Tuesday, January 14, 2020

ஆமோஸ்

தெக்கோவா<Tekoa>  ஊர்  மேய்ப்பருக்குள்  இருந்த  ஆமோஸ்<Amos>,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  உசியாவின்<Uzziah>  நாட்களிலும்,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாசுடைய<Joash>  குமாரனாகிய  எரொபெயாமின்<Jeroboam>  நாட்களிலும்,  பூமி  அதிர்ச்சி  உண்டாக  இரண்டு  வருஷத்துக்கு  முன்னே,  இஸ்ரவேலைக்குறித்துத்<Israel>  தரிசனங்கண்டு  சொன்ன  வார்த்தைகள்.  {Amos  1:1}

 

கர்த்தர்  சீயோனிலிருந்து<Zion>  கெர்ச்சித்து,  எருசலேமிலிருந்து<Jerusalem>  சத்தமிடுவார்;  அதினால்  மேய்ப்பரின்  தாபரங்கள்  துக்கங்கொண்டாடும்;  கர்மேலின்<Carmel>  கொடுமுடியும்  காய்ந்துபோகும்.  {Amos  1:2}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  தமஸ்குவினுடைய<Damascus>  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அதின்  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவர்கள்  கீலேயாத்தை<Gilead>  இருப்புக்  கருவிகளினால்  போரடித்தார்களே.  {Amos  1:3}

 

ஆசகேலின்<Hazael>  வீட்டிலே  தீக்கொளுத்துவேன்;  அது  பெனாதாதின்<Benhadad>  அரமனைகளைப்  பட்சிக்கும்.  {Amos  1:4}

 

நான்  தமஸ்குவின்<Damascus>  தாழ்ப்பாளை  உடைத்து,  குடிகளை  ஆவேன்<Aven>  என்னும்  பள்ளத்தாக்கிலும்,  செங்கோல்  செலுத்துகிறவனைப்  பெத்ஏதேனிலும்<Beth Eden//Eden>  இராதபடிக்குச்  சங்காரம்பண்ணுவேன்;  அப்பொழுது  சீரியாவின்<Syria>  ஜனங்கள்  கீருக்குச்<Kir>  சிறைப்பட்டுப்போவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  1:5}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  காத்சாவினுடைய<Gaza>  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அதின்  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவர்கள்  சிறைப்பட்டவர்களை  ஏதோமியரிடத்தில்<Edom>  ஒப்புவிக்கும்படி  முழுதும்  சிறையாக்கினார்களே.  {Amos  1:6}

 

காத்சாவின்<Gaza>  மதிலுக்குள்  தீக்கொளுத்துவேன்;  அது  அதினுடைய  அரமனைகளைப்  பட்சிக்கும்.  {Amos  1:7}

 

நான்  குடிகளை  அஸ்தோத்திலும்<Ashdod>,  செங்கோல்  செலுத்துகிறவனை  அஸ்கலோனிலும்<Ashkelon>  இராதபடிக்குச்  சங்காரம்பண்ணி,  பெலிஸ்தரில்<Philistines>  மீதியானவர்கள்  அழியும்படிக்கு  என்  கையை  எக்ரோனுக்கு<Ekron>  விரோதமாகத்  திருப்புவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Amos  1:8}

 

மேலும்:  தீருவினுடைய<Tyrus>  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அதின்  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவர்கள்  சகோதரரின்  உடன்படிக்கையை  நினையாமல்,  சிறைப்பட்டவர்களை  முழுதும்  ஏதோமியர்<Edom>  கையில்  ஒப்பித்தார்களே.  {Amos  1:9}

 

தீருவின்<Tyrus>  மதிலுக்குள்  தீக்கொளுத்துவேன்;  அது  அதின்  அரமனைகளைப்  பட்சிக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  1:10}

 

மேலும்:  ஏதோமுடைய<Edom>  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அவன்  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவன்  தன்  சகோதரனைப்  பட்டயத்தோடே  தொடர்ந்து,  தன்  மனதை  இரக்கமற்றதாக்கி,  தன்  கோபத்தினாலே  என்றைக்கும்  அவனைப்  பீறிப்போட்டு,  தன்  மூர்க்கத்தை  நித்தியகாலமாக  வைத்திருக்கிறானே.  {Amos  1:11}

 

தேமானிலே<Teman>  தீக்கொளுத்துவேன்;  அது  போஸ்றாவின்<Bozrah>  அரமனைகளைப்  பட்சிக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  1:12}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அம்மோன்<Ammon>  புத்திரரின்  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அவர்கள்  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவர்கள்  தங்கள்  எல்லைகளை  விஸ்தாரமாக்கும்படிக்குக்  கீலேயாத்<Gilead>  தேசத்தின்  கர்ப்பஸ்திரீகளைக்  கீறிப்போட்டார்களே.  {Amos  1:13}

 

ரப்பாவின்<Rabbah>  மதிலுக்குள்  தீக்கொளுத்துவேன்;  அது  யுத்தநாளின்  முழக்கமாகவும்,  பெருங்காற்றின்  புசலாகவும்  அதின்  அரமனைகளைப்  பட்சிக்கும்.  {Amos  1:14}

 

அவர்களுடைய  ராஜாவும்,  அவனுடைய  அதிபதிகளும்  சிறைப்பட்டுப்போவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  1:15}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  மோவாபின்<Moab>  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அவன்  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவன்  ஏதோமுடைய<Edom>  ராஜாவின்  எலும்புகளை  நீறாகச்  சுட்டுப்போட்டானே.  {Amos  2:1}

 

மோவாப்தேசத்தில்<Moab>  தீக்கொளுத்துவேன்;  அது  கீரியோத்தின்<Kerioth>  அரமனைகளைப்  பட்சிக்கும்;  மோவாபியர்<Moab>  அமளியோடும்  ஆர்ப்பரிப்போடும்  எக்காள  சத்தத்தோடும்  சாவார்கள்.  {Amos  2:2}

 

நியாயாதிபதியை  அவர்கள்  நடுவில்  இராதபடிக்கு  நான்  சங்காரம்பண்ணி,  அவனோடேகூட  அவர்களுடைய  பிரபுக்களையெல்லாம்  கொன்றுபோடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  2:3}

 

மேலும்:  யூதாவின்<Judah>  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அவர்கள்  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவர்கள்  கர்த்தருடைய  வேதத்தை  வெறுத்து,  அவருடைய  கட்டளைகளைக்  கைக்கொள்ளாமல்,  தங்கள்  பிதாக்கள்  பின்பற்றின  பொய்களினால்  மோசம்போனார்களே.  {Amos  2:4}

 

யூதாவிலே<Judah>  நான்  தீக்கொளுத்துவேன்;  அது  எருசலேமின்<Jerusalem>  அரமனைகளைப்  பட்சிக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  2:5}

 

மேலும்:  இஸ்ரவேலின்<Israel>  மூன்று  பாதகங்களினிமித்தமும்,  நாலு  பாதகங்களினிமித்தமும்,  நான்  அவர்களுடைய  ஆக்கினையைத்  திருப்பமாட்டேன்;  அவர்கள்  நீதிமானைப்  பணத்துக்கும்,  எளியவனை  ஒரு  ஜோடு  பாதரட்சைக்கும்  விற்றுப்போட்டார்களே.  {Amos  2:6}

 

அவர்கள்  தரித்திரருடைய  தலையின்மேல்  மண்ணைவாரி  இறைத்து,  சிறுமையானவர்களின்  வழியைப்  புரட்டுகிறார்கள்;  என்  பரிசுத்த  நாமத்தைக்  குலைச்சலாக்கும்படிக்கு  மகனும்  தகப்பனும்  ஒரு  பெண்ணிடத்தில்  பிரவேசிக்கிறார்கள்.  {Amos  2:7}

 

அவர்கள்  சகல  பீடங்களருகிலும்  அடைமானமாய்  வாங்கின  வஸ்திரங்களின்மேல்  படுத்துக்கொண்டு,  தெண்டம்  பிடிக்கப்பட்டவர்களுடைய  மதுபானத்தைத்  தங்கள்  தேவர்களின்  கோவிலிலே  குடிக்கிறார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  2:8}

 

நானோ:  கேதுருமரங்களைப்போல்  உயரமும்,  கர்வாலி  மரங்களைப்போல்  வைரமுமாயிருந்த  எமோரியனை<Amorite>  அவர்களுக்கு  முன்பாக  அழித்தேன்;  உயர  இருந்த  அவனுடைய  கனியையும்,  தாழ  இருந்த  அவனுடைய  வேர்களையும்  அழித்துப்போட்டு,  {Amos  2:9}

 

நீங்கள்  எமோரியனுடைய<Amorite>  தேசத்தைக்  கட்டிக்கொள்ளும்படிக்கு  உங்களை  நான்  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  வரப்பண்ணி,  உங்களை  நாற்பது  வருஷமாக  வனாந்தரத்திலே  வழிநடத்தி,  {Amos  2:10}

 

உங்கள்  குமாரரில்  சிலரைத்  தீர்க்கதரிசிகளாகவும்,  உங்கள்  வாலிபரில்  சிலரை  நசரேயராகவும்<Nazarites>  எழும்பப்பண்ணினேன்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  இப்படி  நான்  செய்யவில்லையா  என்று  கர்த்தர்  கேட்கிறார்.  {Amos  2:11}

 

நீங்களோ  நசரேயருக்குத்<Nazarites>  திராட்சரசம்  குடிக்கக்  கொடுத்து,  தீர்க்கதரிசிகளை  நோக்கி:  நீங்கள்  தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம்  என்று  கற்பித்தீர்கள்.  {Amos  2:12}

 

இதோ,  கோதுமைக்கட்டுகள்  நிறைபாரமாக  ஏற்றப்பட்ட  வண்டியில்  இருத்துகிறதுபோல,  நான்  உங்களை  நீங்கள்  இருக்கிற  ஸ்தலத்தில்  இருத்துவேன்.  {Amos  2:13}

 

அப்பொழுது  வேகமானவன்  ஓடியும்  புகலிடமில்லை;  பலவான்  தன்  பலத்தினால்  பலப்படுவதுமில்லை;  பராக்கிரமசாலி  தன்  பிராணனைத்  தப்புவிப்பதுமில்லை.  {Amos  2:14}

 

வில்லைப்  பிடிக்கிறவன்  நிற்பதுமில்லை;  வேகமானவன்  தன்  கால்களால்  தப்பிப்போவதுமில்லை;  குதிரையின்மேல்  ஏறுகிறவன்  தன்  பிராணனை  இரட்சிப்பதுமில்லை.  {Amos  2:15}

 

பலசாலிகளுக்குள்ளே  தைரியவான்  அந்நாளிலே  நிர்வாணியாய்  ஓடிப்போவான்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  2:16}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  கர்த்தராகிய  நான்  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  வரப்பண்ணின  முழுக்குடும்பமாகிய  உங்களுக்கு  விரோதமாய்ச்  சொல்லிய  இந்த  வசனத்தைக்  கேளுங்கள்.  {Amos  3:1}

 

பூமியின்  எல்லா  வம்சங்களுக்குள்ளும்  உங்களைமாத்திரம்  அறிந்துகொண்டேன்;  ஆகையால்  உங்களுடைய  எல்லா  அக்கிரமங்களினிமித்தமும்  உங்களைத்  தண்டிப்பேன்.  {Amos  3:2}

 

இரண்டுபேர்  ஒருமனப்பட்டிருந்தாலொழிய  ஒருமித்து  நடந்துபோவார்களோ?  {Amos  3:3}

 

தனக்கு  இரை  அகப்படாமலிருக்கக்  காட்டிலே  சிங்கம்  கெர்ச்சிக்குமோ?  இரைபிடியாமல்  இருக்கும்போது  பாலசிங்கம்  தன்  கெபியிலிருந்து  சத்தமிடுமோ?  {Amos  3:4}

 

குருவிக்குத்  தரையிலே  சுருக்குப்  போடப்படாதிருந்தால்,  அது  கண்ணியில்  அகப்படுமோ?  ஒன்றும்  படாதிருக்கையில்,  கண்ணி  தரையிலிருந்து  எடுக்கப்படுமோ?  {Amos  3:5}

 

ஊரில்  எக்காளம்  ஊதினால்,  ஜனங்கள்  கலங்காதிருப்பார்களோ?  கர்த்தருடைய  செயல்  இல்லாமல்  ஊரில்  தீங்கு  உண்டாகுமோ?  {Amos  3:6}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  ஊழியக்காரருக்குத்  தமது  இரகசியத்தை  வெளிப்படுத்தாமல்  ஒரு  காரியத்தையும்  செய்யார்.  {Amos  3:7}

 

சிங்கம்  கெர்ச்சிக்கிறது,  யார்  பயப்படாதிருப்பான்?  கர்த்தராகிய  ஆண்டவர்  பேசுகிறார்,  யார்  தீர்க்கதரிசனம்  சொல்லாதிருப்பான்?  {Amos  3:8}

 

நீங்கள்  சமாரியாவின்<Samaria>  பர்வதங்களில்  வந்து  கூடி,  அதின்  நடுவில்  நடக்கிற  பெரிய  கலகங்களையும்  அதற்குள்  செய்யப்படுகிற  இடுக்கண்களையும்  பாருங்கள்  என்று  அஸ்தோத்தின்<Ashdod>  அரமனைகள்மேலும்,  எகிப்துதேசத்தின்<Egypt>  அரமனைகள்மேலும்  கூறுங்கள்.  {Amos  3:9}

 

அவர்கள்  செம்மையானதைச்  செய்ய  அறியாமல்,  தங்கள்  அரமனைகளில்  கொடுமையையும்  கொள்ளையையும்  குவித்துக்கொள்ளுகிறார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  3:10}

 

ஆகையால்  சத்துரு  வந்து,  தேசத்தைச்  சூழ்ந்துகொண்டு,  உன்  பெலத்தை  உன்னிலிருந்து  அற்றுப்போகப்பண்ணுவான்;  அப்பொழுது  உன்  அரமனைகள்  கொள்ளையிடப்படும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Amos  3:11}

 

மேலும்:  ஒரு  மேய்ப்பன்  இரண்டு  கால்களையாவது  ஒரு  காதின்  துண்டையாவது  சிங்கத்தின்  வாயிலிருந்து  பிடுங்கித்  தப்புவிக்குமாப்போல,  சமாரியாவில்<Samaria>  குடியிருக்கிற  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  ஒரு  படுக்கையின்  மூலையிலிருந்தும்,  ஒரு  மஞ்சத்தின்மேலிருந்தும்  தப்புவிக்கப்படுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  3:12}

 

நீங்கள்  கேட்டு  யாக்கோபு<Jacob>  வம்சத்தாருக்குள்ளே  சாட்சியாக  அறிவிக்கவேண்டியது:  சேனைகளின்  தேவனாயிருக்கிற  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  {Amos  3:13}

 

நான்  இஸ்ரவேலுடைய<Israel>  பாதகங்களினிமித்தம்  அவனை  விசாரிக்கும்  நாளிலே  நான்  பெத்தேலின்<Bethel>  பலிபீடங்களை  விசாரிப்பேன்;  பலிபீடத்தின்  கொம்புகள்  வெட்டுண்டு  தரையிலே  விழும்.  {Amos  3:14}

 

மாரிகாலத்து  வீட்டையும்  கோடைகாலத்து  வீட்டையும்  அழிப்பேன்;  அப்பொழுது  யானைத்தந்தத்தால்  செய்யப்பட்ட  வீடுகள்  அழியும்;  பெரிய  வீடுகளுக்கும்  முடிவு  வரும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  3:15}

 

சமாரியாவின்<Samaria>  மலைகளிலுள்ள  பாசானின்<Bashan>  மாடுகளே,  நீங்கள்  இந்த  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  தரித்திரரை  ஒடுக்கி,  எளியவர்களை  நொறுக்கி,  அவர்களுடைய  எஜமான்களை  நோக்கி:  நாங்கள்  குடிக்கும்படிக்  கொண்டுவாருங்கள்  என்று  சொல்லுகிறீர்கள்.  {Amos  4:1}

 

இதோ,  கர்த்தராகிய  ஆண்டவர்  உங்களைத்  துறடுகளாலும்,  உங்கள்  பின்சந்ததியை  மீன்பிடிக்கிற  தூண்டில்களாலும்  இழுத்துக்கொண்டுபோகும்  நாட்கள்  வருமென்று  அவர்  தம்முடைய  பரிசுத்தத்தைக்கொண்டு  ஆணையிட்டார்.  {Amos  4:2}

 

அப்பொழுது  நீங்கள்  ஒவ்வொருவனும்  அரமனைக்குச்  சுமந்துகொண்டுபோவதை  எறிந்துவிட்டு,  தனக்கு  எதிரான  திறப்புகளின்  வழியாய்ப்  புறப்பட்டுப்போவீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  4:3}

 

பெத்தேலுக்குப்<Bethel>  போய்த்  துரோகம்  பண்ணுங்கள்,  கில்காலுக்கும்<Gilgal>  போய்த்  துரோகத்தைப்  பெருகப்பண்ணி,  காலைதோறும்  உங்கள்  பலிகளையும்,  மூன்றாம்  வருஷத்திலே  உங்கள்  தசமபாகங்களையும்  செலுத்தி,  {Amos  4:4}

 

புளித்தமாவுள்ள  ஸ்தோத்திரபலியோடே  தூபங்காட்டி,  உற்சாக  பலிகளைக்  கூறித்  தெரியப்படுத்துங்கள்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  இப்படிச்  செய்வதே  உங்களுக்குப்  பிரியம்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Amos  4:5}

 

ஆகையால்  நான்  உங்கள்  பட்டணங்களில்  எல்லாம்  உங்கள்  பல்லுகளுக்கு  ஓய்வையும்,  உங்கள்  ஸ்தலங்களில்  எல்லாம்  அப்பக்குறைவையும்  கட்டளையிட்டேன்;  ஆகிலும்  நீங்கள்  என்னிடத்தில்  திரும்பாமற்போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  4:6}

 

இதுவுமல்லாமல்,  அறுப்புக்காலம்  வர  இன்னும்  மூன்றுமாதம்  இருக்கும்போதே  மழையை  நான்  தடுத்தேன்,  ஒரு  பட்டணத்தின்மேல்  மழைபெய்யவும்  ஒரு  பட்டணத்தின்மேல்  மழை  பெய்யாமலிருக்கவும்  பண்ணினேன்;  ஒரு  வயலின்மேல்  மழைபெய்தது,  மழைபெய்யாத  மற்ற  வயல்  காய்ந்து  போயிற்று.  {Amos  4:7}

 

இரண்டு  மூன்று  பட்டணங்களின்  மனுஷர்  தண்ணீர்  குடிக்க  ஒரே  பட்டணத்துக்குப்  போய்  அலைந்தும்  தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை;  ஆகிலும்  நீங்கள்  என்னிடத்தில்  திரும்பாமற்போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  4:8}

 

கருக்காயினாலும்  விஷப்பனியினாலும்  உங்களை  தண்டித்தேன்;  உங்கள்  சோலைகளிலும்  திராட்சத்தோட்டங்களிலும்  அத்திமரங்களிலும்  ஒலிவமரங்களிலும்  மிகுதியானதைப்  பச்சைப்புழு  அரித்துப்போட்டது;  ஆகிலும்  என்னிடத்தில்  திரும்பாமற்போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  4:9}

 

எகிப்திலே<Egypt>  உண்டானதற்கு  ஒத்த  கொள்ளைநோயை  உங்களுக்குள்  அனுப்பினேன்;  உங்கள்  வாலிபரைப்  பட்டயத்தாலே  கொன்றேன்;  உங்கள்  குதிரைகளை  அழித்துப்போட்டேன்;  உங்கள்  பாளயங்களின்  நாற்றத்தை  உங்கள்  நாசிகளிலும்  ஏறப்பண்ணினேன்;  ஆகிலும்  நீங்கள்  என்னிடத்தில்  திரும்பாமற்போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  4:10}

 

சோதோமையும்<Sodom>  கொமோராவையும்<Gomorrah>  தேவன்  கவிழ்த்துப்போட்டது  போல,  உங்களைக்  கவிழ்த்துப்போட்டேன்;  நீங்கள்  அக்கினியினின்று  பறிக்கப்பட்ட  கொள்ளியைப்போல  இருந்தீர்கள்;  ஆகிலும்  நீங்கள்  என்னிடத்தில்  திரும்பாமற்போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  4:11}

 

ஆகையால்  இஸ்ரவேலே<Israel>,  இந்தப்பிரகாரமாக  உனக்குச்  செய்வேன்;  இஸ்ரவேலே<Israel>,  நான்  இப்படி  உனக்குச்  செய்யப்போகிறபடியினால்  உன்  தேவனைச்  சந்திக்கும்படி  ஆயத்தப்படு.  {Amos  4:12}

 

அவர்  பர்வதங்களை  உருவாக்கினவரும்,  காற்றைச்  சிருஷ்டித்தவரும்,  மனுஷனுடைய  நினைவுகள்  இன்னதென்று  அவனுக்கு  வெளிப்படுத்துகிறவரும்,  விடியற்காலத்தை  அந்தகாரமாக்குகிறவரும்,  பூமியினுடைய  உயர்ந்த  ஸ்தானங்களின்மேல்  உலாவுகிறவருமாயிருக்கிறார்;  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  {Amos  4:13}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  உங்களைக்குறித்து  நான்  புலம்பிச்  சொல்லும்  இந்த  வசனத்தைக்  கேளுங்கள்.  {Amos  5:1}

 

இஸ்ரவேல்<Israel>  என்னும்  கன்னிகை  விழுந்தாள்,  அவள்  இனி  ஒருபோதும்  எழுந்திருக்கமாட்டாள்;  தன்  தேசத்தில்  விழுந்துகிடக்கிறாள்,  அவளை  எடுப்பாரில்லை.  {Amos  5:2}

 

நகரத்திலிருந்து  புறப்பட்ட  ஆயிரம்பேரில்  நூறுபேரும்,  நூறுபேரில்  பத்துப்பேரும்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்கு  மீந்திருப்பார்கள்  என்று  கர்த்தராகிய  தேவன்  சொல்லுகிறார்.  {Amos  5:3}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்குச்  சொல்லுகிறது  என்னவென்றால்:  என்னைத்  தேடுங்கள்,  அப்பொழுது  பிழைப்பீர்கள்.  {Amos  5:4}

 

பெத்தேலைத்<Bethel>  தேடாதேயுங்கள்,  கில்காலிலும்<Gilgal>  சேராதேயுங்கள்,  பெயெர்செபாவுக்கும்<Beersheba>  போகாதேயுங்கள்;  ஏனென்றால்  கில்கால்<Gilgal>  சிறையிருப்பாகவும்,  பெத்தேல்<Bethel>  பாழான  ஸ்தலமாகவும்  போகும்.  {Amos  5:5}

 

கர்த்தரைத்  தேடுங்கள்,  அப்பொழுது  பிழைப்பீர்கள்;  இல்லாவிட்டால்  பெத்தேலில்<Bethel>  இருக்கிற  ஒருவராலும்  அவிக்கப்படாத  அக்கினி  யோசேப்பின்<Joseph>  வீட்டில்  பற்றி,  அதைப்  பட்சிக்கும்.  {Amos  5:6}

 

நியாயத்தை  எட்டியாக  மாற்றி,  நீதியைத்  தரையிலே  விழப்பண்ணுகிறவர்களே,  அவரைத்  தேடுங்கள்.  {Amos  5:7}

 

அவர்  அறுமீனையும்  மிருகசீரிஷத்தையும்  உண்டாக்கினவர்;  அவர்  மரண  இருளை  விடியற்காலமாக  மாற்றி,  பகலை  இராத்திரியாக  அந்தகாரப்படுத்துகிறவர்;  அவர்  சமுத்திரத்தின்  தண்ணீர்களை  வரவழைத்து,  அவைகளைப்  பூமியின்  விசாலத்தின்மேல்  ஊற்றுகிறவர்;  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  {Amos  5:8}

 

அரணான  ஸ்தலத்தின்மேல்  பாழ்க்கடிப்பு  வரத்தக்கதாக,  அவர்  கொள்ளை  கொடுத்தவனைப்  பலத்தவனுக்கு  விரோதமாய்  லகுவடையப்பண்ணுகிறவர்.  {Amos  5:9}

 

ஒலிமுகவாசலிலே  கடிந்துகொள்ளுகிறவனை  அவர்கள்  பகைத்து,  யதார்த்தமாய்ப்  பேசுகிறவனை  வெறுக்கிறார்கள்.  {Amos  5:10}

 

நீங்கள்  தரித்திரனை  மிதித்து,  அவன்  கையிலே  தானியத்தைச்  சுமைசுமையாய்  வாங்குகிறபடியினால்,  நீங்கள்  பொளிந்த  கற்களால்  வீடுகளைக்  கட்டினீர்கள்,  ஆனாலும்  அவைகளில்  நீங்கள்  குடியிருப்பதில்லை;  இன்பமான  திராட்சத்தோட்டங்களை  நாட்டினீர்கள்,  ஆனாலும்  அவைகளின்  இரசத்தை  நீங்கள்  குடிப்பதில்லை.  {Amos  5:11}

 

உங்கள்  மீறுதல்கள்  மிகுதியென்றும்,  உங்கள்  பாவங்கள்  பலத்ததென்றும்  அறிவேன்;  நீதிமானை  ஒடுக்கி,  பரிதானம்  வாங்கி,  ஒலிமுகவாசலில்  ஏழைகளின்  நியாயத்தைப்  புரட்டுகிறீர்கள்.  {Amos  5:12}

 

ஆகையால்  புத்திமான்  அந்தக்  காலத்திலே  மௌனமாயிருக்கவேண்டும்;  அந்தக்  காலம்  தீமையான  காலம்.  {Amos  5:13}

 

நீங்கள்  பிழைக்கும்படிக்குத்  தீமையை  அல்ல,  நன்மையைத்  தேடுங்கள்;  அப்பொழுது  நீங்கள்  சொல்லுகிறபடியே  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  உங்களோடே  இருப்பார்.  {Amos  5:14}

 

நீங்கள்  தீமையை  வெறுத்து,  நன்மையை  விரும்பி,  ஒலிமுகவாசலில்  நியாயத்தை  நிலைப்படுத்துங்கள்;  ஒருவேளை  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  யோசேப்பிலே<Joseph>  மீதியானவர்களுக்கு  இரங்குவார்.  {Amos  5:15}

 

ஆதலால்  ஆண்டவரும்  சேனைகளின்  தேவனுமாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  எல்லாத்தெருக்களிலும்  புலம்பல்  உண்டாகும்;  எல்லா  வீதிகளிலும்  ஐயோ!  ஐயோ!  என்று  ஓலமிடுவார்கள்;  பயிரிடுகிறவர்களைத்  துக்கங்கொண்டாடுகிறதற்கும்,  ஒப்பாரிபாட  அறிந்தவர்களைப்  புலம்புகிறதற்கும்  வரவழைப்பார்கள்.  {Amos  5:16}

 

எல்லாத்  திராட்சத்தோட்டங்களிலும்  புலம்பல்  உண்டாயிருக்கும்,  நான்  உன்  நடுவே  கடந்துபோவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  5:17}

 

கர்த்தருடைய  நாளை  விரும்புகிறவர்களுக்கு  ஐயோ!  அதினால்  உங்களுக்கு  என்ன  உண்டு?  கர்த்தருடைய  நாள்  வெளிச்சமாயிராமல்  அந்தகாரமாயிருக்கும்.  {Amos  5:18}

 

சிங்கத்துக்குத்  தப்பினவனுக்குக்  கரடி  எதிர்ப்பட்டதுபோலவும்,  அல்லது  வீட்டுக்குள்ளே  வந்து  சுவரின்மேல்  தன்  கையை  வைத்தபோது  பாம்பு  அவனைக்  கடித்ததுபோலவும்  இருக்கும்.  {Amos  5:19}

 

கர்த்தருடைய  நாள்  வெளிச்சமாயிராமல்,  இருளும்  பிரகாசமற்ற  அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?  {Amos  5:20}

 

உங்கள்  பண்டிகைகளைப்  பகைத்து  வெறுக்கிறேன்;  உங்கள்  ஆசரிப்பு  நாட்களில்  எனக்குப்  பிரியமில்லை.  {Amos  5:21}

 

உங்கள்  தகனபலிகளையும்  போஜனபலிகளையும்  எனக்குப்  படைத்தாலும்  நான்  அங்கீகரிக்கமாட்டேன்;  கொழுமையான  உங்கள்  மிருகங்களின்  ஸ்தோத்திரபலிகளையும்  நான்  நோக்கிப்  பார்க்கமாட்டேன்.  {Amos  5:22}

 

உன்  பாட்டுகளின்  இரைச்சலை  என்னைவிட்டு  அகற்று;  உன்  வீணைகளின்  ஓசையை  நான்  கேட்கமாட்டேன்.  {Amos  5:23}

 

நியாயம்  தண்ணீரைப்போலவும்,  நீதி  வற்றாத  நதியைப்போலவும்  புரண்டு  வரக்கடவது.  {Amos  5:24}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  வனாந்தரத்திலே  இருந்த  நாற்பது  வருஷம்வரையில்  பலிகளையும்  காணிக்கைகளையும்  எனக்குச்  செலுத்தினீர்களோ?  {Amos  5:25}

 

நீங்கள்  உங்களுக்கு  உண்டாக்கின  மோளோகுடைய<Moloch>  கூடாரத்தையும்,  உங்கள்  தேவர்களின்  நட்சத்திரராசியாகிய  உங்கள்  சொரூபங்களின்  சப்பரத்தையும்  சுமந்துகொண்டுவந்தீர்களே.  {Amos  5:26}

 

ஆகையால்  உங்களைத்  தமஸ்குவுக்கு<Damascus>  அப்பாலே  குடியோட்டுவேன்  என்று  சேனைகளுடைய  தேவன்  என்னும்  நாமமுள்ள  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  5:27}

 

சீயோனிலே<Zion>  நிர்விசாரமாயிருக்கிறவர்களும்  சமாரியாவின்<Samaria>  பர்வதத்தை  நம்பிக்கொண்டிருக்கிறவர்களும்,  ஜாதிகளின்  தலைமையென்னப்பட்டு,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  தேடிவருகிறவர்களுமாகிய  உங்களுக்கு  ஐயோ!  {Amos  6:1}

 

நீங்கள்  கல்னேமட்டும்<Calneh>  சென்று,  அவ்விடத்திலிருந்து  ஆமாத்<Hamath>  என்னும்  பெரிய  பட்டணத்துக்குப்  போய்,  பெலிஸ்தருடைய<Philistines>  காத்பட்டணத்துக்கு<Gath>  இறங்கி,  அவைகள்  இந்த  ராஜ்யங்களைப்பார்க்கிலும்  நல்லவைகளோ  என்றும்,  அவைகளின்  எல்லைகள்  உங்கள்  எல்லைகளைப்பார்க்கிலும்  விஸ்தாரமானவைகளோ  என்றும்  பாருங்கள்.  {Amos  6:2}

 

தீங்குநாள்  தூரமென்றெண்ணிக்  கொடுமையின்  ஆசனம்  கிட்டிவரும்படி  செய்து,  {Amos  6:3}

 

தந்தக்  கட்டில்களில்  படுத்துக்கொண்டு,  தங்கள்  மஞ்சங்களின்மேல்  சவுக்கியமாய்ச்  சயனித்து,  மந்தையிலுள்ள  ஆட்டுக்குட்டிகளையும்,  மாட்டுத்தொழுவத்திலுள்ள  கன்றுக்குட்டிகளையும்  தின்று,  {Amos  6:4}

 

தம்புரை  வாசித்துப்  பாடி,  தாவீதைப்போல்<David>  கீதவாத்தியங்களைத்  தங்களுக்கு  உண்டுபண்ணி,  {Amos  6:5}

 

பெரிய  பாத்திரங்களில்  மதுபானத்தைக்  குடித்து,  சிறந்த  பரிமளதைலங்களைப்  பூசிக்கொள்ளுகிறார்கள்;  ஆனாலும்  யோசேப்புக்கு<Joseph>  நேரிட்ட  ஆபத்துக்குக்  கவலைப்படாமற்போகிறார்கள்.  {Amos  6:6}

 

ஆகையால்  அவர்கள்  சிறையிருப்புக்குப்  போகிறவர்களின்  முன்னணியிலே  போவார்கள்;  இப்படியே  செல்வமாய்ச்  சயனித்தவர்களின்  விருந்துகொண்டாடல்  நின்றுபோகும்.  {Amos  6:7}

 

நான்  யாக்கோபுடைய<Jacob>  மேன்மையை  வெறுத்து,  அவனுடைய  அரமனைகளைப்  பகைக்கிறேன்;  நான்  நகரத்தையும்  அதின்  நிறைவையும்  ஒப்புக்கொடுத்துவிடுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  தம்முடைய  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டார்  என்பதைச்  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  6:8}

 

ஒரு  வீட்டிலே  பத்துப்பேர்  மீதியாயிருந்தாலும்  அவர்கள்  செத்துப்போவார்கள்.  {Amos  6:9}

 

அவர்களுடைய  இனத்தானாவது,  பிரேதத்தைத்  தகிக்கிறவனாவது  எலும்புகளை  வீட்டிலிருந்து  வெளியே  கொண்டுபோகும்படிக்கு,  அவைகளை  எடுத்து,  வீட்டின்  உட்புறத்திலே  இருக்கிறவனை  நோக்கி:  உன்னிடத்தில்  இன்னும்  யாராயினும்  உண்டோ  என்று  கேட்பான்,  அவன்  இல்லையென்பான்;  அப்பொழுது  இவன்:  நீ  மௌனமாயிரு;  கர்த்தருடைய  நாமத்தைச்  சொல்லலாகாது  என்பான்.  {Amos  6:10}

 

இதோ,  கர்த்தர்  கட்டளையிட்டிருக்கிறார்;  பெரிய  வீட்டைத்  திறப்புகள்  உண்டாகவும்,  சிறிய  வீட்டை  வெடிப்புகள்  உண்டாகவும்  அடிப்பார்.  {Amos  6:11}

 

கன்மலையின்மேல்  குதிரைகள்  ஓடுமோ?  அங்கே  ஒருவன்  மாடுகளால்  உழுவானோ?  நியாயத்தை  நஞ்சாகவும்,  நீதியின்  கனியை  எட்டியாகவும்  மாற்றினீர்கள்.  {Amos  6:12}

 

நாங்கள்  எங்கள்  பலத்தினாலே  எங்களுக்குக்  கொம்புகளை  உண்டாக்கிக்கொள்ளவில்லையோ  என்று  சொல்லி,  வீண்காரியத்தில்  மகிழுகிறார்கள்.  {Amos  6:13}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  இதோ,  நான்  ஒரு  ஜாதியை  உங்களுக்கு  விரோதமாக  எழுப்புவேன்;  அவர்கள்  ஆமாத்துக்குள்<Hemath>  பிரவேசிக்கிற  வழிதொடங்கிச்  சமனான  நாட்டின்  ஆறுமட்டாக  உங்களை  ஒடுக்குவார்கள்  என்று  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  6:14}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  ராஜாவினுடைய  புல்லறுப்புக்குப்பின்பு  இரண்டாம்  கந்தாயத்துப்  புல்  முளைக்கத்  தொடங்குகையில்  அவர்  வெட்டுக்கிளிகளை  உண்டாக்கினார்.  {Amos  7:1}

 

அவைகள்  தேசத்தின்  புல்லைத்தின்று  தீர்ந்தபோது,  நான்:  கர்த்தராகிய  ஆண்டவரே,  மன்னித்தருளும்;  யாக்கோபு<Jacob>  திரும்ப  யாராலே  எழுந்திருப்பான்?  அவன்  சிறுத்துப்போனான்  என்றேன்.  {Amos  7:2}

 

கர்த்தர்  அதற்கு  மனஸ்தாபப்பட்டு,  அப்படி  ஆவதில்லை  என்றார்.  {Amos  7:3}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  அக்கினியாலே  நியாயம்  விசாரிப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  ஏற்பட்டார்;  அது  மகா  ஆழியைப்  பட்சித்தது,  அதில்  ஒரு  பங்கைப்  பட்சித்துத்  தீர்ந்தது.  {Amos  7:4}

 

அப்பொழுது  நான்:  கர்த்தராகிய  ஆண்டவரே,  நிறுத்துமே;  யாக்கோபு<Jacob>  திரும்ப  யாராலே  எழுந்திருப்பான்?  அவன்  சிறுத்துப்போனான்  என்றேன்.  {Amos  7:5}

 

கர்த்தர்  அதற்கு  மனஸ்தாபப்பட்டு,  அப்படி  ஆவதில்லை  என்றார்.  {Amos  7:6}

 

பின்பு  அவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  தூக்குநூல்  பிரமாணத்தினால்  கட்டப்பட்ட  ஒரு  மதிலின்மேல்  நின்றார்;  அவர்  கையில்  தூக்குநூல்  இருந்தது.  {Amos  7:7}

 

கர்த்தர்  என்னை  நோக்கி:  ஆமோசே<Amos>,  நீ  என்னத்தைக்  காண்கிறாய்  என்றார்;  தூக்குநூலைக்  காண்கிறேன்  என்றேன்;  அப்பொழுது  ஆண்டவர்:  இதோ,  இஸ்ரவேலென்னும்<Israel>  என்  ஜனத்தின்  நடுவே  தூக்குநூலை  விடுவேன்;  இனி  அவர்களை  மன்னிக்கமாட்டேன்.  {Amos  7:8}

 

ஈசாக்கின்<Isaac>  மேடைகள்  பாழும்,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்த  ஸ்தலங்கள்  அவாந்தரமுமாக்கப்படும்;  நான்  எரொபெயாம்<Jeroboam>  வீட்டாருக்கு  விரோதமாய்ப்  பட்டயத்தோடே  எழும்பிவருவேன்  என்றார்.  {Amos  7:9}

 

அப்பொழுது  பெத்தேலில்<Bethel>  ஆசாரியனான  அமத்சியா<Amaziah>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  எரொபெயாமுக்கு<Jeroboam>  ஆள்  அனுப்பி:  ஆமோஸ்<Amos>  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  நடுவே  உமக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடு  பண்ணுகிறான்;  தேசம்  அவன்  வார்த்தைகளையெல்லாம்  சகிக்கமாட்டாது.  {Amos  7:10}

 

எரொபெயாம்<Jeroboam>  பட்டயத்தினால்  சாவான்  என்றும்,  இஸ்ரவேல்<Israel>  தன்  தேசத்திலிருந்து  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்படுவான்  என்றும்  ஆமோஸ்<Amos>  சொல்லுகிறான்  என்று  சொல்லச்சொன்னான்.  {Amos  7:11}

 

அமத்சியா<Amaziah>  ஆமோசை<Amos>  நோக்கி:  தரிசனம்  பார்க்கிறவனே,  போ;  நீ  யூதாதேசத்துக்கு<Judah>  ஓடிப்போ,  அங்கே  அப்பம்  தின்று,  அங்கே  தீர்க்கதரிசனம்  சொல்லு.  {Amos  7:12}

 

பெத்தேலிலே<Bethel>  இனித்  தீர்க்கதரிசனம்  சொல்லாதே;  அது  ராஜாவின்  பரிசுத்த  ஸ்தலமும்  ராஜ்யத்தின்  அரமனையுமாயிருக்கிறது  என்றான்.  {Amos  7:13}

 

ஆமோஸ்<Amos>  அமத்சியாவுக்குப்<Amaziah>  பிரதியுத்தரமாக:  நான்  தீர்க்கதரிசியுமல்ல,  தீர்க்கதரிசியின்  புத்திரனுமல்ல;  நான்  மந்தை  மேய்க்கிறவனும்,  காட்டத்திப்பழங்களைப்  பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.  {Amos  7:14}

 

ஆனால்  மந்தையின்  பின்னாலே  போகிறபோது  என்னைக்  கர்த்தர்  அழைத்து,  நீ  போய்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  சொல்லு  என்று  கர்த்தர்  உரைத்தார்.  {Amos  7:15}

 

இப்போதும்  நீ  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேள்;  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாய்த்  தீர்க்கதரிசனம்  சொல்லாதே,  ஈசாக்கின்<Isaac>  வம்சத்தாருக்கு  விரோதமாக  ஒன்றையும்  சொல்லாதே  என்று  சொல்லுகிறாயே.  {Amos  7:16}

 

இதினிமித்தம்:  உன்  பெண்ஜாதி  நகரத்தில்  வேசியாவாள்;  உன்  குமாரரும்  உன்  குமாரத்திகளும்  பட்டயத்தால்  விழுவார்கள்;  உன்  வயல்  அளவுநூலால்  பங்கிட்டுக்கொள்ளப்படும்;  நீயோவெனில்  அசுத்தமான  தேசத்திலே  செத்துப்போவாய்;  இஸ்ரவேலும்<Israel>  தன்  தேசத்திலிருந்து  சிறைபிடிக்கப்பட்டுக்  கொண்டுபோகப்படுவான்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {Amos  7:17}

 

பின்பு  கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  காண்பித்ததாவது:  இதோ,  பழுத்த  பழங்களுள்ள  ஒரு  கூடை  இருந்தது.  {Amos  8:1}

 

அவர்:  ஆமோசே<Amos>,  நீ  என்னத்தைக்  காண்கிறாய்  என்று  கேட்டார்?  பழுத்த  பழங்களுள்ள  ஒரு  கூடையைக்  காண்கிறேன்  என்றேன்.  அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  முடிவுகாலம்  வந்தது;  இனி  அவர்களை  மன்னிக்கமாட்டேன்.  {Amos  8:2}

 

அந்நாளிலே  தேவாலயப்பாட்டுகள்  அலறுதலாக  மாறும்;  எல்லா  இடத்திலும்  திரளான  பிரேதங்கள்  புலம்பலில்லாமல்  எறிந்துவிடப்படும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Amos  8:3}

 

தேசத்தில்  சிறுமைப்பட்டவர்களை  ஒழியப்பண்ண,  எளியவர்களை  விழுங்கி:  {Amos  8:4}

 

நாங்கள்  மரக்காலைக்  குறைத்து,  சேக்கல்  நிறையை  அதிகமாக்கி,  கள்ளத்தராசினால்  வஞ்சித்து,  தரித்திரரைப்  பணத்துக்கும்,  எளியவர்களை  ஒரு  ஜோடு  பாதரட்சைக்கும்  கொள்ளும்படிக்கும்,  தானியத்தின்  பதரை  விற்கும்படிக்கும்,  {Amos  8:5}

 

நாங்கள்  தவசம்  விற்கத்தக்கதாக  மாதப்பிறப்பும்,  நாங்கள்  தானியத்தின்  பண்டசாலைகளைத்  திறக்கத்தக்கதாக  ஓய்வுநாளும்  எப்போது  முடியும்  என்று  சொல்லுகிறவர்களே,  இதைக்  கேளுங்கள்.  {Amos  8:6}

 

அவர்கள்  செய்கைகளையெல்லாம்  நான்  ஒருபோதும்  மறப்பதில்லையென்று  கர்த்தர்  யாக்கோபுடைய<Jacob>  மகிமையின்பேரில்  ஆணையிட்டார்.  {Amos  8:7}

 

இதினிமித்தம்  தேசம்  அதிரவும்,  அதின்  குடிகள்  எல்லாம்  துக்கிக்கவும்,  எங்கும்  நதிகளாய்ப்  புரண்டோடவும்,  எகிப்தின்<Egypt>  ஆற்றுவெள்ளத்தைப்போல்  அடித்து,  பெருவெள்ளமாகவும்  வேண்டாமோ?  {Amos  8:8}

 

அந்நாளிலே  நான்  மத்தியானத்திலே  சூரியனை  அஸ்தமிக்கப்பண்ணி,  பட்டப்பகலிலே  தேசத்தை  அந்தகாரப்படுத்தி,  {Amos  8:9}

 

உங்கள்  பண்டிகைகளைத்  துக்கிப்பாகவும்,  உங்கள்  பாட்டுகளையெல்லாம்  புலம்பலாகவும்  மாறப்பண்ணி,  சகல  அரைகளிலும்  இரட்டையும்,  சகல  தலைகளிலும்  மொட்டையையும்  வருவித்து,  அவர்களுடைய  துக்கிப்பை  ஒரே  பிள்ளைக்காகத்  துக்கிக்கிற  துக்கிப்புக்குச்  சமானமாக்கி,  அவர்களுடைய  முடிவைக்  கசப்பான  நாளாக்குவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Amos  8:10}

 

இதோ,  நான்  தேசத்தின்மேல்  பஞ்சத்தை  அனுப்பும்  நாட்கள்  வரும்;  ஆகாரக்  குறைவினால்  உண்டாகிய  பஞ்சமல்ல,  ஜலக்குறைவினால்  உண்டாகிய  தாகமுமல்ல,  கர்த்தருடைய  வசனம்  கேட்கக்  கிடையாத  பஞ்சத்தை  அனுப்புவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Amos  8:11}

 

அப்பொழுது  அவர்கள்  கர்த்தருடைய  வசனத்தைத்  தேட  ஒரு  சமுத்திரந்தொடங்கி  மறு  சமுத்திரமட்டும்,  வடதிசைதொடங்கிக்  கீழ்த்திசைமட்டும்  அலைந்து  திரிந்தும்  அதைக்  கண்டடையாமற்  போவார்கள்.  {Amos  8:12}

 

அந்நாளிலே  சௌந்தரியமுள்ள  கன்னிகைகளும்  வாலிபரும்  தாகத்தினால்  சோர்ந்துபோவார்கள்.  {Amos  8:13}

 

தாணே<Dan>!  உன்  தேவனுடைய  ஜீவனைக்கொண்டும்,  பெயெர்செபா<Beersheba>  மார்க்கத்தின்  தேவனுடைய  ஜீவனைக்கொண்டும்  என்று  சொல்லி,  சமாரியாவின்<Samaria>  தோஷத்தின்மேல்  ஆணையிடுகிறவர்கள்  விழுவார்கள்;  இனி  ஒருபோதும்  எழுந்திருக்கமாட்டார்கள்  என்றார்.  {Amos  8:14}

 

ஆண்டவரைப்  பலிபீடத்தின்மேல்  நிற்கக்கண்டேன்;  அவர்:  நீ  வாசல்  நிலைகள்  அசையும்படி  போதிகையை  அடித்து,  அவைகளை  அவர்கள்  எல்லாருடைய  தலையின்மேலும்  விழ  உடைத்துப்போடு;  அவர்களுக்குப்  பின்னாகவரும்  மீதியானவர்களை  நான்  பட்டயத்தினால்  கொன்றுபோடுவேன்;  அவர்களில்  ஓடுகிறவன்  ஒருவனும்  தப்புவதுமில்லை,  அவர்களில்  தப்புகிறவன்  ஒருவனும்  இரட்சிக்கப்படுவதுமில்லை.  {Amos  9:1}

 

அவர்கள்  பாதாளபரியந்தம்  தோண்டிப்  பதுங்கிக்கொண்டாலும்,  என்  கை  அவ்விடத்திலிருந்து  அவர்களைப்  பிடித்துக்கொண்டுவரும்;  அவர்கள்  வானபரியந்தம்  ஏறினாலும்,  அவ்விடத்திலுமிருந்து  அவர்களை  இறங்கப்பண்ணுவேன்;  {Amos  9:2}

 

அவர்கள்  கர்மேலின்<Carmel>  கொடுமுடியிலே  ஒளித்துக்கொண்டாலும்,  அங்கே  அவர்களைத்  தேடிப்பிடிப்பேன்;  அவர்கள்  சமுத்திரத்தின்  ஆழத்திலே  போய்  என்  கண்களுக்கு  மறைந்துகொண்டாலும்,  அங்கே  அவர்களைக்  கடிக்கப்  பாம்புகளுக்குக்  கட்டளையிடுவேன்.  {Amos  9:3}

 

அவர்கள்  தங்கள்  சத்துருவுக்கு  முன்பாகச்  சிறைப்பட்டுப்போனாலும்,  அங்கே  அவர்களைக்  கொன்றுபோடப்  பட்டயத்துக்கு  நான்  கட்டளையிட்டு,  என்  கண்களை  அவர்கள்மேல்  நன்மைக்கல்ல,  தீமைக்கென்றே  வைப்பேன்.  {Amos  9:4}

 

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  தேசத்தைத்  தொட,  அது  உருகிப்போம்;  அப்பொழுது  அதின்  குடிகளெல்லாரும்  புலம்புவார்கள்;  எங்கும்  நதியாய்ப்  புரண்டோடி,  எகிப்தினுடைய<Egypt>  ஆற்று  வெள்ளத்தைப்போல்  வெள்ளமாகும்.  {Amos  9:5}

 

அவர்  வானத்தில்  தமது  மேலறைகளைக்  கட்டி,  பூமியில்  தமது  கீழறைகளை  அஸ்திபாரப்படுத்தி,  சமுத்திரத்தின்  தண்ணீர்களை  வரவழைத்து,  அவைகளைப்  பூமியினுடைய  விசாலத்தின்மேல்  ஊற்றுகிறவர்;  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  {Amos  9:6}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  நீங்கள்  எனக்கு  எத்தியோப்பியரின்<Ethiopians>  புத்திரரைப்போல்  இருக்கிறீர்கள்  அல்லவோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  இஸ்ரவேலை<Israel>  எகிப்துதேசத்திலிருந்தும்<Egypt>,  பெலிஸ்தரைக்<Philistines>  கப்தோரிலிருந்தும்<Caphtor>,  சீரியரைக்<Syrians>  கீரிலிருந்தும்<Kir>  கொண்டுவரவில்லையோ?  {Amos  9:7}

 

இதோ,  கர்த்தராகிய  ஆண்டவரின்  கண்கள்  பாவமுள்ள  ராஜ்யத்துக்கு  விரோதமாக  வைக்கப்பட்டிருக்கிறது;  அதைப்  பூமியின்மேல்  இராதபடிக்கு  அழித்துப்போடுவேன்;  ஆகிலும்  யாக்கோபின்<Jacob>  வம்சத்தை  முழுவதும்  அழிக்கமாட்டேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  9:8}

 

இதோ,  ஜல்லடையினால்  சலித்தரிக்கிறதுபோல்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  எல்லா  ஜாதிகளுக்குள்ளும்  சலித்தரிக்கும்படிக்கு  நான்  கட்டளையிடுவேன்;  ஆனாலும்  ஒரு  கோதுமைமணியும்  தரையிலே  விழுவதில்லை.  {Amos  9:9}

 

தீங்கு  எங்களை  அணுகுவதுமில்லை,  எங்களுக்கு  நேரிடுவதுமில்லையென்று  என்  ஜனத்தில்  சொல்லுகிற  பாவிகளெல்லாரும்  பட்டயத்தினால்  சாவார்கள்.  {Amos  9:10}

 

ஏதோமில்<Edom>  மீதியானவர்களையும்,  என்  நாமம்  விளங்கிய  சகல  ஜாதிகளையும்  வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,  {Amos  9:11}

 

அந்நாளிலே  விழுந்துபோன  தாவீதின்<David>  கூடாரத்தை  நான்  திரும்ப  எடுப்பித்து,  அதின்  திறப்புகளை  அடைத்து,  அதில்  பழுதாய்ப்போனதைச்  சீர்ப்படுத்தி,  பூர்வநாட்களில்  இருந்ததுபோல  அதை  ஸ்தாபிப்பேன்  என்று  இதைச்  செய்கிற  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  9:12}

 

இதோ,  உழுகிறவன்  அறுக்கிறவனையும்,  திராட்சப்பழங்களை  ஆலையாடுகிறவன்  விதைக்கிறவனையும்  தொடர்ந்துபிடித்து,  பர்வதங்கள்  திராட்சரசமாய்  வடிகிறதும்,  மேடுகளெல்லாம்  கரைகிறதுமான  நாட்கள்  வரும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Amos  9:13}

 

என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்<Israel>  சிறையிருப்பைத்  திருப்புவேன்;  அவர்கள்  பாழான  நகரங்களைக்  கட்டி,  அவைகளில்  குடியிருந்து,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  அவைகளுடைய  பழரசத்தைக்  குடித்து,  தோட்டங்களை  உண்டாக்கி,  அவைகளின்  கனிகளைப்  புசிப்பார்கள்.  {Amos  9:14}

 

அவர்களை  அவர்கள்  தேசத்திலே  நாட்டுவேன்;  நான்  அவர்களுக்குக்  கொடுத்த  தேசத்திலிருந்து  அவர்கள்  இனிப்  பிடுங்கப்படுவதில்லையென்று  உன்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  {Amos  9:15}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!