Wednesday, January 01, 2020

3 யோவான்

மூப்பனாகிய  நான்  சத்தியத்தின்படி  நேசிக்கிற  பிரியமான  காயுவுக்கு<Gaius>  எழுதுகிறதாவது:  {3John  1:1}

 

பிரியமானவனே,  உன்  ஆத்துமா  வாழ்கிறதுபோல  நீ  எல்லாவற்றிலும்  வாழ்ந்து  சுகமாயிருக்கும்படி  வேண்டுகிறேன்.  {3John  1:2}

 

சகோதரர்  வந்து  நீ  சத்தியத்தில்  நடந்துகொள்ளுகிறாய்  என்று  உன்னுடைய  உண்மையைக்குறித்துச்  சாட்சி  கொடுத்தபோது  மிகவும்  சந்தோஷப்பட்டேன்.  {3John  1:3}

 

என்  பிள்ளைகள்  சத்தியத்திலே  நடக்கிறார்கள்  என்று  நான்  கேள்விப்படுகிற  சந்தோஷத்திலும்  அதிகமான  சந்தோஷம்  எனக்கு  இல்லை.  {3John  1:4}

 

பிரியமானவனே,  நீ  சகோதரருக்கும்  அந்நியருக்கும்  செய்கிற  யாவற்றையும்  உண்மையாய்ச்  செய்கிறாய்.  {3John  1:5}

 

அவர்கள்  உன்னுடைய  அன்பைக்  குறித்துச்  சபைக்குமுன்பாகச்  சாட்சி  சொன்னார்கள்;  தேவனுக்கு  முன்பாகப்  பாத்திரமானபடி  அவர்களை  நீ  வழிவிட்டனுப்பினால்  நலமாயிருக்கும்.  {3John  1:6}

 

ஏனெனில்  அவர்கள்  புறஜாதியாரிடத்தில்  ஒன்றும்  வாங்காமல்  அவருடைய  நாமத்தினிமித்தம்  புறப்பட்டுப்போனார்கள்.  {3John  1:7}

 

ஆகையால்  நாம்  சத்தியத்திற்கு  உடன்வேலையாட்களாயிருக்கும்படி  அப்படிப்பட்டவர்களைச்  சேர்த்துக்கொள்ளக்  கடனாளிகளாயிருக்கிறோம்.  {3John  1:8}

 

நான்  சபைக்கு  எழுதினேன்;  ஆனாலும்  அவர்களில்  முதன்மையாயிருக்க  விரும்புகிற  தியோத்திரேப்பு<Diotrephes>  எங்களை  ஏற்றுக்கொள்ளவில்லை.  {3John  1:9}

 

ஆனபடியால்,  நான்  வந்தால்,  அவன்  எங்களுக்கு  விரோதமாய்ப்  பொல்லாத  வார்த்தைகளை  அலப்பி,  செய்துவருகிற  கிரியைகளை  நினைத்துக்கொள்வேன்.  அவன்  இப்படிச்  செய்துவருவதும்  போதாமல்,  தான்  சகோதரரை  ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி,  ஏற்றுக்கொள்ள  மனதாயிருக்கிறவர்களையும்  தடைசெய்து,  சபைக்குப்  புறம்பே  தள்ளுகிறான்.  {3John  1:10}

 

பிரியமானவனே,  நீ  தீமையானதைப்  பின்பற்றாமல்,  நன்மையானதைப்  பின்பற்று,  நன்மைசெய்கிறவன்  தேவனால்  உண்டாயிருக்கிறான்;  தீமைசெய்கிறவன்  தேவனைக்  காணவில்லை.  {3John  1:11}

 

தேமேத்திரியு<Demetrius>  எல்லாராலும்  நற்சாட்சிபெற்றதுமல்லாமல்,  சத்தியத்தாலும்  நற்சாட்சிபெற்றவன்;  நாங்களும்  சாட்சிகொடுக்கிறோம்,  எங்கள்  சாட்சி  மெய்யென்று  அறிவீர்கள்.  {3John  1:12}

 

எழுதவேண்டிய  காரியங்கள்  அநேகமுண்டு;  ஆனால்  மையினாலும்  இறகினாலும்  எழுத  எனக்கு  மனதில்லை.  {3John  1:13}

 

சீக்கிரமாய்  உன்னைக்  காணலாமென்று  நம்பியிருக்கிறேன்,  அப்பொழுது  முகமுகமாய்ப்  பேசிக்கொள்ளுவோம்.  உனக்குச்  சமாதானம்  உண்டாவதாக.  சிநேகிதர்  உனக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  சிநேகிதரைப்  பேர்பேராக  வாழ்த்துவாயாக.  {3John  1:14}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!