Saturday, December 14, 2019

பிலிப்பியர்

இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  ஊழியக்காரராகிய  பவுலும்<Paul>  தீமோத்தேயும்<Timotheus>,  பிலிப்பி<Philippi>  பட்டணத்தில்  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான<Christ  Jesus>  பரிசுத்தவான்கள்  அனைவருக்கும்,  கண்காணிகளுக்கும்,  உதவிக்காரருக்கும்  எழுதுகிறதாவது:  {Phil  1:1}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {Phil  1:2}

 

சுவிசேஷம்  உங்களுக்கு  அறிவிக்கப்பட்ட  நாள்முதல்  இதுவரைக்கும்  நீங்கள்  அதற்கு  உடன்பட்டவர்களானபடியால்,  {Phil  1:3}

 

நான்  பண்ணுகிற  ஒவ்வொரு  விண்ணப்பத்திலும்  உங்கள்  அனைவருக்காகவும்  எப்போதும்  சந்தோஷத்தோடே  விண்ணப்பம்பண்ணி,  {Phil  1:4}

 

உங்களில்  நற்கிரியையைத்  தொடங்கினவர்  அதை  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாள்பரியந்தம்  முடிய  நடத்திவருவாரென்று  நம்பி,  {Phil  1:5}

 

நான்  உங்களை  நினைக்கிறபொழுதெல்லாம்  என்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {Phil  1:6}

 

என்  கட்டுகளிலும்,  நான்  சுவிசேஷத்திற்காக  உத்தரவுசொல்லி  அதைத்  திடப்படுத்திவருகிறதிலும்,  நீங்கள்  அனைவரும்  எனக்கு  அளிக்கப்பட்ட  கிருபையில்  பங்குள்ளவர்களானதால்,  உங்களை  என்  இருதயத்தில்  தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே,  உங்களெல்லாரையுங்  குறித்து  நான்  இப்படி  நினைக்கிறது  எனக்குத்  தகுதியாயிருக்கிறது.  {Phil  1:7}

 

இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  உருக்கமான  அன்பிலே  உங்களெல்லார்மேலும்  எவ்வளவோ  வாஞ்சையாயிருக்கிறேன்  என்பதற்குத்  தேவனே  எனக்குச்  சாட்சி.  {Phil  1:8}

 

மேலும்,  உத்தமமானவைகளை  நீங்கள்  ஒப்புக்கொள்ளத்தக்கதாக  உங்கள்  அன்பானது  அறிவிலும்  எல்லா  உணர்விலும்  இன்னும்  அதிகமதிகமாய்ப்  பெருகவும்,  {Phil  1:9}

 

தேவனுக்கு  மகிமையும்  துதியும்  உண்டாகும்படி  இயேசுகிறிஸ்துவினால்<Jesus  Christ>  வருகிற  நீதியின்  கனிகளால்  நிறைந்தவர்களாகி,  {Phil  1:10}

 

நீங்கள்  கிறிஸ்துவின்<Christ>  நாளுக்கென்று  துப்புரவானவர்களும்  இடறலற்றவர்களுமாயிருக்கவும்  வேண்டுதல்  செய்கிறேன்.  {Phil  1:11}

 

சகோதரரே,  எனக்குச்  சம்பவித்தவைகள்  சுவிசேஷம்  பிரபலமாகும்படிக்கு  ஏதுவாயிற்றென்று  நீங்கள்  அறிய  மனதாயிருக்கிறேன்.  {Phil  1:12}

 

அரமனை  யெங்குமுள்ளவர்களுக்கும்  மற்ற  யாவருக்கும்  என்  கட்டுகள்  கிறிஸ்துவுக்குள்ளான<Christ>  கட்டுகளென்று  வெளியரங்கமாகி,  {Phil  1:13}

 

சகோதரரில்  அநேகர்  என்  கட்டுகளாலே  கர்த்தருக்குள்  திடன்கொண்டு  பயமில்லாமல்  திருவசனத்தைச்  சொல்லும்படி  அதிகமாய்த்  துணிந்திருக்கிறார்கள்.  {Phil  1:14}

 

சிலர்  பொறாமையினாலும்  விரோதத்தினாலும்,  சிலர்  நல்மனதினாலும்  கிறிஸ்துவைப்<Christ>  பிரசங்கிக்கிறார்கள்.  {Phil  1:15}

 

சிலர்  என்  கட்டுகளோடே  உபத்திரவத்தையுங்கூட்ட  நினைத்து,  சுத்தமனதோடே  கிறிஸ்துவை<Christ>  அறிவியாமல்,  விரோதத்தினாலே  அறிவிக்கிறார்கள்.  {Phil  1:16}

 

சுவிசேஷத்திற்காக  நான்  உத்தரவு  சொல்ல  ஏற்படுத்தப்பட்டவனென்று  அறிந்து,  சிலர்  அன்பினாலே  அறிவிக்கிறார்கள்.  {Phil  1:17}

 

இதனாலென்ன?  வஞ்சகத்தினாலாவது,  உண்மையினாலாவது,  எப்படியாவது,  கிறிஸ்து<Christ>  அறிவிக்கப்படுகிறார்;  அதனால்  சந்தோஷப்படுகிறேன்,  இன்னமும்  சந்தோஷப்படுவேன்.  {Phil  1:18}

 

அது  உங்கள்  வேண்டுதலினாலும்  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  ஆவியின்  உதவியினாலும்  எனக்கு  இரட்சிப்பாக  முடியுமென்று  அறிவேன்.  {Phil  1:19}

 

நான்  ஒன்றிலும்  வெட்கப்பட்டுப்போகாமல்,  எப்பொழுதும்போல  இப்பொழுதும்,  மிகுந்த  தைரியத்தோடே  ஜீவனாலாகிலும்,  சாவினாலாகிலும்,  கிறிஸ்து<Christ>  என்  சரீரத்தினாலே  மகிமைப்படுவாரென்று  எனக்கு  உண்டாயிருக்கிற  வாஞ்சைக்கும்  நம்பிக்கைக்கும்  தக்கதாய்,  அப்படி  முடியும்.  {Phil  1:20}

 

கிறிஸ்து<Christ>  எனக்கு  ஜீவன்,  சாவு  எனக்கு  ஆதாயம்.  {Phil  1:21}

 

ஆகிலும்  சரீரத்தில்  பிழைத்திருக்கிறதினாலே  என்  கிரியைக்குப்  பலனுண்டாயிருப்பதால்,  நான்  தெரிந்துகொள்ளவேண்டியது  இன்னதென்று  அறியேன்.  {Phil  1:22}

 

ஏனெனில்  இவ்விரண்டினாலும்  நான்  நெருக்கப்படுகிறேன்;  தேகத்தைவிட்டுப்  பிரிந்து,  கிறிஸ்துவுடனேகூட<Christ>  இருக்க  எனக்கு  ஆசையுண்டு,  அது  அதிக  நன்மையாயிருக்கும்;  {Phil  1:23}

 

அப்படியிருந்தும்,  நான்  சரீரத்தில்  தரித்திருப்பது  உங்களுக்கு  அதிக  அவசியம்.  {Phil  1:24}

 

இந்த  நிச்சயத்தைக்கொண்டிருந்து,  நான்  மறுபடியும்  உங்களிடத்தில்  வருகிறதினால்  என்னைக்குறித்து  உங்களுடைய  மகிழ்ச்சி  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  பெருகும்படிக்கு,  {Phil  1:25}

 

உங்கள்  விசுவாசத்தின்  வர்த்தனைக்காகவும்  சந்தோஷத்துக்காகவும்  நான்  பிழைத்து,  உங்கள்  அனைவரோடுங்கூட  இருப்பேனென்று  அறிந்திருக்கிறேன்.  {Phil  1:26}

 

நான்  வந்து  உங்களைக்  கண்டாலும்,  நான்  வராமலிருந்தாலும்,  நீங்கள்  ஒரே  ஆவியிலே  உறுதியாய்  நின்று,  ஒரே  ஆத்துமாவினாலே  சுவிசேஷத்தின்  விசுவாசத்திற்காகக்  கூடப்போராடி,  எதிர்க்கிறவர்களால்  ஒன்றிலும்  மருளாதிருக்கிறீர்களென்று  உங்களைக்குறித்து  நான்  கேள்விப்படும்படி,  எவ்விதத்திலும்  நீங்கள்  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்திற்குப்  பாத்திரராக  மாத்திரம்  நடந்துகொள்ளுங்கள்.  {Phil  1:27}

 

நீங்கள்  மருளாதிருக்கிறது  அவர்கள்  கெட்டுப்போகிறதற்கும்,  நீங்கள்  இரட்சிக்கப்படுகிறதற்கும்  அத்தாட்சியாயிருக்கிறது;  இதுவும்  தேவனுடைய  செயலே.  {Phil  1:28}

 

ஏனெனில்  கிறிஸ்துவினிடத்தில்<Christ>  விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல,  அவர்  நிமித்தமாகப்  பாடுபடுகிறதற்கும்  உங்களுக்கு  அருளப்பட்டிருக்கிறது.  {Phil  1:29}

 

நீங்கள்  என்னிடத்திலே  கண்டதும்  எனக்கு  உண்டென்று  இப்பொழுது  கேள்விப்படுகிறதுமான  போராட்டமே  உங்களுக்கும்  உண்டு.  {Phil  1:30}

 

ஆதலால்  கிறிஸ்துவுக்குள்<Christ>  யாதொரு  ஆறுதலும்,  அன்பினாலே  யாதொரு  தேறுதலும்,  ஆவியின்  யாதொரு  ஐக்கியமும்,  யாதொரு  உருக்கமான  பட்சமும்  இரக்கங்களும்  உண்டானால்,  {Phil  2:1}

 

நீங்கள்  ஏக  சிந்தையும்  ஏக  அன்புமுள்ளவர்களாயிருந்து,  இசைந்த  ஆத்துமாக்களாய்  ஒன்றையே  சிந்தித்து,  என்  சந்தோஷத்தை  நிறைவாக்குங்கள்.  {Phil  2:2}

 

ஒன்றையும்  வாதினாலாவது  வீண்  பெருமையினாலாவது  செய்யாமல்,  மனத்தாழ்மையினாலே  ஒருவரையொருவர்  தங்களிலும்  மேன்மையானவர்களாக  எண்ணக்கடவீர்கள்.  {Phil  2:3}

 

அவனவன்  தனக்கானவைகளையல்ல,  பிறருக்கானவைகளையும்  நோக்குவானாக.  {Phil  2:4}

 

கிறிஸ்து  இயேசுவிலிருந்த<Christ  Jesus>  சிந்தையே  உங்களிலும்  இருக்கக்கடவது;  {Phil  2:5}

 

அவர்  தேவனுடைய  ரூபமாயிருந்தும்,  தேவனுக்குச்  சமமாயிருப்பதைக்  கொள்ளையாடின  பொருளாக  எண்ணாமல்,  {Phil  2:6}

 

தம்மைத்தாமே  வெறுமையாக்கி,  அடிமையின்  ரூபமெடுத்து,  மனுஷர்  சாயலானார்.  {Phil  2:7}

 

அவர்  மனுஷரூபமாய்க்  காணப்பட்டு,  மரணபரியந்தம்,  அதாவது  சிலுவையின்  மரணபரியந்தமும்  கீழ்ப்படிந்தவராகி,  தம்மைத்தாமே  தாழ்த்தினார்.  {Phil  2:8}

 

ஆதலால்  தேவன்  எல்லாவற்றிற்கும்  மேலாக  அவரை  உயர்த்தி,  {Phil  2:9}

 

இயேசுவின்<Jesus>  நாமத்தில்  வானோர்  பூதலத்தோர்  பூமியின்  கீழானோருடைய  முழங்கால்  யாவும்  முடங்கும்படிக்கும்,  {Phil  2:10}

 

பிதாவாகிய  தேவனுக்கு  மகிமையாக  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  கர்த்தரென்று  நாவுகள்  யாவும்  அறிக்கைபண்ணும்படிக்கும்,  எல்லா  நாமத்திற்கும்  மேலான  நாமத்தை  அவருக்குத்  தந்தருளினார்.  {Phil  2:11}

 

ஆதலால்,  எனக்குப்  பிரியமானவர்களே,  நீங்கள்  எப்பொழுதும்  கீழ்ப்படிகிறபடியே,  நான்  உங்களுக்குச்  சமீபமாயிருக்கும்பொழுது  மாத்திரமல்ல,  நான்  தூரமாயிருக்கிற  இப்பொழுதும்,  அதிக  பயத்தோடும்  நடுக்கத்தோடும்  உங்கள்  இரட்சிப்பு  நிறைவேறப்  பிரயாசப்படுங்கள்.  {Phil  2:12}

 

ஏனெனில்  தேவனே  தம்முடைய  தயவுள்ள  சித்தத்தின்படி  விருப்பத்தையும்  செய்கையையும்  உங்களில்  உண்டாக்குகிறவராயிருக்கிறார்.  {Phil  2:13}

 

நான்  வீணாக  ஓடினதும்  வீணாகப்  பிரயாசப்பட்டதுமில்லையென்கிற  மகிழ்ச்சி  கிறிஸ்துவின்<Christ>  நாளில்  எனக்கு  உண்டாயிருப்பதற்கு,  ஜீவவசனத்தைப்  பிடித்துக்கொண்டு,  உலகத்திலே  சுடர்களைப்போலப்  பிரகாசிக்கிற  நீங்கள்,  {Phil  2:14}

 

கோணலும்  மாறுபாடுமான  சந்ததியின்  நடுவிலே  குற்றமற்றவர்களும்  கபடற்றவர்களும்,  தேவனுடைய  மாசற்ற  பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு,  {Phil  2:15}

 

எல்லாவற்றையும்  முறுமுறுப்பில்லாமலும்  தர்க்கிப்பில்லாமலும்  செய்யுங்கள்.  {Phil  2:16}

 

மேலும்,  உங்கள்  விசுவாசமாகிய  பலியின்மேலும்  ஊழியத்தின்மேலும்  நான்  வார்க்கப்பட்டுப்போனாலும்,  நான்  மகிழ்ந்து,  உங்களனைவரோடுங்கூடச்  சந்தோஷப்படுவேன்.  {Phil  2:17}

 

இதினிமித்தம்  நீங்களும்  மகிழ்ந்து,  என்னோடேகூடச்  சந்தோஷப்படுங்கள்.  {Phil  2:18}

 

அன்றியும்,  நானும்  உங்கள்  செய்திகளை  அறிந்து  மனத்தேறுதல்  அடையும்படிக்குச்  சீக்கிரமாய்த்  தீமோத்தேயுவை<Timotheus>  உங்களிடத்தில்  அனுப்பலாமென்று  கர்த்தராகிய  இயேசுவுக்குள்<Jesus>  நம்பியிருக்கிறேன்.  {Phil  2:19}

 

அதேனென்றால்,  உங்கள்  காரியங்களை  உண்மையாய்  விசாரிக்கிறதற்கு  என்னைப்போல  மனதுள்ளவன்  அவனையன்றி  வேறொருவனும்  என்னிடத்திலில்லை.  {Phil  2:20}

 

மற்றவர்களெல்லாரும்  கிறிஸ்து  இயேசுவுக்குரியவைகளைத்<Christ  Jesus>  தேடாமல்,  தங்களுக்குரியவைகளையே  தேடுகிறார்கள்.  {Phil  2:21}

 

தகப்பனுக்குப்  பிள்ளை  ஊழியஞ்செய்வதுபோல,  அவன்  என்னுடனேகூட  சுவிசேஷத்தினிமித்தம்  ஊழியஞ்செய்தானென்று  அவனுடைய  உத்தமகுணத்தை  அறிந்திருக்கிறீர்கள்.  {Phil  2:22}

 

ஆகையால்  என்  காரியங்கள்  இன்னபடி  நடக்கும்  என்று  நான்  அறிந்தவுடனே  அவனை  அனுப்பலாமென்று  நினைத்திருக்கிறேன்.  {Phil  2:23}

 

அன்றியும்  நானே  சீக்கிரத்தில்  வருவேனென்று  கர்த்தருக்குள்  நம்பிக்கையாயிருக்கிறேன்.  {Phil  2:24}

 

மேலும்,  என்  சகோதரனும்,  உடன்வேலையாளும்,  உடன்சேவகனும்,  உங்கள்  ஸ்தானாபதியும்,  என்  குறைச்சலுக்கு  உதவிசெய்தவனுமான  எப்பாப்பிரோதீத்துவை<Epaphroditus>  உங்களிடத்தில்  அனுப்பவேண்டுமென்று  எண்ணினேன்.  {Phil  2:25}

 

அவன்  உங்கள்  எல்லார்மேலும்  வாஞ்சையுள்ளவனும்,  தான்  வியாதிப்பட்டதை  நீங்கள்  கேள்விப்பட்டதினாலே  மிகவும்  வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.  {Phil  2:26}

 

அவன்  வியாதிப்பட்டு  மரணத்திற்குச்  சமீபமாயிருந்தது  மெய்தான்.  ஆகிலும்,  தேவன்  அவனுக்கு  இரங்கினார்;  அவனுக்கு  இரங்கினதுமல்லாமல்,  துக்கத்தின்மேல்  துக்கம்  எனக்கு  உண்டாகாதபடிக்கு,  எனக்கும்  இரங்கினார்.  {Phil  2:27}

 

ஆகையால்  நீங்கள்  அவனை  மறுபடியும்  கண்டு  சந்தோஷப்படவும்,  என்  துக்கங்  குறையவும்,  அவனை  அதிசீக்கிரமாய்  அனுப்பினேன்.  {Phil  2:28}

 

ஆனபடியினாலே  நீங்கள்  கர்த்தருக்குள்  மிகுந்த  சந்தோஷத்தோடே  அவனை  ஏற்றுக்கொண்டு,  இப்படிப்பட்டவர்களைக்  கனமாய்  எண்ணுங்கள்.  {Phil  2:29}

 

ஏனெனில்  நீங்கள்  எனக்குச்  செய்யவேண்டிய  ஊழியத்திலே  உங்கள்  குறைவை  நிறைவாக்கும்படிக்கு,  அவன்  தன்  பிராணனையும்  எண்ணாமல்,  கிறிஸ்துவின்<Christ>  ஊழியத்தினிமித்தம்  மரணத்திற்குச்  சமீபமாயிருந்தான்.  {Phil  2:30}

 

மேலும்,  என்  சகோதரரே,  கர்த்தருக்குள்  சந்தோஷப்படுங்கள்.  எழுதினவைகளையே  எழுதுவது  எனக்கு  வருத்தமல்ல,  அது  உங்களுக்கு  நலமாயிருக்கும்.  {Phil  3:1}

 

நாய்களுக்கு  எச்சரிக்கையாயிருங்கள்,  பொல்லாத  வேலையாட்களுக்கு  எச்சரிக்கையாயிருங்கள்,  சுன்னத்துக்காரருக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  {Phil  3:2}

 

ஏனெனில்,  மாம்சத்தின்மேல்  நம்பிக்கையாயிராமல்,  ஆவியினாலே  தேவனுக்கு  ஆராதனைசெய்து,  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  மேன்மைபாராட்டுகிற  நாமே  விருத்தசேதனமுள்ளவர்கள்.  {Phil  3:3}

 

மாம்சத்தின்மேல்  நம்பிக்கை  வைக்கவேண்டுமானால்  நானும்  வைக்கலாம்;  வேறொருவன்  மாம்சத்தின்மேல்  நம்பிக்கையாயிருக்க  நினைத்தால்  நான்  அதிகமாய்  அப்படிச்  செய்யலாம்.  {Phil  3:4}

 

நான்  எட்டாம்  நாளில்  விருத்தசேதனமடைந்தவன்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தான்,  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்தான்,  எபிரெயரில்<Hebrews>  பிறந்த  எபிரெயன்<Hebrew>,  நியாயப்பிரமாணத்தின்படி  பரிசேயன்<Pharisee>;  {Phil  3:5}

 

பக்திவைராக்கியத்தின்படி  சபையைத்  துன்பப்படுத்தினவன்,  நியாயப்பிரமாணத்திற்குரிய  நீதியின்படி  குற்றஞ்சாட்டப்படாதவன்.  {Phil  3:6}

 

ஆகிலும்,  எனக்கு  லாபமாயிருந்தவைகளெவைகளோ  அவைகளைக்  கிறிஸ்துவுக்காக<Christ>  நஷ்டமென்று  எண்ணினேன்.  {Phil  3:7}

 

அதுமாத்திரமல்ல,  என்  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவை<Christ  Jesus>  அறிகிற  அறிவின்  மேன்மைக்காக  எல்லாவற்றையும்  நஷ்டமென்று  எண்ணிக்கொண்டிருக்கிறேன்.  {Phil  3:8}

 

நான்  கிறிஸ்துவை<Christ>  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும்,  நியாயப்பிரமாணத்தினால்  வருகிற  சுயநீதியை  உடையவனாயிராமல்,  கிறிஸ்துவைப்<Christ>  பற்றும்  விசுவாசத்தினால்  வருகிறதும்  விசுவாசமூலமாய்த்  தேவனால்  உண்டாயிருக்கிறதுமான  நீதியை  உடையவனாயிருந்து,  கிறிஸ்துவுக்குள்<Christ>  இருக்கிறவனென்று  காணப்படும்படிக்கும்,  {Phil  3:9}

 

இப்படி  நான்  அவரையும்  அவருடைய  உயிர்த்தெழுதலின்  வல்லமையையும்,  அவருடைய  பாடுகளின்  ஐக்கியத்தையும்  அறிகிறதற்கும்,  அவருடைய  மரணத்திற்கொப்பான  மரணத்திற்குள்ளாகி,  எப்படியாயினும்  நான்  மரித்தோரிலிருந்து  உயிரோடெழுந்திருப்பதற்குத்  தகுதியாகும்படிக்கும்,  {Phil  3:10}

 

அவருக்காக  எல்லாவற்றையும்  நஷ்டமென்று  விட்டேன்;  குப்பையுமாக  எண்ணுகிறேன்.  {Phil  3:11}

 

நான்  அடைந்தாயிற்று,  அல்லது  முற்றும்  தேறினவனானேன்  என்று  எண்ணாமல்,  கிறிஸ்து  இயேசுவினால்<Christ  Jesus>  நான்  எதற்காகப்  பிடிக்கப்பட்டேனோ  அதை  நான்  பிடித்துக்கொள்ளும்படி  ஆசையாய்த்  தொடருகிறேன்.  {Phil  3:12}

 

சகோதரரே,  அதைப்  பிடித்துக்கொண்டேனென்று  நான்  எண்ணுகிறதில்லை;  ஒன்று  செய்கிறேன்,  பின்னானவைகளை  மறந்து,  முன்னானவைகளை  நாடி,  {Phil  3:13}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  தேவன்  அழைத்த  பரம  அழைப்பின்  பந்தயப்பொருளுக்காக  இலக்கை  நோக்கித்  தொடருகிறேன்.  {Phil  3:14}

 

ஆகையால்,  நம்மில்  தேறினவர்கள்  யாவரும்  இந்தச்  சிந்தையாயிருக்கக்கடவோம்;  எந்தக்  காரியத்திலாவது  நீங்கள்  வேறே  சிந்தையாயிருந்தால்,  அதையும்  தேவன்  உங்களுக்கு  வெளிப்படுத்துவார்.  {Phil  3:15}

 

ஆகிலும்  நாம்  எதுவரையில்  தேறியிருக்கிறோமோ,  அதுமுதல்  ஒரே  ஒழுங்காய்  நடந்துகொண்டு,  ஒரே  சிந்தையாயிருப்போமாக.  {Phil  3:16}

 

சகோதரரே,  நீங்கள்  என்னோடேகூடப்  பின்பற்றுகிறவர்களாகி,  நாங்கள்  உங்களுக்கு  வழிகாட்டுகிறபடி  நடக்கிறவர்களை  மாதிரியாக  நோக்குங்கள்.  {Phil  3:17}

 

ஏனெனில்,  அநேகர்  வேறுவிதமாய்  நடக்கிறார்கள்;  அவர்கள்  கிறிஸ்துவின்<Christ>  சிலுவைக்குப்  பகைஞரென்று  உங்களுக்கு  அநேகந்தரம்  சொன்னேன்,  இப்பொழுது  கண்ணீரோடும்  சொல்லுகிறேன்.  {Phil  3:18}

 

அவர்களுடைய  முடிவு  அழிவு,  அவர்களுடைய  தேவன்  வயிறு,  அவர்களுடைய  மகிமை  அவர்களுடைய  இலச்சையே,  அவர்கள்  பூமிக்கடுத்தவைகளைச்  சிந்திக்கிறார்கள்.  {Phil  3:19}

 

நம்முடைய  குடியிருப்போ  பரலோகத்திலிருக்கிறது,  அங்கேயிருந்து  கர்த்தராயிருக்கிற  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  என்னும்  இரட்சகர்  வர  எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  {Phil  3:20}

 

அவர்  எல்லாவற்றையும்  தமக்குக்  கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க  தம்முடைய  வல்லமையான  செயலின்படியே,  நம்முடைய  அற்பமான  சரீரத்தைத்  தம்முடைய  மகிமையான  சரீரத்திற்கு  ஒப்பாக  மறுரூபப்படுத்துவார்.  {Phil  3:21}

 

ஆதலால்,  எனக்குப்  பிரியமும்  வாஞ்சையுமான  சகோதரரே,  எனக்குச்  சந்தோஷமும்  கிரீடமுமானவர்களே,  பிரியமானவர்களே,  இந்தப்படியே  கர்த்தருக்குள்  நிலைத்திருங்கள்.  {Phil  4:1}

 

கர்த்தருக்குள்  ஒரே  சிந்தையாயிருக்க  எயோதியாளுக்கும்<Euodias>  சிந்திகேயாளுக்கும்<Syntyche>  புத்திசொல்லுகிறேன்.  {Phil  4:2}

 

அன்றியும்,  என்  உத்தம  கூட்டாளியே,  அவர்களுக்கு  உதவியாயிருக்கும்படி  உன்னையும்  வேண்டிக்கொள்ளுகிறேன்;  அவர்கள்  கிலேமெந்தோடும்<Clement>  மற்ற  என்  உடன்வேலையாட்களோடுங்கூடச்  சுவிசேஷ  விஷயத்தில்  என்னோடேகூட  மிகவும்  பிரயாசப்பட்டார்கள்,  அவர்களுடைய  நாமங்கள்  ஜீவபுஸ்தகத்தில்  இருக்கிறது.  {Phil  4:3}

 

கர்த்தருக்குள்  எப்பொழுதும்  சந்தோஷமாயிருங்கள்;  சந்தோஷமாயிருங்கள்  என்று  மறுபடியும்  சொல்லுகிறேன்.  {Phil  4:4}

 

உங்கள்  சாந்தகுணம்  எல்லா  மனுஷருக்கும்  தெரிந்திருப்பதாக.  கர்த்தர்  சமீபமாயிருக்கிறார்.  {Phil  4:5}

 

நீங்கள்  ஒன்றுக்குங்  கவலைப்படாமல்,  எல்லாவற்றையுங்குறித்து  உங்கள்  விண்ணப்பங்களை  ஸ்தோத்திரத்தோடே  கூடிய  ஜெபத்தினாலும்  வேண்டுதலினாலும்  தேவனுக்குத்  தெரியப்படுத்துங்கள்.  {Phil  4:6}

 

அப்பொழுது,  எல்லாப்  புத்திக்கும்  மேலான  தேவசமாதானம்  உங்கள்  இருதயங்களையும்  உங்கள்  சிந்தைகளையும்  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளாகக்<Christ  Jesus>  காத்துக்கொள்ளும்.  {Phil  4:7}

 

கடைசியாக,  சகோதரரே,  உண்மையுள்ளவைகளெவைகளோ,  ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ,  நீதியுள்ளவைகளெவைகளோ,  கற்புள்ளவைகளெவைகளோ,  அன்புள்ளவைகளெவைகளோ,  நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ,  புண்ணியம்  எதுவோ,  புகழ்  எதுவோ  அவைகளையே  சிந்தித்துக்கொண்டிருங்கள்.  {Phil  4:8}

 

நீங்கள்  என்னிடத்தில்  கற்றும்  அடைந்தும்  கேட்டும்  கண்டும்  இருக்கிறவைகளெவைகளோ,  அவைகளையே  செய்யுங்கள்;  அப்பொழுது  சமாதானத்தின்  தேவன்  உங்களோடிருப்பார்.  {Phil  4:9}

 

என்னை  விசாரிப்பதற்கு  நீங்கள்  இப்பொழுது  மறுபடியும்  மனமலர்ந்தபடியினாலே  கர்த்தருக்குள்  மிகவும்  சந்தோஷப்பட்டேன்;  இப்படிச்  செய்ய  எண்ணங்கொண்டிருந்தீர்கள்,  சமயம்மாத்திரம்  உங்களுக்கு  நேரிடவில்லை.  {Phil  4:10}

 

என்  குறைச்சலினால்  நான்  இப்படிச்  சொல்லுகிறதில்லை;  ஏனெனில்  நான்  எந்த  நிலைமையிலிருந்தாலும்  மனரம்மியமாயிருக்கக்  கற்றுக்கொண்டேன்.  {Phil  4:11}

 

தாழ்ந்திருக்கவும்  எனக்குத்  தெரியும்,  வாழ்ந்திருக்கவும்  எனக்குத்  தெரியும்;  எவ்விடத்திலும்  எல்லாவற்றிலும்  திருப்தியாயிருக்கவும்  பட்டினியாயிருக்கவும்,  பரிபூரணமடையவும்  குறைவுபடவும்  போதிக்கப்பட்டேன்.  {Phil  4:12}

 

என்னைப்  பெலப்படுத்துகிற  கிறிஸ்துவினாலே<Christ>  எல்லாவற்றையுஞ்செய்ய  எனக்குப்  பெலனுண்டு.  {Phil  4:13}

 

ஆகிலும்  நீங்கள்  என்  உபத்திரவத்தில்  என்னோடே  உடன்பட்டது  நலமாயிருக்கிறது.  {Phil  4:14}

 

மேலும்,  பிலிப்பியரே<Philippians>,  சுவிசேஷத்தின்  ஆரம்பத்திலே  நான்  மக்கெதோனியாவிலிருந்து<Macedonia>  புறப்பட்டபோது,  கொடுக்கல்  வாங்கல்  காரியத்தில்  நீங்கள்மாத்திரம்  எனக்கு  உடன்பட்டதேயல்லாமல்,  வேறொரு  சபையும்  உடன்படவில்லை  என்று  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  {Phil  4:15}

 

நான்  தெசலோனிக்கேயிலிருந்தபோதும்<Thessalonica>,  என்  குறைச்சலை  நீக்கும்படி  நீங்கள்  இரண்டொருதரம்  அனுப்பினீர்கள்.  {Phil  4:16}

 

உபகாரத்தை  நான்  நாடாமல்,  உங்கள்  கணக்குக்குப்  பலன்  பெருகும்படியே  நாடுகிறேன்.  {Phil  4:17}

 

எல்லாம்  எனக்குக்  கிடைத்தது,  பரிபூரணமும்  உண்டாயிருக்கிறது;  உங்களால்  அனுப்பப்பட்டவைகளைச்  சுகந்த  வாசனையும்  தேவனுக்குப்  பிரியமான  உகந்த  பலியுமாக  எப்பாப்பிரோதீத்துவின்<Epaphroditus>  கையில்  வரப்பற்றிக்கொண்டபடியால்  நான்  திருப்தியடைந்திருக்கிறேன்.  {Phil  4:18}

 

என்  தேவன்  தம்முடைய  ஐசுவரியத்தின்படி  உங்கள்  குறைவையெல்லாம்  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  மகிமையிலே  நிறைவாக்குவார்.  {Phil  4:19}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனானவருக்கு  என்றென்றைக்கும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  {Phil  4:20}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான<Christ  Jesus>  பரிசுத்தவான்கள்  யாவருக்கும்  வாழ்த்துதல்  சொல்லுங்கள்.  என்னோடிருக்கிற  சகோதரர்கள்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  {Phil  4:21}

 

பரிசுத்தவான்கள்  அனைவரும்,  விசேஷமாக  இராயனுடைய<Caesar>  அரமனையிலுள்ளவர்களும்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  {Phil  4:22}

 

நமது  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  கிருபை  உங்களனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  {Phil  4:23}




No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!