Monday, December 30, 2019

2 பேதுரு

நம்முடைய  தேவனும்  இரட்சகருமாயிருக்கிற  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  நீதியால்  எங்களைப்போல  அருமையான  விசுவாசத்தைப்  பெற்றவர்களுக்கு,  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  ஊழியக்காரனும்  அப்போஸ்தலனுமாகிய  சீமோன்  பேதுரு<Simon  Peter>  எழுதுகிறதாவது:  {2Pet  1:1}

 

தேவனையும்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுவையும்  அறிகிற  அறிவினால்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  பெருகக்கடவது.  {2Pet  1:2}

 

தம்முடைய  மகிமையினாலும்  காருணியத்தினாலும்  நம்மை  அழைத்தவரை  அறிகிற  அறிவினாலே  ஜீவனுக்கும்  தேவபக்திக்கும்  வேண்டிய  யாவற்றையும்,  அவருடைய  திவ்விய  வல்லமையானது  நமக்குத்  தந்தருளினதுமன்றி,  {2Pet  1:3}

 

இச்சையினால்  உலகத்திலுண்டான  கேட்டுக்குத்  தப்பி,  திவ்விய  சுபாவத்துக்குப்  பங்குள்ளவர்களாகும்பொருட்டு,  மகா  மேன்மையும்  அருமையுமான  வாக்குத்தத்தங்களும்  அவைகளினாலே  நமக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.  {2Pet  1:4}

 

இப்படியிருக்க,  நீங்கள்  அதிக  ஜாக்கிரதையுள்ளவர்களாய்  உங்கள்  விசுவாசத்தோடே  தைரியத்தையும்,  தைரியத்தோடே  ஞானத்தையும்,  {2Pet  1:5}

 

ஞானத்தோடே  இச்சையடக்கத்தையும்,  இச்சையடக்கத்தோடே  பொறுமையையும்,  பொறுமையோடே  தேவபக்தியையும்,  {2Pet  1:6}

 

தேவபக்தியோடே  சகோதர  சிநேகத்தையும்,  சகோதர  சிநேகத்தோடே  அன்பையும்  கூட்டி  வழங்குங்கள்.  {2Pet  1:7}

 

இவைகள்  உங்களுக்கு  உண்டாயிருந்து  பெருகினால்,  உங்களை  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  அறிகிற  அறிவிலே  வீணரும்  கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.  {2Pet  1:8}

 

இவைகள்  இல்லாதவன்  எவனோ,  அவன்  முன்செய்த  பாவங்களறத்  தான்  சுத்திகரிக்கப்பட்டதை  மறந்து  கண்சொருகிப்போன  குருடனாயிருக்கிறான்.  {2Pet  1:9}

 

ஆகையால்,  சகோதரரே,  உங்கள்  அழைப்பையும்  தெரிந்துகொள்ளுதலையும்  உறுதியாக்கும்படி  ஜாக்கிரதையாயிருங்கள்;  இவைகளைச்  செய்தால்  நீங்கள்  ஒருக்காலும்  இடறிவிழுவதில்லை.  {2Pet  1:10}

 

இவ்விதமாய்,  நம்முடைய  கர்த்தரும்  இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  நித்திய  ராஜ்யத்துக்குட்படும்  பிரவேசம்  உங்களுக்குப்  பரிபூரணமாய்  அளிக்கப்படும்.  {2Pet  1:11}

 

இதினிமித்தம்,  இவைகளை  நீங்கள்  அறிந்தும்,  நீங்கள்  இப்பொழுது  அறிந்திருக்கிற  சத்தியத்தில்  உறுதிப்பட்டிருந்தும்,  உங்களுக்கு  இவைகளை  எப்பொழுதும்  நினைப்பூட்ட  நான்  அசதியாயிரேன்.  {2Pet  1:12}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  எனக்கு  அறிவித்தபடி  நான்  என்  கூடாரத்தைவிட்டுப்போவது  சீக்கிரத்தில்  நேரிடுமென்று  அறிந்து,  {2Pet  1:13}

 

இந்தக்  கூடாரத்தில்  நான்  இருக்குமளவும்  உங்களை  நினைப்பூட்டி  எழுப்பிவிடுவது  நியாயமென்று  எண்ணுகிறேன்.  {2Pet  1:14}

 

மேலும்,  நான்  சென்றுபோனபின்பு  இவைகளை  நீங்கள்  எப்பொழுதும்  நினைத்துக்கொள்ள  ஏதுவுண்டாயிருக்கும்படி  பிரயத்தனம்பண்ணுவேன்.  {2Pet  1:15}

 

நாங்கள்  தந்திரமான  கட்டுக்கதைகளைப்  பின்பற்றினவர்களாக  அல்ல,  அவருடைய  மகத்துவத்தைக்  கண்ணாரக்  கண்டவர்களாகவே  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  வல்லமையையும்  வருகையையும்  உங்களுக்கு  அறிவித்தோம்.  {2Pet  1:16}

 

இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவரிடத்தில்  பிரியமாயிருக்கிறேன்  என்று  சொல்லுகிற  சத்தம்  உன்னதமான  மகிமையிலிருந்து  அவருக்கு  உண்டாகி,  பிதாவாகிய  தேவனால்  அவர்  கனத்தையும்  மகிமையையும்  பெற்றபோது,  {2Pet  1:17}

 

அவரோடேகூட  நாங்கள்  பரிசுத்த  பருவதத்திலிருக்கையில்,  வானத்திலிருந்து  பிறந்த  அந்தச்  சத்தத்தைக்கேட்டோம்.  {2Pet  1:18}

 

அதிக  உறுதியான  தீர்க்கதரிசனவசனமும்  நமக்கு  உண்டு;  பொழுது  விடிந்து  விடிவெள்ளி  உங்கள்  இருதயங்களில்  உதிக்குமளவும்  இருளுள்ள  ஸ்தலத்தில்  பிரகாசிக்கிற  விளக்கைப்போன்ற  அவ்வசனத்தைக்  கவனித்திருப்பது  நலமாயிருக்கும்.  {2Pet  1:19}

 

வேதத்திலுள்ள  எந்தத்  தீர்க்கதரிசனமும்  சுயதோற்றமான  பொருளையுடையதாயிராதென்று  நீங்கள்  முந்தி  அறியவேண்டியது.  {2Pet  1:20}

 

தீர்க்கதரிசனமானது  ஒருகாலத்திலும்  மனுஷருடைய  சித்தத்தினாலே  உண்டாகவில்லை;  தேவனுடைய  பரிசுத்த  மனுஷர்கள்  பரிசுத்த  ஆவியினாலே  ஏவப்பட்டுப்  பேசினார்கள்.  {2Pet  1:21}

 

கள்ளத்தீர்க்கதரிசிகளும்  ஜனங்களுக்குள்ளே  இருந்தார்கள்,  அப்படியே  உங்களுக்குள்ளும்  கள்ளப்போதகர்கள்  இருப்பார்கள்;  அவர்கள்  கேட்டுக்கேதுவான  வேதப்புரட்டுகளைத்  தந்திரமாய்  நுழையப்பண்ணி,  தங்களைக்  கிரயத்துக்குக்கொண்ட  ஆண்டவரை  மறுதலித்து,  தங்களுக்குத்  தீவிரமான  அழிவை  வருவித்துக்கொள்ளுவார்கள்.  {2Pet  2:1}

 

அவர்களுடைய  கெட்ட  நடக்கைகளை  அநேகர்  பின்பற்றுவார்கள்;  அவர்கள்நிமித்தம்  சத்தியமார்க்கம்  தூஷிக்கப்படும்.  {2Pet  2:2}

 

பொருளாசையுடையவர்களாய்,  தந்திரமான  வார்த்தைகளால்  உங்களைத்  தங்களுக்கு  ஆதாயமாக  வசப்படுத்திக்கொள்ளுவார்கள்;  பூர்வகாலமுதல்  அவர்களுக்கு  விதிக்கப்பட்ட  ஆக்கினை  அயர்ந்திராது,  அவர்களுடைய  அழிவு  உறங்காது.  {2Pet  2:3}

 

பாவஞ்செய்த  தூதர்களைத்  தேவன்  தப்பவிடாமல்,  அந்தகாரச்  சங்கிலிகளினாலே  கட்டி  நரகத்திலே  தள்ளி  நியாயத்தீர்ப்புக்கு  வைக்கப்பட்டவர்களாக  ஒப்புக்கொடுத்து;  {2Pet  2:4}

 

பூர்வ  உலகத்தையும்  தப்பவிடாமல்,  நீதியைப்  பிரசங்கித்தவனாகிய  நோவா<Noah>  முதலான  எட்டுப்பேரைக்  காப்பாற்றி,  அவபக்தியுள்ளவர்கள்  நிறைந்த  உலகத்தின்மேல்  ஜலப்பிரளயத்தை  வரப்பண்ணி;  {2Pet  2:5}

 

சோதோம்<Sodom>  கொமோரா<Gomorrha>  என்னும்  பட்டணங்களையும்  சாம்பலாக்கிக்  கவிழ்த்துப்போட்டு,  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து,  பிற்காலத்திலே  அவபக்தியாய்  நடப்பவர்களுக்கு  அவைகளைத்  திருஷ்டாந்தமாக  வைத்து;  {2Pet  2:6}

 

அக்கிரமக்காரருக்குள்  வாசமாயிருக்கையில்  அவர்களுடைய  காமவிகார  நடக்கையால்  வருத்தப்பட்டு;  {2Pet  2:7}

 

நாள்தோறும்  அவர்களுடைய  அக்கிரமக்கிரியைகளைக்  கண்டு  கேட்டு  நீதியுள்ள  தன்னுடைய  இருதயத்தில்  வாதிக்கப்பட்ட  நீதிமானாகிய  லோத்தை<Lot>  அவர்  இரட்சித்திருக்க;  {2Pet  2:8}

 

கர்த்தர்  தேவபக்தியுள்ளவர்களைச்  சோதனையினின்று  இரட்சிக்கவும்,  அக்கிரமக்காரரை  ஆக்கினைக்குள்ளானவர்களாக  நியாயத்தீர்ப்பு  நாளுக்கு  வைக்கவும்  அறிந்திருக்கிறார்.  {2Pet  2:9}

 

விசேஷமாக  அசுத்த  இச்சையோடே  மாம்சத்திற்கேற்றபடி  நடந்து,  கர்த்தத்துவத்தை  அசட்டைபண்ணுகிறவர்களை  அப்படிச்  செய்வார்.  இவர்கள்  துணிகரக்காரர்,  அகங்காரிகள்,  மகத்துவங்களைத்  தூஷிக்க  அஞ்சாதவர்கள்.  {2Pet  2:10}

 

அதிக  பெலனையும்  வல்லமையையுமுடைய  தேவதூதர்கள்  முதலாய்க்  கர்த்தருக்கு  முன்பாக  அவர்களைத்  தூஷணமாய்க்  குற்றப்படுத்தமாட்டார்களே.  {2Pet  2:11}

 

இவர்களோ  பிடிபட்டழிக்கப்படுவதற்கு  உண்டான  புத்தியற்ற  மிருகஜீவன்களைப்போலத்  தங்களுக்குத்  தெரியாதவைகளைத்  தூஷித்து,  தங்கள்  கேட்டிலே  கெட்டழிந்து,  அநீதத்தின்  பலனை  அடைவார்கள்.  {2Pet  2:12}

 

இவர்கள்  ஒருநாள்  வாழ்வை  இன்பமென்றெண்ணி,  கறைகளும்  இலச்சைகளுமாயிருந்து;  உங்களோடே  விருந்துண்கையில்  தங்கள்  வஞ்சனைகளில்  உல்லாசமாய்  வாழ்கிறவர்கள்;  {2Pet  2:13}

 

விபசாரமயக்கத்தால்  நிறைந்தவைகளும்,  பாவத்தை  விட்டோயாதவைகளுமாயிருக்கிற  கண்களையுடையவர்கள்;  உறுதியில்லாத  ஆத்துமாக்களைத்  தந்திரமாய்ப்  பிடித்து,  பொருளாசைகளில்  பழகின  இருதயத்தையுடைய  சாபத்தின்  பிள்ளைகள்.  {2Pet  2:14}

 

செம்மையான  வழியைவிட்டுத்  தப்பிநடந்து,  பேயோரின்<Beor//Bosor>  குமாரனாகிய  பிலேயாமின்<Balaam>  வழியைப்  பின்பற்றிப்போனவர்கள்;  அவன்  அநீதத்தின்  கூலியை  விரும்பி,  {2Pet  2:15}

 

தன்னுடைய  அக்கிரமத்தினிமித்தம்  கடிந்துகொள்ளப்பட்டான்;  பேசாத  மிருகம்  மனுஷர்பேச்சைப்  பேசித்  தீர்க்கதரிசியினுடைய  மதிகேட்டைத்  தடுத்தது.  {2Pet  2:16}

 

இவர்கள்  தண்ணீரில்லாத  கிணறுகளும்,  சுழல்காற்றினால்  அடியுண்டோடுகிற  மேகங்களுமாயிருக்கிறார்கள்;  என்றென்றைக்குமுள்ள  காரிருளே  இவர்களுக்கு  வைக்கப்பட்டிருக்கிறது.  {2Pet  2:17}

 

வஞ்சகமாய்  நடக்கிறவர்களிடத்திலிருந்து  அரிதாய்த்  தப்பினவர்களிடத்தில்  இவர்கள்  அகந்தையான  வீண்வார்த்தைகளைப்  பேசி,  மாம்ச  இச்சைகளினாலும்  காமவிகாரங்களினாலும்  அவர்களைத்  தந்திரமாய்ப்  பிடிக்கிறார்கள்.  {2Pet  2:18}

 

தாங்களே  கேட்டுக்கு  அடிமைகளாயிருந்தும்,  அவர்களுக்குச்  சுயாதீனத்தை  வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்;  எதினால்  ஒருவன்  ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ  அதற்கு  அவன்  அடிமைப்பட்டிருக்கிறானே.  {2Pet  2:19}

 

கர்த்தரும்  இரட்சகருமாயிருக்கிற  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  அறிகிற  அறிவினாலே  உலகத்தின்  அசுத்தங்களுக்குத்  தப்பினவர்கள்  மறுபடியும்  அவைகளில்  சிக்கிக்கொண்டு  ஜெயிக்கப்பட்டால்,  அவர்களுடைய  பின்னிலைமை  முன்னிலைமையிலும்  கேடுள்ளதாயிருக்கும்.  {2Pet  2:20}

 

அவர்கள்  நீதியின்  மார்க்கத்தை  அறிந்தபின்பு  தங்களுக்கு  ஒப்புவிக்கப்பட்ட  பரிசுத்த  கற்பனையை  விட்டு  விலகுவதைப்பார்க்கிலும்  அதை  அறியாதிருந்தார்களானால்  அவர்களுக்கு  நலமாயிருக்கும்.  {2Pet  2:21}

 

நாய்  தான்  கக்கினதைத்  தின்னவும்,  கழுவப்பட்ட  பன்றி  சேற்றிலே  புரளவும்  திரும்பினது  என்று  சொல்லப்பட்ட  மெய்யான  பழமொழியின்படியே  அவர்களுக்குச்  சம்பவித்தது.  {2Pet  2:22}

 

பிரியமானவர்களே,  இந்த  இரண்டாம்  நிருபத்தை  இப்பொழுது  உங்களுக்கு  எழுதுகிறேன்.  {2Pet  3:1}

 

பரிசுத்த  தீர்க்கதரிசிகளால்  முன்சொல்லப்பட்ட  வார்த்தைகளையும்,  இரட்சகராயிருக்கிற  கர்த்தருடைய  அப்போஸ்தலராகிய  எங்களுடைய  கட்டளைகளையும்  நீங்கள்  நினைவுகூரும்படி  இந்த  நிருபங்களினால்  உங்கள்  உண்மையான  மனதை  நினைப்பூட்டி  எழுப்புகிறேன்.  {2Pet  3:2}

 

முதலாவது  நீங்கள்  அறியவேண்டியது  என்னவெனில்:  கடைசிநாட்களில்  பரியாசக்காரர்  வந்து,  தங்கள்  சுய  இச்சைகளின்படியே  நடந்து,  {2Pet  3:3}

 

அவர்  வருவார்  என்று  சொல்லுகிற  வாக்குத்தத்தம்  எங்கே?  பிதாக்கள்  நித்திரையடைந்தபின்பு  சகலமும்  சிருஷ்டிப்பின்தோற்றமுதல்  இருந்தவிதமாயிருக்கிறதே  என்று  சொல்லுவார்கள்.  {2Pet  3:4}

 

பூர்வகாலத்தில்  தேவனுடைய  வார்த்தையினாலே  வானங்களும்,  ஜலத்தினின்று  தோன்றி  ஜலத்தினாலே  நிலைகொண்டிருக்கிற  பூமியும்  உண்டாயினவென்பதையும்,  {2Pet  3:5}

 

அப்பொழுது  இருந்த  உலகம்  ஜலப்பிரளயத்தினாலே  அழிந்ததென்பதையும்  மனதார  அறியாமலிருக்கிறார்கள்.  {2Pet  3:6}

 

இப்பொழுது  இருக்கிற  வானங்களும்  பூமியும்  அந்த  வார்த்தையினாலேயே  அக்கினிக்கு  இரையாக  வைக்கப்பட்டு,  தேவபக்தியில்லாதவர்கள்  நியாயந்தீர்க்கப்பட்டு  அழிந்துபோகும்  நாள்வரைக்கும்  காக்கப்பட்டிருக்கிறது.  {2Pet  3:7}

 

பிரியமானவர்களே,  கர்த்தருக்கு  ஒருநாள்  ஆயிரம்  வருஷம்போலவும்,  ஆயிரம்  வருஷம்  ஒருநாள்போலவும்  இருக்கிறதென்கிற  இந்த  ஒரு  காரியத்தை  நீங்கள்  அறியாதிருக்கவேண்டாம்.  {2Pet  3:8}

 

தாமதிக்கிறார்  என்று  சிலர்  எண்ணுகிறபடி,  கர்த்தர்  தமது  வாக்குத்தத்தத்தைக்குறித்துத்  தாமதமாயிராமல்;  ஒருவரும்  கெட்டுப்போகாமல்  எல்லாரும்  மனந்திரும்பவேண்டுமென்று  விரும்பி,  நம்மேல்  நீடிய  பொறுமையுள்ளவராயிருக்கிறார்.  {2Pet  3:9}

 

கர்த்தருடைய  நாள்  இரவிலே  திருடன்  வருகிறவிதமாய்  வரும்;  அப்பொழுது  வானங்கள்  மடமட  என்று  அகன்றுபோம்,  பூதங்கள்  வெந்து  உருகிப்போம்,  பூமியும்  அதிலுள்ள  கிரியைகளும்  எரிந்து  அழிந்துபோம்.  {2Pet  3:10}

 

இப்படி  இவைகளெல்லாம்  அழிந்து  போகிறதாயிருக்கிறபடியால்  நீங்கள்  எப்படிப்பட்ட  பரிசுத்த  நடக்கையும்  தேவபக்தியும்  உள்ளவர்களாயிருக்க  வேண்டும்!  {2Pet  3:11}

 

தேவனுடைய  நாள்  சீக்கிரமாய்  வரும்படிக்கு  மிகுந்த  ஆவலோடே  காத்திருங்கள்;  அந்த  நாளில்  வானங்கள்  வெந்து  அழிந்து,  பூதங்கள்  எரிந்து  உருகிப்போம்.  {2Pet  3:12}

 

அவருடைய  வாக்குத்தத்தத்தின்படியே  நீதி  வாசமாயிருக்கும்  புதிய  வானங்களும்  புதிய  பூமியும்  உண்டாகுமென்று  காத்திருக்கிறோம்.  {2Pet  3:13}

 

ஆகையால்,  பிரியமானவர்களே,  இவைகள்  வரக்  காத்திருக்கிற  நீங்கள்  கறையற்றவர்களும்  பிழையில்லாதவர்களுமாய்ச்  சமாதானத்தோடே  அவர்  சந்நிதியில்  காணப்படும்படி  ஜாக்கிரதையாயிருங்கள்.  {2Pet  3:14}

 

மேலும்  நம்முடைய  கர்த்தரின்  நீடிய  பொறுமையை  இரட்சிப்பென்று  எண்ணுங்கள்;  நமக்குப்  பிரியமான  சகோதரனாகிய  பவுலும்<Paul>  தனக்கு  அருளப்பட்ட  ஞானத்தினாலே  இப்படியே  உங்களுக்கு  எழுதியிருக்கிறான்;  {2Pet  3:15}

 

எல்லா  நிருபங்களிலும்  இவைகளைக்குறித்துப்  பேசியிருக்கிறான்;  அவன்  சொன்னவைகளில்  சில  காரியங்கள்  அறிகிறதற்கு  அரிதாயிருக்கிறது;  கல்லாதவர்களும்  உறுதியில்லாதவர்களும்  மற்ற  வேதவாக்கியங்களைப்  புரட்டுகிறதுபோலத்  தங்களுக்குக்  கேடுவரத்தக்கதாக  இவைகளையும்  புரட்டுகிறார்கள்.  {2Pet  3:16}

 

ஆதலால்  பிரியமானவர்களே,  இவைகளை  முன்னமே  நீங்கள்  அறிந்திருக்கிறபடியால்,  அக்கிரமக்காரருடைய  வஞ்சகத்திலே  நீங்கள்  இழுப்புண்டு  உங்கள்  உறுதியிலிருந்து  விலகி  விழுந்துபோகாதபடிக்கு  எச்சரிக்கையாயிருந்து,  {2Pet  3:17}

 

நம்முடைய  கர்த்தரும்  இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  கிருபையிலும்  அவரை  அறிகிற  அறிவிலும்  வளருங்கள்.  அவருக்கு  இப்பொழுதும்  என்றென்றைக்கும்  மகிமையுண்டாவதாக.  ஆமென்.  {2Pet  3:18}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!