Monday, January 06, 2020

எண்ணாகமம்

இஸ்ரவேலர்<Israel>  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  இரண்டாம்  வருஷம்  இரண்டாம்  மாதம்  முதல்  தேதியில்,  கர்த்தர்  சீனாய்<Sinai>  வனாந்தரத்திலிருக்கிற  ஆசரிப்புக்  கூடாரத்திலே  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  1:1}

 

நீங்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  முழுச்சபையாயிருக்கிற  அவர்கள்  பிதாக்களுடைய  வீட்டு  வம்சங்களிலுள்ள  புருஷர்களாகிய  சகல  தலைகளையும்  பேர்பேராக  எண்ணித்  தொகையேற்றுங்கள்.  {Num  1:2}

 

இஸ்ரவேலிலே<Israel>  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்துக்குப்  புறப்படத்தக்கவர்கள்  எல்லாரையும்  அவர்கள்  சேனைகளின்படி  நீயும்  ஆரோனும்<Aaron>  எண்ணிப்  பார்ப்பீர்களாக.  {Num  1:3}

 

ஒவ்வொரு  கோத்திரத்துக்கு  ஒவ்வொரு  மனிதன்  உங்களோடே  இருப்பானாக;  அவன்  தன்  பிதாக்களின்  வம்சத்துக்குத்  தலைவனாயிருக்கவேண்டும்.  {Num  1:4}

 

உங்களோடே  நிற்கவேண்டிய  மனிதருடைய  நாமங்களாவன:  ரூபன்<Reuben>  கோத்திரத்தில்  சேதேயூருடைய<Shedeur>  குமாரன்  எலிசூர்<Elizur>.  {Num  1:5}

 

சிமியோன்<Simeon>  கோத்திரத்தில்  சூரிஷதாயின்<Zurishaddai>  குமாரன்  செலூமியேல்<Shelumiel>.  {Num  1:6}

 

யூதா<Judah>  கோத்திரத்தில்  அம்மினதாபின்<Amminadab>  குமாரன்  நகசோன்<Nahshon>.  {Num  1:7}

 

இசக்கார்<Issachar>  கோத்திரத்தில்  சூவாரின்<Zuar>  குமாரன்  நெதனெயேல்<Nethaneel>.  {Num  1:8}

 

செபுலோன்<Zebulun>  கோத்திரத்தில்  ஏலோனின்<Helon>  குமாரன்  எலியாப்<Eliab>.  {Num  1:9}

 

யோசேப்பின்<Joseph>  குமாரராகிய  எப்பிராயீம்<Ephraim>  கோத்திரத்தில்  அம்மியூதின்<Ammihud>  குமாரன்  எலிஷாமா<Elishama>;  மனாசே<Manasseh>  கோத்திரத்தில்  பெதாசூரின்<Pedahzur>  குமாரன்  கமாலியேல்<Gamaliel>.  {Num  1:10}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தில்  கீதெயோனின்<Gideoni>  குமாரன்  அபீதான்<Abidan>.  {Num  1:11}

 

தாண்<Dan>  கோத்திரத்தில்  அம்மிஷதாயின்<Ammishaddai>  குமாரன்  அகியேசேர்<Ahiezer>.  {Num  1:12}

 

ஆசேர்<Asher>  கோத்திரத்தில்  ஓகிரானின்<Ocran>  குமாரன்  பாகியேல்<Pagiel>.  {Num  1:13}

 

காத்<Gad>  கோத்திரத்தில்  தேகுவேலின்<Deuel>  குமாரன்  எலியாசாப்<Eliasaph>.  {Num  1:14}

 

நப்தலி<Naphtali>  கோத்திரத்தில்  ஏனானின்<Enan>  குமாரன்  அகீரா<Ahira>.  {Num  1:15}

 

இவர்களே  சபையில்  ஏற்படுத்தப்பட்டவர்களும்,  தங்கள்  தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரங்களில்  பிரபுக்களும்,  இஸ்ரவேலில்<Israel>  ஆயிரவர்களுக்குத்  தலைவருமாயிருப்பவர்கள்  என்றார்.  {Num  1:16}

 

அப்படியே  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  பேர்பேராகக்  குறிக்கப்பட்ட  இந்த  மனிதரைக்  கூட்டிக்கொண்டு,  {Num  1:17}

 

இரண்டாம்  மாதம்  முதல்  தேதியில்  சபையார்  எல்லாரையும்  கூடிவரச்செய்தார்கள்.  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  தங்கள்  குடும்பத்தின்படிக்கும்,  பிதாக்களுடைய  வம்சத்தின்படிக்கும்,  நாமத்  தொகையின்படிக்கும்,  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  தலைதலையாகத்  தங்கள்  வம்ச  உற்பத்தியைத்  தெரிவித்தார்கள்.  {Num  1:18}

 

இப்படிக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே,  மோசே<Moses>  அவர்களைச்  சீனாய்<Sinai>  வனாந்தரத்தில்  எண்ணிப்பார்த்தான்.  {Num  1:19}

 

இஸ்ரவேலின்<Israel>  மூத்தகுமாரனாகிய  ரூபன்<Reuben>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  தலைதலையாக  எண்ணப்பட்டபோது,  {Num  1:20}

 

ரூபன்<Reuben>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பத்தாறாயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  1:21}

 

சிமியோன்<Simeon>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  தலைதலையாக  எண்ணப்பட்டபோது,  {Num  1:22}

 

சிமியோன்<Simeon>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்தொன்பதினாயிரத்து  முந்நூறுபேர்.  {Num  1:23}

 

காத்<Gad>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:24}

 

காத்<Gad>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பத்தையாயிரத்து  அறுநூற்று  ஐம்பதுபேர்.  {Num  1:25}

 

யூதா<Judah>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:26}

 

யூதா<Judah>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  எழுபத்து  நாலாயிரத்து  அறுநூறுபேர்.  {Num  1:27}

 

இசக்கார்<Issachar>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:28}

 

இசக்கார்<Issachar>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்து  நாலாயிரத்து  நானூறுபேர்.  {Num  1:29}

 

செபுலோன்<Zebulun>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:30}

 

செபுலோன்<Zebulun>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்தேழாயிரத்து  நானூறுபேர்.  {Num  1:31}

 

யோசேப்பின்<Joseph>  குமாரரில்  எப்பிராயீம்<Ephraim>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:32}

 

எப்பிராயீம்<Ephraim>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பதினாயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  1:33}

 

மனாசே<Manasseh>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:34}

 

மனாசே<Manasseh>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  முப்பத்தீராயிரத்து  இருநூறுபேர்.  {Num  1:35}

 

பென்யமீன்<Benjamin>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:36}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  முப்பத்தையாயிரத்து  நானூறுபேர்.  {Num  1:37}

 

தாண்<Dan>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:38}

 

தாண்<Dan>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  அறுபத்தீராயிரத்து  எழுநூறுபேர்.  {Num  1:39}

 

ஆசேர்<Asher>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:40}

 

ஆசேர்<Asher>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பத்தோராயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  1:41}

 

நப்தலி<Naphtali>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  {Num  1:42}

 

நப்தலி<Naphtali>  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்து  மூவாயிரத்து  நானூறுபேர்.  {Num  1:43}

 

எண்ணப்பட்டவர்கள்  இவர்களே;  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  இஸ்ரவேலுடைய<Israel>  பிதாக்களின்  வம்சத்தில்  ஒவ்வொரு  வம்சத்துக்கு  ஒவ்வொரு  பிரபுவாகிய  பன்னிரண்டுபேரும்  எண்ணினார்கள்.  {Num  1:44}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  பிதாக்களின்  வம்சத்தில்  இருபது  வயதுள்ளவர்கள்முதல்,  இஸ்ரவேலில்<Israel>  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்கவர்களாகிய  எண்ணப்பட்ட  பேர்கள்  எல்லாரும்,  {Num  1:45}

 

ஆறுலட்சத்து  மூவாயிரத்து  ஐந்நூற்று  ஐம்பது  பேராயிருந்தார்கள்.  {Num  1:46}

 

லேவியர்<Levites>  தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரத்தின்படியே,  மற்றவர்களுடனே  எண்ணப்படவில்லை.  {Num  1:47}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  1:48}

 

நீ  லேவி<Levi>  கோத்திரத்தாரைமாத்திரம்  எண்ணாமலும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குள்ளே  அவர்கள்  தொகையை  ஏற்றாமலும்,  {Num  1:49}

 

லேவியரைச்<Levites>  சாட்சியின்  வாசஸ்தலத்திற்கும்,  அதினுடைய  சகல  பணிமுட்டுகளுக்கும்,  அதிலுள்ள  சமஸ்த  பொருள்களுக்கும்  விசாரிப்புக்காரராக  ஏற்படுத்து;  அவர்கள்  வாசஸ்தலத்தையும்  அதின்  சகல  பணிமுட்டுகளையும்  சுமப்பார்களாக;  அதினிடத்தில்  ஊழியம்  செய்து,  வாசஸ்தலத்தைச்  சுற்றிலும்  பாளயமிறங்கக்கடவர்கள்.  {Num  1:50}

 

வாசஸ்தலம்  புறப்படும்போது,  லேவியர்<Levites>  அதை  இறக்கிவைத்து,  அது  ஸ்தாபனம்  பண்ணப்படும்போது,  லேவியர்<Levites>  அதை  எடுத்து  நிறுத்தக்கடவர்கள்;  அந்நியன்  அதற்குச்  சமீபத்தில்  வந்தால்  கொலைசெய்யப்படக்கடவன்.  {Num  1:51}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  தங்கள்  தங்கள்  பாளயத்தோடும்,  தங்கள்  தங்கள்  சேனையின்  கொடியோடும்  கூடாரம்  போடக்கடவர்கள்.  {Num  1:52}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சபையின்மேல்  கடுங்கோபம்  வராதபடிக்கு  லேவியர்<Levites>  சாட்சியின்  வாசஸ்தலத்தைச்  சுற்றிலும்  பாளயமிறங்கி,  லேவியர்<Levites>  சாட்சியின்  வாசஸ்தலத்தைக்  காவல்காப்பார்களாக  என்றார்.  {Num  1:53}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடி  எல்லாவற்றையும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  செய்தார்கள்.  {Num  1:54}

 

கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  நோக்கி:  {Num  2:1}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அவரவர்  தங்கள்  தங்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்  விருதாகிய  தங்கள்  தங்கள்  கொடியண்டையிலே  தங்கள்  கூடாரங்களைப்  போட்டு,  ஆசரிப்புக்  கூடாரத்திற்கு  எதிராகச்  சுற்றிலும்  பாளயமிறங்கக்கடவர்கள்.  {Num  2:2}

 

யூதாவின்<Judah>  பாளயத்துக்  கொடியையுடைய  சேனைகள்  சூரியன்  உதிக்கும்  கீழ்ப்புறத்திலே  பாளயமிறங்கவேண்டும்;  அம்மினதாபின்<Amminadab>  குமாரனாகிய  நகசோன்<Nahshon>  யூதா<Judah>  சந்ததிக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:3}

 

எண்ணப்பட்ட  அவனுடைய  சேனை  எழுபத்து  நாலாயிரத்து  அறுநூறுபேர்.  {Num  2:4}

 

அவன்  அருகே  இசக்கார்<Issachar>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  சூவாரின்<Zuar>  குமாரன்  நெதனெயேல்<Nethaneel>  இசக்கார்<Issachar>  சந்ததிக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:5}

 

எண்ணப்பட்ட  அவனுடைய  சேனை  ஐம்பத்து  நாலாயிரத்து  நானூறுபேர்.  {Num  2:6}

 

அவன்  அருகே  செபுலோன்<Zebulun>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  ஏலோனின்<Helon>  குமாரனாகிய  எலியாப்<Eliab>  செபுலோன்<Zebulun>  சந்ததிக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:7}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  ஐம்பத்தேழாயிரத்து  நானூறுபேர்.  {Num  2:8}

 

எண்ணப்பட்ட  யூதாவின்<Judah>  பாளயத்தார்  எல்லாரும்  தங்கள்  சேனைகளின்படியே  இலட்சத்து  எண்பத்து  ஆறாயிரத்து  நானூறுபேர்;  இவர்கள்  பிரயாணத்திலே  முதற்பாளயமாய்ப்  போகக்கடவர்கள்.  {Num  2:9}

 

ரூபனுடைய<Reuben>  பாளயத்துக்  கொடியையுடைய  சேனைகள்  தென்புறத்தில்  பாளயமிறங்கவேண்டும்;  சேதேயூரின்<Shedeur>  குமாரனாகிய  எலிசூர்<Elizur>  ரூபன்<Reuben>  சந்ததியாருக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:10}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்தாறாயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  2:11}

 

அவன்  அருகே  சிமியோன்<Simeon>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  சூரிஷதாயின்<Zurishaddai>  குமாரனாகிய  செலூமியேல்<Shelumiel>  சிமியோன்<Simeon>  சந்ததியாருக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:12}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  ஐம்பத்தொன்பதினாயிரத்து  முந்நூறுபேர்.  {Num  2:13}

 

அவன்  அருகே  காத்<Gad>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  தேகுவேலின்<Reuel>  குமாரனாகிய  எலியாசாப்<Eliasaph>  காத்<Gad>  சந்ததியாருக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:14}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்தையாயிரத்து  அறுநூற்று  ஐம்பதுபேர்.  {Num  2:15}

 

எண்ணப்பட்ட  ரூபனின்<Reuben>  பாளயத்தார்  எல்லாரும்  தங்கள்  சேனைகளின்படியே  இலட்சத்து  ஐம்பத்து  ஓராயிரத்து  நானூற்று  ஐம்பதுபேர்;  இவர்கள்  பிரயாணத்தில்  இரண்டாம்  பாளயமாய்ப்  போகக்கடவர்கள்.  {Num  2:16}

 

பின்பு  ஆசரிப்புக்  கூடாரம்  லேவியரின்<Levites>  சேனையோடே  பாளயங்களின்  நடுவே  பிரயாணப்பட்டுப்  போகவேண்டும்;  எப்படிப்  பாளயமிறங்குகிறார்களோ,  அப்படியே  அவரவர்  தங்கள்  வரிசையிலே  தங்கள்  கொடிகளோடே  பிரயாணமாய்ப்  போகக்கடவர்கள்.  {Num  2:17}

 

எப்பிராயீமுடைய<Ephraim>  பாளயத்துக்  கொடியையுடைய  சேனைகள்  மேல்புறத்தில்  இறங்கவேண்டும்;  அம்மியூதின்<Ammihud>  குமாரனாகிய  எலிஷாமா<Elishama>  எப்பிராயீமின்<Ephraim>  சந்ததிக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:18}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பதினாயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  2:19}

 

அவன்  அருகே  மனாசே<Manasseh>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  பெதாசூரின்<Pedahzur>  குமாரனாகிய  கமாலியேல்<Gamaliel>  மனாசே<Manasseh>  சந்ததிக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:20}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  முப்பத்தீராயிரத்து  இருநூறுபேர்.  {Num  2:21}

 

அவன்  அருகே  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  கீதெயோனின்<Gideoni>  குமாரனாகிய  அபீதான்<Abidan>  பென்யமீன்<Benjamin>  சந்ததிக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:22}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  முப்பத்தையாயிரத்து  நானூறுபேர்.  {Num  2:23}

 

எண்ணப்பட்ட  எப்பிராயீமின்<Ephraim>  பாளயத்தார்  எல்லாரும்  தங்கள்  சேனைகளின்படியே  இலட்சத்து  எண்ணாயிரத்து  நூறுபேர்;  இவர்கள்  பிரயாணத்தில்  மூன்றாம்  பாளயமாய்ப்  போகக்கடவர்கள்.  {Num  2:24}

 

தாணுடைய<Dan>  பாளயத்துக்  கொடியையுடைய  சேனைகள்  வடபுறத்தில்  இறங்கவேண்டும்;  அம்மிஷதாயின்<Ammishaddai>  குமாரனாகிய  அகியேசேர்<Ahiezer>  தாண்<Dan>  வம்சத்திற்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:25}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  அறுபத்தீராயிரத்து  எழுநூறுபேர்.  {Num  2:26}

 

அவன்  அருகே  ஆசேர்<Asher>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  ஓகிரானின்<Ocran>  குமாரனாகிய  பாகியேல்<Pagiel>  ஆசேர்<Asher>  சந்ததிக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:27}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்தோராயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  2:28}

 

அவன்  அருகே  நப்தலி<Naphtali>  கோத்திரத்தார்  பாளயமிறங்கவேண்டும்;  ஏனானின்<Enan>  குமாரனாகிய  அகீரா<Ahira>  நப்தலி<Naphtali>  சந்ததியாருக்குச்  சேனாபதியாயிருக்கக்கடவன்.  {Num  2:29}

 

அவனுடைய  சேனையில்  எண்ணப்பட்டவர்கள்  ஐம்பத்து  மூவாயிரத்து  நானூறுபேர்.  {Num  2:30}

 

எண்ணப்பட்ட  தாணின்<Dan>  பாளயத்தார்  எல்லாரும்  இலட்சத்து  ஐம்பத்தேழாயிரத்து  அறுநூறுபேர்;  இவர்கள்  தங்கள்  கொடிகளோடே  பின்பாளயமாய்ப்  போகக்கடவர்கள்.  {Num  2:31}

 

இவர்களே  தங்கள்  தங்கள்  பிதாக்களின்  வம்சத்தின்படி  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  எண்ணப்பட்டவர்கள்.  பாளயங்களிலே  தங்கள்  தங்கள்  சேனைகளின்படியே  எண்ணப்பட்டவர்கள்  எல்லாரும்  ஆறுலட்சத்து  மூவாயிரத்து  ஐந்நூற்று  ஐம்பது  பேராயிருந்தார்கள்.  {Num  2:32}

 

லேவியரோ<Levites>,  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடி,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குள்ளே  எண்ணப்படவில்லை.  {Num  2:33}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியெல்லாம்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  செய்து,  தங்கள்  தங்கள்  கொடிகளின்கீழ்  பாளயமிறங்கி,  தங்கள்  தங்கள்  பிதாக்களுடைய  வம்சங்களின்படியே  பிரயாணப்பட்டுப்போனார்கள்.  {Num  2:34}

 

சீனாய்<Sinai>  மலையில்  கர்த்தர்  மோசேயோடே<Moses>  பேசின  நாளிலே,  ஆரோன்<Aaron>  மோசே<Moses>  என்பவர்களுடைய  வம்சவரலாறாவது:  {Num  3:1}

 

ஆரோனுடைய<Aaron>  குமாரர்,  முதல்  பிறந்தவனாகிய  நாதாப்<Nadab>,  அபியூ<Abihu>,  எலெயாசார்<Eleazar>,  இத்தாமார்<Ithamar>  என்பவர்களே.  {Num  3:2}

 

ஆசாரிய  ஊழியம்செய்கிறதற்கு  அவனால்  பிரதிஷ்டை  செய்யப்பட்டு  அபிஷேகம்பெற்ற  ஆசாரியரான  ஆரோனுடைய<Aaron>  குமாரரின்  நாமங்கள்  இவைகளே.  {Num  3:3}

 

நாதாபும்<Nadab>  அபியூவும்<Abihu>  சீனாய்<Sinai>  வனாந்தரத்தில்  அந்நிய  அக்கினியைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்தபோது,  கர்த்தருடைய  சந்நிதியில்  மரித்துப்போனார்கள்;  அவர்களுக்குப்  பிள்ளைகள்  இல்லை;  எலெயாசாரும்<Eleazar>  இத்தாமாருமே<Ithamar>  தங்கள்  தகப்பனாகிய  ஆரோனுக்கு<Aaron>  முன்பாக  ஆசாரிய  ஊழியம்  செய்தார்கள்.  {Num  3:4}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  3:5}

 

நீ  லேவிகோத்திரத்தாரைச்<Levi>  சேர்த்து,  அவர்கள்  ஆசாரியனாகிய  ஆரோனுக்குப்<Aaron>  பணிவிடை  செய்யும்படி  அவர்களை  நிறுத்து.  {Num  3:6}

 

அவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  முன்பாக  அவனுடைய  காவலையும்  எல்லாச்  சபையின்  காவலையும்  காத்து,  வாசஸ்தலத்தின்  பணிவிடை  வேலைகளைச்  செய்யக்கடவர்கள்.  {Num  3:7}

 

அவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  தட்டுமுட்டு  முதலானவைகளையும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  காவலையும்  காத்து,  வாசஸ்தலத்தின்  பணிவிடைகளைச்  செய்யக்கடவர்கள்.  {Num  3:8}

 

ஆகையால்  லேவியரை<Levites>  ஆரோனிடத்திலும்<Aaron>  அவன்  குமாரரிடத்திலும்  ஒப்புக்கொடுப்பாயாக;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  இவர்கள்  முற்றிலும்  அவனுக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.  {Num  3:9}

 

ஆரோனையும்<Aaron>  அவன்  குமாரரையுமோ,  தங்கள்  ஆசாரிய  ஊழியத்தைச்  செய்வதற்காக  நியமிக்கக்கடவாய்,  அந்த  ஊழியத்தைச்  செய்யும்படி  சேருகிற  அந்நியன்  கொலைசெய்யப்படக்கடவன்  என்றார்.  {Num  3:10}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  3:11}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  கர்ப்பந்திறந்து  பிறக்கிற  முதற்பேறான  யாவுக்கும்  பதிலாக,  நான்  லேவியரை<Levites>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலிருந்து  எடுத்துக்கொண்டேன்;  அவர்கள்  என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.  {Num  3:12}

 

முதற்பேறானவையெல்லாம்  என்னுடையவை;  நான்  எகிப்துதேசத்தில்<Egypt>  முதற்பேறான  யாவையும்  சங்கரித்த  நாளில்,  இஸ்ரவேலில்<Israel>  மனிதர்முதல்  மிருகஜீவன்மட்டுமுள்ள  முதற்பேறான  யாவையும்  எனக்கென்று  பரிசுத்தப்படுத்தினதினாலே,  அவைகள்  என்னுடையவைகளாயிருக்கும்;  நான்  கர்த்தர்  என்றார்.  {Num  3:13}

 

பின்னும்  கர்த்தர்  சீனாய்<Sinai>  வனாந்தரத்தில்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  3:14}

 

லேவிபுத்திரரை<Levi>  அவர்கள்  பிதாக்களின்  வம்சங்களின்படியே  எண்ணுவாயாக;  அவர்களில்  ஒரு  மாதம்முதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  ஆண்பிள்ளைகளையெல்லாம்  எண்ணுவாயாக  என்றார்.  {Num  3:15}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வாக்கின்படி,  மோசே<Moses>  தனக்குக்  கற்பிக்கப்பட்டபிரகாரம்  அவர்களை  எண்ணினான்.  {Num  3:16}

 

லேவியின்<Levi>  குமாரர்  தங்கள்  நாமங்களின்படியே,  கெர்சோன்<Gershon>,  கோகாத்<Kohath>,  மெராரி<Merari>  என்பவர்கள்.  {Num  3:17}

 

தங்கள்  வம்சத்தின்படியே  கெர்சோனுடைய<Gershon>  குமாரரின்  நாமங்கள்,  லிப்னீ<Libni>,  சீமேயி<Shimei>  என்பவைகள்.  {Num  3:18}

 

தங்கள்  வம்சங்களின்படியே  கோகாத்துடைய<Kohath>  குமாரர்,  அம்ராம்<Amram>,  இத்சேயார்<Izehar>,  எப்ரோன்<Hebron>,  ஊசியேல்<Uzziel>  என்பவர்கள்.  {Num  3:19}

 

தங்கள்  வம்சங்களின்படியே  மெராரியினுடைய<Merari>  குமாரர்,  மகேலி<Mahli>,  மூசி<Mushi>  என்பவர்கள்;  இவர்களே  லேவியருடைய<Levites>  பிதாக்களின்  வம்சத்தார்.  {Num  3:20}

 

கெர்சோனின்<Gershon>  வழியாய்  லிப்னீயரின்<Libnites>  வம்சமும்  சீமேயியர்<Shimites>  வம்சமும்  தோன்றின;  இவைகளே  கெர்சோனியரின்<Gershonites>  வம்சங்கள்.  {Num  3:21}

 

அவர்களில்  ஒரு  மாதம்முதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  ஆண்பிள்ளைகளெல்லாம்  எண்ணப்பட்டபோது,  எண்ணப்பட்டவர்கள்  ஏழாயிரத்து  ஐந்நூறுபேராயிருந்தார்கள்.  {Num  3:22}

 

கெர்சோனியரின்<Gershonites>  வம்சங்கள்  வாசஸ்தலத்தின்  பின்புறத்தில்  மேற்கே  பாளயமிறங்கவேண்டும்.  {Num  3:23}

 

கெர்சோனியருடைய<Gershonites>  தகப்பன்  வம்சத்துக்குத்  தலைவன்  லாயேலின்<Lael>  குமாரனாகிய  எலியாசாப்<Eliasaph>  என்பவன்.  {Num  3:24}

 

ஆசரிப்புக்  கூடாரத்திலே  கெர்சோன்<Gershon>  புத்திரரின்  காவலாவது:  வாசஸ்தலமும்,  கூடாரமும்,  அதின்  மூடியும்,  ஆசரிப்புக்  கூடாரவாசல்  மறைவும்,  {Num  3:25}

 

வாசஸ்தலத்தண்டையிலும்  பலிபீடத்தண்டையிலும்  சுற்றிலும்  இருக்கிற  பிராகாரத்தின்  தொங்குதிரைகளும்,  பிராகாரவாசல்  மூடுதிரையும்,  அவைகளின்  வேலைகளுக்கெல்லாம்  உரிய  அவைகளின்  கயிறுகளுமே.  {Num  3:26}

 

கோகாத்தின்<Kohath>  வழியாய்  அம்ராமியரின்<Amramites>  வம்சமும்  இத்சேயாரின்<Izeharites>  வம்சமும்  எப்ரோனியரின்<Hebronites>  வம்சமும்  ஊசியேலரின்<Uzzielites>  வம்சமும்  தோன்றின;  இவைகளே  கோகாத்தியரின்<Kohathites>  வம்சங்கள்.  {Num  3:27}

 

ஒரு  மாதம்முதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  ஆண்பிள்ளைகளெல்லாம்  எண்ணப்பட்டபோது,  பரிசுத்த  ஸ்தலத்துக்குரியவைகளைக்  காப்பவர்கள்,  எண்ணாயிரத்து  அறுநூறுபேராயிருந்தார்கள்.  {Num  3:28}

 

கோகாத்<Kohath>  புத்திரரின்  வம்சங்கள்  வாசஸ்தலத்தின்  தென்புறமான  பக்கத்திலே  பாளயமிறங்கவேண்டும்.  {Num  3:29}

 

அவர்களின்  தலைவன்,  ஊசியேலின்<Uzziel>  குமாரனாகிய  எல்சாபான்<Elizaphan>.  {Num  3:30}

 

அவர்களுடைய  காவலாவது:  பெட்டியும்,  மேஜையும்,  குத்துவிளக்கும்,  பீடங்களும்,  ஆராதனைக்கேற்ற  பரிசுத்த  ஸ்தலத்தின்  பணிமுட்டுகளும்,  தொங்குதிரையும்,  அதினுடைய  எல்லா  வேலைகளுக்கும்  ஏற்றவைகளுமே.  {Num  3:31}

 

ஆசாரியனாகிய  ஆரோனின்<Aaron>  குமாரன்  எலெயாசார்<Eleazar>  என்பவன்  லேவியருடைய<Levites>  தலைவர்களுக்குத்  தலைவனாய்ப்  பரிசுத்த  ஸ்தலத்தைக்  காவல்காக்கிறவர்களுக்கு  விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.  {Num  3:32}

 

மெராரியின்<Merari>  வழியாய்  மகேலியரின்<Mahlites>  வம்சமும்  மூசியரின்<Mushites>  வம்சமும்  தோன்றின;  இவைகளே  மெராரியின்<Merari>  வம்சங்கள்.  {Num  3:33}

 

அவர்களில்  ஒரு  மாதம்முதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  ஆண்பிள்ளைகளெல்லாம்  எண்ணப்பட்டபோது,  எண்ணப்பட்டவர்கள்  ஆறாயிரத்து  இருநூறுபேராயிருந்தார்கள்.  {Num  3:34}

 

அபியாயேலின்<Abihail>  குமாரனாகிய  சூரியேல்<Zuriel>  என்பவன்  அவர்களுக்குத்  தலைவனாயிருந்தான்;  இவர்கள்  வாசஸ்தலத்தின்  வடபுறமான  பக்கத்தில்  பாளயமிறங்கவேண்டும்.  {Num  3:35}

 

அவர்களுடைய  காவல்  விசாரிப்பாவது:  வாசஸ்தலத்தின்  பலகைகளும்,  தாழ்ப்பாள்களும்,  தூண்களும்,  பாதங்களும்,  அதினுடைய  எல்லாப்  பணிமுட்டுகளும்,  அதற்கடுத்தவைகள்  அனைத்தும்,  {Num  3:36}

 

சுற்றுப்பிராகாரத்தின்  தூண்களும்,  அவைகளின்  பாதங்களும்,  முளைகளும்,  கயிறுகளுமே.  {Num  3:37}

 

ஆசரிப்புக்  கூடாரமாகிய  வாசஸ்தலத்துக்கு  முன்பாக,  சூரியன்  உதிக்கும்  கீழ்ப்புறத்திலே  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  அவன்  குமாரரும்  கூடாரங்களைப்  போட்டு  இறங்கி,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  காவலுக்குப்  பதிலாகப்  பரிசுத்த  ஸ்தலத்தைக்  காவல்  காக்கவேண்டும்.  வாசஸ்தலத்தில்  சேருகிற  அந்நியன்  கொலைசெய்யப்படக்கடவன்.  {Num  3:38}

 

மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>,  கர்த்தருடைய  வாக்கின்படி,  லேவியரில்<Levites>  ஒரு  மாதம்முதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  ஆண்பிள்ளைகளையெல்லாம்  அவர்களுடைய  வம்சங்களின்படியே  எண்ணினார்கள்;  அவர்கள்  இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள்.  {Num  3:39}

 

அதன்பின்பு  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  ஒரு  மாதம்முதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  முதற்பேறான  ஆண்பிள்ளைகளையெல்லாம்  எண்ணி,  அவர்கள்  நாமங்களைத்  தொகையேற்றி,  {Num  3:40}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலுள்ள  முதற்பேறான  யாவுக்கும்  பதிலாக  லேவியரையும்<Levites>,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  மிருகஜீவன்களிலுள்ள  தலையீற்றான  யாவுக்கும்  பதிலாக  லேவியரின்<Levites>  மிருகஜீவன்களையும்  எனக்கென்று  பிரித்தெடு;  நான்  கர்த்தர்  என்றார்.  {Num  3:41}

 

அப்பொழுது  மோசே<Moses>,  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலுள்ள  முதற்பேறான  யாவரையும்  எண்ணினான்.  {Num  3:42}

 

ஒரு  மாதம்முதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  முதற்பேறான  ஆண்பிள்ளைகளெல்லாரும்  பேர்பேராக  எண்ணப்பட்டபோது,  இருபத்தீராயிரத்து  இருநூற்று  எழுபத்துமூன்றுபேராயிருந்தார்கள்.  {Num  3:43}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  3:44}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலுள்ள  முதற்பேறான  யாவருக்கும்  பதிலாக  லேவியரையும்<Levites>,  அவர்களுடைய  மிருகஜீவன்களுக்குப்  பதிலாக  லேவியரின்<Levites>  மிருகஜீவன்களையும்  பிரித்தெடு;  லேவியர்<Levites>  என்னுடையவர்களாயிருப்பார்கள்;  நான்  கர்த்தர்.  {Num  3:45}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  முதற்பேறுகளில்  லேவியரின்<Levites>  தொகைக்கு  அதிகமாயிருந்து,  மீட்கப்படவேண்டிய  இருநூற்று  எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,  {Num  3:46}

 

நீ  தலைக்கு  ஐந்து  சேக்கல்  வீதமாகப்  பரிசுத்த  சேக்கல்  கணக்கின்படி  வாங்குவாயாக;  அந்தச்  சேக்கலானது  இருபது  கேரா.  {Num  3:47}

 

லேவியருடைய<Levites>  தொகைக்கு  அதிகமானவர்கள்  மீட்கப்படும்  திரவியத்தை  ஆரோனுக்கும்<Aaron>  அவன்  குமாரருக்கும்  கொடுப்பாயாக  என்றார்.  {Num  3:48}

 

அப்படியே  லேவியரால்<Levites>  மீட்கப்பட்டவர்களின்  தொகைக்கு  அதிகமாயிருந்து,  இன்னும்  மீட்கப்படவேண்டியவர்களுக்கு  ஈடாக  மோசே<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  முதற்பேறானவர்களிடத்தில்,  {Num  3:49}

 

ஆயிரத்து  முந்நூற்று  அறுபத்தைந்து  சேக்கலாகிய  திரவியத்தை,  பரிசுத்த  ஸ்தலத்துச்  சேக்கல்  கணக்கின்படி  வாங்கி,  {Num  3:50}

 

கர்த்தருடைய  வாக்கின்படியே  மீட்கப்பட்டவர்களின்  கிரயத்தை  ஆரோனுக்கும்<Aaron>  அவன்  குமாரருக்கும்,  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே  கொடுத்தான்.  {Num  3:51}

 

கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  நோக்கி:  {Num  4:1}

 

லேவியின்<Levi>  புத்திரருக்குள்ளே  இருக்கிற  கோகாத்<Kohath>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களில்,  {Num  4:2}

 

ஆசரிப்புக்  கூடாரத்திலே  வேலைசெய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க  முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணி,  தொகையிடுவாயாக.  {Num  4:3}

 

ஆசரிப்புக்  கூடாரத்திலே  கோகாத்<Kohath>  புத்திரரின்  பணிவிடை  மகா  பரிசுத்தமானவைகளுக்குரியது.  {Num  4:4}

 

பாளயம்  புறப்படும்போது,  ஆரோனும்<Aaron>  அவன்  குமாரரும்  வந்து,  மறைவின்  திரைச்சீலையை  இறக்கி,  அதினாலே  சாட்சியின்  பெட்டியை  மூடி,  {Num  4:5}

 

அதின்மேல்  தகசுத்தோல்  மூடியைப்போட்டு,  அதின்மேல்  முற்றிலும்  நீலமான  துப்பட்டியை  விரித்து,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சி,  {Num  4:6}

 

சமுகத்தப்ப  மேஜையின்மேல்  நீலத்  துப்பட்டியை  விரித்து,  தட்டுகளையும்  தூபக்கரண்டிகளையும்  கிண்ணங்களையும்  மூடுகிற  தட்டுகளையும்  அதின்மேல்  வைப்பார்களாக;  நித்திய  அப்பமும்  அதின்மேல்  இருக்கக்கடவது.  {Num  4:7}

 

அவைகளின்மேல்  அவர்கள்  சிவப்புத்  துப்பட்டியை  விரித்து,  அதைத்  தகசுத்தோல்  மூடியால்  மூடி,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சி,  {Num  4:8}

 

இளநீலத்  துப்பட்டியை  எடுத்து,  குத்துவிளக்குத்தண்டையும்,  அதின்  அகல்களையும்,  அதின்  கத்தரிகளையும்,  சாம்பல்  பாத்திரங்களையும்,  அதற்குரிய  எண்ணெய்ப்  பாத்திரங்களையும்  மூடி,  {Num  4:9}

 

அதையும்  அதற்கடுத்த  தட்டுமுட்டுகள்  யாவையும்  தகசுத்தோல்  மூடிக்குள்ளே  போட்டு,  அதை  ஒரு  தண்டிலே  கட்டி,  {Num  4:10}

 

பொற்பீடத்தின்மேல்  இளநீலத்  துப்பட்டியை  விரித்து,  அதைத்  தகசுத்தோல்  மூடியால்  மூடி,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சி,  {Num  4:11}

 

பரிசுத்த  ஸ்தலத்தில்  வழங்கும்  ஆராதனைக்கேற்ற  சகல  தட்டுமுட்டுகளையும்  எடுத்து,  இளநீலத்  துப்பட்டியிலே  போட்டு,  தகசுத்தோல்  மூடியினால்  மூடி,  தண்டின்மேல்  கட்டி,  {Num  4:12}

 

பலிபீடத்தைச்  சாம்பலற  விளக்கி,  அதின்மேல்  இரத்தாம்பரத்  துப்பட்டியை  விரித்து,  {Num  4:13}

 

அதின்மேல்  ஆராதனைக்கேற்ற  சகல  பணிமுட்டுகளாகிய  கலசங்களையும்,  முள்  துறடுகளையும்,  சாம்பல்  எடுக்கும்  கரண்டிகளையும்,  கலசங்களையும்,  பலிபீடத்திற்கடுத்த  எல்லாப்  பாத்திரங்களையும்,  அதின்மேல்  வைத்து,  அதின்மேல்  தகசுத்தோல்  மூடியை  விரித்து,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சக்கடவர்கள்.  {Num  4:14}

 

பாளயம்  புறப்படும்போது,  ஆரோனும்<Aaron>  அவன்  குமாரரும்  பரிசுத்த  ஸ்தலத்தையும்  அதினுடைய  சகல  பணிமுட்டுகளையும்  மூடித்  தீர்ந்தபின்பு,  கோகாத்<Kohath>  புத்திரர்  அதை  எடுத்துக்கொண்டுபோகிறதற்கு  வரக்கடவர்கள்;  அவர்கள்  சாகாதபடிக்குப்  பரிசுத்தமானதைத்  தொடாதிருக்கக்கடவர்கள்;  ஆசரிப்புக்  கூடாரத்திலே  கோகாத்<Kohath>  புத்திரர்  சுமக்கும்  சுமை  இதுவே.  {Num  4:15}

 

ஆசாரியனாகிய  ஆரோனின்<Aaron>  குமாரன்  எலெயாசார்<Eleazar>,  விளக்குக்கு  எண்ணெயையும்,  சுகந்த  தூபவர்க்கத்தையும்,  தினந்தோறும்  இடும்  போஜனபலியையும்,  அபிஷேக  தைலத்தையும்,  வாசஸ்தலம்  முழுவதையும்,  அதிலுள்ள  யாவையும்,  பரிசுத்த  ஸ்தலத்தையும்  அதின்  பணிமுட்டுகளையும்,  விசாரிக்கக்கடவன்  என்றார்.  {Num  4:16}

 

கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  நோக்கி:  {Num  4:17}

 

லேவியருக்குள்ளே<Levites>  கோகாத்<Kohathites>  வம்சமாகிய  கோத்திரத்தார்  அழிந்துபோகாதபடி  பாருங்கள்.  {Num  4:18}

 

அவர்கள்  மகா  பரிசுத்தமானவைகளைக்  கிட்டுகையில்,  சாகாமல்  உயிரோடிருக்கும்படிக்கு,  நீங்கள்  அவர்களுக்காகச்  செய்யவேண்டியதாவது:  {Num  4:19}

 

ஆரோனும்<Aaron>  அவன்  குமாரரும்  வந்து,  அவர்களில்  அவனவனை  அவனவன்  செய்யும்  வேலைக்கும்  அவனவன்  சுமக்கும்  சுமைக்கும்  நியமிக்கக்கடவர்கள்;  அவர்களோ  சாகாதபடிக்குப்  பரிசுத்தமானவைகள்  மூடப்படும்போது  பார்க்கிறதற்கு  உட்பிரவேசியாமல்  இருப்பார்களாக  என்றார்.  {Num  4:20}

 

பின்னும்,  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  4:21}

 

கெர்சோன்<Gershon>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  வேலைசெய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  {Num  4:22}

 

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணி,  தொகை  ஏற்றுவாயாக.  {Num  4:23}

 

பணிவிடை  செய்கிறதிலும்  சுமக்கிறதிலும்  கெர்சோன்<Gershonites>  வம்சத்தாரின்  வேலையாவது:  {Num  4:24}

 

அவர்கள்  வாசஸ்தலத்துக்கும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  உரிய  தொங்குதிரையையும்,  மூடியையும்,  அவைகளின்மேல்  இருக்கிற  தகசுத்தோல்  மூடியையும்,  ஆசரிப்புக்  கூடாரவாசல்  மறைவையும்,  {Num  4:25}

 

பிராகாரத்தின்  தொங்குதிரைகளையும்,  வாசஸ்தலத்தண்டையிலும்  பலிபீடத்தண்டையிலும்  சுற்றிலும்  இருக்கிற  பிராகாரத்தினுடைய  வாசல்  தொங்குதிரையையும்,  அவைகளின்  கயிறுகளையும்,  அவைகளின்  வேலைக்கடுத்த  கருவிகள்  யாவையும்  சுமந்து,  அவைகளுக்காகச்  செய்யவேண்டிய  யாவையும்  செய்யக்கடவர்கள்.  {Num  4:26}

 

கெர்சோன்<Gershonites>  புத்திரர்  சுமக்கவேண்டிய  சுமைகளும்  செய்யவேண்டிய  பணிவிடைகளாகிய  சகல  வேலைகளும்  ஆரோனும்<Aaron>  அவன்  குமாரரும்  சொல்லுகிறபடியே  செய்யவேண்டும்;  அவர்கள்  சுமக்கவேண்டிய  சகல  சுமைகளையும்  நீங்கள்  நியமித்து,  அவர்களிடத்தில்  ஒப்புவியுங்கள்.  {Num  4:27}

 

கெர்சோன்<Gershon>  புத்திரரின்  வம்சத்தார்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடை  இதுதான்;  அவர்களை  வேலைகொள்ளும்  விசாரணை,  ஆசாரியனாகிய  ஆரோனின்<Aaron>  குமாரன்  இத்தாமாருடைய<Ithamar>  கைக்குள்  இருக்கவேண்டும்.  {Num  4:28}

 

மெராரி<Merari>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  வேலைசெய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  {Num  4:29}

 

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணக்கடவாய்.  {Num  4:30}

 

ஆசரிப்புக்  கூடாரத்தில்  அவர்கள்  செய்யும்  எல்லாப்  பணிவிடைக்கும்  அடுத்த  காவல்  விசாரிப்பாவது:  வாசஸ்தலத்தின்  பலகைகளும்,  தாழ்ப்பாள்களும்,  தூண்களும்,  பாதங்களும்,  {Num  4:31}

 

சுற்றிலும்  இருக்கிற  பிராகாரத்தின்  தூண்களும்,  அவைகளின்  பாதங்களும்,  முளைகளும்,  கயிறுகளும்,  அவைகளின்  சகல  கருவிகளும்,  அவற்றிற்கு  அடுத்த  மற்றெல்லா  வேலையும்தானே;  அவர்கள்  சுமந்து  காவல்காக்கும்படி  ஒப்புவிக்கப்படுகிறவைகளைப்  பேர்பேராக  எண்ணக்கடவீர்கள்.  {Num  4:32}

 

ஆசாரியனாகிய  ஆரோனுடைய<Aaron>  குமாரனான  இத்தாமாருடைய<Ithamar>  கைக்குள்ளாக  மெராரி<Merari>  புத்திரரின்  வம்சத்தார்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடைக்கு  அடுத்த  எல்லா  வேலையும்  இதுவே  என்றார்.  {Num  4:33}

 

அப்படியே  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  சபையின்  பிரபுக்களும்  கோகாத்<Kohathites>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களின்படி  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  செய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  {Num  4:34}

 

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணினார்கள்.  {Num  4:35}

 

அவர்கள்  வம்சங்களில்  எண்ணப்பட்டவர்கள்  இரண்டாயிரத்து  எழுநூற்று  ஐம்பதுபேர்.  {Num  4:36}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே,  மோசேயினாலும்<Moses>  ஆரோனாலும்<Aaron>  கோகாத்<Kohathites>  வம்சத்தாரில்  ஆசரிப்புக்  கூடாரத்தில்  வேலை  செய்கிறதற்காக  எண்ணித்  தொகையிடப்பட்டவர்கள்  எல்லாரும்  இவர்களே.  {Num  4:37}

 

கெர்சோன்<Gershon>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  செய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  {Num  4:38}

 

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரும்  எண்ணப்பட்டார்கள்.  {Num  4:39}

 

அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  அவரவர்  குடும்பத்தின்படிக்கும்,  பிதாக்களுடைய  வம்சத்தின்படிக்கும்  இரண்டாயிரத்து  அறுநூற்று  முப்பதுபேர்.  {Num  4:40}

 

மோசேயினாலும்<Moses>  ஆரோனாலும்<Aaron>  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  கெர்சோன்<Gershon>  புத்திரரின்  வம்சத்தாரில்  ஆசரிப்புக்  கூடாரத்தில்  வேலைசெய்ய  எண்ணித்  தொகையிடப்பட்டவர்கள்  எல்லாரும்  இவர்களே.  {Num  4:41}

 

மெராரி<Merari>  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  செய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  {Num  4:42}

 

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுள்ளவர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டார்கள்.  {Num  4:43}

 

அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  தங்கள்  குடும்பங்களின்படியே  மூவாயிரத்து  இருநூறுபேர்.  {Num  4:44}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே  மோசேயினாலும்<Moses>  ஆரோனாலும்<Aaron>  மெராரி<Merari>  புத்திரரின்  குடும்பத்தாரில்  எண்ணித்  தொகையிடப்பட்டவர்கள்  எல்லாரும்  இவர்களே.  {Num  4:45}

 

லேவியருடைய<Levites>  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களில்  முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ளவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடை  வேலைக்கும்  சுமையின்  வேலைக்கும்  உட்படத்தக்கவர்களும்,  {Num  4:46}

 

மோசேயினாலும்<Moses>  ஆரோனாலும்<Aaron>  இஸ்ரவேலின்<Israel>  பிரபுக்களாலும்  எண்ணப்பட்டவர்களும்  ஆகிய  எல்லாரும்,  {Num  4:47}

 

எண்ணாயிரத்து  ஐந்நூற்று  எண்பதுபேராயிருந்தார்கள்.  {Num  4:48}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே,  அவர்கள்  தங்கள்  தங்கள்  பணிவிடைக்கென்றும்  தங்கள்  தங்கள்  சுமைக்கென்றும்  மோசேயினால்<Moses>  எண்ணப்பட்டார்கள்;  இவ்விதமாய்,  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே  அவர்கள்  அவனால்  எண்ணப்பட்டார்கள்.  {Num  4:49}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  5:1}

 

குஷ்டரோகிகள்  யாவரையும்,  பிரமியமுள்ளவர்கள்  யாவரையும்,  சவத்தினால்  தீட்டுப்பட்டவர்கள்  யாவரையும்  பாளயத்திலிருந்து  விலக்கிவிட  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கட்டளையிடு.  {Num  5:2}

 

ஆண்பிள்ளையானாலும்  பெண்பிள்ளையானாலும்  அப்படிப்பட்டவர்களை  நீங்கள்  விலக்கி,  நான்  வாசம்பண்ணுகிற  தங்கள்  பாளயங்களை  அவர்கள்  தீட்டுப்படுத்தாதபடிக்கு,  நீங்கள்  அவர்களைப்  பாளயத்திற்குப்  புறம்பாக்கிவிடக்கடவீர்கள்  என்றார்.  {Num  5:3}

 

கர்த்தர்  மோசேக்குச்<Moses>  சொன்னபடியே,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  செய்து,  அவர்களைப்  பாளயத்திற்குப்  புறம்பாக்கிவிட்டார்கள்.  {Num  5:4}

 

மேலும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  5:5}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  ஒரு  புருஷனானாலும்  ஸ்திரீயானாலும்,  கர்த்தருடைய  கட்டளையை  மீறி  மனிதர்  செய்யும்  பாவங்களில்  யாதொரு  பாவத்தைச்  செய்து  குற்றவாளியானால்,  {Num  5:6}

 

அவர்கள்  தாங்கள்  செய்த  பாவத்தை  அறிக்கையிடக்கடவர்கள்;  அப்படிப்பட்டவன்  தான்  செய்த  குற்றத்தினிமித்தம்  அபராதத்தின்  முதலோடே  ஐந்தில்  ஒரு  பங்கை  அதிகமாய்க்கூட்டி,  தான்  குற்றஞ்செய்தவனுக்குச்  செலுத்தக்கடவன்.  {Num  5:7}

 

அதைக்  கேட்டு  வாங்குகிறதற்கு  இனத்தான்  ஒருவனும்  இல்லாதிருந்தால்,  அப்பொழுது  அவனுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்படி  ஆட்டுக்கடா  செலுத்தப்படுவதுமல்லாமல்,  கர்த்தருக்கு  அந்த  அபராதம்  செலுத்தப்பட்டு,  அது  ஆசாரியனைச்  சேரவேண்டும்.  {Num  5:8}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  ஏறெடுத்துப்  படைக்கும்படி  ஆசாரியனிடத்தில்  கொண்டுவருகிற  எல்லாப்  பரிசுத்தமான  படைப்பும்  அவனுடையதாயிருக்கும்.  {Num  5:9}

 

ஒவ்வொருவரும்  படைக்கும்  பரிசுத்தமான  வஸ்துக்கள்  அவனுடையதாயிருக்கும்;  ஒருவன்  ஆசாரியனுக்குக்  கொடுக்கிறது  எதுவும்  அவனுக்கே  உரியது  என்று  சொல்  என்றார்.  {Num  5:10}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  5:11}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  ஒருவனுடைய  மனைவி  பிறர்முகம்  பார்த்து,  புருஷனுக்குத்  துரோகம்பண்ணி,  {Num  5:12}

 

ஒருவனோடே  சம்யோகமாய்ச்  சயனித்திருந்த  விஷயத்தில்  அவள்  தீட்டுப்பட்டவளாயிருந்தும்,  அவளுடைய  புருஷன்  கண்களுக்கு  அது  மறைக்கப்பட்டு  வெளிக்கு  வராமல்  இருக்கிறபோதும்,  சாட்சியில்லாமலும்  அவள்  கையும்  களவுமாகப்  பிடிக்கப்படாமலும்  இருக்கிறபோதும்,  {Num  5:13}

 

எரிச்சலின்  ஆவி  அவன்மேல்  வந்து,  அவன்  தன்னுடைய  மனைவி  தீட்டுப்படுத்தப்பட்டிருக்க,  தீட்டுப்படுத்தப்பட்ட  தன்  மனைவியின்மேல்  குரோதங்கொண்டிருந்தாலும்,  அல்லது  அவன்  மனைவி  தீட்டுப்படுத்தப்படாதிருக்க,  எரிச்சலின்  ஆவி  அவன்மேல்  வந்து,  அவன்  அவள்மேல்  குரோதங்கொண்டிருந்தாலும்,  {Num  5:14}

 

அந்தப்  புருஷன்  தன்  மனைவியை  ஆசாரியனிடத்தில்  அழைத்துக்கொண்டுவந்து,  அவள்  நிமித்தம்  ஒரு  எப்பா  அளவான  வாற்கோதுமை  மாவிலே  பத்தில்  ஒரு  பங்கைப்  படைப்பாகக்  கொடுக்கக்கடவன்;  அது  எரிச்சலின்  காணிக்கையும்  அக்கிரமத்தை  நினைப்பூட்டும்  காணிக்கையுமாய்  இருப்பதினால்,  அதின்மேல்  எண்ணெய்  வார்க்காமலும்  தூபவர்க்கம்  போடாமலும்  இருப்பானாக.  {Num  5:15}

 

ஆசாரியன்  அவளைச்  சமீபத்தில்  அழைத்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  நிறுத்தி,  {Num  5:16}

 

ஒரு  மண்பாண்டத்திலே  பரிசுத்த  ஜலம்  வார்த்து,  வாசஸ்தலத்தின்  தரையிலிருக்கும்  புழுதியிலே  கொஞ்சம்  எடுத்து,  அந்த  ஜலத்திலே  போட்டு,  {Num  5:17}

 

ஸ்திரீயைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  நிறுத்தி,  அவள்  முக்காட்டை  நீக்கி,  எரிச்சலின்  காணிக்கையாகிய  நினைப்பூட்டுதலின்  காணிக்கையை  அவள்  உள்ளங்கையிலே  வைப்பானாக;  சாபகாரணமான  கசப்பான  ஜலம்  ஆசாரியன்  கையில்  இருக்கவேண்டும்.  {Num  5:18}

 

பின்பு  ஆசாரியன்  அவளை  ஆணையிடுவித்து:  ஒருவனும்  உன்னோடே  சயனியாமலும்,  உன்  புருஷனுக்கு  உட்பட்டிருக்கிற  நீ  தீட்டுப்படத்தக்கதாய்ப்  பிறர்முகம்  பாராமலும்  இருந்தால்,  சாபகாரணமான  இந்தக்  கசப்பான  ஜலத்தின்  தோஷத்துக்கு  நீங்கலாயிருப்பாய்.  {Num  5:19}

 

உன்  புருஷனுக்கு  உட்பட்டிருக்கிற  நீ  பிறர்முகம்  பார்த்து,  உன்  புருஷனோடேயன்றி  அந்நியனோடே  சம்யோகமாய்  சயனித்துத்  தீட்டுப்பட்டிருப்பாயானால்,  {Num  5:20}

 

கர்த்தர்  உன்  இடுப்பு  சூம்பவும்,  உன்  வயிறு  வீங்கவும்பண்ணி,  உன்னை  உன்  ஜனங்களுக்குள்ளே  சாபமும்  ஆணையிடுங்  குறியுமாக  வைப்பாராக.  {Num  5:21}

 

சாபகாரணமான  இந்த  ஜலம்  உன்  வயிறு  வீங்கவும்  இடுப்பு  சூம்பவும்  பண்ணும்படி,  உன்  குடலுக்குள்  பிரவேசிக்கக்கடவது  என்கிற  சாபவார்த்தையாலே  ஸ்திரீயை  ஆணையிடுவித்துச்  சொல்வானாக.  அதற்கு  அந்த  ஸ்திரீ:  ஆமென்,  ஆமென்,  என்று  சொல்லக்கடவள்.  {Num  5:22}

 

பின்பு  ஆசாரியன்  இந்தச்  சாபவார்த்தைகளை  ஒரு  சீட்டில்  எழுதி,  அவைகளைக்  கசப்பான  ஜலத்தினால்  கழுவிப்போட்டு,  {Num  5:23}

 

சாபகாரணமான  அந்தக்  கசப்பான  ஜலத்தை  அவள்  குடிக்கும்படி  பண்ணுவான்;  அப்பொழுது  சாபகாரணமான  அந்த  ஜலம்  அவளுக்குள்  இறங்கிக்  கசப்பாகும்.  {Num  5:24}

 

பின்பு  ஆசாரியன்  எரிச்சலின்  காணிக்கையை  அந்த  ஸ்திரீயின்  கையிலிருந்து  வாங்கி,  அதைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டி,  பீடத்தின்மேல்  செலுத்தி,  {Num  5:25}

 

ஞாபகக்குறியாக  அதிலே  ஒரு  கைப்பிடி  நிறைய  எடுத்து,  பீடத்தின்மேல்  தகனித்து,  பின்பு  ஸ்திரீக்கு  அந்த  ஜலத்தைக்  குடிக்கும்படி  கொடுக்கக்கடவன்.  {Num  5:26}

 

அந்த  ஜலத்தைக்  குடிக்கச்  செய்தபின்பு  சம்பவிப்பதாவது:  அவள்  தீட்டுப்பட்டு,  தன்  புருஷனுக்குத்  துரோகம்பண்ணியிருந்தால்,  சாபகாரணமான  அந்த  ஜலம்  அவளுக்குள்  பிரவேசித்துக்  கசப்புண்டானதினால்,  அவள்  வயிறுவீங்கி,  அவள்  இடுப்பு  சூம்பும்;  இப்படியே  அந்த  ஸ்திரீ  தன்  ஜனங்களுக்குள்ளே  சாபமாக  இருப்பாள்.  {Num  5:27}

 

அந்த  ஸ்திரீ  தீட்டுப்படாமல்  சுத்தமாயிருந்தால்,  அவள்  அதற்கு  நீங்கலாகி,  கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.  {Num  5:28}

 

ஒரு  ஸ்திரீ  தன்  புருஷனோடேயன்றி  அந்நிய  புருஷனோடே  சேர்ந்து  தீட்டுப்பட்டதினால்  உண்டான  எரிச்சலுக்கும்,  {Num  5:29}

 

புருஷன்மேல்  எரிச்சலின்  ஆவி  வருகிறதினால்,  அவன்  தன்  மனைவியின்மேல்  அடைந்த  சமுசயத்துக்கும்  அடுத்த  பிரமாணம்  இதுவே.  அவன்  கர்த்தருடைய  சந்நிதியில்  தன்  மனைவியை  நிறுத்துவானாக;  ஆசாரியன்  இந்தப்  பிரமாணத்தின்படியெல்லாம்  அவளுக்குச்  செய்யக்கடவன்.  {Num  5:30}

 

புருஷனானவன்  அக்கிரமத்திற்கு  நீங்கலாயிருப்பான்;  அப்படிப்பட்ட  ஸ்திரீயோ,  தன்  அக்கிரமத்தைச்  சுமப்பாள்  என்று  சொல்  என்றார்.  {Num  5:31}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  6:1}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  புருஷனாகிலும்  ஸ்திரீயாகிலும்  கர்த்தருக்கென்று  விரதம்  பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி  நசரேய<Nazarene//Nazarite>  விரதமாகிய  ஒரு  விசேஷித்த  பொருத்தனையைப்  பண்ணினால்,  {Num  6:2}

 

அப்படிப்பட்டவன்  திராட்சரசத்தையும்  மதுபானத்தையும்  விலக்கக்கடவன்;  அவன்  திராட்சரசத்தின்  காடியையும்  மற்ற  மதுபானத்தின்  காடியையும்,  திராட்சரசத்தினால்  செய்த  எவ்விதமான  பானத்தையும்  குடியாமலும்,  திராட்சப்பழங்களையாவது  திராட்ச  வற்றல்களையாவது  புசியாமலும்,  {Num  6:3}

 

தான்  நசரேயனாயிருக்கும்<Nazarene//Nazarite>  நாளெல்லாம்  திராட்சச்செடி  விதைமுதல்  தோல்வரையிலுள்ளவைகளினால்  செய்யப்பட்ட  யாதொன்றையும்  புசியாமலும்  இருக்கக்கடவன்.  {Num  6:4}

 

அவன்  நசரேய<Nazarene//Nazarite>  விரதங்காக்கும்  நாளெல்லாம்  சவரகன்  கத்தி  அவன்  தலையின்மேல்  படலாகாது;  அவன்  கர்த்தருக்கென்று  விரதங்காக்கும்  காலம்  நிறைவேறுமளவும்  பரிசுத்தமாயிருந்து,  தன்  தலைமயிரை  வளரவிடக்கடவன்.  {Num  6:5}

 

அவன்  கர்த்தருக்கென்று  விரதங்காக்கும்  நாளெல்லாம்  யாதொரு  பிரேதத்தண்டையில்  போகக்கூடாது.  {Num  6:6}

 

அவன்  தன்  தேவனுக்கென்று  செய்த  நசரேய<Nazarene//Nazarite>  விரதம்  அவன்  தலைமேல்  இருக்கிறபடியால்,  மரணமடைந்த  தன்  தகப்பனாலாகிலும்  தாயினாலாகிலும்  சகோதரனாலாகிலும்  சகோதரியினாலாகிலும்  தன்னைத்  தீட்டுப்படுத்தலாகாது.  {Num  6:7}

 

அவன்  நசரேயனாயிருக்கும்<Nazarene//Nazarite>  நாளெல்லாம்  கர்த்தருக்குப்  பரிசுத்தமாயிருப்பான்.  {Num  6:8}

 

அவனண்டையிலே  ஒருவன்  சடுதியில்  மரணமடைந்ததினால்,  நசரேய<Nazarene//Nazarite>  விரதமுள்ள  அவனுடைய  தலை  தீட்டுப்பட்டதேயாகில்,  அவன்  தன்  சுத்திகரிப்பின்  நாளாகிய  ஏழாம்  நாளில்  தன்  தலைமயிரைச்  சிரைத்துக்கொண்டு,  {Num  6:9}

 

எட்டாம்  நாளில்  இரண்டு  காட்டுப்புறாக்களையாவது  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  ஆசாரியனிடத்தில்  கொண்டுவரக்கடவன்.  {Num  6:10}

 

அப்பொழுது  ஆசாரியன்  ஒன்றைப்  பாவநிவாரணபலியாகவும்,  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியாகவும்  செலுத்தி,  பிணத்தினால்  அவனுக்கு  உண்டான  தீட்டை  நிவிர்த்திசெய்து,  அவன்  தலையை  அந்நாளில்  பரிசுத்தப்படுத்துவானாக.  {Num  6:11}

 

அவன்  திரும்பவும்  தன்  விரதநாட்களைக்  கர்த்தருக்கென்று  காத்து,  ஒரு  வருஷத்து  ஆட்டுக்குட்டியைக்  குற்றநிவாரணபலியாகக்  கொண்டுவரக்கடவன்;  அவனுடைய  நசரேய<Nazarene//Nazarite>  விரதம்  தீட்டுப்பட்டதினால்  சென்ற  நாட்கள்  விருதாவாகும்.  {Num  6:12}

 

நசரேயனுக்குரிய<Nazarene//Nazarite>  பிரமாணமாவது:  அவன்  விரதங்காக்கும்  நாட்கள்  நிறைவேறின  அன்றே,  அவன்  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  வந்து,  {Num  6:13}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  வருஷத்து  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்குட்டியையும்,  பாவநிவாரணபலியாக  ஒரு  வருஷத்து  பழுதற்ற  ஒரு  பெண்ணாட்டுக்குட்டியையும்,  சமாதானபலியாக  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  {Num  6:14}

 

ஒரு  கூடையில்  எண்ணெயிலே  பிசைந்த  புளிப்பில்லாத  மெல்லிய  மாவினால்  செய்த  அதிரசங்களையும்,  எண்ணெய்  தடவப்பட்ட  புளிப்பில்லாத  அடைகளையும்,  அவைகளுக்கு  அடுத்த  போஜனபலியையும்,  பானபலிகளையும்  கர்த்தருக்குத்  தன்  காணிக்கையாகச்  செலுத்தக்கடவன்.  {Num  6:15}

 

அவைகளை  ஆசாரியன்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்து,  அவனுடைய  பாவநிவாரண  பலியையும்  அவனுடைய  சர்வாங்க  தகனபலியையும்  செலுத்தி,  {Num  6:16}

 

ஆட்டுக்கடாவைக்  கூடையிலிருக்கும்  புளிப்பில்லாத  அப்பங்களோடுங்கூடக்  கர்த்தருக்குச்  சமாதான  பலியாகச்  செலுத்தி,  அவனுடைய  போஜனபலியையும்  பானபலியையும்  படைப்பானாக.  {Num  6:17}

 

அப்பொழுது  நசரேயன்<Nazarene//Nazarite>  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே,  பொருத்தனை  செய்யப்பட்ட  தன்  தலையைச்  சிரைத்து,  பொருத்தனை  செய்யப்பட்ட  தன்  தலைமயிரை  எடுத்து,  சமாதானபலியின்கீழ்  எரிகிற  அக்கினியில்  போடக்கடவன்.  {Num  6:18}

 

நசரேயன்<Nazarene//Nazarite>  பொருத்தனை  செய்யப்பட்ட  தன்  தலைமயிரைச்  சிரைத்துக்கொண்டபின்பு,  ஆசாரியன்  ஆட்டுக்கடாவினுடைய  வேவிக்கப்பட்ட  ஒரு  முன்னந்தொடையையும்,  கூடையில்  இருக்கிறவைகளிலே  புளிப்பில்லாத  ஒரு  அதிரசத்தையும்  புளிப்பில்லாத  ஒரு  அடையையும்  எடுத்து,  அவனுடைய  உள்ளங்கைகளில்  வைத்து,  {Num  6:19}

 

அவைகளைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டக்கடவன்;  அது  அசைவாட்டப்பட்ட  மார்க்கண்டத்தோடும்,  ஏறெடுத்துப்  படைக்கப்பட்ட  முன்னந்தொடையோடும்,  ஆசாரியனைச்  சேரும்;  அது  பரிசுத்தமானது.  பின்பு  நசரேயன்<Nazarene//Nazarite>  திராட்சரசம்  குடிக்கலாம்.  {Num  6:20}

 

பொருத்தனைபண்ணின  நசரேயனுக்கும்<Nazarene//Nazarite>,  அவன்  தன்  கைக்கு  உதவுகிறதையல்லாமல்,  தன்  நசரேய<Nazarene//Nazarite>  விரதத்தினிமித்தம்  கர்த்தருக்குச்  செலுத்தும்  காணிக்கைக்கும்  அடுத்த  பிரமாணம்  இதுவே.  அவன்  செய்த  பொருத்தனையின்படியே  தன்  பொருத்தனையின்  பிரமாணத்துக்கேற்க  செய்து  தீரவேண்டும்  என்று  சொல்  என்றார்.  {Num  6:21}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  6:22}

 

நீ  ஆரோனோடும்<Aaron>  அவன்  குமாரரோடும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  ஆசீர்வதிக்கும்போது,  அவர்களைப்  பார்த்துச்  சொல்லவேண்டியதாவது:  {Num  6:23}

 

கர்த்தர்  உன்னை  ஆசீர்வதித்து,  உன்னைக்  காக்கக்கடவர்.  {Num  6:24}

 

கர்த்தர்  தம்முடைய  முகத்தை  உன்மேல்  பிரகாசிக்கப்பண்ணி,  உன்மேல்  கிருபையாயிருக்கக்கடவர்.  {Num  6:25}

 

கர்த்தர்  தம்முடைய  முகத்தை  உன்மேல்  பிரசன்னமாக்கி,  உனக்குச்  சமாதானம்  கட்டளையிடக்கடவர்  என்பதே.  {Num  6:26}

 

இவ்விதமாய்  அவர்கள்  என்  நாமத்தை  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்மேல்  கூறக்கடவர்கள்;  அப்பொழுது  நான்  அவர்களை  ஆசீர்வதிப்பேன்  என்று  சொல்  என்றார்.  {Num  6:27}

 

மோசே<Moses>  வாசஸ்தலத்தை  ஸ்தாபனம்பண்ணி,  அதையும்  அதின்  எல்லாப்  பணிமுட்டுகளையும்,  பலிபீடத்தையும்  அதின்  எல்லாப்  பணிமுட்டுகளையும்  அபிஷேகம்பண்ணி,  பரிசுத்தப்படுத்தி  முடித்த  நாளில்,  {Num  7:1}

 

தங்கள்  பிதாக்களுடைய  வம்சத்தலைவரும்,  எண்ணப்பட்டவர்களின்  விசாரிப்புக்கு  வைக்கப்பட்ட  கோத்திரப்  பிரபுக்களுமாகிய  இஸ்ரவேலின்<Israel>  பிரபுக்கள்  காணிக்கைகளைச்  செலுத்தினார்கள்.  {Num  7:2}

 

தங்கள்  காணிக்கையாக,  ஆறு  கூண்டு  வண்டில்களையும்,  பன்னிரண்டு  மாடுகளையும்,  இரண்டிரண்டு  பிரபுக்களுக்கு  ஒவ்வொரு  வண்டிலும்,  ஒவ்வொரு  பிரபுக்கு  ஒவ்வொரு  மாடுமாக,  கர்த்தருக்குச்  செலுத்த  வாசஸ்தலத்திற்கு  முன்பாகக்  கொண்டுவந்தார்கள்.  {Num  7:3}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  7:4}

 

நீ  அவர்களிடத்தில்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  ஊழியத்திற்காக  அவைகளை  வாங்கி,  லேவியருக்கு<Levites>  அவரவர்  வேலைக்குத்  தக்கவைகளாகப்  பங்கிட்டுக்  கொடு  என்றார்.  {Num  7:5}

 

அப்பொழுது  மோசே<Moses>  அந்த  வண்டில்களையும்  மாடுகளையும்  வாங்கி,  லேவியருக்குக்<Levites>  கொடுத்தான்.  {Num  7:6}

 

இரண்டு  வண்டில்களையும்  நான்கு  மாடுகளையும்  கெர்சோன்<Gershon>  புத்திரருக்கு,  அவர்கள்  வேலைக்குத்தக்க  பங்காகக்  கொடுத்தான்.  {Num  7:7}

 

நான்கு  வண்டில்களையும்  எட்டு  மாடுகளையும்  மெராரியின்<Merari>  புத்திரருக்கு,  ஆசாரியனாகிய  ஆரோனின்<Aaron>  குமாரர்  இத்தாமாருடைய<Ithamar>  கையின்  கீழிருக்கிற  அவர்களுடைய  வேலைக்குத்தக்க  பங்காகக்  கொடுத்தான்.  {Num  7:8}

 

கோகாத்தின்<Kohath>  புத்திரருக்கோ  ஒன்றும்  கொடுக்கவில்லை;  தோள்மேல்  சுமப்பதே  அவர்களுக்குரிய  பரிசுத்த  ஸ்தலத்தின்  வேலையாயிருந்தது.  {Num  7:9}

 

பலிபீடம்  அபிஷேகம்பண்ணப்பட்ட  நாளிலே,  பிரபுக்கள்  அதின்  பிரதிஷ்டைக்காகக்  காணிக்கைகளைச்  செலுத்தி,  பலிபீடத்துக்கு  முன்பாகத்  தங்கள்  காணிக்கைகளைக்  கொண்டுவந்தார்கள்.  {Num  7:10}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  பலிபீடத்தின்  பிரதிஷ்டைக்காக  ஒவ்வொரு  பிரபுவும்  தன்தன்  நாளில்  தன்தன்  காணிக்கையைச்  செலுத்தக்கடவன்  என்றார்.  {Num  7:11}

 

அப்படியே  முதலாம்  நாளில்  தன்  காணிக்கையைச்  செலுத்தினவன்  யூதா<Judah>  கோத்திரத்தானாகிய  அம்மினதாபின்<Amminadab>  குமாரன்  நகசோன்<Nahshon>.  {Num  7:12}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:13}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:14}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:15}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:16}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  அம்மினதாபின்<Amminadab>  குமாரனாகிய  நகசோனின்<Nahshon>  காணிக்கை.  {Num  7:17}

 

இரண்டாம்  நாளில்  இசக்காரின்<Issachar>  பிரபுவாகிய  சூவாரின்<Zuar>  குமாரன்  நெதனெயேல்<Nethaneel>  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:18}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:19}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:20}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:21}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:22}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  சூவாரின்<Zuar>  குமாரனாகிய  நெதனெயேலின்<Nethaneel>  காணிக்கை.  {Num  7:23}

 

மூன்றாம்  நாளில்  ஏலோனின்<Helon>  குமாரனாகிய  எலியாப்<Eliab>  என்னும்  செபுலோன்<Zebulun>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:24}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:25}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:26}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:27}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:28}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  ஏலோனின்<Helon>  குமாரனாகிய  எலியாபின்<Eliab>  காணிக்கை.  {Num  7:29}

 

நான்காம்  நாளில்  சேதேயூரின்<Shedeur>  குமாரனாகிய  எலிசூர்<Elizur>  என்னும்  ரூபன்<Reuben>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:30}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:31}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:32}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:33}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:34}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  சேதேயூரின்<Shedeur>  குமாரனாகிய  எலிசூரின்<Elizur>  காணிக்கை.  {Num  7:35}

 

ஐந்தாம்  நாளில்  சூரிஷதாயின்<Zurishaddai>  குமாரனாகிய  செலூமியேல்<Shelumiel>  என்னும்  சிமியோன்<Simeon>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:36}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:37}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:38}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:39}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:40}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  சூரிஷதாயின்<Zurishaddai>  குமாரனாகிய  செலூமியேலின்<Shelumiel>  காணிக்கை.  {Num  7:41}

 

ஆறாம்  நாளில்  தேகுவேலின்<Deuel>  குமாரனாகிய  எலியாசாப்<Eliasaph>  என்னும்  காத்<Gad>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:42}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:43}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:44}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:45}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:46}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  தேகுவேலின்<Deuel>  குமாரனாகிய  எலியாசாபின்<Eliasaph>  காணிக்கை.  {Num  7:47}

 

ஏழாம்  நாளில்  அம்மியூதின்<Ammihud>  குமாரனாகிய  எலிஷாமா<Elishama>  என்னும்  எப்பிராயீம்<Ephraim>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:48}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:49}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:50}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:51}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:52}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  அம்மியூதின்<Ammihud>  குமாரனாகிய  எலிஷாமாவின்<Elishama>  காணிக்கை.  {Num  7:53}

 

எட்டாம்  நாளில்  பெதாசூரின்<Pedahzur>  குமாரனாகிய  கமாலியேல்<Gamaliel>  என்னும்  மனாசே<Manasseh>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:54}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:55}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:56}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:57}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:58}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  பெதாசூரின்<Pedahzur>  குமாரனாகிய  கமாலியேலின்<Gamaliel>  காணிக்கை.  {Num  7:59}

 

ஒன்பதாம்  நாளில்  கீதெயோனின்<Gideoni>  குமாரனாகிய  அபீதான்<Abidan>  என்னும்  பென்யமீன்<Benjamin>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:60}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:61}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:62}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:63}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:64}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  கீதெயோனின்<Gideoni>  குமாரனாகிய  அபீதானின்<Abidan>  காணிக்கை.  {Num  7:65}

 

பத்தாம்  நாளில்  அம்மிஷதாயின்<Ammishaddai>  குமாரனாகிய  அகியேசேர்<Ahiezer>  என்னும்  தாண்<Dan>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:66}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:67}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:68}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:69}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:70}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  அம்மிஷதாயின்<Ammishaddai>  குமாரனாகிய  அகியேசேரின்<Ahiezer>  காணிக்கை.  {Num  7:71}

 

பதினோராம்  நாளில்  ஓகிரானின்<Ocran>  குமாரனாகிய  பாகியேல்<Pagiel>  என்னும்  ஆசேர்<Asher>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:72}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:73}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:74}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:75}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:76}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  ஓகிரானின்<Ocran>  குமாரனாகிய  பாகியேலின்<Pagiel>  காணிக்கை.  {Num  7:77}

 

பன்னிரண்டாம்  நாளில்  ஏனானின்<Enan>  குமாரனாகிய  அகீரா<Ahira>  என்னும்  நப்தலி<Naphtali>  புத்திரரின்  பிரபு  காணிக்கை  செலுத்தினான்.  {Num  7:78}

 

அவன்  காணிக்கையாவது:  போஜனபலியாகப்  படைக்கும்பொருட்டு  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  நிறைந்ததும்,  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்காக  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையுள்ளதுமான  ஒரு  வெள்ளித்தாலமும்,  எழுபது  சேக்கல்  நிறையுள்ள  ஒரு  வெள்ளிக்கலமும்  ஆகிய  இவ்விரண்டும்,  {Num  7:79}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பத்துச்சேக்கல்  நிறையுள்ள  பொன்னினால்  செய்த  ஒரு  தூபகரண்டியும்,  {Num  7:80}

 

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவும்,  ஒரு  வயதான  ஒரு  ஆட்டுக்குட்டியும்,  {Num  7:81}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்,  {Num  7:82}

 

சமாதானபலியாக  இரண்டு  மாடுகளும்,  ஐந்து  ஆட்டுக்கடாக்களும்,  ஐந்து  வெள்ளாட்டுக்கடாக்களும்,  ஒரு  வயதான  ஐந்து  ஆட்டுக்குட்டிகளுமே;  இது  ஏனானின்<Enan>  குமாரனாகிய  அகீராவின்<Ahira>  காணிக்கை.  {Num  7:83}

 

பலிபீடம்  அபிஷேகம்பண்ணப்பட்டபோது,  இஸ்ரவேல்<Israel>  பிரபுக்களால்  செய்யப்பட்ட  பிரதிஷ்டையாவது:  வெள்ளித்தாலங்கள்  பன்னிரண்டு,  வெள்ளிக்கலங்கள்  பன்னிரண்டு,  பொன்  தூபகரண்டிகள்  பன்னிரண்டு.  {Num  7:84}

 

ஒவ்வொரு  வெள்ளித்தாலம்  நூற்றுமுப்பது  சேக்கல்  நிறையும்,  ஒவ்வொரு  கலம்  எழுபது  சேக்கல்  நிறையுமாக,  இந்தப்  பாத்திரங்களின்  வெள்ளியெல்லாம்  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்கின்படி  இரண்டாயிரத்து  நானூறு  சேக்கல்  நிறையாயிருந்தது.  {Num  7:85}

 

தூபவர்க்கம்  நிறைந்த  பொன்  தூபகரண்டிகள்  பன்னிரண்டு,  ஒவ்வொன்று  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்கின்படி  பத்துச்சேக்கல்  நிறையாக,  தூபகரண்டிகளின்  பொன்னெல்லாம்  நூற்றிருபது  சேக்கல்  நிறையாயிருந்தது.  {Num  7:86}

 

சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்தப்பட்ட  காளைகளெல்லாம்  பன்னிரண்டு,  ஆட்டுக்கடாக்கள்  பன்னிரண்டு,  ஒரு  வயதான  ஆட்டுக்குட்டிகள்  பன்னிரண்டு,  அவைகளுக்கடுத்த  போஜனபலிகளும்கூடச்  செலுத்தப்பட்டது;  பாவநிவாரணபலியாகச்  செலுத்தப்பட்ட  வெள்ளாட்டுக்கடாக்கள்  பன்னிரண்டு.  {Num  7:87}

 

சமாதான  பலியாகச்  செலுத்தப்பட்ட  காளைகளெல்லாம்  இருபத்துநான்கு;  ஆட்டுக்கடாக்கள்  அறுபது,  வெள்ளாட்டுக்கடாக்கள்  அறுபது,  ஒரு  வயதான  ஆட்டுக்குட்டிகள்  அறுபது;  பலிபீடம்  அபிஷேகம்பண்ணப்பட்ட  பின்பு  செய்யப்பட்ட  அதின்  பிரதிஷ்டை  இதுவே.  {Num  7:88}

 

மோசே<Moses>  தேவனோடே  பேசும்படி  ஆசரிப்புக்  கூடாரத்திற்குள்  பிரவேசிக்கும்போது,  தன்னோடே  பேசுகிறவரின்  சத்தம்  சாட்சிப்பெட்டியின்மேலுள்ள  கிருபாசனமான  இரண்டு  கேருபீன்களின்  நடுவிலிருந்துண்டாகக்  கேட்பான்;  அங்கே  இருந்து  அவனோடே  பேசுவார்.  {Num  7:89}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  8:1}

 

நீ  ஆரோனோடே<Aaron>  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீ  விளக்குகளை  ஏற்றும்போது  ஏழு  விளக்குகளும்  விளக்குத்தண்டிற்கு  நேரே  எரியவேண்டும்  என்று  சொல்  என்றார்.  {Num  8:2}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபிரகாரம்  ஆரோன்<Aaron>  செய்து,  விளக்குத்தண்டிற்கு  நேரே  ஒழுங்காக  அதின்  விளக்குகளை  ஏற்றினான்.  {Num  8:3}

 

இந்தக்  குத்துவிளக்கு,  அதின்  பாதமுதல்  பூக்கள்வரைக்கும்  பொன்னினால்  அடிப்புவேலையாய்ச்  செய்யப்பட்டிருந்தது;  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  காண்பித்த  மாதிரியின்படியே  அவன்  குத்துவிளக்கை  உண்டாக்கினான்.  {Num  8:4}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  8:5}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  சந்ததியாரினின்று  லேவியரைப்<Levites>  பிரித்தெடுத்து,  அவர்களைச்  சுத்திகரிப்பாயாக.  {Num  8:6}

 

அவர்களைச்  சுத்திகரிக்கும்படி  அவர்களுக்குச்  செய்யவேண்டியதாவது:  அவர்கள்மேல்  சுத்திகரிக்கும்  ஜலத்தைத்  தெளிப்பாயாக;  பின்பு  அவர்கள்  சர்வாங்க  சவரம்பண்ணி,  தங்கள்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தங்களைச்  சுத்திகரிக்கக்கடவர்கள்.  {Num  8:7}

 

அப்பொழுது  ஒரு  காளையையும்,  அதற்கேற்ற  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவாகிய  போஜனபலியையும்  கொண்டுவரக்கடவர்கள்;  பாவநிவாரணபலியாக  வேறொரு  காளையையும்  நீ  வாங்கி,  {Num  8:8}

 

லேவியரை<Levites>  ஆசரிப்புக்  கூடாரத்துக்குமுன்  வரச்செய்து,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபையார்  எல்லாரையும்  கூடிவரப்பண்ணுவாயாக.  {Num  8:9}

 

நீ  லேவியரைக்<Levites>  கர்த்தருடைய  சந்நிதியில்  வரப்பண்ணினபோது,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  தங்கள்  கைகளை  லேவியர்மேல்<Levites>  வைக்கக்கடவர்கள்.  {Num  8:10}

 

லேவியர்<Levites>  கர்த்தருக்குரிய  பணிவிடை  செய்யும்பொருட்டு,  ஆரோன்<Aaron>  அவர்களை  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  காணிக்கையாகக்  கர்த்தருக்கு  முன்பாக  அசைவாட்டப்படும்  காணிக்கையாய்  நிறுத்தக்கடவன்.  {Num  8:11}

 

அதன்பின்  லேவியர்<Levites>  தங்கள்  கைகளைக்  காளைகளுடைய  தலையின்மேல்  வைப்பார்களாக;  பின்பு  நீ  லேவியருக்காகப்<Levites>  பாவநிவிர்த்தி  செய்யும்பொருட்டு,  கர்த்தருக்கு  அவைகளில்  ஒன்றைப்  பாவநிவாரணபலியாகவும்,  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியாகவும்  செலுத்தி,  {Num  8:12}

 

லேவியரை<Levites>  ஆரோனுக்கும்<Aaron>  அவன்  குமாரனுக்கும்  முன்பாக  நிறுத்தி,  அவர்களைக்  கர்த்தருக்கு  அசைவாட்டப்படும்  காணிக்கையாக்கி,  {Num  8:13}

 

இப்படி  நீ  லேவியரை<Levites>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலிருந்து  பிரித்தெடுக்கக்கடவாய்;  லேவியர்<Levites>  என்னுடையவர்களாயிருப்பார்கள்.  {Num  8:14}

 

இப்படி  அவர்களைச்  சுத்திகரித்து,  அவர்களை  அசைவாட்டும்  காணிக்கையாக்கக்கடவாய்;  அதன்பின்பு  லேவியர்<Levites>  ஆசரிப்புக்  கூடாரத்தில்  பணிவிடை  செய்யப்  பிரவேசிக்கக்கடவர்கள்.  {Num  8:15}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலிருந்து  அவர்கள்  எனக்கு  முற்றிலும்  கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எல்லாரிலும்  கர்ப்பந்திறந்து  பிறக்கிற  சகல  முதற்பேறுக்கும்  பதிலாக  அவர்களை  எனக்கு  எடுத்துக்கொண்டேன்.  {Num  8:16}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  மனிதரிலும்  மிருகஜீவன்களிலும்  முதற்பேறானதெல்லாம்  என்னுடையது;  நான்  எகிப்துதேசத்திலே<Egypt>  முதற்பேறான  யாவையும்  சங்கரித்த  நாளிலே  அவைகளை  எனக்கென்று  பரிசுத்தப்படுத்தி,  {Num  8:17}

 

பின்பு  லேவியரை<Levites>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலுள்ள  முதற்பேறு  சகலத்திற்கும்  பதிலாக  எடுத்துக்கொண்டு,  {Num  8:18}

 

லேவியர்<Levites>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  பணிவிடையை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  செய்யும்படிக்கும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்படிக்கும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  தாங்களே  பரிசுத்த  ஸ்தலத்தில்  சேருகிறதினால்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  வாதையுண்டாகாதபடிக்கும்,  லேவியரை<Levites>  அவர்களிலிருந்து  எடுத்து,  ஆரோனுக்கும்<Aaron>  அவன்  குமாரருக்கும்  தத்தமாகக்  கொடுத்தேன்  என்றார்.  {Num  8:19}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபையார்  யாவரும்  கர்த்தர்  லேவியரைக்குறித்து<Levites>  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியெல்லாம்  லேவியருக்குச்<Levites>  செய்தார்கள்.  {Num  8:20}

 

லேவியர்<Levites>  சுத்திகரிக்கப்பட்டு,  தங்கள்  வஸ்திரங்களைத்  தோய்த்தார்கள்;  பின்பு  ஆரோன்<Aaron>  அவர்களைக்  கர்த்தருக்கு  முன்பாக  அசைவாட்டும்  காணிக்கையாக  நிறுத்தி,  அவர்களைச்  சுத்திகரிக்க  அவர்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்தான்.  {Num  8:21}

 

அதற்குப்பின்பு  லேவியர்<Levites>  ஆரோனுக்கும்<Aaron>  அவன்  குமாரருக்கும்  முன்பாக  ஆசரிப்புக்  கூடாரத்தில்  தங்கள்  பணிவிடையைச்  செய்யும்படி  பிரவேசித்தார்கள்;  கர்த்தர்  லேவியரைக்குறித்து<Levites>  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே  அவர்களுக்குச்  செய்தார்கள்.  {Num  8:22}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  8:23}

 

லேவியருக்குரிய<Levites>  கட்டளை  என்னவென்றால்:  இருபத்தைந்து  வயதுமுதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  யாவரும்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  பணிவிடையைச்  செய்யும்  சேனையிலே  சேவிக்க  வரவேண்டும்.  {Num  8:24}

 

ஐம்பது  வயதுக்கு  மேற்பட்டவர்கள்  வேலைசெய்யாமல்  திருப்பணி  சேனையை  விட்டு,  {Num  8:25}

 

ஆசரிப்புக்  கூடாரத்தின்  காவலைக்  காக்கிறதற்குத்  தங்கள்  சகோதரரோடேகூட  ஊழியஞ்செய்வதேயன்றி,  வேறொரு  சேவகமும்  செய்யவேண்டியதில்லை;  இப்படி  லேவியர்<Levites>  செய்யவேண்டிய  வேலைகளைக்குறித்துத்  திட்டம்பண்ணக்கடவாய்  என்றார்.  {Num  8:26}

 

அவர்கள்  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  இரண்டாம்  வருஷம்  முதலாம்  மாதத்தில்  கர்த்தர்  சீனாய்<Sinai>  வனாந்தரத்தில்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  9:1}

 

குறித்த  காலத்தில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பஸ்காவை  ஆசரிக்கக்கடவர்கள்.  {Num  9:2}

 

இந்த  மாதம்  பதினாலாந்தேதி  அந்திநேரமான  வேளையாகிய  குறித்த  காலத்தில்  அதை  ஆசரிக்கக்கடவீர்கள்;  அதற்குரிய  எல்லாக்  கட்டளையின்படியேயும்  முறைமைகளின்படியேயும்  அதை  ஆசரிக்கக்கடவீர்கள்  என்றார்.  {Num  9:3}

 

அப்படியே  பஸ்காவை  ஆசரிக்கும்படி  மோசே<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கட்டளையிட்டான்.  {Num  9:4}

 

அதினால்  முதலாம்  மாதம்  பதினான்காம்  தேதி  அந்திநேரமான  வேளையில்,  சீனாய்<Sinai>  வனாந்தரத்தில்  பஸ்காவை  ஆசரித்தார்கள்;  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியெல்லாம்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  செய்தார்கள்.  {Num  9:5}

 

அந்நாளில்  சிலர்  மனித  பிரேதத்தினால்  தீட்டுப்பட்டபடியினால்  பஸ்காவை  ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்;  அவர்கள்  அந்நாளிலே  மோசேக்கும்<Moses>  ஆரோனுக்கும்<Aaron>  முன்பாக  வந்து:  {Num  9:6}

 

நாங்கள்  மனித  பிரேதத்தினால்  தீட்டுப்பட்டவர்கள்;  குறித்த  காலத்தில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடேகூடக்  கர்த்தருக்குக்  காணிக்கையைச்  செலுத்தாதபடிக்கு,  நாங்கள்  விலக்கப்பட்டிருக்கவேண்டியது  என்ன  என்றார்கள்.  {Num  9:7}

 

மோசே<Moses>  அவர்களை  நோக்கி:  பொறுங்கள்;  கர்த்தர்  உங்களைக்குறித்துக்  கட்டளையிடுவது  என்ன  என்று  கேட்பேன்  என்றான்.  {Num  9:8}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  9:9}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  உங்களிலாகிலும்  உங்கள்  சந்ததியாரிலாகிலும்  ஒருவன்  பிரேதத்தினால்  தீட்டுப்பட்டாலும்,  பிரயாணமாய்த்  தூரம்போயிருந்தாலும்,  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்கவேண்டும்.  {Num  9:10}

 

அவர்கள்  அதை  இரண்டாம்  மாதம்  பதினாலாந்தேதி  அந்திநேரமான  வேளையில்  ஆசரித்து,  அதைப்  புளிப்பில்லாத  அப்பங்களோடும்  கசப்பான  கீரைகளோடும்  புசித்து,  {Num  9:11}

 

விடியற்காலம்மட்டும்  அதில்  ஒன்றும்  மீதியாக  வைக்காமலும்,  அதில்  ஒரு  எலும்பையும்  முறிக்காமலும்,  பஸ்காவினுடைய  சகல  முறைமைகளின்படியும்  அதை  ஆசரிக்கக்கடவர்கள்.  {Num  9:12}

 

ஒருவன்  சுத்தமுள்ளவனுமாய்ப்  பிரயாணம்  போகாதவனுமாயிருந்தும்,  பஸ்காவை  ஆசரிக்காதேபோனால்,  அந்த  ஆத்துமா  குறித்த  காலத்தில்  கர்த்தரின்  பலியைச்  செலுத்தாதபடியினால்  தன்  ஜனத்தாரில்  இராமல்  அறுப்புண்டுபோவான்;  அந்த  மனிதன்  தன்  பாவத்தைச்  சுமப்பான்.  {Num  9:13}

 

ஒரு  பரதேசி  உங்களிடத்திலே  தங்கி,  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்க  வேண்டுமானால்,  அவன்  அதைப்  பஸ்காவின்  கட்டளைப்படியும்  அதின்  முறைமையின்படியும்  ஆசரிக்கக்கடவன்;  பரதேசிக்கும்  சுதேசிக்கும்  ஒரே  கட்டளை  இருக்கவேண்டும்  என்று  சொல்  என்றார்.  {Num  9:14}

 

வாசஸ்தலம்  ஸ்தாபனஞ்செய்யப்பட்ட  நாளிலே,  மேகமானது  சாட்சியின்  கூடாரமாகிய  வாசஸ்தலத்தை  மூடிற்று;  சாயங்காலமானபோது,  வாசஸ்தலத்தின்மேல்  அக்கினிமயமான  ஒரு  தோற்றம்  உண்டாயிற்று;  அது  விடியற்காலமட்டும்  இருந்தது.  {Num  9:15}

 

இப்படி  நித்தமும்  இருந்தது;  பகலில்  மேகமும்,  இரவில்  அக்கினித்தோற்றமும்  அதை  மூடிக்கொண்டிருந்தது.  {Num  9:16}

 

மேகம்  கூடாரத்திலிருந்து  மேலே  எழும்பும்போது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பிரயாணம்பண்ணுவார்கள்;  மேகம்  தங்குமிடத்தில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பாளயமிறங்குவார்கள்.  {Num  9:17}

 

கர்த்தருடைய  கட்டளையின்படியே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பிரயாணப்படுவார்கள்;  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பாளயமிறங்குவார்கள்;  மேகம்  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்  நாளெல்லாம்  அவர்கள்  பாளயத்தில்  தங்கியிருப்பார்கள்.  {Num  9:18}

 

மேகம்  நெடுநாள்  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்போது,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பிரயாணப்படாமல்  கர்த்தரின்  காவலைக்  காத்துக்கொண்டிருப்பார்கள்.  {Num  9:19}

 

மேகம்  சிலநாள்  மாத்திரம்  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்போது,  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பாளயமிறங்கியிருந்து,  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பிரயாணப்படுவார்கள்.  {Num  9:20}

 

மேகம்  சாயங்காலந்தொடங்கி  விடியற்காலமட்டும்  இருந்து,  விடியற்காலத்தில்  உயர  எழும்பும்போது,  உடனே  பிரயாணப்படுவார்கள்;  பகலிலாகிலும்  இரவிலாகிலும்  மேகம்  எழும்பும்போது  பிரயாணப்படுவார்கள்.  {Num  9:21}

 

மேகமானது  இரண்டுநாளாவது  ஒரு  மாதமாவது  ஒரு  வருஷமாவது  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்போது,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பிரயாணம்பண்ணாமல்  பாளயமிறங்கியிருப்பார்கள்;  அது  உயர  எழும்பும்போதோ  பிரயாணப்படுவார்கள்.  {Num  9:22}

 

கர்த்தருடைய  கட்டளையின்படியே  பாளயமிறங்குவார்கள்;  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பிரயாணம்பண்ணுவார்கள்;  கர்த்தர்  மோசேயைக்கொண்டு<Moses>  கட்டளையிடுகிறபடியே  கர்த்தருடைய  காவலைக்  காத்துக்கொள்வார்கள்.  {Num  9:23}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  10:1}

 

சபையைக்  கூடிவரவழைப்பதற்கும்  பாளயங்களைப்  பிரயாணப்படுத்துவதற்கும்  உபயோகமாக  இரண்டு  வெள்ளிப்  பூரிகைகளைச்  செய்துகொள்வாயாக;  அவைகள்  ஒரே  வெள்ளித்தகட்டால்  செய்யப்படவேண்டும்.  {Num  10:2}

 

அவைகளை  ஊதும்போது,  சபையார்  எல்லாரும்  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  உன்னிடத்தில்  கூடிவரவேண்டும்.  {Num  10:3}

 

ஒன்றைமாத்திரம்  ஊதினால்  இஸ்ரவேலில்<Israel>  ஆயிரவர்களுக்குத்  தலைவராகிய  பிரபுக்கள்  உன்னிடத்தில்  கூடிவரக்கடவர்கள்.  {Num  10:4}

 

நீங்கள்  அவைகளைப்  பெருந்தொனியாய்  முழக்கும்போது,  கிழக்கே  இறங்கியிருக்கிற  பாளயங்கள்  பிரயாணப்படக்கடவது.  {Num  10:5}

 

அவைகளை  நீங்கள்  இரண்டாந்தரம்  பெருந்தொனியாய்  முழக்கும்போது,  தெற்கே  இறங்கியிருக்கிற  பாளயங்கள்  பிரயாணப்படக்கடவது;  அவர்களைப்  பிரயாணப்படுத்துவதற்குப்  பெருந்தொனியாய்  முழக்கவேண்டும்.  {Num  10:6}

 

சபையைக்  கூட்டுகிறதற்கு  நீங்கள்  ஊதவேண்டியதேயன்றி  பெருந்தொனியாய்  முழக்கவேண்டாம்.  {Num  10:7}

 

ஆரோனின்<Aaron>  குமாரராகிய  ஆசாரியர்  பூரிகைகளை  ஊதக்கடவர்கள்;  உங்கள்  தலைமுறைதோறும்  இது  உங்களுக்கு  நித்திய  கட்டளையாயிருக்கக்கடவது.  {Num  10:8}

 

உங்கள்  தேசத்தில்  உங்களைத்  துன்பப்படுத்துகிற  சத்துருவுக்கு  விரோதமாக  யுத்தத்துக்குப்  போகும்போது,  பூரிகைகளைப்  பெருந்தொனியாய்  முழக்கக்கடவீர்கள்;  அப்பொழுது  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சமுகத்திலே  நீங்கள்  நினைவுகூரப்பட்டு,  உங்கள்  பகைஞருக்கு  நீங்கலாகி  இரட்சிக்கப்படுவீர்கள்.  {Num  10:9}

 

உங்கள்  மகிழ்ச்சியின்  நாளிலும்,  உங்கள்  பண்டிகைகளிலும்,  மாதப்பிறப்புகளிலும்,  உங்கள்  சர்வாங்க  தகனபலிகளும்  சமாதானபலிகளும்  செலுத்தப்படும்போது  பூரிகைகளை  ஊதவேண்டும்;  அப்பொழுது  அவைகள்  உங்கள்  தேவனுடைய  சமுகத்தில்  உங்களுக்கு  ஞாபகக்குறியாயிருக்கும்;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்றார்.  {Num  10:10}

 

இரண்டாம்  வருஷம்  இரண்டாம்  மாதம்  இருபதாம்  தேதியில்  மேகம்  சாட்சியினுடைய  வாசஸ்தலத்தின்  மீதிலிருந்து  உயர  எழும்பிற்று.  {Num  10:11}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  சீனாய்<Sinai>  வனாந்தரத்திலிருந்து  தங்கள்  பிரயாண  வரிசைகளாய்ப்  புறப்பட்டார்கள்;  மேகம்  பாரான்<Paran>  வனாந்தரத்தில்  தங்கிற்று.  {Num  10:12}

 

இப்படியே  கர்த்தர்  மோசேயைக்கொண்டு<Moses>  கட்டளையிட்டபடி  முதல்  பிரயாணம்பண்ணினார்கள்.  {Num  10:13}

 

யூதா<Judah>  சந்ததியாருடைய  பாளயத்தின்  கொடி  அவர்கள்  சேனைகளோடே  முதல்  புறப்பட்டது;  அவனுடைய  சேனைக்கு  அம்மினதாபின்<Amminadab>  குமாரன்  நகசோன்<Nahshon>  தலைவனாயிருந்தான்.  {Num  10:14}

 

இசக்கார்<Issachar>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்குச்  சூவாரின்<Zuar>  குமாரன்  நெதனெயேல்<Nethaneel>  தலைவனாயிருந்தான்.  {Num  10:15}

 

செபுலோன்<Zebulun>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்கு  ஏலோனின்<Helon>  குமாரன்  எலியாப்<Eliab>  தலைவனாயிருந்தான்.  {Num  10:16}

 

அப்பொழுது  வாசஸ்தலம்  இறக்கி  வைக்கப்பட்டது;  அதைக்  கெர்சோன்<Gershon>  புத்திரரும்  மெராரி<Merari>  புத்திரரும்  சுமந்துகொண்டு  புறப்பட்டார்கள்.  {Num  10:17}

 

அதற்குப்பின்பு  ரூபன்<Reuben>  சந்ததியாருடைய  பாளயத்தின்  கொடி  அவர்கள்  சேனைகளோடே  புறப்பட்டது;  அவனுடைய  சேனைக்குச்  சேதேயூரின்<Shedeur>  குமாரன்  எலிசூர்<Elizur>  தலைவனாயிருந்தான்.  {Num  10:18}

 

சிமியோன்<Simeon>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்குச்  சூரிஷதாயின்<Zurishaddai>  குமாரன்  செலூமியேல்<Shelumiel>  தலைவனாயிருந்தான்.  {Num  10:19}

 

காத்<Gad>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்குத்  தேகுவேலின்<Deuel>  குமாரன்  எலியாசாப்<Eliasaph>  தலைவனாயிருந்தான்.  {Num  10:20}

 

கோகாத்தியர்<Kohathites>  பரிசுத்தமானவைகளைச்  சுமந்துகொண்டு  புறப்பட்டார்கள்;  இவர்கள்  வந்து  சேருமுன்  மற்றவர்கள்  வாசஸ்தலத்தை  ஸ்தாபனம்பண்ணுவார்கள்.  {Num  10:21}

 

அதற்குப்பின்பு,  எப்பிராயீம்<Ephraim>  சந்ததியாருடைய  பாளயத்தின்  கொடி  அவர்கள்  சேனைகளோடே  புறப்பட்டது;  அவனுடைய  சேனைக்கு  அம்மியூதின்<Ammihud>  குமாரன்  எலிஷாமா<Elishama>  தலைவனாயிருந்தான்.  {Num  10:22}

 

மனாசே<Manasseh>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்குப்  பெதாசூரின்<Pedahzur>  குமாரன்  கமாலியேல்<Gamaliel>  தலைவனாயிருந்தான்.  {Num  10:23}

 

பென்யமீன்<Benjamin>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்குக்  கீதெயோனின்<Gideoni>  குமாரன்  அபீதான்<Abidan>  தலைவனாயிருந்தான்.  {Num  10:24}

 

அதற்குப்பின்பு,  தாண்<Dan>  சந்ததியாருடைய  பாளயத்தின்  கொடி  சகல  பாளயங்களுக்கும்  பின்னாக  அவர்கள்  சேனைகளோடே  புறப்பட்டது;  அவனுடைய  சேனைக்கு  அம்மிஷதாயின்<Ammishaddai>  குமாரன்  அகியேசேர்<Ahiezer>  தலைவனாயிருந்தான்.  {Num  10:25}

 

ஆசேர்<Asher>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்கு  ஓகிரானின்<Ocran>  குமாரன்  பாகியேல்<Pagiel>  தலைவனாயிருந்தான்.  {Num  10:26}

 

நப்தலி<Naphtali>  சந்ததியாருடைய  கோத்திரத்தின்  சேனைக்கு  ஏனானின்<Enan>  குமாரன்  அகீரா<Ahira>  தலைவனாயிருந்தான்.  {Num  10:27}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  புறப்பட்டபோது,  இவ்விதமாய்த்  தங்கள்  தங்கள்  சேனைகளின்படியே  பிரயாணம்பண்ணினார்கள்.  {Num  10:28}

 

அப்பொழுது  மோசே<Moses>  தன்  மாமனாகிய  ரெகுவேல்<Raguel>  என்னும்  மீதியானனுடைய<Midianite>  குமாரனான  ஓபாவை<Hobab>  நோக்கி:  உங்களுக்குத்  தருவேன்  என்று  கர்த்தர்  சொன்ன  ஸ்தலத்துக்கு  நாங்கள்  பிரயாணம்போகிறோம்;  நீயும்  எங்களோடேகூட  வா,  உனக்கு  நன்மைசெய்வோம்;  கர்த்தர்  இஸ்ரவேலுக்கு<Israel>  நல்ல  வாக்குத்தத்தம்  பண்ணியிருக்கிறார்  என்றான்.  {Num  10:29}

 

அதற்கு  அவன்:  நான்  வரக்கூடாது;  என்  தேசத்துக்கும்  என்  இனத்தாரிடத்துக்கும்  போகவேண்டும்  என்றான்.  {Num  10:30}

 

அப்பொழுது  மோசே<Moses>:  நீ  எங்களைவிட்டுப்  போகவேண்டாம்;  வனாந்தரத்திலே  நாங்கள்  பாளயமிறங்கும்  இடங்களை  நீ  அறிந்திருக்கிறபடியினால்,  எங்களுக்குக்  கண்களைப்போல  இருப்பாய்.  {Num  10:31}

 

நீ  எங்களோடேகூட  வந்தால்,  கர்த்தர்  எங்களுக்குச்  செய்தருளும்  நன்மையின்படியே  உனக்கும்  நன்மைசெய்வோம்  என்றான்.  {Num  10:32}

 

அவர்கள்  கர்த்தருடைய  பர்வதத்தைவிட்டு,  மூன்றுநாள்  பிரயாணம்  போனார்கள்;  மூன்றுநாள்  பிரயாணத்திலும்  கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டி  அவர்களுக்கு  இளைப்பாறும்  ஸ்தலத்தைத்  தேடிக்  காட்டும்படிக்கு  அவர்கள்முன்  சென்றது.  {Num  10:33}

 

அவர்கள்  பாளயத்திலிருந்து  பிரயாணம்போகிறபோது,  கர்த்தருடைய  மேகம்  பகலில்  அவர்கள்மேல்  தங்கியிருந்தது.  {Num  10:34}

 

பெட்டியானது  புறப்படும்போது,  மோசே<Moses>:  கர்த்தாவே,  எழுந்தருளும்,  உம்முடைய  சத்துருக்கள்  சிதறடிக்கப்படுவார்களாக;  உம்மைப்  பகைக்கிறவர்கள்  உமக்கு  முன்பாக  ஓடிப்போவார்களாக  என்பான்.  {Num  10:35}

 

அது  தங்கும்போது:  கர்த்தாவே,  அநேக  ஆயிரவர்களாகிய  இஸ்ரவேலரிடத்தில்<Israel>  திரும்புவீராக  என்று  சொல்லுவான்.  {Num  10:36}

 

பின்பு,  ஜனங்கள்  முறையிட்டுக்  கொண்டிருந்தார்கள்;  அது  கர்த்தருடைய  செவிகளில்  பொல்லாப்பாயிருந்தது;  கர்த்தர்  அதைக்  கேட்டபோது,  அவருடைய  கோபம்  மூண்டது;  கர்த்தருடைய  அக்கினி  அவர்களுக்குள்ளே  பற்றியெரிந்து,  பாளயத்தின்  கடைசியிலிருந்த  சிலரைப்  பட்சித்தது.  {Num  11:1}

 

அப்பொழுது  ஜனங்கள்  மோசேயை<Moses>  நோக்கிக்  கூப்பிட்டார்கள்;  மோசே<Moses>  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்;  உடனே  அக்கினி  அவிந்துபோயிற்று.  {Num  11:2}

 

கர்த்தருடைய  அக்கினி  அவர்களுக்குள்ளே  பற்றியெரிந்ததினால்,  அவ்விடத்துக்குத்  தபேரா<Taberah>  என்று  பேரிட்டான்.  {Num  11:3}

 

பின்பு  அவர்களுக்குள்  இருந்த  பலஜாதியான  அந்நிய  ஜனங்கள்  மிகுந்த  இச்சையுள்ளவர்களானார்கள்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரும்  திரும்ப  அழுது,  நமக்கு  இறைச்சியைப்  புசிக்கக்கொடுப்பவர்  யார்?  {Num  11:4}

 

நாம்  எகிப்திலே<Egypt>  கிரயமில்லாமல்  சாப்பிட்ட  மச்சங்களையும்,  வெள்ளரிக்காய்களையும்,  கொம்மட்டிக்காய்களையும்,  கீரைகளையும்,  வெண்காயங்களையும்,  வெள்ளைப்  பூண்டுகளையும்  நினைக்கிறோம்.  {Num  11:5}

 

இப்பொழுது  நம்முடைய  உள்ளம்  வாடிப்போகிறது;  இந்த  மன்னாவைத்  தவிர,  நம்முடைய  கண்களுக்கு  முன்பாக  வேறொன்றும்  இல்லையே  என்று  சொன்னார்கள்.  {Num  11:6}

 

அந்த  மன்னா  கொத்துமல்லி  விதையம்மாத்திரமும்,  அதின்  நிறம்  முத்துப்போலவும்  இருந்தது.  {Num  11:7}

 

ஜனங்கள்  போய்  அதைப்  பொறுக்கிக்கொண்டுவந்து,  ஏந்திரங்களில்  அரைத்தாவது  உரல்களில்  இடித்தாவது,  பானைகளில்  சமைப்பார்கள்;  அதை  அப்பங்களுமாகச்  சுடுவார்கள்;  அதின்  ருசி  புது  ஒலிவ  எண்ணெயின்  ருசிபோலிருந்தது.  {Num  11:8}

 

இரவிலே  பாளயத்தின்மேல்  பனிபெய்யும்போது,  மன்னாவும்  அதின்மேல்  விழும்.  {Num  11:9}

 

அந்தந்த  வம்சங்களைச்  சேர்ந்த  ஜனங்கள்  தங்கள்  தங்கள்  கூடாரவாசலில்  நின்று  அழுகிறதை  மோசே<Moses>  கேட்டான்;  கர்த்தருக்கு  மிகவும்  கோபம்  மூண்டது;  மோசேயின்<Moses>  பார்வைக்கும்  அது  பொல்லாப்பாயிருந்தது.  {Num  11:10}

 

அப்பொழுது  மோசே<Moses>  கர்த்தரை  நோக்கி:  நீர்  இந்த  ஜனங்கள்  எல்லாருடைய  பாரத்தையும்  என்மேல்  சுமத்தினதினால்,  உமது  அடியானுக்கு  உபத்திரவம்  வரப்பண்ணினதென்ன?  உம்முடைய  கண்களில்  எனக்குக்  கிருபை  கிடையாதே  போனதென்ன?  {Num  11:11}

 

இவர்களுடைய  பிதாக்களுக்கு  நான்  ஆணையிட்டுக்கொடுத்த  தேசத்துக்கு  நீ  இவர்களை  முலையுண்கிற  பாலகனைத்  தகப்பன்  சுமந்துகொண்டுபோவதுபோல,  உன்  மார்பிலே  அணைத்துக்கொண்டுபோ  என்று  நீர்  என்னோடே  சொல்லும்படி  இந்த  ஜனங்களையெல்லாம்  கர்ப்பந்தரித்தேனோ?  இவர்களைப்  பெற்றது  நானோ?  {Num  11:12}

 

இந்த  ஜனங்கள்  எல்லாருக்கும்  கொடுக்கிறதற்கு  எனக்கு  இறைச்சி  எங்கேயிருந்து  வரும்?  எனக்கு  இறைச்சி  கொடு  என்று  என்னைப்  பார்த்து  அழுகிறார்களே.  {Num  11:13}

 

இந்த  ஜனங்களெல்லாரையும்  நான்  ஒருவனாய்த்  தாங்கக்கூடாது;  எனக்கு  இது  மிஞ்சின  பாரமாயிருக்கிறது.  {Num  11:14}

 

உம்முடைய  கண்களிலே  எனக்குக்  கிருபை  கிடைத்ததானால்,  இப்படி  எனக்குச்  செய்யாமல்,  என்  உபத்திரவத்தை  நான்  காணாதபடிக்கு  இப்பொழுதே  என்னைக்  கொன்றுபோடும்  என்று  வேண்டிக்கொண்டான்.  {Num  11:15}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  இஸ்ரவேல்<Israel>  ஜனங்களுக்கு  மூப்பரும்  தலைவருமானவர்கள்  இன்னார்  என்று  நீ  அறிந்திருக்கிறாயே,  அந்த  மூப்பரில்  எழுபதுபேரைக்  கூட்டி,  அவர்களை  ஆசரிப்புக்  கூடாரத்தினிடத்தில்  அங்கே  உன்னோடேகூட  வந்து  நிற்கும்படி  செய்.  {Num  11:16}

 

அப்பொழுது  நான்  இறங்கிவந்து,  அங்கே  உன்னோடே  பேசி,  நீ  ஒருவன்மாத்திரம்  ஜனங்களின்  பாரத்தைச்  சுமக்காமல்,  உன்னோடேகூட  அவர்களும்  அதைச்  சுமப்பதற்காக  உன்மேல்  இருக்கிற  ஆவியை  அவர்கள்மேலும்  வைப்பேன்.  {Num  11:17}

 

நீ  ஜனங்களை  நோக்கி:  நாளைக்காக  உங்களைப்  பரிசுத்தம்பண்ணுங்கள்;  நீங்கள்  இறைச்சி  சாப்பிடுவீர்கள்;  எங்களுக்கு  இறைச்சி  சாப்பிடக்  கொடுப்பவர்  யார்  என்றும்,  எகிப்திலே<Egypt>  எங்களுக்குச்  சௌக்கியமாயிருந்தது  என்றும்,  கர்த்தருடைய  செவிகள்  கேட்க  அழுதீர்களே;  ஆகையால்,  நீங்கள்  சாப்பிடும்படி  கர்த்தர்  உங்களுக்கு  இறைச்சி  கொடுப்பார்.  {Num  11:18}

 

நீங்கள்  ஒருநாள்,  இரண்டுநாள்,  ஐந்துநாள்,  பத்துநாள்,  இருபதுநாள்  மாத்திரமல்ல,  {Num  11:19}

 

ஒரு  மாதம்வரைக்கும்  புசிப்பீர்கள்;  அது  உங்கள்  மூக்காலே  புறப்பட்டு,  உங்களுக்குத்  தெவிட்டிப்போகுமட்டும்  புசிப்பீர்கள்;  உங்களுக்குள்ளே  இருக்கிற  கர்த்தரை  அசட்டைபண்ணி,  நாங்கள்  ஏன்  எகிப்திலிருந்து<Egypt>  புறப்பட்டோம்  என்று  அவருக்கு  முன்பாக  அழுதீர்களே  என்று  சொல்  என்றார்.  {Num  11:20}

 

அதற்கு  மோசே<Moses>:  என்னோடிருக்கிற  காலாட்கள்  ஆறுலட்சம்பேர்;  ஒரு  மாதம்  முழுவதும்  புசிக்கும்படி  அவர்களுக்கு  இறைச்சி  கொடுப்பேன்  என்று  சொன்னீரே.  {Num  11:21}

 

ஆடுமாடுகளை  அவர்களுக்காக  அடித்தாலும்  அவர்களுக்குப்  போதுமா?  சமுத்திரத்து  மச்சங்களையெல்லாம்  அவர்களுக்காகச்  சேர்த்தாலும்  அவர்களுக்குப்  போதுமா  என்றான்.  {Num  11:22}

 

அதற்குக்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  கர்த்தருடைய  கை  குறுகியிருக்கிறதோ?  என்  வார்த்தையின்படி  நடக்குமோ  நடவாதோ  என்று,  நீ  இப்பொழுது  காண்பாய்  என்றார்.  {Num  11:23}

 

அப்பொழுது  மோசே<Moses>  புறப்பட்டு,  கர்த்தருடைய  வார்த்தைகளை  ஜனங்களுக்குச்  சொல்லி,  ஜனங்களின்  மூப்பரில்  எழுபதுபேரைக்  கூட்டி,  கூடாரத்தைச்  சுற்றிலும்  அவர்களை  நிறுத்தினான்.  {Num  11:24}

 

கர்த்தர்  மேகத்தில்  இறங்கி,  அவனோடே  பேசி,  அவன்மேலிருந்த  ஆவியை  மூப்பராகிய  அந்த  எழுபதுபேர்மேலும்  வைத்தார்;  அந்த  ஆவி  அவர்கள்மேல்  வந்து  தங்கினமாத்திரத்தில்  தீர்க்கதரிசனஞ்  சொன்னார்கள்;  சொல்லி,  பின்பு  ஓய்ந்தார்கள்.  {Num  11:25}

 

அப்பொழுது  இரண்டுபேர்  பாளயத்தில்  இருந்துவிட்டார்கள்;  ஒருவன்பேர்  எல்தாத்<Eldad>,  மற்றவன்பேர்  மேதாத்<Medad>;  அவர்களும்  பேர்வழியில்  எழுதப்பட்டிருந்தும்,  கூடாரத்துக்குப்  போகப்  புறப்படாதிருந்தார்கள்;  அவர்கள்மேலும்  ஆவி  வந்து  தங்கினதினால்,  பாளயத்தில்  தீர்க்கதரிசனஞ்  சொன்னார்கள்.  {Num  11:26}

 

ஒரு  பிள்ளையாண்டான்  ஓடிவந்து,  எல்தாதும்<Eldad>  மேதாதும்<Medad>  பாளயத்தில்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறார்கள்  என்று  மோசேக்கு<Moses>  அறிவித்தான்.  {Num  11:27}

 

உடனே  மோசேயினிடத்திலுள்ள<Moses>  வாலிபரில்  ஒருவனும்  அவனுடைய  ஊழியக்காரனும்  நூனின்<Nun>  குமாரனுமாகிய  யோசுவா<Joshua>  பிரதியுத்தரமாக:  என்  ஆண்டவனாகிய  மோசேயே<Moses>,  அவர்களைத்  தடைபண்ணும்  என்றான்.  {Num  11:28}

 

அதற்கு  மோசே<Moses>:  நீ  எனக்காக  வைராக்கியம்  காண்பிக்கிறாயோ?  கர்த்தருடைய  ஜனங்கள்  எல்லாரும்  தீர்க்கதரிசனஞ்  சொல்லத்தக்கதாக,  கர்த்தர்  தம்முடைய  ஆவியை  அவர்கள்மேல்  இறங்கப்பண்ணினால்  நலமாயிருக்குமே  என்றான்.  {Num  11:29}

 

பின்பு,  மோசேயும்<Moses>  இஸ்ரவேலின்<Israel>  மூப்பரும்  பாளயத்திலே  வந்து  சேர்ந்தார்கள்.  {Num  11:30}

 

அப்பொழுது  கர்த்தரிடத்திலிருந்து  புறப்பட்ட  ஒரு  காற்று  சமுத்திரத்திலிருந்து  காடைகளை  அடித்துக்கொண்டுவந்து,  பாளயத்திலும்  பாளயத்தைச்  சுற்றிலும்,  இந்தப்பக்கம்  ஒருநாள்  பிரயாணமட்டும்  அந்தப்பக்கம்  ஒருநாள்  பிரயாணமட்டும்,  தரையின்மேல்  இரண்டுமுழ  உயரம்  விழுந்துகிடக்கச்  செய்தது.  {Num  11:31}

 

அப்பொழுது  ஜனங்கள்  எழும்பி,  அன்று  பகல்முழுவதும்,  இராமுழுவதும்,  மறுநாள்  முழுவதும்  காடைகளைச்  சேர்த்தார்கள்;  கொஞ்சமாய்ச்  சேர்த்தவன்  பத்து  ஓமர்  அளவு  சேர்த்தான்;  அவைகளைப்  பாளயத்தைச்  சுற்றிலும்  தங்களுக்காகக்  குவித்துவைத்தார்கள்.  {Num  11:32}

 

தங்கள்  பற்கள்  நடுவே  இருக்கும்  இறைச்சியை  அவர்கள்  மென்று  தின்னுமுன்னே  கர்த்தருடைய  கோபம்  ஜனங்களுக்குள்ளே  மூண்டது;  கர்த்தர்  ஜனங்களை  மகா  பெரிய  வாதையால்  வாதித்தார்.  {Num  11:33}

 

இச்சித்த  ஜனங்களை  அங்கே  அடக்கம்பண்ணினதினால்,  அந்த  ஸ்தலத்துக்குக்  கிப்ரோத்  அத்தாவா<Kibrothhattaavah>  என்று  பேரிட்டான்.  {Num  11:34}

 

பின்பு,  ஜனங்கள்  கிப்ரோத்  அத்தாவா<Kibrothhattaavah>  என்னும்  இடத்தை  விட்டு,  ஆஸரோத்துக்குப்<Hazeroth>  பிரயாணம்பண்ணி,  ஆஸரோத்திலே<Hazeroth>  தங்கினார்கள்.  {Num  11:35}

 

எத்தியோப்பியா<Ethiopian>  தேசத்து  ஸ்திரீயை  மோசே<Moses>  விவாகம்பண்ணியிருந்தபடியினால்,  மிரியாமும்<Miriam>  ஆரோனும்<Aaron>  அவன்  விவாகம்பண்ணின  எத்தியோப்பியா<Ethiopian>  தேசத்து  ஸ்திரீயினிமித்தம்  அவனுக்கு  விரோதமாய்ப்  பேசி:  {Num  12:1}

 

கர்த்தர்  மோசேயைக்கொண்டுமாத்திரம்<Moses>  பேசினாரோ,  எங்களைக்கொண்டும்  அவர்  பேசினதில்லையோ  என்றார்கள்.  கர்த்தர்  அதைக்  கேட்டார்.  {Num  12:2}

 

மோசேயானவன்<Moses>  பூமியிலுள்ள  சகல  மனிதரிலும்  மிகுந்த  சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.  {Num  12:3}

 

சடுதியிலே  கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  மிரியாமையும்<Miriam>  நோக்கி:  நீங்கள்  மூன்றுபேரும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்குப்  புறப்பட்டுவாருங்கள்  என்றார்;  மூன்றுபேரும்  போனார்கள்.  {Num  12:4}

 

கர்த்தர்  மேகத்தூணில்  இறங்கி,  கூடாரவாசலிலே  நின்று,  ஆரோனையும்<Aaron>  மிரியாமையும்<Miriam>  கூப்பிட்டார்;  அவர்கள்  இருவரும்  போனார்கள்.  {Num  12:5}

 

அப்பொழுது  அவர்:  என்  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  உங்களுக்குள்ளே  ஒருவன்  தீர்க்கதரிசியாயிருந்தால்,  கர்த்தராகிய  நான்  தரிசனத்தில்  என்னை  அவனுக்கு  வெளிப்படுத்தி,  சொப்பனத்தில்  அவனோடே  பேசுவேன்.  {Num  12:6}

 

என்  தாசனாகிய  மோசேயோ<Moses>  அப்படிப்பட்டவன்  அல்ல,  என்  வீட்டில்  எங்கும்  அவன்  உண்மையுள்ளவன்.  {Num  12:7}

 

நான்  அவனுடன்  மறைபொருளாக  அல்ல,  முகமுகமாகவும்  பிரத்தியட்சமாகவும்  பேசுகிறேன்;  அவன்  கர்த்தரின்  சாயலைக்  காண்கிறான்;  இப்படியிருக்க,  நீங்கள்  என்  தாசனாகிய  மோசேக்கு<Moses>  விரோதமாய்ப்  பேச,  உங்களுக்குப்  பயமில்லாமற்போனதென்ன  என்றார்.  {Num  12:8}

 

கர்த்தருடைய  கோபம்  அவர்கள்மேல்  மூண்டது;  அவர்  போய்விட்டார்.  {Num  12:9}

 

மேகம்  கூடாரத்தை  விட்டு  நீங்கிப்போயிற்று;  மிரியாம்<Miriam>  உறைந்த  மழையின்  வெண்மைபோன்ற  குஷ்டரோகியானாள்;  ஆரோன்<Aaron>  மிரியாமைப்<Miriam>  பார்த்தபோது,  அவள்  குஷ்டரோகியாயிருக்கக்  கண்டான்.  {Num  12:10}

 

அப்பொழுது  ஆரோன்<Aaron>  மோசேயை<Moses>  நோக்கி:  ,  என்  ஆண்டவனே,  நாங்கள்  புத்தியீனமாய்ச்  செய்த  இந்தப்  பாவத்தை  எங்கள்மேல்  சுமத்தாதிரும்.  {Num  12:11}

 

தன்  தாயின்  கர்ப்பத்தில்  பாதி  மாம்சம்  அழுகிச்  செத்துவிழுந்த  பிள்ளையைப்போல  அவள்  ஆகாதிருப்பாளாக  என்றான்.  {Num  12:12}

 

அப்பொழுது  மோசே<Moses>  கர்த்தரை  நோக்கி:  என்  தேவனே,  அவளைக்  குணமாக்கும்  என்று  கெஞ்சினான்.  {Num  12:13}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  அவள்  தகப்பன்  அவள்  முகத்திலே  காறித்  துப்பினதுண்டானால்,  அவள்  ஏழுநாள்  வெட்கப்படவேண்டாமோ,  அதுபோலவே  அவள்  ஏழுநாள்  பாளயத்துக்குப்  புறம்பே  விலக்கப்பட்டிருந்து,  பின்பு  சேர்த்துக்கொள்ளப்படக்கடவள்  என்றார்.  {Num  12:14}

 

அப்படியே  மிரியாம்<Miriam>  ஏழுநாள்  பாளயத்துக்குப்  புறம்பே  விலக்கப்பட்டிருந்தாள்;  மிரியாம்<Miriam>  சேர்த்துக்கொள்ளப்படுமட்டும்  ஜனங்கள்  பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.  {Num  12:15}

 

பின்பு,  ஜனங்கள்  ஆஸரோத்திலிருந்து<Hazeroth>  புறப்பட்டு,  பாரான்<Paran>  வனாந்தரத்திலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  12:16}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  13:1}

 

நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கொடுக்கும்  கானான்தேசத்தைச்<Canaan>  சுற்றிப்பார்ப்பதற்கு  நீ  மனிதரை  அனுப்பு;  ஒவ்வொரு  பிதாக்களின்  கோத்திரத்திலும்  ஒவ்வொரு  பிரபுவாகிய  புருஷனை  அனுப்பவேண்டும்  என்றார்.  {Num  13:2}

 

மோசே<Moses>  கர்த்தருடைய  வாக்கின்படியே  அவர்களைப்  பாரான்<Paran>  வனாந்தரத்திலிருந்து  அனுப்பினான்;  அந்த  மனிதர்  யாவரும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  தலைவர்கள்.  {Num  13:3}

 

அவர்களுடைய  நாமங்களாவன:  ரூபன்<Reuben>  கோத்திரத்தில்  சக்கூரின்<Zaccur>  குமாரன்  சம்முவா<Shammua>.  {Num  13:4}

 

சிமியோன்<Simeon>  கோத்திரத்தில்  ஓரியின்<Hori>  குமாரன்  சாப்பாத்<Shaphat>.  {Num  13:5}

 

யூதா<Judah>  கோத்திரத்தில்  எப்புன்னேயின்<Jephunneh>  குமாரன்  காலேப்<Caleb>.  {Num  13:6}

 

இசக்கார்<Issachar>  கோத்திரத்தில்  யோசேப்பின்<Joseph>  குமாரன்  ஈகால்<Igal>.  {Num  13:7}

 

எப்பிராயீம்<Ephraim>  கோத்திரத்தில்  நூனின்<Nun>  குமாரன்  ஓசேயா<Oshea>.  {Num  13:8}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தில்  ரப்பூவின்<Raphu>  குமாரன்  பல்த்தி<Palti>.  {Num  13:9}

 

செபுலோன்<Zebulun>  கோத்திரத்தில்  சோதியின்<Sodi>  குமாரன்  காதியேல்<Gaddiel>.  {Num  13:10}

 

யோசேப்பின்<Joseph>  கோத்திரத்தைச்  சேர்ந்த  மனாசே<Manasseh>  கோத்திரத்தில்  சூசின்<Susi>  குமாரன்  காதி<Gaddi>.  {Num  13:11}

 

தாண்<Dan>  கோத்திரத்தில்  கெமல்லியின்<Gemalli>  குமாரன்  அம்மியேல்<Ammiel>.  {Num  13:12}

 

ஆசேர்<Asher>  கோத்திரத்தில்  மிகாவேலின்<Michael>  குமாரன்  சேத்தூர்<Sethur>.  {Num  13:13}

 

நப்தலி<Naphtali>  கோத்திரத்தில்  ஒப்பேசியின்<Vophsi>  குமாரன்  நாகபி<Nahbi>.  {Num  13:14}

 

காத்<Gad>  கோத்திரத்தில்  மாகியின்<Machi>  குமாரன்  கூவேல்<Geuel>.  {Num  13:15}

 

தேசத்தைச்  சுற்றிப்பார்க்கும்படி  மோசே<Moses>  அனுப்பின  மனிதரின்  நாமங்கள்  இவைகளே;  நூனின்<Nun>  குமாரனாகிய  ஓசேயாவுக்கு<Oshea>  யோசுவா<Jehoshua>  என்று  மோசே<Moses>  பேரிட்டிருந்தான்.  {Num  13:16}

 

அவர்களை  மோசே<Moses>  கானான்தேசத்தைச்<Canaan>  சுற்றிப்பார்க்கும்படி  அனுப்புகையில்,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படித்  தெற்கே  போய்,  மலையில்  ஏறி,  {Num  13:17}

 

தேசம்  எப்படிப்பட்டதென்றும்,  அங்கே  குடியிருக்கிற  ஜனங்கள்  பலவான்களோ  பலவீனர்களோ,  கொஞ்சம்பேரோ  அநேகம்பேரோ  என்றும்,  {Num  13:18}

 

அவர்கள்  குடியிருக்கிற  தேசம்  எப்படிப்பட்டது,  அது  நல்லதோ  கெட்டதோ  என்றும்,  அவர்கள்  பட்டணங்கள்  எப்படிப்பட்டதென்றும்,  அவர்கள்  கூடாரங்களில்  குடியிருக்கிறவர்களோ  கோட்டைகளில்  குடியிருக்கிறவர்களோ  என்றும்,  {Num  13:19}

 

நிலம்  எப்படிப்பட்டது,  அது  வளப்பமானதோ  இளப்பமானதோ  என்றும்;  அதில்  விருட்சங்கள்  உண்டோ  இல்லையோ  என்றும்  பாருங்கள்;  தைரியங்கொண்டிருந்து,  தேசத்தின்  கனிகளிலே  சிலவற்றைக்  கொண்டுவாருங்கள்  என்றான்.  அக்காலம்  திராட்சச்செடி  முதற்பழம்  பழுக்கிற  காலமாயிருந்தது.  {Num  13:20}

 

அவர்கள்  போய்,  சீன்<Zin>  வனாந்தரந்தொடங்கி,  ஆமாத்துக்குப்<Hamath>  போகிற  வழியாகிய  ரேகொப்மட்டும்<Rehob>,  தேசத்தைச்  சுற்றிப்பார்த்து,  {Num  13:21}

 

தெற்கேயும்  சென்று,  எபிரோன்மட்டும்<Hebron>  போனார்கள்;  அங்கே  ஏனாக்கின்<Anak>  குமாரராகிய  அகீமானும்<Ahiman>  சேசாயும்<Sheshai>  தல்மாயும்<Talmai>  இருந்தார்கள்.  எபிரோன்<Hebron>  எகிப்திலுள்ள<Egypt>  சோவானுக்கு<Zoan>  ஏழுவருஷத்திற்குமுன்னே  கட்டப்பட்டது.  {Num  13:22}

 

பின்பு,  அவர்கள்  எஸ்கோல்<Eshcol>  பள்ளத்தாக்குமட்டும்  போய்,  அங்கே  ஒரே  குலையுள்ள  ஒரு  திராட்சக்கொடியை  அறுத்தார்கள்;  அதை  ஒரு  தடியிலே  இரண்டு  பேர்  கட்டித்  தூக்கிக்கொண்டுவந்தார்கள்;  மாதளம்பழங்களிலும்  அத்திப்பழங்களிலும்  சிலவற்றைக்  கொண்டுவந்தார்கள்.  {Num  13:23}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அங்கே  அறுத்த  திராட்சக்குலையினிமித்தம்,  அவ்விடம்  எஸ்கோல்<Eshcol>  பள்ளத்தாக்கு  என்னப்பட்டது.  {Num  13:24}

 

அவர்கள்  தேசத்தைச்  சுற்றிப்பார்த்து,  நாற்பதுநாள்  சென்றபின்பு  திரும்பினார்கள்.  {Num  13:25}

 

அவர்கள்  பாரான்<Paran>  வனாந்தரத்தில்  இருக்கிற  காதேசுக்கு<Kadesh>  வந்து,  மோசே<Moses>  ஆரோன்<Aaron>  என்பவர்களிடத்திலும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சபையார்  எல்லாரிடத்திலும்  சேர்ந்து,  அவர்களுக்கும்  சபையார்  அனைவருக்கும்  சமாசாரத்தை  அறிவித்து,  தேசத்தின்  கனிகளை  அவர்களுக்குக்  காண்பித்தார்கள்.  {Num  13:26}

 

அவர்கள்  மோசேயை<Moses>  நோக்கி:  நீர்  எங்களை  அனுப்பின  தேசத்துக்கு  நாங்கள்  போய்வந்தோம்;  அது  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசந்தான்;  இது  அதினுடைய  கனி.  {Num  13:27}

 

ஆனாலும்,  அந்த  தேசத்திலே  குடியிருக்கிற  ஜனங்கள்  பலவான்கள்;  பட்டணங்கள்  அரணிப்பானவைகளும்  மிகவும்  பெரியவைகளுமாய்  இருக்கிறது;  அங்கே  ஏனாக்கின்<Anak>  குமாரரையும்  கண்டோம்.  {Num  13:28}

 

அமலேக்கியர்<Amalekites>  தென்புறமான  தேசத்தில்  குடியிருக்கிறார்கள்;  ஏத்தியரும்<Hittites>,  எபூசியரும்<Jebusites>,  எமோரியரும்<Amorites>  மலைநாட்டில்  குடியிருக்கிறார்கள்;  கானானியர்<Canaanites>  கடல்  அருகேயும்  யோர்தானண்டையிலும்<Jordan>  குடியிருக்கிறார்கள்  என்றார்கள்.  {Num  13:29}

 

அப்பொழுது  காலேப்<Caleb>  மோசேக்கு<Moses>  முன்பாக  ஜனங்களை  அமர்த்தி:  நாம்  உடனே  போய்  அதைச்  சுதந்தரித்துக்கொள்வோம்;  நாம்  அதை  எளிதாய்  ஜெயித்துக்கொள்ளலாம்  என்றான்.  {Num  13:30}

 

அவனோடேகூடப்  போய்வந்த  மனிதரோ:  நாம்  போய்  அந்த  ஜனங்களோடே  எதிர்க்க  நம்மாலே  கூடாது;  அவர்கள்  நம்மைப்பார்க்கிலும்  பலவான்கள்  என்றார்கள்.  {Num  13:31}

 

நாங்கள்  போய்ச்  சுற்றிப்  பார்த்துவந்த  அந்த  தேசம்  தன்  குடிகளைப்  பட்சிக்கிற  தேசம்;  நாங்கள்  அதிலே  கண்ட  ஜனங்கள்  எல்லாரும்  மிகவும்  பெரிய  ஆட்கள்.  {Num  13:32}

 

அங்கே  இராட்சதப்  பிறவியான  ஏனாக்கின்<Anak>  குமாரராகிய  இராட்சதரையும்  கண்டோம்;  நாங்கள்  எங்கள்  பார்வைக்கு  வெட்டுக்கிளிகளைப்போல்  இருந்தோம்,  அவர்கள்  பார்வைக்கும்  அப்படியே  இருந்தோம்  என்று  சொல்லி,  இப்படி  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குள்ளே  தாங்கள்  சுற்றிப்  பார்த்துவந்த  தேசத்தைக்குறித்து  துர்ச்செய்தி  பரம்பச்செய்தார்கள்.  {Num  13:33}

 

அப்பொழுது  சபையார்  எல்லாரும்  கூக்குரலிட்டுப்  புலம்பினார்கள்;  ஜனங்கள்  அன்று  இராமுழுதும்  அழுதுகொண்டிருந்தார்கள்.  {Num  14:1}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எல்லாரும்  மோசேக்கும்<Moses>  ஆரோனுக்கும்<Aaron>  விரோதமாக  முறுமுறுத்தார்கள்.  சபையார்  எல்லாரும்  அவர்களை  நோக்கி:  எகிப்துதேசத்திலே<Egypt>  செத்துப்போனோமானால்  நலமாயிருக்கும்;  இந்த  வனாந்தரத்திலே  நாங்கள்  செத்தாலும்  நலம்.  {Num  14:2}

 

நாங்கள்  பட்டயத்தால்  மடியும்படிக்கும்,  எங்கள்  பெண்ஜாதிகளும்  பிள்ளைகளும்  கொள்ளையாகும்படிக்கும்,  கர்த்தர்  எங்களை  இந்த  தேசத்துக்குக்  கொண்டுவந்தது  என்ன?  எகிப்துக்குத்<Egypt>  திரும்பிப்போகிறதே  எங்களுக்கு  உத்தமம்  அல்லவோ  என்றார்கள்.  {Num  14:3}

 

பின்பு  அவர்கள்:  நாம்  ஒரு  தலைவனை  ஏற்படுத்திக்கொண்டு  எகிப்துக்குத்<Egypt>  திரும்பிப்போவோம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  {Num  14:4}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபையாராகிய  எல்லாக்  கூட்டத்தாருக்குமுன்பாகவும்  முகங்குப்புற  விழுந்தார்கள்.  {Num  14:5}

 

தேசத்தைச்  சுற்றிப்பார்த்தவர்களில்  நூனின்<Nun>  குமாரனாகிய  யோசுவாவும்<Joshua>,  எப்புன்னேயின்<Jephunneh>  குமாரனாகிய  காலேபும்<Caleb>,  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  {Num  14:6}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சமஸ்த  சபையையும்  நோக்கி:  நாங்கள்  போய்ச்  சுற்றிப்பார்த்து  சோதித்த  தேசம்  மகா  நல்ல  தேசம்.  {Num  14:7}

 

கர்த்தர்  நம்மேல்  பிரியமாயிருந்தால்,  அந்தத்  தேசத்திலே  நம்மைக்  கொண்டுபோய்,  பாலும்  தேனும்  ஓடுகிற  அந்தத்  தேசத்தை  நமக்குக்  கொடுப்பார்.  {Num  14:8}

 

கர்த்தருக்கு  விரோதமாகமாத்திரம்  கலகம்பண்ணாதிருங்கள்;  அந்த  தேசத்தின்  ஜனங்களுக்கு  நீங்கள்  பயப்படவேண்டியதில்லை;  அவர்கள்  நமக்கு  இரையாவார்கள்;  அவர்களைக்  காத்த  நிழல்  அவர்களைவிட்டு  விலகிப்போயிற்று;  கர்த்தர்  நம்மோடே  இருக்கிறார்;  அவர்களுக்குப்  பயப்படவேண்டியதில்லை  என்றார்கள்.  {Num  14:9}

 

அப்பொழுது  அவர்கள்மேல்  கல்லெறியவேண்டும்  என்று  சபையார்  எல்லாரும்  சொன்னார்கள்;  உடனே  கர்த்தருடைய  மகிமை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எல்லாருக்கும்  முன்பாகக்  காணப்பட்டது.  {Num  14:10}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  எதுவரைக்கும்  இந்த  ஜனங்கள்  எனக்குக்  கோபம்  உண்டாக்குவார்கள்?  தங்களுக்குள்ளே  நான்  காட்டின  சகல  அடையாளங்களையும்  அவர்கள்  கண்டும்,  எதுவரைக்கும்  என்னை  விசுவாசியாதிருப்பார்கள்?  {Num  14:11}

 

நான்  அவர்களைக்  கொள்ளைநோயினால்  வாதித்து,  சுதந்தரத்துக்குப்  புறம்பாக்கிப்போட்டு,  அவர்களைப்பார்க்கிலும்  உன்னைப்  பெரிதும்  பலத்ததுமான  ஜாதியாக்குவேன்  என்றார்.  {Num  14:12}

 

மோசே<Moses>  கர்த்தரை  நோக்கி:  எகிப்தியர்<Egyptians>  இதைக்  கேட்பார்கள்,  அவர்கள்  நடுவிலிருந்து  உம்முடைய  வல்லமையினாலே  இந்த  ஜனங்களைக்  கொண்டுவந்தீரே.  {Num  14:13}

 

கர்த்தராகிய  நீர்  இந்த  ஜனங்களின்  நடுவே  இருக்கிறதையும்,  கர்த்தராகிய  நீர்  முகமுகமாய்த்  தரிசனமாகிறதையும்,  உம்முடைய  மேகம்  இவர்கள்மேல்  நிற்கிறதையும்,  பகலில்  மேகத்தூணிலும்,  இரவில்  அக்கினித்தூணிலும்,  நீர்  இவர்களுக்கு  முன்  செல்லுகிறதையும்  கேட்டிருக்கிறார்கள்;  இந்த  தேசத்தின்  குடிகளுக்கும்  சொல்லுவார்கள்.  {Num  14:14}

 

ஒரே  மனிதனைக்  கொல்லுகிறதுபோல  இந்த  ஜனங்களையெல்லாம்  நீர்  கொல்வீரானால்,  அப்பொழுது  உம்முடைய  கீர்த்தியைக்  கேட்டிருக்கும்  புறஜாதியார்:  {Num  14:15}

 

கர்த்தர்  அந்த  ஜனங்களுக்குக்  கொடுப்போம்  என்று  ஆணையிட்டிருந்த  தேசத்திலே  அவர்களைக்  கொண்டுபோய்  விடக்கூடாதேபோனபடியினால்,  அவர்களை  வனாந்தரத்திலே  கொன்றுபோட்டார்  என்பார்களே.  {Num  14:16}

 

ஆகையால்  கர்த்தர்  நீடிய  சாந்தமும்  மிகுந்த  கிருபையுமுள்ளவர்  என்றும்,  அக்கிரமத்தையும்  மீறுதலையும்  மன்னிக்கிறவர்  என்றும்,  குற்றமுள்ளவர்களைக்  குற்றமற்றவர்களாக  விடாமல்,  பிதாக்கள்  செய்த  அக்கிரமத்தைப்  பிள்ளைகளிடத்தில்  மூன்றாம்  நான்காம்  தலைமுறைமட்டும்  விசாரிக்கிறவர்  என்றும்,  நீர்  சொல்லியிருக்கிறபடியே,  {Num  14:17}

 

என்  ஆண்டவருடைய  வல்லமை  பெரிதாய்  விளங்குவதாக.  {Num  14:18}

 

உமது  கிருபையினுடைய  மகத்துவத்தின்படியேயும்,  எகிப்தை<Egypt>  விட்டதுமுதல்  இந்நாள்வரைக்கும்  இந்த  ஜனங்களுக்கு  மன்னித்துவந்ததின்படியேயும்,  இந்த  ஜனங்களின்  அக்கிரமத்தை  மன்னித்தருளும்  என்றான்.  {Num  14:19}

 

அப்பொழுது  கர்த்தர்:  உன்  வார்த்தையின்படியே  மன்னித்தேன்.  {Num  14:20}

 

பூமியெல்லாம்  கர்த்தருடைய  மகிமையினால்  நிறைந்திருக்கும்  என்று  என்னுடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {Num  14:21}

 

என்  மகிமையையும்,  நான்  எகிப்திலும்<Egypt>  வனாந்தரத்திலும்  செய்த  என்  அடையாளங்களையும்  கண்டிருந்தும்,  என்  சத்தத்துக்குச்  செவிகொடாமல்,  இதனோடே  பத்துமுறை  என்னைப்  பரீட்சைபார்த்த  மனிதரில்  ஒருவரும்,  {Num  14:22}

 

அவர்கள்  பிதாக்களுக்கு  நான்  ஆணையிட்டுக்கொடுத்த  தேசத்தைக்  காணமாட்டார்கள்;  எனக்குக்  கோபம்  உண்டாக்கினவர்களில்  ஒருவரும்  அதைக்  காணமாட்டார்கள்.  {Num  14:23}

 

என்னுடைய  தாசனாகிய  காலேப்<Caleb>  வேறே  ஆவியை  உடையவனாயிருக்கிறபடியினாலும்,  உத்தமமாய்  என்னைப்  பின்பற்றிவந்தபடியினாலும்,  அவன்  போய்வந்த  தேசத்திலே  அவனைச்  சேரப்பண்ணுவேன்;  அவன்  சந்ததியார்  அதைச்  சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.  {Num  14:24}

 

அமலேக்கியரும்<Amalekites>  கானானியரும்<Canaanites>  பள்ளத்தாக்கிலே  குடியிருக்கிறபடியினால்,  நாளைக்கு  நீங்கள்  திரும்பிச்  சிவந்த  சமுத்திரத்துக்குப்<Red  sea>  போகிற  வழியாய்  வனாந்தரத்துக்குப்  பிரயாணம்பண்ணுங்கள்  என்றார்.  {Num  14:25}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  நோக்கி:  {Num  14:26}

 

எனக்கு  விரோதமாய்  முறுமுறுக்கிற  இந்தப்  பொல்லாத  சபையாரை  எதுவரைக்கும்  பொறுப்பேன்?  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எனக்கு  விரோதமாய்  முறுமுறுக்கிறதைக்  கேட்டேன்.  {Num  14:27}

 

நீ  அவர்களோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  என்  செவிகள்  கேட்கச்  சொன்னபிரகாரம்  உங்களுக்குச்  செய்வேன்  என்பதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்.  {Num  14:28}

 

இந்த  வனாந்தரத்தில்  உங்கள்  பிரேதங்கள்  விழும்;  உங்களில்  இருபது  வயதுமுதல்  அதற்கு  மேற்பட்டவர்களாக  எண்ணப்பட்டு,  உங்கள்  தொகைக்கு  உட்பட்டவர்களும்  எனக்கு  விரோதமாய்  முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய  அனைவரின்  பிரேதங்களும்  விழும்.  {Num  14:29}

 

எப்புன்னேயின்<Jephunneh>  குமாரன்  காலேபும்<Caleb>,  நூனின்<Nun>  குமாரன்  யோசுவாவும்<Joshua>  தவிர,  மற்றவர்களாகிய  நீங்கள்  நான்  உங்களைக்  குடியேற்றுவேன்  என்று  ஆணையிட்டுக்கொடுத்த  தேசத்தில்  பிரவேசிப்பதில்லை.  {Num  14:30}

 

கொள்ளையாவார்கள்  என்று  நீங்கள்  சொன்ன  உங்கள்  குழந்தைகளையோ  நான்  அதில்  பிரவேசிக்கச்  செய்வேன்;  நீங்கள்  அசட்டைப்பண்ணின  தேசத்தை  அவர்கள்  கண்டறிவார்கள்.  {Num  14:31}

 

உங்கள்  பிரேதங்களோ  இந்த  வனாந்தரத்திலே  விழும்.  {Num  14:32}

 

அவைகள்  வனாந்தரத்திலே  விழுந்து  தீருமட்டும்,  உங்கள்  பிள்ளைகள்  நாற்பது  வருஷம்  வனாந்தரத்திலே  திரிந்து,  நீங்கள்  சோரம்போன  பாதகத்தைச்  சுமப்பார்கள்.  {Num  14:33}

 

நீங்கள்  தேசத்தைச்  சுற்றிப்பார்த்த  நாற்பதுநாள்  இலக்கத்தின்படியே,  ஒவ்வொரு  நாள்  ஒவ்வொரு  வருஷமாக,  நீங்கள்  நாற்பது  வருஷம்  உங்கள்  அக்கிரமங்களைச்  சுமந்து,  என்  உடன்படிக்கைக்கு  வந்த  மாறுதலை  உணருவீர்கள்.  {Num  14:34}

 

கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்;  எனக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடின  இந்தப்  பொல்லாத  சபையார்  யாவருக்கும்  இப்படியே  செய்வேன்;  இந்த  வனாந்தரத்திலே  அழிவார்கள்,  இங்கே  சாவார்கள்  என்று  சொல்  என்றார்.  {Num  14:35}

 

அந்த  தேசத்தைச்  சோதித்துப்பார்க்கும்படி  மோசேயால்<Moses>  அனுப்பப்பட்டுத்  திரும்பி,  அந்த  தேசத்தைக்குறித்துத்  துர்ச்செய்தி  கொண்டுவந்து,  {Num  14:36}

 

சபையார்  எல்லாரும்  அவனுக்கு  விரோதமாய்  முறுமுறுக்கும்படி  அந்தத்  துர்ச்செய்தியைச்  சொன்னவர்களாகிய  அந்த  மனிதர்  கர்த்தருடைய  சந்நிதியில்  வாதையினால்  செத்தார்கள்.  {Num  14:37}

 

தேசத்தைச்  சுற்றிப்பார்க்கப்போன  அந்த  மனிதரில்  நூனின்<Nun>  குமாரனாகிய  யோசுவாவும்<Joshua>,  எப்புன்னேயின்<Jephunneh>  குமாரனாகிய  காலேபும்மாத்திரம்<Caleb>  உயிரோடிருந்தார்கள்.  {Num  14:38}

 

மோசே<Moses>  இந்த  வார்த்தைகளை  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அனைவரோடும்  சொன்னபோது,  ஜனங்கள்  மிகவும்  துக்கித்தார்கள்.  {Num  14:39}

 

அதிகாலமே  அவர்கள்  எழுந்திருந்து:  நாங்கள்  பாவஞ்செய்தோம்,  கர்த்தர்  வாக்குத்தத்தம்பண்ணின  இடத்துக்கு  நாங்கள்  போவோம்  என்று  சொல்லி  மலையின்  உச்சியில்  ஏறத்துணிந்தார்கள்.  {Num  14:40}

 

மோசே<Moses>  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படி  கர்த்தரின்  கட்டளையை  மீறுகிறதென்ன?  அது  உங்களுக்கு  வாய்க்காது.  {Num  14:41}

 

நீங்கள்  உங்கள்  சத்துருக்களுக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்படாதபடிக்கு  ஏறிப்போகாதிருங்கள்;  கர்த்தர்  உங்கள்  நடுவில்  இரார்.  {Num  14:42}

 

அமலேக்கியரும்<Amalekites>  கானானியரும்<Canaanites>  அங்கே  உங்களுக்குமுன்னே  இருக்கிறார்கள்;  பட்டயத்தினால்  விழுவீர்கள்;  நீங்கள்  கர்த்தரை  விட்டுப்  பின்வாங்கினபடியால்,  கர்த்தர்  உங்களோடே  இருக்கமாட்டார்  என்றான்.  {Num  14:43}

 

ஆனாலும்  அவர்கள்  மலையின்  உச்சியில்  ஏறத்  துணிந்தார்கள்;  கர்த்தருடைய  உடன்படிக்கையின்  பெட்டியும்  மோசேயும்<Moses>  பாளயத்தை  விட்டுப்  போகவில்லை.  {Num  14:44}

 

அப்பொழுது  அமலேக்கியரும்<Amalekites>  கானானியரும்<Canaanites>  அந்த  மலையிலே  இருந்து  இறங்கிவந்து,  அவர்களை  முறிய  அடித்து,  அவர்களை  ஓர்மாமட்டும்<Hormah>  துரத்தினார்கள்.  {Num  14:45}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  15:1}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  குடியிருக்கும்படி  நான்  உங்களுக்குக்  கொடுக்கும்  தேசத்தில்  நீங்கள்  போய்ச்  சேர்ந்தபின்பு,  {Num  15:2}

 

விசேஷித்த  பொருத்தனையாயாவது,  உற்சாக  பலியாயாவது,  உங்கள்  பண்டிகைகளில்  செலுத்தும்  பலியாயாவது,  கர்த்தருக்கு  மாடுகளிலாகிலும்  ஆடுகளிலாகிலும்  சர்வாங்க  தகனபலியையாவது  மற்ற  யாதொரு  பலியையாவது  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனமாகப்  பலியிடும்போது,  {Num  15:3}

 

தன்  படைப்பைக்  கர்த்தருக்குச்  செலுத்துகிறவன்  சர்வாங்க  தகனபலிக்காகிலும்  மற்றப்  பலிக்காகிலும்  ஒரு  ஆட்டுக்குட்டியுடனே,  ஒரு  மரக்காலிலே  பத்தில்  ஒரு  பங்கும்  காற்படி  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மெல்லிய  மாவின்  போஜனபலியைச்  செலுத்தக்கடவன்.  {Num  15:4}

 

பானபலியாக  காற்படி  திராட்சரசத்தையும்  படைக்கவேண்டும்.  {Num  15:5}

 

ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில்,  பத்தில்  இரண்டு  பங்கானதும்,  ஒரு  படியில்  மூன்றில்  ஒரு  பங்காகிய  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மெல்லிய  மாவின்  போஜனபலியையும்,  {Num  15:6}

 

பானபலியாக  ஒரு  படியில்  மூன்றில்  ஒரு  பங்கு  திராட்சரசத்தையும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  படைப்பாகப்  படைக்கவேண்டும்.  {Num  15:7}

 

நீ  சர்வாங்க  தகனபலிக்காகிலும்,  விசேஷித்த  பொருத்தனை  பலிக்காகிலும்,  சமாதான  பலிக்காகிலும்,  ஒரு  காளையைக்  கர்த்தருக்குச்  செலுத்த  ஆயத்தப்படுத்தும்போது,  {Num  15:8}

 

அதனோடே  பத்தில்  மூன்றுபங்கானதும்,  அரைப்படி  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மெல்லிய  மாவின்  போஜனபலியையும்,  {Num  15:9}

 

பானபலியாக  அரைப்படி  திராட்சரசத்தையும்,  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலியாகப்  படைக்க  வேண்டும்.  {Num  15:10}

 

இந்தப்பிரகாரமாகவே  ஒவ்வொரு  மாட்டுக்காகிலும்,  ஆட்டுக்கடாவுக்காகிலும்,  செம்மறியாட்டுக்  குட்டிக்காகிலும்,  வெள்ளாட்டுக்  குட்டிக்காகிலும்  செய்து  படைக்கவேண்டும்.  {Num  15:11}

 

நீங்கள்  படைக்கிறவைகளின்  இலக்கத்திற்குத்தக்கதாய்  ஒவ்வொன்றிற்காகவும்  இந்தப்பிரகாரம்  செய்யவேண்டும்.  {Num  15:12}

 

சுதேசத்தில்  பிறந்தவர்கள்  யாவரும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலியைச்  செலுத்தும்போது  இவ்விதமாகவே  செய்யவேண்டும்.  {Num  15:13}

 

உங்களிடத்திலே  தங்கியிருக்கிற  அந்நியனாவது,  உங்கள்  நடுவிலே  உங்கள்  தலைமுறைதோறும்  குடியிருக்கிறவனாவது,  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலி  செலுத்தவேண்டுமானால்,  நீங்கள்  செய்கிறபடியே  அவனும்  செய்யவேண்டும்.  {Num  15:14}

 

சபையாராகிய  உங்களுக்கும்  உங்களிடத்தில்  தங்குகிற  அந்நியனுக்கும்  ஒரே  பிரமாணம்  இருக்கவேண்டும்  என்பது  உங்கள்  தலைமுறைகளில்  நித்திய  கட்டளையாயிருக்கக்கடவது;  கர்த்தருக்கு  முன்பாக  அந்நியனும்  உங்களைப்போலவே  இருக்கவேண்டும்.  {Num  15:15}

 

உங்களுக்கும்  உங்களிடத்தில்  தங்குகிற  அந்நியனுக்கும்  ஒரே  பிரமாணமும்  ஒரே  முறைமையும்  இருக்கக்கடவது  என்று  சொல்  என்றார்.  {Num  15:16}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  15:17}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நான்  உங்களை  அழைத்துக்கொண்டுபோகிற  தேசத்தில்  நீங்கள்  சேர்ந்து,  {Num  15:18}

 

தேசத்தின்  ஆகாரத்தைப்  புசிக்கும்போது,  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  காணிக்கையைச்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  15:19}

 

உங்கள்  பிசைந்த  மாவினால்  செய்த  முதற்பலனாகிய  அதிரசத்தை  ஏறெடுத்துப்  படைப்பீர்களாக;  போரடிக்கிற  களத்தின்  படைப்பை  ஏறெடுத்துப்  படைக்கிறதுபோல  அதையும்  ஏறெடுத்துப்  படைக்கவேண்டும்.  {Num  15:20}

 

இப்படி  உங்கள்  தலைமுறைதோறும்  உங்கள்  பிசைந்த  மாவின்  முதற்பலனிலே  கர்த்தருக்குப்  படைப்பை  ஏறெடுத்துப்  படைக்கக்கடவீர்கள்.  {Num  15:21}

 

கர்த்தர்  மோசேயினிடத்தில்<Moses>  சொன்ன  இந்தக்  கற்பனைகள்  எல்லாவற்றின்படியும்,  {Num  15:22}

 

கர்த்தர்  மோசேயைக்கொண்டு<Moses>  கட்டளைகொடுத்த  நாள்முதற்கொண்டு  அவர்  உங்களுக்கும்  உங்கள்  சந்ததிகளுக்கும்  நியமித்த  எல்லாவற்றின்படியேயும்  நீங்கள்  செய்யாமல்,  {Num  15:23}

 

அறியாமல்  தவறி  நடந்தாலும்,  சபையாருக்குத்  தெரியாமல்  யாதொரு  தப்பிதம்  செய்தாலும்,  சபையார்  எல்லாரும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலியாக  ஒரு  காளையையும்,  முறைமைப்படி  அதற்கேற்ற  போஜனபலியையும்,  பானபலியையும்,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தவேண்டும்.  {Num  15:24}

 

அதினால்  ஆசாரியன்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபையனைத்திற்காகவும்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அது  அறியாமையினால்  செய்யப்பட்டபடியாலும்,  அதினிமித்தம்  அவர்கள்  கர்த்தருக்குத்  தகனபலியையும்  பாவநிவாரணபலியையும்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்ததினாலும்,  அது  அவர்களுக்கு  மன்னிக்கப்படும்.  {Num  15:25}

 

அது  அறியாமையினாலே  ஜனங்கள்  யாவருக்கும்  வந்தபடியால்,  அது  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபையனைத்திற்கும்  அவர்களுக்குள்ளே  தங்குகிற  அந்நியனுக்கும்  மன்னிக்கப்படும்.  {Num  15:26}

 

ஒருவன்  அறியாமையினால்  பாவஞ்செய்தானாகில்,  ஒரு  வயதான  வெள்ளாட்டைப்  பாவநிவாரணபலியாகச்  செலுத்தக்கடவன்.  {Num  15:27}

 

அப்பொழுது  அறியாமையினால்  பாவஞ்செய்தவனுக்காக  ஆசாரியன்  பாவநிவிர்த்தி  செய்யும்படி  கர்த்தருடைய  சந்நிதியில்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  {Num  15:28}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  உங்களில்  பிறந்தவனுக்கும்  உங்களுக்குள்ளே  தங்கும்  அந்நியனுக்கும்,  அறியாமையினால்  பாவஞ்செய்தவனிமித்தம்,  ஒரே  பிரமாணம்  இருக்கவேண்டும்.  {Num  15:29}

 

அன்றியும்  தேசத்திலே  பிறந்தவர்களிலாகிலும்  அந்நியர்களிலாகிலும்  எவனாவது  துணிகரமாய்  யாதொன்றைச்  செய்தால்,  அவன்  கர்த்தரை  நிந்திக்கிறான்;  அந்த  ஆத்துமா  தன்  ஜனத்தாரில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோகவேண்டும்.  {Num  15:30}

 

அவன்  கர்த்தரின்  வார்த்தையை  அசட்டைபண்ணி,  அவர்  கற்பனையை  மீறினபடியால்,  அந்த  ஆத்துமா  அறுப்புண்டுபோகவேண்டும்;  அவன்  அக்கிரமம்  அவன்மேல்  இருக்கும்  என்று  சொல்  என்றார்.  {Num  15:31}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  வனாந்தரத்தில்  இருக்கையில்,  ஓய்வுநாளில்  விறகுகளைப்  பொறுக்கிக்கொண்டிருந்த  ஒரு  மனிதனைக்  கண்டுபிடித்தார்கள்.  {Num  15:32}

 

விறகுகளைப்  பொறுக்கின  அந்த  மனிதனைக்  கண்டுபிடித்தவர்கள்,  அவனை  மோசே<Moses>  ஆரோன்<Aaron>  என்பவர்களிடத்துக்கும்  சபையார்  அனைவரிடத்துக்கும்  கொண்டுவந்தார்கள்.  {Num  15:33}

 

அவனுக்குச்  செய்யவேண்டியது  இன்னதென்று  தீர்க்கமான  உத்தரவு  இல்லாதபடியினால்,  அவனைக்  காவலில்  வைத்தார்கள்.  {Num  15:34}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  அந்த  மனிதன்  நிச்சயமாய்க்  கொலைசெய்யப்படவேண்டும்;  சபையார்  எல்லாரும்  அவனைப்  பாளயத்திற்குப்  புறம்பே  கல்லெறியக்கடவர்கள்  என்றார்.  {Num  15:35}

 

அப்பொழுது  சபையார்  எல்லாரும்  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே,  அவனைப்  பாளயத்திற்குப்  புறம்பே  கொண்டுபோய்க்  கல்லெறிந்தார்கள்;  அவன்  செத்தான்.  {Num  15:36}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  15:37}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிடத்தில்  பேசி,  அவர்கள்  தங்கள்  தலைமுறைதோறும்  தங்கள்  வஸ்திரங்களின்  ஓரங்களிலே  தொங்கல்களை  உண்டாக்கி,  ஓரத்தின்  தொங்கலிலே  இளநீல  நாடாவைக்  கட்டவேண்டும்  என்று  அவர்களுக்குச்  சொல்.  {Num  15:38}

 

நீங்கள்  பின்பற்றிச்  சோரம்போகிற  உங்கள்  இருதயத்துக்கும்  உங்கள்  கண்களுக்கும்  ஏற்க  நடவாமல்,  அதைப்  பார்த்து,  கர்த்தரின்  கற்பனைகளையெல்லாம்  நினைத்து  அவைகளின்படியே  செய்யும்படிக்கு,  அது  உங்களுக்குத்  தொங்கலாய்  இருக்கவேண்டும்.  {Num  15:39}

 

நீங்கள்  என்  கற்பனைகளையெல்லாம்  நினைத்து,  அவைகளின்படியே  செய்து,  உங்கள்  தேவனுக்குப்  பரிசுத்தராயிருக்கும்படி  அதைப்  பார்ப்பீர்களாக.  {Num  15:40}

 

நான்  உங்களுக்குத்  தேவனாயிருக்கும்படி,  உங்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணின  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்;  நானே  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  சொல்  என்றார்.  {Num  15:41}

 

லேவிக்குப்<Levi>  பிறந்த  கோகாத்தின்<Kohath>  குமாரனாகிய  இத்சேயாரின்<Izhar>  மகன்  கோராகு<Korah>  என்பவன்  ரூபன்<Reuben>  வம்சத்திலுள்ள  எலியாபின்<Eliab>  குமாரராகிய  தாத்தானையும்<Dathan>  அபிராமையும்<Abiram>  பேலேத்தின்<Peleth>  குமாரனாகிய  ஓனையும்<On>  கூட்டிக்கொண்டு,  {Num  16:1}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  சபைக்குத்  தலைவர்களும்  சங்கத்துக்கு  அழைக்கப்பட்டவர்களும்  பிரபலமானவர்களுமாகிய  இருநூற்று  ஐம்பது  பேர்களோடும்  கூட  மோசேக்குமுன்பாக<Moses>  எழும்பி,  {Num  16:2}

 

மோசேக்கும்<Moses>  ஆரோனுக்கும்<Aaron>  விரோதமாகக்  கூட்டங்கூடி,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  மிஞ்சிப்போகிறீர்கள்;  சபையார்  எல்லாரும்  பரிசுத்தமானவர்கள்;  கர்த்தர்  அவர்கள்  நடுவில்  இருக்கிறாரே;  இப்படியிருக்க,  கர்த்தருடைய  சபைக்கு  மேலாக  உங்களை  ஏன்  உயர்த்துகிறீர்கள்  என்றார்கள்.  {Num  16:3}

 

மோசே<Moses>  அதைக்  கேட்டபோது,  முகங்குப்புற  விழுந்தான்.  {Num  16:4}

 

பின்பு  அவன்  கோராகையும்<Korah>  அவனுடைய  எல்லாக்  கூட்டத்தையும்  நோக்கி:  நாளைக்குக்  கர்த்தர்  தம்முடையவன்  இன்னான்  என்றும்,  தம்மண்டையிலே  சேரத்  தாம்  கட்டளையிட்ட  பரிசுத்தவான்  இன்னான்  என்றும்  காண்பிப்பார்;  அப்பொழுது  எவனைத்  தெரிந்துகொள்வாரோ,  அவனைத்  தம்மிடத்தில்  சேரக்  கட்டளையிடுவார்.  {Num  16:5}

 

ஒன்று  செய்யுங்கள்;  கோராகே<Korah>,  கோராகின்<Korah>  கூட்டத்தார்களே,  நீங்கள்  எல்லாரும்  தூபகலசங்களை  எடுத்துக்கொண்டு,  {Num  16:6}

 

நாளைக்கு  அவைகளில்  அக்கினிபோட்டு,  கர்த்தருடைய  சந்நிதியில்  தூபவர்க்கம்  இடுங்கள்;  அப்பொழுது  கர்த்தர்  எவனைத்  தெரிந்துகொள்வாரோ,  அவன்  பரிசுத்தவானாயிருப்பான்;  லேவியின்<Levi>  புத்திரராகிய  நீங்களே  மிஞ்சிப்போகிறீர்கள்  என்றான்.  {Num  16:7}

 

பின்னும்  மோசே<Moses>  கோராகை<Korah>  நோக்கி:  லேவியின்<Levi>  புத்திரரே,  கேளுங்கள்;  {Num  16:8}

 

கர்த்தருடைய  வாசஸ்தலத்தின்  பணிவிடைகளைச்  செய்யவும்,  சபையாரின்  முன்நின்று  அவர்கள்  செய்யவேண்டிய  வேலைகளைச்  செய்யவும்,  உங்களைத்  தம்மண்டையிலே  சேரப்பண்ணும்படி  இஸ்ரவேலின்<Israel>  தேவன்  இஸ்ரவேல்<Israel>  சபையாரிலிருந்து  உங்களைப்  பிரித்தெடுத்ததும்,  {Num  16:9}

 

அவர்  உன்னையும்  உன்னோடேகூட  லேவியின்<Levi>  புத்திரராகிய  உன்னுடைய  எல்லாச்  சகோதரரையும்  சேரப்பண்ணினதும்,  உங்களுக்கு  அற்பகாரியமோ?  இப்பொழுது  ஆசாரியப்பட்டத்தையும்  தேடுகிறீர்களோ?  {Num  16:10}

 

இதற்காக  நீயும்  உன்  கூட்டத்தார்  அனைவரும்  கர்த்தருக்கு  விரோதமாகவே  கூட்டங்கூடினீர்கள்;  ஆரோனுக்கு<Aaron>  விரோதமாக  நீங்கள்  முறுமுறுக்கிறதற்கு  அவன்  எம்மாத்திரம்  என்றான்.  {Num  16:11}

 

பின்பு  மோசே<Moses>  எலியாபின்<Eliab>  குமாரராகிய  தாத்தானையும்<Dathan>  அபிராமையும்<Abiram>  அழைத்தனுப்பினான்.  அவர்கள்:  நாங்கள்  வருகிறதில்லை;  {Num  16:12}

 

இந்த  வனாந்தரத்தில்  எங்களைக்  கொன்றுபோடும்படி,  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்திலிருந்து  எங்களைக்  கொண்டுவந்தது  அற்பகாரியமோ,  எங்கள்மேல்  துரைத்தனமும்  பண்ணப்பார்க்கிறாயோ?  {Num  16:13}

 

மேலும்  நீ  எங்களைப்  பாலும்  தேனும்  ஓடுகிற  தேசத்துக்குக்  கொண்டுவந்ததும்  இல்லை,  எங்களுக்கு  வயல்களையும்  திராட்சத்தோட்டங்களையும்  சுதந்தரமாகக்  கொடுத்ததும்  இல்லை;  இந்த  மனிதருடைய  கண்களைப்  பிடுங்கப்பார்க்கிறாயோ?  நாங்கள்  வருகிறதில்லை  என்றார்கள்.  {Num  16:14}

 

அப்பொழுது  மோசேக்குக்<Moses>  கடுங்கோபம்  மூண்டது;  அவன்  கர்த்தரை  நோக்கி:  அவர்கள்  செலுத்துங்  காணிக்கையை  அங்கிகரியாதிருப்பீராக;  நான்  அவர்களிடத்தில்  ஒரு  கழுதையை  முதலாய்  எடுத்துக்கொள்ளவில்லை;  அவர்களில்  ஒருவனுக்கும்  யாதொரு  பொல்லாப்பு  செய்யவும்  இல்லை  என்றான்.  {Num  16:15}

 

பின்பு  மோசே<Moses>  கோராகை<Korah>  நோக்கி:  நீயும்  உன்  கூட்டத்தார்  யாவரும்  நாளைக்குக்  கர்த்தருடைய  சந்நிதியில்  வாருங்கள்;  நீயும்  அவர்களும்  ஆரோனும்<Aaron>  வந்திருங்கள்.  {Num  16:16}

 

உங்களில்  ஒவ்வொருவரும்  தங்கள்  தங்கள்  தூபகலசங்களை  எடுத்து,  அவைகளில்  தூபவர்க்கத்தைப்  போட்டு,  தங்கள்  தங்கள்  தூபகலசங்களாகிய  இருநூற்று  ஐம்பது  தூபகலசங்களையும்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவரவேண்டும்;  நீயும்  ஆரோனும்<Aaron>  தன்  தன்  தூபகலசத்தைக்  கொண்டுவாருங்கள்  என்றான்.  {Num  16:17}

 

அப்படியே  அவரவர்  தங்கள்  தங்கள்  தூபகலசங்களை  எடுத்து,  அவைகளில்  அக்கினியையும்  தூபவர்க்கத்தையும்  போட்டு,  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாக  வந்து  நின்றார்கள்;  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  அங்கே  நின்றார்கள்.  {Num  16:18}

 

அவர்களுக்கு  விரோதமாகக்  கோராகு<Korah>  சபையையெல்லாம்  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாகக்  கூடிவரும்படி  செய்தான்;  அப்பொழுது  கர்த்தருடைய  மகிமை  சபைக்கெல்லாம்  காணப்பட்டது.  {Num  16:19}

 

கர்த்தர்  மோசேயோடும்<Moses>  ஆரோனோடும்<Aaron>  பேசி:  {Num  16:20}

 

இந்தச்  சபையைவிட்டுப்  பிரிந்துபோங்கள்;  ஒரு  நிமிஷத்திலே  அவர்களை  அதமாக்குவேன்  என்றார்.  {Num  16:21}

 

அப்பொழுது  அவர்கள்  முகங்குப்புற  விழுந்து:  தேவனே,  மாம்சமான  யாவருடைய  ஆவிகளுக்கும்  தேவனே,  ஒரு  மனிதன்  பாவம்  செய்திருக்கச்  சபையார்  எல்லார்மேலும்  கடுங்கோபங்கொள்வீரோ  என்றார்கள்.  {Num  16:22}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  16:23}

 

கோராகு<Korah>  தாத்தான்<Dathan>  அபிராம்<Abiram>  என்பவர்களுடைய  வாசஸ்தலத்தை  விட்டு  விலகிப்போங்கள்  என்று  சபையாருக்குச்  சொல்  என்றார்.  {Num  16:24}

 

உடனே  மோசே<Moses>  எழுந்திருந்து,  தாத்தான்<Dathan>  அபிராம்<Abiram>  என்பவர்களிடத்தில்  போனான்;  இஸ்ரவேலின்<Israel>  மூப்பரும்  அவனைப்  பின்சென்று  போனார்கள்.  {Num  16:25}

 

அவன்  சபையாரை  நோக்கி:  இந்தத்  துஷ்டமனிதரின்  சகல  பாவங்களிலும்  நீங்கள்  வாரிக்கொள்ளப்படாதபடிக்கு,  அவர்கள்  கூடாரங்களை  விட்டு  விலகி,  அவர்களுக்கு  உண்டானவைகளில்  ஒன்றையும்  தொடாதிருங்கள்  என்றான்.  {Num  16:26}

 

அப்படியே  அவர்கள்  கோராகு<Korah>  தாத்தான்<Dathan>  அபிராம்<Abiram>  என்பவர்களுடைய  வாசஸ்தலத்தை  விட்டு  விலகிப்போனார்கள்;  தாத்தானும்<Dathan>  அபிராமும்<Abiram>  வெளியே  வந்து,  தங்கள்  பெண்ஜாதிகள்  பிள்ளைகள்  குழந்தைகளோடும்  தங்கள்  கூடாரவாசலிலே  நின்றார்கள்.  {Num  16:27}

 

அப்பொழுது  மோசே<Moses>:  இந்தக்  கிரியைகளையெல்லாம்  செய்கிறதற்குக்  கர்த்தர்  என்னை  அனுப்பினார்  என்றும்,  அவைகளை  நான்  என்  மனதின்படியே  செய்யவில்லை  என்றும்,  நீங்கள்  எதினாலே  அறிவீர்களென்றால்,  {Num  16:28}

 

சகல  மனிதரும்  சாகிறபடி  இவர்கள்  செத்து,  சகல  மனிதருக்கும்  நேரிடுகிறதுபோல  இவர்களுக்கும்  நேரிட்டால்,  கர்த்தர்  என்னை  அனுப்பவில்லை  என்று  அறிவீர்கள்.  {Num  16:29}

 

கர்த்தர்  ஒரு  புதிய  காரியத்தை  நேரிடச்செய்வதால்,  பூமி  தன்  வாயைத்  திறந்து,  இவர்கள்  உயிரோடே  பாதாளத்தில்  இறங்கத்தக்கதாக  இவர்களையும்  இவர்களுக்கு  உண்டான  யாவையும்  விழுங்கிப்போட்டதேயானால்,  இந்த  மனிதர்  கர்த்தரை  அவமதித்தார்கள்  என்பதை  அறிந்துகொள்வீர்கள்  என்றான்.  {Num  16:30}

 

அவன்  இந்த  வார்த்தைகளையெல்லாம்  சொல்லி  முடித்தவுடனே,  அவர்கள்  நின்றிருந்த  நிலம்  பிளந்தது;  {Num  16:31}

 

பூமி  தன்  வாயைத்  திறந்து,  அவர்களையும்  அவர்கள்  வீடுகளையும்,  கோராகுக்குரிய<Korah>  எல்லா  மனிதரையும்,  அவர்களுக்கு  உண்டான  சகல  பொருள்களையும்  விழுங்கிப்போட்டது.  {Num  16:32}

 

அவர்கள்  தங்களுக்கு  உண்டானவை  எல்லாவற்றோடும்  உயிரோடே  பாதாளத்தில்  இறங்கினார்கள்;  பூமி  அவர்களை  மூடிக்கொண்டது;  இப்படிச்  சபையின்  நடுவிலிருந்து  அழிந்துபோனார்கள்.  {Num  16:33}

 

அவர்களைச்  சுற்றிலும்  இருந்த  இஸ்ரவேலர்<Israel>  யாவரும்  அவர்கள்  கூக்குரலைக்கேட்டு,  பூமி  நம்மையும்  விழுங்கிப்போடும்  என்று  சொல்லி  ஓடினார்கள்.  {Num  16:34}

 

அக்கினி  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  புறப்பட்டு,  தூபங்காட்டின  இருநூற்று  ஐம்பது  பேரையும்  பட்சித்துப்போட்டது.  {Num  16:35}

 

பின்பு  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  16:36}

 

அக்கினிக்குள்  அகப்பட்ட  தூபகலசங்களை  எடுத்து,  அவைகளிலிருக்கிற  அக்கினியை  அப்பாலே  கொட்டிப்போடும்படி  ஆசாரியனாகிய  ஆரோனின்<Aaron>  குமாரன்  எலெயாசாருக்குச்<Eleazar>  சொல்;  அந்தத்  தூபகலசங்கள்  பரிசுத்தமாயின.  {Num  16:37}

 

தங்கள்  ஆத்துமாக்களுக்கே  கேடுண்டாக்கின  அந்தப்  பாவிகளின்  தூபகலசங்களைப்  பலிபீடத்தை  மூடத்தக்க  தட்டையான  தகடுகளாய்  அடிக்கக்கடவர்கள்;  அவர்கள்  கர்த்தருடைய  சந்நிதியில்  அவைகளைக்  கொண்டுவந்ததினால்  அவைகள்  பரிசுத்தமாயின;  அவைகள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  ஒரு  அடையாளமாயிருக்கும்  என்றார்.  {Num  16:38}

 

அப்படியே  ஆசாரியனாகிய  எலெயாசார்<Eleazar>  சுட்டெரிக்கப்பட்டவர்கள்  கொண்டுவந்திருந்த  வெண்கலத்  தூபகலசங்களை  எடுத்து,  {Num  16:39}

 

ஆரோனின்<Aaron>  புத்திரராய்  இராத  அந்நியன்  ஒருவனும்  கர்த்தருடைய  சந்நிதியில்  தூபங்காட்ட  வராதபடிக்கும்,  கோராகைப்போலும்<Korah>  அவன்  கூட்டத்தாரைப்போலும்  இராதபடிக்கும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு,  கர்த்தர்  மோசேயைக்கொண்டு<Moses>  தனக்குச்  சொன்னபடியே  அவைகளைப்  பலிபீடத்தை  மூடும்  தகடுகளாக  அடிப்பித்தான்.  {Num  16:40}

 

மறுநாளில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபையார்  எல்லாரும்  மோசேக்கும்<Moses>  ஆரோனுக்கும்<Aaron>  விரோதமாக  முறுமுறுத்து:  நீங்கள்  கர்த்தரின்  ஜனங்களைக்  கொன்றுபோட்டீர்கள்  என்றார்கள்.  {Num  16:41}

 

சபையார்  மோசேக்கும்<Moses>  ஆரோனுக்கும்<Aaron>  விரோதமாகக்  கூடி  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  நேரே  பார்க்கிறபோது,  மேகம்  அதை  மூடினது,  கர்த்தரின்  மகிமை  காணப்பட்டது.  {Num  16:42}

 

மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  முன்பாக  வந்தார்கள்.  {Num  16:43}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  16:44}

 

இந்தச்  சபையாரை  விட்டு  விலகிப்போங்கள்;  ஒரு  நிமிஷத்தில்  அவர்களை  அதமாக்குவேன்  என்றார்.  அவர்கள்  முகங்குப்புற  விழுந்தார்கள்.  {Num  16:45}

 

மோசே<Moses>  ஆரோனை<Aaron>  நோக்கி:  நீ  தூபகலசத்தை  எடுத்து,  பலிபீடத்திலிருக்கிற  அக்கினியை  அதில்  போட்டு,  அதின்மேல்  தூபவர்க்கம்  இட்டு,  சீக்கிரமாய்ச்  சபையினிடத்தில்  போய்,  அவர்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்;  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  கடுங்கோபம்  புறப்பட்டது,  வாதை  தொடங்கிற்று  என்றான்.  {Num  16:46}

 

மோசே<Moses>  சொன்னபடி  ஆரோன்<Aaron>  அதை  எடுத்துக்கொண்டு  சபையின்  நடுவில்  ஓடினான்;  ஜனங்களுக்குள்ளே  வாதை  தொடங்கியிருந்தது;  அவன்  தூபவர்க்கம்  போட்டு,  ஜனங்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்து,  {Num  16:47}

 

செத்தவர்களுக்கும்  உயிரோடிருக்கிறவர்களுக்கும்  நடுவே  நின்றான்;  அப்பொழுது  வாதை  நிறுத்தப்பட்டது.  {Num  16:48}

 

கோராகின்<Korah>  காரியத்தினிமித்தம்  செத்தவர்கள்  தவிர,  அந்த  வாதையினால்  செத்துப்போனவர்கள்  பதினாலாயிரத்து  எழுநூறுபேர்.  {Num  16:49}

 

வாதை  நிறுத்தப்பட்டது;  அப்பொழுது  ஆரோன்<Aaron>  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  மோசேயினிடத்தில்<Moses>  திரும்பிவந்தான்.  {Num  16:50}

 

பின்பு  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  17:1}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  பேசி,  அவர்கள்  பிதாக்களின்  வம்சங்களாகிய  ஒவ்வொரு  வம்சத்தினுடைய  பிரபுவினிடத்தில்,  ஒவ்வொரு  கோலாகப்  பன்னிரண்டு  கோலை  வாங்கி,  அவனவன்  கோலில்  அவனவன்  பேரை  எழுதுவாயாக.  {Num  17:2}

 

லேவியினுடைய<Levi>  கோலின்மேல்  ஆரோனின்<Aaron>  பேரை  எழுதக்கடவாய்;  அவர்களுடைய  பிதாக்களின்  ஒவ்வொரு  வம்சத்  தலைவனுக்காகவும்  ஒவ்வொரு  கோல்  இருக்கவேண்டும்.  {Num  17:3}

 

அவைகளை  ஆசரிப்புக்  கூடாரத்திலே  நான்  உங்களைச்  சந்திக்கும்  ஸ்தானமாகிய  சாட்சிப்பெட்டிக்கு  முன்னே  வைக்கக்கடவாய்.  {Num  17:4}

 

அப்பொழுது  நான்  தெரிந்துகொள்ளுகிறவனுடைய  கோல்  துளிர்க்கும்;  இப்படி  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  உங்களுக்கு  விரோதமாய்  முறுமுறுக்கிற  அவர்கள்  முறுமுறுப்பை  என்னைவிட்டு  ஒழியப்பண்ணுவேன்  என்றார்.  {Num  17:5}

 

இதை  மோசே<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொன்னான்;  அப்பொழுது  அவர்களுடைய  பிரபுக்கள்  எல்லாரும்  தங்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்படி  ஒவ்வொரு  பிரபுவுக்கு  ஒவ்வொரு  கோலாகப்  பன்னிரண்டு  கோல்களை  அவனிடத்தில்  கொடுத்தார்கள்;  ஆரோனின்<Aaron>  கோலும்  அவர்களுடைய  கோல்களுடனே  இருந்தது.  {Num  17:6}

 

அந்தக்  கோல்களை  மோசே<Moses>  சாட்சியின்  கூடாரத்திலே  கர்த்தருடைய  சமுகத்தில்  வைத்தான்.  {Num  17:7}

 

மறுநாள்  மோசே<Moses>  சாட்சியின்  கூடாரத்துக்குள்  பிரவேசித்தபோது,  இதோ,  லேவியின்<Levi>  குடும்பத்தாருக்கு  இருந்த  ஆரோனின்<Aaron>  கோல்  துளிர்த்திருந்தது;  அது  துளிர்விட்டு,  பூப்பூத்து,  வாதுமைப்  பழங்களைக்  கொடுத்தது.  {Num  17:8}

 

அப்பொழுது  மோசே<Moses>  கர்த்தருடைய  சமுகத்திலிருந்த  அந்தக்  கோல்களையெல்லாம்  எடுத்து,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எல்லாரும்  காண  வெளியே  கொண்டுவந்தான்;  அவர்கள்  கண்டு,  அவரவர்  தங்கள்  தங்கள்  கோல்களை  வாங்கிக்கொண்டார்கள்.  {Num  17:9}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  ஆரோனின்<Aaron>  கோல்  அந்தக்  கலகக்காரருக்கு  விரோதமான  அடையாளமாகும்பொருட்டு,  அதைத்  திரும்பவும்  சாட்சிப்பெட்டிக்கு  முன்னே  கொண்டுபோய்  வை;  இப்படி  அவர்கள்  எனக்கு  விரோதமாய்  முறுமுறுப்பதை  ஒழியப்பண்ணுவாய்,  அப்பொழுது  அவர்கள்  சாகமாட்டார்கள்  என்றார்.  {Num  17:10}

 

கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே  மோசே<Moses>  செய்தான்.  {Num  17:11}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மோசேயை<Moses>  நோக்கி:  இதோ,  செத்து  அழிந்துபோகிறோம்;  நாங்கள்  எல்லாரும்  அழிந்துபோகிறோம்.  {Num  17:12}

 

கர்த்தரின்  வாசஸ்தலத்தின்  கிட்டே  வருகிற  எவனும்  சாகிறான்;  நாங்கள்  எல்லாரும்  செத்துத்தான்  தீருமோ  என்றார்கள்.  {Num  17:13}

 

பின்பு  கர்த்தர்  ஆரோனை<Aaron>  நோக்கி:  நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  உன்  தகப்பன்  வம்சத்தாரும்  பரிசுத்த  ஸ்தலத்தைப்பற்றிய  அக்கிரமத்தைச்  சுமக்கவேண்டும்;  நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  உங்கள்  ஆசாரிய  ஊழியத்தைப்பற்றிய  அக்கிரமத்தைச்  சுமக்கவேண்டும்.  {Num  18:1}

 

உன்  தகப்பனாகிய  லேவியின்<Levi>  கோத்திரத்தாரான  உன்  சகோதரரையும்  உன்னோடே  கூடியிருக்கவும்  உன்னிடத்திலே  சேவிக்கவும்  அவர்களைச்  சேர்த்துக்கொள்;  நீயும்  உன்  குமாரருமோ  சாட்சியின்  கூடாரத்துக்குமுன்  ஊழியம்  செய்யக்கடவீர்கள்.  {Num  18:2}

 

அவர்கள்  உன்  காவலையும்  கூடாரம்  அனைத்தின்  காவலையும்  காக்கக்கடவர்கள்;  ஆகிலும்  அவர்களும்  நீங்களும்  சாகாதபடிக்கு,  அவர்கள்  பரிசுத்த  ஸ்தலத்தின்  பணிமுட்டுகளண்டையிலும்  பலிபீடத்தண்டையிலும்  சேராமல்,  {Num  18:3}

 

உன்னோடே  கூடிக்கொண்டு,  கூடாரத்துக்கடுத்த  எல்லாப்  பணிவிடையையும்  செய்ய,  ஆசரிப்புக்  கூடாரத்தின்  காவலைக்  காக்கக்கடவர்கள்;  அந்நியன்  ஒருவனும்  உங்களிடத்தில்  சேரக்கூடாது.  {Num  18:4}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்மேல்  இனிக்  கடுங்கோபம்  வராதபடிக்கு,  நீங்கள்  பரிசுத்த  ஸ்தலத்தின்  காவலையும்  பலிபீடத்தின்  காவலையும்  காக்கக்கடவீர்கள்.  {Num  18:5}

 

ஆசரிப்புக்  கூடாரத்தின்  பணிவிடையைச்  செய்ய,  கர்த்தருக்குக்  கொடுக்கப்பட்ட  உங்கள்  சகோதரராகிய  லேவியரை<Levites>  நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலிருந்து  பிரித்து,  உங்களுக்குத்  தத்தமாகக்  கொடுத்தேன்.  {Num  18:6}

 

ஆகையால்  நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  பலிபீடத்துக்கும்  திரைக்கு  உட்புறத்துக்கும்  அடுத்த  எல்லாவற்றையும்  செய்யும்பொருட்டு,  உங்கள்  ஆசாரிய  ஊழியத்தைக்  காத்துச்  சேவிக்கக்கடவீர்கள்;  உங்கள்  ஆசாரிய  ஊழியத்தை  உங்களுக்கு  தத்தமாக  அருளினேன்;  அதைச்  செய்யும்படி  சேருகிற  அந்நியன்  கொலைசெய்யப்படக்கடவன்  என்றார்.  {Num  18:7}

 

பின்னும்  கர்த்தர்  ஆரோனை<Aaron>  நோக்கி:  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம்  எனக்கு  ஏறெடுத்துப்  படைக்கப்படும்  படைப்புகளைக்  காத்துக்கொண்டிருக்கிறீர்களே,  அவைகளை  உனக்குக்  கொடுத்தேன்;  அபிஷேகத்தினிமித்தம்  அவைகளை  உனக்கும்  உன்  குமாரருக்கும்  நித்திய  கட்டளையாகக்  கொடுத்தேன்.  {Num  18:8}

 

மகா  பரிசுத்தமானவைகளிலே,  அக்கினிக்கு  உட்படுத்தப்படாமல்  உன்னுடையதாயிருப்பது  எவையெனில்,  அவர்கள்  எனக்குப்  படைக்கும்  எல்லாப்  படைப்பும்,  எல்லாப்  போஜனபலியும்,  எல்லாப்  பாவநிவாரணபலியும்,  எல்லாக்  குற்றநிவாரணபலியும்,  உனக்கும்  உன்  குமாரருக்கும்  பரிசுத்தமாயிருக்கும்.  {Num  18:9}

 

பரிசுத்த  ஸ்தலத்திலே  அவைகளைப்  புசிக்கவேண்டும்;  ஆண்மக்கள்  யாவரும்  அவைகளைப்  புசிக்கலாம்;  அவைகள்  உனக்குப்  பரிசுத்தமாயிருப்பதாக.  {Num  18:10}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  ஏறெடுத்துப்  படைக்கிறதும்  அசைவாட்டுகிறதுமான  அவர்களுடைய  எல்லாக்  காணிக்கைகளின்  படைப்பும்  உன்னுடையவைகளாயிருக்கும்;  அவைகளை  உனக்கும்  உன்  குமாரருக்கும்  உன்  குமாரத்திகளுக்கும்  நித்திய  நியமமாகக்  கொடுத்தேன்;  உன்  வீட்டிலே  சுத்தமானவர்கள்  எல்லாரும்  அவைகளைப்  புசிக்கலாம்.  {Num  18:11}

 

அவர்கள்  கர்த்தருக்குக்  கொடுக்கும்  அவர்களுடைய  முதற்பலன்களாகிய  உச்சிதமான  எண்ணெயையும்,  உச்சிதமான  திராட்சரசத்தையும்,  தானியத்தையும்  உனக்கு  உரியதாகக்  கொடுத்தேன்.  {Num  18:12}

 

தங்கள்  தேசத்தில்  முதற்பழுத்த  பலனில்  அவர்கள்  கர்த்தருக்குக்  கொண்டுவருவதெல்லாம்  உனக்கு  உரியதாகும்;  உன்  வீட்டிலே  சுத்தமாயிருப்பவர்கள்  யாவரும்  அவைகளைப்  புசிக்கலாம்.  {Num  18:13}

 

இஸ்ரவேலிலே<Israel>  சாபத்தீடாக  நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம்  உனக்கு  உரியதாயிருக்கும்.  {Num  18:14}

 

மனிதரிலும்  மிருகங்களிலும்  அவர்கள்  கர்த்தருக்குச்  செலுத்தும்  சமஸ்த  பிராணிகளுக்குள்ளே  கர்ப்பந்திறந்து  பிறக்கும்  யாவும்  உனக்கு  உரியதாயிருக்கும்;  ஆனாலும்  மனிதரின்  முதற்பேற்றை  அகத்தியமாய்  மீட்கவேண்டும்;  தீட்டான  மிருகஜீவனின்  தலையீற்றையும்  மீட்கவேண்டும்.  {Num  18:15}

 

மீட்கவேண்டியவைகள்  ஒரு  மாதத்திற்கு  மேற்பட்டதானால்,  உன்  மதிப்புக்கு  இசைய  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்கின்படி  ஐந்து  சேக்கல்  பணத்தாலே  அவைகளை  மீட்கவேண்டும்;  ஒரு  சேக்கல்  இருபது  கேரா.  {Num  18:16}

 

மாட்டின்  தலையீற்றும்,  செம்மறியாட்டின்  தலையீற்றும்,  வெள்ளாட்டின்  தலையீற்றுமோ  மீட்கப்படவேண்டாம்;  அவைகள்  பரிசுத்தமானவைகள்;  அவைகளின்  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  தெளித்து,  அவைகளின்  கொழுப்பைக்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனமாகத்  தகனிக்கவேண்டும்.  {Num  18:17}

 

அசைவாட்டும்  மார்க்கண்டத்தைப்போலும்  வலது  முன்னந்தொடையைப்போலும்  அவைகளின்  மாம்சமும்  உன்னுடையதாகும்.  {Num  18:18}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கிற  பரிசுத்த  படைப்புகளையெல்லாம்  உனக்கும்  உன்  குமாரருக்கும்  உன்  குமாரத்திகளுக்கும்  நித்திய  கட்டளையாகக்  கொடுத்தேன்;  கர்த்தருடைய  சந்நிதியில்  இது  உனக்கும்  உன்  சந்ததிக்கும்  என்றைக்கும்  செல்லும்  மாறாத  உடன்படிக்கை  என்றார்.  {Num  18:19}

 

பின்னும்  கர்த்தர்  ஆரோனை<Aaron>  நோக்கி:  அவர்களுடைய  தேசத்தில்  நீ  ஒன்றையும்  சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம்,  அவர்கள்  நடுவே  உனக்குப்  பங்கு  உண்டாயிருக்கவும்  வேண்டாம்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  நடுவில்  நானே  உன்  பங்கும்  உன்  சுதந்தரமுமாய்  இருக்கிறேன்.  {Num  18:20}

 

இதோ,  லேவியின்<Levi>  புத்திரர்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  பணிவிடையைச்  செய்கிற  அவர்களுடைய  வேலைக்காக,  இஸ்ரவேலருக்குள்ளவை<Israel>  எல்லாவற்றிலும்  தசமபாகத்தை  அவர்களுக்குச்  சுதந்தரமாகக்  கொடுத்தேன்.  {Num  18:21}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  குற்றஞ்சுமந்து  சாகாதபடிக்கு,  இனி  ஆசரிப்புக்  கூடாரத்தைக்  கிட்டாதிருக்கக்கடவர்கள்.  {Num  18:22}

 

லேவியர்மாத்திரம்<Levites>  ஆசரிப்புக்  கூடாரத்துக்கடுத்த  வேலைகளைச்  செய்யவேண்டும்;  அவர்கள்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  நடுவே  அவர்களுக்குச்  சுதந்தரம்  இல்லை  என்பது  உங்கள்  தலைமுறைதோறும்  நித்திய  கட்டளையாயிருக்கும்.  {Num  18:23}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாகிய  தசமபாகத்தை  லேவியருக்குச்<Levites>  சுதந்தரமாகக்  கொடுத்தேன்;  ஆகையால்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  நடுவே  அவர்களுக்குச்  சுதந்தரமில்லையென்று  அவர்களுக்குச்  சொன்னேன்  என்றார்.  {Num  18:24}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  18:25}

 

நீ  லேவியரோடே<Levites>  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கையில்  வாங்கிக்கொள்ளும்படி  நான்  உங்களுக்குச்  சுதந்தரமாகக்  கொடுத்த  தசமபாகத்தை  நீங்கள்  அவர்கள்  கையில்  வாங்கும்போது,  தசமபாகத்தில்  பத்தில்  ஒரு  பங்கைக்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாகச்  செலுத்தவேண்டும்.  {Num  18:26}

 

நீங்கள்  ஏறெடுத்துப்  படைக்கும்  இந்தப்  படைப்பு  களத்தின்  தானியத்தைப்போலும்,  ஆலையின்  இரசத்தைப்போலும்  உங்களுக்கு  எண்ணப்படும்.  {Num  18:27}

 

இப்படியே  நீங்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கையில்  வாங்கும்  தசமபாகமாகிய  உங்கள்  பங்குகளிலெல்லாம்  நீங்களும்  கர்த்தருக்கு  என்று  ஒரு  படைப்பை  ஏறெடுத்துப்  படைத்து,  அந்தப்  படைப்பை  ஆசாரியனாகிய  ஆரோனுக்குக்<Aaron>  கொடுக்கவேண்டும்.  {Num  18:28}

 

உங்களுக்குக்  கொடுக்கப்படுகிற  ஒவ்வொரு  காணிக்கையிலுமுள்ள  உச்சிதமான  பரிசுத்த  பங்கையெல்லாம்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாகச்  செலுத்தவேண்டும்.  {Num  18:29}

 

ஆதலால்  நீ  அவர்களோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  அதில்  உச்சிதமானதை  நீங்கள்  ஏறெடுத்துப்  படைக்கும்போது,  அது  களத்தின்  வரத்திலும்  ஆலையின்  வரத்திலும்  இருந்து  எடுத்துச்  செலுத்துகிறதுபோல  லேவியருக்கு<Levites>  எண்ணப்படும்.  {Num  18:30}

 

அதை  நீங்களும்  உங்கள்  குடும்பத்தாரும்  எவ்விடத்திலும்  புசிக்கலாம்;  அது  நீங்கள்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடைக்கு  ஈடான  உங்கள்  சம்பளம்.  {Num  18:31}

 

இப்படி  அதில்  உச்சிதமானதை  ஏறெடுத்துப்  படைத்தீர்களானால்,  நீங்கள்  அதினிமித்தம்  பாவம்  சுமக்கமாட்டீர்கள்;  நீங்கள்  சாகாதிருக்கும்படிக்கு,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  பரிசுத்தமானவைகளைத்  தீட்டுப்படுத்தலாகாது  என்று  சொல்  என்றார்.  {Num  18:32}

 

கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  நோக்கி:  {Num  19:1}

 

கர்த்தர்  கற்பித்த  நியமப்பிரமாணமாவது:  பழுதற்றதும்  ஊனமில்லாததும்  நுகத்தடிக்கு  உட்படாததுமாகிய  சிவப்பான  ஒரு  கிடாரியை  உன்னிடத்தில்  கொண்டுவரும்படி  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குச்  சொல்லுங்கள்.  {Num  19:2}

 

அதை  எலெயாசார்<Eleazar>  என்னும்  ஆசாரியனிடத்தில்  ஒப்புக்கொடுங்கள்;  அவன்  அதைப்  பாளயத்துக்கு  வெளியே  கொண்டுபோகக்கடவன்;  அங்கே  அது  அவனுக்கு  முன்பாகக்  கொல்லப்படக்கடவது.  {Num  19:3}

 

அப்பொழுது  ஆசாரியனாகிய  எலெயாசார்<Eleazar>  தன்  விரலினால்  அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  எதிராக  ஏழுதரம்  தெளிக்கக்கடவன்.  {Num  19:4}

 

பின்பு  கிடாரியை  அவன்  கண்களுக்கு  முன்பாக  ஒருவன்  சுட்டெரிக்கவேண்டும்;  அதின்  தோலும்  அதின்  மாம்சமும்  அதின்  இரத்தமும்  அதின்  சாணியும்  சுட்டெரிக்கப்படவேண்டும்.  {Num  19:5}

 

அப்பொழுது  ஆசாரியன்  கேதுருக்  கட்டையையும்  ஈசோப்பையும்  சிவப்பு  நூலையும்  எடுத்து,  கிடாரி  எரிக்கப்படுகிற  நெருப்பின்  நடுவிலே  போடக்கடவன்.  {Num  19:6}

 

பின்பு  ஆசாரியன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  ஜலத்திலே  ஸ்நானம்பண்ணி,  அதின்பின்பு  பாளயத்தில்  பிரவேசிக்கக்கடவன்;  ஆசாரியன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  {Num  19:7}

 

அதைச்  சுட்டெரித்தவனும்  தன்  வஸ்திரங்களை  ஜலத்தில்  தோய்த்து,  ஜலத்திலே  ஸ்நானம்பண்ணி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  {Num  19:8}

 

சுத்தமாயிருக்கிற  ஒருவன்  அந்தக்  கிடாரியின்  சாம்பலை  வாரிக்கொண்டு,  பாளயத்திற்குப்  புறம்பே  சுத்தமான  ஒரு  இடத்திலே  கொட்டிவைக்கக்கடவன்;  அது  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபைக்காகத்  தீட்டுக்கழிக்கும்  ஜலத்துக்கென்று  காத்து  வைக்கப்படவேண்டும்;  அது  பாவத்தைப்  பரிகரிக்கும்.  {Num  19:9}

 

கிடாரியின்  சாம்பலை  வாரினவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  அவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  இது  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  அவர்கள்  நடுவிலே  தங்குகிற  அந்நியனுக்கும்  நித்திய  கட்டளையாயிருப்பதாக.  {Num  19:10}

 

செத்துப்போனவனுடைய  பிரேதத்தைத்  தொட்டவன்  ஏழுநாள்  தீட்டுப்பட்டிருப்பான்.  {Num  19:11}

 

அவன்  மூன்றாம்  நாளிலும்  ஏழாம்  நாளிலும்  தீட்டுக்கழிக்கும்  ஜலத்தினால்  தன்னைச்  சுத்திகரிக்கக்கடவன்;  அப்பொழுது  சுத்தமாவான்;  மூன்றாம்  நாளிலும்  ஏழாம்  நாளிலும்  தன்னைச்  சுத்திகரிக்காமலிருப்பானாகில்  சுத்தமாகான்.  {Num  19:12}

 

செத்தவனுடைய  பிரேதத்தைத்  தொட்டும்,  தன்னைச்  சுத்திகரித்துக்கொள்ளாதவன்  கர்த்தரின்  வாசஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்துகிறான்;  அந்த  ஆத்துமா  இஸ்ரவேலில்<Israel>  இராமல்  அறுப்புண்டுபோவான்;  தீட்டுக்கழிக்கும்  ஜலம்  அவன்மேல்  தெளிக்கப்படாததினால்,  அவன்  தீட்டுப்பட்டிருப்பான்;  அவன்  தீட்டு  இன்னும்  அவன்மேல்  இருக்கும்.  {Num  19:13}

 

கூடாரத்தில்  ஒரு  மனிதன்  செத்தால்,  அதற்கடுத்த  நியமமாவது:  அந்தக்  கூடாரத்தில்  பிரவேசிக்கிற  யாவரும்  கூடாரத்தில்  இருக்கிற  யாவரும்  ஏழுநாள்  தீட்டுப்பட்டிருப்பார்கள்.  {Num  19:14}

 

மூடிக்  கட்டப்படாமல்  திறந்திருக்கும்  பாத்திரங்கள்  எல்லாம்  தீட்டுப்பட்டிருக்கும்.  {Num  19:15}

 

வெளியிலே  பட்டயத்தால்  வெட்டுண்டவனையாவது,  செத்தவனையாவது,  மனித  எலும்பையாவது,  பிரேதக்குழியையாவது,  தொட்டவன்  எவனும்  ஏழுநாள்  தீட்டுப்பட்டிருப்பான்.  {Num  19:16}

 

ஆகையால்  தீட்டுப்பட்டவனுக்காக,  பாவத்தைப்  பரிகரிக்கும்  கிடாரியின்  சாம்பலிலே  கொஞ்சம்  எடுத்து,  ஒரு  பாத்திரத்தில்  போட்டு,  அதின்மேல்  ஊற்று  ஜலம்  வார்க்கவேண்டும்.  {Num  19:17}

 

சுத்தமான  ஒருவன்  ஈசோப்பை  எடுத்து,  அந்த  ஜலத்திலே  தோய்த்து,  கூடாரத்தின்மேலும்  அதிலுள்ள  சகல  பணிமுட்டுகளின்மேலும்  அங்கேயிருக்கிற  ஜனங்களின்மேலும்  தெளிக்கிறதுமல்லாமல்,  எலும்பையாகிலும்  வெட்டுண்டவனையாகிலும்  செத்தவனையாகிலும்  பிரேதக்குழியையாகிலும்  தொட்டவன்மேலும்  தெளிக்கக்கடவன்.  {Num  19:18}

 

சுத்தமாயிருக்கிறவன்  தீட்டுப்பட்டவன்மேல்  மூன்றாம்  நாளிலும்  ஏழாம்  நாளிலும்  தெளிக்கவேண்டும்;  ஏழாம்  நாளில்  இவன்  தன்னைச்  சுத்திகரித்து,  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  ஜலத்தில்  ஸ்நானம்பண்ணி,  சாயங்காலத்திலே  சுத்தமாயிருப்பான்.  {Num  19:19}

 

தீட்டுப்பட்டிருக்கிறவன்  தன்னைச்  சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால்,  அவன்  சபையில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்;  அவன்  கர்த்தரின்  பரிசுத்த  ஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்தினான்;  தீட்டுக்கழிக்கும்  ஜலம்  அவன்மேல்  தெளிக்கப்படாததினால்  அவன்  தீட்டுப்பட்டிருக்கிறான்.  {Num  19:20}

 

தீட்டுக்கழிக்கும்  ஜலத்தைத்  தெளிக்கிறவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  தீட்டுக்கழிக்கும்  ஜலத்தைத்  தொட்டவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  {Num  19:21}

 

தீட்டுப்பட்டிருக்கிறவன்  தொடுகிறவைகளெல்லாம்  தீட்டுப்படும்,  அவைகளைத்  தொடுகிறவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  இது  உங்களுக்கு  நித்திய  கட்டளையாயிருக்கும்  என்றார்.  {Num  19:22}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சபையார்  எல்லாரும்  முதலாம்  மாதத்தில்  சீன்வனாந்தரத்திலே<Zin>  சேர்ந்து,  ஜனங்கள்  காதேசிலே<Kadesh>  தங்கியிருக்கையில்,  மிரியாம்<Miriam>  மரணமடைந்து,  அங்கே  அடக்கம்பண்ணப்பட்டாள்.  {Num  20:1}

 

ஜனங்களுக்குத்  தண்ணீர்  இல்லாதிருந்தது;  அப்பொழுது  அவர்கள்  மோசேக்கும்<Moses>  ஆரோனுக்கும்<Aaron>  விரோதமாகக்  கூட்டங்கூடினார்கள்.  {Num  20:2}

 

ஜனங்கள்  மோசேயோடே<Moses>  வாக்குவாதம்பண்ணி:  எங்கள்  சகோதரர்  கர்த்தருடைய  சந்நிதியில்  மாண்டபோது  நாங்களும்  மாண்டுபோயிருந்தால்  நலமாயிருக்கும்.  {Num  20:3}

 

நாங்களும்  எங்கள்  மிருகங்களும்  இங்கே  சாகும்படி,  நீங்கள்  கர்த்தரின்  சபையை  இந்த  வனாந்தரத்திலே  கொண்டுவந்தது  என்ன;  {Num  20:4}

 

விதைப்பும்,  அத்திமரமும்,  திராட்சச்செடியும்,  மாதளஞ்செடியும்,  குடிக்கத்தண்ணீரும்  இல்லாத  இந்தக்  கெட்ட  இடத்தில்  எங்களைக்  கொண்டுவரும்படி,  நீங்கள்  எங்களை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணினது  என்ன  என்றார்கள்.  {Num  20:5}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  சபையாரைவிட்டு,  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  போய்,  முகங்குப்புற  விழுந்தார்கள்;  கர்த்தருடைய  மகிமை  அவர்களுக்குக்  காணப்பட்டது.  {Num  20:6}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  20:7}

 

நீ  கோலை  எடுத்துக்கொண்டு,  நீயும்  உன்  சகோதரனாகிய  ஆரோனும்<Aaron>  சபையாரைக்  கூடிவரச்செய்து,  அவர்கள்  கண்களுக்குமுன்னே  கன்மலையைப்  பார்த்துப்  பேசுங்கள்;  அப்பொழுது  அது  தன்னிடத்திலுள்ள  தண்ணீரைக்  கொடுக்கும்;  இப்படி  நீ  அவர்களுக்குக்  கன்மலையிலிருந்து  தண்ணீர்  புறப்படப்பண்ணி,  சபையாருக்கும்  அவர்கள்  மிருகங்களுக்கும்  குடிக்கக்  கொடுப்பாய்  என்றார்.  {Num  20:8}

 

அப்பொழுது  மோசே<Moses>  தனக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்த  கோலை  எடுத்தான்.  {Num  20:9}

 

மோசேயும்<Moses>  ஆரோனும்<Aaron>  சபையாரைக்  கன்மலைக்கு  முன்பாகக்  கூடிவரச்செய்தார்கள்;  அப்பொழுது  மோசே<Moses>  அவர்களை  நோக்கி:  கலகக்காரரே,  கேளுங்கள்,  உங்களுக்கு  இந்தக்  கன்மலையிலிருந்து  நாங்கள்  தண்ணீர்  புறப்படப்பண்ணுவோமோ  என்று  சொல்லி,  {Num  20:10}

 

தன்  கையை  ஓங்கி,  கன்மலையைத்  தன்  கோலினால்  இரண்டுதரம்  அடித்தான்;  உடனே  தண்ணீர்  ஏராளமாய்ப்  புறப்பட்டது,  சபையார்  குடித்தார்கள்;  அவர்கள்  மிருகங்களும்  குடித்தது.  {Num  20:11}

 

பின்பு  கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  நோக்கி:  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  கண்களுக்கு  முன்பாக  என்னைப்  பரிசுத்தம்பண்ணும்படி,  நீங்கள்  என்னை  விசுவாசியாமற்  போனபடியினால்,  இந்தச்  சபையாருக்கு  நான்  கொடுத்த  தேசத்துக்குள்  நீங்கள்  அவர்களைக்  கொண்டுபோவதில்லை  என்றார்.  {Num  20:12}

 

இங்கே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரோடே  வாக்குவாதம்பண்ணினதினாலும்,  அவர்களுக்குள்ளே  அவருடைய  பரிசுத்தம்  விளங்கினதினாலும்  இது  மேரிபாவின்<Meribah>  தண்ணீர்  என்னப்பட்டது.  {Num  20:13}

 

பின்பு  மோசே<Moses>  காதேசிலிருந்து<Kadesh>  ஏதோமின்<Edom>  ராஜாவினிடத்துக்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  {Num  20:14}

 

எங்கள்  பிதாக்கள்  எகிப்துக்குப்<Egypt>  போனதும்,  நாங்கள்  எகிப்திலே<Egypt>  நெடுநாள்  வாசம்பண்ணினதும்,  எகிப்தியர்<Egyptians>  எங்களையும்  எங்கள்  பிதாக்களையும்  உபத்திரவப்படுத்தினதும்,  இவைகளினால்  எங்களுக்கு  நேரிட்ட  எல்லா  வருத்தமும்  உமக்குத்  தெரிந்திருக்கிறது.  {Num  20:15}

 

கர்த்தரை  நோக்கி  நாங்கள்  மன்றாடினோம்;  அவர்  எங்களுக்குச்  செவிகொடுத்து,  ஒரு  தூதனை  அனுப்பி,  எங்களை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணினார்;  இப்பொழுது  நாங்கள்  உமது  எல்லைக்கு  உட்பட்ட  காதேஸ்<Kadesh>  ஊரில்  வந்திருக்கிறோம்.  {Num  20:16}

 

நாங்கள்  உமது  தேசத்தின்  வழியாய்க்  கடந்துபோகும்படி  உத்தரவு  கொடுக்கவேண்டும்;  வயல்வெளிகள்  வழியாகவும்,  திராட்சத்தோட்டங்கள்  வழியாகவும்  நாங்கள்  போகாமலும்,  துரவுகளின்  தண்ணீரைக்  குடியாமலும்,  ராஜபாதையாகவே  நடந்து,  உமது  எல்லையைக்  கடந்துபோகுமட்டும்,  வலதுபுறம்  இடதுபுறம்  சாயாதிருப்போம்  என்று,  உமது  சகோதரனாகிய  இஸ்ரவேல்<Israel>  சொல்லி  அனுப்புகிறான்  என்று  சொல்லச்சொன்னான்.  {Num  20:17}

 

அதற்கு  ஏதோம்<Edom>:  நீ  என்  தேசத்தின்  வழியாய்க்  கடந்துபோகக்கூடாது;  போனால்  பட்டயத்தோடே  உன்னை  எதிர்க்கப்  புறப்படுவேன்  என்று  அவனுக்குச்  சொல்லச்சொன்னான்.  {Num  20:18}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அவனை  நோக்கி:  நடப்பான  பாதையின்  வழியாய்ப்  போவோம்;  நாங்களும்  எங்கள்  மிருகங்களும்  உன்  தண்ணீரைக்  குடித்தால்,  அதற்குக்  கிரயங்கொடுப்போம்;  வேறொன்றும்  செய்யாமல்,  கால்நடையாய்  மாத்திரம்  கடந்துபோவோம்  என்றார்கள்.  {Num  20:19}

 

அதற்கு  அவன்:  நீ  கடந்துபோகக்கூடாது  என்று  சொல்லி,  வெகு  ஜனங்களோடும்  பலத்த  கையோடும்  அவர்களை  எதிர்க்கப்  புறப்பட்டான்.  {Num  20:20}

 

இப்படி  ஏதோம்<Edom>  தன்  எல்லைவழியாய்க்  கடந்துபோகும்படி  இஸ்ரவேலருக்கு<Israel>  உத்தரவு  கொடுக்கவில்லை;  ஆகையால்  இஸ்ரவேலர்<Israel>  அவனை  விட்டு  விலகிப்போனார்கள்.  {Num  20:21}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரான  சபையார்  எல்லாரும்  காதேசை<Kadesh>  விட்டுப்  பிரயாணப்பட்டு,  ஓர்<Hor>  என்னும்  மலைக்குப்  போனார்கள்.  {Num  20:22}

 

ஏதோம்<Edom>  தேசத்தின்  எல்லைக்கு  அருகான  ஓர்<Hor>  என்னும்  மலையிலே  கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  நோக்கி:  {Num  20:23}

 

ஆரோன்<Aaron>  தன்  ஜனத்தாரோடே  சேர்க்கப்படுவான்.  மேரிபாவின்<Meribah>  தண்ணீரைப்பற்றிய  காரியத்தில்  நீங்கள்  என்  வாக்குக்குக்  கீழ்ப்படியாமற்போனபடியினால்,  நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கொடுக்கிற  தேசத்தில்  அவன்  பிரவேசிப்பதில்லை.  {Num  20:24}

 

நீ  ஆரோனையும்<Aaron>  அவன்  குமாரனாகிய  எலெயாசாரையும்<Eleazar>  கூட்டிக்கொண்டு,  அவர்களை  ஓர்<Hor>  என்னும்  மலையில்  ஏறப்பண்ணி,  {Num  20:25}

 

ஆரோன்<Aaron>  உடுத்திருக்கிற  வஸ்திரங்களைக்  கழற்றி,  அவைகளை  அவன்  குமாரனாகிய  எலெயாசாருக்கு<Eleazar>  உடுத்துவாயாக;  ஆரோன்<Aaron>  அங்கே  மரித்து,  தன்  ஜனத்தாரோடே  சேர்க்கப்படுவான்  என்றார்.  {Num  20:26}

 

கர்த்தர்  கட்டளையிட்டபடியே  மோசே<Moses>  செய்தான்;  சபையார்  எல்லாரும்  பார்க்க,  அவர்கள்  ஓர்<Hor>  என்னும்  மலையில்  ஏறினார்கள்.  {Num  20:27}

 

அங்கே  ஆரோன்<Aaron>  உடுத்திருந்த  வஸ்திரங்களை  மோசே<Moses>  கழற்றி,  அவைகளை  அவன்  குமாரனாகிய  எலெயாசாருக்கு<Eleazar>  உடுத்தினான்;  அப்பொழுது  ஆரோன்<Aaron>  அங்கே  மலையின்  உச்சியிலே  மரித்தான்;  பின்பு  மோசேயும்<Moses>  எலெயாசாரும்<Eleazar>  மலையிலிருந்து  இறங்கினார்கள்.  {Num  20:28}

 

ஆரோன்<Aaron>  ஜீவித்துப்போனான்  என்பதைச்  சபையார்  எல்லாரும்  கண்டபோது,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  எல்லாரும்  ஆரோனுக்காக<Aaron>  முப்பது  நாள்  துக்கங்கொண்டாடினார்கள்.  {Num  20:29}

 

வேவுகாரர்  காண்பித்த  வழியாக  இஸ்ரவேலர்<Israel>  வருகிறார்கள்  என்று  தெற்கே  வாசம்பண்ணுகிற  கானானியனாகிய<Canaanite>  ஆராத்<Arad>  ராஜா  கேள்விப்பட்டபோது,  அவன்  இஸ்ரவேலருக்கு<Israel>  விரோதமாக  யுத்தம்பண்ணி,  அவர்களில்  சிலரைச்  சிறைபிடித்துக்கொண்டுபோனான்.  {Num  21:1}

 

அப்பொழுது  இஸ்ரவேலர்<Israel>  கர்த்தரை  நோக்கி:  தேவரீர்  இந்த  ஜனங்களை  எங்கள்  கையில்  ஒப்புக்கொடுத்தால்,  அவர்களுடைய  பட்டணங்களைச்  சங்காரம்  பண்ணுவோம்  என்று  பிரதிக்கினை  பண்ணினார்கள்.  {Num  21:2}

 

கர்த்தர்  இஸ்ரவேலின்<Israel>  சத்தத்துக்குச்  செவிகொடுத்து,  அவர்களுக்குக்  கானானியரை<Canaanites>  ஒப்புக்கொடுத்தார்;  அப்பொழுது  அவர்களையும்  அவர்கள்  பட்டணங்களையும்  சங்காரம்பண்ணி,  அவ்விடத்திற்கு  ஓர்மா<Hormah>  என்று  பேரிட்டார்கள்.  {Num  21:3}

 

அவர்கள்  ஏதோம்<Edom>  தேசத்தைச்  சுற்றிப்போகும்படிக்கு,  ஓர்<Hor>  என்னும்  மலையைவிட்டு,  சிவந்த  சமுத்திரத்தின்<Red  sea>  வழியாய்ப்  பிரயாணம்பண்ணினார்கள்;  வழியினிமித்தம்  ஜனங்கள்  மனமடிவடைந்தார்கள்.  {Num  21:4}

 

ஜனங்கள்  தேவனுக்கும்  மோசேக்கும்<Moses>  விரோதமாகப்  பேசி:  நாங்கள்  வனாந்தரத்திலே  சாகும்படி  நீங்கள்  எங்களை  எகிப்து<Egypt>  தேசத்திலிருந்து  வரப்பண்ணினதென்ன?  இங்கே  அப்பமும்  இல்லை,  தண்ணீரும்  இல்லை;  இந்த  அற்பமான  உணவு  எங்கள்  மனதுக்கு  வெறுப்பாயிருக்கிறது  என்றார்கள்.  {Num  21:5}

 

அப்பொழுது  கர்த்தர்  கொள்ளிவாய்ச்  சர்ப்பங்களை  ஜனங்களுக்குள்ளே  அனுப்பினார்;  அவைகள்  ஜனங்களைக்  கடித்ததினால்  இஸ்ரவேலருக்குள்ளே<Israel>  அநேக  ஜனங்கள்  செத்தார்கள்.  {Num  21:6}

 

அதினால்  ஜனங்கள்  மோசேயினிடத்தில்<Moses>  போய்:  நாங்கள்  கர்த்தருக்கும்  உமக்கும்  விரோதமாய்ப்  பேசினதினால்  பாவஞ்செய்தோம்;  சர்ப்பங்கள்  எங்களைவிட்டு  நீங்கும்படி  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்  பண்ணவேண்டும்  என்றார்கள்;  மோசே<Moses>  ஜனங்களுக்காக  விண்ணப்பம்பண்ணினான்.  {Num  21:7}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  நீ  ஒரு  கொள்ளிவாய்ச்  சர்ப்பத்தின்  உருவத்தைச்  செய்து,  அதை  ஒரு  கம்பத்தின்மேல்  தூக்கிவை;  கடிக்கப்பட்டவன்  எவனோ  அவன்  அதை  நோக்கிப்பார்த்தால்  பிழைப்பான்  என்றார்.  {Num  21:8}

 

அப்படியே  மோசே<Moses>  ஒரு  வெண்கலச்  சர்ப்பத்தை  உண்டாக்கி,  அதை  ஒரு  கம்பத்தின்மேல்  தூக்கிவைத்தான்;  சர்ப்பம்  ஒருவனைக்  கடித்தபோது,  அவன்  அந்த  வெண்கலச்  சர்ப்பத்தை  நோக்கிப்பார்த்துப்  பிழைப்பான்.  {Num  21:9}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பிரயாணப்பட்டுப்போய்,  ஓபோத்தில்<Oboth>  பாளயமிறங்கினார்கள்.  {Num  21:10}

 

ஓபோத்திலிருந்து<Oboth>  பிரயாணம்பண்ணி,  சூரியோதயத்திற்கு  நேராய்  மோவாபுக்கு<Moab>  எதிரான  வனாந்தரத்திலுள்ள  அபாரீமின்<Ijeabarim>  மேடுகளில்  பாளயமிறங்கினார்கள்.  {Num  21:11}

 

அங்கேயிருந்து  பிரயாணப்பட்டுப்போய்,  சாரேத்<Zared>  பள்ளத்தாக்கிலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  21:12}

 

அங்கேயிருந்து  பிரயாணப்பட்டுப்போய்,  எமோரியரின்<Amorites>  எல்லையிலிருந்து  வருகிறதும்  வனாந்தரத்தில்  ஓடுகிறதுமான  அர்னோன்<Arnon>  ஆற்றுக்கு  இப்புறம்  பாளயமிறங்கினார்கள்;  அந்த  அர்னோன்<Arnon>  மோவாபுக்கும்<Moab>  எமோரியருக்கும்<Amorites>  நடுவே  இருக்கிற  மோவாபின்<Moab>  எல்லை.  {Num  21:13}

 

அதினால்  சூப்பாவிலுள்ள<n/a>  வாகேபும்<n/a>,  அர்னோனின்<Arnon>  ஆற்றுக்கால்களும்,  {Num  21:14}

 

ஆர்<Ar>  என்னும்  ஸ்தலத்துக்குப்  பாயும்  நீரோடையும்  மோவாபின்<Moab>  எல்லையைச்  சார்ந்திருக்கிறது  என்னும்  வசனம்  கர்த்தருடைய  யுத்த  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  {Num  21:15}

 

அங்கேயிருந்து  பேயேருக்குப்<Beer>  போனார்கள்;  ஜனங்களைக்  கூடிவரச்செய்,  அவர்களுக்குத்  தண்ணீர்  கொடுப்பேன்  என்று  கர்த்தர்  மோசேக்குச்<Moses>  சொன்ன  ஊற்று  இருக்கிற  இடம்  அதுதான்.  {Num  21:16}

 

அப்பொழுது  இஸ்ரவேலர்<Israel>  பாடின  பாட்டாவது:  ஊற்றுத்  தண்ணீரே,  பொங்கிவா;  அதைக்குறித்துப்  பாடுவோம்  வாருங்கள்.  {Num  21:17}

 

நியாயப்பிரமாணிக்கனின்  ஏவுதலால்  அதிபதிகள்  கிணற்றைத்  தோண்டினார்கள்;  ஜனத்தில்  மேன்மக்கள்  தங்கள்  தண்டாயுதங்களைக்கொண்டு  தோண்டினார்கள்  என்று  பாடினார்கள்.  {Num  21:18}

The  princes  digged  the  well,  the  nobles  of  the  people  digged  it,  by  the  direction  of  the  lawgiver,  with  their  staves.  And  from  the  wilderness  they  went  to  :  {Num  21:18}

 

அந்த  வனாந்தரத்திலிருந்து  மாத்தனாவுக்கும்<Mattanah>,  மாத்தனாவிலிருந்து<Mattanah>  நகாலியேலுக்கும்<Nahaliel>,  நகாலியேலிலிருந்து<Nahaliel>  பாமோத்துக்கும்<Bamoth>,  {Num  21:19}

 

பள்ளத்தாக்கிலுள்ள  மோவாபின்<Moab>  வெளியில்  இருக்கிற  பாமோத்திலிருந்து<Bamoth>  எஷிமோனை<Jeshimon>  நோக்கும்  பிஸ்காவின்<Pisgah>  உச்சிக்கும்  போனார்கள்.  {Num  21:20}

 

அப்பொழுது  இஸ்ரவேலர்<Israel>  எமோரியரின்<Amorites>  ராஜாவாகிய  சீகோனிடத்தில்<Sihon>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  {Num  21:21}

 

உமது  தேசத்தின்  வழியாய்க்  கடந்துபோகும்படி  உத்தரவு  கொடுக்கவேண்டும்;  நாங்கள்  வயல்களிலும்,  திராட்சத்தோட்டங்களிலும்  போகாமலும்,  துரவுகளின்  தண்ணீரைக்  குடியாமலும்,  உமது  எல்லையைக்  கடந்துபோகுமட்டும்  ராஜபாதையில்  நடந்துபோவோம்  என்று  சொல்லச்சொன்னார்கள்.  {Num  21:22}

 

சீகோன்<Sihon>  தன்  எல்லைவழியாய்க்  கடந்துபோக  இஸ்ரவேலுக்கு<Israel>  உத்தரவு  கொடாமல்,  தன்  ஜனங்களெல்லாரையும்  கூட்டிக்கொண்டு,  இஸ்ரவேலருக்கு<Israel>  விரோதமாக  வனாந்தரத்திலே  புறப்பட்டு,  யாகாசுக்கு<Jahaz>  வந்து,  இஸ்ரவேலரோடே<Israel>  யுத்தம்பண்ணினான்.  {Num  21:23}

 

இஸ்ரவேலர்<Israel>  அவனைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  அர்னோன்<Arnon>  தொடங்கி  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தேசத்தைச்சார்ந்த  யாப்போக்குவரைக்குமுள்ள<Jabbok>  அவனுடைய  தேசத்தைக்  கட்டிக்கொண்டார்கள்;  அம்மோன்<Ammon>  புத்திரரின்  எல்லை  அரணிப்பானதாயிருந்தது.  {Num  21:24}

 

இஸ்ரவேலர்<Israel>  அந்தப்  பட்டணங்கள்  யாவையும்  பிடித்து,  எஸ்போனிலும்<Heshbon>  அதைச்  சார்ந்த  எல்லாக்  கிராமங்களிலும்  எமோரியருடைய<Amorites>  எல்லாப்  பட்டணங்களிலும்  குடியிருந்தார்கள்.  {Num  21:25}

 

எஸ்போனானது<Heshbon>  எமோரியரின்<Amorites>  ராஜாவாகிய  சீகோனின்<Sihon>  பட்டணமாயிருந்தது;  அவன்  மோவாபியரின்<Moab>  முந்தின  ராஜாவுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணி,  அர்னோன்வரைக்கும்<Arnon>  இருந்த  அவன்  தேசத்தையெல்லாம்  அவன்  கையிலிருந்து  பறித்துக்கொண்டான்.  {Num  21:26}

 

அதினாலே  கவிகட்டுகிறவர்கள்:  எஸ்போனுக்கு<Heshbon>  வாருங்கள்;  சீகோனின்<Sihon>  பட்டணம்  ஸ்திரமாய்க்  கட்டப்படுவதாக.  {Num  21:27}

 

எஸ்போனிலிருந்து<Heshbon>  அக்கினியும்  சீகோனுடைய<Sihon>  பட்டணத்திலிருந்து  ஜுவாலையும்  புறப்பட்டு,  மோவாபுடைய<Moab>  ஆர்<Ar>  என்னும்  ஊரையும்,  அர்னோனுடைய<Arnon>  மேடுகளிலுள்ள  ஆண்டவமார்களையும்  பட்சித்தது.  {Num  21:28}

 

ஐயோ,  மோவாபே<Moab>,  கேமோஷ்<Chemosh>  தேவனின்  ஜனமே,  நீ  நாசமானாய்;  தப்பி  ஓடின  தன்  குமாரரையும்  தன்  குமாரத்திகளையும்  எமோரியரின்<Amorites>  ராஜாவாகிய  சீகோனுக்குச்<Sihon>  சிறைகளாக  ஒப்புக்கொடுத்தான்.  {Num  21:29}

 

அவர்களை  எய்துபோட்டோம்;  எஸ்போன்<Heshbon>  பட்டணம்  தீபோன்<Dibon>  ஊர்வரைக்கும்  நாசமாயிற்று;  மேதேபாவுக்குச்<Medeba>  சமீபமான  நோப்பா<Nophah>  பட்டணபரியந்தம்  அவர்களைப்  பாழாக்கினோம்  என்று  பாடினார்கள்.  {Num  21:30}

 

இஸ்ரவேலர்<Israel>  இப்படியே  எமோரியரின்<Amorites>  தேசத்திலே  குடியிருந்தார்கள்.  {Num  21:31}

 

பின்பு,  மோசே<Moses>  யாசேர்<Jaazer>  பட்டணத்துக்கு  வேவு  பார்க்கிறவர்களை  அனுப்பினான்;  அவர்கள்  அதைச்சேர்ந்த  கிராமங்களைக்  கட்டிக்கொண்டு,  அங்கே  இருந்த  எமோரியரைத்<Amorites>  துரத்திவிட்டார்கள்.  {Num  21:32}

 

பின்பு  பாசானுக்குப்<Bashan>  போகிற  வழியாய்த்  திரும்பிவிட்டார்கள்;  அப்பொழுது  பாசான்<Bashan>  ராஜாவாகிய  ஓக்<Og>  என்பவன்  தன்  சமஸ்த  ஜனங்களோடும்  அவர்களை  எதிர்த்து  யுத்தம்பண்ணும்படிக்கு,  எத்ரேயுக்குப்<Edrei>  புறப்பட்டு  வந்தான்.  {Num  21:33}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  அவனுக்குப்  பயப்படவேண்டாம்;  அவனையும்  அவன்  ஜனங்கள்  எல்லாரையும்,  அவன்  தேசத்தையும்  உன்  கையில்  ஒப்புக்கொடுத்தேன்;  எஸ்போனிலே<Heshbon>  வாசமாயிருந்த  எமோரியரின்<Amorites>  ராஜாவாகிய  சீகோனுக்கு<Sihon>  நீ  செய்தபடியே  இவனுக்கும்  செய்வாய்  என்றார்.  {Num  21:34}

 

அப்படியே  ஒருவரும்  உயிருடன்  மீதியாயிராதபடிக்கு  அவனையும்,  அவன்  குமாரரையும்,  அவனுடைய  சகல  ஜனங்களையும்  வெட்டிப்போட்டு,  அவன்  தேசத்தைக்  கட்டிக்கொண்டார்கள்.  {Num  21:35}

 

பின்பு  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பிரயாணம்பண்ணி,  எரிகோவின்<Jericho>  கிட்ட  இருக்கும்  யோர்தானுக்கு<Jordan>  இக்கரையிலே  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளில்  பாளயமிறங்கினார்கள்.  {Num  22:1}

 

இஸ்ரவேலர்<Israel>  எமோரியருக்குச்<Amorites>  செய்த  யாவையும்  சிப்போரின்<Zippor>  குமாரனாகிய  பாலாக்<Balak>  கண்டான்.  {Num  22:2}

 

ஜனங்கள்  ஏராளமாயிருந்தபடியினால்,  மோவாப்<Moab>  மிகவும்  பயந்து,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரினிமித்தம்  கலக்கமடைந்து,  {Num  22:3}

 

மீதியானியரின்<Midian>  மூப்பரை  நோக்கி:  மாடு  வெளியின்  புல்லை  மேய்கிறதுபோல,  இப்பொழுது  இந்தக்  கூட்டம்  நம்மைச்  சுற்றியிருக்கிற  யாவையும்  மேய்ந்துபோடும்  என்றான்.  அக்காலத்திலே  சிப்போரின்<Zippor>  குமாரனாகிய  பாலாக்<Balak>  மோவாபியருக்கு<Moabites>  ராஜாவாயிருந்தான்.  {Num  22:4}

 

அவன்  பேயோரின்<Beor>  குமாரனாகிய  பிலேயாமை<Balaam>  அழைத்துவரும்படி,  தன்  சந்ததியாருடைய  தேசத்தில்  நதியருகேயுள்ள  பெத்தூருக்கு<Pethor>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  எகிப்திலிருந்து<Egypt>  ஒரு  ஜனக்கூட்டம்  வந்திருக்கிறது;  அவர்கள்  பூமியின்  விசாலத்தை  மூடி,  எனக்கு  எதிரே  இறங்கியிருக்கிறார்கள்.  {Num  22:5}

 

அவர்கள்  என்னிலும்  பலவான்கள்;  ஆகிலும்,  நீர்  ஆசீர்வதிக்கிறவன்  ஆசீர்வதிக்கப்பட்டவன்,  நீர்  சபிக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்று  அறிவேன்;  ஆதலால்,  நீர்  வந்து,  எனக்காக  அந்த  ஜனத்தைச்  சபிக்கவேண்டும்;  அப்பொழுது  ஒருவேளை  நான்  அவர்களை  முறிய  அடித்து,  அவர்களை  இத்தேசத்திலிருந்து  துரத்திவிடலாம்  என்று  சொல்லச்சொன்னான்.  {Num  22:6}

 

அப்படியே  மோவாபின்<Moab>  மூப்பரும்  மீதியானின்<Midian>  மூப்பரும்  குறிசொல்லுதலுக்குரிய  கூலியைத்  தங்கள்  கையில்  எடுத்துக்கொண்டு  புறப்பட்டு,  பிலேயாமிடத்தில்<Balaam>  போய்,  பாலாகின்<Balak>  வார்த்தைகளை  அவனுக்குச்  சொன்னார்கள்.  {Num  22:7}

 

அவன்  அவர்களை  நோக்கி:  இராத்திரிக்கு  இங்கே  தங்கியிருங்கள்;  கர்த்தர்  எனக்குச்  சொல்லுகிறபடியே  உங்களுக்கு  உத்தரவு  கொடுப்பேன்  என்றான்;  அப்படியே  மோவாபின்<Moab>  பிரபுக்கள்  பிலேயாமிடத்தில்<Balaam>  தங்கினார்கள்.  {Num  22:8}

 

தேவன்  பிலேயாமிடத்தில்<Balaam>  வந்து:  உன்னிடத்திலிருக்கிற  இந்த  மனிதர்  யார்  என்றார்.  {Num  22:9}

 

பிலேயாம்<Balaam>  தேவனை  நோக்கி:  சிப்போரின்<Zippor>  குமாரனாகிய  பாலாக்<Balak>  என்னும்  மோவாபின்<Moab>  ராஜா  அவர்களை  என்னிடத்துக்கு  அனுப்பி:  {Num  22:10}

 

பூமியின்  விசாலத்தை  மூடுகிற  ஒரு  ஜனக்கூட்டம்  எகிப்திலிருந்து<Egypt>  வந்திருக்கிறது;  ஆகையால்,  நீ  வந்து  எனக்காக  அவர்களைச்  சபிக்கவேண்டும்;  அப்பொழுது  நான்  அவர்களோடே  யுத்தம்பண்ணி,  ஒருவேளை  அவர்களைத்  துரத்திவிடலாம்  என்று  சொல்லச்சொன்னான்  என்றான்.  {Num  22:11}

 

அதற்குத்  தேவன்  பிலேயாமை<Balaam>  நோக்கி:  நீ  அவர்களோடே  போகவேண்டாம்;  அந்த  ஜனங்களைச்  சபிக்கவும்  வேண்டாம்;  அவர்கள்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்  என்றார்.  {Num  22:12}

 

பிலேயாம்<Balaam>  காலமே  எழுந்து,  பாலாகின்<Balak>  பிரபுக்களை  நோக்கி:  நீங்கள்  உங்கள்  தேசத்துக்குப்  போய்விடுங்கள்;  நான்  உங்களோடேகூட  வருகிறதற்குக்  கர்த்தர்  எனக்கு  உத்தரவு  கொடுக்கமாட்டோம்  என்கிறார்  என்று  சொன்னான்.  {Num  22:13}

 

அப்படியே  மோவாபியருடைய<Moab>  பிரபுக்கள்  எழுந்து,  பாலாகினிடத்தில்<Balak>  போய்:  பிலேயாம்<Balaam>  எங்களோடே  வரமாட்டேன்  என்று  சொன்னான்  என்றார்கள்.  {Num  22:14}

 

பாலாக்<Balak>  மறுபடியும்  அவர்களிலும்  கனவான்களான  அதிக  பிரபுக்களை  அனுப்பினான்.  {Num  22:15}

 

அவர்கள்  பிலேயாமிடத்தில்<Balaam>  போய்,  அவனை  நோக்கி:  சிப்போரின்<Zippor>  குமாரனாகிய  பாலாக்<Balak>  எங்களை  அனுப்பி:  நீர்  என்னிடத்தில்  வருகிறதற்குத்  தடைபடவேண்டாம்;  {Num  22:16}

 

உம்மை  மிகவும்  கனம்பண்ணுவேன்;  நீர்  சொல்வதையெல்லாம்  செய்வேன்;  நீர்  வந்து  எனக்காக  அந்த  ஜனங்களைச்  சபிக்கவேண்டும்  என்று  சொல்லச்சொன்னார்  என்றார்கள்.  {Num  22:17}

 

பிலேயாம்<Balaam>  பாலாகின்<Balak>  ஊழியக்காரருக்குப்  பிரதியுத்தரமாக:  பாலாக்<Balak>  எனக்குத்  தன்  வீடுநிறைய  வெள்ளியும்  பொன்னும்  தந்தாலும்,  சிறிய  காரியமானாலும்  பெரிய  காரியமானாலும்  செய்யும்பொருட்டு,  என்  தேவனாகிய  கர்த்தரின்  கட்டளையை  நான்  மீறக்கூடாது.  {Num  22:18}

 

ஆகிலும்,  கர்த்தர்  இனிமேல்  எனக்கு  என்ன  சொல்லுவார்  என்பதை  நான்  அறியும்படிக்கு,  நீங்களும்  இந்த  இராத்திரி  இங்கே  தங்கியிருங்கள்  என்றான்.  {Num  22:19}

 

இரவிலே  தேவன்  பிலேயாமிடத்தில்<Balaam>  வந்து:  அந்த  மனிதர்  உன்னைக்  கூப்பிட  வந்திருந்தால்,  நீ  எழுந்து  அவர்களோடே  கூடப்போ;  ஆனாலும்,  நான்  உனக்குச்  சொல்லும்  வார்த்தையின்படிமாத்திரம்  நீ  செய்யவேண்டும்  என்றார்.  {Num  22:20}

 

பிலேயாம்<Balaam>  காலமே  எழுந்து,  தன்  கழுதையின்மேல்  சேணங்கட்டி,  மோவாபின்<Moab>  பிரபுக்களோடேகூடப்  போனான்.  {Num  22:21}

 

அவன்  போகிறதினாலே  தேவனுக்குக்  கோபம்  மூண்டது;  கர்த்தருடைய  தூதனானவர்  வழியிலே  அவனுக்கு  எதிராளியாக  நின்றார்.  அவன்  தன்  கழுதையின்மேல்  ஏறிப்போனான்;  அவன்  வேலைக்காரர்  இரண்டுபேரும்  அவனோடே  இருந்தார்கள்.  {Num  22:22}

 

கர்த்தருடைய  தூதனானவர்  உருவின  பட்டயத்தைத்  தம்முடைய  கையிலே  பிடித்துக்கொண்டு  வழியிலே  நிற்கிறதைக்  கழுதை  கண்டு,  வழியை  விட்டு  வயலிலே  விலகிப்போயிற்று;  கழுதையை  வழியில்  திருப்ப  பிலேயாம்<Balaam>  அதை  அடித்தான்.  {Num  22:23}

 

கர்த்தருடைய  தூதனானவர்  இருபுறத்திலும்  சுவர்  வைத்திருந்த  திராட்சத்தோட்டங்களின்  பாதையிலே  போய்  நின்றார்.  {Num  22:24}

 

கழுதை  கர்த்தருடைய  தூதனைக்கண்டு,  சுவர்  ஓரமாய்  ஒதுங்கி,  பிலேயாமின்<Balaam>  காலைச்  சுவரோடே  நெருக்கிற்று;  திரும்பவும்  அதை  அடித்தான்.  {Num  22:25}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  அப்புறம்  போய்,  வலதுபுறம்  இடதுபுறம்  விலக  வழியில்லாத  இடுக்கமான  இடத்திலே  நின்றார்.  {Num  22:26}

 

கழுதை  கர்த்தருடைய  தூதனைக்  கண்டு,  பிலேயாமின்<Balaam>  கீழ்ப்  படுத்துக்கொண்டது;  பிலேயாம்<Balaam>  கோபம்  மூண்டவனாகி,  கழுதையைத்  தடியினால்  அடித்தான்.  {Num  22:27}

 

உடனே  கர்த்தர்  கழுதையின்  வாயைத்  திறந்தார்;  அது  பிலேயாமைப்<Balaam>  பார்த்து:  நீர்  என்னை  இப்பொழுது  மூன்றுதரம்  அடிக்கும்படி  நான்  உமக்கு  என்ன  செய்தேன்  என்றது.  {Num  22:28}

 

அப்பொழுது  பிலேயாம்<Balaam>  கழுதையைப்  பார்த்து:  நீ  என்னைப்  பரியாசம்  பண்ணிக்கொண்டு  வருகிறாய்;  என்  கையில்  ஒரு  பட்டயம்மாத்திரம்  இருந்தால்,  இப்பொழுதே  உன்னைக்  கொன்றுபோடுவேன்  என்றான்.  {Num  22:29}

 

கழுதை  பிலேயாமை<Balaam>  நோக்கி:  நீர்  என்னைக்  கைக்கொண்ட  காலமுதல்  இந்நாள்வரைக்கும்  நீர்  ஏறின  கழுதை  நான்  அல்லவா?  இப்படி  உமக்கு  எப்போதாகிலும்  நான்  செய்தது  உண்டா  என்றது.  அதற்கு  அவன்:  இல்லை  என்றான்.  {Num  22:30}

 

அப்பொழுது  கர்த்தர்  பிலேயாமின்<Balaam>  கண்களைத்  திறந்தார்;  வழியிலே  நின்று  உருவின  பட்டயத்தைத்  தம்முடைய  கையிலே  பிடித்திருக்கிற  கர்த்தருடைய  தூதனை  அவன்  கண்டு,  தலைகுனிந்து  முகங்குப்புற  விழுந்து  பணிந்தான்.  {Num  22:31}

 

கர்த்தருடைய  தூதனானவர்  அவனை  நோக்கி:  நீ  உன்  கழுதையை  இதனோடே  மூன்றுதரம்  அடித்ததென்ன?  உன்  வழி  எனக்கு  மாறுபாடாயிருக்கிறதினால்,  நான்  உனக்கு  எதிரியாகப்  புறப்பட்டு  வந்தேன்.  {Num  22:32}

 

கழுதை  என்னைக்  கண்டு,  இந்த  மூன்றுதரம்  எனக்கு  விலகிற்று;  எனக்கு  விலகாமல்  இருந்ததானால்,  இப்பொழுது  நான்  உன்னைக்  கொன்றுபோட்டு,  கழுதையை  உயிரோடே  வைப்பேன்  என்றார்.  {Num  22:33}

 

அப்பொழுது  பிலேயாம்<Balaam>  கர்த்தருடைய  தூதனை  நோக்கி:  நான்  பாவஞ்செய்தேன்;  வழியிலே  நீர்  எனக்கு  எதிராக  நிற்கிறதை  அறியாதிருந்தேன்;  இப்பொழுதும்  உமது  பார்வைக்கு  இது  தகாததாயிருக்குமானால்,  நான்  திரும்பிப்  போய்விடுகிறேன்  என்றான்.  {Num  22:34}

 

கர்த்தருடைய  தூதனானவர்  பிலேயாமை<Balaam>  நோக்கி:  அந்த  மனிதரோடே  கூடப்போ;  நான்  உன்னோடே  சொல்லும்  வார்த்தையைமாத்திரம்  நீ  சொல்லக்கடவாய்  என்றார்;  அப்படியே  பிலேயாம்<Balaam>  பாலாகின்<Balak>  பிரபுக்களோடேகூடப்  போனான்.  {Num  22:35}

 

பிலேயாம்<Balaam>  வருகிறதைப்  பாலாக்<Balak>  கேட்டமாத்திரத்தில்,  கடைசி  எல்லையான  அர்னோன்<Arnon>  நதியின்  ஓரத்திலுள்ள  மோவாபின்<Moab>  பட்டணமட்டும்  அவனுக்கு  எதிர்கொண்டுபோனான்.  {Num  22:36}

 

பாலாக்<Balak>  பிலேயாமை<Balaam>  நோக்கி:  உம்மை  அழைக்கும்படி  நான்  ஆவலோடே  உம்மிடத்தில்  ஆள்  அனுப்பவில்லையா?  என்னிடத்திற்கு  வராமல்  இருந்ததென்ன?  ஏற்றபிரகாரமாக  உம்மை  நான்  கனம்  பண்ணமாட்டேனா  என்றான்.  {Num  22:37}

 

அப்பொழுது  பிலேயாம்<Balaam>  பாலாகை<Balak>  நோக்கி:  இதோ,  உம்மிடத்திற்கு  வந்தேன்;  ஆனாலும்,  ஏதாகிலும்  சொல்லுகிறதற்கு  என்னாலே  ஆகுமோ?  தேவன்  என்  வாயிலே  அளிக்கும்  வார்த்தையையே  சொல்லுவேன்  என்றான்.  {Num  22:38}

 

பிலேயாம்<Balaam>  பாலாகுடனேகூடப்<Balak>  போனான்;  அவர்கள்  கீரியாத்  ஊசோத்தில்<Kirjathhuzoth>  சேர்ந்தார்கள்.  {Num  22:39}

 

அங்கே  பாலாக்<Balak>  ஆடுமாடுகளை  அடித்து,  பிலேயாமுக்கும்<Balaam>  அவனோடிருந்த  பிரபுக்களுக்கும்  அனுப்பினான்.  {Num  22:40}

 

மறுநாள்  காலமே  பாலாக்<Balak>  பிலேயாமைக்<Balaam>  கூட்டிக்கொண்டு,  அவனைப்  பாகாலுடைய<Baal>  மேடுகளில்  ஏறப்பண்ணினான்;  அவ்விடத்திலிருந்து  பிலேயாம்<Balaam>  ஜனத்தின்  கடைசிப்  பாளயத்தைப்  பார்த்தான்.  {Num  22:41}

 

பிலேயாம்<Balaam>  பாலாகை<Balak>  நோக்கி:  நீர்  இங்கே  எனக்கு  ஏழு  பலிபீடங்களைக்  கட்டி,  ஏழு  காளைகளையும்  ஏழு  ஆட்டுக்கடாக்களையும்  இங்கே  எனக்கு  ஆயத்தப்படுத்தும்  என்றான்.  {Num  23:1}

 

பிலேயாம்<Balaam>  சொன்னபடியே  பாலாக்<Balak>  செய்தான்;  பாலாகும்<Balak>  பிலேயாமும்<Balaam>  ஒவ்வொரு  பீடத்தில்  ஒவ்வொரு  காளையையும்  ஒவ்வொரு  ஆட்டுக்கடாவையும்  பலியிட்டார்கள்.  {Num  23:2}

 

பின்பு  பிலேயாம்<Balaam>  பாலாகை<Balak>  நோக்கி:  உம்முடைய  சர்வாங்க  தகனபலியண்டையில்  நில்லும்,  நான்  போய்வருகிறேன்;  கர்த்தர்  வந்து  என்னைச்  சந்திக்கிறதாயிருக்கும்;  அவர்  எனக்கு  வெளிப்படுத்துவதை  உமக்கு  அறிவிப்பேன்  என்று  சொல்லி,  ஒரு  மேட்டின்மேல்  ஏறினான்.  {Num  23:3}

 

தேவன்  பிலேயாமைச்<Balaam>  சந்தித்தார்;  அப்பொழுது  அவன்  அவரை  நோக்கி:  நான்  ஏழு  பலிபீடங்களை  ஆயத்தம்பண்ணி,  ஒவ்வொரு  பலிபீடத்தில்  ஒவ்வொரு  காளையையும்  ஒவ்வொரு  ஆட்டுக்கடாவையும்  பலியிட்டேன்  என்றான்.  {Num  23:4}

 

கர்த்தர்  பிலேயாமின்<Balaam>  வாயிலே  வாக்கு  அருளி:  நீ  பாலாகினிடத்தில்<Balak>  திரும்பிப்போய்,  இவ்விதமாய்ச்  சொல்லக்கடவாய்  என்றார்.  {Num  23:5}

 

அவனிடத்துக்கு  அவன்  திரும்பிப்போனான்;  பாலாக்<Balak>  மோவாபுடைய<Moab>  சகல  பிரபுக்களோடுங்கூடத்  தன்  சர்வாங்க  தகனபலியண்டையிலே  நின்றுகொண்டிருந்தான்.  {Num  23:6}

 

அப்பொழுது  அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  மோவாபின்<Moab>  ராஜாவாகிய  பாலாக்<Balak>  என்னைக்  கிழக்கு  மலைகளிலுள்ள  ஆராமிலிருந்து<Aram>  வரவழைத்து:  நீ  வந்து  எனக்காக  யாக்கோபைச்<Jacob>  சபிக்கவேண்டும்;  நீ  வந்து  இஸ்ரவேலை<Israel>  வெறுத்து  விடவேண்டும்  என்று  சொன்னான்.  {Num  23:7}

 

தேவன்  சபிக்காதவனை  நான்  சபிப்பதெப்படி?  கர்த்தர்  வெறுக்காதவனை  நான்  வெறுப்பதெப்படி?  {Num  23:8}

 

கன்மலையுச்சியிலிருந்து  நான்  அவனைக்  கண்டு,  குன்றுகளிலிருந்து  அவனைப்  பார்க்கிறேன்;  அந்த  ஜனங்கள்  ஜாதிகளோடே  கலவாமல்  தனியே  வாசமாயிருப்பார்கள்.  {Num  23:9}

 

யாக்கோபின்<Jacob>  தூளை  எண்ணத்தக்கவன்  யார்?  இஸ்ரவேலின்<Israel>  காற்பங்கை  எண்ணுகிறவன்  யார்?  நீதிமான்  மரிப்பது  போல்  நான்  மரிப்பேனாக,  என்  முடிவு  அவன்  முடிவுபோல்  இருப்பதாக  என்றான்.  {Num  23:10}

 

அப்பொழுது  பாலாக்<Balak>  பிலேயாமை<Balaam>  நோக்கி:  நீர்  எனக்கு  என்னசெய்தீர்;  என்  சத்துருக்களைச்  சபிக்கும்படி  உம்மை  அழைப்பித்தேன்;  நீர்  அவர்களை  ஆசீர்வதிக்கவே  ஆசீர்வதித்தீர்  என்றான்.  {Num  23:11}

 

அதற்கு  அவன்:  கர்த்தர்  என்  வாயில்  அருளினதையே  சொல்வது  என்  கடமையல்லவா  என்றான்.  {Num  23:12}

 

பின்பு  பாலாக்<Balak>  அவனை  நோக்கி:  நீர்  அவர்களைப்  பார்க்கத்தக்க  வேறொரு  இடத்திற்கு  என்னோடேகூட  வாரும்;  அங்கே  அவர்கள்  எல்லாரையும்  பாராமல்,  அவர்களுடைய  கடைசிப்  பாளயத்தைமாத்திரம்  பார்ப்பீர்;  அங்கேயிருந்து  எனக்காக  அவர்களைச்  சபிக்கவேண்டும்  என்று  சொல்லி,  {Num  23:13}

 

அவனைப்  பிஸ்காவின்<Pisgah>  கொடுமுடியில்  இருக்கிற  சோப்பீமின்<Zophim>  வெளியிலே  அழைத்துக்கொண்டுபோய்,  ஏழு  பலிபீடங்களைக்  கட்டி,  ஒவ்வொரு  பீடத்தில்  ஒவ்வொரு  காளையையும்  ஒவ்வொரு  ஆட்டுக்கடாவையும்  பலியிட்டான்.  {Num  23:14}

 

அப்பொழுது  பிலேயாம்<Balaam>  பாலாகை<Balak>  நோக்கி:  இங்கே  உம்முடைய  சர்வாங்க  தகனபலியண்டையில்  நில்லும்;  நான்  அங்கே  போய்க்  கர்த்தரைச்  சந்தித்துவருகிறேன்  என்றான்.  {Num  23:15}

 

கர்த்தர்  பிலேயாமைச்<Balaam>  சந்தித்து,  அவன்  வாயிலே  வசனத்தை  அருளி:  நீ  பாலாகினிடத்திற்குத்<Balak>  திரும்பிப்போய்,  இவ்விதமாய்ச்  சொல்லக்கடவாய்  என்றார்.  {Num  23:16}

 

அவனிடத்திற்கு  அவன்  வருகிறபோது,  அவன்  மோவாபின்<Moab>  பிரபுக்களோடுங்கூடத்  தன்னுடைய  சர்வாங்க  தகனபலியண்டையிலே  நின்றுகொண்டிருந்தான்;  பாலாக்<Balak>  அவனை  நோக்கி:  கர்த்தர்  என்ன  சொன்னார்  என்று  கேட்டான்.  {Num  23:17}

 

அப்பொழுது  அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  பாலாகே<Balak>,  எழுந்திருந்து  கேளும்;  சிப்போரின்<Zippor>  குமாரனே,  எனக்குச்  செவிகொடும்.  {Num  23:18}

 

பொய்  சொல்ல  தேவன்  ஒரு  மனிதன்  அல்ல;  மனம்மாற  அவர்  ஒரு  மனுபுத்திரனும்  அல்ல;  அவர்  சொல்லியும்  செய்யாதிருப்பாரா?  அவர்  வசனித்தும்  நிறைவேற்றாதிருப்பாரா?  {Num  23:19}

 

இதோ,  ஆசீர்வதிக்கக்  கட்டளைபெற்றேன்;  அவர்  ஆசீர்வதிக்கிறார்,  அதை  நான்  திருப்பக்கூடாது.  {Num  23:20}

 

அவர்  யாக்கோபிலே<Jacob>  அக்கிரமத்தைக்  காண்கிறதும்  இல்லை,  இஸ்ரவேலிலே<Israel>  குற்றம்  பார்க்கிறதும்  இல்லை;  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  அவர்களோடே  இருக்கிறார்;  ராஜாவின்  ஜயகெம்பீரம்  அவர்களுக்குள்ளே  இருக்கிறது.  {Num  23:21}

 

தேவன்  அவர்களை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணினார்;  காண்டாமிருகத்துக்கொத்த  பெலன்  அவர்களுக்கு  உண்டு.  {Num  23:22}

 

யாக்கோபுக்கு<Jacob>  விரோதமான  மந்திரவாதம்  இல்லை,  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமான  குறிசொல்லுதலும்  இல்லை;  தேவன்  என்னென்ன  செய்தார்  என்று  கொஞ்சக்காலத்திலே  யாக்கோபையும்<Jacob>  இஸ்ரவேலையும்<Israel>  குறித்துச்  சொல்லப்படும்.  {Num  23:23}

 

அந்த  ஜனம்  துஷ்ட  சிங்கம்போல  எழும்பும்,  பாலசிங்கம்போல  நிமிர்ந்து  நிற்கும்;  அது  தான்  பிடித்த  இரையைப்  பட்சித்து,  வெட்டுண்டவர்களின்  இரத்தத்தைக்  குடிக்குமட்டும்  படுத்துக்கொள்வதில்லை  என்றான்.  {Num  23:24}

 

அப்பொழுது  பாலாக்<Balak>  பிலேயாமை<Balaam>  நோக்கி:  நீர்  அவர்களைச்  சபிக்கவும்  வேண்டாம்,  அவர்களை  ஆசீர்வதிக்கவும்  வேண்டாம்  என்றான்.  {Num  23:25}

 

அதற்குப்  பிலேயாம்<Balaam>  பாலாகைப்<Balak>  பார்த்து:  கர்த்தர்  சொல்லுகிறபடியெல்லாம்  செய்வேன்  என்று  உம்மோடே  நான்  சொல்லவில்லையா  என்றான்.  {Num  23:26}

 

அப்பொழுது  பாலாக்<Balak>  பிலேயாமை<Balaam>  நோக்கி:  வாரும்,  வேறொரு  இடத்திற்கு  உம்மை  அழைத்துக்கொண்டு  போகிறேன்;  நீர்  அங்கேயிருந்தாவது  எனக்காக  அவர்களைச்  சபிக்கிறது  தேவனுக்குப்  பிரியமாயிருக்கும்  என்று  சொல்லி,  {Num  23:27}

 

அவனை  எஷிமோனுக்கு<Jeshimon>  எதிராயிருக்கிற  பேயோரின்<Peor>  கொடுமுடிக்கு  அழைத்துக்கொண்டுபோனான்.  {Num  23:28}

 

அப்பொழுது  பிலேயாம்<Balaam>  பாலாகை<Balak>  நோக்கி:  இங்கே  எனக்கு  ஏழு  பலிபீடங்களைக்  கட்டி,  இங்கே  எனக்கு  ஏழு  காளைகளையும்  ஏழு  ஆட்டுக்  கடாக்களையும்  ஆயத்தம்பண்ணும்  என்றான்.  {Num  23:29}

 

பிலேயாம்<Balaam>  சொன்னபடி  பாலாக்<Balak>  செய்து,  ஒவ்வொரு  பீடத்தில்  ஒவ்வொரு  காளையையும்  ஒவ்வொரு  ஆட்டுக்கடாவையும்  பலியிட்டான்.  {Num  23:30}

 

இஸ்ரவேலை<Israel>  ஆசீர்வதிப்பதே  கர்த்தருக்குப்  பிரியம்  என்று  பிலேயாம்<Balaam>  கண்ட  போது,  அவன்  முந்திச்  செய்துவந்தது  போல  நிமித்தம்பார்க்கப்  போகாமல்,  வனாந்தரத்திற்கு  நேராகத்  தன்  முகத்தைத்  திருப்பி,  {Num  24:1}

 

தன்  கண்களை  ஏறெடுத்து,  இஸ்ரவேல்<Israel>  தன்  கோத்திரங்களின்படியே  பாளயமிறங்கியிருக்கிறதைப்  பார்த்தான்;  தேவ  ஆவி  அவன்மேல்  வந்தது.  {Num  24:2}

 

அப்பொழுது  அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  பேயோரின்<Beor>  குமாரனாகிய  பிலேயாம்<Balaam>  சொல்லுகிறதாவது,  கண்திறக்கப்பட்டவன்  உரைக்கிறதாவது,  {Num  24:3}

 

தேவன்  அருளும்  வார்த்தைகளைக்  கேட்டு,  சர்வவல்லவரின்  தரிசனத்தைக்  கண்டு  தாழ  விழும்போது,  கண்திறக்கப்பட்டவன்  விளம்புகிறதாவது,  {Num  24:4}

 

யாக்கோபே<Jacob>,  உன்  கூடாரங்களும்,  இஸ்ரவேலே<Israel>,  உன்  வாசஸ்தலங்களும்  எவ்வளவு  அழகானவைகள்!  {Num  24:5}

 

அவைகள்  பரவிப்போகிற  ஆறுகளைப்போலவும்,  நதியோரத்திலுள்ள  தோட்டங்களைப்போலவும்,  கர்த்தர்  நாட்டின  சந்தனமரங்களைப்போலவும்,  தண்ணீர்  அருகே  உள்ள  கேதுரு  விருட்சங்களைப்போலவும்  இருக்கிறது.  {Num  24:6}

 

அவர்களுடைய  நீர்ச்சால்களிலிருந்து  தண்ணீர்  பாயும்;  அவர்கள்  வித்து  திரளான  தண்ணீர்களில்  பரவும்;  அவர்களுடைய  ராஜா  ஆகாகைப்<Agag>  பார்க்கிலும்  உயருவான்;  அவர்கள்  ராஜ்யம்  மேன்மையடையும்.  {Num  24:7}

 

தேவன்  அவர்களை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணினார்;  காண்டாமிருகத்துக்கொத்த  பெலன்  அவர்களுக்கு  உண்டு;  அவர்கள்  தங்கள்  சத்துருக்களாகிய  ஜாதிகளைப்  பட்சித்து,  அவர்கள்  எலும்புகளை  நொறுக்கி,  அவர்களைத்  தங்கள்  அம்புகளாலே  எய்வார்கள்.  {Num  24:8}

 

சிங்கம்போலவும்  துஷ்ட  சிங்கம்போலவும்  மடங்கிப்  படுத்துக்கொண்டிருக்கிறார்கள்;  அவர்களை  எழுப்புகிறவன்  யார்?  உங்களை  ஆசீர்வதிக்கிறவன்  ஆசீர்வதிக்கப்பட்டவன்,  உங்களைச்  சபிக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்றான்.  {Num  24:9}

 

அப்பொழுது  பாலாக்<Balak>  பிலேயாமின்மேல்<Balaam>  கோபம்  மூண்டவனாகி,  கையோடே  கைதட்டி,  பிலேயாமை<Balaam>  நோக்கி:  என்  சத்துருக்களைச்  சபிக்க  உன்னை  அழைத்தனுப்பினேன்;  நீயோ  இந்த  மூன்றுமுறையும்  அவர்களை  ஆசீர்வதிக்கவே  ஆசீர்வதித்தாய்.  {Num  24:10}

 

ஆகையால்  உன்  இடத்துக்கு  ஓடிப்போ;  உன்னை  மிகவும்  கனம்பண்ணுவேன்  என்றேன்;  நீ  கனமடையாதபடிக்குக்  கர்த்தர்  தடுத்தார்  என்றான்.  {Num  24:11}

 

அப்பொழுது  பிலேயாம்<Balaam>  பாலாகை<Balak>  நோக்கி:  பாலாக்<Balak>  எனக்குத்  தன்  வீடு  நிறைய  வெள்ளியும்  பொன்னும்  கொடுத்தாலும்,  நான்  என்  மனதாய்  நன்மையாகிலும்  தீமையாகிலும்  செய்கிறதற்குக்  கர்த்தரின்  கட்டளையை  மீறக்கூடாது;  கர்த்தர்  சொல்வதையே  சொல்வேன்  என்று,  {Num  24:12}

 

நீர்  என்னிடத்திற்கு  அனுப்பின  ஸ்தானாபதிகளிடத்தில்  நான்  சொல்லவில்லையா?  {Num  24:13}

 

இதோ,  நான்  என்  ஜனத்தாரிடத்திற்குப்  போகிறேன்;  பிற்காலத்திலே  இந்த  ஜனங்கள்  உம்முடைய  ஜனங்களுக்குச்  செய்வது  இன்னதென்று  உமக்குத்  தெரிவிப்பேன்  வாரும்  என்று  சொல்லி,  {Num  24:14}

 

அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  பேயோரின்<Beor>  குமாரன்  பிலேயாம்<Balaam>  சொல்லுகிறதாவது,  கண்திறக்கப்பட்டவன்  உரைக்கிறதாவது,  {Num  24:15}

 

தேவன்  அருளும்  வார்த்தைகளைக்  கேட்டு,  உன்னதமானவர்  அளித்த  அறிவை  அறிந்து,  சர்வவல்லவரின்  தரிசனத்தைக்  கண்டு,  தாழவிழும்போது,  கண்திறக்கப்பட்டவன்  விளம்புகிறதாவது;  {Num  24:16}

 

அவரைக்  காண்பேன்,  இப்பொழுது  அல்ல;  அவரைத்  தரிசிப்பேன்,  சமீபமாய்  அல்ல;  ஒரு  நட்சத்திரம்  யாக்கோபிலிருந்து<Jacob>  உதிக்கும்,  ஒரு  செங்கோல்  இஸ்ரவேலிலிருந்து<Israel>  எழும்பும்;  அது  மோவாபின்<Moab>  எல்லைகளை  நொறுக்கி,  சேத்புத்திரர்<Sheth>  எல்லாரையும்  நிர்மூலமாக்கும்.  {Num  24:17}

 

ஏதோம்<Edom>  சுதந்தரமாகும்,  சேயீர்<Seir>  தன்  சத்துருக்களுக்குச்  சுதந்தரமாகும்;  இஸ்ரவேல்<Israel>  பராக்கிரமஞ்செய்யும்.  {Num  24:18}

 

யாக்கோபிலிருந்து<Jacob>  தோன்றும்  ஒருவர்  ஆளுகை  செய்வார்;  பட்டணங்களில்  மீதியானவர்களை  அழிப்பார்  என்றான்.  {Num  24:19}

 

மேலும்,  அவன்  அமலேக்கைப்<Amalek>  பார்த்து,  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  அமலேக்கு<Amalek>  முந்தியெழும்பினவன்;  ஆனாலும்  அவன்  முடிவிலே  முற்றிலும்  நாசமாவான்  என்றான்.  {Num  24:20}

 

அன்றியும்  அவன்  கேனியனைப்<Kenites>  பார்த்து,  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  உன்  வாசஸ்தலம்  அரணிப்பானது;  உன்  கூட்டைக்  கன்மலையில்  கட்டினாய்.  {Num  24:21}

 

ஆகிலும்  கேனியன்<Kenite>  அழிந்துபோவான்;  அசூர்<Asshur>  உன்னைச்  சிறைபிடித்துக்  கொண்டுபோக  எத்தனைநாள்  செல்லும்  என்றான்.  {Num  24:22}

 

பின்னும்  அவன்  தன்  வாக்கியத்தை  எடுத்துரைத்து:  ஐயோ,  தேவன்  இதைச்  செய்யும்போது  யார்  பிழைப்பான்;  {Num  24:23}

 

சித்தீமின்<Chittim>  கரைதுறையிலிருந்து  கப்பல்கள்  வந்து,  அசூரைச்<Asshur>  சிறுமைப்படுத்தி,  ஏபேரையும்<Eber>  வருத்தப்படுத்தும்;  அவனும்  முற்றிலும்  அழிந்துபோவான்  என்றான்.  {Num  24:24}

 

பின்பு  பிலேயாம்<Balaam>  எழுந்து  புறப்பட்டு,  தன்  இடத்திற்குத்  திரும்பினான்;  பாலாகும்<Balak>  தன்  வழியே  போனான்.  {Num  24:25}

 

இஸ்ரவேல்<Israel>  சித்தீமிலே<Shittim>  தங்கியிருக்கையில்,  ஜனங்கள்  மோவாபின்<Moab>  குமாரத்திகளோடே  வேசித்தனம்  பண்ணத்தொடங்கினார்கள்.  {Num  25:1}

 

அவர்கள்  தங்கள்  தேவர்களுக்கு  இட்ட  பலிகளை  விருந்துண்ணும்படி  ஜனங்களை  அழைத்தார்கள்;  ஜனங்கள்  போய்ப்  புசித்து,  அவர்கள்  தேவர்களைப்  பணிந்துகொண்டார்கள்.  {Num  25:2}

 

இப்படி  இஸ்ரவேலர்<Israel>  பாகால்பேயோரைப்<Baalpeor>  பற்றிக்கொண்டார்கள்;  அதனால்  இஸ்ரவேலர்மேல்<Israel>  கர்த்தருடைய  கோபம்  மூண்டது.  {Num  25:3}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  கர்த்தருடைய  உக்கிரமான  கோபம்  இஸ்ரவேலைவிட்டு<Israel>  நீங்கும்படி  நீ  ஜனங்களின்  தலைவர்  எல்லாரையும்  கூட்டிக்கொண்டு,  அப்படிச்  செய்தவர்களைச்  சூரியனுக்கு  எதிரே  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  தூக்கிப்போடும்படி  செய்  என்றார்.  {Num  25:4}

 

அப்படியே  மோசே<Moses>  இஸ்ரவேலின்<Israel>  நியாயாதிபதிகளை  நோக்கி:  நீங்கள்  அவரவர்  பாகால்பேயோரைப்<Baalpeor>  பற்றிக்கொண்ட  உங்கள்  மனிதரைக்  கொன்றுபோடுங்கள்  என்றான்.  {Num  25:5}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சபையார்  அனைவரும்  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாக  அழுதுகொண்டு  நிற்கையில்,  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  ஒருவன்  ஒரு  மீதியானிய<Midianitish>  ஸ்திரீயைத்  தன்  சகோதரரிடத்திலே  அழைத்துக்கொண்டுவந்தான்.  {Num  25:6}

 

அதை  ஆசாரியனாகிய  ஆரோனின்<Aaron>  குமாரனான  எலெயாசாரின்<Eleazar>  மகன்  பினெகாஸ்<Phinehas>  கண்டபோது,  அவன்  நடுச்சபையிலிருந்து  எழுந்து,  ஒரு  ஈட்டியைத்  தன்  கையிலே  பிடித்து,  {Num  25:7}

 

இஸ்ரவேலனாகிய<Israel>  அந்த  மனிதன்  வேசித்தனம்பண்ணும்  அறையிலே  அவன்  பின்னாலே  போய்,  இஸ்ரவேல்<Israel>  மனிதனும்  அந்த  ஸ்திரீயுமாகிய  இருவருடைய  வயிற்றிலும்  ஈட்டி  உருவிப்போக  அவர்களைக்  குத்திப்போட்டான்;  அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  உண்டான  வாதை  நின்றுபோயிற்று.  {Num  25:8}

 

அந்த  வாதையால்  செத்தவர்கள்  இருபத்துநாலாயிரம்பேர்.  {Num  25:9}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  25:10}

 

நான்  என்  எரிச்சலில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நிர்மூலமாக்காதபடிக்கு,  ஆசாரியனாகிய  ஆரோனின்<Aaron>  குமாரனான  எலெயாசாரின்<Eleazar>  மகன்  பினெகாஸ்<Phinehas>,  என்  நிமித்தம்  அவர்கள்  நடுவில்  பக்திவைராக்கியம்  காண்பித்ததினால்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்மேல்  உண்டான  என்  உக்கிரத்தைத்  திருப்பினான்.  {Num  25:11}

 

ஆகையால்,  இதோ,  அவனுக்கு  என்  சமாதானத்தின்  உடன்படிக்கையைக்  கட்டளையிடுகிறேன்.  {Num  25:12}

 

அவன்  தன்  தேவனுக்காக  பக்திவைராக்கியம்  காண்பித்து,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்காகப்  பாவநிவிர்த்தி  செய்தபடியினால்,  அவனுக்கும்  அவனுக்குப்  பின்பு  அவன்  சந்ததிக்கும்  நித்திய  ஆசாரிய  பட்டத்திற்குரிய  உடன்படிக்கை  உண்டாயிருக்கும்  என்று  சொல்  என்றார்.  {Num  25:13}

 

மீதியானிய<Midianitish>  ஸ்திரீயோடே  குத்துண்டு  செத்த  இஸ்ரவேல்<Israelite>  மனிதனுடைய  பேர்  சிம்ரி<Zimri>;  அவன்  சல்லூவின்<Salu>  குமாரனும்,  சிமியோனியரின்<Simeonites>  தகப்பன்  வம்சத்தில்  ஒரு  பிரபுவுமாயிருந்தான்.  {Num  25:14}

 

குத்துண்ட  மீதியானிய<Midianitish>  ஸ்திரீயின்  பேர்  கஸ்பி<Cozbi>,  அவள்  சூரின்<Zur>  குமாரத்தி,  அவன்  மீதியானியருடைய<Midian>  தகப்பன்  வம்சத்தாரான  ஜனங்களுக்குத்  தலைவனாயிருந்தான்.  {Num  25:15}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  25:16}

 

மீதியானியரை<Midianites>  நெருக்கி  அவர்களை  வெட்டிப்போடுங்கள்.  {Num  25:17}

 

பேயோரின்<Peor>  சங்கதியிலும்  பேயோரின்<Peor>  நிமித்தம்  வாதையுண்டான  நாளிலே  குத்துண்ட  அவர்கள்  சகோதரியாகிய  கஸ்பி<Cozbi>  என்னும்  மீதியான்<Midian>  பிரபுவினுடைய  குமாரத்தியின்  சங்கதியிலும்,  அவர்கள்  உங்களுக்குச்  செய்த  சர்ப்பனைகளினால்  உங்களை  மோசம்போக்கி  நெருக்கினார்களே  என்றார்.  {Num  25:18}

 

அந்த  வாதை  தீர்ந்தபின்பு,  கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனின்<Aaron>  குமாரனும்  ஆசாரியனுமாகிய  எலெயாசாரையும்<Eleazar>  நோக்கி:  {Num  26:1}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சமஸ்த  சபையாரையும்  அவர்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்படி  இருபது  வயதுமுதல்  அதற்கு  மேற்பட்ட  இஸ்ரவேலிலே<Israel>  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்கவர்கள்  எல்லாரையும்  எண்ணுங்கள்  என்றார்.  {Num  26:2}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  எரிகோவின்<Jericho>  அருகே  இருக்கும்  யோர்தானுக்கு<Jordan>  இப்பாலே  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளிலே  அவர்களோடே  பேசி:  {Num  26:3}

 

கர்த்தர்  மோசேக்கும்<Moses>  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  கட்டளையிட்டிருக்கிறபடியே,  இருபது  வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை  எண்ணுங்கள்  என்றார்கள்.  {Num  26:4}

 

ரூபன்<Reuben>  இஸ்ரவேலின்<Israel>  மூத்த  குமாரன்;  ரூபனுடைய<Reuben>  குமாரர்,  ஆனோக்கியர்<Hanochites>  குடும்பத்துக்குத்  தகப்பனான  ஆனோக்கும்<Hanoch>,  பல்லூவியர்<Palluites>  குடும்பத்துக்குத்  தகப்பனான  பல்லூவும்<Pallu>,  {Num  26:5}

 

எஸ்ரோனியர்<Hezronites>  குடும்பத்துக்குத்  தகப்பனான  எஸ்ரோனும்<Hezron>,  கர்மீயர்<Carmites>  குடும்பத்துக்குத்  தகப்பனான  கர்மீயுமே<Carmi>.  {Num  26:6}

 

இவைகளே  ரூபனியரின்<Reubenites>  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்து  மூவாயிரத்து  எழுநூற்று  முப்பதுபேர்.  {Num  26:7}

 

பல்லூவின்<Pallu>  குமாரன்  எலியாப்<Eliab>.  {Num  26:8}

 

எலியாபின்<Eliab>  குமாரர்  நேமுவேல்<Nemuel>,  தாத்தான்<Dathan>,  அபிராம்<Abiram>  என்பவர்கள்;  இந்தத்  தாத்தான்<Dathan>  அபிராம்<Abiram>  என்பவர்களே  சபையில்  பேர்பெற்றவர்களாயிருந்து,  கர்த்தருக்கு  விரோதமாகப்  போராட்டம்  பண்ணி,  கோராகின்<Korah>  கூட்டாளிகளாகி,  மோசேக்கும்<Moses>  ஆரோனுக்கும்<Aaron>  விரோதமாக  விவாதம்பண்ணினவர்கள்.  {Num  26:9}

 

பூமி  தன்  வாயைத்  திறந்து,  அவர்களையும்  கோராகையும்<Korah>  விழுங்கினதினாலும்,  அக்கினி  இருநூற்று  ஐம்பதுபேரைப்  பட்சித்ததினாலும்,  அந்தக்  கூட்டத்தார்  செத்து,  ஒரு  அடையாளமானார்கள்.  {Num  26:10}

 

கோராகின்<Korah>  குமாரரோ  சாகவில்லை.  {Num  26:11}

 

சிமியோனுடைய<Simeon>  குமாரரின்  குடும்பங்களாவன:  நேமுவேலின்<Nemuel>  சந்ததியான  நேமுவேலரின்<Nemuelites>  குடும்பமும்,  யாமினின்<Jamin>  சந்ததியான  யாமினியரின்<Jaminites>  குடும்பமும்,  யாகீனின்<Jachin>  சந்ததியான  யாகீனியரின்<Jachinites>  குடும்பமும்,  {Num  26:12}

 

சேராகின்<Zerah>  சந்ததியான  சேராகியரின்<Zarhites>  குடும்பமும்,  சவுலின்<Shaul>  சந்ததியான  சவுலியரின்<Shaulites>  குடும்பமுமே.  {Num  26:13}

 

இவைகளே  சிமியோனியரின்<Simeonites>  குடும்பங்கள்;  அவர்கள்  இருபத்தீராயிரத்து  இருநூறுபேர்.  {Num  26:14}

 

காத்துடைய<Gad>  குமாரரின்  குடும்பங்களாவன:  சிப்போனின்<Zephon>  சந்ததியான  சிப்போனியரின்<Zephonites>  குடும்பமும்,  ஆகியின்<Haggi>  சந்ததியான  ஆகியரின்<Haggites>  குடும்பமும்,  சூனியின்<Shuni>  சந்ததியான  சூனியரின்<Shunites>  குடும்பமும்,  {Num  26:15}

 

ஒஸ்னியின்<Ozni>  சந்ததியான  ஒஸ்னியரின்<Oznites>  குடும்பமும்,  ஏரியின்<Eri>  சந்ததியான  ஏரியரின்<Erites>  குடும்பமும்,  {Num  26:16}

 

ஆரோதின்<Arod>  சந்ததியான  ஆரோதியரின்<Arodites>  குடும்பமும்,  அரேலியின்<Areli>  சந்ததியான  அரேலியரின்<Arelites>  குடும்பமுமே.  {Num  26:17}

 

இவைகளே  காத்<Gad>  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பதினாயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  26:18}

 

யூதாவின்<Judah>  குமாரர்  ஏர்<Er>  ஓனான்<Onan>  என்பவர்கள்;  ஏரும்<Er>  ஓனானும்<Onan>  கானான்<Canaan>  தேசத்தில்  செத்தார்கள்.  {Num  26:19}

 

யூதாவுடைய<Judah>  மற்றக்  குமாரரின்  குடும்பங்களாவன:  சேலாவின்<Shelah>  சந்ததியான  சேலாவியரின்<Shelanites>  குடும்பமும்,  பாரேசின்<Pharez>  சந்ததியான  பாரேசியரின்<Pharzites>  குடும்பமும்,  சேராவின்<Zerah>  சந்ததியான  சேராவியரின்<Zarhites>  குடும்பமுமே.  {Num  26:20}

 

பாரேசுடைய<Pharez>  குமாரரின்  குடும்பங்களாவன:  எஸ்ரோனின்<Hezron>  சந்ததியான  எஸ்ரோனியரின்<Hezronites>  குடும்பமும்,  ஆமூலின்<Hamul>  சந்ததியான  ஆமூலியரின்<Hamulites>  குடும்பமுமே.  {Num  26:21}

 

இவைகளே  யூதாவின்<Judah>  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  எழுபத்தாறாயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  26:22}

 

இசக்காருடைய<Issachar>  குமாரரின்  குடும்பங்களாவன:  தோலாவின்<Tola>  சந்ததியான  தோலாவியரின்<Tolaites>  குடும்பமும்,  பூவாவின்<Pua>  சந்ததியான  பூவாவியரின்<Punites>  குடும்பமும்,  {Num  26:23}

 

யாசூபின்<Jashub>  சந்ததியான  யாசூபியரின்<Jashubites>  குடும்பமும்,  சிம்ரோனின்<Shimron>  சந்ததியான  சிம்ரோனியரின்<Shimronites>  குடும்பமுமே.  {Num  26:24}

 

இவைகளே  இசக்காரின்<Issachar>  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  அறுபத்து  நாலாயிரத்து  முந்நூறுபேர்.  {Num  26:25}

 

செபுலோனுடைய<Zebulun>  குமாரரின்  குடும்பங்களாவன:  சேரேத்தின்<Sered>  சந்ததியான  சேரேத்தியரின்<Sardites>  குடும்பமும்,  ஏலோனின்<Elon>  சந்ததியான  ஏலோனியரின்<Elonites>  குடும்பமும்,  யாலேயேலின்<Jahleel>  சந்ததியான  யாலேயேலியரின்<Jahleelites>  குடும்பமுமே.  {Num  26:26}

 

இவைகளே  செபுலோனியரின்<Zebulunites>  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  அறுபதினாயிரத்து  ஐந்நூறுபேர்.  {Num  26:27}

 

யோசேப்புடைய<Joseph>  குமாரரான  மனாசே<Manasseh>  எப்பிராயீம்<Ephraim>  என்பவர்களின்  குடும்பங்களாவன:  {Num  26:28}

 

மனாசேயினுடைய<Manasseh>  குமாரரின்  குடும்பங்கள்;  மாகீரின்<Machir>  சந்ததியான  மாகீரியரின்<Machirites>  குடும்பமும்,  மாகீர்<Machir>  பெற்ற  கிலெயாதின்<Gilead>  சந்ததியான  கிலெயாதியரின்<Gileadites>  குடும்பமும்,  {Num  26:29}

 

கிலெயாத்<Gilead>  பெற்ற  ஈயேசேரின்<Jeezer>  சந்ததியான  ஈயேசேரியரின்<Jeezerites>  குடும்பமும்,  ஏலேக்கின்<Helek>  சந்ததியான  ஏலேக்கியரின்<Helekites>  குடும்பமும்,  {Num  26:30}

 

அஸ்ரியேலின்<Asriel>  சந்ததியான  அஸ்ரியேலரின்<Asrielites>  குடும்பமும்,  சேகேமின்<Shechem>  சந்ததியான  சேகேமியரின்<Shechemites>  குடும்பமும்,  {Num  26:31}

 

செமீதாவின்<Shemida>  சந்ததியான  செமீதாவியரின்<Shemidaites>  குடும்பமும்,  ஏப்பேரின்<Hepher>  சந்ததியான  ஏப்பேரியரின்<Hepherites>  குடும்பமுமே.  {Num  26:32}

 

ஏப்பேரின்<Hepher>  குமாரனான  செலொப்பியாத்திற்குக்<Zelophehad>  குமாரர்  இல்லாமல்,  குமாரத்திகள்மாத்திரம்  இருந்தார்கள்;  இவர்கள்  நாமங்கள்  மக்லாள்<Mahlah>,  நோவாள்<Noah>,  ஒக்லாள்<Hoglah>,  மில்காள்<Milcah>,  திர்சாள்<Tirzah>  என்பவைகள்.  {Num  26:33}

 

இவைகளே  மனாசேயின்<Manasseh>  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  ஐம்பத்தீராயிரத்து  எழுநூறுபேர்.  {Num  26:34}

 

எப்பிராயீமுடைய<Ephraim>  குமாரரின்  குடும்பங்களாவன:  சுத்தெலாகின்<Shuthelah>  சந்ததியான  சுத்தெலாகியரின்<Shuthalhites>  குடும்பமும்,  பெகேரின்<Becher>  சந்ததியான  பெகேரியரின்<Bachrites>  குடும்பமும்,  தாகானின்<Tahan>  சந்ததியான  தாகானியரின்<Tahanites>  குடும்பமும்,  {Num  26:35}

 

சுத்தெலாக்<Shuthelah>  பெற்ற  ஏரானின்<Eran>  சந்ததியான  ஏரானியரின்<Eranites>  குடும்பமுமே.  {Num  26:36}

 

இவைகளே  எப்பிராயீம்<Ephraim>  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  முப்பத்தீராயிரத்து  ஐந்நூறுபேர்;  இவர்களே  யோசேப்பு<Joseph>  புத்திரரின்  குடும்பங்கள்.  {Num  26:37}

 

பென்யமீனுடைய<Benjamin>  குமாரரின்  குடும்பங்களாவன:  பேலாவின்<Bela>  சந்ததியான  பேலாவியரின்<Belaites>  குடும்பமும்,  அஸ்பேலின்<Ashbel>  சந்ததியான  அஸ்பேலியரின்<Ashbelites>  குடும்பமும்,  அகிராமின்<Ahiram>  சந்ததியான  அகிராமியரின்<Ahiramites>  குடும்பமும்,  {Num  26:38}

 

சுப்பாமின்<Shupham>  சந்ததியான  சுப்பாமியரின்<Shuphamites>  குடும்பமும்,  உப்பாமின்<Hupham>  சந்ததியான  உப்பாமியரின்<Huphamites>  குடும்பமும்,  {Num  26:39}

 

பேலா<Bela>  பெற்ற  ஆரேதின்<Ard>  சந்ததியான  ஆரேதியரின்<Ardites>  குடும்பமும்,  நாகமானின்<Naaman>  சந்ததியான  நாகமானியரின்<Naamites>  குடும்பமுமே.  {Num  26:40}

 

இவைகளே  பென்யமீன்<Benjamin>  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்தையாயிரத்து  அறுநூறுபேர்.  {Num  26:41}

 

தாணுடைய<Dan>  குமாரரின்  குடும்பங்களாவன:  சூகாமின்<Shuham>  சந்ததியான  சூகாமியரின்<Shuhamites>  குடும்பமே;  இவைகள்  தாணின்<Dan>  குடும்பம்.  {Num  26:42}

 

சூகாமியரின்<Shuhamites>  வம்சங்களில்  எண்ணப்பட்டவர்கள்  எல்லாரும்  அறுபத்து  நாலாயிரத்து  நானூறுபேர்.  {Num  26:43}

 

ஆசேருடைய<Asher>  குமாரரின்  குடும்பங்களாவன:  இம்னாவின்<Jimna>  சந்ததியான  இம்னாவியரின்<Jimnites>  குடும்பமும்,  இஸ்வியின்<Jesui>  சந்ததியான  இஸ்வியரின்<Jesuites>  குடும்பமும்,  பெரீயாவின்<Beriah>  சந்ததியான  பெரீயாவியரின்<Beriites>  குடும்பமும்,  {Num  26:44}

 

பெரீயா<Beriah>  பெற்ற  ஏபேரின்<Heber>  சந்ததியான  ஏபேரியரின்<Heberites>  குடும்பமும்,  மல்கியேலின்<Malchiel>  சந்ததியான  மல்கியேலியரின்<Malchielites>  குடும்பமுமே.  {Num  26:45}

 

ஆசேருடைய<Asher>  குமாரத்தியின்  பேர்  சாராள்<Sarah>.  {Num  26:46}

 

இவைகளே  ஆசேர்<Asher>  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  ஐம்பத்து  மூவாயிரத்து  நானூறுபேர்.  {Num  26:47}

 

நப்தலியினுடைய<Naphtali>  குமாரரின்  குடும்பங்களாவன:  யாத்சியேலின்<Jahzeel>  சந்ததியான  யாத்சியேலியரின்<Jahzeelites>  குடும்பமும்,  கூனியின்<Guni>  சந்ததியான  கூனியரின்<Gunites>  குடும்பமும்,  {Num  26:48}

 

எத்செரின்<Jezer>  சந்ததியான  எத்செரியரின்<Jezerites>  குடும்பமும்,  சில்லேமின்<Shillem>  சந்ததியான  சில்லேமியரின்<Shillemites>  குடும்பமுமே.  {Num  26:49}

 

இவைகளே  நப்தலியின்<Naphtali>  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்தையாயிரத்து  நானூறுபேர்.  {Num  26:50}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  எண்ணப்பட்டவர்கள்  ஆறுலட்சத்தோராயிரத்து  எழுநூற்று  முப்பதுபேராயிருந்தார்கள்.  {Num  26:51}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  26:52}

 

இவர்களுடைய  பேர்களின்  இலக்கத்திற்குத்தக்கதாய்  தேசம்  இவர்களுக்குச்  சுதந்தரமாகப்  பங்கிடப்படவேண்டும்.  {Num  26:53}

 

அநேகம்பேருக்கு  அதிக  சுதந்தரமும்  கொஞ்சம்பேருக்குக்  கொஞ்ச  சுதந்தரமும்  கொடுப்பாயாக;  அவர்களில்  எண்ணப்பட்ட  இலக்கத்திற்குத்தக்கதாக  அவரவர்களுக்குச்  சுதந்தரம்  கொடுக்கப்படவேண்டும்.  {Num  26:54}

 

ஆனாலும்  சீட்டுப்போட்டு,  தேசத்தைப்  பங்கிடவேண்டும்;  தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரங்களுக்குரிய  நாமங்களின்படியே  சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.  {Num  26:55}

 

அநேகம்பேர்களாயினும்  கொஞ்சம்பேர்களாயினும்  சீட்டு  விழுந்தபடியே  அவரவர்களுடைய  சுதந்தரங்கள்  பங்கிடப்படவேண்டும்  என்றார்.  {Num  26:56}

 

எண்ணப்பட்ட  லேவியரின்<Levites>  குடும்பங்களாவன:  கெர்சோனின்<Gershon>  சந்ததியான  கெர்சோனியரின்<Gershonites>  குடும்பமும்,  கோகாத்தின்<Kohath>  சந்ததியான  கோகாத்தியரின்<Kohathites>  குடும்பமும்,  மெராரியின்<Merari>  சந்ததியான  மெராரியரின்<Merarites>  குடும்பமும்;  {Num  26:57}

 

லேவியின்<Levites>  மற்றக்  குடும்பங்களாகிய  லிப்னீயரின்<Libnites>  குடும்பமும்,  எப்ரோனியரின்<Hebronites>  குடும்பமும்,  மகலியரின்<Mahlites>  குடும்பமும்,  மூசியரின்<Mushites>  குடும்பமும்,  கோராகியரின்<Korathites>  குடும்பமுமே.  கோகாத்<Kohath>  அம்ராமைப்<Amram>  பெற்றான்.  {Num  26:58}

 

அம்ராமுடைய<Amram>  மனைவிக்கு  யோகெபேத்<Jochebed>  என்று  பேர்;  அவள்  எகிப்திலே<Egypt>  லேவிக்குப்<Levi>  பிறந்த  குமாரத்தி;  அவள்  அம்ராமுக்கு<Amram>  ஆரோனையும்<Aaron>  மோசேயையும்<Moses>  அவர்கள்  சகோதரியான  மிரியாமையும்<Miriam>  பெற்றாள்.  {Num  26:59}

 

ஆரோனுக்கு<Aaron>  நாதாபும்<Nadab>  அபியூவும்<Abihu>  எலெயாசாரும்<Eleazar>  இத்தாமாரும்<Ithamar>  பிறந்தார்கள்.  {Num  26:60}

 

நாதாபும்<Nadab>  அபியூவும்<Abihu>  கர்த்தருடைய  சந்நிதியில்  அந்நிய  அக்கினியைக்  கொண்டுவந்தபோது,  செத்துப்போனார்கள்.  {Num  26:61}

 

அவர்களில்  ஒரு  மாதத்து  ஆண்பிள்ளை  முதலாக  எண்ணப்பட்டவர்கள்  இருபத்து  மூவாயிரம்பேர்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  நடுவே  அவர்களுக்குச்  சுதந்தரம்  கொடுக்கப்படாதபடியினால்,  அவர்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  இலக்கத்திற்கு  உட்படவில்லை.  {Num  26:62}

 

மோசேயும்<Moses>  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  எரிகோவின்<Jericho>  அருகேயிருக்கும்  யோர்தானுக்கு<Jordan>  இப்பாலே  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  எண்ணுகிறபோது  இருந்தவர்கள்  இவர்களே.  {Num  26:63}

 

முன்பு  மோசேயும்<Moses>  ஆசாரியனாகிய  ஆரோனும்<Aaron>  சீனாய்<Sinai>  வனாந்தரத்தில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  எண்ணும்போது  இருந்தவர்களில்  ஒருவரும்  இவர்களுக்குள்  இல்லை.  {Num  26:64}

 

வனாந்தரத்தில்  சாகவே  சாவார்கள்  என்று  கர்த்தர்  அவர்களைக்குறித்துச்  சொல்லியிருந்தார்;  எப்புன்னேயின்<Jephunneh>  குமாரனாகிய  காலேபும்<Caleb>  நூனின்<Nun>  குமாரனாகிய  யோசுவாவும்<Joshua>  தவிர,  வேறொருவரும்  அவர்களில்  மீதியாயிருக்கவில்லை.  {Num  26:65}

 

யோசேப்பின்<Joseph>  குமாரனாகிய  மனாசேயின்<Manasseh>  குடும்பங்களில்,  மனாசேயின்<Manasseh>  குமாரனாகிய  மாகீரின்<Machir>  மகனான  கிலெயாத்துக்குப்<Gilead>  பிறந்த  ஏபேருக்குப்<Hepher>  புத்திரனாயிருந்த  செலோப்பியாத்தின்<Zelophehad>  குமாரத்திகளாகிய  மக்லாள்<Mahlah>,  நோவாள்<Noah>,  ஒக்லாள்<Hoglah>,  மில்காள்<Milcah>,  திர்சாள்<Tirzah>  என்பவர்கள்  வந்து,  {Num  27:1}

 

ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  மோசேக்கும்<Moses>,  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கும்<Eleazar>,  பிரபுக்களுக்கும்,  சபையனைத்திற்கும்  முன்பாக  நின்று:  {Num  27:2}

 

எங்கள்  தகப்பன்  வனாந்தரத்தில்  மரணமடைந்தார்;  அவர்  கர்த்தருக்கு  விரோதமாகக்  கூடின  கோராகின்<Korah>  கூட்டத்தாரில்  சேர்ந்தவர்  அல்ல,  தம்முடைய  பாவத்தினாலே  மரித்தார்;  அவருக்குக்  குமாரர்  இல்லை.  {Num  27:3}

 

எங்கள்  தகப்பனுக்குக்  குமாரன்  இல்லாததினாலே,  அவருடைய  பேர்  அவருடைய  வம்சத்தில்  இல்லாமல்  அற்றுப்போகலாமா?  எங்கள்  தகப்பனுடைய  சகோதரருக்குள்ளே  எங்களுக்குக்  காணியாட்சி  கொடுக்கவேண்டும்  என்றார்கள்.  {Num  27:4}

 

மோசே<Moses>  அவர்களுடைய  நியாயத்தைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுபோனான்.  {Num  27:5}

 

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  27:6}

 

செலோப்பியாத்தின்<Zelophehad>  குமாரத்திகள்  சொல்லுகிறது  சரிதான்;  அவர்களுக்கு  அவர்கள்  தகப்பனுடைய  சகோதரருக்குள்ளே  சுதந்தரம்  கொடுக்கவேண்டும்;  அவர்கள்  தகப்பன்  பின்வைத்த  சுதந்தரத்தை  அவர்களுக்குக்  கிடைக்கும்படி  செய்வாயாக.  {Num  27:7}

 

மேலும்  நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நோக்கி:  ஒருவன்  குமாரன்  இல்லாமல்  மரித்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  குமாரத்திக்குக்  கொடுக்கவேண்டும்.  {Num  27:8}

 

அவனுக்குக்  குமாரத்தியும்  இல்லாதிருந்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  சகோதரருக்குக்  கொடுக்கவேண்டும்.  {Num  27:9}

 

அவனுக்குச்  சகோதரரும்  இல்லாதிருந்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  தகப்பனுடைய  சகோதரருக்குக்  கொடுக்கவேண்டும்.  {Num  27:10}

 

அவன்  தகப்பனுக்குச்  சகோதரர்  இல்லாதிருந்தால்,  அவனுக்குரிய  சுதந்தரத்தை  அவன்  வம்சத்திலே  அவனுக்குக்  கிட்டின  உறவின்முறையானுக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கவேண்டும்;  இது,  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  நியாயவிதிப்பிரமாணமாய்  இருக்கக்கடவது  என்று  சொல்  என்றார்.  {Num  27:11}

 

பின்பு  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  நீ  இந்த  அபாரீம்<Abarim>  மலையில்  ஏறி,  நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கொடுத்த  தேசத்தைப்  பார்.  {Num  27:12}

 

நீ  அதைப்  பார்த்தபின்பு,  உன்  சகோதரனாகிய  ஆரோன்<Aaron>  சேர்க்கப்பட்டதுபோல,  நீயும்  உன்  ஜனத்தாரிடத்தில்  சேர்க்கப்படுவாய்;  {Num  27:13}

 

சபையார்  வாக்குவாதம்பண்ணின  சீன்<Zin>  வனாந்தரத்தில்  தண்ணீருக்கடுத்த  விஷயத்தில்  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  என்னைப்  பரிசுத்தம்பண்ணவேண்டிய  நீங்கள்  என்  கட்டளையை  மீறினீர்களே  என்றார்.  இது  சீன்<Zin>  வனாந்தரத்தில்  காதேஸ்<Kadesh>  ஊர்அருகே  உண்டான  மேரிபாவின்<Meribah>  தண்ணீருக்கடுத்த  காரியமே.  {Num  27:14}

 

அப்பொழுது  மோசே<Moses>  கர்த்தரை  நோக்கி:  {Num  27:15}

 

கர்த்தருடைய  சபை  மேய்ப்பன்  இல்லாத  மந்தையைப்போல்  இராதபடிக்கு,  {Num  27:16}

 

அந்தச்  சபைக்கு  முன்பாகப்  போக்கும்  வரத்துமாய்  இருக்கும்படிக்கும்,  அவர்களைப்  போகவும்  வரவும்  பண்ணும்படிக்கும்,  மாம்சமான  யாவருடைய  ஆவிகளுக்கும்  தேவனாகிய  கர்த்தர்  ஒரு  புருஷனை  அவர்கள்மேல்  அதிகாரியாக  ஏற்படுத்தவேண்டும்  என்றான்.  {Num  27:17}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  ஆவியைப்  பெற்றிருக்கிற  புருஷனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  நூனின்<Nun>  குமாரனை  நீ  தெரிந்துகொண்டு,  அவன்மேல்  உன்  கையை  வைத்து,  {Num  27:18}

 

அவனை  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கும்<Eleazar>  சபையனைத்திற்கும்  முன்பாக  நிறுத்தி,  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  அவனுக்குக்  கட்டளைகொடுத்து,  {Num  27:19}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சபையார்  எல்லாரும்  அவனுக்குக்  கீழ்ப்படியும்படிக்கு,  உன்  கனத்தில்  கொஞ்சம்  அவனுக்குக்  கொடு.  {Num  27:20}

 

அவன்  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கு<Eleazar>  முன்பாக  நிற்கக்கடவன்;  அவனிமித்தம்  அந்த  ஆசாரியன்  கர்த்தருடைய  சந்நிதானத்தில்  வந்து,  ஊரீம்<Urim>  என்னும்  நியாயத்தினாலே  ஆலோசனை  கேட்கக்கடவன்;  அவருடைய  கட்டளையின்படியே,  அவனும்  அவனோடேகூட  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சபையார்  எல்லாரும்  போகவும்  அவருடைய  கட்டளையின்படியே  வரவும்  வேண்டியது  என்றார்.  {Num  27:21}

 

மோசே<Moses>  தனக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  யோசுவாவை<Joshua>  அழைத்துக்கொண்டுபோய்,  அவனை  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கும்<Eleazar>  சபையனைத்திற்கும்  முன்பாக  நிறுத்தி,  {Num  27:22}

 

அவன்மேல்  தன்  கைகளை  வைத்து,  கர்த்தர்  தனக்குச்  சொன்னபடியே  அவனுக்குக்  கட்டளைகொடுத்தான்.  {Num  27:23}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  28:1}

 

எனக்குச்  சுகந்தவாசனையாக,  தகனபலிகளுக்கு  அடுத்த  காணிக்கையையும்  அப்பத்தையும்,  குறித்தகாலத்தில்  எனக்குச்  செலுத்தும்படிக்குக்  கவனமாயிருக்கக்கடவீர்கள்  என்று  நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கட்டளையிடு.  {Num  28:2}

 

மேலும்  நீ  அவர்களை  நோக்கி:  நீங்கள்  கர்த்தருக்குச்  செலுத்தவேண்டிய  தகனபலி  என்னவென்றால்:  நித்திய  சர்வாங்க  தகனபலியாக  நாடோறும்  ஒரு  வயதான  பழுதற்ற  இரண்டு  ஆட்டுக்குட்டிகளைப்  பலியிடவேண்டும்.  {Num  28:3}

 

காலையில்  ஒரு  ஆட்டுக்குட்டியையும்,  மாலையில்  ஒரு  ஆட்டுக்குட்டியையும்  பலியிட்டு,  {Num  28:4}

 

போஜனபலியாக  ஒரு  மரக்காலிலே  பத்தில்  ஒரு  பங்கானதும்  இடித்துப்  பிழிந்த  காற்படி  எண்ணெயிலே  பிசைந்ததுமாகிய  மெல்லிய  மாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:5}

 

இது  சீனாய்<Sinai>  மலையிலே  கட்டளையிடப்பட்ட  நித்திய  சர்வாங்க  தகனபலி;  இது  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனைக்கான  தகனபலி.  {Num  28:6}

 

காற்படி  திராட்சரசம்  ஒரு  ஆட்டுக்குட்டிக்கு  அடுத்த  பானபலி;  பரிசுத்த  ஸ்தலத்திலே  கர்த்தருக்கு  அந்த  இரசம்  பானபலியாக  வார்க்கப்படக்கடவது.  {Num  28:7}

 

காலையின்  போஜனபலிக்கும்  அதின்  பானபலிக்கும்  ஒப்பாகவே  மாலையில்  மற்ற  ஆட்டுக்குட்டியையும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலியாகச்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:8}

 

ஓய்வுநாளிலோ  போஜனபலிக்காக  ஒரு  வயதான  பழுதற்ற  இரண்டு  ஆட்டுக்குட்டிகளையும்,  பத்தில்  இரண்டு  பங்கானதும்  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மெல்லிய  மாவையும்,  அதின்  பானபலியையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:9}

 

நித்தமும்  செலுத்தும்  சர்வாங்க  தகனபலியும்  அதின்  பானபலியும்  அன்றி  ஒவ்வொரு  ஓய்வுநாளிலும்  இந்தச்  சர்வாங்க  தகனபலியும்  செலுத்தப்படவேண்டும்.  {Num  28:10}

 

உங்கள்  மாதப்பிறப்புகளில்  நீங்கள்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாக  இரண்டு  காளைகளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:11}

 

போஜனபலியாக  ஒவ்வொரு  காளைக்குப்  பத்தில்  மூன்றுபங்கானதும்  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மெல்லிய  மாவையும்,  போஜனபலியாக  ஒரு  ஆட்டுக்கடாவுக்குப்  பத்தில்  இரண்டு  பங்கானதும்  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மாவையும்,  {Num  28:12}

 

போஜனபலியாக  ஒவ்வொரு  ஆட்டுக்குட்டிக்குப்  பத்தில்  ஒரு  பங்கானதும்  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மாவையும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:13}

 

அவைகளுக்கேற்ற  பானபலிகள்  திராட்சரசத்தில்  காளைக்கு  அரைப்படியும்,  ஆட்டுக்கடாவுக்குப்  படியில்  மூன்றில்  ஒரு  பங்கும்,  ஆட்டுக்குட்டிக்குக்  காற்படி  ரசமுமாயிருக்கவேண்டும்;  இது  வருஷ  முழுவதும்  மாதந்தோறும்  செலுத்தப்படவேண்டிய  சர்வாங்க  தகனபலி.  {Num  28:14}

 

நித்தமும்  இடப்படும்  சர்வாங்க  தகனபலியும்  அதின்  பானபலியும்  அன்றி,  பாவநிவாரணபலியாகக்  கர்த்தருக்கு  ஒரு  வெள்ளாட்டுக்கடாவும்  செலுத்தப்படவேண்டும்.  {Num  28:15}

 

முதலாம்  மாதம்  பதினாலாம்  தேதி  கர்த்தருக்கு  உரிய  பஸ்கா.  {Num  28:16}

 

அந்த  மாதம்  பதினைந்தாம்  தேதி  பண்டிகைநாள்;  ஏழுநாளளவும்  புளிப்பில்லாத  அப்பம்  புசிக்கவேண்டும்.  {Num  28:17}

 

முதலாம்  நாளிலே  பரிசுத்த  சபை  கூடுதல்  இருக்கவேண்டும்;  அன்றைத்தினம்  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது.  {Num  28:18}

 

அப்பொழுது  நீங்கள்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாக  இரண்டு  காளைகளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  28:19}

 

அவைகளுக்கேற்ற  போஜனபலியாக  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவிலே  காளைக்காகப்  பத்தில்  மூன்று  பங்கையும்,  ஆட்டுக்கடாவுக்காகப்  பத்தில்  இரண்டு  பங்கையும்,  {Num  28:20}

 

ஏழு  ஆட்டுக்குட்டிகளில்  ஒவ்வொன்றிற்காகப்  பத்தில்  ஒரு  பங்கையும்,  {Num  28:21}

 

உங்கள்  பாவநிவிர்த்திக்கென்று  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:22}

 

காலையிலே  நித்தமும்  செலுத்தும்  சர்வாங்க  தகனபலியையும்  அன்றி  இவைகளையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:23}

 

இந்தப்பிரகாரம்  ஏழுநாளளவும்  நாடோறும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலி  செலுத்தக்கடவீர்கள்;  நித்தமும்  செலுத்தப்படும்  சர்வாங்க  தகனபலியையும்  அதின்  பானபலியையும்  அன்றி,  இதையும்  செலுத்தவேண்டும்.  {Num  28:24}

 

ஏழாம்  நாளிலே  பரிசுத்த  சபைகூடுதல்  இருக்கவேண்டும்;  அதில்  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது.  {Num  28:25}

 

அந்த  வாரங்களுக்குப்பின்  நீங்கள்  கர்த்தருக்குப்  புதிய  போஜனபலியாக  முதற்கனிகளைச்  செலுத்தும்  பண்டிகை  நாளிலும்  பரிசுத்த  சபைகூடுதல்  இருக்கவேண்டும்;  அதில்  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது.  {Num  28:26}

 

அப்பொழுது  நீங்கள்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  சர்வாங்க  தகனபலியாக  இரண்டு  காளைகளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  ஒரு  வயதான  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  28:27}

 

அவைகளின்  போஜனபலியாக  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவில்  ஒரு  காளைக்காகப்  பத்தில்  மூன்று  பங்கையும்,  அந்த  ஒரு  ஆட்டுக்கடாவுக்காகப்  பத்தில்  இரண்டு  பங்கையும்,  {Num  28:28}

 

ஏழு  ஆட்டுக்குட்டிகளில்  ஒவ்வொன்றிற்காகப்  பத்தில்  ஒரு  பங்கையும்,  {Num  28:29}

 

உங்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்படிக்கு  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  28:30}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்  அதின்  போஜனபலியையும்  அதின்  பானபலியையும்  அன்றி,  இவைகளையும்  செலுத்தக்கடவீர்கள்;  இவைகள்  பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.  {Num  28:31}

 

ஏழாம்  மாதம்  முதல்தேதி  பரிசுத்த  சபைகூடும்  நாளாயிருக்கக்கடவது;  அதில்  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது;  அது  உங்களுக்கு  எக்காளமூதும்  நாளாயிருக்கவேண்டும்.  {Num  29:1}

 

அப்பொழுது  நீங்கள்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:2}

 

அவைகளுக்கு  அடுத்த  போஜனபலியாக  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவிலே  காளைக்காகப்  பத்தில்  மூன்று  பங்கையும்,  ஆட்டுக்கடாவுக்காக  இரண்டு  பங்கையும்,  {Num  29:3}

 

ஏழு  ஆட்டுக்குட்டிகளில்  ஒவ்வொன்றிற்காக  ஒரு  பங்கையும்,  {Num  29:4}

 

உங்கள்  பாவநிவிர்த்திக்கான  பலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தி,  {Num  29:5}

 

மாதப்பிறப்பின்  சர்வாங்க  தகனபலியையும்  அதின்  போஜனபலியையும்,  தினந்தோறும்  இடும்  சர்வாங்க  தகனபலியையும்  அதின்  போஜனபலியையும்,  அவைகளின்  முறைமைக்கேற்ற  பானபலிகளையும்  அன்றி,  இவைகளையும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:6}

 

இந்த  ஏழாம்  மாதம்  பத்தாம்  தேதி  உங்களுக்குப்  பரிசுத்த  சபைகூடும்  நாளாயிருக்கக்கடவது;  அதிலே  நீங்கள்  யாதொரு  வேலையும்  செய்யாமல்,  உங்கள்  ஆத்துமாக்களைத்  தாழ்மைப்படுத்தி,  {Num  29:7}

 

கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:8}

 

அவைகளின்  போஜனபலியாக  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவிலே  காளைக்காகப்  பத்தில்  மூன்று  பங்கையும்,  அந்த  ஒரு  ஆட்டுக்கடாவுக்காக  இரண்டு  பங்கையும்,  {Num  29:9}

 

ஏழு  ஆட்டுக்குட்டிகளில்  ஒவ்வொன்றிற்காகப்  பத்தில்  ஒரு  பங்கையும்,  {Num  29:10}

 

பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தி,  பாவநிவாரணபலியையும்,  நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்  அன்றி,  இவைகளையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:11}

 

ஏழாம்  மாதம்  பதினைந்தாம்  தேதி  உங்களுக்குப்  பரிசுத்த  சபைகூடும்  நாளாயிருக்கக்கடவது;  அதில்  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது;  ஏழுநாள்  கர்த்தருக்குப்  பண்டிகை  ஆசரிக்கக்கடவீர்கள்.  {Num  29:12}

 

நீங்கள்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையுள்ள  சர்வாங்க  தகனபலியாக  பதின்மூன்று  காளைகளையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  பதினான்கு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:13}

 

அவைகளின்  போஜனபலியாக  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவிலே  அந்தப்  பதின்மூன்று  காளைகளில்  ஒவ்வொன்றிற்காகப்  பத்தில்  மூன்று  பங்கையும்,  அந்த  இரண்டு  ஆட்டுக்கடாக்களில்  ஒவ்வொன்றிற்காக  இரண்டு  பங்கையும்,  {Num  29:14}

 

பதினான்கு  ஆட்டுக்குட்டிகளில்  ஒவ்வொன்றிற்காக  ஒரு  பங்கையும்,  {Num  29:15}

 

நித்திய  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அதின்  பானபலியையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:16}

 

இரண்டாம்  நாளிலே  பன்னிரண்டு  காளைகளையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  பதினான்கு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:17}

 

காளைகளும்  ஆட்டுக்கடாக்களும்  ஆட்டுக்குட்டிகளும்  இருக்கிற  இலக்கத்திற்குத்தக்கதாக  முறைமையின்படி  அவைகளின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்,  {Num  29:18}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:19}

 

மூன்றாம்  நாளிலே  பதினொரு  காளைகளையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  பதினான்கு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:20}

 

காளைகளும்  ஆட்டுக்கடாக்களும்  ஆட்டுக்குட்டிகளும்  இருக்கிற  இலக்கத்திற்குத்தக்கதாக  முறைமையின்படி  அவைகளின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்,  {Num  29:21}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அதின்  பானபலியையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:22}

 

நான்காம்  நாளிலே  பத்துக்  காளைகளையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  பதினான்கு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:23}

 

காளைகளும்  ஆட்டுக்கடாக்களும்  ஆட்டுக்குட்டிகளும்  இருக்கிற  இலக்கத்திற்குத்தக்கதாக  முறைமையின்படி  அவைகளின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்,  {Num  29:24}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அதின்  பானபலியையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:25}

 

ஐந்தாம்  நாளிலே  ஒன்பது  காளைகளையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  பதினான்கு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:26}

 

காளைகளும்  ஆட்டுக்கடாக்களும்  ஆட்டுக்குட்டிகளும்  இருக்கிற  இலக்கத்திற்குத்தக்கதாக  முறைமையின்படி  அவைகளின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்,  {Num  29:27}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அதின்  பானபலியையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:28}

 

ஆறாம்  நாளிலே  எட்டுக்  காளைகளையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  பதினான்கு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:29}

 

காளைகளும்  ஆட்டுக்கடாக்களும்  ஆட்டுக்குட்டிகளும்  இருக்கிற  இலக்கத்திற்குத்தக்கதாக  முறைமையின்படி  அவைகளின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்,  {Num  29:30}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அதின்  பானபலிகளையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:31}

 

ஏழாம்  நாளிலே  ஏழு  காளைகளையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  பதினான்கு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:32}

 

காளைகளும்  ஆட்டுக்கடாக்களும்  ஆட்டுக்குட்டிகளும்  இருக்கிற  இலக்கத்திற்குத்தக்கதாக  முறைமையின்படி  அவைகளின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்,  {Num  29:33}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அதின்  பானபலியையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:34}

 

எட்டாம்  நாள்  உங்களுக்கு  விசேஷித்த  ஆசரிப்பு  நாளாயிருக்கக்கடவது;  அதில்  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது.  {Num  29:35}

 

அப்பொழுது  நீங்கள்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையுள்ள  தகனமான  சர்வாங்க  தகனபலியாக  ஒரு  காளையையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்,  {Num  29:36}

 

காளையும்  ஆட்டுக்கடாவும்  ஆட்டுக்குட்டிகளும்  இருக்கிற  இலக்கத்திற்குத்தக்கதாக  முறைமையின்படி  அவைகளின்  போஜனபலியையும்,  அவைகளின்  பானபலிகளையும்,  {Num  29:37}

 

நித்திய  சர்வாங்க  தகனபலியையும்,  அதின்  போஜனபலியையும்,  அதின்  பானபலியையும்  அன்றி,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  செலுத்தக்கடவீர்கள்.  {Num  29:38}

 

உங்கள்  பொருத்தனைகளையும்,  உங்கள்  உற்சாகபலிகளையும்,  உங்கள்  சர்வாங்க  தகனபலிகளையும்,  உங்கள்  போஜனபலிகளையும்,  உங்கள்  பானபலிகளையும்,  உங்கள்  சமாதானபலிகளையும்  அன்றி,  நீங்கள்  உங்கள்  பண்டிகைகளிலே  கர்த்தருக்குச்  செலுத்தவேண்டியவைகள்  இவைகளே  என்று  சொல்  என்றார்.  {Num  29:39}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியெல்லாம்  மோசே<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குச்  சொன்னான்.  {Num  29:40}

 

மோசே<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  கோத்திரங்களின்  தலைவரை  நோக்கி:  கர்த்தர்  கட்டளையிடுவது  என்னவென்றால்:  {Num  30:1}

 

ஒருவன்  கர்த்தருக்கு  யாதொரு  பொருத்தனை  பண்ணினாலும்,  அல்லது  யாதொரு  காரியத்தைச்  செய்யும்படி  ஆணையிட்டுத்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,  அவன்  சொல்தவறாமல்  தன்  வாயிலிருந்து  புறப்பட்ட  வாக்கின்படியெல்லாம்  செய்யக்கடவன்.  {Num  30:2}

 

தன்  தகப்பன்  வீட்டிலிருக்கிற  ஒரு  பெண்பிள்ளை  தன்  சிறுவயதிலே  கர்த்தருக்குப்  பொருத்தனைபண்ணி  யாதொரு  காரியத்தைச்  செய்யும்படி  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,  {Num  30:3}

 

அவள்  செய்த  பொருத்தனையையும்,  அவள்  பண்ணிக்கொண்ட  நிபந்தனையையும்  அவளுடைய  தகப்பன்  கேட்டும்  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாதிருப்பானானால்,  அவள்  செய்த  எல்லாப்  பொருத்தனைகளும்  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட  நிபந்தனையும்  நிறைவேறவேண்டும்.  {Num  30:4}

 

அவள்  செய்த  பொருத்தனைகளையும்,  அவள்  செய்யும்படி  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்தின  நிபந்தனையையும்  அவளுடைய  தகப்பன்  கேட்கிற  நாளில்  அவன்  வேண்டாம்  என்று  தடுத்தால்,  அது  நிறைவேறவேண்டியதில்லை;  அவளுடைய  தகப்பன்  வேண்டாம்  என்று  தடுத்தபடியால்,  கர்த்தர்  அதை  அவளுக்கு  மன்னிப்பார்.  {Num  30:5}

 

அவள்  பொருத்தனை  பண்ணும்போதும்,  தன்  உதடுகளைத்  திறந்து  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும்,  அவளுக்குப்  புருஷன்  இருந்தால்,  {Num  30:6}

 

அப்பொழுது  அவளுடைய  புருஷன்  அதைக்  கேட்டிருந்தும்,  அதைக்  கேள்விப்படுகிற  நாளில்  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாதிருந்தால்,  அவளுடைய  பொருத்தனைகளும்  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்தின  நிபந்தனையும்  நிறைவேறவேண்டும்.  {Num  30:7}

 

அவளுடைய  புருஷன்  அதைக்  கேட்கிற  நாளில்  அவன்  வேண்டாம்  என்று  தடுத்து,  அவள்  செய்த  பொருத்தனையும்  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட  நிபந்தனையும்  செல்லாதபடி  செய்தானேயானால்,  அப்பொழுது  கர்த்தர்  அதை  அவளுக்கு  மன்னிப்பார்.  {Num  30:8}

 

ஒரு  விதவையாவது,  தள்ளப்பட்டுப்போன  ஒரு  ஸ்திரீயாவது  தன்  ஆத்துமாவை  எந்த  நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ  அந்த  நிபந்தனை  நிறைவேறவேண்டும்.  {Num  30:9}

 

அவள்  தன்  புருஷனுடைய  வீட்டில்  யாதொரு  பொருத்தனை  பண்ணினாலும்,  அல்லது  யாதொரு  காரியத்தைச்  செய்யும்படி  ஆணையிட்டுத்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,  {Num  30:10}

 

அவளுடைய  புருஷன்  அதைக்  கேட்டும்  அவளுக்கு  அதை  வேண்டாமென்று  தடுக்காமல்  மவுனமாயிருந்தால்,  அவள்  செய்த  எல்லாப்  பொருத்தனைகளும்,  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்தின  எல்லா  நிபந்தனைகளும்  நிறைவேறவேண்டும்.  {Num  30:11}

 

அவளுடைய  புருஷன்  அவைகளைக்  கேட்ட  நாளில்  அவைகளைச்  செல்லாதபடி  பண்ணினால்,  அப்பொழுது  அவள்  செய்த  பொருத்தனைகளும்,  அவள்  தன்  ஆத்துமாவையுட்படுத்தின  நிபந்தனையைக்குறித்து  அவள்  வாயிலிருந்து  புறப்பட்டதொன்றும்  நிறைவேறவேண்டியதில்லை;  அவளுடைய  புருஷன்  அவைகளைச்  செல்லாதபடி  பண்ணினதினாலே  கர்த்தர்  அதை  அவளுக்கு  மன்னிப்பார்.  {Num  30:12}

 

எந்தப்  பொருத்தனையையும்,  ஆத்துமாவைத்  தாழ்மைப்படுத்தும்படி  செய்யப்பட்ட  எந்த  ஆணையையும்,  அவளுடைய  புருஷன்  ஸ்திரப்படுத்தவுங்கூடும்,  செல்லாதபடி  பண்ணவும்  கூடும்.  {Num  30:13}

 

அவளுடைய  புருஷன்  ஒருநாளும்  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாதிருந்தானாகில்,  அவன்  அவளுடைய  எல்லாப்  பொருத்தனைகளையும்,  அவள்பேரிலிருக்கிற  அவளுடைய  எல்லா  நிபந்தனைகளையும்  ஸ்திரப்படுத்துகிறான்;  அவன்  அதைக்  கேட்ட  நாளிலே  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாமற்  போனதினால்,  அவைகளை  ஸ்திரப்படுத்துகிறான்.  {Num  30:14}

 

அவன்  அவைகளைக்  கேட்டபின்பு  செல்லாதபடி  பண்ணினால்,  அவளுடைய  அக்கிரமத்தை  அவன்  சுமப்பான்  என்றார்.  {Num  30:15}

 

புருஷனையும்  ஸ்திரீயையும்,  தகப்பனையும்  தகப்பனுடைய  வீட்டில்  சிறுவயதில்  இருக்கிற  அவன்  குமாரத்தியையும்  குறித்து,  கர்த்தர்  மோசேக்கு<Moses>  விதித்த  கட்டளைகள்  இவைகளே.  {Num  30:16}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  31:1}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  நிமித்தம்  மீதியானியரிடத்தில்<Midianites>  பழிவாங்குவாயாக;  அதன்பின்பு  உன்  ஜனத்தாரிடத்தில்  சேர்க்கப்படுவாய்  என்றார்.  {Num  31:2}

 

அப்பொழுது  மோசே<Moses>  ஜனங்களை  நோக்கி:  கர்த்தர்  நிமித்தம்  மீதியானியரிடத்தில்<Midianites>  பழிவாங்கும்பொருட்டு,  உங்களில்  அவர்கள்மேல்  யுத்தத்திற்குப்  போகத்தக்கதாக  மனிதரைப்  பிரித்தெடுங்கள்.  {Num  31:3}

 

இஸ்ரவேலுடைய<Israel>  எல்லாக்  கோத்திரங்களிலும்  ஒவ்வொரு  கோத்திரத்தில்  ஆயிரம்பேரை  யுத்தத்திற்கு  அனுப்பவேண்டும்  என்றான்.  {Num  31:4}

 

அப்படியே  இஸ்ரவேலராகிய<Israel>  அநேகம்  ஆயிரங்களில்,  ஒவ்வொரு  கோத்திரத்தில்  ஆயிரமாயிரம்  பேராகப்  பன்னீராயிரம்பேர்  யுத்தசன்னத்தராய்  நிறுத்தப்பட்டார்கள்.  {Num  31:5}

 

மோசே<Moses>  அவர்களையும்  ஆசாரியனாகிய  எலெயாசாரின்<Eleazar>  குமாரன்  பினெகாசையும்<Phinehas>  யுத்தத்திற்கு  அனுப்புகையில்,  அவன்  கையிலே  பரிசுத்த  தட்டுமுட்டுகளையும்,  தொனிக்கும்  பூரிகைகளையும்  கொடுத்து  அனுப்பினான்.  {Num  31:6}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே  அவர்கள்  மீதியானியருடன்<Midianites>  யுத்தம்பண்ணி,  புருஷர்கள்  யாவரையும்  கொன்றுபோட்டார்கள்.  {Num  31:7}

 

அவர்களைக்  கொன்றுபோட்டதும்  அன்றி,  மீதியானியரின்<Midian>  ஐந்து  ராஜாக்களாகிய  ஏவி<Evi>,  ரேக்கேம்<Rekem>,  சூர்<Zur>,  ஊர்<Hur>,  ரேபா<Reba>  என்பவர்களையும்  கொன்றுபோட்டார்கள்.  பேயோரின்<Beor>  குமாரனாகிய  பிலேயாமையும்<Balaam>  பட்டயத்தினாலே  கொன்றுபோட்டார்கள்.  {Num  31:8}

 

அன்றியும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மீதியானியரின்<Midian>  ஸ்திரீகளையும்  குழந்தைகளையும்  சிறைபிடித்து,  அவர்களுடைய  மிருகஜீவன்களாகிய  ஆடுமாடுகள்  யாவையும்,  மற்ற  ஆஸ்திகள்  யாவையும்  கொள்ளையிட்டு,  {Num  31:9}

 

அவர்கள்  குடியிருந்த  ஊர்கள்  கோட்டைகள்  யாவையும்  அக்கினியால்  சுட்டெரித்து,  {Num  31:10}

 

தாங்கள்  கொள்ளையிட்ட  பொருளையும்  தாங்கள்  பிடித்த  நரஜீவன்  மிருகஜீவன்  அனைத்தையும்  சேர்த்து,  {Num  31:11}

 

சிறைபிடிக்கப்பட்ட  மனிதரையும்,  மிருகங்களையும்,  கொள்ளையிட்ட  பொருள்களையும்  எரிகோவின்<Jericho>  அருகேயுள்ள  யோர்தானுக்கு<Jordan>  இக்கரையில்  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளிலுள்ள  பாளயத்திலிருந்த  மோசேயினிடத்துக்கும்<Moses>,  ஆசாரியனாகிய  எலெயாசாரினிடத்துக்கும்<Eleazar>,  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சபையாரிடத்துக்கும்  கொண்டுவந்தார்கள்.  {Num  31:12}

 

மோசேயும்<Moses>  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  சபையின்  பிரபுக்கள்  எல்லாரும்  அவர்களைச்  சந்திக்கப்  பாளயத்திற்கு  வெளியே  புறப்பட்டுப்போனார்கள்.  {Num  31:13}

 

அப்பொழுது  மோசே<Moses>  யுத்தத்திலிருந்து  வந்த  ஆயிரம்பேருக்குத்  தலைவரும்,  நூறுபேருக்குத்  தலைவருமாகிய  சேனாபதிகள்மேல்  கோபங்கொண்டு,  {Num  31:14}

 

அவர்களை  நோக்கி:  ஸ்திரீகள்  எல்லாரையும்  உயிரோடே  விட்டுவிட்டீர்களா?  {Num  31:15}

And  Moses  said  unto  them,  Have  ye  saved  all  the  women  alive?  {Num  31:15}

 

பேயோரின்<Peor>  சங்கதியிலே  பிலேயாமின்<Balaam>  ஆலோசனையினால்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தருக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணக்  காரணமாயிருந்தவர்கள்  இவர்கள்தானே;  அதினால்  கர்த்தரின்  சபையிலே  வாதையும்  நேரிட்டதே.  {Num  31:16}

 

ஆகையால்  குழந்தைகளில்  எல்லா  ஆண்பிள்ளைகளையும்,  புருஷசம்யோகத்தை  அறிந்த  எல்லா  ஸ்திரீகளையும்  கொன்றுபோடுங்கள்.  {Num  31:17}

 

ஸ்திரீகளில்  புருஷசம்யோகத்தை  அறியாத  எல்லாப்  பெண்பிள்ளைகளையும்  உங்களுக்காக  உயிரோடே  வையுங்கள்.  {Num  31:18}

 

பின்பு  நீங்கள்  ஏழுநாள்  பாளயத்திற்குப்  புறம்பே  தங்குங்கள்;  நரஜீவனைக்  கொன்றவர்களும்,  வெட்டுண்டவர்களைத்  தொட்டவர்களுமாகிய  நீங்கள்  யாவரும்  மூன்றாம்  நாளிலும்  ஏழாம்  நாளிலும்  உங்களையும்  உங்களால்  சிறைபிடிக்கப்பட்டவர்களையும்  சுத்திகரித்து,  {Num  31:19}

 

அந்தப்படியே  எல்லா  வஸ்திரத்தையும்,  தோலால்  செய்த  கருவிகளையும்,  வெள்ளாட்டுமயிரினால்  நெய்தவைகளையும்,  மரச்சாமான்களையும்  சுத்திகரிக்கக்கடவீர்கள்  என்றான்.  {Num  31:20}

 

ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  யுத்தத்திற்குப்  போய்வந்த  படைவீரரை  நோக்கி:  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்ட  விதிப்பிரமாணம்  என்னவென்றால்:  {Num  31:21}

 

அக்கினிக்கு  நிற்கத்தக்கவைகளாகிய  பொன்,  வெள்ளி,  வெண்கலம்,  இரும்பு,  தகரம்,  ஈயம்  ஆகிய  இவைகளெல்லாம்  சுத்தமாகும்படிக்கு,  {Num  31:22}

 

அவைகளை  அக்கினியிலே  போட்டெடுக்கக்கடவீர்கள்;  தீட்டுக்கழிக்கும்  தண்ணீராலும்  அவைகள்  சுத்திகரிக்கப்படவேண்டும்;  அக்கினிக்கு  நிற்கத்தகாதவைகளையெல்லாம்  தண்ணீரினால்  சுத்தம்பண்ணக்கடவீர்கள்.  {Num  31:23}

 

ஏழாம்  நாளில்  உங்கள்  வஸ்திரங்களைத்  தோய்க்கவேண்டும்;  அப்பொழுது  சுத்தமாயிருப்பீர்கள்;  பின்பு  நீங்கள்  பாளயத்திற்குள்  வரலாம்  என்றான்.  {Num  31:24}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  31:25}

 

பிடித்துக்கொண்டு  வரப்பட்ட  மனிதரையும்  மிருகங்களையும்  நீயும்  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  சபையினுடைய  பிதாக்களாகிய  தலைவரும்  தொகைபார்த்து,  {Num  31:26}

 

கொள்ளையிடப்பட்டதை  இரண்டு  பங்காகப்  பங்கிட்டு,  யுத்தத்திற்குப்  படையெடுத்துப்போனவர்களுக்கும்  சபையனைத்திற்கும்  கொடுங்கள்.  {Num  31:27}

 

மேலும்  யுத்தத்திற்குப்போன  படைவீரரிடத்தில்  கர்த்தருக்காக  மனிதரிலும்  மாடுகளிலும்  கழுதைகளிலும்  ஆடுகளிலும்  ஐந்நூற்றிற்கு  ஒரு  பிராணி  வீதமாக  பகுதி  வாங்கி,  {Num  31:28}

 

அவர்களுடைய  பாதிப்பங்கில்  எடுத்து,  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாக  ஆசாரியனாகிய  எலெயாசாருக்குக்<Eleazar>  கொடுக்கவேண்டும்.  {Num  31:29}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  பாதிப்பங்கிலோ  மனிதரிலும்,  மாடுகள்  கழுதைகள்  ஆடுகளாகிய  சகலவித  மிருகங்களிலும்,  ஐம்பதிற்கு  ஒன்று  வீதமாய்  வாங்கி,  அவைகளைக்  கர்த்தருடைய  வாசஸ்தலத்தின்  காவலைக்காக்கும்  லேவியருக்குக்<Levites>  கொடுக்கவேண்டும்  என்றார்.  {Num  31:30}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே,  மோசேயும்<Moses>  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  செய்தார்கள்.  {Num  31:31}

 

படைவீரர்  கொள்ளையிட்ட  பொருளில்,  ஆறுலட்சத்து  எழுபத்தையாயிரம்  ஆடுகளும்,  {Num  31:32}

 

எழுபத்தீராயிரம்  மாடுகளும்,  {Num  31:33}

 

அறுபத்தோராயிரம்  கழுதைகளும்  மீதியாயிருந்தது.  {Num  31:34}

 

புருஷசம்யோகத்தை  அறியாத  ஸ்திரீகளில்  முப்பத்தீராயிரம்பேர்  இருந்தார்கள்.  {Num  31:35}

 

யுத்தஞ்செய்யப்  போனவர்களுக்குக்  கிடைத்த  பாதிப்பங்கின்  தொகையாவது:  ஆடுகள்  மூன்றுலட்சத்து  முப்பத்தேழாயிரத்து  ஐந்நூறு.  {Num  31:36}

 

இந்த  ஆடுகளிலே  கர்த்தருக்குப்  பகுதியாக  வந்தது  அறுநூற்று  எழுபத்தைந்து.  {Num  31:37}

 

மாடுகள்  முப்பத்தாறாயிரம்;  அவைகளில்  கர்த்தருக்குப்  பகுதியாக  வந்தது  எழுபத்திரண்டு.  {Num  31:38}

 

கழுதைகள்  முப்பதினாயிரத்து  ஐந்நூறு;  அவைகளில்  கர்த்தருக்குப்  பகுதியாக  வந்தது  அறுபத்தொன்று.  {Num  31:39}

 

நரஜீவன்கள்  பதினாறாயிரம்  பேர்;  அவர்களில்  கர்த்தருக்குப்  பகுதியாக  வந்தவர்கள்  முப்பத்திரண்டுபேர்.  {Num  31:40}

 

கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  அந்தப்  பகுதியை,  மோசே<Moses>  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே,  ஆசாரியனாகிய  எலெயாசாரிடத்தில்<Eleazar>  கொடுத்தான்.  {Num  31:41}

 

யுத்தம்பண்ணின  பேர்களுக்கும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  மோசே<Moses>  பாதி  பாதியாகப்  பங்கிட்டதின்படியே  சபையாருக்கு  வந்த  பாதிப்பங்காவது:  {Num  31:42}

 

ஆடுகளில்  மூன்றுலட்சத்து  முப்பத்தேழாயிரத்து  ஐந்நூறு,  {Num  31:43}

 

மாடுகளில்  முப்பத்தாறாயிரம்,  {Num  31:44}

 

கழுதைகளில்  முப்பதினாயிரத்து  ஐந்நூறு,  {Num  31:45}

 

நரஜீவன்களில்  பதினாறாயிரம்  பேருமே.  {Num  31:46}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  பாதிப்பங்குக்கு  வந்த  இந்த  நரஜீவன்களிலும்  மிருகங்களிலும்  மோசே<Moses>  ஐம்பதுக்கு  ஒன்று  வீதமாக  எடுத்து,  அவைகளைக்  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே,  கர்த்தருடைய  வாசஸ்தலத்தின்  காவலைக்  காக்கிற  லேவியருக்குக்<Levites>  கொடுத்தான்.  {Num  31:47}

 

பின்பு  ஆயிரம்பேருக்குத்  தலைவரும்  நூறுபேருக்குத்  தலைவருமான  சேனாபதிகள்  மோசேயினிடத்தில்<Moses>  வந்து,  {Num  31:48}

 

உமது  ஊழியக்காரராகிய  நாங்கள்  எங்கள்  கையின்  கீழிருக்கிற  யுத்தமனிதரைத்  தொகைபார்த்தோம்;  அவர்களுக்குள்ளே  ஒரு  ஆளும்  குறையவில்லை.  {Num  31:49}

 

ஆகையால்,  கர்த்தருடைய  சந்நிதியில்  எங்கள்  ஆத்துமாக்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்பொருட்டு,  எங்களுக்குக்  கிடைத்த  பொற்பணிகளாகிய  பாதசரங்களையும்,  அஸ்தகடகங்களையும்,  மோதிரங்களையும்,  காதணிகளையும்,  காப்புகளையும்  கர்த்தருக்குக்  காணிக்கையாகக்  கொண்டுவந்தோம்  என்றார்கள்.  {Num  31:50}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  சகலவித  வேலைப்பாடான  பணிதிகளான  அந்தப்  பொன்னாபரணங்களை  அவர்களிடத்தில்  வாங்கினார்கள்.  {Num  31:51}

 

இப்படி  ஆயிரம்பேருக்குத்  தலைவரானவர்களாலும்  நூறுபேருக்குத்  தலைவரானவர்களாலும்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  காணிக்கையாகச்  செலுத்தப்பட்ட  பொன்  முழுவதும்  பதினாறாயிரத்து  எழுநூற்று  ஐம்பது  சேக்கல்  நிறையாயிருந்தது.  {Num  31:52}

 

யுத்தத்திற்குப்  போன  மனிதர்  ஒவ்வொருவரும்  தங்கள்  தங்களுக்காகக்  கொள்ளையிட்டிருந்தார்கள்.  {Num  31:53}

 

அந்தப்  பொன்னை  மோசேயும்<Moses>  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>  ஆயிரம்  பேருக்குத்  தலைவரானவர்களின்  கையிலும்,  நூறுபேருக்குத்  தலைவரானவர்களின்  கையிலும்  வாங்கி,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  ஞாபகக்குறியாக  ஆசரிப்புக்  கூடாரத்திலே  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்து  வைத்தார்கள்.  {Num  31:54}

 

ரூபன்<Reuben>  புத்திரருக்கும்  காத்<Gad>  புத்திரருக்கும்  ஆடுமாடுகள்  மிகவும்  திரளாயிருந்தது;  அவர்கள்  யாசேர்<Jazer>  தேசத்தையும்  கீலேயாத்<Gilead>  தேசத்தையும்  பார்த்தபோது,  அது  ஆடுமாடுகளுக்குத்  தகுந்த  இடமென்று  கண்டார்கள்.  {Num  32:1}

 

ஆகையால்  ரூபன்<Reuben>  புத்திரரும்  காத்<Gad>  புத்திரரும்  வந்து,  மோசேயையும்<Moses>  ஆசாரியனாகிய  எலெயாசாரையும்<Eleazar>  சபையின்  பிரபுக்களையும்  நோக்கி:  {Num  32:2}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  சபைக்கு  முன்பாக  முறிய  அடித்த  அதரோத்<Ataroth>,  தீபோன்<Dibon>,  யாசேர்<Jazer>,  நிம்ரா<Nimrah>,  எஸ்போன்<Heshbon>,  எலெயாலெ<Elealeh>,  சேபாம்<Shebam>,  நேபோ<Nebo>,  பெயோன்<Beon>  என்னும்  பட்டணங்களைச்  சேர்ந்த  நாடானது  ஆடுமாடுகளுக்குத்  தகுந்த  இடம்.  {Num  32:3}

 

உமது  அடியாருக்கு  ஆடுமாடுகள்  உண்டு.  {Num  32:4}

 

உம்முடைய  கண்களில்  எங்களுக்குத்  தயை  கிடைத்ததானால்,  எங்களை  யோர்தான்<Jordan>  நதிக்கு  அப்புறம்  கடந்துபோகப்  பண்ணீராக;  இந்த  நாட்டை  உமது  அடியாருக்குக்  காணியாட்சியாகக்  கொடுக்கவேண்டும்  என்றார்கள்.  {Num  32:5}

 

அப்பொழுது  மோசே<Moses>  காத்<Gad>  புத்திரரையும்  ரூபன்<Reuben>  புத்திரரையும்  நோக்கி:  உங்கள்  சகோதரர்  யுத்தத்திற்குப்  போகையில்,  நீங்கள்  இங்கே  இருப்பீர்களோ?  {Num  32:6}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கொடுத்த  தேசத்திற்கு  அவர்கள்  போகாதபடிக்கு,  நீங்கள்  அவர்கள்  இருதயத்தைத்  திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?  {Num  32:7}

 

அந்த  தேசத்தைப்  பார்ப்பதற்கு  நான்  உங்கள்  பிதாக்களைக்  காதேஸ்பர்னேயாவிலிருந்து<Kadeshbarnea>  அனுப்பினபோது  அவர்களும்  இப்படியே  செய்தார்கள்.  {Num  32:8}

 

அவர்கள்  எஸ்கோல்<Eshcol>  பள்ளத்தாக்குமட்டும்  போய்,  அத்தேசத்தைப்  பார்த்துவந்து,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தர்  தங்களுக்குக்  கொடுத்த  தேசத்திற்குப்  போகாதபடிக்கு  அவர்கள்  இருதயத்தைத்  திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.  {Num  32:9}

 

அதினால்  கர்த்தர்  அந்நாளிலே  கோபம்  மூண்டவராகி:  {Num  32:10}

 

உத்தமமாய்  என்னைப்  பின்பற்றின  கேனேசியனான<Kenezite>  எப்புன்னேயின்<Jephunneh>  குமாரன்  காலேபும்<Caleb>,  நூனின்<Nun>  குமாரன்  யோசுவாவும்<Joshua>  தவிர,  {Num  32:11}

 

எகிப்திலிருந்து<Egypt>  வந்தவர்களில்  இருபது  வயதுமுதல்  அதற்கு  மேற்பட்ட  மனிதர்களில்  ஒருவரும்  என்னை  உத்தமமாய்ப்  பின்பற்றாதபடியால்,  அவர்கள்  நான்  ஆபிரகாமுக்கும்<Abraham>  ஈசாக்குக்கும்<Isaac>  யாக்கோபுக்கும்<Jacob>  ஆணையிட்டுக்கொடுத்த  தேசத்தைக்  காண்பதில்லை  என்று  ஆணையிட்டிருக்கிறார்.  {Num  32:12}

 

அப்படியே  கர்த்தருடைய  கோபம்  இஸ்ரவேலின்மேல்<Israel>  மூண்டது;  கர்த்தருடைய  சமுகத்தில்  பொல்லாப்புச்  செய்த  அந்தச்  சந்ததியெல்லாம்  நிர்மூலமாகுமட்டும்  அவர்களை  வனாந்தரத்திலே  நாற்பது  வருஷம்  அலையப்பண்ணினார்.  {Num  32:13}

 

இப்பொழுதும்  இதோ  இஸ்ரவேலர்மேலிருக்கும்<Israel>  கர்த்தருடைய  கோபத்தின்  உக்கிரத்தை  இன்னும்  அதிகரிக்கப்பண்ணும்படி,  நீங்கள்  உங்கள்  பிதாக்களின்  ஸ்தானத்திலே  பாவமுள்ள  பெருங்கூட்டமாய்  எழும்பியிருக்கிறீர்கள்.  {Num  32:14}

 

நீங்கள்  அவரைவிட்டுப்  பின்வாங்கினால்,  அவர்  இன்னும்  அவர்களை  வனாந்தரத்தில்  இருக்கப்பண்ணுவார்;  இப்படி  நீங்கள்  இந்த  ஜனங்களையெல்லாம்  அழியப்பண்ணுவீர்கள்  என்றான்.  {Num  32:15}

 

அப்பொழுது  அவர்கள்  அவன்  சமீபத்தில்  வந்து:  எங்கள்  ஆடுமாடுகளுக்காகத்  தொழுவங்களையும்,  எங்கள்  பிள்ளைகளுக்காகப்  பட்டணங்களையும்  இங்கே  கட்டுவோம்.  {Num  32:16}

 

நாங்களோ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  அவர்கள்  ஸ்தானத்திலே  கொண்டுபோய்ச்  சேர்க்குமளவும்,  யுத்தசன்னத்தராய்த்  தீவிரத்தோடே  அவர்களுக்கு  முன்பாக  நடப்போம்;  எங்கள்  பிள்ளைகள்  இத்தேசத்துக்  குடிகளினிமித்தம்  அரணான  பட்டணங்களிலே  குடியிருக்கக்  கேட்டுக்கொள்ளுகிறோம்.  {Num  32:17}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  யாவரும்  தங்கள்  தங்கள்  சுதந்தரத்தைச்  சுதந்தரித்துக்  கொள்ளும்வரைக்கும்,  நாங்கள்  எங்கள்  வீடுகளுக்குத்  திரும்புவதில்லை.  {Num  32:18}

 

யோர்தானுக்கு<Jordan>  இப்புறத்தில்  கிழக்கே  எங்களுக்குச்  சுதந்தரம்  உண்டானபடியினாலே,  நாங்கள்  அவர்களோடேகூட  யோர்தானுக்கு<Jordan>  அக்கரையிலும்,  அதற்கு  அப்புறத்திலும்  சுதந்தரம்  வாங்கமாட்டோம்  என்றார்கள்.  {Num  32:19}

 

அப்பொழுது  மோசே<Moses>  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இந்த  வார்த்தையின்படியே  செய்து,  கர்த்தருடைய  சமுகத்தில்  யுத்தசன்னத்தராகி,  {Num  32:20}

 

கர்த்தர்  தம்முடைய  சத்துருக்களைத்  தம்முடைய  முகத்திற்கு  முன்னின்று  துரத்திவிடுமளவும்,  நீங்கள்  யாவரும்  அவருடைய  சமுகத்தில்  யுத்தசன்னத்தராய்  யோர்தானைக்<Jordan>  கடந்துபோவீர்களானால்,  {Num  32:21}

 

அத்தேசம்  கர்த்தருக்கு  முன்பாக  வசப்படுத்தப்பட்டபின்பு,  நீங்கள்  திரும்பிவந்து,  கர்த்தருக்கு  முன்பாகவும்,  இஸ்ரவேலருக்கு<Israel>  முன்பாகவும்,  குற்றமில்லாதிருப்பீர்கள்;  அதற்குப்பின்பு  இந்த  தேசம்  கர்த்தருக்கு  முன்பாக  உங்களுக்குச்  சுதந்தரமாகும்.  {Num  32:22}

 

நீங்கள்  இப்படிச்  செய்யாமற்போனால்,  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவம்  செய்தவர்களாயிருப்பீர்கள்;  உங்கள்  பாவம்  உங்களைத்  தொடர்ந்துபிடிக்கும்  என்று  நிச்சயமாய்  அறியுங்கள்.  {Num  32:23}

 

உங்கள்  பிள்ளைகளுக்காகப்  பட்டணங்களையும்,  உங்கள்  ஆடுமாடுகளுக்காகத்  தொழுவங்களையும்  கட்டி,  உங்கள்  வாய்மொழியின்படியே  செய்யுங்கள்  என்றான்.  {Num  32:24}

 

அப்பொழுது  காத்<Gad>  புத்திரரும்  ரூபன்<Reuben>  புத்திரரும்  மோசேயை<Moses>  நோக்கி:  எங்கள்  ஆண்டவன்  கட்டளையிட்டபடியே  உமது  ஊழியக்காரராகிய  நாங்கள்  செய்வோம்.  {Num  32:25}

 

எங்கள்  பிள்ளைகளும்  எங்கள்  மனைவிகளும்,  எங்கள்  ஆடுமாடு  முதலான  எங்களுடைய  எல்லா  மிருகஜீவன்களோடும்,  இங்கே  கீலேயாத்தின்<Gilead>  பட்டணங்களில்  இருப்பார்கள்.  {Num  32:26}

 

உமது  ஊழியக்காரராகிய  நாங்களோ  எங்கள்  ஆண்டவன்  சொன்னபடியே,  ஒவ்வொருவரும்  யுத்தசன்னத்தராய்,  கர்த்தருடைய  சமுகத்தில்  யுத்தத்திற்குப்  போவோம்  என்றார்கள்.  {Num  32:27}

 

அப்பொழுது  மோசே<Moses>  அவர்களுக்காக  ஆசாரியனாகிய  எலெயாசாருக்கும்<Eleazar>,  நூனின்<Nun>  குமாரனாகிய  யோசுவாவுக்கும்<Joshua>,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  கோத்திர  பிதாக்களாகிய  தலைவர்களுக்கும்  கட்டளையிட்டு:  {Num  32:28}

 

காத்<Gad>  புத்திரரும்  ரூபன்<Reuben>  புத்திரரும்  அவரவர்  கர்த்தருடைய  சமுகத்தில்  யுத்தசன்னத்தராய்  உங்களோடேகூட  யோர்தானைக்<Jordan>  கடந்துபோனால்,  அத்தேசம்  உங்களுக்கு  வசப்பட்டபின்பு,  அவர்களுக்குக்  கீலேயாத்<Gilead>  தேசத்தைச்  சுதந்தரமாகக்  கொடுக்கக்கடவீர்கள்.  {Num  32:29}

 

உங்களோடேகூட  யுத்தசன்னத்தராய்க்  கடந்து  போகாதிருந்தார்களேயானால்,  அவர்கள்  உங்கள்  நடுவே  கானான்<Canaan>  தேசத்திலே  சுதந்தரம்  அடையக்கடவர்கள்  என்றான்.  {Num  32:30}

 

காத்<Gad>  புத்திரரும்  ரூபன்<Reuben>  புத்திரரும்  பிரதியுத்தரமாக:  உம்முடைய  ஊழியக்காரராகிய  நாங்கள்  கர்த்தர்  எங்களுக்குச்  சொன்னபடியே  செய்வோம்.  {Num  32:31}

 

யோர்தானுக்கு<Jordan>  இக்கரையிலே  எங்கள்  சுதந்தரத்தின்  காணியாட்சி  எங்களுக்கு  உரியதாகும்படி  நாங்கள்  கர்த்தருடைய  சமுகத்தில்  யுத்தசன்னத்தராய்க்  கானான்தேசத்திற்குப்<Canaan>  போவோம்  என்றார்கள்.  {Num  32:32}

 

அப்பொழுது  மோசே<Moses>  காத்<Gad>  புத்திரருக்கும்,  ரூபன்<Reuben>  புத்திரருக்கும்,  யோசேப்பின்<Joseph>  குமாரனாகிய  மனாசேயின்<Manasseh>  பாதிக்  கோத்திரத்தாருக்கும்,  எமோரியருடைய<Amorites>  ராஜாவாகிய  சீகோனின்<Sihon>  ராஜ்யத்தையும்,  பாசானுடைய<Bashan>  ராஜாவாகிய  ஓகின்<Og>  ராஜ்யத்தையும்,  அவைகளைச்  சேர்ந்த  தேசங்களையும்  அவைகளின்  எல்லையைச்  சுற்றிலுமுள்ள  பட்டணங்களையும்  கொடுத்தான்.  {Num  32:33}

 

பின்பு  காத்<Gad>  சந்ததியார்  தீபோன்<Dibon>,  அதரோத்<Ataroth>  ஆரோவேர்<Aroer>,  {Num  32:34}

 

ஆத்ரோத்<Atroth>,  சோபான்<Shophan>,  யாசேர்<Jaazer>,  யொகிபேயா<Jogbehah>,  {Num  32:35}

 

பெத்நிம்ரா<Bethnimrah>,  பெத்தாரன்<Bethharan>  என்னும்  அரணான  பட்டணங்களையும்  ஆட்டுத்தொழுவங்களையும்  கட்டினார்கள்.  {Num  32:36}

 

ரூபன்<Reuben>  சந்ததியார்  எஸ்போன்<Heshbon>,  எலெயாலெ<Elealeh>,  கீரியத்தாயீம்<Kirjathaim>,  {Num  32:37}

 

பேர்கள்  மாற்றப்பட்ட  நேபோ<Nebo>,  பாகால்மெயோன்<Baalmeon>,  சீப்மா<Shibmah>  என்பவைகளைக்  கட்டி,  தாங்கள்  கட்டின  பட்டணங்களுக்கு  வேறே  பேர்களைக்  கொடுத்தார்கள்.  {Num  32:38}

 

மனாசேயின்<Manasseh>  குமாரனாகிய  மாகீரின்<Machir>  புத்திரர்  கீலேயாத்திற்குப்<Gilead>  போய்,  அதைக்கட்டிக்கொண்டு,  அதிலிருந்த  எமோரியரைத்<Amorite>  துரத்திவிட்டார்கள்.  {Num  32:39}

 

அப்பொழுது  மோசே<Moses>  கீலேயாத்தை<Gilead>  மனாசேயின்<Manasseh>  குமாரனாகிய  மாகீருக்குக்<Machir>  கொடுத்தான்;  அவர்கள்  அதிலே  குடியேறினார்கள்.  {Num  32:40}

 

மனாசேயின்<Manasseh>  குமாரனாகிய  யாவீர்<Jair>  போய்,  அவர்களுடைய  கிராமங்களைக்  கட்டிக்கொண்டு,  அவைகளுக்கு  யாவீர்<Havothjair>  என்று  பேரிட்டான்.  {Num  32:41}

 

நோபாக்<Nobah>  போய்,  கேனாத்தையும்<Kenath>  அதின்  கிராமங்களையும்  கட்டிக்கொண்டு,  அதற்குத்  தன்  நாமத்தின்படியே  நோபாக்<Nobah>  என்று  பேரிட்டான்.  {Num  32:42}

 

மோசே<Moses>  ஆரோன்<Aaron>  என்பவர்களுடைய  கையின்கீழ்த்  தங்கள்தங்கள்  சேனைகளின்படியே  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  பிரயாணங்களின்  விபரம்:  {Num  33:1}

 

மோசே<Moses>  தனக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  அவர்கள்  புறப்பட்டபிரகாரமாக  அவர்களுடைய  பிரயாணங்களை  எழுதினான்;  அவர்கள்  ஒவ்வொரு  இடங்களிலிருந்து  புறப்பட்டுப்பண்ணின  பிரயாணங்களாவன:  {Num  33:2}

 

முதலாம்  மாதத்தின்  பதினைந்தாம்  தேதியிலே  அவர்கள்  ராமசேசை<Rameses>  விட்டுப்  புறப்பட்டார்கள்;  பஸ்காவுக்கு  மறுநாளிலே,  எகிப்தியர்<Egyptians>  எல்லாரும்  பார்க்க,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பெலத்தகையுடன்  புறப்பட்டார்கள்.  {Num  33:3}

 

அப்பொழுது  எகிப்தியர்<Egyptians>  கர்த்தர்  தங்களுக்குள்ளே  சங்கரித்த  தலைச்சன்பிள்ளைகளையெல்லாம்  அடக்கம்பண்ணினார்கள்;  அவர்கள்  தேவர்களின்பேரிலும்  கர்த்தர்  நீதிசெலுத்தினார்.  {Num  33:4}

 

பின்பு  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  ராமசேசிலிருந்து<Rameses>  புறப்பட்டுப்போய்,  சுக்கோத்திலே<Succoth>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:5}

 

சுக்கோத்திலிருந்து<Succoth>  புறப்பட்டுப்போய்,  வனாந்தரத்தின்  எல்லையிலிருக்கிற  ஏத்தாமிலே<Etham>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:6}

 

ஏத்தாமிலிருந்து<Etham>  புறப்பட்டுப்போய்,  பாகால்செபோனுக்கு<Baalzephon>  எதிராக  இருக்கிற  ஈரோத்<Pihahiroth>  பள்ளத்தாக்கின்  முன்னடிக்குத்  திரும்பி,  மிக்தோலுக்கு<Migdol>  முன்பாகப்  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:7}

 

ஈரோத்தை<Pihahiroth>  விட்டுப்  புறப்பட்டு,  சமுத்திரத்தை  நடுவாகக்  கடந்து  வனாந்தரத்திற்குப்போய்,  ஏத்தாம்<Etham>  வனாந்தரத்திலே  மூன்றுநாள்  பிரயாணம்பண்ணி,  மாராவிலே<Marah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:8}

 

மாராவிலிருந்து<Marah>  புறப்பட்டு,  ஏலிமுக்குப்<Elim>  போனார்கள்;  ஏலிமிலே<Elim>  பன்னிரண்டு  நீரூற்றுகளும்  எழுபது  பேரீச்சமரங்களும்  இருந்தது;  அங்கே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:9}

 

ஏலிமிலிருந்து<Elim>  புறப்பட்டு,  சிவந்த  சமுத்திரத்தின்<Red  sea>  அருகே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:10}

 

சிவந்த  சமுத்திரத்தை<Red  sea>  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  சீன்வனாந்தரத்திலே<Sin>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:11}

 

சீன்வனாந்தரத்திலிருந்து<Sin>  புறப்பட்டுப்போய்,  தொப்காவிலே<Dophkah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:12}

 

தொப்காவிலிருந்து<Dophkah>  புறப்பட்டுப்போய்,  ஆலூசிலே<Alush>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:13}

 

ஆலூசிலிருந்து<Alush>  புறப்பட்டுப்போய்,  ரெவிதீமிலே<Rephidim>  பாளயமிறங்கினார்கள்;  அங்கே  ஜனங்களுக்குக்  குடிக்கத்  தண்ணீர்  இல்லாதிருந்தது.  {Num  33:14}

 

ரெவிதீமிலிருந்து<Rephidim>  புறப்பட்டுப்போய்,  சீனாய்<Sinai>  வனாந்தரத்திலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:15}

 

சீனாய்<Sinai>  வனாந்தரத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  கிப்ரோத்  அத்தாவிலே<Kibrothhattaavah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:16}

 

கிப்ரோத்  அத்தாவிலிருந்து<Kibrothhattaavah>  புறப்பட்டுப்போய்,  ஆஸரோத்திலே<Hazeroth>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:17}

 

ஆஸரோத்திலிருந்து<Hazeroth>  புறப்பட்டுப்போய்,  ரித்மாவிலே<Rithmah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:18}

 

ரித்மாவிலிருந்து<Rithmah>  புறப்பட்டுப்போய்,  ரிம்மோன்பேரேசிலே<Rimmonparez>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:19}

 

ரிம்மோன்பேரேசிலிருந்து<Rimmonparez>  புறப்பட்டுப்போய்,  லிப்னாவிலே<Libnah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:20}

 

லிப்னாவிலிருந்து<Libnah>  புறப்பட்டுப்போய்,  ரீசாவிலே<Rissah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:21}

 

ரீசாவிலிருந்து<Rissah>  புறப்பட்டுப்போய்,  கேலத்தாவிலே<Kehelathah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:22}

 

கேலத்தாவிலிருந்து<Kehelathah>  புறப்பட்டுப்போய்,  சாப்பேர்<Shapher>  மலையிலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:23}

 

சாப்பேர்<Shapher>  மலையிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ஆரதாவிலே<Haradah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:24}

 

ஆரதாவிலிருந்து<Haradah>  புறப்பட்டுப்போய்,  மக்கெலோத்திலே<Makheloth>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:25}

 

மக்கெலோத்திலிருந்து<Makheloth>  புறப்பட்டுப்போய்,  தாகாத்திலே<Tahath>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:26}

 

தாகாத்திலிருந்து<Tahath>  புறப்பட்டுப்போய்,  தாராகிலே<Tarah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:27}

 

தாராகிலிருந்து<Tarah>  புறப்பட்டுப்போய்,  மித்காவிலே<Mithcah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:28}

 

மித்காவிலிருந்து<Mithcah>  புறப்பட்டுப்போய்,  அஸ்மோனாவிலே<Hashmonah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:29}

 

அஸ்மோனாவிலிருந்து<Hashmonah>  புறப்பட்டுப்போய்,  மோசெரோத்திலே<Moseroth>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:30}

 

மோசெரோத்திலிருந்து<Moseroth>  புறப்பட்டுப்போய்,  பெனெயாக்கானிலே<Benejaakan>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:31}

 

பெனெயாக்கானிலிருந்து<Benejaakan>  புறப்பட்டுப்போய்,  கித்காத்<Horhagidgad>  மலையிலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:32}

 

கித்காத்<Horhagidgad>  மலையிலிருந்து  புறப்பட்டுப்போய்,  யோத்பாத்தாவிலே<Jotbathah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:33}

 

யோத்பாத்தாவிலிருந்து<Jotbathah>  புறப்பட்டுப்போய்,  எப்ரோனாவிலே<Ebronah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:34}

 

எப்ரோனாவிலிருந்து<Ebronah>  புறப்பட்டுப்போய்,  எசியோன்  கேபேரிலே<Eziongaber>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:35}

 

எசியோன்  கேபேரிலிருந்து<Eziongaber>  புறப்பட்டுப்போய்,  காதேசாகிய<Kadesh>  சீன்வனாந்தரத்திலே<Zin>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:36}

 

காதேசிலிருந்து<Kadesh>  புறப்பட்டுப்போய்,  ஏதோம்<Edom>  தேசத்தின்  எல்லையிலிருக்கிற  ஓர்<Hor>  என்னும்  மலையிலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:37}

 

அப்பொழுது  ஆசாரியனாகிய  ஆரோன்<Aaron>  கர்த்தருடைய  கட்டளையின்படியே  ஓர்<Hor>  என்னும்  மலையின்மேல்  ஏறி,  அங்கே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  நாற்பதாம்  வருஷம்  ஐந்தாம்  மாதம்  முதல்  தேதியிலே  மரணமடைந்தான்.  {Num  33:38}

 

ஆரோன்<Aaron>  ஓர்<Hor>  என்னும்  மலையிலே  மரணமடைந்தபோது,  நூற்றிருபத்துமூன்று  வயதாயிருந்தான்.  {Num  33:39}

 

அந்நாட்களிலே  கானான்<Canaan>  தேசத்தின்  தென்திசையில்  குடியிருந்த  கானானியனாகிய<Canaanite>  ஆராத்<Arad>  என்னும்  ராஜா  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  வருகிறதைக்  கேள்விப்பட்டான்.  {Num  33:40}

 

ஓர்<Hor>  என்னும்  மலையை  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  சல்மோனாவிலே<Zalmonah>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:41}

 

சல்மோனாவிலிருந்து<Zalmonah>  புறப்பட்டுப்போய்,  பூனோனிலே<Punon>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:42}

 

பூனோனிலிருந்து<Punon>  புறப்பட்டுப்போய்,  ஓபோத்திலே<Oboth>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:43}

 

ஓபோத்திலிருந்து<Oboth>  புறப்பட்டுப்போய்,  மோவாபின்<Moab>  எல்லையிலுள்ள  அபாரீமின்<Ijeabarim>  மேடுகளிலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:44}

 

அந்த  மேடுகளை  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  தீபோன்காத்திலே<Dibongad>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:45}

 

தீபோன்காத்திலிருந்து<Dibongad>  புறப்பட்டுப்போய்,  அல்மோன்  திப்லத்தாயிமிலே<Almondiblathaim>  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:46}

 

அல்மோன்  திப்லத்தாயிமிலிருந்து<Almondiblathaim>  புறப்பட்டுப்போய்,  நேபோவுக்கு<Nebo>  எதிரான  அபாரீம்<Abarim>  மலைகளிலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:47}

 

அபாரீம்<Abarim>  மலைகளிலிருந்து  புறப்பட்டுப்போய்,  எரிகோவின்<Jericho>  அருகே  யோர்தானைச்<Jordan>  சார்ந்த  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளிலே  பாளயமிறங்கினார்கள்.  {Num  33:48}

 

யோர்தானைச்<Jordan>  சார்ந்த  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளில்  அவர்கள்  பெத்யெசிமோத்தைத்<Bethjesimoth>  தொடங்கி,  ஆபேல்சித்தீம்மட்டும்<Abelshittim>  பாளயமிறங்கியிருந்தார்கள்.  {Num  33:49}

 

எரிகோவின்<Jericho>  அருகே  யோர்தானைச்<Jordan>  சார்ந்த  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளிலே  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  33:50}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  யோர்தானைக்<Jordan>  கடந்து,  கானான்தேசத்தில்<Canaan>  போய்ச்  சேரும்போது,  {Num  33:51}

 

அத்தேசத்துக்  குடிகளையெல்லாம்  உங்களுக்கு  முன்பாகத்  துரத்திவிட்டு,  அவர்களுடைய  எல்லாச்  சிலைகளையும்  வார்ப்பிக்கப்பட்ட  அவர்களுடைய  எல்லா  விக்கிரகங்களையும்  அழித்து,  அவர்கள்  மேடைகளையெல்லாம்  நிர்மூலமாக்கி,  {Num  33:52}

 

தேசத்திலுள்ளவர்களைத்  துரத்திவிட்டு,  அதிலே  குடியிருக்கக்கடவீர்கள்;  அந்தத்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  அதை  உங்களுக்குக்  கொடுத்தேன்.  {Num  33:53}

 

சீட்டுப்போட்டு,  தேசத்தை  உங்கள்  குடும்பங்களுக்குச்  சுதந்தரங்களாகப்  பங்கிட்டு,  அதிக  ஜனங்களுக்கு  அதிக  சுதந்தரமும்,  கொஞ்ச  ஜனங்களுக்குக்  கொஞ்சச்  சுதந்தரமும்  கொடுக்கக்கடவீர்கள்;  அவரவர்க்குச்  சீட்டு  விழும்  இடம்  எதுவோ,  அவ்விடம்  அவரவர்க்கு  உரியதாகும்;  உங்கள்  பிதாக்களுடைய  கோத்திரங்களின்படியே  சுதந்தரம்  பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.  {Num  33:54}

 

நீங்கள்  தேசத்தின்  குடிகளை  உங்களுக்கு  முன்பாகத்  துரத்திவிடாமலிருப்பீர்களானால்,  அப்பொழுது  அவர்களில்  நீங்கள்  மீதியாக  வைக்கிறவர்கள்  உங்கள்  கண்களில்  முள்ளுகளும்  உங்கள்  விலாக்களிலே  கூர்களுமாயிருந்து,  நீங்கள்  குடியிருக்கிற  தேசத்திலே  உங்களை  உபத்திரவப்படுத்துவார்கள்.  {Num  33:55}

 

அன்றியும்,  நான்  அவர்களுக்குச்  செய்ய  நினைத்ததை  உங்களுக்குச்  செய்வேன்  என்று  சொல்  என்றார்.  {Num  33:56}

 

கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  34:1}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குக்  கட்டளையிட்டுச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கானான்தேசம்<Canaan>  அதின்  எல்லைகள்  உட்பட  உங்களுக்குச்  சுதந்தரமாகக்  கிடைக்கப்போகிறது;  நீங்கள்  கானான்தேசத்தில்<Canaan>  சேரும்போது,  {Num  34:2}

 

உங்கள்  தென்புறம்  சீன்வனாந்தரம்<Zin>  தொடங்கி  ஏதோம்<Edom>  தேசத்தின்  ஓரமட்டும்  இருக்கும்;  கிழக்கே  இருக்கிற  உப்புக்கடலின்<salt  sea>  கடைசி  தொடங்கி  உங்கள்  தென்  எல்லையாயிருக்கும்.  {Num  34:3}

 

உங்கள்  எல்லை  தெற்கிலிருந்து  அக்கராபீம்<Akrabbim>  மேடுகளைச்  சுற்றி,  சீன்வனாந்தரம்வரையில்<Zin>  போய்,  தெற்கிலே  காதேஸ்பர்னேயாவுக்கும்<Kadeshbarnea>,  அங்கேயிருந்து  ஆத்சார்  அதாருக்கும்<Hazaraddar>,  அங்கேயிருந்து  அஸ்மோனாவுக்கும்<Azmon>  போய்,  {Num  34:4}

 

அஸ்மோனாவிலிருந்து<Azmon>  எகிப்தின்<Egypt>  நதிவரைக்கும்  சுற்றிப்போய்க்  கடலில்  முடியும்.  {Num  34:5}

 

மேற்றிசைக்குப்  பெருங்கடலே  உங்களுக்கு  எல்லை;  அதுவே  உங்களுக்கு  மேற்புறத்து  எல்லையாயிருக்கும்.  {Num  34:6}

 

உங்களுக்கு  வடதிசை  எல்லை  பெருங்கடல்  தொடங்கி,  ஓர்<Hor>  என்னும்  மலையை  உங்களுக்குக்  குறிப்பாக  வைத்து,  {Num  34:7}

 

ஓர்<Hor>  என்னும்  மலை  தொடங்கி,  ஆமாத்திற்குப்<Hamath>  போகிற  வழியைக்  குறிப்பாக  வைத்து,  அங்கேயிருந்து  அந்த  எல்லை  சேதாத்திற்குப்<Zedad>  போய்,  {Num  34:8}

 

அங்கேயிருந்து  அது  சிப்ரோனுக்குப்போய்<Ziphron>,  ஆத்சார்  ஏனானிலே<Hazarenan>  முடியும்;  அதுவே  உங்களுக்கு  வடபுறத்து  எல்லையாயிருக்கும்.  {Num  34:9}

 

உங்களுக்குக்  கீழ்த்திசை  எல்லைக்கு  ஆத்சார்  ஏனானிலிருந்து<Hazarenan>  சேப்பாமைக்<Shepham>  குறிப்பாக  வைத்து,  {Num  34:10}

 

சேப்பாமிலிருந்து<Shepham>  எல்லையானது  ஆயினுக்குக்<Ain>  கிழக்கிலுள்ள  ரிப்லாபரியந்தமும்<Riblah>,  அங்கேயிருந்து  கின்னரேத்<Chinnereth>  கடல்பரியந்தமும்  அதின்  கீழ்க்கரையோரமாய்,  {Num  34:11}

 

அங்கேயிருந்து  யோர்தான்பரியந்தமும்<Jordan>  போய்,  உப்புக்கடலில்<salt  sea>  முடியும்;  இந்தச்  சுற்றெல்லைகளையுடைய  தேசமே  உங்களுக்குரிய  தேசம்  என்று  சொல்  என்றார்.  {Num  34:12}

 

அப்பொழுது  மோசே<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நோக்கி:  ஒன்பதரைக்  கோத்திரத்தாருக்குக்  கொடுக்கும்படி  கர்த்தர்  கட்டளையிட்டதும்,  நீங்கள்  சீட்டுப்போட்டுச்  சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான  தேசம்  இதுவே.  {Num  34:13}

 

ரூபன்<Reuben>  புத்திரர்  தங்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்படியும்,  காத்<Gad>  புத்திரர்  தங்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்படியும்,  தங்கள்  சுதந்தரத்தைப்  பெற்றுக்கொண்டதும்  அல்லாமல்,  மனாசேயின்<Manasseh>  பாதிக்  கோத்திரத்தாரும்  தங்கள்  சுதந்தரத்தைப்  பெற்றுக்கொண்டார்கள்.  {Num  34:14}

 

இந்த  இரண்டரைக்  கோத்திரத்தாரும்  சூரியோதய  திசையாகிய  கிழக்கே  எரிகோவின்<Jericho>  அருகேயுள்ள  யோர்தானுக்கு<Jordan>  இப்புறத்திலே  தங்கள்  சுதந்தரத்தைப்  பெற்றுக்கொண்டார்கள்  என்றான்.  {Num  34:15}

 

மேலும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  34:16}

 

உங்களுக்கு  தேசத்தைப்  பங்கிட்டுக்கொடுக்கும்  மனிதரின்  நாமங்களாவன:  ஆசாரியனாகிய  எலெயாசாரும்<Eleazar>,  நூனின்<Nun>  குமாரனாகிய  யோசுவாவுமே<Joshua>.  {Num  34:17}

 

அன்றியும்,  தேசத்தைப்  பங்கிடும்படி  ஒவ்வொரு  கோத்திரத்தில்  ஒவ்வொரு  தலைவனையும்  தெரிந்துகொள்ளுங்கள்.  {Num  34:18}

 

அந்த  மனிதருடைய  நாமங்களாவன:  யூதா<Judah>  கோத்திரத்துக்கு  எப்புன்னேயின்<Jephunneh>  குமாரனாகிய  காலேபும்<Caleb>,  {Num  34:19}

 

சிமியோன்<Simeon>  புத்திரரின்  கோத்திரத்துக்கு  அம்மியூதின்<Ammihud>  குமாரனாகிய  சாமுவேலும்<Shemuel>,  {Num  34:20}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்துக்குக்  கிஸ்லோனின்<Chislon>  குமாரனாகிய  எலிதாதும்<Elidad>,  {Num  34:21}

 

தாண்<Dan>  புத்திரரின்  கோத்திரத்துக்கு  யொக்லியின்<Jogli>  குமாரனாகிய  புக்கி<Bukki>  என்னும்  பிரபுவும்,  {Num  34:22}

 

யோசேப்பின்<Joseph>  குமாரனாகிய  மனாசே<Manasseh>  புத்திரரின்  கோத்திரத்துக்கு  எபோதின்<Ephod>  குமாரனாகிய  அன்னியேல்<Hanniel>  என்னும்  பிரபுவும்,  {Num  34:23}

 

எப்பிராயீம்<Ephraim>  புத்திரரின்  கோத்திரத்துக்குச்  சிப்தானின்<Shiphtan>  குமாரனாகிய  கேமுவேல்<Kemuel>  என்னும்  பிரபுவும்,  {Num  34:24}

 

செபுலோன்<Zebulun>  புத்திரரின்  கோத்திரத்துக்குப்  பர்னாகின்<Parnach>  குமாரனாகிய  எலிசாப்பான்<Elizaphan>  என்னும்  பிரபுவும்,  {Num  34:25}

 

இசக்கார்<Issachar>  புத்திரரின்  கோத்திரத்துக்கு  ஆசானின்<Azzan>  குமாரனாகிய  பல்த்தியேல்<Paltiel>  என்னும்  பிரபுவும்,  {Num  34:26}

 

ஆசேர்<Asher>  புத்திரரின்  கோத்திரத்துக்குச்  செலோமியின்<Shelomi>  குமாரனாகிய  அகியூத்<Ahihud>  என்னும்  பிரபுவும்,  {Num  34:27}

 

நப்தலி<Naphtali>  புத்திரரின்  கோத்திரத்துக்கு  அம்மியூதின்<Ammihud>  குமாரனாகிய  பெதாக்கேல்<Pedahel>  என்னும்  பிரபுவுமே  என்றார்.  {Num  34:28}

 

கானான்தேசத்திலே<Canaan>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குச்  சுதந்தரங்களைப்  பங்கிட்டுக்  கொடுக்கிறதற்குக்  கர்த்தர்  கட்டளையிட்டவர்கள்  இவர்களே.  {Num  34:29}

 

எரிகோவின்<Jericho>  அருகே  யோர்தானைச்<Jordan>  சேர்ந்த  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளிலே  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  35:1}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  தங்கள்  காணியாட்சியாகிய  சுதந்தரத்திலே  லேவியருக்குக்<Levites>  குடியிருக்கும்படி  பட்டணங்களைக்  கொடுக்கவேண்டும்  என்று  அவர்களுக்குக்  கட்டளையிடு;  அந்தப்  பட்டணங்களைச்  சூழ்ந்திருக்கிற  வெளிநிலங்களையும்  லேவியருக்குக்<Levites>  கொடுக்கவேண்டும்.  {Num  35:2}

 

அந்தப்  பட்டணங்கள்  அவர்கள்  குடியிருப்பதற்கும்,  அவைகளைச்  சூழ்ந்த  வெளிநிலங்கள்  அவர்களுடைய  ஆடுமாடுகளுக்கும்,  அவர்களுடைய  ஆஸ்திகளுக்கும்,  அவர்களுடைய  சகல  மிருகஜீவன்களுக்கும்  குறிக்கப்படவேண்டும்.  {Num  35:3}

 

நீங்கள்  லேவியருக்குக்<Levites>  கொடுக்கும்  பட்டணங்களைச்  சூழ்ந்த  வெளிநிலங்கள்  பட்டணத்தின்  மதில்தொடங்கி,  வெளியிலே  சுற்றிலும்  ஆயிரமுழ  தூரத்துக்கு  எட்டவேண்டும்.  {Num  35:4}

 

பட்டணம்  மத்தியில்  இருக்க,  பட்டணத்தின்  வெளிப்புறந்தொடங்கி,  கிழக்கே  இரண்டாயிரமுழமும்,  தெற்கே  இரண்டாயிரமுழமும்,  மேற்கே  இரண்டாயிரமுழமும்,  வடக்கே  இரண்டாயிரமுழமும்  அளந்துவிடக்கடவீர்கள்;  இது  அவர்கள்  பட்டணங்களுக்கு  வெளிநிலங்களாயிருப்பதாக.  {Num  35:5}

 

நீங்கள்  லேவியருக்குக்<Levites>  கொடுக்கும்  பட்டணங்களில்  அடைக்கலத்துக்காக  ஆறு  பட்டணங்கள்  இருக்கவேண்டும்;  கொலைசெய்தவன்  அங்கே  தப்பி  ஓடிப்போகிறதற்கு  அவைகளைக்  குறிக்கக்கடவீர்கள்;  அவைகளையல்லாமல்,  நாற்பத்திரண்டு  பட்டணங்களை  அவர்களுக்குக்  கொடுக்கவேண்டும்.  {Num  35:6}

 

நீங்கள்  லேவியருக்குக்<Levites>  கொடுக்கவேண்டிய  பட்டணங்களெல்லாம்  நாற்பத்தெட்டுப்  பட்டணங்களும்  அவைகளைச்  சூழ்ந்த  வெளிநிலங்களுமே.  {Num  35:7}

 

நீங்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சுதந்தரத்திலிருந்து  அந்தப்  பட்டணங்களைப்  பிரித்துக்  கொடுக்கும்போது,  அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து  அதிகமும்,  கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து  கொஞ்சமும்  பிரித்துக்கொடுக்கவேண்டும்;  அவரவர்  சுதந்தரித்துக்கொண்ட  சுதந்தரத்தின்படியே  தங்கள்  பட்டணங்களில்  லேவியருக்குக்<Levites>  கொடுக்கக்கடவர்கள்  என்றார்.  {Num  35:8}

 

பின்னும்  கர்த்தர்  மோசேயை<Moses>  நோக்கி:  {Num  35:9}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  யோர்தானைக்<Jordan>  கடந்து,  கானான்தேசத்தில்<Canaan>  பிரவேசிக்கும்போது,  {Num  35:10}

 

கைப்பிசகாய்  ஒருவனைக்  கொன்றுபோட்டவன்  ஓடிப்போயிருக்கத்தக்க  அடைக்கலப்பட்டணங்களாகச்  சில  பட்டணங்களைக்  குறிக்கக்கடவீர்கள்.  {Num  35:11}

 

கொலைசெய்தவன்  நியாயசபையிலே  நியாயம்  விசாரிக்கப்படுமுன்  சாகாமல்,  பழிவாங்குகிறவன்  கைக்குத்  தப்பிப்போயிருக்கும்படி,  அவைகள்  உங்களுக்கு  அடைக்கலப்பட்டணங்களாய்  இருக்கக்கடவது.  {Num  35:12}

 

நீங்கள்  கொடுக்கும்  பட்டணங்களில்  ஆறு  பட்டணங்கள்  அடைக்கலத்துக்காக  இருக்கவேண்டும்.  {Num  35:13}

 

யோர்தானுக்கு<Jordan>  இப்புறத்தில்  மூன்று  பட்டணங்களையும்,  கானான்தேசத்தில்<Canaan>  மூன்று  பட்டணங்களையும்  கொடுக்கவேண்டும்;  அவைகள்  அடைக்கலப்பட்டணங்களாம்.  {Num  35:14}

 

கைப்பிசகாய்  ஒருவனைக்  கொன்றவன்  எவனோ,  அவன்  அங்கே  ஓடிப்போயிருக்கும்படிக்கு,  அந்த  ஆறு  பட்டணங்களும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  உங்கள்  நடுவே  இருக்கும்  பரதேசிக்கும்  அந்நியனுக்கும்  அடைக்கலப்பட்டணங்களாய்  இருக்கவேண்டும்.  {Num  35:15}

 

ஒருவன்  இருப்பு  ஆயுதத்தினால்  ஒருவனை  வெட்டினதினால்  அவன்  செத்துப்போனால்,  வெட்டினவன்  கொலைபாதகனாயிருக்கிறான்;  கொலைபாதகன்  கொலைசெய்யப்படவேண்டும்.  {Num  35:16}

 

ஒருவன்  ஒரு  கல்லை  எடுத்து,  சாகத்தக்கதாக  ஒருவன்மேல்  எறிகிறதினாலே  அவன்  செத்துப்போனால்,  கல்லெறிந்தவன்  கொலைபாதகனாயிருக்கிறான்,  அவன்  கொலைசெய்யப்படவேண்டும்.  {Num  35:17}

 

ஒருவன்  தன்  கையில்  ஒரு  மர  ஆயுதத்தை  எடுத்து,  சாகத்தக்கதாக  ஒருவனை  அடித்ததினால்  அவன்  செத்துப்போனால்,  அடித்தவன்  கொலைபாதகனாயிருக்கிறான்;  கொலைபாதகன்  கொலைசெய்யப்படவேண்டும்.  {Num  35:18}

 

பழிவாங்கவேண்டியவனே  கொலைபாதகனைக்  கொல்லவேண்டும்;  அவனைக்  கண்டமாத்திரத்தில்  அவனைக்  கொன்றுபோடலாம்.  {Num  35:19}

 

ஒருவன்  பகையினால்  ஒருவனை  விழத்தள்ளினதினாலாயினும்,  பதுங்கியிருந்து  அவன்  சாகத்தக்கதாய்  அவன்மேல்  ஏதாகிலும்  எறிந்ததினாலாயினும்,  {Num  35:20}

 

அவனைப்  பகைத்து,  தன்  கையினால்  அடித்ததினாலாயினும்,  அவன்  செத்துப்போனால்,  அடித்தவன்  கொலைபாதகன்;  அவன்  கொலைசெய்யப்படவேண்டும்,  பழிவாங்குகிறவன்  கொலைபாதகனைக்  கண்டமாத்திரத்தில்  கொன்றுபோடலாம்.  {Num  35:21}

 

ஒருவன்  பகையொன்றும்  இல்லாமல்  சடுதியில்  ஒருவனைத்  தள்ளி  விழப்பண்ணினதினாலாயினும்,  பதுங்கியிராமல்  யாதொரு  ஆயுதத்தை  அவன்மேல்  பட  எறிந்ததினாலாயினும்,  {Num  35:22}

 

அவனுக்குப்  பகைஞனாயிராமலும்  அவனுக்குத்  தீங்கு  செய்ய  நினையாமலும்  இருக்கையில்,  ஒருவனைக்  கொன்றுபோடத்தக்க  ஒரு  கல்லினால்  அவனைக்  காணாமல்  எறிய,  அது  அவன்மேல்  பட்டதினாலாயினும்,  அவன்  செத்துப்போனால்,  {Num  35:23}

 

அப்பொழுது  கொலைசெய்தவனையும்  பழிவாங்குகிறவனையும்  சபையார்  இந்த  நியாயப்படி  விசாரித்து,  {Num  35:24}

 

கொலைசெய்தவனைப்  பழிவாங்குகிறவனுடைய  கைக்குத்  தப்புவித்து,  அவன்  ஓடிப்போயிருந்த  அடைக்கலப்பட்டணத்துக்கு  அவனைத்  திரும்பப்  போகும்படி  செய்யக்கடவர்கள்;  பரிசுத்த  தைலத்தினால்  அபிஷேகம்  பெற்ற  பிரதான  ஆசாரியன்  மரணமடையுமட்டும்  அவன்  அதிலே  இருக்கக்கடவன்.  {Num  35:25}

 

ஆனாலும்  கொலைசெய்தவன்  தான்  ஓடிப்போயிருக்கிற  அடைக்கலப்பட்டணத்தின்  எல்லையை  விட்டு  வெளிப்பட்டிருக்கும்போது,  {Num  35:26}

 

பழிவாங்குகிறவன்  கொலைசெய்தவனை  அடைக்கலப்பட்டணத்துக்கு  வெளியே  கண்டுபிடித்துக்  கொன்றுபோட்டால்,  அவன்மேல்  இரத்தப்பழி  இல்லை.  {Num  35:27}

 

கொலைசெய்தவன்  பிரதான  ஆசாரியன்  மரணமடையுமட்டும்  அடைக்கலப்  பட்டணத்திலிருக்கவேண்டும்;  பிரதான  ஆசாரியன்  மரணமடைந்தபின்பு,  தன்  சுதந்தரமான  காணியாட்சிக்குத்  திரும்பிப்  போகலாம்.  {Num  35:28}

 

இவைகள்  உங்கள்  வாசஸ்தலங்களிலெங்கும்  உங்கள்  தலைமுறைதோறும்  உங்களுக்கு  நியாயவிதிப்  பிரமாணமாயிருக்கக்கடவது.  {Num  35:29}

 

எவனாகிலும்,  ஒரு  மனிதனைக்  கொன்றுபோட்டால்,  அப்பொழுது  சாட்சிகளுடைய  வாக்குமூலத்தின்படியே  அந்தக்  கொலைபாதகனைக்  கொலைசெய்யக்கடவர்கள்;  ஒரே  சாட்சியைக்கொண்டுமாத்திரம்  ஒரு  மனிதன்  சாகும்படி  தீர்ப்புச்செய்யலாகாது.  {Num  35:30}

 

சாகிறதற்கேற்ற  குற்றஞ்சுமந்த  கொலைபாதகனுடைய  ஜீவனுக்காக  நீங்கள்  மீட்கும்பொருளை  வாங்கக்கூடாது;  அவன்  தப்பாமல்  கொலைசெய்யப்படவேண்டும்.  {Num  35:31}

 

தன்  அடைக்கலப்பட்டணத்துக்கு  ஓடிப்போனவன்  ஆசாரியன்  மரணமடையாததற்கு  முன்னே  தன்  நாட்டிற்குத்  திரும்பிவரும்படி  நீங்கள்  அவனுக்காக  மீட்கும்பொருளை  வாங்கக்கூடாது.  {Num  35:32}

 

நீங்கள்  இருக்கும்  தேசத்தைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்காதிருங்கள்;  இரத்தம்  தேசத்தைத்  தீட்டுப்படுத்தும்;  இரத்தம்  சிந்தினவனுடைய  இரத்தத்தினாலேயொழிய,  வேறொன்றினாலும்  தேசத்திலே  சிந்துண்ட  இரத்தத்திற்காகப்  பாவநிவிர்த்தியில்லை.  {Num  35:33}

 

நீங்கள்  குடியிருக்கும்  என்  வாசஸ்தலமாகிய  தேசத்தைத்  தீட்டுப்படுத்தவேண்டாம்;  கர்த்தராகிய  நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  நடுவே  வாசம்பண்ணுகிறேன்  என்று  சொல்  என்றார்.  {Num  35:34}

 

யோசேப்பின்<Joseph>  குமாரனுடைய  வம்சத்தாரில்  மனாசேயின்<Manasseh>  குமாரனாகிய  மாகீருக்குப்<Machir>  பிறந்த  கீலேயாத்தின்<Gilead>  வம்ச  பிதாக்களான  தலைவர்  சேர்ந்து,  மோசேக்கும்<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  பிதாக்களில்  தலைவராகிய  பிரபுக்களுக்கும்  முன்பாக  வந்து,  அவர்களை  நோக்கி:  {Num  36:1}

 

சீட்டுப்போட்டு,  தேசத்தை  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கும்படி  எங்கள்  ஆண்டவனுக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டாரே;  அன்றியும்,  எங்கள்  சகோதரனாகிய  செலொப்பியாத்தின்<Zelophehad>  சுதந்தரத்தை  அவன்  குமாரத்திகளுக்குக்  கொடுக்கவேண்டும்  என்றும்  எங்கள்  ஆண்டவனுக்குக்  கர்த்தராலே  கட்டளையிடப்பட்டதே.  {Num  36:2}

 

இப்படியிருக்க,  இவர்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  வேறொரு  கோத்திரத்தின்  புத்திரருக்கு  மனைவிகளானால்,  அந்தக்  குமாரத்திகளுடைய  சுதந்தரம்  எங்கள்  பிதாக்களுடைய  சுதந்தரத்திலிருந்து  நீங்கி,  அவர்கள்  உட்படுகிற  கோத்திரத்தின்  சுதந்தரத்தோடே  சேர்ந்துபோகும்;  இப்படி  எங்கள்  சுதந்தரத்துக்குச்  சீட்டினால்  விழுந்த  பங்கில்  இராமல்  அற்றுப்போகுமே.  {Num  36:3}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  யூபிலி<jubile>  வருஷம்  வந்தாலும்,  அவர்களுடைய  சுதந்தரம்  அவர்கள்  உட்பட்டுப்போன  கோத்திரத்தின்  சுதந்தரத்தோடே  சேர்ந்துபோகும்;  இப்படி  எங்கள்  பிதாக்களுடைய  கோத்திரத்தின்  சுதந்தரத்திலிருந்து  அது  நீங்கிப்போகுமே  என்றார்கள்.  {Num  36:4}

 

அப்பொழுது  மோசே<Moses>  கர்த்தருடைய  கட்டளையின்படியே  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நோக்கி:  யோசேப்பு<Joseph>  புத்திரரின்  கோத்திரத்தார்  சொல்லுகிறது  சரியே.  {Num  36:5}

 

கர்த்தர்  செலொப்பியாத்தின்<Zelophehad>  குமாரத்திகளைக்குறித்த  காரியத்தில்  கட்டளையிடுகிறதாவது:  அவர்கள்  தங்களுக்கு  இஷ்டமானவர்களை  விவாகஞ்செய்யலாம்;  ஆனாலும்,  தங்கள்  பிதாவின்  கோத்திர  வம்சத்தாரில்மாத்திரம்  அவர்கள்  விவாகஞ்செய்யவேண்டும்.  {Num  36:6}

 

இப்படியே  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சுதந்தரம்  ஒரு  கோத்திரத்தைவிட்டு,  வேறு  கோத்திரத்துக்குப்  போகாதிருக்கும்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அவரவர்  தங்கள்தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரத்தின்  சுதந்தரத்திலே  நிலைகொண்டிருக்க  வேண்டும்.  {Num  36:7}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அவரவர்  தங்கள்தங்கள்  பிதாக்களின்  சுதந்தரத்தை  அநுபவிக்கும்படி,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  ஒரு  கோத்திரத்திலே  சுதந்தரம்  அடைந்திருக்கிற  எந்தக்  குமாரத்தியும்  தன்  பிதாவின்  கோத்திர  வம்சத்தாரில்  ஒருவனுக்கு  மனைவியாகவேண்டும்.  {Num  36:8}

 

சுதந்தரமானது  ஒரு  கோத்திரத்தைவிட்டு  வேறொரு  கோத்திரத்தைச்  சேரக்கூடாது;  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  ஒவ்வொரு  கோத்திரமும்  தன்தன்  சுதந்தரத்திலே  நிலைகொண்டிருக்கவேண்டும்  என்று  கட்டளையிட்டிருக்கிறார்  என்றான்.  {Num  36:9}

 

கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கட்டளையிட்டபடியே  செலொப்பியாத்தின்<Zelophehad>  குமாரத்திகள்  செய்தார்கள்.  {Num  36:10}

 

செலொப்பியாத்தின்<Zelophehad>  குமாரத்திகளாகிய  மக்லாள்<Mahlah>  திர்சாள்<Tirzah>  ஒக்லாள்<Hoglah>  மில்காள்<Milcah>  நோவாள்<Noah>  என்பவர்கள்  தங்கள்  பிதாவின்  சகோதரருடைய  புத்திரரை  விவாகம்பண்ணினார்கள்;  அவர்கள்  யோசேப்பின்<Joseph>  குமாரனாகிய  மனாசே<Manasseh>  புத்திரரின்  வம்சத்தாரை  விவாகம்பண்ணினபடியால்,  {Num  36:11}

 

அவர்களுடைய  சுதந்தரம்  அவர்கள்  பிதாவின்  வம்சமான  கோத்திரத்தோடே  இருந்தது.  {Num  36:12}

 

எரிகோவின்<Jericho>  அருகே  யோர்தானுக்கு<Jordan>  இப்புறத்திலுள்ள  மோவாபின்<Moab>  சமனான  வெளிகளில்  கர்த்தர்  மோசேயைக்கொண்டு<Moses>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  விதித்த  கட்டளைகளும்  நியாயங்களும்  இவைகளே.  {Num  36:13}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!