Wednesday, December 25, 2019

2 தீமோத்தேயு

கிறிஸ்து  இயேசுவினால்<Christ  Jesus>  உண்டாயிருக்கிற  ஜீவனைப்பற்றிய  வாக்குத்தத்தத்தின்படி,  தேவனுடைய  சித்தத்தினாலே,  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அப்போஸ்தலனாயிருக்கிற  பவுல்<Paul>,  {2Tim  1:1}

 

பிரியமுள்ள  குமாரனாகிய  தீமோத்தேயுவுக்கு<Timothy>  எழுதுகிறதாவது:  பிதாவாகிய  தேவனாலும்  நம்முடைய  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவினாலும்<Christ  Jesus>  கிருபையும்  இரக்கமும்  சமாதானமும்  உண்டாவதாக.  {2Tim  1:2}

 

நான்  இரவும்  பகலும்  இடைவிடாமல்  என்  ஜெபங்களில்  உன்னை  நினைத்து,  உன்  கண்ணீரை  ஞாபகம்பண்ணி,  சந்தோஷத்தால்  நிறையப்படும்படிக்கு  உன்னைக்  காண  வாஞ்சையாயிருந்து,  {2Tim  1:3}

 

உன்னிலுள்ள  மாயமற்ற  விசுவாசத்தை  நினைவுகூருகிறதினால்,  என்  முன்னோர்கள்  முதற்கொண்டு  சுத்த  மனச்சாட்சியோடே  ஆராதித்துவரும்  தேவனை  நான்  ஸ்தோத்திரிக்கிறேன்.  {2Tim  1:4}

 

அந்த  விசுவாசம்  முந்தி  உன்  பாட்டியாகிய  லோவிசாளுக்குள்ளும்<Lois>  உன்  தாயாகிய  ஐனிக்கேயாளுக்குள்ளும்<Eunice>  நிலைத்திருந்தது;  அது  உனக்குள்ளும்  நிலைத்திருக்கிறதென்று  நிச்சயித்திருக்கிறேன்.  {2Tim  1:5}

 

இதினிமித்தமாக,  நான்  உன்மேல்  என்  கைகளை  வைத்ததினால்  உனக்கு  உண்டான  தேவவரத்தை  நீ  அனல்மூட்டி  எழுப்பிவிடும்படி  உனக்கு  நினைப்பூட்டுகிறேன்.  {2Tim  1:6}

 

தேவன்  நமக்குப்  பயமுள்ள  ஆவியைக்  கொடாமல்,  பலமும்  அன்பும்  தெளிந்த  புத்தியுள்ள  ஆவியையே  கொடுத்திருக்கிறார்.  {2Tim  1:7}

 

ஆகையால்  நம்முடைய  கர்த்தரைப்  பற்றிய  சாட்சியைக்குறித்தாவது,  அவர்  நிமித்தம்  கட்டப்பட்டிருக்கிற  என்னைக்  குறித்தாவது,  நீ  வெட்கப்படாமல்,  தேவவல்லமைக்கேற்றபடி  சுவிசேஷத்திற்காக  என்னோடேகூடத்  தீங்கநுபவி.  {2Tim  1:8}

 

அவர்  நம்முடைய  கிரியைகளின்படி  நம்மை  இரட்சிக்காமல்,  தம்முடைய  தீர்மானத்தின்படியும்,  ஆதிகாலமுதல்  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  நமக்கு  அருளப்பட்ட  கிருபையின்படியும்,  நம்மை  இரட்சித்து,  பரிசுத்த  அழைப்பினாலே  அழைத்தார்.  {2Tim  1:9}

 

நம்முடைய  இரட்சகராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  பிரசன்னமானதினாலே  அந்தக்  கிருபை  இப்பொழுது  வெளிப்படுத்தப்பட்டது;  அவர்  மரணத்தைப்  பரிகரித்து,  ஜீவனையும்  அழியாமையையும்  சுவிசேஷத்தினாலே  வெளியரங்கமாக்கினார்.  {2Tim  1:10}

 

அதற்கு  நான்  பிரசங்கியாகவும்,  அப்போஸ்தலனாகவும்,  புறஜாதியாருக்குப்  போதகனாகவும்  நியமிக்கப்பட்டேன்.  {2Tim  1:11}

 

அதினிமித்தம்  நான்  இந்தப்  பாடுகளையும்  அனுபவிக்கிறேன்;  ஆயினும்,  நான்  வெட்கப்படுகிறதில்லை;  ஏனென்றால்,  நான்  விசுவாசித்திருக்கிறவர்  இன்னார்  என்று  அறிவேன்,  நான்  அவரிடத்தில்  ஒப்புக்கொடுத்ததை  அவர்  அந்நாள்வரைக்கும்  காத்துக்கொள்ள  வல்லவராயிருக்கிறாரென்று  நிச்சயித்துமிருக்கிறேன்.  {2Tim  1:12}

 

நீ  கிறிஸ்து  இயேசுவைப்பற்றும்<Christ  Jesus>  விசுவாசத்தோடும்  அன்போடும்  என்னிடத்தில்  கேட்டிருக்கிற  ஆரோக்கியமான  வசனங்களின்  சட்டத்தைக்  கைக்கொண்டிரு.  {2Tim  1:13}

 

உன்னிடத்தில்  ஒப்புவிக்கப்பட்ட  அந்த  நற்பொருளை  நமக்குள்ளே  வாசம்பண்ணுகிற  பரிசுத்த  ஆவியினாலே  காத்துக்கொள்.  {2Tim  1:14}

 

ஆசியாநாட்டிலிருக்கிற<Asia>  யாவரும்,  அவர்களில்  பிகெல்லு<Phygellus>  எர்மொகெனே<Hermogenes>  முதலாய்  என்னைவிட்டு  விலகினார்களென்று  அறிந்திருக்கிறாய்.  {2Tim  1:15}

 

ஒநேசிப்போருவின்<Onesiphorus>  வீட்டாருக்குக்  கர்த்தர்  இரக்கங்  கட்டளையிடுவாராக;  அவன்  அநேகந்தரம்  என்னை  இளைப்பாற்றினான்;  என்  விலங்கைக்குறித்து  அவன்  வெட்கப்படவுமில்லை;  {2Tim  1:16}

 

அவன்  ரோமாவில்<Rome>  வந்திருந்தபோது  அதிக  ஜாக்கிரதையாய்  என்னைத்  தேடிக்  கண்டுபிடித்தான்.  {2Tim  1:17}

 

அந்நாளிலே  அவன்  கர்த்தரிடத்தில்  இரக்கத்தைக்  கண்டடையும்படி,  கர்த்தர்  அவனுக்கு  அனுக்கிரகஞ்செய்வாராக;  அவன்  எபேசுவிலே<Ephesus>  செய்த  பற்பல  உதவிகளையும்  நீ  நன்றாய்  அறிந்திருக்கிறாயே.  {2Tim  1:18}

 

ஆதலால்,  என்  குமாரனே,  நீ  கிறிஸ்து  இயேசுவிலுள்ள<Christ  Jesus>  கிருபையில்  பலப்படு.  {2Tim  2:1}

 

அநேக  சாட்சிகளுக்கு  முன்பாக  நீ  என்னிடத்தில்  கேட்டவைகளை  மற்றவர்களுக்குப்  போதிக்கத்தக்க  உண்மையுள்ள  மனுஷர்களிடத்தில்  ஒப்புவி.  {2Tim  2:2}

 

நீயும்  இயேசுகிறிஸ்துவுக்கு<Jesus  Christ>  நல்ல  போர்ச்சேவகனாய்த்  தீங்கநுபவி.  {2Tim  2:3}

 

தண்டில்  சேவகம்பண்ணுகிற  எவனும்,  தன்னைச்  சேவகமெழுதிக்கொண்டவனுக்கு  ஏற்றவனாயிருக்கும்படி,  பிழைப்புக்கடுத்த  அலுவல்களில்  சிக்கிக்கொள்ளமாட்டான்.  {2Tim  2:4}

 

மேலும்  ஒருவன்  மல்யுத்தம்பண்ணினாலும்,  சட்டத்தின்படி  பண்ணாவிட்டால்  முடிசூட்டப்படான்.  {2Tim  2:5}

 

பிரயாசப்பட்டுப்  பயிரிடுகிறவன்  பலனில்  முந்திப்  பங்கடையவேண்டும்.  {2Tim  2:6}

 

நான்  சொல்லுகிறவைகளைச்  சிந்தித்துக்கொள்;  கர்த்தர்  எல்லாக்  காரியங்களிலும்  உனக்குப்  புத்தியைத்  தந்தருளுவார்.  {2Tim  2:7}

 

தாவீதின்<David>  சந்ததியில்  பிறந்த  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>,  என்  சுவிசேஷத்தின்படியே,  மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று  நினைத்துக்கொள்.  {2Tim  2:8}

 

இந்தச்  சுவிசேஷத்தினிமித்தம்  நான்  பாதகன்போலக்  கட்டப்பட்டு,  துன்பத்தை  அநுபவிக்கிறேன்;  தேவவசனமோ  கட்டப்பட்டிருக்கவில்லை.  {2Tim  2:9}

 

ஆகையால்,  தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்  கிறிஸ்து  இயேசுவினால்<Christ  Jesus>  உண்டான  இரட்சிப்பை  நித்திய  மகிமையோடே  பெற்றுக்கொள்ளும்படி,  சகலத்தையும்  அவர்கள்  நிமித்தமாகச்  சகிக்கிறேன்.  {2Tim  2:10}

 

இந்த  வார்த்தை  உண்மையுள்ளது;  என்னவெனில்,  நாம்  அவரோடேகூட  மரித்தோமானால்,  அவரோடேகூடப்  பிழைத்துமிருப்போம்;  {2Tim  2:11}

 

அவரோடேகூடப்  பாடுகளைச்  சகித்தோமானால்  அவரோடேகூட  ஆளுகையும்  செய்வோம்;  நாம்  அவரை  மறுதலித்தால்,  அவரும்  நம்மை  மறுதலிப்பார்;  {2Tim  2:12}

 

நாம்  உண்மையில்லாதவர்களாயிருந்தாலும்,  அவர்  உண்மையுள்ளவராயிருக்கிறார்;  அவர்  தம்மைத்தாம்  மறுதலிக்கமாட்டார்.  {2Tim  2:13}

 

இவைகளை  அவர்களுக்கு  நினைப்பூட்டி,  ஒன்றுக்கும்  பிரயோஜனமில்லாமல்,  கேட்கிறவர்களைக்  கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான  வாக்குவாதம்  செய்யாதபடிக்கு,  கர்த்தருக்கு  முன்பாக  அவர்களுக்கு  எச்சரித்துப்  புத்திசொல்லு.  {2Tim  2:14}

 

நீ  வெட்கப்படாத  ஊழியக்காரனாயும்  சத்திய  வசனத்தை  நிதானமாய்ப்  பகுத்துப்  போதிக்கிறவனாயும்  உன்னைத்  தேவனுக்கு  முன்பாக  உத்தமனாக  நிறுத்தும்படி  ஜாக்கிரதையாயிரு.  {2Tim  2:15}

 

சீர்கேடான  வீண்பேச்சுகளுக்கு  விலகியிரு;  அவைகளால்  (கள்ளப்போதகர்களான)  அவர்கள்  அதிக  அவபக்தியுள்ளவர்களாவார்கள்;  {2Tim  2:16}

 

அவர்களுடைய  வார்த்தை  அரிபிளவையைப்போலப்  படரும்;  இமெநேயும்<Hymenaeus>  பிலேத்தும்<Philetus>  அப்படிப்பட்டவர்கள்;  {2Tim  2:17}

 

அவர்கள்  சத்தியத்தை  விட்டு  விலகி,  உயிர்த்தெழுதல்  நடந்தாயிற்றென்று  சொல்லி,  சிலருடைய  விசுவாசத்தைக்  கவிழ்த்துப்போடுகிறார்கள்.  {2Tim  2:18}

 

ஆகிலும்  தேவனுடைய  உறுதியான  அஸ்திபாரம்  நிலைத்திருக்கிறது;  கர்த்தர்  தம்முடையவர்களை  அறிவாரென்பதும்,  கிறிஸ்துவின்<Christ>  நாமத்தைச்  சொல்லுகிற  எவனும்  அநியாயத்தைவிட்டு  விலகக்கடவனென்பதும்,  அதற்கு  முத்திரையாயிருக்கிறது.  {2Tim  2:19}

 

ஒரு  பெரிய  வீட்டிலே  பொன்னும்  வெள்ளியுமான  பாத்திரங்களுமல்லாமல்,  மரமும்  மண்ணுமான  பாத்திரங்களுமுண்டு;  அவைகளில்  சில  கனத்திற்கும்  சில  கனவீனத்திற்குமானவைகள்.  {2Tim  2:20}

 

ஆகையால்  ஒருவன்  இவைகளை  விட்டு,  தன்னைச்  சுத்திகரித்துக்கொண்டால்,  அவன்  பரிசுத்தமாக்கப்பட்டதும்,  எஜமானுக்கு  உபயோகமானதும்,  எந்த  நற்கிரியைக்கும்  ஆயத்தமாக்கப்பட்டதுமான  கனத்துக்குரிய  பாத்திரமாயிருப்பான்.  {2Tim  2:21}

 

அன்றியும்,  பாலியத்துக்குரிய  இச்சைகளுக்கு  நீ  விலகியோடி,  சுத்த  இருதயத்தோடே  கர்த்தரைத்  தொழுதுகொள்ளுகிறவர்களுடனே,  நீதியையும்  விசுவாசத்தையும்  அன்பையும்  சமாதானத்தையும்  அடையும்படி  நாடு.  {2Tim  2:22}

 

புத்தியீனமும்  அயுக்தமுமான  தர்க்கங்கள்  சண்டைகளைப்  பிறப்பிக்குமென்று  அறிந்து,  அவைகளுக்கு  விலகியிரு.  {2Tim  2:23}

 

கர்த்தருடைய  ஊழியக்காரன்  சண்டைபண்ணுகிறவனாயிராமல்,  எல்லாரிடத்திலும்  சாந்தமுள்ளவனும்,  போதகசமர்த்தனும்,  தீமையைச்  சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.  {2Tim  2:24}

 

எதிர்பேசுகிறவர்கள்  சத்தியத்தை  அறியும்படி  தேவன்  அவர்களுக்கு  மனந்திரும்புதலை  அருளத்தக்கதாகவும்,  {2Tim  2:25}

 

பிசாசானவனுடைய  இச்சையின்படி  செய்ய  அவனால்  பிடிபட்டிருக்கிற  அவர்கள்  மறுபடியும்  மயக்கந்தெளிந்து  அவன்  கண்ணிக்கு  நீங்கத்தக்கதாகவும்,  சாந்தமாய்  அவர்களுக்கு  உபதேசிக்கவேண்டும்.  {2Tim  2:26}

 

மேலும்,  கடைசிநாட்களில்  கொடிய  காலங்கள்  வருமென்று  அறிவாயாக.  {2Tim  3:1}

 

எப்படியெனில்,  மனுஷர்கள்  தற்பிரியராயும்,  பணப்பிரியராயும்,  வீம்புக்காரராயும்,  அகந்தையுள்ளவர்களாயும்,  தூஷிக்கிறவர்களாயும்,  தாய்தகப்பன்மாருக்குக்  கீழ்ப்படியாதவர்களாயும்,  நன்றியறியாதவர்களாயும்,  பரிசுத்தமில்லாதவர்களாயும்,  {2Tim  3:2}

 

சுபாவ  அன்பில்லாதவர்களாயும்,  இணங்காதவர்களாயும்,  அவதூறு  செய்கிறவர்களாயும்,  இச்சையடக்கமில்லாதவர்களாயும்,  கொடுமையுள்ளவர்களாயும்,  நல்லோரைப்  பகைக்கிறவர்களாயும்,  {2Tim  3:3}

 

துரோகிகளாயும்,  துணிகரமுள்ளவர்களாயும்,  இறுமாப்புள்ளவர்களாயும்,  தேவப்பிரியராயிராமல்  சுகபோகப்பிரியராயும்,  {2Tim  3:4}

 

தேவபக்தியின்  வேஷத்தைத்  தரித்து  அதின்  பெலனை  மறுதலிக்கிறவர்களாயும்  இருப்பார்கள்;  இப்படிப்பட்டவர்களை  நீ  விட்டு  விலகு.  {2Tim  3:5}

 

பாவங்களால்  நிறைந்து,  பற்பல  இச்சைகளால்  இழுப்புண்டு,  {2Tim  3:6}

 

எப்போதும்  கற்றாலும்  ஒருபோதும்  சத்தியத்தை  அறிந்து  உணராதவர்களாயிருக்கிற  பெண்பிள்ளைகளுடைய  வீடுகளில்  இப்படிப்பட்டவர்கள்  நுழைந்து,  அவர்களை  வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.  {2Tim  3:7}

 

யந்நேயும்<Jannes>  யம்பிரேயும்<Jambres>  மோசேக்கு<Moses>  எதிர்த்து  நின்றதுபோல  இவர்களும்  சத்தியத்துக்கு  எதிர்த்து  நிற்கிறார்கள்;  இவர்கள்  துர்ப்புத்தியுள்ள  மனுஷர்கள்,  விசுவாசவிஷயத்தில்  பரீட்சைக்கு  நில்லாதவர்கள்.  {2Tim  3:8}

 

ஆனாலும்,  இவர்கள்  அதிகமாய்ப்  பலப்படுவதில்லை;  அவ்விருவருடைய  மதிகேடு  எல்லாருக்கும்  வெளிப்பட்டதுபோல,  இவர்களுடைய  மதிகேடும்  வெளிப்படும்.  {2Tim  3:9}

 

நீயோ  என்  போதகத்தையும்  நடக்கையையும்  நோக்கத்தையும்  விசுவாசத்தையும்  நீடிய  சாந்தத்தையும்  அன்பையும்  பொறுமையையும்,  {2Tim  3:10}

 

அந்தியோகியா<Antioch>,  இக்கோனியா<Iconium>,  லீஸ்திரா<Lystra>  என்னும்  பட்டணங்களில்  எனக்கு  உண்டான  துன்பங்களையும்  பாடுகளையும்  நன்றாய்  அறிந்திருக்கிறாய்;  எவ்வளவோ  துன்பங்களைச்  சகித்தேன்;  இவையெல்லாவற்றினின்றும்  கர்த்தர்  என்னை  நீங்கலாக்கிவிட்டார்.  {2Tim  3:11}

 

அன்றியும்  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  தேவபக்தியாய்  நடக்க  மனதாயிருக்கிற  யாவரும்  துன்பப்படுவார்கள்.  {2Tim  3:12}

 

பொல்லாதவர்களும்  எத்தர்களுமானவர்கள்  மோசம்போக்குகிறவர்களாகவும்,  மோசம்போகிறவர்களாகவுமிருந்து  மேன்மேலும்  கேடுள்ளவர்களாவார்கள்.  {2Tim  3:13}

 

நீ  கற்று  நிச்சயித்துக்கொண்டவைகளில்  நிலைத்திரு;  அவைகளை  இன்னாரிடத்தில்  கற்றாய்  என்று  நீ  அறிந்திருக்கிறதுமல்லாமல்,  {2Tim  3:14}

 

கிறிஸ்து  இயேசுவைப்பற்றும்<Christ  Jesus>  விசுவாசத்தினாலே  உன்னை  இரட்சிப்புக்கேற்ற  ஞானமுள்ளவனாக்கத்தக்க  பரிசுத்த  வேத  எழுத்துக்களை,  நீ  சிறுவயதுமுதல்  அறிந்தவனென்றும்  உனக்குத்  தெரியும்.  {2Tim  3:15}

 

வேதவாக்கியங்களெல்லாம்  தேவஆவியினால்  அருளப்பட்டிருக்கிறது;  தேவனுடைய  மனுஷன்  தேறினவனாகவும்,  எந்த  நற்கிரியையுஞ்  செய்யத்  தகுதியுள்ளவனாகவும்  இருக்கும்படியாக,  {2Tim  3:16}

 

அவைகள்  உபதேசத்துக்கும்,  கடிந்துகொள்ளுதலுக்கும்,  சீர்திருத்தலுக்கும்,  நீதியைப்  படிப்பிக்குதலுக்கும்  பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.  {2Tim  3:17}

 

நான்  தேவனுக்கு  முன்பாகவும்,  உயிரோடிருக்கிறவர்களையும்  மரித்தவர்களையும்  நியாயந்தீர்க்கப்போகிற  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்கு<Jesus  Christ>  முன்பாகவும்,  அவருடைய  பிரசன்னமாகுதலையும்  அவருடைய  ராஜ்யத்தையும்  சாட்சியாக  வைத்துக்  கட்டளையிடுகிறதாவது:  {2Tim  4:1}

 

சமயம்  வாய்த்தாலும்  வாய்க்காவிட்டாலும்  ஜாக்கிரதையாய்த்  திருவசனத்தைப்  பிரசங்கம்பண்ணு;  எல்லா  நீடிய  சாந்தத்தோடும்  உபதேசத்தோடும்  கண்டனம்பண்ணி,  கடிந்துகொண்டு,  புத்திசொல்லு.  {2Tim  4:2}

 

ஏனென்றால்,  அவர்கள்  ஆரோக்கியமான  உபதேசத்தைப்  பொறுக்க  மனதில்லாமல்,  செவித்தினவுள்ளவர்களாகி,  தங்கள்  சுய  இச்சைகளுக்கேற்ற  போதகர்களைத்  தங்களுக்குத்  திரளாகச்  சேர்த்துக்கொண்டு,  {2Tim  4:3}

 

சத்தியத்துக்குச்  செவியை  விலக்கி,  கட்டுக்கதைகளுக்குச்  சாய்ந்துபோகுங்காலம்  வரும்.  {2Tim  4:4}

 

நீயோ  எல்லாவற்றிலும்  மனத்தெளிவுள்ளவனாயிரு,  தீங்கநுபவி,  சுவிசேஷகனுடைய  வேலையைச்  செய்,  உன்  ஊழியத்தை  நிறைவேற்று.  {2Tim  4:5}

 

ஏனென்றால்,  நான்  இப்பொழுதே  பானபலியாக  வார்க்கப்பட்டுப்போகிறேன்;  நான்  தேகத்தை  விட்டுப்  பிரியும்  காலம்  வந்தது.  {2Tim  4:6}

 

நல்ல  போராட்டத்தைப்  போராடினேன்,  ஓட்டத்தை  முடித்தேன்,  விசுவாசத்தைக்  காத்துக்கொண்டேன்.  {2Tim  4:7}

 

இதுமுதல்  நீதியின்  கிரீடம்  எனக்காக  வைக்கப்பட்டிருக்கிறது,  நீதியுள்ள  நியாயாதிபதியாகிய  கர்த்தர்  அந்நாளிலே  அதை  எனக்குத்  தந்தருளுவார்;  எனக்கு  மாத்திரமல்ல,  அவர்  பிரசன்னமாகுதலை  விரும்பும்  யாவருக்கும்  அதைத்  தந்தருளுவார்.  {2Tim  4:8}

 

நீ  சீக்கிரமாய்  என்னிடத்தில்  வரும்படி  ஜாக்கிரதைப்படு.  {2Tim  4:9}

 

ஏனென்றால்,  தேமா<Demas>  இப்பிரபஞ்சத்தின்மேல்  ஆசைவைத்து,  என்னைவிட்டுப்  பிரிந்து,  தெசலோனிக்கே<Thessalonica>  பட்டணத்துக்குப்  போய்விட்டான்;  கிரெஸ்கே<Crescens>  கலாத்தியா<Galatia>  நாட்டிற்கும்,  தீத்து<Titus>  தல்மாத்தியா<Dalmatia>  நாட்டிற்கும்  போய்விட்டார்கள்.  {2Tim  4:10}

 

லூக்காமாத்திரம்<Luke>  என்னோடே  இருக்கிறான்.  மாற்குவை<Mark>  உன்னோடே  கூட்டிக்கொண்டுவா;  ஊழியத்தில்  அவன்  எனக்குப்  பிரயோஜனமுள்ளவன்.  {2Tim  4:11}

 

தீகிக்குவை<Tychicus>  நான்  எபேசுவுக்கு<Ephesus>  அனுப்பினேன்.  {2Tim  4:12}

 

துரோவா<Troas>  பட்டணத்திலிருக்கிற  கார்ப்பு<Carpus>  என்பவன்  வசத்தில்  நான்  வைத்துவந்த  மேலங்கியையும்,  புஸ்தகங்களையும்,  விசேஷமாய்த்  தோற்சுருள்களையும்,  நீ  வருகிறபோது  எடுத்துக்கொண்டுவா.  {2Tim  4:13}

 

கன்னானாகிய  அலெக்சந்தர்<Alexander>  எனக்கு  வெகு  தீமைசெய்தான்;  அவனுடைய  செய்கைக்குத்தக்கதாகக்  கர்த்தர்  அவனுக்குப்  பதிலளிப்பாராக.  {2Tim  4:14}

 

நீயும்  அவனைக்குறித்து  எச்சரிக்கையாயிரு;  அவன்  நம்முடைய  வார்த்தைகளுக்கு  மிகவும்  எதிர்த்துநின்றவன்.  {2Tim  4:15}

 

நான்  முதல்விசை  உத்தரவுசொல்ல  நிற்கையில்  ஒருவனும்  என்னோடேகூட  இருக்கவில்லை,  எல்லாரும்  என்னைக்  கைவிட்டார்கள்;  அந்தக்  குற்றம்  அவர்கள்மேல்  சுமராதிருப்பதாக.  {2Tim  4:16}

 

கர்த்தரோ  எனக்குத்  துணையாக  நின்று,  என்னாலே  பிரசங்கம்  நிறைவேறுகிறதற்காகவும்,  புறஜாதியாரெல்லாரும்  கேட்கிறதற்காகவும்,  என்னைப்  பலப்படுத்தினார்;  சிங்கத்தின்  வாயிலிருந்தும்  நான்  இரட்சிக்கப்பட்டேன்.  {2Tim  4:17}

 

கர்த்தர்  எல்லாத்  தீமையினின்றும்  என்னை  இரட்சித்து,  தம்முடைய  பரம  ராஜ்யத்தை  அடையும்படி  காப்பாற்றுவார்;  அவருக்குச்  சதாகாலங்களிலும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  {2Tim  4:18}

 

பிரிஸ்காளுக்கும்<Prisca>  ஆக்கில்லாவுக்கும்<Aquila>,  ஒநேசிப்போருவின்<Onesiphorus>  வீட்டாருக்கும்  என்  வாழ்த்துதலைச்  சொல்லு.  {2Tim  4:19}

 

எரஸ்து<Erastus>  கொரிந்துபட்டணத்தில்<Corinth>  இருந்துவிட்டான்;  துரோப்பீமுவை<Trophimus>  மிலேத்துவில்<Miletum>  வியாதிப்பட்டவனாக  விட்டுவந்தேன்.  {2Tim  4:20}

 

மாரிகாலத்துக்குமுன்  நீ  வந்து  சேரும்படி  ஜாக்கிரதைப்படு.  ஐபூலுவும்<Eubulus>,  புதேஞ்சும்<Pudens>,  லீனுவும்<Linus>,  கலவுதியாளும்<Claudia>,  மற்றெல்லாச்  சகோதரரும்  உனக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  {2Tim  4:21}

 

கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  உன்  ஆவியுடனேகூட  இருப்பாராக.  கிருபை  உங்களோடிருப்பதாக.  ஆமென்.  {2Tim  4:22}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!