Monday, January 27, 2020

1 இராஜாக்கள்

தாவீதுராஜா<David>  வயதுசென்ற  விர்த்தாப்பியனானபோது,  வஸ்திரங்களினால்  அவனை  மூடினாலும்,  அவனுக்கு  அனல்  உண்டாகவில்லை.  {1Kgs  1:1}

 

அப்பொழுது  அவனுடைய  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  ராஜசமுகத்தில்  நின்று,  அவருக்குப்  பணிவிடை  செய்யவும்,  ராஜாவாகிய  எங்கள்  ஆண்டவனுக்கு  அனல்  உண்டாகும்படி  உம்முடைய  மடியிலே  படுத்துக்கொள்ளவும்  கன்னியாகிய  ஒரு  சிறு  பெண்ணை  ராஜாவாகிய  எங்கள்  ஆண்டவனுக்குத்  தேடுவோம்  என்று  சொல்லி,  {1Kgs  1:2}

 

இஸ்ரவேலின்<Israel>  எல்லையிலெல்லாம்  அழகான  ஒரு  பெண்ணைத்  தேடி,  சூனேம்<Shunammite>  ஊராளாகிய  அபிஷாகைக்<Abishag>  கண்டு,  அவளை  ராஜாவினிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  {1Kgs  1:3}

 

அந்தப்  பெண்  வெகு  அழகாயிருந்தாள்;  அவள்  ராஜாவுக்கு  உதவியாயிருந்து  அவனுக்குப்  பணிவிடைசெய்தாள்;  ஆனாலும்  ராஜா  அவளை  அறியவில்லை.  {1Kgs  1:4}

 

ஆகீத்திற்குப்<Haggith>  பிறந்த  அதோனியா<Adonijah>  என்பவன்:  நான்  ராஜா  ஆவேன்  என்று  சொல்லி,  தன்னைத்தான்  உயர்த்தி,  தனக்கு  இரதங்களையும்  குதிரைவீரரையும்,  தனக்குமுன்  ஓடும்  ஐம்பது  காலாட்களையும்  சம்பாதித்தான்.  {1Kgs  1:5}

 

அவனுடைய  தகப்பன்:  நீ  இப்படிச்  செய்வானேன்  என்று  அவனை  ஒருக்காலும்  கடிந்துகொள்ளவில்லை;  அவன்  மிகவும்  அழகுள்ளவனாயிருந்தான்;  அப்சலோமுக்குப்பின்<Absalom>  அவனுடைய  தாய்  அவனைப்  பெற்றாள்.  {1Kgs  1:6}

 

அவன்  செருயாவின்<Zeruiah>  குமாரனாகிய  யோவாபோடும்<Joab>,  ஆசாரியனாகிய  அபியத்தாரோடும்<Abiathar>  ஆலோசனைபண்ணிவந்தான்;  அவர்கள்  அவனிடத்திலிருந்து  அவனுக்கு  உதவிசெய்துவந்தார்கள்.  {1Kgs  1:7}

 

ஆசாரியனாகிய  சாதோக்கும்<Zadok>,  யோய்தாவின்<Jehoiada>  குமாரனாகிய  பெனாயாவும்<Benaiah>,  தீர்க்கதரிசியாகிய  நாத்தானும்<Nathan>,  சீமேயியும்<Shimei>,  ரேயியும்<Rei>,  தாவீதோடிருக்கிற<David>  பராக்கிரமசாலிகளும்,  அதோனியாவுக்கு<Adonijah>  உடந்தையாயிருக்கவில்லை.  {1Kgs  1:8}

 

அதோனியா<Adonijah>  என்ரோகேலுக்குச்<Enrogel>  சமீபமான  சோகெலெத்<Zoheleth>  என்னும்  கல்லின்  அருகே  ஆடுமாடுகளையும்  கொழுத்த  ஜந்துக்களையும்  அடித்து,  ராஜாவின்  குமாரராகிய  தன்  சகோதரரெல்லாரையும்,  ராஜாவின்  ஊழியக்காரரான  யூதாவின்<Judah>  மனுஷர்  அனைவரையும்  அழைத்தான்.  {1Kgs  1:9}

 

தீர்க்கதரிசியாகிய  நாத்தானையும்<Nathan>,  பெனாயாவையும்<Benaiah>,  பராக்கிரமசாலிகளையும்,  தன்  சகோதரனாகிய  சாலொமோனையும்<Solomon>  அழைக்கவில்லை.  {1Kgs  1:10}

 

அப்பொழுது  நாத்தான்<Nathan>  சாலொமோனின்<Solomon>  தாயாகிய  பத்சேபாளை<Bathsheba>  நோக்கி:  நம்முடைய  ஆண்டவனாகிய  தாவீதுக்குத்<David>  தெரியாமல்,  ஆகீத்தின்<Haggith>  குமாரனாகிய  அதோனியா<Adonijah>  ராஜாவாகிற  செய்தியை  நீ  கேட்கவில்லையா?  {1Kgs  1:11}

 

இப்போதும்  உன்  பிராணனையும்,  உன்  குமாரனாகிய  சாலொமோனின்<Solomon>  பிராணனையும்  தப்புவிக்கும்படிக்கு  நீ  வா,  உனக்கு  நான்  ஆலோசனை  சொல்லுவேன்.  {1Kgs  1:12}

 

நீ  தாவீதுராஜாவினிடத்தில்<David>  போய்:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  எனக்குப்பின்  உன்  குமாரனாகிய  சாலொமோன்<Solomon>  ராஜாவாகி,  அவனே  என்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருப்பான்  என்று  நீர்  உமது  அடியாளுக்கு  ஆணையிடவில்லையா?  அப்படியிருக்க,  அதோனியா<Adonijah>  ராஜாவாகிறது  என்ன?  என்று  அவரிடத்தில்  கேள்.  {1Kgs  1:13}

 

நீ  அங்கே  ராஜாவோடே  பேசிக்கொண்டிருக்கையில்,  நானும்  உனக்குப்  பின்வந்து,  உன்  வார்த்தைகளை  உறுதிப்படுத்துவேன்  என்றான்.  {1Kgs  1:14}

 

அப்படியே  பத்சேபாள்<Bathsheba>  பள்ளியறைக்குள்  ராஜாவிடத்தில்  போனாள்;  ராஜா  மிகவும்  வயதுசென்றவனாயிருந்தான்;  சூனேம்<Shunammite>  ஊராளாகிய  அபிஷாக்<Abishag>  ராஜாவுக்குப்  பணிவிடை  செய்துகொண்டிருந்தாள்.  {1Kgs  1:15}

 

பத்சேபாள்<Bathsheba>  குனிந்து,  ராஜாவை  வணங்கினாள்;  அப்பொழுது  ராஜா:  உனக்கு  என்னவேண்டும்  என்று  கேட்டான்.  {1Kgs  1:16}

 

அதற்கு  அவள்:  என்  ஆண்டவனே,  எனக்குப்பின்  உன்  குமாரனாகிய  சாலொமோன்<Solomon>  ராஜாவாகி,  அவனே  என்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருப்பான்  என்று  நீர்  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரைக்கொண்டு,  உமது  அடியாளுக்கு  ஆணையிட்டீரே.  {1Kgs  1:17}

 

இப்பொழுது,  இதோ,  அதோனியா<Adonijah>  ராஜாவாகிறான்;  என்  ஆண்டவனாகிய  ராஜாவே,  நீர்  அதை  அறியவில்லை.  {1Kgs  1:18}

 

அவன்  மாடுகளையும்  கொழுத்த  ஜந்துக்களையும்  ஆடுகளையும்  திரளாக  அடித்து,  ராஜாவின்  குமாரர்  அனைவரையும்  ஆசாரியனாகிய  அபியத்தாரையும்<Abiathar>,  யோவாப்<Joab>  என்னும்  படைத்தலைவனையும்  அழைத்தான்;  ஆனாலும்  உமது  அடியானாகிய  சாலொமோனை<Solomon>  அழைக்கவில்லை.  {1Kgs  1:19}

 

ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்குப்பிறகு  அவருடைய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருப்பவன்  இன்னான்  என்று  தங்களுக்கு  அறிவிக்கவேண்டும்  என்று  இஸ்ரவேலர்<Israel>  அனைவரின்  கண்களும்  உம்மை  நோக்கிக்கொண்டிருக்கிறது.  {1Kgs  1:20}

 

அறிவியாமற்போனால்  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தம்முடைய  பிதாக்களோடே  படுத்துக்கொண்டபின்பு,  நானும்  என்  குமாரனாகிய  சாலொமோனும்<Solomon>  குற்றவாளிகளாய்  எண்ணப்படுவோம்  என்றாள்.  {1Kgs  1:21}

 

அவள்  ராஜாவோடே  பேசிக்கொண்டிருக்கையில்,  தீர்க்கதரிசியாகிய  நாத்தான்<Nathan>  வந்தான்.  {1Kgs  1:22}

 

தீர்க்கதரிசியாகிய  நாத்தான்<Nathan>  வந்திருக்கிறார்  என்று  ராஜாவுக்குத்  தெரிவித்தார்கள்;  அவன்  ராஜாவுக்கு  முன்பாகப்  பிரவேசித்து  முகங்குப்புற  விழுந்து  ராஜாவை  வணங்கினான்.  {1Kgs  1:23}

 

நாத்தான்<Nathan>:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  அதோனியா<Adonijah>  எனக்குப்பின்  ராஜாவாகி,  அவனே  என்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருப்பான்  என்று  நீர்  சொன்னதுண்டோ?  {1Kgs  1:24}

 

அவன்  இன்றையதினம்  போய்,  மாடுகளையும்  கொழுத்த  ஜந்துக்களையும்  ஆடுகளையும்  திரளாக  அடித்து,  ராஜாவின்  குமாரர்  அனைவரையும்  இராணுவத்தலைவரையும்,  ஆசாரியனாகிய  அபியத்தாரையும்<Abiathar>  அழைத்தான்;  அவர்கள்  அவனுக்கு  முன்பாகப்  புசித்துக்  குடித்து,  ராஜாவாகிய  அதோனியா<Adonijah>  வாழ்க  என்று  சொல்லுகிறார்கள்.  {1Kgs  1:25}

 

ஆனாலும்  உமது  அடியானாகிய  என்னையும்,  ஆசாரியனாகிய  சாதோக்கையும்<Zadok>,  யோய்தாவின்<Jehoiada>  குமாரனாகிய  பெனாயாவையும்<Benaiah>,  உமது  அடியானாகிய  சாலொமோனையும்<Solomon>  அவன்  அழைக்கவில்லை.  {1Kgs  1:26}

 

ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்குப்பின்  தமது  சிங்காசனத்தில்  வீற்றிருப்பவன்  இவன்தான்  என்று  நீர்  உமது  அடியானுக்குத்  தெரிவிக்காதிருக்கையில்,  இந்தக்  காரியம்  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  கட்டளையால்  நடந்திருக்குமோ  என்றான்.  {1Kgs  1:27}

 

அப்பொழுது  தாவீதுராஜா<David>  பிரதியுத்தரமாக:  பத்சேபாளை<Bathsheba>  என்னிடத்தில்  வரவழையுங்கள்  என்றான்;  அவள்  ராஜசமுகத்தில்  பிரவேசித்து  ராஜாவுக்கு  முன்னே  நின்றாள்.  {1Kgs  1:28}

 

அப்பொழுது  ராஜா:  உன்  குமாரனாகிய  சாலொமோன்<Solomon>  எனக்குப்பின்  அரசாண்டு,  அவனே  என்  ஸ்தானத்தில்  என்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருப்பான்  என்று  நான்  உனக்கு  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்மேல்  ஆணையிட்டபடியே,  இன்றைக்குச்  செய்து  தீர்ப்பேன்  என்பதை,  {1Kgs  1:29}

 

என்  ஆத்துமாவை  எல்லா  இக்கட்டுக்கும்  நீங்கலாக்கி  மீட்ட  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  ஆணையிட்டான்.  {1Kgs  1:30}

 

அப்பொழுது  பத்சேபாள்<Bathsheba>  தரைமட்டும்  குனிந்து  ராஜாவை  வணங்கி,  என்  ஆண்டவனாகிய  தாவீதுராஜா<David>  என்றைக்கும்  வாழ்க  என்றாள்.  {1Kgs  1:31}

 

பின்பு  தாவீதுராஜா<David>,  ஆசாரியனாகிய  சாதோக்கையும்<Zadok>  தீர்க்கதரிசியாகிய  நாத்தானையும்<Nathan>  யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயாவையும்<Benaiah>  என்னிடத்தில்  வரவழையுங்கள்  என்றான்.  {1Kgs  1:32}

 

அவர்கள்  ராஜாவுக்கு  முன்பாகப்  பிரவேசித்தபோது,  ராஜா  அவர்களை  நோக்கி:  நீங்கள்  உங்கள்  ஆண்டவனுடைய  சேவகரைக்  கூட்டிக்கொண்டு,  என்  குமாரனாகிய  சாலொமோனை<Solomon>  என்  கோவேறுகழுதையின்மேல்  ஏற்றி,  அவனைக்  கீகோனுக்கு<Gihon>  அழைத்துக்கொண்டு  போங்கள்.  {1Kgs  1:33}

 

அங்கே  ஆசாரியனாகிய  சாதோக்கும்<Zadok>  தீர்க்கதரிசியாகிய  நாத்தானும்<Nathan>  அவனை  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணக்கடவர்கள்;  பின்பு  எக்காளம்  ஊதி,  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  வாழ்க  என்று  வாழ்த்துங்கள்.  {1Kgs  1:34}

 

அதின்பின்பு  அவன்  நகர்வலம்  வந்து,  என்  சிங்காசனத்தில்  வீற்றிருக்கும்படி,  அவனைக்  கூட்டிக்கொண்டு  வாருங்கள்;  அவனே  என்  ஸ்தானத்தில்  ராஜாவாயிருப்பான்;  அவன்  இஸ்ரவேலின்மேலும்<Israel>  யூதாவின்மேலும்<Judah>  தலைவனாயிருக்கும்படி  அவனை  ஏற்படுத்தினேன்  என்றான்.  {1Kgs  1:35}

 

அப்பொழுது  யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயா<Benaiah>  ராஜாவுக்குப்  பிரதியுத்தரமாக:  ஆமென்<Amen>,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  தேவனாகிய  கர்த்தரும்  இப்படியே  சொல்வாராக.  {1Kgs  1:36}

 

கர்த்தர்  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடே  எப்படி  இருந்தாரோ,  அப்படியே  அவர்  சாலொமோனோடும்<Solomon>  இருந்து,  தாவீதுராஜாவாகிய<David>  என்  ஆண்டவனுடைய  சிங்காசனத்தைப்  பார்க்கிலும்  அவருடைய  சிங்காசனத்தைப்  பெரிதாக்குவாராக  என்றான்.  {1Kgs  1:37}

 

அப்படியே  ஆசாரியனாகிய  சாதோக்கும்<Zadok>,  தீர்க்கதரிசியாகிய  நாத்தானும்<Nathan>,  யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயாவும்<Benaiah>,  கிரேத்தியரும்<Cherethites>  பிலேத்தியரும்<Pelethites>  போய்,  சாலொமோனைத்<Solomon>  தாவீதுராஜாவினுடைய<David>  கோவேறுகழுதையின்மேல்  ஏற்றி,  அவனைக்  கீகோனுக்கு<Gihon>  நடத்திக்கொண்டுபோனார்கள்.  {1Kgs  1:38}

 

ஆசாரியனாகிய  சாதோக்கு<Zadok>  தைலக்கொம்பைக்  கூடாரத்திலிருந்து  எடுத்துக்கொண்டுபோய்,  சாலொமோனை<Solomon>  அபிஷேகம்பண்ணினான்;  அப்பொழுது  எக்காளம்  ஊதி,  ஜனங்களெல்லாரும்  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  வாழ்க  என்று  வாழ்த்தினார்கள்.  {1Kgs  1:39}

 

பிற்பாடு  ஜனங்களெல்லாரும்  அவன்  பிறகாலே  போனார்கள்;  ஜனங்கள்  நாகசுரங்களை  ஊதி,  பூமி  அவர்கள்  சத்தத்தினால்  அதிரத்தக்கதாக  மகா  பூரிப்பாய்ச்  சந்தோஷித்தார்கள்.  {1Kgs  1:40}

 

அதோனியாவும்<Adonijah>  அவனோடிருந்த  எல்லா  விருந்தாளிகளும்  போஜனம்பண்ணி  முடிந்தபோது  அதைக்  கேட்டார்கள்;  யோவாப்<Joab>  எக்காளசத்தத்தைக்  கேட்டபோது,  நகரத்தில்  உண்டாயிருக்கிற  ஆரவாரம்  என்ன  என்று  விசாரித்தான்.  {1Kgs  1:41}

 

அவன்  பேசிக்கொண்டிருக்கையில்,  ஆசாரியனாகிய  அபியத்தாரின்<Abiathar>  குமாரன்  யோனத்தான்<Jonathan>  வந்தான்;  அப்பொழுது  அதோனியா<Adonijah>,  உள்ளே  வா,  நீ  கெட்டிக்காரன்,  நீ  நற்செய்தி  கொண்டுவருகிறவன்  என்றான்.  {1Kgs  1:42}

 

யோனத்தான்<Jonathan>  அதோனியாவுக்குப்<Adonijah>  பிரதியுத்தரமாக:  ஏது,  தாவீதுராஜாவாகிய<David>  நம்முடைய  ஆண்டவன்  சாலொமோனை<Solomon>  ராஜாவாக்கினாரே.  {1Kgs  1:43}

 

ராஜா  ஆசாரியனாகிய  சாதோக்கையும்<Zadok>,  தீர்க்கதரிசியாகிய  நாத்தானையும்<Nathan>,  யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயாவையும்<Benaiah>,  கிரேத்தியரையும்<Cherethites>  பிலேத்தியரையும்<Pelethites>  அவனோடே  அனுப்பினார்;  அவர்கள்  அவனை  ராஜாவுடைய  கோவேறுகழுதையின்மேல்  ஏற்றினார்கள்.  {1Kgs  1:44}

 

ஆசாரியனாகிய  சாதோக்கும்<Zadok>,  தீர்க்கதரிசியாகிய  நாத்தானும்<Nathan>,  அவனைக்  கீகோனிலே<Gihon>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்;  நகரமெல்லாம்  முழங்கத்தக்கதாக  அங்கேயிருந்து  பூரிப்போடே  புறப்பட்டுப்போனார்கள்;  நீங்கள்  கேட்ட  இரைச்சல்  அதுதான்.  {1Kgs  1:45}

 

அல்லாமலும்  சாலொமோன்<Solomon>  ராஜாங்கத்துக்குரிய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறான்.  {1Kgs  1:46}

 

ராஜாவின்  ஊழியக்காரரும்  தாவீது<David>  ராஜாவாகிய  நம்முடைய  ஆண்டவனை  வாழ்த்துதல்  செய்யவந்து:  தேவன்  சாலொமோனின்<Solomon>  நாமத்தை  உம்முடைய  நாமத்தைப்பார்க்கிலும்  பிரபலப்படுத்தி,  அவருடைய  சிங்காசனத்தை  உம்முடைய  சிங்காசனத்தைப்  பார்க்கிலும்  பெரிதாக்குவாராக  என்றார்கள்;  ராஜா  தம்முடைய  கட்டிலின்மேல்  குனிந்து  பணிந்துகொண்டார்.  {1Kgs  1:47}

 

பின்னும்  ராஜா:  என்னுடைய  கண்கள்  காண  இன்றையதினம்  என்  சிங்காசனத்தின்மேல்  ஒருவனை  வீற்றிருக்கச்செய்த  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  என்று  சொன்னார்  என்றான்.  {1Kgs  1:48}

 

அப்பொழுது  அதோனியாவின்<Adonijah>  விருந்தாளிகளெல்லாரும்  அதிர்ந்து  எழுந்திருந்து,  அவரவர்  தங்கள்  வழியே  போய்விட்டார்கள்.  {1Kgs  1:49}

 

அதோனியா<Adonijah>,  சாலொமோனுக்குப்<Solomon>  பயந்ததினால்  எழுந்துபோய்,  பலிபீடத்தின்  கொம்புகளைப்  பிடித்துக்கொண்டான்.  {1Kgs  1:50}

 

இதோ,  அதோனியா<Adonijah>  ராஜாவாகிய  சாலொமோனுக்குப்<Solomon>  பயப்படுகிறான்  என்றும்,  இதோ,  அவன்  பலிபீடத்தின்  கொம்புகளைப்  பிடித்துக்கொண்டு,  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  தமது  அடியானைப்  பட்டயத்தாலே  கொன்றுபோடுவதில்லை  என்று  இன்று  எனக்கு  ஆணையிடுவாராக  என்கிறான்  என்றும்,  சாலொமோனுக்கு<Solomon>  அறிவிக்கப்பட்டது.  {1Kgs  1:51}

 

அப்பொழுது  சாலொமோன்<Solomon>:  அவன்  யோக்கியன்  என்று  விளங்க  நடந்துகொண்டால்  அவன்  தலைமயிரில்  ஒன்றும்  தரையிலே  விழப்போகிறதில்லை;  அவனிடத்தில்  பொல்லாப்புக்  காணப்படுமேயாகில்,  அவன்  சாகவேண்டும்  என்றான்.  {1Kgs  1:52}

 

அவனைப்  பலிபீடத்திலிருந்து  கொண்டுவர,  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  ஆட்களை  அனுப்பினான்;  அவன்  வந்து,  ராஜாவாகிய  சாலொமோனை<Solomon>  வணங்கினான்;  சாலொமோன்<Solomon>  அவனைப்  பார்த்து:  உன்  வீட்டிற்குப்  போ  என்றான்.  {1Kgs  1:53}

 

தாவீது<David>  மரணமடையும்  காலம்  சமீபித்தபோது,  அவன்  தன்  குமாரனாகிய  சாலொமோனுக்குக்<Solomon>  கட்டளையிட்டுச்  சொன்னது:  {1Kgs  2:1}

 

நான்  பூலோகத்தார்  யாவரும்  போகிற  வழியே  போகிறேன்;  நீ  திடன்கொண்டு  புருஷனாயிரு.  {1Kgs  2:2}

 

நீ  என்ன  செய்தாலும்,  நீ  எங்கே  போனாலும்,  எல்லாவற்றிலும்  புத்திமானாயிருக்கிறதற்கும்,  கர்த்தர்  என்னைக்குறித்து:  உன்  பிள்ளைகள்  தங்கள்  முழு  இருதயத்தோடும்  தங்கள்  முழு  ஆத்துமாவோடும்  எனக்கு  முன்பாக  உண்மையாய்  நடக்கும்படிக்குத்  தங்கள்  வழியைக்  காத்துக்கொண்டால்,  இஸ்ரவேலின்<Israel>  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கத்தக்க  புருஷன்  உனக்கு  இல்லாமற்போவதில்லை  என்று  சொன்ன  தம்முடைய  வார்த்தையைத்  திடப்படுத்துகிறதற்கும்,  {1Kgs  2:3}

 

மோசேயின்<Moses>  நியாயப்பிரமாணத்தில்  எழுதியிருக்கிறபடி,  நீ  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  கட்டளைகளையும்,  கற்பனைகளையும்,  நியாயங்களையும்,  சாட்சிகளையும்  கைக்கொள்ள,  அவர்  வழிகளில்  நடக்கும்படிக்கு  அவருடைய  காவலைக்  காப்பாயாக.  {1Kgs  2:4}

 

செருயாவின்<Zeruiah>  குமாரனாகிய  யோவாப்<Joab>,  இஸ்ரவேலின்<Israel>  இரண்டு  சேனாபதிகளாகிய  நேரின்<Ner>  குமாரன்  அப்னேருக்கும்<Abner>,  ஏத்தேரின்<Jether>  குமாரன்  அமாசாவுக்கும்<Amasa>  செய்த  காரியத்தினால்  எனக்குச்  செய்த  குற்றத்தை  நீ  அறிந்திருக்கிறாயே;  அவன்  அவர்களைக்  கொன்று,  சமாதானகாலத்திலே  யுத்தகாலத்து  இரத்தத்தைச்  சிந்தி,  யுத்தகாலத்து  இரத்தத்தைத்  தன்  அரையிலுள்ள  கச்சையிலும்  தன்  கால்களில்  இருந்த  பாதரட்சையிலும்  வடியவிட்டானே.  {1Kgs  2:5}

 

ஆகையால்  உன்  யுக்தியின்படியே  நீ  செய்து,  அவனுடைய  நரைமயிர்  சமாதானமாய்ப்  பாதாளத்தில்  இறங்கவொட்டாதிரு.  {1Kgs  2:6}

 

கீலேயாத்தியனான<Gileadite>  பர்சிலாயின்<Barzillai>  குமாரருக்குத்  தயைசெய்வாயாக;  அவர்கள்  உன்  பந்தியிலே  சாப்பிடுகிறவர்களுடன்  இருப்பார்களாக;  உன்  சகோதரனாகிய  அப்சலோமுக்கு<Absalom>  முன்பாக  நான்  ஓடிப்போகையில்,  அவர்கள்  என்னை  ஆதரித்தார்கள்.  {1Kgs  2:7}

 

மேலும்  பகூரிம்<Bahurim>  ஊரானான  பென்யமீனனாகிய<Benjamite>  கேராவின்<Gera>  மகன்  சீமேயி<Shimei>  உன்னிடத்தில்  இருக்கிறான்;  நான்  மக்னாயீமுக்குப்<Mahanaim>  போகிற  நாளிலே,  அவன்  என்னைக்  கொடிய  தூஷணமாய்த்  தூஷித்தான்;  ஆனாலும்  அவன்  யோர்தானிலே<Jordan>  எனக்கு  எதிர்கொண்டுவந்தபடியினால்:  நான்  உன்னைப்  பட்டயத்தாலே  கொன்றுபோடுவதில்லை  என்று  கர்த்தர்மேல்  அவனுக்கு  ஆணையிட்டுக்கொடுத்தேன்.  {1Kgs  2:8}

 

ஆகிலும்  நீ  அவனைக்  குற்றமற்றவன்  என்று  எண்ணாதே;  நீ  புத்திமான்;  அவனுடைய  நரைமயிரை  இரத்தத்துடன்  பாதாளத்தில்  இறங்கப்பண்ண,  நீ  அவனுக்குச்  செய்யவேண்டியதை  அறிவாய்  என்றான்.  {1Kgs  2:9}

 

பின்பு  தாவீது<David>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  தாவீதின்<David>  நகரத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்.  {1Kgs  2:10}

 

தாவீது<David>  இஸ்ரவேலை<Israel>  அரசாண்ட  நாட்கள்  நாற்பது  வருஷம்;  அவன்  எப்ரோனில்<Hebron>  ஏழு  வருஷமும்,  எருசலேமில்<Jerusalem>  முப்பத்துமூன்று  வருஷமும்  அரசாண்டான்.  {1Kgs  2:11}

 

சாலொமோன்<Solomon>  தன்  தகப்பனாகிய  தாவீதுடைய<David>  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்தான்;  அவன்  ராஜ்யபாரம்  மிகவும்  ஸ்திரப்பட்டது.  {1Kgs  2:12}

 

ஆகீத்தின்<Haggith>  குமாரனாகிய  அதோனியா<Adonijah>  சாலொமோனின்<Solomon>  தாயாகிய  பத்சேபாளிடத்தில்<Bathsheba>  வந்தான்.  நீ  சமாதானமாய்  வருகிறாயா  என்று  அவள்  கேட்டதற்கு:  சமாதானமாய்த்தான்  வருகிறேன்  என்றான்.  {1Kgs  2:13}

 

பின்பு  அவன்:  உம்மோடே  நான்  பேசவேண்டிய  ஒரு  காரியம்  இருக்கிறது  என்றான்.  அதற்கு  அவள்:  சொல்  என்றாள்.  {1Kgs  2:14}

 

அப்பொழுது  அவன்:  ராஜ்யம்  என்னுடையதாயிருந்தது  என்றும்,  நான்  அரசாளுகிறதற்கு  இஸ்ரவேலரெல்லாரும்<Israel>  என்மேல்  நோக்கமாய்  இருந்தார்கள்  என்றும்  நீர்  அறிவீர்;  ஆனாலும்  ராஜ்யபாரம்  என்னைவிட்டுத்  தாண்டி,  என்  சகோதரனுக்கு  ஆயிற்று;  கர்த்தரால்  அது  அவருக்குக்  கிடைத்தது.  {1Kgs  2:15}

 

இப்பொழுது  நான்  உம்மிடத்தில்  ஒரு  மன்றாட்டைக்  கேட்கிறேன்;  அதை  எனக்கு  மறுக்கவேண்டாம்  என்றான்.  அவள்:  சொல்  என்றாள்.  {1Kgs  2:16}

 

அப்பொழுது  அவன்:  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  உம்முடைய  சொல்லை  மறுப்பதில்லை;  சூனேம்<Shunammite>  ஊராளாகிய  அபிஷாகை<Abishag>  எனக்கு  அவர்  விவாகம்பண்ணிக்கொடுக்க,  அவரோடே  பேசும்படி  வேண்டுகிறேன்  என்றான்.  {1Kgs  2:17}

 

அதற்குப்  பத்சேபாள்<Bathsheba>:  நல்லது,  நான்  உனக்காக  ராஜாவிடத்தில்  பேசுவேன்  என்றாள்.  {1Kgs  2:18}

 

பத்சேபாள்<Bathsheba>  அதோனியாவுக்காக<Adonijah>  ராஜாவாகிய  சாலொமோனிடத்தில்<Solomon>  பேசும்படி  போனாள்;  அப்பொழுது  ராஜா  எழுந்திருந்து,  அவளுக்கு  எதிர்கொண்டுவந்து  அவளை  வணங்கி,  தன்  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்து,  ராஜாவின்  தாயார்  தன்  வலதுபுறமாக  உட்கார,  அவளுக்கு  ஒரு  ஆசனத்தை  வைத்தான்.  {1Kgs  2:19}

 

அப்பொழுது  அவள்:  நான்  உம்மை  ஒரு  சிறிய  மன்றாட்டைக்  கேட்க  விரும்புகிறேன்;  எனக்கு  அதை  மறுக்கவேண்டாம்  என்றாள்.  அதற்கு  ராஜா:  என்  தாயாரே,  கேளும்;  நான்  உமக்கு  மறுப்பதில்லை  என்றான்.  {1Kgs  2:20}

 

அப்பொழுது  அவள்:  சூனேம்<Shunammite>  ஊராளாகிய  அபிஷாகை<Abishag>  உம்முடைய  சகோதரனாகிய  அதோனியாவுக்கு<Adonijah>  விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும்  என்றாள்.  {1Kgs  2:21}

 

ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  தன்  தாயாருக்குப்  பிரதியுத்தரமாக:  நீர்  சூனேம்<Shunammite>  ஊராளாகிய  அபிஷாகை<Abishag>  அதோனியாவுக்குக்<Adonijah>  கேட்பானேன்?  அப்படியானால்  ராஜ்யபாரத்தையும்  அவனுக்குக்  கேளும்;  அவன்  எனக்கு  மூத்த  சகோதரன்;  அவனுக்கும்  ஆசாரியனாகிய  அபியத்தாருக்கும்<Abiathar>  செருயாவின்<Zeruiah>  குமாரன்  யோவாபுக்குமே<Joab>  அதைக்  கேளும்  என்றான்.  {1Kgs  2:22}

 

பின்பு  சாலொமோன்<Solomon>  ராஜா:  அதோனியா<Adonijah>  இந்த  வார்த்தையைத்  தன்  பிராணனுக்குச்  சேதமாகச்  சொல்லாதிருந்தால்,  தேவன்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்  என்று  கர்த்தர்மேல்  ஆணையிட்டு,  {1Kgs  2:23}

 

இப்போதும்  இன்றைக்கு  அதோனியா<Adonijah>  கொலையுண்பான்  என்று  என்னைத்  திடப்படுத்தினவரும்,  என்னை  என்  தகப்பனாகிய  தாவீதின்<David>  சிங்காசனத்தில்  வீற்றிருக்கப்பண்ணி,  தாம்  சொன்னபடி  எனக்கு  வீட்டைக்  கட்டுவித்தவருமாகிய  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  {1Kgs  2:24}

 

ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயாவுக்குக்<Benaiah>  கட்டளைகொடுத்து  அவனை  அனுப்பினான்;  இவன்  அவன்மேல்  விழுந்து  அவனைக்  கொன்றுபோட்டான்.  {1Kgs  2:25}

 

ராஜா:  ஆசாரியனாகிய  அபியத்தாரை<Abiathar>  நோக்கி:  நீ  உன்  நிலங்கள்  இருக்கிற  ஆனதோத்திற்குப்<Anathoth>  போய்விடு;  நீ  மரணத்திற்குப்  பாத்திரவானாயிருந்தும்,  நீ  என்  தகப்பனாகிய  தாவீதுக்கு<David>  முன்பாகக்  கர்த்தராகிய  ஆண்டவருடைய  பெட்டியைச்  சுமந்தபடியினாலும்,  என்  தகப்பன்  அநுபவித்த  உபத்திரவத்தையெல்லாம்  நீ  கூட  அநுபவித்தபடியினாலும்,  இன்றையதினம்  நான்  உன்னைக்  கொலைசெய்யமாட்டேன்  என்றான்.  {1Kgs  2:26}

 

அப்படியே  கர்த்தர்  சீலோவிலே<Shiloh>  ஏலியின்<Eli>  வீட்டாரைக்குறித்துச்  சொன்ன  வார்த்தையை  நிறைவேற்றும்படியாக,  சாலொமோன்<Solomon>  அபியத்தாரைக்<Abiathar>  கர்த்தருடைய  ஆசாரியனாயிராதபடிக்குத்  தள்ளிப்போட்டான்.  {1Kgs  2:27}

 

நடந்த  இந்தச்  செய்தி  யோவாபுக்கு<Joab>  வந்தபோது,  அவன்  கர்த்தருடைய  கூடாரத்திற்கு  ஓடிப்போய்,  பலிபீடத்தின்  கொம்புகளைப்  பிடித்துக்கொண்டான்;  யோவாப்<Joab>  அப்சலோமின்<Absalom>  பட்சம்  சாயாதவனாயிருந்தும்,  அதோனியாவின்<Adonijah>  பட்சம்  சாய்ந்திருந்தான்.  {1Kgs  2:28}

 

யோவாப்<Joab>  கர்த்தரின்  கூடாரத்திற்கு  ஓடிப்போனான்  என்றும்,  இதோ,  பலிபீடத்தண்டையில்  நிற்கிறான்  என்றும்,  ராஜாவாகிய  சாலொமோனுக்கு<Solomon>  அறிவிக்கப்பட்டபோது,  சாலொமோன்<Solomon>  யோய்தாவின்<Jehoiada>  குமாரனாகிய  பெனாயாவை<Benaiah>  அனுப்பி,  நீ  போய்  அவன்மேல்  விழு  என்றான்.  {1Kgs  2:29}

 

பெனாயா<Benaiah>  கர்த்தரின்  கூடாரத்திற்குப்  போய்,  அவனைப்  பார்த்து:  வெளியே  வா  என்று  ராஜா  சொல்லுகிறார்  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  வரமாட்டேன்;  இங்கேயே  சாவேன்  என்றான்;  ஆகையால்  பெனாயா<Benaiah>  ராஜாவினிடத்தில்  போய்,  யோவாப்<Joab>  இன்னபடி  சொல்லி,  இன்னபடி  எனக்கு  மறுஉத்தரவு  கொடுத்தான்  என்று  மறுசெய்தி  சொன்னான்.  {1Kgs  2:30}

 

அப்பொழுது  ராஜா  அவனை  நோக்கி:  அவன்  சொன்னபடியே  நீ  செய்து,  அவனைக்  கொன்று,  அடக்கம்பண்ணி,  இவ்விதமாய்  யோவாப்<Joab>  முகாந்தரமில்லாமல்  சிந்தின  இரத்தத்தை  என்னைவிட்டும்  என்  பிதாவின்  வீட்டைவிட்டும்  விலக்கிப்போடு.  {1Kgs  2:31}

 

அவன்  தன்னைப்பார்க்கிலும்  நீதியும்  நற்குணமுமுள்ள  இரண்டுபேராகிய  நேரின்<Ner>  குமாரன்  அப்னேர்<Abner>  என்னும்  இஸ்ரவேலின்<Israel>  படைத்தலைவன்மேலும்,  ஏதேரின்<Jether>  குமாரன்  அமாசா<Amasa>  என்னும்  யூதாவின்<Judah>  படைத்தலைவன்மேலும்  விழுந்து,  என்  தகப்பனாகிய  தாவீதுக்குத்<David>  தெரியாமல்  அவர்களைப்  பட்டயத்தால்  கொன்ற  அவனுடைய  இரத்தப்பழியைக்  கர்த்தர்  அவனுடைய  தலையின்மேல்  திரும்பப்பண்ணுவாராக.  {1Kgs  2:32}

 

இப்படியே  அவர்களுடைய  இரத்தப்பழி  என்றும்  யோவாபுடைய<Joab>  தலையின்  மேலும்,  அவன்  சந்ததியாரின்  தலையின்  மேலும்  திரும்பவும்,  தாவீதுக்கும்<David>  அவர்  சந்ததியாருக்கும்  அவர்  வீட்டாருக்கும்  அவர்  சிங்காசனத்திற்கும்  என்றென்றைக்கும்  கர்த்தராலே  சமாதானம்  உண்டாயிருக்கவும்  கடவது  என்றான்.  {1Kgs  2:33}

 

அப்படியே  யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயா<Benaiah>  போய்,  அவன்மேல்  விழுந்து  அவனைக்  கொன்றுபோட்டான்;  அவன்  வனாந்தரத்திலிருக்கிற  தன்னுடைய  வீட்டிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  {1Kgs  2:34}

 

அவனுக்குப்  பதிலாக  ராஜா  யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயாவை<Benaiah>  இராணுவத்தின்மேலும்,  ஆசாரியனாகிய  சாதோக்கை<Zadok>  அபியத்தாரின்<Abiathar>  ஸ்தானத்திலும்  வைத்தான்.  {1Kgs  2:35}

 

பின்பு  ராஜா  சீமேயியை<Shimei>  அழைப்பித்து,  அவனை  நோக்கி:  நீ  எருசலேமிலே<Jerusalem>  உனக்கு  ஒரு  வீட்டைக்  கட்டி,  அங்கேயிருந்து  எங்கேயாவது  வெளியே  போகாமல்,  அங்கேதானே  குடியிரு.  {1Kgs  2:36}

 

நீ  வெளியே  போய்க்  கீதரோன்<Kidron>  ஆற்றைக்  கடக்கும்  நாளில்,  நீ  சாகவே  சாவாய்;  அப்பொழுது  உன்  இரத்தப்பழி  உன்  தலையின்மேல்  இருக்கும்  என்பதை  நீ  நிச்சயமாய்  அறிந்துகொள்  என்றான்.  {1Kgs  2:37}

 

சீமேயி<Shimei>  ராஜாவைப்  பார்த்து:  அது  நல்ல  வார்த்தை;  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  சொன்னபடியே,  உமது  அடியானாகிய  நான்  செய்வேன்  என்று  சொல்லி,  சீமேயி<Shimei>  அநேகநாள்  எருசலேமிலே<Jerusalem>  குடியிருந்தான்.  {1Kgs  2:38}

 

மூன்று  வருஷம்  சென்றபோது,  சீமேயியின்<Shimei>  வேலைக்காரர்  இரண்டுபேர்  மாக்காவின்<Maachah>  குமாரனாகிய  ஆகீஸ்<Achish>  என்னும்  காத்தின்<Gath>  ராஜாவினிடத்துக்கு  ஓடிப்போனார்கள்;  உன்  வேலைக்காரர்  காத்<Gath>  ஊரில்  இருக்கிறார்கள்  என்று  சீமேயிக்கு<Shimei>  அறிவித்தார்கள்.  {1Kgs  2:39}

 

அப்பொழுது  சீமேயி<Shimei>  எழுந்து,  தன்  கழுதையின்மேல்  சேணம்வைத்து,  தன்  வேலைக்காரரைத்  தேட,  காத்<Gath>  ஊரிலிருக்கிற  ஆகீசிடத்துக்குப்<Achish>  புறப்பட்டுப்போனான்;  இப்படிச்  சீமேயி<Shimei>  போய்,  தன்  வேலைக்காரரைக்  காத்<Gath>  ஊரிலிருந்து  கொண்டுவந்தான்.  {1Kgs  2:40}

 

சீமேயி<Shimei>  எருசலேமிலிருந்து<Jerusalem>  காத்<Gath>  ஊருக்குப்  போய்,  திரும்பிவந்தான்  என்று  சாலொமோனுக்கு<Solomon>  அறிவிக்கப்பட்டபோது,  {1Kgs  2:41}

 

ராஜா  சீமேயியை<Shimei>  அழைப்பித்து:  நீ  வெளியே  புறப்பட்டு  எங்கேயாவது  போகிறநாளிலே  சாகவே  சாவாய்  என்பதை  நீ  நிச்சயமாய்  அறிந்துகொள்  என்று  நான்  உன்னைக்  கர்த்தர்மேல்  ஆணையிடச்  செய்து,  உனக்குத்  திடச்சாட்சியாகச்  சொல்லியிருக்க,  அதற்கு  நீ:  நான்  கேட்ட  வார்த்தை  நல்லதென்று  சொல்லவில்லையா?  {1Kgs  2:42}

 

நீ  கர்த்தரின்  ஆணையையும்,  நான்  உனக்குக்  கற்பித்த  கட்டளையையும்  கைக்கொள்ளாதே  போனதென்ன?  என்று  சொல்லி,  {1Kgs  2:43}

 

பின்னும்  ராஜா  சீமேயியைப்<Shimei>  பார்த்து:  நீ  என்  தகப்பனாகிய  தாவீதுக்குச்<David>  செய்ததும்  உன்  மனதுக்குத்  தெரிந்திருக்கிறதுமான  எல்லாப்  பொல்லாப்பையும்  அறிந்திருக்கிறாய்;  ஆகையால்  கர்த்தர்  உன்  பொல்லாப்பை  உன்  தலையின்மேல்  திரும்பப்பண்ணுவார்.  {1Kgs  2:44}

 

ராஜாவாகிய  சாலொமோனோ<Solomon>  ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்;  தாவீதின்<David>  சிங்காசனம்  என்றைக்கும்  கர்த்தருக்கு  முன்பாக  உறுதியாயிருக்கும்  என்று  சொல்லி,  {1Kgs  2:45}

 

ராஜா  யோய்தாவின்<Jehoiada>  குமாரனாகிய  பெனாயாவுக்குக்<Benaiah>  கட்டளைகொடுத்தான்;  அவன்  வெளியே  போய்,  அவன்மேல்  விழுந்து  அவனைக்  கொன்றுபோட்டான்.  ராஜ்யபாரம்  சாலொமோனின்<Solomon>  கையிலே  ஸ்திரப்பட்டது.  {1Kgs  2:46}

 

சாலொமோன்<Solomon>  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனோடே<Pharaoh>  சம்பந்தங்கலந்து,  பார்வோனின்<Pharaoh>  குமாரத்தியை  விவாகம்பண்ணி,  தன்னுடைய  அரமனையையும்  கர்த்தருடைய  ஆலயத்தையும்  எருசலேமின்<Jerusalem>  சுற்றுமதிலையும்  கட்டித்  தீருமட்டும்  அவன்  அவளைத்  தாவீதின்<David>  நகரத்தில்  கொண்டுவந்து  வைத்தான்.  {1Kgs  3:1}

 

அந்நாட்கள்மட்டும்  கர்த்தருடைய  நாமத்திற்கு  ஒரு  ஆலயம்  கட்டப்படாதிருந்ததினால்,  ஜனங்கள்  மேடைகளிலே  பலியிட்டுவந்தார்கள்.  {1Kgs  3:2}

 

சாலொமோன்<Solomon>  கர்த்தரிடத்தில்  அன்புகூர்ந்து,  தன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  கட்டளைகளில்  நடந்தான்;  ஆனாலும்  அவன்  மேடைகளிலே  பலியிட்டுத்  தூபங்காட்டி  வந்தான்.  {1Kgs  3:3}

 

அப்படியே  ராஜா  பலியிட  கிபியோனுக்குப்<Gibeon>  போனான்;  அது  பெரிய  மேடையாயிருந்தது;  அந்தப்  பலிபீடத்தின்மேல்  சாலொமோன்<Solomon>  ஆயிரம்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தினான்.  {1Kgs  3:4}

 

கிபியோனிலே<Gibeon>  கர்த்தர்  சாலொமோனுக்கு<Solomon>  இராத்திரியில்  சொப்பனத்திலே  தரிசனமாகி:  நீ  விரும்புகிறதை  என்னிடத்தில்  கேள்  என்று  தேவன்  சொன்னார்.  {1Kgs  3:5}

 

அதற்குச்  சாலொமோன்<Solomon>:  என்  தகப்பனாகிய  தாவீது<David>  என்னும்  உமது  அடியான்  உம்மைப்பற்றி  உண்மையும்  நீதியும்  மன  நேர்மையுமாய்  உமக்கு  முன்பாக  நடந்தபடியே  தேவரீர்  அவருக்குப்  பெரிய  கிருபைசெய்து,  அந்தப்  பெரிய  கிருபையை  அவருக்குக்  காத்து,  இந்நாளில்  இருக்கிறபடியே  அவருடைய  சிங்காசனத்தில்  வீற்றிருக்கிற  ஒரு  குமாரனை  அவருக்குத்  தந்தீர்.  {1Kgs  3:6}

 

இப்போதும்  என்  தேவனாகிய  கர்த்தாவே,  தேவரீர்  உமது  அடியேனை  என்  தகப்பனாகிய  தாவீதின்<David>  ஸ்தானத்திலே  ராஜாவாக்கினீரே,  நானோவென்றால்  போக்கு  வரவு  அறியாத  சிறுபிள்ளையாயிருக்கிறேன்.  {1Kgs  3:7}

 

நீர்  தெரிந்துகொண்டதும்  ஏராளத்தினால்  எண்ணிக்கைக்கு  அடங்காததும்  இலக்கத்திற்கு  உட்படாததுமான  திரளான  ஜனங்களாகிய  உமது  ஜனத்தின்  நடுவில்  அடியேன்  இருக்கிறேன்.  {1Kgs  3:8}

 

ஆகையால்  உமது  ஜனங்களை  நியாயம்  விசாரிக்கவும்,  நன்மைதீமை  இன்னதென்று  வகையறுக்கவும்,  அடியேனுக்கு  ஞானமுள்ள  இருதயத்தைத்  தந்தருளும்;  ஏராளமாயிருக்கிற  இந்த  உமது  ஜனங்களை  நியாயம்  விசாரிக்க  யாராலே  ஆகும்  என்றான்.  {1Kgs  3:9}

 

சாலொமோன்<Solomon>  இந்தக்  காரியத்தைக்  கேட்டது  ஆண்டவருடைய  பார்வைக்கு  உகந்த  விண்ணப்பமாயிருந்தது.  {1Kgs  3:10}

 

ஆகையினால்  தேவன்  அவனை  நோக்கி:  நீ  உனக்கு  நீடித்த  நாட்களைக்  கேளாமலும்,  ஐசுவரியத்தைக்  கேளாமலும்,  உன்  சத்துருக்களின்  பிராணனைக்  கேளாமலும்,  நீ  இந்தக்  காரியத்தையே  கேட்டு,  நியாயம்  விசாரிக்கிறதற்கு  ஏற்ற  ஞானத்தை  உனக்கு  வேண்டிக்கொண்டபடியினால்,  {1Kgs  3:11}

 

உன்  வார்த்தைகளின்படி  செய்தேன்;  ஞானமும்  உணர்வுமுள்ள  இருதயத்தை  உனக்குத்  தந்தேன்;  இதிலே  உனக்குச்  சரியானவன்  உனக்குமுன்  இருந்ததுமில்லை,  உனக்குச்  சரியானவன்  உனக்குப்பின்  எழும்புவதுமில்லை.  {1Kgs  3:12}

 

இதுவுமன்றி,  நீ  கேளாத  ஐசுவரியத்தையும்  மகிமையையும்  உனக்குத்  தந்தேன்;  உன்  நாட்களில்  இருக்கிற  ராஜாக்களில்  ஒருவனும்  உனக்குச்  சரியானவன்  இருப்பதில்லை.  {1Kgs  3:13}

 

உன்  தகப்பனாகிய  தாவீது<David>  நடந்ததுபோல,  நீயும்  என்  கட்டளைகளையும்  என்  நியமங்களையும்  கைக்கொண்டு,  என்  வழிகளில்  நடப்பாயாகில்,  உன்  நாட்களையும்  நீடித்திருக்கப்பண்ணுவேன்  என்றார்.  {1Kgs  3:14}

 

சாலொமோனுக்கு<Solomon>  நித்திரை  தெளிந்தபோது,  அது  சொப்பனம்  என்று  அறிந்தான்;  அவன்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டிக்கு  முன்பாக  நின்று,  சர்வாங்க  தகனபலிகளையிட்டு,  சமாதானபலிகளைச்  செலுத்தி,  தன்  ஊழியக்காரர்  எல்லாருக்கும்  விருந்துசெய்தான்.  {1Kgs  3:15}

 

அப்பொழுது  வேசிகளான  இரண்டு  ஸ்திரீகள்  ராஜாவினிடத்தில்  வந்து,  அவனுக்கு  முன்பாக  நின்றார்கள்.  {1Kgs  3:16}

 

அவர்களில்  ஒருத்தி:  என்  ஆண்டவனே,  நானும்  இந்த  ஸ்திரீயும்  ஒரே  வீட்டிலே  குடியிருக்கிறோம்;  நான்  இவளோடே  வீட்டிலிருக்கையில்  ஆண்பிள்ளை  பெற்றேன்.  {1Kgs  3:17}

 

நான்  பிள்ளைபெற்ற  மூன்றாம்  நாளிலே,  இந்த  ஸ்திரீயும்  ஆண்பிள்ளை  பெற்றாள்;  நாங்கள்  ஒருமித்திருந்தோம்,  எங்கள்  இருவரையும்  தவிர,  வீட்டுக்குள்ளே  வேறொருவரும்  இல்லை.  {1Kgs  3:18}

 

இராத்திரி  தூக்கத்திலே  இந்த  ஸ்திரீ  தன்  பிள்ளையின்மேல்  புரண்டுபடுத்ததினால்  அது  செத்துப்போயிற்று.  {1Kgs  3:19}

 

அப்பொழுது,  உமது  அடியாள்  நித்திரைபண்ணுகையில்,  இவள்  நடுஜாமத்தில்  எழுந்து,  என்  பக்கத்திலே  கிடக்கிற  என்  பிள்ளையை  எடுத்து,  தன்  மார்பிலே  கிடத்திக்கொண்டு,  செத்த  தன்  பிள்ளையை  எடுத்து,  என்  மார்பிலே  கிடத்திவிட்டாள்.  {1Kgs  3:20}

 

என்  பிள்ளைக்குப்  பால்கொடுக்கக்  காலமே  நான்  எழுந்திருந்தபோது,  அது  செத்துக்கிடந்தது;  பொழுது  விடிந்தபின்  நான்  அதை  உற்றுப்பார்க்கும்போது,  அது  நான்  பெற்ற  பிள்ளை  அல்லவென்று  கண்டேன்  என்றாள்.  {1Kgs  3:21}

 

அதற்கு  மற்ற  ஸ்திரீ:  அப்படியல்ல,  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை,  செத்தது  உன்  பிள்ளை  என்றாள்.  இவளோ:  இல்லை,  செத்தது  உன்  பிள்ளை,  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை  என்றாள்;  இப்படி  ராஜாவுக்கு  முன்பாக  வாதாடினார்கள்.  {1Kgs  3:22}

 

அப்பொழுது  ராஜா:  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை,  செத்தது  உன்  பிள்ளை  என்று  இவள்  சொல்லுகிறாள்;  அப்படியல்ல,  செத்தது  உன்  பிள்ளை,  உயிரோடிருக்கிறது  என்  பிள்ளை  என்று  அவள்  சொல்லுகிறாள்  என்று  சொல்லி,  {1Kgs  3:23}

 

ஒரு  பட்டயத்தைக்  கொண்டுவாருங்கள்  என்றான்;  அவர்கள்  ஒரு  பட்டயத்தை  ராஜாவினிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  {1Kgs  3:24}

 

ராஜா  உயிரோடிருக்கிற  பிள்ளையை  இரண்டாகப்  பிளந்து,  பாதியை  இவளுக்கும்  பாதியை  அவளுக்கும்  கொடுங்கள்  என்றான்.  {1Kgs  3:25}

 

அப்பொழுது  உயிரோடிருக்கிற  பிள்ளையின்  தாய்,  தன்  பிள்ளைக்காக  அவள்  குடல்  துடித்ததினால்,  ராஜாவை  நோக்கி:  ஐயோ,  என்  ஆண்டவனே,  உயிரோடிருக்கிற  பிள்ளையைக்  கொல்லவேண்டாம்;  அதை  அவளுக்கே  கொடுத்துவிடும்  என்றாள்;  மற்றவள்  அது  எனக்கும்  வேண்டாம்,  உனக்கும்  வேண்டாம்,  பிளந்து  போடுங்கள்  என்றாள்.  {1Kgs  3:26}

 

அப்பொழுது  ராஜா  உயிரோடிருக்கிற  பிள்ளையைக்  கொல்லாமல்,  அவளுக்குக்  கொடுத்துவிடுங்கள்;  அவளே  அதின்  தாய்  என்றான்.  {1Kgs  3:27}

 

ராஜா  தீர்த்த  இந்த  நியாயத்தை  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  கேள்விப்பட்டு,  நியாயம்  விசாரிக்கிறதற்கு  தேவன்  அருளின  ஞானம்  ராஜாவுக்கு  உண்டென்று  கண்டு,  அவனுக்குப்  பயந்தார்கள்.  {1Kgs  3:28}

 

ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  சமஸ்த  இஸ்ரவேலின்மேலும்<Israel>  ராஜாவாயிருந்தான்.  {1Kgs  4:1}

 

அவனுக்கு  இருந்த  பிரபுக்கள்:  சாதோக்கின்<Zadok>  குமாரனாகிய  அசரியா<Azariah>  பிரதான  மந்திரியாயிருந்தான்.  {1Kgs  4:2}

 

சீசாவின்<Shisha>  குமாரராகிய  ஏலிகோரேப்பும்<Elihoreph>  அகியாவும்<Ahiah>  சம்பிரதிகளாயிருந்தார்கள்;  அகிலூதின்<Ahilud>  குமாரன்  யோசபாத்<Jehoshaphat>  மந்திரியாயிருந்தான்.  {1Kgs  4:3}

 

யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயா<Benaiah>  படைத்தலைவனும்,  சாதோக்கும்<Zadok>  அபியத்தாரும்<Abiathar>  ஆசாரியர்களுமாயிருந்தார்கள்.  {1Kgs  4:4}

 

நாத்தானின்<Nathan>  குமாரன்  அசரியா<Azariah>  மணியக்காரரின்  தலைவனாயிருந்தான்;  நாத்தானின்<Nathan>  குமாரன்  சாபூத்<Zabud>  ராஜாவின்  பிரதானியும்  இஷ்டனுமாயிருந்தான்.  {1Kgs  4:5}

 

அகீஷார்<Ahishar>  அரமனை  விசாரிப்புக்காரனும்,  அப்தாவின்<Abda>  குமாரன்  அதோனீராம்<Adoniram>  பகுதி  விசாரிப்புக்காரனுமாய்  இருந்தான்.  {1Kgs  4:6}

 

ராஜாவுக்கும்  அவன்  அரமனைக்கும்  வேண்டிய  உணவுப்பொருள்களைச்  சேகரிக்கிற  பன்னிரண்டு  மணியக்காரர்  சாலொமோனுக்கு<Solomon>  இஸ்ரவேல்<Israel>  தேசமெங்கும்  வைக்கப்பட்டிருந்தார்கள்;  அவர்கள்  மாதத்துக்கு  ஒவ்வொருவராக  வருஷமுழுவதும்  பராமரித்துவந்தார்கள்.  {1Kgs  4:7}

 

அவர்கள்  நாமங்களாவன:  ஊரின்<Hur>  குமாரன்,  இவன்  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்தில்  இருந்தான்.  {1Kgs  4:8}

 

தேக்கேரின்<Dekar>  குமாரன்,  இவன்  மாக்காத்சிலும்<Makaz>,  சால்பீமிலும்<Shaalbim>,  பெத்ஷிமேசிலும்<Bethshemesh>,  ஏலோன்பெத்தானானிலும்<Elonbethhanan>  இருந்தான்.  {1Kgs  4:9}

 

ஏசேதின்<Hesed>  குமாரன்,  இவன்  அறுபோத்தில்<Aruboth>  இருந்தான்;  சோகோவும்<Sochoh>  எப்பேர்<Hepher>  சீமையனைத்தும்  இவன்  விசாரிப்பில்  இருந்தது.  {1Kgs  4:10}

 

அபினதாபின்<Abinadab>  குமாரன்,  இவன்  தோரின்<Dor>  நாட்டுப்புறமனைத்திற்கும்  விசாரிப்புக்காரனாயிருந்தான்;  சாலொமோனின்<Solomon>  குமாரத்தியாகிய  தாபாத்<Taphath>  இவனுக்கு  மனைவியாயிருந்தாள்.  {1Kgs  4:11}

 

அகிலூதின்<Ahilud>  குமாரனாகிய  பானா<Baana>,  இவன்  விசாரிப்பில்,  தானாகும்<Taanach>,  மெகிதோவும்<Megiddo>,  சர்த்தனாவுக்குப்<Zartanah>  பக்கமாகவும்  யெஸ்ரயேலுக்குக்<Jezreel>  கீழாகவும்  பெத்செயான்<Bethshean>  தொடங்கி  ஆபேல்  மெகொல்லாமட்டும்<Abelmeholah>  யக்மெயாமுக்கு<Jokneam>  அப்புறத்துமட்டும்  இருக்கிற  பெத்செயான்<Bethshean>  அனைத்தும்  இருந்தது.  {1Kgs  4:12}

 

கேபேரின்<Geber>  குமாரன்,  இவன்  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்தில்<Ramoth>  இருந்தான்;  கீலேயாத்திலுள்ள<Gilead>  மனாசேயின்<Manasseh>  குமாரனாகிய  யாவீரின்<Jair>  கிராமங்களும்  மதில்களும்  வெண்கலத்  தாழ்ப்பாள்களுமுள்ள  பாசான்தேசத்தினுடைய<Bashan>  அறுபது  பெரிய  பட்டணங்களுள்ள  அர்கோப்<Argob>  சீமையும்  இவன்  விசாரிப்பில்  இருந்தது.  {1Kgs  4:13}

 

இத்தோவின்<Iddo>  குமாரன்  அகினதாப்<Ahinadab>,  இவன்  மக்னாயீமில்<Mahanaim>  இருந்தான்.  {1Kgs  4:14}

 

அகிமாஸ்<Ahimaaz>,  இவன்  நப்தலியில்<Naphtali>  இருந்தான்;  இவன்  சாலொமோனுக்கு<Solomon>  இருந்த  ஒரு  குமாரத்தியாகிய  பஸ்மாத்<Basmath>  என்பவளை  விவாகம்பண்ணினான்.  {1Kgs  4:15}

 

ஊசாயின்<Hushai>  குமாரன்  பானா<Baanah>,  இவன்  ஆசேரிலும்<Asher>  ஆலோத்திலும்<Aloth>  இருந்தான்.  {1Kgs  4:16}

 

பருவாவின்<Paruah>  குமாரன்  யோசபாத்<Jehoshaphat>,  இவன்  இசக்காரில்<Issachar>  இருந்தான்.  {1Kgs  4:17}

 

ஏலாவின்<Elah>  குமாரன்  சீமேயி<Shimei>,  இவன்  பென்யமீனில்<Benjamin>  இருந்தான்.  {1Kgs  4:18}

 

ஊரியின்<Uri>  குமாரன்  கேபேர்<Geber>,  இவன்  எமோரியரின்<Amorites>  ராஜாவாகிய  சீகோனுக்கும்<Sihon>  பாசானின்<Bashan>  ராஜாவாகிய  ஓகுக்கும்<Og>  இருந்த  தேசமாகிய  கீலேயாத்தேசத்தில்<Gilead>  இருந்தான்;  இவன்மாத்திரம்  அத்தேசத்தில்  அதிபதியாய்  இருந்தான்.  {1Kgs  4:19}

 

யூதாவும்<Judah>  இஸ்ரவேலும்<Israel>  கடற்கரை  மணலத்தனை  ஏராளமாயிருந்து,  புசித்துக்  குடித்து  மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.  {1Kgs  4:20}

 

நதிதொடங்கி,  பெலிஸ்தர்<Philistines>  தேசவழியாய்  எகிப்தின்<Egypt>  எல்லைமட்டும்  இருக்கிற  சகல  ராஜ்யங்களையும்  சாலொமோன்<Solomon>  ஆண்டுகொண்டிருந்தான்;  அவர்கள்  சாலொமோனுக்குக்<Solomon>  காணிக்கைகளைக்  கொண்டுவந்து,  அவன்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  அவனைச்  சேவித்தார்கள்.  {1Kgs  4:21}

 

நாள்  ஒன்றிற்குச்  சாலொமோனுக்குச்<Solomon>  செல்லும்  சாப்பாட்டுச்  செலவு,  முப்பது  மரக்கால்  மெல்லிய  மாவும்,  அறுபது  மரக்கால்  மாவும்,  {1Kgs  4:22}

 

கலைமான்களையும்  வெளிமான்களையும்  வரையாடுகளையும்  கொழுமையான  பறவைகளையும்  தவிர,  கொழுக்கப்பட்ட  பத்து  மாடுகளும்,  மேய்ச்சலிலிருந்து  வந்த  இருபது  மாடுகளும்  நூறு  ஆடுகளுமாம்.  {1Kgs  4:23}

 

நதிக்கு  இப்புறத்தில்  இருக்கிற  திப்சாமுதற்கொண்டு<Tiphsah>  ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும்<Azzah>,  நதிக்கு  இப்புறத்திலுள்ள  சகல  ராஜாக்களையும்  ஆண்டுவந்தான்;  அவனைச்  சுற்றி  எங்கும்  சமாதானமாயிருந்தது.  {1Kgs  4:24}

 

சாலொமோனுடைய<Solomon>  நாளெல்லாம்  தாண்<Dan>  துவக்கிப்  பெயெர்செபாமட்டும்<Beersheba>,  யூதாவும்<Judah>  இஸ்ரவேலும்<Israel>  அவரவர்  தங்கள்  தங்கள்  திராட்சச்செடியின்  நிழலிலும்,  தங்கள்  தங்கள்  அத்திமரத்தின்  நிழலிலும்  சுகமாய்க்  குடியிருந்தார்கள்.  {1Kgs  4:25}

 

சாலொமோனுக்கு<Solomon>  நாலாயிரம்  இரதக்  குதிரைலாயங்களும்,  பன்னீராயிரம்  குதிரைவீரரும்  இருந்தார்கள்.  {1Kgs  4:26}

 

மேற்சொல்லிய  மணியக்காரரில்  ஒவ்வொருவரும்  தன்தன்  மாதத்திலே  சாலொமோன்<Solomon>  ராஜாவுக்கும்,  ராஜாவின்  பந்திக்கு  வரும்  யாவருக்கும்  வேண்டியவைகளை  ஒரு  குறைவுமின்றி  பராமரித்து,  {1Kgs  4:27}

 

குதிரைகளுக்கும்  ஒட்டகங்களுக்கும்  வேண்டிய  வாற்கோதுமையையும்,  வைக்கோலையும்,  அவரவர்  தங்களுக்கு  இடப்பட்ட  கட்டளையின்படி  அவைகள்  இருக்கும்  ஸ்தலத்திற்குக்  கொண்டுவருவார்கள்.  {1Kgs  4:28}

 

தேவன்  சாலொமோனுக்கு<Solomon>  மிகுதியான  ஞானத்தையும்  புத்தியையும்,  கடற்கரை  மணலத்தனையான  மனோவிருத்தியையும்  கொடுத்தார்.  {1Kgs  4:29}

 

சகல  கிழக்கத்திப்  புத்திரரின்  ஞானத்தையும்  எகிப்தியரின்<Egypt>  சகல  ஞானத்தையும்  பார்க்கிலும்  சாலொமோனின்<Solomon>  ஞானம்  சிறந்ததாயிருந்தது.  {1Kgs  4:30}

 

அவன்  எஸ்ராகியனாகிய<Ezrahite>  ஏத்தானிலும்<Ethan>,  ஏமான்<Heman>,  கல்கோல்<Chalcol>,  தர்தா<Darda>  என்னும்  மாகோலின்<Mahol>  குமாரரிலும்,  மற்ற  எல்லா  மனுஷரிலும்  ஞானவானாயிருந்தான்;  சுற்றிலும்  இருந்த  சகல  ஜாதிகளிலும்  அவன்  கீர்த்தி  பிரபலமாயிருந்தது.  {1Kgs  4:31}

 

அவன்  மூவாயிரம்  நீதிமொழிகளைச்  சொன்னான்;  அவனுடைய  பாட்டுகள்  ஆயிரத்து  ஐந்து.  {1Kgs  4:32}

 

லீபனோனில்<Lebanon>  இருக்கிற  கேதுருமரங்கள்  முதற்கொண்டு  சுவரில்  முளைக்கிற  ஈசோப்புப்  பூண்டுவரைக்குமுள்ள  மரமுதலிய  தாபரங்களைக்குறித்தும்,  மிருகங்கள்  பறவைகள்  ஊரும்  பிராணிகள்  மச்சங்கள்  ஆகிய  இவைகளைக்குறித்தும்  வாக்கியங்களைச்  சொன்னான்.  {1Kgs  4:33}

 

சாலொமோனின்<Solomon>  ஞானத்தைக்  குறித்துக்  கேள்விப்பட்ட  பூமியின்  சகல  ராஜாக்களிடத்திலுமிருந்து  நானாஜாதியான  ஜனங்களும்  அவனுடைய  ஞானத்தைக்  கேட்கிறதற்கு  வந்தார்கள்.  {1Kgs  4:34}

 

சாலொமோனை<Solomon>  அவனுடைய  பிதாவின்  ஸ்தானத்தில்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்  என்று  தீருவின்<Tyre>  ராஜாவாகிய  ஈராம்<Hiram>  கேள்விப்பட்டு,  தன்  ஊழியக்காரரை  அவனிடத்தில்  அனுப்பினான்;  ஈராம்<Hiram>  தாவீதுக்குச்<David>  சகலநாளும்  சிநேகிதனாயிருந்தான்.  {1Kgs  5:1}

 

அப்பொழுது  சாலொமோன்<Solomon>  ஈராமினிடத்தில்<Hiram>  ஆட்களை  அனுப்பி:  {1Kgs  5:2}

 

என்  தகப்பனாகிய  தாவீதின்<David>  சத்துருக்களைக்  கர்த்தர்  அவருடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்திவிடுமளவும்,  அவர்கள்  தம்மைச்  சுற்றிலும்  செய்கிற  யுத்தத்தினால்,  அவர்  தம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்ட,  அவருக்குக்  கூடாதிருந்தது  என்று  நீர்  அறிந்திருக்கிறீர்.  {1Kgs  5:3}

 

ஆனாலும்  இப்பொழுதோ  என்  தேவனாகிய  கர்த்தர்  எங்கும்  எனக்கு  இளைப்பாறுதலைத்  தந்தார்;  விரோதியும்  இல்லை,  இடையூறும்  இல்லை.  {1Kgs  5:4}

 

ஆகையால்:  நான்  உன்  ஸ்தானத்தில்  உன்  சிங்காசனத்தின்மேல்  வைக்கும்  உன்  குமாரனே  என்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டுவான்  என்று  கர்த்தர்  என்  தகப்பனாகிய  தாவீதினிடத்தில்<David>  சொன்னபடியே,  என்  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்று  இருக்கிறேன்.  {1Kgs  5:5}

 

ஆதலால்  லீபனோனில்<Lebanon>  எனக்காக  கேதுருமரங்களை  வெட்டக்  கட்டளையிடும்;  சீதோனியரைப்போல<Sidonians>  மரவெட்டு  வேலை  அறிந்தவர்கள்  எங்களுக்குள்ளே  ஒருவருமில்லை  என்பது  உமக்குத்  தெரியும்;  அதற்காக  என்  வேலைக்காரர்  உம்முடைய  வேலைக்காரரோடே  இருப்பார்கள்;  நீர்  சொல்வதின்படியெல்லாம்  உம்முடைய  வேலைக்காரரின்  சம்பளத்தை  உமக்குக்  கொடுப்பேன்  என்று  சொல்லச்சொன்னான்.  {1Kgs  5:6}

 

ஈராம்<Hiram>  சாலொமோனின்<Solomon>  வார்த்தைகளைக்  கேட்டபோது,  மிகவும்  சந்தோஷப்பட்டு:  அந்த  ஏராளமான  ஜனங்களை  ஆளும்படி,  தாவீதுக்கு<David>  ஒரு  ஞானமுள்ள  குமாரனைக்  கொடுத்த  கர்த்தர்  இன்று  ஸ்தோத்திரிக்கப்படுவாராக  என்று  சொல்லி;  {1Kgs  5:7}

 

ஈராம்<Hiram>  சாலொமோனிடத்தில்<Solomon>  மனுஷரை  அனுப்பி:  நீர்  எனக்குச்  சொல்லியனுப்பின  காரியத்தை  நான்  கேட்டேன்;  கேதுருமரங்களுக்காகவும்,  தேவதாரி  விருட்சங்களுக்காகவும்,  உம்முடைய  விருப்பத்தின்படியெல்லாம்  நான்  செய்வேன்.  {1Kgs  5:8}

 

என்  வேலைக்காரர்  லீபனோனில்<Lebanon>  இருந்து  அவைகளை  இறக்கிக்  கடலிலே  கொண்டுவருவார்கள்;  அங்கே  நான்  அவைகளைத்  தெப்பங்களாகக்  கட்டி,  நீர்  நியமிக்கும்  இடத்துக்குக்  கடல்வழியாய்  அனுப்பி,  அவைகளை  அவிழ்த்து  ஒப்பிப்பேன்;  அங்கே  நீர்  அவைகளை  ஒப்புக்கொண்டு  என்  ஜனங்களுக்கு  ஆகாரங்கொடுத்து,  என்  விருப்பத்தின்படி  செய்யவேண்டும்  என்று  சொல்லச்சொன்னான்.  {1Kgs  5:9}

 

அப்படியே  ஈராம்<Hiram>  சாலொமோனுக்கு<Solomon>  வேண்டியமட்டும்  கேதுருமரங்களையும்  தேவதாரி  விருட்சங்களையும்  கொடுத்துக்கொண்டுவந்தான்.  {1Kgs  5:10}

 

சாலொமோன்<Solomon>  ஈராமின்<Hiram>  அரமனைக்குப்  போஜனத்திற்காக  இருபதினாயிரக்கலம்  கோதுமையையும்,  இடித்துப்பிழிந்த  ஒலிவமரங்களின்  இருபதுகல  எண்ணெயையும்  கொடுத்தான்;  இப்படிச்  சாலொமோன்<Solomon>  ஈராமுக்கு<Hiram>  வருஷாந்தரம்  கொடுத்துவந்தான்.  {1Kgs  5:11}

 

கர்த்தர்  சாலொமோனுக்குச்<Solomon>  சொல்லியிருந்தபடியே  அவனுக்கு  ஞானத்தைத்  தந்தருளினார்;  ஈராமுக்கும்<Hiram>  சாலொமோனுக்கும்<Solomon>  சமாதானம்  உண்டாயிருந்து,  இருவரும்  உடன்படிக்கை  பண்ணிக்கொண்டார்கள்.  {1Kgs  5:12}

 

ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  இஸ்ரவேலரெல்லாரிலும்<Israel>  ஊழியத்துக்கு  முப்பதினாயிரம்  அமஞ்சி  ஆட்களைப்  பிடித்தான்.  {1Kgs  5:13}

 

அவர்களில்  ஒவ்வொரு  மாதத்திற்குப்  பதினாயிரம்பேரை  மாற்றி  மாற்றி,  லீபனோனுக்கு<Lebanon>  அனுப்பினான்;  அவர்கள்  ஒரு  மாதம்  லீபனோனிலும்<Lebanon>,  இரண்டு  மாதம்  தங்கள்  வீடுகளிலும்  இருப்பார்கள்;  அதோனீராம்<Adoniram>  அந்த  அமஞ்சி  ஆட்களின்மேல்  விசாரிப்புக்காரனாயிருந்தான்.  {1Kgs  5:14}

 

சாலொமோனிடத்தில்<Solomon>  சுமை  சுமக்கிறவர்கள்  எழுபதினாயிரம்பேரும்,  மலைகளில்  மரம்  வெட்டுகிறவர்கள்  எண்பதினாயிரம்பேரும்,  {1Kgs  5:15}

 

இவர்களைத்தவிர  வேலையை  விசாரித்து  வேலையாட்களைக்  கண்காணிக்கிறதற்கு  தலைமையான  விசாரிப்புக்காரர்  மூவாயிரத்து  முந்நூறுபேரும்  இருந்தார்கள்.  {1Kgs  5:16}

 

வெட்டின  கல்லால்  ஆலயத்துக்கு  அஸ்திபாரம்  போட,  பெரிதும்  விலையேறப்பெற்றதுமான  கற்களைக்  கொண்டுவர  ராஜா  கட்டளையிட்டான்.  {1Kgs  5:17}

 

ஆலயத்தைக்  கட்ட,  சாலொமோனின்<Solomon>  சிற்பாசாரிகளும்,  ஈராமின்<Hiram>  சிற்பாசாரிகளும்,  கிபலி<n/a>  ஊராரும்,  அந்த  மரங்களையும்  கற்களையும்  வெட்டி  ஆயத்தப்படுத்தினார்கள்.  {1Kgs  5:18}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எகிப்து<Egypt>  தேசத்திலிருந்து  புறப்பட்ட  நானூற்று  எண்பதாம்  வருஷத்திலும்,  சாலொமோன்<Solomon>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவான  நாலாம்  வருஷம்  சீப்மாதமாகிய<Zif>  இரண்டாம்  மாதத்திலும்,  அவன்  கர்த்தரின்  ஆலயத்தைக்  கட்டத்தொடங்கினான்.  {1Kgs  6:1}

 

சாலொமோன்<Solomon>  ராஜா  கர்த்தருக்குக்  கட்டின  ஆலயம்  அறுபது  முழ  நீளமும்,  இருபது  முழ  அகலமும்,  முப்பது  முழ  உயரமுமாயிருந்தது.  {1Kgs  6:2}

 

ஆலயமாகிய  அந்த  மாளிகையின்  முகப்பிலே  அவன்  கட்டின  மண்டபம்  ஆலயத்தின்  அகலத்திற்குச்  சரியாய்  இருபது  முழ  நீளமும்,  ஆலயத்துக்கு  முன்னே  பத்துமுழ  அகலமுமாயிருந்தது.  {1Kgs  6:3}

 

பார்வைக்குக்  குறுகிப்போகிற  ஒடுக்கமான  ஜன்னல்களை  ஆலயத்திற்குச்  செய்வித்தான்.  {1Kgs  6:4}

 

அவன்  தேவாலயத்தின்  சுவரும்  சந்நிதி  ஸ்தானச்சுவருமாகிய  ஆலயத்தின்  சுவர்களுக்கு  அடுத்ததாய்ச்  சுற்றுக்கட்டுகளைக்  கட்டி,  அவைகளில்  அறைகளைச்  சுற்றிலும்  உண்டாக்கினான்.  {1Kgs  6:5}

 

கீழே  இருக்கிற  சுற்றுக்கட்டு  ஐந்து  முழ  அகலமும்,  நடுவே  இருக்கிறது  ஆறு  முழ  அகலமும்,  மூன்றாவதாயிருக்கிறது  ஏழுமுழ  அகலமுமாயிருந்தது;  அவைகள்  ஆலயத்தினுடைய  சுவர்களிலே  தாங்காதபடிக்கு  ஆலயத்தைச்  சுற்றிலும்  புறம்பே  ஒட்டுச்சுவர்களைக்  கட்டுவித்தான்.  {1Kgs  6:6}

 

ஆலயம்  கட்டப்படுகையில்,  அது  பணிதீர்ந்து  கொண்டுவரப்பட்ட  கற்களாலே  கட்டப்பட்டது;  ஆகையால்  அது  கட்டப்படுகிறபோது,  சுத்திகள்  வாச்சிகள்  முதலான  எந்த  இருப்பு  ஆயுதங்களின்  சத்தமும்  அதிலே  கேட்கப்படவில்லை.  {1Kgs  6:7}

 

நடு  அறைகளுக்குப்  போகிற  வாசற்படி  ஆலயத்தின்  வலதுபுறத்தில்  இருந்தது;  சுழற்படிகளால்  நடு  அறைகளுக்கும்,  நடு  அறைகளிலிருந்து  மூன்றாவது  அறைகளுக்கும்  ஏறுவார்கள்.  {1Kgs  6:8}

 

இவ்விதமாய்  அவன்  ஆலயத்தைக்  கட்டி,  கேதுருமர  உத்திரங்களாலும்  பலகைகளாலும்  ஆலயத்தை  மச்சுப்பாவி  முடித்தான்.  {1Kgs  6:9}

 

அவன்  ஐந்துமுழ  உயரமான  சுற்றுக்கட்டுகளை  ஆலயத்தின்மேலெங்கும்  கட்டுவித்தான்;  அவைகள்  கேதுருமரங்களால்  ஆலயத்தோடே  இணைக்கப்பட்டிருந்தது.  {1Kgs  6:10}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  சாலொமோனுக்கு<Solomon>  உண்டாயிற்று;  அவர்:  {1Kgs  6:11}

 

நீ  என்  கட்டளைகளின்படி  நடந்து,  என்  நீதிநியாயங்களை  நிறைவேற்றி,  என்  கற்பனைகளின்படியெல்லாம்  நடந்துகொள்ளும்படிக்கு,  அவைகளைக்  கைக்கொண்டால்,  நீ  கட்டுகிற  இந்த  ஆலயத்தைக்குறித்து  நான்  உன்  தகப்பனாகிய  தாவீதோடே<David>  சொன்ன  என்  வார்த்தையை  உன்னிடத்தில்  நிறைவேற்றி,  {1Kgs  6:12}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  நடுவிலே  வாசம்பண்ணி,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலைக்<Israel>  கைவிடாதிருப்பேன்  என்றார்.  {1Kgs  6:13}

 

அப்படியே  சாலொமோன்<Solomon>  ஆலயத்தைக்  கட்டி  முடித்தான்.  {1Kgs  6:14}

 

ஆலயத்துச்  சுவர்களின்  உட்புறத்தை,  தளம்தொடங்கிச்  சுவர்களின்  மேல்மச்சுமட்டும்,  கேதுருப்பலகைகளால்  மூடி,  இப்படி  உட்புறத்தை  மரவேலையாக்கி,  ஆலயத்தின்  தளத்தை  தேவதாரி  விருட்சங்களின்  பலகைகளால்  தளவரிசைப்படுத்தினான்.  {1Kgs  6:15}

 

தளவரிசை  தொடங்கிச்  சுவர்களின்  உயரமட்டும்  ஆலயத்தின்  பக்கங்களைத்  தொடர்ந்திருக்கிற  இருபதுமுழ  நீளமான  மறைப்பையும்  கேதுருப்பலகைகளால்  உண்டாக்கி,  உட்புறத்தை  மகா  பரிசுத்தமான  சந்நிதி  ஸ்தானமாகக்  கட்டினான்.  {1Kgs  6:16}

 

அதின்  முன்னிருக்கிற  தேவாலயமாகிய  மாளிகை  நாற்பதுமுழ  நீளமாயிருந்தது.  {1Kgs  6:17}

 

ஆலயத்திற்குள்  இருக்கிற  கேதுருமரங்களில்  மொக்குகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திரவேலை  செய்திருந்தது;  பார்வைக்கு  ஒரு  கல்லாகிலும்  காணப்படாமல்  எல்லாம்  கேதுருமரமாயிருந்தது.  {1Kgs  6:18}

 

கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியை  வைக்கிறதற்கு  ஆலயத்துக்குள்ளே  சந்நிதி  ஸ்தானத்தை  ஆயத்தப்படுத்தினான்.  {1Kgs  6:19}

 

சந்நிதி  ஸ்தானம்  முன்புறமட்டும்  இருபதுமுழ  நீளமும்,  இருபதுமுழ  அகலமும்,  இருபதுமுழ  உயரமுமாயிருந்தது;  அதைப்  பசும்பொன்  தகட்டால்  மூடினான்;  கேதுருமரப்  பலிபீடத்தையும்  அப்படியே  மூடினான்.  {1Kgs  6:20}

 

ஆலயத்தின்  உட்புறத்தைச்  சாலொமோன்<Solomon>  பசும்பொன்தகட்டால்  மூடி,  சந்நிதி  ஸ்தானத்தின்  மறைப்புக்கும்  பொன்  சங்கிலிகளைக்  குறுக்கே  போட்டு,  அதைப்  பொன்  தகட்டால்  மூடினான்.  {1Kgs  6:21}

 

இப்படி  ஆலயம்  முழுவதும்  கட்டித்தீருமட்டும்,  அவன்  ஆலயம்  முழுவதையும்  பொன்தகட்டால்  மூடி,  சந்நிதி  ஸ்தானத்திற்கு  முன்பாக  இருக்கிற  பலிபீடத்தை  முழுவதும்  பொன்தகட்டால்  மூடினான்.  {1Kgs  6:22}

 

சந்நிதி  ஸ்தானத்தில்  ஒலிவமரங்களால்  இரண்டு  கேருபீன்களைச்<cherubims>  செய்து  வைத்தான்;  ஒவ்வொன்றும்  பத்துமுழ  உயரமாயிருந்தது.  {1Kgs  6:23}

 

கேருபீனுக்கு<cherub>  இருக்கிற  ஒரு  செட்டை  ஐந்து  முழமும்  கேருபீனின்<cherub>  மற்றச்  செட்டை  ஐந்து  முழமுமாய்,  இப்படி  ஒரு  செட்டையின்  கடைசிமுனைதொடங்கி  மற்றச்  செட்டையின்  கடைசிமுனைமட்டும்  பத்து  முழமாயிருந்தது.  {1Kgs  6:24}

 

மற்றக்  கேருபீனும்<cherub>  பத்து  முழமாயிருந்தது;  இரண்டு  கேருபீன்களும்<cherubims>  ஒரே  அளவும்  ஒரே  திட்டமுமாயிருந்தது.  {1Kgs  6:25}

 

ஒரு  கேருபீன்<cherub>  பத்துமுழ  உயரமாயிருந்தது;  மற்றக்  கேருபீனும்<cherub>  அப்படியே  இருந்தது.  {1Kgs  6:26}

 

அந்தக்  கேருபீன்களை<cherubims>  உள்  ஆலயத்திலே  வைத்தான்;  கேருபீன்களின்<cherubims>  செட்டைகள்  விரித்திருந்ததினால்,  ஒரு  கேருபீனின்<cherub>  செட்டை  ஒருபக்கத்ததுச்  சுவரிலும்,  மற்றக்  கேருபீனின்<cherub>  செட்டை  மறுபக்கத்துச்  சுவரிலும்  தொடத்தக்கதாயிருந்தது;  ஆலயத்தின்  நடுமையத்தில்,  அவைகளின்  செட்டைகள்  ஒன்றோடொன்று  தொடத்தக்கதாயிருந்தது.  {1Kgs  6:27}

 

அந்தக்  கேருபீன்களைப்<cherubims>  பொன்தகட்டால்  மூடினான்.  {1Kgs  6:28}

 

ஆலயத்தின்  சுவர்களையெல்லாம்  அவன்  சுற்றிலும்  உள்ளும்  புறம்புமாகக்  கேருபீன்களும்<cherubims>  பேரீந்துகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திரங்களும்  கொத்து  வேலைகளுமாக்கினான்.  {1Kgs  6:29}

 

உள்ளும்  புறம்புமாயிருக்கிற  ஆலயத்துத்  தளவரிசையையும்  பொன்தகட்டால்  மூடினான்.  {1Kgs  6:30}

 

சந்நிதி  ஸ்தானத்தின்  வாசலுக்கு  ஒலிவமரங்களால்  இரட்டைக்  கதவுகளைச்  செய்தான்;  மேல்சட்டமும்  நிலைகளும்  மறைப்பின்  அளவில்  ஐந்தில்  ஒரு  பங்காயிருந்தது.  {1Kgs  6:31}

 

ஒலிவமரமான  அந்த  இரட்டைக்  கதவுகளில்  அவன்  கேருபீன்களும்<cherubims>  பேரீந்துகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திரங்களைச்  செய்து,  அந்தக்  கேருபீன்களிலும்<cherubims>  பேரீந்துகளிலும்  பொன்பதியத்தக்கதாய்ப்  பொன்தகட்டால்  மூடினான்.  {1Kgs  6:32}

 

இப்படி  தேவாலயத்தின்  வாசலுக்கும்  ஒலிவமர  நிலைகளைச்  செய்தான்;  அது  சுவர்  அளவில்  நாலத்தொரு  பங்காயிருந்தது.  {1Kgs  6:33}

 

அதின்  இரண்டு  கதவுகளும்  தேவதாரிப்  பலகைகளால்  செய்யப்பட்டிருந்தது;  ஒரு  கதவுக்கு  இரண்டு  மடிப்புப்  பலகைகளும்,  மற்றக்  கதவுக்கு  இரண்டு  மடிப்புப்  பலகைகளும்  இருந்தது.  {1Kgs  6:34}

 

அவைகளில்  கேருபீன்களும்<cherubims>  பேரீந்துகளும்  மலர்ந்த  பூக்களுமான  சித்திர  வேலையைச்  செய்து,  சித்திரங்களுக்குச்  சரியாகச்  செய்யப்பட்ட  பொன்தகட்டால்  அவைகளை  மூடினான்.  {1Kgs  6:35}

 

அவன்  உட்பிராகாரத்தை  மூன்று  வரிசை  வெட்டின  கற்களாலும்,  ஒரு  வரிசை  கேதுருப்  பலகைகளாலும்  கட்டினான்.  {1Kgs  6:36}

 

நாலாம்  வருஷம்  சீப்மாதத்திலே<Zif>  கர்த்தருடைய  ஆலயத்துக்கு  அஸ்திபாரம்  போட்டு,  {1Kgs  6:37}

 

பதினோராம்  வருஷம்  பூல்<Bul>  என்னும்  எட்டாம்  மாதத்திலே,  அந்த  ஆலயமுழுதும்  சகல  சட்டதிட்டத்தின்படியே  ஒரு  பங்கும்  குறையாமல்  கட்டித்  தீர்ந்தது;  அவன்  அதைக்  கட்டிமுடிக்க  ஏழுவருஷம்  சென்றது.  {1Kgs  6:38}

 

சாலொமோன்<Solomon>  தன்  அரமனை  முழுதையும்  கட்டிமுடிக்க  பதின்மூன்று  வருஷம்  சென்றது.  {1Kgs  7:1}

 

அவன்  லீபனோன்<Lebanon>  வனம்  என்னும்  மாளிகையையும்  கட்டினான்;  அது  நூறு  முழ  நீளமும்,  ஐம்பதுமுழ  அகலமும்,  முப்பதுமுழ  உயரமுமாயிருந்தது;  அதைக்  கேதுருமர  உத்திரங்கள்  பாவப்பட்ட  கேதுருமரத்தூண்களின்  நாலு  வரிசைகளின்மேல்  கட்டினான்.  {1Kgs  7:2}

 

ஒவ்வொரு  வரிசைக்குப்  பதினைந்து  தூண்களாக  நாற்பத்தைந்து  தூண்களின்மேல்  வைக்கப்பட்ட  உத்திரங்களின்மேல்  கேதுருக்களால்  மச்சுப்பாவியிருந்தது.  {1Kgs  7:3}

 

மூன்று  வரிசை  ஜன்னல்கள்  இருந்தது;  மூன்று  வரிசையிலும்  ஜன்னல்கள்,  ஒன்றுக்கொன்று  எதிராயிருந்தது.  {1Kgs  7:4}

 

ஜன்னல்களின்  வாசல்களும்  சட்டங்களும்  எல்லாம்  சதுரமாயிருந்தது;  மூன்று  வரிசையிலும்  ஜன்னல்கள்  ஒன்றுக்கொன்று  எதிராயிருந்தது.  {1Kgs  7:5}

 

ஐம்பதுமுழ  நீளமும்  முப்பதுமுழ  அகலமுமான  மண்டபத்தையும்  தூண்கள்  நிறுத்திக்  கட்டினான்;  அந்த  மண்டபமும்,  அதின்  தூண்களும்,  உத்திரங்களும்,  மாளிகையின்  தூண்களுக்கும்  உத்திரங்களுக்கும்  எதிராயிருந்தது.  {1Kgs  7:6}

 

தான்  இருந்து  நியாயம்  தீர்க்கிறதற்கு  நியாயாசனம்  போட்டிருக்கும்  ஒரு  நியாயவிசாரணை  மண்டபத்தையும்  கட்டி,  அதின்  ஒருபக்கம்  துவக்கி  மறுபக்கமட்டும்  கேதுருப்பலகைகளால்  தளவரிசைப்  படுத்தினான்.  {1Kgs  7:7}

 

அவன்  வாசம்பண்ணும்  அவனுடைய  அரமனை  மண்டபத்திற்குள்ளே  அதேமாதிரியாகச்  செய்யப்பட்ட  வேறொரு  மண்டபமும்  இருந்தது.  சாலொமோன்<Solomon>  விவாகம்பண்ணின  பார்வோனின்<Pharaoh>  குமாரத்திக்கும்  அந்த  மண்டபத்தைப்போல  ஒரு  மாளிகையைக்  கட்டுவித்தான்.  {1Kgs  7:8}

 

இவைகளெல்லாம்,  உள்ளும்  புறம்பும்,  அஸ்திபாரமுதல்  மேல்திரணைகள்மட்டும்,  வெளியே  இருக்கும்  பெரிய  முற்றம்வரைக்கும்,  அளவுபடி  வெட்டி  வாளால்  அறுக்கப்பட்ட  விலையேறப்பெற்ற  கற்களால்  செய்யப்பட்டது.  {1Kgs  7:9}

 

அஸ்திபாரம்  பத்துமுழக்  கற்களும்,  எட்டுமுழக்  கற்களுமான  விலையேறப்பெற்ற  பெரிய  கற்களாயிருந்தது.  {1Kgs  7:10}

 

அதின்மேல்  உயர  அளவுபடி  பணிப்படுத்தின  விலையேறப்பெற்ற  கற்களும்,  கேதுருமரங்களும்  வைக்கப்பட்டிருந்தது.  {1Kgs  7:11}

 

பெரிய  முற்றத்திற்குச்  சுற்றிலும்  மூன்று  வரிசைக்  கேதுருமர  உத்திரங்களாலும்  ஒரு  வரிசை  பணிப்படுத்தின  கற்களாலும்  செய்யப்பட்டிருந்தது;  கர்த்தருடைய  ஆலயத்தின்  உட்பிராகாரத்திற்கும்,  அதின்  முன்மண்டபத்திற்கும்  அப்படியே  செய்யப்பட்டிருந்தது.  {1Kgs  7:12}

 

ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  ஈராம்<Hiram>  என்னும்  ஒருவனைத்  தீருவிலிருந்து<Tyre>  அழைப்பித்தான்.  {1Kgs  7:13}

 

இவன்  நப்தலி<Naphtali>  கோத்திரத்தாளாகிய  ஒரு  கைம்பெண்ணின்  மகன்;  இவன்  தகப்பன்  தீருநகரத்தானான<Tyre>  கன்னான்;  இவன்  சகலவித  வெண்கலவேலையையும்  செய்யத்தக்க  யுக்தியும்  புத்தியும்  அறிவும்  உள்ளவனாயிருந்தான்;  இவன்  ராஜாவாகிய  சாலொமோனிடத்தில்<Solomon>  வந்து,  அவன்  வேலையையெல்லாம்  செய்தான்.  {1Kgs  7:14}

 

இவன்  இரண்டு  வெண்கலத்  தூண்களை  உண்டாக்கினான்;  ஒவ்வொரு  தூண்  பதினெட்டு  முழ  உயரமும்,  ஒவ்வொரு  தூணின்  சுற்றளவு  பன்னிரண்டு  முழ  நூலளவுமாயிருந்தது.  {1Kgs  7:15}

 

அந்தத்  தூண்களுடைய  தலைப்பில்  வைக்க,  வெண்கலத்தால்  வார்க்கப்பட்ட  இரண்டு  கும்பங்களை  உண்டாக்கினான்;  ஒவ்வொரு  கும்பமும்  ஐந்துமுழ  உயரமாயிருந்தது.  {1Kgs  7:16}

 

தூண்களுடைய  முனையின்மேலுள்ள  கும்பங்களுக்கு  வலைபோன்ற  பின்னல்களும்,  சங்கிலிபோன்ற  தொங்கல்களும்,  ஒவ்வொரு  கும்பத்திற்கும்  எவ்வேழாக  இருந்தது.  {1Kgs  7:17}

 

தூண்களைப்  பண்ணின  விதமாவது:  தலைப்பின்மேலுள்ள  கும்பங்களை  மூடும்படிக்கு,  கும்பங்கள்  ஒவ்வொன்றிலும்  பின்னலின்மேல்  சுற்றிலும்  இரண்டு  வரிசை  மாதளம்பழங்களைச்  செய்வித்தான்.  {1Kgs  7:18}

 

மண்டபத்தின்  முன்னிருக்கும்  அந்தத்  தூண்களுடைய  தலைப்பின்மேலுள்ள  கும்பங்கள்  லீலிபுஷ்பங்களின்  வேலையும்,  நாலுமுழ  உயரமுமாயிருந்தது.  {1Kgs  7:19}

 

இரண்டு  தூண்களின்மேலுமுள்ள  கும்பங்களில்  செய்யப்பட்ட  பின்னலுக்கு  அருகே  இருந்த  இடத்தில்  விம்மிய  இருநூறு  மாதளம்பழங்களின்  வரிசைகள்  சுற்றிலும்  இருந்தது;  மற்றக்  கும்பத்திலும்  அப்படியே  இருந்தது.  {1Kgs  7:20}

 

அந்தத்  தூண்களை  தேவாலய  வாசல்  மண்டபத்தில்  நிறுத்தினான்;  அவன்  வலதுபுறத்தில்  நிறுத்தின  தூணுக்கு  யாகீன்<Jachin>  என்றும்,  இடதுபுறத்தில்  நிறுத்தின  தூணுக்கு  போவாஸ்<Boaz>  என்றும்  பேரிட்டான்.  {1Kgs  7:21}

 

தூண்களுடைய  சிகரத்தில்  லீலிபுஷ்பவேலை  செய்யப்பட்டிருந்தது;  இவ்விதமாய்த்  தூண்களின்  வேலை  முடிந்தது.  {1Kgs  7:22}

 

வெண்கலக்  கடல்  என்னும்  தொட்டியையும்  வார்ப்பித்தான்;  சுற்றிலும்  சக்கராகாரமான  அதினுடைய  ஒரு  விளிம்பு  தொடங்கி  மறுவிளிம்புமட்டும்,  அகலம்  பத்துமுழமும்,  உயரம்  ஐந்துமுழமும்,  சுற்றளவு  முப்பதுமுழ  நூலளவுமாயிருந்தது.  {1Kgs  7:23}

 

அந்தக்  கடல்தொட்டியைச்  சுற்றி  விளிம்புக்குக்  கீழே  அதைச்  சுற்றிலும்  மொக்குகள்  ஒவ்வொரு  முழத்திற்குப்  பத்து  பத்தாகச்  செய்யப்பட்டிருந்தது;  வார்க்கப்பட்ட  அந்த  மொக்குகளின்  வரிசைகள்  இரண்டும்  தொட்டியோடு  ஒன்றாய்  வார்க்கப்பட்டிருந்தது.  {1Kgs  7:24}

 

அது  பன்னிரண்டு  ரிஷபங்களின்மேல்  நின்றது;  அவைகளில்  மூன்று  வடக்கேயும்,  மூன்று  மேற்கேயும்,  மூன்று  தெற்கேயும்,  மூன்று  கிழக்கேயும்  நோக்கியிருந்தது;  கடல்தொட்டி  ரிஷபங்களின்  மேலாகவும்,  அவைகளின்  பின்புறங்களெல்லாம்  உள்ளாகவும்  இருந்தது.  {1Kgs  7:25}

 

அதின்  கனம்  நாலு  விரற்கடையும்,  அதின்  விளிம்பு  பானபாத்திரத்தின்  விளிம்புபோலும்,  லீலிபுஷ்பம்போலும்  இருந்தது;  அது  இரண்டாயிரம்  குடம்  தண்ணீர்  பிடிக்கும்.  {1Kgs  7:26}

 

பத்து  வெண்கல  ஆதாரங்களையும்  செய்தான்;  ஒவ்வொரு  ஆதாரம்  நாலுமுழ  நீளமும்,  நாலுமுழ  அகலமும்,  மூன்றுமுழ  உயரமுமாயிருந்தது.  {1Kgs  7:27}

 

அந்த  ஆதாரங்களின்  வேலைப்பாடு  என்னவெனில்,  அவைகளுக்குச்  சவுக்கைகள்  உண்டாயிருந்தது;  சவுக்கைகளோ  சட்டங்களின்  நடுவில்  இருந்தது.  {1Kgs  7:28}

 

சட்டங்களுக்கு  நடுவே  இருக்கிற  அந்தச்  சவுக்கைகளில்  சிங்கங்களும்,  காளைகளும்,  கேருபீன்களும்<cherubims>,  சட்டங்களுக்கு  மேலாக  ஒரு  திரணையும்,  சிங்கங்களுக்கும்  காளைகளுக்கும்  கீழாக  சாய்வான  வேலைப்பாடுள்ள  ஜலதாரைகளும்  அதனோடே  இருந்தது.  {1Kgs  7:29}

 

ஒவ்வொரு  ஆதாரத்திற்கு  நாலு  வெண்கல  உருளைகளும்,  வெண்கலத்  தட்டுகளும்,  அதின்  நாலு  கோடிகளுக்கு  அச்சுகளும்  இருந்தது;  கொப்பரையின்  கீழிருக்க,  அந்தக்  கொம்மைகள்  ஒவ்வொன்றும்  வார்ப்பு  வேலையாக  ஜலதாரைகளுக்கு  நேராயிருந்தது.  {1Kgs  7:30}

 

திரணைகளுக்குள்ளான  அதின்  வாய்  மேலாக  ஒருமுழம்  உயர்ந்திருந்தது;  அதின்  வாய்  ஒன்றரைமுழ  சக்கராகாரமும்  தட்டையுமாய்,  அதின்  வாயின்மேல்  சித்திரங்களும்  செய்யப்பட்டிருந்தது;  அவைகளின்  சவுக்கைகள்  விருத்தமாயிராமல்  சதுரமாயிருந்தது.  {1Kgs  7:31}

 

அந்த  நாலு  உருளைகள்  சவுக்கைகளின்  கீழும்,  உருளைகளின்  அச்சுகள்  ஆதாரத்திலும்  இருந்தது;  ஒவ்வொரு  உருளை  ஒன்றரைமுழ  உயரமாயிருந்தது.  {1Kgs  7:32}

 

உருளைகளின்  வேலை  இரதத்து  உருளைகளின்  வேலைக்கு  ஒத்திருந்தது;  அவைகளின்  அச்சுகளும்,  சக்கரங்களும்,  வட்டங்களும்,  கம்பிகளும்  எல்லாம்  வார்ப்புவேலையாயிருந்தது.  {1Kgs  7:33}

 

ஒவ்வொரு  ஆதாரத்தினுடைய  நாலு  கோடிகளிலும்,  ஆதாரத்திலிருந்து  புறப்படுகிற  நாலு  கொம்மைகள்  இருந்தது.  {1Kgs  7:34}

 

ஒவ்வொரு  ஆதாரத்தின்  தலைப்பிலும்  அரைமுழ  உயரமான  சக்கராகாரமும்,  ஒவ்வொரு  ஆதாரத்தினுடைய  தலைப்பின்மேலும்  அதிலிருந்து  புறப்படுகிற  அதின்  கைப்பிடிகளும்  சவுக்கைகளும்  இருந்தது.  {1Kgs  7:35}

 

அவைகளிலிருக்கிற  கைப்பிடிகளுக்கும்  சவுக்கைகளுக்கும்  இருக்கிற  சந்துகளிலே,  கேருபீன்கள்<cherubims>  சிங்கங்கள்  பேரீந்துகளுடைய  சித்திரங்களைத்  தீர்த்திருந்தான்;  சுற்றிலும்  ஒவ்வொன்றிலும்,  ஜலதாரைகளிலும்  இருக்கும்  இடங்களுக்குத்  தக்கதாய்ச்  செய்தான்.  {1Kgs  7:36}

 

இந்தப்பிரகாரமாக  அந்தப்  பத்து  ஆதாரங்களையும்  செய்தான்;  அவைகளெல்லாம்  ஒரே  வார்ப்பும்,  ஒரே  அளவும்,  ஒரேவித  கொத்துவேலையுமாயிருந்தது.  {1Kgs  7:37}

 

பத்து  வெண்கலக்  கொப்பரைகளையும்  உண்டாக்கினான்;  ஒவ்வொரு  கொப்பரை  நாற்பது  குடம்  பிடிக்கும்;  நாலுமுழ  அகலமான  ஒவ்வொரு  கொப்பரையும்  அந்தப்  பத்து  ஆதாரங்களில்  ஒவ்வொன்றின்மேலும்  வைக்கப்பட்டது.  {1Kgs  7:38}

 

ஐந்து  ஆதாரங்களை  ஆலயத்தின்  வலதுபுறத்திலும்,  ஐந்து  ஆதாரங்களை  ஆலயத்தின்  இடதுபுறத்திலும்  வைத்தான்;  கடல்தொட்டியைக்  கிழக்கில்  ஆலயத்தின்  வலதுபுறத்திலே  தெற்குக்கு  நேராக  வைத்தான்.  {1Kgs  7:39}

 

பின்பு  ஈராம்<Hiram>  கொப்பரைகளையும்  சாம்பல்  எடுக்கிற  கரண்டிகளையும்  கலங்களையும்  செய்தான்.  இவ்விதமாய்  ஈராம்<Hiram>  கர்த்தருடைய  ஆலயத்துக்காக  ராஜாவாகிய  சாலொமோனுக்குச்<Solomon>  செய்யவேண்டிய  எல்லா  வேலையையும்  செய்து  முடித்தான்.  {1Kgs  7:40}

 

அவைகள்  என்னவெனில்:  இரண்டு  தூண்களும்,  இரண்டு  தூண்களுடைய  முனையின்மேல்  இருக்கிற  இரண்டு  உருண்டைக்  கும்பங்களும்,  தூண்களுடைய  முனையின்மேல்  இருக்கிற  இரண்டு  உருண்டைக்  கும்பங்களை  மூடும்  இரண்டு  வலைப்  பின்னல்களும்,  {1Kgs  7:41}

 

தூண்களின்மேலுள்ள  இரண்டு  உருண்டைக்  கும்பங்களை  மூடும்படி  ஒவ்வொரு  வலைப்பின்னலுக்கும்  பண்ணின  இரண்டு  வரிசை  மாதளம்பழங்களும்,  ஆக  இரண்டு  வலைப்பின்னலுக்கும்  நானூறு  மாதளம்பழங்களும்,  {1Kgs  7:42}

 

பத்து  ஆதாரங்களும்,  ஆதாரங்களின்மேல்  வைத்த  பத்துக்  கொப்பரைகளும்,  {1Kgs  7:43}

 

ஒரு  கடல்தொட்டியும்,  கடல்தொட்டியின்  கீழிருக்கிற  பன்னிரண்டு  ரிஷபங்களும்,  {1Kgs  7:44}

 

செப்புச்சட்டிகளும்,  சாம்பல்  கரண்டிகளும்,  கலங்களும்  செய்தான்;  கர்த்தரின்  ஆலயத்துக்காக  ராஜாவாகிய  சாலொமோனுக்கு<Solomon>  ஈராம்<Hiram>  செய்த  இந்த  எல்லாப்  பணிமுட்டுகளும்  சுத்தமான  வெண்கலமாயிருந்தது.  {1Kgs  7:45}

 

யோர்தானுக்கு<Jordan>  அடுத்த  சமனான  பூமியிலே,  சுக்கோத்துக்கும்<Succoth>  சர்தானுக்கும்<Zarthan>  நடுவே  களிமண்தரையிலே  ராஜா  இவைகளை  வார்ப்பித்தான்.  {1Kgs  7:46}

 

இந்தச்  சகல  பணிமுட்டுகளின்  வெண்கலம்  மிகவும்  ஏராளமுமாயிருந்தபடியால்,  சாலொமோன்<Solomon>  அவைகளை  நிறுக்கவில்லை;  அதினுடைய  நிறை  இவ்வளவென்று  ஆராய்ந்து  பார்க்கவுமில்லை.  {1Kgs  7:47}

 

பின்னும்  கர்த்தருடைய  ஆலயத்துக்குத்  தேவையான  பணிமுட்டுகளையெல்லாம்  சாலொமோன்<Solomon>  உண்டாக்கினான்;  அவையாவன,  பொன்  பலிபீடத்தையும்,  சமுகத்தப்பங்களை  வைக்கும்  பொன்மேஜையையும்,  {1Kgs  7:48}

 

சந்நிதி  ஸ்தானத்திற்கு  முன்பாக  வைக்கும்  பசும்பொன்  விளக்குத்தண்டுகள்,  வலதுபுறமாக  ஐந்தையும்  இடதுபுறமாக  ஐந்தையும்,  பொன்னான  அதின்  பூக்களோடும்  விளக்குகளோடும்  கத்தரிகளோடுங்கூட  உண்டாக்கினான்.  {1Kgs  7:49}

 

பசும்பொன்  கிண்ணங்களையும்,  வெட்டுக்கத்திகளையும்,  கலங்களையும்,  கலயங்களையும்,  தூபகலசங்களையும்,  மகா  பரிசுத்தமான  உள்  ஆலயத்தினுடைய  கதவுகளின்  பொன்னான  முளைகளையும்,  தேவாலயமாகிய  மாளிகைக்  கதவுகளின்  பொன்னான  முளைகளையும்  செய்தான்.  {1Kgs  7:50}

 

இவ்விதமாய்  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  கர்த்தருடைய  ஆலயத்துக்காகச்  செய்த  வேலைகளெல்லாம்  முடிந்தது;  அப்பொழுது  சாலொமோன்<Solomon>  தன்  தகப்பனாகிய  தாவீது<David>  பரிசுத்தம்பண்ணும்படி  நேர்ந்துகொண்ட  வெள்ளியையும்  பொன்னையும்  பணிமுட்டுகளையும்  கொண்டுவந்து,  கர்த்தருடைய  ஆலயத்தின்  பொக்கிஷங்களில்  வைத்தான்.  {1Kgs  7:51}

 

அப்பொழுது  கர்த்தருடைய  உடன்படிக்கைப்  பெட்டியைச்  சீயோன்<Zion>  என்னும்  தாவீதின்<David>  நகரத்திலிருந்து  கொண்டுவரும்படி  சாலொமோன்<Solomon>  இஸ்ரவேலின்<Israel>  மூப்பரையும்,  கோத்திரப்  பிரபுக்களாகிய  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிலுள்ள  பிதாக்களின்  தலைவர்  அனைவரையும்,  எருசலேமில்<Jerusalem>  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  தன்னிடத்திலே  கூடிவரச்செய்தான்.  {1Kgs  8:1}

 

இஸ்ரவேல்<Israel>  மனுஷரெல்லாரும்  ஏழாம்  மாதமாகிய  ஏத்தானீம்மாதத்துப்<Ethanim>  பண்டிகையிலே,  ராஜாவாகிய  சாலொமோனிடத்தில்<Solomon>  கூடிவந்தார்கள்.  {1Kgs  8:2}

 

இஸ்ரவேலின்<Israel>  மூப்பர்  அனைவரும்  வந்திருக்கையில்,  ஆசாரியர்  கர்த்தருடைய  பெட்டியை  எடுத்து,  {1Kgs  8:3}

 

பெட்டியையும்,  ஆசரிப்புக்  கூடாரத்தையும்,  கூடாரத்திலிருந்த  பரிசுத்த  பணிமுட்டுகள்  அனைத்தையும்  சுமந்து  கொண்டுவந்தார்கள்;  ஆசாரியரும்,  லேவியரும்<Levites>,  அவைகளைச்  சுமந்தார்கள்.  {1Kgs  8:4}

 

ராஜாவாகிய  சாலொமோனும்<Solomon>  அவனோடேகூடின  இஸ்ரவேல்<Israel>  சபையனைத்தும்  பெட்டிக்கு  முன்பாக  நடந்து,  எண்ணிக்கையும்  கணக்குமில்லாத  திரளான  ஆடுகளையும்  மாடுகளையும்  பலியிட்டார்கள்.  {1Kgs  8:5}

 

அப்படியே  ஆசாரியர்கள்  கர்த்தருடைய  உடன்படிக்கைப்பெட்டியை  ஆலயத்தின்  சந்நிதி  ஸ்தானமாகிய  மகாபரிசுத்த  ஸ்தானத்திலே  கேருபீன்களுடைய<cherubims>  செட்டைகளின்கீழே  கொண்டுவந்து  வைத்தார்கள்.  {1Kgs  8:6}

 

கேருபீன்கள்<cherubims>  பெட்டியிருக்கும்  ஸ்தானத்திலே  தங்கள்  இரண்டு  செட்டைகளையும்  விரித்து,  உயர  இருந்து  பெட்டியையும்  அதின்  தண்டுகளையும்  மூடிக்கொண்டிருந்தது.  {1Kgs  8:7}

 

தண்டுகளின்  முனைகள்  சந்நிதி  ஸ்தானத்திற்கு  முன்னான  பரிசுத்த  ஸ்தலத்திலே  காணப்படத்தக்கதாய்  அந்தத்  தண்டுகளை  முன்னுக்கு  இழுத்தார்கள்;  ஆகிலும்  வெளியே  அவைகள்  காணப்படவில்லை;  அவைகள்  இந்நாள்வரைக்கும்  அங்கேதான்  இருக்கிறது.  {1Kgs  8:8}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்பட்டபின்  கர்த்தர்  அவர்களோடே  உடன்படிக்கை  பண்ணுகிறபோது,  மோசே<Moses>  ஓரேபிலே<Horeb>  அந்தப்  பெட்டியில்  வைத்த  இரண்டு  கற்பலகைகளே  அல்லாமல்  அதிலே  வேறொன்றும்  இருந்ததில்லை.  {1Kgs  8:9}

 

அப்பொழுது  ஆசாரியர்கள்  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  புறப்படுகையில்,  மேகமானது  கர்த்தருடைய  ஆலயத்தை  நிரப்பிற்று.  {1Kgs  8:10}

 

மேகத்தினிமித்தம்  ஆசாரியர்கள்  ஊழியஞ்செய்கிறதற்கு  நிற்கக்கூடாமற்  போயிற்று;  கர்த்தருடைய  மகிமை  கர்த்தருடைய  ஆலயத்தை  நிரப்பிற்று.  {1Kgs  8:11}

 

அப்பொழுது  சாலொமோன்<Solomon>:  காரிருளிலே  வாசம்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொன்னார்  என்றும்,  {1Kgs  8:12}

 

தேவரீர்  வாசம்பண்ணத்தக்க  வீடும்,  நீர்  என்றைக்கும்  தங்கத்தக்க  நிலையான  ஸ்தானமுமாகிய  ஆலயத்தை  உமக்குக்  கட்டினேன்  என்றும்  சொல்லி,  {1Kgs  8:13}

 

ராஜா  முகம்  திரும்பி,  இஸ்ரவேல்<Israel>  சபையையெல்லாம்  ஆசீர்வதித்தான்;  இஸ்ரவேல்<Israel>  சபையாரெல்லாரும்  நின்றார்கள்.  {1Kgs  8:14}

 

அவன்  சொன்னது:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்;  அவர்  என்  தகப்பனாகிய  தாவீதுக்குத்<David>  தம்முடைய  வாக்கினால்  சொன்னதைத்  தம்முடைய  கரத்தினால்  நிறைவேற்றினார்.  {1Kgs  8:15}

 

அவர்  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலை<Israel>  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணின  நாள்முதற்கொண்டு,  என்  நாமம்  விளங்கும்படி,  ஒரு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்று  நான்  இஸ்ரவேலுடைய<Israel>  எல்லாக்  கோத்திரங்களிலுமுள்ள  ஒரு  பட்டணத்தையும்  தெரிந்துகொள்ளாமல்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்<Israel>  அதிகாரியாயிருக்கும்படி  தாவீதையே<David>  தெரிந்துகொண்டேன்  என்றார்.  {1Kgs  8:16}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்கிற  விருப்பம்  என்  தகப்பனாகிய  தாவீதின்<David>  இருதயத்தில்  இருந்தது.  {1Kgs  8:17}

 

ஆனாலும்  கர்த்தர்  என்  தகப்பனாகிய  தாவீதை<David>  நோக்கி:  என்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டவேண்டும்  என்கிற  விருப்பம்  உன்  மனதிலே  இருந்தது  நல்லகாரியந்தான்.  {1Kgs  8:18}

 

ஆகிலும்  நீ  அந்த  ஆலயத்தைக்  கட்டமாட்டாய்,  உன்  கர்ப்பப்பிறப்பாகிய  உன்  குமாரனே  என்  நாமத்திற்கு  அந்த  ஆலயத்தைக்  கட்டுவான்  என்றார்.  {1Kgs  8:19}

 

இப்போதும்  கர்த்தர்  சொல்லிய  தம்முடைய  வார்த்தையை  நிறைவேற்றினார்;  கர்த்தர்  சொன்னபடியே,  நான்  என்  தகப்பனாகிய  தாவீதின்<David>  ஸ்தானத்தில்  எழும்பி,  இஸ்ரவேலின்<Israel>  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்து,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்திற்கு  ஆலயத்தைக்  கட்டினேன்.  {1Kgs  8:20}

 

கர்த்தர்  நம்முடைய  பிதாக்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணினபோது,  அவர்களோடே  பண்ணின  உடன்படிக்கை  இருக்கிற  பெட்டிக்காக  அதிலே  ஒரு  ஸ்தானத்தை  உண்டாக்கினேன்  என்றான்.  {1Kgs  8:21}

 

பின்பு  சாலொமோன்<Solomon>:  கர்த்தருடைய  பலிபீடத்திற்குமுன்னே  இஸ்ரவேல்<Israel>  சபையாரெல்லாருக்கும்  எதிராக  நின்று,  வானத்திற்கு  நேராய்த்  தன்  கைகளை  விரித்து:  {1Kgs  8:22}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தாவே,  மேலே  வானத்திலும்  கீழே  பூமியிலும்  உமக்கு  ஒப்பான  தேவன்  இல்லை;  தங்கள்  முழு  இருதயத்தோடும்  உமக்கு  முன்பாக  நடக்கிற  உமது  அடியாருக்கு  உடன்படிக்கையையும்  கிருபையையும்  காத்துவருகிறீர்.  {1Kgs  8:23}

 

தேவரீர்  என்  தகப்பனாகிய  தாவீது<David>  என்னும்  உம்முடைய  தாசனுக்குச்  செய்த  வாக்குத்தத்தத்தைக்  காத்தருளினீர்;  அதை  உம்முடைய  வாக்கினால்  சொன்னீர்;  இந்நாளில்  இருக்கிறபடி,  உம்முடைய  கரத்தினால்  அதை  நிறைவேற்றினீர்.  {1Kgs  8:24}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தாவே,  தேவரீர்  என்  தகப்பனாகிய  தாவீது<David>  என்னும்  உம்முடைய  தாசனை  நோக்கி:  நீ  எனக்கு  முன்பாக  நடந்ததுபோல,  உன்  குமாரரும்  எனக்கு  முன்பாக  நடக்கும்படி  தங்கள்  வழியைக்  காப்பார்களேயானால்,  இஸ்ரவேலின்<Israel>  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்  புருஷன்  எனக்கு  முன்பாக  உனக்கு  இல்லாமற்போவதில்லை  என்று  சொன்னதை  இப்பொழுது  அவனுக்கு  நிறைவேற்றும்.  {1Kgs  8:25}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனே,  என்  தகப்பனாகிய  தாவீது<David>  என்னும்  உம்முடைய  தாசனுக்குச்  சொன்ன  உம்முடைய  வார்த்தை  மெய்யென்று  விளங்குவதாக.  {1Kgs  8:26}

 

தேவன்  மெய்யாக  பூமியிலே  வாசம்பண்ணுவாரோ?  இதோ,  வானங்களும்  வானாதி  வானங்களும்  உம்மைக்  கொள்ளாதே;  நான்  கட்டின  இந்த  ஆலயம்  எம்மாத்திரம்?  {1Kgs  8:27}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  உமது  அடியேன்  இன்று  உமது  சந்நிதியில்  செய்கிற  விண்ணப்பத்தையும்  மன்றாட்டையும்  கேட்டு,  உமது  அடியேனுடைய  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  திருவுளத்தில்  கொண்டருளும்.  {1Kgs  8:28}

 

உமது  அடியேன்  இவ்விடத்திலே  செய்யும்  விண்ணப்பத்தைக்  கேட்கும்படி  என்னுடைய  நாமம்  விளங்குமென்று  நீர்  சொன்ன  ஸ்தலமாகிய  இந்த  ஆலயத்தின்மேல்  உம்முடைய  கண்கள்  இரவும்  பகலும்  திறந்திருப்பதாக.  {1Kgs  8:29}

 

உமது  அடியானும்,  இந்த  ஸ்தலத்திலே  விண்ணப்பஞ்  செய்யப்போகிற  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலும்<Israel>  பண்ணும்  ஜெபத்தைக்  கேட்டருளும்;  பரலோகமாகிய  உம்முடைய  வாசஸ்தலத்திலே  அதை  நீர்  கேட்பீராக,  கேட்டு  மன்னிப்பீராக.  {1Kgs  8:30}

 

ஒருவன்  தன்  அயலானுக்குக்  குற்றஞ்செய்திருக்கையில்,  இவன்  அவனை  ஆணையிடச்சொல்லும்போது,  அந்த  ஆணை  இந்த  ஆலயத்திலே  உம்முடைய  பலிபீடத்திற்கு  முன்  வந்தால்,  {1Kgs  8:31}

 

அப்பொழுது  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு,  துன்மார்க்கனுடைய  நடக்கையை  அவன்  தலையின்மேல்  சுமரப்பண்ணி,  அவனைக்  குற்றவாளியாகத்  தீர்க்கவும்,  நீதிமானுக்கு  அவனுடைய  நீதிக்குத்தக்கதாய்ச்  செய்து  அவனை  நீதிமானாக்கவும்  தக்கதாய்  உமது  அடியாரை  நியாயந்தீர்ப்பீராக.  {1Kgs  8:32}

 

உம்முடைய  ஜனங்களாகிய  இஸ்ரவேலர்<Israel>  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்ததினிமித்தம்  சத்துருவுக்கு  முன்பாக  முறிந்துபோய்,  உம்மிடத்திற்குத்  திரும்பி,  உம்முடைய  நாமத்தை  அறிக்கைபண்ணி,  இந்த  ஆலயத்துக்கு  நேராக  உம்மை  நோக்கி  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  செய்தால்,  {1Kgs  8:33}

 

பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு,  உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலின்<Israel>  பாவத்தை  மன்னித்து,  அவர்கள்  பிதாக்களுக்கு  நீர்  கொடுத்த  தேசத்துக்கு  அவர்களைத்  திரும்பிவரப்பண்ணுவீராக.  {1Kgs  8:34}

 

அவர்கள்  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்ததினால்  வானம்  அடைபட்டு  மழைபெய்யாதிருக்கும்போது,  அவர்கள்  இந்த  ஸ்தலத்திற்கு  நேராக  விண்ணப்பஞ்செய்து,  உம்முடைய  நாமத்தை  அறிக்கைபண்ணி,  தங்களை  தேவரீர்  கிலேசப்படுத்துகையில்  தங்கள்  பாவங்களை  விட்டுத்  திரும்பினால்,  {1Kgs  8:35}

 

பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு,  உமது  அடியாரும்  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலும்<Israel>  செய்த  பாவத்தை  மன்னித்து,  அவர்கள்  நடக்கவேண்டிய  நல்வழியை  அவர்களுக்குப்  போதித்து,  தேவரீர்  உமது  ஜனத்திற்குச்  சுதந்தரமாகக்  கொடுத்த  உமது  தேசத்தில்  மழைபெய்யக்  கட்டளையிடுவீராக.  {1Kgs  8:36}

 

தேசத்திலே  பஞ்சம்  உண்டாகிறபோதும்,  கொள்ளைநோய்  உண்டாகிறபோதும்,  வறட்சி,  சாவி,  வெட்டுக்கிளி,  பச்சைக்கிளி  உண்டாகிறபோதும்,  அவர்கள்  சத்துருக்கள்  தேசத்திலுள்ள  பட்டணங்களை  முற்றிக்கைபோடுகிறபோதும்,  யாதொரு  வாதையாகிலும்  யாதொரு  வியாதியாகிலும்  வருகிறபோதும்,  {1Kgs  8:37}

 

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேல்<Israel>  அனைவரிலும்  எந்த  மனுஷனானாலும்  தன்  இருதயத்தின்  வாதையை  உணர்ந்து,  இந்த  ஆலயத்துக்கு  நேராகத்  தன்  கைகளை  விரித்துச்  செய்யும்  சகல  விண்ணப்பத்தையும்,  சகல  வேண்டுதலையும்,  {1Kgs  8:38}

 

உம்முடைய  வாசஸ்தலமாகிய  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  கேட்டு  மன்னித்து,  {1Kgs  8:39}

 

தேவரீர்  எங்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  தேசத்தில்  அவர்கள்  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  உமக்குப்  பயப்படும்படிக்கு  தேவரீர்  ஒருவரே  எல்லா  மனுபுத்திரரின்  இருதயத்தையும்  அறிந்தவராதலால்,  நீர்  அவனவன்  இருதயத்தை  அறிந்திருக்கிறபடியே,  அவனவனுடைய  வழிகளுக்குத்தக்கதாகச்  செய்து,  அவனவனுக்குப்  பலன்  அளிப்பீராக.  {1Kgs  8:40}

 

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேல்<Israel>  ஜாதியல்லாத  அந்நிய  ஜாதியார்  உமது  மகத்துவமான  நாமத்தையும்,  உமது  பலத்த  கரத்தையும்,  உமது  ஓங்கிய  புயத்தையும்  கேள்விப்படுவார்களே.  {1Kgs  8:41}

 

அப்படிக்கொத்த  அந்நிய  ஜாதியானும்,  உமது  நாமத்தினிமித்தம்  தூரதேசத்திலிருந்து  வந்து,  இந்த  ஆலயத்துக்கு  நேராக  விண்ணப்பம்பண்ணினால்,  {1Kgs  8:42}

 

உமது  வாசஸ்தலமாகிய  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  அதைக்  கேட்டு,  பூமியின்  ஜனங்களெல்லாரும்  உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலைப்போல<Israel>  உமக்குப்  பயப்படும்படிக்கும்,  நான்  கட்டின  இந்த  ஆலயத்துக்கு  உம்முடைய  நாமம்  தரிக்கப்பட்டதென்று  அறியும்படிக்கும்,  உம்முடைய  நாமத்தை  அறியத்தக்கதாக,  அந்த  அந்நிய  ஜாதியான்  உம்மை  நோக்கி  வேண்டிக்கொள்வதின்படியெல்லாம்  தேவரீர்  செய்வீராக.  {1Kgs  8:43}

 

நீர்  உம்முடைய  ஜனங்களை  அனுப்பும்  வழியிலே  அவர்கள்  தங்கள்  சத்துருக்களோடு  யுத்தம்பண்ணப்  புறப்படும்போது,  நீர்  தெரிந்துகொண்ட  இந்த  நகரத்துக்கும்,  உம்முடைய  நாமத்துக்கு  நான்  கட்டின  இந்த  ஆலயத்துக்கும்  நேராகக்  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினால்,  {1Kgs  8:44}

 

பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  அவர்கள்  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  கேட்டு,  அவர்கள்  நியாயத்தை  விசாரிப்பீராக.  {1Kgs  8:45}

 

பாவஞ்செய்யாத  மனுஷன்  இல்லையே;  ஆகையால்,  அவர்கள்  உமக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்து,  தேவரீர்  அவர்கள்மேல்  கோபங்கொண்டு,  அவர்கள்  சத்துருக்கள்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுத்து,  அந்தச்  சத்துருக்கள்  அவர்களைத்  தூரத்திலாகிலும்  சமீபத்திலாகிலும்  இருக்கிற  தங்கள்  தேசத்திற்குச்  சிறைபிடித்துக்கொண்டுபோகும்போது,  {1Kgs  8:46}

 

அவர்கள்  சிறைப்பட்டுப்  போயிருக்கிற  தேசத்திலே  தங்களில்  உணர்வடைந்து,  மனந்திரும்பி:  நாங்கள்  பாவஞ்செய்து,  அக்கிரமம்பண்ணி,  துன்மார்க்கமாய்  நடந்தோம்  என்று  தங்கள்  சிறையிருப்பான  தேசத்திலே  உம்மை  நோக்கி  வேண்டுதல்  செய்து,  {1Kgs  8:47}

 

தங்களைச்  சிறைபிடித்துக்கொண்ட  தங்கள்  சத்துருக்களின்  தேசத்திலே  தங்கள்  முழு  இருதயத்தோடும்  தங்கள்  முழு  ஆத்துமாவோடும்  உம்மிடத்தில்  திரும்பி,  தேவரீர்  தங்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  தங்கள்  தேசத்திற்கும்,  தேவரீர்  தெரிந்துகொண்ட  இந்த  நகரத்திற்கும்,  உம்முடைய  நாமத்திற்கு  நான்  கட்டின  இந்த  ஆலயத்திற்கும்  நேராக  உம்மை  நோக்கி  விண்ணப்பம்பண்ணும்போது,  {1Kgs  8:48}

 

உமது  வாசஸ்தலமாகிய  பரலோகத்தில்  இருக்கிற  தேவரீர்  அவர்கள்  விண்ணப்பத்தையும்  வேண்டுதலையும்  கேட்டு,  அவர்கள்  நியாயத்தை  விசாரித்து,  {1Kgs  8:49}

 

உம்முடைய  ஜனங்கள்  உமக்கு  விரோதமாய்ச்  செய்த  பாவத்தையும்,  அவர்கள்  உம்முடைய  கட்டளையை  மீறிய  அவர்கள்  துரோகங்களையும்  எல்லாம்  மன்னித்து,  அவர்களைச்  சிறைபிடித்துக்  கொண்டுபோகிறவர்கள்  அவர்களுக்கு  இரங்கத்தக்கதான  இரக்கத்தை  அவர்களுக்குக்  கிடைக்கப்பண்ணுவீராக.  {1Kgs  8:50}

 

அவர்கள்  எகிப்தென்கிற<Egypt>  இருப்புக்  காளவாயின்  நடுவிலிருந்து  தேவரீர்  புறப்படப்பண்ணின  உம்முடைய  ஜனமும்  உம்முடைய  சுதந்தரமுமாய்  இருக்கிறார்களே.  {1Kgs  8:51}

 

அவர்கள்  உம்மை  நோக்கி  வேண்டிக்கொள்வதின்படியெல்லாம்  தேவரீர்  அவர்களுக்குச்  செய்யும்படி,  உம்முடைய  கண்கள்  உமது  அடியானின்  வேண்டுதலுக்கும்,  உமது  ஜனமாகிய  இஸ்ரவேலின்<Israel>  வேண்டுதலுக்கும்  திறந்திருப்பதாக.  {1Kgs  8:52}

 

கர்த்தராகிய  ஆண்டவரே,  நீர்  எங்கள்  பிதாக்களை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணும்போது,  உம்முடைய  தாசனாகிய  மோசேயைக்கொண்டு<Moses>  சொன்னபடியே,  தேவரீர்  பூமியின்  சகல  ஜனங்களிலும்  அவர்களை  உமக்குச்  சுதந்தரமாகப்  பிரித்தெடுத்தீரே  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  {1Kgs  8:53}

 

சாலொமோன்<Solomon>  கர்த்தரை  நோக்கி,  இந்த  ஜெபத்தையும்  வேண்டுதலையும்  எல்லாம்  செய்து  முடித்தபின்பு,  அவன்  கர்த்தருடைய  பலிபீடத்திற்கு  முன்பாகத்  தன்  கைகளை  வானத்திற்கு  நேராக  விரித்து,  முழங்காற்படியிட்டிருந்ததை  விட்டெழுந்து,  {1Kgs  8:54}

 

நின்றுகொண்டு,  இஸ்ரவேல்<Israel>  சபையையெல்லாம்  ஆசீர்வதித்து,  உரத்த  சத்தத்தோடே  சொன்னது:  {1Kgs  8:55}

 

தாம்  வாக்குத்தத்தம்  பண்ணினபடியெல்லாம்  தம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  இளைப்பாறுதலை  அருளின  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்,  அவர்  தம்முடைய  தாசனாகிய  மோசேயைக்கொண்டு<Moses>  சொன்ன  அவருடைய  நல்வார்த்தைகளில்  எல்லாம்  ஒரு  வார்த்தையானாலும்  தவறிப்போகவில்லை.  {1Kgs  8:56}

 

நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  நம்மைக்  கைவிடாமலும்,  நம்மை  நெகிழவிடாமலும்,  அவர்  நம்முடைய  பிதாக்களோடு  இருந்ததுபோல,  நம்மோடும்  இருந்து,  {1Kgs  8:57}

 

நாம்  அவருடைய  வழிகளில்  எல்லாம்  நடக்கிறதற்கும்,  அவர்  நம்முடைய  பிதாக்களுக்குக்  கட்டளையிட்ட  அவருடைய  கற்பனைகளையும்,  அவருடைய  கட்டளைகளையும்,  அவருடைய  நியாயங்களையும்  கைக்கொள்ளுகிறதற்கும்,  நம்முடைய  இருதயத்தைத்  தம்மிடத்தில்  சாயப்பண்ணுவாராக.  {1Kgs  8:58}

 

கர்த்தரே  தேவன்,  வேறொருவரும்  இல்லையென்பதைப்  பூமியின்  ஜனங்களெல்லாம்  அறியும்படியாக,  {1Kgs  8:59}

 

அவர்  தமது  அடியானுடைய  நியாயத்தையும்,  தமது  ஜனமாகிய  இஸ்ரவேலின்<Israel>  நியாயத்தையும்,  அந்தந்த  நாளில்  நடக்கும்  காரியத்துக்குத்தக்கதாய்  விசாரிப்பதற்கு,  நான்  கர்த்தருக்கு  முன்பாக  விண்ணப்பம்பண்ணின  இந்த  என்னுடைய  வார்த்தைகள்  இரவும்பகலும்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  இருப்பதாக.  {1Kgs  8:60}

 

ஆதலால்  இந்நாளில்  இருக்கிறதுபோல,  நீங்கள்  அவர்  கட்டளைகளில்  நடந்து,  அவர்  கற்பனைகளைக்  கைக்கொள்ள,  உங்கள்  இருதயம்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரோடு  உத்தமமாய்  இருக்கக்கடவது  என்றான்.  {1Kgs  8:61}

 

பின்பு  ராஜாவும்  அவனோடே  இருந்த  இஸ்ரவேலர்<Israel>  அனைவரும்,  கர்த்தருடைய  சந்நிதியில்  பலிகளைச்  செலுத்தினார்கள்.  {1Kgs  8:62}

 

சாலொமோன்<Solomon>  கர்த்தருக்குச்  சமாதானபலிகளாக,  இருபத்தீராயிரம்  மாடுகளையும்,  இலட்சத்திருபதினாயிரம்  ஆடுகளையும்  பலியிட்டான்;  இவ்விதமாய்  ராஜாவும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அனைவரும்  கர்த்தருடைய  ஆலயத்தைப்  பிரதிஷ்டைபண்ணினார்கள்.  {1Kgs  8:63}

 

கர்த்தருடைய  சந்நிதியில்  இருந்த  வெண்கலப்  பலிபீடம்  சர்வாங்க  தகனபலிகளையும்,  போஜனபலிகளையும்,  சமாதான  பலிகளின்  நிணத்தையும்  கொள்ளமாட்டாமல்  சிறிதாயிருந்தபடியினால்,  ராஜா  கர்த்தருடைய  ஆலயத்திற்குமுன்  இருக்கிற  பிராகாரத்தின்  நடுமையத்தைப்  பரிசுத்தப்படுத்தி,  அன்றையதினம்  அங்கே  சர்வாங்க  தகனபலிகளையும்,  போஜனபலிகளையும்,  சமாதான  பலிகளின்  நிணத்தையும்  செலுத்தினான்.  {1Kgs  8:64}

 

அக்காலத்தில்தானே  சாலொமோனும்<Solomon>,  ஆமாத்தின்<Hamath>  எல்லைதொடங்கி  எகிப்தின்<Egypt>  நதிமட்டும்  இருந்துவந்து,  அவனோடே  இருந்த  பெரிய  கூட்டமாகிய  இஸ்ரவேல்<Israel>  அனைத்தும்  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  ஏழுநாளும்,  அதற்குப்பின்பு  வேறே  ஏழுநாளும்,  ஆகப்  பதினாலு  நாள்வரைக்கும்  பண்டிகையை  ஆசரித்தார்கள்.  {1Kgs  8:65}

 

எட்டாம்நாளிலே  ஜனங்களுக்கு  விடைகொடுத்து  அனுப்பினான்;  அவர்கள்  ராஜாவை  வாழ்த்தி,  கர்த்தர்  தமது  தாசனாகிய  தாவீதுக்கும்<David>  தமது  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கும்<Israel>  செய்த  எல்லா  நன்மைக்காகவும்  சந்தோஷப்பட்டு  மனமகிழ்ச்சியோடே  தங்கள்  கூடாரங்களுக்குப்  போய்விட்டார்கள்.  {1Kgs  8:66}

 

சாலொமோன்<Solomon>  கர்த்தருடைய  ஆலயத்தையும்  ராஜ  அரமனையையும்,  தான்  செய்யவேண்டும்  என்று  விரும்பின  எல்லாவற்றையும்  கட்டி  முடித்தபின்பு,  {1Kgs  9:1}

 

கர்த்தர்  கிபியோனிலே<Gibeon>  சாலொமோனுக்குத்<Solomon>  தரிசனமானதுபோல,  இரண்டாந்தரமும்  அவனுக்குத்  தரிசனமானார்.  {1Kgs  9:2}

 

கர்த்தர்  அவனை  நோக்கி:  நீ  என்  சமுகத்தில்  செய்த  உன்  விண்ணப்பத்தையும்  உன்  வேண்டுதலையும்  கேட்டேன்;  நீ  கட்டின  இந்த  ஆலயத்தில்  என்  நாமம்  என்றைக்கும்  விளங்கத்தக்கதாக,  அதைப்  பரிசுத்தமாக்கினேன்;  என்  கண்களும்  என்  இருதயமும்  எந்நாளும்  அங்கேயிருக்கும்.  {1Kgs  9:3}

 

நான்  உனக்குக்  கட்டளையிட்ட  எல்லாவற்றையும்  நீ  செய்து,  என்  கட்டளைகளையும்  என்  நியாயங்களையும்  கைக்கொள்ளும்படிக்கு,  என்  சமுகத்தில்  மன  உத்தமமும்  செம்மையுமாய்  உன்  தகப்பனாகிய  தாவீது<David>  நடந்ததுபோல  நடப்பாயானால்,  {1Kgs  9:4}

 

இஸ்ரவேலின்<Israel>  சிங்காசனத்தின்மேல்  உட்காரும்  புருஷன்  உனக்கு  இல்லாமற்போவதில்லை  என்று  உன்  தகப்பனாகிய  தாவீதோடே<David>  நான்  சொன்னபடியே,  இஸ்ரவேலின்மேலுள்ள<Israel>  உன்  ராஜ்யபாரத்தின்  சிங்காசனத்தை  என்றைக்கும்  நிலைக்கப்பண்ணுவேன்.  {1Kgs  9:5}

 

நீங்களும்  உங்கள்  பிள்ளைகளும்  என்னைவிட்டுப்  பின்வாங்கி,  நான்  உங்களுக்கு  முன்வைத்த  என்  கற்பனைகளையும்  என்  கட்டளைகளையும்  கைக்கொள்ளாமற்போய்,  வேறே  தேவர்களைச்  சேவித்து,  அவைகளைப்  பணிந்துகொள்வீர்களாகில்,  {1Kgs  9:6}

 

நான்  இஸ்ரவேலுக்குக்<Israel>  கொடுத்த  தேசத்திலே  அவர்களை  வைக்காதபடிக்கு  நிர்மூலமாக்கி,  என்  நாமம்  விளங்க  நான்  பரிசுத்தமாக்கின  இந்த  ஆலயத்தை  என்  சமுகத்தைவிட்டுத்  தள்ளுவேன்;  அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  சகல  ஜனங்களுக்குள்ளும்  பழமொழியாகவும்  வசைச்சொல்லாகவும்  இருப்பார்கள்.  {1Kgs  9:7}

 

அப்பொழுது  உன்னதமாயிருக்கிற  இந்த  ஆலயத்தைக்  கடந்துபோகிறவன்  எவனும்  பிரமித்து,  பகிடியாய்  ஈசலிட்டு:  கர்த்தர்  இந்த  தேசத்துக்கும்  இந்த  ஆலயத்துக்கும்  இப்படிச்  செய்தது  என்ன?  என்று  கேட்பார்கள்.  {1Kgs  9:8}

 

அதற்கு  அவர்கள்:  தங்கள்  பிதாக்களை  எகிப்து<Egypt>  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணின  தங்கள்  தேவனாகிய  கர்த்தரைவிட்டு,  வேறே  தேவர்களைப்  பற்றிக்கொண்டு,  அவர்களை  நமஸ்கரித்துச்  சேவித்தபடியினால்,  கர்த்தர்  இந்தத்  தீங்கையெல்லாம்  அவர்கள்மேல்  வரப்பண்ணினார்  என்று  சொல்லுவார்கள்  என்றார்.  {1Kgs  9:9}

 

சாலொமோன்<Solomon>  கர்த்தருடைய  ஆலயமும்  ராஜ  அரமனையுமாகிய  இரண்டு  மாளிகைகளையும்  கட்டி  நிறைவேற்றுகிற  இருபதாம்  வருஷம்  முடிவிலே,  {1Kgs  9:10}

 

தன்னுடைய  விருப்பத்தின்படியெல்லாம்  தனக்குக்  கேதுருமரங்களையும்,  தேவதாரி  விருட்சங்களையும்,  பொன்னையும்  கொடுத்துவந்த  தீருவின்<Tyre>  ராஜாவாகிய  ஈராமுக்கு<Hiram>,  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  கலிலேயா<Galilee>  நாட்டிலுள்ள  இருபது  பட்டணங்களைக்  கொடுத்தான்.  {1Kgs  9:11}

 

ஈராம்<Hiram>  தனக்குச்  சாலொமோன்<Solomon>  கொடுத்த  பட்டணங்களைப்  பார்க்கிறதற்குத்  தீருவிலிருந்து<Tyre>  புறப்பட்டுவந்தான்;  அவைகளில்  அவன்  பிரியப்படவில்லை.  {1Kgs  9:12}

 

அதனாலே  அவன்:  என்  சகோதரனே,  நீர்  எனக்குக்  கொடுத்த  இந்தப்  பட்டணங்கள்  என்ன  பட்டணங்கள்?  என்றான்.  அவைகளுக்கு  இந்நாள்மட்டும்  வழங்கி  வருகிறபடி  காபூல்<Cabul>  நாடு  என்று  பேரிட்டான்.  {1Kgs  9:13}

 

ஈராம்<Hiram>  ராஜாவுக்கு  நூற்றிருபது  தாலந்து  பொன்  அனுப்பியிருந்தான்.  {1Kgs  9:14}

 

பிடித்த  அமஞ்சி  ஆட்களைக்கொண்டு  சாலொமோன்<Solomon>  ராஜா  தான்  கர்த்தருடைய  ஆலயத்தையும்,  தன்  அரமனையையும்,  மில்லோவையும்<Millo>,  எருசலேமின்<Jerusalem>  மதிலையும்,  ஆத்சோரையும்<Hazor>,  மெகிதோவையும்<Megiddo>,  கேசேரையும்<Gezer>  கட்டினான்.  {1Kgs  9:15}

 

கேசேரை<Gezer>  ஏன்  கட்டினான்  என்றால்,  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோன்<Pharaoh>  புறப்பட்டுவந்து,  அந்தக்  கேசேர்பட்டணத்தைப்<Gezer>  பிடித்து,  அதை  அக்கினியால்  சுட்டெரித்து,  அதிலே  குடியிருந்த  கானானியரைக்<Canaanites>  கொன்றுபோட்டு,  அதைச்  சாலொமோனின்<Solomon's>  மனைவியாகிய  தன்  குமாரத்திக்குச்  சீதனமாகக்  கொடுத்திருந்தான்.  {1Kgs  9:16}

 

சாலொமோன்<Solomon>  அந்தக்  கேசேர்பட்டணத்தையும்<Gezer>,  கீழ்ப்பெத்தொரோனையும்<Bethhoron>,  {1Kgs  9:17}

 

பாலாத்தையும்<Baalath>,  வனாந்தரவெளியிலுள்ள  தத்மோரையும்<Tadmor>,  {1Kgs  9:18}

 

தனக்கு  இருக்கிற  ரஸ்துக்களை  வைக்கும்  சகல  பட்டணங்களையும்,  இரதங்கள்  இருக்கும்  பட்டணங்களையும்,  குதிரை  வீரர்  இருக்கும்  பட்டணங்களையும்,  எருசலேமிலும்<Jerusalem>  லீபனோனிலும்<Lebanon>,  தான்  அரசாண்ட  தேசமெங்கும்  தனக்கு  இஷ்டமானதையெல்லாம்  கட்டினான்.  {1Kgs  9:19}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  சங்காரம்  பண்ணக்கூடாமல்  மீந்திருந்த  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  ஜாதியல்லாத  எமோரியர்<Amorites>,  ஏத்தியர்<Hittites>,  பெரிசியர்<Perizzites>,  ஏவியர்<Hivites>,  எபூசியருமான<Jebusites>  சகல  ஜனத்திலும்,  {1Kgs  9:20}

 

அவர்களுக்குப்  பிறகு  தேசத்தில்  மீந்திருந்த  சகல  ஜனங்களுடைய  பிள்ளைகளையும்,  சாலொமோன்<Solomon>  இந்நாள்வரைக்கும்  நடக்கிறதுபோல,  அமஞ்சிவேலை  செய்ய  அடிமைப்படுத்திக்கொண்டான்.  {1Kgs  9:21}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  ஒருவரையும்  சாலொமோன்<Solomon>  அடிமைப்படுத்தவில்லை;  அவர்கள்  யுத்தமனுஷரும்,  அவனுக்குப்  பணிவிடைக்காரரும்,  பிரபுக்களும்,  சேர்வைக்காரரும்,  இரதவீரரும்,  குதிரைவீரருமாயிருந்தார்கள்.  {1Kgs  9:22}

 

ஐந்நூற்றைம்பதுபேர்  சாலொமோனின்<Solomon>  வேலையை  விசாரித்து,  வேலையாட்களைக்  கண்காணிக்கிறதற்குத்  தலைமையான  விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.  {1Kgs  9:23}

 

பார்வோனின்<Pharaoh>  குமாரத்தி,  தாவீதின்<David>  நகரத்திலிருந்து  சாலொமோன்<Solomon>  தனக்குக்  கட்டின  தன்  மாளிகையிலே  குடிவந்தாள்;  அப்பொழுது  மில்லோவைக்<Millo>  கட்டினான்.  {1Kgs  9:24}

 

சாலொமோன்<Solomon>  கர்த்தரின்  ஆலயத்தை  முடித்தபின்பு,  அவருக்குக்  கட்டின  பலிபீடத்தின்மேல்  வருஷத்தில்  மூன்றுமுறை  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதான  பலிகளையும்  இட்டு,  கர்த்தரின்  சந்நிதியில்  இருக்கிற  பலிபீடத்தின்மேல்  தூபங்காட்டிவந்தான்.  {1Kgs  9:25}

 

ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  ஏதோம்<Edom>  தேசத்தில்  சிவந்த  சமுத்திரக்கரையிலே<Red  sea>  ஏலோத்துக்குச்<Eloth>  சமீபத்திலுள்ள  எசியோன்கேபேரிலே<Eziongeber>  கப்பல்களைச்  செய்வித்தான்.  {1Kgs  9:26}

 

அந்தக்  கப்பல்களில்  ஈராம்<Hiram>  சமுத்திர  யாத்திரையில்  பழகின  கப்பலாட்களாகிய  தன்  வேலைக்காரரைச்  சாலொமோனுடைய<Solomon>  வேலைக்காரரோடேகூட  அனுப்பினான்.  {1Kgs  9:27}

 

அவர்கள்  ஓப்பீருக்குப்போய்<Ophir>,  அவ்விடத்திலிருந்து  நானூற்று  இருபது  தாலந்து  பொன்னை  ராஜாவாகிய  சாலொமோனிடத்தில்<Solomon>  கொண்டுவந்தார்கள்.  {1Kgs  9:28}

 

கர்த்தருடைய  நாமத்தைக்குறித்துச்  சாலொமோனுக்கு<Solomon>  உண்டாயிருந்த  கீர்த்தி  சேபாவின்<Sheba>  ராஜஸ்திரீக்குக்  கேள்வியானபோது,  அவள்  விடுகதைகளினால்  அவனைச்  சோதிக்கிறதற்காக,  {1Kgs  10:1}

 

மிகுந்த  பரிவாரத்தோடும்,  கந்தவர்க்கங்களையும்,  மிகுதியான  பொன்னையும்  இரத்தினங்களையும்  சுமக்கிற  ஒட்டகங்களோடும்,  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தாள்;  அவள்  சாலொமோனிடத்தில்<Solomon>  வந்தபோது,  தன்  மனதில்  இருந்த  எல்லாவற்றையுங்குறித்து  அவனிடத்தில்  சம்பாஷித்தாள்.  {1Kgs  10:2}

 

அப்பொழுது  சாலொமோன்<Solomon>  அவள்  கேட்டவைகளையெல்லாம்  விடுவித்தான்,  அவளுக்கு  விடுவிக்கக்கூடாதபடிக்கு,  ஒன்றாகிலும்  ராஜாவுக்கு  மறைபொருளாயிருக்கவில்லை.  {1Kgs  10:3}

 

சேபாவின்<Sheba>  ராஜஸ்திரீ  சாலொமோனுடைய<Solomon>  சகல  ஞானத்தையும்,  அவன்  கட்டின  அரமனையையும்,  {1Kgs  10:4}

 

அவன்  பந்தியின்  போஜனபதார்த்தங்களையும்,  அவன்  ஊழியக்காரரின்  வீடுகளையும்,  அவன்  உத்தியோகஸ்தரின்  வரிசையையும்,  அவர்கள்  வஸ்திரங்களையும்,  அவனுடைய  பானபாத்திரக்காரரையும்,  அவன்  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கும்  நடைமண்டபத்தையும்  கண்டபோது  அவள்  ஆச்சரியத்தால்  பிரமைகொண்டு,  {1Kgs  10:5}

 

ராஜாவை  நோக்கி:  உம்முடைய  வர்த்தமானங்களையும்  உம்முடைய  ஞானத்தையும்  குறித்து  நான்  என்  தேசத்தில்  கேட்ட  செய்தி  மெய்யாயிற்று.  {1Kgs  10:6}

 

நான்  வந்து  அதை  என்  கண்களால்  காணுமட்டும்  அந்த  வார்த்தைகளை  நான்  நம்பவில்லை;  இவைகளில்  பாதியாகிலும்  எனக்கு  அறிவிக்கப்படவில்லை  என்று  காண்கிறேன்;  நான்  கேள்விப்பட்ட  பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும்,  உம்முடைய  ஞானமும்  செல்வமும்  அதிகமாயிருக்கிறது.  {1Kgs  10:7}

 

உம்முடைய  ஜனங்கள்  பாக்கியவான்கள்;  எப்போதும்  உமக்கு  முன்பாக  நின்று,  உம்முடைய  ஞானத்தைக்  கேட்கிற  உம்முடைய  ஊழியக்காரரும்  பாக்கியவான்கள்.  {1Kgs  10:8}

 

உம்மை  இஸ்ரவேலின்<Israel>  சிங்காசனத்தின்மேல்  வைக்க,  உம்மேல்  பிரியங்கொண்ட  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஸ்தோத்திரிக்கப்படுவாராக:  கர்த்தர்  இஸ்ரவேலை<Israel>  என்றைக்கும்  சிநேகிக்கிறபடியினால்,  நியாயமும்  நீதியும்  செய்கிறதற்கு  உம்மை  ராஜாவாக  ஏற்படுத்தினார்  என்றாள்.  {1Kgs  10:9}

 

அவள்  ராஜாவுக்கு  நூற்றிருபது  தாலந்து  பொன்னையும்,  மிகுதியான  கந்தவர்க்கங்களையும்,  இரத்தினங்களையும்  கொடுத்தாள்;  சேபாவின்<Sheba>  ராஜஸ்திரீ  ராஜாவாகிய  சாலொமோனுக்குக்<Solomon>  கொடுத்த  அவ்வளவு  கந்தவர்க்கங்கள்  பிற்பாடு  ஒருக்காலும்  வரவில்லை.  {1Kgs  10:10}

 

ஓப்பீரிலிருந்து<Ophir>  பொன்னைக்  கொண்டுவருகிற  ஈராமின்<Hiram>  கப்பல்களும்,  ஓப்பீரிலிருந்து<Ophir>  மிகுந்த  வாசனைமரங்களையும்  இரத்தினங்களையும்  கொண்டுவந்தது.  {1Kgs  10:11}

 

அந்த  வாசனைமரங்களால்  ராஜா  கர்த்தருடைய  ஆலயத்திற்கும்  ராஜ  அரமனைக்கும்  ஊன்றுகால்களையும்,  சங்கீதக்காரருக்குச்  சுரமண்டலங்களையும்  தம்புருகளையும்  உண்டாக்கினான்;  அப்படிப்பட்ட  வாசனைமரங்கள்  பிற்பாடு  வந்ததுமில்லை,  இந்நாள்வரைக்கும்  காணப்படவுமில்லை.  {1Kgs  10:12}

 

ராஜாவாகிய  சாலொமோன்தானே<Solomon>  சந்தோஷமாய்ச்  சேபாவின்<Sheba>  ராஜஸ்திரீக்கு  வெகுமதிகள்  கொடுத்ததும்  அல்லாமல்,  அவள்  விருப்பப்பட்டுக்  கேட்டது  எல்லாவற்றையும்  அவளுக்குக்  கொடுத்தான்;  பின்பு  அவள்  தன்  பரிவாரத்தோடே  தன்  தேசத்திற்குத்  திரும்பிப்  போனாள்.  {1Kgs  10:13}

 

சாலொமோனுக்கு<Solomon>  வியாபாரிகளாலும்,  சுகந்த  திரவிய  வர்த்தகராலும்,  அரபிதேசத்து<Arabia>  சகல  ராஜாக்களாலும்,  மாகாணங்களின்  அதிபதிகளாலும்  வந்த  பொன்னையல்லாமல்,  {1Kgs  10:14}

 

ஒவ்வொரு  வருஷத்தில்  அவனுக்கு  வந்த  பொன்  அறுநூற்று  அறுபத்தாறு  தாலந்து  நிறையாயிருந்தது.  {1Kgs  10:15}

 

சாலொமோன்<Solomon>  ராஜா,  அடித்த  பொன்தகட்டால்  இருநூறு  பரிசைகளைச்  செய்வித்தான்;  ஒவ்வொரு  பரிசைக்கு  அறுநூறு  சேக்கல்  நிறைபொன்  சென்றது.  {1Kgs  10:16}

 

அடித்த  பொன்தகட்டால்  முந்நூறு  கேடகங்களையும்  செய்வித்தான்;  ஒவ்வொரு  கேடகத்திற்கும்  மூன்று  இராத்தல்  பொன்  சென்றது;  அவைகளை  ராஜா  லீபனோன்<Lebanon>  வனம்  என்னும்  மாளிகையிலே  வைத்தான்.  {1Kgs  10:17}

 

ராஜா  தந்தத்தினால்  பெரிய  ஒரு  சிங்காசனத்தையும்  செய்வித்து,  அதைப்  பசும்பொன்தகட்டால்  மூடினான்.  {1Kgs  10:18}

 

அந்தச்  சிங்காசனத்திற்கு  ஆறு  படிகள்  இருந்தது;  சிங்காசனத்தின்  தலைப்பு  பின்னாக  வளைவாயிருந்தது;  உட்காரும்  இடத்திற்கு  இருபுறமும்  கைச்  சாய்மானங்கள்  இருந்தது;  இரண்டு  சிங்கங்கள்  கைச்சாய்மானங்கள்  அருகே  நின்றது.  {1Kgs  10:19}

 

ஆறு  படிகளின்மேலும்,  இரண்டு  பக்கத்திலும்,  பன்னிரண்டு  சிங்கங்கள்  நின்றது;  எந்த  ராஜ்யத்திலும்  இப்படிப்  பண்ணப்படவில்லை.  {1Kgs  10:20}

 

ராஜாவாகிய  சாலொமோனுக்கு<Solomon>  இருந்த  பானபாத்திரங்களெல்லாம்  பொன்னும்,  லீபனோன்<Lebanon>  வனம்  என்கிற  மாளிகையின்  பணிமுட்டுகளெல்லாம்  பசும்பொன்னுமாயிருந்தது;  ஒன்றும்  வெள்ளியினால்  செய்யப்படவில்லை;  சாலொமோனின்<Solomon>  நாட்களில்  வெள்ளி  ஒரு  பொருளாய்  எண்ணப்படவில்லை.  {1Kgs  10:21}

 

ராஜாவுக்குச்  சமுத்திரத்திலே  ஈராமின்<Hiram>  கப்பல்களோடேகூடத்  தர்ஷீசின்<Tharshish>  கப்பல்களும்  இருந்தது;  தர்ஷீசின்<Tharshish>  கப்பல்கள்  மூன்று  வருஷத்துக்கு  ஒருதரம்  பொன்னையும்,  வெள்ளியையும்,  யானைத்  தந்தங்களையும்,  குரங்குகளையும்,  மயில்களையும்  கொண்டுவரும்.  {1Kgs  10:22}

 

பூமியின்  சகல  ராஜாக்களைப்பார்க்கிலும்,  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  ஐசுவரியத்திலும்  ஞானத்திலும்  சிறந்தவனாயிருந்தான்.  {1Kgs  10:23}

 

சாலொமோனின்<Solomon>  இருதயத்திலே  தேவன்  அருளிய  ஞானத்தைக்  கேட்கிறதற்காக,  சகல  தேசத்தாரும்  அவன்  முகதரிசனத்தைத்  தேடினார்கள்.  {1Kgs  10:24}

 

வருஷாவருஷம்  அவரவர்  தங்கள்  காணிக்கையாகிய  வெள்ளிப்பாத்திரங்களையும்,  பொற்பாத்திரங்களையும்,  வஸ்திரங்களையும்,  ஆயுதங்களையும்,  கந்தவர்க்கங்களையும்,  குதிரைகளையும்,  கோவேறு  கழுதைகளையும்  கொண்டுவருவார்கள்.  {1Kgs  10:25}

 

சாலொமோன்<Solomon>  இரதங்களையும்  குதிரைவீரரையும்  சேர்த்தான்;  அவனுக்கு  ஆயிரத்து  நானூறு  இரதங்கள்  இருந்தது,  பன்னீராயிரம்  குதிரைவீரரும்  இருந்தார்கள்;  அவைகளை  இரதங்கள்  வைக்கும்  பட்டணங்களிலும்,  அவர்களை  எருசலேமில்<Jerusalem>  தன்னிடத்திலும்  வைத்திருந்தான்.  {1Kgs  10:26}

 

எருசலேமிலே<Jerusalem>  ராஜா  வெள்ளியைக்  கற்கள்போலவும்,  கேதுருமரங்களைப்  பள்ளத்தாக்குகளில்  இருக்கும்  காட்டத்தி  மரங்கள்போலவும்  அதிகமாக்கினான்.  {1Kgs  10:27}

 

சாலொமோன்<Solomon>  தனக்குக்  குதிரைகளையும்  புடவைகளையும்  எகிப்திலிருந்து<Egypt>  அழைப்பித்தான்;  ராஜாவின்  வர்த்தகர்  புடவைகளை  ஒப்பந்த  விலைக்கிரயத்திற்கு  வாங்கினார்கள்.  {1Kgs  10:28}

 

எகிப்திலிருந்து<Egypt>  வந்த  ஒவ்வொரு  இரதத்தின்  விலை  அறுநூறு  வெள்ளிக்காசும்,  ஒவ்வொரு  குதிரையின்  விலை  நூற்றைம்பது  வெள்ளிக்காசுமாயிருந்தது;  இந்தப்பிரகாரம்  ஏத்தியரின்<Hittites>  ராஜாக்களெல்லாருக்கும்,  சீரியாவின்<Syria>  ராஜாக்களுக்கும்,  அவர்கள்  மூலமாய்க்  கொண்டுவரப்பட்டது.  {1Kgs  10:29}

 

ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>,  பார்வோனின்<Pharaoh>  குமாரத்தியை  நேசித்ததுமல்லாமல்,  மோவாபியரும்<Moabites>,  அம்மோனியரும்<Ammonites>,  ஏதோமியரும்<Edomites>,  சீதோனியரும்<Zidonians>,  ஏத்தியருமாகிய<Hittites>  அந்நிய  ஜாதியாரான  அநேகம்  ஸ்திரீகள்மேலும்  ஆசைவைத்தான்.  {1Kgs  11:1}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  நோக்கி:  நீங்கள்  அவர்களண்டைக்கும்  அவர்கள்  உங்களண்டைக்கும்  பிரவேசிக்கலாகாது;  அவர்கள்  நிச்சயமாய்த்  தங்கள்  தேவர்களைப்  பின்பற்றும்படி  உங்கள்  இருதயத்தைச்  சாயப்பண்ணுவார்கள்  என்று  சொல்லியிருந்தார்;  சாலொமோன்<Solomon>  அவர்கள்மேல்  ஆசைவைத்து,  அவர்களோடு  ஐக்கியமாயிருந்தான்.  {1Kgs  11:2}

 

அவனுக்குப்  பிரபுக்கள்  குலமான  எழுநூறு  மனையாட்டிகளும்,  முந்நூறு  மறுமனையாட்டிகளும்  இருந்தார்கள்;  அவனுடைய  ஸ்திரீகள்  அவன்  இருதயத்தை  வழுவிப்போகப்  பண்ணினார்கள்.  {1Kgs  11:3}

 

சாலொமோன்<Solomon>  வயதுசென்றபோது,  அவனுடைய  மனைவிகள்  அவன்  இருதயத்தை  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றும்படி  சாயப்பண்ணினார்கள்;  அதினால்  அவனுடைய  இருதயம்  அவன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  இருதயத்தைப்போல,  தன்  தேவனாகிய  கர்த்தரோடே  உத்தமமாயிருக்கவில்லை.  {1Kgs  11:4}

 

சாலொமோன்<Solomon>  சீதோனியரின்<Zidonians>  தேவியாகிய  அஸ்தரோத்தையும்<Ashtoreth>,  அம்மோனியரின்<Ammonites>  அருவருப்பாகிய  மில்கோமையும்<Milcom>  பின்பற்றினான்.  {1Kgs  11:5}

 

சாலொமோன்<Solomon>  தன்  தகப்பனாகிய  தாவீதைப்போல<David>  கர்த்தரைப்  பூரணமாய்ப்  பின்பற்றாமல்,  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {1Kgs  11:6}

 

அப்பொழுது  சாலொமோன்<Solomon>  எருசலேமுக்கு<Jerusalem>  எதிரான  மலையிலே  மோவாபியரின்<Moab>  அருவருப்பாகிய  காமோசுக்கும்<Chemosh>,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  அருவருப்பாகிய  மோளோகுக்கும்<Molech>  மேடையைக்  கட்டினான்.  {1Kgs  11:7}

 

இப்படியே  தங்கள்  தேவர்களுக்குத்  தூபங்காட்டிப்  பலியிடுகிற  அந்நியஜாதியாரான  தன்  ஸ்திரீகள்  எல்லாருக்காகவும்  செய்தான்.  {1Kgs  11:8}

 

ஆகையால்  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சாலொமோனுக்கு<Solomon>  இரண்டுவிசை  தரிசனமாகி,  அந்நிய  தேவர்களைப்  பின்பற்றவேண்டாம்  என்று  கட்டளையிட்டிருந்தும்,  அவன்  கர்த்தரை  விட்டுத்  தன்  இருதயத்தைத்  திருப்பி,  {1Kgs  11:9}

 

அவர்  கற்பித்ததைக்  கைக்கொள்ளாமற்போனதினால்  கர்த்தர்  அவன்மேல்  கோபமானார்.  {1Kgs  11:10}

 

ஆகையால்  கர்த்தர்  சாலொமோனை<Solomon>  நோக்கி:  நான்  உனக்குக்  கட்டளையிட்ட  என்  உடன்படிக்கையையும்  என்  கட்டளைகளையும்  நீ  கைக்கொள்ளாமற்போய்  இந்தக்  காரியத்தைச்  செய்தபடியினால்,  ராஜ்யபாரத்தை  உன்னிடத்திலிருந்து  பிடுங்கி,  அதை  உன்  ஊழியக்காரனுக்குக்  கொடுப்பேன்.  {1Kgs  11:11}

 

ஆகிலும்  உன்  தகப்பனாகிய  தாவீதினிமித்தம்<David>,  நான்  அதை  உன்  நாட்களிலே  செய்வதில்லை;  உன்  குமாரனுடைய  கையினின்று  அதைப்  பிடுங்குவேன்.  {1Kgs  11:12}

 

ஆனாலும்  ராஜ்யம்  முழுவதையும்  நான்  பிடுங்காமல்,  என்  தாசனாகிய  தாவீதினிமித்தமும்<David>,  நான்  தெரிந்துகொண்ட  எருசலேமினிமித்தமும்<Jerusalem>,  ஒரு  கோத்திரத்தை  நான்  உன்  குமாரனுக்குக்  கொடுப்பேன்  என்றார்.  {1Kgs  11:13}

 

கர்த்தர்  ஏதோமியனாகிய<Edomite>  ஆதாத்<Hadad>  என்னும்  ஒரு  விரோதியைச்  சாலொமோனுக்கு<Solomon>  எழுப்பினார்;  இவன்  ஏதோமிலிருந்த<Edom>  ராஜகுலமானவன்.  {1Kgs  11:14}

 

தாவீது<David>  ஏதோமில்<Edom>  இருக்கும்போது  படைத்தலைவனாகிய  யோவாப்<Joab>  ஏதோமிலுள்ள<Edom>  ஆண்மக்களையெல்லாம்  சங்கரித்து,  வெட்டுண்டவர்களை  அடக்கம்பண்ணப்போனான்.  {1Kgs  11:15}

 

அவர்களையெல்லாம்  சங்கரிக்குமளவும்,  தானும்  இஸ்ரவேல்<Israel>  அனைத்தும்  அங்கே  ஆறுமாதம்  இருக்கும்போது,  {1Kgs  11:16}

 

ஆதாதும்<Hadad>  அவனோடேகூட  அவன்  தகப்பனுடைய  ஊழியக்காரரில்  சில  ஏதோமியரும்<Edomites>  எகிப்திற்குப்போக<Egypt>  ஓடிப்போனார்கள்;  ஆதாத்<Hadad>  அப்பொழுது  ஒரு  சிறுபிள்ளையாயிருந்தான்.  {1Kgs  11:17}

 

அவர்கள்  மீதியானிலிருந்து<Midian>  எழுந்து,  பாரானுக்குச்<Paran>  சென்று,  பாரானிலே<Paran>  சில  மனுஷரைக்  கூட்டிக்கொண்டு,  எகிப்திற்குப்<Egypt>  பார்வோன்<Pharaoh>  என்னும்  எகிப்தின்<Egypt>  ராஜாவினிடத்திற்குப்  போனார்கள்;  அவன்  இவனுக்கு  ஒரு  வீடுகொடுத்து,  இவனுக்கு  ஆகாரத்தைத்  திட்டம்பண்ணி,  நிலத்தையும்  கொடுத்தான்.  {1Kgs  11:18}

 

ஆதாதுக்குப்<Hadad>  பார்வோனின்<Pharaoh>  கண்களில்  மிகுந்த  தயைகிடைத்தபடியினால்,  அவன்  ராஜஸ்திரீயாகிய  தாப்பெனேஸ்<Tahpenes>  என்னும்  தன்  மனைவியின்  சகோதரியை  அவனுக்கு  விவாகஞ்செய்துகொடுத்தான்.  {1Kgs  11:19}

 

தாப்பெனேசின்<Tahpenes>  சகோதரியாகிய  இவள்  அவனுக்குக்  கேனுபாத்<Genubath>  என்னும்  ஒரு  குமாரனைப்  பெற்றாள்;  அவனைத்  தாப்பெனேஸ்<Tahpenes>  பார்வோனின்<Pharaoh>  வீட்டிலே  வளர்த்தாள்;  அப்படியே  கேனுபாத்<Genubath>  பார்வோனின்<Pharaoh>  வீட்டில்  அவனுடைய  குமாரருடன்  இருந்தான்.  {1Kgs  11:20}

 

தாவீது<David>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தான்  என்றும்,  படைத்தலைவனாகிய  யோவாப்<Joab>  இறந்துபோனான்  என்றும்,  எகிப்திலே<Egypt>  ஆதாத்<Hadad>  கேள்விப்பட்டபோது,  ஆதாத்<Hadad>  பார்வோனை<Pharaoh>  நோக்கி:  நான்  என்  சுயதேசத்துக்குப்  போக  என்னை  அனுப்பவேண்டும்  என்றான்.  {1Kgs  11:21}

 

அதற்குப்  பார்வோன்<Pharaoh>:  இதோ,  நீ  உன்  சுயதேசத்துக்குப்போக  விரும்புகிறதற்கு,  என்னிடத்தில்  உனக்கு  என்ன  குறைவு  இருக்கிறது  என்றான்;  அதற்கு  அவன்:  ஒரு  குறைவும்  இல்லை;  ஆகிலும்  என்னை  அனுப்பிவிடவேண்டும்  என்றான்.  {1Kgs  11:22}

 

எலியாதாவின்<Eliadah>  குமாரனாகிய  ரேசோன்<Rezon>  என்னும்  வேறொரு  விரோதியை  தேவன்  எழுப்பினார்;  இவன்  தன்  ஆண்டவனாகிய  ஆதாதேசர்<Hadadezer>  என்னும்  சோபாவின்<Zobah>  ராஜாவை  விட்டு  ஓடிப்போய்,  {1Kgs  11:23}

 

தாவீது<David>  சோபாவில்<Zobah>  உள்ளவர்களைக்  கொன்றுபோடுகையில்,  அவன்  தன்னோடே  சில  மனுஷரைச்  சேர்த்துக்கொண்டு,  அந்தக்  கூட்டத்திற்குத்  தலைவனானான்;  இவர்கள்  தமஸ்குவுக்குப்<Damascus>  போய்,  அங்கே  குடியிருந்து,  தமஸ்குவில்<Damascus>  ஆண்டார்கள்.  {1Kgs  11:24}

 

ஆதாத்<Hadad>  பொல்லாப்புச்  செய்ததுமல்லாமல்,  ரேசோன்<Rezon>  சாலொமோனுடைய<Solomon>  நாளெல்லாம்  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதியாகி,  சீரியாவின்மேல்<Syria>  ராஜாவாயிருந்து,  இஸ்ரவேலைப்<Israel>  பகைத்தான்.  {1Kgs  11:25}

 

சேரேதா<Zereda>  ஊரிலுள்ள  எப்பிராயீம்<Ephrathite>  மனுஷனாகிய  நேபாத்தின்<Nebat>  குமாரன்  யெரொபெயாம்<Jeroboam>  என்னும்  சாலொமோனின்<Solomon>  ஊழியக்காரனும்  ராஜாவுக்கு  விரோதமாய்க்  கையெடுத்தான்;  அவனுடைய  தாய்  செரூகாள்<Zeruah>  என்னும்  பேருள்ள  ஒரு  விதவை.  {1Kgs  11:26}

 

அவன்  ராஜாவுக்கு  விரோதமாய்க்  கையெடுத்த  முகாந்தரம்  என்னவென்றால்,  சாலொமோன்<Solomon>  மில்லோவைக்கட்டி<Millo>,  தன்  தகப்பனாகிய  தாவீதுடைய<David>  நகரத்தின்  இடிந்துபோன  இடங்களைப்  பழுதுபார்த்தபோது,  {1Kgs  11:27}

 

யெரொபெயாம்<Jeroboam>  என்பவன்  பராக்கிரமசாலியாயிருந்தான்;  அவன்  காரிய  சமர்த்தனான  வாலிபன்  என்று  சாலொமோன்<Solomon>  கண்டு,  யோசேப்பு<Joseph>  வம்சத்தாரின்  காரியத்தையெல்லாம்  அவன்  விசாரிப்புக்கு  ஒப்புவித்தான்.  {1Kgs  11:28}

 

அக்காலத்திலே  யெரொபெயாம்<Jeroboam>  எருசலேமிலிருந்து<Jerusalem>  வெளியே  போகிறபோது,  சீலோனியனான<Shilonite>  அகியா<Ahijah>  என்னும்  தீர்க்கதரிசி  புதுச்சால்வையைப்  போர்த்துக்கொண்டிருந்து,  வழியிலே  அவனைக்  கண்டான்;  இருவரும்  வயல்வெளியிலே  தனித்திருக்கையில்,  {1Kgs  11:29}

 

அகியா<Ahijah>  தான்  போர்த்துக்கொண்டிருந்த  புதுச்சால்வையைப்  பிடித்து,  அதைப்  பன்னிரண்டு  துண்டாகக்  கிழித்துப்போட்டு,  {1Kgs  11:30}

 

யெரொபெயாமை<Jeroboam>  நோக்கி:  பத்துத்  துண்டுகளை  எடுத்துக்கொள்;  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  ராஜ்யபாரத்தைச்  சாலொமோனுடைய<Solomon>  கையிலிருந்து  எடுத்துக்  கிழித்து,  உனக்குப்  பத்துக்  கோத்திரங்களைக்  கொடுப்பேன்.  {1Kgs  11:31}

 

ஆனாலும்  என்  தாசனாகிய  தாவீதுக்காகவும்<David>,  நான்  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களில்  எல்லாம்  தெரிந்துகொண்ட  எருசலேம்<Jerusalem>  நகரத்துக்காகவும்,  ஒரு  கோத்திரம்  அவனுக்கு  இருக்கும்.  {1Kgs  11:32}

 

அவர்கள்  என்னைவிட்டு,  சீதோனியரின்<Zidonians>  தேவியாகிய  அஸ்தரோத்தையும்<Ashtoreth>,  மோவாபியரின்<Moabites>  தேவனாகிய  காமோசையும்<Chemosh>,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தேவனாகிய  மில்கோமையும்<Milcom>  பணிந்துகொண்டு,  அவன்  தகப்பனாகிய  தாவீதைப்போல<David>  என்  பார்வைக்குச்  செம்மையாய்  இருக்கிறதைச்  செய்யவும்,  என்  கட்டளைகளையும்  என்  நியாயங்களையும்  கைக்கொள்ளவும்,  அவர்கள்  என்  வழிகளில்  நடவாமற்போனபடியினால்  அப்படிச்  செய்வேன்.  {1Kgs  11:33}

 

ஆனாலும்  ராஜ்யபார  முழுவதையும்  நான்  அவன்  கையிலிருந்து  எடுத்துப்  போடுவதில்லை;  நான்  தெரிந்துகொண்டவனும்,  என்  கற்பனைகளையும்  என்  கட்டளைகளையும்  கைக்கொண்டவனுமான  என்  தாசனாகிய  தாவீதினிமித்தம்<David>,  அவன்  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  அவனை  அதிபதியாக  வைப்பேன்.  {1Kgs  11:34}

 

ஆனாலும்  ராஜ்யபாரத்தை  அவன்  குமாரன்  கையிலிருந்து  எடுத்து,  அதிலே  பத்துக்  கோத்திரங்களை  உனக்குத்  தருவேன்.  {1Kgs  11:35}

 

என்  நாமம்  விளங்கும்படிக்கு,  நான்  தெரிந்துகொண்ட  நகரமாகிய  எருசலேமிலே<Jerusalem>  என்  சமுகத்தில்  என்  தாசனாகிய  தாவீதுக்கு<David>  எந்நாளும்  ஒரு  விளக்கு  இருக்கத்தக்கதாக,  அவன்  குமாரனுக்கு  ஒரு  கோத்திரத்தைக்  கொடுப்பேன்.  {1Kgs  11:36}

 

நீ  உன்  மனவிருப்பத்தின்படி  ஆண்டுகொண்டு,  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாய்  இருப்பதற்காக  நான்  உன்னைத்  தெரிந்துகொண்டேன்.  {1Kgs  11:37}

 

நான்  உனக்குக்  கட்டளையிட்டதையெல்லாம்  நீ  கேட்டுக்  கைக்கொண்டு,  நீ  என்  வழிகளில்  நடந்து,  என்  தாசனாகிய  தாவீது<David>  செய்ததுபோல,  என்  கட்டளைகளையும்  என்  கற்பனைகளையும்  கைக்கொள்ளும்படிக்கு  என்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்கிறதுண்டானால்,  நான்  உன்னோடிருந்து,  நான்  தாவீதுக்குக்<David>  கட்டினதுபோல  உனக்கும்  நிலையான  வீட்டைக்  கட்டி  இஸ்ரவேலை<Israel>  உனக்குத்  தருவேன்.  {1Kgs  11:38}

 

இப்படி  நான்  இந்தக்  காரியத்தினிமித்தம்  தாவீதின்<David>  சந்ததியைச்  சிறுமைப்படுத்துவேன்;  ஆகிலும்  எந்நாளும்  அப்படியிராது  என்று  சொன்னான்.  {1Kgs  11:39}

 

அதினிமித்தம்  சாலொமோன்<Solomon>  யெரொபெயாமைக்<Jeroboam>  கொல்ல  வகைதேடினான்;  யெரொபெயாம்<Jeroboam>  எழுந்து,  எகிப்திற்குச்<Egypt>  சீஷாக்<Shishak>  என்னும்  எகிப்தின்<Egypt>  ராஜாவினிடத்தில்  ஓடிப்போய்,  சாலொமோன்<Solomon>  மரணமடையுமட்டும்  எகிப்தில்<Egypt>  இருந்தான்.  {1Kgs  11:40}

 

சாலொமோனின்<Solomon>  மற்ற  நடபடிகளும்,  அவன்  செய்தவை  அனைத்தும்,  அவனுடைய  ஞானமும்,  சாலொமோனுடைய<Solomon>  நடபடிப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  11:41}

 

சாலொமோன்<Solomon>  எருசலேமிலே<Jerusalem>  இஸ்ரவேலையெல்லாம்<Israel>  அரசாண்ட  நாட்கள்  நாற்பது  வருஷம்.  {1Kgs  11:42}

 

சாலொமோன்<Solomon>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  தன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  நகரத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  11:43}

 

ரெகொபெயாமை<Rehoboam>  ராஜாவாக்கும்படி,  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  சீகேமுக்கு<Shechem>  வந்திருந்தபடியால்,  அவனும்  சீகேமுக்குப்<Shechem>  போனான்.  {1Kgs  12:1}

 

ராஜாவாகிய  சாலொமோனை<Solomon>  விட்டு  ஓடிப்போய்,  எகிப்திலே<Egypt>  குடியிருந்த  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமோ<Jeroboam>,  எகிப்தில்<Egypt>  இருக்கையில்  இதைக்  கேள்விப்பட்டான்.  {1Kgs  12:2}

 

அவர்கள்  யெரொபெயாமுக்கு<Jeroboam>  ஆள்  அனுப்பி  அவனை  அழைப்பித்தார்கள்;  அவனும்  இஸ்ரவேல்<Israel>  சபை  அனைத்தும்  வந்து,  ரெகொபெயாமை<Rehoboam>  நோக்கி:  {1Kgs  12:3}

 

உம்முடைய  தகப்பன்  பாரமான  நுகத்தை  எங்கள்மேல்  வைத்தார்;  இப்போதும்  நீர்  உம்முடைய  தகப்பன்  சுமத்தின  கடினமான  வேலையையும்,  அவர்  எங்கள்மேல்  வைத்த  பாரமான  நுகத்தையும்  லகுவாக்கும்;  அப்பொழுது  உம்மைச்  சேவிப்போம்  என்றார்கள்.  {1Kgs  12:4}

 

அதற்கு  அவன்:  நீங்கள்  போய்,  மூன்றுநாள்  பொறுத்து  என்னிடத்தில்  திரும்பிவாருங்கள்  என்றான்;  அப்படியே  ஜனங்கள்  போயிருந்தார்கள்.  {1Kgs  12:5}

 

அப்பொழுது  ராஜாவாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  தன்  தகப்பனாகிய  சாலொமோன்<Solomon>  உயிரோடிருக்கையில்  அவன்  சமுகத்தில்  நின்ற  முதியோரோடே  ஆலோசனைபண்ணி,  இந்த  ஜனங்களுக்கு  மறுஉத்தரவு  கொடுக்க,  நீங்கள்  என்ன  யோசனை  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டான்.  {1Kgs  12:6}

 

அதற்கு  அவர்கள்:  நீர்  இன்று  இந்த  ஜனங்களுக்கு  சேவகனாகி,  அவர்களுக்கு  இணங்கி,  அவர்கள்  சொற்படி  செய்து,  மறுமொழியாக  நல்வார்த்தைகளைச்  சொல்வீரானால்,  எந்நாளும்  அவர்கள்  உமக்கு  ஊழியக்காரராயிருப்பார்கள்  என்றார்கள்.  {1Kgs  12:7}

 

முதியோர்  தனக்குச்  சொன்ன  ஆலோசனையை  அவன்  தள்ளிவிட்டு,  தன்னோடே  வளர்ந்து  தன்  சமுகத்தில்  நிற்கிற  வாலிபரோடே  ஆலோசனைபண்ணி,  {1Kgs  12:8}

 

அவர்களை  நோக்கி:  உம்முடைய  தகப்பன்  எங்கள்மேல்  வைத்த  நுகத்தை  லகுவாக்கும்  என்று  என்னிடத்தில்  சொன்ன  இந்த  ஜனங்களுக்கு  மறுமொழி  கொடுக்க,  நீங்கள்  என்ன  யோசனை  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டான்.  {1Kgs  12:9}

 

அப்பொழுது  அவனோடே  வளர்ந்த  வாலிபர்  அவனை  நோக்கி:  உம்முடைய  தகப்பன்  எங்கள்  நுகத்தைப்  பாரமாக்கினார்,  நீர்  அதை  எங்களுக்கு  லகுவாக்கும்  என்று  உம்மிடத்தில்  சொன்ன  இந்த  ஜனத்திற்கு  நீர்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  என்  சுண்டுவிரல்  என்  தகப்பனாருடைய  இடுப்பைப்பார்க்கிலும்  பருமனாயிருக்கும்.  {1Kgs  12:10}

 

இப்போதும்  என்  தகப்பன்  பாரமான  நுகத்தை  உங்கள்மேல்  வைத்தார்,  நான்  உங்கள்  நுகத்தை  அதிக  பாரமாக்குவேன்;  என்  தகப்பன்  உங்களைச்  சவுக்குகளினாலே  தண்டித்தார்,  நான்  உங்களைத்  தேள்களினாலே  தண்டிப்பேன்  என்று  நீர்  அவர்களோடே  சொல்லவேண்டும்  என்றார்கள்.  {1Kgs  12:11}

 

மூன்றாம்  நாள்  என்னிடத்தில்  வாருங்கள்  என்று  ராஜா  சொல்லியிருந்தபடியே,  யெரொபெயாமும்<Jeroboam>  சகல  ஜனங்களும்  மூன்றாம்  நாளிலே  ரெகொபெயாமிடத்தில்<Rehoboam>  வந்தார்கள்.  {1Kgs  12:12}

 

ராஜா  முதியோர்  தனக்குச்  சொன்ன  ஆலோசனையைத்  தள்ளிவிட்டு,  வாலிபருடைய  ஆலோசனையின்படியே  அவர்களோடே  பேசி:  {1Kgs  12:13}

 

என்  தகப்பன்  உங்கள்  நுகத்தைப்  பாரமாக்கினார்,  நான்  உங்கள்  நுகத்தை  அதிக  பாரமாக்குவேன்;  என்  தகப்பன்  உங்களைச்  சவுக்குகளினாலே  தண்டித்தார்,  நான்  உங்களைத்  தேள்களினாலே  தண்டிப்பேன்  என்று  ஜனங்களுக்குக்  கடினமான  உத்தரவு  கொடுத்தான்.  {1Kgs  12:14}

 

ராஜா  ஜனங்களுக்குச்  செவிகொடாமற்போனான்;  கர்த்தர்  சீலோனியனான<Shilonite>  அகியாவைக்கொண்டு<Ahijah>  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமுக்குச்<Jeroboam>  சொன்ன  தம்முடைய  வார்த்தையை  உறுதிப்படுத்தும்படி  கர்த்தரால்  இப்படி  நடந்தது.  {1Kgs  12:15}

 

ராஜா  தங்களுக்குச்  செவிகொடாததை  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  கண்டபோது,  ஜனங்கள்  ராஜாவுக்கு  மறுஉத்தரவாக:  தாவீதோடே<David>  எங்களுக்குப்  பங்கேது?  ஈசாயின்<Jesse>  குமாரனிடத்தில்  எங்களுக்குச்  சுதந்தரம்  இல்லை;  இஸ்ரவேலே<Israel>,  உன்  கூடாரங்களுக்குப்  போய்விடு;  இப்போது  தாவீதே<David>,  உன்  சொந்த  வீட்டைப்  பார்த்துக்கொள்  என்று  சொல்லி,  இஸ்ரவேலர்<Israel>  தங்கள்  கூடாரங்களுக்குப்  போய்விட்டார்கள்.  {1Kgs  12:16}

 

ஆனாலும்  யூதாவின்<Judah>  பட்டணங்களிலே  குடியிருந்த  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்மேல்  ரெகொபெயாம்<Rehoboam>  ராஜாவாயிருந்தான்.  {1Kgs  12:17}

 

பின்பு  ராஜாவாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  பகுதிவிசாரிப்புக்காரனாகிய  அதோராமை<Adoram>  அனுப்பினான்;  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  அவனைக்  கல்லெறிந்து  கொன்றார்கள்;  அப்பொழுது  ராஜாவாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  தீவிரமாய்  இரதத்தின்மேல்  ஏறி,  எருசலேமுக்கு<Jerusalem>  ஓடிப்போனான்.  {1Kgs  12:18}

 

அப்படியே  இந்நாள்வரைக்கும்  இருக்கிறபடி  இஸ்ரவேலர்<Israel>  தாவீதின்<David>  வம்சத்தை  விட்டு  கலகம்பண்ணிப்  பிரிந்து  போயிருக்கிறார்கள்.  {1Kgs  12:19}

 

யெரொபெயாம்<Jeroboam>  திரும்பிவந்தான்  என்று  இஸ்ரவேலருக்கெல்லாம்<Israel>  கேள்வியானபோது,  அவனைச்  சபையினிடத்தில்  அழைத்தனுப்பி,  அவனைச்  சமஸ்த  இஸ்ரவேலின்மேலும்<Israel>  ராஜாவாக்கினார்கள்;  யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி<Judah>  வேறொருவரும்  தாவீதின்<David>  வம்சத்தைப்  பின்பற்றவில்லை.  {1Kgs  12:20}

 

ரெகொபெயாம்<Rehoboam>  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தபோது,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரோடே  யுத்தம்பண்ணவும்,  ராஜ்யத்தைச்  சாலொமோனின்<Solomon>  குமாரனாகிய  தன்னிடமாகத்  திருப்பிக்கொள்ளவும்,  யூதா<Judah>  வம்சத்தார்  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தார்  அனைவருமாகிய  தெரிந்துகொள்ளப்பட்ட  யுத்தவீரர்  லட்சத்து  எண்பதினாயிரம்பேரைக்  கூட்டினான்.  {1Kgs  12:21}

 

தேவனுடைய  மனுஷனாகிய  சேமாயாவுக்கு<Shemaiah>  தேவனுடைய  வார்த்தையுண்டாகி,  அவர்  சொன்னது:  {1Kgs  12:22}

 

நீ  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  என்னும்  சாலொமோனின்<Solomon>  குமாரனையும்  யூதா<Judah>  வம்சத்தார்  அனைவரையும்,  பென்யமீனரையும்<Benjamin>,  மற்ற  ஜனங்களையும்  நோக்கி:  {1Kgs  12:23}

 

நீங்கள்  போகாமலும்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரரான  உங்கள்  சகோதரரோடு  யுத்தம்பண்ணாமலும்,  அவரவர்  தம்தம்  வீட்டிற்குத்  திரும்புங்கள்;  என்னாலே  இந்தக்  காரியம்  நடந்தது  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்;  அப்பொழுது  அவர்கள்:  கர்த்தருடைய  சொல்லைக்  கேட்டு,  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  திரும்பிப்  போய்விட்டார்கள்.  {1Kgs  12:24}

 

யெரொபெயாம்<Jeroboam>  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்தில்  சீகேமைக்<Shechem>  கட்டி,  அதிலே  வாசம்பண்ணி,  அங்கிருந்து  போய்ப்  பெனூவேலைக்<Penuel>  கட்டினான்.  {1Kgs  12:25}

 

யெரொபெயாம்<Jeroboam>:  இப்போது  ராஜ்யபாரம்  தாவீது<David>  வம்சவசமாய்த்  திரும்புகிறதாயிருக்கும்.  {1Kgs  12:26}

 

இந்த  ஜனங்கள்  எருசலேமிலுள்ள<Jerusalem>  கர்த்தருடைய  ஆலயத்திலே  பலிகளைச்  செலுத்தப்போனால்,  இந்த  ஜனங்களின்  இருதயம்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  என்னும்  தங்கள்  ஆண்டவன்  வசமாய்த்  திரும்பி,  அவர்கள்  என்னைக்  கொன்றுபோட்டு,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ரெகொபெயாமின்<Rehoboam>  பாரிசமாய்ப்  போய்விடுவார்கள்  என்று  தன்  மனதிலே  சிந்தித்துக்கொண்டிருந்தான்.  {1Kgs  12:27}

 

ஆகையால்  ராஜாவானவன்  யோசனைபண்ணி,  பொன்னினால்  இரண்டு  கன்றுக்குட்டிகளை  உண்டாக்கி,  ஜனங்களைப்  பார்த்து:  நீங்கள்  எருசலேமுக்குப்<Jerusalem>  போகிறது  உங்களுக்கு  வருத்தம்;  இஸ்ரவேலரே<Israel>,  இதோ,  இவைகள்  உங்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  வரப்பண்ணின  உங்கள்  தேவர்கள்  என்று  சொல்லி,  {1Kgs  12:28}

 

ஒன்றைப்  பெத்தேலிலும்<Bethel>,  ஒன்றைத்  தாணிலும்<Dan>  ஸ்தாபித்தான்.  {1Kgs  12:29}

 

இந்தக்  காரியம்  பாவமாயிற்று;  ஜனங்கள்  இந்த  ஒரு  கன்றுக்குட்டிக்காகத்  தாண்மட்டும்<Dan>  போவார்கள்.  {1Kgs  12:30}

 

அவன்  மேடையாகிய  ஒரு  கோவிலையும்  கட்டி,  லேவியின்<Levi>  புத்திரராயிராத  ஜனத்தில்  ஈனமானவர்களை  ஆசாரியராக்கினான்.  {1Kgs  12:31}

 

யூதாவில்<Judah>  ஆசரிக்கப்படும்  பண்டிகைக்கொப்பாக  எட்டாம்  மாதம்  பதினைந்தாம்  தேதியிலே  யெரொபெயாம்<Jeroboam>  ஒரு  பண்டிகையையும்  கொண்டாடி,  பலிபீடத்தின்மேல்  பலியிட்டான்;  அப்படியே  பெத்தேலிலே<Bethel>  தான்  உண்டாக்கின  கன்றுக்குட்டிகளுக்குப்  பலியிட்டு,  தான்  உண்டுபண்ணின  மேடைகளின்  ஆசாரியர்களைப்  பெத்தேலிலே<Bethel>  ஸ்தாபித்து,  {1Kgs  12:32}

 

தன்  மனதிலே  தானே  நியமித்துக்கொண்ட  எட்டாம்  மாதம்  பதினைந்தாம்  தேதியிலே  பெத்தேலில்<Bethel>  தான்  உண்டாக்கின  பலிபீடத்தின்மேல்  பலியிட்டு,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குப்  பண்டிகையை  ஏற்படுத்தி,  பலிபீடத்தின்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டினான்.  {1Kgs  12:33}

 

யெரொபெயாம்<Jeroboam>  தூபங்காட்ட  பலிபீடத்தண்டையிலே  நிற்கையில்,  இதோ,  தேவனுடைய  மனுஷன்  ஒருவன்  கர்த்தருடைய  வார்த்தையின்படியே,  யூதாவிலிருந்து<Judah>  பெத்தேலுக்கு<Bethel>  வந்து,  {1Kgs  13:1}

 

அந்தப்  பலிபீடத்தை  நோக்கி:  பலிபீடமே  பலிபீடமே,  இதோ,  தாவீதின்<David>  வம்சத்தில்  யோசியா<Josiah>  என்னும்  பேருள்ள  ஒரு  குமாரன்  பிறப்பான்;  அவன்  உன்மேல்  தூபங்காட்டுகிற  மேடைகளின்  ஆசாரியர்களை  உன்மேல்  பலியிடுவான்;  மனுஷரின்  எலும்புகளும்  உன்மேல்  சுட்டெரிக்கப்படும்  என்பதைக்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  கர்த்தருடைய  வார்த்தையைக்  கூறி;  {1Kgs  13:2}

 

அன்றையதினம்  அவன்  ஒரு  அடையாளத்தையும்  சொல்லி,  இதோ,  இந்தப்  பலிபீடம்  வெடித்து,  அதின்மேலுள்ள  சாம்பல்  கொட்டுண்டுபோம்;  கர்த்தர்  உரைத்ததற்கு  இதுவே  அடையாளம்  என்றான்.  {1Kgs  13:3}

 

பெத்தேலில்<Bethel>  இருக்கிற  அந்தப்  பலிபீடத்திற்கு  எதிராக  தேவனுடைய  மனுஷன்  கூறின  வார்த்தையை  ராஜாவாகிய  யெரொபெயாம்<Jeroboam>  கேட்டபோது,  அவனைப்  பிடியுங்கள்  என்று  தன்  கையைப்  பலிபீடத்திலிருந்து  நீட்டினான்;  அவனுக்கு  விரோதமாய்  நீட்டின  கை  தன்னிடமாக  முடக்கக்கூடாதபடிக்கு  மரத்துப்போயிற்று.  {1Kgs  13:4}

 

தேவனுடைய  மனுஷன்  கர்த்தருடைய  வார்த்தையால்  குறித்திருந்த  அடையாளத்தின்படியே  பலிபீடம்  வெடித்து,  சாம்பல்  பலிபீடத்திலிருந்து  கொட்டுண்டுபோயிற்று.  {1Kgs  13:5}

 

அப்பொழுது  ராஜா,  தேவனுடைய  மனுஷனுக்குப்  பிரதியுத்தரமாக:  நீ  உன்  தேவனாகிய  கர்த்தருடைய  சமுகத்தை  நோக்கி  வேண்டிக்கொண்டு,  என்  கை  முன்போலிருக்கும்படிக்கு  எனக்காக  விண்ணப்பம்  பண்ணவேண்டும்  என்றான்;  அப்பொழுது  தேவனுடைய  மனுஷன்  கர்த்தருடைய  சமுகத்தை  நோக்கி  வருந்தி  விண்ணப்பம்  செய்தான்,  ராஜாவின்  கை  முன்னிருந்தபடி  சீர்ப்பட்டது.  {1Kgs  13:6}

 

அப்பொழுது  ராஜா  தேவனுடைய  மனுஷனை  நோக்கி:  நீ  என்னோடேகூட  வீட்டுக்கு  வந்து  இளைப்பாறு;  உனக்கு  வெகுமானம்  தருவேன்  என்றான்.  {1Kgs  13:7}

 

தேவனுடைய  மனுஷன்  ராஜாவை  நோக்கி:  நீர்  எனக்கு  உம்முடைய  வீட்டில்  பாதி  கொடுத்தாலும்,  நான்  உம்மோடே  வருவதுமில்லை,  இந்த  ஸ்தலத்தில்  அப்பம்  புசிப்பதுமில்லை,  தண்ணீர்  குடிப்பதுமில்லை.  {1Kgs  13:8}

 

ஏனென்றால்  நீ  அப்பம்  புசியாமலும்,  தண்ணீர்  குடியாமலும்,  போனவழியாய்த்  திரும்பாமலும்  இருவென்று  கர்த்தர்  தம்முடைய  வார்த்தையால்  எனக்குக்  கட்டளையிட்டிருக்கிறார்  என்று  சொல்லி,  {1Kgs  13:9}

 

அவன்  பெத்தேலுக்கு<Bethel>  வந்தவழியாய்த்  திரும்பாமல்,  வேறுவழியாய்ப்  போய்விட்டான்.  {1Kgs  13:10}

 

கிழவனான  ஒரு  தீர்க்கதரிசி  பெத்தேலிலே<Bethel>  குடியிருந்தான்;  அவன்  குமாரர்  வந்து  தேவனுடைய  மனுஷன்  அன்றையதினம்  பெத்தேலிலே<Bethel>  செய்த  எல்லாச்  செய்கைகளையும்,  அவன்  ராஜாவோடே  சொன்ன  வார்த்தைகளையும்  தங்கள்  தகப்பனுக்கு  அறிவித்தார்கள்.  {1Kgs  13:11}

 

அப்பொழுது  அவர்கள்  தகப்பன்:  அவன்  எந்த  வழி  போனான்  என்று  அவர்களைக்  கேட்டான்.  யூதாவிலிருந்து<Judah>  வந்த  தேவனுடைய  மனுஷன்  போனவழி  இன்னதென்று  அவன்  குமாரர்  பார்த்திருந்தபடியால்,  {1Kgs  13:12}

 

அவன்  தன்  குமாரருடனே:  கழுதையின்மேல்  சேணம்வைத்துக்  கொடுங்கள்  என்றான்;  அவர்கள்  கழுதையின்மேல்  சேணம்வைத்துக்  கொடுத்தபின்,  அவன்  அதின்மேல்  ஏறி,  {1Kgs  13:13}

 

தேவனுடைய  மனுஷனைத்  தொடர்ந்துபோய்,  ஒரு  கர்வாலி  மரத்தின்கீழ்  உட்கார்ந்திருக்கிற  அவனைக்  கண்டு:  யூதாவிலிருந்துவந்த<Judah>  தேவனுடைய  மனுஷன்  நீர்தானா  என்று  அவனைக்  கேட்டதற்கு;  அவன்,  நான்தான்  என்றான்.  {1Kgs  13:14}

 

அப்பொழுது  அவனை  நோக்கி:  என்னோடே  வீட்டுக்கு  வந்து  அப்பம்  புசியும்  என்றான்.  {1Kgs  13:15}

 

அதற்கு  அவன்:  நான்  உம்மோடே  திரும்பவும்  உம்மோடே  உள்ளே  போகவுமாட்டேன்;  இந்த  ஸ்தலத்திலே  உம்மோடே  நான்  அப்பம்  புசிக்கவும்  தண்ணீர்  குடிக்கவுமாட்டேன்.  {1Kgs  13:16}

 

ஏனென்றால்  நீ  அப்பம்  புசியாமலும்,  அங்கே  தண்ணீர்  குடியாமலும்,  நீ  போனவழியாய்த்  திரும்பிவராமலும்  இரு  என்று  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாயிருக்கிறது  என்றான்.  {1Kgs  13:17}

 

அதற்கு  அவன்:  உம்மைப்போல  நானும்  தீர்க்கதரிசிதான்;  அவன்  அப்பம்  புசித்துத்  தண்ணீர்  குடிக்க,  நீ  அவனைத்  திருப்பி,  உன்  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டுவா  என்று  ஒரு  தூதன்  கர்த்தருடைய  வார்த்தையாக  என்னோடே  சொன்னான்  என்று  அவனிடத்தில்  பொய்சொன்னான்.  {1Kgs  13:18}

 

அப்பொழுது  அவன்  இவனோடே  திரும்பிப்  போய்,  இவன்  வீட்டிலே  அப்பம்  புசித்துத்  தண்ணீர்  குடித்தான்.  {1Kgs  13:19}

 

அவர்கள்  பந்தியில்  உட்கார்ந்திருக்கிறபோது,  அவனைத்  திருப்பிக்கொண்டு  வந்த  தீர்க்கதரிசிக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டானதினால்,  {1Kgs  13:20}

 

அவன்  யூதாவிலிருந்து<Judah>  வந்த  தேவனுடைய  மனுஷனைப்  பார்த்துச்  சத்தமிட்டு,  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கற்பித்த  கட்டளையை  நீ  கைக்கொள்ளாமல்  கர்த்தருடைய  வாக்கை  மீறி,  {1Kgs  13:21}

 

அப்பம்  புசிக்கவும்  தண்ணீர்  குடிக்கவும்  வேண்டாம்  என்று  அவர்  விலக்கின  ஸ்தலத்திற்கு  நீ  திரும்பி,  அப்பம்  புசித்துத்  தண்ணீர்  குடித்தபடியினால்,  உன்னுடைய  பிரேதம்  உன்  பிதாக்களின்  கல்லறையிலே  சேருவதில்லை  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {1Kgs  13:22}

 

அவன்  போஜனபானம்பண்ணி  முடிந்தபின்பு,  அந்தத்  தீர்க்கதரிசியைத்  திருப்பிக்கொண்டுவந்தவன்  அவனுக்குக்  கழுதையின்மேல்  சேணம்வைத்துக்  கொடுத்தான்.  {1Kgs  13:23}

 

அவன்  போனபிற்பாடு  வழியிலே  ஒரு  சிங்கம்  அவனுக்கு  எதிர்ப்பட்டு  அவனைக்  கொன்றுபோட்டது;  அவன்  பிரேதம்  வழியிலே  கிடந்தது;  கழுதை  அதினண்டையிலே  நின்றது;  சிங்கமும்  பிரேதத்தண்டையிலே  நின்றது.  {1Kgs  13:24}

 

அந்த  வழியே  கடந்துவருகிற  மனுஷர்,  வழியிலே  கிடக்கிற  பிரேதத்தையும்,  பிரேதத்தண்டையிலே  நிற்கிற  சிங்கத்தையும்  கண்டு,  கிழவனான  தீர்க்கதரிசி  குடியிருந்த  பட்டணத்திலே  வந்து  சொன்னார்கள்.  {1Kgs  13:25}

 

அவனை  வழியிலிருந்து  திரும்பப்பண்ணின  தீர்க்கதரிசி  அதைக்  கேட்டபோது,  அவன்  கர்த்தருடைய  வாக்கை  மீறின  தேவனுடைய  மனுஷன்தான்,  கர்த்தர்  அவனுக்குச்  சொன்ன  வார்த்தையின்படியே,  கர்த்தர்  அவனை  ஒரு  சிங்கத்திற்கு  ஒப்புக்கொடுத்தார்;  அது  அவனை  முறித்துக்  கொன்றுபோட்டது  என்று  சொல்லி,  {1Kgs  13:26}

 

தன்  குமாரரை  நோக்கி:  எனக்குக்  கழுதையின்மேல்  சேணம்  வைத்துக்  கொடுங்கள்  என்றான்;  அவர்கள்  சேணம்  வைத்துக்  கொடுத்தார்கள்.  {1Kgs  13:27}

 

அப்பொழுது  அவன்  போய்,  வழியிலே  கிடக்கிற  அவன்  பிரேதத்தையும்,  பிரேதத்தண்டையிலே  கழுதையும்  சிங்கமும்  நிற்கிறதையும்  கண்டான்;  அந்தச்  சிங்கம்  பிரேதத்தைத்  தின்னவுமில்லை,  கழுதையை  முறித்துப்போடவுமில்லை.  {1Kgs  13:28}

 

அப்பொழுது  கிழவனான  அந்தத்  தீர்க்கதரிசி  தேவனுடைய  மனுஷனின்  பிரேதத்தை  எடுத்து,  அதைக்  கழுதையின்மேல்  வைத்து,  அதற்காகத்  துக்கங்கொண்டாடவும்  அதை  அடக்கம்பண்ணவும்,  அதைத்  தன்  பட்டணத்திற்குக்  கொண்டுவந்து,  {1Kgs  13:29}

 

அவன்  பிரேதத்தைத்  தன்னுடைய  கல்லறையிலே  வைத்தான்.  அவனுக்காக:  ஐயோ,  என்  சகோதரனே  என்று  புலம்பி,  துக்கங்கொண்டாடினார்கள்.  {1Kgs  13:30}

 

அவனை  அடக்கம்பண்ணினபின்பு,  அவன்  தன்  குமாரரை  நோக்கி:  நான்  மரிக்கும்போது,  தேவனுடைய  மனுஷன்  அடக்கம்பண்ணப்பட்ட  கல்லறையிலே  என்னையும்  நீங்கள்  அடக்கம்பண்ணி,  அவன்  எலும்புகளண்டையிலே  என்  எலும்புகளையும்  வையுங்கள்.  {1Kgs  13:31}

 

அவன்  பெத்தேலில்<Bethel>  இருக்கிற  பலிபீடத்திற்கும்,  சமாரியாவின்<Samaria>  பட்டணங்களில்  இருக்கிற  மேடைகளாகிய  சகல  கோவில்களுக்கும்  விரோதமாகக்  கூறின  கர்த்தருடைய  வார்த்தை  நிச்சயமாய்  நிறைவேறும்  என்றான்.  {1Kgs  13:32}

 

இந்த  நடபடிக்குப்பின்பு,  யெரொபெயாம்<Jeroboam>  தன்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பாமல்,  மறுபடியும்  ஜனத்தில்  ஈனமானவர்களை  மேடைகளின்  ஆசாரியராக்கினான்;  எவன்மேல்  அவனுக்கு  மனதிருந்ததோ  அவனைப்  பிரதிஷ்டைபண்ணினான்;  அப்படிப்பட்டவர்கள்  மேடைகளின்  ஆசாரியரானார்கள்.  {1Kgs  13:33}

 

யெரொபெயாமின்<Jeroboam>  வீட்டாரை  பூமியின்மேல்  வைக்காமல்  அதம்பண்ணி  அழிக்கும்படியாக  இந்தக்  காரியம்  அவர்களுக்குப்  பாவமாயிற்று.  {1Kgs  13:34}

 

அக்காலத்திலே  யெரொபெயாமின்<Jeroboam>  குமாரனாகிய  அபியா<Abijah>  வியாதியில்  விழுந்தான்.  {1Kgs  14:1}

 

அப்பொழுது  யெரொபெயாம்<Jeroboam>  தன்  மனைவியைப்  பார்த்து:  நீ  எழுந்து,  நீ  யெரொபெயாமின்<Jeroboam>  மனைவியென்று  ஒருவரும்  அறியாதபடிக்கு  வேஷம்மாறி  சீலோவுக்குப்<Shiloh>  போ;  இந்த  ஜனத்தின்மேல்  நான்  ராஜாவாவேன்  என்று  என்னோடே  சொன்ன  தீர்க்கதரிசியாகிய  அகியா<Ahijah>  அங்கே  இருக்கிறான்.  {1Kgs  14:2}

 

நீ  உன்  கையிலே  பத்து  அப்பங்களையும்,  பணியாரங்களையும்,  ஒரு  கலசம்  தேனையும்  எடுத்துக்கொண்டு  அவனிடத்துக்குப்  போ;  பிள்ளைக்குச்  சம்பவிக்கப்போகிறது  இன்னதென்று  அவன்  உனக்கு  அறிவிப்பான்  என்றான்.  {1Kgs  14:3}

 

அப்படியே  யெரொபெயாமின்<Jeroboam>  மனைவி  செய்தாள்;  அவள்  எழுந்து  சீலோவுக்குப்<Shiloh>  போய்,  அகியாவின்<Ahijah>  வீட்டிற்குள்  பிரவேசித்தாள்;  அகியாவோ<Ahijah>  முதிர்  வயதானதினால்  அவன்  கண்கள்  மங்கலடைந்து  பார்க்கக்கூடாதிருந்தான்.  {1Kgs  14:4}

 

கர்த்தர்  அகியாவினிடத்தில்<Ahijah>:  இதோ,  யெரொபெயாமின்<Jeroboam>  மனைவி  வியாதியாயிருக்கிற  தன்  குமாரனுக்காக  உன்னை  ஒரு  விசேஷம்கேட்க  வருகிறாள்;  நீ  அவளுக்கு  இன்ன  இன்ன  பிரகாரமாகச்  சொல்லவேண்டும்;  அவள்  உட்பிரவேசிக்கிறபோது,  தன்னை  அந்நிய  ஸ்திரீயாகக்  காண்பிப்பாள்  என்றார்.  {1Kgs  14:5}

 

ஆகையால்  வாசற்படிக்குள்  பிரவேசிக்கும்  அவளுடைய  நடையின்  சத்தத்தை  அகியா<Ahijah>  கேட்டவுடனே,  அவன்:  யெரொபெயாமின்<Jeroboam>  மனைவியே,  உள்ளே  வா;  உன்னை  அந்நிய  ஸ்திரீயாகக்  காண்பிக்கிறதென்ன?  துக்கசெய்தியை  உனக்கு  அறிவிக்க  நான்  அனுப்பப்பட்டேன்.  {1Kgs  14:6}

 

நீ  போய்  யெரொபெயாமை<Jeroboam>  நோக்கி:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  ஜனத்தினின்று  உன்னை  நான்  உயர்த்தி,  உன்னை  இஸ்ரவேல்<Israel>  என்னும்  என்  ஜனத்தின்மேல்  அதிபதியாக  வைத்தேன்.  {1Kgs  14:7}

 

நான்  ராஜ்யபாரத்தைத்  தாவீது<David>  வம்சத்தாரின்  கையிலிருந்து  பிடுங்கி  உனக்குக்  கொடுத்தேன்;  ஆனாலும்  என்  கற்பனைகளைக்  கைக்கொண்டு,  என்  பார்வைக்குச்  செம்மையானதையே  செய்ய,  தன்  முழு  இருதயத்தோடும்  என்னைப்  பின்பற்றின  என்  தாசனாகிய  தாவீதைப்போல<David>  நீ  இராமல்,  {1Kgs  14:8}

 

உனக்கு  முன்னிருந்த  எல்லாரைப்பார்க்கிலும்  பொல்லாப்புச்  செய்தாய்;  எனக்குக்  கோபம்  உண்டாக்க,  நீ  போய்  உனக்கு  அந்நிய  தேவர்களையும்  வார்க்கப்பட்ட  விக்கிரகங்களையும்  உண்டுபண்ணி,  உனக்குப்  புறம்பே  என்னைத்  தள்ளிவிட்டாய்.  {1Kgs  14:9}

 

ஆகையால்  இதோ,  நான்  யெரொபெயாமுடைய<Jeroboam>  வீட்டின்மேல்  பொல்லாப்பை  வரப்பண்ணி,  யெரொபெயாமுக்கு<Jeroboam>,  சுவர்மேல்  நீர்விடும்  ஒரு  நாய்  முதலாயிராதபடிக்கு,  இஸ்ரவேலிலே<Israel>  அடைபட்டவனையும்  விடுபட்டவனையும்  சங்காரம்பண்ணி,  குப்பை  கழித்துப்போடப்படுகிறதுபோல  யெரொபெயாமின்<Jeroboam>  பின்னடியாரை  அவர்கள்  கட்டோடே  அற்றுப்போகுமட்டும்  கழித்துப்போடுவேன்  என்றார்.  {1Kgs  14:10}

 

யெரொபெயாமின்<Jeroboam>  சந்ததியாரில்  பட்டணத்திலே  சாகிறவனை  நாய்கள்  தின்னும்;  வெளியிலே  சாகிறவனை  ஆகாயத்தின்  பறவைகள்  தின்னும்;  கர்த்தர்  இதை  உரைத்தார்.  {1Kgs  14:11}

 

ஆகையால்  நீ  எழுந்து,  உன்  வீட்டுக்குப்  போ,  உன்  கால்கள்  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கையில்  பிள்ளையாண்டான்  செத்துப்போவான்.  {1Kgs  14:12}

 

அவனுக்காக  இஸ்ரவேலரெல்லாரும்<Israel>  துக்கங்கொண்டாடி  அவனை  அடக்கம்பண்ணுவார்கள்;  யெரொபெயாமின்<Jeroboam>  வீட்டாரில்  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  அவனிடத்திலே  நல்ல  காரியம்  காணப்பட்டதினால்,  யெரொபெயாமின்<Jeroboam>  சந்ததியில்  அவன்  ஒருவனே  கல்லறைக்குட்படுவான்.  {1Kgs  14:13}

 

ஆனாலும்  கர்த்தர்  தமக்கு  இஸ்ரவேலின்மேல்<Israel>  ஒரு  ராஜாவை  எழும்பப்பண்ணுவார்;  அவன்  அந்நாளிலே  யெரொபெயாமின்<Jeroboam>  வீட்டாரைச்  சங்கரிப்பான்;  இப்போதே  இது  நடந்தேறும்.  {1Kgs  14:14}

 

தண்ணீரிலே  நாணல்  அசைகிறதுபோல,  கர்த்தர்  இஸ்ரவேலை<Israel>  முறிந்தசையப்பண்ணி,  அவர்கள்  பிதாக்களுக்குத்  தாம்  கொடுத்த  இந்த  நல்ல  தேசத்திலிருந்து  இஸ்ரவேலை<Israel>  வேரோடே  பிடுங்கி,  அவர்கள்  தங்களுக்கு  தோப்பு  விக்கிரகங்களை  வைத்து,  கர்த்தருக்குக்  கோபம்  உண்டாக்கினபடியினால்,  அவர்களை  நதிக்கப்பாலே  சிதறடித்து,  {1Kgs  14:15}

 

யெரொபெயாம்<Jeroboam>  செய்ததும்  இஸ்ரவேலைச்<Israel>  செய்யப்பண்ணினதுமான  பாவத்தினிமித்தம்  இஸ்ரவேலை<Israel>  ஒப்புக்கொடுத்துவிடுவார்  என்றான்.  {1Kgs  14:16}

 

அப்பொழுது  யெரொபெயாமின்<Jeroboam>  மனைவி  எழுந்து  புறப்பட்டு  திர்சாவுக்கு<Tirzah>  வந்தாள்;  அவள்  வாசற்படியிலே  வருகையில்  பிள்ளையாண்டான்  செத்துப்போனான்.  {1Kgs  14:17}

 

கர்த்தர்  தீர்க்கதரிசியாகிய  அகியா<Ahijah>  என்னும்  தமது  ஊழியக்காரனைக்  கொண்டு  சொன்ன  வார்த்தையின்படியே,  அவர்கள்  அவனை  அடக்கம்பண்ணி,  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  அவனுக்காகத்  துக்கங்கொண்டாடினார்கள்.  {1Kgs  14:18}

 

யெரொபெயாம்<Jeroboam>  யுத்தம்பண்ணினதும்  ஆண்டதுமான  அவனுடைய  மற்ற  வர்த்தமானங்கள்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.  {1Kgs  14:19}

 

யெரொபெயாம்<Jeroboam>  ராஜ்யபாரம்பண்ணின  காலம்  இருபத்திரண்டு  வருஷம்;  அவன்  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  நாதாப்<Nadab>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  14:20}

 

சாலொமோனின்<Solomon>  குமாரனாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  யூதாவிலே<Judah>  ராஜ்யபாரம்  பண்ணினான்;  ரெகொபெயாம்<Rehoboam>  ராஜாவாகிறபோது  நாற்பத்தொரு  வயதாயிருந்து,  கர்த்தர்  தம்முடைய  நாமம்  விளங்கும்படி  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களிலெல்லாம்  தெரிந்துகொண்ட  நகரமாகிய  எருசலேமிலே<Jerusalem>  பதினேழுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  அம்மோன்<Ammonitess>  ஜாதியான  அவனுடைய  தாயின்பேர்  நாமாள்<Naamah>.  {1Kgs  14:21}

 

யூதாஜனங்கள்<Judah>  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தாங்கள்  செய்துவருகிற  தங்களுடைய  பாவங்களினால்  தங்கள்  பிதாக்கள்  செய்த  எல்லாவற்றைப்பார்க்கிலும்  அவருக்கு  அதிக  எரிச்சலை  மூட்டினார்கள்.  {1Kgs  14:22}

 

அவர்களும்  உயர்ந்த  சகல  மேட்டின்மேலும்,  பச்சையான  சகல  மரத்தின்கீழும்,  மேடைகளையும்  சிலைகளையும்  தோப்பு  விக்கிரகங்களையும்  தங்களுக்கு  உண்டாக்கினார்கள்.  {1Kgs  14:23}

 

தேசத்திலே  இலச்சையான  புணர்ச்சிக்காரரும்  இருந்தார்கள்;  கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்திவிட்ட  ஜாதிகளுடைய  அருவருப்புகளின்படியெல்லாம்  செய்தார்கள்.  {1Kgs  14:24}

 

ரெகொபெயாம்<Rehoboam>  ராஜ்யபாரம்பண்ணும்  ஐந்தாம்  வருஷத்திலே,  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  சீஷாக்<Shishak>  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாய்  வந்து,  {1Kgs  14:25}

 

கர்த்தருடைய  ஆலயத்தின்  பொக்கிஷங்களையும்,  ராஜாவுடைய  அரமனையின்  பொக்கிஷங்களையும்,  சாலொமோன்<Solomon>  செய்வித்த  பொன்  பரிசைகள்  ஆகிய  சகலத்தையும்  எடுத்துக்கொண்டு  போய்விட்டான்.  {1Kgs  14:26}

 

அவைகளுக்குப்  பதிலாக  ராஜாவாகிய  ரெகொபெயாம்<Rehoboam>  வெண்கலப்  பரிசைகளைச்  செய்வித்து,  அவைகளை  ராஜாவின்  வாசற்படியைக்  காக்கிற  சேவகருடைய  தலைவரின்  கையில்  ஒப்பித்தான்.  {1Kgs  14:27}

 

ராஜா  கர்த்தருடைய  ஆலயத்துக்குள்  பிரவேசிக்கும்போது,  அரமனைச்  சேவகர்  அவைகளைப்  பிடித்துக்கொண்டு  போய்,  திரும்பத்  தங்கள்  அறையிலே  வைப்பார்கள்.  {1Kgs  14:28}

 

ரெகொபெயாமின்<Rehoboam>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  14:29}

 

ரெகொபெயாமுக்கும்<Rehoboam>  யெரொபெயாமுக்கும்<Jeroboam>  அவர்கள்  இருந்த  நாட்களிலெல்லாம்  யுத்தம்  நடந்துகொண்டிருந்தது.  {1Kgs  14:30}

 

ரெகொபெயாம்<Rehoboam>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  தாவீதின்<David>  நகரத்தில்  தன்  பிதாக்களண்டையில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அம்மோன்<Ammonitess>  ஜாதியான  அவன்  தாய்க்கு  நாமாள்<Naamah>  என்று  பேர்;  அவன்  குமாரனாகிய  அபியாம்<Abijam>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  14:31}

 

நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாம்<Jeroboam>  என்னும்  ராஜாவின்  பதினெட்டாம்  வருஷத்திலே  அபியாம்<Abijam>  யூதாவின்மேல்<Judah>  ராஜாவாகி,  {1Kgs  15:1}

 

மூன்று  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  ராஜ்யபாரம்பண்ணினான்;  அப்சலோமின்<Abishalom>  குமாரத்தியாகிய  அவனுடைய  தாயின்  பேர்  மாகாள்<Maachah>.  {1Kgs  15:2}

 

தன்  தகப்பன்  தனக்கு  முன்செய்த  எல்லாப்  பாவங்களிலும்  அவன்  நடந்தான்;  அவன்  இருதயம்  அவன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  இருதயத்தைப்போல்,  தன்  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  உத்தமமாயிருக்கவில்லை.  {1Kgs  15:3}

 

ஆனாலும்  தாவீதினிமித்தம்<David>  அவனுடைய  தேவனாகிய  கர்த்தர்,  அவனுக்குப்  பிற்பாடு  அவன்  குமாரனை  எழும்பப்பண்ணுகிறதினாலும்,  எருசலேமை<Jerusalem>  நிலை  நிறுத்துகிறதினாலும்,  அவனுக்கு  எருசலேமில்<Jerusalem>  ஒரு  விளக்கைக்  கட்டளையிட்டு  வந்தார்.  {1Kgs  15:4}

 

தாவீது<David>  ஏத்தியனாகிய<Hittite>  உரியாவின்<Uriah>  சங்கதி  ஒன்றுதவிர  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டதிலே  தான்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  ஒன்றையும்  விட்டு  விலகாமல்,  அவர்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்துவந்தான்.  {1Kgs  15:5}

 

ரெகொபெயாமுக்கும்<Rehoboam>  யெரொபெயாமுக்கும்<Jeroboam>  அவர்கள்  இருந்த  நாட்களிலெல்லாம்  யுத்தம்  நடந்துகொண்டிருந்தது.  {1Kgs  15:6}

 

அபியாமின்<Abijam>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது;  அபியாமுக்கும்<Abijam>  யெரொபெயாமுக்கும்<Jeroboam>  யுத்தம்  நடந்துகொண்டிருந்தது.  {1Kgs  15:7}

 

அபியாம்<Abijam>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவனைத்  தாவீதின்<David>  நகரத்தில்  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  ஆசா<Asa>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  15:8}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  இருபதாம்  வருஷத்திலே  ஆசா<Asa>  யூதாவின்மேல்<Judah>  ராஜாவாகி,  {1Kgs  15:9}

 

நாற்பத்தொரு  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  ராஜ்யபாரம்பண்ணினான்;  அப்சலோமின்<Abishalom>  குமாரத்தியாகிய  அவனுடைய  தாயின்  பேர்  மாகாள்<Maachah>.  {1Kgs  15:10}

 

ஆசா<Asa>  தன்  தகப்பனாகிய  தாவீதைப்போல்<David>  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  {1Kgs  15:11}

 

அவன்  இலச்சையான  புணர்ச்சிக்காரரை  தேசத்திலிருந்து  அகற்றி,  தன்  பிதாக்கள்  உண்டுபண்ணின  நரகலான  விக்கிரகங்களையெல்லாம்  விலக்கி,  {1Kgs  15:12}

 

தோப்பிலே  அருவருப்பான  விக்கிரகத்தை  உண்டுபண்ணின  தன்  தாயாகிய  மாகாளையும்<Maachah>  ராஜாத்தியாய்  இராதபடிக்கு  விலக்கிவிட்டான்;  அவளுடைய  விக்கிரகத்தையும்  ஆசா<Asa>  நிர்மூலமாக்கி,  கீதரோன்<Kidron>  ஆற்றண்டையிலே  சுட்டெரித்துப்போட்டான்.  {1Kgs  15:13}

 

மேடைகளோ  தகர்க்கப்படவில்லை;  ஆனாலும்  ஆசா<Asa>  உயிரோடிருந்த  நாளெல்லாம்  அவன்  இருதயம்  கர்த்தரோடே  உத்தமமாயிருந்தது.  {1Kgs  15:14}

 

தன்  தகப்பனும்  தானும்  பரிசுத்தப்படுத்தும்படி  நேர்ந்துகொண்ட  வெள்ளியையும்  பொன்னையும்  பணிமுட்டுகளையும்  அவன்  கர்த்தருடைய  ஆலயத்திலே  கொண்டுவந்தான்.  {1Kgs  15:15}

 

ஆசாவுக்கும்<Asa>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  பாஷாவுக்கும்<Baasha>  அவர்களுடைய  நாட்களிலெல்லாம்  யுத்தம்  நடந்துகொண்டிருந்தது.  {1Kgs  15:16}

 

ஒருவரும்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவினிடத்தில்<Asa>  போக்குவரத்தாயிராதபடிக்கு,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  பாஷா<Baasha>  யூதாவுக்கு<Judah>  விரோதமாக  வந்து  ராமாவைக்<Ramah>  கட்டினான்.  {1Kgs  15:17}

 

அப்பொழுது  ஆசா<Asa>  கர்த்தருடைய  ஆலயத்தின்  பொக்கிஷங்களில்  மீதியான  எல்லா  வெள்ளியையும்  பொன்னையும்,  ராஜாவின்  அரமனையின்  பொக்கிஷங்களையும்  எடுத்து,  அவைகளைத்  தன்  ஊழியக்காரர்  கையிலே  தமஸ்குவில்<Damascus>  வாசமாயிருக்கிற  எசியோனின்<Hezion>  மகனாகிய  தப்ரிமோனின்<Tabrimon>  குமாரன்  பெனாதாத்<Benhadad>  என்னும்  சீரியாவின்<Syria>  ராஜாவுக்குக்  கொடுத்தனுப்பி:  {1Kgs  15:18}

 

எனக்கும்  உமக்கும்  என்  தகப்பனுக்கும்  உம்முடைய  தகப்பனுக்கும்  உடன்படிக்கை  உண்டே;  இதோ,  உமக்கு  வெகுமதியாய்  வெள்ளியையும்  பொன்னையும்  அனுப்புகிறேன்;  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  பாஷா<Baasha>  என்னைவிட்டு  விலகிப்  போகும்படிக்கு,  நீர்  வந்து  அவனோடு  செய்த  உடன்படிக்கையைத்  தள்ளிப்போடும்  என்று  சொல்லச்சொன்னான்.  {1Kgs  15:19}

 

பெனாதாத்<Benhadad>,  ராஜாவாகிய  ஆசாவுக்குச்<Asa>  செவிகொடுத்து,  தனக்கு  உண்டான  சேனாபதிகளை  இஸ்ரவேலின்<Israel>  பட்டணங்களுக்கு  விரோதமாக  அனுப்பி,  ஈயோனையும்<Ijon>,  தாணையும்<Dan>  பெத்மாக்கா<Bethmaachah>  என்னும்  ஆபேலையும்<Abel>  கின்னரோத்<Cinneroth>  அனைத்தையும்  நப்தலியின்<Naphtali>  முழுத்தேசத்தோடுங்கூட  முறிய  அடித்தான்.  {1Kgs  15:20}

 

பாஷா<Baasha>  அதைக்  கேட்டபோது,  ராமாவைக்<Ramah>  கட்டுகிறதை  விட்டுத்  திர்சாவிலிருந்துவிட்டான்<Tirzah>.  {1Kgs  15:21}

 

அப்பொழுது  ராஜாவாகிய  ஆசா<Asa>  யூதா<Judah>  எங்கும்  ஒருவரும்  தப்பாமல்  எல்லாரும்  போய்,  பாஷா<Baasha>  கட்டின  ராமாவின்<Ramah>  கற்களையும்  அதின்  மரங்களையும்  எடுத்துவர  பறைமுறை  இடுவித்து;  அவைகளினால்  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்திலுள்ள  கேபாவையும்<Geba>  மிஸ்பாவையும்<Mizpah>  கட்டினான்.  {1Kgs  15:22}

 

ஆசாவின்<Asa>  மற்ற  எல்லா  வர்த்தமானங்களும்,  அவனுடைய  எல்லா  வல்லமையும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  கட்டின  பட்டணங்களின்  வரலாறும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது;  அவன்  முதிர்வயதான  காலத்தில்  அவனுடைய  கால்களில்  வியாதி  கண்டிருந்தது.  {1Kgs  15:23}

 

ஆசா<Asa>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  தன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  நகரத்திலே  தன்  பிதாக்களண்டையில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  யோசபாத்<Jehoshaphat>  அவன்  ஸ்தானத்திலே  ராஜாவானான்.  {1Kgs  15:24}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவின்<Asa>  இரண்டாம்  வருஷத்திலே  யெரொபெயாமின்<Jeroboam>  குமாரனாகிய  நாதாப்<Nadab>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகி,  இரண்டு  வருஷம்  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜ்யபாரம்பண்ணினான்.  {1Kgs  15:25}

 

அவன்  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தன்  தகப்பன்  வழியிலும்,  அவன்  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  அவனுடைய  பாவத்திலும்  நடந்தான்.  {1Kgs  15:26}

 

இசக்கார்<Issachar>  வம்சத்தானாகிய  அகியாவின்<Ahijah>  குமாரனான  பாஷா<Baasha>,  அவனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  நாதாபும்<Nadab>  இஸ்ரவேலனைத்தும்<Israel>  பெலிஸ்தருக்கு<Philistines>  இருந்த  கிபெத்தோனை<Gibbethon>  முற்றிக்கைபோட்டிருக்கையில்,  பாஷா<Baasha>  அவனைக்  கிபெத்தோனிலே<Gibbethon>  வெட்டிப்போட்டான்.  {1Kgs  15:27}

 

பாஷா<Baasha>  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவின்<Asa>  மூன்றாம்  வருஷத்திலே  அவனைக்  கொன்றுபோட்டபின்,  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  15:28}

 

அப்பொழுது  யெரொபெயாம்<Jeroboam>  செய்ததும்,  இஸ்ரவேலைச்<Israel>  செய்யப்பண்ணினதுமான  பாவங்களினிமித்தமும்,  அவன்  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  உண்டாக்கின  கோபத்தினிமித்தமும்,  கர்த்தர்  சீலோனியனான<Shilonite>  அகியா<Ahijah>  என்னும்  தமது  ஊழியக்காரனைக்கொண்டு  சொல்லியிருந்த  வார்த்தையின்படியே,  {1Kgs  15:29}

 

அவன்  ராஜாவானபின்  அவன்  யெரொபெயாமின்<Jeroboam>  வீட்டாரையெல்லாம்  வெட்டிப்போட்டான்;  யெரொபெயாமுக்கு<Jeroboam>  இருந்த  சுவாசமுள்ளதொன்றையும்  அவன்  அழிக்காமல்  விடவில்லை.  {1Kgs  15:30}

 

நாதாபின்<Nadab>  மற்ற  வர்த்தமானங்களும்  அவன்  செய்தவை  யாவும்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  15:31}

 

ஆசாவுக்கும்<Asa>  இஸ்ரவேல்<Israel>  ராஜாவாகிய  பாஷாவுக்கும்<Baasha>  அவர்கள்  நாட்களிலெல்லாம்  யுத்தம்  நடந்துகொண்டிருந்தது.  {1Kgs  15:32}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவின்<Asa>  மூன்றாம்  வருஷத்திலே  அகியாவின்<Ahijah>  குமாரனாகிய  பாஷா<Baasha>,  இஸ்ரவேலனைத்தின்<Israel>  மேலும்  திர்சாவிலே<Tirzah>  ராஜாவாகி  இருபத்து  நாலு  வருஷம்  ஆண்டு,  {1Kgs  15:33}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  யெரொபெயாமின்<Jeroboam>  வழியிலும்,  அவன்  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  அவனுடைய  பாவத்திலும்  நடந்தான்.  {1Kgs  15:34}

 

பாஷாவுக்கு<Baasha>  விரோதமாகக்  கர்த்தருடைய  வார்த்தை  ஆனானியின்<Hanani>  குமாரனாகிய  யெகூவுக்கு<Jehu>  உண்டாயிற்று,  அவர்:  {1Kgs  16:1}

 

நான்  உன்னைத்  தூளிலிருந்து  உயர்த்தி,  உன்னை  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்<Israel>  தலைவனாக  வைத்திருக்கையில்,  நீ  யெரொபெயாமின்<Jeroboam>  வழியிலே  நடந்து,  என்  ஜனமாகிய  இஸ்ரவேல்<Israel>  தங்கள்  பாவங்களால்  எனக்குக்  கோபமுண்டாக்கும்படி  அவர்களைப்  பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால்,  {1Kgs  16:2}

 

இதோ,  நான்  பாஷாவின்<Baasha>  பின்னடியாரையும்  அவன்  வீட்டாரின்  பின்னடியாரையும்  அழித்துப்போட்டு,  உன்  வீட்டை  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  வீட்டைப்போல  ஆக்குவேன்.  {1Kgs  16:3}

 

பாஷாவின்<Baasha>  சந்ததியிலே  பட்டணத்தில்  சாகிறவனை  நாய்கள்  தின்னும்;  வெளியிலே  சாகிறவனை  ஆகாயத்துப்  பறவைகள்  தின்னும்  என்றார்.  {1Kgs  16:4}

 

பாஷாவின்<Baasha>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்ததும்,  அவனுடைய  வல்லமையும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  16:5}

 

பாஷா<Baasha>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து  திர்சாவில்<Tirzah>  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  ஏலா<Elah>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  16:6}

 

பாஷா<Baasha>  தன்  கைகளின்  செய்கையால்  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்கி,  அவர்  பார்வைக்குச்  செய்த  எல்லாப்  பொல்லாப்பினிமித்தமும்,  அவன்  யெரொபெயாமின்<Jeroboam>  வீட்டாரை  வெட்டிப்போட்டதினிமித்தமும்,  இவர்களைப்போல்  ஆவான்  என்று  அவனுக்கும்  அவன்  வீட்டுக்கும்  விரோதமாக  ஆனானியின்<Hanani>  குமாரனாகிய  யெகூ<Jehu>  என்னும்  தீர்க்கதரிசியினால்  கர்த்தருடைய  வார்த்தை  பின்னும்  உண்டாயிற்று.  {1Kgs  16:7}

 

யூதாவின்<Judah>  ராஜாவான  ஆசாவின்<Asa>  இருபத்தாறாம்  வருஷத்திலே  பாஷாவின்<Baasha>  குமாரனாகிய  ஏலா<Elah>  இஸ்ரவேலின்மேல்<Israel>  திர்சாவிலே<Tirzah>  ராஜாவாகி  இரண்டு  வருஷம்  அரசாண்டான்.  {1Kgs  16:8}

 

இரதங்களில்  பாதிபங்குக்குத்  தலைவனாகிய  சிம்ரி<Zimri>  என்னும்  அவன்  ஊழியக்காரன்  அவனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  அவன்  திர்சாவிலே<Tirzah>  அவ்விடத்து  அரமனை  உக்கிராணக்காரனாகிய  அர்சாவின்<Arza>  வீட்டிலே  குடித்து  வெறி  கொண்டிருக்கையில்,  {1Kgs  16:9}

 

சிம்ரி<Zimri>  உள்ளே  புகுந்து,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவின்<Asa>  இருபத்தேழாம்  வருஷத்தில்  அவனை  வெட்டிக்  கொன்றுபோட்டு,  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  16:10}

 

அவன்  ராஜாவாகி,  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்தபோது,  அவன்  பாஷாவின்<Baasha>  வீட்டாரையெல்லாம்  வெட்டிப்போட்டான்;  அவன்  இனத்தாரையாகிலும்,  அவன்  சிநேகிதரையாகிலும்,  சுவரில்  நீர்விடும்  ஒரு  நாயையாகிலும்,  அவன்  உயிரோடே  வைக்கவில்லை.  {1Kgs  16:11}

 

அப்படியே  பாஷாவும்<Baasha>,  அவன்  குமாரனாகிய  ஏலாவும்<Elah>,  தங்கள்  வீணான  விக்கிரகங்களினாலே  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்கிச்  செய்ததும்  இஸ்ரவேலைச்<Israel>  செய்யப்பண்ணினதுமான  அவர்களுடைய  எல்லாப்  பாவங்களினிமித்தமும்,  {1Kgs  16:12}

 

கர்த்தர்  தீர்க்கதரிசியாகிய  யெகூவினால்<Jehu>  பாஷாவைக்குறித்துச்<Baasha>  சொல்லியிருந்த  அவருடைய  வார்த்தையின்படியே,  சிம்ரி<Zimri>  பாஷாவின்<Baasha>  வீட்டாரையெல்லாம்  அழித்துப்போட்டான்.  {1Kgs  16:13}

 

ஏலாவின்<Elah>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  16:14}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவின்<Asa>  இருபத்தேழாம்  வருஷத்திலே  சிம்ரி<Zimri>  திர்சாவிலே<Tirzah>  ஏழுநாள்  ராஜாவாயிருந்தான்;  ஜனங்கள்  அப்பொழுது  பெலிஸ்தருக்கு<Philistines>  இருக்கிற  கிபெத்தோனுக்கு<Gibbethon>  எதிராகப்  பாளயமிறங்கியிருந்தார்கள்.  {1Kgs  16:15}

 

சிம்ரி<Zimri>  கட்டுப்பாடுபண்ணி,  ராஜாவைக்  கொன்றுபோட்டான்  என்பதை  அங்கே  பாளயமிறங்கின  ஜனங்கள்  கேட்டபோது,  இஸ்ரவேலரெல்லாம்<Israel>  அந்நாளிலேதானே  பாளயத்திலே  படைத்தலைவனாகிய  உம்ரியை<Omri>  இஸ்ரவேல்மேல்<Israel>  ராஜாவாக்கினார்கள்.  {1Kgs  16:16}

 

அப்பொழுது  உம்ரியும்<Omri>  அவனோடேகூட  இஸ்ரவேல்<Israel>  அனைத்தும்  கிபெத்தோனிலிருந்து<Gibbethon>  வந்து,  திர்சாவை<Tirzah>  முற்றிக்கை  போட்டார்கள்.  {1Kgs  16:17}

 

பட்டணம்  பிடிபட்டதைச்  சிம்ரி<Zimri>  கண்டபோது,  அவன்  ராஜாவின்  வீடாகிய  அரமனைக்குள்  பிரவேசித்து,  தான்  இருக்கிற  ராஜ  அரமனையைத்  தீக்கொளுத்தி,  அதிலே  செத்தான்.  {1Kgs  16:18}

 

அவன்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  யெரொபெயாமின்<Jeroboam>  வழியிலும்  அவன்  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  அவன்  பாவத்திலும்  நடந்ததினால்,  கட்டிக்கொண்ட  அவனுடைய  பாவங்களினிமித்தம்  அப்படி  நடந்தது.  {1Kgs  16:19}

 

சிம்ரியின்<Zimri>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  பண்ணின  அவனுடைய  கட்டுப்பாடும்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  16:20}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  ஜனங்கள்  இரண்டு  வகுப்பாய்ப்  பிரிந்து,  பாதி  ஜனங்கள்  கீனாத்தின்<Ginath>  குமாரனாகிய  திப்னியை<Tibni>  ராஜாவாக்க,  அவனைப்  பின்பற்றினார்கள்;  பாதி  ஜனங்கள்  உம்ரியைப்<Omri>  பின்பற்றினார்கள்.  {1Kgs  16:21}

 

ஆனாலும்  கீனாத்தின்<Ginath>  குமாரனாகிய  திப்னியைப்<Tibni>  பின்பற்றின  ஜனங்களைப்பார்க்கிலும்,  உம்ரியைப்<Omri>  பின்பற்றின  ஜனங்கள்  பலத்துப்போனார்கள்;  திப்னி<Tibni>  செத்துப்போனான்;  உம்ரி<Omri>  அரசாண்டான்.  {1Kgs  16:22}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவின்<Asa>  முப்பத்தோராம்  வருஷத்தில்,  உம்ரி<Omri>  இஸ்ரவேல்மேல்<Israel>  ராஜாவாகி,  பன்னிரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  அவன்  திர்சாவிலே<Tirzah>  ஆறுவருஷம்  அரசாண்டு,  {1Kgs  16:23}

 

பின்பு  சேமேரின்<Shemer>  கையிலிருந்து  சமாரியா<Samaria>  மலையை  இரண்டு  தாலந்து  வெள்ளிக்கு  வாங்கி,  அந்த  மலையின்மேல்  ஒரு  பட்டணத்தைக்  கட்டி,  அதற்கு  மலையினுடைய  எஜமானாயிருந்த  சேமேருடைய<Shemer>  பேரின்படியே  சமாரியா<Samaria>  என்னும்  பேரைத்  தரித்தான்.  {1Kgs  16:24}

 

உம்ரி<Omri>  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தனக்கு  முன்னிருந்த  எல்லாரைப்பார்க்கிலும்  கேடாய்  நடந்து,  {1Kgs  16:25}

 

நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  சகல  வழியிலும்,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்குத்  தங்கள்  வீணான  விக்கிரகங்களாலே  கோபம்  மூட்டும்படியாய்  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  அவனுடைய  பாவங்களிலும்  நடந்தான்.  {1Kgs  16:26}

 

உம்ரி<Omri>  செய்த  அவனுடைய  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  காண்பித்த  வல்லமையும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  16:27}

 

உம்ரி<Omri>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  சமாரியாவிலே<Samaria>  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  ஆகாப்<Ahab>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  16:28}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆசாவின்<Asa>  முப்பத்தெட்டாம்  வருஷத்தில்  உம்ரியின்<Omri>  குமாரனாகிய  ஆகாப்<Ahab>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகி,  சமாரியாவில்<Samaria>  இஸ்ரவேலின்மேல்<Israel>  இருபத்திரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்.  {1Kgs  16:29}

 

உம்ரியின்<Omri>  குமாரனாகிய  ஆகாப்<Ahab>,  தனக்கு  முன்னிருந்த  எல்லாரைப்பார்க்கிலும்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {1Kgs  16:30}

 

நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களில்  நடப்பது  அவனுக்குக்  கொஞ்சக்காரியமென்று  நினைத்தாற்போல்  அவன்  சீதோனியரின்<Zidonians>  ராஜாவாகிய  ஏத்பாகாலின்<Ethbaal>  குமாரத்தி  யேசபேலை<Jezebel>  விவாகம்பண்ணினதுமல்லாமல்,  அவன்  போய்  பாகாலையும்<Baal>  சேவித்து  அதைப்  பணிந்துகொண்டு,  {1Kgs  16:31}

 

தான்  சமாரியாவிலே<Samaria>  கட்டின  பாகாலின்<Baal>  கோவிலில்  பாகாலுக்குப்<Baal>  பலிபீடத்தை  எடுப்பித்தான்.  {1Kgs  16:32}

 

ஆகாப்<Ahab>  ஒரு  விக்கிரகத்தோப்பையும்  வைத்து,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்குக்  கோபம்  உண்டாக்கும்படிக்கு  தனக்கு  முன்னிருந்த  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்களெல்லாம்  செய்ததைப்பார்க்கிலும்  அதிகமாய்ச்  செய்துவந்தான்.  {1Kgs  16:33}

 

அவன்  நாட்களிலே  பெத்தேல்<Bethelite>  ஊரானாகிய  ஈயேல்<Hiel>  எரிகோவைக்<Jericho>  கட்டினான்;  கர்த்தர்  நூனின்<Nun>  குமாரனாகிய  யோசுவாவைக்கொண்டு<Joshua>  சொல்லியிருந்த  வார்த்தையின்படியே,  அவன்  அதின்  அஸ்திபாரத்தைப்  போடுகிறபோது,  அபிராம்<Abiram>  என்னும்  தன்  மூத்த  குமாரனையும்,  அதின்  வாசல்களை  வைக்கிறபோது  செகூப்<Segub>  என்னும்  தன்  இளையகுமாரனையும்  சாகக்கொடுத்தான்.  {1Kgs  16:34}

 

கீலேயாத்தின்<Gilead>  குடிகளிலே  திஸ்பியனாகிய<Tishbite>  எலியா<Elijah>  ஆகாபை<Ahab>  நோக்கி:  என்  வாக்கின்படியே  அன்றி  இந்த  வருஷங்களிலே  பனியும்  மழையும்  பெய்யாதிருக்கும்  என்று  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  முன்பாக  நிற்கிற  நான்  அவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  {1Kgs  17:1}

 

பின்பு  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  உண்டாயிற்று,  அவர்:  {1Kgs  17:2}

 

நீ  இவ்விடத்தை  விட்டுக்  கீழ்த்திசையை  நோக்கிப்  போய்,  யோர்தானுக்கு<Jordan>  நேராயிருக்கிற  கேரீத்<Cherith>  ஆற்றண்டையில்  ஒளித்துக்கொண்டிரு.  {1Kgs  17:3}

 

அந்த  ஆற்றின்  தண்ணீரைக்  குடிப்பாய்;  அங்கே  உன்னைப்  போஷிக்க,  காகங்களுக்குக்  கட்டளையிடுவேன்  என்றார்.  {1Kgs  17:4}

 

அவன்  போய்,  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  யோர்தானுக்கு<Jordan>  நேராயிருக்கிற  கேரீத்<Cherith>  ஆற்றண்டையிலே  தங்கியிருந்தான்.  {1Kgs  17:5}

 

காகங்கள்  அவனுக்கு  விடியற்காலத்தில்  அப்பமும்  இறைச்சியும்,  சாயங்காலத்தில்  அப்பமும்  இறைச்சியும்  கொண்டுவந்தது;  தாகத்திற்கு  அந்த  ஆற்றின்  தண்ணீரைக்  குடித்தான்.  {1Kgs  17:6}

 

தேசத்தில்  மழை  பெய்யாதபடியினால்,  சிலநாளுக்குப்பின்பு  அந்த  ஆறு  வற்றிப்போயிற்று.  {1Kgs  17:7}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  உண்டாயிற்று,  அவர்:  {1Kgs  17:8}

 

நீ  எழுந்து,  சீதோனுக்கடுத்த<Zidon>  சாறிபாத்<Zarephath>  ஊருக்குப்  போய்,  அங்கே  தங்கியிரு;  உன்னைப்  பராமரிக்கும்படி  அங்கே  இருக்கிற  ஒரு  விதவைக்குக்  கட்டளையிட்டேன்  என்றார்.  {1Kgs  17:9}

 

அப்படியே  அவன்  எழுந்து,  சாறிபாத்துக்குப்<Zarephath>  போனான்;  அந்தப்  பட்டணத்தின்  ஒலிமுகவாசலுக்கு  அவன்  வந்தபோது,  அங்கே  ஒரு  விதவை  விறகு  பொறுக்கிக்கொண்டிருந்தாள்;  அவன்  அவளைப்  பார்த்துக்  கூப்பிட்டு,  நான்  குடிக்கிறதற்குக்  கொஞ்சம்  தண்ணீர்  ஒரு  பாத்திரத்தில்  எனக்குக்  கொண்டுவா  என்றான்.  {1Kgs  17:10}

 

கொண்டுவர  அவள்  போகிறபோது  அவன்  அவளை  நோக்கிக்  கூப்பிட்டு,  கொஞ்சம்  அப்பமும்  உன்  கையிலே  எனக்குக்  கொண்டுவா  என்றான்.  {1Kgs  17:11}

 

அதற்கு  அவள்:  பானையில்  ஒரு  பிடிமாவும்  கலயத்தில்  கொஞ்சம்  எண்ணெயுமே  அல்லாமல்,  என்னிடத்தில்  ஒரு  அடையும்  இல்லையென்று  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  இதோ,  நானும்  என்  குமாரனும்  சாப்பிட்டுச்  செத்துப்போக,  அதை  எனக்கும்  அவனுக்கும்  ஆயத்தப்படுத்துகிறதற்கு  இரண்டு  விறகு  பொறுக்குகிறேன்  என்றாள்.  {1Kgs  17:12}

 

அப்பொழுது  எலியா<Elijah>  அவளைப்  பார்த்து:  பயப்படாதே;  நீ  போய்  உன்  வார்த்தையின்படி  ஆயத்தப்படுத்து;  ஆனாலும்  முதல்  அதிலே  எனக்கு  ஒரு  சிறிய  அடையைப்  பண்ணி  என்னிடத்தில்  கொண்டுவா;  பின்பு  உனக்கும்  உன்  குமாரனுக்கும்  பண்ணலாம்.  {1Kgs  17:13}

 

கர்த்தர்  தேசத்தின்மேல்  மழையைக்  கட்டளையிடும்  நாள்மட்டும்  பானையின்  மா  செலவழிந்துபோவதும்  இல்லை;  கலசத்தின்  எண்ணெய்  குறைந்துபோவதும்  இல்லை  என்று  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {1Kgs  17:14}

 

அவள்  போய்,  எலியாவின்<Elijah>  சொற்படி  செய்தாள்;  அவளும்,  இவனும்,  அவள்  வீட்டாரும்  அநேகநாள்  சாப்பிட்டார்கள்.  {1Kgs  17:15}

 

கர்த்தர்  எலியாவைக்கொண்டு<Elijah>  சொன்ன  வார்த்தையின்படியே,  பானையிலே  மா  செலவழிந்துபோகவும்  இல்லை;  கலசத்தின்  எண்ணெய்  குறைந்துபோகவும்  இல்லை.  {1Kgs  17:16}

 

இவைகள்  நடந்தபின்பு,  வீட்டுக்காரியாகிய  அந்த  ஸ்திரீயின்  மகன்  வியாதியில்  விழுந்தான்;  அவனுடைய  சுவாசம்  போகுமட்டும்  அவனுடைய  வியாதி  அதிகரித்துக்கொண்டே  இருந்தது.  {1Kgs  17:17}

 

அப்பொழுது  அவள்  எலியாவை<Elijah>  நோக்கி:  தேவனுடைய  மனுஷனே,  எனக்கும்  உமக்கும்  என்ன?  என்  அக்கிரமத்தை  நினைக்கப்பண்ணவும்,  என்  குமாரனைச்  சாகப்பண்ணவுமா?  என்னிடத்தில்  வந்தீர்  என்றாள்.  {1Kgs  17:18}

 

அதற்கு  அவன்:  உன்  குமாரனை  என்னிடத்தில்  தா  என்று  சொல்லி,  அவனை  அவள்  மடியிலிருந்து  எடுத்து,  தான்  தங்கியிருக்கிற  மேல்வீட்டிலே  அவனைக்  கொண்டுபோய்,  தன்  கட்டிலின்மேல்  வைத்து:  {1Kgs  17:19}

 

என்  தேவனாகிய  கர்த்தாவே,  நான்  தங்கியிருக்க  இடங்கொடுத்த  இந்த  விதவையின்  மகனைச்  சாகப்பண்ணினதினால்  அவளுக்குத்  துக்கத்தை  வருவித்தீரோ  என்று  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு;  {1Kgs  17:20}

 

அந்தப்  பிள்ளையின்மேல்  மூன்றுதரம்  குப்புறவிழுந்து:  என்  தேவனாகிய  கர்த்தாவே,  இந்தப்  பிள்ளையின்  ஆத்துமா  அவனுக்குள்  திரும்பிவரப்பண்ணும்  என்று  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினான்.  {1Kgs  17:21}

 

கர்த்தர்  எலியாவின்<Elijah>  சத்தத்தைக்  கேட்டார்;  பிள்ளையினுடைய  ஆத்துமா  அவனுள்  திரும்பி  வந்தது;  அவன்  பிழைத்தான்.  {1Kgs  17:22}

 

அப்பொழுது  எலியா<Elijah>  பிள்ளையை  எடுத்து,  மேல்வீட்டிலிருந்து  அவனைக்  கீழ்வீட்டிற்குள்  கொண்டுவந்து,  அவனை  அவன்  தாயினிடத்தில்  கொடுத்து:  பார்  உன்  பிள்ளை  உயிரோடிருக்கிறான்  என்று  சொன்னான்.  {1Kgs  17:23}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  எலியாவை<Elijah>  நோக்கி:  நீர்  தேவனுடைய  மனுஷன்  என்றும்,  உம்முடைய  வாயிலிருந்து  பிறக்கும்  கர்த்தரின்  வார்த்தை  உண்மை  என்றும்,  இதினால்  இப்போது  அறிந்திருக்கிறேன்  என்றாள்.  {1Kgs  17:24}

 

அநேகநாள்  சென்று,  மூன்றாம்  வருஷமாகையில்,  கர்த்தருடைய  வார்த்தை  எலியாவுக்கு<Elijah>  உண்டாகி:  நீ  போய்  ஆகாபுக்கு<Ahab>  உன்னைக்  காண்பி;  நான்  தேசத்தின்மேல்  மழையைக்  கட்டளையிடுவேன்  என்றார்.  {1Kgs  18:1}

 

அப்பொழுது  எலியா<Elijah>  ஆகாபுக்குத்<Ahab>  தன்னைக்  காண்பிக்கப்போனான்;  பஞ்சமோவெனில்  சமாரியாவிலே<Samaria>  கொடிதாயிருந்தது.  {1Kgs  18:2}

 

ஆனபடியால்  ஆகாப்<Ahab>  அரமனை  விசாரிப்புக்காரனாகிய  ஒபதியாவை<Obadiah>  அழைப்பித்தான்;  ஒபதியா<Obadiah>  கர்த்தருக்கு  மிகவும்  பயந்து  நடக்கிறவனாயிருந்தான்.  {1Kgs  18:3}

 

யேசபேல்<Jezebel>  கர்த்தரின்  தீர்க்கதரிசிகளைச்  சங்கரிக்கிறபோது,  ஒபதியா<Obadiah>  நூறு  தீர்க்கதரிசிகளைச்  சேர்த்து,  அவர்களைக்  கெபிக்கு  ஐம்பது  ஐம்பது  பேராக  ஒளித்துவைத்து,  அவர்களுக்கு  அப்பமும்  தண்ணீரும்  கொடுத்து,  அவர்களைப்  பராமரித்துவந்தான்.  {1Kgs  18:4}

 

ஆகாப்<Ahab>  ஒபதியாவைப்<Obadiah>  பார்த்து:  நீ  தேசத்திலிருக்கிற  எல்லா  நீரூற்றுகளிடத்திலும்,  எல்லா  ஆறுகளிடத்திலும்  போ;  நாம்  சகல  மிருகஜீவன்களையும்  சாகக்கொடாமல்,  குதிரைகளையும்  கோவேறு  கழுதைகளையுமாவது  உயிரோடே  காப்பாற்றும்படிக்கு  நமக்குப்  புல்  அகப்படுமா  என்று  பார்  என்றான்.  {1Kgs  18:5}

 

அப்படியே  தேசத்தைச்  சுற்றிப்பார்க்கும்படி,  அதைப்  பகுத்துக்கொண்டு,  ஆகாப்<Ahab>  ஒரு  வழியாயும்,  ஒபதியா<Obadiah>  வேறொரு  வழியாயும்  போனார்கள்.  {1Kgs  18:6}

 

ஒபதியா<Obadiah>  வழியில்  போகும்போது,  எலியா<Elijah>  அவனுக்கு  எதிர்ப்பட்டான்;  அவன்  இவனை  இன்னான்  என்று  அறிந்து,  முகங்குப்புற  விழுந்து,  நீர்  என்  ஆண்டவனாகிய  எலியா<Elijah>  அல்லவா  என்று  கேட்டதற்கு;  {1Kgs  18:7}

 

அவன்,  நான்தான்;  நீ  போய்,  இதோ,  எலியா<Elijah>  வந்திருக்கிறான்  என்று  உன்  ஆண்டவனுக்குச்  சொல்  என்றான்.  {1Kgs  18:8}

 

அதற்கு  அவன்:  ஆகாப்<Ahab>  என்னைக்  கொன்றுபோடும்படிக்கு,  நீர்  உமது  அடியானை  அவன்  கையில்  ஒப்புக்கொடுக்க  நான்  என்ன  பாவம்  செய்தேன்.  {1Kgs  18:9}

 

உம்மைத்  தேடும்படி  என்  ஆண்டவன்  மனுஷரை  அனுப்பாத  ஜாதியும்  ராஜ்யமும்  இல்லை  என்று  உம்முடைய  தேவனாகிய  கர்த்தரின்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  நீர்  இல்லையென்று  அவர்கள்  சொன்னபோது,  அவன்  அந்த  ராஜ்யத்தையும்  அந்த  ஜாதியையும்  உம்மைக்  காணவில்லை  என்று  சத்தியம்  வாங்கிக்கொண்டான்.  {1Kgs  18:10}

 

இப்போதும்  நீ  போய்,  உன்  ஆண்டவனுக்கு,  இதோ,  எலியா<Elijah>  வந்திருக்கிறான்  என்று  சொல்  என்று  நீர்  சொல்லுகிறீரே.  {1Kgs  18:11}

 

நான்  உம்மை  விட்டுப்போனவுடனே  ஒருவேளை  கர்த்தருடைய  ஆவியானவர்  உம்மை  எடுத்து,  நான்  அறியாத  இடத்திற்குக்  கொண்டுபோவார்;  அப்பொழுது  நான்  ஆகாபிடத்திற்குப்<Ahab>  போய்  அறிவித்த  பின்பு,  அவன்  உம்மைக்  காணாவிட்டால்,  என்னைக்  கொன்றுபோடுவானே;  உமது  அடியானாகிய  நான்  சிறுவயதுமுதல்  கர்த்தருக்குப்  பயந்து  நடக்கிறவன்.  {1Kgs  18:12}

 

யேசபேல்<Jezebel>  கர்த்தரின்  தீர்க்கதரிசிகளைக்  கொன்றுபோடுகிறபோது,  நான்  கர்த்தருடைய  தீர்க்கதரிசிகளில்  நூறுபேரை  ஒவ்வொரு  கெபியிலே  ஐம்பது  ஐம்பது  பேராக  ஒளித்துவைத்து,  அவர்களுக்கு  அப்பமும்  தண்ணீரும்  கொடுத்து,  பராமரித்துவந்த  என்னுடைய  செய்கை  என்  ஆண்டவனுக்கு  அறிவிக்கப்படவில்லையோ?  {1Kgs  18:13}

 

இப்போதும்  என்  ஆண்டவன்  என்னைக்  கொன்றுபோடும்படியாக,  நீர்:  இதோ,  எலியா<Elijah>  வந்திருக்கிறான்  என்று  போய்  அவனுக்குச்  சொல்  என்று  சொல்லுகிறீரே  என்றான்.  {1Kgs  18:14}

 

அதற்கு  எலியா<Elijah>:  இன்றைக்கு  என்னை  அவனுக்குக்  காண்பிப்பேன்  என்று  சேனைகளின்  கர்த்தருக்கு  முன்பாக  நிற்கிற  நான்  அவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  {1Kgs  18:15}

 

அப்பொழுது  ஒபதியா<Obadiah>  போய்,  ஆகாபைச்<Ahab>  சந்தித்து  அவனுக்கு  அதை  அறிவித்தவுடனே,  ஆகாப்<Ahab>  எலியாவைச்<Elijah>  சந்திக்கப்போனான்.  {1Kgs  18:16}

 

ஆகாப்<Ahab>  எலியாவைக்<Elijah>  கண்டபோது,  ஆகாப்<Ahab>  அவனை  நோக்கி:  இஸ்ரவேலைக்<Israel>  கலங்கப்பண்ணுகிறவன்  நீயல்லவா  என்றான்.  {1Kgs  18:17}

 

அதற்கு  அவன்:  இஸ்ரவேலைக்<Israel>  கலங்கப்பண்ணுகிறவன்  நான்  அல்ல;  கர்த்தரின்  கட்டளைகளை  விட்டு  பாகால்களைப்<Baalim>  பின்பற்றினதினால்  நீரும்  உம்முடைய  தகப்பன்  வீட்டாருமே  இஸ்ரவேலைக்<Israel>  கலங்கப்பண்ணுகிறவர்கள்.  {1Kgs  18:18}

 

இப்போதும்  கர்மேல்<Carmel>  பர்வதத்திலே  இஸ்ரவேலனைத்தையும்<Israel>,  பாகாலின்<Baal>  தீர்க்கதரிசிகள்  நானூற்றைம்பதுபேரையும்,  யேசபேலின்<Jezebel>  பந்தியிலே  சாப்பிடுகிற  தோப்பு  விக்கிரகத்தின்  தீர்க்கதரிசிகள்  நானூறுபேரையும்  என்னிடத்தில்  கூட்டிக்கொண்டுவர  ஆட்களை  அனுப்பும்  என்றான்.  {1Kgs  18:19}

 

அப்படியே  ஆகாப்<Ahab>:  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எல்லாரிடத்திலும்  ஆட்களை  அனுப்பி,  கர்மேல்<Carmel>  பர்வதத்திலே  அந்தத்  தீர்க்கதரிசிகளைக்  கூடிவரும்படி  செய்தான்.  {1Kgs  18:20}

 

அப்பொழுது  எலியா<Elijah>  சகல  ஜனத்தண்டைக்கும்  வந்து:  நீங்கள்  எந்தமட்டும்  இரண்டு  நினைவுகளால்  குந்திக்குந்தி  நடப்பீர்கள்;  கர்த்தர்  தெய்வமானால்  அவரைப்  பின்பற்றுங்கள்;  பாகால்<Baal>  தெய்வமானால்  அவனைப்  பின்பற்றுங்கள்  என்றான்,  ஜனங்கள்  பிரதியுத்தரமாக  அவனுக்கு  ஒன்றும்  சொல்லவில்லை.  {1Kgs  18:21}

 

அப்பொழுது  எலியா<Elijah>  ஜனங்களை  நோக்கி:  கர்த்தரின்  தீர்க்கதரிசிகளில்  மீந்திருக்கிறவன்  நான்  ஒருவன்;  பாகாலின்<Baal>  தீர்க்கதரிசிகளோ  நானூற்றைம்பதுபேர்.  {1Kgs  18:22}

 

இப்போதும்  இரண்டு  காளைகளை  எங்களிடத்தில்  கொண்டுவரட்டும்;  ஒரு  காளையை  அவர்கள்  தெரிந்துகொண்டு,  அதைச்  சந்துசந்தாகத்  துண்டித்து,  நெருப்புப்  போடாமல்  விறகுகளின்மேல்  வைக்கக்கடவர்கள்;  நான்  மற்றக்  காளையை  அப்படியே  செய்து,  நெருப்புப்  போடாமல்  விறகுகளின்மேல்  வைப்பேன்.  {1Kgs  18:23}

 

நீங்கள்  உங்கள்  தேவனுடைய  நாமத்தைச்  சொல்லிக்  கூப்பிடுங்கள்;  நான்  கர்த்தருடைய  நாமத்தைச்  சொல்லிக்  கூப்பிடுவேன்;  அப்பொழுது  அக்கினியினால்  உத்தரவு  அருளும்  தெய்வமே  தெய்வம்  என்றான்;  அதற்கு  ஜனங்களெல்லாரும்  இது  நல்ல  வார்த்தை  என்றார்கள்.  {1Kgs  18:24}

 

அப்பொழுது  எலியா<Elijah>  பாகாலின்<Baal>  தீர்க்கதரிசிகளை  நோக்கி:  நீங்கள்  அநேகரானதால்  நீங்களே  முந்தி  ஒரு  காளையைத்  தெரிந்துகொண்டு  அதை  ஆயத்தம்பண்ணி,  நெருப்புப்போடாமல்  உங்கள்  தேவனுடைய  நாமத்தைச்  சொல்லிக்  கூப்பிடுங்கள்  என்றான்.  {1Kgs  18:25}

 

தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட  காளையை  அவர்கள்  வாங்கி,  அதை  ஆயத்தம்பண்ணி:  பாகாலே<Baal>,  எங்களுக்கு  உத்தரவு  அருளும்  என்று  காலைதொடங்கி  மத்தியானமட்டும்  பாகாலின்<Baal>  நாமத்தைச்  சொல்லிக்  கூப்பிட்டார்கள்;  ஆனாலும்  ஒரு  சத்தமும்  பிறக்கவில்லை,  மறுஉத்தரவு  கொடுப்பாரும்  இல்லை.  அவர்கள்  கட்டின  பலிபீடத்திற்கு  எதிரே  குதித்து  ஆடினார்கள்.  {1Kgs  18:26}

 

மத்தியானவேளையிலே  எலியா<Elijah>  அவர்களைப்  பரியாசம்பண்ணி:  உரத்த  சத்தமாய்க்  கூப்பிடுங்கள்;  அவன்  தேவனாமே,  அவன்  தியானத்தில்  இருப்பான்;  அல்லது  அலுவலாயிருப்பான்;  அல்லது  பிரயாணம்போயிருப்பான்;  அல்லது  தூங்கினாலும்  தூங்குவான்;  அவனை  எழுப்பவேண்டியதாக்கும்  என்றான்.  {1Kgs  18:27}

 

அவர்கள்  உரத்தசத்தமாய்க்  கூப்பிட்டு,  தங்கள்  வழக்கத்தின்படியே  இரத்தம்  தங்கள்மேல்  வடியுமட்டும்  கத்திகளாலும்  ஈட்டிகளாலும்  தங்களைக்  கீறிக்கொண்டார்கள்.  {1Kgs  18:28}

 

மத்தியானவேளை  சென்றபின்பு,  அந்திப்பலி  செலுத்தும்  நேரமட்டாகச்  சன்னதம்  சொல்லிக்கொண்டிருந்தார்கள்;  ஆனாலும்  ஒரு  சத்தமும்  பிறக்கவில்லை,  மறுஉத்தரவு  கொடுப்பாரும்  இல்லை,  கவனிப்பாரும்  இல்லை.  {1Kgs  18:29}

 

அப்பொழுது  எலியா<Elijah>  சகல  ஜனங்களையும்  நோக்கி:  என்  கிட்டே  வாருங்கள்  என்றான்;  சகல  ஜனங்களும்  அவன்  கிட்டே  வந்தபோது,  தகர்க்கப்பட்ட  கர்த்தருடைய  பலிபீடத்தை  அவன்  செப்பனிட்டு:  {1Kgs  18:30}

 

உனக்கு  இஸ்ரவேல்<Israel>  என்னும்  பேர்  இருப்பதாக  என்று  சொல்லி,  கர்த்தருடைய  வார்த்தையைப்பெற்ற  யாக்கோபுடைய<Jacob>  குமாரரால்  உண்டான  கோத்திரங்களுடைய  இலக்கத்தின்படியே,  பன்னிரண்டு  கற்களை  எடுத்து,  {1Kgs  18:31}

 

அந்தக்  கற்களாலே  கர்த்தருடைய  நாமத்திற்கென்று  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  பலிபீடத்தைச்  சுற்றிலும்  தானியம்  அளக்கிற  இரண்டுபடி  விதை  விதைக்கத்தக்க  இடமான  ஒரு  வாய்க்காலை  உண்டாக்கி,  {1Kgs  18:32}

 

விறகுகளை  அடுக்கி,  ஒரு  காளையைச்  சந்துசந்தாகத்  துண்டித்து  விறகுகளின்மேல்  வைத்தான்.  {1Kgs  18:33}

 

பிற்பாடு  அவன்:  நீங்கள்  நாலுகுடம்  தண்ணீர்  கொண்டுவந்து,  சர்வாங்க  தகனபலியின்மேலும்,  விறகுகளின்மேலும்  ஊற்றுங்கள்  என்றான்;  பின்பு  இரண்டாந்தரமும்  அப்படியே  ஊற்றுங்கள்  என்றான்;  இரண்டாந்தரமும்  ஊற்றினார்கள்;  அதற்குப்பின்பு  மூன்றாந்தரமும்  அப்படியே  ஊற்றுங்கள்  என்றான்;  மூன்றாந்தரமும்  ஊற்றினார்கள்.  {1Kgs  18:34}

 

அப்பொழுது  தண்ணீர்  பலிபீடத்தைச்  சுற்றிலும்  ஓடினது;  வாய்க்காலையும்  தண்ணீரால்  நிரப்பினான்.  {1Kgs  18:35}

 

அந்திப்பலி  செலுத்தும்  நேரத்திலே,  தீர்க்கதரிசியாகிய  எலியா<Elijah>  வந்து:  ஆபிரகாமுக்கும்<Abraham>  ஈசாக்குக்கும்<Isaac>  யாக்கோபுக்கும்<Jacob>  தேவனாகிய  கர்த்தாவே,  இஸ்ரவேலிலே<Israel>  நீர்  தேவன்  என்றும்,  நான்  உம்முடைய  ஊழியக்காரன்  என்றும்,  நான்  இந்தக்  காரியங்களையெல்லாம்  உம்முடைய  வார்த்தையின்படி  செய்தேன்  என்றும்  இன்றைக்கு  விளங்கப்பண்ணும்.  {1Kgs  18:36}

 

கர்த்தாவே,  நீர்  தேவனாகிய  கர்த்தர்  என்றும்,  தேவரீர்  தங்கள்  இருதயத்தை  மறுபடியும்  திருப்பினீர்  என்றும்  இந்த  ஜனங்கள்  அறியும்படிக்கு,  என்னைக்  கேட்டருளும்,  என்னைக்  கேட்டருளும்  என்றான்.  {1Kgs  18:37}

 

அப்பொழுது:  கர்த்தரிடத்தில்  இருந்து  அக்கினி  இறங்கி,  அந்தச்  சர்வாங்க  தகனபலியையும்,  விறகுகளையும்,  கற்களையும்,  மண்ணையும்  பட்சித்து,  வாய்க்காலிலிருந்த  தண்ணீரையும்  நக்கிப்போட்டது.  {1Kgs  18:38}

 

ஜனங்களெல்லாரும்  இதைக்  கண்டபோது,  முகங்குப்புற  விழுந்து:  கர்த்தரே  தெய்வம்,  கர்த்தரே  தெய்வம்  என்றார்கள்.  {1Kgs  18:39}

 

அப்பொழுது  எலியா<Elijah>  அவர்களை  நோக்கி:  நீங்கள்  பாகாலின்<Baal>  தீர்க்கதரிசிகளில்  ஒருவனும்  தப்பிப்போகாதபடிக்கு  அவர்களைப்  பிடியுங்கள்  என்றான்;  அவர்களைப்  பிடித்தபோது,  எலியா<Elijah>  அவர்களைக்  கீழே  கீசோன்<Kishon>  ஆற்றங்கரையிலே  கொண்டுபோய்,  அங்கே  அவர்களை  வெட்டிப்போட்டான்.  {1Kgs  18:40}

 

பின்பு  எலியா<Elijah>  ஆகாபை<Ahab>  நோக்கி:  நீர்  போம்,  போஜனபானம்பண்ணும்;  பெருமழையின்  இரைச்சல்  கேட்கப்படுகிறது  என்றான்.  {1Kgs  18:41}

 

ஆகாப்<Ahab>  போஜனபானம்  பண்ணப்போனான்;  பின்பு  எலியா<Elijah>  கர்மேல்<Carmel>  பர்வதத்தினுடைய  சிகரத்தின்மேல்  ஏறி,  தரையிலே  பணிந்து,  தன்  முகம்  தன்  முழங்காலில்  படக்குனிந்து,  {1Kgs  18:42}

 

தன்  ஊழியக்காரனை  நோக்கி:  நீ  போய்ச்  சமுத்திரமுகமாய்ப்  பார்  என்றான்;  அவன்  போய்ப்  பார்த்து,  ஒன்றும்  இல்லை  என்றான்;  நீ  இன்னும்  ஏழுதரம்  போய்ப்  பார்  என்றான்.  {1Kgs  18:43}

 

ஏழாந்தரம்  இவன்:  இதோ,  சமுத்திரத்திலிருந்து  ஒரு  மனுஷனுடைய  உள்ளங்கை  அத்தனைச்  சிறிய  மேகம்  எழும்புகிறது  என்றான்;  அப்பொழுது  அவன்  நீ  போய்,  ஆகாபை<Ahab>  நோக்கி:  மழை  உம்மைத்  தடைசெய்யாதபடிக்கு  இரதத்தைப்  பூட்டி,  போய்விடும்  என்று  சொல்  என்றான்.  {1Kgs  18:44}

 

அதற்குள்ளாக  வானம்  மேகங்களினாலும்  காற்றினாலும்  கறுத்து  பெருமழை  உண்டாயிற்று;  ஆகாப்<Ahab>  இரதத்தில்  ஏறி  யெஸ்ரயேலுக்குப்<Jezreel>  போனான்.  {1Kgs  18:45}

 

கர்த்தருடைய  கை  எலியாவின்மேல்<Elijah>  இருந்ததினால்,  அவன்  தன்  அரையைக்  கட்டிக்கொண்டு,  யெஸ்ரயேலுக்கு<Jezreel>  வருமட்டாக  ஆகாபுக்குமுன்<Ahab>  ஓடினான்.  {1Kgs  18:46}

 

எலியா<Elijah>  செய்த  எல்லாவற்றையும்,  அவன்  தீர்க்கதரிசிகளெல்லாரையும்  பட்டயத்தாலே  கொன்றுபோட்ட  செய்தி  அனைத்தையும்,  ஆகாப்<Ahab>  யேசபேலுக்கு<Jezebel>  அறிவித்தான்.  {1Kgs  19:1}

 

அப்பொழுது  யேசபேல்<Jezebel>  எலியாவினிடத்தில்<Elijah>  ஆள்  அனுப்பி:  அவர்களில்  ஒவ்வொருவனுடைய  பிராணனுக்குச்  செய்யப்பட்டதுபோல,  நான்  நாளை  இந்நேரத்தில்  உன்  பிராணனுக்குச்  செய்யாதேபோனால்,  தேவர்கள்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்கள்  என்று  சொல்லச்சொன்னாள்.  {1Kgs  19:2}

 

அவனுக்கு  அது  தெரிந்தபோது  எழுந்து,  தன்  பிராணனைக்  காக்க  யூதாவைச்சேர்ந்த<Judah>  பெயெர்செபாவுக்குப்<Beersheba>  புறப்பட்டுப்போய்,  தன்  வேலைக்காரனை  அங்கே  நிறுத்திவிட்டான்.  {1Kgs  19:3}

 

அவன்  வனாந்தரத்தில்  ஒருநாள்  பிரயாணம்  போய்,  ஒரு  சூரைச்செடியின்  கீழ்  உட்கார்ந்து,  தான்  சாகவேண்டும்  என்று  கோரி:  போதும்  கர்த்தாவே,  என்  ஆத்துமாவை  எடுத்துக்கொள்ளும்;  நான்  என்  பிதாக்களைப்பார்க்கிலும்  நல்லவன்  அல்ல  என்று  சொல்லி,  {1Kgs  19:4}

 

ஒரு  சூரைச்செடியின்கீழ்ப்  படுத்துக்கொண்டு  நித்திரைபண்ணினான்;  அப்பொழுது  ஒரு  தூதன்  அவனைத்  தட்டியெழுப்பி:  எழுந்திருந்து  போஜனம்பண்ணு  என்றான்.  {1Kgs  19:5}

 

அவன்  விழித்துப்  பார்க்கிறபோது,  இதோ,  தழலில்  சுடப்பட்ட  அடையும்,  ஒரு  பாத்திரத்தில்  தண்ணீரும்  அவன்  தலைமாட்டில்  இருந்தது;  அப்பொழுது  அவன்,  புசித்துக்  குடித்துத்  திரும்பப்  படுத்துக்கொண்டான்.  {1Kgs  19:6}

 

கர்த்தருடைய  தூதன்  திரும்ப  இரண்டாந்தரம்  வந்து  அவனைத்  தட்டியெழுப்பி:  எழுந்திருந்து  போஜனம்பண்ணு;  நீ  பண்ணவேண்டிய  பிரயாணம்  வெகுதூரம்  என்றான்.  {1Kgs  19:7}

 

அப்பொழுது  அவன்  எழுந்திருந்து  புசித்துக்  குடித்து,  அந்தப்  போஜனத்தின்  பலத்தினால்  நாற்பதுநாள்  இரவுபகல்  ஓரேப்<Horeb>  என்னும்  தேவனுடைய  பர்வதமட்டும்  நடந்துபோனான்.  {1Kgs  19:8}

 

அங்கே  அவன்  ஒரு  கெபிக்குள்  போய்த்  தங்கினான்;  இதோ,  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  உண்டாகி,  அவர்:  எலியாவே<Elijah>,  இங்கே  உனக்கு  என்ன  காரியம்  என்றார்.  {1Kgs  19:9}

 

அதற்கு  அவன்:  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தருக்காக  வெகு  பக்திவைராக்கியமாயிருந்தேன்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  உமது  உடன்படிக்கையைத்  தள்ளிவிட்டார்கள்;  உம்முடைய  பலிபீடங்களை  இடித்து,  உம்முடைய  தீர்க்கதரிசிகளைப்  பட்டயத்தினால்  கொன்றுபோட்டார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  மீதியாயிருக்கிறேன்;  என்  பிராணனையும்  வாங்கத்  தேடுகிறார்கள்  என்றான்.  {1Kgs  19:10}

 

அப்பொழுது  அவர்:  நீ  வெளியே  வந்து  கர்த்தருக்கு  முன்பாகப்  பர்வதத்தில்  நில்  என்றார்;  அப்பொழுது,  இதோ,  கர்த்தர்  கடந்துபோனார்;  கர்த்தருக்கு  முன்பாகப்  பர்வதங்களைப்  பிளக்கிறதும்  கன்மலைகளை  உடைக்கிறதுமான  பலத்த  பெருங்காற்று  உண்டாயிற்று;  ஆனாலும்  அந்தக்  காற்றிலே  கர்த்தர்  இருக்கவில்லை;  காற்றிற்குப்பின்  பூமி  அதிர்ச்சி  உண்டாயிற்று;  பூமி  அதிர்ச்சியிலும்  கர்த்தர்  இருக்கவில்லை.  {1Kgs  19:11}

 

பூமி  அதிர்ச்சிக்குப்பின்  அக்கினி  உண்டாயிற்று;  அக்கினியிலும்  கர்த்தர்  இருக்கவில்லை;  அக்கினிக்குப்பின்  அமர்ந்த  மெல்லியசத்தம்  உண்டாயிற்று.  {1Kgs  19:12}

 

அதை  எலியா<Elijah>  கேட்டபோது,  தன்  சால்வையினால்  தன்  முகத்தை  மூடிக்கொண்டு  வெளியே  வந்து,  கெபியின்  வாசலில்  நின்றான்.  அப்பொழுது,  இதோ,  எலியாவே<Elijah>,  இங்கே  உனக்கு  என்ன  காரியம்  என்கிற  சத்தம்  அவனுக்கு  உண்டாயிற்று.  {1Kgs  19:13}

 

அதற்கு  அவன்:  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தருக்காக  வெகு  பக்திவைராக்கியமாயிருந்தேன்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  உமது  உடன்படிக்கையைத்  தள்ளிவிட்டார்கள்;  உம்முடைய  பலிபீடங்களை  இடித்து,  உம்முடைய  தீர்க்கதரிசிகளைப்  பட்டயத்தினால்  கொன்றுபோட்டார்கள்,  நான்  ஒருவன்மாத்திரம்  மீதியாயிருக்கிறேன்;  என்  பிராணனையும்  வாங்கத்  தேடுகிறார்கள்  என்றான்.  {1Kgs  19:14}

 

அப்பொழுது  கர்த்தர்  அவனைப்  பார்த்து:  நீ  தமஸ்குவின்<Damascus>  வழியாய்  வனாந்தரத்திற்குத்  திரும்பிப்போய்,  ஆசகேலைச்<Hazael>  சீரியாவின்மேல்<Syria>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணி,  {1Kgs  19:15}

 

பின்பு  நிம்சியின்<Nimshi>  குமாரனாகிய  யெகூவை<Jehu>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணி,  ஆபேல்மேகொலா<Abelmeholah>  ஊரானான  சாப்பாத்தின்<Shaphat>  குமாரனாகிய  எலிசாவை<Elisha>  உன்  ஸ்தானத்திலே  தீர்க்கதரிசியாக  அபிஷேகம்பண்ணு.  {1Kgs  19:16}

 

சம்பவிப்பதாவது:  ஆசகேலின்<Hazael>  பட்டயத்திற்குத்  தப்பினவனை  யெகூ<Jehu>  கொன்றுபோடுவான்;  யெகூவின்<Jehu>  பட்டயத்திற்குத்  தப்பினவனை  எலிசா<Elisha>  கொன்றுபோடுவான்.  {1Kgs  19:17}

 

ஆனாலும்  பாகாலுக்கு<Baal>  முடங்காதிருக்கிற  முழங்கால்களையும்,  அவனை  முத்தஞ்செய்யாதிருக்கிற  வாய்களையுமுடைய  ஏழாயிரம்பேரை  இஸ்ரவேலிலே<Israel>  மீதியாக  வைத்திருக்கிறேன்  என்றார்.  {1Kgs  19:18}

 

அப்படியே  அவன்  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  பன்னிரண்டு  ஏர்  பூட்டி  உழுத  சாப்பாத்தின்<Shaphat>  குமாரனாகிய  எலிசாவைக்<Elisha>  கண்டான்;  அவன்  பன்னிரண்டாம்  ஏரை  ஓட்டிக்கொண்டிருந்தான்;  எலியா<Elijah>  அவன்  இருக்கும்  இடமட்டும்  போய்,  அவன்மேல்  தன்  சால்வையைப்  போட்டான்.  {1Kgs  19:19}

 

அப்பொழுது  அவன்  மாடுகளைவிட்டு,  எலியாவின்<Elijah>  பிறகே  ஓடி:  நான்  என்  தகப்பனையும்  என்  தாயையும்  முத்தஞ்செய்ய  உத்தரவுகொடும்,  அதற்குப்பின்  உம்மைப்  பின்தொடர்வேன்  என்றான்.  அதற்கு  அவன்:  போய்த்  திரும்பிவா;  நான்  உனக்குச்  செய்ததை  நினைத்துக்கொள்  என்றான்.  {1Kgs  19:20}

 

அப்பொழுது  அவன்  இவனை  விட்டுப்  போய்,  ஓர்  ஏர்மாடுகளைப்  பிடித்து  அடித்து,  ஏரின்  மரமுட்டுகளால்  அவைகளின்  இறைச்சியைச்  சமைத்து  ஜனங்களுக்குக்  கொடுத்தான்;  அவர்கள்  சாப்பிட்டபிற்பாடு,  அவன்  எழுந்து,  எலியாவுக்குப்<Elijah>  பின்சென்று  அவனுக்கு  ஊழியஞ்செய்தான்.  {1Kgs  19:21}

 

சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  பெனாதாத்<Benhadad>  தன்  சேனையையெல்லாம்  கூட்டிக்கொண்டுபோய்,  சமாரியாவை<Samaria>  முற்றிக்கைபோட்டு  அதின்மேல்  யுத்தம்பண்ணினான்;  அவனோடேகூட  முப்பத்திரண்டு  ராஜாக்கள்  இருந்ததுமல்லாமல்,  குதிரைகளும்  இரதங்களும்  இருந்தது.  {1Kgs  20:1}

 

அவன்  நகரத்திற்குள்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஆகாபிடத்தில்<Ahab>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  {1Kgs  20:2}

 

உன்னுடைய  வெள்ளியும்  உன்னுடைய  பொன்னும்  என்னுடையது;  உன்னுடைய  ஸ்திரீகளும்  உன்னுடைய  குமாரருக்குள்  சமர்த்தராயிருக்கிறவர்களும்  என்னுடையவர்கள்  என்று  பெனாதாத்<Benhadad>  சொல்லுகிறான்  என்று  அவனுக்குச்  சொல்லச்சொன்னான்.  {1Kgs  20:3}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  அதற்குப்  பிரதியுத்தரமாக:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  உம்முடைய  வார்த்தையின்படியே,  நானும்  எனக்கு  உண்டான  யாவும்  உம்முடையவைகள்தான்  என்று  சொல்லியனுப்பினான்.  {1Kgs  20:4}

 

அந்த  ஸ்தானாபதிகள்  திரும்பவும்  வந்து:  பெனாதாத்<Benhadad>  சொல்லுகிறது  என்னவென்றால்,  உன்  வெள்ளியையும்,  உன்  பொன்னையும்,  உன்  ஸ்திரீகளையும்,  உன்  குமாரர்களையும்  நீ  எனக்குக்  கொடுக்கவேண்டும்  என்று  உமக்குச்  சொல்லியனுப்பினேனே.  {1Kgs  20:5}

 

ஆனாலும்  நாளை  இந்நேரத்தில்  என்  ஊழியக்காரரை  உன்னிடத்தில்  அனுப்புவேன்;  அவர்கள்  உன்  வீட்டையும்  உன்  ஊழியக்காரரின்  வீடுகளையும்  சோதித்து,  உன்  கண்ணுக்குப்  பிரியமானவைகள்  எல்லாவற்றையும்  தங்கள்  கைகளில்  எடுத்துக்கொண்டுபோவார்கள்  என்றார்  என்று  சொன்னார்கள்.  {1Kgs  20:6}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா,  தேசத்தின்  மூப்பரையெல்லாம்  அழைப்பித்து:  இவன்  பொல்லாப்புத்  தேடுகிற  விதத்தைக்  கவனித்துப்பாருங்கள்;  என்  ஸ்திரீகளையும்,  என்  குமாரர்களையும்,  என்  வெள்ளியையும்,  என்  பொன்னையும்  கேட்க,  இவன்  என்னிடத்தில்  ஆள்  அனுப்பினபோது,  நான்  கொடுக்கமாட்டேன்  என்று  இவனுக்கு  மறுக்கவில்லையே  என்றான்.  {1Kgs  20:7}

 

அப்பொழுது  சகல  மூப்பரும்  சகல  ஜனங்களும்  அவனைப்  பார்த்து:  நீர்  அவனுக்குச்  செவிகொடுக்கவும்,  அவனுக்குச்  சம்மதிக்கவும்  வேண்டாம்  என்றார்கள்.  {1Kgs  20:8}

 

அதினால்  அவன்  பெனாதாத்தின்<Benhadad>  ஸ்தானாபதிகளை  நோக்கி:  நீங்கள்  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  நீர்  முதல்விசை  உமது  அடியானுக்குச்  சொல்லியனுப்பின  யாவும்  செய்வேன்;  இந்தக்  காரியத்தையோ  நான்  செய்யக்கூடாது  என்று  சொல்லுங்கள்  என்றான்;  ஸ்தானாபதிகள்  போய்,  இந்த  மறுமொழியை  அவனுக்குச்  சொன்னார்கள்.  {1Kgs  20:9}

 

அப்பொழுது  பெனாதாத்<Benhadad>  அவனிடத்தில்  ஆள்  அனுப்பி:  எனக்குப்  பின்  செல்லுகிற  ஜனங்கள்  எல்லாரும்  கைக்கு  ஒரு  பிடியாவது  வாரிக்கொள்ள  சமாரியாவின்<Samaria>  தூள்  போதுமானதாயிருந்தால்,  தேவர்கள்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்கள்  என்று  சொல்லச்சொன்னான்.  {1Kgs  20:10}

 

அதற்கு  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  பிரதியுத்தரமாக:  ஆயுதம்  தரித்திருக்கிறவன்,  ஆயுதம்  உரிந்து  போடுகிறவனைப்போலப்  பெருமைபாராட்டலாகாது  என்று  அவனுக்குச்  சொல்லுங்கள்  என்றான்.  {1Kgs  20:11}

 

பெனாதாத்தும்<Benhadad>,  மற்ற  ராஜாக்களும்  கூடாரங்களிலே  குடித்துக்கொண்டிருக்கையில்,  இந்த  வார்த்தையைக்  கேட்டு,  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  ஆயத்தம்பண்ணுங்கள்  என்றான்;  அப்படியே  நகரத்தின்மேல்  சண்டைசெய்ய  ஆயத்தம்பண்ணினார்கள்.  {1Kgs  20:12}

 

அப்பொழுது  ஒரு  தீர்க்கதரிசி  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஆகாபிடத்தில்<Ahab>  வந்து:  அந்த  ஏராளமான  ஜனக்கூட்டத்தையெல்லாம்  கண்டாயா?  இதோ,  நானே  கர்த்தர்  என்று  நீ  அறியும்படி  இன்றைக்கு  அதை  உன்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {1Kgs  20:13}

 

யாரைக்கொண்டு  என்று  ஆகாப்<Ahab>  கேட்டான்;  அதற்கு  அவன்:  மாகாணங்களுடைய  அதிபதிகளின்  சேவகரைக்கொண்டு  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்;  பின்பு  அவன்,  யுத்தத்தை  யார்  துவக்கவேண்டும்  என்று  கேட்டதற்கு;  அவன்,  நீர்தான்  என்றான்.  {1Kgs  20:14}

 

அவன்  மாகாணங்களுடைய  அதிபதிகளின்  சேவகரை  இலக்கம்பார்த்தான்,  அவர்கள்  இருநூற்று  முப்பத்திரண்டுபேர்;  அவர்களுக்குப்பின்பு,  இஸ்ரவேல்<Israel>  புத்திரராகிய  சகல  ஜனத்தின்  இலக்கமும்  பார்த்து  ஏழாயிரம்பேர்  என்று  கண்டான்.  {1Kgs  20:15}

 

அவர்கள்  மத்தியானவேளையிலே  வெளியே  புறப்பட்டார்கள்;  பெனாதாத்தும்<Benhadad>,  அவனுக்கு  உதவியாக  வந்த  முப்பத்திரண்டு  ராஜாக்களாகிய  மற்ற  ராஜாக்களும்,  கூடாரங்களில்  குடித்து  வெறிகொண்டிருந்தார்கள்.  {1Kgs  20:16}

 

மாகாணங்களுடைய  அதிபதிகளின்  சேவகர்  முன்  தண்டாகப்  புறப்படுகிறபோது,  பெனாதாத்<Benhadad>  அனுப்பின  மனுஷர்:  சமாரியாவிலிருந்து<Samaria>  மனுஷர்  புறப்பட்டு  வருகிறார்கள்  என்று  அவனுக்கு  அறிவித்தார்கள்.  {1Kgs  20:17}

 

அப்பொழுது  அவன்:  அவர்கள்  சமாதானத்திற்காகப்  புறப்பட்டுவந்தாலும்  அவர்களை  உயிரோடே  பிடியுங்கள்;  அவர்கள்  யுத்தத்திற்காகப்  புறப்பட்டுவந்தாலும்  அவர்களை  உயிரோடே  பிடியுங்கள்  என்றான்.  {1Kgs  20:18}

 

மாகாணங்களுடைய  அதிபதிகளின்  சேவகரான  அவர்களும்,  அவர்கள்  பின்னே  வருகிற  இராணுவமும்,  நகரத்திலிருந்து  வெளியே  வந்தபோது,  {1Kgs  20:19}

 

அவர்கள்  அவரவர்  தங்களுக்கு  எதிர்ப்படுகிறவர்களை  வெட்டினார்கள்;  சீரியர்<Syrians>  முறிந்தோடிப்போனார்கள்;  இஸ்ரவேலர்<Israel>  அவர்களைத்  துரத்தினார்கள்;  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  பெனாதாத்<Benhadad>,  குதிரையின்மேல்  ஏறிச்  சில  குதிரைவீரரோடுங்கூடத்  தப்பியோடிப்போனான்.  {1Kgs  20:20}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  புறப்பட்டு,  குதிரைகளையும்  இரதங்களையும்  முறிய  அடித்து,  சீரியரில்<Syrians>  மகா  சங்காரம்  உண்டாக  வெட்டினான்.  {1Kgs  20:21}

 

பின்பு  அந்தத்  தீர்க்கதரிசி  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவினிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  போய்  உம்மைப்  பலப்படுத்திக்கொண்டு,  நீர்  செய்யத்தக்கது  இன்னதென்று  கவனித்துப்பாரும்;  மறுவருஷத்திலே  சீரியாவின்<Syria>  ராஜா  உமக்கு  விரோதமாக  வருவான்  என்றான்.  {1Kgs  20:22}

 

சீரியாவின்<Syria>  ராஜாவுடைய  ஊழியக்காரர்  அவனைப்  பார்த்து:  அவர்களுடைய  தேவர்கள்  மலைத்தேவர்கள்,  அதினால்  அவர்கள்  நம்மை  மேற்கொண்டார்கள்;  நாம்  அவர்களோடே  சமபூமியிலே  யுத்தம்பண்ணினால்  நல்லது;  அப்பொழுது  அவர்களை  மேற்கொள்வது  நிச்சயம்.  {1Kgs  20:23}

 

அதற்காக  நீர்  செய்யவேண்டியது  என்னவென்றால்,  இந்த  ராஜாக்கள்  ஒவ்வொருவரையும்  தங்கள்  ஸ்தலத்திலிருந்து  மாற்றி,  அவர்களுக்குப்  பதிலாகச்  சேனாபதிகளை  ஏற்படுத்தி;  {1Kgs  20:24}

 

நீர்  மடியக்கொடுத்த  சேனைக்குச்  சரியாய்ச்  சேனையையும்,  அந்தக்  குதிரைகளுக்குச்  சரியாய்க்  குதிரைகளையும்,  இரதங்களுக்குச்  சரியாய்  இரதங்களையும்  இலக்கம்பார்த்துக்கொள்ளும்;  பிற்பாடு  சமபூமியிலே  நாம்  அவர்களோடு  யுத்தம்பண்ணி,  நிச்சயமாய்  அவர்களை  மேற்கொள்வோம்  என்றார்கள்;  அவன்  அவர்கள்  சொற்கேட்டு  அப்படியே  செய்தான்.  {1Kgs  20:25}

 

மறுவருஷத்திலே  பெனாதாத்<Benhadad>  சீரியரை<Syrians>  இலக்கம்பார்த்து,  இஸ்ரவேலோடு<Israel>  யுத்தம்பண்ண  ஆப்பெக்குக்கு<Aphek>  வந்தான்.  {1Kgs  20:26}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரும்  இலக்கம்  பார்க்கப்பட்டு,  தேவையானதைச்  சம்பாதித்துக்கொண்டு,  அவர்களை  எதிர்க்கப்  புறப்பட்டு,  அவர்களுக்கு  எதிரே  இரண்டு  சிறிய  வெள்ளாட்டுக்  கிடைகளைப்போலப்  பாளயமிறங்கினார்கள்;  தேசம்  சீரியரால்<Syrians>  நிறைந்திருந்தது.  {1Kgs  20:27}

 

அப்பொழுது  தேவனுடைய  மனுஷன்  ஒருவன்  வந்து,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவைப்  பார்த்து:  கர்த்தர்  பள்ளத்தாக்குகளின்  தேவனாயிராமல்,  மலைகளின்  தேவனாயிருக்கிறார்  என்று  சீரியர்<Syrians>  சொல்லியிருக்கிறபடியினால்,  நான்  இந்த  ஏராளமான  ஜனக்கூட்டத்தையெல்லாம்  உன்  கையில்  ஒப்புக்கொடுத்தேன்;  அதினால்  நானே  கர்த்தர்  என்று  நீங்கள்  அறிவீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {1Kgs  20:28}

 

ஏழுநாளளவும்  அவர்கள்  முகமுகமாய்ப்  பாளயமிறங்கியிருந்தார்கள்;  ஏழாம்  நாளில்  யுத்தம்  கலந்து,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  ஒரேநாளிலே  சீரியரில்<Syrians>  லட்சம்  காலாட்களை  மடங்கடித்தார்கள்.  {1Kgs  20:29}

 

மீதியானவர்கள்  ஆப்பெக்பட்டணத்திற்குள்<Aphek>  ஓடிப்போனார்கள்;  அங்கே  மீதியாயிருந்த  இருபத்தேழாயிரம்பேரின்மேல்  அலங்கம்  இடிந்து  விழுந்தது;  பெனாதாத்தும்<Benhadad>  ஓடிப்போய்  நகரத்திற்குள்  புகுந்து,  உள்ளறையிலே  பதுங்கினான்.  {1Kgs  20:30}

 

அப்பொழுது  அவன்  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  இதோ,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்து  ராஜாக்கள்  தயவுள்ள  ராஜாக்கள்  என்று  கேட்டிருக்கிறோம்;  நாங்கள்  இரட்டுகளை  எங்கள்  அரைகளில்  கட்டி,  கயிறுகளை  எங்கள்  தலைகளில்  சுற்றிக்கொண்டு,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவினிடத்தில்  போவோம்;  ஒருவேளை  உம்மை  உயிரோடே  வைப்பார்  என்று  சொல்லி,  {1Kgs  20:31}

 

இரட்டைத்  தங்கள்  அரைகளில்  கட்டி,  கயிறுகளைத்  தங்கள்  தலைகளில்  சுற்றிக்கொண்டு,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவினிடத்தில்  வந்து:  என்னை  உயிரோடே  வையும்  என்று  உமது  அடியானாகிய  பெனாதாத்<Benhadad>  விண்ணப்பம்பண்ணுகிறான்  என்றார்கள்.  அதற்கு  அவன்,  இன்னும்  அவன்  உயிரோடே  இருக்கிறானா,  அவன்  என்  சகோதரன்  என்றான்.  {1Kgs  20:32}

 

அந்த  மனுஷர்  நன்றாய்க்  கவனித்து,  அவன்  வாயின்  சொல்லை  உடனே  பிடித்து:  உமது  சகோதரனாகிய  பெனாதாத்<Benhadad>  இருக்கிறான்  என்றார்கள்;  அப்பொழுது  அவன்:  நீங்கள்  போய்,  அவனை  அழைத்துக்கொண்டுவாருங்கள்  என்றான்;  பெனாதாத்<Benhadad>  அவனிடத்தில்  வந்தபோது,  அவனைத்  தன்  இரதத்தில்  ஏற்றிக்கொண்டான்.  {1Kgs  20:33}

 

அப்பொழுது  பெனாதாத்<Benhadad>  இவனைப்  பார்த்து:  என்  தகப்பன்  உம்முடைய  தகப்பனார்  கையிலே  பிடித்த  பட்டணங்களைத்  திரும்பக்  கொடுத்துவிடுகிறேன்;  என்  தகப்பன்  சமாரியாவிலே<Samaria>  செய்ததுபோல,  நீரும்  தமஸ்குவிலே<Damascus>  வீதிகளை  உண்டாக்கிக்கொள்ளலாம்  என்றான்.  அதற்கு  அவன்,  இந்த  உடன்படிக்கை  செய்து  நான்  உம்மை  அனுப்பிவிடுகிறேன்  என்று  சொல்லி,  அவனோடு  உடன்படிக்கைபண்ணி  அவனை  அனுப்பிவிட்டான்.  {1Kgs  20:34}

 

அப்பொழுது  தீர்க்கதரிசிகளின்  புத்திரரில்  ஒருவன்  கர்த்தருடைய  வார்த்தையின்படி  தன்  தோழனை  நோக்கி:  நீ  என்னை  அடி  என்றான்;  அந்த  மனுஷன்  அவனைப்பார்த்து  அடிக்கமாட்டேன்  என்றான்.  {1Kgs  20:35}

 

அப்பொழுது  அவன்  இவனைப்  பார்த்து:  நீ  கர்த்தருடைய  சத்தத்திற்குக்  கீழ்ப்படியாமற்போனபடியால்,  இதோ,  நீ  என்னைவிட்டுப்  புறப்பட்டுப்  போனவுடனே  ஒரு  சிங்கம்  உன்னைக்  கொல்லும்  என்றான்;  அப்படியே  இவன்  அவனை  விட்டுப்  புறப்பட்டவுடனே,  ஒரு  சிங்கம்  இவனைக்  கண்டு  கொன்றுபோட்டது.  {1Kgs  20:36}

 

அதின்பின்  அவன்  வேறொருவனைக்  கண்டு:  என்னை  அடி  என்றான்;  அந்த  மனுஷன்,  அவனைக்  காயமுண்டாக  அடித்தான்.  {1Kgs  20:37}

 

அப்பொழுது  அந்தத்  தீர்க்கதரிசி  போய்,  தன்  முகத்தின்மேல்  சாம்பலைப்போட்டு,  வேஷமாறினவனாய்  வழியிலே  ராஜாவுக்காகக்  காத்திருந்தான்.  {1Kgs  20:38}

 

ராஜா  அவ்வழியாய்  வருகிறபோது,  இவன்  ராஜாவைப்பார்த்துக்  கூப்பிட்டு:  உமது  அடியான்  யுத்தத்தில்  நின்றபோது,  ஒருவன்  விலகி,  என்னிடத்தில்  ஒருவனைக்  கொண்டுவந்து,  இந்த  மனுஷனைப்  பத்திரம்பண்ணு;  இவன்  தப்பிப்போனால்,  உன்  பிராணன்  அவன்  பிராணனுக்கு  ஈடாயிருக்கும்,  அல்லது  ஒரு  தாலந்து  வெள்ளியை  நீ  கொடுக்கவேண்டும்  என்றான்.  {1Kgs  20:39}

 

ஆனாலும்  உமது  அடியான்  இங்கும்  அங்கும்  அலுவலாயிருக்கும்போது,  அவன்  போய்விட்டான்  என்றான்.  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  அவனைப்  பார்த்து:  நீ  சொன்ன  தீர்ப்பின்படியே  ஆகும்  என்றான்.  {1Kgs  20:40}

 

அப்பொழுது  அவன்  சீக்கிரமாய்த்  தன்  முகத்தின்மேலிருக்கும்  சாம்பலைத்  துடைத்துவிட்டதினால்,  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  அவன்  தீர்க்கதரிசிகளில்  ஒருவன்  என்று  அறிந்துகொண்டான்.  {1Kgs  20:41}

 

அப்பொழுது  இவன்  அவனை  நோக்கி:  சங்காரத்திற்கு  நான்  நியமித்த  மனுஷனை  உன்  கையிலிருந்து  தப்பிப்போகும்படி  நீ  விட்டபடியினால்,  உன்  பிராணன்  அவன்  பிராணனுக்கு  ஈடாகவும்,  உன்  ஜனம்  அவன்  ஜனத்திற்கு  ஈடாகவும்  இருக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {1Kgs  20:42}

 

அதினால்  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  சலிப்பும்  விசனமுமாய்த்  தன்  வீட்டிற்குப்  போகப்  புறப்பட்டுச்  சமாரியாவுக்கு<Samaria>  வந்தான்.  {1Kgs  20:43}

 

இவைகளுக்குப்பின்பு,  யெஸ்ரயேலனாகிய<Jezreelite>  நாபோத்துக்கு<Naboth>  யெஸ்ரயேலிலே<Jezreel>  சமாரியாவின்<Samaria>  ராஜாவாகிய  ஆகாபின்<Ahab>  அரமனை  அண்டையில்  ஒரு  திராட்சத்தோட்டம்  இருந்தது.  {1Kgs  21:1}

 

ஆகாப்<Ahab>  நாபோத்தோடே<Naboth>  பேசி:  உன்  திராட்சத்தோட்டம்  என்  வீட்டிற்கு  அடுத்திருக்கிறபடியால்,  அதைக்  கீரைக்கொல்லையாக்கும்படி  எனக்குக்  கொடு,  அதைப்பார்க்கிலும்  நல்ல  திராட்சத்தோட்டத்தை  அதற்குப்  பதிலாக  உனக்குத்  தருவேன்;  அல்லது  உனக்கு  வேண்டுமானால்,  அதின்  விலைக்கிரயமான  பணத்தைத்  தருவேன்  என்றான்.  {1Kgs  21:2}

 

நாபோத்<Naboth>  ஆகாபை<Ahab>  நோக்கி:  நான்  என்  பிதாக்களின்  சுதந்தரத்தை  உமக்குக்  கொடாதபடி  கர்த்தர்  என்னைக்  காப்பாராக  என்றான்.  {1Kgs  21:3}

 

இப்படி  என்  பிதாக்களின்  சுதந்தரத்தை  உமக்குக்  கொடேன்  என்று  யெஸ்ரயேலனாகிய<Jezreelite>  நாபோத்<Naboth>  தன்னோடே  சொன்ன  வார்த்தைக்காக  ஆகாப்<Ahab>  சலிப்பும்  சினமுமாய்,  தன்  வீட்டிற்கு  வந்து,  போஜனம்பண்ணாமல்,  தன்  கட்டிலின்மேல்  படுத்து,  தன்  முகத்தைத்  திருப்பிக்கொண்டிருந்தான்.  {1Kgs  21:4}

 

அப்பொழுது  அவன்  மனைவியாகிய  யேசபேல்<Jezebel>  அவனிடத்தில்  வந்து:  நீர்  போஜனம்பண்ணாதபடிக்கு,  உம்முடைய  மனம்  சலிப்பாயிருக்கிறது  என்ன  என்று  அவனைக்  கேட்டதற்கு,  {1Kgs  21:5}

 

அவன்  அவளைப்  பார்த்து:  நான்  யெஸ்ரயேலனாகிய<Jezreelite>  நாபோத்தோடே<Naboth>  பேசி:  உன்  திராட்சத்தோட்டத்தை  எனக்கு  விலைக்கிரயமாய்க்  கொடு;  அல்லது  உனக்கு  ராசியானால்  அதற்குப்  பதிலாக  வேறே  திராட்சத்தோட்டத்தை  உனக்குத்  தருவேன்  என்றேன்.  அதற்கு  அவன்:  என்  திராட்சத்தோட்டத்தை  உமக்குக்  கொடுக்கமாட்டேன்  என்று  சொன்னான்  என்றான்.  {1Kgs  21:6}

 

அப்பொழுது  அவன்  மனைவியாகிய  யேசபேல்<Jezebel>  அவனை  நோக்கி:  நீர்  இப்போது  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜ்யபாரம்பண்ணுகிறவர்  அல்லவா?  நீர்  எழுந்து  போஜனம்பண்ணி  மனமகிழ்ச்சியாயிரும்;  யெஸ்ரயேலனாகிய<Jezreelite>  நாபோத்தின்<Naboth>  திராட்சத்தோட்டத்தை  நான்  உமக்குக்  கொடுப்பேன்  என்று  சொன்னாள்.  {1Kgs  21:7}

 

அவள்  ஆகாபின்<Ahab>  பெயரால்  நிருபங்களை  எழுதி,  அவன்  முத்திரையை  அவைகளுக்குப்  போட்டு,  அந்த  நிருபங்களை  நாபோத்<Naboth>  இருக்கும்  பட்டணத்தில்  அவனோடே  குடியிருக்கிற  மூப்பரிடத்துக்கும்  பெரியோரிடத்துக்கும்  அனுப்பினாள்.  {1Kgs  21:8}

 

அந்த  நிருபங்களில்  அவள்  எழுதினது  என்னவென்றால்:  நீங்கள்  உபவாசம்  என்று  பிரசித்தப்படுத்தி,  நாபோத்தை<Naboth>  ஜனத்தின்  முன்  நிறுத்தி,  {1Kgs  21:9}

 

தேவனையும்  ராஜாவையும்  தூஷித்தாய்  என்று  அவன்மேல்  சாட்சிசொல்லுகிற  பேலியாளின்<Belial>  மக்களாகிய  இரண்டுபேரை  அவனுக்கு  எதிராக  நிறுத்தி,  அவனை  வெளியே  கொண்டுபோய்  அவன்  சாகும்படிக்கு  அவனைக்  கல்லெறியுங்கள்  என்று  எழுதினாள்.  {1Kgs  21:10}

 

அவன்  பட்டணத்திலே  குடியிருக்கிற  மூப்பரும்  பெரியோருமாகிய  அவன்  பட்டணத்து  மனுஷர்,  யேசபேல்<Jezebel>  தங்களுக்கு  அனுப்பின  நிருபங்களில்  எழுதிக்  கட்டளையிட்டிருந்தபடியே  செய்தார்கள்.  {1Kgs  21:11}

 

அவர்கள்  உபவாசம்  என்று  பிரசித்தப்படுத்தி  நாபோத்தை<Naboth>  ஜனத்தின்  முன்னே  நிறுத்தினார்கள்.  {1Kgs  21:12}

 

அப்பொழுது  பேலியாளின்<Belial>  மக்களாகிய  இரண்டுபேர்  வந்து,  அவனுக்கு  எதிராக  உட்கார்ந்து:  நாபோத்<Naboth>  தேவனையும்  ராஜாவையும்  தூஷித்தான்  என்று  ஜனத்திற்கு  முன்பாக  அவன்மேல்  சாட்சி  சொன்னார்கள்;  அதற்குப்பின்பு  அவனைப்  பட்டணத்திற்கு  வெளியே  கொண்டுபோய்,  அவன்  சாகும்படிக்கு  அவனைக்  கல்லெறிந்து,  {1Kgs  21:13}

 

பிற்பாடு  யேசபேலுக்கு<Jezebel>,  நாபோத்<Naboth>  கல்லெறியுண்டு  செத்தான்  என்று  சொல்லியனுப்பினார்கள்.  {1Kgs  21:14}

 

நாபோத்<Naboth>  கல்லெறியுண்டு  செத்ததை  யேசபேல்<Jezebel>  கேட்டபோது,  ஆகாபை<Ahab>  நோக்கி:  நீர்  எழுந்திருந்து,  யெஸ்ரயேலனாகிய<Jezreelite>  நாபோத்<Naboth>  உமக்கு  விலைக்கிரயமாய்க்  கொடுக்கமாட்டேன்  என்று  சொன்ன  திராட்சத்தோட்டத்தைச்  சொந்தமாய்  எடுத்துக்கொள்ளும்;  நாபோத்<Naboth>  உயிரோடில்லை,  அவன்  செத்துப்போனான்  என்றாள்.  {1Kgs  21:15}

 

நாபோத்<Naboth>  செத்துப்போனதை  ஆகாப்<Ahab>  கேட்டபோது,  அவன்  யெஸ்ரயேலனாகிய<Jezreelite>  நாபோத்தின்<Naboth>  திராட்சத்தோட்டத்தைச்  சொந்தமாய்  எடுத்துக்கொள்ளும்படி  எழுந்துபோனான்.  {1Kgs  21:16}

 

கர்த்தருடைய  வார்த்தை  திஸ்பியனாகிய<Tishbite>  எலியாவுக்கு<Elijah>  உண்டாயிற்று,  அவர்:  {1Kgs  21:17}

 

நீ  எழுந்து,  சமாரியாவிலிருக்கிற<Samaria>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஆகாபைச்<Ahab>  சந்திக்கும்படி  போ;  இதோ,  அவன்  நாபோத்தின்<Naboth>  திராட்சத்தோட்டத்தைச்  சொந்தமாய்  எடுத்துக்கொள்ள  அங்கே  போயிருக்கிறான்.  {1Kgs  21:18}

 

நீ  அவனைப்  பார்த்து:  நீ  கொலைசெய்ததும்  எடுத்துக்கொண்டதும்  இல்லையோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நாய்கள்  நாபோத்தின்<Naboth>  இரத்தத்தை  நக்கின  ஸ்தலத்திலே  உன்னுடைய  இரத்தத்தையும்  நாய்கள்  நக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்  என்றார்.  {1Kgs  21:19}

 

அப்பொழுது  ஆகாப்<Ahab>  எலியாவை<Elijah>  நோக்கி:  என்  பகைஞனே,  என்னைக்  கண்டுபிடித்தாயா  என்றான்.  அதற்கு  அவன்:  கண்டுபிடித்தேன்;  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்ய  நீ  உன்னை  விற்றுப்போட்டாய்.  {1Kgs  21:20}

 

நான்  உன்மேல்  பொல்லாப்பு  வரப்பண்ணி,  உன்  சந்ததியை  அழித்துப்போட்டு,  ஆகாபுக்கு<Ahab>  சுவரில்  நீர்விடும்  ஒரு  நாயாகிலும்  இராதபடிக்கு  இஸ்ரவேலில்<Israel>  அடைபட்டவனையும்  விடுபட்டவனையும்  சங்கரித்து,  {1Kgs  21:21}

 

நீ  எனக்குக்  கோபம்  உண்டாக்கி,  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம்,  உன்னுடைய  குடும்பத்தை  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  குடும்பத்துக்கும்,  அகியாவின்<Ahijah>  குமாரனாகிய  பாஷாவின்<Baasha>  குடும்பத்துக்கும்  சமானமாக்குவேன்  என்றார்  என்று  சொன்னான்.  {1Kgs  21:22}

 

யேசபேலையும்<Jezebel>  குறித்துக்  கர்த்தர்:  நாய்கள்  யேசபேலை<Jezebel>  யெஸ்ரயேலின்<Jezreel>  மதில்  அருகே  தின்னும்.  {1Kgs  21:23}

 

ஆகாபின்<Ahab>  சந்ததியில்  பட்டணத்திலே  சாகிறவனை  நாய்களும்,  வெளியிலே  சாகிறவனை  ஆகாயத்துப்  பறவைகளும்  தின்னும்  என்றார்.  {1Kgs  21:24}

 

தன்  மனைவியாகிய  யேசபேல்<Jezebel>  தூண்டிவிட்டபடியே,  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்ய,  தன்னை  விற்றுப்போட்ட  ஆகாபைப்போல<Ahab>  ஒருவனுமில்லை.  {1Kgs  21:25}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்னின்று  துரத்திவிட்ட  எமோரியர்<Amorites>  செய்தபடியெல்லாம்,  அவன்  நரகலான  விக்கிரகங்களைப்  பின்பற்றி,  மகா  அருவருப்பாய்  நடந்துகொண்டான்.  {1Kgs  21:26}

 

ஆகாப்<Ahab>  இந்த  வார்த்தைகளைக்  கேட்டபோது,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்து,  தன்  சரீரத்தின்மேல்  இரட்டைப்  போர்த்துக்கொண்டு,  உபவாசம்பண்ணி,  இரட்டிலே  படுத்துத்  தாழ்மையாய்  நடந்துகொண்டான்.  {1Kgs  21:27}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  திஸ்பியனாகிய<Tishbite>  எலியாவுக்கு<Elijah>  உண்டாயிற்று,  அவர்:  {1Kgs  21:28}

 

ஆகாப்<Ahab>  எனக்கு  முன்பாகத்  தன்னைத்  தாழ்த்தினதைக்  கண்டாயா?  அவன்  எனக்கு  முன்பாகத்  தன்னைத்  தாழ்த்துகிறபடியினால்,  நான்  அவன்  நாட்களில்  அந்தப்  பொல்லாப்பை  வரப்பண்ணாமல்,  அவன்  குமாரன்  நாட்களில்  அதை  அவன்  வீட்டின்மேல்  வரப்பண்ணுவேன்  என்றார்.  {1Kgs  21:29}

 

சீரியருக்கும்<Syria>  இஸ்ரவேலருக்கும்<Israel>  மூன்று  வருஷம்  யுத்தமில்லாமலிருந்தது.  {1Kgs  22:1}

 

மூன்றாம்  வருஷத்திலே  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்<Jehoshaphat>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவினிடத்திற்குப்  போயிருக்கும்போது,  {1Kgs  22:2}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்<Ramoth>  நம்முடையதென்று  அறியீர்களா?  நாம்  அதைச்  சீரியா<Syria>  ராஜாவின்  கையிலிருந்து  பிடித்துக்கொள்ளாமல்,  சும்மாயிருப்பானேன்  என்று  சொல்லி,  {1Kgs  22:3}

 

யோசபாத்தை<Jehoshaphat>  நோக்கி:  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்தின்மேல்<Ramoth>  யுத்தம்பண்ண  என்னோடேகூட  வருகிறீரா  என்று  கேட்டான்.  யோசபாத்<Jehoshaphat>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவை  நோக்கி:  நான்தான்  நீர்,  என்னுடைய  ஜனங்கள்  உம்முடைய  ஜனங்கள்,  என்னுடைய  குதிரைகள்  உம்முடைய  குதிரைகள்  என்றான்.  {1Kgs  22:4}

 

பின்னும்  யோசபாத்<Jehoshaphat>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவைப்  பார்த்து:  கர்த்தருடைய  வார்த்தையை  இன்றைக்கு  விசாரித்து  அறியும்  என்றான்.  {1Kgs  22:5}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  ஏறக்குறைய  நானூறு  தீர்க்கதரிசிகளைக்  கூடிவரச்செய்து:  நான்  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்தின்மேல்<Ramoth>  யுத்தம்பண்ணப்போகலாமா,  போகலாகாதா  என்று  அவர்களைக்  கேட்டதற்கு;  அவர்கள்,  போம்,  ஆண்டவர்  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்றார்கள்.  {1Kgs  22:6}

 

பின்பு  யோசபாத்<Jehoshaphat>:  நாம்  விசாரித்து  அறிகிறதற்கு  இவர்களையல்லாமல்  கர்த்தருடைய  தீர்க்கதரிசி  வேறே  யாராகிலும்  இங்கே  இல்லையா  என்று  கேட்டான்.  {1Kgs  22:7}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா,  யோசபாத்தை<Jehoshaphat>  நோக்கி:  கர்த்தரிடத்தில்  விசாரித்து  அறிகிறதற்கு  இம்லாவின்<Imlah>  குமாரனாகிய  மிகாயா<Micaiah>  என்னும்  இன்னும்  ஒருவன்  இருக்கிறான்;  ஆனாலும்  நான்  அவனைப்  பகைக்கிறேன்;  அவன்  என்னைக்குறித்து  நன்மையாக  அல்ல,  தீமையாகவே  தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன்  என்றான்.  அதற்கு  யோசபாத்<Jehoshaphat>,  ராஜாவே,  அப்படிச்  சொல்லவேண்டாம்  என்றான்.  {1Kgs  22:8}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  பிரதானிகளில்  ஒருவனைக்  கூப்பிட்டு:  இம்லாவின்<Imlah>  குமாரனாகிய  மிகாயாவைச்<Micaiah>  சீக்கிரமாய்  அழைத்துவா  என்றான்.  {1Kgs  22:9}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவும்,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்தும்<Jehoshaphat>,  சமாரியாவின்<Samaria>  ஒலிமுகவாசலுக்கு  முன்னிருக்கும்  விசாலத்திலே  ராஜவஸ்திரம்  தரித்துக்கொண்டவர்களாய்,  அவரவர்  தம்தம்  சிங்காசனத்தில்  உட்கார்ந்திருந்தார்கள்;  சகல  தீர்க்கதரிசிகளும்  அவர்களுக்கு  முன்பாகத்  தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.  {1Kgs  22:10}

 

கேனானாவின்<Chenaanah>  குமாரனாகிய  சிதேக்கியா<Zedekiah>  தனக்கு  இருப்புக்கொம்புகளை  உண்டாக்கி,  இவைகளால்  நீர்  சீரியரை<Syrians>  முட்டி  நிர்மூலமாக்கிப்  போடுவீர்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {1Kgs  22:11}

 

சகல  தீர்க்கதரிசிகளும்  அதற்கு  இசைவாகத்  தீர்க்கதரிசனம்  சொல்லி,  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்துக்குப்போம்<Ramoth>,  உமக்கு  வாய்க்கும்;  கர்த்தர்  அதை  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்றார்கள்.  {1Kgs  22:12}

 

மிகாயாவை<Micaiah>  அழைக்கப்போன  ஆள்  அவனுடன்  பேசி:  இதோ,  தீர்க்கதரிசிகளுடைய  வார்த்தைகள்  ஏகவாக்காய்  ராஜாவுக்கு  நன்மையாயிருக்கிறது;  உம்முடைய  வார்த்தையும்  அவர்களில்  ஒருவர்  வார்த்தையைப்போல  இருக்கும்படி  நன்மையாகச்  சொல்லும்  என்றான்.  {1Kgs  22:13}

 

அதற்கு  மிகாயா<Micaiah>:  கர்த்தர்  என்னிடத்தில்  சொல்வதையே  சொல்லுவேன்  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  {1Kgs  22:14}

 

அவன்  ராஜாவினிடத்தில்  வந்தபோது,  ராஜா  அவனைப்  பார்த்து:  மிகாயாவே<Micaiah>,  நாங்கள்  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்தின்மேல்<Ramoth>  யுத்தம்பண்ணப்போகலாமா,  போகலாகாதா  என்று  கேட்டான்.  அதற்கு  அவன்:  "போம்,  உமக்கு  வாய்க்கும்;  கர்த்தர்  அதை  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுப்பார்"  என்றான்.  {1Kgs  22:15}

 

ராஜா  அவனைப்  பார்த்து:  நீ  கர்த்தருடைய  நாமத்திலே  உண்மையை  அல்லாமல்  வேறொன்றையும்  என்னிடத்தில்  சொல்லாதபடிக்கு,  நான்  எத்தனைதரம்  உன்னை  ஆணையிடுவிக்கவேண்டும்  என்று  சொன்னான்.  {1Kgs  22:16}

 

அப்பொழுது  அவன்:  இஸ்ரவேலரெல்லாரும்<Israel>  மேய்ப்பன்  இல்லாத  ஆடுகளைப்போல  மலைகளிலே  சிதறப்பட்டதைக்  கண்டேன்;  அப்பொழுது  கர்த்தர்:  இவர்களுக்கு  எஜமான்  இல்லை;  அவரவர்  தம்தம்  வீட்டிற்குச்  சமாதானத்தோடே  திரும்பக்கடவர்கள்  என்றார்  என்று  சொன்னான்.  {1Kgs  22:17}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  யோசபாத்தை<Jehoshaphat>  நோக்கி:  இவன்  என்னைக்குறித்து  நன்மையாக  அல்ல,  தீமையாகவே  தீர்க்கதரிசனம்  சொல்லுகிறவன்  என்று  நான்  உம்மோடே  சொல்லவில்லையா  என்றான்.  {1Kgs  22:18}

 

அப்பொழுது  அவன்  சொன்னது:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளும்;  கர்த்தர்  தம்முடைய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கிறதையும்,  பரமசேனையெல்லாம்  அவரிடம்  அவர்  வலதுபக்கத்திலும்  அவர்  இடதுபக்கத்திலும்  நிற்கிறதையும்  கண்டேன்.  {1Kgs  22:19}

 

அப்பொழுது  கர்த்தர்:  ஆகாப்<Ahab>  போய்,  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்தில்<Ramoth>  விழும்படிக்கு,  அவனுக்குப்  போதனை  செய்கிறவன்  யார்  என்று  கேட்டதற்கு,  ஒருவன்  இப்படியும்  ஒருவன்  அப்படியும்  சொன்னார்கள்.  {1Kgs  22:20}

 

அப்பொழுது  ஒரு  ஆவி  புறப்பட்டு  வந்து,  கர்த்தருக்கு  முன்பாக  நின்று:  நான்  அவனுக்குப்  போதனை  செய்வேன்  என்றது.  {1Kgs  22:21}

 

எதினால்  என்று  கர்த்தர்  அதைக்  கேட்டார்.  அப்பொழுது  அது:  நான்  போய்,  அவனுடைய  தீர்க்கதரிசிகள்  எல்லாரின்  வாயிலும்  பொய்யின்  ஆவியாய்  இருப்பேன்  என்றது.  அதற்கு  அவர்:  நீ  அவனுக்குப்  போதனைசெய்து  அப்படி  நடக்கப்பண்ணுவாய்;  போய்  அப்படிச்  செய்  என்றார்.  {1Kgs  22:22}

 

ஆதலால்  கர்த்தர்  பொய்யின்  ஆவியை  இந்த  உம்முடைய  தீர்க்கதரிசிகளாகிய  இவர்கள்  எல்லாருடைய  வாயிலும்  கட்டளையிட்டார்;  கர்த்தர்  உம்மைக்  குறித்துத்  தீமையாகச்  சொன்னார்  என்றான்.  {1Kgs  22:23}

 

அப்பொழுது  கேனானாவின்<Chenaanah>  குமாரனாகிய  சிதேக்கியா<Zedekiah>  கிட்டேவந்து,  மிகாயாவைக்<Micaiah>  கன்னத்தில்  அடித்து,  கர்த்தருடைய  ஆவி  எந்தவழியாய்  என்னைவிட்டு  உன்னோடே  பேசும்படி  வந்தது  என்றான்.  {1Kgs  22:24}

 

அதற்கு  மிகாயா<Micaiah>:  நீ  ஒளித்துக்கொள்ள  உள்ளறையிலே  பதுங்கும்  அந்நாளிலே  அதைக்  காண்பாய்  என்றான்.  {1Kgs  22:25}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா:  மிகாயாவைப்<Micaiah>  பிடித்து,  அவனைப்  பட்டணத்துத்  தலைவனாகிய  ஆமோனிடத்திற்கும்<Amon>,  ராஜாவின்  குமாரனாகிய  யோவாசிடத்திற்கும்<Joash>  திரும்பக்  கொண்டுபோய்,  {1Kgs  22:26}

 

இவனைச்  சிறைச்சாலையிலே  வைத்து,  நான்  சமாதானத்தோடே  வருமளவும்,  இவனுக்கு  இடுக்கத்தின்  அப்பத்தையும்  இடுக்கத்தின்  தண்ணீரையும்  சாப்பிடக்கொடுங்கள்  என்று  ராஜா  சொன்னார்  என்று  சொல்லுங்கள்  என்றான்.  {1Kgs  22:27}

 

அப்பொழுது  மிகாயா<Micaiah>:  நீர்  சமாதானத்தோடே  திரும்பிவருகிறது  உண்டானால்,  கர்த்தர்  என்னைக்கொண்டு  பேசினதில்லை  என்று  சொல்லி;  ஜனங்களே,  நீங்கள்  எல்லாரும்  இதைக்  கேளுங்கள்  என்றான்.  {1Kgs  22:28}

 

பின்பு  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவும்,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்தும்<Jehoshaphat>  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்துக்குப்<Ramoth>  போனார்கள்.  {1Kgs  22:29}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  யோசபாத்தை<Jehoshaphat>  நோக்கி:  நான்  வேஷம்மாறி  யுத்தத்தில்  பிரவேசிப்பேன்;  நீரோ  ராஜவஸ்திரம்  தரித்திரும்  என்று  சொல்லி,  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  வேஷம்மாறி,  யுத்தத்தில்  பிரவேசித்தான்.  {1Kgs  22:30}

 

சீரியாவின்<Syria>  ராஜா  தனக்கு  இருக்கிற  இரதங்களின்  முப்பத்திரண்டு  தலைவரையும்  நோக்கி:  நீங்கள்  சிறியவரோடும்  பெரியவரோடும்  யுத்தம்பண்ணாமல்  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  ஒருவனோடேமாத்திரம்  யுத்தம்பண்ணுங்கள்  என்று  கட்டளையிட்டிருந்தான்.  {1Kgs  22:31}

 

ஆதலால்  இரதங்களின்  தலைவர்  யோசபாத்தைக்<Jehoshaphat>  காண்கையில்,  இவன்தான்  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  என்று  சொல்லி  யுத்தம்பண்ண  அவனுக்கு  நேராகச்  சாய்ந்துவந்தார்கள்;  அப்பொழுது  யோசபாத்<Jehoshaphat>  கூக்குரலிட்டான்.  {1Kgs  22:32}

 

இவன்  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  அல்ல  என்று  இரதங்களின்  தலைவர்  கண்டு  அவனைவிட்டு,  விலகிப்போனார்கள்.  {1Kgs  22:33}

 

ஒருவன்  நினையாமல்  வில்லை  நாணேற்றி  எய்தான்;  அது  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவினுடைய  கவசத்தின்  சந்துகளுக்குள்  பட்டது;  அப்பொழுது  அவன்  தன்  சாரதியைப்  பார்த்து:  நீ  திருப்பி  என்னை  இராணுவத்துக்கப்பால்  கொண்டுபோ;  எனக்குக்  காயம்பட்டது  என்றான்.  {1Kgs  22:34}

 

அன்றையதினம்  யுத்தம்  அதிகரித்தது;  ராஜாவைச்  சீரியருக்கு<Syrians>  எதிராக  இரதத்தில்  நிறுத்திவைத்தார்கள்;  சாயங்காலத்திலே  அவன்  இறந்துபோனான்;  காயத்தின்  இரத்தம்  இரதத்தின்  தட்டிலே  வடிந்தது.  {1Kgs  22:35}

 

பொழுதுபோகும்போது  அவரவர்  தம்தம்  பட்டணத்திற்கும்,  அவரவர்  தம்தம்  தேசத்திற்கும்  போகலாம்  என்று  இராணுவத்தில்  பறைசாற்றப்பட்டது.  {1Kgs  22:36}

 

அப்படியே  ராஜா  இறந்தபின்பு,  சமாரியாவுக்குக்<Samaria>  கொண்டுவரப்பட்டான்;  ராஜாவைச்  சமாரியாவில்<Samaria>  அடக்கம்பண்ணினார்கள்.  {1Kgs  22:37}

 

அந்த  இரதத்தையும்  அவனுடைய  கவசத்தையும்  சமாரியாவின்<Samaria>  குளத்திலே  கழுவுகிறபோது,  கர்த்தர்  சொல்லியிருந்த  வார்த்தையின்படியே,  நாய்கள்  அவன்  இரத்தத்தை  நக்கினது.  {1Kgs  22:38}

 

ஆகாபின்<Ahab>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  கட்டின  தந்த  அரமனையின்  வரலாறும்,  அவன்  கட்டின  எல்லாப்  பட்டணங்களின்  வரலாறும்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  22:39}

 

ஆகாப்<Ahab>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  அகசியா<Ahaziah>  அவன்  ஸ்தலத்தில்  ராஜாவானான்.  {1Kgs  22:40}

 

ஆசாவின்<Asa>  குமாரனாகிய  யோசபாத்<Jehoshaphat>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஆகாபின்<Ahab>  நாலாம்  வருஷத்தில்  யூதாவின்மேல்<Judah>  ராஜாவானான்.  {1Kgs  22:41}

 

யோசபாத்<Jehoshaphat>  ராஜாவாகிறபோது  முப்பத்தைந்து  வயதாயிருந்து,  இருபத்தைந்து  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  ராஜ்யபாரம்பண்ணினான்;  சில்கியின்<Shilhi>  குமாரத்தியாகிய  அவனுடைய  தாயின்  பேர்  அசுபாள்<Azubah>.  {1Kgs  22:42}

 

அவன்  தன்  தகப்பனாகிய  ஆசாவின்<Asa>  வழிகளிலெல்லாம்  நடந்தான்;  அவன்  அதை  விட்டு  விலகாமல்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்;  ஆகிலும்  மேடைகள்  தகர்க்கப்படவில்லை;  ஜனங்கள்  இன்னும்  மேடைகளின்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தார்கள்.  {1Kgs  22:43}

 

யோசபாத்<Jehoshaphat>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவோடே  சமாதானமாயிருந்தான்.  {1Kgs  22:44}

 

யோசபாத்தின்<Jehoshaphat>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  காட்டிய  வல்லமையும்,  அவன்  பண்ணின  யுத்தமும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {1Kgs  22:45}

 

தன்  தகப்பனாகிய  ஆசாவின்<Asa>  நாட்களில்  மீதியாய்  விட்டிருந்த  இலச்சையான  புணர்ச்சிக்காரரையும்  அவன்  தேசத்திலிருந்து  அற்றுப்போகப்பண்ணினான்.  {1Kgs  22:46}

 

அப்பொழுது  ஏதோமில்<Edom>  ராஜா  இல்லை;  பிரதிராஜா  ஒருவன்  இருந்தான்.  {1Kgs  22:47}

 

பொன்னுக்காக  ஓப்பீருக்குப்<Ophir>  போகும்படி,  யோசபாத்<Jehoshaphat>  தர்ஷீஸ்<Tharshish>  கப்பல்களைச்  செய்தான்;  ஆனால்  அவைகள்  போகவில்லை;  அவைகள்  எசியோன்கேபேரிலே<Eziongeber>  உடைந்துபோயின.  {1Kgs  22:48}

 

அப்பொழுது  ஆகாபின்<Ahab>  குமாரனாகிய  அகசியா<Ahaziah>  யோசபாத்தை<Jehoshaphat>  நோக்கி:  என்  வேலைக்காரர்  உம்முடைய  வேலைக்காரரோடுங்கூடக்  கப்பல்களிலே  போகட்டும்  என்றான்;  அதற்கு  யோசபாத்<Jehoshaphat>  சம்மதிக்கவில்லை.  {1Kgs  22:49}

 

யோசபாத்<Jehoshaphat>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  தாவீதின்<David>  நகரத்திலே  தன்  பிதாக்களோடே  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  யோராம்<Jehoram>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {1Kgs  22:50}

 

ஆகாபின்<Ahab>  குமாரனாகிய  அகசியா<Ahaziah>  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்தின்<Jehoshaphat>  பதினேழாம்  வருஷத்திலே  சமாரியாவில்<Samaria>  ராஜாவாகி,  இஸ்ரவேலின்மேல்<Israel>  இரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  {1Kgs  22:51}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  தன்  தகப்பன்  வழியிலும்,  தன்  தாயின்  வழியிலும்,  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரன்  யெரொபெயாமின்<Jeroboam>  வழியிலும்  நடந்து,  {1Kgs  22:52}

 

பாகாலைச்<Baal>  சேவித்து,  அவனைப்  பணிந்துகொண்டு,  தன்  தகப்பன்  செய்தபடியெல்லாம்  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்கினான்.  {1Kgs  22:53}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!