யோசுவா<Joshua> மரித்தபின் இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை<Canaanites> எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள். {Judg 1:1}
அதற்குக் கர்த்தர்: யூதா<Judah> எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார். {Judg 1:2}
அப்பொழுது யூதா<Judah> தன் சகோதரனாகிய சிமியோனை<Simeon> நோக்கி: நாம் கானானியரோடே<Canaanites> யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன்<Simeon> அவனோடேகூடப் போனான். {Judg 1:3}
யூதா<Judah> எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும்<Canaanites> பெரிசியரையும்<Perizzites> அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே<Bezek> பதினாயிரம்பேரை வெட்டினார்கள். {Judg 1:4}
பேசேக்கிலே<Bezek> அதோனிபேசேக்கைக்<Adonibezek> கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும்<Canaanites> பெரிசியரையும்<Perizzites> வெட்டினார்கள். {Judg 1:5}
அதோனிபேசேக்<Adonibezek> ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள். {Judg 1:6}
அப்பொழுது அதோனிபேசேக்<Adonibezek>: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக்<Jerusalem> கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான். {Judg 1:7}
யூதாவின்<Judah> புத்திரர் எருசலேமின்மேல்<Jerusalem> யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள். {Judg 1:8}
பின்பு யூதாவின்<Judah> புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு<Canaanites> யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள். {Judg 1:9}
அப்படியே யூதா<Judah> கோத்திரத்தார் எபிரோனிலே<Hebron> குடியிருக்கிற கானானியருக்கு<Canaanites> விரோதமாய்ப் போய், சேசாய்<Sheshai>, அகீமான்<Ahiman>, தல்மாய்<Talmai> என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்குக்<Hebron> கீரியாத்அர்பா<Kirjatharba> என்று பேர். {Judg 1:10}
அங்கேயிருந்து தெபீரின்<Debir> குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்குக்<Debir> கீரியாத்செப்பேர்<Kirjathsepher> என்று பேர். {Judg 1:11}
அப்பொழுது காலேப்<Caleb>: கீரியாத்செப்பேரைச்<Kirjathsepher> சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை<Achsah> விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்றான். {Judg 1:12}
அப்பொழுது காலேபுடைய<Caleb> தம்பியாகிய கேனாசின்<Kenaz> குமாரன் ஒத்னியேல்<Othniel> அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை<Achsah> அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான். {Judg 1:13}
அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப்<Caleb> அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான். {Judg 1:14}
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்<Caleb> மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். {Judg 1:15}
மோசேயின்<Moses> மாமனாகிய கேனியனின்<Kenite> புத்திரரும் யூதாவின்<Judah> புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத்<Arad> தெற்கேயிருக்கிற யூதாவின்<Judah> வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள். {Judg 1:16}
யூதா<Judah> தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப்<Simeon> போனான்; அவர்கள் சேப்பாத்தில்<Zephath> குடியிருக்கிற கானானியரை<Canaanites> முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா<Hormah> என்று பேரிட்டார்கள். {Judg 1:17}
யூதா<Judah> காசாவையும்<Gaza> அதின் எல்லையையும், அஸ்கலோனையும்<Askelon> அதின் எல்லையையும், எக்ரோனையும்<Ekron> அதின் எல்லையையும் பிடித்தான். {Judg 1:18}
கர்த்தர் யூதாவோடேகூட<Judah> இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று. {Judg 1:19}
மோசே<Moses> சொன்னபடியே, எபிரோனைக்<Hebron> காலேபுக்குக்<Caleb> கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின்<Anak> மூன்று குமாரரையும் துரத்திவிட்டான். {Judg 1:20}
பென்யமீன்<Benjamin> புத்திரர் எருசலேமிலே<Jerusalem> குடியிருந்த எபூசியரையும்<Jebusites> துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர்<Jebusites> இந்நாள்மட்டும் பென்யமீன்<Benjamin> புத்திரரோடேகூட எருசலேமில்<Jerusalem> குடியிருக்கிறார்கள். {Judg 1:21}
யோசேப்பின்<Joseph> குடும்பத்தாரும் பெத்தேலுக்கு<Bethel> விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார். {Judg 1:22}
யோசேப்பின்<Joseph> புத்திரர் பெத்தேலை<Bethel> வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ்<Luz> என்று பேர். {Judg 1:23}
அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள். {Judg 1:24}
அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள். {Judg 1:25}
அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின்<Hittites> தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ்<Luz> என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர். {Judg 1:26}
மனாசே<Manasseh> கோத்திரத்தார் பெத்செயான்<Bethshean> பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக்<Taanach> பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின்<Dor> குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம்<Ibleam> பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின்<Megiddo> குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர்<Canaanites> அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள். {Judg 1:27}
இஸ்ரவேலர்<Israel> பலத்தபோது, கானானியரை<Canaanites> முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள். {Judg 1:28}
எப்பிராயீம்<Ephraim> கோத்திரத்தார் கேசேரிலே<Gezer> குடியிருந்த கானானியரையும்<Canaanites> துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர்<Canaanites> கேசேரில்<Gezer> அவர்கள் நடுவே குடியிருந்தார்கள். {Judg 1:29}
செபுலோன்<Zebulun> கோத்திரத்தார் கித்ரோனின்<Kitron> குடிகளையும், நாகலோலின்<Nahalol> குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர்<Canaanites> அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள். {Judg 1:30}
ஆசேர்<Asher> கோத்திரத்தார் அக்கோவின்<Accho> குடிகளையும், சீதோனின்<Zidon> குடிகளையும், அக்லாப்<Ahlab>, அக்சீப்<Achzib>, எல்பா<Helbah>, ஆப்பீக்<Aphik>, ரேகோப்<Rehob> பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை. {Judg 1:31}
ஆசேரியர்<Asherites> தேசத்தின் குடிகளாகிய கானானியரின்<Canaanites> நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை. {Judg 1:32}
நப்தலி<Naphtali> கோத்திரத்தார் பெத்ஷிமேசின்<Bethshemesh> குடிகளையும் பெத்தானாத்தின்<Bethanath> குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின்<Canaanites> நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ்<Bethshemesh>, பெத்தானாத்<Bethanath> பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள். {Judg 1:33}
எமோரியர்<Amorites> தாண்<Dan> புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள். {Judg 1:34}
எமோரியர்<Amorites> ஏரேஸ்<Heres> மலைகளிலும் ஆயலோனிலும்<Aijalon> சால்பீமிலும்<Shaalbim> குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின்<Joseph> குடும்பத்தாரின் கை பலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள். {Judg 1:35}
எமோரியரின்<Amorites> எல்லை அக்கராபீமுக்குப்<Akrabbim> போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று. {Judg 1:36}
கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து<Gilgal> போகீமுக்கு<Bochim> வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும், {Judg 2:1}
நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்? {Judg 2:2}
ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார். {Judg 2:3}
கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல்<Israel> புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள். {Judg 2:4}
அவ்விடத்திற்குப் போகீம்<Bochim> என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள். {Judg 2:5}
யோசுவா<Joshua> இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள். {Judg 2:6}
யோசுவாவின்<Joshua> சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச்<Israel> செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப்<Joshua> பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள். {Judg 2:7}
நூனின்<Nun> குமாரனாகிய யோசுவா<Joshua> என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். {Judg 2:8}
அவனை எப்பிராயீமின்<Ephraim> மலைத்தேசத்திலுள்ள காயாஸ்<Gaash> மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே<Timnathheres> அடக்கம்பண்ணினார்கள். {Judg 2:9}
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச்<Israel> செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. {Judg 2:10}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச்<Baalim> சேவித்து, {Judg 2:11}
தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து<Egypt> புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள். {Judg 2:12}
அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும்<Baal> அஸ்தரோத்தையும்<Ashtaroth> சேவித்தார்கள். {Judg 2:13}
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல்<Israel> கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார். {Judg 2:14}
கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள். {Judg 2:15}
கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள். {Judg 2:16}
அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள். {Judg 2:17}
கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார். {Judg 2:18}
நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள். {Judg 2:19}
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல்<Israel> கோபமூண்டவராகி: இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால், {Judg 2:20}
யோசுவா<Joshua> மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன். {Judg 2:21}
அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச்<Israel> சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார். {Judg 2:22}
அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின்<Joshua> கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார். {Judg 2:23}
கானான்<Canaan> தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய<Israel> அனைவரையும் சோதிப்பதற்காகவும், {Judg 3:1}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்: {Judg 3:2}
பெலிஸ்தரின்<Philistines> ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும்<Canaanites>, சீதோனியரும்<Sidonians>, பாகால்எர்மோன்<Baalhermon> துவக்கி ஆமாத்திற்குள்<Hamath> பிரவேசிக்கும்வரைக்கும் லீபனோனின்<Lebanon> மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே<Hivites>. {Judg 3:3}
கர்த்தர் மோசேயைக்கொண்டு<Moses> தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர்<Israel> கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை<Israel> அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள். {Judg 3:4}
இப்படி இஸ்ரவேல்<Israel> புத்திரர், கானானியர்<Canaanites>, ஏத்தியர்<Hittites>, எமோரியர்<Amorites>, பெரிசியர்<Perizzites>, ஏவியர்<Hivites>, எபூசியராகிய<Jebusites> இவர்கள் நடுவே குடியிருந்து, {Judg 3:5}
அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள். {Judg 3:6}
இப்படி இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும்<Baalim> தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது, {Judg 3:7}
கர்த்தர் இஸ்ரவேலின்மேல்<Israel> கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின்<Mesopotamia> ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின்<Chushanrishathaim> கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல்<Israel> புத்திரர் கூசான்ரிஷதாயீமை<Chushanrishathaim> எட்டு வருஷம் சேவித்தார்கள். {Judg 3:8}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல்<Israel> புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின்<Caleb> தம்பியான கேனாசுடைய<Kenaz> குமாரனாகிய ஒத்னியேல்<Othniel> என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார். {Judg 3:9}
அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின்<Mesopotamia> ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை<Chushanrishathaim> அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல்<Chushanrishathaim> பலங்கொண்டது. {Judg 3:10}
தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின்<Kenaz> குமாரனாகிய ஒத்னியேல்<Othniel> மரணமடைந்தான். {Judg 3:11}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன்<Eglon> என்னும் மோவாபின்<Moab> ராஜாவை இஸ்ரவேலுக்கு<Israel> விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார். {Judg 3:12}
அவன் அம்மோன்<Ammon> புத்திரரையும் அமலேக்கியரையும்<Amalek> கூட்டிக்கொண்டுவந்து, இஸ்ரவேலை<Israel> முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான். {Judg 3:13}
இப்படியே இஸ்ரவேல்<Israel> புத்திரர் எக்லோன்<Eglon> என்னும் மோவாபின்<Moab> ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள். {Judg 3:14}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன்<Benjamite> கோத்திரத்தானாகிய கேராவின்<Gera> மகன் ஏகூத்<Ehud> என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல்<Israel> புத்திரர் மோவாபின்<Moab> ராஜாவாகிய எக்லோனுக்குக்<Eglon> காணிக்கை அனுப்பினார்கள். {Judg 3:15}
ஏகூத்<Ehud>, இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டுபண்ணி, அதைத் தன் வஸ்திரத்துக்குள்ளே தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு, {Judg 3:16}
காணிக்கையை மோவாபின்<Moab> ராஜாவாகிய எக்லோனுக்குச்<Eglon> செலுத்தினான்; எக்லோன்<Eglon> மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தான். {Judg 3:17}
அவன் காணிக்கையைச் செலுத்தித் தீர்ந்தபின்பு, காணிக்கையைச் சுமந்துவந்த ஜனங்களை அனுப்பிவிட்டான். {Judg 3:18}
அவனோ கில்காலிலுள்ள<Gilgal> சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற யாவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள். {Judg 3:19}
ஏகூத்<Ehud> அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்<Ehud>: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான். {Judg 3:20}
உடனே ஏகூத்<Ehud> தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான். {Judg 3:21}
அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக்கொண்டு அடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது. {Judg 3:22}
ஏகூத்<Ehud> புறப்பட்டு, அறைவீட்டின் கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான். {Judg 3:23}
அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள். {Judg 3:24}
அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான். {Judg 3:25}
அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத்<Ehud> ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச்<Seirath> சேர்ந்து தப்பினான். {Judg 3:26}
அங்கே வந்தபோது எப்பிராயீம்<Ephraim> மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து: {Judg 3:27}
என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை<Moabites> உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு<Moab> எதிரான யோர்தான்<Jordan> துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல், {Judg 3:28}
அக்காலத்திலே மோவாபியரில்<Moab> ஏறக்குறையப் பதினாயிரம்பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. {Judg 3:29}
இப்படியே அந்நாளிலே மோவாப்<Moab> இஸ்ரவேலுடைய<Israel> கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது. {Judg 3:30}
அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின்<Anath> குமாரன் சம்கார்<Shamgar> எழும்பினான்; அவன் பெலிஸ்தரில்<Philistines> அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை<Israel> இரட்சித்தான். {Judg 3:31}
ஏகூத்<Ehud> மரணமடைந்தபின்பு இஸ்ரவேல்<Israel> புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள். {Judg 4:1}
ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில்<Hazor> ஆளுகிற யாபீன்<Jabin> என்னும் கானானியருடைய<Canaan> ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா<Sisera> என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே<Harosheth> குடியிருந்தான். {Judg 4:2}
அவனுக்குத் தொளாயிரம் இருப்புரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்<Israel> புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். {Judg 4:3}
அக்காலத்திலே லபிதோத்தின்<Lapidoth> மனைவியாகிய தெபொராள்<Deborah> என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்தாள். {Judg 4:4}
அவள் எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசமான ராமாவுக்கும்<Ramah> பெத்தேலுக்கும்<Bethel> நடுவிலிருக்கிற தெபொராளின்<Deborah> பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல்<Israel> புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள். {Judg 4:5}
அவள் நப்தலியிலுள்ள<Naphtali> கேதேசிலிருக்கிற<Kedesh> அபினோகாமின்<Abinoam> குமாரன் பாராக்கை<Barak> வரவழைத்து: நீ நப்தலி<Naphtali> புத்திரரிலும், செபுலோன்<Zebulun> புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர்<Tabor> மலைக்குப் போகக்கடவாய் என்றும், {Judg 4:6}
நான் யாபீனின்<Jabin> சேனாபதியாகிய சிசெராவையும்<Sisera>, அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன்<Kishon> பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள். {Judg 4:7}
அதற்குப் பாராக்<Barak>: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். {Judg 4:8}
அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை<Sisera> ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள்<Deborah> எழும்பி, பாராக்கோடேகூடக்<Barak> கேதேசுக்குப்<Kedesh> போனாள். {Judg 4:9}
அப்பொழுது பாராக்<Barak>: செபுலோன்<Zebulun> மனுஷரையும் நப்தலி<Naphtali> மனுஷரையும் கேதேசுக்கு<Kedesh> வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும்<Deborah> அவனோடேகூடப் போனாள். {Judg 4:10}
கேனியனான<Kenite> ஏபேர்<Heber> என்பவன் மோசேயின்<Moses> மாமனாகிய ஒபாபின்<Hobab> புத்திரராயிருக்கிற கேனியரை<Kenites> விட்டுப் பிரிந்து, கேதேசின்<Kedesh> கிட்ட இருக்கிற சானாயிம்<Zaanaim> என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். {Judg 4:11}
அபினோகாமின்<Abinoam> குமாரன் பாராக்<Barak> தாபோர்<Tabor> மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு<Sisera> அறிவிக்கப்பட்டபோது, {Judg 4:12}
சிசெரா<Sisera> தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து<Harosheth> கீசோன்<Kishon> பள்ளத்தாக்கிலே வரவழைத்தான். {Judg 4:13}
அப்பொழுது தெபொராள்<Deborah> பாராக்கை<Barak> நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை<Sisera> உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும்<Barak>, அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர்<Tabor> மலையிலிருந்து இறங்கினார்கள். {Judg 4:14}
கர்த்தர் சிசெராவையும்<Sisera> அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு<Barak> முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா<Sisera> ரதத்தைவிட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனான். {Judg 4:15}
பாராக்<Barak> ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும்<Harosheth> துரத்தினான்; சிசெராவின்<Sisera> சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை. {Judg 4:16}
சிசெரா<Sisera> கால்நடையாய்க் கேனியனான<Kenite> ஏபேரின்<Heber> மனைவி யாகேலுடைய<Jael> கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன்<Jabin> என்னும் ஆத்சோரின்<Hazor> ராஜாவுக்கும், கேனியனான<Kenite> ஏபேரின்<Heber> வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது. {Judg 4:17}
யாகேல்<Jael> வெளியே சிசெராவுக்கு<Sisera> எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள். {Judg 4:18}
அவன் அவளைப் பார்த்து: குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். {Judg 4:19}
அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். {Judg 4:20}
பின்பு ஏபேரின்<Heber> மனைவியாகிய யாகேல்<Jael> ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான். {Judg 4:21}
பின்பு சிசெராவைத்<Sisera> தொடருகிற பாராக்<Barak> வந்தான்; அப்பொழுது யாகேல்<Jael> வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா<Sisera> செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது. {Judg 4:22}
இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின்<Canaan> ராஜாவாகிய யாபீனை<Jabin> இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார். {Judg 4:23}
இஸ்ரவேல்<Israel> புத்திரரின் கை கானானியரின்<Canaan> ராஜாவாகிய யாபீனை<Jabin> நிர்மூலமாக்குமட்டும் அவன்மேல் பலத்துக் கொண்டேயிருந்தது. {Judg 4:24}
அந்நாளிலே தெபொராளும்<Deborah> அபினோகாமின்<Abinoam> குமாரன் பாராக்கும்<Barak> பாடினதாவது: {Judg 5:1}
கர்த்தர் இஸ்ரவேலுக்காக<Israel> நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள். {Judg 5:2}
ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி, இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன். {Judg 5:3}
கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து<Seir> புறப்பட்டு, ஏதோமின்<Edom> வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது. {Judg 5:4}
கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும்<Sinai> கரைந்தது. {Judg 5:5}
ஆனாத்தின்<Anath> குமாரனாகிய சம்காரின்<Shamgar> நாட்களிலும், யாகேலின்<Jael> நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள். {Judg 5:6}
தெபொராளாகிய<Deborah> நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே<Israel> நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின்<Israel> கிராமங்கள் பாழாய்ப்போயின. {Judg 5:7}
நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே<Israel> நாற்பதினாயிரம்பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? {Judg 5:8}
ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின்<Israel> அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். {Judg 5:9}
வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள். {Judg 5:10}
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள<Israel> தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுகவாசல்களிலே போய் இறங்குவார்கள். {Judg 5:11}
விழி, விழி, தெபொராளே<Deborah>, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே<Barak>, எழும்பு; அபினோகாமின்<Abinoam> குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ. {Judg 5:12}
மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார். {Judg 5:13}
அமலேக்குக்கு<Amalek> விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து<Ephraim> துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன்<Benjamin> மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து<Machir> அதிபதிகளும், செபுலோனிலிருந்து<Zebulun> எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள். {Judg 5:14}
இசக்காரின்<Issachar> பிரபுக்களும் தெபொராளோடே<Deborah> இருந்தார்கள்; பாராக்கைப்போல<Barak> இசக்கார்<Issachar> மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின்<Reuben> பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. {Judg 5:15}
மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின்<Reuben> பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி. {Judg 5:16}
கீலேயாத்<Gilead> மனுஷர் யோர்தானுக்கு<Jordan> அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண்<Dan> மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்ததென்ன? ஆசேர்<Asher> மனுஷர் கடற்கரையிலே தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தார்கள். {Judg 5:17}
செபுலோனும்<Zebulun> நப்தலியும்<Naphtali> போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள். {Judg 5:18}
ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின்<Canaan> ராஜாக்கள் மெகிதோவின்<Megiddo> தண்ணீர் அருகான தானாக்கிலே<Taanach> யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளை கிடைக்கவில்லை. {Judg 5:19}
வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே<Sisera> யுத்தம்பண்ணின. {Judg 5:20}
கீசோன்<Kishon> நதி, பூர்வ நதியாகிய கீசோன்<Kishon> நதியே, அவர்களை அடித்துக்கொண்டுபோயிற்று; என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய். {Judg 5:21}
அப்பொழுது குதிரைகளின் குளம்புகள், பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. {Judg 5:22}
மேரோசைச்<Meroz> சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே. {Judg 5:23}
ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான<Kenite> ஏபேரின்<Heber> மனைவியாகிய யாகேல்<Jael> ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே. {Judg 5:24}
தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள். {Judg 5:25}
தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை<Sisera> அடித்தாள்; அவன் நெற்றியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள். {Judg 5:26}
அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான். {Judg 5:27}
சிசெராவின்<Sisera> தாய் ஜன்னலில் நின்று பலகணிவழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய ரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய ரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள். {Judg 5:28}
அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள் அவளுக்கு உத்தரவுசொன்னதுமன்றி, அவள் தானும் தனக்கு மறுமொழியாக: {Judg 5:29}
அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக்<Sisera> கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள். {Judg 5:30}
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. {Judg 5:31}
பின்னும் இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின்<Midian> கையில் ஒப்புக்கொடுத்தார். {Judg 6:1}
மீதியானியரின்<Midian> கை இஸ்ரவேலின்மேல்<Israel> பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல்<Israel> புத்திரர் மீதியானியர்<Midianites> நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். {Judg 6:2}
இஸ்ரவேலர்<Israel> விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும்<Midianites> அமலேக்கியரும்<Amalekites> கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து; {Judg 6:3}
அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின்<Gaza> எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே<Israel> ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள். {Judg 6:4}
அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள். {Judg 6:5}
இப்படி மீதியானியராலே<Midianites> இஸ்ரவேலர்<Israel> மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். {Judg 6:6}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் மீதியானியர்<Midianites> நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது, {Judg 6:7}
கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து<Egypt> வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, {Judg 6:8}
எகிப்தியர்<Egyptians> கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, {Judg 6:9}
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய<Amorites> தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான். {Judg 6:10}
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான<Abiezrite> யோவாசின்<Joash> ஊராகிய ஒப்ராவிலிருக்கும்<Ophrah> ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன்<Gideon> கோதுமையை மீதியானியரின்<Midianites> கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான். {Judg 6:11}
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். {Judg 6:12}
அப்பொழுது கிதியோன்<Gideon> அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து<Egypt> கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர்<Midianites> கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். {Judg 6:13}
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை<Israel> மீதியானியரின்<Midianites> கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். {Judg 6:14}
அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை<Israel> எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில்<Manasseh> என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். {Judg 6:15}
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை<Midianites> முறிய அடிப்பாய் என்றார். {Judg 6:16}
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும். {Judg 6:17}
நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப் போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார். {Judg 6:18}
உடனே கிதியோன்<Gideon> உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆணத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான். {Judg 6:19}
அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். {Judg 6:20}
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்துபோனார். {Judg 6:21}
அப்பொழுது கிதியோன்<Gideon>, அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான். {Judg 6:22}
அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். {Judg 6:23}
அங்கே கிதியோன்<Gideon> கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம்<Jehovahshalom> என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின்<Abiezrites> ஊராகிய ஒப்ராவில்<Ophrah> இருக்கிறது. {Judg 6:24}
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின்<Baal> பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு, {Judg 6:25}
இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டுவந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின்மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார். {Judg 6:26}
அப்பொழுது கிதியோன்<Gideon>, தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். {Judg 6:27}
அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின்<Baal> பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின்மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு; {Judg 6:28}
ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின்<Joash> மகன் கிதியோன்<Gideon> இதைச் செய்தான் என்றார்கள். {Judg 6:29}
அப்பொழுது ஊரார் யோவாசை<Joash> நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின்<Baal> பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். {Judg 6:30}
யோவாஸ்<Joash> தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக<Baal> வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலேதானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான். {Judg 6:31}
தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால்<Baal> அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால்<Jerubbaal> என்று பேரிடப்பட்டது. {Judg 6:32}
மீதியானியரும்<Midianites> அமலேக்கியரும்<Amalekites> கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க் கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல்<Jezreel> பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். {Judg 6:33}
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல்<Gideon> இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக்<Abiezer> கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, {Judg 6:34}
மனாசே<Manasseh> நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர்<Asher>, செபுலோன்<Zebulun>, நப்தலி<Naphtali> நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். {Judg 6:35}
அப்பொழுது கிதியோன்<Gideon> தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை<Israel> இரட்சிக்கவேண்டுமானால், {Judg 6:36}
இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல்மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை<Israel> என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான். {Judg 6:37}
அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். {Judg 6:38}
அப்பொழுது கிதியோன்<Gideon> தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். {Judg 6:39}
அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது. {Judg 6:40}
அப்பொழுது கிதியோனாகிய<Gideon> யெருபாகாலும்<Jerubbaal> அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத்<Harod> என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின்<Midianites> பாளயம் அவனுக்கு வடக்கே மோரே<Moreh> மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது. {Judg 7:1}
அப்பொழுது கர்த்தர் கிதியோனை<Gideon> நோக்கி: நான் மீதியானியரை<Midianites> உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல்<Israel> எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும். {Judg 7:2}
ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத்<Gilead> மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள். {Judg 7:3}
கர்த்தர் கிதியோனை<Gideon> நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரிட்சித்துக்காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார். {Judg 7:4}
அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப் பண்ணினான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை<Gideon> நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார். {Judg 7:5}
தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் லக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள். {Judg 7:6}
அப்பொழுது கர்த்தர் கிதியோனை<Gideon> நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை<Midianites> உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார். {Judg 7:7}
அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும்<Israel> தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறு பேரைமாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின்<Midian> சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது. {Judg 7:8}
அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். {Judg 7:9}
போகப் பயப்பட்டாயானால், முதல் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும்<Phurah> சேனையினிடத்திற்குப் போய், {Judg 7:10}
அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும்<Phurah> சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள். {Judg 7:11}
மீதியானியரும்<Midianites>, அமலேக்கியரும்<Amalekites>, சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது. {Judg 7:12}
கிதியோன்<Gideon> வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின்<Midian> பாளயத்திற்கு உருண்டுவந்தது, அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான். {Judg 7:13}
அப்பொழுது மற்றவன்: இது யோவாசின்<Joash> குமாரனாகிய கிதியோன்<Gideon> என்னும் இஸ்ரவேலனுடைய<Israel> பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும்<Midian>, இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான். {Judg 7:14}
கிதியோன்<Gideon> அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின்<Israel> பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின்<Midian> பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, {Judg 7:15}
அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து, {Judg 7:16}
அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும். {Judg 7:17}
நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய<Gideon> பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான். {Judg 7:18}
நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும்<Gideon> அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். {Judg 7:19}
மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலதுகைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய<Gideon> பட்டயம் என்று சத்தமிட்டு, {Judg 7:20}
பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். {Judg 7:21}
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள<Zererath> பெத்சித்தாமட்டும்<Bethshittah>, தாபாத்திற்குச்<Tabbath> சமீபமான ஆபேல்மேகொலாவின்<Abelmeholah> எல்லைமட்டும் ஓடிப்போயிற்று. {Judg 7:22}
அப்பொழுது நப்தலி<Naphtali> மனுஷரும், ஆசேர்<Asher> மனுஷரும், மனாசேயின்<Manasseh> சகல மனுஷருமாகிய இஸ்ரவேலர்<Israel> கூடிவந்து, மீதியானியரைப்<Midianites> பின்தொடர்ந்துபோனார்கள். {Judg 7:23}
கிதியோன்<Gideon> எப்பிராயீம்<Ephraim> மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியருக்கு<Midianites> விரோதமாயிறங்கி, பெத்தாபரா<Bethbarah> இருக்கும் யோர்தான்மட்டும்<Jordan> வந்து, அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச்சொன்னான்; அப்படியே எப்பிராயீமின்<Ephraim> மனுஷர் எல்லாரும் கூடி, பெத்தாபரா<Bethbarah> இருக்கும் யோர்தான்மட்டும்<Jordan> வந்து, துறைகளைக் கட்டிக்கொண்டு, {Judg 7:24}
மீதியானியரின்<Midianites> இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும்<Oreb> சேபையும்<Zeeb> பிடித்து, ஓரேபை<Oreb> ஓரேப்<Oreb> என்னப்பட்ட கன்மலையிலும், சேபை<Zeeb> சேப்<Zeeb> என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத்<Midian> துரத்தி, ஓரேப்<Oreb> சேப்<Zeeb> என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு<Jordan> இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக்<Gideon> கொண்டுவந்தார்கள். {Judg 7:25}
அப்பொழுது எப்பிராயீம்<Ephraim> மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல்<Midianites> யுத்தம்பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடே பலத்த வாக்குவாதம்பண்ணினார்கள். {Judg 8:1}
அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின்<Abiezer> திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின்<Ephraim> மீதியான அறுப்பு அதிகம் அல்லவா? {Judg 8:2}
தேவன் உங்கள் கையிலே மீதியானியரின்<Midian> அதிபதிகளாகிய ஓரேபையும்<Oreb> சேபையும்<Zeeb> ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று. {Judg 8:3}
கிதியோன்<Gideon> யோர்தானுக்கு<Jordan> வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள். {Judg 8:4}
அவன் சுக்கோத்தின்<Succoth> மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின்<Midian> ராஜாக்களாகிய சேபாவையும்<Zebah> சல்முனாவையும்<Zalmunna> பின்தொடருகிறேன் என்றான். {Judg 8:5}
அதற்குச் சுக்கோத்தின்<Succoth> பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா<Zebah> சல்முனா<Zalmunna> என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள். {Judg 8:6}
அப்பொழுது கிதியோன்<Gideon> அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும்<Zebah> சல்முனாவையும்<Zalmunna> என் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி, {Judg 8:7}
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்<Penuel> போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின்<Succoth> மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின்<Penuel> மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள். {Judg 8:8}
அப்பொழுது அவன், பெனூவேலின்<Penuel> மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான். {Judg 8:9}
சேபாவும்<Zebah> சல்முனாவும்<Zalmunna> அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் ஏறக்குறைய பதினையாயிரம்பேர் கர்கோரில்<Karkor> இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்க லட்சத்து இருபதினாயிரம்பேர் விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள்மாத்திரம் மீந்திருந்தார்கள். {Judg 8:10}
கிதியோன்<Gideon> கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும்<Nobah>, யொகிபெயாவுக்கும்<Jogbehah> கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான். {Judg 8:11}
சேபாவும்<Zebah> சல்முனாவும்<Zalmunna> ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா<Zebah> சல்முனா<Zalmunna> என்னும் மீதியானியரின்<Midian> இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான். {Judg 8:12}
யோவாசின்<Joash> குமாரனாகிய கிதியோன்<Gideon> யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது, {Judg 8:13}
சுக்கோத்தின்<Succoth> மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின்<Succoth> பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான். {Judg 8:14}
அவன் சுக்கோத்து<Succoth> ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா<Zebah> சல்முனா<Zalmunna> என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும்<Zebah> சல்முனாவும்<Zalmunna> இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி, {Judg 8:15}
பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின்<Succoth> மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி, {Judg 8:16}
பெனூவேலின்<Penuel> கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்றுபோட்டான். {Judg 8:17}
பின்பு அவன் சேபாவையும்<Zebah> சல்முனாவையும்<Zalmunna> நோக்கி: நீங்கள் தாபோரிலே<Tabor> கொன்றுபோட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள். {Judg 8:18}
அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால், உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி, {Judg 8:19}
தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை<Jether> நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான். {Judg 8:20}
அப்பொழுது சேபாவும்<Zebah> சல்முனாவும்<Zalmunna>: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன்<Gideon> எழுந்து, சேபாவையும்<Zebah> சல்முனாவையும்<Zalmunna> கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான். {Judg 8:21}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> மனுஷர் கிதியோனை<Gideon> நோக்கி: நீர் எங்களை மீதியானியர்<Midian> கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள். {Judg 8:22}
அதற்குக் கிதியோன்<Gideon>: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான். {Judg 8:23}
பின்பு கிதியோன்<Gideon> அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால்<Ishmaelites> அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது. {Judg 8:24}
இஸ்ரவேலர்<Israel>: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள். {Judg 8:25}
பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின்<Midian> ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது. {Judg 8:26}
அதினால் கிதியோன்<Gideon> ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே<Ophrah> வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும்<Israel> அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும்<Gideon> அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று. {Judg 8:27}
இந்தப்பிரகாரம் மீதியானியர்<Midian> திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின்<Gideon> நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது. {Judg 8:28}
யோவாசின்<Joash> குமாரனாகிய யெருபாகால்<Jerubbaal> போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான். {Judg 8:29}
கிதியோனுக்கு<Gideon> அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர். {Judg 8:30}
சீகேமிலிருந்த<Shechem> அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு<Abimelech> என்று பேரிட்டான். {Judg 8:31}
பின்பு யோவாசின்<Joash> குமாரனாகிய கிதியோன்<Gideon> நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே<Ophrah> தன் தகப்பனாகிய யோவாஸ்<Joash> என்னும் அபியேஸ்ரியனுடைய<Abiezrites> கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான். {Judg 8:32}
கிதியோன்<Gideon> மரித்தபின் இஸ்ரவேல்<Israel> புத்திரர் திரும்பவும் பாகால்களைப்<Baalim> பின்பற்றிச் சோரம்போய், பாகால்பேரீத்தைத்<Baalberith> தங்களுக்குத் தேவனாக வைத்துக்கொண்டார்கள். {Judg 8:33}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும், {Judg 8:34}
கிதியோன்<Gideon> என்னும் யெருபாகால்<Jerubbaal> இஸ்ரவேலுக்குச்<Israel> செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள். {Judg 8:35}
யெருபாகாலின்<Jerubbaal> குமாரன் அபிமெலேக்கு<Abimelech> சீகேமிலிருக்கிற<Shechem> தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி: {Judg 9:1}
யெருபாகாலின்<Jerubbaal> குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன்மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற<Shechem> சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப் பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான். {Judg 9:2}
அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற<Shechem> சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப்<Abimelech> பின்பற்றச் சாய்ந்தது. {Judg 9:3}
அவர்கள் பாகால் பேரீத்தின்<Baalberith> கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு<Abimelech> வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். {Judg 9:4}
அவன் ஒப்ராவிலிருக்கிற<Ophrah> தன் தகப்பன் வீட்டிற்குப்போய், யெருபாகாலின்<Jerubbaal> குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின்<Jerubbaal> இளைய குமாரனாகிய யோதாம்<Jotham> ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான். {Judg 9:5}
பின்பு சீகேமிலிருக்கிற<Shechem> சகல பெரிய மனுஷரும், மில்லோவின்<Millo> குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற<Shechem> உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை<Abimelech> ராஜாவாக்கினார்கள். {Judg 9:6}
இது யோதாமுக்கு<Jotham> அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம்<Gerizim> மலையின் உச்சியில் ஏறிநின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின்<Shechem> பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். {Judg 9:7}
விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. {Judg 9:8}
அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என் கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது. {Judg 9:9}
அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. {Judg 9:10}
அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது. {Judg 9:11}
அப்பொழுது மரங்கள் திராட்சசெடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. {Judg 9:12}
அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது. {Judg 9:13}
அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. {Judg 9:14}
அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின்<Lebanon> கேதுருமரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது. {Judg 9:15}
என் தகப்பன் உங்களுக்காக யுத்தம்பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின்<Midian> கையினின்று இரட்சித்தார். {Judg 9:16}
நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு<Abimelech> உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம்<Shechem> பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள். {Judg 9:17}
இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால், {Judg 9:18}
நீங்கள் யெருபாகாலையும்<Jerubbaal> அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவருக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல்<Abimelech> நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும். {Judg 9:19}
இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து<Abimelech> அக்கினி புறப்பட்டு, சீகேம்<Shechem> பட்டணத்தாரையும், மில்லோவின்<Millo> குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம்<Shechem> பட்டணத்தாரிலும் மில்லோவின்<Millo> குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப்<Abimelech> பட்சிக்கவும்கடவது என்று யோதாம்<Jotham> சொல்லி, {Judg 9:20}
தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப்<Abimelech> பயந்து, தப்பியோடி, பேயேருக்குப்<Beer> போய், அங்கே குடியிருந்தான். {Judg 9:21}
அபிமெலேக்கு<Abimelech> இஸ்ரவேலை<Israel> மூன்று வருஷம் அரசாண்டபின்பு, {Judg 9:22}
அபிமெலேக்குக்கும்<Abimelech> சீகேமின்<Shechem> பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார். {Judg 9:23}
யெருபாகாலின்<Jerubbaal> எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும்<Abimelech>, தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம்<Shechem> மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின்<Shechem> பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு<Abimelech> இரண்டகம்பண்ணினார்கள். {Judg 9:24}
சீகேமின்<Shechem> மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு<Abimelech> அறிவிக்கப்பட்டது. {Judg 9:25}
ஏபேதின்<Ebed> குமாரனாகிய காகால்<Gaal> தன் சகோதரரோடே சீகேமுக்குள்<Shechem> போனான்; சீகேமின்<Shechem> பெரிய மனுஷர் அவனை நம்பி, {Judg 9:26}
வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சத்தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையாட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக் குடித்து, அபிமெலேக்கை<Abimelech> சபித்தார்கள். {Judg 9:27}
அப்பொழுது ஏபேதின்<Ebed> குமாரனாகிய காகால்<Gaal>: அபிமெலேக்கு<Abimelech> யார்? சீகேம்<Shechem> யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின்<Jerubbaal> மகன் அல்லவா? சேபூல்<Zebul> அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின்<Shechem> தகப்பனாகிய ஏமோரின்<Hamor> மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்? {Judg 9:28}
இந்த ஜனங்கள்மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத்<Abimelech> துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச்<Abimelech> சொல்லியனுப்பினான். {Judg 9:29}
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல்<Zebul> ஏபேதின்<Ebed> குமாரனாகிய காகாலின்<Gaal> வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு, {Judg 9:30}
இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு<Abimelech> ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின்<Ebed> குமாரனாகிய காகாலும்<Gaal> அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு<Shechem> வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள். {Judg 9:31}
ஆகையால் நீர் உம்மோடிருக்கும் ஜனங்களோடேகூட இரவில் எழுந்துவந்து வெளியிலே பதிவிருந்து, {Judg 9:32}
காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான். {Judg 9:33}
அப்படியே அபிமெலேக்கும்<Abimelech>, அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு<Shechem> விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள். {Judg 9:34}
ஏபேதின்<Ebed> குமாரன் காகால்<Gaal> புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு<Abimelech> தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பிவந்தான். {Judg 9:35}
காகால்<Gaal> அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே<Zebul> சொன்னான். அதற்குச் சேபூல்<Zebul>: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான். {Judg 9:36}
காகாலோ<Gaal> திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின்<Meonenim> கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான். {Judg 9:37}
அதற்குச் சேபூல்<Zebul>: அபிமெலேக்கை<Abimelech> நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான். {Judg 9:38}
அப்பொழுது காகால்<Gaal> சீகேமின்<Shechem> மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே<Abimelech> யுத்தம்பண்ணினான். {Judg 9:39}
அபிமெலேக்கு<Abimelech> அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள். {Judg 9:40}
அபிமெலேக்கு<Abimelech> அருமாவில்<Arumah> இருந்துவிட்டான்; சேபூல்<Zebul> காகாலையும்<Gaal> அவன் சகோதரரையும் சீகேமிலே<Shechem> குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான். {Judg 9:41}
மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு<Abimelech> அறிவிக்கப்பட்டபோது, {Judg 9:42}
அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான். {Judg 9:43}
அபிமெலேக்கும்<Abimelech> அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள். {Judg 9:44}
அபிமெலேக்கு<Abimelech> அந்நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான். {Judg 9:45}
அதைச் சீகேம்<Shechem> துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத்<Berith> தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள். {Judg 9:46}
சீகேம்<Shechem> துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு<Abimelech> அறிவிக்கப்பட்டபோது, {Judg 9:47}
அபிமெலேக்கு<Abimelech> தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன்<Zalmon> மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான். {Judg 9:48}
அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப்<Abimelech> பின்சென்று, அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம்<Shechem> துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள். {Judg 9:49}
பின்பு அபிமெலேக்கு<Abimelech> தேபேசுக்குப்போய்<Thebez>, அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான். {Judg 9:50}
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள். {Judg 9:51}
அபிமெலேக்கு<Abimelech> அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான். {Judg 9:52}
அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய<Abimelech> தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது. {Judg 9:53}
உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக்குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்றுபோடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான். {Judg 9:54}
அபிமெலேக்குச்<Abimelech> செத்துப்போனதை இஸ்ரவேல்<Israel> மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய்விட்டார்கள். {Judg 9:55}
இப்படியே அபிமெலேக்கு<Abimelech> தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார். {Judg 9:56}
சீகேம்<Shechem> மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின்<Jerubbaal> குமாரன் யோதாமின்<Jotham> சாபம் அவர்களுக்குப் பலித்தது. {Judg 9:57}
அபிமெலேக்குக்குப்பின்பு<Abimelech>, தோதோவின்<Dodo> மகனாகிய பூவாவின்<Puah> குமாரன் தோலா<Tola> என்னும் இசக்கார்<Issachar> கோத்திரத்தான் இஸ்ரவேலை<Israel> இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே<Shamir> குடியிருந்தான். {Judg 10:1}
அவன் இஸ்ரவேலை<Israel> இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே<Shamir> அடக்கம்பண்ணப்பட்டான். {Judg 10:2}
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான<Gileadite> யாவீர்<Jair> எழும்பி, இஸ்ரவேலை<Israel> இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான். {Judg 10:3}
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத்<Gilead> தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின்<Havothjair> கிராமங்களென்கிற பேர் இருக்கிறது. {Judg 10:4}
யாவீர்<Jair> மரித்து, காமோனிலே<Camon> அடக்கம்பண்ணப்பட்டான். {Judg 10:5}
இஸ்ரவேல்<Israel> புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும்<Baalim>, அஸ்தரோத்தையும்<Ashtaroth>, சீரியாவின்<Syria> தேவர்களையும், சீதோனின்<Zidon> தேவர்களையும், மோவாபின்<Moab> தேவர்களையும், அம்மோன்<Ammon> புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின்<Philistines> தேவர்களையும் சேவித்தார்கள். {Judg 10:6}
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல்<Israel> கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர்<Philistines> கையிலும், அம்மோன்<Ammon> புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார். {Judg 10:7}
அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு<Jordan> அப்பாலே கீலேயாத்திலுள்ள<Gilead> எமோரியரின்<Amorites> தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல்<Israel> புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள். {Judg 10:8}
அம்மோன்<Ammon> புத்திரர் யூதாவின்மேலும்<Judah>, பென்யமீன்மேலும்<Benjamin>, எப்பிராயீம்<Ephraim> குடும்பத்தார்மேலும் யுத்தம்பண்ண யோர்தானைக்<Jordan> கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்<Israel> மிகவும் நெருக்கப்பட்டார்கள். {Judg 10:9}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச்<Baalim> சேவித்தோம் என்றார்கள். {Judg 10:10}
கர்த்தர் இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: எகிப்தியரும்<Egyptians>, எமோரியரும்<Amorites>, அம்மோன்<Ammon> புத்திரரும், பெலிஸ்தியரும்<Philistines>, {Judg 10:11}
சீதோனியரும்<Zidonians>, அமலேக்கியரும்<Amalekites>, மாகோனியரும்<Maonites>, உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா? {Judg 10:12}
அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன். {Judg 10:13}
நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார். {Judg 10:14}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி, {Judg 10:15}
அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின்<Israel> வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார். {Judg 10:16}
அம்மோன்<Ammon> புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே<Gilead> பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல்<Israel> புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே<Mizpeh> பாளயமிறங்கினார்கள். {Judg 10:17}
அப்பொழுது கீலேயாத்தின்<Gilead> ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன்<Ammon> புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின்<Gilead> குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள். {Judg 10:18}
கீலேயாத்தியனான<Gileadite> யெப்தா<Jephthah> பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத்<Gilead> அவனைப் பெற்றான். {Judg 11:1}
கிலெயாத்தின்<Gilead> மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை<Jephthah> நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். {Judg 11:2}
அப்பொழுது யெப்தா<Jephthah>: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே<Tob> குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே<Jephthah> கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள். {Judg 11:3}
சிலநாளைக்குப்பின்பு, அம்மோன்<Ammon> புத்திரர் இஸ்ரவேலின்மேல்<Israel> யுத்தம்பண்ணினார்கள். {Judg 11:4}
அவர்கள் இஸ்ரவேலின்மேல்<Israel> யுத்தம்பண்ணும்போது கீலேயாத்தின்<Gilead> மூப்பர் யெப்தாவைத்<Jephthah> தோப்தேசத்திலிருந்து<Tob> அழைத்துவரப்போய், {Judg 11:5}
யெப்தாவை<Jephthah> நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன்<Ammon> புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள். {Judg 11:6}
அதற்கு யெப்தா<Gilead> கீலேயாத்தின்<Jephthah> மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். {Judg 11:7}
அதற்குக் கீலேயாத்தின்<Gilead> மூப்பர் யெப்தாவை<Jephthah> நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன்<Ammon> புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின்<Gilead> குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்கவேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள். {Judg 11:8}
அதற்கு யெப்தா<Jephthah>: அம்மோன்<Ammon> புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின்<Gilead> மூப்பரைக் கேட்டான். {Judg 11:9}
கீலேயாத்தின்<Gilead> மூப்பர் யெப்தாவைப்<Jephthah> பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள். {Judg 11:10}
அப்பொழுது யெப்தா<Jephthah> கீலேயாத்தின்<Gilead> மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா<Jephthah> தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே<Mizpeh> கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான். {Judg 11:11}
பின்பு யெப்தா<Jephthah> அம்மோன்<Ammon> புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான். {Judg 11:12}
அம்மோன்<Ammon> புத்திரரின் ராஜா யெப்தாவின்<Jephthah> ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர்<Israel> எகிப்திலிருந்து<Egypt> வருகிறபோது, அர்னோன்<Arnon> துவக்கி யாபோக்மட்டும்<Jabbok>, யோர்தான்மட்டும்<Jordan> இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். {Judg 11:13}
யெப்தா<Jephthah> மறுபடியும் அம்மோன்<Ammon> புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச்சொன்னதாவது: {Judg 11:14}
யெப்தா<Jephthah> சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்<Israel> மோவாபியரின்<Moab> தேசத்தையாகிலும், அம்மோன்<Ammon> புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே. {Judg 11:15}
இஸ்ரவேலர்<Israel> எகிப்திலிருந்து<Egypt> வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திரமட்டும்<Red sea> நடந்து, பின்பு காதேசுக்கு<Kadesh> வந்து, {Judg 11:16}
இஸ்ரவேலர்<Israel> ஏதோமின்<Edom> ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்துபோகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின்<Edom> ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின்<Moab> ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்<Israel> காதேசிலே<Kadesh> தரித்திருந்து, {Judg 11:17}
பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம்<Edom> தேசத்தையும் மோவாப்<Moab> தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின்<Moab> தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின்<Moab> எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின்<Moab> எல்லையான அர்னோன்<Arnon> நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள். {Judg 11:18}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel> எஸ்போனில்<Heshbon> ஆளுகிற சீகோன்<Sihon> என்னும் எமோரியரின்<Amorites> ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். {Judg 11:19}
சீகோன்<Sihon> இஸ்ரவேலரை<Israel> நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே<Jahaz> பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே<Israel> யுத்தம்பண்ணினான். {Judg 11:20}
அப்பொழுது இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் சீகோனையும்<Sihon> அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின்<Israel> கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்<Israel> அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின்<Amorites> சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன்<Arnon> துவக்கி, {Judg 11:21}
யாபோக்மட்டும்<Jabbok>, வனாந்தரம்துவக்கி யோர்தான்மட்டும்<Jordan> இருக்கிற எமோரியரின்<Amorites> எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள். {Judg 11:22}
இப்படி இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தர் எமோரியரைத்<Amorites> தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு<Israel> முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா? {Judg 11:23}
உம்முடைய தேவனாகிய காமோஸ்<Chemosh> உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம். {Judg 11:24}
மேலும் சிப்போரின்<Zippor> குமாரனாகிய பாலாக்<Balak> என்னும் மோவாபின்<Moab> ராஜாவைப்பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே<Israel> எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினானா? {Judg 11:25}
இஸ்ரவேலர்<Israel> எஸ்போனிலும்<Heshbon> அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும்<Aroer> அதின் கிராமங்களிலும், அர்னோன்<Arnon> நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவுகாலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன? {Judg 11:26}
நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கும் அம்மோன்<Ammon> புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். {Judg 11:27}
ஆனாலும் அம்மோன்<Ammon> புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா<Jephthah> சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான். {Judg 11:28}
அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல்<Jephthah> இறங்கினார்; அவன் கீலேயாத்தையும்<Gilead> மனாசே<Manasseh> நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற<Gilead> மிஸ்பாவுக்கு<Mizpeh> வந்து, அங்கேயிருந்து அம்மோன்<Ammon> புத்திரருக்கு விரோதமாகப் போனான். {Judg 11:29}
அப்பொழுது யெப்தா<Jephthah> கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன்<Ammon> புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், {Judg 11:30}
நான் அம்மோன்<Ammon> புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பிவரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். {Judg 11:31}
யெப்தா<Jephthah> அம்மோன்<Ammon> புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். {Judg 11:32}
அவன் அவர்களை ஆரோவேர்<Aroer> துவக்கி மின்னித்திற்குப்<Minnith> போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன்<Ammon> புத்திரர் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். {Judg 11:33}
யெப்தா<Jephthah> மிஸ்பாவிலிருக்கிற<Mizpeh> தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை. {Judg 11:34}
அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். {Judg 11:35}
அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன்<Ammon> புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். {Judg 11:36}
பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த் திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள். {Judg 11:37}
அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, {Judg 11:38}
இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். {Judg 11:39}
இதினிமித்தம் இஸ்ரவேலின்<Israel> குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான<Gileadite> யெப்தாவின்<Jephthah> குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே<Israel> வழக்கமாயிற்று. {Judg 11:40}
எப்பிராயீம்<Ephraim> மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை<Jephthah> நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன்<Ammon> புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள். {Judg 12:1}
அதற்கு யெப்தா<Jephthah>: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன்<Ammon> புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை. {Judg 12:2}
நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன்<Ammon> புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான். {Judg 12:3}
பின்பு யெப்தா<Jephthah> கீலேயாத்<Gilead> மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமரோடு<Ephraim> யுத்தம்பண்ணினான்; எப்பிராயீமுக்கும்<Ephraim> மனாசேக்கும்<Manasseh> நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான<Gileadites> நீங்கள் எப்பிராயீமைவிட்டு<Ephraim> ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்<Ephraim> சொன்னபடியினால், கீலேயாத்<Gilead> மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள். {Judg 12:4}
கீலேயாத்தியர்<Gileadites> எப்பிராயீமருக்கு<Ephraimites> முந்தி யோர்தானின்<Jordan> துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே<Ephraimites> தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத்<Gilead> மனுஷர்: நீ எப்பிராயீமனா<Ephraimite> என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், {Judg 12:5}
நீ ஷிபோலேத்<Shibboleth> என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத்<Sibboleth> என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான்<Jordan> துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில்<Ephraimites> நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள். {Judg 12:6}
யெப்தா<Jephthah> இஸ்ரவேலை<Israel> ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான<Gileadite> யெப்தா<Jephthah> மரித்து, கீலேயாத்திலுள்ள<Gilead> ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். {Judg 12:7}
அவனுக்குப்பின்பு பெத்லெகேம்<Bethlehem> ஊரானாகிய இப்சான்<Ibzan> இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்தான். {Judg 12:8}
அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை<Israel> ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். {Judg 12:9}
பின்பு இப்சான்<Ibzan> மரித்து, பெத்லெகேமிலே<Bethlehem> அடக்கம்பண்ணப்பட்டான். {Judg 12:10}
அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய<Zebulonite> ஏலோன்<Elon> இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்தான். {Judg 12:11}
பின்பு செபுலோனியனாகிய<Zebulonite> ஏலோன்<Elon> மரித்து, செபுலோன்<Zebulun> தேசமான ஆயலோன்<Aijalon> ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான். {Judg 12:12}
அவனுக்குப்பின்பு இல்லேலின்<Hillel> குமாரனாகிய பிரத்தோனியனான<Pirathonite> அப்தோன்<Abdon> இஸ்ரவேலை<Israel> நியாயம் விசாரித்தான். {Judg 12:13}
அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை<Israel> எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான். {Judg 12:14}
பின்பு பிரத்தோனியனான<Pirathonite> இல்லேலின்<Hillel> குமாரனாகிய அப்தோன்<Abdon> மரித்து, எப்பிராயீம்<Ephraim> தேசத்தில் அமலேக்கியர்<Amalekites> மலையிலிருக்கிற பிரத்தோனிலே<Pirathon> அடக்கம்பண்ணப்பட்டான். {Judg 12:15}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர்<Philistines> கையில் ஒப்புக்கொடுத்தார். {Judg 13:1}
அப்பொழுது தாண்<Danites> வம்சத்தானாகிய சோரா<Zorah> ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா<Manoah>; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். {Judg 13:2}
கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். {Judg 13:3}
ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. {Judg 13:4}
நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்<Nazarene//Nazarite>; அவன் இஸ்ரவேலைப்<Israel> பெலிஸ்தரின்<Philistines> கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார். {Judg 13:5}
அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. {Judg 13:6}
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்<Nazarene//Nazarite> என்று சொன்னார் என்றாள். {Judg 13:7}
அப்பொழுது மனோவா<Manoah> கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். {Judg 13:8}
தேவன் மனோவாவின்<Manoah> சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா<Manoah> அவளோடே இருக்கவில்லை. {Judg 13:9}
ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள். {Judg 13:10}
அப்பொழுது மனோவா<Manoah> எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார். {Judg 13:11}
அப்பொழுது மனோவா<Manoah>: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான். {Judg 13:12}
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை<Manoah> நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து, {Judg 13:13}
திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார். {Judg 13:14}
அப்பொழுது மனோவா<Manoah> கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான். {Judg 13:15}
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை<Manoah> நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா<Manoah> அறியாதிருந்தான். {Judg 13:16}
அப்பொழுது மனோவா<Manoah> கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். {Judg 13:17}
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். {Judg 13:18}
மனோவா<Manoah> போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும்<Manoah> அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது. {Judg 13:19}
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும்<Manoah> அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். {Judg 13:20}
பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும்<Manoah> அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா<Manoah> அறிந்து, {Judg 13:21}
தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான். {Judg 13:22}
அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள். {Judg 13:23}
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன்<Samson> என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். {Judg 13:24}
அவன் சோராவுக்கும்<Zorah> எஸ்தாவோலுக்கும்<Eshtaol> நடுவிலுள்ள தாணின்<Dan> பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார். {Judg 13:25}
சிம்சோன்<Samson> திம்னாத்துக்குப்<Timnath> போய், திம்னாத்திலே<Timnath> பெலிஸ்தரின்<Philistines> குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, {Judg 14:1}
திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே<Timnath> பெலிஸ்தரின்<Philistines> குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். {Judg 14:2}
அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில்<Philistines> ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன்<Samson> தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். {Judg 14:3}
அவன் பெலிஸ்தரிடத்தில்<Philistines> குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர்<Philistines> இஸ்ரவேலை<Israel> ஆண்டார்கள். {Judg 14:4}
அப்படியே சிம்சோனும்<Samson> அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப்<Timnath> போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத்<Timnath> ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. {Judg 14:5}
அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. {Judg 14:6}
அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின்<Samson> கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள். {Judg 14:7}
சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது. {Judg 14:8}
அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை. {Judg 14:9}
அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன்<Samson> அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம். {Judg 14:10}
அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். {Judg 14:11}
சிம்சோன்<Samson> அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன். {Judg 14:12}
அதை எனக்கு விடுவிக்காதேபோனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள். {Judg 14:13}
அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்றுநாள்மட்டும் விடுவிக்கக்கூடாதே போயிற்று. {Judg 14:14}
ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின்<Samson> பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம்பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள். {Judg 14:15}
அப்பொழுது சிம்சோனின்<Samson> பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான். {Judg 14:16}
விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள். {Judg 14:17}
ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான். {Judg 14:18}
கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்<Ashkelon> போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான். {Judg 14:19}
சிம்சோனின்<Samson> பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். {Judg 14:20}
சிலநாள் சென்றபின்பு, சிம்சோன்<Samson> கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்: நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்: {Judg 15:1}
நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான். {Judg 15:2}
அப்பொழுது சிம்சோன்<Samson>: நான் பெலிஸ்தருக்குப்<Philistines> பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி, {Judg 15:3}
புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, {Judg 15:4}
பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின்<Philistines> வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான். {Judg 15:5}
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர்<Philistines> கேட்கிறபோது, திம்னாத்தானுடைய<Timnite> மருமகனாகிய சிம்சோன்தான்<Samson>; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்<Philistines> போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். {Judg 15:6}
அப்பொழுது சிம்சோன்<Samson> அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி, {Judg 15:7}
அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம்<Etam> ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான். {Judg 15:8}
அப்பொழுது பெலிஸ்தர்<Philistines> போய், யூதாவிலே<Judah> பாளயமிறங்கி, லேகி<Lehi> என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள். {Judg 15:9}
நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா<Judah> மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன்<Samson> எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள். {Judg 15:10}
அப்பொழுது யூதாவிலே<Judah> மூவாயிரம்பேர் ஏத்தாம்<Etam> ஊர்க் கன்மலைச் சந்திற்குப் போய்: பெலிஸ்தர்<Philistines> நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில்<Samson> சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான். {Judg 15:11}
அப்பொழுது அவர்கள்: உன்னைக் கட்டி, பெலிஸ்தர்<Philistines> கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்<Samson>: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான். {Judg 15:12}
அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள். {Judg 15:13}
அவன் லேகிவரைக்கும்<Lehi> வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர்<Philistines> அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள்; அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. {Judg 15:14}
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான். {Judg 15:15}
அப்பொழுது சிம்சோன்<Samson>: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான். {Judg 15:16}
அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி<Ramathlehi> என்று பேரிட்டான். {Judg 15:17}
அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான். {Judg 15:18}
அப்பொழுது தேவன் லேகியிலுள்ள<Lehi> பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி<Enhakkore> என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில்<Lehi> இருக்கிறது. {Judg 15:19}
அவன் பெலிஸ்தரின்<Philistines> நாட்களில் இஸ்ரவேலை<Israel> இருபது வருஷம் நியாயம் விசாரித்தான். {Judg 15:20}
பின்பு சிம்சோன்<Samson> காசாவுக்குப்<Gaza> போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். {Judg 16:1}
அப்பொழுது: சிம்சோன்<Samson> இங்கே வந்திருக்கிறான் என்று காசா<Gazites> ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள். {Judg 16:2}
சிம்சோன்<Samson> நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு<Hebron> எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான். {Judg 16:3}
அதற்குப்பின்பு அவன் சோரேக்<Sorek> ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள்<Delilah> என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். {Judg 16:4}
அவளிடத்திற்குப் பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். {Judg 16:5}
அப்படியே தெலீலாள்<Delilah> சிம்சோனைப்<Samson> பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். {Judg 16:6}
அதற்குச் சிம்சோன்<Samson>: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். {Judg 16:7}
அப்பொழுது பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். {Judg 16:8}
பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே<Samson>, பெலிஸ்தர்<Philistines> உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை. {Judg 16:9}
அப்பொழுது தெலீலாள்<Delilah> சிம்சோனைப்<Samson> பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். {Judg 16:10}
அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். {Judg 16:11}
அப்பொழுது தெலீலாள்<Delilah>, புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி: சிம்சோனே<Samson>, பெலிஸ்தர்<Philistines> உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். {Judg 16:12}
பின்பு தெலீலாள்<Delilah> சிம்சோனைப்<Samson> பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான். {Judg 16:13}
அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே<Samson>, பெலிஸ்தர்<Philistines> உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான். {Judg 16:14}
அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம்பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி, {Judg 16:15}
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, {Judg 16:16}
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்<Nazarene//Nazarite>; என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். {Judg 16:17}
அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள்<Delilah> கண்டபோது, அவள் பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின்<Philistines> அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள். {Judg 16:18}
அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. {Judg 16:19}
அப்பொழுது அவள்: சிம்சோனே<Samson>, பெலிஸ்தர்<Philistines> உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். {Judg 16:20}
பெலிஸ்தர்<Philistines> அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக்<Gaza> கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். {Judg 16:21}
அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. {Judg 16:22}
பெலிஸ்தரின்<Philistines> பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை<Samson> நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு<Dagon> ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள். {Judg 16:23}
ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்றுசொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். {Judg 16:24}
இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக்<Samson> கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச்<Samson> சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள். {Judg 16:25}
சிம்சோன்<Samson> தனக்குக் கைலாகு கொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான். {Judg 16:26}
அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின்<Philistines> சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன்<Samson> வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். {Judg 16:27}
அப்பொழுது சிம்சோன்<Samson> கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர்<Philistines> கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி, {Judg 16:28}
சிம்சோன்<Samson> அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, {Judg 16:29}
என் ஜீவன் பெலிஸ்தரோடே<Philistines> கூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள். {Judg 16:30}
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும்<Zorah> எஸ்தாவோலுக்கும்<Eshtaol> நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின்<Manoah> கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை<Israel> இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான். {Judg 16:31}
எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசத்தானாகிய மீகா<Micah> என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். {Judg 17:1}
அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக்குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள். {Judg 17:2}
அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள். {Judg 17:3}
அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின்<Micah> வீட்டில் இருந்தது. {Judg 17:4}
மீகா<Micah>, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும்<ephod> சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான். {Judg 17:5}
அந்நாட்களில் இஸ்ரவேலிலே<Israel> ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். {Judg 17:6}
யூதாவிலுள்ள<Judah> பெத்லெகேம்<Bethlehem> ஊரானும் லேவியனுமான<Levite> ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான். {Judg 17:7}
அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள<Judah> பெத்லெகேம்<Bethlehem> ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின்<Micah> வீட்டில் வந்து சேர்ந்தான். {Judg 17:8}
எங்கே இருந்து வந்தாய் என்று மீகா<Micah> அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள<Judah> பெத்லெகேம்<Bethlehem> ஊரானாகிய லேவியன்<Levite>, எங்கேயாகிலும் போய்த் தங்கப்போகிறேன் என்றான். {Judg 17:9}
அப்பொழுது மீகா<Micah>: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன்<Levite> உள்ளே போனான். {Judg 17:10}
அந்த லேவியன்<Levite> அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான். {Judg 17:11}
மீகா<Micah> அந்த லேவியனைப்<Levite> பிரதிஷ்டைபண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின்<Micah> வீட்டில் இருந்தான். {Judg 17:12}
அப்பொழுது மீகா<Micah>: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன்<Levite> அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான். {Judg 17:13}
அந்நாட்களில் இஸ்ரவேலிலே<Israel> ராஜா இல்லை; தாண்<Danites> கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல்<Israel> கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை. {Judg 18:1}
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண்<Dan> புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்துபேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும்<Zorah> எஸ்தாவோலிலுமிருந்து<Eshtaol> அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின்<Micah> வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள். {Judg 18:2}
அவர்கள் மீகாவின்<Micah> வீட்டண்டை இருக்கையில், லேவியனான<Levite> வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்துவந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள். {Judg 18:3}
அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா<Micah> எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான். {Judg 18:4}
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள். {Judg 18:5}
அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான். {Judg 18:6}
அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப்<Laish> போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய<Zidonians> வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத்<Zidonians> தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு, {Judg 18:7}
சோராவிலும்<Zorah> எஸ்தாவோலிலும்<Eshtaol> இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள். {Judg 18:8}
அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள். {Judg 18:9}
நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள். {Judg 18:10}
அப்பொழுது சோராவிலும்<Zorah> எஸ்தாவோலிலும்<Eshtaol> இருக்கிற தாண்<Danites> கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய், {Judg 18:11}
யூதாவிலுள்ள<Judah> கீரியாத்யாரீமிலே<Kirjathjearim> பாளயமிறங்கினார்கள்; ஆதலால் அது இந்நாள்வரைக்கும் மக்னிதான்<Mahanehdan> என்னப்படும்; அது கீரியாத்யாரீமின்<Kirjathjearim> பின்னாலே இருக்கிறது. {Judg 18:12}
பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம்<Ephraim> மலைக்குப் போய், மீகாவின்<Micah> வீடுமட்டும் வந்தார்கள். {Judg 18:13}
அப்பொழுது லாயீசின்<Laish> நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும்<ephod> சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள். {Judg 18:14}
அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின்<Micah> வீட்டில் இருக்கிற லேவியனான<Levite> வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள். {Judg 18:15}
ஆயுதபாணிகளாகிய தாண்<Dan> புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள். {Judg 18:16}
ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய்வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும்<ephod> சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். {Judg 18:17}
அவர்கள் மீகாவின்<Micah> வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும்<ephod> சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான். {Judg 18:18}
அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில்<Israel> ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள். {Judg 18:19}
அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும்<ephod> சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான். {Judg 18:20}
அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம் பாடிகளையும், தங்களுக்குமுன்னே போகும்படி செய்தார்கள். {Judg 18:21}
அவர்கள் புறப்பட்டு, மீகாவின்<Micah> வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின்<Micah> வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண்<Dan> புத்திரரைத் தொடர்ந்துவந்து, {Judg 18:22}
அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை<Micah> நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள். {Judg 18:23}
அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான். {Judg 18:24}
தாண்<Dan> புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்கக் கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள்மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி, {Judg 18:25}
தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா<Micah> கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான். {Judg 18:26}
அவர்களோ மீகா<Micah> உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ்<Laish> ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள். {Judg 18:27}
அது சீதோனுக்குத்<Zidon> தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச்<Bethrehob> சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து, {Judg 18:28}
பூர்வத்திலே லாயீஸ்<Laish> என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப்<Israel> பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய<Dan> நாமத்தின்படியே தாண்<Dan> என்று பேரிட்டார்கள். {Judg 18:29}
அப்பொழுது தாண்<Dan> புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின்<Manasseh> குமாரனாகிய கெர்சோனின்<Gershom> மகன் யோனத்தானும்<Jonathan>, அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண்<Dan> கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள். {Judg 18:30}
தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த<Shiloh> காலமுழுதும் அவர்கள் மீகா<Micah> உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள். {Judg 18:31}
இஸ்ரவேலில்<Israel> ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம்<Ephraim> மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன்<Levite> இருந்தான்; அவன் யூதாவிலுள்ள<Judah> பெத்லெகேம்<Bethlehem> ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான். {Judg 19:1}
அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா<Judah> தேசத்துப் பெத்லெகேம்<Bethlehem> ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம்வரைக்கும் இருந்தாள். {Judg 19:2}
அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்துவரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக் கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு, {Judg 19:3}
ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள். {Judg 19:4}
நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள்; பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான். {Judg 19:5}
அவர்கள் உட்கார்ந்து, இருவரும்கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான். {Judg 19:6}
அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான். {Judg 19:7}
ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள். {Judg 19:8}
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான். {Judg 19:9}
அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய<Jerusalem> எபூசுக்கு<Jebus> நேராக வந்தான். {Judg 19:10}
அவர்கள் எபூசுக்குச்<Jebus> சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர்<Jebusites> இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான். {Judg 19:11}
அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல்<Israel> புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியாமட்டும்<Gibeah> போவோம் என்று சொல்லி, {Judg 19:12}
தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும்<Gibeah> ராமாவிலாகிலும்<Ramah> இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்துபோவோம் வா என்றான். {Judg 19:13}
அப்படியே அப்பாலே நடந்துபோனார்கள்; பென்யமீன்<Benjamin> நாட்டைச் சேர்ந்த கிபியாவின்<Gibeah> கிட்ட வருகையில், சூரியன் அஸ்தமனமாயிற்று. {Judg 19:14}
ஆகையால் கிபியாவிலே<Gibeah> வந்து இராத்தங்கும்படிக்கு, வழியைவிட்டு அவ்விடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்துக்குள் போனபோது, இராத்தங்குகிறதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான். {Judg 19:15}
வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே<Gibeah> சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்<Benjamites>. {Judg 19:16}
அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான். {Judg 19:17}
அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள<Judah> ஊராகிய பெத்லெகேமிலிருந்து<Bethlehem> வந்து, எப்பிராயீம்<Ephraim> மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள<Judah> பெத்லெகேம்மட்டும்<Bethlehem> போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை. {Judg 19:18}
எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான். {Judg 19:19}
அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி, {Judg 19:20}
அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீபனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள். {Judg 19:21}
அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது, இதோ, பேலியாளின்<Belial> மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள். {Judg 19:22}
அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக. {Judg 19:23}
இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான். {Judg 19:24}
அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை அறிந்துகொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள். {Judg 19:25}
விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள். {Judg 19:26}
அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள். {Judg 19:27}
எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான். {Judg 19:28}
அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின்<Israel> எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான். {Judg 19:29}
அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல்<Israel> புத்திரர் எகிப்திலிருந்து<Egypt> புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்த காரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணிச் செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள். {Judg 19:30}
அப்பொழுது தாண்முதல்<Dan> பெயெர்செபாமட்டுமுள்ள<Beersheba> இஸ்ரவேல்<Israel> புத்திரர் அனைவரும் கீலேயாத்<Gilead> தேசத்தாருடன் மிஸ்பாவிலே<Mizpeh> கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள். {Judg 20:1}
சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின்<Israel> சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள். {Judg 20:2}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் மிஸ்பாவுக்கு<Mizpeh> வந்த செய்தியைப் பென்யமீன்<Benjamin> புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல்<Israel> புத்திரர் கேட்டார்கள். {Judg 20:3}
அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன்<Levite> மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன்<Benjamin> நாட்டிலுள்ள கிபியாவிலே<Gibeah> இராத்தங்க வந்தோம். {Judg 20:4}
அப்பொழுது கிபியாபட்டணத்தார்<Gibeah> எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்துகொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள். {Judg 20:5}
ஆகையால் இஸ்ரவேலிலே<Israel> அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின்<Israel> சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன். {Judg 20:6}
நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல்<Israel> புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம்பண்ணுங்கள் என்றான். {Judg 20:7}
அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது. {Judg 20:8}
இப்பொழுது கிபியாவுக்குச்<Gibeah> செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம். {Judg 20:9}
பென்யமீன்<Benjamin> கோத்திரமான கிபியா<Gibeah> பட்டணத்தார் இஸ்ரவேலிலே<Israel> செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களிலெல்லாம் நூறுபேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள். {Judg 20:10}
இஸ்ரவேலரெல்லாரும்<Israel> ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி, {Judg 20:11}
அங்கே இருந்த இஸ்ரவேலின்<Israel> கோத்திரத்தார் பென்யமீன்<Benjamin> கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன? {Judg 20:12}
இப்பொழுது கிபியாவில்<Gibeah> இருக்கிற பேலியாளின்<Belial> மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை<Israel> விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன்<Benjamin> புத்திரர் இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல், {Judg 20:13}
இஸ்ரவேல்<Israel> புத்திரரோடு யுத்தம்பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு<Gibeah> வந்து கூடினார்கள். {Judg 20:14}
கிபியாவின்<Gibeah> குடிகளிலே தெரிந்துகொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் லக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது. {Judg 20:15}
அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள். {Judg 20:16}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே<Israel> பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள். {Judg 20:17}
இஸ்ரவேல்<Israel> புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப்போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன்<Benjamin> புத்திரரோடு யுத்தம்பண்ணவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா<Judah> முந்திப் போகவேண்டும் என்றார். {Judg 20:18}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு<Gibeah> எதிராகப் பாளயமிறங்கினார்கள். {Judg 20:19}
பின்பு இஸ்ரவேல்<Israel> மனுஷர் பென்யமீனோடு<Benjamin> யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே<Gibeah> அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள். {Judg 20:20}
ஆனாலும் பென்யமீன்<Benjamin> புத்திரர் கிபியாவிலிருந்து<Gibeah> புறப்பட்டு, இஸ்ரவேலில்<Israelites> இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள். {Judg 20:21}
இஸ்ரவேல்<Israel> ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள். {Judg 20:22}
அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன்<Benjamin> புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார். {Judg 20:23}
மறுநாளிலே இஸ்ரவேல்<Israel> புத்திரர் பென்யமீன்<Benjamin> புத்திரர் கிட்டச் சேருகிறபோது, {Judg 20:24}
பென்யமீன்<Benjamin> கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து<Gibeah> அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல்<Israel> புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள். {Judg 20:25}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு, {Judg 20:26}
கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது. {Judg 20:27}
ஆரோனின்<Aaron> குமாரனாகிய எலெயாசாரின்<Eleazar> மகன் பினெகாஸ்<Phinehas> அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன்<Benjamin> புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். {Judg 20:28}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> புத்திரர் கிபியாவைச்சுற்றிலும்<Gibeah> பதிவிடையாட்களை வைத்து, {Judg 20:29}
மூன்றாம் நாளிலே பென்யமீன்<Benjamin> புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச்<Gibeah> சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள். {Judg 20:30}
அப்பொழுது பென்யமீன்<Benjamin> புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும்<Bethel> கிபியாவுக்கும்<Gibeah> போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல்<Israel> ஜனத்தில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள். {Judg 20:31}
முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்<Benjamin> புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல்<Israel> புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். {Judg 20:32}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே<Baaltamar> யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில்<Israel> கிபியாவின்<Gibeah> பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, {Judg 20:33}
அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும்<Israel> தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு<Gibeah> எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். {Judg 20:34}
கர்த்தர் இஸ்ரவேலுக்கு<Israel> முன்பாகப் பென்யமீனை<Benjamin> முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல்<Israel> புத்திரர் பென்யமீனிலே<Benjamites> பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள். {Judg 20:35}
இஸ்ரவேலர்<Israel> கிபியாவுக்கு<Gibeah> அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு<Benjamites> இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்<Benjamin> புத்திரருக்குக் காணப்பட்டது. {Judg 20:36}
அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல்<Gibeah> பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள். {Judg 20:37}
பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும்<Israel> பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது. {Judg 20:38}
ஆகையால் இஸ்ரவேலர்<Israel> யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்<Benjamin>: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில்<Israel> ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள். {Judg 20:39}
பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர்<Benjamites> பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று. {Judg 20:40}
அப்பொழுது இஸ்ரவேலர்<Israel> திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன்<Benjamin> மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து, {Judg 20:41}
இஸ்ரவேல்<Israel> புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள். {Judg 20:42}
இப்படியே பென்யமீனரை<Benjamites> வளைந்துகொண்டு துரத்தி, கிபியாவுக்குக்<Gibeah> கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள். {Judg 20:43}
இதினால் பென்யமீனரிலே<Benjamin> பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள். {Judg 20:44}
மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன்<Rimmon> கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும்<Gidom> பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள். {Judg 20:45}
இவ்விதமாய் பென்யமீனரில்<Benjamin> அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம்பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள். {Judg 20:46}
அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன்<Rimmon> கன்மலைக்குப் போய், ரிம்மோன்<Rimmon> கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள். {Judg 20:47}
இஸ்ரவேலரோ<Israel> பென்யமீன்<Benjamin> புத்திரர்மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப்போட்டார்கள். {Judg 20:48}
இஸ்ரவேலர்<Israel> மிஸ்பாவிலே<Mizpeh> இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு<Benjamin> விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள். {Judg 21:1}
ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது: {Judg 21:2}
இஸ்ரவேலின்<Israel> தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில்<Israel> ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில்<Israel> இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள். {Judg 21:3}
மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். {Judg 21:4}
கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு<Mizpeh> வராதவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல்<Israel> புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய<Israel> எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள். {Judg 21:5}
இஸ்ரவேல்<Israel> புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை<Benjamin> நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில்<Israel> ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே. {Judg 21:6}
மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக்கொண்டோமே. {Judg 21:7}
இஸ்ரவேலின்<Israel> கோத்திரங்களில் மிஸ்பாவிலே<Mizpeh> கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள<Gilead> யாபேசின்<Jabesh> மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை. {Judg 21:8}
ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற<Gilead> யாபேசின்<Jabesh> குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை. {Judg 21:9}
உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள<Gilead> யாபேசின்<Jabesh> குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள். {Judg 21:10}
சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள். {Judg 21:11}
இவர்கள் கீலேயாத்திலுள்ள<Gilead> யாபேசின்<Jabesh> குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான<Canaan> சீலோவிலிருக்கிற<Shiloh> பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள். {Judg 21:12}
அப்பொழுது ரிம்மோன்<Rimmon> கன்மலையிலிருக்கிற பென்யமீன்<Benjamin> புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள். {Judg 21:13}
அப்படியே அக்காலத்தில் பென்யமீனர்<Benjamin> திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற<Gilead> யாபேசின்<Jabesh> ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது. {Judg 21:14}
இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக<Benjamin> மனஸ்தாபப்பட்டார்கள். {Judg 21:15}
பென்யமீன்<Benjamin> கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்னசெய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு, {Judg 21:16}
இஸ்ரவேலில்<Israel> ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு<Benjamin> இருக்கவேண்டுமே, {Judg 21:17}
நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப்<Benjamin> பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல்<Israel> புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள். {Judg 21:18}
பின்னும், இதோ, பெத்தேலுக்கு<Bethel> வடக்கே பெத்தேலிலிருந்து<Bethel> சீகேமுக்குப்<Shechem> போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத்<Lebonah> தெற்காகவும் இருக்கிற சீலோவிலே<Shiloh> வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி, {Judg 21:19}
அவர்கள் பென்யமீன்<Benjamin> புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து, {Judg 21:20}
சீலோவின்<Shiloh> குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின்<Shiloh> குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன்<Benjamin> தேசத்திற்குக் கொண்டுபோங்கள். {Judg 21:21}
அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள். {Judg 21:22}
பென்யமீன்<Benjamin> புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள். {Judg 21:23}
இஸ்ரவேல்<Israel> புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள். {Judg 21:24}
அந்நாட்களிலே இஸ்ரவேலில்<Israel> ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். {Judg 21:25}
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!