Sunday, January 12, 2020

யோனா

அமித்தாயின்<Amittai>  குமாரனாகிய  யோனாவுக்குக்<Jonah>  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அவர்:  {Jonah  1:1}

 

நீ  எழுந்து  மகா  நகரமாகிய  நினிவேக்குப்<Nineveh>  போய்,  அதற்கு  விரோதமாகப்  பிரசங்கி;  அவர்களுடைய  அக்கிரமம்  என்  சமுகத்தில்  வந்து  எட்டினது  என்றார்.  {Jonah  1:2}

 

அப்பொழுது  யோனா<Jonah>  கர்த்தருடைய  சமுகத்தினின்று  விலகி,  தர்ஷீசுக்கு<Tarshish>  ஓடிப்போகும்படி  எழுந்து,  யோப்பாவுக்குப்<Joppa>  போய்,  தர்ஷீசுக்குப்<Tarshish>  போகிற  ஒரு  கப்பலைக்கண்டு,  கூலி  கொடுத்து,  தான்  கர்த்தருடைய  சமுகத்தினின்று  விலகும்படி,  அவர்களோடே  தர்ஷீசுக்குப்<Tarshish>  போகக்  கப்பல்  ஏறினான்.  {Jonah  1:3}

 

கர்த்தர்  சமுத்திரத்தின்மேல்  பெருங்காற்றை  வரவிட்டார்;  அதினால்  கடலிலே  கப்பல்  உடையுமென்று  நினைக்கத்தக்க  பெரிய  கொந்தளிப்பு  உண்டாயிற்று.  {Jonah  1:4}

 

அப்பொழுது  கப்பற்காரர்  பயந்து,  அவனவன்  தன்தன்  தேவனை  நோக்கி  வேண்டுதல்செய்து,  பாரத்தை  லேசாக்கும்படிக்  கப்பலில்  இருந்த  சரக்குகளைச்  சமுத்திரத்தில்  எறிந்துவிட்டார்கள்;  யோனாவோவென்றால்<Jonah>  கப்பலின்  கீழ்த்தட்டில்  இறங்கிபோய்ப்  படுத்துக்கொண்டு,  அயர்ந்த  நித்திரைபண்ணினான்.  {Jonah  1:5}

 

அப்பொழுது  மாலுமி  அவனிடத்தில்  வந்து:  நீ  நித்திரைபண்ணுகிறது  என்ன?  எழுந்திருந்து  உன்  தேவனை  நோக்கி  வேண்டிக்கொள்;  நாம்  அழிந்துபோகாதபடிக்குச்  சுவாமி  ஒருவேளை  நம்மை  நினைத்தருளுவார்  என்றான்.  {Jonah  1:6}

 

அவர்கள்  யார்நிமித்தம்  இந்த  ஆபத்து  நமக்கு  நேரிட்டதென்று  நாம்  அறியும்படிக்குச்  சீட்டுப்போடுவோம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டு  சீட்டுப்போட்டார்கள்;  யோனாவின்<Jonah>  பேருக்குச்  சீட்டு  விழுந்தது.  {Jonah  1:7}

 

அப்பொழுது  அவர்கள்  அவனை  நோக்கி:  யார்நிமித்தம்  இந்த  ஆபத்து  நமக்கு  நேரிட்டதென்று  நீ  எங்களுக்குச்  சொல்லவேண்டும்;  உன்  தொழிலென்ன?  நீ  எங்கேயிருந்து  வருகிறாய்?  உன்  தேசம்  எது?  நீ  என்ன  ஜாதியான்  என்று  கேட்டார்கள்.  {Jonah  1:8}

 

அதற்கு  அவன்:  நான்  எபிரெயன்<Hebrew>;  சமுத்திரத்தையும்  பூமியையும்  உண்டாக்கின  பரலோகத்தின்  தேவனாகிய  கர்த்தர்  இடத்தில்  பயபக்தியுள்ளவன்  என்றான்.  {Jonah  1:9}

 

அவன்  கர்த்தருடைய  சமுகத்தினின்று  விலகி  ஓடிப்போகிறவன்  என்று  தங்களுக்கு  அறிவித்ததினால்,  அந்த  மனுஷர்  மிகவும்  பயந்து,  அவனை  நோக்கி:  நீ  ஏன்  இதைச்  செய்தாய்  என்றார்கள்.  {Jonah  1:10}

 

பின்னும்  சமுத்திரம்  அதிகமாய்க்  கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால்,  அவர்கள்  அவனை  நோக்கி:  சமுத்திரம்  நமக்கு  அமரும்படி  நாங்கள்  உனக்கு  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டார்கள்.  {Jonah  1:11}

 

அதற்கு  அவன்:  நீங்கள்  என்னை  எடுத்துச்  சமுத்திரத்திலே  போட்டுவிடுங்கள்;  அப்பொழுது  சமுத்திரம்  உங்களுக்கு  அமர்ந்திருக்கும்;  என்னிமித்தம்  இந்தப்  பெரிய  கொந்தளிப்பு  உங்கள்மேல்  வந்ததென்பதை  நான்  அறிவேன்  என்றான்.  {Jonah  1:12}

 

அந்த  மனுஷர்  கரைசேரும்படி  வேகமாய்த்  தண்டுவலித்தார்கள்;  ஆனாலும்  சமுத்திரம்  வெகு  மும்முரமாய்க்  கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால்  அவர்களால்  கூடாமற்போயிற்று.  {Jonah  1:13}

 

அப்பொழுது  அவர்கள்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு:    கர்த்தாவே,  இந்த  மனுஷனுடைய  ஜீவனிமித்தம்  எங்களை  அழித்துப்போடாதேயும்;  குற்றமில்லாத  இரத்தப்பழியை  எங்கள்மேல்  சுமத்தாதேயும்;  தேவரீர்  கர்த்தர்;  உமக்குச்  சித்தமாயிருக்கிறபடி  செய்கிறீர்  என்று  சொல்லி,  {Jonah  1:14}

 

யோனாவை<Jonah>  எடுத்துச்  சமுத்திரத்திலே  போட்டுவிட்டார்கள்;  சமுத்திரம்  தன்  மும்முரத்தைவிட்டு  அமர்ந்தது.  {Jonah  1:15}

 

அப்பொழுது  அந்த  மனுஷர்  கர்த்தருக்கு  மிகவும்  பயந்து,  கர்த்தருக்குப்  பலியிட்டுப்  பொருத்தனைகளைப்  பண்ணினார்கள்.  {Jonah  1:16}

 

யோனாவை<Jonah>  விழுங்கும்படி  ஒரு  பெரிய  மீனைக்  கர்த்தர்  ஆயத்தப்படுத்தியிருந்தார்;  அந்த  மீன்  வயிற்றிலே  யோனா<Jonah>  இராப்பகல்  மூன்றுநாள்  இருந்தான்.  {Jonah  1:17}

 

அந்த  மீனின்  வயிற்றிலிருந்து,  யோனா<Jonah>  தன்  தேவனாகிய  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:  {Jonah  2:1}

 

என்  நெருக்கத்தில்  நான்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  அவர்  எனக்கு  உத்தரவு  அருளினார்;  நான்  பாதாளத்தின்  வயிற்றிலிருந்து  கூக்குரலிட்டேன்,  நீர்  என்  சத்தத்தைக்  கேட்டீர்.  {Jonah  2:2}

 

சமுத்திரத்தின்  நடுமையமாகிய  ஆழத்திலே  நீர்  என்னைத்  தள்ளிவிட்டீர்;  நீரோட்டம்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  உம்முடைய  வெள்ளங்களும்  அலைகளும்  எல்லாம்  என்மேல்  புரண்டது.  {Jonah  2:3}

 

நான்  உமது  கண்களுக்கு  எதிரே  இராதபடிக்குத்  தள்ளப்பட்டேன்;  ஆகிலும்  இன்னமும்  உம்முடைய  பரிசுத்த  ஆலயத்தை  நோக்குவேன்  என்றேன்.  {Jonah  2:4}

 

தண்ணீர்கள்  பிராணபரியந்தம்  என்னை  நெருக்கினது;  ஆழி  என்னைச்  சூழ்ந்தது;  கடற்பாசி  என்  தலையைச்  சுற்றிக்கொண்டது.  {Jonah  2:5}

 

பர்வதங்களின்  அடிவாரங்கள்  பரியந்தமும்  இறங்கினேன்;  பூமியின்  தாழ்ப்பாள்கள்  என்றென்றைக்கும்  என்னை  அடைக்கிறதாயிருந்தது;  ஆனாலும்  என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  என்  பிராணனை  அழிவுக்குத்  தப்புவித்தீர்.  {Jonah  2:6}

 

என்  ஆத்துமா  என்னில்  தொய்ந்துபோகையில்  கர்த்தரை  நினைத்தேன்;  அப்பொழுது  என்  விண்ணப்பம்  உமது  பரிசுத்த  ஆலயத்திலே  உம்மிடத்தில்  வந்து  சேர்ந்தது.  {Jonah  2:7}

 

பொய்யான  மாயையைப்  பற்றிக்கொள்ளுகிறவர்கள்  தங்களுக்கு  வரும்  கிருபையைப்  போக்கடிக்கிறார்கள்.  {Jonah  2:8}

 

நானோவெனில்  துதியின்  சத்தத்தோடே  உமக்குப்  பலியிடுவேன்;  நான்  பண்ணின  பொருத்தனையைச்  செலுத்துவேன்;  இரட்சிப்பு  கர்த்தருடையது  என்றான்.  {Jonah  2:9}

 

கர்த்தர்  மீனுக்குக்  கட்டளையிட்டார்,  அது  யோனாவைக்<Jonah>  கரையிலே  கக்கிவிட்டது.  {Jonah  2:10}

 

இரண்டாந்தரம்  கர்த்தருடைய  வார்த்தை  யோனாவுக்கு<Jonah>  உண்டாகி,  அவர்:  {Jonah  3:1}

 

நீ  எழுந்து  மகா  நகரமாகிய  நினிவேக்குப்<Nineveh>  போய்,  நான்  உனக்குக்  கற்பிக்கும்  வார்த்தையை  அதற்கு  விரோதமாய்ப்  பிரசங்கி  என்றார்.  {Jonah  3:2}

 

யோனா<Jonah>  எழுந்து,  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  நினிவேக்குப்<Nineveh>  போனான்;  நினிவே<Nineveh>  மூன்றுநாள்  பிரயாண  விஸ்தாரமான  மகா  பெரிய  நகரமாயிருந்தது.  {Jonah  3:3}

 

யோனா<Jonah>  நகரத்தில்  பிரவேசித்து,  ஒருநாள்  பிரயாணம்பண்ணி:  இன்னும்  நாற்பதுநாள்  உண்டு,  அப்பொழுது  நினிவே<Nineveh>  கவிழ்க்கப்பட்டுப்போம்  என்று  கூறினான்.  {Jonah  3:4}

 

அப்பொழுது  நினிவேயிலுள்ள<Nineveh>  ஜனங்கள்  தேவனை  விசுவாசித்து,  உபவாசஞ்செய்யும்படிக்  கூறினார்கள்;  பெரியோர்முதல்  சிறியோர்மட்டும்  இரட்டுடுத்திக்கொண்டார்கள்.  {Jonah  3:5}

 

இந்தச்  செய்தி  நினிவேயின்<Nineveh>  ராஜாவுக்கு  எட்டினபோது,  அவன்  தன்  சிங்காசனத்தைவிட்டு  எழுந்து,  தான்  உடுத்தியிருந்த  உடுப்பைக்  கழற்றிப்போட்டு,  இரட்டை  உடுத்திக்கொண்டு,  சாம்பலிலே  உட்கார்ந்தான்.  {Jonah  3:6}

 

மேலும்  ராஜா,  தானும்  தன்  பிரதானிகளும்  நிர்ணயம்பண்ணின  கட்டளையாக,  நினிவேயிலெங்கும்<Nineveh>  மனுஷரும்  மிருகங்களும்,  மாடுகளும்  ஆடுகளும்  ஒன்றும்  ருசிபாராதிருக்கவும்,  மேயாமலும்  தண்ணீர்  குடியாமலும்  இருக்கவும்,  {Jonah  3:7}

 

மனுஷரும்  மிருகங்களும்  இரட்டினால்  மூடிக்கொண்டு,  தேவனை  நோக்கி  உரத்த  சத்தமாய்க்  கூப்பிடவும்,  அவரவர்  தம்தம்  பொல்லாத  வழியையும்  தம்தம்  கைகளிலுள்ள  கொடுமையையும்  விட்டுத்  திரும்பவுங்கடவர்கள்.  {Jonah  3:8}

 

யாருக்குத்  தெரியும்;  நாம்  அழிந்து  போகாதபடிக்கு  ஒருவேளை  தேவன்  மனஸ்தாபப்பட்டு,  தம்முடைய  உக்கிர  கோபத்தைவிட்டுத்  திரும்பினாலும்  திரும்புவார்  என்று  கூறச்சொன்னான்.  {Jonah  3:9}

 

அவர்கள்  தங்கள்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பினார்களென்று  தேவன்  அவர்களுடைய  கிரியைகளைப்  பார்த்து,  தாம்  அவர்களுக்குச்  செய்வேன்  என்று  சொல்லியிருந்த  தீங்கைக்  குறித்து  மனஸ்தாபப்பட்டு,  அதைச்  செய்யாதிருந்தார்.  {Jonah  3:10}

 

யோனாவுக்கு<Jonah>  இது  மிகவும்  விசனமாயிருந்தது;  அவன்  கடுங்கோபங்கொண்டு,  {Jonah  4:1}

 

கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:    கர்த்தாவே,  நான்  என்  தேசத்தில்  இருக்கும்போதே  நான்  இதைச்  சொல்லவில்லையா?  இதினிமித்தமே  நான்  முன்னமே  தர்ஷீசுக்கு<Tarshish>  ஓடிப்போனேன்;  நீர்  இரக்கமும்  மன  உருக்கமும்  நீடிய  சாந்தமும்  மிகுந்த  கிருபையுமுள்ளவரும்,  தீங்குக்கு  மனஸ்தாபப்படுகிறவருமான  தேவனென்று  அறிவேன்.  {Jonah  4:2}

 

இப்போதும்  கர்த்தாவே,  என்  பிராணனை  என்னைவிட்டு  எடுத்துக்கொள்ளும்;  நான்  உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்  சாகிறது  நலமாயிருக்கும்  என்றான்.  {Jonah  4:3}

 

அதற்குக்  கர்த்தர்:  நீ  எரிச்சலாயிருக்கிறது  நல்லதோ  என்றார்.  {Jonah  4:4}

 

பின்பு  யோனா<Jonah>  நகரத்திலிருந்து  புறப்பட்டு,  நகரத்துக்குக்  கிழக்கேபோய்,  அங்கே  தனக்கு  ஒரு  குடிசையைப்  போட்டு,  நகரத்துக்குச்  சம்பவிக்கப்போகிறதைத்  தான்  பார்க்குமட்டும்  அதின்  கீழ்  நிழலில்  உட்கார்ந்திருந்தான்.  {Jonah  4:5}

 

யோனாவுடைய<Jonah>  தலையின்மேல்  நிழலுண்டாயிருக்கவும்,  அவனை  அவனுடைய  மனமடிவுக்கு  நீங்கலாக்கவும்  தேவனாகிய  கர்த்தர்  ஒரு  ஆமணக்குச்  செடியை  முளைக்கக்  கட்டளையிட்டு,  அதை  அவன்மேல்  ஓங்கி  வளரப்பண்ணினார்;  அந்த  ஆமணக்கின்மேல்  யோனா<Jonah>  மிகவும்  சந்தோஷப்பட்டான்.  {Jonah  4:6}

 

மறுநாளிலோ  கிழக்கு  வெளுக்கும்  நேரத்தில்  தேவன்  ஒரு  பூச்சியைக்  கட்டளையிட்டார்;  அது  ஆமணக்குச்  செடியை  அரித்துப்போட்டது;  அதினால்  அது  காய்ந்துபோயிற்று.  {Jonah  4:7}

 

சூரியன்  உதித்தபோது  தேவன்  உஷ்ணமான  கீழ்க்காற்றைக்  கட்டளையிட்டார்;  அப்பொழுது  வெயில்  யோனாவுடைய<Jonah>  தலையில்  படுகிறதினால்  அவன்  சோர்ந்துபோய்,  தனக்குள்ளே  சாவை  விரும்பி:  நான்  உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும்  சாகிறது  நலமாயிருக்கும்  என்றான்.  {Jonah  4:8}

 

அப்பொழுது  தேவன்  யோனாவை<Jonah>  நோக்கி:  நீ  ஆமணக்கினிமித்தம்  எரிச்சலாயிருக்கிறது  நல்லதோ  என்றார்;  அதற்கு  அவன்:  நான்  மரணபரியந்தமும்  எரிச்சலாயிருக்கிறது  நல்லதுதான்  என்றான்.  {Jonah  4:9}

 

அதற்குக்  கர்த்தர்:  நீ  பிரயாசப்படாததும்,  நீ  வளர்க்காததும்,  ஒரு  இராத்திரியிலே  முளைத்ததும்,  ஒரு  இராத்திரியிலே  அழிந்துபோனதுமான  ஆமணக்குக்காகப்  பரிதபிக்கிறாயே.  {Jonah  4:10}

 

வலதுகைக்கும்  இடதுகைக்கும்  வித்தியாசம்  அறியாத  இலட்சத்து  இருபதினாயிரம்பேருக்கு  அதிகமான  மனுஷரும்  அநேக  மிருகஜீவன்களும்  இருக்கிற  மகா  நகரமாகிய  நினிவேக்காக<Nineveh>  நான்  பரிதபியாமலிருப்பேனோ  என்றார்.  {Jonah  4:11}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!