Saturday, January 18, 2020

1 சாமுவேல்

எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்திலிருக்கிற  சோப்பீம்<Zophim>  என்னப்பட்ட  ராமதாயீம்<Ramathaim>  ஊரானாகிய  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவனுக்கு  எல்க்கானா<Elkanah>  என்று  பேர்;  அவன்  எப்பிராயீமியனாகிய<Ephrathite>  சூப்புக்குப்<Zuph>  பிறந்த  தோகுவின்<Tohu>  குமாரனாகிய  எலிகூவின்<Elihu>  மகனான  எரோகாமின்<Jeroham>  புத்திரன்.  {1Sam  1:1}

 

அவனுக்கு  இரண்டு  மனைவிகள்  இருந்தார்கள்;  ஒருத்திபேர்  அன்னாள்<Hannah>,  மற்றவள்பேர்  பெனின்னாள்<Peninnah>;  பெனின்னாளுக்குப்<Peninnah>  பிள்ளைகள்  இருந்தார்கள்;  அன்னாளுக்கோ<Hannah>  பிள்ளை  இல்லை.  {1Sam  1:2}

 

அந்த  மனுஷன்  சீலோவிலே<Shiloh>  சேனைகளின்  கர்த்தரைப்  பணிந்துகொள்ளவும்  அவருக்குப்  பலியிடவும்  வருஷந்தோறும்  தன்  ஊரிலிருந்து  போய்வருவான்;  அங்கே  கர்த்தரின்  ஆசாரியரான  ஏலியின்<Eli>  இரண்டு  குமாரராகிய  ஓப்னியும்<Hophni>  பினெகாசும்<Phinehas>  இருந்தார்கள்.  {1Sam  1:3}

 

அங்கே  எல்க்கானா<Elkanah>  பலியிடும்  நாளிலே,  அவன்  தன்  மனைவியாகிய  பெனின்னாளுக்கும்<Peninnah>,  அவளுடைய  எல்லாக்  குமாரருக்கும்  குமாரத்திகளுக்கும்,  பங்குபோட்டுக்  கொடுப்பான்.  {1Sam  1:4}

 

அன்னாளைச்<Hannah>  சிநேகித்தபடியினால்,  அவளுக்கு  இரட்டிப்பான  பங்கு  கொடுப்பான்;  கர்த்தரோ  அவள்  கர்ப்பத்தை  அடைத்திருந்தார்.  {1Sam  1:5}

 

கர்த்தர்  அவள்  கர்ப்பத்தை  அடைத்தபடியினால்,  அவளுடைய  சக்களத்தி  அவள்  துக்கப்படும்படியாக  அவளை  மிகவும்  விசனப்படுத்துவாள்.  {1Sam  1:6}

 

அவள்  கர்த்தருடைய  ஆலயத்திற்குப்  போகும்  சமயத்தில்,  அவன்  வருஷந்தோறும்  அந்தப்பிரகாரமாய்ச்  செய்வான்;  இவள்  அவளை  மனமடிவாக்குவாள்;  அப்பொழுது  அவள்  சாப்பிடாமல்  அழுதுகொண்டிருப்பாள்.  {1Sam  1:7}

 

அவள்  புருஷனாகிய  எல்க்கானா<Elkanah>  அவளைப்  பார்த்து:  அன்னாளே<Hannah>,  ஏன்  அழுகிறாய்?  ஏன்  சாப்பிடாதிருக்கிறாய்?  ஏன்  சஞ்சலப்படுகிறாய்?  பத்துக்  குமாரரைப்பார்க்கிலும்  நான்  உனக்கு  அதிகமல்லவா  என்றான்.  {1Sam  1:8}

 

சீலோவிலே<Shiloh>  அவர்கள்  புசித்துக்  குடித்தபின்பு,  அன்னாள்<Hannah>  எழுந்திருந்தாள்;  ஆசாரியனாகிய  ஏலி<Eli>  கர்த்தருடைய  ஆலயத்தின்  வாசல்  நிலையண்டையிலே  ஒரு  ஆசனத்தின்மேல்  உட்கார்ந்திருந்தான்.  {1Sam  1:9}

 

அவள்  போய்,  மனங்கசந்து,  மிகவும்  அழுது,  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:  {1Sam  1:10}

 

சேனைகளின்  கர்த்தாவே,  தேவரீர்  உம்முடைய  அடியாளின்  சிறுமையைக்  கண்ணோக்கிப்  பார்த்து,  உம்முடைய  அடியாளை  மறவாமல்  நினைந்தருளி,  உமது  அடியாளுக்கு  ஒரு  ஆண்  பிள்ளையைக்  கொடுத்தால்,  அவன்  உயிரோடிருக்கும்  சகல  நாளும்  நான்  அவனைக்  கர்த்தருக்கு  ஒப்புக்கொடுப்பேன்;  அவன்  தலையின்மேல்  சவரகன்  கத்தி  படுவதில்லை  என்று  ஒரு  பொருத்தனை  பண்ணினாள்.  {1Sam  1:11}

 

அவள்  கர்த்தருடைய  சந்நிதியில்  வெகுநேரம்  விண்ணப்பம்பண்ணுகிறபோது,  ஏலி<Eli>  அவள்  வாயைக்  கவனித்துக்கொண்டிருந்தான்.  {1Sam  1:12}

 

அன்னாள்<Hannah>  தன்  இருதயத்திலே  பேசினாள்;  அவளுடைய  உதடுகள்  மாத்திரம்  அசைந்தது,  அவள்  சத்தமோ  கேட்கப்படவில்லை;  ஆகையால்  அவள்  வெறித்திருக்கிறாள்  என்று  ஏலி<Eli>  நினைத்து,  {1Sam  1:13}

 

அவளை  நோக்கி:  நீ  எதுவரைக்கும்  வெறித்திருப்பாய்?  உன்  குடியை  உன்னைவிட்டு  விலக்கு  என்றான்.  {1Sam  1:14}

 

அதற்கு  அன்னாள்<Hannah>  பிரதியுத்தரமாக:  அப்படியல்ல,  என்  ஆண்டவனே,  நான்  மனக்கிலேசமுள்ள  ஸ்திரீ;  நான்  திராட்சரசமாகிலும்  மதுவாகிலும்  குடிக்கவில்லை;  நான்  கர்த்தருடைய  சந்நிதியில்  என்  இருதயத்தை  ஊற்றிவிட்டேன்.  {1Sam  1:15}

 

உம்முடைய  அடியாளைப்  பேலியாளின்<Belial>  மகளாக  எண்ணாதேயும்;  மிகுதியான  விசாரத்தினாலும்  கிலேசத்தினாலும்  இந்நேரமட்டும்  விண்ணப்பம்பண்ணினேன்  என்றாள்.  {1Sam  1:16}

 

அதற்கு  ஏலி<Eli>  சமாதானத்துடனே  போ;  நீ  இஸ்ரவேலின்<Israel>  தேவனிடத்தில்  கேட்ட  உன்  விண்ணப்பத்தின்படி  அவர்  உனக்குக்  கட்டளையிடுவாராக  என்றான்.  {1Sam  1:17}

 

அப்பொழுது  அவள்:  உம்முடைய  அடியாளுக்கு  உம்முடைய  கண்களிலே  தயைகிடைக்கக்கடவது  என்றாள்;  பின்பு  அந்த  ஸ்திரீ  புறப்பட்டுப்போய்,  போஜனஞ்செய்தாள்;  அப்புறம்  அவள்  துக்கமுகமாயிருக்கவில்லை.  {1Sam  1:18}

 

அவர்கள்  அதிகாலையில்  எழுந்து,  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  ராமாவிலிருக்கிற<Ramah>  தங்கள்  வீட்டுக்குத்  திரும்பிப்போனார்கள்;  எல்க்கானா<Elkanah>  தன்  மனைவியாகிய  அன்னாளை<Hannah>  அறிந்தான்;  கர்த்தர்  அவளை  நினைந்தருளினார்.  {1Sam  1:19}

 

சிலநாள்  சென்றபின்பு  அன்னாள்<Hannah>  கர்ப்பவதியாகி,  ஒரு  குமாரனைப்  பெற்று,  கர்த்தரிடத்தில்  அவனைக்  கேட்டேன்  என்று  சொல்லி,  அவனுக்கு  சாமுவேல்<Samuel>  என்று  பேரிட்டாள்.  {1Sam  1:20}

 

எல்க்கானா<Elkanah>  என்பவன்  கர்த்தருக்கு  வருஷாந்தரம்  செலுத்தும்  பலியையும்  தன்  பொருத்தனையையும்  செலுத்தும்படியாக,  தன்  வீட்டார்  அனைவரோடுங்கூடப்  போனான்.  {1Sam  1:21}

 

அன்னாள்<Hannah>  கூடப்போகவில்லை;  அவள்:  பிள்ளை  பால்மறந்தபின்பு,  அவன்  கர்த்தரின்  சந்நிதியிலே  காணப்படவும்,  அங்கே  எப்பொழுதும்  இருக்கவும்,  நான்  அவனைக்  கொண்டுபோய்  விடுவேன்  என்று  தன்  புருஷனிடத்தில்  சொன்னாள்.  {1Sam  1:22}

 

அப்பொழுது  அவள்  புருஷனாகிய  எல்க்கானா<Elkanah>  அவளை  நோக்கி:  நீ  உன்  இஷ்டப்படி  செய்து,  அவனைப்  பால்மறக்கப்பண்ணுமட்டும்  இரு;  கர்த்தர்  தம்முடைய  வார்த்தையைமாத்திரம்  நிறைவேற்றுவாராக  என்றான்;  அப்படியே  அந்த  ஸ்திரீ  தன்  பிள்ளையைப்  பால்  மறக்கப்பண்ணுமட்டும்  அதற்கு  முலைகொடுத்தாள்.  {1Sam  1:23}

 

அவள்  அவனைப்  பால்மறக்கப்  பண்ணினபின்பு,  மூன்று  காளைகளையும்,  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஒரு  துருத்தி  திராட்சரசத்தையும்  எடுத்துக்கொண்டு,  அவனையும்  கூட்டிக்கொண்டு,  சீலோவிலிருக்கிற<Shiloh>  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போனாள்;  பிள்ளை  இன்னும்  குழந்தையாயிருந்தது.  {1Sam  1:24}

 

அவர்கள்  ஒரு  காளையைப்  பலியிட்டு,  பிள்ளையை  ஏலியினிடத்தில்<Eli>  கொண்டுவந்து  விட்டார்கள்.  {1Sam  1:25}

 

அப்பொழுது  அவள்:  என்  ஆண்டவனே,  இங்கே  உம்மண்டையிலே  நின்று  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணின  ஸ்திரீ  நான்தான்  என்று  என்  ஆண்டவனாகிய  உம்முடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {1Sam  1:26}

 

இந்தப்  பிள்ளைக்காக  விண்ணப்பம்பண்ணினேன்;  நான்  கர்த்தரிடத்தில்  கேட்ட  என்  விண்ணப்பத்தின்படி  எனக்குக்  கட்டளையிட்டார்.  {1Sam  1:27}

 

ஆகையால்  அவன்  கர்த்தருக்கென்று  கேட்கப்பட்டபடியினால்,  அவன்  உயிரோடிருக்கும்  சகல  நாளும்  அவனைக்  கர்த்தருக்கே  ஒப்புக்கொடுக்கிறேன்  என்றாள்;  அவன்  அங்கே  கர்த்தரைப்  பணிந்துகொண்டான்.  {1Sam  1:28}

 

அப்பொழுது  அன்னாள்<Hannah>  ஜெபம்பண்ணி:  என்  இருதயம்  கர்த்தருக்குள்  களிகூருகிறது;  என்  கொம்பு  கர்த்தருக்குள்  உயர்ந்திருக்கிறது;  என்  பகைஞரின்மேல்  என்  வாய்  திறந்திருக்கிறது;  உம்முடைய  இரட்சிப்பினாலே  சந்தோஷப்படுகிறேன்.  {1Sam  2:1}

 

கர்த்தரைப்போலப்  பரிசுத்தமுள்ளவர்  இல்லை;  உம்மையல்லாமல்  வேறொருவரும்  இல்லை;  எங்கள்  தேவனைப்போல  ஒரு  கன்மலையும்  இல்லை.  {1Sam  2:2}

 

இனி  மேட்டிமையான  பேச்சைப்  பேசாதிருங்கள்;  அகந்தையான  பேச்சு  உங்கள்  வாயிலிருந்து  புறப்படவேண்டாம்;  கர்த்தர்  ஞானமுள்ள  தேவன்;  அவர்  செய்கைகள்  யதார்த்தமல்லவோ?  {1Sam  2:3}

 

பலவான்களின்  வில்  முறிந்தது;  தள்ளாடினவர்களோ  பலத்தினால்  இடைகட்டப்பட்டார்கள்.  {1Sam  2:4}

 

திருப்தியாயிருந்தவர்கள்  அப்பத்துக்காக  கூலிவேலை  செய்கிறார்கள்;  பசியாயிருந்தவர்களோ  இனிப்  பசியாயிரார்கள்;  மலடியாயிருந்தவள்  ஏழு  பெற்றாள்;  அநேகம்  பிள்ளைகளைப்  பெற்றவளோ  பலட்சயப்பட்டாள்.  {1Sam  2:5}

 

கர்த்தர்  கொல்லுகிறவரும்  உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்;  அவரே  பாதாளத்தில்  இறங்கவும்  அதிலிருந்து  ஏறவும்  பண்ணுகிறவர்.  {1Sam  2:6}

 

கர்த்தர்  தரித்திரம்  அடையச்செய்கிறவரும்,  ஐசுவரியம்  அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்;  அவர்  தாழ்த்துகிறவரும்,  உயர்த்துகிறவருமானவர்.  {1Sam  2:7}

 

அவர்  சிறியவனைப்  புழுதியிலிருந்து  எடுத்து,  எளியவனைக்  குப்பையிலிருந்து  உயர்த்துகிறார்;  அவர்களைப்  பிரபுக்களோடே  உட்காரவும்,  மகிமையுள்ள  சிங்காசனத்தைச்  சுதந்தரிக்கவும்  பண்ணுகிறார்;  பூமியின்  அஸ்திபாரங்கள்  கர்த்தருடையவைகள்;  அவரே  அவைகளின்மேல்  பூச்சக்கரத்தை  வைத்தார்.  {1Sam  2:8}

 

அவர்  தமது  பரிசுத்தவான்களின்  பாதங்களைக்  காப்பார்;  துன்மார்க்கர்  இருளிலே  மௌனமாவார்கள்;  பெலத்தினால்  ஒருவனும்  மேற்கொள்வதில்லை.  {1Sam  2:9}

 

கர்த்தரோடே  வழக்காடுகிறவர்கள்  நொறுக்கப்படுவார்கள்;  வானத்திலிருந்து  அவர்கள்மேல்  முழங்குவார்;  கர்த்தர்  பூமியின்  கடையாந்தரங்களை  நியாயந்தீர்த்து,  தாம்  ஏற்படுத்தின  ராஜாவுக்குப்  பெலன்  அளித்து,  தாம்  அபிஷேகம்  பண்ணினவரின்  கொம்பை  உயரப்பண்ணுவார்  என்று  துதித்தாள்.  {1Sam  2:10}

 

பின்பு  எல்க்கானா<Elkanah>  ராமாவிலிருக்கிற<Ramah>  தன்  வீட்டுக்குப்  போனான்;  அந்தப்  பிள்ளையோ,  ஆசாரியனாகிய  ஏலிக்கு<Eli>  முன்பாகக்  கர்த்தருக்குப்  பணிவிடை  செய்துகொண்டிருந்தான்.  {1Sam  2:11}

 

ஏலியின்<Eli>  குமாரர்  பேலியாளின்<Belial>  மக்களாயிருந்தார்கள்;  அவர்கள்  கர்த்தரை  அறியவில்லை.  {1Sam  2:12}

 

அந்த  ஆசாரியர்கள்  ஜனங்களை  நடப்பித்த  விதம்  என்னவென்றால்,  எவனாகிலும்  ஒரு  பலியைச்  செலுத்துங்காலத்தில்  இறைச்சி  வேகும்போது,  ஆசாரியனுடைய  வேலைக்காரன்  மூன்று  கூறுள்ள  ஒரு  ஆயுதத்தைத்  தன்  கையிலே  பிடித்துவந்து,  {1Sam  2:13}

 

அதினாலே,  கொப்பரையிலாவது  பானையிலாவது  சருவத்திலாவது  சட்டியிலாவது  குத்துவான்;  அந்த  ஆயுதத்தில்  வருகிறதையெல்லாம்  ஆசாரியன்  எடுத்துக்கொள்ளுவான்;  அப்படி  அங்கே  சீலோவிலே<Shiloh>  வருகிற  இஸ்ரவேலருக்கெல்லாம்<Israelites>  செய்தார்கள்.  {1Sam  2:14}

 

கொழுப்பைத்  தகனிக்கிறதற்கு  முன்னும்,  ஆசாரியனுடைய  வேலைக்காரன்  வந்து  பலியிடுகிற  மனுஷனை  நோக்கி:  ஆசாரியனுக்குப்  பொரிக்கும்படி  இறைச்சி  கொடு;  பச்சை  இறைச்சியே  அல்லாமல்,  அவித்ததை  உன்  கையிலே  வாங்குகிறதில்லை  என்பான்.  {1Sam  2:15}

 

அதற்கு  அந்த  மனுஷன்:  இன்று  செய்யவேண்டியபடி  முதலாவது  கொழுப்பைத்  தகனித்துவிடட்டும்;  பிற்பாடு  உன்  மனவிருப்பத்தின்படி  எடுத்துக்கொள்  என்று  சொன்னாலும்;  அவன்:  அப்படியல்ல,  இப்பொழுதே  கொடு,  இல்லாவிட்டால்  பலவந்தமாய்  எடுத்துக்கொள்ளுவேன்  என்பான்.  {1Sam  2:16}

 

ஆதலால்  அந்த  வாலிபரின்  பாவம்  கர்த்தருடைய  சந்நிதியில்  மிகவும்  பெரிதாயிருந்தது;  மனுஷர்  கர்த்தரின்  காணிக்கையை  வெறுப்பாய்  எண்ணினார்கள்.  {1Sam  2:17}

 

சாமுவேல்<Samuel>  என்னும்  பிள்ளையாண்டான்  சணல்நூல்  ஏபோத்தைத்<ephod>  தரித்தவனாய்க்  கர்த்தருக்கு  முன்பாகப்  பணிவிடை  செய்தான்.  {1Sam  2:18}

 

அவனுடைய  தாய்  வருஷந்தோறும்  செலுத்தும்  பலியைச்  செலுத்துகிறதற்காக,  தன்  புருஷனோடேகூட  வருகிறபோதெல்லாம்,  அவனுக்கு  ஒரு  சின்னச்  சட்டையைத்  தைத்துக்கொண்டு  வருவாள்.  {1Sam  2:19}

 

ஏலி<Eli>  எல்க்கானாவையும்<Elkanah>  அவன்  மனைவியையும்  ஆசீர்வதித்து:  இந்த  ஸ்திரீ  கர்த்தருக்கென்று  ஒப்புக்கொடுத்ததற்குப்  பதிலாகக்  கர்த்தர்  உனக்கு  அவளாலே  சந்தானம்  கட்டளையிடுவாராக  என்றான்;  அவர்கள்  தங்கள்  ஸ்தானத்திற்குத்  திரும்பப்  போய்விட்டார்கள்.  {1Sam  2:20}

 

அப்படியே  கர்த்தர்  அன்னாளைக்<Hannah>  கடாட்சித்தார்;  அவள்  கர்ப்பந்தரித்து  மூன்று  குமாரரையும்  இரண்டு  குமாரத்திகளையும்  பெற்றாள்;  சாமுவேல்<Samuel>  என்னும்  பிள்ளையாண்டான்  கர்த்தருடைய  சந்நிதியில்  வளர்ந்தான்.  {1Sam  2:21}

 

ஏலி<Eli>  மிகுந்த  கிழவனாயிருந்தான்;  அவன்  தன்  குமாரர்  இஸ்ரவேலுக்கெல்லாம்<Israel>  செய்கிற  எல்லாவற்றையும்,  அவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  வாசலில்  கூட்டங்கூடுகிற  ஸ்திரீகளோடே  சயனிக்கிறதையும்  கேள்விப்பட்டு,  {1Sam  2:22}

 

அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படிப்பட்ட  காரியங்களைச்  செய்கிறது  என்ன?  இந்த  ஜனங்கள்  எல்லாரும்  உங்கள்  பொல்லாத  நடக்கைகளைச்  சொல்லக்கேட்கிறேன்.  {1Sam  2:23}

 

என்  குமாரரே,  வேண்டாம்;  நான்  கேள்விப்படுகிற  இந்தச்  செய்தி  நல்லதல்ல;  கர்த்தருடைய  ஜனங்கள்  மீறி  நடக்கிறதற்குக்  காரணமாயிருக்கிறீர்களே.  {1Sam  2:24}

 

மனுஷனுக்கு  விரோதமாக  மனுஷன்  பாவஞ்செய்தால்,  நியாயாதிபதிகள்  அதைத்  தீர்ப்பார்கள்;  ஒருவன்  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்வானேயாகில்,  அவனுக்காக  விண்ணப்பஞ்செய்யத்தக்கவன்  யார்  என்றான்;  அவர்களோ  தங்கள்  தகப்பன்  சொல்லைக்  கேளாமற்போனார்கள்;  அவர்களைச்  சங்கரிக்கக்  கர்த்தர்  சித்தமாயிருந்தார்.  {1Sam  2:25}

 

சாமுவேல்<Samuel>  என்னும்  பிள்ளையாண்டானோ,  பெரியவனாக  வளர்ந்து,  கர்த்தருக்கும்  மனுஷருக்கும்  பிரியமாக  நடந்துகொண்டான்.  {1Sam  2:26}

 

தேவனுடைய  மனுஷன்  ஒருவன்  ஏலியினிடத்தில்<Eli>  வந்து:  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  உன்  பிதாவின்  வீட்டார்  எகிப்திலே<Egypt>  பார்வோனின்<Pharaoh>  வீட்டில்  இருக்கையில்,  நான்  என்னை  அவர்களுக்கு  வெளிப்படுத்தி,  {1Sam  2:27}

 

என்  பலிபீடத்தின்மேல்  பலியிடவும்,  தூபங்காட்டவும்,  என்  சமுகத்தில்  ஏபோத்தைத்<ephod>  தரிக்கவும்,  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களிலெல்லாம்  அவனை  எனக்கு  ஆசாரியனாகத்  தெரிந்துகொண்டு,  உன்  பிதாவின்  வீட்டாருக்கு  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  தகனபலிகளையெல்லாம்  கொடுக்கவில்லையா?  {1Sam  2:28}

 

என்  வாசஸ்தலத்திலே  செலுத்தும்படி  நான்  கட்டளையிட்ட  என்  பலியையும்,  என்  காணிக்கையையும்,  நீங்கள்  உதைப்பானேன்?  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்<Israel>  காணிக்கைகளிலெல்லாம்  பிரதானமானவைகளைக்  கொண்டு  உங்களைக்  கொழுக்கப்பண்ணும்படிக்கு,  நீ  என்னைப்பார்க்கிலும்  உன்  குமாரரை  மதிப்பானேன்  என்கிறார்.  {1Sam  2:29}

 

ஆகையால்  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  உன்  வீட்டாரும்  உன்  பிதாவின்  வீட்டாரும்  என்றைக்கும்  என்  சந்நிதியில்  நடந்து  கொள்வார்கள்  என்று  நான்  நிச்சயமாய்ச்  சொல்லியிருந்தும்,  இனி  அது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  என்னைக்  கனம்பண்ணுகிறவர்களை  நான்  கனம்  பண்ணுவேன்;  என்னை  அசட்டைபண்ணுகிறவர்கள்  கனஈனப்படுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {1Sam  2:30}

 

உன்  வீட்டில்  ஒரு  கிழவனும்  இராதபடிக்கு  உன்  புயத்தையும்  உன்  பிதாவின்  வீட்டாருடைய  புயத்தையும்  நான்  தறித்துப்போடும்  நாட்கள்  வரும்.  {1Sam  2:31}

 

இஸ்ரவேலுக்குச்<Israel>  செய்யப்படும்  சகல  நன்மைக்கும்  மாறாக  என்  வாசஸ்தலத்திலே  உபத்திரவத்தைக்  காண்பாய்;  ஒருபோதும்  உன்  வீட்டில்  ஒரு  கிழவனும்  இருப்பதில்லை.  {1Sam  2:32}

 

என்  பலிபீடத்தில்  சேவிக்க,  நான்  உன்  சந்ததியில்  நிர்மூலமாக்காதவர்களோ,  உன்  கண்களைப்  பூத்துப்போகப்பண்ணவும்,  உன்  ஆத்துமாவை  வேதனைப்படுத்தவும்  வைக்கப்படுவார்கள்;  உன்  வம்சத்திலுள்ள  யாவரும்  வாலவயதிலே  சாவார்கள்.  {1Sam  2:33}

 

ஓப்னி<Hophni>  பினெகாஸ்<Phinehas>  என்னும்  உன்  இரண்டு  குமாரரின்மேல்  வருவதே  உனக்கு  அடையாளமாயிருக்கும்;  அவர்கள்  இருவரும்  ஒரேநாளில்  சாவார்கள்.  {1Sam  2:34}

 

நான்  என்  உள்ளத்துக்கும்  என்  சித்தத்துக்கும்  ஏற்றபடி  செய்யத்தக்க  உண்மையான  ஒரு  ஆசாரியனை  எழும்பப்பண்ணி,  அவனுக்கு  நிலையான  வீட்டைக்  கட்டுவேன்;  அவன்  என்னால்  அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு  முன்பாகச்  சகல  நாளும்  நடந்துகொள்ளுவான்.  {1Sam  2:35}

 

அப்பொழுது  உன்  வீட்டாரில்  மீதியாயிருப்பவன்  எவனும்  ஒரு  வெள்ளிப்பணத்துக்காகவும்  ஒரு  அப்பத்துணிக்கைக்காகவும்  அவனிடத்தில்  வந்து  பணிந்து:  நான்  கொஞ்சம்  அப்பம்  சாப்பிட  யாதொரு  ஆசாரிய  ஊழியத்தில்  என்னைச்  சேர்த்துக்கொள்ளும்  என்று  கெஞ்சுவான்  என்று  சொல்லுகிறார்  என்றான்.  {1Sam  2:36}

 

சாமுவேல்<Samuel>  என்னும்  பிள்ளையாண்டான்  ஏலிக்கு<Eli>  முன்பாகக்  கர்த்தருக்குப்  பணிவிடை  செய்துகொண்டிருந்தான்;  அந்நாட்களிலே  கர்த்தருடைய  வசனம்  அபூர்வமாயிருந்தது;  பிரத்தியட்சமான  தரிசனம்  இருந்ததில்லை.  {1Sam  3:1}

 

ஒருநாள்  ஏலி<Eli>  தன்னுடைய  ஸ்தானத்திலே  படுத்துக்கொண்டிருந்தான்;  அவன்  பார்க்கக்கூடாதபடிக்கு  அவனுடைய  கண்கள்  இருளடைந்திருந்தது.  {1Sam  3:2}

 

தேவனுடைய  பெட்டி  இருக்கிற  கர்த்தருடைய  ஆலயத்தில்  தேவனுடைய  விளக்கு  அணைந்துபோகுமுன்னே  சாமுவேலும்<Samuel>  படுத்துக்கொண்டிருந்தான்.  {1Sam  3:3}

 

அப்பொழுது  கர்த்தர்,  சாமுவேலைக்<Samuel>  கூப்பிட்டார்.  அதற்கு  அவன்:  இதோ,  இருக்கிறேன்  என்று  சொல்லி,  {1Sam  3:4}

 

ஏலியினிடத்தில்<Eli>  ஓடி,  இதோ,  இருக்கிறேன்;  என்னைக்  கூப்பிட்டீரே  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  கூப்பிடவில்லை,  திரும்பிப்போய்ப்  படுத்துக்கொள்  என்றான்;  அவன்  போய்ப்  படுத்துக்கொண்டான்.  {1Sam  3:5}

 

மறுபடியும்  கர்த்தர்  சாமுவேலே<Samuel>  என்று  கூப்பிட்டார்;  அப்பொழுது  சாமுவேல்<Samuel>  எழுந்திருந்து  ஏலியினிடத்தில்<Eli>  போய்:  இதோ,  இருக்கிறேன்;  என்னைக்  கூப்பிட்டீரே  என்றான்.  அதற்கு  அவன்:  என்  மகனே,  நான்  உன்னைக்  கூப்பிடவில்லை,  திரும்பிப்போய்ப்  படுத்துக்கொள்  என்றான்.  {1Sam  3:6}

 

சாமுவேல்<Samuel>  கர்த்தரை  இன்னும்  அறியாதிருந்தான்;  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  இன்னும்  வெளிப்படவில்லை.  {1Sam  3:7}

 

கர்த்தர்  மறுபடியும்  மூன்றாம்விசை:  சாமுவேலே<Samuel>  என்று  கூப்பிட்டார்.  அவன்  எழுந்திருந்து  ஏலியினிடத்தில்<Eli>  போய்,  இதோ,  இருக்கிறேன்;  என்னைக்  கூப்பிட்டீரே  என்றான்.  அப்பொழுது  கர்த்தர்  பிள்ளையாண்டானைக்  கூப்பிடுகிறார்  என்று  ஏலி<Eli>  அறிந்து,  {1Sam  3:8}

 

சாமுவேலை<Samuel>  நோக்கி:  நீ  போய்ப்  படுத்துக்கொள்;  உன்னைக்  கூப்பிட்டால்,  அப்பொழுது  நீ:  கர்த்தாவே  சொல்லும்;  அடியேன்  கேட்கிறேன்  என்று  சொல்  என்றான்;  சாமுவேல்<Samuel>  போய்,  தன்னுடைய  ஸ்தானத்திலே  படுத்துக்கொண்டான்.  {1Sam  3:9}

 

அப்பொழுது  கர்த்தர்  வந்து  நின்று,  முன்போல:  சாமுவேலே<Samuel>  சாமுவேலே<Samuel>  என்று  கூப்பிட்டார்;  அதற்குச்  சாமுவேல்<Samuel>:  சொல்லும்;  அடியேன்  கேட்கிறேன்  என்றான்.  {1Sam  3:10}

 

கர்த்தர்  சாமுவேலை<Samuel>  நோக்கி:  இதோ,  நான்  இஸ்ரவேலில்<Israel>  ஒரு  காரியத்தைச்  செய்வேன்;  அதைக்  கேட்கிற  ஒவ்வொருவனுடைய  இரண்டு  காதுகளிலும்  அது  தொனித்துக்கொண்டிருக்கும்.  {1Sam  3:11}

 

நான்  ஏலியின்<Eli>  குடும்பத்திற்கு  விரோதமாகச்  சொன்ன  யாவையும்,  அவன்மேல்  அந்நாளிலே  வரப்பண்ணுவேன்;  அதைத்  தொடங்கவும்  அதை  முடிக்கவும்  போகிறேன்.  {1Sam  3:12}

 

அவன்  குமாரர்  தங்கள்மேல்  சாபத்தை  வரப்பண்ணுகிறதை  அவன்  அறிந்திருந்தும்,  அவர்களை  அடக்காமற்போன  பாவத்தினிமித்தம்,  நான்  அவன்  குடும்பத்துக்கு  என்றும்  நீங்காத  நியாயத்தீர்ப்புச்  செய்வேன்  என்று  அவனுக்கு  அறிவித்தேன்.  {1Sam  3:13}

 

அதினிமித்தம்  ஏலியின்<Eli>  குடும்பத்தார்  செய்த  அக்கிரமம்  ஒருபோதும்  பலியினாலாவது  காணிக்கையினாலாவது  நிவிர்த்தியாவதில்லை  என்று  ஏலியின்<Eli>  குடும்பத்தைக்குறித்து  ஆணையிட்டிருக்கிறேன்  என்றார்.  {1Sam  3:14}

 

சாமுவேல்<Samuel>  விடியற்காலமட்டும்  படுத்திருந்து,  கர்த்தருடைய  ஆலயத்தின்  கதவுகளைத்  திறந்தான்;  சாமுவேல்<Samuel>  ஏலிக்கு<Eli>  அந்தத்  தரிசனத்தை  அறிவிக்கப்  பயந்தான்.  {1Sam  3:15}

 

ஏலியோ<Eli>:  சாமுவேலே<Samuel>,  என்  மகனே  என்று  சாமுவேலைக்<Samuel>  கூப்பிட்டான்.  அவன்:  இதோ,  இருக்கிறேன்  என்றான்.  {1Sam  3:16}

 

அப்பொழுது  அவன்:  கர்த்தர்  உன்னிடத்தில்  சொன்ன  காரியம்  என்ன?  எனக்கு  அதை  மறைக்கவேண்டாம்;  அவர்  உன்னிடத்தில்  சொன்ன  சகல  காரியத்திலும்  யாதொன்றை  எனக்கு  மறைத்தாயானால்,  தேவன்  உனக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்வாராக  என்றான்.  {1Sam  3:17}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  ஒன்றையும்  அவனுக்கு  மறைக்காமல்,  அந்தக்  காரியங்களையெல்லாம்  அவனுக்கு  அறிவித்தான்.  அதற்கு  அவன்:  அவர்  கர்த்தர்;  அவர்  தமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்வாராக  என்றான்.  {1Sam  3:18}

 

சாமுவேல்<Samuel>  வளர்ந்தான்;  கர்த்தர்  அவனுடனேகூட  இருந்தார்;  அவர்  தம்முடைய  எல்லா  வார்த்தைகளிலும்  ஒன்றையாகிலும்  தரையிலே  விழுந்துபோக  விடவில்லை.  {1Sam  3:19}

 

சாமுவேல்<Samuel>  கர்த்தருடைய  தீர்க்கதரிசிதான்  என்று  தாண்முதல்<Dan>  பெயெர்செபாமட்டுமுள்ள<Beersheba>  சகல  இஸ்ரவேலருக்கும்<Israel>  விளங்கினது.  {1Sam  3:20}

 

கர்த்தர்  பின்னும்  சீலோவிலே<Shiloh>  தரிசனம்  தந்தருளினார்;  கர்த்தர்  சீலோவிலே<Shiloh>  தம்முடைய  வார்த்தையினாலே  சாமுவேலுக்குத்<Samuel>  தம்மை  வெளிப்படுத்தினார்.  {1Sam  3:21}

 

சாமுவேலின்<Samuel>  வார்த்தை  இஸ்ரவேலுக்கெல்லாம்<Israel>  வந்தது.  இஸ்ரவேலர்<Israel>  பெலிஸ்தருக்கு<Philistines>  விரோதமாய்  யுத்தஞ்  செய்யப்புறப்பட்டு,  எபெனேசருக்குச்<Ebenezer>  சமீபத்தில்  பாளயமிறங்கினார்கள்;  பெலிஸ்தரோ<Philistines>  ஆப்பெக்கிலே<Aphek>  பாளயமிறங்கியிருந்தார்கள்.  {1Sam  4:1}

 

பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேலருக்கு<Israel>  விரோதமாய்  அணிவகுத்து  நின்றார்கள்;  யுத்தம்  அதிகரித்து,  இஸ்ரவேலர்<Israel>  பெலிஸ்தருக்கு<Philistines>  முன்பாக  முறிய  அடிக்கப்பட்டார்கள்;  அவர்கள்  சேனையில்  போர்க்களத்திலே  ஏறக்குறைய  நாலாயிரம்பேர்  வெட்டுண்டுபோனார்கள்.  {1Sam  4:2}

 

ஜனங்கள்  திரும்பப்  பாளயத்துக்கு  வந்தபோது,  இஸ்ரவேலின்<Israel>  மூப்பரானவர்கள்,  இன்று  கர்த்தர்  பெலிஸ்தருக்கு<Philistines>  முன்பாக  நம்மை  முறிய  அடித்ததென்ன?  சீலோவிலிருக்கிற<Shiloh>  கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டியைக்  கொண்டுவருவோம்;  அது  நம்மை  நம்முடைய  பகைஞரின்  கைக்கு  விலக்கி  ரட்சிக்கும்படி,  நம்முடைய  நடுவிலே  வரவேண்டியது  என்றார்கள்.  {1Sam  4:3}

 

அப்படியே  கேருபீன்களின்<cherubims>  மத்தியிலே  வாசமாயிருக்கிற  சேனைகளின்  கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டியை  எடுத்துவர,  ஜனங்கள்  சீலோவுக்குச்<Shiloh>  சொல்லியனுப்பினார்கள்;  அங்கே  ஏலியின்<Eli>  இரண்டு  குமாரராகிய  ஓப்னியும்<Hophni>  பினெகாசும்<Phinehas>  தேவனுடைய  உடன்படிக்கைப்  பெட்டியண்டையில்  இருந்தார்கள்.  {1Sam  4:4}

 

கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டி  பாளயத்திலே  வருகிறபோது,  இஸ்ரவேலரெல்லாரும்<Israel>  பூமி  அதிரத்தக்கதாக  மகா  ஆர்ப்பரிப்பாய்ச்  சத்தமிட்டார்கள்.  {1Sam  4:5}

 

அவர்கள்  ஆர்ப்பரிக்கிற  சத்தத்தைப்  பெலிஸ்தர்<Philistines>  கேட்டபோது:  எபிரெயருடைய<Hebrews>  பாளயத்தில்  இந்த  மகா  ஆர்ப்பரிப்பின்  சத்தம்  என்ன  என்றார்கள்;  பின்பு  கர்த்தரின்  பெட்டி  பாளயத்தில்  வந்தது  என்று  அறிந்துகொண்டார்கள்.  {1Sam  4:6}

 

தேவன்  பாளயத்தில்  வந்தார்  என்று  சொல்லப்பட்டபடியினால்,  பெலிஸ்தர்<Philistines>  பயந்து,  ஐயோ,  நமக்கு  மோசம்  வந்தது;  இதற்குமுன்  ஒருபோதும்  இப்படி  நடக்கவில்லையே.  {1Sam  4:7}

 

ஐயோ,  அந்த  மகத்துவமான  தேவர்களின்  கைக்கு  நம்மைத்  தப்புவிப்பவர்  யார்?  எகிப்தியரைச்<Egyptians>  சகலவித  வாதைகளினாலும்  வனாந்தரத்திலே  அடித்த  தேவர்கள்  இவர்கள்தானே.  {1Sam  4:8}

 

பெலிஸ்தரே<Philistines>,  திடங்கொண்டு  புருஷரைப்போல  நடந்துகொள்ளுங்கள்;  எபிரெயர்<Hebrews>  உங்களுக்கு  அடிமைகளாயிருந்ததுபோல,  நீங்களும்  அவர்களுக்கு  அடிமைகளாகாதபடிக்கு,  புருஷராயிருந்து,  யுத்தம்பண்ணுங்கள்  என்று  சொல்லிக்கொண்டார்கள்.  {1Sam  4:9}

 

அப்பொழுது  பெலிஸ்தர்<Philistines>  யுத்தம்பண்ணினார்கள்;  இஸ்ரவேலர்<Israel>  முறிந்து,  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்;  மகா  பெரிய  சங்காரம்  உண்டாயிற்று;  இஸ்ரவேலிலே<Israel>  முப்பதினாயிரம்  காலாட்கள்  விழுந்தார்கள்.  {1Sam  4:10}

 

தேவனுடைய  பெட்டி  பிடிக்கப்பட்டது;  ஏலியின்<Eli>  இரண்டு  குமாரராகிய  ஓப்னியும்<Hophni>  பினெகாசும்<Phinehas>  மாண்டார்கள்.  {1Sam  4:11}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தானாகிய  ஒருவன்  படையிலிருந்து  ஓடி,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்து,  தன்  தலையின்மேல்  புழுதியை  வாரிப்  போட்டுக்கொண்டு,  அன்றையதினமே  சீலோவுக்கு<Shiloh>  வந்தான்.  {1Sam  4:12}

 

அவன்  வந்தபோது:  ஏலி<Eli>  ஒரு  ஆசனத்தின்மேல்  உட்கார்ந்து  வழியைப்  பார்த்துக்கொண்டிருந்தான்;  தேவனுடைய  பெட்டிக்காக  அவன்  இருதயம்  தத்தளித்துக்கொண்டிருந்தது.  ஊரிலே  செய்தியை  அறிவிக்க  அந்த  மனுஷன்  வந்தபோது,  ஊரெங்கும்  புலம்பல்  உண்டாயிற்று.  {1Sam  4:13}

 

புலம்புகிற  இந்தச்  சத்தத்தை  ஏலி<Eli>  கேட்டபோது:  இந்த  அமளியின்  இரைச்சல்  என்ன  என்று  கேட்டான்;  அப்பொழுது  அந்த  மனுஷன்  தீவிரித்து  வந்து,  ஏலிக்கு<Eli>  அறிவித்தான்.  {1Sam  4:14}

 

ஏலி<Eli>  தொண்ணூற்றெட்டு  வயதுள்ளவனாயிருந்தான்;  அவன்  பார்க்கக்கூடாதபடிக்கு,  அவன்  கண்கள்  மங்கலாயிருந்தது.  {1Sam  4:15}

 

அந்த  மனுஷன்  ஏலியைப்<Eli>  பார்த்து:  படையிலிருந்து  வந்தவன்  நான்தான்;  இன்று  தான்  படையிலிருந்து  ஓடிவந்தேன்  என்றான்.  அப்பொழுது  அவன்:  என்  மகனே,  நடந்த  காரியம்  என்ன  என்று  கேட்டான்.  {1Sam  4:16}

 

செய்தி  கொண்டுவந்தவன்  பிரதியுத்தரமாக:  இஸ்ரவேலர்<Israel>  பெலிஸ்தருக்கு<Philistines>  முன்பாக  முறிந்தோடிப்போனார்கள்;  ஜனங்களுக்குள்ளே  பெரிய  சங்காரம்  உண்டாயிற்று;  உம்முடைய  குமாரராகிய  ஓப்னி<Hophni>  பினெகாஸ்<Phinehas>  என்னும்  இருவரும்  இறந்துபோனார்கள்;  தேவனுடைய  பெட்டியும்  பிடிபட்டுப்போயிற்று  என்றான்.  {1Sam  4:17}

 

அவன்  தேவனுடைய  பெட்டியைக்  குறித்துச்  சொன்னவுடனே,  ஏலி<Eli>  ஆசனத்திலிருந்து  வாசலின்  பக்கமாய்  மல்லாக்க  விழுந்தான்;  அவன்  கிழவனும்  ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால்,  அவன்  பிடரி  முறிந்து  செத்துப்போனான்.  அவன்  இஸ்ரவேலை<Israel>  நாற்பது  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  {1Sam  4:18}

 

பினெகாசின்<Phinehas>  மனைவியாகிய  அவன்  மருமகள்  நிறைகர்ப்பிணியாயிருந்தாள்;  அவள்  தேவனுடைய  பெட்டி  பிடிபட்ட  செய்தியையும்,  தன்  மாமனும்  தன்  புருஷனும்  இறந்து  போனதையும்  கேள்விப்பட்டபோது,  அவள்  கர்ப்பவேதனைப்பட்டு  குனிந்து  பிரசவித்தாள்.  {1Sam  4:19}

 

அவள்  சாகப்போகிற  நேரத்தில்  அவளண்டையிலே  நின்ற  ஸ்திரீகள்:  நீ  பயப்படாதே,  ஆண்பிள்ளையைப்  பெற்றாய்  என்றார்கள்;  அவளோ  அதற்கு  ஒன்றும்  சொல்லவுமில்லை,  அதின்மேல்  சிந்தைவைக்கவுமில்லை.  {1Sam  4:20}

 

தேவனுடைய  பெட்டி  பிடிபட்டு,  அவளுடைய  மாமனும்  அவளுடைய  புருஷனும்  இறந்துபோனபடியினால்,  அவள்:  மகிமை  இஸ்ரவேலை<Israel>  விட்டுப்போயிற்று  என்று  சொல்லி,  அந்தப்  பிள்ளைக்கு  இக்கபோத்<Ichabod>  என்று  பேரிட்டாள்.  {1Sam  4:21}

 

தேவனுடைய  பெட்டி  பிடிபட்டுப்  போனபடியினால்,  மகிமை  இஸ்ரவேலை<Israel>  விட்டு  விலகிப்போயிற்று  என்றாள்.  {1Sam  4:22}

 

பெலிஸ்தர்<Philistines>  தேவனுடைய  பெட்டியைப்  பிடித்து,  அதை  எபெனேசரிலிருந்து<Ebenezer>  அஸ்தோத்திற்குக்<Ashdod>  கொண்டுபோனார்கள்.  {1Sam  5:1}

 

பெலிஸ்தர்<Philistines>  தேவனுடைய  பெட்டியைப்  பிடித்து,  தாகோனின்<Dagon>  கோவிலிலே  கொண்டுவந்து,  தாகோனண்டையிலே<Dagon>  வைத்தார்கள்.  {1Sam  5:2}

 

அஸ்தோத்<Ashdod>  ஊரார்  மறுநாள்  காலமே  எழுந்திருந்து  வந்தபோது,  இதோ,  தாகோன்<Dagon>  கர்த்தருடைய  பெட்டிக்கு  முன்பாகத்  தரையிலே  முகங்குப்புற  விழுந்துகிடந்தது;  அப்பொழுது  அவர்கள்  தாகோனை<Dagon>  எடுத்து,  அதை  அதின்  ஸ்தானத்திலே  திரும்பவும்  நிறுத்தினார்கள்.  {1Sam  5:3}

 

அவர்கள்  மறுநாள்  காலமே  எழுந்திருந்து  வந்தபோது,  இதோ,  தாகோன்<Dagon>  கர்த்தருடைய  பெட்டிக்கு  முன்பாகத்  தரையிலே  முகங்குப்புற  விழுந்துகிடந்ததுமல்லாமல்,  தாகோனின்<Dagon>  தலையும்  அதின்  இரண்டு  கைகளும்  வாசற்படியின்மேல்  உடைபட்டுக்  கிடந்தது;  தாகோனுக்கு<Dagon>  உடல்மாத்திரம்  மீதியாயிருந்தது.  {1Sam  5:4}

 

ஆதலால்  இந்நாள்வரைக்கும்  தாகோனின்<Dagon>  பூஜாசாரிகளும்  தாகோனின்<Dagon>  கோவிலுக்குள்  பிரவேசிக்கிற  யாவரும்  அஸ்தோத்திலிருக்கிற<Ashdod>  தாகோனுடைய<Dagon>  வாசற்படியை  மிதிக்கிறதில்லை.  {1Sam  5:5}

 

அஸ்தோத்<Ashdod>  ஊராரைப்  பாழாக்கும்படிக்கு  கர்த்தருடைய  கை  அவர்கள்மேல்  பாரமாயிருந்தது;  அவர்  அஸ்தோத்தின்<Ashdod>  ஜனங்களையும்,  அதின்  எல்லைகளுக்குள்  இருக்கிறவர்களையும்  மூலவியாதியினால்  வாதித்தார்.  {1Sam  5:6}

 

இப்படி  நடந்ததை  அஸ்தோத்தின்<Ashdod>  ஜனங்கள்  கண்டபோது:  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  கை  நமதுமேலும்,  நம்முடைய  தேவனாகிய  தாகோனின்மேலும்<Dagon>  கடினமாயிருக்கிறபடியால்,  அவருடைய  பெட்டி  நம்மிடத்தில்  இருக்கலாகாது  என்று  சொல்லி;  {1Sam  5:7}

 

பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகளையெல்லாம்  அழைப்பித்து,  தங்களண்டையிலே  கூடிவரச்  செய்து:  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  பெட்டியை  நாம்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டார்கள்.  அவர்கள்:  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  பெட்டியை  காத்பட்டணமட்டும்<Gath>  எடுத்துச்  சுற்றிக்கொண்டு  போகவேண்டும்  என்றார்கள்;  அப்படியே  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  பெட்டியை  எடுத்துச்  சுற்றிக்கொண்டுபோனார்கள்.  {1Sam  5:8}

 

அதை  எடுத்துச்  சுற்றிக்கொண்டு  போனபின்பு,  கர்த்தருடைய  கை  அந்தப்  பட்டணத்தின்மேல்  மகா  உக்கிரமாக  இறங்கிற்று;  அந்தப்  பட்டணத்தின்  மனுஷருக்குள்,  சிறியவர்துவக்கிப்  பெரியவர்மட்டும்,  மூலவியாதியை  உண்டாக்கி,  அவர்களை  வாதித்தார்.  {1Sam  5:9}

 

அதினால்  அவர்கள்  தேவனுடைய  பெட்டியை  எக்ரோனுக்கு<Ekron>  அனுப்பினார்கள்;  தேவனுடைய  பெட்டி  எக்ரோனுக்கு<Ekron>  வருகிறபோது,  எக்ரோன்<Ekronites>  ஊரார்:  எங்களையும்  எங்கள்  ஜனங்களையும்  கொன்றுபோட,  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  பெட்டியை  எடுத்து,  எங்களண்டைக்குச்  சுற்றிக்கொண்டு  வந்தார்கள்  என்று  கூக்குரலிட்டார்கள்.  {1Sam  5:10}

 

அவர்கள்  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகளையெல்லாம்  கூடிவரும்படி  அழைத்து:  இஸ்ரவேலின்<Israel>  தேவன்  எங்களையும்  எங்கள்  ஜனங்களையும்  கொன்றுபோடாதபடிக்கு,  அவருடைய  பெட்டியை  அதின்  ஸ்தானத்திற்குத்  திரும்ப  அனுப்பிவிடுங்கள்  என்றார்கள்;  அந்தப்  பட்டணமெங்கும்  சாவு  மும்முரமாயிருந்தது;  தேவனுடைய  கை  அங்கே  மகா  பாரமாயிருந்தது.  {1Sam  5:11}

 

செத்துப்போகாதிருந்தவர்கள்  மூலவியாதியினால்  வாதிக்கப்பட்டதினால்,  அந்தப்  பட்டணத்தின்  கூக்குரல்  வானபரியந்தம்  எழும்பிற்று.  {1Sam  5:12}

 

கர்த்தருடைய  பெட்டி  பெலிஸ்தரின்<Philistines>  தேசத்தில்  ஏழுமாதம்  இருந்தது.  {1Sam  6:1}

 

பின்பு  பெலிஸ்தர்<Philistines>  பூஜாசாரிகளையும்  குறிசொல்லுகிறவர்களையும்  அழைப்பித்து:  கர்த்தருடைய  பெட்டியைப்பற்றி  நாங்கள்  என்ன  செய்யவேண்டும்?  அதை  நாங்கள்  எவ்விதமாய்  அதின்  ஸ்தானத்திற்கு  அனுப்பிவிடலாம்  என்று  எங்களுக்குச்  சொல்லுங்கள்  என்றார்கள்.  {1Sam  6:2}

 

அதற்கு  அவர்கள்:  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  பெட்டியை  நீங்கள்  அனுப்பினால்,  அதை  வெறுமையாய்  அனுப்பாமல்,  குற்றநிவாரண  காணிக்கையை  எவ்விதத்திலும்  அவருக்குச்  செலுத்தவேண்டும்;  அப்பொழுது  நீங்கள்  சொஸ்தமடைகிறதும்  அல்லாமல்,  அவருடைய  கை  உங்களை  விடாதிருந்த  முகாந்தரம்  இன்னது  என்றும்  உங்களுக்குத்  தெரியவரும்  என்றார்கள்.  {1Sam  6:3}

 

அதற்கு  அவர்கள்:  குற்றநிவாரண  காணிக்கையாக  நாங்கள்  அவருக்கு  என்னத்தைச்  செலுத்தவேண்டுமென்று  கேட்டதற்கு,  அவர்கள்:  உங்களெல்லாருக்கும்  உங்கள்  அதிபதிகளுக்கும்  ஒரே  வாதையுண்டானபடியால்,  பெலிஸ்தருடைய<Philistines>  அதிபதிகளின்  இலக்கத்திற்குச்  சரியாக  மூலவியாதியின்  சாயலானபடி  செய்த  ஐந்து  பொன்  சுரூபங்களும்,  பொன்னால்  செய்த  ஐந்து  சுண்டெலிகளும்  செலுத்தவேண்டும்.  {1Sam  6:4}

 

ஆகையால்  உங்கள்  மூலவியாதியின்  சாயலான  சுரூபங்களையும்,  உங்கள்  தேசத்தைக்  கெடுத்துப்போட்ட  சுண்டெலிகளின்  சாயலான  சுரூபங்களையும்  நீங்கள்  உண்டுபண்ணி,  இஸ்ரவேலின்<Israel>  தேவனுக்கு  மகிமையைச்  செலுத்துங்கள்;  அப்பொழுது  ஒருவேளை  உங்கள்மேலும்,  உங்கள்  தேவர்கள்மேலும்,  உங்கள்  தேசத்தின்மேலும்  இறங்கியிருக்கிற  அவருடைய  கை  உங்களை  விட்டு  விலகும்.  {1Sam  6:5}

 

எகிப்தியரும்<Egyptians>  பார்வோனும்<Pharaoh>  தங்கள்  இருதயத்தைக்  கடினப்படுத்தினதுபோல,  நீங்கள்  உங்கள்  இருதயத்தைக்  கடினப்படுத்துவானேன்?  அவர்களை  அவர்  தீங்காய்  வாதித்தபின்பு,  ஜனங்களை  அவர்கள்  அனுப்பிவிட்டதும்,  அவர்கள்  போய்விட்டதும்  இல்லையோ?  {1Sam  6:6}

 

இப்போதும்  நீங்கள்  ஒரு  புதுவண்டில்  செய்து,  நுகம்  பூட்டாதிருக்கிற  இரண்டு  கறவைப்பசுக்களைப்  பிடித்து,  அவைகளை  வண்டிலிலே  கட்டி,  அவைகளின்  கன்றுக்குட்டிகளை  அவைகளுக்குப்  பின்னாகப்  போகவிடாமல்,  வீட்டிலே  கொண்டுவந்து  விட்டு,  {1Sam  6:7}

 

பின்பு  கர்த்தருடைய  பெட்டியை  எடுத்து,  அதை  வண்டிலின்மேல்  வைத்து,  நீங்கள்  குற்றநிவாரணகாணிக்கையாக  அவருக்குச்  செலுத்தும்  பொன்னுருப்படிகளை  அதின்  பக்கத்தில்  ஒரு  சிறிய  பெட்டியிலே  வைத்து,  அதை  அனுப்பிவிடுங்கள்.  {1Sam  6:8}

 

அப்பொழுது  பாருங்கள்;  அது  தன்  எல்லைக்குப்  போகிறவழியாய்ப்  பெத்ஷிமேசுக்குப்<Bethshemesh>  போனால்,  இந்தப்  பெரிய  தீங்கை  நமக்குச்  செய்தவர்  அவர்தாமே  என்று  அறியலாம்;  போகாதிருந்தால்,  அவருடைய  கை  நம்மைத்  தொடாமல்,  அது  தற்செயலாய்  நமக்கு  நேரிட்டது  என்று  அறிந்துகொள்ளலாம்  என்றார்கள்.  {1Sam  6:9}

 

அந்த  மனுஷர்  அப்படியே  செய்து,  இரண்டு  கறவைப்பசுக்களைக்  கொண்டுவந்து,  அவைகளை  வண்டிலிலே  கட்டி,  அவைகளின்  கன்றுக்குட்டிகளை  வீட்டிலே  அடைத்துவைத்து,  {1Sam  6:10}

 

கர்த்தருடைய  பெட்டியையும்,  பொன்னால்  செய்த  சுண்டெலிகளும்  தங்கள்  மூலவியாதியின்  சாயலான  சுரூபங்களும்  வைத்திருக்கிற  சிறிய  பெட்டியையும்,  அந்த  வண்டிலின்மேல்  வைத்தார்கள்.  {1Sam  6:11}

 

அப்பொழுது  அந்தப்  பசுக்கள்  பெத்ஷிமேசுக்குப்<Bethshemesh>  போகிற  வழியிலே  செவ்வையாய்ப்  போய்,  வலது  இடது  பக்கமாய்  விலகாமல்,  பெரும்பாதையான  நேர்வழியாகக்  கூப்பிட்டுக்கொண்டே  நடந்தது;  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகள்  பெத்ஷிமேசின்<Bethshemesh>  எல்லைமட்டும்  அவைகளின்  பிறகே  போனார்கள்.  {1Sam  6:12}

 

பெத்ஷிமேசின்<Bethshemesh>  மனுஷர்  பள்ளத்தாக்கிலே  கோதுமை  அறுப்பு  அறுத்துக்கொண்டிருந்தார்கள்;  அவர்கள்  தங்கள்  கண்களை  ஏறெடுக்கும்போது,  பெட்டியைக்  கண்டு,  அதைக்  கண்டதினால்  சந்தோஷப்பட்டார்கள்.  {1Sam  6:13}

 

அந்த  வண்டில்  பெத்ஷிமேஸ்<Bethshemite>  ஊரானாகிய  யோசுவாவின்<Joshua>  வயலில்  வந்து,  அங்கே  நின்றது;  அங்கே  ஒரு  பெரிய  கல்லிருந்தது;  அப்பொழுது  வண்டிலின்  மரங்களைப்  பிளந்து,  பசுக்களைக்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்தினார்கள்.  {1Sam  6:14}

 

லேவியர்<Levites>  கர்த்தருடைய  பெட்டியையும்,  அதனோடிருந்த  பொன்னுருப்படிகளுள்ள  சிறிய  பெட்டியையும்  இறக்கி,  அந்தப்  பெரிய  கல்லின்மேல்  வைத்தார்கள்;  பெத்ஷிமேசின்<Bethshemesh>  மனுஷர்,  அன்றையதினம்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனங்களைச்  செலுத்திப்  பலிகளை  இட்டார்கள்.  {1Sam  6:15}

 

பெலிஸ்தரின்<Philistines>  ஐந்து  அதிபதிகளும்  இவைகளைக்கண்டு,  அன்றையதினம்  எக்ரோனுக்குத்<Ekron>  திரும்பிப்போனார்கள்.  {1Sam  6:16}

 

பெலிஸ்தர்<Philistines>  குற்றநிவாரணத்திற்காக,  கர்த்தருக்குச்  செலுத்தின  மூலவியாதியின்  சாயலான  பொன்  சுரூபங்களாவன,  அஸ்தோத்திற்காக<Ashdod>  ஒன்று,  காசாவுக்காக<Gaza>  ஒன்று,  அஸ்கலோனுக்காக<Askelon>  ஒன்று,  காத்துக்காக<Gath>  ஒன்று,  எக்ரோனுக்காக<Ekron>  ஒன்று.  {1Sam  6:17}

 

பொன்னால்  செய்த  சுண்டெலிகளோவென்றால்,  அரணான  பட்டணங்கள்  துவக்கி  நாட்டிலுள்ள  கிராமங்கள்மட்டும்,  கர்த்தருடைய  பெட்டியை  வைத்த  பெரிய  கல்  இருக்கிற  ஆபேல்மட்டும்<Abel>,  ஐந்து  அதிபதிகளுக்கும்  ஆதீனமாயிருக்கிற  பெலிஸ்தருடைய<Philistines>  சகல  ஊர்களின்  இலக்கத்திற்குச்  சரியாயிருந்தது.  அந்தக்  கல்  இந்நாள்வரைக்கும்  பெத்ஷிமேஸ்<Bethshemite>  ஊரானாகிய  யோசுவாவின்<Joshua>  வயலில்  இருக்கிறது.  {1Sam  6:18}

 

ஆனாலும்  பெத்ஷிமேசின்<Bethshemesh>  மனுஷர்  கர்த்தருடைய  பெட்டிக்குள்  பார்த்தபடியினால்,  கர்த்தர்  ஜனங்களில்  ஐம்பதினாயிரத்து  எழுபதுபேரை  அடித்தார்;  அப்பொழுது  கர்த்தர்  ஜனங்களைப்  பெரிய  சங்காரமாக  அடித்ததினிமித்தம்,  ஜனங்கள்  துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.  {1Sam  6:19}

 

இந்தப்  பரிசுத்தமான  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  நிற்கத்தக்கவன்  யார்?  பெட்டி  நம்மிடத்திலிருந்து  யாரிடத்துக்குப்  போகும்  என்று  பெத்ஷிமேசின்<Bethshemesh>  மனுஷர்  சொல்லி,  {1Sam  6:20}

 

கீரியாத்யாரீமின்<Kirjathjearim>  குடிகளுக்கு  ஆட்களை  அனுப்பி:  பெலிஸ்தர்<Philistines>  கர்த்தருடைய  பெட்டியைத்  திரும்ப  அனுப்பினார்கள்;  நீங்கள்  வந்து,  அதை  உங்களிடத்துக்கு  எடுத்துக்கொண்டு  போங்கள்  என்று  சொல்லச்சொன்னார்கள்.  {1Sam  6:21}

 

அப்படியே  கீரியாத்யாரீமின்<Kirjathjearim>  மனுஷர்  வந்து,  கர்த்தருடைய  பெட்டியை  எடுத்து,  மேட்டின்மேலிருக்கிற  அபினதாபின்<Abinadab>  வீட்டிலே  கொண்டுவந்து  வைத்து,  கர்த்தருடைய  பெட்டியைக்  காக்கும்படிக்கு,  அவன்  குமாரனாகிய  எலெயாசாரைப்<Eleazar>  பரிசுத்தப்படுத்தினார்கள்.  {1Sam  7:1}

 

பெட்டி  கீரியாத்யாரீமிலே<Kirjathjearim>  அநேகநாள்  தங்கியிருந்தது;  இருபது  வருஷம்  அங்கேயே  இருந்தது;  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தாரெல்லாரும்  கர்த்தரை  நினைத்து,  புலம்பிக்கொண்டிருந்தார்கள்.  {1Sam  7:2}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தார்  யாவரையும்  நோக்கி:  நீங்கள்  உங்கள்  முழு  இருதயத்தோடும்  கர்த்தரிடத்தில்  திரும்புகிறவர்களானால்,  அந்நிய  தேவர்களையும்  அஸ்தரோத்தையும்<Ashtaroth>  உங்கள்  நடுவிலிருந்து  விலக்கி,  உங்கள்  இருதயத்தைக்  கர்த்தருக்கு  நேராக்கி,  அவர்  ஒருவருக்கே  ஆராதனைசெய்யுங்கள்;  அப்பொழுது  அவர்  உங்களைப்  பெலிஸ்தருடைய<Philistines>  கைக்கு  நீங்கலாக்கி  விடுவார்  என்றான்.  {1Sam  7:3}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பாகால்களையும்<Baalim>  அஸ்தரோத்தையும்<Ashtaroth>  விலக்கிவிட்டு,  கர்த்தர்  ஒருவருக்கே  ஆராதனைசெய்தார்கள்.  {1Sam  7:4}

 

பின்பு  சாமுவேல்<Samuel>:  நான்  உங்களுக்காகக்  கர்த்தரை  மன்றாடும்படிக்கு,  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரையும்  மிஸ்பாவிலே<Mizpeh>  கூட்டுங்கள்  என்றான்.  {1Sam  7:5}

 

அவர்கள்  அப்படியே  மிஸ்பாவிலே<Mizpeh>  கூடிவந்து  தண்ணீர்  மொண்டு,  கர்த்தருடைய  சந்நிதியில்  ஊற்றி,  அன்றையதினம்  உபவாசம்பண்ணி,  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தோம்  என்று  அங்கே  சொன்னார்கள்;  மிஸ்பாவிலே<Mizpeh>  சாமுவேல்<Samuel>  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நியாயம்  விசாரித்துக்கொண்டிருந்தான்.  {1Sam  7:6}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மிஸ்பாவிலே<Mizpeh>  கூடிவந்ததைப்  பெலிஸ்தர்<Philistines>  கேள்விப்பட்டபோது,  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகள்  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாக  எதிர்த்து  வந்தார்கள்;  அதை  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கேட்டு,  பெலிஸ்தரினிமித்தம்<Philistines>  பயப்பட்டு,  {1Sam  7:7}

 

சாமுவேலை<Samuel>  நோக்கி:  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  எங்களைப்  பெலிஸ்தரின்<Philistines>  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கும்படிக்கு,  எங்களுக்காக  அவரை  நோக்கி  ஓயாமல்  வேண்டிக்கொள்ளும்  என்றார்கள்.  {1Sam  7:8}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  பால்குடிக்கிற  ஒரு  ஆட்டுக்குட்டியைப்  பிடித்து,  அதைக்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்தி,  இஸ்ரவேலுக்காகக்<Israel>  கர்த்தரை  நோக்கி  வேண்டிக்கொண்டான்;  கர்த்தர்  அவனுக்கு  மறுமொழி  அருளிச்செய்தார்.  {1Sam  7:9}

 

சாமுவேல்<Samuel>  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்துகையில்,  பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேலின்மேல்<Israel>  யுத்தம்பண்ண  நெருங்கினார்கள்;  கர்த்தர்  மகா  பெரிய  இடிமுழக்கங்களைப்  பெலிஸ்தர்மேல்<Philistines>  அந்நாளிலே  முழங்கப்பண்ணி,  அவர்களைக்  கலங்கடித்ததினால்,  அவர்கள்  இஸ்ரவேலுக்கு<Israel>  முன்பாகப்  பட்டு  விழுந்தார்கள்.  {1Sam  7:10}

 

அப்பொழுது  இஸ்ரவேலர்<Israel>  மிஸ்பாவிலிருந்து<Mizpeh>  பெலிஸ்தரைப்<Philistines>  பின்தொடர்ந்துபோய்,  பெத்காரீம்<Bethcar>  பள்ளத்தாக்குமட்டும்  அவர்களை  முறிய  அடித்தார்கள்.  {1Sam  7:11}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  ஒரு  கல்லை  எடுத்து,  மிஸ்பாவுக்கும்<Mizpeh>  சேணுக்கும்<Shen>  நடுவாக  நிறுத்தி,  இம்மட்டும்  கர்த்தர்  எங்களுக்கு  உதவிசெய்தார்  என்று  சொல்லி,  அதற்கு  எபெனேசர்<Ebenezer>  என்று  பேரிட்டான்.  {1Sam  7:12}

 

இந்தப்பிரகாரம்  பெலிஸ்தர்<Philistines>  அப்புறம்  இஸ்ரவேலின்<Israel>  எல்லையிலே  வராதபடிக்குத்  தாழ்த்தப்பட்டார்கள்;  சாமுவேலின்<Samuel>  நாளெல்லாம்  கர்த்தருடைய  கை  பெலிஸ்தருக்கு<Philistines>  விரோதமாய்  இருந்தது.  {1Sam  7:13}

 

பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேல்<Israel>  கையிலிருந்து  பிடித்திருந்த  எக்ரோன்<Ekron>  துவக்கிக்  காத்மட்டுமுள்ள<Gath>  பட்டணங்களும்  இஸ்ரவேலுக்குத்<Israel>  திரும்பக்  கிடைத்தது;  அவைகளையும்  அவைகளின்  எல்லைகளையும்  இஸ்ரவேலர்<Israel>  பெலிஸ்தர்<Philistines>  கையிலே  இராதபடிக்கு,  விடுவித்துக்  கொண்டார்கள்;  இஸ்ரவேலுக்கும்<Israel>  எமோரியருக்கும்<Amorites>  சமாதானம்  உண்டாயிருந்தது.  {1Sam  7:14}

 

சாமுவேல்<Samuel>  உயிரோடிருந்த  நாளெல்லாம்  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்தான்.  {1Sam  7:15}

 

அவன்  வருஷாவருஷம்  புறப்பட்டு,  பெத்தேலையும்<Bethel>  கில்காலையும்<Gilgal>  மிஸ்பாவையும்<Mizpeh>  சுற்றிப்போய்,  அவ்விடங்களிலெல்லாம்  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்த  பின்பு,  {1Sam  7:16}

 

அவன்  ராமாவுக்குத்<Ramah>  திரும்பிவருவான்,  அவனுடைய  வீடு  அங்கே  இருந்தது;  அங்கே  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்து,  அவ்விடத்தில்  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டினான்.  {1Sam  7:17}

 

சாமுவேல்<Samuel>  முதிர்வயதானபோது,  தன்  குமாரரை  இஸ்ரவேலின்மேல்<Israel>  நியாயாதிபதிகளாக  வைத்தான்.  {1Sam  8:1}

 

அவனுடைய  மூத்தகுமாரனுக்குப்  பெயர்  யோவேல்<Joel>,  இளையவனுக்குப்  பெயர்  அபியா<Abiah>;  அவர்கள்  பெயெர்செபாவிலே<Beersheba>  நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.  {1Sam  8:2}

 

ஆனாலும்  அவனுடைய  குமாரர்  அவன்  வழிகளில்  நடவாமல்,  பொருளாசைக்குச்  சாய்ந்து,  பரிதானம்  வாங்கி,  நியாயத்தைப்  புரட்டினார்கள்.  {1Sam  8:3}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  மூப்பர்  எல்லாரும்  கூட்டங்கூடி,  ராமாவிலிருந்த<Ramah>  சாமுவேலினிடத்தில்<Samuel>  வந்து:  {1Sam  8:4}

 

இதோ,  நீர்  முதிர்வயதுள்ளவரானீர்;  உம்முடைய  குமாரர்  உம்முடைய  வழிகளில்  நடக்கிறதில்லை;  ஆகையால்  சகல  ஜாதிகளுக்குள்ளும்  இருக்கிறபடி,  எங்களை  நியாயம்  விசாரிக்கிறதற்கு,  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தவேண்டும்  என்றார்கள்.  {1Sam  8:5}

 

எங்களை  நியாயம்  விசாரிக்க  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தும்  என்று  அவர்கள்  சொன்ன  வார்த்தை  சாமுவேலுக்குத்<Samuel>  தகாததாய்க்  காணப்பட்டது;  ஆகையால்  சாமுவேல்<Samuel>  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்.  {1Sam  8:6}

 

அப்பொழுது  கர்த்தர்  சாமுவேலை<Samuel>  நோக்கி:  ஜனங்கள்  உன்னிடத்தில்  சொல்வதெல்லாவற்றிலும்  அவர்கள்  சொல்லைக்  கேள்;  அவர்கள்  உன்னைத்  தள்ளவில்லை,  நான்  அவர்களை  ஆளாதபடிக்கு,  என்னைத்தான்  தள்ளினார்கள்.  {1Sam  8:7}

 

நான்  அவர்களை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணின  நாள்முதல்  இந்நாள்மட்டும்  அவர்கள்  என்னைவிட்டு,  வேறே  தேவர்களைச்  சேவித்துவந்த  தங்கள்  எல்லாச்  செய்கைகளின்படியும்  செய்ததுபோல,  அவர்கள்  உனக்கும்  செய்கிறார்கள்.  {1Sam  8:8}

 

இப்போதும்  அவர்கள்  சொல்லைக்  கேள்;  ஆனாலும்  உன்  அபிப்பிராயத்தைக்  காட்டும்படி  அவர்களை  ஆளும்  ராஜாவின்  காரியம்  இன்னது  என்று  அவர்களுக்குத்  திடசாட்சியாய்த்  தெரியப்படுத்து  என்றார்.  {1Sam  8:9}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>,  ஒரு  ராஜா  வேண்டும்  என்று  தன்னிடத்தில்  கேட்ட  ஜனங்களுக்குக்  கர்த்தருடைய  வார்த்தைகளையெல்லாம்  சொல்லி:  {1Sam  8:10}

 

உங்களை  ஆளும்  ராஜாவின்  காரியம்  என்னவென்றால்,  தன்  ரதத்திற்குமுன்  ஓடும்படி  அவன்  உங்கள்  குமாரரை  எடுத்து,  தன்  ரதசாரதிகளாகவும்  தன்  குதிரைவீரராகவும்  வைத்துக்கொள்ளுவான்.  {1Sam  8:11}

 

ஆயிரம்பேருக்கும்  ஐம்பதுபேருக்கும்  தலைவராகவும்,  தன்  நிலத்தை  உழுகிறவர்களாகவும்,  தன்  விளைச்சலை  அறுக்கிறவர்களாகவும்,  தன்  யுத்தஆயுதங்களையும்  தன்  ரதங்களின்  பணிமுட்டுகளையும்  பண்ணுகிறவர்களாகவும்,  அவர்களை  வைத்துக்கொள்ளுவான்.  {1Sam  8:12}

 

உங்கள்  குமாரத்திகளைப்  பரிமளதைலம்  செய்கிறவர்களாகவும்,  சமையல்  பண்ணுகிறவர்களாகவும்,  அப்பம்  சுடுகிறவர்களாகவும்  வைத்துக்கொள்ளுவான்.  {1Sam  8:13}

 

உங்கள்  வயல்களிலும்,  உங்கள்  திராட்சத்தோட்டங்களிலும்,  உங்கள்  ஒலிவத்தோப்புகளிலும்,  நல்லவைகளை  எடுத்துக்கொண்டு,  தன்  ஊழியக்காரருக்குக்  கொடுப்பான்.  {1Sam  8:14}

 

உங்கள்  தானியத்திலும்  உங்கள்  திராட்சப்பலனிலும்  தசமபாகம்  வாங்கி,  தன்  பிரதானிகளுக்கும்  தன்  சேவகர்களுக்கும்  கொடுப்பான்.  {1Sam  8:15}

 

உங்கள்  வேலைக்காரரையும்,  உங்கள்  வேலைக்காரிகளையும்,  உங்களில்  திறமையான  வாலிபரையும்,  உங்கள்  கழுதைகளையும்  எடுத்து  தன்னுடைய  வேலைக்கு  வைத்துக்கொள்ளுவான்.  {1Sam  8:16}

 

உங்கள்  ஆடுகளிலே  பத்தில்  ஒன்று  எடுத்துக்கொள்ளுவான்;  நீங்கள்  அவனுக்கு  வேலையாட்களாவீர்கள்.  {1Sam  8:17}

 

நீங்கள்  தெரிந்துகொண்ட  உங்கள்  ராஜாவினிமித்தம்  அந்நாளிலே  முறையிடுவீர்கள்;  ஆனாலும்  கர்த்தர்  அந்நாளிலே  உங்களுக்குச்  செவிகொடுக்கமாட்டார்  என்றான்.  {1Sam  8:18}

 

ஜனங்கள்  சாமுவேலின்<Samuel>  சொல்லைக்  கேட்க  மனதில்லாமல்:  அப்படியல்ல,  எங்களுக்கு  ஒரு  ராஜா  இருக்கத்தான்  வேண்டும்.  {1Sam  8:19}

 

சகல  ஜாதிகளையும்போல  நாங்களும்  இருப்போம்;  எங்கள்  ராஜா  எங்களை  நியாயம்  விசாரித்து,  எங்களுக்கு  முன்பாகப்  புறப்பட்டு,  எங்கள்  யுத்தங்களை  நடத்தவேண்டும்  என்றார்கள்.  {1Sam  8:20}

 

சாமுவேல்<Samuel>  ஜனங்களின்  வார்த்தைகளையெல்லாம்  கேட்டு,  அவைகளைக்  கர்த்தரிடத்தில்  தெரியப்படுத்தினான்.  {1Sam  8:21}

 

கர்த்தர்  சாமுவேலை<Samuel>  நோக்கி:  நீ  அவர்கள்  சொல்லைக்  கேட்டு,  அவர்களை  ஆள  ஒரு  ராஜாவை  ஏற்படுத்து  என்றார்;  அப்பொழுது  சாமுவேல்<Samuel>  இஸ்ரவேல்<Israel>  ஜனங்களைப்  பார்த்து:  அவரவர்  தங்கள்  ஊர்களுக்குப்  போகலாம்  என்றான்.  {1Sam  8:22}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தாரில்  கீஸ்<Kish>  என்னும்  பேருள்ள  மகா  பராக்கிரமசாலியான  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  பென்யமீன்<Benjamite>  கோத்திரத்தானாகிய  அபியாவின்<Aphiah>  மகனான  பெகோராத்திற்குப்<Bechorath>  பிறந்த  சேரோரின்<Zeror>  புத்திரனாகிய  அபீயேலின்<Abiel>  குமாரன்.  {1Sam  9:1}

 

அவனுக்குச்  சவுல்<Saul>  என்னும்  பேருள்ள  சவுந்தரியமான  வாலிபனாகிய  ஒரு  குமாரன்  இருந்தான்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  அவனைப்பார்க்கிலும்  சவுந்தரியவான்  இல்லை;  எல்லா  ஜனங்களும்  அவன்  தோளுக்குக்  கீழாயிருக்கத்தக்க  உயரமுள்ளவனாயிருந்தான்.  {1Sam  9:2}

 

சவுலின்<Saul>  தகப்பனாகிய  கீசுடைய<Kish>  கழுதைகள்  காணாமற்போயிற்று;  ஆகையால்  கீஸ்<Kish>  தன்  குமாரனாகிய  சவுலை<Saul>  நோக்கி:  நீ  வேலைக்காரரில்  ஒருவனைக்  கூட்டிக்கொண்டு,  கழுதைகளைத்  தேட,  புறப்பட்டுப்போ  என்றான்.  {1Sam  9:3}

 

அப்படியே  அவன்  எப்பிராயீம்<Ephraim>  மலைகளையும்  சலீஷா<Shalisha>  நாட்டையும்  கடந்துபோனான்;  அங்கே  அவைகளைக்  காணாமல்  சாலீம்<Shalim>  நாட்டைக்கடந்தார்கள்.  அங்கேயும்  காணவில்லை;  பென்யமீன்<Benjamites>  நாட்டை  உருவக்கடந்தும்  அவைகளைக்  காணவில்லை.  {1Sam  9:4}

 

அவர்கள்  சூப்<Zuph>  என்னும்  நாட்டிற்கு  வந்தபோது,  சவுல்<Saul>  தன்னோடிருந்த  வேலைக்காரனை  நோக்கி:  என்  தகப்பன்,  கழுதைகளின்மேலுள்ள  கவலையை  விட்டு,  நமக்காகக்  கவலைப்படாதபடிக்குத்  திரும்பிப்போவோம்  வா  என்றான்.  {1Sam  9:5}

 

அதற்கு  அவன்:  இதோ,  இந்தப்  பட்டணத்திலே  தேவனுடைய  மனுஷன்  ஒருவர்  இருக்கிறார்;  அவர்  பெரியவர்;  அவர்  சொல்லுகிறதெல்லாம்  தப்பாமல்  நடக்கும்;  அங்கே  போவோம்;  ஒருவேளை  அவர்  நாம்  போகவேண்டிய  நம்முடைய  வழியை  நமக்குத்  தெரிவிப்பார்  என்றான்.  {1Sam  9:6}

 

அப்பொழுது  சவுல்<Saul>  தன்  வேலைக்காரனைப்  பார்த்து:  நாம்  போனாலும்  அந்த  மனுஷனுக்கு  என்னத்தைக்  கொண்டுபோவோம்;  நம்முடைய  பைகளில்  இருந்த  தின்பண்டங்கள்  செலவழிந்துபோயிற்று;  தேவனுடைய  மனுஷனாகிய  அவருக்குக்  கொண்டு  போகத்தக்க  காணிக்கை  நம்மிடத்தில்  ஒன்றும்  இல்லையே  என்றான்.  {1Sam  9:7}

 

அந்த  வேலைக்காரன்  பின்னும்  சவுலைப்<Saul>  பார்த்து:  இதோ,  என்  கையில்  இன்னும்  கால்சேக்கல்  வெள்ளியிருக்கிறது;  தேவனுடைய  மனுஷன்  நமக்கு  நம்முடைய  வழியை  அறிவிக்கும்படிக்கு,  அதை  அவருக்குக்  கொடுப்பேன்  என்றான்.  {1Sam  9:8}

 

முற்காலத்தில்  இஸ்ரவேலில்<Israel>  யாதொருவர்  தேவனிடத்தில்  விசாரிக்கப்போனால்,  ஞானதிருஷ்டிக்காரனிடத்திற்குப்  போவோம்  வாருங்கள்  என்பார்கள்;  இந்நாளிலே  தீர்க்கதரிசி  என்னப்படுகிறவன்  முற்காலத்தில்  ஞானதிருஷ்டிக்காரன்  என்னப்படுவான்.  {1Sam  9:9}

 

அப்பொழுது  சவுல்<Saul>  தன்  வேலைக்காரனை  நோக்கி:  நல்லகாரியம்  சொன்னாய்,  போவோம்  வா  என்றான்;  அப்படியே  தேவனுடைய  மனுஷன்  இருந்த  அந்தப்  பட்டணத்திற்குப்  போனார்கள்.  {1Sam  9:10}

 

அவர்கள்  பட்டணத்து  மேட்டின்  வழியாய்  ஏறுகிறபோது,  தண்ணீர்  எடுக்கவந்த  பெண்களைக்  கண்டு:  ஞானதிருஷ்டிக்காரன்  இங்கே  இருக்கிறாரா  என்று  அவர்களைக்  கேட்டார்கள்.  {1Sam  9:11}

 

அதற்கு  அவர்கள்:  இருக்கிறார்;  இதோ,  உங்களுக்கு  எதிரே  இருக்கிறார்;  தீவிரமாய்ப்  போங்கள்;  இன்றைக்கு  ஜனங்கள்  மேடையில்  பலியிடுகிறபடியினால்,  இன்றையதினம்  பட்டணத்திற்கு  வந்தார்.  {1Sam  9:12}

 

நீங்கள்  பட்டணத்திற்குள்  பிரவேசித்தவுடனே,  அவர்  மேடையின்மேல்  போஜனம்  பண்ணப்போகிறதற்கு  முன்னே  அவரைக்  காண்பீர்கள்;  அவர்  வருமட்டும்  ஜனங்கள்  போஜனம்  பண்ணமாட்டார்கள்;  பலியிட்டதை  அவர்  ஆசீர்வதிப்பார்;  பின்பு  அழைக்கப்பட்டவர்கள்  போஜனம்பண்ணுவார்கள்;  உடனே  போங்கள்;  இந்நேரத்திலே  அவரைக்  கண்டுகொள்ளலாம்  என்றார்கள்.  {1Sam  9:13}

 

அவர்கள்  பட்டணத்திற்குப்  போய்,  பட்டணத்தின்  நடுவே  சேர்ந்தபோது,  இதோ,  சாமுவேல்<Samuel>  மேடையின்மேல்  ஏறிப்போகிறதற்காக,  அவர்களுக்கு  எதிரே  புறப்பட்டுவந்தான்.  {1Sam  9:14}

 

சவுல்<Saul>  வர  ஒருநாளுக்கு  முன்னே  கர்த்தர்  சாமுவேலின்<Samuel>  காதுகேட்க:  {1Sam  9:15}

 

நாளை  இந்நேரத்திற்குப்  பென்யமீன்<Benjamin>  நாட்டானாகிய  ஒரு  மனுஷனை  உன்னிடத்தில்  அனுப்புவேன்;  அவனை  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்<Israel>  அதிபதியாக  அபிஷேகம்பண்ணக்கடவாய்;  அவன்  என்  ஜனத்தைப்  பெலிஸ்தரின்<Philistines>  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிப்பான்;  என்  ஜனத்தின்  முறையிடுதல்  என்னிடத்தில்  வந்து  எட்டினபடியினால்,  நான்  அவர்களைக்  கடாட்சித்தேன்  என்று  வெளிப்படுத்தியிருந்தார்.  {1Sam  9:16}

 

சாமுவேல்<Samuel>  சவுலைக்<Saul>  கண்டபோது,  கர்த்தர்  அவனிடத்தில்:  இதோ,  நான்  உனக்குச்  சொல்லியிருந்த  மனுஷன்  இவனே;  இவன்தான்  என்  ஜனத்தை  ஆளுவான்  என்றார்.  {1Sam  9:17}

 

சவுல்<Saul>  நடுவாசலிலே  சாமுவேலிடத்தில்<Samuel>  வந்து:  ஞானதிருஷ்டிக்காரன்  வீடு  எங்கே,  சொல்லும்  என்று  கேட்டான்.  {1Sam  9:18}

 

சாமுவேல்<Samuel>  சவுலுக்குப்<Saul>  பிரதியுத்தரமாக:  ஞானதிருஷ்டிக்காரன்  நான்தான்;  நீ  எனக்கு  முன்னே  மேடையின்மேல்  ஏறிப்போ;  நீங்கள்  இன்றைக்கு  என்னோடே  போஜனம்பண்ணவேண்டும்;  நாளைக்காலமே  நான்  உன்  இருதயத்தில்  உள்ளது  எல்லாவற்றையும்  உனக்கு  அறிவித்து,  உன்னை  அனுப்பிவிடுவேன்.  {1Sam  9:19}

 

மூன்றுநாளைக்கு  முன்னே  காணாமற்போன  கழுதைகளைப்பற்றிக்  கவலைப்படவேண்டாம்;  அவைகள்  அகப்பட்டது;  இதல்லாமல்  சகல  இஸ்ரவேலின்<Israel>  அபேட்சையும்  யாரை  நாடுகிறது?  உன்னையும்  உன்  வீட்டார்  அனைவரையும்  அல்லவா?  என்றான்.  {1Sam  9:20}

 

அப்பொழுது  சவுல்<Saul>  பிரதியுத்தரமாக:  நான்  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களிலே  சிறிதான  பென்யமீன்<Benjamite>  கோத்திரத்தான்  அல்லவா?  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்துக்  குடும்பங்களிலெல்லாம்  என்  குடும்பம்  அற்பமானது  அல்லவா?  நீர்  இப்படிப்பட்ட  வார்த்தையை  என்னிடத்தில்  சொல்வானேன்  என்றான்.  {1Sam  9:21}

 

சாமுவேல்<Samuel>  சவுலையும்<Saul>  அவன்  வேலைக்காரனையும்  போஜனசாலைக்குள்  அழைத்துக்கொண்டுபோய்,  அவர்களை  அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே  தலைமையான  இடத்திலே  வைத்தான்;  அழைக்கப்பட்டவர்கள்  ஏறக்குறைய  முப்பதுபேராயிருந்தார்கள்.  {1Sam  9:22}

 

பின்பு  சாமுவேல்<Samuel>  சமையற்காரனைப்  பார்த்து:  நான்  உன்  கையிலே  ஒரு  பங்கைக்  கொடுத்துவைத்தேனே,  அதைக்  கொண்டுவந்து  வை  என்றான்.  {1Sam  9:23}

 

அப்பொழுது  சமையற்காரன்,  ஒரு  முன்னந்தொடையையும்,  அதனோடிருந்ததையும்  எடுத்துக்கொண்டுவந்து,  அதை  சவுலுக்குமுன்<Saul>  வைத்தான்;  அப்பொழுது  சாமுவேல்<Samuel>:  இதோ,  இது  உனக்கென்று  வைக்கப்பட்டது,  இதை  உனக்கு  முன்பாக  வைத்துச்  சாப்பிடு;  நான்  ஜனங்களை  விருந்துக்கு  அழைத்ததுமுதல்,  இதுவரைக்கும்  இது  உனக்காக  வைக்கப்பட்டிருந்தது  என்றான்;  அப்படியே  சவுல்<Saul>  அன்றையதினம்  சாமுவேலோடே<Samuel>  சாப்பிட்டான்.  {1Sam  9:24}

 

அவர்கள்  மேடையிலிருந்து  பட்டணத்திற்கு  இறங்கிவந்தபின்பு,  அவன்  மேல்வீட்டிலே  சவுலோடே<Saul>  பேசிக்கொண்டிருந்தான்.  {1Sam  9:25}

 

அவர்கள்  அதிகாலமே  கிழக்கு  வெளுக்கிற  நேரத்தில்  எழுந்திருந்தபோது,  சாமுவேல்<Samuel>  சவுலை<Saul>  மேல்வீட்டின்மேல்  அழைத்து:  நான்  உன்னை  அனுப்பிவிடும்படிக்கு  ஆயத்தப்படு  என்றான்;  சவுல்<Saul>  ஆயத்தப்பட்டபோது,  அவனும்  சாமுவேலும்<Samuel>  இருவருமாக  வெளியே  புறப்பட்டார்கள்.  {1Sam  9:26}

 

அவர்கள்  பட்டணத்தின்  கடைசிமட்டும்  இறங்கி  வந்தபோது,  சாமுவேல்<Samuel>  சவுலைப்<Saul>  பார்த்து:  வேலைக்காரனை  நமக்கு  முன்னே  நடந்துபோகச்  சொல்  என்றான்;  அப்படியே  அவன்  நடந்து  போனான்;  இப்பொழுது  நான்  தேவனுடைய  வார்த்தையை  உனக்குத்  தெரிவிக்கும்படிக்கு,  நீ  சற்றே  தரித்துநில்  என்றான்.  {1Sam  9:27}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  தைலக்குப்பியை  எடுத்து,  அவன்  தலையின்மேல்  வார்த்து,  அவனை  முத்தஞ்செய்து:  கர்த்தர்  உன்னைத்  தம்முடைய  சுதந்தரத்தின்மேல்  தலைவனாக  அபிஷேகம்  பண்ணினார்  அல்லவா?  {1Sam  10:1}

 

நீ  இன்றைக்கு  என்னைவிட்டுப்  போகிறபோது,  பென்யமீன்<Benjamin>  எல்லையாகிய  செல்சாகில்<Zelzah>  ராகேலின்<Rachel>  கல்லறையண்டையில்  இரண்டு  மனுஷரைக்  காண்பாய்;  அவர்கள்  உன்னைப்  பார்த்து:  நீ  தேடப்போன  கழுதைகள்  அகப்பட்டது;  இதோ,  உன்  தகப்பன்  கழுதைகளின்மேலிருந்த  கவலையை  விட்டு,  உங்களுக்காக  விசாரப்பட்டு,  என்  மகனுக்காக  என்னசெய்வேன்?  என்கிறான்  என்று  சொல்லுவார்கள்.  {1Sam  10:2}

 

நீ  அவ்விடத்தை  விட்டு  அப்புறம்  கடந்துபோய்,  தாபோரிலுள்ள<Tabor>  சமபூமியில்  சேரும்போது,  தேவனைப்  பணியும்படி  பெத்தேலுக்குப்<Bethel>  போகிற  மூன்று  மனுஷர்  அங்கே  உன்னைக்  கண்டு  சந்திப்பார்கள்;  ஒருவன்  மூன்று  ஆட்டுக்குட்டிகளையும்,  இன்னொருவன்  மூன்று  அப்பங்களையும்,  வேறொருவன்  திராட்சரசமுள்ள  ஒரு  துருத்தியையும்  கொண்டுவந்து,  {1Sam  10:3}

 

உன்னுடைய  சுகசெய்தியை  விசாரித்து,  உனக்கு  இரண்டு  அப்பங்களைக்  கொடுப்பார்கள்;  அவைகளை  நீ  அவர்கள்  கையிலே  வாங்கவேண்டும்.  {1Sam  10:4}

 

பின்பு  பெலிஸ்தரின்<Philistines>  தாணையம்  இருக்கிற  தேவனுடைய  மலைக்குப்  போவாய்;  அங்கே  நீ  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கையில்,  மேடையிலிருந்து  இறங்கிவருகிற  தீர்க்கதரிசிகளின்  கூட்டத்திற்கு  எதிர்ப்படுவாய்;  அவர்களுக்கு  முன்பாகத்  தம்புரும்  மேளமும்  நாகசுரமும்  சுரமண்டலமும்  போகும்;  அவர்கள்  தீர்க்கதரிசனம்  சொல்லுவார்கள்.  {1Sam  10:5}

 

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  உன்மேல்  இறங்குவார்;  நீ  அவர்களோடேகூடத்  தீர்க்கதரிசனம்  சொல்லி,  வேறு  மனுஷனாவாய்.  {1Sam  10:6}

 

இந்த  அடையாளங்கள்  உனக்கு  நேரிடும்போது,  சமயத்துக்கு  ஏற்றபடி  நீ  செய்;  தேவன்  உன்னோடே  இருக்கிறார்.  {1Sam  10:7}

 

நீ  எனக்கு  முன்னே  கில்காலுக்கு<Gilgal>  இறங்கிப்போ;  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  செலுத்தும்படிக்கு,  நான்  உன்னிடத்தில்  வருவேன்;  நான்  உன்னிடத்தில்  வந்து,  நீ  செய்ய  வேண்டியதை  உனக்கு  அறிவிக்குமட்டும்,  ஏழுநாள்  காத்திரு  என்றான்.  {1Sam  10:8}

 

அவன்  சாமுவேலை<Samuel>  விட்டுப்  போகும்படி  திரும்பினபோது,  தேவன்  அவனுக்கு  வேறே  இருதயத்தைக்  கொடுத்தார்;  அந்த  அடையாளங்கள்  எல்லாம்  அன்றையதினமே  நேரிட்டது.  {1Sam  10:9}

 

அவர்கள்  அந்த  மலைக்கு  வந்தபோது,  இதோ,  தீர்க்கதரிசிகளின்  கூட்டம்  அவனுக்கு  எதிராக  வந்தது;  அப்பொழுது  தேவனுடைய  ஆவி  அவன்மேல்  இறங்கினதினால்,  அவனும்  அவர்களுக்குள்ளே  தீர்க்கதரிசனம்  சொன்னான்.  {1Sam  10:10}

 

அதற்கு  முன்னே  அவனை  அறிந்தவர்கள்  எல்லாரும்  அவன்  தீர்க்கதரிசிகளோடிருந்து,  தீர்க்கதரிசனம்  சொல்லுகிறதைக்  கண்டபோது:  கீசின்<Kish>  குமாரனுக்கு  வந்தது  என்ன?  சவுலும்<Saul>  தீர்க்கதரிசிகளில்  ஒருவனோ?  என்று  அந்த  ஜனங்கள்  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  {1Sam  10:11}

 

அதற்கு  அங்கே  இருக்கிறவர்களில்  ஒருவன்:  இவர்களுக்குத்  தகப்பன்  யார்  என்றான்;  ஆதலால்  சவுலும்<Saul>  தீர்க்கதரிசிகளில்  ஒருவனோ?  என்பது  பழமொழியாயிற்று.  {1Sam  10:12}

 

அவன்  தீர்க்கதரிசனம்  சொல்லி  முடிந்தபின்பு,  மேடையின்மேல்  வந்தான்.  {1Sam  10:13}

 

அப்பொழுது  சவுலுடைய<Saul>  சிறிய  தகப்பன்:  நீங்கள்  எங்கே  போனீர்கள்  என்று  அவனையும்  அவன்  வேலைக்காரனையும்  கேட்டான்.  அதற்கு  அவன்:  நாங்கள்  கழுதைகளைத்  தேடப்போய்,  அவைகளை  எங்குங்  காணாதபடியினால்,  சாமுவேலிடத்துக்குப்<Samuel>  போனோம்  என்றான்.  {1Sam  10:14}

 

அப்பொழுது  சவுலின்<Saul>  சிறியதகப்பன்:  சாமுவேல்<Samuel>  உங்களுக்குச்  சொன்னது  என்ன?  அதைச்  சொல்  என்றான்.  {1Sam  10:15}

 

சவுல்<Saul>  தன்  சிறியதகப்பனைப்  பார்த்து:  கழுதைகள்  அகப்பட்டது  என்று  எங்களுக்குத்  தீர்மானமாய்ச்  சொன்னார்  என்றான்;  ஆனாலும்  ராஜ்யபாரத்தைப்பற்றிச்  சாமுவேல்<Samuel>  சொன்னதை  அவனுக்கு  அறிவிக்கவில்லை.  {1Sam  10:16}

 

சாமுவேல்<Samuel>  ஜனங்களை  மிஸ்பாவிலே<Mizpeh>  கர்த்தரிடத்தில்  வரவழைத்து,  {1Sam  10:17}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நோக்கி:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  இஸ்ரவேலை<Israel>  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணி,  உங்களை  எகிப்தியர்<Egyptians>  கைக்கும்,  உங்களை  இறுகப்பிடித்த  எல்லா  ராஜ்யத்தாரின்  கைக்கும்  நீங்கலாக்கிவிட்டேன்.  {1Sam  10:18}

 

நீங்களோ  உங்களுடைய  எல்லாத்  தீங்குகளுக்கும்  நெருக்கங்களுக்கும்  உங்களை  நீங்கலாக்கி  ரட்சித்த  உங்கள்  தேவனை  இந்நாளிலே  புறக்கணித்து,  ஒரு  ராஜாவை  எங்கள்மேல்  ஏற்படுத்தும்  என்று  அவரிடத்தில்  கேட்டுக்கொண்டீர்கள்;  இப்பொழுது  கர்த்தருடைய  சந்நிதியில்  உங்கள்  வம்சங்களின்படியேயும்,  ஆயிரங்களான  உங்கள்  சேர்வைகளின்படியேயும்,  வந்து  நில்லுங்கள்  என்றான்.  {1Sam  10:19}

 

சாமுவேல்<Samuel>  இஸ்ரவேலின்<Israel>  கோத்திரங்களையெல்லாம்  சேரப்பண்ணினபின்பு  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தின்மேல்  சீட்டு  விழுந்தது.  {1Sam  10:20}

 

அவன்  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தை  அதினுடைய  குடும்பங்களின்படியே  சேரப்பண்ணினபின்பு,  மாத்திரி<Matri>  குடும்பத்தின்மேலும்,  அதிலே  கீசின்<Kish>  குமாரனாகிய  சவுலின்மேலும்<Saul>,  சீட்டு  விழுந்தது;  அவனைத்  தேடினபோது,  அவன்  அகப்படவில்லை.  {1Sam  10:21}

 

அவன்  இனி  இங்கே  வருவானா  என்று  அவர்கள்  திரும்பக்  கர்த்தரிடத்தில்  விசாரித்தபோது:  இதோ,  அவன்  தளவாடங்களிருக்கிற  இடத்திலே  ஒளித்துக்கொண்டிருக்கிறான்  என்று  கர்த்தர்  சொன்னார்.  {1Sam  10:22}

 

அப்பொழுது  அவர்கள்  ஓடி,  அங்கேயிருந்து  அவனை  அழைத்துக்கொண்டுவந்தார்கள்;  அவன்  ஜனங்கள்  நடுவே  வந்து  நின்றபோது,  எல்லா  ஜனங்களும்  அவன்  தோளுக்குக்  கீழாயிருக்கத்தக்க  உயரமுள்ளவனாயிருந்தான்.  {1Sam  10:23}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  எல்லா  ஜனங்களையும்  நோக்கி:  கர்த்தர்  தெரிந்துகொண்டவனைப்  பாருங்கள்,  சமஸ்த  ஜனங்களுக்குள்ளும்  அவனுக்குச்  சமானமானவன்  இல்லை  என்றான்;  அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  ஆர்ப்பரித்து:  ராஜா  வாழ்க  என்றார்கள்.  {1Sam  10:24}

 

சாமுவேல்<Samuel>  ராஜாங்கத்தின்  முறையை  ஜனங்களுக்குத்  தெரிவித்து,  அதை  ஒரு  புஸ்தகத்தில்  எழுதி,  கர்த்தருடைய  சந்நிதியில்  வைத்து,  ஜனங்களையெல்லாம்  அவரவர்  வீட்டுக்கு  அனுப்பிவிட்டான்.  {1Sam  10:25}

 

சவுலும்<Saul>  கிபியாவிலிருக்கிற<Gibeah>  தன்  வீட்டுக்குப்  போனான்;  இராணுவத்தில்  தேவன்  எவர்கள்  மனதை  ஏவினாரோ,  அவர்களும்  அவனோடேகூடப்  போனார்கள்.  {1Sam  10:26}

 

ஆனாலும்  பேலியாளின்<Belial>  மக்கள்:  இவனா  நம்மை  ரட்சிக்கப்போகிறவன்  என்று  சொல்லி,  அவனுக்குக்  காணிக்கை  கொண்டுவராமல்  அவனை  அசட்டைபண்ணினார்கள்;  அவனோ  காதுகேளாதவன்போல  இருந்தான்.  {1Sam  10:27}

 

அக்காலத்தில்  நாகாஸ்<Nahash>  என்னும்  அம்மோனியன்<Ammonite>  வந்து,  கீலேயாத்திலிருக்கிற<Gilead>  யாபேசை<Jabesh>  முற்றிக்கைபோட்டான்;  அப்பொழுது  யாபேசின்<Jabesh>  மனுஷர்  எல்லாரும்  நாகாசை<Nahash>  நோக்கி:  எங்களோடே  உடன்படிக்கைபண்ணும்;  அப்பொழுது  உம்மைச்  சேவிப்போம்  என்றார்கள்.  {1Sam  11:1}

 

அதற்கு  அம்மோனியனாகிய<Ammonite>  நாகாஸ்<Nahash>:  நான்  உங்கள்  ஒவ்வொருவருடைய  வலது  கண்ணையும்  பிடுங்கி,  இதினாலே  இஸ்ரவேல்<Israel>  எல்லாவற்றின்மேலும்  நிந்தைவரப்பண்ணுவதே  நான்  உங்களோடே  பண்ணும்  உடன்படிக்கை  என்றான்.  {1Sam  11:2}

 

அதற்கு  யாபேசின்<Jabesh>  மூப்பர்கள்:  நாங்கள்  இஸ்ரவேல்<Israel>  நாடெங்கும்  ஸ்தானாபதிகளை  அனுப்பும்படி,  ஏழுநாள்  எங்களுக்குத்  தவணைகொடும்,  எங்களை  ரட்சிப்பார்  இல்லாவிட்டால்,  அப்பொழுது  உம்மிடத்தில்  வருவோம்  என்றார்கள்.  {1Sam  11:3}

 

அந்த  ஸ்தானாபதிகள்  சவுலின்<Saul>  ஊராகிய  கிபியாவிலே<Gibeah>  வந்து,  ஜனங்களின்  காதுகேட்க  அந்தச்  செய்திகளைச்  சொன்னார்கள்;  அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  சத்தமிட்டு  அழுதார்கள்.  {1Sam  11:4}

 

இதோ,  சவுல்<Saul>  மாடுகளின்  பின்னாலே  வயலிலிருந்து  வந்து,  ஜனங்கள்  அழுகிற  முகாந்தரம்  என்ன  என்று  கேட்டான்;  யாபேசின்<Jabesh>  மனுஷர்  சொல்லிய  செய்திகளை  அவனுக்குத்  தெரிவித்தார்கள்.  {1Sam  11:5}

 

சவுல்<Saul>  இந்தச்  செய்திகளைக்  கேட்டவுடனே,  தேவனுடைய  ஆவி  அவன்மேல்  இறங்கினதினால்  அவன்  மிகவும்  கோபம்  மூண்டவனாகி,  {1Sam  11:6}

 

ஓரிணைமாட்டைப்  பிடித்து,  துண்டித்து,  அந்த  ஸ்தானாபதிகள்  கையிலே  கொடுத்து,  இஸ்ரவேலின்<Israel>  நாடுகளுக்கெல்லாம்  அனுப்பி:  சவுலின்<Saul>  பின்னாலேயும்,  சாமுவேலின்<Samuel>  பின்னாலேயும்  புறப்படாதவன்  எவனோ,  அவனுடைய  மாடுகளுக்கு  இப்படிச்  செய்யப்படும்  என்று  சொல்லியனுப்பினான்;  அப்பொழுது  கர்த்தரால்  உண்டான  பயங்கரம்  ஜனத்தின்மேல்  வந்ததினால்,  ஒருமனப்பட்டுப்  புறப்பட்டு  வந்தார்கள்.  {1Sam  11:7}

 

அவர்களைப்  பேசேக்கிலே<Bezek>  இலக்கம்பார்த்தான்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  மூன்றுலட்சம்பேரும்,  யூதா<Judah>  மனுஷரில்  முப்பதினாயிரம்பேரும்  இருந்தார்கள்.  {1Sam  11:8}

 

வந்த  ஸ்தானாபதிகளை  அவர்கள்  நோக்கி:  நாளைக்கு  வெயில்  ஏறுகிறதற்கு  முன்னே  உங்களுக்கு  ரட்சிப்புக்  கிடைக்கும்  என்று  கீலேயாத்திலிருக்கிற<Gilead>  யாபேசின்<Jabesh>  மனுஷருக்குச்  சொல்லுங்கள்  என்றார்கள்;  ஸ்தானாபதிகள்  வந்து  யாபேசின்<Jabesh>  மனுஷரிடத்தில்  அதை  அறிவித்தார்கள்;  அதற்கு  அவர்கள்  சந்தோஷப்பட்டார்கள்.  {1Sam  11:9}

 

பின்பு  யாபேசின்<Jabesh>  மனுஷர்:  நாளைக்கு  உங்களிடத்தில்  வருவோம்,  அப்பொழுது  உங்கள்  இஷ்டப்படியெல்லாம்  எங்களுக்குச்  செய்யுங்கள்  என்றார்கள்.  {1Sam  11:10}

 

மறுநாளிலே  சவுல்<Saul>  ஜனங்களை  மூன்று  படையாக  வகுத்து,  கிழக்கு  வெளுத்துவரும்  ஜாமத்தில்  பாளயத்திற்குள்  வந்து  வெயில்  ஏறும்வரைக்கும்  அம்மோனியரை<Ammonites>  முறிய  அடித்தான்;  தப்பினவர்களில்  இரண்டுபேராகிலும்  சேர்ந்து  ஓடிப்போகாதபடி  எல்லாரும்  சிதறிப்போனார்கள்.  {1Sam  11:11}

 

அப்பொழுது  ஜனங்கள்  சாமுவேலை<Samuel>  நோக்கி:  சவுலா<Saul>  நமக்கு  ராஜாவாயிருக்கப்போகிறவன்  என்று  சொன்னவர்கள்  யார்?  அந்த  மனுஷரை  நாங்கள்  கொன்றுபோடும்படிக்கு  ஒப்புக்கொடுங்கள்  என்றார்கள்.  {1Sam  11:12}

 

அதற்குச்  சவுல்<Saul>:  இன்றையதினம்  ஒருவரும்  கொல்லப்படலாகாது;  இன்று  கர்த்தர்  இஸ்ரவேலுக்கு<Israel>  இரட்சிப்பை  அருளினார்  என்றான்.  {1Sam  11:13}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  ஜனங்களை  நோக்கி:  நாம்  கில்காலுக்குப்<Gilgal>  போய்,  அங்கே  ராஜ்யபாரத்தை  ஸ்திரப்படுத்துவோம்  வாருங்கள்  என்றான்.  {1Sam  11:14}

 

அப்படியே  ஜனங்கள்  எல்லாரும்  கில்காலுக்குப்<Gilgal>  போய்,  அவ்விடத்திலே  கர்த்தருடைய  சந்நிதியில்  சவுலை<Saul>  ராஜாவாக  ஏற்படுத்தி,  அங்கே  கர்த்தருடைய  சந்நிதியில்  சமாதானபலிகளைச்  செலுத்தி,  அங்கே  சவுலும்<Saul>  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  யாவரும்  மிகவும்  சந்தோஷங்கொண்டாடினார்கள்.  {1Sam  11:15}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  இஸ்ரவேலர்<Israel>  அனைவரையும்  நோக்கி:  இதோ,  நீங்கள்  எனக்குச்  சொன்னபடியெல்லாம்  உங்கள்  சொற்கேட்டு  உங்களுக்கு  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தினேன்.  {1Sam  12:1}

 

இப்போதும்  இதோ,  ராஜாவானவர்  உங்களுக்கு  முன்பாகச்  சஞ்சரித்துவருகிறார்;  நானோ  கிழவனும்  நரைத்தவனுமானேன்;  என்  குமாரர்  உங்களோடிருப்பார்கள்;  நான்  என்  சிறுவயதுமுதல்  இந்நாள்வரைக்கும்  உங்களுக்கு  முன்பாகச்  சஞ்சரித்துவந்தேன்.  {1Sam  12:2}

 

இதோ,  இருக்கிறேன்;  கர்த்தரின்  சந்நிதியிலும்  அவர்  அபிஷேகம்பண்ணி  வைத்தவருக்கு  முன்பாகவும்  என்னைக்குறித்துச்  சாட்சி  சொல்லுங்கள்;  நான்  யாருடைய  எருதை  எடுத்துக்கொண்டேன்?  யாருடைய  கழுதையை  எடுத்துக்கொண்டேன்?  யாருக்கு  அநியாயஞ்செய்தேன்?  யாருக்கு  இடுக்கண்செய்தேன்?  யார்  கையில்  பரிதானம்  வாங்கிக்கொண்டு  கண்சாடையாயிருந்தேன்?  சொல்லுங்கள்;  அப்படியுண்டானால்  அதை  உங்களுக்குத்  திரும்பக்  கொடுப்பேன்  என்றான்.  {1Sam  12:3}

 

அதற்கு  அவர்கள்:  நீர்  எங்களுக்கு  அநியாயஞ்  செய்யவும்  இல்லை;  எங்களுக்கு  இடுக்கண்  செய்யவும்  இல்லை;  ஒருவர்  கையிலும்  ஒன்றும்  வாங்கவும்  இல்லை  என்றார்கள்.  {1Sam  12:4}

 

அதற்கு  அவன்:  நீங்கள்  என்  கையில்  ஒன்றும்  கண்டுபிடிக்கவில்லை  என்பதற்குக்  கர்த்தர்  உங்களுக்கு  எதிராகச்  சாட்சியாயிருக்கிறார்;  அவர்  அபிஷேகம்பண்ணினவரும்  இன்று  அதற்குச்  சாட்சி  என்றான்;  அதற்கு  அவர்கள்:  அவர்  சாட்சிதான்  என்றார்கள்.  {1Sam  12:5}

 

அப்புறம்  சாமுவேல்<Samuel>  ஜனங்களை  நோக்கி:  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  ஏற்படுத்தினவரும்,  உங்கள்  பிதாக்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணினவரும்  கர்த்தரே.  {1Sam  12:6}

 

இப்போதும்  கர்த்தர்  உங்களுக்கும்  உங்கள்  பிதாக்களுக்கும்  செய்துவந்த  எல்லா  நீதியான  கிரியைகளைக்குறித்தும்,  நான்  கர்த்தருடைய  சந்நிதியில்  உங்களோடே  நியாயம்  பேசும்படிக்கு  நீங்கள்  நில்லுங்கள்.  {1Sam  12:7}

 

யாக்கோபு<Jacob>  எகிப்திலே<Egypt>  போயிருக்கும்போது,  உங்கள்  பிதாக்கள்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டார்கள்,  அப்பொழுது  கர்த்தர்  மோசேயையும்<Moses>  ஆரோனையும்<Aaron>  அனுப்பினார்;  அவர்கள்  உங்கள்  பிதாக்களை  எகிப்திலிருந்து<Egypt>  அழைத்துவந்து,  அவர்களை  இந்த  ஸ்தலத்திலே  குடியிருக்கப்பண்ணினார்கள்.  {1Sam  12:8}

 

அவர்கள்  தங்கள்  தேவனாகிய  கர்த்தரை  மறந்துபோகிறபோது,  அவர்  அவர்களை  ஆத்சோரின்<Hazor>  சேனாபதியாகிய  சிசெராவின்<Sisera>  கையிலும்,  பெலிஸ்தரின்<Philistines>  கையிலும்,  மோவாபிய<Moab>  ராஜாவின்  கையிலும்  விற்றுப்போட்டார்;  இவர்கள்  அவர்களுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணினார்கள்.  {1Sam  12:9}

 

ஆகையால்  அவர்கள்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டு:  நாங்கள்  கர்த்தரை  விட்டுப்  பாகால்களையும்<Baalim>  அஸ்தரோத்தையும்<Ashtaroth>  சேவித்ததினாலே,  பாவஞ்செய்தோம்;  இப்போதும்  எங்கள்  சத்துருக்களின்  கைக்கு  எங்களை  நீங்கலாக்கி  ரட்சியும்;  இனி  உம்மைச்  சேவிப்போம்  என்றார்கள்.  {1Sam  12:10}

 

அப்பொழுது  கர்த்தர்  எருபாகாலையும்<Jerubbaal>  பேதானையும்<Bedan>  யெப்தாவையும்<Jephthah>  சாமுவேலையும்<Samuel>  அனுப்பி,  நீங்கள்  பயமில்லாமல்  குடியிருக்கும்படிக்குச்  சுற்றிலும்  இருந்த  உங்கள்  சத்துருக்களின்  கைக்கும்  உங்களை  நீங்கலாக்கி  ரட்சித்தார்.  {1Sam  12:11}

 

அம்மோன்<Ammon>  புத்திரரின்  ராஜாவாகிய  நாகாஸ்<Nahash>  உங்களுக்கு  விரோதமாய்  வருகிறதை  நீங்கள்  கண்டபோது,  உங்கள்  தேவனாகிய  கர்த்தரே  உங்களுக்கு  ராஜாவாயிருந்தும்,  நீங்கள்  என்னை  நோக்கி:  அப்படியல்ல,  ஒரு  ராஜா  எங்கள்மேல்  ஆளவேண்டும்  என்றீர்கள்.  {1Sam  12:12}

 

இப்போதும்  நீங்கள்  வேண்டும்  என்று  விரும்பித்  தெரிந்துகொண்ட  ராஜா,  இதோ,  இருக்கிறார்;  இதோ,  கர்த்தர்  உங்களுக்கு  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தினார்.  {1Sam  12:13}

 

நீங்கள்  கர்த்தருடைய  வாக்குக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணாமல்  கர்த்தருக்குப்  பயந்து,  அவரைச்  சேவித்து,  அவருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படிந்தால்,  நீங்களும்  உங்களை  ஆளுகிற  ராஜாவும்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரைப்  பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.  {1Sam  12:14}

 

நீங்கள்  கர்த்தருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படியாமல்,  கர்த்தருடைய  வாக்குக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினீர்களானால்,  கர்த்தருடைய  கை  உங்கள்  பிதாக்களுக்கு  விரோதமாயிருந்தது  போல  உங்களுக்கும்  விரோதமாயிருக்கும்.  {1Sam  12:15}

 

இப்பொழுது  கர்த்தர்  உங்கள்  கண்களுக்கு  முன்பாகச்  செய்யும்  பெரிய  காரியத்தை  நின்று  பாருங்கள்.  {1Sam  12:16}

 

இன்று  கோதுமை  அறுப்பின்  நாள்  அல்லவா?  நீங்கள்  உங்களுக்கு  ஒரு  ராஜாவைக்  கேட்டதினால்,  கர்த்தரின்  பார்வைக்குச்  செய்த  உங்களுடைய  பொல்லாப்புப்  பெரியதென்று  நீங்கள்  கண்டு  உணரும்படிக்கு,  நான்  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுவேன்;  அப்பொழுது  இடிமுழக்கங்களையும்  மழையையும்  கட்டளையிடுவார்  என்று  சொல்லி,  {1Sam  12:17}

 

சாமுவேல்<Samuel>  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்;  அன்றையதினமே  கர்த்தர்  இடிமுழக்கங்களையும்  மழையையும்  கட்டளையிட்டார்;  அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  கர்த்தருக்கும்  சாமுவேலுக்கும்<Samuel>  மிகவும்  பயந்து;  {1Sam  12:18}

 

சாமுவேலைப்<Samuel>  பார்த்து:  நாங்கள்  சாகாதபடிக்கு  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உம்முடைய  அடியாருக்காக  விண்ணப்பம்  செய்யும்;  நாங்கள்  செய்த  எல்லாப்  பாவங்களோடும்  எங்களுக்கு  ஒரு  ராஜா  வேண்டும்  என்று  கேட்ட  இந்தப்  பாவத்தையும்  கூட்டிக்கொண்டோம்  என்று  ஜனங்கள்  எல்லாரும்  சொன்னார்கள்.  {1Sam  12:19}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  ஜனங்களை  நோக்கி:  பயப்படாதேயுங்கள்;  நீங்கள்  இந்தப்  பொல்லாப்பையெல்லாம்  செய்தீர்கள்;  ஆகிலும்  கர்த்தரை  விட்டுப்  பின்வாங்காமல்  கர்த்தரை  உங்கள்  முழு  இருதயத்தோடும்  சேவியுங்கள்.  {1Sam  12:20}

 

விலகிப்போகாதிருங்கள்;  மற்றப்படி  பிரயோஜனமற்றதும்  ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற  வீணானவைகளைப்  பின்பற்றுவீர்கள்;  அவைகள்  வீணானவைகளே.  {1Sam  12:21}

 

கர்த்தர்  உங்களைத்  தமக்கு  ஜனமாக்கிக்கொள்ளப்  பிரியமானபடியினால்,  கர்த்தர்  தம்முடைய  மகத்துவமான  நாமத்தினிமித்தம்  தமது  ஜனத்தைக்  கைவிடமாட்டார்.  {1Sam  12:22}

 

நானும்  உங்களுக்காக  விண்ணப்பம்  செய்யாதிருப்பேனாகில்  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்;  அது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  நன்மையும்  செவ்வையுமான  வழியை  நான்  உங்களுக்குப்  போதிப்பேன்.  {1Sam  12:23}

 

நீங்கள்  எப்படியும்  கர்த்தருக்குப்  பயந்து,  உங்கள்  முழு  இருதயத்தோடும்  உண்மையாய்  அவரைச்  சேவிக்கக்கடவீர்கள்;  அவர்  உங்களிடத்தில்  எவ்வளவு  மகிமையான  காரியங்களைச்  செய்தார்  என்பதைச்  சிந்தித்துப்பாருங்கள்.  {1Sam  12:24}

 

நீங்கள்  இன்னும்  பொல்லாப்பைச்  செய்யவே  செய்வீர்களானால்,  நீங்களும்  உங்கள்  ராஜாவும்  நாசமடைவீர்கள்  என்றான்.  {1Sam  12:25}

 

சவுல்<Saul>  ராஜ்யபாரம்பண்ணி,  ஒரு  வருஷமாயிற்று;  அவன்  இஸ்ரவேலை<Israel>  இரண்டாம்  வருஷம்  அரசாண்டபோது,  {1Sam  13:1}

 

இஸ்ரவேலில்<Israel>  மூவாயிரம்பேரைத்  தனக்குத்  தெரிந்துகொண்டான்;  அவர்களில்  இரண்டாயிரம்பேர்  சவுலோடேகூட<Saul>  மிக்மாசிலும்<Michmash>  பெத்தேல்<Bethel>  மலையிலும்,  ஆயிரம்பேர்  யோனத்தானோடேகூடப்<Jonathan>  பென்யமீன்<Benjamin>  நாட்டிலுள்ள  கிபியாவிலும்<Gibeah>  இருந்தார்கள்;  மற்ற  ஜனங்களை  அவரவர்  கூடாரங்களுக்கு  அனுப்பிவிட்டான்.  {1Sam  13:2}

 

யோனத்தான்<Jonathan>  கேபாவிலே<Geba>  தாணையம்  இருந்த  பெலிஸ்தரை<Philistines>  முறிய  அடித்தான்;  பெலிஸ்தர்<Philistines>  அதைக்  கேள்விப்பட்டார்கள்;  ஆகையினால்  இதை  எபிரெயர்<Hebrews>  கேட்கக்கடவர்கள்  என்று  சவுல்<Saul>  தேசமெங்கும்  எக்காளம்  ஊதுவித்தான்.  {1Sam  13:3}

 

தாணையம்  இருந்த  பெலிஸ்தரைச்<Philistines>  சவுல்<Saul>  முறிய  அடித்தான்  என்றும்,  இஸ்ரவேலர்<Israel>  பெலிஸ்தருக்கு<Philistines>  அருவருப்பானார்கள்  என்றும்,  இஸ்ரவேலெல்லாம்<Israel>  கேள்விப்பட்டபோது,  ஜனங்கள்  சவுலுக்குப்<Saul>  பின்செல்லும்படி  கில்காலுக்கு<Gilgal>  வரவழைக்கப்பட்டார்கள்.  {1Sam  13:4}

 

பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேலோடு<Israel>  யுத்தம்பண்ணும்படி  முப்பதினாயிரம்  இரதங்களோடும்,  ஆறாயிரம்  குதிரைவீரரோடும்,  கடற்கரை  மணலத்தனை  ஜனங்களோடும்  கூடிக்கொண்டுவந்து,  பெத்தாவேலுக்குக்<Bethaven>  கிழக்கான  மிக்மாசிலே<Michmash>  பாளயமிறங்கினார்கள்.  {1Sam  13:5}

 

அப்பொழுது  இஸ்ரவேலர்<Israel>  தங்களுக்கு  உண்டான  இக்கட்டைக்  கண்டபோது,  ஜனங்கள்  தங்களுக்கு  உண்டான  நெருக்கத்தினாலே  கெபிகளிலும்,  முட்காடுகளிலும்,  கன்மலைகளிலும்,  துருக்கங்களிலும்,  குகைகளிலும்  ஒளித்துக்கொண்டார்கள்.  {1Sam  13:6}

 

எபிரெயரில்<Hebrews>  சிலர்  யோர்தானையும்<Jordan>  கடந்து,  காத்<Gad>  நாட்டிற்கும்  கீலேயாத்<Gilead>  தேசத்திற்கும்  போனார்கள்;  சவுலோ<Saul>  இன்னும்  கில்காலில்<Gilgal>  இருந்தான்;  சகல  ஜனங்களும்  பயந்துகொண்டு  அவனுக்குப்  பின்சென்றார்கள்.  {1Sam  13:7}

 

அவன்  தனக்குச்  சாமுவேல்<Samuel>  குறித்த  காலத்தின்படி  ஏழுநாள்மட்டும்  காத்திருந்தான்;  சாமுவேல்<Samuel>  கில்காலுக்கு<Gilgal>  வரவில்லை,  ஜனங்கள்  அவனை  விட்டுச்  சிதறிப்போனார்கள்.  {1Sam  13:8}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  சர்வாங்க  தகனபலியையும்  சமாதானபலிகளையும்  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்று  சொல்லி,  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்தினான்.  {1Sam  13:9}

 

அவன்  சர்வாங்க  தகனபலியிட்டு  முடிகிறபோது,  இதோ,  சாமுவேல்<Samuel>  வந்தான்;  சவுல்<Saul>  அவனைச்  சந்தித்து  வந்தனஞ்செய்ய  அவனுக்கு  எதிர்கொண்டுபோனான்.  {1Sam  13:10}

 

நீர்  செய்தது  என்ன  என்று  சாமுவேல்<Samuel>  கேட்டதற்கு,  சவுல்<Saul>:  ஜனங்கள்  என்னைவிட்டுச்  சிதறிப்போகிறதையும்,  குறித்த  நாட்களின்  திட்டத்திலே  நீர்  வராததையும்,  பெலிஸ்தர்<Philistines>  மிக்மாசிலே<Michmash>  கூடிவந்திருக்கிறதையும்,  நான்  கண்டபடியினாலே,  {1Sam  13:11}

 

கில்காலில்<Gilgal>  பெலிஸ்தர்<Philistines>  எனக்கு  விரோதமாய்  வந்துவிடுவார்கள்  என்றும்,  நான்  இன்னும்  கர்த்தருடைய  சமுகத்தை  நோக்கி  விண்ணப்பம்பண்ணவில்லை  என்றும்,  எண்ணித்  துணிந்து,  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்தினேன்  என்றான்.  {1Sam  13:12}

 

சாமுவேல்<Samuel>  சவுலைப்<Saul>  பார்த்து:  புத்தியீனமாய்ச்  செய்தீர்;  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  உமக்கு  விதித்த  கட்டளையைக்  கைக்கொள்ளாமற்போனீர்;  மற்றப்படி  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  உம்முடைய  ராஜ்யபாரத்தை  என்றைக்கும்  ஸ்திரப்படுத்துவார்.  {1Sam  13:13}

 

இப்போதோ  உம்முடைய  ராஜ்யபாரம்  நிலைநிற்காது;  கர்த்தர்  தம்முடைய  இருதயத்திற்கு  ஏற்ற  ஒரு  மனுஷனைத்  தமக்குத்  தேடி,  அவனைக்  கர்த்தர்  தம்முடைய  ஜனங்கள்மேல்  தலைவனாயிருக்கக்  கட்டளையிட்டார்;  கர்த்தர்  உமக்கு  விதித்த  கட்டளையை  நீர்  கைக்கொள்ளவில்லையே  என்று  சொன்னான்.  {1Sam  13:14}

 

சாமுவேல்<Samuel>  எழுந்திருந்து,  கில்காலை<Gilgal>  விட்டு,  பென்யமீன்<Benjamin>  நாட்டிலுள்ள  கிபியாவுக்குப்<Gibeah>  போனான்;  சவுல்<Saul>  தன்னோடேகூட  இருக்கிற  ஜனத்தைத்  தொகைபார்க்கிறபோது,  ஏறக்குறைய  அறுநூறுபேர்  இருந்தார்கள்.  {1Sam  13:15}

 

சவுலும்<Saul>  அவன்  குமாரனாகிய  யோனத்தானும்<Jonathan>  அவர்களோடேகூட  இருக்கிற  ஜனங்களும்  பென்யமீன்<Benjamin>  நாட்டிலுள்ள  கிபியாவில்<Gibeah>  இருந்துவிட்டார்கள்;  பெலிஸ்தரோ<Philistines>  மிக்மாசிலே<Michmash>  பாளயமிறங்கியிருந்தார்கள்.  {1Sam  13:16}

 

கொள்ளைக்காரர்  பெலிஸ்தரின்<Philistines>  பாளயத்திலிருந்து  மூன்று  படையாய்ப்  புறப்பட்டுவந்தார்கள்;  ஒரு  படை  ஒப்ராவழியாய்ச்<Ophrah>  சூவால்<Shual>  நாட்டிற்கு  நேராகப்  போயிற்று.  {1Sam  13:17}

 

வேறொரு  படை  பெத்தொரோன்<Bethhoron>  வழியாய்ப்  போயிற்று;  வேறொருபடை  வனாந்தரத்தில்  இருக்கிற  செபோயீமின்<Zeboim>  பள்ளத்தாக்குக்கு  எதிரான  எல்லைவழியாய்ப்  போயிற்று.  {1Sam  13:18}

 

எபிரெயர்<Hebrews>  பட்டயங்களையாகிலும்  ஈட்டிகளையாகிலும்  உண்டுபண்ணாதபடிக்குப்  பார்த்துக்கொள்ளவேண்டும்  என்று  பெலிஸ்தர்<Philistines>  சொல்லியிருந்தபடியால்,  இஸ்ரவேல்<Israel>  தேசத்தில்  எங்கும்  ஒரு  கொல்லன்  அகப்படவில்லை.  {1Sam  13:19}

 

இஸ்ரவேலர்<Israelites>  யாவரும்  அவரவர்  தங்கள்  கொழுவிரும்புகளையும்,  தங்கள்  மண்வெட்டிகளையும்,  தங்கள்  கோடரிகளையும்,  தங்கள்  கடப்பாரைகளையும்  தீட்டிக்  கூர்மையாக்குகிறதற்கு,  பெலிஸ்தரிடத்துக்குப்<Philistines>  போகவேண்டியதாயிருந்தது.  {1Sam  13:20}

 

கடப்பாரைகளையும்,  மண்வெட்டிகளையும்,  முக்கூருள்ள  ஆயுதங்களையும்,  கோடரிகளையும்,  தாற்றுக்கோல்களையும்  கூர்மையாக்குகிறதற்கு  அரங்கள்  மாத்திரம்  அவர்களிடத்தில்  இருந்தது.  {1Sam  13:21}

 

யுத்தநாள்  வந்தபோது,  சவுலுக்கும்<Saul>  அவன்  குமாரனாகிய  யோனத்தானுக்குமேயன்றி<Jonathan>,  சவுலோடும்<Saul>  யோனத்தானோடும்<Jonathan>  இருக்கிற  ஜனங்களில்  ஒருவர்  கையிலும்  பட்டயமும்  ஈட்டியும்  இல்லாதிருந்தது.  {1Sam  13:22}

 

பெலிஸ்தரின்<Philistines>  பாளயம்  மிக்மாசிலிருந்து<Michmash>  போகிற  வழிமட்டும்  பரம்பியிருந்தது.  {1Sam  13:23}

 

ஒருநாள்  சவுலின்<Saul>  குமாரனாகிய  யோனத்தான்<Jonathan>  தன்  ஆயுததாரியாகிய  வாலிபனை  நோக்கி:  நமக்கு  எதிராக  அந்தப்  பக்கத்தில்  இருக்கிற  பெலிஸ்தரின்<Philistines'>  தாணையத்திற்குப்  போவோம்  வா  என்று  சொன்னான்;  அதை  அவன்  தன்  தகப்பனுக்கு  அறிவிக்கவில்லை.  {1Sam  14:1}

 

சவுல்<Saul>  கிபியாவின்<Gibeah>  கடைசிமுனையாகிய  மிக்ரோனிலே<Migron>  ஒரு  மாதளமரத்தின்கீழ்  இருந்தான்;  அவனோடேகூட  இருந்த  ஜனங்கள்  ஏறக்குறைய  அறுநூறுபேராயிருந்தார்கள்.  {1Sam  14:2}

 

சீலோவிலே<Shiloh>  கர்த்தருடைய  ஆசாரியனாயிருந்த  ஏலியின்<Eli>  குமாரனாகிய  பினெகாசுக்குப்<Phinehas>  பிறந்த  இக்கபோத்தின்<Ichabod>  சகோதரனும்  அகிதூபின்<Ahitub>  குமாரனுமாகிய  அகியா<Ahiah>  என்பவன்  ஏபோத்தைத்<ephod>  தரித்தவனாயிருந்தான்;  யோனத்தான்<Jonathan>  போனதை  ஜனங்கள்  அறியாதிருந்தார்கள்.  {1Sam  14:3}

 

யோனத்தான்<Jonathan>  பெலிஸ்தரின்<Philistines>  தாணையத்திற்குப்  போகப்பார்த்த  வழிகளின்  நடுவே,  இந்தப்பக்கம்  ஒரு  செங்குத்தான  பாறையும்,  அந்தப்பக்கம்  ஒரு  செங்குத்தான  பாறையும்  இருந்தது;  ஒன்றுக்குப்  போசேஸ்<Bozez>  என்று  பேர்,  மற்றொன்றுக்குச்  சேனே<Seneh>  என்று  பேர்.  {1Sam  14:4}

 

அந்தப்  பாறைகளில்  ஒன்று  வடக்கே  மிக்மாசுக்கு<Michmash>  எதிராகவும்,  மற்றொன்று  தெற்கே  கிபியாவுக்கு<Gibeah>  எதிராகவும்  இருந்தது.  {1Sam  14:5}

 

யோனத்தான்<Jonathan>  தன்  ஆயுததாரியாகிய  வாலிபனை  நோக்கி:  விருத்தசேதனம்  இல்லாதவர்களுடைய  அந்தத்  தாணையத்திற்குப்  போவோம்  வா;  ஒருவேளை  கர்த்தர்  நமக்காக  ஒரு  காரியம்  செய்வார்;  அநேகம்பேரைக்  கொண்டாகிலும்,  கொஞ்சம்பேரைக்  கொண்டாகிலும்,  ரட்சிக்கக்  கர்த்தருக்குத்  தடையில்லை  என்றான்.  {1Sam  14:6}

 

அப்பொழுது  அவன்  ஆயுததாரி  அவனைப்  பார்த்து:  உம்முடைய  இருதயத்தில்  இருக்கிறபடியெல்லாம்  செய்யும்;  அப்படியே  போம்;  இதோ,  உம்முடைய  மனதுக்கு  ஏற்றபடி  நானும்  உம்மோடேகூட  வருகிறேன்  என்றான்.  {1Sam  14:7}

 

அதற்கு  யோனத்தான்<Jonathan>:  இதோ,  நாம்  கடந்து,  அந்த  மனுஷரிடத்திற்குப்  போகிறவர்கள்போல  அவர்களுக்கு  நம்மைக்  காண்பிப்போம்.  {1Sam  14:8}

 

நாங்கள்  உங்களிடத்துக்கு  வருமட்டும்  நில்லுங்கள்  என்று  நம்மோடே  சொல்வார்களானால்,  நாம்  அவர்களிடத்துக்கு  ஏறிப்போகாமல்,  நம்முடைய  நிலையிலே  நிற்போம்.  {1Sam  14:9}

 

எங்களிடத்துக்கு  ஏறிவாருங்கள்  என்று  சொல்வார்களானால்,  ஏறிப்போவோம்;  கர்த்தர்  அவர்களை  நம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  இது  நமக்கு  அடையாளம்  என்றான்.  {1Sam  14:10}

 

அப்படியே  அவர்கள்  இருவரும்  பெலிஸ்தரின்<Philistines>  தாணையத்திற்முன்  தங்களைக்  காண்பித்தார்கள்;  அப்பொழுது  பெலிஸ்தர்<Philistines>:  இதோ,  எபிரெயர்<Hebrews>  ஒளித்துக்கொண்டிருந்த  வளைகளைவிட்டுப்  புறப்படுகிறார்கள்  என்று  சொல்லி,  {1Sam  14:11}

 

தாணையம்  இருக்கிற  மனுஷர்  யோனத்தானையும்<Jonathan>  அவன்  ஆயுததாரியையும்  பார்த்து:  எங்களிடத்துக்கு  ஏறிவாருங்கள்,  உங்களுக்குப்  புத்தி  கற்பிப்போம்  என்றார்கள்;  அப்பொழுது  யோனத்தான்<Jonathan>  தன்  ஆயுததாரியை  நோக்கி:  என்  பின்னாலே  ஏறிவா;  கர்த்தர்  அவர்களை  இஸ்ரவேலின்<Israel>  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்று  சொல்லி,  {1Sam  14:12}

 

யோனத்தான்<Jonathan>  தன்  கைகளாலும்  தன்  கால்களாலும்  தவழ்ந்து  ஏறினான்;  அவன்  ஆயுததாரி  அவன்  பின்னாலே  ஏறினான்;  அப்பொழுது  அவர்கள்  யோனத்தானுக்கு<Jonathan>  முன்பாக  மடிந்து  விழுந்தார்கள்;  அவன்  ஆயுததாரியும்  அவன்  பின்னாலே  வெட்டிக்கொண்டே  போனான்.  {1Sam  14:13}

 

யோனத்தானும்<Jonathan>  அவன்  ஆயுததாரியும்  அடித்த  அந்த  முந்தின  அடியிலே  ஏறக்குறைய  இருபதுபேர்  அரையேர்  நிலமான  விசாலத்திலே  விழுந்தார்கள்.  {1Sam  14:14}

 

அப்பொழுது  பாளயத்திலும்  வெளியிலும்,  சகல  ஜனங்களிலும்,  பயங்கரம்  உண்டாகி,  தாணையம்  இருந்தவர்களும்  கொள்ளையிடப்போன  தண்டிலுள்ளவர்களுங்கூடத்  திகில்  அடைந்தார்கள்;  பூமியும்  அதிர்ந்தது;  அது  தேவனால்  உண்டான  பயங்கரமாயிருந்தது.  {1Sam  14:15}

 

பென்யமீன்<Benjamin>  நாட்டிலுள்ள  கிபியாவிலே<Gibeah>  சவுலுக்கு<Saul>  இருந்த  ஜாமக்காரர்  பார்த்து:  இதோ,  அந்த  ஏராளமான  கூட்டம்  கலைந்து,  ஒருவர்மேல்  ஒருவர்  விழுகிறதைக்  கண்டார்கள்.  {1Sam  14:16}

 

அப்பொழுது  சவுல்<Saul>  தன்னோடேகூட  இருக்கிற  ஜனங்களை  நோக்கி:  நம்மிடத்திலிருந்து  போனவர்கள்  யார்  என்று  இலக்கம்பாருங்கள்  என்றான்;  அவர்கள்  இலக்கம்  பார்க்கிறபோது,  இதோ,  யோனத்தானும்<Jonathan>  அவன்  ஆயுததாரியும்  அங்கே  இல்லை  என்று  கண்டார்கள்.  {1Sam  14:17}

 

அப்பொழுது  சவுல்<Saul>  அகீயாவை<Ahiah>  நோக்கி:  தேவனுடைய  பெட்டியைக்  கொண்டுவா  என்றான்;  தேவனுடைய  பெட்டி  அந்நாட்களில்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிடத்தில்  இருந்தது.  {1Sam  14:18}

 

இப்படிச்  சவுல்<Saul>  ஆசாரியனோடே  பேசுகையில்,  பெலிஸ்தரின்<Philistines>  பாளயத்தில்  உண்டான  கலகம்  வரவர  அதிகரித்தது;  அப்பொழுது  சவுல்<Saul>  ஆசாரியனைப்  பார்த்து:  இருக்கட்டும்  என்றான்.  {1Sam  14:19}

 

சவுலும்<Saul>  அவனோடிருந்த  ஜனங்களும்  கூட்டங்கூடிப்  போர்க்களத்திற்குப்  போனார்கள்;  ஒருவர்  பட்டயம்  ஒருவருக்கு  விரோதமாயிருந்தபடியால்  மகா  அமளியுண்டாயிற்று.  {1Sam  14:20}

 

இதற்குமுன்  பெலிஸ்தருடன்<Philistines>  கூடி  அவர்களோடேகூடப்  பாளயத்திலே  திரிந்து  வந்த  எபிரெயரும்<Hebrews>,  சவுலோடும்<Saul>  யோனத்தானோடும்<Jonathan>  இருக்கிற  இஸ்ரவேலரோடே<Israelites>  கூடிக்கொண்டார்கள்.  {1Sam  14:21}

 

எப்பிராயீம்<Ephraim>  மலைகளில்  ஒளித்துக்கொண்டிருந்த  சகல  இஸ்ரவேலரும்<Israel>  பெலிஸ்தர்<Philistines>  முறிந்தோடுகிறதைக்  கேள்விப்பட்டபோது,  யுத்தத்திலே  அவர்களை  நெருங்கித்  தொடர்ந்தார்கள்.  {1Sam  14:22}

 

இப்படிக்  கர்த்தர்  அன்றையதினம்  இஸ்ரவேலை<Israel>  ரட்சித்தார்;  அந்த  யுத்தம்  பெத்தாவேன்மட்டும்<Bethaven>  நடந்தது.  {1Sam  14:23}

 

இஸ்ரவேலர்<Israel>  அன்றையதினம்  மிகுந்த  வருத்தம்  அடைந்தார்கள்:  நான்  என்  சத்துருக்கள்  கையிலே  பழிவாங்கவேண்டும்,  சாயங்காலமட்டும்  பொறுக்காமல்  எவன்  போஜனம்  செய்கிறானோ,  அவன்  சபிக்கப்பட்டவன்  என்று  சவுல்<Saul>  ஜனங்களுக்கு  ஆணையிட்டுச்  சொல்லியிருந்தபடியால்,  ஜனங்களில்  ஒருவரும்  எவ்வளவேனும்  போஜனம்பண்ணாதிருந்தார்கள்.  {1Sam  14:24}

 

தேசத்து  ஜனங்கள்  எல்லாரும்  ஒரு  காட்டிலே  வந்தார்கள்;  அங்கே  வெளியிலே  தேன்கூடு  கட்டியிருந்தது.  {1Sam  14:25}

 

ஜனங்கள்  காட்டிலே  வந்தபோது,  இதோ,  தேன்  ஒழுகிக்கொண்டிருந்தது;  ஆனாலும்  ஒருவனும்  அதைத்  தன்  கையினாலே  தொட்டுத்  தன்  வாயில்  வைக்கவில்லை;  ஜனங்கள்  அந்த  ஆணையினிமித்தம்  பயப்பட்டார்கள்.  {1Sam  14:26}

 

யோனத்தான்<Jonathan>  தன்  தகப்பன்  ஜனங்களுக்கு  ஆணையிட்டதைக்  கேள்விப்படவில்லை;  அவன்  தன்  கையிலிருந்த  கோலை  நீட்டி,  அதின்  நுனியினாலே  தேன்கூட்டைக்  குத்தி,  அதை  எடுத்துத்  தன்  வாயிலே  போட்டுக்கொண்டான்;  அதினால்  அவன்  கண்கள்  தெளிந்தது.  {1Sam  14:27}

 

அப்பொழுது  ஜனங்களில்  ஒருவன்:  இன்றைக்கு  போஜனம்  சாப்பிடுகிறவன்  சபிக்கப்பட்டவன்  என்று  உம்முடைய  தகப்பனார்  ஜனங்களுக்கு  உறுதியாய்  ஆணையிட்டிருக்கிறார்;  ஆகையினால்  ஜனங்கள்  விடாய்த்திருக்கிறார்கள்  என்றான்.  {1Sam  14:28}

 

அப்பொழுது  யோனத்தான்<Jonathan>:  என்  தகப்பன்  தேசத்தின்  ஜனங்களைக்  கலக்கப்படுத்தினார்;  நான்  இந்தத்  தேனிலே  கொஞ்சம்  ருசிபார்த்ததினாலே,  என்  கண்கள்  தெளிந்ததைப்  பாருங்கள்.  {1Sam  14:29}

 

இன்றையதினம்  ஜனங்கள்  தங்களுக்கு  அகப்பட்ட  தங்கள்  சத்துருக்களின்  கொள்ளையிலே  ஏதாகிலும்  புசித்திருந்தால்,  எத்தனை  நலமாயிருக்கும்;  பெலிஸ்தருக்குள்<Philistines>  உண்டான  சங்காரம்  மிகவும்  அதிகமாயிருக்குமே  என்றான்.  {1Sam  14:30}

 

அவர்கள்  அன்றையதினம்  மிக்மாசிலிருந்து<Michmash>  ஆயலோன்மட்டும்<Aijalon>  பெலிஸ்தரை<Philistines>  முறிய  அடித்தபோது,  ஜனங்கள்  மிகவும்  விடாய்த்திருந்தார்கள்.  {1Sam  14:31}

 

அப்பொழுது  ஜனங்கள்  கொள்ளையின்மேல்  பாய்ந்து,  ஆடுகளையும்  மாடுகளையும்  கன்றுக்குட்டிகளையும்  பிடித்து,  தரையிலே  போட்டு  அடித்து,  இரத்தத்தோடும்  புசித்தார்கள்.  {1Sam  14:32}

 

அப்பொழுது:  இதோ,  இரத்தத்தோடிருக்கிறதைப்  புசிக்கிறதினால்  ஜனங்கள்  கர்த்தருக்கு  ஏலாத  பாவம்  செய்கிறார்கள்  என்று  சவுலுக்கு<Saul>  அறிவித்தார்கள்;  அவன்:  நீங்கள்  துரோகம்பண்ணினீர்கள்;  இப்போதே  ஒரு  பெரிய  கல்லை  என்னிடத்தில்  உருட்டிக்கொண்டுவாருங்கள்.  {1Sam  14:33}

 

நீங்கள்  ஜனத்திற்குள்ளே  போய்,  இரத்தத்தோடிருக்கிறதைச்  சாப்பிடுகிறதினாலே,  கர்த்தருக்கு  ஏலாத  பாவம்  செய்யாதபடிக்கு,  அவரவர்  தங்கள்  மாட்டையும்  அவரவர்  தங்கள்  ஆட்டையும்  என்னிடத்தில்  கொண்டுவந்து,  இங்கே  அடித்து,  பின்பு  சாப்பிடவேண்டும்  என்று  அவர்களுக்குச்  சொல்லுங்கள்  என்று  கட்டளையிட்டான்;  ஆகையால்  ஜனங்கள்  எல்லாரும்  அவரவர்  தங்கள்  மாடுகளை  அன்று  இராத்திரி  தாங்களே  கொண்டுவந்து,  அங்கே  அடித்தார்கள்.  {1Sam  14:34}

 

பின்பு  சவுல்<Saul>  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டினான்;  அது  அவன்  கர்த்தருக்குக்  கட்டின  முதலாவது  பலிபீடம்.  {1Sam  14:35}

 

அதற்குப்பின்பு  சவுல்<Saul>:  நாம்  இந்த  இராத்திரியிலே  பெலிஸ்தரைத்<Philistines>  தொடர்ந்துபோய்,  விடியற்கால  வெளிச்சமாகுமட்டும்  அவர்களைக்  கொள்ளையிட்டு,  அவர்களில்  ஒருவரையும்  மீதியாக  வைக்காதிருப்போமாக  என்றான்.  அதற்கு  அவர்கள்:  உம்முடைய  கண்களுக்கு  நலமானபடியெல்லாம்  செய்யும்  என்றார்கள்.  ஆசாரியனோ:  நாம்  இங்கே  தேவசந்நிதியில்  சேரக்கடவோம்  என்றான்.  {1Sam  14:36}

 

அப்படியே:  பெலிஸ்தரைத்<Philistines>  தொடர்ந்துபோகலாமா?  அவர்களை  இஸ்ரவேலின்<Israel>  கையில்  ஒப்புக்கொடுப்பீரா?  என்று  சவுல்<Saul>  தேவனிடத்தில்  விசாரித்தான்;  அவர்  அந்த  நாளிலே  அவனுக்கு  மறுஉத்தரவு  அருளவில்லை.  {1Sam  14:37}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  ஜனத்தின்  தலைவர்களே,  நீங்கள்  எல்லாரும்  இங்கே  சேர்ந்துவந்து,  இன்று  இந்தப்  பாவம்  எதினாலே  உண்டாயிற்று  என்று  பார்த்தறியுங்கள்.  {1Sam  14:38}

 

அது  என்  குமாரனாகிய  யோனத்தானிடத்தில்<Jonathan>  காணப்பட்டாலும்,  அவன்  சாகவே  சாகவேண்டும்  என்று  இஸ்ரவேலை<Israel>  ரட்சிக்கிற  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்;  சகல  ஜனங்களுக்குள்ளும்  ஒருவனும்  அவனுக்குப்  பிரதியுத்தரம்  சொல்லவில்லை.  {1Sam  14:39}

 

அதற்குப்பின்  அவன்  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரையும்  நோக்கி:  நீங்கள்  அந்தப்பக்கத்திலே  இருங்கள்;  நானும்  என்  குமாரனாகிய  யோனத்தானும்<Jonathan>  இந்தப்பக்கத்தில்  இருப்போம்  என்றான்;  ஜனங்கள்  சவுலைப்<Saul>  பார்த்து:  உம்முடைய  கண்களுக்கு  நலமானபடி  செய்யும்  என்றார்கள்.  {1Sam  14:40}

 

அப்பொழுது  சவுல்<Saul>  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரை  நோக்கி:  நிதானமாய்க்  கட்டளையிட்டு  யதார்த்தத்தை  விளங்கப்பண்ணும்  என்றான்;  அப்பொழுது  யோனத்தான்மேலும்<Jonathan>  சவுலின்மேலும்<Saul>  சீட்டு  விழுந்தது,  ஜனங்களோ  தப்பினார்கள்.  {1Sam  14:41}

 

எனக்கும்  என்  குமாரனாகிய  யோனத்தானுக்கும்<Jonathan>  சீட்டுப்போடுங்கள்  என்று  சவுல்<Saul>  சொன்னபோது,  யோனத்தான்மேல்<Jonathan>  சீட்டு  விழுந்தது.  {1Sam  14:42}

 

அப்பொழுது  சவுல்<Saul>  யோனத்தானைப்<Jonathan>  பார்த்து:  நீ  செய்தது  என்ன?  எனக்குச்  சொல்  என்று  கேட்டான்.  அதற்கு  யோனத்தான்<Jonathan>:  என்  கையில்  இருக்கிற  கோலின்  நுனியினாலே  கொஞ்சம்  தேன்  எடுத்து  ருசிபார்த்தேன்;  அதற்காக  நான்  சாகவேண்டும்  என்றான்.  {1Sam  14:43}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  யோனத்தானே<Jonathan>,  நீ  சாகத்தான்வேண்டும்;  இல்லாவிட்டால்  தேவன்  எனக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்றான்.  {1Sam  14:44}

 

ஜனங்களோ  சவுலை<Saul>  நோக்கி:  இஸ்ரவேலிலே<Israel>  இந்தப்  பெரிய  இரட்சிப்பைச்  செய்த  யோனத்தான்<Jonathan>  கொலைசெய்யப்படலாமா?  அது  கூடாது;  அவன்  தலையில்  இருக்கிற  ஒரு  மயிரும்  தரையிலே  விழப்போகிறதில்லை  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டுச்  சொல்லுகிறோம்;  தேவன்  துணை  நிற்க  அவன்  இன்று  காரியத்தை  நடப்பித்தான்  என்றார்கள்;  அப்படியே  யோனத்தான்<Jonathan>  சாகாதபடிக்கு,  ஜனங்கள்  அவனைத்  தப்புவித்தார்கள்.  {1Sam  14:45}

 

சவுல்<Saul>  பெலிஸ்தரைத்<Philistines>  தொடராமல்  திரும்பிவிட்டான்;  பெலிஸ்தரும்<Philistines>  தங்கள்  ஸ்தலத்திற்குப்  போய்விட்டார்கள்.  {1Sam  14:46}

 

இப்படிச்  சவுல்<Saul>  இஸ்ரவேலை<Israel>  ஆளுகிற  ராஜ்யபாரத்தைப்  பெற்றுக்கொண்டு,  சுற்றிலும்  இருக்கிற  தன்னுடைய  எல்லாச்  சத்துருக்களுமாகிய  மோவாபியருக்கும்<Moab>,  அம்மோன்<Ammon>  புத்திரருக்கும்,  ஏதோமியருக்கும்<Edom>,  சோபாவின்<Zobah>  ராஜாக்களுக்கும்,  பெலிஸ்தருக்கும்<Philistines>  விரோதமாக  யுத்தம்பண்ணி,  எவர்கள்மேல்  படையெடுத்தானோ,  அவர்களையெல்லாம்  அடக்கினான்.  {1Sam  14:47}

 

அவன்  பலத்து,  அமலேக்கியரை<Amalekites>  முறிய  அடித்து,  இஸ்ரவேலரைக்<Israel>  கொள்ளையிடுகிற  யாவர்  கைக்கும்  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்தான்.  {1Sam  14:48}

 

சவுலுக்கு<Saul>  இருந்த  குமாரர்:  யோனத்தான்<Jonathan>,  இஸ்வி<Ishui>,  மல்கிசூவா<Melchishua>  என்பவர்கள்;  அவனுடைய  இரண்டு  குமாரத்திகளில்,  மூத்தவள்  பேர்  மேரப்<Merab>,  இளையவள்  பேர்  மீகாள்<Michal>.  {1Sam  14:49}

 

சவுலுடைய<Saul>  மனைவியின்  பேர்  அகினோவாம்<Ahinoam>,  அவள்  அகிமாசின்<Ahimaaz>  குமாரத்தி;  அவனுடைய  சேனாபதியின்  பேர்  அப்னேர்<Abner>,  அவன்  சவுலுடைய<Saul>  சிறியதகப்பனாகிய  நேரின்<Ner>  குமாரன்.  {1Sam  14:50}

 

கீஸ்<Kish>  சவுலின்<Saul>  தகப்பன்;  அப்னேரின்<Abner>  தகப்பனாகிய  நேர்<Ner>  ஆபியேலின்<Abiel>  குமாரன்.  {1Sam  14:51}

 

சவுல்<Saul>  இருந்த  நாளெல்லாம்  பெலிஸ்தரின்மேல்<Philistines>  கடினமான  யுத்தம்  நடந்தது;  சவுல்<Saul>  ஒரு  பராக்கிரமசாலியையாகிலும்  ஒரு  பலசாலியையாகிலும்  காணும்போது,  அவர்கள்  எல்லாரையும்  தன்னிடமாகச்  சேர்த்துக்கொள்ளுவான்.  {1Sam  14:52}

 

பின்பு  சாமுவேல்<Samuel>  சவுலை<Saul>  நோக்கி:  இஸ்ரவேலராகிய<Israel>  தம்முடைய  ஜனங்கள்மேல்  உம்மை  ராஜாவாக  அபிஷேகம்  பண்ணுகிறதற்குக்  கர்த்தர்  என்னை  அனுப்பினாரே;  இப்போதும்  கர்த்தருடைய  வார்த்தைகளின்  சத்தத்தைக்  கேளும்:  {1Sam  15:1}

 

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  இஸ்ரவேலர்<Israel>  எகிப்திலிருந்து<Egypt>  வந்தபோது,  அமலேக்கு<Amalek>  அவர்களுக்கு  வழிமறித்த  செய்கையை  மனதிலே  வைத்திருக்கிறேன்.  {1Sam  15:2}

 

இப்போதும்  நீ  போய்,  அமலேக்கை<Amalek>  மடங்கடித்து,  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  சங்கரித்து,  அவன்மேல்  இரக்கம்  வைக்காமல்,  புருஷரையும்,  ஸ்திரீகளையும்,  பிள்ளைகளையும்,  குழந்தைகளையும்,  மாடுகளையும்,  ஆடுகளையும்,  ஒட்டகங்களையும்,  கழுதைகளையும்  கொன்றுபோடக்கடவாய்  என்கிறார்  என்று  சொன்னான்.  {1Sam  15:3}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  இதை  ஜனங்களுக்கு  அறியப்படுத்தி,  தெலாயிமிலே<Telaim>  அவர்களைத்  தொகைபார்த்தான்;  அவர்கள்  இரண்டு  லட்சம்  காலாட்களும்,  யூதா<Judah>  ஜனங்கள்  பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.  {1Sam  15:4}

 

சவுல்<Saul>  அமலேக்குடைய<Amalek>  பட்டணமட்டும்  வந்து,  பள்ளத்தாக்கிலே  ஒரு  பதிவிடையை  வைத்தான்.  {1Sam  15:5}

 

சவுல்<Saul>  கேனியரை<Kenites>  நோக்கி:  நான்  அமலேக்கியரோடேகூட<Amalekites>  உங்களையும்  வாரிக்கொள்ளாதபடிக்கு,  நீங்கள்  அவர்கள்  நடுவிலிருந்து  புறப்பட்டு  விலகிப்போங்கள்;  இஸ்ரவேல்<Israel>  எகிப்திலிருந்து<Egypt>  வந்தபோது,  நீங்கள்  அவர்கள்  எல்லாருக்கும்  தயவுசெய்தீர்கள்  என்றான்;  அப்படியே  கேனியர்<Kenites>  அமலேக்கியரின்<Amalekites>  நடுவிலிருந்து  விலகிப்போனார்கள்.  {1Sam  15:6}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  ஆவிலா<Havilah>  துவக்கி  எகிப்திற்கு<Egypt>  எதிரேயிருக்கிற  சூருக்குப்<Shur>  போகும்  எல்லைமட்டும்  இருந்த  அமலேக்கியரை<Amalekites>  மடங்கடித்து,  {1Sam  15:7}

 

அமலேக்கியரின்<Amalekites>  ராஜாவாகிய  ஆகாகை<Agag>  உயிரோடே  பிடித்தான்;  ஜனங்கள்  யாவரையும்  பட்டயக்  கருக்கினாலே  சங்காரம்பண்ணினான்.  {1Sam  15:8}

 

சவுலும்<Saul>  ஜனங்களும்  ஆகாகையும்<Agag>,  ஆடுமாடுகளில்  முதல்தரமானவைகளையும்,  இரண்டாந்தரமானவைகளையும்,  ஆட்டுக்குட்டிகளையும்,  நலமான  எல்லாவற்றையும்,  அழித்துப்போட  மனதில்லாமல்  தப்பவைத்து,  அற்பமானவைகளும்  உதவாதவைகளுமான  சகல  வஸ்துக்களையும்  முற்றிலும்  அழித்துப்போட்டார்கள்.  {1Sam  15:9}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  சாமுவேலுக்கு<Samuel>  உண்டாகி,  அவர்  சொன்னது:  {1Sam  15:10}

 

நான்  சவுலை<Saul>  ராஜாவாக்கினது  எனக்கு  மனஸ்தாபமாயிருக்கிறது;  அவன்  என்னைவிட்டுத்  திரும்பி,  என்  வார்த்தைகளை  நிறைவேற்றாமற்போனான்  என்றார்;  அப்பொழுது  சாமுவேல்<Samuel>  மனம்  நொந்து,  இராமுழுதும்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டான்.  {1Sam  15:11}

 

மறுநாள்  அதிகாலமே  சாமுவேல்<Samuel>  சவுலைச்<Saul>  சந்திக்கப்போனான்;  அப்பொழுது  சவுல்<Saul>  கர்மேலுக்கு<Carmel>  வந்து,  தனக்கு  ஒரு  ஜெயஸ்தம்பம்  நாட்டி,  பின்பு  பல  இடங்களில்  சென்று  கில்காலுக்குப்<Gilgal>  போனான்  என்று,  சாமுவேலுக்கு<Samuel>  அறிவிக்கப்பட்டது.  {1Sam  15:12}

 

சாமுவேல்<Samuel>  சவுலினிடத்தில்<Saul>  போனான்;  சவுல்<Saul>  அவனை  நோக்கி:  நீர்  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்பட்டவர்;  கர்த்தருடைய  வார்த்தையை  நிறைவேற்றினேன்  என்றான்.  {1Sam  15:13}

 

அதற்குச்  சாமுவேல்<Samuel>:  அப்படியானால்  என்  காதுகளில்  விழுகிற  ஆடுகளின்  சத்தமும்,  எனக்குக்  கேட்கிற  மாடுகளின்  சத்தமும்  என்ன  என்றான்.  {1Sam  15:14}

 

அதற்குச்  சவுல்<Saul>:  அமலேக்கியரிடத்திலிருந்து<Amalekites>  அவைகளைக்  கொண்டுவந்தார்கள்;  ஜனங்கள்  ஆடுமாடுகளில்  நலமானவைகளை  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்குப்  பலியிடும்படிக்குத்  தப்பவைத்தார்கள்;  மற்றவைகளை  முற்றிலும்  அழித்துப்போட்டோம்  என்றான்.  {1Sam  15:15}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>:  அந்தப்  பேச்சை  விடும்,  கர்த்தர்  இந்த  இராத்திரியிலே  எனக்குச்  சொன்னதை  உமக்கு  அறிவிக்கிறேன்  என்று  சவுலோடே<Saul>  சொன்னான்.  அவன்:  சொல்லும்  என்றான்.  {1Sam  15:16}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>:  நீர்  உம்முடைய  பார்வைக்குச்  சிறியவராயிருந்தபோது  அல்லவோ  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களுக்குத்  தலைவரானீர்;  கர்த்தர்  உம்மை  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்  பண்ணுவித்தாரே.  {1Sam  15:17}

 

இப்போதும்  கர்த்தர்:  நீ  போய்  அமலேக்கியராகிய<Amalekites>  அந்தப்  பாவிகளைச்  சங்கரித்து,  அவர்களை  நிர்மூலமாக்கித்  தீருமட்டும்,  அவர்களோடு  யுத்தம்பண்ணு  என்று  சொல்லி,  உம்மை  அந்த  வழியாய்  அனுப்பினார்.  {1Sam  15:18}

 

இப்படியிருக்க,  நீர்  கர்த்தருடைய  சொல்லைக்கேளாமல்,  கொள்ளையின்மேல்  பறந்து,  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தது  என்ன  என்றான்.  {1Sam  15:19}

 

சவுல்<Saul>  சாமுவேலை<Samuel>  நோக்கி:  நான்  கர்த்தருடைய  சொல்லைக்  கேட்டு,  கர்த்தர்  என்னை  அனுப்பின  வழியாய்ப்  போய்,  அமலேக்கின்<Amalek>  ராஜாவாகிய  ஆகாகைக்<Agag>  கொண்டுவந்து,  அமலேக்கியரைச்<Amalekites>  சங்காரம்  பண்ணினேன்.  {1Sam  15:20}

 

ஜனங்களோ  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்குக்  கில்காலிலே<Gilgal>  பலியிடுகிறதற்காக,  கொள்ளையிலே  சாபத்தீடாகும்  ஆடுமாடுகளிலே  பிரதானமானவைகளைப்  பிடித்துக்கொண்டு  வந்தார்கள்  என்றான்.  {1Sam  15:21}

 

அதற்குச்  சாமுவேல்<Samuel>:  கர்த்தருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும்,  சர்வாங்க  தகனங்களும்  பலிகளும்  கர்த்தருக்குப்  பிரியமாயிருக்குமோ?  பலியைப்பார்க்கிலும்  கீழ்ப்படிதலும்,  ஆட்டுக்கடாக்களின்  நிணத்தைப்பார்க்கிலும்  செவிகொடுத்தலும்  உத்தமம்.  {1Sam  15:22}

 

இரண்டகம்பண்ணுதல்  பில்லிசூனிய  பாவத்திற்கும்,  முரட்டாட்டம்பண்ணுதல்  அவபக்திக்கும்  விக்கிரகாராதனைக்கும்  சரியாய்  இருக்கிறது;  நீர்  கர்த்தருடைய  வார்த்தையைப்  புறக்கணித்தபடியினாலே,  அவர்  உம்மை  ராஜாவாயிராதபடிக்குப்  புறக்கணித்துத்  தள்ளினார்  என்றான்.  {1Sam  15:23}

 

அப்பொழுது  சவுல்<Saul>  சாமுவேலை<Samuel>  நோக்கி:  நான்  கர்த்தருடைய  கட்டளையையும்  உம்முடைய  வார்த்தைகளையும்  மீறினதினாலே  பாவஞ்செய்தேன்;  நான்  ஜனங்களுக்குப்  பயந்து,  அவர்கள்  சொல்லைக்  கேட்டேன்.  {1Sam  15:24}

 

இப்போதும்  நீர்  என்  பாவத்தை  மன்னித்து,  நான்  கர்த்தரைப்  பணிந்துகொள்ளும்படிக்கு,  என்னோடேகூடத்  திரும்பிவாரும்  என்றான்.  {1Sam  15:25}

 

சாமுவேல்<Samuel>  சவுலைப்<Saul>  பார்த்து:  நான்  உம்மோடேகூடத்  திரும்பிவருவதில்லை;  கர்த்தருடைய  வார்த்தையைப்  புறக்கணித்தீர்;  நீர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாயிராதபடிக்கு,  கர்த்தர்  உம்மையும்  புறக்கணித்துத்  தள்ளினார்  என்றான்.  {1Sam  15:26}

 

போகும்படி  சாமுவேல்<Samuel>  திரும்புகிறபோது,  சவுல்<Saul>,  அவன்  சால்வையின்  தொங்கலைப்  பிடித்துக்கொண்டான்,  அது  கிழிந்துபோயிற்று.  {1Sam  15:27}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  அவனை  நோக்கி:  கர்த்தர்  இன்று  உம்மிடத்திலிருந்த  இஸ்ரவேலின்<Israel>  ராஜ்யத்தைக்  கிழித்துப்போட்டு;  உம்மைப்பார்க்கிலும்  உத்தமனாயிருக்கிற  உம்முடைய  தோழனுக்கு  அதைக்  கொடுத்தார்.  {1Sam  15:28}

 

இஸ்ரவேலின்<Israel>  ஜெயபலமானவர்  பொய்சொல்லுகிறதும்  இல்லை;  தாம்  சொன்னதைப்பற்றி  மனஸ்தாபப்படுகிறதும்  இல்லை;  மனம்மாற  அவர்  மனுஷன்  அல்ல  என்றான்.  {1Sam  15:29}

 

அதற்கு  அவன்:  நான்  பாவஞ்செய்தேன்;  இப்போது  என்  ஜனத்தின்  மூப்பருக்கு  முன்பாகவும்,  இஸ்ரவேலுக்கு<Israel>  முன்பாகவும்  நீர்  என்னைக்  கனம்பண்ணி,  நான்  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரைப்  பணிந்துகொள்ளும்படிக்கு,  என்னோடேகூடத்  திரும்பிவாரும்  என்றான்.  {1Sam  15:30}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>  திரும்பிச்  சவுலுக்குப்<Saul>  பின்சென்றான்;  சவுல்<Saul>  கர்த்தரைப்  பணிந்துகொண்டான்.  {1Sam  15:31}

 

பின்பு  சாமுவேல்<Samuel>:  அமலேக்கின்<Amalekites>  ராஜாவாகிய  ஆகாகை<Agag>  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்;  ஆகாக்<Agag>  சந்தோஷமாய்  அவனிடத்தில்  வந்து,  மரணத்தின்  கசப்பு  அற்றுப்போனது  நிச்சயம்  என்றான்.  {1Sam  15:32}

 

சாமுவேல்<Samuel>:  உன்  பட்டயம்  ஸ்திரீகளைப்  பிள்ளையற்றவர்களாக்கினதுபோல,  ஸ்திரீகளுக்குள்ளே  உன்  தாயும்  பிள்ளையற்றவளாவாள்  என்று  சொல்லி;  சாமுவேல்<Samuel>  கில்காலிலே<Gilgal>  கர்த்தருக்கு  முன்பாக  ஆகாகைத்<Agag>  துண்டித்துப்போட்டான்.  {1Sam  15:33}

 

பின்பு  சாமுவேல்<Samuel>  ராமாவுக்குப்<Ramah>  போனான்;  சவுலோ<Saul>  தன்  ஊராகிய  கிபியாவிலிருக்கிற<Gibeah>  தன்  வீட்டுக்குப்  போய்விட்டான்.  {1Sam  15:34}

 

சவுல்<Saul>  மரணமடையும்  நாள்மட்டும்  சாமுவேல்<Samuel>  அப்புறம்  அவனைக்  கண்டு  பேசவில்லை;  இஸ்ரவேலின்மேல்<Israel>  சவுலை<Saul>  ராஜாவாக்கினதற்காகக்  கர்த்தர்  மனஸ்தாபப்பட்டதினிமித்தம்,  சாமுவேல்<Samuel>  சவுலுக்காகத்<Saul>  துக்கித்துக்கொண்டிருந்தான்.  {1Sam  15:35}

 

கர்த்தர்  சாமுவேலை<Samuel>  நோக்கி:  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாயிராதபடிக்கு,  நான்  புறக்கணித்துத்  தள்ளின  சவுலுக்காக<Saul>  நீ  எந்தமட்டும்  துக்கித்துக்கொண்டிருப்பாய்;  நீ  உன்  கொம்பை  தைலத்தால்  நிரப்பிக்கொண்டுவா;  பெத்லெகேமியனாகிய<Bethlehemite>  ஈசாயினிடத்துக்கு<Jesse>  உன்னை  அனுப்புவேன்;  அவன்  குமாரரில்  ஒருவனை  நான்  ராஜாவாகத்  தெரிந்துகொண்டேன்  என்றார்.  {1Sam  16:1}

 

அதற்குச்  சாமுவேல்<Samuel>:  நான்  எப்படிப்  போவேன்;  சவுல்<Saul>  இதைக்  கேள்விப்பட்டால்,  என்னைக்  கொன்றுபோடுவானே  என்றான்;  அப்பொழுது  கர்த்தர்:  நீ  ஒரு  காளையைக்  கையோடே  கொண்டுபோய்,  கர்த்தருக்குப்  பலியிடவந்தேன்  என்று  சொல்லி,  {1Sam  16:2}

 

ஈசாயைப்<Jesse>  பலிவிருந்துக்கு  அழைப்பாயாக;  அப்பொழுது  நீ  செய்யவேண்டியதை  நான்  உனக்கு  அறிவிப்பேன்;  நான்  உனக்குச்  சொல்லுகிறவனை  எனக்காக  அபிஷேகம்பண்ணுவாயாக  என்றார்.  {1Sam  16:3}

 

கர்த்தர்  சொன்னபடியே  சாமுவேல்<Samuel>  செய்து,  பெத்லெகேமுக்குப்<Bethlehem>  போனான்;  அப்பொழுது  அவ்வூரின்  மூப்பர்  தத்தளிப்போடே  அவனுக்கு  எதிர்கொண்டுவந்து,  நீர்  வருகிறது  சமாதானமா  என்றார்கள்.  {1Sam  16:4}

 

அதற்கு  அவன்:  சமாதானந்தான்;  கர்த்தருக்குப்  பலியிடவந்தேன்;  நீங்கள்  உங்களைப்  பரிசுத்தம்பண்ணிக்கொண்டு,  என்னுடனேகூடப்  பலிவிருந்துக்கு  வாருங்கள்  என்றான்;  மேலும்  ஈசாயையும்<Jesse>  அவன்  குமாரரையும்  பரிசுத்தம்பண்ணி,  அவர்களைப்  பலிவிருந்துக்கு  அழைத்தான்.  {1Sam  16:5}

 

அவர்கள்  வந்தபோது,  அவன்  எலியாபைப்<Eliab>  பார்த்தவுடனே:  கர்த்தரால்  அபிஷேகம்பண்ணப்படுபவன்  இவன்தானாக்கும்  என்றான்.  {1Sam  16:6}

 

கர்த்தர்  சாமுவேலை<Samuel>  நோக்கி:  நீ  இவனுடைய  முகத்தையும்,  இவனுடைய  சரீரவளர்ச்சியையும்  பார்க்கவேண்டாம்;  நான்  இவனைப்  புறக்கணித்தேன்;  மனுஷன்  பார்க்கிறபடி  நான்  பாரேன்;  மனுஷன்  முகத்தைப்  பார்ப்பான்;  கர்த்தரோ  இருதயத்தைப்  பார்க்கிறார்  என்றார்.  {1Sam  16:7}

 

அப்பொழுது  ஈசாய்<Jesse>  அபினதாபை<Abinadab>  அழைத்து,  அவனைச்  சாமுவேலுக்கு<Samuel>  முன்பாகக்  கடந்துபோகப்பண்ணினான்;  அவன்:  இவனையும்  கர்த்தர்  தெரிந்துகொள்ளவில்லை  என்றான்.  {1Sam  16:8}

 

ஈசாய்<Jesse>  சம்மாவையும்<Shammah>  கடந்துபோகப்பண்ணினான்;  அவன்:  இவனையும்  கர்த்தர்  தெரிந்துகொள்ளவில்லை  என்றான்.  {1Sam  16:9}

 

இப்படி  ஈசாய்<Jesse>  தன்  குமாரரில்  ஏழுபேரை  சாமுவேலுக்கு<Samuel>  முன்பாகக்  கடந்து  போகப்பண்ணினான்;  பின்பு  சாமுவேல்<Samuel>  ஈசாயைப்<Jesse>  பார்த்து:  கர்த்தர்  இவர்களில்  ஒருவனையும்  தெரிந்துகொள்ளவில்லை  என்று  சொல்லி;  {1Sam  16:10}

 

உன்  பிள்ளைகள்  இவ்வளவுதானா  என்று  ஈசாயைக்<Jesse>  கேட்டான்.  அதற்கு  அவன்:  இன்னும்  எல்லாருக்கும்  இளையவன்  ஒருவன்  இருக்கிறான்;  அவன்  ஆடுகளை  மேய்த்துக்கொண்டிருக்கிறான்  என்றான்;  அப்பொழுது  சாமுவேல்<Samuel>  ஈசாயை<Jesse>  நோக்கி:  ஆள்  அனுப்பி  அவனை  அழைப்பி;  அவன்  இங்கே  வருமட்டும்  நான்  பந்தியிருக்கமாட்டேன்  என்றான்.  {1Sam  16:11}

 

ஆள்  அனுப்பி  அவனை  அழைப்பித்தான்;  அவன்  சிவந்தமேனியும்,  அழகிய  கண்களும்,  நல்ல  ரூபமுமுள்ளவனாயிருந்தான்;  அப்பொழுது  கர்த்தர்:  இவன்தான்,  நீ  எழுந்து  இவனை  அபிஷேகம்பண்ணு  என்றார்.  {1Sam  16:12}

 

அப்பொழுது  சாமுவேல்<Samuel>:  தைலக்கொம்பை  எடுத்து,  அவனை  அவன்  சகோதரர்  நடுவிலே  அபிஷேகம்பண்ணினான்;  அந்நாள்முதற்கொண்டு,  கர்த்தருடைய  ஆவியானவர்  தாவீதின்மேல்<David>  வந்து  இறங்கியிருந்தார்;  சாமுவேல்<Samuel>  எழுந்து  ராமாவுக்குப்<Ramah>  போய்விட்டான்.  {1Sam  16:13}

 

கர்த்தருடைய  ஆவி  சவுலை<Saul>  விட்டு  நீங்கினார்;  கர்த்தரால்  வரவிடப்பட்ட  ஒரு  பொல்லாத  ஆவி  அவனைக்  கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.  {1Sam  16:14}

 

அப்பொழுது  சவுலின்<Saul>  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  இதோ,  தேவனால்  விடப்பட்ட  ஒரு  பொல்லாத  ஆவி  உம்மைக்  கலங்கப்பண்ணுகிறதே.  {1Sam  16:15}

 

சுரமண்டலம்  வாசிக்கிறதில்  தேறின  ஒருவனைத்  தேடும்படிக்கு,  எங்கள்  ஆண்டவனாகிய  நீர்  உமக்கு  முன்பாக  நிற்கிற  உம்முடைய  அடியாருக்குக்  கட்டளையிடும்;  அப்பொழுது  தேவனால்  விடப்பட்ட  பொல்லாத  ஆவி  உம்மேல்  இறங்குகையில்,  அவன்  தன்  கையினால்  அதை  வாசித்தால்  உமக்குச்  சவுக்கியமுண்டாகும்  என்றார்கள்.  {1Sam  16:16}

 

சவுல்<Saul>  தன்  ஊழியக்காரரைப்  பார்த்து:  நன்றாய்  வாசிக்கத்தக்க  ஒருவனைத்  தேடி,  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்.  {1Sam  16:17}

 

அப்பொழுது  அந்த  வேலைக்காரரில்  ஒருவன்  பிரதியுத்தரமாக:  இதோ,  பெத்லெகேமியனாகிய<Bethlehemite>  ஈசாயின்<Jesse>  குமாரன்  ஒருவனைக்  கண்டிருக்கிறேன்;  அவன்  வாசிப்பதில்  தேறினவன்,  அவன்  பராக்கிரமசாலி,  யுத்தவீரன்,  காரியசமர்த்தன்,  சவுந்தரியமுள்ளவன்;  கர்த்தர்  அவனோடேகூட  இருக்கிறார்  என்றான்.  {1Sam  16:18}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  ஈசாயினிடத்தில்<Jesse>  ஆட்களை  அனுப்பி,  ஆட்டுமந்தையில்  இருக்கிற  உன்  குமாரனாகிய  தாவீதை<David>  என்னிடத்தில்  அனுப்பு  என்று  சொல்லச்சொன்னான்.  {1Sam  16:19}

 

அப்பொழுது  ஈசாய்<Jesse>:  அப்பத்தையும்,  ஒரு  துருத்தி  திராட்சரசத்தையும்,  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியையும்  கழுதையின்மேல்  ஏற்றி,  தன்  குமாரனாகிய  தாவீதின்<David>  வசமாய்  சவுலுக்கு<Saul>  அனுப்பினான்.  {1Sam  16:20}

 

அப்படியே  தாவீது<David>  சவுலிடத்தில்<Saul>  வந்து,  அவனுக்கு  முன்பாக  நின்றான்;  அவன்  இவனை  மிகவும்  சிநேகித்தான்;  அவனுக்கு  இவன்  ஆயுததாரியானான்.  {1Sam  16:21}

 

சவுல்<Saul>  ஈசாயினிடத்தில்<Jesse>  ஆள்  அனுப்பி,  தாவீது<David>  எனக்கு  முன்பாக  நிற்கட்டும்;  என்  கண்களில்  அவனுக்குத்  தயவுகிடைத்தது  என்று  சொல்லச்சொன்னான்.  {1Sam  16:22}

 

அப்படியே  தேவனால்  விடப்பட்ட  ஆவி  சவுலைப்<Saul>  பிடிக்கும்போது,  தாவீது<David>  சுரமண்டலத்தை  எடுத்து,  தன்  கையினால்  வாசிப்பான்;  அதினாலே  பொல்லாத  ஆவி  அவனைவிட்டு  நீங்க,  சவுல்<Saul>  ஆறுதலடைந்து,  சொஸ்தமாவான்.  {1Sam  16:23}

 

பெலிஸ்தர்<Philistines>  யுத்தம்பண்ணுகிறதற்குத்  தங்கள்  சேனைகளைச்  சேர்த்து,  யூதாவிலுள்ள<Judah>  சோக்கோவிலே<Shochoh>  ஒருமித்துக்  கூடி,  சோக்கோவுக்கும்<Shochoh>  அசெக்காவுக்கும்<Azekah>  நடுவே  இருக்கிற  எபேஸ்தம்மீமிலே<Ephesdammim>  பாளயமிறங்கினார்கள்.  {1Sam  17:1}

 

சவுலும்<Saul>  இஸ்ரவேல்<Israel>  மனுஷரும்  ஒருமித்துக்  கூடி,  ஏலா<Elah>  பள்ளத்தாக்கிலே  பாளயமிறங்கி,  பெலிஸ்தருக்கு<Philistines>  எதிராக  யுத்தத்திற்கு  அணிவகுத்து  நின்றார்கள்.  {1Sam  17:2}

 

பெலிஸ்தர்<Philistines>  அந்தப்பக்கத்தில்  ஒரு  மலையின்மேலும்,  இஸ்ரவேலர்<Israel>  இந்தப்பக்கத்தில்  ஒரு  மலையின்மேலும்  நின்றார்கள்;  அவர்களுக்கு  நடுவே  பள்ளத்தாக்கு  இருந்தது.  {1Sam  17:3}

 

அப்பொழுது  காத்<Gath>  ஊரானாகிய  கோலியாத்<Goliath>  என்னும்  பேருள்ள  ஒரு  வீரன்  பெலிஸ்தரின்<Philistines>  பாளயத்திலிருந்து  புறப்பட்டுவந்து  நடுவே  நிற்பான்;  அவன்  உயரம்  ஆறுமுழமும்  ஒரு  ஜாணுமாம்.  {1Sam  17:4}

 

அவன்  தன்  தலையின்மேல்  வெண்கலச்  சீராவைப்  போட்டு,  ஒரு  போர்க்கவசம்  தரித்துக்கொண்டிருப்பான்;  அந்தக்  கவசத்தின்  நிறை  ஐயாயிரம்  சேக்கலான  வெண்கலமாயிருக்கும்.  {1Sam  17:5}

 

அவன்  தன்  கால்களிலே  வெண்கலக்  கவசத்தையும்  தன்  தோள்களின்மேல்  வெண்கலக்  கேடகத்தையும்  தரித்திருப்பான்.  {1Sam  17:6}

 

அவனுடைய  ஈட்டித்தாங்கு  நெசவுக்காரரின்  படைமரத்தின்  கனதியும்  அவன்  ஈட்டியின்  அலகு  அறுநூறுசேக்கல்  இரும்புமாயிருக்கும்;  பரிசைபிடிக்கிறவன்  அவனுக்கு  முன்னாக  நடப்பான்.  {1Sam  17:7}

 

அவன்  வந்துநின்று,  இஸ்ரவேல்<Israel>  சேனைகளைப்  பார்த்துச்  சத்தமிட்டு,  நீங்கள்  யுத்தத்திற்கு  அணிவகுத்து  நிற்கிறது  என்ன?  நான்  பெலிஸ்தன்<Philistine>  அல்லவா?  நீங்கள்  சவுலின்<Saul>  சேவகர்  அல்லவா?  உங்களில்  ஒருவனைத்  தெரிந்துகொள்ளுங்கள்;  அவன்  என்னிடத்தில்  வரட்டும்.  {1Sam  17:8}

 

அவன்  என்னோடு  யுத்தம்பண்ணவும்  என்னைக்  கொல்லவும்  சமர்த்தனானால்,  நாங்கள்  உங்களுக்கு  வேலைக்காரராயிருப்போம்;  நான்  அவனை  ஜெயித்து  அவனைக்  கொல்வேனானால்,  நீங்கள்  எங்களுக்கு  வேலைக்காரராயிருந்து,  எங்களைச்  சேவிக்கவேண்டும்  என்று  சொல்லி,  {1Sam  17:9}

 

பின்னும்  அந்தப்  பெலிஸ்தன்<Philistine>:  நான்  இன்றையதினம்  இஸ்ரவேலுடைய<Israel>  சேனைகளை  நிந்தித்தேன்;  நாம்  ஒருவரோடு  ஒருவர்  யுத்தம்பண்ண  ஒருவனை  விடுங்கள்  என்று  சொல்லிக்கொண்டுவருவான்.  {1Sam  17:10}

 

சவுலும்<Saul>  இஸ்ரவேலர்<Israel>  அனைவரும்  அந்தப்  பெலிஸ்தனுடைய<Philistine>  வார்த்தைகளைக்  கேட்டு,  கலங்கி  மிகவும்  பயப்பட்டார்கள்.  {1Sam  17:11}

 

தாவீது<David>  என்பவன்  யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்<Bethlehem>  ஊரானாகிய  ஈசாய்<Jesse>  என்னும்  பேருள்ள  எப்பிராத்திய<Ephrathite>  மனுஷனுடைய  குமாரனாயிருந்தான்;  ஈசாயுக்கு<Jesse>  எட்டுக்  குமாரர்  இருந்தார்கள்;  இவன்  சவுலின்<Saul>  நாட்களிலே  மற்ற  ஜனங்களுக்குள்ளே  வயதுசென்ற  கிழவனாய்  மதிக்கப்பட்டான்.  {1Sam  17:12}

 

ஈசாயினுடைய<Jesse>  மூன்று  மூத்த  குமாரர்  சவுலோடேகூட<Saul>  யுத்தத்திற்குப்  போயிருந்தார்கள்;  யுத்தத்திற்குப்  போயிருந்த  அவனுடைய  மூன்று  குமாரரில்  மூத்தவனுக்கு  எலியாப்<Eliab>  என்றும்,  இரண்டாங்குமாரனுக்கு  அபினதாப்<Abinadab>  என்றும்,  மூன்றாங்குமாரனுக்குச்  சம்மா<Shammah>  என்றும்  பேர்.  {1Sam  17:13}

 

தாவீது<David>  எல்லாருக்கும்  இளையவன்;  மூத்தவர்களாகிய  அந்த  மூன்றுபேரும்  சவுலோடேகூடப்<Saul>  போயிருந்தார்கள்.  {1Sam  17:14}

 

தாவீது<David>  சவுலைவிட்டுத்<Saul>  திரும்பிப்  போய்  பெத்லெகேமிலிருக்கிற<Bethlehem>  தன்  தகப்பனுடைய  ஆடுகளை  மேய்த்துக்கொண்டிருந்தான்.  {1Sam  17:15}

 

அந்தப்  பெலிஸ்தன்<Philistine>  காலையிலும்  மாலையிலும்  நாற்பதுநாள்  வந்துவந்து  நிற்பான்.  {1Sam  17:16}

 

ஈசாய்<Jesse>  தன்  குமாரனாகிய  தாவீதை<David>  நோக்கி:  உன்  சகோதரருக்கு  இந்த  ஒரு  மரக்கால்  வறுத்த  பயற்றையும்,  இந்தப்  பத்து  அப்பங்களையும்  எடுத்துக்கொண்டு,  பாளயத்திலிருக்கிற  உன்  சகோதரரிடத்தில்  ஓட்டமாய்ப்  போய்,  {1Sam  17:17}

 

இந்தப்  பத்துப்  பால்கட்டிகளை  ஆயிரம்பேருக்கு  அதிபதியானவனிடத்தில்  கொடுத்து,  உன்  சகோதரர்  சுகமாயிருக்கிறார்களா  என்று  விசாரித்து,  அவர்களிடத்தில்  அடையாளம்  வாங்கிக்  கொண்டுவா  என்றான்.  {1Sam  17:18}

 

அப்பொழுது  சவுலும்<Saul>,  அவர்களும்,  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்,  ஏலா<Elah>  பள்ளத்தாக்கிலே  பெலிஸ்தரோடு<Philistines>  யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.  {1Sam  17:19}

 

தாவீது<David>  அதிகாலையில்  எழுந்து,  ஆடுகளைக்  காவலாளி  வசமாய்  விட்டு,  ஈசாய்<Jesse>  தனக்குக்  கற்பித்தபடியே  எடுத்துக்கொண்டுபோய்,  இரதங்கள்  இருக்கிற  இடத்திலே  வந்தான்;  சேனைகள்  அணிவகுத்து  நின்று,  யுத்தத்திற்கென்று  ஆர்ப்பரித்தார்கள்.  {1Sam  17:20}

 

இஸ்ரவேலரும்<Israel>  பெலிஸ்தரும்<Philistines>  ஒருவருக்கு  எதிராக  ஒருவர்  அணிவகுத்துக்கொண்டிருந்தார்கள்.  {1Sam  17:21}

 

அப்பொழுது  தாவீது<David>:  தான்  கொண்டுவந்தவைகளை  இறக்கி,  ரஸ்துக்களைக்  காக்கிறவன்  வசமாக  வைத்துவிட்டு,  சேனைக்குள்  ஓடி,  தன்  சகோதரரைப்  பார்த்து:  சுகமாயிருக்கிறீர்களா  என்று  கேட்டான்.  {1Sam  17:22}

 

அவன்  இவர்களோடே  பேசிக்கொண்டிருக்கையில்,  இதோ,  காத்<Gath>  ஊரானாகிய  கோலியாத்<Goliath>  என்னும்  பேருள்ள  அந்தப்  பெலிஸ்த<Philistine>  வீரன்  பெலிஸ்தரின்<Philistines>  சேனைகளிலிருந்து  எழும்பிவந்து  நின்று,  முன்  சொன்ன  வார்த்தைகளையே  சொன்னான்;  அதைத்  தாவீது<David>  கேட்டான்.  {1Sam  17:23}

 

இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  அந்த  மனுஷனைக்  காணும்போது  மிகவும்  பயப்பட்டு,  அவன்  முகத்துக்கு  விலகி  ஓடிப்போவார்கள்.  {1Sam  17:24}

 

அந்நேரத்திலே  இஸ்ரவேலர்<Israel>:  வந்து  நிற்கிற  அந்த  மனுஷனைக்  கண்டீர்களா,  இஸ்ரவேலை<Israel>  நிந்திக்க  வந்து  நிற்கிறான்;  இவனைக்  கொல்லுகிறவன்  எவனோ,  அவனை  ராஜா  மிகவும்  ஐசுவரியவானாக்கி,  அவனுக்குத்  தம்முடைய  குமாரத்தியைத்  தந்து,  அவன்  தகப்பன்  வீட்டாருக்கு  இஸ்ரவேலிலே<Israel>  சர்வமானியம்  கொடுப்பார்  என்றார்கள்.  {1Sam  17:25}

 

அப்பொழுது  தாவீது<David>  தன்னண்டையிலே  நிற்கிறவர்களைப்  பார்த்து,  இந்தப்  பெலிஸ்தனைக்<Philistine>  கொன்று  இஸ்ரவேலுக்கு<Israel>  நேரிட்ட  நிந்தையை  நீக்குகிறவனுக்கு  என்ன  செய்யப்படும்;  ஜீவனுள்ள  தேவனுடைய  சேனைகளை  நிந்திக்கிறதற்கு  விருத்தசேதனம்  இல்லாத  இந்த  பெலிஸ்தன்<Philistine>  எம்மாத்திரம்  என்றான்.  {1Sam  17:26}

 

அதற்கு  ஜனங்கள்:  அவனைக்  கொல்லுகிறவனுக்கு  இன்ன  இன்னபடி  செய்யப்படும்  என்று  முன்  சொன்ன  வார்த்தைகளையே  அவனுக்குச்  சொன்னார்கள்.  {1Sam  17:27}

 

அந்த  மனுஷரோடே  அவன்  பேசிக்கொண்டிருக்கிறதை  அவன்  மூத்த  சகோதரனாகிய  எலியாப்<Eliab>  கேட்டபோது,  அவன்  தாவீதின்மேல்<David>  கோபங்கொண்டு:  நீ  இங்கே  வந்தது  என்ன?  வனாந்தரத்திலுள்ள  அந்தக்  கொஞ்ச  ஆடுகளை  நீ  யார்  வசத்தில்  விட்டாய்?  யுத்தத்தைப்  பார்க்க  அல்லவா  வந்தாய்?  உன்  துணிகரத்தையும்,  உன்  இருதயத்தின்  அகங்காரத்தையும்  நான்  அறிவேன்  என்றான்.  {1Sam  17:28}

 

அதற்குத்  தாவீது<David>:  நான்  இப்பொழுது  செய்தது  என்ன?  நான்  வந்ததற்கு  முகாந்தரம்  இல்லையா  என்று  சொல்லி,  {1Sam  17:29}

 

அவனை  விட்டு,  வேறொருவனிடத்தில்  திரும்பி,  அந்தப்பிரகாரமாகவே  கேட்டான்;  ஜனங்கள்  முன்போலவே  உத்தரவு  சொன்னார்கள்.  {1Sam  17:30}

 

தாவீது<David>  சொன்ன  வார்த்தைகளை  அவர்கள்  கேட்டு,  அதைச்  சவுலின்<Saul>  சமுகத்தில்  அறிவித்தார்கள்;  அப்பொழுது  அவன்  அவனை  அழைப்பித்தான்.  {1Sam  17:31}

 

தாவீது<David>  சவுலை<Saul>  நோக்கி:  இவனிமித்தம்  ஒருவனுடைய  இருதயமும்  கலங்க  வேண்டியதில்லை;  உம்முடைய  அடியானாகிய  நான்  போய்,  இந்தப்  பெலிஸ்தனோடே<Philistine>  யுத்தம்பண்ணுவேன்  என்றான்.  {1Sam  17:32}

 

அப்பொழுது  சவுல்<Saul>  தாவீதை<David>  நோக்கி:  நீ  இந்தப்  பெலிஸ்தனோடே<Philistine>  எதிர்த்து  யுத்தம்பண்ண  உன்னால்  ஆகாது;  நீ  இளைஞன்,  அவனோ  தன்  சிறுவயதுமுதல்  யுத்தவீரன்  என்றான்.  {1Sam  17:33}

 

தாவீது<David>  சவுலைப்பார்த்து<Saul>:  உம்முடைய  அடியான்  என்  தகப்பனுடைய  ஆடுகளை  மேய்த்துக்கொண்டிருக்கிறபோது,  ஒருவிசை  ஒரு  சிங்கமும்,  ஒருவிசை  ஒரு  கரடியும்  வந்து,  மந்தையிலிருக்கிற  ஒரு  ஆட்டைப்  பிடித்துக்கொண்டது.  {1Sam  17:34}

 

நான்  அதைத்  தொடர்ந்துபோய்,  அதை  அடித்து,  அதை  அதின்  வாய்க்குத்  தப்புவித்தேன்;  அது  என்மேல்  பாய்ந்தபோது,  நான்  அதின்  தாடியைப்  பிடித்து,  அதை  அடித்துக்  கொன்றுபோட்டேன்.  {1Sam  17:35}

 

அந்தச்  சிங்கத்தையும்  அந்தக்  கரடியையும்  உம்முடைய  அடியானாகிய  நான்  கொன்றேன்;  விருத்தசேதனமில்லாத  இந்தப்  பெலிஸ்தனும்<Philistine>  அவைகளில்  ஒன்றைப்போல  இருப்பான்;  அவன்  ஜீவனுள்ள  தேவனுடைய  சேனைகளை  நிந்தித்தானே  என்றான்.  {1Sam  17:36}

 

பின்னும்  தாவீது<David>:  என்னைச்  சிங்கத்தின்  கைக்கும்  கரடியின்  கைக்கும்  தப்புவித்த  கர்த்தர்  இந்தப்  பெலிஸ்தனுடைய<Philistine>  கைக்கும்  தப்புவிப்பார்  என்றான்;  அப்பொழுது  சவுல்<Saul>  தாவீதைப்<David>  பார்த்து:  போ,  கர்த்தர்  உன்னுடனேகூட  இருப்பாராக  என்றான்.  {1Sam  17:37}

 

சவுல்<Saul>  தாவீதுக்குத்<David>  தன்  வஸ்திரங்களை  உடுத்துவித்து  வெண்கலமான  ஒரு  சீராவை  அவன்  தலையின்மேல்  போட்டு,  ஒரு  கவசத்தையும்  அவனுக்குத்  தரிப்பித்தான்.  {1Sam  17:38}

 

அவனுடைய  பட்டயத்தை  தாவீது<David>  தன்  வஸ்திரங்கள்மேல்  கட்டிக்கொண்டு,  அதிலே  அவனுக்குப்  பழக்கமில்லாததினால்  நடந்துபார்த்தான்;  அப்பொழுது  தாவீது<David>  சவுலை<Saul>  நோக்கி:  நான்  இவைகளைப்  போட்டுக்கொண்டு  போகக்கூடாது;  இந்த  அப்பியாசம்  எனக்கு  இல்லை  என்று  சொல்லி,  அவைகளைக்  களைந்துபோட்டு,  {1Sam  17:39}

 

தன்  தடியைக்  கையிலே  பிடித்துக்கொண்டு,  ஆற்றிலிருக்கிற  ஐந்து  கூழாங்கல்லுகளைத்  தெரிந்தெடுத்து,  அவைகளை  மேய்ப்பருக்குரிய  தன்னுடைய  அடைப்பப்பையிலே  போட்டு,  தன்  கவணைத்  தன்  கையிலே  பிடித்துக்கொண்டு,  அந்தப்  பெலிஸ்தனண்டையிலே<Philistine>  போனான்.  {1Sam  17:40}

 

பெலிஸ்தனும்<Philistine>  நடந்து,  தாவீதண்டைக்குக்<David>  கிட்டிவந்தான்;  பரிசையைப்  பிடிக்கிறவன்  அவனுக்கு  முன்னாக  நடந்தான்.  {1Sam  17:41}

 

பெலிஸ்தன்<Philistine>  சுற்றிப்பார்த்து:  தாவீதைக்<David>  கண்டு,  அவன்  இளைஞனும்  சவுந்தரிய  ரூபமான  சிவந்த  மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால்,  அவனை  அசட்டைபண்ணினான்.  {1Sam  17:42}

 

பெலிஸ்தன்<Philistine>  தாவீதைப்<David>  பார்த்து:  நீ  தடிகளோடே  என்னிடத்தில்  வர  நான்  நாயா  என்று  சொல்லி,  அவன்  தன்  தேவர்களைக்கொண்டு  தாவீதைச்<David>  சபித்தான்.  {1Sam  17:43}

 

பின்னும்  அந்தப்  பெலிஸ்தன்<Philistine>  தாவீதைப்<David>  பார்த்து:  என்னிடத்தில்  வா;  நான்  உன்  மாம்சத்தை  ஆகாயத்துப்  பறவைகளுக்கும்  காட்டு  மிருகங்களுக்கும்  கொடுப்பேன்  என்றான்.  {1Sam  17:44}

 

அதற்குத்  தாவீது<David>:  பெலிஸ்தனை<Philistine>  நோக்கி:  நீ  பட்டயத்தோடும்,  ஈட்டியோடும்,  கேடகத்தோடும்  என்னிடத்தில்  வருகிறாய்;  நானோ  நீ  நிந்தித்த  இஸ்ரவேலுடைய<Israel>  இராணுவங்களின்  தேவனாகிய  சேனைகளுடைய  கர்த்தரின்  நாமத்திலே  உன்னிடத்தில்  வருகிறேன்.  {1Sam  17:45}

 

இன்றையதினம்  கர்த்தர்  உன்னை  என்  கையில்  ஒப்புக்கொடுப்பார்;  நான்  உன்னைக்  கொன்று,  உன்  தலையை  உன்னை  விட்டு  வாங்கி,  பெலிஸ்தருடைய<Philistines>  பாளயத்தின்  பிணங்களை  இன்றையதினம்  ஆகாயத்துப்  பறவைகளுக்கும்,  பூமியின்  காட்டு  மிருகங்களுக்கும்  கொடுப்பேன்;  அதனால்  இஸ்ரவேலில்<Israel>  தேவன்  ஒருவர்  உண்டு  என்று  பூலோகத்தார்  எல்லாரும்  அறிந்துகொள்ளுவார்கள்.  {1Sam  17:46}

 

கர்த்தர்  பட்டயத்தினாலும்  ஈட்டியினாலும்  ரட்சிக்கிறவர்  அல்ல  என்று  இந்த  ஜனக்கூட்டமெல்லாம்  அறிந்துகொள்ளும்;  யுத்தம்  கர்த்தருடையது;  அவர்  உங்களை  எங்கள்  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்றான்.  {1Sam  17:47}

 

அப்பொழுது  அந்தப்  பெலிஸ்தன்<Philistine>  எழும்பி,  தாவீதுக்கு<David>  எதிராகக்  கிட்டிவருகையில்,  தாவீது<David>  தீவிரமாய்  அந்தச்  சேனைக்கும்  அந்தப்  பெலிஸ்தனுக்கும்<Philistine>  எதிராக  ஓடி,  {1Sam  17:48}

 

தன்  கையை  அடைப்பத்திலே  போட்டு,  அதிலிருந்து  ஒரு  கல்லை  எடுத்து,  கவணிலே  வைத்துச்  சுழற்றி,  பெலிஸ்தனுடைய<Philistine>  நெற்றியிலே  பட  எறிந்தான்;  அந்தக்  கல்  அவன்  நெற்றியில்  பதிந்து  போனதினால்,  அவன்  தரையிலே  முகங்குப்புற  விழுந்தான்.  {1Sam  17:49}

 

இவ்விதமாகத்  தாவீது<David>  ஒரு  கவணினாலும்  ஒரு  கல்லினாலும்  பெலிஸ்தனை<Philistine>  மேற்கொண்டு,  அவனை  மடங்கடித்து,  அவனைக்  கொன்றுபோட்டான்;  தாவீதின்<David>  கையில்  பட்டயம்  இல்லாதிருந்தது.  {1Sam  17:50}

 

ஆகையால்  தாவீது<David>  பெலிஸ்தனண்டையில்<Philistine>  ஓடி  அவன்மேல்  நின்று,  அவன்  பட்டயத்தை  எடுத்து,  அதை  அதின்  உறையிலிருந்து  உருவி,  அவனைக்  கொன்று,  அதினாலே  அவன்  தலையை  வெட்டிப்போட்டான்;  அப்பொழுது  தங்கள்  வீரன்  செத்துப்போனான்  என்று  பெலிஸ்தர்<Philistines>  கண்டு,  ஓடிப்போனார்கள்.  {1Sam  17:51}

 

அப்பொழுது  இஸ்ரவேலரும்<Israel>  யூதா<Judah>  மனுஷரும்  எழும்பி,  ஆர்ப்பரித்து,  பள்ளத்தாக்கின்  எல்லைமட்டும்,  எக்ரோனின்<Ekron>  வாசல்கள்மட்டும்,  பெலிஸ்தரைத்<Philistines>  துரத்தினார்கள்;  சாராயீமின்<Shaaraim>  வழியிலும்,  காத்பட்டணமட்டும்<Gath>,  எக்ரோன்<Ekron>  பட்டணமட்டும்,  பெலிஸ்தர்<Philistines>  வெட்டுண்டு  விழுந்தார்கள்.  {1Sam  17:52}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பெலிஸ்தரை<Philistines>  மூர்க்கமாய்த்  துரத்தினபிற்பாடு,  திரும்பிவந்து,  அவர்களுடைய  பாளயங்களைக்  கொள்ளையிட்டார்கள்.  {1Sam  17:53}

 

தாவீது<David>  பெலிஸ்தனுடைய<Philistine>  தலையை  எடுத்து,  அதை  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டு  வந்தான்;  அவன்  ஆயுதங்களையோ  தன்  கூடாரத்திலே  வைத்தான்.  {1Sam  17:54}

 

தாவீது<David>  பெலிஸ்தனுக்கு<Philistine>  எதிராகப்  புறப்பட்டுப்போகிறதைச்  சவுல்<Saul>  கண்டபோது,  அவன்  சேனாபதியாகிய  அப்னேரைப்<Abner>  பார்த்து:  அப்னேரே<Abner>,  இந்த  வாலிபன்  யாருடைய  மகன்  என்று  கேட்டான்;  அதற்கு  அப்னேர்<Abner>:  ராஜாவே,  எனக்குத்  தெரியாது  என்று  உம்முடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  {1Sam  17:55}

 

அப்பொழுது  ராஜா:  அந்தப்  பிள்ளையாண்டான்  யாருடைய  மகன்  என்று  விசாரி  என்றான்.  {1Sam  17:56}

 

தாவீது<David>  பெலிஸ்தனைக்<Philistine>  கொன்று  திரும்புகையில்,  அப்னேர்<Abner>  அவனைச்  சவுலுக்கு<Saul>  முன்பாக  அழைத்துக்கொண்டு  போய்விட்டான்;  பெலிஸ்தனுடைய<Philistine>  தலை  அவன்  கையில்  இருந்தது.  {1Sam  17:57}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  வாலிபனே,  நீ  யாருடைய  மகன்  என்று  அவனைக்  கேட்டதற்கு,  தாவீது<David>:  நான்  பெத்லெகேம்<Bethlehemite>  ஊரானாயிருக்கிற  உம்முடைய  அடியானாகிய  ஈசாயின்<Jesse>  மகன்  என்றான்.  {1Sam  17:58}

 

அவன்  சவுலோடே<Saul>  பேசி  முடிந்தபின்பு,  யோனத்தானுடைய<Jonathan>  ஆத்துமா  தாவீதின்<David>  ஆத்துமாவோடே  ஒன்றாய்  இசைந்திருந்தது;  யோனத்தான்<Jonathan>  அவனைத்  தன்  உயிரைப்போலச்  சிநேகித்தான்.  {1Sam  18:1}

 

சவுல்<Saul>  அவனை  அவன்  தகப்பன்  வீட்டுக்குத்  திரும்பிப்போக  ஒட்டாமல்,  அன்றுமுதல்  தன்னிடத்தில்  வைத்துக்கொண்டான்.  {1Sam  18:2}

 

யோனத்தான்<Jonathan>  தாவீதைத்<David>  தன்  ஆத்துமாவைப்போலச்  சிநேகித்ததினால்,  அவனும்  இவனும்  உடன்படிக்கை  பண்ணிக்கொண்டார்கள்.  {1Sam  18:3}

 

யோனத்தான்<Jonathan>  போர்த்துக்கொண்டிருந்த  சால்வையைக்  கழற்றி,  அதையும்,  தன்  வஸ்திரத்தையும்,  தன்  பட்டயத்தையும்,  தன்  வில்லையும்,  தன்  கச்சையையும்கூடத்  தாவீதுக்குக்<David>  கொடுத்தான்.  {1Sam  18:4}

 

தாவீது<David>  சவுல்<Saul>  தன்னை  அனுப்புகிற  எவ்விடத்திற்கும்  போய்,  புத்தியாய்க்  காரியத்தை  நடப்பித்ததினால்,  சவுல்<Saul>  அவனை  யுத்தமனுஷரின்மேல்  அதிகாரியாக்கினான்;  அவன்  எல்லா  ஜனத்தின்  கண்களுக்கும்,  சவுலுடைய<Saul>  ஊழியக்காரரின்  கண்களுக்கும்கூடப்  பிரியமாயிருந்தான்.  {1Sam  18:5}

 

தாவீது<David>  பெலிஸ்தனைக்<Philistine>  கொன்று  திரும்பிவந்தபின்பு,  ஜனங்கள்  திரும்ப  வரும்போதும்,  ஸ்திரீகள்  இஸ்ரவேலின்<Israel>  சகல  பட்டணங்களிலுமிருந்து,  ஆடல்பாடலுடன்  புறப்பட்டு,  மேளங்களோடும்  கீதவாத்தியங்களோடும்  சந்தோஷமாய்  ராஜாவாகிய  சவுலுக்கு<Saul>  எதிர்கொண்டுவந்தார்கள்.  {1Sam  18:6}

 

அந்த  ஸ்திரீகள்  ஆடிப்பாடுகையில்:  சவுல்<Saul>  கொன்றது  ஆயிரம்,  தாவீது<David>  கொன்றது  பதினாயிரம்  என்று  முறைமுறையாகப்  பாடினார்கள்.  {1Sam  18:7}

 

அந்த  வார்த்தை  சவுலுக்கு<Saul>  விசனமாயிருந்தது;  அவன்  மிகுந்த  எரிச்சலடைந்து,  தாவீதுக்குப்<David>  பதினாயிரம்,  எனக்கோ  ஆயிரம்  கொடுத்தார்கள்;  இன்னும்  ராஜாங்கமாத்திரம்  அவனுக்குக்  குறைவாயிருக்கிறது  என்று  சொல்லி,  {1Sam  18:8}

 

அந்நாள்முதற்கொண்டு  சவுல்<Saul>  தாவீதைக்<David>  காய்மகாரமாய்ப்  பார்த்தான்.  {1Sam  18:9}

 

மறுநாளிலே  தேவனால்  விடப்பட்ட  பொல்லாத  ஆவி  சவுலின்மேல்<Saul>  இறங்கிற்று;  அவன்  வீட்டிற்குள்ளே  தீர்க்கதரிசனம்  சொல்லிக்கொண்டிருந்தான்;  அப்பொழுது  தாவீது<David>  தினந்தோறும்  செய்கிறபடி,  தன்  கையினால்  சுரமண்டலத்தை  வாசித்துக்கொண்டிருந்தான்;  சவுலின்<Saul>  கையிலே  ஈட்டியிருந்தது.  {1Sam  18:10}

 

அப்பொழுது  சவுல்<Saul>  தாவீதைச்<David>  சுவரோடே  சேர்த்து  உருவக்  குத்திப்போடுவேன்  என்று  ஈட்டியை  அவன்மேல்  எறிந்தான்;  ஆனாலும்  தாவீது<David>  விலகி  இரண்டுதரம்  அவனுக்குத்  தப்பினான்.  {1Sam  18:11}

 

கர்த்தர்  தாவீதோடேகூட<David>  இருக்கிறார்  என்றும்  தன்னை  விட்டு  விலகிப்போனார்  என்றும்,  சவுல்<Saul>  கண்டு,  தாவீதுக்குப்<David>  பயந்து,  {1Sam  18:12}

 

அவனைத்  தன்னைவிட்டு  அப்புறப்படுத்தி,  அவனை  ஆயிரம்பேருக்கு  அதிபதியாக  வைத்தான்;  அப்படியே  அவன்  ஜனத்திற்கு  முன்பாகப்  போக்கும்  வரத்துமாயிருந்தான்.  {1Sam  18:13}

 

தாவீது<David>  தன்  செய்கைகளிலெல்லாம்  புத்திமானாய்  நடந்தான்;  கர்த்தர்  அவனோடேகூட  இருந்தார்.  {1Sam  18:14}

 

அவன்  மகா  புத்திமானாய்  நடக்கிறதைச்  சவுல்<Saul>  கண்டு,  அவனுக்குப்  பயந்திருந்தான்.  {1Sam  18:15}

 

இஸ்ரவேலரும்<Israel>  யூதா<Judah>  ஜனங்களுமாகிய  யாவரும்  தாவீதைச்<David>  சிநேகித்தார்கள்;  அவர்களுக்கு  முன்பாக  அவன்  போக்கும்  வரத்துமாயிருந்தான்.  {1Sam  18:16}

 

என்  கை  அல்ல,  பெலிஸ்தரின்<Philistines>  கையே  அவன்மேல்  விழட்டும்  என்று  சவுல்<Saul>  நினைத்துக்கொண்டு,  சவுல்<Saul>  தாவீதை<David>  நோக்கி:  இதோ,  என்  மூத்த  குமாரத்தியாகிய  மேராவை<Merab>  உனக்கு  மனைவியாகக்  கொடுப்பேன்;  நீ  எனக்கு  நல்ல  சேவகனாய்மாத்திரம்  இருந்து,  கர்த்தருடைய  யுத்தங்களை  நடத்து  என்றான்.  {1Sam  18:17}

 

அப்பொழுது  தாவீது<David>  சவுலைப்<Saul>  பார்த்து:  ராஜாவுக்கு  மருமகனாகிறதற்கு  நான்  எம்மாத்திரம்,  என்  ஜீவன்  எம்மாத்திரம்,  இஸ்ரவேலிலே<Israel>  என்  தகப்பன்  வம்சமும்  எம்மாத்திரம்  என்றான்.  {1Sam  18:18}

 

சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மேராப்<Merab>  தாவீதுக்குக்<David>  கொடுக்கப்படுங்  காலம்  வந்தபோது,  அவள்  மேகோலாத்தியனாகிய<Meholathite>  ஆதரியேலுக்கு<Adriel>  மனைவியாகக்  கொடுக்கப்பட்டாள்.  {1Sam  18:19}

 

சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மீகாள்<Michal>  தாவீதை<David>  நேசித்தாள்;  அது  சவுலுக்கு<Saul>  அறிவிக்கப்பட்டபோது,  அது  அவனுக்குச்  சந்தோஷமாயிருந்தது.  {1Sam  18:20}

 

அவள்  அவனுக்குக்  கண்ணியாயிருக்கவும்,  பெலிஸ்தரின்<Philistines>  கை  அவன்மேல்  விழவும்,  அவளை  அவனுக்குக்  கொடுப்பேன்  என்று  சவுல்<Saul>  எண்ணி,  தாவீதை<David>  நோக்கி:  நீ  என்னுடைய  இரண்டாம்  குமாரத்தியினால்  இன்று  எனக்கு  மருமகனாவாய்  என்றான்.  {1Sam  18:21}

 

பின்பு  சவுல்<Saul>  தன்  ஊழியக்காரரைப்  பார்த்து:  நீங்கள்  தாவீதோடே<David>  இரகசியமாய்ப்  பேசி:  இதோ,  ராஜா  உன்மேல்  பிரியமாயிருக்கிறார்;  அவருடைய  ஊழியக்காரர்  எல்லாரும்  உம்மைச்  சிநேகிக்கிறார்கள்;  இப்போதும்  நீர்  ராஜாவுக்கு  மருமகனானால்  நலம்  என்று  சொல்லுங்கள்  என்று  கற்பித்தான்.  {1Sam  18:22}

 

சவுலின்<Saul>  ஊழியக்காரர்  இந்த  வார்த்தைகளைத்  தாவீதின்<David>  செவிகள்  கேட்கப்  பேசினார்கள்;  அப்பொழுது  தாவீது<David>,  நான்  ராஜாவுக்கு  மருமகனாகிறது  லேசான  காரியமா?  நான்  எளியவனும்,  அற்பமாய்  எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்  என்றான்.  {1Sam  18:23}

 

தாவீது<David>  இன்ன  இன்னபடி  சொன்னான்  என்று  சவுலின்<Saul>  ஊழியக்காரர்  அவனுக்கு  அறிவித்தார்கள்.  {1Sam  18:24}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  ராஜா  பரிசத்தை  விரும்பாமல்,  பெலிஸ்தரின்<Philistines>  நூறு  நுனித்தோல்களினால்  ராஜாவின்  சத்துருக்களிடத்தில்  பழிவாங்க  விருப்பமாயிருக்கிறார்  என்று  தாவீதுக்குச்<David>  சொல்லுங்கள்  என்றான்;  தாவீதை<David>  பெலிஸ்தரின்<Philistines>  கையினால்  விழப்பண்ணுவதே  சவுலுடைய<Saul>  எண்ணமாயிருந்தது.  {1Sam  18:25}

 

அவன்  ஊழியக்காரர்  தாவீதுக்கு<David>  இந்த  வார்த்தைகளைச்  சொன்னபோது,  ராஜாவுக்கு  மருமகனாகிறது  தாவீதுக்குப்<David>  பிரியமாயிருந்தது.  {1Sam  18:26}

 

அதற்குக்  குறித்த  நாட்கள்  நிறைவேறுமுன்னே,  தாவீது<David>  எழுந்து,  தன்  மனுஷரைக்  கூட்டிக்கொண்டுபோய்,  பெலிஸ்தரில்<Philistines>  இருநூறுபேரை  வெட்டி,  அவர்கள்  நுனித்தோல்களைக்  கொண்டுவந்து,  தான்  ராஜாவுக்கு  மருமகனாகும்படிக்கு,  அவைகளை  ராஜாவுக்கு  எண்ணிச்  செலுத்தினான்;  அப்பொழுது  சவுல்<Saul>  தன்  குமாரத்தியாகிய  மீகாளை<Michal>  அவனுக்கு  மனைவியாகக்  கொடுத்தான்.  {1Sam  18:27}

 

கர்த்தர்  தாவீதோடிருக்கிறார்<David>  என்று  சவுல்<Saul>  கண்டறிந்துகொண்டான்;  சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மீகாளும்<Michal>  அவனை  நேசித்தாள்.  {1Sam  18:28}

 

ஆகையால்  சவுல்<Saul>  இன்னும்  அதிகமாய்த்  தாவீதுக்குப்<David>  பயந்து,  தான்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  தாவீதுக்குச்<David>  சத்துருவாயிருந்தான்.  {1Sam  18:29}

 

பெலிஸ்தருடைய<Philistines>  பிரபுக்கள்  புறப்படுகிறபோதெல்லாம்  தாவீது<David>  சவுலுடைய<Saul>  ஊழியக்காரர்  எல்லாரைப்பார்க்கிலும்  புத்திமானாய்  நடந்துகொண்டான்;  அவன்  பேர்  மிகவும்  கனம்பெற்றது.  {1Sam  18:30}

 

தாவீதைக்<David>  கொன்றுபோடும்படிக்கு,  சவுல்<Saul>  தன்  குமாரனாகிய  யோனத்தானோடும்<Jonathan>  தன்  ஊழியக்காரர்  எல்லாரோடும்  பேசினான்.  {1Sam  19:1}

 

சவுலின்<Saul>  குமாரனாகிய  யோனத்தானோ<Jonathan>,  தாவீதின்மேல்<David>  மிகவும்  பிரியமாயிருந்தான்;  அதனால்  யோனத்தான்<Jonathan>  தாவீதுக்கு<David>  அதை  அறிவித்து:  என்  தகப்பனாகிய  சவுல்<Saul>  உம்மைக்  கொன்றுபோட  வகைதேடுகிறார்;  இப்போதும்  நாளைக்காலமே  நீர்  எச்சரிக்கையாயிருந்து,  மறைவான  இடத்தில்  ஒளித்துக்கொண்டிரும்.  {1Sam  19:2}

 

நான்  புறப்பட்டுவந்து,  நீர்  வெளியிலிருக்கும்  இடத்தில்  என்  தகப்பன்  பக்கத்திலே  நின்று,  உமக்காக  என்  தகப்பனோடே  பேசி,  நடக்கும்  காரியத்தைக்  கண்டு,  உமக்கு  அறிவிப்பேன்  என்றான்.  {1Sam  19:3}

 

அப்படியே  யோனத்தான்<Jonathan>  தன்  தகப்பனாகிய  சவுலோடே<Saul>  தாவீதுக்காக<David>  நலமாய்ப்  பேசி,  ராஜா  தம்முடைய  அடியானாகிய  தாவீதுக்கு<David>  விரோதமாய்ப்  பாவஞ்செய்யாதிருப்பாராக;  அவன்  உமக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்யவில்லை;  அவன்  செய்கைகள்  உமக்கு  மெத்த  உபயோகமாயிருக்கிறதே.  {1Sam  19:4}

 

அவன்  தன்  பிராணனைத்  தன்  கையிலே  வைத்துக்கொண்டு,  அந்தப்  பெலிஸ்தனைக்<Philistine>  கொன்றதினாலே,  கர்த்தர்  இஸ்ரவேலுக்கெல்லாம்<Israel>  பெரிய  இரட்சிப்பைக்  கட்டளையிட்டதை  நீர்  கண்டு,  சந்தோஷப்பட்டீரே;  இப்போதும்  முகாந்தரமில்லாமல்  தாவீதைக்<David>  கொல்லுகிறதினால்,  குற்றமில்லாத  இரத்தத்திற்கு  விரோதமாக  நீர்  பாவஞ்செய்வானேன்  என்றான்.  {1Sam  19:5}

 

சவுல்<Saul>  யோனத்தானுடைய<Jonathan>  சொல்லைக்  கேட்டு:  அவன்  கொலைசெய்யப்படுவதில்லை  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  ஆணையிட்டான்.  {1Sam  19:6}

 

பின்பு  யோனத்தான்<Jonathan>  தாவீதை<David>  அழைத்து,  அந்த  வார்த்தைகளையெல்லாம்  அவனுக்கு  அறிவித்து,  அவனைச்  சவுலண்டையிலே<Saul>  கூட்டிக்கொண்டுபோய்  விட்டான்;  அப்படியே  அவன்  முன்போலவே  அவனுடைய  சமுகத்தில்  இருந்தான்.  {1Sam  19:7}

 

மறுபடியும்  ஒரு  யுத்தம்  உண்டாயிற்று;  அப்பொழுது  தாவீது<David>  புறப்பட்டுப்போய்,  பெலிஸ்தரோடே<Philistines>  யுத்தம்பண்ணி,  அவர்களுக்குள்  மகா  சங்காரம்பண்ணினதினால்  அவர்கள்  அவனுக்கு  முன்பாக  முறிந்தோடிப்போனார்கள்.  {1Sam  19:8}

 

கர்த்தரால்  விடப்பட்ட  பொல்லாத  ஆவி  சவுலின்மேல்<Saul>  வந்தது;  அவன்  தன்  வீட்டில்  உட்கார்ந்து,  தன்  ஈட்டியைக்  கையிலே  பிடித்துக்கொண்டிருந்தான்;  தாவீது<David>  தன்  கையினாலே  சுரமண்டலம்  வாசித்தான்.  {1Sam  19:9}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  தாவீதை<David>  ஈட்டியினாலே  சுவரோடே  சேர்த்து  உருவக்  குத்திப்போடப்  பார்த்தான்;  ஆனாலும்  இவன்  சவுலுக்கு<Saul>  விலகினதினாலே,  அவன்  எறிந்த  ஈட்டி  சுவரிலே  பட்டது;  தாவீதோ<David>  அன்று  இராத்திரி  ஓடிப்போய்,  தன்னைத்  தப்புவித்துக்கொண்டான்.  {1Sam  19:10}

 

தாவீதைக்<David>  காவல்பண்ணி,  மறுநாள்  காலமே  அவனைக்  கொன்றுபோடும்படிக்கு,  சவுல்<Saul>  அவன்  வீட்டிற்குச்  சேவகரை  அனுப்பினான்;  இதைத்  தாவீதுக்கு<David>  அவன்  மனைவியாகிய  மீகாள்<Michal>  அறிவித்து:  நீர்  இன்று  இராத்திரியில்  உம்முடைய  பிராணனைத்  தப்புவித்துக்கொள்ளாவிட்டால்,  நாளைக்கு  நீர்  கொன்றுபோடப்படுவீர்  என்று  சொல்லி,  {1Sam  19:11}

 

மீகாள்<Michal>  தாவீதை<David>  ஜன்னல்வழியாய்  இறக்கிவிட்டாள்;  அவன்  தப்பி  ஓடிப்போனான்.  {1Sam  19:12}

 

மீகாளோ<Michal>  ஒரு  சுரூபத்தை  எடுத்து,  கட்டிலின்மேல்  வைத்து,  அதின்  தலைமாட்டிலே  ஒரு  வெள்ளாட்டுத்தோலைப்போட்டு,  துப்பட்டியினால்  மூடிவைத்தாள்.  {1Sam  19:13}

 

தாவீதைக்<David>  கொண்டுவரச்  சவுல்<Saul>  சேவகரை  அனுப்பினபோது,  அவர்  வியாதியாயிருக்கிறார்  என்றாள்.  {1Sam  19:14}

 

அப்பொழுது  தாவீதைப்<David>  பார்க்கிறதற்குச்  சவுல்<Saul>  சேவகரை  அனுப்பி,  அவனைக்  கொன்றுபோடும்படிக்கு,  கட்டிலோடே  அவனை  என்னிடத்திற்கு  எடுத்துக்கொண்டுவாருங்கள்  என்றான்.  {1Sam  19:15}

 

சேவகர்  வந்தபோது,  இதோ,  சுரூபம்  கட்டிலின்மேலும்,  வெள்ளாட்டுத்தோல்  அதின்  தலைமாட்டிலும்  கிடக்கக்  கண்டார்கள்.  {1Sam  19:16}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  நீ  இப்படி  என்னை  ஏய்த்து,  என்  பகைஞனைத்  தப்பவிட்டு  அனுப்பினது  என்ன  என்று  மீகாளிடத்தில்<Michal>  கேட்டான்.  மீகாள்<Michal>  சவுலை<Saul>  நோக்கி:  என்னைப்  போகவிடு,  நான்  உன்னை  ஏன்  கொல்லவேண்டும்  என்று  அவர்  என்னிடத்தில்  சொன்னார்  என்றாள்.  {1Sam  19:17}

 

தாவீது<David>  தப்பி,  ராமாவிலிருந்த<Ramah>  சாமுவேலிடத்திற்குப்<Samuel>  போய்,  சவுல்<Saul>  தனக்குச்  செய்தது  எல்லாவற்றையும்  அவனுக்கு  அறிவித்தான்;  பின்பு  அவனும்  சாமுவேலும்<Samuel>  போய்,  நாயோதிலே<Naioth>  தங்கியிருந்தார்கள்.  {1Sam  19:18}

 

தாவீது<David>  ராமாவுக்கடுத்த<Ramah>  நாயோதிலே<Naioth>  இருக்கிறான்  என்று  சவுலுக்கு<Saul>  அறிவிக்கப்பட்டது.  {1Sam  19:19}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  தாவீதைக்<David>  கொண்டுவரச்  சேவகரை  அனுப்பினான்;  அவர்கள்  தீர்க்கதரிசனம்  சொல்லுகிற  தீர்க்கதரிசிகளின்  கூட்டத்தையும்,  சாமுவேல்<Samuel>  அவர்களின்  தலைவனாக  நிற்கிறதையும்  கண்டார்கள்;  அப்பொழுது  சவுலினுடைய<Saul>  சேவகரின்மேல்  தேவனுடைய  ஆவி  இறங்கினதினால்  அவர்களும்  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்.  {1Sam  19:20}

 

இது  சவுலுக்கு<Saul>  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  வேறே  சேவகரை  அனுப்பினான்;  அவர்களும்  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்;  மூன்றாந்தரமும்  சவுல்<Saul>  சேவகரை  அனுப்பினான்;  அவர்களும்  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்.  {1Sam  19:21}

 

அப்பொழுது  அவனும்  ராமாவுக்குப்<Ramah>  போய்,  சேக்குவிலிருக்கிற<Sechu>  பெரிய  கிணற்றண்டையிலே  வந்து,  சாமுவேலும்<Samuel>  தாவீதும்<David>  எங்கே  என்று  கேட்டான்;  அதோ  ராமாவுக்கடுத்த<Ramah>  நாயோதிலே<Naioth>  இருக்கிறார்கள்  என்று  சொல்லப்பட்டது.  {1Sam  19:22}

 

அப்பொழுது  ராமாவுக்கடுத்த<Ramah>  நாயோதிற்குப்<Naioth>  போனான்;  அவன்மேலும்  தேவனுடைய  ஆவி  இறங்கினதினால்  அவன்  ராமாவுக்கடுத்த<Ramah>  நாயோதிலே<Naioth>  சேருமட்டும்,  தீர்க்கதரிசனம்  சொல்லிக்கொண்டே  நடந்துவந்து,  {1Sam  19:23}

 

தானும்  தன்  வஸ்திரங்களைக்  கழற்றிப்போட்டு,  சாமுவேலுக்கு<Samuel>  முன்பாகத்  தீர்க்கதரிசனம்  சொல்லி,  அன்று  பகல்  முழுவதும்  இராமுழுவதும்  வஸ்திரம்  இல்லாமல்  விழுந்துகிடந்தான்;  ஆகையினாலே  சவுலும்<Saul>  தீர்க்கதரிசிகளில்  ஒருவனோ  என்பார்கள்.  {1Sam  19:24}

 

தாவீது<David>  ராமாவுக்கடுத்த<Ramah>  நாயோதிலிருந்து<Naioth>  ஓடிப்போய்,  யோனத்தான்<Jonathan>  முன்பாக  வந்து:  உம்முடைய  தகப்பன்  என்  பிராணனை  வாங்கத்தேடுகிறாரே,  நான்  செய்தது  என்ன?  என்  அக்கிரமம்  என்ன?  நான்  அவருக்குச்  செய்த  துரோகம்  என்ன?  என்றான்.  {1Sam  20:1}

 

அதற்கு  அவன்:  அப்படி  ஒருக்காலும்  வாராது;  நீர்  சாவதில்லை,  இதோ,  எனக்கு  அறிவிக்காமல்  என்  தகப்பன்  பெரிய  காரியமானாலும்  சிறிய  காரியமானாலும்  ஒன்றும்  செய்கிறதில்லை;  இந்தக்  காரியத்தை  என்  தகப்பன்  எனக்கு  மறைப்பானேன்?  அப்படி  இருக்கமாட்டாது  என்றான்.  {1Sam  20:2}

 

அப்பொழுது  தாவீது<David>:  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயைகிடைத்தது  என்று  உம்முடைய  தகப்பன்  நன்றாய்  அறிவார்;  ஆகையால்  யோனத்தானுக்கு<Jonathan>  மனநோவு  உண்டாகாதபடிக்கு  அவன்  இதை  அறியப்போகாது  என்பார்;  மரணத்திற்கும்  எனக்கும்  ஒரு  அடி  தூரமாத்திரம்  இருக்கிறது  என்று  கர்த்தருடைய  ஜீவனையும்  உம்முடைய  ஜீவனையும்  கொண்டு  நிச்சயமாய்ச்  சொல்லுகிறேன்  என்று  மறுமொழி  சொல்லி  ஆணையிட்டான்.  {1Sam  20:3}

 

அப்பொழுது  யோனத்தான்<Jonathan>  தாவீதைப்<David>  பார்த்து:  உமது  மனவிருப்பம்  இன்னது  என்று  சொல்லும்,  அதின்படி  உமக்குச்  செய்வேன்  என்றான்.  {1Sam  20:4}

 

தாவீது<David>  யோனத்தானை<Jonathan>  நோக்கி:  இதோ,  நாளைக்கு  அமாவாசி,  நான்  ராஜாவோடே  பந்தியிருந்து  சாப்பிடவேண்டியதாயிருக்கும்;  ஆனாலும்  நான்  மூன்றாம்  நாள்  சாயங்காலமட்டும்  வெளியிலே  ஒளித்திருக்கும்படி  எனக்கு  உத்தரவு  கொடும்.  {1Sam  20:5}

 

உம்முடைய  தகப்பன்  என்னைக்குறித்து  விசாரித்தால்,  தன்  ஊராகிய  பெத்லெகேமிலே<Bethlehem>  தன்  குடும்பத்தார்  யாவரும்  வருஷத்துக்கு  ஒருதரம்  பலியிட  வருகிறபடியால்  தாவீது<David>  அவ்விடத்திற்குப்போக  என்னிடத்தில்  வருந்திக்  கேட்டான்  என்று  நீர்  சொல்லும்.  {1Sam  20:6}

 

அதற்கு  அவர்  நல்லது  என்றால்,  உம்முடைய  அடியானுக்குச்  சமாதானம்  இருக்கும்;  அவருக்கு  எரிச்சலுண்டானால்,  அவராலே  பொல்லாப்புத்  தீர்மானப்பட்டிருக்கிறது  என்று  அறிந்துகொள்வீர்.  {1Sam  20:7}

 

ஆகையால்  உம்முடைய  அடியானுக்குத்  தயைசெய்யவேண்டும்;  கர்த்தருக்கு  முன்பாக  உம்முடைய  அடியானோடே  உடன்படிக்கை  பண்ணியிருக்கிறீரே;  என்னில்  ஒரு  அக்கிரமம்  இருந்ததேயானால்,  நீரே  என்னைக்  கொன்றுபோடும்;  நீர்  என்னை  உம்முடைய  தகப்பனிடத்துக்குக்  கொண்டுபோகவேண்டியது  என்ன  என்றான்.  {1Sam  20:8}

 

அப்பொழுது  யோனத்தான்<Jonathan>:  அப்படி  உமக்கு  வராதிருப்பதாக;  உமக்குப்  பொல்லாப்புச்  செய்ய  என்  தகப்பனாலே  தீர்மானித்திருக்கிறது  என்று  நான்  நிச்சயமாய்  அறிந்தேனானால்  நான்  அதை  உமக்கு  அறிவிக்காதிருப்பேனா  என்றான்.  {1Sam  20:9}

 

தாவீது<David>  யோனத்தானை<Jonathan>  நோக்கி:  உம்முடைய  தகப்பன்  கடினமான  உத்தரம்  சொன்னால்  அதை  யார்  எனக்கு  அறிவிப்பார்  என்றான்.  {1Sam  20:10}

 

அப்பொழுது  யோனத்தான்<Jonathan>  தாவீதைப்<David>  பார்த்து:  ஊருக்கு  வெளியே  போவோம்  வாரும்  என்றான்;  இருவரும்  வெளியே  புறப்பட்டுப்போனார்கள்.  {1Sam  20:11}

 

அப்பொழுது  யோனத்தான்<Jonathan>  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரை  முன்னிட்டுத்  தாவீதை<David>  நோக்கி:  நான்  நாளையாவது  மறுநாளிலாவது  என்  தகப்பனுடைய  மனதை  அறிந்துகொண்டு,  அவர்  தாவீதின்மேல்<David>  தயவாயிருக்கிறார்  என்று  கண்டும்,  அதை  அப்போது  உமது  செவிகளுக்கு  வெளிப்படுத்தும்படிக்கு,  உமக்குச்  சொல்லியனுப்பாதிருந்தால்,  {1Sam  20:12}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  யோனத்தானுக்கு<Jonathan>  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்;  ஆனாலும்  உமக்குத்  தீங்கு  செய்ய  என்  தகப்பனுக்குப்  பிரியமாயிருந்தால்,  அதை  உமது  செவிகளுக்கு  வெளிப்படுத்தி,  நீர்  சமாதானத்தோடே  போகும்படிக்கு  உம்மை  அனுப்பிவிடுவேன்;  கர்த்தர்  என்  தகப்பனோடு  இருந்ததுபோல்,  உம்மோடும்  இருப்பாராக.  {1Sam  20:13}

 

மேலும்,  நான்  உயிரோடிருக்கையில்,  நான்  சாகாதபடிக்கு  நீர்  கர்த்தரின்  நிமித்தமாய்  எனக்குத்  தயைசெய்யவேண்டியதும்  அல்லாமல்,  {1Sam  20:14}

 

கர்த்தர்  தாவீதின்<David>  சத்துருக்களாகிய  ஒவ்வொருவரையும்  பூமியின்மேல்  இராதபடிக்கு,  வேர்அறுக்கும்போதும்,  நீர்  என்றைக்கும்  உமது  தயவை  என்  வீட்டைவிட்டு  அகற்றிவிடாமலும்  இருக்கவேண்டும்  என்றான்.  {1Sam  20:15}

 

இப்படி  யோனத்தான்<Jonathan>  தாவீதின்<David>  குடும்பத்தோடே  உடன்படிக்கைபண்ணி,  தாவீதுடைய<David>  சத்துருக்களின்  கையிலே  கர்த்தர்  கணக்குக்  கேட்பாராக  என்று  சொல்லி,  {1Sam  20:16}

 

யோனத்தான்<Jonathan>  தாவீதை<David>  மிகவும்  சிநேகித்தபடியினால்,  பின்னும்  அவனுக்கு  ஆணையிட்டான்;  தன்  உயிரைச்  சிநேகித்ததுபோல  அவனைச்  சிநேகித்தான்.  {1Sam  20:17}

 

பின்பு  யோனத்தான்<Jonathan>  தாவீதைப்<David>  பார்த்து:  நாளைக்கு  அமாவாசி,  நீர்  உட்காரவேண்டிய  இடம்  காலியாயிருப்பதினால்  உம்மைக்குறித்து  விசாரிக்கப்படும்.  {1Sam  20:18}

 

காரியம்  நடந்தபோது,  மூன்றாம்  நாளிலே  நீர்  ஒளித்திருக்கும்  இடத்திற்குத்  தீவிரித்து  வந்து,  ஏசேல்<Ezel>  என்னும்  கல்லண்டையில்  உட்கார்ந்திரும்.  {1Sam  20:19}

 

அப்பொழுது  நான்  குறிப்புவைத்து  எய்கிறதுபோல,  அதற்குப்  பக்கமாக  மூன்று  அம்புகளை  எய்து:  {1Sam  20:20}

 

நீ  போய்,  அந்த  அம்புகளைத்  தேடி  வா  என்று  ஒரு  பிள்ளையாண்டானை  அனுப்புவேன்;  இதோ,  அம்புகள்  உனக்கு  இப்புறத்திலே  கிடக்கிறது,  அவைகளை  எடுத்துக்கொண்டுவா  என்று  பிள்ளையாண்டானிடத்தில்  நான்  சொன்னால்,  நீர்  வாரும்;  அப்பொழுது  ஒன்றும்  இல்லை,  உமக்குச்  சமாதானம்  இருக்கும்  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {1Sam  20:21}

 

இதோ,  அம்புகள்  உனக்கு  அப்புறத்திலே  கிடக்கிறது  என்று  நான்  அந்தப்  பிள்ளையாண்டானிடத்தில்  சொன்னால்,  நீர்  போய்விடும்;  அப்பொழுது  கர்த்தர்  உம்மைப்  போகச்சொல்லுகிறார்  என்று  அறியும்.  {1Sam  20:22}

 

நீரும்  நானும்  பேசிக்கொண்ட  காரியத்திற்கு,  இதோ,  கர்த்தர்  எனக்கும்  உமக்கும்  என்றைக்கும்  நடுநிற்கும்  சாட்சி  என்றான்.  {1Sam  20:23}

 

அப்படியே  தாவீது<David>  வெளியிலே  ஒளித்துக்கொண்டிருந்தான்;  அமாவாசியானபோது  ராஜா  போஜனம்பண்ண  உட்கார்ந்தான்.  {1Sam  20:24}

 

ராஜா  சுவரண்டையிலிருக்கிற  தன்  இடத்தில்  எப்போதும்போல்  உட்கார்ந்தபோது,  யோனத்தான்<Jonathan>  எழுந்திருந்தான்;  அப்னேரோ<Abner>  சவுலுடைய<Saul>  பக்கத்தில்  உட்கார்ந்தான்;  தாவீது<David>  இருக்கும்  இடம்  காலியாயிருந்தது.  {1Sam  20:25}

 

ஆனாலும்  அவன்  தீட்டாயிருக்கிறானாக்கும்,  அவன்  தீட்டுப்பட்டுத்தான்  இருக்கவேண்டும்  என்று  அன்றையதினம்  சவுல்<Saul>  ஒன்றும்  சொல்லவில்லை.  {1Sam  20:26}

 

அமாவாசிக்கு  மறுநாளிலும்  தாவீது<David>  இருக்கும்  இடம்  காலியாயிருந்தது;  அப்பொழுது  சவுல்<Saul>:  ஈசாயின்<Jesse>  மகன்  நேற்றும்  இன்றும்  போஜனத்துக்கு  வராதேபோனது  என்ன  என்று  தன்  குமாரனாகிய  யோனத்தானைக்<Jonathan>  கேட்டான்.  {1Sam  20:27}

 

யோனத்தான்<Jonathan>  சவுலுக்குப்<Saul>  பிரதியுத்தரமாக:  பெத்லெகேம்மட்டும்<Bethlehem>  போக,  தாவீது<David>  என்னிடத்தில்  வருந்திக்கேட்டு,  {1Sam  20:28}

 

அங்கே  நான்  போகவேண்டும்;  எங்கள்  குடும்பத்தார்  ஊரிலே  பலியிடப்  போகிறார்கள்;  என்  தமையன்  என்னை  வரும்படி  கட்டளையிட்டார்;  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயைகிடைத்ததானால்,  நான்  என்  சகோதரரைப்  பார்க்கிறதற்குப்  போக  எனக்கு  உத்தரவு  கொடும்  என்றான்;  இதனாலேதான்  அவன்  ராஜாவின்  பந்திக்கு  வரவில்லை  என்றான்.  {1Sam  20:29}

 

அப்பொழுது  சவுல்<Saul>  யோனத்தான்மேல்<Jonathan>  கோபமூண்டவனாகி,  அவனைப்  பார்த்து:  இரண்டகமும்  மாறுபாடுமுள்ளவளின்  மகனே,  நீ  உனக்கு  வெட்கமாகவும்,  உன்  தாயின்  மானத்திற்கு  வெட்கமாகவும்,  ஈசாயின்<Jesse>  மகனைத்  தோழனாகத்  தெரிந்துகொண்டிருக்கிறதை  நான்  அறியேனோ?  {1Sam  20:30}

 

ஈசாயின்<Jesse>  மகன்  பூமியின்மேல்  உயிரோடிருக்கும்  நாள்வரையும்  நீயானாலும்  உன்  ராஜ்யபாரமானாலும்  நிலைப்படுவதில்லை;  இப்போதே  அவனை  அழைப்பித்து,  என்னிடத்தில்  கொண்டுவா;  அவன்  சாகவேண்டும்  என்றான்.  {1Sam  20:31}

 

யோனத்தான்<Jonathan>  தன்  தகப்பனாகிய  சவுலுக்குப்<Saul>  பிரதியுத்தரமாக:  அவன்  ஏன்  கொல்லப்படவேண்டும்?  அவன்  என்ன  செய்தான்  என்றான்.  {1Sam  20:32}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  அவனைக்  குத்திப்போட  அவன்மேல்  ஈட்டியை  எறிந்தான்;  ஆகையால்  தாவீதைக்<David>  கொன்றுபோடத்  தன்  தகப்பன்  தீர்மானித்திருக்கிறான்  என்பதை  யோனத்தான்<Jonathan>  அறிந்துகொண்டு,  {1Sam  20:33}

 

கோபதாபமாய்  பந்தியைவிட்டு  எழுந்திருந்துபோய்,  அமாவாசியின்  மறுநாளாகிய  அன்றையதினம்  போஜனம்பண்ணாதிருந்தான்;  தன்  தகப்பன்  தாவீதை<David>  நிந்தித்துச்  சொன்னது  அவனுக்கு  மனநோவாயிருந்தது.  {1Sam  20:34}

 

மறுநாள்  காலமே,  யோனத்தான்<Jonathan>  தாவீதுக்குக்<David>  குறித்தநேரத்திலே  ஒரு  சிறுபிள்ளையாண்டானைக்  கூட்டிக்கொண்டு,  வெளியே  புறப்பட்டுப்போய்:  {1Sam  20:35}

 

பிள்ளையாண்டானை  நோக்கி:  நீ  ஓடி,  நான்  எய்கிற  அம்புகளைத்  தேடி  எடுத்துக்கொண்டுவா  என்று  சொல்லி,  அந்தப்  பிள்ளையாண்டான்  ஓடும்போது,  அவனுக்கு  அப்பாலே  போகும்படி  ஒரு  அம்பை  எய்தான்.  {1Sam  20:36}

 

யோனத்தான்<Jonathan>  எய்த  அம்பிருக்கும்  இடமட்டும்  பிள்ளையாண்டான்  போனபோது,  அம்பு  உனக்கு  இன்னும்  அப்பால்  இருக்கிறது  அல்லவா  என்று  யோனத்தான்<Jonathan>  பிள்ளையாண்டானுக்குப்  பிறகேயிருந்து  கூப்பிட்டான்.  {1Sam  20:37}

 

நீ  தரித்துநிற்காமல்  தீவிரித்துப்  பொட்டெனப்போ  என்றும்  யோனத்தான்<Jonathan>  பிள்ளையாண்டானுக்குப்  பிறகேயிருந்து  கூப்பிட்டான்;  அப்படியே  யோனத்தானின்<Jonathan>  பிள்ளையாண்டான்  அம்புகளைப்  பொறுக்கி,  தன்  எஜமானிடத்தில்  கொண்டுவந்தான்.  {1Sam  20:38}

 

அந்தக்  காரியம்  யோனத்தானுக்கும்<Jonathan>  தாவீதுக்கும்<David>  தெரிந்திருந்ததேயல்லாமல்,  அந்தப்  பிள்ளையாண்டானுக்கு  ஒன்றும்  தெரியாதிருந்தது.  {1Sam  20:39}

 

அப்பொழுது  யோனத்தான்<Jonathan>:  தன்  ஆயுதங்களைப்  பிள்ளையாண்டானிடத்தில்  கொடுத்து,  இவைகளைப்  பட்டணத்திற்குக்  கொண்டுபோ  என்றான்.  {1Sam  20:40}

 

பிள்ளையாண்டான்  போனபின்பு,  தாவீது<David>  தென்புறமான  இடத்திலிருந்து  எழுந்துவந்து,  தரையிலே  முகங்குப்புற  விழுந்து,  மூன்றுவிசை  வணங்கினான்;  அவர்கள்  ஒருவரை  ஒருவர்  முத்தஞ்செய்து  அழுதார்கள்;  தாவீது<David>  மிகவும்  அழுதான்.  {1Sam  20:41}

 

அப்பொழுது  யோனத்தான்<Jonathan>  தாவீதை<David>  நோக்கி:  நீர்  சமாதானத்தோடே  போம்,  கர்த்தர்  என்றைக்கும்  எனக்கும்  உமக்கும்,  என்  சந்ததிக்கும்  உமது  சந்ததிக்கும்,  நடுநிற்கும்  சாட்சி  என்று  சொல்லி,  கர்த்தருடைய  நாமத்தைக்கொண்டு  நாம்  இருவரும்  ஆணையிட்டுக்  கொண்டதை  நினைத்துக்  கொள்ளும்  என்றான்.  (43)  பின்பு  அவன்  எழுந்து  புறப்பட்டுப்போனான்;  யோனத்தானோ<Jonathan>  பட்டணத்திற்குப்  போய்விட்டான்.  {1Sam  20:42}

 

தாவீது<David>  நோபிலிருக்கிற<Nob>  ஆசாரியனாகிய  அகிமெலேக்கினிடத்தில்<Ahimelech>  போனான்;  அகிமெலேக்கு<Ahimelech>  நடுக்கத்தோடே  தாவீதுக்கு<David>  எதிர்கொண்டுபோய்:  ஒருவரும்  உம்மோடே  கூடவராமல்,  நீர்  ஒண்டியாய்  வருகிறது  என்ன  என்று  அவனைக்  கேட்டான்.  {1Sam  21:1}

 

தாவீது<David>  ஆசாரியனாகிய  அகிமெலேக்கைப்<Ahimelech>  பார்த்து:  ராஜா  எனக்கு  ஒரு  காரியத்தைக்  கட்டளையிட்டு,  நான்  உன்னை  அனுப்பின  காரியமும்  உனக்குக்  கட்டளையிட்டதும்  இன்னதென்று  ஒருவரும்  அறியாதிருக்கவேண்டும்  என்று  என்னோடே  சொன்னார்;  இன்ன  இடத்திற்கு  வரவேண்டும்  என்று  சேவகருக்குச்  சொல்லியிருக்கிறேன்.  {1Sam  21:2}

 

இப்போதும்  உம்முடைய  கையில்  இருக்கிறது  என்ன?  ஐந்து  அப்பமாகிலும்,  என்னவாகிலும்,  இருக்கிறதை  என்  கையிலே  கொடும்  என்றான்.  {1Sam  21:3}

 

ஆசாரியன்  தாவீதுக்குப்<David>  பிரதியுத்தரமாக:  பரிசுத்த  அப்பம்  இருக்கிறதே  ஒழிய,  சாதாரண  அப்பம்  என்  கையில்  இல்லை;  வாலிபர்  ஸ்திரீகளோடேமாத்திரம்  சேராதிருந்தால்  கொடுப்பேன்  என்றான்.  {1Sam  21:4}

 

தாவீது<David>  ஆசாரியனுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  புறப்படுகிறதற்கு  முன்  நேற்றும்  முந்தாநாளும்  ஸ்திரீகள்  எங்களுக்கு  விலக்கமாயிருந்தார்கள்;  வாலிபருடைய  அசம்பிகளும்  சுத்தமாயிருக்கிறது;  இன்றையதினம்  வேறே  அப்பம்  பாத்திரத்தில்  பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால்,  இது  சாதாரணமாயிற்றே  என்றான்.  {1Sam  21:5}

 

அப்பொழுது  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  எடுக்கப்பட்ட  சமுகத்தப்பங்களைத்தவிர,  வேறே  அப்பம்  அங்கே  இராதபடியினால்  ஆசாரியன்  அவனுக்குப்  பரிசுத்த  அப்பத்தைக்  கொடுத்தான்;  அவைகள்  எடுக்கப்படுகிற  நாளிலே  அதற்குப்  பதிலாகச்  சூடான  அப்பம்  வைக்கப்படும்.  {1Sam  21:6}

 

சவுலுடைய<Saul>  வேலைக்காரரில்  ஏதோமியனாகிய<Edomite>  தோவேக்கு<Doeg>  என்னும்  பேருள்ள  ஒருவன்  அன்றையதினம்  அங்கே  கர்த்தருடைய  சந்நிதியில்  தடைபட்டிருந்தான்;  அவன்  சவுலுடைய<Saul>  மேய்ப்பருக்குத்  தலைவனாயிருந்தான்.  {1Sam  21:7}

 

தாவீது<David>  அகிமெலேக்கைப்<Ahimelech>  பார்த்து:  இங்கே  உம்முடைய  வசத்தில்  ஒரு  ஈட்டியானாலும்  பட்டயமானாலும்  இல்லையா?  ராஜாவின்  காரியம்  அவசரமானபடியினால்,  என்  பட்டயத்தையாகிலும்,  என்  ஆயுதங்களையாகிலும்,  நான்  எடுத்துக்  கொண்டுவரவில்லை  என்றான்.  {1Sam  21:8}

 

அதற்கு  ஆசாரியன்:  நீர்  ஏலே<Elah>  பள்ளத்தாக்கிலே  கொன்ற  பெலிஸ்தனாகிய<Philistine>  கோலியாத்தின்<Goliath>  பட்டயம்,  இதோ,  ஏபோத்துக்குப்<ephod>  பின்னாக  ஒரு  புடவையிலே  சுருட்டி  வைத்திருக்கிறது;  அதை  நீர்  எடுக்க  மனதானால்  எடுத்துக்கொண்டுபோம்,  அதுவே  அல்லாமல்  வேறொன்றும்  இங்கே  இல்லை  என்றான்;  அப்பொழுது  தாவீது<David>:  அதற்கு  நிகரில்லை;  அதை  எனக்குத்  தாரும்  என்றான்.  {1Sam  21:9}

 

அன்றையதினம்  தாவீது<David>  எழுந்து  சவுலுக்குத்<Saul>  தப்பியோடி,  காத்தின்<Gath>  ராஜாவாகிய  ஆகீசிடத்தில்<Achish>  போனான்.  {1Sam  21:10}

 

ஆகீசின்<Achish>  ஊழியக்காரர்  அவனைப்  பார்த்து:  தேசத்து  ராஜாவாகிய  தாவீது<David>  இவன்  அல்லவோ?  சவுல்<Saul>  கொன்றது  ஆயிரம்,  தாவீது<David>  கொன்றது  பதினாயிரம்  என்று  இவனைக்குறித்தல்லவோ  ஆடல்பாடலோடே  கொண்டாடினார்கள்  என்றார்கள்.  {1Sam  21:11}

 

இந்த  வார்த்தைகளைத்  தாவீது<David>  தன்  மனதிலே  வைத்துக்கொண்டு,  காத்தின்<Gath>  ராஜாவாகிய  ஆகீசுக்கு<Achish>  மிகவும்  பயப்பட்டு,  {1Sam  21:12}

 

அவர்கள்  கண்களுக்கு  முன்பாகத்  தன்  முகநாடியை  வேறுபடுத்தி,  அவர்களிடத்தில்  பித்தங்கொண்டவன்போலக்  காண்பித்து,  வாசற்கதவுகளிலே  கீறிக்கொண்டிருந்து,  தன்  வாயிலிருந்து  நுரையைத்  தன்  தாடியில்  விழப்பண்ணிக்  கொண்டிருந்தான்.  {1Sam  21:13}

 

அப்பொழுது  ஆகீஸ்<Achish>:  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  இதோ,  இந்த  மனுஷன்  பித்தங்கொண்டவன்  என்று  காண்கிறீர்களே;  இவனை  நீங்கள்  என்னிடத்தில்  கொண்டுவந்தது  என்ன?  {1Sam  21:14}

 

எனக்கு  முன்பாகப்  பயித்திய  சேஷ்டை  செய்ய,  நீங்கள்  இவனைக்  கொண்டுவருகிறதற்கு,  பயித்தியக்காரர்  எனக்குக்  குறைவாயிருக்கிறார்களோ?  இவன்  என்  வீட்டிலே  வரலாமா  என்றான்.  {1Sam  21:15}

 

தாவீது<David>  அவ்விடத்தைவிட்டுத்  தப்பி,  அதுல்லாம்<Adullam>  என்னும்  கெபிக்குப்  போனான்;  அதை  அவன்  சகோதரரும்  அவன்  தகப்பன்  வீட்டார்  அனைவரும்  கேட்டு,  அங்கே  அவனிடத்துக்குப்  போனார்கள்.  {1Sam  22:1}

 

ஒடுக்கப்பட்டவர்கள்,  கடன்பட்டவர்கள்,  முறுமுறுக்கிறவர்கள்  யாவரும்  அவனோடே  கூடிக்கொண்டார்கள்;  அவன்  அவர்களுக்குத்  தலைவனானான்;  இந்தப்பிரகாரமாக  ஏறக்குறைய  நானூறுபேர்  அவனோடிருந்தார்கள்.  {1Sam  22:2}

 

தாவீது<David>  அவ்விடத்தைவிட்டு  மோவாபியரைச்<Moab>  சேர்ந்த  மிஸ்பேக்குப்<Mizpeh>  போய்,  மோவாபின்<Moab>  ராஜாவைப்  பார்த்து:  தேவன்  என்னை  எப்படி  நடத்துவார்  என்று  நான்  அறியுமட்டும்,  என்  தகப்பனும்  என்  தாயும்  உங்களிடத்திலே  தங்கியிருக்கும்படி  தயவுசெய்யும்  என்று  சொல்லி,  {1Sam  22:3}

 

அவர்களை  மோவாபின்<Moab>  ராஜாவினிடத்தில்  அழைத்துக்கொண்டுபோய்விட்டான்;  தாவீது<David>  அரணில்  இருந்த  நாளெல்லாம்  அவர்கள்  அங்கே  அவனோடிருந்தார்கள்.  {1Sam  22:4}

 

பின்பு  காத்<Gad>  என்னும்  தீர்க்கதரிசி  தாவீதைப்<David>  பார்த்து:  நீர்  அரணில்  இராமல்  யூதாதேசத்திற்குப்<Judah>  புறப்பட்டுவாரும்  என்றான்;  அப்பொழுது  தாவீது<David>  புறப்பட்டு  ஆரேத்<Hareth>  என்னும்  காட்டிலே  போனான்.  {1Sam  22:5}

 

தாவீதும்<David>  அவனோடிருந்த  மனுஷரும்  காணப்பட்ட  செய்தியைச்  சவுல்<Saul>  கேள்விப்பட்டான்;  சவுல்<Saul>  கிபியாவைச்<Gibeah>  சேர்ந்த  ராமாவில்<Ramah>  ஒரு  தோப்பிலே  உட்கார்ந்து,  தன்னுடைய  ஊழியக்காரர்  எல்லாரும்  தன்னைச்  சூழ்ந்துநிற்க,  தன்  ஈட்டியைத்  தன்  கையிலே  பிடித்துக்கொண்டிருக்கும்போது,  {1Sam  22:6}

 

சவுல்<Saul>  தன்னண்டையில்  நிற்கிற  தன்  ஊழியக்காரரைப்  பார்த்து:  பென்யமீன்<Benjamites>  புத்திரரே,  கேளுங்கள்;  ஈசாயின்<Jesse>  மகன்  உங்களெல்லாருக்கும்  வயல்களையும்  திராட்சத்தோட்டங்களையும்  கொடுப்பானோ?  உங்களெல்லாரையும்  ஆயிரத்துக்கு  அதிபதிகளும்  நூற்றுக்கு  அதிபதிகளுமாக  வைப்பானோ?  {1Sam  22:7}

 

நீங்களெல்லாரும்  எனக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடு  பண்ணிக்கொண்டது  என்ன?  ஈசாயின்<Jesse>  மகனுடனே  என்  குமாரன்  உடன்படிக்கைபண்ணும்போது,  என்  செவிக்கு  அதை  ஒருவனும்  வெளிப்படுத்தவில்லை;  எனக்காகப்  பரிதாபப்பட்டு,  என்  செவிக்கு  அதை  வெளிப்படுத்த  உங்களில்  ஒருவனாகிலும்  இல்லையா?  இந்நாளில்  இருக்கிறபடி  எனக்குச்  சதிபண்ண,  என்  குமாரன்  என்  வேலைக்காரனை  எனக்கு  விரோதமாக  எடுத்துவிட்டானே  என்றான்.  {1Sam  22:8}

 

அப்பொழுது  சவுலின்<Saul>  ஊழியக்காரரோடே  நின்ற  ஏதோமியனாகிய<Edomite>  தோவேக்கு<Doeg>  பிரதியுத்தரமாக:  ஈசாயின்<Jesse>  மகனை  நோபிலிருக்கிற<Nob>  அகிதூபின்<Ahitub>  குமாரனாகிய  அகிமெலேக்கிடத்தில்<Ahimelech>  வரக்கண்டேன்.  {1Sam  22:9}

 

இவன்  அவனுக்காகக்  கர்த்தரிடத்தில்  விசாரித்து,  அவனுக்கு  வழிக்கு  போஜனத்தைக்  கொடுத்து,  பெலிஸ்தனாகிய<Philistine>  கோலியாத்தின்<Goliath>  பட்டயத்தையும்  அவனுக்குக்  கொடுத்தான்  என்றான்.  {1Sam  22:10}

 

அப்பொழுது  ராஜா:  அகிதூபின்<Ahitub>  குமாரனாகிய  அகிமெலேக்<Ahimelech>  என்னும்  ஆசாரியனையும்,  நோபிலிருக்கிற<Nob>  அவன்  தகப்பன்  வீட்டாராகிய  எல்லா  ஆசாரியரையும்  அழைப்பித்தான்;  அவர்களெல்லாரும்  ராஜாவினிடத்தில்  வந்தார்கள்.  {1Sam  22:11}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  அகிதூபின்<Ahitub>  குமாரனே  கேள்  என்று  சொல்ல,  அவன்:  இதோ,  இருக்கிறேன்  என்  ஆண்டவனே  என்றான்.  {1Sam  22:12}

 

அப்பொழுது  சவுல்<Saul>  அவனை  நோக்கி:  நீயும்  ஈசாயின்<Jesse>  மகனும்  எனக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  இந்நாளில்  இருக்கிறபடி  எனக்குச்  சதிபண்ண  அவன்  எனக்கு  விரோதமாக  எழும்பும்படிக்கு,  நீ  அவனுக்கு  அப்பமும்  பட்டயமும்  கொடுத்து,  தேவசந்நிதியில்  அவனுக்காக  விசாரித்தது  என்ன  என்றான்.  {1Sam  22:13}

 

அகிமெலேக்<Ahimelech>  ராஜாவுக்குப்  பிரதியுத்தரமாக:  உம்முடைய  எல்லா  ஊழியக்காரரிலும்  தாவீதைப்போல<David>,  ராஜாவுக்கு  மருமகனும்,  உம்முடைய  கட்டளைகளின்படி  செய்துவருகிறவனும்,  உம்முடைய  வீட்டிலே  கனமுள்ளவனுமாயிருக்கிற  உண்மையுள்ளவன்  யார்?  {1Sam  22:14}

 

இன்றையதினம்  அவனுக்காக  தேவ  சந்நிதியில்  விசாரிக்கத்  தொடங்கினேனோ?  அது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  ராஜா  தம்முடைய  அடியானாகிய  என்மேலாகிலும்  என்  தகப்பன்  வீட்டாரில்  எவன்மேலாகிலும்  குற்றம்  சுமத்தவேண்டாம்;  உம்முடைய  அடியான்  இவைகளிலெல்லாம்  ஒரு  சிறிய  காரியமாகிலும்  பெரிய  காரியமாகிலும்  அறிந்திருந்ததில்லை  என்றான்.  {1Sam  22:15}

 

ராஜாவோ:  அகிமெலேக்கே<Ahimelech>,  நீயும்  உன்  தகப்பன்  வீட்டார்  அனைவரும்  சாகவே  சாகவேண்டும்  என்றான்.  {1Sam  22:16}

 

பின்பு  ராஜா  தன்னண்டையிலே  நிற்கிற  சேவகரை  நோக்கி:  நீங்கள்  போய்,  கர்த்தருடைய  ஆசாரியர்களைக்  கொல்லுங்கள்;  அவர்கள்  கையும்  தாவீதோடே<David>  இருக்கிறது;  அவன்  ஓடிப்போகிறதை  அவர்கள்  அறிந்திருந்தும்,  அதை  எனக்கு  வெளிப்படுத்தவில்லை  என்றான்;  ராஜாவின்  வேலைக்காரரோ,  கர்த்தருடைய  ஆசாரியர்களைக்  கொல்லத்  தங்கள்  கைகளை  நீட்ட  சம்மதிக்கவில்லை.  {1Sam  22:17}

 

அப்பொழுது  ராஜா  தோவேக்கை<Doeg>  நோக்கி:  நீ  போய்  ஆசாரியர்களைக்  கொன்றுபோடு  என்றான்;  ஏதோமியனாகிய<Edomite>  தோவேக்கு<Doeg>  ஆசாரியர்கள்மேல்  விழுந்து,  சணல்நூல்  ஏபோத்தைத்<ephod>  தரித்திருக்கும்  எண்பத்தைந்துபேரை  அன்றையதினம்  கொன்றான்.  {1Sam  22:18}

 

ஆசாரியர்களின்  பட்டணமாகிய  நோபிலுமுள்ள<Nob>  புருஷரையும்,  ஸ்திரீகளையும்,  பிள்ளைகளையும்,  குழந்தைகளையும்,  மாடுகளையும்,  கழுதைகளையும்,  ஆடுகளையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டிப்போட்டான்.  {1Sam  22:19}

 

அகிதூபின்<Ahitub>  குமாரனாகிய  அகிமெலேக்கின்<Ahimelech>  குமாரரில்  அபியத்தார்<Abiathar>  என்னும்  பேருள்ள  ஒருவன்  தப்பி,  தாவீது<David>  இருக்கும்  புறமாக  ஓடிப்போய்,  {1Sam  22:20}

 

சவுல்<Saul>  கர்த்தருடைய  ஆசாரியர்களைக்  கொன்றுபோட்ட  செய்தியை  தாவீதுக்கு<David>  அறிவித்தான்.  {1Sam  22:21}

 

அப்பொழுது  தாவீது<David>  அபியத்தாரைப்<Abiathar>  பார்த்து:  ஏதோமியனாகிய<Edomite>  தோவேக்கு<Doeg>  அங்கே  இருந்தபடியினாலே,  அவன்  எவ்விதத்திலும்  சவுலுக்கு<Saul>  அதை  அறிவிப்பான்  என்று  அன்றையதினமே  அறிந்திருந்தேன்;  உன்  தகப்பன்  வீட்டாராகிய  எல்லாருடைய  மரணத்துக்கும்  காரணம்  நானே.  {1Sam  22:22}

 

நீ  என்னிடத்தில்  இரு,  பயப்படவேண்டாம்;  என்  பிராணனை  வாங்கத்தேடுகிறவனே  உன்  பிராணனையும்  வாங்கத்தேடுகிறான்;  நீ  என்  ஆதரவிலே  இரு  என்றான்.  {1Sam  22:23}

 

இதோ,  பெலிஸ்தர்<Philistines>  கேகிலாவின்மேல்<Keilah>  யுத்தம்பண்ணி,  களஞ்சியங்களைக்  கொள்ளையிடுகிறார்கள்  என்று  தாவீதுக்கு<David>  அறிவிக்கப்பட்டது.  {1Sam  23:1}

 

அப்பொழுது  தாவீது<David>:  நான்  போய்,  அந்தப்  பெலிஸ்தரை<Philistines>  முறிய  அடிக்கலாமா  என்று  கர்த்தரிடத்தில்  விசாரித்ததற்கு,  கர்த்தர்:  நீ  போ;  பெலிஸ்தரை<Philistines>  முறிய  அடித்து,  கேகிலாவை<Keilah>  ரட்சிப்பாயாக  என்று  தாவீதுக்குச்<David>  சொன்னார்.  {1Sam  23:2}

 

ஆனாலும்  தாவீதின்<David>  மனுஷர்  அவனை  நோக்கி:  இதோ,  நாங்கள்  இங்கே  யூதாவிலே<Judah>  இருக்கும்போதே  பயப்படுகிறோம்;  நாங்கள்  பெலிஸ்தருடைய<Philistines>  சேனைகளை  எதிர்க்கிறதற்கு  கேகிலாவுக்குப்<Keilah>  போனால்,  எவ்வளவு  அதிகம்  என்றார்கள்.  {1Sam  23:3}

 

அப்பொழுது  தாவீது<David>  திரும்பவும்  கர்த்தரிடத்தில்  விசாரித்தபோது,  கர்த்தர்  அவனுக்கு  உத்தரமாக:  நீ  எழும்பி,  கேகிலாவுக்குப்<Keilah>  போ;  நான்  பெலிஸ்தரை<Philistines>  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்  என்றார்.  {1Sam  23:4}

 

அப்படியே  தாவீது<David>  தன்  மனுஷரைக்  கூட்டிக்கொண்டு,  கேகிலாவுக்குப்<Keilah>  போய்,  பெலிஸ்தரோடு<Philistines>  யுத்தம்பண்ணி,  அவர்களில்  அநேகம்பேரை  வெட்டி,  அவர்கள்  ஆடுமாடுகளை  ஓட்டிக்கொண்டுபோனான்;  இவ்விதமாய்க்  கேகிலாவின்<Keilah>  குடிகளை  ரட்சித்தான்.  {1Sam  23:5}

 

அகிமெலேக்கின்<Ahimelech>  குமாரனாகிய  அபியத்தார்<Abiathar>  கேகிலாவில்<Keilah>  இருக்கிற  தாவீதினிடத்தில்<David>  தப்பியோடுகிறபோது,  அவனிடத்தில்  ஒரு  ஏபோத்து<ephod>  இருந்தது.  {1Sam  23:6}

 

தாவீது<David>  கேகிலாவுக்கு<Keilah>  வந்தான்  என்று  சவுலுக்கு<Saul>  அறிவிக்கப்பட்டபோது,  தேவன்  அவனை  என்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவன்  கதவுகளும்  தாழ்ப்பாள்களுமுள்ள  பட்டணத்திற்குள்  பிரவேசித்ததினால்,  அடைபட்டிருக்கிறான்  என்று  சவுல்<Saul>  சொல்லி,  {1Sam  23:7}

 

தாவீதையும்<David>  அவன்  மனுஷரையும்  முற்றிக்கை  போடும்படிக்கு,  கேகிலாவுக்குப்<Keilah>  போக,  எல்லா  ஜனத்தையும்  யுத்தத்திற்கு  அழைப்பித்தான்.  {1Sam  23:8}

 

தனக்குப்  பொல்லாப்புச்  செய்யச்  சவுல்<Saul>  எத்தனம்பண்ணுகிறான்  என்று  தாவீது<David>  அறிந்துகொண்டபோது,  ஆசாரியனாகிய  அபியத்தாரை<Abiathar>  நோக்கி:  ஏபோத்தை<ephod>  இங்கே  கொண்டுவா  என்றான்.  {1Sam  23:9}

 

அப்பொழுது  தாவீது<David>:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தாவே,  சவுல்<Saul>  கேகிலாவுக்கு<Keilah>  வந்து,  என்னிமித்தம்  பட்டணத்தை  அழிக்க  வகைதேடுகிறான்  என்று  உமது  அடியானாகிய  நான்  நிச்சயமாய்க்  கேள்விப்பட்டேன்.  {1Sam  23:10}

 

கேகிலா<Keilah>  பட்டணத்தார்  என்னை  அவன்  கையில்  ஒப்புக்கொடுப்பார்களோ,  உம்முடைய  அடியான்  கேள்விப்பட்டபடி  சவுல்<Saul>  வருவானோ,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தாவே,  இதை  உம்முடைய  அடியானுக்குத்  தெரிவிக்கவேண்டும்  என்றான்.  அதற்குக்  கர்த்தர்:  அவன்  வருவான்  என்றார்.  {1Sam  23:11}

 

கேகிலாபட்டணத்தார்<Keilah>  என்னையும்  என்  மனுஷரையும்  சவுலின்<Saul>  கையில்  ஒப்புக்கொடுப்பார்களோ  என்று  தாவீது<David>  கேட்டதற்கு,  கர்த்தர்:  ஒப்புக்கொடுப்பார்கள்  என்றார்.  {1Sam  23:12}

 

ஆகையால்  தாவீதும்<David>  ஏறக்குறைய  அறுநூறுபேராகிய  அவன்  மனுஷரும்  எழும்பி,  கேகிலாவை<Keilah>  விட்டுப்  புறப்பட்டு,  போகக்கூடிய  இடத்திற்குப்  போனார்கள்;  தாவீது<David>  கேகிலாவிலிருந்து<Keilah>  தப்பிப்போனான்  என்று  சவுலுக்கு<Saul>  அறிவிக்கப்பட்டபோது,  தான்  புறப்படுகிறதை  நிறுத்திவிட்டான்.  {1Sam  23:13}

 

தாவீது<David>  வனாந்தரத்திலுள்ள  அரணான  ஸ்தலங்களிலே  தங்கி,  சீப்<Ziph>  என்னும்  வனாந்தரத்திலிருக்கிற  ஒரு  மலையிலே  தரித்திருந்தான்;  சவுல்<Saul>  அநுதினமும்  அவனைத்  தேடியும்,  தேவன்  அவனை  அவன்  கையில்  ஒப்புக்கொடுக்கவில்லை.  {1Sam  23:14}

 

தன்  பிராணனை  வாங்கத்  தேடும்படிக்கு,  சவுல்<Saul>  புறப்பட்டான்  என்று  தாவீது<David>  அறிந்தபடியினாலே,  தாவீது<David>  சீப்<Ziph>  வனாந்தரத்திலுள்ள  ஒரு  காட்டிலே  இருந்தான்.  {1Sam  23:15}

 

அப்பொழுது  சவுலின்<Saul>  குமாரனாகிய  யோனத்தான்<Jonathan>  எழுந்து,  காட்டிலிருக்கிற  தாவீதினிடத்தில்<David>  போய்,  தேவனுக்குள்  அவன்  கையைத்  திடப்படுத்தி:  {1Sam  23:16}

 

நீர்  பயப்படவேண்டாம்;  என்  தகப்பனாகிய  சவுலின்<Saul>  கை  உம்மைக்  கண்டு  பிடிக்கமாட்டாது;  நீர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாயிருப்பீர்;  அப்பொழுது  நான்  உமக்கு  இரண்டாவதாயிருப்பேன்;  அப்படி  நடக்கும்  என்று  என்  தகப்பனாகிய  சவுலும்<Saul>  அறிந்திருக்கிறார்  என்றான்.  {1Sam  23:17}

 

அவர்கள்  இருவரும்  கர்த்தருக்கு  முன்பாக  உடன்படிக்கை  பண்ணினபின்பு,  தாவீது<David>  காட்டில்  இருந்துவிட்டான்;  யோனத்தானோ<Jonathan>  தன்  வீட்டிற்குப்  போனான்.  {1Sam  23:18}

 

பின்பு  சீப்<Ziphites>  ஊரார்  கிபியாவிலிருக்கிற<Gibeah>  சவுலிடத்தில்<Saul>  வந்து:  தாவீது<David>  எங்களிடத்தில்  எஷிமோனுக்குத்<Jeshimon>  தெற்கே  ஆகிலா<Hachilah>  என்னும்  மலைக்காட்டிலுள்ள  அரணிப்பான  இடங்களில்  ஒளித்துக்கொண்டிருக்கிறான்  அல்லவா?  {1Sam  23:19}

 

இப்போதும்  ராஜாவே,  நீர்  உம்முடைய  மனவிருப்பத்தின்படி  இறங்கி  வாரும்;  அவனை  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்க,  எங்களால்  ஆகும்  என்றார்கள்.  {1Sam  23:20}

 

அதற்கு  சவுல்<Saul>:  நீங்கள்  என்மேல்  தயை  வைத்ததினாலே,  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.  {1Sam  23:21}

 

நீங்கள்  போய்,  அவன்  கால்  நடமாடுகிற  இடத்தைப்  பார்த்து,  அங்கே  அவனைக்  கண்டவன்  யார்  என்பதையும்  இன்னும்  நன்றாய்  விசாரித்து  அறியுங்கள்;  அவன்  மகா  தந்திரவாதி  என்று  எனக்குத்  தெரியவந்தது.  {1Sam  23:22}

 

அவன்  ஒளித்துக்கொண்டிருக்கும்  எல்லா  மறைவிடங்களையும்  பார்த்தறிந்து  கொண்டு,  நிச்சய  செய்தி  எனக்குக்  கொண்டுவாருங்கள்;  அப்பொழுது  நான்  உங்களோடே  கூடவந்து,  அவன்  தேசத்தில்  இருந்தால்,  யூதாவிலிருக்கிற<Judah>  சகல  ஆயிரங்களுக்குள்ளும்  அவனைத்  தேடிப்  போவேன்  என்றான்.  {1Sam  23:23}

 

அப்பொழுது  அவர்கள்  எழுந்து,  சவுலுக்கு<Saul>  முன்னாலே  சீப்<Ziph>  ஊருக்குப்  போனார்கள்;  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  எஷிமோனுக்குத்<Jeshimon>  தெற்கான  அந்தர  வெளியாகிய  மாகோன்<Maon>  வனாந்தரத்தில்  இருந்தார்கள்.  {1Sam  23:24}

 

சவுலும்<Saul>  அவன்  மனுஷரும்  தாவீதைத்<David>  தேடவருகிறார்கள்  என்று  அவனுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  கன்மலையிலிருந்து  இறங்கி,  மாகோன்<Maon>  வனாந்தரத்திலே  தங்கினான்;  அதைச்  சவுல்<Saul>  கேள்விப்பட்டு,  மாகோன்<Maon>  வனாந்தரத்திலே  தாவீதைப்<David>  பின்  தொடர்ந்தான்.  {1Sam  23:25}

 

சவுல்<Saul>  மலையின்  இந்தப்பக்கத்திலும்,  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  மலையின்  அந்தப்பக்கத்திலும்  நடந்தார்கள்;  சவுலுக்குத்<Saul>  தப்பிப்போக,  தாவீது<David>  தீவிரித்தபோது,  சவுலும்<Saul>  அவன்  மனுஷரும்  தாவீதையும்<David>  அவன்  மனுஷரையும்  பிடிக்கத்தக்கதாய்  அவர்களை  வளைந்துகொண்டார்கள்.  {1Sam  23:26}

 

அந்தச்  சமயத்தில்  ஒரு  ஆள்  சவுலிடத்தில்<Saul>  வந்து:  நீர்  சீக்கிரமாய்  வாரும்;  பெலிஸ்தர்<Philistines>  தேசத்தின்மேல்  படையெடுத்து  வந்திருக்கிறார்கள்  என்றான்.  {1Sam  23:27}

 

அதனால்  சவுல்<Saul>  தாவீதைப்<David>  பின்தொடருகிறதை  விட்டுத்  திரும்பி,  பெலிஸ்தரை<Philistines>  எதிர்க்கும்படி  போனான்;  ஆதலால்  அவ்விடத்திற்குச்  சேலா  அம்மாலிகோத்<Selahammahlekoth>  என்று  பேரிட்டார்கள்.  {1Sam  23:28}

 

தாவீது<David>  அவ்விடத்தை  விட்டுப்  புறப்பட்டு,  என்கேதியிலுள்ள<Engedi>  அரணிப்பான  இடங்களில்  தங்கினான்.  {1Sam  23:29}

 

சவுல்<Saul>  பெலிஸ்தரைப்<Philistines>  பின்தொடர்ந்து  திரும்பிவந்தபோது,  இதோ,  தாவீது<David>  என்கேதியின்<Engedi>  வனாந்தரத்தில்  இருக்கிறான்  என்று  அவனுக்கு  அறிவிக்கப்பட்டது.  {1Sam  24:1}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  இஸ்ரவேல்<Israel>  அனைத்திலும்  தெரிந்துகொள்ளப்பட்ட  மூவாயிரம்பேரைக்  கூட்டிக்கொண்டு,  தாவீதையும்<David>  அவன்  மனுஷரையும்  வரையாடுகளுள்ள  கன்மலைகளின்மேல்  தேடப்போனான்.  {1Sam  24:2}

 

வழியோரத்திலிருக்கிற  ஆட்டுத்தொழுவங்களிடத்தில்  அவன்  வந்தபோது,  அங்கே  ஒரு  கெபி  இருந்தது;  அதிலே  சவுல்<Saul>  மலஜலாதிக்குப்  போனான்;  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  அந்தக்  கெபியின்  பக்கங்களில்  உட்கார்ந்திருந்தார்கள்.  {1Sam  24:3}

 

அப்பொழுது  தாவீதின்<David>  மனுஷர்  அவனை  நோக்கி:  இதோ,  நான்  உன்  சத்துருவை  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்;  உன்  பார்வைக்கு  நலமானபடி  அவனுக்குச்  செய்வாயாக  என்று  கர்த்தர்  உன்னோடே  சொன்ன  நாள்  இதுதானே  என்றார்கள்;  தாவீது<David>  எழுந்திருந்துபோய்,  சவுலுடைய<Saul>  சால்வையின்  தொங்கலை  மெள்ள  அறுத்துக்கொண்டான்.  {1Sam  24:4}

 

தாவீது<David>  சவுலின்<Saul>  சால்வைத்  தொங்கலை  அறுத்துக்கொண்டதினிமித்தம்  அவன்  மனது  அடித்துக்கொண்டிருந்தது.  {1Sam  24:5}

 

அவன்  தன்  மனுஷரைப்  பார்த்து:  கர்த்தர்  அபிஷேகம்பண்ணின  என்  ஆண்டவன்மேல்  என்  கையைப்  போடும்படியான  இப்படிப்பட்ட  காரியத்தை  நான்  செய்யாதபடிக்கு,  கர்த்தர்  என்னைக்  காப்பாராக;  அவர்  கர்த்தரால்  அபிஷேகம்  பண்ணப்பட்டவர்  என்று  சொல்லி,  {1Sam  24:6}

 

தன்  மனுஷரைச்  சவுலின்மேல்<Saul>  எழும்ப  ஒட்டாமல்,  இவ்வார்த்தைகளினால்  அவர்களைத்  தடைபண்ணினான்;  சவுல்<Saul>  எழுந்திருந்து,  கெபியைவிட்டு,  வழியே  நடந்துபோனான்.  {1Sam  24:7}

 

அப்பொழுது  தாவீதும்<David>  எழுந்து,  கெபியிலிருந்து  புறப்பட்டு,  சவுலுக்குப்<Saul>  பின்னாகப்  போய்:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே  என்று  கூப்பிட்டான்;  சவுல்<Saul>  திரும்பிப்பார்த்தபோது,  தாவீது<David>  தரைமட்டும்  முகங்குனிந்து  வணங்கி,  {1Sam  24:8}

 

சவுலை<Saul>  நோக்கி:  தாவீது<David>  உமக்குப்  பொல்லாப்புச்  செய்யப்பார்க்கிறான்  என்று  சொல்லுகிற  மனுஷருடைய  வார்த்தைகளை  ஏன்  கேட்கிறீர்?  {1Sam  24:9}

 

இதோ,  கர்த்தர்  இன்று  கெபியில்  உம்மை  என்  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்பதை  இன்றையதினம்  உம்முடைய  கண்கள்  கண்டதே,  உம்மைக்  கொன்றுபோடவேண்டும்  என்று  சிலர்  சொன்னார்கள்;  ஆனாலும்  என்  கை  உம்மைத்  தப்பவிட்டது;  என்  ஆண்டவன்மேல்  என்  கையைப்  போடேன்;  அவர்  கர்த்தரால்  அபிஷேகம்பண்ணப்பட்டவராமே  என்றேன்.  {1Sam  24:10}

 

என்  தகப்பனே  பாரும்;  என்  கையிலிருக்கிற  உம்முடைய  சால்வையின்  தொங்கலைப்  பாரும்;  உம்மைக்  கொன்றுபோடாமல்,  உம்முடைய  சால்வையின்  தொங்கலை  அறுத்துக்கொண்டேன்;  என்  கையிலே  பொல்லாப்பும்  துரோகமும்  இல்லை  என்றும்,  உமக்கு  நான்  குற்றம்  செய்யவில்லை  என்றும்  அறிந்துகொள்ளும்;  நீரோ  என்  பிராணனை  வாங்க,  அதை  வேட்டையாடுகிறீர்.  {1Sam  24:11}

 

கர்த்தர்  எனக்கும்  உமக்கும்  நடுநின்று  நியாயம்  விசாரித்து,  கர்த்தர்  தாமே  என்  காரியத்தில்  உமக்கு  நீதியைச்  சரிக்கட்டுவாராக;  உம்முடைய  பேரில்  நான்  கைபோடுவதில்லை.  {1Sam  24:12}

 

முதியோர்  மொழிப்படியே,  ஆகாதவர்களிடத்திலே  ஆகாமியம்  பிறக்கும்;  ஆகையால்  உம்முடையபேரில்  நான்  கைபோடுவதில்லை.  {1Sam  24:13}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  யாரைத்  தேடப்  புறப்பட்டார்?  ஒரு  செத்த  நாயையா,  ஒரு  தெள்ளுப்பூச்சியையா,  நீர்  யாரைப்  பின்தொடருகிறீர்?  {1Sam  24:14}

 

கர்த்தர்  நியாயாதிபதியாயிருந்து,  எனக்கும்  உமக்கும்  நியாயந்தீர்த்து,  எனக்காக  வழக்காடி,  நான்  உம்முடைய  கைக்குத்  தப்ப  என்னை  விடுவிப்பாராக  என்றான்.  {1Sam  24:15}

 

தாவீது<David>  இந்த  வார்த்தைகளைச்  சவுலோடே<Saul>  சொல்லி  முடிந்தபின்பு,  சவுல்<Saul>:  என்  குமாரனாகிய  தாவீதே<David>,  இது  உன்னுடைய  சத்தமல்லவா  என்று  சொல்லி,  சத்தமிட்டு  அழுது,  {1Sam  24:16}

 

தாவீதைப்<David>  பார்த்து:  நீ  என்னைப்பார்க்கிலும்  நீதிமான்;  நீ  எனக்கு  நன்மை  செய்தாய்;  நானோ  உனக்கு  தீமை  செய்தேன்.  {1Sam  24:17}

 

நீ  எனக்கு  நன்மை  செய்ததை  இன்று  விளங்கப்பண்ணினாய்;  கர்த்தர்  என்னை  உன்  கையில்  ஒப்புக்கொடுத்திருந்தும்,  நீ  என்னைக்  கொன்றுபோடவில்லை.  {1Sam  24:18}

 

ஒருவன்  தன்  மாற்றானைக்  கண்டுபிடித்தால்,  அவனைச்  சுகமே  போகவிடுவானோ?  இன்று  நீ  எனக்குச்  செய்த  நன்மைக்காகக்  கர்த்தர்  உனக்கு  நன்மை  செய்வாராக.  {1Sam  24:19}

 

நீ  நிச்சயமாக  ராஜாவாய்  இருப்பாய்  என்றும்,  இஸ்ரவேலின்<Israel>  ராஜ்யபாரம்  உன்  கையில்  நிலைவரப்படும்  என்றும்  அறிவேன்.  {1Sam  24:20}

 

இப்போதும்  நீ  எனக்குப்  பின்னிருக்கும்  என்  சந்ததியை  வேரறுப்பதில்லை  என்றும்,  என்  தகப்பன்  வீட்டாரில்  என்  பெயரை  அழித்துப்போடுவதில்லை  என்றும்  கர்த்தர்மேல்  எனக்கு  ஆணையிட்டுக்  கொடு  என்றான்.  {1Sam  24:21}

 

அப்பொழுது  தாவீது<David>  சவுலுக்கு<Saul>  ஆணையிட்டுக்  கொடுத்தான்;  பின்பு,  சவுல்<Saul>  தன்  வீட்டுக்குப்  புறப்பட்டுப்போனான்;  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  அரணிப்பான  இடத்திற்கு  ஏறிப்போனார்கள்.  {1Sam  24:22}

 

சாமுவேல்<Samuel>  மரணமடைந்தான்.  இஸ்ரவேலர்<Israelites>  எல்லாரும்  கூடிவந்து,  அவனுக்காகத்  துக்கங்கொண்டாடி,  ராமாவிலிருக்கிற<Ramah>  அவனுடைய  வளவிலே  அவனை  அடக்கம்பண்ணினார்கள்;  தாவீது<David>  எழுந்து,  பாரான்<Paran>  வனாந்தரத்திற்குப்  புறப்பட்டுப்போனான்.  {1Sam  25:1}

 

மாகோனிலே<Maon>  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவனுடைய  தொழில்துறை  கர்மேலில்<Carmel>  இருந்தது;  அந்த  மனுஷன்  மகா  பாரிக்  குடித்தனக்காரனாயிருந்தான்;  அவனுக்கு  மூவாயிரம்  ஆடும்,  ஆயிரம்  வெள்ளாடும்  இருந்தது;  அவன்  அப்பொழுது  கர்மேலில்<Carmel>  தன்  ஆடுகளை  மயிர்  கத்தரித்துக்கொண்டிருந்தான்.  {1Sam  25:2}

 

அந்த  மனுஷனுக்கு  நாபால்<Nabal>  என்றும்,  அவன்  மனைவிக்கு  அபிகாயில்<Abigail>  என்றும்  பெயர்;  அந்த  ஸ்திரீ  மகா  புத்திசாலியும்  ரூபவதியுமாயிருந்தாள்;  அந்தப்  புருஷனோ  முரடனும்  துராகிருதனுமாயிருந்தான்;  அவன்  காலேபுடைய<Caleb>  சந்ததியான்.  {1Sam  25:3}

 

நாபால்<Nabal>  தன்  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிற  செய்தியை  வனாந்தரத்தில்  இருக்கிற  தாவீது<David>  கேட்டபோது,  {1Sam  25:4}

 

தாவீது<David>  பத்து  வாலிபரை  அழைத்து:  நீங்கள்  கர்மேலுக்குப்<Carmel>  போய்,  நாபாலிடத்தில்<Nabal>  சென்று,  என்  பேரைச்சொல்லி,  அவன்  சுகசெய்தியை  விசாரித்து,  {1Sam  25:5}

 

அவனை  நோக்கி:  நீர்  வாழ்க,  உமக்குச்  சமாதானமும்,  உம்முடைய  வீட்டுக்குச்  சமாதானமும்,  உமக்கு  உண்டான  எல்லாவற்றிற்கும்  சமாதானமும்  உண்டாவதாக  என்று  அவனை  வாழ்த்தி,  {1Sam  25:6}

 

இப்பொழுது  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிறவர்கள்  உம்மிடத்தில்  இருக்கிறார்கள்  என்று  கேள்விப்பட்டேன்;  உம்முடைய  மேய்ப்பர்  எங்களோடேகூட  இருந்தார்கள்;  அவர்கள்  கர்மேலில்<Carmel>  இருந்த  நாளெல்லாம்  நாங்கள்  அவர்களை  வருத்தப்படுத்தவில்லை;  அவர்களுடைய  பொருள்  ஒன்றும்  காணாமற்போனதும்  இல்லை.  {1Sam  25:7}

 

உம்முடைய  வேலைக்காரரைக்  கேளும்;  அவர்கள்  உமக்குச்  சொல்லுவார்கள்;  ஆதலால்  இந்த  வாலிபருக்கு  உம்முடைய  கண்களிலே  தயைகிடைக்கவேண்டும்;  நல்ல  நாளில்  வந்தோம்;  உம்முடைய  கைக்கு  உதவுவதை  உம்முடைய  ஊழியக்காரருக்கும்,  உம்முடைய  குமாரனாகிய  தாவீதுக்கும்<David>  கொடுக்கும்படி  வேண்டுகிறேன்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  {1Sam  25:8}

 

தாவீதின்<David>  வாலிபர்  போய்,  இந்த  வார்த்தைகளையெல்லாம்  தாவீதின்<David>  நாமத்தினாலே  நாபாலிடத்தில்<Nabal>  சொல்லி,  பின்னொன்றும்  பேசாதிருந்தார்கள்.  {1Sam  25:9}

 

நாபால்<Nabal>  தாவீதின்<David>  ஊழியக்காரருக்குப்  பிரதியுத்தரமாக:  தாவீது<David>  என்பவன்  யார்?  ஈசாயின்<Jesse>  குமாரன்  யார்?  தங்கள்  எஜமான்களை  விட்டு  ஓடிப்போகிற  வேலைக்காரர்  இந்நாளில்  அநேகர்  உண்டு.  {1Sam  25:10}

 

நான்  என்  அப்பத்தையும்,  என்  தண்ணீரையும்,  என்  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக  நான்  அடித்துச்  சமையல்  பண்ணுவித்ததையும்  எடுத்து,  இன்ன  இடத்தார்  என்று  நான்  அறியாத  மனுஷருக்குக்  கொடுப்பேனோ  என்றான்.  {1Sam  25:11}

 

தாவீதின்<David>  வாலிபர்  தங்கள்  வழியே  திரும்பி,  மறுபடியும்  தாவீதினிடத்தில்<David>  வந்து,  இந்த  வார்த்தைகளையெல்லாம்  அவனுக்கு  அறிவித்தார்கள்.  {1Sam  25:12}

 

அப்பொழுது  தாவீது<David>  தன்  மனுஷரைப்  பார்த்து:  நீங்கள்  அவரவர்  உங்கள்  பட்டயத்தைக்  கட்டிக்கொள்ளுங்கள்  என்றான்;  அவரவர்  தங்கள்  பட்டயத்தைக்  கட்டிக்கொண்டார்கள்;  தாவீதும்<David>  தன்  பட்டயத்தைக்  கட்டிக்கொண்டான்;  ஏறக்குறைய  நானூறுபேர்  தாவீதுக்குப்<David>  பின்சென்று  புறப்பட்டுப்போனார்கள்;  இருநூறுபேர்  ரஸ்துக்கள்  அண்டையில்  இருந்துவிட்டார்கள்.  {1Sam  25:13}

 

அப்பொழுது  வேலைக்காரரில்  ஒருவன்  நாபாலுடைய<Nabal>  மனைவியாகிய  அபிகாயிலை<Abigail>  நோக்கி:  இதோ,  நம்முடைய  எஜமானுடைய  சுகசெய்தி  விசாரிக்கத்  தாவீது<David>  வனாந்தரத்திலிருந்து  ஆட்களை  அனுப்பினான்;  அவர்கள்பேரில்  அவர்  சீறினார்.  {1Sam  25:14}

 

அந்த  மனுஷரோ  எங்களுக்கு  மிகவும்  உபகாரிகளாயிருந்தார்கள்;  நாங்கள்  வெளிகளில்  இருக்கும்போது,  அவர்கள்  எங்களிடத்தில்  நடமாடின  நாளெல்லாம்  அவர்கள்  எங்களை  வருத்தப்படுத்தினதுமில்லை;  நமது  பொருளில்  ஒன்றும்  காணாமற்  போனதுமில்லை.  {1Sam  25:15}

 

நாங்கள்  ஆடுகளை  மேய்த்து,  அவர்களிடத்தில்  இருந்த  நாளெல்லாம்  அவர்கள்  இரவும்பகலும்  எங்களைச்  சுற்றிலும்  மதிலாயிருந்தார்கள்.  {1Sam  25:16}

 

இப்போதும்  நீர்  செய்யவேண்டியதைக்  கவனித்துப்பாரும்;  நம்முடைய  எஜமான்  மேலும்,  அவருடைய  வீட்டார்  யாவர்மேலும்,  நிச்சயமாய்  ஒரு  பொல்லாப்பு  வருகிறதாயிருக்கிறது;  இவரோ,  ஒருவரும்  தம்மோடே  பேசக்கூடாதபடிக்கு,  பேலியாளின்<Belial>  மகனாயிருக்கிறார்  என்றான்.  {1Sam  25:17}

 

அப்பொழுது  அபிகாயில்<Abigail>  தீவிரமாய்  இருநூறு  அப்பங்களையும்,  இரண்டு  துருத்தி  திராட்சரசத்தையும்,  சமையல்பண்ணப்பட்ட  ஐந்து  ஆடுகளையும்,  ஐந்து  படி  வறுத்த  பயற்றையும்,  வற்றலாக்கப்பட்ட  நூறு  திராட்சக்குலைகளையும்,  வற்றலான  இருநூறு  அத்திப்பழ  அடைகளையும்  எடுத்து,  கழுதைகள்மேல்  ஏற்றி,  {1Sam  25:18}

 

தன்  வேலைக்காரரைப்  பார்த்து:  நீங்கள்  எனக்கு  முன்னே  போங்கள்;  இதோ,  நான்  உங்கள்  பின்னே  வருகிறேன்  என்று  சொல்லி  அனுப்பினாள்;  தன்  புருஷனாகிய  நாபாலுக்கு<Nabal>  அதை  அறிவிக்கவில்லை.  {1Sam  25:19}

 

அவள்  ஒரு  கழுதையின்மேல்  ஏறி,  மலையின்  மறைவில்  இறங்கிவருகையில்,  இதோ,  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  அவளுக்கு  எதிராக  இறங்கிவந்தார்கள்;  அவர்களைச்  சந்தித்தாள்.  {1Sam  25:20}

 

தாவீது<David>  தன்  ஜனங்களை  நோக்கி:  அவனுக்கு  வனாந்தரத்தில்  இருக்கிறதையெல்லாம்  வீணாகவே  காப்பாற்றினேன்;  அவனுக்கு  உண்டானதிலெல்லாம்  ஒன்றும்  காணாமற்போனதில்லை;  என்றாலும்  நன்மைக்குப்  பதிலாக  அவன்  எனக்குத்  தீமை  செய்தான்.  {1Sam  25:21}

 

அவனுக்கு  உண்டான  எல்லாவற்றிலும்  சுவரில்  நீர்விடும்  ஒரு  நாயைமுதலாய்ப்  பொழுதுவிடியுமட்டும்  நான்  உயிரோடே  வைத்தால்,  தேவன்  தாவீதின்<David>  சத்துருக்களுக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்று  சொல்லியிருந்தான்.  {1Sam  25:22}

 

அபிகாயில்<Abigail>  தாவீதைக்<David>  காண்கையில்,  தீவிரமாய்க்  கழுதையை  விட்டு  இறங்கி,  தாவீதுக்கு<David>  நேராகத்  தரையில்  முகங்குப்புற  விழுந்து  பணிந்து,  {1Sam  25:23}

 

அவன்  பாதத்திலே  விழுந்து:  என்  ஆண்டவனே,  இந்தப்  பாதகம்  என்மேல்  சுமரட்டும்;  உம்முடைய  அடியாளுடைய  வார்த்தைகளை  நீர்  கேட்கும்பொருட்டாக  உம்முடைய  அடியாள்  உமது  செவிகேட்கப்  பேசவேண்டும்.  {1Sam  25:24}

 

என்  ஆண்டவனாகிய  நீர்  நாபால்<Nabal>  என்னும்  இந்தப்  பேலியாளின்<Belial>  மனுஷனை  ஒரு  பொருட்டாக  எண்ணவேண்டாம்;  அவன்  பெயர்  எப்படியோ  அப்படியே  அவனும்  இருக்கிறான்;  அவன்  பெயர்  நாபால்<Nabal>,  அவனுக்குப்  பயித்தியமும்  இருக்கிறது;  உம்முடைய  அடியாளாகிய  நானோ,  என்  ஆண்டவன்  அனுப்பின  வாலிபரைக்  காணவில்லை.  {1Sam  25:25}

 

இப்போதும்  என்  ஆண்டவனே,  நீர்  இரத்தம்  சிந்த  வரவும்,  உம்முடைய  கை  நீதியைச்  சரிக்கட்டவும்,  கர்த்தர்  உமக்கு  இடங்கொடுக்கவில்லை  என்பதைக்  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டும்,  உம்முடைய  ஜீவனைக்கொண்டும்  சொல்லுகிறேன்;  இப்போதும்  உம்முடைய  சத்துருக்களும்,  என்  ஆண்டவனுக்கு  விரோதமாகப்  பொல்லாப்புத்  தேடுகிறவர்களும்,  நாபாலைப்போல<Nabal>  ஆகக்கடவர்கள்.  {1Sam  25:26}

 

இப்போதும்  உமது  அடியாள்  என்  ஆண்டவனுக்குக்  கொண்டுவந்த  காணிக்கையை  ஏற்றுக்கொண்டு,  என்  ஆண்டவனைப்  பின்பற்றுகிற  வாலிபருக்குக்  கொடுப்பீராக.  {1Sam  25:27}

 

உமது  அடியாளின்  பாதகத்தை  மன்னியும்,  கர்த்தர்  என்  ஆண்டவனுக்கு  நிலையான  வீட்டை  நிச்சயமாய்க்  கட்டுவார்;  என்  ஆண்டவன்  கர்த்தருடைய  யுத்தங்களை  நடத்துகிறவராமே;  நீர்  உயிரோடே  இருக்கும்  நாளில்  ஒரு  பொல்லாப்பும்  உம்மிலே  காணப்படாதிருப்பதாக.  {1Sam  25:28}

 

உம்மைத்  துன்பப்படுத்தவும்,  உம்முடைய  பிராணனை  வாங்க  வகைதேடவும்,  ஒரு  மனுஷன்  எழும்பினாலும்  என்  ஆண்டவனுடைய  ஆத்துமா  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரின்  ஆதரவில்  இருக்கிற  ஜீவனுள்ளோருடைய  கட்டிலே  கட்டப்பட்டிருக்கும்;  உம்முடைய  சத்துருக்களின்  ஆத்துமாக்களோ  கவணில்  வைத்து  எறிந்தாற்போல  எறியப்பட்டுப்போம்.  {1Sam  25:29}

 

கர்த்தர்  உம்மைக்குறித்துச்  சொன்ன  நன்மையின்படி  எல்லாம்  இனி  என்  ஆண்டவனுக்குச்  செய்து,  இஸ்ரவேலுக்கு<Israel>  அதிபதியாக  உம்மை  நேமிக்கும்  போது,  {1Sam  25:30}

 

நீர்  விருதாவாய்  இரத்தம்  சிந்தாமலும்,  என்  ஆண்டவனாகிய  நீர்  பழிவாங்காமலும்  இருந்ததுண்டானால்,  அப்பொழுது  என்  ஆண்டவனாகிய  உமக்குத்  துக்கமும்  இராது,  மன  இடறலும்  இராது;  கர்த்தர்  என்  ஆண்டவனுக்கு  நன்மை  செய்யும்போது,  உம்முடைய  அடியாளை  நினைப்பீராக  என்றாள்.  {1Sam  25:31}

 

அப்பொழுது  தாவீது<David>  அபிகாயிலை<Abigail>  நோக்கி:  உன்னை  இன்றையதினம்  என்னைச்  சந்திக்க  அனுப்பின  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  {1Sam  25:32}

 

நீ  சொல்லிய  யோசனை  ஆசீர்வதிக்கப்படுவதாக;  நான்  இரத்தம்  சிந்த  வராதபடிக்கும்,  என்  கையே  பழிவாங்காதபடிக்கும்,  நீ  இன்றையதினம்  எனக்குத்  தடை  பண்ணினபடியினால்,  நீயும்  ஆசீர்வதிக்கப்படுவாயாக.  {1Sam  25:33}

 

நீ  தீவிரமாய்  என்னைச்  சந்திக்க  வராமல்  இருந்தாயானால்,  பொழுது  விடியுமட்டும்  நாபாலுக்கு<Nabal>  ஒரு  நாயும்  உயிரோடே  வைக்கப்படுவதில்லை  என்று,  உனக்குப்  பொல்லாப்புச்  செய்ய  எனக்கு  இடங்கொடாதிருக்கிற  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரின்  ஜீவனைக்கொண்டு  மெய்யாய்ச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  {1Sam  25:34}

 

அவள்  தனக்குக்  கொண்டுவந்ததைத்  தாவீது<David>  அவள்  கையிலே  வாங்கிக்கொண்டு,  அவளைப்  பார்த்து:  நீ  சமாதானத்தோடே  உன்  வீட்டுக்குப்  போ;  இதோ,  நான்  உன்  சொல்லைக்கேட்டு,  உன்  முகத்தைப்  பார்த்து,  இப்படிச்  செய்தேன்  என்றான்.  {1Sam  25:35}

 

அபிகாயில்<Abigail>  நாபாலிடத்தில்<Nabal>  வந்தபோது,  இதோ,  ராஜவிருந்துக்கு  ஒப்பான  விருந்து  அவன்  வீட்டிலே  நடந்தது;  அவன்  இருதயம்  களித்திருந்தது;  அவன்  மிகவும்  வெறித்துமிருந்தான்;  ஆகையால்  பொழுது  விடியுமட்டும்  சிறிய  காரியமானாலும்  பெரிய  காரியமானாலும்,  ஒன்றையும்  அவனுக்கு  அறிவிக்கவில்லை.  {1Sam  25:36}

 

பொழுது  விடிந்து,  நாபாலின்<Nabal>  வெறி  தெளிந்தபின்பு,  அவன்  மனைவி  இந்த  வர்த்தமானங்களை  அவனுக்கு  அறிவித்தாள்;  அப்பொழுது  அவன்  இருதயம்  அவனுக்குள்ளே  செத்து,  அவன்  கல்லைப்போலானான்.  {1Sam  25:37}

 

கர்த்தர்  நாபாலை<Nabal>  வாதித்ததினால்,  ஏறக்குறையப்  பத்து  நாளுக்குப்பின்பு,  அவன்  செத்தான்.  {1Sam  25:38}

 

நாபால்<Nabal>  செத்துப்போனான்  என்று  தாவீது<David>  கேள்விப்பட்டபோது:  என்  நிந்தையின்  வழக்கை  நாபாலின்<Nabal>  கையில்  விசாரித்து,  தம்முடைய  அடியானைப்  பொல்லாப்புச்  செய்யாதபடிக்குத்  தடுத்த  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  கர்த்தர்  தாமே  நாபாலின்<Nabal>  பொல்லாப்பை  அவன்  தலையின்மேல்  திரும்பப்பண்ணினார்  என்று  சொல்லி,  அபிகாயிலை<Abigail>  விவாகம்பண்ணுகிறதற்காக  அவளோடே  பேச,  தாவீது<David>  ஆட்களை  அனுப்பினான்.  {1Sam  25:39}

 

தாவீதின்<David>  ஊழியக்காரர்  கர்மேலில்<Carmel>  இருக்கிற  அபிகாயிலண்டைக்கு<Abigail>  வந்து,  தாவீது<David>  உன்னை  விவாகம்பண்ண  மனதாய்,  எங்களை  உன்னிடத்தில்  அனுப்பினார்  என்று  அவளோடே  சொல்லுகிறபோது,  {1Sam  25:40}

 

அவள்  எழுந்திருந்து,  தரைமட்டும்  முகங்குனிந்து,  இதோ,  நான்  என்  ஆண்டவனுடைய  ஊழியக்காரரின்  கால்களைக்  கழுவத்தக்க  பணிவிடைக்காரியாகிய  அவருடைய  அடியாள்  என்றாள்.  {1Sam  25:41}

 

பின்பு  அபிகாயில்<Abigail>  தீவிரித்து  எழுந்து,  ஒரு  கழுதையின்மேல்  ஏறி,  ஐந்து  தாதிப்  பெண்களைக்  கூட்டிக்கொண்டு,  தாவீதின்<David>  ஸ்தானாபதிகளுக்குப்  பின்சென்று  போய்,  அவனுக்கு  மனைவியானாள்.  {1Sam  25:42}

 

யெஸ்ரயேல்<Jezreel>  ஊராளாகிய  அகினோவாமையும்<Ahinoam>  தாவீது<David>  விவாகம்பண்ணினான்;  அவர்கள்  இருவரும்  அவனுக்கு  மனைவிகளானார்கள்.  {1Sam  25:43}

 

சவுல்<Saul>  தாவீதின்<David>  மனைவியாகிய  மீகாள்<Michal>  என்னும்  தன்  குமாரத்தியைக்  காலீம்<Gallim>  ஊரானாகிய  லாயீசின்<Laish>  குமாரனான  பல்த்திக்குக்<Phalti>  கொடுத்திருந்தான்.  {1Sam  25:44}

 

பின்பு  சீப்ஊரார்<Ziphites>  கிபியாவிலிருக்கிற<Gibeah>  சவுலிடத்தில்<Saul>  வந்து:  தாவீது<David>  எஷிமோனுக்கு<Jeshimon>  எதிரான  ஆகிலாமேட்டில்<Hachilah>  ஒளித்துக்கொண்டிருக்கிறான்  என்றார்கள்.  {1Sam  26:1}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  சீப்வனாந்தரத்திலே<Ziph>  தாவீதைத்<David>  தேடும்படி  எழுந்து,  இஸ்ரவேலிலே<Israel>  தெரிந்துகொள்ளப்பட்ட  மூவாயிரம்  பேரோடுங்கூட,  சீப்<Ziph>  வனாந்தரத்திற்குப்  புறப்பட்டுப்போனான்.  {1Sam  26:2}

 

சவுல்<Saul>  எஷிமோனுக்கு<Jeshimon>  எதிரே  வழியண்டையிலிருக்கிற  ஆகிலாமேட்டிலே<Hachilah>  பாளயமிறங்கினான்;  தாவீது<David>  வனாந்தரத்தில்  தங்கி,  சவுல்<Saul>  தன்னைத்  தொடர்ந்து  வனாந்தரத்திற்கு  வருகிறதைக்  கண்டு,  {1Sam  26:3}

 

தாவீது<David>  வேவுகாரரை  அனுப்பி,  சவுல்<Saul>  வந்தது  நிச்சயம்  என்று  அறிந்துகொண்டான்.  {1Sam  26:4}

 

பின்பு  தாவீது<David>  எழுந்து,  சவுல்<Saul>  பாளயமிறங்கின  இடத்திற்குப்  போய்,  சவுலும்<Saul>  நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேர்<Abner>  என்னும்  அவன்  படைத்தலைவனும்  படுத்துக்கொண்டிருக்கிற  இடத்தைப்  பார்த்தான்;  சவுல்<Saul>  இரதங்களிருக்கிற  இடத்திலே  படுத்துக்கொண்டிருந்தான்;  ஜனங்கள்  அவனைச்  சுற்றிலும்  பாளயமிறங்கியிருந்தார்கள்.  {1Sam  26:5}

 

தாவீது<David>  ஏத்தியனாகிய<Hittite>  அகிமெலேக்கையும்<Ahimelech>,  செருயாவின்<Zeruiah>  குமாரனும்  யோவாபின்<Joab>  சகோதரனுமாகிய  அபிசாயையும்<Abishai>  பார்த்து:  என்னோடேகூடச்  சவுலிடத்திற்குப்<Saul>  பாளயத்தில்  இறங்கிவருகிறவன்  யார்  என்றதற்கு,  அபிசாய்<Abishai>:  நான்  உம்மோடேகூட  வருகிறேன்  என்றான்.  {1Sam  26:6}

 

அப்படியே  தாவீதும்<David>  அபிசாயும்<Abishai>  இராத்திரியிலே  அந்த  ஜனங்களுக்குள்ளே  வந்தார்கள்;  இதோ,  சவுல்<Saul>  இரதங்களிருக்கிற  இடத்திலே  படுத்து  நித்திரைபண்ணினான்;  அவன்  தலைமாட்டில்  அவனுடைய  ஈட்டி  நிலத்திலே  குத்தியிருந்தது;  அவனைச்  சுற்றிலும்  அப்னேரும்<Abner>  ஜனங்களும்  படுத்துக்கொண்டிருந்தார்கள்.  {1Sam  26:7}

 

அப்பொழுது  அபிசாய்<Abishai>  தாவீதைப்<David>  பார்த்து:  இன்று  தேவன்  உம்முடைய  சத்துருவை  உம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  இப்போதும்  நான்  அவனை  ஈட்டியினால்  இரண்டு  குத்தாகக்  குத்தாமல்,  ஒரே  குத்தாக  நிலத்தில்  உருவக்  குத்தட்டுமா  என்றான்.  {1Sam  26:8}

 

தாவீது<David>  அபிசாயைப்<Abishai>  பார்த்து:  அவரைக்  கொல்லாதே;  கர்த்தர்  அபிஷேகம்  பண்ணுவித்தவர்மேல்  தன்  கையைப்  போட்டு,  குற்றமில்லாமற்போகிறவன்  யார்?  என்று  சொன்னான்.  {1Sam  26:9}

 

பின்னும்  தாவீது<David>:  கர்த்தர்  அவரை  அடித்து,  அல்லது  அவருடைய  காலம்  வந்து,  அவர்  மரித்து,  அல்லது  அவர்  யுத்தத்திற்குப்போய்  மாண்டாலொழிய,  {1Sam  26:10}

 

நான்  என்  கையைக்  கர்த்தர்  அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல்  போடாதபடிக்கு,  கர்த்தர்  என்னைக்  காக்கக்கடவர்  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  இப்போதும்  அவர்  தலைமாட்டில்  இருக்கிற  ஈட்டியையும்,  தண்ணீர்ச்  செம்பையும்  எடுத்துக்கொண்டு  போவோம்  என்றான்.  {1Sam  26:11}

 

தாவீது<David>  சவுலின்<Saul>  தலைமாட்டில்  இருந்த  ஈட்டியையும்,  தண்ணீர்ச்செம்பையும்  எடுத்துக்கொண்டபின்பு,  புறப்பட்டுப்போனார்கள்;  அதை  ஒருவரும்  காணவில்லை,  அறியவுமில்லை,  ஒருவரும்  விழித்துக்கொள்ளவுமில்லை;  கர்த்தர்  அவர்களுக்கு  அயர்ந்த  நித்திரை  வருவித்ததினால்,  அவர்களெல்லாரும்  தூங்கினார்கள்.  {1Sam  26:12}

 

தாவீது<David>  கடந்து,  அந்தப்  பக்கத்திற்குப்  போய்,  தங்களுக்கும்  அவர்களுக்கும்  நடுவே  போந்த  இடமுண்டாக,  தூரத்திலிருக்கிற  மலையின்  கொடுமுடியிலே,  {1Sam  26:13}

 

ஜனங்களுக்கும்  நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேருக்கும்<Abner>  நேராக  நின்று  கூப்பிட்டு:  அப்னேரே<Abner>,  உத்தரவு  சொல்லமாட்டீரா  என்றான்;  அதற்கு  அப்னேர்<Abner>:  ராஜாவுக்கு  நேராகக்  கூக்குரலிடுகிற  நீ  யார்  என்றான்.  {1Sam  26:14}

 

அப்பொழுது  தாவீது<David>  அப்னேரை<Abner>  நோக்கி:  நீர்  வீரன்  அல்லவா?  இஸ்ரவேலில்<Israel>  உமக்குச்  சரியானவன்  யார்?  பின்னை  நீர்  உம்முடைய  ஆண்டவனாகிய  ராஜாவைக்  காக்காமற்  போனதென்ன?  ஜனத்தில்  ஒருவன்  உம்முடைய  ஆண்டவனாகிய  ராஜாவைக்  கொல்லும்படி  வந்திருந்தானே.  {1Sam  26:15}

 

நீர்  செய்த  இந்தக்  காரியம்  நல்லதல்ல;  கர்த்தர்  அபிஷேகம்பண்ணின  உங்கள்  ஆண்டவனை  நீங்கள்  காக்காமற்  போனபடியினால்,  நீங்கள்  மரணத்திற்குப்  பாத்திரவான்கள்;  இப்போதும்  ராஜாவின்  தலைமாட்டில்  இருந்த  அவருடைய  ஈட்டியும்  தண்ணீர்ச்  செம்பும்  எங்கே  என்று  பாரும்  என்றான்.  {1Sam  26:16}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  தாவீதின்<David>  சத்தத்தை  அறிந்து,  என்  குமாரனாகிய  தாவீதே<David>,  இது  உன்  சத்தமல்லவா  என்றான்.  அதற்குத்  தாவீது<David>:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  இது  என்  சத்தந்தான்  என்று  சொல்லி,  {1Sam  26:17}

 

பின்னும்:  என்  ஆண்டவனாகிய  நீர்  உம்முடைய  அடியானை  இப்படிப்  பின்தொடருகிறது  என்ன?  நான்  என்ன  செய்தேன்?  என்னிடத்தில்  என்ன  பொல்லாப்பு  இருக்கிறது?  {1Sam  26:18}

 

இப்பொழுது  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தம்முடைய  அடியானுடைய  வார்த்தைகளைக்  கேட்பாராக;  கர்த்தர்  உம்மை  எனக்கு  விரோதமாக  எடுத்து  விட்டதுண்டானால்,  அதற்கு  அவர்  காணிக்கையை  ஏற்றுக்கொள்வாராக;  மனுபுத்திரர்  அதைச்  செய்தார்களேயாகில்,  அவர்கள்  கர்த்தருக்கு  முன்பாகச்  சபிக்கப்படக்கடவர்கள்;  அவர்கள்:  நீ  போய்;  அந்நிய  தேவர்களைச்  சேவி  என்று  சொல்லி,  அவர்கள்  இன்று  என்னைக்  கர்த்தருடைய  சுதந்தரத்திற்கு  அடுத்தவனாயிராதபடிக்கு,  துரத்திவிட்டார்களே.  {1Sam  26:19}

 

இப்போதும்  கர்த்தருடைய  சமுகத்தில்  என்  இரத்தம்  தரையில்  விழாதிருப்பதாக;  மலைகளில்  ஒரு  கவுதாரியை  வேட்டையாடுகிறதுபோல,  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  ஒரு  தெள்ளுப்பூச்சியைத்  தேடவந்தாரோ  என்றான்.  {1Sam  26:20}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  நான்  பாவஞ்செய்தேன்;  என்  குமாரனாகிய  தாவீதே<David>,  திரும்பிவா;  என்  ஜீவன்  இன்றையதினம்  உன்  பார்வைக்கு  அருமையாயிருந்தபடியால்,  இனி  உனக்கு  ஒரு  பொல்லாப்புஞ்  செய்யேன்;  இதோ,  நான்  மதியற்றவனாய்  மகா  பெரிய  தப்பிதஞ்செய்தேன்  என்றான்.  {1Sam  26:21}

 

அதற்குத்  தாவீது<David>:  இதோ,  ராஜாவின்  ஈட்டி  இங்கே  இருக்கிறது;  வாலிபரில்  ஒருவன்  இப்புறம்  வந்து,  அதை  வாங்கிக்  கொண்டுபோகட்டும்.  {1Sam  26:22}

 

கர்த்தர்  அவனவனுக்கு  அவனவன்  நீதிக்கும்  உண்மைக்கும்  தக்கதாகப்  பலன்  அளிப்பாராக;  இன்று  கர்த்தர்  உம்மை  என்  கையில்  ஒப்புக்கொடுத்திருந்தும்,  கர்த்தர்  அபிஷேகம்பண்ணினவர்மேல்,  என்  கையை  நீட்ட  மனதில்லாதிருந்தேன்.  {1Sam  26:23}

 

இதோ,  உம்முடைய  ஜீவன்  இன்றையதினம்  என்  பார்வைக்கு  எப்படி  அருமையாயிருந்ததோ,  அப்படியே  என்  ஜீவனும்  கர்த்தரின்  பார்வைக்கு  அருமையாயிருப்பதினால்,  அவர்  என்னை  எல்லா  உபத்திரவத்திற்கும்  நீங்கலாக்கி  விடுவாராக  என்றான்.  {1Sam  26:24}

 

அப்பொழுது  சவுல்<Saul>  தாவீதை<David>  நோக்கி:  என்  குமாரனாகிய  தாவீதே<David>,  நீ  ஆசீர்வதிக்கப்பட்டவன்;  நீ  பெரிய  காரியங்களைச்  செய்வாய்,  மேன்மேலும்  பலப்படுவாய்  என்றான்;  அப்படியே  தாவீது<David>  தன்  வழியே  போனான்;  சவுலும்<Saul>  தன்  ஸ்தானத்திற்குத்  திரும்பினான்.  {1Sam  26:25}

 

பின்பு  தாவீது<David>:  நான்  எந்த  நாளிலாகிலும்  ஒருநாள்  சவுலின்<Saul>  கையினால்  மடிந்துபோவேன்;  இனிச்  சவுல்<Saul>  இஸ்ரவேலின்<Israel>  எல்லைகளில்  எங்கேயாவது  என்னைக்  கண்டுபிடிக்கலாம்  என்கிற  நம்பிக்கை  அற்றுப்போகும்படிக்கும்,  நான்  அவன்  கைக்கு  நீங்கலாயிருக்கும்படிக்கும்,  நான்  பெலிஸ்தரின்<Philistines>  தேசத்திற்குப்  போய்,  தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும்  நலமான  காரியம்  வேறில்லை  என்று  தன்  இருதயத்தில்  யோசித்தான்.  {1Sam  27:1}

 

ஆகையால்  தாவீது<David>  தன்னோடிருந்த  அறுநூறுபேரோடுங்கூட  எழுந்திருந்து,  மாயோகின்<Maoch>  குமாரனாகிய  ஆகீஸ்<Achish>  என்னும்  காத்தின்<Gath>  ராஜாவினிடத்தில்  போய்ச்  சேர்ந்தான்.  {1Sam  27:2}

 

அங்கே  தாவீதும்<David>,  அவன்  மனுஷரும்,  அவரவர்  வீட்டாரும்,  தாவீதோடேகூட<David>  அவன்  இரண்டு  மனைவிகளாகிய  யெஸ்ரயேல்<Jezreelitess>  ஊராளாகிய  அகினோவாமும்<Ahinoam>;  நாபாலின்<Nabal>  மனைவியாயிருந்த  கர்மேல்<Carmelitess>  ஊராளாகிய  அபிகாயிலும்<Abigail>,  காத்பட்டணத்தில்<Gath>  ஆகீசிடத்தில்<Achish>  தங்கியிருந்தார்கள்.  {1Sam  27:3}

 

தாவீது<David>  காத்பட்டணத்திற்கு<Gath>  ஓடிப்போனான்  என்று  சவுலுக்கு<Saul>  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  அப்புறம்  அவனைத்  தேடவில்லை.  {1Sam  27:4}

 

தாவீது<David>  ஆகீசை<Achish>  நோக்கி:  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயை  கிடைக்குமானால்,  நான்  வாசம்பண்ணும்படி  நாட்டிலுள்ள  ஊர்களிலே  ஒன்றில்  எனக்கு  இடந்தாரும்;  உம்முடைய  அடியான்  உம்மோடேகூட  ராஜதானி  பட்டணத்திலே  வாசமாயிருப்பானேன்  என்றான்.  {1Sam  27:5}

 

அப்பொழுது  ஆகீஸ்<Achish>:  அன்றையதினம்  சிக்லாகை<Ziklag>  அவனுக்குக்  கொடுத்தான்;  அதினிமித்தம்  சிக்லாக்<Ziklag>  இந்நாள்வரைக்கும்  யூதாவின்<Judah>  ராஜாக்களைச்  சேர்ந்திருக்கிறது.  {1Sam  27:6}

 

தாவீது<David>  பெலிஸ்தரின்<Philistines>  நாட்டிலே  ஒரு  வருஷமும்  நாலு  மாதமும்  குடியிருந்தான்.  {1Sam  27:7}

 

அங்கேயிருந்து  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  கெசூரியர்மேலும்<Geshurites>  கெஸ்ரியர்மேலும்<Gezrites>  அமலேக்கியர்மேலும்<Amalekites>  படையெடுத்துப்போனார்கள்;  சூருக்குப்<Shur>  போகிற  எல்லைதுவக்கி  எகிப்துதேசமட்டும்<Egypt>  இருக்கிற  நாட்டிலே  பூர்வகாலம்  துவக்கிக்  குடியிருந்தவர்கள்  இவர்களே.  {1Sam  27:8}

 

தாவீது<David>  அந்த  நாட்டைக்  கொள்ளையடிக்கிறபோது,  புருஷர்களையும்  ஸ்திரீகளையும்  உயிரோடே  வைக்காமல்,  ஆடுமாடுகளையும்  கழுதைகளையும்  ஒட்டகங்களையும்  வஸ்திரங்களையும்  எடுத்துக்கொண்டு,  ஆகீசிடத்துக்குத்<Achish>  திரும்பிவருவான்.  {1Sam  27:9}

 

இன்று  எத்திசையில்  போய்க்  கொள்ளையடித்தீர்கள்  என்று  ஆகீஸ்<Achish>  கேட்கும்போது,  தாவீது<David>:  யூதாவுடைய<Judah>  தென்திசையிலும்,  யெராமியேலருடைய<Jerahmeelites>  தென்திசையிலும்,  கேனியருடைய<Kenites>  தென்திசையிலும்  என்பான்.  {1Sam  27:10}

 

இன்ன  இன்னபடி  தாவீது<David>  செய்தான்  என்று  தங்களுக்கு  விரோதமான  செய்தியை  அறிவிக்கத்தக்க  ஒருவரையும்  தாவீது<David>  காத்பட்டணத்திற்குக்<Gath>  கொண்டு  வராதபடிக்கு,  ஒரு  புருஷனையாகிலும்  ஸ்திரீயையாகிலும்  உயிரோடே  வைக்காதிருப்பான்;  அவன்  பெலிஸ்தரின்<Philistines>  நாட்டுப்புறத்திலே  குடியிருக்கிற  நாளெல்லாம்  இவ்வண்ணம்  செய்துகொண்டுவந்தான்.  {1Sam  27:11}

 

ஆகீஸ்<Achish>  தாவீதை<David>  நம்பி:  அவன்  இஸ்ரவேலராகிய<Israel>  தன்னுடைய  ஜனங்கள்  தன்னை  வெறுக்கும்படி  செய்கிறான்;  என்றைக்கும்  அவன்  என்  ஊழியக்காரனாயிருப்பான்  என்பான்.  {1Sam  27:12}

 

அந்நாட்களிலே  பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேலின்மேல்<Israel>  யுத்தம்பண்ண,  தங்கள்  சேனைகளைப்  போருக்குக்  கூட்டினார்கள்;  அப்பொழுது  ஆகீஸ்<Achish>  தாவீதை<David>  நோக்கி:  நீயும்  உன்  மனுஷரும்  எவ்விதத்திலும்  என்னோடேகூட  யுத்தத்துக்கு  வரவேண்டும்  என்று  அறியக்கடவாய்  என்றான்.  {1Sam  28:1}

 

தாவீது<David>  ஆகீசைப்<Achish>  பார்த்து:  உம்முடைய  அடியான்  செய்யப்போகிறதை  நீர்  நிச்சயமாய்  அறிந்துகொள்வீர்  என்றான்;  அப்பொழுது  ஆகீஸ்<Achish>  தாவீதை<David>  நோக்கி:  இதற்காக  உன்னை  எந்நாளும்  எனக்கு  மெய்காவலனாக  வைப்பேன்  என்றான்.  {1Sam  28:2}

 

சாமுவேல்<Samuel>  இதற்கு  முன்னமே  மரித்துப்போனான்;  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  அவனுக்குத்  துக்கங்கொண்டாடி,  அவன்  ஊராகிய  ராமாவிலே<Ramah>  அவனை  அடக்கம்  பண்ணினார்கள்.  சவுல்<Saul>  அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்  குறிசொல்லுகிறவர்களையும்  தேசத்தில்  இராதபடிக்குத்  துரத்திவிட்டான்.  {1Sam  28:3}

 

பெலிஸ்தர்<Philistines>  கூடிவந்து,  சூநேமிலே<Shunem>  பாளயமிறங்கினார்கள்;  சவுலும்<Saul>  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரையும்  கூட்டினான்;  அவர்கள்  கில்போவாவிலே<Gilboa>  பாளயமிறங்கினார்கள்.  {1Sam  28:4}

 

சவுல்<Saul>  பெலிஸ்தரின்<Philistines>  பாளயத்தைக்  கண்டபோது  பயந்தான்;  அவன்  இருதயம்  மிகவும்  தத்தளித்துக்கொண்டிருந்தது.  {1Sam  28:5}

 

சவுல்<Saul>  கர்த்தரிடத்தில்  விசாரிக்கும்போது,  கர்த்தர்  அவனுக்குச்  சொப்பனங்களினாலாவது,  ஊரீமினாலாவது<Urim>,  தீர்க்கதரிசிகளினாலாவது  மறுஉத்தரவு  அருளவில்லை.  {1Sam  28:6}

 

அப்பொழுது  சவுல்<Saul>  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  அஞ்சனம்பார்க்கிற  ஒரு  ஸ்திரீயைத்  தேடுங்கள்;  நான்  அவளிடத்தில்  போய்  விசாரிப்பேன்  என்றான்;  அதற்கு  அவனுடைய  ஊழியக்காரர்:  இதோ,  எந்தோரில்<Endor>  அஞ்சனம்பார்க்கிற  ஒரு  ஸ்திரீ  இருக்கிறாள்  என்றார்கள்.  {1Sam  28:7}

 

அப்பொழுது  சவுல்<Saul>  வேஷம்  மாறி,  வேறு  வஸ்திரம்  தரித்துக்கொண்டு,  அவனும்  அவனோடேகூட  இரண்டுபேரும்  இராத்திரியிலே  அந்த  ஸ்திரீயினிடத்தில்  போய்ச்  சேர்ந்தார்கள்;  அவளை  அவன்  நோக்கி:  நீ  அஞ்சனம்பார்த்து  எனக்குக்  குறிசொல்லி,  நான்  உன்னிடத்தில்  சொல்லுகிறவனை  எழும்பிவரச்செய்  என்றான்.  {1Sam  28:8}

 

அதற்கு  அந்த  ஸ்திரீ:  சவுல்<Saul>  அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்,  குறிசொல்லுகிறவர்களையும்,  தேசத்தில்  இராதபடிக்கு  நிர்மூலமாக்கின  செய்தியை  நீர்  அறிவீரே;  என்னைக்  கொன்றுபோடும்படி  நீர்  என்  பிராணனுக்குக்  கண்ணிவைக்கிறது  என்ன  என்றாள்.  {1Sam  28:9}

 

அப்பொழுது  சவுல்<Saul>:  இந்தக்  காரியத்திற்காக  உனக்குப்  பொல்லாப்பு  வராது  என்பதைக்  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  அவளுக்குக்  கர்த்தர்மேல்  ஆணையிட்டான்.  {1Sam  28:10}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீ:  உமக்கு  நான்  யாரை  எழும்பிவரப்பண்ணவேண்டும்  என்றதற்கு,  அவன்:  சாமுவேலை<Samuel>  எழும்பிவரப்பண்ணவேண்டும்  என்றான்.  {1Sam  28:11}

 

அந்த  ஸ்திரீ  சாமுவேலைக்<Samuel>  கண்டமாத்திரத்தில்  மகா  சத்தமாய்க்  கூப்பிட்டு,  சவுலை<Saul>  நோக்கி:  ஏன்  என்னை  மோசம்போக்கினீர்?  நீர்தான்  சவுலாச்சுதே<Saul>  என்றாள்.  {1Sam  28:12}

 

ராஜா  அவளைப்  பார்த்து:  நீ  பயப்படாதே;  நீ  காண்கிறது  என்ன  என்று  கேட்டான்.  அதற்கு  அந்த  ஸ்திரீ:  தேவர்கள்  பூமிக்குள்ளிருந்து  ஏறிவருகிறதைக்  காண்கிறேன்  என்று  சவுலுக்குச்<Saul>  சொன்னாள்.  {1Sam  28:13}

 

அவருடைய  ரூபம்  என்ன  என்று  அவளைக்  கேட்டான்.  அதற்கு  அவள்:  சால்வையைப்  போர்த்துக்கொண்டிருக்கிற  ஒரு  முதிர்ந்த  வயதான  மனுஷன்  எழும்பிவருகிறான்  என்றாள்;  அதினாலே  சவுல்<Saul>  அவன்  சாமுவேல்<Samuel>  என்று  அறிந்துகொண்டு,  தரைமட்டும்  முகங்குனிந்து  வணங்கினான்.  {1Sam  28:14}

 

சாமுவேல்<Samuel>  சவுலை<Saul>  நோக்கி:  நீ  என்னை  எழும்பிவரப்பண்ணி,  என்னைக்  கலைத்தது  என்ன  என்று  கேட்டான்.  அதற்குச்  சவுல்<Saul>:  நான்  மிகவும்  நெருக்கப்பட்டிருக்கிறேன்;  பெலிஸ்தர்<Philistines>  எனக்கு  விரோதமாய்  யுத்தம்பண்ணுகிறார்கள்;  தேவனும்  என்னைக்  கைவிட்டார்;  அவர்  தீர்க்கதரிசிகளினாலாவது,  சொப்பனங்களினாலாவது  எனக்கு  மறுஉத்தரவு  அருளுகிறதில்லை;  ஆகையால்  நான்  செய்யவேண்டியதை  நீர்  எனக்கு  அறிவிக்கும்படிக்கு,  உம்மை  அழைப்பித்தேன்  என்றான்.  {1Sam  28:15}

 

அதற்குச்  சாமுவேல்<Samuel>:  கர்த்தர்  உன்னைவிட்டு  விலகி,  உனக்குச்  சத்துருவாய்  இருக்கும்போது,  நீ  என்னிடத்தில்  கேட்பானேன்?  {1Sam  28:16}

 

கர்த்தர்  என்னைக்கொண்டு  சொன்னபடியே  செய்து  முடித்து,  ராஜ்யத்தை  உன்  கையிலிருந்து  பறித்து,  அதை  உன்  தோழனாகிய  தாவீதுக்குக்<David>  கொடுத்துவிட்டார்.  {1Sam  28:17}

 

நீ  கர்த்தருடைய  சொற்கேளாமலும்,  அமலேக்கின்மேல்<Amalek>  அவருக்கு  இருந்த  கோபத்தின்  உக்கிரத்தைத்  தீர்க்காமலும்  போனபடியினால்,  கர்த்தர்  இன்றையதினம்  உனக்கு  இந்தப்பிரகாரமாகச்  செய்தார்.  {1Sam  28:18}

 

கர்த்தர்  உன்னுடைய  ஜனமாகிய  இஸ்ரவேலரையும்<Israel>  பெலிஸ்தர்<Philistines>  கையில்  ஒப்புக்  கொடுப்பார்;  நாளைக்கு  நீயும்  உன்  குமாரரும்  என்னோடிருப்பீர்கள்;  இஸ்ரவேலின்<Israel>  பாளயத்தையும்  கர்த்தர்  பெலிஸ்தரின்<Philistines>  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்றான்.  {1Sam  28:19}

 

அந்தக்ஷணமே  சவுல்<Saul>  நெடிதாங்கிடையாய்த்  தரையிலே  விழுந்து,  சாமுவேலின்<Samuel>  வார்த்தைகளினாலே  மிகவும்  பயப்பட்டான்;  அவன்  இராப்பகல்  முழுதும்  ஒன்றும்  சாப்பிடாதிருந்தபடியினால்,  அவன்  பலவீனமாயிருந்தான்.  {1Sam  28:20}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  சவுலிடத்தில்<Saul>  வந்து,  அவன்  மிகவும்  கலங்கியிருக்கிறதைக்  கண்டு,  அவனை  நோக்கி:  இதோ,  உம்முடைய  அடியாளாகிய  நான்  உம்முடைய  சொற்கேட்டு,  என்  பிராணனை  என்  கையிலே  பிடித்துக்கொண்டு,  நீர்  எனக்குச்  சொன்ன  உம்முடைய  வார்த்தைகளுக்குக்  கீழ்ப்படிந்தேன்.  {1Sam  28:21}

 

இப்பொழுது  நீர்  உம்முடைய  அடியாளுடைய  சொல்லைக்  கேளும்,  நான்  உமக்கு  முன்பாகக்  கொஞ்சம்  அப்பம்  வைக்கிறேன்,  அதைப்  புசிப்பீராக;  அப்பொழுது  நீர்  வழிநடந்து  போகத்தக்க  பெலன்  உமக்குள்  இருக்கும்  என்றாள்.  {1Sam  28:22}

 

அவனோ  தட்டுதல்பண்ணி,  நான்  புசிக்கமாட்டேன்  என்றான்;  ஆனாலும்  அவனுடைய  ஊழியக்காரரும்  அந்த  ஸ்திரீயும்  அவனை  மிகவும்  வருந்திக்கொண்டதினால்,  அவன்  அவர்கள்  சொற்கேட்டு,  தரையிலிருந்து  எழுந்திருந்து  கட்டிலின்மேல்  உட்கார்ந்தான்.  {1Sam  28:23}

 

அந்த  ஸ்திரீயினிடத்தில்  கொழுத்த  கன்றுக்குட்டி  ஒன்று  வீட்டில்  இருந்தது;  அதைத்  தீவிரமாய்  அடித்து,  மா  எடுத்துப்  பிசைந்து,  அதைப்  புளிப்பில்லா  அப்பங்களாகச்  சுட்டு,  {1Sam  28:24}

 

சவுலுக்கும்<Saul>  அவன்  ஊழியக்காரருக்கும்  முன்பாகக்  கொண்டுவந்து  வைத்தாள்;  அவர்கள்  புசித்து  எழுந்திருந்து,  அந்த  இராத்திரியிலேயே  புறப்பட்டுப்போனார்கள்.  {1Sam  28:25}

 

பெலிஸ்தர்<Philistines>  தங்கள்  சேனைகளையெல்லாம்  ஆப்பெக்கிலே<Aphek>  கூடிவரச்செய்தார்கள்;  இஸ்ரவேலர்<Israelites>  யெஸ்ரயேலிலிருக்கிற<Jezreel>  துரவண்டையிலே  பாளயமிறங்கினார்கள்.  {1Sam  29:1}

 

அப்பொழுது  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகள்  நூறும்  ஆயிரமுமான  சேர்வைகளோடே  போனார்கள்;  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  ஆகீசோடே<Achish>  பின்தண்டிலே  போனார்கள்.  {1Sam  29:2}

 

அப்பொழுது  பெலிஸ்தரின்<Philistines>  பிரபுக்கள்:  இந்த  எபிரெயர்<Hebrews>  என்னத்திற்கு  என்றார்கள்;  ஆகீஸ்<Achish>  அவர்களைப்  பார்த்து:  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  சவுலின்<Saul>  ஊழியக்காரனாயிருந்த  இந்தத்  தாவீது<David>  இத்தனை  நாட்களும்  இத்தனை  வருஷங்களும்  என்னோடு  இருக்கவில்லையா?  இவன்  என்னிடத்தில்  வந்து  சேர்ந்த  நாள்முதல்  இந்நாள்வரைக்கும்  ஒரு  குற்றமும்  நான்  இவனில்  கண்டுபிடிக்கவில்லை  என்றான்.  {1Sam  29:3}

 

அதனால்  பெலிஸ்தரின்<Philistines>  பிரபுக்கள்  அவன்மேல்  கடுங்கோபமாகி,  அவனைப்  பார்த்து:  இந்த  மனுஷன்  நீர்  குறித்த  தன்  இடத்திற்குத்  திரும்பிப்போகும்படிக்கு,  அங்கே  அவனை  மறுபடியும்  அனுப்பிவிடும்;  யுத்தத்தில்  இவன்  நமக்குச்  சத்துருவாயிராதபடிக்கு,  இவன்  நம்மோடே  கூட  யுத்தத்திற்கு  வரவேண்டியதில்லை;  இவன்  எதினாலே  தன்  ஆண்டவனோடே  ஒப்புரவாவான்?  இந்த  மனுஷருடைய  தலைகளினால்  அல்லவா?  {1Sam  29:4}

 

சவுல்<Saul>  கொன்றது  ஆயிரம்,  தாவீது<David>  கொன்றது  பதினாயிரம்  என்று  இந்தத்  தாவீதைக்குறித்து<David>  அல்லவோ  ஆடிப்பாடிச்  சொன்னார்கள்  என்றார்கள்.  {1Sam  29:5}

 

அப்பொழுது  ஆகீஸ்<Achish>  தாவீதை<David>  அழைத்து:  நீ  உத்தமன்  என்றும்,  நீ  பாளயத்தில்  என்னோடே  போக்கும்  வரத்துமாயிருக்கிறது  என்  பார்வைக்கு  நல்லது  என்றும்,  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  நீ  என்னிடத்தில்  வந்து  சேர்ந்த  நாள்முதல்  இன்றையவரைக்கும்  நான்  உன்னில்  ஒரு  பொல்லாப்பும்  காணவில்லை;  ஆகிலும்  பிரபுக்களின்  பார்வைக்கு  நீ  பிரியமானவன்  அல்ல.  {1Sam  29:6}

 

ஆகையால்  பெலிஸ்தருடைய<Philistines>  பிரபுக்கள்  உன்மேல்  தாங்கல்  அடையாதபடிக்கு,  இப்போது  சமாதானத்தோடே  திரும்பிப்  போய்விடு  என்றான்.  {1Sam  29:7}

 

தாவீது<David>  ஆகீசை<Achish>  நோக்கி:  ஏன்?  நான்  செய்தது  என்ன?  நான்  வந்து,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  சத்துருக்களோடே  யுத்தம்பண்ணாதபடிக்கு,  நான்  உம்மிடத்தில்  வந்த  நாள்முதற்கொண்டு  இன்றையவரைக்கும்  உமது  அடியேனிடத்தில்  கண்டுபிடித்தது  என்ன  என்றான்.  {1Sam  29:8}

 

ஆகீஸ்<Achish>  தாவீதுக்குப்<David>  பிரதியுத்தரமாக:  அதை  அறிவேன்;  நீ  தேவனுடைய  தூதனைப்போல  என்  பார்வைக்குப்  பிரியமானவன்;  ஆனாலும்  இவன்  எங்களோடேகூட  யுத்தத்திற்கு  வரக்கூடாது  என்று  பெலிஸ்தரின்<Philistines>  பிரபுக்கள்  சொல்லுகிறார்கள்.  {1Sam  29:9}

 

இப்போதும்  நீ  நாளை  அதிகாலையில்  உன்னோடே  வந்த  உன்  ஆண்டவனுடைய  வேலைக்காரரைக்  கூட்டிக்கொண்டு,  விடியற்காலத்திலே  வெளிச்சமாகிறபோது,  புறப்பட்டுப்போ  என்றான்.  {1Sam  29:10}

 

அப்படியே  தாவீது<David>  அதிகாலையில்  தன்  மனுஷரைக்  கூட்டிக்கொண்டு,  பொழுதுவிடிகிற  நேரத்திலே,  பெலிஸ்தரின்<Philistines>  தேசத்திற்குத்  திரும்பிப்போகப்  புறப்பட்டான்;  பெலிஸ்தரோவெனில்<Philistines>  யெஸ்ரயேலுக்குப்<Jezreel>  போனார்கள்.  {1Sam  29:11}

 

தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  மூன்றாம்  நாளிலே,  சிக்லாகுக்கு<Ziklag>  வந்து  சேருகிறதற்குள்ளே,  அமலேக்கியர்<Amalekites>  தென்புறத்துச்  சீமையின்மேலும்  சிக்லாகின்மேலும்<Ziklag>  விழுந்து,  சிக்லாகைக்<Ziklag>  கொள்ளையடித்து,  அதை  அக்கினியால்  சுட்டெரித்து,  {1Sam  30:1}

 

அதிலிருந்த  ஸ்திரீகளாகிய  சிறியவர்களையும்  பெரியவர்களையும்  சிறைபிடித்து,  ஒருவரையும்  கொன்றுபோடாமல்,  அவர்களைப்  பிடித்துக்கொண்டு,  தங்கள்  வழியே  போய்விட்டார்கள்.  {1Sam  30:2}

 

தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  அந்தப்  பட்டணத்திற்கு  வந்தபோது,  இதோ,  அது  அக்கினியினால்  சுட்டெரிக்கப்பட்டது  என்றும்,  தங்கள்  மனைவிகளும்  தங்கள்  குமாரரும்  தங்கள்  குமாரத்திகளும்  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்பட்டார்கள்  என்றும்  கண்டார்கள்.  {1Sam  30:3}

 

அப்பொழுது  தாவீதும்<David>  அவனோடிருந்த  ஜனங்களும்  அழுகிறதற்குத்  தங்களில்  பெலனில்லாமல்  போகுமட்டும்  சத்தமிட்டு  அழுதார்கள்.  {1Sam  30:4}

 

தாவீதின்<David>  இரண்டு  மனைவிகளாகிய  யெஸ்ரயேல்<Jezreelitess>  ஊராளான  அகினோவாமும்<Ahinoam>,  கர்மேல்<Carmelite>  ஊராளான  நாபாலின்<Nabal>  மனைவியாயிருந்த  அபிகாயிலும்<Abigail>,  சிறைபிடித்துக்  கொண்டுபோகப்பட்டார்கள்.  {1Sam  30:5}

 

தாவீது<David>  மிகவும்  நெருக்கப்பட்டான்;  சகல  ஜனங்களும்  தங்கள்  குமாரர்  குமாரத்திகளினிமித்தம்  மனக்கிலேசமானதினால்,  அவனைக்  கல்லெறியவேண்டும்  என்று  சொல்லிக்கொண்டார்கள்;  தாவீது<David>  தன்  தேவனாகிய  கர்த்தருக்குள்ளே  தன்னைத்  திடப்படுத்திக்கொண்டான்.  {1Sam  30:6}

 

தாவீது<David>  அகிமெலேக்கின்<Ahimelech>  குமாரனாகிய  அபியத்தார்<Abiathar>  என்னும்  ஆசாரியனை  நோக்கி:  ஏபோத்தை<ephod>  என்னிடத்தில்  கொண்டுவா  என்றான்;  அபியத்தார்<Abiathar>  ஏபோத்தைத்<ephod>  தாவீதினிடத்தில்<David>  கொண்டுவந்தான்.  {1Sam  30:7}

 

தாவீது<David>  கர்த்தரை  நோக்கி:  நான்  அந்தத்  தண்டைப்  பின்தொடரவேண்டுமா?  அதைப்  பிடிப்பேனா?  என்று  கேட்டான்.  அதற்கு  அவர்:  அதைப்  பின்தொடர்;  அதை  நீ  பிடித்து,  சகலத்தையும்  திருப்பிக்கொள்வாய்  என்றார்.  {1Sam  30:8}

 

அப்பொழுது  தாவீதும்<David>  அவனோடிருந்த  அறுநூறுபேரும்  போனார்கள்;  அவர்கள்  பேசோர்<Besor>  ஆற்றண்டைக்கு  வந்தபோது  அங்கே  சிலர்  நின்றுபோனார்கள்.  {1Sam  30:9}

 

தாவீதோ<David>,  நானூறுபேரோடுங்கூடத்  தொடர்ந்துபோனான்;  இருநூறுபேர்  விடாய்த்துப்போனபடியினால்  பேசோர்<Besor>  ஆற்றைக்  கடக்கமாட்டாமல்  நின்றுபோனார்கள்.  {1Sam  30:10}

 

ஒரு  எகிப்தியனை<Egyptian>  வெளியில்  அவர்கள்  கண்டு,  அவனைத்  தாவீதினிடத்தில்<David>  கொண்டுவந்து,  புசிக்க  அவனுக்கு  அப்பமும்  குடிக்கத்  தண்ணீரும்  கொடுத்து,  {1Sam  30:11}

 

அத்திப்பழ  அடையின்  ஒரு  துண்டையும்,  வற்றலான  இரண்டு  திராட்சப்பழக்  குலைகளையும்  அவனுக்குக்  கொடுத்தார்கள்;  அதை  அவன்  சாப்பிட்ட  பின்பு,  அவனுடைய  உயிர்  திரும்ப  அவனுக்குள்  வந்தது.  அவன்  இராப்பகல்  மூன்றுநாளாய்  அப்பம்  சாப்பிடாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இருந்தான்.  {1Sam  30:12}

 

தாவீது<David>  அவனை  நோக்கி:  நீ  யாருடையவன்?  நீ  எவ்விடத்தான்  என்று  கேட்டதற்கு,  அவன்:  நான்  ஒரு  அமலேக்கியனுடைய<Amalekite>  வேலைக்காரனாகிய  எகிப்துதேசத்துப்<Egypt>  பிள்ளையாண்டான்;  மூன்று  நாளைக்குமுன்  நான்  வியாதிப்பட்டபோது,  என்  எஜமான்  என்னைக்  கைவிட்டான்.  {1Sam  30:13}

 

நாங்கள்  கிரேத்தியருடைய<Cherethites>  தென்புறத்தின்மேலும்,  யூதாவுக்கடுத்த<Judah>  எல்லையின்மேலும்,  காலேபுடைய<Caleb>  தென்புறத்தின்மேலும்,  படையெடுத்துப்போய்  சிக்லாகை<Ziklag>  அக்கினியினால்  சுட்டெரித்துப்போட்டோம்  என்றான்.  {1Sam  30:14}

 

தாவீது<David>  அவனை  நோக்கி:  நீ  என்னை  அந்தத்  தண்டினிடத்துக்குக்  கொண்டு  போவாயா  என்று  கேட்டதற்கு:  அவன்,  நீர்  என்னைக்  கொன்றுபோடுவதுமில்லை,  என்னை  என்  எஜமான்  கையில்  ஒப்புக்கொடுப்பதுமில்லை  என்று  தேவன்மேல்  ஆணையிடுவீரானால்,  உம்மை  அந்தத்  தண்டினிடத்துக்குக்  கூட்டிக்கொண்டுபோவேன்  என்றான்.  {1Sam  30:15}

 

இவன்  அவனைக்  கொண்டுபோய்  விட்டபோது,  இதோ,  அவர்கள்  வெளியெங்கும்  பரவி,  புசித்துக்  குடித்து,  தாங்கள்  பெலிஸ்தர்<Philistines>  தேசத்திலும்  யூதாதேசத்திலும்<Judah>  கொள்ளையிட்டுவந்த  மகா  பெரிதான  அந்த  எல்லாக்  கொள்ளைக்காகவும்  ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.  {1Sam  30:16}

 

அவர்களைத்  தாவீது<David>  அன்று  சாயங்காலந்தொடங்கி  மறுநாள்  சாயங்காலமட்டும்  முறிய  அடித்தான்;  ஒட்டகங்கள்மேல்  ஏறி  ஓடிப்போன  நானூறு  வாலிபர்  தவிர,  அவர்களில்  வேறொருவரும்  தப்பவில்லை.  {1Sam  30:17}

 

அமலேக்கியர்<Amalekites>  பிடித்துக்கொண்டுபோன  எல்லாவற்றையும்,  தன்னுடைய  இரண்டு  மனைவிகளையும்,  தாவீது<David>  விடுவித்தான்.  {1Sam  30:18}

 

அவர்கள்  கொள்ளையாடிக்கொண்டுபோன  எல்லாவற்றிலும்,  சிறியதிலும்  பெரியதிலும்,  குமாரரிலும்,  குமாரத்திகளிலும்,  ஒன்றும்  குறைபடாமல்  எல்லாவற்றையும்  தாவீது<David>  திருப்பிக்கொண்டான்.  {1Sam  30:19}

 

எல்லா  ஆடுமாடுகளையும்  தாவீது<David>  பிடித்துக்கொண்டான்;  அவைகளைத்  தங்கள்  மிருகஜீவன்களுக்கு  முன்னாலே  ஓட்டி,  இது  தாவீதின்<David>  கொள்ளை  என்றார்கள்.  {1Sam  30:20}

 

விடாய்த்துப்போனதினாலே  தாவீதுக்குப்<David>  பின்செல்லாமல்,  பேசோர்<Besor>  ஆற்றண்டையிலே  தங்கியிருந்த  இருநூறுபேரிடத்துக்குத்  தாவீது<David>  வருகிறபோது,  இவர்கள்  தாவீதுக்கும்<David>  அவனோடிருந்த  ஜனத்திற்கும்  எதிர்கொண்டு  வந்தார்கள்;  தாவீது<David>  அந்த  ஜனத்தினிடத்தில்  சேர்ந்து,  அவர்கள்  சுகசெய்தியை  விசாரித்தான்.  {1Sam  30:21}

 

அப்பொழுது  தாவீதோடே<David>  நடந்து  வந்த  மனுஷரில்  பொல்லாதவர்களும்  பேலியாளின்<Belial>  மக்களுமான  எல்லாரும்:  அவர்கள்  எங்களோடே  வராதபடியினால்  நாங்கள்  திருப்பிக்கொண்ட  கொள்ளையுடைமைகளில்  அவர்களுக்கு  ஒன்றும்  கொடுப்பதில்லை;  அவர்களில்  ஒவ்வொருவனும்  தன்தன்  மனைவியையும்  தன்தன்  பிள்ளைகளையுமே  அழைத்துக்கொண்டு  போகட்டும்  என்றார்கள்.  {1Sam  30:22}

 

அதற்குத்  தாவீது<David>:  என்  சகோதரரே,  கர்த்தர்  நமக்குத்  தந்ததை  நீங்கள்  இப்படிச்  செய்யவேண்டாம்;  கர்த்தர்  நம்மைக்  காப்பாற்றி,  நமக்கு  விரோதமாய்  வந்திருந்த  அந்தத்  தண்டை  நம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  {1Sam  30:23}

 

இந்தக்  காரியத்தில்  உங்கள்  சொற்கேட்க  யார்  சம்மதிப்பான்?  யுத்தத்திற்குப்  போனவர்களின்  பங்கு  எவ்வளவோ,  அவ்வளவு  ரஸ்துக்களண்டையில்  இருந்தவர்களுக்கும்  பங்குவீதம்  கிடைக்கவேண்டும்;  சரிபங்காகப்  பங்கிடுவார்களாக  என்றான்.  {1Sam  30:24}

 

அப்படியே  அந்நாள்முதற்கொண்டு  நடந்துவருகிறது;  அதை  இஸ்ரவேலிலே<Israel>  இந்நாள்வரைக்கும்  இருக்கும்  கட்டளையும்  பிரமாணமுமாக  ஏற்படுத்தினான்.  {1Sam  30:25}

 

தாவீது<David>  சிக்லாகுக்கு<Ziklag>  வந்தபோது,  அவன்  கொள்ளையாடினவைகளிலே  தன்  சிநேகிதராகிய  யூதாவின்<Judah>  மூப்பருக்குச்  சிலவற்றை  அனுப்பி:  இதோ,  கர்த்தருடைய  சத்துருக்களின்  கொள்ளையில்  உங்களுக்கு  உண்டாயிருக்கும்  ஆசீர்வாத  பாகம்  என்று  சொல்லச்சொன்னான்.  {1Sam  30:26}

 

யார்யாருக்கு  அனுப்பினானென்றால்,  பெத்தேலில்<Bethel>  இருக்கிறவர்களுக்கும்,  தெற்கான  ராமோத்தில்<Ramoth>  இருக்கிறவர்களுக்கும்,  யாத்தீரில்<Jattir>  இருக்கிறவர்களுக்கும்,  {1Sam  30:27}

 

ஆரோவேரில்<Aroer>  இருக்கிறவர்களுக்கும்,  சிப்மோத்தில்<Siphmoth>  இருக்கிறவர்களுக்கும்,  எஸ்தெமோவாவில்<Eshtemoa>  இருக்கிறவர்களுக்கும்,  {1Sam  30:28}

 

ராக்காலில்<Rachal>  இருக்கிறவர்களுக்கும்,  யெராமியேலியரின்<Jerahmeelites>  பட்டணங்களில்  இருக்கிறவர்களுக்கும்,  கேனியரின்<Kenites>  பட்டணங்களில்  இருக்கிறவர்களுக்கும்,  {1Sam  30:29}

 

ஒர்மாவில்<Hormah>  இருக்கிறவர்களுக்கும்,  கொராசானில்<Chorashan>  இருக்கிறவர்களுக்கும்,  ஆற்றாகில்<Athach>  இருக்கிறவர்களுக்கும்,  {1Sam  30:30}

 

எப்ரோனில்<Hebron>  இருக்கிறவர்களுக்கும்,  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  நடமாடின  எல்லா  இடங்களில்  இருக்கிறவர்களுக்கும்  அனுப்பினான்.  {1Sam  30:31}

 

பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேலரோடே<Israel>  யுத்தம்பண்ணினார்கள்;  இஸ்ரவேலர்<Israel>  பெலிஸ்தருக்கு<Philistines>  முன்பாக  முறிந்தோடி,  கில்போவா<Gilboa>  மலையிலே  வெட்டுண்டு  விழுந்தார்கள்.  {1Sam  31:1}

 

பெலிஸ்தர்<Philistines>  சவுலையும்<Saul>  அவன்  குமாரரையும்  நெருங்கித்  தொடர்ந்து,  சவுலின்<Saul>  குமாரராகிய  யோனத்தானையும்<Jonathan>  அபினதாபையும்<Abinadab>  மல்கிசூகாவையும்<Malchishua>  வெட்டிப்போட்டார்கள்.  {1Sam  31:2}

 

சவுலுக்கு<Saul>  விரோதமாய்  யுத்தம்  பலத்தது;  வில்வீரர்  அவனைக்  கண்டு  நெருங்கினார்கள்;  அப்பொழுது  சவுல்<Saul>  வில்வீரரால்  மிகவும்  காயப்பட்டு,  {1Sam  31:3}

 

தன்  ஆயுததாரியை  நோக்கி:  அந்த  விருத்தசேதனம்  இல்லாதவர்கள்  வந்து,  என்னைக்  குத்திப்போட்டு,  என்னை  அவமானப்படுத்தாதபடிக்கு,  நீ  உன்  பட்டயத்தை  உருவி,  என்னைக்  குத்திப்போடு  என்றான்;  அவனுடைய  ஆயுததாரி  மிகவும்  பயப்பட்டதினால்,  அப்படிச்  செய்யமாட்டேன்  என்றான்;  அப்பொழுது  சவுல்<Saul>  பட்டயத்தை  நட்டு  அதின்மேல்  விழுந்தான்.  {1Sam  31:4}

 

சவுல்<Saul>  செத்துப்போனதை  அவன்  ஆயுததாரி  கண்டபோது,  அவனும்  தன்  பட்டயத்தின்மேல்  விழுந்து,  அவனோடேகூடச்  செத்துப்போனான்.  {1Sam  31:5}

 

அப்படியே  அன்றையதினம்  சவுலும்<Saul>,  அவன்  மூன்று  குமாரரும்,  அவன்  ஆயுததாரியும்,  அவனுடைய  எல்லா  மனுஷரும்  ஒருமிக்கச்  செத்துப்போனார்கள்.  {1Sam  31:6}

 

இஸ்ரவேலர்<Israel>  முறிந்தோடினார்கள்  என்றும்,  சவுலும்<Saul>  அவன்  குமாரரும்  செத்துப்  போனார்கள்  என்றும்,  பள்ளத்தாக்குக்கு  இப்பாலும்  யோர்தானுக்கு<Jordan>  இப்பாலும்  இருந்த  இஸ்ரவேலர்<Israel>  கண்டபோது,  அவர்கள்  பட்டணங்களை  விட்டு  ஓடிப்போனார்கள்;  அப்பொழுது  பெலிஸ்தர்<Philistines>  வந்து,  அவைகளிலே  குடியிருந்தார்கள்.  {1Sam  31:7}

 

வெட்டுண்டவர்களை  உரிந்துகொள்ள,  பெலிஸ்தர்<Philistines>  மறுநாள்  வந்தபோது,  அவர்கள்,  சவுலும்<Saul>  அவன்  மூன்று  குமாரரும்  கில்போவா<Gilboa>  மலையிலே  விழுந்து  கிடக்கிறதைக்  கண்டு,  {1Sam  31:8}

 

அவன்  தலையை  வெட்டி,  அவன்  ஆயுதங்களை  எடுத்துக்கொண்டு,  தங்கள்  விக்கிரகங்களின்  கோவில்களிலும்  ஜனங்களுக்குள்ளும்  செய்தியைப்  பிரசித்தப்படுத்தும்படி,  அவைகளைப்  பெலிஸ்தர்<Philistines>  தேசத்திலே  சுற்றிலும்  அனுப்பி,  {1Sam  31:9}

 

அவன்  ஆயுதங்களை  அஸ்தரோத்<Ashtaroth>  தேவனுடைய  கோவிலிலே  வைத்து,  அவன்  உடலைப்  பெத்சானின்<Bethshan>  அலங்கத்திலே  தூக்கிப்போட்டார்கள்.  {1Sam  31:10}

 

பெலிஸ்தர்<Philistines>  சவுலுக்குச்<Saul>  செய்ததைக்  கீலேயாத்தேசத்து<Gilead>  யாபேஸ்<Jabesh>  பட்டணத்தார்  கேட்டபோது,  {1Sam  31:11}

 

அவர்களிலே  பலசாலிகள்  எல்லாரும்  எழுந்து  இராமுழுதும்  நடந்துபோய்,  பெத்சானின்<Bethshan>  அலங்கத்திலிருந்த  சவுலின்<Saul>  உடலையும்  அவன்  குமாரரின்  உடல்களையும்  எடுத்து,  யாபேசுக்குக்<Jabesh>  கொண்டுவந்து,  அவைகளை  அங்கே  தகனம்  பண்ணி,  {1Sam  31:12}

 

அவர்களுடைய  எலும்புகளை  எடுத்து,  யாபேசிலிருக்கிற<Jabesh>  தோப்பிலே  அடக்கம்பண்ணி,  ஏழுநாள்  உபவாசம்பண்ணினார்கள்.  {1Sam  31:13}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!