Wednesday, February 05, 2020

2 இராஜாக்கள்

ஆகாப்<Ahab>  மரணமடைந்தபின்,  மோவாபியர்<Moab>  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாய்க்  கலகம்பண்ணிப்  பிரிந்துபோனார்கள்.  {2Kgs  1:1}

 

அகசியா<Ahaziah>  சமாரியாவிலிருக்கிற<Samaria>  தன்  மேல்வீட்டிலிருந்து  கிராதியின்  வழியாய்  விழுந்து,  வியாதிப்பட்டு:  இந்த  வியாதி  நீங்கிப்  பிழைப்பேனா  என்று  எக்ரோனின்<Ekron>  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்<Baalzebub>  போய்  விசாரியுங்கள்  என்று  ஆட்களை  அனுப்பினான்.  {2Kgs  1:2}

 

கர்த்தருடைய  தூதன்  திஸ்பியனாகிய<Tishbite>  எலியாவை<Elijah>  நோக்கி:  நீ  எழுந்து,  சமாரியாவுடைய<Samaria>  ராஜாவின்  ஆட்களுக்கு  எதிர்ப்படப்போய்:  இஸ்ரவேலிலே<Israel>  தேவன்  இல்லையென்றா  நீங்கள்  எக்ரோனின்<Ekron>  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்<Baalzebub>  விசாரிக்கப்போகிறீர்கள்?  {2Kgs  1:3}

 

இதினிமித்தம்  நீ  ஏறின  கட்டிலிலிருந்து  இறங்காமல்,  சாகவே  சாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்பதை  அவர்களோடே  சொல்  என்றான்;  அப்படியே  எலியா<Elijah>  போய்ச்  சொன்னான்.  {2Kgs  1:4}

 

அந்த  ஆட்கள்  அவனிடத்திற்குத்  திரும்பிவந்தபோது:  நீங்கள்  திரும்பி  வந்தது  என்ன  என்று  அவன்  அவர்களிடத்தில்  கேட்டான்.  {2Kgs  1:5}

 

அதற்கு  அவர்கள்:  ஒரு  மனுஷன்  எங்களுக்கு  எதிர்ப்பட்டுவந்து:  நீங்கள்  உங்களை  அனுப்பின  ராஜாவினிடத்தில்  திரும்பிப்போய்,  இஸ்ரவேலிலே<Israel>  தேவன்  இல்லையென்றா  நீ  எக்ரோனின்<Ekron>  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்<Baalzebub>  விசாரிக்கப்போகிறாய்;  இதினிமித்தம்  நீ  ஏறின  கட்டிலிலிருந்து  இறங்காமல்  சாகவே  சாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்பதை  அவனோடே  சொல்லுங்கள்  என்றான்  என்று  சொன்னார்கள்.  {2Kgs  1:6}

 

அப்பொழுது  அவன்  அவர்களை  நோக்கி:  உங்களுக்கு  எதிர்ப்பட்டு  வந்து,  இந்த  வார்த்தைகளை  உங்களிடத்தில்  சொன்ன  மனுஷன்  எப்படிப்பட்டவன்  என்று  கேட்டான்.  {2Kgs  1:7}

 

அதற்கு  அவர்கள்:  அவன்  மயிர்  உடையைத்  தரித்து,  வார்க்கச்சையைத்  தன்  அரையிலே  கட்டிக்கொண்டிருந்தான்  என்றார்கள்;  அப்பொழுது  அவன்:  திஸ்பியனாகிய<Tishbite>  எலியாதான்<Elijah>  என்று  சொல்லி;  {2Kgs  1:8}

 

அவனிடத்திற்கு  ஒரு  தலைவனையும்,  அவனுடைய  ஐம்பது  சேவகரையும்  அனுப்பினான்;  மலையின்  உச்சியில்  உட்கார்ந்திருக்கிற  அவனிடத்தில்  இவன்  ஏறிப்போய்:  தேவனுடைய  மனுஷனே,  ராஜா  உன்னை  வரச்சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  1:9}

 

அப்பொழுது  எலியா<Elijah>,  அந்த  ஐம்பதுபேரின்  தலைவனுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  தேவனுடைய  மனுஷனானால்,  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  உன்னையும்  உன்  ஐம்பதுபேரையும்  பட்சிக்கக்கடவது  என்றான்;  உடனே  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  அவனையும்  அவன்  ஐம்பதுபேரையும்  பட்சித்தது.  {2Kgs  1:10}

 

மறுபடியும்  அவனிடத்திற்கு  வேறொரு  தலைவனையும்,  அவனுடைய  ஐம்பது  சேவகரையும்  அனுப்பினான்.  இவன்  அவனை  நோக்கி:  தேவனுடைய  மனுஷனே,  ராஜா  உன்னைச்  சீக்கிரமாய்  வரச்சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  1:11}

 

எலியா<Elijah>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  தேவனுடைய  மனுஷனானால்,  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  உன்னையும்  உன்  ஐம்பதுபேரையும்  பட்சிக்கக்கடவது  என்றான்;  உடனே  தேவனுடைய  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  அவனையும்  அவன்  ஐம்பதுபேரையும்  பட்சித்தது.  {2Kgs  1:12}

 

திரும்பவும்  மூன்றாந்தரம்  ஒரு  தலைவனையும்,  அவனுடைய  ஐம்பது  சேவகரையும்  அனுப்பினான்;  இந்த  மூன்றாந்தலைவன்  ஏறிவந்தபோது,  எலியாவுக்கு<Elijah>  முன்பாக  முழங்காற்படியிட்டு,  அவனை  வேண்டிக்கொண்டு:  தேவனுடைய  மனுஷனே,  என்னுடைய  பிராணனும்,  உமது  அடியாராகிய  இந்த  ஐம்பதுபேரின்  பிராணனும்  உமது  பார்வைக்கு  அருமையாயிருப்பதாக.  {2Kgs  1:13}

 

இதோ,  அக்கினி  வானத்திலிருந்து  இறங்கி,  முந்தின  இரண்டு  தலைவரையும்,  அவரவருடைய  ஐம்பது  சேவகரையும்  பட்சித்தது;  இப்போதும்  என்னுடைய  பிராணன்  உமது  பார்வைக்கு  அருமையாயிருப்பதாக  என்றான்.  {2Kgs  1:14}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  எலியாவை<Elijah>  நோக்கி:  அவனோடேகூட  இறங்கிப்போ,  அவனுக்குப்  பயப்படாதே  என்றான்;  அப்படியே  அவன்  எழுந்து  அவனோடேகூட  ராஜாவினிடத்திற்கு  இறங்கிப்போய்,  {2Kgs  1:15}

 

அவனைப்  பார்த்து:  இஸ்ரவேலிலே<Israel>  தேவன்  இல்லையென்றா  நீ  எக்ரோனின்<Ekron>  தேவனாகிய  பாகால்சேபூபிடத்தில்<Baalzebub>  விசாரிக்க  ஆட்களை  அனுப்பினாய்;  ஆதலால்  நீ  ஏறின  கட்டிலிலிருந்து  இறங்காமல்  சாகவே  சாவாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  1:16}

 

எலியா<Elijah>  சொன்ன  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  அவன்  இறந்துபோனான்;  அவனுக்குக்  குமாரன்  இல்லாதபடியினால்,  அவன்  ஸ்தானத்திலே  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்துடைய<Jehoshaphat>  குமாரனான  யோராமின்<Jehoram>  இரண்டாம்  வருஷத்தில்  யோராம்<Jehoram>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  1:17}

 

அகசியாவின்<Ahaziah>  மற்ற  வர்த்தமானங்கள்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  1:18}

 

கர்த்தர்  எலியாவைச்<Elijah>  சுழல்காற்றிலே  பரலோகத்திற்கு  எடுத்துக்கொள்ளப்  போகிறபோது,  எலியா<Elijah>  எலிசாவோடேகூடக்<Elisha>  கில்காலிலிருந்து<Gilgal>  புறப்பட்டுப்போனான்.  {2Kgs  2:1}

 

எலியா<Elijah>  எலிசாவை<Elisha>  நோக்கி:  நீ  இங்கே  இரு;  கர்த்தர்  என்னைப்  பெத்தேல்மட்டும்<Bethel>  போக  அனுப்புகிறார்  என்றான்.  அதற்கு  எலிசா<Elisha>:  நான்  உம்மை  விடுகிறதில்லை  என்று  கர்த்தரின்  ஜீவனையும்  உம்முடைய  ஜீவனையும்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்;  அப்படியே  இருவரும்  பெத்தேலுக்குப்<Bethel>  போனார்கள்.  {2Kgs  2:2}

 

அப்பொழுது  பெத்தேலிலிருந்த<Bethel>  தீர்க்கதரிசிகளின்  புத்திரர்  எலிசாவினிடத்தில்<Elisha>  வந்து:  இன்றைக்குக்  கர்த்தர்  உனக்குத்  தலைமையாயிருக்கிற  உன்  எஜமானை  உன்னைவிட்டு  எடுத்துக்கொள்வார்  என்பது  உனக்குத்  தெரியுமா  என்றார்கள்.  அதற்கு  அவன்:  எனக்குத்  தெரியும்,  சும்மா  இருங்கள்  என்றான்.  {2Kgs  2:3}

 

பின்பு  எலியா<Elijah>  அவனை  நோக்கி:  எலிசாவே<Elisha>,  நீ  இங்கே  இரு;  கர்த்தர்  என்னை  எரிகோமட்டும்<Jericho>  போக  அனுப்புகிறார்  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  உம்மை  விடுகிறதில்லை  என்று  கர்த்தருடைய  ஜீவனையும்  உம்முடைய  ஜீவனையும்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்;  அப்படியே  அவர்கள்  எரிகோவுக்கு<Jericho>  வந்தார்கள்.  {2Kgs  2:4}

 

எரிகோவிலிருந்த<Jericho>  தீர்க்கதரிசிகளின்  புத்திரர்  எலிசாவினிடத்தில்<Elisha>  வந்து:  இன்றைக்குக்  கர்த்தர்  உனக்குத்  தலைமையாயிருக்கிற  உன்  எஜமானை  உன்னைவிட்டு  எடுத்துக்கொள்வார்  என்பது  உனக்குத்  தெரியுமா  என்று  அவனைக்  கேட்டார்கள்.  அதற்கு  அவன்:  எனக்குத்  தெரியும்,  சும்மா  இருங்கள்  என்றான்.  {2Kgs  2:5}

 

பின்பு  எலியா<Elijah>  அவனை  நோக்கி:  நீ  இங்கே  இரு;  கர்த்தர்  என்னை  யோர்தானுக்கு<Jordan>  அனுப்புகிறார்  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  உம்மை  விடுகிறதில்லை  என்று  கர்த்தருடைய  ஜீவனையும்  உம்முடைய  ஜீவனையும்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்;  அப்படியே  இருவரும்  போனார்கள்.  {2Kgs  2:6}

 

தீர்க்கதரிசிகளின்  புத்திரரில்  ஐம்பதுபேர்  போய்,  தூரத்திலே  பார்த்துக்கொண்டு  நின்றார்கள்;  அவர்கள்  இருவரும்  யோர்தான்<Jordan>  கரையிலே  நின்றார்கள்.  {2Kgs  2:7}

 

அப்பொழுது  எலியா<Elijah>,  தன்  சால்வையை  எடுத்து  முறுக்கித்  தண்ணீரை  அடித்தான்;  அது  இருபக்கமாகப்  பிரிந்தது;  அவர்கள்  இருவரும்  உலர்ந்த  தரைவழியாய்  அக்கரைக்குப்  போனார்கள்.  {2Kgs  2:8}

 

அவர்கள்  அக்கரைப்பட்டபின்பு,  எலியா<Elijah>  எலிசாவை<Elisha>  நோக்கி:  நான்  உன்னைவிட்டு  எடுத்துக்கொள்ளப்படுமுன்னே  நான்  உனக்குச்  செய்யவேண்டியது  என்ன,  கேள்  என்றான்.  அதற்கு  எலிசா<Elisha>:  உம்மிடத்திலுள்ள  ஆவியின்  வரம்  எனக்கு  இரட்டிப்பாய்க்  கிடைக்கும்படி  வேண்டுகிறேன்  என்றான்.  {2Kgs  2:9}

 

அதற்கு  அவன்:  அரிதான  காரியத்தைக்  கேட்டாய்;  உன்னைவிட்டு  நான்  எடுத்துக்கொள்ளப்படுகையில்  என்னை  நீ  கண்டால்  உனக்குக்  கிடைக்கும்;  இல்லாவிட்டால்  கிடையாது  என்றான்.  {2Kgs  2:10}

 

அவர்கள்  பேசிக்கொண்டு  நடந்துபோகையில்,  இதோ,  அக்கினி  ரதமும்  அக்கினிக்  குதிரைகளும்  அவர்கள்  நடுவாக  வந்து  இருவரையும்  பிரித்தது;  எலியா<Elijah>  சுழல்காற்றிலே  பரலோகத்திற்கு  ஏறிப்போனான்.  {2Kgs  2:11}

 

அதை  எலிசா<Elisha>  கண்டு:  என்  தகப்பனே,  என்  தகப்பனே,  இஸ்ரவேலுக்கு<Israel>  இரதமும்  குதிரைவீரருமாய்  இருந்தவரே  என்று  புலம்பினான்;  அவனை  அப்புறம்  காணாமல்,  தன்  வஸ்திரத்தைப்  பிடித்து  இரண்டு  துண்டாகக்  கிழித்தான்.  {2Kgs  2:12}

 

பின்பு  அவன்  எலியாவின்மேலிருந்து<Elijah>  கீழே  விழுந்த  சால்வையை  எடுத்துத்  திரும்பிப்போய்,  யோர்தானின்<Jordan>  கரையிலே  நின்று,  {2Kgs  2:13}

 

எலியாவின்மேலிருந்து<Elijah>  கீழே  விழுந்த  சால்வையைப்  பிடித்து:  எலியாவின்<Elijah>  தேவனாகிய  கர்த்தர்  எங்கே  என்று  சொல்லித்  தண்ணீரை  அடித்தான்;  தண்ணீரை  அடித்தவுடனே  அது  இருபக்கமாகப்  பிரிந்ததினால்  எலிசா<Elisha>  இக்கரைப்பட்டான்.  {2Kgs  2:14}

 

எரிகோவில்<Jericho>  பார்த்துக்கொண்டு  நின்ற  தீர்க்கதரிசிகளின்  புத்திரர்  அவனைக்  கண்டவுடனே,  எலியாவின்<Elijah>  ஆவி  எலிசாவின்மேல்<Elisha>  இறங்கியிருக்கிறது  என்று  சொல்லி,  அவனுக்கு  எதிர்கொண்டுபோய்த்  தரைமட்டும்  குனிந்து  அவனை  வணங்கி:  {2Kgs  2:15}

 

இதோ,  உமது  அடியாரோடே  ஐம்பது  பலவான்கள்  இருக்கிறார்கள்;  அவர்கள்  போய்  உம்முடைய  எஜமானைத்  தேடும்படி  உத்தரவுகொடும்;  ஒருவேளை  கர்த்தருடைய  ஆவியானவர்  அவரை  எடுத்து,  பர்வதங்களில்  ஒன்றின்மேலாகிலும்,  பள்ளத்தாக்குகளில்  ஒன்றிலாகிலும்  கொண்டுபோய்  வைத்திருப்பார்  என்றார்கள்.  அதற்கு  அவன்:  அவர்களை  அனுப்பவேண்டாம்  என்றான்.  {2Kgs  2:16}

 

அவன்  சலித்துப்போகுமட்டும்  அவர்கள்  அவனை  அலட்டிக்கொண்டிருந்தபடியால்  அனுப்புங்கள்  என்றான்;  அப்படியே  ஐம்பதுபேரை  அனுப்பினார்கள்;  அவர்கள்  மூன்றுநாள்  அவனைத்  தேடியும்  காணாமல்,  {2Kgs  2:17}

 

எரிகோவிலிருந்த<Jericho>  அவனிடத்திற்குத்  திரும்பிவந்தபோது,  அவன்  இவர்களைப்  பார்த்து:  போகவேண்டாம்  என்று  நான்  உங்களுக்குச்  சொல்லவில்லையா  என்றான்.  {2Kgs  2:18}

 

பின்பு  அந்தப்  பட்டணத்தின்  மனுஷர்  எலிசாவை<Elisha>  நோக்கி:  இதோ,  எங்கள்  ஆண்டவன்  காண்கிறபடி  இந்தப்  பட்டணம்  குடியிருப்புக்கு  நல்லது;  தண்ணீரோ  கெட்டது,  நிலமும்  பாழ்நிலம்  என்றார்கள்.  {2Kgs  2:19}

 

அப்பொழுது  அவன்:  ஒரு  புதுத்தோண்டியை  எடுத்து,  அதிலே  உப்புப்போட்டுக்  கொண்டுவாருங்கள்  என்றான்;  அதை  அவனிடத்தில்  கொண்டுவந்தபோது,  {2Kgs  2:20}

 

அவன்  நீரூற்றண்டைக்குப்  போய்,  உப்பை  அதிலே  போட்டு:  இந்தத்  தண்ணீரை  ஆரோக்கியமாக்கினேன்;  இனி  இதினால்  சாவும்  வராது,  நிலப்பாழும்  இராது  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  2:21}

 

எலிசா<Elisha>  சொன்ன  வார்த்தையின்படியே  அந்தத்  தண்ணீர்  இந்நாள்வரைக்கும்  இருக்கிறபடி  ஆரோக்கியமாயிற்று.  {2Kgs  2:22}

 

அவன்  அவ்விடத்தைவிட்டுப்  பெத்தேலுக்குப்<Bethel>  போனான்;  அவன்  வழிநடந்துபோகையில்  பிள்ளைகள்  பட்டணத்திலிருந்து  வந்து,  அவனைப்  பார்த்து:  மொட்டைத்தலையா  ஏறிப்போ,  மொட்டைத்தலையா  ஏறிப்போ  என்று  சொல்லி  நிந்தித்தார்கள்.  {2Kgs  2:23}

 

அப்பொழுது  அவன்  திரும்பி  அவர்களைப்  பார்த்து:  கர்த்தரின்  நாமத்திலே  அவர்களைச்  சபித்தான்;  உடனே  காட்டிலிருந்து  இரண்டு  கரடிகள்  புறப்பட்டு  வந்து,  அவர்களில்  நாற்பத்திரண்டு  பிள்ளைகளைப்  பீறிப்போட்டது.  {2Kgs  2:24}

 

அவன்  அவ்விடத்தைவிட்டுக்  கர்மேல்<Carmel>  பர்வதத்திற்குப்போய்,  அங்கேயிருந்து  சமாரியாவுக்குத்<Samaria>  திரும்பினான்.  {2Kgs  2:25}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்தின்<Jehoshaphat>  பதினெட்டாம்  வருஷத்தில்  ஆகாபின்<Ahab>  குமாரனாகிய  யோராம்<Jehoram>  சமாரியாவிலே<Samaria>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகிப்  பன்னிரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  {2Kgs  3:1}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  ஆனாலும்  தன்  தகப்பனைப்போலும்  தன்  தாயைப்போலும்  அல்ல;  தன்  தகப்பன்  பண்ணுவித்த  பாகாலின்<Baal>  சிலையை  அகற்றிவிட்டான்.  {2Kgs  3:2}

 

என்றாலும்  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  அவன்  விட்டு  நீங்காமல்  அவைகளிலே  சிக்கிக்கொண்டிருந்தான்.  {2Kgs  3:3}

 

மோவாபின்<Moab>  ராஜாவாகிய  மேசா<Mesha>  ஆடுமாடுகள்  பெருத்தவனாயிருந்து,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவுக்கு  இலட்சம்  ஆட்டுக்குட்டிகளையும்,  இலட்சம்  குறும்பாட்டுக்கடாக்களையும்  செலுத்திவந்தான்.  {2Kgs  3:4}

 

ஆகாப்<Ahab>  இறந்துபோனபின்  மோவாபின்<Moab>  ராஜா  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவுக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினான்.  {2Kgs  3:5}

 

அக்காலத்திலே  யோராம்<Jehoram>  என்னும்  ராஜா  சமாரியாவிலிருந்து<Samaria>  புறப்பட்டு,  இஸ்ரவேலையெல்லாம்<Israel>  இலக்கம்  பார்த்துப்போய்:  {2Kgs  3:6}

 

மோவாபின்<Moab>  ராஜா  எனக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினான்;  மோவாபியர்மேல்<Moab>  யுத்தம்பண்ண,  என்னோடேகூட  வருகிறீரா  என்று  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்தைக்<Jehoshaphat>  கேட்டனுப்பினதற்கு;  அவன்  நான்  வருகிறேன்;  நான்தான்  நீர்,  என்னுடைய  ஜனங்கள்  உம்முடைய  ஜனங்கள்,  என்னுடைய  குதிரைகள்  உம்முடைய  குதிரைகள்  என்றான்.  {2Kgs  3:7}

 

எந்த  வழியாய்ப்  போவோம்  என்று  கேட்டான்;  அதற்கு  அவன்:  ஏதோம்<Edom>  வனாந்தரவழியாய்  என்றான்.  {2Kgs  3:8}

 

அப்படியே  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவும்  யூதாவின்<Judah>  ராஜாவும்  ஏதோமின்<Edom>  ராஜாவும்  சேர்ந்து  போனார்கள்;  ஆனாலும்  அவர்கள்  ஏழுநாள்  சுற்றித்திரிந்தபோது,  அவர்களைப்  பின்செல்லுகிற  இராணுவத்துக்கும்  மிருகஜீவன்களுக்கும்  தண்ணீர்  இல்லாமற்போயிற்று.  {2Kgs  3:9}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா:  ஐயோ,  இந்த  மூன்று  ராஜாக்களையும்  கர்த்தர்  மோவாபியரின்<Moab>  கையில்  ஒப்புக்கொடுக்க  வரவழைத்தாரே  என்றான்.  {2Kgs  3:10}

 

அப்பொழுது  யோசபாத்<Jehoshaphat>:  நாம்  கர்த்தரிடத்தில்  விசாரிக்கும்படி  கர்த்தருடைய  தீர்க்கதரிசி  ஒருவரும்  இங்கே  இல்லையா  என்று  கேட்டதற்கு,  எலியாவின்<Elijah>  கைகளுக்குத்  தண்ணீர்  வார்த்த  சாப்பாத்தின்<Shaphat>  குமாரனாகிய  எலிசா<Elisha>  இங்கே  இருக்கிறான்  என்று  இஸ்ரவேல்<Israel>  ராஜாவின்  ஊழியக்காரரில்  ஒருவன்  மறுமொழியாகச்  சொன்னான்.  {2Kgs  3:11}

 

அப்பொழுது  யோசபாத்<Jehoshaphat>  அவனை  நோக்கி:  கர்த்தருடைய  வார்த்தை  அவனிடத்தில்  இருக்கிறது  என்றான்;  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவும்  யோசபாத்தும்<Jehoshaphat>  ஏதோமின்<Edom>  ராஜாவும்  அவனிடத்தில்  போனார்கள்.  {2Kgs  3:12}

 

எலிசா<Elisha>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவைப்  பார்த்து:  எனக்கும்  உமக்கும்  என்ன?  நீர்  உம்முடைய  தகப்பனின்  தீர்க்கதரிசிகளிடத்திலும்,  உம்முடைய  தாயாரின்  தீர்க்கதரிசிகளிடத்திலும்  போம்  என்றான்.  அதற்கு  இஸ்ரவேலின்<Israel>  ராஜா:  அப்படியல்ல,  கர்த்தர்  இந்த  மூன்று  ராஜாக்களையும்  மோவாபியரின்<Moab>  கையில்  ஒப்புக்கொடுக்கிறதற்கு  வரவழைத்தார்  என்றான்.  {2Kgs  3:13}

 

அதற்கு  எலிசா<Elisha>:  நான்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோசபாத்தின்<Jehoshaphat>  முகத்தைப்  பாராதிருந்தால்  நான்  உம்மை  நோக்கவுமாட்டேன்,  உம்மைப்  பார்க்கவுமாட்டேன்  என்று  சேனைகளுடைய  கர்த்தருக்கு  முன்நிற்கிற  நான்  அவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {2Kgs  3:14}

 

இப்போதும்  ஒரு  சுரமண்டல  வாத்தியக்காரனை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்;  சுரமண்டல  வாத்தியக்காரன்  வந்து  வாசித்தபோது  கர்த்தருடைய  கரம்  அவன்மேல்  இறங்கி,  {2Kgs  3:15}

 

அவன்:  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இந்தப்  பள்ளத்தாக்கிலே  எங்கும்  வாய்க்கால்களை  வெட்டுங்கள்.  {2Kgs  3:16}

 

நீங்கள்  காற்றையும்  காணமாட்டீர்கள்,  மழையையும்  காணமாட்டீர்கள்;  ஆனாலும்  நீங்களும்  உங்கள்  ஆடுமாடுகளும்  உங்கள்  மிருகஜீவன்களும்  குடிக்கும்படிக்கு,  இந்தப்  பள்ளத்தாக்கு  தண்ணீரால்  நிரப்பப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {2Kgs  3:17}

 

இது  கர்த்தரின்  பார்வைக்கு  அற்பகாரியம்;  மோவாபியரையும்<Moabites>  உங்கள்  கையிலே  ஒப்புக்கொடுப்பார்.  {2Kgs  3:18}

 

நீங்கள்  சகல  கோட்டைகளையும்  சகல  சிறந்த  பட்டணங்களையும்  தகர்த்து,  நல்ல  மரங்களையெல்லாம்  வெட்டி,  நீரூற்றுகளையெல்லாம்  தூர்த்து,  நல்ல  நிலத்தையெல்லாம்  கல்மேடுகளாக்கிக்  கெடுப்பீர்கள்  என்றான்.  {2Kgs  3:19}

 

மறுநாள்  காலமே  பலிசெலுத்தப்படும்  நேரத்தில்,  இதோ,  தண்ணீர்  ஏதோம்<Edom>  தேசவழியாய்  வந்ததினால்  தேசம்  தண்ணீரால்  நிரம்பிற்று.  {2Kgs  3:20}

 

தங்களோடு  யுத்தம்பண்ண  ராஜாக்கள்  வருகிறதை  மோவாபியரெல்லாரும்<Moabites>  கேட்டபோது,  அவர்கள்  ஆயுதம்  தரிக்கத்தக்க  வயதுள்ளவர்களையும்,  அதற்கு  மேல்தரமானவர்கள்  எல்லாரையும்  கூட்டி  அழைத்துக்கொண்டுவந்து  எல்லையிலே  நின்றார்கள்.  {2Kgs  3:21}

 

மோவாபியர்<Moabites>  அதிகாலமே  எழுந்தபோது  சூரியன்  தண்ணீரின்மேல்  பிரகாசித்ததினால்  அந்தத்  தண்ணீர்  அவர்களுக்கு  இரத்தம்போல்  சிவப்பாய்க்  காணப்பட்டது.  {2Kgs  3:22}

 

அதினால்  அவர்கள்:  இது  இரத்தம்,  அந்த  ராஜாக்கள்  தங்களைத்  தாங்களே  ஒருவரை  ஒருவர்  வெட்டிக்கொண்டு  மாண்டுபோனார்கள்;  ஆதலால்  மோவாபியரே<Moab>,  கொள்ளைக்கு  வாருங்கள்  என்று  சொன்னார்கள்.  {2Kgs  3:23}

 

அவர்கள்  இஸ்ரவேலின்<Israel>  பாளயத்திற்கு  வந்தபோதோவெனில்,  இஸ்ரவேலர்<Israelites>  எழும்பி,  மோவாபியரைத்<Moabites>  தங்களுக்கு  முன்பாக  ஓடிப்போகத்தக்கதாய்  முறிய  அடித்து,  அவர்கள்  தேசத்திற்குள்  புகுந்து,  அங்கேயும்  மோவாபியரை<Moabites>  முறிய  அடித்து,  {2Kgs  3:24}

 

பட்டணங்களை  இடித்து,  சகல  நல்ல  நிலத்திலும்  கல்லெறிந்து  நிரப்பி,  நீரூற்றுகளையெல்லாம்  தூர்த்து,  நல்ல  மரங்களையெல்லாம்  வெட்டிப்போட்டார்கள்;  கிராரேசேத்திலேமாத்திரம்<Kirharaseth>  அதின்  மதில்கள்  இன்னும்  இடிபடாதிருக்கிறபோது;  கவண்காரர்  அதைச்  சுற்றிக்கொண்டு  அதையும்  சேதமாக்கினார்கள்.  {2Kgs  3:25}

 

யுத்தம்  மும்முரமாகிறதென்று  மோவாபியரின்<Moab>  ராஜா  கண்டபோது,  அவன்  ஏதோமின்<Edom>  ராஜாவின்மேல்  வலுமையாய்  விழுகிறதற்குப்  பட்டயம்  உருவுகிற  எழுநூறுபேரைக்  கூட்டிக்கொண்டுபோனான்;  ஆனாலும்  அவர்களாலே  கூடாமற்போயிற்று.  {2Kgs  3:26}

 

அப்பொழுது  அவன்  தன்  ஸ்தானத்தில்  ராஜாவாகப்போகிற  தன்  சேஷ்டபுத்திரனைப்  பிடித்து,  அலங்கத்தின்மேல்  அவனைச்  சர்வாங்க  தகனமாகப்  பலியிட்டான்;  அப்பொழுது  இஸ்ரவேலர்மேல்<Israel>  கடுங்கோபம்மூண்டதினால்,  அவர்கள்  அவனைவிட்டுப்  புறப்பட்டு,  தங்கள்  தேசத்திற்குத்  திரும்பிவிட்டார்கள்.  {2Kgs  3:27}

 

தீர்க்கதரிசிகளுடைய  புத்திரரில்  ஒருவனுக்கு  மனைவியாயிருந்த  ஒரு  ஸ்திரீ  எலிசாவைப்<Elisha>  பார்த்து:  உமது  அடியானாகிய  என்  புருஷன்  இறந்துபோனான்;  உமது  அடியான்  கர்த்தருக்குப்  பயந்து  நடந்தான்  என்பதை  அறிவீர்;  கடன்கொடுத்தவன்  இப்போது  என்  இரண்டு  குமாரரையும்  தனக்கு  அடிமைகளாக்கிக்கொள்ள  வந்தான்  என்றாள்.  {2Kgs  4:1}

 

எலிசா<Elisha>  அவளை  நோக்கி:  நான்  உனக்கு  என்னசெய்யவேண்டும்?  வீட்டில்  உன்னிடத்தில்  என்ன  இருக்கிறது  சொல்  என்றான்.  அதற்கு  அவள்:  ஒரு  குடம்  எண்ணெய்  அல்லாமல்  உமது  அடியாளுடைய  வீட்டில்  வேறொன்றும்  இல்லை  என்றாள்.  {2Kgs  4:2}

 

அப்பொழுது  அவன்:  நீ  போய்,  உன்னுடைய  அயல்வீட்டுக்காரர்  எல்லாரிடத்திலும்  அநேகம்  வெறும்பாத்திரங்களைக்  கேட்டுவாங்கி,  {2Kgs  4:3}

 

உள்ளே  போய்,  உன்  பிள்ளைகளுடன்  உள்ளே  நின்று  கதவைப்  பூட்டி,  அந்தப்  பாத்திரங்கள்  எல்லாவற்றிலும்  வார்த்து,  நிறைந்ததை  ஒரு  பக்கத்தில்  வை  என்றான்.  {2Kgs  4:4}

 

அவள்  அவனிடத்திலிருந்து  போய்,  தன்  பிள்ளைகளுடன்  கதவைப்  பூட்டிக்கொண்டு,  இவர்கள்  பாத்திரங்களை  அவளிடத்தில்  கொடுக்க,  அவள்  அவைகளில்  வார்த்தாள்.  {2Kgs  4:5}

 

அந்தப்  பாத்திரங்கள்  நிறைந்தபின்,  அவள்  தன்  மகன்  ஒருவனை  நோக்கி:  இன்னும்  ஒரு  பாத்திரம்  கொண்டுவா  என்றாள்.  அதற்கு  அவன்:  வேறே  பாத்திரம்  இல்லை  என்றான்;  அப்பொழுது  எண்ணெய்  நின்றுபோயிற்று.  {2Kgs  4:6}

 

அவள்  போய்  தேவனுடைய  மனுஷனுக்கு  அதை  அறிவித்தாள்.  அப்பொழுது  அவன்:  நீ  போய்  அந்த  எண்ணெயை  விற்று,  உன்  கடனைத்  தீர்த்து,  மீந்ததைக்கொண்டு  நீயும்  உன்  பிள்ளைகளும்  ஜீவனம்பண்ணுங்கள்  என்றான்.  {2Kgs  4:7}

 

பின்பு  ஒருநாள்  எலிசா<Elisha>  சூனேமுக்குப்<Shunem>  போயிருக்கும்போது,  அங்கேயிருந்த  கனம்பொருந்திய  ஒரு  ஸ்திரீ  அவனைப்  போஜனம்பண்ண  வருந்திக்கேட்டுக்கொண்டாள்;  அப்படியே  அவன்  பயணப்பட்டு  வருகிறபோதெல்லாம்  போஜனம்பண்ணும்படி  அங்கே  வந்து  தங்குவான்.  {2Kgs  4:8}

 

அவள்  தன்  புருஷனை  நோக்கி:  இதோ,  நம்மிடத்தில்  எப்போதும்  வந்துபோகிற  தேவனுடைய  மனுஷனாகிய  இவர்  பரிசுத்தவான்  என்று  காண்கிறேன்.  {2Kgs  4:9}

 

நாம்  மெத்தையின்மேல்  ஒரு  சிறிய  அறைவீட்டைக்  கட்டி,  அதில்  அவருக்கு  ஒரு  கட்டிலையும்,  மேஜையையும்,  நாற்காலியையும்,  குத்துவிளக்கையும்  வைப்போம்;  அவர்  நம்மிடத்தில்  வரும்போது  அங்கே  தங்கலாம்  என்றாள்.  {2Kgs  4:10}

 

ஒருநாள்  அவன்  அங்கே  வந்து,  அந்த  அறைவீட்டிலே  தங்கி,  அங்கே  படுத்துக்கொண்டிருந்தான்.  {2Kgs  4:11}

 

அவன்  தன்  வேலைக்காரனாகிய  கேயாசை<Gehazi>  நோக்கி:  இந்தச்  சூனேமியாளை<Shunammite>  அழைத்துக்கொண்டுவா  என்றான்;  அவளை  அழைத்துக்கொண்டுவந்தான்;  அவள்  அவனுக்குமுன்பாக  நின்றாள்.  {2Kgs  4:12}

 

அவன்  கேயாசியைப்<Gehazi>  பார்த்து:  இதோ,  இப்படிப்பட்ட  சகல  சலக்கரணையோடும்  எங்களை  விசாரித்து  வருகிறாயே,  உனக்கு  நான்  என்ன  செய்யவேண்டும்?  ராஜாவினிடத்திலாவது  சேனாபதியினிடத்திலாவது  உனக்காக  நான்  பேசவேண்டிய  காரியம்  உண்டோ  என்று  அவளைக்  கேள்  என்றான்.  அதற்கு  அவள்:  என்  ஜனத்தின்  நடுவே  நான்  சுகமாய்க்  குடியிருக்கிறேன்  என்றாள்.  {2Kgs  4:13}

 

அவளுக்குச்  செய்யவேண்டியது  என்னவென்று  கேயாசியை<Gehazi>  அவன்  கேட்டதற்கு;  அவன்,  அவளுக்குப்  பிள்ளை  இல்லை,  அவள்  புருஷனும்  பெரிய  வயதுள்ளவன்  என்றான்.  {2Kgs  4:14}

 

அப்பொழுது  அவன்:  அவளைக்  கூப்பிடு  என்றான்;  அவளைக்  கூப்பிட்டபோது,  அவள்  வந்து  வாசற்படியிலே  நின்றாள்.  {2Kgs  4:15}

 

அப்பொழுது  அவன்:  ஒரு  பிராண  உற்பத்திகாலத்திட்டத்திலே  ஒரு  குமாரனை  அணைத்துக்கொண்டிருப்பாய்  என்றான்.  அதற்கு  அவள்:  ஏது?  தேவனுடைய  மனுஷனாகிய  என்  ஆண்டவனே,  உமது  அடியாளுக்கு  அபத்தம்  சொல்லவேண்டாம்  என்றாள்.  {2Kgs  4:16}

 

அந்த  ஸ்திரீ  கர்ப்பந்தரித்து,  எலிசா<Elisha>  தன்னோடே  சொன்னபடி,  ஒரு  உற்பத்திகாலத்திட்டத்தில்  ஒரு  குமாரனைப்  பெற்றாள்.  {2Kgs  4:17}

 

அந்தப்  பிள்ளை  வளர்ந்தான்,  ஒருநாள்  அவன்  அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த  தன்  தகப்பனண்டைக்குப்  போயிருக்கும்போது,  {2Kgs  4:18}

 

தன்  தகப்பனைப்  பார்த்து:  என்  தலை  நோகிறது,  என்  தலை  நோகிறது  என்றான்;  அப்பொழுது  அவன்  வேலைக்காரனிடத்தில்,  இவனை  இவன்  தாயினிடத்தில்  எடுத்துக்கொண்டுபோய்விடு  என்றான்.  {2Kgs  4:19}

 

அவனை  எடுத்து,  அவன்  தாயினிடத்தில்  கொண்டுபோனபோது,  அவன்  மத்தியானமட்டும்  அவள்  மடியில்  இருந்து  செத்துப்போனான்.  {2Kgs  4:20}

 

அப்பொழுது  அவள்  ஏறிப்போய்,  அவனை  தேவனுடைய  மனுஷன்  கட்டிலின்மேல்  வைத்து,  அவன்  வைக்கப்பட்ட  அறையின்  கதவைப்  பூட்டிக்கொண்டுபோய்,  {2Kgs  4:21}

 

தன்  புருஷனிடத்தில்  ஆள்  அனுப்பி:  நான்  சீக்கிரமாய்  தேவனுடைய  மனுஷன்  இருக்கும்  இடமட்டும்  போய்வரும்படிக்கு,  வேலைக்காரரில்  ஒருவனையும்  ஒரு  கழுதையையும்  எனக்கு  அனுப்பவேண்டும்  என்று  சொல்லச்சொன்னாள்.  {2Kgs  4:22}

 

அப்பொழுது  அவன்:  இது  அமாவாசியும்  அல்ல  ஓய்வுநாளும்  அல்லவே;  நீ  இன்றைக்கு  அவரிடத்துக்குப்  போகவேண்டியது  என்ன  என்று  கேட்கச்சொன்னான்.  அதற்கு  அவள்:  எல்லாம்  சரிதான்,  நான்  போகவேண்டியிருக்கிறது  என்று  சொல்லியனுப்பி,  {2Kgs  4:23}

 

கழுதையின்மேல்  சேணம்வைத்து  ஏறி,  தன்  வேலைக்காரனை  நோக்கி:  இதை  ஓட்டிக்கொண்டுபோ;  நான்  உனக்குச்  சொன்னால்  ஒழிய  போகிற  வழியில்  எங்கும்  ஓட்டத்தை  நிறுத்தாதே  என்று  சொல்லிப்  புறப்பட்டு,  {2Kgs  4:24}

 

கர்மேல்<Carmel>  பர்வதத்திலிருக்கிற  தேவனுடைய  மனுஷனிடத்திற்குப்  போனாள்;  தேவனுடைய  மனுஷன்  தூரத்திலே  அவளை  வரக்கண்டு,  தன்  வேலைக்காரனாகிய  கேயாசியைப்<Gehazi>  பார்த்து:  அதோ  சூனேமியாள்<Shunammite>  வருகிறாள்.  {2Kgs  4:25}

 

நீ  அவளுக்கு  எதிர்கொண்டு  ஓடி,  நீ  சுகமாயிருக்கிறாயா?  உன்  புருஷன்  சுகமாயிருக்கிறானா?  அந்தப்  பிள்ளை  சுகமாயிருக்கிறதா  என்று  அவளிடத்தில்  கேள்  என்றான்.  அவள்:  சுகந்தான்  என்று  சொல்லி,  {2Kgs  4:26}

 

பர்வதத்திலிருக்கிற  தேவனுடைய  மனுஷனிடத்தில்  வந்து,  அவன்  காலைப்  பிடித்துக்கொண்டாள்;  அப்பொழுது  கேயாசி<Gehazi>  அவளை  விலக்கிவிட  வந்தான்;  தேவனுடைய  மனுஷன்:  அவளைத்  தடுக்காதே;  அவள்  ஆத்துமா  துக்கமாயிருக்கிறது;  கர்த்தர்  அதை  எனக்கு  அறிவியாமல்  மறைத்துவைத்தார்  என்றான்.  {2Kgs  4:27}

 

அப்பொழுது  அவள்,  நான்  என்  ஆண்டவனிடத்தில்  ஒரு  குமாரனை  வேண்டும்  என்று  கேட்டதுண்டா?  எனக்கு  அபத்தம்  சொல்லவேண்டாம்  என்று  நான்  சொல்லவில்லையா  என்றாள்.  {2Kgs  4:28}

 

அப்பொழுது  அவன்  கேயாசியைப்<Gehazi>  பார்த்து:  நீ  உன்  இடையைக்  கட்டிக்கொண்டு,  என்  தடியை  உன்  கையில்  பிடித்துக்கொண்டு,  வழியில்  ஒருவனைச்  சந்தித்தாலும்  அவனை  வினவாமலும்,  உன்னை  ஒருவன்  வினவினாலும்  அவனுக்கு  மறுமொழி  சொல்லாமலும்  போய்,  என்  தடியை  அந்தப்  பிள்ளையின்  முகத்தின்மேல்  வை  என்றான்.  {2Kgs  4:29}

 

பிள்ளையின்  தாயோ:  நான்  உம்மை  விடுகிறதில்லை  என்று  கர்த்தரின்  ஜீவனையும்  உம்முடைய  ஜீவனையும்  கொண்டு  சொல்லுகிறேன்  என்றாள்;  அப்பொழுது  அவன்  எழுந்திருந்து  அவள்  பின்னே  போனான்.  {2Kgs  4:30}

 

கேயாசி<Gehazi>  அவர்களுக்கு  முன்னே  போய்,  அந்தத்  தடியைப்  பிள்ளையின்  முகத்தின்மேல்  வைத்தான்;  ஆனாலும்  சத்தமும்  இல்லை,  உணர்ச்சியும்  இல்லை;  ஆகையால்  அவன்  திரும்பி  அவனுக்கு  எதிர்கொண்டுவந்து:  பிள்ளை  விழிக்கவில்லை  என்று  அவனுக்கு  அறிவித்தான்.  {2Kgs  4:31}

 

எலிசா<Elisha>  வீட்டிற்குள்  வந்தபோது,  இதோ,  அந்தப்  பிள்ளை  அவன்  கட்டிலின்மேல்  செத்துக்கிடந்தான்.  {2Kgs  4:32}

 

உள்ளே  போய்த்  தங்கள்  இருவருக்கும்  பின்னாக  அவன்  கதவைப்  பூட்டி,  கர்த்தரை  நோக்கி  வேண்டுதல்  செய்து,  {2Kgs  4:33}

 

கிட்டேபோய்,  தன்  வாய்  பிள்ளையின்  வாயின்மேலும்,  தன்  கண்கள்  அவன்  கண்களின்மேலும்,  தன்  உள்ளங்கைகள்  அவன்  உள்ளங்கைகளின்மேலும்  படும்படியாக  அவன்மேல்  குப்புறப்  படுத்துக்கொண்டான்;  அப்பொழுது  பிள்ளையின்  உடல்  அனல்கொண்டது.  {2Kgs  4:34}

 

அவன்  எழுந்து,  அறைவீட்டில்  இங்கும்  அங்கும்  உலாவி,  திரும்பக்  கிட்டப்  போய்  அவன்மேல்  குப்புறப்படுத்தான்;  அப்பொழுது  அந்தப்  பிள்ளை  ஏழுதரம்  தும்மித்  தன்  கண்களைத்  திறந்தான்.  {2Kgs  4:35}

 

அப்பொழுது  அவன்:  கேயாசியைக்<Gehazi>  கூப்பிட்டு,  அந்தச்  சூனேமியாளை<Shunammite>  அழைத்துக்கொண்டுவா  என்றான்;  அவளை  அழைத்துக்கொண்டுவந்தான்;  அவள்  அவனிடத்தில்  வந்தபோது;  அவன்,  உன்  குமாரனை  எடுத்துக்கொண்டுபோ  என்றான்.  {2Kgs  4:36}

 

அப்பொழுது  அவள்  உள்ளே  போய்,  அவன்  பாதத்திலே  விழுந்து,  தரைமட்டும்  பணிந்து,  தன்  குமாரனை  எடுத்துக்கொண்டு  வெளியே  போனாள்.  {2Kgs  4:37}

 

எலிசா<Elisha>  கில்காலுக்குத்<Gilgal>  திரும்பிப்போய்  இருக்கையில்,  தேசத்திலே  பஞ்சம்  உண்டாயிற்று;  தீர்க்கதரிசிகளின்  புத்திரர்,  அவனுக்கு  முன்பாக  உட்கார்ந்திருந்தார்கள்;  அவன்  தன்  வேலைக்காரனை  நோக்கி:  நீ  பெரிய  பானையை  அடுப்பிலே  வைத்துத்  தீர்க்கதரிசிகளின்  புத்திரருக்குக்  கூழ்காய்ச்சு  என்றான்.  {2Kgs  4:38}

 

ஒருவன்  கீரைகளைப்  பறிக்க  வெளியிலே  போய்,  ஒரு  பேய்க்கொம்மட்டிக்  கொடியைக்  கண்டு,  அதன்  காய்களை  மடி  நிறைய  அறுத்துவந்து,  அவைகளை  அரிந்து  கூழ்ப்பானையிலே  போட்டான்;  அது  இன்னதென்று  அவர்களுக்குத்  தெரியாதிருந்தது.  {2Kgs  4:39}

 

சாப்பிட  அதை  ஜனங்களுக்கு  வார்த்தார்கள்;  அவர்கள்  அந்தக்  கூழில்  எடுத்துச்  சாப்பிடுகிறபோது,  அதைச்  சாப்பிடக்கூடாமல்:  தேவனுடைய  மனுஷனே,  பானையில்  சாவு  இருக்கிறது  என்று  சத்தமிட்டார்கள்.  {2Kgs  4:40}

 

அப்பொழுது  அவன்,  மாவைக்  கொண்டுவரச்சொல்லி,  அதைப்  பானையிலே  போட்டு,  ஜனங்கள்  சாப்பிடும்படி  அவர்களுக்கு  வார்  என்றான்;  அப்புறம்  பானையிலே  தோஷம்  இல்லாமற்போயிற்று.  {2Kgs  4:41}

 

பின்பு  பாகால்  சலீஷாவிலிருந்து<Baalshalisha>  ஒரு  மனுஷன்  தேவனுடைய  மனுஷனுக்கு  முதற்பலனான  வாற்கோதுமையின்  இருபது  அப்பங்களையும்  தாள்  கதிர்களையும்  கொண்டுவந்தான்;  அப்பொழுது  அவன்:  ஜனங்களுக்குச்  சாப்பிடக்கொடு  என்றான்.  {2Kgs  4:42}

 

அதற்கு  அவனுடைய  பணிவிடைக்காரன்:  இதை  நான்  நூறுபேருக்கு  முன்  வைப்பது  எப்படி  என்றான்.  அதற்கு  அவன்:  அதை  ஜனங்களுக்குச்  சாப்பிடக்கொடு;  சாப்பிட்டபிற்பாடு  இன்னும்  மீதியுண்டாயிருக்கும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  4:43}

 

அப்பொழுது  அவர்களுக்கு  முன்பாக  அதை  வைத்தான்;  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  அவர்கள்  சாப்பிட்டதுமன்றி  மீதியும்  இருந்தது.  {2Kgs  4:44}

 

சீரிய<Syria>  ராஜாவின்  படைத்தலைவனாகிய  நாகமான்<Naaman>  என்பவன்  தன்  ஆண்டவனிடத்தில்  பெரிய  மனுஷனும்  எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்;  அவனைக்  கொண்டு  கர்த்தர்  சீரியாவுக்கு<Syria>  இரட்சிப்பைக்  கட்டளையிட்டார்;  மகா  பராக்கிரமசாலியாகிய  அவனோ  குஷ்டரோகியாயிருந்தான்.  {2Kgs  5:1}

 

சீரியாவிலிருந்து<Syrians>  தண்டுகள்  புறப்பட்டு,  இஸ்ரவேல்<Israel>  தேசத்திலிருந்து  ஒரு  சிறு  பெண்ணைச்  சிறைபிடித்துக்கொண்டு  வந்திருந்தார்கள்;  அவள்  நாகமானின்<Naaman>  மனைவிக்குப்  பணிவிடை  செய்துகொண்டிருந்தாள்.  {2Kgs  5:2}

 

அவள்  தன்  நாச்சியாரைப்  பார்த்து:  என்  ஆண்டவன்  சமாரியாவிலிருக்கிற<Samaria>  தீர்க்கதரிசியினிடத்தில்  போவாரானால்  நலமாயிருக்கும்;  அவர்  இவருடைய  குஷ்டரோகத்தை  நீக்கிவிடுவார்  என்றாள்.  {2Kgs  5:3}

 

அப்பொழுது  அவன்  போய்,  இஸ்ரவேல்<Israel>  தேசத்துப்  பெண்  இன்ன  இன்ன  பிரகாரமாய்ச்  சொல்லுகிறாள்  என்று  தன்  ஆண்டவனிடத்தில்  அறிவித்தான்.  {2Kgs  5:4}

 

அப்பொழுது  சீரியாவின்<Syria>  ராஜா:  நல்லது  போகலாம்,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவுக்கு  நிருபம்  தருகிறேன்  என்றான்;  அப்படியே  அவன்  தன்  கையிலே  பத்துத்  தாலந்து  வெள்ளியையும்,  ஆறாயிரம்  சேக்கல்  நிறைபொன்னையும்,  பத்து  மாற்றுவஸ்திரங்களையும்  எடுத்துக்கொண்டுபோய்,  {2Kgs  5:5}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவிடத்தில்  அந்த  நிருபத்தைக்  கொடுத்தான்.  அதிலே:  இந்த  நிருபத்தை  உம்மிடத்தில்  என்  ஊழியக்காரனாகிய  நாகமான்<Naaman>  கொண்டுவருவான்;  நீர்  அவன்  குஷ்டரோகத்தை  நீக்கி  விட  அவனை  உம்மிடத்தில்  அனுப்பியிருக்கிறேன்  என்று  எழுதியிருந்தது.  {2Kgs  5:6}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  அந்த  நிருபத்தை  வாசித்தபோது,  அவன்  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  ஒரு  மனுஷனை  அவன்  குஷ்டரோகத்தினின்று  நீக்கி  விடவேண்டும்  என்று,  அவன்  என்னிடத்தில்  நிருபம்  அனுப்புகிறதற்கு,  கொல்லவும்  உயிர்ப்பிக்கவும்  நான்  தேவனா?  இவன்  என்னை  விரோதிக்கச்  சமயம்  தேடுகிறான்  என்பதைச்  சிந்தித்துப்பாருங்கள்  என்றான்.  {2Kgs  5:7}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்ட  செய்தியைத்  தேவனுடைய  மனுஷனாகிய  எலிசா<Elisha>  கேட்டபோது,  அவன்:  நீர்  உம்முடைய  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொள்வானேன்?  அவன்  என்னிடத்தில்  வந்து,  இஸ்ரவேலிலே<Israel>  தீர்க்கதரிசி  உண்டென்பதை  அறிந்துகொள்ளட்டும்  என்று  ராஜாவுக்குச்  சொல்லியனுப்பினான்.  {2Kgs  5:8}

 

அப்படியே  நாகமான்<Naaman>  தன்  குதிரைகளோடும்  தன்  இரதத்தோடும்  வந்து  எலிசாவின்<Elisha>  வாசற்படியிலே  நின்றான்.  {2Kgs  5:9}

 

அப்பொழுது  எலிசா<Elisha>:  அவனிடத்தில்  ஆள்  அனுப்பி,  நீ  போய்,  யோர்தானில்<Jordan>  ஏழுதரம்  ஸ்நானம்பண்ணு;  அப்பொழுது  உன்  மாம்சம்  மாறி,  நீ  சுத்தமாவாய்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Kgs  5:10}

 

அதற்கு  நாகமான்<Naaman>  கடுங்கோபங்கொண்டு,  புறப்பட்டுப்போய்:  அவன்  வெளியே  வந்து  நின்று,  தன்  தேவனாகிய  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுது,  தன்  கையினால்  அந்த  இடத்தைத்  தடவி,  இவ்விதமாய்க்  குஷ்டரோகத்தை  நீக்கிவிடுவான்  என்று  எனக்குள்  நினைத்திருந்தேன்.  {2Kgs  5:11}

 

நான்  ஸ்நானம்பண்ணிச்  சுத்தமாகிறதற்கு  இஸ்ரவேலின்<Israel>  தண்ணீர்கள்  எல்லாவற்றைப்பார்க்கிலும்  தமஸ்குவின்<Damascus>  நதிகளாகிய  ஆப்னாவும்<Abana>  பர்பாரும்<Pharpar>  நல்லதல்லவோ  என்று  சொல்லி,  உக்கிரத்தோடே  திரும்பிப்போனான்.  {2Kgs  5:12}

 

அவன்  ஊழியக்காரர்  சமீபத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  தகப்பனே,  அந்தத்  தீர்க்கதரிசி  ஒரு  பெரிய  காரியத்தைச்  செய்ய  உமக்குச்  சொல்லியிருந்தால்  அதை  நீர்  செய்வீர்  அல்லவா?  ஸ்நானம்பண்ணும்,  அப்பொழுது  சுத்தமாவீர்  என்று  அவர்  உம்மோடே  சொல்லும்போது,  அதைச்  செய்யவேண்டியது  எத்தனை  அதிகம்  என்று  சொன்னார்கள்.  {2Kgs  5:13}

 

அப்பொழுது  அவன்  இறங்கி,  தேவனுடைய  மனுஷன்  வார்த்தையின்படியே  யோர்தானில்<Jordan>  ஏழுதரம்  முழுகினபோது,  அவன்  மாம்சம்  ஒரு  சிறுபிள்ளையின்  மாம்சத்தைப்போல  மாறி,  அவன்  சுத்தமானான்.  {2Kgs  5:14}

 

அப்பொழுது  அவன்  தன்  கூட்டத்தோடெல்லாம்  தேவனுடைய  மனுஷனிடத்துக்குத்  திரும்பிவந்து,  அவனுக்கு  முன்பாக  நின்று:  இதோ,  இஸ்ரவேலிலிருக்கிற<Israel>  தேவனைத்தவிரப்  பூமியெங்கும்  வேறே  தேவன்  இல்லை  என்பதை  அறிந்தேன்;  இப்போதும்  உமது  அடியேன்  கையில்  ஒரு  காணிக்கை  வாங்கிக்கொள்ளவேண்டும்  என்றான்.  {2Kgs  5:15}

 

அதற்கு  அவன்:  நான்  வாங்குகிறதில்லை  என்று  கர்த்தருக்கு  முன்பாக  அவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்;  வாங்கவேண்டும்  என்று  அவனை  வருந்தினாலும்  தட்டுதல்  பண்ணிவிட்டான்.  {2Kgs  5:16}

 

அப்பொழுது  நாகமான்<Naaman>:  ஆனாலும்  இரண்டு  கோவேறு  கழுதைகள்  சுமக்கத்தக்க  இரண்டு  பொதி  மண்  உமது  அடியேனுக்குக்  கட்டளையிடவேண்டும்;  உமது  அடியேன்  இனிக்  கர்த்தருக்கே  அல்லாமல்,  அந்நிய  தேவர்களுக்குச்  சர்வாங்க  தகனத்தையும்  பலியையும்  செலுத்துவதில்லை.  {2Kgs  5:17}

 

ஒரு  காரியத்தையே  கர்த்தர்  உமது  அடியேனுக்கு  மன்னிப்பாராக;  என்  ஆண்டவன்  பணிந்துகொள்ள  ரிம்மோன்<Rimmon>  கோவிலுக்குள்  பிரவேசிக்கும்போது,  நான்  அவருக்குக்  கைலாகு  கொடுத்து  ரிம்மோன்<Rimmon>  கோவிலிலே  பணியவேண்டியதாகும்;  இப்படி  ரிம்மோன்<Rimmon>  கோவிலில்  நான்  பணியவேண்டிய  இந்தக்  காரியத்தைக்  கர்த்தர்  உமது  அடியேனுக்கு  மன்னிப்பாராக  என்றான்.  {2Kgs  5:18}

 

அதற்கு  அவன்:  சமாதானத்தோடே  போ  என்றான்;  இவன்  புறப்பட்டுக்  கொஞ்சதூரம்  போனபோது,  {2Kgs  5:19}

 

தேவனுடைய  மனுஷனாகிய  எலிசாவின்<Elisha>  வேலைக்காரன்  கேயாசி<Gehazi>  என்பவன்,  அந்தச்  சீரியனாகிய<Syrian>  நாகமான்<Naaman>  கொண்டுவந்ததை  என்  ஆண்டவன்  அவன்  கையிலே  வாங்காமல்  அவனை  விட்டுவிட்டார்;  நான்  அவன்  பிறகே  ஓடி,  அவன்  கையிலே  ஏதாகிலும்  வாங்குவேன்  என்று  கர்த்தருடைய  ஜீவன்மேல்  ஆணையிட்டு,  {2Kgs  5:20}

 

நாகமானைப்<Naaman>  பின்தொடர்ந்தான்;  அவன்  தன்  பிறகே  ஓடிவருகிறதை  நாகமான்<Naaman>  கண்டபோது,  அவனுக்கு  எதிர்கொண்டுபோக  இரதத்திலிருந்து  குதித்து:  சுகசெய்தியா  என்று  கேட்டான்.  {2Kgs  5:21}

 

அதற்கு  அவன்:  சுகசெய்திதான்;  தீர்க்கதரிசிகளின்  புத்திரரில்  இரண்டு  வாலிபர்  இப்பொழுதுதான்  எப்பிராயீம்<Ephraim>  மலைத்தேசத்திலிருந்து  என்னிடத்தில்  வந்தார்கள்;  அவர்களுக்கு  ஒரு  தாலந்து  வெள்ளியையும்,  இரண்டு  மாற்றுவஸ்திரங்களையும்  தரவேண்டும்  என்று  கேட்க,  என்  எஜமான்  என்னை  அனுப்பினார்  என்றான்.  {2Kgs  5:22}

 

அதற்கு  நாகமான்<Naaman>:  தயவுசெய்து,  இரண்டு  தாலந்தை  வாங்கிக்கொள்  என்று  சொல்லி,  அவனை  வருந்தி,  இரண்டு  தாலந்து  வெள்ளியை  இரண்டு  பைகளில்  இரண்டு  மாற்று  வஸ்திரங்களோடே  கட்டி,  அவனுக்கு  முன்பாகச்  சுமந்துபோக,  தன்  வேலைக்காரரான  இரண்டு  பேர்மேல்  வைத்தான்.  {2Kgs  5:23}

 

அவன்  மேட்டண்டைக்கு  வந்தபோது,  அவன்  அதை  அவர்கள்  கையிலிருந்து  வாங்கி,  வீட்டிலே  வைத்து,  அந்த  மனுஷரை  அனுப்பிவிட்டான்;  அவர்கள்  போய்விட்டார்கள்.  {2Kgs  5:24}

 

பின்பு  அவன்  உள்ளே  போய்த்  தன்  எஜமானுக்கு  முன்பாக  நின்றான்;  கேயாசியே<Gehazi>,  எங்கேயிருந்து  வந்தாய்  என்று  எலிசா<Elisha>  அவனைக்  கேட்டதற்கு,  அவன்:  உமது  அடியான்  எங்கும்  போகவில்லை  என்றான்.  {2Kgs  5:25}

 

அப்பொழுது  அவன்  இவனைப்  பார்த்து:  அந்த  மனுஷன்  உனக்கு  எதிர்கொண்டுவரத்  தன்  இரதத்திலிருந்து  இறங்கித்  திரும்புகிறபோது  என்  மனம்  உன்னுடன்கூடச்  செல்லவில்லையா?  பணத்தை  வாங்குகிறதற்கும்,  வஸ்திரங்களையும்  ஒலிவத்தோப்புகளையும்  திராட்சத்தோட்டங்களையும்  ஆடுமாடுகளையும்  வேலைக்காரரையும்  வேலைக்காரிகளையும்  வாங்குகிறதற்கும்  இது  காலமா?  {2Kgs  5:26}

 

ஆகையால்  நாகமானின்<Naaman>  குஷ்டரோகம்  உன்னையும்  உன்  சந்ததியாரையும்  என்றைக்கும்  பிடித்திருக்கும்  என்றான்;  உடனே  அவன்  உறைந்த  மழை  நிறமான  குஷ்டரோகியாகி,  அவன்  சமுகத்தை  விட்டுப்  புறப்பட்டுப்போனான்.  {2Kgs  5:27}

 

தீர்க்கதரிசிகளின்  புத்திரர்  எலிசாவை<Elisha>  நோக்கி:  இதோ,  நாங்கள்  உம்முடன்  குடியிருக்கிற  இந்த  இடம்  எங்களுக்கு  நெருக்கமாய்  இருக்கிறது.  {2Kgs  6:1}

 

நாங்கள்  யோர்தான்மட்டும்<Jordan>  போய்  அவ்விடத்தில்  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு  உத்திரத்தை  வெட்டி,  குடியிருக்க  அங்கே  எங்களுக்கு  ஒரு  இடத்தை  உண்டாக்குவோம்  என்றார்கள்.  அதற்கு  அவன்:  போங்கள்  என்றான்.  {2Kgs  6:2}

 

அவர்களில்  ஒருவன்:  நீர்  தயவு  செய்து  உமது  அடியாரோடேகூட  வரவேண்டும்  என்றான்.  அதற்கு  அவன்:  நான்  வருகிறேன்  என்று  சொல்லி,  {2Kgs  6:3}

 

அவர்களோடேகூடப்  போனான்;  அவர்கள்  யோர்தான்<Jordan>  நதியருகே  வந்தபோது  மரங்களை  வெட்டினார்கள்.  {2Kgs  6:4}

 

ஒருவன்  ஒரு  உத்திரத்தை  வெட்டி  விழுத்துகையில்  கோடரி  தண்ணீரில்  விழுந்தது;  அவன்:  ஐயோ  என்  ஆண்டவனே,  அது  இரவலாக  வாங்கப்பட்டதே  என்று  கூவினான்.  {2Kgs  6:5}

 

தேவனுடைய  மனுஷன்  அது  எங்கே  விழுந்தது  என்று  கேட்டான்;  அவன்  அந்த  இடத்தைக்  காண்பித்தபோது,  ஒரு  கொம்பை  வெட்டி,  அதை  அங்கே  எறிந்து,  அந்த  இரும்பை  மிதக்கப்பண்ணி,  {2Kgs  6:6}

 

அதை  எடுத்துக்கொள்  என்றான்;  அப்படியே  அவன்  தன்  கையை  நீட்டி  அதை  எடுத்துக்கொண்டான்.  {2Kgs  6:7}

 

அக்காலத்தில்  சீரியாவின்<Syria>  ராஜா  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாய்  யுத்தம்பண்ணி,  இன்ன  இன்ன  ஸ்தலத்திலே  பாளயமிறங்குவேன்  என்று  தன்  ஊழியக்காரரோடே  ஆலோசனைபண்ணினான்.  {2Kgs  6:8}

 

ஆகிலும்  தேவனுடைய  மனுஷன்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவினிடத்தில்  ஆள்  அனுப்பி:  இன்ன  இடத்துக்குப்  போகாதபடிக்கு  எச்சரிக்கையாயிரும்;  சீரியர்<Syrians>  அங்கே  இறங்குவார்கள்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Kgs  6:9}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  தேவனுடைய  மனுஷன்  தன்னை  எச்சரித்து,  தனக்குக்  குறித்துச்சொன்ன  ஸ்தலத்திற்கு  மனுஷரை  அனுப்பிப்பார்த்து  எச்சரிக்கையாயிருந்து,  இப்படி  அநேகந்தரம்  தன்னைக்  காத்துக்கொண்டான்.  {2Kgs  6:10}

 

இந்தக்  காரியத்தினிமித்தம்  சீரிய<Syria>  ராஜாவின்  இருதயம்  குழம்பி,  அவன்  தன்  ஊழியக்காரரை  அழைத்து:  நம்முடையவர்களில்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவுக்கு  உளவாயிருக்கிறவன்  யார்  என்று  நீங்கள்  எனக்கு  அறிவிக்கமாட்டீர்களா  என்று  கேட்டான்.  {2Kgs  6:11}

 

அப்பொழுது  அவன்  ஊழியக்காரரில்  ஒருவன்:  அப்படியில்லை;  என்  ஆண்டவனாகிய  ராஜாவே,  நீர்  உம்முடைய  பள்ளி  அறையிலே  பேசுகிற  வார்த்தைகளையும்  இஸ்ரவேலிலிருக்கிற<Israel>  தீர்க்கதரிசியாகிய  எலிசா<Elisha>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவுக்கு  அறிவிப்பான்  என்றான்.  {2Kgs  6:12}

 

அப்பொழுது  அவன்:  நான்  மனுஷரை  அனுப்பி  அவனைப்  பிடிக்கும்படி,  நீங்கள்  போய்  அவன்  எங்கே  இருக்கிறான்  என்று  பாருங்கள்  என்றான்;  அவன்  தோத்தானில்<Dothan>  இருக்கிறான்  என்று  அவனுக்கு  அறிவிக்கப்பட்டது.  {2Kgs  6:13}

 

அப்பொழுது  அவன்  அங்கே  குதிரைகளையும்  இரதங்களையும்  பலத்த  இராணுவத்தையும்  அனுப்பினான்;  அவர்கள்  இராக்காலத்திலே  வந்து  பட்டணத்தை  வளைந்துகொண்டார்கள்.  {2Kgs  6:14}

 

தேவனுடைய  மனுஷனின்  வேலைக்காரன்  அதிகாலமே  எழுந்து  வெளியே  புறப்படுகையில்,  இதோ,  இராணுவமும்  குதிரைகளும்  இரதங்களும்  பட்டணத்தைச்  சுற்றிக்கொண்டிருக்கக்  கண்டான்;  அப்பொழுது  வேலைக்காரன்  அவனை  நோக்கி:  ஐயோ,  என்  ஆண்டவனே,  என்னசெய்வோம்  என்றான்.  {2Kgs  6:15}

 

அதற்கு  அவன்:  பயப்படாதே;  அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும்  நம்மோடிருக்கிறவர்கள்  அதிகம்  என்றான்.  {2Kgs  6:16}

 

அப்பொழுது  எலிசா<Elisha>  விண்ணப்பம்பண்ணி:  கர்த்தாவே,  இவன்  பார்க்கும்படி  இவன்  கண்களைத்  திறந்தருளும்  என்றான்;  உடனே  கர்த்தர்  அந்த  வேலைக்காரன்  கண்களைத்  திறந்தார்;  இதோ,  எலிசாவைச்சுற்றிலும்<Elisha>  அக்கினிமயமான  குதிரைகளாலும்  இரதங்களாலும்  அந்த  மலை  நிறைந்திருக்கிறதை  அவன்  கண்டான்.  {2Kgs  6:17}

 

அவர்கள்  அவனிடத்தில்  வருகையில்,  எலிசா<Elisha>  கர்த்தரை  நோக்கி  விண்ணப்பம்பண்ணி:  இந்த  ஜனங்களுக்குக்  கண்மயக்கம்  உண்டாகும்படி  செய்யும்  என்றான்;  எலிசாவுடைய<Elisha>  வார்த்தையின்படியே  அவர்களுக்குக்  கண்மயக்கம்  உண்டாகும்படி  செய்தார்.  {2Kgs  6:18}

 

அப்பொழுது  எலிசா<Elisha>  அவர்களை  நோக்கி:  இது  வழி  அல்ல;  இது  பட்டணமும்  அல்ல;  என்  பிறகே  வாருங்கள்;  நீங்கள்  தேடுகிற  மனுஷனிடத்தில்  நான்  உங்களை  வழிநடத்துவேன்  என்று  சொல்லி,  அவர்களைச்  சமாரியாவுக்கு<Samaria>  அழைத்துக்கொண்டுபோனான்.  {2Kgs  6:19}

 

அவர்கள்  சமாரியாவில்<Samaria>  வந்தபோது,  எலிசா<Elisha>:  கர்த்தாவே,  இவர்கள்  பார்க்கும்படிக்கு  இவர்கள்  கண்களைத்  திறந்தருளும்  என்றான்;  பார்க்கும்படிக்குக்  கர்த்தர்  அவர்கள்  கண்களைத்  திறக்கும்போது,  இதோ,  அவர்கள்  சமாரியாவின்<Samaria>  நடுவே  இருந்தார்கள்.  {2Kgs  6:20}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  அவர்களைக்  கண்டபோது,  எலிசாவைப்<Elisha>  பார்த்து:  என்  தகப்பனே,  நான்  அவர்களை  வெட்டிப்போடலாமா  என்று  கேட்டான்.  {2Kgs  6:21}

 

அதற்கு  அவன்:  நீர்  வெட்டவேண்டாம்;  நீர்  உம்முடைய  பட்டயத்தாலும்,  உம்முடைய  வில்லினாலும்  சிறையாக்கிக்  கொண்டவர்களை  வெட்டுகிறீரோ?  இவர்கள்  புசித்துக்  குடித்து,  தங்கள்  ஆண்டவனிடத்துக்குப்  போகும்படிக்கு,  அப்பமும்  தண்ணீரும்  அவர்களுக்கெதிரில்  வையும்  என்றான்.  {2Kgs  6:22}

 

அப்பொழுது  அவர்களுக்குப்  பெரிய  விருந்துபண்ணி,  அவர்கள்  புசித்துக்  குடித்தபின்பு,  அவர்களை  அனுப்பிவிட்டான்;  அவர்கள்  தங்கள்  ஆண்டவனிடத்துக்குப்  போய்விட்டார்கள்;  சீரியரின்<Syria>  தண்டுகள்  இஸ்ரவேல்<Israel>  தேசத்திலே  அப்புறம்  வரவில்லை.  {2Kgs  6:23}

 

இதற்குப்பின்பு  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  பெனாதாத்<Benhadad>  தன்  இராணுவத்தையெல்லாம்  கூட்டிக்கொண்டுவந்து  சமாரியாவை<Samaria>  முற்றிக்கைபோட்டான்.  {2Kgs  6:24}

 

அதினால்  சமாரியாவிலே<Samaria>  கொடிய  பஞ்சமுண்டாயிற்று;  ஒரு  கழுதைத்  தலை  எண்பது  வெள்ளிக்காசுக்கும்,  புறாக்களுக்குப்  போடுகிற  காற்படி  பயறு  ஐந்து  வெள்ளிக்காசுக்கும்  விற்கப்படுமட்டும்  அதை  முற்றிக்கைபோட்டார்கள்.  {2Kgs  6:25}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜா  அலங்கத்தின்மேல்  நடந்துபோகையில்,  ஒரு  ஸ்திரீ  அவனைப்பார்த்துக்  கூப்பிட்டு,  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  இரட்சியும்  என்றாள்.  {2Kgs  6:26}

 

அதற்கு  அவன்:  கர்த்தர்  உன்னை  இரட்சிக்காதிருந்தால்  நான்  எதிலிருந்து  எடுத்து  உன்னை  இரட்சிக்கலாம்?  களஞ்சியத்திலிருந்தா,  ஆலையிலிருந்தா  என்று  சொல்லி,  {2Kgs  6:27}

 

ராஜா  பின்னையும்  அவளைப்  பார்த்து:  உனக்கு  என்னவேண்டும்  என்று  கேட்டான்.  அதற்கு  அவள்:  இந்த  ஸ்திரீ  என்னை  நோக்கி:  உன்  மகனைத்  தா,  அவனை  இன்று  தின்போம்;  நாளைக்கு  என்  மகனைத்  தின்போம்  என்றாள்.  {2Kgs  6:28}

 

அப்படியே  என்  மகனை  ஆக்கித்  தின்றோம்;  மறுநாளில்  நான்  இவளை  நோக்கி:  நாம்  உன்  மகனைத்  தின்ன  அவனைத்  தா  என்றேன்;  அவள்  தன்  மகனை  ஒளித்துவிட்டாள்  என்றாள்.  {2Kgs  6:29}

 

அந்த  ஸ்திரீயின்  வார்த்தைகளை  ராஜா  கேட்டவுடனே,  அலங்கத்தின்மேல்  நடந்துபோகிற  அவன்  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டான்;  அவன்  உள்ளே  தன்  சரீரத்தின்மேல்  இரட்டு  உடுத்தியிருக்கிறதை  ஜனங்கள்  கண்டார்கள்.  {2Kgs  6:30}

 

அவன்:  சாப்பாத்தின்<Shaphat>  குமாரனாகிய  எலிசாவின்<Elisha>  தலை  இன்றைக்கு  அவன்மேல்  இருந்தால்,  தேவன்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்  என்று  சொன்னான்.  {2Kgs  6:31}

 

எலிசா<Elisha>  தன்  வீட்டில்  உட்கார்ந்திருந்தான்;  மூப்பரும்  அவனோடு  உட்கார்ந்திருந்தார்கள்.  அப்பொழுது  ராஜா:  ஒரு  மனுஷனைத்  தனக்கு  முன்னே  அனுப்பினான்;  இந்த  ஆள்  எலிசாவினிடத்துக்கு<Elisha>  வருமுன்னே,  அவன்  அந்த  மூப்பரை  நோக்கி:  என்  தலையை  வாங்க,  அந்தக்  கொலைபாதகனுடைய  மகன்  ஆள்  அனுப்பினான்;  பார்த்தீர்களா?  அந்த  ஆள்  வரும்போது,  நீங்கள்  அவனை  உள்ளே  வரவொட்டாமல்  கதவைப்  பூட்டிப்போடுங்கள்;  அவனுக்குப்  பின்னாக  அவன்  ஆண்டவனுடைய  காலின்  சத்தம்  கேட்கிறது  அல்லவா  என்றான்.  {2Kgs  6:32}

 

அவர்களோடே  அவன்  பேசிக்கொண்டிருக்கையில்,  அந்த  ஆள்  அவனிடத்தில்  வந்து:  இதோ,  இந்தப்  பொல்லாப்புக்  கர்த்தரால்  உண்டானது;  நான்  இனிக்  கர்த்தருக்காகக்  காத்திருக்க  வேண்டியது  என்ன  என்று  ராஜா  சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  6:33}

 

அப்பொழுது  எலிசா<Elisha>:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  நாளை  இந்நேரத்தில்  சமாரியாவின்<Samaria>  வாசலிலே  ஒரு  மரக்கால்  கோதுமை  மா  ஒரு  சேக்கலுக்கும்,  இரண்டு  மரக்கால்  வாற்கோதுமை  ஒரு  சேக்கலுக்கும்  விற்கப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  7:1}

 

அப்பொழுது  ராஜாவுக்குக்  கைலாகு  கொடுக்கிற  பிரதானி  ஒருவன்  தேவனுடைய  மனுஷனுக்குப்  பிரதியுத்தரமாக:  இதோ,  கர்த்தர்  வானத்திலே  மதகுகளை  உண்டாக்கினாலும்  இப்படி  நடக்குமா  என்றான்.  அதற்கு  அவன்:  உன்னுடைய  கண்களினாலே  அதைக்  காண்பாய்;  ஆனாலும்  அதிலே  சாப்பிடமாட்டாய்  என்றான்.  {2Kgs  7:2}

 

குஷ்டரோகிகளான  நாலுபேர்  ஒலிமுகவாசலில்  இருந்தார்கள்;  அவர்கள்  ஒருவரை  ஒருவர்  நோக்கி:  நாம்  இங்கே  இருந்து  சாகவேண்டியது  என்ன?  {2Kgs  7:3}

 

பட்டணத்திற்குள்  போவோமென்றாலும்  பட்டணத்தில்  பஞ்சம்  உண்டாயிருக்கிறதினால்  அங்கே  சாவோம்;  நாம்  இங்கே  இருந்தாலும்  சாவோம்;  ஆகையால்  இப்பொழுது  சீரியருடைய<Syrians>  இராணுவத்திற்குப்  போவோம்  வாருங்கள்;  அவர்கள்  நம்மை  உயிரோடே  வைத்தால்  பிழைக்கிறோம்;  நம்மைக்  கொன்றால்  சாகிறோம்  என்று  சொல்லி,  {2Kgs  7:4}

 

சீரியருடைய<Syrians>  இராணுவத்திற்குப்போக  இருட்டோடே  எழுந்திருந்து,  சீரியருடைய<Syria>  பாளயத்தின்  முன்னணியில்  வந்தார்கள்;  அங்கே  ஒருவருமில்லை.  {2Kgs  7:5}

 

ஆண்டவர்  சீரியரின்<Syrians>  இராணுவத்திற்கு  இரதங்களின்  இரைச்சலையும்,  குதிரைகளின்  இரைச்சலையும்,  மகா  இராணுவத்தின்  இரைச்சலையும்  கேட்கப்பண்ணினதினால்,  அவர்கள்  ஒருவரை  ஒருவர்  நோக்கி:  இதோ,  நம்மிடத்தில்  போருக்கு  வர,  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  ஏத்தியரின்<Hittites>  ராஜாக்களையும்  எகிப்தியரின்<Egyptians>  ராஜாக்களையும்  நமக்கு  விரோதமாகக்  கூலி  பொருத்தினான்  என்று  சொல்லி,  {2Kgs  7:6}

 

இருட்டோடே  எழுந்திருந்து  ஓடிப்போய்,  தங்கள்  கூடாரங்களையும்  தங்கள்  குதிரைகளையும்  தங்கள்  கழுதைகளையும்  தங்கள்  பாளயத்தையும்  அவைகள்  இருந்த  பிரகாரமாக  விட்டு,  தங்கள்  பிராணன்மாத்திரம்  தப்பும்படி  ஓடிப்போனார்கள்.  {2Kgs  7:7}

 

அந்தக்  குஷ்டரோகிகள்  பாளயத்தின்  முன்னணிமட்டும்  வந்தபோது,  ஒரு  கூடாரத்திற்குள்  பிரவேசித்துப்  புசித்துக்  குடித்து,  அதிலிருந்து  வெள்ளியையும்  பொன்னையும்  வஸ்திரங்களையும்  எடுத்துக்கொண்டுபோய்  ஒளித்துவைத்து,  திரும்பிவந்து,  வேறொரு  கூடாரத்திற்குள்  பிரவேசித்து,  அதிலிருந்தும்  அப்படியே  எடுத்துக்கொண்டுபோய்  ஒளித்துவைத்து,  {2Kgs  7:8}

 

பின்பு  அவர்கள்  ஒருவரை  ஒருவர்  நோக்கி:  நாம்  செய்கிறது  நியாயமல்ல,  இந்நாள்  நற்செய்தி  அறிவிக்கும்  நாள்;  நாம்  மவுனமாயிருந்து,  பொழுது  விடியுமட்டும்  காத்திருந்தால்  குற்றம்  நம்மேல்  சுமரும்;  இப்போதும்  நாம்  போய்  ராஜாவின்  அரமனையாருக்கு  இதை  அறிவிப்போம்  வாருங்கள்  என்றார்கள்.  {2Kgs  7:9}

 

அப்படியே  அவர்கள்  வந்து,  பட்டணத்து  வாசல்  காவலாளனை  நோக்கிக்  கூப்பிட்டு:  நாங்கள்  சீரியரின்<Syrians>  பாளயத்திற்குப்  போய்வந்தோம்;  அங்கே  ஒருவரும்  இல்லை,  ஒரு  மனுஷனுடைய  சத்தமும்  இல்லை,  கட்டியிருக்கிற  குதிரைகளும்  கட்டியிருக்கிற  கழுதைகளும்,  கூடாரங்களும்  இருந்தபிரகாரம்  இருக்கிறது  என்று  அவர்களுக்குச்  சொன்னார்கள்.  {2Kgs  7:10}

 

அப்பொழுது  அவன்  வாசல்காக்கிற  மற்றவர்களைக்  கூப்பிட்டான்;  அவர்கள்  உள்ளே  போய்  ராஜாவின்  அரமனையாருக்கு  அதை  அறிவித்தார்கள்.  {2Kgs  7:11}

 

அப்பொழுது  இராஜா  இராத்திரியில்  எழுந்து,  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  சீரியர்<Syrians>  நமக்குச்  செய்கிற  காரியத்தை  உங்களுக்குத்  தெரியப்படுத்துகிறேன்;  நாம்  பட்டினியாயிருக்கிறோம்  என்று  அவர்கள்  அறிவார்கள்;  ஆகையால்  நாம்  பட்டணத்திலிருந்து  புறப்பட்டுப்போனால்  நம்மை  உயிரோடே  பிடித்துக்கொண்டு  பட்டணத்திற்குள்  பிரவேசிக்கலாம்  என்று  எண்ணி,  அவர்கள்  பாளயத்தை  விட்டுப்  புறப்பட்டு  வெளியில்  ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள்  என்றான்.  {2Kgs  7:12}

 

அவன்  ஊழியக்காரரில்  ஒருவன்  பிரதியுத்தரமாக:  இங்கே  மீதியான  குதிரைகளில்  ஐந்து  குதிரைகளைக்  கொண்டுபோக  உத்தரவு  கொடும்;  இதோ,  இங்கே  மீதியான  இஸ்ரவேலின்<Israel>  சகல  ஏராளத்திலும்,  மாண்டுபோன  இஸ்ரவேலின்<Israelites>  சகல  கூட்டத்திலும்,  அவைகள்  மாத்திரம்  மீந்திருக்கிறது;  அவைகளை  நாம்  அனுப்பிப்பார்ப்போம்  என்றான்.  {2Kgs  7:13}

 

அப்படியே  இரண்டு  இரதக்  குதிரைகளைக்  கொண்டுவந்தார்கள்;  ராஜா  போய்  வாருங்கள்  என்று  சொல்லி,  சீரியரின்<Syrians>  இராணுவத்தைத்  தொடர்ந்துபோகும்படி  அனுப்பினான்.  {2Kgs  7:14}

 

அவர்கள்  யோர்தான்மட்டும்<Jordan>  அவர்களைப்  பின்தொடர்ந்துபோனார்கள்;  சீரியர்<Syrians>  தீவிரித்து  ஓடுகையில்,  அவர்கள்  எறிந்துபோட்ட  வஸ்திரங்களாலும்  தட்டுமுட்டுகளாலும்  வழியெல்லாம்  நிறைந்திருந்தது;  அனுப்பப்பட்டவர்கள்  திரும்பிவந்து  ராஜாவுக்கு  அதை  அறிவித்தார்கள்.  {2Kgs  7:15}

 

அப்பொழுது  ஜனங்கள்  புறப்பட்டு,  சீரியரின்<Syrians>  பாளயத்தைக்  கொள்ளையிட்டார்கள்;  கர்த்தருடைய  வார்த்தையின்படியே,  ஒரு  மரக்கால்  கோதுமை  மா  ஒரு  சேக்கலுக்கும்,  இரண்டு  மரக்கால்  வாற்கோதுமை  ஒரு  சேக்கலுக்கும்  விற்கப்பட்டது.  {2Kgs  7:16}

 

ராஜா  தனக்குக்  கைலாகுகொடுக்கிற  அந்தப்  பிரதானியை  ஒலிமுகவாசலில்  விசாரிப்பாயிருக்கக்  கட்டளையிட்டிருந்தான்;  ஒலிமுகவாசலிலே  ஜனங்கள்  அவனை  நெருங்கி  மிதித்ததினாலே,  ராஜா  தேவனுடைய  மனுஷனிடத்தில்  வந்தபோது  சொல்லியிருந்தபடியே,  அவன்  செத்துப்போனான்.  {2Kgs  7:17}

 

இரண்டு  மரக்கால்  வாற்கோதுமை  ஒரு  சேக்கலுக்கும்,  ஒரு  மரக்கால்  கோதுமை  மா  ஒரு  சேக்கலுக்கும்,  நாளை  இந்நேரத்திலே  சமாரியாவின்<Samaria>  ஒலிமுகவாசலில்  விற்கும்  என்று  தேவனுடைய  மனுஷன்  ராஜாவோடே  சொன்னதின்படியே  நடந்தது.  {2Kgs  7:18}

 

அதற்கு  அந்தப்  பிரதானி  தேவனுடைய  மனுஷனுக்குப்  பிரதியுத்தரமாக:  இதோ,  கர்த்தர்  வானத்திலே  மதகுகளை  உண்டாக்கினாலும்,  இந்த  வார்த்தையின்படி  நடக்குமா  என்று  சொல்ல;  இவன்,  இதோ,  உன்னுடைய  கண்களினாலே  அதைக்  காண்பாய்,  ஆனாலும்  அதிலே  சாப்பிடமாட்டாய்  என்றானே.  {2Kgs  7:19}

 

அந்தப்  பிரகாரமாகத்தானே  அவனுக்கு  நடந்தது;  ஒலிமுகவாசலிலே  ஜனங்கள்  அவனை  நெருங்கி  மிதித்ததினாலே  அவன்  செத்துப்போனான்.  {2Kgs  7:20}

 

எலிசா<Elisha>  தான்  உயிர்ப்பித்த  பிள்ளையின்  தாயாகிய  ஸ்திரீயை  நோக்கி:  நீ  உன்  வீட்டாரோடுங்கூட  எழுந்து  புறப்பட்டுப்போய்  எங்கேயாகிலும்  சஞ்சரி;  கர்த்தர்  பஞ்சத்தை  வருவிப்பார்;  அது  ஏழுவருஷம்  தேசத்தில்  இருக்கும்  என்று  சொல்லியிருந்தான்.  {2Kgs  8:1}

 

அந்த  ஸ்திரீ  எழுந்து,  தேவனுடைய  மனுஷன்  சொன்ன  வார்த்தையின்படி  செய்து,  தன்  வீட்டாரோடுங்கூடப்  புறப்பட்டு,  பெலிஸ்தரின்<Philistines>  தேசத்தில்  போய்,  ஏழுவருஷம்  சஞ்சரித்தாள்.  {2Kgs  8:2}

 

ஏழுவருஷம்  சென்றபின்பு,  அவள்  பெலிஸ்தரின்<Philistines>  தேசத்தை  விட்டுத்  திரும்ப  வந்து,  தன்  வீட்டுக்காகவும்  தன்  வயலுக்காகவும்  ராஜாவினிடத்தில்  முறையிடும்படி  போனாள்.  {2Kgs  8:3}

 

அந்நேரத்தில்  ராஜா,  தேவனுடைய  மனுஷனின்  வேலைக்காரனாயிருந்த  கேயாசியுடனே<Gehazi>  பேசி:  எலிசா<Elisha>  செய்த  அதிசயங்களையெல்லாம்  நீ  எனக்கு  விவரமாய்ச்  சொல்  என்றான்.  {2Kgs  8:4}

 

செத்துப்போனவனை  உயிர்ப்பித்தார்  என்பதை  அவன்  ராஜாவுக்கு  அறிவிக்கிறபோது,  இதோ,  அவன்  உயிர்ப்பித்த  பிள்ளையின்  தாயாகிய  அந்த  ஸ்திரீ  வந்து,  தன்  வீட்டுக்காகவும்  தன்  வயலுக்காகவும்  ராஜாவினிடத்தில்  முறையிட்டாள்;  அப்பொழுது  கேயாசி<Gehazi>:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  இவள்தான்  அந்த  ஸ்திரீ;  எலிசா<Elisha>  உயிர்ப்பித்த  இவளுடைய  குமாரன்  இவன்தான்  என்றான்.  {2Kgs  8:5}

 

ராஜா  அந்த  ஸ்திரீயைக்  கேட்டதற்கு,  அவள்:  அதை  அவனுக்கு  விவரித்துச்  சொன்னாள்;  அப்பொழுது  ராஜா  அவளுக்கு  ஒரு  பிரதானியை  நியமித்து,  அவளுக்கு  உண்டானது  எல்லாவற்றையும்,  அவள்  தேசத்தை  விட்டுப்போன  நாள்முதல்  இதுவரைக்கும்  உண்டான  அந்த  வயலின்  வருமானம்  அனைத்தையும்  அவளுக்குக்  கிடைக்கும்படி  செய்  என்றான்.  {2Kgs  8:6}

 

சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  பெனாதாத்<Benhadad>  வியாதியாயிருந்தான்;  எலிசா<Elisha>  தமஸ்குவுக்கு<Damascus>  வந்தான்;  தேவனுடைய  மனுஷன்  இவ்விடத்தில்  வந்திருக்கிறான்  என்று  அவனுக்கு  அறிவிக்கப்பட்டபோது,  {2Kgs  8:7}

 

ராஜா  ஆசகேலை<Hazael>  நோக்கி:  நீ  உன்  கையிலே  ஒரு  காணிக்கையை  எடுத்துக்கொண்டு,  தேவனுடைய  மனுஷனுக்கு  எதிர்கொண்டுபோய்,  நான்  இந்த  வியாதி  நீங்கிப்  பிழைப்பேனா  என்று  அவனைக்கொண்டு  கர்த்தரிடத்தில்  விசாரிக்கச்  சொன்னான்.  {2Kgs  8:8}

 

ஆசகேல்<Hazael>  தமஸ்குவின்<Damascus>  சகல  உச்சிதங்களிலும்  நாற்பது  ஒட்டகங்களின்  சுமையான  காணிக்கையை  எடுத்துக்கொண்டு,  அவனுக்கு  எதிர்கொண்டு  போய்,  அவனுக்கு  முன்பாக  நின்று,  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  பெனாதாத்<Benhadad>  என்னும்  உம்முடைய  குமாரன்  என்னை  உம்மிடத்தில்  அனுப்பி,  இந்த  வியாதி  நீங்கிப்  பிழைப்பேனா  என்று  கேட்கச்சொன்னார்  என்றான்.  {2Kgs  8:9}

 

எலிசா<Elisha>  அவனை  நோக்கி:  நீ  போய்,  வியாதி  நீங்கிப்  பிழைப்பீர்  என்று  அவனுக்குச்  சொல்லும்;  ஆனாலும்  அவன்  சாகவே  சாவான்  என்பதைக்  கர்த்தர்  எனக்குக்  காண்பித்தார்  என்றான்.  {2Kgs  8:10}

 

பின்பு  தேவனுடைய  மனுஷன்:  தன்  முகத்தைத்  திருப்பாமல்  அவன்  சலித்துப்போகுமட்டும்  அவனை  நோக்கிக்கொண்டே  அழுதான்.  {2Kgs  8:11}

 

அப்பொழுது  ஆசகேல்<Hazael>:  என்  ஆண்டவன்  அழுகிறது  என்ன  என்று  கேட்டான்.  அதற்கு  அவன்:  நீ  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குச்  செய்யும்  தீங்கை  நான்  அறிந்திருக்கிறபடியினால்  அழுகிறேன்;  நீ  அவர்கள்  கோட்டைகளை  அக்கினிக்கு  இரையாக்கி,  அவர்கள்  வாலிபரைப்  பட்டயத்தால்  கொன்று,  அவர்கள்  குழந்தைகளைத்  தரையோடே  மோதி,  அவர்கள்  கர்ப்பவதிகளைக்  கீறிப்போடுவாய்  என்றான்.  {2Kgs  8:12}

 

அப்பொழுது  ஆசகேல்<Hazael>:  இத்தனை  பெரிய  காரியத்தைச்  செய்ய  நாயாகிய  உமது  அடியான்  எம்மாத்திரம்  என்றான்.  அதற்கு  எலிசா<Elisha>:  நீ  சீரியாவின்மேல்<Syria>  ராஜாவாவாய்  என்பதைக்  கர்த்தர்  எனக்குத்  தெரிவித்தார்  என்றான்.  {2Kgs  8:13}

 

இவன்  எலிசாவைவிட்டுப்<Elisha>  புறப்பட்டு,  தன்  ஆண்டவனிடத்தில்  வந்தபோது,  அவன்:  எலிசா<Elisha>  உனக்கு  என்ன  சொன்னான்  என்று  கேட்டதற்கு;  இவன்  நீர்  வியாதி  நீங்கிப்  பிழைப்பீர்  என்று  எனக்குச்  சொன்னான்  என்று  சொல்லி,  {2Kgs  8:14}

 

மறுநாளிலே  ஒரு  சமுக்காளத்தை  எடுத்து,  தண்ணீரிலே  தோய்த்து  அவன்  முகத்தின்மேல்  விரித்தான்;  அதினால்  அவன்  செத்துப்போனான்;  ஆசகேல்<Hazael>  அவனுக்குப்  பதிலாய்  ராஜாவானான்.  {2Kgs  8:15}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஆகாபின்<Ahab>  குமாரன்  யோராமுடைய<Joram>  ஐந்தாம்  வருஷத்தில்,  யோசபாத்<Jehoshaphat>  யூதாவிலே<Judah>  இன்னும்  ராஜாவாயிருக்கையில்,  யோசபாத்தின்<Jehoshaphat>  குமாரனாகிய  யோராம்<Jehoram>  என்னும்  யூதாவின்<Judah>  ராஜா  ராஜ்யபாரம்பண்ணத்  துவக்கினான்.  {2Kgs  8:16}

 

அவன்  ராஜாவாகிறபோது  முப்பத்திரண்டு  வயதாயிருந்து,  எட்டு  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  ராஜ்யபாரம்பண்ணினான்.  {2Kgs  8:17}

 

அவன்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  வழியிலே  நடந்து,  ஆகாபின்<Ahab>  வீட்டார்  செய்ததுபோலச்  செய்தான்;  ஆகாபின்<Ahab>  குமாரத்தி  அவனுக்கு  மனைவியாயிருந்தாள்;  அவன்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {2Kgs  8:18}

 

கர்த்தர்:  உன்  குமாரருக்குள்ளே  எந்நாளும்  ஒரு  விளக்கை  உனக்குக்  கட்டளையிடுவேன்  என்று  தம்முடைய  தாசனாகிய  தாவீதுக்குச்<David>  சொன்னதின்படியே,  அவனிமித்தம்  அவர்  யூதாவை<Judah>  முற்றிலும்  கெடுக்கவில்லை.  {2Kgs  8:19}

 

அவன்  நாட்களில்  யூதாவுடைய<Judah>  கையின்கீழிருந்த  ஏதோமியர்<Edom>  கலகம்பண்ணி,  தங்களுக்கு  ஒரு  ராஜாவை  ஏற்படுத்திக்கொண்டார்கள்.  {2Kgs  8:20}

 

அதினாலே  யோராம்<Joram>  சகல  இரதங்களோடுங்கூடச்  சாயீருக்குப்<Zair>  புறப்பட்டுப்போனான்;  அவன்  இராத்திரியில்  எழுந்திருந்து,  தன்னை  வளைந்துகொண்ட  ஏதோமியரையும்<Edomites>  இரதங்களின்  தலைவரையும்  முறிய  அடித்தபோது,  ஜனங்கள்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்.  {2Kgs  8:21}

 

அப்படியே  யூதாவுடைய<Judah>  கையின்  கீழிருந்த  ஏதோமியர்<Edom>,  இந்நாள்வரைக்கும்  இருக்கிறதுபோல,  கலகம்பண்ணினார்கள்;  அக்காலத்தில்தானே  லிப்னா<Libnah>  பட்டணத்தாரும்  கலகம்பண்ணினார்கள்.  {2Kgs  8:22}

 

யோராமின்<Joram>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  8:23}

 

யோராம்<Joram>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்து,  தன்  பிதாக்களிடத்திலே  தாவீதின்<David>  நகரத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவனுக்குப்  பதிலாக  அவன்  குமாரனாகிய  அகசியா<Ahaziah>  ராஜாவானான்.  {2Kgs  8:24}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஆகாபின்<Ahab>  குமாரன்  யோராமுடைய<Joram>  பன்னிரண்டாம்  வருஷத்திலே,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோராமின்<Jehoram>  குமாரன்  அகசியா<Ahaziah>  ராஜாவானான்.  {2Kgs  8:25}

 

அகசியா<Ahaziah>  ராஜாவாகிறபோது,  இருபத்திரண்டு  வயதாயிருந்து,  ஒரே  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  ராஜ்யபாரம்பண்ணினான்;  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஒம்ரியின்<Omri>  குமாரத்தியான  அவன்  தாயின்  பேர்  அத்தாலியாள்<Athaliah>.  {2Kgs  8:26}

 

அவன்  ஆகாபுடைய<Ahab>  வீட்டாரின்  வழியே  நடந்து,  ஆகாபின்<Ahab>  வீட்டாரைப்போல்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  அவன்  ஆகாப்<Ahab>  வீட்டாரோடே  சம்பந்தங்கலந்திருந்தான்.  {2Kgs  8:27}

 

அவன்  ஆகாபின்<Ahab>  குமாரனாகிய  யோராமோடே<Joram>  கூடக்  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்திற்குச்<Ramoth>  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேலோடு<Hazael>  யுத்தம்பண்ணப்போனான்;  சீரியர்<Syrians>  யோராமைக்<Joram>  காயப்படுத்தினார்கள்.  {2Kgs  8:28}

 

ராஜாவாகிய  யோராம்<Joram>  தான்  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேலோடு<Hazael>  யுத்தம்பண்ணுகையில்,  சீரியர்<Syrians>  ராமாவிலே<Ramah>  தன்னை  வெட்டின  காயங்களை  ஆற்றிக்கொள்ள  யெஸ்ரயேலுக்குப்<Jezreel>  போயிருந்தான்;  ஆகாபின்<Ahab>  குமாரனாகிய  யோராம்<Joram>  வியாதியாயிருந்தபடியினால்,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோராமின்<Jehoram>  குமாரன்  அகசியா<Ahaziah>  யெஸ்ரயேலில்<Jezreel>  இருக்கிற  அவனைப்  பார்க்கிறதற்குப்  போனான்.  {2Kgs  8:29}

 

அப்பொழுது  தீர்க்கதரிசியாகிய  எலிசா<Elisha>  தீர்க்கதரிசிகளின்  புத்திரரில்  ஒருவனை  அழைத்து:  நீ  இடைகட்டிக்கொண்டு,  இந்தத்  தைலக்குப்பியை  உன்  கையில்  எடுத்துக்கொண்டு,  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்திற்குப்<Ramoth>  போ.  {2Kgs  9:1}

 

நீ  அங்கே  சேர்ந்தபோது,  நிம்சியின்<Nimshi>  மகனான  யோசபாத்தின்<Jehoshaphat>  குமாரன்  யெகூ<Jehu>  எங்கே  இருக்கிறான்  என்று  பார்த்து,  அங்கே  உட்பிரவேசித்து,  அவனைத்  தன்  சகோதரரின்  நடுவிலிருந்து  எழுந்திருக்கப்பண்ணி,  அவனை  உள்ளான  ஒரு  அறையிலே  அழைத்துக்கொண்டுபோய்,  {2Kgs  9:2}

 

தைலக்குப்பியை  எடுத்து,  அவன்  தலையின்மேல்  வார்த்து:  உன்னை  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்லி,  கதவைத்  திறந்து  தாமதியாமல்  ஓடிப்போ  என்றான்.  {2Kgs  9:3}

 

அப்படியே  தீர்க்கதரிசியின்  ஊழியக்காரனாகிய  அந்த  வாலிபன்  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்திற்குப்<Ramoth>  போனான்.  {2Kgs  9:4}

 

அவன்  உட்பிரவேசித்தபோது,  சேனாபதிகள்  அங்கே  உட்கார்ந்திருந்தார்கள்;  அப்பொழுது  அவன்:  சேனாபதியே,  உமக்குச்  சொல்லவேண்டிய  ஒரு  வார்த்தை  உண்டு  என்றான்.  அதற்கு  யெகூ<Jehu>:  எங்களெல்லாருக்குள்ளும்  யாருக்கு  என்று  கேட்டதற்கு,  அவன்,  சேனாபதியாகிய  உமக்குத்தான்  என்றான்.  {2Kgs  9:5}

 

அவன்  எழுந்து,  அறைவீட்டிற்குள்  பிரவேசித்தான்;  அவன்  அந்தத்  தைலத்தை  அவன்  தலையின்மேல்  வார்த்து,  அவனை  நோக்கி:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  உன்னைக்  கர்த்தருடைய  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினேன்.  {2Kgs  9:6}

 

நான்  என்  ஊழியக்காரராகிய  தீர்க்கதரிசிகளின்  இரத்தப்பழியையும்,  கர்த்தருடைய  சகல  ஊழியக்காரரின்  இரத்தப்பழியையும்,  யேசபேலின்<Jezebel>  கையிலே  வாங்கும்படிக்கு  நீ  உன்  ஆண்டவனாகிய  ஆகாபின்<Ahab>  குடும்பத்தை  அழித்துவிடக்கடவாய்.  {2Kgs  9:7}

 

ஆகாபின்<Ahab>  குடும்பமெல்லாம்  அழியும்படிக்கு,  நான்  ஆகாபுக்குச்<Ahab>  சுவரில்  நீர்விடும்  ஒரு  நாய்  முதலாய்  இராதபடிக்கு,  இஸ்ரவேலிலே<Israel>  அவனுடையவர்களில்  அடைபட்டவனையும்  விடுபட்டவனையும்  கருவறுத்து,  {2Kgs  9:8}

 

ஆகாபின்<Ahab>  குடும்பத்தை  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  குடும்பத்துக்கும்,  அகியாவின்<Ahijah>  குமாரனாகிய  பாஷாவின்<Baasha>  குடும்பத்துக்கும்  சரியாக்குவேன்.  {2Kgs  9:9}

 

யேசபேலை<Jezebel>  யெஸ்ரயேலின்<Jezreel>  நிலத்திலே  நாய்கள்  தின்றுவிடும்;  அவளை  அடக்கம்பண்ணுகிறவன்  இல்லையென்கிறார்  என்று  சொல்லி,  கதவைத்  திறந்து  ஓடிப்போனான்.  {2Kgs  9:10}

 

யெகூ<Jehu>  தன்  ஆண்டவனுடைய  ஊழியக்காரரிடத்துக்குத்  திரும்பிவந்தபோது,  அவர்கள்  அவனை  நோக்கி:  சுகசெய்தியா?  அந்தப்  பயித்தியக்காரன்  உன்னிடத்தில்  வந்தது  என்ன  என்று  கேட்டார்கள்.  அதற்கு  அவன்:  அந்த  மனுஷனையும்,  அவன்  சொன்ன  காரியத்தையும்  நீங்கள்  அறிவீர்கள்  என்றான்.  {2Kgs  9:11}

 

அதற்கு  அவர்கள்:  அது  பொய்,  அதை  எங்களுக்குச்  சொல்லும்  என்றார்கள்.  அப்பொழுது  அவன்:  நான்  உன்னை  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  இன்ன  இன்ன  பிரகாரமாக  என்னிடத்தில்  சொன்னான்  என்றான்.  {2Kgs  9:12}

 

அப்பொழுது  அவர்கள்  தீவிரமாய்  அவரவர்  தங்கள்  வஸ்திரத்தைப்  படிகளின்  உயரத்தில்  அவன்  கீழே  விரித்து,  எக்காளம்  ஊதி:  யெகூ<Jehu>  ராஜாவானான்  என்றார்கள்.  {2Kgs  9:13}

 

அப்படியே  நிம்சியின்<Nimshi>  மகனாகிய  யோசபாத்தின்<Jehoshaphat>  குமாரன்  யெகூ<Jehu>  என்பவன்  யோராமுக்கு<Joram>  விரோதமாய்க்  கட்டுப்பாடு  பண்ணினான்;  யோராமோ<Joram>  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரோடுங்கூடக்  கீலேயாத்திலுள்ள<Gilead>  ராமோத்திலே<Ramoth>  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேலினிமித்தம்<Hazael>  காவல்  வைத்துவைத்தான்.  {2Kgs  9:14}

 

ஆனாலும்  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேலோடே<Hazael>  பண்ணின  யுத்தத்திலே,  சீரியர்<Syrians>  தன்னை  வெட்டின  காயங்களை  யெஸ்ரயேலிலே<Jezreel>  ஆற்றிக்கொள்ளுகிறதற்கு,  ராஜாவாகிய  யோராம்<Joram>  திரும்பிப்போயிருந்தான்.  யெகூ<Jehu>  என்பவன்:  இது  உங்களுக்குச்  சம்மதியாயிருந்தால்  யெஸ்ரயேலில்<Jezreel>  இதை  அறிவிக்கிறதற்கு  ஒருவரும்  பட்டணத்திலிருந்து  தப்பிப்போகும்படி  விடாதிருங்கள்  என்றான்.  {2Kgs  9:15}

 

அப்பொழுது  யெகூ<Jehu>  இரதத்தின்மேல்  ஏறி,  யெஸ்ரயேலுக்கு<Jezreel>  நேராகப்  போனான்,  யோராம்<Joram>  அங்கே  வியாதியாய்க்  கிடந்தான்;  யோராமைப்பார்க்க<Joram>,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அகசியாவும்<Ahaziah>  அங்கே  வந்திருந்தான்.  {2Kgs  9:16}

 

யெஸ்ரயேலில்<Jezreel>  கோபுரத்தின்மேல்  நிற்கிற  ஜாமக்காரன்,  யெகூவின்<Jehu>  கூட்டம்  வருகிறதைக்  கண்டு:  ஒரு  கூட்டத்தைக்  காண்கிறேன்  என்றான்.  அப்பொழுது  யோராம்<Joram>:  நீ  ஒரு  குதிரைவீரனைக்  கூப்பிட்டு,  அவர்களுக்கு  எதிராக  அனுப்பிச்  சமாதானமா  என்று  கேட்கச்சொல்  என்றான்.  {2Kgs  9:17}

 

அந்தக்  குதிரைவீரன்:  அவனுக்கு  எதிர்கொண்டுபோய்,  சமாதானமா  என்று  ராஜா  கேட்கச்சொன்னார்  என்றான்.  அதற்கு  யெகூ<Jehu>:  சமாதானத்தைப்பற்றி  உனக்கு  என்ன?  என்  பிறகே  திரும்பிவா  என்றான்.  அப்பொழுது  ஜாமக்காரன்:  அனுப்பப்பட்டவன்  அவர்கள்  இருக்கும்  இடமட்டும்  போனபோதிலும்  திரும்பி  வரவில்லை  என்றான்.  {2Kgs  9:18}

 

ஆகையால்  வேறொரு  குதிரைவீரனை  அனுப்பினான்,  அவன்  அவர்களிடத்தில்  போய்:  சமாதானமா  என்று  ராஜா  கேட்கச்சொன்னார்  என்றான்.  அதற்கு  யெகூ<Jehu>:  சமாதானத்தைப்பற்றி  உனக்கு  என்ன?  என்  பிறகே  திரும்பிவா  என்றான்.  {2Kgs  9:19}

 

அப்பொழுது  ஜாமக்காரன்:  அவன்  அவர்கள்  இருக்கும்  இடமட்டும்  போனபோதிலும்  திரும்பிவரவில்லை  என்றும்,  ஓட்டுகிறது  நிம்சியின்<Nimshi>  குமாரனாகிய  யெகூ<Jehu>  ஓட்டுகிறதுபோல  இருக்கிறது;  அதிவேகமாய்  ஓட்டுகிறான்  என்றும்  சொன்னான்.  {2Kgs  9:20}

 

அப்பொழுது  யோராம்<Joram>:  இரதத்தை  ஆயத்தப்படுத்து  என்றான்;  அவனுடைய  இரதத்தை  ஆயத்தப்படுத்தினபோது,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோராமும்<Joram>,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அகசியாவும்<Ahaziah>  அவனவன்  தன்  தன்  இரதத்தில்  ஏறி  யெகூவுக்கு<Jehu>  நேராகப்  புறப்பட்டு,  யெஸ்ரயேலியனாகிய<Jezreelite>  நாபோத்தின்<Naboth>  நிலத்திலே  அவனுக்கு  எதிர்ப்பட்டார்கள்.  {2Kgs  9:21}

 

யோராம்<Joram>  யெகூவைக்<Jehu>  கண்டவுடனே:  யெகூவே<Jehu>,  சமாதானமா  என்றான்.  அதற்கு  யெகூ<Jehu>:  உன்  தாயாகிய  யேசபேலின்<Jezebel>  வேசித்தனங்களும்  அவளுடைய  பில்லிசூனியங்களும்,  இத்தனை  ஏராளமாயிருக்கையில்  சமாதானம்  ஏது  என்றான்.  {2Kgs  9:22}

 

அப்பொழுது  யோராம்<Joram>  தன்  இரதத்தைத்  திருப்பிக்கொண்டு  ஓடிப்போய்,  அகசியாவை<Ahaziah>  நோக்கி:  அகசியாவே<Ahaziah>,  இது  சதி  என்றான்.  {2Kgs  9:23}

 

யெகூ<Jehu>  தன்  கையால்  வில்லை  நாணேற்றி,  அம்பு  யோராமுடைய<Jehoram>  நெஞ்சில்  உருவிப்  புறப்படத்தக்கதாய்,  அவனை  அவன்  புயங்களின்  நடுவே  எய்தான்;  அதினால்  அவன்  தன்  இரதத்திலே  சுருண்டு  விழுந்தான்.  {2Kgs  9:24}

 

அப்பொழுது  யெகூ<Jehu>,  தன்  சேனாபதியாகிய  பித்காரை<Bidkar>  நோக்கி:  அவனை  எடுத்து,  யெஸ்ரயேலியனாகிய<Jezreelite>  நாபோத்தின்<Naboth>  வயல்நிலத்தில்  எறிந்துபோடு;  நானும்  நீயும்  ஒரு  சோடாய்  அவன்  தகப்பனாகிய  ஆகாபின்<Ahab>  பிறகே  குதிரை  ஏறி  வருகிறபோது,  கர்த்தர்  இந்த  ஆக்கினையை  அவன்மேல்  சுமத்தினார்  என்பதை  நினைத்துக்கொள்.  {2Kgs  9:25}

 

நேற்று  நாபோத்தின்<Naboth>  இரத்தத்தையும்,  அவன்  குமாரரின்  இரத்தத்தையும்  கண்டேன்  அல்லவா  என்றும்,  இந்த  நிலத்தில்  உனக்கு  நீதியைச்  சரிக்கட்டுவேன்  என்றும்  அப்பொழுது  கர்த்தர்  சொன்னாரே;  இப்போதும்  அவனை  எடுத்து,  கர்த்தருடைய  வார்த்தையின்படியே  இந்த  நிலத்தில்  எறிந்துபோடு  என்றான்.  {2Kgs  9:26}

 

இதை  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அகசியா<Ahaziah>  கண்டு,  தோட்டத்தின்  வீட்டுவழியாய்  ஓடிப்போனான்;  யெகூ<Jehu>  அவனைப்  பின்தொடர்ந்து:  அவனையும்  இரதத்திலே  வெட்டிப்போடுங்கள்  என்றான்;  அவர்கள்  இப்லேயாம்<Ibleam>  கிட்ட  இருக்கிற  கூர்மலையின்மேல்<Gur>  ஏறுகிற  வழியிலே  அப்படிச்  செய்தார்கள்;  அவன்  மெகிதோவுக்கு<Megiddo>  ஓடிப்போய்  அங்கே  செத்துப்போனான்.  {2Kgs  9:27}

 

அவனுடைய  ஊழியக்காரர்  அவனை  இரதத்தின்மேல்  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுபோய்,  அவனைத்  தாவீதின்<David>  நகரத்தில்  அவன்  பிதாக்களோடு  அவனுடைய  கல்லறையிலே  அடக்கம்பண்ணினார்கள்.  {2Kgs  9:28}

 

இந்த  அகசியா<Ahaziah>,  ஆகாபுடைய<Ahab>  குமாரனாகிய  யோராமின்<Joram>  பதினோராம்  வருஷத்தில்  யூதாவின்மேல்<Judah>  ராஜாவானான்.  {2Kgs  9:29}

 

யெகூ<Jehu>  யெஸ்ரயேலுக்கு<Jezreel>  வந்தான்;  அதை  யேசபேல்<Jezebel>  கேட்டபோது,  தன்  கண்களுக்கு  மையிட்டு,  தன்  தலையைச்  சிங்காரித்துக்கொண்டு,  ஜன்னல்வழியாய்  எட்டிப்பார்த்து,  {2Kgs  9:30}

 

யெகூ<Jehu>  ஒலிமுகவாசலில்  வந்தபோது,  அவள்:  தன்  ஆண்டவனைக்  கொன்ற  சிம்ரி<Zimri>  ஷேமம்  அடைந்தானா  என்றாள்.  {2Kgs  9:31}

 

அப்பொழுது  அவன்  தன்  முகத்தை  அந்த  ஜன்னலுக்கு  நேராக  ஏறெடுத்து:  என்  பட்சத்தில்  இருக்கிறது  யார்?  யார்?  என்று  கேட்டதற்கு,  இரண்டு  மூன்று  பிரதானிகள்  அவனை  எட்டிப்பார்த்தார்கள்.  {2Kgs  9:32}

 

அப்பொழுது  அவன்:  அவளைக்  கீழே  தள்ளுங்கள்  என்றான்;  அப்படியே  அவளைக்  கீழே  தள்ளினதினால்,  அவளுடைய  இரத்தம்  சுவரிலும்  குதிரைகளிலும்  தெறித்தது;  அவன்  அவளை  மிதித்துக்கொண்டு,  {2Kgs  9:33}

 

உள்ளே  போய்,  புசித்துக்  குடித்த  பின்பு:  நீங்கள்  போய்ச்  சபிக்கப்பட்ட  அந்த  ஸ்திரீயைப்  பார்த்து,  அவளை  அடக்கம்பண்ணுங்கள்;  அவள்  ஒரு  ராஜகுமாரத்தி  என்றான்.  {2Kgs  9:34}

 

அவர்கள்  அவளை  அடக்கம்பண்ணப்போகிறபோது,  அவளுடைய  தலையோட்டையும்  கால்களையும்  உள்ளங்கைகளையுமே  அல்லாமல்  வேறொன்றையும்  காணவில்லை.  {2Kgs  9:35}

 

ஆகையால்  அவர்கள்  திரும்பவந்து  அவனுக்கு  அறிவித்தார்கள்;  அப்பொழுது  அவன்:  இது  கர்த்தர்  திஸ்பியனாகிய<Tishbite>  எலியா<Elijah>  என்னும்  தம்முடைய  ஊழியக்காரனைக்கொண்டு  சொன்ன  வார்த்தை;  யெஸ்ரயேலின்<Jezreel>  நிலத்திலே  நாய்கள்  யேசபேலின்<Jezebel>  மாம்சத்தைத்  தின்னும்  என்றும்,  {2Kgs  9:36}

 

இன்னது  யேசபேலென்று<Jezebel>  சொல்லக்கூடாதபடிக்கு,  யேசபேலின்<Jezebel>  பிரேதம்  யெஸ்ரயேலின்<Jezreel>  நிலத்திலே  வயல்வெளியின்மேல்  போடும்  எருவைப்போல்  ஆகும்  என்றும்  சொன்னாரே  என்றான்.  {2Kgs  9:37}

 

ஆகாபுக்குச்<Ahab>  சமாரியாவிலே<Samaria>  எழுபது  குமாரர்  இருந்தபடியினால்,  யெகூ<Jehu>  சமாரியாவிலிருக்கிற<Samaria>  யெஸ்ரயேலின்<Jezreel>  பிரபுக்களாகிய  மூப்பரிடத்துக்கும்,  ஆகாபுடைய<Ahab>  பிள்ளைகளை  வளர்க்கிறவர்களிடத்துக்கும்  நிருபங்களை  எழுதியனுப்பினான்.  {2Kgs  10:1}

 

அதில்:  உங்கள்  ஆண்டவனுடைய  குமாரர்கள்  உங்களோடிருக்கிறார்களே;  இரதங்களும்,  குதிரைகளும்,  அரணான  பட்டணமும்  ஆயுதங்களும்  உங்களுக்கு  உண்டே.  {2Kgs  10:2}

 

இப்போதும்  இந்த  நிருபம்  உங்களிடத்தில்  வரும்போது  நீங்கள்  உங்கள்  ஆண்டவனுடைய  குமாரரில்  உத்தமமும்  செம்மையுமாயிருக்கிறவனைப்  பார்த்து,  அவனை  அவன்  தகப்பனுடைய  சிங்காசனத்தின்மேல்  வைத்து,  உங்கள்  ஆண்டவனுடைய  குடும்பத்துக்காக  யுத்தம்பண்ணுங்கள்  என்று  எழுதியிருந்தது.  {2Kgs  10:3}

 

அவர்கள்  மிகவும்  பயந்து:  இதோ,  இரண்டு  ராஜாக்கள்  அவனுக்கு  முன்பாக  நிற்கவில்லையே;  நாங்கள்  எப்படி  நிற்போம்  என்றார்கள்.  {2Kgs  10:4}

 

ஆகையால்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  நகர  விசாரிப்புக்காரனும்,  மூப்பரும்,  பிள்ளைகளின்  விசாரிப்புக்காரரும்:  நாங்கள்  உமது  அடியார்கள்,  நீர்  எங்களுக்குச்  சொல்வதையெல்லாம்  செய்வோம்;  நாங்கள்  ஒருவரையும்  ராஜாவாக்குவதில்லை;  உமது  பார்வைக்குச்  சம்மதியானதைச்  செய்யும்  என்று  யெகூவுக்குச்<Jehu>  சொல்லியனுப்பினார்கள்.  {2Kgs  10:5}

 

அப்பொழுது  அவன்:  அவர்களுக்கு  இரண்டாம்  நிருபத்தை  எழுதினான்;  அதில்:  நீங்கள்  என்  பட்சத்தில்  சேர்ந்து  என்  சொல்லைக்  கேட்பீர்களானால்,  உங்கள்  ஆண்டவனுடைய  குமாரரின்  தலைகளை  வாங்கி,  நாளை  இந்நேரத்தில்  யெஸ்ரயேலுக்கு<Jezreel>  என்னிடத்தில்  வாருங்கள்  என்று  எழுதியிருந்தது.  ராஜாவின்  குமாரராகிய  எழுபதுபேரும்  தங்களை  வளர்க்கிற  பட்டணத்தின்  பெரிய  மனுஷரோடு  இருந்தார்கள்.  {2Kgs  10:6}

 

இந்த  நிருபம்  அவர்களிடத்தில்  வந்தபோது,  அவர்கள்  ராஜாவின்  குமாரராகிய  எழுபதுபேரையும்  பிடித்து  வெட்டி,  அவர்கள்  தலைகளைக்  கூடைகளில்  வைத்து,  யெஸ்ரயேலிலிருக்கிற<Jezreel>  அவனிடத்திற்கு  அனுப்பினார்கள்.  {2Kgs  10:7}

 

அனுப்பப்பட்ட  ஆள்  வந்து:  ராஜகுமாரரின்  தலைகளைக்  கொண்டுவந்தார்கள்  என்று  அவனுக்கு  அறிவித்தபோது,  அவன்  விடியற்காலமட்டும்  அவைகளை  ஒலிமுகவாசலில்  இரண்டு  குவியலாகக்  குவித்துவையுங்கள்  என்றான்.  {2Kgs  10:8}

 

மறுநாள்  காலமே  அவன்  வெளியே  வந்து  நின்று,  சகல  ஜனங்களையும்  நோக்கி:  நீங்கள்  நீதிமான்களல்லவா?  இதோ,  நான்  என்  ஆண்டவனுக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடுபண்ணி  அவனைக்  கொன்றுபோட்டேனே;  ஆனாலும்  இவர்கள்  எல்லாரையும்  கொன்றவன்  யார்?  {2Kgs  10:9}

 

ஆதலால்  கர்த்தர்  ஆகாபின்<Ahab>  குடும்பத்தாருக்கு  விரோதமாகச்  சொன்ன  கர்த்தருடைய  வார்த்தைகளில்  ஒன்றும்  தரையிலே  விழவில்லை  என்பதை  அறிந்துகொள்ளுங்கள்;  கர்த்தர்  தம்முடைய  ஊழியக்காரனாகிய  எலியாவைக்கொண்டு<Elijah>  சொன்னதைச்  செய்தார்  என்றான்.  {2Kgs  10:10}

 

யெஸ்ரயேலிலும்<Jezreel>  ஆகாபின்<Ahab>  குடும்பத்தாரில்  மீதியான  யாவரையும்,  அவனுக்கு  இருந்த  எல்லா  மந்திரிகளையும்,  அவனைச்சேர்ந்த  மனுஷரையும்,  அவனுடைய  ஆசாரியர்களையும்,  அவனுக்கு  ஒருவரையும்  மீதியாக  வைக்காதபடிக்கு,  யெகூ<Jehu>  கொன்றுபோட்டான்.  {2Kgs  10:11}

 

பின்பு  அவன்  எழுந்து  சமாரியாவுக்குப்<Samaria>  போகப்  புறப்பட்டான்;  வழியிலே  அவன்  ஆட்டுமயிர்  கத்தரிக்கிற  மேய்ப்பரின்  ஊர்  இருக்கும்  இடத்துக்கு  வந்தபோது,  {2Kgs  10:12}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அகசியாவின்<Ahaziah>  சகோதரரை  அங்கே  கண்டு,  நீங்கள்  யார்  என்று  கேட்டான்.  அவர்கள்:  நாங்கள்  அகசியாவின்<Ahaziah>  சகோதரர்;  நாங்கள்  ராஜாவின்  பிள்ளைகளையும்  ராஜஸ்திரீயின்  பிள்ளைகளையும்  வினவுகிறதற்குப்  போகிறோம்  என்றார்கள்.  {2Kgs  10:13}

 

அப்பொழுது  அவன்:  இவர்களை  உயிரோடே  பிடியுங்கள்  என்றான்;  அவர்களை  உயிரோடே  பிடித்து,  நாற்பத்திரண்டு  பேர்களாகிய  அவர்களை  ஆட்டுமயிர்  கத்தரிக்கிற  துரவண்டையிலே  வெட்டிப்போட்டார்கள்;  அவர்களில்  ஒருவனையும்  அவன்  மீதியாக  விடவில்லை.  {2Kgs  10:14}

 

அவன்  அவ்விடம்விட்டுப்  புறப்பட்டபோது,  தனக்கு  எதிர்ப்பட்ட  ரேகாபின்<Rechab>  குமாரனாகிய  யோனதாபைச்<Jehonadab>  சந்தித்து,  அவனை  உபசரித்து:  என்  இருதயம்  உன்  இருதயத்தோடே  செம்மையாய்  இருக்கிறதுபோல  உன்  இருதயமும்  செம்மையாயிருக்கிறதா  என்று  கேட்டான்.  அதற்கு  யோனதாப்<Jehonadab>:  அப்படியே  இருக்கிறது  என்றான்;  அப்படியிருக்கிறதானால்,  உன்  கையைத்  தா  என்று  சொன்னான்;  அவன்  தன்  கையைக்  கொடுத்தபோது,  அவனைத்  தன்னிடத்தில்  இரதத்தின்மேல்  ஏறிவரச்சொல்லி,  {2Kgs  10:15}

 

நீ  என்னோடே  கூடவந்து  கர்த்தருக்காக  எனக்கு  இருக்கிற  பக்திவைராக்கியத்தைப்  பார்  என்றான்;  அப்படியே  இவனை  அவன்  இரதத்தின்மேல்  ஏற்றினார்கள்.  {2Kgs  10:16}

 

அவன்  சமாரியாவுக்கு<Samaria>  வந்தபோது,  கர்த்தர்  எலியாவோடே<Elijah>  சொன்ன  வார்த்தையின்படியே,  சமாரியாவில்<Samaria>  ஆகாபுக்கு<Ahab>  மீதியான  யாவரையும்  அழித்துத்  தீருமளவும்  சங்காரஞ்செய்தான்.  {2Kgs  10:17}

 

பின்பு  யெகூ<Jehu>  ஜனங்களையெல்லாம்  கூட்டி,  அவர்களை  நோக்கி:  ஆகாப்<Ahab>  பாகாலைச்<Baal>  சேவித்தது  கொஞ்சம்,  யெகூ<Jehu>  அவனைச்  சேவிப்பது  மிகுதி.  {2Kgs  10:18}

 

இப்போதும்  பாகாலின்<Baal>  சகல  தீர்க்கதரிசிகளையும்,  அவனுடைய  சகல  பணிவிடைக்காரரையும்,  அவனுடைய  சகல  ஆசாரியரையும்  என்னிடத்தில்  அழைப்பியுங்கள்;  ஒருவனும்  குறையலாகாது;  நான்  பாகாலுக்குப்<Baal>  பெரிய  பலியிடப்போகிறேன்;  வராதவன்  எவனோ  அவன்  உயிரோடிருப்பதில்லை  என்றான்;  பாகாலின்<Baal>  பணிவிடைக்காரரை  அழிக்கும்படி  யெகூ<Jehu>  இதைத்  தந்திரமாய்ச்  செய்தான்.  {2Kgs  10:19}

 

பாகாலுக்குப்<Baal>  பண்டிகையின்  ஆசரிப்பைக்  கூறுங்கள்  என்று  யெகூ<Jehu>  சொன்னான்;  அப்படியே  கூறினார்கள்.  {2Kgs  10:20}

 

யெகூ<Jehu>  இஸ்ரவேல்<Israel>  தேசமெங்கும்  அதைச்  சொல்லியனுப்பினபடியினால்,  பாகாலின்<Baal>  பணிவிடைக்காரர்  எல்லாரும்  வந்தார்கள்;  வராதவன்  ஒருவனுமில்லை;  அவர்கள்  பாகாலின்<Baal>  கோவிலுக்குள்  பிரவேசித்ததினால்  பாகாலின்<Baal>  கோவில்  நாற்சாரியும்  நிறைந்திருந்தது.  {2Kgs  10:21}

 

அப்பொழுது  அவன்,  வஸ்திரசாலை  விசாரிப்புக்காரனை  நோக்கி:  பாகாலின்<Baal>  பணிவிடைக்காரருக்கெல்லாம்  வஸ்திரங்களை  எடுத்துக்கொண்டுவா  என்றான்;  அவர்களுக்கு  வஸ்திரங்களை  எடுத்துக்கொண்டுவந்தான்.  {2Kgs  10:22}

 

பின்பு  யெகூ<Jehu>:  ரேகாபின்<Rechab>  குமாரனாகிய  யோனதாபோடுங்கூடப்<Jehonadab>  பாகாலின்<Baal>  கோவிலுக்குள்  பிரவேசித்து,  பாகாலின்<Baal>  பணிவிடைக்காரரை  நோக்கி:  பாகாலின்<Baal>  ஊழியக்காரரே  அல்லாமல்  கர்த்தரின்  ஊழியக்காரரில்  ஒருவரும்  இங்கே  உங்களோடு  இராதபடிக்குத்  திட்டமாய்ப்  பாருங்கள்  என்றான்.  {2Kgs  10:23}

 

அவர்கள்  பலிகளையும்  சர்வாங்க  தகனங்களையும்  செலுத்த  உட்பிரவேசித்த  பின்பு,  யெகூ<Jehu>  வெளியிலே  எண்பது  பேரைத்  தனக்கு  ஆயத்தமாக  வைத்து:  நான்  உங்கள்  கையில்  ஒப்புவிக்கிற  மனுஷரில்  ஒருவனை  எவன்  தப்பவிடுகிறானோ  அவனுடைய  ஜீவனுக்குப்  பதிலாக  அவனைத்  தப்பவிட்டவனுடைய  ஜீவன்  ஈடாயிருக்கும்  என்றான்.  {2Kgs  10:24}

 

சர்வாங்க  தகனபலியிட்டுத்  தீர்ந்தபோது,  யெகூ<Jehu>  சேவகரையும்  சேர்வைக்காரரையும்  நோக்கி:  உள்ளே  போய்,  அவர்களை  வெட்டிப்போடுங்கள்;  ஒருவரையும்  வெளியே  விடவேண்டாம்  என்றான்;  அப்படியே  பட்டயக்கருக்கினால்  சேவகரும்  சேர்வைக்காரரும்  அவர்களை  வெட்டி  எறிந்துபோட்டு,  பாகால்<Baal>  கோவிலைச்  சேர்ந்த  ஸ்தலம்  எங்கும்  போய்,  {2Kgs  10:25}

 

பாகால்<Baal>  கோவில்  விக்கிரகங்களை  வெளியே  எடுத்துவந்து,  அவைகளைத்  தீக்கொளுத்தி,  {2Kgs  10:26}

 

பாகாலின்<Baal>  சிலையைத்  தகர்த்து,  பாகாலின்<Baal>  கோவிலை  இடித்து,  அதை  இந்நாள்வரைக்கும்  இருக்கிறதுபோல  மலஜலாதி  இடமாக்கினார்கள்.  {2Kgs  10:27}

 

இப்படியே  யெகூ<Jehu>  பாகாலை<Baal>  இஸ்ரவேலில்<Israel>  இராதபடிக்கு  அழித்துப்போட்டான்.  {2Kgs  10:28}

 

ஆனாலும்  பெத்தேலிலும்<Bethel>  தாணிலும்<Dan>  வைத்த  பொற்கன்றுக்குட்டிகளால்,  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  யெகூ<Jehu>  விட்டு  விலகவில்லை.  {2Kgs  10:29}

 

கர்த்தர்  யெகூவை<Jehu>  நோக்கி:  என்  பார்வைக்குச்  செம்மையானதை  நீ  நன்றாய்ச்  செய்து,  என்  இருதயத்தில்  இருந்தபடியெல்லாம்  ஆகாபின்<Ahab>  குடும்பத்துக்குச்  செய்தபடியினால்,  உன்  குமாரர்  இஸ்ரவேலுடைய<Israel>  சிங்காசனத்தின்மேல்  நாலு  தலைமுறையாக  வீற்றிருப்பார்கள்  என்றார்.  {2Kgs  10:30}

 

ஆனாலும்  யெகூ<Jehu>  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரின்  நியாயப்பிரமாணத்தின்படி  தன்  முழு  இருதயத்தோடும்  நடக்கக்  கவலைப்படவில்லை;  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  விட்டு  அவன்  விலகவும்  இல்லை.  {2Kgs  10:31}

 

அந்நாட்கள்முதல்  கர்த்தர்  இஸ்ரவேலைக்<Israel>  குறைந்துபோகப்பண்ணினார்;  ஆசகேல்<Hazael>  அவர்களை  இஸ்ரவேலின்<Israel>  எல்லைகளிலெல்லாம்  முறிய  அடித்து,  {2Kgs  10:32}

 

யோர்தான்<Jordan>  துவக்கிக்  கிழக்கிலுள்ள  அர்னோன்<Arnon>  நதிக்குச்  சமீபமான  ஆரோவேர்<Aroer>  முதற்கொண்டிருக்கிற  கீலேயாத்திலும்<Gilead>  பாசானிலுமுள்ள<Bashan>  காதியர்<Gadites>,  ரூபேனியர்<Reubenites>,  மனாசேயர்<Manassites>  இவர்களுடைய  தேசமாகிய  கீலேயாத்<Gilead>  முழுவதையும்  முறிய  அடித்தான்.  {2Kgs  10:33}

 

யெகூவின்<Jehu>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவனுடைய  எல்லா  வல்லமையும்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  10:34}

 

யெகூ<Jehu>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவனைச்  சமாரியாவில்<Samaria>  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  ஸ்தானத்தில்  அவன்  குமாரனாகிய  யோவாகாஸ்<Jehoahaz>  ராஜாவானான்.  {2Kgs  10:35}

 

யெகூ<Jehu>  சமாரியாவிலே<Samaria>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜ்யபாரம்பண்ணின  நாட்கள்  இருபத்தெட்டு  வருஷம்.  {2Kgs  10:36}

 

அகசியாவின்<Ahaziah>  தாயாகிய  அத்தாலியாள்<Athaliah>  தன்  குமாரன்  இறந்துபோனதைக்  கண்டபோது,  எழும்பி  ராஜவம்சஸ்தர்  யாவரையும்  சங்காரம்பண்ணினாள்.  {2Kgs  11:1}

 

யோராம்<Joram>  என்னும்  ராஜாவின்  குமாரத்தியும்  அகசியாவின்<Ahaziah>  சகோதரியுமாகிய  யோசேபாள்<Jehosheba>,  கொலையுண்ணப்படுகிற  ராஜகுமாரரின்  நடுவிலிருக்கிற  அகசியாவின்<Ahaziah>  மகனாகிய  யோவாசைக்<Joash>  களவாய்  எடுத்தாள்;  அவன்  கொல்லப்படாதபடி,  அவனையும்  அவன்  தாதியையும்  அத்தாலியாளுக்குத்<Athaliah>  தெரியாமல்  பள்ளி  அறையில்  ஒளித்துவைத்தார்கள்.  {2Kgs  11:2}

 

இவளோடேகூட  அவன்  ஆறுவருஷம்  கர்த்தருடைய  ஆலயத்தில்  ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்;  அத்தாலியாள்<Athaliah>  தேசத்தின்மேல்  ராஜ்யபாரம்பண்ணினாள்.  {2Kgs  11:3}

 

ஏழாம்  வருஷத்திலே  யோய்தா<Jehoiada>  நூறு  பேருக்கு  அதிபதிகளையும்  தலைவரையும்  காவலாளரையும்  அழைப்பித்து,  அவர்களைத்  தன்னிடத்தில்  கர்த்தருடைய  ஆலயத்திலே  வரச்சொல்லி,  அவர்களோடு  உடன்படிக்கைபண்ணி,  அவர்களைக்  கர்த்தருடைய  ஆலயத்திலே  ஆணையிடுவித்துக்கொண்டு,  அவர்களுக்கு  ராஜாவின்  குமாரனைக்  காண்பித்து,  {2Kgs  11:4}

 

அவர்களை  நோக்கி:  நீங்கள்  செய்யவேண்டிய  காரியம்  என்னவென்றால்,  ஓய்வுநாளில்  முறைப்படி  இங்கே  வருகிற  உங்களில்  மூன்றில்  ஒருபங்கு  ராஜாவின்  அரமனைக்  காவல்  காக்கவேண்டும்.  {2Kgs  11:5}

 

மூன்றில்  ஒருபங்கு  சூர்<Sur>  என்னும்  வாசலிலும்,  மூன்றில்  ஒருபங்கு  காவலாளரின்  காவலின்  பிறகே  இருக்கிற  வாசலிலுமிருந்து  ஆலயக்காவலைப்  பத்திரமாய்க்  காக்கவேண்டும்.  {2Kgs  11:6}

 

இப்படியே  ஓய்வுநாளில்  முறைப்படியே  உங்களில்  இரண்டுபங்குபேர்,  ராஜாவினிடத்தில்  கர்த்தருடைய  ஆலயத்தைக்  காவல்  காக்கவேண்டும்.  {2Kgs  11:7}

 

நீங்கள்  அவரவர்  தங்கள்  ஆயுதங்களைக்  கையிலே  பிடித்தவர்களாய்,  ராஜாவைச்  சுற்றிலும்  வரிசையாய்  நின்றுகொண்டிருக்கவேண்டும்;  வரிசைகளுக்குள்  புகுந்துவருகிறவன்  கொலைசெய்யப்படக்கடவன்;  ராஜா  வெளியே  போகும்போதும்  உள்ளே  வரும்போதும்  நீங்கள்  அவரோடே  இருங்கள்  என்றான்.  {2Kgs  11:8}

 

ஆசாரியனாகிய  யோய்தா<Jehoiada>  கட்டளையிட்டபடியெல்லாம்  நூறுபேருக்கு  அதிபதிகள்  செய்து,  அவரவர்  ஓய்வுநாளில்  முறைப்படி  வருகிறவர்களும்  முறைப்படி  போகிறவர்களுமாகிய  தங்கள்  மனுஷரைக்  கூட்டிக்கொண்டு,  ஆசாரியனாகிய  யோய்தாவினிடத்தில்<Jehoiada>  வந்தார்கள்.  {2Kgs  11:9}

 

ஆசாரியன்  கர்த்தரின்  ஆலயத்தில்  தாவீதுராஜா<David>  வைத்திருந்த  ஈட்டிகளையும்  கேடகங்களையும்  நூறுபேருக்கு  அதிபதிகளிடத்தில்  கொடுத்தான்.  {2Kgs  11:10}

 

காவலாளர்  அவரவர்  தங்கள்  ஆயுதங்களைப்  பிடித்தவர்களாய்,  ஆலயத்தின்  வலதுபக்கம்தொடங்கி  அதின்  இடதுபக்கமட்டும்,  பலிபீடத்திற்கு  எதிராகவும்  ஆலயத்திற்கு  எதிராகவும்  ராஜாவைச்  சுற்றிலும்  நின்றார்கள்.  {2Kgs  11:11}

 

அப்பொழுது  அவன்:  ராஜகுமாரனை  வெளியே  கொண்டுவந்து,  கிரீடத்தை  அவன்மேல்  வைத்து,  சாட்சியின்  ஆகமத்தை  அவன்  கையிலே  கொடுத்தான்;  இப்படி  அவனை  ராஜாவாக்கி  அபிஷேகம்பண்ணி:  ராஜா  வாழ்க  என்று  சொல்லி  கைகொட்டினார்கள்.  {2Kgs  11:12}

 

ஓடிவருகிற  ஜனங்கள்  செய்த  ஆரவாரத்தை  அத்தாலியாள்<Athaliah>  கேட்டபோது:  அவள்  கர்த்தருடைய  ஆலயத்திற்கு  ஜனங்களிடத்தில்  வந்து,  {2Kgs  11:13}

 

இதோ,  ராஜா  முறைமையின்படியே  தூணண்டையிலே  நிற்கிறதையும்,  ராஜாவண்டையில்  நிற்கிற  பிரபுக்களையும்,  எக்காளம்  ஊதுகிறவர்களையும்,  தேசத்து  ஜனங்கள்  எல்லாரும்  சந்தோஷப்பட்டு  எக்காளம்  ஊதுகிறதையும்  கண்டவுடனே,  அத்தாலியாள்<Athaliah>  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  துரோகம்  துரோகம்  என்று  கூவினாள்.  {2Kgs  11:14}

 

ஆசாரியனாகிய  யோய்தா<Jehoiada>  இராணுவத்தலைவராகிய  நூறுபேருக்கு  அதிபதிகளானவர்களுக்குக்  கட்டளையிட்டு:  இவளை  வரிசைகளுக்குப்  புறம்பே  கொண்டுபோங்கள்;  இவளைப்  பின்பற்றுகிறவனைப்  பட்டயத்தாலே  வெட்டிப்போடுங்கள்  என்றான்.  கர்த்தருடைய  ஆலயத்தில்  அவளைக்  கொல்லலாகாது  என்று  ஆசாரியன்  சொல்லியிருந்தான்.  {2Kgs  11:15}

 

அவர்கள்  அவளுக்கு  இடம்  உண்டாக்கினபோது,  ராஜாவின்  அரமனைக்குள்  குதிரைகள்  பிரவேசிக்கிற  வழியிலே  அவள்  போகையில்,  அவளைக்  கொன்றுபோட்டார்கள்.  {2Kgs  11:16}

 

அப்பொழுது  யோய்தா<Jehoiada>,  அவர்கள்  கர்த்தருடைய  ஜனமாயிருக்கும்படிக்கு,  ராஜாவும்  ஜனங்களும்  கர்த்தரோடே  உடன்படிக்கைபண்ணவும்,  ராஜாவும்  ஜனங்களும்  ஒருவரோடொருவர்  உடன்படிக்கைபண்ணவும்  செய்து,  {2Kgs  11:17}

 

பின்பு  தேசத்தின்  ஜனங்கள்  எல்லாரும்  பாகாலின்<Baal>  கோவிலில்  போய்,  அதை  இடித்து,  அதின்  பலிபீடங்களையும்  அதின்  விக்கிரகங்களையும்  முற்றிலும்  உடைத்து,  பாகாலின்<Baal>  பூஜாசாரியாகிய  மாத்தானைப்<Mattan>  பலிபீடங்களுக்கு  முன்பாகக்  கொன்றுபோட்டார்கள்.  ஆசாரியன்  கர்த்தருடைய  ஆலயத்தை  விசாரிக்கும்  உத்தியோகஸ்தரை  ஏற்படுத்தினான்.  {2Kgs  11:18}

 

நூறுபேருக்கு  அதிபதிகளையும்  தலைவரையும்  காவலாளரையும்  தேசத்தின்  ஜனங்களையும்  கூட்டி,  ராஜாவைக்  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  இறங்கப்பண்ணி,  அவனைக்  காவலாளரின்  வாசல்  வழியாய்  ராஜ  அரமனைக்கு  அழைத்துக்கொண்டுபோனார்கள்;  அங்கே  அவன்  ராஜாக்களுடைய  சிங்காசனத்தின்மேல்  உட்கார்ந்தான்.  {2Kgs  11:19}

 

தேசத்தின்  ஜனங்கள்  எல்லாரும்  மகிழ்ந்து  நகரம்  அமைதலாயிற்று.  அத்தாலியாளையோ<Athaliah>  ராஜாவின்  அரமனையண்டையில்  பட்டயத்தால்  கொன்றுபோட்டார்கள்.  {2Kgs  11:20}

 

யோவாஸ்<Jehoash>  ராஜாவாகிறபோது  ஏழு  வயதாயிருந்தான்.  {2Kgs  11:21}

 

யெகூவின்<Jehu>  ஏழாம்  வருஷத்தில்  யோவாஸ்<Jehoash>  ராஜாவாகி,  எருசலேமிலே<Jerusalem>  நாற்பதுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  பெயெர்செபா<Beersheba>  ஊராளாகிய  அவனுடைய  தாயின்  பேர்  சிபியாள்<Zibiah>.  {2Kgs  12:1}

 

ஆசாரியனாகிய  யோய்தா<Jehoiada>  யோவாசைப்<Jehoash>  போதகம்பண்ணின  நாளெல்லாம்  அவன்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  {2Kgs  12:2}

 

மேடைகளைமாத்திரம்  அகற்றவில்லை;  ஜனங்கள்  இன்னும்  மேடைகள்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தார்கள்.  {2Kgs  12:3}

 

யோவாஸ்<Jehoash>  ஆசாரியரை  நோக்கி:  பிரதிஷ்டையாக்கப்பட்ட  பொருள்களாகிய  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவரப்படுகிற  எல்லாப்  பணங்களையும்,  இலக்கத்திற்குட்படுகிறவர்களின்  பணத்தையும்,  மீட்புக்காக  மதிக்கப்படுகிற  ஆட்களின்  பணத்தையும்,  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவரும்படி,  அவரவர்  தம்தம்  மனதிலே  நியமித்திருக்கும்  எல்லாப்  பணத்தையும்,  {2Kgs  12:4}

 

ஆசாரியர்கள்  அவரவர்  தங்களுக்கு  அறிமுகமானவர்கள்  கையில்  வாங்கிக்கொண்டு,  ஆலயத்தில்  எங்கெங்கே  பழுதுகாண்கிறதோ,  அங்கேயெல்லாம்  ஆலயத்தைப்  பழுதுபார்க்கவேண்டும்  என்றான்.  {2Kgs  12:5}

 

ஆனாலும்  ராஜாவாகிய  யோவாசின்<Jehoash>  இருபத்துமூன்றாம்  வருஷமட்டும்  ஆசாரியர்கள்  ஆலயத்தைப்  பழுதுபாராதே  போனபடியினால்,  {2Kgs  12:6}

 

ராஜாவாகிய  யோவாஸ்<Jehoash>  ஆசாரியனாகிய  யோய்தாவையும்<Jehoiada>  மற்ற  ஆசாரியர்களையும்  அழைப்பித்து:  நீங்கள்  ஆலயத்தைப்  பழுதுபாராதேபோனதென்ன?  இனி  நீங்கள்  உங்களுக்கு  அறிமுகமானவர்கள்  கையிலே  பணத்தை  வாங்காமல்,  அதை  ஆலயத்தைப்  பழுதுபார்க்கிறதற்காக  விட்டுவிடுங்கள்  என்றான்.  {2Kgs  12:7}

 

அப்பொழுது  ஆசாரியர்கள்  ஜனத்தின்  கையிலே  பணத்தை  வாங்கிக்கொள்ளாமலும்,  ஆலயத்தைப்  பழுதுபாராமலும்  இருக்கிறதற்குச்  சம்மதித்தார்கள்.  {2Kgs  12:8}

 

ஆசாரியனாகிய  யோய்தா<Jehoiada>  ஒரு  பெட்டியை  எடுத்து,  அதின்  மூடியிலே  ஒரு  துவாரமிட்டு,  அதைப்  பலிபீடத்தண்டையிலே  கர்த்தருடைய  ஆலயத்தில்  ஜனங்கள்  உட்பிரவேசிக்கும்  வலதுபக்கத்தில்  வைத்தான்;  வாசற்படியைக்  காக்கிற  ஆசாரியர்கள்  கர்த்தருடைய  ஆலயத்திற்குக்  கொண்டுவரப்பட்ட  பணத்தையெல்லாம்  அதிலே  போட்டார்கள்.  {2Kgs  12:9}

 

பெட்டியிலே  மிகுந்த  பணம்  உண்டென்று  அவர்கள்  காணும்போது,  ராஜாவின்  சம்பிரதியும்  பிரதான  ஆசாரியனும்  வந்து:  கர்த்தருடைய  ஆலயத்திலே  சேகரிக்கப்பட்ட  பணத்தை  எண்ணி  முடிப்புக்கட்டி,  {2Kgs  12:10}

 

எண்ணின  பணத்தைக்  கர்த்தருடைய  ஆலயத்திலே  விசாரிப்புக்காரர்  கையிலே  கொடுப்பார்கள்;  அதை  அவர்கள்  கர்த்தருடைய  ஆலயத்தைப்  பழுதுபார்க்கிற  தச்சருக்கும்,  சிற்பாசாரிகளுக்கும்,  {2Kgs  12:11}

 

கொற்றருக்கும்,  கல்தச்சருக்கும்,  கர்த்தருடைய  ஆலயத்தைப்  பழுதுபார்க்கத்  தேவையான  மரங்களையும்  வெட்டின  கற்களையும்  கொள்ளுகிறதற்கும்,  ஆலயத்தைப்  பழுதுபார்க்கிறதற்குச்  செல்லும்  எல்லாச்  செலவுக்கும்  கொடுப்பார்கள்.  {2Kgs  12:12}

 

கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவரப்பட்ட  பணத்தினாலே  வெள்ளிக்கிண்ணங்களும்,  கீதவாத்தியங்களும்,  கலங்களும்,  எக்காளங்களும்,  பொற்பாத்திரங்களும்,  வெள்ளிப்  பாத்திரங்களும்  பண்ணப்படாமல்,  {2Kgs  12:13}

 

கர்த்தருடைய  ஆலயத்தைப்  பழுதுபார்க்கும்படிக்கு  வேலைசெய்கிறவர்களுக்கே  அதைக்  கொடுத்தார்கள்.  {2Kgs  12:14}

 

வேலைசெய்கிறவர்களுக்குக்  கொடுக்கும்படிக்கு,  பணத்தை  வரப்பற்றிக்கொண்ட  மனுஷர்  கையிலே  கணக்குக்  கேளாதிருந்தார்கள்;  அவர்கள்  உண்மையாய்  அதை  நடப்பித்தார்கள்.  {2Kgs  12:15}

 

குற்றப்பிராயச்சித்தப்  பணமும்  பாவப்பிராயச்சித்தப்  பணமும்  கர்த்தருடைய  ஆலயத்திற்காகக்  கொண்டுவரப்படவில்லை;  அது  ஆசாரியரைச்  சேர்ந்தது.  {2Kgs  12:16}

 

அதற்குப்பின்பு  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேல்<Hazael>  வந்து,  காத்தூரின்மேல்<Gath>  யுத்தம்பண்ணி  அதைப்  பிடித்தான்;  அதின்பின்பு  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாய்ப்  போக  ஆசகேல்<Hazael>  தன்  முகத்தைத்  திருப்பினான்.  {2Kgs  12:17}

 

அப்பொழுது  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோவாஸ்<Jehoash>,  தன்  பிதாக்களாகிய  யோசபாத்<Jehoshaphat>  யோராம்<Jehoram>  அகசியா<Ahaziah>  என்னும்  யூதாவின்<Judah>  ராஜாக்கள்  பரிசுத்தம்பண்ணிவைத்த  எல்லாவற்றையும்,  தான்  பரிசுத்தம்பண்ணிவைத்ததையும்,  கர்த்தருடைய  ஆலயத்திலும்  ராஜாவின்  அரமனையிலுமுள்ள  பொக்கிஷங்களில்  அகப்பட்ட  பொன்  யாவையும்  எடுத்துச்  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேலுக்கு<Hazael>  அனுப்பினான்;  அப்பொழுது  அவன்  எருசலேமை<Jerusalem>  விட்டுத்  திரும்பிப்போனான்.  {2Kgs  12:18}

 

யோவாசின்<Joash>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  12:19}

 

யோவாசின்<Joash>  ஊழியக்காரர்  எழும்பி  கட்டுப்பாடு  பண்ணிக்கொண்டு,  சில்லாவுக்குப்<Silla>  போகிற  வழியிலிருக்கிற  மில்லோ<Millo>  வீட்டிலே  அவனைக்  கொன்றுபோட்டார்கள்.  {2Kgs  12:20}

 

சிமியாதின்<Shimeath>  குமாரன்,  யோசகார்<Jozachar>  சோமேரின்<Shomer>  குமாரன்  யோசபாத்<Jehozabad>  என்னும்  அவனுடைய  ஊழியக்காரர்  அவனைக்  கொன்றார்கள்;  இறந்துபோன  அவனைத்  தாவீதின்<David>  நகரத்தில்  அவனுடைய  பிதாக்களண்டையிலே  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  அமத்சியா<Amaziah>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  12:21}

 

அகசியா<Ahaziah>  என்னும்  யூதாவுடைய<Judah>  ராஜாவின்  குமாரனாகிய  யோவாசுடைய<Joash>  இருபத்துமூன்றாம்  வருஷத்தில்  யெகூவின்<Jehu>  குமாரனாகிய  யோவாகாஸ்<Jehoahaz>  இஸ்ரவேலின்மேல்<Israel>  சமாரியாவிலே<Samaria>  பதினேழுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  {2Kgs  13:1}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களைப்  பின்பற்றி  நடந்தான்;  அவைகளை  விட்டு  அவன்  விலகவில்லை.  {2Kgs  13:2}

 

ஆகையால்  கர்த்தருக்கு  இஸ்ரவேலின்மேல்<Israel>  கோபமூண்டு,  அவர்களைச்  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேலின்<Hazael>  கையிலும்  ஆசகேலின்<Hazael>  குமாரனாகிய  பெனாதாத்தின்<Benhadad>  கையிலும்  அந்நாட்களிலெல்லாம்  ஒப்புக்கொடுத்தார்.  {2Kgs  13:3}

 

யோவாகாஸ்<Jehoahaz>  கர்த்தருடைய  சமுகத்தை  நோக்கிப்  பிரார்த்தித்தான்;  சீரியாவின்<Syria>  ராஜா  இஸ்ரவேலை<Israel>  ஒடுக்குகிறதினால்  அவர்கள்  ஒடுங்கிப்போகிறதைப்  பார்த்து:  கர்த்தர்  அவனுக்குச்  செவிகொடுத்தார்.  {2Kgs  13:4}

 

கர்த்தர்  இஸ்ரவேலுக்கு<Israel>  ஒரு  ரட்சகனைக்  கொடுத்ததினால்,  அவர்கள்  சீரியருடைய<Syrians>  கையின்கீழிருந்து  நீங்கலானார்கள்;  ஆதலால்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  முன்போல்  தங்கள்  கூடாரங்களிலே  குடியிருந்தார்கள்.  {2Kgs  13:5}

 

ஆகிலும்  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  யெரொபெயாம்<Jeroboam>  வீட்டாரின்  பாவங்களை  அவர்கள்  விட்டு  விலகாமல்  அதிலே  நடந்தார்கள்;  சமாரியாவிலிருந்த<Samaria>  விக்கிரகத்தோப்பும்  நிலையாயிருந்தது.  {2Kgs  13:6}

 

யோவாகாசுக்குச்<Jehoahaz>  சீரியாவின்<Syria>  ராஜா,  ஐம்பது  குதிரைவீரரையும்,  பத்து  இரதங்களையும்,  பதினாயிரம்  காலாட்களையுமே  அல்லாமல்,  ஜனங்களில்  வேறொன்றும்  மீதியாக  வைக்கவில்லை;  அவன்  அவர்களை  அழித்துப்  போரடிக்கும்  இடத்துத்  தூளைப்போல  ஆக்கிப்போட்டான்.  {2Kgs  13:7}

 

யோவாகாசின்<Jehoahaz>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவனுடைய  வல்லமையும்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  13:8}

 

யோவாகாஸ்<Jehoahaz>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவனைச்  சமாரியாவிலே<Samaria>  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  யோவாஸ்<Joash>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  13:9}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோவாசுடைய<Joash>  முப்பத்தேழாம்  வருஷத்தில்  யோவாகாசின்<Jehoahaz>  குமாரனாகிய  யோவாஸ்<Jehoash>,  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகிய  சமாரியாவிலே<Samaria>  பதினாறுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  {2Kgs  13:10}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  விட்டு  விலகாமல்  அவைகளிலெல்லாம்  நடந்தான்.  {2Kgs  13:11}

 

யோவாசின்<Joash>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அமத்சியாவோடு<Amaziah>  அவன்  யுத்தம்பண்ணின  வல்லமையும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  13:12}

 

யோவாஸ்<Joash>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  யெரொபெயாம்<Jeroboam>  அவன்  சிங்காசனத்தில்  வீற்றிருந்தான்;  யோவாஸ்<Joash>  சமாரியாவில்<Samaria>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்களண்டையிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  {2Kgs  13:13}

 

அவன்  நாட்களில்  எலிசா<Elisha>  மரணத்துக்கு  ஏதுவான  வியாதியாய்க்  கிடந்தான்;  அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாஸ்<Joash>  அவனிடத்துக்குப்  போய்,  அவன்மேல்  விழுந்து,  அழுது:  என்  தகப்பனே,  என்  தகப்பனே,  இஸ்ரவேலுக்கு<Israel>  இரதமும்  குதிரைவீரருமாயிருந்தவரே  என்றான்.  {2Kgs  13:14}

 

எலிசா<Elisha>  அவனைப்  பார்த்து:  வில்லையும்  அம்புகளையும்  பிடியும்  என்றான்;  அப்படியே  வில்லையும்  அம்புகளையும்  பிடித்துக்கொண்டான்.  {2Kgs  13:15}

 

அப்பொழுது  அவன்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவை  நோக்கி:  உம்முடைய  கையை  வில்லின்மேல்  வையும்  என்றான்;  அவன்  தன்  கையை  வைத்தபோது,  எலிசா<Elisha>  தன்  கைகளை  ராஜாவுடைய  கைகள்மேல்  வைத்து:  {2Kgs  13:16}

 

கிழக்கே  இருக்கிற  ஜன்னலைத்  திறவும்  என்றான்;  அவன்  அதைத்  திறந்தபோது,  எலிசா<Elisha>:  எய்யும்  என்றான்;  இவன்  எய்தபோது,  அவன்:  அது  கர்த்தருடைய  ரட்சிப்பின்  அம்பும்,  சீரியரினின்று<Syria>  விடுதலையாக்கும்  ரட்சிப்பின்  அம்புமானது;  நீர்  ஆப்பெக்கிலே<Aphek>  சீரியரைத்<Syrians>  தீர  முறிய  அடிப்பீர்  என்றான்.  {2Kgs  13:17}

 

பின்பு  அம்புகளைப்  பிடியும்  என்றான்;  அவைகளைப்  பிடித்தான்.  அப்பொழுது  அவன்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவை  நோக்கி:  தரையிலே  அடியும்  என்றான்;  அவன்  மூன்றுதரம்  அடித்து  நின்றான்.  {2Kgs  13:18}

 

அப்பொழுது  தேவனுடைய  மனுஷன்  அவன்மேல்  கோபமாகி:  நீர்  ஐந்து  ஆறுவிசை  அடித்தீரானால்,  அப்பொழுது  சீரியரைத்<Syria>  தீர  முறிய  அடிப்பீர்;  இப்பொழுதோ  சீரியரை<Syria>  மூன்றுவிசைமாத்திரம்  முறிய  அடிப்பீர்  என்றான்.  {2Kgs  13:19}

 

எலிசா<Elisha>  மரணமடைந்தான்;  அவனை  அடக்கம்பண்ணினார்கள்;  மறுவருஷத்திலே  மோவாபியரின்<Moabites>  தண்டுகள்  தேசத்திலே  வந்தது.  {2Kgs  13:20}

 

அப்பொழுது  அவர்கள்,  ஒரு  மனுஷனை  அடக்கம்பண்ணப்போகையில்,  அந்தத்  தண்டைக்  கண்டு,  அந்த  மனுஷனை  எலிசாவின்<Elisha>  கல்லறையில்  போட்டார்கள்;  அந்த  மனுஷனின்  பிரேதம்  அதிலே  விழுந்து  எலிசாவின்<Elisha>  எலும்புகளின்மேல்  பட்டபோது,  அந்த  மனுஷன்  உயிரடைந்து  தன்  கால்களை  ஊன்றி  எழுந்திருந்தான்.  {2Kgs  13:21}

 

யோவாகாசின்<Jehoahaz>  நாட்களிலெல்லாம்  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேல்<Hazael>  இஸ்ரவேலை<Israel>  ஒடுக்கினான்.  {2Kgs  13:22}

 

ஆனாலும்  கர்த்தர்  அவர்களுக்கு  இரங்கி,  ஆபிரகாம்<Abraham>  ஈசாக்கு<Isaac>  யாக்கோபு<Jacob>  என்பவர்களோடு  செய்த  தமது  உடன்படிக்கையினிமித்தம்  அவர்களை  அழிக்கச்  சித்தமாயிராமலும்,  அவர்களை  இன்னும்  தம்முடைய  முகத்தைவிட்டுத்  தள்ளாமலும்  அவர்கள்மேல்  மனதுருகி,  அவர்களை  நினைத்தருளினார்.  {2Kgs  13:23}

 

சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ஆசகேல்<Hazael>  இறந்துபோய்,  அவன்  குமாரனாகிய  பெனாதாத்<Benhadad>  அவன்  ஸ்தானத்திலே  ராஜாவான  பின்பு,  {2Kgs  13:24}

 

யோவாகாசின்<Jehoahaz>  குமாரனாகிய  யோவாஸ்<Jehoash>,  ஆசகேலோடே<Hazael>  யுத்தம்பண்ணி,  தன்  தகப்பனாகிய  யோவாகாசின்<Jehoahaz>  கையிலிருந்து  பிடித்துக்கொண்ட  பட்டணங்களை  அவன்  குமாரனாகிய  பெனாதாத்தின்<Benhadad>  கையிலிருந்து  திரும்பப்  பிடித்துக்கொண்டான்;  மூன்றுவிசை  யோவாஸ்<Joash>  அவனை  முறிய  அடித்து  இஸ்ரவேலின்<Israel>  பட்டணங்களைத்  திரும்பக்  கட்டிக்கொண்டான்.  {2Kgs  13:25}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாகாசின்<Jehoahaz>  குமாரன்  யோவாசுடைய<Joash>  இரண்டாம்  வருஷத்திலே  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோவாசின்<Joash>  குமாரன்  அமத்சியா<Amaziah>  ராஜாவானான்.  {2Kgs  14:1}

 

அவன்  ராஜாவாகிறபோது  இருபத்தைந்து  வயதாயிருந்து,  எருசலேமிலே<Jerusalem>  இருபத்தொன்பது  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  எருசலேம்<Jerusalem>  நகரத்தாளான  அவன்  தாயின்பேர்  யொவதானாள்<Jehoaddan>.  {2Kgs  14:2}

 

அவன்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்;  ஆனாலும்  தன்  தகப்பனாகிய  தாவீதைப்போலல்ல<David>;  தன்  தகப்பனாகிய  யோவாஸ்<Joash>  செய்தபடியெல்லாம்  செய்தான்.  {2Kgs  14:3}

 

மேடைகள்மாத்திரம்  அகற்றப்படவில்லை;  ஜனங்கள்  இன்னும்  மேடைகளின்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தார்கள்.  {2Kgs  14:4}

 

ராஜ்யபாரம்  அவன்  கையிலே  ஸ்திரப்பட்டபோது,  அவனுடைய  தகப்பனாகிய  ராஜாவைக்  கொன்றுபோட்ட  தன்  ஊழியக்காரரைக்  கொன்றுபோட்டான்.  {2Kgs  14:5}

 

ஆனாலும்  பிள்ளைகளினிமித்தம்  பிதாக்கள்  கொலைசெய்யப்படாமலும்  பிதாக்களினிமித்தம்  பிள்ளைகள்  கொலைசெய்யப்படாமலும்,  அவனவன்  செய்த  பாவத்தினிமித்தம்  அவனவன்  கொலைசெய்யப்படவேண்டும்  என்று  மோசேயின்<Moses>  நியாயப்பிரமாண  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடி,  கர்த்தர்  கட்டளையிட்டபிரகாரம்  கொலைசெய்தவர்களின்  பிள்ளைகளை  அவன்  கொல்லாதிருந்தான்.  {2Kgs  14:6}

 

அவன்  உப்புப்பள்ளத்தாக்கிலே<valley  of  salt>  ஏதோமியரில்<Edom>  பதினாயிரம்பேரை  மடங்கடித்து,  யுத்தஞ்செய்து  சேலாவைப்<Selah>  பிடித்து,  அதற்கு  இந்நாள்வரைக்கும்  இருக்கிற  யொக்தியேல்<Joktheel>  என்னும்  பேரைத்  தரித்தான்.  {2Kgs  14:7}

 

அப்பொழுது  அமத்சியா<Amaziah>  யெகூவின்<Jehu>  குமாரனாகிய  யோவாகாசின்<Jehoahaz>  குமாரன்  யோவாஸ்<Jehoash>  என்னும்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவிடத்தில்  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நம்முடைய  சாமர்த்தியத்தைப்  பார்ப்போம்  வா  என்று  சொல்லச்சொன்னான்.  {2Kgs  14:8}

 

அதற்கு  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாஸ்<Jehoash>  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அமத்சியாவுக்கு<Amaziah>  ஆள்  அனுப்பி:  லீபனோனிலுள்ள<Lebanon>  முட்செடியானது,  லீபனோனிலுள்ள<Lebanon>  கேதுருமரத்தை  நோக்கி,  நீ  உன்  மகளை  என்  மகனுக்கு  மனைவியாக  விவாகஞ்செய்துகொடு  என்று  சொல்லச்சொல்லிற்று;  ஆனாலும்  லீபனோனிலுள்ள<Lebanon>  ஒரு  காட்டுமிருகம்  அந்த  வழி  போகையில்  ஓடி  அந்த  முட்செடியை  மிதித்துப்போட்டது.  {2Kgs  14:9}

 

நீ  ஏதோமியரை<Edom>  முறிய  அடித்ததினால்  உன்  இருதயம்  உன்னைக்  கர்வங்கொள்ளப்பண்ணினது;  நீ  பெருமைபாராட்டிக்கொண்டு  உன்  வீட்டிலே  இரு;  நீயும்  உன்னோடேகூட  யூதாவும்<Judah>  விழும்படிக்கு,  பொல்லாப்பைத்  தேடிக்கொள்வானேன்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Kgs  14:10}

 

ஆனாலும்  அமத்சியா<Amaziah>  செவிகொடாதேபோனான்;  ஆகையால்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாஸ்<Jehoash>  வந்தான்;  யூதாவிலுள்ள<Judah>  பெத்ஷிமேசிலே<Bethshemesh>  அவனும்,  யூதாவின்<Judah>  ராஜா  அமத்சியாவும்<Amaziah>,  தங்கள்  சாமர்த்தியத்தைப்  பார்க்கிறபோது,  {2Kgs  14:11}

 

யூதா<Judah>  ஜனங்கள்  இஸ்ரவேலருக்கு<Israel>  முன்பாக  முறிந்து  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்.  {2Kgs  14:12}

 

அகசியாவின்<Ahaziah>  குமாரனாகிய  யோவாசின்<Jehoash>  குமாரன்  அமத்சியா<Amaziah>  என்னும்  யூதாவின்<Judah>  ராஜாவையோ,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாஸ்<Jehoash>  பெத்ஷிமேசிலே<Bethshemesh>  பிடித்து,  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  எருசலேமின்<Jerusalem>  அலங்கத்திலே  எப்பிராயீம்<Ephraim>  வாசல்  தொடங்கி  மூலைவாசல்மட்டும்  நானூறு  முழ  நீளம்  இடித்துப்போட்டு,  {2Kgs  14:13}

 

கர்த்தருடைய  ஆலயத்திலும்  ராஜாவுடைய  அரமனைப்  பொக்கிஷங்களிலும்  அகப்பட்ட  பொன்  வெள்ளி  யாவையும்,  சகல  பணிமுட்டுகளையும்,  கிரியிருப்பவர்களையும்  பிடித்துக்கொண்டு  சமாரியாவுக்குத்<Samaria>  திரும்பிப்போனான்.  {2Kgs  14:14}

 

யோவாஸ்<Jehoash>  செய்த  மற்ற  வர்த்தமானங்களும்,  அவனுடைய  வல்லமையும்,  அவன்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அமத்சியாவோடு<Amaziah>  யுத்தம்பண்ணின  விதமும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  14:15}

 

யோவாஸ்<Jehoash>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  சமாரியாவில்<Samaria>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்களண்டையிலே  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  யெரொபெயாம்<Jeroboam>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  14:16}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாகாசின்<Jehoahaz>  குமாரன்  யோவாஸ்<Jehoash>  மரணமடைந்தபின்,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோவாசின்<Joash>  குமாரன்  அமத்சியா<Amaziah>  பதினைந்துவருஷம்  உயிரோடிருந்தான்.  {2Kgs  14:17}

 

அமத்சியாவின்<Amaziah>  மற்ற  வர்த்தமானங்கள்  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  14:18}

 

எருசலேமிலே<Jerusalem>  அவனுக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடு  பண்ணினார்கள்;  அப்பொழுது  லாகீசுக்கு<Lachish>  ஓடிப்போனான்;  ஆனாலும்  அவர்கள்  அவன்  பிறகே  லாகீசுக்கு<Lachish>  மனுஷரை  அனுப்பி,  அங்கே  அவனைக்  கொன்றுபோட்டு,  {2Kgs  14:19}

 

குதிரைகள்மேல்  அவனை  எடுத்துக்கொண்டுவந்தார்கள்;  அவன்  எருசலேமில்<Jerusalem>  இருக்கிற  தாவீதின்<David>  நகரத்திலே  தன்  பிதாக்களண்டையிலே  அடக்கம்பண்ணப்பட்டான்.  {2Kgs  14:20}

 

யூதா<Judah>  ஜனங்கள்  யாவரும்  பதினாறு  வயதுள்ள  அசரியாவை<Azariah>  அழைத்துவந்து  அவனை  அவன்  தகப்பனாகிய  அமத்சியாவின்<Amaziah>  ஸ்தானத்தில்  ராஜாவாக்கினார்கள்.  {2Kgs  14:21}

 

ராஜா  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்பு,  இவன்  ஏலாதைக்<Elath>  கட்டி,  அதைத்  திரும்ப  யூதாவின்<Judah>  வசமாக்கிக்கொண்டான்.  {2Kgs  14:22}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோவாசின்<Joash>  குமாரன்  அமத்சியாவின்<Amaziah>  பதினைந்தாம்  வருஷத்தில்,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யோவாசின்<Joash>  குமாரன்  யெரொபெயாம்<Jeroboam>  ராஜாவாகி  சமாரியாவில்<Samaria>  நாற்பத்தொரு  வருஷம்  அரசாண்டு,  {2Kgs  14:23}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்கள்  ஒன்றையும்  அவன்  விட்டு  விலகவில்லை.  {2Kgs  14:24}

 

காத்தேப்பேர்<Gathhepher>  ஊரானாகிய  அமித்தாய்<Amittai>  என்னும்  தீர்க்கதரிசியின்  குமாரன்  யோனா<Jonah>  என்னும்  தம்முடைய  ஊழியக்காரனைக்கொண்டு  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லியிருந்த  வார்த்தையின்படியே,  அவன்  ஆமாத்தின்<Hamath>  எல்லை  முதற்கொண்டு  சமபூமியின்  கடல்மட்டுமுள்ள  இஸ்ரவேலின்<Israel>  எல்லைகளைத்  திரும்பச்  சேர்த்துக்கொண்டான்.  {2Kgs  14:25}

 

இஸ்ரவேலின்<Israel>  உபத்திரவம்  மிகவும்  கொடிது  என்றும்,  அடைபட்டவனுமில்லை,  விடுபட்டவனுமில்லை,  இஸ்ரவேலுக்கு<Israel>  ஒத்தாசை  செய்கிறவனுமில்லை  என்றும்  கர்த்தர்  பார்த்தார்.  {2Kgs  14:26}

 

இஸ்ரவேலின்<Israel>  பேரை  வானத்தின்  கீழிருந்து  குலைத்துப்போடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லாமல்,  யோவாசின்<Joash>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  கையால்  அவர்களை  ரட்சித்தார்.  {2Kgs  14:27}

 

யெரொபெயாமின்<Jeroboam>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  யுத்தம்பண்ணி,  யூதாவுக்கு<Judah>  இருந்த  தமஸ்குவையும்<Damascus>  ஆமாத்தையும்<Hamath>  இஸ்ரவேலுக்காகத்<Israel>  திரும்பச்  சேர்த்துக்கொண்ட  அவனுடைய  வல்லமையும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  14:28}

 

யெரொபெயாம்<Jeroboam>  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்களாகிய  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  சகரியா<Zachariah>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  14:29}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  இருபத்தேழாம்  வருஷத்தில்,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அமத்சியாவின்<Amaziah>  குமாரன்  அசரியா<Azariah>  ராஜாவானான்.  {2Kgs  15:1}

 

அவன்  ராஜாவாகிறபோது  பதினாறு  வயதாயிருந்து,  ஐம்பத்திரண்டு  வருஷம்  எருசலேமிலே<Jerusalem>  அரசாண்டான்;  எருசலேம்<Jerusalem>  நகரத்தாளான  அவன்  தாயின்  பேர்  எக்கோலியாள்<Jecholiah>.  {2Kgs  15:2}

 

அவன்  தன்  தகப்பனாகிய  அமத்சியா<Amaziah>  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  {2Kgs  15:3}

 

மேடைகள்  மாத்திரம்  அகற்றப்படவில்லை;  ஜனங்கள்  இன்னும்  மேடைகள்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தார்கள்.  {2Kgs  15:4}

 

கர்த்தர்  இந்த  ராஜாவை  வாதித்ததினால்,  அவன்  தன்  மரணநாள்மட்டும்  குஷ்டரோகியாயிருந்து,  தனித்து  ஒரு  வீட்டிலே  வாசம்பண்ணினான்;  ராஜாவின்  குமாரனாகிய  யோதாம்<Jotham>  அரமனை  விசாரிப்புக்காரனாயிருந்து,  தேசத்தின்  ஜனங்களை  நியாயம்  விசாரித்தான்.  {2Kgs  15:5}

 

அசரியாவின்<Azariah>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  15:6}

 

அசரியா<Azariah>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவனைத்  தாவீதின்<David>  நகரத்திலே  அவன்  பிதாக்களண்டையிலே  அடக்கம்பண்ணினார்கள்;  அவன்  குமாரனாகிய  யோதாம்<Jotham>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  15:7}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அசரியாவின்<Azariah>  முப்பத்தெட்டாம்  வருஷத்திலே  யெரொபெயாமின்<Jeroboam>  குமாரனாகிய  சகரியா<Zachariah>  இஸ்ரவேலின்மேல்<Israel>  சமாரியாவிலே<Samaria>  ஆறுமாதம்  ராஜ்யபாரம்பண்ணி,  {2Kgs  15:8}

 

தன்  பிதாக்கள்  செய்ததுபோல,  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  அவன்  விட்டு  விலகவில்லை.  {2Kgs  15:9}

 

யாபேசின்<Jabesh>  குமாரனாகிய  சல்லூம்<Shallum>  அவனுக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடுபண்ணி,  ஜனத்தின்  முன்பாக  அவனை  வெட்டிக்  கொன்றுபோட்டு,  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  15:10}

 

சகரியாவின்<Zachariah>  மற்ற  வர்த்தமானங்கள்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  15:11}

 

உன்  குமாரர்  நாலாம்  தலைமுறைமட்டும்  இஸ்ரவேலுடைய<Israel>  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருப்பார்கள்  என்று  கர்த்தர்  யெகூவோடே<Jehu>  சொன்ன  வார்த்தை  இதுதான்;  அப்படியே  ஆயிற்று.  {2Kgs  15:12}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  உசியாவின்<Uzziah>  முப்பத்தொன்பதாம்  வருஷத்தில்  யாபேசின்<Jabesh>  குமாரனாகிய  சல்லூம்<Shallum>  ராஜாவாகி,  சமாரியாவில்<Samaria>  ஒரு  மாதம்  அரசாண்டான்.  {2Kgs  15:13}

 

காதியின்<Gadi>  குமாரனாகிய  மெனாகேம்<Menahem>  திர்சாவிலிருந்து<Tirzah>  சமாரியாவுக்கு<Samaria>  வந்து,  யாபேசின்<Jabesh>  குமாரனாகிய  சல்லூமைச்<Shallum>  சமாரியாவிலே<Samaria>  வெட்டிக்  கொன்றுபோட்டு,  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  15:14}

 

சல்லூமின்<Shallum>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்த  கட்டுப்பாடும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  15:15}

 

அப்பொழுது  மெனாகேம்<Menahem>  திப்சா<Tiphsah>  பட்டணத்தையும்,  அதிலுள்ள  யாவையும்,  திர்சாதொடங்கி<Tirzah>  அதின்  எல்லைகளையும்  முறிய  அடித்தான்;  அவர்கள்  தனக்கு  வாசலைத்  திறக்கவில்லை  என்று  அவர்களை  வெட்டி,  அவர்களுடைய  கர்ப்பவதிகளையெல்லாம்  கீறிப்போட்டான்.  {2Kgs  15:16}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அசரியாவின்<Azariah>  முப்பத்தொன்பதாம்  வருஷத்தில்,  காதியின்<Gadi>  குமாரனாகிய  மெனாகேம்<Menahem>  இஸ்ரவேல்மேல்<Israel>  ராஜாவாகிச்  சமாரியாவிலே<Samaria>  பத்துவருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  அவன்  தன்  நாட்களிலெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {2Kgs  15:17}

 

இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  விட்டு  விலகாதிருந்தான்.  {2Kgs  15:18}

 

அசீரியாவின்<Assyria>  ராஜாவாகிய  பூல்<Pul>,  தேசத்திற்கு  விரோதமாய்  வந்தான்;  அப்பொழுது  மெனாகேம்<Menahem>  பூலின்<Pul>  உதவியினால்  ராஜ்யபாரத்தைத்  தன்  கையில்  பலப்படுத்தும்பொருட்டு,  அவனுக்கு  ஆயிரம்  தாலந்து  வெள்ளி  கொடுத்தான்.  {2Kgs  15:19}

 

இந்தப்  பணத்தை  அசீரியாவின்<Assyria>  ராஜாவுக்குக்  கொடுக்கும்படி,  மெனாகேம்<Menahem>  இஸ்ரவேலில்<Israel>  பலத்த  ஐசுவரியவான்களிடத்தில்  ஆள்  ஒன்றிற்கு  ஐம்பது  வெள்ளிச்  சேக்கல்  தண்டினான்;  அப்படியே  அசீரியாவின்<Assyria>  ராஜா  தேசத்திலே  நிற்காமல்  திரும்பிப்போனான்.  {2Kgs  15:20}

 

மெனாகேமின்<Menahem>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  15:21}

 

மெனாகேம்<Menahem>  தன்  பிதாக்களோடு  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  பெக்காகியா<Pekahiah>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  15:22}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அசரியாவின்<Azariah>  ஐம்பதாம்  வருஷத்தில்,  மெனாகேமின்<Menahem>  குமாரனாகிய  பெக்காகியா<Pekahiah>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகி  சமாரியாவிலே<Samaria>  இரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  {2Kgs  15:23}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  அவன்  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  விட்டு  விலகவில்லை.  {2Kgs  15:24}

 

ஆனாலும்  ரெமலியாவின்<Remaliah>  குமாரனாகிய  பெக்கா<Pekah>  என்னும்  அவனுடைய  சேர்வைக்காரன்  அவனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  கீலேயாத்<Gileadites>  புத்திரரில்  ஐம்பதுபேரைக்  கூட்டிக்கொண்டு,  அவனையும்  அர்கோபையும்<Argob>  ஆரியேயையும்<Arieh>  ராஜாவின்  வீடாகிய  அரமனையிலே  சமாரியாவில்<Samaria>  வெட்டிக்  கொன்றுபோட்டு,  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  15:25}

 

பெக்காகியாவின்<Pekahiah>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  15:26}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  அசரியாவின்<Azariah>  ஐம்பத்திரண்டாம்  வருஷத்தில்,  ரெமலியாவின்<Remaliah>  குமாரனாகிய  பெக்கா<Pekah>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகிச்  சமாரியாவிலே<Samaria>  இருபதுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  {2Kgs  15:27}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமின்<Jeroboam>  பாவங்களை  அவன்  விட்டு  விலகவில்லை.  {2Kgs  15:28}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  பெக்காவின்<Pekah>  நாட்களில்  அசீரியாவின்<Assyria>  ராஜாவாகிய  திகிலாத்பிலேசர்<Tiglathpileser>  வந்து,  ஈயோனையும்<Ijon>,  பெத்மாக்கா<Bethmaachah>  என்னும்  ஆபேலையும்<Abel>,  யனோவாகையும்<Janoah>,  கேதேசையும்<Kedesh>,  ஆத்சோரையும்<Hazor>,  கீலேயாத்தையும்<Gilead>,  கலிலேயாவாகிய<Galilee>  நப்தலி<Naphtali>  தேசமனைத்தையும்  பிடித்து,  குடிகளைச்  சிறையாக  அசீரியாவுக்குக்<Assyria>  கொண்டுபோனான்.  {2Kgs  15:29}

 

ஏலாவின்<Elah>  குமாரனாகிய  ஓசெயா<Hoshea>  ரெமலியாவின்<Remaliah>  குமாரனாகிய  பெக்காவுக்கு<Pekah>  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  அவனை  உசியாவின்<Uzziah>  குமாரனாகிய  யோதாமின்<Jotham>  இருபதாம்  வருஷத்தில்  வெட்டிக்  கொன்றுபோட்டு,  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  15:30}

 

பெக்காவின்<Pekah>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  15:31}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ரெமலியாவின்<Remaliah>  குமாரன்  பெக்காவின்<Pekah>  இரண்டாம்  வருஷத்தில்,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  உசியாவின்<Uzziah>  குமாரன்  யோதாம்<Jotham>  ராஜாவானான்.  {2Kgs  15:32}

 

அவன்  ராஜாவாகிறபோது,  இருபத்தைந்து  வயதாயிருந்து,  எருசலேமிலே<Jerusalem>  பதினாறுவருஷம்  அரசாண்டான்;  சாதோக்கின்<Zadok>  குமாரத்தியாகிய  அவன்  தாயின்  பேர்  எருசாள்<Jerusha>.  {2Kgs  15:33}

 

அவன்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்;  தன்  தகப்பனாகிய  உசியா<Uzziah>  செய்தபடியெல்லாம்  செய்தான்.  {2Kgs  15:34}

 

மேடைகள்மாத்திரம்  அகற்றப்படவில்லை;  ஜனங்கள்  இன்னும்  மேடைகளின்மேல்  பலியிட்டுத்  தூபங்காட்டி  வந்தார்கள்;  இவன்  கர்த்தருடைய  ஆலயத்தின்  உயர்ந்த  வாசலைக்  கட்டினான்.  {2Kgs  15:35}

 

யோதாமின்<Jotham>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  15:36}

 

அந்நாட்களிலே  கர்த்தர்  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ரேத்சீனையும்<Rezin>,  ரெமலியாவின்<Remaliah>  குமாரனாகிய  பெக்காவையும்<Pekah>  யூதாவுக்கு<Judah>  விரோதமாக  அனுப்பத்தொடங்கினார்.  {2Kgs  15:37}

 

யோதாம்<Jotham>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  தன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  பட்டணத்திலே  தன்  பிதாக்களண்டையில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  ஆகாஸ்<Ahaz>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  15:38}

 

ரெமலியாவின்<Remaliah>  குமாரனாகிய  பெக்காவின்<Pekah>  பதினேழாம்  வருஷத்தில்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோதாமின்<Jotham>  குமாரன்  ஆகாஸ்<Ahaz>  ராஜாவானான்.  {2Kgs  16:1}

 

ஆகாஸ்<Ahaz>  ராஜாவாகிறபோது  இருபது  வயதாயிருந்து,  எருசலேமிலே<Jerusalem>  பதினாறு  வருஷம்  அரசாண்டான்;  அவன்  தன்  தகப்பனாகிய  தாவீதைப்போல்<David>  தன்  தேவனாகிய  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்யாமல்,  {2Kgs  16:2}

 

இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  வழியிலே  நடந்து,  கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்தின  ஜாதிகளுடைய  அருவருப்புகளின்படியே  தன்  குமாரனை  முதலாய்த்  தீக்கடக்கப்பண்ணினான்.  {2Kgs  16:3}

 

மேடைகளிலும்  மலைகளின்மேலும்  பச்சையான  சகல  மரத்தின்கீழும்  பலியிட்டுத்  தூபங்காட்டிவந்தான்.  {2Kgs  16:4}

 

அப்பொழுது  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ரேத்சீனும்<Rezin>,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ரெமலியாவின்<Remaliah>  குமாரன்  பெக்காவும்<Pekah>,  எருசலேமின்மேல்<Jerusalem>  யுத்தம்பண்ண  வந்து  ஆகாசை<Ahaz>  முற்றிக்கை  போட்டார்கள்;  ஆனாலும்  ஜெயிக்கமாட்டாதே  போனார்கள்.  {2Kgs  16:5}

 

அக்காலத்திலே  சீரியாவின்<Syria>  ராஜாவாகிய  ரேத்சீன்<Rezin>  ஏலாத்தைத்<Elath>  திரும்பச்  சீரியாவோடே<Syria>  சேர்த்துக்கொண்டு,  யூதரை<Jews>  ஏலாத்திலிருந்து<Elath>  துரத்தினான்;  சீரியர்<Syrians>  ஏலாத்திற்கு<Elath>  வந்து  இந்நாள்வரைக்கும்  அவ்விடத்திலே  குடியாயிருக்கிறார்கள்.  {2Kgs  16:6}

 

ஆகாஸ்<Ahaz>  அசீரியாவின்<Assyria>  ராஜாவாகிய  திகிலாத்பிலேசரிடத்திற்கு<Tiglathpileser>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நான்  உம்முடைய  அடியானும்  உம்முடைய  குமாரனுமாயிருக்கிறேன்;  நீர்  வந்து,  எனக்கு  விரோதமாயெழும்பின  சீரியா<Syria>  ராஜாவின்  கைக்கும்,  இஸ்ரவேல்<Israel>  ராஜாவின்  கைக்கும்  என்னை  நீங்கலாக்கிவிடும்  என்று  சொல்லச்சொல்லி;  {2Kgs  16:7}

 

கர்த்தருடைய  ஆலயத்திலும்  ராஜாவின்  அரமனைப்  பொக்கிஷங்களிலும்  அகப்பட்ட  வெள்ளியையும்  பொன்னையும்  எடுத்து,  அசீரியாவின்<Assyria>  ராஜாவுக்குக்  காணிக்கையாக  அனுப்பினான்.  {2Kgs  16:8}

 

அசீரியா<Assyria>  ராஜா  அவனுக்குச்  செவிகொடுத்து,  தமஸ்குவுக்குப்போய்<Damascus>  அதைப்  பிடித்து,  அதின்  குடிகளைக்  கீர்பட்டணத்திற்குச்<Kir>  சிறைபிடித்துக்கொண்டுபோய்,  ரேத்சீனைக்<Rezin>  கொன்றுபோட்டான்.  {2Kgs  16:9}

 

அப்பொழுது  ராஜாவாகிய  ஆகாஸ்<Ahaz>  தமஸ்குவிலுள்ள<Damascus>  அசீரியாவின்<Assyria>  ராஜாவாகிய  திகிலாத்பிலேசருக்கு<Tiglathpileser>  எதிர்கொண்டுபோய்த்  தமஸ்குவிலுள்ள<Damascus>  பலிபீடத்தைக்  கண்டான்.  ராஜாவாகிய  ஆகாஸ்<Ahaz>  அந்தப்  பலிபீடத்தின்  சாயலையும்,  அதினுடைய  சகல  வேலைப்பாடாகிய  அதின்  மாதிரியையும்  ஆசாரியனாகிய  உரியாவுக்கு<Urijah>  அனுப்பினான்.  {2Kgs  16:10}

 

ராஜாவாகிய  ஆகாஸ்<Ahaz>  தமஸ்குவிலிருந்து<Damascus>  வருகிறதற்குள்  ஆசாரியனாகிய  உரியா<Urijah>  அப்படிக்கொத்த  பலிபீடத்தைக்  கட்டி,  ராஜாவாகிய  ஆகாஸ்<Ahaz>  தமஸ்குவிலிருந்து<Damascus>  அனுப்பின  கட்டளையின்படியெல்லாம்  செய்தான்.  {2Kgs  16:11}

 

ராஜா  தமஸ்குவிலிருந்து<Damascus>  வந்தபோது,  அவன்  அந்தப்  பலிபீடத்தைப்  பார்த்து,  அந்தப்  பலிபீடத்தண்டையில்  சேர்ந்து,  அதின்மேல்  பலியிட்டு,  {2Kgs  16:12}

 

தன்  சர்வாங்க  தகனபலியையும்  தன்  போஜனபலியையும்  தகனித்து,  தன்  பானபலியை  வார்த்து,  தன்  சமாதானபலிகளின்  இரத்தத்தை  அந்தப்  பலிபீடத்தின்மேல்  தெளித்தான்.  {2Kgs  16:13}

 

கர்த்தரின்  சந்நிதியில்  இருந்த  வெண்கலப்  பலிபீடத்தை  அவன்  தன்  பலிபீடத்திற்கும்  கர்த்தரின்  ஆலயத்திற்கும்  நடுவே  ஆலயத்தின்  முகப்பிலிருந்து  எடுத்து,  அதைத்  தன்  பலிபீடத்திற்கு  வடபுறமாய்  வைத்தான்.  {2Kgs  16:14}

 

ராஜாவாகிய  ஆகாஸ்<Ahaz>  ஆசாரியனாகிய  உரியாவை<Urijah>  நோக்கி:  இந்தப்  பெரிய  பலிபீடத்தின்மேல்  நீ  காலைச்  சர்வாங்க  தகனபலியையும்,  மாலைப்போஜனபலியையும்,  ராஜாவின்  சர்வாங்க  தகனபலியையும்,  அவருடைய  போஜனபலியையும்,  தேசத்தினுடைய  சகல  ஜனத்தின்  சர்வாங்க  தகனபலியையும்,  அவர்கள்  போஜனபலியையும்,  அவர்கள்  பானபலிகளையும்  செலுத்தி,  அதின்மேல்  சர்வாங்க  தகனங்களின்  சகல  இரத்தத்தையும்,  பலிகளின்  சகல  இரத்தத்தையும்  தெளிப்பாயாக;  அந்த  வெண்கலப்  பலிபீடமோ,  நான்  சன்னதம்  கேட்கிறதற்கு  உதவும்  என்றான்.  {2Kgs  16:15}

 

ராஜாவாகிய  ஆகாஸ்<Ahaz>  கட்டளையிட்டபடியெல்லாம்  ஆசாரியனாகிய  உரியா<Urijah>  செய்தான்.  {2Kgs  16:16}

 

பின்னும்  ராஜாவாகிய  ஆகாஸ்<Ahaz>  ஆதாரங்களின்  சவுக்கைகளை  அறுத்துவிட்டு,  அவைகளின்மேலிருந்த  கொப்பரைகளை  எடுத்து,  கடல்தொட்டியைக்  கீழே  நிற்கிற  வெண்கல  ரிஷபங்களின்மேலிருந்து  இறக்கி,  அதைக்  கற்களின்  தளவரிசையிலே  வைத்து,  {2Kgs  16:17}

 

ஆலயத்தின்  அருகே  கட்டியிருந்த  ஓய்வுநாளின்  மண்டபத்தையும்,  ராஜா  பிரவேசிக்கும்  மண்டபத்தையும்,  அசீரியருடைய<Assyria>  ராஜாவினிமித்தம்  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  அப்புறப்படுத்தினான்.  {2Kgs  16:18}

 

ஆகாஸ்<Ahaz>  செய்த  மற்ற  வர்த்தமானங்கள்  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  16:19}

 

ஆகாஸ்<Ahaz>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  தாவீதின்<David>  நகரத்தில்  தன்  பிதாக்களண்டையிலே  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  குமாரனாகிய  எசேக்கியா<Hezekiah>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  16:20}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  ஆகாசின்<Ahaz>  பன்னிரண்டாம்  வருஷத்தில்,  ஏலாவின்<Elah>  குமாரனாகிய  ஓசெயா<Hoshea>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகி,  சமாரியாவிலே<Samaria>  ஒன்பதுவருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  {2Kgs  17:1}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  ஆனாலும்  தனக்கு  முன்னிருந்த  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்களைப்போல்  செய்யவில்லை.  {2Kgs  17:2}

 

அவனுக்கு  விரோதமாக  அசீரியாவின்<Assyria>  ராஜாவாகிய  சல்மனாசார்<Shalmaneser>  வந்தான்;  அப்பொழுது  ஓசெயா<Hoshea>  அவனைச்  சேவிக்கிறவனாகி,  அவனுக்குப்  பகுதிகட்டினான்.  {2Kgs  17:3}

 

ஓசெயா<Hoshea>  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  சோ<So>  என்பவனிடத்துக்கு  ஸ்தானாபதிகளை  அனுப்பினதும்,  தனக்கு  வருஷந்தோறும்  செய்ததுபோல்,  பகுதி  அனுப்பாதே  போனதுமான  கலக  யோசனையை  அசீரியாவின்<Assyria>  ராஜா  ஓசெயாவினிடத்திலே<Hoshea>  கண்டு,  அவனைப்  பிடித்துக்  கட்டிச்  சிறைச்சாலையிலே  வைத்தான்.  {2Kgs  17:4}

 

அசீரியா<Assyria>  ராஜா  தேசம்  எங்கும்  போய்,  சமாரியாவுக்கும்<Samaria>  வந்து  அதை  மூன்று  வருஷம்  முற்றிக்கைபோட்டிருந்தான்.  {2Kgs  17:5}

 

ஓசெயாவின்<Hoshea>  ஒன்பதாம்  வருஷத்தில்  அசீரியா<Assyria>  ராஜா  சமாரியாவைப்<Samaria>  பிடித்து,  இஸ்ரவேலை<Israel>  அசீரியாவுக்குச்<Assyria>  சிறையாகக்  கொண்டுபோய்,  அவர்களைக்  கோசான்<Gozan>  நதி  ஓரமான  ஆலாகிலும்<Halah>  ஆபோரிலும்<Habor>  மேதியரின்<Medes>  பட்டணங்களிலும்  குடியேற்றினான்.  {2Kgs  17:6}

 

எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனுடைய<Pharaoh>  கையின்கீழிருந்த  தங்களை  எகிப்து<Egypt>  தேசத்திலிருந்து  வரப்பண்ணின  தங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாக  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  பாவஞ்செய்து,  அந்நிய  தேவர்களுக்குப்  பயந்து  நடந்து,  {2Kgs  17:7}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்தின  ஜாதிகளின்  வழிபாடுகளிலும்  இஸ்ரவேல்<Israel>  ராஜாக்களின்  வழிபாடுகளிலும்  நடந்துகொண்டிருந்தார்கள்.  {2Kgs  17:8}

 

செய்யத்தகாத  காரியங்களை  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  தங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கு  விரோதமாக  இரகசியத்தில்  செய்ததுமன்றி,  காவல்காக்கிற  கோபுரங்கள்  தொடங்கி  அரணான  பட்டணங்கள்மட்டுமுள்ள  தங்கள்  ஊர்களிலெல்லாம்  தங்களுக்கு  மேடைகளையும்  கட்டி,  {2Kgs  17:9}

 

உயரமான  சகல  மேட்டின்மேலும்  பச்சையான  சகல  மரத்தின்கீழும்  தங்களுக்குச்  சிலைகளையும்  விக்கிரகத்  தோப்புகளையும்  நிறுத்தி,  {2Kgs  17:10}

 

கர்த்தர்  தங்களை  விட்டுக்  குடிவிலக்கின  ஜாதிகளைப்போல,  சகல  மேடைகளிலும்  தூபங்காட்டி,  கர்த்தருக்குக்  கோபமுண்டாகத்  துர்க்கிரியைகளைச்  செய்து,  {2Kgs  17:11}

 

இப்படிச்  செய்யத்தகாது  என்று  கர்த்தர்  தங்களுக்குச்  சொல்லியிருந்தும்,  நரகலான  விக்கிரகங்களைச்  சேவித்துவந்தார்கள்.  {2Kgs  17:12}

 

நீங்கள்  உங்கள்  பொல்லாத  வழிகளைவிட்டுத்  திரும்பி,  நான்  உங்கள்  பிதாக்களுக்குக்  கட்டளையிட்டதும்,  என்  ஊழியக்காரராகிய  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  உங்களுக்குச்  சொல்லியனுப்பினதுமான  நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம்  என்  கற்பனைகளையும்  என்  கட்டளைகளையும்  கைக்கொள்ளுங்கள்  என்று  கர்த்தர்  தீர்க்கதரிசிகள்  ஞானதிருஷ்டிக்காரர்  எல்லாரையுங்கொண்டு  இஸ்ரவேலுக்கும்<Israel>  யூதாவுக்கும்<Judah>  திடச்சாட்சியாய்  எச்சரித்துக்கொண்டிருந்தும்,  {2Kgs  17:13}

 

அவர்கள்  செவிகொடாமல்,  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்மேல்  விசுவாசியாமற்போன  கடினக்  கழுத்துள்ள  தங்கள்  பிதாக்களைப்போல்,  தங்கள்  கழுத்தைக்  கடினப்படுத்தி,  {2Kgs  17:14}

 

அவருடைய  கட்டளைகளையும்,  அவர்  தங்கள்  பிதாக்களோடே  பண்ணின  அவருடைய  உடன்படிக்கையையும்,  அவர்  தங்களுக்குத்  திடச்சாட்சியாய்க்  காண்பித்த  அவருடைய  சாட்சிகளையும்  வெறுத்துவிட்டு,  வீணான  விக்கிரகங்களைப்  பின்பற்றி  வீணராகி,  அவர்களைச்  சுற்றிலும்  இருக்கிறவர்களைப்போல,  செய்ய  வேண்டாமென்று  கர்த்தர்  தங்களுக்குக்  கட்டளையிட்டு  விலக்கியிருந்த  ஜாதிகளுக்குப்  பின்சென்று,  {2Kgs  17:15}

 

தங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  கற்பனைகளையெல்லாம்  விட்டுவிட்டு,  இரண்டு  கன்றுக்குட்டிகளாகிய  வார்ப்பித்த  விக்கிரகங்களைத்  தங்களுக்கு  உண்டாக்கி,  விக்கிரகத்  தோப்புகளை  நாட்டி,  வானத்தின்  சேனைகளையெல்லாம்  பணிந்துகொண்டு,  பாகாலைச்<Baal>  சேவித்தார்கள்.  {2Kgs  17:16}

 

அவர்கள்  தங்கள்  குமாரரையும்  தங்கள்  குமாரத்திகளையும்  தீக்கடக்கப்பண்ணி,  குறிகேட்டு  நிமித்தங்கள்  பார்த்து,  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்க  அவர்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்கிறதற்குத்  தங்களை  விற்றுப்  போட்டார்கள்.  {2Kgs  17:17}

 

ஆகையால்  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  மிகவும்  கோபமடைந்து,  அவர்களைத்  தம்முடைய  முகத்தைவிட்டு  அகற்றினார்;  யூதாகோத்திரமாத்திரமே<Judah>  மீதியாயிற்று.  {2Kgs  17:18}

 

யூதா<Judah>  ஜனங்களும்  தங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  கற்பனைகளைக்  கைக்கொள்ளாமல்  இஸ்ரவேல்<Israel>  உண்டாக்கின  வழிபாடுகளில்  நடந்தார்கள்.  {2Kgs  17:19}

 

ஆகையால்  கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  சந்ததியாரையெல்லாம்  புறக்கணித்து,  அவர்களைத்  தமது  முகத்தைவிட்டுத்  தள்ளுமட்டாக  ஒடுக்கி,  அவர்களைக்  கொள்ளைக்காரர்  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  {2Kgs  17:20}

 

இஸ்ரவேலர்<Israel>  தாவீது<David>  வம்சத்தைவிட்டுப்  பிரிந்து,  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாமை<Jeroboam>  ராஜாவாக்கினார்கள்;  அப்பொழுது  யெரொபெயாம்<Jeroboam>  இஸ்ரவேலைக்<Israel>  கர்த்தரை  விட்டுப்  பின்வாங்கவும்,  பெரிய  பாவத்தைச்  செய்யவும்பண்ணினான்.  {2Kgs  17:21}

 

அப்படியே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  யெரொபெயாம்<Jeroboam>  செய்த  எல்லாப்  பாவங்களிலும்  நடந்து,  {2Kgs  17:22}

 

கர்த்தர்  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  ஊழியக்காரர்  எல்லாரையும்  கொண்டு  சொல்லியிருந்தபடி,  அவர்களைத்  தமது  சமுகத்தைவிட்டு  அகற்றுகிறவரைக்கும்,  அவைகளை  விட்டு  விலகாதிருந்தார்கள்;  இப்படியே  இஸ்ரவேலர்<Israel>  தங்கள்  தேசத்தினின்று  அசீரியாவுக்குக்<Assyria>  கொண்டுபோகப்பட்டு  இந்நாள்வரைக்கும்  இருக்கிறார்கள்.  {2Kgs  17:23}

 

அசீரியா<Assyria>  ராஜா,  பாபிலோனிலும்<Babylon>,  கூத்தாவிலும்<Cuthah>,  ஆபாவிலும்<Ava>,  ஆமாத்திலும்<Hamath>,  செப்பர்வாயிமிலும்<Sepharvaim>  இருந்து  மனுஷரை  வரப்பண்ணி,  அவர்களை  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குப்  பதிலாகச்  சமாரியாவின்<Samaria>  பட்டணங்களிலே  குடியேற்றினான்;  இவர்கள்  சமாரியாவைச்<Samaria>  சொந்தமாய்க்  கட்டிக்கொண்டு  அதின்  பட்டணங்களிலே  குடியிருந்தார்கள்.  {2Kgs  17:24}

 

அவர்கள்  அங்கே  குடியேறினதுமுதல்,  கர்த்தருக்குப்  பயப்படாததினால்,  கர்த்தர்  அவர்களுக்குள்ளே  சிங்கங்களை  அனுப்பினார்;  அவைகள்  அவர்களில்  சிலரைக்  கொன்றுபோட்டது.  {2Kgs  17:25}

 

அப்பொழுது  ஜனங்கள்  அசீரியா<Assyria>  ராஜாவை  நோக்கி:  நீர்  இங்கேயிருந்து  அனுப்பி,  சமாரியாவின்<Samaria>  பட்டணங்களிலே  குடியேற்றுவித்த  ஜாதிகள்  அந்தத்  தேசத்துத்  தேவனுடைய  காரியத்தை  அறியாதபடியினால்,  அவர்  அவர்களுக்குள்ளே  சிங்கங்களை  அனுப்பினார்;  அந்தத்  தேசத்துத்  தேவனுடைய  காரியத்தை  அவர்கள்  அறியாதபடியினால்,  அவைகள்  அவர்களைக்  கொன்றுபோடுகிறது  என்று  சொன்னார்கள்.  {2Kgs  17:26}

 

அதற்கு  அசீரியா<Assyria>  ராஜா:  நீங்கள்  அங்கேயிருந்து  கொண்டுவந்த  ஆசாரியர்களில்  ஒருவனை  அங்கே  அழைத்துக்கொண்டுபோங்கள்;  அவர்கள்  அங்கே  குடியிருக்கும்படிக்கு,  அவன்  அவர்களுக்கு  அந்தத்  தேசத்துத்  தேவனுடைய  காரியத்தைப்  போதிக்கக்கடவன்  என்று  கட்டளையிட்டான்.  {2Kgs  17:27}

 

அப்படியே  அவர்கள்  சமாரியாவிலிருந்து<Samaria>  கொண்டுபோயிருந்த  ஆசாரியர்களில்  ஒருவன்  வந்து,  பெத்தேலிலே<Bethel>  குடியிருந்து,  கர்த்தருக்குப்  பயந்து  நடக்கவேண்டிய  விதத்தை  அவர்களுக்குப்  போதித்தான்.  {2Kgs  17:28}

 

ஆனாலும்  அந்தந்த  ஜாதி  தங்கள்  தங்கள்  தேவர்களைத்  தங்களுக்கு  உண்டுபண்ணி,  அந்தந்த  ஜாதியார்  குடியேறின  தங்கள்  தங்கள்  பட்டணங்களில்  சமாரியர்<Samaritans>  உண்டுபண்ணின  மேடைகளின்  கோவில்களில்  வைத்தார்கள்.  {2Kgs  17:29}

 

பாபிலோனின்<Babylon>  மனுஷர்  சுக்கோத்  பெனோத்தையும்<Succothbenoth>,  கூத்தின்<Cuth>  மனுஷர்  நேர்காலையும்<Nergal>,  ஆமாத்தின்<Hamath>  மனுஷர்  அசிமாவையும்<Ashima>,  {2Kgs  17:30}

 

ஆவியர்<Avites>  நிபேகாசையும்<Nibhaz>  தர்தாக்கையும்<Tartak>  உண்டாக்கினார்கள்,  செப்பர்வியர்<Sepharvites>  செப்பர்வாயிமின்<Sepharvaim>  தேவர்களாகிய  அத்ரமலேக்குக்கும்<Adrammelech>  அன்னமலேக்குக்கும்<Anammelech>  தங்கள்  பிள்ளைகளை  அக்கினியில்  தகனித்து  வந்தார்கள்.  {2Kgs  17:31}

 

அவர்கள்  கர்த்தருக்குப்  பயந்ததுமன்றி,  மேடைகளிலுள்ள  கோவில்களில்  தங்களுக்காக  ஆராதனை  செய்கிறதற்கு,  தங்களுக்குள்  ஈனமானவர்களை  ஆசாரியர்களாகவும்  ஏற்படுத்தினார்கள்.  {2Kgs  17:32}

 

அப்படியே  கர்த்தருக்குப்  பயந்தும்,  தாங்கள்  விட்டுவந்த  ஜாதிகளுடைய  முறைமையின்படியே  தங்கள்  தேவர்களைச்  சேவித்தும்  வந்தார்கள்.  {2Kgs  17:33}

 

இந்நாள்வரைக்கும்  அவர்கள்  தங்கள்  முந்தின  முறைகளின்படியே  செய்து  வருகிறார்கள்;  அவர்கள்  கர்த்தருக்குப்  பயந்து  நடக்கிறதுமில்லை,  தங்கள்  சுயதிட்டங்கள்  முறைமைகளின்படியாகிலும்,  கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  என்று  பேரிட்ட  யாக்கோபின்<Jacob>  புத்திரருக்குக்  கற்பித்த  நியாயப்பிரமாணத்திற்கும்  கற்பனைக்கும்  ஒத்தபடியாகிலும்  செய்கிறதுமில்லை.  {2Kgs  17:34}

 

கர்த்தர்  இவர்களோடே  உடன்படிக்கைபண்ணி,  இவர்களுக்குக்  கற்பித்தது  என்னவென்றால்:  நீங்கள்  அந்நிய  தேவர்களுக்குப்  பயப்படாமலும்,  அவர்களைப்  பணிந்துகொள்ளாமலும்,  சேவியாமலும்,  அவர்களுக்குப்  பலியிடாமலும்,  {2Kgs  17:35}

 

உங்களை  மகா  வல்லமையினாலும்  ஓங்கிய  புயத்தினாலும்  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  வரப்பண்ணின  கர்த்தருக்கே  பயந்து,  அவரையே  பணிந்துகொண்டு,  அவருக்கே  பலியிட்டு,  {2Kgs  17:36}

 

அவர்  உங்களுக்கு  எழுதிக்கொடுத்த  திட்டங்களின்படியும்,  முறைமைகளின்படியும்,  நியாயப்பிரமாணத்தின்படியும்,  கற்பனைகளின்படியும்,  நீங்கள்  சகல  நாளும்  செய்கிறதற்குக்  கவனமாயிருந்து  அந்நிய  தேவர்களுக்குப்  பயப்படாதிருங்கள்.  {2Kgs  17:37}

 

நான்  உங்களோடே  பண்ணின  உடன்படிக்கையை  நீங்கள்  மறவாமலும்,  அந்நிய  தேவர்களுக்குப்  பயப்படாமலும்,  {2Kgs  17:38}

 

உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்கே  பயந்து  நடப்பீர்களாக;  அப்பொழுது  அவர்  உங்கள்  எல்லாச்  சத்துருக்களின்  கைக்கும்  உங்களைத்  தப்புவிப்பார்  என்று  அவர்களுக்குச்  சொல்லியிருந்தார்.  {2Kgs  17:39}

 

ஆனாலும்  அவர்கள்  செவிகொடாமல்  தங்கள்  முந்தின  முறைமைகளின்படியே  செய்தார்கள்.  {2Kgs  17:40}

 

அப்படியே  அந்த  ஜாதிகள்  கர்த்தருக்குப்  பயந்தும்,  தங்கள்  விக்கிரகங்களைச்  சேவித்தும்  வந்தார்கள்;  அவர்கள்  பிள்ளைகளும்  அவர்கள்  பிள்ளைகளின்  பிள்ளைகளும்  தங்கள்  பிதாக்கள்  செய்தபடியே  இந்நாள்வரைக்கும்  செய்துவருகிறார்கள்.  {2Kgs  17:41}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஏலாவின்<Elah>  குமாரன்  ஓசெயாவின்<Hoshea>  மூன்றாம்  வருஷத்திலே  ஆகாஸ்<Ahaz>  என்னும்  யூதாவுடைய<Judah>  ராஜாவின்  குமாரனாகிய  எசேக்கியா<Hezekiah>  ராஜாவானான்.  {2Kgs  18:1}

 

அவன்  ராஜாவாகிறபோது,  இருபத்தைந்து  வயதாயிருந்து,  எருசலேமிலே<Jerusalem>  இருபத்தொன்பது  வருஷம்  அரசாண்டான்;  சகரியாவின்<Zachariah>  குமாரத்தியாகிய  அவன்  தாயின்பேர்  ஆபி<Abi>.  {2Kgs  18:2}

 

அவன்  தன்  தகப்பனாகிய  தாவீது<David>  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்தான்.  {2Kgs  18:3}

 

அவன்  மேடைகளை  அகற்றி,  சிலைகளைத்  தகர்த்து,  விக்கிரகத்தோப்புகளை  வெட்டி,  மோசே<Moses>  பண்ணியிருந்த  வெண்கலச்  சர்ப்பத்தை  உடைத்துப்போட்டான்;  அந்நாட்கள்மட்டும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அதற்குத்  தூபங்காட்டி  வந்தார்கள்;  அதற்கு  நிகுஸ்தான்<Nehushtan>  என்று  பேரிட்டான்.  {2Kgs  18:4}

 

அவன்  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரின்மேல்  வைத்த  நம்பிக்கையிலே,  அவனுக்குப்  பின்னும்  அவனுக்கு  முன்னும்  இருந்த  யூதாவின்<Judah>  ராஜாக்களிலெல்லாம்  அவனைப்போல்  ஒருவனும்  இருந்ததில்லை.  {2Kgs  18:5}

 

அவன்  கர்த்தரை  விட்டுப்  பின்வாங்காமல்  அவரைச்  சார்ந்திருந்து,  கர்த்தர்  மோசேக்குக்<Moses>  கற்பித்த  அவருடைய  கற்பனைகளைக்  கைக்கொண்டு  நடந்தான்.  {2Kgs  18:6}

 

ஆகையால்  கர்த்தர்  அவனோடிருந்தார்;  அவன்  போகிற  இடம்  எங்கும்  அவனுக்கு  அநுகூலமாயிற்று;  அவன்  அசீரியா<Assyria>  ராஜாவைச்  சேவிக்காமல்,  அவன்  அதிகாரத்தைத்  தள்ளிவிட்டான்.  {2Kgs  18:7}

 

அவன்  பெலிஸ்தரைக்<Philistines>  காசாமட்டும்<Gaza>  அதின்  எல்லைகள்  பரியந்தமும்,  காவலாளர்  காக்கிற  கோபுரங்கள்  தொடங்கி  அரணான  நகரங்கள்  பரியந்தமும்  முறிய  அடித்தான்.  {2Kgs  18:8}

 

இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஏலாவின்<Elah>  குமாரன்  ஓசெயாவின்<Hoshea>  ஏழாம்  வருஷத்திற்குச்  சரியான  எசேக்கியா<Hezekiah>  ராஜாவின்  நாலாம்  வருஷத்திலே  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சல்மனாசார்<Shalmaneser>  சமாரியாவுக்கு<Samaria>  விரோதமாய்  வந்து  அதை  முற்றிக்கைபோட்டான்.  {2Kgs  18:9}

 

மூன்று  வருஷம்  சென்றபின்பு,  அவர்கள்  அதைப்  பிடித்தார்கள்;  எசேக்கியாவின்<Hezekiah>  ஆறாம்  வருஷத்திலும்,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஓசெயாவின்<Hoshea>  ஒன்பதாம்  வருஷத்திலும்  சமாரியா<Samaria>  பிடிபட்டது.  {2Kgs  18:10}

 

அசீரியா<Assyria>  ராஜா  இஸ்ரவேலை<Israel>  அசீரியாவுக்குச்<Assyria>  சிறைபிடித்துக்கொண்டுபோய்,  கோசான்<Gozan>  நதியோரமான  ஆலாகிலும்<Halah>  ஆபோரிலும்<Habor>  மேதியரின்<Medes>  பட்டணங்களிலும்  குடியேற்றினான்.  {2Kgs  18:11}

 

அவர்கள்  தங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சத்தத்திற்குச்  செவிகொடாமல்,  அவருடைய  உடன்படிக்கையையும்  கர்த்தரின்  தாசனாகிய  மோசே<Moses>  கற்பித்த  யாவற்றையும்  மீறி,  அதற்குச்  செவிகொடாமலும்  அதின்படி  செய்யாமலும்  போனார்கள்.  {2Kgs  18:12}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியாவின்<Hezekiah>  பதினாலாம்  வருஷத்திலே  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சனகெரிப்<Sennacherib>  யூதாவிலிருக்கிற<Judah>  அரணான  சகல  பட்டணங்களுக்கும்  விரோதமாய்  வந்து  அவைகளைப்  பிடித்தான்.  {2Kgs  18:13}

 

அப்பொழுது  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியா<Hezekiah>  லாகீசிலுள்ள<Lachish>  அசீரியா<Assyria>  ராஜாவுக்கு  ஆள்  அனுப்பி:  நான்  குற்றஞ்செய்தேன்;  என்னைவிட்டுத்  திரும்பிப்போம்;  நீர்  என்மேல்  சுமத்துவதைச்  சுமப்பேன்  என்று  சொன்னான்;  அப்படியே  அசீரியா<Assyria>  ராஜா  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியாவின்மேல்<Hezekiah>  முந்நூறு  தாலந்து  வெள்ளியையும்  முப்பது  தாலந்து  பொன்னையும்  சுமத்தினான்.  {2Kgs  18:14}

 

ஆதலால்  எசேக்கியா<Hezekiah>  கர்த்தரின்  ஆலயத்திலும்  ராஜாவுடைய  அரமனை  பொக்கிஷங்களிலும்  அகப்பட்ட  எல்லா  வெள்ளியையும்  கொடுத்தான்.  {2Kgs  18:15}

 

அக்காலத்திலே  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியா<Hezekiah>  கர்த்தருடைய  ஆலயக்கதவுகளிலும்  நிலைகளிலும்  தான்  அழுத்தியிருந்த  பொன்  தகடுகளைக்  கழற்றி  அவைகளை  அசீரியா<Assyria>  ராஜாவுக்குக்  கொடுத்தான்.  {2Kgs  18:16}

 

ஆகிலும்  அசீரியா<Assyria>  ராஜா  லாகீசிலிருந்து<Lachish>  தர்தானையும்<Tartan>  ரப்சாரீசையும்<Rabsaris>  ரப்சாக்கேயையும்<Rabshakeh>  பெரிய  சேனையோடே  எருசலேமுக்கு<Jerusalem>  எசேக்கியா<Hezekiah>  ராஜாவினிடத்தில்  அனுப்பினான்;  அவர்கள்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  வண்ணார்  துறையின்  வழியிலுள்ள  மேல்குளத்துச்  சாலகத்தண்டையிலே  நின்று,  {2Kgs  18:17}

 

ராஜாவை  அழைப்பித்தார்கள்;  அப்பொழுது  இல்க்கியாவின்<Hilkiah>  குமாரனாகிய  எலியாக்கீம்<Eliakim>  என்னும்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  செப்னா<Shebna>  என்னும்  சம்பிரதியும்,  ஆசாப்பின்<Asaph>  குமாரனாகிய  யோவாக்<Joah>  என்னும்  கணக்கனும்  அவர்களிடத்திற்குப்  புறப்பட்டுப்போனார்கள்.  {2Kgs  18:18}

 

ரப்சாக்கே<Rabshakeh>  அவர்களை  நோக்கி:  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  மகாராஜாவானவர்  உரைக்கிறதும்,  நீங்கள்  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  சொல்லவேண்டியதும்  என்னவென்றால்:  நீ  நம்பியிருக்கிற  இந்த  நம்பிக்கை  என்ன?  {2Kgs  18:19}

 

யுத்தத்திற்கு  மந்திராலோசனையும்  வல்லமையும்  உண்டென்று  நீ  சொல்லுகிறாயே,  அது  வாய்ப்பேச்சேயன்றி  வேறல்ல;  நீ  என்னை  விரோதிக்கும்படி  யார்மேல்  நம்பிக்கைவைத்திருக்கிறாய்?  {2Kgs  18:20}

 

இதோ,  நெரிந்த  நாணல்கோலாகிய  அந்த  எகிப்தை<Egypt>  நம்புகிறாய்;  அதின்மேல்  ஒருவன்  சாய்ந்தால்,  அது  அவன்  உள்ளங்கையில்  பட்டு  உருவிப்போம்;  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோன்<Pharaoh>  தன்னை  நம்புகிற  யாவருக்கும்  இப்படியே  இருப்பான்.  {2Kgs  18:21}

 

நீங்கள்  என்னிடத்தில்:  எங்கள்  தேவனாகிய  கர்த்தரை  நம்புகிறோம்  என்று  சொல்லுவீர்களாகில்,  அவருடைய  மேடைகளையும்  அவருடைய  பலிபீடங்களையும்  அல்லவோ  எசேக்கியா<Hezekiah>  அகற்றி,  யூதாவையும்<Judah>  எருசலேமையும்<Jerusalem>  நோக்கி:  எருசலேமிலிருக்கிற<Jerusalem>  இந்தப்  பலிபீடத்தின்முன்  பணியுங்கள்  என்றானே.  {2Kgs  18:22}

 

நான்  உனக்கு  இரண்டாயிரம்  குதிரைகளைக்  கொடுப்பேன்;  நீ  அவைகள்மேல்  ஏறத்தக்கவர்களைச்  சம்பாதிக்கக்கூடுமானால்  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடே  சபதங்கூறு.  {2Kgs  18:23}

 

கூறாதேபோனால்,  நீ  என்  ஆண்டவனுடைய  ஊழியக்காரரில்  ஒரே  ஒரு  சிறிய  தலைவனின்  முகத்தை  எப்படித்  திருப்புவாய்?  இரதங்களோடு  குதிரைவீரரும்  வருவார்கள்  என்று  எகிப்தையா<Egypt>  நம்புகிறாய்?  {2Kgs  18:24}

 

இப்போதும்  கர்த்தருடைய  கட்டளையில்லாமல்  இந்த  ஸ்தலத்தை  அழிக்கவந்தேனோ?  இந்தத்  தேசத்திற்கு  விரோதமாய்ப்  போய்  அதை  அழித்துப்போடு  என்று  கர்த்தர்  என்னோடே  சொன்னாரே  என்றான்.  {2Kgs  18:25}

 

அப்பொழுது  இல்க்கியாவின்<Hilkiah>  குமாரன்  எலியாக்கீமும்<Eliakim>  செப்னாவும்<Shebna>  யோவாகும்<Joah>  ரப்சாக்கேயைப்<Rabshakeh>  பார்த்து:  உமது  அடியாரோடே  சீரியபாஷையிலே<Syrian>  பேசும்;  அது  எங்களுக்குத்  தெரியும்;  அலங்கத்திலிருக்கிற  ஜனத்தின்  செவிகள்  கேட்க  எங்களோடே  யூதபாஷையிலே<Jews>  பேசவேண்டாம்  என்றார்கள்.  {2Kgs  18:26}

 

அதற்கு  ரப்சாக்கே<Rabshakeh>:  உங்களோடுங்கூடத்  தங்கள்  மலத்தைத்  தின்னவும்  தங்கள்  நீரைக்  குடிக்கவும்  அலங்கத்திலே  தங்கியிருக்கிற  மனுஷரண்டைக்கே  அல்லாமல்,  உன்  ஆண்டவனண்டைக்கும்  உன்னண்டைக்குமா  என்  ஆண்டவன்  இந்த  வார்த்தைகளைப்  பேச  என்னை  அனுப்பினார்  என்று  சொல்லி,  {2Kgs  18:27}

 

ரப்சாக்கே<Rabshakeh>  நின்றுகொண்டு  யூதபாஷையிலே<Jews>  உரத்தசத்தமாய்:  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  மகாராஜாவுடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  {2Kgs  18:28}

 

எசேக்கியா<Hezekiah>  உங்களை  வஞ்சியாதபடி  பாருங்கள்;  அவன்  உங்களை  என்  கையிலிருந்து  தப்புவிக்கமாட்டான்.  {2Kgs  18:29}

 

கர்த்தர்  நம்மை  நிச்சயமாய்த்  தப்புவிப்பார்;  இந்த  நகரம்  அசீரியா<Assyria>  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை  என்று  சொல்லி,  எசேக்கியா<Hezekiah>  உங்களைக்  கர்த்தரை  நம்பப்பண்ணுவான்;  அதற்கு  இடங்கொடாதிருங்கள்  என்று  ராஜா  சொல்லுகிறார்.  {2Kgs  18:30}

 

எசேக்கியாவின்<Hezekiah>  சொல்லைக்  கேளாதிருங்கள்;  அசீரியா<Assyria>  ராஜா  சொல்லுகிறதாவது:  நீங்கள்  என்னோடே  ராசியாகி,  காணிக்கையோடே  என்னிடத்தில்  வாருங்கள்;  நான்  வந்து,  உங்களை  உங்கள்  தேசத்துக்கு  ஒப்பான  தானியமும்  திராட்சத்தோட்டமுமுள்ள  தேசமும்,  அப்பமும்  திராட்சரசமுமுள்ள  தேசமும்,  ஒலிவ  எண்ணெயும்  தேனுமுள்ள  தேசமுமாகிய  சீமைக்கு  அழைத்துக்கொண்டுபோகுமளவும்,  {2Kgs  18:31}

 

அவனவன்  தன்தன்  திராட்சச்செடியின்  கனியையும்  தன்தன்  அத்திமரத்தின்  கனியையும்  புசித்து,  அவனவன்  தன்  தன்  கிணற்றின்  தண்ணீரைக்  குடியுங்கள்;  இவ்விதமாய்  நீங்கள்  சாகாமல்  பிழைப்பீர்கள்;  கர்த்தர்  நம்மைத்  தப்புவிப்பார்  என்று  உங்களைப்  போதனைசெய்ய  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  செவிகொடாதிருங்கள்.  {2Kgs  18:32}

 

ஜாதிகளுடைய  தேவர்களில்  யாராவது  தங்கள்  தேசத்தை  அசீரியா<Assyria>  ராஜாவின்  கைக்குத்  தப்புவித்ததுண்டோ?  {2Kgs  18:33}

 

ஆமாத்<Hamath>,  அர்பாத்<Arpad>  பட்டணங்களின்  தேவர்கள்  எங்கே?  செப்பர்வாயிம்<Sepharvaim>,  ஏனா<Hena>,  ஈவாப்<Ivah>  பட்டணங்களின்  தேவர்கள்  எங்கே?  அவர்கள்  சமாரியாவை<Samaria>  என்  கைக்குத்  தப்புவித்ததுண்டோ?  {2Kgs  18:34}

 

கர்த்தர்  எருசலேமை<Jerusalem>  என்  கைக்குத்  தப்புவிப்பார்  என்பதற்கு,  அந்தத்  தேசங்களுடைய  எல்லா  தேவர்களுக்குள்ளும்  தங்கள்  தேசத்தை  என்  கைக்குத்  தப்புவித்தவர்  யார்  என்கிறார்  என்று  சொன்னான்.  {2Kgs  18:35}

 

ஆனாலும்  ஜனங்கள்  அவனுக்கு  ஒரு  வார்த்தையும்  பிரதியுத்தரமாகச்  சொல்லாமல்  மவுனமாயிருந்தார்கள்;  அவனுக்கு  மறுஉத்தரவு  சொல்லவேண்டாம்  என்று  ராஜா  கட்டளையிட்டிருந்தான்.  {2Kgs  18:36}

 

அப்பொழுது  இல்க்கியாவின்<Hilkiah>  குமாரனாகிய  எலியாக்கீம்<Eliakim>  என்னும்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  செப்னா<Shebna>  என்னும்  சம்பிரதியும்,  ஆசாப்பின்<Asaph>  குமாரன்  யோவாக்<Joah>  என்னும்  கணக்கனும்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  எசேக்கியாவினிடத்தில்<Hezekiah>  வந்து,  ரப்சாக்கேயின்<Rabshakeh>  வார்த்தைகளை  அவனுக்குத்  தெரிவித்தார்கள்.  {2Kgs  18:37}

 

ராஜாவாகிய  எசேக்கியா<Hezekiah>  அதைக்  கேட்டபோது,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்து,  இரட்டு  உடுத்திக்கொண்டு,  கர்த்தருடைய  ஆலயத்தில்  பிரவேசித்து,  {2Kgs  19:1}

 

அரமனை  விசாரிப்புக்காரனாகிய  எலியாக்கீமையும்<Eliakim>,  சம்பிரதியாகிய  செப்னாவையும்<Shebna>,  ஆசாரியர்களின்  மூப்பரையும்,  ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>  என்னும்  தீர்க்கதரிசியினிடத்துக்கு  இரட்டு  உடுத்திக்கொண்டவர்களாக  அனுப்பினான்.  {2Kgs  19:2}

 

இவர்கள்  அவனை  நோக்கி:  இந்த  நாள்  நெருக்கமும்  கண்டிதமும்  தூஷணமும்  அநுபவிக்கிற  நாள்;  பிள்ளைபேறு  நோக்கியிருக்கிறது,  பெறவோ  பெலனில்லை.  {2Kgs  19:3}

 

ஜீவனுள்ள  தேவனை  நிந்திக்கும்படி  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  தன்  ஆண்டவனால்  அனுப்பப்பட்ட  ரப்சாக்கே<Rabshakeh>  சொன்ன  வார்த்தைகளையெல்லாம்  உமது  தேவனாகிய  கர்த்தர்  கேட்டிருக்கிறார்;  உமது  தேவனாகிய  கர்த்தர்  கேட்டிருக்கிற  வார்த்தைகளினிமித்தம்  தண்டனைசெய்வார்;  ஆகையால்  இன்னும்  மீதியாயிருக்கிறவர்களுக்காக  விண்ணப்பஞ்செய்வீராக  என்று  எசேக்கியா<Hezekiah>  சொல்லச்சொன்னார்  என்றார்கள்.  {2Kgs  19:4}

 

இவ்விதமாய்  எசேக்கியா<Hezekiah>  ராஜாவின்  ஊழியக்காரர்  ஏசாயாவினிடத்தில்<Isaiah>  வந்து  சொன்னார்கள்.  {2Kgs  19:5}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>  அவர்களை  நோக்கி:  அசீரியா<Assyria>  ராஜாவின்  ஊழியக்காரர்  என்னைத்  தூஷித்ததும்  நீர்  கேட்டதுமான  வார்த்தைகளினாலே  பயப்படாதேயும்.  {2Kgs  19:6}

 

இதோ,  அவன்  ஒரு  செய்தியைக்  கேட்டு,  தன்  தேசத்துக்குத்  திரும்புவதற்கான  ஆவியை  நான்  அவனுக்குள்  அனுப்பி,  அவனை  அவன்  தேசத்திலே  பட்டயத்தால்  விழப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்பதை  உங்கள்  ஆண்டவனிடத்தில்  சொல்லுங்கள்  என்றான்.  {2Kgs  19:7}

 

அசீரியா<Assyria>  ராஜா  லாகீசைவிட்டுப்<Lachish>  புறப்பட்டான்  என்று  கேள்விப்பட்டு,  ரப்சாக்கே<Rabshakeh>  திரும்பிப்போய்,  அவன்  லிப்னாவின்மேல்<Libnah>  யுத்தம்பண்ணுகிறதைக்  கண்டான்.  {2Kgs  19:8}

 

இதோ,  எத்தியோப்பியா<Ethiopia>  ராஜாவாகிய  தீராக்கா<Tirhakah>  உம்மோடு  யுத்தம்பண்ணப்  புறப்பட்டான்  என்று  சொல்லக்  கேள்விப்பட்டான்;  அப்பொழுது  அவன்  திரும்ப  எசேக்கியாவினிடத்துக்கு<Hezekiah>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  {2Kgs  19:9}

 

நீங்கள்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  எருசலேம்<Jerusalem>  அசீரியா<Assyria>  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று  நீ  நம்பியிருக்கிற  உன்  தேவன்  உன்னை  எத்த  ஒட்டாதே.  {2Kgs  19:10}

 

இதோ,  அசீரியா<Assyria>  ராஜாக்கள்  சகல  தேசங்களையும்  சங்கரித்த  செய்தியை  நீ  கேட்டிருக்கிறாயே,  நீ  தப்புவாயோ?  {2Kgs  19:11}

 

என்  பிதாக்கள்  அழித்துவிட்ட  கோசானையும்<Gozan>  ஆரானையும்<Haran>  ரேத்சேப்பையும்<Rezeph>,  தெலாசாரிலிருந்த<Thelasar>  ஏதேனின்<Eden>  புத்திரரையும்  அவர்களுடைய  தேவர்கள்  தப்புவித்ததுண்டோ?  {2Kgs  19:12}

 

ஆமாத்தின்<Hamath>  ராஜாவும்,  அர்பாத்தின்<Arpad>  ராஜாவும்,  செப்பர்வாயிம்<Sepharvaim>  ஏனா<Hena>  ஈவா<Ivah>  பட்டணங்களின்  ராஜாவும்  எங்கே?  என்று  சொல்லுங்கள்  என்றான்.  {2Kgs  19:13}

 

எசேக்கியா<Hezekiah>  ஸ்தானாபதிகளின்  கையிலிருந்து  நிருபத்தை  வாங்கி  வாசித்த  பின்பு,  அவன்  கர்த்தரின்  ஆலயத்திற்குப்  போய்,  அதைக்  கர்த்தருக்கு  முன்பாக  விரித்து,  {2Kgs  19:14}

 

கர்த்தரை  நோக்கி:  கேருபீன்களின்<cherubims>  மத்தியில்  வாசம்பண்ணுகிற  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  ஒருவரே  பூமியின்  ராஜ்யங்களுக்கெல்லாம்  தேவனானவர்;  நீர்  வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கினீர்.  {2Kgs  19:15}

 

கர்த்தாவே,  உமது  செவியைச்  சாய்த்துக்  கேளும்;  கர்த்தாவே,  நீர்  உமது  கண்களைத்  திறந்துபாரும்;  சனகெரிப்<Sennacherib>  ஜீவனுள்ள  தேவனை  நிந்திக்கும்படிக்குச்  சொல்லியனுப்பின  வார்த்தைகளைக்  கேளும்.  {2Kgs  19:16}

 

கர்த்தாவே,  அசீரியா<Assyria>  ராஜாக்கள்  அந்த  ஜாதிகளையும்  அவர்கள்  தேசத்தையும்  நாசமாக்கி,  {2Kgs  19:17}

 

அவர்களுடைய  தேவர்களை  நெருப்பிலே  போட்டுவிட்டது  மெய்தான்;  அவைகள்  தேவர்கள்  அல்லவே,  மனுஷர்  கைவேலையான  மரமும்  கல்லும்தானே;  ஆகையால்  அவைகளை  நிர்த்தூளியாக்கினார்கள்.  {2Kgs  19:18}

 

இப்போதும்  எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  ஒருவரே  தேவனாகிய  கர்த்தர்  என்று  பூமியின்  ராஜ்யங்கள்  எல்லாம்  அறியும்படிக்கு,  எங்களை  அவன்  கைக்கு  நீங்கலாக்கி  இரட்சியும்  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  {2Kgs  19:19}

 

அப்பொழுது  ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  சொல்லியனுப்பினது:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சனகெரிபின்நிமித்தம்<Sennacherib>  நீ  என்னை  நோக்கிப்  பண்ணின  விண்ணப்பத்தைக்  கேட்டேன்.  {2Kgs  19:20}

 

அவனைக்குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிற  வசனமாவது:  சீயோன்<Zion>  குமாரத்தியாகிய  கன்னியாஸ்திரீ  உன்னை  இகழ்ந்து,  உன்னைப்  பரிகாசம்பண்ணுகிறாள்;  எருசலேம்<Jerusalem>  குமாரத்தி  உன்  பின்னாலே  தலையைத்  துலுக்குகிறாள்.  {2Kgs  19:21}

 

யாரை  நிந்தித்துத்  தூஷித்தாய்?  யாருக்கு  விரோதமாய்  உன்  சத்தத்தை  உயர்த்தினாய்?  நீ  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருக்கு  விரோதமாயல்லவோ  உன்  கண்களை  மேட்டிமையாக  ஏறெடுத்தாய்?  {2Kgs  19:22}

 

உன்  ஸ்தானாபதிகளைக்கொண்டு  நீ  ஆண்டவரை  நிந்தித்து:  என்  இரதங்களின்  திரளினாலே  நான்  மலைகளின்  கொடுமுடிகளுக்கும்  லீபனோனின்<Lebanon>  சிகரங்களுக்கும்  வந்து  ஏறினேன்;  அதின்  உயரமான  கேதுருமரங்களையும்,  உச்சிதமான  தேவதாரி  விருட்சங்களையும்  நான்  வெட்டி,  அதின்  கடையாந்தரத்  தாபரமட்டும்,  அதின்  செழுமையான  வனமட்டும்  வருவேன்  என்றும்,  {2Kgs  19:23}

 

நான்  அந்நியதேசங்களில்  கிணறு  வெட்டித்  தண்ணீர்  குடித்தேன்;  என்  உள்ளங்கால்களினால்  அரணிப்பான  இடங்களின்  அகழிகளையெல்லாம்  வறளவும்  பண்ணினேன்  என்றும்  சொன்னாய்.  {2Kgs  19:24}

 

நான்  வெகுகாலத்திற்குமுன்  அதை  நியமித்து,  பூர்வநாட்கள்முதல்  அதைத்  திட்டம்பண்ணினேன்  என்பதை  நீ  கேட்டதில்லையோ?  இப்பொழுது  நீ  அரணான  பட்டணங்களைப்  பாழான  மண்மேடுகள்  ஆக்கும்படிக்கு  நானே  அதைச்  சம்பவிக்கப்பண்ணினேன்.  {2Kgs  19:25}

 

அதினாலே  அவைகளின்  குடிகள்  கையிளைத்தவர்களாகி,  கலங்கி  வெட்கப்பட்டு,  வெளியின்  பூண்டுக்கும்,  பச்சிலைக்கும்,  வீடுகளின்மேல்  முளைக்கும்  புல்லுக்கும்,  ஓங்கிவளருமுன்  தீய்ந்துபோம்  பயிருக்கும்  சமானமானார்கள்.  {2Kgs  19:26}

 

உன்  இருப்பையும்,  உன்  போக்கையும்,  உன்  வரவையும்,  நீ  எனக்கு  விரோதமாய்க்  கொந்தளிக்கிறதையும்  அறிவேன்.  {2Kgs  19:27}

 

நீ  எனக்கு  விரோதமாய்க்  கொந்தளித்து,  வீரியம்  பேசினது  என்  செவிகளில்  ஏறினபடியினால்,  நான்  என்  துறட்டை  உன்  மூக்கிலும்  என்  கடிவாளத்தை  உன்  வாயிலும்  போட்டு,  நீ  வந்தவழியே  உன்னைத்  திருப்பிக்கொண்டுபோவேன்  என்று  அவனைக்குறித்துச்  சொல்லுகிறார்.  {2Kgs  19:28}

 

உனக்கு  அடையாளமாயிருப்பது  என்னவென்றால்:  இந்த  வருஷத்திலே  தப்பிப்  பயிராகிறதையும்,  இரண்டாம்  வருஷத்திலே  தானாய்  விளைகிறதையும்  சாப்பிடுவீர்கள்;  மூன்றாம்  வருஷத்திலோ  விதைத்து  அறுத்து,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  அவைகளின்  கனிகளைப்  புசிப்பீர்கள்.  {2Kgs  19:29}

 

யூதா  வம்சத்தாரில்<Judah>  தப்பி  மீந்திருக்கிறவர்கள்  மறுபடியும்  கீழே  வேர்பற்றி  மேலே  கனிகொடுப்பார்கள்.  {2Kgs  19:30}

 

மீதியாயிருக்கிறவர்கள்  எருசலேமிலும்<Jerusalem>,  தப்பினவர்கள்  சீயோன்<Zion>  மலையிலும்  இருந்து  புறப்படுவார்கள்;  சேனைகளுடைய  கர்த்தரின்  வைராக்கியம்  இதைச்  செய்யும்.  {2Kgs  19:31}

 

ஆகையால்  கர்த்தர்  அசீரியா<Assyria>  ராஜாவைக்குறித்து:  அவன்  இந்த  நகரத்திற்குள்  பிரவேசிப்பதில்லை;  இதின்மேல்  அம்பு  எய்வதுமில்லை;  இதற்குமுன்  கேடகத்தோடே  வருவதுமில்லை;  இதற்கு  எதிராகக்  கொத்தளம்  போடுவதுமில்லை.  {2Kgs  19:32}

 

அவன்  இந்த  நகரத்திற்குள்  பிரவேசியாமல்,  தான்  வந்தவழியே  திரும்பிப்போவான்.  {2Kgs  19:33}

 

என்  நிமித்தமும்  என்  தாசனாகிய  தாவீதின்<David>  நிமித்தமும்  நான்  இந்த  நகரத்தை  இரட்சிக்கும்படிக்கு,  இதற்கு  ஆதரவாயிருப்பேன்  என்பதைக்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்லியனுப்பினான்.  {2Kgs  19:34}

 

அன்று  இராத்திரியில்  சம்பவித்தது  என்னவென்றால்:  கர்த்தருடைய  தூதன்  புறப்பட்டு,  அசீரியரின்<Assyrians>  பாளயத்தில்  லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச்  சங்கரித்தான்;  அதிகாலமே  எழுந்திருக்கும்போது,  இதோ,  அவர்கள்  எல்லாரும்  செத்த  பிரேதங்களாய்க்  கிடந்தார்கள்.  {2Kgs  19:35}

 

அப்பொழுது  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சனகெரிப்<Sennacherib>  பிரயாணப்பட்டு,  திரும்பிப்போய்  நினிவேயில்<Nineveh>  இருந்துவிட்டான்.  {2Kgs  19:36}

 

அவன்  தன்  தேவனாகிய  நிஸ்ரோகின்<Nisroch>  கோவிலிலே  பணிந்துகொள்ளுகிறபோது,  அவன்  குமாரராகிய  அத்ரமலேக்கும்<Adrammelech>  சரேத்சேரும்<Sharezer>  அவனைப்  பட்டயத்தினால்  வெட்டிப்போட்டு,  ஆரராத்<Ararat//Armenia>  தேசத்திற்குத்  தப்பி  ஓடிப்போனார்கள்;  அவன்  குமாரனாகிய  எசரத்தோன்<Esarhaddon>  அவன்  பட்டத்திற்கு  வந்து  அரசாண்டான்.  {2Kgs  19:37}

 

அந்நாட்களில்  எசேக்கியா<Hezekiah>  வியாதிப்பட்டு  மரணத்துக்கு  ஏதுவாயிருந்தான்;  அப்பொழுது  ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>  என்னும்  தீர்க்கதரிசி  அவனிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  உமது  வீட்டுக்காரியத்தை  ஒழுங்குப்படுத்தும்;  நீர்  பிழைக்கமாட்டீர்,  மரித்துப்போவீர்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  20:1}

 

அப்பொழுது  எசேக்கியா<Hezekiah>  தன்  முகத்தைச்  சுவர்ப்புறமாகத்  திருப்பிக்கொண்டு,  கர்த்தரை  நோக்கி:  {2Kgs  20:2}

 

  கர்த்தாவே,  நான்  உமக்கு  முன்பாக  உண்மையும்  மன  உத்தமமுமாய்  நடந்து,  உமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்தேன்  என்பதை  நினைத்தருளும்  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  எசேக்கியா<Hezekiah>  மிகவும்  அழுதான்.  {2Kgs  20:3}

 

ஏசாயா<Isaiah>  பாதி  முற்றத்தைவிட்டு  அப்புறம்  போகிறதற்குமுன்னே,  கர்த்தருடைய  வார்த்தை  அவனுக்கு  உண்டாகி,  அவர்  சொன்னது:  {2Kgs  20:4}

 

நீ  திரும்பிப்போய்,  என்  ஜனத்தின்  அதிபதியாகிய  எசேக்கியாவை<Hezekiah>  நோக்கி:  உன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  தேவனாயிருக்கிற  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உன்  விண்ணப்பத்தைக்  கேட்டேன்,  உன்  கண்ணீரைக்  கண்டேன்;  இதோ,  நான்  உன்னைக்  குணமாக்குவேன்;  மூன்றாம்  நாளிலே  நீ  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போவாய்.  {2Kgs  20:5}

 

உன்  நாட்களோடே  பதினைந்து  வருஷங்களைக்  கூட்டுவேன்;  உன்னையும்  இந்த  நகரத்தையும்  அசீரியா<Assyria>  ராஜாவின்  கைக்குத்  தப்புவித்து,  என்  நிமித்தமும்  என்  தாசனாகிய  தாவீதின்<David>  நிமித்தமும்  இந்த  நகரத்துக்கு  ஆதரவாய்  இருப்பேன்  என்று  சொல்  என்றார்.  {2Kgs  20:6}

 

பின்பு  ஏசாயா<Isaiah>:  அத்திப்பழத்து  அடையைக்  கொண்டுவாருங்கள்  என்றான்;  அதை  அவர்கள்  கொண்டுவந்து,  பிளவையின்மேல்  பற்றுப்போட்டபோது  அவன்  பிழைத்தான்.  {2Kgs  20:7}

 

எசேக்கியா<Hezekiah>  ஏசாயாவை<Isaiah>  நோக்கி:  கர்த்தர்  என்னைக்  குணமாக்குவதற்கும்,  மூன்றாம்  நாளிலே  நான்  கர்த்தருடைய  ஆலயத்திற்குப்  போவதற்கும்  அடையாளம்  என்ன  என்றான்.  {2Kgs  20:8}

 

அதற்கு  ஏசாயா<Isaiah>:  கர்த்தர்  தாம்  சொன்ன  வார்த்தையின்படியே  செய்வாரென்பதற்கு,  கர்த்தரால்  உனக்கு  உண்டாகும்  அடையாளமாகச்  சாயை  பத்துப்பாகை  முன்னிட்டுப்  போகவேண்டுமோ,  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திரும்ப  வேண்டுமோ  என்று  கேட்டான்.  {2Kgs  20:9}

 

அதற்கு  எசேக்கியா<Hezekiah>:  சாயை  பத்துப்பாகை  முன்னிட்டுப்போகிறது  லேசான  காரியம்;  அப்படி  வேண்டாம்;  சாயை  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திரும்பவேண்டும்  என்றான்.  {2Kgs  20:10}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>  தீர்க்கதரிசி  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுகையில்,  அவர்  ஆகாசுடைய<Ahaz>  சூரிய  கடியாரத்தில்  பாகைக்குப்  பாகை  முன்போன  சாயை  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திரும்பும்படி  செய்தார்.  {2Kgs  20:11}

 

அக்காலத்திலே  பலாதானின்<Baladan>  குமாரனாகிய  பெரோதாக்பலாதான்<Berodachbaladan>  என்னும்  பாபிலோனின்<Babylon>  ராஜா  எசேக்கியா<Hezekiah>  வியாதிப்பட்டிருக்கிறதைக்  கேட்டு,  அவனிடத்துக்கு  நிருபங்களையும்  வெகுமானத்தையும்  அனுப்பினான்.  {2Kgs  20:12}

 

எசேக்கியா<Hezekiah>  அவர்களை  அங்கிகரித்து,  பின்பு  அவர்களுக்குத்  தன்  பொக்கிஷசாலை  அனைத்தையும்,  வெள்ளியையும்,  பொன்னையும்,  கந்தவர்க்கங்களையும்,  நல்ல  பரிமளதைலத்தையும்,  தன்  ஆயுதசாலை  அனைத்தையும்  தன்  பொக்கிஷசாலைகளிலுள்ள  எல்லாவற்றையும்  காண்பித்தான்;  தன்  அரமனையிலும்  தன்  ராஜ்யத்தில்  எங்கும்  எசேக்கியா<Hezekiah>  அவர்களுக்குக்  காண்பியாத  பொருள்  ஒன்றும்  இல்லை.  {2Kgs  20:13}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>  தீர்க்கதரிசி  எசேக்கியா<Hezekiah>  ராஜாவினிடத்தில்  வந்து:  அந்த  மனுஷர்  என்ன  சொன்னார்கள்,  எங்கேயிருந்து  உம்மிடத்தில்  வந்தார்கள்  என்று  கேட்டான்.  அதற்கு  எசேக்கியா<Hezekiah>:  பாபிலோன்<Babylon>  என்னும்  தூரதேசத்திலிருந்து  வந்தார்கள்  என்றான்.  {2Kgs  20:14}

 

அப்பொழுது  அவன்:  உம்முடைய  வீட்டில்  என்னத்தைப்  பார்த்தார்கள்  என்று  கேட்டான்.  அதற்கு  எசேக்கியா<Hezekiah>:  என்  வீட்டிலுள்ள  எல்லாவற்றையும்  பார்த்தார்கள்;  என்  பொக்கிஷங்களில்  நான்  அவர்களுக்குக்  காண்பியாத  பொருள்  ஒன்றும்  இல்லை  என்றான்.  {2Kgs  20:15}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>  எசேக்கியாவை<Hezekiah>  நோக்கி:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளும்.  {2Kgs  20:16}

 

இதோ,  நாட்கள்  வரும்;  அப்பொழுது  உமது  வீட்டில்  உள்ளதிலும்,  உமது  பிதாக்கள்  இந்நாள்வரைக்கும்  சேர்த்ததிலும்  ஒன்றும்  மீதியாக  வைக்கப்படாமல்  எல்லாம்  பாபிலோனுக்குக்<Babylon>  கொண்டுபோகப்படும்.  {2Kgs  20:17}

 

நீர்  பெறப்போகிற  உமது  சந்தானமாகிய  உமது  குமாரர்களிலும்  சிலர்  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  அரமனையிலே  அரமனை  வேலைக்காரராயிருப்பார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {2Kgs  20:18}

 

அப்பொழுது  எசேக்கியா<Hezekiah>  ஏசாயாவை<Isaiah>  நோக்கி:  நீர்  சொன்ன  கர்த்தருடைய  வார்த்தை  நல்லதுதான்  என்று  சொல்லி,  என்  நாட்களிலாவது  சமாதானமும்  உண்மையும்  இருக்குமே  என்றான்.  {2Kgs  20:19}

 

எசேக்கியாவின்<Hezekiah>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவனுடைய  எல்லா  வல்லமையும்,  அவன்  ஒரு  குளத்தையும்  சாலகத்தையும்  உண்டாக்கினதினாலே  தண்ணீரை  நகரத்திற்குள்ளே  வரப்பண்ணினதும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  20:20}

 

எசேக்கியா<Hezekiah>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  மனாசே<Manasseh>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  20:21}

 

மனாசே<Manasseh>  ராஜாவாகிறபோது  பன்னிரண்டு  வயதாயிருந்து,  ஐம்பத்தைந்து  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  அரசாண்டான்;  அவன்  தாயின்பேர்  எப்சிபாள்<Hephzibah>.  {2Kgs  21:1}

 

கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாகத்  துரத்தின  ஜாதிகளுடைய  அருவருப்புகளின்படியே,  அவன்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  {2Kgs  21:2}

 

தன்  தகப்பனாகிய  எசேக்கியா<Hezekiah>  இடித்துப்போட்ட  மேடைகளைத்  திரும்பவும்  கட்டி,  பாகாலுக்குப்<Baal>  பலிபீடங்களை  எடுப்பித்து,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  ஆகாப்<Ahab>  செய்ததுபோல  விக்கிரகத்தோப்பை  உண்டாக்கி,  வானத்தின்  சேனைகளையெல்லாம்  பணிந்துகொண்டு  அவைகளைச்  சேவித்தான்.  {2Kgs  21:3}

 

எருசலேமிலே<Jerusalem>  என்  நாமத்தை  விளங்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லிக்  குறித்த  கர்த்தருடைய  ஆலயத்திலே  அவன்  பலிபீடங்களைக்  கட்டி,  {2Kgs  21:4}

 

கர்த்தருடைய  ஆலயத்தின்  இரண்டு  பிராகாரங்களிலும்  வானத்தின்  சேனைகளுக்கெல்லாம்  பலிபீடங்களைக்  கட்டி,  {2Kgs  21:5}

 

தன்  குமாரனைத்  தீமிதிக்கப்பண்ணி,  நாள்பார்க்கிறவனும்  நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து,  அஞ்சனம்  பார்க்கிறவர்களையும்  குறிசொல்லுகிறவர்களையும்  வைத்து,  கர்த்தருக்குக்  கோபமுண்டாக  அவர்  பார்வைக்குப்  பொல்லாப்பானதை  மிகுதியாய்ச்  செய்தான்.  {2Kgs  21:6}

 

இந்த  ஆலயத்திலும்,  நான்  இஸ்ரவேலின்<Israel>  சகல  கோத்திரங்களிலுமிருந்து  தெரிந்துகொண்ட  எருசலேமிலும்<Jerusalem>,  என்  நாமத்தை  என்றைக்கும்  விளங்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  தாவீதோடும்<David>  அவன்  குமாரனாகிய  சாலொமோனோடும்<Solomon>  சொல்லிக்  குறித்த  ஆலயத்திலே  அவன்  பண்ணின  தோப்புவிக்கிரகத்தை  வைத்தான்.  {2Kgs  21:7}

 

நான்  அவர்களுக்குக்  கற்பித்த  எல்லாவற்றின்படியேயும்,  என்  தாசனாகிய  மோசே<Moses>  அவர்களுக்குக்  கற்பித்த  எல்லா  நியாயப்பிரமாணத்தின்படியேயும்  செய்ய  ஜாக்கிரதையாய்  இருந்தார்களேயானால்,  நான்  இனி  இஸ்ரவேலின்<Israel>  காலை  அவர்கள்  பிதாக்களுக்குக்  கொடுத்த  தேசத்தைவிட்டு  அலையப்பண்ணுவதில்லை  என்று  சொல்லியிருந்தார்.  {2Kgs  21:8}

 

ஆனாலும்  அவர்கள்  கேளாதேபோனார்கள்;  கர்த்தர்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  முன்பாக  அழித்த  ஜாதிகள்  செய்த  பொல்லாப்பைப்பார்க்கிலும்  அதிகமாய்ச்  செய்ய  மனாசே<Manasseh>  அவர்களை  ஏவிவிட்டான்.  {2Kgs  21:9}

 

ஆகையால்  கர்த்தர்  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  ஊழியக்காரரைக்கொண்டு  உரைத்தது:  {2Kgs  21:10}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  மனாசே<Manasseh>  தனக்கு  முன்னிருந்த  எமோரியர்<Amorites>  செய்த  எல்லாவற்றைப்பார்க்கிலும்  கேடாக  இந்த  அருவருப்புகளைச்  செய்து,  தன்  நரகலான  விக்கிரகங்களால்  யூதாவையும்<Judah>  பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்,  {2Kgs  21:11}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  கேட்கப்போகிற  யாவருடைய  இரண்டு  காதுகளிலும்  அது  தொனித்துக்கொண்டிருக்கும்படியான  பொல்லாப்பை  நான்  எருசலேமின்மேலும்<Jerusalem>  யூதாவின்மேலும்<Judah>  வரப்பண்ணி,  {2Kgs  21:12}

 

எருசலேமின்மேல்<Jerusalem>  சமாரியாவின்<Samaria>  மட்டநூலையும்  ஆகாப்<Ahab>  வீட்டின்  தூக்குநூலையும்  பிடிப்பேன்;  ஒருவன்  ஒரு  தாலத்தைத்  துடைத்துப்  பின்பு  அதைக்  கவிழ்த்துவைக்கிறதுபோல  எருசலேமைத்<Jerusalem>  துடைத்துவிடுவேன்.  {2Kgs  21:13}

 

அவர்கள்  தங்கள்  பிதாக்கள்  எகிப்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  நாள்முதற்கொண்டு  இந்நாள்வரைக்கும்  என்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  எனக்குக்  கோபம்  மூட்டிவந்தபடியினால்,  என்  சுதந்தரத்தில்  மீதியானதைக்  கைவிட்டு,  அவர்கள்  பகைஞரின்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுப்பேன்.  {2Kgs  21:14}

 

தங்கள்  பகைஞருக்கெல்லாம்  கொள்ளையும்  சூறையுமாய்ப்  போவார்கள்  என்றார்.  {2Kgs  21:15}

 

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்யும்படியாக,  மனாசே<Manasseh>  யூதாவைப்<Judah>  பாவஞ்செய்யப்பண்ணின  அந்தப்  பாவமும்  தவிர,  அவன்  எருசலேமை<Jerusalem>  நாலு  மூலைவரையும்  இரத்தப்பழிகளால்  நிரப்பத்தக்கதாய்,  குற்றமில்லாத  இரத்தத்தையும்  மிகுதியாகச்  சிந்தினான்.  {2Kgs  21:16}

 

மனாசேயின்<Manasseh>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  அவன்  செய்த  பாவமும்  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  21:17}

 

மனாசே<Manasseh>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  ஊசாவின்<Uzza>  தோட்டமாகிய  தன்  அரமனைத்  தோட்டத்தில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  ஸ்தானத்திலே  அவன்  குமாரனாகிய  ஆமோன்<Amon>  ராஜாவானான்.  {2Kgs  21:18}

 

ஆமோன்<Amon>  ராஜாவானபோது  இருபத்திரண்டு  வயதாயிருந்து,  இரண்டு  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  அரசாண்டான்;  யோத்பா<Jotbah>  ஊரானாகிய  ஆரூத்சின்<Haruz>  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  மெசுல்லேமேத்<Meshullemeth>.  {2Kgs  21:19}

 

அவன்  தன்  தகப்பனாகிய  மனாசே<Manasseh>  செய்ததுபோல,  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  {2Kgs  21:20}

 

தன்  தகப்பன்  நடந்த  எல்லா  வழியிலும்  நடந்து,  தன்  தகப்பன்  சேவித்த  நரகலான  விக்கிரகங்களைச்  சேவித்து  அவைகளைப்  பணிந்துகொண்டு,  {2Kgs  21:21}

 

கர்த்தரின்  வழியிலே  நடவாமல்,  தன்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தரை  விட்டுவிட்டான்.  {2Kgs  21:22}

 

ஆமோனின்<Amon>  ஊழியக்காரர்  அவனுக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  ராஜாவை  அவன்  அரமனையிலே  கொன்றுபோட்டார்கள்.  {2Kgs  21:23}

 

அதினால்  தேசத்து  ஜனங்கள்  ராஜாவாகிய  ஆமோனுக்கு<Amon>  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம்  வெட்டிப்போட்டு,  அவன்  குமாரனாகிய  யோசியாவை<Josiah>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவாக்கினார்கள்.  {2Kgs  21:24}

 

ஆமோன்<Amon>  செய்த  மற்ற  வர்த்தமானங்கள்  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  21:25}

 

அவன்  ஊசாவின்<Uzza>  தோட்டத்திலுள்ள  அவனுடைய  கல்லறையில்  அடக்கம்பண்ணப்பட்டான்;  அவன்  ஸ்தானத்திலே  அவன்  குமாரனாகிய  யோசியா<Josiah>  ராஜாவானான்.  {2Kgs  21:26}

 

யோசியா<Josiah>  ராஜாவாகிறபோது,  எட்டு  வயதாயிருந்து,  முப்பத்தொரு  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  அரசாண்டான்;  போஸ்காத்<Boscath>  ஊரானாகிய  அதாயாவின்<Adaiah>  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  எதிதாள்<Jedidah>.  {2Kgs  22:1}

 

அவன்  கர்த்தரின்  பார்வைக்குச்  செம்மையானதைச்  செய்து,  தன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  வழியிலெல்லாம்  வலது  இடதுபுறம்  விலகாமல்  நடந்தான்.  {2Kgs  22:2}

 

ராஜாவாகிய  யோசியாவின்<Josiah>  பதினெட்டாம்  வருஷத்திலே,  ராஜா  மெசுல்லாமின்<Meshullam>  குமாரனாகிய  அத்சலியாவின்<Azaliah>  மகன்  சாப்பான்<Shaphan>  என்னும்  சம்பிரதியைக்  கர்த்தரின்  ஆலயத்துக்கு  அனுப்பி:  {2Kgs  22:3}

 

நீ  பிரதான  ஆசாரியனாகிய  இல்க்கியாவினிடத்தில்<Hilkiah>  போய்,  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவரப்பட்டதும்  வாசல்காக்கிறவர்கள்  ஜனத்தின்  கையிலே  வாங்கப்பட்டதுமான  பணத்தை  அவன்  தொகைபார்த்து,  {2Kgs  22:4}

 

பிற்பாடு  அவர்கள்  அதைக்  கர்த்தருடைய  ஆலயத்தின்  வேலையை  விசாரிக்கிறவர்கள்  கையிலே  கொடுத்து,  அவர்கள்  அதைக்  கர்த்தரின்  ஆலயத்தைப்  பழுதுபார்க்கிறதற்காக  அதிலிருக்கிற  வேலைக்காரராகிய,  {2Kgs  22:5}

 

தச்சருக்கும்,  சிற்பாசாரிகளுக்கும்,  கொற்றருக்கும்,  ஆலயத்தைப்  பழுதுபார்க்கும்படி  வேண்டிய  மரங்களையும்  வெட்டின  கற்களையும்  வாங்குகிறதற்கும்  செலவழிக்கவேண்டும்.  {2Kgs  22:6}

 

ஆகிலும்  அந்தப்  பணத்தைத்  தங்கள்  கையில்  ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ  காரியத்தை  உண்மையாய்  நடப்பிக்கிறபடியினால்,  அவர்களிடத்தில்  அதின்  கணக்கைக்  கேட்கவேண்டியதில்லை  என்று  சொல்  என்றான்.  {2Kgs  22:7}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியனாகிய  இல்க்கியா<Hilkiah>  சம்பிரதியாகிய  சாப்பானை<Shaphan>  நோக்கி:  நான்  கர்த்தரின்  ஆலயத்திலே  நியாயப்பிரமாண  புஸ்தகத்தைக்  கண்டுபிடித்தேன்  என்று  சொல்லி,  அந்தப்  புஸ்தகத்தைச்  சாப்பானிடத்தில்<Shaphan>  கொடுத்தான்;  அவன்  அதை  வாசித்தான்.  {2Kgs  22:8}

 

அப்பொழுது  சம்பிரதியாகிய  சாப்பான்<Shaphan>  ராஜாவினிடத்தில்  வந்து,  ராஜாவுக்கு  மறுஉத்தரவு  சொல்லி,  ஆலயத்திலே  தொகையிட்டுக்  கண்ட  பணத்தை  உமது  அடியார்  சேர்த்துக்  கட்டி,  அதைக்  கர்த்தருடைய  ஆலயத்தின்  வேலையை  விசாரிக்கிறவர்கள்  கையிலே  கொடுத்தார்கள்  என்று  சொன்னான்.  {2Kgs  22:9}

 

சம்பிரதியாகிய  சாப்பான்<Shaphan>  பின்னையும்  ராஜாவை  நோக்கி:  ஆசாரியனாகிய  இல்க்கியா<Hilkiah>  என்னிடத்தில்  ஒரு  புஸ்தகத்தைக்  கொடுத்தான்  என்று  அறிவித்து,  அதை  ராஜாவுக்கு  முன்பாக  வாசித்தான்.  {2Kgs  22:10}

 

ராஜா  நியாயப்பிரமாண  புஸ்தகத்தின்  வார்த்தைகளைக்  கேட்டபோது,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  {2Kgs  22:11}

 

ஆசாரியனாகிய  இல்க்கியாவுக்கும்<Hilkiah>,  சாப்பானின்<Shaphan>  குமாரனாகிய  அகீக்காமுக்கும்<Ahikam>,  மிகாயாவின்<Michaiah>  குமாரனாகிய  அக்போருக்கும்<Achbor>,  சம்பிரதியாகிய  சாப்பானுக்கும்<Shaphan>,  ராஜாவின்  ஊழியக்காரனாகிய  அசாயாவுக்கும்<Asahiah>  ராஜா  கட்டளையிட்டது:  {2Kgs  22:12}

 

கண்டெடுக்கப்பட்ட  இந்தப்  புஸ்தகத்தின்  வார்த்தைகளினிமித்தம்  நீங்கள்  போய்,  எனக்காகவும்  ஜனத்திற்காகவும்  யூதாவனைத்திற்காகவும்<Judah>  கர்த்தரிடத்தில்  விசாரியுங்கள்;  நமக்காக  எழுதியிருக்கிற  எல்லாவற்றின்படியேயும்  செய்ய  நம்முடைய  பிதாக்கள்  இந்தப்  புஸ்தகத்தின்  வார்த்தைகளுக்குச்  செவிகொடாதபடியினால்,  நம்மேல்  பற்றியெரிந்த  கர்த்தருடைய  உக்கிரம்  பெரியது  என்றான்.  {2Kgs  22:13}

 

அப்பொழுது  ஆசாரியனாகிய  இல்க்கியாவும்<Hilkiah>,  அகீக்காமும்<Ahikam>,  அக்போரும்<Achbor>,  சாப்பானும்<Shaphan>,  அசாயாவும்<Asahiah>,  அர்காசின்<Harhas>  குமாரனாகிய  திக்வாவின்<Tikvah>  மகனான  சல்லூம்<Shallum>  என்னும்  வஸ்திரசாலை  விசாரிப்புக்காரன்  மனைவியாகிய  உல்தாள்<Huldah>  என்னும்  தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்  போய்  அவளோடே  பேசினார்கள்;  அவள்  எருசலேமின்<Jerusalem>  இரண்டாம்  வகுப்பிலே  குடியிருந்தாள்.  {2Kgs  22:14}

 

அவள்  அவர்களை  நோக்கி:  உங்களை  என்னிடத்தில்  அனுப்பினவரிடத்தில்  நீங்கள்  போய்:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  {2Kgs  22:15}

 

இதோ,  யூதாவின்<Judah>  ராஜா  வாசித்த  புஸ்தகத்தின்  வார்த்தைகளிலெல்லாம்  காட்டியிருக்கிற  பொல்லாப்பை  நான்  இந்த  ஸ்தலத்தின்மேலும்,  அதின்  குடிகளின்மேலும்  வரப்பண்ணுவேன்.  {2Kgs  22:16}

 

அவர்கள்  என்னைவிட்டு,  தங்கள்  கைகளின்  கிரியைகள்  எல்லாவற்றிலும்  எனக்குக்  கோபமுண்டாக்க  வேறே  தேவர்களுக்குத்  தூபங்காட்டினபடியினால்,  என்  உக்கிரம்  இந்த  ஸ்தலத்தின்மேல்  பற்றியெரியும்;  அது  அவிந்துபோவது  இல்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  சொல்லுங்கள்.  {2Kgs  22:17}

 

கர்த்தரிடத்தில்  விசாரிக்கிறதற்கு  உங்களை  அனுப்பின  யூதாவின்<Judah>  ராஜாவினிடத்தில்  நீங்கள்  போய்:  நீர்  கேட்ட  வார்த்தைகளைக்  குறித்து  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  {2Kgs  22:18}

 

நான்  இந்த  ஸ்தலத்திற்கும்  அதின்  குடிகளுக்கும்  விரோதமாக,  அவர்கள்  பாழும்  சாபமுமாவார்கள்  என்று  சொன்னதை  நீ  கேட்டபோது,  உன்  இருதயம்  இளகி,  நீ  கர்த்தருக்கு  முன்பாக  உன்னைத்  தாழ்த்தி,  உன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  எனக்குமுன்பாக  அழுதபடியினால்  நானும்  உன்  விண்ணப்பத்தைக்  கேட்டேன்.  {2Kgs  22:19}

 

ஆகையால்,  இதோ,  நான்  உன்னை  உன்  பிதாக்களண்டையிலே  சேர்த்துக்கொள்ளுவேன்;  நீ  சமாதானத்தோடே  உன்  கல்லறையில்  சேர்வாய்;  நான்  இந்த  ஸ்தலத்தின்மேல்  வரப்பண்ணும்  சகல  பொல்லாப்பையும்  உன்  கண்கள்  காண்பதில்லை  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்பதைச்  சொல்லுங்கள்  என்றாள்;  இந்த  மறுஉத்தரவை  அவர்கள்  போய்  ராஜாவுக்குச்  சொன்னார்கள்.  {2Kgs  22:20}

 

அப்பொழுது  ராஜா  யூதாவிலும்<Judah>  எருசலேமிலும்<Jerusalem>  இருந்த  மூப்பரையெல்லாம்  அழைப்பித்தான்;  அவர்கள்  அவனிடத்தில்  கூடினபோது,  {2Kgs  23:1}

 

ராஜாவும்,  அவனோடு  யூதாவின்<Judah>  மனுஷர்  யாவரும்  எருசலேமின்<Jerusalem>  குடிகள்  அனைவரும்,  ஆசாரியர்களும்,  தீர்க்கதரிசிகளும்,  சிறியோர்துவக்கிப்  பெரியோர்மட்டுமுள்ள  சகலரும்  கர்த்தரின்  ஆலயத்துக்குப்  போனார்கள்;  கர்த்தருடைய  ஆலயத்திலே  கண்டெடுக்கப்பட்ட  உடன்படிக்கை  புஸ்தகத்தின்  வார்த்தைகளையெல்லாம்  அவர்கள்  காதுகள்  கேட்க  வாசித்தான்.  {2Kgs  23:2}

 

அப்பொழுது  ராஜா,  தூண்  அருகே  நின்று,  கர்த்தரைப்  பின்பற்றி  நடக்கவும்,  அவருடைய  கற்பனைகளையும்  அவருடைய  சாட்சிகளையும்  அவருடைய  கட்டளைகளையும்  முழு  இருதயத்தோடும்  முழு  ஆத்துமாவோடும்  கைக்கொள்ளவும்,  அந்தப்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  அந்த  உடன்படிக்கையின்  வார்த்தைகளை  நிறைவேற்றவும்  கர்த்தருடைய  சந்நிதியில்  உடன்படிக்கைபண்ணினான்;  ஜனங்கள்  எல்லாரும்  உடன்படிக்கைக்கு  உட்பட்டார்கள்.  {2Kgs  23:3}

 

பின்பு  ராஜா:  பாகாலுக்கும்<Baal>  விக்கிரகத்தோப்புக்கும்  வானத்தின்  சகல  சேனைகளுக்கும்  பண்ணப்பட்டிருந்த  சகல  பணிமுட்டுகளையும்  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  புறம்பாக்க,  பிரதான  ஆசாரியனாகிய  இல்க்கியாவுக்கும்<Hilkiah>  இரண்டாம்  வகுப்பிலுள்ள  ஆசாரியர்களுக்கும்  வாசல்  காக்கிறவர்களுக்கும்  கட்டளையிட்டு,  அவைகளை  எருசலேமுக்குப்<Jerusalem>  புறம்பாய்க்  கீதரோன்<Kidron>  வெளிகளில்  சுட்டெரித்து,  அவைகளின்  சாம்பலைப்  பெத்தேலுக்குக்<Bethel>  கொண்டுபோகப்பண்ணினான்.  {2Kgs  23:4}

 

யூதாவின்<Judah>  பட்டணங்களிலும்  எருசலேமைச்<Jerusalem>  சுற்றிலும்  மேடைகளின்மேல்  தூபங்காட்ட,  யூதாவின்<Judah>  ராஜாக்கள்  வைத்த  பூஜாசாரிகளையும்,  பாகாலுக்கும்<Baal>  சூரியனுக்கும்  சந்திரனுக்கும்  கிரகங்களுக்கும்  வானத்தின்  சகல  சேனைகளுக்கும்  தூபங்காட்டினவர்களையும்  அகற்றிவிட்டான்.  {2Kgs  23:5}

 

தோப்பு  விக்கிரகத்தைக்  கர்த்தரின்  ஆலயத்திலிருந்து  எருசலேமுக்குப்<Jerusalem>  புறம்பே  கீதரோன்<Kidron>  ஆற்றிற்குக்  கொண்டுபோய்,  அதைக்  கீதரோன்<Kidron>  ஆற்று  ஓரத்திலே  சுட்டெரித்து,  அதைத்  தூளாக்கி,  அந்தத்  தூளை  ஜனபுத்திரருடைய  பிரேதக்  குழிகளின்மேல்  போடுவித்தான்.  {2Kgs  23:6}

 

கர்த்தரின்  ஆலயத்திற்கு  அருகே  ஸ்திரீகள்  தோப்பு  விக்கிரகத்துக்குக்  கூடாரங்களை  நெய்த  இடத்திலுள்ள  இலச்சையான  புணர்ச்சிக்காரரின்  வீடுகளை  இடித்துப்போட்டான்.  {2Kgs  23:7}

 

அவன்  யூதாவின்<Judah>  பட்டணங்களிலுள்ள  எல்லா  ஆசாரியரையும்  வரச்சொல்லி,  கேபாமுதல்<Geba>  பெயெர்செபாமட்டும்<Beersheba>  ஆசாரியர்கள்  தூபங்காட்டியிருந்த  மேடைகளைத்  தீட்டாக்கி,  ஒலிமுகவாசல்களின்  மேடைகளையும்,  பட்டணத்து  வாசலுக்குப்போகும்  வழிக்கு  இடதுபுறமாயிருக்கிற  பட்டணத்தலைவனாகிய  யோசுவாவின்<Joshua>  வாசற்படியில்  இருந்த  மேடையையும்  இடித்துப்போட்டான்.  {2Kgs  23:8}

 

மேடைகளின்  ஆசாரியர்கள்  எருசலேமிலிருக்கிற<Jerusalem>  கர்த்தருடைய  பலிபீடத்தின்மேல்  பலியிடாமல்,  தங்கள்  சகோதரருக்குள்ளே  புளிப்பில்லாத  அப்பங்களைப்  புசிக்கிறதற்குமாத்திரம்  உத்தாரம்  பெற்றார்கள்.  {2Kgs  23:9}

 

ஒருவனும்  மோளேகுக்கென்று<Molech>  தன்  குமாரனையாகிலும்  தன்  குமாரத்தியையாகிலும்  தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு,  இன்னோம்<Hinnom>  புத்திரரின்  பள்ளத்தாக்கிலிருக்கிற  தோப்பேத்<Topheth>  என்னும்  ஸ்தலத்தையும்  அவன்  தீட்டாக்கி,  {2Kgs  23:10}

 

கர்த்தரின்  ஆலயத்திற்குள்  போகிற  இடந்தொடங்கி,  பட்டணத்துக்குப்  புறம்பே  இருக்கிற  நாத்தான்மெலெக்<Nathanmelech>  என்னும்  பிரதானியின்  அறைவீடுமட்டும்  யூதாவின்<Judah>  ராஜாக்கள்  சூரியனுக்கென்று  வைத்திருந்த  குதிரைகளை  அகற்றி,  சூரியனின்  இரதங்களை  அக்கினியில்  சுட்டெரித்தான்.  {2Kgs  23:11}

 

யூதாவின்<Judah>  ராஜாக்கள்  உண்டாக்கினதும்,  ஆகாசுடைய<Ahaz>  மேல்வீட்டில்  இருந்ததுமான  பலிபீடங்களையும்,  மனாசே<Manasseh>  கர்த்தருடைய  ஆலயத்தின்  இரண்டு  பிராகாரங்களிலும்  உண்டாக்கின  பலிபீடங்களையும்  ராஜா  இடித்து,  அவைகளின்  தூளை  அங்கேயிருந்து  எடுத்துக்  கீதரோன்<Kidron>  ஆற்றில்  கொட்டினான்.  {2Kgs  23:12}

 

எருசலேமுக்கு<Jerusalem>  எதிரே  இருக்கிற  நாசமலையின்<mount  of  corruption>  வலதுபுறத்தில்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  சீதோனியரின்<Zidonians>  அருவருப்பாகிய  அஸ்தரோத்திற்கும்<Ashtoreth>,  மோவாபியரின்<Moabites>  அருவருப்பாகிய  காமோசுக்கும்<Chemosh>,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  அருவருப்பாகிய  மில்கோமுக்கும்<Milcom>  கட்டியிருந்த  மேடைகளையும்  ராஜா  தீட்டாக்கி,  {2Kgs  23:13}

 

சிலைகளை  உடைத்து,  விக்கிரகத்  தோப்புகளை  நிர்மூலமாக்கி,  அவைகளின்  ஸ்தலத்தை  மனுஷரின்  எலும்புகளால்  நிரப்பினான்.  {2Kgs  23:14}

 

இஸ்ரவேலைப்<Israel>  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்<Nebat>  குமாரனாகிய  யெரொபெயாம்<Jeroboam>  பெத்தேலில்<Bethel>  உண்டாக்கியிருந்த  பலிபீடமும்  மேடையும்  ஆகிய  அவ்விரண்டையும்  அவன்  இடித்து,  அந்த  மேடையைச்  சுட்டெரித்துத்  தூளாக்கி,  விக்கிரகத்தோப்பையும்  சுட்டெரித்தான்.  {2Kgs  23:15}

 

யோசியா<Josiah>  திரும்பிப்பார்க்கிறபோது  அங்கே  அந்த  மலையிலிருக்கிற  கல்லறைகளைக்  கண்டு,  ஆட்களை  அனுப்பி,  அந்தக்  கல்லறைகளிலுள்ள  எலும்புகளை  எடுத்துவரச்செய்து,  இப்படி  நடக்கும்  என்று  தேவனுடைய  மனுஷன்  கூறின  கர்த்தருடைய  வார்த்தையின்படியே,  அவைகளை  அந்தப்  பலிபீடத்தின்மேல்  சுட்டெரித்து  அதைத்  தீட்டாக்கினான்.  {2Kgs  23:16}

 

அப்பொழுது  அவன்:  நான்  காண்கிற  அந்தக்  குறிப்படையாளம்  என்ன  என்று  கேட்டதற்கு,  அந்தப்  பட்டணத்து  மனுஷர்:  அது  யூதாவிலிருந்து<Judah>  வந்து,  நீர்  செய்த  இந்தக்  கிரியைகளைப்  பெத்தேலின்<Bethel>  பலிபீடத்திற்கு  விரோதமாய்க்  கூறி,  அறிவித்த  தேவனுடைய  மனுஷனின்  கல்லறை  என்றார்கள்.  {2Kgs  23:17}

 

அதற்கு  அவன்:  இருக்கட்டும்,  ஒருவனும்  அவன்  எலும்புகளைத்  தொடவேண்டாம்  என்றான்;  அப்படியே  அவன்  எலும்புகளைச்  சமாரியாவிலிருந்து<Samaria>  வந்த  தீர்க்கதரிசியின்  எலும்புகளோடு  விட்டுவிட்டார்கள்.  {2Kgs  23:18}

 

கர்த்தருக்குக்  கோபமுண்டாக்க  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்கள்  சமாரியாவின்<Samaria>  பட்டணங்களில்  உண்டாக்கியிருந்த  மேடைகளின்  கோவில்களையெல்லாம்  யோசியா<Josiah>  தகர்த்து,  பெத்தேலிலே<Bethel>  தான்  செய்த  செய்கைகளின்படியே  அவைகளுக்குச்  செய்து,  {2Kgs  23:19}

 

அவ்விடங்களில்  இருக்கிற  மேடைகளின்  ஆசாரியர்களையெல்லாம்  பலிபீடங்களின்மேல்  கொன்றுபோட்டு,  அவைகளின்மேல்  மனுஷரின்  எலும்புகளைச்  சுட்டெரித்து,  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பினான்.  {2Kgs  23:20}

 

பின்பு  ராஜா:  இந்த  உடன்படிக்கையின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறபடியே  உங்கள்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரியுங்கள்  என்று  சகல  ஜனங்களுக்கும்  கட்டளையிட்டான்.  {2Kgs  23:21}

 

இஸ்ரவேலை<Israel>  நியாயம்  விசாரித்த  நியாயாதிபதிகளின்  நாட்கள்  தொடங்கி,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாக்கள்  யூதாவின்<Judah>  ராஜாக்கள்  ஆகிய  அவர்களுடைய  சகல  நாட்களிலும்  இந்தப்  பஸ்காவைப்போல்  பஸ்கா  ஆசரிக்கப்படவில்லை.  {2Kgs  23:22}

 

ராஜாவாகிய  யோசியாவின்<Josiah>  பதினெட்டாம்  வருஷத்திலே  கர்த்தருக்கு  இந்தப்  பஸ்கா  எருசலேமிலே<Jerusalem>  ஆசரிக்கப்பட்டது.  {2Kgs  23:23}

 

ஆசாரியனாகிய  இல்க்கியா<Hilkiah>  கர்த்தருடைய  ஆலயத்தில்  கண்டெடுத்த  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிற  நியாயப்பிரமாணத்தின்  வார்த்தைகளை  நிறைவேற்றும்படிக்கு,  யோசியா<Josiah>  அஞ்சனக்காரரையும்,  குறிசொல்லுகிறவர்களையும்,  சுரூபங்களையும்  நரகலான  விக்கிரகங்களையும்,  யூதாதேசத்திலும்<Judah>  எருசலேமிலும்<Jerusalem>  காணப்பட்ட  எல்லா  அருவருப்புகளையும்  நிர்மூலமாக்கினான்.  {2Kgs  23:24}

 

கர்த்தரிடத்துக்குத்  தன்  முழு  இருதயத்தோடும்  தன்  முழு  ஆத்துமாவோடும்  தன்  முழு  பலத்தோடும்  மோசேயின்<Moses>  நியாயப்பிரமாணத்திற்கு  ஏற்றபடியெல்லாம்  செய்ய  மனதைச்  சாய்த்தான்;  அவனைப்  போலொத்த  ராஜா  அவனுக்குமுன்  இருந்ததுமில்லை,  அவனுக்குப்பின்  எழும்பினதுமில்லை.  {2Kgs  23:25}

 

ஆகிலும்,  மனாசே<Manasseh>  கர்த்தருக்குக்  கோபமுண்டாக்கின  சகல  காரியங்களினிமித்தமும்  அவர்  யூதாவின்மேல்<Judah>  கொண்ட  தம்முடைய  மகா  கோபத்தின்  உக்கிரத்தை  விட்டுத்  திரும்பாமல்:  {2Kgs  23:26}

 

நான்  இஸ்ரவேலைத்<Israel>  தள்ளிவிட்டதுபோல  யூதாவையும்<Judah>  என்  முகத்தை  விட்டுத்  தள்ளி,  நான்  தெரிந்துகொண்ட  இந்த  எருசலேம்<Jerusalem>  நகரத்தையும்,  என்  நாமம்  விளங்கும்  என்று  நான்  சொன்ன  ஆலயத்தையும்  வெறுத்துவிடுவேன்  என்று  கர்த்தர்  சொன்னார்.  {2Kgs  23:27}

 

யோசியாவின்<Josiah>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  23:28}

 

அவன்  நாட்களில்  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோன்நேகோ<Pharaohnechoh>  அசீரியா<Assyria>  ராஜாவுக்கு  விரோதமாய்  ஐபிராத்து<Euphrates>  நதிக்குப்  போகிறபோது  ராஜாவாகிய  யோசியா<Josiah>  அவனுக்கு  எதிராகப்  புறப்பட்டான்;  பார்வோன்நேகோ<Pharaohnechoh>  அவனை  மெகிதோவிலே<Megiddo>  கண்டபோது,  அவனைக்  கொன்றுபோட்டான்.  {2Kgs  23:29}

 

மரணமடைந்த  அவனை  அவனுடைய  ஊழியக்காரர்  ரதத்தின்மேல்  ஏற்றி,  மெகிதோவிலிருந்து<Megiddo>  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுவந்து,  அவனை  அவன்  கல்லறையில்  அடக்கம்பண்ணினார்கள்;  அப்பொழுது  தேசத்தின்  ஜனங்கள்  யோசியாவின்<Josiah>  குமாரனாகிய  யோவாகாசை<Jehoahaz>  அழைத்து,  அவனை  அபிஷேகம்பண்ணி,  அவன்  தகப்பன்  ஸ்தானத்தில்  அவனை  ராஜாவாக்கினார்கள்.  {2Kgs  23:30}

 

யோவாகாஸ்<Jehoahaz>  ராஜாவாகிறபோது  இருபத்துமூன்று  வயதாயிருந்து,  மூன்றுமாதம்  எருசலேமில்<Jerusalem>  அரசாண்டான்;  லிப்னா<Libnah>  ஊரானாகிய  எரேமியாவின்<Jeremiah>  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  அமுத்தாள்<Hamutal>.  {2Kgs  23:31}

 

அவன்  தன்  பிதாக்கள்  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {2Kgs  23:32}

 

அவன்  எருசலேமில்<Jerusalem>  அரசாளாதபடிக்கு,  பார்வோன்நேகோ<Pharaohnechoh>  அவனை  ஆமாத்<Hamath>  தேசமான  ரிப்லாவிலே<Riblah>  பிடித்துக்  கட்டுவித்து,  தேசத்தின்மேல்  நூறு  தாலந்து  வெள்ளியையும்  ஒரு  தாலந்து  பொன்னையும்  அபராதமாகச்  சுமத்தி,  {2Kgs  23:33}

 

யோசியாவின்<Josiah>  குமாரனாகிய  எலியாக்கீமை<Eliakim>  அவன்  தகப்பனாகிய  யோசியாவின்<Josiah>  ஸ்தானத்தில்  ராஜாவாக  வைத்து,  அவன்  பேரை  யோயாக்கீம்<Jehoiakim>  என்று  மாற்றி,  யோவாகாசைக்<Jehoahaz>  கொண்டுபோய்விட்டான்;  இவன்  எகிப்திலே<Egypt>  போய்  அங்கே  மரணமடைந்தான்.  {2Kgs  23:34}

 

அந்த  வெள்ளியையும்  பொன்னையும்  யோயாக்கீம்<Jehoiakim>  பார்வோனுக்குக்<Pharaoh>  கொடுத்தான்;  ஆனாலும்  பார்வோனுடைய<Pharaoh>  கட்டளையின்படி  அந்தப்  பணத்தைக்  கொடுக்கும்படி  அவன்  தேசத்தை  மதிப்பிட்டு,  அவரவர்  மதிப்பின்படி  அந்த  வெள்ளியையும்  பொன்னையும்  பார்வோன்  நேகோவுக்குக்<Pharaohnechoh>  கொடுக்கத்தக்கதாகத்  தேசத்து  ஜனங்களின்  கையிலே  தண்டினான்.  {2Kgs  23:35}

 

யோயாக்கீம்<Jehoiakim>  ராஜாவாகிறபோது  இருபத்தைந்து  வயதாயிருந்து,  பதினொரு  வருஷம்  எருசலேமில்<Jerusalem>  அரசாண்டான்;  ரூமா<Rumah>  ஊரானாகிய  பெதாயாமின்<Pedaiah>  குமாரத்தியாகிய  அவன்  தாயின்பேர்  செபுதாள்<Zebudah>.  {2Kgs  23:36}

 

அவன்  தன்  பிதாக்கள்  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {2Kgs  23:37}

 

அவன்  நாட்களிலே  பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்<Nebuchadnezzar>  வந்தான்;  யோயாக்கீம்<Jehoiakim>  மூன்று  வருஷம்  அவனைச்  சேவித்து,  பின்பு  அவனுக்கு  விரோதமாகக்  கலகம்பண்ணினான்.  {2Kgs  24:1}

 

அப்பொழுது  கர்த்தர்  கல்தேயரின்<Chaldees>  தண்டுகளையும்,  சீரியரின்<Syrians>  தண்டுகளையும்,  மோவாபியரின்<Moabites>  தண்டுகளையும்,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தண்டுகளையும்  அவன்மேல்  வரவிட்டார்;  தீர்க்கதரிசிகளாகிய  தம்முடைய  ஊழியக்காரரைக்கொண்டு  கர்த்தர்  சொன்ன  வார்த்தையின்படியே  அவர்  அவைகளை  யூதாவை<Judah>  அழிக்கும்படிக்கு  வரவிட்டார்.  {2Kgs  24:2}

 

மனாசே<Manasseh>  தன்  எல்லாச்  செய்கைகளினாலும்  செய்த  பாவங்களினிமித்தம்  யூதாவைத்<Judah>  தமது  சமுகத்தை  விட்டு  அகற்றும்படி  கர்த்தருடைய  கட்டளையினால்  அப்படி  நடந்தது.  {2Kgs  24:3}

 

அவன்  சிந்தின  குற்றமற்ற  இரத்தத்திற்காகவும்  எருசலேமைக்<Jerusalem>  குற்றமற்ற  இரத்தத்தால்  நிரப்பினதற்காகவும்  கர்த்தர்  மன்னிக்கச்  சித்தமில்லாதிருந்தார்.  {2Kgs  24:4}

 

யோயாக்கீமின்<Jehoiakim>  மற்ற  வர்த்தமானங்களும்,  அவன்  செய்தவை  யாவும்,  யூதாவுடைய<Judah>  ராஜாக்களின்  நாளாகமப்  புஸ்தகத்தில்  அல்லவோ  எழுதியிருக்கிறது.  {2Kgs  24:5}

 

யோயாக்கீம்<Jehoiakim>  தன்  பிதாக்களோடே  நித்திரையடைந்தபின்,  அவன்  குமாரனாகிய  யோயாக்கீன்<Jehoiachin>  அவன்  ஸ்தானத்தில்  ராஜாவானான்.  {2Kgs  24:6}

 

எகிப்தின்<Egypt>  ராஜா  அப்புறம்  தன்  தேசத்திலிருந்து  புறப்பட்டு  வரவில்லை;  எகிப்தின்<Egypt>  நதிதுவக்கி  ஐபிராத்து<Euphrates>  நதிமட்டும்  எகிப்தின்<Egypt>  ராஜாவுக்கு  இருந்த  யாவையும்  பாபிலோன்<Babylon>  ராஜா  பிடித்திருந்தான்.  {2Kgs  24:7}

 

யோயாக்கீன்<Jehoiachin>  ராஜாவாகிறபோது  பதினெட்டு  வயதாயிருந்து,  எருசலேமிலே<Jerusalem>  மூன்றுமாதம்  அரசாண்டான்;  எருசலேம்<Jerusalem>  ஊரானாகிய  எல்நாத்தானின்<Elnathan>  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  நெகுஸ்தாள்<Nehushta>.  {2Kgs  24:8}

 

அவன்  தன்  தகப்பன்  செய்தபடியெல்லாம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {2Kgs  24:9}

 

அக்காலத்திலே  பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரின்<Nebuchadnezzar>  சேவகர்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தார்கள்;  நகரம்  முற்றிக்கை  போடப்பட்டது.  {2Kgs  24:10}

 

பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாருடைய<Nebuchadnezzar>  சேவகர்  நகரத்தை  முற்றிக்கை  போடுகையில்  அவன்  தானும்  அதற்கு  விரோதமாய்  வந்தான்.  {2Kgs  24:11}

 

அப்பொழுது  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோயாக்கீனும்<Jehoiachin>,  அவன்  தாயும்,  அவன்  ஊழியக்காரரும்,  அவன்  பிரபுக்களும்,  பிரதானிகளும்  பாபிலோன்<Babylon>  ராஜாவினிடத்திற்குப்  புறப்பட்டுப்போனார்கள்;  அவனைப்  பாபிலோன்<Babylon>  ராஜா  தன்  ஆளுகையின்  எட்டாம்  வருஷத்திலே  பிடித்துக்கொண்டான்.  {2Kgs  24:12}

 

அங்கேயிருந்து  கர்த்தருடைய  ஆலயத்தின்  சகல  பொக்கிஷங்களையும்,  ராஜாவுடைய  அரமனையின்  பொக்கிஷங்களையும்  எடுத்துக்கொண்டு,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  சாலொமோன்<Solomon>  கர்த்தருடைய  ஆலயத்தில்  உண்டாக்கியிருந்த  பொன்  பணிமுட்டுகளையெல்லாம்,  கர்த்தர்  சொல்லியிருந்தபடியே  உடைத்துப்போட்டு,  {2Kgs  24:13}

 

எருசலேமியர்<Jerusalem>  அனைவரும்  சகல  பிரபுக்களும்  சகல  பராக்கிரமசாலிகளுமாகிய  பதினாயிரம்பேரையும்,  சகல  தச்சரையும்  கொல்லரையும்  சிறைபிடித்துக்கொண்டுபோனான்;  தேசத்தில்  ஏழை  ஜனங்களே  அல்லாமல்  வேறொருவரும்  மீதியாயிருக்கவில்லை.  {2Kgs  24:14}

 

அவன்  யோயாக்கீனையும்<Jehoiachin>,  ராஜாவின்  தாயையும்,  ராஜாவின்  ஸ்திரீகளையும்,  அவன்  பிரதானிகளையும்,  தேசத்தின்  பராக்கிரமசாலிகளையும்  எருசலேமிலிருந்து<Jerusalem>  பாபிலோனுக்குச்<Babylon>  சிறைபிடித்துக்கொண்டுபோனான்.  {2Kgs  24:15}

 

இப்படியே  பாபிலோன்<Babylon>  ராஜா  பராக்கிரமசாலிகளான  மனுஷராகிய  ஏழாயிரம்பேரையும்,  தச்சரும்  கொல்லருமாகிய  ஆயிரம்பேரையும்,  யுத்தம்பண்ணத்தக்க  பலசாலிகளையும்  பாபிலோனுக்குச்<Babylon>  சிறைபிடித்துக்கொண்டுபோனான்.  {2Kgs  24:16}

 

அவனுக்குப்  பதிலாகப்  பாபிலோன்<Babylon>  ராஜா  அவன்  சிறியதகப்பனாகிய  மத்தனியாவை<Mattaniah>  ராஜாவாக  வைத்து,  அவனுக்குச்  சிதேக்கியா<Zedekiah>  என்று  மறுபேரிட்டான்.  {2Kgs  24:17}

 

சிதேக்கியா<Zedekiah>  ராஜாவாகிறபோது  இருபத்தொரு  வயதாயிருந்து,  பதினொரு  வருஷம்  எருசலேமிலே<Jerusalem>  அரசாண்டான்;  லிப்னா<Libnah>  ஊரானாகிய  எரேமியாவின்<Jeremiah>  குமாரத்தியான  அவன்  தாயின்பேர்  அமுத்தாள்<Hamutal>.  {2Kgs  24:18}

 

யோயாக்கீம்<Jehoiakim>  செய்தபடியெல்லாம்  அவனும்  கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்.  {2Kgs  24:19}

 

எருசலேமையும்<Jerusalem>  யூதாவையும்<Judah>  கர்த்தர்  தம்முடைய  சமுகத்தைவிட்டு  அகற்றித்  தீருமளவும்,  அவைகளின்மேலுள்ள  அவருடைய  கோபத்தினால்  இப்படி  நடந்ததும்  அல்லாமல்,  சிதேக்கியா<Zedekiah>  பாபிலோனிலே<Babylon>  ராஜாவுக்கு  விரோதமாகக்  கலகமும்பண்ணினான்.  {2Kgs  24:20}

 

அவன்  ராஜ்யபாரம்பண்ணும்  ஒன்பதாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  பத்தாந்தேதியிலே  பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரும்<Nebuchadnezzar>  அவனுடைய  எல்லா  இராணுவமும்  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாய்  வந்து,  அதற்கு  எதிரே  பாளயமிறங்கி,  சுற்றிலும்  அதற்கு  எதிராகக்  கொத்தளங்களைக்  கட்டினார்கள்.  {2Kgs  25:1}

 

அப்படியே  சிதேக்கியா<Zedekiah>  ராஜாவின்  பதினோராம்  வருஷமட்டும்  நகரம்  முற்றிக்கை  போடப்பட்டிருந்தது.  {2Kgs  25:2}

 

நாலாம்  மாதம்  ஒன்பதாந்தேதியிலே  பஞ்சம்  நகரத்திலே  அதிகரித்து,  தேசத்தின்  ஜனத்திற்கு  ஆகாரம்  இல்லாமற்போயிற்று;  நகரத்தின்  மதிலில்  திறப்பு  கண்டது.  {2Kgs  25:3}

 

அப்பொழுது  கல்தேயர்<Chaldees>  நகரத்தைச்  சூழ்ந்திருக்கையில்,  யுத்தமனுஷர்  எல்லாரும்  இராத்திரிகாலத்தில்  ராஜாவுடைய  தோட்டத்தின்  வழியாய்  இரண்டு  மதில்களுக்கு  நடுவான  வாசலால்  தப்பி,  அவர்களும்  ராஜாவுமாய்ச்  சமனான  பூமியை  நோக்கி  ஓடிப்போனார்கள்.  {2Kgs  25:4}

 

கல்தேயரின்<Chaldees>  இராணுவத்தார்  ராஜாவைப்  பின்தொடர்ந்து  எரிகோவின்<Jericho>  சமனான  பூமியில்  அவனைப்  பிடித்தார்கள்;  அப்பொழுது  அவனுடைய  இராணுவமெல்லாம்  அவனை  விட்டுச்  சிதறிப்போயிற்று.  {2Kgs  25:5}

 

அவர்கள்  ராஜாவைப்  பிடித்து,  அவனை  ரிப்லாவிலிருக்கிற<Riblah>  பாபிலோன்<Babylon>  ராஜாவினிடத்துக்குக்  கொண்டுபோய்,  அவனை  நியாயந்தீர்த்து,  {2Kgs  25:6}

 

சிதேக்கியாவின்<Zedekiah>  குமாரரை  அவன்  கண்களுக்கு  முன்பாக  வெட்டி,  சிதேக்கியாவின்<Zedekiah>  கண்களைக்  குருடாக்கி,  அவனுக்கு  இரண்டு  வெண்கல  விலங்குகளைப்  போட்டு,  அவனைப்  பாபிலோனுக்குக்<Babylon>  கொண்டுபோனார்கள்.  {2Kgs  25:7}

 

ஐந்தாம்  மாதம்  ஏழாந்தேதியிலே  நேபுகாத்நேச்சார்<Nebuchadnezzar>  என்னும்  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  பத்தொன்பதாம்  வருஷத்திலே,  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  ஊழியக்காரனாகிய  நெபுசராதான்<Nebuzaradan>  என்னும்  காவல்  சேனாபதி  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  {2Kgs  25:8}

 

கர்த்தருடைய  ஆலயத்தையும்,  ராஜாவின்  அரமனையையும்,  எருசலேமின்<Jerusalem>  சகல  கட்டடங்களையும்,  பெரிய  வீடுகள்  எல்லாவற்றையும்  அக்கினியால்  சுட்டெரித்துவிட்டான்.  {2Kgs  25:9}

 

காவல்  சேனாபதியோடிருந்த  கல்தேயரின்<Chaldees>  இராணுவத்தாரெல்லாரும்  எருசலேமைச்சுற்றிலும்<Jerusalem>  இருந்த  அலங்கங்களை  இடித்துப்போட்டார்கள்.  {2Kgs  25:10}

 

நகரத்தில்  மீதியான  மற்ற  ஜனத்தையும்,  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  வசமாக  ஓடிவந்துவிட்டவர்களையும்,  மற்ற  ஜனக்கூட்டத்தையும்,  காவல்  சேனாபதியாகிய  நெபுசராதான்<Nebuzaradan>  சிறைகளாகக்  கொண்டுபோனான்.  {2Kgs  25:11}

 

தேசத்தில்  ஏழையான  சிலரைத்  திராட்சத்தோட்டக்காரராகவும்  பயிரிடுங்குடிகளாகவும்  விட்டிருந்தான்.  {2Kgs  25:12}

 

கர்த்தருடைய  ஆலயத்திலிருந்த  வெண்கலத்  தூண்களையும்,  அதிலிருந்த  ஆதாரங்களையும்,  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்த  வெண்கலக்  கடல்தொட்டியையும்,  கல்தேயர்<Chaldees>  உடைத்துப்போட்டு,  அவைகளின்  வெண்கலத்தைப்  பாபிலோனுக்கு<Babylon>  எடுத்துக்கொண்டுபோனார்கள்.  {2Kgs  25:13}

 

செப்புச்சட்டிகளையும்,  சாம்பல்  பாத்திரங்களையும்,  கத்திகளையும்,  தூபகலசங்களையும்,  ஆராதனைக்கடுத்த  சகல  வெண்கலப்  பணிமுட்டுகளையும்  எடுத்துக்கொண்டார்கள்.  {2Kgs  25:14}

 

சுத்தப்  பொன்னும்  சுத்த  வெள்ளியுமான  தூபகலசங்களையும்  கலங்களையும்  காவல்  சேனாபதி  எடுத்துக்கொண்டான்.  {2Kgs  25:15}

 

சாலொமோன்<Solomon>  கர்த்தருடைய  ஆலயத்துக்காகப்  பண்ணுவித்த  இரண்டு  தூண்களும்,  ஒரு  கடல்தொட்டியும்  ஆதாரங்களுமாகிய  அந்தச்  சகல  பணிமுட்டுகளுடைய  வெண்கலத்திற்கும்  நிறையில்லை.  {2Kgs  25:16}

 

ஒரு  தூணின்  உயரம்  பதினெட்டு  முழமாயிருந்தது;  அதின்மேல்  அதற்கு  மூன்றுமுழ  உயரமான  வெண்கலத்  தலைப்பும்  உண்டாயிருந்தது;  குமிழிலே  சுற்றிலும்  செய்யப்பட்டிருந்த  பின்னலும்  மாதளம்பழங்களும்  எல்லாம்  வெண்கலமாயிருந்தது;  மற்றத்  தூணும்  அதின்  பின்னலும்  அதைப்போல்  இருந்தது.  {2Kgs  25:17}

 

காவல்  சேனாபதி  பிரதான  ஆசாரியனாகிய  செராயாவையும்<Seraiah>,  இரண்டாம்  ஆசாரியனாகிய  செப்பனியாவையும்<Zephaniah>,  வாசல்காக்கும்  மூன்று  காவற்காரரையும்  பிடித்தான்.  {2Kgs  25:18}

 

நகரத்திலே  அவன்  யுத்தமனுஷரின்  விசாரிப்புக்காரனாகிய  பிரதானி  ஒருவனையும்,  ராஜாவின்  மந்திரிகளிலே  நகரத்தில்  அகப்பட்ட  ஐந்துபேரையும்,  தேசத்தின்  ஜனத்தைச்  சேவகம்  எழுதுகிற  தலைவனான  இராணுவச்சம்பிரதியையும்,  தேசஜனத்திலே  நகரத்தில்  அகப்பட்ட  அறுபதுபேரையும்  பிடித்தான்.  {2Kgs  25:19}

 

அவர்களைக்  காவல்  சேனாபதியாகிய  நெபுசராதான்<Nebuzaradan>  பிடித்து,  ரிப்லாவில்<Riblah>  இருக்கிற  பாபிலோன்<Babylon>  ராஜாவினிடத்துக்குக்  கொண்டுபோனான்.  {2Kgs  25:20}

 

அவர்களைப்  பாபிலோன்<Babylon>  ராஜா  ஆமாத்<Hamath>  தேசத்தின்  பட்டணமான  ரிப்லாவிலே<Riblah>  வெட்டிக்  கொன்றுபோட்டான்;  இப்படியே  யூதா<Judah>  ஜனங்கள்  தங்கள்  தேசத்திலிருந்து  சிறையிருப்புக்குக்  கொண்டுபோகப்பட்டார்கள்.  {2Kgs  25:21}

 

பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்<Nebuchadnezzar>,  யூதேயாதேசத்தில்<Judah>  மீதியாக  வைத்த  ஜனத்தின்மேல்,  சாப்பானின்<Shaphan>  குமாரனாகிய  அகீக்காமின்<Ahikam>  மகன்  கெதலியாவை<Gedaliah>  அதிகாரியாக  வைத்தான்.  {2Kgs  25:22}

 

பாபிலோன்<Babylon>  ராஜா  கெதலியாவை<Gedaliah>  அதிகாரியாக  வைத்ததை,  சகல  இராணுவச்  சேர்வைக்காரரும்  அவர்களுடைய  மனுஷரும்  கேட்டபோது,  அவர்கள்  மிஸ்பாவில்<Mizpah>  இருக்கிற  கெதலியாவினிடத்தில்<Gedaliah>  வந்தார்கள்;  அவர்கள்  யாரெனில்,  நெத்தனியாவின்<Nethaniah>  குமாரன்  இஸ்மவேலும்<Ishmael>,  கரேயாவின்<Careah>  குமாரன்  யோகனானும்<Johanan>,  நெத்தோப்பாத்தியனாகிய<Netophathite>  தன்கூமேத்தின்<Tanhumeth>  குமாரன்  செராயாவும்<Seraiah>,  மாகாத்தியனான<Maachathite>  ஒருவனுடைய  குமாரன்  யசனியாவும்<Jaazaniah>  அவர்கள்  மனுஷருமே.  {2Kgs  25:23}

 

அப்பொழுது  கெதலியா<Gedaliah>  அவர்களுக்கும்  அவர்கள்  மனுஷருக்கும்  ஆணையிட்டு:  நீங்கள்  கல்தேயரைச்<Chaldees>  சேவிக்கப்  பயப்படவேண்டாம்;  தேசத்திலிருந்து  பாபிலோன்<Babylon>  ராஜாவைச்  சேவியுங்கள்;  அப்பொழுது  உங்களுக்கு  நன்மை  உண்டாகும்  என்றான்.  {2Kgs  25:24}

 

ஏழாம்  மாதத்திலே,  ராஜவம்சத்திலே  பிறந்த  எலிசாமாவின்<Elishama>  குமாரனாகிய  நெத்தனியாவின்<Nethaniah>  குமாரன்  இஸ்மவேல்<Ishmael>  பத்து  மனுஷரோடேகூட  வந்து,  கெதலியாவையும்<Gedaliah>,  அவனோடே  மிஸ்பாவிலிருந்த<Mizpah>  யூதரையும்<Jews>,  கல்தேயரையும்<Chaldees>  வெட்டிக்  கொன்றுபோட்டான்.  {2Kgs  25:25}

 

அப்பொழுது  சிறியோரும்  பெரியோருமாகிய  ஜனங்கள்  யாவரும்  சேனாபதிகளும்  கல்தேயருக்குப்<Chaldees>  பயந்ததினாலே  எழுந்து  புறப்பட்டு  எகிப்திற்குப்<Egypt>  போனார்கள்.  {2Kgs  25:26}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோயாக்கீனுடைய<Jehoiachin>  சிறையிருப்பின்  முப்பத்தேழாம்  வருஷம்  பன்னிரண்டாம்  மாதம்  இருபத்தேழாந்தேதியிலே,  ஏவில்மெரொதாக்<Evilmerodach>  என்னும்  பாபிலோன்<Babylon>  ராஜா,  தான்  ராஜாவான  வருஷத்திலே,  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  யோயாக்கீனைச்<Jehoiachin>  சிறைச்சாலையிலிருந்து  புறப்படப்பண்ணி,  அவன்  தலையை  உயர்த்தி,  {2Kgs  25:27}

 

அவனோடே  அன்பாய்ப்  பேசி,  அவனுடைய  சிங்காசனத்தைத்  தன்னோடே  பாபிலோனிலிருந்து<Babylon>  ராஜாக்களின்  சிங்காசனங்களுக்கு  உயரமாக  வைத்து,  {2Kgs  25:28}

 

அவனுடைய  சிறைச்சாலை  வஸ்திரங்களை  மாற்றினான்;  அவன்  உயிரோடிருந்த  சகல  நாளும்  நித்தம்  தனக்கு  முன்பாகப்  போஜனம்பண்ணும்படி  செய்தான்.  {2Kgs  25:29}

 

அவன்  உயிரோடிருந்த  நாளெல்லாம்  அவனுடைய  செலவுக்காக,  ராஜாவினால்  கட்டளையான  அநுதினத்  திட்டத்தின்படி,  அநுதினமும்  கொடுக்கப்பட்டுவந்தது.  {2Kgs  25:30}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!