Saturday, December 14, 2019

கலாத்தியர்

மனுஷராலுமல்ல,  மனுஷன்  மூலமாயுமல்ல,  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>,  அவரை  மரித்தோரிலிருந்தெழுப்பின  பிதாவாகிய  தேவனாலும்,  அப்போஸ்தலனாயிருக்கிற  பவுலாகிய<Paul>  நானும்,  {Gal  1:1}

 

என்னுடனேகூட  இருக்கிற  சகோதரரெல்லாரும்,  கலாத்தியா<Galatia>  நாட்டிலுள்ள  சபைகளுக்கு  எழுதுகிறதாவது:  {Gal  1:2}

 

பிதாவாகிய  தேவனாலும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக;  {Gal  1:3}

 

அவர்  நம்மை  இப்பொழுதிருக்கிற  பொல்லாத  பிரபஞ்சத்தினின்று  விடுவிக்கும்படி  நம்முடைய  பிதாவாகிய  தேவனுடைய  சித்தத்தின்படியே  நம்முடைய  பாவங்களுக்காகத்  தம்மைத்தாமே  ஒப்புக்கொடுத்தார்;  {Gal  1:4}

 

அவருக்கு  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  {Gal  1:5}

 

உங்களைக்  கிறிஸ்துவின்<Christ>  கிருபையினாலே  அழைத்தவரை  நீங்கள்  இவ்வளவு  சீக்கிரமாய்  விட்டு,  வேறொரு  சுவிசேஷத்திற்குத்  திரும்புகிறதைப்பற்றி  நான்  ஆச்சரியப்படுகிறேன்;  {Gal  1:6}

 

வேறொரு  சுவிசேஷம்  இல்லையே;  சிலர்  உங்களைக்  கலகப்படுத்தி,  கிறிஸ்துவினுடைய<Christ>  சுவிசேஷத்தைப்  புரட்ட  மனதாயிருக்கிறார்களேயல்லாமல்  வேறல்ல.  {Gal  1:7}

 

நாங்கள்  உங்களுக்குப்  பிரசங்கித்த  சுவிசேஷத்தையல்லாமல்,  நாங்களாவது,  வானத்திலிருந்து  வருகிற  ஒரு  தூதனாவது,  வேறொரு  சுவிசேஷத்தை  உங்களுக்குப்  பிரசங்கித்தால்,  அவன்  சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  {Gal  1:8}

 

முன்  சொன்னதுபோல  மறுபடியும்  சொல்லுகிறேன்;  நீங்கள்  ஏற்றுக்கொண்ட  சுவிசேஷத்தையல்லாமல்  வேறொரு  சுவிசேஷத்தை  ஒருவன்  உங்களுக்குப்  பிரசங்கித்தால்  அவன்  சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  {Gal  1:9}

 

இப்பொழுது  நான்  மனுஷரையா,  தேவனையா,  யாரை  நாடிப்  போதிக்கிறேன்?  மனுஷரையா  பிரியப்படுத்தப்  பார்க்கிறேன்?  நான்  இன்னும்  மனுஷரைப்  பிரியப்படுத்துகிறவனாயிருந்தால்  நான்  கிறிஸ்துவின்<Christ>  ஊழியக்காரனல்லவே.  {Gal  1:10}

 

மேலும்,  சகோதரரே,  என்னால்  பிரசங்கிக்கப்பட்ட  சுவிசேஷம்  மனுஷருடைய  யோசனையின்படியானதல்லவென்று  உங்களுக்குத்  தெரிவிக்கிறேன்.  {Gal  1:11}

 

நான்  அதை  ஒரு  மனுஷனால்  பெற்றதுமில்லை,  மனுஷனால்  கற்றதுமில்லை,  இயேசுகிறிஸ்துவே<Jesus  Christ>  அதை  எனக்கு  வெளிப்படுத்தினார்.  {Gal  1:12}

 

நான்  யூதமார்க்கத்திலிருந்தபோது<Jews>  என்னுடைய  நடக்கையைக்குறித்துக்  கேள்விப்பட்டிருப்பீர்கள்;  தேவனுடைய  சபையை  நான்  மிகவும்  துன்பப்படுத்தி,  அதைப்  பாழாக்கி;  {Gal  1:13}

 

என்  ஜனத்தாரில்  என்  வயதுள்ள  அநேகரைப்பார்க்கிலும்  யூதமார்க்கத்திலே<Jews>  தேறினவனாய்,  என்  பிதாக்களுடைய  பாரம்பரிய  நியாயங்களுக்காக  மிகவும்  பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.  {Gal  1:14}

 

அப்படியிருந்தும்,  நான்  என்  தாயின்  வயிற்றிலிருந்ததுமுதல்,  என்னைப்  பிரித்தெடுத்து,  தம்முடைய  கிருபையினால்  அழைத்த  தேவன்,  {Gal  1:15}

 

தம்முடைய  குமாரனை  நான்  புறஜாதிகளிடத்தில்  சுவிசேஷமாய்  அறிவிக்கும்பொருட்டாக,  அவரை  எனக்குள்  வெளிப்படுத்தப்  பிரியமாயிருந்தபோது,  உடனே  நான்  மாம்சத்தோடும்  இரத்தத்தோடும்  யோசனைபண்ணாமலும்;  {Gal  1:16}

 

எனக்கு  முன்னே  அப்போஸ்தலரானவர்களிடத்திலே  எருசலேமுக்குப்<Jerusalem>  போகாமலும்;  அரபிதேசத்திற்குப்<Arabia>  புறப்பட்டுப்போய்,  மறுபடியும்  தமஸ்கு<Damascus>  ஊருக்குத்  திரும்பிவந்தேன்.  {Gal  1:17}

 

மூன்று  வருஷம்  சென்றபின்பு,  பேதுருவைக்<Peter>  கண்டுகொள்ளும்படி  நான்  எருசலேமுக்குப்<Jerusalem>  போய்,  அவனிடத்தில்  பதினைந்துநாள்  தங்கியிருந்தேன்.  {Gal  1:18}

 

கர்த்தருடைய  சகோதரனாகிய  யாக்கோபைத்<James>  தவிர,  அப்போஸ்தலரில்  வேறொருவரையும்  நான்  காணவில்லை.  {Gal  1:19}

 

நான்  உங்களுக்கு  எழுதுகிற  இவைகள்  பொய்யல்லவென்று  தேவனுக்குமுன்பாக  நிச்சயமாய்ச்  சொல்லுகிறேன்.  {Gal  1:20}

 

பின்பு,  சீரியா<Syria>  சிலிசியா<Cilicia>  நாடுகளின்  புறங்களில்  வந்தேன்.  {Gal  1:21}

 

மேலும்  யூதேயாதேசத்திலே<Judaea>  கிறிஸ்துவுக்குள்ளான<Christ>  சபைகளுக்கு  முகமறியாதவனாயிருந்தேன்.  {Gal  1:22}

 

முன்னே  நம்மைத்  துன்பப்படுத்தினவனே,  தான்  அழிக்கத்தேடின  விசுவாசத்தை  இப்பொழுது  பிரசங்கிக்கிறான்  என்பதைமாத்திரம்  அவர்கள்  கேள்விப்பட்டிருந்து,  {Gal  1:23}

 

என்னைப்பற்றித்  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  {Gal  1:24}

 

பதினாலு  வருஷம்  சென்றபின்பு,  நான்  தீத்துவைக்<Titus>  கூட்டிக்கொண்டு  பர்னபாவுடனேகூட<Barnabas>  மறுபடியும்  எருசலேமுக்குப்<Jerusalem>  போனேன்.  {Gal  2:1}

 

நான்  தேவ  அறிவிப்பினாலே  போய்,  புறஜாதிகளிடத்தில்  நான்  பிரசங்கிக்கிற  சுவிசேஷத்தை  அவர்களுக்கு  விவரித்துக்  காண்பித்தேன்;  ஆயினும்  நான்  ஓடுகிறதும்,  ஓடினதும்  வீணாகாதபடிக்கு  எண்ணிக்கையுள்ளவர்களுக்கே  தனிமையாய்  விவரித்துக்  காண்பித்தேன்.  {Gal  2:2}

 

ஆனாலும்  என்னுடனேகூட  இருந்த  தீத்து<Titus>  கிரேக்கனாயிருந்தும்<Greek>  விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக்  கட்டாயம்பண்ணப்படவில்லை.  {Gal  2:3}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  நமக்கு  உண்டான  சுயாதீனத்தை  உளவுபார்த்து  நம்மை  நியாயப்பிரமாணத்திற்கு  அடிமைகளாக்கும்பொருட்டாகப்  பக்கவழியாய்  நுழைந்த  கள்ளச்  சகோதரர்  நிமித்தம்  அப்படியாயிற்று.  {Gal  2:4}

 

சுவிசேஷத்தின்  சத்தியம்  உங்களிடத்திலே  நிலைத்திருக்கும்படி,  நாங்கள்  ஒரு  நாழிகையாகிலும்  அவர்களுக்குக்  கீழ்ப்படிந்து  இணங்கவில்லை.  {Gal  2:5}

 

அல்லாமலும்  எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள்  எனக்கு  ஒன்றும்  போதிக்கவில்லை;  அவர்கள்  எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும்  எனக்குக்  கவலையில்லை,  தேவன்  மனுஷரிடத்தில்  பட்சபாதமுள்ளவரல்லவே.  {Gal  2:6}

 

அதுவுமல்லாமல்,  விருத்தசேதனமுள்ளவர்களுக்கு  அப்போஸ்தலனாயிருக்கும்படி  பேதுருவைப்<Peter>  பலப்படுத்தினவர்  புறஜாதிகளுக்கு  அப்போஸ்தலனாயிருக்கும்படி  என்னையும்  பலப்படுத்தினபடியால்,  {Gal  2:7}

 

விருத்தசேதனமுள்ளவர்களுக்குச்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கும்படி  பேதுருவுக்குக்<Peter>  கையளிக்கப்பட்டதுபோல,  விருத்தசேதனம்  இல்லாதவர்களுக்குப்  பிரசங்கிக்கும்படி  அது  எனக்கும்  கையளிக்கப்பட்டதென்று  அவர்கள்  கண்டு;  {Gal  2:8}

 

எனக்கு  அளிக்கப்பட்ட  கிருபையை  அறிந்தபோது,  தூண்களாக  எண்ணப்பட்ட  யாக்கோபும்<James>,  கேபாவும்<Cephas>,  யோவானும்<John>,  தாங்கள்  விருத்தசேதனமுள்ளவர்களுக்கும்,  நாங்கள்  புறஜாதிகளுக்கும்  பிரசங்கிக்கும்படி,  அந்நியோந்நிய  ஐக்கியத்திற்கு  அடையாளமாக  எனக்கும்  பர்னபாவுக்கும்<Barnabas>  வலதுகை  கொடுத்து,  {Gal  2:9}

 

தரித்திரரை  நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம்  சொன்னார்கள்;  அப்படிச்  செய்யும்படி  அதற்கு  முன்னமே  நானும்  கருத்துள்ளவனாயிருந்தேன்.  {Gal  2:10}

 

மேலும்,  பேதுரு<Peter>  அந்தியோகியாவுக்கு<Antioch>  வந்தபோது,  அவன்மேல்  குற்றஞ்  சுமந்ததினால்,  நான்  முகமுகமாய்  அவனோடே  எதிர்த்தேன்.  {Gal  2:11}

 

எப்படியெனில்,  யாக்கோபினிடத்திலிருந்து<James>  சிலர்  வருகிறதற்குமுன்னே  அவன்  புறஜாதியாருடனே  சாப்பிட்டான்;  அவர்கள்  வந்தபோதோ,  விருத்தசேதனமுள்ளவர்களுக்குப்  பயந்து,  விலகிப்  பிரிந்தான்.  {Gal  2:12}

 

மற்ற  யூதரும்<Jews>  அவனுடனேகூட  மாயம்பண்ணினார்கள்;  அவர்களுடைய  மாயத்தினாலே  பர்னபாவும்<Barnabas>  இழுப்புண்டான்.  {Gal  2:13}

 

இப்படி  அவர்கள்  சுவிசேஷத்தின்  சத்தியத்திற்கேற்றபடி  சரியாய்  நடவாததை  நான்  கண்டபோது,  எல்லாருக்கும்  முன்பாக  நான்  பேதுருவை<Peter>  நோக்கிச்  சொன்னது  என்னவென்றால்:  யூதனாயிருக்கிற<Jew>  நீர்  யூதர்<Jews>  முறைமையாக  நடவாமல்,  புறஜாதியார்  முறைமையாக  நடந்துகொண்டிருக்க,  புறஜாதியாரை  யூதர்<Jews>  முறைமையாக  நடக்கும்படி  நீர்  எப்படிக்  கட்டாயம்பண்ணலாம்?  {Gal  2:14}

 

புறஜாதியாரில்  பிறந்த  பாவிகளாயிராமல்,  சுபாவத்தின்படி  யூதராயிருக்கிற<Jews>  நாமும்  இயேசுகிறிஸ்துவைப்பற்றும்<Jesus  Christ>  விசுவாசத்தினாலேயன்றி,  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலே  மனுஷன்  நீதிமானாக்கப்படுவதில்லையென்று  அறிந்து,  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலல்ல,  கிறிஸ்துவைப்பற்றும்<Christ>  விசுவாசத்தினாலே  நீதிமான்களாக்கப்படும்படிக்குக்  கிறிஸ்து  இயேசுவின்மேல்<Christ  Jesus>  விசுவாசிகளானோம்.  {Gal  2:15}

 

நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலே  எந்த  மனுஷனும்  நீதிமானாக்கப்படுவதில்லையே.  {Gal  2:16}

 

கிறிஸ்துவுக்குள்<Christ>  நீதிமான்களாக்கப்படும்படி  நாடுகிற  நாமும்  பாவிகளாகக்  காணப்படுவோமானால்,  கிறிஸ்து<Christ>  பாவத்திற்குக்  காரணரோ?  அல்லவே.  {Gal  2:17}

 

நான்  இடித்துப்போட்டவைகளையே  நான்  மறுபடியும்  கட்டினால்,  பிரமாணத்தை  மீறுகிறவனென்று  காணப்படுவேன்.  {Gal  2:18}

 

தேவனுக்கென்று  பிழைக்கும்படி  நான்  நியாயப்பிரமாணத்தினாலே  நியாயப்பிரமாணத்திற்கு  மரித்தேனே.  {Gal  2:19}

 

கிறிஸ்துவுடனேகூடச்<Christ>  சிலுவையிலறையப்பட்டேன்;  ஆயினும்,  பிழைத்திருக்கிறேன்;  இனி  நான்  அல்ல,  கிறிஸ்துவே<Christ>  எனக்குள்  பிழைத்திருக்கிறார்;  நான்  இப்பொழுது  மாம்சத்தில்  பிழைத்திருக்கிறதோ,  என்னில்  அன்புகூர்ந்து  எனக்காகத்  தம்மைத்தாமே  ஒப்புக்கொடுத்த  தேவனுடைய  குமாரனைப்பற்றும்  விசுவாசத்தினாலே  பிழைத்திருக்கிறேன்.  {Gal  2:20}

 

நான்  தேவனுடைய  கிருபையை  விருதாவாக்குகிறதில்லை;  நீதியானது  நியாயப்பிரமாணத்தினாலே  வருமானால்,  கிறிஸ்து<Christ>  மரித்தது  வீணாயிருக்குமே.  {Gal  2:21}

 

புத்தியில்லாத  கலாத்தியரே<Galatians>,  நீங்கள்  சத்தியத்திற்குக்  கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக  உங்களை  மயக்கினவன்  யார்?  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  சிலுவையிலறையப்பட்டவராக  உங்கள்  கண்களுக்குமுன்  பிரத்தியட்சமாய்  உங்களுக்குள்ளே  வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.  {Gal  3:1}

 

ஒன்றைமாத்திரம்  உங்களிடத்தில்  அறிய  விரும்புகிறேன்;  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலேயோ,  விசுவாசக்  கேள்வியினாலேயோ,  எதினாலே  ஆவியைப்  பெற்றீர்கள்?  {Gal  3:2}

 

ஆவியினாலே  ஆரம்பம்பண்ணின  நீங்கள்  இப்பொழுது  மாம்சத்தினாலே  முடிவுபெறப்போகிறீர்களோ?  நீங்கள்  இத்தனை  புத்தியீனரா?  {Gal  3:3}

 

இத்தனை  பாடுகளையும்  வீணாய்ப்  பட்டீர்களோ?  அவைகள்  வீணாய்ப்போயிற்றே.  {Gal  3:4}

 

அன்றியும்  உங்களுக்கு  ஆவியை  அளித்து,  உங்களுக்குள்ளே  அற்புதங்களை  நடப்பிக்கிறவர்  அதை  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலேயோ,  விசுவாசக்  கேள்வியினாலேயோ,  எதினாலே  செய்கிறார்?  {Gal  3:5}

 

அப்படியே  ஆபிரகாம்<Abraham>  தேவனை  விசுவாசித்தான்,  அது  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டது.  {Gal  3:6}

 

ஆகையால்  விசுவாசமார்க்கத்தார்கள்  எவர்களோ  அவர்களே  ஆபிரகாமின்<Abraham>  பிள்ளைகளென்று  அறிவீர்களாக.  {Gal  3:7}

 

மேலும்  தேவன்  விசுவாசத்தினாலே  புறஜாதிகளை  நீதிமான்களாக்குகிறாரென்று  வேதம்  முன்னாகக்  கண்டு:  உனக்குள்  சகல  ஜாதிகளும்  ஆசீர்வதிக்கப்படும்  என்று  ஆபிரகாமுக்குச்<Abraham>  சுவிசேஷமாய்  முன்னறிவித்தது.  {Gal  3:8}

 

அந்தப்படி  விசுவாசமார்க்கத்தார்  விசுவாசமுள்ள  ஆபிரகாமுடனே<Abraham>  ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.  {Gal  3:9}

 

நியாயப்பிரமாணத்தின்  கிரியைக்காரராகிய  யாவரும்  சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;  நியாயப்பிரமாண  புஸ்தகத்தில்  எழுதப்பட்டவைகளையெல்லாம்  செய்யத்தக்கதாக  அவைகளில்  நிலைத்திராதவன்  எவனோ  அவன்  சபிக்கப்பட்டவன்  என்று  எழுதியிருக்கிறதே.  {Gal  3:10}

 

நியாயப்பிரமாணத்தினாலே  ஒருவனும்  தேவனிடத்தில்  நீதிமானாகிறதில்லையென்பது  வெளியரங்கமாயிருக்கிறது.  ஏனெனில்,  விசுவாசத்தினாலே  நீதிமான்  பிழைப்பான்  என்று  எழுதியிருக்கிறதே.  {Gal  3:11}

 

நியாயப்பிரமாணமோ  விசுவாசத்திற்குரியதல்ல;  அவைகளைச்  செய்கிற  மனுஷனே  அவைகளால்  பிழைப்பான்.  {Gal  3:12}

 

மரத்திலே  தூக்கப்பட்ட  எவனும்  சபிக்கப்பட்டவன்  என்று  எழுதியிருக்கிறபடி,  கிறிஸ்து<Christ>  நமக்காகச்  சாபமாகி,  நியாயப்பிரமாணத்தின்  சாபத்திற்கு  நம்மை  நீங்கலாக்கி  மீட்டுக்கொண்டார்.  {Gal  3:13}

 

ஆபிரகாமுக்கு<Abraham>  உண்டான  ஆசீர்வாதம்  கிறிஸ்து  இயேசுவினால்<Christ  Jesus>  புறஜாதிகளுக்கு  வரும்படியாகவும்,  ஆவியைக்குறித்துச்  சொல்லப்பட்ட  வாக்குத்தத்தத்தை  நாம்  விசுவாசத்தினாலே  பெறும்படியாகவும்  இப்படியாயிற்று.  {Gal  3:14}

 

சகோதரரே,  மனுஷர்  முறைமையின்படி  சொல்லுகிறேன்;  மனுஷர்களுக்குள்ளே  உறுதிபண்ணப்பட்ட  உடன்படிக்கையை  ஒருவனும்  தள்ளுகிறதுமில்லை,  அதினோடே  ஒன்றையும்  கூட்டுகிறதுமில்லை.  {Gal  3:15}

 

ஆபிரகாமுக்கும்<Abraham>  அவனுடைய  சந்ததிக்கும்  வாக்குத்தத்தங்கள்  பண்ணப்பட்டன;  சந்ததிகளுக்கு  என்று  அநேகரைக்குறித்துச்  சொல்லாமல்,  உன்  சந்ததிக்கு  என்று  ஒருவனைக்குறித்துச்  சொல்லியிருக்கிறார்,  அந்தச்  சந்ததி  கிறிஸ்துவே<Christ>.  {Gal  3:16}

 

ஆதலால்  நான்  சொல்லுகிறதென்னவெனில்,  கிறிஸ்துவை<Christ>  முன்னிட்டுத்  தேவனால்  முன்  உறுதிபண்ணப்பட்ட  உடன்படிக்கையை  நானூற்றுமுப்பது  வருஷத்திற்குப்பின்பு  உண்டான  நியாயப்பிரமாணமானது  தள்ளி,  வாக்குத்தத்தத்தை  வியர்த்தமாக்கமாட்டாது.  {Gal  3:17}

 

அன்றியும்,  சுதந்தரமானது  நியாயப்பிரமாணத்தினாலே  உண்டானால்  அது  வாக்குத்தத்தத்தினாலே  உண்டாயிராது;  தேவன்  அதை  ஆபிரகாமுக்கு<Abraham>  வாக்குத்தத்தத்தினாலே  அருளிச்செய்தாரே.  {Gal  3:18}

 

அப்படியானால்,  நியாயப்பிரமாணத்தின்  நோக்கமென்ன?  வாக்குத்தத்தத்தைப்பெற்ற  சந்ததி  வருமளவும்  அது  அக்கிரமங்களினிமித்தமாகக்  கூட்டப்பட்டு,  தேவதூதரைக்கொண்டு  மத்தியஸ்தன்  கையிலே  கட்டளையிடப்பட்டது.  {Gal  3:19}

 

மத்தியஸ்தன்  ஒருவனுக்குரியவனல்ல,  தேவனோ  ஒருவர்.  {Gal  3:20}

 

அப்படியானால்,  நியாயப்பிரமாணம்  தேவனுடைய  வாக்குத்தத்தங்களுக்கு  விரோதமா?  அல்லவே;  உயிரைக்  கொடுக்கத்தக்க  நியாயப்பிரமாணம்  அருளப்பட்டிருந்ததானால்,  நீதியானது  நியாயப்பிரமாணத்தினால்  உண்டாயிருக்குமே.  {Gal  3:21}

 

அப்படியிராதபடியால்,  இயேசுகிறிஸ்துவைப்<Jesus  Christ>  பற்றும்  விசுவாசத்தினாலே  பலிக்கிற  வாக்குத்தத்தம்  விசுவாசமுள்ளவர்களுக்கு  அளிக்கப்படும்படி  வேதம்  எல்லாரையும்  ஏகமாய்ப்  பாவத்தின்கீழ்  அடைத்துப்போட்டது.  {Gal  3:22}

 

ஆதலால்  விசுவாசம்  வருகிறதற்குமுன்னே,  வெளிப்படப்போகிற  விசுவாசத்திற்கு  ஏதுவாக  நாம்  அடைக்கப்பட்டவர்களாய்  நியாயப்பிரமாணத்தின்கீழ்  காவல்பண்ணப்பட்டிருந்தோம்.  {Gal  3:23}

 

இவ்விதமாக,  நாம்  விசுவாசத்தினாலே  நீதிமான்களாக்கப்படுவதற்கு  நியாயப்பிரமாணம்  நம்மைக்  கிறிஸ்துவினிடத்தில்<Christ>  வழிநடத்துகிற  உபாத்தியாய்  இருந்தது.  {Gal  3:24}

 

விசுவாசம்  வந்தபின்பு  நாம்  உபாத்திக்குக்  கீழானவர்களல்லவே.  {Gal  3:25}

 

நீங்களெல்லாரும்  கிறிஸ்து  இயேசுவைப்பற்றும்<Christ  Jesus>  விசுவாசத்தினால்  தேவனுடைய  புத்திரராயிருக்கிறீர்களே.  {Gal  3:26}

 

ஏனெனில்,  உங்களில்  கிறிஸ்துவுக்குள்ளாக<Christ>  ஞானஸ்நானம்  பெற்றவர்கள்  எத்தனைபேரோ,  அத்தனைபேரும்  கிறிஸ்துவைத்<Christ>  தரித்துக்கொண்டீர்களே.  {Gal  3:27}

 

யூதனென்றும்<Jew>  கிரேக்கனென்றுமில்லை<Greek>,  அடிமையென்றும்  சுயாதீனனென்றுமில்லை,  ஆணென்றும்  பெண்ணென்றுமில்லை;  நீங்களெல்லாரும்  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  ஒன்றாயிருக்கிறீர்கள்.  {Gal  3:28}

 

நீங்கள்  கிறிஸ்துவினுடையவர்களானால்<Christ>,  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியாராயும்,  வாக்குத்தத்தத்தின்படியே  சுதந்தரராயும்  இருக்கிறீர்கள்.  {Gal  3:29}

 

பின்னும்  நான்  சொல்லுகிறதென்னவெனில்,  சுதந்தரவாளியானவன்  எல்லாவற்றிற்கும்  எஜமானாயிருந்தும்,  அவன்  சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும்,  அவனுக்கும்  அடிமையானவனுக்கும்  வித்தியாசமில்லை.  {Gal  4:1}

 

தகப்பன்  குறித்த  காலம்வரைக்கும்  அவன்  காரியக்காரருக்கும்  வீட்டு  விசாரணைக்காரருக்கும்  கீழ்ப்பட்டிருக்கிறான்.  {Gal  4:2}

 

அப்படியே  நாமும்  சிறுபிள்ளைகளாயிருந்த  காலத்தில்  இவ்வுலகத்தின்  வழிபாடுகளுக்கு  அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.  {Gal  4:3}

 

நாம்  புத்திரசுவிகாரத்தையடையும்படி  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டவர்களை  மீட்டுக்கொள்ளத்தக்கதாக,  {Gal  4:4}

 

காலம்  நிறைவேறினபோது,  ஸ்திரீயினிடத்திற்  பிறந்தவரும்  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழானவருமாகிய  தம்முடைய  குமாரனைத்  தேவன்  அனுப்பினார்.  {Gal  4:5}

 

மேலும்  நீங்கள்  புத்திரராயிருக்கிறபடியினால்,  அப்பா,  பிதாவே!  என்று  கூப்பிடத்தக்கதாகத்  தேவன்  தமது  குமாரனுடைய  ஆவியை  உங்கள்  இருதயங்களில்  அனுப்பினார்.  {Gal  4:6}

 

ஆகையால்  இனி  நீ  அடிமையாயிராமல்  புத்திரனாயிருக்கிறாய்;  நீ  புத்திரனேயானால்,  கிறிஸ்துமூலமாய்த்<Christ>  தேவனுடைய  சுதந்தரனாயுமிருக்கிறாய்.  {Gal  4:7}

 

நீங்கள்  தேவனை  அறியாமலிருந்தபோது,  சுபாவத்தின்படி  தேவர்களல்லாதவர்களுக்கு  அடிமைகளாயிருந்தீர்கள்.  {Gal  4:8}

 

இப்பொழுதோ  நீங்கள்  தேவனை  அறிந்திருக்க,  அல்லது  தேவனாலே  அறியப்பட்டிருக்க,  பெலனற்றதும்  வெறுமையானதுமான  அவ்வழிபாடுகளுக்கு  நீங்கள்  மறுபடியும்  திரும்பி,  மறுபடியும்  அவைகளுக்கு  அடிமைப்படும்படி  விரும்புகிறதெப்படி?  {Gal  4:9}

 

நாட்களையும்,  மாதங்களையும்,  காலங்களையும்,  வருஷங்களையும்  பார்க்கிறீர்களே.  {Gal  4:10}

 

நான்  உங்களுக்காகப்  பிரயாசப்பட்டது  வீணாய்ப்போயிற்றோ  என்று  உங்களைக்குறித்துப்  பயந்திருக்கிறேன்.  {Gal  4:11}

 

சகோதரரே,  என்னைப்போலாகுங்கள்  என்று  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறேன்;  நான்  உங்களைப்போலுமானேனே.  எனக்கு  நீங்கள்  அநியாயம்  ஒன்றும்  செய்யவில்லை.  {Gal  4:12}

 

உங்களுக்குத்  தெரிந்திருக்கிறபடி,  நான்  சரீர  பலவீனத்தோடு  முதலாந்தரம்  உங்களுக்குச்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்தேன்.  {Gal  4:13}

 

அப்படியிருந்தும்,  என்  சரீரத்தில்  உண்டாயிருக்கிற  சோதனையை  நீங்கள்  அசட்டைபண்ணாமலும்,  அரோசியாமலும்,  தேவதூதனைப்போலவும்,  கிறிஸ்து  இயேசுவைப்போலவும்<Christ  Jesus>,  என்னை  ஏற்றுக்கொண்டீர்கள்.  {Gal  4:14}

 

அப்பொழுது  நீங்கள்  கொண்டிருந்த  ஆனந்த  பாக்கியம்  எங்கே?  உங்கள்  கண்களைப்  பிடுங்கி  எனக்குக்  கொடுக்கக்கூடுமானால்,  அப்படியும்  செய்திருப்பீர்கள்  என்று  உங்களுக்குச்  சாட்சியாயிருக்கிறேன்.  {Gal  4:15}

 

நான்  உங்களுக்குச்  சத்தியத்தைச்  சொன்னதினாலே  உங்களுக்குச்  சத்துருவானேனோ?  {Gal  4:16}

 

அவர்கள்  உங்களை  நாடி  வைராக்கியம்  பாராட்டுகிறார்கள்;  ஆகிலும்  நல்மனதோடே  அப்படிச்  செய்யாமல்,  நீங்கள்  அவர்களை  நாடி  வைராக்கியம்  பாராட்டும்பொருட்டு  உங்களைப்  புறம்பாக்க  விரும்புகிறார்கள்.  {Gal  4:17}

 

நல்விஷயத்தில்  வைராக்கியம்  பாராட்டுவது  நல்லதுதான்;  அதை  நான்  உங்களிடத்தில்  இருக்கும்பொழுதுமாத்திரமல்ல,  எப்பொழுதும்  பாராட்டவேண்டும்.  {Gal  4:18}

 

என்  சிறுபிள்ளைகளே,  கிறிஸ்து<Christ>  உங்களிடத்தில்  உருவாகுமளவும்  உங்களுக்காக  மறுபடியும்  கர்ப்பவேதனைப்படுகிறேன்;  {Gal  4:19}

 

உங்களைக்குறித்து  நான்  சந்தேகப்படுகிறபடியால்,  நான்  இப்பொழுது  உங்களிடத்தில்  வந்திருந்து,  வேறுவகையாகப்  பேச  விரும்புகிறேன்.  {Gal  4:20}

 

நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டிருக்க  விரும்புகிற  நீங்கள்  நியாயப்பிரமாணம்  சொல்லுகிறதைக்  கேட்கவில்லையா?  இதை  எனக்குச்  சொல்லுங்கள்.  {Gal  4:21}

 

ஆபிரகாமுக்கு<Abraham>  இரண்டு  குமாரர்  இருந்தார்கள்  என்று  எழுதியிருக்கிறது;  ஒருவன்  அடிமையானவளிடத்தில்  பிறந்தவன்,  ஒருவன்  சுயாதீனமுள்ளவளிடத்தில்  பிறந்தவன்.  {Gal  4:22}

 

அடிமையானவளிடத்தில்  பிறந்தவன்  மாம்சத்தின்படி  பிறந்தான்,  சுயாதீனமுள்ளவளிடத்தில்  பிறந்தவன்  வாக்குத்தத்தத்தின்படி  பிறந்தான்.  {Gal  4:23}

 

இவைகள்  ஞான  அர்த்தமுள்ளவைகள்;  அந்த  ஸ்திரீகள்  இரண்டு  ஏற்பாடுகளாம்;  ஒன்று  சீனாய்மலையிலுண்டான<Sinai>  ஏற்பாடு,  அது  அடிமைத்தனத்திற்குள்ளாகப்  பிள்ளைபெறுகிறது,  அது  ஆகார்<Agar>  என்பவள்தானே.  {Gal  4:24}

 

ஆகார்<Agar>  என்பது  அரபிதேசத்திலுள்ள<Arabia>  சீனாய்மலை<Sinai>;  அந்த  ஆகார்<Agar>  இப்பொழுதிருக்கிற  எருசலேமுக்குச்<Jerusalem>  சரி;  இவள்  தன்  பிள்ளைகளோடேகூட  அடிமைப்பட்டிருக்கிறாளே.  {Gal  4:25}

 

மேலான  எருசலேமோ<Jerusalem>  சுயாதீனமுள்ளவள்,  அவளே  நம்மெல்லாருக்கும்  தாயானவள்.  {Gal  4:26}

 

அந்தப்படி  பிள்ளைபெறாத  மலடியே,  மகிழ்ந்திரு;  கர்ப்பவேதனைப்படாதவளே,  களிப்பாய்  எழும்பி  ஆர்ப்பரி;  புருஷனுள்ளவளைப்பார்க்கிலும்  அநாத  ஸ்திரீக்கே  அதிக  பிள்ளைகளுண்டு  என்று  எழுதியிருக்கிறது.  {Gal  4:27}

 

சகோதரரே,  நாம்  ஈசாக்கைப்போல<Isaac>  வாக்குத்தத்தத்துப்  பிள்ளைகளாயிருக்கிறோம்.  {Gal  4:28}

 

ஆகிலும்  மாம்சத்தின்படி  பிறந்தவன்  ஆவியின்படி  பிறந்தவனை  அப்பொழுது  துன்பப்படுத்தினதுபோல,  இப்பொழுதும்  நடந்துவருகிறது.  {Gal  4:29}

 

அதைக்குறித்து  வேதம்  என்ன  சொல்லுகிறது:  அடிமையானவளின்  மகன்  சுயாதீனமுள்ளவளுடைய  குமாரனோடே  சுதந்தரவாளியாயிருப்பதில்லை;  ஆகையால்  அடிமையானவளையும்,  அவளுடைய  மகனையும்  புறம்பே  தள்ளு  என்று  சொல்லுகிறது.  {Gal  4:30}

 

இப்படியிருக்க,  சகோதரரே,  நாம்  அடிமையானவளுக்குப்  பிள்ளைகளாயிராமல்,  சுயாதீனமுள்ளவளுக்கே  பிள்ளைகளாயிருக்கிறோம்.  {Gal  4:31}

 

ஆனபடியினாலே,  நீங்கள்  மறுபடியும்  அடிமைத்தனத்தின்  நுகத்துக்குட்படாமல்,  கிறிஸ்து<Christ>  நமக்கு  உண்டாக்கின  சுயாதீன  நிலைமையிலே  நிலைகொண்டிருங்கள்.  {Gal  5:1}

 

இதோ,  நீங்கள்  விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால்  கிறிஸ்துவினால்<Christ>  உங்களுக்கு  ஒரு  பிரயோஜனமுமிராது  என்று  பவுலாகிய<Paul>  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Gal  5:2}

 

மேலும்,  விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற  எந்த  மனுஷனும்  நியாயப்பிரமாணம்  முழுவதையும்  நிறைவேற்றக்  கடனாளியாயிருக்கிறான்  என்று  மறுபடியும்  அப்படிப்பட்டவனுக்குச்  சாட்சியாகச்  சொல்லுகிறேன்.  {Gal  5:3}

 

நியாயப்பிரமாணத்தினால்  நீதிமான்களாக  விரும்புகிற  நீங்கள்  யாவரும்  கிறிஸ்துவைவிட்டுப்<Christ>  பிரிந்து  கிருபையினின்று  விழுந்தீர்கள்.  {Gal  5:4}

 

நாங்களோ  நீதிகிடைக்குமென்று  ஆவியைக்கொண்டு  விசுவாசத்தினால்  நம்பிக்கையோடே  காத்திருக்கிறோம்.  {Gal  5:5}

 

கிறிஸ்து  இயேசுவினிடத்தில்<Christ  Jesus>  விருத்தசேதனமும்  விருத்தசேதனமில்லாமையும்  ஒன்றுக்கும்  உதவாது,  அன்பினால்  கிரியைசெய்கிற  விசுவாசமே  உதவும்.  {Gal  5:6}

 

நீங்கள்  நன்றாய்  ஓடினீர்களே;  சத்தியத்திற்குக்  கீழ்ப்படியாமற்போக  உங்களுக்குத்  தடைசெய்தவன்  யார்?  {Gal  5:7}

 

இந்தப்  போதனை  உங்களை  அழைத்தவரால்  உண்டானதல்ல.  {Gal  5:8}

 

புளிப்புள்ள  கொஞ்சமாவானது  பிசைந்த  மாவனைத்தையும்  உப்பப்பண்ணும்.  {Gal  5:9}

 

நீங்கள்  வேறுவிதமாய்ச்  சிந்திக்கமாட்டீர்களென்று  நான்  கர்த்தருக்குள்  உங்களைக்குறித்து  நம்பிக்கையாயிருக்கிறேன்;  உங்களைக்  கலக்குகிறவன்  எப்படிப்பட்டவனாயிருந்தாலும்  தனக்கேற்ற  ஆக்கினையை  அடைவான்.  {Gal  5:10}

 

சகோதரரே,  இதுவரைக்கும்  நான்  விருத்தசேதனத்தைப்  பிரசங்கிக்கிறவனாயிருந்தால்,  இதுவரைக்கும்  என்னத்திற்குத்  துன்பப்படுகிறேன்?  அப்படியானால்  சிலுவையைப்பற்றி  வரும்  இடறல்  ஒழிந்திருக்குமே.  {Gal  5:11}

 

உங்களைக்  கலக்குகிறவர்கள்  தறிப்புண்டுபோனால்  நலமாயிருக்கும்.  {Gal  5:12}

 

சகோதரரே,  நீங்கள்  சுயாதீனத்திற்கு  அழைக்கப்பட்டீர்கள்,  இந்தச்  சுயாதீனத்தை  நீங்கள்  மாம்சத்திற்கேதுவாக  அநுசரியாமல்,  அன்பினாலே  ஒருவருக்கொருவர்  ஊழியஞ்செய்யுங்கள்.  {Gal  5:13}

 

உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக,  என்கிற  இந்த  ஒரே  வார்த்தையிலே  நியாயப்பிரமாணம்  முழுவதும்  நிறைவேறும்.  {Gal  5:14}

 

நீங்கள்  ஒருவரையொருவர்  கடித்துப்  பட்சித்தீர்களானால்  அழிவீர்கள்,  அப்படி  ஒருவராலொருவர்  அழிக்கப்படாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  {Gal  5:15}

 

பின்னும்  நான்  சொல்லுகிறதென்னவென்றால்,  ஆவிக்கேற்றபடி  நடந்துகொள்ளுங்கள்,  அப்பொழுது  மாம்ச  இச்சையை  நிறைவேற்றாதிருப்பீர்கள்.  {Gal  5:16}

 

மாம்சம்  ஆவிக்கு  விரோதமாகவும்,  ஆவி  மாம்சத்துக்கு  விரோதமாகவும்  இச்சிக்கிறது;  நீங்கள்  செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச்  செய்யாதபடிக்கு,  இவைகள்  ஒன்றுக்கொன்று  விரோதமாயிருக்கிறது.  {Gal  5:17}

 

ஆவியினால்  நடத்தப்படுவீர்களானால்,  நீங்கள்  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டவர்களல்ல.  {Gal  5:18}

 

மாம்சத்தின்  கிரியைகள்  வெளியரங்கமாயிருக்கின்றன;  அவையாவன:  விபசாரம்,  வேசித்தனம்,  அசுத்தம்,  காமவிகாரம்,  {Gal  5:19}

 

விக்கிரகாராதனை,  பில்லிசூனியம்,  பகைகள்,  விரோதங்கள்,  வைராக்கியங்கள்,  கோபங்கள்,  சண்டைகள்,  பிரிவினைகள்,  மார்க்கபேதங்கள்,  {Gal  5:20}

 

பொறாமைகள்,  கொலைகள்,  வெறிகள்,  களியாட்டுகள்  முதலானவைகளே;  இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிப்பதில்லையென்று  முன்னே  நான்  சொன்னதுபோல  இப்பொழுதும்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Gal  5:21}

 

ஆவியின்  கனியோ,  அன்பு,  சந்தோஷம்,  சமாதானம்,  நீடியபொறுமை,  தயவு,  நற்குணம்,  விசுவாசம்,  {Gal  5:22}

 

சாந்தம்,  இச்சையடக்கம்;  இப்படிப்பட்டவைகளுக்கு  விரோதமான  பிரமாணம்  ஒன்றுமில்லை.  {Gal  5:23}

 

கிறிஸ்துவினுடையவர்கள்<Christ>  தங்கள்  மாம்சத்தையும்  அதின்  ஆசை  இச்சைகளையும்  சிலுவையில்  அறைந்திருக்கிறார்கள்.  {Gal  5:24}

 

நாம்  ஆவியினாலே  பிழைத்திருந்தால்,  ஆவிக்கேற்றபடி  நடக்கவும்  கடவோம்.  {Gal  5:25}

 

வீண்  புகழ்ச்சியை  விரும்பாமலும்,  ஒருவரையொருவர்  கோபமூட்டாமலும்,  ஒருவர்மேல்  ஒருவர்  பொறாமைகொள்ளாமலும்  இருக்கக்கடவோம்.  {Gal  5:26}

 

சகோதரரே,  ஒருவன்  யாதொரு  குற்றத்தில்  அகப்பட்டால்,  ஆவிக்குரியவர்களாகிய  நீங்கள்  சாந்தமுள்ள  ஆவியோடே  அப்படிப்பட்டவனைச்  சீர்பொருந்தப்பண்ணுங்கள்;  நீயும்  சோதிக்கப்படாதபடிக்கு  உன்னைக்குறித்து  எச்சரிக்கையாயிரு.  {Gal  6:1}

 

ஒருவர்  பாரத்தை  ஒருவர்  சுமந்து,  இப்படியே  கிறிஸ்துவினுடைய<Christ>  பிரமாணத்தை  நிறைவேற்றுங்கள்.  {Gal  6:2}

 

ஒருவன்,  தான்  ஒன்றுமில்லாதிருந்தும்,  தன்னை  ஒரு  பொருட்டென்று  எண்ணினால்,  தன்னைத்தானே  வஞ்சிக்கிறவனாவான்.  {Gal  6:3}

 

அவனவன்  தன்தன்  சுயகிரியையைச்  சோதித்துப்பார்க்கக்கடவன்;  அப்பொழுது  மற்றவனைப்  பார்க்கும்போதல்ல,  தன்னையே  பார்க்கும்போது  மேன்மைபாராட்ட  அவனுக்கு  இடமுண்டாகும்.  {Gal  6:4}

 

அவனவன்  தன்தன்  பாரத்தைச்  சுமப்பானே.  {Gal  6:5}

 

மேலும்,  திருவசனத்தில்  உபதேசிக்கப்படுகிறவன்  உபதேசிக்கிறவனுக்குச்  சகல  நன்மைகளிலும்  பகிர்ந்துகொடுக்கக்கடவன்.  {Gal  6:6}

 

மோசம்போகாதிருங்கள்,  தேவன்  தம்மைப்  பரியாசம்பண்ணவொட்டார்;  மனுஷன்  எதை  விதைக்கிறானோ  அதையே  அறுப்பான்.  {Gal  6:7}

 

தன்  மாம்சத்திற்கென்று  விதைக்கிறவன்  மாம்சத்தினால்  அழிவை  அறுப்பான்;  ஆவிக்கென்று  விதைக்கிறவன்  ஆவியினாலே  நித்தியஜீவனை  அறுப்பான்.  {Gal  6:8}

 

நன்மைசெய்கிறதில்  சோர்ந்துபோகாமல்  இருப்போமாக;  நாம்  தளர்ந்துபோகாதிருந்தால்  ஏற்றகாலத்தில்  அறுப்போம்.  {Gal  6:9}

 

ஆகையால்  நமக்குக்  கிடைக்கும்  சமயத்திற்குத்தக்கதாக,  யாவருக்கும்,  விசேஷமாக  விசுவாச  குடும்பத்தார்களுக்கும்,  நன்மைசெய்யக்கடவோம்.  {Gal  6:10}

 

என்  கையெழுத்தாய்  எவ்வளவு  எழுதினேனென்று  பாருங்கள்.  {Gal  6:11}

 

மாம்சத்தின்படி  நல்வேஷமாய்க்  காணப்பட  விரும்புகிறவர்கள்  எவர்களோ,  அவர்கள்  தாங்கள்  கிறிஸ்துவினுடைய<Christ>  சிலுவையினிமித்தம்  துன்பப்படாதபடிக்கே  உங்களை  விருத்தசேதனம்  பண்ணிக்கொள்ளக்  கட்டாயம்பண்ணுகிறார்கள்.  {Gal  6:12}

 

விருத்தசேதனம்  அடைந்திருக்கிற  அவர்களும்  நியாயப்பிரமாணத்தைக்  கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்;  அப்படியிருந்தும்,  அவர்கள்  உங்கள்  மாம்சத்தைக்குறித்து  மேன்மைபாராட்டும்படிக்கு  நீங்கள்  விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று  விரும்புகிறார்கள்.  {Gal  6:13}

 

நானோ  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  சிலுவையைக்  குறித்தேயல்லாமல்  வேறொன்றையுங்குறித்து  மேன்மைபாராட்டாதிருப்பேனாக;  அவரால்  உலகம்  எனக்குச்  சிலுவையிலறையுண்டிருக்கிறது,  நானும்  உலகத்திற்குச்  சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.  {Gal  6:14}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  விருத்தசேதனமும்  ஒன்றுமில்லை,  விருத்தசேதனமில்லாமையும்  ஒன்றுமில்லை;  புது  சிருஷ்டியே  காரியம்.  {Gal  6:15}

 

இந்தப்  பிரமாணத்தின்படி  நடந்துவருகிறவர்கள்  எவர்களோ,  அவர்களுக்கும்,  தேவனுடைய  இஸ்ரவேலருக்கும்<Israel>,  சமாதானமும்  இரக்கமும்  உண்டாயிருப்பதாக.  {Gal  6:16}

 

இனிமேல்  ஒருவனும்  எனக்கு  வருத்தம்  உண்டாக்காதிருப்பானாக;  கர்த்தராகிய  இயேசுவினுடைய<Jesus>  அச்சடையாளங்களை  நான்  என்  சரீரத்திலே  தரித்துக்கொண்டிருக்கிறேன்.  {Gal  6:17}

 

சகோதரரே,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  கிருபை  உங்கள்  ஆவியுடனேகூட  இருப்பதாக.  ஆமென்.  {Gal  6:18}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!