இஸ்ரவேலர்<Israel> எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய்<Sinai> வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை<Moses> நோக்கி: {Num 1:1}
நீங்கள் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். {Num 1:2}
இஸ்ரவேலிலே<Israel> இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும்<Aaron> எண்ணிப் பார்ப்பீர்களாக. {Num 1:3}
ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும். {Num 1:4}
உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன்<Reuben> கோத்திரத்தில் சேதேயூருடைய<Shedeur> குமாரன் எலிசூர்<Elizur>. {Num 1:5}
சிமியோன்<Simeon> கோத்திரத்தில் சூரிஷதாயின்<Zurishaddai> குமாரன் செலூமியேல்<Shelumiel>. {Num 1:6}
யூதா<Judah> கோத்திரத்தில் அம்மினதாபின்<Amminadab> குமாரன் நகசோன்<Nahshon>. {Num 1:7}
இசக்கார்<Issachar> கோத்திரத்தில் சூவாரின்<Zuar> குமாரன் நெதனெயேல்<Nethaneel>. {Num 1:8}
செபுலோன்<Zebulun> கோத்திரத்தில் ஏலோனின்<Helon> குமாரன் எலியாப்<Eliab>. {Num 1:9}
யோசேப்பின்<Joseph> குமாரராகிய எப்பிராயீம்<Ephraim> கோத்திரத்தில் அம்மியூதின்<Ammihud> குமாரன் எலிஷாமா<Elishama>; மனாசே<Manasseh> கோத்திரத்தில் பெதாசூரின்<Pedahzur> குமாரன் கமாலியேல்<Gamaliel>. {Num 1:10}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்தில் கீதெயோனின்<Gideoni> குமாரன் அபீதான்<Abidan>. {Num 1:11}
தாண்<Dan> கோத்திரத்தில் அம்மிஷதாயின்<Ammishaddai> குமாரன் அகியேசேர்<Ahiezer>. {Num 1:12}
ஆசேர்<Asher> கோத்திரத்தில் ஓகிரானின்<Ocran> குமாரன் பாகியேல்<Pagiel>. {Num 1:13}
காத்<Gad> கோத்திரத்தில் தேகுவேலின்<Deuel> குமாரன் எலியாசாப்<Eliasaph>. {Num 1:14}
நப்தலி<Naphtali> கோத்திரத்தில் ஏனானின்<Enan> குமாரன் அகீரா<Ahira>. {Num 1:15}
இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில்<Israel> ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார். {Num 1:16}
அப்படியே மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு, {Num 1:17}
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத் தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள். {Num 1:18}
இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே<Moses> அவர்களைச் சீனாய்<Sinai> வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான். {Num 1:19}
இஸ்ரவேலின்<Israel> மூத்தகுமாரனாகிய ரூபன்<Reuben> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, {Num 1:20}
ரூபன்<Reuben> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். {Num 1:21}
சிமியோன்<Simeon> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, {Num 1:22}
சிமியோன்<Simeon> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர். {Num 1:23}
காத்<Gad> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:24}
காத்<Gad> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர். {Num 1:25}
யூதா<Judah> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:26}
யூதா<Judah> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர். {Num 1:27}
இசக்கார்<Issachar> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:28}
இசக்கார்<Issachar> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர். {Num 1:29}
செபுலோன்<Zebulun> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:30}
செபுலோன்<Zebulun> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர். {Num 1:31}
யோசேப்பின்<Joseph> குமாரரில் எப்பிராயீம்<Ephraim> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:32}
எப்பிராயீம்<Ephraim> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். {Num 1:33}
மனாசே<Manasseh> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:34}
மனாசே<Manasseh> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். {Num 1:35}
பென்யமீன்<Benjamin> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:36}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர். {Num 1:37}
தாண்<Dan> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:38}
தாண்<Dan> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். {Num 1:39}
ஆசேர்<Asher> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:40}
ஆசேர்<Asher> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். {Num 1:41}
நப்தலி<Naphtali> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, {Num 1:42}
நப்தலி<Naphtali> கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். {Num 1:43}
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> இஸ்ரவேலுடைய<Israel> பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். {Num 1:44}
இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில்<Israel> யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும், {Num 1:45}
ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். {Num 1:46}
லேவியர்<Levites> தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை. {Num 1:47}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 1:48}
நீ லேவி<Levi> கோத்திரத்தாரைமாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும், {Num 1:49}
லேவியரைச்<Levites> சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். {Num 1:50}
வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்<Levites> அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர்<Levites> அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலைசெய்யப்படக்கடவன். {Num 1:51}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள். {Num 1:52}
இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர்<Levites> சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர்<Levites> சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். {Num 1:53}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல்<Israel> புத்திரர் செய்தார்கள். {Num 1:54}
கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> நோக்கி: {Num 2:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். {Num 2:2}
யூதாவின்<Judah> பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின்<Amminadab> குமாரனாகிய நகசோன்<Nahshon> யூதா<Judah> சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:3}
எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர். {Num 2:4}
அவன் அருகே இசக்கார்<Issachar> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின்<Zuar> குமாரன் நெதனெயேல்<Nethaneel> இசக்கார்<Issachar> சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:5}
எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர். {Num 2:6}
அவன் அருகே செபுலோன்<Zebulun> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின்<Helon> குமாரனாகிய எலியாப்<Eliab> செபுலோன்<Zebulun> சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:7}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர். {Num 2:8}
எண்ணப்பட்ட யூதாவின்<Judah> பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள். {Num 2:9}
ரூபனுடைய<Reuben> பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின்<Shedeur> குமாரனாகிய எலிசூர்<Elizur> ரூபன்<Reuben> சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:10}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். {Num 2:11}
அவன் அருகே சிமியோன்<Simeon> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின்<Zurishaddai> குமாரனாகிய செலூமியேல்<Shelumiel> சிமியோன்<Simeon> சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:12}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர். {Num 2:13}
அவன் அருகே காத்<Gad> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின்<Reuel> குமாரனாகிய எலியாசாப்<Eliasaph> காத்<Gad> சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:14}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர். {Num 2:15}
எண்ணப்பட்ட ரூபனின்<Reuben> பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள். {Num 2:16}
பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின்<Levites> சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள். {Num 2:17}
எப்பிராயீமுடைய<Ephraim> பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும்; அம்மியூதின்<Ammihud> குமாரனாகிய எலிஷாமா<Elishama> எப்பிராயீமின்<Ephraim> சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:18}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். {Num 2:19}
அவன் அருகே மனாசே<Manasseh> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின்<Pedahzur> குமாரனாகிய கமாலியேல்<Gamaliel> மனாசே<Manasseh> சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:20}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். {Num 2:21}
அவன் அருகே பென்யமீன்<Benjamin> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின்<Gideoni> குமாரனாகிய அபீதான்<Abidan> பென்யமீன்<Benjamin> சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:22}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர். {Num 2:23}
எண்ணப்பட்ட எப்பிராயீமின்<Ephraim> பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள். {Num 2:24}
தாணுடைய<Dan> பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின்<Ammishaddai> குமாரனாகிய அகியேசேர்<Ahiezer> தாண்<Dan> வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:25}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். {Num 2:26}
அவன் அருகே ஆசேர்<Asher> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின்<Ocran> குமாரனாகிய பாகியேல்<Pagiel> ஆசேர்<Asher> சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:27}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். {Num 2:28}
அவன் அருகே நப்தலி<Naphtali> கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின்<Enan> குமாரனாகிய அகீரா<Ahira> நப்தலி<Naphtali> சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். {Num 2:29}
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். {Num 2:30}
எண்ணப்பட்ட தாணின்<Dan> பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள். {Num 2:31}
இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல்<Israel> புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். {Num 2:32}
லேவியரோ<Levites>, கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடி, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை. {Num 2:33}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல்<Israel> புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள். {Num 2:34}
சீனாய்<Sinai> மலையில் கர்த்தர் மோசேயோடே<Moses> பேசின நாளிலே, ஆரோன்<Aaron> மோசே<Moses> என்பவர்களுடைய வம்சவரலாறாவது: {Num 3:1}
ஆரோனுடைய<Aaron> குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப்<Nadab>, அபியூ<Abihu>, எலெயாசார்<Eleazar>, இத்தாமார்<Ithamar> என்பவர்களே. {Num 3:2}
ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய<Aaron> குமாரரின் நாமங்கள் இவைகளே. {Num 3:3}
நாதாபும்<Nadab> அபியூவும்<Abihu> சீனாய்<Sinai> வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும்<Eleazar> இத்தாமாருமே<Ithamar> தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு<Aaron> முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள். {Num 3:4}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 3:5}
நீ லேவிகோத்திரத்தாரைச்<Levi> சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப்<Aaron> பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து. {Num 3:6}
அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள். {Num 3:7}
அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல்<Israel> புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள். {Num 3:8}
ஆகையால் லேவியரை<Levites> ஆரோனிடத்திலும்<Aaron> அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல்<Israel> புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். {Num 3:9}
ஆரோனையும்<Aaron> அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார். {Num 3:10}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 3:11}
இஸ்ரவேல்<Israel> புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை<Levites> இஸ்ரவேல்<Israel> புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள். {Num 3:12}
முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில்<Egypt> முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில்<Israel> மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார். {Num 3:13}
பின்னும் கர்த்தர் சீனாய்<Sinai> வனாந்தரத்தில் மோசேயை<Moses> நோக்கி: {Num 3:14}
லேவிபுத்திரரை<Levi> அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார். {Num 3:15}
அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே<Moses> தனக்குக் கற்பிக்கப்பட்டபிரகாரம் அவர்களை எண்ணினான். {Num 3:16}
லேவியின்<Levi> குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன்<Gershon>, கோகாத்<Kohath>, மெராரி<Merari> என்பவர்கள். {Num 3:17}
தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய<Gershon> குமாரரின் நாமங்கள், லிப்னீ<Libni>, சீமேயி<Shimei> என்பவைகள். {Num 3:18}
தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய<Kohath> குமாரர், அம்ராம்<Amram>, இத்சேயார்<Izehar>, எப்ரோன்<Hebron>, ஊசியேல்<Uzziel> என்பவர்கள். {Num 3:19}
தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய<Merari> குமாரர், மகேலி<Mahli>, மூசி<Mushi> என்பவர்கள்; இவர்களே லேவியருடைய<Levites> பிதாக்களின் வம்சத்தார். {Num 3:20}
கெர்சோனின்<Gershon> வழியாய் லிப்னீயரின்<Libnites> வம்சமும் சீமேயியர்<Shimites> வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின்<Gershonites> வம்சங்கள். {Num 3:21}
அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள். {Num 3:22}
கெர்சோனியரின்<Gershonites> வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும். {Num 3:23}
கெர்சோனியருடைய<Gershonites> தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின்<Lael> குமாரனாகிய எலியாசாப்<Eliasaph> என்பவன். {Num 3:24}
ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன்<Gershon> புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவும், {Num 3:25}
வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே. {Num 3:26}
கோகாத்தின்<Kohath> வழியாய் அம்ராமியரின்<Amramites> வம்சமும் இத்சேயாரின்<Izeharites> வம்சமும் எப்ரோனியரின்<Hebronites> வம்சமும் ஊசியேலரின்<Uzzielites> வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின்<Kohathites> வம்சங்கள். {Num 3:27}
ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள். {Num 3:28}
கோகாத்<Kohath> புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும். {Num 3:29}
அவர்களின் தலைவன், ஊசியேலின்<Uzziel> குமாரனாகிய எல்சாபான்<Elizaphan>. {Num 3:30}
அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே. {Num 3:31}
ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரன் எலெயாசார்<Eleazar> என்பவன் லேவியருடைய<Levites> தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும். {Num 3:32}
மெராரியின்<Merari> வழியாய் மகேலியரின்<Mahlites> வம்சமும் மூசியரின்<Mushites> வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின்<Merari> வம்சங்கள். {Num 3:33}
அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள். {Num 3:34}
அபியாயேலின்<Abihail> குமாரனாகிய சூரியேல்<Zuriel> என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும். {Num 3:35}
அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும், {Num 3:36}
சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே. {Num 3:37}
ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல்<Israel> புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன். {Num 3:38}
மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron>, கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில்<Levites> ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள். {Num 3:39}
அதன்பின்பு கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி, {Num 3:40}
இஸ்ரவேல்<Israel> புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும்<Levites>, இஸ்ரவேல்<Israel> புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின்<Levites> மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார். {Num 3:41}
அப்பொழுது மோசே<Moses>, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல்<Israel> புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான். {Num 3:42}
ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்றுபேராயிருந்தார்கள். {Num 3:43}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 3:44}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும்<Levites>, அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப் பதிலாக லேவியரின்<Levites> மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர்<Levites> என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர். {Num 3:45}
இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின்<Levites> தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும், {Num 3:46}
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா. {Num 3:47}
லேவியருடைய<Levites> தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும்<Aaron> அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார். {Num 3:48}
அப்படியே லேவியரால்<Levites> மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில், {Num 3:49}
ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி, {Num 3:50}
கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும்<Aaron> அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான். {Num 3:51}
கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> நோக்கி: {Num 4:1}
லேவியின்<Levi> புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத்<Kohath> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில், {Num 4:2}
ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக. {Num 4:3}
ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத்<Kohath> புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது. {Num 4:4}
பாளயம் புறப்படும்போது, ஆரோனும்<Aaron> அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி, {Num 4:5}
அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி, {Num 4:6}
சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத் துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது. {Num 4:7}
அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி, {Num 4:8}
இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி, {Num 4:9}
அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி, {Num 4:10}
பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி, {Num 4:11}
பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி, {Num 4:12}
பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து, {Num 4:13}
அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள் துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள். {Num 4:14}
பாளயம் புறப்படும்போது, ஆரோனும்<Aaron> அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத்<Kohath> புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத்<Kohath> புத்திரர் சுமக்கும் சுமை இதுவே. {Num 4:15}
ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரன் எலெயாசார்<Eleazar>, விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார். {Num 4:16}
கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> நோக்கி: {Num 4:17}
லேவியருக்குள்ளே<Levites> கோகாத்<Kohathites> வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள். {Num 4:18}
அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது: {Num 4:19}
ஆரோனும்<Aaron> அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார். {Num 4:20}
பின்னும், கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 4:21}
கெர்சோன்<Gershon> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க, {Num 4:22}
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக. {Num 4:23}
பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன்<Gershonites> வம்சத்தாரின் வேலையாவது: {Num 4:24}
அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும், {Num 4:25}
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள். {Num 4:26}
கெர்சோன்<Gershonites> புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும்<Aaron> அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள். {Num 4:27}
கெர்சோன்<Gershon> புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரன் இத்தாமாருடைய<Ithamar> கைக்குள் இருக்கவேண்டும். {Num 4:28}
மெராரி<Merari> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க, {Num 4:29}
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய். {Num 4:30}
ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், {Num 4:31}
சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள். {Num 4:32}
ஆசாரியனாகிய ஆரோனுடைய<Aaron> குமாரனான இத்தாமாருடைய<Ithamar> கைக்குள்ளாக மெராரி<Merari> புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார். {Num 4:33}
அப்படியே மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> சபையின் பிரபுக்களும் கோகாத்<Kohathites> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, {Num 4:34}
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள். {Num 4:35}
அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர். {Num 4:36}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே, மோசேயினாலும்<Moses> ஆரோனாலும்<Aaron> கோகாத்<Kohathites> வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. {Num 4:37}
கெர்சோன்<Gershon> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, {Num 4:38}
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். {Num 4:39}
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர். {Num 4:40}
மோசேயினாலும்<Moses> ஆரோனாலும்<Aaron> கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன்<Gershon> புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. {Num 4:41}
மெராரி<Merari> புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, {Num 4:42}
முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். {Num 4:43}
அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர். {Num 4:44}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே மோசேயினாலும்<Moses> ஆரோனாலும்<Aaron> மெராரி<Merari> புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. {Num 4:45}
லேவியருடைய<Levites> பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும், {Num 4:46}
மோசேயினாலும்<Moses> ஆரோனாலும்<Aaron> இஸ்ரவேலின்<Israel> பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லாரும், {Num 4:47}
எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள். {Num 4:48}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால்<Moses> எண்ணப்பட்டார்கள்; இவ்விதமாய், கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள். {Num 4:49}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 5:1}
குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கட்டளையிடு. {Num 5:2}
ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்பண்ணுகிற தங்கள் பாளயங்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிடக்கடவீர்கள் என்றார். {Num 5:3}
கர்த்தர் மோசேக்குச்<Moses> சொன்னபடியே, இஸ்ரவேல்<Israel> புத்திரர் செய்து, அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிட்டார்கள். {Num 5:4}
மேலும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 5:5}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், {Num 5:6}
அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க்கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தக்கடவன். {Num 5:7}
அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும். {Num 5:8}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் ஏறெடுத்துப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாயிருக்கும். {Num 5:9}
ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார். {Num 5:10}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 5:11}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி, {Num 5:12}
ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும், {Num 5:13}
எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், {Num 5:14}
அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக. {Num 5:15}
ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, {Num 5:16}
ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு, {Num 5:17}
ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும். {Num 5:18}
பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து: ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய். {Num 5:19}
உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால், {Num 5:20}
கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங் குறியுமாக வைப்பாராக. {Num 5:21}
சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள். {Num 5:22}
பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான ஜலத்தினால் கழுவிப்போட்டு, {Num 5:23}
சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும். {Num 5:24}
பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி, {Num 5:25}
ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன். {Num 5:26}
அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறுவீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள். {Num 5:27}
அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள். {Num 5:28}
ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும், {Num 5:29}
புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன். {Num 5:30}
புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார். {Num 5:31}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 6:1}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய<Nazarene//Nazarite> விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால், {Num 6:2}
அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும், {Num 6:3}
தான் நசரேயனாயிருக்கும்<Nazarene//Nazarite> நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன். {Num 6:4}
அவன் நசரேய<Nazarene//Nazarite> விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன். {Num 6:5}
அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. {Num 6:6}
அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய<Nazarene//Nazarite> விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. {Num 6:7}
அவன் நசரேயனாயிருக்கும்<Nazarene//Nazarite> நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான். {Num 6:8}
அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய<Nazarene//Nazarite> விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு, {Num 6:9}
எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன். {Num 6:10}
அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக. {Num 6:11}
அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய<Nazarene//Nazarite> விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும். {Num 6:12}
நசரேயனுக்குரிய<Nazarene//Nazarite> பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து, {Num 6:13}
சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும், {Num 6:14}
ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன். {Num 6:15}
அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, {Num 6:16}
ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக. {Num 6:17}
அப்பொழுது நசரேயன்<Nazarene//Nazarite> ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன். {Num 6:18}
நசரேயன்<Nazarene//Nazarite> பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து, {Num 6:19}
அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன்<Nazarene//Nazarite> திராட்சரசம் குடிக்கலாம். {Num 6:20}
பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும்<Nazarene//Nazarite>, அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய<Nazarene//Nazarite> விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார். {Num 6:21}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 6:22}
நீ ஆரோனோடும்<Aaron> அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல்<Israel> புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது: {Num 6:23}
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். {Num 6:24}
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். {Num 6:25}
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. {Num 6:26}
இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல்<Israel> புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார். {Num 6:27}
மோசே<Moses> வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில், {Num 7:1}
தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின்<Israel> பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். {Num 7:2}
தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும், இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். {Num 7:3}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 7:4}
நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு<Levites> அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார். {Num 7:5}
அப்பொழுது மோசே<Moses> அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக்<Levites> கொடுத்தான். {Num 7:6}
இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன்<Gershon> புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். {Num 7:7}
நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின்<Merari> புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரர் இத்தாமாருடைய<Ithamar> கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். {Num 7:8}
கோகாத்தின்<Kohath> புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது. {Num 7:9}
பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். {Num 7:10}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார். {Num 7:11}
அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா<Judah> கோத்திரத்தானாகிய அம்மினதாபின்<Amminadab> குமாரன் நகசோன்<Nahshon>. {Num 7:12}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:13}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:14}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:15}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:16}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின்<Amminadab> குமாரனாகிய நகசோனின்<Nahshon> காணிக்கை. {Num 7:17}
இரண்டாம் நாளில் இசக்காரின்<Issachar> பிரபுவாகிய சூவாரின்<Zuar> குமாரன் நெதனெயேல்<Nethaneel> காணிக்கை செலுத்தினான். {Num 7:18}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:19}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:20}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:21}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:22}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின்<Zuar> குமாரனாகிய நெதனெயேலின்<Nethaneel> காணிக்கை. {Num 7:23}
மூன்றாம் நாளில் ஏலோனின்<Helon> குமாரனாகிய எலியாப்<Eliab> என்னும் செபுலோன்<Zebulun> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:24}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:25}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:26}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:27}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:28}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின்<Helon> குமாரனாகிய எலியாபின்<Eliab> காணிக்கை. {Num 7:29}
நான்காம் நாளில் சேதேயூரின்<Shedeur> குமாரனாகிய எலிசூர்<Elizur> என்னும் ரூபன்<Reuben> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:30}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:31}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:32}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:33}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:34}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின்<Shedeur> குமாரனாகிய எலிசூரின்<Elizur> காணிக்கை. {Num 7:35}
ஐந்தாம் நாளில் சூரிஷதாயின்<Zurishaddai> குமாரனாகிய செலூமியேல்<Shelumiel> என்னும் சிமியோன்<Simeon> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:36}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:37}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:38}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:39}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:40}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின்<Zurishaddai> குமாரனாகிய செலூமியேலின்<Shelumiel> காணிக்கை. {Num 7:41}
ஆறாம் நாளில் தேகுவேலின்<Deuel> குமாரனாகிய எலியாசாப்<Eliasaph> என்னும் காத்<Gad> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:42}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:43}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:44}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:45}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:46}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின்<Deuel> குமாரனாகிய எலியாசாபின்<Eliasaph> காணிக்கை. {Num 7:47}
ஏழாம் நாளில் அம்மியூதின்<Ammihud> குமாரனாகிய எலிஷாமா<Elishama> என்னும் எப்பிராயீம்<Ephraim> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:48}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:49}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:50}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:51}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:52}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின்<Ammihud> குமாரனாகிய எலிஷாமாவின்<Elishama> காணிக்கை. {Num 7:53}
எட்டாம் நாளில் பெதாசூரின்<Pedahzur> குமாரனாகிய கமாலியேல்<Gamaliel> என்னும் மனாசே<Manasseh> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:54}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:55}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:56}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:57}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:58}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின்<Pedahzur> குமாரனாகிய கமாலியேலின்<Gamaliel> காணிக்கை. {Num 7:59}
ஒன்பதாம் நாளில் கீதெயோனின்<Gideoni> குமாரனாகிய அபீதான்<Abidan> என்னும் பென்யமீன்<Benjamin> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:60}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:61}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:62}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:63}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:64}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின்<Gideoni> குமாரனாகிய அபீதானின்<Abidan> காணிக்கை. {Num 7:65}
பத்தாம் நாளில் அம்மிஷதாயின்<Ammishaddai> குமாரனாகிய அகியேசேர்<Ahiezer> என்னும் தாண்<Dan> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:66}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:67}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:68}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:69}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:70}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின்<Ammishaddai> குமாரனாகிய அகியேசேரின்<Ahiezer> காணிக்கை. {Num 7:71}
பதினோராம் நாளில் ஓகிரானின்<Ocran> குமாரனாகிய பாகியேல்<Pagiel> என்னும் ஆசேர்<Asher> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:72}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:73}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:74}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:75}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:76}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின்<Ocran> குமாரனாகிய பாகியேலின்<Pagiel> காணிக்கை. {Num 7:77}
பன்னிரண்டாம் நாளில் ஏனானின்<Enan> குமாரனாகிய அகீரா<Ahira> என்னும் நப்தலி<Naphtali> புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். {Num 7:78}
அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், {Num 7:79}
தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், {Num 7:80}
சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், {Num 7:81}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், {Num 7:82}
சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின்<Enan> குமாரனாகிய அகீராவின்<Ahira> காணிக்கை. {Num 7:83}
பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல்<Israel> பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு. {Num 7:84}
ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது. {Num 7:85}
தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது. {Num 7:86}
சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு. {Num 7:87}
சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே. {Num 7:88}
மோசே<Moses> தேவனோடே பேசும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார். {Num 7:89}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 8:1}
நீ ஆரோனோடே<Aaron> சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார். {Num 8:2}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபிரகாரம் ஆரோன்<Aaron> செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான். {Num 8:3}
இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோசேக்குக்<Moses> காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான். {Num 8:4}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 8:5}
நீ இஸ்ரவேல்<Israel> சந்ததியாரினின்று லேவியரைப்<Levites> பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக. {Num 8:6}
அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் ஜலத்தைத் தெளிப்பாயாக; பின்பு அவர்கள் சர்வாங்க சவரம்பண்ணி, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தங்களைச் சுத்திகரிக்கக்கடவர்கள். {Num 8:7}
அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி, {Num 8:8}
லேவியரை<Levites> ஆசரிப்புக் கூடாரத்துக்குமுன் வரச்செய்து, இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக. {Num 8:9}
நீ லேவியரைக்<Levites> கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல்<Levites> வைக்கக்கடவர்கள். {Num 8:10}
லேவியர்<Levites> கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன்<Aaron> அவர்களை இஸ்ரவேல்<Israel> புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன். {Num 8:11}
அதன்பின் லேவியர்<Levites> தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப்<Levites> பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, {Num 8:12}
லேவியரை<Levites> ஆரோனுக்கும்<Aaron> அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி, {Num 8:13}
இப்படி நீ லேவியரை<Levites> இஸ்ரவேல்<Israel> புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர்<Levites> என்னுடையவர்களாயிருப்பார்கள். {Num 8:14}
இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர்<Levites> ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள். {Num 8:15}
இஸ்ரவேல்<Israel> புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல்<Israel> புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன். {Num 8:16}
இஸ்ரவேல்<Israel> புத்திரரில் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே<Egypt> முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி, {Num 8:17}
பின்பு லேவியரை<Levites> இஸ்ரவேல்<Israel> புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு, {Num 8:18}
லேவியர்<Levites> இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல்<Israel> புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல்<Israel> புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல்<Israel> புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை<Levites> அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும்<Aaron> அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார். {Num 8:19}
அப்பொழுது மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து<Levites> மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச்<Levites> செய்தார்கள். {Num 8:20}
லேவியர்<Levites> சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன்<Aaron> அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். {Num 8:21}
அதற்குப்பின்பு லேவியர்<Levites> ஆரோனுக்கும்<Aaron> அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து<Levites> மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள். {Num 8:22}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 8:23}
லேவியருக்குரிய<Levites> கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும். {Num 8:24}
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு, {Num 8:25}
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடேகூட ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர்<Levites> செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார். {Num 8:26}
அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய்<Sinai> வனாந்தரத்தில் மோசேயை<Moses> நோக்கி: {Num 9:1}
குறித்த காலத்தில் இஸ்ரவேல்<Israel> புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள். {Num 9:2}
இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார். {Num 9:3}
அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கட்டளையிட்டான். {Num 9:4}
அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய்<Sinai> வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல்<Israel> புத்திரர் செய்தார்கள். {Num 9:5}
அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும்<Moses> ஆரோனுக்கும்<Aaron> முன்பாக வந்து: {Num 9:6}
நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல்<Israel> புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள். {Num 9:7}
மோசே<Moses> அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான். {Num 9:8}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 9:9}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும். {Num 9:10}
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து, {Num 9:11}
விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள். {Num 9:12}
ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான். {Num 9:13}
ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார். {Num 9:14}
வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது. {Num 9:15}
இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது. {Num 9:16}
மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல்<Israel> புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல்<Israel> புத்திரர் பாளயமிறங்குவார்கள். {Num 9:17}
கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல்<Israel> புத்திரர் பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள். {Num 9:18}
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல்<Israel> புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள். {Num 9:19}
மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள். {Num 9:20}
மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள். {Num 9:21}
மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல்<Israel> புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள். {Num 9:22}
கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள். {Num 9:23}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 10:1}
சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப் பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும். {Num 10:2}
அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும். {Num 10:3}
ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில்<Israel> ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள். {Num 10:4}
நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது. {Num 10:5}
அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும். {Num 10:6}
சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம். {Num 10:7}
ஆரோனின்<Aaron> குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது. {Num 10:8}
உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள். {Num 10:9}
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார். {Num 10:10}
இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று. {Num 10:11}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் சீனாய்<Sinai> வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான்<Paran> வனாந்தரத்தில் தங்கிற்று. {Num 10:12}
இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள். {Num 10:13}
யூதா<Judah> சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின்<Amminadab> குமாரன் நகசோன்<Nahshon> தலைவனாயிருந்தான். {Num 10:14}
இசக்கார்<Issachar> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின்<Zuar> குமாரன் நெதனெயேல்<Nethaneel> தலைவனாயிருந்தான். {Num 10:15}
செபுலோன்<Zebulun> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின்<Helon> குமாரன் எலியாப்<Eliab> தலைவனாயிருந்தான். {Num 10:16}
அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன்<Gershon> புத்திரரும் மெராரி<Merari> புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். {Num 10:17}
அதற்குப்பின்பு ரூபன்<Reuben> சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின்<Shedeur> குமாரன் எலிசூர்<Elizur> தலைவனாயிருந்தான். {Num 10:18}
சிமியோன்<Simeon> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின்<Zurishaddai> குமாரன் செலூமியேல்<Shelumiel> தலைவனாயிருந்தான். {Num 10:19}
காத்<Gad> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின்<Deuel> குமாரன் எலியாசாப்<Eliasaph> தலைவனாயிருந்தான். {Num 10:20}
கோகாத்தியர்<Kohathites> பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள். {Num 10:21}
அதற்குப்பின்பு, எப்பிராயீம்<Ephraim> சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின்<Ammihud> குமாரன் எலிஷாமா<Elishama> தலைவனாயிருந்தான். {Num 10:22}
மனாசே<Manasseh> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின்<Pedahzur> குமாரன் கமாலியேல்<Gamaliel> தலைவனாயிருந்தான். {Num 10:23}
பென்யமீன்<Benjamin> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின்<Gideoni> குமாரன் அபீதான்<Abidan> தலைவனாயிருந்தான். {Num 10:24}
அதற்குப்பின்பு, தாண்<Dan> சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின்<Ammishaddai> குமாரன் அகியேசேர்<Ahiezer> தலைவனாயிருந்தான். {Num 10:25}
ஆசேர்<Asher> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின்<Ocran> குமாரன் பாகியேல்<Pagiel> தலைவனாயிருந்தான். {Num 10:26}
நப்தலி<Naphtali> சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின்<Enan> குமாரன் அகீரா<Ahira> தலைவனாயிருந்தான். {Num 10:27}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள். {Num 10:28}
அப்பொழுது மோசே<Moses> தன் மாமனாகிய ரெகுவேல்<Raguel> என்னும் மீதியானனுடைய<Midianite> குமாரனான ஓபாவை<Hobab> நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு<Israel> நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான். {Num 10:29}
அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான். {Num 10:30}
அப்பொழுது மோசே<Moses>: நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய். {Num 10:31}
நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான். {Num 10:32}
அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது. {Num 10:33}
அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது. {Num 10:34}
பெட்டியானது புறப்படும்போது, மோசே<Moses>: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான். {Num 10:35}
அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில்<Israel> திரும்புவீராக என்று சொல்லுவான். {Num 10:36}
பின்பு, ஜனங்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது. {Num 11:1}
அப்பொழுது ஜனங்கள் மோசேயை<Moses> நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே<Moses> கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று. {Num 11:2}
கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா<Taberah> என்று பேரிட்டான். {Num 11:3}
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல்<Israel> புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? {Num 11:4}
நாம் எகிப்திலே<Egypt> கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். {Num 11:5}
இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். {Num 11:6}
அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது. {Num 11:7}
ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது. {Num 11:8}
இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும். {Num 11:9}
அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே<Moses> கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின்<Moses> பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது. {Num 11:10}
அப்பொழுது மோசே<Moses> கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன? {Num 11:11}
இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ? {Num 11:12}
இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே. {Num 11:13}
இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. {Num 11:14}
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான். {Num 11:15}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: இஸ்ரவேல்<Israel> ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய். {Num 11:16}
அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன்மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன். {Num 11:17}
நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே<Egypt> எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார். {Num 11:18}
நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல, {Num 11:19}
ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார். {Num 11:20}
அதற்கு மோசே<Moses>: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. {Num 11:21}
ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான். {Num 11:22}
அதற்குக் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார். {Num 11:23}
அப்பொழுது மோசே<Moses> புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். {Num 11:24}
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். {Num 11:25}
அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன்பேர் எல்தாத்<Eldad>, மற்றவன்பேர் மேதாத்<Medad>; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். {Num 11:26}
ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும்<Eldad> மேதாதும்<Medad> பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு<Moses> அறிவித்தான். {Num 11:27}
உடனே மோசேயினிடத்திலுள்ள<Moses> வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின்<Nun> குமாரனுமாகிய யோசுவா<Joshua> பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே<Moses>, அவர்களைத் தடைபண்ணும் என்றான். {Num 11:28}
அதற்கு மோசே<Moses>: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான். {Num 11:29}
பின்பு, மோசேயும்<Moses> இஸ்ரவேலின்<Israel> மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள். {Num 11:30}
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. {Num 11:31}
அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள். {Num 11:32}
தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். {Num 11:33}
இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா<Kibrothhattaavah> என்று பேரிட்டான். {Num 11:34}
பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா<Kibrothhattaavah> என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப்<Hazeroth> பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே<Hazeroth> தங்கினார்கள். {Num 11:35}
எத்தியோப்பியா<Ethiopian> தேசத்து ஸ்திரீயை மோசே<Moses> விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும்<Miriam> ஆரோனும்<Aaron> அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா<Ethiopian> தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: {Num 12:1}
கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம்<Moses> பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். {Num 12:2}
மோசேயானவன்<Moses> பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். {Num 12:3}
சடுதியிலே கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> மிரியாமையும்<Miriam> நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள். {Num 12:4}
கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும்<Aaron> மிரியாமையும்<Miriam> கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள். {Num 12:5}
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். {Num 12:6}
என் தாசனாகிய மோசேயோ<Moses> அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். {Num 12:7}
நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு<Moses> விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார். {Num 12:8}
கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். {Num 12:9}
மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம்<Miriam> உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன்<Aaron> மிரியாமைப்<Miriam> பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான். {Num 12:10}
அப்பொழுது ஆரோன்<Aaron> மோசேயை<Moses> நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். {Num 12:11}
தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான். {Num 12:12}
அப்பொழுது மோசே<Moses> கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். {Num 12:13}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார். {Num 12:14}
அப்படியே மிரியாம்<Miriam> ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம்<Miriam> சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள். {Num 12:15}
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து<Hazeroth> புறப்பட்டு, பாரான்<Paran> வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். {Num 12:16}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 13:1}
நான் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச்<Canaan> சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். {Num 13:2}
மோசே<Moses> கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான்<Paran> வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் தலைவர்கள். {Num 13:3}
அவர்களுடைய நாமங்களாவன: ரூபன்<Reuben> கோத்திரத்தில் சக்கூரின்<Zaccur> குமாரன் சம்முவா<Shammua>. {Num 13:4}
சிமியோன்<Simeon> கோத்திரத்தில் ஓரியின்<Hori> குமாரன் சாப்பாத்<Shaphat>. {Num 13:5}
யூதா<Judah> கோத்திரத்தில் எப்புன்னேயின்<Jephunneh> குமாரன் காலேப்<Caleb>. {Num 13:6}
இசக்கார்<Issachar> கோத்திரத்தில் யோசேப்பின்<Joseph> குமாரன் ஈகால்<Igal>. {Num 13:7}
எப்பிராயீம்<Ephraim> கோத்திரத்தில் நூனின்<Nun> குமாரன் ஓசேயா<Oshea>. {Num 13:8}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்தில் ரப்பூவின்<Raphu> குமாரன் பல்த்தி<Palti>. {Num 13:9}
செபுலோன்<Zebulun> கோத்திரத்தில் சோதியின்<Sodi> குமாரன் காதியேல்<Gaddiel>. {Num 13:10}
யோசேப்பின்<Joseph> கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே<Manasseh> கோத்திரத்தில் சூசின்<Susi> குமாரன் காதி<Gaddi>. {Num 13:11}
தாண்<Dan> கோத்திரத்தில் கெமல்லியின்<Gemalli> குமாரன் அம்மியேல்<Ammiel>. {Num 13:12}
ஆசேர்<Asher> கோத்திரத்தில் மிகாவேலின்<Michael> குமாரன் சேத்தூர்<Sethur>. {Num 13:13}
நப்தலி<Naphtali> கோத்திரத்தில் ஒப்பேசியின்<Vophsi> குமாரன் நாகபி<Nahbi>. {Num 13:14}
காத்<Gad> கோத்திரத்தில் மாகியின்<Machi> குமாரன் கூவேல்<Geuel>. {Num 13:15}
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே<Moses> அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின்<Nun> குமாரனாகிய ஓசேயாவுக்கு<Oshea> யோசுவா<Jehoshua> என்று மோசே<Moses> பேரிட்டிருந்தான். {Num 13:16}
அவர்களை மோசே<Moses> கானான்தேசத்தைச்<Canaan> சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, {Num 13:17}
தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், {Num 13:18}
அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், {Num 13:19}
நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது. {Num 13:20}
அவர்கள் போய், சீன்<Zin> வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப்<Hamath> போகிற வழியாகிய ரேகொப்மட்டும்<Rehob>, தேசத்தைச் சுற்றிப்பார்த்து, {Num 13:21}
தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும்<Hebron> போனார்கள்; அங்கே ஏனாக்கின்<Anak> குமாரராகிய அகீமானும்<Ahiman> சேசாயும்<Sheshai> தல்மாயும்<Talmai> இருந்தார்கள். எபிரோன்<Hebron> எகிப்திலுள்ள<Egypt> சோவானுக்கு<Zoan> ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது. {Num 13:22}
பின்பு, அவர்கள் எஸ்கோல்<Eshcol> பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்; மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். {Num 13:23}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல்<Eshcol> பள்ளத்தாக்கு என்னப்பட்டது. {Num 13:24}
அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். {Num 13:25}
அவர்கள் பாரான்<Paran> வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு<Kadesh> வந்து, மோசே<Moses> ஆரோன்<Aaron> என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். {Num 13:26}
அவர்கள் மோசேயை<Moses> நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. {Num 13:27}
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின்<Anak> குமாரரையும் கண்டோம். {Num 13:28}
அமலேக்கியர்<Amalekites> தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும்<Hittites>, எபூசியரும்<Jebusites>, எமோரியரும்<Amorites> மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்<Canaanites> கடல் அருகேயும் யோர்தானண்டையிலும்<Jordan> குடியிருக்கிறார்கள் என்றார்கள். {Num 13:29}
அப்பொழுது காலேப்<Caleb> மோசேக்கு<Moses> முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். {Num 13:30}
அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். {Num 13:31}
நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். {Num 13:32}
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின்<Anak> குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். {Num 13:33}
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். {Num 14:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் எல்லாரும் மோசேக்கும்<Moses> ஆரோனுக்கும்<Aaron> விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே<Egypt> செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். {Num 14:2}
நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத்<Egypt> திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். {Num 14:3}
பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத்<Egypt> திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். {Num 14:4}
அப்பொழுது மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்குமுன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். {Num 14:5}
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவும்<Joshua>, எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேபும்<Caleb>, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, {Num 14:6}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். {Num 14:7}
கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். {Num 14:8}
கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். {Num 14:9}
அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல்<Israel> புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது. {Num 14:10}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? {Num 14:11}
நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார். {Num 14:12}
மோசே<Moses> கர்த்தரை நோக்கி: எகிப்தியர்<Egyptians> இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே. {Num 14:13}
கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். {Num 14:14}
ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: {Num 14:15}
கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக்கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. {Num 14:16}
ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, {Num 14:17}
என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. {Num 14:18}
உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை<Egypt> விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். {Num 14:19}
அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். {Num 14:20}
பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். {Num 14:21}
என் மகிமையையும், நான் எகிப்திலும்<Egypt> வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், {Num 14:22}
அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். {Num 14:23}
என்னுடைய தாசனாகிய காலேப்<Caleb> வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். {Num 14:24}
அமலேக்கியரும்<Amalekites> கானானியரும்<Canaanites> பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பிச் சிவந்த சமுத்திரத்துக்குப்<Red sea> போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார். {Num 14:25}
பின்னும் கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> நோக்கி: {Num 14:26}
எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல்<Israel> புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன். {Num 14:27}
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். {Num 14:28}
இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். {Num 14:29}
எப்புன்னேயின்<Jephunneh> குமாரன் காலேபும்<Caleb>, நூனின்<Nun> குமாரன் யோசுவாவும்<Joshua> தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. {Num 14:30}
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். {Num 14:31}
உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். {Num 14:32}
அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். {Num 14:33}
நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். {Num 14:34}
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார். {Num 14:35}
அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால்<Moses> அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, {Num 14:36}
சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். {Num 14:37}
தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவும்<Joshua>, எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேபும்மாத்திரம்<Caleb> உயிரோடிருந்தார்கள். {Num 14:38}
மோசே<Moses> இந்த வார்த்தைகளை இஸ்ரவேல்<Israel> புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். {Num 14:39}
அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள். {Num 14:40}
மோசே<Moses> அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. {Num 14:41}
நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார். {Num 14:42}
அமலேக்கியரும்<Amalekites> கானானியரும்<Canaanites> அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான். {Num 14:43}
ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும்<Moses> பாளயத்தை விட்டுப் போகவில்லை. {Num 14:44}
அப்பொழுது அமலேக்கியரும்<Amalekites> கானானியரும்<Canaanites> அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும்<Hormah> துரத்தினார்கள். {Num 14:45}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 15:1}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, {Num 15:2}
விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது, {Num 15:3}
தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன். {Num 15:4}
பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும். {Num 15:5}
ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், {Num 15:6}
பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும். {Num 15:7}
நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது, {Num 15:8}
அதனோடே பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், {Num 15:9}
பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்க வேண்டும். {Num 15:10}
இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும். {Num 15:11}
நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும். {Num 15:12}
சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும். {Num 15:13}
உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும். {Num 15:14}
சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும். {Num 15:15}
உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார். {Num 15:16}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 15:17}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து, {Num 15:18}
தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள். {Num 15:19}
உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும். {Num 15:20}
இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள். {Num 15:21}
கர்த்தர் மோசேயினிடத்தில்<Moses> சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும், {Num 15:22}
கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல், {Num 15:23}
அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். {Num 15:24}
அதினால் ஆசாரியன் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். {Num 15:25}
அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும். {Num 15:26}
ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன். {Num 15:27}
அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும். {Num 15:28}
இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும். {Num 15:29}
அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். {Num 15:30}
அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார். {Num 15:31}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். {Num 15:32}
விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே<Moses> ஆரோன்<Aaron> என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். {Num 15:33}
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். {Num 15:34}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். {Num 15:35}
அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். {Num 15:36}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 15:37}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். {Num 15:38}
நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும். {Num 15:39}
நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக. {Num 15:40}
நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். {Num 15:41}
லேவிக்குப்<Levi> பிறந்த கோகாத்தின்<Kohath> குமாரனாகிய இத்சேயாரின்<Izhar> மகன் கோராகு<Korah> என்பவன் ரூபன்<Reuben> வம்சத்திலுள்ள எலியாபின்<Eliab> குமாரராகிய தாத்தானையும்<Dathan> அபிராமையும்<Abiram> பேலேத்தின்<Peleth> குமாரனாகிய ஓனையும்<On> கூட்டிக்கொண்டு, {Num 16:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்குமுன்பாக<Moses> எழும்பி, {Num 16:2}
மோசேக்கும்<Moses> ஆரோனுக்கும்<Aaron> விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். {Num 16:3}
மோசே<Moses> அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். {Num 16:4}
பின்பு அவன் கோராகையும்<Korah> அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார். {Num 16:5}
ஒன்று செய்யுங்கள்; கோராகே<Korah>, கோராகின்<Korah> கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, {Num 16:6}
நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின்<Levi> புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான். {Num 16:7}
பின்னும் மோசே<Moses> கோராகை<Korah> நோக்கி: லேவியின்<Levi> புத்திரரே, கேளுங்கள்; {Num 16:8}
கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின்<Israel> தேவன் இஸ்ரவேல்<Israel> சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், {Num 16:9}
அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின்<Levi> புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ? {Num 16:10}
இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு<Aaron> விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான். {Num 16:11}
பின்பு மோசே<Moses> எலியாபின்<Eliab> குமாரராகிய தாத்தானையும்<Dathan> அபிராமையும்<Abiram> அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை; {Num 16:12}
இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ? {Num 16:13}
மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள். {Num 16:14}
அப்பொழுது மோசேக்குக்<Moses> கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான். {Num 16:15}
பின்பு மோசே<Moses> கோராகை<Korah> நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும்<Aaron> வந்திருங்கள். {Num 16:16}
உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும்<Aaron> தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான். {Num 16:17}
அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> அங்கே நின்றார்கள். {Num 16:18}
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு<Korah> சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது. {Num 16:19}
கர்த்தர் மோசேயோடும்<Moses> ஆரோனோடும்<Aaron> பேசி: {Num 16:20}
இந்தச் சபையைவிட்டுப் பிரிந்துபோங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார். {Num 16:21}
அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள். {Num 16:22}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 16:23}
கோராகு<Korah> தாத்தான்<Dathan> அபிராம்<Abiram> என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார். {Num 16:24}
உடனே மோசே<Moses> எழுந்திருந்து, தாத்தான்<Dathan> அபிராம்<Abiram> என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின்<Israel> மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள். {Num 16:25}
அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான். {Num 16:26}
அப்படியே அவர்கள் கோராகு<Korah> தாத்தான்<Dathan> அபிராம்<Abiram> என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும்<Dathan> அபிராமும்<Abiram> வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள். {Num 16:27}
அப்பொழுது மோசே<Moses>: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால், {Num 16:28}
சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். {Num 16:29}
கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத் திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப்போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான். {Num 16:30}
அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; {Num 16:31}
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய<Korah> எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. {Num 16:32}
அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். {Num 16:33}
அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்<Israel> யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள். {Num 16:34}
அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப்போட்டது. {Num 16:35}
பின்பு கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 16:36}
அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரன் எலெயாசாருக்குச்<Eleazar> சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின. {Num 16:37}
தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார். {Num 16:38}
அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார்<Eleazar> சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து, {Num 16:39}
ஆரோனின்<Aaron> புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும்<Korah> அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான். {Num 16:40}
மறுநாளில் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும்<Moses> ஆரோனுக்கும்<Aaron> விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்றார்கள். {Num 16:41}
சபையார் மோசேக்கும்<Moses> ஆரோனுக்கும்<Aaron> விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது. {Num 16:42}
மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள். {Num 16:43}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 16:44}
இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். {Num 16:45}
மோசே<Moses> ஆரோனை<Aaron> நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான். {Num 16:46}
மோசே<Moses> சொன்னபடி ஆரோன்<Aaron> அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, {Num 16:47}
செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது. {Num 16:48}
கோராகின்<Korah> காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர். {Num 16:49}
வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன்<Aaron> ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில்<Moses> திரும்பிவந்தான். {Num 16:50}
பின்பு கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 17:1}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக. {Num 17:2}
லேவியினுடைய<Levi> கோலின்மேல் ஆரோனின்<Aaron> பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத் தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும். {Num 17:3}
அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய். {Num 17:4}
அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல்<Israel> புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார். {Num 17:5}
இதை மோசே<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின்<Aaron> கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது. {Num 17:6}
அந்தக் கோல்களை மோசே<Moses> சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான். {Num 17:7}
மறுநாள் மோசே<Moses> சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின்<Levi> குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின்<Aaron> கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. {Num 17:8}
அப்பொழுது மோசே<Moses> கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல்<Israel> புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள். {Num 17:9}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: ஆரோனின்<Aaron> கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார். {Num 17:10}
கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே<Moses> செய்தான். {Num 17:11}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் மோசேயை<Moses> நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம். {Num 17:12}
கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டே வருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள். {Num 17:13}
பின்பு கர்த்தர் ஆரோனை<Aaron> நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும். {Num 18:1}
உன் தகப்பனாகிய லேவியின்<Levi> கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள். {Num 18:2}
அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல், {Num 18:3}
உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது. {Num 18:4}
இஸ்ரவேல்<Israel> புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள். {Num 18:5}
ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை<Levites> நான் இஸ்ரவேல்<Israel> புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன். {Num 18:6}
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார். {Num 18:7}
பின்னும் கர்த்தர் ஆரோனை<Aaron> நோக்கி: இஸ்ரவேல்<Israel> புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன். {Num 18:8}
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும். {Num 18:9}
பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. {Num 18:10}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் ஏறெடுத்துப் படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும்; அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம். {Num 18:11}
அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன். {Num 18:12}
தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டுவருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம். {Num 18:13}
இஸ்ரவேலிலே<Israel> சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும். {Num 18:14}
மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும். {Num 18:15}
மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா. {Num 18:16}
மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும். {Num 18:17}
அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும். {Num 18:18}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார். {Num 18:19}
பின்னும் கர்த்தர் ஆரோனை<Aaron> நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல்<Israel> புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன். {Num 18:20}
இதோ, லேவியின்<Levi> புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை<Israel> எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். {Num 18:21}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள். {Num 18:22}
லேவியர்மாத்திரம்<Levites> ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல்<Israel> புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும். {Num 18:23}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச்<Levites> சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார். {Num 18:24}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 18:25}
நீ லேவியரோடே<Levites> சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல்<Israel> புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். {Num 18:26}
நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும். {Num 18:27}
இப்படியே நீங்கள் இஸ்ரவேல்<Israel> புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக்<Aaron> கொடுக்கவேண்டும். {Num 18:28}
உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். {Num 18:29}
ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு<Levites> எண்ணப்படும். {Num 18:30}
அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம். {Num 18:31}
இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல்<Israel> புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார். {Num 18:32}
கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> நோக்கி: {Num 19:1}
கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குச் சொல்லுங்கள். {Num 19:2}
அதை எலெயாசார்<Eleazar> என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. {Num 19:3}
அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார்<Eleazar> தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன். {Num 19:4}
பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். {Num 19:5}
அப்பொழுது ஆசாரியன் கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன். {Num 19:6}
பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். {Num 19:7}
அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். {Num 19:8}
சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். {Num 19:9}
கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக. {Num 19:10}
செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். {Num 19:11}
அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான். {Num 19:12}
செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில்<Israel> இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும். {Num 19:13}
கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள். {Num 19:14}
மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும். {Num 19:15}
வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். {Num 19:16}
ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும். {Num 19:17}
சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன். {Num 19:18}
சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான். {Num 19:19}
தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான். {Num 19:20}
தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். {Num 19:21}
தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். {Num 19:22}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே<Zin> சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே<Kadesh> தங்கியிருக்கையில், மிரியாம்<Miriam> மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள். {Num 20:1}
ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும்<Moses> ஆரோனுக்கும்<Aaron> விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். {Num 20:2}
ஜனங்கள் மோசேயோடே<Moses> வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். {Num 20:3}
நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன; {Num 20:4}
விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். {Num 20:5}
அப்பொழுது மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. {Num 20:6}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 20:7}
நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும்<Aaron> சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். {Num 20:8}
அப்பொழுது மோசே<Moses> தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். {Num 20:9}
மோசேயும்<Moses> ஆரோனும்<Aaron> சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே<Moses> அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, {Num 20:10}
தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. {Num 20:11}
பின்பு கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> நோக்கி: இஸ்ரவேல்<Israel> புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். {Num 20:12}
இங்கே இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின்<Meribah> தண்ணீர் என்னப்பட்டது. {Num 20:13}
பின்பு மோசே<Moses> காதேசிலிருந்து<Kadesh> ஏதோமின்<Edom> ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: {Num 20:14}
எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப்<Egypt> போனதும், நாங்கள் எகிப்திலே<Egypt> நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர்<Egyptians> எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. {Num 20:15}
கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ்<Kadesh> ஊரில் வந்திருக்கிறோம். {Num 20:16}
நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல்<Israel> சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான். {Num 20:17}
அதற்கு ஏதோம்<Edom>: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். {Num 20:18}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால், அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள். {Num 20:19}
அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். {Num 20:20}
இப்படி ஏதோம்<Edom> தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு<Israel> உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர்<Israel> அவனை விட்டு விலகிப்போனார்கள். {Num 20:21}
இஸ்ரவேல்<Israel> புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை<Kadesh> விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர்<Hor> என்னும் மலைக்குப் போனார்கள். {Num 20:22}
ஏதோம்<Edom> தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர்<Hor> என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> நோக்கி: {Num 20:23}
ஆரோன்<Aaron> தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின்<Meribah> தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. {Num 20:24}
நீ ஆரோனையும்<Aaron> அவன் குமாரனாகிய எலெயாசாரையும்<Eleazar> கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர்<Hor> என்னும் மலையில் ஏறப்பண்ணி, {Num 20:25}
ஆரோன்<Aaron> உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு<Eleazar> உடுத்துவாயாக; ஆரோன்<Aaron> அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார். {Num 20:26}
கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே<Moses> செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க, அவர்கள் ஓர்<Hor> என்னும் மலையில் ஏறினார்கள். {Num 20:27}
அங்கே ஆரோன்<Aaron> உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே<Moses> கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு<Eleazar> உடுத்தினான்; அப்பொழுது ஆரோன்<Aaron> அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும்<Moses> எலெயாசாரும்<Eleazar> மலையிலிருந்து இறங்கினார்கள். {Num 20:28}
ஆரோன்<Aaron> ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல்<Israel> வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக<Aaron> முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள். {Num 20:29}
வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர்<Israel> வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய<Canaanite> ஆராத்<Arad> ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு<Israel> விரோதமாக யுத்தம்பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். {Num 21:1}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel> கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம் பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள். {Num 21:2}
கர்த்தர் இஸ்ரவேலின்<Israel> சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை<Canaanites> ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா<Hormah> என்று பேரிட்டார்கள். {Num 21:3}
அவர்கள் ஏதோம்<Edom> தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர்<Hor> என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின்<Red sea> வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள். {Num 21:4}
ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும்<Moses> விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து<Egypt> தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். {Num 21:5}
அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே<Israel> அநேக ஜனங்கள் செத்தார்கள். {Num 21:6}
அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில்<Moses> போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே<Moses> ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். {Num 21:7}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். {Num 21:8}
அப்படியே மோசே<Moses> ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். {Num 21:9}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில்<Oboth> பாளயமிறங்கினார்கள். {Num 21:10}
ஓபோத்திலிருந்து<Oboth> பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு<Moab> எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின்<Ijeabarim> மேடுகளில் பாளயமிறங்கினார்கள். {Num 21:11}
அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப்போய், சாரேத்<Zared> பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். {Num 21:12}
அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப்போய், எமோரியரின்<Amorites> எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன்<Arnon> ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன்<Arnon> மோவாபுக்கும்<Moab> எமோரியருக்கும்<Amorites> நடுவே இருக்கிற மோவாபின்<Moab> எல்லை. {Num 21:13}
அதினால் சூப்பாவிலுள்ள<n/a> வாகேபும்<n/a>, அர்னோனின்<Arnon> ஆற்றுக்கால்களும், {Num 21:14}
ஆர்<Ar> என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின்<Moab> எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. {Num 21:15}
அங்கேயிருந்து பேயேருக்குப்<Beer> போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச்<Moses> சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். {Num 21:16}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel> பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். {Num 21:17}
நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள். {Num 21:18}
The princes digged the well, the nobles of the people digged it, by the direction of the lawgiver, with their staves. And from the wilderness they went to : {Num 21:18}
அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும்<Mattanah>, மாத்தனாவிலிருந்து<Mattanah> நகாலியேலுக்கும்<Nahaliel>, நகாலியேலிலிருந்து<Nahaliel> பாமோத்துக்கும்<Bamoth>, {Num 21:19}
பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின்<Moab> வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து<Bamoth> எஷிமோனை<Jeshimon> நோக்கும் பிஸ்காவின்<Pisgah> உச்சிக்கும் போனார்கள். {Num 21:20}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel> எமோரியரின்<Amorites> ராஜாவாகிய சீகோனிடத்தில்<Sihon> ஸ்தானாபதிகளை அனுப்பி: {Num 21:21}
உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள். {Num 21:22}
சீகோன்<Sihon> தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு<Israel> உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு<Israel> விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு<Jahaz> வந்து, இஸ்ரவேலரோடே<Israel> யுத்தம்பண்ணினான். {Num 21:23}
இஸ்ரவேலர்<Israel> அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன்<Arnon> தொடங்கி அம்மோன்<Ammon> புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள<Jabbok> அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன்<Ammon> புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது. {Num 21:24}
இஸ்ரவேலர்<Israel> அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும்<Heshbon> அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய<Amorites> எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள். {Num 21:25}
எஸ்போனானது<Heshbon> எமோரியரின்<Amorites> ராஜாவாகிய சீகோனின்<Sihon> பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின்<Moab> முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன்வரைக்கும்<Arnon> இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான். {Num 21:26}
அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு<Heshbon> வாருங்கள்; சீகோனின்<Sihon> பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக. {Num 21:27}
எஸ்போனிலிருந்து<Heshbon> அக்கினியும் சீகோனுடைய<Sihon> பட்டணத்திலிருந்து ஜுவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய<Moab> ஆர்<Ar> என்னும் ஊரையும், அர்னோனுடைய<Arnon> மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது. {Num 21:28}
ஐயோ, மோவாபே<Moab>, கேமோஷ்<Chemosh> தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின்<Amorites> ராஜாவாகிய சீகோனுக்குச்<Sihon> சிறைகளாக ஒப்புக்கொடுத்தான். {Num 21:29}
அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன்<Heshbon> பட்டணம் தீபோன்<Dibon> ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச்<Medeba> சமீபமான நோப்பா<Nophah> பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள். {Num 21:30}
இஸ்ரவேலர்<Israel> இப்படியே எமோரியரின்<Amorites> தேசத்திலே குடியிருந்தார்கள். {Num 21:31}
பின்பு, மோசே<Moses> யாசேர்<Jaazer> பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத்<Amorites> துரத்திவிட்டார்கள். {Num 21:32}
பின்பு பாசானுக்குப்<Bashan> போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான்<Bashan> ராஜாவாகிய ஓக்<Og> என்பவன் தன் சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப்<Edrei> புறப்பட்டு வந்தான். {Num 21:33}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே<Heshbon> வாசமாயிருந்த எமோரியரின்<Amorites> ராஜாவாகிய சீகோனுக்கு<Sihon> நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார். {Num 21:34}
அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள். {Num 21:35}
பின்பு இஸ்ரவேல்<Israel> புத்திரர் பிரயாணம்பண்ணி, எரிகோவின்<Jericho> கிட்ட இருக்கும் யோர்தானுக்கு<Jordan> இக்கரையிலே மோவாபின்<Moab> சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள். {Num 22:1}
இஸ்ரவேலர்<Israel> எமோரியருக்குச்<Amorites> செய்த யாவையும் சிப்போரின்<Zippor> குமாரனாகிய பாலாக்<Balak> கண்டான். {Num 22:2}
ஜனங்கள் ஏராளமாயிருந்தபடியினால், மோவாப்<Moab> மிகவும் பயந்து, இஸ்ரவேல்<Israel> புத்திரரினிமித்தம் கலக்கமடைந்து, {Num 22:3}
மீதியானியரின்<Midian> மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின்<Zippor> குமாரனாகிய பாலாக்<Balak> மோவாபியருக்கு<Moabites> ராஜாவாயிருந்தான். {Num 22:4}
அவன் பேயோரின்<Beor> குமாரனாகிய பிலேயாமை<Balaam> அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு<Pethor> ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து<Egypt> ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள். {Num 22:5}
அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான். {Num 22:6}
அப்படியே மோவாபின்<Moab> மூப்பரும் மீதியானின்<Midian> மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில்<Balaam> போய், பாலாகின்<Balak> வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள். {Num 22:7}
அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின்<Moab> பிரபுக்கள் பிலேயாமிடத்தில்<Balaam> தங்கினார்கள். {Num 22:8}
தேவன் பிலேயாமிடத்தில்<Balaam> வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார். {Num 22:9}
பிலேயாம்<Balaam> தேவனை நோக்கி: சிப்போரின்<Zippor> குமாரனாகிய பாலாக்<Balak> என்னும் மோவாபின்<Moab> ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி: {Num 22:10}
பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து<Egypt> வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம்பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான். {Num 22:11}
அதற்குத் தேவன் பிலேயாமை<Balaam> நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். {Num 22:12}
பிலேயாம்<Balaam> காலமே எழுந்து, பாலாகின்<Balak> பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான். {Num 22:13}
அப்படியே மோவாபியருடைய<Moab> பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில்<Balak> போய்: பிலேயாம்<Balaam> எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள். {Num 22:14}
பாலாக்<Balak> மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான். {Num 22:15}
அவர்கள் பிலேயாமிடத்தில்<Balaam> போய், அவனை நோக்கி: சிப்போரின்<Zippor> குமாரனாகிய பாலாக்<Balak> எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்; {Num 22:16}
உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள். {Num 22:17}
பிலேயாம்<Balaam> பாலாகின்<Balak> ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: பாலாக்<Balak> எனக்குத் தன் வீடுநிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது. {Num 22:18}
ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான். {Num 22:19}
இரவிலே தேவன் பிலேயாமிடத்தில்<Balaam> வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார். {Num 22:20}
பிலேயாம்<Balaam> காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின்<Moab> பிரபுக்களோடேகூடப் போனான். {Num 22:21}
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள். {Num 22:22}
கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம்<Balaam> அதை அடித்தான். {Num 22:23}
கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத்தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார். {Num 22:24}
கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின்<Balaam> காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான். {Num 22:25}
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார். {Num 22:26}
கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின்<Balaam> கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம்<Balaam> கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான். {Num 22:27}
உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப்<Balaam> பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்றுதரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது. {Num 22:28}
அப்பொழுது பிலேயாம்<Balaam> கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான். {Num 22:29}
கழுதை பிலேயாமை<Balaam> நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான். {Num 22:30}
அப்பொழுது கர்த்தர் பிலேயாமின்<Balaam> கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். {Num 22:31}
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். {Num 22:32}
கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுதரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார். {Num 22:33}
அப்பொழுது பிலேயாம்<Balaam> கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான். {Num 22:34}
கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை<Balaam> நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம்<Balaam> பாலாகின்<Balak> பிரபுக்களோடேகூடப் போனான். {Num 22:35}
பிலேயாம்<Balaam> வருகிறதைப் பாலாக்<Balak> கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன்<Arnon> நதியின் ஓரத்திலுள்ள மோவாபின்<Moab> பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். {Num 22:36}
பாலாக்<Balak> பிலேயாமை<Balaam> நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான். {Num 22:37}
அப்பொழுது பிலேயாம்<Balaam> பாலாகை<Balak> நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான். {Num 22:38}
பிலேயாம்<Balaam> பாலாகுடனேகூடப்<Balak> போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில்<Kirjathhuzoth> சேர்ந்தார்கள். {Num 22:39}
அங்கே பாலாக்<Balak> ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும்<Balaam> அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான். {Num 22:40}
மறுநாள் காலமே பாலாக்<Balak> பிலேயாமைக்<Balaam> கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய<Baal> மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம்<Balaam> ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான். {Num 22:41}
பிலேயாம்<Balaam> பாலாகை<Balak> நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான். {Num 23:1}
பிலேயாம்<Balaam> சொன்னபடியே பாலாக்<Balak> செய்தான்; பாலாகும்<Balak> பிலேயாமும்<Balaam> ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள். {Num 23:2}
பின்பு பிலேயாம்<Balaam> பாலாகை<Balak> நோக்கி: உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான். {Num 23:3}
தேவன் பிலேயாமைச்<Balaam> சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான். {Num 23:4}
கர்த்தர் பிலேயாமின்<Balaam> வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில்<Balak> திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார். {Num 23:5}
அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக்<Balak> மோவாபுடைய<Moab> சகல பிரபுக்களோடுங்கூடத் தன் சர்வாங்க தகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். {Num 23:6}
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின்<Moab> ராஜாவாகிய பாலாக்<Balak> என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து<Aram> வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச்<Jacob> சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை<Israel> வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான். {Num 23:7}
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? {Num 23:8}
கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். {Num 23:9}
யாக்கோபின்<Jacob> தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின்<Israel> காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான். {Num 23:10}
அப்பொழுது பாலாக்<Balak> பிலேயாமை<Balaam> நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான். {Num 23:11}
அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான். {Num 23:12}
பின்பு பாலாக்<Balak> அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி, {Num 23:13}
அவனைப் பிஸ்காவின்<Pisgah> கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின்<Zophim> வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான். {Num 23:14}
அப்பொழுது பிலேயாம்<Balaam> பாலாகை<Balak> நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான். {Num 23:15}
கர்த்தர் பிலேயாமைச்<Balaam> சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத்<Balak> திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார். {Num 23:16}
அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின்<Moab> பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்க தகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக்<Balak> அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான். {Num 23:17}
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே<Balak>, எழுந்திருந்து கேளும்; சிப்போரின்<Zippor> குமாரனே, எனக்குச் செவிகொடும். {Num 23:18}
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? {Num 23:19}
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது. {Num 23:20}
அவர் யாக்கோபிலே<Jacob> அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே<Israel> குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. {Num 23:21}
தேவன் அவர்களை எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு. {Num 23:22}
யாக்கோபுக்கு<Jacob> விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு<Israel> விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும்<Jacob> இஸ்ரவேலையும்<Israel> குறித்துச் சொல்லப்படும். {Num 23:23}
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பாலசிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான். {Num 23:24}
அப்பொழுது பாலாக்<Balak> பிலேயாமை<Balaam> நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான். {Num 23:25}
அதற்குப் பிலேயாம்<Balaam> பாலாகைப்<Balak> பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான். {Num 23:26}
அப்பொழுது பாலாக்<Balak> பிலேயாமை<Balaam> நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி, {Num 23:27}
அவனை எஷிமோனுக்கு<Jeshimon> எதிராயிருக்கிற பேயோரின்<Peor> கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டுபோனான். {Num 23:28}
அப்பொழுது பிலேயாம்<Balaam> பாலாகை<Balak> நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான். {Num 23:29}
பிலேயாம்<Balaam> சொன்னபடி பாலாக்<Balak> செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான். {Num 23:30}
இஸ்ரவேலை<Israel> ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம்<Balaam> கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி, {Num 24:1}
தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல்<Israel> தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது. {Num 24:2}
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின்<Beor> குமாரனாகிய பிலேயாம்<Balaam> சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, {Num 24:3}
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது, {Num 24:4}
யாக்கோபே<Jacob>, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே<Israel>, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! {Num 24:5}
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது. {Num 24:6}
அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப்<Agag> பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும். {Num 24:7}
தேவன் அவர்களை எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள். {Num 24:8}
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான். {Num 24:9}
அப்பொழுது பாலாக்<Balak> பிலேயாமின்மேல்<Balaam> கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை<Balaam> நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். {Num 24:10}
ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான். {Num 24:11}
அப்பொழுது பிலேயாம்<Balaam> பாலாகை<Balak> நோக்கி: பாலாக்<Balak> எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று, {Num 24:12}
நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா? {Num 24:13}
இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி, {Num 24:14}
அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின்<Beor> குமாரன் பிலேயாம்<Balaam> சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, {Num 24:15}
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது; {Num 24:16}
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து<Jacob> உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து<Israel> எழும்பும்; அது மோவாபின்<Moab> எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர்<Sheth> எல்லாரையும் நிர்மூலமாக்கும். {Num 24:17}
ஏதோம்<Edom> சுதந்தரமாகும், சேயீர்<Seir> தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல்<Israel> பராக்கிரமஞ்செய்யும். {Num 24:18}
யாக்கோபிலிருந்து<Jacob> தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான். {Num 24:19}
மேலும், அவன் அமலேக்கைப்<Amalek> பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு<Amalek> முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமாவான் என்றான். {Num 24:20}
அன்றியும் அவன் கேனியனைப்<Kenites> பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய். {Num 24:21}
ஆகிலும் கேனியன்<Kenite> அழிந்துபோவான்; அசூர்<Asshur> உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான். {Num 24:22}
பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்; {Num 24:23}
சித்தீமின்<Chittim> கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச்<Asshur> சிறுமைப்படுத்தி, ஏபேரையும்<Eber> வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான். {Num 24:24}
பின்பு பிலேயாம்<Balaam> எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும்<Balak> தன் வழியே போனான். {Num 24:25}
இஸ்ரவேல்<Israel> சித்தீமிலே<Shittim> தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின்<Moab> குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். {Num 25:1}
அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். {Num 25:2}
இப்படி இஸ்ரவேலர்<Israel> பாகால்பேயோரைப்<Baalpeor> பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல்<Israel> கர்த்தருடைய கோபம் மூண்டது. {Num 25:3}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலைவிட்டு<Israel> நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார். {Num 25:4}
அப்படியே மோசே<Moses> இஸ்ரவேலின்<Israel> நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப்<Baalpeor> பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான். {Num 25:5}
அப்பொழுது மோசேயும்<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல்<Israel> புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய<Midianitish> ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக்கொண்டுவந்தான். {Num 25:6}
அதை ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரனான எலெயாசாரின்<Eleazar> மகன் பினெகாஸ்<Phinehas> கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து, {Num 25:7}
இஸ்ரவேலனாகிய<Israel> அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல்<Israel> மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று. {Num 25:8}
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர். {Num 25:9}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 25:10}
நான் என் எரிச்சலில் இஸ்ரவேல்<Israel> புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின்<Aaron> குமாரனான எலெயாசாரின்<Eleazar> மகன் பினெகாஸ்<Phinehas>, என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல்<Israel> புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். {Num 25:11}
ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். {Num 25:12}
அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார். {Num 25:13}
மீதியானிய<Midianitish> ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல்<Israelite> மனிதனுடைய பேர் சிம்ரி<Zimri>; அவன் சல்லூவின்<Salu> குமாரனும், சிமியோனியரின்<Simeonites> தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான். {Num 25:14}
குத்துண்ட மீதியானிய<Midianitish> ஸ்திரீயின் பேர் கஸ்பி<Cozbi>, அவள் சூரின்<Zur> குமாரத்தி, அவன் மீதியானியருடைய<Midian> தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான். {Num 25:15}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 25:16}
மீதியானியரை<Midianites> நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள். {Num 25:17}
பேயோரின்<Peor> சங்கதியிலும் பேயோரின்<Peor> நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி<Cozbi> என்னும் மீதியான்<Midian> பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார். {Num 25:18}
அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனின்<Aaron> குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும்<Eleazar> நோக்கி: {Num 26:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே<Israel> யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார். {Num 26:2}
அப்பொழுது மோசேயும்<Moses> ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> எரிகோவின்<Jericho> அருகே இருக்கும் யோர்தானுக்கு<Jordan> இப்பாலே மோவாபின்<Moab> சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி: {Num 26:3}
கர்த்தர் மோசேக்கும்<Moses> எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்பட்ட இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள். {Num 26:4}
ரூபன்<Reuben> இஸ்ரவேலின்<Israel> மூத்த குமாரன்; ரூபனுடைய<Reuben> குமாரர், ஆனோக்கியர்<Hanochites> குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும்<Hanoch>, பல்லூவியர்<Palluites> குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும்<Pallu>, {Num 26:5}
எஸ்ரோனியர்<Hezronites> குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும்<Hezron>, கர்மீயர்<Carmites> குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே<Carmi>. {Num 26:6}
இவைகளே ரூபனியரின்<Reubenites> குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர். {Num 26:7}
பல்லூவின்<Pallu> குமாரன் எலியாப்<Eliab>. {Num 26:8}
எலியாபின்<Eliab> குமாரர் நேமுவேல்<Nemuel>, தாத்தான்<Dathan>, அபிராம்<Abiram> என்பவர்கள்; இந்தத் தாத்தான்<Dathan> அபிராம்<Abiram> என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின்<Korah> கூட்டாளிகளாகி, மோசேக்கும்<Moses> ஆரோனுக்கும்<Aaron> விரோதமாக விவாதம்பண்ணினவர்கள். {Num 26:9}
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும்<Korah> விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பதுபேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள். {Num 26:10}
கோராகின்<Korah> குமாரரோ சாகவில்லை. {Num 26:11}
சிமியோனுடைய<Simeon> குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின்<Nemuel> சந்ததியான நேமுவேலரின்<Nemuelites> குடும்பமும், யாமினின்<Jamin> சந்ததியான யாமினியரின்<Jaminites> குடும்பமும், யாகீனின்<Jachin> சந்ததியான யாகீனியரின்<Jachinites> குடும்பமும், {Num 26:12}
சேராகின்<Zerah> சந்ததியான சேராகியரின்<Zarhites> குடும்பமும், சவுலின்<Shaul> சந்ததியான சவுலியரின்<Shaulites> குடும்பமுமே. {Num 26:13}
இவைகளே சிமியோனியரின்<Simeonites> குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர். {Num 26:14}
காத்துடைய<Gad> குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின்<Zephon> சந்ததியான சிப்போனியரின்<Zephonites> குடும்பமும், ஆகியின்<Haggi> சந்ததியான ஆகியரின்<Haggites> குடும்பமும், சூனியின்<Shuni> சந்ததியான சூனியரின்<Shunites> குடும்பமும், {Num 26:15}
ஒஸ்னியின்<Ozni> சந்ததியான ஒஸ்னியரின்<Oznites> குடும்பமும், ஏரியின்<Eri> சந்ததியான ஏரியரின்<Erites> குடும்பமும், {Num 26:16}
ஆரோதின்<Arod> சந்ததியான ஆரோதியரின்<Arodites> குடும்பமும், அரேலியின்<Areli> சந்ததியான அரேலியரின்<Arelites> குடும்பமுமே. {Num 26:17}
இவைகளே காத்<Gad> புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். {Num 26:18}
யூதாவின்<Judah> குமாரர் ஏர்<Er> ஓனான்<Onan> என்பவர்கள்; ஏரும்<Er> ஓனானும்<Onan> கானான்<Canaan> தேசத்தில் செத்தார்கள். {Num 26:19}
யூதாவுடைய<Judah> மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின்<Shelah> சந்ததியான சேலாவியரின்<Shelanites> குடும்பமும், பாரேசின்<Pharez> சந்ததியான பாரேசியரின்<Pharzites> குடும்பமும், சேராவின்<Zerah> சந்ததியான சேராவியரின்<Zarhites> குடும்பமுமே. {Num 26:20}
பாரேசுடைய<Pharez> குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின்<Hezron> சந்ததியான எஸ்ரோனியரின்<Hezronites> குடும்பமும், ஆமூலின்<Hamul> சந்ததியான ஆமூலியரின்<Hamulites> குடும்பமுமே. {Num 26:21}
இவைகளே யூதாவின்<Judah> குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். {Num 26:22}
இசக்காருடைய<Issachar> குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின்<Tola> சந்ததியான தோலாவியரின்<Tolaites> குடும்பமும், பூவாவின்<Pua> சந்ததியான பூவாவியரின்<Punites> குடும்பமும், {Num 26:23}
யாசூபின்<Jashub> சந்ததியான யாசூபியரின்<Jashubites> குடும்பமும், சிம்ரோனின்<Shimron> சந்ததியான சிம்ரோனியரின்<Shimronites> குடும்பமுமே. {Num 26:24}
இவைகளே இசக்காரின்<Issachar> குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர். {Num 26:25}
செபுலோனுடைய<Zebulun> குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின்<Sered> சந்ததியான சேரேத்தியரின்<Sardites> குடும்பமும், ஏலோனின்<Elon> சந்ததியான ஏலோனியரின்<Elonites> குடும்பமும், யாலேயேலின்<Jahleel> சந்ததியான யாலேயேலியரின்<Jahleelites> குடும்பமுமே. {Num 26:26}
இவைகளே செபுலோனியரின்<Zebulunites> குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர். {Num 26:27}
யோசேப்புடைய<Joseph> குமாரரான மனாசே<Manasseh> எப்பிராயீம்<Ephraim> என்பவர்களின் குடும்பங்களாவன: {Num 26:28}
மனாசேயினுடைய<Manasseh> குமாரரின் குடும்பங்கள்; மாகீரின்<Machir> சந்ததியான மாகீரியரின்<Machirites> குடும்பமும், மாகீர்<Machir> பெற்ற கிலெயாதின்<Gilead> சந்ததியான கிலெயாதியரின்<Gileadites> குடும்பமும், {Num 26:29}
கிலெயாத்<Gilead> பெற்ற ஈயேசேரின்<Jeezer> சந்ததியான ஈயேசேரியரின்<Jeezerites> குடும்பமும், ஏலேக்கின்<Helek> சந்ததியான ஏலேக்கியரின்<Helekites> குடும்பமும், {Num 26:30}
அஸ்ரியேலின்<Asriel> சந்ததியான அஸ்ரியேலரின்<Asrielites> குடும்பமும், சேகேமின்<Shechem> சந்ததியான சேகேமியரின்<Shechemites> குடும்பமும், {Num 26:31}
செமீதாவின்<Shemida> சந்ததியான செமீதாவியரின்<Shemidaites> குடும்பமும், ஏப்பேரின்<Hepher> சந்ததியான ஏப்பேரியரின்<Hepherites> குடும்பமுமே. {Num 26:32}
ஏப்பேரின்<Hepher> குமாரனான செலொப்பியாத்திற்குக்<Zelophehad> குமாரர் இல்லாமல், குமாரத்திகள்மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள்<Mahlah>, நோவாள்<Noah>, ஒக்லாள்<Hoglah>, மில்காள்<Milcah>, திர்சாள்<Tirzah> என்பவைகள். {Num 26:33}
இவைகளே மனாசேயின்<Manasseh> குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர். {Num 26:34}
எப்பிராயீமுடைய<Ephraim> குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின்<Shuthelah> சந்ததியான சுத்தெலாகியரின்<Shuthalhites> குடும்பமும், பெகேரின்<Becher> சந்ததியான பெகேரியரின்<Bachrites> குடும்பமும், தாகானின்<Tahan> சந்ததியான தாகானியரின்<Tahanites> குடும்பமும், {Num 26:35}
சுத்தெலாக்<Shuthelah> பெற்ற ஏரானின்<Eran> சந்ததியான ஏரானியரின்<Eranites> குடும்பமுமே. {Num 26:36}
இவைகளே எப்பிராயீம்<Ephraim> புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு<Joseph> புத்திரரின் குடும்பங்கள். {Num 26:37}
பென்யமீனுடைய<Benjamin> குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின்<Bela> சந்ததியான பேலாவியரின்<Belaites> குடும்பமும், அஸ்பேலின்<Ashbel> சந்ததியான அஸ்பேலியரின்<Ashbelites> குடும்பமும், அகிராமின்<Ahiram> சந்ததியான அகிராமியரின்<Ahiramites> குடும்பமும், {Num 26:38}
சுப்பாமின்<Shupham> சந்ததியான சுப்பாமியரின்<Shuphamites> குடும்பமும், உப்பாமின்<Hupham> சந்ததியான உப்பாமியரின்<Huphamites> குடும்பமும், {Num 26:39}
பேலா<Bela> பெற்ற ஆரேதின்<Ard> சந்ததியான ஆரேதியரின்<Ardites> குடும்பமும், நாகமானின்<Naaman> சந்ததியான நாகமானியரின்<Naamites> குடும்பமுமே. {Num 26:40}
இவைகளே பென்யமீன்<Benjamin> புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர். {Num 26:41}
தாணுடைய<Dan> குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின்<Shuham> சந்ததியான சூகாமியரின்<Shuhamites> குடும்பமே; இவைகள் தாணின்<Dan> குடும்பம். {Num 26:42}
சூகாமியரின்<Shuhamites> வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர். {Num 26:43}
ஆசேருடைய<Asher> குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின்<Jimna> சந்ததியான இம்னாவியரின்<Jimnites> குடும்பமும், இஸ்வியின்<Jesui> சந்ததியான இஸ்வியரின்<Jesuites> குடும்பமும், பெரீயாவின்<Beriah> சந்ததியான பெரீயாவியரின்<Beriites> குடும்பமும், {Num 26:44}
பெரீயா<Beriah> பெற்ற ஏபேரின்<Heber> சந்ததியான ஏபேரியரின்<Heberites> குடும்பமும், மல்கியேலின்<Malchiel> சந்ததியான மல்கியேலியரின்<Malchielites> குடும்பமுமே. {Num 26:45}
ஆசேருடைய<Asher> குமாரத்தியின் பேர் சாராள்<Sarah>. {Num 26:46}
இவைகளே ஆசேர்<Asher> புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். {Num 26:47}
நப்தலியினுடைய<Naphtali> குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின்<Jahzeel> சந்ததியான யாத்சியேலியரின்<Jahzeelites> குடும்பமும், கூனியின்<Guni> சந்ததியான கூனியரின்<Gunites> குடும்பமும், {Num 26:48}
எத்செரின்<Jezer> சந்ததியான எத்செரியரின்<Jezerites> குடும்பமும், சில்லேமின்<Shillem> சந்ததியான சில்லேமியரின்<Shillemites> குடும்பமுமே. {Num 26:49}
இவைகளே நப்தலியின்<Naphtali> குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறுபேர். {Num 26:50}
இஸ்ரவேல்<Israel> புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள். {Num 26:51}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 26:52}
இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத்தக்கதாய் தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும். {Num 26:53}
அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்ட இலக்கத்திற்குத்தக்கதாக அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். {Num 26:54}
ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள். {Num 26:55}
அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார். {Num 26:56}
எண்ணப்பட்ட லேவியரின்<Levites> குடும்பங்களாவன: கெர்சோனின்<Gershon> சந்ததியான கெர்சோனியரின்<Gershonites> குடும்பமும், கோகாத்தின்<Kohath> சந்ததியான கோகாத்தியரின்<Kohathites> குடும்பமும், மெராரியின்<Merari> சந்ததியான மெராரியரின்<Merarites> குடும்பமும்; {Num 26:57}
லேவியின்<Levites> மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின்<Libnites> குடும்பமும், எப்ரோனியரின்<Hebronites> குடும்பமும், மகலியரின்<Mahlites> குடும்பமும், மூசியரின்<Mushites> குடும்பமும், கோராகியரின்<Korathites> குடும்பமுமே. கோகாத்<Kohath> அம்ராமைப்<Amram> பெற்றான். {Num 26:58}
அம்ராமுடைய<Amram> மனைவிக்கு யோகெபேத்<Jochebed> என்று பேர்; அவள் எகிப்திலே<Egypt> லேவிக்குப்<Levi> பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு<Amram> ஆரோனையும்<Aaron> மோசேயையும்<Moses> அவர்கள் சகோதரியான மிரியாமையும்<Miriam> பெற்றாள். {Num 26:59}
ஆரோனுக்கு<Aaron> நாதாபும்<Nadab> அபியூவும்<Abihu> எலெயாசாரும்<Eleazar> இத்தாமாரும்<Ithamar> பிறந்தார்கள். {Num 26:60}
நாதாபும்<Nadab> அபியூவும்<Abihu> கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள். {Num 26:61}
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல்<Israel> புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை. {Num 26:62}
மோசேயும்<Moses> ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> எரிகோவின்<Jericho> அருகேயிருக்கும் யோர்தானுக்கு<Jordan> இப்பாலே மோவாபின்<Moab> சமனான வெளிகளில் இஸ்ரவேல்<Israel> புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே. {Num 26:63}
முன்பு மோசேயும்<Moses> ஆசாரியனாகிய ஆரோனும்<Aaron> சீனாய்<Sinai> வனாந்தரத்தில் இஸ்ரவேல்<Israel> புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. {Num 26:64}
வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேபும்<Caleb> நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவும்<Joshua> தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை. {Num 26:65}
யோசேப்பின்<Joseph> குமாரனாகிய மனாசேயின்<Manasseh> குடும்பங்களில், மனாசேயின்<Manasseh> குமாரனாகிய மாகீரின்<Machir> மகனான கிலெயாத்துக்குப்<Gilead> பிறந்த ஏபேருக்குப்<Hepher> புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின்<Zelophehad> குமாரத்திகளாகிய மக்லாள்<Mahlah>, நோவாள்<Noah>, ஒக்லாள்<Hoglah>, மில்காள்<Milcah>, திர்சாள்<Tirzah> என்பவர்கள் வந்து, {Num 27:1}
ஆசரிப்புக் கூடாரவாசலிலே மோசேக்கும்<Moses>, ஆசாரியனாகிய எலெயாசாருக்கும்<Eleazar>, பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று: {Num 27:2}
எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின்<Korah> கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை. {Num 27:3}
எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள். {Num 27:4}
மோசே<Moses> அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனான். {Num 27:5}
அப்பொழுது கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 27:6}
செலோப்பியாத்தின்<Zelophehad> குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக. {Num 27:7}
மேலும் நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும். {Num 27:8}
அவனுக்குக் குமாரத்தியும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும். {Num 27:9}
அவனுக்குச் சகோதரரும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும். {Num 27:10}
அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார். {Num 27:11}
பின்பு கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: நீ இந்த அபாரீம்<Abarim> மலையில் ஏறி, நான் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார். {Num 27:12}
நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன்<Aaron> சேர்க்கப்பட்டதுபோல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்; {Num 27:13}
சபையார் வாக்குவாதம்பண்ணின சீன்<Zin> வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன்<Zin> வனாந்தரத்தில் காதேஸ்<Kadesh> ஊர்அருகே உண்டான மேரிபாவின்<Meribah> தண்ணீருக்கடுத்த காரியமே. {Num 27:14}
அப்பொழுது மோசே<Moses> கர்த்தரை நோக்கி: {Num 27:15}
கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு, {Num 27:16}
அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான். {Num 27:17}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா<Joshua> என்னும் நூனின்<Nun> குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, {Num 27:18}
அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும்<Eleazar> சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து, {Num 27:19}
இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு. {Num 27:20}
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு<Eleazar> முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம்<Urim> என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார். {Num 27:21}
மோசே<Moses> தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை<Joshua> அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும்<Eleazar> சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, {Num 27:22}
அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான். {Num 27:23}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 28:1}
எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கட்டளையிடு. {Num 28:2}
மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். {Num 28:3}
காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, {Num 28:4}
போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 28:5}
இது சீனாய்<Sinai> மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி. {Num 28:6}
காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது. {Num 28:7}
காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். {Num 28:8}
ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். {Num 28:9}
நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும். {Num 28:10}
உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள். {Num 28:11}
போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும், {Num 28:12}
போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். {Num 28:13}
அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி. {Num 28:14}
நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும். {Num 28:15}
முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. {Num 28:16}
அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும். {Num 28:17}
முதலாம் நாளிலே பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. {Num 28:18}
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், {Num 28:19}
அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், {Num 28:20}
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், {Num 28:21}
உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 28:22}
காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். {Num 28:23}
இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும். {Num 28:24}
ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. {Num 28:25}
அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. {Num 28:26}
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும், {Num 28:27}
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், {Num 28:28}
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், {Num 28:29}
உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 28:30}
நித்திய சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும். {Num 28:31}
ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும். {Num 29:1}
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:2}
அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும், {Num 29:3}
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், {Num 29:4}
உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, {Num 29:5}
மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், தினந்தோறும் இடும் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். {Num 29:6}
இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, {Num 29:7}
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:8}
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும், {Num 29:9}
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், {Num 29:10}
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:11}
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள். {Num 29:12}
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:13}
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும், {Num 29:14}
பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், {Num 29:15}
நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:16}
இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:17}
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், {Num 29:18}
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:19}
மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:20}
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், {Num 29:21}
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:22}
நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:23}
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், {Num 29:24}
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:25}
ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:26}
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், {Num 29:27}
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:28}
ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:29}
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், {Num 29:30}
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:31}
ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:32}
காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், {Num 29:33}
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:34}
எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. {Num 29:35}
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், {Num 29:36}
காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், {Num 29:37}
நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். {Num 29:38}
உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்க தகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார். {Num 29:39}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியெல்லாம் மோசே<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குச் சொன்னான். {Num 29:40}
மோசே<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: {Num 30:1}
ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன். {Num 30:2}
தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால், {Num 30:3}
அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும். {Num 30:4}
அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். {Num 30:5}
அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால், {Num 30:6}
அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும். {Num 30:7}
அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். {Num 30:8}
ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும். {Num 30:9}
அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், {Num 30:10}
அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும். {Num 30:11}
அவளுடைய புருஷன் அவைகளைக் கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். {Num 30:12}
எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும். {Num 30:13}
அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான். {Num 30:14}
அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார். {Num 30:15}
புருஷனையும் ஸ்திரீயையும், தகப்பனையும் தகப்பனுடைய வீட்டில் சிறுவயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு<Moses> விதித்த கட்டளைகள் இவைகளே. {Num 30:16}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 31:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில்<Midianites> பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார். {Num 31:2}
அப்பொழுது மோசே<Moses> ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில்<Midianites> பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள். {Num 31:3}
இஸ்ரவேலுடைய<Israel> எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான். {Num 31:4}
அப்படியே இஸ்ரவேலராகிய<Israel> அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள். {Num 31:5}
மோசே<Moses> அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின்<Eleazar> குமாரன் பினெகாசையும்<Phinehas> யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான். {Num 31:6}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன்<Midianites> யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். {Num 31:7}
அவர்களைக் கொன்றுபோட்டதும் அன்றி, மீதியானியரின்<Midian> ஐந்து ராஜாக்களாகிய ஏவி<Evi>, ரேக்கேம்<Rekem>, சூர்<Zur>, ஊர்<Hur>, ரேபா<Reba> என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின்<Beor> குமாரனாகிய பிலேயாமையும்<Balaam> பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். {Num 31:8}
அன்றியும் இஸ்ரவேல்<Israel> புத்திரர் மீதியானியரின்<Midian> ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு, {Num 31:9}
அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து, {Num 31:10}
தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து, {Num 31:11}
சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின்<Jericho> அருகேயுள்ள யோர்தானுக்கு<Jordan> இக்கரையில் மோவாபின்<Moab> சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும்<Moses>, ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும்<Eleazar>, இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். {Num 31:12}
மோசேயும்<Moses> ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள். {Num 31:13}
அப்பொழுது மோசே<Moses> யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு, {Num 31:14}
அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? {Num 31:15}
And Moses said unto them, Have ye saved all the women alive? {Num 31:15}
பேயோரின்<Peor> சங்கதியிலே பிலேயாமின்<Balaam> ஆலோசனையினால் இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே. {Num 31:16}
ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். {Num 31:17}
ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். {Num 31:18}
பின்பு நீங்கள் ஏழுநாள் பாளயத்திற்குப் புறம்பே தங்குங்கள்; நரஜீவனைக் கொன்றவர்களும், வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து, {Num 31:19}
அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான். {Num 31:20}
ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்: {Num 31:21}
அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு, {Num 31:22}
அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம்பண்ணக்கடவீர்கள். {Num 31:23}
ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான். {Num 31:24}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 31:25}
பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகைபார்த்து, {Num 31:26}
கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள். {Num 31:27}
மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி, {Num 31:28}
அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக்<Eleazar> கொடுக்கவேண்டும். {Num 31:29}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி, அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக்<Levites> கொடுக்கவேண்டும் என்றார். {Num 31:30}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே, மோசேயும்<Moses> ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> செய்தார்கள். {Num 31:31}
படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும், {Num 31:32}
எழுபத்தீராயிரம் மாடுகளும், {Num 31:33}
அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது. {Num 31:34}
புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். {Num 31:35}
யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. {Num 31:36}
இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து. {Num 31:37}
மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு. {Num 31:38}
கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று. {Num 31:39}
நரஜீவன்கள் பதினாறாயிரம் பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர். {Num 31:40}
கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே<Moses> கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில்<Eleazar> கொடுத்தான். {Num 31:41}
யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கும் மோசே<Moses> பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது: {Num 31:42}
ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு, {Num 31:43}
மாடுகளில் முப்பத்தாறாயிரம், {Num 31:44}
கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு, {Num 31:45}
நரஜீவன்களில் பதினாறாயிரம் பேருமே. {Num 31:46}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே<Moses> ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக்<Levites> கொடுத்தான். {Num 31:47}
பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில்<Moses> வந்து, {Num 31:48}
உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை. {Num 31:49}
ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள். {Num 31:50}
அப்பொழுது மோசேயும்<Moses> ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள். {Num 31:51}
இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது. {Num 31:52}
யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காகக் கொள்ளையிட்டிருந்தார்கள். {Num 31:53}
அந்தப் பொன்னை மோசேயும்<Moses> ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar> ஆயிரம் பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள். {Num 31:54}
ரூபன்<Reuben> புத்திரருக்கும் காத்<Gad> புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர்<Jazer> தேசத்தையும் கீலேயாத்<Gilead> தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள். {Num 32:1}
ஆகையால் ரூபன்<Reuben> புத்திரரும் காத்<Gad> புத்திரரும் வந்து, மோசேயையும்<Moses> ஆசாரியனாகிய எலெயாசாரையும்<Eleazar> சபையின் பிரபுக்களையும் நோக்கி: {Num 32:2}
கர்த்தர் இஸ்ரவேல்<Israel> சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத்<Ataroth>, தீபோன்<Dibon>, யாசேர்<Jazer>, நிம்ரா<Nimrah>, எஸ்போன்<Heshbon>, எலெயாலெ<Elealeh>, சேபாம்<Shebam>, நேபோ<Nebo>, பெயோன்<Beon> என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம். {Num 32:3}
உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு. {Num 32:4}
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான்<Jordan> நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள். {Num 32:5}
அப்பொழுது மோசே<Moses> காத்<Gad> புத்திரரையும் ரூபன்<Reuben> புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ? {Num 32:6}
கர்த்தர் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன? {Num 32:7}
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து<Kadeshbarnea> அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள். {Num 32:8}
அவர்கள் எஸ்கோல்<Eshcol> பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள். {Num 32:9}
அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி: {Num 32:10}
உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான<Kenezite> எப்புன்னேயின்<Jephunneh> குமாரன் காலேபும்<Caleb>, நூனின்<Nun> குமாரன் யோசுவாவும்<Joshua> தவிர, {Num 32:11}
எகிப்திலிருந்து<Egypt> வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும்<Abraham> ஈசாக்குக்கும்<Isaac> யாக்கோபுக்கும்<Jacob> ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார். {Num 32:12}
அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல்<Israel> மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார். {Num 32:13}
இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும்<Israel> கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள். {Num 32:14}
நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான். {Num 32:15}
அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம். {Num 32:16}
நாங்களோ இஸ்ரவேல்<Israel> புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம். {Num 32:17}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை. {Num 32:18}
யோர்தானுக்கு<Jordan> இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு<Jordan> அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள். {Num 32:19}
அப்பொழுது மோசே<Moses> அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி, {Num 32:20}
கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக்<Jordan> கடந்துபோவீர்களானால், {Num 32:21}
அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு, நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு<Israel> முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும். {Num 32:22}
நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். {Num 32:23}
உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான். {Num 32:24}
அப்பொழுது காத்<Gad> புத்திரரும் ரூபன்<Reuben> புத்திரரும் மோசேயை<Moses> நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம். {Num 32:25}
எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின்<Gilead> பட்டணங்களில் இருப்பார்கள். {Num 32:26}
உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள். {Num 32:27}
அப்பொழுது மோசே<Moses> அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும்<Eleazar>, நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவுக்கும்<Joshua>, இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு: {Num 32:28}
காத்<Gad> புத்திரரும் ரூபன்<Reuben> புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் உங்களோடேகூட யோர்தானைக்<Jordan> கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத்<Gilead> தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள். {Num 32:29}
உங்களோடேகூட யுத்தசன்னத்தராய்க் கடந்து போகாதிருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான்<Canaan> தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான். {Num 32:30}
காத்<Gad> புத்திரரும் ரூபன்<Reuben> புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம். {Num 32:31}
யோர்தானுக்கு<Jordan> இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய்க் கானான்தேசத்திற்குப்<Canaan> போவோம் என்றார்கள். {Num 32:32}
அப்பொழுது மோசே<Moses> காத்<Gad> புத்திரருக்கும், ரூபன்<Reuben> புத்திரருக்கும், யோசேப்பின்<Joseph> குமாரனாகிய மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய<Amorites> ராஜாவாகிய சீகோனின்<Sihon> ராஜ்யத்தையும், பாசானுடைய<Bashan> ராஜாவாகிய ஓகின்<Og> ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான். {Num 32:33}
பின்பு காத்<Gad> சந்ததியார் தீபோன்<Dibon>, அதரோத்<Ataroth> ஆரோவேர்<Aroer>, {Num 32:34}
ஆத்ரோத்<Atroth>, சோபான்<Shophan>, யாசேர்<Jaazer>, யொகிபேயா<Jogbehah>, {Num 32:35}
பெத்நிம்ரா<Bethnimrah>, பெத்தாரன்<Bethharan> என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள். {Num 32:36}
ரூபன்<Reuben> சந்ததியார் எஸ்போன்<Heshbon>, எலெயாலெ<Elealeh>, கீரியத்தாயீம்<Kirjathaim>, {Num 32:37}
பேர்கள் மாற்றப்பட்ட நேபோ<Nebo>, பாகால்மெயோன்<Baalmeon>, சீப்மா<Shibmah> என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள். {Num 32:38}
மனாசேயின்<Manasseh> குமாரனாகிய மாகீரின்<Machir> புத்திரர் கீலேயாத்திற்குப்<Gilead> போய், அதைக்கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத்<Amorite> துரத்திவிட்டார்கள். {Num 32:39}
அப்பொழுது மோசே<Moses> கீலேயாத்தை<Gilead> மனாசேயின்<Manasseh> குமாரனாகிய மாகீருக்குக்<Machir> கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள். {Num 32:40}
மனாசேயின்<Manasseh> குமாரனாகிய யாவீர்<Jair> போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர்<Havothjair> என்று பேரிட்டான். {Num 32:41}
நோபாக்<Nobah> போய், கேனாத்தையும்<Kenath> அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக்<Nobah> என்று பேரிட்டான். {Num 32:42}
மோசே<Moses> ஆரோன்<Aaron> என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்பட்ட இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்: {Num 33:1}
மோசே<Moses> தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன: {Num 33:2}
முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை<Rameses> விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர்<Egyptians> எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல்<Israel> புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள். {Num 33:3}
அப்பொழுது எகிப்தியர்<Egyptians> கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார். {Num 33:4}
பின்பு இஸ்ரவேல்<Israel> புத்திரர் ராமசேசிலிருந்து<Rameses> புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே<Succoth> பாளயமிறங்கினார்கள். {Num 33:5}
சுக்கோத்திலிருந்து<Succoth> புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே<Etham> பாளயமிறங்கினார்கள். {Num 33:6}
ஏத்தாமிலிருந்து<Etham> புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு<Baalzephon> எதிராக இருக்கிற ஈரோத்<Pihahiroth> பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு<Migdol> முன்பாகப் பாளயமிறங்கினார்கள். {Num 33:7}
ஈரோத்தை<Pihahiroth> விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம்<Etham> வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே<Marah> பாளயமிறங்கினார்கள். {Num 33:8}
மாராவிலிருந்து<Marah> புறப்பட்டு, ஏலிமுக்குப்<Elim> போனார்கள்; ஏலிமிலே<Elim> பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள். {Num 33:9}
ஏலிமிலிருந்து<Elim> புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின்<Red sea> அருகே பாளயமிறங்கினார்கள். {Num 33:10}
சிவந்த சமுத்திரத்தை<Red sea> விட்டுப் புறப்பட்டுப்போய், சீன்வனாந்தரத்திலே<Sin> பாளயமிறங்கினார்கள். {Num 33:11}
சீன்வனாந்தரத்திலிருந்து<Sin> புறப்பட்டுப்போய், தொப்காவிலே<Dophkah> பாளயமிறங்கினார்கள். {Num 33:12}
தொப்காவிலிருந்து<Dophkah> புறப்பட்டுப்போய், ஆலூசிலே<Alush> பாளயமிறங்கினார்கள். {Num 33:13}
ஆலூசிலிருந்து<Alush> புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே<Rephidim> பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. {Num 33:14}
ரெவிதீமிலிருந்து<Rephidim> புறப்பட்டுப்போய், சீனாய்<Sinai> வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். {Num 33:15}
சீனாய்<Sinai> வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே<Kibrothhattaavah> பாளயமிறங்கினார்கள். {Num 33:16}
கிப்ரோத் அத்தாவிலிருந்து<Kibrothhattaavah> புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே<Hazeroth> பாளயமிறங்கினார்கள். {Num 33:17}
ஆஸரோத்திலிருந்து<Hazeroth> புறப்பட்டுப்போய், ரித்மாவிலே<Rithmah> பாளயமிறங்கினார்கள். {Num 33:18}
ரித்மாவிலிருந்து<Rithmah> புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே<Rimmonparez> பாளயமிறங்கினார்கள். {Num 33:19}
ரிம்மோன்பேரேசிலிருந்து<Rimmonparez> புறப்பட்டுப்போய், லிப்னாவிலே<Libnah> பாளயமிறங்கினார்கள். {Num 33:20}
லிப்னாவிலிருந்து<Libnah> புறப்பட்டுப்போய், ரீசாவிலே<Rissah> பாளயமிறங்கினார்கள். {Num 33:21}
ரீசாவிலிருந்து<Rissah> புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே<Kehelathah> பாளயமிறங்கினார்கள். {Num 33:22}
கேலத்தாவிலிருந்து<Kehelathah> புறப்பட்டுப்போய், சாப்பேர்<Shapher> மலையிலே பாளயமிறங்கினார்கள். {Num 33:23}
சாப்பேர்<Shapher> மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே<Haradah> பாளயமிறங்கினார்கள். {Num 33:24}
ஆரதாவிலிருந்து<Haradah> புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே<Makheloth> பாளயமிறங்கினார்கள். {Num 33:25}
மக்கெலோத்திலிருந்து<Makheloth> புறப்பட்டுப்போய், தாகாத்திலே<Tahath> பாளயமிறங்கினார்கள். {Num 33:26}
தாகாத்திலிருந்து<Tahath> புறப்பட்டுப்போய், தாராகிலே<Tarah> பாளயமிறங்கினார்கள். {Num 33:27}
தாராகிலிருந்து<Tarah> புறப்பட்டுப்போய், மித்காவிலே<Mithcah> பாளயமிறங்கினார்கள். {Num 33:28}
மித்காவிலிருந்து<Mithcah> புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே<Hashmonah> பாளயமிறங்கினார்கள். {Num 33:29}
அஸ்மோனாவிலிருந்து<Hashmonah> புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே<Moseroth> பாளயமிறங்கினார்கள். {Num 33:30}
மோசெரோத்திலிருந்து<Moseroth> புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே<Benejaakan> பாளயமிறங்கினார்கள். {Num 33:31}
பெனெயாக்கானிலிருந்து<Benejaakan> புறப்பட்டுப்போய், கித்காத்<Horhagidgad> மலையிலே பாளயமிறங்கினார்கள். {Num 33:32}
கித்காத்<Horhagidgad> மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே<Jotbathah> பாளயமிறங்கினார்கள். {Num 33:33}
யோத்பாத்தாவிலிருந்து<Jotbathah> புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே<Ebronah> பாளயமிறங்கினார்கள். {Num 33:34}
எப்ரோனாவிலிருந்து<Ebronah> புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே<Eziongaber> பாளயமிறங்கினார்கள். {Num 33:35}
எசியோன் கேபேரிலிருந்து<Eziongaber> புறப்பட்டுப்போய், காதேசாகிய<Kadesh> சீன்வனாந்தரத்திலே<Zin> பாளயமிறங்கினார்கள். {Num 33:36}
காதேசிலிருந்து<Kadesh> புறப்பட்டுப்போய், ஏதோம்<Edom> தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர்<Hor> என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள். {Num 33:37}
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன்<Aaron> கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர்<Hor> என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல்<Israel> புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான். {Num 33:38}
ஆரோன்<Aaron> ஓர்<Hor> என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான். {Num 33:39}
அந்நாட்களிலே கானான்<Canaan> தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய<Canaanite> ஆராத்<Arad> என்னும் ராஜா இஸ்ரவேல்<Israel> புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான். {Num 33:40}
ஓர்<Hor> என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே<Zalmonah> பாளயமிறங்கினார்கள். {Num 33:41}
சல்மோனாவிலிருந்து<Zalmonah> புறப்பட்டுப்போய், பூனோனிலே<Punon> பாளயமிறங்கினார்கள். {Num 33:42}
பூனோனிலிருந்து<Punon> புறப்பட்டுப்போய், ஓபோத்திலே<Oboth> பாளயமிறங்கினார்கள். {Num 33:43}
ஓபோத்திலிருந்து<Oboth> புறப்பட்டுப்போய், மோவாபின்<Moab> எல்லையிலுள்ள அபாரீமின்<Ijeabarim> மேடுகளிலே பாளயமிறங்கினார்கள். {Num 33:44}
அந்த மேடுகளை விட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே<Dibongad> பாளயமிறங்கினார்கள். {Num 33:45}
தீபோன்காத்திலிருந்து<Dibongad> புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே<Almondiblathaim> பாளயமிறங்கினார்கள். {Num 33:46}
அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து<Almondiblathaim> புறப்பட்டுப்போய், நேபோவுக்கு<Nebo> எதிரான அபாரீம்<Abarim> மலைகளிலே பாளயமிறங்கினார்கள். {Num 33:47}
அபாரீம்<Abarim> மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின்<Jericho> அருகே யோர்தானைச்<Jordan> சார்ந்த மோவாபின்<Moab> சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள். {Num 33:48}
யோர்தானைச்<Jordan> சார்ந்த மோவாபின்<Moab> சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத்<Bethjesimoth> தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும்<Abelshittim> பாளயமிறங்கியிருந்தார்கள். {Num 33:49}
எரிகோவின்<Jericho> அருகே யோர்தானைச்<Jordan> சார்ந்த மோவாபின்<Moab> சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 33:50}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக்<Jordan> கடந்து, கானான்தேசத்தில்<Canaan> போய்ச் சேரும்போது, {Num 33:51}
அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி, {Num 33:52}
தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன். {Num 33:53}
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள். {Num 33:54}
நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள். {Num 33:55}
அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார். {Num 33:56}
கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 34:1}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம்<Canaan> அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில்<Canaan> சேரும்போது, {Num 34:2}
உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்<Zin> தொடங்கி ஏதோம்<Edom> தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின்<salt sea> கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும். {Num 34:3}
உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம்<Akrabbim> மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில்<Zin> போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும்<Kadeshbarnea>, அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும்<Hazaraddar>, அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும்<Azmon> போய், {Num 34:4}
அஸ்மோனாவிலிருந்து<Azmon> எகிப்தின்<Egypt> நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும். {Num 34:5}
மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும். {Num 34:6}
உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர்<Hor> என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து, {Num 34:7}
ஓர்<Hor> என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப்<Hamath> போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப்<Zedad> போய், {Num 34:8}
அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய்<Ziphron>, ஆத்சார் ஏனானிலே<Hazarenan> முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும். {Num 34:9}
உங்களுக்குக் கீழ்த்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து<Hazarenan> சேப்பாமைக்<Shepham> குறிப்பாக வைத்து, {Num 34:10}
சேப்பாமிலிருந்து<Shepham> எல்லையானது ஆயினுக்குக்<Ain> கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும்<Riblah>, அங்கேயிருந்து கின்னரேத்<Chinnereth> கடல்பரியந்தமும் அதின் கீழ்க்கரையோரமாய், {Num 34:11}
அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும்<Jordan> போய், உப்புக்கடலில்<salt sea> முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார். {Num 34:12}
அப்பொழுது மோசே<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே. {Num 34:13}
ரூபன்<Reuben> புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத்<Gad> புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின்<Manasseh> பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். {Num 34:14}
இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின்<Jericho> அருகேயுள்ள யோர்தானுக்கு<Jordan> இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான். {Num 34:15}
மேலும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 34:16}
உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும்<Eleazar>, நூனின்<Nun> குமாரனாகிய யோசுவாவுமே<Joshua>. {Num 34:17}
அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள். {Num 34:18}
அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா<Judah> கோத்திரத்துக்கு எப்புன்னேயின்<Jephunneh> குமாரனாகிய காலேபும்<Caleb>, {Num 34:19}
சிமியோன்<Simeon> புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின்<Ammihud> குமாரனாகிய சாமுவேலும்<Shemuel>, {Num 34:20}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்துக்குக் கிஸ்லோனின்<Chislon> குமாரனாகிய எலிதாதும்<Elidad>, {Num 34:21}
தாண்<Dan> புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின்<Jogli> குமாரனாகிய புக்கி<Bukki> என்னும் பிரபுவும், {Num 34:22}
யோசேப்பின்<Joseph> குமாரனாகிய மனாசே<Manasseh> புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின்<Ephod> குமாரனாகிய அன்னியேல்<Hanniel> என்னும் பிரபுவும், {Num 34:23}
எப்பிராயீம்<Ephraim> புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின்<Shiphtan> குமாரனாகிய கேமுவேல்<Kemuel> என்னும் பிரபுவும், {Num 34:24}
செபுலோன்<Zebulun> புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின்<Parnach> குமாரனாகிய எலிசாப்பான்<Elizaphan> என்னும் பிரபுவும், {Num 34:25}
இசக்கார்<Issachar> புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின்<Azzan> குமாரனாகிய பல்த்தியேல்<Paltiel> என்னும் பிரபுவும், {Num 34:26}
ஆசேர்<Asher> புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின்<Shelomi> குமாரனாகிய அகியூத்<Ahihud> என்னும் பிரபுவும், {Num 34:27}
நப்தலி<Naphtali> புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின்<Ammihud> குமாரனாகிய பெதாக்கேல்<Pedahel> என்னும் பிரபுவுமே என்றார். {Num 34:28}
கானான்தேசத்திலே<Canaan> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே. {Num 34:29}
எரிகோவின்<Jericho> அருகே யோர்தானைச்<Jordan> சேர்ந்த மோவாபின்<Moab> சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 35:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக்<Levites> குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக்<Levites> கொடுக்கவேண்டும். {Num 35:2}
அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருகஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும். {Num 35:3}
நீங்கள் லேவியருக்குக்<Levites> கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்தொடங்கி, வெளியிலே சுற்றிலும் ஆயிரமுழ தூரத்துக்கு எட்டவேண்டும். {Num 35:4}
பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறந்தொடங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், மேற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடக்கடவீர்கள்; இது அவர்கள் பட்டணங்களுக்கு வெளிநிலங்களாயிருப்பதாக. {Num 35:5}
நீங்கள் லேவியருக்குக்<Levites> கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலைசெய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கக்கடவீர்கள்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். {Num 35:6}
நீங்கள் லேவியருக்குக்<Levites> கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே. {Num 35:7}
நீங்கள் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக்<Levites> கொடுக்கக்கடவர்கள் என்றார். {Num 35:8}
பின்னும் கர்த்தர் மோசேயை<Moses> நோக்கி: {Num 35:9}
நீ இஸ்ரவேல்<Israel> புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக்<Jordan> கடந்து, கானான்தேசத்தில்<Canaan> பிரவேசிக்கும்போது, {Num 35:10}
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றுபோட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள். {Num 35:11}
கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது. {Num 35:12}
நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும். {Num 35:13}
யோர்தானுக்கு<Jordan> இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில்<Canaan> மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம். {Num 35:14}
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும். {Num 35:15}
ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். {Num 35:16}
ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால், கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான், அவன் கொலைசெய்யப்படவேண்டும். {Num 35:17}
ஒருவன் தன் கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். {Num 35:18}
பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்றுபோடலாம். {Num 35:19}
ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய் அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலாயினும், {Num 35:20}
அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டமாத்திரத்தில் கொன்றுபோடலாம். {Num 35:21}
ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப்பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும், {Num 35:22}
அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்றுபோடத்தக்க ஒரு கல்லினால் அவனைக் காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால், {Num 35:23}
அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து, {Num 35:24}
கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன். {Num 35:25}
ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது, {Num 35:26}
பழிவாங்குகிறவன் கொலைசெய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை. {Num 35:27}
கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப் போகலாம். {Num 35:28}
இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது. {Num 35:29}
எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது. {Num 35:30}
சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும். {Num 35:31}
தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக்கூடாது. {Num 35:32}
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை. {Num 35:33}
நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல்<Israel> புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார். {Num 35:34}
யோசேப்பின்<Joseph> குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின்<Manasseh> குமாரனாகிய மாகீருக்குப்<Machir> பிறந்த கீலேயாத்தின்<Gilead> வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும்<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி: {Num 36:1}
சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல்<Israel> புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின்<Zelophehad> சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே. {Num 36:2}
இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே. {Num 36:3}
இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு யூபிலி<jubile> வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள். {Num 36:4}
அப்பொழுது மோசே<Moses> கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: யோசேப்பு<Joseph> புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே. {Num 36:5}
கர்த்தர் செலொப்பியாத்தின்<Zelophehad> குமாரத்திகளைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திர வம்சத்தாரில்மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும். {Num 36:6}
இப்படியே இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்க வேண்டும். {Num 36:7}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும். {Num 36:8}
சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான். {Num 36:9}
கர்த்தர் மோசேக்குக்<Moses> கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின்<Zelophehad> குமாரத்திகள் செய்தார்கள். {Num 36:10}
செலொப்பியாத்தின்<Zelophehad> குமாரத்திகளாகிய மக்லாள்<Mahlah> திர்சாள்<Tirzah> ஒக்லாள்<Hoglah> மில்காள்<Milcah> நோவாள்<Noah> என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின்<Joseph> குமாரனாகிய மனாசே<Manasseh> புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால், {Num 36:11}
அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது. {Num 36:12}
எரிகோவின்<Jericho> அருகே யோர்தானுக்கு<Jordan> இப்புறத்திலுள்ள மோவாபின்<Moab> சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. {Num 36:13}
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!