Saturday, January 11, 2020

செப்பனியா

ஆமோனின்<Amon>  புத்திரனாகிய  யோசியா<Josiah>  என்னும்  யூதா<Judah>  ராஜாவின்  நாட்களிலே,  எஸ்கியாவின்<Hizkiah>  குமாரனாகிய  ஆமரியாவுக்குக்<Amariah>  குமாரனான  கெதலியா<Gedaliah>  என்பவனுடைய  மகனாகிய  கூஷின்<Cushi>  குமாரன்  செப்பனியாவுக்கு<Zephaniah>  உண்டான  கர்த்தருடைய  வசனம்.  {Zeph  1:1}

 

தேசத்தில்  உண்டானதை  எல்லாம்  முற்றிலும்  வாரிக்கொள்ளுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zeph  1:2}

 

மனுஷரையும்  மிருகஜீவன்களையும்  வாரிக்கொள்ளுவேன்;  நான்  ஆகாயத்துப்  பறவைகளையும்,  சமுத்திரத்து  மச்சங்களையும்,  இடறுகிறதற்கேதுவானவைகளையும்  துன்மார்க்கரோடேகூட  வாரிக்கொண்டு,  தேசத்தில்  உண்டான  மனுஷரைச்  சங்காரம்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zeph  1:3}

 

நான்  யூதாவின்மேலும்<Judah>,  எருசலேமிலுள்ள<Jerusalem>  எல்லாக்  குடிகளின்மேலும்  என்  கையை  நீட்டி,  பாகாலில்<Baal>  மீதியாயிருக்கிறதையும்,  ஆசாரியர்களோடேகூடக்  கெம்மரீம்<Chemarims>  என்பவர்களின்  பேரையும்,  {Zeph  1:4}

 

வீடுகளின்மேல்  வானசேனையைப்  பணிகிறவர்களையும்,  கர்த்தர்பேரில்  ஆணையிட்டு,  மல்காமின்பேரிலும்<Malcham>  ஆணையிட்டுப்  பணிகிறவர்களையும்,  {Zeph  1:5}

 

கர்த்தரை  விட்டுப்  பின்வாங்குகிறவர்களையும்,  கர்த்தரைத்  தேடாமலும்,  அவரைக்குறித்து  விசாரியாமலுமிருக்கிறவர்களையும்,  இவ்விடத்தில்  இராதபடிக்குச்  சங்காரம்பண்ணுவேன்.  {Zeph  1:6}

 

கர்த்தராகிய  ஆண்டவருக்கு  முன்பாக  மௌனமாயிருங்கள்;  கர்த்தருடைய  நாள்  சமீபித்திருக்கிறது;  கர்த்தர்  ஒரு  யாகத்தை  ஆயத்தம்பண்ணி,  அதற்கு  விருந்தாளிகளையும்  அழைத்திருக்கிறார்.  {Zeph  1:7}

 

கர்த்தருடைய  யாகத்தின்  நாளிலே  நான்  அதிபதிகளையும்  ராஜகுமாரரையும்  மறுதேசத்து  வஸ்திரம்  தரிக்கிற  யாவரையும்  தண்டிப்பேன்.  {Zeph  1:8}

 

வாசற்படியைத்  தாண்டி,  கொடுமையினாலும்  வஞ்சகத்தினாலும்  தங்கள்  எஜமான்களின்  வீடுகளை  நிரப்புகிற  யாவரையும்  அந்நாளிலே  தண்டிப்பேன்.  {Zeph  1:9}

 

அந்நாளிலே  மீன்வாசலிலிருந்து  கூக்குரலின்  சத்தமும்,  நகரத்தின்  இரண்டாம்  பாகத்திலிருந்து  அலறுதலும்,  மேடுகளிலிருந்து  மகா  சங்காரத்தின்  இரைச்சலும்  உண்டாகுமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zeph  1:10}

 

மக்தேஷின்<Maktesh>  குடிகளே  அலறுங்கள்;  வர்த்தகரெல்லாரும்  சங்காரமானார்கள்;  காசுக்காரர்  யாவரும்  வெட்டுண்டுபோனார்கள்.  {Zeph  1:11}

 

அக்காலத்திலே  நான்  எருசலேமை<Jerusalem>  விளக்குக்கொளுத்திச்  சோதித்து,  வண்டல்போலக்  குழம்பியிருக்கிறவர்களும்,  கர்த்தர்  நன்மைசெய்வதும்  இல்லை  தீமைசெய்வதும்  இல்லையென்று  தங்கள்  இருதயத்தில்  சொல்லுகிறவர்களுமான  மனுஷரைத்  தண்டிப்பேன்.  {Zeph  1:12}

 

அவர்களுடைய  ஆஸ்தி  கொள்ளையாகும்;  அவர்களுடைய  வீடுகள்  பாழாய்ப்போகும்;  அவர்கள்  வீடுகளைக்  கட்டியும்,  அவைகளில்  குடியிருக்கமாட்டார்கள்;  அவர்கள்  திராட்சத்தோட்டங்களை  நாட்டியும்,  அவைகளின்  பழரசத்தைக்  குடிப்பதில்லை.  {Zeph  1:13}

 

கர்த்தருடைய  பெரியநாள்  சமீபித்திருக்கிறது;  அது  கிட்டிச்சேர்ந்து  மிகவும்  தீவிரித்துவருகிறது;  கர்த்தருடைய  நாளென்கிற  சத்தத்துக்குப்  பராக்கிரமசாலி  முதலாய்  அங்கே  மனங்கசந்து  அலறுவான்.  {Zeph  1:14}

 

அந்த  நாள்  உக்கிரத்தின்  நாள்;  அது  இக்கட்டும்  இடுக்கமுமான  நாள்;  அது  அழிவும்  பாழ்க்கடிப்புமான  நாள்;  அது  இருளும்  அந்தகாரமுமான  நாள்;  அது  மப்பும்  மந்தாரமுமான  நாள்.  {Zeph  1:15}

 

அது  அரணிப்பான  நகரங்களுக்கும்,  உயரமான  கொத்தளங்களுக்கும்  விரோதமாக  எக்காளம்  ஊதுகிறதும்  ஆர்ப்பரிக்கிறதுமான  நாள்.  {Zeph  1:16}

 

மனுஷர்  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தபடியால்,  அவர்கள்  குருடரைப்போல்  நடக்கும்படி  நான்  அவர்களை  வருத்தப்படுத்துவேன்;  அவர்கள்  இரத்தம்  புழுதியைப்போல்  சொரியப்படும்;  அவர்கள்  மாம்சம்  எருவைப்போல்  கிடக்கும்.  {Zeph  1:17}

 

கர்த்தருடைய  உக்கிரத்தின்  நாளிலே  அவர்கள்  வெள்ளியும்  அவர்கள்  பொன்னும்  அவர்களைத்  தப்புவிக்கமாட்டாது;  அவருடைய  எரிச்சலின்  அக்கினியினால்  தேசமெல்லாம்  அழியும்;  தேசத்தின்  குடிகளையெல்லாம்  சடிதியாய்  நிர்மூலம்பண்ணுவார்.  {Zeph  1:18}

 

விரும்பப்படாத  ஜாதியே,  கட்டளை  பிறக்குமுன்னும்,  பதரைப்போல  நாள்  பறந்துபோகுமுன்னும்  கர்த்தருடைய  உக்கிரகோபம்  உங்கள்மேல்  இறங்குமுன்னும்,  கர்த்தருடைய  கோபத்தின்  நாள்  உங்கள்மேல்  வருமுன்னும்,  {Zeph  2:1}

 

நீங்கள்  உங்களை  உய்த்து  ஆராய்ந்து  சோதியுங்கள்.  {Zeph  2:2}

 

தேசத்திலுள்ள  எல்லாச்  சிறுமையானவர்களே,  கர்த்தருடைய  நியாயத்தை  நடப்பிக்கிறவர்களே,  அவரைத்  தேடுங்கள்;  நீதியைத்  தேடுங்கள்,  மனத்தாழ்மையைத்  தேடுங்கள்;  அப்பொழுது  ஒருவேளை  கர்த்தருடைய  கோபத்தின்நாளிலே  மறைக்கப்படுவீர்கள்.  {Zeph  2:3}

 

காத்சா<Gaza>  குடியற்று,  அஸ்கலோன்<Ashkelon>  பாழாகும்;  அஸ்தோத்தைப்<Ashdod>  பட்டப்பகலிலே  பறக்கடிப்பார்கள்;  எக்ரோன்<Ekron>  வேரோடே  பிடுங்கப்படும்.  {Zeph  2:4}

 

சமுத்திரக்கரை  குடிகளாகிய  கிரேத்தியருக்கு<Cherethites>  ஐயோ!  பெலிஸ்தரின்<Philistines>  தேசமாகிய  கானானே<Canaan>,  கர்த்தருடைய  வார்த்தை  உனக்கு  விரோதமாயிருக்கிறது;  இனி  உன்னில்  குடியில்லாதபடிக்கு  உன்னை  அழிப்பேன்.  {Zeph  2:5}

 

சமுத்திரக்கரை  தேசம்  மேய்ப்பர்  தங்கும்  குடில்களும்  ஆட்டுத்தோழங்களுமாகும்.  {Zeph  2:6}

 

அந்தத்  தேசம்  யூதா<Judah>  வம்சத்தாரில்  மீதியானவர்களின்  வசமாகும்;  அவர்கள்  அவ்விடங்களில்  மந்தை  மேய்ப்பார்கள்;  அஸ்கலோனின்<Ashkelon>  வீடுகளிலே  சாயங்காலத்திலே  படுத்துக்கொள்வார்கள்;  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  அவர்களை  விசாரித்து,  அவர்கள்  சிறையிருப்பைத்  திருப்புவார்.  {Zeph  2:7}

 

மோவாப்<Moab>  செய்த  நிந்தனையையும்,  அம்மோன்<Ammon>  புத்திரர்  என்  ஜனத்தை  நிந்தித்து,  அவர்கள்  எல்லையைக்  கடந்து  பெருமைபாராட்டிச்  சொன்ன  தூஷணங்களையும்  கேட்டேன்.  {Zeph  2:8}

 

ஆகையால்  மோவாப்<Moab>  சோதோமைப்போலும்<Sodom>,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தேசம்  கொமோராவைப்போலுமாகி<Gomorrah>,  காஞ்சொறி  படரும்  இடமும்,  உப்புப்பள்ளமும்,  நித்திய  பாழுமாயிருக்கும்;  என்  ஜனத்தில்  மீந்தவர்கள்  அவர்களைக்  கொள்ளையிட்டு,  என்  ஜாதியில்  மீதியானவர்கள்  அவர்களைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்  என்பதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்.  {Zeph  2:9}

 

அவர்கள்  சேனைகளுடைய  கர்த்தரின்  ஜனத்துக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டி  அவர்களை  நிந்தித்தபடியினால்,  இது  அவர்கள்  அகங்காரத்துக்குப்  பதிலாக  அவர்களுக்குக்  கிடைக்கும்.  {Zeph  2:10}

 

கர்த்தர்  அவர்கள்மேல்  கெடியாயிருப்பார்;  பூமியிலுள்ள  தேவர்களையெல்லாம்  மெலிந்துபோகப்பண்ணுவார்;  அப்பொழுது  தீவுகளிலுள்ள  சகல  புறஜாதிகளும்  அவரவர்  தங்கள்  தங்கள்  ஸ்தானத்திலிருந்து  அவரைப்  பணிந்துகொள்வார்கள்.  {Zeph  2:11}

 

எத்தியோப்பியராகிய<Ethiopians>  நீங்களும்  என்  பட்டயத்தினால்  கொலைசெய்யப்படுவீர்கள்.  {Zeph  2:12}

 

அவர்  தமது  கையை  வடதேசத்துக்கு  விரோதமாய்  நீட்டி,  அசீரியாவை<Assyria>  அழித்து,  நினிவேயைப்<Nineveh>  பாழும்  வனாந்தரத்துக்கொத்த  வறட்சியுமான  ஸ்தலமாக்குவார்.  {Zeph  2:13}

 

அதின்  நடுவில்  மந்தைகளும்  ஜாதிஜாதியான  சகல  மிருகங்களும்  படுத்துக்கொள்ளும்;  அதினுடைய  சிகரங்களின்மேல்  நாரையும்  கோட்டானும்  இராத்தங்கும்;  பலகணிகளில்  கூவுகிற  சத்தம்  பிறக்கும்;  வாசற்படிகளில்  பாழ்க்கடிப்பு  இருக்கும்;  கேதுருமரங்களின்  மச்சைத்  திறப்பாக்கிப்போடுவார்.  {Zeph  2:14}

 

நான்தான்,  என்னைத்தவிர  வேறொருவரும்  இல்லை  என்று  தன்  இருதயத்தில்  சொல்லி,  நிர்விசாரமாய்  வாழ்ந்து  களிகூர்ந்திருந்த  நகரம்  இதுவே;  இது  பாழும்  மிருகஜீவன்களின்  தாபரமுமாய்ப்போய்விட்டதே!  அதின்  வழியாய்ப்போகிறவன்  எவனும்  ஈசல்  போட்டுத்  தன்  கையைக்  கொட்டுவான்.  {Zeph  2:15}

 

இடுக்கண்  செய்து,  ஊத்தையும்  அழுக்குமாயிருக்கிற  நகரத்துக்கு  ஐயோ!  {Zeph  3:1}

 

அது  சத்தத்துக்குச்  செவிகொடுக்கவில்லை;  அது  கடிந்துகொள்ளுதலை  ஏற்றுக்கொள்ளவில்லை;  அது  கர்த்தரை  நம்பவில்லை;  அது  தன்  தேவனிடத்தில்  சேரவில்லை.  {Zeph  3:2}

 

அதற்குள்ளே  இருக்கிற  அதின்  அதிபதிகள்  கெர்ச்சிக்கிற  சிங்கங்கள்;  அதின்  நியாயாதிபதிகள்  சாயங்காலத்தில்  புறப்படுகிறதும்  விடியற்காலமட்டும்  ஒரு  எலும்பையும்  மீதியாக  வைக்காததுமான  ஓநாய்கள்.  {Zeph  3:3}

 

அதின்  தீர்க்கதரிசிகள்  வீண்பெருமையும்  வஞ்சகமுமுள்ளவர்கள்;  அதின்  ஆசாரியர்கள்  பரிசுத்த  ஸ்தலத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கி,  வேதத்துக்கு  அநியாயஞ்செய்தார்கள்.  {Zeph  3:4}

 

அதற்குள்  இருக்கிற  கர்த்தர்  நீதியுள்ளவர்;  அவர்  அநியாயஞ்செய்வதில்லை;  அவர்  குறைவில்லாமல்  காலைதோறும்  தம்முடைய  நியாயத்தை  விளங்கப்பண்ணுகிறார்;  அநியாயக்காரனோ  வெட்கம்  அறியான்.  {Zeph  3:5}

 

ஜாதிகளைச்  சங்கரித்தேன்;  அவர்கள்  துருகங்கள்  பாழாயின;  அவர்களுடைய  வீதிகளை  ஒருவரும்  கடந்துபோகாதபடிக்குப்  பாழாக்கினேன்;  அவர்களுடைய  பட்டணங்கள்  மனுஷர்  இல்லாதபடிக்கும்  குடியில்லாதபடிக்கும்  அவாந்தரையாயின.  {Zeph  3:6}

 

உன்  வாசஸ்தலம்  நிர்மூலமாகாதபடிக்கு  நீ  எனக்குப்  பயந்து,  கடிந்துகொள்ளுதலை  ஏற்றுக்கொள்  என்றேன்;  நான்  அவர்களை  எப்படித்  தண்டித்தாலும்,  அவர்கள்  அதிகாலையில்  எழுந்து  தங்கள்  கிரியைகளையெல்லாம்  கேடாக்கினார்கள்.  {Zeph  3:7}

 

ஆகையால்  நான்  கொள்ளையாட  எழும்பும்  நாள்மட்டும்  எனக்குக்  காத்திருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  என்  சினமாகிய  உக்கிர  கோபத்தையெல்லாம்  அவர்கள்மேல்  சொரியும்படி  ஜாதிகளைச்  சேர்க்கவும்,  ராஜ்யங்களைக்  கூட்டவும்  நான்  தீர்மானம்பண்ணினேன்;  பூமியெல்லாம்  என்  எரிச்சலின்  அக்கினியினால்  அழியும்.  {Zeph  3:8}

 

அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டு,  ஒருமனப்பட்டு  அவருக்கு  ஆராதனை  செய்யும்படிக்கு,  நான்  அவர்கள்  பாஷையைச்  சுத்தமான  பாஷையாக  மாறப்பண்ணுவேன்.  {Zeph  3:9}

 

எத்தியோப்பியாவின்<Ethiopia>  நதிகளுக்கு  அக்கரையிலிருந்து  என்னிடத்தில்  விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய  சிதறடிக்கப்பட்டவர்களின்  குமாரத்தியானவள்  எனக்குக்  காணிக்கை  கொண்டுவருவாள்.  {Zeph  3:10}

 

எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணி,  நீ  செய்த  உன்  எல்லாக்  கிரியைகளினிமித்தமும்  அந்நாளிலே  வெட்கப்படாதிருப்பாய்;  அப்பொழுது  நான்  உன்  பெருமையைக்குறித்துக்  களிகூர்ந்தவர்களை  உன்  நடுவிலிருந்து  விலக்கிவிடுவேன்;  நீ  இனி  என்  பரிசுத்த  பர்வதத்தில்  அகங்காரங்கொள்ளமாட்டாய்.  {Zeph  3:11}

 

உன்  நடுவில்  சிறுமையும்  எளிமையுமான  ஜனத்தை  மீதியாக  வைப்பேன்;  அவர்கள்  கர்த்தருடைய  நாமத்தின்மேல்  நம்பிக்கையாயிருப்பார்கள்.  {Zeph  3:12}

 

இஸ்ரவேலில்<Israel>  மீதியானவர்கள்  அநியாயஞ்செய்வதில்லை;  அவர்கள்  பொய்  பேசுவதுமில்லை;  வஞ்சகநாவு  அவர்கள்  வாயில்  கண்டுபிடிக்கப்படுவதுமில்லை;  அவர்கள்  தங்களைப்  பயப்படுத்துவாரில்லாமல்  புசித்துப்  படுத்துக்கொள்வார்கள்.  {Zeph  3:13}

 

சீயோன்<Zion>  குமாரத்தியே,  கெம்பீரித்துப்பாடு;  இஸ்ரவேலரே<Israel>,  ஆர்ப்பரியுங்கள்;  எருசலேம்<Jerusalem>  குமாரத்தியே,  நீ  முழு  இருதயத்தோடும்  மகிழ்ந்து  களிகூரு.  {Zeph  3:14}

 

கர்த்தர்  உன்  ஆக்கினைகளை  அகற்றி,  உன்  சத்துருக்களை  விலக்கினார்;  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  கர்த்தர்  உன்  நடுவிலே  இருக்கிறார்;  இனித்  தீங்கைக்  காணாதிருப்பாய்.  {Zeph  3:15}

 

அந்நாளிலே  எருசலேமைப்<Jerusalem>  பார்த்து,  பயப்படாதே  என்றும்,  சீயோனைப்<Zion>  பார்த்து,  உன்  கைகளைத்  தளரவிடாதே  என்றும்  சொல்லப்படும்.  {Zeph  3:16}

 

உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்  நடுவில்  இருக்கிறார்;  அவர்  வல்லமையுள்ளவர்,  அவர்  இரட்சிப்பார்;  அவர்  உன்பேரில்  சந்தோஷமாய்  மகிழ்ந்து,  தம்முடைய  அன்பினிமித்தம்  அமர்ந்திருப்பார்;  அவர்  உன்பேரில்  கெம்பீரமாய்க்  களிகூருவார்.  {Zeph  3:17}

 

உன்  சபையின்  மனுஷராயிருந்து,  பண்டிகை  ஆசரிப்பில்லாமையால்  உண்டான  நிந்தையினிமித்தம்  சஞ்சலப்பட்டவர்களை  நான்  ஏகமாய்க்  கூட்டிக்கொள்ளுவேன்.  {Zeph  3:18}

 

இதோ,  அக்காலத்திலே  உன்னைச்  சிறுமைப்படுத்தின  யாவரையும்  தண்டிப்பேன்;  நொண்டியானவனை  இரட்சித்து,  தள்ளுண்டவனைச்  சேர்த்துக்கொள்ளுவேன்;  அவர்கள்  வெட்கம்  அநுபவித்த  சகல  தேசங்களிலும்  அவர்களுக்குப்  புகழ்ச்சியும்  கீர்த்தியும்  உண்டாகச்  செய்வேன்.  {Zeph  3:19}

 

அக்காலத்திலே  உங்களைக்  கூட்டிக்கொண்டுவருவேன்;  அக்காலத்திலே  உங்களைச்  சேர்த்துக்கொள்ளுவேன்;  உங்கள்  கண்காண  நான்  உங்கள்  சிறையிருப்பைத்  திருப்பும்போது,  பூமியிலுள்ள  சகல  ஜனங்களுக்குள்ளும்  நான்  உங்களைக்  கீர்த்தியும்  புகழ்ச்சியுமாக  வைப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zeph  3:20}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!