Sunday, January 12, 2020

மீகா

யோதாம்<Jotham>,  ஆகாஸ்<Ahaz>,  எசேக்கியா<Hezekiah>  என்னும்  யூதா<Judah>  ராஜாக்களுடைய  நாட்களில்,  மொரேசா<Morasthite>  ஊரானாகிய  மீகாவுக்கு<Micah>  உண்டானதும்,  அவன்  சமாரியாவுக்கும்<Samaria>  எருசலேமுக்கும்<Jerusalem>  விரோதமாய்த்  தரிசித்ததுமான  கர்த்தருடைய  வார்த்தை.  {Mic  1:1}

 

சகல  ஜனங்களே,  கேளுங்கள்;  பூமியே,  அதிலுள்ளவைகளே,  செவிகொடுங்கள்;  கர்த்தராகிய  ஆண்டவர்,  தம்முடைய  பரிசுத்த  ஆலயத்திலிருக்கிற  ஆண்டவரே,  உங்களுக்கு  விரோதமாகச்  சாட்சியாயிருப்பார்.  {Mic  1:2}

 

இதோ,  கர்த்தர்  தமது  ஸ்தானத்திலிருந்து  புறப்பட்டு  வருகிறார்;  அவர்  இறங்கிப்  பூமியின்  உயர்ந்த  இடங்களை  மிதிப்பார்.  {Mic  1:3}

 

மெழுகு  அக்கினிக்கு  முன்பாக  உருகுகிறதுபோலவும்,  மலைகளிலிருந்து  பாயுந்  தண்ணீர்  தரையைப்  பிளக்கிறதுபோலவும்,  பர்வதங்கள்  அவர்  கீழே  உருகி,  பள்ளத்தாக்குகள்  பிளந்துபோகும்.  {Mic  1:4}

 

இது  எல்லாம்  யாக்கோபுடைய<Jacob>  மீறுதலினிமித்தமும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருடைய  பாவங்களினிமித்தமும்  சம்பவிக்கும்;  யாக்கோபின்<Jacob>  மீறுதலுக்குக்  காரணமென்ன?  சமாரியா<Samaria>  அல்லவோ?  யூதாவின்<Judah>  மேடைகளுக்குக்  காரணமென்ன?  எருசலேம்<Jerusalem>  அல்லவோ?  {Mic  1:5}

 

ஆகையால்  நான்  சமாரியாவை<Samaria>  வெளியான  மண்மேடும்,  திராட்சச்செடி  நடுகிற  நிலமுமாக்கி,  அதின்  கற்களைப்  பள்ளத்தாக்கிலே  புரண்டு  விழப்பண்ணி,  அதின்  அஸ்திபாரங்களைத்  திறந்துவைப்பேன்.  {Mic  1:6}

 

அதின்  சுரூபங்கள்  எல்லாம்  நொறுக்கப்படும்;  அதின்  பணையங்கள்  எல்லாம்  அக்கினியால்  எரித்துப்போடப்படும்;  அதின்  விக்கிரகங்களை  எல்லாம்  பாழாக்குவேன்;  வேசிப்பணையத்தினால்  சேர்க்கப்பட்டது,  திரும்ப  வேசிப்பணையமாய்ப்  போகும்.  {Mic  1:7}

 

இதினிமித்தம்  நான்  புலம்பி  அலறுவேன்;  பறிகொடுத்தவனாகவும்  அம்மணமாகவும்  நடப்பேன்;  நான்  ஓரிகளைப்போல  ஊளையிட்டு,  ஆந்தைகளைப்போல  அலறுவேன்.  {Mic  1:8}

 

அதின்  காயம்  ஆறாதது;  அது  யூதாமட்டும்<Judah>  வந்தது;  என்  ஜனத்தின்  வாசலாகிய  எருசலேம்மட்டும்<Jerusalem>  வந்தெட்டினது.  {Mic  1:9}

 

அதைக்  காத்பட்டணத்திலே<Gath>  அறிவியாதேயுங்கள்,  அழவே  வேண்டாம்;  பெத்அப்ராவிலே<Aphrah>  புழுதியில்  புரளு.  {Mic  1:10}

 

சாப்பீரில்<Saphir>  குடியிருக்கிறவளே,  வெட்கத்துடன்  அம்மணமாய்  அப்பாலே  போ;  சாயனானில்<Zaanan>  குடியிருக்கிறவள்  வெளியே  வருவதில்லை;  பெத்ஏசேலின்<Bethezel>  புலம்பல்  உங்களுக்கு  அடைக்கலமாயிராது.  {Mic  1:11}

 

மாரோத்தில்<Maroth>  குடியிருக்கிறவள்  நன்மை  வருமென்று  எதிர்பார்த்திருந்தாள்;  ஆனாலும்  தீமை  கர்த்தரிடத்திலிருந்து  எருசலேமின்<Jerusalem>  வாசல்வரைக்கும்  வந்தது.  {Mic  1:12}

 

லாகீசில்<Lachish>  குடியிருக்கிறவளே,  வேகமான  குதிரைகளை  இரதத்திலே  பூட்டு;  நீயே  சீயோன்<Zion>  குமாரத்தியின்  பாவத்துக்குக்  காரணி;  உன்னிடத்தில்  இஸ்ரவேலின்<Israel>  பாதகங்கள்  காணப்பட்டது.  {Mic  1:13}

 

ஆகையால்  மோர்ஷேத்காத்தினிடத்தில்<Moreshethgath>  உனக்கு  இருக்கிறதைக்  கொடுத்துவிடுவாய்;  அக்சீபின்<Achzib>  வீடுகள்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்களுக்கு  அபத்தமாய்ப்போகும்.  {Mic  1:14}

 

மரேஷாவில்<Mareshah>  குடியிருக்கிறவளே,  உனக்கு  இன்னும்  ஒரு  சுதந்தரவாளியை  வரப்பண்ணுவேன்;  அவன்  இஸ்ரவேலின்<Israel>  மகிமையாகிய  அதுல்லாம்மட்டும்<Adullam>  வருவான்.  {Mic  1:15}

 

உனக்கு  அருமையான  உன்  பிள்ளைகளினிமித்தம்  நீ  உன்  தலையைச்  சிரைத்து  மொட்டையிட்டுக்கொள்;  கழுகைப்போல  முழுமொட்டையாயிரு,  அவர்கள்  உன்னைவிட்டுச்  சிறைப்பட்டுப்போகிறார்கள்.  {Mic  1:16}

 

அக்கிரமத்தை  யோசித்து,  தங்கள்  படுக்கைகளின்மேல்  பொல்லாப்பு  செய்ய  எத்தனம்பண்ணித்  தங்கள்  கையில்  வல்லமை  இருக்கிறபடியினால்,  விடியற்காலமாகிறபோது  அதை  நடப்பித்து,  {Mic  2:1}

 

வயல்களை  இச்சித்துப்  பறித்துக்கொண்டு,  வீடுகளை  இச்சித்து  எடுத்துக்கொண்டு,  புருஷனையும்  அவன்  வீட்டையும்,  மனுஷனையும்  அவன்  சுதந்தரத்தையும்  ஒடுக்குகிறவர்களுக்கு  ஐயோ!  {Mic  2:2}

 

ஆகையால்  கர்த்தர்:  நான்  இந்த  வம்சத்தாருக்கு  விரோதமாய்த்  தீமையை  வருவிக்க  நினைக்கிறேன்;  அதினின்று  நீங்கள்  கழுத்தை  நீக்கமாட்டீர்கள்;  நீங்கள்  மேட்டிமையாய்  நடப்பதில்லை;  அது  தீமையான  காலம்.  {Mic  2:3}

 

அந்நாளில்  உங்கள்பேரில்  ஒப்புச்சொல்லி,  நாம்  முற்றிலும்  பாழானோம்;  நமது  ஜனத்தின்  சுதந்தரத்தை  மாற்றிப்போட்டார்;  என்னமாய்  அதை  என்னைவிட்டு  நீக்கிப்போட்டார்!  நமது  வயல்களைப்  பிடுங்கிப்  பகிர்ந்துகொடுத்தாரே  என்று  துயரமான  புலம்பலாய்ப்  புலம்புவார்கள்.  {Mic  2:4}

 

கர்த்தரின்  சபையில்  சுதந்தர  வீதங்களை  அளந்துகொடுக்கிறவர்கள்  உனக்கு  இல்லாதிருப்பார்கள்.  {Mic  2:5}

 

தீர்க்கதரிசனஞ்  சொல்லாதிருப்பீர்களாக  என்கிறார்கள்;  அவர்கள்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுவார்கள்,  இந்தப்பிரகாரமாய்  அவர்கள்  தீர்க்கதரிசனஞ்  சொல்லாவிட்டால்  நிந்தை  நீங்காதே.  {Mic  2:6}

 

யாக்கோபு<Jacob>  வம்சம்  என்று  பேர்பெற்றவர்களே,  கர்த்தரின்  ஆவி  குறுகியிருக்கிறதோ?  அவருடைய  கிரியைகள்  இவைகள்தானோ?  செம்மையாய்  நடக்கிறவனுக்கு  என்  வார்த்தைகள்  நன்மை  செய்யாதோ?  {Mic  2:7}

 

என்  ஜனங்கள்  பூர்வமுதல்  சத்துருவைப்போல்  எழும்பினார்கள்.  யுத்தத்திலிருந்து  திரும்பிவந்து  வழியில்  அஞ்சாமல்  கடந்துபோகிறவர்களுடைய  மேலங்கியையும்  வஸ்திரத்தையும்  உரிந்துகொண்டீர்கள்.  {Mic  2:8}

 

என்  ஜனத்தின்  ஸ்திரீகளை  அவர்களுடைய  சௌக்கியமான  வீடுகளிலிருந்து  துரத்திவிட்டீர்கள்;  அவர்களுடைய  குழந்தைகளுக்கு  இருந்த  என்  அலங்காரத்தை  என்றைக்கும்  இல்லாதபடிக்குப்  பறித்துக்கொண்டீர்கள்.  {Mic  2:9}

 

எழுந்திருந்து  போங்கள்;  இது  நீங்கள்  இளைப்பாறும்  இடம்  அல்ல,  இது  தீட்டுப்பட்டது,  இது  உங்களை  நாசப்படுத்தும்,  அந்த  நாசம்  மிகவும்  கொடியதாயிருக்கும்.  {Mic  2:10}

 

மனம்போகிற  போக்கின்படிபோய்,  அபத்தமானதை  உரைக்கிற  ஒருவன்,  திராட்சரசத்தையும்  மதுபானத்தையுங்குறித்து  நான்  உனக்குப்  பிரசங்கிப்பேனென்றால்,  அவனே  இந்த  ஜனத்திற்கு  ஏற்ற  பிரசங்கியாயிருப்பான்.  {Mic  2:11}

 

யாக்கோபின்<Jacob>  ஜனங்களே,  உங்களெல்லாரையும்  நான்  நிச்சயமாய்க்  கூட்டுவேன்,  இஸ்ரவேலில்<Israel>  மீதியானவர்களை  நிச்சயமாய்ச்  சேர்ப்பேன்;  போஸ்றாவின்<Bozrah>  ஆடுகளைப்போல்  அவர்களை  ஏகக்கூட்டமாக்குவேன்;  தன்  தொழுவத்துக்குள்ளே  சேர்ந்த  மந்தைக்குச்  சமானமாய்  ஜனத்திரளினாலே  இரைச்சல்  உண்டாகும்.  {Mic  2:12}

 

தடைகளை  நீக்கிப்போடுகிறவர்  அவர்களுக்கு  முன்பாக  நடந்துபோகிறார்;  அவர்கள்  தடைகளை  நீக்கி,  வாசலால்  உட்பிரவேசித்துக்  கடந்துபோவார்கள்;  அவர்கள்  ராஜா  அவர்களுக்கு  முன்பாகப்  போவார்,  கர்த்தர்  அவர்கள்  முன்னணியில்  நடந்துபோவார்.  {Mic  2:13}

 

நான்  சொன்னது:  யாக்கோபின்<Jacob>  தலைவர்களே,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்து  அதிபதிகளே,  நியாயம்  இன்னதென்று  அறிவது  உங்களுக்கு  அல்லவோ  அடுத்தது.  {Mic  3:1}

 

ஆனாலும்  நன்மையை  வெறுத்து,  தீமையை  விரும்பி,  அவர்கள்மேல்  இருக்கிற  அவர்களுடைய  தோலையும்  அவர்கள்  எலும்புகள்மேல்  இருக்கிற  அவர்களுடைய  சதையையும்  பிடுங்கி,  {Mic  3:2}

 

என்  ஜனத்தின்  சதையைத்  தின்று,  அவர்கள்மேல்  இருக்கிற  அவர்களுடைய  தோலை  உரிந்துகொண்டு,  அவர்கள்  எலும்புகளை  முறித்து,  பானையிலே  போடும்வண்ணமாகவும்  இறைச்சியைக்  கொப்பரைக்குள்ளே  போடும்வண்ணமாகவும்  அவைகளைத்  துண்டிக்கிறார்கள்.  {Mic  3:3}

 

அப்பொழுது  அவர்கள்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுவார்கள்;  ஆனாலும்  அவர்கள்  தங்கள்  கிரியைகளில்  பொல்லாதவர்களானபடியினால்,  அவர்  அவர்களுக்கு  மறுஉத்தரவு  கொடாமல்,  தமது  முகத்தை  அக்காலத்திலே  அவர்களுக்கு  மறைத்துக்கொள்ளுவார்.  {Mic  3:4}

 

தங்கள்  பற்களினால்  கடிக்கிறவர்களாயிருந்து,  சமாதானமென்று  சொல்லி,  தங்கள்  வாய்க்கு  உணவைக்  கொடாதவனுக்கு  விரோதமாகச்  சண்டைக்கு  ஆயத்தம்பண்ணி,  என்  ஜனத்தை  மோசம்போக்குகிற  தீர்க்கதரிசிகளுக்கு  விரோதமாய்க்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  {Mic  3:5}

 

தரிசனங்காணக்கூடாத  இராத்திரியும்,  குறிசொல்லக்கூடாத  அந்தகாரமும்  உங்களுக்கு  வரும்;  தீர்க்கதரிசிகளின்மேல்  சூரியன்  அஸ்தமித்து,  அவர்கள்மேல்  பகல்  காரிருளாய்ப்  போகும்.  {Mic  3:6}

 

தரிசனம்  பார்க்கிறவர்கள்  வெட்கி,  குறிசொல்லுகிறவர்கள்  நாணி,  உத்தரவுகொடுக்கிற  தேவன்  இல்லாததினால்  அவர்கள்  எல்லாரும்  தங்கள்  வாயை  மூடுவார்கள்.  {Mic  3:7}

 

நானோ,  யாக்கோபுக்கு<Jacob>  அவன்  மீறுதலையும்,  இஸ்ரவேலுக்கு<Israel>  அவன்  பாவத்தையும்  அறிவிக்கும்படி,  கர்த்தருடைய  ஆவி  அருளிய  பலத்தினாலும்,  நியாயத்தினாலும்,  பராக்கிரமத்தினாலும்  நிரப்பப்பட்டிருக்கிறேன்.  {Mic  3:8}

 

நியாயத்தை  அருவருத்து,  செம்மையானவைகளையெல்லாம்  கோணலாக்கி,  {Mic  3:9}

 

சீயோனை<Zion>  இரத்தப்பழியினாலும்,  எருசலேமை<Jerusalem>  அநியாயத்தினாலும்  கட்டுவிக்கிற  யாக்கோபு<Jacob>  வம்சத்துத்  தலைவர்களே,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்து  அதிபதிகளே,  இதைக்  கேளுங்கள்.  {Mic  3:10}

 

அதின்  தலைவர்கள்  பரிதானத்துக்கு  நியாயந்தீர்க்கிறார்கள்;  அதின்  ஆசாரியர்கள்  கூலிக்கு  உபதேசிக்கிறார்கள்;  அதின்  தீர்க்கதரிசிகள்  பணத்துக்குக்  குறிசொல்லுகிறார்கள்;  ஆகிலும்  அவர்கள்  கர்த்தரைச்  சார்ந்துகொண்டு:  கர்த்தர்  எங்கள்  நடுவில்  இல்லையோ?  தீங்கு  எங்கள்மேல்  வராது  என்கிறார்கள்.  {Mic  3:11}

 

ஆகையால்  உங்கள்நிமித்தம்  சீயோன்<Zion>  வயல்வெளியைப்போல  உழப்பட்டு,  எருசலேம்<Jerusalem>  மண்மேடுகளாய்ப்போம்,  ஆலயத்தின்  பர்வதம்  காட்டு  மேடுகளாய்ப்போம்.  {Mic  3:12}

 

ஆனாலும்,  கடைசி  நாட்களில்  கர்த்தருடைய  ஆலயமாகிய  பர்வதம்  பர்வதங்களின்  கொடுமுடியில்  ஸ்தாபிக்கப்பட்டு,  மலைகளுக்கு  மேலாய்  உயர்த்தப்பட்டிருக்கும்,  எல்லா  ஜாதிகளும்  அதினிடத்திற்கு  ஓடிவருவார்கள்.  {Mic  4:1}

 

திரளான  ஜாதிகள்  புறப்பட்டுவந்து:  நாம்  கர்த்தரின்  பர்வதத்துக்கும்,  யாக்கோபின்<Jacob>  தேவனுடைய  ஆலயத்துக்கும்  போவோம்  வாருங்கள்;  அவர்  தமது  வழிகளை  நமக்குப்  போதிப்பார்,  நாம்  அவர்  பாதைகளில்  நடப்போம்  என்பார்கள்;  ஏனெனில்  சீயோனிலிருந்து<Zion>  வேதமும்,  எருசலேமிலிருந்து<Jerusalem>  கர்த்தரின்  வசனமும்  வெளிப்படும்.  {Mic  4:2}

 

அவர்  திரளான  ஜனங்களுக்குள்  நியாயந்தீர்த்து,  தூரத்திலுள்ள  பலத்த  ஜாதிகளைக்  கடிந்துகொள்ளுவார்;  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  பட்டயங்களை  மண்வெட்டிகளாகவும்,  தங்கள்  ஈட்டிகளை  அறிவாள்களாகவும்  அடிப்பார்கள்;  ஒரு  ஜாதிக்கு  விரோதமாய்  மறுஜாதி  பட்டயம்  எடுப்பதில்லை;  இனி  அவர்கள்  யுத்தத்தைக்  கற்பதுமில்லை.  {Mic  4:3}

 

அவனவன்  தன்தன்  திராட்சச்செடியின்  நிழலிலும்,  தன்தன்  அத்திமரத்தின்  நிழலிலும்  பயப்படுத்துவார்  இல்லாமல்  உட்காருவான்;  சேனைகளுடைய  கர்த்தரின்  வாய்  இதைச்  சொல்லிற்று.  {Mic  4:4}

 

சகல  ஜனங்களும்  தங்கள்  தங்கள்  தேவனுடைய  நாமத்தைப்  பற்றிக்கொண்டு  நடப்பார்கள்;  நாங்களும்  எங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைப்  பற்றிக்கொண்டு  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  நடப்போம்.  {Mic  4:5}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அந்நாளிலே  நான்  நொண்டியானவளைச்  சேர்த்து,  தள்ளுண்டவளையும்  தீங்கு  அனுபவித்தவளையும்  கூட்டிக்கொண்டு,  {Mic  4:6}

 

நொண்டியானவளை  மீதியான  ஜனமாகவும்,  தூரமாய்த்  தள்ளுண்டுபோனவளைப்  பலத்த  ஜாதியாகவும்  வைப்பேன்;  அவர்கள்பேரில்  கர்த்தர்  சீயோன்<Zion>  பர்வதத்திலே  இதுமுதல்  என்றென்றைக்கும்  ராஜாவாயிருப்பார்.  {Mic  4:7}

 

மந்தையின்  துருக்கமே,  சீயோன்<Zion>  குமாரத்தியின்  அரணே,  முந்தின  ஆளுகை  உன்னிடத்தில்  வரும்;  ராஜரிகம்  எருசலேம்<Jerusalem>  குமாரத்தியினிடத்தில்  வரும்.  {Mic  4:8}

 

இப்போதும்  நீ  சத்தமிட்டுக்  கதறுவானேன்?  ராஜாவானவர்  உன்னிடத்தில்  இல்லையோ?  உன்  ஆலோசனைக்காரர்  அழிந்துபோனார்களோ?  பிரசவிக்கிற  ஸ்திரீக்கு  ஒத்த  வேதனை  உனக்கு  உண்டாகும்.  {Mic  4:9}

 

சீயோன்<Zion>  குமாரத்தியே,  பிரசவ  ஸ்திரீயைப்போல  அம்பாயப்பட்டு  வேதனைப்படு;  நீ  இப்போது  நகரத்திலிருந்து  புறப்பட்டு,  வெளிகளில்  தங்கி,  பாபிலோன்வரைக்கும்<Babylon>  போவாய்,  அங்கே  விடுவிக்கப்படுவாய்;  அங்கே  கர்த்தர்  உன்னை  உன்  சத்துருக்களின்  கைக்கு  நீங்கலாக்கி  மீட்பார்.  {Mic  4:10}

 

சீயோன்<Zion>  தீட்டுப்படுவாளாக,  எங்கள்  கண்  அவளைக்  காண்பதாக  என்று  சொல்லி,  அநேக  ஜாதியார்  உனக்கு  விரோதமாகக்  கூடியிருக்கிறார்கள்.  {Mic  4:11}

 

ஆனாலும்  அவர்கள்  கர்த்தருடைய  நினைவுகளை  அறியாமலும்,  அவருடைய  யோசனையை  உணராமலும்  இருக்கிறார்கள்;  அவர்  அரிக்கட்டுகளைப்போல  அவர்களைக்  களத்திலே  சேர்ப்பார்.  {Mic  4:12}

 

சீயோன்<Zion>  குமாரத்தியே,  நீ  எழுந்து  போரடி;  நான்  உன்  கொம்புகளை  இரும்பும்,  உன்  குளம்புகளை  வெண்கலமுமாக்குவேன்;  நீ  அநேக  ஜனங்களை  நொறுக்கிப்போடுவாய்;  அவர்கள்  தேடிச்  சேர்த்ததை  நீ  கர்த்தருக்கென்றும்,  அவர்களுடைய  ஆஸ்தியைப்  பூமிக்கெல்லாம்  ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும்  நியமிப்பாய்.  {Mic  4:13}

 

சேனைகளையுடைய  நகரமே,  இப்போது  தண்டுதண்டாகக்  கூடிக்கொள்;  நமக்கு  விரோதமாக  முற்றிக்கை  போடப்படும்;  இஸ்ரவேலுடைய<Israel>  நியாயாதிபதியைக்  கோலினால்  கன்னத்திலே  அடிப்பார்கள்.  {Mic  5:1}

 

எப்பிராத்தா<Ephratah>  என்னப்பட்ட  பெத்லெகேமே<Bethlehem>,  நீ  யூதேயாவிலுள்ள<Judah>  ஆயிரங்களுக்குள்ளே  சிறியதாயிருந்தும்,  இஸ்ரவேலை<Israel>  ஆளப்போகிறவர்  உன்னிடத்திலிருந்து  புறப்பட்டு  என்னிடத்தில்  வருவார்;  அவருடைய  புறப்படுதல்  அநாதிநாட்களாகிய  பூர்வத்தினுடையது.  {Mic  5:2}

 

ஆனாலும்  பிரசவிக்கிறவள்  பிரசவிக்கிறமட்டும்  அவர்களை  ஒப்புக்கொடுப்பார்;  அப்பொழுது  அவருடைய  சகோதரரில்  மீதியானவர்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரோடுங்கூடத்  திரும்புவார்கள்.  {Mic  5:3}

 

அவர்  நின்றுகொண்டு,  கர்த்தருடைய  பலத்தோடும்  தம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தின்  மகத்துவத்தோடும்  மேய்ப்பார்;  ஆகையால்  அவர்கள்  நிலைத்திருப்பார்கள்;  அவர்  இனிப்  பூமியின்  எல்லைகள்பரியந்தமும்  மகிமைப்படுவார்.  {Mic  5:4}

 

இவரே  சமாதான  காரணர்;  அசீரியன்<Assyrian>  நம்முடைய  தேசத்திலே  வரும்போதும்,  நம்முடைய  அரண்மனைகளை  மிதிக்கும்போதும்,  ஏழு  மேய்ப்பரையும்  மனுஷரில்  எட்டு  அதிபதிகளையும்  அவனுக்கு  விரோதமாக  நிறுத்துவேன்.  {Mic  5:5}

 

இவர்கள்  அசீரியா<Assyria>  தேசத்தையும்,  நிம்ரோதின்<Nimrod>  தேசத்தையும்,  அதினுடைய  வாசல்களுக்கு  உட்புறமாகப்  பட்டயத்திற்கு  இரையாக்குவார்கள்;  அசீரியன்<Assyrian>  நம்முடைய  தேசத்தில்  வரும்போதும்,  நம்முடைய  எல்லைகளை  மிதிக்கும்போதும்  அவனுக்கு  நம்மைத்  தப்புவிப்பார்.  {Mic  5:6}

 

யாக்கோபிலே<Jacob>  மீதியானவர்கள்  கர்த்தராலே  வருகிற  பனியைப்போலவும்,  மனுஷனுக்குக்  காத்திராமலும்,  மனுபுத்திரருக்குத்  தாமதியாமலும்,  பூண்டுகள்மேல்  வருகிற  மழைகளைப்போலவும்,  அநேக  ஜனங்களின்  நடுவிலே  இருப்பார்கள்.  {Mic  5:7}

 

யாக்கோபிலே<Jacob>  மீதியானவர்கள்,  சிங்கம்  காட்டுமிருகங்களுக்குள்ளே  இருக்கிறதற்குச்  சமானமாகவும்,  கடந்துபோய்  மிதித்துத்  தப்புவிப்பார்  இல்லாமல்  பீறிப்போடுகிற  பாலசிங்கம்  ஆட்டுமந்தைகளுக்குள்ளே  இருக்கிறதற்குச்  சமானமாகவும்  ஜாதிகளுக்குள்  அநேக  ஜனங்களின்  நடுவிலே  இருப்பார்கள்.  {Mic  5:8}

 

உன்னுடைய  கை  உன்  விரோதிகளின்மேல்  உயரும்;  உன்  சத்துருக்களெல்லாரும்  சங்கரிக்கப்படுவார்கள்.  {Mic  5:9}

 

அந்நாளிலே  நான்  உன்  குதிரைகளை  உன்  நடுவில்  இராதபடிக்குச்  சங்கரித்து,  உன்  இரதங்களை  அழித்து,  {Mic  5:10}

 

உன்  தேசத்துப்  பட்டணங்களைச்  சங்கரித்து,  உன்  அரண்களையெல்லாம்  நிர்மூலமாக்கி,  {Mic  5:11}

 

சூனிய  வித்தைகள்  உன்  கையில்  இராதபடிக்கு  அகற்றுவேன்;  நாள்  பார்க்கிறவர்கள்  உன்னிடத்தில்  இல்லாமற்போவார்கள்.  {Mic  5:12}

 

உன்  சுரூபங்களையும்  உன்  சிலைகளையும்  உன்  நடுவில்  இராதபடிக்கு  நிர்மூலமாக்குவேன்;  உன்  கையின்  கிரியையை  நீ  இனிப்  பணிந்துகொள்ளாய்.  {Mic  5:13}

 

நான்  உன்  விக்கிரகத்தோப்புகளை  உன்  நடுவில்  இராதபடிக்குப்  பிடுங்கி,  உன்  பட்டணங்களை  அழித்து,  {Mic  5:14}

 

செவிகொடாத  புறஜாதிகளிடத்திலே  கோபத்தோடும்  உக்கிரத்தோடும்  நீதியைச்  சரிக்கட்டுவேன்  என்றார்.  {Mic  5:15}

 

கர்த்தர்  சொல்லுகிறதைக்  கேளுங்கள்;  நீ  எழுந்து,  பர்வதங்களுக்குமுன்  உன்  வழக்கைச்  சொல்;  மலைகள்  உன்  சத்தத்தைக்  கேட்கக்கடவது.  {Mic  6:1}

 

பர்வதங்களே,  பூமியின்  உறுதியான  அஸ்திபாரங்களே,  கர்த்தருடைய  வழக்கைக்  கேளுங்கள்;  கர்த்தருக்கு  அவர்  ஜனத்தோடே  வழக்கு  இருக்கிறது;  இஸ்ரவேலோடே<Israel>  அவர்  வழக்காடுவார்.  {Mic  6:2}

 

என்  ஜனமே,  நான்  உனக்கு  என்ன  செய்தேன்?  நான்  எதினால்  உன்னை  விசனப்படுத்தினேன்?  எனக்கு  எதிரே  உத்தரவு  சொல்.  {Mic  6:3}

 

நான்  உன்னை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  வரப்பண்ணி,  அடிமைத்தன  வீட்டிலிருந்த  உன்னை  மீட்டுக்கொண்டு,  மோசே<Moses>  ஆரோன்<Aaron>  மீரியாம்<Miriam>  என்பவர்களை  உனக்கு  முன்பாக  அனுப்பினேன்.  {Mic  6:4}

 

என்  ஜனமே,  மோவாபின்<Moab>  ராஜாவாகிய  பாலாக்<Balak>  பண்ணின  யோசனை  இன்னதென்றும்,  பேயோரின்<Beor>  குமாரனான  பிலேயாம்<Balaam>  அவனுக்குப்  பிரதியுத்தரமாகச்  சொன்னது  இன்னதென்றும்,  சித்தீம்<Shittim>  தொடங்கி  கில்கால்மட்டும்<Gilgal>  நடந்தது  இன்னதென்றும்,  நீ  கர்த்தருடைய  நீதிகளை  அறிந்துகொள்ளும்படி  நினைத்துக்கொள்.  {Mic  6:5}

 

என்னத்தைக்கொண்டு  நான்  கர்த்தருடைய  சந்நிதியில்  வந்து,  உன்னதமான  தேவனுக்கு  முன்பாகப்  பணிந்துகொள்வேன்?  தகனபலிகளைக்கொண்டும்,  ஒரு  வயது  கன்றுக்குட்டிகளைக்கொண்டும்  அவர்  சந்நிதியில்  வரவேண்டுமோ?  {Mic  6:6}

 

ஆயிரங்களான  ஆட்டுக்கடாக்களின்பேரிலும்,  எண்ணெயாய்  ஓடுகிற  பதினாயிரங்களான  ஆறுகளின்பேரிலும்,  கர்த்தர்  பிரியமாயிருப்பாரோ?  என்  அக்கிரமத்தைப்  போக்க  என்  முதற்பேறானவனையும்,  என்  ஆத்துமாவின்  பாவத்தைப்  போக்க  என்  கர்ப்பக்கனியையும்  கொடுக்கவேண்டுமோ?  {Mic  6:7}

 

மனுஷனே,  நன்மை  இன்னதென்று  அவர்  உனக்கு  அறிவித்திருக்கிறார்;  நியாயஞ்செய்து,  இரக்கத்தைச்  சிநேகித்து,  உன்  தேவனுக்கு  முன்பாக  மனத்தாழ்மையாய்  நடப்பதை  அல்லாமல்  வேறே  என்னத்தைக்  கர்த்தர்  உன்னிடத்தில்  கேட்கிறார்.  {Mic  6:8}

 

கர்த்தருடைய  சத்தம்  நகரத்தை  நோக்கிக்  கூப்பிடுகிறது;  ஞானமுள்ளவன்  உம்முடைய  நாமத்தை  மதிப்பான்;  மிலாற்றிற்கும்  அதை  நேமித்தவருக்கும்  செவிகொடுங்கள்.  {Mic  6:9}

 

துன்மார்க்கனுடைய  வீட்டிலே  துன்மார்க்கத்தினால்  சம்பாதித்த  பொக்கிஷங்களும்,  அருவருக்கப்படத்தக்க  குறைந்த  மரக்காலும்  இன்னும்  இருக்கிறதல்லவோ?  {Mic  6:10}

 

கள்ளத்தராசும்  கள்ளப்  படிக்கற்களுள்ள  பையும்  இருக்கும்போது,  அவர்களைச்  சுத்தமுள்ளவர்களென்று  எண்ணுவேனோ?  {Mic  6:11}

 

அவர்களில்  ஐசுவரியமுள்ளவர்கள்  கொடுமையால்  நிறைந்திருக்கிறார்கள்;  அவர்களுக்குள்  வாசமாயிருக்கிறவர்கள்  பொய்பேசுகிறார்கள்;  அவர்கள்  வாயிலுள்ள  நாவு  கபடமுள்ளது.  {Mic  6:12}

 

ஆகையால்  நான்  உன்  பாவங்களினிமித்தம்  உன்னை  அடித்துப்  பாழாக்குகிறதினால்  உன்னைப்  பலட்சயமாக்குவேன்.  {Mic  6:13}

 

நீ  புசித்தும்  திருப்தியடையாதிருப்பாய்;  உனக்குள்ளே  சோர்வுண்டாகும்;  நீ  பதனம்  பண்ணியும்  தப்புவிப்பதில்லை;  நீ  தப்புவிப்பதையும்  பட்டயத்துக்கு  ஒப்புக்கொடுப்பேன்.  {Mic  6:14}

 

நீ  விதைத்தும்  அறுக்காமற்போவாய்;  நீ  ஒலிவப்பழங்களையும்  திராட்சப்பழங்களையும்  ஆலையாடின  போதிலும்,  எண்ணெய்  பூசிக்கொள்வதுமில்லை,  இரசம்  குடிப்பதுமில்லை.  {Mic  6:15}

 

நான்  உன்னைப்  பாழாகவும்  உன்  குடிகளை  ஈசலிட்டு  நிந்திக்கிற  நிந்தையாகவும்  வைக்கும்படி,  உம்ரியினுடைய<Omri>  கட்டளைகளும்  ஆகாப்<Ahab>  வீட்டாருடைய  எல்லாச்  செய்கைகளும்  கைக்கொள்ளப்பட்டுவருகிறது;  அவர்களுடைய  ஆலோசனைகளிலே  நடக்கிறீர்கள்;  ஆகையால்  என்  ஜனத்தின்  நிந்தையைச்  சுமப்பீர்கள்.  {Mic  6:16}

 

ஐயோ!  உஷ்ணகாலத்துக்  கனிகளைச்  சேர்த்து,  திராட்சப்பழங்களை  அறுத்தபின்பு  வருகிறவனைப்போல்  இருக்கிறேன்;  புசிக்கிறதற்கு  ஒரு  திராட்சக்குலையும்  என்  ஆத்துமா  இச்சித்த  முதல்  அறுப்பின்  கனியும்  இல்லை.  {Mic  7:1}

 

தேசத்தில்  பக்தியுள்ளவன்  அற்றுப்போனான்;  மனுஷரில்  செம்மையானவன்  இல்லை;  அவர்களெல்லாரும்  இரத்தஞ்சிந்தப்  பதிவிருக்கிறார்கள்;  அவனவன்  தன்தன்  சகோதரனை  வலையிலே  பிடிக்க  வேட்டையாடுகிறான்.  {Mic  7:2}

 

பொல்லாப்புச்  செய்ய  அவர்கள்  இரண்டு  கைகளும்  நன்றாய்க்  கூடும்;  அதிபதி  கொடு  என்கிறான்;  நியாயாதிபதி  கைக்கூலி  கேட்கிறான்;  பெரியவன்  தன்  துராசையைத்  தெரிவிக்கிறான்;  இவ்விதமாய்ப்  புரட்டுகிறார்கள்.  {Mic  7:3}

 

அவர்களில்  நல்லவன்  முட்செடிக்கொத்தவன்,  செம்மையானவன்  நெரிஞ்சிலைப்பார்க்கிலும்  கடுங்கூர்மையானவன்;  உன்  காவற்காரர்  அறிவித்த  உன்  தண்டனையின்  நாள்  வருகிறது;  இப்பொழுதே  அவர்களுக்குக்  கலக்கம்  உண்டு.  {Mic  7:4}

 

சிநேகிதனை  விசுவாசிக்கவேண்டாம்,  வழிகாட்டியை  நம்பவேண்டாம்;  உன்  மடியிலே  படுத்துக்கொள்ளுகிறவளுக்கு  முன்பாக  உன்  வாயைத்  திறவாமல்  எச்சரிக்கையாயிரு.  {Mic  7:5}

 

மகன்  தகப்பனைக்  கனவீனப்படுத்துகிறான்;  மகள்  தன்  தாய்க்கு  விரோதமாகவும்,  மருமகள்  தன்  மாமிக்கு  விரோதமாகவும்  எழும்புகிறார்கள்;  மனுஷனுடைய  சத்துருக்கள்  அவன்  வீட்டார்தானே.  {Mic  7:6}

 

நானோவென்றால்  கர்த்தரை  நோக்கிக்கொண்டு,  என்  இரட்சிப்பின்  தேவனுக்குக்  காத்திருப்பேன்;  என்  தேவன்  என்னைக்  கேட்டருளுவார்.  {Mic  7:7}

 

என்  சத்துருவே,  எனக்கு  விரோதமாய்ச்  சந்தோஷப்படாதே;  நான்  விழுந்தாலும்  எழுந்திருப்பேன்;  நான்  இருளிலே  உட்கார்ந்தால்,  கர்த்தர்  எனக்கு  வெளிச்சமாயிருப்பார்.  {Mic  7:8}

 

நான்  கர்த்தருக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தேன்;  அவர்  எனக்காக  வழக்காடி  என்  நியாயத்தை  விசாரிக்குமட்டும்  அவருடைய  கோபத்தைச்  சுமப்பேன்;  அவர்  என்னை  வெளிச்சத்திலே  கொண்டுவருவார்,  அவருடைய  நீதியைப்  பார்ப்பேன்.  {Mic  7:9}

 

உன்  தேவனாகிய  கர்த்தர்  எங்கே  என்று  என்னோடே  சொல்லுகிற  என்  சத்துருவானவள்  அதைப்  பார்க்கும்போது  வெட்கம்  அவளை  மூடும்;  என்  கண்கள்  அவளைக்  காணும்;  இனி  வீதிகளின்  சேற்றைப்போல  மிதிக்கப்படுவாள்.  {Mic  7:10}

 

உன்  மதில்களை  எடுப்பிக்கும்  நாள்  வருகிறது;  அந்நாளிலே  பிரமாணம்  வெகுதூரம்  பரவிப்போம்.  {Mic  7:11}

 

அந்நாளிலே  அசீரியாமுதல்<Assyria>  எகிப்தின்<Egypt>  பட்டணங்கள்வரைக்கும்,  எகிப்துமுதல்<Egypt>  நதிவரைக்கும்,  ஒரு  சமுத்திரமுதல்  மறு  சமுத்திரம்வரைக்கும்,  ஒரு  பர்வதமுதல்  மறு  பர்வதம்வரைக்குமுள்ள  ஜனங்கள்  உன்னிடத்திற்கு  வருவார்கள்.  {Mic  7:12}

 

ஆனாலும்  தன்  குடிகளினிமித்தமும்  அவர்கள்  கிரியைகளுடைய  பலன்களினிமித்தமும்  தேசம்  பாழாயிருக்கும்.  {Mic  7:13}

 

கர்மேலின்<Carmel>  நடுவிலே  தனித்து  வனவாசமாயிருக்கிற  உமது  சுதந்தரமான  மந்தையாகிய  உம்முடைய  ஜனத்தை  உமது  கோலினால்  மேய்த்தருளும்;  பூர்வநாட்களில்  மேய்ந்ததுபோலவே  அவர்கள்  பாசானிலும்<Bashan>  கீலேயாத்திலும்<Gilead>  மேய்வார்களாக.  {Mic  7:14}

 

நீ  எகிப்து<Egypt>  தேசத்திலிருந்து  புறப்பட்டநாளில்  நடந்ததுபோலவே  உன்னை  அதிசயங்களைக்  காணப்பண்ணுவேன்.  {Mic  7:15}

 

புறஜாதிகள்  கண்டு  தங்களுடைய  எல்லாப்  பராக்கிரமத்தையுங்குறித்து  வெட்கப்படுவார்கள்;  கையை  வாயின்மேல்  வைத்துக்கொள்வார்கள்;  அவர்கள்  காதுகள்  செவிடாய்ப்  போகும்.  {Mic  7:16}

 

பாம்பைப்போல  மண்ணை  நக்குவார்கள்;  பூமியின்  ஊர்வனவற்றைப்  போலத்  தங்கள்  மறைவிடங்களிலிருந்து  நடுநடுங்கிப்  புறப்படுவார்கள்;  நமது  தேவனாகிய  கர்த்தரிடத்திற்குத்  திகிலோடே  சேர்ந்து,  உனக்குப்  பயப்படுவார்கள்.  {Mic  7:17}

 

தமது  சுதந்தரத்தில்  மீதியானவர்களுடைய  அக்கிரமத்தைப்  பொறுத்து,  மீறுதலை  மன்னிக்கிற  தேவரீருக்கு  ஒப்பான  தேவன்  யார்?  அவர்  கிருபைசெய்ய  விரும்புகிறபடியால்  அவர்  என்றென்றைக்கும்  கோபம்  வையார்.  {Mic  7:18}

 

அவர்  திரும்ப  நம்மேல்  இரங்குவார்;  நம்முடைய  அக்கிரமங்களை  அடக்கி,  நம்முடைய  பாவங்களையெல்லாம்  சமுத்திரத்தின்  ஆழங்களில்  போட்டுவிடுவார்.  {Mic  7:19}

 

தேவரீர்  பூர்வநாட்கள்முதல்  எங்கள்  பிதாக்களுக்கு  ஆணையிட்ட  சத்தியத்தை  யாக்கோபுக்கும்<Jacob>,  கிருபையை  ஆபிரகாமுக்கும்<Abraham>  கட்டளையிடுவீராக.  {Mic  7:20}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!