Friday, January 10, 2020

ஆகாய்

ராஜாவாகிய  தரியு<Darius>  அரசாண்ட  இரண்டாம்  வருஷம்  ஆறாம்  மாதம்  முதலாந்தேதியிலே,  கர்த்தருடைய  வார்த்தை  ஆகாய்<Haggai>  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்  செயல்த்தியேலின்<Shealtiel>  குமாரனாகிய  செருபாபேல்<Zerubbabel>  என்னும்  யூதாவின்<Judah>  தலைவனுக்கும்,  யோத்சதாக்கின்<Josedech>  குமாரனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  பிரதான  ஆசாரியனுக்கும்  உண்டாகி,  அவர்  சொன்னது  என்னவென்றால்:  {Hag  1:1}

 

இந்த  ஜனங்கள்  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுகிறதற்கு  ஏற்றகாலம்  இன்னும்  வரவில்லை  என்கிறார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  1:2}

 

ஆனாலும்  ஆகாய்<Haggai>  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்க்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அவர்  சொல்லுகிறார்:  {Hag  1:3}

 

இந்த  வீடு  பாழாய்க்  கிடக்கும்போது,  நீங்கள்  மச்சுப்பாவப்பட்ட  உங்கள்  வீடுகளில்  குடியிருக்கும்படியான  காலம்  இதுவோ?  {Hag  1:4}

 

இப்போதும்  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:  உங்கள்  வழிகளைச்  சிந்தித்துப்பாருங்கள்.  {Hag  1:5}

 

நீங்கள்  திரளாய்  விதைத்தும்  கொஞ்சமாய்  அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்;  நீங்கள்  புசித்தும்  திருப்தியாகவில்லை;  குடித்தும்  பரிபூரணமடையவில்லை;  நீங்கள்  வஸ்திரம்  உடுத்தியும்  ஒருவனுக்கும்  குளிர்விடவில்லை;  கூலியைச்  சம்பாதிக்கிறவன்  பொத்தலான  பையிலே  போடுகிறவனாய்  அதைச்  சம்பாதிக்கிறான்.  {Hag  1:6}

 

உங்கள்  வழிகளைச்  சிந்தித்துப்  பாருங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  1:7}

 

நீங்கள்  மலையின்மேல்  ஏறிப்போய்,  மரங்களை  வெட்டிக்கொண்டுவந்து,  ஆலயத்தைக்  கட்டுங்கள்;  அதின்பேரில்  நான்  பிரியமாயிருப்பேன்,  அதினால்  என்  மகிமை  விளங்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  1:8}

 

அதிகமாய்  வருமென்று  நீங்கள்  எதிர்பார்த்திருந்தும்,  இதோ,  கொஞ்சம்  கிடைத்தது;  நீங்கள்  அறுத்து  வீட்டுக்குக்  கொண்டுவந்தும்,  நான்  அதை  ஊதிப்போடுகிறேன்;  எதினிமித்தமென்றால்,  என்  வீடு  பாழாய்க்கிடக்கும்போது,  நீங்கள்  எல்லாரும்  அவனவன்  தன்  தன்  வீட்டிற்கு  ஓடிப்போகிறீர்களே,  இதினிமித்தமே  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  1:9}

 

ஆதலால்  உங்கள்மேல்  இருக்கிற  வானம்  பனியைப்  பெய்யாமலும்,  பூமி  பலனைக்  கொடாமலும்  போயிற்று.  {Hag  1:10}

 

நான்  நிலத்தின்மேலும்,  மலைகளின்மேலும்,  தானியத்தின்மேலும்,  புது  திராட்சரசத்தின்மேலும்,  எண்ணெயின்மேலும்,  பூமியில்  விளைகிற  எல்லாவற்றின்மேலும்,  மனுஷரின்மேலும்,  மிருகங்களின்மேலும்,  கைப்பாடு  அனைத்தின்மேலும்  வறட்சியை  வருவித்தேன்  என்றார்.  {Hag  1:11}

 

அப்பொழுது  செயல்த்தியேலின்<Shealtiel>  குமாரனாகிய  செருபாபேலும்<Zerubbabel>,  யோத்சதாக்கின்<Josedech>  குமாரனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  பிரதான  ஆசாரியனும்,  ஜனத்தில்  மீதியான  அனைவரும்  தங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சத்தத்துக்கும்,  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  அனுப்பின  ஆகாய்<Haggai>  என்னும்  தீர்க்கதரிசியினுடைய  வார்த்தைகளுக்கும்  செவிகொடுத்தார்கள்,  ஜனங்கள்  கர்த்தருக்கு  முன்பாகப்  பயந்திருந்தார்கள்.  {Hag  1:12}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதனாகிய  ஆகாய்<Haggai>,  கர்த்தர்  தூதனுப்பிய  வார்த்தையின்படி  ஜனங்களை  நோக்கி:  நான்  உங்களோடே  இருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {Hag  1:13}

 

பின்பு  கர்த்தர்  செயல்த்தியேலின்<Shealtiel>  குமாரனாகிய  செருபாபேல்<Zerubbabel>  என்னும்  யூதாவின்<Judah>  தலைவனுடைய  ஆவியையும்,  யோத்சதாக்கின்<Josedech>  குமாரனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  பிரதான  ஆசாரியனுடைய  ஆவியையும்,  ஜனத்தில்  மீதியான  எல்லாருடைய  ஆவியையும்  எழுப்பினார்;  அவர்கள்  வந்து,  தங்கள்  தேவனாகிய  சேனைகளுடைய  கர்த்தரின்  ஆலயத்திலே  வேலைசெய்தார்கள்.  {Hag  1:14}

 

தரியு<Darius>  ராஜாவின்  இரண்டாம்  வருஷம்  ஆறாம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியிலே  இது  நடந்தது.  {Hag  1:15}

 

ஏழாம்  மாதம்  இருபத்தோராந்தேதியிலே  ஆகாய்<Haggai>  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்,  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாயிற்று;  அவர்:  {Hag  2:1}

 

நீ  செயல்த்தியேலின்<Shealtiel>  குமாரனாகிய  செருபாபேல்<Zerubbabel>  என்னும்  யூதாவின்<Judah>  தலைவனோடும்,  யோத்சதாக்கின்<Josedech>  குமாரனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  பிரதான  ஆசாரியனோடும்,  ஜனத்தில்  மீதியானவர்களோடும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  {Hag  2:2}

 

இந்த  ஆலயத்தின்  முந்தின  மகிமையைக்  கண்டவர்களில்  உங்களுக்குள்ளே  மீந்திருக்கிறவர்கள்  யார்?  இப்பொழுது  இது  உங்களுக்கு  எப்படிக்  காண்கிறது?  அதற்கு  இது  உங்கள்  பார்வையில்  ஒன்றுமில்லாததுபோல்  காண்கிறதல்லவா?  {Hag  2:3}

 

ஆனாலும்  செருபாபேலே<Zerubbabel>,  நீ  திடன்கொள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  யோத்சதாக்கின்<Josedech>  குமாரனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  பிரதான  ஆசாரியனே,  நீ  திடன்கொள்;  தேசத்தின்  எல்லா  ஜனங்களே,  நீங்கள்  திடன்கொள்ளுங்கள்,  வேலையை  நடத்துங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உங்களுடனே  இருக்கிறேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  2:4}

 

நீங்கள்  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படுகிறபோது  நான்  உங்களோடே  உடன்படிக்கைபண்ணின  வார்த்தையின்படியே,  என்  ஆவியானவரும்  உங்கள்  நடுவில்  நிலைகொண்டிருப்பார்;  பயப்படாதேயுங்கள்.  {Hag  2:5}

 

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:  கொஞ்சக்காலத்துக்குள்ளே  இன்னும்  ஒருதரம்  நான்  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  வெட்டாந்தரையையும்  அசையப்பண்ணுவேன்.  {Hag  2:6}

 

சகல  ஜாதிகளையும்  அசையப்பண்ணுவேன்,  சகல  ஜாதிகளாலும்  விரும்பப்பட்டவர்  வருவார்;  இந்த  ஆலயத்தை  மகிமையினால்  நிறையப்பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  2:7}

 

வெள்ளியும்  என்னுடையது,  பொன்னும்  என்னுடையது  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  2:8}

 

முந்தின  ஆலயத்தின்  மகிமையைப்பார்க்கிலும்,  இந்தப்  பிந்தின  ஆலயத்தின்  மகிமை  பெரிதாயிருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  இவ்விடத்திலே  சமாதானத்தைக்  கட்டளையிடுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Hag  2:9}

 

தரியுவின்<Darius>  இரண்டாம்  வருஷம்  ஒன்பதாம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியிலே,  ஆகாய்<Haggai>  என்னும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்க்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாயிற்று;  அவர்:  {Hag  2:10}

 

ஒருவன்  தன்  வஸ்திரத்தின்  தொங்கலிலே  பரிசுத்த  மாம்சத்தைக்  கொண்டுபோகையில்  தன்  வஸ்திரத்தின்  தொங்கல்  அப்பத்தையாகிலும்,  சாதத்தையாகிலும்,  திராட்சரசத்தையாகிலும்,  எண்ணெயையாகிலும்,  மற்றெந்த  போஜனபதார்த்தத்தையாகிலும்  தொட்டால்  அது  பரிசுத்தமாகுமோ  என்று  நீ  ஆசாரியரிடத்தில்  வேத  நியாயத்தைப்பற்றிக்  கேள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  {Hag  2:11}

 

அதற்கு  ஆசாரியர்கள்  பிரதியுத்தரமாக:  பரிசுத்தமாகாது  என்றார்கள்.  {Hag  2:12}

 

பிணத்தால்  தீட்டுப்பட்டவன்  அவைகளில்  எதையாகிலும்  தொட்டால்,  அது  தீட்டுப்படுமோ  என்று  ஆகாய்<Haggai>  பின்னும்  கேட்டான்;  அதற்கு  ஆசாரியர்கள்  பிரதியுத்தரமாக:  தீட்டுப்படும்  என்றார்கள்.  {Hag  2:13}

 

அப்பொழுது  ஆகாய்<Haggai>:  அப்படியே  இந்த  ஜனங்களும்  இந்த  ஜாதியாரும்  என்  சமுகத்தில்  இருக்கிறார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அவர்களுடைய  கைகளின்  எல்லாக்  கிரியைகளும்  அப்படியே  இருக்கிறது;  அவர்கள்  அங்கே  கொண்டுவந்து  படைக்கிறதும்  தீட்டுப்பட்டிருக்கிறது.  {Hag  2:14}

 

இப்போதும்  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டும்படி  ஒரு  கல்லின்மேல்  ஒரு  கல்  வைக்கப்பட்டது  முதல்  நடந்ததை  உங்கள்  மனதிலே  சிந்தித்துப்பாருங்கள்.  {Hag  2:15}

 

அந்த  நாட்கள்  முதல்  ஒருவன்  இருபது  மரக்காலாகக்  கண்ட  அம்பாரத்தினிடத்தில்  வந்தபோது,  பத்து  மரக்கால்மாத்திரம்  இருந்தது;  ஒருவன்  ஆலையின்  தொட்டியில்  ஐம்பது  குடம்  மொள்ள  ஆலையினிடத்திலே  வந்தபோது  இருபது  குடம்மாத்திரம்  இருந்தது.  {Hag  2:16}

 

கருக்காயினாலும்  விஷப்பனியினாலும்  கல்மழையினாலும்  உங்களை  உங்கள்  கைகளின்  வேலையிலெல்லாம்  அடித்தேன்;  ஆனாலும்  நீங்கள்  என்னிடத்தில்  மனதைத்  திருப்பாமல்  போனீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Hag  2:17}

 

இப்போதும்  இதற்கு  முந்தினகாலத்தில்  நடந்ததை  உங்கள்  மனதிலே  சிந்தித்துப்பாருங்கள்;  ஒன்பதாம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியாகிய  இந்நாள்முதல்  கர்த்தருடைய  ஆலயத்தின்  அஸ்திபாரம்  போடப்பட்ட  அந்நாள்வரைக்கும்  சென்றகாலத்தில்  நடந்ததை  உங்கள்  மனதிலே  சிந்தித்துப்பாருங்கள்.  {Hag  2:18}

 

களஞ்சியத்தில்  இன்னும்  விதைத்தானியம்  உண்டோ?  திராட்சச்செடியும்  அத்திமரமும்  மாதளஞ்செடியும்  ஒலிவமரமும்  கனிகொடுக்கவில்லையே;  நான்  இன்றுமுதல்  உங்களை  ஆசீர்வதிப்பேன்  என்று  சொல்லுகிறார்  என்றான்.  {Hag  2:19}

 

இருபத்துநாலாந்தேதியாகிய  அந்நாளிலே  கர்த்தருடைய  வார்த்தை  இரண்டாம்  விசை  ஆகாய்<Haggai>  என்பவனுக்கு  உண்டாகி,  அவர்:  {Hag  2:20}

 

நீ  யூதாவின்<Judah>  தலைவனாகிய  செருபாபேலோடே<Zerubbabel>  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  நான்  வானத்தையும்  பூமியையும்  அசையப்பண்ணி,  {Hag  2:21}

 

ராஜ்யங்களின்  சிங்காசனத்தைக்  கவிழ்த்து,  ஜாதிகளுடைய  ராஜ்யங்களின்  பெலத்தை  அழித்து,  இரதத்தையும்  அதில்  ஏறியிருக்கிறவர்களையும்  கவிழ்த்துப்போடுவேன்;  குதிரைகளோடே  அவைகளின்மேல்  ஏறியிருப்பவர்களும்  அவரவர்  தங்கள்  தங்கள்  சகோதரனின்  பட்டயத்தினாலே  விழுவார்கள்.  {Hag  2:22}

 

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:  செயல்த்தியேலின்<Shealtiel>  குமாரனாகிய  செருபாபேல்<Zerubbabel>  என்னும்  என்  ஊழியக்காரனே,  உன்னை  நான்  அந்நாளிலே  சேர்த்துக்கொண்டு,  உன்னை  முத்திரை  மோதிரமாக  வைப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  உன்னைத்  தெரிந்துகொண்டேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Hag  2:23}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!