Friday, December 20, 2019

2 தெசலோனிக்கேயர்

பவுலும்<Paul>,  சில்வானும்<Silvanus>,  தீமோத்தேயும்<Timotheus>,  நம்முடைய  பிதாவாகிய  தேவனுக்குள்ளும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்குள்ளும்<Jesus  Christ>  இருக்கிற  தெசலோனிக்கேயர்<Thessalonians>  சபைக்கு  எழுதுகிறதாவது:  {2Thess  1:1}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {2Thess  1:2}

 

சகோதரரே,  நாங்கள்  எப்பொழுதும்  உங்களுக்காகத்  தேவனை  ஸ்தோத்திரிக்கக்  கடனாளிகளாயிருக்கிறோம்;  உங்கள்  விசுவாசம்  மிகவும்  பெருகுகிறபடியினாலும்,  நீங்களெல்லாரும்  ஒருவரிலொருவர்  வைத்திருக்கிற  அன்பு  அதிகரிக்கிறபடியினாலும்,  அப்படிச்  செய்கிறது  தகுதியாயிருக்கிறது.  {2Thess  1:3}

 

நீங்கள்  சகிக்கிற  சகல  துன்பங்களிலும்  உபத்திரவங்களிலும்  பொறுமையையும்  விசுவாசத்தையும்  காண்பிக்கிறதினிமித்தம்  உங்களைக்குறித்து  நாங்கள்  தேவனுடைய  சபைகளில்  மேன்மைபாராட்டுகிறோம்.  {2Thess  1:4}

 

நீங்கள்  தேவனுடைய  ராஜ்யத்தினிமித்தம்  பாடு  அநுபவிக்கிறவர்களாயிருக்க,  அந்த  ராஜ்யத்திற்கு  நீங்கள்  பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு,  தேவன்  நியாயமான  தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு,  அதுவே  அத்தாட்சியாயிருக்கிறது.  {2Thess  1:5}

 

உங்களை  உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு  உபத்திரவத்தையும்,  உபத்திரவப்படுகிற  உங்களுக்கு  எங்களோடேகூட  இளைப்பாறுதலையும்  பிரதிபலனாகக்  கொடுப்பது  தேவனுக்கு  நீதியாயிருக்கிறதே.  {2Thess  1:6}

 

தேவனை  அறியாதவர்களுக்கும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  சுவிசேஷத்திற்குக்  கீழ்ப்படியாதவர்களுக்கும்  நீதியுள்ள  ஆக்கினையைச்  செலுத்தும்படிக்கு,  {2Thess  1:7}

 

கர்த்தராகிய  இயேசு<Jesus>  தமது  வல்லமையின்  தூதரோடும்,  ஜுவாலித்து  எரிகிற  அக்கினியோடும்,  வானத்திலிருந்து  வெளிப்படும்போது  அப்படியாகும்.  {2Thess  1:8}

 

அந்நாளிலே  தம்முடைய  பரிசுத்தவான்களில்  மகிமைப்படத்தக்கவராயும்,  நீங்கள்  எங்களுடைய  சாட்சியை  விசுவாசித்தபடியினாலே  உங்களிடத்திலும்,  விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும்  ஆச்சரியப்படத்தக்கவராயும்,  அவர்  வரும்போது,  {2Thess  1:9}

 

அவர்கள்  கர்த்தருடைய  சந்நிதானத்திலிருந்தும்,  அவருடைய  வல்லமை  பொருந்திய  மகிமையிலிருந்தும்  நீங்கலாகி,  நித்திய  அழிவாகிய  தண்டனையை  அடைவார்கள்.  {2Thess  1:10}

 

ஆகையால்,  நம்முடைய  தேவனும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவும்<Jesus  Christ>  அளிக்கும்  கிருபையின்படியே,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமம்  உங்களிடத்திலும்,  நீங்கள்  அவரிடத்திலும்  மகிமைப்படும்பொருட்டாக;  {2Thess  1:11}

 

நம்முடைய  தேவன்  உங்களைத்  தமது  அழைப்புக்குப்  பாத்திரராக்கவும்,  தமது  தயையுள்ள  சித்தம்  முழுவதையும்  விசுவாசத்தின்  கிரியையையும்  பலமாய்  உங்களிடத்தில்  நிறைவேற்றவும்  வேண்டுமென்று,  எப்பொழுதும்  உங்களுக்காக  வேண்டிக்கொள்ளுகிறோம்.  {2Thess  1:12}

 

அன்றியும்,  சகோதரரே,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  வருகையையும்,  நாம்  அவரிடத்திலே  சேர்க்கப்படுவதையுங்குறித்து,  நாங்கள்  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறது  என்னவென்றால்,  {2Thess  2:1}

 

ஒரு  ஆவியினாலாவது,  வார்த்தையினாலாவது,  எங்களிடத்திலிருந்து  வந்ததாய்த்  தோன்றுகிற  ஒரு  நிருபத்தினாலாவது,  கிறிஸ்துவினுடைய<Christ>  நாள்  சமீபமாயிருக்கிறதாகச்  சொல்லப்பட்டால்,  உடனே  சஞ்சலப்படாமலும்  கலங்காமலும்  இருங்கள்.  {2Thess  2:2}

 

எவ்விதத்தினாலும்  ஒருவனும்  உங்களை  மோசம்போக்காதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  ஏனெனில்  விசுவாச  துரோகம்  முந்தி  நேரிட்டு,  கேட்டின்  மகனாகிய  பாவமனுஷன்  வெளிப்பட்டாலொழிய,  அந்த  நாள்  வராது.  {2Thess  2:3}

 

அவன்  எதிர்த்துநிற்கிறவனாயும்,  தேவனென்னப்படுவதெதுவோ,  ஆராதிக்கப்படுவதெதுவோ,  அவையெல்லாவற்றிற்கும்  மேலாகத்  தன்னை  உயர்த்துகிறவனாயும்,  தேவனுடைய  ஆலயத்தில்  தேவன்போல  உட்கார்ந்து,  தன்னைத்தான்  தேவனென்று  காண்பிக்கிறவனாயும்  இருப்பான்.  {2Thess  2:4}

 

நான்  உங்களிடத்திலிருந்தபோது  இவைகளைச்  சொன்னது  உங்களுக்கு  ஞாபகமில்லையா?  {2Thess  2:5}

 

அவன்  தன்  காலத்திலே  வெளிப்படும்படிக்கு,  இப்பொழுது  அவனைத்  தடைசெய்கிறது  இன்னதென்றும்  அறிந்திருக்கிறீர்களே.  {2Thess  2:6}

 

அக்கிரமத்தின்  இரகசியம்  இப்பொழுதே  கிரியைசெய்கிறது;  ஆனாலும்  தடைசெய்கிறவன்  நடுவிலிருந்து  நீக்கப்படுமுன்னே  அது  வெளிப்படாது.  {2Thess  2:7}

 

நீக்கப்படும்போது,  அந்த  அக்கிரமக்காரன்  வெளிப்படுவான்;  அவனைக்  கர்த்தர்  தம்முடைய  வாயின்  சுவாசத்தினாலே  அழித்து,  தம்முடைய  வருகையின்  பிரசன்னத்தினாலே  நாசம்பண்ணுவார்.  {2Thess  2:8}

 

அந்த  அக்கிரமக்காரனுடைய  வருகை  சாத்தானுடைய  செயலின்படி  சகல  வல்லமையோடும்  அடையாளங்களோடும்  பொய்யான  அற்புதங்களோடும்,  {2Thess  2:9}

 

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே  அநீதியினால்  உண்டாகும்  சகலவித  வஞ்சகத்தோடும்  இருக்கும்.  இரட்சிக்கப்படத்தக்கதாய்ச்  சத்தியத்தின்மேலுள்ள  அன்பை  அவர்கள்  அங்கிகரியாமற்போனபடியால்  அப்படி  நடக்கும்.  {2Thess  2:10}

 

ஆகையால்  சத்தியத்தை  விசுவாசியாமல்  அநீதியில்  பிரியப்படுகிற  யாவரும்  ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,  {2Thess  2:11}

 

அவர்கள்  பொய்யை  விசுவாசிக்கத்தக்கதாகக்  கொடிய  வஞ்சகத்தைத்  தேவன்  அவர்களுக்கு  அனுப்புவார்.  {2Thess  2:12}

 

கர்த்தருக்குப்  பிரியமான  சகோதரரே,  நீங்கள்  ஆவியினாலே  பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்,  சத்தியத்தை  விசுவாசிக்கிறதினாலும்  இரட்சிப்படையும்படிக்கு,  ஆதிமுதல்  தேவன்  உங்களைத்  தெரிந்துகொண்டபடியினாலே,  நாங்கள்  உங்களைக்குறித்து  எப்பொழுதும்  தேவனை  ஸ்தோத்திரிக்கக்  கடனாளிகளாயிருக்கிறோம்.  {2Thess  2:13}

 

நீங்கள்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  மகிமையை  அடையும்பொருட்டாக  எங்கள்  சுவிசேஷத்தினாலே  அந்த  இரட்சிப்புக்கு  அவர்  உங்களை  அழைத்தார்.  {2Thess  2:14}

 

ஆகையால்,  சகோதரரே,  நீங்கள்  நிலைகொண்டு,  வார்த்தையினாலாவது  நிருபத்தினாலாவது  நாங்கள்  உங்களுக்கு  உபதேசித்த  முறைமைகளைக்  கைக்கொள்ளுங்கள்.  {2Thess  2:15}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவும்<Jesus  Christ>,  நம்மிடத்தில்  அன்புகூர்ந்து  நித்திய  ஆறுதலையும்  நல்நம்பிக்கையையும்  கிருபையாய்  நமக்குக்  கொடுத்திருக்கிற  நம்முடைய  பிதாவாகிய  தேவனும்,  {2Thess  2:16}

 

உங்கள்  இருதயங்களைத்  தேற்றி,  எல்லா  நல்வசனத்திலும்  நற்கிரியையிலும்  உங்களை  ஸ்திரப்படுத்துவாராக.  {2Thess  2:17}

 

கடைசியாக,  சகோதரரே,  உங்களிடத்தில்  கர்த்தருடைய  வசனம்  பரம்பி  மகிமைப்படுகிறதுபோல,  எவ்விடத்திலும்  பரம்பி  மகிமைப்படும்படிக்கும்,  {2Thess  3:1}

 

துர்க்குணராகிய  பொல்லாத  மனுஷர்  கையினின்று  நாங்கள்  விடுவிக்கப்படும்படிக்கும்,  எங்களுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள்;  விசுவாசம்  எல்லாரிடத்திலுமில்லையே.  {2Thess  3:2}

 

கர்த்தரோ  உண்மையுள்ளவர்,  அவர்  உங்களை  ஸ்திரப்படுத்தி,  தீமையினின்று  விலக்கிக்  காத்துக்கொள்ளுவார்.  {2Thess  3:3}

 

மேலும்,  நாங்கள்  கட்டளையிடுகிறவைகளை  நீங்கள்  செய்துவருகிறீர்களென்றும்,  இனிமேலும்  செய்வீர்களென்றும்,  உங்களைக்குறித்துக்  கர்த்தருக்குள்  நம்பிக்கையாயிருக்கிறோம்.  {2Thess  3:4}

 

கர்த்தர்  உங்கள்  இருதயங்களைத்  தேவனைப்பற்றும்  அன்புக்கும்  கிறிஸ்துவின்<Christ>  பொறுமைக்கும்  நேராய்  நடத்துவாராக.  {2Thess  3:5}

 

மேலும்,  சகோதரரே,  எங்களிடத்தில்  ஏற்றுக்கொண்ட  முறைமையின்படி  நடவாமல்,  ஒழுங்கற்று  நடக்கிற  எந்தச்  சகோதரனையும்  நீங்கள்  விட்டு  விலக  வேண்டுமென்று,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலே,  உங்களுக்குக்  கட்டளையிடுகிறோம்.  {2Thess  3:6}

 

இன்னவிதமாய்  எங்களைப்  பின்பற்ற  வேண்டுமென்று  நீங்கள்  அறிந்திருக்கிறீர்களே;  நாங்கள்  உங்களுக்குள்ளே  ஒழுங்கற்று  நடவாமலும்,  {2Thess  3:7}

 

ஒருவனிடத்திலும்  இலவசமாய்ச்  சாப்பிடாமலும்,  உங்களில்  ஒருவனுக்கும்  பாரமாயிராதபடிக்கு  இரவும்  பகலும்  பிரயாசத்தோடும்  வருத்தத்தோடும்  வேலைசெய்து  சாப்பிட்டோம்.  {2Thess  3:8}

 

உங்கள்மேல்  பாரத்தை  வைப்பதற்கான  அதிகாரம்  எங்களுக்கு  இல்லையென்பதினாலே  அப்படிச்  செய்யாமல்,  நீங்கள்  எங்களைப்  பின்பற்றும்படிக்கு  நாங்கள்  உங்களுக்கு  மாதிரியாயிருக்கவேண்டுமென்றே  அப்படிச்  செய்தோம்.  {2Thess  3:9}

 

ஒருவன்  வேலைசெய்ய  மனதில்லாதிருந்தால்  அவன்  சாப்பிடவும்  கூடாதென்று  நாங்கள்  உங்களிடத்தில்  இருந்தபோது  உங்களுக்குக்  கட்டளையிட்டோமே.  {2Thess  3:10}

 

உங்களில்  சிலர்  யாதொரு  வேலையும்  செய்யாமல்,  வீண்  அலுவற்காரராய்,  ஒழுங்கற்றுத்  திரிகிறார்களென்று  கேள்விப்படுகிறோம்.  {2Thess  3:11}

 

இப்படிப்பட்டவர்கள்  அமைதலோடே  வேலைசெய்து,  தங்கள்  சொந்தச்  சாப்பாட்டைச்  சாப்பிடவேண்டுமென்று,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலே<Jesus  Christ>  அவர்களுக்குக்  கட்டளையிட்டுப்  புத்திசொல்லுகிறோம்.  {2Thess  3:12}

 

சகோதரரே,  நீங்கள்  நன்மை  செய்வதிலே  சோர்ந்துபோகாமலிருங்கள்.  {2Thess  3:13}

 

மேலும்,  இந்த  நிருபத்தில்  சொல்லிய  எங்கள்  வசனத்துக்கு  ஒருவன்  கீழ்ப்படியாமற்போனால்,  அவனைக்  குறித்துக்கொண்டு,  அவன்  வெட்கப்படும்படிக்கு  அவனுடனே  கலவாதிருங்கள்.  {2Thess  3:14}

 

ஆனாலும்  அவனைச்  சத்துருவாக  எண்ணாமல்,  சகோதரனாக  எண்ணி,  அவனுக்குப்  புத்திசொல்லுங்கள்.  {2Thess  3:15}

 

சமாதானத்தின்  கர்த்தர்தாமே  எப்பொழுதும்  சகலவிதத்திலும்  உங்களுக்குச்  சமாதானத்தைத்  தந்தருளுவாராக.  கர்த்தர்  உங்களனைவரோடுங்கூட  இருப்பாராக.  {2Thess  3:16}

 

பவுலாகிய<Paul>  நான்  என்  கையெழுத்தாலே  உங்களை  வாழ்த்துகிறேன்,  நிருபங்கள்தோறும்  இதுவே  அடையாளம்;  இப்படியே  எழுதுகிறேன்.  {2Thess  3:17}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  கிருபை  உங்களனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  {2Thess  3:18}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!