Thursday, January 09, 2020

மல்கியா

மல்கியாவைக்கொண்டு<Malachi>  கர்த்தர்  இஸ்ரவேலுக்குச்<Israel>  சொன்ன  வார்த்தையின்  பாரம்.  {Mal  1:1}

 

நான்  உங்களைச்  சிநேகித்தேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அதற்கு  நீங்கள்:  எங்களை  எப்படிச்  சிநேகித்தீர்  என்கிறீர்கள்;  கர்த்தர்  சொல்லுகிறார்:  ஏசா<Esau>  யாக்கோபுக்குச்<Jacob>  சகோதரன்  அல்லவோ?  ஆகிலும்  யாக்கோபை<Jacob>  நான்  சிநேகித்தேன்.  {Mal  1:2}

 

ஏசாவையோ<Esau>  நான்  வெறுத்தேன்;  அவனுடைய  மலைகளைப்  பாழும்,  அவனுடைய  சுதந்தரத்தை  வனாந்தரத்திலுள்ள  வலுசர்ப்பங்களின்  தாவும்  ஆக்கினேன்.  {Mal  1:3}

 

ஏதோமியர்<Edom>:  நாம்  எளிமைப்பட்டோம்;  ஆனாலும்  பாழானவைகளைத்  திரும்பக்  கட்டுவோம்  என்று  சொல்லுகிறார்கள்;  அதற்குக்  கர்த்தர்:  அவர்கள்  கட்டுவார்கள்,  நான்  இடிப்பேன்.  அவர்கள்  துன்மார்க்கத்தின்  எல்லையென்றும்,  கர்த்தர்  என்றைக்கும்  சினம்  வைக்கிற  ஜனமென்றும்  சொல்லப்படுவார்கள்  என்கிறார்.  {Mal  1:4}

 

இதை  உங்கள்  கண்கள்  காணும்.  அப்பொழுது  நீங்கள்:  கர்த்தர்  இஸ்ரவேலுடைய<Israel>  எல்லை  துவக்கி  மகிமைப்படுத்தப்படுவார்  என்பீர்கள்.  {Mal  1:5}

 

குமாரன்  தன்  பிதாவையும்,  ஊழியக்காரன்  தன்  எஜமானையும்  கனம்பண்ணுகிறார்களே;  நான்  பிதாவானால்  என்  கனம்  எங்கே?  நான்  எஜமானானால்  எனக்குப்  பயப்படும்  பயம்  எங்கே  என்று  சேனைகளின்  கர்த்தர்  தமது  நாமத்தை  அசட்டைபண்ணுகிற  ஆசாரியர்களாகிய  உங்களைக்  கேட்கிறார்;  அதற்கு  நீங்கள்:  உமது  நாமத்தை  எதினாலே  அசட்டைபண்ணினோம்  என்கிறீர்கள்.  {Mal  1:6}

 

என்  பீடத்தின்மேல்  அசுத்தமான  அப்பத்தைப்  படைக்கிறதினாலேயே;  ஆனாலும்  உம்மை  எதினாலே  அசுத்தப்படுத்தினோம்  என்கிறீர்கள்;  கர்த்தருடைய  பந்தி  எண்ணமற்றுப்போயிற்றென்று  நீங்கள்  சொல்லுகிறதினாலேயே.  {Mal  1:7}

 

நீங்கள்  கண்  ஊனமானதைப்  பலியிடக்கொண்டுவந்தாலும்  அது  பொல்லாப்பல்ல,  நீங்கள்  காலூனமானதையும்  நசல்  பிடித்ததையும்  கொண்டுவந்தாலும்  அது  பொல்லாப்பல்ல  என்கிறீர்களே;  அதை  நீ  உன்  அதிபதிக்குச்  செலுத்து,  அவன்  உன்மேல்  பிரியமாயிருப்பானோ?  உன்  முகத்தைப்  பார்ப்பானோ  என்று  சேனைகளின்  கர்த்தர்  கேட்கிறார்.  {Mal  1:8}

 

இப்போதும்  தேவனுடைய  சமுகத்தை  நோக்கிக்  கெஞ்சுங்கள்;  அப்பொழுது  நம்மேல்  இரங்குவார்;  இது  உங்களாலே  வந்த  காரியம்,  அவர்  உங்களை  அங்கீகரிப்பாரோ  என்று  சேனைகளின்  கர்த்தர்  கேட்கிறார்.  {Mal  1:9}

 

உங்களில்  எவன்  கூலியில்லாமல்  கதவுகளைப்  பூட்டுவான்;  என்  பலிபீடத்தின்மேல்  அக்கினியைக்  கூலியில்லாமல்  கொளுத்தவுமாட்டீர்கள்;  உங்கள்பேரில்  எனக்குப்  பிரியமில்லையென்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  உங்கள்  கைகளிலுள்ள  காணிக்கை  எனக்கு  உகந்ததல்ல.  {Mal  1:10}

 

சூரியன்  உதிக்கிற  திசைதொடங்கி,  அது  அஸ்தமிக்கிற  திசைவரைக்கும்,  என்  நாமம்  ஜாதிகளுக்குள்ளே  மகத்துவமாயிருக்கும்;  எல்லா  இடங்களிலும்  என்  நாமத்துக்குத்  தூபமும்  சுத்தமான  காணிக்கையும்  செலுத்தப்படும்;  என்  நாமம்  ஜாதிகளுக்குள்ளே  மகத்துவமாயிருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  1:11}

 

நீங்களோ  கர்த்தருடைய  பந்தி  அசுத்தமானது  என்றும்,  அதின்  ஆகாரமாகிய  அதின்  பலன்  அற்பமானது  என்றும்  சொல்லுகிறதினாலே,  என்  நாமத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.  {Mal  1:12}

 

இதோ,  இது  எவ்வளவு  வருத்தமென்று  சொல்லி,  அதை  ஒரு  திரணமாய்ப்  பேசி,  பீறுண்டதையும்  கால்  ஊனமானதையும்  நசல்கொண்டதையும்  கொண்டுவந்து  காணிக்கையாகச்  செலுத்துகிறீர்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  அதை  உங்கள்  கைகளில்  அங்கீகரித்துக்கொள்வேனோ  என்று  கர்த்தர்  கேட்கிறார்.  {Mal  1:13}

 

தன்  மந்தையில்  கடா  இருக்கையில்  கெட்டுப்போனதை  ஆண்டவருக்கு  நேர்ந்துகொண்டு  பலியிடுகிற  கபடஸ்தன்  சபிக்கப்பட்டவன்;  என்  நாமம்  ஜாதிகளுக்குள்ளே  பயங்கரமாயிருக்கும்;  நான்  மகத்துவமான  ராஜா  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  1:14}

 

இப்போதும்  ஆசாரியர்களே,  இந்தக்  கட்டளை  உங்களுக்குரியது.  {Mal  2:1}

 

நீங்கள்  கேளாமலும்  என்  நாமத்துக்கு  மகிமையைச்  செலுத்தும்படி  இதைச்  சிந்தியாமலுமிருந்தால்,  நான்  உங்களுக்குள்ளே  சாபத்தை  அனுப்பி,  உங்கள்  ஆசீர்வாதங்களையும்  சாபமாக்குவேன்;  ஆம்,  நீங்கள்  அதைச்  சிந்தியாமற்போனதினால்  அவைகளைச்  சபித்தேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  2:2}

 

இதோ,  நான்  உங்களுடைய  பயிரைக்  கெடுத்து,  உங்கள்  பண்டிகைகளின்  சாணியையே  உங்கள்  முகங்களில்  இறைப்பேன்;  அதனோடுகூட  நீங்களும்  தள்ளுபடியாவீர்கள்.  {Mal  2:3}

 

லேவியோடேபண்ணின<Levi>  என்  உடன்படிக்கை  நிலைத்திருக்கும்படிக்கு  இந்தக்  கட்டளையை  உங்களிடத்திற்கு  அனுப்பினேன்  என்கிறதை  அப்பொழுது  அறிந்துகொள்வீர்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  2:4}

 

அவனோடே  பண்ணின  என்  உடன்படிக்கை  ஜீவனும்  சமாதானமுமாக  இருந்தது;  அவன்  எனக்குப்  பயப்படும்  பயத்தோடே  இருக்கவேண்டுமென்று,  இவைகளை  அவனுக்குக்  கட்டளையிட்டேன்;  அப்படியே  அவன்  என்  நாமத்துக்குப்  பயந்தும்  இருந்தான்.  {Mal  2:5}

 

சத்தியவேதம்  அவன்  வாயில்  இருந்தது;  அவனுடைய  உதடுகளில்  அநியாயம்  காணப்படவில்லை;  அவன்  என்னோடே  சமாதானமும்  யதார்த்தமுமாய்ச்  சஞ்சரித்து,  அநேகரை  அக்கிரமத்தினின்று  திருப்பினான்.  {Mal  2:6}

 

ஆசாரியனுடைய  உதடுகள்  அறிவைக்  காக்கவேண்டும்;  வேதத்தை  அவன்  வாயிலே  தேடுவார்களே;  அவன்  சேனைகளுடைய  கர்த்தரின்  தூதன்.  {Mal  2:7}

 

நீங்களோ  வழியைவிட்டு  விலகி,  அநேகரை  வேதத்தைக்குறித்து  இடறப்பண்ணினீர்கள்;  லேவியின்<Levi>  உடன்படிக்கையைக்  கெடுத்துப்போட்டீர்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  2:8}

 

நீங்கள்  என்  வழிகளைக்  கைக்கொள்ளாமல்  வேதத்தைக்குறித்துப்  பட்சபாதம்  பண்ணினபடியினால்  நானும்  உங்களை  எல்லா  ஜனத்துக்கு  முன்பாகவும்  அற்பரும்  நீசருமாக்கினேன்.  {Mal  2:9}

 

நம்மெல்லாருக்கும்  ஒரே  பிதா  இல்லையோ?  ஒரே  தேவன்  நம்மைச்  சிருஷ்டித்ததில்லையோ?  நாம்  நம்முடைய  பிதாக்களின்  உடன்படிக்கையைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கி,  அவனவன்  தன்தன்  சகோதரனுக்குத்  துரோகம்பண்ணுவானேன்?  {Mal  2:10}

 

யூதா<Judah>  ஜனங்கள்  துரோகம்பண்ணினார்கள்;  இஸ்ரவேலிலும்<Israel>  எருசலேமிலும்<Jerusalem>  அருவருப்பான  காரியம்  செய்யப்பட்டது;  கர்த்தர்  சிநேகிக்கிற  பரிசுத்தத்தை  யூதா<Judah>  ஜனங்கள்  பரிசுத்தக்  குலைச்சலாக்கி  அந்நிய  தேவதையின்  குமாரத்திகளை  விவாகம்பண்ணினார்கள்.  {Mal  2:11}

 

இப்படிச்  செய்கிறவன்  எவனோ,  அவன்  காவல்காக்கிறவனாயினும்,  உத்தரவுகொடுக்கிறவனாயினும்,  சேனைகளின்  கர்த்தருக்குக்  காணிக்கை  செலுத்துகிறவனாயினும்,  அவனை  யாக்கோபின்<Jacob>  கூடாரங்களில்  இராதபடிக்குக்  கர்த்தர்  சங்கரிப்பார்.  {Mal  2:12}

 

நீங்கள்  இரண்டாந்தரமும்  இதைச்  செய்து,  கர்த்தருடைய  பீடத்தைக்  கண்ணீரினாலும்  அழுகையினாலும்  பெருமூச்சினாலும்  நிரப்புகிறீர்கள்;  ஆகையால்,  அவர்  இனிக்  காணிக்கையை  மதியார்,  அதை  உங்கள்  கைகளில்  பிரியமாய்  ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.  {Mal  2:13}

 

ஏன்  என்று  கேட்கிறீர்கள்;  கர்த்தர்  உனக்கும்  உன்  இளவயதின்  மனைவிக்கும்  சாட்சியாயிருக்கிறார்;  உன்  தோழியும்  உன்  உடன்படிக்கையின்  மனைவியுமாகிய  அவளுக்கு  நீ  துரோகம்பண்ணினாயே.  {Mal  2:14}

 

அவர்  ஒருவனையல்லவா  படைத்தார்?  ஆவி  அவரிடத்தில்  பரிபூரணமாயிருந்ததே,  பின்னை  ஏன்  ஒருவனைப்  படைத்தார்?  தேவபக்தியுள்ள  சந்ததியைப்  பெறும்படிதானே.  ஆகையால்  ஒருவனும்  தன்  இளவயதின்  மனைவிக்குத்  துரோகம்பண்ணாதபடிக்கு,  உங்கள்  ஆவியைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்.  {Mal  2:15}

 

தள்ளிவிடுதலை  நான்  வெறுக்கிறேன்  என்று  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்;  அப்படிப்பட்டவன்  கொடுமையினால்  தன்  வஸ்திரத்தை  மூடுகிறான்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆகையால்  நீங்கள்  துரோகம்பண்ணாமல்  உங்கள்  ஆவியைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்.  {Mal  2:16}

 

உங்கள்  வார்த்தைகளினாலே  கர்த்தரை  வருத்தப்படுத்துகிறீர்கள்;  ஆனாலும்  எதினாலே  அவரை  வருத்தப்படுத்துகிறோம்  என்கிறீர்கள்;  பொல்லாப்பைச்  செய்கிறவனெவனும்  கர்த்தரின்  பார்வைக்கு  நல்லவன்  என்றும்,  அப்படிப்பட்டவர்கள்பேரில்  அவர்  பிரியமாயிருக்கிறாரென்றும்,  நியாயந்தீர்க்கிற  தேவன்  எங்கேயென்றும்,  நீங்கள்  சொல்லுகிறதினாலேயே.  {Mal  2:17}

 

இதோ,  நான்  என்  தூதனை  அனுப்புகிறேன்,  அவன்  எனக்கு  முன்பாகப்  போய்,  வழியை  ஆயத்தம்பண்ணுவான்;  அப்பொழுது  நீங்கள்  தேடுகிற  ஆண்டவரும்  நீங்கள்  விரும்புகிற  உடன்படிக்கையின்  தூதனுமானவர்  தம்முடைய  ஆலயத்துக்குத்  தீவிரமாய்  வருவார்;  இதோ,  வருகிறார்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  3:1}

 

ஆனாலும்  அவர்  வரும்  நாளைச்  சகிப்பவன்  யார்?  அவர்  வெளிப்படுகையில்  நிலைநிற்பவன்  யார்?  அவர்  புடமிடுகிறவனுடைய  அக்கினியைப்போலவும்,  வண்ணாருடைய  சவுக்காரத்தைப்போலவும்  இருப்பார்.  {Mal  3:2}

 

அவர்  உட்கார்ந்து  வெள்ளியைப்  புடமிட்டுச்  சுத்திகரித்துக்கொண்டிருப்பார்;  அவர்  லேவியின்<Levi>  புத்திரரைச்  சுத்திகரித்து,  அவர்கள்  கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும்,  நீதியாய்  காணிக்கையைச்  செலுத்தும்படிக்கும்,  அவர்களைப்  பொன்னைப்போலவும்  வெள்ளியைப்போலவும்  புடமிடுவார்.  {Mal  3:3}

 

அப்பொழுது  பூர்வநாட்களிலும்  முந்தின  வருஷங்களிலும்  இருந்ததுபோல,  யூதாவின்<Judah>  காணிக்கையும்,  எருசலேமின்<Jerusalem>  காணிக்கையும்  கர்த்தருக்குப்  பிரியமாயிருக்கும்.  {Mal  3:4}

 

நான்  நியாயத்தீர்ப்புச்  செய்யும்படி  உங்களிடத்தில்  வந்து,  சூனியக்காரருக்கும்  விபசாரருக்கும்  பொய்யாணை  இடுகிறவர்களுக்கும்,  எனக்குப்  பயப்படாமல்  விதவைகளும்  திக்கற்ற  பிள்ளைகளுமாகிய  கூலிக்காரரின்  கூலியை  அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும்,  பரதேசிக்கு  அநியாயஞ்செய்கிறவர்களுக்கும்  விரோதமாய்த்  தீவிரமான  சாட்சியாயிருப்பேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  3:5}

 

நான்  கர்த்தர்,  நான்  மாறாதவர்;  ஆகையால்  யாக்கோபின்<Jacob>  புத்திரராகிய  நீங்கள்  நிர்மூலமாகவில்லை.  {Mal  3:6}

 

நீங்கள்  உங்கள்  பிதாக்களின்  நாட்கள்  தொடங்கி  என்  கட்டளைகளைக்  கைக்கொள்ளாமல்,  அவைகளைவிட்டு  விலகிப்போனீர்கள்;  என்னிடத்திற்குத்  திரும்புங்கள்,  அப்பொழுது  உங்களிடத்திற்குத்  திரும்புவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  நாங்கள்  எந்த  விஷயத்தில்  திரும்பவேண்டும்  என்கிறீர்கள்.  {Mal  3:7}

 

மனுஷன்  தேவனை  வஞ்சிக்கலாமா?  நீங்களோ  என்னை  வஞ்சிக்கிறீர்கள்.  எதிலே  உம்மை  வஞ்சித்தோம்  என்கிறீர்கள்?  தசமபாகத்திலும்  காணிக்கைகளிலுந்தானே.  {Mal  3:8}

 

நீங்கள்  சபிக்கப்பட்டவர்கள்;  ஜனத்தாராகிய  நீங்கள்  எல்லாரும்  என்னை  வஞ்சித்தீர்கள்.  {Mal  3:9}

 

என்  ஆலயத்தில்  ஆகாரம்  உண்டாயிருக்கும்படித்  தசமபாகங்களையெல்லாம்  பண்டசாலையிலே  கொண்டுவாருங்கள்;  அப்பொழுது  நான்  வானத்தின்  பலகணிகளைத்  திறந்து,  இடங்கொள்ளாமற்போகுமட்டும்  உங்கள்மேல்  ஆசீர்வாதத்தை  வருஷிக்கமாட்டேனோவென்று  அதினால்  என்னைச்  சோதித்துப்  பாருங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  3:10}

 

பூமியின்  கனியைப்  பட்சித்துப்  போடுகிறவைகளை  உங்கள்  நிமித்தம்  கண்டிப்பேன்;  அவைகள்  உங்கள்  நிலத்தின்  பலனை  அழிப்பதில்லை,  வெளியிலுள்ள  திராட்சக்கொடி  பழமில்லாமற்போவதுமில்லை  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  3:11}

 

அப்பொழுது  எல்லா  ஜாதிகளும்  உங்களைப்  பாக்கியவான்கள்  என்பார்கள்;  தேசம்  விரும்பப்படத்தக்கதாயிருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  3:12}

 

நீங்கள்  எனக்கு  விரோதமாய்ப்  பேசின  பேச்சுகள்  கடினமாயிருக்கிறது  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆனாலும்  உமக்கு  விரோதமாக  என்னத்தைப்  பேசினோம்  என்கிறீர்கள்.  {Mal  3:13}

 

தேவனைச்  சேவிப்பது  விருதா,  அவருடைய  கட்டளைகளைக்  கைக்கொள்ளுகிறதினாலும்,  சேனைகளின்  கர்த்தருக்கு  முன்பாகத்  துக்கித்து  நடக்கிறதினாலும்  என்ன  பிரயோஜனம்?  {Mal  3:14}

 

இப்போதும்  அகங்காரிகளைப்  பாக்கியவான்கள்  என்கிறோம்;  தீமை  செய்கிறவர்கள்  திடப்படுகிறார்கள்;  அவர்கள்  தேவனைப்  பரீட்சைபார்த்தாலும்  விடுவிக்கப்படுகிறார்களே  என்று  சொல்லுகிறீர்கள்.  {Mal  3:15}

 

அப்பொழுது  கர்த்தருக்குப்  பயந்தவர்கள்  ஒருவரோடொருவர்  பேசிக்கொள்வார்கள்;  கர்த்தர்  கவனித்துக்கேட்பார்;  கர்த்தருக்குப்  பயந்தவர்களுக்காகவும்  அவருடைய  நாமத்தைத்  தியானிக்கிறவர்களுக்காகவும்  ஞாபகப்புஸ்தகம்  ஒன்று  அவருக்கு  முன்பாக  எழுதப்பட்டிருக்கிறது.  {Mal  3:16}

 

என்  சம்பத்தை  நான்  சேர்க்கும்  நாளிலே  அவர்கள்  என்னுடையவர்களாயிருப்பார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஒரு  மனுஷன்  தனக்கு  ஊழியஞ்செய்கிற  தன்னுடைய  குமாரனைக்  கடாட்சிக்கிறதுபோல  நான்  அவர்களைக்  கடாட்சிப்பேன்.  {Mal  3:17}

 

அப்பொழுது  நீங்கள்  நீதிமானுக்கும்  துன்மார்க்கனுக்கும்,  தேவனுக்கு  ஊழியஞ்செய்கிறவனுக்கும்  அவருக்கு  ஊழியஞ்செய்யாதவனுக்கும்  இருக்கிற  வித்தியாசத்தைத்  திரும்பவும்  காண்பீர்கள்.  {Mal  3:18}

 

இதோ,  சூளையைப்போல  எரிகிற  நாள்  வரும்;  அப்பொழுது  அகங்காரிகள்  யாவரும்  அக்கிரமஞ்செய்கிற  யாவரும்  துரும்பாயிருப்பார்கள்;  வரப்போகிற  அந்த  நாள்  அவர்களைச்  சுட்டெரிக்கும்;  அது  அவர்களுக்கு  வேரையும்  கொப்பையும்  வைக்காமற்போகும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  4:1}

 

ஆனாலும்  என்  நாமத்துக்குப்  பயந்திருக்கிற  உங்கள்மேல்  நீதியின்  சூரியன்  உதிக்கும்;  அதின்  செட்டைகளின்கீழ்  ஆரோக்கியம்  இருக்கும்;  நீங்கள்  வெளியே  புறப்பட்டுப்போய்,  கொழுத்த  கன்றுகளைப்போல  வளருவீர்கள்.  {Mal  4:2}

 

துன்மார்க்கரை  மிதிப்பீர்கள்;  நான்  இதைச்  செய்யும்நாளிலே  அவர்கள்  உங்கள்  உள்ளங்கால்களின்கீழ்  சாம்பலாயிருப்பார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Mal  4:3}

 

ஓரேபிலே<Horeb>  இஸ்ரவேலரெல்லாருக்காகவும்<Israel>  என்  தாசனாகிய  மோசேக்கு<Moses>  நான்  கற்பித்த  நியாயப்பிரமாணமாகிய  கட்டளைகளையும்  நியாயங்களையும்  நினையுங்கள்.  {Mal  4:4}

 

இதோ,  கர்த்தருடைய  பெரிதும்  பயங்கரமுமான  நாள்  வருகிறதற்கு  முன்னே  நான்  உங்களிடத்திற்கு  எலியா<Elijah>  தீர்க்கதரிசியை  அனுப்புகிறேன்.  {Mal  4:5}

 

நான்  வந்து  பூமியைச்  சங்காரத்தால்  அடிக்காதபடிக்கு,  அவன்  பிதாக்களுடைய  இருதயத்தைப்  பிள்ளைகளிடத்திற்கும்,  பிள்ளைகளுடைய  இருதயத்தை  அவர்கள்  பிதாக்களிடத்திற்கும்  திருப்புவான்.  {Mal  4:6}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!