Wednesday, January 01, 2020

1 யோவான்

ஆதிமுதல்  இருந்ததும்,  நாங்கள்  கேட்டதும்,  எங்கள்  கண்களினாலே  கண்டதும்,  நாங்கள்  நோக்கிப்பார்த்ததும்,  எங்கள்  கைகளினாலே  தொட்டதுமாயிருக்கிற  ஜீவவார்த்தையைக்குறித்து  உங்களுக்கு  அறிவிக்கிறோம்.  {1John  1:1}

 

அந்த  ஜீவன்  வெளிப்பட்டது;  பிதாவினிடத்திலிருந்ததும்,  எங்களுக்கு  வெளிப்பட்டதுமான  நித்தியமாயிருக்கிற  அந்த  ஜீவனை  நாங்கள்  கண்டு,  அதைக்குறித்துச்  சாட்சிகொடுத்து,  அதை  உங்களுக்கு  அறிவிக்கிறோம்.  {1John  1:2}

 

நீங்களும்  எங்களோடே  ஐக்கியமுள்ளவர்களாகும்படி,  நாங்கள்  கண்டும்  கேட்டும்  இருக்கிறதை  உங்களுக்கும்  அறிவிக்கிறோம்;  எங்களுடைய  ஐக்கியம்  பிதாவோடும்  அவருடைய  குமாரனாகிய  இயேசுகிறிஸ்துவோடும்<Jesus  Christ>  இருக்கிறது.  {1John  1:3}

 

உங்கள்  சந்தோஷம்  நிறைவாயிருக்கும்படி  இவைகளை  உங்களுக்கு  எழுதுகிறோம்.  {1John  1:4}

 

தேவன்  ஒளியாயிருக்கிறார்,  அவரில்  எவ்வளவேனும்  இருளில்லை;  இது  நாங்கள்  அவரிடத்தில்  கேட்டு  உங்களுக்கு  அறிவிக்கிற  விசேஷமாயிருக்கிறது.  {1John  1:5}

 

நாம்  அவரோடே  ஐக்கியப்பட்டவர்களென்று  சொல்லியும்,  இருளிலே  நடக்கிறவர்களாயிருந்தால்,  சத்தியத்தின்படி  நடவாமல்  பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.  {1John  1:6}

 

அவர்  ஒளியிலிருக்கிறதுபோல  நாமும்  ஒளியிலே  நடந்தால்  ஒருவரோடொருவர்  ஐக்கியப்பட்டிருப்போம்;  அவருடைய  குமாரனாகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  இரத்தம்  சகல  பாவங்களையும்  நீக்கி,  நம்மைச்  சுத்திகரிக்கும்.  {1John  1:7}

 

நமக்குப்  பாவமில்லையென்போமானால்,  நம்மை  நாமே  வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்,  சத்தியம்  நமக்குள்  இராது.  {1John  1:8}

 

நம்முடைய  பாவங்களை  நாம்  அறிக்கையிட்டால்,  பாவங்களை  நமக்கு  மன்னித்து  எல்லா  அநியாயத்தையும்  நீக்கி  நம்மைச்  சுத்திகரிப்பதற்கு  அவர்  உண்மையும்  நீதியும்  உள்ளவராயிருக்கிறார்.  {1John  1:9}

 

நாம்  பாவஞ்செய்யவில்லையென்போமானால்,  நாம்  அவரைப்  பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்,  அவருடைய  வார்த்தை  நமக்குள்  இராது.  {1John  1:10}

 

என்  பிள்ளைகளே,  நீங்கள்  பாவஞ்செய்யாதபடிக்கு  இவைகளை  உங்களுக்கு  எழுதுகிறேன்;  ஒருவன்  பாவஞ்செய்வானானால்  நீதிபரராயிருக்கிற  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  நமக்காகப்  பிதாவினிடத்தில்  பரிந்து  பேசுகிறவராயிருக்கிறார்.  {1John  2:1}

 

நம்முடைய  பாவங்களை  நிவிர்த்தி  செய்கிற  கிருபாதாரபலி  அவரே;  நம்முடைய  பாவங்களை  மாத்திரம்  அல்ல,  சர்வலோகத்தின்  பாவங்களையும்  நிவிர்த்தி  செய்கிற  பலியாயிருக்கிறார்.  {1John  2:2}

 

அவருடைய  கற்பனைகளை  நாம்  கைக்கொள்ளுகிறவர்களானால்,  அவரை  அறிந்திருக்கிறோமென்பதை  அதினால்  அறிவோம்.  {1John  2:3}

 

அவரை  அறிந்திருக்கிறேனென்று  சொல்லியும்,  அவருடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளாதவன்  பொய்யனாயிருக்கிறான்,  அவனுக்குள்  சத்தியமில்லை.  {1John  2:4}

 

அவருடைய  வசனத்தைக்  கைக்கொள்ளுகிறவனிடத்தில்  தேவ  அன்பு  மெய்யாகப்  பூரணப்பட்டிருக்கும்;  நாம்  அவருக்குள்  இருக்கிறோமென்பதை  அதினாலே  அறிந்திருக்கிறோம்.  {1John  2:5}

 

அவருக்குள்  நிலைத்திருக்கிறேனென்று  சொல்லுகிறவன்,  அவர்  நடந்தபடியே  தானும்  நடக்கவேண்டும்.  {1John  2:6}

 

சகோதரரே,  நான்  உங்களுக்குப்  புதிய  கற்பனையை  அல்ல,  ஆதிமுதல்  நீங்கள்  பெற்றிருக்கிற  பழைய  கற்பனையையே  எழுதுகிறேன்;  அந்தப்  பழைய  கற்பனை  நீங்கள்  ஆதிமுதல்  கேட்டிருக்கிற  வசனந்தானே.  {1John  2:7}

 

மேலும்,  நான்  புதிய  கற்பனையையும்  உங்களுக்கு  எழுதுகிறேன்,  இது  அவருக்குள்ளும்  உங்களுக்குள்ளும்  மெய்யாயிருக்கிறது;  ஏனென்றால்,  இருள்  நீங்கிப்போகிறது,  மெய்யான  ஒளி  இப்பொழுது  பிரகாசிக்கிறது.  {1John  2:8}

 

ஒளியிலே  இருக்கிறேன்  என்று  சொல்லியும்  தன்  சகோதரனைப்  பகைக்கிறவன்  இதுவரைக்கும்  இருளிலே  இருக்கிறான்.  {1John  2:9}

 

தன்  சகோதரனிடத்தில்  அன்புகூருகிறவன்  ஒளியிலே  நிலைகொண்டிருக்கிறான்;  அவனிடத்தில்  இடறல்  ஒன்றுமில்லை.  {1John  2:10}

 

தன்  சகோதரனைப்  பகைக்கிறவன்  இருளிலே  இருந்து  இருளிலே  நடக்கிறான்;  இருளானது  அவன்  கண்களைக்  குருடாக்கினபடியால்  தான்  போகும்  இடம்  இன்னதென்று  அறியாதிருக்கிறான்.  {1John  2:11}

 

பிள்ளைகளே,  அவருடைய  நாமத்தினிமித்தம்  உங்கள்  பாவங்கள்  மன்னிக்கப்பட்டிருக்கிறதினால்  உங்களுக்கு  எழுதுகிறேன்.  {1John  2:12}

 

பிதாக்களே,  ஆதிமுதலிருக்கிறவரை  நீங்கள்  அறிந்திருக்கிறதினால்  உங்களுக்கு  எழுதுகிறேன்.  வாலிபரே,  பொல்லாங்கனை  நீங்கள்  ஜெயித்ததினால்  உங்களுக்கு  எழுதுகிறேன்.  பிள்ளைகளே,  நீங்கள்  பிதாவை  அறிந்திருக்கிறதினால்  உங்களுக்கு  எழுதுகிறேன்.  {1John  2:13}

 

பிதாக்களே,  ஆதிமுதலிருக்கிறவரை  நீங்கள்  அறிந்திருக்கிறதினால்  உங்களுக்கு  எழுதியிருக்கிறேன்.  வாலிபரே,  நீங்கள்  பலவான்களாயிருக்கிறதினாலும்,  தேவவசனம்  உங்களில்  நிலைத்திருக்கிறதினாலும்,  நீங்கள்  பொல்லாங்கனை  ஜெயித்ததினாலும்,  உங்களுக்கு  எழுதியிருக்கிறேன்.  {1John  2:14}

 

உலகத்திலும்  உலகத்திலுள்ளவைகளிலும்  அன்புகூராதிருங்கள்;  ஒருவன்  உலகத்தில்  அன்புகூர்ந்தால்  அவனிடத்தில்  பிதாவின்  அன்பில்லை.  {1John  2:15}

 

ஏனெனில்,  மாம்சத்தின்  இச்சையும்,  கண்களின்  இச்சையும்,  ஜீவனத்தின்  பெருமையுமாகிய  உலகத்திலுள்ளவைகளெல்லாம்  பிதாவினாலுண்டானவைகளல்ல,  அவைகள்  உலகத்தினாலுண்டானவைகள்.  {1John  2:16}

 

உலகமும்  அதின்  இச்சையும்  ஒழிந்துபோம்;  தேவனுடைய  சித்தத்தின்படி  செய்கிறவனோ  என்றென்றைக்கும்  நிலைத்திருப்பான்.  {1John  2:17}

 

பிள்ளைகளே,  இது  கடைசிக்காலமாயிருக்கிறது;  அந்திக்கிறிஸ்து<antichrist>  வருகிறானென்று  நீங்கள்  கேள்விப்பட்டபடி  இப்பொழுதும்  அநேக  அந்திக்கிறிஸ்துகள்<antichrists>  இருக்கிறார்கள்;  அதினாலே  இது  கடைசிக்காலமென்று  அறிகிறோம்.  {1John  2:18}

 

அவர்கள்  நம்மைவிட்டுப்  பிரிந்துபோனார்கள்,  ஆகிலும்  அவர்கள்  நம்முடையவர்களாயிருக்கவில்லை;  நம்முடையவர்களாயிருந்தார்களானால்  நம்முடனே  நிலைத்திருப்பார்களே;  எல்லாரும்  நம்முடையவர்களல்லவென்று  வெளியாகும்படிக்கே  பிரிந்துபோனார்கள்.  {1John  2:19}

 

நீங்கள்  பரிசுத்தராலே  அபிஷேகம்  பெற்றுச்  சகலத்தையும்  அறிந்திருக்கிறீர்கள்.  {1John  2:20}

 

சத்தியத்தை  நீங்கள்  அறியாததினாலல்ல,  நீங்கள்  சத்தியத்தை  அறிந்திருக்கிறதினாலும்,  சத்தியத்தினால்  ஒரு  பொய்யுமுண்டாயிராதென்பதை  நீங்கள்  அறிந்திருக்கிறதினாலும்,  உங்களுக்கு  எழுதியிருக்கிறேன்.  {1John  2:21}

 

இயேசுவைக்<Jesus>  கிறிஸ்து<Christ>  அல்ல  என்று  மறுதலிக்கிறவனேயல்லாமல்  வேறே  யார்  பொய்யன்?  பிதாவையும்  குமாரனையும்  மறுதலிக்கிறவனே  அந்திக்கிறிஸ்து<antichrist>.  {1John  2:22}

 

குமாரனை  மறுதலிக்கிறவன்  பிதாவையுடையவனல்ல,  குமாரனை  அறிக்கையிடுகிறவன்  பிதாவையும்  உடையவனாயிருக்கிறான்.  {1John  2:23}

 

ஆகையால்  ஆதிமுதல்  நீங்கள்  கேள்விப்பட்டது  உங்களில்  நிலைத்திருக்கக்கடவது;  ஆதிமுதல்  நீங்கள்  கேள்விப்பட்டது  உங்களில்  நிலைத்திருந்தால்,  நீங்களும்  குமாரனிலும்  பிதாவிலும்  நிலைத்திருப்பீர்கள்.  {1John  2:24}

 

நித்தியஜீவனை  அளிப்பேன்  என்பதே  அவர்  நமக்குச்  செய்த  வாக்குத்தத்தம்.  {1John  2:25}

 

உங்களை  வஞ்சிக்கிறவர்களைக்குறித்து  இவைகளை  உங்களுக்கு  எழுதியிருக்கிறேன்.  {1John  2:26}

 

நீங்கள்  அவராலே  பெற்ற  அபிஷேகம்  உங்களில்  நிலைத்திருக்கிறது,  ஒருவரும்  உங்களுக்குப்  போதிக்கவேண்டுவதில்லை;  அந்த  அபிஷேகம்  சகலத்தையுங்குறித்து  உங்களுக்குப்  போதிக்கிறது;  அது  சத்தியமாயிருக்கிறது,  பொய்யல்ல,  அது  உங்களுக்குப்  போதித்தபடியே  அவரில்  நிலைத்திருப்பீர்களாக.  {1John  2:27}

 

இப்படியிருக்க,  பிள்ளைகளே,  அவர்  வெளிப்படும்போது  நாம்  அவர்  வருகையில்  அவருக்கு  முன்பாக  வெட்கப்பட்டுப்போகாமல்  தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு  அவரில்  நிலைத்திருங்கள்.  {1John  2:28}

 

அவர்  நீதியுள்ளவராயிருக்கிறாரென்று  உங்களுக்குத்  தெரிந்திருப்பதினால்,  நீதியைச்  செய்கிறவனெவனும்  அவரில்  பிறந்தவனென்று  அறிந்திருக்கிறீர்கள்.  {1John  2:29}

 

நாம்  தேவனுடைய  பிள்ளைகளென்று  அழைக்கப்படுவதினாலே  பிதாவானவர்  நமக்குப்  பாராட்டின  அன்பு  எவ்வளவு  பெரிதென்று  பாருங்கள்;  உலகம்  அவரை  அறியாதபடியினாலே  நம்மையும்  அறியவில்லை.  {1John  3:1}

 

பிரியமானவர்களே,  இப்பொழுது  தேவனுடைய  பிள்ளைகளாயிருக்கிறோம்,  இனி  எவ்விதமாயிருப்போமென்று  இன்னும்  வெளிப்படவில்லை;  ஆகிலும்  அவர்  வெளிப்படும்போது  அவர்  இருக்கிறவண்ணமாகவே  நாம்  அவரைத்  தரிசிப்பதினால்,  அவருக்கு  ஒப்பாயிருப்போமென்று  அறிந்திருக்கிறோம்.  {1John  3:2}

 

அவர்மேல்  இப்படிப்பட்ட  நம்பிக்கை  வைத்திருக்கிறவனெவனும்,  அவர்  சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல,  தன்னையும்  சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.  {1John  3:3}

 

பாவஞ்செய்கிற  எவனும்  நியாயப்பிரமாணத்தை  மீறுகிறான்;  நியாயப்பிரமாணத்தை  மீறுகிறதே  பாவம்.  {1John  3:4}

 

அவர்  நம்முடைய  பாவங்களைச்  சுமந்து  தீர்க்க  வெளிப்பட்டாரென்று  அறிவீர்கள்;  அவரிடத்தில்  பாவமில்லை.  {1John  3:5}

 

அவரில்  நிலைத்திருக்கிற  எவனும்  பாவஞ்செய்கிறதில்லை;  பாவஞ்செய்கிற  எவனும்  அவரைக்  காணவுமில்லை,  அவரை  அறியவுமில்லை.  {1John  3:6}

 

பிள்ளைகளே,  நீங்கள்  ஒருவராலும்  வஞ்சிக்கப்படாதிருங்கள்;  நீதியைச்  செய்கிறவன்  அவர்  நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத்  தானும்  நீதியுள்ளவனாயிருக்கிறான்.  {1John  3:7}

 

பாவஞ்செய்கிறவன்  பிசாசினாலுண்டாயிருக்கிறான்;  ஏனெனில்  பிசாசானவன்  ஆதிமுதல்  பாவஞ்செய்கிறான்;  பிசாசினுடைய  கிரியைகளை  அழிக்கும்படிக்கே  தேவனுடைய  குமாரன்  வெளிப்பட்டார்.  {1John  3:8}

 

தேவனால்  பிறந்த  எவனும்  பாவஞ்செய்யான்,  ஏனெனில்  அவருடைய  வித்து  அவனுக்குள்  தரித்திருக்கிறது;  அவன்  தேவனால்  பிறந்தபடியினால்  பாவஞ்செய்யமாட்டான்.  {1John  3:9}

 

இதினாலே  தேவனுடைய  பிள்ளைகள்  இன்னாரென்றும்,  பிசாசின்  பிள்ளைகள்  இன்னாரென்றும்  வெளிப்படும்;  நீதியைச்  செய்யாமலும்  தன்  சகோதரனில்  அன்புகூராமலும்  இருக்கிற  எவனும்  தேவனால்  உண்டானவனல்ல.  {1John  3:10}

 

நாம்  ஒருவரிலொருவர்  அன்புகூரவேண்டுமென்பதே  நீங்கள்  ஆதிமுதல்  கேள்விப்பட்ட  விசேஷமாயிருக்கிறது.  {1John  3:11}

 

பொல்லாங்கனால்  உண்டாயிருந்து  தன்  சகோதரனைக்  கொலைசெய்த  காயீனைப்போலிருக்கவேண்டாம்<Cain>;  அவன்  எதினிமித்தம்  அவனைக்  கொலைசெய்தான்?  தன்  கிரியைகள்  பொல்லாதவைகளும்,  தன்  சகோதரனுடைய  கிரியைகள்  நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.  {1John  3:12}

 

என்  சகோதரரே,  உலகம்  உங்களைப்  பகைத்தால்  ஆச்சரியப்படாதிருங்கள்.  {1John  3:13}

 

நாம்  சகோதரரிடத்தில்  அன்புகூருகிறபடியால்,  மரணத்தைவிட்டு  நீங்கி  ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று  அறிந்திருக்கிறோம்;  சகோதரனிடத்தில்  அன்புகூராதவன்  மரணத்திலே  நிலைகொண்டிருக்கிறான்.  {1John  3:14}

 

தன்  சகோதரனைப்  பகைக்கிற  எவனும்  மனுஷ  கொலைபாதகனாயிருக்கிறான்;  மனுஷ  கொலைபாதகனெவனோ  அவனுக்குள்  நித்தியஜீவன்  நிலைத்திராது  என்று  அறிவீர்கள்.  {1John  3:15}

 

அவர்  தம்முடைய  ஜீவனை  நமக்காகக்  கொடுத்ததினாலே  அன்பு  இன்னதென்று  அறிந்திருக்கிறோம்;  நாமும்  சகோதரருக்காக  ஜீவனைக்கொடுக்கக்  கடனாளிகளாயிருக்கிறோம்.  {1John  3:16}

 

ஒருவன்  இவ்வுலக  ஆஸ்தி  உடையவனாயிருந்து,  தன்  சகோதரனுக்குக்  குறைச்சலுண்டென்று  கண்டு,  தன்  இருதயத்தை  அவனுக்கு  அடைத்துக்கொண்டால்,  அவனுக்குள்  தேவ  அன்பு  நிலைகொள்ளுகிறதெப்படி?  {1John  3:17}

 

என்  பிள்ளைகளே,  வசனத்தினாலும்  நாவினாலுமல்ல,  கிரியையினாலும்  உண்மையினாலும்  அன்புகூரக்கடவோம்.  {1John  3:18}

 

இதினாலே  நாம்  நம்மைச்  சத்தியத்திற்குரியவர்களென்று  அறிந்து,  நம்முடைய  இருதயத்தை  அவருக்கு  முன்பாக  நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.  {1John  3:19}

 

நம்முடைய  இருதயமே  நம்மைக்  குற்றவாளிகளாகத்  தீர்க்குமானால்,  தேவன்  நம்முடைய  இருதயத்திலும்  பெரியவராயிருந்து  சகலத்தையும்  அறிந்திருக்கிறார்.  {1John  3:20}

 

பிரியமானவர்களே,  நம்முடைய  இருதயம்  நம்மைக்  குற்றவாளிகளென்று  தீர்க்காதிருந்தால்,  நாம்  தேவனிடத்தில்  தைரியங்கொண்டிருந்து,  {1John  3:21}

 

அவருடைய  கற்பனைகளை  நாம்  கைக்கொண்டு  அவருக்கு  முன்பாகப்  பிரியமானவைகளைச்  செய்கிறபடியினால்  நாம்  வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ  அதை  அவராலே  பெற்றுக்கொள்ளுகிறோம்.  {1John  3:22}

 

நாம்  அவருடைய  குமாரனாகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தின்மேல்  விசுவாசமாயிருந்து,  அவர்  நமக்குக்  கட்டளையிட்டபடி  ஒருவரிலொருவர்  அன்பாயிருக்கவேண்டுமென்பதே  அவருடைய  கற்பனையாயிருக்கிறது.  {1John  3:23}

 

அவருடைய  கட்டளைகளைக்  கைக்கொள்ளுகிறவன்  அவரில்  நிலைத்திருக்கிறான்,  அவரும்  அவனில்  நிலைத்திருக்கிறார்;  அவர்  நம்மில்  நிலைத்திருக்கிறதை  அவர்  நமக்குத்  தந்தருளின  ஆவியினாலே  அறிந்திருக்கிறோம்.  {1John  3:24}

 

பிரியமானவர்களே,  உலகத்தில்  அநேகங்  கள்ளத்தீர்க்கதரிசிகள்  தோன்றியிருப்பதினால்,  நீங்கள்  எல்லா  ஆவிகளையும்  நம்பாமல்,  அந்த  ஆவிகள்  தேவனால்  உண்டானவைகளோ  என்று  சோதித்தறியுங்கள்.  {1John  4:1}

 

தேவஆவியை  நீங்கள்  எதினாலே  அறியலாமென்றால்:  மாம்சத்தில்  வந்த  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  அறிக்கைபண்ணுகிற  எந்த  ஆவியும்  தேவனால்  உண்டாயிருக்கிறது.  {1John  4:2}

 

மாம்சத்தில்  வந்த  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  அறிக்கைபண்ணாத  எந்த  ஆவியும்  தேவனால்  உண்டானதல்ல;  வருமென்று  நீங்கள்  கேள்விப்பட்ட  அந்திக்கிறிஸ்துவினுடைய<antichrist>  ஆவி  அதுவே,  அது  இப்பொழுதும்  உலகத்தில்  இருக்கிறது.  {1John  4:3}

 

பிள்ளைகளே,  நீங்கள்  தேவனால்  உண்டாயிருந்து,  அவர்களை  ஜெயித்தீர்கள்;  ஏனெனில்  உலகத்திலிருக்கிறவனிலும்  உங்களிலிருக்கிறவர்  பெரியவர்.  {1John  4:4}

 

அவர்கள்  உலகத்துக்குரியவர்கள்,  ஆகையால்  உலகத்துக்குரியவைகளைப்  பேசுகிறார்கள்,  உலகமும்  அவர்களுக்குச்  செவிகொடுக்கும்.  {1John  4:5}

 

நாங்கள்  தேவனால்  உண்டானவர்கள்;  தேவனை  அறிந்தவன்  எங்களுக்குச்  செவிகொடுக்கிறான்;  தேவனால்  உண்டாயிராதவன்  எங்களுக்குச்  செவிகொடுக்கிறதில்லை;  இதினாலே  சத்திய  ஆவி  இன்னதென்றும்,  வஞ்சகஆவி  இன்னதென்றும்  அறிந்திருக்கிறோம்.  {1John  4:6}

 

பிரியமானவர்களே,  ஒருவரிலொருவர்  அன்பாயிருக்கக்கடவோம்;  ஏனெனில்  அன்பு  தேவனால்  உண்டாயிருக்கிறது;  அன்புள்ள  எவனும்  தேவனால்  பிறந்து,  அவரை  அறிந்திருக்கிறான்.  {1John  4:7}

 

அன்பில்லாதவன்  தேவனை  அறியான்;  தேவன்  அன்பாகவே  இருக்கிறார்.  {1John  4:8}

 

தம்முடைய  ஒரே  பேறான  குமாரனாலே  நாம்  பிழைக்கும்படிக்குத்  தேவன்  அவரை  இவ்வுலகத்திலே  அனுப்பினதினால்  தேவன்  நம்மேல்  வைத்த  அன்பு  வெளிப்பட்டது.  {1John  4:9}

 

நாம்  தேவனிடத்தில்  அன்புகூர்ந்ததினால்  அல்ல,  அவர்  நம்மிடத்தில்  அன்புகூர்ந்து,  நம்முடைய  பாவங்களை  நிவிர்த்தி  செய்கிற  கிருபாதாரபலியாகத்  தம்முடைய  குமாரனை  அனுப்பினதினாலே  அன்பு  உண்டாயிருக்கிறது.  {1John  4:10}

 

பிரியமானவர்களே,  தேவன்  இவ்விதமாய்  நம்மிடத்தில்  அன்புகூர்ந்திருக்க,  நாமும்  ஒருவரிடத்தில்  ஒருவர்  அன்புகூரக்  கடனாளிகளாயிருக்கிறோம்.  {1John  4:11}

 

தேவனை  ஒருவரும்  ஒருபோதும்  கண்டதில்லை;  நாம்  ஒருவரிடத்தில்  ஒருவர்  அன்புகூர்ந்தால்  தேவன்  நமக்குள்  நிலைத்திருக்கிறார்;  அவருடைய  அன்பும்  நமக்குள்  பூரணப்படும்.  {1John  4:12}

 

அவர்  தம்முடைய  ஆவியில்  நமக்குத்  தந்தருளினதினாலே  நாம்  அவரிலும்  அவர்  நம்மிலும்  நிலைத்திருக்கிறதை  அறிந்திருக்கிறோம்.  {1John  4:13}

 

பிதாவானவர்  குமாரனை  உலகரட்சகராக  அனுப்பினாரென்று  நாங்கள்  கண்டு  சாட்சியிடுகிறோம்.  {1John  4:14}

 

இயேசுவானவர்<Jesus>  தேவனுடைய  குமாரனென்று  அறிக்கைபண்ணுகிறவன்  எவனோ  அவனில்  தேவன்  நிலைத்திருக்கிறார்,  அவனும்  தேவனில்  நிலைத்திருக்கிறான்.  {1John  4:15}

 

தேவன்  நம்மேல்  வைத்திருக்கிற  அன்பை  நாம்  அறிந்து  விசுவாசித்திருக்கிறோம்.  தேவன்  அன்பாகவே  இருக்கிறார்;  அன்பில்  நிலைத்திருக்கிறவன்  தேவனில்  நிலைத்திருக்கிறான்,  தேவனும்  அவனில்  நிலைத்திருக்கிறார்.  {1John  4:16}

 

நியாயத்தீர்ப்புநாளிலே  நமக்குத்  தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக  அன்பு  நம்மிடத்தில்  பூரணப்படுகிறது;  ஏனென்றால்,  அவர்  இருக்கிறபிரகாரமாக  நாமும்  இவ்வுலகத்தில்  இருக்கிறோம்.  {1John  4:17}

 

அன்பிலே  பயமில்லை;  பூரண  அன்பு  பயத்தைப்  புறம்பே  தள்ளும்;  பயமானது  வேதனையுள்ளது,  பயப்படுகிறவன்  அன்பில்  பூரணப்பட்டவன்  அல்ல.  {1John  4:18}

 

அவர்  முந்தி  நம்மிடத்தில்  அன்புகூர்ந்தபடியால்  நாமும்  அவரிடத்தில்  அன்புகூருகிறோம்.  {1John  4:19}

 

தேவனிடத்தில்  அன்புகூருகிறேனென்று  ஒருவன்  சொல்லியும்,  தன்  சகோதரனைப்  பகைத்தால்,  அவன்  பொய்யன்;  தான்  கண்ட  சகோதரனிடத்தில்  அன்புகூராமலிருக்கிறவன்,  தான்  காணாத  தேவனிடத்தில்  எப்படி  அன்புகூருவான்?  {1John  4:20}

 

தேவனிடத்தில்  அன்புகூருகிறவன்  தன்  சகோதரனிடத்திலும்  அன்புகூரவேண்டுமென்கிற  இந்தக்  கற்பனையை  அவராலே  பெற்றிருக்கிறோம்.  {1John  4:21}

 

இயேசுவானவரே<Jesus>  கிறிஸ்து<Christ>  என்று  விசுவாசிக்கிற  எவனும்  தேவனால்  பிறந்திருக்கிறான்;  பிறப்பித்தவரிடத்தில்  அன்புகூருகிற  எவனும்  அவரால்  பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும்  அன்புகூருகிறான்.  {1John  5:1}

 

நாம்  தேவனிடத்தில்  அன்புகூர்ந்து  அவருடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளும்போது,  தேவனுடைய  பிள்ளைகளிடத்தில்  அன்புகூருகிறோமென்று  அறிந்துகொள்ளுகிறோம்.  {1John  5:2}

 

நாம்  தேவனுடைய  கற்பனைகளைக்  கைக்கொள்வதே  அவரிடத்தில்  அன்புகூருவதாம்;  அவருடைய  கற்பனைகள்  பாரமானவைகளுமல்ல.  {1John  5:3}

 

தேவனால்  பிறப்பதெல்லாம்  உலகத்தை  ஜெயிக்கும்;  நம்முடைய  விசுவாசமே  உலகத்தை  ஜெயிக்கிற  ஜெயம்.  {1John  5:4}

 

இயேசுவானவர்<Jesus>  தேவனுடைய  குமாரனென்று  விசுவாசிக்கிறவனேயன்றி  உலகத்தை  ஜெயிக்கிறவன்  யார்?  {1John  5:5}

 

இயேசுகிறிஸ்துவாகிய<Jesus  Christ>  இவரே  ஜலத்தினாலும்  இரத்தத்தினாலும்  வந்தவர்;  ஜலத்தினாலே  மாத்திரமல்ல,  ஜலத்தினாலும்  இரத்தத்தினாலும்  வந்தவர்.  ஆவியானவர்  சத்தியமாகையால்,  ஆவியானவரே  சாட்சிகொடுக்கிறவர்.  {1John  5:6}

 

[பரலோகத்திலே  சாட்சியிடுகிறவர்கள்  மூவர்,  பிதா,  வார்த்தை,  பரிசுத்தஆவி  என்பவர்களே,  இம்மூவரும்  ஒன்றாயிருக்கிறார்கள்;  {1John  5:7}

 

பூலோகத்திலே]  சாட்சியிடுகிறவைகள்  மூன்று,  ஆவி,  ஜலம்,  இரத்தம்  என்பவைகளே,  இம்மூன்றும்  ஒருமைப்பட்டிருக்கிறது.  {1John  5:8}

 

நாம்  மனுஷருடைய  சாட்சியை  ஏற்றுக்கொண்டால்,  அதைப்பார்க்கிலும்  தேவனுடைய  சாட்சி  அதிகமாயிருக்கிறது;  தேவன்  தமது  குமாரனைக்குறித்துக்  கொடுத்த  சாட்சி  இதுவே.  {1John  5:9}

 

தேவனுடைய  குமாரனிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவன்  அந்தச்  சாட்சியைத்  தனக்குள்ளே  கொண்டிருக்கிறான்;  தேவனை  விசுவாசியாதவனோ,  தேவன்  தம்முடைய  குமாரனைக்குறித்துக்  கொடுத்த  சாட்சியை  விசுவாசியாததினால்,  அவரைப்  பொய்யராக்குகிறான்.  {1John  5:10}

 

தேவன்  நமக்கு  நித்தியஜீவனைத்  தந்திருக்கிறார்,  அந்த  ஜீவன்  அவருடைய  குமாரனில்  இருக்கிறதென்பதே  அந்தச்  சாட்சியாம்.  {1John  5:11}

 

குமாரனை  உடையவன்  ஜீவனை  உடையவன்,  தேவனுடைய  குமாரன்  இல்லாதவன்  ஜீவன்  இல்லாதவன்.  {1John  5:12}

 

உங்களுக்கு  நித்தியஜீவன்  உண்டென்று  நீங்கள்  அறியவும்,  தேவகுமாரனுடைய  நாமத்தின்மேல்  நீங்கள்  விசுவாசமாயிருக்கவும்,  தேவகுமாரனுடைய  நாமத்தின்மேல்  விசுவாசமாயிருக்கிற  உங்களுக்கு  இவைகளை  எழுதியிருக்கிறேன்.  {1John  5:13}

 

நாம்  எதையாகிலும்  அவருடைய  சித்தத்தின்படி  கேட்டால்,  அவர்  நமக்குச்  செவிகொடுக்கிறாரென்பதே  அவரைப்  பற்றி  நாம்  கொண்டிருக்கிற  தைரியம்.  {1John  5:14}

 

நாம்  எதைக்  கேட்டாலும்,  அவர்  நமக்குச்  செவிகொடுக்கிறாரென்று  நாம்  அறிந்திருந்தோமானால்,  அவரிடத்தில்  நாம்  கேட்டவைகளைப்  பெற்றுக்கொண்டோமென்றும்  அறிந்திருக்கிறோம்.  {1John  5:15}

 

மரணத்துக்கு  ஏதுவல்லாத  பாவத்தைத்  தன்  சகோதரன்  செய்ய  ஒருவன்  கண்டால்,  அவன்  வேண்டுதல்செய்யக்கடவன்,  அப்பொழுது  அவனுக்கு  ஜீவனைக்  கொடுப்பார்;  யாருக்கென்றால்,  மரணத்துக்கு  ஏதுவல்லாத  பாவத்தைச்  செய்தவர்களுக்கே;  மரணத்துக்கு  ஏதுவான  பாவமுண்டு,  அதைக்குறித்து  வேண்டுதல்செய்ய  நான்  சொல்லேன்.  {1John  5:16}

 

அநீதியெல்லாம்  பாவந்தான்;  என்றாலும்  மரணத்துக்கு  ஏதுவல்லாத  பாவமுமுண்டு.  {1John  5:17}

 

தேவனால்  பிறந்த  எவனும்  பாவஞ்செய்யானென்று  அறிந்திருக்கிறோம்;  தேவனால்  பிறந்தவன்  தன்னைக்  காக்கிறான்,  பொல்லாங்கன்  அவனைத்  தொடான்.  {1John  5:18}

 

நாம்  தேவனால்  உண்டாயிருக்கிறோமென்றும்,  உலகமுழுவதும்  பொல்லாங்கனுக்குள்  கிடக்கிறதென்றும்  அறிந்திருக்கிறோம்.  {1John  5:19}

 

அன்றியும்,  நாம்  சத்தியமுள்ளவரை  அறிந்துகொள்வதற்குத்  தேவனுடைய  குமாரன்  வந்து  நமக்குப்  புத்தியைத்  தந்திருக்கிறாரென்றும்  அறிவோம்;  அவருடைய  குமாரனாகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  என்னப்பட்ட  சத்தியமுள்ளவருக்குள்ளும்  இருக்கிறோம்;  இவரே  மெய்யான  தேவனும்  நித்தியஜீவனுமாயிருக்கிறார்.  {1John  5:20}

 

பிள்ளைகளே,  நீங்கள்  விக்கிரகங்களுக்கு  விலகி,  உங்களைக்  காத்துக்கொள்வீர்களாக.  ஆமென்<Amen>.  {1John  5:21}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!