Wednesday, December 25, 2019

1 தீமோத்தேயு

நம்முடைய  இரட்சகராயிருக்கிற  தேவனும்,  நம்முடைய  நம்பிக்கையாயிருக்கிற  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவும்<Jesus  Christ>  கட்டளையிட்டபடியே,  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அப்போஸ்தலனாயிருக்கிற  பவுல்<Paul>,  {1Tim  1:1}

 

விசுவாசத்தில்  உத்தம  குமாரனாகிய  தீமோத்தேயுவுக்கு<Timothy>  எழுதுகிறதாவது:  நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  நம்முடைய  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவினாலும்<Christ  Jesus>  கிருபையும்  இரக்கமும்  சமாதானமும்  உண்டாவதாக.  {1Tim  1:2}

 

வேற்றுமையான  உபதேசங்களைப்  போதியாதபடிக்கும்,  விசுவாசத்தினால்  விளங்கும்  தெய்வீக  பக்திவிருத்திக்கு  ஏதுவாயிராமல்,  தர்க்கங்களுக்கு  ஏதுவாயிருக்கிற  கட்டுக்கதைகளையும்  முடிவில்லாத  வம்சவரலாறுகளையும்  கவனியாதபடிக்கும்,  நீ  சிலருக்குக்  கட்டளையிடும்பொருட்டாக,  {1Tim  1:3}

 

நான்  மக்கெதோனியாவுக்குப்<Macedonia>  போகும்போது  உன்னை  எபேசு<Ephesus>  பட்டணத்திலிருக்க  வேண்டிக்கொண்டபடியே  செய்வாயாக.  {1Tim  1:4}

 

கற்பனையின்  பொருள்  என்னவெனில்,  சுத்தமான  இருதயத்திலும்  நல்மனச்சாட்சியிலும்  மாயமற்ற  விசுவாசத்திலும்  பிறக்கும்  அன்பே.  {1Tim  1:5}

 

இவைகளைச்  சிலர்  நோக்காமல்  வீண்பேச்சுக்கு  இடங்கொடுத்து  விலகிப்போனார்கள்.  {1Tim  1:6}

 

தாங்கள்  சொல்லுகிறது  இன்னதென்றும்,  தாங்கள்  சாதிக்கிறது  இன்னதென்றும்  அறியாதிருந்தும்,  நியாயப்பிரமாண  போதகராயிருக்க  விரும்புகிறார்கள்.  {1Tim  1:7}

 

ஒருவன்  நியாயப்பிரமாணத்தை  நியாயப்படி  அநுசரித்தால்,  நியாயப்பிரமாணம்  நல்லதென்று  அறிந்திருக்கிறோம்.  {1Tim  1:8}

 

எங்களுக்குத்  தெரிந்திருக்கிறபடி,  நியாயப்பிரமாணம்  நீதிமானுக்கு  விதிக்கப்படாமல்,  அக்கிரமக்காரருக்கும்,  அடங்காதவர்களுக்கும்,  பக்தியில்லாதவர்களுக்கும்,  பாவிகளுக்கும்,  அசுத்தருக்கும்,  சீர்கெட்டவர்களுக்கும்,  தாய்தகப்பன்மாரை  அடிக்கிறவர்களுக்கும்,  கொலைபாதகருக்கும்,  {1Tim  1:9}

 

வேசிக்கள்ளருக்கும்,  ஆண்புணர்ச்சிக்காரருக்கும்,  மனுஷரைத்  திருடுகிறவர்களுக்கும்,  பொய்யருக்கும்,  பொய்யாணை  இடுகிறவர்களுக்கும்,  {1Tim  1:10}

 

நித்தியானந்த  தேவனுடைய  மகிமையான  சுவிசேஷத்தின்படி  எனக்கு  ஒப்புவிக்கப்பட்டிருக்கிற  ஆரோக்கியமான  உபதேசத்திற்கு  எதிரிடையாயிருக்கிற  மற்றெந்தச்  செய்கைக்கும்  விரோதமாய்  விதிக்கப்பட்டிருக்கிறது.  {1Tim  1:11}

 

என்னைப்  பலப்படுத்துகிற  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  என்னை  உண்மையுள்ளவனென்றெண்ணி,  இந்த  ஊழியத்திற்கு  ஏற்படுத்தினபடியால்,  அவரை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {1Tim  1:12}

 

முன்னே  நான்  தூஷிக்கிறவனும்,  துன்பப்படுத்துகிறவனும்,  கொடுமை  செய்கிறவனுமாயிருந்தேன்;  அப்படியிருந்தும்,  நான்  அறியாமல்  அவிசுவாசத்தினாலே  அப்படிச்  செய்தபடியினால்  இரக்கம்பெற்றேன்.  {1Tim  1:13}

 

நம்முடைய  கர்த்தரின்  கிருபை  கிறிஸ்து  இயேசுவின்மேலுள்ள<Christ  Jesus>  விசுவாசத்தோடும்  அன்போடுங்கூட  என்னிடத்தில்  பரிபூரணமாய்ப்  பெருகிற்று.  {1Tim  1:14}

 

பாவிகளை  இரட்சிக்க  கிறிஸ்து  இயேசு<Christ  Jesus>  உலகத்தில்  வந்தார்  என்கிற  வார்த்தை  உண்மையும்  எல்லா  அங்கிகரிப்புக்கும்  பாத்திரமுமானது;  அவர்களில்  பிரதான  பாவி  நான்.  {1Tim  1:15}

 

அப்படியிருந்தும்,  நித்திய  ஜீவனை  அடையும்படி  இனிமேல்  இயேசுகிறிஸ்துவினிடத்தில்<Jesus  Christ>  விசுவாசமாயிருப்பவர்களுக்குத்  திருஷ்டாந்தம்  உண்டாகும்பொருட்டுப்  பிரதான  பாவியாகிய  என்னிடத்தில்  அவர்  எல்லா  நீடிய  பொறுமையையும்  காண்பிக்கும்படிக்கு  இரக்கம்பெற்றேன்.  {1Tim  1:16}

 

நித்தியமும்  அழிவில்லாமையும்  அதரிசனமுமுள்ள  ராஜனுமாய்,  தாம்  ஒருவரே  ஞானமுள்ள  தேவனுமாயிருக்கிறவருக்கு,  கனமும்  மகிமையும்  சதாகாலங்களிலும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  {1Tim  1:17}

 

குமாரனாகிய  தீமோத்தேயுவே<Timothy>,  உன்னைக்குறித்து  முன்  உண்டான  தீர்க்கதரிசனங்களின்படியே,  நீ  அவைகளை  முன்னிட்டு  நல்ல  போராட்டம்பண்ணும்படி,  இந்தக்  கட்டளையை  உனக்கு  ஒப்புவிக்கிறேன்;  நீ  விசுவாசமும்  நல்மனச்சாட்சியும்  உடையவனாயிரு.  {1Tim  1:18}

 

இந்த  நல்மனச்சாட்சியைச்  சிலர்  தள்ளிவிட்டு,  விசுவாசமாகிய  கப்பலைச்  சேதப்படுத்தினார்கள்.  {1Tim  1:19}

 

இமெனேயும்<Hymenaeus>  அலெக்சந்தரும்<Alexander>  அப்படிப்பட்டவர்கள்;  அவர்கள்  தூஷியாதபடி  சிட்சிக்கப்பட  அவர்களைச்  சாத்தானிடத்தில்  ஒப்புக்கொடுத்தேன்.  {1Tim  1:20}

 

நான்  பிரதானமாய்ச்  சொல்லுகிற  புத்தியென்னவெனில்,  எல்லா  மனுஷருக்காகவும்  விண்ணப்பங்களையும்  ஜெபங்களையும்  வேண்டுதல்களையும்  ஸ்தோத்திரங்களையும்  பண்ணவேண்டும்;  {1Tim  2:1}

 

நாம்  எல்லாப்  பக்தியோடும்  நல்லொழுக்கத்தோடும்  கலகமில்லாமல்  அமைதலுள்ள  ஜீவனம்பண்ணும்படிக்கு,  ராஜாக்களுக்காகவும்,  அதிகாரமுள்ள  யாவருக்காகவும்  அப்படியே  செய்யவேண்டும்.  {1Tim  2:2}

 

நம்முடைய  இரட்சகராகிய  தேவனுக்குமுன்பாக  அது  நன்மையும்  பிரியமுமாயிருக்கிறது.  {1Tim  2:3}

 

எல்லா  மனுஷரும்  இரட்சிக்கப்படவும்,  சத்தியத்தை  அறிகிற  அறிவை  அடையவும்,  அவர்  சித்தமுள்ளவராயிருக்கிறார்.  {1Tim  2:4}

 

தேவன்  ஒருவரே,  தேவனுக்கும்  மனுஷருக்கும்  மத்தியஸ்தரும்  ஒருவரே.  {1Tim  2:5}

 

எல்லாரையும்  மீட்கும்பொருளாகத்  தம்மை  ஒப்புக்கொடுத்த  மனுஷனாகிய  கிறிஸ்து  இயேசு<Christ Jesus>  அவரே;  இதற்குரிய  சாட்சி  ஏற்ற  காலங்களில்  விளங்கிவருகிறது.  {1Tim  2:6}

 

இதற்காகவே  நான்  பிரசங்கியாகவும்,  அப்போஸ்தலனாகவும்,  புறஜாதிகளுக்கு  விசுவாசத்தையும்  சத்தியத்தையும்  விளங்கப்பண்ணுகிற  போதகனாகவும்  நியமிக்கப்பட்டிருக்கிறேன்;  நான்  பொய்  சொல்லாமல்  கிறிஸ்துவுக்குள்<Christ>  உண்மையைச்  சொல்லுகிறேன்.  {1Tim  2:7}

 

அன்றியும்,  புருஷர்கள்  கோபமும்  தர்க்கமுமில்லாமல்  பரிசுத்தமான  கைகளை  உயர்த்தி,  எல்லா  இடங்களிலேயும்  ஜெபம்பண்ணவேண்டுமென்று  விரும்புகிறேன்.  {1Tim  2:8}

 

ஸ்திரீகளும்  மயிரைப்  பின்னுதலினாலாவது,  பொன்னினாலாவது,  முத்துக்களினாலாவது,  விலையேறப்பெற்ற  வஸ்திரத்தினாலாவது  தங்களை  அலங்கரியாமல்,  {1Tim  2:9}

 

தகுதியான  வஸ்திரத்தினாலும்,  நாணத்தினாலும்,  தெளிந்த  புத்தியினாலும்,  தேவபக்தியுள்ளவர்களென்று  சொல்லிக்கொள்ளுகிற  ஸ்திரீகளுக்கு  ஏற்றபடியே  நற்கிரியைகளினாலும்,  தங்களை  அலங்கரிக்கவேண்டும்.  {1Tim  2:10}

 

ஸ்திரீயானவள்  எல்லாவற்றிலும்  அடக்கமுடையவளாயிருந்து,  அமைதலோடு  கற்றுக்கொள்ளக்கடவள்.  {1Tim  2:11}

 

உபதேசம்பண்ணவும்,  புருஷன்மேல்  அதிகாரஞ்  செலுத்தவும்,  ஸ்திரீயானவளுக்கு  நான்  உத்தரவு  கொடுக்கிறதில்லை;  அவள்  அமைதலாயிருக்கவேண்டும்.  {1Tim  2:12}

 

என்னத்தினாலெனில்,  முதலாவது  ஆதாம்<Adam>  உருவாக்கப்பட்டான்,  பின்பு  ஏவாள்<Eve>  உருவாக்கப்பட்டாள்.  {1Tim  2:13}

 

மேலும்,  ஆதாம்<Adam>  வஞ்சிக்கப்படவில்லை,  ஸ்திரீயானவளே  வஞ்சிக்கப்பட்டு  மீறுதலுக்கு  உட்பட்டாள்.  {1Tim  2:14}

 

அப்படியிருந்தும்,  தெளிந்த  புத்தியோடு  விசுவாசத்திலும்  அன்பிலும்  பரிசுத்தத்திலும்  நிலைகொண்டிருந்தால்,  பிள்ளைப்பேற்றினாலே  இரட்சிக்கப்படுவாள்.  {1Tim  2:15}

 

கண்காணிப்பை  விரும்புகிறவன்  நல்ல  வேலையை  விரும்புகிறான்,  இது  உண்மையான  வார்த்தை.  {1Tim  3:1}

 

ஆகையால்  கண்காணியானவன்  குற்றஞ்சாட்டப்படாதவனும்,  ஒரே  மனைவியை  உடைய  புருஷனும்,  ஜாக்கிரதையுள்ளவனும்,  தெளிந்த  புத்தியுள்ளவனும்,  யோக்கியதையுள்ளவனும்,  அந்நியரை  உபசரிக்கிறவனும்,  போதகசமர்த்தனுமாய்  இருக்கவேண்டும்.  {1Tim  3:2}

 

அவன்  மதுபானப்பிரியனும்,  அடிக்கிறவனும்,  இழிவான  ஆதாயத்தை  இச்சிக்கிறவனுமாயிராமல்,  பொறுமையுள்ளவனும்,  சண்டைபண்ணாதவனும்,  பண  ஆசையில்லாதவனுமாயிருந்து,  {1Tim  3:3}

 

தன்  சொந்தக்  குடும்பத்தை  நன்றாய்  நடத்துகிறவனும்,  தன்  பிள்ளைகளைச்  சகல  நல்லொழுக்கமுள்ளவர்களாகக்  கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.  {1Tim  3:4}

 

ஒருவன்  தன்  சொந்தக்  குடும்பத்தை  நடத்த  அறியாதிருந்தால்,  தேவனுடைய  சபையை  எப்படி  விசாரிப்பான்?  {1Tim  3:5}

 

அவன்  இறுமாப்படைந்து,  பிசாசு  அடைந்த  ஆக்கினையிலே  விழாதபடிக்கு,  நூதன  சீஷனாயிருக்கக்கூடாது.  {1Tim  3:6}

 

அவன்  நிந்தனையிலும்,  பிசாசின்  கண்ணியிலும்  விழாதபடிக்கு,  புறம்பானவர்களால்  நற்சாட்சி  பெற்றவனாயுமிருக்கவேண்டும்.  {1Tim  3:7}

 

அந்தப்படியே,  உதவிக்காரரும்  இருநாக்குள்ளவர்களாயும்,  மதுபானப்பிரியராயும்,  இழிவான  ஆதாயத்தை  இச்சிக்கிறவர்களாயும்  இராமல்,  நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,  {1Tim  3:8}

 

விசுவாசத்தின்  இரகசியத்தைச்  சுத்த  மனச்சாட்சியிலே  காத்துக்கொள்ளுகிறவர்களாயும்  இருக்கவேண்டும்.  {1Tim  3:9}

 

மேலும்,  இவர்கள்  முன்னதாகச்  சோதிக்கப்படவேண்டும்;  குற்றஞ்சாட்டப்படாதவர்களானால்  உதவிக்காரராக  ஊழியஞ்செய்யலாம்.  {1Tim  3:10}

 

அந்தப்படியே  ஸ்திரீகளும்  நல்லொழுக்கமுள்ளவர்களும்,  அவதூறுபண்ணாதவர்களும்,  தெளிந்த  புத்தியுள்ளவர்களும்,  எல்லாவற்றிலேயும்  உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.  {1Tim  3:11}

 

மேலும்,  உதவிக்காரரானவர்கள்  ஒரே  மனைவியையுடைய  புருஷருமாய்,  தங்கள்  பிள்ளைகளையும்  சொந்தக்  குடும்பங்களையும்  நன்றாய்  நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.  {1Tim  3:12}

 

இப்படி  உதவிக்காரருடைய  ஊழியத்தை  நன்றாய்ச்  செய்கிறவர்கள்  தங்களுக்கு  நல்ல  நிலையையும்,  கிறிஸ்து  இயேசுவைப்பற்றும்<Christ  Jesus>  விசுவாசத்தில்  மிகுந்த  தைரியத்தையும்  அடைவார்கள்.  {1Tim  3:13}

 

நான்  உன்னிடத்திற்குச்  சீக்கிரமாய்  வருவேனென்று  நம்பியிருக்கிறேன்.  {1Tim  3:14}

 

தாமதிப்பேனாகில்,  தேவனுடைய  வீட்டிலே  நடக்கவேண்டிய  வகையை  நீ  அறியும்படி  இவைகளை  உனக்கு  எழுதுகிறேன்;  அந்த  வீடு  ஜீவனுள்ள  தேவனுடைய  சபையாய்ச்  சத்தியத்துக்குத்  தூணும்  ஆதாரமுமாயிருக்கிறது.  {1Tim  3:15}

 

அன்றியும்,  தேவபக்திக்குரிய  இரகசியமானது  யாவரும்  ஒப்புக்கொள்ளுகிறபடியே  மகா  மேன்மையுள்ளது.  தேவன்  மாம்சத்திலே  வெளிப்பட்டார்,  ஆவியிலே  நீதியுள்ளவரென்று  விளங்கப்பட்டார்,  தேவதூதர்களால்  காணப்பட்டார்,  புறஜாதிகளிடத்தில்  பிரசங்கிக்கப்பட்டார்,  உலகத்திலே  விசுவாசிக்கப்பட்டார்,  மகிமையிலே  ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.  {1Tim  3:16}

 

ஆகிலும்,  ஆவியானவர்  வெளிப்படையாய்ச்  சொல்லுகிறபடி,  பிற்காலங்களிலே  மனச்சாட்சியில்  சூடுண்ட  பொய்யருடைய  மாயத்தினாலே  சிலர்  வஞ்சிக்கிற  ஆவிகளுக்கும்  பிசாசுகளின்  உபதேசங்களுக்கும்  செவிகொடுத்து,  விசுவாசத்தை  விட்டு  விலகிப்போவார்கள்.  {1Tim  4:1}

 

விவாகம்பண்ணாதிருக்கவும்,  {1Tim  4:2}

 

விசுவாசிகளும்  சத்தியத்தை  அறிந்தவர்களும்  ஸ்தோத்திரத்தோடே  அநுபவிக்கும்படி  தேவன்  படைத்த  போஜனபதார்த்தங்களை  விலக்கவும்  வேண்டுமென்று  அந்தப்  பொய்யர்  கட்டளையிடுவார்கள்.  {1Tim  4:3}

 

தேவன்  படைத்ததெல்லாம்  நல்லதாயிருக்கிறது;  ஸ்தோத்திரத்தோடே  ஏற்றுக்கொள்ளப்படுமாகில்  ஒன்றும்  தள்ளப்படத்தக்கதல்ல.  {1Tim  4:4}

 

அது  தேவவசனத்தினாலும்  ஜெபத்தினாலும்  பரிசுத்தமாக்கப்படும்.  {1Tim  4:5}

 

இவைகளை  நீ  சகோதரருக்குப்  போதித்துவந்தால்,  விசுவாசத்திற்குரிய  வார்த்தைகளிலும்  நீ  அநுசரித்த  நற்போதகத்திலும்  தேறினவனாகி,  இயேசுகிறிஸ்துவுக்கு<Jesus  Christ>  நல்ல  ஊழியக்காரனாயிருப்பாய்.  {1Tim  4:6}

 

சீர்கேடும்  கிழவிகள்  பேச்சுமாயிருக்கிற  கட்டுக்கதைகளுக்கு  விலகி,  தேவ  பக்திக்கேதுவாக  முயற்சிபண்ணு.  {1Tim  4:7}

 

சரீரமுயற்சி  அற்ப  பிரயோஜனமுள்ளது;  தேவபக்தியானது  இந்த  ஜீவனுக்கும்  இதற்குப்  பின்வரும்  ஜீவனுக்கும்  வாக்குத்தத்தமுள்ளதாகையால்  எல்லாவற்றிலும்  பிரயோஜனமுள்ளது.  {1Tim  4:8}

 

இந்த  வார்த்தை  உண்மையும்  எல்லா  அங்கிகரிப்புக்கும்  பாத்திரமுமாயிருக்கிறது.  {1Tim  4:9}

 

இதினிமித்தம்  பிரயாசப்படுகிறோம்,  நிந்தையும்  அடைகிறோம்;  ஏனெனில்  எல்லா  மனுஷருக்கும்,  விசேஷமாக  விசுவாசிகளுக்கும்  இரட்சகராகிய  ஜீவனுள்ள  தேவன்மேல்  நம்பிக்கை  வைத்திருக்கிறோம்.  {1Tim  4:10}

 

இவைகளை  நீ  கட்டளையிட்டுப்  போதித்துக்கொண்டிரு.  {1Tim  4:11}

 

உன்  இளமையைக்குறித்து  ஒருவனும்  உன்னை  அசட்டைபண்ணாதபடிக்கு,  நீ  வார்த்தையிலும்,  நடக்கையிலும்,  அன்பிலும்,  ஆவியிலும்,  விசுவாசத்திலும்,  கற்பிலும்,  விசுவாசிகளுக்கு  மாதிரியாயிரு.  {1Tim  4:12}

 

நான்  வருமளவும்  வாசிக்கிறதிலும்  புத்திசொல்லுகிறதிலும்  உபதேசிக்கிறதிலும்  ஜாக்கிரதையாயிரு.  {1Tim  4:13}

 

மூப்பராகிய  சங்கத்தார்  உன்மேல்  கைகளை  வைத்தபோது  தீர்க்கதரிசனத்தினால்  உனக்கு  அளிக்கப்பட்ட  வரத்தைப்பற்றி  அசதியாயிராதே.  {1Tim  4:14}

 

நீ  தேறுகிறது  யாவருக்கும்  விளங்கும்படி  இவைகளையே  சிந்தித்துக்கொண்டு,  இவைகளிலே  நிலைத்திரு.  {1Tim  4:15}

 

உன்னைக்குறித்தும்  உபதேசத்தைக்குறித்தும்  எச்சரிக்கையாயிரு,  இவைகளில்  நிலைகொண்டிரு,  இப்படிச்  செய்வாயானால்,  உன்னையும்  உன்  உபதேசத்தைக்  கேட்பவர்களையும்  இரட்சித்துக்கொள்ளுவாய்.  {1Tim  4:16}

 

முதிர்வயதுள்ளவனைக்  கடிந்துகொள்ளாமல்,  அவனைத்  தகப்பனைப்போலவும்,  பாலிய  புருஷரைச்  சகோதரரைப்போலவும்,  {1Tim  5:1}

 

முதிர்வயதுள்ள  ஸ்திரீகளைத்  தாய்களைப்போலவும்,  பாலிய  ஸ்திரீகளை  எல்லாக்  கற்புடன்  சகோதரிகளைப்போலவும்  பாவித்து,  புத்திசொல்லு.  {1Tim  5:2}

 

உத்தம  விதவைகளாகிய  விதவைகளைக்  கனம்பண்ணு.  {1Tim  5:3}

 

விதவையானவளுக்குப்  பிள்ளைகளாவது,  பேரன்  பேர்த்திகளாவது  இருந்தால்,  இவர்கள்  முதலாவது  தங்கள்  சொந்தக்  குடும்பத்தைத்  தேவபக்தியாய்  விசாரித்து,  பெற்றார்  செய்த  நன்மைகளுக்குப்  பதில்  நன்மைகளைச்  செய்யக்  கற்றுக்கொள்ளக்கடவர்கள்;  அது  நன்மையும்  தேவனுக்கு  முன்பாகப்  பிரியமுமாயிருக்கிறது.  {1Tim  5:4}

 

உத்தம  விதவையாயிருந்து  தனிமையாயிருக்கிறவள்  தேவனிடத்தில்  நம்பிக்கையுள்ளவளாய்,  இரவும்  பகலும்  வேண்டுதல்களிலும்  ஜெபங்களிலும்  நிலைத்திருப்பாள்.  {1Tim  5:5}

 

சுகபோகமாய்  வாழ்கிறவள்  உயிரோடே  செத்தவள்.  {1Tim  5:6}

 

அவர்கள்  குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி  இவைகளைக்  கட்டளையிடு.  {1Tim  5:7}

 

ஒருவன்  தன்  சொந்த  ஜனங்களையும்,  விசேஷமாகத்  தன்  வீட்டாரையும்  விசாரியாமற்போனால்,  அவன்  விசுவாசத்தை  மறுதலித்தவனும்,  அவிசுவாசியிலும்  கெட்டவனுமாயிருப்பான்.  {1Tim  5:8}

 

அறுபது  வயதுக்குக்  குறையாதவளும்,  ஒரே  புருஷனுக்கு  மனைவியாயிருந்தவளுமாகி,  {1Tim  5:9}

 

பிள்ளைகளை  வளர்த்து,  அந்நியரை  உபசரித்து,  பரிசுத்தவான்களுடைய  கால்களைக்கழுவி,  உபத்திரவப்படுகிறவர்களுக்கு  உதவிசெய்து,  சகலவித  நற்கிரியைகளையும்  ஜாக்கிரதையாய்  நடப்பித்து,  இவ்விதமாய்  நற்கிரியைகளைக்குறித்து  நற்சாட்சி  பெற்றவளுமாயிருந்தால்,  அப்படிப்பட்ட  விதவையையே  விதவைகள்  கூட்டத்தில்  சேர்த்துக்கொள்ளவேண்டும்.  {1Tim  5:10}

 

இளவயதுள்ள  விதவைகளை  அதிலே  சேர்த்துக்கொள்ளாதே;  ஏனெனில்,  அவர்கள்  கிறிஸ்துவுக்கு<Christ>  விரோதமாய்க்  காமவிகாரங்கொள்ளும்போது  விவாகம்பண்ண  மனதாகி,  {1Tim  5:11}

 

முதலில்  கொண்டிருந்த  விசுவாசத்தை  விடுவதினாலே,  ஆக்கினைக்குட்படுவார்கள்.  {1Tim  5:12}

 

அதுவுமல்லாமல்,  அவர்கள்  சோம்பலுள்ளவர்களாய்,  வீடுவீடாய்த்  திரியப்பழகுவார்கள்;  சோம்பலுள்ளவர்களாய்  மாத்திரமல்ல,  அலப்புகிறவர்களாயும்  வீணலுவற்காரிகளாயும்  தகாத  காரியங்களைப்  பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.  {1Tim  5:13}

 

ஆகையால்  இளவயதுள்ள  விதவைகள்  விவாகம்பண்ணவும்,  பிள்ளைகளைப்  பெறவும்,  வீட்டை  நடத்தவும்,  விரோதியானவன்  நிந்திக்கிறதற்கு  இடமுண்டாக்காமலிருக்கவும்  வேண்டுமென்றிருக்கிறேன்.  {1Tim  5:14}

 

ஏனெனில்  இதற்குமுன்னே  சிலர்  சாத்தானைப்  பின்பற்றி  விலகிப்போனார்கள்.  {1Tim  5:15}

 

விசுவாசியாகிய  ஒருவனிடத்திலாவது  ஒருத்தியிடத்திலாவது  விதவைகளிருந்தால்,  அவர்கள்  இவர்களுக்கு  உதவி  செய்யக்கடவர்கள்;  சபையானது  உத்தம  விதவைகளானவர்களுக்கு  உதவிசெய்யவேண்டியதாகையால்  அந்தப்  பாரத்தை  அதின்மேல்  வைக்கக்கூடாது.  {1Tim  5:16}

 

நன்றாய்  விசாரணைசெய்கிற  மூப்பர்களை,  விசேஷமாகத்  திருவசனத்திலும்  உபதேசத்திலும்  பிரயாசப்படுகிறவர்களை,  இரட்டிப்பான  கனத்திற்குப்  பாத்திரராக  எண்ணவேண்டும்.  {1Tim  5:17}

 

போரடிக்கிற  மாட்டை  வாய்கட்டாயாக  என்றும்,  வேலையாள்  தன்  கூலிக்குப்  பாத்திரனாயிருக்கிறான்  என்றும்,  வேதவாக்கியம்  சொல்லுகிறதே.  {1Tim  5:18}

 

மூப்பனானவனுக்கு  விரோதமாக  ஒருவன்  செய்யும்  பிராதை  இரண்டு  மூன்று  சாட்சிகள்  இல்லாமல்  நீ  ஏற்றுக்கொள்ளக்கூடாது.  {1Tim  5:19}

 

மற்றவர்களுக்குப்  பயமுண்டாகும்படி,  பாவஞ்செய்தவர்களை  எல்லாருக்கும்  முன்பாகக்  கடிந்துகொள்.  {1Tim  5:20}

 

நீ  பட்சபாதத்தோடே  ஒன்றும்  செய்யாமலும்,  விசாரிக்குமுன்  நிருணயம்பண்ணாமலும்,  இவைகளைக்  காத்து  நடக்கும்படி,  தேவனுக்கும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்கும்<Jesus  Christ>,  தெரிந்துகொள்ளப்பட்ட  தூதருக்கும்  முன்பாக,  உறுதியாய்க்  கட்டளையிடுகிறேன்.  {1Tim  5:21}

 

ஒருவன்மேலும்  சீக்கிரமாய்க்  கைகளை  வையாதே;  மற்றவர்கள்  செய்யும்  பாவங்களுக்கும்  உடன்படாதே;  உன்னைச்  சுத்தவானாகக்  காத்துக்கொள்.  {1Tim  5:22}

 

நீ  இனிமேல்  தண்ணீர்  மாத்திரம்  குடியாமல்,  உன்  வயிற்றிற்காகவும்,  உனக்கு  அடிக்கடி  நேரிடுகிற  பலவீனங்களுக்காகவும்,  கொஞ்சம்  திராட்சரசமும்  கூட்டிக்கொள்.  {1Tim  5:23}

 

சிலருடைய  பாவங்கள்  வெளியரங்கமாயிருந்து,  நியாயத்தீர்ப்புக்கு  முந்திக்கொள்ளும்;  சிலருடைய  பாவங்கள்  அவர்களைப்  பின்தொடரும்.  {1Tim  5:24}

 

அப்படியே  சிலருடைய  நற்கிரியைகளும்  வெளியரங்கமாயிருக்கும்;  அப்படி  இராதவைகளும்  மறைந்திருக்கமாட்டாது.  {1Tim  5:25}

 

தேவனுடைய  நாமமும்  உபதேசமும்  தூஷிக்கப்படாதபடிக்கு,  அடிமைத்தன  நுகத்திற்குட்பட்டிருக்கிற  வேலைக்காரர்  யாவரும்  தங்கள்  எஜமான்களை  எல்லாக்  கனத்திற்கும்  பாத்திரரென்று  எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.  {1Tim  6:1}

 

விசுவாசிகளாகிய  எஜமான்களை  உடையவர்கள்,  தங்கள்  எஜமான்கள்  சகோதரராயிருக்கிறதினாலே  அவர்களை  அசட்டைபண்ணாமல்,  நல்வேலையின்  பலனைப்  பெற்றுக்கொள்ளுகிற  அவர்கள்  விசுவாசிகளும்  பிரியருமாயிருக்கிறபடியால்,  அவர்களுக்கு  அதிகமாய்  ஊழியஞ்செய்யக்கடவர்கள்;  இந்தப்படியே  போதித்துப்  புத்திசொல்லு.  {1Tim  6:2}

 

ஒருவன்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  ஆரோக்கியமான  வசனங்களையும்,  தேவபக்திக்கேற்ற  உபதேசங்களையும்  ஒப்புக்கொள்ளாமல்,  வேற்றுமையான  உபதேசங்களைப்  போதிக்கிறவனானால்,  {1Tim  6:3}

 

அவன்  இறுமாப்புள்ளவனும்,  ஒன்றும்  அறியாதவனும்,  தர்க்கங்களையும்  வாக்குவாதங்களையும்பற்றி  நோய்கொண்டவனுமாயிருக்கிறான்;  அவைகளாலே  பொறாமையும்,  சண்டையும்,  தூஷணங்களும்,  பொல்லாத  சம்சயங்களுமுண்டாகி,  {1Tim  6:4}

 

கெட்ட  சிந்தையுள்ளவர்களும்  சத்தியமில்லாதவர்களும்  தேவபக்தியை  ஆதாயத்தொழிலென்று  எண்ணுகிறவர்களுமாயிருக்கிற  மனுஷர்களால்  உண்டாகும்  மாறுபாடான  தர்க்கங்களும்  பிறக்கும்;  இப்படிப்பட்டவர்களை  விட்டு  விலகு.  {1Tim  6:5}

 

போதுமென்கிற  மனதுடனே  கூடிய  தேவபக்தியே  மிகுந்த  ஆதாயம்.  {1Tim  6:6}

 

உலகத்திலே  நாம்  ஒன்றும்  கொண்டுவந்ததுமில்லை,  இதிலிருந்து  நாம்  ஒன்றும்  கொண்டுபோவதுமில்லை  என்பது  நிச்சயம்.  {1Tim  6:7}

 

உண்ணவும்  உடுக்கவும்  நமக்கு  உண்டாயிருந்தால்  அது  போதுமென்றிருக்கக்  கடவோம்.  {1Tim  6:8}

 

ஐசுவரியவான்களாக  விரும்புகிறவர்கள்  சோதனையிலும்  கண்ணியிலும்,  மனுஷரைக்  கேட்டிலும்  அழிவிலும்  அமிழ்த்துகிற  மதிகேடும்  சேதமுமான  பலவித  இச்சைகளிலும்  விழுகிறார்கள்.  {1Tim  6:9}

 

பண  ஆசை  எல்லாத்  தீமைக்கும்  வேராயிருக்கிறது;  சிலர்  அதை  இச்சித்து,  விசுவாசத்தைவிட்டு  வழுவி,  அநேக  வேதனைகளாலே  தங்களை  உருவக்  குத்திக்கொண்டிருக்கிறார்கள்.  {1Tim  6:10}

 

நீயோ,  தேவனுடைய  மனுஷனே,  இவைகளை  விட்டோடி,  நீதியையும்  தேவபக்தியையும்  விசுவாசத்தையும்  அன்பையும்  பொறுமையையும்  சாந்தகுணத்தையும்  அடையும்படி  நாடு.  {1Tim  6:11}

 

விசுவாசத்தின்  நல்ல  போராட்டத்தைப்  போராடு,  நித்தியஜீவனைப்  பற்றிக்கொள்;  அதற்காகவே  நீ  அழைக்கப்பட்டாய்;  அநேக  சாட்சிகளுக்கு  முன்பாக  நல்ல  அறிக்கை  பண்ணினவனுமாயிருக்கிறாய்.  {1Tim  6:12}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  பிரசன்னமாகும்வரைக்கும்,  நீ  இந்தக்  கற்பனையை  மாசில்லாமலும்  குற்றமில்லாமலும்  கைக்கொள்ளும்படிக்கு,  {1Tim  6:13}

 

எல்லாவற்றையும்  உயிரோடிருக்கச்  செய்கிற  தேவனுடைய  சந்நிதானத்திலேயும்,  பொந்தியுபிலாத்துவின்<Pontius  Pilate>  முன்னின்று  நல்ல  அறிக்கையைச்  சாட்சியாக  விளங்கப்பண்ணின  கிறிஸ்து  இயேசுவினுடைய<Christ  Jesus>  சந்நிதானத்திலேயும்  உனக்குக்  கட்டளையிடுகிறேன்.  {1Tim  6:14}

 

அந்தப்  பிரசன்னமாகுதலைத்  தேவன்  தம்முடைய  காலங்களில்  வெளிப்படுத்துவார்.  அவரே  நித்தியானந்தமுள்ள  ஏக  சக்கராதிபதியும்,  ராஜாதி  ராஜாவும்,  கர்த்தாதி  கர்த்தாவும்,  {1Tim  6:15}

 

ஒருவராய்,  சாவாமையுள்ளவரும்,  சேரக்கூடாத  ஒளியில்  வாசம்பண்ணுகிறவரும்,  மனுஷரில்  ஒருவரும்  கண்டிராதவரும்,  காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;  அவருக்கே  கனமும்  நித்திய  வல்லமையும்  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  {1Tim  6:16}

 

இவ்வுலகத்திலே  ஐசுவரியமுள்ளவர்கள்  இறுமாப்பான  சிந்தையுள்ளவர்களாயிராமலும்,  நிலையற்ற  ஐசுவரியத்தின்மேல்  நம்பிக்கை  வையாமலும்,  நாம்  அனுபவிக்கிறதற்குச்  சகலவித  நன்மைகளையும்  நமக்குச்  சம்பூரணமாய்க்  கொடுக்கிற  ஜீவனுள்ள  தேவன்மேல்  நம்பிக்கை  வைக்கவும்,  {1Tim  6:17}

 

நன்மைசெய்யவும்,  நற்கிரியைகளில்  ஐசுவரியவான்களாகவும்,  தாராளமாய்க்  கொடுக்கிறவர்களும்,  உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,  {1Tim  6:18}

 

நித்திய  ஜீவனைப்  பற்றிக்கொள்ளும்படி  வருங்காலத்திற்காகத்  தங்களுக்கு  நல்ல  ஆதாரத்தைப்  பொக்கிஷமாக  வைக்கவும்  அவர்களுக்குக்  கட்டளையிடு.  {1Tim  6:19}

 

  தீமோத்தேயுவே<Timothy>,  உன்னிடத்தில்  ஒப்புவிக்கப்பட்டதை  நீ  காத்துக்கொண்டு,  சீர்கேடான  வீண்பேச்சுகளுக்கும்,  ஞானமென்று  பொய்யாய்ப்  பேர்பெற்றிருக்கிற  கொள்கையின்  விபரீதங்களுக்கும்  விலகு.  {1Tim  6:20}

 

சிலர்  அதைப்  பாராட்டி,  விசுவாசத்தைவிட்டு  வழுவிப்போனார்கள்.  கிருபையானது  உன்னோடேகூட  இருப்பதாக.  ஆமென்.  {1Tim  6:21}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!