Monday, December 30, 2019

1 பேதுரு

இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அப்போஸ்தலனாகிய  பேதுரு<Peter>,  பொந்து<Pontus>,  கலாத்தியா<Galatia>,  கப்பத்தோக்கியா<Cappadocia>,  ஆசியா<Asia>,  பித்தினியா<Bithynia>  தேசங்களிலே  சிதறியிருக்கிறவர்களில்,  {1Pet  1:1}

 

பிதாவாகிய  தேவனுடைய  முன்னறிவின்படியே,  ஆவியானவரின்  பரிசுத்தமாக்குதலினாலே,  கீழ்ப்படிதலுக்கும்  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும்  தெரிந்துகொள்ளப்பட்ட  பரதேசிகளுக்கு  எழுதுகிறதாவது:  கிருபையும்  சமாதானமும்  உங்களுக்குப்  பெருகக்கடவது.  {1Pet  1:2}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  பிதாவாகிய  தேவனுக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக;  {1Pet  1:3}

 

அவர்,  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  மரித்தோரிலிருந்து  எழுந்ததினாலே,  அழியாததும்  மாசற்றதும்  வாடாததுமாகிய  சுதந்தரத்திற்கேதுவாக,  ஜீவனுள்ள  நம்பிக்கை  உண்டாகும்படி,  தமது  மிகுந்த  இரக்கத்தின்படியே  நம்மை  மறுபடியும்  ஜெநிப்பித்தார்.  {1Pet  1:4}

 

கடைசிக்காலத்திலே  வெளிப்பட  ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற  இரட்சிப்புக்கு  ஏதுவாக  விசுவாசத்தைக்கொண்டு  தேவனுடைய  பலத்தினாலே  காக்கப்பட்டிருக்கிற  உங்களுக்கு  அந்தச்  சுதந்தரம்  பரலோகத்தில்  வைக்கப்பட்டிருக்கிறது.  {1Pet  1:5}

 

இதிலே  நீங்கள்  மிகவும்  சந்தோஷப்படுகிறீர்கள்;  என்றாலும்,  துன்பப்படவேண்டியது  அவசியமானதால்,  இப்பொழுது  கொஞ்சக்காலம்  பலவிதமான  சோதனைகளினாலே  துக்கப்படுகிறீர்கள்.  {1Pet  1:6}

 

அழிந்துபோகிற  பொன்  அக்கினியினாலே  சோதிக்கப்படும்;  அதைப்பார்க்கிலும்  அதிக  விலையேறப்பெற்றதாயிருக்கிற  உங்கள்  விசுவாசம்  சோதிக்கப்பட்டு,  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  வெளிப்படும்போது  உங்களுக்குப்  புகழ்ச்சியும்  கனமும்  மகிமையுமுண்டாகக்  காணப்படும்.  {1Pet  1:7}

 

அவரை  நீங்கள்  காணாமலிருந்தும்  அவரிடத்தில்  அன்புகூருகிறீர்கள்;  இப்பொழுது  அவரைத்  தரிசியாமலிருந்தும்  அவரிடத்தில்  விசுவாசம்  வைத்து,  சொல்லிமுடியாததும்  மகிமையால்  நிறைந்ததுமாயிருக்கிற  சந்தோஷமுள்ளவர்களாய்க்  களிகூர்ந்து,  {1Pet  1:8}

 

உங்கள்  விசுவாசத்தின்  பலனாகிய  ஆத்துமரட்சிப்பை  அடைகிறீர்கள்.  {1Pet  1:9}

 

உங்களுக்கு  உண்டான  கிருபையைக்  குறித்துத்  தீர்க்கதரிசனஞ்சொன்ன  தீர்க்கதரிசிகள்  இந்த  இரட்சிப்பைக்குறித்துக்  கருத்தாய்  ஆராய்ந்து  பரிசோதனைபண்ணினார்கள்;  {1Pet  1:10}

 

தங்களிலுள்ள  கிறிஸ்துவின்<Christ>  ஆவியானவர்  கிறிஸ்துவுக்கு<Christ>  உண்டாகும்  பாடுகளையும்,  அவைகளுக்குப்  பின்வரும்  மகிமைகளையும்  முன்னறிவித்தபோது,  இன்னகாலத்தைக்  குறித்தாரென்பதையும்,  அந்தக்  காலத்தின்  விசேஷம்  இன்னதென்பதையும்  ஆராய்ந்தார்கள்.  {1Pet  1:11}

 

தங்கள்நிமித்தமல்ல,  நமதுநிமித்தமே  இவைகளைத்  தெரிவித்தார்களென்று  அவர்களுக்கு  வெளியாக்கப்பட்டது;  பரலோகத்திலிருந்து  அனுப்பப்பட்ட  பரிசுத்த  ஆவியினாலே  உங்களுக்குச்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்தவர்களைக்கொண்டு  இவைகள்  இப்பொழுது  உங்களுக்கு  அறிவிக்கப்பட்டு  வருகிறது;  இவைகளை  உற்றுப்பார்க்கத்  தேவதூதரும்  ஆசையாயிருக்கிறார்கள்.  {1Pet  1:12}

 

ஆகையால்,  நீங்கள்  உங்கள்  மனதின்  அரையைக்  கட்டிக்கொண்டு,  தெளிந்த  புத்தியுள்ளவர்களாயிருந்து;  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  வெளிப்படும்போது  உங்களுக்கு  அளிக்கப்படுங்  கிருபையின்மேல்  பூரண  நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.  {1Pet  1:13}

 

நீங்கள்  முன்னே  உங்கள்  அறியாமையினாலே  கொண்டிருந்த  இச்சைகளின்படி  இனி  நடவாமல்,  கீழ்ப்படிகிற  பிள்ளைகளாயிருந்து,  {1Pet  1:14}

 

உங்களை  அழைத்தவர்  பரிசுத்தராயிருக்கிறதுபோல,  நீங்களும்  உங்கள்  நடக்கைகளெல்லாவற்றிலேயும்  பரிசுத்தராயிருங்கள்.  {1Pet  1:15}

 

நான்  பரிசுத்தர்,  ஆகையால்  நீங்களும்  பரிசுத்தராயிருங்கள்  என்று  எழுதியிருக்கிறதே.  {1Pet  1:16}

 

அன்றியும்,  பட்சபாதமில்லாமல்  அவனவனுடைய  கிரியைகளின்படி  நியாயந்தீர்க்கிறவரை  நீங்கள்  பிதாவாகத்  தொழுதுகொண்டுவருகிறபடியால்,  இங்கே  பரதேசிகளாய்ச்  சஞ்சரிக்குமளவும்  பயத்துடனே  நடந்துகொள்ளுங்கள்.  {1Pet  1:17}

 

உங்கள்  முன்னோர்களால்  பாரம்பரியமாய்  நீங்கள்  அநுசரித்துவந்த  வீணான  நடத்தையினின்று  அழிவுள்ள  வஸ்துக்களாகிய  வெள்ளியினாலும்  பொன்னினாலும்  மீட்கப்படாமல்,  {1Pet  1:18}

 

குற்றமில்லாத  மாசற்ற  ஆட்டுக்குட்டியாகிய  கிறிஸ்துவின்<Christ>  விலையேறப்பெற்ற  இரத்தத்தினாலே  மீட்கப்பட்டீர்களென்று  அறிந்திருக்கிறீர்களே.  {1Pet  1:19}

 

அவர்  உலகத்தோற்றத்திற்கு  முன்னே  குறிக்கப்பட்டவராயிருந்து,  தமது  மூலமாய்த்  தேவன்மேல்  விசுவாசமாயிருக்கிற  உங்களுக்காக  இந்தக்  கடைசிக்  காலங்களில்  வெளிப்பட்டார்.  {1Pet  1:20}

 

உங்கள்  விசுவாசமும்  நம்பிக்கையும்  தேவன்மேலிருக்கும்படி,  அவரை  மரித்தோரிலிருந்து  எழுப்பி,  அவருக்கு  மகிமையைக்  கொடுத்தார்.  {1Pet  1:21}

 

ஆகையால்  நீங்கள்  மாயமற்ற  சகோதர  சிநேகமுள்ளவர்களாகும்படி,  ஆவியினாலே  சத்தியத்திற்குக்  கீழ்ப்படிந்து,  உங்கள்  ஆத்துமாக்களைச்  சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால்,  சுத்த  இருதயத்தோடே  ஒருவரிலொருவர்  ஊக்கமாய்  அன்புகூருங்கள்;  {1Pet  1:22}

 

அழிவுள்ள  வித்தினாலே  அல்ல,  என்றென்றைக்கும்  நிற்கிறதும்  ஜீவனுள்ளதுமான  தேவவசனமாகிய  அழிவில்லாத  வித்தினாலே  மறுபடியும்  ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.  {1Pet  1:23}

 

மாம்சமெல்லாம்  புல்லைப்போலவும்,  மனுஷருடைய  மகிமையெல்லாம்  புல்லின்  பூவைப்போலவுமிருக்கிறது;  புல்  உலர்ந்தது,  அதின்  பூவும்  உதிர்ந்தது.  {1Pet  1:24}

 

கர்த்தருடைய  வசனமோ  என்றென்றைக்கும்  நிலைத்திருக்கும்;  உங்களுக்குச்  சுவிசேஷமாய்  அறிவிக்கப்பட்டுவருகிற  வசனம்  இதுவே.  {1Pet  1:25}

 

இப்படியிருக்க,  கர்த்தர்  தயையுள்ளவரென்பதை  நீங்கள்  ருசிபார்த்ததுண்டானால்,  {1Pet  2:1}

 

சகல  துர்க்குணத்தையும்,  சகலவித  கபடத்தையும்,  வஞ்சகங்களையும்,  பொறாமைகளையும்,  சகலவித  புறங்கூறுதலையும்  ஒழித்துவிட்டு,  {1Pet  2:2}

 

நீங்கள்  வளரும்படி,  புதிதாய்ப்  பிறந்த  குழந்தைகளைப்போல,  திருவசனமாகிய  களங்கமில்லாத  ஞானப்பாலின்மேல்  வாஞ்சையாயிருங்கள்.  {1Pet  2:3}

 

மனுஷரால்  தள்ளப்பட்டதாயினும்,  தேவனால்  தெரிந்துகொள்ளப்பட்டதும்  விலையேறப்பெற்றதுமாயிருக்கிற  ஜீவனுள்ள  கல்லாகிய  அவரிடத்தில்  சேர்ந்தவர்களாகிய  நீங்களும்,  {1Pet  2:4}

 

ஜீவனுள்ள  கற்களைப்போல  ஆவிக்கேற்ற  மாளிகையாகவும்,  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  மூலமாய்த்  தேவனுக்குப்  பிரியமான  ஆவிக்கேற்ற  பலிகளைச்  செலுத்தும்படிக்குப்  பரிசுத்த  ஆசாரியக்கூட்டமாகவும்  கட்டப்பட்டுவருகிறீர்கள்.  {1Pet  2:5}

 

அந்தப்படியே:  இதோ,  தெரிந்துகொள்ளப்பட்டதும்  விலையேறப்பெற்றதுமாயிருக்கிற  மூலைக்கல்லை  சீயோனில்<Sion>  வைக்கிறேன்;  அதின்மேல்  விசுவாசமாயிருக்கிறவன்  வெட்கப்படுவதில்லை  என்று  வேதத்திலே  சொல்லியிருக்கிறது.  {1Pet  2:6}

 

ஆகையால்  விசுவாசிக்கிற  உங்களுக்கு  அது  விலையேறப்பெற்றது;  கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ  வீட்டைக்  கட்டுகிறவர்களால்  தள்ளப்பட்ட  பிரதான  மூலைக்கல்லாகிய  அந்தக்  கல்  இடறுதற்கேதுவான  கல்லும்  விழுதற்கேதுவான  கன்மலையுமாயிற்று;  {1Pet  2:7}

 

அவர்கள்  திருவசனத்திற்குக்  கீழ்ப்படியாதவர்களாயிருந்து  இடறுகிறார்கள்;  அதற்கென்றே  நியமிக்கப்பட்டவர்களாயும்  இருக்கிறார்கள்.  {1Pet  2:8}

 

நீங்களோ,  உங்களை  அந்தகாரத்தினின்று  தம்முடைய  ஆச்சரியமான  ஒளியினிடத்திற்கு  வரவழைத்தவருடைய  புண்ணியங்களை  அறிவிக்கும்படிக்குத்  தெரிந்துகொள்ளப்பட்ட  சந்ததியாயும்,  ராஜரீகமான  ஆசாரியக்கூட்டமாயும்,  பரிசுத்த  ஜாதியாயும்,  அவருக்குச்  சொந்தமான  ஜனமாயும்  இருக்கிறீர்கள்.  {1Pet  2:9}

 

முன்னே  நீங்கள்  தேவனுடைய  ஜனங்களாயிருக்கவில்லை,  இப்பொழுதோ  அவருடைய  ஜனங்களாயிருக்கிறீர்கள்;  முன்னே  நீங்கள்  இரக்கம்  பெறாதவர்களாயிருந்தீர்கள்,  இப்பொழுதோ  இரக்கம்  பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.  {1Pet  2:10}

 

பிரியமானவர்களே,  அந்நியர்களும்  பரதேசிகளுமாயிருக்கிற  நீங்கள்  ஆத்துமாவுக்கு  விரோதமாய்ப்  போர்செய்கிற  மாம்ச  இச்சைகளை  விட்டு  விலகி,  {1Pet  2:11}

 

புறஜாதிகள்  உங்களை  அக்கிரமக்காரரென்று  விரோதமாய்ப்  பேசும்  விஷயத்தில்,  அவர்கள்  உங்கள்  நற்கிரியைகளைக்  கண்டு,  அவற்றினிமித்தம்  சந்திப்பின்  நாளிலே  தேவனை  மகிமைப்படுத்தும்படி  நீங்கள்  அவர்களுக்குள்ளே  நல்நடக்கையுள்ளவர்களாய்  நடந்துகொள்ளுங்கள்  என்று  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  {1Pet  2:12}

 

நீங்கள்  மனுஷருடைய  கட்டளைகள்  யாவற்றிற்கும்  கர்த்தர்நிமித்தம்  கீழ்ப்படியுங்கள்.  {1Pet  2:13}

 

மேலான  அதிகாரமுள்ள  ராஜாவுக்கானாலுஞ்சரி,  தீமைசெய்கிறவர்களுக்கு  ஆக்கினையும்  நன்மைசெய்கிறவர்களுக்குப்  புகழ்ச்சியும்  உண்டாகும்படி  அவனால்  அனுப்பப்பட்ட  அதிகாரிகளுக்கானாலுஞ்சரி,  கீழ்ப்படியுங்கள்.  {1Pet  2:14}

 

நீங்கள்  நன்மைசெய்கிறதினாலே  புத்தியீன  மனுஷருடைய  அறியாமையை  அடக்குவது  தேவனுடைய  சித்தமாயிருக்கிறது.  {1Pet  2:15}

 

சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும்  உங்கள்  சுயாதீனத்தைத்  துர்க்குணத்திற்கு  மூடலாகக்  கொண்டிராமல்,  தேவனுக்கு  அடிமைகளாயிருங்கள்.  {1Pet  2:16}

 

எல்லாரையும்  கனம்பண்ணுங்கள்;  சகோதரரிடத்தில்  அன்புகூருங்கள்;  தேவனுக்குப்  பயந்திருங்கள்;  ராஜாவைக்  கனம்பண்ணுங்கள்.  {1Pet  2:17}

 

வேலைக்காரரே,  அதிக  பயத்துடனே  உங்கள்  எஜமான்களுக்குக்  கீழ்ப்படிந்திருங்கள்;  நல்லவர்களுக்கும்  சாந்தகுணமுள்ளவர்களுக்கும்  மாத்திரம்  அல்ல,  முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும்  கீழ்ப்படிந்திருங்கள்.  {1Pet  2:18}

 

ஏனெனில்,  தேவன்மேல்  பற்றுதலாயிருக்கிற  மனச்சாட்சியினிமித்தம்  ஒருவன்  அநியாயமாய்ப்  பாடுபட்டு  உபத்திரவங்களைப்  பொறுமையாய்ச்  சகித்தால்  அதுவே  பிரீதியாயிருக்கும்.  {1Pet  2:19}

 

நீங்கள்  குற்றஞ்செய்து  அடிக்கப்படும்போது  பொறுமையோடே  சகித்தால்,  அதினால்  என்ன  கீர்த்தியுண்டு?  நீங்கள்  நன்மைசெய்து  பாடுபடும்போது  பொறுமையோடே  சகித்தால்  அதுவே  தேவனுக்குமுன்பாகப்  பிரீதியாயிருக்கும்.  {1Pet  2:20}

 

இதற்காக  நீங்கள்  அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்;  ஏனெனில்,  கிறிஸ்துவும்<Christ>  உங்களுக்காகப்  பாடுபட்டு,  நீங்கள்  தம்முடைய  அடிச்சுவடுகளைத்  தொடர்ந்துவரும்படி  உங்களுக்கு  மாதிரியைப்  பின்வைத்துப்போனார்.  {1Pet  2:21}

 

அவர்  பாவஞ்செய்யவில்லை,  அவருடைய  வாயிலே  வஞ்சனை  காணப்படவுமில்லை;  {1Pet  2:22}

 

அவர்  வையப்படும்போது  பதில்  வையாமலும்,  பாடுபடும்போது  பயமுறுத்தாமலும்,  நியாயமாய்த்  தீர்ப்புச்செய்கிறவருக்குத்  தம்மை  ஒப்புவித்தார்.  {1Pet  2:23}

 

நாம்  பாவங்களுக்குச்  செத்து,  நீதிக்குப்  பிழைத்திருக்கும்படிக்கு,  அவர்தாமே  தமது  சரீரத்திலே  நம்முடைய  பாவங்களைச்  சிலுவையின்மேல்  சுமந்தார்;  அவருடைய  தழும்புகளால்  குணமானீர்கள்.  {1Pet  2:24}

 

சிதறுண்ட  ஆடுகளைப்போலிருந்தீர்கள்;  இப்பொழுதோ  உங்கள்  ஆத்துமாக்களுக்கு  மேய்ப்பரும்  கண்காணியுமானவரிடத்தில்  திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.  {1Pet  2:25}

 

அந்தப்படி  மனைவிகளே,  உங்கள்  சொந்தப்  புருஷர்களுக்குக்  கீழ்ப்படிந்திருங்கள்;  அப்பொழுது  அவர்களில்  யாராவது  திருவசனத்திற்குக்  கீழ்ப்படியாதவர்களாயிருந்தால்,  பயபக்தியோடு  கூடிய  உங்கள்  கற்புள்ள  நடக்கையை  அவர்கள்  பார்த்து,  {1Pet  3:1}

 

போதனையின்றி,  மனைவிகளின்  நடக்கையினாலேயே  ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.  {1Pet  3:2}

 

மயிரைப்  பின்னி,  பொன்னாபரணங்களை  அணிந்து,  உயர்ந்த  வஸ்திரங்களை  உடுத்திக்கொள்ளுதலாகிய  புறம்பான  அலங்கரிப்பு  உங்களுக்கு  அலங்காரமாயிராமல்,  {1Pet  3:3}

 

அழியாத  அலங்கரிப்பாயிருக்கிற  சாந்தமும்  அமைதலுமுள்ள  ஆவியாகிய  இருதயத்தில்  மறைந்திருக்கிற  குணமே  உங்களுக்கு  அலங்காரமாயிருக்கக்கடவது;  அதுவே  தேவனுடைய  பார்வையில்  விலையேறப்பெற்றது.  {1Pet  3:4}

 

இப்படியே  பூர்வத்தில்  தேவனிடத்தில்  நம்பிக்கையாயிருந்த  பரிசுத்த  ஸ்திரீகளும்  தங்களுடைய  புருஷர்களுக்குக்  கீழ்ப்படிந்து  தங்களை  அலங்கரித்தார்கள்.  {1Pet  3:5}

 

அந்தப்படியே  சாராள்<Sarah>  ஆபிரகாமை<Abraham>  ஆண்டவன்  என்று  சொல்லி,  அவனுக்குக்  கீழ்ப்படிந்திருந்தாள்;  நீங்கள்  நன்மைசெய்து  ஒரு  ஆபத்துக்கும்  பயப்படாதிருந்தீர்களானால்  அவளுக்குப்  பிள்ளைகளாயிருப்பீர்கள்.  {1Pet  3:6}

 

அந்தப்படி  புருஷர்களே,  மனைவியானவள்  பெலவீன  பாண்டமாயிருக்கிறபடியினால்,  உங்கள்  ஜெபங்களுக்குத்  தடைவராதபடிக்கு,  நீங்கள்  விவேகத்தோடு  அவர்களுடனே  வாழ்ந்து,  உங்களுடனேகூட  அவர்களும்  நித்திய  ஜீவனாகிய  கிருபையைச்  சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால்,  அவர்களுக்குச்  செய்யவேண்டிய  கனத்தைச்  செய்யுங்கள்.  {1Pet  3:7}

 

மேலும்,  நீங்களெல்லாரும்  ஒருமனப்பட்டவர்களும்,  இரக்கமுள்ளவர்களும்,  சகோதர  சிநேகமுள்ளவர்களும்,  மனஉருக்கமுள்ளவர்களும்,  இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,  {1Pet  3:8}

 

தீமைக்குத்  தீமையையும்,  உதாசனத்துக்கு  உதாசனத்தையும்  சரிக்கட்டாமல்,  அதற்குப்  பதிலாக,  நீங்கள்  ஆசீர்வாதத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று  அறிந்து,  ஆசீர்வதியுங்கள்.  {1Pet  3:9}

 

ஜீவனை  விரும்பி,  நல்ல  நாட்களைக்  காணவேண்டுமென்றிருக்கிறவன்  பொல்லாப்புக்குத்  தன்  நாவையும்,  கபடத்துக்குத்  தன்  உதடுகளையும்  விலக்கிக்காத்து,  {1Pet  3:10}

 

பொல்லாப்பைவிட்டு  நீங்கி,  நன்மைசெய்து,  சமாதானத்தைத்  தேடி,  அதைப்  பின்தொடரக்கடவன்.  {1Pet  3:11}

 

கர்த்தருடைய  கண்கள்  நீதிமான்கள்மேல்  நோக்கமாயிருக்கிறது,  அவருடைய  செவிகள்  அவர்கள்  வேண்டுதலுக்குக்  கவனமாயிருக்கிறது;  தீமைசெய்கிறவர்களுக்கோ  கர்த்தருடைய  முகம்  விரோதமாயிருக்கிறது.  {1Pet  3:12}

 

நீங்கள்  நன்மையைப்  பின்பற்றுகிறவர்களானால்,  உங்களுக்குத்  தீமைசெய்கிறவன்  யார்?  {1Pet  3:13}

 

நீதியினிமித்தமாக  நீங்கள்  பாடுபட்டால்  பாக்கியவான்களாயிருப்பீர்கள்;  அவர்களுடைய  பயமுறுத்தலுக்கு  நீங்கள்  பயப்படாமலும்  கலங்காமலும்  இருந்து;  {1Pet  3:14}

 

கர்த்தராகிய  தேவனை  உங்கள்  இருதயங்களில்  பரிசுத்தம்பண்ணுங்கள்;  உங்களிலிருக்கிற  நம்பிக்கையைக்குறித்து  உங்களிடத்தில்  விசாரித்துக்  கேட்கிற  யாவருக்கும்  சாந்தத்தோடும்  வணக்கத்தோடும்  உத்தரவுசொல்ல  எப்பொழுதும்  ஆயத்தமாயிருங்கள்.  {1Pet  3:15}

 

கிறிஸ்துவுக்கேற்ற<Christ>  உங்கள்  நல்ல  நடக்கையைத்  தூஷிக்கிறவர்கள்  உங்களை  அக்கிரமக்காரரென்று  உங்களுக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிற  விஷயத்தில்  வெட்கப்படும்படிக்கு  நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.  {1Pet  3:16}

 

தீமைசெய்து  பாடநுபவிப்பதிலும்,  தேவனுக்குச்  சித்தமானால்,  நன்மைசெய்து  பாடநுபவிப்பதே  மேன்மையாயிருக்கும்.  {1Pet  3:17}

 

ஏனெனில்,  கிறிஸ்துவும்<Christ>  நம்மைத்  தேவனிடத்தில்  சேர்க்கும்படி  அநீதியுள்ளவர்களுக்குப்  பதிலாக  நீதியுள்ளவராய்ப்  பாவங்களினிமித்தம்  ஒருதரம்  பாடுபட்டார்;  அவர்  மாம்சத்திலே  கொலையுண்டு,  ஆவியிலே  உயிர்ப்பிக்கப்பட்டார்.  {1Pet  3:18}

 

அந்த  ஆவியிலே  அவர்  போய்க்  காவலிலுள்ள  ஆவிகளுக்குப்  பிரசங்கித்தார்.  {1Pet  3:19}

 

அந்த  ஆவிகள்,  பூர்வத்திலே  நோவா<Noah>  பேழையை  ஆயத்தம்பண்ணும்  நாட்களிலே,  தேவன்  நீடிய  பொறுமையோடே  காத்திருந்தபோது,  கீழ்ப்படியாமற்  போனவைகள்;  அந்தப்  பேழையிலே  சிலராகிய  எட்டுப்பேர்மாத்திரம்  பிரவேசித்து  ஜலத்தினாலே  காக்கப்பட்டார்கள்.  {1Pet  3:20}

 

அதற்கு  ஒப்பனையான  ஞானஸ்நானமானது,  மாம்ச  அழுக்கை  நீக்குதலாயிராமல்,  தேவனைப்பற்றும்  நல்மனச்சாட்சியின்  உடன்படிக்கையாயிருந்து,  இப்பொழுது  நம்மையும்  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  உயிர்த்தெழுதலினால்  இரட்சிக்கிறது;  {1Pet  3:21}

 

அவர்  பரலோகத்திற்குப்  போய்,  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  இருக்கிறார்;  தேவதூதர்களும்  அதிகாரங்களும்  வல்லமைகளும்  அவருக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறது.  {1Pet  3:22}

 

இப்படியிருக்க,  கிறிஸ்து<Christ>  நமக்காக  மாம்சத்திலே  பாடுபட்டபடியால்,  நீங்களும்  அப்படிப்பட்ட  சிந்தையை  ஆயுதமாகத்  தரித்துக்கொள்ளுங்கள்.  {1Pet  4:1}

 

ஏனென்றால்  மாம்சத்தில்  பாடுபடுகிறவன்  இனி  மாம்சத்திலிருக்கும்  காலம்வரைக்கும்  மனுஷருடைய  இச்சைகளின்படி  பிழைக்காமல்  தேவனுடைய  சித்தத்தின்படியே  பிழைக்கத்தக்கதாகப்  பாவங்களை  விட்டோய்ந்திருப்பான்.  {1Pet  4:2}

 

சென்ற  வாழ்நாட்  காலத்திலே  நாம்  புறஜாதிகளுடைய  இஷ்டத்தின்படி  நடந்துகொண்டது  போதும்;  அப்பொழுது  நாம்  காமவிகாரத்தையும்  துர்இச்சைகளையும்  நடப்பித்து,  மதுபானம்பண்ணி,  களியாட்டுச்செய்து,  வெறிகொண்டு,  அருவருப்பான  விக்கிரகாராதனையைச்  செய்துவந்தோம்.  {1Pet  4:3}

 

அந்தத்  துன்மார்க்க  உளையிலே  அவர்களோடேகூட  நீங்கள்  விழாமலிருக்கிறதினாலே  அவர்கள்  ஆச்சரியப்பட்டு,  உங்களைத்  தூஷிக்கிறார்கள்.  {1Pet  4:4}

 

உயிரோடிருக்கிறவர்களுக்கும்  மரித்தோர்களுக்கும்  நியாயத்தீர்ப்புக்கொடுக்க  ஆயத்தமாயிருக்கிறவருக்கு  அவர்கள்  கணக்கொப்புவிப்பார்கள்.  {1Pet  4:5}

 

இதற்காக  மரித்தோரானவர்கள்,  மனுஷர்முன்பாக  மாம்சத்திலே  ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும்,  தேவன்முன்பாக  ஆவியிலே  பிழைக்கும்படியாக,  அவர்களுக்கும்  சுவிசேஷம்  அறிவிக்கப்பட்டது.  {1Pet  4:6}

 

எல்லாவற்றிற்கும்  முடிவு  சமீபமாயிற்று;  ஆகையால்  தெளிந்த  புத்தியுள்ளவர்களாயிருந்து,  ஜெபம்பண்ணுவதற்கு  ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.  {1Pet  4:7}

 

எல்லாவற்றிற்கும்  மேலாக  ஒருவரிலொருவர்  ஊக்கமான  அன்புள்ளவர்களாயிருங்கள்;  அன்பு  திரளான  பாவங்களை  மூடும்.  {1Pet  4:8}

 

முறுமுறுப்பில்லாமல்  ஒருவரையொருவர்  உபசரியுங்கள்.  {1Pet  4:9}

 

அவனவன்  பெற்ற  வரத்தின்படியே  நீங்கள்  தேவனுடைய  பற்பல  கிருபையுள்ள  ஈவுகளைப்  பகிர்ந்துகொடுக்கும்  நல்ல  உக்கிராணக்காரர்போல,  ஒருவருக்கொருவர்  உதவிசெய்யுங்கள்.  {1Pet  4:10}

 

ஒருவன்  போதித்தால்  தேவனுடைய  வாக்கியங்களின்படி  போதிக்கக்கடவன்;  ஒருவன்  உதவிசெய்தால்  தேவன்  தந்தருளும்  பெலத்தின்படி  செய்யக்கடவன்;  எல்லாவற்றிலேயும்  இயேசுகிறிஸ்துமூலமாய்த்<Jesus  Christ>  தேவன்  மகிமைப்படும்படியே  செய்வீர்களாக;  அவருக்கே  மகிமையும்  வல்லமையும்  சதாகாலங்களிலும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  {1Pet  4:11}

 

பிரியமானவர்களே,  உங்களைச்  சோதிக்கும்படி  உங்கள்  நடுவில்  பற்றியெரிகிற  அக்கினியைக்குறித்து  ஏதோ  புதுமையென்று  திகையாமல்,  {1Pet  4:12}

 

கிறிஸ்துவின்<Christ>  மகிமை  வெளிப்படும்போது  நீங்கள்  களிகூர்ந்து  மகிழும்படியாக  அவருடைய  பாடுகளுக்கு  நீங்கள்  பங்காளிகளானதால்  சந்தோஷப்படுங்கள்.  {1Pet  4:13}

 

நீங்கள்  கிறிஸ்துவின்<Christ>  நாமத்தினிமித்தம்  நிந்திக்கப்பட்டால்  பாக்கியவான்கள்;  ஏனென்றால்  தேவனுடைய  ஆவியாகிய  மகிமையுள்ள  ஆவியானவர்  உங்கள்மேல்  தங்கியிருக்கிறார்;  அவர்களாலே  தூஷிக்கப்படுகிறார்;  உங்களாலே  மகிமைப்படுகிறார்.  {1Pet  4:14}

 

ஆதலால்  உங்களில்  ஒருவனும்  கொலைபாதகனாயாவது,  திருடனாயாவது,  பொல்லாங்கு  செய்தவனாயாவது,  அந்நிய  காரியங்களில்  தலையிட்டுக்கொண்டவனாயாவது  பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.  {1Pet  4:15}

 

ஒருவன்  கிறிஸ்தவனாயிருப்பதினால்<Christian>  பாடுபட்டால்  வெட்கப்படாமலிருந்து,  அதினிமித்தம்  தேவனை  மகிமைப்படுத்தக்கடவன்.  {1Pet  4:16}

 

நியாயத்தீர்ப்பு  தேவனுடைய  வீட்டிலே  துவக்குங்காலமாயிருக்கிறது;  முந்தி  நம்மிடத்திலே  அது  துவக்கினால்  தேவனுடைய  சுவிசேஷத்திற்குக்  கீழ்ப்படியாதவர்களின்  முடிவு  என்னமாயிருக்கும்?  {1Pet  4:17}

 

நீதிமானே  இரட்சிக்கப்படுவது  அரிதானால்,  பக்தியில்லாதவனும்  பாவியும்  எங்கே  நிற்பான்?  {1Pet  4:18}

 

ஆகையால்  தேவனுடைய  சித்தத்தின்படி  பாடநுபவிக்கிறவர்கள்  நன்மைசெய்கிறவர்களாய்த்  தங்கள்  ஆத்துமாக்களை  உண்மையுள்ள  சிருஷ்டிகர்த்தாவாகிய  அவருக்கு  ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.  {1Pet  4:19}

 

உங்களிலுள்ள  மூப்பருக்கு  உடன்மூப்பனும்,  கிறிஸ்துவின்<Christ>  பாடுகளுக்குச்  சாட்சியும்,  இனி  வெளிப்படும்  மகிமைக்குப்  பங்காளியுமாயிருக்கிற  நான்  புத்திசொல்லுகிறதென்னவென்றால்:  {1Pet  5:1}

 

உங்களிடத்திலுள்ள  தேவனுடைய  மந்தையை  நீங்கள்  மேய்த்து,  கட்டாயமாய்  அல்ல,  மனப்பூர்வமாயும்,  அவலட்சணமான  ஆதாயத்திற்காக  அல்ல,  உற்சாக  மனதோடும்,  {1Pet  5:2}

 

சுதந்தரத்தை  இறுமாப்பாய்  ஆளுகிறவர்களாக  அல்ல,  மந்தைக்கு  மாதிரிகளாகவும்,  கண்காணிப்புச்  செய்யுங்கள்.  {1Pet  5:3}

 

அப்படிச்  செய்தால்  பிரதான  மேய்ப்பர்  வெளிப்படும்போது  மகிமையுள்ள  வாடாத  கிரீடத்தைப்  பெறுவீர்கள்.  {1Pet  5:4}

 

அந்தப்படி,  இளைஞரே,  மூப்பருக்குக்  கீழ்ப்படியுங்கள்.  நீங்களெல்லாரும்  ஒருவருக்கொருவர்  கீழ்ப்படிந்து,  மனத்தாழ்மையை  அணிந்துகொள்ளுங்கள்;  பெருமையுள்ளவர்களுக்குத்  தேவன்  எதிர்த்து  நிற்கிறார்,  தாழ்மையுள்ளவர்களுக்கோ  கிருபை  அளிக்கிறார்.  {1Pet  5:5}

 

ஆகையால்,  ஏற்றகாலத்திலே  தேவன்  உங்களை  உயர்த்தும்படிக்கு,  அவருடைய  பலத்த  கைக்குள்  அடங்கியிருங்கள்.  {1Pet  5:6}

 

அவர்  உங்களை  விசாரிக்கிறவரானபடியால்,  உங்கள்  கவலைகளையெல்லாம்  அவர்மேல்  வைத்துவிடுங்கள்.  {1Pet  5:7}

 

தெளிந்த  புத்தியுள்ளவர்களாயிருங்கள்,  விழித்திருங்கள்;  ஏனெனில்,  உங்கள்  எதிராளியாகிய  பிசாசானவன்  கெர்ச்சிக்கிற  சிங்கம்போல்  எவனை  விழுங்கலாமோ  என்று  வகைதேடிச்  சுற்றித்திரிகிறான்.  {1Pet  5:8}

 

விசுவாசத்தில்  உறுதியாயிருந்து,  அவனுக்கு  எதிர்த்து  நில்லுங்கள்;  உலகத்திலுள்ள  உங்கள்  சகோதரரிடத்திலே  அப்படிப்பட்ட  பாடுகள்  நிறைவேறிவருகிறதென்று  அறிந்திருக்கிறீர்களே.  {1Pet  5:9}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  நம்மைத்  தமது  நித்திய  மகிமைக்கு  அழைத்தவராயிருக்கிற  சகல  கிருபையும்  பொருந்திய  தேவன்தாமே  கொஞ்சக்காலம்  பாடநுபவிக்கிற  உங்களைச்  சீர்ப்படுத்தி,  ஸ்திரப்படுத்தி,  பலப்படுத்தி,  நிலைநிறுத்துவாராக;  {1Pet  5:10}

 

அவருக்கு  மகிமையும்  வல்லமையும்  சதாகாலங்களிலும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  {1Pet  5:11}

 

உங்களுக்குப்  புத்திசொல்லும்படிக்கும்,  நீங்கள்  நிலைகொண்டு  நிற்கிற  கிருபை  தேவனுடைய  மெய்யான  கிருபைதானென்று  சாட்சியிடும்படிக்கும்,  நான்  சுருக்கமாய்  உங்களுக்கு  எழுதி,  எனக்குத்  தோன்றுகிறபடி  உண்மையுள்ள  சகோதரனாகிய  சில்வானுவின்<Silvanus>  கையிலே  கொடுத்து  அனுப்பியிருக்கிறேன்.  {1Pet  5:12}

 

உங்களுடனேகூடத்  தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற  பாபிலோனிலுள்ள<Babylon>  சபையும்,  என்  குமாரனாகிய  மாற்கும்<Marcus>  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  {1Pet  5:13}

 

ஒருவரையொருவர்  அன்பின்  முத்தத்தோடே  வாழ்த்துதல்  செய்யுங்கள்.  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான<Christ  Jesus>  உங்கள்  அனைவருக்கும்  சமாதானமுண்டாவதாக.  ஆமென்<Amen>.  {1Pet  5:14}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!