எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம்<Zophim> என்னப்பட்ட ராமதாயீம்<Ramathaim> ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா<Elkanah> என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய<Ephrathite> சூப்புக்குப்<Zuph> பிறந்த தோகுவின்<Tohu> குமாரனாகிய எலிகூவின்<Elihu> மகனான எரோகாமின்<Jeroham> புத்திரன். {1Sam 1:1}
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள்<Hannah>, மற்றவள்பேர் பெனின்னாள்<Peninnah>; பெனின்னாளுக்குப்<Peninnah> பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ<Hannah> பிள்ளை இல்லை. {1Sam 1:2}
அந்த மனுஷன் சீலோவிலே<Shiloh> சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின்<Eli> இரண்டு குமாரராகிய ஓப்னியும்<Hophni> பினெகாசும்<Phinehas> இருந்தார்கள். {1Sam 1:3}
அங்கே எல்க்கானா<Elkanah> பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும்<Peninnah>, அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான். {1Sam 1:4}
அன்னாளைச்<Hannah> சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். {1Sam 1:5}
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். {1Sam 1:6}
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். {1Sam 1:7}
அவள் புருஷனாகிய எல்க்கானா<Elkanah> அவளைப் பார்த்து: அன்னாளே<Hannah>, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான். {1Sam 1:8}
சீலோவிலே<Shiloh> அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள்<Hannah> எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி<Eli> கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். {1Sam 1:9}
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: {1Sam 1:10}
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். {1Sam 1:11}
அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி<Eli> அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். {1Sam 1:12}
அன்னாள்<Hannah> தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி<Eli> நினைத்து, {1Sam 1:13}
அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். {1Sam 1:14}
அதற்கு அன்னாள்<Hannah> பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். {1Sam 1:15}
உம்முடைய அடியாளைப் பேலியாளின்<Belial> மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். {1Sam 1:16}
அதற்கு ஏலி<Eli> சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின்<Israel> தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். {1Sam 1:17}
அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. {1Sam 1:18}
அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற<Ramah> தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா<Elkanah> தன் மனைவியாகிய அன்னாளை<Hannah> அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார். {1Sam 1:19}
சிலநாள் சென்றபின்பு அன்னாள்<Hannah> கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல்<Samuel> என்று பேரிட்டாள். {1Sam 1:20}
எல்க்கானா<Elkanah> என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான். {1Sam 1:21}
அன்னாள்<Hannah> கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள். {1Sam 1:22}
அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா<Elkanah> அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள். {1Sam 1:23}
அவள் அவனைப் பால்மறக்கப் பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற<Shiloh> கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது. {1Sam 1:24}
அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில்<Eli> கொண்டுவந்து விட்டார்கள். {1Sam 1:25}
அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். {1Sam 1:26}
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். {1Sam 1:27}
ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான். {1Sam 1:28}
அப்பொழுது அன்னாள்<Hannah> ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். {1Sam 2:1}
கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. {1Sam 2:2}
இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? {1Sam 2:3}
பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். {1Sam 2:4}
திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள். {1Sam 2:5}
கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர். {1Sam 2:6}
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். {1Sam 2:7}
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். {1Sam 2:8}
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. {1Sam 2:9}
கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள். {1Sam 2:10}
பின்பு எல்க்கானா<Elkanah> ராமாவிலிருக்கிற<Ramah> தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு<Eli> முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். {1Sam 2:11}
ஏலியின்<Eli> குமாரர் பேலியாளின்<Belial> மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. {1Sam 2:12}
அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து, {1Sam 2:13}
அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே<Shiloh> வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம்<Israelites> செய்தார்கள். {1Sam 2:14}
கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சி கொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை என்பான். {1Sam 2:15}
அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான். {1Sam 2:16}
ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். {1Sam 2:17}
சாமுவேல்<Samuel> என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத்<ephod> தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். {1Sam 2:18}
அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக்கொண்டு வருவாள். {1Sam 2:19}
ஏலி<Eli> எல்க்கானாவையும்<Elkanah> அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். {1Sam 2:20}
அப்படியே கர்த்தர் அன்னாளைக்<Hannah> கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல்<Samuel> என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். {1Sam 2:21}
ஏலி<Eli> மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம்<Israel> செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு, {1Sam 2:22}
அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். {1Sam 2:23}
என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே. {1Sam 2:24}
மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக் கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார். {1Sam 2:25}
சாமுவேல்<Samuel> என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான். {1Sam 2:26}
தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில்<Eli> வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே<Egypt> பார்வோனின்<Pharaoh> வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, {1Sam 2:27}
என் பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத்<ephod> தரிக்கவும், இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களிலெல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல்<Israel> புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா? {1Sam 2:28}
என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின்<Israel> காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார். {1Sam 2:29}
ஆகையால் இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். {1Sam 2:30}
உன் வீட்டில் ஒரு கிழவனும் இராதபடிக்கு உன் புயத்தையும் உன் பிதாவின் வீட்டாருடைய புயத்தையும் நான் தறித்துப்போடும் நாட்கள் வரும். {1Sam 2:31}
இஸ்ரவேலுக்குச்<Israel> செய்யப்படும் சகல நன்மைக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை. {1Sam 2:32}
என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள். {1Sam 2:33}
ஓப்னி<Hophni> பினெகாஸ்<Phinehas> என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள். {1Sam 2:34}
நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான். {1Sam 2:35}
அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான். {1Sam 2:36}
சாமுவேல்<Samuel> என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு<Eli> முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. {1Sam 3:1}
ஒருநாள் ஏலி<Eli> தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. {1Sam 3:2}
தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும்<Samuel> படுத்துக்கொண்டிருந்தான். {1Sam 3:3}
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக்<Samuel> கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, {1Sam 3:4}
ஏலியினிடத்தில்<Eli> ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான். {1Sam 3:5}
மறுபடியும் கர்த்தர் சாமுவேலே<Samuel> என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல்<Samuel> எழுந்திருந்து ஏலியினிடத்தில்<Eli> போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். {1Sam 3:6}
சாமுவேல்<Samuel> கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. {1Sam 3:7}
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே<Samuel> என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில்<Eli> போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி<Eli> அறிந்து, {1Sam 3:8}
சாமுவேலை<Samuel> நோக்கி: நீ போய்ப் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல்<Samuel> போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். {1Sam 3:9}
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே<Samuel> சாமுவேலே<Samuel> என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்<Samuel>: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். {1Sam 3:10}
கர்த்தர் சாமுவேலை<Samuel> நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில்<Israel> ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். {1Sam 3:11}
நான் ஏலியின்<Eli> குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். {1Sam 3:12}
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். {1Sam 3:13}
அதினிமித்தம் ஏலியின்<Eli> குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின்<Eli> குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார். {1Sam 3:14}
சாமுவேல்<Samuel> விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல்<Samuel> ஏலிக்கு<Eli> அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான். {1Sam 3:15}
ஏலியோ<Eli>: சாமுவேலே<Samuel>, என் மகனே என்று சாமுவேலைக்<Samuel> கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான். {1Sam 3:16}
அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான். {1Sam 3:17}
அப்பொழுது சாமுவேல்<Samuel> ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். {1Sam 3:18}
சாமுவேல்<Samuel> வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை. {1Sam 3:19}
சாமுவேல்<Samuel> கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல்<Dan> பெயெர்செபாமட்டுமுள்ள<Beersheba> சகல இஸ்ரவேலருக்கும்<Israel> விளங்கினது. {1Sam 3:20}
கர்த்தர் பின்னும் சீலோவிலே<Shiloh> தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே<Shiloh> தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத்<Samuel> தம்மை வெளிப்படுத்தினார். {1Sam 3:21}
சாமுவேலின்<Samuel> வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம்<Israel> வந்தது. இஸ்ரவேலர்<Israel> பெலிஸ்தருக்கு<Philistines> விரோதமாய் யுத்தஞ் செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச்<Ebenezer> சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ<Philistines> ஆப்பெக்கிலே<Aphek> பாளயமிறங்கியிருந்தார்கள். {1Sam 4:1}
பெலிஸ்தர்<Philistines> இஸ்ரவேலருக்கு<Israel> விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர்<Israel> பெலிஸ்தருக்கு<Philistines> முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள். {1Sam 4:2}
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின்<Israel> மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு<Philistines> முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற<Shiloh> கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். {1Sam 4:3}
அப்படியே கேருபீன்களின்<cherubims> மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச்<Shiloh> சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின்<Eli> இரண்டு குமாரராகிய ஓப்னியும்<Hophni> பினெகாசும்<Phinehas> தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள். {1Sam 4:4}
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும்<Israel> பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள். {1Sam 4:5}
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்<Philistines> கேட்டபோது: எபிரெயருடைய<Hebrews> பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். {1Sam 4:6}
தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர்<Philistines> பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. {1Sam 4:7}
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச்<Egyptians> சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. {1Sam 4:8}
பெலிஸ்தரே<Philistines>, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர்<Hebrews> உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். {1Sam 4:9}
அப்பொழுது பெலிஸ்தர்<Philistines> யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர்<Israel> முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே<Israel> முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள். {1Sam 4:10}
தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின்<Eli> இரண்டு குமாரராகிய ஓப்னியும்<Hophni> பினெகாசும்<Phinehas> மாண்டார்கள். {1Sam 4:11}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின்மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு<Shiloh> வந்தான். {1Sam 4:12}
அவன் வந்தபோது: ஏலி<Eli> ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது. ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று. {1Sam 4:13}
புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி<Eli> கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு<Eli> அறிவித்தான். {1Sam 4:14}
ஏலி<Eli> தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது. {1Sam 4:15}
அந்த மனுஷன் ஏலியைப்<Eli> பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான். {1Sam 4:16}
செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர்<Israel> பெலிஸ்தருக்கு<Philistines> முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி<Hophni> பினெகாஸ்<Phinehas> என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப்போயிற்று என்றான். {1Sam 4:17}
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி<Eli> ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை<Israel> நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தான். {1Sam 4:18}
பினெகாசின்<Phinehas> மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள். {1Sam 4:19}
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை. {1Sam 4:20}
தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை<Israel> விட்டுப்போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத்<Ichabod> என்று பேரிட்டாள். {1Sam 4:21}
தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை<Israel> விட்டு விலகிப்போயிற்று என்றாள். {1Sam 4:22}
பெலிஸ்தர்<Philistines> தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து<Ebenezer> அஸ்தோத்திற்குக்<Ashdod> கொண்டுபோனார்கள். {1Sam 5:1}
பெலிஸ்தர்<Philistines> தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின்<Dagon> கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே<Dagon> வைத்தார்கள். {1Sam 5:2}
அஸ்தோத்<Ashdod> ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன்<Dagon> கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை<Dagon> எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். {1Sam 5:3}
அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன்<Dagon> கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின்<Dagon> தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு<Dagon> உடல்மாத்திரம் மீதியாயிருந்தது. {1Sam 5:4}
ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின்<Dagon> பூஜாசாரிகளும் தாகோனின்<Dagon> கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற<Ashdod> தாகோனுடைய<Dagon> வாசற்படியை மிதிக்கிறதில்லை. {1Sam 5:5}
அஸ்தோத்<Ashdod> ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின்<Ashdod> ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். {1Sam 5:6}
இப்படி நடந்ததை அஸ்தோத்தின்<Ashdod> ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின்<Israel> தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும்<Dagon> கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி; {1Sam 5:7}
பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின்<Israel> தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின்<Israel> தேவனுடைய பெட்டியை காத்பட்டணமட்டும்<Gath> எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின்<Israel> தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டுபோனார்கள். {1Sam 5:8}
அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர்துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். {1Sam 5:9}
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு<Ekron> அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு<Ekron> வருகிறபோது, எக்ரோன்<Ekronites> ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின்<Israel> தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். {1Sam 5:10}
அவர்கள் பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின்<Israel> தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது. {1Sam 5:11}
செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று. {1Sam 5:12}
கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின்<Philistines> தேசத்தில் ஏழுமாதம் இருந்தது. {1Sam 6:1}
பின்பு பெலிஸ்தர்<Philistines> பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப்பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள். {1Sam 6:2}
அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின்<Israel> தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள். {1Sam 6:3}
அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய<Philistines> அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும். {1Sam 6:4}
ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின்<Israel> தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள்மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களை விட்டு விலகும். {1Sam 6:5}
எகிப்தியரும்<Egyptians> பார்வோனும்<Pharaoh> தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ? {1Sam 6:6}
இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம் பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு, {1Sam 6:7}
பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள். {1Sam 6:8}
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய்ப் பெத்ஷிமேசுக்குப்<Bethshemesh> போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள். {1Sam 6:9}
அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டுவந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து, {1Sam 6:10}
கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள். {1Sam 6:11}
அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப்<Bethshemesh> போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகள் பெத்ஷிமேசின்<Bethshemesh> எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள். {1Sam 6:12}
பெத்ஷிமேசின்<Bethshemesh> மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள். {1Sam 6:13}
அந்த வண்டில் பெத்ஷிமேஸ்<Bethshemite> ஊரானாகிய யோசுவாவின்<Joshua> வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள். {1Sam 6:14}
லேவியர்<Levites> கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின்<Bethshemesh> மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள். {1Sam 6:15}
பெலிஸ்தரின்<Philistines> ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத்<Ekron> திரும்பிப்போனார்கள். {1Sam 6:16}
பெலிஸ்தர்<Philistines> குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக<Ashdod> ஒன்று, காசாவுக்காக<Gaza> ஒன்று, அஸ்கலோனுக்காக<Askelon> ஒன்று, காத்துக்காக<Gath> ஒன்று, எக்ரோனுக்காக<Ekron> ஒன்று. {1Sam 6:17}
பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும்<Abel>, ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய<Philistines> சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ்<Bethshemite> ஊரானாகிய யோசுவாவின்<Joshua> வயலில் இருக்கிறது. {1Sam 6:18}
ஆனாலும் பெத்ஷிமேசின்<Bethshemesh> மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். {1Sam 6:19}
இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின்<Bethshemesh> மனுஷர் சொல்லி, {1Sam 6:20}
கீரியாத்யாரீமின்<Kirjathjearim> குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர்<Philistines> கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள். {1Sam 6:21}
அப்படியே கீரியாத்யாரீமின்<Kirjathjearim> மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின்மேலிருக்கிற அபினதாபின்<Abinadab> வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப்<Eleazar> பரிசுத்தப்படுத்தினார்கள். {1Sam 7:1}
பெட்டி கீரியாத்யாரீமிலே<Kirjathjearim> அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல்<Israel> குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள். {1Sam 7:2}
அப்பொழுது சாமுவேல்<Samuel> இஸ்ரவேல்<Israel> குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும்<Ashtaroth> உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய<Philistines> கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான். {1Sam 7:3}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் பாகால்களையும்<Baalim> அஸ்தரோத்தையும்<Ashtaroth> விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள். {1Sam 7:4}
பின்பு சாமுவேல்<Samuel>: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர்<Israel> எல்லாரையும் மிஸ்பாவிலே<Mizpeh> கூட்டுங்கள் என்றான். {1Sam 7:5}
அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே<Mizpeh> கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே<Mizpeh> சாமுவேல்<Samuel> இஸ்ரவேல்<Israel> புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். {1Sam 7:6}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் மிஸ்பாவிலே<Mizpeh> கூடிவந்ததைப் பெலிஸ்தர்<Philistines> கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகள் இஸ்ரவேலுக்கு<Israel> விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல்<Israel> புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம்<Philistines> பயப்பட்டு, {1Sam 7:7}
சாமுவேலை<Samuel> நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின்<Philistines> கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள். {1Sam 7:8}
அப்பொழுது சாமுவேல்<Samuel> பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக்<Israel> கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார். {1Sam 7:9}
சாமுவேல்<Samuel> சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர்<Philistines> இஸ்ரவேலின்மேல்<Israel> யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல்<Philistines> அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு<Israel> முன்பாகப் பட்டு விழுந்தார்கள். {1Sam 7:10}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel> மிஸ்பாவிலிருந்து<Mizpeh> பெலிஸ்தரைப்<Philistines> பின்தொடர்ந்துபோய், பெத்காரீம்<Bethcar> பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள். {1Sam 7:11}
அப்பொழுது சாமுவேல்<Samuel> ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும்<Mizpeh> சேணுக்கும்<Shen> நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர்<Ebenezer> என்று பேரிட்டான். {1Sam 7:12}
இந்தப்பிரகாரம் பெலிஸ்தர்<Philistines> அப்புறம் இஸ்ரவேலின்<Israel> எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின்<Samuel> நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு<Philistines> விரோதமாய் இருந்தது. {1Sam 7:13}
பெலிஸ்தர்<Philistines> இஸ்ரவேல்<Israel> கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன்<Ekron> துவக்கிக் காத்மட்டுமுள்ள<Gath> பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத்<Israel> திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்<Israel> பெலிஸ்தர்<Philistines> கையிலே இராதபடிக்கு, விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும்<Israel> எமோரியருக்கும்<Amorites> சமாதானம் உண்டாயிருந்தது. {1Sam 7:14}
சாமுவேல்<Samuel> உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்தான். {1Sam 7:15}
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும்<Bethel> கில்காலையும்<Gilgal> மிஸ்பாவையும்<Mizpeh> சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்த பின்பு, {1Sam 7:16}
அவன் ராமாவுக்குத்<Ramah> திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். {1Sam 7:17}
சாமுவேல்<Samuel> முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல்<Israel> நியாயாதிபதிகளாக வைத்தான். {1Sam 8:1}
அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல்<Joel>, இளையவனுக்குப் பெயர் அபியா<Abiah>; அவர்கள் பெயெர்செபாவிலே<Beersheba> நியாயாதிபதிகளாயிருந்தார்கள். {1Sam 8:2}
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். {1Sam 8:3}
அப்பொழுது இஸ்ரவேலின்<Israel> மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த<Ramah> சாமுவேலினிடத்தில்<Samuel> வந்து: {1Sam 8:4}
இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். {1Sam 8:5}
எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத்<Samuel> தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல்<Samuel> கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். {1Sam 8:6}
அப்பொழுது கர்த்தர் சாமுவேலை<Samuel> நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். {1Sam 8:7}
நான் அவர்களை எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். {1Sam 8:8}
இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். {1Sam 8:9}
அப்பொழுது சாமுவேல்<Samuel>, ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: {1Sam 8:10}
உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்குமுன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான். {1Sam 8:11}
ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்தஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். {1Sam 8:12}
உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். {1Sam 8:13}
உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். {1Sam 8:14}
உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். {1Sam 8:15}
உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். {1Sam 8:16}
உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். {1Sam 8:17}
நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். {1Sam 8:18}
ஜனங்கள் சாமுவேலின்<Samuel> சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். {1Sam 8:19}
சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள். {1Sam 8:20}
சாமுவேல்<Samuel> ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான். {1Sam 8:21}
கர்த்தர் சாமுவேலை<Samuel> நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல்<Samuel> இஸ்ரவேல்<Israel> ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான். {1Sam 8:22}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்தாரில் கீஸ்<Kish> என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன்<Benjamite> கோத்திரத்தானாகிய அபியாவின்<Aphiah> மகனான பெகோராத்திற்குப்<Bechorath> பிறந்த சேரோரின்<Zeror> புத்திரனாகிய அபீயேலின்<Abiel> குமாரன். {1Sam 9:1}
அவனுக்குச் சவுல்<Saul> என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல்<Israel> புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். {1Sam 9:2}
சவுலின்<Saul> தகப்பனாகிய கீசுடைய<Kish> கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ்<Kish> தன் குமாரனாகிய சவுலை<Saul> நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். {1Sam 9:3}
அப்படியே அவன் எப்பிராயீம்<Ephraim> மலைகளையும் சலீஷா<Shalisha> நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம்<Shalim> நாட்டைக்கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன்<Benjamites> நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை. {1Sam 9:4}
அவர்கள் சூப்<Zuph> என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல்<Saul> தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின்மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா என்றான். {1Sam 9:5}
அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். {1Sam 9:6}
அப்பொழுது சவுல்<Saul> தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்துபோயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான். {1Sam 9:7}
அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப்<Saul> பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். {1Sam 9:8}
முற்காலத்தில் இஸ்ரவேலில்<Israel> யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிருஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான். {1Sam 9:9}
அப்பொழுது சவுல்<Saul> தன் வேலைக்காரனை நோக்கி: நல்லகாரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள். {1Sam 9:10}
அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். {1Sam 9:11}
அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். {1Sam 9:12}
நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம்பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள். {1Sam 9:13}
அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல்<Samuel> மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டுவந்தான். {1Sam 9:14}
சவுல்<Saul> வர ஒருநாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின்<Samuel> காதுகேட்க: {1Sam 9:15}
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன்<Benjamin> நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல்<Israel> அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின்<Philistines> கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். {1Sam 9:16}
சாமுவேல்<Samuel> சவுலைக்<Saul> கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார். {1Sam 9:17}
சவுல்<Saul> நடுவாசலிலே சாமுவேலிடத்தில்<Samuel> வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். {1Sam 9:18}
சாமுவேல்<Samuel> சவுலுக்குப்<Saul> பிரதியுத்தரமாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். {1Sam 9:19}
மூன்றுநாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின்<Israel> அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான். {1Sam 9:20}
அப்பொழுது சவுல்<Saul> பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன்<Benjamite> கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன்<Benjamin> கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். {1Sam 9:21}
சாமுவேல்<Samuel> சவுலையும்<Saul> அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பதுபேராயிருந்தார்கள். {1Sam 9:22}
பின்பு சாமுவேல்<Samuel> சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான். {1Sam 9:23}
அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டுவந்து, அதை சவுலுக்குமுன்<Saul> வைத்தான்; அப்பொழுது சாமுவேல்<Samuel>: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல்<Saul> அன்றையதினம் சாமுவேலோடே<Samuel> சாப்பிட்டான். {1Sam 9:24}
அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன் மேல்வீட்டிலே சவுலோடே<Saul> பேசிக்கொண்டிருந்தான். {1Sam 9:25}
அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல்<Samuel> சவுலை<Saul> மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல்<Saul> ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும்<Samuel> இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். {1Sam 9:26}
அவர்கள் பட்டணத்தின் கடைசிமட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல்<Samuel> சவுலைப்<Saul> பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான். {1Sam 9:27}
அப்பொழுது சாமுவேல்<Samuel> தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா? {1Sam 10:1}
நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன்<Benjamin> எல்லையாகிய செல்சாகில்<Zelzah> ராகேலின்<Rachel> கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள். {1Sam 10:2}
நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள<Tabor> சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப்<Bethel> போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, {1Sam 10:3}
உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும். {1Sam 10:4}
பின்பு பெலிஸ்தரின்<Philistines> தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். {1Sam 10:5}
அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். {1Sam 10:6}
இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். {1Sam 10:7}
நீ எனக்கு முன்னே கில்காலுக்கு<Gilgal> இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான். {1Sam 10:8}
அவன் சாமுவேலை<Samuel> விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது. {1Sam 10:9}
அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். {1Sam 10:10}
அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின்<Kish> குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும்<Saul> தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். {1Sam 10:11}
அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும்<Saul> தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று. {1Sam 10:12}
அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான். {1Sam 10:13}
அப்பொழுது சவுலுடைய<Saul> சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப்<Samuel> போனோம் என்றான். {1Sam 10:14}
அப்பொழுது சவுலின்<Saul> சிறியதகப்பன்: சாமுவேல்<Samuel> உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான். {1Sam 10:15}
சவுல்<Saul> தன் சிறியதகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல்<Samuel> சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை. {1Sam 10:16}
சாமுவேல்<Samuel> ஜனங்களை மிஸ்பாவிலே<Mizpeh> கர்த்தரிடத்தில் வரவழைத்து, {1Sam 10:17}
இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை<Israel> எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர்<Egyptians> கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன். {1Sam 10:18}
நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான். {1Sam 10:19}
சாமுவேல்<Samuel> இஸ்ரவேலின்<Israel> கோத்திரங்களையெல்லாம் சேரப்பண்ணினபின்பு பென்யமீன்<Benjamin> கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது. {1Sam 10:20}
அவன் பென்யமீன்<Benjamin> கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி<Matri> குடும்பத்தின்மேலும், அதிலே கீசின்<Kish> குமாரனாகிய சவுலின்மேலும்<Saul>, சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை. {1Sam 10:21}
அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார். {1Sam 10:22}
அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். {1Sam 10:23}
அப்பொழுது சாமுவேல்<Samuel> எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். {1Sam 10:24}
சாமுவேல்<Samuel> ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். {1Sam 10:25}
சவுலும்<Saul> கிபியாவிலிருக்கிற<Gibeah> தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள். {1Sam 10:26}
ஆனாலும் பேலியாளின்<Belial> மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன்போல இருந்தான். {1Sam 10:27}
அக்காலத்தில் நாகாஸ்<Nahash> என்னும் அம்மோனியன்<Ammonite> வந்து, கீலேயாத்திலிருக்கிற<Gilead> யாபேசை<Jabesh> முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின்<Jabesh> மனுஷர் எல்லாரும் நாகாசை<Nahash> நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். {1Sam 11:1}
அதற்கு அம்மோனியனாகிய<Ammonite> நாகாஸ்<Nahash>: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல்<Israel> எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான். {1Sam 11:2}
அதற்கு யாபேசின்<Jabesh> மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல்<Israel> நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள். {1Sam 11:3}
அந்த ஸ்தானாபதிகள் சவுலின்<Saul> ஊராகிய கிபியாவிலே<Gibeah> வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள். {1Sam 11:4}
இதோ, சவுல்<Saul> மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின்<Jabesh> மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள். {1Sam 11:5}
சவுல்<Saul> இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி, {1Sam 11:6}
ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின்<Israel> நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின்<Saul> பின்னாலேயும், சாமுவேலின்<Samuel> பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள். {1Sam 11:7}
அவர்களைப் பேசேக்கிலே<Bezek> இலக்கம்பார்த்தான்; இஸ்ரவேல்<Israel> புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா<Judah> மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள். {1Sam 11:8}
வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற<Gilead> யாபேசின்<Jabesh> மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின்<Jabesh> மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். {1Sam 11:9}
பின்பு யாபேசின்<Jabesh> மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள். {1Sam 11:10}
மறுநாளிலே சவுல்<Saul> ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை<Ammonites> முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள். {1Sam 11:11}
அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை<Samuel> நோக்கி: சவுலா<Saul> நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள். {1Sam 11:12}
அதற்குச் சவுல்<Saul>: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு<Israel> இரட்சிப்பை அருளினார் என்றான். {1Sam 11:13}
அப்பொழுது சாமுவேல்<Samuel> ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப்<Gilgal> போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான். {1Sam 11:14}
அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப்<Gilgal> போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை<Saul> ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும்<Saul> இஸ்ரவேல்<Israel> மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள். {1Sam 11:15}
அப்பொழுது சாமுவேல்<Samuel> இஸ்ரவேலர்<Israel> அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். {1Sam 12:1}
இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன். {1Sam 12:2}
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். {1Sam 12:3}
அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். {1Sam 12:4}
அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். {1Sam 12:5}
அப்புறம் சாமுவேல்<Samuel> ஜனங்களை நோக்கி: மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே. {1Sam 12:6}
இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். {1Sam 12:7}
யாக்கோபு<Jacob> எகிப்திலே<Egypt> போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும்<Moses> ஆரோனையும்<Aaron> அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து<Egypt> அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள். {1Sam 12:8}
அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின்<Hazor> சேனாபதியாகிய சிசெராவின்<Sisera> கையிலும், பெலிஸ்தரின்<Philistines> கையிலும், மோவாபிய<Moab> ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள். {1Sam 12:9}
ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும்<Baalim> அஸ்தரோத்தையும்<Ashtaroth> சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்போதும் எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள். {1Sam 12:10}
அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும்<Jerubbaal> பேதானையும்<Bedan> யெப்தாவையும்<Jephthah> சாமுவேலையும்<Samuel> அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார். {1Sam 12:11}
அம்மோன்<Ammon> புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ்<Nahash> உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். {1Sam 12:12}
இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். {1Sam 12:13}
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். {1Sam 12:14}
நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கும் விரோதமாயிருக்கும். {1Sam 12:15}
இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். {1Sam 12:16}
இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, {1Sam 12:17}
சாமுவேல்<Samuel> கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும்<Samuel> மிகவும் பயந்து; {1Sam 12:18}
சாமுவேலைப்<Samuel> பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொன்னார்கள். {1Sam 12:19}
அப்பொழுது சாமுவேல்<Samuel> ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். {1Sam 12:20}
விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே. {1Sam 12:21}
கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார். {1Sam 12:22}
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். {1Sam 12:23}
நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். {1Sam 12:24}
நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான். {1Sam 12:25}
சவுல்<Saul> ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை<Israel> இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, {1Sam 13:1}
இஸ்ரவேலில்<Israel> மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட<Saul> மிக்மாசிலும்<Michmash> பெத்தேல்<Bethel> மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப்<Jonathan> பென்யமீன்<Benjamin> நாட்டிலுள்ள கிபியாவிலும்<Gibeah> இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். {1Sam 13:2}
யோனத்தான்<Jonathan> கேபாவிலே<Geba> தாணையம் இருந்த பெலிஸ்தரை<Philistines> முறிய அடித்தான்; பெலிஸ்தர்<Philistines> அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர்<Hebrews> கேட்கக்கடவர்கள் என்று சவுல்<Saul> தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான். {1Sam 13:3}
தாணையம் இருந்த பெலிஸ்தரைச்<Philistines> சவுல்<Saul> முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர்<Israel> பெலிஸ்தருக்கு<Philistines> அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம்<Israel> கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப்<Saul> பின்செல்லும்படி கில்காலுக்கு<Gilgal> வரவழைக்கப்பட்டார்கள். {1Sam 13:4}
பெலிஸ்தர்<Philistines> இஸ்ரவேலோடு<Israel> யுத்தம்பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக்<Bethaven> கிழக்கான மிக்மாசிலே<Michmash> பாளயமிறங்கினார்கள். {1Sam 13:5}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel> தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். {1Sam 13:6}
எபிரெயரில்<Hebrews> சிலர் யோர்தானையும்<Jordan> கடந்து, காத்<Gad> நாட்டிற்கும் கீலேயாத்<Gilead> தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ<Saul> இன்னும் கில்காலில்<Gilgal> இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள். {1Sam 13:7}
அவன் தனக்குச் சாமுவேல்<Samuel> குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல்<Samuel> கில்காலுக்கு<Gilgal> வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். {1Sam 13:8}
அப்பொழுது சவுல்<Saul>: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினான். {1Sam 13:9}
அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல்<Samuel> வந்தான்; சவுல்<Saul> அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான். {1Sam 13:10}
நீர் செய்தது என்ன என்று சாமுவேல்<Samuel> கேட்டதற்கு, சவுல்<Saul>: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர்<Philistines> மிக்மாசிலே<Michmash> கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, {1Sam 13:11}
கில்காலில்<Gilgal> பெலிஸ்தர்<Philistines> எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். {1Sam 13:12}
சாமுவேல்<Samuel> சவுலைப்<Saul> பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல்<Israel> உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். {1Sam 13:13}
இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். {1Sam 13:14}
சாமுவேல்<Samuel> எழுந்திருந்து, கில்காலை<Gilgal> விட்டு, பென்யமீன்<Benjamin> நாட்டிலுள்ள கிபியாவுக்குப்<Gibeah> போனான்; சவுல்<Saul> தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள். {1Sam 13:15}
சவுலும்<Saul> அவன் குமாரனாகிய யோனத்தானும்<Jonathan> அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன்<Benjamin> நாட்டிலுள்ள கிபியாவில்<Gibeah> இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ<Philistines> மிக்மாசிலே<Michmash> பாளயமிறங்கியிருந்தார்கள். {1Sam 13:16}
கொள்ளைக்காரர் பெலிஸ்தரின்<Philistines> பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச்<Ophrah> சூவால்<Shual> நாட்டிற்கு நேராகப் போயிற்று. {1Sam 13:17}
வேறொரு படை பெத்தொரோன்<Bethhoron> வழியாய்ப் போயிற்று; வேறொருபடை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின்<Zeboim> பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று. {1Sam 13:18}
எபிரெயர்<Hebrews> பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர்<Philistines> சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல்<Israel> தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை. {1Sam 13:19}
இஸ்ரவேலர்<Israelites> யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப்<Philistines> போகவேண்டியதாயிருந்தது. {1Sam 13:20}
கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. {1Sam 13:21}
யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும்<Saul> அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி<Jonathan>, சவுலோடும்<Saul> யோனத்தானோடும்<Jonathan> இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது. {1Sam 13:22}
பெலிஸ்தரின்<Philistines> பாளயம் மிக்மாசிலிருந்து<Michmash> போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது. {1Sam 13:23}
ஒருநாள் சவுலின்<Saul> குமாரனாகிய யோனத்தான்<Jonathan> தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின்<Philistines'> தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. {1Sam 14:1}
சவுல்<Saul> கிபியாவின்<Gibeah> கடைசிமுனையாகிய மிக்ரோனிலே<Migron> ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள். {1Sam 14:2}
சீலோவிலே<Shiloh> கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின்<Eli> குமாரனாகிய பினெகாசுக்குப்<Phinehas> பிறந்த இக்கபோத்தின்<Ichabod> சகோதரனும் அகிதூபின்<Ahitub> குமாரனுமாகிய அகியா<Ahiah> என்பவன் ஏபோத்தைத்<ephod> தரித்தவனாயிருந்தான்; யோனத்தான்<Jonathan> போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள். {1Sam 14:3}
யோனத்தான்<Jonathan> பெலிஸ்தரின்<Philistines> தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ்<Bozez> என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே<Seneh> என்று பேர். {1Sam 14:4}
அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு<Michmash> எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு<Gibeah> எதிராகவும் இருந்தது. {1Sam 14:5}
யோனத்தான்<Jonathan> தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். {1Sam 14:6}
அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான். {1Sam 14:7}
அதற்கு யோனத்தான்<Jonathan>: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம். {1Sam 14:8}
நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம். {1Sam 14:9}
எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான். {1Sam 14:10}
அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின்<Philistines> தாணையத்திற்முன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்<Philistines>: இதோ, எபிரெயர்<Hebrews> ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி, {1Sam 14:11}
தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும்<Jonathan> அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான்<Jonathan> தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின்<Israel> கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, {1Sam 14:12}
யோனத்தான்<Jonathan> தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு<Jonathan> முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான். {1Sam 14:13}
யோனத்தானும்<Jonathan> அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள். {1Sam 14:14}
அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாகி, தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது. {1Sam 14:15}
பென்யமீன்<Benjamin> நாட்டிலுள்ள கிபியாவிலே<Gibeah> சவுலுக்கு<Saul> இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள். {1Sam 14:16}
அப்பொழுது சவுல்<Saul> தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும்<Jonathan> அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள். {1Sam 14:17}
அப்பொழுது சவுல்<Saul> அகீயாவை<Ahiah> நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல்<Israel> புத்திரரிடத்தில் இருந்தது. {1Sam 14:18}
இப்படிச் சவுல்<Saul> ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின்<Philistines> பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல்<Saul> ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான். {1Sam 14:19}
சவுலும்<Saul> அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று. {1Sam 14:20}
இதற்குமுன் பெலிஸ்தருடன்<Philistines> கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும்<Hebrews>, சவுலோடும்<Saul> யோனத்தானோடும்<Jonathan> இருக்கிற இஸ்ரவேலரோடே<Israelites> கூடிக்கொண்டார்கள். {1Sam 14:21}
எப்பிராயீம்<Ephraim> மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும்<Israel> பெலிஸ்தர்<Philistines> முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள். {1Sam 14:22}
இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை<Israel> ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும்<Bethaven> நடந்தது. {1Sam 14:23}
இஸ்ரவேலர்<Israel> அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல்<Saul> ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள். {1Sam 14:24}
தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது. {1Sam 14:25}
ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள். {1Sam 14:26}
யோனத்தான்<Jonathan> தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது. {1Sam 14:27}
அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான். {1Sam 14:28}
அப்பொழுது யோனத்தான்<Jonathan>: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள். {1Sam 14:29}
இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள்<Philistines> உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான். {1Sam 14:30}
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து<Michmash> ஆயலோன்மட்டும்<Aijalon> பெலிஸ்தரை<Philistines> முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள். {1Sam 14:31}
அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள். {1Sam 14:32}
அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு<Saul> அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள். {1Sam 14:33}
நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள். {1Sam 14:34}
பின்பு சவுல்<Saul> கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம். {1Sam 14:35}
அதற்குப்பின்பு சவுல்<Saul>: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத்<Philistines> தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான். {1Sam 14:36}
அப்படியே: பெலிஸ்தரைத்<Philistines> தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின்<Israel> கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல்<Saul> தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை. {1Sam 14:37}
அப்பொழுது சவுல்<Saul>: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள். {1Sam 14:38}
அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில்<Jonathan> காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை<Israel> ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை. {1Sam 14:39}
அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர்<Israel> எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும்<Jonathan> இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப்<Saul> பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள். {1Sam 14:40}
அப்பொழுது சவுல்<Saul> இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும்<Jonathan> சவுலின்மேலும்<Saul> சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள். {1Sam 14:41}
எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும்<Jonathan> சீட்டுப்போடுங்கள் என்று சவுல்<Saul> சொன்னபோது, யோனத்தான்மேல்<Jonathan> சீட்டு விழுந்தது. {1Sam 14:42}
அப்பொழுது சவுல்<Saul> யோனத்தானைப்<Jonathan> பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்<Jonathan>: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான். {1Sam 14:43}
அப்பொழுது சவுல்<Saul>: யோனத்தானே<Jonathan>, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான். {1Sam 14:44}
ஜனங்களோ சவுலை<Saul> நோக்கி: இஸ்ரவேலிலே<Israel> இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான்<Jonathan> கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான்<Jonathan> சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள். {1Sam 14:45}
சவுல்<Saul> பெலிஸ்தரைத்<Philistines> தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும்<Philistines> தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள். {1Sam 14:46}
இப்படிச் சவுல்<Saul> இஸ்ரவேலை<Israel> ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும்<Moab>, அம்மோன்<Ammon> புத்திரருக்கும், ஏதோமியருக்கும்<Edom>, சோபாவின்<Zobah> ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும்<Philistines> விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான். {1Sam 14:47}
அவன் பலத்து, அமலேக்கியரை<Amalekites> முறிய அடித்து, இஸ்ரவேலரைக்<Israel> கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான். {1Sam 14:48}
சவுலுக்கு<Saul> இருந்த குமாரர்: யோனத்தான்<Jonathan>, இஸ்வி<Ishui>, மல்கிசூவா<Melchishua> என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப்<Merab>, இளையவள் பேர் மீகாள்<Michal>. {1Sam 14:49}
சவுலுடைய<Saul> மனைவியின் பேர் அகினோவாம்<Ahinoam>, அவள் அகிமாசின்<Ahimaaz> குமாரத்தி; அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர்<Abner>, அவன் சவுலுடைய<Saul> சிறியதகப்பனாகிய நேரின்<Ner> குமாரன். {1Sam 14:50}
கீஸ்<Kish> சவுலின்<Saul> தகப்பன்; அப்னேரின்<Abner> தகப்பனாகிய நேர்<Ner> ஆபியேலின்<Abiel> குமாரன். {1Sam 14:51}
சவுல்<Saul> இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல்<Philistines> கடினமான யுத்தம் நடந்தது; சவுல்<Saul> ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான். {1Sam 14:52}
பின்பு சாமுவேல்<Samuel> சவுலை<Saul> நோக்கி: இஸ்ரவேலராகிய<Israel> தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: {1Sam 15:1}
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்<Israel> எகிப்திலிருந்து<Egypt> வந்தபோது, அமலேக்கு<Amalek> அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். {1Sam 15:2}
இப்போதும் நீ போய், அமலேக்கை<Amalek> மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். {1Sam 15:3}
அப்பொழுது சவுல்<Saul>: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே<Telaim> அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா<Judah> ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள். {1Sam 15:4}
சவுல்<Saul> அமலேக்குடைய<Amalek> பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான். {1Sam 15:5}
சவுல்<Saul> கேனியரை<Kenites> நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட<Amalekites> உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல்<Israel> எகிப்திலிருந்து<Egypt> வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்<Kenites> அமலேக்கியரின்<Amalekites> நடுவிலிருந்து விலகிப்போனார்கள். {1Sam 15:6}
அப்பொழுது சவுல்<Saul>: ஆவிலா<Havilah> துவக்கி எகிப்திற்கு<Egypt> எதிரேயிருக்கிற சூருக்குப்<Shur> போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை<Amalekites> மடங்கடித்து, {1Sam 15:7}
அமலேக்கியரின்<Amalekites> ராஜாவாகிய ஆகாகை<Agag> உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். {1Sam 15:8}
சவுலும்<Saul> ஜனங்களும் ஆகாகையும்<Agag>, ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். {1Sam 15:9}
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு<Samuel> உண்டாகி, அவர் சொன்னது: {1Sam 15:10}
நான் சவுலை<Saul> ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல்<Samuel> மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். {1Sam 15:11}
மறுநாள் அதிகாலமே சாமுவேல்<Samuel> சவுலைச்<Saul> சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல்<Saul> கர்மேலுக்கு<Carmel> வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப்<Gilgal> போனான் என்று, சாமுவேலுக்கு<Samuel> அறிவிக்கப்பட்டது. {1Sam 15:12}
சாமுவேல்<Samuel> சவுலினிடத்தில்<Saul> போனான்; சவுல்<Saul> அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். {1Sam 15:13}
அதற்குச் சாமுவேல்<Samuel>: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். {1Sam 15:14}
அதற்குச் சவுல்<Saul>: அமலேக்கியரிடத்திலிருந்து<Amalekites> அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். {1Sam 15:15}
அப்பொழுது சாமுவேல்<Samuel>: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே<Saul> சொன்னான். அவன்: சொல்லும் என்றான். {1Sam 15:16}
அப்பொழுது சாமுவேல்<Samuel>: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல்<Israel> ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே. {1Sam 15:17}
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய<Amalekites> அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார். {1Sam 15:18}
இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான். {1Sam 15:19}
சவுல்<Saul> சாமுவேலை<Samuel> நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின்<Amalek> ராஜாவாகிய ஆகாகைக்<Agag> கொண்டுவந்து, அமலேக்கியரைச்<Amalekites> சங்காரம் பண்ணினேன். {1Sam 15:20}
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே<Gilgal> பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். {1Sam 15:21}
அதற்குச் சாமுவேல்<Samuel>: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். {1Sam 15:22}
இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். {1Sam 15:23}
அப்பொழுது சவுல்<Saul> சாமுவேலை<Samuel> நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். {1Sam 15:24}
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். {1Sam 15:25}
சாமுவேல்<Samuel> சவுலைப்<Saul> பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல்<Israel> ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். {1Sam 15:26}
போகும்படி சாமுவேல்<Samuel> திரும்புகிறபோது, சவுல்<Saul>, அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று. {1Sam 15:27}
அப்பொழுது சாமுவேல்<Samuel> அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின்<Israel> ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். {1Sam 15:28}
இஸ்ரவேலின்<Israel> ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம்மாற அவர் மனுஷன் அல்ல என்றான். {1Sam 15:29}
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு<Israel> முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். {1Sam 15:30}
அப்பொழுது சாமுவேல்<Samuel> திரும்பிச் சவுலுக்குப்<Saul> பின்சென்றான்; சவுல்<Saul> கர்த்தரைப் பணிந்துகொண்டான். {1Sam 15:31}
பின்பு சாமுவேல்<Samuel>: அமலேக்கின்<Amalekites> ராஜாவாகிய ஆகாகை<Agag> என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக்<Agag> சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான். {1Sam 15:32}
சாமுவேல்<Samuel>: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி; சாமுவேல்<Samuel> கில்காலிலே<Gilgal> கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத்<Agag> துண்டித்துப்போட்டான். {1Sam 15:33}
பின்பு சாமுவேல்<Samuel> ராமாவுக்குப்<Ramah> போனான்; சவுலோ<Saul> தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற<Gibeah> தன் வீட்டுக்குப் போய்விட்டான். {1Sam 15:34}
சவுல்<Saul> மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல்<Samuel> அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல்<Israel> சவுலை<Saul> ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல்<Samuel> சவுலுக்காகத்<Saul> துக்கித்துக்கொண்டிருந்தான். {1Sam 15:35}
கர்த்தர் சாமுவேலை<Samuel> நோக்கி: இஸ்ரவேலின்மேல்<Israel> ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக<Saul> நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய<Bethlehemite> ஈசாயினிடத்துக்கு<Jesse> உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். {1Sam 16:1}
அதற்குச் சாமுவேல்<Samuel>: நான் எப்படிப் போவேன்; சவுல்<Saul> இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, {1Sam 16:2}
ஈசாயைப்<Jesse> பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார். {1Sam 16:3}
கர்த்தர் சொன்னபடியே சாமுவேல்<Samuel> செய்து, பெத்லெகேமுக்குப்<Bethlehem> போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். {1Sam 16:4}
அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும்<Jesse> அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான். {1Sam 16:5}
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப்<Eliab> பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான். {1Sam 16:6}
கர்த்தர் சாமுவேலை<Samuel> நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். {1Sam 16:7}
அப்பொழுது ஈசாய்<Jesse> அபினதாபை<Abinadab> அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு<Samuel> முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். {1Sam 16:8}
ஈசாய்<Jesse> சம்மாவையும்<Shammah> கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். {1Sam 16:9}
இப்படி ஈசாய்<Jesse> தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு<Samuel> முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல்<Samuel> ஈசாயைப்<Jesse> பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; {1Sam 16:10}
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக்<Jesse> கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல்<Samuel> ஈசாயை<Jesse> நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். {1Sam 16:11}
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். {1Sam 16:12}
அப்பொழுது சாமுவேல்<Samuel>: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல்<David> வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல்<Samuel> எழுந்து ராமாவுக்குப்<Ramah> போய்விட்டான். {1Sam 16:13}
கர்த்தருடைய ஆவி சவுலை<Saul> விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. {1Sam 16:14}
அப்பொழுது சவுலின்<Saul> ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே. {1Sam 16:15}
சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள். {1Sam 16:16}
சவுல்<Saul> தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். {1Sam 16:17}
அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய<Bethlehemite> ஈசாயின்<Jesse> குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். {1Sam 16:18}
அப்பொழுது சவுல்<Saul>: ஈசாயினிடத்தில்<Jesse> ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை<David> என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச்சொன்னான். {1Sam 16:19}
அப்பொழுது ஈசாய்<Jesse>: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின்<David> வசமாய் சவுலுக்கு<Saul> அனுப்பினான். {1Sam 16:20}
அப்படியே தாவீது<David> சவுலிடத்தில்<Saul> வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். {1Sam 16:21}
சவுல்<Saul> ஈசாயினிடத்தில்<Jesse> ஆள் அனுப்பி, தாவீது<David> எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான். {1Sam 16:22}
அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப்<Saul> பிடிக்கும்போது, தாவீது<David> சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல்<Saul> ஆறுதலடைந்து, சொஸ்தமாவான். {1Sam 16:23}
பெலிஸ்தர்<Philistines> யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள<Judah> சோக்கோவிலே<Shochoh> ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும்<Shochoh> அசெக்காவுக்கும்<Azekah> நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே<Ephesdammim> பாளயமிறங்கினார்கள். {1Sam 17:1}
சவுலும்<Saul> இஸ்ரவேல்<Israel> மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா<Elah> பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு<Philistines> எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். {1Sam 17:2}
பெலிஸ்தர்<Philistines> அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர்<Israel> இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது. {1Sam 17:3}
அப்பொழுது காத்<Gath> ஊரானாகிய கோலியாத்<Goliath> என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின்<Philistines> பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம். {1Sam 17:4}
அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும். {1Sam 17:5}
அவன் தன் கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான். {1Sam 17:6}
அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான். {1Sam 17:7}
அவன் வந்துநின்று, இஸ்ரவேல்<Israel> சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன்<Philistine> அல்லவா? நீங்கள் சவுலின்<Saul> சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவன் என்னிடத்தில் வரட்டும். {1Sam 17:8}
அவன் என்னோடு யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்கவேண்டும் என்று சொல்லி, {1Sam 17:9}
பின்னும் அந்தப் பெலிஸ்தன்<Philistine>: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய<Israel> சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான். {1Sam 17:10}
சவுலும்<Saul> இஸ்ரவேலர்<Israel> அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய<Philistine> வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள். {1Sam 17:11}
தாவீது<David> என்பவன் யூதாவிலுள்ள<Judah> பெத்லெகேம்<Bethlehem> ஊரானாகிய ஈசாய்<Jesse> என்னும் பேருள்ள எப்பிராத்திய<Ephrathite> மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு<Jesse> எட்டுக் குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின்<Saul> நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான். {1Sam 17:12}
ஈசாயினுடைய<Jesse> மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட<Saul> யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப்<Eliab> என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப்<Abinadab> என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா<Shammah> என்றும் பேர். {1Sam 17:13}
தாவீது<David> எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப்<Saul> போயிருந்தார்கள். {1Sam 17:14}
தாவீது<David> சவுலைவிட்டுத்<Saul> திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற<Bethlehem> தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். {1Sam 17:15}
அந்தப் பெலிஸ்தன்<Philistine> காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான். {1Sam 17:16}
ஈசாய்<Jesse> தன் குமாரனாகிய தாவீதை<David> நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய், {1Sam 17:17}
இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான். {1Sam 17:18}
அப்பொழுது சவுலும்<Saul>, அவர்களும், இஸ்ரவேலர்<Israel> எல்லாரும், ஏலா<Elah> பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு<Philistines> யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். {1Sam 17:19}
தாவீது<David> அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய்<Jesse> தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். {1Sam 17:20}
இஸ்ரவேலரும்<Israel> பெலிஸ்தரும்<Philistines> ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக்கொண்டிருந்தார்கள். {1Sam 17:21}
அப்பொழுது தாவீது<David>: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். {1Sam 17:22}
அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத்<Gath> ஊரானாகிய கோலியாத்<Goliath> என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த<Philistine> வீரன் பெலிஸ்தரின்<Philistines> சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது<David> கேட்டான். {1Sam 17:23}
இஸ்ரவேலர்<Israel> எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள். {1Sam 17:24}
அந்நேரத்திலே இஸ்ரவேலர்<Israel>: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை<Israel> நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே<Israel> சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள். {1Sam 17:25}
அப்பொழுது தாவீது<David> தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக்<Philistine> கொன்று இஸ்ரவேலுக்கு<Israel> நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன்<Philistine> எம்மாத்திரம் என்றான். {1Sam 17:26}
அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். {1Sam 17:27}
அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப்<Eliab> கேட்டபோது, அவன் தாவீதின்மேல்<David> கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். {1Sam 17:28}
அதற்குத் தாவீது<David>: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, {1Sam 17:29}
அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள். {1Sam 17:30}
தாவீது<David> சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின்<Saul> சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான். {1Sam 17:31}
தாவீது<David> சவுலை<Saul> நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே<Philistine> யுத்தம்பண்ணுவேன் என்றான். {1Sam 17:32}
அப்பொழுது சவுல்<Saul> தாவீதை<David> நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே<Philistine> எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயதுமுதல் யுத்தவீரன் என்றான். {1Sam 17:33}
தாவீது<David> சவுலைப்பார்த்து<Saul>: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. {1Sam 17:34}
நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். {1Sam 17:35}
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும்<Philistine> அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். {1Sam 17:36}
பின்னும் தாவீது<David>: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய<Philistine> கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல்<Saul> தாவீதைப்<David> பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். {1Sam 17:37}
சவுல்<Saul> தாவீதுக்குத்<David> தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான். {1Sam 17:38}
அவனுடைய பட்டயத்தை தாவீது<David> தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது<David> சவுலை<Saul> நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, {1Sam 17:39}
தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே<Philistine> போனான். {1Sam 17:40}
பெலிஸ்தனும்<Philistine> நடந்து, தாவீதண்டைக்குக்<David> கிட்டிவந்தான்; பரிசையைப் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். {1Sam 17:41}
பெலிஸ்தன்<Philistine> சுற்றிப்பார்த்து: தாவீதைக்<David> கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான். {1Sam 17:42}
பெலிஸ்தன்<Philistine> தாவீதைப்<David> பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச்<David> சபித்தான். {1Sam 17:43}
பின்னும் அந்தப் பெலிஸ்தன்<Philistine> தாவீதைப்<David> பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். {1Sam 17:44}
அதற்குத் தாவீது<David>: பெலிஸ்தனை<Philistine> நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய<Israel> இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். {1Sam 17:45}
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய<Philistines> பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில்<Israel> தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். {1Sam 17:46}
கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். {1Sam 17:47}
அப்பொழுது அந்தப் பெலிஸ்தன்<Philistine> எழும்பி, தாவீதுக்கு<David> எதிராகக் கிட்டிவருகையில், தாவீது<David> தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும்<Philistine> எதிராக ஓடி, {1Sam 17:48}
தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய<Philistine> நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். {1Sam 17:49}
இவ்விதமாகத் தாவீது<David> ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை<Philistine> மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின்<David> கையில் பட்டயம் இல்லாதிருந்தது. {1Sam 17:50}
ஆகையால் தாவீது<David> பெலிஸ்தனண்டையில்<Philistine> ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று, அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர்<Philistines> கண்டு, ஓடிப்போனார்கள். {1Sam 17:51}
அப்பொழுது இஸ்ரவேலரும்<Israel> யூதா<Judah> மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின்<Ekron> வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத்<Philistines> துரத்தினார்கள்; சாராயீமின்<Shaaraim> வழியிலும், காத்பட்டணமட்டும்<Gath>, எக்ரோன்<Ekron> பட்டணமட்டும், பெலிஸ்தர்<Philistines> வெட்டுண்டு விழுந்தார்கள். {1Sam 17:52}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் பெலிஸ்தரை<Philistines> மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பிவந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள். {1Sam 17:53}
தாவீது<David> பெலிஸ்தனுடைய<Philistine> தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக்<Jerusalem> கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான். {1Sam 17:54}
தாவீது<David> பெலிஸ்தனுக்கு<Philistine> எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல்<Saul> கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப்<Abner> பார்த்து: அப்னேரே<Abner>, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்<Abner>: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். {1Sam 17:55}
அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான். {1Sam 17:56}
தாவீது<David> பெலிஸ்தனைக்<Philistine> கொன்று திரும்புகையில், அப்னேர்<Abner> அவனைச் சவுலுக்கு<Saul> முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய<Philistine> தலை அவன் கையில் இருந்தது. {1Sam 17:57}
அப்பொழுது சவுல்<Saul>: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது<David>: நான் பெத்லெகேம்<Bethlehemite> ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின்<Jesse> மகன் என்றான். {1Sam 17:58}
அவன் சவுலோடே<Saul> பேசி முடிந்தபின்பு, யோனத்தானுடைய<Jonathan> ஆத்துமா தாவீதின்<David> ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான்<Jonathan> அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். {1Sam 18:1}
சவுல்<Saul> அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்றுமுதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். {1Sam 18:2}
யோனத்தான்<Jonathan> தாவீதைத்<David> தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். {1Sam 18:3}
யோனத்தான்<Jonathan> போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக்<David> கொடுத்தான். {1Sam 18:4}
தாவீது<David> சவுல்<Saul> தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல்<Saul> அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய<Saul> ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். {1Sam 18:5}
தாவீது<David> பெலிஸ்தனைக்<Philistine> கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின்<Israel> சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு<Saul> எதிர்கொண்டுவந்தார்கள். {1Sam 18:6}
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல்<Saul> கொன்றது ஆயிரம், தாவீது<David> கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். {1Sam 18:7}
அந்த வார்த்தை சவுலுக்கு<Saul> விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப்<David> பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, {1Sam 18:8}
அந்நாள்முதற்கொண்டு சவுல்<Saul> தாவீதைக்<David> காய்மகாரமாய்ப் பார்த்தான். {1Sam 18:9}
மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல்<Saul> இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது<David> தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின்<Saul> கையிலே ஈட்டியிருந்தது. {1Sam 18:10}
அப்பொழுது சவுல்<Saul> தாவீதைச்<David> சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது<David> விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான். {1Sam 18:11}
கர்த்தர் தாவீதோடேகூட<David> இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல்<Saul> கண்டு, தாவீதுக்குப்<David> பயந்து, {1Sam 18:12}
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். {1Sam 18:13}
தாவீது<David> தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார். {1Sam 18:14}
அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல்<Saul> கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். {1Sam 18:15}
இஸ்ரவேலரும்<Israel> யூதா<Judah> ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச்<David> சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான். {1Sam 18:16}
என் கை அல்ல, பெலிஸ்தரின்<Philistines> கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல்<Saul> நினைத்துக்கொண்டு, சவுல்<Saul> தாவீதை<David> நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை<Merab> உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான். {1Sam 18:17}
அப்பொழுது தாவீது<David> சவுலைப்<Saul> பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே<Israel> என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான். {1Sam 18:18}
சவுலின்<Saul> குமாரத்தியாகிய மேராப்<Merab> தாவீதுக்குக்<David> கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய<Meholathite> ஆதரியேலுக்கு<Adriel> மனைவியாகக் கொடுக்கப்பட்டாள். {1Sam 18:19}
சவுலின்<Saul> குமாரத்தியாகிய மீகாள்<Michal> தாவீதை<David> நேசித்தாள்; அது சவுலுக்கு<Saul> அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. {1Sam 18:20}
அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின்<Philistines> கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல்<Saul> எண்ணி, தாவீதை<David> நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான். {1Sam 18:21}
பின்பு சவுல்<Saul> தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே<David> இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான். {1Sam 18:22}
சவுலின்<Saul> ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின்<David> செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது<David>, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான். {1Sam 18:23}
தாவீது<David> இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின்<Saul> ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள். {1Sam 18:24}
அப்பொழுது சவுல்<Saul>: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின்<Philistines> நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச்<David> சொல்லுங்கள் என்றான்; தாவீதை<David> பெலிஸ்தரின்<Philistines> கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய<Saul> எண்ணமாயிருந்தது. {1Sam 18:25}
அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு<David> இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப்<David> பிரியமாயிருந்தது. {1Sam 18:26}
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது<David> எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில்<Philistines> இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டுவந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல்<Saul> தன் குமாரத்தியாகிய மீகாளை<Michal> அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். {1Sam 18:27}
கர்த்தர் தாவீதோடிருக்கிறார்<David> என்று சவுல்<Saul> கண்டறிந்துகொண்டான்; சவுலின்<Saul> குமாரத்தியாகிய மீகாளும்<Michal> அவனை நேசித்தாள். {1Sam 18:28}
ஆகையால் சவுல்<Saul> இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப்<David> பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச்<David> சத்துருவாயிருந்தான். {1Sam 18:29}
பெலிஸ்தருடைய<Philistines> பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது<David> சவுலுடைய<Saul> ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது. {1Sam 18:30}
தாவீதைக்<David> கொன்றுபோடும்படிக்கு, சவுல்<Saul> தன் குமாரனாகிய யோனத்தானோடும்<Jonathan> தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். {1Sam 19:1}
சவுலின்<Saul> குமாரனாகிய யோனத்தானோ<Jonathan>, தாவீதின்மேல்<David> மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான்<Jonathan> தாவீதுக்கு<David> அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல்<Saul> உம்மைக் கொன்றுபோட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும். {1Sam 19:2}
நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான். {1Sam 19:3}
அப்படியே யோனத்தான்<Jonathan> தன் தகப்பனாகிய சவுலோடே<Saul> தாவீதுக்காக<David> நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு<David> விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே. {1Sam 19:4}
அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக்<Philistine> கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம்<Israel> பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக்<David> கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான். {1Sam 19:5}
சவுல்<Saul> யோனத்தானுடைய<Jonathan> சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான். {1Sam 19:6}
பின்பு யோனத்தான்<Jonathan> தாவீதை<David> அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே<Saul> கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான். {1Sam 19:7}
மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது<David> புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடே<Philistines> யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள். {1Sam 19:8}
கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல்<Saul> வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது<David> தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான். {1Sam 19:9}
அப்பொழுது சவுல்<Saul>: தாவீதை<David> ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு<Saul> விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ<David> அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான். {1Sam 19:10}
தாவீதைக்<David> காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல்<Saul> அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு<David> அவன் மனைவியாகிய மீகாள்<Michal> அறிவித்து: நீர் இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, {1Sam 19:11}
மீகாள்<Michal> தாவீதை<David> ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான். {1Sam 19:12}
மீகாளோ<Michal> ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள். {1Sam 19:13}
தாவீதைக்<David> கொண்டுவரச் சவுல்<Saul> சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள். {1Sam 19:14}
அப்பொழுது தாவீதைப்<David> பார்க்கிறதற்குச் சவுல்<Saul> சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான். {1Sam 19:15}
சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள். {1Sam 19:16}
அப்பொழுது சவுல்<Saul>: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில்<Michal> கேட்டான். மீகாள்<Michal> சவுலை<Saul> நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள். {1Sam 19:17}
தாவீது<David> தப்பி, ராமாவிலிருந்த<Ramah> சாமுவேலிடத்திற்குப்<Samuel> போய், சவுல்<Saul> தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும்<Samuel> போய், நாயோதிலே<Naioth> தங்கியிருந்தார்கள். {1Sam 19:18}
தாவீது<David> ராமாவுக்கடுத்த<Ramah> நாயோதிலே<Naioth> இருக்கிறான் என்று சவுலுக்கு<Saul> அறிவிக்கப்பட்டது. {1Sam 19:19}
அப்பொழுது சவுல்<Saul>: தாவீதைக்<David> கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல்<Samuel> அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய<Saul> சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். {1Sam 19:20}
இது சவுலுக்கு<Saul> அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல்<Saul> சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். {1Sam 19:21}
அப்பொழுது அவனும் ராமாவுக்குப்<Ramah> போய், சேக்குவிலிருக்கிற<Sechu> பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும்<Samuel> தாவீதும்<David> எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த<Ramah> நாயோதிலே<Naioth> இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. {1Sam 19:22}
அப்பொழுது ராமாவுக்கடுத்த<Ramah> நாயோதிற்குப்<Naioth> போனான்; அவன்மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த<Ramah> நாயோதிலே<Naioth> சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து, {1Sam 19:23}
தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு<Samuel> முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும்<Saul> தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள். {1Sam 19:24}
தாவீது<David> ராமாவுக்கடுத்த<Ramah> நாயோதிலிருந்து<Naioth> ஓடிப்போய், யோனத்தான்<Jonathan> முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான். {1Sam 20:1}
அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான். {1Sam 20:2}
அப்பொழுது தாவீது<David>: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு<Jonathan> மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான். {1Sam 20:3}
அப்பொழுது யோனத்தான்<Jonathan> தாவீதைப்<David> பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான். {1Sam 20:4}
தாவீது<David> யோனத்தானை<Jonathan> நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும். {1Sam 20:5}
உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லெகேமிலே<Bethlehem> தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிட வருகிறபடியால் தாவீது<David> அவ்விடத்திற்குப்போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும். {1Sam 20:6}
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர். {1Sam 20:7}
ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான். {1Sam 20:8}
அப்பொழுது யோனத்தான்<Jonathan>: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான். {1Sam 20:9}
தாவீது<David> யோனத்தானை<Jonathan> நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான். {1Sam 20:10}
அப்பொழுது யோனத்தான்<Jonathan> தாவீதைப்<David> பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள். {1Sam 20:11}
அப்பொழுது யோனத்தான்<Jonathan> இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை<David> நோக்கி: நான் நாளையாவது மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல்<David> தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால், {1Sam 20:12}
இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு<Jonathan> அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக. {1Sam 20:13}
மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல், {1Sam 20:14}
கர்த்தர் தாவீதின்<David> சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர்அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான். {1Sam 20:15}
இப்படி யோனத்தான்<Jonathan> தாவீதின்<David> குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய<David> சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி, {1Sam 20:16}
யோனத்தான்<Jonathan> தாவீதை<David> மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான். {1Sam 20:17}
பின்பு யோனத்தான்<Jonathan> தாவீதைப்<David> பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும். {1Sam 20:18}
காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல்<Ezel> என்னும் கல்லண்டையில் உட்கார்ந்திரும். {1Sam 20:19}
அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து: {1Sam 20:20}
நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். {1Sam 20:21}
இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும். {1Sam 20:22}
நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான். {1Sam 20:23}
அப்படியே தாவீது<David> வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம்பண்ண உட்கார்ந்தான். {1Sam 20:24}
ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான்<Jonathan> எழுந்திருந்தான்; அப்னேரோ<Abner> சவுலுடைய<Saul> பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது<David> இருக்கும் இடம் காலியாயிருந்தது. {1Sam 20:25}
ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல்<Saul> ஒன்றும் சொல்லவில்லை. {1Sam 20:26}
அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது<David> இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்<Saul>: ஈசாயின்<Jesse> மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக்<Jonathan> கேட்டான். {1Sam 20:27}
யோனத்தான்<Jonathan> சவுலுக்குப்<Saul> பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும்<Bethlehem> போக, தாவீது<David> என்னிடத்தில் வருந்திக்கேட்டு, {1Sam 20:28}
அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான். {1Sam 20:29}
அப்பொழுது சவுல்<Saul> யோனத்தான்மேல்<Jonathan> கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின்<Jesse> மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ? {1Sam 20:30}
ஈசாயின்<Jesse> மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான். {1Sam 20:31}
யோனத்தான்<Jonathan> தன் தகப்பனாகிய சவுலுக்குப்<Saul> பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான். {1Sam 20:32}
அப்பொழுது சவுல்<Saul>: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக்<David> கொன்றுபோடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான்<Jonathan> அறிந்துகொண்டு, {1Sam 20:33}
கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம்பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை<David> நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது. {1Sam 20:34}
மறுநாள் காலமே, யோனத்தான்<Jonathan> தாவீதுக்குக்<David> குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்: {1Sam 20:35}
பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான். {1Sam 20:36}
யோனத்தான்<Jonathan> எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான்<Jonathan> பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான். {1Sam 20:37}
நீ தரித்துநிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான்<Jonathan> பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின்<Jonathan> பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான். {1Sam 20:38}
அந்தக் காரியம் யோனத்தானுக்கும்<Jonathan> தாவீதுக்கும்<David> தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது. {1Sam 20:39}
அப்பொழுது யோனத்தான்<Jonathan>: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான். {1Sam 20:40}
பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது<David> தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது<David> மிகவும் அழுதான். {1Sam 20:41}
அப்பொழுது யோனத்தான்<Jonathan> தாவீதை<David> நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான். (43) பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப்போனான்; யோனத்தானோ<Jonathan> பட்டணத்திற்குப் போய்விட்டான். {1Sam 20:42}
தாவீது<David> நோபிலிருக்கிற<Nob> ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில்<Ahimelech> போனான்; அகிமெலேக்கு<Ahimelech> நடுக்கத்தோடே தாவீதுக்கு<David> எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான். {1Sam 21:1}
தாவீது<David> ஆசாரியனாகிய அகிமெலேக்கைப்<Ahimelech> பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன். {1Sam 21:2}
இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான். {1Sam 21:3}
ஆசாரியன் தாவீதுக்குப்<David> பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான். {1Sam 21:4}
தாவீது<David> ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான். {1Sam 21:5}
அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும். {1Sam 21:6}
சவுலுடைய<Saul> வேலைக்காரரில் ஏதோமியனாகிய<Edomite> தோவேக்கு<Doeg> என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய<Saul> மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான். {1Sam 21:7}
தாவீது<David> அகிமெலேக்கைப்<Ahimelech> பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான். {1Sam 21:8}
அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே<Elah> பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய<Philistine> கோலியாத்தின்<Goliath> பட்டயம், இதோ, ஏபோத்துக்குப்<ephod> பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது<David>: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான். {1Sam 21:9}
அன்றையதினம் தாவீது<David> எழுந்து சவுலுக்குத்<Saul> தப்பியோடி, காத்தின்<Gath> ராஜாவாகிய ஆகீசிடத்தில்<Achish> போனான். {1Sam 21:10}
ஆகீசின்<Achish> ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது<David> இவன் அல்லவோ? சவுல்<Saul> கொன்றது ஆயிரம், தாவீது<David> கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல்பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். {1Sam 21:11}
இந்த வார்த்தைகளைத் தாவீது<David> தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின்<Gath> ராஜாவாகிய ஆகீசுக்கு<Achish> மிகவும் பயப்பட்டு, {1Sam 21:12}
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான். {1Sam 21:13}
அப்பொழுது ஆகீஸ்<Achish>: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன? {1Sam 21:14}
எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான். {1Sam 21:15}
தாவீது<David> அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம்<Adullam> என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள். {1Sam 22:1}
ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப்பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள். {1Sam 22:2}
தாவீது<David> அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச்<Moab> சேர்ந்த மிஸ்பேக்குப்<Mizpeh> போய், மோவாபின்<Moab> ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி, {1Sam 22:3}
அவர்களை மோவாபின்<Moab> ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டுபோய்விட்டான்; தாவீது<David> அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள். {1Sam 22:4}
பின்பு காத்<Gad> என்னும் தீர்க்கதரிசி தாவீதைப்<David> பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப்<Judah> புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது<David> புறப்பட்டு ஆரேத்<Hareth> என்னும் காட்டிலே போனான். {1Sam 22:5}
தாவீதும்<David> அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல்<Saul> கேள்விப்பட்டான்; சவுல்<Saul> கிபியாவைச்<Gibeah> சேர்ந்த ராமாவில்<Ramah> ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது, {1Sam 22:6}
சவுல்<Saul> தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன்<Benjamites> புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின்<Jesse> மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ? {1Sam 22:7}
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின்<Jesse> மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான். {1Sam 22:8}
அப்பொழுது சவுலின்<Saul> ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய<Edomite> தோவேக்கு<Doeg> பிரதியுத்தரமாக: ஈசாயின்<Jesse> மகனை நோபிலிருக்கிற<Nob> அகிதூபின்<Ahitub> குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில்<Ahimelech> வரக்கண்டேன். {1Sam 22:9}
இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய<Philistine> கோலியாத்தின்<Goliath> பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான். {1Sam 22:10}
அப்பொழுது ராஜா: அகிதூபின்<Ahitub> குமாரனாகிய அகிமெலேக்<Ahimelech> என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற<Nob> அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள். {1Sam 22:11}
அப்பொழுது சவுல்<Saul>: அகிதூபின்<Ahitub> குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான். {1Sam 22:12}
அப்பொழுது சவுல்<Saul> அவனை நோக்கி: நீயும் ஈசாயின்<Jesse> மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான். {1Sam 22:13}
அகிமெலேக்<Ahimelech> ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல<David>, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்? {1Sam 22:14}
இன்றையதினம் அவனுக்காக தேவ சந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான். {1Sam 22:15}
ராஜாவோ: அகிமெலேக்கே<Ahimelech>, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான். {1Sam 22:16}
பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே<David> இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை. {1Sam 22:17}
அப்பொழுது ராஜா தோவேக்கை<Doeg> நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய<Edomite> தோவேக்கு<Doeg> ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத்<ephod> தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான். {1Sam 22:18}
ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள<Nob> புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான். {1Sam 22:19}
அகிதூபின்<Ahitub> குமாரனாகிய அகிமெலேக்கின்<Ahimelech> குமாரரில் அபியத்தார்<Abiathar> என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது<David> இருக்கும் புறமாக ஓடிப்போய், {1Sam 22:20}
சவுல்<Saul> கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு<David> அறிவித்தான். {1Sam 22:21}
அப்பொழுது தாவீது<David> அபியத்தாரைப்<Abiathar> பார்த்து: ஏதோமியனாகிய<Edomite> தோவேக்கு<Doeg> அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு<Saul> அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே. {1Sam 22:22}
நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனை வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான். {1Sam 22:23}
இதோ, பெலிஸ்தர்<Philistines> கேகிலாவின்மேல்<Keilah> யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு<David> அறிவிக்கப்பட்டது. {1Sam 23:1}
அப்பொழுது தாவீது<David>: நான் போய், அந்தப் பெலிஸ்தரை<Philistines> முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை<Philistines> முறிய அடித்து, கேகிலாவை<Keilah> ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச்<David> சொன்னார். {1Sam 23:2}
ஆனாலும் தாவீதின்<David> மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே<Judah> இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய<Philistines> சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப்<Keilah> போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள். {1Sam 23:3}
அப்பொழுது தாவீது<David> திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப்<Keilah> போ; நான் பெலிஸ்தரை<Philistines> உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். {1Sam 23:4}
அப்படியே தாவீது<David> தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப்<Keilah> போய், பெலிஸ்தரோடு<Philistines> யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய்க் கேகிலாவின்<Keilah> குடிகளை ரட்சித்தான். {1Sam 23:5}
அகிமெலேக்கின்<Ahimelech> குமாரனாகிய அபியத்தார்<Abiathar> கேகிலாவில்<Keilah> இருக்கிற தாவீதினிடத்தில்<David> தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து<ephod> இருந்தது. {1Sam 23:6}
தாவீது<David> கேகிலாவுக்கு<Keilah> வந்தான் என்று சவுலுக்கு<Saul> அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல்<Saul> சொல்லி, {1Sam 23:7}
தாவீதையும்<David> அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப்<Keilah> போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான். {1Sam 23:8}
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல்<Saul> எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது<David> அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை<Abiathar> நோக்கி: ஏபோத்தை<ephod> இங்கே கொண்டுவா என்றான். {1Sam 23:9}
அப்பொழுது தாவீது<David>: இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தாவே, சவுல்<Saul> கேகிலாவுக்கு<Keilah> வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன். {1Sam 23:10}
கேகிலா<Keilah> பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல்<Saul> வருவானோ, இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார். {1Sam 23:11}
கேகிலாபட்டணத்தார்<Keilah> என்னையும் என் மனுஷரையும் சவுலின்<Saul> கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது<David> கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார். {1Sam 23:12}
ஆகையால் தாவீதும்<David> ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை<Keilah> விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது<David> கேகிலாவிலிருந்து<Keilah> தப்பிப்போனான் என்று சவுலுக்கு<Saul> அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான். {1Sam 23:13}
தாவீது<David> வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப்<Ziph> என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல்<Saul> அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. {1Sam 23:14}
தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல்<Saul> புறப்பட்டான் என்று தாவீது<David> அறிந்தபடியினாலே, தாவீது<David> சீப்<Ziph> வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். {1Sam 23:15}
அப்பொழுது சவுலின்<Saul> குமாரனாகிய யோனத்தான்<Jonathan> எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில்<David> போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: {1Sam 23:16}
நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின்<Saul> கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல்<Israel> ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும்<Saul> அறிந்திருக்கிறார் என்றான். {1Sam 23:17}
அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது<David> காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ<Jonathan> தன் வீட்டிற்குப் போனான். {1Sam 23:18}
பின்பு சீப்<Ziphites> ஊரார் கிபியாவிலிருக்கிற<Gibeah> சவுலிடத்தில்<Saul> வந்து: தாவீது<David> எங்களிடத்தில் எஷிமோனுக்குத்<Jeshimon> தெற்கே ஆகிலா<Hachilah> என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? {1Sam 23:19}
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள். {1Sam 23:20}
அதற்கு சவுல்<Saul>: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. {1Sam 23:21}
நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது. {1Sam 23:22}
அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற<Judah> சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான். {1Sam 23:23}
அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு<Saul> முன்னாலே சீப்<Ziph> ஊருக்குப் போனார்கள்; தாவீதும்<David> அவன் மனுஷரும் எஷிமோனுக்குத்<Jeshimon> தெற்கான அந்தர வெளியாகிய மாகோன்<Maon> வனாந்தரத்தில் இருந்தார்கள். {1Sam 23:24}
சவுலும்<Saul> அவன் மனுஷரும் தாவீதைத்<David> தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன்<Maon> வனாந்தரத்திலே தங்கினான்; அதைச் சவுல்<Saul> கேள்விப்பட்டு, மாகோன்<Maon> வனாந்தரத்திலே தாவீதைப்<David> பின் தொடர்ந்தான். {1Sam 23:25}
சவுல்<Saul> மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும்<David> அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத்<Saul> தப்பிப்போக, தாவீது<David> தீவிரித்தபோது, சவுலும்<Saul> அவன் மனுஷரும் தாவீதையும்<David> அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள். {1Sam 23:26}
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில்<Saul> வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்<Philistines> தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். {1Sam 23:27}
அதனால் சவுல்<Saul> தாவீதைப்<David> பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை<Philistines> எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத்<Selahammahlekoth> என்று பேரிட்டார்கள். {1Sam 23:28}
தாவீது<David> அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள<Engedi> அரணிப்பான இடங்களில் தங்கினான். {1Sam 23:29}
சவுல்<Saul> பெலிஸ்தரைப்<Philistines> பின்தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது<David> என்கேதியின்<Engedi> வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. {1Sam 24:1}
அப்பொழுது சவுல்<Saul>: இஸ்ரவேல்<Israel> அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும்<David> அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். {1Sam 24:2}
வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல்<Saul> மலஜலாதிக்குப் போனான்; தாவீதும்<David> அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். {1Sam 24:3}
அப்பொழுது தாவீதின்<David> மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது<David> எழுந்திருந்துபோய், சவுலுடைய<Saul> சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். {1Sam 24:4}
தாவீது<David> சவுலின்<Saul> சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது. {1Sam 24:5}
அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி, {1Sam 24:6}
தன் மனுஷரைச் சவுலின்மேல்<Saul> எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல்<Saul> எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான். {1Sam 24:7}
அப்பொழுது தாவீதும்<David> எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப்<Saul> பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல்<Saul> திரும்பிப்பார்த்தபோது, தாவீது<David> தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி, {1Sam 24:8}
சவுலை<Saul> நோக்கி: தாவீது<David> உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? {1Sam 24:9}
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன். {1Sam 24:10}
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர். {1Sam 24:11}
கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை. {1Sam 24:12}
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. {1Sam 24:13}
இஸ்ரவேலின்<Israel> ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்? {1Sam 24:14}
கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான். {1Sam 24:15}
தாவீது<David> இந்த வார்த்தைகளைச் சவுலோடே<Saul> சொல்லி முடிந்தபின்பு, சவுல்<Saul>: என் குமாரனாகிய தாவீதே<David>, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, {1Sam 24:16}
தாவீதைப்<David> பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன். {1Sam 24:17}
நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை. {1Sam 24:18}
ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. {1Sam 24:19}
நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின்<Israel> ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன். {1Sam 24:20}
இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். {1Sam 24:21}
அப்பொழுது தாவீது<David> சவுலுக்கு<Saul> ஆணையிட்டுக் கொடுத்தான்; பின்பு, சவுல்<Saul> தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும்<David> அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள். {1Sam 24:22}
சாமுவேல்<Samuel> மரணமடைந்தான். இஸ்ரவேலர்<Israelites> எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற<Ramah> அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது<David> எழுந்து, பாரான்<Paran> வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான். {1Sam 25:1}
மாகோனிலே<Maon> ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில்<Carmel> இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில்<Carmel> தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். {1Sam 25:2}
அந்த மனுஷனுக்கு நாபால்<Nabal> என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில்<Abigail> என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய<Caleb> சந்ததியான். {1Sam 25:3}
நாபால்<Nabal> தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது<David> கேட்டபோது, {1Sam 25:4}
தாவீது<David> பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப்<Carmel> போய், நாபாலிடத்தில்<Nabal> சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து, {1Sam 25:5}
அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி, {1Sam 25:6}
இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில்<Carmel> இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை. {1Sam 25:7}
உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும்<David> கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். {1Sam 25:8}
தாவீதின்<David> வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின்<David> நாமத்தினாலே நாபாலிடத்தில்<Nabal> சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள். {1Sam 25:9}
நாபால்<Nabal> தாவீதின்<David> ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது<David> என்பவன் யார்? ஈசாயின்<Jesse> குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு. {1Sam 25:10}
நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். {1Sam 25:11}
தாவீதின்<David> வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில்<David> வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். {1Sam 25:12}
அப்பொழுது தாவீது<David> தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும்<David> தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப்<David> பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள். {1Sam 25:13}
அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய<Nabal> மனைவியாகிய அபிகாயிலை<Abigail> நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது<David> வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள்பேரில் அவர் சீறினார். {1Sam 25:14}
அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற் போனதுமில்லை. {1Sam 25:15}
நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். {1Sam 25:16}
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின்<Belial> மகனாயிருக்கிறார் என்றான். {1Sam 25:17}
அப்பொழுது அபிகாயில்<Abigail> தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி, {1Sam 25:18}
தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு<Nabal> அதை அறிவிக்கவில்லை. {1Sam 25:19}
அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும்<David> அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள். {1Sam 25:20}
தாவீது<David> தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான். {1Sam 25:21}
அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய்ப் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின்<David> சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான். {1Sam 25:22}
அபிகாயில்<Abigail> தாவீதைக்<David> காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு<David> நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, {1Sam 25:23}
அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும். {1Sam 25:24}
என் ஆண்டவனாகிய நீர் நாபால்<Nabal> என்னும் இந்தப் பேலியாளின்<Belial> மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால்<Nabal>, அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை. {1Sam 25:25}
இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல<Nabal> ஆகக்கடவர்கள். {1Sam 25:26}
இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. {1Sam 25:27}
உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக. {1Sam 25:28}
உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம். {1Sam 25:29}
கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு<Israel> அதிபதியாக உம்மை நேமிக்கும் போது, {1Sam 25:30}
நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள். {1Sam 25:31}
அப்பொழுது தாவீது<David> அபிகாயிலை<Abigail> நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். {1Sam 25:32}
நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக. {1Sam 25:33}
நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு<Nabal> ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி, {1Sam 25:34}
அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது<David> அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். {1Sam 25:35}
அபிகாயில்<Abigail> நாபாலிடத்தில்<Nabal> வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. {1Sam 25:36}
பொழுது விடிந்து, நாபாலின்<Nabal> வெறி தெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான். {1Sam 25:37}
கர்த்தர் நாபாலை<Nabal> வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப்பின்பு, அவன் செத்தான். {1Sam 25:38}
நாபால்<Nabal> செத்துப்போனான் என்று தாவீது<David> கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின்<Nabal> கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின்<Nabal> பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை<Abigail> விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது<David> ஆட்களை அனுப்பினான். {1Sam 25:39}
தாவீதின்<David> ஊழியக்காரர் கர்மேலில்<Carmel> இருக்கிற அபிகாயிலண்டைக்கு<Abigail> வந்து, தாவீது<David> உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது, {1Sam 25:40}
அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள். {1Sam 25:41}
பின்பு அபிகாயில்<Abigail> தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின்<David> ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள். {1Sam 25:42}
யெஸ்ரயேல்<Jezreel> ஊராளாகிய அகினோவாமையும்<Ahinoam> தாவீது<David> விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள். {1Sam 25:43}
சவுல்<Saul> தாவீதின்<David> மனைவியாகிய மீகாள்<Michal> என்னும் தன் குமாரத்தியைக் காலீம்<Gallim> ஊரானாகிய லாயீசின்<Laish> குமாரனான பல்த்திக்குக்<Phalti> கொடுத்திருந்தான். {1Sam 25:44}
பின்பு சீப்ஊரார்<Ziphites> கிபியாவிலிருக்கிற<Gibeah> சவுலிடத்தில்<Saul> வந்து: தாவீது<David> எஷிமோனுக்கு<Jeshimon> எதிரான ஆகிலாமேட்டில்<Hachilah> ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள். {1Sam 26:1}
அப்பொழுது சவுல்<Saul>: சீப்வனாந்தரத்திலே<Ziph> தாவீதைத்<David> தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே<Israel> தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங்கூட, சீப்<Ziph> வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான். {1Sam 26:2}
சவுல்<Saul> எஷிமோனுக்கு<Jeshimon> எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே<Hachilah> பாளயமிறங்கினான்; தாவீது<David> வனாந்தரத்தில் தங்கி, சவுல்<Saul> தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு, {1Sam 26:3}
தாவீது<David> வேவுகாரரை அனுப்பி, சவுல்<Saul> வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான். {1Sam 26:4}
பின்பு தாவீது<David> எழுந்து, சவுல்<Saul> பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும்<Saul> நேரின்<Ner> குமாரனாகிய அப்னேர்<Abner> என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல்<Saul> இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள். {1Sam 26:5}
தாவீது<David> ஏத்தியனாகிய<Hittite> அகிமெலேக்கையும்<Ahimelech>, செருயாவின்<Zeruiah> குமாரனும் யோவாபின்<Joab> சகோதரனுமாகிய அபிசாயையும்<Abishai> பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப்<Saul> பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்<Abishai>: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான். {1Sam 26:6}
அப்படியே தாவீதும்<David> அபிசாயும்<Abishai> இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல்<Saul> இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும்<Abner> ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள். {1Sam 26:7}
அப்பொழுது அபிசாய்<Abishai> தாவீதைப்<David> பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான். {1Sam 26:8}
தாவீது<David> அபிசாயைப்<Abishai> பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான். {1Sam 26:9}
பின்னும் தாவீது<David>: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய, {1Sam 26:10}
நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான். {1Sam 26:11}
தாவீது<David> சவுலின்<Saul> தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள். {1Sam 26:12}
தாவீது<David> கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே, {1Sam 26:13}
ஜனங்களுக்கும் நேரின்<Ner> குமாரனாகிய அப்னேருக்கும்<Abner> நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே<Abner>, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்<Abner>: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான். {1Sam 26:14}
அப்பொழுது தாவீது<David> அப்னேரை<Abner> நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில்<Israel> உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற் போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே. {1Sam 26:15}
நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற் போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான். {1Sam 26:16}
அப்பொழுது சவுல்<Saul>: தாவீதின்<David> சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே<David>, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது<David>: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி, {1Sam 26:17}
பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின்தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது? {1Sam 26:18}
இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே. {1Sam 26:19}
இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின்<Israel> ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான். {1Sam 26:20}
அப்பொழுது சவுல்<Saul>: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே<David>, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ் செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான். {1Sam 26:21}
அதற்குத் தாவீது<David>: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக் கொண்டுபோகட்டும். {1Sam 26:22}
கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன். {1Sam 26:23}
இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான். {1Sam 26:24}
அப்பொழுது சவுல்<Saul> தாவீதை<David> நோக்கி: என் குமாரனாகிய தாவீதே<David>, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது<David> தன் வழியே போனான்; சவுலும்<Saul> தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான். {1Sam 26:25}
பின்பு தாவீது<David>: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின்<Saul> கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல்<Saul> இஸ்ரவேலின்<Israel> எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின்<Philistines> தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான். {1Sam 27:1}
ஆகையால் தாவீது<David> தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின்<Maoch> குமாரனாகிய ஆகீஸ்<Achish> என்னும் காத்தின்<Gath> ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான். {1Sam 27:2}
அங்கே தாவீதும்<David>, அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட<David> அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல்<Jezreelitess> ஊராளாகிய அகினோவாமும்<Ahinoam>; நாபாலின்<Nabal> மனைவியாயிருந்த கர்மேல்<Carmelitess> ஊராளாகிய அபிகாயிலும்<Abigail>, காத்பட்டணத்தில்<Gath> ஆகீசிடத்தில்<Achish> தங்கியிருந்தார்கள். {1Sam 27:3}
தாவீது<David> காத்பட்டணத்திற்கு<Gath> ஓடிப்போனான் என்று சவுலுக்கு<Saul> அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை. {1Sam 27:4}
தாவீது<David> ஆகீசை<Achish> நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான். {1Sam 27:5}
அப்பொழுது ஆகீஸ்<Achish>: அன்றையதினம் சிக்லாகை<Ziklag> அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக்<Ziklag> இந்நாள்வரைக்கும் யூதாவின்<Judah> ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது. {1Sam 27:6}
தாவீது<David> பெலிஸ்தரின்<Philistines> நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான். {1Sam 27:7}
அங்கேயிருந்து தாவீதும்<David> அவன் மனுஷரும் கெசூரியர்மேலும்<Geshurites> கெஸ்ரியர்மேலும்<Gezrites> அமலேக்கியர்மேலும்<Amalekites> படையெடுத்துப்போனார்கள்; சூருக்குப்<Shur> போகிற எல்லைதுவக்கி எகிப்துதேசமட்டும்<Egypt> இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே. {1Sam 27:8}
தாவீது<David> அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத்<Achish> திரும்பிவருவான். {1Sam 27:9}
இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ்<Achish> கேட்கும்போது, தாவீது<David>: யூதாவுடைய<Judah> தென்திசையிலும், யெராமியேலருடைய<Jerahmeelites> தென்திசையிலும், கேனியருடைய<Kenites> தென்திசையிலும் என்பான். {1Sam 27:10}
இன்ன இன்னபடி தாவீது<David> செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது<David> காத்பட்டணத்திற்குக்<Gath> கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின்<Philistines> நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான். {1Sam 27:11}
ஆகீஸ்<Achish> தாவீதை<David> நம்பி: அவன் இஸ்ரவேலராகிய<Israel> தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான். {1Sam 27:12}
அந்நாட்களிலே பெலிஸ்தர்<Philistines> இஸ்ரவேலின்மேல்<Israel> யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ்<Achish> தாவீதை<David> நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். {1Sam 28:1}
தாவீது<David> ஆகீசைப்<Achish> பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ்<Achish> தாவீதை<David> நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். {1Sam 28:2}
சாமுவேல்<Samuel> இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர்<Israel> எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே<Ramah> அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல்<Saul> அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான். {1Sam 28:3}
பெலிஸ்தர்<Philistines> கூடிவந்து, சூநேமிலே<Shunem> பாளயமிறங்கினார்கள்; சவுலும்<Saul> இஸ்ரவேலர்<Israel> எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே<Gilboa> பாளயமிறங்கினார்கள். {1Sam 28:4}
சவுல்<Saul> பெலிஸ்தரின்<Philistines> பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது. {1Sam 28:5}
சவுல்<Saul> கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது<Urim>, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை. {1Sam 28:6}
அப்பொழுது சவுல்<Saul> தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில்<Endor> அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். {1Sam 28:7}
அப்பொழுது சவுல்<Saul> வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். {1Sam 28:8}
அதற்கு அந்த ஸ்திரீ: சவுல்<Saul> அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். {1Sam 28:9}
அப்பொழுது சவுல்<Saul>: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான். {1Sam 28:10}
அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை<Samuel> எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். {1Sam 28:11}
அந்த ஸ்திரீ சாமுவேலைக்<Samuel> கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை<Saul> நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே<Saul> என்றாள். {1Sam 28:12}
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச்<Saul> சொன்னாள். {1Sam 28:13}
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்; அதினாலே சவுல்<Saul> அவன் சாமுவேல்<Samuel> என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான். {1Sam 28:14}
சாமுவேல்<Samuel> சவுலை<Saul> நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்<Saul>: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர்<Philistines> எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான். {1Sam 28:15}
அதற்குச் சாமுவேல்<Samuel>: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? {1Sam 28:16}
கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக்<David> கொடுத்துவிட்டார். {1Sam 28:17}
நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல்<Amalek> அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தார். {1Sam 28:18}
கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும்<Israel> பெலிஸ்தர்<Philistines> கையில் ஒப்புக் கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின்<Israel> பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின்<Philistines> கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். {1Sam 28:19}
அந்தக்ஷணமே சவுல்<Saul> நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின்<Samuel> வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான். {1Sam 28:20}
அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில்<Saul> வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். {1Sam 28:21}
இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். {1Sam 28:22}
அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின்மேல் உட்கார்ந்தான். {1Sam 28:23}
அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு, {1Sam 28:24}
சவுலுக்கும்<Saul> அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப்போனார்கள். {1Sam 28:25}
பெலிஸ்தர்<Philistines> தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே<Aphek> கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர்<Israelites> யெஸ்ரயேலிலிருக்கிற<Jezreel> துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள். {1Sam 29:1}
அப்பொழுது பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும்<David> அவன் மனுஷரும் ஆகீசோடே<Achish> பின்தண்டிலே போனார்கள். {1Sam 29:2}
அப்பொழுது பெலிஸ்தரின்<Philistines> பிரபுக்கள்: இந்த எபிரெயர்<Hebrews> என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ்<Achish> அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின்<Israel> ராஜாவாகிய சவுலின்<Saul> ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது<David> இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான். {1Sam 29:3}
அதனால் பெலிஸ்தரின்<Philistines> பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா? {1Sam 29:4}
சவுல்<Saul> கொன்றது ஆயிரம், தாவீது<David> கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து<David> அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள். {1Sam 29:5}
அப்பொழுது ஆகீஸ்<Achish> தாவீதை<David> அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல. {1Sam 29:6}
ஆகையால் பெலிஸ்தருடைய<Philistines> பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான். {1Sam 29:7}
தாவீது<David> ஆகீசை<Achish> நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான். {1Sam 29:8}
ஆகீஸ்<Achish> தாவீதுக்குப்<David> பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின்<Philistines> பிரபுக்கள் சொல்லுகிறார்கள். {1Sam 29:9}
இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான். {1Sam 29:10}
அப்படியே தாவீது<David> அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின்<Philistines> தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில்<Philistines> யெஸ்ரயேலுக்குப்<Jezreel> போனார்கள். {1Sam 29:11}
தாவீதும்<David> அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு<Ziklag> வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர்<Amalekites> தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும்<Ziklag> விழுந்து, சிக்லாகைக்<Ziklag> கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, {1Sam 30:1}
அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள். {1Sam 30:2}
தாவீதும்<David> அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். {1Sam 30:3}
அப்பொழுது தாவீதும்<David> அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். {1Sam 30:4}
தாவீதின்<David> இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல்<Jezreelitess> ஊராளான அகினோவாமும்<Ahinoam>, கர்மேல்<Carmelite> ஊராளான நாபாலின்<Nabal> மனைவியாயிருந்த அபிகாயிலும்<Abigail>, சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள். {1Sam 30:5}
தாவீது<David> மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது<David> தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். {1Sam 30:6}
தாவீது<David> அகிமெலேக்கின்<Ahimelech> குமாரனாகிய அபியத்தார்<Abiathar> என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை<ephod> என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார்<Abiathar> ஏபோத்தைத்<ephod> தாவீதினிடத்தில்<David> கொண்டுவந்தான். {1Sam 30:7}
தாவீது<David> கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். {1Sam 30:8}
அப்பொழுது தாவீதும்<David> அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர்<Besor> ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள். {1Sam 30:9}
தாவீதோ<David>, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர்<Besor> ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள். {1Sam 30:10}
ஒரு எகிப்தியனை<Egyptian> வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில்<David> கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, {1Sam 30:11}
அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான். {1Sam 30:12}
தாவீது<David> அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய<Amalekite> வேலைக்காரனாகிய எகிப்துதேசத்துப்<Egypt> பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான். {1Sam 30:13}
நாங்கள் கிரேத்தியருடைய<Cherethites> தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த<Judah> எல்லையின்மேலும், காலேபுடைய<Caleb> தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை<Ziklag> அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டோம் என்றான். {1Sam 30:14}
தாவீது<David> அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். {1Sam 30:15}
இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர்<Philistines> தேசத்திலும் யூதாதேசத்திலும்<Judah> கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். {1Sam 30:16}
அவர்களைத் தாவீது<David> அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. {1Sam 30:17}
அமலேக்கியர்<Amalekites> பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது<David> விடுவித்தான். {1Sam 30:18}
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது<David> திருப்பிக்கொண்டான். {1Sam 30:19}
எல்லா ஆடுமாடுகளையும் தாவீது<David> பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின்<David> கொள்ளை என்றார்கள். {1Sam 30:20}
விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப்<David> பின்செல்லாமல், பேசோர்<Besor> ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது<David> வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும்<David> அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது<David> அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான். {1Sam 30:21}
அப்பொழுது தாவீதோடே<David> நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின்<Belial> மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள். {1Sam 30:22}
அதற்குத் தாவீது<David>: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். {1Sam 30:23}
இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான். {1Sam 30:24}
அப்படியே அந்நாள்முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே<Israel> இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான். {1Sam 30:25}
தாவீது<David> சிக்லாகுக்கு<Ziklag> வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின்<Judah> மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாத பாகம் என்று சொல்லச்சொன்னான். {1Sam 30:26}
யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில்<Bethel> இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில்<Ramoth> இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில்<Jattir> இருக்கிறவர்களுக்கும், {1Sam 30:27}
ஆரோவேரில்<Aroer> இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில்<Siphmoth> இருக்கிறவர்களுக்கும், எஸ்தெமோவாவில்<Eshtemoa> இருக்கிறவர்களுக்கும், {1Sam 30:28}
ராக்காலில்<Rachal> இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின்<Jerahmeelites> பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின்<Kenites> பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், {1Sam 30:29}
ஒர்மாவில்<Hormah> இருக்கிறவர்களுக்கும், கொராசானில்<Chorashan> இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில்<Athach> இருக்கிறவர்களுக்கும், {1Sam 30:30}
எப்ரோனில்<Hebron> இருக்கிறவர்களுக்கும், தாவீதும்<David> அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான். {1Sam 30:31}
பெலிஸ்தர்<Philistines> இஸ்ரவேலரோடே<Israel> யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர்<Israel> பெலிஸ்தருக்கு<Philistines> முன்பாக முறிந்தோடி, கில்போவா<Gilboa> மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள். {1Sam 31:1}
பெலிஸ்தர்<Philistines> சவுலையும்<Saul> அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின்<Saul> குமாரராகிய யோனத்தானையும்<Jonathan> அபினதாபையும்<Abinadab> மல்கிசூகாவையும்<Malchishua> வெட்டிப்போட்டார்கள். {1Sam 31:2}
சவுலுக்கு<Saul> விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல்<Saul> வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, {1Sam 31:3}
தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல்<Saul> பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். {1Sam 31:4}
சவுல்<Saul> செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான். {1Sam 31:5}
அப்படியே அன்றையதினம் சவுலும்<Saul>, அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள். {1Sam 31:6}
இஸ்ரவேலர்<Israel> முறிந்தோடினார்கள் என்றும், சவுலும்<Saul> அவன் குமாரரும் செத்துப் போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு<Jordan> இப்பாலும் இருந்த இஸ்ரவேலர்<Israel> கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்<Philistines> வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள். {1Sam 31:7}
வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர்<Philistines> மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும்<Saul> அவன் மூன்று குமாரரும் கில்போவா<Gilboa> மலையிலே விழுந்து கிடக்கிறதைக் கண்டு, {1Sam 31:8}
அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர்<Philistines> தேசத்திலே சுற்றிலும் அனுப்பி, {1Sam 31:9}
அவன் ஆயுதங்களை அஸ்தரோத்<Ashtaroth> தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின்<Bethshan> அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள். {1Sam 31:10}
பெலிஸ்தர்<Philistines> சவுலுக்குச்<Saul> செய்ததைக் கீலேயாத்தேசத்து<Gilead> யாபேஸ்<Jabesh> பட்டணத்தார் கேட்டபோது, {1Sam 31:11}
அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்துபோய், பெத்சானின்<Bethshan> அலங்கத்திலிருந்த சவுலின்<Saul> உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக்<Jabesh> கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம் பண்ணி, {1Sam 31:12}
அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற<Jabesh> தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள். {1Sam 31:13}
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!