Wednesday, January 01, 2020

யூதா

இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  ஊழியக்காரனும்,  யாக்கோபினுடைய<James>  சகோதரனுமாயிருக்கிற  யூதா<Jude>,  பிதாவாகிய  தேவனாலே  பரிசுத்தமாக்கப்பட்டவர்களும்,  இயேசுகிறிஸ்துவினாலே<Jesus  Christ>  காக்கப்பட்டவர்களுமாகிய  அழைக்கப்பட்டவர்களுக்கு  எழுதுகிறதாவது:  {Jude  1:1}

 

உங்களுக்கு  இரக்கமும்  சமாதானமும்  அன்பும்  பெருகக்கடவது.  {Jude  1:2}

 

பிரியமானவர்களே,  பொதுவான  இரட்சிப்பைக்குறித்து  உங்களுக்கு  எழுதும்படி  நான்  மிகவும்  கருத்துள்ளவனாயிருக்கையில்,  பரிசுத்தவான்களுக்கு  ஒருவிசை  ஒப்புக்கொடுக்கப்பட்ட  விசுவாசத்திற்காக  நீங்கள்  தைரியமாய்ப்  போராடவேண்டுமென்று  உங்களுக்கு  எழுதி  உணர்த்துவது  எனக்கு  அவசியமாய்க்  கண்டது.  {Jude  1:3}

 

ஏனெனில்  நமது  தேவனுடைய  கிருபையைக்  காமவிகாரத்துக்கேதுவாகப்  புரட்டி,  ஒன்றான  ஆண்டவராகிய  தேவனையும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவையும்<Jesus  Christ>  மறுதலிக்கிற  பக்தியற்றவர்களாகிய  சிலர்  பக்கவழியாய்  நுழைந்திருக்கிறார்கள்;  அவர்கள்  இந்த  ஆக்கினைக்குள்ளாவார்களென்று  பூர்வத்திலே  எழுதியிருக்கிறது.  {Jude  1:4}

 

நீங்கள்  முன்னமே  அறிந்திருந்தாலும்,  நான்  உங்களுக்கு  நினைப்பூட்ட  விரும்புகிறதென்னவெனில்,  கர்த்தர்  தமது  ஜனத்தை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  வரப்பண்ணி  இரட்சித்து,  பின்பு  விசுவாசியாதவர்களை  அழித்தார்.  {Jude  1:5}

 

தங்களுடைய  ஆதிமேன்மையைக்  காத்துக்கொள்ளாமல்,  தங்களுக்குரிய  வாசஸ்தலத்தை  விட்டுவிட்ட  தூதர்களையும்,  மகாநாளின்  நியாயத்தீர்ப்புக்கென்று  நித்திய  சங்கிலிகளினாலே  கட்டி,  அந்தகாரத்தில்  அடைத்துவைத்திருக்கிறார்.  {Jude  1:6}

 

அப்படியே  சோதோம்<Sodom>  கொமோரா<Gomorrha>  பட்டணத்தார்களும்,  அவைகளைச்  சூழ்ந்த  பட்டணத்தார்களும்,  அவர்களைப்போல்  விபசாரம்பண்ணி,  அந்நிய  மாம்சத்தைத்  தொடர்ந்து,  நித்திய  அக்கினியின்  ஆக்கினையை  அடைந்து,  திருஷ்டாந்தமாக  வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  {Jude  1:7}

 

அப்படிப்போலவே,  சொப்பனக்காரராகிய  இவர்களும்  மாம்சத்தை  அசுசிப்படுத்திக்கொண்டு,  கர்த்தத்துவத்தை  அசட்டைபண்ணி,  மகத்துவங்களைத்  தூஷிக்கிறார்கள்.  {Jude  1:8}

 

பிரதான  தூதனாகிய  மிகாவேல்<Michael>  மோசேயினுடைய<Moses>  சரீரத்தைக்குறித்துப்  பிசாசுடனே  தர்க்கித்துப்  பேசினபோது,  அவனைத்  தூஷணமாய்க்  குற்றப்படுத்தத்  துணியாமல்:  கர்த்தர்  உன்னைக்  கடிந்துகொள்வாராக  என்று  சொன்னான்.  {Jude  1:9}

 

இவர்கள்  தங்களுக்குத்  தெரியாதவைகளைத்  தூஷிக்கிறார்கள்;  புத்தியில்லாத  மிருகங்களைப்போலச்  சுபாவப்படி  தங்களுக்குத்  தெரிந்திருக்கிறவைகளாலே  தங்களைக்  கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.  {Jude  1:10}

 

இவர்களுக்கு  ஐயோ!  இவர்கள்  காயீனுடைய<Cain>  வழியில்  நடந்து,  பிலேயாம்<Balaam>  கூலிக்காகச்செய்த  வஞ்சகத்திலே  விரைந்தோடி,  கோரா<Core>  எதிர்த்துப்பேசின  பாவத்திற்குள்ளாகி,  கெட்டுப்போனார்கள்.  {Jude  1:11}

 

இவர்கள்  உங்கள்  அன்பின்  விருந்துகளில்  கறைகளாயிருந்து,  பயமின்றிக்  கூட  விருந்துண்டு,  தங்களைத்  தாங்களே  மேய்த்துக்கொள்ளுகிறார்கள்;  இவர்கள்  காற்றுகளால்  அடியுண்டோடுகிற  தண்ணீரற்ற  மேகங்களும்,  இலையுதிர்ந்து  கனியற்று  இரண்டுதரஞ்  செத்து  வேரற்றுப்போன  மரங்களும்,  {Jude  1:12}

 

தங்கள்  அவமானங்களை  நுரைதள்ளுகிற  அமளியான  கடலலைகளும்,  மார்க்கந்தப்பி  அலைகிற  நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்;  இவர்களுக்காக  என்றென்றைக்கும்  காரிருளே  வைக்கப்பட்டிருக்கிறது.  {Jude  1:13}

 

ஆதாமுக்கு<Adam>  ஏழாந்தலைமுறையான  ஏனோக்கும்<Enoch>  இவர்களைக்குறித்து:  இதோ,  எல்லாருக்கும்  நியாயத்தீர்ப்புக்  கொடுக்கிறதற்கும்,  அவர்களில்  அவபக்தியுள்ளவர்கள்  யாவரும்  அவபக்தியாய்ச்  செய்துவந்த  சகல  அவபக்தியான  கிரியைகளினிமித்தமும்,  {Jude  1:14}

 

தமக்கு  விரோதமாய்  அவபக்தியுள்ள  பாவிகள்  பேசின  கடின  வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும்,  அவர்களைக்  கண்டிக்கிறதற்கும்,  ஆயிரமாயிரமான  தமது  பரிசுத்தவான்களோடுங்கூடக்  கர்த்தர்  வருகிறார்  என்று  முன்னறிவித்தான்.  {Jude  1:15}

 

இவர்கள்  முறுமுறுக்கிறவர்களும்,  முறையிடுகிறவர்களும்,  தங்கள்  இச்சைகளின்படி  நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்;  இவர்களுடைய  வாய்  இறுமாப்பானவைகளைப்  பேசும்;  தற்பொழிவுக்காக  முகஸ்துதி  செய்வார்கள்.  {Jude  1:16}

 

நீங்களோ  பிரியமானவர்களே,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அப்போஸ்தலரால்  முன்  சொல்லப்பட்ட  வார்த்தைகளை  நினைவுகூருங்கள்.  {Jude  1:17}

 

கடைசிக்காலத்திலே  தங்கள்  துன்மார்க்கமான  இச்சைகளின்படி  நடக்கிற  பரியாசக்காரர்  தோன்றுவார்கள்  என்று  உங்களுக்குச்  சொன்னார்களே.  {Jude  1:18}

 

இவர்கள்  பிரிந்துபோகிறவர்களும்,  ஜென்மசுபாவத்தாரும்,  ஆவியில்லாதவர்களுமாமே.  {Jude  1:19}

 

நீங்களோ  பிரியமானவர்களே,  உங்கள்  மகா  பரிசுத்தமான  விசுவாசத்தின்மேல்  உங்களை  உறுதிப்படுத்திக்கொண்டு,  பரிசுத்தஆவிக்குள்  ஜெபம்பண்ணி,  {Jude  1:20}

 

தேவனுடைய  அன்பிலே  உங்களைக்  காத்துக்கொண்டு,  நித்தியஜீவனுக்கேதுவாக  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  இரக்கத்தைப்பெறக்  காத்திருங்கள்.  {Jude  1:21}

 

அல்லாமலும்,  நீங்கள்  பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து,  சிலருக்கு  இரக்கம்  பாராட்டி,  சிலரை  அக்கினியிலிருந்து  இழுத்துவிட்டு,  பயத்தோடே  இரட்சித்து,  {Jude  1:22}

 

மாம்சத்தால்  கறைப்பட்டிருக்கிற  வஸ்திரத்தையும்  வெறுத்துத்  தள்ளுங்கள்.  {Jude  1:23}

 

வழுவாதபடி  உங்களைக்  காக்கவும்,  தமது  மகிமையுள்ள  சந்நிதானத்திலே  மிகுந்த  மகிழ்ச்சியோடே  உங்களை  மாசற்றவர்களாய்  நிறுத்தவும்  வல்லமையுள்ளவரும்,  {Jude  1:24}

 

தாம்  ஒருவரே  ஞானமுள்ளவருமாகிய  நம்முடைய  இரட்சகரான  தேவனுக்குக்  கனமும்  மகத்துவமும்  வல்லமையும்  அதிகாரமும்  இப்பொழுதும்  எப்பொழுதும்  உண்டாவதாக.  ஆமென்<Amen>.  {Jude  1:25}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!