Wednesday, December 18, 2019

கொலோசெயர்

தேவனுடைய  சித்தத்தினாலே  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அப்போஸ்தலனாகிய  பவுலும்<Paul>,  சகோதரனாகிய  தீமோத்தேயும்<Timotheus>,  {Col  1:1}

 

கொலோசெ<Colosse>  பட்டணத்தில்  கிறிஸ்துவுக்குள்<Christ>  பரிசுத்தவான்களும்  விசுவாசிகளுமாயிருக்கிற  சகோதரர்களுக்கு  எழுதுகிறதாவது:  நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {Col  1:2}

 

கிறிஸ்து  இயேசுவின்மேலுள்ள<Christ  Jesus>  உங்கள்  விசுவாசத்தையும்,  பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள  உங்கள்  அன்பையுங்குறித்து  நாங்கள்  கேள்விப்பட்டு,  {Col  1:3}

 

பரலோகத்தில்  உங்களுக்காக  வைத்திருக்கிற  நம்பிக்கையினிமித்தம்,  {Col  1:4}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  பிதாவாகிய  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்செலுத்தி,  எப்பொழுதும்  உங்களுக்காக  வேண்டுதல்  செய்கிறோம்.  {Col  1:5}

 

அந்த  நம்பிக்கையைக்குறித்து,  நீங்கள்  முன்னமே  சத்தியவசனமாகிய  சுவிசேஷத்தினாலே  கேள்விப்பட்டீர்கள்;  அந்தச்  சுவிசேஷம்  உலகமெங்கும்  பரம்பிப்  பலன்தருகிறதுபோல,  உங்களிடத்திலும்  வந்து,  நீங்கள்  அதைக்  கேட்டு,  தேவகிருபையைச்  சத்தியத்தின்படி  அறிந்துகொண்ட  நாள்முதல்,  அது  உங்களுக்குள்ளும்  பலன்தருகிறதாயிருக்கிறது;  {Col  1:6}

 

அதை  எங்களுக்குப்  பிரியமான  உடன்வேலையாளும்,  உங்களுக்காகக்  கிறிஸ்துவின்<Christ>  உண்மையான  ஊழியக்காரனுமாயிருக்கிற  எப்பாப்பிராவினிடத்தில்<Epaphras>  நீங்கள்  கற்றறிந்திருக்கிறீர்கள்;  {Col  1:7}

 

ஆவிக்குள்ளான  உங்கள்  அன்பையும்  அவனே  எங்களுக்குத்  தெரியப்படுத்தினான்.  {Col  1:8}

 

இதினிமித்தம்,  நாங்கள்  அதைக்  கேட்ட  நாள்முதல்  உங்களுக்காக  இடைவிடாமல்  ஜெபம்பண்ணுகிறோம்;  நீங்கள்  எல்லா  ஞானத்தோடும்,  ஆவிக்குரிய  விவேகத்தோடும்  அவருடைய  சித்தத்தை  அறிகிற  அறிவினாலே  நிரப்பப்படவும்,  {Col  1:9}

 

சகலவித  நற்கிரியைகளுமாகிய  கனிகளைத்  தந்து,  தேவனை  அறிகிற  அறிவில்  விருத்தியடைந்து,  கர்த்தருக்குப்  பிரியமுண்டாக  அவருக்குப்  பாத்திரராய்  நடந்துகொள்ளவும்,  {Col  1:10}

 

சந்தோஷத்தோடே  கூடிய  எல்லாப்  பொறுமையும்  நீடியசாந்தமும்  உண்டாவதற்கு,  மகிமையான  அவருடைய  வல்லமையின்படி,  எல்லா  வல்லமையாலும்  பலப்படுத்தப்படவும்,  உங்களுக்காக  வேண்டுதல்செய்கிறோம்.  {Col  1:11}

 

ஒளியிலுள்ள  பரிசுத்தவான்களுடைய  சுதந்தரத்தில்  பங்கடைவதற்கு,  நம்மைத்  தகுதியுள்ளவர்களாக்கினவரும்,  {Col  1:12}

 

இருளின்  அதிகாரத்தினின்று  நம்மை  விடுதலையாக்கி,  தமது  அன்பின்  குமாரனுடைய  ராஜ்யத்திற்கு  உட்படுத்தினவருமாயிருக்கிற  பிதாவை  ஸ்தோத்திரிக்கிறோம்.  {Col  1:13}

 

[குமாரனாகிய]  அவருக்குள்,  அவருடைய  இரத்தத்தினாலே,  பாவமன்னிப்பாகிய  மீட்பு  நமக்கு  உண்டாயிருக்கிறது.  {Col  1:14}

 

அவர்  அதரிசனமான  தேவனுடைய  தற்சுரூபமும்,  சர்வ  சிருஷ்டிக்கும்  முந்தின  பேறுமானவர்.  {Col  1:15}

 

ஏனென்றால்  அவருக்குள்  சகலமும்  சிருஷ்டிக்கப்பட்டது;  பரலோகத்திலுள்ளவைகளும்  பூலோகத்திலுள்ளவைகளுமாகிய  காணப்படுகிறவைகளும்  காணப்படாதவைகளுமான  சகல  வஸ்துக்களும்,  சிங்காசனங்களானாலும்,  கர்த்தத்துவங்களானாலும்,  துரைத்தனங்களானாலும்,  அதிகாரங்களானாலும்,  சகலமும்  அவரைக்கொண்டும்  அவருக்கென்றும்  சிருஷ்டிக்கப்பட்டது.  {Col  1:16}

 

அவர்  எல்லாவற்றிற்கும்  முந்தினவர்,  எல்லாம்  அவருக்குள்  நிலைநிற்கிறது.  {Col  1:17}

 

அவரே  சபையாகிய  சரீரத்துக்குத்  தலையானவர்;  எல்லாவற்றிலும்  முதல்வராயிருக்கும்படி,  அவரே  ஆதியும்  மரித்தோரிலிருந்து  எழுந்த  முதற்பேறுமானவர்.  {Col  1:18}

 

சகல  பரிபூரணமும்  அவருக்குள்ளே  வாசமாயிருக்கவும்,  {Col  1:19}

 

அவர்  சிலுவையில்  சிந்தின  இரத்தத்தினாலே  சமாதானத்தை  உண்டாக்கி,  பூலோகத்திலுள்ளவைகள்  பரலோகத்திலுள்ளவைகள்  யாவையும்  அவர்  மூலமாய்த்  தமக்கு  ஒப்புரவாக்கிக்கொள்ளவும்  அவருக்குப்  பிரியமாயிற்று.  {Col  1:20}

 

முன்னே  அந்நியராயும்  துர்க்கிரியைகளினால்  மனதிலே  சத்துருக்களாயும்  இருந்த  உங்களையும்  பரிசுத்தராகவும்  குற்றமற்றவர்களாகவும்  கண்டிக்கப்படாதவர்களாகவும்  தமக்கு  முன்  நிறுத்தும்படியாக  அவருடைய  மாம்ச  சரீரத்தில்  அடைந்த  மரணத்தினாலே  இப்பொழுது  ஒப்புரவாக்கினார்.  {Col  1:21}

 

நீங்கள்  கேட்ட  சுவிசேஷத்தினால்  உண்டாகும்  நம்பிக்கையைவிட்டு  அசையாமல்,  ஸ்திரமாயும்  உறுதியாயும்  விசுவாசத்திலே  நிலைத்திருப்பீர்களானால்  அப்படியாகும்.  {Col  1:22}

 

அந்தச்  சுவிசேஷம்  வானத்தின்  கீழிருக்கிற  சகல  சிருஷ்டிகளுக்கும்  பிரசங்கிக்கப்பட்டுவருகிறது;  அதற்கென்றே  பவுலாகிய<Paul>  நான்  ஊழியக்காரனானேன்.  {Col  1:23}

 

இப்பொழுது  நான்  உங்கள்நிமித்தம்  அநுபவிக்கிற  பாடுகளில்  சந்தோஷமடைந்து,  கிறிஸ்துவினுடைய<Christ>  உபத்திரவங்களில்  குறைவானதை  அவருடைய  சரீரமாகிய  சபைக்காக,  என்  மாம்சத்திலே  நிறைவேற்றுகிறேன்.  {Col  1:24}

 

ஆதிகாலங்களுக்கும்  தலைமுறை  தலைமுறைகளுக்கும்  மறைவாயிருந்து,  இப்பொழுது  அவருடைய  பரிசுத்தவான்களுக்கு  வெளியாக்கப்பட்ட  இரகசியமாகிய  தேவவசனத்தைப்  பூரணமாய்த்  தெரியப்படுத்துகிறதற்கு,  {Col  1:25}

 

உங்கள்பொருட்டுத்  தேவனால்  எனக்கு  அளிக்கப்பட்ட  உத்தியோகத்தின்படியே  நான்  அந்தச்  சபைக்கு  ஊழியக்காரனானேன்.  {Col  1:26}

 

புறஜாதிகளுக்குள்ளே  விளங்கிய  இந்த  இரகசியத்திலுள்ள  மகிமையின்  ஐசுவரியம்  இன்னதென்று,  தேவன்  தம்முடைய  பரிசுத்தவான்களுக்குத்  தெரியப்படுத்தச்  சித்தமானார்;  கிறிஸ்துவானவர்<Christ>  மகிமையின்  நம்பிக்கையாக  உங்களுக்குள்  இருப்பதே  அந்த  இரகசியம்.  {Col  1:27}

 

எந்த  மனுஷனையும்  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  தேறினவனாக  நிறுத்தும்படிக்கு,  அவரையே  நாங்கள்  அறிவித்து,  எந்த  மனுஷனுக்கும்  புத்திசொல்லி,  எந்த  மனுஷனுக்கும்  எல்லா  ஞானத்தோடும்  உபதேசம்பண்ணுகிறோம்.  {Col  1:28}

 

அதற்காக  நான்  எனக்குள்ளே  வல்லமையாய்க்  கிரியை  நடப்பிக்கிற  அவருடைய  பலத்தின்படி  போராடிப்  பிரயாசப்படுகிறேன்.  {Col  1:29}

 

உங்களுக்காகவும்  லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும்<Laodicea>,  சரீரத்தில்  என்  முகத்தைக்  காணாதிருக்கிற  மற்றெல்லாருக்காகவும்  மிகுந்த  போராட்டம்  எனக்கு  உண்டென்று  நீங்கள்  அறிய  விரும்புகிறேன்.  {Col  2:1}

 

அவர்களுடைய  இருதயங்கள்  தேற்றப்பட்டு,  அவர்கள்  அன்பினால்  இணைக்கப்பட்டு,  பிதாவாகிய  தேவனுக்கும்  கிறிஸ்துவுக்கும்<Christ>  உரிய  இரகசியத்தை  அறிந்துகொள்ளுகிற  உணர்வின்  பூரண  நிச்சயத்தினுடைய  எல்லா  ஐசுவரியத்திற்கும்  உரியவர்களாகவேண்டுமென்றே  இப்படி  விரும்புகிறேன்.  {Col  2:2}

 

அவருக்குள்  ஞானம்  அறிவு  என்பவைகளாகிய  பொக்கிஷங்களெல்லாம்  அடங்கியிருக்கிறது.  {Col  2:3}

 

ஒருவனும்  நயவசனிப்பினாலே  உங்களை  வஞ்சியாதபடிக்கு  இதைச்  சொல்லுகிறேன்.  {Col  2:4}

 

சரீரத்தின்படி  நான்  தூரமாயிருந்தும்,  ஆவியின்படி  உங்களுடனேகூட  இருந்து,  உங்கள்  ஒழுங்கையும்,  கிறிஸ்துவின்மேலுள்ள<Christ>  உங்கள்  விசுவாசத்தின்  உறுதியையும்  பார்த்துச்  சந்தோஷப்படுகிறேன்.  {Col  2:5}

 

ஆகையால்,  நீங்கள்  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவை<Christ  Jesus>  ஏற்றுக்கொண்டபடியே,  அவருக்குள்  வேர்கொண்டவர்களாகவும்,  அவர்மேல்  கட்டப்பட்டவர்களாகவும்,  அவருக்குள்  நடந்துகொண்டு,  {Col  2:6}

 

நீங்கள்  போதிக்கப்பட்டபடியே,  விசுவாசத்தில்  உறுதிப்பட்டு,  ஸ்தோத்திரத்தோடே  அதிலே  பெருகுவீர்களாக.  {Col  2:7}

 

லௌகிக  ஞானத்தினாலும்,  மாயமான  தந்திரத்தினாலும்,  ஒருவனும்  உங்களைக்  கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  அது  மனுஷர்களின்  பாரம்பரிய  நியாயத்தையும்  உலகவழிபாடுகளையும்  பற்றினதேயல்லாமல்  கிறிஸ்துவைப்<Christ>  பற்றினதல்ல.  {Col  2:8}

 

ஏனென்றால்,  தேவத்துவத்தின்  பரிபூரணமெல்லாம்  சரீரப்பிரகாரமாக  அவருக்குள்  வாசமாயிருக்கிறது.  {Col  2:9}

 

மேலும்  சகல  துரைத்தனங்களுக்கும்  அதிகாரத்துக்கும்  தலைவராயிருக்கிற  அவருக்குள்  நீங்கள்  பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.  {Col  2:10}

 

அல்லாமலும்,  நீங்கள்  கிறிஸ்துவைப்பற்றும்<Christ>  விருத்தசேதனத்தினாலே  மாம்சத்துக்குரிய  பாவசரீரத்தைக்  களைந்துவிட்டதினால்,  கையால்  செய்யப்படாத  விருத்தசேதனத்தை  அவருக்குள்  பெற்றீர்கள்.  {Col  2:11}

 

ஞானஸ்நானத்திலே  அவரோடேகூட  அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும்,  அதிலே  அவரை  மரித்தோரிலிருந்தெழுப்பின  தேவனுடைய  செயலின்மேலுள்ள  விசுவாசத்தினாலே  அவரோடேகூட  எழுந்தவர்களாகவும்  இருக்கிறீர்கள்.  {Col  2:12}

 

உங்கள்  பாவங்களினாலேயும்,  உங்கள்  மாம்ச  விருத்தசேதனமில்லாமையினாலேயும்  மரித்தவர்களாயிருந்த  உங்களையும்  அவரோடேகூட  உயிர்ப்பித்து,  அக்கிரமங்களெல்லாவற்றையும்  உங்களுக்கு  மன்னித்து;  {Col  2:13}

 

நமக்கு  எதிரிடையாகவும்  கட்டளைகளால்  நமக்கு  விரோதமாகவும்  இருந்த  கையெழுத்தைக்  குலைத்து,  அதை  நடுவிலிராதபடிக்கு  எடுத்து,  சிலுவையின்மேல்  ஆணியடித்து;  {Col  2:14}

 

துரைத்தனங்களையும்  அதிகாரங்களையும்  உரிந்துகொண்டு,  வெளியரங்கமான  கோலமாக்கி,  அவைகளின்மேல்  சிலுவையிலே  வெற்றிசிறந்தார்.  {Col  2:15}

 

ஆகையால்,  போஜனத்தையும்  பானத்தையும்  குறித்தாவது,  பண்டிகைநாளையும்  மாதப்பிறப்பையும்  ஓய்வுநாட்களையுங்குறித்தாவது,  ஒருவனும்  உங்களைக்  குற்றப்படுத்தாதிருப்பானாக.  {Col  2:16}

 

அவைகள்  வருங்காரியங்களுக்கு  நிழலாயிருக்கிறது;  அவைகளின்  பொருள்  கிறிஸ்துவைப்பற்றினது<Christ>.  {Col  2:17}

 

கணுக்களாலும்  கட்டுகளாலும்  உதவிபெற்று  இணைக்கப்பட்டு,  தேவவளர்ச்சியாய்  வளர்ந்தேறுகிற  சரீரமுழுவதையும்  ஆதரிக்கிற  தலையைப்  பற்றிக்கொள்ளாமல்,  {Col  2:18}

 

மாயமான  தாழ்மையிலும்,  தேவதூதர்களுக்குச்  செய்யும்  ஆராதனையிலும்  விருப்பமுற்று,  காணாதவைகளிலே  துணிவாய்  நுழைந்து,  தன்  மாம்சசிந்தையினாலே  வீணாய்  இறுமாப்புக்கொண்டிருக்கிற  எவனும்  உங்கள்  பந்தயப்பொருளை  நீங்கள்  இழந்துபோகும்படி  உங்களை  வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.  {Col  2:19}

 

நீங்கள்  கிறிஸ்துவுடனேகூட<Christ>  உலகத்தின்  வழிபாடுகளுக்கு  மரித்ததுண்டானால்,  இன்னும்  உலக  வழக்கத்தின்படி  பிழைக்கிறவர்கள்போல,  {Col  2:20}

 

மனுஷருடைய  கற்பனைகளின்படியும்  போதனைகளின்படியும்  நடந்து:  தொடாதே,  ருசிபாராதே,  தீண்டாதே  என்கிற  கட்டளைகளுக்கு  உட்படுகிறதென்ன?  {Col  2:21}

 

இவையெல்லாம்  அநுபவிக்கிறதினால்  அழிந்துபோகுமே.  {Col  2:22}

 

இப்படிப்பட்ட  போதனைகள்  சுய  இஷ்டமான  ஆராதனையையும்,  மாயமான  தாழ்மையையும்,  சரீர  ஒடுக்கத்தையும்பற்றி  ஞானமென்கிற  பேர்கொண்டிருந்தாலும்,  இவைகள்  மாம்சத்தைப்  பேணுகிறதற்கே  ஒழிய  மற்றொன்றிற்கும்  பிரயோஜனப்படாது.  {Col  2:23}

 

நீங்கள்  கிறிஸ்துவுடன்கூட<Christ>  எழுந்ததுண்டானால்,  கிறிஸ்து<Christ>  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  வீற்றிருக்கும்  இடத்திலுள்ள  மேலானவைகளைத்  தேடுங்கள்.  {Col  3:1}

 

பூமியிலுள்ளவைகளையல்ல,  மேலானவைகளையே  நாடுங்கள்.  {Col  3:2}

 

ஏனென்றால்,  நீங்கள்  மரித்தீர்கள்,  உங்கள்  ஜீவன்  கிறிஸ்துவுடனே<Christ>  தேவனுக்குள்  மறைந்திருக்கிறது.  {Col  3:3}

 

நம்முடைய  ஜீவனாகிய  கிறிஸ்து<Christ>  வெளிப்படும்போது,  நீங்களும்  அவரோடேகூட  மகிமையிலே  வெளிப்படுவீர்கள்.  {Col  3:4}

 

ஆகையால்,  விபசாரம்,  அசுத்தம்,  மோகம்,  துர்இச்சை,  விக்கிரகாராதனையான  பொருளாசை  ஆகிய  இவைகளைப்  பூமியில்  உண்டுபண்ணுகிற  உங்கள்  அவயவங்களை  அழித்துப்போடுங்கள்.  {Col  3:5}

 

இவைகளின்பொருட்டே  கீழ்ப்படியாமையின்  பிள்ளைகள்மேல்  தேவகோபாக்கினை  வரும்.  {Col  3:6}

 

நீங்களும்  முற்காலத்தில்  அவர்களுக்குள்ளே  சஞ்சரித்தபோது,  அவைகளைச்  செய்துகொண்டுவந்தீர்கள்.  {Col  3:7}

 

இப்பொழுதோ  கோபமும்  மூர்க்கமும்  பொறாமையும்,  உங்கள்  வாயில்  பிறக்கலாகாத  தூஷணமும்  வம்பு  வார்த்தைகளுமாகிய  இவைகளையெல்லாம்  விட்டுவிடுங்கள்.  {Col  3:8}

 

ஒருவருக்கொருவர்  பொய்  சொல்லாதிருங்கள்;  பழைய  மனுஷனையும்  அவன்  செய்கைகளையும்  களைந்துபோட்டு,  {Col  3:9}

 

தன்னைச்  சிருஷ்டித்தவருடைய  சாயலுக்கொப்பாய்ப்  பூரண  அறிவடையும்படி  புதிதாக்கப்பட்ட  புதிய  மனுஷனைத்  தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.  {Col  3:10}

 

அதிலே  கிரேக்கனென்றும்<Greek>  யூதனென்றுமில்லை<Jew>,  விருத்தசேதனமுள்ளவனென்றும்  விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை,  புறஜாதியானென்றும்  புறதேசத்தானென்றுமில்லை,  அடிமையென்றும்  சுயாதீனனென்றுமில்லை;  கிறிஸ்துவே<Christ>  எல்லாரிலும்  எல்லாமுமாயிருக்கிறார்.  {Col  3:11}

 

ஆகையால்,  நீங்கள்  தேவனால்  தெரிந்துகொள்ளப்பட்ட  பரிசுத்தரும்  பிரியருமாய்,  உருக்கமான  இரக்கத்தையும்,  தயவையும்,  மனத்தாழ்மையையும்,  சாந்தத்தையும்,  நீடிய  பொறுமையையும்  தரித்துக்கொண்டு;  {Col  3:12}

 

ஒருவரையொருவர்  தாங்கி,  ஒருவர்பேரில்  ஒருவருக்குக்  குறைபாடு  உண்டானால்,  கிறிஸ்து<Christ>  உங்களுக்கு  மன்னித்ததுபோல,  ஒருவருக்கொருவர்  மன்னியுங்கள்.  {Col  3:13}

 

இவை  எல்லாவற்றின்மேலும்,  பூரண  சற்குணத்தின்  கட்டாகிய  அன்பைத்  தரித்துக்கொள்ளுங்கள்.  {Col  3:14}

 

தேவசமாதானம்  உங்கள்  இருதயங்களில்  ஆளக்கடவது,  இதற்கென்றே  நீங்கள்  ஒரே  சரீரமாக  அழைக்கப்பட்டீர்கள்;  நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.  {Col  3:15}

 

கிறிஸ்துவின்<Christ>  வசனம்  உங்களுக்குள்ளே  சகல  ஞானத்தோடும்  பரிபூரணமாக  வாசமாயிருப்பதாக;  சங்கீதங்களினாலும்  கீர்த்தனைகளினாலும்  ஞானப்பாட்டுகளினாலும்  ஒருவருக்கொருவர்  போதித்துப்  புத்திசொல்லிக்கொண்டு,  உங்கள்  இருதயத்திலே  கர்த்தரைப்  பக்தியுடன்  பாடி;  {Col  3:16}

 

வார்த்தையினாலாவது  கிரியையினாலாவது,  நீங்கள்  எதைச்  செய்தாலும்,  அதையெல்லாம்  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமத்தினாலே  செய்து,  அவர்  முன்னிலையாகப்  பிதாவாகிய  தேவனை  ஸ்தோத்திரியுங்கள்.  {Col  3:17}

 

மனைவிகளே,  கர்த்தருக்கேற்கும்படி,  உங்கள்  புருஷருக்குக்  கீழ்ப்படியுங்கள்.  {Col  3:18}

 

புருஷர்களே,  உங்கள்  மனைவிகளில்  அன்புகூருங்கள்,  அவர்கள்மேல்  கசந்துகொள்ளாதிருங்கள்.  {Col  3:19}

 

பிள்ளைகளே,  உங்களைப்  பெற்றாருக்கு  எல்லாக்  காரியத்திலேயும்  கீழ்ப்படியுங்கள்;  இது  கர்த்தருக்குப்  பிரியமானது.  {Col  3:20}

 

பிதாக்களே,  உங்கள்  பிள்ளைகள்  திடனற்றுப்போகாதபடி,  அவர்களுக்குக்  கோபமூட்டாதிருங்கள்.  {Col  3:21}

 

வேலைக்காரரே,  சரீரத்தின்படி  உங்கள்  எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு  எல்லாக்  காரியத்திலேயும்  கீழ்ப்படிந்து,  நீங்கள்  மனுஷருக்குப்  பிரியமாயிருக்க  விரும்புகிறவர்களாகப்  பார்வைக்கு  ஊழியஞ்செய்யாமல்,  தேவனுக்குப்  பயப்படுகிறவர்களாகக்  கபடமில்லாத  இருதயத்தோடே  ஊழியஞ்செய்யுங்கள்.  {Col  3:22}

 

நீங்கள்  கர்த்தராகிய  கிறிஸ்துவைச்<Christ>  சேவிக்கிறதினாலே,  சுதந்தரமாகிய  பலனைக்  கர்த்தராலே  பெறுவீர்களென்று  அறிந்து,  {Col  3:23}

 

எதைச்  செய்தாலும்,  அதை  மனுஷர்களுக்கென்று  செய்யாமல்,  கர்த்தருக்கென்றே  மனப்பூர்வமாய்ச்  செய்யுங்கள்.  {Col  3:24}

 

அநியாயஞ்செய்கிறவன்  தான்  செய்த  அநியாயத்துக்கேற்ற  பலனை  அடைவான்;  பட்சபாதமே  இல்லை.  {Col  3:25}

 

எஜமான்களே,  உங்களுக்கும்  பரலோகத்தில்  எஜமான்  இருக்கிறாரென்று  அறிந்து,  வேலைக்காரருக்கு  நீதியும்  செவ்வையுமானதைச்  செய்யுங்கள்.  {Col  4:1}

 

இடைவிடாமல்  ஜெபம்பண்ணுங்கள்,  ஸ்தோத்திரத்துடன்  ஜெபத்தில்  விழித்திருங்கள்.  {Col  4:2}

 

கிறிஸ்துவினுடைய<Christ>  இரகசியத்தினிமித்தம்  கட்டப்பட்டிருக்கிற  நான்  அந்த  இரகசியத்தைக்குறித்துப்  பேசவேண்டியபிரகாரமாய்ப்  பேசி,  அதை  வெளிப்படுத்துவதற்கு,  {Col  4:3}

 

திருவசனம்  செல்லும்படியான  வாசலைத்  தேவன்  திறந்தருளும்படி  எங்களுக்காகவும்  வேண்டிக்கொள்ளுங்கள்.  {Col  4:4}

 

புறம்பேயிருக்கிறவர்களுக்கு  முன்பாக  ஞானமாய்  நடந்து,  காலத்தைப்  பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.  {Col  4:5}

 

அவனவனுக்கு  இன்னின்னபடி  உத்தரவு  சொல்லவேண்டுமென்று  நீங்கள்  அறியும்படிக்கு,  உங்கள்  வசனம்  எப்பொழுதும்  கிருபை  பொருந்தினதாயும்  உப்பால்  சாரமேறினதாயுமிருப்பதாக.  {Col  4:6}

 

பிரியமான  சகோதரனும்,  உண்மையுள்ள  ஊழியக்காரனும்,  கர்த்தருக்குள்  எனக்கு  உடன்வேலையாளுமாயிருக்கிற  தீகிக்கு<Tychicus>  என்பவன்  என்  செய்திகளையெல்லாம்  உங்களுக்கு  அறிவிப்பான்.  {Col  4:7}

 

உங்கள்  செய்திகளை  அறியவும்,  உங்கள்  இருதயங்களைத்  தேற்றவும்,  {Col  4:8}

 

அவனையும்,  உங்களிலொருவனாயிருக்கிற  உண்மையும்  பிரியமுமுள்ள  சகோதரனாகிய  ஒநேசிமு<Onesimus>  என்பவனையும்,  உங்களிடத்தில்  அனுப்பியிருக்கிறேன்;  அவர்கள்  இவ்விடத்துச்  செய்திகளையெல்லாம்  உங்களுக்கு  அறிவிப்பார்கள்.  {Col  4:9}

 

என்னோடேகூடக்  காவலிலிருக்கிற  அரிஸ்தர்க்கு<Aristarchus>  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறான்;  பர்னபாவுக்கு<Barnabas>  இனத்தானாகிய  மாற்கும்<Marcus>  வாழ்த்துதல்  சொல்லுகிறான்,  இவனைக்குறித்துக்  கட்டளைபெற்றீர்களே;  இவன்  உங்களிடத்தில்  வந்தால்  இவனை  அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.  {Col  4:10}

 

யுஸ்து<Justus>  என்னப்பட்ட  இயேசுவும்<Jesus>  வாழ்த்துதல்  சொல்லுகிறான்.  விருத்தசேதனமுள்ளவர்களில்  இவர்கள்மாத்திரம்  தேவனுடைய  ராஜ்யத்தின்பொருட்டு  என்  உடன்வேலையாட்களாயிருந்து,  எனக்கு  ஆறுதல்  செய்துவந்தவர்கள்.  {Col  4:11}

 

எப்பாப்பிராவும்<Epaphras>  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறான்;  உங்களைச்  சேர்ந்தவனும்  கிறிஸ்துவின்<Christ>  ஊழியக்காரனுமாகிய  இவன்,  நீங்கள்  தேவனுக்குச்  சித்தமானவைகளெல்லாவற்றிலும்  தேறினவர்களாயும்  பூரண  நிச்சயமுள்ளவர்களாயும்  நிலைநிற்கவேண்டுமென்று,  தன்  ஜெபங்களில்  உங்களுக்காக  எப்பொழுதும்  போராடுகிறான்.  {Col  4:12}

 

இவன்  உங்களுக்காகவும்,  லவோதிக்கேயருக்காகவும்<Laodicea>,  எராப்போலியருக்காகவும்<Hierapolis>,  மிகுந்த  ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு  நான்  சாட்சியாயிருக்கிறேன்.  {Col  4:13}

 

பிரியமான  வைத்தியனாகிய  லூக்காவும்<Luke>,  தேமாவும்<Demas>,  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  {Col  4:14}

 

லவோதிக்கேயாவிலிருக்கிற<Laodicea>  சகோதரரையும்,  நிம்பாவையும்<Nymphas>,  அவன்  வீட்டில்  கூடுகிற  சபையையும்  வாழ்த்துங்கள்.  {Col  4:15}

 

இந்த  நிருபம்  உங்களிடத்தில்  வாசிக்கப்பட்டபின்பு  இது  லவோதிக்கேயா<Laodiceans>  சபையிலும்  வாசிக்கப்படும்படி  செய்யுங்கள்;  லவோதிக்கேயாவிலிருந்து<Laodicea>  வரும்  நிருபத்தை  நீங்களும்  வாசியுங்கள்.  {Col  4:16}

 

அர்க்கிப்பைக்<Archippus>  கண்டு:  நீ  கர்த்தரிடத்தில்  பெற்ற  ஊழியத்தை  நிறைவேற்றும்படி  கவனமாயிருப்பாயாகவென்று  சொல்லுங்கள்.  {Col  4:17}

 

பவுலாகிய<Paul>  நான்  என்  கையினால்  எழுதி,  உங்களை  வாழ்த்துகிறேன்.  நான்  கட்டப்பட்டிருக்கிறதை  நினைத்துக்கொள்ளுங்கள்.  கிருபை  உங்களோடிருப்பதாக.  ஆமென்.  {Col  4:18}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!