Monday, January 13, 2020

ஒபதியா

ஒபதியாவின்<Obadiah>  தரிசனம்;  கர்த்தராகிய  ஆண்டவர்  ஏதோமைக்<Edom>  குறித்துச்  சொல்லுகிறது  என்னவென்றால்:  எழும்புங்கள்,  அதற்கு  விரோதமாக  யுத்தம்பண்ண  எழும்புவோம்  வாருங்கள்  என்று  அறிவிக்க  ஸ்தானாபதி  ஜாதிகளிடத்தில்  அனுப்பப்படும்  செய்தியைக்  கர்த்தர்  சொல்லக்கேட்டோம்.  {Obad  1:1}

 

இதோ,  நான்  உன்னை  ஜாதிகளில்  சிறுகப்பண்ணினேன்;  நீ  மெத்தவும்  அசட்டைபண்ணப்பட்டிருக்கிறாய்.  {Obad  1:2}

 

கன்மலை  வெடிப்புகளாகிய  உன்  உயர்ந்த  ஸ்தானத்திலே  குடியிருந்து,  என்னைத்  தரையிலே  விழத்தள்ளுகிறவன்  யார்  என்று  உன்  இருதயத்தில்  சொல்லுகிறவனே,  உன்  இருதயத்தின்  அகந்தை  உன்னை  மோசம்போக்குகிறது.  {Obad  1:3}

 

நீ  கழுகைப்போல  உயரப்போனாலும்,  நீ  நட்சத்திரங்களுக்குள்ளே  உன்  கூட்டைக்  கட்டினாலும்,  அவ்விடத்திலிருந்தும்  உன்னை  விழத்தள்ளுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Obad  1:4}

 

நீ  எவ்வளவாய்ச்  சங்கரிப்பட்டுப்போனாய்!  திருடராகிலும்  இராத்திரியில்  கொள்ளையடிக்கிறவர்களாகிலும்  உன்னிடத்தில்  வந்தால்,  தங்களுக்குப்  போதுமானமட்டும்  திருடுவார்கள்  அல்லவோ?  திராட்சப்பழங்களை  அறுக்கிறவர்கள்  உன்னிடத்தில்  வந்தால்,  சில  பழங்களை  விட்டுவிடுவார்கள்  அல்லவோ?  {Obad  1:5}

 

ஏசாவினுடையவைகள்<Esau>  எவ்வளவாய்த்  தேடிப்பார்க்கப்பட்டது;  அவனுடைய  அந்தரங்கப்  பொக்கிஷங்கள்  எவ்வளவாய்  ஆராய்ந்தெடுத்துக்  கொள்ளப்பட்டது.  {Obad  1:6}

 

உன்னோடு  உடன்படிக்கை  செய்த  எல்லா  மனுஷரும்  உன்னை  எல்லைமட்டும்  துரத்திவிட்டார்கள்;  உன்னோடு  சமாதானமாயிருந்த  மனுஷர்  உன்னை  மோசம்போக்கி,  உன்னை  மேற்கொண்டார்கள்;  உன்  அப்பத்தைச்  சாப்பிட்டவர்கள்  உனக்குக்  கீழே  கண்ணிவைத்தார்கள்.  அவனுக்கு  உணர்வில்லை.  {Obad  1:7}

 

அந்நாளில்  அல்லவோ  நான்  ஏதோமிலுள்ள<Edom>  ஞானிகளையும்,  ஏசாவின்<Esau>  பர்வதத்திலுள்ள  புத்திமான்களையும்  அழிப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Obad  1:8}

 

தேமானே<Teman>,  ஏசாவின்<Esau>  பர்வதத்திலுள்ள  மனுஷர்  யாவரும்  கொலையினால்  சங்கரிக்கப்படும்படி  உன்  பராக்கிரமசாலிகள்  கலங்குவார்கள்.  {Obad  1:9}

 

நீ  உன்  சகோதரனாகிய  யாக்கோபுக்குச்<Jacob>  செய்த  கொடுமையினிமித்தம்  வெட்கம்  உன்னை  மூடும்;  நீ  முற்றிலும்  சங்கரிக்கப்பட்டுப்போவாய்.  {Obad  1:10}

 

நீ  எதிர்த்துநின்ற  நாளிலும்,  அந்நியர்  அவன்  சேனையைச்  சிறைபிடித்துப்போன  நாளிலும்,  மறுதேசத்தார்  அவன்  வாசல்களுக்குள்  பிரவேசித்து  எருசலேமின்பேரில்<Jerusalem>  சீட்டுப்போட்ட  காலத்தில்,  நீயும்  அவர்களில்  ஒருவனைப்போல்  இருந்தாய்.  {Obad  1:11}

 

உன்  சகோதரன்  அந்நியர்வசமான  நாளாகிய  அவனுடைய  நாளை  நீ  பிரியத்தோடே  பாராமலும்,  யூதா<Judah>  புத்திரருடைய  அழிவின்  நாளிலே  அவர்கள்  நிமித்தம்  சந்தோஷப்படாமலும்,  அவர்கள்  நெருக்கப்படுகிற  நாளிலே  நீ  பெருமையாய்ப்  பேசாமலும்  இருக்க  வேண்டியதாயிருந்தது.  {Obad  1:12}

 

என்  ஜனத்தின்  ஆபத்துநாளிலே  நீ  அவர்கள்  வாசல்களுக்குள்  பிரவேசியாமலும்,  அவர்கள்  ஆபத்துநாளிலே  அவர்கள்  அநுபவிக்கிற  தீங்கை  நீ  பிரியத்தோடே  பாராமலும்,  அவர்கள்  ஆபத்துநாளிலே  அவர்கள்  ஆஸ்தியில்  கைபோடாமலும்,  {Obad  1:13}

 

அவர்களில்  தப்பினவர்களைச்  சங்கரிக்கும்படி  வழிச்சந்திகளிலே  நிற்காமலும்,  இக்கட்டு  நாளில்  அவர்களில்  மீதியானவர்களைக்  காட்டிக்கொடாமலும்  இருக்கவேண்டியதாயிருந்தது.  {Obad  1:14}

 

எல்லா  ஜாதிகளுக்கும்  விரோதமான  நாளாகிய  கர்த்தருடைய  நாள்  சமீபமாய்  வந்திருக்கிறது;  நீ  செய்தபடியே  உனக்கும்  செய்யப்படும்;  உன்  செய்கையின்  பலன்  உன்  தலையின்மேல்  திரும்பும்.  {Obad  1:15}

 

நீங்கள்  என்  பரிசுத்த  பர்வதத்தின்மேல்  மதுபானம்பண்ணினபடியே  எல்லா  ஜாதிகளும்  எப்பொழுதும்  மதுபானம்பண்ணுவார்கள்;  அவர்கள்  குடித்து  விழுங்குவார்கள்,  இராதவர்களைப்போல்  இருப்பார்கள்.  {Obad  1:16}

 

ஆனாலும்  சீயோன்<Zion>  பர்வதத்திலே  தப்பியிருப்பார்  உண்டு,  அவர்கள்  பரிசுத்தமாயிருப்பார்கள்;  யாக்கோபின்<Jacob>  வம்சத்தார்  தங்களுடைய  சுதந்தரங்களைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்.  {Obad  1:17}

 

யாக்கோபு<Jacob>  வம்சத்தார்  அக்கினியும்,  யோசேப்பு<Joseph>  வம்சத்தார்  அக்கினிஜுவாலையுமாயிருப்பார்கள்;  ஏசா<Esau>  வம்சத்தாரோ  வைக்கோல்  துரும்பாயிருப்பார்கள்;  அவர்கள்  இவர்களைக்  கொளுத்தி,  ஏசாவின்<Esau>  வம்சத்தில்  மீதியிராதபடி  இவர்களைப்  பட்சிப்பார்கள்;  கர்த்தர்  இதைச்  சொன்னார்.  {Obad  1:18}

 

தென்தேசத்தார்  ஏசாவின்<Esau>  மலையையும்,  சமனான  தேசத்தார்  பெலிஸ்தரின்<Philistines>  தேசத்தையும்  சுதந்தரித்துக்கொள்வார்கள்;  அவர்கள்  எப்பிராயீமின்<Ephraim>  நாட்டையும்,  சமாரியாவின்<Samaria>  நாட்டையும்  சுதந்தரித்துக்கொள்வார்கள்;  பென்யமீன்<Benjamin>  மனுஷர்  கீலேயாத்தையும்<Gilead>  சுதந்தரித்துக்கொள்வார்கள்.  {Obad  1:19}

 

சர்பாத்மட்டும்<Zarephath>  கானானியருக்குள்ளே<Canaanites>  சிறைப்பட்டுப்போன  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  இந்தச்  சேனையும்,  சேப்பாராத்தில்<Sepharad>  சிறைப்பட்டுப்போன  எருசலேம்<Jerusalem>  நகரத்தாரும்  தென்திசைப்  பட்டணங்களைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்.  {Obad  1:20}

 

ஏசாவின்<Esau>  பர்வதத்தை  நியாயந்தீர்ப்பதற்காக  இரட்சகர்கள்  சீயோன்<Zion>  பர்வதத்தில்  வந்தேறுவார்கள்;  அப்பொழுது  ராஜ்யம்  கர்த்தருடையதாய்  இருக்கும்.  {Obad  1:21}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!