Friday, December 20, 2019

1 தெசலோனிக்கேயர்

பவுலும்<Paul>,  சில்வானும்<Silvanus>,  தீமோத்தேயும்<Timotheus>,  பிதாவாகிய  தேவனுக்குள்ளும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்குள்ளும்<Jesus  Christ>  இருக்கிற  தெசலோனிக்கேயர்<Thessalonians>  சபைக்கு  எழுதுகிறதாவது:  நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {1Thess  1:1}

 

தேவனுக்குப்  பிரியமான  சகோதரரே,  உங்கள்  விசுவாசத்தின்  கிரியையையும்,  உங்கள்  அன்பின்  பிரயாசத்தையும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள<Jesus  Christ>  உங்கள்  நம்பிக்கையின்  பொறுமையையும்,  நம்முடைய  பிதாவாகிய  தேவனுக்குமுன்பாக  நாங்கள்  இடைவிடாமல்  நினைவுகூர்ந்து,  {1Thess  1:2}

 

நீங்கள்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று  நாங்கள்  அறிந்து,  {1Thess  1:3}

 

எங்கள்  ஜெபங்களில்  இடைவிடாமல்  உங்களைக்குறித்து  விண்ணப்பம்பண்ணி,  உங்களெல்லாருக்காகவும்  எப்பொழுதும்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறோம்.  {1Thess  1:4}

 

எங்கள்  சுவிசேஷம்  உங்களிடத்தில்  வசனத்தோடேமாத்திரமல்ல,  வல்லமையோடும்,  பரிசுத்த  ஆவியோடும்,  முழு  நிச்சயத்தோடும்  வந்தது;  நாங்களும்  உங்களுக்குள்ளே  இருந்தபோது  உங்கள்நிமித்தம்  எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று  அறிந்திருக்கிறீர்களே.  {1Thess  1:5}

 

நீங்கள்  மிகுந்த  உபத்திரவத்திலே,  பரிசுத்த  ஆவியின்  சந்தோஷத்தோடே,  திருவசனத்தை  ஏற்றுக்கொண்டு,  எங்களையும்  கர்த்தரையும்  பின்பற்றுகிறவர்களாகி,  {1Thess  1:6}

 

இவ்விதமாய்  மக்கெதோனியாவிலும்<Macedonia>  அகாயாவிலுமுள்ள<Achaia>  விசுவாசிகள்  யாவருக்கும்  மாதிரிகளானீர்கள்.  {1Thess  1:7}

 

எப்படியெனில்,  உங்களிடத்திலிருந்து  கர்த்தருடைய  வசனம்  மக்கெதோனியாவிலும்<Macedonia>  அகாயாவிலும்<Achaia>  தொனித்ததுமல்லாமல்,  நாங்கள்  அதைக்குறித்து  ஒன்றும்  சொல்லவேண்டியதாயிராதபடிக்கு,  தேவனைப்பற்றின  உங்கள்  விசுவாசம்  எங்கும்  பிரசித்தமாயிற்று.  {1Thess  1:8}

 

ஏனெனில்,  அவர்கள்தாமே  எங்களைக்குறித்து,  உங்களிடத்தில்  நாங்கள்  அடைந்த  பிரவேசம்  இன்னதென்பதையும்,  ஜீவனுள்ள  மெய்யான  தேவனுக்கு  ஊழியஞ்செய்வதற்கு,  நீங்கள்  விக்கிரகங்களைவிட்டுத்  தேவனிடத்திற்கு  மனந்திரும்பினதையும்,  {1Thess  1:9}

 

அவர்  மரித்தோரிலிருந்தெழுப்பினவரும்,  இனிவரும்  கோபாக்கினையினின்று  நம்மை  நீங்கலாக்கி  இரட்சிக்கிறவருமாயிருக்கிற  அவருடைய  குமாரனாகிய  இயேசு<Jesus>  பரலோகத்திலிருந்து  வருவதை  நீங்கள்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும்,  அறிவிக்கிறார்களே.  {1Thess  1:10}

 

சகோதரரே,  நாங்கள்  உங்களிடத்தில்  பிரவேசித்தது  வீணாயிருக்கவில்லையென்று  நீங்களே  அறிந்திருக்கிறீர்கள்.  {1Thess  2:1}

 

உங்களுக்குத்  தெரிந்திருக்கிறபடி,  முன்னே  பிலிப்பிபட்டணத்திலே<Philippi>  நாங்கள்  பாடுபட்டு  நிந்தையடைந்திருந்தும்,  வெகு  போராட்டத்தோடே  தேவனுடைய  சுவிசேஷத்தை  உங்களுக்குச்  சொல்லும்படி,  நம்முடைய  தேவனுக்குள்  தைரியங்கொண்டிருந்தோம்.  {1Thess  2:2}

 

எங்கள்  போதகம்  வஞ்சகத்தினாலும்  துராசையினாலும்  உண்டாகவில்லை,  அது  கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.  {1Thess  2:3}

 

சுவிசேஷத்தை  எங்களிடத்தில்  ஒப்புவிக்கத்தக்கதாய்,  தேவன்  எங்களை  உத்தமரென்றெண்ணினபடியே,  நாங்கள்  மனுஷருக்கு  அல்ல,  எங்கள்  இருதயங்களைச்  சோதித்தறிகிற  தேவனுக்கே  பிரியமுண்டாகப்  பேசுகிறோம்.  {1Thess  2:4}

 

உங்களுக்குத்  தெரிந்திருக்கிறபடி,  நாங்கள்  ஒருக்காலும்  இச்சகமான  வசனங்களைச்  சொல்லவுமில்லை,  பொருளாசையுள்ளவர்களாய்  மாயம்பண்ணவுமில்லை;  தேவனே  சாட்சி.  {1Thess  2:5}

 

நாங்கள்  கிறிஸ்துவின்<Christ>  அப்போஸ்தலராக  உங்களுக்குப்  பாரமாயிருக்கக்  கூடியவர்களானாலும்,  உங்களிடத்திலாவது,  மற்றவர்களிடத்திலாவது,  மனுஷரால்  வரும்  மகிமையை  நாங்கள்  தேடவில்லை.  {1Thess  2:6}

 

உங்களிடத்தில்  பட்சமாய்  நடந்துகொண்டோம்;  பால்  கொடுக்கிற  தாயானவள்  தன்  பிள்ளைகளைக்  காப்பாற்றுகிறதுபோல,  {1Thess  2:7}

 

நாங்கள்  உங்கள்மேல்  வாஞ்சையாயிருந்து,  தேவனுடைய  சுவிசேஷத்தை  உங்களுக்குக்  கொடுத்ததுமல்லாமல்,  நீங்கள்  எங்களுக்குப்  பிரியமானவர்களானபடியினாலே,  எங்கள்  ஜீவனையும்  உங்களுக்குக்  கொடுக்க  மனதாயிருந்தோம்.  {1Thess  2:8}

 

சகோதரரே,  நாங்கள்  பட்ட  பிரயாசமும்  வருத்தமும்  உங்களுக்கு  ஞாபகமாயிருக்கும்;  உங்களில்  ஒருவனுக்கும்  பாரமாயிராதபடிக்கு,  இரவும்  பகலும்  நாங்கள்  வேலைசெய்து,  தேவனுடைய  சுவிசேஷத்தை  உங்களிடத்தில்  பிரசங்கித்தோம்.  {1Thess  2:9}

 

விசுவாசிகளாகிய  உங்களுக்குள்ளே  நாங்கள்  எவ்வளவு  பரிசுத்தமும்  நீதியும்  பிழையின்மையுமாய்  நடந்தோமென்பதற்கு  நீங்களும்  சாட்சி,  தேவனும்  சாட்சி.  {1Thess  2:10}

 

மேலும்,  தம்முடைய  ராஜ்யத்திற்கும்  மகிமைக்கும்  உங்களை  அழைத்த  தேவனுக்கு  நீங்கள்  பாத்திரராய்  நடக்கவேண்டுமென்று,  {1Thess  2:11}

 

தகப்பன்  தன்  பிள்ளைகளுக்குச்  சொல்லுகிறதுபோல,  நாங்கள்  உங்களில்  ஒவ்வொருவனுக்கும்  புத்தியும்  தேறுதலும்  எச்சரிப்பும்  சொன்னதை  அறிந்திருக்கிறீர்கள்.  {1Thess  2:12}

 

ஆகையால்,  நீங்கள்  தேவவசனத்தை  எங்களாலே  கேள்விப்பட்டு  ஏற்றுக்கொண்டபோது,  அதை  மனுஷர்  வசனமாக  ஏற்றுக்கொள்ளாமல்,  தேவவசனமாகவே  ஏற்றுக்கொண்டதினாலே  நாங்கள்  இடைவிடாமல்  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்  செலுத்துகிறோம்;  அது  மெய்யாகவே  தேவவசனந்தான்,  விசுவாசிக்கிற  உங்களுக்குள்ளே  அது  பெலனும்  செய்கிறது.  {1Thess  2:13}

 

எப்படியெனில்,  சகோதரரே,  யூதேயா<Judaea>  தேசத்தில்  கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான<Christ  Jesus>  தேவனுடைய  சபைகளை  நீங்கள்  பின்பற்றினவர்களாகி,  அவர்கள்  யூதராலே<Jews>  எப்படிப்  பாடுபட்டார்களோ,  அப்படியே  நீங்களும்  உங்கள்  சுய  ஜனங்களாலே  பாடுபட்டீர்கள்.  {1Thess  2:14}

 

அந்த  யூதர்கள்<Jews>  கர்த்தராகிய  இயேசுவையும்<Jesus>,  தங்கள்  தீர்க்கதரிசிகளையும்  கொலைசெய்தவர்களும்,  எங்களைத்  துன்பப்படுத்தினவர்களும்,  தேவனுக்கேற்காதவர்களும்,  மனுஷர்  யாவருக்கும்  விரோதிகளுமாயிருந்து,  {1Thess  2:15}

 

புறஜாதியார்  இரட்சிக்கப்படுவதற்கு  நாங்கள்  அவர்களோடே  பேசாதபடிக்குத்  தடைபண்ணுகிறார்கள்;  இவ்விதமாய்  எக்காலத்திலும்  தங்கள்  பாவங்களை  நிறைவாக்குகிறார்கள்;  அவர்கள்மேல்  கோபாக்கினை  பூரணமாய்  வந்திருக்கிறது.  {1Thess  2:16}

 

சகோதரரே,  நாங்கள்  இருதயத்தின்படி  உங்களோடிருந்து,  சரீரத்தின்படி  கொஞ்சக்காலம்  உங்களைவிட்டுப்  பிரிந்திருந்தபடியினாலே,  உங்கள்  முகத்தைப்  பார்க்கவேண்டுமென்று  மிகுந்த  ஆசையோடே  அதிகமாய்ப்  பிரயத்தனம்பண்ணினோம்.  {1Thess  2:17}

 

ஆகையால்,  நாங்கள்  உங்களிடத்தில்  வர  இரண்டொருதரம்  மனதாயிருந்தோம்,  பவுலாகிய<Paul>  நானே  வர  மனதாயிருந்தேன்;  சாத்தானோ  எங்களைத்  தடைபண்ணினான்.  {1Thess  2:18}

 

எங்களுக்கு  நம்பிக்கையும்  சந்தோஷமும்  மகிழ்ச்சியின்  கிரீடமுமாயிருப்பவர்கள்  யார்?  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  வரும்போது  அவருடைய  சந்நிதானத்திலே  நீங்களல்லவா  அப்படியிருப்பீர்கள்;  {1Thess  2:19}

 

நீங்களே  எங்களுக்கு  மகிமையும்  சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.  {1Thess  2:20}

 

ஆகையால்,  நாங்கள்  இனிப்  பொறுத்திருக்கக்கூடாமல்,  அத்தேனே<Athens>  பட்டணத்தில்  தனித்துவிடப்படுகிறது  நன்மையென்று  நினைத்து,  {1Thess  3:1}

 

இந்த  உபத்திரவங்களினாலே  ஒருவனும்  அசைக்கப்படாதபடிக்கு  உங்களைத்  திடப்படுத்தவும்,  உங்கள்  விசுவாசத்தைப்பற்றி  உங்களுக்குப்  புத்திசொல்லவும்,  நம்முடைய  சகோதரனும்  தேவ  ஊழியக்காரனும்  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்தில்  எங்கள்  உடன்வேலையாளுமாகிய  தீமோத்தேயுவை<Timotheus>  அனுப்பினோம்.  {1Thess  3:2}

 

இப்படிப்பட்ட  உபத்திரவங்களைச்  சகிக்க  நாம்  நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று  நீங்கள்  அறிந்திருக்கிறீர்களே.  {1Thess  3:3}

 

நமக்கு  உபத்திரவம்  வருமென்று  நாங்கள்  உங்களிடத்திலிருந்தபோது,  உங்களுக்கு  முன்னறிவித்தோம்;  அப்படியே  வந்து  நேரிட்டதென்றும்  அறிந்திருக்கிறீர்கள்.  {1Thess  3:4}

 

ஆகையால்,  நான்  இனிப்  பொறுத்திருக்கக்கூடாமல்,  எங்கள்  வேலை  வீணாய்ப்  போகத்தக்கதாகச்  சோதனைக்காரன்  உங்களைச்  சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று,  உங்கள்  விசுவாசத்தை  அறியும்படிக்கு,  அவனை  அனுப்பினேன்.  {1Thess  3:5}

 

இப்பொழுது  தீமோத்தேயு<Timotheus>  உங்களிடத்திலிருந்து  எங்களிடத்தில்  வந்து,  உங்கள்  விசுவாசத்தையும்  அன்பையும்  குறித்தும்,  நீங்கள்  எப்பொழுதும்  எங்களைப்  பட்சமாய்  நினைத்துக்கொண்டு,  நாங்கள்  உங்களைக்  காண  வாஞ்சையாயிருக்கிறதுபோல  நீங்களும்  எங்களைக்  காண  வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக்குறித்தும்,  எங்களுக்கு  நற்செய்தி  சொன்னதினாலே,  {1Thess  3:6}

 

சகோதரரே,  எங்களுக்கு  நேரிட்ட  எல்லா  இக்கட்டிலும்  உபத்திரவத்திலும்  உங்கள்  விசுவாசத்தினாலே  உங்களைக்குறித்து  ஆறுதலடைந்தோம்.  {1Thess  3:7}

 

நீங்கள்  கர்த்தருக்குள்  நிலைத்திருந்தால்  நாங்கள்  பிழைத்திருப்போம்.  {1Thess  3:8}

 

மேலும்,  நம்முடைய  தேவனுக்கு  முன்பாக  நாங்கள்  உங்களைக்குறித்து  அடைந்திருக்கிற  மிகுந்த  சந்தோஷத்திற்காக,  நாங்கள்  தேவனுக்கு  எவ்விதமாய்  ஸ்தோத்திரம்  செலுத்துவோம்?  {1Thess  3:9}

 

உங்கள்  முகத்தைக்  கண்டு,  உங்கள்  விசுவாசத்தின்  குறைவுகளை  நிறைவாக்கும்பொருட்டு,  இரவும்  பகலும்  மிகவும்  வேண்டிக்கொள்ளுகிறோமே.  {1Thess  3:10}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனும்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவும்<Jesus  Christ>  உங்களிடத்திற்கு  எங்களை  நேராக  வழிநடத்துவாராக.  {1Thess  3:11}

 

நாங்கள்  உங்களிடத்தில்  வைத்திருக்கிற  அன்புக்கொப்பாய்,  நீங்களும்  ஒருவரிடத்தில்  ஒருவர்  வைக்கும்  அன்பிலும்  மற்றெல்லா  மனுஷரிடத்தில்  வைக்கும்  அன்பிலும்  கர்த்தர்  உங்களைப்  பெருகவும்  நிலைத்தோங்கவும்  செய்து,  {1Thess  3:12}

 

இவ்விதமாய்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  தமது  பரிசுத்தவான்கள்  அனைவரோடுங்கூட  வரும்போது,  நீங்கள்  நம்முடைய  பிதாவாகிய  தேவனுக்கு  முன்பாகப்  பிழையற்ற  பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி  உங்கள்  இருதயங்களை  ஸ்திரப்படுத்துவாராக.  {1Thess  3:13}

 

அன்றியும்,  சகோதரரே,  நீங்கள்  இன்னின்ன  பிரகாரமாய்  நடக்கவும்,  தேவனுக்குப்  பிரியமாயிருக்கவும்  வேண்டுமென்று,  நீங்கள்  எங்களால்  கேட்டு  ஏற்றுக்கொண்டபடியே,  அதிகமதிகமாய்த்  தேறும்படிக்கு,  கர்த்தராகிய  இயேசுவுக்குள்<Jesus>  உங்களை  வேண்டிக்கொண்டு  புத்திசொல்லுகிறோம்.  {1Thess  4:1}

 

கர்த்தராகிய  இயேசுவினாலே<Jesus>  நாங்கள்  உங்களுக்குக்  கொடுத்த  கட்டளைகளை  அறிந்திருக்கிறீர்களே.  {1Thess  4:2}

 

நீங்கள்  பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே  தேவனுடைய  சித்தமாயிருக்கிறது.  அந்தப்படி,  நீங்கள்  வேசிமார்க்கத்துக்கு  விலகியிருந்து,  {1Thess  4:3}

 

தேவனை  அறியாத  அஞ்ஞானிகளைப்போல  மோக  இச்சைக்குட்படாமல்,  {1Thess  4:4}

 

உங்களில்  அவனவன்  தன்தன்  சரீர  பாண்டத்தைப்  பரிசுத்தமாயும்  கனமாயும்  ஆண்டுகொள்ளும்படி  அறிந்து:  {1Thess  4:5}

 

இந்த  விஷயத்தில்  ஒருவனும்  மீறாமலும்  தன்  சகோதரனை  வஞ்சியாமலும்  இருக்கவேண்டும்;  முன்னமே  நாங்கள்  உங்களுக்குச்  சொல்லி,  சாட்சியாக  எச்சரித்தபடியே  இப்படிப்பட்ட  விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக்  கர்த்தர்  நீதியைச்  சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.  {1Thess  4:6}

 

தேவன்  நம்மை  அசுத்தத்திற்கல்ல  பரிசுத்தத்திற்கே  அழைத்திருக்கிறார்.  {1Thess  4:7}

 

ஆகையால்  அசட்டைபண்ணுகிறவன்  மனுஷரை  அல்ல,  தமது  பரிசுத்தஆவியை  நமக்குத்  தந்தருளின  தேவனையே  அசட்டைபண்ணுகிறான்.  {1Thess  4:8}

 

சகோதர  சிநேகத்தைக்குறித்து  நான்  உங்களுக்கு  எழுதவேண்டுவதில்லை;  நீங்கள்  ஒருவரிலொருவர்  அன்பாயிருக்கும்படிக்குத்  தேவனால்  போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.  {1Thess  4:9}

 

அந்தப்படி  நீங்கள்  மக்கெதோனியா<Macedonia>  நாடெங்குமுள்ள  சகோதரரெல்லாருக்கும்  செய்துவருகிறீர்கள்.  சகோதரரே,  அன்பிலே  நீங்கள்  இன்னும்  அதிகமாய்ப்  பெருகவும்;  {1Thess  4:10}

 

புறம்பேயிருக்கிறவர்களைப்  பற்றி  யோக்கியமாய்  நடந்து,  ஒன்றிலும்  உங்களுக்குக்  குறைவில்லாதிருக்கும்படிக்கு,  {1Thess  4:11}

 

நாங்கள்  உங்களுக்குக்  கட்டளையிட்டபடியே,  அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி  நாடவும்,  உங்கள்  சொந்த  அலுவல்களைப்  பார்க்கவும்,  உங்கள்  சொந்தக்  கைகளினாலே  வேலைசெய்யவும்  வேண்டுமென்று  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறோம்.  {1Thess  4:12}

 

அன்றியும்,  சகோதரரே,  நித்திரையடைந்தவர்களினிமித்தம்  நீங்கள்  நம்பிக்கையற்றவர்களான  மற்றவர்களைப்போலத்  துக்கித்து,  அறிவில்லாதிருக்க  எனக்கு  மனதில்லை.  {1Thess  4:13}

 

இயேசுவானவர்<Jesus>  மரித்து  பின்பு  எழுந்திருந்தாரென்று  விசுவாசிக்கிறோமே;  அப்படியே  இயேசுவுக்குள்<Jesus>  நித்திரையடைந்தவர்களையும்  தேவன்  அவரோடேகூடக்  கொண்டுவருவார்.  {1Thess  4:14}

 

கர்த்தருடைய  வார்த்தையை  முன்னிட்டு  நாங்கள்  உங்களுக்குச்  சொல்லுகிறதாவது:  கர்த்தருடைய  வருகைமட்டும்  உயிரோடிருக்கும்  நாம்  நித்திரையடைந்தவர்களுக்கு  முந்திக்கொள்வதில்லை.  {1Thess  4:15}

 

ஏனெனில்,  கர்த்தர்  தாமே  ஆரவாரத்தோடும்,  பிரதான  தூதனுடைய  சத்தத்தோடும்,  தேவ  எக்காளத்தோடும்  வானத்திலிருந்து  இறங்கிவருவார்;  அப்பொழுது  கிறிஸ்துவுக்குள்<Christ>  மரித்தவர்கள்  முதலாவது  எழுந்திருப்பார்கள்.  {1Thess  4:16}

 

பின்பு  உயிரோடிருக்கும்  நாமும்  கர்த்தருக்கு  எதிர்கொண்டுபோக,  மேகங்கள்மேல்  அவர்களோடேகூட  ஆகாயத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்டு,  இவ்விதமாய்  எப்பொழுதும்  கர்த்தருடனேகூட  இருப்போம்.  {1Thess  4:17}

 

ஆகையால்,  இந்த  வார்த்தைகளினாலே  நீங்கள்  ஒருவரையொருவர்  தேற்றுங்கள்.  {1Thess  4:18}

 

சகோதரரே,  இவைகள்  நடக்குங்காலங்களையும்  சமயங்களையுங்குறித்து  உங்களுக்கு  எழுதவேண்டுவதில்லை.  {1Thess  5:1}

 

இரவிலே  திருடன்  வருகிறவிதமாய்க்  கர்த்தருடைய  நாள்  வருமென்று  நீங்களே  நன்றாய்  அறிந்திருக்கிறீர்கள்.  {1Thess  5:2}

 

சமாதானமும்  சவுக்கியமும்  உண்டென்று  அவர்கள்  சொல்லும்போது,  கர்ப்பவதியானவளுக்கு  வேதனை  வருகிறதுபோல,  அழிவு  சடிதியாய்  அவர்கள்மேல்  வரும்;  அவர்கள்  தப்பிப்போவதில்லை.  {1Thess  5:3}

 

சகோதரரே,  அந்த  நாள்  திருடனைப்போல  உங்களைப்  பிடித்துக்கொள்ளத்தக்கதாக,  நீங்கள்  அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.  {1Thess  5:4}

 

நீங்களெல்லாரும்  வெளிச்சத்தின்  பிள்ளைகளும்,  பகலின்  பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்;  நாம்  இரவுக்கும்  இருளுக்கும்  உள்ளானவர்களல்லவே.  {1Thess  5:5}

 

ஆகையால்,  மற்றவர்கள்  தூங்குகிறதுபோல  நாம்  தூங்காமல்,  விழித்துக்கொண்டு  தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.  {1Thess  5:6}

 

தூங்குகிறவர்கள்  இராத்திரியிலே  தூங்குவார்கள்;  வெறிகொள்ளுகிறவர்கள்  இராத்திரியிலே  வெறிகொள்ளுவார்கள்.  {1Thess  5:7}

 

பகலுக்குரியவர்களாகிய  நாமோ  தெளிந்தவர்களாயிருந்து,  விசுவாசம்  அன்பு  என்னும்  மார்க்கவசத்தையும்,  இரட்சிப்பின்  நம்பிக்கையென்னும்  தலைச்சீராவையும்  தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.  {1Thess  5:8}

 

தேவன்  நம்மைக்  கோபாக்கினைக்கென்று  நியமிக்காமல்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்<Jesus  Christ>  இரட்சிப்படைவதற்கென்று  நியமித்தார்.  {1Thess  5:9}

 

நாம்  விழித்திருப்பவர்களானாலும்,  நித்திரையடைந்தவர்களானாலும்,  தம்முடனேகூட  நாம்  ஏகமாய்ப்  பிழைத்திருக்கும்படி  அவர்  நமக்காக  மரித்தாரே.  {1Thess  5:10}

 

ஆகையால்  நீங்கள்  செய்துவருகிறபடியே,  ஒருவரையொருவர்  தேற்றி,  ஒருவருக்கொருவர்  பக்திவிருத்தி  உண்டாகும்படி  செய்யுங்கள்.  {1Thess  5:11}

 

அன்றியும்,  சகோதரரே,  உங்களுக்குள்ளே  பிரயாசப்பட்டு,  கர்த்தருக்குள்  உங்களை  விசாரணைசெய்கிறவர்களாயிருந்து,  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறவர்களை  நீங்கள்  மதித்து,  {1Thess  5:12}

 

அவர்களுடைய  கிரியையினிமித்தம்  அவர்களை  மிகவும்  அன்பாய்  எண்ணிக்கொள்ளும்படி  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறோம்.  உங்களுக்குள்ளே  சமாதானமாயிருங்கள்.  {1Thess  5:13}

 

மேலும்,  சகோதரரே,  நாங்கள்  உங்களுக்குப்  போதிக்கிறதென்னவென்றால்,  ஒழுங்கில்லாதவர்களுக்குப்  புத்திசொல்லுங்கள்,  திடனற்றவர்களைத்  தேற்றுங்கள்,  பலவீனரைத்  தாங்குங்கள்,  எல்லாரிடத்திலும்  நீடிய  சாந்தமாயிருங்கள்.  {1Thess  5:14}

 

ஒருவனும்  மற்றொருவன்  செய்யும்  தீமைக்குத்  தீமைசெய்யாதபடி  பாருங்கள்;  உங்களுக்குள்ளும்  மற்ற  யாவருக்குள்ளும்  எப்பொழுதும்  நன்மைசெய்ய  நாடுங்கள்.  {1Thess  5:15}

 

எப்பொழுதும்  சந்தோஷமாயிருங்கள்.  {1Thess  5:16}

 

இடைவிடாமல்  ஜெபம்பண்ணுங்கள்.  {1Thess  5:17}

 

எல்லாவற்றிலேயும்  ஸ்தோத்திரஞ்  செய்யுங்கள்;  அப்படிச்  செய்வதே  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  உங்களைக்குறித்துத்  தேவனுடைய  சித்தமாயிருக்கிறது.  {1Thess  5:18}

 

ஆவியை  அவித்துப்போடாதிருங்கள்.  {1Thess  5:19}

 

தீர்க்கதரிசனங்களை  அற்பமாயெண்ணாதிருங்கள்.  {1Thess  5:20}

 

எல்லாவற்றையும்  சோதித்துப்  பார்த்து,  நலமானதைப்  பிடித்துக்கொள்ளுங்கள்.  {1Thess  5:21}

 

பொல்லாங்காய்த்  தோன்றுகிற  எல்லாவற்றையும்  விட்டு  விலகுங்கள்.  {1Thess  5:22}

 

சமாதானத்தின்  தேவன்  தாமே  உங்களை  முற்றிலும்  பரிசுத்தமாக்குவாராக.  உங்கள்  ஆவி  ஆத்துமா  சரீரம்  முழுவதும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  வரும்போது  குற்றமற்றதாயிருக்கும்படி  காக்கப்படுவதாக.  {1Thess  5:23}

 

உங்களை  அழைக்கிறவர்  உண்மையுள்ளவர்,  அவர்  அப்படியே  செய்வார்.  {1Thess  5:24}

 

சகோதரரே,  எங்களுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள்.  {1Thess  5:25}

 

சகோதரரெல்லாரையும்  பரிசுத்த  முத்தத்தோடே  வாழ்த்துங்கள்.  {1Thess  5:26}

 

இந்த  நிருபம்  பரிசுத்தமான  சகோதரர்  யாவருக்கும்  வாசிக்கப்படும்படி  செய்யவேண்டுமென்று  கர்த்தர்பேரில்  ஆணையிட்டு  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {1Thess  5:27}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  கிருபை  உங்களுடனேகூட  இருப்பதாக.  ஆமென்.  {1Thess  5:28}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!