Wednesday, January 01, 2020

2 யோவான்

நமக்குள்  நிலைநிற்கிறதும்  என்றென்றைக்கும்  நம்மோடிருப்பதுமாகிய  சத்தியத்தினிமித்தம்,  நான்  மாத்திரமல்ல,  சத்தியத்தை  அறிந்திருக்கிற  யாவரும்  சத்தியத்தின்படி  நேசித்திருக்கிறவளும்,  {2John  1:1}

 

தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய  அம்மாளுக்கும்  அவளுடைய  பிள்ளைகளுக்கும்,  மூப்பனாகிய  நான்  எழுதுகிறதாவது:  {2John  1:2}

 

பிதாவாகிய  தேவனாலும்  பிதாவின்  குமாரனாயிருக்கிற  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>,  கிருபையும்  இரக்கமும்  சமாதானமும்,  சத்தியத்தோடும்  அன்போடுங்கூட,  உங்களோடிருப்பதாக.  {2John  1:3}

 

பிதாவினால்  நாம்  பெற்ற  கற்பனையின்படியே  உம்முடைய  பிள்ளைகளில்  சிலர்  சத்தியத்திலே  நடக்கிறதை  நான்  கண்டு  மிகவும்  சந்தோஷப்பட்டேன்.  {2John  1:4}

 

இப்பொழுதும்  அம்மாளே,  நாம்  ஒருவரிலொருவர்  அன்புகூரவேண்டுமென்று,  உமக்குப்  புதிய  கற்பனையாக  எழுதாமல்,  ஆதிமுதல்  நமக்கு  உண்டாயிருக்கிற  கற்பனையாக  எழுதி,  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {2John  1:5}

 

நாம்  அவருடைய  கற்பனைகளின்படி  நடப்பதே  அன்பு;  நீங்கள்  ஆதிமுதல்  கேட்டிருக்கிறபடி  நடந்துகொள்ளவேண்டிய  கற்பனை  இதுவே.  {2John  1:6}

 

மாம்சத்தில்  வந்த  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  அறிக்கைபண்ணாத  அநேக  வஞ்சகர்  உலகத்திலே  தோன்றியிருக்கிறார்கள்;  இப்படிப்பட்டவனே  வஞ்சகனும்  அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்<antichrist>.  {2John  1:7}

 

உங்கள்  செய்கைகளின்  பலனை  இழந்துபோகாமல்,  பூரண  பலனைப்  பெறும்படிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  {2John  1:8}

 

கிறிஸ்துவின்<Christ>  உபதேசத்திலே  நிலைத்திராமல்  மீறி  நடக்கிற  எவனும்  தேவனை  உடையவனல்ல;  கிறிஸ்துவின்<Christ>  உபதேசத்தில்  நிலைத்திருக்கிறவனோ  பிதாவையும்  குமாரனையும்  உடையவன்.  {2John  1:9}

 

ஒருவன்  உங்களிடத்தில்  வந்து  இந்த  உபதேசத்தைக்  கொண்டுவராமலிருந்தால்,  அவனை  உங்கள்  வீட்டிலே  ஏற்றுக்கொள்ளாமலும்,  அவனுக்கு  வாழ்த்துதல்  சொல்லாமலும்  இருங்கள்.  {2John  1:10}

 

அவனுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறவன்  அவனுடைய  துர்க்கிரியைகளுக்கும்  பங்குள்ளவனாகிறான்.  {2John  1:11}

 

உங்களுக்கு  எழுதவேண்டிய  காரியங்கள்  அநேகமுண்டு;  காகிதத்தினாலும்  மையினாலும்  அவைகளை  எழுத  எனக்கு  மனதில்லை.  உங்களுடைய  சந்தோஷம்  நிறைவாயிருக்கும்படிக்கு  உங்களிடத்தில்  வந்து,  முகமுகமாய்ப்  பேசலாமென்று  நம்பியிருக்கிறேன்.  {2John  1:12}

 

தெரிந்துகொள்ளப்பட்ட  உம்முடைய  சகோதரியின்  பிள்ளைகள்  உமக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  ஆமென்<Amen>.  {2John  1:13}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!