Wednesday, January 08, 2020

வெளிப்படுத்தின விசேஷம்

சீக்கிரத்தில்  சம்பவிக்கவேண்டியவைகளைத்  தம்முடைய  ஊழியக்காரருக்குக்  காண்பிக்கும்பொருட்டு,  தேவன்  இயேசுகிறிஸ்துவுக்கு<Jesus  Christ>  ஒப்புவித்ததும்,  இவர்  தம்முடைய  தூதனை  அனுப்பி,  தம்முடைய  ஊழியக்காரனாகிய  யோவானுக்கு<John>  வெளிப்படுத்தினதுமான  விசேஷம்.  {Rev  1:1}

 

இவன்  தேவனுடைய  வசனத்தைக்குறித்தும்,  இயேசுகிறிஸ்துவைப்பற்றிய<Jesus  Christ>  சாட்சியைக்குறித்தும்,  தான்  கண்ட  யாவற்றையும்  சாட்சியாக  அறிவித்திருக்கிறான்.  {Rev  1:2}

 

இந்தத்  தீர்க்கதரிசன  வசனங்களை  வாசிக்கிறவனும்,  கேட்கிறவர்களும்,  இதில்  எழுதியிருக்கிறவைகளைக்  கைக்கொள்ளுகிறவர்களும்  பாக்கியவான்கள்,  காலம்  சமீபமாயிருக்கிறது.  {Rev  1:3}

 

யோவான்<John>  ஆசியாவிலுள்ள<Asia>  ஏழுசபைகளுக்கும்  எழுதுகிறதாவது:  இருக்கிறவரும்  இருந்தவரும்  வருகிறவருமானவராலும்,  அவருடைய  சிங்காசனத்திற்கு  முன்பாக  இருக்கிற  ஏழு  ஆவிகளாலும்,  {Rev  1:4}

 

உண்மையுள்ள  சாட்சியும்,  மரித்தோரிலிருந்து  முதற்பிறந்தவரும்,  பூமியின்  ராஜாக்களுக்கு  அதிபதியுமாகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {Rev  1:5}

 

நம்மிடத்தில்  அன்புகூர்ந்து,  தமது  இரத்தத்தினாலே  நம்முடைய  பாவங்களற  நம்மைக்  கழுவி,  தம்முடைய  பிதாவாகிய  தேவனுக்கு  முன்பாக  நம்மை  ராஜாக்களும்  ஆசாரியர்களுமாக்கின  அவருக்கு  மகிமையும்  வல்லமையும்  என்றென்றைக்கும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்<Amen>.  {Rev  1:6}

 

இதோ,  மேகங்களுடனே  வருகிறார்;  கண்கள்  யாவும்  அவரைக்  காணும்,  அவரைக்  குத்தினவர்களும்  அவரைக்  காண்பார்கள்;  பூமியின்  கோத்திரத்தாரெல்லாரும்  அவரைப்  பார்த்துப்  புலம்புவார்கள்.  அப்படியே  ஆகும்,  ஆமென்<Amen>.  {Rev  1:7}

 

இருக்கிறவரும்  இருந்தவரும்  வருகிறவருமாகிய  சர்வவல்லமையுள்ள  கர்த்தர்:  நான்  அல்பாவும்<Alpha>,  ஓமெகாவும்<Omega>,  ஆதியும்  அந்தமுமாயிருக்கிறேன்  என்று  திருவுளம்பற்றுகிறார்.  {Rev  1:8}

 

உங்கள்  சகோதரனும்,  இயேசுகிறிஸ்துவினிமித்தம்<Jesus  Christ>  வருகிற  உபத்திரவத்திற்கும்  அவருடைய  ராஜ்யத்திற்கும்  அவருடைய  பொறுமைக்கும்  உங்கள்  உடன்பங்காளனுமாயிருக்கிற  யோவானாகிய<John>  நான்  தேவவசனத்தினிமித்தமும்,  இயேசுகிறிஸ்துவைப்பற்றிய<Jesus  Christ>  சாட்சியினிமித்தமும்,  பத்மு<Patmos>  என்னும்  தீவிலே  இருந்தேன்.  {Rev  1:9}

 

கர்த்தருடைய  நாளில்  ஆவிக்குள்ளானேன்;  அப்பொழுது  எனக்குப்  பின்னாலே  எக்காளசத்தம்போன்ற  பெரிதான  ஒரு  சத்தத்தைக்  கேட்டேன்.  {Rev  1:10}

 

அது:  நான்  அல்பாவும்<Alpha>  ஓமெகாவும்<Omega>,  முந்தினவரும்  பிந்தினவருமாயிருக்கிறேன்.  நீ  காண்கிறதை  ஒரு  புஸ்தகத்தில்  எழுதி,  ஆசியாவிலிருக்கிற<Asia>  எபேசு<Ephesus>,  சிமிர்னா<Smyrna>,  பெர்கமு<Pergamos>,  தியத்தீரா<Thyatira>,  சர்தை<Sardis>,  பிலதெல்பியா<Philadelphia>,  லவோதிக்கேயா<Laodicea>  என்னும்  பட்டணங்களிலுள்ள  ஏழு  சபைகளுக்கும்  அனுப்பு  என்று  விளம்பினது.  {Rev  1:11}

 

அப்பொழுது  என்னுடனே  பேசின  சத்தத்தைப்  பார்க்கத்  திரும்பினேன்;  திரும்பினபோது,  ஏழு  பொன்  குத்துவிளக்குகளையும்,  {Rev  1:12}

 

அந்த  ஏழு  குத்துவிளக்குகளின்  மத்தியிலே,  நிலையங்கி  தரித்து,  மார்பருகே  பொற்கச்சை  கட்டியிருந்த  மனுஷகுமாரனுக்கொப்பானவரையும்  கண்டேன்.  {Rev  1:13}

 

அவருடைய  சிரசும்  மயிரும்  வெண்பஞ்சைப்போலவும்  உறைந்த  மழையைப்போலவும்  வெண்மையாயிருந்தது;  அவருடைய  கண்கள்  அக்கினிஜுவாலையைப்  போலிருந்தது;  {Rev  1:14}

 

அவருடைய  பாதங்கள்  உலைக்களத்தில்  காய்ந்த  பிரகாசமான  வெண்கலம்போலிருந்தது;  அவருடைய  சத்தம்  பெருவெள்ளத்து  இரைச்சலைப்போலிருந்தது.  {Rev  1:15}

 

தமது  வலதுகரத்திலே  ஏழு  நட்சத்திரங்களை  ஏந்திக்கொண்டிருந்தார்;  அவர்  வாயிலிருந்து  இருபுறமும்  கருக்குள்ள  பட்டயம்  புறப்பட்டது;  அவருடைய  முகம்  வல்லமையாய்ப்  பிரகாசிக்கிற  சூரியனைப்போலிருந்தது.  {Rev  1:16}

 

நான்  அவரைக்  கண்டபோது  செத்தவனைப்போல  அவருடைய  பாதத்தில்  விழுந்தேன்;  அப்பொழுது  அவர்  தம்முடைய  வலதுகரத்தை  என்மேல்  வைத்து,  என்னை  நோக்கி:  பயப்படாதே,  நான்  முந்தினவரும்  பிந்தினவரும்,  உயிருள்ளவருமாயிருக்கிறேன்;  {Rev  1:17}

 

மரித்தேன்,  ஆனாலும்,  இதோ,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறேன்,  ஆமென்<Amen>;  நான்  மரணத்திற்கும்  பாதாளத்திற்குமுரிய  திறவுகோல்களை  உடையவராயிருக்கிறேன்.  {Rev  1:18}

 

நீ  கண்டவைகளையும்,  இருக்கிறவைகளையும்,  இவைகளுக்குப்பின்பு  சம்பவிப்பவைகளையும்  எழுது;  {Rev  1:19}

 

என்  வலதுகரத்தில்  நீ  கண்ட  ஏழு  நட்சத்திரங்களின்  இரகசியத்தையும்,  ஏழு  பொன்  குத்துவிளக்குகளின்  இரகசியத்தையும்  எழுது;  அந்த  ஏழு  நட்சத்திரங்களும்  ஏழு  சபைகளின்  தூதர்களாம்;  நீ  கண்ட  ஏழு  குத்துவிளக்குகளும்  ஏழு  சபைகளாம்.  {Rev  1:20}

 

எபேசு<Ephesus>  சபையின்  தூதனுக்கு  நீ  எழுதவேண்டியது  என்னவெனில்:  ஏழு  நட்சத்திரங்களைத்  தம்முடைய  வலதுகரத்தில்  ஏந்திக்கொண்டு,  ஏழு  பொன்  குத்துவிளக்குகளின்  மத்தியிலே  உலாவிக்கொண்டிருக்கிறவர்  சொல்லுகிறதாவது;  {Rev  2:1}

 

உன்  கிரியைகளையும்,  உன்  பிரயாசத்தையும்,  உன்  பொறுமையையும்,  நீ  பொல்லாதவர்களைச்  சகிக்கக்கூடாமலிருக்கிறதையும்,  அப்போஸ்தலரல்லாதவர்கள்  தங்களை  அப்போஸ்தலரென்று  சொல்லுகிறதை  நீ  சோதித்து  அவர்களைப்  பொய்யரென்று  கண்டறிந்ததையும்;  {Rev  2:2}

 

நீ  சகித்துக்கொண்டிருக்கிறதையும்,  பொறுமையாயிருக்கிறதையும்,  என்  நாமத்தினிமித்தம்  இளைப்படையாமல்  பிரயாசப்பட்டதையும்  அறிந்திருக்கிறேன்.  {Rev  2:3}

 

ஆனாலும்,  நீ  ஆதியில்  கொண்டிருந்த  அன்பை  விட்டாய்  என்று  உன்பேரில்  எனக்குக்  குறை  உண்டு.  {Rev  2:4}

 

ஆகையால்,  நீ  இன்ன  நிலைமையிலிருந்து  விழுந்தாயென்பதை  நினைத்து,  மனந்திரும்பி,  ஆதியில்  செய்த  கிரியைகளைச்  செய்வாயாக;  இல்லாவிட்டால்  நான்  சீக்கிரமாய்  உன்னிடத்தில்  வந்து,  நீ  மனந்திரும்பாதபட்சத்தில்,  உன்  விளக்குத்தண்டை  அதனிடத்தினின்று  நீக்கிவிடுவேன்.  {Rev  2:5}

 

நான்  வெறுக்கிற  நிக்கொலாய்  மதஸ்தரின்  கிரியைகளை  நீயும்  வெறுக்கிறாய்,  இது  உன்னிடத்திலுண்டு.  {Rev  2:6}

 

ஆவியானவர்  சபைகளுக்குச்  சொல்லுகிறதைக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்;  ஜெயங்கொள்ளுகிறவனெவனோ  அவனுக்குத்  தேவனுடைய  பரதீசின்  மத்தியிலிருக்கிற  ஜீவவிருட்சத்தின்  கனியைப்  புசிக்கக்கொடுப்பேன்  என்றெழுது.  {Rev  2:7}

 

சிமிர்னா<Smyrna>  சபையின்  தூதனுக்கு  நீ  எழுதவேண்டியது  என்னவெனில்:  முந்தினவரும்  பிந்தினவரும்,  மரித்திருந்து  பிழைத்தவருமானவர்  சொல்லுகிறதாவது;  {Rev  2:8}

 

உன்  கிரியைகளையும்,  உன்  உபத்திரவத்தையும்,  நீ  ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்  உனக்கிருக்கிற  தரித்திரத்தையும்,  தங்களை  யூதரென்று<Jews>  சொல்லியும்  யூதராயிராமல்<Jews>  சாத்தானுடைய  கூட்டமாயிருக்கிறவர்கள்  செய்யும்  தூஷணத்தையும்  அறிந்திருக்கிறேன்.  {Rev  2:9}

 

நீ  படப்போகிற  பாடுகளைக்குறித்து  எவ்வளவும்  பயப்படாதே;  இதோ,  நீங்கள்  சோதிக்கப்படும்பொருட்டாகப்  பிசாசானவன்  உங்களில்  சிலரைக்  காவலில்  போடுவான்;  பத்துநாள்  உபத்திரவப்படுவீர்கள்.  ஆகிலும்  நீ  மரணபரியந்தம்  உண்மையாயிரு,  அப்பொழுது  ஜீவகிரீடத்தை  உனக்குத்  தருவேன்.  {Rev  2:10}

 

ஆவியானவர்  சபைகளுக்குச்  சொல்லுகிறதைக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்;  ஜெயங்கொள்ளுகிறவன்  இரண்டாம்  மரணத்தினால்  சேதப்படுவதில்லை  என்றெழுது.  {Rev  2:11}

 

பெர்கமு<Pergamos>  சபையின்  தூதனுக்கு  நீ  எழுதவேண்டியது  என்னவெனில்:  இருபுறமும்  கருக்குள்ள  பட்டயத்தை  உடையவர்  சொல்லுகிறதாவது;  {Rev  2:12}

 

உன்  கிரியைகளையும்,  சாத்தானுடைய  சிங்காசனமிருக்கிற  இடத்தில்  நீ  குடியிருக்கிறதையும்,  நீ  என்  நாமத்தைப்  பற்றிக்கொண்டிருக்கிறதையும்,  சாத்தான்  குடிகொண்டிருக்கிற  இடத்திலே  உங்களுக்குள்ளே  எனக்கு  உண்மையுள்ள  சாட்சியான  அந்திப்பா<Antipas>  என்பவன்  கொல்லப்பட்ட  நாட்களிலும்  என்னைப்  பற்றும்  விசுவாசத்தை  நீ  மறுதலியாமலிருந்ததையும்  அறிந்திருக்கிறேன்.  {Rev  2:13}

 

ஆகிலும்,  சில  காரியங்களைக்குறித்து  உன்பேரில்  எனக்குக்  குறை  உண்டு;  விக்கிரகங்களுக்குப்  படைத்தவைகளைப்  புசிப்பதற்கும்  வேசித்தனம்பண்ணுவதற்கும்  ஏதுவான  இடறலை  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  முன்பாகப்  போடும்படி  பாலாக்<Balac>  என்பவனுக்குப்  போதனைசெய்த  பிலேயாமுடைய<Balaam>  போதகத்தைக்  கைக்கொள்ளுகிறவர்கள்  உன்னிடத்திலுண்டு.  {Rev  2:14}

 

அப்படியே  நிக்கொலாய்  மதஸ்தருடைய  போதகத்தைக்  கைக்கொள்ளுகிறவர்களும்  உன்னிடத்திலுண்டு;  அதை  நான்  வெறுக்கிறேன்.  {Rev  2:15}

 

நீ  மனந்திரும்பு,  இல்லாவிட்டால்  நான்  சீக்கிரமாய்  உன்னிடத்தில்  வந்து,  என்  வாயின்  பட்டயத்தால்  அவர்களோடே  யுத்தம்பண்ணுவேன்.  {Rev  2:16}

 

ஆவியானவர்  சபைகளுக்குச்  சொல்லுகிறதைக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்;  ஜெயங்கொள்ளுகிறவனுக்கு  நான்  மறைவான  மன்னாவைப்<manna>  புசிக்கக்கொடுத்து,  அவனுக்கு  வெண்மையான  குறிக்கல்லையும்,  அந்தக்  கல்லின்மேல்  எழுதப்பட்டதும்  அதைப்  பெறுகிறவனேயன்றி  வேறொருவனும்  அறியக்கூடாததுமாகிய  புதிய  நாமத்தையும்  கொடுப்பேன்  என்றெழுது.  {Rev  2:17}

 

தியத்தீரா<Thyatira>  சபையின்  தூதனுக்கு  நீ  எழுதவேண்டியது  என்னவெனில்:  அக்கினிஜுவாலை  போன்ற  கண்களும்,  பிரகாசமான  வெண்கலம்போன்ற  பாதங்களுமுள்ள  தேவகுமாரன்  சொல்லுகிறதாவது;  {Rev  2:18}

 

உன்  கிரியைகளையும்,  உன்  அன்பையும்,  உன்  ஊழியத்தையும்,  உன்  விசுவாசத்தையும்,  உன்  பொறுமையையும்,  நீ  முன்பு  செய்த  கிரியைகளிலும்  பின்பு  செய்த  கிரியைகள்  அதிகமாயிருக்கிறதையும்  அறிந்திருக்கிறேன்.  {Rev  2:19}

 

ஆகிலும்,  உன்  பேரில்  எனக்குக்  குறை  உண்டு;  என்னவெனில்,  தன்னைத்  தீர்க்கதரிசியென்று  சொல்லுகிற  யேசபேல்<Jezebel>  என்னும்  ஸ்திரீயானவள்  என்னுடைய  ஊழியக்காரர்  வேசித்தனம்பண்ணவும்  விக்கிரகங்களுக்குப்  படைத்தவைகளைப்  புசிக்கவும்  அவர்களுக்குப்  போதித்து,  அவர்களை  வஞ்சிக்கும்படி  நீ  அவளுக்கு  இடங்கொடுக்கிறாய்.  {Rev  2:20}

 

அவள்  மனந்திரும்பும்படியாய்  அவளுக்குத்  தவணைகொடுத்தேன்;  தன்  வேசிமார்க்கத்தை  விட்டு  மனந்திரும்ப  அவளுக்கு  விருப்பமில்லை.  {Rev  2:21}

 

இதோ,  நான்  அவளைக்  கட்டில்கிடையாக்கி,  அவளுடனே  விபசாரஞ்செய்தவர்கள்  தங்களுடைய  கிரியைகளைவிட்டு  மனந்திரும்பாவிட்டால்  அவர்களையும்  மிகுந்த  உபத்திரவத்திலே  தள்ளி,  {Rev  2:22}

 

அவளுடைய  பிள்ளைகளையும்  கொல்லவே  கொல்லுவேன்;  அப்பொழுது  நானே  உள்ளிந்திரியங்களையும்  இருதயங்களையும்  ஆராய்கிறவரென்று  எல்லாச்  சபைகளும்  அறிந்துகொள்ளும்;  அன்றியும்  உங்களில்  ஒவ்வொருவனுக்கும்  உங்கள்  கிரியைகளின்படியே  பலனளிப்பேன்.  {Rev  2:23}

 

தியத்தீராவிலே<Thyatira>  இந்தப்  போதகத்தைப்  பற்றிக்கொள்ளாமலும்,  சாத்தானுடைய  ஆழங்கள்  என்று  அவர்கள்  சொல்லுகிறார்களே,  அந்த  ஆழங்களை  அறிந்துகொள்ளாமலுமிருக்கிற  மற்றவர்களாகிய  உங்களுக்கு  நான்  சொல்லுகிறதாவது;  உங்கள்மேல்  வேறொரு  பாரத்தையும்  சுமத்தமாட்டேன்.  {Rev  2:24}

 

உங்களுக்குள்ளதை  நான்  வருமளவும்  பற்றிக்கொண்டிருங்கள்.  {Rev  2:25}

 

ஜெயங்கொண்டு  முடிவுபரியந்தம்  என்  கிரியைகளைக்  கைக்கொள்ளுகிறவனெவனோ  அவனுக்கு,  நான்  என்  பிதாவினிடத்தில்  அதிகாரம்  பெற்றதுபோல,  ஜாதிகள்மேல்  அதிகாரம்  கொடுப்பேன்.  {Rev  2:26}

 

அவன்  இருப்புக்கோலால்  அவர்களை  ஆளுவான்;  அவர்கள்  மண்பாண்டங்களைப்போல  நொறுக்கப்படுவார்கள்.  {Rev  2:27}

 

விடிவெள்ளி  நட்சத்திரத்தையும்  அவனுக்குக்  கொடுப்பேன்.  {Rev  2:28}

 

ஆவியானவர்  சபைகளுக்குச்  சொல்லுகிறதைக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றெழுது.  {Rev  2:29}

 

சர்தை<Sardis>  சபையின்  தூதனுக்கு  நீ  எழுதவேண்டியது  என்னவெனில்:  தேவனுடைய  ஏழு  ஆவிகளையும்  ஏழு  நட்சத்திரங்களையும்  உடையவர்  சொல்லுகிறதாவது;  உன்  கிரியைகளை  அறிந்திருக்கிறேன்,  நீ  உயிருள்ளவனென்று  பெயர்கொண்டிருந்தும்  செத்தவனாயிருக்கிறாய்.  {Rev  3:1}

 

நீ  விழித்துக்கொண்டு,  சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை  ஸ்திரப்படுத்து;  உன்  கிரியைகள்  தேவனுக்குமுன்  நிறைவுள்ளவைகளாக  நான்  காணவில்லை.  {Rev  3:2}

 

ஆகையால்  நீ  கேட்டுப்  பெற்றுக்கொண்ட  வகையை  நினைவுகூர்ந்து,  அதைக்  கைக்கொண்டு  மனந்திரும்பு.  நீ  விழித்திராவிட்டால்,  திருடனைப்போல்  உன்மேல்  வருவேன்;  நான்  உன்மேல்  வரும்வேளையை  அறியாதிருப்பாய்.  {Rev  3:3}

 

ஆனாலும்  தங்கள்  வஸ்திரங்களை  அசுசிப்படுத்தாத  சிலபேர்  சர்தையிலும்<Sardis>  உனக்குண்டு;  அவர்கள்  பாத்திரவான்களானபடியால்  வெண்வஸ்திரந்தரித்து  என்னோடேகூட  நடப்பார்கள்.  {Rev  3:4}

 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ  அவனுக்கு  வெண்வஸ்திரம்  தரிப்பிக்கப்படும்;  ஜீவபுஸ்தகத்திலிருந்து  அவனுடைய  நாமத்தை  நான்  கிறுக்கிப்போடாமல்,  என்  பிதா  முன்பாகவும்  அவருடைய  தூதர்  முன்பாகவும்  அவன்  நாமத்தை  அறிக்கையிடுவேன்.  {Rev  3:5}

 

ஆவியானவர்  சபைகளுக்குச்  சொல்லுகிறதைக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றெழுது.  {Rev  3:6}

 

பிலதெல்பியா<Philadelphia>  சபையின்  தூதனுக்கு  நீ  எழுதவேண்டியது  என்னவெனில்:  பரிசுத்தமுள்ளவரும்,  சத்தியமுள்ளவரும்,  தாவீதின்<David>  திறவுகோலை  உடையவரும்,  ஒருவரும்  பூட்டக்கூடாதபடிக்குத்  திறக்கிறவரும்,  ஒருவரும்  திறக்கக்கூடாதபடிக்குப்  பூட்டுகிறவருமாயிருக்கிறவர்  சொல்லுகிறதாவது;  {Rev  3:7}

 

உன்  கிரியைகளை  அறிந்திருக்கிறேன்;  உனக்குக்  கொஞ்சம்  பெலன்  இருந்தும்,  நீ  என்  நாமத்தை  மறுதலியாமல்,  என்  வசனத்தைக்  கைக்கொண்டபடியினாலே,  இதோ,  திறந்தவாசலை  உனக்கு  முன்பாக  வைத்திருக்கிறேன்,  அதை  ஒருவனும்  பூட்டமாட்டான்.  {Rev  3:8}

 

இதோ,  யூதரல்லாதிருந்தும்<Jews>  தங்களை  யூதரென்று<Jews>  பொய்  சொல்லுகிறவர்களாகிய  சாத்தானுடைய  கூட்டத்தாரில்  சிலரை  உனக்குக்  கொடுப்பேன்;  இதோ,  அவர்கள்  உன்  பாதங்களுக்கு  முன்பாக  வந்து  பணிந்து,  நான்  உன்மேல்  அன்பாயிருக்கிறதை  அறிந்துகொள்ளும்படி  செய்வேன்.  {Rev  3:9}

 

என்  பொறுமையைக்குறித்துச்  சொல்லிய  வசனத்தை  நீ  காத்துக்கொண்டபடியினால்,  பூமியில்  குடியிருக்கிறவர்களைச்  சோதிக்கும்படியாகப்  பூச்சக்கரத்தின்மேலெங்கும்  வரப்போகிற  சோதனைகாலத்திற்குத்  தப்பும்படி  நானும்  உன்னைக்  காப்பேன்.  {Rev  3:10}

 

இதோ,  சீக்கிரமாய்  வருகிறேன்;  ஒருவனும்  உன்  கிரீடத்தை  எடுத்துக்கொள்ளாதபடிக்கு  உனக்குள்ளதைப்  பற்றிக்கொண்டிரு.  {Rev  3:11}

 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ  அவனை  என்  தேவனுடைய  ஆலயத்திலே  தூணாக்குவேன்,  அதினின்று  அவன்  ஒருக்காலும்  நீங்குவதில்லை;  என்  தேவனுடைய  நாமத்தையும்  என்  தேவனால்  பரலோகத்திலிருந்திறங்கிவருகிற  புதிய  எருசலேமாகிய<Jerusalem>  என்  தேவனுடைய  நகரத்தின்  நாமத்தையும்,  என்  புதிய  நாமத்தையும்  அவன்மேல்  எழுதுவேன்.  {Rev  3:12}

 

ஆவியானவர்  சபைகளுக்குச்  சொல்லுகிறதைக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றெழுது.  {Rev  3:13}

 

லவோதிக்கேயா<Laodiceans>  சபையின்  தூதனுக்கு  நீ  எழுதவேண்டியது  என்னவெனில்:  உண்மையும்  சத்தியமுமுள்ள  சாட்சியும்,  தேவனுடைய  சிருஷ்டிக்கு  ஆதியுமாயிருக்கிற  ஆமென்<Amen>  என்பவர்  சொல்லுகிறதாவது;  {Rev  3:14}

 

உன்  கிரியைகளை  அறிந்திருக்கிறேன்;  நீ  குளிருமல்ல  அனலுமல்ல;  நீ  குளிராயாவது  அனலாயாவது  இருந்தால்  நலமாயிருக்கும்.  {Rev  3:15}

 

இப்படி  நீ  குளிருமின்றி  அனலுமின்றி  வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால்  உன்னை  என்  வாயினின்று  வாந்திபண்ணிப்போடுவேன்.  {Rev  3:16}

 

நீ  நிர்ப்பாக்கியமுள்ளவனும்,  பரிதபிக்கப்படத்தக்கவனும்,  தரித்திரனும்,  குருடனும்,  நிர்வாணியுமாயிருக்கிறதை  அறியாமல்,  நான்  ஐசுவரியவானென்றும்,  திரவியசம்பன்னனென்றும்,  எனக்கு  ஒரு  குறைவுமில்லையென்றும்  சொல்லுகிறபடியால்;  {Rev  3:17}

 

நான்:  நீ  ஐசுவரியவானாகும்படிக்கு  நெருப்பிலே  புடமிடப்பட்ட  பொன்னையும்,  உன்  நிர்வாணமாகிய  அவலட்சணம்  தோன்றாதபடிக்கு  நீ  உடுத்திக்கொள்வதற்கு  வெண்வஸ்திரங்களையும்  என்னிடத்திலே  வாங்கிக்கொள்ளவும்,  நீ  பார்வையடையும்படிக்கு  உன்  கண்களுக்குக்  கலிக்கம்போடவும்  வேண்டுமென்று  உனக்கு  ஆலோசனை  சொல்லுகிறேன்.  {Rev  3:18}

 

நான்  நேசிக்கிறவர்களெவர்களோ  அவர்களைக்  கடிந்துகொண்டு  சிட்சிக்கிறேன்;  ஆகையால்  நீ  ஜாக்கிரதையாயிருந்து,  மனந்திரும்பு.  {Rev  3:19}

 

இதோ,  வாசற்படியிலே  நின்று  தட்டுகிறேன்;  ஒருவன்  என்  சத்தத்தைக்  கேட்டு,  கதவைத்  திறந்தால்,  அவனிடத்தில்  நான்  பிரவேசித்து,  அவனோடே  போஜனம்பண்ணுவேன்,  அவனும்  என்னோடே  போஜனம்பண்ணுவான்.  {Rev  3:20}

 

நான்  ஜெயங்கொண்டு  என்  பிதாவினுடைய  சிங்காசனத்திலே  அவரோடேகூட  உட்கார்ந்ததுபோல,  ஜெயங்கொள்ளுகிறவனெவனோ  அவனும்  என்னுடைய  சிங்காசனத்தில்  என்னோடேகூட  உட்காரும்படிக்கு  அருள்செய்வேன்.  {Rev  3:21}

 

ஆவியானவர்  சபைகளுக்குச்  சொல்லுகிறதைக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றெழுது  என்றார்.  {Rev  3:22}

 

இவைகளுக்குப்பின்பு,  இதோ,  பரலோகத்தில்  திறக்கப்பட்டிருந்த  ஒரு  வாசலைக்  கண்டேன்.  முன்னே  எக்காளசத்தம்போல  என்னுடனே  பேச  நான்  கேட்டிருந்த  சத்தமானது:  இங்கே  ஏறிவா,  இவைகளுக்குப்பின்பு  சம்பவிக்கவேண்டியவைகளை  உனக்குக்  காண்பிப்பேன்  என்று  விளம்பினது.  {Rev  4:1}

 

உடனே  ஆவிக்குள்ளானேன்;  அப்பொழுது,  இதோ,  வானத்தில்  ஒரு  சிங்காசனம்  வைக்கப்பட்டிருந்தது,  அந்தச்  சிங்காசனத்தின்மேல்  ஒருவர்  வீற்றிருந்தார்.  {Rev  4:2}

 

வீற்றிருந்தவர்,  பார்வைக்கு  வச்சிரக்கல்லுக்கும்  பதுமராகத்துக்கும்  ஒப்பாயிருந்தார்;  அந்தச்  சிங்காசனத்தைச்சுற்றி  ஒரு  வானவில்லிருந்தது;  அது  பார்வைக்கு  மரகதம்போல்  தோன்றிற்று.  {Rev  4:3}

 

அந்தச்  சிங்காசனத்தைச்  சூழ  இருபத்துநான்கு  சிங்காசனங்களிருந்தன;  இருபத்துநான்கு  மூப்பர்கள்  வெண்வஸ்திரந்தரித்து,  தங்கள்  சிரசுகளில்  பொன்முடி  சூடி,  அந்தச்  சிங்காசனங்களின்மேல்  உட்கார்ந்திருக்கக்கண்டேன்.  {Rev  4:4}

 

அந்தச்  சிங்காசனத்திலிருந்து  மின்னல்களும்  இடிமுழக்கங்களும்  சத்தங்களும்  புறப்பட்டன;  தேவனுடைய  ஏழு  ஆவிகளாகிய  ஏழு  அக்கினி  தீபங்கள்  சிங்காசனத்திற்கு  முன்பாக  எரிந்துகொண்டிருந்தன.  {Rev  4:5}

 

அந்தச்  சிங்காசனத்திற்கு  முன்பாகப்  பளிங்குக்கொப்பான  கண்ணாடிக்கடலிருந்தது;  அந்தச்  சிங்காசனத்தின்  மத்தியிலும்  அந்தச்  சிங்காசனத்தைச்  சுற்றிலும்  நான்கு  ஜீவன்களிருந்தன,  அவைகள்  முன்புறத்திலும்  பின்புறத்திலும்  கண்களால்  நிறைந்திருந்தன.  {Rev  4:6}

 

முதலாம்  ஜீவன்  சிங்கத்திற்கொப்பாகவும்,  இரண்டாம்  ஜீவன்  காளைக்கொப்பாகவும்,  மூன்றாம்  ஜீவன்  மனுஷமுகம்  போன்ற  முகமுள்ளதாகவும்,  நான்காம்  ஜீவன்  பறக்கிற  கழுகுக்கு  ஒப்பாகவுமிருந்தன.  {Rev  4:7}

 

அந்த  நான்கு  ஜீவன்களிலும்  ஒவ்வொன்று  அவ்வாறு  சிறகுகளுள்ளவைகளும்,  சுற்றிலும்  உள்ளேயும்  கண்களால்  நிறைந்தவைகளுமாயிருந்தன.  அவைகள்:  இருந்தவரும்  இருக்கிறவரும்  வருகிறவருமாகிய  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தர்  பரிசுத்தர்  பரிசுத்தர்  பரிசுத்தர்  என்று  இரவும்  பகலும்  ஓய்வில்லாமல்  சொல்லிக்கொண்டிருந்தன.  {Rev  4:8}

 

மேலும்,  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்து,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவருக்கு  அந்த  ஜீவன்கள்,  மகிமையையும்  கனத்தையும்  ஸ்தோத்திரத்தையும்  செலுத்தும்போது,  {Rev  4:9}

 

இருபத்துநான்கு  மூப்பர்களும்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருக்கு  முன்பாக  வணக்கமாய்  விழுந்து,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவரைத்  தொழுதுகொண்டு,  தங்கள்  கிரீடங்களைச்  சிங்காசனத்திற்குமுன்பாக  வைத்து:  {Rev  4:10}

 

கர்த்தாவே,  தேவரீர்,  மகிமையையும்  கனத்தையும்  வல்லமையையும்  பெற்றுக்கொள்ளுகிறதற்குப்  பாத்திரராயிருக்கிறீர்;  நீரே  சகலத்தையும்  சிருஷ்டித்தீர்,  உம்முடைய  சித்தத்தினாலே  அவைகள்  உண்டாயிருக்கிறவைகளும்  சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது  என்றார்கள்.  {Rev  4:11}

 

அன்றியும்,  உள்ளும்  புறம்பும்  எழுதப்பட்டு,  ஏழு  முத்திரைகளால்  முத்திரிக்கப்பட்டிருந்த  ஒரு  புஸ்தகத்தைச்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருடைய  வலதுகரத்திலே  கண்டேன்.  {Rev  5:1}

 

புஸ்தகத்தைத்  திறக்கவும்  அதின்  முத்திரைகளை  உடைக்கவும்  பாத்திரவான்  யார்  என்று  மிகுந்த  சத்தமிட்டுக்  கூறுகிற  பலமுள்ள  ஒரு  தூதனையுங்  கண்டேன்.  {Rev  5:2}

 

வானத்திலாவது,  பூமியிலாவது,  பூமியின்கீழாவது,  ஒருவனும்  அந்தப்  புஸ்தகத்தைத்  திறக்கவும்,  அதைப்  பார்க்கவும்  கூடாதிருந்தது.  {Rev  5:3}

 

ஒருவனும்  அந்தப்  புஸ்தகத்தைத்  திறந்து  வாசிக்கவும்  அதைப்  பார்க்கவும்  பாத்திரவானாகக்  காணப்படாததினால்  நான்  மிகவும்  அழுதேன்.  {Rev  5:4}

 

அப்பொழுது  மூப்பர்களில்  ஒருவன்  என்னை  நோக்கி:  நீ  அழவேண்டாம்;  இதோ,  யூதா<Juda>  கோத்திரத்துச்  சிங்கமும்  தாவீதின்<David>  வேருமானவர்  புஸ்தகத்தைத்  திறக்கவும்  அதின்  ஏழு  முத்திரைகளையும்  உடைக்கவும்  ஜெயங்கொண்டிருக்கிறார்  என்றான்.  {Rev  5:5}

 

அப்பொழுது,  இதோ,  அடிக்கப்பட்ட  வண்ணமாயிருக்கிற  ஒரு  ஆட்டுக்குட்டி  சிங்காசனத்திற்கும்,  நான்கு  ஜீவன்களுக்கும்,  மூப்பர்களுக்கும்  மத்தியிலே  நிற்கக்கண்டேன்;  அது  ஏழு  கொம்புகளையும்  ஏழு  கண்களையும்  உடையதாயிருந்தது;  அந்தக்  கண்கள்  பூமியெங்கும்  அனுப்பப்படுகிற  தேவனுடைய  ஏழு  ஆவிகளேயாம்.  {Rev  5:6}

 

அந்த  ஆட்டுக்குட்டியானவர்  வந்து,  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்தவருடைய  வலதுகரத்திலிருந்த  புஸ்தகத்தை  வாங்கினார்.  {Rev  5:7}

 

அந்தப்  புஸ்தகத்தை  அவர்  வாங்கினபோது,  அந்த  நான்கு  ஜீவன்களும்,  இருபத்துநான்கு  மூப்பர்களும்  தங்கள்  தங்கள்  சுரமண்டலங்களையும்,  பரிசுத்தவான்களுடைய  ஜெபங்களாகிய  தூபவர்க்கத்தால்  நிறைந்த  பொற்கலசங்களையும்  பிடித்துக்கொண்டு,  ஆட்டுக்குட்டியானவருக்கு  முன்பாக  வணக்கமாய்  விழுந்து:  {Rev  5:8}

 

தேவரீர்  புஸ்தகத்தை  வாங்கவும்  அதின்  முத்திரைகளை  உடைக்கவும்  பாத்திரராயிருக்கிறீர்;  ஏனெனில்  நீர்  அடிக்கப்பட்டு,  சகல  கோத்திரங்களிலும்  பாஷைக்காரரிலும்  ஜனங்களிலும்  ஜாதிகளிலுமிருந்து  எங்களைத்  தேவனுக்கென்று  உம்முடைய  இரத்தத்தினாலே  மீட்டுக்கொண்டு,  {Rev  5:9}

 

எங்கள்  தேவனுக்குமுன்பாக  எங்களை  ராஜாக்களும்  ஆசாரியர்களுமாக்கினீர்;  நாங்கள்  பூமியிலே  அரசாளுவோம்  என்று  புதிய  பாட்டைப்  பாடினார்கள்.  {Rev  5:10}

 

பின்னும்  நான்  பார்த்தபோது,  சிங்காசனத்தையும்  ஜீவன்களையும்  மூப்பர்களையும்  சூழ்ந்திருந்த  அநேக  தூதர்களுடைய  சத்தத்தைக்  கேட்டேன்;  அவர்களுடைய  இலக்கம்  பதினாயிரம்  பதினாயிரமாகவும்,  ஆயிரமாயிரமாகவுமிருந்தது.  {Rev  5:11}

 

அவர்களும்  மகா  சத்தமிட்டு:  அடிக்கப்பட்ட  ஆட்டுக்குட்டியானவர்  வல்லமையையும்  ஐசுவரியத்தையும்  ஞானத்தையும்  பெலத்தையும்  கனத்தையும்  மகிமையையும்  ஸ்தோத்திரத்தையும்  பெற்றுக்கொள்ளப்  பாத்திரராயிருக்கிறார்  என்று  சொன்னார்கள்.  {Rev  5:12}

 

அப்பொழுது,  வானத்திலும்  பூமியிலும்  பூமியின்கீழுமிருக்கிற  சிருஷ்டிகள்  யாவும்,  சமுத்திரத்திலுள்ளவைகளும்,  அவற்றுளடங்கிய  வஸ்துக்கள்  யாவும்:  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும்  ஸ்தோத்திரமும்  கனமும்  மகிமையும்  வல்லமையும்  சதாகாலங்களிலும்  உண்டாவதாக  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  5:13}

 

அதற்கு  நான்கு  ஜீவன்களும்:  ஆமென்<Amen>  என்று  சொல்லின.  இருபத்துநான்கு  மூப்பர்களும்  வணக்கமாய்  விழுந்து  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவரைத்  தொழுதுகொண்டார்கள்.  {Rev  5:14}

 

ஆட்டுக்குட்டியானவர்  முத்திரைகளில்  ஒன்றை  உடைக்கக்கண்டேன்.  அப்பொழுது  நான்கு  ஜீவன்களில்  ஒன்று  என்னை  நோக்கி:  நீ  வந்து  பார்  என்று  இடிமுழக்கம்போன்ற  சத்தமாய்ச்  சொல்லக்கேட்டேன்.  {Rev  6:1}

 

நான்  பார்த்தபோது,  இதோ,  ஒரு  வெள்ளைக்குதிரையைக்  கண்டேன்;  அதின்மேல்  ஏறியிருந்தவன்  வில்லைப்  பிடித்திருந்தான்;  அவனுக்கு  ஒரு  கிரீடங்  கொடுக்கப்பட்டது;  அவன்  ஜெயிக்கிறவனாகவும்  ஜெயிப்பவனாகவும்  புறப்பட்டான்.  {Rev  6:2}

 

அவர்  இரண்டாம்  முத்திரையை  உடைத்தபோது,  இரண்டாம்  ஜீவனானது:  நீ  வந்துபார்  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  6:3}

 

அப்பொழுது  சிவப்பான  வேறொரு  குதிரை  புறப்பட்டது;  அதின்மேல்  ஏறியிருந்தவனுக்கு,  பூமியிலுள்ளவர்கள்  ஒருவரையொருவர்  கொலைசெய்யத்தக்கதாகச்  சமாதானத்தைப்  பூமியிலிருந்தெடுத்துப்  போடும்படியான  அதிகாரம்  கொடுக்கப்பட்டது;  ஒரு  பெரிய  பட்டயமும்  அவனுக்குக்  கொடுக்கப்பட்டது.  {Rev  6:4}

 

அவர்  மூன்றாம்  முத்திரையை  உடைத்தபோது,  மூன்றாம்  ஜீவனானது:  நீ  வந்துபார்  என்று  சொல்லக்கேட்டேன்.  நான்  பார்த்தபோது,  இதோ,  ஒரு  கறுப்புக்குதிரையைக்  கண்டேன்;  அதின்மேல்  ஏறியிருந்தவன்  ஒரு  தராசைத்  தன்  கையிலே  பிடித்திருந்தான்.  {Rev  6:5}

 

அப்பொழுது,  ஒரு  பணத்துக்கு  ஒருபடி  கோதுமையென்றும்,  ஒரு  பணத்துக்கு  மூன்றுபடி  வாற்கோதுமையென்றும்,  எண்ணெயையும்  திராட்சரசத்தையும்  சேதப்படுத்தாதே  என்றும்,  நான்கு  ஜீவன்களின்  மத்தியிலிருந்து  உண்டான  சத்தத்தைக்  கேட்டேன்.  {Rev  6:6}

 

அவர்  நாலாம்  முத்திரையை  உடைத்தபோது,  நாலாம்  ஜீவனானது:  நீ  வந்துபார்  என்று  சொல்லுஞ்  சத்தத்தைக்  கேட்டேன்.  {Rev  6:7}

 

நான்  பார்த்தபோது,  இதோ,  மங்கின  நிறமுள்ள  ஒரு  குதிரையைக்  கண்டேன்;  அதின்மேல்  ஏறியிருந்தவனுக்கு  மரணம்  என்று  பெயர்;  பாதாளம்  அவன்பின்  சென்றது.  பட்டயத்தினாலும்,  பஞ்சத்தினாலும்,  சாவினாலும்,  பூமியின்  துஷ்ட  மிருகங்களினாலும்,  பூமியின்  காற்பங்கிலுள்ளவர்களைக்  கொலைசெய்யும்படியான  அதிகாரம்  அவைகளுக்குக்  கொடுக்கப்பட்டது.  {Rev  6:8}

 

அவர்  ஐந்தாம்  முத்திரையை  உடைத்தபோது,  தேவவசனத்தினிமித்தமும்  தாங்கள்  கொடுத்த  சாட்சியினிமித்தமும்  கொல்லப்பட்டவர்களுடைய  ஆத்துமாக்களைப்  பலிபீடத்தின்கீழே  கண்டேன்.  {Rev  6:9}

 

அவர்கள்:  பரிசுத்தமும்  சத்தியமுமுள்ள  ஆண்டவரே,  தேவரீர்  பூமியின்மேல்  குடியிருக்கிறவர்களிடத்தில்  எங்கள்  இரத்தத்தைக்குறித்து  எதுவரைக்கும்  நியாயத்தீர்ப்புச்செய்யாமலும்  பழிவாங்காமலும்  இருப்பீர்  என்று  மகா  சத்தமிட்டுக்  கூப்பிட்டார்கள்.  {Rev  6:10}

 

அப்பொழுது  அவர்கள்  ஒவ்வொருவருக்கும்  வெள்ளை  அங்கிகள்  கொடுக்கப்பட்டது;  அன்றியும்,  அவர்கள்  தங்களைப்போலக்  கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய  தங்கள்  உடன்பணிவிடைக்காரரும்  தங்கள்  சகோதரருமானவர்களின்  தொகை  நிறைவாகுமளவும்  இன்னுங்கொஞ்சக்காலம்  இளைப்பாறவேண்டும்  என்று  அவர்களுக்குச்  சொல்லப்பட்டது.  {Rev  6:11}

 

அவர்  ஆறாம்  முத்திரையை  உடைக்கக்கண்டேன்;  இதோ,  பூமி  மிகவும்  அதிர்ந்தது;  சூரியன்  கறுப்புக்  கம்பளியைப்போலக்  கறுத்தது;  சந்திரன்  இரத்தம்  போலாயிற்று.  {Rev  6:12}

 

அத்திமரமானது  பெருங்காற்றினால்  அசைக்கப்படும்போது,  அதின்  காய்கள்  உதிருகிறதுபோல,  வானத்தின்  நட்சத்திரங்களும்  பூமியிலே  விழுந்தது.  {Rev  6:13}

 

வானமும்  சுருட்டப்பட்ட  புஸ்தகம்  போலாகி  விலகிப்போயிற்று;  மலைகள்  தீவுகள்  யாவும்  தங்கள்  இடங்களைவிட்டு  அகன்றுபோயின.  {Rev  6:14}

 

பூமியின்  ராஜாக்களும்,  பெரியோர்களும்,  ஐசுவரியவான்களும்,  சேனைத்தலைவர்களும்,  பலவான்களும்,  அடிமைகள்  யாவரும்,  சுயாதீனர்  யாவரும்,  பர்வதங்களின்  குகைகளிலும்  கன்மலைகளிலும்  ஒளித்துக்கொண்டு,  {Rev  6:15}

 

பர்வதங்களையும்  கன்மலைகளையும்  நோக்கி:  நீங்கள்  எங்கள்மேல்  விழுந்து,  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவருடைய  முகத்திற்கும்,  ஆட்டுக்குட்டியானவருடைய  கோபத்திற்கும்  எங்களை  மறைத்துக்கொள்ளுங்கள்;  {Rev  6:16}

 

அவருடைய  கோபாக்கினையின்  மகாநாள்  வந்துவிட்டது,  யார்  நிலைநிற்கக்கூடும்  என்றார்கள்.  {Rev  6:17}

 

இவைகளுக்குப்பின்பு,  பூமியின்  நான்கு  திசைகளிலும்  நான்கு  தூதர்கள்  நின்று,  பூமியின்மேலாவது,  சமுத்திரத்தின்மேலாவது,  ஒரு  மரத்தின்மேலாவது,  காற்று  அடியாதபடிக்கு,  பூமியின்  நான்கு  காற்றுகளையும்  பிடித்திருக்கக்கண்டேன்.  {Rev  7:1}

 

ஜீவனுள்ள  தேவனுடைய  முத்திரைக்  கோலையுடைய  வேறொரு  தூதன்  சூரியன்  உதிக்குந்திசையிலிருந்து  ஏறிவரக்கண்டேன்;  அவன்,  பூமியையும்  சமுத்திரத்தையும்  சேதப்படுத்துகிறதற்கு  அதிகாரம்  பெற்ற  அந்த  நான்கு  தூதரையும்  நோக்கி:  {Rev  7:2}

 

நாம்  நமது  தேவனுடைய  ஊழியக்காரரின்  நெற்றிகளில்  முத்திரைபோட்டுத்  தீருமளவும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  மரங்களையும்  சேதப்படுத்தாதிருங்கள்  என்று  மகா  சத்தமிட்டுக்  கூப்பிட்டான்.  {Rev  7:3}

 

முத்திரைபோடப்பட்டவர்களின்  தொகையைச்  சொல்லக்கேட்டேன்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  சகல  கோத்திரங்களிலும்  முத்திரைபோடப்பட்டவர்கள்  இலட்சத்து  நாற்பத்து  நாலாயிரம்பேர்.  {Rev  7:4}

 

யூதா<Juda>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  ரூபன்<Reuben>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  காத்<Gad>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  {Rev  7:5}

 

ஆசேர்<Aser>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  நப்தலி<Nepthalim>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  மனாசே<Manasses>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  {Rev  7:6}

 

சிமியோன்<Simeon>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  லேவி<Levi>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  இசக்கார்<Issachar>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  {Rev  7:7}

 

செபுலோன்<Zabulon>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  யோசேப்பு<Joseph>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தில்  முத்திரைபோடப்பட்டவர்கள்  பன்னீராயிரம்.  {Rev  7:8}

 

இவைகளுக்குப்பின்பு,  நான்  பார்த்தபோது,  இதோ,  சகல  ஜாதிகளிலும்  கோத்திரங்களிலும்  ஜனங்களிலும்  பாஷைக்காரரிலுமிருந்து  வந்ததும்,  ஒருவனும்  எண்ணக்கூடாததுமான  திரளான  கூட்டமாகிய  ஜனங்கள்,  வெள்ளை  அங்கிகளைத்  தரித்து,  தங்கள்  கைகளில்  குருத்தோலைகளைப்  பிடித்து,  சிங்காசனத்திற்கு  முன்பாகவும்  ஆட்டுக்குட்டியானவருக்கு  முன்பாகவும்  நிற்கக்கண்டேன்.  {Rev  7:9}

 

அவர்கள்  மகா  சத்தமிட்டு:  இரட்சிப்பின்  மகிமை  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிற  எங்கள்  தேவனுக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும்  உண்டாவதாக  என்று  ஆர்ப்பரித்தார்கள்.  {Rev  7:10}

 

தூதர்கள்  யாவரும்  சிங்காசனத்தையும்  மூப்பர்களையும்  நான்கு  ஜீவன்களையும்  சூழநின்று,  சிங்காசனத்திற்குமுன்பாக  முகங்குப்புற  விழுந்து,  தேவனைத்  தொழுதுகொண்டு:  {Rev  7:11}

 

ஆமென்<Amen>,  எங்கள்  தேவனுக்குத்  துதியும்  மகிமையும்  ஞானமும்  ஸ்தோத்திரமும்  கனமும்  வல்லமையும்  பெலனும்  சதாகாலங்களிலும்  உண்டாவதாக;  ஆமென்<Amen>,  என்றார்கள்.  {Rev  7:12}

 

அப்பொழுது,  மூப்பர்களில்  ஒருவன்  என்னை  நோக்கி:  வெள்ளை  அங்கிகளைத்  தரித்திருக்கிற  இவர்கள்  யார்?  எங்கேயிருந்து  வந்தார்கள்?  என்று  கேட்டான்.  {Rev  7:13}

 

அதற்கு  நான்:  ஆண்டவனே,  அது  உமக்கே  தெரியும்  என்றேன்.  அப்பொழுது  அவன்:  இவர்கள்  மிகுந்த  உபத்திரவத்திலிருந்து  வந்தவர்கள்;  இவர்கள்  தங்கள்  அங்கிகளை  ஆட்டுக்குட்டியானவருடைய  இரத்தத்திலே  தோய்த்து  வெளுத்தவர்கள்.  {Rev  7:14}

 

ஆனபடியால்,  இவர்கள்  தேவனுடைய  சிங்காசனத்திற்கு  முன்பாக  இருந்து,  இரவும்  பகலும்  அவருடைய  ஆலயத்திலே  அவரைச்  சேவிக்கிறார்கள்;  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறவர்  இவர்களுக்குள்ளே  வாசமாயிருப்பார்.  {Rev  7:15}

 

இவர்கள்  இனி  பசியடைவதுமில்லை,  இனி  தாகமடைவதுமில்லை;  வெயிலாவது  உஷ்ணமாவது  இவர்கள்மேல்  படுவதுமில்லை.  {Rev  7:16}

 

சிங்காசனத்தின்  மத்தியிலிருக்கிற  ஆட்டுக்குட்டியானவரே  இவர்களை  மேய்த்து,  இவர்களை  ஜீவத்தண்ணீருள்ள  ஊற்றுகளண்டைக்கு  நடத்துவார்;  தேவன்தாமே  இவர்களுடைய  கண்ணீர்  யாவையும்  துடைப்பார்  என்றான்.  {Rev  7:17}

 

அவர்  ஏழாம்  முத்திரையை  உடைத்தபோது,  பரலோகத்தில்  ஏறக்குறைய  அரைமணிநேரமளவும்  அமைதல்  உண்டாயிற்று.  {Rev  8:1}

 

பின்பு,  தேவனுக்குமுன்பாக  நிற்கிற  ஏழு  தூதர்களையுங்  கண்டேன்;  அவர்களுக்கு  ஏழு  எக்காளங்கள்  கொடுக்கப்பட்டது.  {Rev  8:2}

 

வேறொரு  தூதனும்  வந்து,  தூபங்காட்டும்  பொற்கலசத்தைப்  பிடித்துப்  பலிபீடத்தின்  படியிலே  நின்றான்;  சிங்காசனத்திற்குமுன்பாக  இருந்த  பொற்பீடத்தின்மேல்  சகல  பரிசுத்தவான்களுடைய  ஜெபங்களோடும்  செலுத்தும்படி  மிகுந்த  தூபவர்க்கம்  அவனுக்குக்  கொடுக்கப்பட்டது.  {Rev  8:3}

 

அப்படியே  பரிசுத்தவான்களுடைய  ஜெபங்களோடும்  செலுத்தப்பட்ட  தூபவர்க்கத்தின்  புகையானது  தூதனுடைய  கையிலிருந்து  தேவனுக்குமுன்பாக  எழும்பிற்று.  {Rev  8:4}

 

பின்பு,  அந்தத்  தூதன்  தூபகலசத்தை  எடுத்து,  அதைப்  பலிபீடத்து  நெருப்பினால்  நிரப்பி,  பூமியிலே  கொட்டினான்;  உடனே  சத்தங்களும்,  இடிமுழக்கங்களும்,  மின்னல்களும்,  பூமியதிர்ச்சியும்  உண்டாயின.  {Rev  8:5}

 

அப்பொழுது,  ஏழு  எக்காளங்களையுடைய  ஏழு  தூதர்கள்  எக்காளம்  ஊதுகிறதற்குத்  தங்களை  ஆயத்தப்படுத்தினார்கள்.  {Rev  8:6}

 

முதலாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  இரத்தங்கலந்த  கல்மழையும்  அக்கினியும்  உண்டாகி,  பூமியிலே  கொட்டப்பட்டது;  அதினால்  மரங்களில்  மூன்றிலொருபங்கு  வெந்துபோயிற்று,  பசும்புல்லெல்லாம்  எரிந்துபோயிற்று.  {Rev  8:7}

 

இரண்டாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  அக்கினியால்  எரிகிற  பெரிய  மலைபோன்றதொன்று  சமுத்திரத்திலே  போடப்பட்டது;  அதினால்  சமுத்திரத்தில்  மூன்றிலொருபங்கு  இரத்தமாயிற்று.  {Rev  8:8}

 

சமுத்திரத்திலிருந்த  ஜீவனுள்ள  சிருஷ்டிகளில்  மூன்றிலொருபங்கு  செத்துப்போயிற்று;  கப்பல்களில்  மூன்றிலொருபங்கு  சேதமாயிற்று.  {Rev  8:9}

 

மூன்றாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  ஒரு  பெரிய  நட்சத்திரம்  தீவட்டியைப்போல  எரிந்து,  வானத்திலிருந்து  விழுந்தது;  அது  ஆறுகளில்  மூன்றிலொருபங்கின்மேலும்,  நீரூற்றுகளின்மேலும்  விழுந்தது.  {Rev  8:10}

 

அந்த  நட்சத்திரத்திற்கு  எட்டியென்று  பெயர்;  அதினால்  தண்ணீரில்  மூன்றிலொருபங்கு  எட்டியைப்போலக்  கசப்பாயிற்று;  இப்படிக்  கசப்பான  தண்ணீரினால்  மனுஷரில்  அநேகர்  செத்தார்கள்.  {Rev  8:11}

 

நான்காம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  சூரியனில்  மூன்றிலொரு  பங்கும்,  சந்திரனில்  மூன்றிலொருபங்கும்,  நட்சத்திரங்களில்  மூன்றிலொருபங்கும்  சேதப்பட்டது,  அவற்றவற்றில்  மூன்றிலொருபங்கு  இருளடைந்தது;  பகலிலும்  மூன்றிலொருபங்கு  பிரகாசமில்லாமற்போயிற்று,  இரவிலும்  அப்படியேயாயிற்று.  {Rev  8:12}

 

பின்பு,  ஒரு  தூதன்  வானத்தின்  மத்தியிலே  பறந்துவரக்கண்டேன்;  அவன்  மகா  சத்தமிட்டு:  இனி  எக்காளம்  ஊதப்போகிற  மற்ற  மூன்று  தூதருடைய  எக்காளசத்தங்களினால்  பூமியில்  குடியிருக்கிறவர்களுக்கு  ஐயோ,  ஐயோ,  ஐயோ,  (ஆபத்துவரும்)  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  8:13}

 

ஐந்தாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  வானத்திலிருந்து  பூமியின்மேல்  விழுந்த  ஒரு  நட்சத்திரத்தைக்  கண்டேன்;  அவனுக்குப்  பாதாளக்குழியின்  திறவுகோல்  கொடுக்கப்பட்டது.  {Rev  9:1}

 

அவன்  பாதாளக்குழியைத்  திறந்தான்;  உடனே  பெருஞ்சூளையின்  புகையைப்போல  அந்தக்  குழியிலிருந்து  புகைஎழும்பிற்று;  அந்தக்  குழியின்  புகையினால்  சூரியனும்  ஆகாயமும்  அந்தகாரப்பட்டது.  {Rev  9:2}

 

அந்தப்  புகையிலிருந்து  வெட்டுக்கிளிகள்  புறப்பட்டுப்  பூமியின்மேல்  வந்தது;  அவைகளுக்குப்  பூமியிலுள்ள  தேள்களின்  வல்லமைக்கொப்பான  வல்லமை  கொடுக்கப்பட்டது.  {Rev  9:3}

 

பூமியின்  புல்லையும்  பசுமையான  எந்தப்  பூண்டையும்  எந்த  மரத்தையும்  சேதப்படுத்தாமல்,  தங்கள்  நெற்றிகளில்  தேவனுடைய  முத்திரையைத்  தரித்திராத  மனுஷரைமாத்திரம்  சேதப்படுத்த  அவைகளுக்கு  உத்தரவு  கொடுக்கப்பட்டது.  {Rev  9:4}

 

மேலும்  அவர்களைக்  கொலைசெய்யும்படிக்கு  அவைகளுக்கு  உத்தரவு  கொடுக்கப்படாமல்,  ஐந்துமாதமளவும்  அவர்களை  வேதனைப்படுத்தும்படிக்கு  உத்தரவு  கொடுக்கப்பட்டது;  அவைகள்  செய்யும்  வேதனை  தேளானது  மனுஷரைக்  கொட்டும்போது  உண்டாகும்  வேதனையைப்போலிருக்கும்.  {Rev  9:5}

 

அந்நாட்களில்  மனுஷர்கள்  சாவைத்தேடியும்  அதைக்  காணாதிருப்பார்கள்,  சாகவேண்டுமென்று  ஆசைப்படுவார்கள்,  சாவோ  அவர்களுக்கு  விலகி  ஓடிப்போம்.  {Rev  9:6}

 

அந்த  வெட்டுக்கிளிகளின்  உருவம்  யுத்தத்திற்கு  ஆயத்தம்பண்ணப்பட்ட  குதிரைகளுக்கு  ஒப்பாயிருந்தது;  அவைகளுடைய  தலைகளின்மேல்  பொன்மயமான  கிரீடம்  போன்றவைகளிருந்தன;  அவைகளின்  முகங்கள்  மனுஷருடைய  முகங்கள்போலிருந்தன.  {Rev  9:7}

 

அவைகளுடைய  கூந்தல்  ஸ்திரீகளுடைய  கூந்தல்போலிருந்தது;  அவைகளின்  பற்கள்  சிங்கங்களின்  பற்கள்போலிருந்தன.  {Rev  9:8}

 

இருப்புக்  கவசங்களைப்போல  மார்க்கவசங்கள்  அவைகளுக்கு  இருந்தன;  அவைகளுடைய  சிறகுகளின்  இரைச்சல்  யுத்தத்திற்கு  ஓடுகிற  அநேகங்  குதிரைகள்  பூண்ட  இரதங்களின்  இரைச்சலுக்கு  ஒப்பாயிருந்தன.  {Rev  9:9}

 

அவைகள்  தேள்களின்  வால்களுக்கு  ஒப்பான  வால்களையும்,  அந்த  வால்களில்  கொடுக்குகளையும்  உடையவைகளாயிருந்தன;  அவைகள்  ஐந்து  மாதமளவும்  மனுஷரைச்  சேதப்படுத்துவதற்கு  அதிகாரம்  உடையவைகளாயிருந்தன.  {Rev  9:10}

 

அவைகளுக்கு  ஒரு  ராஜன்  உண்டு,  அவன்  பாதாளத்தின்  தூதன்;  எபிரெயு<Hebrew>  பாஷையிலே  அபெத்தோன்<Abaddon>  என்றும்,  கிரேக்கு<Greek>  பாஷையிலே  அப்பொல்லியோன்<Apollyon>  என்றும்  அவனுக்குப்  பெயர்.  {Rev  9:11}

 

முதலாம்  ஆபத்து  கடந்துபோயிற்று;  இவைகளுக்குப்பின்பு  இன்னும்  இரண்டு  ஆபத்துகள்,  இதோ,  வருகிறது.  {Rev  9:12}

 

ஆறாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  தேவனுக்கு  முன்பாக  இருந்த  பொற்பீடத்தின்  நான்கு  கொம்புகளிலுமிருந்து  ஒரு  சத்தந்தோன்றி,  {Rev  9:13}

 

எக்காளத்தைப்  பிடித்திருந்த  ஆறாம்  தூதனை  நோக்கி:  ஐபிராத்தென்னும்<Euphrates>  பெரிய  நதியண்டையிலே  கட்டப்பட்டிருக்கிற  நான்கு  தூதர்களையும்  அவிழ்த்துவிடு  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  9:14}

 

அப்பொழுது  மனுஷரில்  மூன்றிலொருபங்கைக்  கொல்லும்படிக்கு  ஒருமணிநேரத்திற்கும்,  ஒரு  நாளுக்கும்,  ஒரு  மாதத்திற்கும்,  ஒரு  வருஷத்திற்கும்  ஆயத்தமாக்கப்பட்டிருந்த  அந்த  நான்கு  தூதர்களும்  அவிழ்த்துவிடப்பட்டார்கள்.  {Rev  9:15}

 

குதிரைச்சேனைகளாகிய  இராணுவங்களின்  தொகை  இருபது  கோடியாயிருந்தது;  அவைகளின்  தொகையைச்  சொல்லக்கேட்டேன்.  {Rev  9:16}

 

குதிரைகளையும்  அவைகளின்மேல்  ஏறியிருந்தவர்களையும்  நான்  தரிசனத்தில்  கண்டவிதமாவது;  அவர்கள்  அக்கினிநிறமும்  நீலநிறமும்  கந்தகநிறமுமான  மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்;  குதிரைகளுடைய  தலைகள்  சிங்கங்களின்  தலைகளைப்போலிருந்தன;  அவைகளுடைய  வாய்களிலிருந்து  அக்கினியும்  புகையும்  கந்தகமும்  புறப்பட்டன.  {Rev  9:17}

 

அவைகளுடைய  வாய்களிலிருந்து  புறப்பட்ட  அக்கினி  புகை  கந்தகம்  என்னும்  இம்மூன்றினாலும்  மனுஷரில்  மூன்றிலொருபங்கு  கொல்லப்பட்டார்கள்.  {Rev  9:18}

 

அந்தக்  குதிரைகளின்  வல்லமை  அவைகளுடைய  வாயிலேயும்  வால்களிலேயும்  இருக்கிறது;  அவைகளுடைய  வால்கள்  பாம்புகளுக்கு  ஒப்பானவைகளாயும்,  தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது,  அவைகளாலே  சேதப்படுத்துகிறது.  {Rev  9:19}

 

அப்படியிருந்தும்,  அந்த  வாதைகளால்  கொல்லப்படாத  மற்ற  மனுஷர்கள்  பேய்களையும்,  பொன்  வெள்ளி  செம்பு  கல்  மரம்  என்பவைகளால்  செய்யப்பட்டவைகளாயும்  காணவும்  கேட்கவும்  நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற  விக்கிரகங்களையும்  வணங்காதபடிக்குத்  தங்கள்  கைகளின்  கிரியைகளைவிட்டு  மனந்திரும்பவுமில்லை;  {Rev  9:20}

 

தங்கள்  கொலைபாதகங்களையும்,  தங்கள்  சூனியங்களையும்,  தங்கள்  வேசித்தனங்களையும்,  தங்கள்  களவுகளையும்  விட்டு  மனந்திரும்பவுமில்லை.  {Rev  9:21}

 

பின்பு,  பலமுள்ள  வேறொரு  தூதன்  வானத்திலிருந்திறங்கி  வரக்கண்டேன்;  மேகம்  அவனைச்  சூழ்ந்திருந்தது,  அவனுடைய  சிரசின்மேல்  வானவில்லிருந்தது,  அவனுடைய  முகம்  சூரியனைப்போலவும்,  அவனுடைய  கால்கள்  அக்கினி  ஸ்தம்பங்களைப்போலவும்  இருந்தது.  {Rev  10:1}

 

திறக்கப்பட்ட  ஒரு  சிறு  புஸ்தகம்  அவன்  கையில்  இருந்தது;  தன்  வலதுபாதத்தைச்  சமுத்திரத்தின்மேலும்,  தன்  இடதுபாதத்தைப்  பூமியின்மேலும்  வைத்து,  {Rev  10:2}

 

சிங்கம்  கெர்ச்சிக்கிறதுபோல  மகா  சத்தமாய்  ஆர்ப்பரித்தான்;  அவன்  ஆர்ப்பரித்தபோது  ஏழு  இடிகளும்  சத்தமிட்டு  முழங்கின.  {Rev  10:3}

 

அவ்வேழு  இடிகளும்  தங்கள்  சத்தங்களை  முழங்கினபோது,  நான்  எழுதவேண்டுமென்றிருந்தேன்.  அப்பொழுது:  ஏழு  இடிமுழக்கங்கள்  சொன்னவைகளை  நீ  எழுதாமல்  முத்திரைபோடு  என்று  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகக்  கேட்டேன்.  {Rev  10:4}

 

சமுத்திரத்தின்மேலும்  பூமியின்மேலும்  நிற்கிறதாக  நான்  கண்ட  தூதன்,  தன்  கையை  வானத்திற்கு  நேராக  உயர்த்தி:  {Rev  10:5}

 

இனி  காலம்  செல்லாது;  ஆனாலும்  தேவன்  தம்முடைய  ஊழியக்காரராகிய  தீர்க்கதரிசிகளுக்குச்  சுவிசேஷமாய்  அறிவித்தபடி,  ஏழாம்  தூதனுடைய  சத்தத்தின்  நாட்களிலே  அவன்  எக்காளம்  ஊதப்போகிறபோது  தேவரகசியம்  நிறைவேறும்  என்று,  {Rev  10:6}

 

வானத்தையும்  அதிலுள்ளவைகளையும்,  பூமியையும்  அதிலுள்ளவைகளையும்,  சமுத்திரத்தையும்  அதிலுள்ளவைகளையும்  சிருஷ்டித்தவரும்,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவருமானவர்மேல்  ஆணையிட்டுச்  சொன்னான்.  {Rev  10:7}

 

நான்  வானத்திலிருந்து  பிறக்கக்கேட்ட  சத்தம்  மறுபடியும்  என்னுடனே  பேசி:  சமுத்திரத்தின்மேலும்  பூமியின்மேலும்  நிற்கிற  தூதனுடைய  கையிலிருக்கும்  திறக்கப்பட்ட  சிறு  புஸ்தகத்தை  நீ  போய்  வாங்கிக்கொள்  என்று  சொல்ல,  {Rev  10:8}

 

நான்  தூதனிடத்தில்  போய்:  அந்தச்  சிறு  புஸ்தகத்தை  எனக்குத்  தாரும்  என்றேன்.  அதற்கு  அவன்:  நீ  இதை  வாங்கிப்  புசி;  இது  உன்  வயிற்றுக்குக்  கசப்பாயிருக்கும்,  ஆகிலும்  உன்  வாய்க்கு  இது  தேனைப்போல  மதுரமாயிருக்கும்  என்றான்.  {Rev  10:9}

 

நான்  அந்தச்  சிறு  புஸ்தகத்தைத்  தூதனுடைய  கையிலிருந்து  வாங்கி,  அதைப்  புசித்தேன்;  என்  வாய்க்கு  அது  தேனைப்போல  மதுரமாயிருந்தது;  நான்  அதைப்  புசித்தவுடனே  என்  வயிறு  கசப்பாயிற்று.  {Rev  10:10}

 

அப்பொழுது  அவன்  என்னை  நோக்கி:  நீ  மறுபடியும்  அநேக  ஜனங்களையும்,  ஜாதிகளையும்,  பாஷைக்காரரையும்,  ராஜாக்களையுங்குறித்துத்  தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும்  என்றான்.  {Rev  10:11}

 

பின்பு  கைக்கோலுக்கு  ஒப்பான  ஒரு  அளவுகோல்  என்னிடத்தில்  கொடுக்கப்பட்டது.  அப்பொழுது  தேவதூதன்  நின்று,  என்னை  நோக்கி:  நீ  எழுந்து,  தேவனுடைய  ஆலயத்தையும்,  பலிபீடத்தையும்,  அதில்  தொழுதுகொள்ளுகிறவர்களையும்  அளந்துபார்.  {Rev  11:1}

 

ஆலயத்திற்குப்  புறம்பே  இருக்கிற  பிராகாரம்  புறஜாதியாருக்குக்  கொடுக்கப்பட்டபடியால்  அதை  அளவாமல்  புறம்பாக்கிப்போடு;  பரிசுத்த  நகரத்தை  அவர்கள்  நாற்பத்திரண்டு  மாதமளவும்  மிதிப்பார்கள்.  {Rev  11:2}

 

என்னுடைய  இரண்டு  சாட்சிகளும்  இரட்டு  வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய்,  ஆயிரத்திருநூற்றறுபது  நாளளவும்  தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி  அவர்களுக்கு  அதிகாரம்  கொடுப்பேன்.  {Rev  11:3}

 

பூலோகத்தின்  ஆண்டவருக்குமுன்பாக  நிற்கிற  இரண்டு  ஒலிவமரங்களும்  இரண்டு  விளக்குத்தண்டுகளும்  இவர்களே.  {Rev  11:4}

 

ஒருவன்  அவர்களைச்  சேதப்படுத்த  மனதாயிருந்தால்,  அவர்களுடைய  வாயிலிருந்து  அக்கினி  புறப்பட்டு,  அவர்களுடைய  சத்துருக்களைப்  பட்சிக்கும்;  அவர்களைச்  சேதப்படுத்த  மனதாயிருக்கிறவன்  எவனோ  அவன்  அப்படியே  கொல்லப்படவேண்டும்.  {Rev  11:5}

 

அவர்கள்  தீர்க்கதரிசனஞ்  சொல்லிவருகிற  நாட்களிலே  மழைபெய்யாதபடிக்கு  வானத்தை  அடைக்க  அவர்களுக்கு  அதிகாரமுண்டு;  அவர்கள்  தண்ணீர்களை  இரத்தமாக  மாற்றவும்,  தங்களுக்கு  வேண்டும்போதெல்லாம்  பூமியைச்  சகலவித  வாதைகளாலும்  வாதிக்கவும்  அவர்களுக்கு  அதிகாரமுண்டு.  {Rev  11:6}

 

அவர்கள்  தங்கள்  சாட்சியைச்  சொல்லி  முடித்திருக்கும்போது,  பாதாளத்திலிருந்தேறுகிற  மிருகம்  அவர்களோடே  யுத்தம்பண்ணி,  அவர்களை  ஜெயித்து,  அவர்களைக்  கொன்றுபோடும்.  {Rev  11:7}

 

அவர்களுடைய  உடல்கள்  மகா  நகரத்தின்  விசாலமான  வீதியிலே  கிடக்கும்.  அந்த  நகரம்  சோதோம்<Sodom>  என்றும்  எகிப்து<Egypt>  என்றும்  ஞானார்த்தமாய்ச்  சொல்லப்படும்;  அதிலே  நம்முடைய  கர்த்தரும்  சிலுவையிலே  அறையப்பட்டார்.  {Rev  11:8}

 

ஜனங்களிலும்,  கோத்திரங்களிலும்,  பாஷைக்காரரிலும்,  ஜாதிகளிலுமுள்ளவர்கள்  அவர்களுடைய  உடல்களை  மூன்றரை  நாள்வரைக்கும்  பார்ப்பார்கள்,  அவர்களுடைய  உடல்களைக்  கல்லறைகளில்  வைக்கவொட்டார்கள்.  {Rev  11:9}

 

அவ்விரண்டு  தீர்க்கதரிசிகளும்  பூமியின்  குடிகளை  வேதனைப்படுத்தினபடியால்  அவர்கள்  நிமித்தம்  பூமியில்  குடியிருக்கிறவர்கள்  சந்தோஷப்பட்டுக்  களிகூர்ந்து,  ஒருவருக்கொருவர்  வெகுமதிகளை  அனுப்புவார்கள்.  {Rev  11:10}

 

மூன்றரை  நாளைக்குப்பின்பு  தேவனிடத்திலிருந்து  ஜீவஆவி  அவர்களுக்குள்  பிரவேசித்தது,  அப்பொழுது  அவர்கள்  காலூன்றி  நின்றார்கள்;  அவர்களைப்  பார்த்தவர்களுக்கு  மிகுந்த  பயமுண்டாயிற்று.  {Rev  11:11}

 

இங்கே  ஏறிவாருங்கள்  என்று  வானத்திலிருந்து  தங்களுக்கு  உண்டான  பெரிய  சத்தத்தை  அவர்கள்  கேட்டு,  மேகத்தில்  ஏறி  வானத்திற்குப்  போனார்கள்;  அவர்களுடைய  சத்துருக்கள்  அவர்களைப்  பார்த்தார்கள்.  {Rev  11:12}

 

அந்நேரத்திலே  பூமி  மிகவும்  அதிர்ந்தது,  உடனே  அந்த  நகரத்தில்  பத்திலொருபங்கு  இடிந்து  விழுந்தது;  மனுஷரில்  ஏழாயிரம்பேர்  பூமியதிர்ச்சியினால்  அழிந்தார்கள்;  மீதியானவர்கள்  பயமடைந்து  பரலோகத்தின்  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  {Rev  11:13}

 

இரண்டாம்  ஆபத்து  கடந்துபோயிற்று;  இதோ,  மூன்றாம்  ஆபத்து  சீக்கிரமாய்  வருகிறது.  {Rev  11:14}

 

ஏழாம்  தூதன்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  உலகத்தின்  ராஜ்யங்கள்  நம்முடைய  கர்த்தருக்கும்,  அவருடைய  கிறிஸ்துவுக்குமுரிய<Christ>  ராஜ்யங்களாயின;  அவர்  சதாகாலங்களிலும்  ராஜ்யபாரம்  பண்ணுவார்  என்னும்  கெம்பீர  சத்தங்கள்  வானத்தில்  உண்டாயின.  {Rev  11:15}

 

அப்பொழுது  தேவனுக்கு  முன்பாகத்  தங்கள்  சிங்காசனங்கள்மேல்  உட்கார்ந்திருந்த  இருபத்துநான்கு  மூப்பர்களும்  முகங்குப்புற  விழுந்து:  {Rev  11:16}

 

இருக்கிறவரும்  இருந்தவரும்  வருகிறவருமாகிய  சர்வவல்லமையுள்ள  கர்த்தராகிய  தேவனே,  உம்மை  ஸ்தோத்திரிக்கிறோம்;  தேவரீர்  உமது  மகா  வல்லமையைக்கொண்டு  ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.  {Rev  11:17}

 

ஜாதிகள்  கோபித்தார்கள்,  அப்பொழுது  உம்முடைய  கோபம்  மூண்டது;  மரித்தோர்  நியாயத்தீர்ப்படைகிறதற்கும்,  தீர்க்கதரிசிகளாகிய  உம்முடைய  ஊழியக்காரருக்கும்  பரிசுத்தவான்களுக்கும்  உமது  நாமத்தின்மேல்  பயபக்தியாயிருந்த  சிறியோர்  பெரியோருக்கும்  பலனளிக்கிறதற்கும்,  பூமியைக்  கெடுத்தவர்களைக்  கெடுக்கிறதற்கும்,  காலம்  வந்தது  என்று  சொல்லி,  தேவனைத்  தொழுதுகொண்டார்கள்.  {Rev  11:18}

 

அப்பொழுது  பரலோகத்தில்  தேவனுடைய  ஆலயம்  திறக்கப்பட்டது,  அவருடைய  ஆலயத்திலே  அவருடைய  உடன்படிக்கையின்  பெட்டி  காணப்பட்டது;  அப்பொழுது  மின்னல்களும்,  சத்தங்களும்,  இடிமுழக்கங்களும்,  பூமியதிர்ச்சியும்,  பெருங்கல்மழையும்  உண்டாயின.  {Rev  11:19}

 

அன்றியும்  ஒரு  பெரிய  அடையாளம்  வானத்திலே  காணப்பட்டது;  ஒரு  ஸ்திரீ  சூரியனை  அணிந்திருந்தாள்,  அவள்  பாதங்களின்  கீழே  சந்திரனும்,  அவள்  சிரசின்மேல்  பன்னிரண்டு  நட்சத்திரங்களுள்ள  கிரீடமும்  இருந்தன.  {Rev  12:1}

 

அவள்  கர்ப்பவதியாயிருந்து,  பிரசவவேதனையடைந்து,  பிள்ளைபெறும்படி  வருத்தப்பட்டு  அலறினாள்.  {Rev  12:2}

 

அப்பொழுது  வேறொரு  அடையாளம்  வானத்திலே  காணப்பட்டது;  ஏழு  தலைகளையும்,  பத்துக்  கொம்புகளையும்,  தன்  தலைகளின்மேல்  ஏழு  முடிகளையுமுடைய  சிவப்பான  பெரிய  வலுசர்ப்பமிருந்தது.  {Rev  12:3}

 

அதின்  வால்  வானத்தின்  நட்சத்திரங்களில்  மூன்றிலொருபங்கை  இழுத்து,  அவைகளைப்  பூமியில்  விழத்தள்ளிற்று;  பிரசவவேதனைப்படுகிற  அந்த  ஸ்திரீ  பிள்ளை  பெற்றவுடனே,  அவளுடைய  பிள்ளையைப்  பட்சித்துப்போடும்படிக்கு  அந்த  வலுசர்ப்பம்  அவளுக்கு  முன்பாக  நின்றது.  {Rev  12:4}

 

சகல  ஜாதிகளையும்  இருப்புக்கோலால்  ஆளுகைசெய்யும்  ஆண்பிள்ளையை  அவள்  பெற்றாள்;  அவளுடைய  பிள்ளை  தேவனிடத்திற்கும்  அவருடைய  சிங்காசனத்தினிடத்திற்கும்  எடுத்துக்கொள்ளப்பட்டது.  {Rev  12:5}

 

ஸ்திரீயானவள்  வனாந்தரத்திற்கு  ஓடிப்போனாள்;  அங்கே  ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும்  அவளைப்  போஷிப்பதற்காகத்  தேவனால்  ஆயத்தமாக்கப்பட்ட  இடம்  அவளுக்கு  உண்டாயிருந்தது.  {Rev  12:6}

 

வானத்திலே  யுத்தமுண்டாயிற்று;  மிகாவேலும்<Michael>  அவனைச்  சேர்ந்த  தூதர்களும்  வலுசர்ப்பத்தோடே  யுத்தம்பண்ணினார்கள்;  வலுசர்ப்பமும்  அதைச்சேர்ந்த  தூதரும்  யுத்தம்பண்ணியும்  ஜெயங்கொள்ளவில்லை.  {Rev  12:7}

 

வானத்தில்  அவர்கள்  இருந்த  இடமும்  காணப்படாமற்போயிற்று.  {Rev  12:8}

 

உலகமனைத்தையும்  மோசம்போக்குகிற  பிசாசு  என்றும்  சாத்தான்  என்றும்  சொல்லப்பட்ட  பழைய  பாம்பாகிய  பெரிய  வலுசர்ப்பம்  தள்ளப்பட்டது;  அது  பூமியிலே  விழத்தள்ளப்பட்டது,  அதனோடேகூட  அதைச்சேர்ந்த  தூதரும்  தள்ளப்பட்டார்கள்.  {Rev  12:9}

 

அப்பொழுது  வானத்திலே  ஒரு  பெரிய  சத்தமுண்டாகி:  இப்பொழுது  இரட்சிப்பும்  வல்லமையும்  நமது  தேவனுடைய  ராஜ்யமும்,  அவருடைய  கிறிஸ்துவின்<Christ>  அதிகாரமும்  உண்டாயிருக்கிறது;  இரவும்  பகலும்  நம்முடைய  தேவனுக்கு  முன்பாக  நம்முடைய  சகோதரர்மேல்  குற்றஞ்  சுமத்தும்பொருட்டு  அவர்கள்மேல்  குற்றஞ்சாட்டுகிறவன்  தாழத்  தள்ளப்பட்டுப்போனான்.  {Rev  12:10}

 

மரணம்  நேரிடுகிறதாயிருந்தாலும்  அதற்குத்  தப்பும்படி  தங்கள்  ஜீவனையும்  பாராமல்,  ஆட்டுக்குட்டியின்  இரத்தத்தினாலும்  தங்கள்  சாட்சியின்  வசனத்தினாலும்  அவனை  ஜெயித்தார்கள்.  {Rev  12:11}

 

ஆகையால்  பரலோகங்களே!  அவைகளில்  வாசமாயிருக்கிறவர்களே!  களிகூருங்கள்.  பூமியிலும்  சமுத்திரத்திலும்  குடியிருக்கிறவர்களே!  ஐயோ,  பிசாசானவன்  தனக்குக்  கொஞ்சக்காலமாத்திரம்  உண்டென்று  அறிந்து,  மிகுந்த  கோபங்கொண்டு,  உங்களிடத்தில்  இறங்கினபடியால்,  உங்களுக்கு  ஆபத்துவரும்  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  12:12}

 

வலுசர்ப்பமானது  தான்  பூமியிலே  தள்ளப்பட்டதை  அறிந்து,  அந்த  ஆண்பிள்ளையைப்பெற்ற  ஸ்திரீயைத்  துன்பப்படுத்தினது.  {Rev  12:13}

 

ஸ்திரீயானவள்  அந்தப்  பாம்பின்  முகத்திற்கு  விலகி,  ஒரு  காலமும்,  காலங்களும்,  அரைக்காலமுமாகப்  போஷிக்கப்படத்தக்கதாய்  வனாந்தரத்திலுள்ள  தன்  இடத்திற்குப்  பறந்துபோகும்படி  பெருங்கழுகின்  இரண்டு  சிறகுகள்  அவளுக்குக்  கொடுக்கப்பட்டது.  {Rev  12:14}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீயை  வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப்  பாம்பானது  தன்  வாயிலிருந்து  ஒரு  நதிபோன்ற  வெள்ளத்தை  அவளுக்குப்  பின்னாக  ஊற்றிவிட்டது.  {Rev  12:15}

 

பூமியானது  ஸ்திரீக்கு  உதவியாகத்  தன்  வாயைத்  திறந்து,  வலுசர்ப்பம்  தன்  வாயிலிருந்து  ஊற்றின  வெள்ளத்தை  விழுங்கினது.  {Rev  12:16}

 

அப்பொழுது  வலுசர்ப்பமானது  ஸ்திரீயின்மேல்  கோபங்கொண்டு,  தேவனுடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளுகிறவர்களும்,  இயேசுகிறிஸ்துவைக்குறித்துச்<Jesus  Christ>  சாட்சியை  உடையவர்களுமாகிய  அவளுடைய  சந்ததியான  மற்றவர்களுடனே  யுத்தம்பண்ணப்போயிற்று.  {Rev  12:17}

 

பின்பு  நான்  கடற்கரை  மணலின்மேல்  நின்றேன்.  அப்பொழுது  சமுத்திரத்திலிருந்து  ஒரு  மிருகம்  எழும்பிவரக்  கண்டேன்;  அதற்கு  ஏழு  தலைகளும்  பத்துக்  கொம்புகளும்  இருந்தன;  அதின்  கொம்புகளின்மேல்  பத்து  முடிகளும்,  அதின்  தலைகளின்மேல்  தூஷணமான  நாமமும்  இருந்தன.  {Rev  13:1}

 

நான்  கண்ட  மிருகம்  சிறுத்தையைப்போலிருந்தது;  அதின்  கால்கள்  கரடியின்  கால்களைப்போலவும்,  அதின்  வாய்  சிங்கத்தின்  வாயைப்போலவும்  இருந்தன;  வலுசர்ப்பமானது  தன்  பலத்தையும்  தன்  சிங்காசனத்தையும்  மிகுந்த  அதிகாரத்தையும்  அதற்குக்  கொடுத்தது.  {Rev  13:2}

 

அதின்  தலைகளிலொன்று  சாவுக்கேதுவாய்க்  காயப்பட்டிருக்கக்  கண்டேன்;  ஆனாலும்  சாவுக்கேதுவான  அந்தக்  காயம்  சொஸ்தமாக்கப்பட்டது.  பூமியிலுள்ள  யாவரும்  ஆச்சரியத்தோடே  அந்த  மிருகத்தைப்  பின்பற்றி,  {Rev  13:3}

 

அந்த  மிருகத்திற்கு  அப்படிப்பட்ட  அதிகாரங்கொடுத்த  வலுசர்ப்பத்தை  வணங்கினார்கள்.  அல்லாமலும்:  மிருகத்திற்கு  ஒப்பானவன்  யார்?  அதினோடே  யுத்தம்பண்ணத்தக்கவன்  யார்?  என்று  சொல்லி,  மிருகத்தையும்  வணங்கினார்கள்.  {Rev  13:4}

 

பெருமையானவைகளையும்  தூஷணங்களையும்  பேசும்  வாய்  அதற்குக்  கொடுக்கப்பட்டது;  அல்லாமலும்,  நாற்பத்திரண்டு  மாதம்  யுத்தம்பண்ண  அதற்கு  அதிகாரங்  கொடுக்கப்பட்டது.  {Rev  13:5}

 

அது  தேவனைத்  தூஷிக்கும்படி  தன்  வாயைத்  திறந்து,  அவருடைய  நாமத்தையும்,  அவருடைய  வாசஸ்தலத்தையும்,  பரலோகத்தில்  வாசமாயிருக்கிறவர்களையும்  தூஷித்தது.  {Rev  13:6}

 

மேலும்,  பரிசுத்தவான்களோடே  யுத்தம்பண்ணி  அவர்களை  ஜெயிக்கும்படிக்கு  அதற்கு  அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல்,  ஒவ்வொரு  கோத்திரத்தின்மேலும்  பாஷைக்காரர்மேலும்  ஜாதிகள்மேலும்  அதற்கு  அதிகாரங்கொடுக்கப்பட்டது.  {Rev  13:7}

 

உலகத்தோற்றமுதல்  அடிக்கப்பட்ட  ஆட்டுக்குட்டியினுடைய  ஜீவபுஸ்தகத்தில்  பேரெழுதப்பட்டிராத  பூமியின்  குடிகள்  யாவரும்  அதை  வணங்குவார்கள்.  {Rev  13:8}

 

காதுள்ளவனெவனோ  அவன்  கேட்கக்கடவன்.  {Rev  13:9}

 

சிறைப்படுத்திக்கொண்டு  போகிறவன்  சிறைப்பட்டுப்போவான்;  பட்டயத்தினாலே  கொல்லுகிறவன்  பட்டயத்தினாலே  கொல்லப்படவேண்டும்.  பரிசுத்தவான்களுடைய  பொறுமையும்  விசுவாசமும்  இதிலே  விளங்கும்.  {Rev  13:10}

 

பின்பு,  வேறொரு  மிருகம்  பூமியிலிருந்து  எழும்பக்  கண்டேன்;  அது  ஒரு  ஆட்டுக்குட்டிக்கு  ஒப்பாக  இரண்டு  கொம்புகளையுடையதாயிருந்து,  வலுசர்ப்பத்தைப்போலப்  பேசினது.  {Rev  13:11}

 

அது  முந்தின  மிருகத்தின்  அதிகாரம்  முழுவதையும்  அதின்  முன்பாக  நடப்பித்து,  சாவுக்கேதுவான  காயம்  ஆறச்  சொஸ்தமடைந்த  முந்தின  மிருகத்தைப்  பூமியும்  அதின்  குடிகளும்  வணங்கும்படி  செய்தது.  {Rev  13:12}

 

அன்றியும்,  அது  மனுஷருக்குமுன்பாக  வானத்திலிருந்து  பூமியின்மேல்  அக்கினியை  இறங்கப்பண்ணத்தக்கதாகப்  பெரிய  அற்புதங்களை  நடப்பித்து,  {Rev  13:13}

 

மிருகத்தின்முன்பாக  அந்த  அற்புதங்களைச்  செய்யும்படி  தனக்குக்  கொடுக்கப்பட்ட  சத்துவத்தினாலே  பூமியின்  குடிகளை  மோசம்போக்கி,  பட்டயத்தினாலே  காயப்பட்டுப்  பிழைத்த  மிருகத்திற்கு  ஒரு  சொரூபம்  பண்ணவேண்டுமென்று  பூமியின்  குடிகளுக்குச்  சொல்லிற்று.  {Rev  13:14}

 

மேலும்  அம்மிருகத்தின்  சொரூபம்  பேசத்தக்கதாகவும்,  மிருகத்தின்  சொரூபத்தை  வணங்காத  யாவரையும்  கொலைசெய்யத்தக்கதாகவும்,  மிருகத்தின்  சொரூபத்திற்கு  ஆவியைக்  கொடுக்கும்படி  அதற்குச்  சத்துவங்கொடுக்கப்பட்டது.  {Rev  13:15}

 

அது  சிறியோர்,  பெரியோர்,  ஐசுவரியவான்கள்,  தரித்திரர்,  சுயாதீனர்,  அடிமைகள்,  இவர்கள்  யாவரும்  தங்கள்  தங்கள்  வலதுகைகளிலாவது  நெற்றிகளிலாவது  ஒரு  முத்திரையைப்  பெறும்படிக்கும்,  {Rev  13:16}

 

அந்த  மிருகத்தின்  முத்திரையையாவது  அதின்  நாமத்தையாவது  அதின்  நாமத்தின்  இலக்கத்தையாவது  தரித்துக்கொள்ளுகிறவன்  தவிர  வேறொருவனும்  கொள்ளவும்  விற்கவுங்  கூடாதபடிக்கும்  செய்தது.  {Rev  13:17}

 

இதிலே  ஞானம்  விளங்கும்;  அந்த  மிருகத்தின்  இலக்கத்தைப்  புத்தியுடையவன்  கணக்குப்பார்க்கக்கடவன்;  அது  மனுஷனுடைய  இலக்கமாயிருக்கிறது;  அதினுடைய  இலக்கம்  அறுநூற்றறுபத்தாறு.  {Rev  13:18}

 

பின்பு  நான்  பார்த்தபோது,  இதோ,  சீயோன்<Sion>  மலையின்மேல்  ஆட்டுக்குட்டியானவரையும்,  அவரோடேகூட  அவருடைய  பிதாவின்  நாமம்  தங்கள்  நெற்றிகளில்  எழுதப்பட்டிருந்த  இலட்சத்து  நாற்பத்து  நாலாயிரம்பேரையும்  நிற்கக்கண்டேன்.  {Rev  14:1}

 

அல்லாமலும்,  பெருவெள்ள  இரைச்சல்போலவும்,  பலத்த  இடிமுழக்கம்போலவும்,  ஒரு  சத்தம்  வானத்திலிருந்து  உண்டாகக்கேட்டேன்;  நான்  கேட்ட  சத்தம்  சுரமண்டலக்காரர்  தங்கள்  சுரமண்டலங்களை  வாசிக்கிற  ஓசையைப்போலிருந்தது.  {Rev  14:2}

 

அவர்கள்  சிங்காசனத்திற்கு  முன்பாகவும்,  நான்கு  ஜீவன்களுக்கு  முன்பாகவும்,  மூப்பர்களுக்கு  முன்பாகவும்  புதுப்பாட்டைப்  பாடினார்கள்;  அந்தப்  பாட்டு  பூமியிலிருந்து  மீட்டுக்கொள்ளப்பட்ட  இலட்சத்து  நாற்பத்துநாலாயிரம்  பேரேயல்லாமல்  வேறொருவரும்  கற்றுக்கொள்ளக்  கூடாதிருந்தது.  {Rev  14:3}

 

ஸ்திரீகளால்  தங்களைக்  கறைப்படுத்தாதவர்கள்  இவர்களே;  கற்புள்ளவர்கள்  இவர்களே;  ஆட்டுக்குட்டியானவர்  எங்கே  போனாலும்  அவரைப்  பின்பற்றுகிறவர்கள்  இவர்களே;  இவர்கள்  மனுஷரிலிருந்து  தேவனுக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும்  முதற்பலனாக  மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.  {Rev  14:4}

 

இவர்களுடைய  வாயிலே  கபடம்  காணப்படவில்லை;  இவர்கள்  தேவனுடைய  சிங்காசனத்திற்குமுன்பாக  மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.  {Rev  14:5}

 

பின்பு,  வேறொரு  தூதன்  வானத்தின்  மத்தியிலே  பறக்கக்கண்டேன்;  அவன்  பூமியில்  வாசம்பண்ணுகிற  சகல  ஜாதிகளுக்கும்,  கோத்திரத்தாருக்கும்,  பாஷைக்காரருக்கும்,  ஜனக்கூட்டத்தாருக்கும்  அறிவிக்கத்தக்கதாக  நித்திய  சுவிசேஷத்தை  உடையவனாயிருந்து,  {Rev  14:6}

 

மிகுந்த  சத்தமிட்டு:  தேவனுக்குப்  பயந்து,  அவரை  மகிமைப்படுத்துங்கள்;  அவர்  நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்  வேளை  வந்தது;  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  நீரூற்றுகளையும்  உண்டாக்கினவரையே  தொழுதுகொள்ளுங்கள்  என்று  கூறினான்.  {Rev  14:7}

 

வேறொரு  தூதன்  பின்சென்று:  பாபிலோன்<Babylon>  மகா  நகரம்  விழுந்தது!  விழுந்தது!  தன்  வேசித்தனமாகிய  உக்கிரமான  மதுவைச்  சகல  ஜாதிகளுக்கும்  குடிக்கக்  கொடுத்தாளே!  என்றான்.  {Rev  14:8}

 

அவர்களுக்குப்  பின்னே  மூன்றாம்  தூதன்  வந்து,  மிகுந்த  சத்தமிட்டு:  மிருகத்தையும்  அதின்  சொரூபத்தையும்  வணங்கித்  தன்  நெற்றியிலாவது  தன்  கையிலாவது  அதின்  முத்திரையைத்  தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,  {Rev  14:9}

 

அவன்  தேவனுடைய  கோபாக்கினையாகிய  பாத்திரத்திலே  கலப்பில்லாமல்  வார்க்கப்பட்ட  அவருடைய  உக்கிரமாகிய  மதுவைக்  குடித்து,  பரிசுத்த  தூதர்களுக்குமுன்பாகவும்,  ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும்  அக்கினியினாலும்  கந்தகத்தினாலும்  வாதிக்கப்படுவான்.  {Rev  14:10}

 

அவர்களுடைய  வாதையின்  புகை  சதாகாலங்களிலும்  எழும்பும்;  மிருகத்தையும்  அதின்  சொரூபத்தையும்  வணங்குகிறவர்களுக்கும்,  அதினுடைய  நாமத்தின்  முத்திரையைத்  தரித்துக்கொள்ளுகிற  எவனுக்கும்  இரவும்  பகலும்  இளைப்பாறுதலிராது.  {Rev  14:11}

 

தேவனுடைய  கற்பனைகளையும்  இயேசுவின்<Jesus>  மேலுள்ள  விசுவாசத்தையும்  காத்துக்கொள்ளுகிறவர்களாகிய  பரிசுத்தவான்களுடைய  பொறுமை  இதிலே  விளங்கும்  என்று  கூறினான்.  {Rev  14:12}

 

பின்பு,  பரலோகத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகக்  கேட்டேன்;  அது:  கர்த்தருக்குள்  மரிக்கிறவர்கள்  இதுமுதல்  பாக்கியவான்கள்  என்றெழுது;  அவர்கள்  தங்கள்  பிரயாசங்களை  விட்டொழிந்து  இளைப்பாறுவார்கள்;  அவர்களுடைய  கிரியைகள்  அவர்களோடே  கூடப்போம்;  ஆவியானவரும்  ஆம்  என்று  திருவுளம்பற்றுகிறார்  என்று  சொல்லிற்று.  {Rev  14:13}

 

பின்பு  நான்  பார்த்தபோது,  இதோ,  வெண்மையான  மேகத்தையும்,  அந்த  மேகத்தின்மேல்  மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த்  தமது  சிரசின்மேல்  பொற்கிரீடத்தையும்  தமது  கையிலே  கருக்குள்ள  அரிவாளையுமுடைய  ஒருவர்  உட்கார்ந்திருக்கிறதையும்  கண்டேன்.  {Rev  14:14}

 

அப்பொழுது  வேறொரு  தூதன்  தேவாலயத்திலிருந்து  புறப்பட்டு,  மேகத்தின்மேல்  உட்கார்ந்திருக்கிறவரை  நோக்கி:  பூமியின்  பயிர்  முதிர்ந்தது,  அறுக்கிறதற்குக்  காலம்  வந்தது,  ஆகையால்  உம்முடைய  அரிவாளை  நீட்டி  அறுத்துவிடும்  என்று  மிகுந்த  சத்தமிட்டுச்  சொன்னான்.  {Rev  14:15}

 

அப்பொழுது  மேகத்தின்மேல்  உட்கார்ந்தவர்  தமது  அரிவாளைப்  பூமியின்மேல்  நீட்டினார்,  பூமியின்  விளைவு  அறுப்புண்டது.  {Rev  14:16}

 

பின்பு  வேறொரு  தூதனும்  கருக்குள்ள  அரிவாளைப்  பிடித்துக்கொண்டு  பரலோகத்திலுள்ள  தேவாலயத்திலிருந்து  புறப்பட்டுவந்தான்.  {Rev  14:17}

 

அக்கினியின்மேல்  அதிகாரமுள்ள  வேறொரு  தூதனும்  பலிபீடத்திலிருந்து  புறப்பட்டுவந்து,  கருக்குள்ள  அரிவாளைப்  பிடித்திருக்கிறவனை  நோக்கி:  பூமியின்  திராட்சப்பழங்கள்  பழுத்திருக்கிறது,  கருக்குள்ள  உமது  அரிவாளை  நீட்டி,  அதின்  குலைகளை  அறுத்துவிடும்  என்று  மிகுந்த  சத்தத்தோடே  சொன்னான்.  {Rev  14:18}

 

அப்பொழுது  அந்தத்  தூதன்  தன்  அரிவாளைப்  பூமியின்மேலே  நீட்டி,  பூமியின்  திராட்சப்பழங்களை  அறுத்து,  தேவனுடைய  கோபாக்கினையென்னும்  பெரிய  ஆலையிலே  போட்டான்.  {Rev  14:19}

 

நகரத்திற்குப்  புறம்பேயுள்ள  அந்த  ஆலையிலே  அது  மிதிக்கப்பட்டது;  அந்த  ஆலையிலிருந்து  ஆயிரத்தறுநூறு  ஸ்தாதி  தூரத்திற்கு  இரத்தம்  புறப்பட்டுக்  குதிரைகளின்  கடிவாளங்கள்மட்டும்  பெருகிவந்தது.  {Rev  14:20}

 

பின்பு,  வானத்திலே  பெரிதும்  ஆச்சரியமுமான  வேறொரு  அடையாளமாகிய  கடைசியான  ஏழு  வாதைகளையுடைய  ஏழு  தூதரைக்  கண்டேன்,  அவைகளால்  தேவனுடைய  கோபம்  முடிகிறது.  {Rev  15:1}

 

அன்றியும்,  அக்கினிகலந்த  கண்ணாடிக்  கடல்போன்ற  ஒரு  கடலையும்,  மிருகத்திற்கும்  அதின்  சொரூபத்திற்கும்  அதின்  முத்திரைக்கும்  அதின்  நாமத்தின்  இலக்கத்திற்கும்  உள்ளாகாமல்  ஜெயங்கொண்டவர்கள்  தேவ  சுரமண்டலங்களைப்  பிடித்துக்கொண்டு  அந்தக்  கண்ணாடிக்  கடலருகே  நிற்கிறதையும்  கண்டேன்.  {Rev  15:2}

 

அவர்கள்  தேவனுடைய  ஊழியக்காரனாகிய  மோசேயின்<Moses>  பாட்டையும்  ஆட்டுக்குட்டியானவருடைய  பாட்டையும்  பாடி:  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தாவே,  தேவரீருடைய  கிரியைகள்  மகத்துவமும்  ஆச்சரியமுமானவைகள்;  பரிசுத்தவான்களின்  ராஜாவே,  தேவரீருடைய  வழிகள்  நீதியும்  சத்தியமுமானவைகள்.  {Rev  15:3}

 

கர்த்தாவே,  யார்  உமக்குப்  பயப்படாமலும்,  உமது  நாமத்தை  மகிமைப்படுத்தாமலும்  இருக்கலாம்?  தேவரீர்  ஒருவரே  பரிசுத்தர்,  எல்லா  ஜாதிகளும்  வந்து  உமக்கு  முன்பாகத்  தொழுதுகொள்வார்கள்;  உம்முடைய  நீதியான  செயல்கள்  வெளியரங்கமாயின  என்றார்கள்.  {Rev  15:4}

 

இவைகளுக்குப்பின்பு,  நான்  பார்த்தபோது,  இதோ,  பரலோகத்திலே  சாட்சியின்  கூடாரமாகிய  ஆலயம்  திறக்கப்பட்டது;  {Rev  15:5}

 

அந்த  ஆலயத்திலிருந்து  ஏழு  வாதைகளையுடைய  அவ்வேழு  தூதர்களும்  சுத்தமும்  பிரகாசமுமான  மெல்லிய  வஸ்திரந்தரித்து,  மார்பருகே  பொற்கச்சைகளைக்  கட்டிக்கொண்டு  புறப்பட்டார்கள்.  {Rev  15:6}

 

அப்பொழுது  அந்த  நான்கு  ஜீவன்களில்  ஒன்று,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிற  தேவனுடைய  கோபாக்கினையால்  நிறைந்த  பொற்கலசங்கள்  ஏழையும்  அந்த  ஏழு  தூதர்களுக்குங்  கொடுத்தது.  {Rev  15:7}

 

அப்பொழுது,  தேவனுடைய  மகிமையினாலும்  அவருடைய  வல்லமையினாலும்  உண்டான  புகையினாலே  தேவாலயம்  நிறைந்தது;  ஏழு  தூதர்களுடைய  ஏழு  வாதைகளும்  முடியும்வரைக்கும்  ஒருவரும்  தேவாலயத்திற்குள்  பிரவேசிக்கக்  கூடாதிருந்தது.  {Rev  15:8}

 

அப்பொழுது  தேவாலயத்திலிருந்து  உண்டான  ஒரு  பெருஞ்சத்தம்  அந்த  ஏழு  தூதருடனே:  நீங்கள்  போய்த்  தேவனுடைய  கோபகலசங்களைப்  பூமியின்மேல்  ஊற்றுங்கள்  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  16:1}

 

முதலாம்  தூதன்  போய்,  தன்  கலசத்திலுள்ளதைப்  பூமியின்மேல்  ஊற்றினான்;  உடனே  மிருகத்தின்  முத்திரையைத்  தரித்தவர்களும்  அதின்  சொரூபத்தை  வணங்குகிறவர்களுமாகிய  மனுஷர்களுக்குப்  பொல்லாத  கொடிய  புண்ணுண்டாயிற்று.  {Rev  16:2}

 

இரண்டாம்  தூதன்  தன்  கலசத்திலுள்ளதைச்  சமுத்திரத்திலே  ஊற்றினான்;  உடனே  அது  செத்தவனுடைய  இரத்தம்  போலாயிற்று;  சமுத்திரத்திலுள்ள  பிராணிகள்  யாவும்  மாண்டுபோயின.  {Rev  16:3}

 

மூன்றாம்  தூதன்  தன்  கலசத்திலுள்ளதை  ஆறுகளிலும்,  நீரூற்றுகளிலும்  ஊற்றினான்;  உடனே  அவைகள்  இரத்தமாயின.  {Rev  16:4}

 

அப்பொழுது  தண்ணீர்களின்  தூதன்:  இருக்கிறவரும்  இருந்தவரும்  பரிசுத்தருமாகிய  தேவரீர்  இப்படி  நியாயந்தீர்க்க  நீதியுள்ளவராயிருக்கிறீர்.  {Rev  16:5}

 

அவர்கள்  பரிசுத்தவான்களுடைய  இரத்தத்தையும்  தீர்க்கதரிசிகளுடைய  இரத்தத்தையும்  சிந்தினபடியினால்,  இரத்தத்தையே  அவர்களுக்குக்  குடிக்கக்கொடுத்தீர்;  அதற்குப்  பாத்திரராயிருக்கிறார்கள்  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  16:6}

 

பலிபீடத்திலிருந்து  வேறொருவன்:  ஆம்,  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தாவே,  உம்முடைய  நியாயத்தீர்ப்புகள்  சத்தியமும்  நீதியுமானவைகள்  என்று  சொல்லக்கேட்டேன்.  {Rev  16:7}

 

நான்காம்  தூதன்  தன்  கலசத்திலுள்ளதைச்  சூரியன்மேல்  ஊற்றினான்;  தீயினால்  மனுஷரைத்  தகிக்கும்படி  அதற்கு  அதிகாரங்  கொடுக்கப்பட்டது.  {Rev  16:8}

 

அப்பொழுது  மனுஷர்கள்  மிகுந்த  உஷ்ணத்தினாலே  தகிக்கப்பட்டு,  இந்த  வாதைகளைச்  செய்ய  அதிகாரமுள்ள  தேவனுடைய  நாமத்தைத்  தூஷித்தார்களேயல்லாமல்,  அவரை  மகிமைப்படுத்த  மனந்திரும்பவில்லை.  {Rev  16:9}

 

ஐந்தாம்  தூதன்  தன்  கலசத்திலுள்ளதை  மிருகத்தினுடைய  சிங்காசனத்தின்மேல்  ஊற்றினான்;  அப்பொழுது  அதின்  ராஜ்யம்  இருளடைந்தது;  அவர்கள்  வருத்தத்தினாலே  தங்கள்  நாவுகளைக்  கடித்துக்கொண்டு,  {Rev  16:10}

 

தங்கள்  வருத்தங்களாலும்,  தங்கள்  புண்களாலும்,  பரலோகத்தின்  தேவனைத்  தூஷித்தார்களேயல்லாமல்,  தங்கள்  கிரியைகளை  விட்டு  மனந்திரும்பவில்லை.  {Rev  16:11}

 

ஆறாம்  தூதன்  தன்  கலசத்திலுள்ளதை  ஐபிராத்<Euphrates>  என்னும்  பெரிய  நதியின்மேல்  ஊற்றினான்;  அப்பொழுது  சூரியன்  உதிக்குந்  திசையிலிருந்துவரும்  ராஜாக்களுக்கு  வழி  ஆயத்தமாகும்படி  அந்த  நதியின்  தண்ணீர்  வற்றிப்போயிற்று.  {Rev  16:12}

 

அப்பொழுது,  வலுசர்ப்பத்தின்  வாயிலும்  மிருகத்தின்  வாயிலும்  கள்ளத்தீர்க்கதரிசியின்  வாயிலுமிருந்து  தவளைகளுக்கு  ஒப்பான  மூன்று  அசுத்த  ஆவிகள்  புறப்பட்டுவரக்  கண்டேன்.  {Rev  16:13}

 

அவைகள்  அற்புதங்களைச்  செய்கிற  பிசாசுகளின்  ஆவிகள்;  அவைகள்  பூலோகமெங்குமுள்ள  ராஜாக்களைச்  சர்வவல்லமையுள்ள  தேவனுடைய  மகாநாளில்  நடக்கும்  யுத்தத்திற்குக்  கூட்டிச்சேர்க்கும்படிக்குப்  புறப்பட்டுப்போகிறது.  {Rev  16:14}

 

இதோ,  திருடனைப்போல்  வருகிறேன்.  தன்  மானம்  காணப்படத்தக்கதாக  நிர்வாணமாய்  நடவாதபடிக்கு  விழித்துக்கொண்டு,  தன்  வஸ்திரங்களைக்  காத்துக்கொள்ளுகிறவன்  பாக்கியவான்.  {Rev  16:15}

 

அப்பொழுது  எபிரெயு<Hebrew>  பாஷையிலே  அர்மகெதோன்<Armageddon>  என்னப்பட்ட  இடத்திலே  அவர்களைக்  கூட்டிச்  சேர்த்தான்.  {Rev  16:16}

 

ஏழாம்  தூதன்  தன்  கலசத்திலுள்ளதை  ஆகாயத்தில்  ஊற்றினான்;  அப்பொழுது  பரலோகத்தின்  ஆலயத்திலுள்ள  சிங்காசனத்திலிருந்து:  ஆயிற்று  என்று  சொல்லிய  பெருஞ்சத்தம்  பிறந்தது.  {Rev  16:17}

 

சத்தங்களும்  இடிமுழக்கங்களும்  மின்னல்களும்  உண்டாயின;  பூமி  மிகவும்  அதிர்ந்தது,  பூமியின்மேல்  மனுஷர்கள்  உண்டான  நாள்முதற்கொண்டு  அப்படிப்பட்ட  பெரிய  அதிர்ச்சியுண்டானதில்லை.  {Rev  16:18}

 

அப்பொழுது  மகா  நகரம்  மூன்று  பங்காகப்  பிரிக்கப்பட்டது,  புறஜாதிகளுடைய  பட்டணங்கள்  விழுந்தன.  மகா  பாபிலோனுக்குத்<Babylon>  தேவனுடைய  உக்கிரமான  கோபாக்கினையாகிய  மதுவுள்ள  பாத்திரத்தைக்  கொடுக்கும்படி  அது  அவருக்கு  முன்பாக  நினைப்பூட்டப்பட்டது.  {Rev  16:19}

 

தீவுகள்  யாவும்  அகன்றுபோயின;  பர்வதங்கள்  காணப்படாமற்போயின.  {Rev  16:20}

 

தாலந்து  நிறையான  பெரிய  கல்மழையும்  வானத்திலிருந்து  மனுஷர்மேல்  விழுந்தது;  அந்தக்  கல்மழையினால்  உண்டான  வாதையினிமித்தம்  மனுஷர்கள்  தேவனைத்  தூஷித்தார்கள்;  அந்த  வாதை  மகா  கொடிதாயிருந்தது.  {Rev  16:21}

 

ஏழு  கலசங்களையுடைய  அந்த  ஏழு  தூதரில்  ஒருவன்  வந்து  என்னோடே  பேசி:  நீ  வா,  திரளான  தண்ணீர்கள்மேல்  உட்கார்ந்திருக்கிற  மகா  வேசியோடே  பூமியின்  ராஜாக்கள்  வேசித்தனம்பண்ணினார்களே,  அவளுடைய  வேசித்தனமாகிய  மதுவால்  பூமியின்  குடிகளும்  வெறிகொண்டிருந்தார்களே;  {Rev  17:1}

 

அவளுக்கு  வருகிற  ஆக்கினையை  உனக்குக்  காண்பிப்பேன்  என்று  சொல்லி;  {Rev  17:2}

 

ஆவிக்குள்  என்னை  வனாந்தரத்திற்குக்  கொண்டுபோனான்.  அப்பொழுது  ஏழு  தலைகளையும்  பத்துக்  கொம்புகளையும்  உடையதும்  தூஷணமான  நாமங்களால்  நிறைந்ததுமான  சிவப்புநிறமுள்ள  மிருகத்தின்மேல்  ஒரு  ஸ்திரீ  ஏறியிருக்கக்கண்டேன்.  {Rev  17:3}

 

அந்த  ஸ்திரீ  இரத்தாம்பரமும்  சிவப்பான  ஆடையுந்தரித்து,  பொன்னினாலும்  இரத்தினங்களினாலும்  முத்துக்களினாலும்  சிங்காரிக்கப்பட்டு,  தன்  வேசித்தனமாகிய  அருவருப்புகளாலும்  அசுத்தத்தாலும்  நிறைந்த  பொற்பாத்திரத்தைத்  தன்  கையிலே  பிடித்திருந்தாள்.  {Rev  17:4}

 

மேலும்,  இரகசியம்,  மகா  பாபிலோன்,  வேசிகளுக்கும்  பூமியிலுள்ள  அருவருப்புகளுக்கும்  தாய்<MYSTERY,  BABYLON  THE  GREAT,  THE  MOTHER  OF  HARLOTS  AND  ABOMINATIONS  OF  THE  EARTH>  என்னும்  நாமம்  அவள்  நெற்றியில்  எழுதியிருந்தது.  {Rev  17:5}

 

அந்த  ஸ்திரீ  பரிசுத்தவான்களின்  இரத்தத்தினாலும்,  இயேசுவினுடைய<Jesus>  சாட்சிகளின்  இரத்தத்தினாலும்  வெறிகொண்டிருக்கிறதைக்  கண்டேன்;  அவளைக்  கண்டு  நான்  மிகவும்  ஆச்சரியப்பட்டேன்.  {Rev  17:6}

 

அப்பொழுது,  தூதனானவன்  என்னை  நோக்கி:  ஏன்  ஆச்சரியப்படுகிறாய்?  இந்த  ஸ்திரீயினுடைய  இரகசியத்தையும்,  ஏழு  தலைகளையும்  பத்துக்  கொம்புகளையுமுடையதாய்  இவளைச்  சுமக்கிற  மிருகத்தினுடைய  இரகசியத்தையும்  உனக்குச்  சொல்லுகிறேன்.  {Rev  17:7}

 

நீ  கண்ட  மிருகம்  முன்னே  இருந்தது,  இப்பொழுது  இல்லை;  அது  பாதாளத்திலிருந்து  ஏறிவந்து,  நாசமடையப்போகிறது.  உலகத்தோற்றமுதல்  ஜீவபுஸ்தகத்தில்  பேரெழுதப்பட்டிராத  பூமியின்  குடிகள்,  இருந்ததும்,  இராமற்போனதும்,  இனி  இருப்பதுமாயிருக்கிற  மிருகத்தைப்பார்த்து  ஆச்சரியப்படுவார்கள்.  {Rev  17:8}

 

ஞானமுள்ள  மனம்  இதிலே  விளங்கும்.  அந்த  ஏழு  தலைகளும்  அந்த  ஸ்திரீ  உட்கார்ந்திருக்கிற  ஏழு  மலைகளாம்.  {Rev  17:9}

 

அவைகள்  ஏழு  ராஜாக்களாம்;  இவர்களில்  ஐந்துபேர்  விழுந்தார்கள்,  ஒருவன்  இருக்கிறான்,  மற்றவன்  இன்னும்  வரவில்லை;  வரும்போது  அவன்  கொஞ்சக்காலம்  தரித்திருக்கவேண்டும்.  {Rev  17:10}

 

இருந்ததும்  இராததுமாகிய  மிருகமே  எட்டாவதானவனும்,  அவ்வேழிலிருந்து  தோன்றுகிறவனும்,  நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.  {Rev  17:11}

 

நீ  கண்ட  பத்துக்  கொம்புகளும்  பத்து  ராஜாக்களாம்;  இவர்கள்  இன்னும்  ராஜ்யம்  பெறவில்லை;  இவர்கள்  மிருகத்துடனேகூட  ஒருமணி  நேரமளவும்  ராஜாக்கள்போல  அதிகாரம்  பெற்றுக்கொள்ளுகிறார்கள்.  {Rev  17:12}

 

இவர்கள்  ஒரே  யோசனையுள்ளவர்கள்;  இவர்கள்  தங்கள்  வல்லமையையும்  அதிகாரத்தையும்  மிருகத்திற்குக்  கொடுப்பார்கள்.  {Rev  17:13}

 

இவர்கள்  ஆட்டுக்குட்டியானவருடனே  யுத்தம்பண்ணுவார்கள்;  ஆட்டுக்குட்டியானவர்  கர்த்தாதி  கர்த்தரும்  ராஜாதி  ராஜாவுமாயிருக்கிறபடியால்  அவர்களை  ஜெயிப்பார்;  அவரோடுகூட  இருக்கிறவர்கள்  அழைக்கப்பட்டவர்களும்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களும்  உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்  என்றான்.  {Rev  17:14}

 

பின்னும்  அவன்  என்னை  நோக்கி:  அந்த  வேசி  உட்கார்ந்திருக்கிற  தண்ணீர்களைக்  கண்டாயே;  அவைகள்  ஜனங்களும்  கூட்டங்களும்  ஜாதிகளும்  பாஷைக்காரருமாம்.  {Rev  17:15}

 

நீ  மிருகத்தின்மேல்  கண்ட  பத்துக்  கொம்புகளானவர்கள்  அந்த  வேசியைப்  பகைத்து,  அவளைப்  பாழும்  நிர்வாணமுமாக்கி,  அவளுடைய  மாம்சத்தைப்  பட்சித்து,  அவளை  நெருப்பினால்  சுட்டெரித்துப்போடுவார்கள்.  {Rev  17:16}

 

தேவன்  தம்முடைய  வார்த்தைகள்  நிறைவேறுமளவும்,  அவர்கள்  தமது  யோசனையை  நிறைவேற்றுகிறதற்கும்,  ஒரே  யோசனையுள்ளவர்களாயிருந்து,  தங்கள்  ராஜ்யத்தை  மிருகத்திற்குக்  கொடுக்கிறதற்கும்  அவர்களுடைய  இருதயங்களை  ஏவினார்.  {Rev  17:17}

 

நீ  கண்ட  ஸ்திரீயானவள்  பூமியின்  ராஜாக்கள்மேல்  ராஜ்யபாரம்பண்ணுகிற  மகா  நகரமேயாம்  என்றான்.  {Rev  17:18}

 

இவைகளுக்குப்பின்பு,  வேறொரு  தூதன்  மிகுந்த  அதிகாரமுடையவனாய்,  வானத்திலிருந்திறங்கி  வரக்கண்டேன்;  அவனுடைய  மகிமையினால்  பூமி  பிரகாசமாயிற்று.  {Rev  18:1}

 

அவன்  பலத்த  சத்தமிட்டு:  மகா  பாபிலோன்<Babylon>  விழுந்தது!  விழுந்தது!  அது  பேய்களுடைய  குடியிருப்பும்,  சகலவித  அசுத்தஆவிகளுடைய  காவல்வீடும்,  அசுத்தமும்  அருவருப்புமுள்ள  சகலவித  பறவைகளுடைய  கூடுமாயிற்று.  {Rev  18:2}

 

அவளுடைய  வேசித்தனத்தின்  உக்கிரமான  மதுவை  எல்லா  ஜாதிகளும்  குடித்தார்கள்;  பூமியின்  ராஜாக்கள்  அவளோடே  வேசித்தனம்பண்ணினார்கள்;  பூமியின்  வர்த்தகர்  அவளுடைய  செல்வச்செருக்கின்  மிகுதியினால்  ஐசுவரியவான்களானார்கள்  என்று  விளம்பினான்.  {Rev  18:3}

 

பின்பு,  வேறொரு  சத்தம்  வானத்திலிருந்து  உண்டாகக்  கேட்டேன்.  அது:  என்  ஜனங்களே,  நீங்கள்  அவளுடைய  பாவங்களுக்கு  உடன்படாமலும்,  அவளுக்கு  நேரிடும்  வாதைகளில்  அகப்படாமலும்  இருக்கும்படிக்கு  அவளைவிட்டு  வெளியே  வாருங்கள்.  {Rev  18:4}

 

அவளுடைய  பாவம்  வானபரியந்தம்  எட்டினது,  அவளுடைய  அநியாயங்களைத்  தேவன்  நினைவுகூர்ந்தார்.  {Rev  18:5}

 

அவள்  உங்களுக்குப்  பலனளித்ததுபோல  நீங்களும்  அவளுக்குப்  பலனளியுங்கள்;  அவளுடைய  கிரியைகளுக்குத்தக்கதாக  அவளுக்கு  இரட்டிப்பாகக்  கொடுத்துத்  தீருங்கள்;  அவள்  உங்களுக்குக்  கலந்துகொடுத்த  பாத்திரத்திலே  இரட்டிப்பாக  அவளுக்குக்  கலந்துகொடுங்கள்.  {Rev  18:6}

 

அவள்  தன்னை  மகிமைப்படுத்தி,  செல்வச்செருக்காய்  வாழ்ந்ததெவ்வளவோ  அவ்வளவாய்  வாதையையும்  துக்கத்தையும்  அவளுக்குக்  கொடுங்கள்.  நான்  ராஜஸ்திரீயாய்  வீற்றிருக்கிறேன்;  நான்  கைம்பெண்ணல்ல,  நான்  துக்கத்தைக்  காண்பதில்லையென்று  அவள்  தன்  இருதயத்திலே  எண்ணினாள்.  {Rev  18:7}

 

ஆகையால்  அவளுக்கு  வரும்  வாதைகளாகிய  சாவும்  துக்கமும்  பஞ்சமும்  ஒரேநாளிலே  வரும்;  அவள்  அக்கினியினாலே  சுட்டெரிக்கப்படுவாள்;  அவளுக்கு  நியாயத்தீர்ப்புக்  கொடுக்கும்  தேவனாகிய  கர்த்தர்  வல்லமையுள்ளவர்.  {Rev  18:8}

 

அவளுடனே  வேசித்தனஞ்செய்து  செல்வச்செருக்காய்  வாழ்ந்த  பூமியின்  ராஜாக்களும்  அவள்  வேகிறதினால்  உண்டான  புகையைக்  காணும்போது  அவளுக்காக  அழுது  புலம்பி,  {Rev  18:9}

 

அவளுக்கு  உண்டான  வாதையினால்  பயந்து,  தூரத்திலே  நின்று:  ஐயையோ!  பாபிலோன்<Babylon>,  மகா  நகரமே!  பலமான  பட்டணமே!  ஒரே  நாழிகையில்  உனக்கு  ஆக்கினை  வந்ததே!  என்பார்கள்.  {Rev  18:10}

 

பூமியின்  வர்த்தகர்களும்  தங்கள்  தங்கள்  சரக்குகளாகிய  பொன்னையும்,  வெள்ளியையும்,  இரத்தினங்களையும்,  முத்துக்களையும்,  சல்லாவையும்,  இரத்தாம்பரத்தையும்,  பட்டாடைகளையும்,  சிவப்பாடைகளையும்,  {Rev  18:11}

 

சகலவித  வாசனைக்  கட்டைகளையும்,  தந்தத்தினால்  செய்திருக்கிற  சகலவித  வஸ்துக்களையும்,  விலையுயர்ந்த  மரத்தினாலும்  வெண்கலத்தினாலும்  இரும்பினாலும்  வெள்ளைக்  கல்லினாலும்  செய்திருக்கிற  சகலவித  வஸ்துக்களையும்,  {Rev  18:12}

 

இலவங்கப்பட்டையையும்,  தூபவர்க்கங்களையும்,  தைலங்களையும்,  சாம்பிராணியையும்,  திராட்சரசத்தையும்,  எண்ணெயையும்,  மெல்லிய  மாவையும்,  கோதுமையையும்,  மாடுகளையும்,  ஆடுகளையும்,  குதிரைகளையும்,  இரதங்களையும்,  அடிமைகளையும்,  மனுஷருடைய  ஆத்துமாக்களையும்  இனிக்  கொள்வாரில்லாதபடியால்,  அவளுக்காக  அழுது  புலம்புவார்கள்.  {Rev  18:13}

 

உன்  ஆத்துமா  இச்சித்த  பழவர்க்கங்கள்  உன்னைவிட்டு  நீங்கிப்போயின;  கொழுமையானவைகளும்  சம்பிரமமானவைகளும்  உன்னைவிட்டு  நீங்கிப்போயின;  நீ  அவைகளை  இனிக்  காண்பதில்லை.  {Rev  18:14}

 

இப்படிப்பட்டவைகளைக்  கொண்டு  வர்த்தகம்பண்ணி,  அவளால்  ஐசுவரியவான்களானவர்கள்  அவளுக்கு  உண்டான  வாதையினால்  பயந்து,  தூரத்திலே  நின்று;  {Rev  18:15}

 

ஐயையோ!  சல்லாவும்  இரத்தாம்பரமும்  சிவப்பாடையும்  தரித்து,  பொன்னினாலும்  இரத்தினங்களினாலும்  முத்துக்களினாலும்  சிங்காரிக்கப்பட்டிருந்த  மகா  நகரமே!  ஒரு  நாழிகையிலே  இவ்வளவு  ஐசுவரியமும்  அழிந்துபோயிற்றே!  என்று  சொல்லி,  அழுது  துக்கிப்பார்கள்.  {Rev  18:16}

 

மாலுமிகள்  யாவரும்,  கப்பல்களில்  யாத்திரை  பண்ணுகிறவர்கள்  யாவரும்,  கப்பலாட்களும்,  சமுத்திரத்திலே  தொழில்செய்கிற  யாவரும்  தூரத்திலே  நின்று,  {Rev  18:17}

 

அவள்  வேகிறதினால்  உண்டான  புகையைப்  பார்த்து:  இந்த  மகா  நகரத்திற்கொப்பான  நகரம்  உண்டோ  என்று  சத்தமிட்டு,  {Rev  18:18}

 

தங்கள்  தலைகள்மேல்  புழுதியைப்போட்டுக்கொண்டு:  ஐயையோ,  மகா  நகரமே!  சமுத்திரத்திலே  கப்பல்களையுடைய  அனைவரும்  இவளுடைய  உச்சிதமான  சம்பூரணத்தினால்  ஐசுவரியவான்களானார்களே!  ஒரு  நாழிகையிலே  இவள்  பாழாய்ப்போனாளே!  என்று  அழுது  துக்கித்து  ஓலமிடுவார்கள்.  {Rev  18:19}

 

பரலோகமே!  பரிசுத்தவான்களாகிய  அப்போஸ்தலர்களே!  தீர்க்கதரிசிகளே!  அவளைக்குறித்துக்  களிகூருங்கள்.  உங்கள்  நிமித்தம்  தேவன்  அவளை  நியாயந்தீர்த்தாரே!  என்று  தூதன்  சொன்னான்.  {Rev  18:20}

 

அப்பொழுது,  பலமுள்ள  தூதனொருவன்  பெரிய  ஏந்திரக்கல்லையொத்த  ஒரு  கல்லை  எடுத்துச்  சமுத்திரத்திலே  எறிந்து:  இப்படியே  பாபிலோன்<Babylon>  மகாநகரம்  வேகமாய்த்  தள்ளுண்டு,  இனி  ஒருபோதும்  காணப்படாமற்போகும்.  {Rev  18:21}

 

சுரமண்டலக்காரரும்,  கீதவாத்தியக்காரரும்,  நாகசுரக்காரரும்,  எக்காளக்காரருமானவர்களுடைய  சத்தம்  இனி  உன்னிடத்தில்  கேட்கப்படுவதுமில்லை;  எந்தத்  தொழிலாளியும்  இனி  உன்னிடத்தில்  காணப்படுவதுமில்லை;  ஏந்திரசத்தம்  இனி  உன்னிடத்தில்  கேட்கப்படுவதுமில்லை.  {Rev  18:22}

 

விளக்குவெளிச்சம்  இனி  உன்னிடத்தில்  பிரகாசிப்பதுமில்லை;  மணவாளனும்  மணவாட்டியுமானவர்களுடைய  சத்தம்  இனி  உன்னிடத்தில்  கேட்கப்படுவதுமில்லை.  உன்  வர்த்தகர்  பூமியில்  பெரியோர்களாயிருந்தார்களே;  உன்  சூனியத்தால்  எல்லா  ஜாதிகளும்  மோசம்போனார்களே.  {Rev  18:23}

 

தீர்க்கதரிசிகளுடைய  இரத்தமும்  பரிசுத்தவான்களுடைய  இரத்தமும்  பூமியில்  கொல்லப்பட்ட  அனைவருடைய  இரத்தமும்  அவளிடத்தில்  காணப்பட்டது  என்று  விளம்பினான்.  {Rev  18:24}

 

இவைகளுக்குப்பின்பு,  பரலோகத்தில்  திரளான  ஜனக்கூட்டம்  இடுகிற  ஆரவாரத்தைக்  கேட்டேன்.  அவர்கள்:  அல்லேலூயா<Alleluia>,  இரட்சணியமும்  மகிமையும்  கனமும்  வல்லமையும்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்கே  உரியது;  அவருடைய  நியாயத்தீர்ப்புகள்  சத்தியமும்  நீதியுமானவைகள்.  {Rev  19:1}

 

தன்  வேசித்தனத்தினால்  பூமியைக்  கெடுத்த  மகா  வேசிக்கு  அவர்  நியாயத்தீர்ப்புக்கொடுத்து,  தம்முடைய  ஊழியக்காரரின்  இரத்தத்திற்காக  அவளிடத்தில்  பழிவாங்கினாரே  என்றார்கள்.  {Rev  19:2}

 

மறுபடியும்  அவர்கள்:  அல்லேலூயா<Alleluia>  என்று  சொல்லி  ஆர்ப்பரித்தார்கள்.  அவளுடைய  புகை  என்றென்றைக்கும்  எழும்புகிறது  என்றார்கள்.  {Rev  19:3}

 

இருபத்துநான்கு  மூப்பர்களும்,  நான்கு  ஜீவன்களும்  வணக்கமாய்  விழுந்து:  ஆமென்<Amen>,  அல்லேலூயா<Alleluia>,  என்று  சொல்லி,  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்  தேவனைத்  தொழுதுகொண்டார்கள்.  {Rev  19:4}

 

மேலும்,  நமது  தேவனுடைய  ஊழியக்காரரே,  அவருக்குப்  பயப்படுகிற  சிறியோரும்  பெரியோருமானவர்களே,  நீங்கள்  யாவரும்  அவரைத்  துதியுங்கள்  என்று  ஒரு  சத்தம்  சிங்காசனத்திலிருந்து  பிறந்தது.  {Rev  19:5}

 

அப்பொழுது  திரளான  ஜனங்கள்  இடும்  ஆரவாரம்போலவும்,  பெருவெள்ள  இரைச்சல்போலவும்,  பலத்த  இடிமுழக்கம்போலவும்,  ஒரு  சத்தமுண்டாகி:  அல்லேலூயா<Alleluia>,  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தர்  ராஜ்யபாரம்பண்ணுகிறார்.  {Rev  19:6}

 

நாம்  சந்தோஷப்பட்டுக்  களிகூர்ந்து  அவருக்குத்  துதிசெலுத்தக்கடவோம்.  ஆட்டுக்குட்டியானவருடைய  கலியாணம்  வந்தது,  அவருடைய  மனைவி  தன்னை  ஆயத்தம்பண்ணினாள்  என்று  சொல்லக்  கேட்டேன்.  {Rev  19:7}

 

சுத்தமும்  பிரகாசமுமான  மெல்லிய  வஸ்திரம்  தரித்துக்கொள்ளும்படி  அவளுக்கு  அளிக்கப்பட்டது;  அந்த  மெல்லிய  வஸ்திரம்  பரிசுத்தவான்களுடைய  நீதிகளே.  {Rev  19:8}

 

பின்னும்,  அவன்  என்னை  நோக்கி:  ஆட்டுக்குட்டியானவரின்  கலியாண  விருந்துக்கு  அழைக்கப்பட்டவர்கள்  பாக்கியவான்கள்  என்றெழுது  என்றான்.  மேலும்,  இவைகள்  தேவனுடைய  சத்தியமான  வசனங்கள்  என்று  என்னுடனே  சொன்னான்.  {Rev  19:9}

 

அப்பொழுது  அவனை  வணங்கும்படி  அவனுடைய  பாதத்தில்  விழுந்தேன்.  அவன்  என்னை  நோக்கி:  இப்படிச்  செய்யாதபடிக்குப்  பார்;  உன்னோடும்  இயேசுவைக்குறித்துச்<Jesus>  சாட்சியிட்ட  உன்  சகோதரரோடுங்கூட  நானும்  ஒரு  ஊழியக்காரன்;  தேவனைத்  தொழுதுகொள்.  இயேசுவைப்பற்றின<Jesus>  சாட்சி  தீர்க்கதரிசனத்தின்  ஆவியாயிருக்கிறது  என்றான்.  {Rev  19:10}

 

பின்பு,  பரலோகம்  திறந்திருக்கக்  கண்டேன்;  இதோ,  ஒரு  வெள்ளைக்குதிரை  காணப்பட்டது,  அதின்மேல்  ஏறியிருந்தவர்  உண்மையும்  சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்;  அவர்  நீதியாய்  நியாயந்தீர்த்து  யுத்தம்பண்ணுகிறார்.  {Rev  19:11}

 

அவருடைய  கண்கள்  அக்கினிஜுவாலையைப்போலிருந்தன,  அவருடைய  சிரசின்மேல்  அநேக  கிரீடங்கள்  இருந்தன;  அவருக்கேயன்றி  வேறொருவருக்குந்  தெரியாத  ஒரு  நாமமும்  எழுதியிருந்தது.  {Rev  19:12}

 

இரத்தத்தில்  தோய்க்கப்பட்ட  வஸ்திரத்தைத்  தரித்திருந்தார்;  அவருடைய  நாமம்  தேவனுடைய  வார்த்தை  என்பதே.  {Rev  19:13}

 

பரலோகத்திலுள்ள  சேனைகள்  வெண்மையும்  சுத்தமுமான  மெல்லிய  வஸ்திரந்  தரித்தவர்களாய்,  வெள்ளைக்குதிரைகளின்மேல்  ஏறி,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Rev  19:14}

 

புறஜாதிகளை  வெட்டும்படிக்கு  அவருடைய  வாயிலிருந்து  கூர்மையான  பட்டயம்  புறப்படுகிறது;  இருப்புக்கோலால்  அவர்களை  அரசாளுவார்;  அவர்  சர்வவல்லமையுள்ள  தேவனுடைய  உக்கிரகோபமாகிய  மதுவுள்ள  ஆலையை  மிதிக்கிறார்.  {Rev  19:15}

 

ராஜாதி  ராஜா,  கர்த்தாதி  கர்த்தா  என்னும்  நாமம்  அவருடைய  வஸ்திரத்தின்மேலும்  அவருடைய  தொடையின்மேலும்  எழுதப்பட்டிருந்தது.  {Rev  19:16}

 

பின்பு  ஒரு  தூதன்  சூரியனில்  நிற்கக்கண்டேன்;  அவன்  வானத்தின்  மத்தியில்  பறக்கிற  சகல  பறவைகளையும்  பார்த்து:  {Rev  19:17}

 

நீங்கள்  ராஜாக்களின்  மாம்சத்தையும்,  சேனைத்தலைவர்களின்  மாம்சத்தையும்,  பலவான்களின்  மாம்சத்தையும்,  குதிரைகளின்  மாம்சத்தையும்,  அவைகளின்மேல்  ஏறியிருக்கிறவர்களின்  மாம்சத்தையும்,  சுயாதீனர்  அடிமைகள்,  சிறியோர்  பெரியோர்,  இவர்களெல்லாருடைய  மாம்சத்தையும்  பட்சிக்கும்படிக்கு,  மகா  தேவன்  கொடுக்கும்  விருந்துக்குக்  கூடிவாருங்கள்  என்று  மிகுந்த  சத்தத்தோடே  கூப்பிட்டான்.  {Rev  19:18}

 

பின்பு,  மிருகமும்  பூமியின்  ராஜாக்களும்  அவர்களுடைய  சேனைகளும்,  குதிரையின்மேல்  ஏறியிருக்கிறவரோடும்  அவருடைய  சேனையோடும்  யுத்தம்பண்ணும்படிக்குக்  கூடிவரக்கண்டேன்.  {Rev  19:19}

 

அப்பொழுது  மிருகம்  பிடிக்கப்பட்டது;  மிருகத்தின்முன்பாகச்  செய்த  அற்புதங்களால்  அதின்  முத்திரையைத்  தரித்தவர்களையும்  அதின்  சொரூபத்தை  வணங்கினவர்களையும்  மோசம்போக்கின  கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப்  பிடிக்கப்பட்டான்;  இருவரும்  கந்தகம்  எரிகிற  அக்கினிக்கடலிலே  உயிரோடே  தள்ளப்பட்டார்கள்.  {Rev  19:20}

 

மற்றவர்கள்  குதிரையின்மேல்  ஏறினவருடைய  வாயிலிருந்து  புறப்படுகிற  பட்டயத்தால்  கொல்லப்பட்டார்கள்;  அவர்களுடைய  மாம்சத்தினால்  பறவைகள்  யாவும்  திருப்தியடைந்தன.  {Rev  19:21}

 

ஒரு  தூதன்  பாதாளத்தின்  திறவுகோலையும்  பெரிய  சங்கிலியையும்  தன்  கையிலே  பிடித்துக்கொண்டு  வானத்திலிருந்திறங்கி  வரக்கண்டேன்.  {Rev  20:1}

 

பிசாசென்றும்  சாத்தானென்றும்  சொல்லப்பட்ட  பழைய  பாம்பாகிய  வலுசர்ப்பத்தை  அவன்  பிடித்து,  அதை  ஆயிரம்  வருஷமளவுங்  கட்டிவைத்து,  அந்த  ஆயிரம்  வருஷம்  நிறைவேறும்வரைக்கும்  அது  ஜனங்களை  மோசம்போக்காதபடிக்கு  அதைப்  பாதாளத்திலே  தள்ளியடைத்து,  அதின்மேல்  முத்திரைபோட்டான்.  {Rev  20:2}

 

அதற்குப்  பின்பு  அது  கொஞ்சக்காலம்  விடுதலையாகவேண்டும்.  {Rev  20:3}

 

அன்றியும்,  நான்  சிங்காசனங்களைக்  கண்டேன்;  அவைகளின்மேல்  உட்கார்ந்தார்கள்;  நியாயத்தீர்ப்புக்  கொடுக்கும்படி  அவர்களுக்கு  அதிகாரம்  அளிக்கப்பட்டது.  இயேசுவைப்பற்றிய<Jesus>  சாட்சியினிமித்தமும்  தேவனுடைய  வசனத்தினிமித்தமும்  சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய  ஆத்துமாக்களையும்,  மிருகத்தையாவது  அதின்  சொரூபத்தையாவது  வணங்காமலும்  தங்கள்  நெற்றியிலும்  தங்கள்  கையிலும்  அதின்  முத்திரையைத்  தரித்துக்கொள்ளாமலும்  இருந்தவர்களையும்  கண்டேன்.  அவர்கள்  உயிர்த்துக்  கிறிஸ்துவுடனேகூட<Christ>  ஆயிரம்  வருஷம்  அரசாண்டார்கள்.  {Rev  20:4}

 

மரணமடைந்த  மற்றவர்கள்  அந்த  ஆயிரம்  வருஷம்  முடியுமளவும்  உயிரடையவில்லை.  இதுவே  முதலாம்  உயிர்த்தெழுதல்.  {Rev  20:5}

 

முதலாம்  உயிர்த்தெழுதலுக்குப்  பங்குள்ளவன்  பாக்கியவானும்  பரிசுத்தவானுமாயிருக்கிறான்;  இவர்கள்மேல்  இரண்டாம்  மரணத்திற்கு  அதிகாரமில்லை;  இவர்கள்  தேவனுக்கும்  கிறிஸ்துவுக்கும்<Christ>  முன்பாக  ஆசாரியராயிருந்து,  அவரோடேகூட  ஆயிரம்  வருஷம்  அரசாளுவார்கள்.  {Rev  20:6}

 

அந்த  ஆயிரம்  வருஷம்  முடியும்போது  சாத்தான்  தன்  காவலிலிருந்து  விடுதலையாகி,  {Rev  20:7}

 

பூமியின்  நான்கு  திசைகளிலுமுள்ள  ஜாதிகளாகிய  கோகையும்<Gog>  மாகோகையும்<Magog>  மோசம்போக்கும்படிக்கும்,  அவர்களை  யுத்தத்திற்குக்  கூட்டிக்கொள்ளும்படிக்கும்  புறப்படுவான்;  அவர்களுடைய  தொகை  கடற்கரை  மணலத்தனையாயிருக்கும்.  {Rev  20:8}

 

அவர்கள்  பூமியெங்கும்  பரம்பி,  பரிசுத்தவான்களுடைய  பாளையத்தையும்,  பிரியமான  நகரத்தையும்  வளைந்துகொண்டார்கள்;  அப்பொழுது  தேவனால்  வானத்திலிருந்து  அக்கினி  இறங்கி  அவர்களைப்  பட்சித்துப்போட்டது.  {Rev  20:9}

 

மேலும்  அவர்களை  மோசம்போக்கின  பிசாசானவன்,  மிருகமும்  கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற  இடமாகிய  அக்கினியும்  கந்தகமுமான  கடலிலே  தள்ளப்பட்டான்.  அவர்கள்  இரவும்  பகலும்  சதாகாலங்களிலும்  வாதிக்கப்படுவார்கள்.  {Rev  20:10}

 

பின்பு,  நான்  பெரிய  வெள்ளைச்  சிங்காசனத்தையும்  அதின்மேல்  வீற்றிருக்கிறவரையும்  கண்டேன்;  அவருடைய  சமுகத்திலிருந்து  பூமியும்  வானமும்  அகன்றுபோயின;  அவைகளுக்கு  இடங்காணப்படவில்லை.  {Rev  20:11}

 

மரித்தோராகிய  சிறியோரையும்  பெரியோரையும்  தேவனுக்குமுன்பாக  நிற்கக்கண்டேன்;  அப்பொழுது  புஸ்தகங்கள்  திறக்கப்பட்டன;  ஜீவபுஸ்தகம்  என்னும்  வேறொரு  புஸ்தகமும்  திறக்கப்பட்டது;  அப்பொழுது  அந்தப்  புஸ்தகங்களில்  எழுதப்பட்டவைகளின்படியே  மரித்தோர்  தங்கள்  தங்கள்  கிரியைகளுக்குத்தக்கதாக  நியாயத்தீர்ப்படைந்தார்கள்.  {Rev  20:12}

 

சமுத்திரம்  தன்னிலுள்ள  மரித்தோரை  ஒப்புவித்தது;  மரணமும்  பாதாளமும்  தங்களிலுள்ள  மரித்தோரை  ஒப்புவித்தன.  யாவரும்  தங்கள்  தங்கள்  கிரியைகளின்படியே  நியாயத்தீர்ப்படைந்தார்கள்.  {Rev  20:13}

 

அப்பொழுது  மரணமும்  பாதாளமும்  அக்கினிக்கடலிலே  தள்ளப்பட்டன.  இது  இரண்டாம்  மரணம்.  {Rev  20:14}

 

ஜீவபுஸ்தகத்திலே  எழுதப்பட்டவனாகக்  காணப்படாதவனெவனோ  அவன்  அக்கினிக்கடலிலே  தள்ளப்பட்டான்.  {Rev  20:15}

 

பின்பு,  நான்  புதிய  வானத்தையும்  புதிய  பூமியையும்  கண்டேன்;  முந்தின  வானமும்  முந்தின  பூமியும்  ஒழிந்துபோயின;  சமுத்திரமும்  இல்லாமற்போயிற்று.  {Rev  21:1}

 

யோவானாகிய<John>  நான்,  புதிய  எருசலேமாகிய<Jerusalem>  பரிசுத்த  நகரத்தைத்  தேவனிடத்தினின்று  பரலோகத்தைவிட்டு  இறங்கி  வரக்கண்டேன்;  அது  தன்  புருஷனுக்காக  அலங்கரிக்கப்பட்ட  மணவாட்டியைப்போல  ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.  {Rev  21:2}

 

மேலும்,  பரலோகத்திலிருந்து  உண்டான  ஒரு  பெருஞ்சத்தத்தைக்  கேட்டேன்;  அது:  இதோ,  மனுஷர்களிடத்திலே  தேவனுடைய  வாசஸ்தலமிருக்கிறது,  அவர்களிடத்திலே  அவர்  வாசமாயிருப்பார்;  அவர்களும்  அவருடைய  ஜனங்களாயிருப்பார்கள்,  தேவன்தாமே  அவர்களோடேகூட  இருந்து  அவர்களுடைய  தேவனாயிருப்பார்.  {Rev  21:3}

 

அவர்களுடைய  கண்ணீர்  யாவையும்  தேவன்  துடைப்பார்;  இனி  மரணமுமில்லை,  துக்கமுமில்லை,  அலறுதலுமில்லை,  வருத்தமுமில்லை;  முந்தினவைகள்  ஒழிந்துபோயின  என்று  விளம்பினது.  {Rev  21:4}

 

சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்தவர்:  இதோ,  நான்  சகலத்தையும்  புதிதாக்குகிறேன்  என்றார்.  பின்னும்,  அவர்:  இந்த  வசனங்கள்  சத்தியமும்  உண்மையுமானவைகள்,  இவைகளை  எழுது  என்றார்.  {Rev  21:5}

 

அன்றியும்,  அவர்  என்னை  நோக்கி:  ஆயிற்று,  நான்  அல்பாவும்<Alpha>  ஓமெகாவும்<Omega>,  ஆதியும்  அந்தமுமாயிருக்கிறேன்.  தாகமாயிருக்கிறவனுக்கு  நான்  ஜீவத்தண்ணீரூற்றில்  இலவசமாய்க்  கொடுப்பேன்.  {Rev  21:6}

 

ஜெயங்கொள்ளுகிறவன்  எல்லாவற்றையும்  சுதந்தரித்துக்கொள்ளுவான்;  நான்  அவன்  தேவனாயிருப்பேன்,  அவன்  என்  குமாரனாயிருப்பான்.  {Rev  21:7}

 

பயப்படுகிறவர்களும்,  அவிசுவாசிகளும்,  அருவருப்பானவர்களும்,  கொலைபாதகரும்,  விபசாரக்காரரும்,  சூனியக்காரரும்,  விக்கிரகாராதனைக்காரரும்,  பொய்யர்  அனைவரும்  இரண்டாம்  மரணமாகிய  அக்கினியும்  கந்தகமும்  எரிகிற  கடலிலே  பங்கடைவார்கள்  என்றார்.  {Rev  21:8}

 

பின்பு,  கடைசியான  ஏழு  வாதைகளால்  நிறைந்த  ஏழு  கலசங்களையுடைய  அந்த  ஏழு  தூதரில்  ஒருவன்  என்னிடத்தில்  வந்து:  நீ  இங்கே  வா,  ஆட்டுக்குட்டியானவருடைய  மனைவியாகிய  மணவாட்டியை  உனக்குக்  காண்பிக்கிறேன்  என்று  சொல்லி,  {Rev  21:9}

 

பெரிதும்  உயரமுமான  ஒரு  பர்வதத்தின்மேல்  என்னை  ஆவியில்  கொண்டுபோய்,  தேவனுடைய  மகிமையை  அடைந்த  எருசலேமாகிய<Jerusalem>  பரிசுத்தநகரம்  பரலோகத்தைவிட்டுத்  தேவனிடத்திலிருந்து  இறங்கிவருகிறதை  எனக்குக்  காண்பித்தான்.  {Rev  21:10}

 

அதின்  பிரகாசம்  மிகவும்  விலையுயர்ந்த  இரத்தினக்கல்லைப்போலவும்,  பளிங்கினொளியுள்ள  வச்சிரக்கல்லைப்போலவும்  இருந்தது.  {Rev  21:11}

 

அதற்குப்  பெரிதும்  உயரமுமான  மதிலும்,  கிழக்கே  மூன்று  வாசல்கள்,  வடக்கே  மூன்று  வாசல்கள்,  தெற்கே  மூன்று  வாசல்கள்,  மேற்கே  மூன்று  வாசல்கள்  ஆகப்  பன்னிரண்டு  வாசல்களும்  இருந்தன.  {Rev  21:12}

 

வாசல்களின்  அருகே  பன்னிரண்டு  தூதர்களிருந்தார்கள்;  அந்த  வாசல்களின்மேல்  இஸ்ரவேல்<Israel>  சந்ததியாராகிய  பன்னிரண்டு  கோத்திரத்தாருடைய  நாமங்களும்  எழுதப்பட்டிருந்தன.  {Rev  21:13}

 

நகரத்தின்  மதிலுக்குப்  பன்னிரண்டு  அஸ்திபாரக்  கற்களிருந்தன;  அவைகள்மேல்  ஆட்டுக்குட்டியானவருடைய  பன்னிரண்டு  அப்போஸ்தலரின்  பன்னிரண்டு  நாமங்களும்  பதிந்திருந்தன.  {Rev  21:14}

 

என்னுடனே  பேசினவன்,  நகரத்தையும்  அதின்  வாசல்களையும்  அதின்  மதிலையும்  அளக்கிறதற்கு  ஒரு  பொற்கோலைப்  பிடித்திருந்தான்.  {Rev  21:15}

 

அந்த  நகரம்  சதுரமாயிருந்தது,  அதின்  அகலமும்  நீளமும்  சமமாயிருந்தது.  அவன்  அந்தக்  கோலினால்  நகரத்தை  அளந்தான்;  அது  பன்னீராயிரம்  ஸ்தாதி  அளவாயிருந்தது;  அதின்  நீளமும்  அகலமும்  உயரமும்  சமமாயிருந்தது.  {Rev  21:16}

 

அவன்  அதின்  மதிலை  அளந்தபோது,  அது  தூதனுடைய  அளவாகிய  மனுஷ  அளவின்படியே  நூற்றுநாற்பத்துநான்கு  முழமாயிருந்தது.  {Rev  21:17}

 

அதின்  மதில்  வச்சிரக்கல்லால்  கட்டப்பட்டிருந்தது;  நகரம்  தெளிந்த  பளிங்குக்கு  ஒப்பான  சுத்தப்பொன்னாயிருந்தது.  {Rev  21:18}

 

நகரத்து  மதில்களின்  அஸ்திபாரங்கள்  சகலவித  இரத்தினங்களினாலும்  அலங்கரிக்கப்பட்டிருந்தன;  முதலாம்  அஸ்திபாரம்  வச்சிரக்கல்,  இரண்டாவது  இந்திரநீலம்,  மூன்றாவது  சந்திரகாந்தம்,  நான்காவது  மரகதம்,  {Rev  21:19}

 

ஐந்தாவது  கோமேதகம்,  ஆறாவது  பதுமராகம்,  ஏழாவது  சுவர்ணரத்தினம்,  எட்டாவது  படிகப்பச்சை,  ஒன்பதாவது  புஷ்பராகம்,  பத்தாவது  வைடூரியம்,  பதினோராவது  சுநீரம்,  பன்னிரண்டாவது  சுகந்தி  இவைகளே.  {Rev  21:20}

 

பன்னிரண்டு  வாசல்களும்  பன்னிரண்டு  முத்துக்களாயிருந்தன;  ஒவ்வொரு  வாசலும்  ஒவ்வொரு  முத்தாயிருந்தது.  நகரத்தின்  வீதி  தெளிவுள்ள  பளிங்குபோலச்  சுத்தப்பொன்னாயிருந்தது.  {Rev  21:21}

 

அதிலே  தேவாலயத்தை  நான்  காணவில்லை;  சர்வவல்லமையுள்ள  தேவனாகிய  கர்த்தரும்  ஆட்டுக்குட்டியானவருமே  அதற்கு  ஆலயம்.  {Rev  21:22}

 

நகரத்திற்கு  வெளிச்சங்கொடுக்கச்  சூரியனும்  சந்திரனும்  அதற்கு  வேண்டுவதில்லை;  தேவனுடைய  மகிமையே  அதைப்  பிரகாசிப்பித்தது,  ஆட்டுக்குட்டியானவரே  அதற்கு  விளக்கு.  {Rev  21:23}

 

இரட்சிக்கப்படுகிற  ஜனங்கள்  அதின்  வெளிச்சத்திலே  நடப்பார்கள்.  பூமியின்  ராஜாக்கள்  தங்கள்  மகிமையையும்  கனத்தையும்  அதற்குள்ளே  கொண்டுவருவார்கள்.  {Rev  21:24}

 

அங்கே  இராக்காலம்  இல்லாதபடியால்,  அதின்  வாசல்கள்  பகலில்  அடைக்கப்படுவதே  இல்லை.  {Rev  21:25}

 

உலகத்தாருடைய  மகிமையையும்  கனத்தையும்  அதற்குள்ளே  கொண்டுவருவார்கள்.  {Rev  21:26}

 

தீட்டுள்ளதும்  அருவருப்பையும்  பொய்யையும்  நடப்பிக்கிறதுமாகிய  ஒன்றும்  அதில்  பிரவேசிப்பதில்லை;  ஆட்டுக்குட்டியானவரின்  ஜீவபுஸ்தகத்தில்  எழுதப்பட்டவர்கள்  மாத்திரம்  அதில்  பிரவேசிப்பார்கள்.  {Rev  21:27}

 

பின்பு,  பளிங்கைப்போல்  தெளிவான  ஜீவத்தண்ணீருள்ள  சுத்தமான  நதி  தேவனும்  ஆட்டுக்குட்டியானவரும்  இருக்கிற  சிங்காசனத்திலிருந்து  புறப்பட்டுவருகிறதை  எனக்குக்  காண்பித்தான்.  {Rev  22:1}

 

நகரத்து  வீதியின்  மத்தியிலும்,  நதியின்  இருகரையிலும்,  பன்னிரண்டுவிதமான  கனிகளைத்தரும்  ஜீவவிருட்சம்  இருந்தது,  அது  மாதந்தோறும்  தன்  கனியைக்  கொடுக்கும்;  அந்த  விருட்சத்தின்  இலைகள்  ஜனங்கள்  ஆரோக்கியமடைகிறதற்கு  ஏதுவானவைகள்.  {Rev  22:2}

 

இனி  ஒரு  சாபமுமிராது.  தேவனும்  ஆட்டுக்குட்டியானவரும்  இருக்கிற  சிங்காசனம்  அதிலிருக்கும்.  {Rev  22:3}

 

அவருடைய  ஊழியக்காரர்  அவரைச்  சேவித்து,  அவருடைய  சமுகத்தைத்  தரிசிப்பார்கள்;  அவருடைய  நாமம்  அவர்களுடைய  நெற்றிகளில்  இருக்கும்.  {Rev  22:4}

 

அங்கே  இராக்காலமிராது;  விளக்கும்  சூரியனுடைய  வெளிச்சமும்  அவர்களுக்கு  வேண்டுவதில்லை;  தேவனாகிய  கர்த்தரே  அவர்கள்மேல்  பிரகாசிப்பார்.  அவர்கள்  சதாகாலங்களிலும்  அரசாளுவார்கள்.  {Rev  22:5}

 

பின்பு,  அவர்  என்னை  நோக்கி:  இந்த  வசனங்கள்  உண்மையும்  சத்தியமுமானவைகள்.  சீக்கிரமாய்ச்  சம்பவிக்கவேண்டியவைகளைத்  தம்முடைய  ஊழியக்காரருக்குக்  காண்பிக்கும்பொருட்டு,  பரிசுத்த  தீர்க்கதரிசிகளின்  கர்த்தராகிய  தேவனானவர்  தம்முடைய  தூதனை  அனுப்பினார்.  {Rev  22:6}

 

இதோ,  சீக்கிரமாய்  வருகிறேன்;  இந்தப்  புஸ்தகத்திலுள்ள  தீர்க்கதரிசன  வசனங்களைக்  கைக்கொள்ளுகிறவன்  பாக்கியவான்  என்றார்.  {Rev  22:7}

 

யோவானாகிய<John>  நானே  இவைகளைக்  கண்டும்  கேட்டும்  இருந்தேன்.  நான்  கேட்டுக்  கண்டபோது,  இவைகளை  எனக்குக்  காண்பித்த  தூதனை  வணங்கும்படி  அவன்  பாதத்தில்  விழுந்தேன்.  {Rev  22:8}

 

அதற்கு  அவன்:  நீ  இப்படிச்  செய்யாதபடிக்குப்  பார்;  உன்னோடும்  உன்  சகோதரரோடும்  தீர்க்கதரிசிகளோடும்,  இந்தப்  புஸ்தகத்தின்  வசனங்களைக்  கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட  நானும்  ஒரு  ஊழியக்காரன்;  தேவனைத்  தொழுதுகொள்  என்றான்.  {Rev  22:9}

 

பின்னும்,  அவர்  என்னை  நோக்கி:  இந்தப்  புஸ்தகத்திலுள்ள  தீர்க்கதரிசன  வசனங்களை  முத்திரைபோடவேண்டாம்;  காலம்  சமீபமாயிருக்கிறது.  {Rev  22:10}

 

அநியாயஞ்செய்கிறவன்  இன்னும்  அநியாயஞ்செய்யட்டும்;  அசுத்தமாயிருக்கிறவன்  இன்னும்  அசுத்தமாயிருக்கட்டும்;  நீதியுள்ளவன்  இன்னும்  நீதிசெய்யட்டும்;  பரிசுத்தமுள்ளவன்  இன்னும்  பரிசுத்தமாகட்டும்.  {Rev  22:11}

 

இதோ,  சீக்கிரமாய்  வருகிறேன்;  அவனவனுடைய  கிரியைகளின்படி  அவனவனுக்கு  நான்  அளிக்கும்  பலன்  என்னோடேகூட  வருகிறது.  {Rev  22:12}

 

நான்  அல்பாவும்<Alpha>  ஓமெகாவும்<Omega>,  ஆதியும்  அந்தமும்,  முந்தினவரும்  பிந்தினவருமாயிருக்கிறேன்.  {Rev  22:13}

 

ஜீவவிருட்சத்தின்மேல்  அதிகாரமுள்ளவர்களாவதற்கும்,  வாசல்கள்  வழியாய்  நகரத்திற்குள்  பிரவேசிப்பதற்கும்  அவருடைய  கற்பனைகளின்படி  செய்கிறவர்கள்  பாக்கியவான்கள்.  {Rev  22:14}

 

நாய்களும்,  சூனியக்காரரும்,  விபசாரக்காரரும்,  கொலைபாதகரும்,  விக்கிரகாராதனைக்காரரும்,  பொய்யை  விரும்பி  அதின்படி  செய்கிற  யாவரும்  புறம்பே  இருப்பார்கள்.  {Rev  22:15}

 

சபைகளில்  இவைகளை  உங்களுக்குச்  சாட்சியாக  அறிவிக்கும்படிக்கு  இயேசுவாகிய<Jesus>  நான்  என்  தூதனை  அனுப்பினேன்.  நான்  தாவீதின்<David>  வேரும்  சந்ததியும்,  பிரகாசமுள்ள  விடிவெள்ளி  நட்சத்திரமுமாயிருக்கிறேன்  என்றார்.  {Rev  22:16}

 

ஆவியும்  மணவாட்டியும்  வா  என்கிறார்கள்;  கேட்கிறவனும்  வா  என்பானாக;  தாகமாயிருக்கிறவன்  வரக்கடவன்;  விருப்பமுள்ளவன்  ஜீவத்தண்ணீரை  இலவசமாய்  வாங்கிக்கொள்ளக்கடவன்.  {Rev  22:17}

 

இந்தப்  புஸ்தகத்திலுள்ள  தீர்க்கதரிசன  வசனங்களைக்  கேட்கிற  யாவருக்கும்  நான்  சாட்சியாக  எச்சரிக்கிறதாவது:  ஒருவன்  இவைகளோடே  எதையாகிலும்  கூட்டினால்,  இந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  வாதைகளை  தேவன்  அவன்மேல்  கூட்டுவார்.  {Rev  22:18}

 

ஒருவன்  இந்தத்  தீர்க்கதரிசன  புஸ்தகத்தின்  வசனங்களிலிருந்து  எதையாகிலும்  எடுத்துப்போட்டால்,  ஜீவபுஸ்தகத்திலிருந்தும்,  பரிசுத்த  நகரத்திலிருந்தும்,  இந்தப்  புஸ்தகத்தில்  எழுதப்பட்டவைகளிலிருந்தும்,  அவனுடைய  பங்கை  தேவன்  எடுத்துப்போடுவார்.  {Rev  22:19}

 

இவைகளைச்  சாட்சியாக  அறிவிக்கிறவர்:  மெய்யாகவே  நான்  சீக்கிரமாய்  வருகிறேன்  என்கிறார்.  ஆமென்<Amen>,  கர்த்தராகிய  இயேசுவே<Jesus>,  வாரும்.  {Rev  22:20}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  கிருபை  உங்கள்  அனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்<Amen>.  {Rev  22:21}

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!