Tuesday, January 14, 2020

நியாயாதிபதிகள்

யோசுவா<Joshua>  மரித்தபின்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரை  நோக்கி:  கானானியரை<Canaanites>  எதிர்த்து  யுத்தம்பண்ணும்படி,  எங்களில்  யார்  முதல்முதல்  எழுந்து  புறப்படவேண்டும்  என்று  கேட்டார்கள்.  {Judg  1:1}

 

அதற்குக்  கர்த்தர்:  யூதா<Judah>  எழுந்து  புறப்படக்கடவன்;  இதோ,  அந்த  தேசத்தை  அவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தேன்  என்றார்.  {Judg  1:2}

 

அப்பொழுது  யூதா<Judah>  தன்  சகோதரனாகிய  சிமியோனை<Simeon>  நோக்கி:  நாம்  கானானியரோடே<Canaanites>  யுத்தம்பண்ண  நீ  என்  சுதந்தரப்  பங்குவீதத்தில்  என்னோடேகூட  எழுந்துவா;  உன்  சுதந்தரப்  பங்கு  வீதத்தில்  நானும்  உன்னோடுகூட  வருவேன்  என்றான்;  அப்படியே  சிமியோன்<Simeon>  அவனோடேகூடப்  போனான்.  {Judg  1:3}

 

யூதா<Judah>  எழுந்துபோனபோது,  கர்த்தர்  கானானியரையும்<Canaanites>  பெரிசியரையும்<Perizzites>  அவர்கள்  கையிலே  ஒப்புக்கொடுத்தார்;  அவர்கள்  பேசேக்கிலே<Bezek>  பதினாயிரம்பேரை  வெட்டினார்கள்.  {Judg  1:4}

 

பேசேக்கிலே<Bezek>  அதோனிபேசேக்கைக்<Adonibezek>  கண்டு,  அவனோடு  யுத்தம்பண்ணி,  கானானியரையும்<Canaanites>  பெரிசியரையும்<Perizzites>  வெட்டினார்கள்.  {Judg  1:5}

 

அதோனிபேசேக்<Adonibezek>  ஓடிப்போகையில்,  அவனைப்  பின்தொடர்ந்து  பிடித்து,  அவன்  கைகால்களின்  பெருவிரல்களைத்  தறித்துப்போட்டார்கள்.  {Judg  1:6}

 

அப்பொழுது  அதோனிபேசேக்<Adonibezek>:  எழுபது  ராஜாக்கள்,  கைகால்களின்  பெருவிரல்கள்  தறிக்கப்பட்டவர்களாய்,  என்  மேஜையின்கீழ்  விழுந்ததைப்  பொறுக்கித்  தின்றார்கள்;  நான்  எப்படிச்  செய்தேனோ,  அப்படியே  தேவன்  எனக்கும்  செய்து  சரிக்கட்டினார்  என்றான்.  அவனை  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுபோனார்கள்;  அங்கே  அவன்  செத்துப்போனான்.  {Judg  1:7}

 

யூதாவின்<Judah>  புத்திரர்  எருசலேமின்மேல்<Jerusalem>  யுத்தம்பண்ணி,  அதைப்  பிடித்து,  அதிலுள்ளவர்களைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  பட்டணத்தை  அக்கினிக்கு  இரையாக்கிவிட்டார்கள்.  {Judg  1:8}

 

பின்பு  யூதாவின்<Judah>  புத்திரர்  மலைத்தேசத்திலேயும்,  தெற்கேயும்,  பள்ளத்தாக்குகளிலேயும்  குடியிருக்கிற  கானானியரோடு<Canaanites>  யுத்தம்பண்ணப்  புறப்பட்டுப்போனார்கள்.  {Judg  1:9}

 

அப்படியே  யூதா<Judah>  கோத்திரத்தார்  எபிரோனிலே<Hebron>  குடியிருக்கிற  கானானியருக்கு<Canaanites>  விரோதமாய்ப்  போய்,  சேசாய்<Sheshai>,  அகீமான்<Ahiman>,  தல்மாய்<Talmai>  என்பவர்களை  வெட்டிப்போட்டார்கள்.  முற்காலத்தில்  அந்த  எபிரோனுக்குக்<Hebron>  கீரியாத்அர்பா<Kirjatharba>  என்று  பேர்.  {Judg  1:10}

 

அங்கேயிருந்து  தெபீரின்<Debir>  குடிகளுக்கு  விரோதமாகப்  போனார்கள்;  முற்காலத்தில்  தெபீருக்குக்<Debir>  கீரியாத்செப்பேர்<Kirjathsepher>  என்று  பேர்.  {Judg  1:11}

 

அப்பொழுது  காலேப்<Caleb>:  கீரியாத்செப்பேரைச்<Kirjathsepher>  சங்காரம்பண்ணிப்  பிடிக்கிறவனுக்கு  என்  குமாரத்தியாகிய  அக்சாளை<Achsah>  விவாகம்பண்ணிக்கொடுப்பேன்  என்றான்.  {Judg  1:12}

 

அப்பொழுது  காலேபுடைய<Caleb>  தம்பியாகிய  கேனாசின்<Kenaz>  குமாரன்  ஒத்னியேல்<Othniel>  அதைப்  பிடித்தான்;  ஆகையால்  தன்  குமாரத்தியாகிய  அக்சாளை<Achsah>  அவனுக்கு  விவாகம்பண்ணிக்கொடுத்தான்.  {Judg  1:13}

 

அவள்  புறப்படுகையில்,  என்  தகப்பனிடத்தில்  ஒரு  வயல்வெளியைக்  கேட்கவேண்டும்  என்று  அவனிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  கழுதையின்மேலிருந்து  இறங்கினாள்.  காலேப்<Caleb>  அவளை  நோக்கி:  உனக்கு  என்னவேண்டும்  என்றான்.  {Judg  1:14}

 

அப்பொழுது  அவள்:  எனக்கு  ஒரு  ஆசீர்வாதம்  தரவேண்டும்;  வறட்சியான  நிலத்தை  எனக்குத்  தந்தீர்;  நீர்ப்பாய்ச்சலான  நிலங்களையும்  எனக்குத்  தரவேண்டும்  என்றாள்;  அப்பொழுது  காலேப்<Caleb>  மேற்புறத்திலும்  கீழ்ப்புறத்திலும்  அவளுக்கு  நீர்ப்பாய்ச்சலான  நிலங்களைக்  கொடுத்தான்.  {Judg  1:15}

 

மோசேயின்<Moses>  மாமனாகிய  கேனியனின்<Kenite>  புத்திரரும்  யூதாவின்<Judah>  புத்திரரோடேகூடப்  பேரீச்சமரங்களின்  பட்டணத்திலிருந்து  ஆராத்திற்குத்<Arad>  தெற்கேயிருக்கிற  யூதாவின்<Judah>  வனாந்தரத்திற்கு  வந்து,  ஜனங்களோடே  குடியேறினார்கள்.  {Judg  1:16}

 

யூதா<Judah>  தன்  சகோதரனாகிய  சிமியோனோடுங்கூடப்<Simeon>  போனான்;  அவர்கள்  சேப்பாத்தில்<Zephath>  குடியிருக்கிற  கானானியரை<Canaanites>  முறிய  அடித்து,  அதைச்  சங்காரம்பண்ணி,  அந்தப்  பட்டணத்திற்கு  ஒர்மா<Hormah>  என்று  பேரிட்டார்கள்.  {Judg  1:17}

 

யூதா<Judah>  காசாவையும்<Gaza>  அதின்  எல்லையையும்,  அஸ்கலோனையும்<Askelon>  அதின்  எல்லையையும்,  எக்ரோனையும்<Ekron>  அதின்  எல்லையையும்  பிடித்தான்.  {Judg  1:18}

 

கர்த்தர்  யூதாவோடேகூட<Judah>  இருந்ததினால்,  மலைத்தேசத்தாரைத்  துரத்திவிட்டார்கள்;  பள்ளத்தாக்கின்  குடிகளுக்கு  இருப்புரதங்கள்  இருந்தபடியினால்,  அவர்களைத்  துரத்தக்கூடாமற்போயிற்று.  {Judg  1:19}

 

மோசே<Moses>  சொன்னபடியே,  எபிரோனைக்<Hebron>  காலேபுக்குக்<Caleb>  கொடுத்தார்கள்;  அவன்  அதிலிருந்த  ஏனாக்கின்<Anak>  மூன்று  குமாரரையும்  துரத்திவிட்டான்.  {Judg  1:20}

 

பென்யமீன்<Benjamin>  புத்திரர்  எருசலேமிலே<Jerusalem>  குடியிருந்த  எபூசியரையும்<Jebusites>  துரத்திவிடவில்லை;  ஆகையால்  எபூசியர்<Jebusites>  இந்நாள்மட்டும்  பென்யமீன்<Benjamin>  புத்திரரோடேகூட  எருசலேமில்<Jerusalem>  குடியிருக்கிறார்கள்.  {Judg  1:21}

 

யோசேப்பின்<Joseph>  குடும்பத்தாரும்  பெத்தேலுக்கு<Bethel>  விரோதமாய்ப்  போனார்கள்;  கர்த்தர்  அவர்களோடேகூட  இருந்தார்.  {Judg  1:22}

 

யோசேப்பின்<Joseph>  புத்திரர்  பெத்தேலை<Bethel>  வேவுபார்க்க  ஆட்களை  அனுப்பினார்கள்;  முன்னே  அந்தப்  பட்டணத்திற்கு  லூஸ்<Luz>  என்று  பேர்.  {Judg  1:23}

 

அந்த  வேவுகாரர்  பட்டணத்திலிருந்து  புறப்பட்டுவருகிற  ஒரு  மனுஷனைக்  கண்டு:  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கும்  வழியை  எங்களுக்குக்  காண்பி,  உனக்குத்  தயைசெய்வோம்  என்றார்கள்.  {Judg  1:24}

 

அப்படியே  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கும்  வழியை  அவர்களுக்குக்  காண்பித்தான்;  அப்பொழுது  அவர்கள்  வந்து,  பட்டணத்திலுள்ளவர்களைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  அந்த  மனுஷனையும்  அவன்  குடும்பத்தையும்  விட்டுவிட்டார்கள்.  {Judg  1:25}

 

அப்பொழுது  அந்த  மனுஷன்  ஏத்தியரின்<Hittites>  தேசத்திற்குப்  போய்,  ஒரு  பட்டணத்தைக்  கட்டி,  அதற்கு  லூஸ்<Luz>  என்று  பேரிட்டான்;  அதுதான்  இந்நாள்மட்டும்  அதின்  பேர்.  {Judg  1:26}

 

மனாசே<Manasseh>  கோத்திரத்தார்  பெத்செயான்<Bethshean>  பட்டணத்தாரையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  தானாக்<Taanach>  பட்டணத்தாரையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  தோரின்<Dor>  குடிகளையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  இப்லெயாம்<Ibleam>  பட்டணத்தாரையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்,  மெகிதோவின்<Megiddo>  குடிகளையும்  அதற்கு  அடுத்த  ஊர்களின்  மனுஷரையும்  துரத்திவிடவில்லை;  கானானியர்<Canaanites>  அந்த  தேசத்திலேதானே  குடியிருக்கவேண்டும்  என்று  இருந்தார்கள்.  {Judg  1:27}

 

இஸ்ரவேலர்<Israel>  பலத்தபோது,  கானானியரை<Canaanites>  முற்றிலும்  துரத்திவிடாமல்  பகுதி  கட்டப்பண்ணினார்கள்.  {Judg  1:28}

 

எப்பிராயீம்<Ephraim>  கோத்திரத்தார்  கேசேரிலே<Gezer>  குடியிருந்த  கானானியரையும்<Canaanites>  துரத்திவிடவில்லை;  ஆகையால்  கானானியர்<Canaanites>  கேசேரில்<Gezer>  அவர்கள்  நடுவே  குடியிருந்தார்கள்.  {Judg  1:29}

 

செபுலோன்<Zebulun>  கோத்திரத்தார்  கித்ரோனின்<Kitron>  குடிகளையும்,  நாகலோலின்<Nahalol>  குடிகளையும்  துரத்திவிடவில்லை,  ஆகையால்  கானானியர்<Canaanites>  அவர்கள்  நடுவே  குடியிருந்து,  பகுதிகட்டுகிறவர்களானார்கள்.  {Judg  1:30}

 

ஆசேர்<Asher>  கோத்திரத்தார்  அக்கோவின்<Accho>  குடிகளையும்,  சீதோனின்<Zidon>  குடிகளையும்,  அக்லாப்<Ahlab>,  அக்சீப்<Achzib>,  எல்பா<Helbah>,  ஆப்பீக்<Aphik>,  ரேகோப்<Rehob>  பட்டணங்களின்  குடிகளையும்  துரத்திவிடவில்லை.  {Judg  1:31}

 

ஆசேரியர்<Asherites>  தேசத்தின்  குடிகளாகிய  கானானியரின்<Canaanites>  நடுவே  குடியிருந்தார்கள்;  அவர்களை  அவர்கள்  துரத்திவிடவில்லை.  {Judg  1:32}

 

நப்தலி<Naphtali>  கோத்திரத்தார்  பெத்ஷிமேசின்<Bethshemesh>  குடிகளையும்  பெத்தானாத்தின்<Bethanath>  குடிகளையும்  துரத்திவிடாமல்,  தேசத்தின்  குடிகளாகிய  கானானியரின்<Canaanites>  நடுவே  குடியிருந்தார்கள்;  பெத்ஷிமேஸ்<Bethshemesh>,  பெத்தானாத்<Bethanath>  பட்டணங்களின்  குடிகள்  அவர்களுக்குப்  பகுதிகட்டுகிறவர்களானார்கள்.  {Judg  1:33}

 

எமோரியர்<Amorites>  தாண்<Dan>  புத்திரரைப்  பள்ளத்தாக்கில்  இறங்கவொட்டாமல்,  மலைத்தேசத்திற்குப்  போகும்படி  நெருக்கினார்கள்.  {Judg  1:34}

 

எமோரியர்<Amorites>  ஏரேஸ்<Heres>  மலைகளிலும்  ஆயலோனிலும்<Aijalon>  சால்பீமிலும்<Shaalbim>  குடியிருக்கவேண்டும்  என்று  இருந்தார்கள்;  ஆனாலும்  யோசேப்பின்<Joseph>  குடும்பத்தாரின்  கை  பலத்தபடியினால்,  அவர்களுக்குப்  பகுதிகட்டுகிறவர்களானார்கள்.  {Judg  1:35}

 

எமோரியரின்<Amorites>  எல்லை  அக்கராபீமுக்குப்<Akrabbim>  போகிற  மேடுதொடங்கி  அதற்கு  அப்புறமும்  போயிற்று.  {Judg  1:36}

 

கர்த்தருடைய  தூதனானவர்  கில்காலிலிருந்து<Gilgal>  போகீமுக்கு<Bochim>  வந்து:  நான்  உங்களை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணி,  உங்கள்  பிதாக்களுக்கு  ஆணையிட்ட  தேசத்தில்  நான்  உங்களைக்  கொண்டுவந்து  விட்டு,  உங்களோடே  பண்ணின  என்  உடன்படிக்கையை  நான்  ஒருக்காலும்  முறித்துப்போடுவதில்லை  என்றும்,  {Judg  2:1}

 

நீங்கள்  இந்த  தேசத்தின்  குடிகளோடே  உடன்படிக்கைபண்ணாமல்,  அவர்கள்  பலிபீடங்களை  இடித்துவிடக்கடவீர்கள்  என்றும்  சொன்னேன்;  ஆனாலும்  என்  சொல்லைக்  கேளாதேபோனீர்கள்;  ஏன்  இப்படிச்  செய்தீர்கள்?  {Judg  2:2}

 

ஆகையால்  நான்  அவர்களை  உங்கள்  முகத்திற்கு  முன்பாகத்  துரத்துவதில்லை  என்றேன்;  அவர்கள்  உங்களை  நெருக்குவார்கள்;  அவர்களுடைய  தேவர்கள்  உங்களுக்குக்  கண்ணியாவார்கள்  என்றார்.  {Judg  2:3}

 

கர்த்தருடைய  தூதனானவர்  இந்த  வார்த்தைகளை  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எல்லாரோடும்  சொல்லுகையில்,  ஜனங்கள்  உரத்த  சத்தமிட்டு  அழுதார்கள்.  {Judg  2:4}

 

அவ்விடத்திற்குப்  போகீம்<Bochim>  என்று  பேரிட்டு,  அங்கே  கர்த்தருக்குப்  பலியிட்டார்கள்.  {Judg  2:5}

 

யோசுவா<Joshua>  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  ஜனங்களை  அனுப்பிவிட்டபோது,  அவர்கள்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ள  அவரவர்  தங்கள்தங்கள்  சுதந்தர  வீதத்திற்குப்  போனார்கள்.  {Judg  2:6}

 

யோசுவாவின்<Joshua>  சகல  நாட்களிலும்  கர்த்தர்  இஸ்ரவேலுக்காகச்<Israel>  செய்த  அவருடைய  பெரிய  கிரியைகளையெல்லாம்  கண்டவர்களும்,  யோசுவாவுக்குப்<Joshua>  பின்பு  உயிரோடிருந்தவர்களுமாகிய  மூப்பரின்  சகல  நாட்களிலும்  ஜனங்கள்  கர்த்தரைச்  சேவித்தார்கள்.  {Judg  2:7}

 

நூனின்<Nun>  குமாரனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  கர்த்தரின்  ஊழியக்காரன்  நூற்றுப்பத்து  வயதுள்ளவனாய்  மரணமடைந்தான்.  {Judg  2:8}

 

அவனை  எப்பிராயீமின்<Ephraim>  மலைத்தேசத்திலுள்ள  காயாஸ்<Gaash>  மலைக்கு  வடக்கேயிருக்கிற  அவனுடைய  சுதந்தரத்தின்  எல்லையாகிய  திம்னாத்ஏரேசிலே<Timnathheres>  அடக்கம்பண்ணினார்கள்.  {Judg  2:9}

 

அக்காலத்தில்  இருந்த  அந்தச்  சந்ததியார்  எல்லாரும்  தங்கள்  பிதாக்களுடன்  சேர்க்கப்பட்டபின்பு,  கர்த்தரையும்,  அவர்  இஸ்ரவேலுக்காகச்<Israel>  செய்த  கிரியையையும்  அறியாத  வேறொரு  சந்ததி  அவர்களுக்குப்பின்  எழும்பிற்று.  {Judg  2:10}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  பாகால்களைச்<Baalim>  சேவித்து,  {Judg  2:11}

 

தங்கள்  பிதாக்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணின  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தரை  விட்டு,  தங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  ஜனங்களுடைய  தேவர்களாகிய  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றிப்போய்,  அவர்களைப்  பணிந்துகொண்டு,  கர்த்தருக்குக்  கோபமூட்டினார்கள்.  {Judg  2:12}

 

அவர்கள்  கர்த்தரை  விட்டு,  பாகாலையும்<Baal>  அஸ்தரோத்தையும்<Ashtaroth>  சேவித்தார்கள்.  {Judg  2:13}

 

அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  கோபமூண்டவராகி,  அவர்கள்  அப்புறம்  தங்கள்  சத்துருக்களுக்கு  முன்பாக  நிற்கக்கூடாதபடி  கொள்ளையிடுகிற  கொள்ளைக்காரர்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுத்து,  அவர்களைச்  சுற்றிலும்  இருக்கிற  அவர்கள்  பகைஞரின்  கையிலே  விற்றுப்போட்டார்.  {Judg  2:14}

 

கர்த்தர்  சொல்லியபடியும்,  கர்த்தர்  அவர்களுக்கு  ஆணையிட்டிருந்தபடியும்,  அவர்கள்  புறப்பட்டுப்போகிற  இடமெல்லாம்  கர்த்தருடைய  கை  தீமைக்கென்றே  அவர்களுக்கு  விரோதமாயிருந்தது;  மிகவும்  நெருக்கப்பட்டார்கள்.  {Judg  2:15}

 

கர்த்தர்  நியாயாதிபதிகளை  எழும்பப்பண்ணினார்;  அவர்கள்  கொள்ளையிடுகிறவர்களின்  கைக்கு  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்தார்கள்.  {Judg  2:16}

 

அவர்கள்  தங்கள்  நியாயாதிபதிகளின்  சொல்லைக்  கேளாமல்,  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றிச்  சோரம்போய்,  அவைகளைப்  பணிந்துகொண்டார்கள்;  தங்கள்  பிதாக்கள்  கர்த்தரின்  கற்பனைகளுக்குக்  கீழ்ப்படிந்து  நடந்த  வழியை  அவர்கள்  சீக்கிரமாய்  விட்டு  விலகி,  அவர்கள்  செய்தபடி  செய்யாமற்போனார்கள்.  {Judg  2:17}

 

கர்த்தர்  அவர்களுக்கு  நியாயாதிபதிகளை  எழும்பப்பண்ணுகிறபோது,  கர்த்தர்  நியாயாதிபதியோடேகூட  இருந்து,  அந்த  நியாயாதிபதியின்  நாட்களிலெல்லாம்  அவர்கள்  சத்துருக்களின்  கைக்கு  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்துவருவார்;  அவர்கள்  தங்களை  இறுகப்பிடித்து  ஒடுக்குகிறவர்களினிமித்தம்  தவிக்கிறதினாலே,  கர்த்தர்  மனஸ்தாபப்படுவார்.  {Judg  2:18}

 

நியாயாதிபதி  மரணமடைந்த  உடனே,  அவர்கள்  திரும்பி,  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றவும்  சேவிக்கவும்  பணிந்துகொள்ளவும்,  தங்கள்  பிதாக்களைப்பார்க்கிலும்  கேடாய்  நடந்து,  தங்கள்  கிர்த்தியங்களையும்  தங்கள்  முரட்டாட்டமான  வழியையும்  விடாதிருப்பார்கள்.  {Judg  2:19}

 

ஆகையால்  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  கோபமூண்டவராகி:  இந்த  ஜனங்கள்  தங்கள்  பிதாக்களுக்கு  நான்  கற்பித்த  என்  உடன்படிக்கையை  மீறி  என்  சொல்லைக்  கேளாதேபோனபடியால்,  {Judg  2:20}

 

யோசுவா<Joshua>  மரித்துப்  பின்வைத்துப்போன  ஜாதிகளில்  ஒருவரையும்,  நான்  இனி  அவர்களுக்கு  முன்பாகத்  துரத்திவிடாதிருப்பேன்.  {Judg  2:21}

 

அவர்கள்  பிதாக்கள்  கர்த்தரின்  வழியைக்  கவனித்ததுபோல,  அவர்கள்  அதிலே  நடக்கும்படிக்கு,  அதைக்  கவனிப்பார்களோ  இல்லையோ  என்று,  அவர்களைக்கொண்டு  இஸ்ரவேலைச்<Israel>  சோதிப்பதற்காக  அப்படிச்  செய்வேன்  என்றார்.  {Judg  2:22}

 

அதற்காகக்  கர்த்தர்  அந்த  ஜாதிகளை  யோசுவாவின்<Joshua>  கையில்  ஒப்புக்கொடாமலும்,  அவைகளைச்  சீக்கிரமாய்த்  துரத்திவிடாமலும்  விட்டுவைத்தார்.  {Judg  2:23}

 

கானான்<Canaan>  தேசத்தில்  நடந்த  சகல  யுத்தங்களையும்  அறியாதிருந்த  இஸ்ரவேலராகிய<Israel>  அனைவரையும்  சோதிப்பதற்காகவும்,  {Judg  3:1}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  சந்ததியாரும்  அதற்குமுன்  யுத்தஞ்செய்ய  அறியாதிருந்தவர்களும்  அவைகளை  அறியும்படி  பழக்குவிப்பதற்காகவும்,  கர்த்தர்  விட்டுவைத்த  ஜாதிகள்  யாரென்றால்:  {Judg  3:2}

 

பெலிஸ்தரின்<Philistines>  ஐந்து  அதிபதிகளும்,  சகல  கானானியரும்<Canaanites>,  சீதோனியரும்<Sidonians>,  பாகால்எர்மோன்<Baalhermon>  துவக்கி  ஆமாத்திற்குள்<Hamath>  பிரவேசிக்கும்வரைக்கும்  லீபனோனின்<Lebanon>  மலைகளிலே  குடியிருக்கிற  ஏவியருமே<Hivites>.  {Judg  3:3}

 

கர்த்தர்  மோசேயைக்கொண்டு<Moses>  தங்கள்  பிதாக்களுக்கு  விதித்த  கற்பனைகளுக்கு  இஸ்ரவேலர்<Israel>  கீழ்ப்படிவார்களோ  என்று  அறியும்படி,  இஸ்ரவேலரை<Israel>  அவர்களாலே  சோதிப்பதற்காக  அவர்கள்  விடப்பட்டிருந்தார்கள்.  {Judg  3:4}

 

இப்படி  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்,  கானானியர்<Canaanites>,  ஏத்தியர்<Hittites>,  எமோரியர்<Amorites>,  பெரிசியர்<Perizzites>,  ஏவியர்<Hivites>,  எபூசியராகிய<Jebusites>  இவர்கள்  நடுவே  குடியிருந்து,  {Judg  3:5}

 

அவர்களுடைய  குமாரத்திகளை  விவாகம்பண்ணி,  தங்களுடைய  குமாரத்திகளை  அவர்கள்  குமாரருக்குக்  கொடுத்து,  அவர்கள்  தேவர்களைச்  சேவித்தார்கள்.  {Judg  3:6}

 

இப்படி  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தங்கள்  தேவனாகிய  கர்த்தரை  மறந்து,  பாகால்களையும்<Baalim>  தோப்பு  விக்கிரகங்களையும்  சேவிக்கிறபோது,  {Judg  3:7}

 

கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  கோபமூண்டவராகி,  அவர்களை  மெசொப்பொத்தாமியாவின்<Mesopotamia>  ராஜாவாகிய  கூசான்ரிஷதாயீமின்<Chushanrishathaim>  கையிலே  விற்றுப்போட்டார்;  இப்படியே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கூசான்ரிஷதாயீமை<Chushanrishathaim>  எட்டு  வருஷம்  சேவித்தார்கள்.  {Judg  3:8}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டபோது,  கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  இரட்சிக்கும்படி  காலேபின்<Caleb>  தம்பியான  கேனாசுடைய<Kenaz>  குமாரனாகிய  ஒத்னியேல்<Othniel>  என்னும்  ஒரு  ரட்சகனை  அவர்களுக்கு  எழும்பப்பண்ணினார்.  {Judg  3:9}

 

அவன்மேல்  கர்த்தருடைய  ஆவி  வந்திருந்ததினால்,  அவன்  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்து,  யுத்தம்பண்ணப்  புறப்பட்டான்;  கர்த்தர்  மெசொப்பொத்தாமியாவின்<Mesopotamia>  ராஜாவாகிய  கூசான்ரிஷதாயீமை<Chushanrishathaim>  அவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தார்;  ஆகையால்  அவன்  கை  கூசான்ரிஷதாயீமின்மேல்<Chushanrishathaim>  பலங்கொண்டது.  {Judg  3:10}

 

தேசம்  நாற்பது  வருஷம்  அமைதலாயிருந்தது.  கேனாசின்<Kenaz>  குமாரனாகிய  ஒத்னியேல்<Othniel>  மரணமடைந்தான்.  {Judg  3:11}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மறுபடியும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தார்கள்;  அவர்கள்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தபடியால்,  கர்த்தர்  எக்லோன்<Eglon>  என்னும்  மோவாபின்<Moab>  ராஜாவை  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாய்ப்  பலக்கப்பண்ணினார்.  {Judg  3:12}

 

அவன்  அம்மோன்<Ammon>  புத்திரரையும்  அமலேக்கியரையும்<Amalek>  கூட்டிக்கொண்டுவந்து,  இஸ்ரவேலை<Israel>  முறிய  அடித்தான்;  பேரீச்சமரங்களின்  பட்டணத்தையும்  பிடித்தான்.  {Judg  3:13}

 

இப்படியே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எக்லோன்<Eglon>  என்னும்  மோவாபின்<Moab>  ராஜாவைப்  பதினெட்டு  வருஷம்  சேவித்தார்கள்.  {Judg  3:14}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டபோது,  கர்த்தர்  அவர்களுக்குப்  பென்யமீன்<Benjamite>  கோத்திரத்தானாகிய  கேராவின்<Gera>  மகன்  ஏகூத்<Ehud>  என்னும்  இரட்சகனை  எழும்பப்பண்ணினார்;  அவன்  இடதுகைப்  பழக்கமுள்ளவனாயிருந்தான்;  அவன்  கையிலே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மோவாபின்<Moab>  ராஜாவாகிய  எக்லோனுக்குக்<Eglon>  காணிக்கை  அனுப்பினார்கள்.  {Judg  3:15}

 

ஏகூத்<Ehud>,  இருபுறமும்  கருக்கும்  ஒரு  முழ  நீளமுமான  ஒரு  கத்தியை  உண்டுபண்ணி,  அதைத்  தன்  வஸ்திரத்துக்குள்ளே  தன்  வலதுபுறத்து  இடுப்பிலே  கட்டிக்கொண்டு,  {Judg  3:16}

 

காணிக்கையை  மோவாபின்<Moab>  ராஜாவாகிய  எக்லோனுக்குச்<Eglon>  செலுத்தினான்;  எக்லோன்<Eglon>  மிகவும்  ஸ்தூலித்த  மனுஷனாயிருந்தான்.  {Judg  3:17}

 

அவன்  காணிக்கையைச்  செலுத்தித்  தீர்ந்தபின்பு,  காணிக்கையைச்  சுமந்துவந்த  ஜனங்களை  அனுப்பிவிட்டான்.  {Judg  3:18}

 

அவனோ  கில்காலிலுள்ள<Gilgal>  சிலைகள்  இருக்கும்  இடத்திலிருந்து  திரும்பிவந்து:  ராஜாவே,  உம்மிடத்தில்  சொல்லவேண்டிய  இரகசியமான  ஒரு  வார்த்தை  உண்டு  என்றான்.  அதற்கு  அவன்:  பொறு  என்றான்;  அப்பொழுது  அவனிடத்தில்  நின்ற  யாவரும்  அவனை  விட்டு  வெளியே  போய்விட்டார்கள்.  {Judg  3:19}

 

ஏகூத்<Ehud>  அவன்  கிட்டே  போனான்;  அவனோ  தனக்குத்  தனிப்புற  இருந்த  குளிர்ச்சியான  அறைவீட்டில்  உட்கார்ந்திருந்தான்;  அப்பொழுது  ஏகூத்<Ehud>:  உம்மிடத்தில்  சொல்லவேண்டிய  தேவவாக்கு  எனக்கு  உண்டு  என்றான்;  அவன்  தன்  ஆசனத்திலிருந்து  எழுந்திருந்தான்.  {Judg  3:20}

 

உடனே  ஏகூத்<Ehud>  தன்  இடதுகையை  நீட்டி,  தன்  வலதுபுறத்து  இடுப்பிலே  கட்டியிருந்த  கத்தியை  உருவி,  அதை  அவன்  வயிற்றிற்குள்  பாய்ச்சினான்.  {Judg  3:21}

 

அலகோடேகூடக்  கைப்பிடியும்  உள்ளே  புகுந்தது;  அவனுடைய  வயிற்றிற்குள்  போன  கத்தியை  இவன்  இழுக்கக்கூடாதபடிக்கு,  நிணம்  அலகைச்  சுற்றிக்கொண்டு  அடைத்தது;  அது  பின்புறத்திலே  புறப்பட்டது.  {Judg  3:22}

 

ஏகூத்<Ehud>  புறப்பட்டு,  அறைவீட்டின்  கதவைச்  சாத்திப்  பூட்டிப்போட்டு,  கொலுக்கூடத்தின்  வழியாய்ப்  போய்விட்டான்.  {Judg  3:23}

 

அவன்  போனபின்பு  ஊழியக்காரர்  வந்து  பார்த்தார்கள்;  இதோ,  அறைவீட்டின்  கதவு  பூட்டியிருந்தது;  ஆகையால்  அவர்  அந்தக்  குளிர்ச்சியான  அறையிலே  மலஜலாதிக்கிருக்கிறாராக்கும்  என்றார்கள்.  {Judg  3:24}

 

அவர்கள்  சலித்துப்போகுமட்டும்  காத்திருந்தார்கள்;  அவன்  அறைவீட்டின்  கதவைத்  திறக்கவில்லை;  ஆகையால்  ஒரு  திறவுகோலை  எடுத்துத்  திறந்தார்கள்;  இதோ,  அவர்கள்  ஆண்டவன்  தரையிலே  செத்துக்கிடந்தான்.  {Judg  3:25}

 

அவர்கள்  தாமதித்துக்கொண்டிருந்தபோது,  ஏகூத்<Ehud>  ஓடிப்போய்,  சிலைகளுள்ள  இடத்தைக்  கடந்து,  சேயிராத்தைச்<Seirath>  சேர்ந்து  தப்பினான்.  {Judg  3:26}

 

அங்கே  வந்தபோது  எப்பிராயீம்<Ephraim>  மலையில்  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அவனோடேகூட  மலையிலிருந்து  இறங்கினார்கள்;  அவன்  அவர்களுக்கு  முன்பாக  நடந்து:  {Judg  3:27}

 

என்னைப்  பின்தொடர்ந்து  வாருங்கள்;  கர்த்தர்  உங்கள்  பகைஞராகிய  மோவாபியரை<Moabites>  உங்கள்  கைகளில்  ஒப்புக்கொடுத்தார்  என்றான்.  அவர்கள்  அவனைப்  பின்தொடர்ந்துபோய்,  மோவாபுக்கு<Moab>  எதிரான  யோர்தான்<Jordan>  துறைகளைப்  பிடித்து,  ஒருவனையும்  கடந்துபோகவொட்டாமல்,  {Judg  3:28}

 

அக்காலத்திலே  மோவாபியரில்<Moab>  ஏறக்குறையப்  பதினாயிரம்பேரை  வெட்டினார்கள்;  அவர்களெல்லாரும்  புஷ்டியுள்ளவர்களும்  பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்;  அவர்களில்  ஒருவனும்  தப்பவில்லை.  {Judg  3:29}

 

இப்படியே  அந்நாளிலே  மோவாப்<Moab>  இஸ்ரவேலுடைய<Israel>  கையின்கீழ்த்  தாழ்த்தப்பட்டது;  அதனாலே  தேசம்  எண்பது  வருஷம்  அமைதலாயிருந்தது.  {Judg  3:30}

 

அவனுக்குப்பிற்பாடு  ஆனாத்தின்<Anath>  குமாரன்  சம்கார்<Shamgar>  எழும்பினான்;  அவன்  பெலிஸ்தரில்<Philistines>  அறுநூறுபேரை  ஒரு  தாற்றுக்கோலால்  முறிய  அடித்தான்;  அவனும்  இஸ்ரவேலை<Israel>  இரட்சித்தான்.  {Judg  3:31}

 

ஏகூத்<Ehud>  மரணமடைந்தபின்பு  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  திரும்பக்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்துவந்தார்கள்.  {Judg  4:1}

 

ஆகையால்  கர்த்தர்  அவர்களை  ஆத்சோரில்<Hazor>  ஆளுகிற  யாபீன்<Jabin>  என்னும்  கானானியருடைய<Canaan>  ராஜாவின்  கையிலே  விற்றுப்போட்டார்;  அவனுடைய  சேனாபதிக்குச்  சிசெரா<Sisera>  என்று  பேர்;  அவன்  புறஜாதிகளுடைய  பட்டணமாகிய  அரோசேத்திலே<Harosheth>  குடியிருந்தான்.  {Judg  4:2}

 

அவனுக்குத்  தொளாயிரம்  இருப்புரதங்கள்  இருந்தது;  அவன்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  இருபது  வருஷம்  கொடுமையாய்  ஒடுக்கினான்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டார்கள்.  {Judg  4:3}

 

அக்காலத்திலே  லபிதோத்தின்<Lapidoth>  மனைவியாகிய  தெபொராள்<Deborah>  என்னும்  தீர்க்கதரிசியானவள்  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்தாள்.  {Judg  4:4}

 

அவள்  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசமான  ராமாவுக்கும்<Ramah>  பெத்தேலுக்கும்<Bethel>  நடுவிலிருக்கிற  தெபொராளின்<Deborah>  பேரீச்சமரத்தின்கீழே  குடியிருந்தாள்;  அங்கே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அவளிடத்திற்கு  நியாயவிசாரணைக்குப்  போவார்கள்.  {Judg  4:5}

 

அவள்  நப்தலியிலுள்ள<Naphtali>  கேதேசிலிருக்கிற<Kedesh>  அபினோகாமின்<Abinoam>  குமாரன்  பாராக்கை<Barak>  வரவழைத்து:  நீ  நப்தலி<Naphtali>  புத்திரரிலும்,  செபுலோன்<Zebulun>  புத்திரரிலும்  பதினாயிரம்  பேரைக்  கூட்டிக்கொண்டு,  தாபோர்<Tabor>  மலைக்குப்  போகக்கடவாய்  என்றும்,  {Judg  4:6}

 

நான்  யாபீனின்<Jabin>  சேனாபதியாகிய  சிசெராவையும்<Sisera>,  அவன்  ரதங்களையும்,  அவன்  சேனையையும்,  கீசோன்<Kishon>  பள்ளத்தாக்கிலே  உன்னிடத்திற்கு  வர  இழுத்து,  அவனை  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்  என்றும்,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கட்டளையிடவில்லையா  என்றாள்.  {Judg  4:7}

 

அதற்குப்  பாராக்<Barak>:  நீ  என்னோடேகூட  வந்தால்  போவேன்;  என்னோடேகூட  வராவிட்டால்,  நான்  போகமாட்டேன்  என்றான்.  {Judg  4:8}

 

அதற்கு  அவள்:  நான்  உன்னோடேகூட  நிச்சயமாய்  வருவேன்;  ஆனாலும்  நீ  போகிற  பிரயாணத்தில்  உண்டாகிற  மேன்மை  உனக்குக்  கிடையாது;  கர்த்தர்  சிசெராவை<Sisera>  ஒரு  ஸ்திரீயின்  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்று  சொல்லி,  தெபொராள்<Deborah>  எழும்பி,  பாராக்கோடேகூடக்<Barak>  கேதேசுக்குப்<Kedesh>  போனாள்.  {Judg  4:9}

 

அப்பொழுது  பாராக்<Barak>:  செபுலோன்<Zebulun>  மனுஷரையும்  நப்தலி<Naphtali>  மனுஷரையும்  கேதேசுக்கு<Kedesh>  வரவழைத்து,  தன்னைப்  பின்செல்லும்  பதினாயிரம்  பேரோடே  போனான்;  தெபொராளும்<Deborah>  அவனோடேகூடப்  போனாள்.  {Judg  4:10}

 

கேனியனான<Kenite>  ஏபேர்<Heber>  என்பவன்  மோசேயின்<Moses>  மாமனாகிய  ஒபாபின்<Hobab>  புத்திரராயிருக்கிற  கேனியரை<Kenites>  விட்டுப்  பிரிந்து,  கேதேசின்<Kedesh>  கிட்ட  இருக்கிற  சானாயிம்<Zaanaim>  என்னும்  கர்வாலிமரங்கள்  அருகே  தன்  கூடாரத்தைப்  போட்டிருந்தான்.  {Judg  4:11}

 

அபினோகாமின்<Abinoam>  குமாரன்  பாராக்<Barak>  தாபோர்<Tabor>  மலையில்  ஏறிப்போனான்  என்று  சிசெராவுக்கு<Sisera>  அறிவிக்கப்பட்டபோது,  {Judg  4:12}

 

சிசெரா<Sisera>  தொளாயிரம்  இருப்புரதங்களாகிய  தன்னுடைய  எல்லா  ரதங்களையும்,  தன்னோடிருக்கும்  எல்லா  ஜனங்களையும்,  புறஜாதிகளின்  பட்டணமாகிய  அரோசேத்திலிருந்து<Harosheth>  கீசோன்<Kishon>  பள்ளத்தாக்கிலே  வரவழைத்தான்.  {Judg  4:13}

 

அப்பொழுது  தெபொராள்<Deborah>  பாராக்கை<Barak>  நோக்கி:  எழுந்துபோ;  கர்த்தர்  சிசெராவை<Sisera>  உன்  கையில்  ஒப்புக்கொடுக்கும்  நாள்  இதுவே;  கர்த்தர்  உனக்கு  முன்பாகப்  புறப்படவில்லையா  என்றாள்;  அப்பொழுது  பாராக்கும்<Barak>,  அவன்  பின்னாலே  பதினாயிரம்பேரும்,  தாபோர்<Tabor>  மலையிலிருந்து  இறங்கினார்கள்.  {Judg  4:14}

 

கர்த்தர்  சிசெராவையும்<Sisera>  அந்த  எல்லா  ரதங்களையும்  சேனையனைத்தையும்  பாராக்குக்கு<Barak>  முன்பாகப்  பட்டயக்கருக்கினால்  கலங்கடித்தார்;  சிசெரா<Sisera>  ரதத்தைவிட்டிறங்கி  கால்நடையாய்  ஓடிப்போனான்.  {Judg  4:15}

 

பாராக்<Barak>  ரதங்களையும்  சேனையையும்  புறஜாதிகளுடைய  அரோசேத்மட்டும்<Harosheth>  துரத்தினான்;  சிசெராவின்<Sisera>  சேனையெல்லாம்  பட்டயக்கருக்கினால்  விழுந்தது;  ஒருவனும்  மீதியாயிருக்கவில்லை.  {Judg  4:16}

 

சிசெரா<Sisera>  கால்நடையாய்க்  கேனியனான<Kenite>  ஏபேரின்<Heber>  மனைவி  யாகேலுடைய<Jael>  கூடாரத்திற்கு  ஓடிவந்தான்;  அப்பொழுது  யாபீன்<Jabin>  என்னும்  ஆத்சோரின்<Hazor>  ராஜாவுக்கும்,  கேனியனான<Kenite>  ஏபேரின்<Heber>  வீட்டுக்கும்  சமாதானம்  உண்டாயிருந்தது.  {Judg  4:17}

 

யாகேல்<Jael>  வெளியே  சிசெராவுக்கு<Sisera>  எதிர்கொண்டுபோய்:  உள்ளே  வாரும்;  என்  ஆண்டவனே,  என்னண்டை  உள்ளே  வாரும்,  பயப்படாதேயும்  என்று  அவனோடே  சொன்னாள்;  அப்படியே  அவளண்டை  கூடாரத்தில்  உள்ளே  வந்தபோது,  அவனை  ஒரு  சமுக்காளத்தினாலே  மூடினாள்.  {Judg  4:18}

 

அவன்  அவளைப்  பார்த்து:  குடிக்க  எனக்குக்  கொஞ்சம்  தண்ணீர்  தா,  தாகமாயிருக்கிறேன்  என்றான்;  அவள்  பால்  துருத்தியைத்  திறந்து,  அவனுக்குக்  குடிக்கக்கொடுத்து,  திரும்பவும்  அவனை  மூடினாள்.  {Judg  4:19}

 

அப்பொழுது  அவன்:  நீ  கூடாரவாசலிலே  நின்று,  யாராவது  ஒருவன்  வந்து,  இங்கே  யாராகிலும்  இருக்கிறார்களா  என்று  உன்னிடத்தில்  கேட்டால்,  இல்லை  என்று  சொல்  என்றான்.  {Judg  4:20}

 

பின்பு  ஏபேரின்<Heber>  மனைவியாகிய  யாகேல்<Jael>  ஒரு  கூடார  ஆணியை  எடுத்து,  தன்  கையிலே  சுத்தியைப்  பிடித்துக்  கொண்டு,  மெள்ள  அவனண்டையில்  வந்து,  அவன்  நெற்றியிலே  அந்த  ஆணியை  அடித்துப்போட்டாள்;  அது  உருவிப்போய்,  தரையிலே  புதைந்தது;  அப்பொழுது  ஆயாசமாய்த்  தூங்கின  அவன்  செத்துப்போனான்.  {Judg  4:21}

 

பின்பு  சிசெராவைத்<Sisera>  தொடருகிற  பாராக்<Barak>  வந்தான்;  அப்பொழுது  யாகேல்<Jael>  வெளியே  அவனுக்கு  எதிர்கொண்டுபோய்:  வாரும்,  நீர்  தேடுகிற  மனுஷனை  உமக்குக்  காண்பிப்பேன்  என்று  சொன்னாள்;  அவன்  அவளிடத்திற்கு  வந்தபோது,  இதோ,  சிசெரா<Sisera>  செத்துக்கிடந்தான்;  ஆணி  அவன்  நெறியில்  அடித்திருந்தது.  {Judg  4:22}

 

இப்படி  தேவன்  அந்நாளிலே  கானானியரின்<Canaan>  ராஜாவாகிய  யாபீனை<Jabin>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாகத்  தாழ்த்தினார்.  {Judg  4:23}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  கை  கானானியரின்<Canaan>  ராஜாவாகிய  யாபீனை<Jabin>  நிர்மூலமாக்குமட்டும்  அவன்மேல்  பலத்துக்  கொண்டேயிருந்தது.  {Judg  4:24}

 

அந்நாளிலே  தெபொராளும்<Deborah>  அபினோகாமின்<Abinoam>  குமாரன்  பாராக்கும்<Barak>  பாடினதாவது:  {Judg  5:1}

 

கர்த்தர்  இஸ்ரவேலுக்காக<Israel>  நீதியைச்  சரிக்கட்டினதினிமித்தமும்,  ஜனங்கள்  மனப்பூர்வமாய்த்  தங்களை  ஒப்புக்கொடுத்ததினிமித்தமும்  அவரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Judg  5:2}

 

ராஜாக்களே,  கேளுங்கள்;  அதிபதிகளே,  செவிகொடுங்கள்;  நான்  கர்த்தரைப்  பாடி,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  {Judg  5:3}

 

கர்த்தாவே,  நீர்  சேயீரிலிருந்து<Seir>  புறப்பட்டு,  ஏதோமின்<Edom>  வெளியிலிருந்து  நடந்துவருகையில்,  பூமி  அதிர்ந்தது,  வானம்  சொரிந்தது,  மேகங்களும்  தண்ணீராய்ப்  பொழிந்தது.  {Judg  5:4}

 

கர்த்தருக்கு  முன்பாகப்  பர்வதங்கள்  கரைந்தது;  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  சீனாயும்<Sinai>  கரைந்தது.  {Judg  5:5}

 

ஆனாத்தின்<Anath>  குமாரனாகிய  சம்காரின்<Shamgar>  நாட்களிலும்,  யாகேலின்<Jael>  நாட்களிலும்,  பெரும்பாதைகள்  பாழாய்க்  கிடந்தது;  வழி  நடக்கிறவர்கள்  பக்கவழியாய்  நடந்தார்கள்.  {Judg  5:6}

 

தெபொராளாகிய<Deborah>  நான்  எழும்புமளவும்,  இஸ்ரவேலிலே<Israel>  நான்  தாயாக  எழும்புமளவும்,  கிராமங்கள்  பாழாய்ப்போயின,  இஸ்ரவேலின்<Israel>  கிராமங்கள்  பாழாய்ப்போயின.  {Judg  5:7}

 

நூதன  தேவர்களைத்  தெரிந்துகொண்டார்கள்;  அப்பொழுது  யுத்தம்  வாசல்வரையும்  வந்தது;  இஸ்ரவேலிலே<Israel>  நாற்பதினாயிரம்பேருக்குள்ளே  கேடகமும்  ஈட்டியும்  காணப்பட்டதுண்டோ?  {Judg  5:8}

 

ஜனங்களுக்குள்ளே  தங்களை  மனப்பூர்வமாய்  ஒப்புக்கொடுத்த  இஸ்ரவேலின்<Israel>  அதிபதிகளை  என்  இருதயம்  நாடுகிறது;  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  {Judg  5:9}

 

வெள்ளைக்  கழுதைகளின்மேல்  ஏறுகிறவர்களே,  நியாயஸ்தலத்தில்  வீற்றிருக்கிறவர்களே,  வழியில்  நடக்கிறவர்களே,  இதைப்  பிரஸ்தாபியுங்கள்.  {Judg  5:10}

 

தண்ணீர்  மொண்டுகொள்ளும்  இடங்களில்  வில்வீரரின்  இரைச்சலுக்கு  நீங்கினவர்கள்  அங்கே  கர்த்தரின்  நீதிநியாயங்களையும்,  அவர்  இஸ்ரவேலிலுள்ள<Israel>  தமது  கிராமங்களுக்குச்  செய்த  நீதிநியாயங்களையுமே  பிரஸ்தாபப்படுத்துவார்கள்;  அதுமுதல்  கர்த்தரின்  ஜனங்கள்  ஒலிமுகவாசல்களிலே  போய்  இறங்குவார்கள்.  {Judg  5:11}

 

விழி,  விழி,  தெபொராளே<Deborah>,  விழி,  விழி,  பாட்டுப்பாடு;  பாராக்கே<Barak>,  எழும்பு;  அபினோகாமின்<Abinoam>  குமாரனே,  உன்னைச்  சிறையாக்கினவர்களைச்  சிறையாக்கிக்  கொண்டுபோ.  {Judg  5:12}

 

மீதியாயிருந்தவர்கள்  ஜனத்தின்  பிரபுக்களை  ஆளும்படி  செய்தார்;  கர்த்தர்  எனக்குப்  பராக்கிரமசாலிகளின்மேல்  ஆளுகை  தந்தார்.  {Judg  5:13}

 

அமலேக்குக்கு<Amalek>  விரோதமாக  இவர்களுடைய  வேர்  எப்பிராயீமிலிருந்து<Ephraim>  துளிர்த்தது;  உன்  ஜனங்களுக்குள்ளே  பென்யமீன்<Benjamin>  மனுஷர்  உனக்குப்  பின்சென்றார்கள்;  மாகீரிலிருந்து<Machir>  அதிபதிகளும்,  செபுலோனிலிருந்து<Zebulun>  எழுதுகோலைப்  பிடிக்கிறவர்களும்  இறங்கிவந்தார்கள்.  {Judg  5:14}

 

இசக்காரின்<Issachar>  பிரபுக்களும்  தெபொராளோடே<Deborah>  இருந்தார்கள்;  பாராக்கைப்போல<Barak>  இசக்கார்<Issachar>  மனுஷரும்  பள்ளத்தாக்கில்  கால்நடையாய்  அனுப்பப்பட்டுப்  போனார்கள்;  ரூபனின்<Reuben>  பிரிவினைகளால்  உண்டான  இருதயத்தின்  நினைவுகள்  மிகுதி.  {Judg  5:15}

 

மந்தைகளின்  சத்தத்தைக்  கேட்க,  நீ  தொழுவங்களின்  நடுவே  இருந்துவிட்டதென்ன?  ரூபனின்<Reuben>  பிரிவினைகளால்  மனோவிசாரங்கள்  மிகுதி.  {Judg  5:16}

 

கீலேயாத்<Gilead>  மனுஷர்  யோர்தானுக்கு<Jordan>  அக்கரையிலே  இருந்துவிட்டார்கள்;  தாண்<Dan>  மனுஷர்  கப்பல்களில்  தங்கியிருந்ததென்ன?  ஆசேர்<Asher>  மனுஷர்  கடற்கரையிலே  தங்கி,  தங்கள்  குடாக்களில்  தாபரித்தார்கள்.  {Judg  5:17}

 

செபுலோனும்<Zebulun>  நப்தலியும்<Naphtali>  போர்க்களத்து  முனையிலே  தங்கள்  உயிரை  எண்ணாமல்  மரணத்துக்குத்  துணிந்து  நின்றார்கள்.  {Judg  5:18}

 

ராஜாக்கள்  வந்து  யுத்தம்பண்ணினார்கள்;  அப்பொழுது  கானானியரின்<Canaan>  ராஜாக்கள்  மெகிதோவின்<Megiddo>  தண்ணீர்  அருகான  தானாக்கிலே<Taanach>  யுத்தம்பண்ணினார்கள்;  அவர்களுக்குத்  திரவியக்கொள்ளை  கிடைக்கவில்லை.  {Judg  5:19}

 

வானத்திலிருந்து  யுத்தம்  உண்டாயிற்று;  நட்சத்திரங்கள்  தங்கள்  அயனங்களிலிருந்து  சிசெராவோடே<Sisera>  யுத்தம்பண்ணின.  {Judg  5:20}

 

கீசோன்<Kishon>  நதி,  பூர்வ  நதியாகிய  கீசோன்<Kishon>  நதியே,  அவர்களை  அடித்துக்கொண்டுபோயிற்று;  என்  ஆத்துமாவே,  நீ  பலவான்களை  மிதித்தாய்.  {Judg  5:21}

 

அப்பொழுது  குதிரைகளின்  குளம்புகள்,  பாய்ச்சலினாலே,  பலவான்களின்  பாய்ச்சலினாலேயே,  பிளந்துபோயின.  {Judg  5:22}

 

மேரோசைச்<Meroz>  சபியுங்கள்;  அதின்  குடிகளைச்  சபிக்கவே  சபியுங்கள்  என்று  கர்த்தருடைய  தூதனானவர்  சொல்லுகிறார்;  அவர்கள்  கர்த்தர்  பட்சத்தில்  துணைநிற்க  வரவில்லை;  பராக்கிரமசாலிகளுக்கு  விரோதமாய்  அவர்கள்  கர்த்தர்  பட்சத்தில்  துணைநிற்க  வரவில்லையே.  {Judg  5:23}

 

ஸ்திரீகளுக்குள்ளே  கேனியனான<Kenite>  ஏபேரின்<Heber>  மனைவியாகிய  யாகேல்<Jael>  ஆசீர்வதிக்கப்பட்டவள்;  கூடாரத்தில்  வாசமாயிருக்கிற  ஸ்திரீகளுக்குள்ளே  அவள்  ஆசீர்வதிக்கப்பட்டவளே.  {Judg  5:24}

 

தண்ணீரைக்  கேட்டான்,  பாலைக்  கொடுத்தாள்;  ராஜாக்களின்  கிண்ணியிலே  வெண்ணெயைக்  கொண்டுவந்து  கொடுத்தாள்.  {Judg  5:25}

 

தன்  கையால்  ஆணியையும்,  தன்  வலதுகையால்  தொழிலாளரின்  சுத்தியையும்  பிடித்து,  சிசெராவை<Sisera>  அடித்தாள்;  அவன்  நெற்றியில்  உருவக்கடாவி,  அவன்  தலையை  உடைத்துப்போட்டாள்.  {Judg  5:26}

 

அவள்  கால்  அருகே  அவன்  மடங்கி  விழுந்துகிடந்தான்,  அவள்  கால்  அருகே  மடங்கி  விழுந்தான்;  அவன்  எங்கே  மடங்கி  விழுந்தானோ  அங்கே  மடிந்து  கிடந்தான்.  {Judg  5:27}

 

சிசெராவின்<Sisera>  தாய்  ஜன்னலில்  நின்று  பலகணிவழியாய்ப்  பார்த்துக்கொண்டிருந்து:  அவனுடைய  ரதம்  வராமல்  பிந்திப்போனதென்ன?  அவனுடைய  ரதங்களின்  ஓட்டம்  தாமதிக்கிறதென்ன  என்று  புலம்பினாள்.  {Judg  5:28}

 

அவளுடைய  நாயகிகளில்  புத்திசாலிகள்  அவளுக்கு  உத்தரவுசொன்னதுமன்றி,  அவள்  தானும்  தனக்கு  மறுமொழியாக:  {Judg  5:29}

 

அவர்கள்  கொள்ளையைக்  கண்டு  பிடிக்கவில்லையோ,  அதைப்  பங்கிடவேண்டாமோ,  ஆளுக்கு  இரண்டொரு  பெண்களையும்,  சிசெராவுக்குக்<Sisera>  கொள்ளையிட்ட  பலவருணமான  ஆடைகளையும்,  கொள்ளையிட்ட  பலவருணமான  சித்திரத்  தையலாடைகளையும்,  கொள்ளையிட்டவர்களின்  கழுத்துக்கு  இருபுறமும்  பொருந்தும்  சித்திரத்தையலுள்ள  பலவருணமான  ஆடையையும்  கொடுக்கவேண்டாமோ  என்றாள்.  {Judg  5:30}

 

கர்த்தாவே,  உம்மைப்  பகைக்கிற  யாவரும்  இப்படியே  அழியக்கடவர்கள்;  அவரில்  அன்புகூருகிறவர்களோ,  வல்லமையோடே  உதிக்கிற  சூரியனைப்போல  இருக்கக்கடவர்கள்  என்று  பாடினார்கள்.  பின்பு  தேசம்  நாற்பது  வருஷம்  அமைதலாயிருந்தது.  {Judg  5:31}

 

பின்னும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தார்கள்;  அப்பொழுது  கர்த்தர்  அவர்களை  ஏழு  வருஷம்  மீதியானியரின்<Midian>  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  {Judg  6:1}

 

மீதியானியரின்<Midian>  கை  இஸ்ரவேலின்மேல்<Israel>  பலத்துக்கொண்டபடியால்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மீதியானியர்<Midianites>  நிமித்தம்  தங்களுக்கு  மலைகளிலுள்ள  கெபிகளையும்  குகைகளையும்  அரணான  ஸ்தலங்களையும்  அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.  {Judg  6:2}

 

இஸ்ரவேலர்<Israel>  விதை  விதைத்திருக்கும்போது,  மீதியானியரும்<Midianites>  அமலேக்கியரும்<Amalekites>  கிழக்கத்திப்  புத்திரரும்  அவர்களுக்கு  விரோதமாய்  எழும்பி  வந்து;  {Judg  6:3}

 

அவர்களுக்கு  எதிரே  பாளயமிறங்கி,  காசாவின்<Gaza>  எல்லைமட்டும்  நிலத்தின்  விளைச்சலைக்  கெடுத்து,  இஸ்ரவேலிலே<Israel>  ஆகாரத்தையாகிலும்,  ஆடுமாடுகள்  கழுதைகளையாகிலும்  வைக்காதே  போவார்கள்.  {Judg  6:4}

 

அவர்கள்  தங்கள்  மிருகஜீவன்களோடும்,  தங்கள்  கூடாரங்களோடும்,  வெட்டுக்கிளிகளைப்போல்  திரளாய்  வருவார்கள்;  அவர்களும்  அவர்கள்  ஒட்டகங்களும்  எண்ணிமுடியாததாயிருக்கும்;  இந்தப்பிரகாரமாக  தேசத்தைக்  கெடுத்துவிட  அதிலே  வருவார்கள்.  {Judg  6:5}

 

இப்படி  மீதியானியராலே<Midianites>  இஸ்ரவேலர்<Israel>  மிகவும்  சிறுமைப்பட்டார்கள்;  அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டார்கள்.  {Judg  6:6}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மீதியானியர்<Midianites>  நிமித்தம்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டபோது,  {Judg  6:7}

 

கர்த்தர்  ஒரு  தீர்க்கதரிசியை  அவர்களிடத்திற்கு  அனுப்பினார்;  அவன்  அவர்களை  நோக்கி:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நான்  உங்களை  எகிப்திலிருந்து<Egypt>  வரவும்,  அடிமைத்தன  வீட்டிலிருந்து  புறப்படவும்  செய்து,  {Judg  6:8}

 

எகிப்தியர்<Egyptians>  கையினின்றும்,  உங்களை  ஒடுக்கின  யாவருடைய  கையினின்றும்  உங்களை  இரட்சித்து,  அவர்களை  உங்களுக்கு  முன்பாகத்  துரத்தி,  அவர்கள்  தேசத்தை  உங்களுக்குக்  கொடுத்து,  {Judg  6:9}

 

நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்றும்,  நீங்கள்  குடியிருக்கும்  அவர்கள்  தேசத்திலுள்ள  எமோரியருடைய<Amorites>  தேவர்களுக்குப்  பயப்படாதிருங்கள்  என்றும்,  உங்களுக்குச்  சொன்னேன்;  நீங்களோ  என்  சொல்லைக்  கேளாதேபோனீர்கள்  என்கிறார்  என்று  சொன்னான்.  {Judg  6:10}

 

அதற்குப்பின்பு  கர்த்தருடைய  தூதனானவர்  வந்து,  அபியேஸ்ரியனான<Abiezrite>  யோவாசின்<Joash>  ஊராகிய  ஒப்ராவிலிருக்கும்<Ophrah>  ஒரு  கர்வாலி  மரத்தின்கீழ்  உட்கார்ந்தார்;  அப்பொழுது  அவனுடைய  குமாரன்  கிதியோன்<Gideon>  கோதுமையை  மீதியானியரின்<Midianites>  கைக்குத்  தப்புவிக்கிறதற்காக,  ஆலைக்குச்  சமீபமாய்  அதைப்  போரடித்தான்.  {Judg  6:11}

 

கர்த்தருடைய  தூதனானவர்  அவனுக்குத்  தரிசனமாகி:  பராக்கிரமசாலியே  கர்த்தர்  உன்னோடே  இருக்கிறார்  என்றார்.  {Judg  6:12}

 

அப்பொழுது  கிதியோன்<Gideon>  அவரை  நோக்கி:    என்  ஆண்டவனே,  கர்த்தர்  எங்களோடே  இருந்தால்,  இவையெல்லாம்  எங்களுக்கு  நேரிடுவானேன்?  கர்த்தர்  எங்களை  எகிப்திலிருந்து<Egypt>  கொண்டுவரவில்லையா  என்று  எங்கள்  பிதாக்கள்  எங்களுக்கு  விவரித்துச்சொன்ன  அவருடைய  அற்புதங்களெல்லாம்  எங்கே?  இப்பொழுது  கர்த்தர்  எங்களைக்  கைவிட்டு,  மீதியானியர்<Midianites>  கையில்  எங்களை  ஒப்புக்கொடுத்தாரே  என்றான்.  {Judg  6:13}

 

அப்பொழுது  கர்த்தர்  அவனை  நோக்கிப்பார்த்து:  உனக்கு  இருக்கிற  இந்தப்  பலத்தோடே  போ;  நீ  இஸ்ரவேலை<Israel>  மீதியானியரின்<Midianites>  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிப்பாய்;  உன்னை  அனுப்புகிறவர்  நான்  அல்லவா  என்றார்.  {Judg  6:14}

 

அதற்கு  அவன்:    என்  ஆண்டவரே,  நான்  இஸ்ரவேலை<Israel>  எதினாலே  ரட்சிப்பேன்;  இதோ,  மனாசேயில்<Manasseh>  என்  குடும்பம்  மிகவும்  எளியது;  என்  தகப்பன்  வீட்டில்  நான்  எல்லாரிலும்  சிறியவன்  என்றான்.  {Judg  6:15}

 

அதற்குக்  கர்த்தர்:  நான்  உன்னோடேகூட  இருப்பேன்;  ஒரே  மனுஷனை  முறிய  அடிப்பதுபோல  நீ  மீதியானியரை<Midianites>  முறிய  அடிப்பாய்  என்றார்.  {Judg  6:16}

 

அப்பொழுது  அவன்:  உம்முடைய  கண்களில்  இப்பொழுதும்  எனக்குத்  தயை  கிடைத்ததானால்  என்னோடே  பேசுகிறவர்  தேவரீர்தான்  என்று  எனக்கு  ஒரு  அடையாளத்தைக்  காட்டவேண்டும்.  {Judg  6:17}

 

நான்  உம்மிடத்திற்கு  என்  காணிக்கையைக்  கொண்டுவந்து,  உமக்கு  முன்பாக  வைக்குமளவும்,  இவ்விடம்  விட்டுப்  போகாதிருப்பீராக  என்றான்;  அதற்கு  அவர்:  நீ  திரும்பிவருமட்டும்  நான்  இருப்பேன்  என்றார்.  {Judg  6:18}

 

உடனே  கிதியோன்<Gideon>  உள்ளே  போய்,  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியையும்  ஒரு  மரக்கால்  மாவிலே  புளிப்பில்லாத  அப்பங்களையும்  ஆயத்தப்படுத்தி,  இறைச்சியை  ஒரு  கூடையில்  வைத்து,  ஆணத்தை  ஒரு  கிண்ணத்தில்  வார்த்து,  அதை  வெளியே  கர்வாலிமரத்தின்  கீழிருக்கிற  அவரிடத்தில்  கொண்டுவந்து  வைத்தான்.  {Judg  6:19}

 

அப்பொழுது  தேவனுடைய  தூதனானவர்  அவனை  நோக்கி:  நீ  இறைச்சியையும்  புளிப்பில்லாத  அப்பங்களையும்  எடுத்து,  இந்தக்  கற்பாறையின்மேல்  வைத்து  ஆணத்தை  ஊற்று  என்றார்;  அவன்  அப்படியே  செய்தான்.  {Judg  6:20}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  தமது  கையிலிருந்த  கோலின்  நுனியை  நீட்டி,  இறைச்சியையும்  புளிப்பில்லாத  அப்பங்களையும்  தொட்டார்;  அப்பொழுது  அக்கினி  கற்பாறையிலிருந்து  எழும்பி,  இறைச்சியையும்  புளிப்பில்லாத  அப்பங்களையும்  பட்சித்தது;  கர்த்தரின்  தூதனோவென்றால்,  அவன்  கண்களுக்கு  மறைந்துபோனார்.  {Judg  6:21}

 

அப்பொழுது  கிதியோன்<Gideon>,  அவர்  கர்த்தருடைய  தூதன்  என்று  கண்டு:  ஐயோ,  கர்த்தரான  ஆண்டவரே,  நான்  கர்த்தருடைய  தூதனை  முகமுகமாய்க்  கண்டேனே  என்றான்.  {Judg  6:22}

 

அதற்குக்  கர்த்தர்:  உனக்குச்  சமாதானம்;  பயப்படாதே,  நீ  சாவதில்லை  என்று  சொன்னார்.  {Judg  6:23}

 

அங்கே  கிதியோன்<Gideon>  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  அதற்கு  யெகோவா  ஷாலோம்<Jehovahshalom>  என்று  பேரிட்டான்;  அது  இந்நாள்வரைக்கும்  அபியேஸ்ரியரின்<Abiezrites>  ஊராகிய  ஒப்ராவில்<Ophrah>  இருக்கிறது.  {Judg  6:24}

 

அன்று  ராத்திரியிலே  கர்த்தர்  அவனை  நோக்கி:  நீ  உன்  தகப்பனுக்கு  இருக்கிற  காளைகளில்  ஏழு  வயதான  இரண்டாம்  காளையைக்  கொண்டுபோய்,  உன்  தகப்பனுக்கு  இருக்கிற  பாகாலின்<Baal>  பலிபீடத்தைத்  தகர்த்து,  அதின்  அருகேயிருக்கிற  தோப்பை  வெட்டிப்போட்டு,  {Judg  6:25}

 

இந்தக்  கற்பாறை  உச்சியிலே  பாங்கான  ஒரு  இடத்தில்  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  அந்த  இரண்டாம்  காளையைக்  கொண்டுவந்து,  அதை  நீ  வெட்டிப்போட்ட  தோப்பினுடைய  கட்டை  விறகுகளின்மேல்  சர்வாங்க  தகனமாகப்  பலியிடக்கடவாய்  என்றார்.  {Judg  6:26}

 

அப்பொழுது  கிதியோன்<Gideon>,  தன்  வேலையாட்களில்  பத்துப்பேரைச்  சேர்த்து,  கர்த்தர்  தனக்குச்  சொன்னபடியே  செய்தான்;  அவன்  தன்  தகப்பன்  குடும்பத்தாருக்கும்  அந்த  ஊர்  மனுஷருக்கும்  பயப்பட்டபடியினாலே,  அதைப்  பகலிலே  செய்யாமல்,  இரவிலே  செய்தான்.  {Judg  6:27}

 

அந்த  ஊர்  மனுஷர்  காலமே  எழுந்திருந்தபோது,  இதோ,  பாகாலின்<Baal>  பலிபீடம்  தகர்க்கப்பட்டதும்,  அதின்  அருகேயிருந்த  தோப்பு  வெட்டிப்போடப்பட்டதும்,  கட்டப்பட்டிருந்த  பலிபீடத்தின்மேல்  அந்த  இரண்டாம்  காளை  பலியிடப்பட்டதுமாயிருக்க  அவர்கள்  கண்டு;  {Judg  6:28}

 

ஒருவரையொருவர்  நோக்கி:  இந்தக்  காரியத்தைச்  செய்தவன்  யார்  என்றார்கள்;  கேட்டு  விசாரிக்கிறபோது,  யோவாசின்<Joash>  மகன்  கிதியோன்<Gideon>  இதைச்  செய்தான்  என்றார்கள்.  {Judg  6:29}

 

அப்பொழுது  ஊரார்  யோவாசை<Joash>  நோக்கி:  உன்  மகனை  வெளியே  கொண்டுவா;  அவன்  பாகாலின்<Baal>  பலிபீடத்தைத்  தகர்த்து,  அதின்  அருகேயிருந்த  தோப்பை  வெட்டிப்போட்டான்,  அவன்  சாகவேண்டும்  என்றார்கள்.  {Judg  6:30}

 

யோவாஸ்<Joash>  தனக்கு  விரோதமாக  நிற்கிற  அனைவரையும்  பார்த்து:  நீங்களா  பாகாலுக்காக<Baal>  வழக்காடுவீர்கள்?  நீங்களா  அதை  இரட்சிப்பீர்கள்?  அதற்காக  வழக்காடுகிறவன்  இன்று  காலையிலேதானே  சாகக்கடவன்;  அது  தேவனானால்  தன்  பலிபீடத்தைத்  தகர்த்ததினிமித்தம்,  அது  தானே  தனக்காக  வழக்காடட்டும்  என்றான்.  {Judg  6:31}

 

தன்  பலிபீடத்தைத்  தகர்த்ததினிமித்தம்  பாகால்<Baal>  அவனோடே  வழக்காடட்டும்  என்று  சொல்லி,  அந்நாளிலே  அவனுக்கு  யெருபாகால்<Jerubbaal>  என்று  பேரிடப்பட்டது.  {Judg  6:32}

 

மீதியானியரும்<Midianites>  அமலேக்கியரும்<Amalekites>  கிழக்கத்திப்  புத்திரர்  யாவரும்  ஏகமாய்க்  கூடி,  ஆற்றைக்  கடந்துவந்து,  யெஸ்ரயேல்<Jezreel>  பள்ளத்தாக்கிலே  பாளயமிறங்கினார்கள்.  {Judg  6:33}

 

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவியானவர்  கிதியோன்மேல்<Gideon>  இறங்கினார்;  அவன்  எக்காளம்  ஊதி,  அபியேஸ்ரியரைக்<Abiezer>  கூப்பிட்டு,  தனக்குப்  பின்செல்லும்படி  செய்து,  {Judg  6:34}

 

மனாசே<Manasseh>  நாடெங்கும்  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  அவர்களையும்  கூப்பிட்டு,  தனக்குப்  பின்செல்லும்படி  செய்து,  ஆசேர்<Asher>,  செபுலோன்<Zebulun>,  நப்தலி<Naphtali>  நாடுகளிலும்  ஆட்களை  அனுப்பினான்;  அவர்களும்  அவனுக்கு  எதிர்கொண்டு  வந்தார்கள்.  {Judg  6:35}

 

அப்பொழுது  கிதியோன்<Gideon>  தேவனை  நோக்கி:  தேவரீர்  சொன்னபடி  என்  கையினாலே  இஸ்ரவேலை<Israel>  இரட்சிக்கவேண்டுமானால்,  {Judg  6:36}

 

இதோ,  நான்  மயிருள்ள  ஒரு  தோலைக்  களத்திலே  போடுகிறேன்;  பனி  தோலின்மேல்மாத்திரம்  பெய்து,  பூமியெல்லாம்  காய்ந்திருந்தால்,  அப்பொழுது  தேவரீர்  சொன்னபடி  இஸ்ரவேலை<Israel>  என்  கையினால்  இரட்சிப்பீர்  என்று  அதினாலே  அறிவேன்  என்றான்.  {Judg  6:37}

 

அப்படியே  ஆயிற்று.  அவன்  மறுநாள்  காலமே  எழுந்திருந்து,  தோலைக்  கசக்கி,  அதிலிருந்த  பனிநீரை  ஒரு  கிண்ணம்  நிறையப்  பிழிந்தான்.  {Judg  6:38}

 

அப்பொழுது  கிதியோன்<Gideon>  தேவனை  நோக்கி:  நான்  இன்னும்  ஒருவிசைமாத்திரம்  பேசுகிறேன்,  உமது  கோபம்  என்மேல்  மூளாதிருப்பதாக;  தோலினாலே  நான்  இன்னும்  ஒரேவிசை  சோதனைபண்ணட்டும்;  தோல்மாத்திரம்  காய்ந்திருக்கவும்  பூமியெங்கும்  பனி  பெய்திருக்கவும்  கட்டளையிடும்  என்றான்.  {Judg  6:39}

 

அப்படியே  தேவன்  அன்று  ராத்திரி  செய்தார்;  தோல்மாத்திரம்  காய்ந்திருந்து,  பூமியெங்கும்  பனி  பெய்திருந்தது.  {Judg  6:40}

 

அப்பொழுது  கிதியோனாகிய<Gideon>  யெருபாகாலும்<Jerubbaal>  அவனோடிருந்த  ஜனங்கள்  யாவரும்  காலமே  எழுந்து  புறப்பட்டு,  ஆரோத்<Harod>  என்னும்  நீரூற்றின்  கிட்டப்  பாளயமிறங்கினார்கள்;  மீதியானியரின்<Midianites>  பாளயம்  அவனுக்கு  வடக்கே  மோரே<Moreh>  மேட்டிற்குப்  பின்னான  பள்ளத்தாக்கிலே  இருந்தது.  {Judg  7:1}

 

அப்பொழுது  கர்த்தர்  கிதியோனை<Gideon>  நோக்கி:  நான்  மீதியானியரை<Midianites>  உன்னோடிருக்கிற  ஜனத்தின்  கையில்  ஒப்புக்கொடுக்கிறதற்கு  அவர்கள்  மிகுதியாயிருக்கிறார்கள்;  என்  கை  என்னை  ரட்சித்தது  என்று  இஸ்ரவேல்<Israel>  எனக்கு  விரோதமாக  வீம்பு  பேசுகிறதற்கு  இடமாகும்.  {Judg  7:2}

 

ஆகையால்  பயமும்  திகிலும்  உள்ளவன்  எவனோ  அவன்  திரும்பி,  கீலேயாத்<Gilead>  மலைகளிலிருந்து  விரைவாய்  ஓடிப்போகக்கடவன்  என்று,  நீ  ஜனங்களின்  செவிகள்  கேட்கப்  பிரசித்தப்படுத்து  என்றார்;  அப்பொழுது  ஜனத்தில்  இருபத்தீராயிரம்  பேர்  திரும்பிப்  போய்விட்டார்கள்;  பதினாயிரம்பேர்  மீதியாயிருந்தார்கள்.  {Judg  7:3}

 

கர்த்தர்  கிதியோனை<Gideon>  நோக்கி:  ஜனங்கள்  இன்னும்  அதிகம்,  அவர்களைத்  தண்ணீரண்டைக்கு  இறங்கிப்போகப்பண்ணு;  அங்கே  அவர்களைப்  பரிட்சித்துக்காட்டுவேன்;  உன்னோடேகூட  வரலாம்  என்று  நான்  யாரைக்  குறிக்கிறேனோ,  அவன்  உன்னோடேகூட  வரக்கடவன்;  உன்னோடேகூட  வரலாகாது  என்று  நான்  யாரைக்  குறிக்கிறேனோ,  அவன்  உன்னோடேகூட  வராதிருக்கக்கடவன்  என்றார்.  {Judg  7:4}

 

அப்படியே  அவன்  ஜனங்களைத்  தண்ணீரண்டைக்கு  இறங்கிப்போகப்  பண்ணினான்;  அப்பொழுது  கர்த்தர்  கிதியோனை<Gideon>  நோக்கி:  தண்ணீரை  ஒரு  நாய்  நக்கும்  பிரகாரமாக  அதைத்  தன்  நாவினாலே  நக்குகிறவன்  எவனோ  அவனைத்  தனியேயும்,  குடிக்கிறதற்கு  முழங்கால்  ஊன்றிக்  குனிகிறவன்  எவனோ,  அவனைத்  தனியேயும்  நிறுத்து  என்றார்.  {Judg  7:5}

 

தங்கள்  கையால்  அள்ளி,  தங்கள்  வாய்க்கெடுத்து,  நக்கிக்கொண்டவர்களின்  லக்கம்  முந்நூறுபேர்;  மற்ற  ஜனங்களெல்லாம்  தண்ணீர்  குடிக்கிறதற்கு  முழங்கால்  ஊன்றிக்  குனிந்தார்கள்.  {Judg  7:6}

 

அப்பொழுது  கர்த்தர்  கிதியோனை<Gideon>  நோக்கி:  நக்கிக்குடித்த  அந்த  முந்நூறுபேராலே  நான்  உங்களை  இரட்சித்து,  மீதியானியரை<Midianites>  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்,  மற்ற  ஜனங்களெல்லாரும்  தங்கள்  தங்கள்  இடத்திற்குப்  போகக்கடவர்கள்  என்றார்.  {Judg  7:7}

 

அப்பொழுது  ஜனங்கள்  தங்கள்  கையில்  தின்பண்டங்களையும்  எக்காளங்களையும்  எடுத்துக்கொண்டார்கள்;  மற்ற  இஸ்ரவேலரெல்லாரையும்<Israel>  தங்கள்  தங்கள்  கூடாரங்களுக்கு  அனுப்பிவிட்டு,  அந்த  முந்நூறு  பேரைமாத்திரம்  வைத்துக்கொண்டான்;  மீதியானியரின்<Midian>  சேனை  அவனுக்குத்  தாழ்விடமான  பள்ளத்தாக்கில்  இருந்தது.  {Judg  7:8}

 

அன்று  ராத்திரி  கர்த்தர்  அவனை  நோக்கி:  நீ  எழுந்து,  அந்தச்  சேனையினிடத்திற்குப்  போ;  அதை  உன்  கையில்  ஒப்புக்கொடுத்தேன்.  {Judg  7:9}

 

போகப்  பயப்பட்டாயானால்,  முதல்  நீயும்  உன்  வேலைக்காரனாகிய  பூராவும்<Phurah>  சேனையினிடத்திற்குப்  போய்,  {Judg  7:10}

 

அங்கே  என்ன  பேசுகிறார்கள்  என்று  கேள்;  பின்பு  சேனையிடத்திற்குப்  போக,  உன்  கைகள்  திடப்படும்  என்றார்;  அப்படியே  அவனும்  அவன்  வேலைக்காரனாகிய  பூராவும்<Phurah>  சேனையின்  முன்னணியிலே  ஜாமம்  காக்கிறவர்களின்  இடமட்டும்  போனார்கள்.  {Judg  7:11}

 

மீதியானியரும்<Midianites>,  அமலேக்கியரும்<Amalekites>,  சகல  கிழக்கத்திப்  புத்திரரும்,  வெட்டுக்கிளிகளைப்  போலத்  திரளாய்ப்  பள்ளத்தாக்கிலே  படுத்துக்கிடந்தார்கள்;  அவர்களுடைய  ஒட்டகங்களுக்கும்  கணக்கில்லை,  கடற்கரை  மணலைப்போலத்  திரளாயிருந்தது.  {Judg  7:12}

 

கிதியோன்<Gideon>  வந்தபோது,  ஒருவன்  மற்றொருவனுக்கு  ஒரு  சொப்பனத்தைச்  சொன்னான்.  அதாவது:  இதோ  ஒரு  சொப்பனத்தைக்  கண்டேன்;  சுட்டிருந்த  ஒரு  வாற்கோதுமை  அப்பம்  மீதியானியரின்<Midian>  பாளயத்திற்கு  உருண்டுவந்தது,  அது  கூடாரமட்டும்  வந்தபோது,  அதை  விழத்தள்ளிக்  கவிழ்த்துப்போட்டது,  கூடாரம்  விழுந்துகிடந்தது  என்றான்.  {Judg  7:13}

 

அப்பொழுது  மற்றவன்:  இது  யோவாசின்<Joash>  குமாரனாகிய  கிதியோன்<Gideon>  என்னும்  இஸ்ரவேலனுடைய<Israel>  பட்டயமே  அல்லாமல்  வேறல்ல;  தேவன்  மீதியானியரையும்<Midian>,  இந்தச்  சேனை  அனைத்தையும்  அவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தார்  என்றான்.  {Judg  7:14}

 

கிதியோன்<Gideon>  அந்தச்  சொப்பனத்தையும்  அதின்  வியார்த்தியையும்  கேட்டபோது,  அவன்  பணிந்துகொண்டு,  இஸ்ரவேலின்<Israel>  பாளயத்திற்குத்  திரும்பிவந்து:  எழுந்திருங்கள்,  கர்த்தர்  மீதியானியரின்<Midian>  பாளயத்தை  உங்கள்  கைகளில்  ஒப்புக்கொடுத்தார்  என்று  சொல்லி,  {Judg  7:15}

 

அந்த  முந்நூறுபேரை  மூன்று  படையாக  வகுத்து,  அவர்கள்  ஒவ்வொருவன்  கையிலும்  ஒரு  எக்காளத்தையும்,  வெறும்  பானையையும்,  அந்தப்  பானைக்குள்  வைக்கும்  தீவட்டியையும்  கொடுத்து,  {Judg  7:16}

 

அவர்களை  நோக்கி:  நான்  செய்வதைப்  பார்த்து,  அப்படியே  நீங்களும்  செய்யுங்கள்.  இதோ,  நான்  பாளயத்தின்  முன்னணியில்  வந்திருக்கும்போது,  நான்  எப்படிச்  செய்கிறேனோ  அப்படியே  நீங்களும்  செய்யவேண்டும்.  {Judg  7:17}

 

நானும்  என்னோடே  இருக்கும்  சகலமானபேரும்  எக்காளம்  ஊதும்போது,  நீங்களும்  பாளயத்தைச்  சுற்றி  எங்கும்  எக்காளங்களை  ஊதி,  கர்த்தருடைய  பட்டயம்  கிதியோனுடைய<Gideon>  பட்டயம்  என்பீர்களாக  என்று  சொன்னான்.  {Judg  7:18}

 

நடுஜாமத்தின்  துவக்கத்தில்,  ஜாமக்காரரை  மாற்றிவைத்தபின்பு,  கிதியோனும்<Gideon>  அவனோடிருந்த  நூறுபேரும்  அந்த  ஜாமத்தின்  துவக்கத்திலே  பாளயத்தின்  முன்னணியில்  வந்து,  எக்காளங்களை  ஊதி,  தங்கள்  கையிலிருந்த  பானைகளை  உடைத்தார்கள்.  {Judg  7:19}

 

மூன்று  படைகளின்  மனுஷரும்  எக்காளங்களை  ஊதி,  பானைகளை  உடைத்து,  தீவட்டிகளைத்  தங்கள்  இடதுகைகளிலும்,  ஊதும்  எக்காளங்களைத்  தங்கள்  வலதுகைகளிலும்  பிடித்துக்கொண்டு,  கர்த்தருடைய  பட்டயம்  கிதியோனுடைய<Gideon>  பட்டயம்  என்று  சத்தமிட்டு,  {Judg  7:20}

 

பாளயத்தைச்  சுற்றிலும்  அவரவர்  தங்கள்  நிலையிலே  நின்றார்கள்;  அப்பொழுது  பாளயத்தில்  இருந்தவர்கள்  எல்லாரும்  சிதறிக்  கூக்குரலிட்டு,  ஓடிப்போனார்கள்.  {Judg  7:21}

 

முந்நூறுபேரும்  எக்காளங்களை  ஊதுகையில்,  கர்த்தர்  பாளயமெங்கும்  ஒருவர்  பட்டயத்தை  ஒருவருக்கு  விரோதமாய்  ஓங்கப்பண்ணினார்;  சேனையானது  சேரோத்திலுள்ள<Zererath>  பெத்சித்தாமட்டும்<Bethshittah>,  தாபாத்திற்குச்<Tabbath>  சமீபமான  ஆபேல்மேகொலாவின்<Abelmeholah>  எல்லைமட்டும்  ஓடிப்போயிற்று.  {Judg  7:22}

 

அப்பொழுது  நப்தலி<Naphtali>  மனுஷரும்,  ஆசேர்<Asher>  மனுஷரும்,  மனாசேயின்<Manasseh>  சகல  மனுஷருமாகிய  இஸ்ரவேலர்<Israel>  கூடிவந்து,  மீதியானியரைப்<Midianites>  பின்தொடர்ந்துபோனார்கள்.  {Judg  7:23}

 

கிதியோன்<Gideon>  எப்பிராயீம்<Ephraim>  மலைகளெங்கும்  ஆட்களை  அனுப்பி:  மீதியானியருக்கு<Midianites>  விரோதமாயிறங்கி,  பெத்தாபரா<Bethbarah>  இருக்கும்  யோர்தான்மட்டும்<Jordan>  வந்து,  அவர்களுக்கு  முந்தித்  துறைகளைக்  கட்டிக்கொள்ளுங்கள்  என்று  சொல்லச்சொன்னான்;  அப்படியே  எப்பிராயீமின்<Ephraim>  மனுஷர்  எல்லாரும்  கூடி,  பெத்தாபரா<Bethbarah>  இருக்கும்  யோர்தான்மட்டும்<Jordan>  வந்து,  துறைகளைக்  கட்டிக்கொண்டு,  {Judg  7:24}

 

மீதியானியரின்<Midianites>  இரண்டு  அதிபதிகளாகிய  ஓரேபையும்<Oreb>  சேபையும்<Zeeb>  பிடித்து,  ஓரேபை<Oreb>  ஓரேப்<Oreb>  என்னப்பட்ட  கன்மலையிலும்,  சேபை<Zeeb>  சேப்<Zeeb>  என்னப்பட்ட  ஆலையிலும்  கொன்றுபோட்டு,  மீதியானியரைத்<Midian>  துரத்தி,  ஓரேப்<Oreb>  சேப்<Zeeb>  என்பவர்களின்  தலைகளை  யோர்தானுக்கு<Jordan>  இக்கரையிலிருந்த  கிதியோனிடத்துக்குக்<Gideon>  கொண்டுவந்தார்கள்.  {Judg  7:25}

 

அப்பொழுது  எப்பிராயீம்<Ephraim>  மனுஷர்  அவனை  நோக்கி:  நீ  மீதியானியர்மேல்<Midianites>  யுத்தம்பண்ணப்போகிறபோது,  எங்களை  அழைப்பிக்கவில்லையே,  இப்படி  நீ  எங்களுக்குச்  செய்தது  என்ன  என்று,  அவனோடே  பலத்த  வாக்குவாதம்பண்ணினார்கள்.  {Judg  8:1}

 

அதற்கு  அவன்:  நீங்கள்  செய்ததற்கு  நான்  செய்தது  எம்மாத்திரம்?  அபியேஸ்ரியரின்<Abiezer>  திராட்சப்பழத்தின்  முழு  அறுப்பைப்பார்க்கிலும்,  எப்பிராயீமரின்<Ephraim>  மீதியான  அறுப்பு  அதிகம்  அல்லவா?  {Judg  8:2}

 

தேவன்  உங்கள்  கையிலே  மீதியானியரின்<Midian>  அதிபதிகளாகிய  ஓரேபையும்<Oreb>  சேபையும்<Zeeb>  ஒப்புக்கொடுத்தாரே;  நீங்கள்  செய்ததிலும்  நான்  செய்யக்கூடியது  எம்மாத்திரம்  என்றான்;  இந்த  வார்த்தையை  அவன்  சொன்னபோது,  அவன்மேலிருந்த  அவர்களுடைய  கோபம்  ஆறிற்று.  {Judg  8:3}

 

கிதியோன்<Gideon>  யோர்தானுக்கு<Jordan>  வந்தபோது,  அவனும்  அவனோடிருந்த  முந்நூறுபேரும்  அதைக்  கடந்துபோய்,  விடாய்த்திருந்தும்  (சத்துருவை)  பின்தொடர்ந்தார்கள்.  {Judg  8:4}

 

அவன்  சுக்கோத்தின்<Succoth>  மனுஷரை  நோக்கி:  என்னோடிருக்கிற  ஜனத்திற்குச்  சில  அப்பங்களைக்  கொடுங்கள்;  அவர்கள்  விடாய்த்திருக்கிறார்கள்,  நான்  மீதியானியரின்<Midian>  ராஜாக்களாகிய  சேபாவையும்<Zebah>  சல்முனாவையும்<Zalmunna>  பின்தொடருகிறேன்  என்றான்.  {Judg  8:5}

 

அதற்குச்  சுக்கோத்தின்<Succoth>  பிரபுக்கள்:  உன்  சேனைக்கு  நாங்கள்  அப்பம்  கொடுக்கிறதற்குச்  சேபா<Zebah>  சல்முனா<Zalmunna>  என்பவர்களின்  கை  உன்  கைவசமாயிற்றோ  என்றார்கள்.  {Judg  8:6}

 

அப்பொழுது  கிதியோன்<Gideon>  அவர்களை  நோக்கி:  கர்த்தர்  சேபாவையும்<Zebah>  சல்முனாவையும்<Zalmunna>  என்  கையில்  ஒப்புக்கொடுக்கும்போது,  உங்கள்  மாம்சத்தை  வனாந்தரத்தின்  முள்ளுகளாலும்  நெரிஞ்சில்களாலும்  கிழித்துவிடுவேன்  என்று  சொல்லி,  {Judg  8:7}

 

அவ்விடம்  விட்டு,  பெனூவேலுக்குப்<Penuel>  போய்,  அவ்வூராரிடத்தில்  அந்தப்படியே  கேட்டான்;  சுக்கோத்தின்<Succoth>  மனுஷர்  பிரதியுத்தரமாகச்  சொன்னபடியே  பெனூவேலின்<Penuel>  மனுஷரும்  அவனுக்குச்  சொன்னார்கள்.  {Judg  8:8}

 

அப்பொழுது  அவன்,  பெனூவேலின்<Penuel>  மனுஷரைப்  பார்த்து:  நான்  சமாதானத்தோடே  திரும்பிவரும்போது,  இந்தக்  கோபுரத்தை  இடித்துப்போடுவேன்  என்றான்.  {Judg  8:9}

 

சேபாவும்<Zebah>  சல்முனாவும்<Zalmunna>  அவர்களோடேகூட  அவர்களுடைய  சேனைகளும்  ஏறக்குறைய  பதினையாயிரம்பேர்  கர்கோரில்<Karkor>  இருந்தார்கள்;  பட்டயம்  உருவத்தக்க  லட்சத்து  இருபதினாயிரம்பேர்  விழுந்தபடியால்,  கிழக்கத்தியாரின்  சகல  சேனையிலும்  இவர்கள்மாத்திரம்  மீந்திருந்தார்கள்.  {Judg  8:10}

 

கிதியோன்<Gideon>  கூடாரங்களிலே  குடியிருக்கிறவர்கள்  வழியாய்  நோபாகுக்கும்<Nobah>,  யொகிபெயாவுக்கும்<Jogbehah>  கிழக்கே  போய்,  அந்தச்  சேனை  பயமில்லை  என்றிருந்தபோது,  அதை  முறிய  அடித்தான்.  {Judg  8:11}

 

சேபாவும்<Zebah>  சல்முனாவும்<Zalmunna>  ஓடிப்போனார்கள்;  அவனோ  அவர்களைத்  தொடர்ந்து,  சேபா<Zebah>  சல்முனா<Zalmunna>  என்னும்  மீதியானியரின்<Midian>  இரண்டு  ராஜாக்களையும்  பிடித்து,  சேனை  முழுவதையும்  கலங்கடித்தான்.  {Judg  8:12}

 

யோவாசின்<Joash>  குமாரனாகிய  கிதியோன்<Gideon>  யுத்தம்பண்ணி,  சூரியன்  உதிக்கும்  முன்னே  திரும்பிவந்தபோது,  {Judg  8:13}

 

சுக்கோத்தின்<Succoth>  மனுஷரில்  ஒரு  வாலிபனைப்  பிடித்து,  அவனிடத்தில்  விசாரித்தான்;  அவன்  சுக்கோத்தின்<Succoth>  பிரபுக்களும்  அதின்  மூப்பருமாகிய  எழுபத்தேழு  மனுஷரின்  பேரை  அவனுக்கு  எழுதிக்கொடுத்தான்.  {Judg  8:14}

 

அவன்  சுக்கோத்து<Succoth>  ஊராரிடத்தில்  வந்து:  இதோ,  விடாய்த்திருக்கிற  உன்  மனுஷருக்கு  நாங்கள்  அப்பம்  கொடுக்கிறதற்குச்  சேபா<Zebah>  சல்முனா<Zalmunna>  என்பவர்களின்  கை  உன்  கைவசமாயிற்றோ  என்று  நீங்கள்  என்னை  நிந்தித்துச்  சொன்ன  சேபாவும்<Zebah>  சல்முனாவும்<Zalmunna>  இங்கே  இருக்கிறார்கள்  என்று  சொல்லி,  {Judg  8:15}

 

பட்டணத்தின்  மூப்பரைப்  பிடித்து,  வனாந்தரத்தின்  முள்ளுகளையும்  நெரிஞ்சில்களையும்  கொண்டுவந்து,  அவைகளால்  சுக்கோத்தின்<Succoth>  மனுஷருக்குப்  புத்திவரப்பண்ணி,  {Judg  8:16}

 

பெனூவேலின்<Penuel>  கோபுரத்தை  இடித்து,  அவ்வூர்  மனுஷரையும்  கொன்றுபோட்டான்.  {Judg  8:17}

 

பின்பு  அவன்  சேபாவையும்<Zebah>  சல்முனாவையும்<Zalmunna>  நோக்கி:  நீங்கள்  தாபோரிலே<Tabor>  கொன்றுபோட்ட  அந்த  மனுஷர்  எப்படிப்பட்டவர்கள்  என்று  கேட்டான்;  அதற்கு  அவர்கள்:  நீர்  எப்படிப்பட்டவரோ  அவர்களும்  அப்படிப்பட்டவர்களே;  ஒவ்வொருவனும்  பார்வைக்கு  ராஜகுமாரனைப்போலிருந்தான்  என்றார்கள்.  {Judg  8:18}

 

அப்பொழுது  அவன்:  அவர்கள்  என்  சகோதரரும்  என்  தாயின்  பிள்ளைகளுமாயிருந்தார்கள்;  அவர்களை  உயிரோடே  வைத்திருந்தீர்களானால்,  உங்களைக்  கொல்லாதிருப்பேன்  என்று  கர்த்தரின்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  {Judg  8:19}

 

தன்  மூத்தகுமாரனாகிய  யெத்தேரை<Jether>  நோக்கி:  நீ  எழுந்து,  இவர்களை  வெட்டிப்போடு  என்றான்;  அந்த  வாலிபன்  இளைஞனானபடியால்  பயந்து  தன்  பட்டயத்தை  உருவாதிருந்தான்.  {Judg  8:20}

 

அப்பொழுது  சேபாவும்<Zebah>  சல்முனாவும்<Zalmunna>:  நீரே  எழுந்து  எங்கள்மேல்  விழும்;  மனுஷன்  எப்படியோ  அப்படியே  அவன்  பெலனும்  இருக்கும்  என்றார்கள்;  கிதியோன்<Gideon>  எழுந்து,  சேபாவையும்<Zebah>  சல்முனாவையும்<Zalmunna>  கொன்றுபோட்டு,  அவர்கள்  ஒட்டகங்களின்  கழுத்துகளில்  இருந்த  சாந்துக்காறைகளை  எடுத்துக்கொண்டான்.  {Judg  8:21}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  கிதியோனை<Gideon>  நோக்கி:  நீர்  எங்களை  மீதியானியர்<Midian>  கைக்கு  நீங்கலாக்கிவிட்டபடியினால்  நீரும்  உம்முடைய  குமாரனும்,  உம்முடைய  குமாரனின்  குமாரனும்,  எங்களை  ஆளக்கடவீர்கள்  என்றார்கள்.  {Judg  8:22}

 

அதற்குக்  கிதியோன்<Gideon>:  நான்  உங்களை  ஆளமாட்டேன்;  என்  குமாரனும்  உங்களை  ஆளமாட்டான்;  கர்த்தரே  உங்களை  ஆளுவாராக  என்றான்.  {Judg  8:23}

 

பின்பு  கிதியோன்<Gideon>  அவர்களை  நோக்கி:  உங்களிடத்தில்  ஒரு  காரியத்தைக்  கேட்கிறேன்;  நீங்கள்  அவரவர்  கொள்ளையிட்ட  கடுக்கன்களை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்.  அவர்கள்  இஸ்மவேலராயிருந்தபடியினால்<Ishmaelites>  அவர்களிடத்தில்  பொன்கடுக்கன்கள்  இருந்தது.  {Judg  8:24}

 

இஸ்ரவேலர்<Israel>:  சந்தோஷமாய்க்  கொடுப்போம்  என்று  சொல்லி,  ஒரு  வஸ்திரத்தை  விரித்து,  அவரவர்  கொள்ளையிட்ட  கடுக்கன்களை  அதிலே  போட்டார்கள்.  {Judg  8:25}

 

பிறைச்  சிந்தாக்குகளும்,  ஆரங்களும்,  மீதியானியரின்<Midian>  ராஜாக்கள்  போர்த்துக்கொண்டிருந்த  இரத்தாம்பரங்களும்,  அவர்களுடைய  ஒட்டகங்களின்  கழுத்துகளிலிருந்த  சரப்பணிகளும்  அல்லாமல்,  அவன்  கேட்டு  வாங்கின  பொன்கடுக்கன்களின்  நிறை  ஆயிரத்து  எழுநூறு  பொன்  சேக்கலின்  நிறையாயிருந்தது.  {Judg  8:26}

 

அதினால்  கிதியோன்<Gideon>  ஒரு  ஏபோத்தை  உண்டாக்கி,  அதைத்  தன்  ஊரான  ஒப்ராவிலே<Ophrah>  வைத்தான்;  இஸ்ரவேலரெல்லாரும்<Israel>  அதைப்  பின்பற்றிச்  சோரம்போனார்கள்;  அது  கிதியோனுக்கும்<Gideon>  அவன்  வீட்டாருக்கும்  கண்ணியாயிற்று.  {Judg  8:27}

 

இந்தப்பிரகாரம்  மீதியானியர்<Midian>  திரும்ப  தலையெடுக்கக்கூடாதபடிக்கு,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாகத்  தாழ்த்தப்பட்டார்கள்;  தேசமானது  கிதியோனின்<Gideon>  நாட்களில்  நாற்பதுவருஷம்  அமைதலாயிருந்தது.  {Judg  8:28}

 

யோவாசின்<Joash>  குமாரனாகிய  யெருபாகால்<Jerubbaal>  போய்,  தன்  வீட்டிலே  வாசமாயிருந்தான்.  {Judg  8:29}

 

கிதியோனுக்கு<Gideon>  அநேகம்  ஸ்திரீகள்  இருந்தார்கள்;  அவனுடைய  கர்ப்பப்பிறப்பான  குமாரர்  எழுபதுபேர்.  {Judg  8:30}

 

சீகேமிலிருந்த<Shechem>  அவனுடைய  மறுமனையாட்டியும்  அவனுக்கு  ஒரு  குமாரனைப்  பெற்றாள்;  அவனுக்கு  அபிமெலேக்கு<Abimelech>  என்று  பேரிட்டான்.  {Judg  8:31}

 

பின்பு  யோவாசின்<Joash>  குமாரனாகிய  கிதியோன்<Gideon>  நல்ல  விருத்தாப்பியத்திலே  மரித்து,  ஒப்ராவிலே<Ophrah>  தன்  தகப்பனாகிய  யோவாஸ்<Joash>  என்னும்  அபியேஸ்ரியனுடைய<Abiezrites>  கல்லறையில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Judg  8:32}

 

கிதியோன்<Gideon>  மரித்தபின்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  திரும்பவும்  பாகால்களைப்<Baalim>  பின்பற்றிச்  சோரம்போய்,  பாகால்பேரீத்தைத்<Baalberith>  தங்களுக்குத்  தேவனாக  வைத்துக்கொண்டார்கள்.  {Judg  8:33}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  தங்களைச்  சுற்றிலுமிருந்த  தங்கள்  எல்லாச்  சத்துருக்களின்  கையினின்றும்  தங்களை  இரட்சித்த  தங்கள்  தேவனாகிய  கர்த்தரை  நினையாமலும்,  {Judg  8:34}

 

கிதியோன்<Gideon>  என்னும்  யெருபாகால்<Jerubbaal>  இஸ்ரவேலுக்குச்<Israel>  செய்த  சகல  நன்மைக்குந்தக்க  தயவை  அவன்  வீட்டாருக்குப்  பாராட்டாமலும்  போனார்கள்.  {Judg  8:35}

 

யெருபாகாலின்<Jerubbaal>  குமாரன்  அபிமெலேக்கு<Abimelech>  சீகேமிலிருக்கிற<Shechem>  தன்  தாயின்  சகோதரரிடத்திற்குப்  போய்,  அவர்களையும்  தன்  தாயின்  தகப்பனுடைய  வம்சமான  அனைவரையும்  நோக்கி:  {Judg  9:1}

 

யெருபாகாலின்<Jerubbaal>  குமாரர்  எழுபதுபேராகிய  எல்லாரும்  உங்களை  ஆளுவது  உங்களுக்கு  நல்லதோ,  ஒருவன்மாத்திரம்  உங்களை  ஆளுவது  உங்களுக்கு  நல்லதோ  என்று  நீங்கள்  சீகேமிலிருக்கிற<Shechem>  சகல  பெரிய  மனுஷரின்  காதுகளும்  கேட்கப்  பேசுங்கள்;  நான்  உங்கள்  எலும்பும்  உங்கள்  மாம்சமுமானவன்  என்று  நினைத்துக்கொள்ளுங்கள்  என்றான்.  {Judg  9:2}

 

அப்படியே  அவன்  தாயின்  சகோதரர்  சீகேமிலிருக்கிற<Shechem>  சகல  பெரிய  மனுஷரின்  காதுகளும்  கேட்க  இந்த  வார்த்தைகளையெல்லாம்  அவனுக்காகப்  பேசினார்கள்;  அப்பொழுது:  அவன்  நம்முடைய  சகோதரன்  என்று  அவர்கள்  சொன்னதினால்,  அவர்கள்  இருதயம்  அபிமெலேக்கைப்<Abimelech>  பின்பற்றச்  சாய்ந்தது.  {Judg  9:3}

 

அவர்கள்  பாகால்  பேரீத்தின்<Baalberith>  கோவிலிலிருந்து  எழுபது  வெள்ளிக்காசை  எடுத்து  அவனுக்குக்  கொடுத்தார்கள்;  அவைகளால்  அபிமெலேக்கு<Abimelech>  வீணரும்  போக்கிரிகளுமான  மனுஷரைச்  சேவகத்தில்  வைத்தான்;  அவர்கள்  அவனைப்  பின்பற்றினார்கள்.  {Judg  9:4}

 

அவன்  ஒப்ராவிலிருக்கிற<Ophrah>  தன்  தகப்பன்  வீட்டிற்குப்போய்,  யெருபாகாலின்<Jerubbaal>  குமாரராகிய  தன்  சகோதரர்  எழுபது  பேரையும்  ஒரே  கல்லின்மேல்  கொலைசெய்தான்;  ஆனாலும்  யெருபாகாலின்<Jerubbaal>  இளைய  குமாரனாகிய  யோதாம்<Jotham>  ஒளித்திருந்தபடியினால்  அவன்  தப்பினான்.  {Judg  9:5}

 

பின்பு  சீகேமிலிருக்கிற<Shechem>  சகல  பெரிய  மனுஷரும்,  மில்லோவின்<Millo>  குடும்பத்தாரனைவரும்  கூடிக்கொண்டுபோய்,  சீகேமிலிருக்கிற<Shechem>  உயர்ந்த  கர்வாலிமரத்தண்டையிலே  அபிமெலேக்கை<Abimelech>  ராஜாவாக்கினார்கள்.  {Judg  9:6}

 

இது  யோதாமுக்கு<Jotham>  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  போய்,  கெரிசீம்<Gerizim>  மலையின்  உச்சியில்  ஏறிநின்று,  உரத்தசத்தமிட்டுக்  கூப்பிட்டு,  அவர்களை  நோக்கி:  சீகேமின்<Shechem>  பெரிய  மனுஷரே,  தேவன்  உங்களுக்குச்  செவிகொடுக்கும்படி  நீங்கள்  எனக்குச்  செவிகொடுங்கள்.  {Judg  9:7}

 

விருட்சங்கள்  தங்களுக்கு  ஒரு  ராஜாவை  அபிஷேகம்பண்ணும்படி  போய்,  ஒலிவமரத்தைப்  பார்த்து:  நீ  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  {Judg  9:8}

 

அதற்கு  ஒலிவமரம்:  தேவர்களும்  மனுஷரும்  புகழுகிற  என்னிலுள்ள  என்  கொழுமையை  நான்  விட்டு,  மரங்களை  அரசாளப்போவேனோ  என்றது.  {Judg  9:9}

 

அப்பொழுது  மரங்கள்  அத்திமரத்தைப்  பார்த்து:  நீ  வந்து,  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  {Judg  9:10}

 

அதற்கு  அத்திமரம்:  நான்  என்  மதுரத்தையும்  என்  நற்கனியையும்  விட்டு,  மரங்களை  அரசாளப்போவேனோ  என்றது.  {Judg  9:11}

 

அப்பொழுது  மரங்கள்  திராட்சசெடியைப்  பார்த்து:  நீ  வந்து,  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  {Judg  9:12}

 

அதற்குத்  திராட்சச்செடி:  தேவர்களையும்  மனுஷரையும்  மகிழப்பண்ணும்  என்  ரசத்தை  நான்  விட்டு  மரங்களை  அரசாளப்போவேனோ  என்றது.  {Judg  9:13}

 

அப்பொழுது  மரங்களெல்லாம்  முட்செடியைப்  பார்த்து:  நீ  வந்து,  எங்களுக்கு  ராஜாவாயிரு  என்றது.  {Judg  9:14}

 

அதற்கு  முட்செடியானது  மரங்களைப்  பார்த்து:  நீங்கள்  என்னை  உங்களுக்கு  ராஜாவாக  அபிஷேகம்பண்ணுகிறது  மெய்யானால்,  என்  நிழலிலே  வந்தடையுங்கள்;  இல்லாவிட்டால்  முட்செடியிலிருந்து  அக்கினி  புறப்பட்டு  லீபனோனின்<Lebanon>  கேதுருமரங்களைப்  பட்சிக்கக்கடவது  என்றது.  {Judg  9:15}

 

என்  தகப்பன்  உங்களுக்காக  யுத்தம்பண்ணி,  தன்  ஜீவனை  எண்ணாமற்போய்,  உங்களை  மீதியானியரின்<Midian>  கையினின்று  இரட்சித்தார்.  {Judg  9:16}

 

நீங்களோ  இன்று  என்  தகப்பனுடைய  குடும்பத்துக்கு  விரோதமாய்  எழும்பி,  அவருடைய  குமாரரான  எழுபதுபேரையும்  ஒரே  கல்லின்மேல்  கொலைசெய்து,  அவருடைய  வேலைக்காரியின்  மகனாகிய  அபிமெலேக்கு<Abimelech>  உங்கள்  சகோதரனானபடியினால்,  அவனைச்  சீகேம்<Shechem>  பட்டணத்தாருக்கு  ராஜாவாக்கினீர்கள்.  {Judg  9:17}

 

இப்போதும்  நீங்கள்  அவனை  ராஜாவாக்கின  செய்கை  உண்மையும்  உத்தமமுமான  செய்கையாயிருக்குமானால்,  {Judg  9:18}

 

நீங்கள்  யெருபாகாலையும்<Jerubbaal>  அவர்  குடும்பத்தாரையும்  நன்மையாக  நடத்தி,  அவர்  கைகளின்  செய்கைக்குத்தக்கதை  அவருக்குச்  செய்து,  இப்படி  இந்நாளில்  அவரையும்  அவர்  குடும்பத்தாரையும்  நடத்தினது  உண்மையும்  உத்தமுமாயிருக்குமானால்,  அபிமெலேக்கின்மேல்<Abimelech>  நீங்களும்  சந்தோஷமாயிருங்கள்;  உங்கள்மேல்  அவனும்  சந்தோஷமாயிருக்கட்டும்.  {Judg  9:19}

 

இல்லாவிட்டால்  அபிமெலேக்கிலிருந்து<Abimelech>  அக்கினி  புறப்பட்டு,  சீகேம்<Shechem>  பட்டணத்தாரையும்,  மில்லோவின்<Millo>  குடும்பத்தாரையும்  பட்சிக்கவும்,  சீகேம்<Shechem>  பட்டணத்தாரிலும்  மில்லோவின்<Millo>  குடும்பத்தாரிலுமிருந்து  அக்கினி  புறப்பட்டு,  அபிமெலேக்கைப்<Abimelech>  பட்சிக்கவும்கடவது  என்று  யோதாம்<Jotham>  சொல்லி,  {Judg  9:20}

 

தன்  சகோதரனாகிய  அபிமெலேக்குக்குப்<Abimelech>  பயந்து,  தப்பியோடி,  பேயேருக்குப்<Beer>  போய்,  அங்கே  குடியிருந்தான்.  {Judg  9:21}

 

அபிமெலேக்கு<Abimelech>  இஸ்ரவேலை<Israel>  மூன்று  வருஷம்  அரசாண்டபின்பு,  {Judg  9:22}

 

அபிமெலேக்குக்கும்<Abimelech>  சீகேமின்<Shechem>  பெரிய  மனுஷருக்கும்  நடுவே  பொல்லாப்பு  உண்டாக்கும்  ஆவியைத்  தேவன்  வரப்பண்ணினார்.  {Judg  9:23}

 

யெருபாகாலின்<Jerubbaal>  எழுபது  குமாரருக்குச்  செய்யப்பட்ட  கொடுமை  வந்து  பலித்து,  அவர்களுடைய  இரத்தப்பழி  அவர்களைக்  கொன்ற  அவர்களுடைய  சகோதரனாகிய  அபிமெலேக்கின்மேலும்<Abimelech>,  தன்  சகோதரரைக்  கொல்ல  அவன்  கைகளைத்  திடப்படுத்தின  சீகேம்<Shechem>  மனுஷர்  மேலும்  சுமரும்படியாகச்  சீகேமின்<Shechem>  பெரிய  மனுஷர்  அபிமெலேக்குக்கு<Abimelech>  இரண்டகம்பண்ணினார்கள்.  {Judg  9:24}

 

சீகேமின்<Shechem>  மனுஷர்  மலைகளின்  உச்சியில்  அவனுக்குப்  பதிவிருக்கிறவர்களை  வைத்தார்கள்;  அவர்கள்  தங்கள்  அருகே  வழிநடந்துபோகிற  யாவரையும்  கொள்ளையிட்டார்கள்;  அது  அபிமெலேக்குக்கு<Abimelech>  அறிவிக்கப்பட்டது.  {Judg  9:25}

 

ஏபேதின்<Ebed>  குமாரனாகிய  காகால்<Gaal>  தன்  சகோதரரோடே  சீகேமுக்குள்<Shechem>  போனான்;  சீகேமின்<Shechem>  பெரிய  மனுஷர்  அவனை  நம்பி,  {Judg  9:26}

 

வெளியே  புறப்பட்டு,  தங்கள்  திராட்சத்தோட்டங்களின்  பழங்களை  அறுத்து,  ஆலையாட்டி,  ஆடிப்பாடி,  தங்கள்  தேவனின்  வீட்டிற்குள்  போய்,  புசித்துக்  குடித்து,  அபிமெலேக்கை<Abimelech>  சபித்தார்கள்.  {Judg  9:27}

 

அப்பொழுது  ஏபேதின்<Ebed>  குமாரனாகிய  காகால்<Gaal>:  அபிமெலேக்கு<Abimelech>  யார்?  சீகேம்<Shechem>  யார்?  நாம்  அவனைச்  சேவிக்கவேண்டியதென்ன?  அவன்  யெருபாகாலின்<Jerubbaal>  மகன்  அல்லவா?  சேபூல்<Zebul>  அவனுடைய  காரியக்காரன்  அல்லவா?  சீகேமின்<Shechem>  தகப்பனாகிய  ஏமோரின்<Hamor>  மனுஷரையே  சேவியுங்கள்;  அவனை  நாங்கள்  சேவிப்பானேன்?  {Judg  9:28}

 

இந்த  ஜனங்கள்மாத்திரம்  என்  கைக்குள்  இருக்கட்டும்;  நான்  அபிமெலேக்கைத்<Abimelech>  துரத்திவிடுவேன்  என்றான்.  உன்  சேனையைப்  பெருகப்பண்ணிப்  புறப்பட்டுவா  என்று,  அவன்  அபிமெலேக்குக்குச்<Abimelech>  சொல்லியனுப்பினான்.  {Judg  9:29}

 

பட்டணத்தின்  அதிகாரியாகிய  சேபூல்<Zebul>  ஏபேதின்<Ebed>  குமாரனாகிய  காகாலின்<Gaal>  வார்த்தைகளைக்  கேட்டபோது,  கோபமூண்டு,  {Judg  9:30}

 

இரகசியமாய்  அபிமெலேக்கினிடத்துக்கு<Abimelech>  ஆட்களை  அனுப்பி:  இதோ,  ஏபேதின்<Ebed>  குமாரனாகிய  காகாலும்<Gaal>  அவனுடைய  சகோதரரும்  சீகேமுக்கு<Shechem>  வந்திருக்கிறார்கள்;  பட்டணத்தை  உமக்கு  விரோதமாக  எழுப்புகிறார்கள்.  {Judg  9:31}

 

ஆகையால்  நீர்  உம்மோடிருக்கும்  ஜனங்களோடேகூட  இரவில்  எழுந்துவந்து  வெளியிலே  பதிவிருந்து,  {Judg  9:32}

 

காலமே  சூரியன்  உதிக்கையில்  எழும்பி,  பட்டணத்தின்மேல்  விழுந்து,  அவனும்  அவனோடிருக்கிற  ஜனங்களும்  உமக்கு  எதிரே  புறப்படும்போது,  உம்முடைய  கைக்கு  நேரிடுகிறபடி  அவனுக்குச்  செய்யும்  என்று  சொல்லியனுப்பினான்.  {Judg  9:33}

 

அப்படியே  அபிமெலேக்கும்<Abimelech>,  அவனோடிருந்த  சகல  ஜனங்களும்,  இரவில்  எழுந்துபோய்,  சீகேமுக்கு<Shechem>  விரோதமாக  நாலு  படையாகப்  பதிவிருந்தார்கள்.  {Judg  9:34}

 

ஏபேதின்<Ebed>  குமாரன்  காகால்<Gaal>  புறப்பட்டு,  பட்டணத்தின்  ஒலிமுகவாசலில்  நின்றான்;  அப்பொழுது  பதிவிருந்த  அபிமெலேக்கு<Abimelech>  தன்னோடிருக்கிற  ஜனங்களோடேகூட  எழும்பிவந்தான்.  {Judg  9:35}

 

காகால்<Gaal>  அந்த  ஜனங்களைக்  கண்டு:  இதோ,  மலைகளின்  உச்சிகளிலிருந்து  ஜனங்கள்  இறங்கிவருகிறார்கள்  என்று  சேபூலோடே<Zebul>  சொன்னான்.  அதற்குச்  சேபூல்<Zebul>:  நீ  மலைகளின்  நிழலைக்  கண்டு,  மனுஷர்  என்று  நினைக்கிறாய்  என்றான்.  {Judg  9:36}

 

காகாலோ<Gaal>  திரும்பவும்:  இதோ,  ஜனங்கள்  தேசத்தின்  மேட்டிலிருந்து  இறங்கிவந்து,  ஒரு  படை  மெயொனெனீமின்<Meonenim>  கர்வாலிமரத்தின்  வழியாய்  வருகிறது  என்றான்.  {Judg  9:37}

 

அதற்குச்  சேபூல்<Zebul>:  அபிமெலேக்கை<Abimelech>  நாம்  சேவிக்கிறதற்கு  அவன்  யார்  என்று  நீ  சொன்ன  உன்  வாய்  இப்பொழுது  எங்கே?  நீ  நிந்தித்த  ஜனங்கள்  அவர்கள்  அல்லவா?  இப்பொழுது  நீ  புறப்பட்டு,  அவர்களோடே  யுத்தம்பண்ணு  என்றான்.  {Judg  9:38}

 

அப்பொழுது  காகால்<Gaal>  சீகேமின்<Shechem>  மனுஷருக்கு  முன்பாகப்  புறப்பட்டுப்போய்,  அபிமெலேக்கோடே<Abimelech>  யுத்தம்பண்ணினான்.  {Judg  9:39}

 

அபிமெலேக்கு<Abimelech>  அவனைத்  துரத்த,  அவன்  அவனுக்கு  முன்பாக  ஓடினான்;  பட்டணவாசல்மட்டும்  அநேகர்  வெட்டுண்டு  விழுந்தார்கள்.  {Judg  9:40}

 

அபிமெலேக்கு<Abimelech>  அருமாவில்<Arumah>  இருந்துவிட்டான்;  சேபூல்<Zebul>  காகாலையும்<Gaal>  அவன்  சகோதரரையும்  சீகேமிலே<Shechem>  குடியிராதபடிக்குத்  துரத்திவிட்டான்.  {Judg  9:41}

 

மறுநாளிலே  ஜனங்கள்  வெளியிலே  வயலுக்குப்  போனார்கள்;  அது  அபிமெலேக்குக்கு<Abimelech>  அறிவிக்கப்பட்டபோது,  {Judg  9:42}

 

அவன்  ஜனங்களைக்  கூட்டிக்கொண்டு,  அவர்களை  மூன்று  படையாக  வகுத்து,  வெளியிலே  பதிவிருந்து,  அந்த  ஜனங்கள்  பட்டணத்திலிருந்து  புறப்பட்டு  வருகிறதைக்  கண்டு,  அவர்கள்மேல்  எழும்பி,  அவர்களை  வெட்டினான்.  {Judg  9:43}

 

அபிமெலேக்கும்<Abimelech>  அவனோடிருந்த  படையும்  பாய்ந்துவந்து,  பட்டணத்தின்  ஒலிமுகவாசலில்  நின்றார்கள்;  மற்ற  இரண்டு  படைகளோ  வெளியிலிருக்கிற  யாவர்மேலும்  விழுந்து,  அவர்களை  வெட்டினார்கள்.  {Judg  9:44}

 

அபிமெலேக்கு<Abimelech>  அந்நாள்  முழுதும்  பட்டணத்தின்மேல்  யுத்தம்பண்ணி,  பட்டணத்தைப்  பிடித்து,  அதிலிருந்த  ஜனங்களைக்  கொன்று,  பட்டணத்தை  இடித்து  விட்டு,  அதில்  உப்பு  விதைத்தான்.  {Judg  9:45}

 

அதைச்  சீகேம்<Shechem>  துருக்கத்து  மனுஷர்  எல்லாரும்  கேள்விப்பட்டபோது,  அவர்கள்  பேரீத்<Berith>  தேவனுடைய  கோவில்  அரணுக்குள்  பிரவேசித்தார்கள்.  {Judg  9:46}

 

சீகேம்<Shechem>  துருக்கத்து  மனுஷர்  எல்லாரும்  அங்கே  கூடியிருக்கிறது  அபிமெலேக்குக்கு<Abimelech>  அறிவிக்கப்பட்டபோது,  {Judg  9:47}

 

அபிமெலேக்கு<Abimelech>  தன்னோடிருந்த  எல்லா  ஜனங்களோடுங்கூடச்  சல்மோன்<Zalmon>  மலையில்  ஏறி,  தன்  கையிலே  கோடரியைப்  பிடித்து,  ஒரு  மரத்தின்  கொம்பை  வெட்டி,  அதை  எடுத்து,  தன்  தோளின்மேல்  போட்டுக்கொண்டு,  தன்னோடிருந்த  ஜனங்களை  நோக்கி:  நான்  என்ன  செய்கிறேன்  என்று  பார்க்கிறீர்களே,  நீங்களும்  தீவிரமாய்  என்னைப்போலச்  செய்யுங்கள்  என்றான்.  {Judg  9:48}

 

அப்படியே  சகல  ஜனங்களும்  அவரவர்  ஒவ்வொரு  கொம்பை  வெட்டி,  அபிமெலேக்குக்குப்<Abimelech>  பின்சென்று,  அவைகளை  அந்த  அரணுக்கு  அருகே  போட்டு,  அக்கினி  கொளுத்தி  அந்த  அரணைச்  சுட்டுப்போட்டார்கள்;  அதினால்  புருஷரும்  ஸ்திரீகளும்  ஏறக்குறைய  ஆயிரம்பேராகிய  சீகேம்<Shechem>  துருக்கத்து  மனுஷர்  எல்லாரும்  செத்தார்கள்.  {Judg  9:49}

 

பின்பு  அபிமெலேக்கு<Abimelech>  தேபேசுக்குப்போய்<Thebez>,  அதற்கு  விரோதமாய்ப்  பாளயமிறங்கி,  அதைப்  பிடித்தான்.  {Judg  9:50}

 

அந்தப்  பட்டணத்தின்  நடுவே  பலத்த  துருக்கம்  இருந்தது;  அங்கே  சகல  புருஷரும்  ஸ்திரீகளும்  பட்டணத்து  மனுஷர்  அனைவரும்  ஓடிப்  புகுந்து,  கதவைப்  பூட்டிக்கொண்டு,  துருக்கத்தின்மேல்  ஏறினார்கள்.  {Judg  9:51}

 

அபிமெலேக்கு<Abimelech>  அந்தத்  துருக்கம்மட்டும்  வந்து,  அதின்மேல்  யுத்தம்பண்ணி,  துருக்கத்தின்  கதவைச்  சுட்டெரித்துப்  போடும்படிக்கு,  அதின்  கிட்டச்  சேர்ந்தான்.  {Judg  9:52}

 

அப்பொழுது  ஒரு  ஸ்திரீ  ஒரு  ஏந்திரக்கல்லின்  துண்டை  அபிமெலேக்குடைய<Abimelech>  தலையின்மேல்  போட்டாள்;  அது  அவன்  மண்டையை  உடைத்தது.  {Judg  9:53}

 

உடனே  அவன்  தன்  ஆயுததாரியாகிய  வேலைக்காரனைக்  கூப்பிட்டு:  ஒரு  ஸ்திரீ  என்னைக்  கொன்றாள்  என்று  என்னைக்குறித்துச்  சொல்லாதபடிக்கு,  நீ  உன்  பட்டயத்தை  உருவி,  என்னைக்  கொன்றுபோடு  என்று  அவனோடே  சொன்னான்;  அப்படியே  அவன்  வேலைக்காரன்  அவனை  உருவக்  குத்தினான்,  அவன்  செத்துப்போனான்.  {Judg  9:54}

 

அபிமெலேக்குச்<Abimelech>  செத்துப்போனதை  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  கண்டபோது,  அவர்கள்  தங்கள்தங்கள்  இடங்களுக்குப்  போய்விட்டார்கள்.  {Judg  9:55}

 

இப்படியே  அபிமெலேக்கு<Abimelech>  தன்னுடைய  எழுபது  சகோதரரைக்  கொலைசெய்ததினால்,  தன்  தகப்பனுக்குச்  செய்த  பொல்லாப்பை  தேவன்  அவன்மேல்  திரும்பும்படி  செய்தார்.  {Judg  9:56}

 

சீகேம்<Shechem>  மனுஷர்  செய்த  எல்லாப்  பொல்லாப்பையும்  தேவன்  அவர்கள்  தலையின்மேல்  திரும்பும்படி  செய்தார்;  யெருபாகாலின்<Jerubbaal>  குமாரன்  யோதாமின்<Jotham>  சாபம்  அவர்களுக்குப்  பலித்தது.  {Judg  9:57}

 

அபிமெலேக்குக்குப்பின்பு<Abimelech>,  தோதோவின்<Dodo>  மகனாகிய  பூவாவின்<Puah>  குமாரன்  தோலா<Tola>  என்னும்  இசக்கார்<Issachar>  கோத்திரத்தான்  இஸ்ரவேலை<Israel>  இரட்சிக்க  எழும்பினான்;  அவன்  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்து  ஊராகிய  சாமீரிலே<Shamir>  குடியிருந்தான்.  {Judg  10:1}

 

அவன்  இஸ்ரவேலை<Israel>  இருபத்துமூன்று  வருஷம்  நியாயம்  விசாரித்து,  பின்பு  மரித்து,  சாமீரிலே<Shamir>  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Judg  10:2}

 

அவனுக்குப்பின்பு,  கீலேயாத்தியனான<Gileadite>  யாவீர்<Jair>  எழும்பி,  இஸ்ரவேலை<Israel>  இருபத்திரண்டு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  {Judg  10:3}

 

முப்பது  கழுதைக்குட்டிகளின்மேல்  ஏறும்  முப்பது  குமாரர்  அவனுக்கு  இருந்தார்கள்;  அவர்களுக்கு  முப்பது  ஊர்களும்  இருந்தது;  கீலேயாத்<Gilead>  தேசத்திலிருக்கிற  அவைகளுக்கு  இந்நாள்வரைக்கும்  யாவீரின்<Havothjair>  கிராமங்களென்கிற  பேர்  இருக்கிறது.  {Judg  10:4}

 

யாவீர்<Jair>  மரித்து,  காமோனிலே<Camon>  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Judg  10:5}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்,  மறுபடியும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்புச்  செய்து,  கர்த்தரைச்  சேவியாமல்  அவரை  விட்டுப்  போய்,  பாகால்களையும்<Baalim>,  அஸ்தரோத்தையும்<Ashtaroth>,  சீரியாவின்<Syria>  தேவர்களையும்,  சீதோனின்<Zidon>  தேவர்களையும்,  மோவாபின்<Moab>  தேவர்களையும்,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தேவர்களையும்,  பெலிஸ்தரின்<Philistines>  தேவர்களையும்  சேவித்தார்கள்.  {Judg  10:6}

 

அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  கோபமூண்டு,  அவர்களைப்  பெலிஸ்தர்<Philistines>  கையிலும்,  அம்மோன்<Ammon>  புத்திரர்  கையிலும்  விற்றுப்போட்டார்.  {Judg  10:7}

 

அவர்கள்  அந்த  வருஷம்  முதற்கொண்டு  பதினெட்டு  வருஷமாய்  யோர்தானுக்கு<Jordan>  அப்பாலே  கீலேயாத்திலுள்ள<Gilead>  எமோரியரின்<Amorites>  தேசத்தில்  இருக்கிற  இஸ்ரவேல்<Israel>  புத்திரரையெல்லாம்  நெருக்கி  ஒடுக்கினார்கள்.  {Judg  10:8}

 

அம்மோன்<Ammon>  புத்திரர்  யூதாவின்மேலும்<Judah>,  பென்யமீன்மேலும்<Benjamin>,  எப்பிராயீம்<Ephraim>  குடும்பத்தார்மேலும்  யுத்தம்பண்ண  யோர்தானைக்<Jordan>  கடந்துவந்தார்கள்;  இஸ்ரவேலர்<Israel>  மிகவும்  நெருக்கப்பட்டார்கள்.  {Judg  10:9}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரை  நோக்கி  முறையிட்டு:  உமக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தோம்;  நாங்கள்  எங்கள்  தேவனைவிட்டு,  பாகால்களைச்<Baalim>  சேவித்தோம்  என்றார்கள்.  {Judg  10:10}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நோக்கி:  எகிப்தியரும்<Egyptians>,  எமோரியரும்<Amorites>,  அம்மோன்<Ammon>  புத்திரரும்,  பெலிஸ்தியரும்<Philistines>,  {Judg  10:11}

 

சீதோனியரும்<Zidonians>,  அமலேக்கியரும்<Amalekites>,  மாகோனியரும்<Maonites>,  உங்களை  ஒடுக்கும்  சமயங்களில்,  நீங்கள்  என்னை  நோக்கி  முறையிட்டபோது,  நான்  உங்களை  அவர்கள்  கைக்கு  நீங்கலாக்கி  இரட்சிக்கவில்லையா?  {Judg  10:12}

 

அப்படியிருந்தும்  நீங்கள்  என்னைவிட்டு,  அந்நிய  தேவர்களைச்  சேவித்தீர்கள்;  ஆகையால்  இனி  உங்களை  இரட்சியேன்.  {Judg  10:13}

 

நீங்கள்  போய்,  உங்களுக்காகத்  தெரிந்துகொண்ட  தேவர்களை  நோக்கி  முறையிடுங்கள்;  அவைகள்  உங்கள்  ஆபத்தின்  காலத்தில்  உங்களை  இரட்சிக்கட்டும்  என்றார்.  {Judg  10:14}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கர்த்தரை  நோக்கி:  பாவஞ்செய்தோம்,  தேவரீர்  உம்முடைய  பார்வைக்கு  நலமானதை  எங்களுக்குச்  செய்யும்;  இன்றைக்குமாத்திரம்  எங்களை  இரட்சித்தருளும்  என்று  சொல்லி,  {Judg  10:15}

 

அந்நிய  தேவர்களைத்  தங்கள்  நடுவிலிருந்து  விலக்கிவிட்டு,  கர்த்தருக்கு  ஆராதனை  செய்தார்கள்;  அப்பொழுது  அவர்  இஸ்ரவேலின்<Israel>  வருத்தத்தைப்  பார்த்து  மனதுருகினார்.  {Judg  10:16}

 

அம்மோன்<Ammon>  புத்திரர்  கூட்டங்கூடி,  கீலேயாத்திலே<Gilead>  பாளயமிறங்கினார்கள்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரும்  கூடிக்கொண்டு,  மிஸ்பாவிலே<Mizpeh>  பாளயமிறங்கினார்கள்.  {Judg  10:17}

 

அப்பொழுது  கீலேயாத்தின்<Gilead>  ஜனங்களும்  பிரபுக்களும்  ஒருவரையொருவர்  நோக்கி:  அம்மோன்<Ammon>  புத்திரர்மேல்  முந்தி  யுத்தம்பண்ணப்போகிற  மனுஷன்  யார்?  அவனே  கீலேயாத்தின்<Gilead>  குடிகளுக்கெல்லாம்  தலைவனாயிருப்பான்  என்றார்கள்.  {Judg  10:18}

 

கீலேயாத்தியனான<Gileadite>  யெப்தா<Jephthah>  பலத்த  பராக்கிரமசாலியாயிருந்தான்;  அவன்  பரஸ்திரீயின்  குமாரன்;  கிலெயாத்<Gilead>  அவனைப்  பெற்றான்.  {Judg  11:1}

 

கிலெயாத்தின்<Gilead>  மனைவியும்  அவனுக்குக்  குமாரர்களைப்  பெற்றாள்;  அவன்  மனைவி  பெற்ற  குமாரர்  பெரியவர்களான  பின்பு,  அவர்கள்  யெப்தாவை<Jephthah>  நோக்கி:  உனக்கு  எங்கள்  தகப்பன்  வீட்டிலே  சுதந்தரம்  இல்லை;  நீ  அந்நிய  ஸ்திரீயின்  மகன்  என்று  சொல்லி  அவனைத்  துரத்தினார்கள்.  {Judg  11:2}

 

அப்பொழுது  யெப்தா<Jephthah>:  தன்  சகோதரரை  விட்டு  ஓடிப்போய்,  தோப்தேசத்திலே<Tob>  குடியிருந்தான்;  வீணரான  மனுஷர்  யெப்தாவோடே<Jephthah>  கூடிக்கொண்டு,  அவனோடேகூட  யுத்தத்திற்குப்  போவார்கள்.  {Judg  11:3}

 

சிலநாளைக்குப்பின்பு,  அம்மோன்<Ammon>  புத்திரர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  யுத்தம்பண்ணினார்கள்.  {Judg  11:4}

 

அவர்கள்  இஸ்ரவேலின்மேல்<Israel>  யுத்தம்பண்ணும்போது  கீலேயாத்தின்<Gilead>  மூப்பர்  யெப்தாவைத்<Jephthah>  தோப்தேசத்திலிருந்து<Tob>  அழைத்துவரப்போய்,  {Judg  11:5}

 

யெப்தாவை<Jephthah>  நோக்கி:  நீ  வந்து,  நாங்கள்  அம்மோன்<Ammon>  புத்திரரோடு  யுத்தம்பண்ண  எங்கள்  சேனாபதியாயிருக்க  வேண்டும்  என்றார்கள்.  {Judg  11:6}

 

அதற்கு  யெப்தா<Gilead>  கீலேயாத்தின்<Jephthah>  மூப்பரைப்  பார்த்து:  நீங்கள்  அல்லவா  என்னைப்  பகைத்து,  என்  தகப்பன்  வீட்டிலிருந்து  என்னைத்  துரத்தினவர்கள்?  இப்பொழுது  உங்களுக்கு  ஆபத்து  நேரிட்டிருக்கிற  சமயத்தில்  நீங்கள்  என்னிடத்தில்  ஏன்  வருகிறீர்கள்  என்றான்.  {Judg  11:7}

 

அதற்குக்  கீலேயாத்தின்<Gilead>  மூப்பர்  யெப்தாவை<Jephthah>  நோக்கி:  நீ  எங்களுடனேகூட  வந்து,  அம்மோன்<Ammon>  புத்திரரோடு  யுத்தம்பண்ணி,  கீலேயாத்தின்<Gilead>  குடிகளாகிய  எங்கள்  அனைவர்மேலும்  தலைவனாயிருக்கவேண்டும்;  இதற்காக  இப்பொழுது  உன்னிடத்தில்  வந்தோம்  என்றார்கள்.  {Judg  11:8}

 

அதற்கு  யெப்தா<Jephthah>:  அம்மோன்<Ammon>  புத்திரரோடே  யுத்தம்பண்ண,  நீங்கள்  என்னைத்  திரும்ப  அழைத்துப்போனபின்பு,  கர்த்தர்  அவர்களை  என்  முன்னிலையாய்  ஒப்புக்கொடுத்தால்,  என்னை  உங்களுக்குத்  தலைவனாய்  வைப்பீர்களா  என்று  கீலேயாத்தின்<Gilead>  மூப்பரைக்  கேட்டான்.  {Judg  11:9}

 

கீலேயாத்தின்<Gilead>  மூப்பர்  யெப்தாவைப்<Jephthah>  பார்த்து:  நாங்கள்  உன்  வார்த்தையின்படியே  செய்யாவிட்டால்,  கர்த்தர்  நமக்கு  நடுநின்று  கேட்பாராக  என்றார்கள்.  {Judg  11:10}

 

அப்பொழுது  யெப்தா<Jephthah>  கீலேயாத்தின்<Gilead>  மூப்பரோடே  கூடப்போனான்;  ஜனங்கள்  அவனைத்  தங்கள்மேல்  தலைவனும்  சேனாபதியுமாக  வைத்தார்கள்.  யெப்தா<Jephthah>  தன்  காரியங்களையெல்லாம்  மிஸ்பாவிலே<Mizpeh>  கர்த்தருடைய  சந்நிதியிலே  சொன்னான்.  {Judg  11:11}

 

பின்பு  யெப்தா<Jephthah>  அம்மோன்<Ammon>  புத்திரரின்  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நீ  என்  தேசத்தில்  எனக்கு  விரோதமாக  யுத்தம்பண்ண  வருகிறதற்கு,  எனக்கும்  உனக்கும்  என்ன  வழக்கு  இருக்கிறது  என்று  கேட்கச்சொன்னான்.  {Judg  11:12}

 

அம்மோன்<Ammon>  புத்திரரின்  ராஜா  யெப்தாவின்<Jephthah>  ஸ்தானாபதிகளை  நோக்கி:  இஸ்ரவேலர்<Israel>  எகிப்திலிருந்து<Egypt>  வருகிறபோது,  அர்னோன்<Arnon>  துவக்கி  யாபோக்மட்டும்<Jabbok>,  யோர்தான்மட்டும்<Jordan>  இருக்கிற  என்  தேசத்தைக்  கட்டிக்கொண்டார்களே;  இப்பொழுது  அதை  எனக்குச்  சமாதானமாய்த்  திரும்பக்  கொடுத்துவிடவேண்டும்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  {Judg  11:13}

 

யெப்தா<Jephthah>  மறுபடியும்  அம்மோன்<Ammon>  புத்திரரின்  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  அவனுக்குச்  சொல்லச்சொன்னதாவது:  {Judg  11:14}

 

யெப்தா<Jephthah>  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேலர்<Israel>  மோவாபியரின்<Moab>  தேசத்தையாகிலும்,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தேசத்தையாகிலும்  கட்டிக்கொண்டதில்லையே.  {Judg  11:15}

 

இஸ்ரவேலர்<Israel>  எகிப்திலிருந்து<Egypt>  வருகிறபோது,  வனாந்தரத்தில்  சிவந்த  சமுத்திரமட்டும்<Red  sea>  நடந்து,  பின்பு  காதேசுக்கு<Kadesh>  வந்து,  {Judg  11:16}

 

இஸ்ரவேலர்<Israel>  ஏதோமின்<Edom>  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நாங்கள்  உன்  தேசத்துவழியாய்க்  கடந்துபோகட்டும்  என்று  சொல்லச்சொன்னார்கள்;  அதற்கு  ஏதோமின்<Edom>  ராஜா  செவிகொடுக்கவில்லை;  அப்படியே  மோவாபின்<Moab>  ராஜாவினிடத்திற்கும்  அனுப்பினார்கள்;  அவனும்  சம்மதிக்கவில்லை.  ஆதலால்  இஸ்ரவேலர்<Israel>  காதேசிலே<Kadesh>  தரித்திருந்து,  {Judg  11:17}

 

பின்பு  வனாந்தரவழியாய்  நடந்து  ஏதோம்<Edom>  தேசத்தையும்  மோவாப்<Moab>  தேசத்தையும்  சுற்றிப்போய்,  மோவாபின்<Moab>  தேசத்திற்குக்  கிழக்கேவந்து,  மோவாபின்<Moab>  எல்லைக்குள்  பிரவேசியாமல்,  மோவாபின்<Moab>  எல்லையான  அர்னோன்<Arnon>  நதிக்கு  அப்பாலே  பாளயமிறங்கினார்கள்.  {Judg  11:18}

 

அப்பொழுது  இஸ்ரவேலர்<Israel>  எஸ்போனில்<Heshbon>  ஆளுகிற  சீகோன்<Sihon>  என்னும்  எமோரியரின்<Amorites>  ராஜாவினிடத்திற்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நாங்கள்  உன்  தேசத்து  வழியாய்  எங்கள்  ஸ்தானத்திற்குக்  கடந்துபோக  இடங்கொடு  என்று  சொல்லச்சொன்னார்கள்.  {Judg  11:19}

 

சீகோன்<Sihon>  இஸ்ரவேலரை<Israel>  நம்பாததினால்,  தன்  எல்லையைக்  கடந்துபோகிறதற்கு  இடங்கொடாமல்  தன்  ஜனங்களையெல்லாம்  கூட்டி,  யாகாசிலே<Jahaz>  பாளயமிறங்கி,  இஸ்ரவேலரோடே<Israel>  யுத்தம்பண்ணினான்.  {Judg  11:20}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சீகோனையும்<Sihon>  அவனுடைய  எல்லா  ஜனங்களையும்  இஸ்ரவேலரின்<Israel>  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவர்களை  முறிய  அடித்தார்கள்;  அப்படியே  இஸ்ரவேலர்<Israel>  அந்த  தேசத்திலே  குடியிருந்த  எமோரியரின்<Amorites>  சீமையையெல்லாம்  பிடித்து,  அர்னோன்<Arnon>  துவக்கி,  {Judg  11:21}

 

யாபோக்மட்டும்<Jabbok>,  வனாந்தரம்துவக்கி  யோர்தான்மட்டும்<Jordan>  இருக்கிற  எமோரியரின்<Amorites>  எல்லையையெல்லாம்  சுதந்தரமாய்க்  கட்டிக்கொண்டார்கள்.  {Judg  11:22}

 

இப்படி  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  எமோரியரைத்<Amorites>  தம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  முன்பாகத்  துரத்தியிருக்க,  நீர்  அந்த  தேசத்தைக்  கட்டிக்கொள்ளத்தகுமா?  {Judg  11:23}

 

உம்முடைய  தேவனாகிய  காமோஸ்<Chemosh>  உமக்கு  முன்பாகத்  துரத்துகிறவர்களின்  தேசத்தை  நீர்  கட்டிக்கொள்ளமாட்டீரோ?  அப்படியே  எங்கள்  தேவனாகிய  கர்த்தர்  எங்களுக்கு  முன்பாகத்  துரத்துகிறவர்களின்  தேசத்தையெல்லாம்  நாங்களும்  கட்டிக்கொள்ளுகிறோம்.  {Judg  11:24}

 

மேலும்  சிப்போரின்<Zippor>  குமாரனாகிய  பாலாக்<Balak>  என்னும்  மோவாபின்<Moab>  ராஜாவைப்பார்க்கிலும்  உமக்கு  அதிக  நியாயம்  உண்டோ?  அவன்  இஸ்ரவேலோடே<Israel>  எப்போதாகிலும்  வழக்காடினானா?  எப்போதாகிலும்  அவர்களுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணினானா?  {Judg  11:25}

 

இஸ்ரவேலர்<Israel>  எஸ்போனிலும்<Heshbon>  அதின்  கிராமங்களிலும்,  ஆரோவேரிலும்<Aroer>  அதின்  கிராமங்களிலும்,  அர்னோன்<Arnon>  நதியருகான  எல்லா  ஊர்களிலும்,  முந்நூறு  வருஷம்  குடியிருக்கையில்,  இவ்வளவுகாலமாய்  நீங்கள்  அதைத்  திருப்பிக்கொள்ளாதே  போனதென்ன?  {Judg  11:26}

 

நான்  உமக்கு  விரோதமாய்க்  குற்றம்  செய்யவில்லை;  நீர்  எனக்கு  விரோதமாய்  யுத்தம்பண்ணுகிறதினால்  நீர்தான்  எனக்கு  அநியாயம்  செய்கிறீர்;  நியாயாதிபதியாகிய  கர்த்தர்  இன்று  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  அம்மோன்<Ammon>  புத்திரருக்கும்  நடுநின்று  நியாயம்  தீர்க்கக்கடவர்  என்று  சொல்லி  அனுப்பினான்.  {Judg  11:27}

 

ஆனாலும்  அம்மோன்<Ammon>  புத்திரரின்  ராஜா  தனக்கு  யெப்தா<Jephthah>  சொல்லியனுப்பின  வார்த்தைகளுக்குச்  செவிகொடாதே  போனான்.  {Judg  11:28}

 

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  யெப்தாவின்மேல்<Jephthah>  இறங்கினார்;  அவன்  கீலேயாத்தையும்<Gilead>  மனாசே<Manasseh>  நாட்டையும்  கடந்துபோய்,  கீலேயாத்திலிருக்கிற<Gilead>  மிஸ்பாவுக்கு<Mizpeh>  வந்து,  அங்கேயிருந்து  அம்மோன்<Ammon>  புத்திரருக்கு  விரோதமாகப்  போனான்.  {Judg  11:29}

 

அப்பொழுது  யெப்தா<Jephthah>  கர்த்தருக்கு  ஒரு  பொருத்தனையைப்  பண்ணி:  தேவரீர்  அம்மோன்<Ammon>  புத்திரரை  என்  கையில்  ஒப்புக்கொடுக்கவே  ஒப்புக்கொடுத்தால்,  {Judg  11:30}

 

நான்  அம்மோன்<Ammon>  புத்திரரிடத்திலிருந்து  சமாதானத்தோடே  திரும்பிவரும்போது,  என்  வீட்டு  வாசற்படியிலிருந்து  எனக்கு  எதிர்கொண்டு  வருவது  எதுவோ  அது  கர்த்தருக்கு  உரியதாகும்,  அதைச்  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்துவேன்  என்றான்.  {Judg  11:31}

 

யெப்தா<Jephthah>  அம்மோன்<Ammon>  புத்திரரின்மேல்  யுத்தம்பண்ண,  அவர்களுக்கு  விரோதமாய்ப்  புறப்பட்டுப்போனான்;  கர்த்தர்  அவர்களை  அவன்  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  {Judg  11:32}

 

அவன்  அவர்களை  ஆரோவேர்<Aroer>  துவக்கி  மின்னித்திற்குப்<Minnith>  போகுமட்டும்,  திராட்சத்தோட்டத்து  நிலங்கள்வரைக்கும்,  மகா  சங்காரமாய்  முறிய  அடித்து,  இருபது  பட்டணங்களைப்  பிடித்தான்;  இப்படி  அம்மோன்<Ammon>  புத்திரர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாகத்  தாழ்த்தப்பட்டார்கள்.  {Judg  11:33}

 

யெப்தா<Jephthah>  மிஸ்பாவிலிருக்கிற<Mizpeh>  தன்  வீட்டுக்கு  வருகிறபோது,  இதோ,  அவன்  குமாரத்தி  தம்புரு  வாசித்து  நடனஞ்செய்து,  அவனுக்கு  எதிர்கொண்டு  வந்தாள்;  அவள்  அவனுக்கு  ஒரே  பிள்ளையானவள்;  அவளையல்லாமல்  அவனுக்குக்  குமாரனும்  இல்லை  குமாரத்தியும்  இல்லை.  {Judg  11:34}

 

அவன்  அவளைக்  கண்டவுடனே  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  ஐயோ!  என்  மகளே,  என்னை  மிகவும்  மனமடியவும்  கலங்கவும்  பண்ணுகிறாய்;  நான்  கர்த்தரை  நோக்கி  என்  வாயைத்  திறந்து  சொல்லிவிட்டேன்;  அதை  நான்  மாற்றக்கூடாது  என்றான்.  {Judg  11:35}

 

அப்பொழுது  அவள்:  என்  தகப்பனே,  நீர்  கர்த்தரை  நோக்கி  உம்முடைய  வாயைத்  திறந்து  பேசினீரல்லவோ?  அம்மோன்<Ammon>  புத்திரராகிய  உம்முடைய  சத்துருக்களுக்கு  நீதியைச்  சரிக்கட்டும்  ஜெயத்தைக்  கர்த்தர்  உமக்குக்  கட்டளையிட்டபடியினால்,  உம்முடைய  வாயிலிருந்து  புறப்பட்டபடியே  எனக்குச்  செய்யும்  என்றாள்.  {Judg  11:36}

 

பின்னும்  அவள்  தன்  தகப்பனை  நோக்கி:  நீர்  எனக்கு  ஒரு  காரியம்  செய்யவேண்டும்;  நான்  மலைகளின்மேல்  போய்த்  திரிந்து,  நானும்  என்  தோழிமார்களும்  என்  கன்னிமையினிமித்தம்  துக்கங்கொண்டாட,  எனக்கு  இரண்டுமாதம்  தவணைகொடும்  என்றாள்.  {Judg  11:37}

 

அதற்கு  அவன்:  போய்வா  என்று  அவளை  இரண்டு  மாதத்திற்கு  அனுப்பிவிட்டான்;  அவள்  தன்  தோழிமார்களோடும்  கூடப்போய்,  தன்  கன்னிமையினிமித்தம்  மலைகளின்மேல்  துக்கங்கொண்டாடி,  {Judg  11:38}

 

இரண்டுமாதம்  முடிந்தபின்பு,  தன்  தகப்பனிடத்திற்குத்  திரும்பிவந்தாள்;  அப்பொழுது  அவன்  பண்ணியிருந்த  தன்  பொருத்தனையின்படி  அவளுக்குச்  செய்தான்;  அவள்  புருஷனை  அறியாதிருந்தாள்.  {Judg  11:39}

 

இதினிமித்தம்  இஸ்ரவேலின்<Israel>  குமாரத்திகள்  வருஷந்தோறும்  போய்,  நாலு  நாள்  கீலேயாத்தியனான<Gileadite>  யெப்தாவின்<Jephthah>  குமாரத்தியைக்குறித்துப்  புலம்புவது  இஸ்ரவேலிலே<Israel>  வழக்கமாயிற்று.  {Judg  11:40}

 

எப்பிராயீம்<Ephraim>  மனுஷர்  ஏகமாய்க்  கூடி  வடக்கே  புறப்பட்டுப்போய்,  யெப்தாவை<Jephthah>  நோக்கி:  நீ  எங்களை  உன்னோடேகூட  வரும்படி  அழைப்பியாமல்  அம்மோன்<Ammon>  புத்திரர்மேல்  யுத்தம்பண்ணப்போனதென்ன?  உன்  வீட்டையும்  உன்னையும்கூட  அக்கினியால்  சுட்டுப்போடுவோம்  என்றார்கள்.  {Judg  12:1}

 

அதற்கு  யெப்தா<Jephthah>:  எனக்கும்  என்  ஜனத்திற்கும்  அம்மோன்<Ammon>  புத்திரரோடே  பெரிய  வழக்கு  இருக்கும்போது,  நான்  உங்களைக்  கூப்பிட்டேன்;  நீங்கள்  என்னை  அவர்கள்  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கவில்லை.  {Judg  12:2}

 

நீங்கள்  என்னை  ரட்சிக்கவில்லை  என்று  நான்  கண்டபோது,  நான்  என்  ஜீவனை  என்  கையிலே  பிடித்துக்கொண்டு,  அம்மோன்<Ammon>  புத்திரருக்கு  விரோதமாய்ப்  போனேன்;  கர்த்தர்  அவர்களை  என்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  இப்படியிருக்க,  நீங்கள்  என்மேல்  யுத்தம்பண்ண,  இன்று  என்னிடத்திற்கு  வரவேண்டியது  என்ன  என்று  சொன்னான்.  {Judg  12:3}

 

பின்பு  யெப்தா<Jephthah>  கீலேயாத்<Gilead>  மனுஷரையெல்லாம்  கூட்டி,  எப்பிராயீமரோடு<Ephraim>  யுத்தம்பண்ணினான்;  எப்பிராயீமுக்கும்<Ephraim>  மனாசேக்கும்<Manasseh>  நடுவே  குடியிருக்கிற  கீலேயாத்தியரான<Gileadites>  நீங்கள்  எப்பிராயீமைவிட்டு<Ephraim>  ஓடிப்போனவர்கள்  என்று  எப்பிராயீமர்<Ephraim>  சொன்னபடியினால்,  கீலேயாத்<Gilead>  மனுஷர்  அவர்களை  முறிய  அடித்தார்கள்.  {Judg  12:4}

 

கீலேயாத்தியர்<Gileadites>  எப்பிராயீமருக்கு<Ephraimites>  முந்தி  யோர்தானின்<Jordan>  துறைகளைப்  பிடித்தார்கள்;  அப்பொழுது  எப்பிராயீமரிலே<Ephraimites>  தப்பினவர்களில்  யாராவது  வந்து:  நான்  அக்கரைக்குப்  போகட்டும்  என்று  சொல்லும்போது,  கீலேயாத்<Gilead>  மனுஷர்:  நீ  எப்பிராயீமனா<Ephraimite>  என்று  அவனைக்  கேட்பார்கள்;  அவன்  அல்ல  என்றால்,  {Judg  12:5}

 

நீ  ஷிபோலேத்<Shibboleth>  என்று  சொல்  என்பார்கள்;  அப்பொழுது  அவன்  அப்படி  உச்சரிக்கக்கூடாமல்,  சிபோலேத்<Sibboleth>  என்பான்;  அப்பொழுது  அவனைப்  பிடித்து,  யோர்தான்<Jordan>  துறையிலே  வெட்டிப்போடுவார்கள்;  அக்காலத்திலே  எப்பிராயீமில்<Ephraimites>  நாற்பத்தீராயிரம்பேர்  விழுந்தார்கள்.  {Judg  12:6}

 

யெப்தா<Jephthah>  இஸ்ரவேலை<Israel>  ஆறு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்;  பின்பு  கீலேயாத்தியனான<Gileadite>  யெப்தா<Jephthah>  மரித்து,  கீலேயாத்திலுள்ள<Gilead>  ஒரு  பட்டணத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Judg  12:7}

 

அவனுக்குப்பின்பு  பெத்லெகேம்<Bethlehem>  ஊரானாகிய  இப்சான்<Ibzan>  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்தான்.  {Judg  12:8}

 

அவனுக்கு  முப்பது  குமாரரும்  முப்பது  குமாரத்திகளும்  இருந்தார்கள்;  முப்பது  குமாரத்திகளையும்  புறத்திலே  விவாகம்பண்ணிக்கொடுத்து,  தன்  குமாரருக்கு  முப்பது  பெண்களைப்  புறத்திலே  கொண்டான்;  அவன்  இஸ்ரவேலை<Israel>  ஏழு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  {Judg  12:9}

 

பின்பு  இப்சான்<Ibzan>  மரித்து,  பெத்லெகேமிலே<Bethlehem>  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Judg  12:10}

 

அவனுக்குப்பின்பு  செபுலோனியனாகிய<Zebulonite>  ஏலோன்<Elon>  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்தான்;  அவன்  பத்து  வருஷம்  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்தான்.  {Judg  12:11}

 

பின்பு  செபுலோனியனாகிய<Zebulonite>  ஏலோன்<Elon>  மரித்து,  செபுலோன்<Zebulun>  தேசமான  ஆயலோன்<Aijalon>  ஊரில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Judg  12:12}

 

அவனுக்குப்பின்பு  இல்லேலின்<Hillel>  குமாரனாகிய  பிரத்தோனியனான<Pirathonite>  அப்தோன்<Abdon>  இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்தான்.  {Judg  12:13}

 

அவனுக்கு  நாற்பது  குமாரரும்  முப்பது  பேரப்பிள்ளைகளும்  இருந்தார்கள்;  அவர்கள்  எழுபது  கழுதைகளின்மேல்  ஏறுவார்கள்;  அவன்  இஸ்ரவேலை<Israel>  எட்டு  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  {Judg  12:14}

 

பின்பு  பிரத்தோனியனான<Pirathonite>  இல்லேலின்<Hillel>  குமாரனாகிய  அப்தோன்<Abdon>  மரித்து,  எப்பிராயீம்<Ephraim>  தேசத்தில்  அமலேக்கியர்<Amalekites>  மலையிலிருக்கிற  பிரத்தோனிலே<Pirathon>  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Judg  12:15}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மறுபடியும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தபடியால்,  கர்த்தர்  அவர்களை  நாற்பது  வருஷமளவும்  பெலிஸ்தர்<Philistines>  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  {Judg  13:1}

 

அப்பொழுது  தாண்<Danites>  வம்சத்தானாகிய  சோரா<Zorah>  ஊரானான  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  பேர்  மனோவா<Manoah>;  அவன்  மனைவி  பிள்ளைபெறாத  மலடியாயிருந்தாள்.  {Judg  13:2}

 

கர்த்தருடைய  தூதனானவர்  அந்த  ஸ்திரீக்குத்  தரிசனமாகி,  அவளை  நோக்கி:  இதோ,  பிள்ளைபெறாத  மலடியான  நீ  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரனைப்  பெறுவாய்.  {Judg  13:3}

 

ஆதலால்  நீ  திராட்சரசமும்  மதுபானமும்  குடியாதபடிக்கும்,  தீட்டானது  ஒன்றும்  புசியாதபடிக்கும்  எச்சரிக்கையாயிரு.  {Judg  13:4}

 

நீ  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரனைப்  பெறுவாய்;  அவன்  தலையின்மேல்  சவரகன்  கத்தி  படலாகாது;  அந்தப்  பிள்ளை  பிறந்ததுமுதல்  தேவனுக்கென்று  நசரேயனாயிருப்பான்<Nazarene//Nazarite>;  அவன்  இஸ்ரவேலைப்<Israel>  பெலிஸ்தரின்<Philistines>  கைக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கத்  தொடங்குவான்  என்றார்.  {Judg  13:5}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  தன்  புருஷனிடத்தில்  வந்து:  தேவனுடைய  மனுஷன்  ஒருவர்  என்னிடத்தில்  வந்தார்;  அவருடைய  சாயல்  தேவனுடைய  தூதரின்  சாயலைப்போல  மகா  பயங்கரமாயிருந்தது;  எங்கேயிருந்து  வந்தீர்  என்று  நான்  அவரிடத்தில்  கேட்கவில்லை;  அவர்  தம்முடைய  நாமத்தை  எனக்குச்  சொல்லவுமில்லை.  {Judg  13:6}

 

அவர்  என்னை  நோக்கி:  இதோ,  நீ  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரனைப்  பெறுவாய்;  ஆதலால்  நீ  திராட்சரசமும்  மதுபானமும்  குடியாமலும்,  தீட்டானது  ஒன்றும்  புசியாமலும்  இரு;  அந்தப்  பிள்ளை  பிறந்தது  முதல்  தன்  மரணநாள்மட்டும்  தேவனுக்கென்று  நசரேயனாயிருப்பான்<Nazarene//Nazarite>  என்று  சொன்னார்  என்றாள்.  {Judg  13:7}

 

அப்பொழுது  மனோவா<Manoah>  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:  ,  என்  ஆண்டவரே,  நீர்  அனுப்பின  தேவனுடைய  மனுஷன்  மறுபடியும்  ஒருவிசை  எங்களிடத்தில்  வந்து,  பிறக்கப்போகிற  பிள்ளைக்காக  நாங்கள்  செய்யவேண்டியதை  எங்களுக்குக்  கற்பிப்பாராக  என்று  வேண்டிக்கொண்டான்.  {Judg  13:8}

 

தேவன்  மனோவாவின்<Manoah>  சத்தத்துக்குச்  செவிகொடுத்தார்;  அந்த  ஸ்திரீ  வயல்வெளியில்  இருக்கும்போது  தேவனுடைய  தூதனானவர்  திரும்பவும்  அவளிடத்தில்  வந்தார்;  அப்பொழுது  அவள்  புருஷனாகிய  மனோவா<Manoah>  அவளோடே  இருக்கவில்லை.  {Judg  13:9}

 

ஆகையால்  அந்த  ஸ்திரீ  சீக்கிரமாய்  ஓடி,  இதோ,  அன்று  என்னிடத்தில்  வந்தவர்  எனக்குத்  தரிசனமானார்  என்று  தன்  புருஷனுக்கு  அறிவித்தாள்.  {Judg  13:10}

 

அப்பொழுது  மனோவா<Manoah>  எழுந்திருந்து,  தன்  மனைவியின்  பின்னாலே  போய்,  அவரிடத்துக்கு  வந்து:  இந்த  ஸ்திரீயோடே  பேசினவர்  நீர்தானா  என்று  அவரிடத்தில்  கேட்டான்;  அவர்  நான்தான்  என்றார்.  {Judg  13:11}

 

அப்பொழுது  மனோவா<Manoah>:  நீர்  சொன்ன  காரியம்  நிறைவேறும்போது,  அந்தப்  பிள்ளையை  எப்படி  வளர்க்கவேண்டும்,  அதை  எப்படி  நடத்தவேண்டும்  என்று  கேட்டான்.  {Judg  13:12}

 

கர்த்தருடைய  தூதனானவர்  மனோவாவை<Manoah>  நோக்கி:  நான்  ஸ்திரீயோடே  சொன்ன  யாவற்றிற்கும்,  அவள்  எச்சரிக்கையாயிருந்து,  {Judg  13:13}

 

திராட்சச்செடியிலே  உண்டாகிறதொன்றும்  சாப்பிடாமலும்,  திராட்சரசமும்  மதுபானமும்  குடியாமலும்,  தீட்டானதொன்றும்  புசியாமலும்,  நான்  அவளுக்குக்  கட்டளையிட்டதையெல்லாம்  கைக்கொள்ளக்கடவள்  என்றார்.  {Judg  13:14}

 

அப்பொழுது  மனோவா<Manoah>  கர்த்தருடைய  தூதனை  நோக்கி:  நாங்கள்  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியை  உமக்காகச்  சமைத்துக்கொண்டுவருமட்டும்  தரித்திரும்  என்றான்.  {Judg  13:15}

 

கர்த்தருடைய  தூதனானவர்  மனோவாவை<Manoah>  நோக்கி:  நீ  என்னை  இருக்கச்  சொன்னாலும்  நான்  உன்  உணவைப்  புசியேன்;  நீ  சர்வாங்க  தகனபலி  இடவேண்டுமானால்,  அதை  நீ  கர்த்தருக்குச்  செலுத்துவாயாக  என்றார்.  அவர்  கர்த்தருடைய  தூதன்  என்று  மனோவா<Manoah>  அறியாதிருந்தான்.  {Judg  13:16}

 

அப்பொழுது  மனோவா<Manoah>  கர்த்தருடைய  தூதனை  நோக்கி:  நீர்  சொன்ன  காரியம்  நிறைவேறும்போது,  நாங்கள்  உம்மைக்  கனம்பண்ணும்படி,  உம்முடைய  நாமம்  என்ன  என்று  கேட்டான்.  {Judg  13:17}

 

அதற்குக்  கர்த்தருடைய  தூதனானவர்:  என்  நாமம்  என்ன  என்று  நீ  கேட்கவேண்டியது  என்ன?  அது  அதிசயம்  என்றார்.  {Judg  13:18}

 

மனோவா<Manoah>  போய்,  வெள்ளாட்டுக்குட்டியையும்,  போஜனபலியையும்  கொண்டுவந்து,  அதைக்  கன்மலையின்மேல்  கர்த்தருக்குச்  செலுத்தினான்;  அப்பொழுது  மனோவாவும்<Manoah>  அவன்  மனைவியும்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  அதிசயம்  விளங்கினது.  {Judg  13:19}

 

அக்கினிஜுவாலை  பலிபீடத்திலிருந்து  வானத்திற்கு  நேராக  எழும்புகையில்,  கர்த்தருடைய  தூதனானவர்  பலிபீடத்தின்  ஜுவாலையிலே  ஏறிப்போனார்;  அதை  மனோவாவும்<Manoah>  அவன்  மனைவியும்  கண்டு,  தரையிலே  முகங்குப்புற  விழுந்தார்கள்.  {Judg  13:20}

 

பின்பு  கர்த்தருடைய  தூதனானவர்  மனோவாவுக்கும்<Manoah>  அவன்  மனைவிக்கும்  காணப்படவில்லை;  அப்பொழுது  அவர்  கர்த்தருடைய  தூதன்  என்று  மனோவா<Manoah>  அறிந்து,  {Judg  13:21}

 

தன்  மனைவியைப்  பார்த்து:  நாம்  தேவனைக்  கண்டோம்,  சாகவே  சாவோம்  என்றான்.  {Judg  13:22}

 

அதற்கு  அவன்  மனைவி:  கர்த்தர்  நம்மைக்  கொன்றுபோடச்  சித்தமாயிருந்தால்,  அவர்  நம்முடைய  கையிலே  சர்வாங்க  தகனபலியையும்  போஜனபலியையும்  ஒப்புக்கொள்ளமாட்டார்,  இவைகளையெல்லாம்  நமக்குக்  காண்பிக்கவுமாட்டார்,  இவைகளை  நமக்கு  அறிவிக்கவுமாட்டார்  என்றாள்.  {Judg  13:23}

 

பின்பு  அந்த  ஸ்திரீ  ஒரு  குமாரனைப்  பெற்று,  அவனுக்குச்  சிம்சோன்<Samson>  என்று  பேரிட்டாள்;  அந்தப்  பிள்ளை  வளர்ந்தது;  கர்த்தர்  அவனை  ஆசீர்வதித்தார்.  {Judg  13:24}

 

அவன்  சோராவுக்கும்<Zorah>  எஸ்தாவோலுக்கும்<Eshtaol>  நடுவிலுள்ள  தாணின்<Dan>  பாளயத்தில்  இருக்கையில்  கர்த்தருடைய  ஆவியானவர்  அவனை  ஏவத்துவக்கினார்.  {Judg  13:25}

 

சிம்சோன்<Samson>  திம்னாத்துக்குப்<Timnath>  போய்,  திம்னாத்திலே<Timnath>  பெலிஸ்தரின்<Philistines>  குமாரத்திகளில்  ஒரு  பெண்ணைக்  கண்டு,  {Judg  14:1}

 

திரும்ப  வந்து,  தன்  தாயையும்  தகப்பனையும்  நோக்கி:  திம்னாத்திலே<Timnath>  பெலிஸ்தரின்<Philistines>  குமாரத்திகளில்  ஒரு  பெண்ணைக்  கண்டேன்;  அவளை  எனக்குக்  கொள்ளவேண்டும்  என்றான்.  {Judg  14:2}

 

அப்பொழுது  அவன்  தாயும்  அவன்  தகப்பனும்  அவனை  நோக்கி:  நீ  போய்,  விருத்தசேதனமில்லாத  பெலிஸ்தரிடத்தில்<Philistines>  ஒரு  பெண்ணைக்  கொள்ளவேண்டியதென்ன?  உன்  சகோதரரின்  குமாரத்திகளிலும்,  எங்கள்  ஜனமனைத்திலும்  பெண்  இல்லையா  என்றார்கள்.  சிம்சோன்<Samson>  தன்  தகப்பனை  நோக்கி:  அவள்  என்  கண்ணுக்குப்  பிரியமானவள்,  அவளையே  எனக்குக்  கொள்ளவேண்டும்  என்றான்.  {Judg  14:3}

 

அவன்  பெலிஸ்தரிடத்தில்<Philistines>  குற்றம்  பிடிக்க  முகாந்தரம்  உண்டாகும்படி,  இது  கர்த்தரின்  செயல்  என்று  அவன்  தாயும்  தகப்பனும்  அறியாதிருந்தார்கள்;  அக்காலத்திலே  பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேலை<Israel>  ஆண்டார்கள்.  {Judg  14:4}

 

அப்படியே  சிம்சோனும்<Samson>  அவன்  தாயும்  தகப்பனும்  திம்னாத்துக்குப்<Timnath>  போகப்  புறப்பட்டார்கள்;  அவர்கள்  திம்னாத்<Timnath>  ஊர்  திராட்சத்தோட்டங்கள்மட்டும்  வந்தபோது,  இதோ,  கெர்ச்சிக்கிற  பாலசிங்கம்  ஒன்று  அவனுக்கு  எதிராக  வந்தது.  {Judg  14:5}

 

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  அவன்மேல்  பலமாய்  இறங்கினதினால்,  அவன்  தன்  கையில்  ஒன்றும்  இல்லாதிருந்தும்,  அதை  ஒரு  ஆட்டுக்குட்டியைக்  கிழித்துப்போடுகிறதுபோல்  கிழித்துப்போட்டான்;  ஆனாலும்  தான்  செய்ததை  அவன்  தன்  தாய்  தகப்பனுக்கு  அறிவிக்கவில்லை.  {Judg  14:6}

 

அவன்  போய்  அந்தப்  பெண்ணோடே  பேசினான்;  அவள்  சிம்சோனின்<Samson>  கண்ணுக்குப்  பிரியமாயிருந்தாள்.  {Judg  14:7}

 

சிலநாளைக்குப்பின்பு,  அவன்  அவளை  விவாகம்பண்ணத்  திரும்பிவந்து,  சிங்கத்தின்  உடலைப்  பார்க்கிறதற்கு  வழிவிலகிப்  போனான்;  இதோ,  சிங்கத்தின்  உடலுக்குள்ளே  தேனீக்கூட்டமும்  தேனும்  இருந்தது.  {Judg  14:8}

 

அவன்  அதைத்  தன்  கைகளில்  எடுத்து,  சாப்பிட்டுக்கொண்டே  நடந்து,  தன்  தாய்தகப்பனிடத்தில்  வந்து,  அவர்களுக்கும்  கொடுத்தான்;  அவர்களும்  சாப்பிட்டார்கள்;  ஆனாலும்  தான்  அந்தத்  தேனைச்  சிங்கத்தின்  உடலிலே  எடுத்ததை  அவர்களுக்கு  அறிவிக்கவில்லை.  {Judg  14:9}

 

அவன்  தகப்பன்  அந்தப்  பெண்  இருக்கும்  இடத்தில்  போனபோது,  சிம்சோன்<Samson>  அங்கே  விருந்துசெய்தான்;  வாலிபர்  அப்படிச்  செய்வது  வழக்கம்.  {Judg  14:10}

 

அவர்கள்  அவனைக்  கண்டபோது,  அவனோடேகூட  இருக்கும்படி  முப்பது  தோழரை  அவனிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  {Judg  14:11}

 

சிம்சோன்<Samson>  அவர்களை  நோக்கி:  ஒரு  விடுகதையை  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  அதை  நீங்கள்  விருந்துண்கிற  ஏழுநாளைக்குள்ளே  கண்டுபிடித்து  எனக்கு  விடுவித்தால்,  நான்  உங்களுக்கு  முப்பது  துப்பட்டிகளையும்  முப்பது  மாற்று  வஸ்திரங்களையும்  கொடுப்பேன்.  {Judg  14:12}

 

அதை  எனக்கு  விடுவிக்காதேபோனால்,  நீங்கள்  எனக்கு  முப்பது  துப்பட்டிகளையும்  முப்பது  மாற்று  வஸ்திரங்களையும்  கொடுக்கவேண்டும்  என்றான்.  அதற்கு  அவர்கள்:  உன்  விடுகதையைச்  சொல்லு;  நாங்கள்  அதைக்  கேட்கட்டும்  என்றார்கள்.  {Judg  14:13}

 

அப்பொழுது  அவன்:  பட்சிக்கிறவனிடத்திலிருந்து  பட்சணமும்,  பலவானிடத்திலிருந்து  மதுரமும்  வந்தது  என்றான்;  அந்த  விடுகதை  அவர்களால்  மூன்றுநாள்மட்டும்  விடுவிக்கக்கூடாதே  போயிற்று.  {Judg  14:14}

 

ஏழாம்நாளிலே  அவர்கள்  சிம்சோனின்<Samson>  பெண்சாதியைப்  பார்த்து:  உன்  புருஷன்  அந்த  விடுகதையை  எங்களுக்கு  விடுவிக்கும்படிக்கு  நீ  அவனை  நயம்பண்ணு;  இல்லாவிட்டால்  நாங்கள்  உன்னையும்  உன்  தகப்பன்  வீட்டையும்  அக்கினியால்  சுட்டெரித்துப்போடுவோம்;  எங்களுக்குள்ளவைகளைப்  பறித்துக்கொள்ளவா  எங்களை  அழைத்தீர்கள்  என்றார்கள்.  {Judg  14:15}

 

அப்பொழுது  சிம்சோனின்<Samson>  பெண்சாதி  அவனுக்கு  முன்பாக  அழுது,  நீ  என்னை  நேசியாமல்  என்னைப்  பகைக்கிறாய்,  என்  ஜனங்களுக்கு  ஒரு  விடுகதையைச்  சொன்னாய்,  அதை  எனக்காவது  விடுவிக்கவில்லையே  என்றாள்;  அதற்கு  அவன்:  இதோ,  நான்  என்  தாய்தகப்பனுக்கும்  அதை  விடுவிக்கவில்லையே,  உனக்கு  அதை  விடுவிப்பேனோ  என்றான்.  {Judg  14:16}

 

விருந்துண்கிற  ஏழுநாளும்  அவள்  அவன்  முன்பாக  அழுதுகொண்டே  இருந்தாள்;  ஏழாம்நாளிலே  அவள்  அவனை  அலட்டிக்கொண்டிருந்தபடியால்,  அதை  அவளுக்கு  விடுவித்தான்;  அப்பொழுது  அவள்  தன்  ஜனங்களுக்கு  அந்த  விடுகதையை  விடுவித்தாள்.  {Judg  14:17}

 

ஆகையால்  ஏழாம்நாளிலே  பொழுது  போகுமுன்னே,  அந்த  ஊர்  மனுஷர்  அவனை  நோக்கி:  தேனைப்பார்க்கிலும்  மதுரமானது  என்ன,  சிங்கத்தைப்பார்க்கிலும்  பலமானதும்  என்ன  என்றார்கள்;  அதற்கு  அவன்:  நீங்கள்  என்  கிடாரியால்  உழாதிருந்தீர்களானால்,  என்  விடுகதையைக்  கண்டுபிடிப்பதில்லை  என்றான்.  {Judg  14:18}

 

கர்த்தருடைய  ஆவி  அவன்மேல்  இறங்கினதினால்,  அவன்  அஸ்கலோனுக்குப்<Ashkelon>  போய்,  அவ்வூராரில்  முப்பதுபேரைக்  கொன்று,  அவர்களுடைய  வஸ்திரங்களை  உரிந்துகொண்டுவந்து,  விடுகதையை  விடுவித்தவர்களுக்கு  அந்த  மாற்று  வஸ்திரங்களைக்  கொடுத்து,  கோபம்  மூண்டவனாய்ப்  புறப்பட்டு,  தன்  தகப்பன்  வீட்டுக்குப்  போய்விட்டான்.  {Judg  14:19}

 

சிம்சோனின்<Samson>  பெண்சாதியோவென்றால்,  அவனுடைய  தோழரில்  அவனோடே  சிநேகமாயிருந்த  ஒருவனுக்குக்  கொடுக்கப்பட்டாள்.  {Judg  14:20}

 

சிலநாள்  சென்றபின்பு,  சிம்சோன்<Samson>  கோதுமை  அறுக்கிற  நாட்களில்  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியை  எடுத்துக்கொண்டு,  தன்  பெண்சாதியைக்  காணப்போய்:  நான்  என்  பெண்சாதியினிடத்தில்  அறைவீட்டிற்குள்  போகட்டும்  என்றான்;  அவள்  தகப்பனோ,  அவனை  உள்ளே  போக  ஒட்டாமல்:  {Judg  15:1}

 

நீ  அவளை  முற்றிலும்  பகைத்துவிட்டாய்  என்று  நான்  எண்ணி,  அவளை  உன்  சிநேகிதனுக்குக்  கொடுத்துவிட்டேன்;  அவள்  தங்கை  அவளைப்பார்க்கிலும்  அழகானவள்  அல்லவா,  அவளுக்குப்  பதிலாக  இவள்  உனக்கு  இருக்கட்டும்  என்று  சொன்னான்.  {Judg  15:2}

 

அப்பொழுது  சிம்சோன்<Samson>:  நான்  பெலிஸ்தருக்குப்<Philistines>  பொல்லாப்புச்  செய்தாலும்,  என்மேல்  குற்றமில்லை  என்று  அவர்களுக்குச்  சொல்லி,  {Judg  15:3}

 

புறப்பட்டுப்போய்,  முந்நூறு  நரிகளைப்  பிடித்து,  பந்தங்களை  எடுத்து,  வாலோடே  வால்  சேர்த்து,  இரண்டு  வால்களுக்கும்  நடுவே  ஒவ்வொரு  பந்தத்தை  வைத்துக்  கட்டி,  {Judg  15:4}

 

பந்தங்களைக்  கொளுத்தி,  பெலிஸ்தரின்<Philistines>  வெள்ளாண்மையிலே  அவைகளை  ஓடவிட்டு,  கதிர்க்கட்டுகளையும்  வெள்ளாண்மையையும்  திராட்சத்தோட்டங்களையும்  ஒலிவத்தோப்புகளையும்  சுட்டெரித்துப்  போட்டான்.  {Judg  15:5}

 

இப்படிச்  செய்தவன்  யார்  என்று  பெலிஸ்தர்<Philistines>  கேட்கிறபோது,  திம்னாத்தானுடைய<Timnite>  மருமகனாகிய  சிம்சோன்தான்<Samson>;  அவனுடைய  பெண்சாதியை  அவனுடைய  சிநேகிதனுக்குக்  கொடுத்துவிட்டபடியால்  அப்படிச்  செய்தான்  என்றார்கள்;  அப்பொழுது  பெலிஸ்தர்<Philistines>  போய்,  அவளையும்  அவள்  தகப்பனையும்  அக்கினியால்  சுட்டெரித்தார்கள்.  {Judg  15:6}

 

அப்பொழுது  சிம்சோன்<Samson>  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இப்படிச்  செய்தபடியால்  நான்  உங்கள்  கையிலே  பழிவாங்கினாலொழிய  இளைப்பாறேன்  என்று  சொல்லி,  {Judg  15:7}

 

அவர்களைச்  சின்னபின்னமாகச்  சங்காரம்பண்ணி,  பின்பு  போய்,  ஏத்தாம்<Etam>  ஊர்க்  கன்மலைச்  சந்திலே  குடியிருந்தான்.  {Judg  15:8}

 

அப்பொழுது  பெலிஸ்தர்<Philistines>  போய்,  யூதாவிலே<Judah>  பாளயமிறங்கி,  லேகி<Lehi>  என்கிற  வெளியிலே  பரவியிருந்தார்கள்.  {Judg  15:9}

 

நீங்கள்  எங்களுக்கு  விரோதமாக  வந்தது  என்ன  என்று  யூதா<Judah>  மனுஷர்  கேட்டதற்கு,  அவர்கள்:  சிம்சோன்<Samson>  எங்களுக்குச்  செய்ததுபோல,  நாங்களும்  அவனுக்குச்  செய்யும்படி  அவனைக்  கட்டுகிறதற்காக  வந்தோம்  என்றார்கள்.  {Judg  15:10}

 

அப்பொழுது  யூதாவிலே<Judah>  மூவாயிரம்பேர்  ஏத்தாம்<Etam>  ஊர்க்  கன்மலைச்  சந்திற்குப்  போய்:  பெலிஸ்தர்<Philistines>  நம்மை  ஆளுகிறார்கள்  என்று  தெரியாதா?  பின்னை  ஏன்  எங்களுக்கு  இப்படிச்  செய்தாய்  என்று  சிம்சோனிடத்தில்<Samson>  சொன்னார்கள்.  அதற்கு  அவன்:  அவர்கள்  எனக்குச்  செய்தபடியே  நானும்  அவர்களுக்குச்  செய்தேன்  என்றான்.  {Judg  15:11}

 

அப்பொழுது  அவர்கள்:  உன்னைக்  கட்டி,  பெலிஸ்தர்<Philistines>  கையில்  ஒப்புக்கொடுக்க  வந்திருக்கிறோம்  என்றார்கள்.  அதற்குச்  சிம்சோன்<Samson>:  நீங்களே  என்மேல்  விழுகிறதில்லை  என்று  எனக்கு  ஆணையிடுங்கள்  என்றான்.  {Judg  15:12}

 

அதற்கு  அவர்கள்:  நாங்கள்  உன்னை  இறுகக்கட்டி,  அவர்கள்  கையில்  ஒப்புக்கொடுப்போமே  அல்லாமல்,  உன்னைக்  கொன்றுபோடமாட்டோம்  என்று  சொல்லி,  இரண்டு  புதுக்  கயிறுகளாலே  அவனைக்  கட்டி,  கன்மலையிலிருந்து  கொண்டுபோனார்கள்.  {Judg  15:13}

 

அவன்  லேகிவரைக்கும்<Lehi>  வந்து  சேர்ந்தபோது,  பெலிஸ்தர்<Philistines>  அவனுக்கு  விரோதமாய்  ஆரவாரம்  பண்ணினார்கள்;  அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  அவன்மேல்  பலமாய்  இறங்கினதினால்,  அவன்  புயங்களில்  கட்டியிருந்த  கயிறுகள்  நெருப்புப்பட்ட  நூல்போலாகி,  அவன்  கட்டுகள்  அவன்  கைகளை  விட்டு  அறுந்துபோயிற்று.  {Judg  15:14}

 

உடனே  அவன்  ஒரு  கழுதையின்  பச்சைத்  தாடையெலும்பைக்  கண்டு,  தன்  கையை  நீட்டி  அதை  எடுத்து,  அதினாலே  ஆயிரம்  பேரைக்  கொன்றுபோட்டான்.  {Judg  15:15}

 

அப்பொழுது  சிம்சோன்<Samson>:  கழுதையின்  தாடையெலும்பினால்  குவியல்  குவியலாகப்  பட்டுக்கிடக்கிறார்கள்,  கழுதையின்  தாடையெலும்பினால்  ஆயிரம்பேரைக்  கொன்றேன்  என்றான்.  {Judg  15:16}

 

அப்படிச்  சொல்லித்  தீர்ந்தபின்பு,  தன்  கையில்  இருந்த  தாடையெலும்பை  எறிந்துவிட்டு,  அவ்விடத்திற்கு  ராமாத்லேகி<Ramathlehi>  என்று  பேரிட்டான்.  {Judg  15:17}

 

அவன்  மிகவும்  தாகமடைந்து,  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு:  தேவரீர்  உமது  அடியேன்  கையினால்  இந்தப்  பெரிய  இரட்சிப்பைக்  கட்டளையிட்டிருக்க,  இப்பொழுது  நான்  தாகத்தினால்  செத்து,  விருத்தசேதனம்  இல்லாதவர்கள்  கையிலே  விழவேண்டுமோ  என்றான்.  {Judg  15:18}

 

அப்பொழுது  தேவன்  லேகியிலுள்ள<Lehi>  பள்ளத்தைப்  பிளக்கப்பண்ணினார்;  அதிலிருந்து  தண்ணீர்  ஓடிவந்தது;  அவன்  குடித்தபோது  அவன்  உயிர்  திரும்ப  வந்தது,  அவன்  பிழைத்தான்;  ஆனபடியால்  அதற்கு  எந்நக்கோரி<Enhakkore>  என்று  பேரிட்டான்;  அது  இந்நாள்வரையும்  லேகியில்<Lehi>  இருக்கிறது.  {Judg  15:19}

 

அவன்  பெலிஸ்தரின்<Philistines>  நாட்களில்  இஸ்ரவேலை<Israel>  இருபது  வருஷம்  நியாயம்  விசாரித்தான்.  {Judg  15:20}

 

பின்பு  சிம்சோன்<Samson>  காசாவுக்குப்<Gaza>  போய்,  அங்கே  ஒரு  வேசியைக்  கண்டு,  அவளிடத்தில்  போனான்.  {Judg  16:1}

 

அப்பொழுது:  சிம்சோன்<Samson>  இங்கே  வந்திருக்கிறான்  என்று  காசா<Gazites>  ஊராருக்குச்  சொல்லப்பட்டது.  அவர்கள்:  காலையில்  வெளிச்சமாகிறபோது  அவனைக்  கொன்றுபோடுவோம்  என்று  சொல்லி,  அவனை  வளைந்துகொண்டு  இராமுழுதும்  அவனுக்காகப்  பட்டணவாசலில்  பதிவிருந்து  இராமுழுதும்  பேசாதிருந்தார்கள்.  {Judg  16:2}

 

சிம்சோன்<Samson>  நடுராத்திரிமட்டும்  படுத்திருந்து,  நடுராத்திரியில்  எழுந்து,  பட்டணத்து  வாசல்  கதவுகளையும்  அதின்  இரண்டு  நிலைகளையும்  பிடித்து,  தாழ்ப்பாளோடேகூடப்  பேர்த்து,  தன்  தோளின்மேல்  வைத்து,  எபிரோனுக்கு<Hebron>  எதிரேயிருக்கிற  மலையின்  உச்சிக்குச்  சுமந்துகொண்டுபோனான்.  {Judg  16:3}

 

அதற்குப்பின்பு  அவன்  சோரேக்<Sorek>  ஆற்றங்கரையில்  இருக்கிற  தெலீலாள்<Delilah>  என்னும்  பேருள்ள  ஒரு  ஸ்திரீயோடே  சிநேகமாயிருந்தான்.  {Judg  16:4}

 

அவளிடத்திற்குப்  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகள்  போய்:  நீ  அவனை  நயம்பண்ணி,  அவனுடைய  மகா  பலம்  எதினாலே  உண்டாயிருக்கிறது  என்றும்,  நாங்கள்  அவனைக்  கட்டிச்  சிறுமைப்படுத்துகிறதற்கு  எதினாலே  அவனை  மேற்கொள்ளலாம்  என்றும்  அறிந்துகொள்;  அப்பொழுது  நாங்கள்  ஒவ்வொருவரும்  ஆயிரத்துநூறு  வெள்ளிக்காசு  உனக்குக்  கொடுப்போம்  என்றார்கள்.  {Judg  16:5}

 

அப்படியே  தெலீலாள்<Delilah>  சிம்சோனைப்<Samson>  பார்த்து:  உன்  மகா  பலம்  எதினாலே  உண்டாயிருக்கிறது,  உன்னைச்  சிறுமைப்படுத்த  உன்னை  எதினாலே  கட்டலாம்  என்று  நீ  எனக்குச்  சொல்லவேண்டும்  என்றாள்.  {Judg  16:6}

 

அதற்குச்  சிம்சோன்<Samson>:  உலராத  பச்சையான  ஏழு  அகணிநார்க்  கயிறுகளாலே  என்னைக்  கட்டினால்,  நான்  பலட்சயமாகி,  மற்ற  மனுஷனைப்போல்  ஆவேன்  என்றான்.  {Judg  16:7}

 

அப்பொழுது  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகள்  உலராத  பச்சையான  ஏழு  அகணி  நார்க்  கயிறுகளை  அவளிடத்திற்குக்  கொண்டுவந்தார்கள்;  அவைகளால்  அவள்  அவனைக்  கட்டினாள்.  {Judg  16:8}

 

பதிவிருக்கிறவர்கள்  அறைவீட்டிலே  காத்திருக்கும்போது,  அவள்:  சிம்சோனே<Samson>,  பெலிஸ்தர்<Philistines>  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  அப்பொழுது,  சணல்நூலானது  நெருப்புப்பட்டவுடனே  இற்றுப்போகிறதுபோல,  அவன்  அந்தக்  கயிறுகளை  அறுத்துப்போட்டான்;  அவன்  பலம்  இன்னதினாலே  உண்டாயிருக்கிறது  என்று  அறியப்படவில்லை.  {Judg  16:9}

 

அப்பொழுது  தெலீலாள்<Delilah>  சிம்சோனைப்<Samson>  பார்த்து:  இதோ,  என்னைப்  பரியாசம்பண்ணி,  எனக்குப்  பொய்சொன்னாய்;  இப்போதும்  உன்னை  எதினாலே  கட்டலாம்  என்று  எனக்குச்  சொல்லவேண்டும்  என்றாள்.  {Judg  16:10}

 

அதற்கு  அவன்:  இதுவரைக்கும்  ஒரு  வேலைக்கும்  வழங்காதிருக்கிற  புதுக்கயிறுகளால்  என்னை  இறுகக்  கட்டினால்,  நான்  பலட்சயமாகி,  மற்ற  மனுஷனைப்போல்  ஆவேன்  என்றான்.  {Judg  16:11}

 

அப்பொழுது  தெலீலாள்<Delilah>,  புதுக்கயிறுகளை  வாங்கி,  அவைகளால்  அவனைக்  கட்டி:  சிம்சோனே<Samson>,  பெலிஸ்தர்<Philistines>  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  பதிவிருக்கிறவர்கள்  அறைவீட்டில்  இருந்தார்கள்;  ஆனாலும்  அவன்  தன்  புயங்களில்  இருந்த  கயிறுகளை  ஒரு  நூலைப்போல  அறுத்துப்போட்டான்.  {Judg  16:12}

 

பின்பு  தெலீலாள்<Delilah>  சிம்சோனைப்<Samson>  பார்த்து:  இதுவரைக்கும்  என்னைப்  பரியாசம்பண்ணி,  எனக்குப்  பொய்சொன்னாய்;  உன்னை  எதினாலே  கட்டலாம்  என்று  எனக்குச்  சொல்லவேண்டும்  என்றாள்;  அதற்கு  அவன்:  நீ  என்  தலைமயிரின்  ஏழு  ஜடைகளை  நெசவுநூல்  பாவோடே  பின்னிவிட்டால்  ஆகும்  என்றான்.  {Judg  16:13}

 

அப்படியே  அவள்  செய்து,  அவைகளை  ஆணியடித்து  மாட்டி:  சிம்சோனே<Samson>,  பெலிஸ்தர்<Philistines>  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  அவன்  நித்திரைவிட்டெழும்பி,  நெசவு  ஆணியையும்  நூல்பாவையும்கூடப்  பிடுங்கிக்கொண்டுபோனான்.  {Judg  16:14}

 

அப்பொழுது  அவள்  அவனைப்  பார்த்து:  உன்  இருதயம்  என்னோடு  இராதிருக்க,  உன்னைச்  சிநேகிக்கிறேன்  என்று  நீ  எப்படிச்  சொல்லுகிறாய்?  நீ  இந்த  மூன்றுவிசையும்  என்னைப்  பரியாசம்பண்ணினாய்  அல்லவா,  உன்னுடைய  மகாபலம்  எதினாலே  உண்டாயிருக்கிறது  என்று  எனக்குச்  சொல்லாமற்போனாயே  என்று  சொல்லி,  {Judg  16:15}

 

இப்படி  அவனைத்  தினம்தினம்  தன்  வார்த்தைகளினாலே  நெருக்கி  அலட்டிக்  கொண்டிருக்கிறதினால்,  சாகத்தக்கதாய்  அவன்  ஆத்துமா  விசனப்பட்டு,  {Judg  16:16}

 

தன்  இருதயத்தையெல்லாம்  அவளுக்கு  வெளிப்படுத்தி:  சவரகன்  கத்தி  என்  தலையின்மேல்  படவில்லை;  நான்  என்  தாயின்  கர்ப்பத்தில்  பிறந்ததுமுதல்  தேவனுக்கென்று  நசரேயனானவன்<Nazarene//Nazarite>;  என்  தலை  சிரைக்கப்பட்டால்,  என்  பலம்  என்னை  விட்டுப்போம்;  அதினாலே  நான்  பலட்சயமாகி,  மற்ற  எல்லா  மனுஷரைப்போலும்  ஆவேன்  என்று  அவளிடத்தில்  சொன்னான்.  {Judg  16:17}

 

அவன்  தன்  இருதயத்தையெல்லாம்  தனக்கு  வெளிப்படுத்தினதைத்  தெலீலாள்<Delilah>  கண்டபோது,  அவள்  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகளுக்கு  ஆள்  அனுப்பி:  இந்த  ஒருவிசை  வாருங்கள்,  அவன்  தன்  இருதயத்தையெல்லாம்  எனக்கு  வெளிப்படுத்தினான்  என்று  சொல்லச்சொன்னாள்;  அப்பொழுது  பெலிஸ்தரின்<Philistines>  அதிபதிகள்  வெள்ளிக்காசுகளைத்  தங்கள்  கையில்  எடுத்துக்கொண்டு  அவளிடத்துக்கு  வந்தார்கள்.  {Judg  16:18}

 

அவள்  அவனைத்  தன்  மடியிலே  நித்திரைசெய்யப்பண்ணி,  ஒருவனை  அழைத்து,  அவன்  தலைமயிரின்  ஏழு  ஜடைகளையும்  சிரைப்பித்து,  அவனைச்  சிறுமைப்படுத்தத்  தொடங்கினாள்;  அவன்  பலம்  அவனைவிட்டு  நீங்கிற்று.  {Judg  16:19}

 

அப்பொழுது  அவள்:  சிம்சோனே<Samson>,  பெலிஸ்தர்<Philistines>  உன்மேல்  வந்துவிட்டார்கள்  என்றாள்;  அவன்  நித்திரைவிட்டு  விழித்து,  கர்த்தர்  தன்னைவிட்டு  விலகினதை  அறியாமல்,  எப்போதும்போல  உதறிப்போட்டு  வெளியே  போவேன்  என்றான்.  {Judg  16:20}

 

பெலிஸ்தர்<Philistines>  அவனைப்  பிடித்து,  அவன்  கண்களைப்  பிடுங்கி,  அவனைக்  காசாவுக்குக்<Gaza>  கொண்டுபோய்,  அவனுக்கு  இரண்டு  வெண்கல  விலங்குபோட்டுச்  சிறைச்சாலையிலே  மாவரைத்துக்கொண்டிருக்க  வைத்தார்கள்.  {Judg  16:21}

 

அவன்  தலைமயிர்  சிரைக்கப்பட்ட  பின்பு,  திரும்பவும்  முளைக்கத்  தொடங்கிற்று.  {Judg  16:22}

 

பெலிஸ்தரின்<Philistines>  பிரபுக்கள்:  நம்முடைய  பகைஞனாகிய  சிம்சோனை<Samson>  நம்முடைய  தேவன்  நம்முடைய  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்று  சொல்லி,  தங்கள்  தேவனாகிய  தாகோனுக்கு<Dagon>  ஒரு  பெரிய  பலிசெலுத்தவும்,  சந்தோஷம்  கொண்டாடவும்  கூடிவந்தார்கள்.  {Judg  16:23}

 

ஜனங்கள்  அவனைக்  கண்டவுடனே:  நம்முடைய  தேசத்தைப்  பாழாக்கி,  நம்மில்  அநேகரைக்  கொன்றுபோட்ட  நம்முடைய  பகைஞனை  நம்முடைய  தேவன்  நமது  கையில்  ஒப்புக்கொடுத்தார்  என்றுசொல்லி,  தங்கள்  தேவனைப்  புகழ்ந்தார்கள்.  {Judg  16:24}

 

இப்படி  அவர்கள்  மனமகிழ்ச்சியாயிருக்கும்போது:  நமக்கு  முன்பாக  வேடிக்கைகாட்டும்படிக்கு,  சிம்சோனைக்<Samson>  கூட்டிக்கொண்டு  வாருங்கள்  என்றார்கள்;  அப்பொழுது  சிம்சோனைச்<Samson>  சிறைச்சாலையிலிருந்து  கூட்டிக்கொண்டு  வந்தார்கள்,  அவர்களுக்கு  முன்பாக  வேடிக்கை  காட்டினான்;  அவனைத்  தூண்களுக்கு  நடுவே  நிறுத்தினார்கள்.  {Judg  16:25}

 

சிம்சோன்<Samson>  தனக்குக்  கைலாகு  கொடுத்து  நடத்துகிற  பிள்ளையாண்டானோடே,  வீட்டைத்  தாங்குகிற  தூண்களிலே  நான்  சாய்ந்துகொண்டிருக்கும்படி  அவைகளை  நான்  தடவிப்பார்க்கட்டும்  என்றான்.  {Judg  16:26}

 

அந்த  வீடு  புருஷராலும்  ஸ்திரீகளாலும்  நிறைந்திருந்தது;  அங்கே  பெலிஸ்தரின்<Philistines>  சகல  பிரபுக்களும்,  வீட்டின்மேல்  புருஷரும்  ஸ்திரீகளுமாக  ஏறக்குறைய  மூவாயிரம்பேர்,  சிம்சோன்<Samson>  வேடிக்கை  காட்டுகிறதைப்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  {Judg  16:27}

 

அப்பொழுது  சிம்சோன்<Samson>  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு:  கர்த்தராகிய  ஆண்டவரே,  நான்  என்  இரண்டு  கண்களுக்காக  ஒரே  தீர்வையாய்ப்  பெலிஸ்தர்<Philistines>  கையிலே  பழிவாங்கும்படிக்கு,  இந்த  ஒருவிசைமாத்திரம்  என்னை  நினைத்தருளும்,  தேவனே,  பலப்படுத்தும்  என்று  சொல்லி,  {Judg  16:28}

 

சிம்சோன்<Samson>  அந்த  வீட்டைத்  தாங்கி  நிற்கிற  இரண்டு  நடுத்தூண்களில்,  ஒன்றைத்  தன்  வலதுகையினாலும்,  மற்றொன்றைத்  தன்  இடதுகையினாலும்  பிடித்துக்கொண்டு,  {Judg  16:29}

 

என்  ஜீவன்  பெலிஸ்தரோடே<Philistines>  கூட  மடியக்கடவது  என்று  சொல்லி,  பலமாய்ச்  சாய்க்க,  அந்த  வீடு  அதில்  இருந்த  பிரபுக்கள்மேலும்  எல்லா  ஜனங்கள்மேலும்  விழுந்தது;  இவ்விதமாய்  அவன்  உயிரோடிருக்கையில்  அவனால்  கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும்,  அவன்  சாகும்போது  அவனால்  கொல்லப்பட்டவர்கள்  அதிகமாயிருந்தார்கள்.  {Judg  16:30}

 

பின்பு  அவன்  சகோதரரும்,  அவன்  தகப்பன்  வீட்டாரனைவரும்  போய்,  அவனை  எடுத்துக்கொண்டுவந்து,  சோராவுக்கும்<Zorah>  எஸ்தாவோலுக்கும்<Eshtaol>  நடுவே  அவன்  தகப்பனாகிய  மனோவாவின்<Manoah>  கல்லறையில்  அடக்கம்பண்ணினார்கள்.  அவன்  இஸ்ரவேலை<Israel>  இருபதுவருஷம்  நியாயம்  விசாரித்தான்.  {Judg  16:31}

 

எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்தானாகிய  மீகா<Micah>  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷன்  இருந்தான்.  {Judg  17:1}

 

அவன்  தன்  தாயை  நோக்கி:  உன்னிடத்திலிருந்த  ஆயிரத்து  நூறு  வெள்ளிக்காசு  களவுபோயிற்றே,  அதைக்குறித்து  என்  காதுகள்  கேட்க  நீ  சாபமிட்டாயே,  அந்தப்  பணம்,  இதோ,  என்னிடத்தில்  இருக்கிறது;  அதை  எடுத்தவன்  நான்தான்  என்றான்.  அதற்கு  அவன்  தாய்:  என்  மகனே,  நீ  கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்படுவாய்  என்றாள்.  {Judg  17:2}

 

அவன்  அந்த  ஆயிரத்து  நூறு  வெள்ளிக்காசைத்  தன்  தாயினிடத்தில்  திரும்பக்  கொடுத்தான்;  அவள்:  வெட்டப்பட்ட  ஒரு  சுரூபத்தையும்  வார்ப்பிக்கப்பட்ட  ஒரு  விக்கிரகத்தையும்  உண்டுபண்ண,  நான்  என்  கையிலிருந்த  இந்த  வெள்ளியை  என்  மகனுக்காக  முற்றிலும்  கர்த்தருக்கென்று  நியமித்தேன்;  இப்போதும்  இதை  உனக்குத்  திரும்பக்  கொடுக்கிறேன்  என்றாள்.  {Judg  17:3}

 

அவன்  அந்த  வெள்ளியைத்  தன்  தாய்க்குத்  திரும்பக்  கொடுத்தான்;  அப்பொழுது  அவன்  தாய்  இருநூறு  வெள்ளிக்காசை  எடுத்து,  தட்டான்  கையிலே  கொடுத்தாள்;  அவன்  அதினாலே,  வெட்டப்பட்ட  ஒரு  சுரூபத்தையும்  வார்ப்பிக்கப்பட்ட  ஒரு  விக்கிரகத்தையும்  பண்ணினான்;  அவைகள்  மீகாவின்<Micah>  வீட்டில்  இருந்தது.  {Judg  17:4}

 

மீகா<Micah>,  சுவாமிக்கு  ஒரு  அறைவீட்டை  நியமித்து  வைத்திருந்தான்;  அவன்  ஒரு  ஏபோத்தையும்<ephod>  சுரூபங்களையும்  உண்டுபண்ணி,  தன்  குமாரரில்  ஒருவனைப்  பிரதிஷ்டைபண்ணினான்;  இவன்  அவனுக்கு  ஆசாரியனானான்.  {Judg  17:5}

 

அந்நாட்களில்  இஸ்ரவேலிலே<Israel>  ராஜா  இல்லை,  அவனவன்  தன்தன்  பார்வைக்குச்  சரிப்போனபடி  செய்துவந்தான்.  {Judg  17:6}

 

யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்<Bethlehem>  ஊரானும்  லேவியனுமான<Levite>  ஒரு  வாலிபன்  அங்கே  தங்கியிருந்தான்.  {Judg  17:7}

 

அந்த  மனுஷன்  எங்கேயாகிலும்  பரதேசியாய்ப்  போய்த்  தங்கும்படிக்கு,  யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்<Bethlehem>  ஊரைவிட்டுப்  புறப்பட்டுப்  பிரயாணம்  போகையில்,  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்தில்  இருக்கிற  மீகாவின்<Micah>  வீட்டில்  வந்து  சேர்ந்தான்.  {Judg  17:8}

 

எங்கே  இருந்து  வந்தாய்  என்று  மீகா<Micah>  அவனைக்  கேட்டதற்கு,  அவன்:  நான்  யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்<Bethlehem>  ஊரானாகிய  லேவியன்<Levite>,  எங்கேயாகிலும்  போய்த்  தங்கப்போகிறேன்  என்றான்.  {Judg  17:9}

 

அப்பொழுது  மீகா<Micah>:  நீ  என்னிடத்தில்  இரு,  நீ  எனக்குத்  தகப்பனும்  ஆசாரியனுமாயிருப்பாய்;  நான்  உனக்கு  வருஷத்திலே  பத்து  வெள்ளிக்காசையும்,  மாற்று  வஸ்திரத்தையும்,  உனக்கு  வேண்டிய  ஆகாரத்தையும்  கொடுப்பேன்  என்று  அவனிடத்தில்  சொன்னான்;  அப்படியே  லேவியன்<Levite>  உள்ளே  போனான்.  {Judg  17:10}

 

அந்த  லேவியன்<Levite>  அந்த  மனிதனிடத்தில்  இருக்கச்  சம்மதித்தான்;  அந்த  வாலிபன்  அவனுக்கு  அவன்  குமாரரில்  ஒருவனைப்போல்  இருந்தான்.  {Judg  17:11}

 

மீகா<Micah>  அந்த  லேவியனைப்<Levite>  பிரதிஷ்டைபண்ணினான்;  அந்த  வாலிபன்  அவனுக்கு  ஆசாரியனாகி,  மீகாவின்<Micah>  வீட்டில்  இருந்தான்.  {Judg  17:12}

 

அப்பொழுது  மீகா<Micah>:  எனக்கு  ஆசாரியனாக  ஒரு  லேவியன்<Levite>  அகப்பட்டபடியினால்,  கர்த்தர்  எனக்கு  நன்மைசெய்வார்  என்று  இப்பொழுது  அறிந்திருக்கிறேன்  என்றான்.  {Judg  17:13}

 

அந்நாட்களில்  இஸ்ரவேலிலே<Israel>  ராஜா  இல்லை;  தாண்<Danites>  கோத்திரத்தார்  குடியிருக்கிறதற்கு,  தங்களுக்குச்  சுதந்தரம்  தேடினார்கள்;  அந்நாள்வரைக்கும்  அவர்களுக்கு  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்கள்  நடுவே  போந்த  சுதந்தரம்  கிடைக்கவில்லை.  {Judg  18:1}

 

ஆகையால்  தேசத்தை  உளவுபார்த்து  வரும்படி,  தாண்<Dan>  புத்திரர்  தங்கள்  கோத்திரத்திலே  பலத்த  மனுஷராகிய  ஐந்துபேரைத்  தங்கள்  எல்லைகளில்  இருக்கிற  சோராவிலும்<Zorah>  எஸ்தாவோலிலுமிருந்து<Eshtaol>  அனுப்பி:  நீங்கள்  போய்,  தேசத்தை  ஆராய்ந்துபார்த்து  வாருங்கள்  என்று  அவர்களோடே  சொன்னார்கள்;  அவர்கள்  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்தில்  இருக்கிற  மீகாவின்<Micah>  வீடுமட்டும்  போய்,  அங்கே  இராத்தங்கினார்கள்.  {Judg  18:2}

 

அவர்கள்  மீகாவின்<Micah>  வீட்டண்டை  இருக்கையில்,  லேவியனான<Levite>  வாலிபனுடைய  சத்தத்தை  அறிந்து,  அங்கே  அவனிடத்தில்  போய்:  உன்னை  இங்கே  அழைத்துவந்தது  யார்?  இவ்விடத்தில்  என்ன  செய்கிறாய்?  உனக்கு  இங்கே  இருக்கிறது  என்ன  என்று  அவனிடத்தில்  கேட்டார்கள்.  {Judg  18:3}

 

அதற்கு  அவன்:  இன்ன  இன்னபடி  மீகா<Micah>  எனக்குச்  செய்தான்;  எனக்குச்  சம்பளம்  பொருந்தினான்;  அவனுக்கு  ஆசாரியனானேன்  என்றான்.  {Judg  18:4}

 

அப்பொழுது  அவர்கள்  அவனை  நோக்கி:  எங்கள்  பிரயாணம்  அநுகூலமாய்  முடியுமா  என்று  நாங்கள்  அறியும்படி  தேவனிடத்தில்  கேள்  என்றார்கள்.  {Judg  18:5}

 

அவர்களுக்கு  அந்த  ஆசாரியன்:  சமாதானத்தோடே  போங்கள்;  உங்கள்  பிரயாணம்  கர்த்தருக்கு  ஏற்றது  என்றான்.  {Judg  18:6}

 

அப்பொழுது  அந்த  ஐந்து  மனுஷரும்  புறப்பட்டு,  லாயீசுக்குப்<Laish>  போய்,  அதில்  குடியிருக்கிற  ஜனங்கள்  சீதோனியருடைய<Zidonians>  வழக்கத்தின்படியே,  பயமில்லாமல்  அமரிக்கையும்  சுகமுமாய்  இருக்கிறதையும்,  தேசத்திலே  அவர்களை  அடக்கி  ஆள  யாதொரு  அதிகாரியும்  இல்லை  என்பதையும்,  அவர்கள்  சீதோனியருக்குத்<Zidonians>  தூரமானவர்கள்  என்பதையும்,  அவர்களுக்கு  ஒருவரோடும்  கவை  காரியம்  இல்லை  என்பதையும்  கண்டு,  {Judg  18:7}

 

சோராவிலும்<Zorah>  எஸ்தாவோலிலும்<Eshtaol>  இருக்கிற  தங்கள்  சகோதரரிடத்திற்குத்  திரும்பிவந்தார்கள்.  அவர்கள்  சகோதரர்:  நீங்கள்  கொண்டுவருகிற  செய்தி  என்ன  என்று  அவர்களைக்  கேட்டார்கள்.  {Judg  18:8}

 

அதற்கு  அவர்கள்:  எழும்புங்கள்,  அவர்களுக்கு  விரோதமாய்ப்  போவோம்  வாருங்கள்;  அந்த  தேசத்தைப்  பார்த்தோம்,  அது  மிகவும்  நன்றாயிருக்கிறது,  நீங்கள்  சும்மாயிருப்பீர்களா?  அந்த  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  புறப்பட்டுப்போக  அசதியாயிராதேயுங்கள்.  {Judg  18:9}

 

நீங்கள்  அங்கே  சேரும்போது,  சுகமாய்க்  குடியிருக்கிற  ஜனங்களிடத்தில்  சேருவீர்கள்;  அந்த  தேசம்  விஸ்தாரமாயிருக்கிறது;  தேவன்  அதை  உங்கள்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அது  பூமியிலுள்ள  சகல  வஸ்துவும்  குறைவில்லாமலிருக்கிற  இடம்  என்றார்கள்.  {Judg  18:10}

 

அப்பொழுது  சோராவிலும்<Zorah>  எஸ்தாவோலிலும்<Eshtaol>  இருக்கிற  தாண்<Danites>  கோத்திரத்தாரில்  அறுநூறுபேர்  ஆயுதபாணிகளாய்  அங்கேயிருந்து  புறப்பட்டுப்போய்,  {Judg  18:11}

 

யூதாவிலுள்ள<Judah>  கீரியாத்யாரீமிலே<Kirjathjearim>  பாளயமிறங்கினார்கள்;  ஆதலால்  அது  இந்நாள்வரைக்கும்  மக்னிதான்<Mahanehdan>  என்னப்படும்;  அது  கீரியாத்யாரீமின்<Kirjathjearim>  பின்னாலே  இருக்கிறது.  {Judg  18:12}

 

பின்பு  அவர்கள்  அங்கேயிருந்து  எப்பிராயீம்<Ephraim>  மலைக்குப்  போய்,  மீகாவின்<Micah>  வீடுமட்டும்  வந்தார்கள்.  {Judg  18:13}

 

அப்பொழுது  லாயீசின்<Laish>  நாட்டை  உளவுபார்க்கப்  போய்வந்த  ஐந்து  மனுஷர்  தங்கள்  சகோதரரைப்  பார்த்து:  இந்த  வீடுகளில்  ஏபோத்தும்<ephod>  சுரூபங்களும்  வெட்டப்பட்ட  விக்கிரகமும்  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகமும்  இருக்கிறது  என்று  உங்களுக்குத்  தெரியுமா;  இப்போதும்  நீங்கள்  செய்யவேண்டியதை  யோசித்துக்கொள்ளுங்கள்  என்றார்கள்.  {Judg  18:14}

 

அப்பொழுது  அவ்விடத்திற்குத்  திரும்பி,  மீகாவின்<Micah>  வீட்டில்  இருக்கிற  லேவியனான<Levite>  வாலிபனின்  வீட்டிலே  வந்து,  அவனிடத்தில்  சுகசெய்தி  விசாரித்தார்கள்.  {Judg  18:15}

 

ஆயுதபாணிகளாகிய  தாண்<Dan>  புத்திரர்  அறுநூறுபேரும்  வாசற்படியிலே  நின்றார்கள்.  {Judg  18:16}

 

ஆசாரியனும்  ஆயுதபாணிகளாகிய  அறுநூறுபேரும்  வாசற்படியிலே  நிற்கையில்,  தேசத்தை  உளவுபார்க்கப்  போய்வந்த  அந்த  ஐந்து  மனுஷர்  உள்ளே  புகுந்து,  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்  ஏபோத்தையும்<ephod>  சுரூபங்களையும்  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகத்தையும்  எடுத்துக்கொண்டு  வந்தார்கள்.  {Judg  18:17}

 

அவர்கள்  மீகாவின்<Micah>  வீட்டிற்குள்  புகுந்து,  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்  ஏபோத்தையும்<ephod>  சுரூபங்களையும்  வார்ப்பிக்கப்பட்ட  விக்கிரகத்தையும்  எடுத்துக்கொண்டு  வருகிறபோது,  ஆசாரியன்  அவர்களைப்  பார்த்து:  நீங்கள்  செய்கிறது  என்ன  என்று  கேட்டான்.  {Judg  18:18}

 

அதற்கு  அவர்கள்:  நீ  பேசாதே,  உன்  வாயை  மூடிக்கொண்டு,  எங்களோடேகூட  வந்து  எங்களுக்குத்  தகப்பனும்  ஆசாரியனுமாயிரு;  நீ  ஒரே  ஒருவன்  வீட்டுக்கு  ஆசாரியனாயிருக்கிறது  நல்லதோ?  இஸ்ரவேலில்<Israel>  ஒரு  கோத்திரத்திற்கும்  வம்சத்திற்கும்  ஆசாரியனாயிருக்கிறது  நல்லதோ?  என்றார்கள்.  {Judg  18:19}

 

அப்பொழுது  ஆசாரியனுடைய  மனது  இதமியப்பட்டு,  அவன்  ஏபோத்தையும்<ephod>  சுரூபங்களையும்  வெட்டப்பட்ட  விக்கிரகத்தையும்  எடுத்துக்கொண்டு,  ஜனங்களுக்குள்ளே  புகுந்தான்.  {Judg  18:20}

 

அவர்கள்  திரும்பும்படி  புறப்பட்டு,  பிள்ளைகளையும்,  ஆடுமாடுகளையும்,  பண்டம்  பாடிகளையும்,  தங்களுக்குமுன்னே  போகும்படி  செய்தார்கள்.  {Judg  18:21}

 

அவர்கள்  புறப்பட்டு,  மீகாவின்<Micah>  வீட்டை  விட்டுக்  கொஞ்சந்தூரம்  போனபோது,  மீகாவின்<Micah>  வீட்டிற்கு  அயல்வீட்டார்  கூட்டங்கூடி,  தாண்<Dan>  புத்திரரைத்  தொடர்ந்துவந்து,  {Judg  18:22}

 

அவர்களைப்  பார்த்துக்  கூப்பிட்டார்கள்;  அவர்கள்  திரும்பிப்பார்த்து,  மீகாவை<Micah>  நோக்கி:  நீ  இப்படிக்  கூட்டத்துடன்  வருகிற  காரியம்  என்ன  என்று  கேட்டார்கள்.  {Judg  18:23}

 

அதற்கு  அவன்:  நான்  உண்டுபண்ணின  என்னுடைய  தெய்வங்களையும்  அந்த  ஆசாரியனையுங்கூட  நீங்கள்  கொண்டுபோகிறீர்களே;  இனி  எனக்கு  என்ன  இருக்கிறது;  நீ  கூப்பிடுகிற  காரியம்  என்ன  என்று  நீங்கள்  என்னிடத்தில்  எப்படிக்  கேட்கலாம்  என்றான்.  {Judg  18:24}

 

தாண்<Dan>  புத்திரர்  அவனைப்  பார்த்து:  எங்கள்  காதுகள்  கேட்கக்  கூக்குரல்  இடாதே,  இட்டால்  கோபிகள்  உங்கள்மேல்  விழுவார்கள்;  அப்பொழுது  உன்  ஜீவனுக்கும்  உன்  வீட்டாரின்  ஜீவனுக்கும்  மோசம்  வருவித்துக்கொள்வாய்  என்று  சொல்லி,  {Judg  18:25}

 

தங்கள்  வழியே  நடந்துபோனார்கள்;  அவர்கள்  தன்னைப்பார்க்கிலும்  பலத்தவர்கள்  என்று  மீகா<Micah>  கண்டு,  அவன்  தன்  வீட்டுக்குத்  திரும்பினான்.  {Judg  18:26}

 

அவர்களோ  மீகா<Micah>  உண்டுபண்ணினவைகளையும்,  அவனுடைய  ஆசாரியனையும்  கொண்டுபோய்,  பயமில்லாமல்  சுகமாயிருக்கிற  லாயீஸ்<Laish>  ஊர்  ஜனங்களிடத்தில்  சேர்த்து,  அவர்களைப்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  பட்டணத்தை  அக்கினியால்  சுட்டெரித்துப்போட்டார்கள்.  {Judg  18:27}

 

அது  சீதோனுக்குத்<Zidon>  தூரமாயிருந்தது;  வேறே  மனுஷரோடே  அவர்களுக்குச்  சம்பந்தமில்லாமலும்  இருந்தபடியால்,  அவர்களைத்  தப்புவிப்பார்  ஒருவரும்  இல்லை;  அந்தப்  பட்டணம்  பெத்ரேகோபுக்குச்<Bethrehob>  சமீபமான  பள்ளத்தாக்கில்  இருந்தது;  அவர்கள்  அதைத்  திரும்பக்  கட்டி,  அதிலே  குடியிருந்து,  {Judg  18:28}

 

பூர்வத்திலே  லாயீஸ்<Laish>  என்னும்  பேர்  கொண்டிருந்த  அந்தப்  பட்டணத்திற்கு  இஸ்ரவேலுக்குப்<Israel>  பிறந்த  தங்கள்  தகப்பனாகிய  தாணுடைய<Dan>  நாமத்தின்படியே  தாண்<Dan>  என்று  பேரிட்டார்கள்.  {Judg  18:29}

 

அப்பொழுது  தாண்<Dan>  புத்திரர்  அந்தச்  சுரூபத்தைத்  தங்களுக்கு  ஸ்தாபித்துக்கொண்டார்கள்;  மனாசேயின்<Manasseh>  குமாரனாகிய  கெர்சோனின்<Gershom>  மகன்  யோனத்தானும்<Jonathan>,  அவன்  குமாரரும்  அந்தத்  தேசத்தார்  சிறைப்பட்டுப்போன  நாள்மட்டும்,  தாண்<Dan>  கோத்திரத்தாருக்கு  ஆசாரியராயிருந்தார்கள்.  {Judg  18:30}

 

தேவனுடைய  ஆலயம்  சீலோவிலிருந்த<Shiloh>  காலமுழுதும்  அவர்கள்  மீகா<Micah>  உண்டுபண்ணின  சுரூபத்தை  வைத்துக்  கொண்டிருந்தார்கள்.  {Judg  18:31}

 

இஸ்ரவேலில்<Israel>  ராஜா  இல்லாத  அந்நாட்களிலே,  எப்பிராயீம்<Ephraim>  மலைகள்  அருகே  பரதேசியாய்த்  தங்கின  ஒரு  லேவியன்<Levite>  இருந்தான்;  அவன்  யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்<Bethlehem>  ஊராளாகிய  ஒரு  ஸ்திரீயைத்  தனக்கு  மறுமனையாட்டியாகக்  கொண்டிருந்தான்.  {Judg  19:1}

 

அவள்  அவனுக்குத்  துரோகமாய்  விபசாரம்பண்ணி,  அவனை  விட்டு,  யூதா<Judah>  தேசத்துப்  பெத்லெகேம்<Bethlehem>  ஊரிலிருக்கிற  தன்  தகப்பன்  வீட்டுக்குப்  போய்,  அங்கே  நாலுமாதம்வரைக்கும்  இருந்தாள்.  {Judg  19:2}

 

அவள்  புருஷன்  அவளோடே  நலவு  சொல்லவும்,  அவளைத்  திரும்ப  அழைத்துவரவும்,  இரண்டு  கழுதைகளை  ஆயத்தப்படுத்தி,  தன்  வேலைக்காரனைக்  கூட்டிக்கொண்டு,  அவளிடத்துக்குப்  போனான்;  அப்பொழுது  அவள்  அவனைத்  தன்  தகப்பன்  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டு  போனாள்;  ஸ்திரீயின்  தகப்பன்  அவனைக்  கண்டபோது  சந்தோஷமாய்  ஏற்றுக்கொண்டு,  {Judg  19:3}

 

ஸ்திரீயின்  தகப்பனாகிய  அவனுடைய  மாமன்  அவனை  இருத்திக்கொண்டதினால்,  மூன்றுநாள்  அவனோடிருந்தான்;  அவர்கள்  அங்கே  புசித்துக்  குடித்து  இராத்தங்கினார்கள்.  {Judg  19:4}

 

நாலாம்நாள்  காலமே  அவர்கள்  எழுந்திருந்தபோது,  அவன்  பிரயாணப்படுகையில்,  ஸ்திரீயின்  தகப்பன்  தன்  மருமகனை  நோக்கி:  கொஞ்சம்  அப்பம்  புசித்து,  உன்  மனதைத்  தேற்றிக்கொள்;  பிற்பாடு  நீங்கள்  போகலாம்  என்றான்.  {Judg  19:5}

 

அவர்கள்  உட்கார்ந்து,  இருவரும்கூடப்  புசித்துக்  குடித்தார்கள்;  ஸ்திரீயின்  தகப்பன்  அந்த  மனுஷனைப்  பார்த்து:  நீ  தயவுசெய்து,  உன்  இருதயம்  மகிழ்ச்சியடைய  இராத்திரிக்கும்  இரு  என்றான்.  {Judg  19:6}

 

அப்படியே  போகிறதற்கு  அந்த  மனுஷன்  எழுந்தபோது,  அவனுடைய  மாமன்  அவனை  வருந்திக்கொண்டதினால்,  அவன்  அன்று  இராத்திரியும்  அங்கே  இருந்தான்.  {Judg  19:7}

 

ஐந்தாம்  நாளிலே  அவன்  போகிறதற்கு  அதிகாலமே  எழுந்திருந்தபோது,  ஸ்திரீயின்  தகப்பன்:  இருந்து  உன்  இருதயத்தைத்  தேற்றிக்கொள்  என்றான்;  அப்படியே  அந்திநேரமட்டும்  தாமதித்திருந்து,  இருவரும்  போஜனம்பண்ணினார்கள்.  {Judg  19:8}

 

பின்பு  அவனும்,  அவன்  மறுமனையாட்டியும்,  அவன்  வேலைக்காரனும்  போகிறதற்கு  எழுந்திருந்தபோது,  ஸ்திரீயின்  தகப்பனாகிய  அவனுடைய  மாமன்:  இதோ,  பொழுது  அஸ்தமிக்கப்போகிறது,  சாயங்காலமுமாயிற்று;  இங்கே  இராத்திரிக்கு  இருங்கள்;  பார்,  மாலைமயங்குகிற  வேளையாயிற்று:  உன்  இருதயம்  சந்தோஷமாயிருக்கும்படி,  இங்கே  இராத்தங்கி  நாளை  இருட்டோடே  எழுந்திருந்து,  உன்  வீட்டுக்குப்  போகலாம்  என்றான்.  {Judg  19:9}

 

அந்த  மனுஷனோ,  இராத்திரிக்கு  இருக்க  மனதில்லாமல்,  இரண்டு  கழுதைகள்மேலும்  சேணம்வைத்து,  தன்  மறுமனையாட்டியைக்  கூட்டிக்கொண்டு,  எழுந்து  புறப்பட்டு,  எருசலேமாகிய<Jerusalem>  எபூசுக்கு<Jebus>  நேராக  வந்தான்.  {Judg  19:10}

 

அவர்கள்  எபூசுக்குச்<Jebus>  சமீபமாய்  வருகையில்,  பொழுதுபோகிறதாயிருந்தது;  அப்பொழுது  வேலைக்காரன்  தன்  எஜமானை  நோக்கி:  எபூசியர்<Jebusites>  இருக்கிற  இந்தப்  பட்டணத்திற்குப்  போய்,  அங்கே  இராத்தங்கலாம்  என்றான்.  {Judg  19:11}

 

அதற்கு  அவன்  எஜமான்  நாம்  வழியைவிட்டு,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்லாத  மறுஜாதியார்  இருக்கிற  பட்டணத்துக்குப்  போகப்படாது;  அப்பாலே  கிபியாமட்டும்<Gibeah>  போவோம்  என்று  சொல்லி,  {Judg  19:12}

 

தன்  வேலைக்காரனைப்  பார்த்து:  நாம்  கிபியாவிலாகிலும்<Gibeah>  ராமாவிலாகிலும்<Ramah>  இராத்தங்கும்படிக்கு,  அவைகளில்  ஒரு  இடத்திற்குப்  போய்ச்  சேரும்படி  நடந்துபோவோம்  வா  என்றான்.  {Judg  19:13}

 

அப்படியே  அப்பாலே  நடந்துபோனார்கள்;  பென்யமீன்<Benjamin>  நாட்டைச்  சேர்ந்த  கிபியாவின்<Gibeah>  கிட்ட  வருகையில்,  சூரியன்  அஸ்தமனமாயிற்று.  {Judg  19:14}

 

ஆகையால்  கிபியாவிலே<Gibeah>  வந்து  இராத்தங்கும்படிக்கு,  வழியைவிட்டு  அவ்விடத்திற்குப்  போனார்கள்;  அவன்  பட்டணத்துக்குள்  போனபோது,  இராத்தங்குகிறதற்கு  அவர்களை  வீட்டிலே  சேர்த்துக்கொள்வார்  இல்லாததினால்,  வீதியில்  உட்கார்ந்தான்.  {Judg  19:15}

 

வயலிலே  வேலைசெய்து,  மாலையிலே  திரும்புகிற  ஒரு  கிழவன்  வந்தான்;  அந்த  மனுஷனும்  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்தான்,  அவன்  கிபியாவிலே<Gibeah>  சஞ்சரிக்கவந்தான்;  அவ்விடத்து  மனுஷரோ  பென்யமீனர்<Benjamites>.  {Judg  19:16}

 

அந்தக்  கிழவன்  தன்  கண்களை  ஏறெடுத்துப்  பட்டணத்து  வீதியில்  அந்தப்  பிரயாணக்காரன்  இருக்கக்  கண்டு:  எங்கே  போகிறாய்,  எங்கேயிருந்து  வந்தாய்  என்று  கேட்டான்.  {Judg  19:17}

 

அதற்கு  அவன்:  நாங்கள்  யூதாவிலுள்ள<Judah>  ஊராகிய  பெத்லெகேமிலிருந்து<Bethlehem>  வந்து,  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்தின்  புறங்கள்மட்டும்  போகிறோம்;  நான்  அவ்விடத்தான்;  யூதாவிலுள்ள<Judah>  பெத்லெகேம்மட்டும்<Bethlehem>  போய்வந்தேன்,  நான்  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போகிறேன்;  இங்கே  என்னை  வீட்டிலே  ஏற்றுக்கொள்வார்  ஒருவரும்  இல்லை.  {Judg  19:18}

 

எங்கள்  கழுதைகளுக்கு  வைக்கோலும்  தீபனமும்  உண்டு;  எனக்கும்  உமது  அடியாளுக்கும்  உமது  அடியானோடிருக்கிற  வேலைக்காரனுக்கும்  அப்பமும்  திராட்சரசமும்  உண்டு;  ஒன்றிலும்  குறைவில்லை  என்றான்.  {Judg  19:19}

 

அப்பொழுது  அந்தக்  கிழவன்:  உனக்குச்  சமாதானம்;  உன்  குறைவுகளெல்லாம்  என்மேல்  இருக்கட்டும்;  வீதியிலேமாத்திரம்  இராத்தங்கவேண்டாம்  என்று  சொல்லி,  {Judg  19:20}

 

அவனைத்  தன்  வீட்டுக்குள்  அழைத்துக்கொண்டுபோய்,  கழுதைகளுக்குத்  தீபனம்போட்டான்;  அவர்கள்  தங்கள்  கால்களைக்  கழுவிக்கொண்டு,  புசித்துக்  குடித்தார்கள்.  {Judg  19:21}

 

அவர்கள்  மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது,  இதோ,  பேலியாளின்<Belial>  மக்களாகிய  அந்த  ஊர்  மனுஷரில்  சிலர்  அந்த  வீட்டைச்  சூழ்ந்துகொண்டு,  கதவைத்  தட்டி:  உன்  வீட்டிலே  வந்த  அந்த  மனுஷனை  நாங்கள்  அறியும்படிக்கு,  வெளியே  கொண்டுவா  என்று  வீட்டுக்காரனாகிய  அந்தக்  கிழவனோடே  சொன்னார்கள்.  {Judg  19:22}

 

அப்பொழுது  வீட்டுக்காரனாகிய  அந்த  மனுஷன்  வெளியே  அவர்களிடத்தில்  போய்:  இப்படிச்  செய்யவேண்டாம்;  என்  சகோதரரே,  இப்படிப்பட்ட  பொல்லாப்பைச்  செய்யவேண்டாம்;  அந்த  மனுஷன்  என்  வீட்டிற்குள்  வந்திருக்கையில்,  இப்படிக்கொத்த  மதிகேட்டைச்  செய்யீர்களாக.  {Judg  19:23}

 

இதோ,  கன்னியாஸ்திரீயாகிய  என்  மகளும்,  அந்த  மனிதனுடைய  மறுமனையாட்டியும்  இருக்கிறார்கள்;  அவர்களை  உங்களிடத்தில்  வெளியே  கொண்டுவருகிறேன்;  அவர்களை  அவமானப்படுத்தி,  உங்கள்  பார்வைக்குச்  சரிபோனபிரகாரம்  அவர்களுக்குச்  செய்யுங்கள்;  ஆனாலும்  இந்த  மனுஷனுக்கு  அப்படிப்பட்ட  மதிகேடான  காரியத்தைச்  செய்யவேண்டாம்  என்றான்.  {Judg  19:24}

 

அந்த  மனுஷர்  அவன்  சொல்லைக்  கேட்கவில்லை;  அப்பொழுது  அந்த  மனுஷன்  தன்  மறுமனையாட்டியைப்  பிடித்து,  அவர்களிடத்தில்  வெளியே  கொண்டுவந்து  விட்டான்;  அவர்கள்  அவளை  அறிந்துகொண்டு,  இராமுழுதும்  விடியுங்காலமட்டும்  அவளை  இலச்சையாய்  நடத்தி,  கிழக்கு  வெளுக்கும்போது  அவளைப்  போகவிட்டார்கள்.  {Judg  19:25}

 

விடியுங்காலத்திற்கு  முன்னே  அந்த  ஸ்திரீ  வந்து,  வெளிச்சமாகுமட்டும்  அங்கே  தன்  எஜமான்  இருந்த  வீட்டு  வாசற்படியிலே  விழுந்துகிடந்தாள்.  {Judg  19:26}

 

அவள்  எஜமான்  காலமே  எழுந்திருந்து  வீட்டின்  கதவைத்  திறந்து,  தன்  வழியே  போகப்  புறப்படுகிறபோது,  இதோ,  அவன்  மறுமனையாட்டியாகிய  ஸ்திரீ  வீட்டுவாசலுக்கு  முன்பாகத்  தன்  கைகளை  வாசற்படியின்மேல்  வைத்தவளாய்க்  கிடந்தாள்.  {Judg  19:27}

 

எழுந்திரு  போவோம்  என்று  அவன்  அவளோடே  சொன்னதற்குப்  பிரதியுத்தரம்  பிறக்கவில்லை.  அப்பொழுது  அந்த  மனுஷன்  அவளைக்  கழுதையின்மேல்  போட்டுக்கொண்டு,  பிரயாணப்பட்டு,  தன்  இடத்திற்குப்  போனான்.  {Judg  19:28}

 

அவன்  தன்  வீட்டுக்கு  வந்தபோது,  ஒரு  கத்தியை  எடுத்து,  தன்  மறுமனையாட்டியைப்  பிடித்து,  அவளை  அவளுடைய  எலும்புகளோடுங்கூடப்  பன்னிரண்டு  துண்டமாக்கி,  இஸ்ரவேலின்<Israel>  எல்லைகளுக்கெல்லாம்  அனுப்பினான்.  {Judg  19:29}

 

அப்பொழுது  அதைக்  கண்டவர்களெல்லாரும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எகிப்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  நாள்  முதற்கொண்டு  இந்நாள்வரைக்கும்  இதைப்போலொத்த  காரியம்  செய்யப்படவும்  இல்லை,  காணப்படவும்  இல்லை;  இந்தக்  காரியத்தை  யோசித்து  ஆலோசனைபண்ணிச்  செய்யவேண்டியது  இன்னதென்று  சொல்லுங்கள்  என்றார்கள்.  {Judg  19:30}

 

அப்பொழுது  தாண்முதல்<Dan>  பெயெர்செபாமட்டுமுள்ள<Beersheba>  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அனைவரும்  கீலேயாத்<Gilead>  தேசத்தாருடன்  மிஸ்பாவிலே<Mizpeh>  கர்த்தருக்கு  முன்பாக  ஏகோபித்து  சபையாகக்  கூடினார்கள்.  {Judg  20:1}

 

சகல  ஜனங்களின்  அதிபதிகளும்,  இஸ்ரவேலின்<Israel>  சகல  கோத்திரத்தாரும்  தேவனுடைய  ஜனமாகிய  சபையாகக்  கூடிநின்றார்கள்;  அவர்கள்  பட்டயம்  உருவுகிற  நாலு  லட்சம்  காலாட்கள்.  {Judg  20:2}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  மிஸ்பாவுக்கு<Mizpeh>  வந்த  செய்தியைப்  பென்யமீன்<Benjamin>  புத்திரர்  கேள்விப்பட்டார்கள்;  அந்த  அக்கிரமம்  நடந்தது  எப்படி,  சொல்லுங்கள்  என்று  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கேட்டார்கள்.  {Judg  20:3}

 

அப்பொழுது  கொலைசெய்யப்பட்ட  ஸ்திரீயின்  புருஷனாகிய  லேவியன்<Levite>  மாறுத்தரமாக:  நானும்  என்  மறுமனையாட்டியும்  பென்யமீன்<Benjamin>  நாட்டிலுள்ள  கிபியாவிலே<Gibeah>  இராத்தங்க  வந்தோம்.  {Judg  20:4}

 

அப்பொழுது  கிபியாபட்டணத்தார்<Gibeah>  எனக்கு  விரோதமாய்  எழும்பி,  என்னைக்  கொலைசெய்ய  நினைத்து,  நான்  இருந்த  வீட்டை  இராத்திரியிலே  வளைந்துகொண்டு,  என்  மறுமனையாட்டியை  அவமானப்படுத்தினார்கள்;  அதினாலே  அவள்  செத்துப்போனாள்.  {Judg  20:5}

 

ஆகையால்  இஸ்ரவேலிலே<Israel>  அவர்கள்  இப்படிப்பட்ட  முறைகேட்டையும்  மதிகேட்டையும்  செய்தபடியினால்,  நான்  என்  மறுமனையாட்டியைப்  பிடித்துத்  துண்டித்து,  இஸ்ரவேலின்<Israel>  சுதந்தரமான  சகல  நாடுகளுக்கும்  அனுப்பினேன்.  {Judg  20:6}

 

நீங்கள்  எல்லாரும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரராமே,  இங்கே  ஆலோசித்துத்  தீர்மானம்பண்ணுங்கள்  என்றான்.  {Judg  20:7}

 

அப்பொழுது  எல்லா  ஜனங்களும்  ஏகமாய்  எழும்பி:  நம்மில்  ஒருவரும்  தன்  கூடாரத்திற்குப்  போகவும்படாது,  ஒருவனும்  தன்  வீட்டிற்குத்  திரும்பவும்படாது.  {Judg  20:8}

 

இப்பொழுது  கிபியாவுக்குச்<Gibeah>  செய்யவேண்டியது  என்னவென்றால்:  சீட்டுப்போட்டு  அதற்கு  விரோதமாகப்  போவோம்.  {Judg  20:9}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரமான  கிபியா<Gibeah>  பட்டணத்தார்  இஸ்ரவேலிலே<Israel>  செய்த  எல்லா  மதிகேட்டுக்கும்  தக்கதாக  ஜனங்கள்  வந்து  செய்யும்படிக்கு,  நாம்  தானியதவசங்களைச்  சம்பாதிக்கிறதற்கு,  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களிலெல்லாம்  நூறுபேரில்  பத்துப்பேரையும்,  ஆயிரம்பேரில்  நூறுபேரையும்,  பதினாயிரம்பேரில்  ஆயிரம்பேரையும்,  தெரிந்தெடுப்போம்  என்றார்கள்.  {Judg  20:10}

 

இஸ்ரவேலரெல்லாரும்<Israel>  ஒன்றுபோல  ஏகோபித்துப்  பட்டணத்திற்கு  முன்பாகக்  கூட்டங்கூடி,  {Judg  20:11}

 

அங்கே  இருந்த  இஸ்ரவேலின்<Israel>  கோத்திரத்தார்  பென்யமீன்<Benjamin>  கோத்திரமெங்கும்  ஆட்களை  அனுப்பி:  உங்களுக்குள்ளே  நடந்த  இந்த  அக்கிரமம்  என்ன?  {Judg  20:12}

 

இப்பொழுது  கிபியாவில்<Gibeah>  இருக்கிற  பேலியாளின்<Belial>  மக்களாகிய  அந்த  மனுஷரை  நாங்கள்  கொன்று,  பொல்லாப்பை  இஸ்ரவேலை<Israel>  விட்டு  விலக்கும்படிக்கு,  அவர்களை  ஒப்புக்கொடுங்கள்  என்று  சொல்லச்சொன்னார்கள்;  பென்யமீன்<Benjamin>  புத்திரர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  தங்கள்  சகோதரரின்  சொல்லைக்  கேட்க  மனமில்லாமல்,  {Judg  20:13}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடு  யுத்தம்பண்ணப்  புறப்படும்படிக்கு,  பட்டணங்களிலிருந்து  கிபியாவுக்கு<Gibeah>  வந்து  கூடினார்கள்.  {Judg  20:14}

 

கிபியாவின்<Gibeah>  குடிகளிலே  தெரிந்துகொள்ளப்பட்ட  எழுநூறுபேரையல்லாமல்  அந்நாளில்  பட்டணங்களிலிருந்து  வந்து  கூடின  பட்டயம்  உருவுகிற  மனுஷரின்  லக்கம்  இருபத்தாறாயிரம்பேர்  என்று  தொகையிடப்பட்டது.  {Judg  20:15}

 

அந்த  ஜனங்களெல்லாருக்குள்ளும்  தெரிந்துகொள்ளப்பட்ட  இடதுகை  வாக்கான  எழுநூறுபேர்  இருந்தார்கள்;  அவர்கள்  அனைவரும்  ஒரு  மயிரிழையும்  தப்பாதபடிக்குக்  கவண்கல்  எறிவார்கள்.  {Judg  20:16}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தையல்லாமல்  இஸ்ரவேலிலே<Israel>  பட்டயம்  உருவுகிற  மனுஷர்  நாலு  லட்சம்பேர்  என்று  தொகையிடப்பட்டது;  இவர்களெல்லாரும்  யுத்தவீரராயிருந்தார்கள்.  {Judg  20:17}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரான  அவர்கள்  எழும்பி,  தேவனுடைய  வீட்டிற்குப்போய்:  எங்களில்  யார்  முந்திப்  போய்  பென்யமீன்<Benjamin>  புத்திரரோடு  யுத்தம்பண்ணவேண்டும்  என்று  தேவனிடத்தில்  விசாரித்தார்கள்;  அதற்குக்  கர்த்தர்:  யூதா<Judah>  முந்திப்  போகவேண்டும்  என்றார்.  {Judg  20:18}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  காலமே  எழுந்து  புறப்பட்டு,  கிபியாவுக்கு<Gibeah>  எதிராகப்  பாளயமிறங்கினார்கள்.  {Judg  20:19}

 

பின்பு  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  பென்யமீனோடு<Benjamin>  யுத்தம்பண்ணப்  புறப்பட்டு,  கிபியாவிலே<Gibeah>  அவர்களுக்கு  எதிராகப்  போர்செய்ய  அணிவகுத்து  நின்றார்கள்.  {Judg  20:20}

 

ஆனாலும்  பென்யமீன்<Benjamin>  புத்திரர்  கிபியாவிலிருந்து<Gibeah>  புறப்பட்டு,  இஸ்ரவேலில்<Israelites>  இருபத்தீராயிரம்பேரை  அன்றையதினம்  தரையிலே  விழும்படி  சங்கரித்தார்கள்.  {Judg  20:21}

 

இஸ்ரவேல்<Israel>  ஜனங்கள்  தங்களைத்  திடப்படுத்திக்கொண்டு,  முதல்நாளில்  அணிவகுத்து  நின்ற  ஸ்தலத்திலே,  மறுபடியும்  போர்செய்ய  அணிவகுத்து  நின்றார்கள்.  {Judg  20:22}

 

அவர்கள்  போய்,  கர்த்தருடைய  சந்நிதியில்  சாயங்காலமட்டும்  அழுது:  எங்கள்  சகோதரராகிய  பென்யமீன்<Benjamin>  புத்திரரோடே  திரும்பவும்  யுத்தம்  கலக்கப்போவோமா  என்று  கர்த்தரிடத்தில்  விசாரித்தார்கள்;  அப்பொழுது  கர்த்தர்:  அவர்களுக்கு  விரோதமாய்ப்  போங்கள்  என்றார்.  {Judg  20:23}

 

மறுநாளிலே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பென்யமீன்<Benjamin>  புத்திரர்  கிட்டச்  சேருகிறபோது,  {Judg  20:24}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தாரும்  அந்நாளிலே  கிபியாவிலிருந்து<Gibeah>  அவர்களுக்கு  எதிராகப்  புறப்பட்டுவந்து,  பின்னும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  பட்டயம்  உருவுகிற  பதினெண்ணாயிரம்பேரைத்  தரையிலே  விழும்படி  சங்கரித்தார்கள்.  {Judg  20:25}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சகல  ஜனங்களும்  புறப்பட்டு,  தேவனுடைய  வீட்டிற்குப்  போய்,  அங்கே  கர்த்தருடைய  சந்நிதியில்  அழுது,  தரித்திருந்து,  அன்று  சாயங்காலமட்டும்  உபவாசித்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  இட்டு,  {Judg  20:26}

 

கர்த்தரிடத்தில்  விசாரித்தார்கள்;  தேவனுடைய  உடன்படிக்கையின்  பெட்டி  அந்நாட்களில்  அங்கே  இருந்தது.  {Judg  20:27}

 

ஆரோனின்<Aaron>  குமாரனாகிய  எலெயாசாரின்<Eleazar>  மகன்  பினெகாஸ்<Phinehas>  அந்நாட்களில்  அவருடைய  சந்நிதியில்  நின்றான்;  எங்கள்  சகோதரராகிய  பென்யமீன்<Benjamin>  புத்திரரோடே  பின்னும்  யுத்தம்பண்ணப்  புறப்படலாமா  புறப்படலாகாதா  என்று  அவர்கள்  விசாரித்தார்கள்;  அப்பொழுது  கர்த்தர்:  போங்கள்;  நாளைக்கு  அவர்களை  உங்கள்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்  என்றார்.  {Judg  20:28}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  கிபியாவைச்சுற்றிலும்<Gibeah>  பதிவிடையாட்களை  வைத்து,  {Judg  20:29}

 

மூன்றாம்  நாளிலே  பென்யமீன்<Benjamin>  புத்திரருக்கு  விரோதமாய்ப்  போய்,  முன்  இரண்டுதரம்  செய்ததுபோல,  கிபியாவுக்குச்<Gibeah>  சமீபமாய்ப்  போருக்கு  அணிவகுத்து  நின்றார்கள்.  {Judg  20:30}

 

அப்பொழுது  பென்யமீன்<Benjamin>  புத்திரர்  ஜனத்திற்கு  விரோதமாய்ப்  புறப்பட்டுப்  பட்டணத்தை  விட்டு,  அப்பாலே  வந்து,  வெளியிலே  பெத்தேலுக்கும்<Bethel>  கிபியாவுக்கும்<Gibeah>  போகிற  இரண்டு  வழிகளில்  இஸ்ரவேல்<Israel>  ஜனத்தில்  ஏறக்குறைய  முப்பதுபேரை,  முதல்  இரண்டுதரம்  செய்தது  போல,  வெட்டவும்  கொல்லவும்  தொடங்கினார்கள்.  {Judg  20:31}

 

முன்போல  நமக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்படுகிறார்கள்  என்று  பென்யமீன்<Benjamin>  புத்திரர்  சொன்னார்கள்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோ:  அவர்களைப்  பட்டணத்தை  விட்டு  அப்பாலேயிருக்கிற  வழிகளிலே  வரப்பண்ணும்படிக்கு,  நாம்  ஓடவேண்டும்  என்று  சொல்லியிருந்தார்கள்.  {Judg  20:32}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  எல்லாரும்  தங்கள்  ஸ்தானத்திலிருந்து  எழும்பி,  பாகால்தாமாரிலே<Baaltamar>  யுத்தத்திற்கு  அணிவகுத்து  நின்றார்கள்;  இஸ்ரவேலரில்<Israel>  கிபியாவின்<Gibeah>  பள்ளத்தாக்கிலே  பதிவிருந்தவர்கள்  தங்கள்  ஸ்தானத்திலிருந்து  புறப்பட்டு,  {Judg  20:33}

 

அவர்களில்  எல்லா  இஸ்ரவேலிலும்<Israel>  தெரிந்துகொள்ளப்பட்ட  பதினாயிரம்பேர்  கிபியாவுக்கு<Gibeah>  எதிரே  வந்தார்கள்;  யுத்தம்  பலத்தது;  ஆனாலும்  தங்களுக்கு  விக்கினம்  நேரிட்டது  என்று  அவர்கள்  அறியாதிருந்தார்கள்.  {Judg  20:34}

 

கர்த்தர்  இஸ்ரவேலுக்கு<Israel>  முன்பாகப்  பென்யமீனை<Benjamin>  முறிய  அடித்தார்;  அந்நாளிலே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பென்யமீனிலே<Benjamites>  பட்டயம்  உருவுகிற  ஆட்களாகிய  இருபத்தையாயிரத்து  நூறுபேரைச்  சங்கரித்தார்கள்.  {Judg  20:35}

 

இஸ்ரவேலர்<Israel>  கிபியாவுக்கு<Gibeah>  அப்பாலே  வைத்த  பதிவிடையை  நம்பியிருந்தபடியினாலே,  பென்யமீனருக்கு<Benjamites>  இடம்  கொடுத்தார்கள்;  அதினாலே  அவர்கள்  முறிய  அடிக்கப்படுகிறார்கள்  என்று  பென்யமீன்<Benjamin>  புத்திரருக்குக்  காணப்பட்டது.  {Judg  20:36}

 

அப்பொழுது  பதிவிடையிருந்தவர்கள்  தீவிரமாய்க்  கிபியாவின்மேல்<Gibeah>  பாய்ந்து  பரவி,  பட்டணத்தில்  இருக்கிறவர்களெல்லாரையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டினார்கள்.  {Judg  20:37}

 

பட்டணத்திலிருந்து  மகா  பெரிய  புகையை  எழும்பப்பண்ணுவதே  இஸ்ரவேலருக்கும்<Israel>  பதிவிடைக்காரருக்கும்  குறிக்கப்பட்ட  அடையாளமாயிருந்தது.  {Judg  20:38}

 

ஆகையால்  இஸ்ரவேலர்<Israel>  யுத்தத்திலே  பின்வாங்கினபோது,  பென்யமீனர்<Benjamin>:  முந்தின  யுத்தத்தில்  நடந்ததுபோல,  அவர்கள்  நமக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்படுகிறார்களே  என்று  சொல்லி,  இஸ்ரவேலரில்<Israel>  ஏறக்குறைய  முப்பதுபேரை  வெட்டவும்  கொல்லவும்  தொடங்கினார்கள்.  {Judg  20:39}

 

பட்டணத்திலிருந்து  புகையானது  ஸ்தம்பம்போல  உயர  எழும்பினபோது,  பென்யமீனர்<Benjamites>  பின்னாகப்  பார்த்தார்கள்;  இதோ,  பட்டணத்தின்  அக்கினிஜுவாலை  வானபரியந்தம்  எழும்பிற்று.  {Judg  20:40}

 

அப்பொழுது  இஸ்ரவேலர்<Israel>  திரும்பிக்  கொண்டார்கள்;  பென்யமீன்<Benjamin>  மனுஷரோ,  தங்களுக்கு  விக்கினம்  நேரிட்டதைக்  கண்டு  திகைத்து,  {Judg  20:41}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரைவிட்டு,  வனாந்தரத்திற்குப்  போகிற  வழிக்கு  நேராய்த்  திரும்பி  ஓடிப்போனார்கள்;  ஆனாலும்  யுத்தம்  அவர்களைத்  தொடர்ந்தது;  பட்டணங்களில்  இருந்தவர்களும்  தங்கள்  நடுவே  அகப்பட்டவர்களைக்  கொன்றுபோட்டார்கள்.  {Judg  20:42}

 

இப்படியே  பென்யமீனரை<Benjamites>  வளைந்துகொண்டு  துரத்தி,  கிபியாவுக்குக்<Gibeah>  கிழக்குப்புறமாக  வருமட்டும்,  அவர்களை  லேசாய்  மிதித்துப்போட்டார்கள்.  {Judg  20:43}

 

இதினால்  பென்யமீனரிலே<Benjamin>  பதினெண்ணாயிரம்பேர்  விழுந்தார்கள்;  அவர்களெல்லாரும்  பலவான்களாயிருந்தார்கள்.  {Judg  20:44}

 

மற்றவர்கள்  விலகி,  வனாந்தரத்தில்  இருக்கிற  ரிம்மோன்<Rimmon>  கன்மலைக்கு  ஓடிப்போனார்கள்;  அவர்களில்  இன்னும்  ஐயாயிரம்பேரை  வழிகளிலே  கொன்று,  மற்றவர்களைக்  கீதோம்மட்டும்<Gidom>  பின்தொடர்ந்து,  அவர்களில்  இரண்டாயிரம்  பேரை  வெட்டிப்போட்டார்கள்.  {Judg  20:45}

 

இவ்விதமாய்  பென்யமீனரில்<Benjamin>  அந்நாளில்  விழுந்தவர்களெல்லாரும்  இருபத்தையாயிரம்பேர்;  அவர்களெல்லாரும்  பட்டயம்  உருவுகிற  பலவான்களாயிருந்தார்கள்.  {Judg  20:46}

 

அறுநூறுபேர்  திரும்பிக்கொண்டு  ஓடி,  வனாந்தரத்திலிருக்கிற  ரிம்மோன்<Rimmon>  கன்மலைக்குப்  போய்,  ரிம்மோன்<Rimmon>  கன்மலையிலே  நாலு  மாதம்  இருந்தார்கள்.  {Judg  20:47}

 

இஸ்ரவேலரோ<Israel>  பென்யமீன்<Benjamin>  புத்திரர்மேல்  திரும்பி,  பட்டணத்தில்  மனுஷர்  தொடங்கி  மிருகங்கள்மட்டும்  கண்டவைகள்  எல்லாவற்றையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டி,  கண்ட  பட்டணங்களையெல்லாம்  அக்கினியால்  கொளுத்திப்போட்டார்கள்.  {Judg  20:48}

 

இஸ்ரவேலர்<Israel>  மிஸ்பாவிலே<Mizpeh>  இருக்கும்போது:  நம்மில்  ஒருவனும்  தன்  குமாரத்தியைப்  பென்யமீனருக்கு<Benjamin>  விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை  என்று  ஆணையிட்டிருந்தார்கள்.  {Judg  21:1}

 

ஆகையால்  ஜனங்கள்  தேவனுடைய  வீட்டிற்குப்போய்,  அங்கே  தேவசந்நிதியில்  சாயங்காலமட்டும்  இருந்து,  சத்தமிட்டு,  மிகவும்  அழுது:  {Judg  21:2}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தாவே,  இன்று  இஸ்ரவேலில்<Israel>  ஒரு  கோத்திரம்  குறைந்துபோகத்தக்கதாக  இஸ்ரவேலில்<Israel>  இந்தக்  காரியம்  நேரிட்டது  என்ன  என்றார்கள்.  {Judg  21:3}

 

மறுநாளிலே,  ஜனங்கள்  காலமே  எழுந்திருந்து,  அங்கே  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதான  பலிகளையும்  செலுத்தினார்கள்.  {Judg  21:4}

 

கர்த்தருடைய  சந்நிதியில்  மிஸ்பாவுக்கு<Mizpeh>  வராதவன்  நிச்சயமாய்க்  கொலைசெய்யப்படக்கடவன்  என்று  அவர்கள்  பெரிய  ஆணையிட்டிருந்தபடியால்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்:  கர்த்தருடைய  சந்நிதியில்  சபைகூடினபோது,  இஸ்ரவேலுடைய<Israel>  எல்லாக்  கோத்திரங்களிலுமிருந்து  வராதே  போனவர்கள்  யார்  என்று  விசாரித்தார்கள்.  {Judg  21:5}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  தங்கள்  சகோதரராகிய  பென்யமீனரை<Benjamin>  நினைத்து,  மனஸ்தாபப்பட்டு:  இன்று  இஸ்ரவேலில்<Israel>  ஒரு  கோத்திரம்  அறுப்புண்டுபோயிற்றே.  {Judg  21:6}

 

மீந்திருப்பவர்களுக்கு  மனைவிகள்  கிடைக்கும்படி  நாம்  அவர்களுக்காக  என்னசெய்யலாம்?  நம்முடைய  குமாரத்திகளில்  ஒருத்தியையும்  அவர்களுக்குக்  கொடுப்பதில்லை  என்று  நாம்  கர்த்தர்மேல்  ஆணையிட்டுக்கொண்டோமே.  {Judg  21:7}

 

இஸ்ரவேலின்<Israel>  கோத்திரங்களில்  மிஸ்பாவிலே<Mizpeh>  கர்த்தருடைய  சந்நிதியில்  வராதேபோன  யாதொருவர்  உண்டோ  என்று  விசாரித்தார்கள்;  அப்பொழுது  கீலேயாத்திலுள்ள<Gilead>  யாபேசின்<Jabesh>  மனுஷரில்  ஒருவரும்  பாளயத்தில்  சபைகூடினபோது  வரவில்லை.  {Judg  21:8}

 

ஜனங்கள்  இலக்கம்பார்க்கப்பட்டபோது,  கீலேயாத்திலிருக்கிற<Gilead>  யாபேசின்<Jabesh>  குடிகளில்  அங்கே  ஒருவரும்  இருந்ததில்லை.  {Judg  21:9}

 

உடனே  சபையார்  பலவான்களில்  பன்னீராயிரம்பேரை  அங்கே  அழைத்து:  நீங்கள்  போய்,  கீலேயாத்திலுள்ள<Gilead>  யாபேசின்<Jabesh>  குடிகளை  ஸ்திரீகளோடும்  பிள்ளைகளோடும்  பட்டயக்கருக்கினால்  வெட்டுங்கள்.  {Judg  21:10}

 

சகல  ஆண்பிள்ளைகளையும்,  புருஷரை  அறிந்த  சகல  பெண்பிள்ளைகளையும்  சங்கரிக்கக்கடவீர்கள்  என்று  அவர்களுக்குக்  கட்டளையிட்டு  அனுப்பினார்கள்.  {Judg  21:11}

 

இவர்கள்  கீலேயாத்திலுள்ள<Gilead>  யாபேசின்<Jabesh>  குடிகளிடத்திலே  புருஷரை  அறியாத  நானூறு  கன்னிப்பெண்களைக்  கண்டு  பிடித்து,  அவர்களைக்  கானான்தேசமான<Canaan>  சீலோவிலிருக்கிற<Shiloh>  பாளயத்திற்குக்  கொண்டுவந்தார்கள்.  {Judg  21:12}

 

அப்பொழுது  ரிம்மோன்<Rimmon>  கன்மலையிலிருக்கிற  பென்யமீன்<Benjamin>  புத்திரரோடே  பேசவும்,  அவர்களுக்குச்  சமாதானம்  கூறவும்,  சபையார்  எல்லாரும்  மனுஷரை  அனுப்பினார்கள்.  {Judg  21:13}

 

அப்படியே  அக்காலத்தில்  பென்யமீனர்<Benjamin>  திரும்ப  வந்தார்கள்;  கீலேயாத்திலிருக்கிற<Gilead>  யாபேசின்<Jabesh>  ஸ்திரீகளில்  உயிரோடே  வைத்த  பெண்களை  அவர்களுக்குக்  கொடுத்தார்கள்;  அப்படிச்  செய்தும்  அவர்கள்  தொகைக்குக்  காணாதிருந்தது.  {Judg  21:14}

 

இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களிலே  கர்த்தர்  ஒரு  பிளப்பை  உண்டாக்கினார்  என்று  ஜனங்கள்  பென்யமீனருக்காக<Benjamin>  மனஸ்தாபப்பட்டார்கள்.  {Judg  21:15}

 

பென்யமீன்<Benjamin>  கோத்திர  ஸ்திரீகள்  அழிந்தபடியினாலே,  மீதியான  மற்றப்பேர்களுக்கும்  மனைவிகள்  கிடைக்கும்படி  என்னசெய்யலாம்  என்று  சபையின்  மூப்பரானவர்கள்  கேட்டு,  {Judg  21:16}

 

இஸ்ரவேலில்<Israel>  ஒரு  கோத்திரம்  நிர்மூலமாகாதபடிக்கு,  தப்பினவர்களுடைய  சுதந்தரம்  பென்யமீனுக்கு<Benjamin>  இருக்கவேண்டுமே,  {Judg  21:17}

 

நாமோ  நம்முடைய  குமாரத்திகளில்  அவர்களுக்குப்  பெண்  கொடுக்கக்கூடாது;  பென்யமீனருக்குப்<Benjamin>  பெண்கொடுக்கிறவன்  சபிக்கப்பட்டவன்  என்று,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  ஆணையிட்டார்களே  என்றார்கள்.  {Judg  21:18}

 

பின்னும்,  இதோ,  பெத்தேலுக்கு<Bethel>  வடக்கே  பெத்தேலிலிருந்து<Bethel>  சீகேமுக்குப்<Shechem>  போகிற  பாதைக்குக்  கிழக்காகவும்  லிபோனாவுக்குத்<Lebonah>  தெற்காகவும்  இருக்கிற  சீலோவிலே<Shiloh>  வருஷந்தோறும்  கர்த்தருக்குப்  பண்டிகை  கொண்டாடப்படுகிறதே  என்று  சொல்லி,  {Judg  21:19}

 

அவர்கள்  பென்யமீன்<Benjamin>  புத்திரரை  நோக்கி:  நீங்கள்  போய்,  திராட்சத்தோட்டங்களிலே  பதிவிருந்து,  {Judg  21:20}

 

சீலோவின்<Shiloh>  குமாரத்திகள்  கீதவாத்தியத்தோடே  நடனம்பண்ணுகிறவர்களாய்ப்  புறப்பட்டு  வருகிறதை  நீங்கள்  காணும்போது,  திராட்சத்தோட்டங்களிலிருந்து  புறப்பட்டு,  உங்களில்  அவரவர்  சீலோவின்<Shiloh>  குமாரத்திகளில்,  ஒவ்வொரு  பெண்ணைப்  பிடித்துப்  பென்யமீன்<Benjamin>  தேசத்திற்குக்  கொண்டுபோங்கள்.  {Judg  21:21}

 

அவர்களுடைய  தகப்பன்மாராகிலும்,  சகோதரராகிலும்  எங்களிடத்தில்  முறையிட  வரும்போது,  நாங்கள்  அவர்களை  நோக்கி:  எங்கள்  நிமித்தம்  அவர்களுக்குத்  தயவுசெய்யுங்கள்;  நாங்கள்  யுத்தம்பண்ணி,  அவனவனுக்கு  மனைவியை  வாங்கிக்கொடுக்கவில்லை;  உங்கள்மேல்  குற்றமுண்டாக  இப்போது  நீங்கள்  அவர்களுக்கு  மனைவிகளைக்  கொடுக்கவும்  இல்லை  என்போம்  என்று  சொன்னார்கள்.  {Judg  21:22}

 

பென்யமீன்<Benjamin>  புத்திரர்  அப்படியே  செய்து,  நடனம்பண்ணுகிறவர்களிலே  தங்கள்  தொகைக்குச்  சரியான  பெண்களை  மனைவிகளாகப்  பிடித்துக்கொண்டு,  தங்கள்  சுதந்தரத்திற்குத்  திரும்பிப்போய்,  பட்டணங்களைப்  புதுப்பித்துக்  கட்டி,  அவைகளில்  குடியிருந்தார்கள்.  {Judg  21:23}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரும்  அக்காலத்திலே  அவ்விடம்  விட்டு  அவரவர்  தங்கள்  கோத்திரத்துக்கும்  தங்கள்  குடும்பத்துக்கும்  போய்,  அவரவர்  தங்கள்  சுதந்தரத்தில்  சேர்ந்தார்கள்.  {Judg  21:24}

 

அந்நாட்களிலே  இஸ்ரவேலில்<Israel>  ராஜா  இல்லை;  அவனவன்  தன்தன்  பார்வைக்குச்  சரிப்போனபடி  செய்துவந்தான்.  {Judg  21:25}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!