Friday, November 01, 2019

லூக்கா

மகா  கனம்பொருந்திய  தெயோப்பிலுவே<Theophilus>,  நாங்கள்  முழுநிச்சயமாய்  நம்புகிற  சங்கதிகளை,  {Luke  1:1}

 

ஆரம்பமுதல்  கண்ணாரக்கண்டு  வசனத்தைப்  போதித்தவர்கள்  எங்களுக்கு  ஒப்புவித்தபடியே  அவைகளைக்குறித்துச்  சரித்திரம்  எழுத  அநேகம்பேர்  ஏற்பட்டபடியினால்,  {Luke  1:2}

 

ஆதிமுதல்  எல்லாவற்றையும்  திட்டமாய்  விசாரித்தறிந்த  நானும்  உமக்கு  உபதேசிக்கப்பட்ட  விசேஷங்களின்  நிச்சயத்தை  நீர்  அறியவேண்டுமென்று,  {Luke  1:3}

 

அவைகளை  ஒழுங்காய்  உமக்கு  எழுதுவது  எனக்கு  நலமாய்த்  தோன்றிற்று.  {Luke  1:4}

 

யூதேயாதேசத்தின்<Judaea>  ராஜாவாகிய  ஏரோதின்<Herod>  நாட்களில்,  அபியா<Abia>  என்னும்  ஆசாரிய  வகுப்பில்  சகரியா<Zacharias>  என்னும்  பேர்கொண்ட  ஆசாரியன்  ஒருவன்  இருந்தான்.  அவன்  மனைவி  ஆரோனுடைய<Aaron>  குமாரத்திகளில்  ஒருத்தி,  அவள்  பேர்  எலிசபெத்து<Elisabeth>.  {Luke  1:5}

 

அவர்கள்  இருவரும்  கர்த்தரிட்ட  சகல  கற்பனைகளின்படியேயும்  நியமங்களின்படியேயும்  குற்றமற்றவர்களாய்  நடந்து,  தேவனுக்கு  முன்பாக  நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.  {Luke  1:6}

 

எலிசபெத்து<Elisabeth>  மலடியாயிருந்தபடியினால்,  அவர்களுக்குப்  பிள்ளையில்லாதிருந்தது;  இருவரும்  வயதுசென்றவர்களாயும்  இருந்தார்கள்.  {Luke  1:7}

 

அப்படியிருக்க,  அவன்  தன்  ஆசாரிய  வகுப்பின்  முறைப்படி  தேவசந்நிதியிலே  ஆசாரிய  ஊழியம்  செய்துவருகிற  காலத்தில்,  {Luke  1:8}

 

ஆசாரிய  ஊழிய  முறைமையின்படி  அவன்  தேவாலயத்துக்குள்  பிரவேசித்துத்  தூபங்காட்டுகிறதற்குச்  சீட்டைப்  பெற்றான்.  {Luke  1:9}

 

தூபங்காட்டுகிற  வேளையிலே  ஜனங்களெல்லாரும்  கூட்டமாய்  வெளியே  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.  {Luke  1:10}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  ஒருவன்  தூபபீடத்தின்  வலதுபக்கத்திலே  நின்று  அவனுக்குத்  தரிசனமானான்.  {Luke  1:11}

 

சகரியா<Zacharias>  அவனைக்கண்டு  கலங்கி,  பயமடைந்தான்.  {Luke  1:12}

 

தூதன்  அவனை  நோக்கி:  சகரியாவே<Zacharias>,  பயப்படாதே,  உன்  வேண்டுதல்  கேட்கப்பட்டது;  உன்  மனைவியாகிய  எலிசபெத்து<Elisabeth>  உனக்கு  ஒரு  குமாரனைப்  பெறுவாள்,  அவனுக்கு  யோவான்<John>  என்று  பேரிடுவாயாக.  {Luke  1:13}

 

உனக்குச்  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  உண்டாகும்,  அவன்  பிறப்பினிமித்தம்  அநேகர்  சந்தோஷப்படுவார்கள்.  {Luke  1:14}

 

அவன்  கர்த்தருக்கு  முன்பாகப்  பெரியவனாயிருப்பான்,  திராட்சரசமும்  மதுவும்  குடியான்,  தன்  தாயின்  வயிற்றிலிருக்கும்போதே  பரிசுத்த  ஆவியினால்  நிரப்பப்பட்டிருப்பான்.  {Luke  1:15}

 

அவன்  இஸ்ரவேல்<Israel>  சந்ததியாரில்  அநேகரை  அவர்கள்  தேவனாகிய  கர்த்தரிடத்திற்குத்  திருப்புவான்.  {Luke  1:16}

 

பிதாக்களுடைய  இருதயங்களைப்  பிள்ளைகளிடத்திற்கும்,  கீழ்ப்படியாதவர்களை  நீதிமான்களுடைய  ஞானத்திற்கும்  திருப்பி,  உத்தமமான  ஜனத்தைக்  கர்த்தருக்கு  ஆயத்தப்படுத்தும்படியாக,  அவன்  எலியாவின்<Elias>  ஆவியும்  பலமும்  உடையவனாய்  அவருக்கு  முன்னே  நடப்பான்  என்றான்.  {Luke  1:17}

 

அப்பொழுது  சகரியா<Zacharias>  தேவதூதனை  நோக்கி:  இதை  நான்  எதினால்  அறிவேன்;  நான்  கிழவனாயிருக்கிறேன்,  என்  மனைவியும்  வயதுசென்றவளாயிருக்கிறாளே  என்றான்.  {Luke  1:18}

 

தேவதூதன்  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  தேவசந்நிதானத்தில்  நிற்கிற  காபிரியேல்<Gabriel>  என்பவன்;  உன்னுடனே  பேசவும்,  உனக்கு  இந்த  நற்செய்தியை  அறிவிக்கவும்  அனுப்பப்பட்டு  வந்தேன்;  {Luke  1:19}

 

இதோ,  தகுந்தகாலத்திலே  நிறைவேறப்போகிற  என்  வார்த்தைகளை  நீ  விசுவாசியாதபடியினால்  இவைகள்  சம்பவிக்கும்  நாள்மட்டும்  நீ  பேசக்கூடாமல்  ஊமையாயிருப்பாய்  என்றான்.  {Luke  1:20}

 

ஜனங்கள்  சகரியாவுக்குக்<Zacharias>  காத்திருந்து,  அவன்  தேவாலயத்தில்  தாமதித்ததினால்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Luke  1:21}

 

அவன்  வெளியே  வந்தபோது  அவர்களிடத்தில்  பேசக்கூடாமலிருந்தான்;  அதினாலே  தேவாலயத்தில்  ஒரு  தரிசனத்தைக்  கண்டானென்று  அறிந்தார்கள்.  அவனும்  அவர்களுக்குச்  சைகை  காட்டி  ஊமையாயிருந்தான்.  {Luke  1:22}

 

அவனுடைய  ஊழியத்தின்  நாட்கள்  நிறைவேறினவுடனே  தன்  வீட்டுக்குப்போனான்.  {Luke  1:23}

 

அந்நாட்களுக்குப்பின்பு,  அவன்  மனைவியாகிய  எலிசபெத்து<Elisabeth>  கர்ப்பவதியாகி:  ஜனங்களுக்குள்ளே  எனக்கு  உண்டாயிருந்த  நிந்தையை  நீக்கும்படியாகக்  கர்த்தர்  இந்த  நாட்களில்  என்மேல்  கடாட்சம்  வைத்து,  {Luke  1:24}

 

எனக்கு  இப்படிச்  செய்தருளினார்  என்று  சொல்லி,  ஐந்து  மாதம்  வெளிப்படாதிருந்தாள்.  {Luke  1:25}

 

ஆறாம்  மாதத்திலே  காபிரியேல்<Gabriel>  என்னும்  தூதன்,  கலிலேயாவிலுள்ள<Galilee>  நாசரேத்தென்னும்<Nazareth>  ஊரில்,  {Luke  1:26}

 

தாவீதின்<David>  வம்சத்தானாகிய  யோசேப்பு<Joseph>  என்கிற  நாமமுள்ள  புருஷனுக்கு  நியமிக்கப்பட்டிருந்த  ஒரு  கன்னிகையினிடத்திற்கு  தேவனாலே  அனுப்பப்பட்டான்;  அந்தக்  கன்னிகையின்  பேர்  மரியாள்<Mary>.  {Luke  1:27}

 

அவள்  இருந்த  வீட்டில்  தேவதூதன்  பிரவேசித்து:  கிருபை  பெற்றவளே,  வாழ்க,  கர்த்தர்  உன்னுடனே  இருக்கிறார்,  ஸ்திரீகளுக்குள்ளே  நீ  ஆசீர்வதிக்கப்பட்டவள்  என்றான்.  {Luke  1:28}

 

அவளோ  அவனைக்  கண்டு,  அவன்  வார்த்தையினால்  கலங்கி,  இந்த  வாழ்த்துதல்  எப்படிப்பட்டதோ  என்று  சிந்தித்துக்கொண்டிருந்தாள்.  {Luke  1:29}

 

தேவதூதன்  அவளை  நோக்கி:  மரியாளே<Mary>,  பயப்படாதே;  நீ  தேவனிடத்தில்  கிருபைபெற்றாய்.  {Luke  1:30}

 

இதோ,  நீ  கர்ப்பவதியாகி  ஒரு  குமாரனைப்  பெறுவாய்,  அவருக்கு  இயேசு<JESUS>  என்று  பேரிடுவாயாக.  {Luke  1:31}

 

அவர்  பெரியவராயிருப்பார்,  உன்னதமானவருடைய  குமாரன்  என்னப்படுவார்;  கர்த்தராகிய  தேவன்  அவருடைய  பிதாவாகிய  தாவீதின்<David>  சிங்காசனத்தை  அவருக்குக்  கொடுப்பார்.  {Luke  1:32}

 

அவர்  யாக்கோபின்<Jacob>  குடும்பத்தாரை  என்றென்றைக்கும்  அரசாளுவார்;  அவருடைய  ராஜ்யத்துக்கு  முடிவிராது  என்றான்.  {Luke  1:33}

 

அதற்கு  மரியாள்<Mary>  தேவதூதனை  நோக்கி:  இது  எப்படியாகும்?  புருஷனை  அறியேனே  என்றாள்.  {Luke  1:34}

 

தேவதூதன்  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  பரிசுத்தஆவி  உன்மேல்  வரும்;  உன்னதமானவருடைய  பலம்  உன்மேல்  நிழலிடும்;  ஆதலால்  உன்னிடத்தில்  பிறக்கும்  பரிசுத்தமுள்ளது  தேவனுடைய  குமாரன்  என்னப்படும்.  {Luke  1:35}

 

இதோ,  உனக்கு  இனத்தாளாயிருக்கிற  எலிசபெத்தும்<Elisabeth>  தன்  முதிர்வயதிலே  ஒரு  புத்திரனைக்  கர்ப்பந்தரித்திருக்கிறாள்;  மலடியென்னப்பட்ட  அவளுக்கு  இது  ஆறாம்  மாதம்.  {Luke  1:36}

 

தேவனாலே  கூடாதகாரியம்  ஒன்றுமில்லை  என்றான்.  {Luke  1:37}

 

அதற்கு  மரியாள்<Mary>:  இதோ,  நான்  ஆண்டவருக்கு  அடிமை,  உம்முடைய  வார்த்தையின்படி  எனக்கு  ஆகக்கடவது  என்றாள்.  அப்பொழுது  தேவதூதன்  அவளிடத்திலிருந்து  போய்விட்டான்.  {Luke  1:38}

 

அந்நாட்களில்  மரியாள்<Mary>  எழுந்து,  மலைநாட்டிலே  யூதாவிலுள்ள<Juda>  ஒரு  பட்டணத்திற்குத்  தீவிரமாய்ப்  போய்,  {Luke  1:39}

 

சகரியாவின்<Zacharias>  வீட்டுக்குள்  பிரவேசித்து,  எலிசபெத்தை<Elisabeth>  வாழ்த்தினாள்.  {Luke  1:40}

 

எலிசபெத்து<Elisabeth>  மரியாளுடைய<Mary>  வாழ்த்துதலைக்  கேட்டபொழுது,  அவளுடைய  வயிற்றிலிருந்த  பிள்ளை  துள்ளிற்று;  எலிசபெத்து<Elisabeth>  பரிசுத்த  ஆவியினால்  நிரப்பப்பட்டு,  {Luke  1:41}

 

உரத்த  சத்தமாய்:  ஸ்திரீகளுக்குள்ளே  நீ  ஆசீர்வதிக்கப்பட்டவள்,  உன்  கர்ப்பத்தின்  கனியும்  ஆசீர்வதிக்கப்பட்டது.  {Luke  1:42}

 

என்  ஆண்டவருடைய  தாயார்  என்னிடத்தில்  வந்தது  எனக்கு  எதினால்  கிடைத்தது.  {Luke  1:43}

 

இதோ,  நீ  வாழ்த்தின  சத்தம்  என்  காதில்  விழுந்தவுடனே,  என்  வயிற்றிலுள்ள  பிள்ளை  களிப்பாய்த்  துள்ளிற்று.  {Luke  1:44}

 

விசுவாசித்தவளே  பாக்கியவதி,  கர்த்தராலே  அவளுக்குச்  சொல்லப்பட்டவைகள்  நிறைவேறும்  என்றாள்.  {Luke  1:45}

 

அப்பொழுது  மரியாள்<Mary>:  என்  ஆத்துமா  கர்த்தரை  மகிமைப்படுத்துகிறது.  {Luke  1:46}

 

என்  ஆவி  என்  இரட்சகராகிய  தேவனில்  களிகூருகிறது.  {Luke  1:47}

 

அவர்  தம்முடைய  அடிமையின்  தாழ்மையை  நோக்கிப்பார்த்தார்;  இதோ,  இதுமுதல்  எல்லாச்  சந்ததிகளும்  என்னைப்  பாக்கியவதி  என்பார்கள்.  {Luke  1:48}

 

வல்லமையுடையவர்  மகிமையானவைகளை  எனக்குச்  செய்தார்;  அவருடைய  நாமம்  பரிசுத்தமுள்ளது.  {Luke  1:49}

 

அவருடைய  இரக்கம்  அவருக்குப்  பயந்திருக்கிறவர்களுக்குத்  தலைமுறை  தலைமுறைக்குமுள்ளது.  {Luke  1:50}

 

தம்முடைய  புயத்தினாலே  பராக்கிரமஞ்செய்தார்;  இருதயசிந்தையில்  அகந்தையுள்ளவர்களைச்  சிதறடித்தார்.  {Luke  1:51}

 

பலவான்களை  ஆசனங்களிலிருந்து  தள்ளி,  தாழ்மையானவர்களை  உயர்த்தினார்.  {Luke  1:52}

 

பசியுள்ளவர்களை  நன்மைகளினால்  நிரப்பி,  ஐசுவரியமுள்ளவர்களை  வெறுமையாய்  அனுப்பிவிட்டார்.  {Luke  1:53}

 

நம்முடைய  பிதாக்களுக்கு  அவர்  சொன்னபடியே,  ஆபிரகாமுக்கும்<Abraham>  அவன்  சந்ததிக்கும்  என்றென்றைக்கும்  இரக்கஞ்செய்ய  நினைத்து,  {Luke  1:54}

 

தம்முடைய  தாசனாகிய  இஸ்ரவேலை<Israel>  ஆதரித்தார்  என்றாள்.  {Luke  1:55}

 

மரியாள்<Mary>  ஏறக்குறைய  மூன்றுமாதம்  அவளுடனே  இருந்து,  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போனாள்.  {Luke  1:56}

 

எலிசபெத்துக்குப்<Elisabeth>  பிரசவகாலம்  நிறைவேறினபோது  அவள்  ஒரு  புத்திரனைப்  பெற்றாள்.  {Luke  1:57}

 

கர்த்தர்  அவளிடத்தில்  தம்முடைய  இரக்கத்தை  விளங்கப்பண்ணினாரென்று  அவளுடைய  அயலகத்தாரும்  பந்துஜனங்களும்  கேள்விப்பட்டு,  அவளுடனேகூடச்  சந்தோஷப்பட்டார்கள்.  {Luke  1:58}

 

எட்டாம்நாளிலே  பிள்ளைக்கு  விருத்தசேதனம்  பண்ணும்படிக்கு  அவர்கள்  வந்து,  அதின்  தகப்பனுடைய  நாமத்தின்படி  அதற்குச்  சகரியா<Zacharias>  என்று  பேரிடப்போனார்கள்.  {Luke  1:59}

 

அப்பொழுது  அதின்  தாய்:  அப்படியல்ல,  அதற்கு  யோவான்<John>  என்று  பேரிடவேண்டும்  என்றாள்.  {Luke  1:60}

 

அதற்கு  அவர்கள்:  உன்  உறவின்  முறையாரில்  இந்தப்  பேருள்ளவன்  ஒருவனும்  இல்லையே  என்று  சொல்லி,  {Luke  1:61}

 

அதின்  தகப்பனை  நோக்கி:  இதற்கு  என்ன  பேரிட  மனதாயிருக்கிறீர்  என்று  சைகையினால்  கேட்டார்கள்.  {Luke  1:62}

 

அவன்  எழுத்துப்  பலகையைக்  கேட்டு  வாங்கி,  இவன்  பேர்  யோவான்<John>  என்று  எழுதினான்;  எல்லாரும்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Luke  1:63}

 

உடனே  அவனுடைய  வாய்  திறக்கப்பட்டு,  அவனுடைய  நாவும்  கட்டவிழ்க்கப்பட்டு,  தேவனை  ஸ்தோத்திரித்துப்  பேசினான்.  {Luke  1:64}

 

அதினால்  அவர்களைச்சுற்றி  வாசமாயிருந்த  யாவருக்கும்  பயமுண்டாயிற்று.  மேலும்  யூதேயாவின்<Judaea>  மலைநாடெங்கும்  இந்த  வர்த்தமானங்களெல்லாம்  சொல்லிக்கொள்ளப்பட்டது.  {Luke  1:65}

 

அவைகளைக்  கேள்விப்பட்டவர்களெல்லாரும்  தங்கள்  மனதிலே  அவைகளை  வைத்துக்கொண்டு,  இந்தப்  பிள்ளை  எப்படிப்பட்டதாயிருக்குமோ  என்றார்கள்.  கர்த்தருடைய  கரம்  அந்தப்  பிள்ளையோடே  இருந்தது.  {Luke  1:66}

 

அவனுடைய  தகப்பனாகிய  சகரியா<Zacharias>  பரிசுத்த  ஆவியினாலே  நிரப்பப்பட்டு,  தீர்க்கதரிசனமாக:  {Luke  1:67}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக.  {Luke  1:68}

 

அவர்  நம்முடைய  பிதாக்களுக்கு  வாக்குத்தத்தம்பண்ணின  இரக்கத்தைச்  செய்வதற்கும்;  {Luke  1:69}

 

தம்முடைய  பரிசுத்த  உடன்படிக்கையை  நினைத்தருளி:  {Luke  1:70}

 

உங்கள்  சத்துருக்களின்  கைகளினின்று  நீங்கள்  விடுதலையாக்கப்பட்டு,  உயிரோடிருக்கும்  நாளெல்லாம்  பயமில்லாமல்  எனக்கு  முன்பாகப்  பரிசுத்தத்தோடும்  நீதியோடும்  எனக்கு  ஊழியஞ்செய்யக்  கட்டளையிடுவேன்  என்று,  {Luke  1:71}

 

அவர்  நம்முடைய  பிதாவாகிய  ஆபிரகாமுக்கு<Abraham>  இட்ட  ஆணையை  நிறைவேற்றுவதற்கும்;  {Luke  1:72}

 

ஆதிமுதற்கொண்டிருந்த  தம்முடைய  பரிசுத்த  தீர்க்கதரிசிகளின்  வாக்கினால்  தாம்  சொன்னபடியே,  {Luke  1:73}

 

தமது  ஜனத்தைச்  சந்தித்து  மீட்டுக்கொண்டு,  நம்முடைய  சத்துருக்களினின்றும்,  நம்மைப்  பகைக்கிற  யாவருடைய  கைகளினின்றும்,  நம்மை  இரட்சிக்கும்படிக்கு,  {Luke  1:74}

 

தம்முடைய  தாசனாகிய  தாவீதின்<David>  வம்சத்திலே  நமக்கு  இரட்சணியக்  கொம்பை  ஏற்படுத்தினார்.  {Luke  1:75}

 

நீயோ  பாலகனே,  உன்னதமானவருடைய  தீர்க்கதரிசி  என்னப்படுவாய்;  நீ  கர்த்தருக்கு  வழிகளை  ஆயத்தம்பண்ணவும்,  {Luke  1:76}

 

நமது  தேவனுடைய  உருக்கமான  இரக்கத்தினாலே  அவருடைய  ஜனத்துக்குப்  பாவமன்னிப்பாகிய  இரட்சிப்பைத்  தெரியப்படுத்தவும்,  அவருக்கு  முன்னாக  நடந்துபோவாய்.  {Luke  1:77}

 

அந்தகாரத்திலும்  மரண  இருளிலும்  உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு  வெளிச்சம்  தரவும்,  {Luke  1:78}

 

நம்முடைய  கால்களைச்  சமாதானத்தின்  வழியிலே  நடத்தவும்,  அவ்விரக்கத்தினாலே  உன்னதத்திலிருந்து  தோன்றிய  அருணோதயம்  நம்மைச்  சந்தித்திருக்கிறது  என்றான்.  {Luke  1:79}

 

அந்தப்  பிள்ளை  வளர்ந்து,  ஆவியிலே  பலங்கொண்டு,  இஸ்ரவேலுக்குத்<Israel>  தன்னைக்  காண்பிக்கும்  நாள்வரைக்கும்  வனாந்தரங்களிலே  இருந்தான்.  {Luke  1:80}

 

அந்நாட்களில்  உலகமெங்கும்  குடிமதிப்பு  எழுதப்படவேண்டுமென்று  அகுஸ்துராயனால்<Caesar  Augustus>  கட்டளை  பிறந்தது.  {Luke  2:1}

 

சீரியாநாட்டிலே<Syria>  சிரேனியு<Cyrenius>  என்பவன்  தேசாதிபதியாயிருந்தபோது  இந்த  முதலாம்  குடிமதிப்பு  உண்டாயிற்று.  {Luke  2:2}

 

அந்தப்படி  குடிமதிப்பெழுதப்படும்படிக்கு  எல்லாரும்  தங்கள்  தங்கள்  ஊர்களுக்குப்  போனார்கள்.  {Luke  2:3}

 

அப்பொழுது  யோசேப்பும்<Joseph>,  தான்  தாவீதின்<David>  வம்சத்தானும்  குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே,  தனக்கு  மனைவியாக  நியமிக்கப்பட்டுக்  கர்ப்பவதியான  மரியாளுடனே<Mary>  குடிமதிப்பெழுதப்படும்படி,  {Luke  2:4}

 

கலிலேயா<Galilee>  நாட்டிலுள்ள  நாசரேத்தூரிலிருந்து<Nazareth>  யூதேயா<Judaea>  நாட்டிலுள்ள  பெத்லெகேம்<Bethlehem>  என்னும்  தாவீதின்<David>  ஊருக்குப்  போனான்.  {Luke  2:5}

 

அவ்விடத்திலே  அவர்கள்  இருக்கையில்,  அவளுக்குப்  பிரசவகாலம்  நேரிட்டது.  {Luke  2:6}

 

அவள்  தன்  முதற்பேறான  குமாரனைப்பெற்று,  சத்திரத்திலே  அவர்களுக்கு  இடமில்லாதிருந்தபடியினால்,  பிள்ளையைத்  துணிகளில்  சுற்றி,  முன்னணையிலே  கிடத்தினாள்.  {Luke  2:7}

 

அப்பொழுது  அந்த  நாட்டிலே  மேய்ப்பர்கள்  வயல்வெளியில்  தங்கி,  இராத்திரியிலே  தங்கள்  மந்தையைக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.  {Luke  2:8}

 

அவ்வேளையில்  கர்த்தருடைய  தூதன்  அவர்களிடத்தில்  வந்து  நின்றான்,  கர்த்தருடைய  மகிமை  அவர்களைச்  சுற்றிலும்  பிரகாசித்தது;  அவர்கள்  மிகவும்  பயந்தார்கள்.  {Luke  2:9}

 

தேவதூதன்  அவர்களை  நோக்கி:  பயப்படாதிருங்கள்;  இதோ,  எல்லா  ஜனத்துக்கும்  மிகுந்த  சந்தோஷத்தை  உண்டாக்கும்  நற்செய்தியை  உங்களுக்கு  அறிவிக்கிறேன்.  {Luke  2:10}

 

இன்று  கர்த்தராகிய  கிறிஸ்து<Christ>  என்னும்  இரட்சகர்  உங்களுக்குத்  தாவீதின்<David>  ஊரிலே  பிறந்திருக்கிறார்.  {Luke  2:11}

 

பிள்ளையைத்  துணிகளில்  சுற்றி,  முன்னணையிலே  கிடத்தியிருக்கக்  காண்பீர்கள்;  இதுவே  உங்களுக்கு  அடையாளம்  என்றான்.  {Luke  2:12}

 

அந்தக்ஷணமே  பரமசேனையின்  திரள்  அந்தத்  தூதனுடனே  தோன்றி:  {Luke  2:13}

 

உன்னதத்திலிருக்கிற  தேவனுக்கு  மகிமையும்,  பூமியிலே  சமாதானமும்,  மனுஷர்மேல்  பிரியமும்  உண்டாவதாக  என்று  சொல்லி,  தேவனைத்  துதித்தார்கள்.  {Luke  2:14}

 

தேவதூதர்கள்  அவர்களை  விட்டுப்  பரலோகத்துக்குப்  போனபின்பு,  மேய்ப்பர்கள்  ஒருவரையொருவர்  நோக்கி:  நாம்  பெத்லெகேம்<Bethlehem>  ஊருக்குப்  போய்,  நடந்ததாகக்  கர்த்தரால்  நமக்கு  அறிவிக்கப்பட்ட  இந்தக்  காரியத்தைப்  பார்ப்போம்  வாருங்கள்  என்று  சொல்லி,  {Luke  2:15}

 

தீவிரமாய்  வந்து,  மரியாளையும்<Mary>,  யோசேப்பையும்<Joseph>,  முன்னணையிலே  கிடத்தியிருக்கிற  பிள்ளையையும்  கண்டார்கள்.  {Luke  2:16}

 

கண்டு,  அந்தப்  பிள்ளையைக்  குறித்துத்  தங்களுக்குச்  சொல்லப்பட்ட  சங்கதியைப்  பிரசித்தம்பண்ணினார்கள்.  {Luke  2:17}

 

மேய்ப்பராலே  தங்களுக்குச்  சொல்லப்பட்டதைக்  கேட்ட  யாவரும்  அவைகளைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  {Luke  2:18}

 

மரியாளோ<Mary>  அந்தச்  சங்கதிகளையெல்லாம்  தன்  இருதயத்திலே  வைத்து,  சிந்தனைபண்ணினாள்.  {Luke  2:19}

 

மேய்ப்பர்களும்  தங்களுக்குச்  சொல்லப்பட்டதின்படியே  கேட்டு  கண்ட  எல்லாவற்றிற்காகவும்  தேவனை  மகிமைப்படுத்தி,  துதித்துக்கொண்டு  திரும்பிப்போனார்கள்.  {Luke  2:20}

 

பிள்ளைக்கு  விருத்தசேதனம்  பண்ணவேண்டிய  எட்டாம்  நாளிலே,  அது  கர்ப்பத்திலே  உற்பவிக்கிறதற்கு  முன்னே  தேவதூதனால்  சொல்லப்பட்டபடியே,  அதற்கு  இயேசு<JESUS>  என்று  பேரிட்டார்கள்.  {Luke  2:21}

 

மோசேயின்<Moses>  நியாயப்பிரமாணத்தின்படியே  அவர்களுடைய  சுத்திகரிப்பின்  நாட்கள்  நிறைவேறினபோது,  {Luke  2:22}

 

முதற்பேறான  எந்த  ஆண்பிள்ளையும்  கர்த்தருக்குப்  பரிசுத்தமானதென்னப்படும்  என்று  கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தில்  எழுதியிருக்கிறபடி  அவரைக்  கர்த்தருக்கென்று  ஒப்புக்கொடுக்கவும்,  {Luke  2:23}

 

கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தில்  சொல்லியிருக்கிறபடி,  ஒரு  ஜோடு  காட்டுப்புறாவையாவது  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது  பலியாகச்  செலுத்தவும்,  அவரை  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுபோனார்கள்.  {Luke  2:24}

 

அப்பொழுது  சிமியோன்<Simeon>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  மனுஷன்  எருசலேமில்<Jerusalem>  இருந்தான்;  அவன்  நீதியும்  தேவபக்தியும்  உள்ளவனாயும்,  இஸ்ரவேலின்<Israel>  ஆறுதல்வரக்  காத்திருக்கிறவனாயும்  இருந்தான்;  அவன்மேல்  பரிசுத்தஆவி  இருந்தார்.  {Luke  2:25}

 

கர்த்தருடைய  கிறிஸ்துவை<Christ>  நீ  காணுமுன்னே  மரணமடையமாட்டாய்  என்று  பரிசுத்த  ஆவியினாலே  அவனுக்கு  அறிவிக்கப்பட்டுமிருந்தது.  {Luke  2:26}

 

அவன்  ஆவியின்  ஏவுதலினால்  தேவாலயத்திலே  வந்திருந்தான்.  இயேசு<Jesus>  என்னும்  பிள்ளைக்காக  நியாயப்பிரமாண  முறைமையின்படி  செய்வதற்குத்  தாய்  தகப்பன்மார்  அவரை  உள்ளே  கொண்டுவருகையில்,  {Luke  2:27}

 

அவன்  அவரைத்  தன்  கைகளில்  ஏந்திக்கொண்டு,  தேவனை  ஸ்தோத்திரித்து:  {Luke  2:28}

 

ஆண்டவரே,  உமது  வார்த்தையின்படி  உமது  அடியேனை  இப்பொழுது  சமாதானத்தோடே  போகவிடுகிறீர்;  {Luke  2:29}

 

புறஜாதிகளுக்குப்  பிரகாசிக்கிற  ஒளியாகவும்,  உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  மகிமையாகவும்,  {Luke  2:30}

 

தேவரீர்  சகல  ஜனங்களுக்கும்  முன்பாக  ஆயத்தம்பண்ணின  {Luke  2:31}

 

உம்முடைய  இரட்சணியத்தை  என்  கண்கள்  கண்டது  என்றான்.  {Luke  2:32}

 

அவரைக்குறித்துச்  சொல்லப்பட்டவைகளுக்காக  யோசேப்பும்<Joseph>  அவருடைய  தாயாரும்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Luke  2:33}

 

பின்னும்  சிமியோன்<Simeon>  அவர்களை  ஆசீர்வதித்து,  அவருடைய  தாயாகிய  மரியாளை<Mary>  நோக்கி:  இதோ,  அநேகருடைய  இருதய  சிந்தனைகள்  வெளிப்படத்தக்கதாக,  இஸ்ரவேலில்<Israel>  அநேகர்  விழுகிறதற்கும்  எழுந்திருக்கிறதற்கும்,  விரோதமாகப்  பேசப்படும்  அடையாளமாவதற்கும்,  இவர்  நியமிக்கப்பட்டிருக்கிறார்.  {Luke  2:34}

 

உன்  ஆத்துமாவையும்  ஒரு  பட்டயம்  உருவிப்போகும்  என்றான்.  {Luke  2:35}

 

ஆசேருடைய<Aser>  கோத்திரத்தாளும்,  பானுவேலின்<Phanuel>  குமாரத்தியுமாகிய  அன்னாள்<Anna>  என்னும்  ஒரு  தீர்க்கதரிசி  இருந்தாள்;  அவள்  கன்னிப்பிராயத்தில்  விவாகமானதுமுதல்  ஏழுவருஷம்  புருஷனுடனே  வாழ்ந்தவளும்,  அதிக  வயதுசென்றவளுமாயிருந்தாள்.  {Luke  2:36}

 

ஏறக்குறைய  எண்பத்துநாலு  வயதுள்ள  அந்த  விதவை  தேவாலயத்தை  விட்டு  நீங்காமல்,  இரவும்  பகலும்  உபவாசித்து,  ஜெபம்பண்ணி,  ஆராதனை  செய்துகொண்டிருந்தாள்.  {Luke  2:37}

 

அவளும்  அந்நேரத்திலே  வந்து  நின்று,  கர்த்தரைப்  புகழ்ந்து,  எருசலேமிலே<Jerusalem>  மீட்புண்டாகக்  காத்திருந்த  யாவருக்கும்  அவரைக்குறித்துப்  பேசினாள்.  {Luke  2:38}

 

கர்த்தருடைய  நியாயப்பிரமாணத்தின்படி  சகலத்தையும்  அவர்கள்  செய்து  முடித்தபின்பு,  கலிலேயாநாட்டிலுள்ள<Galilee>  தங்கள்  ஊராகிய  நாசரேத்துக்குத்<Nazareth>  திரும்பிப்போனார்கள்.  {Luke  2:39}

 

பிள்ளை  வளர்ந்து,  ஆவியிலே  பெலன்கொண்டு,  ஞானத்தினால்  நிறைந்தது.  தேவனுடைய  கிருபையும்  அவர்மேல்  இருந்தது.  {Luke  2:40}

 

அவருடைய  தாய்  தகப்பன்மார்  வருஷந்தோறும்  பஸ்கா  பண்டிகையில்  எருசலேமுக்குப்<Jerusalem>  போவார்கள்.  {Luke  2:41}

 

அவருக்குப்  பன்னிரண்டு  வயதானபோது,  அவர்கள்  அந்தப்  பண்டிகை  முறைமையின்படி  எருசலேமுக்குப்போய்<Jerusalem>,  {Luke  2:42}

 

பண்டிகைநாட்கள்  முடிந்து,  திரும்பிவருகிறபோது,  பிள்ளையாகிய  இயேசு<Jesus>  எருசலேமிலே<Jerusalem>  இருந்துவிட்டார்;  இது  அவருடைய  தாயாருக்கும்  யோசேப்புக்கும்<Joseph>  தெரியாதிருந்தது.  {Luke  2:43}

 

அவர்  பிரயாணக்காரரின்  கூட்டத்திலே  இருப்பாரென்று  அவர்கள்  நினைத்து,  ஒருநாள்  பிரயாணம்  வந்து,  உறவின்  முறையாரிடத்திலும்  அறிமுகமானவர்களிடத்திலும்  அவரைத்  தேடினார்கள்.  {Luke  2:44}

 

காணாததினாலே  அவரைத்  தேடிக்கொண்டே  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பிப்  போனார்கள்.  {Luke  2:45}

 

மூன்றுநாளைக்குப்  பின்பு,  அவர்  தேவாலயத்தில்  போதகர்  நடுவில்  உட்கார்ந்திருக்கவும்,  அவர்கள்  பேசுகிறதைக்  கேட்கவும்,  அவர்களை  வினாவவும்  கண்டார்கள்.  {Luke  2:46}

 

அவர்  பேசக்கேட்ட  யாவரும்  அவருடைய  புத்தியையும்  அவர்  சொன்ன  மாறுத்தரங்களையுங்குறித்துப்  பிரமித்தார்கள்.  {Luke  2:47}

 

தாய்  தகப்பன்மாரும்  அவரைக்  கண்டு  ஆச்சரியப்பட்டார்கள்.  அப்பொழுது  அவருடைய  தாயார்  அவரை  நோக்கி:  மகனே!  ஏன்  எங்களுக்கு  இப்படிச்  செய்தாய்?  இதோ,  உன்  தகப்பனும்  நானும்  விசாரத்தோடே  உன்னைத்  தேடினோமே  என்றாள்.  {Luke  2:48}

 

அதற்கு  அவர்:  நீங்கள்  ஏன்  என்னைத்  தேடினீர்கள்?  என்  பிதாவுக்கடுத்தவைகளில்  நான்  இருக்கவேண்டியதென்று  அறியீர்களா  என்றார்.  {Luke  2:49}

 

தங்களுக்கு  அவர்  சொன்ன  வார்த்தையை  அவர்கள்  உணர்ந்துகொள்ளவில்லை.  {Luke  2:50}

 

பின்பு  அவர்  அவர்களுடனே  கூடப்போய்,  நாசரேத்தூரில்<Nazareth>  சேர்ந்து,  அவர்களுக்குக்  கீழ்ப்படிந்திருந்தார்.  அவருடைய  தாயார்  இந்தச்  சங்கதிகளையெல்லாம்  தன்  இருதயத்திலே  வைத்துக்கொண்டாள்.  {Luke  2:51}

 

இயேசுவானவர்<Jesus>  ஞானத்திலும்,  வளர்த்தியிலும்,  தேவகிருபையிலும்,  மனுஷர்  தயவிலும்  அதிகமதிகமாய்  விருத்தியடைந்தார்.  {Luke  2:52}

 

திபேரியுராயன்<Tiberius  Caesar>  ராஜ்யபாரம்  பண்ணின  பதினைந்தாம்  வருஷத்திலே,  பொந்தியுபிலாத்து<Pontius  Pilate>  யூதேயாவுக்குத்<Judaea>  தேசாதிபதியாயும்,  ஏரோது<Herod>  காற்பங்கு  தேசமாகிய  கலிலேயாவுக்கு<Galilee>  அதிபதியாயும்,  அவன்  சகோதரனாகிய  பிலிப்பு<Philip>  காற்பங்கு  தேசமாகிய  இத்துரேயாவுக்கும்<Ituraea>  திராகொனித்தி<Trachonitis>  நாட்டிற்கும்  அதிபதியாயும்,  லிசானியா<Lysanias>  காற்பங்கு  தேசமாகிய  அபிலேனேக்கு<Abilene>  அதிபதியாயும்,  {Luke  3:1}

 

அன்னாவும்<Annas>  காய்பாவும்<Caiaphas>  பிரதான  ஆசாரியராயும்  இருந்தகாலத்தில்  வனாந்தரத்திலே  சகரியாவின்<Zacharias>  குமாரனாகிய  யோவானுக்குத்<John>  தேவனுடைய  வார்த்தை  உண்டாயிற்று.  {Luke  3:2}

 

அப்பொழுது:  கர்த்தருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்,  அவருக்குப்  பாதைகளைச்  செவ்வைபண்ணுங்கள்  என்றும்,  {Luke  3:3}

 

பள்ளங்களெல்லாம்  நிரப்பப்படும்,  சகல  மலைகளும்  குன்றுகளும்  தாழ்த்தப்படும்,  கோணலானவைகள்  செவ்வையாகும்,  கரடானவைகள்  சமமாகும்  என்றும்,  {Luke  3:4}

 

மாம்சமான  யாவரும்  தேவனுடைய  இரட்சிப்பைக்  காண்பார்கள்  என்றும்,  வனாந்தரத்திலே  கூப்பிடுகிறவனுடைய  சத்தம்  உண்டாகும்  என்று  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியின்  ஆகமத்தில்  எழுதியிருக்கிறபிரகாரம்,  {Luke  3:5}

 

அவன்  யோர்தான்<Jordan>  நதிக்கு  அருகான  தேசமெங்கும்  போய்,  பாவமன்னிப்புக்கென்று  மனந்திரும்புதலுக்கேற்ற  ஞானஸ்நானத்தைக்குறித்துப்  பிரசங்கித்தான்.  {Luke  3:6}

 

அவன்,  தன்னிடத்தில்  ஞானஸ்நானம்  பெறும்படிக்குப்  புறப்பட்டுவந்த  திரளான  ஜனங்களை  நோக்கி:  விரியன்பாம்புக்  குட்டிகளே!  வருங்கோபத்துக்குத்  தப்பித்துக்கொள்ள  உங்களுக்கு  வகைகாட்டினவன்  யார்?  {Luke  3:7}

 

மனந்திரும்புதலுக்கு  ஏற்ற  கனிகளைக்  கொடுங்கள்;  ஆபிரகாம்<Abraham>  எங்களுக்குத்  தகப்பன்  என்று  உங்களுக்குள்ளே  சொல்லத்தொடங்காதிருங்கள்;  தேவன்  இந்தக்  கல்லுகளினாலே  ஆபிரகாமுக்குப்<Abraham>  பிள்ளைகளை  உண்டுபண்ண  வல்லவராயிருக்கிறார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  3:8}

 

இப்பொழுதே  கோடரியானது  மரங்களின்  வேர்  அருகே  வைத்திருக்கிறது;  ஆகையால்  நல்ல  கனிகொடாத  மரமெல்லாம்  வெட்டுண்டு  அக்கினியிலே  போடப்படும்  என்றான்.  {Luke  3:9}

 

அப்பொழுது  ஜனங்கள்  அவனை  நோக்கி:  அப்படியானால்  நாங்கள்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டார்கள்.  {Luke  3:10}

 

அவர்களுக்கு  அவன்  பிரதியுத்தரமாக:  இரண்டு  அங்கிகளையுடையவன்  இல்லாதவனுக்குக்  கொடுக்கக்கடவன்;  ஆகாரத்தை  உடையவனும்  அப்படியே  செய்யக்கடவன்  என்றான்.  {Luke  3:11}

 

ஆயக்காரரும்  ஞானஸ்நானம்  பெறவந்து,  அவனை  நோக்கி:  போதகரே,  நாங்கள்  என்னசெய்யவேண்டும்  என்று  கேட்டார்கள்.  {Luke  3:12}

 

அதற்கு  அவன்:  உங்களுக்குக்  கட்டளையிட்டிருக்கிறதற்கு  அதிகமாய்  ஒன்றும்  வாங்காதிருங்கள்  என்றான்.  {Luke  3:13}

 

போர்ச்சேவகரும்  அவனை  நோக்கி:  நாங்கள்  என்னசெய்யவேண்டும்  என்று  கேட்டார்கள்.  அதற்கு  அவன்:  நீங்கள்  ஒருவருக்கும்  இடுக்கண்செய்யாமலும்  பொய்யாய்க்  குற்றஞ்சாட்டாமலும்,  உங்கள்  சம்பளமே  போதுமென்றும்  இருங்கள்  என்றான்.  {Luke  3:14}

 

யோவானைக்குறித்து<John>:  இவன்தான்  கிறிஸ்துவோ<Christ>  என்று  ஜனங்களெல்லாரும்  எண்ணங்கொண்டு,  தங்கள்  இருதயங்களில்  யோசனையாயிருக்கையில்,  {Luke  3:15}

 

யோவான்<John>  எல்லாருக்கும்  பிரதியுத்தரமாக:  நான்  ஜலத்தினால்  உங்களுக்கு  ஞானஸ்நானங்  கொடுக்கிறேன்,  என்னிலும்  வல்லவர்  ஒருவர்  வருகிறார்,  அவருடைய  பாதரட்சைகளின்  வாரை  அவிழ்க்கிறதற்கும்  நான்  பாத்திரன்  அல்ல,  அவர்  பரிசுத்தஆவியினாலும்  அக்கினியினாலும்  உங்களுக்கு  ஞானஸ்நானங்  கொடுப்பார்.  {Luke  3:16}

 

தூற்றுக்கூடை  அவர்  கையில்  இருக்கிறது,  அவர்  தமது  களத்தை  நன்றாய்  விளக்கி,  கோதுமையைத்  தமது  களஞ்சியத்தில்  சேர்ப்பார்;  பதரையோ  அவியாத  அக்கினியினால்  சுட்டெரிப்பார்  என்றான்.  {Luke  3:17}

 

வேறு  அநேக  புத்திமதிகளையும்  அவன்  ஜனங்களுக்குச்  சொல்லிப்  பிரசங்கித்தான்.  {Luke  3:18}

 

காற்பங்கு  தேசாதிபதியாகிய  ஏரோது<Herod>  தன்  சகோதரனான  பிலிப்புவின்<Philip>  மனைவி  ஏரோதியாளினிமித்தமாகவும்<Herodias>,  தான்  செய்த  மற்றப்  பொல்லாங்குகளினிமித்தமாகவும்,  யோவானாலே<John>  கடிந்துகொள்ளப்பட்டபோது,  {Luke  3:19}

 

தான்  செய்த  மற்றெல்லாப்  பொல்லாங்குகளும்  தவிர,  யோவானையும்<John>  காவலில்  அடைத்துவைத்தான்.  {Luke  3:20}

 

ஜனங்களெல்லாரும்  ஞானஸ்நானம்  பெற்றபோது,  இயேசுவும்<Jesus>  ஞானஸ்நானம்  பெற்று,  ஜெபம்பண்ணுகையில்,  வானம்  திறக்கப்பட்டது;  {Luke  3:21}

 

பரிசுத்த  ஆவியானவர்  ரூபங்கொண்டு  புறாவைப்போல  அவர்மேல்  இறங்கினார்.  வானத்திலிருந்து  ஒரு  சத்தமும்  உண்டாகி:  நீர்  என்னுடைய  நேசகுமாரன்,  உம்மில்  பிரியமாயிருக்கிறேன்  என்று  உரைத்தது.  {Luke  3:22}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  ஏறக்குறைய  முப்பது  வயதுள்ளவரானார்.  அவர்  யோசேப்பின்<Joseph>  குமாரனென்று  எண்ணப்பட்டார்.  அந்த  யோசேப்பு<Joseph>  ஏலியின்<Heli>  குமாரன்;  {Luke  3:23}

 

ஏலி<Heli>  மாத்தாத்தின்<Matthat>  குமாரன்;  மாத்தாத்<Matthat>  லேவியின்<Levi>  குமாரன்;  லேவி<Levi>  மெல்கியின்<Melchi>  குமாரன்;  மெல்கி<Melchi>  யன்னாவின்<Janna>  குமாரன்;  யன்னா<Janna>  யோசேப்பின்<Joseph>  குமாரன்;  {Luke  3:24}

 

யோசேப்பு<Joseph>  மத்தத்தியாவின்<Mattathias>  குமாரன்;  மத்தத்தியா<Mattathias>  ஆமோசின்<Amos>  குமாரன்;  ஆமோஸ்<Amos>  நாகூமின்<Naum>  குமாரன்;  நாகூம்<Naum>  எஸ்லியின்<Esli>  குமாரன்;  எஸ்லி<Esli>  நங்காயின்<Nagge>  குமாரன்.  {Luke  3:25}

 

நங்காய்<Nagge>  மாகாத்தின்<Maath>  குமாரன்;  மாகாத்<Maath>  மத்தத்தியாவின்<Mattathias>  குமாரன்;  மத்தத்தியா<Mattathias>  சேமேயின்<Semei>  குமாரன்;  சேமேய்<Semei>  யோசேப்பின்<Joseph>  குமாரன்;  யோசேப்பு<Joseph>  யூதாவின்<Juda>  குமாரன்;  யூதா<Juda>  யோவன்னாவின்<Joanna>  குமாரன்.  {Luke  3:26}

 

யோவன்னா<Joanna>  ரேசாவின்<Rhesa>  குமாரன்;  ரேசா<Rhesa>  சொரொபாபேலின்<Zorobabel>  குமாரன்;  சொரொபாபேல்<Zorobabel>  சலாத்தியேலின்<Salathiel>  குமாரன்;  சலாத்தியேல்<Salathiel>  நேரியின்<Neri>  குமாரன்.  {Luke  3:27}

 

நேரி<Neri>  மெல்கியின்<Melchi>  குமாரன்;  மெல்கி<Melchi>  அத்தியின்<Addi>  குமாரன்;  அத்தி<Addi>  கோசாமின்<Cosam>  குமாரன்;  கோசாம்<Cosam>  எல்மோதாமின்<Elmodam>  குமாரன்;  எல்மோதாம்<Elmodam>  ஏரின்<Er>  குமாரன்;  ஏர்<Er>  யோசேயின்<Jose>  குமாரன்.  {Luke  3:28}

 

யோசே<Jose>  எலியேசரின்<Eliezer>  குமாரன்;  எலியேசர்<Eliezer>  யோரீமின்<Jorim>  குமாரன்;  யோரீம்<Jorim>  மாத்தாத்தின்<Matthat>  குமாரன்;  மாத்தாத்<Matthat>  லேவியின்<Levi>  குமாரன்.  {Luke  3:29}

 

லேவி<Levi>  சிமியோனின்<Simeon>  குமாரன்;  சிமியோன்<Simeon>  யூதாவின்<Juda>  குமாரன்;  யூதா<Juda>  யோசேப்பின்<Joseph>  குமாரன்;  யோசேப்பு<Joseph>  யோனானின்<Jonan>  குமாரன்;  யோனான்<Jonan>  எலியாக்கீமின்<Eliakim>  குமாரன்.  {Luke  3:30}

 

எலியாக்கீம்<Eliakim>  மெலெயாவின்<Melea>  குமாரன்;  மெலெயா<Melea>  மயினானின்<Menan>  குமாரன்;  மயினான்<Menan>  மாத்தாத்தாவின்<Mattatha>  குமாரன்;  மாத்தாத்தா<Mattatha>  நாத்தானின்<Nathan>  குமாரன்;  நாத்தான்<Nathan>  தாவீதின்<David>  குமாரன்.  {Luke  3:31}

 

தாவீது<David>  ஈசாயின்<Jesse>  குமாரன்;  ஈசாய்<Jesse>  ஓபேதின்<Obed>  குமாரன்;  ஓபேத்<Obed>  போவாசின்<Booz>  குமாரன்;  போவாஸ்<Booz>  சல்மோனின்<Salmon>  குமாரன்;  சல்மோன்<Salmon>  நகசோனின்<Naasson>  குமாரன்.  {Luke  3:32}

 

நகசோன்<Naasson>  அம்மினதாபின்<Aminadab>  குமாரன்;  அம்மினதாப்<Aminadab>  ஆராமின்<Aram>  குமாரன்;  ஆராம்<Aram>  எஸ்ரோமின்<Esrom>  குமாரன்;  எஸ்ரோம்<Esrom>  பாரேசின்<Phares>  குமாரன்;  பாரேஸ்<Phares>  யூதாவின்<Juda>  குமாரன்;  யூதா<Juda>  யாக்கோபின்<Jacob>  குமாரன்.  {Luke  3:33}

 

யாக்கோபு<Jacob>  ஈசாக்கின்<Isaac>  குமாரன்;  ஈசாக்கு<Isaac>  ஆபிரகாமின்<Abraham>  குமாரன்;  ஆபிரகாம்<Abraham>  தேராவின்<Thara>  குமாரன்;  தேரா<Thara>  நாகோரின்<Nachor>  குமாரன்.  {Luke  3:34}

 

நாகோர்<Nachor>  சேரூக்கின்<Saruch>  குமாரன்;  சேரூக்<Saruch>  ரெகூவின்<Ragau>  குமாரன்;  ரெகூ<Ragau>  பேலேக்கின்<Phalec>  குமாரன்;  பேலேக்<Phalec>  ஏபேரின்<Heber>  குமாரன்;  ஏபேர்<Heber>  சாலாவின்<Sala>  குமாரன்.  {Luke  3:35}

 

சாலா<Sala>  காயினானின்<Cainan>  குமாரன்;  காயினான்<Cainan>  அர்ப்பகசாத்தின்<Arphaxad>  குமாரன்;  அர்ப்பகசாத்<Arphaxad>  சேமின்<Sem>  குமாரன்;  சேம்<Sem>  நோவாவின்<Noe>  குமாரன்;  நோவா<Noe>  லாமேக்கின்<Lamech>  குமாரன்.  {Luke  3:36}

 

லாமேக்கு<Lamech>  மெத்தூசலாவின்<Mathusala>  குமாரன்;  மெத்தூசலா<Mathusala>  ஏனோக்கின்<Enoch>  குமாரன்;  ஏனோக்கு<Enoch>  யாரேதின்<Jared>  குமாரன்;  யாரேத்<Jared>  மகலாலெயேலின்<Maleleel>  குமாரன்;  மகலாலெயேல்<Maleleel>  கேனானின்<Cainan>  குமாரன்;  கேனான்<Cainan>  ஏனோசின்<Enos>  குமாரன்.  {Luke  3:37}

 

ஏனோஸ்<Enos>  சேத்தின்<Seth>  குமாரன்;  சேத்<Seth>  ஆதாமின்<Adam>  குமாரன்;  ஆதாம்<Adam>  தேவனால்  உண்டானவன்.  {Luke  3:38}

 

இயேசு<Jesus>  பரிசுத்த  ஆவியினாலே  நிறைந்தவராய்  யோர்தானை<Jordan>  விட்டுத்  திரும்பி,  ஆவியானவராலே  வனாந்தரத்திற்குக்  கொண்டுபோகப்பட்டு,  {Luke  4:1}

 

நாற்பதுநாள்  பிசாசினால்  சோதிக்கப்பட்டார்.  அந்த  நாட்களில்  அவர்  ஒன்றும்  புசியாதிருந்தார்;  அந்த  நாட்கள்  முடிந்தபின்பு  அவருக்குப்  பசியுண்டாயிற்று.  {Luke  4:2}

 

அப்பொழுது  பிசாசு  அவரை  நோக்கி:  நீர்  தேவனுடைய  குமாரனேயானால்,  இந்தக்  கல்  அப்பமாகும்படி  சொல்லும்  என்றான்.  {Luke  4:3}

 

அவர்  பிரதியுத்தரமாக:  மனுஷன்  அப்பத்தினாலேமாத்திரமல்ல,  தேவனுடைய  ஒவ்வொரு  வார்த்தையினாலும்  பிழைப்பான்  என்று  எழுதியிருக்கிறதே  என்றார்.  {Luke  4:4}

 

பின்பு  பிசாசு  அவரை  உயர்ந்த  மலையின்மேல்  கொண்டுபோய்,  உலகத்தின்  சகல  ராஜ்யங்களையும்  ஒரு  நிமிஷத்திலே  அவருக்குக்  காண்பித்து:  {Luke  4:5}

 

இவைகள்  எல்லாவற்றின்மேலுமுள்ள  அதிகாரத்தையும்  இவைகளின்  மகிமையையும்  உமக்குத்  தருவேன்,  இவைகள்  எனக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;  எனக்கு  இஷ்டமானவனுக்கு  இவைகளைக்  கொடுக்கிறேன்.  {Luke  4:6}

 

நீர்  என்னைப்  பணிந்துகொண்டால்  எல்லாம்  உம்முடையதாகும்  என்று  சொன்னான்.  {Luke  4:7}

 

இயேசு<Jesus>  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  எனக்குப்  பின்னாகப்போ  சாத்தானே,  உன்  தேவனாகிய  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  அவர்  ஒருவருக்கே  ஆராதனைசெய்வாயாக  என்று  எழுதியிருக்கிறதே  என்றார்.  {Luke  4:8}

 

அப்பொழுது  அவன்  அவரை  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுபோய்,  தேவாலயத்து  உப்பரிகையின்மேல்  அவரை  நிறுத்தி:  நீர்  தேவனுடைய  குமாரனேயானால்,  இங்கேயிருந்து  தாழக்குதியும்.  {Luke  4:9}

 

ஏனெனில்,  உம்மைக்  காக்கும்படிக்குத்  தம்முடைய  தூதர்களுக்கு  உம்மைக்குறித்துக்  கட்டளையிடுவார்  என்றும்,  {Luke  4:10}

 

உமது  பாதம்  கல்லில்  இடறாதபடிக்கு,  அவர்கள்  உம்மைக்  கைகளில்  ஏந்திக்கொண்டுபோவார்கள்  என்றும்,  எழுதியிருக்கிறது  என்று  சொன்னான்.  {Luke  4:11}

 

அதற்கு  இயேசு<Jesus>:  உன்  தேவனாகிய  கர்த்தரைப்  பரீட்சை  பாராதிருப்பாயாக  என்று  சொல்லியிருக்கிறதே  என்றார்.  {Luke  4:12}

 

பிசாசானவன்  சோதனையெல்லாம்  முடித்தபின்பு,  சிலகாலம்  அவரை  விட்டு  விலகிப்போனான்.  {Luke  4:13}

 

பின்பு  இயேசு<Jesus>  ஆவியானவருடைய  பலத்தினாலே  கலிலேயாவுக்குத்<Galilee>  திரும்பிப்  போனார்.  அவருடைய  கீர்த்தி  சுற்றிலும்  இருக்கிற  தேசமெங்கும்  பரம்பிற்று.  {Luke  4:14}

 

அவர்களுடைய  ஜெபஆலயங்களில்  அவர்  உபதேசித்து,  எல்லாராலும்  புகழப்பட்டார்.  {Luke  4:15}

 

தாம்  வளர்ந்த  ஊராகிய  நாசரேத்துக்கு<Nazareth>  அவர்  வந்து,  தம்முடைய  வழக்கத்தின்படியே  ஓய்வுநாளில்  ஜெபஆலயத்திலே  பிரவேசித்து,  வாசிக்க  எழுந்து  நின்றார்.  {Luke  4:16}

 

அப்பொழுது  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியின்  புஸ்தகம்  அவரிடத்தில்  கொடுக்கப்பட்டது.  அவர்  புஸ்தகத்தை  விரித்தபோது:  {Luke  4:17}

 

கர்த்தருடைய  ஆவியானவர்  என்மேலிருக்கிறார்;  தரித்திரருக்குச்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கும்படி  என்னை  அபிஷேகம்  பண்ணினார்;  இருதயம்  நருங்குண்டவர்களைக்  குணமாக்கவும்,  சிறைப்பட்டவர்களுக்கு  விடுதலையையும்,  குருடருக்குப்  பார்வையையும்  பிரசித்தப்படுத்தவும்,  நொறுங்குண்டவர்களை  விடுதலையாக்கவும்,  {Luke  4:18}

 

கர்த்தருடைய  அநுக்கிரக  வருஷத்தைப்  பிரசித்தப்படுத்தவும்,  என்னை  அனுப்பினார்,  என்று  எழுதியிருக்கிற  இடத்தை  அவர்  கண்டு,  {Luke  4:19}

 

வாசித்து,  புஸ்தகத்தைச்  சுருட்டி,  பணிவிடைக்காரனிடத்தில்  கொடுத்து,  உட்கார்ந்தார்.  ஜெபஆலயத்திலுள்ள  எல்லாருடைய  கண்களும்  அவர்மேல்  நோக்கமாயிருந்தது.  {Luke  4:20}

 

அப்பொழுது  அவர்  அவர்களோடே  பேசத்தொடங்கி:  உங்கள்  காதுகள்  கேட்க  இந்த  வேதவாக்கியம்  இன்றையத்தினம்  நிறைவேறிற்று  என்றார்.  {Luke  4:21}

 

எல்லாரும்  அவருக்கு  நற்சாட்சி  கொடுத்து,  அவருடைய  வாயிலிருந்து  புறப்பட்ட  கிருபையுள்ள  வார்த்தைகளைக்  குறித்து  ஆச்சரியப்பட்டு:  இவன்  யோசேப்பின்<Joseph>  குமாரன்  அல்லவா  என்றார்கள்.  {Luke  4:22}

 

அவர்  அவர்களை  நோக்கி:  வைத்தியனே,  உன்னைத்தானே  குணமாக்கிக்கொள்  என்கிற  பழமொழியைச்  சொல்லி,  நாங்கள்  கேள்விப்பட்டபடி  கப்பர்நகூமூரில்<Capernaum>  உன்னால்  செய்யப்பட்ட  கிரியைகள்  எவைகளோ  அவைகளை  உன்  ஊராகிய  இவ்விடத்திலும்  செய்  என்று  நீங்கள்  என்னுடன்  சொல்லுவீர்கள்  என்பது  நிச்சயம்.  {Luke  4:23}

 

ஆனாலும்  தீர்க்கதரிசி  ஒருவனும்  தன்  ஊரிலே  அங்கீகரிக்கப்படமாட்டான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  4:24}

 

அன்றியும்  எலியாவின்<Elias>  நாட்களிலே  மூன்று  வருஷமும்  ஆறுமாதமும்  வானம்  அடைபட்டு,  தேசமெங்கும்  மிகுந்த  பஞ்சம்  உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள்<Israel>  அநேகம்  விதவைகள்  இருந்தார்கள்.  {Luke  4:25}

 

ஆயினும்  எலியா<Elias>  சீதோன்<Sidon>  நாட்டிலுள்ள  சரெப்தா//சாறிபாத்<Sarepta>  ஊரிலிருந்த  ஒரு  விதவையினிடத்திற்கு  அனுப்பப்பட்டானேயல்லாமல்    மற்றொருத்தியினிடத்திற்கும்  அனுப்பப்படவில்லை.  {Luke  4:26}

 

அல்லாமலும்  எலிசா<Eliseus>  தீர்க்கதரிசியின்  காலத்திலே  இஸ்ரவேலருக்குள்ளே<Israel>  அநேகம்  குஷ்டரோகிகள்  இருந்தார்கள்;  ஆயினும்  சீரியா<Syrian>  தேசத்தானாகிய  நாகமானேயல்லாமல்<Naaman>  அவர்களில்  வேறொருவனும்  சுத்தமாக்கப்படவில்லை  என்று  சத்தியத்தின்படியே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  4:27}

 

ஜெபஆலயத்திலிருந்த  எல்லாரும்,  இவைகளைக்  கேட்டபொழுது,  கோபமூண்டு,  {Luke  4:28}

 

எழுந்திருந்து,  அவரை  ஊருக்குப்  புறம்பே  தள்ளி,  தங்கள்  ஊர்  கட்டப்பட்டிருந்த  செங்குத்தான  மலையின்  சிகரத்திலிருந்து  அவரைத்  தலைகீழாய்த்  தள்ளிவிடும்படிக்கு  அவ்விடத்திற்குக்  கொண்டுபோனார்கள்.  {Luke  4:29}

 

அவரோ  அவர்கள்  நடுவினின்று  கடந்துபோய்விட்டார்.  {Luke  4:30}

 

பின்பு  அவர்  கலிலேயாவிலுள்ள<Galilee>  கப்பர்நகூம்<Capernaum>  பட்டணத்துக்கு  வந்து,  ஓய்வுநாட்களில்  ஜனங்களுக்குப்  போதகம்  பண்ணினார்.  {Luke  4:31}

 

அவருடைய  வசனம்  அதிகாரமுள்ளதாயிருந்தபடியால்  அவருடைய  போதகத்தைக்குறித்து  அவர்கள்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Luke  4:32}

 

ஜெபஆலயத்திலே  அசுத்த  ஆவி  பிடித்திருந்த  ஒரு  மனுஷன்  இருந்தான்.  {Luke  4:33}

 

அவன்:  ஐயோ!  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவே<Jesus>,  எங்களுக்கும்  உமக்கும்  என்ன?  எங்களைக்  கெடுக்கவா  வந்தீர்?  உம்மை  இன்னார்  என்று  அறிவேன்;  நீர்  தேவனுடைய  பரிசுத்தர்  என்று  உரத்தசத்தமிட்டான்.  {Luke  4:34}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நீ  பேசாமல்  இவனை  விட்டுப்  புறப்பட்டுப்  போ  என்று  அதை  அதட்டினார்;  அப்பொழுது  பிசாசு  அவனை  ஜனங்களின்  நடுவே  விழத்தள்ளி,  அவனுக்கு  ஒரு  சேதமுஞ்செய்யாமல்,  அவனை  விட்டுப்  போய்விட்டது.  {Luke  4:35}

 

எல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  இது  என்ன  வார்த்தையோ!  அதிகாரத்தோடும்  வல்லமையோடும்  அசுத்த  ஆவிகளுக்கும்  கட்டளையிடுகிறார்,  அவைகள்  புறப்பட்டுப்போகிறதே  என்று  ஒருவரோடொருவர்  பேசிக்கொண்டார்கள்.  {Luke  4:36}

 

அவருடைய  கீர்த்தி  சுற்றிலுமிருந்த  நாடுகளிலுள்ள  இடங்களிலெல்லாம்  பிரசித்தமாயிற்று.  {Luke  4:37}

 

பின்பு  அவர்  ஜெபஆலயத்தை  விட்டுப்  புறப்பட்டு,  சீமோன்<Simon>  வீட்டில்  பிரவேசித்தார்,  சீமோனுடைய<Simon>  மாமி  கடும்  ஜுரமாய்க்  கிடந்தாள்.  அவளுக்காக  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  {Luke  4:38}

 

அவர்  அவளிடத்தில்  குனிந்துநின்று,  ஜுரம்  நீங்கும்படி  கட்டளையிட்டார்,  அது  அவளை  விட்டு  நீங்கிற்று;  உடனே  அவள்  எழுந்திருந்து  அவர்களுக்குப்  பணிவிடை  செய்தாள்.  {Luke  4:39}

 

சூரியன்  அஸ்தமித்தபோது,  ஜனங்களெல்லாரும்  தங்களுக்குள்ளே  பலபல  வியாதிகளால்  வருத்தப்பட்டவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  அவர்கள்  ஒவ்வொருவர்மேலும்  அவர்  தம்முடைய  கைகளை  வைத்து,  அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  {Luke  4:40}

 

பிசாசுகளும்:  நீர்  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்து<Christ>  என்று  சத்தமிட்டு,  அநேகரைவிட்டுப்  புறப்பட்டது.  அவரைக்  கிறிஸ்து<Christ>  என்று  பிசாசுகள்  அறிந்திருந்தபடியால்  அவர்  அவைகளைப்  பேசவொட்டாமல்  அதட்டினார்.  {Luke  4:41}

 

உதயமானபோது,  அவர்  புறப்பட்டு,  வனாந்தரமான  ஓரிடத்திற்குப்  போனார்.  திரளான  ஜனங்கள்  அவரைத்  தேடி,  அவரிடத்தில்  வந்து,  தங்களை  விட்டுப்  போகாதபடிக்கு  அவரை  நிறுத்திக்கொண்டார்கள்.  {Luke  4:42}

 

அவரோ  அவர்களை  நோக்கி:  நான்  மற்ற  ஊர்களிலும்  தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்துப்  பிரசங்கிக்கவேண்டும்,  இதற்காகவே  அனுப்பப்பட்டேன்  என்றார்.  {Luke  4:43}

 

அந்தப்படியே  கலிலேயா<Galilee>  நாட்டிலுள்ள  ஜெபஆலயங்களில்  பிரசங்கம்  பண்ணிக்கொண்டுவந்தார்.  {Luke  4:44}

 

பின்பு  அவர்  கெனேசரேத்துக்<Gennesaret>  கடலருகே  நின்றபோது,  திரளான  ஜனங்கள்  தேவவசனத்தைக்  கேட்கும்படி  அவரிடத்தில்  நெருங்கினார்கள்.  {Luke  5:1}

 

அப்பொழுது  கடற்கரையிலே  நின்ற  இரண்டு  படவுகளைக்  கண்டார்.  மீன்பிடிக்கிறவர்கள்  அவைகளை  விட்டிறங்கி,  வலைகளை  அலைசிக்கொண்டிருந்தார்கள்.  {Luke  5:2}

 

அப்பொழுது  அந்தப்  படவுகளில்  ஒன்றில்  ஏறினார்,  அது  சீமோனுடையதாயிருந்தது<Simon>;  அதைக்  கரையிலிருந்து  சற்றே  தள்ளும்படி  அவனைக்  கேட்டுக்கொண்டு,  அந்தப்  படவில்  உட்கார்ந்து,  ஜனங்களுக்குப்  போதகம்பண்ணினார்.  {Luke  5:3}

 

அவர்  போதகம்பண்ணி  முடித்த  பின்பு  சீமோனை<Simon>  நோக்கி:  ஆழத்திலே  தள்ளிக்கொண்டுபோய்,  மீன்பிடிக்கும்படி  உங்கள்  வலைகளைப்  போடுங்கள்  என்றார்.  {Luke  5:4}

 

அதற்குச்  சீமோன்<Simon>:  ஐயரே,  இராமுழுவதும்  நாங்கள்  பிரயாசப்பட்டும்  ஒன்றும்  அகப்படவில்லை;  ஆகிலும்  உம்முடைய  வார்த்தையின்படியே  வலையைப்  போடுகிறேன்  என்றான்.  {Luke  5:5}

 

அந்தப்படியே  அவர்கள்  செய்து,  தங்கள்  வலை  கிழிந்துபோகத்தக்கதாக  மிகுதியான  மீன்களைப்  பிடித்தார்கள்.  {Luke  5:6}

 

அப்பொழுது  மற்றப்  படவிலிருந்த  கூட்டாளிகள்  வந்து  தங்களுக்கு  உதவிசெய்யும்படிக்குச்  சைகைகாட்டினார்கள்;  அவர்கள்  வந்து,  இரண்டு  படவுகளும்  அமிழத்தக்கதாக  நிரப்பினார்கள்.  {Luke  5:7}

 

சீமோன்  பேதுரு<Simon  Peter>  அதைக்  கண்டு,  இயேசுவின்<Jesus>  பாதத்தில்  விழுந்து:  ஆண்டவரே,  நான்  பாவியான  மனுஷன்,  நீர்  என்னைவிட்டுப்  போகவேண்டும்  என்றான்.  {Luke  5:8}

 

அவர்கள்  திரளான  மீன்களைப்  பிடித்ததினிமித்தம்,  அவனுக்கும்  அவனோடுகூட  இருந்த  யாவருக்கும்  பிரமிப்புண்டானபடியினால்  அப்படிச்  சொன்னான்.  {Luke  5:9}

 

சீமோனுக்குக்<Simon>  கூட்டாளிகளான  செபெதேயுவின்<Zebedee>  குமாரராகிய  யாக்கோபும்<James>  யோவானும்<John>  அந்தப்படியே  பிரமித்தார்கள்.  அப்பொழுது  இயேசு<Jesus>  சீமோனை<Simon>  நோக்கி:  பயப்படாதே,  இதுமுதல்  நீ  மனுஷரைப்  பிடிக்கிறவனாயிருப்பாய்  என்றார்.  {Luke  5:10}

 

அவர்கள்  படவுகளைக்  கரையிலே  கொண்டுபோய்  நிறுத்தி,  எல்லாவற்றையும்  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Luke  5:11}

 

பின்பு  அவர்  ஒரு  பட்டணத்தில்  இருக்கையில்,  குஷ்டரோகம்  நிறைந்த  ஒரு  மனுஷன்  இயேசுவைக்<Jesus>  கண்டு,  முகங்குப்புற  விழுந்து:  ஆண்டவரே,  உமக்குச்  சித்தமானால்,  என்னைச்  சுத்தமாக்க  உம்மாலே  ஆகும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டான்.  {Luke  5:12}

 

அவர்  தமது  கையை  நீட்டி,  அவனைத்  தொட்டு:  எனக்குச்  சித்தமுண்டு,  சுத்தமாகு  என்றார்;  உடனே  குஷ்டரோகம்  அவனை  விட்டு  நீங்கிற்று.  {Luke  5:13}

 

அவர்  அவனை  நோக்கி:  நீ  இதை  ஒருவருக்கும்  சொல்லாமல்,  போய்,  உன்னை  ஆசாரியனுக்குக்  காண்பித்து,  நீ  சுத்தமானதினிமித்தம்,  மோசே<Moses>  கட்டளையிட்டபடியே,  அவர்களுக்குச்  சாட்சியாகப்  பலி  செலுத்து  என்று  கட்டளையிட்டார்.  {Luke  5:14}

 

அப்படியிருந்தும்  அவருடைய  கீர்த்தி  அதிகமாகப்  பரம்பிற்று.  திரளான  ஜனங்கள்  அவருடைய  உபதேசத்தைக்  கேட்பதற்கும்  அவராலே  தங்கள்  பிணிகள்  நீங்கிச்  சவுக்கியமடைவதற்கும்  கூடிவந்தார்கள்.  {Luke  5:15}

 

அவரோ  வனாந்தரத்தில்  தனித்துப்  போய்,  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.  {Luke  5:16}

 

பின்பு  ஒருநாள்  அவர்  உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது,  கலிலேயா<Galilee>  யூதேயா<Judaea>  நாடுகளிலுள்ள  சகல  கிராமங்களிலும்,  எருசலேம்<Jerusalem>  நகரத்திலுமிருந்து  வந்த  பரிசேயரும்<Pharisees>  நியாயசாஸ்திரிகளும்  உட்கார்ந்திருந்தார்கள்;  அப்பொழுது  பிணியாளிகளைக்  குணமாக்கத்தக்கதாகக்  கர்த்தருடைய  வல்லமை  விளங்கிற்று.  {Luke  5:17}

 

அப்பொழுது  சில  மனுஷர்  திமிர்வாதக்காரன்  ஒருவனைப்  படுக்கையோடே  எடுத்துக்கொண்டுவந்து,  அவனை  உள்ளே  கொண்டுபோகவும்  அவர்  முன்பாக  வைக்கவும்  வகைதேடினார்கள்.  {Luke  5:18}

 

ஜனக்கூட்டம்  மிகுதியாயிருந்தபடியால்  அவனை  உள்ளே  கொண்டுபோகிறதற்கு  வகைகாணாமல்,  வீட்டின்மேல்  ஏறி,  தட்டோடுகள்  வழியாய்  ஜனங்களின்  மத்தியில்  இயேசுவுக்கு<Jesus>  முன்பாக  அவனைப்  படுக்கையோடே  இறக்கினார்கள்.  {Luke  5:19}

 

அவர்களுடைய  விசுவாசத்தை  அவர்  கண்டு,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  மனுஷனே,  உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டது  என்றார்.  {Luke  5:20}

 

அப்பொழுது  வேதபாரகரும்  பரிசேயரும்<Pharisees>  யோசனைபண்ணி,  தேவதூஷணம்  சொல்லுகிற  இவன்  யார்?  தேவன்  ஒருவரேயன்றிப்  பாவங்களை  மன்னிக்கத்தக்கவர்  யார்  என்றார்கள்.  {Luke  5:21}

 

இயேசு<Jesus>  அவர்கள்  சிந்தனைகளை  அறிந்து,  அவர்களை  நோக்கி:  உங்கள்  இருதயங்களில்  நீங்கள்  சிந்திக்கிறதென்ன?  {Luke  5:22}

 

உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டது  என்று  சொல்வதோ,  எழுந்து  நடவென்று  சொல்வதோ,  எது  எளிது?  {Luke  5:23}

 

பூமியிலே  பாவங்களை  மன்னிக்க  மனுஷகுமாரனுக்கு  அதிகாரம்  உண்டென்பதை  நீங்கள்  அறியவேண்டும்  என்று  சொல்லி,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  நீ  எழுந்து,  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  உன்  வீட்டுக்குப்  போ  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  5:24}

 

உடனே  அவன்  அவர்களுக்கு  முன்பாக  எழுந்து,  தன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  தேவனை  மகிமைப்படுத்தி,  தன்  வீட்டுக்குப்  போனான்.  {Luke  5:25}

 

அதினாலே  எல்லாரும்  ஆச்சரியப்பட்டு,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்;  அல்லாமலும்,  அவர்கள்  பயம்  நிறைந்தவர்களாகி,  அதிசயமான  காரியங்களை  இன்று  கண்டோம்  என்றார்கள்.  {Luke  5:26}

 

இவைகளுக்குப்  பின்பு,  அவர்  புறப்பட்டு,  ஆயத்துறையில்  உட்கார்ந்திருந்த  லேவி<Levi>  என்னும்  பேருடைய  ஒரு  ஆயக்காரனைக்  கண்டு:  எனக்குப்  பின்சென்று  வா  என்றார்.  {Luke  5:27}

 

அவன்  எல்லாவற்றையும்  விட்டு,  எழுந்து,  அவருக்குப்  பின்சென்றான்.  {Luke  5:28}

 

அந்த  லேவி<Levi>  என்பவன்  தன்  வீட்டிலே  அவருக்குப்  பெரிய  விருந்துபண்ணினான்.  அநேக  ஆயக்காரரும்  மற்றவர்களும்  அவர்களோடேகூடப்  பந்தியிருந்தார்கள்.  {Luke  5:29}

 

வேதபாரகரும்  பரிசேயரும்<Pharisees>  அவருடைய  சீஷருக்கு  விரோதமாக  முறுமுறுத்து:  நீங்கள்  ஆயக்காரரோடும்  பாவிகளோடும்  போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று  கேட்டார்கள்.  {Luke  5:30}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  பிணியாளிகளுக்கு  வைத்தியன்  வேண்டியதேயல்லாமல்  சுகமுள்ளவர்களுக்கு  வேண்டியதில்லை.  {Luke  5:31}

 

நீதிமான்களையல்ல,  பாவிகளையே  மனந்திரும்புகிறதற்கு  அழைக்கவந்தேன்  என்றார்.  {Luke  5:32}

 

பின்பு  அவர்கள்  அவரை  நோக்கி:  யோவானுடைய<John>  சீஷர்  அநேகந்தரம்  உபவாசித்து  ஜெபம்பண்ணிக்கொண்டு  வருகிறார்கள்,  பரிசேயருடைய<Pharisees>  சீஷரும்  அப்படியே  செய்கிறார்கள்,  உம்முடைய  சீஷர்  போஜனபானம்பண்ணுகிறார்களே,  அதெப்படியென்று  கேட்டார்கள்.  {Luke  5:33}

 

அதற்கு  அவர்:  மணவாளன்  தங்களோடிருக்கையில்  மணவாளனுடைய  தோழர்களை  நீங்கள்  உபவாசிக்கச்  செய்யக்கூடுமா?  {Luke  5:34}

 

மணவாளன்  அவர்களை  விட்டு  எடுபடும்  நாட்கள்  வரும்,  அந்த  நாட்களிலே  உபவாசிப்பார்கள்  என்றார்.  {Luke  5:35}

 

அவர்களுக்கு  ஒரு  உவமையையும்  சொன்னார்:  ஒருவனும்  புதிய  வஸ்திரத்துண்டைப்  பழைய  வஸ்திரத்தின்மேல்  போட்டு  இணைக்கமாட்டான்,  இணைத்தால்  புதியது  பழையதைக்  கிழிக்கும்;  புதிய  வஸ்திரத்துண்டு  பழைய  வஸ்திரத்துக்கு  ஒவ்வாது.  {Luke  5:36}

 

ஒருவனும்  புது  திராட்சரசத்தைப்  பழந்துருத்திகளில்  வார்த்துவைக்கமாட்டான்;  வார்த்துவைத்தால்  புதுரசம்  துருத்திகளைக்  கிழித்துப்போடும்,  இரசமும்  சிந்திப்போம்,  துருத்திகளும்  கெட்டுப்போம்.  {Luke  5:37}

 

புது  ரசத்தைப்  புது  துருத்திகளில்  வார்த்துவைக்கவேண்டும்,  அப்பொழுது  இரண்டும்  பத்திரப்பட்டிருக்கும்.  {Luke  5:38}

 

அன்றியும்  ஒருவனும்  பழைய  ரசத்தைக்  குடித்தவுடனே  புது  ரசத்தை  விரும்பமாட்டான்,  பழைய  ரசமே  நல்லதென்று  சொல்லுவான்  என்றார்.  {Luke  5:39}

 

பஸ்காபண்டிகையின்  இரண்டாம்  நாளைக்குப்  பின்வந்த  முதலாம்  ஓய்வுநாளிலே,  அவர்  பயிர்வழியே  நடந்துபோகையில்,  அவருடைய  சீஷர்கள்  கதிர்களைக்  கொய்து,  கைகளினால்  நிமிட்டித்  தின்றார்கள்.  {Luke  6:1}

 

பரிசேயரில்<Pharisees>  சிலர்  அவர்களை  நோக்கி:  ஓய்வுநாளில்  செய்யத்தகாததை  நீங்கள்  ஏன்  செய்கிறீர்கள்  என்று  கேட்டார்கள்.  {Luke  6:2}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  தாவீதும்<David>  அவனோடிருந்தவர்களும்  பசியாயிருந்தபோது  செய்ததை  நீங்கள்  வாசிக்கவில்லையா?  அவன்  தேவனுடைய  வீட்டில்  பிரவேசித்து,  ஆசாரியர்  மாத்திரமே  தவிர  வேறொருவரும்  புசிக்கத்தகாத  தேவசமுகத்து  அப்பங்களைக்  கேட்டு  வாங்கி,  {Luke  6:3}

 

தான்  புசித்ததுமன்றி,  தன்னுடனே  கூட  இருந்தவர்களுக்கும்  கொடுத்தானே  என்று  சொன்னார்.  {Luke  6:4}

 

மேலும்  மனுஷகுமாரன்  ஓய்வுநாளுக்கும்  ஆண்டவராய்  இருக்கிறார்  என்றார்.  {Luke  6:5}

 

வேறொரு  ஓய்வுநாளிலே,  அவர்  ஜெபஆலயத்தில்  பிரவேசித்து  உபதேசித்தார்.  அங்கே  சூம்பின  வலதுகையையுடைய  ஒரு  மனுஷன்  இருந்தான்.  {Luke  6:6}

 

அப்பொழுது  வேதபாரகரும்  பரிசேயரும்<Pharisees>  அவரிடத்தில்  குற்றம்  பிடிக்கும்படி,  ஓய்வுநாளில்  சொஸ்தமாக்குவாரோ  என்று  அவர்மேல்  நோக்கமாயிருந்தார்கள்.  {Luke  6:7}

 

அவர்களுடைய  சிந்தனைகளை  அவர்  அறிந்து,  சூம்பின  கையையுடைய  மனுஷனை  நோக்கி:  நீ  எழுந்து,  நடுவே  நில்  என்றார்.  அவன்  எழுந்து  நின்றான்.  {Luke  6:8}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  நான்  உங்களிடத்தில்  ஒன்று  கேட்கிறேன்;  ஓய்வுநாட்களில்  நன்மை  செய்வதோ,  தீமை  செய்வதோ,  ஜீவனைக்  காப்பதோ,  அழிப்பதோ,  எது  நியாயம்  என்று  கேட்டு,  {Luke  6:9}

 

அவர்களெல்லாரையும்  சுற்றிப்  பார்த்து,  அந்த  மனுஷனை  நோக்கி:  உன்  கையை  நீட்டு  என்றார்.  அப்படியே  அவன்  தன்  கையை  நீட்டினான்,  உடனே  அவன்  கை  மறுகையைப்போலச்  சொஸ்தமாயிற்று.  {Luke  6:10}

 

அவர்களோ  மூர்க்கவெறிகொண்டு,  இயேசுவை<Jesus>  என்ன  செய்யலாமென்று  ஒருவரோடொருவர்  ஆலோசித்தார்கள்.  {Luke  6:11}

 

அந்நாட்களிலே,  அவர்  ஜெபம்பண்ணும்படி  ஒரு  மலையின்மேல்  ஏறி,  இராமுழுவதும்  தேவனை  நோக்கி  ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.  {Luke  6:12}

 

பொழுது  விடிந்தபோது,  அவர்  தம்முடைய  சீஷர்களை  வரவழைத்து,  அவர்களில்  பன்னிரண்டுபேரைத்  தெரிந்துகொண்டு,  அவர்களுக்கு  அப்போஸ்தலர்  என்று  பேரிட்டார்.  {Luke  6:13}

 

அவர்கள்  யாரெனில்,  பேதுரு<Peter>  என்று  தாம்  பேரிட்ட  சீமோன்<Simon>,  அவன்  சகோதரனாகிய  அந்திரேயா<Andrew>,  யாக்கோபு<James>,  யோவான்<John>,  பிலிப்பு<Philip>,  பற்தொலொமேயு<Bartholomew>,  {Luke  6:14}

 

மத்தேயு<Matthew>,  தோமா<Thomas>,  அல்பேயுவின்<Alphaeus>  குமாரனாகிய  யாக்கோபு<James>,  செலோத்தே<Zelotes>  என்னப்பட்ட  சீமோன்<Simon>,  {Luke  6:15}

 

யாக்கோபின்<James>  சகோதரனாகிய  யூதா<Judas>,  துரோகியான  யூதாஸ்காரியோத்து<Judas  Iscariot>  என்பவர்களே.  {Luke  6:16}

 

பின்பு  அவர்  அவர்களுடனேகூட  இறங்கி,  சமனான  ஒரு  இடத்திலே  நின்றார்.  அங்கே  அவருடைய  சீஷரில்  அநேகம்பேரும்  அவருடைய  உபதேசத்தைக்  கேட்கும்படிக்கும்,  தங்கள்  வியாதிகளினின்று  குணமாக்கப்படும்படிக்கும்,  யூதேயாதேசத்துத்<Judaea>  திசைகள்  யாவற்றிலிருந்தும்,  எருசலேம்<Jerusalem>  நகரத்திலிருந்தும்,  தீரு<Tyre>  சீதோன்<Sidon>  பட்டணங்கள்  இருக்கிற  கடலோரத்திலிருந்தும்  வந்தவர்களாகிய  திரளான  ஜனங்களும்  இருந்தார்கள்.  {Luke  6:17}

 

அசுத்த  ஆவிகளால்  வாதிக்கப்பட்டவர்களும்  வந்து,  ஆரோக்கியமடைந்தார்கள்.  {Luke  6:18}

 

அவரிடத்திலிருந்து  வல்லமை  புறப்பட்டு  எல்லாரையும்  குணமாக்கினபடியினாலே,  ஜனங்கள்  யாவரும்  அவரைத்  தொடும்படிக்கு  வகைதேடினார்கள்.  {Luke  6:19}

 

அப்பொழுது  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கிப்பார்த்து:  தரித்திரராகிய  நீங்கள்  பாக்கியவான்கள்;  தேவனுடைய  ராஜ்யம்  உங்களுடையது.  {Luke  6:20}

 

இப்பொழுது  பசியாயிருக்கிற  நீங்கள்  பாக்கியவான்கள்;  திருப்தியடைவீர்கள்.  இப்பொழுது  அழுகிற  நீங்கள்  பாக்கியவான்கள்;  இனி  நகைப்பீர்கள்.  {Luke  6:21}

 

மனுஷகுமாரன்  நிமித்தமாக  ஜனங்கள்  உங்களைப்  பகைத்து,  உங்களைப்  புறம்பாக்கி,  உங்களை  நிந்தித்து,  உங்கள்  நாமத்தைப்  பொல்லாததென்று  தள்ளிவிடும்போது  நீங்கள்  பாக்கியவான்களாயிருப்பீர்கள்.  {Luke  6:22}

 

அந்நாளிலே  நீங்கள்  சந்தோஷப்பட்டுக்  களிகூருங்கள்;  பரலோகத்தில்  உங்கள்  பலன்  மிகுதியாயிருக்கும்;  அவர்களுடைய  பிதாக்கள்  தீர்க்கதரிசிகளுக்கும்  அப்படியே  செய்தார்கள்.  {Luke  6:23}

 

ஐசுவரியவான்களாகிய  உங்களுக்கு  ஐயோ;  உங்கள்  ஆறுதலை  நீங்கள்  அடைந்து  தீர்ந்தது.  {Luke  6:24}

 

திருப்தியுள்ளவர்களாயிருக்கிற  உங்களுக்கு  ஐயோ;  பசியாயிருப்பீர்கள்.  இப்பொழுது  நகைக்கிற  உங்களுக்கு  ஐயோ;  இனி  துக்கப்பட்டு  அழுவீர்கள்.  {Luke  6:25}

 

எல்லா  மனுஷரும்  உங்களைக்  குறித்துப்  புகழ்ச்சியாய்ப்  பேசும்போது  உங்களுக்கு  ஐயோ;  அவர்கள்  பிதாக்கள்  கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும்  அப்படியே  செய்தார்கள்.  {Luke  6:26}

 

எனக்குச்  செவிகொடுக்கிற  உங்களுக்கு  நான்  சொல்லுகிறேன்:  உங்கள்  சத்துருக்களைச்  சிநேகியுங்கள்;  உங்களைப்  பகைக்கிறவர்களுக்கு  நன்மைசெய்யுங்கள்.  {Luke  6:27}

 

உங்களைச்  சபிக்கிறவர்களை  ஆசீர்வதியுங்கள்;  உங்களை  நிந்திக்கிறவர்களுக்காக  ஜெபம்  பண்ணுங்கள்.  {Luke  6:28}

 

உன்னை  ஒரு  கன்னத்தில்  அறைகிறவனுக்கு  மறு  கன்னத்தையும்  கொடு;  உன்  அங்கியை  எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு  உன்  வஸ்திரத்தையும்  எடுத்துக்கொள்ளத்  தடைபண்ணாதே.  {Luke  6:29}

 

உன்னிடத்தில்  கேட்கிற  எவனுக்கும்  கொடு;  உன்னுடையதை  எடுத்துக்  கொள்ளுகிறவனிடத்தில்  அதைத்  திரும்பக்  கேளாதே.  {Luke  6:30}

 

மனுஷர்  உங்களுக்கு  எப்படிச்  செய்ய  வேண்டுமென்று  விரும்புகிறீர்களோ,  அப்படியே  நீங்களும்  அவர்களுக்குச்  செய்யுங்கள்.  {Luke  6:31}

 

உங்களைச்  சிநேகிக்கிறவர்களையே  நீங்கள்  சிநேகித்தால்,  உங்களுக்குப்  பலன்  என்ன?  பாவிகளும்  தங்களைச்  சிநேகிக்கிறவர்களைச்  சிநேகிக்கிறார்களே.  {Luke  6:32}

 

உங்களுக்கு  நன்மைசெய்கிறவர்களுக்கே  நீங்கள்  நன்மைசெய்தால்,  உங்களுக்குப்  பலன்  என்ன?  பாவிகளும்  அப்படிச்  செய்கிறார்களே.  {Luke  6:33}

 

திரும்பக்  கொடுப்பார்களென்று  நம்பி  நீங்கள்  கடன்கொடுத்தால்  உங்களுக்குப்  பலன்  என்ன?  திரும்பத்  தங்களுக்குக்  கொடுக்கப்படும்படியாகப்  பாவிகளும்  பாவிகளுக்குக்  கடன்கொடுக்கிறார்களே.  {Luke  6:34}

 

உங்கள்  சத்துருக்களைச்  சிநேகியுங்கள்,  நன்மைசெய்யுங்கள்,  கைம்மாறு  கருதாமல்  கடன்  கொடுங்கள்;  அப்பொழுது  உங்கள்  பலன்  மிகுதியாயிருக்கும்,  உன்னதமானவருக்கு  நீங்கள்  பிள்ளைகளாயிருப்பீர்கள்;  அவர்  நன்றியறியாதவர்களுக்கும்  துரோகிகளுக்கும்  நன்மை  செய்கிறாரே.  {Luke  6:35}

 

ஆகையால்  உங்கள்  பிதா  இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல,  நீங்களும்  இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.  {Luke  6:36}

 

மற்றவர்களைக்  குற்றவாளிகளென்று  தீர்க்காதிருங்கள்;  அப்பொழுது  நீங்களும்  குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதிருப்பீர்கள்;  மற்றவர்களை  ஆக்கினைக்குள்ளாகும்படி  தீர்க்காதிருங்கள்,  அப்பொழுது  நீங்களும்  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படாதிருப்பீர்கள்;  விடுதலைபண்ணுங்கள்,  அப்பொழுது  நீங்களும்  விடுதலைபண்ணப்படுவீர்கள்.  {Luke  6:37}

 

கொடுங்கள்,  அப்பொழுது  உங்களுக்கும்  கொடுக்கப்படும்;  அமுக்கிக்  குலுக்கிச்  சரிந்து  விழும்படி  நன்றாய்  அளந்து,  உங்கள்  மடியிலே  போடுவார்கள்;  நீங்கள்  எந்த  அளவினால்  அளக்கிறீர்களோ  அந்த  அளவினால்  உங்களுக்கும்  அளக்கப்படும்  என்றார்.  {Luke  6:38}

 

பின்னும்  அவர்  ஒரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  குருடனுக்குக்  குருடன்  வழிகாட்டக்கூடுமோ?  இருவரும்  பள்ளத்தில்  விழுவார்கள்  அல்லவா?  {Luke  6:39}

 

சீஷன்  தன்  குருவுக்கு  மேற்பட்டவனல்ல,  தேறினவன்  எவனும்  தன்  குருவைப்போலிருப்பான்.  {Luke  6:40}

 

நீ  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  உணராமல்,  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பைப்  பார்க்கிறதென்ன?  {Luke  6:41}

 

அல்லது  நீ  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  உணராமல்,  உன்  சகோதரனை  நோக்கி:  சகோதரனே,  நான்  உன்  கண்ணிலிருக்கிற  துரும்பை  எடுத்துப்போடட்டும்  என்று  நீ  சொல்வதெப்படி?  மாயக்காரனே!  முன்பு  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  எடுத்துப்போடு,  பின்பு  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பை  எடுத்துப்போட  வகைபார்ப்பாய்.  {Luke  6:42}

 

நல்ல  மரமானது  கெட்ட  கனி  கொடாது,  கெட்ட  மரமானது  நல்ல  கனி  கொடாது.  {Luke  6:43}

 

அந்தந்த  மரம்  அதனதன்  கனியினால்  அறியப்படும்;  முட்செடிகளில்  அத்திப்பழங்களைப்  பறிக்கிறதுமில்லை,  நெருஞ்சிச்செடியில்  திராட்சப்பழங்களைப்  பறிக்கிறதுமில்லை.  {Luke  6:44}

 

நல்ல  மனுஷன்  தன்  இருதயமாகிய  நல்ல  பொக்கிஷத்திலிருந்து  நல்லதை  எடுத்துக்  காட்டுகிறான்;  பொல்லாத  மனுஷன்  தன்  இருதயமாகிய  பொல்லாத  பொக்கிஷத்திலிருந்து  பொல்லாததை  எடுத்துக்காட்டுகிறான்;  இருதயத்தின்  நிறைவினால்  அவனவன்  வாய்  பேசும்.  {Luke  6:45}

 

என்னை  ஆண்டவரே!  ஆண்டவரே!  என்று  நீங்கள்  சொல்லியும்,  நான்  சொல்லுகிறபடி  நீங்கள்  செய்யாமற்போகிறதென்ன?  {Luke  6:46}

 

என்னிடத்தில்  வந்து,  என்  வார்த்தைகளைக்  கேட்டு,  அவைகளின்படி  செய்கிறவன்  யாருக்கு  ஒப்பாயிருக்கிறானென்று  உங்களுக்குக்  காண்பிப்பேன்.  {Luke  6:47}

 

ஆழமாய்த்  தோண்டி,  கற்பாறையின்மேல்  அஸ்திபாரம்  போட்டு,  வீடுகட்டுகிற  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறான்;  பெருவெள்ளம்  வந்து,  நீரோட்டம்  அந்த  வீட்டின்மேல்  மோதியும்,  அதை  அசைக்கக்  கூடாமற்போயிற்று;  ஏனென்றால்  அது  கன்மலையின்மேல்  அஸ்திபாரம்  போடப்பட்டிருந்தது.  {Luke  6:48}

 

என்  வார்த்தைகளைக்  கேட்டும்  அவைகளின்படி  செய்யாதவனோ  அஸ்திபாரமில்லாமல்  மண்ணின்மேல்  வீடுகட்டினவனுக்கு  ஒப்பாயிருக்கிறான்;  நீரோட்டம்  அதின்மேல்  மோதினவுடனே  அது  விழுந்தது;  விழுந்து  முழுவதும்  அழிந்தது  என்றார்.  {Luke  6:49}

 

அவர்  தம்முடைய  வார்த்தைகளையெல்லாம்  ஜனங்களுடைய  காதுகள்  கேட்கும்படி  சொல்லி  முடித்தபின்பு,  கப்பர்நகூமுக்குப்<Capernaum>  போனார்.  {Luke  7:1}

 

அங்கே  நூற்றுக்கு  அதிபதியாகிய  ஒருவனுக்குப்  பிரியமான  வேலைக்காரன்  வியாதிப்பட்டு  மரண  அவஸ்தையாயிருந்தான்.  {Luke  7:2}

 

அவன்  இயேசுவைக்குறித்துக்<Jesus>  கேள்விப்பட்டபோது,  அவர்  வந்து  தன்  வேலைக்காரனைக்  குணமாக்கவேண்டுமென்று,  அவரை  வேண்டிக்கொள்ளும்படி  யூதருடைய<Jews>  மூப்பரை  அவரிடத்தில்  அனுப்பினான்.  {Luke  7:3}

 

அவர்கள்  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து,  அவரைக்  கருத்தாய்  வேண்டிக்கொண்டு:  நீர்  இந்தத்  தயவுசெய்கிறதற்கு  அவன்  பாத்திரனாயிருக்கிறான்.  {Luke  7:4}

 

அவன்  நம்முடைய  ஜனத்தை  நேசிக்கிறான்,  நமக்கு  ஒரு  ஜெபஆலயத்தையும்  கட்டினான்  என்றார்கள்.  {Luke  7:5}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  அவர்களுடனே  கூடப்போனார்.  வீட்டுக்குச்  சமீபமானபோது,  நூற்றுக்கு  அதிபதி  தன்  சிநேகிதரை  நோக்கி:  நீங்கள்  அவரிடத்தில்  போய்,  ஆண்டவரே!  நீர்  வருத்தப்படவேண்டாம்;  நீர்  என்  வீட்டு  வாசலுக்குள்  பிரவேசிக்க  நான்  பாத்திரன்  அல்ல;  {Luke  7:6}

 

நான்  உம்மிடத்தில்  வரவும்  என்னைப்  பாத்திரனாக  எண்ணவில்லை;  ஒரு  வார்த்தைமாத்திரம்  சொல்லும்,  அப்பொழுது  என்  வேலைக்காரன்  சொஸ்தமாவான்.  {Luke  7:7}

 

நான்  அதிகாரத்துக்குக்  கீழ்ப்பட்டவனாயிருந்தும்,  எனக்குக்  கீழ்ப்பட்டிருக்கிற  சேவகருமுண்டு;  நான்  ஒருவனைப்  போவென்றால்  போகிறான்,  மற்றொருவனை  வாவென்றால்  வருகிறான்;  என்  வேலைக்காரனை,  இதைச்  செய்யென்றால்  செய்கிறான்  என்று  நான்  சொன்னதாகச்  சொல்லுங்கள்  என்று  அவர்களை  அனுப்பினான்.  {Luke  7:8}

 

இயேசு<Jesus>  இவைகளைக்  கேட்டு  அவனைக்  குறித்து  ஆச்சரியப்பட்டு,  திரும்பி,  தமக்குப்  பின்செல்லுகிற  திரளான  ஜனங்களை  நோக்கி:  இஸ்ரவேலருக்குள்ளும்<Israel>  நான்  இப்படிப்பட்ட  விசுவாசத்தைக்  காணவில்லை  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  7:9}

 

அனுப்பப்பட்டவர்கள்  வீட்டுக்குத்  திரும்பிவந்தபோது,  வியாதியாய்க்  கிடந்த  வேலைக்காரன்  சுகமடைந்திருக்கிறதைக்  கண்டார்கள்.  {Luke  7:10}

 

மறுநாளிலே  அவர்  நாயீன்<Nain>  என்னும்  ஊருக்குப்  போனார்;  அவருடைய  சீஷர்  அநேகரும்  திரளான  ஜனங்களும்  அவருடனேகூடப்  போனார்கள்.  {Luke  7:11}

 

அவர்  ஊரின்  வாசலுக்குச்  சமீபித்தபோது,  மரித்துப்போன  ஒருவனை  அடக்கம்பண்ணும்படி  கொண்டுவந்தார்கள்;  அவன்  தன்  தாய்க்கு  ஒரே  மகனாயிருந்தான்.  அவளோ  கைம்பெண்ணாயிருந்தாள்;  ஊராரில்  வெகு  ஜனங்கள்  அவளுடனேகூட  வந்தார்கள்.  {Luke  7:12}

 

கர்த்தர்  அவளைப்  பார்த்து,  அவள்மேல்  மனதுருகி:  அழாதே  என்று  சொல்லி,  {Luke  7:13}

 

கிட்டவந்து,  பாடையைத்  தொட்டார்;  அதைச்  சுமந்தவர்கள்  நின்றார்கள்;  அப்பொழுது  அவர்:  வாலிபனே,  எழுந்திரு  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  7:14}

 

மரித்தவன்  எழுந்து  உட்கார்ந்து,  பேசத்தொடங்கினான்.  அவனை  அவன்  தாயினிடத்தில்  ஒப்புவித்தார்.  {Luke  7:15}

 

எல்லாரும்  பயமடைந்து:  மகா  தீர்க்கதரிசியானவர்  நமக்குள்ளே  தோன்றியிருக்கிறார்  என்றும்,  தேவன்  தமது  ஜனங்களைச்  சந்தித்தார்  என்றும்  சொல்லி,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  {Luke  7:16}

 

இந்தச்  செய்தி  யூதேயா<Judaea>  தேசமுழுவதிலும்  சுற்றியிருக்கிற  திசைகள்  யாவற்றிலும்  பிரசித்தமாயிற்று.  {Luke  7:17}

 

இவைகளையெல்லாம்  யோவானுடைய<John>  சீஷர்கள்  அவனுக்கு  அறிவித்தார்கள்.  அப்பொழுது  யோவான்<John>  தன்  சீஷரில்  இரண்டுபேரை  அழைத்து,  {Luke  7:18}

 

நீங்கள்  இயேசுவினிடத்திற்குப்<Jesus>  போய்:  வருகிறவர்  நீர்தானா?  அல்லது  வேறொருவர்  வரக்  காத்திருக்கவேண்டுமா?  என்று  கேளுங்கள்  என்று  சொல்லி  அனுப்பினான்.  {Luke  7:19}

 

அந்தப்படி  அவர்கள்  அவரிடத்தில்  வந்து:  வருகிறவர்  நீர்தானா?  அல்லது  வேறொருவர்  வரக்  காத்திருக்கவேண்டுமா?  என்று  கேட்கும்படி  யோவான்ஸ்நானன்<John  Baptist>  எங்களை  உம்மிடத்திற்கு  அனுப்பினார்  என்றார்கள்.  {Luke  7:20}

 

அந்தச்  சமயத்திலே  நோய்களையும்  கொடிய  வியாதிகளையும்  பொல்லாத  ஆவிகளையும்  கொண்டிருந்த  அநேகரை  அவர்  குணமாக்கி,  அநேகங்  குருடருக்குப்  பார்வையளித்தார்.  {Luke  7:21}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  போய்,  கண்டவைகளையும்  கேட்டவைகளையும்  யோவானுக்கு<John>  அறிவியுங்கள்;  குருடர்  பார்வையடைகிறார்கள்,  சப்பாணிகள்  நடக்கிறார்கள்,  குஷ்டரோகிகள்  சுத்தமாகிறார்கள்,  செவிடர்  கேட்கிறார்கள்,  மரித்தோர்  எழுந்திருக்கிறார்கள்,  தரித்திரருக்குச்  சுவிசேஷம்  பிரசங்கிக்கப்படுகிறது.  {Luke  7:22}

 

என்னிடத்தில்  இடறலடையாதிருக்கிறவன்  எவனோ  அவன்  பாக்கியவான்  என்றார்.  {Luke  7:23}

 

யோவானுடைய<John>  தூதர்கள்  போனபின்பு  அவர்  யோவானைக்குறித்து<John>  ஜனங்களுக்குச்  சொன்னது  என்னவென்றால்:  எதைப்பார்க்க  வனாந்தரத்திற்குப்  போனீர்கள்?  காற்றினால்  அசையும்  நாணலையோ?  {Luke  7:24}

 

அல்லவென்றால்,  எதைப்பார்க்கப்  போனீர்கள்?  மெல்லிய  வஸ்திரந்தரித்த  மனுஷனையோ?  அலங்கார  வஸ்திரந்தரித்துச்  செல்வமாய்  வாழ்கிறவர்கள்  அரசர்  மாளிகைகளிலே  இருக்கிறார்கள்.  {Luke  7:25}

 

அல்லவென்றால்,  எதைப்பார்க்கப்  போனீர்கள்?  தீர்க்கதரிசியையோ?  ஆம்,  தீர்க்கதரிசியைப்  பார்க்கிலும்  மேன்மையுள்ளவனையே  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  7:26}

 

இதோ,  நான்  என்  தூதனை  உமக்கு  முன்பாக  அனுப்புகிறேன்;  அவன்  உமக்கு  முன்னே  போய்,  உமது  வழியை  ஆயத்தம்பண்ணுவான்  என்று  எழுதிய  வாக்கியத்தால்  குறிக்கப்பட்டவன்  இவன்தான்.  {Luke  7:27}

 

ஸ்திரீகளிடத்திலே  பிறந்தவர்களில்  யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும்<John  the  Baptist>  பெரிய  தீர்க்கதரிசி  ஒருவனுமில்லை;  ஆகிலும்,  தேவனுடைய  ராஜ்யத்தில்  சிறியவனாயிருக்கிறவன்  அவனிலும்  பெரியவனாயிருக்கிறானென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  7:28}

 

யோவானுடைய<John>  உபதேசத்தைக்  கேட்ட  ஆயக்காரர்  முதலான  சகல  ஜனங்களும்  அவனாலே  ஞானஸ்நானம்  பெற்று,  தேவன்  நீதிபரர்  என்று  அறிக்கையிட்டார்கள்.  {Luke  7:29}

 

பரிசேயரும்<Pharisees>  நியாயசாஸ்திரிகளுமோ  அவனாலே  ஞானஸ்நானம்  பெறாமல்  தங்களுக்குக்  கேடுண்டாகத்  தேவனுடைய  ஆலோசனையைத்  தள்ளிவிட்டார்கள்.  {Luke  7:30}

 

பின்னும்  கர்த்தர்  சொன்னது:  இந்தச்  சந்ததியை  யாருக்கு  ஒப்பிடுவேன்?  இவர்கள்  யாருக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்?  {Luke  7:31}

 

சந்தை  வெளியில்  உட்கார்ந்து,  ஒருவரையொருவர்  பார்த்து:  உங்களுக்காகக்  குழல்  ஊதினோம்,  நீங்கள்  கூத்தாடவில்லை;  உங்களுக்காகப்  புலம்பினோம்,  நீங்கள்  அழவில்லை  என்று  குறை  சொல்லுகிற  பிள்ளைகளுக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்.  {Luke  7:32}

 

எப்படியெனில்,  யோவான்ஸ்நானன்<John  the  Baptist>  அப்பம்  புசியாதவனும்  திராட்சரசம்  குடியாதவனுமாய்  வந்தான்;  அதற்கு  நீங்கள்:  அவன்  பிசாசு  பிடித்திருக்கிறவன்  என்கிறீர்கள்.  {Luke  7:33}

 

மனுஷகுமாரன்  போஜனபானம்  பண்ணுகிறவராய்  வந்தார்;  அதற்கு  நீங்கள்:  இதோ,  போஜனப்பிரியனும்  மதுபானப்பிரியனுமான  மனுஷன்,  ஆயக்காரருக்கும்  பாவிகளுக்கும்  சிநேகிதன்  என்கிறீர்கள்.  {Luke  7:34}

 

ஆனாலும்  ஞானமானது  அதன்  பிள்ளைகளெல்லாராலும்  நீதியுள்ளதென்று  ஒப்புக்கொள்ளப்படும்  என்றார்.  {Luke  7:35}

 

பரிசேயரில்<Pharisees>  ஒருவன்  தன்னுடனே  போஜனம்பண்ணவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டான்;  அவர்  அந்தப்  பரிசேயனுடைய<Pharisee>  வீட்டில்  பிரவேசித்துப்  பந்தியிருந்தார்.  {Luke  7:36}

 

அப்பொழுது  அந்த  ஊரிலிருந்த  பாவியாகிய  ஒரு  ஸ்திரீ  அவர்  பரிசேயன்<Pharisee>  வீட்டிலே  பந்தியிருக்கிறதை  அறிந்து,  ஒரு  பரணியில்  பரிமளதைலம்  கொண்டுவந்து,  {Luke  7:37}

 

அவருடைய  பாதங்களின்  அருகே  பின்னாக  நின்று  அழுதுகொண்டு,  அவருடைய  பாதங்களைத்  தன்  கண்ணீரினால்  நனைத்து,  தன்  தலைமயிரினால்  துடைத்து,  அவருடைய  பாதங்களை  முத்தஞ்செய்து,  பரிமளதைலத்தைப்  பூசினாள்.  {Luke  7:38}

 

அவரை  அழைத்த  பரிசேயன்<Pharisee>  அதைக்  கண்டபோது,  இவர்  தீர்க்கதரிசியாயிருந்தால்  தம்மைத்  தொடுகிற  ஸ்திரீ  இன்னாளென்றும்  இப்படிப்பட்டவளென்றும்  அறிந்திருப்பார்;  இவள்  பாவியாயிருக்கிறாளே  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டான்.  {Luke  7:39}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  சீமோனே<Simon>,  உனக்கு  நான்  ஒரு  காரியம்  சொல்லவேண்டும்  என்றார்.  அதற்கு  அவன்:  போதகரே,  சொல்லும்  என்றான்.  {Luke  7:40}

 

அப்பொழுது  அவர்:  ஒருவனிடத்தில்  இரண்டுபேர்  கடன்பட்டிருந்தார்கள்;  ஒருவன்  ஐந்நூறு  வெள்ளிக்காசும்,  மற்றவன்  ஐம்பது  வெள்ளிக்காசும்  கொடுக்கவேண்டியதாயிருந்தது.  {Luke  7:41}

 

கொடுக்க  அவர்களுக்கு  நிர்வாகமில்லாதபோது,  இருவருக்கும்  கடனை  மன்னித்துவிட்டான்.  இப்படியிருக்க,  அவர்களில்  எவன்  அவனிடத்தில்  அதிக  அன்பாயிருப்பான்?  அதைச்  சொல்  என்றார்.  {Luke  7:42}

 

சீமோன்<Simon>  பிரதியுத்தரமாக:  எவனுக்கு  அதிகமாய்  மன்னித்துவிட்டானோ  அவனே  அதிக  அன்பாயிருப்பான்  என்று  நினைக்கிறேன்  என்றான்;  அதற்கு  அவர்:  சரியாய்  நிதானித்தாய்  என்று  சொல்லி,  {Luke  7:43}

 

ஸ்திரீயினிடமாய்த்  திரும்பி,  சீமோனை<Simon>  நோக்கி:  இந்த  ஸ்திரீயைப்  பார்க்கிறாயே;  நான்  உன்  வீட்டில்  பிரவேசித்தேன்,  நீ  என்  கால்களுக்குத்  தண்ணீர்  தரவில்லை,  இவளோ,  கண்ணீரினால்  என்  கால்களை  நனைத்து,  தன்  தலைமயிரினால்  அவைகளைத்  துடைத்தாள்.  {Luke  7:44}

 

நீ  என்னை  முத்தஞ்செய்யவில்லை,  இவளோ,  நான்  உட்பிரவேசித்தது  முதல்,  என்  பாதங்களை  ஓயாமல்  முத்தஞ்செய்தாள்.  {Luke  7:45}

 

நீ  என்  தலையில்  எண்ணெய்  பூசவில்லை,  இவளோ,  என்  பாதங்களில்  பரிமளதைலம்  பூசினாள்.  {Luke  7:46}

 

ஆதலால்  நான்  உனக்குச்  சொல்லுகிறேன்:  இவள்  செய்த  அநேக  பாவங்கள்  மன்னிக்கப்பட்டது;  இவள்  மிகவும்  அன்புகூர்ந்தாளே.  எவனுக்குக்  கொஞ்சம்  மன்னிக்கப்படுகிறதோ,  அவன்  கொஞ்சமாய்  அன்புகூருவான்  என்று  சொல்லி;  {Luke  7:47}

 

அவளை  நோக்கி:  உன்  பாவங்கள்  மன்னிக்கப்பட்டது  என்றார்.  {Luke  7:48}

 

அப்பொழுது  கூடப்  பந்தியிருந்தவர்கள்:  பாவங்களை  மன்னிக்கிற  இவன்  யார்  என்று  தங்களுக்குள்ளே  சொல்லிக்கொண்டார்கள்.  {Luke  7:49}

 

அவர்  ஸ்திரீயை  நோக்கி:  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது,  சமாதானத்தோடே  போ  என்றார்.  {Luke  7:50}

 

பின்பு,  அவர்  பட்டணங்கள்தோறும்  கிராமங்கள்தோறும்  பிரயாணம்பண்ணி,  தேவனுடைய  ராஜ்யத்திற்குரிய  நற்செய்தியைக்  கூறிப்  பிரசங்கித்துவந்தார்.  பன்னிருவரும்  அவருடனேகூட  இருந்தார்கள்.  {Luke  8:1}

 

அவர்  பொல்லாத  ஆவிகளையும்  வியாதிகளையும்  நீக்கிக்  குணமாக்கின  சில  ஸ்திரீகளும்,  ஏழு  பிசாசுகள்  நீங்கின  மகதலேனாள்<Magdalene>  என்னப்பட்ட  மரியாளும்<Mary>,  {Luke  8:2}

 

ஏரோதின்<Herod>  காரியக்காரனான  கூசாவின்<Chuza>  மனைவியாகிய  யோவன்னாளும்<Joanna>,  சூசன்னாளும்<Susanna>,  தங்கள்  ஆஸ்திகளால்  அவருக்கு  ஊழியஞ்செய்துகொண்டுவந்த  மற்ற  அநேகம்  ஸ்திரீகளும்  அவருடனே  இருந்தார்கள்.  {Luke  8:3}

 

சகல  பட்டணங்களிலுமிருந்து  திரளான  ஜனங்கள்  அவரிடத்தில்  வந்து  கூடினபோது,  அவர்  உவமையாகச்  சொன்னது:  {Luke  8:4}

 

விதைக்கிறவன்  ஒருவன்  விதையை  விதைக்கப்  புறப்பட்டான்;  அவன்  விதைக்கையில்  சில  விதை  வழியருகே  விழுந்து  மிதியுண்டது,  ஆகாயத்துப்  பறவைகள்  வந்து  அதைப்  பட்சித்துப்போட்டது.  {Luke  8:5}

 

சில  விதை  கற்பாறையின்மேல்  விழுந்தது;  அது  முளைத்தபின்  அதற்கு  ஈரமில்லாததினால்  உலர்ந்துபோயிற்று.  {Luke  8:6}

 

சில  விதை  முள்ளுள்ள  இடங்களில்  விழுந்தது;  முள்  கூட  வளர்ந்து,  அதை  நெருக்கிப்போட்டது.  {Luke  8:7}

 

சில  விதை  நல்ல  நிலத்தில்  விழுந்தது,  அது  முளைத்து,  ஒன்று  நூறாகப்  பலன்  கொடுத்தது  என்றார்.  இவைகளைச்  சொல்லி,  கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்று  சத்தமிட்டுக்  கூறினார்.  {Luke  8:8}

 

அப்பொழுது  அவருடைய  சீஷர்கள்,  இந்த  உவமையின்  கருத்து  என்னவென்று  அவரிடத்தில்  கேட்டார்கள்.  {Luke  8:9}

 

அதற்கு  அவர்:  தேவனுடைய  ராஜ்யத்தின்  இரகசியங்களை  அறியும்படி  உங்களுக்கு  அருளப்பட்டது;  மற்றவர்களுக்கோ,  அவர்கள்  கண்டும்  காணாதவர்களாகவும்,  கேட்டும்  உணராதவர்களாகவும்  இருக்கத்தக்கதாக,  அவைகள்  உவமைகளாகச்  சொல்லப்படுகிறது.  {Luke  8:10}

 

அந்த  உவமையின்  கருத்தாவது:  விதை  தேவனுடைய  வசனம்.  {Luke  8:11}

 

வழியருகே  விதைக்கப்பட்டவர்கள்  வசனத்தைக்  கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்;  அவர்கள்  விசுவாசித்து  இரட்சிக்கப்படாதபடிக்குப்  பிசாசானவன்  வந்து,  அவ்வசனத்தை  அவர்கள்  இருதயத்திலிருந்து  எடுத்துப்போடுகிறான்.  {Luke  8:12}

 

கற்பாறையின்மேல்  விதைக்கப்பட்டவர்கள்  கேட்கும்போது  சந்தோஷத்துடனே  வசனத்தை  ஏற்றுக்கொள்ளுகிறார்கள்;  ஆயினும்  தங்களுக்குள்ளே  வேர்கொள்ளாதபடியினாலே,  கொஞ்சக்காலமாத்திரம்  விசுவாசித்து,  சோதனை  காலத்தில்  பின்வாங்கிப்போகிறார்கள்.  {Luke  8:13}

 

முள்ளுள்ள  இடங்களில்  விதைக்கப்பட்டவர்கள்  வசனத்தைக்  கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்;  கேட்டவுடனே  போய்,  பிரபஞ்சத்திற்குரிய  கவலைகளினாலும்  ஐசுவரியத்தினாலும்  சிற்றின்பங்களினாலும்  நெருக்கப்பட்டு,  பலன்கொடாதிருக்கிறார்கள்.  {Luke  8:14}

 

நல்ல  நிலத்தில்  விதைக்கப்பட்டவர்கள்  வசனத்தைக்  கேட்டு,  அதை  உண்மையும்  நன்மையுமான  இருதயத்திலே  காத்துப்  பொறுமையுடனே  பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.  {Luke  8:15}

 

ஒருவனும்  விளக்கைக்  கொளுத்தி,  அதை  ஒரு  பாத்திரத்தினாலே  மூடவுமாட்டான்,  கட்டிலின்கீழே  வைக்கவுமாட்டான்;  உள்ளே  பிரவேசிக்கிறவர்கள்  அதின்  வெளிச்சத்தைக்  காணும்படிக்கு  அதை  விளக்குத்தண்டின்மேல்  வைப்பான்.  {Luke  8:16}

 

வெளியரங்கமாகாத  இரகசியமுமில்லை,  அறியப்பட்டு  வெளிக்குவராத  மறைபொருளுமில்லை.  {Luke  8:17}

 

ஆதலால்  நீங்கள்  கேட்கிற  விதத்தைக்குறித்துக்  கவனியுங்கள்;  உள்ளவனெவனோ  அவனுக்குக்  கொடுக்கப்படும்;  இல்லாதவனெவனோ  அவன்  தனக்குண்டென்று  நினைக்கிறதும்  அவனிடத்திலிருந்து  எடுத்துக்கொள்ளப்படும்  என்றார்.  {Luke  8:18}

 

அப்பொழுது  அவருடைய  தாயாரும்  சகோதரரும்  அவரிடத்தில்  வந்தார்கள்;  ஜனக்கூட்டத்தினாலே  அவரண்டையில்  அவர்கள்  சேரக்கூடாதிருந்தது.  {Luke  8:19}

 

அப்பொழுது:  உம்முடைய  தாயாரும்  உம்முடைய  சகோதரரும்  உம்மைப்  பார்க்கவேண்டுமென்று  வெளியே  நிற்கிறார்கள்  என்று  அவருக்கு  அறிவித்தார்கள்.  {Luke  8:20}

 

அதற்கு  அவர்:  தேவனுடைய  வசனத்தைக்  கேட்டு,  அதின்படி  செய்கிறவர்களே  எனக்குத்  தாயும்  எனக்குச்  சகோதரருமாயிருக்கிறார்கள்  என்றார்.  {Luke  8:21}

 

பின்பு  ஒருநாள்  அவர்  தமது  சீஷரோடுங்கூடப்  படவில்  ஏறி:  கடலின்  அக்கரைக்குப்  போவோம்  வாருங்கள்  என்றார்;  அப்படியே  புறப்பட்டுப்போனார்கள்.  {Luke  8:22}

 

படவு  ஓடுகையில்  அவர்  நித்திரையாயிருந்தார்.  அப்பொழுது  கடலிலே  சுழல்காற்றுண்டானதால்,  அவர்கள்  மோசமடையத்தக்கதாய்ப்  படவு  ஜலத்தினால்  நிறைந்தது.  {Luke  8:23}

 

அவர்கள்  அவரிடத்தில்  வந்து,  ஐயரே,  ஐயரே,  மடிந்துபோகிறோம்  என்று  அவரை  எழுப்பினார்கள்;  அவர்  எழுந்து,  காற்றையும்  ஜலத்தின்  கொந்தளிப்பையும்  அதட்டினார்;  உடனே  அவைகள்  நின்றுபோய்,  அமைதலுண்டாயிற்று.  {Luke  8:24}

 

அவர்  அவர்களை  நோக்கி:  உங்கள்  விசுவாசம்  எங்கே  என்றார்.  அவர்கள்  பயந்து  ஆச்சரியப்பட்டு:  இவர்  யாரோ,  காற்றுக்கும்  ஜலத்துக்கும்  கட்டளையிடுகிறார்,  அவைகளும்  இவருக்குக்  கீழ்ப்படிகிறதே  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  {Luke  8:25}

 

பின்பு  கலிலேயாவுக்கு<Galilee>  எதிரான  கதரேனருடைய<Gadarenes>  நாட்டில்  சேர்ந்தார்கள்.  {Luke  8:26}

 

அவர்  கரையிலிறங்கினபோது,  நெடுநாளாய்ப்  பிசாசுகள்  பிடித்தவனும்,  வஸ்திரந்தரியாதவனும்,  வீட்டில்  தங்காமல்  பிரேதக்  கல்லறைகளிலே  தங்கினவனுமாயிருந்த  அந்தப்  பட்டணத்து  மனுஷன்  ஒருவன்  அவருக்கு  எதிராக  வந்தான்.  {Luke  8:27}

 

அவன்  இயேசுவைக்<Jesus>  கண்டபோது  கூக்குரலிட்டு,  அவருக்கு  முன்பாக  விழுந்து:  இயேசுவே<Jesus>,  உன்னதமான  தேவனுடைய  குமாரனே,  எனக்கும்  உமக்கும்  என்ன?  என்னை  வேதனைப்படுத்தாதபடிக்கு  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்று  மகா  சத்தத்தோடே  சொன்னான்.  {Luke  8:28}

 

அந்த  அசுத்தஆவி  அவனை  விட்டுப்  போகும்படி  இயேசு<Jesus>  கட்டளையிட்டபடியினாலே  அப்படிச்  சொன்னான்.  அந்த  அசுத்தஆவி  வெகுகாலமாய்  அவனைப்  பிடித்திருந்தது;  அவன்  சங்கிலிகளினாலும்  விலங்குகளினாலும்  கட்டுண்டு  காவல்பண்ணப்பட்டிருந்தும்  கட்டுகளை  முறித்துப்போட்டுப்  பிசாசினால்  வனாந்தரங்களுக்குத்  துரத்தப்பட்டிருந்தான்.  {Luke  8:29}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  உன்  பேர்  என்னவென்று  கேட்டார்;  அதற்கு  அவன்:  லேகியோன்<Legion>  என்றான்;  அநேகம்  பிசாசுகள்  அவனுக்குள்  புகுந்திருந்தபடியால்  அந்தப்  பேரைச்  சொன்னான்.  {Luke  8:30}

 

தங்களைப்  பாதாளத்திலே  போகக்  கட்டளையிடாதபடிக்கு  அவைகள்  அவரை  வேண்டிக்கொண்டன.  {Luke  8:31}

 

அவ்விடத்தில்  அநேகம்  பன்றிகள்  கூட்டமாய்  மலையிலே  மேய்ந்துகொண்டிருந்தது.  அந்தப்  பன்றிகளுக்குள்  போகும்படி  தங்களுக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டன;  அவைகளுக்கு  உத்தரவுகொடுத்தார்.  {Luke  8:32}

 

அப்படியே  பிசாசுகள்  அந்த  மனுஷனைவிட்டு  நீங்கி,  பன்றிகளுக்குள்  புகுந்தன;  அப்பொழுது  அந்தப்  பன்றிக்கூட்டம்  உயர்ந்த  மேட்டிலிருந்து  கடலிலே  பாய்ந்து,  அமிழ்ந்து,  மாண்டது.  {Luke  8:33}

 

அவைகளை  மேய்த்தவர்கள்  சம்பவித்ததைக்  கண்டு,  ஓடிப்போய்,  பட்டணத்திலும்  சுற்றுப்புறங்களிலும்  அறிவித்தார்கள்.  {Luke  8:34}

 

அப்பொழுது,  சம்பவித்ததைப்  பார்க்கும்படி  ஜனங்கள்  புறப்பட்டு,  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து,  பிசாசுகள்  விட்டுப்போன  மனுஷன்  வஸ்திரந்தரித்து  இயேசுவின்<Jesus>  பாதத்தருகே  உட்கார்ந்து  புத்திதெளிந்திருக்கிறதைக்  கண்டு,  பயந்தார்கள்.  {Luke  8:35}

 

பிசாசுகள்  பிடித்திருந்தவன்  சொஸ்தமாக்கப்பட்டதைக்  கண்டவர்களும்  அதை  அவர்களுக்கு  அறிவித்தார்கள்.  {Luke  8:36}

 

அப்பொழுது  கதரேனருடைய<Gadarenes>  சுற்றுப்புறத்திலுள்ள  திரளான  ஜனங்கள்  எல்லாரும்  மிகவும்  பயமடைந்தபடியினாலே,  தங்களை  விட்டுப்  போகும்படி  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  அந்தப்படி  அவர்  படவில்  ஏறி,  திரும்பிப்போனார்.  {Luke  8:37}

 

பிசாசுகள்  நீங்கின  மனுஷன்  அவரோடேகூட  இருக்கும்படி  உத்தரவு  கேட்டான்.  {Luke  8:38}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  நீ  உன்  வீட்டுக்குத்  திரும்பிப்போய்,  தேவன்  உனக்குச்  செய்தவைகளையெல்லாம்  அறிவி  என்று  சொல்லி,  அவனை  அனுப்பிவிட்டார்.  அந்தப்படி  அவன்  போய்,  இயேசு<Jesus>  தனக்குச்  செய்தவைகளையெல்லாம்  பட்டணத்தில்  எங்கும்  பிரசித்தப்படுத்தினான்.  {Luke  8:39}

 

இயேசு<Jesus>  திரும்பிவந்தபோது  ஜனங்களெல்லாரும்  அவருக்காகக்  காத்திருந்தபடியால்  அவரைச்  சந்தோஷமாய்  ஏற்றுக்கொண்டார்கள்.  {Luke  8:40}

 

அப்பொழுது  ஜெபஆலயத்தலைவனாகிய  யவீரு<Jairus>  என்னும்  பேருள்ள  ஒருவன்  வந்து,  இயேசுவின்<Jesus>  பாதத்தில்  விழுந்து,  பன்னிரண்டு  வயதுள்ள  தன்னுடைய  ஒரே  குமாரத்தி  மரண  அவஸ்தையாயிருந்தபடியால்,  {Luke  8:41}

 

தன்  வீட்டிற்கு  வரும்படி  அவரை  வேண்டிக்கொண்டான்.  அவர்  போகையில்  திரளான  ஜனங்கள்  அவரை  நெருக்கினார்கள்.  {Luke  8:42}

 

அப்பொழுது  பன்னிரண்டு  வருஷமாய்ப்  பெரும்பாடுள்ளவளாயிருந்து,  தன்  ஆஸ்திகளையெல்லாம்  வைத்தியர்களுக்குச்  செலவழித்தும்,  ஒருவனாலும்  சொஸ்தமாக்கப்படாதிருந்த  ஒரு  ஸ்திரீ,  {Luke  8:43}

 

அவருக்குப்  பின்னாக  வந்து,  அவருடைய  வஸ்திரத்தின்  ஓரத்தைத்  தொட்டாள்;  உடனே  அவளுடைய  பெரும்பாடு  நின்றுபோயிற்று.  {Luke  8:44}

 

அப்பொழுது  இயேசு<Jesus>:  என்னைத்  தொட்டது  யார்  என்று  கேட்டார்.  எங்களுக்குத்  தெரியாதென்று  எல்லாரும்  சொன்னபோது,  பேதுருவும்<Peter>  அவனுடனே  கூட  இருந்தவர்களும்:  ஐயரே,  திரளான  ஜனங்கள்  உம்மைச்  சூழ்ந்து  நெருக்கிக்  கொண்டிருக்கிறார்களே,  என்னைத்  தொட்டது  யார்  என்று  எப்படிக்  கேட்கிறீர்  என்றார்கள்.  {Luke  8:45}

 

அதற்கு  இயேசு<Jesus>:  என்னிலிருந்து  வல்லமை  புறப்பட்டதை  அறிந்திருக்கிறேன்;  ஆதலால்  ஒருவர்  என்னைத்  தொட்டதுண்டு  என்றார்.  {Luke  8:46}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீ  தான்  மறைந்திருக்கவில்லையென்று  கண்டு,  நடுங்கிவந்து,  அவர்  முன்பாக  விழுந்து,  தான்  அவரைத்  தொட்ட  காரணத்தையும்  உடனே  தான்  சொஸ்தமானதையும்  எல்லா  ஜனங்களுக்கும்  முன்பாக  அவருக்கு  அறிவித்தாள்.  {Luke  8:47}

 

அவர்  அவளைப்  பார்த்து:  மகளே,  திடன்கொள்,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது,  சமாதானத்தோடே  போ  என்றார்.  {Luke  8:48}

 

அவர்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  ஜெபஆலயத்தலைவனுடைய  வீட்டிலிருந்து  ஒருவன்  வந்து,  அவனை  நோக்கி:  உம்முடைய  குமாரத்தி  மரித்துப்போனாள்,  போதகரை  வருத்தப்படுத்த  வேண்டாம்  என்றான்.  {Luke  8:49}

 

இயேசு<Jesus>  அதைக்  கேட்டு:  பயப்படாதே;  விசுவாசமுள்ளவனாயிரு,  அப்பொழுது  அவள்  இரட்சிக்கப்படுவாள்  என்றார்.  {Luke  8:50}

 

அவர்  வீட்டில்  வந்தபோது,  பேதுருவையும்<Peter>  யாக்கோபையும்<James>  யோவானையும்<John>  பெண்ணின்  தகப்பனையும்  தாயையும்  தவிர  வேறொருவரையும்  உள்ளே  வரவொட்டாமல்,  {Luke  8:51}

 

எல்லாரும்  அழுது  அவளைக்குறித்துத்  துக்கங்கொண்டாடுகிறதைக்  கண்டு:  அழாதேயுங்கள்,  அவள்  மரித்துப்போகவில்லை,  நித்திரையாயிருக்கிறாள்  என்றார்.  {Luke  8:52}

 

அவள்  மரித்துப்போனாளென்று  அவர்கள்  அறிந்ததினால்,  அவரைப்  பார்த்து  நகைத்தார்கள்.  {Luke  8:53}

 

எல்லாரையும்  அவர்  வெளியே  போகப்பண்ணி,  அவளுடைய  கையைப்  பிடித்து:  பிள்ளையே  எழுந்திரு  என்றார்.  {Luke  8:54}

 

அப்பொழுது  அவள்  உயிர்  திரும்ப  வந்தது;  உடனே  அவள்  எழுந்திருந்தாள்;  அவளுக்கு  ஆகாரங்கொடுக்கக்  கட்டளையிட்டார்.  {Luke  8:55}

 

அவள்  தாய்தகப்பன்மார்  ஆச்சரியப்பட்டார்கள்.  அப்பொழுது  நடந்ததை  ஒருவருக்கும்  சொல்லாமலிருக்கும்படி  அவர்களுக்குக்  கட்டளையிட்டார்.  {Luke  8:56}

 

அவர்  தம்முடைய  பன்னிரண்டு  சீஷரையும்  வரவழைத்து,  சகல  பிசாசுகளையும்  துரத்தவும்,  வியாதியுள்ளவர்களைக்  குணமாக்கவும்  அவர்களுக்கு  வல்லமையும்  அதிகாரமும்  கொடுத்து,  {Luke  9:1}

 

தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்துப்  பிரசங்கிக்கவும்,  பிணியாளிகளைச்  சொஸ்தமாக்கவும்  அவர்களை  அனுப்பினார்.  {Luke  9:2}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  வழிக்குத்  தடியையாவது  பையையாவது  அப்பத்தையாவது  காசையாவது  எடுத்துக்கொண்டு  போகவேண்டாம்;  இரண்டு  அங்கிகளைக்  கொண்டுபோகவும்  வேண்டாம்.  {Luke  9:3}

 

எந்த  வீட்டிலே  பிரவேசிக்கிறீர்களோ,  அங்கே  தங்கி,  அங்கிருந்து  புறப்படுங்கள்.  {Luke  9:4}

 

உங்களை  ஏற்றுக்கொள்ளாதவர்கள்  எவர்களோ  அவர்களுடைய  ஊரைவிட்டு  நீங்கள்  புறப்படும்போது,  அவர்களுக்குச்  சாட்சியாக  உங்கள்  கால்களில்  படிந்த  தூசியை  உதறிப்போடுங்கள்  என்றார்.  {Luke  9:5}

 

அவர்கள்  புறப்பட்டுப்போய்,  கிராமங்கள்தோறும்  திரிந்து,  எங்கும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து,  பிணியாளிகளைக்  குணமாக்கினார்கள்.  {Luke  9:6}

 

அப்பொழுது  காற்பங்கு  தேசாதிபதியாகிய  ஏரோது<Herod>  அவரால்  செய்யப்பட்ட  யாவையும்  கேள்விப்பட்டதுமன்றி;  சிலர்  யோவான்<John>  மரித்தோரிலிருந்து  எழுந்தான்  என்றும்,  {Luke  9:7}

 

சிலர்  எலியா<Elias>  தோன்றினான்  என்றும்,  வேறு  சிலர்  பூர்வகாலத்துத்  தீர்க்கதரிசிகளில்  ஒருவன்  உயிர்த்தெழுந்தான்  என்றும்  சொல்லிக்கொண்டபடியால்,  கலக்கமடைந்து:  {Luke  9:8}

 

யோவானை<John>  நான்  சிரச்சேதம்பண்ணினேன்,  இவன்  இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறான்  என்று  கேள்விப்படுகிறேனே!  இவன்  யார்?  என்று  ஏரோது<Herod>  சொல்லி,  அவரைப்  பார்க்க  விரும்பினான்.  {Luke  9:9}

 

அப்போஸ்தலர்  திரும்பிவந்து,  தாங்கள்  செய்த  யாவையும்  அவருக்கு  விவரித்துச்  சொன்னார்கள்.  அப்பொழுது  அவர்  அவர்களைக்  கூட்டிக்கொண்டு,  தனித்திருக்கும்படி  பெத்சாயிதா<Bethsaida>  என்னும்  பட்டணத்தைச்  சேர்ந்த  வனாந்தரமான  ஒரு  இடத்துக்குப்  போனார்.  {Luke  9:10}

 

ஜனங்கள்  அதை  அறிந்து,  அவர்  பின்னே  போனார்கள்;  அவர்களை  அவர்  ஏற்றுக்கொண்டு,  தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்து  அவர்களுடனே  பேசி,  சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச்  சொஸ்தப்படுத்தினார்.  {Luke  9:11}

 

சாயங்காலமாகிறபோது,  பன்னிருவரும்  சேர்ந்துவந்து,  அவரை  நோக்கி:  நாம்  இருக்கிற  இடம்  வனாந்தரமாயிருக்கிறது,  சுற்றியிருக்கிற  ஊர்களிலும்  கிராமங்களிலும்  ஜனங்கள்  போய்த்  தங்கி,  போஜனபதார்த்தங்களைச்  சம்பாதித்துக்கொள்ளும்படி  அவர்களை  அனுப்பிவிடவேண்டும்  என்றார்கள்.  {Luke  9:12}

 

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்களே  அவர்களுக்குப்  போஜனங்கொடுங்கள்  என்றார்.  அதற்கு  அவர்கள்:  எங்களிடத்தில்  ஐந்து  அப்பங்களும்  இரண்டு  மீன்களுமாத்திரமுண்டு,  இந்த  ஜனங்களெல்லாருக்கும்  போஜனங்  கொடுக்கவேண்டியதானால்,  நாங்கள்  போய்  வாங்கிக்கொண்டு  வரவேண்டுமே  என்றார்கள்.  {Luke  9:13}

 

ஏறக்குறைய  ஐயாயிரம்  புருஷர்  இருந்தார்கள்.  அவர்களைப்  பந்திக்கு  ஐம்பது  ஐம்பதுபேராக  உட்காரும்படி  சொல்லுங்கள்  என்று  தம்முடைய  சீஷர்களுக்குச்  சொன்னார்.  {Luke  9:14}

 

அவர்கள்  அந்தப்படியே  எல்லாரையும்  உட்காரும்படி  செய்தார்கள்.  {Luke  9:15}

 

அப்பொழுது  அவர்  அந்த  ஐந்து  அப்பங்களையும்  அந்த  இரண்டு  மீன்களையும்  எடுத்து,  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  அவைகளை  ஆசீர்வதித்து,  பிட்டு,  ஜனங்கள்முன்  வைக்கும்படி  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்.  {Luke  9:16}

 

எல்லாரும்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்.  மீதியான  துணிக்கைகள்  பன்னிரண்டு  கூடைநிறைய  எடுக்கப்பட்டது.  {Luke  9:17}

 

பின்பு  அவர்  தமது  சீஷரோடேகூடத்  தனித்து  ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில்,  அவர்களை  நோக்கி:  ஜனங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறார்கள்  என்று  கேட்டார்.  {Luke  9:18}

 

அதற்கு  அவர்கள்:  சிலர்  உம்மை  யோவான்ஸ்நானன்<John  the  Baptist>  என்றும்,  சிலர்  எலியா<Elias>  என்றும்,  வேறு  சிலர்  பூர்வகாலத்துத்  தீர்க்கதரிசிகளில்  ஒருவர்  உயிர்த்தெழுந்தார்  என்றும்  சொல்லுகிறார்கள்  என்றார்கள்.  {Luke  9:19}

 

அப்பொழுது  அவர்:  நீங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டார்;  பேதுரு<Peter>  பிரதியுத்தரமாக:  நீர்  தேவனுடைய  கிறிஸ்து<Christ>  என்றான்.  {Luke  9:20}

 

அப்பொழுது  அவர்கள்  அதை  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்கு  உறுதியாய்க்  கட்டளையிட்டார்.  {Luke  9:21}

 

மேலும்  மனுஷகுமாரன்  பல  பாடுகள்படவும்,  மூப்பராலும்  பிரதான  ஆசாரியராலும்  வேதபாரகராலும்  ஆகாதவனென்று  தள்ளப்படவும்,  கொல்லப்படவும்,  மூன்றாம்  நாளில்  உயிர்த்தெழுந்திருக்கவும்  வேண்டும்  என்று  சொன்னார்.  {Luke  9:22}

 

பின்பு  அவர்  எல்லாரையும்  நோக்கி:  ஒருவன்  என்  பின்னே  வர  விரும்பினால்  அவன்  தன்னைத்தான்  வெறுத்து,  தன்  சிலுவையை  அநுதினமும்  எடுத்துக்கொண்டு,  என்னைப்  பின்பற்றக்கடவன்.  {Luke  9:23}

 

தன்  ஜீவனை  இரட்சிக்க  விரும்புகிறவன்  அதை  இழந்துபோவான்;  என்னிமித்தமாகத்  தன்  ஜீவனை  இழந்துபோகிறவன்  அதை  இரட்சித்துக்கொள்ளுவான்.  {Luke  9:24}

 

மனுஷன்  உலகமுழுவதையும்  ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,  தன்னைத்  தான்  கெடுத்து  நஷ்டப்படுத்தினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  {Luke  9:25}

 

என்னைக்குறித்தும்  என்  வார்த்தைகளைக்குறித்தும்  எவன்  வெட்கப்படுகிறானோ,  அவனைக்குறித்து  மனுஷகுமாரனும்  தம்முடைய  மகிமையோடும்  பிதாவின்  மகிமையோடும்  பரிசுத்த  தூதர்களின்  மகிமையோடும்  வரும்போது  வெட்கப்படுவார்.  {Luke  9:26}

 

இங்கே  நிற்கிறவர்களில்  சிலர்  தேவனுடைய  ராஜ்யத்தைக்  காணுமுன்,  மரணத்தை  ருசிபார்ப்பதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  9:27}

 

இந்த  வார்த்தைகளை  அவர்  சொல்லி  ஏறக்குறைய  எட்டுநாளானபின்பு,  அவர்  பேதுருவையும்<Peter>  யோவானையும்<John>  யாக்கோபையும்<James>  கூட்டிக்கொண்டு,  ஜெபம்பண்ணுகிறதற்கு  ஒரு  மலையின்மேல்  ஏறினார்.  {Luke  9:28}

 

அவர்  ஜெபம்பண்ணுகையில்,  அவருடைய  முகரூபம்  மாறிற்று,  அவருடைய  வஸ்திரம்  வெண்மையாகிப்  பிரகாசித்தது.  {Luke  9:29}

 

அன்றியும்  மோசே<Moses>  எலியா<Elias>  என்னும்  இரண்டுபேரும்  மகிமையோடே  காணப்பட்டு,  அவருடனே  சம்பாஷணைபண்ணி,  {Luke  9:30}

 

அவர்  எருசலேமிலே<Jerusalem>  நிறைவேற்றப்போகிற  அவருடைய  மரணத்தைக்குறித்துப்  பேசிக்கொண்டிருந்தார்கள்.  {Luke  9:31}

 

பேதுருவும்<Peter>  அவனோடிருந்தவர்களும்  நித்திரைமயக்கமாயிருந்தார்கள்.  ஆகிலும்  அவர்கள்  விழித்து  அவருடைய  மகிமையையும்  அவரோடே  நின்ற  அவ்விரண்டுபேரையும்  கண்டார்கள்.  {Luke  9:32}

 

அவ்விருவரும்  அவரைவிட்டுப்  பிரிந்துபோகையில்,  பேதுரு<Peter>  இயேசுவை<Jesus>  நோக்கி:  ஐயரே,  நாம்  இங்கே  இருக்கிறது  நல்லது,  உமக்கு  ஒரு  கூடாரமும்,  மோசேக்கு<Moses>  ஒரு  கூடாரமும்,  எலியாவுக்கு<Elias>  ஒரு  கூடாரமுமாக,  மூன்று  கூடாரங்களைப்  போடுவோம்  என்று,  தான்  சொல்லுகிறது  இன்னதென்று  அறியாமல்  சொன்னான்.  {Luke  9:33}

 

இப்படி  அவன்  பேசுகையில்,  ஒரு  மேகம்  வந்து  அவர்கள்மேல்  நிழலிட்டது;  அவர்கள்  அந்த  மேகத்துக்குள்  பிரவேசிக்கையில்  சீஷர்கள்  பயந்தார்கள்.  {Luke  9:34}

 

அப்பொழுது:  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவருக்குச்  செவிகொடுங்கள்  என்று  மேகத்திலிருந்து  ஒரு  சத்தமுண்டாயிற்று.  {Luke  9:35}

 

அந்தச்  சத்தம்  உண்டாகையில்  இயேசு<Jesus>  ஒருவரே  காணப்பட்டார்.  தாங்கள்  கண்டவைகளில்  ஒன்றையும்  அவர்கள்  அந்நாட்களில்  ஒருவருக்கும்  சொல்லாமல்  அடக்கிவைத்திருந்தார்கள்.  {Luke  9:36}

 

மறுநாளில்  அவர்கள்  மலையிலிருந்திறங்கினபோது,  திரளான  ஜனங்கள்  அவருக்கு  எதிர்கொண்டுவந்தார்கள்.  {Luke  9:37}

 

அவர்களில்  ஒருவன்  சத்தமிட்டு:  போதகரே,  என்  மகனைக்  கடாட்சித்தருள  வேண்டுமென்று  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்,  அவன்  எனக்கு  ஒரே  பிள்ளையாயிருக்கிறான்.  {Luke  9:38}

 

ஒரு  ஆவி  அவனைப்  பிடிக்கிறது,  அப்பொழுது  அலறுகிறான்,  அது  அவனை  நுரைதள்ள  அலைக்கழித்து,  அவனைக்  கசக்கினபின்பும்,  அவனை  விட்டு  நீங்குவது  அரிதாயிருக்கிறது.  {Luke  9:39}

 

அதைத்  துரத்திவிடும்படி  உம்முடைய  சீஷரை  வேண்டிக்கொண்டேன்,  அவர்களால்  கூடாமற்போயிற்று  என்றான்.  {Luke  9:40}

 

இயேசு<Jesus>  பிரதியுத்தரமாக:  விசுவாசமில்லாத  மாறுபாடான  சந்ததியே,  எதுவரைக்கும்  நான்  உங்களோடிருந்து,  உங்களிடத்தில்  பொறுமையாயிருப்பேன்?  உன்  மகனை  இங்கே  கொண்டுவா  என்றார்.  {Luke  9:41}

 

அவன்  சமீபித்துவருகையில்,  பிசாசு  அவனைக்  கீழே  தள்ளி,  அலைக்கழித்தது.  இயேசு<Jesus>  அந்த  அசுத்தஆவியை  அதட்டி,  இளைஞனைக்  குணமாக்கி,  அவன்  தகப்பனிடத்தில்  அவனை  ஒப்புக்கொடுத்தார்.  {Luke  9:42}

 

அப்பொழுது  எல்லாரும்  தேவனுடைய  மகத்துவத்தைக்  குறித்துப்  பிரமித்தார்கள்.  இயேசு<Jesus>  செய்த  யாவையுங்குறித்து  அனைவரும்  ஆச்சரியப்படுகையில்  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  {Luke  9:43}

 

நீங்கள்  இந்த  வார்த்தைகளைக்  கவனமாய்க்  கேளுங்கள்;  மனுஷகுமாரன்  மனுஷர்  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார்  என்றார்.  {Luke  9:44}

 

அவர்கள்  அந்த  வார்த்தையின்  கருத்தை  அறிந்துகொள்ளவில்லை;  அது  அவர்களுக்குத்  தோன்றாமல்  மறைபொருளாயிருந்தது;  அந்த  வார்த்தையைக்குறித்து  அவரிடத்தில்  விசாரிக்கவும்  பயந்தார்கள்.  {Luke  9:45}

 

பின்பு  தங்களில்  எவன்  பெரியவனாயிருப்பானென்கிற  வாக்குவாதம்  அவர்களுக்குள்  உண்டாயிற்று.  {Luke  9:46}

 

இயேசு<Jesus>  அவர்கள்  இருதயத்தின்  யோசனையை  அறிந்து,  ஒரு  சிறுபிள்ளையை  எடுத்து,  அதைத்  தமதருகே  நிறுத்தி,  {Luke  9:47}

 

அவர்களை  நோக்கி:  இந்தச்  சிறுபிள்ளையை  என்  நாமத்தினிமித்தம்  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  அனுப்பினவரை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  உங்களெல்லாருக்குள்ளும்  எவன்  சிறியவனாயிருக்கிறானோ  அவனே  பெரியவனாயிருப்பான்  என்றார்.  {Luke  9:48}

 

அப்பொழுது  யோவான்<John>  அவரை  நோக்கி:  ஐயரே,  ஒருவன்  உம்முடைய  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறதை  நாங்கள்  கண்டு,  அவன்  எங்களுடனேகூட  உம்மைப்  பின்பற்றாதவனானபடியால்,  அவனைத்  தடுத்தோம்  என்றான்.  {Luke  9:49}

 

அதற்கு  இயேசு<Jesus>:  தடுக்கவேண்டாம்;  நமக்கு  விரோதியாயிராதவன்  நமது  பட்சத்திலிருக்கிறான்  என்றார்.  {Luke  9:50}

 

பின்பு,  அவர்  எடுத்துக்கொள்ளப்படும்  நாட்கள்  சமீபித்தபோது,  அவர்  எருசலேமுக்குப்<Jerusalem>  போகத்  தமது  முகத்தைத்திருப்பி,  {Luke  9:51}

 

தமக்கு  முன்னாகத்  தூதர்களை  அனுப்பினார்.  அவர்கள்  போய்,  அவருக்கு  இடத்தை  ஆயத்தம்பண்ணும்படி  சமாரியருடைய<Samaritans>  ஒரு  கிராமத்திலே  பிரவேசித்தார்கள்.  {Luke  9:52}

 

அவர்  எருசலேமுக்குப்<Jerusalem>  போக  நோக்கமாயிருந்தபடியினால்  அவ்வூரார்  அவரை  ஏற்றுக்கொள்ளவில்லை.  {Luke  9:53}

 

அவருடைய  சீஷராகிய  யாக்கோபும்<James>  யோவானும்<John>  அதைக்  கண்டபோது:  ஆண்டவரே,  எலியா<Elias>  செய்ததுபோல,  வானத்திலிருந்து  அக்கினி  இறங்கி  இவர்களை  அழிக்கும்படி  நாங்கள்  கட்டளையிட  உமக்குச்  சித்தமா  என்று  கேட்டார்கள்.  {Luke  9:54}

 

அவர்  திரும்பிப்பார்த்து:  நீங்கள்  இன்ன  ஆவியுள்ளவர்களென்பதை  அறியீர்கள்  என்று  அதட்டி,  {Luke  9:55}

 

மனுஷகுமாரன்  மனுஷருடைய  ஜீவனை  அழிக்கிறதற்கு  அல்ல,  இரட்சிக்கிறதற்கே  வந்தார்  என்றார்.  அதன்பின்பு  அவர்கள்  வேறொரு  கிராமத்துக்குப்  போனார்கள்.  {Luke  9:56}

 

அவர்கள்  வழியிலே  போகையில்  ஒருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  நீர்  எங்கே  போனாலும்  உம்மைப்  பின்பற்றி  வருவேன்  என்றான்.  {Luke  9:57}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நரிகளுக்குக்  குழிகளும்  ஆகாயத்துப்  பறவைகளுக்குக்  கூடுகளும்  உண்டு,  மனுஷகுமாரனுக்கோ  தலைசாய்க்க  இடமில்லை  என்றார்.  {Luke  9:58}

 

வேறொருவனை  அவர்  நோக்கி:  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  அதற்கு  அவன்:  ஆண்டவரே,  முன்பு  நான்  போய்  என்  தகப்பனை  அடக்கம்பண்ண  எனக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  {Luke  9:59}

 

அதற்கு  இயேசு<Jesus>:  மரித்தோர்  தங்கள்  மரித்தோரை  அடக்கம்பண்ணட்டும்;  நீ  போய்,  தேவனுடைய  ராஜ்யத்தைக்குறித்துப்  பிரசங்கி  என்றார்.  {Luke  9:60}

 

பின்பு  வேறொருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  உம்மைப்  பின்பற்றுவேன்,  ஆனாலும்  முன்பு  நான்  போய்  வீட்டிலிருக்கிறவர்களிடத்தில்  அனுப்புவித்துக்கொண்டுவரும்படி  எனக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  {Luke  9:61}

 

அதற்கு  இயேசு<Jesus>:  கலப்பையின்மேல்  தன்  கையை  வைத்துப்  பின்னிட்டுப்பார்க்கிற  எவனும்  தேவனுடைய  ராஜ்யத்துக்குத்  தகுதியுள்ளவன்  அல்ல  என்றார்.  {Luke  9:62}

 

இவைகளுக்குப்பின்பு  கர்த்தர்  வேறே  எழுபதுபேரை  நியமித்து,  தாம்  போகும்  சகல  பட்டணங்களுக்கும்  இடங்களுக்கும்  அவர்களைத்  தமக்கு  முன்னே  இரண்டிரண்டு  பேராக  அனுப்பினார்.  {Luke  10:1}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  அறுப்பு  மிகுதி,  வேலையாட்களோ  கொஞ்சம்;  ஆகையால்  அறுப்புக்கு  எஜமான்  தமது  அறுப்புக்கு  வேலையாட்களை  அனுப்பும்படி  அவரை  வேண்டிக்கொள்ளுங்கள்.  {Luke  10:2}

 

புறப்பட்டுப்போங்கள்;  ஆட்டுக்குட்டிகளை  ஓநாய்களுக்குள்ளே  அனுப்புகிறதுபோல,  இதோ,  நான்  உங்களை  அனுப்புகிறேன்.  {Luke  10:3}

 

பணப்பையையும்  சாமான்  பையையும்  பாதரட்சைகளையும்  கொண்டுபோகவேண்டாம்;  வழியிலே  ஒருவரையும்  வினவவும்  வேண்டாம்.  {Luke  10:4}

 

ஒரு  வீட்டில்  பிரவேசிக்கிறபோது:  இந்த  வீட்டுக்குச்  சமாதானம்  உண்டாவதாகவென்று  முதலாவது  சொல்லுங்கள்.  {Luke  10:5}

 

சமாதான  பாத்திரன்  அங்கே  இருந்தால்,  நீங்கள்  கூறின  சமாதானம்  அவனிடத்தில்  தங்கும்,  இல்லாதிருந்தால்  அது  உங்களிடத்திற்குத்  திரும்பிவரும்.  {Luke  10:6}

 

அந்த  வீட்டிலேதானே  நீங்கள்  தங்கியிருந்து,  அவர்கள்  கொடுக்கிறவைகளைப்  புசித்துக்  குடியுங்கள்;  வேலையாள்  தன்  கூலிக்குப்  பாத்திரனாயிருக்கிறான்.  வீட்டுக்கு  வீடு  போகாதிருங்கள்.  {Luke  10:7}

 

ஒரு  பட்டணத்தில்  நீங்கள்  பிரவேசிக்கிறபொழுது,  ஜனங்கள்  உங்களை  ஏற்றுக்கொண்டால்  அவர்கள்  உங்கள்முன்  வைக்கிறவைகளை  நீங்கள்  புசித்து,  {Luke  10:8}

 

அவ்விடத்திலுள்ள  பிணியாளிகளைச்  சொஸ்தமாக்கி:  தேவனுடைய  ராஜ்யம்  உங்களுக்குச்  சமீபமாய்  வந்திருக்கிறது  என்று  அவர்களுக்குச்  சொல்லுங்கள்.  {Luke  10:9}

 

யாதொரு  பட்டணத்தில்  நீங்கள்  பிரவேசிக்கிறபொழுது,  ஜனங்கள்  உங்களை  ஏற்றுக்கொள்ளாவிட்டால்  அதின்  வீதிகளிலே  நீங்கள்  போய்:  {Luke  10:10}

 

எங்களில்  ஒட்டின  உங்கள்  பட்டணத்தின்  தூசியையும்  உங்களுக்கு  விரோதமாய்த்  துடைத்துப்போடுகிறோம்;  ஆயினும்  தேவனுடைய  ராஜ்யம்  உங்களுக்குச்  சமீபமாய்  வந்திருக்கிறதென்பதை  அறிந்துகொள்வீர்களாக  என்று  சொல்லுங்கள்.  {Luke  10:11}

 

அந்தப்  பட்டணத்திற்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்  அந்த  நாளிலே  சோதோம்<Sodom>  நாட்டிற்கு  நேரிடுவது  இலகுவாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  10:12}

 

கோராசீன்<Chorazin>  பட்டணமே,  உனக்கு  ஐயோ,  பெத்சாயிதா<Bethsaida>  பட்டணமே,  உனக்கு  ஐயோ,  உங்களில்  செய்யப்பட்ட  பலத்த  செய்கைகள்  தீருவிலும்<Tyre>  சீதோனிலும்<Sidon>  செய்யப்பட்டிருந்ததானால்,  அப்பொழுதே  இரட்டுடுத்தி,  சாம்பலில்  உட்கார்ந்து,  மனந்திரும்பியிருப்பார்கள்.  {Luke  10:13}

 

நியாயத்தீர்ப்புநாளில்  உங்களுக்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்,  தீருவுக்கும்<Tyre>  சீதோனுக்கும்<Sidon>  நேரிடுவது  இலகுவாயிருக்கும்.  {Luke  10:14}

 

வானபரியந்தம்  உயர்த்தப்பட்ட  கப்பர்நகூமே<Capernaum>,  நீ  பாதாளபரியந்தம்  தாழ்த்தப்படுவாய்  என்று  சொல்லி,  {Luke  10:15}

 

சீஷரை  நோக்கி:  உங்களுக்குச்  செவிகொடுக்கிறவன்  எனக்குச்  செவிகொடுக்கிறான்,  உங்களை  அசட்டைபண்ணுகிறவன்  என்னை  அசட்டைபண்ணுகிறான்,  என்னை  அசட்டைபண்ணுகிறவன்  என்னை  அனுப்பினவரை  அசட்டைபண்ணுகிறான்  என்றார்.  {Luke  10:16}

 

பின்பு  அந்த  எழுபதுபேரும்  சந்தோஷத்தோடே  திரும்பிவந்து:  ஆண்டவரே,  உம்முடைய  நாமத்தினாலே  பிசாசுகளும்  எங்களுக்குக்  கீழ்ப்படிகிறது  என்றார்கள்.  {Luke  10:17}

 

அவர்களை  அவர்  நோக்கி:  சாத்தான்  மின்னலைப்போல  வானத்திலிருந்து  விழுகிறதைக்  கண்டேன்.  {Luke  10:18}

 

இதோ,  சர்ப்பங்களையும்  தேள்களையும்  மிதிக்கவும்,  சத்துருவினுடைய  சகல  வல்லமையையும்  மேற்கொள்ளவும்  உங்களுக்கு  அதிகாரங்கொடுக்கிறேன்;  ஒன்றும்  உங்களைச்  சேதப்படுத்தமாட்டாது.  {Luke  10:19}

 

ஆகிலும்,  ஆவிகள்  உங்களுக்குக்  கீழ்ப்படிகிறதற்காக  நீங்கள்  சந்தோஷப்படாமல்,  உங்கள்  நாமங்கள்  பரலோகத்தில்  எழுதியிருக்கிறதற்காகச்  சந்தோஷப்படுங்கள்  என்றார்.  {Luke  10:20}

 

அந்த  வேளையில்  இயேசு<Jesus>  ஆவியிலே  களிகூர்ந்து:  பிதாவே!  வானத்துக்கும்  பூமிக்கும்  ஆண்டவரே!  இவைகளை  நீர்  ஞானிகளுக்கும்  கல்விமான்களுக்கும்  மறைத்து,  பாலகருக்கு  வெளிப்படுத்தினபடியால்  உம்மை  ஸ்தோத்திரிக்கிறேன்;  ஆம்,  பிதாவே!  இப்படிச்  செய்வது  உம்முடைய  திருவுளத்துக்குப்  பிரியமாயிருந்தது.  {Luke  10:21}

 

சகலமும்  என்  பிதாவினால்  எனக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;  பிதா  தவிர  வேறொருவனும்  குமாரன்  இன்னாரென்று  அறியான்,  குமாரனும்,  குமாரன்  அவரை  எவனுக்கு  வெளிப்படுத்தச்  சித்தமாயிருக்கிறாரோ  அவனுந்தவிர,  வேறொருவனும்  பிதா  இன்னாரென்று  அறியான்  என்றார்.  {Luke  10:22}

 

பின்பு  தமது  சீஷரிடத்தில்  திரும்பி,  தனித்து  அவர்களை  நோக்கி:  நீங்கள்  காண்கிறவைகளைக்  காணுங்  கண்கள்  பாக்கியமுள்ளவைகள்.  {Luke  10:23}

 

அநேக  தீர்க்கதரிசிகளும்  ராஜாக்களும்  நீங்கள்  காண்கிறவைகளைக்  காணவும்,  நீங்கள்  கேட்கிறவைகளைக்  கேட்கவும்  விரும்பியும்,  காணாமலும்  கேளாமலும்  போனார்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  10:24}

 

அப்பொழுது  நியாயசாஸ்திரி  ஒருவன்  எழுந்திருந்து,  அவரைச்  சோதிக்கும்படி:  போதகரே,  நித்திய  ஜீவனைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு  நான்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டான்.  {Luke  10:25}

 

அதற்கு  அவர்:  நியாயப்பிரமாணத்தில்  என்ன  எழுதியிருக்கிறது?  நீ  வாசித்திருக்கிறது  என்ன  என்றார்.  {Luke  10:26}

 

அவன்  பிரதியுத்தரமாக:  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உன்  முழு  இருதயத்தோடும்  உன்  முழு  ஆத்துமாவோடும்  உன்  முழுப்  பலத்தோடும்  உன்  முழுச்சிந்தையோடும்  அன்புகூர்ந்து,  உன்னிடத்தில்  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்று  எழுதியிருக்கிறது  என்றான்.  {Luke  10:27}

 

அவர்  அவனை  நோக்கி:  நிதானமாய்  உத்தரவு  சொன்னாய்;  அப்படியே  செய்,  அப்பொழுது  பிழைப்பாய்  என்றார்.  {Luke  10:28}

 

அவன்  தன்னை  நீதிமான்  என்று  காண்பிக்க  மனதாய்  இயேசுவை<Jesus>  நோக்கி:  எனக்குப்  பிறன்  யார்  என்று  கேட்டான்.  {Luke  10:29}

 

இயேசு<Jesus>  பிரதியுத்தரமாக:  ஒரு  மனுஷன்  எருசலேமிலிருந்து<Jerusalem>  எரிகோவுக்குப்<Jericho>  போகையில்  கள்ளர்  கையில்  அகப்பட்டான்;  அவர்கள்  அவன்  வஸ்திரங்களை  உரிந்துகொண்டு,  அவனைக்  காயப்படுத்தி,  குற்றுயிராக  விட்டுப்  போனார்கள்.  {Luke  10:30}

 

அப்பொழுது  தற்செயலாய்  ஒரு  ஆசாரியன்  அந்த  வழியே  வந்து,  அவனைக்  கண்டு,  பக்கமாய்  விலகிப்போனான்.  {Luke  10:31}

 

அந்தப்படியே  ஒரு  லேவியனும்<Levite>  அந்த  இடத்துக்கு  வந்து,  அவனைக்  கண்டு,  பக்கமாய்  விலகிப்போனான்.  {Luke  10:32}

 

பின்பு  சமாரியன்<Samaritan>  ஒருவன்  பிரயாணமாய்  வருகையில்,  அவனைக்  கண்டு,  மனதுருகி,  {Luke  10:33}

 

கிட்ட  வந்து,  அவனுடைய  காயங்களில்  எண்ணெயும்  திராட்சரசமும்  வார்த்து,  காயங்களைக்  கட்டி,  அவனைத்  தன்  சுயவாகனத்தின்மேல்  ஏற்றி,  சத்திரத்துக்குக்  கொண்டுபோய்,  அவனைப்  பராமரித்தான்.  {Luke  10:34}

 

மறுநாளிலே  தான்  புறப்படும்போது  இரண்டு  பணத்தை  எடுத்து,  சத்திரத்தான்  கையில்  கொடுத்து:  நீ  இவனை  விசாரித்துக்கொள்,  அதிகமாய்  ஏதாகிலும்  இவனுக்காகச்  செலவழித்தால்,  நான்  திரும்பிவரும்போது  அதை  உனக்குத்  தருவேன்  என்றான்.  {Luke  10:35}

 

இப்படியிருக்க,  கள்ளர்கையில்  அகப்பட்டவனுக்கு  இந்த  மூன்றுபேரில்  எவன்  பிறனாயிருந்தான்?  உனக்கு  எப்படித்  தோன்றுகிறது  என்றார்.  {Luke  10:36}

 

அதற்கு  அவன்:  அவனுக்கு  இரக்கஞ்செய்தவனே  என்றான்.  அப்பொழுது  இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  நீயும்  போய்  அந்தப்படியே  செய்  என்றார்.  {Luke  10:37}

 

பின்பு,  அவர்கள்  பிரயாணமாய்ப்  போகையில்,  அவர்  ஒரு  கிராமத்தில்  பிரவேசித்தார்.  அங்கே  மார்த்தாள்<Martha>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  ஸ்திரீ  அவரைத்  தன்  வீட்டிலே  ஏற்றுக்கொண்டாள்.  {Luke  10:38}

 

அவளுக்கு  மரியாள்<Mary>  என்னப்பட்ட  ஒரு  சகோதரி  இருந்தாள்;  அவள்  இயேசுவின்<Jesus>  பாதத்தருகே  உட்கார்ந்து,  அவருடைய  வசனத்தைக்  கேட்டுக்கொண்டிருந்தாள்.  {Luke  10:39}

 

மார்த்தாளோ<Martha>  பற்பல  வேலைகளைச்  செய்வதில்  மிகவும்  வருத்தமடைந்து,  அவரிடத்தில்  வந்து:  ஆண்டவரே,  நான்  தனியே  வேலைசெய்யும்படி  என்  சகோதரி  என்னை  விட்டுவந்திருக்கிறதைக்  குறித்து  உமக்குக்  கவையில்லையா?  எனக்கு  உதவிசெய்யும்படி  அவளுக்குச்  சொல்லும்  என்றாள்.  {Luke  10:40}

 

இயேசு<Jesus>  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  மார்த்தாளே<Martha>,  மார்த்தாளே<Martha>,  நீ  அநேக  காரியங்களைக்குறித்துக்  கவலைப்பட்டுக்  கலங்குகிறாய்.  {Luke  10:41}

 

தேவையானது  ஒன்றே,  மரியாள்<Mary>  தன்னை  விட்டெடுபடாத  நல்ல  பங்கைத்  தெரிந்துகொண்டாள்  என்றார்.  {Luke  10:42}

 

அவர்  ஒரு  இடத்தில்  ஜெபம்பண்ணி  முடித்தபின்பு,  அவருடைய  சீஷரில்  ஒருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  யோவான்<John>  தன்  சீஷருக்கு  ஜெபம்பண்ணப்  போதித்ததுபோல,  நீரும்  எங்களுக்குப்  போதிக்கவேண்டும்  என்றான்.  {Luke  11:1}

 

அதற்கு  அவர்:  நீங்கள்  ஜெபம்பண்ணும்போது:  பரமண்டலங்களிலிருக்கிற  எங்கள்  பிதாவே,  உம்முடைய  நாமம்  பரிசுத்தப்படுவதாக;  உம்முடைய  ராஜ்யம்  வருவதாக;  உம்முடைய  சித்தம்  பரமண்டலத்திலே  செய்யப்படுகிறதுபோலப்  பூமியிலேயும்  செய்யப்படுவதாக;  {Luke  11:2}

 

எங்களுக்கு  வேண்டிய  ஆகாரத்தை  அன்றன்றும்  எங்களுக்குத்  தாரும்;  {Luke  11:3}

 

எங்கள்  பாவங்களை  எங்களுக்கு  மன்னியும்;  நாங்களும்  எங்களிடத்தில்  கடன்பட்ட  எவனுக்கும்  மன்னிக்கிறோமே;  எங்களைச்  சோதனைக்குட்படப்பண்ணாமல்,  தீமையினின்று  எங்களை  இரட்சித்துக்  கொள்ளும்,  என்று  சொல்லுங்கள்  என்றார்.  {Luke  11:4}

 

பின்னும்  அவர்  அவர்களை  நோக்கி:  உங்களில்  ஒருவன்  தனக்குச்  சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில்  பாதிராத்திரியிலே  போய்:  சிநேகிதனே,  {Luke  11:5}

 

என்  சிநேகிதன்  ஒருவன்  வழிப்பிரயாணமாய்  என்னிடத்தில்  வந்திருக்கிறான்,  அவன்முன்  வைக்கிறதற்கு  என்னிடத்தில்  ஒன்றுமில்லை,  நீ  மூன்று  அப்பங்களை  எனக்குக்  கடனாகத்  தரவேண்டும்  என்று  கேட்டுக்கொண்டான்.  {Luke  11:6}

 

வீட்டுக்குள்  இருக்கிறவன்  பிரதியுத்தரமாக:  என்னைத்  தொந்தரவு  செய்யாதே,  கதவு  பூட்டியாயிற்று,  என்  பிள்ளைகள்  என்னோடேகூடப்  படுத்திருக்கிறார்கள்,  நான்  எழுந்திருந்து,  உனக்குத்  தரக்கூடாது  என்று  சொன்னான்.  {Luke  11:7}

 

பின்பு,  தனக்கு  அவன்  சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம்  எழுந்து  அவனுக்குக்  கொடாவிட்டாலும்,  தன்னிடத்தில்  அவன்  வருந்திக்  கேட்கிறதினிமித்தமாவது  எழுந்திருந்து,  அவனுக்குத்  தேவையானதைக்  கொடுப்பான்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  11:8}

 

மேலும்  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறதாவது:  கேளுங்கள்,  அப்பொழுது  உங்களுக்குக்  கொடுக்கப்படும்;  தேடுங்கள்,  அப்பொழுது  கண்டடைவீர்கள்;  தட்டுங்கள்,  அப்பொழுது  உங்களுக்குத்  திறக்கப்படும்.  {Luke  11:9}

 

ஏனென்றால்,  கேட்கிறவன்  எவனும்  பெற்றுக்கொள்ளுகிறான்;  தேடுகிறவன்  கண்டடைகிறான்;  தட்டுகிறவனுக்குத்  திறக்கப்படும்.  {Luke  11:10}

 

உங்களில்  தகப்பனாயிருக்கிற  ஒருவனிடத்தில்  மகன்  அப்பங்கேட்டால்,  அவனுக்குக்  கல்லைக்  கொடுப்பானா?  மீனைக்  கேட்டால்  மீனுக்குப்  பதிலாய்ப்  பாம்பைக்  கொடுப்பானா?  {Luke  11:11}

 

அல்லது  முட்டையைக்  கேட்டால்,  அவனுக்குத்  தேளைக்  கொடுப்பானா?  {Luke  11:12}

 

பொல்லாதவர்களாகிய  நீங்கள்  உங்கள்  பிள்ளைகளுக்கு  நல்ல  ஈவுகளைக்  கொடுக்க  அறிந்திருக்கும்போது,  பரமபிதாவானவர்  தம்மிடத்தில்  வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப்  பரிசுத்த  ஆவியைக்  கொடுப்பது  அதிக  நிச்சயம்  அல்லவா  என்றார்.  {Luke  11:13}

 

பின்பு  அவர்  ஊமையாயிருந்த  ஒரு  பிசாசைத்  துரத்தினார்.  பிசாசு  புறப்பட்டுப்போனபின்பு  ஊமையன்  பேசினான்;  ஜனங்கள்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Luke  11:14}

 

அவர்களில்  சிலர்:  இவன்  பிசாசுகளின்  தலைவனாகிய  பெயெல்செபூலைக்கொண்டு<Beelzebub>  பிசாசுகளைத்  துரத்துகிறான்  என்றார்கள்.  {Luke  11:15}

 

வேறு  சிலர்  அவரைச்  சோதிக்கும்படி  வானத்திலிருந்து  ஒரு  அடையாளத்தைக்  காட்டவேண்டுமென்று  அவரிடத்தில்  கேட்டார்கள்.  {Luke  11:16}

 

அவர்களுடைய  சிந்தனைகளை  அவர்  அறிந்து,  அவர்களை  நோக்கி:  தனக்குத்  தானே  விரோதமாய்ப்  பிரிந்திருக்கிற  எந்த  ராஜ்யமும்  பாழாய்ப்போம்;  தனக்குத்தானே  விரோதமாய்ப்  பிரிந்திருக்கிற  எந்த  வீடும்  விழுந்துபோம்.  {Luke  11:17}

 

சாத்தானும்  தனக்குத்தானே  விரோதமாய்ப்  பிரிந்திருந்தால்  அவன்  ராஜ்யம்  எப்படி  நிலைநிற்கும்?  இப்படியிருக்க,  பெயெல்செபூலைக்கொண்டு<Beelzebub>  நான்  பிசாசுகளைத்  துரத்துகிறேன்  என்கிறீர்களே.  {Luke  11:18}

 

நான்  பெயெல்செபூலினாலே<Beelzebub>  பிசாசுகளைத்  துரத்தினால்,  உங்கள்  பிள்ளைகள்  அவைகளை  யாராலே  துரத்துகிறார்கள்?  ஆகையால்,  அவர்களே  உங்களை  நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.  {Luke  11:19}

 

நான்  தேவனுடைய  விரலினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறபடியால்,  தேவனுடைய  ராஜ்யம்  உங்களிடத்தில்  வந்திருக்கிறதே.  {Luke  11:20}

 

ஆயுதந்தரித்த  பலவான்  தன்  அரமனையைக்  காக்கிறபோது,  அவனுடைய  பொருள்  பத்திரப்பட்டிருக்கும்.  {Luke  11:21}

 

அவனிலும்  அதிக  பலவான்  வந்து,  அவனை  மேற்கொள்வானேயாகில்,  அவன்  நம்பியிருந்த  சகல  ஆயுதவர்க்கத்தையும்  பறித்துக்கொண்டு,  அவனுடைய  கொள்ளைப்பொருளைப்  பங்கிடுவான்.  {Luke  11:22}

 

என்னோடே  இராதவன்  எனக்கு  விரோதியாயிருக்கிறான்,  என்னோடே  சேர்க்காதவன்  சிதறடிக்கிறான்.  {Luke  11:23}

 

அசுத்தஆவி  ஒரு  மனுஷனை  விட்டுப்  புறப்படும்போது,  வறண்ட  இடங்களில்  அலைந்து,  இளைப்பாறுதல்  தேடியும்  கண்டடையாமல்:  நான்  விட்டுவந்த  என்  வீட்டுக்குத்  திரும்பிப்போவேன்  என்று  சொல்லி,  {Luke  11:24}

 

அதில்  வரும்போது,  அது  பெருக்கி  ஜோடிக்கப்பட்டிருக்கக்  கண்டு,  {Luke  11:25}

 

திரும்பிப்போய்,  தன்னிலும்  பொல்லாத  வேறு  ஏழு  ஆவிகளைக்  கூட்டிக்கொண்டுவந்து,  உட்புகுந்து,  அங்கே  குடியிருக்கும்;  அப்பொழுது  அந்த  மனுஷனுடைய  முன்னிலைமையிலும்  அவன்  பின்னிலைமை  அதிக  கேடுள்ளதாயிருக்கும்  என்றார்.  {Luke  11:26}

 

அவர்  இவைகளைச்  சொல்லுகையில்,  ஜனக்கூட்டத்திலிருந்த  ஒரு  ஸ்திரீ  அவரை  நோக்கி:  உம்மைச்  சுமந்த  கர்ப்பமும்  நீர்  பாலுண்ட  முலைகளும்  பாக்கியமுள்ளவைகளென்று  சத்தமிட்டுச்  சொன்னாள்.  {Luke  11:27}

 

அதற்கு  அவர்:  அப்படியானாலும்,  தேவனுடைய  வார்த்தையைக்  கேட்டு,  அதைக்  காத்துக்கொள்ளுகிறவர்களே  அதிக  பாக்கியவான்கள்  என்றார்.  {Luke  11:28}

 

ஜனங்கள்  திரளாய்க்  கூடிவந்திருக்கிறபொழுது  அவர்:  இந்தச்  சந்ததியார்  பொல்லாதவர்களாயிருக்கிறார்கள்,  அடையாளத்தைத்  தேடுகிறார்கள்;  ஆனாலும்  யோனா<Jonas>  தீர்க்கதரிசியின்  அடையாளமேயன்றி  வேறே  அடையாளம்  இவர்களுக்குக்  கொடுக்கப்படுவதில்லை.  {Luke  11:29}

 

யோனா<Jonas>  நினிவே<Ninevites>  பட்டணத்தாருக்கு  அடையாளமாயிருந்ததுபோல,  மனுஷகுமாரனும்  இந்தச்  சந்ததிக்கு  அடையாளமாயிருப்பார்.  {Luke  11:30}

 

தென்தேசத்து  ராஜஸ்திரீ  சாலொமோனுடைய<Solomon>  ஞானத்தைக்  கேட்கப்  பூமியின்  எல்லைகளிலிருந்து  வந்தாள்;  இதோ,  சாலொமோனிலும்<Solomon>  பெரியவர்  இங்கே  இருக்கிறார்;  ஆதலால்  நியாயத்தீர்ப்பு  நாளிலே  அந்த  ராஜஸ்திரீ  இந்தச்  சந்ததியாரோடெழுந்து  நின்று,  இவர்கள்மேல்  குற்றஞ்சுமத்துவாள்.  {Luke  11:31}

 

யோனாவின்<Jonas>  பிரசங்கத்தைக்  கேட்டு  நினிவே<Nineve>  பட்டணத்தார்  மனந்திரும்பினார்கள்;  இதோ,  யோனாவிலும்<Jonas>  பெரியவர்  இங்கே  இருக்கிறார்;  ஆதலால்  நியாயத்தீர்ப்புநாளிலே  நினிவே<Nineve>  பட்டணத்தார்  இந்தச்  சந்ததியாரோடெழுந்து  நின்று,  இவர்கள்மேல்  குற்றஞ்சுமத்துவார்கள்.  {Luke  11:32}

 

ஒருவனும்  விளக்கைக்  கொளுத்தி,  மறைவிடத்திலாவது,  மரக்காலின்  கீழேயாவது  வைக்காமல்,  உள்ளே  வருகிறவர்கள்  வெளிச்சம்  காணும்படி,  அதை  விளக்குத்தண்டின்மேல்  வைப்பான்.  {Luke  11:33}

 

கண்ணானது  சரீரத்தின்  விளக்காயிருக்கிறது;  உன்  கண்  தெளிவாயிருந்தால்,  உன்  சரீரமுழுவதும்  வெளிச்சமாயிருக்கும்;  உன்  கண்  கெட்டதாயிருந்தால்  உன்  சரீரம்  முழுவதும்  இருளாயிருக்கும்.  {Luke  11:34}

 

ஆகையால்  உன்னிலுள்ள  வெளிச்சம்  இருளாகாதபடிக்கு  எச்சரிக்கையாயிரு.  {Luke  11:35}

 

உன்  சரீரம்  ஒருபுறத்திலும்  இருளடைந்திராமல்  முழுவதும்  வெளிச்சமாயிருந்தால்,  ஒரு  விளக்கு  தன்  பிரகாசத்தினாலே  உனக்கு  வெளிச்சம்  கொடுக்கிறதுபோல  உன்  சரீரமுழுவதும்  வெளிச்சமாயிருக்கும்  என்றார்.  {Luke  11:36}

 

அவர்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  பரிசேயன்<Pharisee>  ஒருவன்  தன்னுடனேகூட  அவர்  பகற்போஜனம்  பண்ணவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டான்;  அவர்  போய்ப்  பந்தியிருந்தார்.  {Luke  11:37}

 

அவர்  போஜனம்பண்ணுகிறதற்குமுன்  கைகழுவாமலிருந்ததைப்  பரிசேயன்<Pharisee>  கண்டு,  ஆச்சரியப்பட்டான்.  {Luke  11:38}

 

கர்த்தர்  அவனை  நோக்கி:  பரிசேயராகிய<Pharisees>  நீங்கள்  போஜனபான  பாத்திரங்களின்  வெளிப்புறத்தைச்  சுத்தமாக்குகிறீர்கள்,  உங்கள்  உள்ளமோ  கொள்ளையினாலும்  பொல்லாப்பினாலும்  நிறைந்திருக்கிறது.  {Luke  11:39}

 

மதிகேடரே,  வெளிப்புறத்தை  உண்டாக்கினவர்  உட்புறத்தையும்  உண்டாக்கவில்லையோ?  {Luke  11:40}

 

உங்களுக்கு  உண்டானவைகளில்  பிச்சை  கொடுங்கள்,  அப்பொழுது  சகலமும்  உங்களுக்குச்  சுத்தமாயிருக்கும்.  {Luke  11:41}

 

பரிசேயரே<Pharisees>,  உங்களுக்கு  ஐயோ,  நீங்கள்  ஒற்தலாம்  மருக்கொழுந்து  முதலிய  சகலவித  பூண்டுகளிலும்  தசமபாகம்  கொடுத்து,  நியாயத்தையும்  தேவ  அன்பையும்  விட்டுவிடுகிறீர்கள்;  இவைகளையும்  செய்யவேண்டும்,  அவைகளையும்  விடாதிருக்கவேண்டுமே.  {Luke  11:42}

 

பரிசேயரே<Pharisees>,  உங்களுக்கு  ஐயோ,  ஜெப  ஆலயங்களில்  முதன்மையான  ஆசனங்களையும்,  சந்தைகளில்  வந்தனங்களையும்  விரும்புகிறீர்கள்.  {Luke  11:43}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே,  பரிசேயரே<Pharisees>,  உங்களுக்கு  ஐயோ,  மறைந்திருக்கிற  பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள்,  அவைகள்மேல்  நடக்கிற  மனுஷருக்கு  அவைகள்  தெரியாதிருக்கிறது  என்றார்.  {Luke  11:44}

 

அப்பொழுது  நியாயசாஸ்திரிகளில்  ஒருவன்  அவரை  நோக்கி:  போதகரே,  நீர்  இப்படிச்  சொல்லுகிறதினால்  எங்களையும்  நிந்திக்கிறீரே  என்றான்.  {Luke  11:45}

 

அதற்கு  அவர்:  நியாயசாஸ்திரிகளே,  உங்களுக்கு  ஐயோ,  சுமக்க  அரிதான  சுமைகளை  மனுஷர்மேல்  சுமத்துகிறீர்கள்;  நீங்களோ  உங்கள்  விரல்களில்  ஒன்றினாலும்  அந்தச்  சுமைகளைத்  தொடவும்மாட்டீர்கள்.  {Luke  11:46}

 

உங்களுக்கு  ஐயோ,  உங்கள்  பிதாக்கள்  கொலைசெய்த  தீர்க்கதரிசிகளுக்குக்  கல்லறைகளைக்  கட்டுகிறீர்கள்.  {Luke  11:47}

 

ஆகையால்  உங்கள்  பிதாக்களுடைய  கிரியைகளுக்கு  நீங்களும்  உடன்பட்டவர்களென்று  சாட்சியிடுகிறீர்கள்;  எப்படியென்றால்,  உங்கள்  பிதாக்கள்  அவர்களைக்  கொலைசெய்தார்கள்,  நீங்களோ  அவர்களுக்குக்  கல்லறைகளைக்  கட்டுகிறீர்கள்.  {Luke  11:48}

 

ஆதலால்  தேவஞானமானது:  நான்  தீர்க்கதரிசிகளையும்  அப்போஸ்தலர்களையும்  அவர்களிடத்தில்  அனுப்புவேன்;  அவர்களில்  சிலரைக்  கொலைசெய்து,  சிலரைத்  துன்பப்படுத்துவார்கள்;  {Luke  11:49}

 

ஆபேலின்<Abel>  இரத்தம்முதல்  பலிபீடத்துக்கும்  தேவாலயத்துக்கும்  நடுவே  கொலையுண்ட  சகரியாவின்<Zacharias>  இரத்தம்வரைக்கும்,  உலகத்தோற்றமுதற்கொண்டு  சிந்தப்பட்ட  சகல  தீர்க்கதரிசிகளுடைய  இரத்தப்பழியும்  இந்தச்  சந்ததியினிடத்தில்  கேட்கப்படத்தக்கதாக  அப்படிச்  செய்வார்கள்  என்று  சொல்லுகிறது.  {Luke  11:50}

 

நிச்சயமாகவே  இந்தச்  சந்ததியினிடத்தில்  அது  கேட்கப்படும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  11:51}

 

நியாயசாஸ்திரிகளே,  உங்களுக்கு  ஐயோ,  அறிவாகிய  திறவுகோலை  எடுத்துக்  கொண்டீர்கள்,  நீங்களும்  உட்பிரவேசிக்கிறதில்லை,  உட்பிரவேசிக்கிறவர்களையும்  தடைபண்ணுகிறீர்கள்  என்றார்.  {Luke  11:52}

 

இவைகளை  அவர்களுக்கு  அவர்  சொல்லுகையில்,  வேதபாரகரும்  பரிசேயரும்<Pharisees>  அவர்மேல்  குற்றஞ்சாட்டும்  பொருட்டு,  அவர்  வாய்மொழியில்  ஏதாகிலும்  பிழை  கண்டுபிடிக்கவேண்டும்  என்று  உபாயம்பண்ணி  அவரை  மிகவும்  நெருக்கவும்,  {Luke  11:53}

 

அநேக  காரியங்களைக்குறித்துப்  பேசும்படி  அவரை  ஏவவும்  தொடங்கினார்கள்.  {Luke  11:54}

 

அத்தருணத்திலே  அநேகமாயிரம்  ஜனங்கள்  ஒருவரையொருவர்  மிதிக்கத்தக்கதாகக்  கூடிவந்திருக்கையில்,  அவர்  முதலாவது  தம்முடைய  சீஷரை  நோக்கி:  நீங்கள்  மாயமாகிய  பரிசேயருடைய<Pharisees>  புளித்தமாவைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்.  {Luke  12:1}

 

வெளியாக்கப்படாத  மறைபொருளுமில்லை,  அறியப்படாத  இரகசியமுமில்லை.  {Luke  12:2}

 

ஆதலால்,  நீங்கள்  இருளிலே  பேசினது  எதுவோ,  அது  வெளிச்சத்திலே  கேட்கப்படும்;  நீங்கள்  அறைகளில்  காதிலே  சொன்னது  எதுவோ,  அது  வீடுகளின்மேல்  கூறப்படும்.  {Luke  12:3}

 

என்  சிநேகிதராகிய  உங்களுக்கு  நான்  சொல்லுகிறேன்:  சரீரத்தைக்  கொலைசெய்து,  அதன்பின்பு  அதிகமாக  ஒன்றும்  செய்யத்  திராணியில்லாதவர்களுக்குப்  பயப்படாதிருங்கள்.  {Luke  12:4}

 

நீங்கள்  இன்னாருக்குப்  பயப்படவேண்டுமென்று  உங்களுக்குக்  காண்பிக்கிறேன்:  கொலைசெய்தபின்பு  நரகத்திலே  தள்ள  வல்லமையுள்ளவருக்குப்  பயப்படுங்கள்;  ஆம்,  அவருக்கே  பயப்படுங்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  12:5}

 

இரண்டு  காசுக்கு  ஐந்து  அடைக்கலான்  குருவிகளை  விற்கிறார்களல்லவா?  அவைகளில்  ஒன்றாகிலும்  தேவனால்  மறக்கப்  படுகிறதில்லை.  {Luke  12:6}

 

உங்கள்  தலையிலுள்ள  மயிரெல்லாம்  எண்ணப்பட்டிருக்கிறது,  ஆகையால்  பயப்படாதிருங்கள்,  அநேகம்  அடைக்கலான்  குருவிகளைப்  பார்க்கிலும்  நீங்கள்  விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.  {Luke  12:7}

 

அன்றியும்  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்:  மனுஷர்  முன்பாக  என்னை  அறிக்கைபண்ணுகிறவன்  எவனோ,  அவனை  மனுஷகுமாரனும்  தேவதூதர்  முன்பாக  அறிக்கைபண்ணுவார்.  {Luke  12:8}

 

மனுஷர்  முன்பாக  என்னை  மறுதலிக்கிறவன்  தேவதூதர்  முன்பாக  மறுதலிக்கப்படுவான்.  {Luke  12:9}

 

எவனாகிலும்  மனுஷகுமாரனுக்கு  விரோதமான  விசேஷத்தைச்  சொன்னால்  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்;  பரிசுத்த  ஆவிக்கு  விரோதமாய்த்  தூஷணஞ்  சொல்லுகிறவனுக்கோ  மன்னிக்கப்படுவதில்லை.  {Luke  12:10}

 

அன்றியும்,  ஜெப  ஆலயத்தலைவர்களுக்கும்  துரைத்தனத்தார்களுக்கும்  அதிகாரமுள்ளவர்களுக்கும்  முன்பாக  உங்களைக்  கொண்டுபோய்  விடும்போது:  எப்படி,  என்னத்தை  மாறுத்தரமாகச்  சொல்லுவோம்  என்றும்,  எதைப்  பேசுவோம்  என்றும்  கவலைப்படாதிருங்கள்.  {Luke  12:11}

 

நீங்கள்  பேசவேண்டியவைகளைப்  பரிசுத்த  ஆவியானவர்  அந்நேரத்திலே  உங்களுக்குப்  போதிப்பார்  என்றார்.  {Luke  12:12}

 

அப்பொழுது  ஜனக்கூட்டத்தில்  ஒருவன்  அவரை  நோக்கி:  போதகரே,  ஆஸ்தியைப்  பாகம்பிரித்து  என்  வீதத்தை  எனக்குத்  தரும்படி  என்  சகோதரனுக்குக்  கட்டளையிடவேண்டும்  என்று  கேட்டுக்கொண்டான்.  {Luke  12:13}

 

அதற்கு  அவர்:  மனுஷனே,  என்னை  உங்களுக்கு  நியாயாதிபதியாகவும்  பங்கிடுகிறவனாகவும்  வைத்தவன்  யார்  என்றார்.  {Luke  12:14}

 

பின்பு  அவர்  அவர்களை  நோக்கி:  பொருளாசையைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்;  ஏனெனில்  ஒருவனுக்கு  எவ்வளவு  திரளான  ஆஸ்தி  இருந்தாலும்  அது  அவனுக்கு  ஜீவன்  அல்ல  என்றார்.  {Luke  12:15}

 

அல்லாமலும்,  ஒரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  ஐசுவரியமுள்ள  ஒருவனுடைய  நிலம்  நன்றாய்  விளைந்தது.  {Luke  12:16}

 

அப்பொழுது  அவன்:  நான்  என்ன  செய்வேன்?  என்  தானியங்களைச்  சேர்த்து  வைக்கிறதற்கு  இடமில்லையே;  {Luke  12:17}

 

நான்  ஒன்று  செய்வேன்,  என்  களஞ்சியங்களை  இடித்து,  பெரிதாகக்  கட்டி,  எனக்கு  விளைந்த  தானியத்தையும்  என்  பொருள்களையும்  அங்கே  சேர்த்துவைத்து,  {Luke  12:18}

 

பின்பு:  ஆத்துமாவே,  உனக்காக  அநேக  வருஷங்களுக்கு  அநேகம்  பொருள்கள்  சேர்த்து  வைக்கப்பட்டிருக்கிறது;  நீ  இளைப்பாறி,  புசித்துக்  குடித்து,  பூரிப்பாயிரு  என்று  என்  ஆத்துமாவோடே  சொல்லுவேன்  என்று  தனக்குள்ளே  சிந்தித்துச்  சொல்லிக்கொண்டான்.  {Luke  12:19}

 

தேவனோ  அவனை  நோக்கி:  மதிகேடனே,  உன்  ஆத்துமா  உன்னிடத்திலிருந்து  இந்த  இராத்திரியிலே  எடுத்துக்  கொள்ளப்படும்,  அப்பொழுது  நீ  சேகரித்தவைகள்  யாருடையதாகும்  என்றார்.  {Luke  12:20}

 

தேவனிடத்தில்  ஐசுவரியவானாயிராமல்,  தனக்காகவே  பொக்கிஷங்களைச்  சேர்த்துவைக்கிறவன்  இப்படியே  இருக்கிறான்  என்றார்.  {Luke  12:21}

 

பின்னும்  அவர்  தம்முடைய  சீஷரை  நோக்கி:  இப்படியிருக்கிறபடியினால்,  என்னத்தை  உண்போம்  என்று  உங்கள்  ஜீவனுக்காகவும்,  என்னத்தை  உடுப்போம்  என்று  உங்கள்  சரீரத்துக்காகவும்  கவலைப்படாதிருங்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  12:22}

 

ஆகாரத்தைப்பார்க்கிலும்  ஜீவனும்,  உடையைப்பார்க்கிலும்  சரீரமும்  விசேஷித்தவைகளாயிருக்கிறது.  {Luke  12:23}

 

காகங்களைக்  கவனித்துப்பாருங்கள்,  அவைகள்  விதைக்கிறதுமில்லை  அறுக்கிறதுமில்லை,  அவைகளுக்குப்  பண்டசாலையுமில்லை,  களஞ்சியமுமில்லை,  இல்லாவிட்டாலும்  அவைகளையும்  தேவன்  பிழைப்பூட்டுகிறார்;  பறவைகளைப்பார்க்கிலும்  நீங்கள்  எவ்வளவோ  விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.  {Luke  12:24}

 

கவலைப்படுகிறதினால்  உங்களில்  எவன்  தன்  சரீர  அளவோடு  ஒரு  முழத்தைக்  கூட்டுவான்.  {Luke  12:25}

 

மிகவும்  அற்பமான  காரியமுதலாய்  உங்களால்  செய்யக்கூடாதிருக்க,  மற்றவைகளுக்காக  நீங்கள்  கவலைப்படுகிறதென்ன?  {Luke  12:26}

 

காட்டுப்புஷ்பங்கள்  எப்படி  வளருகிறதென்று  கவனித்துப்பாருங்கள்;  அவைகள்  உழைக்கிறதுமில்லை,  நூற்கிறதுமில்லை,  என்றாலும்  சாலொமோன்<Solomon>  முதலாய்த்  தன்  சர்வ  மகிமையிலும்  அவைகளில்  ஒன்றைப்போலாகிலும்  உடுத்தியிருந்ததில்லை  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  12:27}

 

இப்படியிருக்க,  அற்பவிசுவாசிகளே,  இன்றைக்குக்  காட்டிலிருந்து  நாளைக்கு  அடுப்பிலே  போடப்படுகிற  புல்லுக்குத்  தேவன்  இவ்விதமாக  உடுத்துவித்தால்,  உங்களுக்கு  உடுத்துவிப்பது  அதிக  நிச்சயமல்லவா?  {Luke  12:28}

 

ஆகையால்,  என்னத்தை  உண்போம்,  என்னத்தைக்  குடிப்போம்  என்று,  நீங்கள்  கேளாமலும்  சந்தேகப்படாமலும்  இருங்கள்.  {Luke  12:29}

 

இவைகளையெல்லாம்  உலகத்தார்  நாடித்  தேடுகிறார்கள்;  இவைகள்  உங்களுக்கு  வேண்டியவைகளென்று  உங்கள்  பிதாவானவர்  அறிந்திருக்கிறார்.  {Luke  12:30}

 

தேவனுடைய  ராஜ்யத்தையே  தேடுங்கள்,  அப்பொழுது  இவைகளெல்லாம்  உங்களுக்குக்  கூடக்  கொடுக்கப்படும்.  {Luke  12:31}

 

பயப்படாதே  சிறுமந்தையே,  உங்களுக்கு  ராஜ்யத்தைக்  கொடுக்க  உங்கள்  பிதா  பிரியமாயிருக்கிறார்.  {Luke  12:32}

 

உங்களுக்கு  உள்ளவைகளை  விற்றுப்  பிச்சைகொடுங்கள்,  பழமையாய்ப்  போகாத  பணப்பைகளையும்  குறையாத  பொக்கிஷத்தையும்  பரலோகத்திலே  உங்களுக்குச்  சம்பாதித்து  வையுங்கள்,  அங்கே  திருடன்  அணுகுகிறதுமில்லை,  பூச்சி  கெடுக்கிறதுமில்லை.  {Luke  12:33}

 

உங்கள்  பொக்கிஷம்  எங்கே  இருக்கிறதோ  அங்கே  உங்கள்  இருதயமும்  இருக்கும்.  {Luke  12:34}

 

உங்கள்  அரைகள்  கட்டப்பட்டதாகவும்,  உங்கள்  விளக்குகள்  எரிகிறதாகவும்,  {Luke  12:35}

 

தங்கள்  எஜமான்  கலியாணத்திலிருந்து  வந்து  தட்டும்போது,  உடனே  அவருக்குத்  திறக்கும்படி  எப்பொழுது  வருவார்  என்று  காத்திருக்கிற  மனுஷருக்கு  ஒப்பாகவும்  இருங்கள்.  {Luke  12:36}

 

எஜமான்  வரும்போது,  விழித்திருக்கிறவர்களாகக்  காணப்படுகிற  ஊழியக்காரரே  பாக்கியவான்கள்.  அவர்  அரைகட்டிக்கொண்டு,  அவர்களைப்  பந்தியிருக்கச்செய்து,  சமீபமாய்  வந்து,  அவர்களுக்கு  ஊழியஞ்செய்வார்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  12:37}

 

அவர்  இரண்டாம்  ஜாமத்திலாவது  மூன்றாம்  ஜாமத்திலாவது  வந்து,  அவர்கள்  அப்படியே  இருக்கக்கண்டால்,  அவ்வூழியக்காரர்  பாக்கியவான்கள்.  {Luke  12:38}

 

திருடன்  இன்னநேரத்தில்  வருவான்  என்று  வீட்டெஜமானுக்குத்  தெரிந்திருந்தால்,  அவன்  விழித்திருந்து,  தன்  வீட்டைக்  கன்னமிடவொட்டான்  என்று  அறிந்திருக்கிறீர்கள்.  {Luke  12:39}

 

அந்தப்படியே  நீங்கள்  நினையாத  நேரத்தில்  மனுஷகுமாரன்  வருவார்,  ஆகையால்  நீங்களும்  ஆயத்தமாயிருங்கள்  என்றார்.  {Luke  12:40}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  இந்த  உவமையை  எங்களுக்குமாத்திரம்  சொல்லுகிறீரோ,  எல்லாருக்கும்  சொல்லுகிறீரோ  என்று  கேட்டான்.  {Luke  12:41}

 

அதற்குக்  கர்த்தர்:  பணிவிடைக்காரருக்குத்  தகுதியான  காலத்திலே  படிகொடுக்கும்படி  எஜமான்  அவர்கள்மேல்  அதிகாரியாக  வைக்கத்தக்க  உண்மையும்  விவேகமுமுள்ள  விசாரணைக்காரன்  யாவன்?  {Luke  12:42}

 

எஜமான்  வரும்போது  அப்படியே  செய்கிறவனாய்க்  காணப்படுகிற  ஊழியக்காரன்  பாக்கியவான்.  {Luke  12:43}

 

தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும்  அவனை  விசாரணைக்காரனாக  வைப்பான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  12:44}

 

அந்த  ஊழியக்காரனோ,  என்  எஜமான்  வர  நாள்  செல்லும்  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டு,  வேலைக்காரரையும்  வேலைக்காரிகளையும்  அடிக்கவும்,  புசித்துக்  குடித்து  வெறிக்கவும்  தலைப்பட்டால்,  {Luke  12:45}

 

அவன்  நினையாத  நாளிலும்,  அறியாத  நேரத்திலும்,  அந்த  ஊழியக்காரனுடைய  எஜமான்  வந்து,  அவனைக்  கடினமாய்த்  தண்டித்து,  உண்மையில்லாதவர்களோடே  அவனுக்குப்  பங்கை  நியமிப்பான்.  {Luke  12:46}

 

தன்  எஜமானுடைய  சித்தத்தை  அறிந்தும்  ஆயத்தமாயிராமலும்,  அவனுடைய  சித்தத்தின்படி  செய்யாமலும்  இருந்த  ஊழியக்காரன்  அநேக  அடிகள்  அடிக்கப்படுவான்.  {Luke  12:47}

 

அறியாதவனாயிருந்து,  அடிகளுக்கு  ஏதுவானவைகளைச்  செய்தவனோ,  சில  அடிகள்  அடிக்கப்படுவான்.  எவனிடத்தில்  அதிகங்  கொடுக்கப்படுகிறதோ  அவனிடத்தில்  அதிகங்  கேட்கப்படும்;  மனுஷர்  எவனிடத்தில்  அதிகமாய்  ஒப்புவிக்கிறார்களோ  அவனிடத்தில்  அதிகமாய்க்  கேட்பார்கள்.  {Luke  12:48}

 

பூமியின்மேல்  அக்கினியைப்  போடவந்தேன்,  அது  இப்பொழுதே  பற்றி  எரிய  வேண்டுமென்று  விரும்புகிறேன்.  {Luke  12:49}

 

ஆகிலும்  நான்  முழுகவேண்டிய  ஒரு  ஸ்நானமுண்டு,  அது  முடியுமளவும்  எவ்வளவோ  நெருக்கப்படுகிறேன்.  {Luke  12:50}

 

நான்  பூமியிலே  சமாதானத்தை  உண்டாக்கவந்தேன்  என்று  நினைக்கிறீர்களோ?  சமாதானத்தையல்ல,  பிரிவினையையே  உண்டாக்கவந்தேன்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  12:51}

 

எப்படியெனில்,  இதுமுதல்  ஒரே  வீட்டிலே  ஐந்துபேர்  பிரிந்திருப்பார்கள்,  இரண்டுபேருக்கு  விரோதமாய்  மூன்றுபேரும்,  மூன்றுபேருக்கு  விரோதமாய்  இரண்டுபேரும்  பிரிந்திருப்பார்கள்.  {Luke  12:52}

 

தகப்பன்  மகனுக்கும்  மகன்  தகப்பனுக்கும்,  தாய்  மகளுக்கும்  மகள்  தாய்க்கும்,  மாமி  மருமகளுக்கும்  மருமகள்  மாமிக்கும்  விரோதமாய்ப்  பிரிந்திருப்பார்கள்  என்றார்.  {Luke  12:53}

 

பின்பு  அவர்  ஜனங்களை  நோக்கி:  மேற்கே  மேகம்  எழும்புகிறதை  நீங்கள்  காணும்போது,  மழை  வருமென்று  சொல்லுகிறீர்கள்;  அந்தப்படியுமாகும்.  {Luke  12:54}

 

தென்றல்  அடிக்கிறதை  நீங்கள்  காணும்போது  உஷ்ணம்  உண்டாகுமென்று  சொல்லுகிறீர்கள்,  அந்தப்படியுமாகும்.  {Luke  12:55}

 

மாயக்காரரே,  பூமியின்  தோற்றத்தையும்  வானத்தின்  தோற்றத்தையும்  நிதானிக்க  உங்களுக்குத்  தெரியுமே,  இந்தக்  காலத்தையோ  நிதானியாமற்போகிறதென்ன?  {Luke  12:56}

 

நியாயம்  இன்னதென்று  நீங்களே  தீர்மானியாமலிருக்கிறதென்ன?  {Luke  12:57}

 

உனக்கு  எதிராளியானவன்  உன்னை  அதிகாரியினிடத்திற்குக்  கொண்டுபோகிறபோது,  வழியிலேதானே  அவனிடத்திலிருந்து  விடுதலையாகும்படி  பிரயாசப்படு,  இல்லாவிட்டால்,  அவன்  உன்னை  நியாயாதிபதிக்கு  முன்பாகக்  கொண்டுபோவான்,  நியாயாதிபதி  உன்னைச்  சேவகனிடத்தில்  ஒப்புக்கொடுப்பான்,  சேவகன்  உன்னைச்  சிறைச்சாலையில்  போடுவான்.  {Luke  12:58}

 

நீ  கடைசிக்காசைக்  கொடுத்துத்  தீர்க்குமட்டும்,  அவ்விடத்திலிருந்து  புறப்படமாட்டாய்  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  12:59}

 

பிலாத்து<Pilate>  சில  கலிலேயருடைய<Galilaeans>  இரத்தத்தை  அவர்களுடைய  பலிகளோடே  கலந்திருந்தான்;  அந்த  வேளையிலே  அங்கே  இருந்தவர்களில்  சிலர்  அந்தச்  செய்தியை  அவருக்கு  அறிவித்தார்கள்.  {Luke  13:1}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  அந்தக்  கலிலேயருக்கு<Galilaeans>  அப்படிப்பட்டவைகள்  சம்பவித்ததினாலே,  மற்ற  எல்லாக்  கலிலேயரைப்<Galilaeans>  பார்க்கிலும்  அவர்கள்  பாவிகளாயிருந்தார்களென்று  நினைக்கிறீர்களோ?  {Luke  13:2}

 

அப்படியல்லவென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  நீங்கள்  மனந்திரும்பாமற்போனால்  எல்லாரும்  அப்படியே  கெட்டுப்போவீர்கள்.  {Luke  13:3}

 

சீலோவாமிலே<Siloam>  கோபுரம்  விழுந்து  பதினெட்டுப்பேரைக்  கொன்றதே;  எருசலேமில்<Jerusalem>  குடியிருக்கிற  மனுஷரெல்லாரிலும்  அவர்கள்  குற்றவாளிகளாயிருந்தார்களென்று  நினைக்கிறீர்களோ?  {Luke  13:4}

 

அப்படியல்லவென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  நீங்கள்  மனந்திரும்பாமற்போனால்  எல்லாரும்  அப்படியே  கெட்டுப்போவீர்கள்  என்றார்.  {Luke  13:5}

 

அப்பொழுது  அவர்  ஒரு  உவமையையும்  சொன்னார்:  ஒருவன்  தன்  திராட்சத்தோட்டத்தில்  ஒரு  அத்திமரத்தை  நட்டிருந்தான்;  அவன்  வந்து  அதிலே  கனியைத்  தேடினபோது  ஒன்றுங்  காணவில்லை.  {Luke  13:6}

 

அப்பொழுது  அவன்  தோட்டக்காரனை  நோக்கி:  இதோ,  மூன்று  வருஷமாய்  இந்த  அத்திமரத்திலே  கனியைத்  தேடி  வருகிறேன்;  ஒன்றையுங்  காணவில்லை,  இதை  வெட்டிப்போடு,  இது  நிலத்தையும்  ஏன்  கெடுக்கிறது  என்றான்.  {Luke  13:7}

 

அதற்கு  அவன்:  ஐயா,  இது  இந்த  வருஷமும்  இருக்கட்டும்;  நான்  இதைச்  சுற்றிலுங்  கொத்தி,  எருப்போடுவேன்,  {Luke  13:8}

 

கனிகொடுத்தால்  சரி,  கொடாவிட்டால்,  இனிமேல்  இதை  வெட்டிப்போடலாம்  என்று  சொன்னான்  என்றார்.  {Luke  13:9}

 

ஒரு  ஓய்வுநாளில்  அவர்  ஜெபஆலயத்தில்  போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.  {Luke  13:10}

 

அப்பொழுது  பதினெட்டு  வருஷமாய்ப்  பலவீனப்படுத்தும்  ஆவியைக்  கொண்ட  ஒரு  ஸ்திரீ  அங்கேயிருந்தாள்.  அவள்  எவ்வளவும்  நிமிரக்கூடாத  கூனியாயிருந்தாள்.  {Luke  13:11}

 

இயேசு<Jesus>  அவளைக்  கண்டு,  தம்மிடத்தில்  அழைத்து:  ஸ்திரீயே,  உன்  பலவீனத்தினின்று  விடுதலையாக்கப்பட்டாய்  என்று  சொல்லி,  {Luke  13:12}

 

அவள்மேல்  தமது  கைகளை  வைத்தார்;  உடனே  அவள்  நிமிர்ந்து,  தேவனை  மகிமைப்படுத்தினாள்.  {Luke  13:13}

 

இயேசு<Jesus>  ஓய்வுநாளிலே  சொஸ்தமாக்கினபடியால்,  ஜெப  ஆலயத்தலைவன்  கோபமடைந்து,  ஜனங்களை  நோக்கி:  வேலைசெய்கிறதற்கு  ஆறுநாள்  உண்டே,  அந்த  நாட்களிலே  நீங்கள்  வந்து  சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள்,  ஓய்வுநாளிலே  அப்படிச்  செய்யலாகாது  என்றான்.  {Luke  13:14}

 

கர்த்தர்  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  மாயக்காரனே,  உங்களில்  எவனும்  ஓய்வுநாளில்  தன்  எருதையாவது  தன்  கழுதையையாவது  தொழுவத்திலிருந்து  அவிழ்த்துக்கொண்டுபோய்,  அதற்குத்  தண்ணீர்  காட்டுகிறதில்லையா?  {Luke  13:15}

 

இதோ,  சாத்தான்  பதினெட்டு  வருஷமாய்க்  கட்டியிருந்த  ஆபிரகாமின்<Abraham>  குமாரத்தியாகிய  இவளை  ஓய்வுநாளில்  இந்தக்  கட்டிலிருந்து  அவிழ்த்துவிடவேண்டியதில்லையா  என்றார்.  {Luke  13:16}

 

அவர்  அப்படிச்  சொன்னபோது,  அவரை  விரோதித்திருந்த  அனைவரும்  வெட்கப்பட்டார்கள்.  ஜனங்களெல்லாரும்  அவரால்  செய்யப்பட்ட  சகல  மகிமையான  செய்கைகளைக்குறித்தும்  சந்தோஷப்பட்டார்கள்.  {Luke  13:17}

 

அவர்  அவர்களை  நோக்கி:  தேவனுடைய  ராஜ்யம்  எதற்கொப்பாயிருக்கிறது;  அதை  எதற்கு  ஒப்பிடுவேன்?  {Luke  13:18}

 

அது  ஒரு  கடுகுவிதைக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  மனுஷன்  எடுத்துத்  தன்  தோட்டத்திலே  போட்டான்;  அது  வளர்ந்து,  பெரிய  மரமாயிற்று;  ஆகாயத்துப்  பறவைகள்  வந்து,  அதின்  கிளைகளில்  அடைந்தது  என்றார்.  {Luke  13:19}

 

மேலும்  அவர்:  தேவனுடைய  ராஜ்யத்தை  நான்  எதற்கு  ஒப்பிடுவேன்?  {Luke  13:20}

 

அது  புளித்தமாவுக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  ஸ்திரீ  எடுத்து  முழுவதும்  புளிக்கும்வரைக்கும்  மூன்றுபடிமாவிலே  அடக்கிவைத்தாள்  என்றார்.  {Luke  13:21}

 

அவர்  எருசலேமுக்குப்<Jerusalem>  பிரயாணமாய்ப்  போகும்போது,  பட்டணங்கள்தோறும்  கிராமங்கள்தோறும்  உபதேசம்  பண்ணிக்கொண்டு  போனார்.  {Luke  13:22}

 

அப்பொழுது  ஒருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  இரட்சிக்கப்படுகிறவர்கள்  சிலபேர்தானோ  என்று  கேட்டான்;  அதற்கு  அவர்:  {Luke  13:23}

 

இடுக்கமான  வாசல்வழியாய்  உட்பிரவேசிக்கப்  பிரயாசப்படுங்கள்,  அநேகர்  உட்பிரவேசிக்க  வகைதேடினாலும்  அவர்களாலே  கூடாமற்போகும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  13:24}

 

வீட்டெஜமான்  எழுந்து,  கதவைப்  பூட்டினபின்பு,  நீங்கள்  வெளியே  நின்று:  ஆண்டவரே,  ஆண்டவரே,  எங்களுக்குத்  திறக்கவேண்டுமென்று  சொல்லிக்  கதவைத்  தட்டும்போது,  அவர்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  எவ்விடத்தாரோ,  உங்களை  அறியேன்  என்று  உங்களுக்குச்  சொல்லுவார்.  {Luke  13:25}

 

அப்பொழுது  நீங்கள்:  உம்முடைய  சமுகத்தில்  போஜனபானம்பண்ணினோமே,  நீர்  எங்கள்  வீதிகளில்  போதகம்பண்ணினீரே  என்று  சொல்லுவீர்கள்.  {Luke  13:26}

 

ஆனாலும்  அவர்:  நீங்கள்  எவ்விடத்தாரோ,  உங்களை  அறியேன்,  அக்கிரமக்காரராகிய  நீங்களெல்லாரும்  என்னைவிட்டு  அகன்றுபோங்கள்  என்று  சொல்லுவார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  13:27}

 

நீங்கள்  ஆபிரகாமையும்<Abraham>  ஈசாக்கையும்<Isaac>  யாக்கோபையும்<Jacob>  சகல  தீர்க்கதரிசிகளையும்  தேவனுடைய  ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும்,  உங்களையோ  புறம்பே  தள்ளப்பட்டவர்களாகவும்  காணும்போது  உங்களுக்கு  அழுகையும்  பற்கடிப்பும்  அங்கே  உண்டாயிருக்கும்.  {Luke  13:28}

 

கிழக்கிலும்  மேற்கிலும்  வடக்கிலும்  தெற்கிலும்  இருந்து  ஜனங்கள்  வந்து,  தேவனுடைய  ராஜ்யத்தில்  பந்தியிருப்பார்கள்.  {Luke  13:29}

 

அப்பொழுது  முந்தினோர்  பிந்தினோராவார்கள்,  பிந்தினோர்  முந்தினோராவார்கள்  என்றார்.  {Luke  13:30}

 

அந்த  நாளிலே  சில  பரிசேயர்<Pharisees>  அவரிடத்தில்  வந்து:  நீர்  இவ்விடத்தை  விட்டுப்  போய்விடும்;  ஏரோது<Herod>  உம்மைக்  கொலைசெய்ய  மனதாய்  இருக்கிறான்  என்றார்கள்.  {Luke  13:31}

 

அதற்கு  அவர்:  நான்  இன்றைக்கும்  நாளைக்கும்  பிசாசுகளைத்  துரத்தி,  வியாதியுள்ளவர்களைச்  சொஸ்தமாக்கி,  மூன்றாம்  நாளில்  நிறைவடைவேன்.  {Luke  13:32}

 

இன்றைக்கும்  நாளைக்கும்  மறுநாளைக்கும்  நான்  நடமாடவேண்டும்;  எருசலேமுக்குப்<Jerusalem>  புறம்பே  ஒரு  தீர்க்கதரிசியும்  மடிந்துபோகிறதில்லையென்று  நான்  சொன்னதாக  நீங்கள்  போய்  அந்த  நரிக்குச்  சொல்லுங்கள்.  {Luke  13:33}

 

எருசலேமே<Jerusalem>,  எருசலேமே<Jerusalem>,  தீர்க்கதரிசிகளைக்  கொலைசெய்து,  உன்னிடத்தில்  அனுப்பப்பட்டவர்களைக்  கல்லெறிகிறவளே!  கோழி  தன்  குஞ்சுகளைத்  தன்  சிறகுகளின்  கீழே  கூட்டிச்  சேர்த்துக்  கொள்ளும்  வண்ணமாக  நான்  எத்தனைதரமோ  உன்  பிள்ளைகளைக்  கூட்டிச்  சேர்த்துக்கொள்ள  மனதாயிருந்தேன்;  உங்களுக்கோ  மனதில்லாமற்போயிற்று.  {Luke  13:34}

 

இதோ,  உங்கள்  வீடு  உங்களுக்குப்  பாழாக்கிவிடப்படும்;  கர்த்தருடைய  நாமத்தினாலே  வருகிறவர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்  என்று  நீங்கள்  சொல்லுங்காலம்  வருமளவும்  என்னைக்  காணாதிருப்பீர்கள்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  13:35}

 

ஒரு  ஓய்வுநாளிலே  பரிசேயரில்<Pharisees>  தலைவனாகிய  ஒருவனுடைய  வீட்டிலே  அவர்  போஜனம்  பண்ணும்படிக்குப்  போயிருந்தார்.  {Luke  14:1}

 

அப்பொழுது  நீர்க்கோவை  வியாதியுள்ள  ஒரு  மனுஷன்  அவருக்கு  முன்பாக  இருந்தான்.  என்ன  செய்வாரோவென்று  ஜனங்கள்  அவர்மேல்  நோக்கமாயிருந்தார்கள்.  {Luke  14:2}

 

இயேசு<Jesus>  நியாயசாஸ்திரிகளையும்  பரிசேயரையும்<Pharisees>  பார்த்து:  ஓய்வு  நாளிலே  சொஸ்தமாக்குகிறது  நியாயமா  என்று  கேட்டார்.  {Luke  14:3}

 

அதற்கு  அவர்கள்  பேசாமலிருந்தார்கள்.  அப்பொழுது  அவர்  அவனை  அழைத்து,  சொஸ்தமாக்கி,  அனுப்பிவிட்டு,  {Luke  14:4}

 

அவர்களை  நோக்கி:  உங்களில்  ஒருவனுடைய  கழுதையாவது  எருதாவது  ஓய்வுநாளில்  துரவிலே  விழுந்தால்,  அவன்  அதை  உடனே  தூக்கிவிடானோ  என்றார்.  {Luke  14:5}

 

அதற்கு  உத்தரவுசொல்ல  அவர்களால்  கூடாமற்போயிற்று.  {Luke  14:6}

 

விருந்துக்கு  அழைக்கப்பட்டவர்கள்  பந்தியில்  முதன்மையான  இடங்களைத்  தெரிந்துகொண்டதை  அவர்  பார்த்து,  அவர்களுக்கு  ஒரு  உவமையைச்  சொன்னார்:  {Luke  14:7}

 

ஒருவனால்  கலியாணத்துக்கு  நீ  அழைக்கப்பட்டிருக்கும்போது,  பந்தியில்  முதன்மையான  இடத்தில்  உட்காராதே;  உன்னிலும்  கனமுள்ளவன்  ஒருவேளை  அவனால்  அழைக்கப்பட்டிருப்பான்.  {Luke  14:8}

 

அப்பொழுது  உன்னையும்  அவனையும்  அழைத்தவன்  உன்னிடத்தில்  வந்து:  இவருக்கு  இடங்கொடு  என்பான்;  அப்பொழுது  நீ  வெட்கத்தோடே  தாழ்ந்த  இடத்திற்குப்  போகவேண்டியதாயிருக்கும்.  {Luke  14:9}

 

நீ  அழைக்கப்பட்டிருக்கும்போது,  போய்,  தாழ்ந்த  இடத்தில்  உட்காரு;  அப்பொழுது  உன்னை  அழைத்தவன்  வந்து:  சிநேகிதனே,  உயர்ந்த  இடத்தில்  வாரும்  என்று  சொல்லும்போது,  உன்னுடனேகூடப்  பந்தியிருக்கிறவர்களுக்கு  முன்பாக  உனக்குக்  கனமுண்டாகும்.  {Luke  14:10}

 

தன்னைத்தான்  உயர்த்துகிறவனெவனும்  தாழ்த்தப்படுவான்,  தன்னைத்தான்  தாழ்த்துகிறவன்  உயர்த்தப்படுவான்  என்றார்.  {Luke  14:11}

 

அன்றியும்  அவர்  தம்மை  விருந்துக்கு  அழைத்தவனை  நோக்கி:  நீ  பகல்விருந்தாவது  இராவிருந்தாவது  பண்ணும்போது,  உன்  சிநேகிதரையாகிலும்  உன்  சகோதரரையாகிலும்,  உன்  பந்து  ஜனங்களையாகிலும்,  ஐசுவரியமுள்ள  அயலகத்தாரையாகிலும்  அழைக்கவேண்டாம்;  அழைத்தால்  அவர்களும்  உன்னை  அழைப்பார்கள்,  அப்பொழுது  உனக்குப்  பதிலுக்குப்  பதில்  செய்ததாகும்.  {Luke  14:12}

 

நீ  விருந்துபண்ணும்போது  ஏழைகளையும்  ஊனரையும்  சப்பாணிகளையும்  குருடரையும்  அழைப்பாயாக.  {Luke  14:13}

 

அப்பொழுது  நீ  பாக்கியவானாயிருப்பாய்;  அவர்கள்  உனக்குப்  பதில்  செய்யமாட்டார்கள்;  நீதிமான்களின்  உயிர்த்தெழுதலில்  உனக்குப்  பதில்  செய்யப்படும்  என்றார்.  {Luke  14:14}

 

அவரோடேகூடப்  பந்தியிருந்தவர்களில்  ஒருவன்  இவைகளைக்  கேட்டபொழுது,  அவரை  நோக்கி:  தேவனுடைய  ராஜ்யத்தில்  போஜனம்பண்ணுகிறவன்  பாக்கியவான்  என்றான்.  {Luke  14:15}

 

அதற்கு  அவர்:  ஒரு  மனுஷன்  பெரியவிருந்தை  ஆயத்தம்பண்ணி,  அநேகரை  அழைப்பித்தான்.  {Luke  14:16}

 

விருந்து  வேளையில்  தன்  ஊழியக்காரனை  நோக்கி:  நீ  அழைக்கப்பட்டவர்களிடத்தில்  போய்,  எல்லாம்  ஆயத்தமாயிருக்கிறது,  வாருங்கள்,  என்று  சொல்லென்று  அவனை  அனுப்பினான்.  {Luke  14:17}

 

அவர்களெல்லாரும்  போக்குச்சொல்லத்  தொடங்கினார்கள்.  ஒருவன்:  ஒரு  வயலைக்கொண்டேன்,  நான்  அகத்தியமாய்ப்போய்,  அதைப்  பார்க்கவேண்டும்,  என்னை  மன்னிக்கும்படி  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  {Luke  14:18}

 

வேறொருவன்:  ஐந்தேர்மாடு  கொண்டேன்,  அதைச்  சோதித்துப்  பார்க்கப்  போகிறேன்,  என்னை  மன்னிக்கும்படி  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  {Luke  14:19}

 

வேறொருவன்:  பெண்ணை  விவாகம்பண்ணினேன்,  அதினால்  நான்  வரக்கூடாது  என்றான்.  {Luke  14:20}

 

அந்த  ஊழியக்காரன்  வந்து,  இவைகளைத்  தன்  எஜமானுக்கு  அறிவித்தான்.  அப்பொழுது  வீட்டெஜமான்  கோபமடைந்து,  தன்  ஊழியக்காரனை  நோக்கி:  நீ  பட்டணத்தின்  தெருக்களிலும்  வீதிகளிலும்  சீக்கிரமாய்ப்  போய்,  ஏழைகளையும்  ஊனரையும்  சப்பாணிகளையும்  குருடரையும்  இங்கே  கூட்டிக்கொண்டுவா  என்றான்.  {Luke  14:21}

 

ஊழியக்காரன்  அப்படியே  செய்து:  ஆண்டவரே,  நீர்  கட்டளையிட்டபடி  செய்தாயிற்று,  இன்னும்  இடம்  இருக்கிறது  என்றான்.  {Luke  14:22}

 

அப்பொழுது  எஜமான்  ஊழியக்காரனை  நோக்கி:  நீ  பெருவழிகளிலும்  வேலிகளருகிலும்  போய்,  என்  வீடு  நிறையும்படியாக  ஜனங்களை  உள்ளே  வரும்படி  வருந்திக்  கூட்டிக்கொண்டுவா;  {Luke  14:23}

 

அழைக்கப்பட்டிருந்த  அந்த  மனுஷரில்  ஒருவனாகிலும்  என்  விருந்தை  ருசிபார்ப்பதில்லை  யென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றான்  என்று  சொன்னார்.  {Luke  14:24}

 

பின்பு  அநேக  ஜனங்கள்  அவரோடேகூடப்  பிரயாணமாய்ப்  போகையில்,  அவர்களிடமாய்  அவர்  திரும்பிப்பார்த்து:  {Luke  14:25}

 

யாதொருவன்  என்னிடத்தில்  வந்து,  தன்  தகப்பனையும்  தாயையும்  மனைவியையும்  பிள்ளைகளையும்  சகோதரரையும்  சகோதரிகளையும்,  தன்  ஜீவனையும்  வெறுக்காவிட்டால்  எனக்குச்  சீஷனாயிருக்கமாட்டான்.  {Luke  14:26}

 

தன்  சிலுவையைச்  சுமந்துகொண்டு  எனக்குப்  பின்செல்லாதவன்  எனக்குச்  சீஷனாயிருக்கமாட்டான்.  {Luke  14:27}

 

உங்களில்  ஒருவன்  ஒரு  கோபுரத்தைக்  கட்ட  மனதாயிருந்து,  {Luke  14:28}

 

அஸ்திபாரம்  போட்டபின்பு  முடிக்கத்  திராணியில்லாமற்போனால்,  பார்க்கிறவர்களெல்லாரும்:  {Luke  14:29}

 

இந்த  மனுஷன்  கட்டத்தொடங்கி,  முடிக்கத்  திராணியில்லாமற்போனான்  என்று  சொல்லித்  தன்னைப்  பரியாசம்பண்ணாதபடிக்கு,  அதைக்  கட்டித்  தீர்க்கிறதற்குத்  தனக்கு  நிர்வாகமுண்டோ  இல்லையோ  என்று  முன்பு  அவன்  உட்கார்ந்து  செல்லுஞ்செலவைக்  கணக்குப்  பாராமலிருப்பானோ?  {Luke  14:30}

 

அன்றியும்  ஒரு  ராஜா  மற்றொரு  ராஜாவோடே  யுத்தஞ்செய்யப்  போகிறபோது,  தன்மேல்  இருபதினாயிரம்  சேவகரோடே  வருகிற  அவனைத்  தான்  பதினாயிரம்  சேவகரைக்கொண்டு  எதிர்க்கக்  கூடுமோ  கூடாதோ  என்று  முன்பு  உட்கார்ந்து  ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?  {Luke  14:31}

 

கூடாதென்று  கண்டால்,  மற்றவன்  இன்னும்  தூரத்திலிருக்கும்போதே,  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  சமாதானத்துக்கானவைகளைக்  கேட்டுக்கொள்வானே.  {Luke  14:32}

 

அப்படியே  உங்களில்  எவனாகிலும்  தனக்கு  உண்டானவைகளையெல்லாம்  வெறுத்துவிடாவிட்டால்  அவன்  எனக்குச்  சீஷனாயிருக்கமாட்டான்.  {Luke  14:33}

 

உப்பு  நல்லதுதான்,  உப்பு  சாரமற்றுப்போனால்  எதினால்  சாரமாக்கப்படும்?  {Luke  14:34}

 

அது  நிலத்துக்காகிலும்  எருவுக்காகிலும்  உதவாது,  அதை  வெளியே  கொட்டிப்  போடுவார்கள்.  கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றார்.  {Luke  14:35}

 

சகல  ஆயக்காரரும்  பாவிகளும்  அவருடைய  வசனங்களைக்  கேட்கும்படி  அவரிடத்தில்  வந்து  சேர்ந்தார்கள்.  {Luke  15:1}

 

அப்பொழுது  பரிசேயரும்<Pharisees>  வேதபாரகரும்  முறுமுறுத்து:  இவர்  பாவிகளை  ஏற்றுக்கொண்டு  அவர்களோடே  சாப்பிடுகிறார்  என்றார்கள்.  {Luke  15:2}

 

அவர்களுக்கு  அவர்  சொன்ன  உவமையாவது:  {Luke  15:3}

 

உங்களில்  ஒரு  மனுஷன்  நூறு  ஆடுகளை  உடையவனாயிருந்து,  அவைகளில்  ஒன்று  காணாமற்போனால்,  தொண்ணூற்றொன்பது  ஆடுகளையும்  வனாந்தரத்திலே  விட்டு,  காணாமற்போன  ஆட்டைக்  கண்டுபிடிக்குமளவும்  தேடித்திரியானோ?  {Luke  15:4}

 

கண்டுபிடித்தபின்பு,  அவன்  சந்தோஷத்தோடே  அதைத்  தன்  தோள்களின்மேல்  போட்டுக்கொண்டு,  {Luke  15:5}

 

வீட்டுக்கு  வந்து,  சிநேகிதரையும்  அயலகத்தாரையும்  கூட  வரவழைத்து:  காணாமற்போன  என்  ஆட்டைக்  கண்டுபிடித்தேன்  என்னோடுகூடச்  சந்தோஷப்படுங்கள்  என்பான்  அல்லவா?  {Luke  15:6}

 

அதுபோல,  மனந்திரும்ப  அவசியமில்லாத  தொண்ணூற்றொன்பது  நீதிமான்களைக்குறித்துச்  சந்தோஷம்  உண்டாகிறதைப்பார்க்கிலும்  மனந்திரும்புகிற  ஒரே  பாவியினிமித்தம்  பரலோகத்தில்  மிகுந்த  சந்தோஷம்  உண்டாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  15:7}

 

அன்றியும்,  ஒரு  ஸ்திரீ  பத்து  வெள்ளிக்காசை  உடையவளாயிருந்து,  அதில்  ஒரு  வெள்ளிக்காசு  காணாமற்போனால்,  விளக்கைக்  கொளுத்தி,  வீட்டைப்  பெருக்கி,  அதைக்  கண்டுபிடிக்கிறவரைக்கும்  ஜாக்கிரதையாய்த்  தேடாமலிருப்பாளோ?  {Luke  15:8}

 

கண்டுபிடித்தபின்பு,  தன்  சிநேகிதிகளையும்  அயல்  வீட்டுக்காரிகளையும்  கூட  வரவழைத்து:  காணாமற்போன  வெள்ளிக்காசைக்  கண்டுபிடித்தேன்,  என்னோடுகூடச்  சந்தோஷப்படுங்கள்  என்பாள்  அல்லவா?  {Luke  15:9}

 

அதுபோல  மனந்திரும்புகிற  ஒரே  பாவியினிமித்தம்  தேவனுடைய  தூதர்களுக்கு  முன்பாகச்  சந்தோஷமுண்டாயிருக்கிறது  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  15:10}

 

பின்னும்  அவர்  சொன்னது:  ஒரு  மனுஷனுக்கு  இரண்டு  குமாரர்  இருந்தார்கள்.  {Luke  15:11}

 

அவர்களில்  இளையவன்  தகப்பனை  நோக்கி:  தகப்பனே,  ஆஸ்தியில்  எனக்கு  வரும்  பங்கை  எனக்குத்  தரவேண்டும்  என்றான்.  அந்தப்படி  அவன்  அவர்களுக்குத்  தன்  ஆஸ்தியைப்  பங்கிட்டுக்கொடுத்தான்.  {Luke  15:12}

 

சில  நாளைக்குப்பின்பு,  இளையமகன்  எல்லாவற்றையும்  சேர்த்துக்கொண்டு,  தூரதேசத்துக்குப்  புறப்பட்டுப்போய்,  அங்கே  துன்மார்க்கமாய்  ஜீவனம்பண்ணி,  தன்  ஆஸ்தியை  அழித்துப்போட்டான்.  {Luke  15:13}

 

எல்லாவற்றையும்  அவன்  செலவழித்தபின்பு,  அந்தத்  தேசத்திலே  கொடிய  பஞ்சமுண்டாயிற்று.  அப்பொழுது  அவன்  குறைவுபடத்தொடங்கி,  {Luke  15:14}

 

அந்தத்  தேசத்துக்  குடிகளில்  ஒருவனிடத்தில்  போய்  ஒட்டிக்கொண்டான்.  அந்தக்  குடியானவன்  அவனைத்  தன்  வயல்களில்  பன்றிகளை  மேய்க்கும்படி  அனுப்பினான்.  {Luke  15:15}

 

அப்பொழுது  பன்றிகள்  தின்கிற  தவிட்டினாலே  தன்  வயிற்றை  நிரப்ப  ஆசையாயிருந்தான்,  ஒருவனும்  அதை  அவனுக்குக்  கொடுக்கவில்லை.  {Luke  15:16}

 

அவனுக்குப்  புத்தி  தெளிந்தபோது,  அவன்:  என்  தகப்பனுடைய  கூலிக்காரர்  எத்தனையோ  பேருக்குப்  பூர்த்தியான  சாப்பாடு  இருக்கிறது,  நானோ  பசியினால்  சாகிறேன்.  {Luke  15:17}

 

நான்  எழுந்து,  என்  தகப்பனிடத்திற்குப்  போய்:  தகப்பனே,  பரத்துக்கு  விரோதமாகவும்  உமக்கு  முன்பாகவும்  பாவஞ்செய்தேன்.  {Luke  15:18}

 

இனிமேல்  உம்முடைய  குமாரன்  என்று  சொல்லப்படுவதற்கு  நான்  பாத்திரனல்ல,  உம்முடைய  கூலிக்காரரில்  ஒருவனாக  என்னை  வைத்துக்கொள்ளும்  என்பேன்  என்று  சொல்லி;  {Luke  15:19}

 

எழுந்து  புறப்பட்டு,  தன்  தகப்பனிடத்தில்  வந்தான்.  அவன்  தூரத்தில்  வரும்போதே,  அவனுடைய  தகப்பன்  அவனைக்  கண்டு,  மனதுருகி,  ஓடி,  அவன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு,  அவனை  முத்தஞ்செய்தான்.  {Luke  15:20}

 

குமாரன்  தகப்பனை  நோக்கி:  தகப்பனே,  பரத்துக்கு  விரோதமாகவும்,  உமக்கு  முன்பாகவும்  பாவஞ்செய்தேன்,  இனிமேல்  உம்முடைய  குமாரன்  என்று  சொல்லப்படுவதற்கு  நான்  பாத்திரன்  அல்ல  என்று  சொன்னான்.  {Luke  15:21}

 

அப்பொழுது  தகப்பன்  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  நீங்கள்  உயர்ந்த  வஸ்திரத்தைக்  கொண்டுவந்து,  இவனுக்கு  உடுத்தி,  இவன்  கைக்கு  மோதிரத்தையும்  கால்களுக்குப்  பாதரட்சைகளையும்  போடுங்கள்.  {Luke  15:22}

 

கொழுத்த  கன்றைக்  கொண்டுவந்து  அடியுங்கள்.  நாம்  புசித்து,  சந்தோஷமாயிருப்போம்.  {Luke  15:23}

 

என்  குமாரனாகிய  இவன்  மரித்தான்,  திரும்பவும்  உயிர்த்தான்;  காணாமற்போனான்,  திரும்பவும்  காணப்பட்டான்  என்றான்.  அப்படியே  அவர்கள்  சந்தோஷப்படத்  தொடங்கினார்கள்.  {Luke  15:24}

 

அவனுடைய  மூத்தகுமாரன்  வயலிலிருந்தான்.  அவன்  திரும்பி  வீட்டுக்குச்  சமீபமாய்  வருகிறபோது,  கீதவாத்தியத்தையும்  நடனக்களிப்பையும்  கேட்டு;  {Luke  15:25}

 

ஊழியக்காரரில்  ஒருவனை  அழைத்து:  இதென்ன  என்று  விசாரித்தான்.  {Luke  15:26}

 

அதற்கு  அவன்:  உம்முடைய  சகோதரன்  வந்தார்,  அவர்  மறுபடியும்  சுகத்துடனே  உம்முடைய  தகப்பனிடத்தில்  வந்து  சேர்ந்தபடியினாலே  அவருக்காகக்  கொழுத்த  கன்றை  அடிப்பித்தார்  என்றான்.  {Luke  15:27}

 

அப்பொழுது  அவன்  கோபமடைந்து,  உள்ளே  போக  மனதில்லாதிருந்தான்.  தகப்பனோ  வெளியே  வந்து,  அவனை  வருந்தியழைத்தான்.  {Luke  15:28}

 

அவன்  தகப்பனுக்குப்  பிரதியுத்தரமாக:  இதோ,  இத்தனை  வருஷகாலமாய்  நான்  உமக்கு  ஊழியஞ்செய்து,  ஒருக்காலும்  உம்முடைய  கற்பனையை  மீறாதிருந்தும்,  என்  சிநேகிதரோடே  நான்  சந்தோஷமாயிருக்கும்படி  நீர்  ஒருக்காலும்  எனக்கு  ஒரு  ஆட்டுக்குட்டியையாவது  கொடுக்கவில்லை.  {Luke  15:29}

 

வேசிகளிடத்தில்  உம்முடைய  ஆஸ்தியை  அழித்துப்போட்ட  உம்முடைய  குமாரனாகிய  இவன்  வந்தவுடனே  கொழுத்த  கன்றை  இவனுக்காக  அடிப்பித்தீரே  என்றான்.  {Luke  15:30}

 

அதற்குத்  தகப்பன்:  மகனே,  நீ  எப்போதும்  என்னோடிருக்கிறாய்,  எனக்குள்ளதெல்லாம்  உன்னுடையதாயிருக்கிறது.  {Luke  15:31}

 

உன்  சகோதரனாகிய  இவனோ  மரித்தான்,  திரும்பவும்  உயிர்த்தான்;  காணாமற்போனான்,  திரும்பவும்  காணப்பட்டான்;  ஆனபடியினாலே,  நாம்  சந்தோஷப்பட்டு  மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே  என்று  சொன்னான்  என்றார்.  {Luke  15:32}

 

பின்னும்  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஐசுவரியவானாகிய  ஒரு  மனுஷனுக்கு  ஒரு  உக்கிராணக்காரன்  இருந்தான்;  அவன்  தன்  எஜமானுடைய  ஆஸ்திகளை  அழித்துப்போடுகிறதாக  எஜமானுக்கு  அறிவிக்கப்பட்டது.  {Luke  16:1}

 

அப்பொழுது  எஜமான்  அவனை  வரவழைத்து:  உன்னைக்குறித்து  நான்  இப்படிக்  கேள்விப்படுகிறதென்ன?  உன்  உக்கிராணக்  கணக்கை  யொப்புவி,  இனி  நீ  உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது  என்றான்.  {Luke  16:2}

 

அப்பொழுது  உக்கிராணக்காரன்:  நான்  என்ன  செய்வேன்,  என்  எஜமான்  உக்கிராண  விசாரிப்பிலிருந்து  என்னைத்  தள்ளிப்போடுகிறானே;  கொத்துகிறதற்கு  எனக்குப்  பெலனில்லை,  இரக்கவும்  வெட்கப்படுகிறேன்.  {Luke  16:3}

 

உக்கிராண  விசாரிப்பைவிட்டு  நான்  தள்ளப்படும்போது,  என்னைத்  தங்கள்  வீடுகளில்  ஏற்றுக்கொள்வார்  உண்டாகும்படி  செய்யவேண்டியது  இன்னதென்று  எனக்குத்  தெரியவந்தது,  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டு;  {Luke  16:4}

 

தன்  எஜமானிடத்தில்  கடன்பட்டவர்களை  ஒவ்வொருவனாக  வரவழைத்து:  முதலாவது  வந்தவனை  நோக்கி:  நீ  என்  எஜமானிடத்தில்  பட்ட  கடன்  எவ்வளவு  என்றான்.  {Luke  16:5}

 

அவன்:  நூறுகுடம்  எண்ணெய்  என்றான்.  அப்பொழுது  உக்கிராணக்காரன்  அவனை  நோக்கி:  நீ  உன்  சீட்டை  வாங்கி,  உட்கார்ந்து,  ஐம்பது  என்று  சீக்கிரமாய்  எழுது  என்றான்.  {Luke  16:6}

 

பின்பு  அவன்  வேறொருவனை  நோக்கி:  நீ  பட்ட  கடன்  எவ்வளவு  என்றான்.  அவன்:  நூறு  கலம்  கோதுமை  என்றான்.  அப்பொழுது  அவன்:  நீ  உன்  சீட்டை  வாங்கி,  எண்பது  என்று  எழுது  என்றான்.  {Luke  16:7}

 

அநீதியுள்ள  உக்கிராணக்காரன்  புத்தியாய்ச்  செய்தான்  என்று  எஜமான்  கண்டு,  அவனை  மெச்சிக்கொண்டான்.  இவ்விதமாய்  ஒளியின்  பிள்ளைகளைப்பார்க்கிலும்  இந்தப்  பிரபஞ்சத்தின்  பிள்ளைகள்  தங்கள்  சந்ததியில்  அதிக  புத்திமான்களாயிருக்கிறார்கள்.  {Luke  16:8}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்,  நீங்கள்  மாளும்போது  உங்களை  நித்தியமான  வீடுகளிலே  ஏற்றுக்  கொள்வாருண்டாகும்படி,  அநீதியான  உலகப்பொருளால்  உங்களுக்குச்  சிநேகிதரைச்  சம்பாதியுங்கள்.  {Luke  16:9}

 

கொஞ்சத்திலே  உண்மையுள்ளவன்  அநேகத்திலும்  உண்மையுள்ளவனாயிருக்கிறான்,  கொஞ்சத்திலே  அநீதியுள்ளவன்  அநேகத்திலும்  அநீதியுள்ளவனாயிருக்கிறான்.  {Luke  16:10}

 

அநீதியான  உலகப்பொருளைப்பற்றி  நீங்கள்  உண்மையாயிராவிட்டால்,  யார்  உங்களை  நம்பி  உங்களிடத்தில்  மெய்யான  பொருளை  ஒப்புவிப்பார்கள்?  {Luke  16:11}

 

வேறொருவனுடைய  காரியத்தில்  நீங்கள்  உண்மையுள்ளவர்களாயிராவிட்டால்,  உங்களுக்கு  யாதொன்றைச்  சொந்தமாகக்  கொடுப்பவர்  யார்?  {Luke  16:12}

 

எந்த  ஊழியக்காரனும்  இரண்டு  எஜமான்களுக்கு  ஊழியஞ்செய்யக்கூடாது;  ஒருவனைப்  பகைத்து  மற்றவனைச்  சிநேகிப்பான்,  அல்லது  ஒருவனைப்  பற்றிக்கொண்டு  மற்றவனை  அசட்டைபண்ணுவான்.  தேவனுக்கும்  உலகப்பொருளுக்கும்  ஊழியஞ்செய்ய  உங்களாலே  கூடாது  என்றார்.  {Luke  16:13}

 

இவைகளையெல்லாம்  பொருளாசைக்காரராகிய  பரிசேயரும்<Pharisees>  கேட்டு,  அவரைப்  பரியாசம்பண்ணினார்கள்.  {Luke  16:14}

 

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  மனுஷர்முன்பாக  உங்களை  நீதிமான்களாகக்  காட்டுகிறீர்கள்,  தேவனோ  உங்கள்  இருதயங்களை  அறிந்திருக்கிறார்;  மனுஷருக்குள்ளே  மேன்மையாக  எண்ணப்படுகிறது  தேவனுக்கு  முன்பாக  அருவருப்பாயிருக்கிறது.  {Luke  16:15}

 

நியாயப்பிரமாணமும்  தீர்க்கதரிசன  வாக்கியங்களும்  யோவான்வரைக்கும்<John>  வழங்கிவந்தது;  அதுமுதல்  தேவனுடைய  ராஜ்யம்  சுவிசேஷமாய்  அறிவிக்கப்பட்டுவருகிறது,  யாவரும்  பலவந்தமாய்  அதில்  பிரவேசிக்கிறார்கள்.  {Luke  16:16}

 

வேதத்தில்  ஒரு  எழுத்தின்  உறுப்பு  அவமாய்ப்  போவதைப்பார்க்கிலும்,  வானமும்  பூமியும்  ஒழிந்துபோவது  எளிதாயிருக்கும்.  {Luke  16:17}

 

தன்  மனைவியைத்  தள்ளிவிட்டு,  வேறொருத்தியை  விவாகம்பண்ணுகிறவன்  விபசாரஞ்செய்கிறான்,  புருஷனாலே  தள்ளப்பட்டவளை  விவாகம்பண்ணுகிறவனும்  விபசாரஞ்செய்கிறான்.  {Luke  16:18}

 

ஐசுவரியமுள்ள  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  இரத்தாம்பரமும்  விலையேறப்பெற்ற  வஸ்திரமும்  தரித்து,  அநுதினமும்  சம்பிரமமாய்  வாழ்ந்துகொண்டிருந்தான்.  {Luke  16:19}

 

லாசரு<Lazarus>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  தரித்திரனும்  இருந்தான்;  அவன்  பருக்கள்  நிறைந்தவனாய்,  அந்த  ஐசுவரியவானுடைய  வாசலருகே  கிடந்து,  {Luke  16:20}

 

அவனுடைய  மேஜையிலிருந்து  விழுந்  துணிக்கைகளாலே  தன்  பசியை  ஆற்ற  ஆசையாயிருந்தான்;  நாய்கள்  வந்து  அவன்  பருக்களை  நக்கிற்று.  {Luke  16:21}

 

பின்பு  அந்தத்  தரித்திரன்  மரித்து,  தேவதூதரால்  ஆபிரகாமுடைய<Abraham>  மடியிலே  கொண்டுபோய்  விடப்பட்டான்;  ஐசுவரியவானும்  மரித்து  அடக்கம்பண்ணப்பட்டான்.  {Luke  16:22}

 

பாதாளத்திலே  அவன்  வேதனைப்படுகிறபோது,  தன்  கண்களை  ஏறெடுத்து,  தூரத்திலே  ஆபிரகாமையும்<Abraham>  அவன்  மடியிலே  லாசருவையும்<Lazarus>  கண்டான்.  {Luke  16:23}

 

அப்பொழுது  அவன்:  தகப்பனாகிய  ஆபிரகாமே<Abraham>,  நீர்  எனக்கு  இரங்கி,  லாசரு<Lazarus>  தன்  விரலின்  நுனியைத்  தண்ணீரில்  தோய்த்து,  என்  நாவைக்  குளிரப்பண்ணும்படி  அவனை  அனுப்பவேண்டும்;  இந்த  அக்கினிஜுவாலையில்  வேதனைப்படுகிறேனே  என்று  கூப்பிட்டான்.  {Luke  16:24}

 

அதற்கு  ஆபிரகாம்<Abraham>:  மகனே,  நீ  பூமியிலே  உயிரோடிருக்குங்  காலத்தில்  உன்  நன்மைகளை  அனுபவித்தாய்,  லாசருவும்<Lazarus>  அப்படியே  தீமைகளை  அநுபவித்தான்,  அதை  நினைத்துக்கொள்;  இப்பொழுது  அவன்  தேற்றப்படுகிறான்,  நீயோ  வேதனைப்படுகிறாய்.  {Luke  16:25}

 

அதுவுமல்லாமல்,  இவ்விடத்திலிருந்து  உங்களிடத்திற்குக்  கடந்துபோகவும்,  அவ்விடத்திலிருந்து  எங்களிடத்திற்குக்  கடந்துவரவும்  மனதுள்ளவர்களுக்குக்  கூடாதபடிக்கு,  எங்களுக்கும்  உங்களுக்கும்  நடுவே  பெரும்பிளப்பு  உண்டாக்கப்பட்டிருக்கிறது  என்றான்.  {Luke  16:26}

 

அப்பொழுது  அவன்:  அப்படியானால்,  தகப்பனே,  எனக்கு  ஐந்துபேர்  சகோதரருண்டு,  அவர்களும்  வேதனையுள்ள  இந்த  இடத்துக்கு  வராதபடி,  அவன்  போய்  அவர்களுக்குச்  சாட்சியாக  அறிவிக்கும்  பொருட்டு,  {Luke  16:27}

 

நீர்  அவனை  என்  தகப்பன்  வீட்டுக்கு  அனுப்பும்படி  உம்மை  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  {Luke  16:28}

 

ஆபிரகாம்<Abraham>  அவனை  நோக்கி:  அவர்களுக்கு  மோசேயும்<Moses>  தீர்க்கதரிசிகளும்  உண்டு,  அவர்களுக்கு  அவர்கள்  செவிகொடுக்கட்டும்  என்றான்.  {Luke  16:29}

 

அதற்கு  அவன்:  அப்படியல்ல,  தகப்பனாகிய  ஆபிரகாமே<Abraham>,  மரித்தோரிலிருந்து  ஒருவன்  அவர்களிடத்திற்குப்  போனால்  மனந்திரும்புவார்கள்  என்றான்.  {Luke  16:30}

 

அதற்கு  அவன்:  அவர்கள்  மோசேக்கும்<Moses>  தீர்க்கதரிசிகளுக்கும்  செவிகொடாவிட்டால்,  மரித்தோரிலிருந்து  ஒருவன்  எழுந்துபோனாலும்,  நம்பமாட்டார்கள்  என்று  சொன்னான்  என்றார்.  {Luke  16:31}

 

பின்பு  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  இடறல்கள்  வராமல்போவது  கூடாதகாரியம்,  ஆகிலும்  அவைகள்  எவனால்  வருகிறதோ,  அவனுக்கு  ஐயோ!  {Luke  17:1}

 

அவன்  இந்தச்  சிறுவரில்  ஒருவனுக்கு  இடறலுண்டாக்குகிறதைப்  பார்க்கிலும்,  அவனுடைய  கழுத்தில்  ஏந்திரக்கல்  கட்டப்பட்டு,  அவன்  சமுத்திரத்தில்  தள்ளுண்டுபோவது  அவனுக்கு  நலமாயிருக்கும்.  {Luke  17:2}

 

உங்களைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்.  உன்  சகோதரன்  உனக்கு  விரோதமாய்க்  குற்றஞ்செய்தால்,  அவனைக்  கடிந்துகொள்;  அவன்  மனஸ்தாபப்பட்டால்,  அவனுக்கு  மன்னிப்பாயாக.  {Luke  17:3}

 

அவன்  ஒருநாளில்  ஏழுதரம்  உனக்கு  விரோதமாய்க்  குற்றஞ்செய்து,  ஏழுதரமும்  உன்னிடத்தில்  வந்து:  நான்  மனஸ்தாபப்படுகிறேன்  என்று  சொன்னால்,  அவனுக்கு  மன்னிப்பாயாக  என்றார்.  {Luke  17:4}

 

அப்பொழுது  அப்போஸ்தலர்  கர்த்தரை  நோக்கி:  எங்கள்  விசுவாசத்தை  வர்த்திக்கப்பண்ணவேண்டும்  என்றார்கள்.  {Luke  17:5}

 

அதற்குக்  கர்த்தர்:  கடுகுவிதையளவு  விசுவாசம்  உங்களுக்கு  உண்டாயிருந்தால்,  நீங்கள்  இந்தக்  காட்டத்திமரத்தை  நோக்கி:  நீ  வேரோடே  பிடுங்குண்டு  கடலிலே  நடப்படுவாயாக  என்று  சொல்ல,  அது  உங்களுக்குக்  கீழ்ப்படியும்.  {Luke  17:6}

 

உங்களில்  ஒருவனுடைய  ஊழியக்காரன்  உழுது  அல்லது  மந்தைமேய்த்து  வயலிலிருந்து  வரும்போது,  எஜமான்  அவனை  நோக்கி:  நீ  முன்பு  போய்ச்  சாப்பிட்டுவா  என்று  அவனுக்குச்  சொல்வானோ?  {Luke  17:7}

 

நீ  எனக்குச்  சாப்பாடு  ஆயத்தம்பண்ணி,  அரைகட்டிக்கொண்டு,  நான்  போஜனபானம்பண்ணுமளவும்  எனக்கு  ஊழியஞ்செய்,  அதற்குப்பின்  நீ  புசித்துக்குடிக்கலாம்  என்று  அவனுக்குச்  சொல்லுவானல்லவா?  {Luke  17:8}

 

தான்  கட்டளையிட்டவைகளை  அந்த  வேலைக்காரன்  செய்ததற்காக  அவனுக்கு  உபசாரஞ்செய்வானோ?  அப்படிச்  செய்யமாட்டானே.  {Luke  17:9}

 

அப்படியே  நீங்களும்  உங்களுக்குக்  கட்டளையிடப்பட்ட  யாவற்றையும்  செய்த  பின்பு:  நாங்கள்  அப்பிரயோஜனமான  ஊழியக்காரர்,  செய்யவேண்டிய  கடமையைமாத்திரம்  செய்தோம்  என்று  சொல்லுங்கள்  என்றார்.  {Luke  17:10}

 

பின்பு  அவர்  எருசலேமுக்குப்<Jerusalem>  பிரயாணம்பண்ணுகையில்,  அவர்  சமாரியா<Samaria>  கலிலேயா<Galilee>  என்னும்  நாடுகளின்  வழியாக  நடந்துபோனார்.  {Luke  17:11}

 

அவர்  ஒரு  கிராமத்தில்  பிரவேசித்தபோது,  குஷ்டரோகமுள்ள  மனுஷர்  பத்துப்பேர்  அவருக்கு  எதிராக  வந்து,  தூரத்திலே  நின்று:  {Luke  17:12}

 

இயேசு<Jesus>  ஐயரே,  எங்களுக்கு  இரங்கும்  என்று  சத்தமிட்டார்கள்.  {Luke  17:13}

 

அவர்களை  அவர்  பார்த்து:  நீங்கள்  போய்,  ஆசாரியர்களுக்கு  உங்களைக்  காண்பியுங்கள்  என்றார்.  அந்தப்படி  அவர்கள்  போகையில்  சுத்தமானார்கள்.  {Luke  17:14}

 

அவர்களில்  ஒருவன்  தான்  ஆரோக்கியமானதைக்  கண்டு,  திரும்பிவந்து,  உரத்த  சத்தத்தோடே  தேவனை  மகிமைப்படுத்தி,  {Luke  17:15}

 

அவருடைய  பாதத்தருகே  முகங்குப்புற  விழுந்து,  அவருக்கு  ஸ்தோத்திரஞ்செலுத்தினான்;  அவன்  சமாரியனாயிருந்தான்<Samaritan>.  {Luke  17:16}

 

அப்பொழுது  இயேசு<Jesus>:  சுத்தமானவர்கள்  பத்துப்பேர்  அல்லவா,  மற்ற  ஒன்பதுபேர்  எங்கே?  {Luke  17:17}

 

தேவனை  மகிமைப்படுத்துகிறதற்கு,  இந்த  அந்நியனே  ஒழிய  மற்றொருவனும்  திரும்பிவரக்காணோமே  என்று  சொல்லி,  {Luke  17:18}

 

அவனை  நோக்கி:  நீ  எழுந்துபோ,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது  என்றார்.  {Luke  17:19}

 

தேவனுடைய  ராஜ்யம்  எப்பொழுது  வருமென்று,  பரிசேயர்<Pharisees>  அவரிடத்தில்  கேட்டபொழுது,  அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  தேவனுடைய  ராஜ்யம்  பிரத்தியட்சமாய்  வராது.  {Luke  17:20}

 

இதோ,  இங்கே  என்றும்,  அதோ,  அங்கே  என்றும்  சொல்லப்படுகிறதற்கும்  ஏதுவிராது;  இதோ,  தேவனுடைய  ராஜ்யம்  உங்களுக்குள்  இருக்கிறதே  என்றார்.  {Luke  17:21}

 

பின்பு  அவர்  சீஷர்களை  நோக்கி:  மனுஷகுமாரனுடைய  நாட்களிலொன்றைக்  காணவேண்டுமென்று  நீங்கள்  ஆசைப்படுங்காலம்  வரும்;  ஆனாலும்  அதைக்  காணமாட்டீர்கள்.  {Luke  17:22}

 

இதோ,  இங்கே  என்றும்,  அதோ,  அங்கே  என்றும்,  சிலர்  உங்களிடத்தில்  சொல்லுவார்கள்;  நீங்களோ  போகாமலும்  பின்தொடராமலும்  இருங்கள்.  {Luke  17:23}

 

மின்னல்  வானத்தின்  ஒரு  திசையில்  தோன்றி  மறுதிசைவரைக்கும்  பிரகாசிக்கிறதுபோல  மனுஷகுமாரனும்  தம்முடைய  நாளிலே  தோன்றுவார்.  {Luke  17:24}

 

அதற்கு  முன்பு  அவர்  அநேகம்  பாடுபட்டு,  இந்தச்  சந்ததியினால்  ஆகாதவனென்று  தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.  {Luke  17:25}

 

நோவாவின்<Noe>  நாட்களில்  நடந்ததுபோல  மனுஷகுமாரனுடைய  நாட்களிலும்  நடக்கும்.  {Luke  17:26}

 

நோவா<Noe>  பேழைக்குள்  பிரவேசித்த  நாள்வரைக்கும்  ஜனங்கள்  புசித்துக்  குடித்தார்கள்,  பெண்கொண்டு  கொடுத்தார்கள்;  ஜலப்பிரளயம்  வந்து  எல்லாரையும்  அழித்துப்போட்டது.  {Luke  17:27}

 

லோத்தினுடைய<Lot>  நாட்களில்  நடந்ததுபோலவும்  நடக்கும்;  ஜனங்கள்  புசித்தார்கள்,  குடித்தார்கள்,  கொண்டார்கள்,  விற்றார்கள்,  நட்டார்கள்,  கட்டினார்கள்.  {Luke  17:28}

 

லோத்து<Lot>  சோதோமை<Sodom>  விட்டுப்  புறப்பட்ட  நாளிலே  வானத்திலிருந்து  அக்கினியும்  கந்தகமும்  வருஷித்து,  எல்லாரையும்  அழித்துப்போட்டது.  {Luke  17:29}

 

மனுஷகுமாரன்  வெளிப்படும்  நாளிலும்  அப்படியே  நடக்கும்.  {Luke  17:30}

 

அந்த  நாளிலே  வீட்டின்மேலிருப்பவன்  வீட்டிலுள்ள  தன்  பண்டங்களை  எடுத்துக்கொண்டுபோக  இறங்காமல்  இருக்கக்கடவன்;  அப்படியே  வயலிலிருக்கிறவன்  பின்னிட்டுத்  திரும்பாமலும்  இருக்கக்கடவன்.  {Luke  17:31}

 

லோத்தின்<Lot>  மனைவியை  நினைத்துக்  கொள்ளுங்கள்.  {Luke  17:32}

 

தன்  ஜீவனை  இரட்சிக்க  வகைதேடுகிறவன்  அதை  இழந்து  போவான்;  இழந்துபோகிறவன்  அதை  உயிர்ப்பித்துக்  கொள்ளுவான்.  {Luke  17:33}

 

அந்த  இராத்திரியில்  ஒரே  படுக்கையில்  படுத்திருக்கிற  இரண்டுபேரில்  ஒருவன்  ஏற்றுக்கொள்ளப்படுவான்,  மற்றவன்  கைவிடப்படுவான்.  {Luke  17:34}

 

திரிகை  திரிக்கிற  இரண்டு  ஸ்திரீகளில்  ஒருத்தி  ஏற்றுக்கொள்ளப்படுவாள்,  மற்றவள்  கைவிடப்படுவாள்.  {Luke  17:35}

 

வயலிலிருக்கிற  இரண்டுபேரில்  ஒருவன்  ஏற்றுக்கொள்ளப்படுவான்,  மற்றவன்  கைவிடப்படுவான்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  17:36}

 

அவர்கள்  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  எங்கே,  ஆண்டவரே,  என்றார்கள்.  அதற்கு  அவர்:  பிணம்  எங்கேயோ  அங்கே  கழுகுகள்  வந்து  கூடும்  என்றார்.  {Luke  17:37}

 

சோர்ந்துபோகாமல்  எப்பொழுதும்  ஜெபம்பண்ணவேண்டும்  என்பதைக்  குறித்து  அவர்களுக்கு  அவர்  ஒரு  உவமையைச்  சொன்னார்.  {Luke  18:1}

 

ஒரு  பட்டணத்திலே  ஒரு  நியாயாதிபதி  இருந்தான்;  அவன்  தேவனுக்குப்  பயப்படாதவனும்  மனுஷரை  மதியாதவனுமாயிருந்தான்.  {Luke  18:2}

 

அந்தப்  பட்டணத்திலே  ஒரு  விதவையும்  இருந்தாள்;  அவள்  அவனிடத்தில்  போய்:  எனக்கும்  என்  எதிராளிக்கும்  இருக்கிற  காரியத்தில்  எனக்கு  நியாயஞ்செய்யவேண்டும்  என்று  விண்ணப்பம்பண்ணினாள்.  {Luke  18:3}

 

வெகுநாள்வரைக்கும்  அவனுக்கு  மனதில்லாதிருந்தது.  பின்பு  அவன்:  நான்  தேவனுக்குப்  பயப்படாமலும்  மனுஷரை  மதியாமலும்  இருந்தும்,  {Luke  18:4}

 

இந்த  விதவை  என்னை  எப்பொழுதும்  தொந்தரவு  செய்கிறபடியினால்,  இவள்  அடிக்கடி  வந்து  என்னை  அலட்டாதபடி  இவளுக்கு  நியாயஞ்செய்யவேண்டும்  என்று  தனக்குள்ளே  சொல்லிக்கொண்டான்  என்றார்.  {Luke  18:5}

 

பின்னும்  கர்த்தர்  அவர்களை  நோக்கி:  அநீதியுள்ள  அந்த  நியாயாதிபதி  சொன்னதைச்  சிந்தித்துப்பாருங்கள்.  {Luke  18:6}

 

அந்தப்படியே  தேவன்  தம்மை  நோக்கி  இரவும்  பகலும்  கூப்பிடுகிறவர்களாகிய  தம்மால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களின்  விஷயத்தில்  நீடிய  பொறுமையுள்ளவராயிருந்து  அவர்களுக்கு  நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?  {Luke  18:7}

 

சீக்கிரத்திலே  அவர்களுக்கு  நியாயஞ்செய்வார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  ஆகிலும்  மனுஷகுமாரன்  வரும்போது  பூமியிலே  விசுவாசத்தைக்  காண்பாரோ  என்றார்.  {Luke  18:8}

 

அன்றியும்,  தங்களை  நீதிமான்களென்று  நம்பி,  மற்றவர்களை  அற்பமாயெண்ணின  சிலரைக்குறித்து,  அவர்  ஒரு  உவமையைச்  சொன்னார்.  {Luke  18:9}

 

இரண்டு  மனுஷர்  ஜெபம்பண்ணும்படி  தேவாலயத்துக்குப்  போனார்கள்;  ஒருவன்  பரிசேயன்<Pharisee>,  மற்றவன்  ஆயக்காரன்.  {Luke  18:10}

 

பரிசேயன்<Pharisee>  நின்று:  தேவனே!  நான்  பறிகாரர்,  அநியாயக்காரர்,  விபசாரக்காரர்  ஆகிய  மற்ற  மனுஷரைப்போலவும்,  இந்த  ஆயக்காரனைப்போலவும்  இராததனால்  உம்மை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {Luke  18:11}

 

வாரத்தில்  இரண்டுதரம்  உபவாசிக்கிறேன்;  என்  சம்பாத்தியத்திலெல்லாம்  தசமபாகம்  செலுத்தி  வருகிறேன்  என்று,  தனக்குள்ளே  ஜெபம்பண்ணினான்.  {Luke  18:12}

 

ஆயக்காரன்  தூரத்திலே  நின்று,  தன்  கண்களையும்  வானத்துக்கு  ஏறெடுக்கத்  துணியாமல்,  தன்  மார்பிலே  அடித்துக்கொண்டு:  தேவனே!  பாவியாகிய  என்மேல்  கிருபையாயிரும்  என்றான்.  {Luke  18:13}

 

அவனல்ல,  இவனே  நீதிமானாக்கப்பட்டவனாய்த்  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போனான்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  ஏனெனில்  தன்னை  உயர்த்துகிறவனெவனும்  தாழ்த்தப்படுவான்,  தன்னைத்  தாழ்த்துகிறவன்  உயர்த்தப்படுவான்  என்றார்.  {Luke  18:14}

 

பின்பு  குழந்தைகளையும்  அவர்  தொடும்படிக்கு  அவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  சீஷர்கள்  அதைக்  கண்டு,  கொண்டுவந்தவர்களை  அதட்டினார்கள்.  {Luke  18:15}

 

இயேசுவோ<Jesus>  அவர்களைக்  கொண்டுவரும்படி  கட்டளையிட்டு:  சிறு  பிள்ளைகள்  என்னிடத்தில்  வருகிறதற்கு  இடங்கொடுங்கள்,  அவர்களைத்  தடைபண்ணாதிருங்கள்;  தேவனுடைய  ராஜ்யம்  அப்படிப்பட்டவர்களுடையது.  {Luke  18:16}

 

எவனாகிலும்  சிறு  பிள்ளையைப்போல்  தேவனுடைய  ராஜ்யத்தை  ஏற்றுக்கொள்ளாவிட்டால்,  அதில்  பிரவேசிக்கமாட்டான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  18:17}

 

அப்பொழுது  தலைவன்  ஒருவன்  அவரை  நோக்கி:  நல்ல  போதகரே,  நித்தியஜீவனைச்  சுதந்தரித்துக்கொள்வதற்கு  நான்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டான்.  {Luke  18:18}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நீ  என்னை  நல்லவன்  என்று  சொல்வானேன்?  தேவன்  ஒருவர்  தவிர  நல்லவன்  ஒருவனும்  இல்லையே.  {Luke  18:19}

 

விபசாரஞ்  செய்யாதிருப்பாயாக,  கொலை  செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி  சொல்லாதிருப்பாயாக,  உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்  பண்ணுவாயாக  என்கிற  கற்பனைகளை  நீ  அறிந்திருக்கிறாயே  என்றார்.  {Luke  18:20}

 

அதற்கு  அவன்:  இவைகளையெல்லாம்  என்  சிறு  வயதுமுதல்  கைக்கொண்டிருக்கிறேன்  என்றான்.  {Luke  18:21}

 

இயேசு<Jesus>  அதைக்  கேட்டு:  இன்னும்  உன்னிடத்தில்  ஒரு  குறைவு  உண்டு;  உனக்கு  உண்டானவைகளையெல்லாம்  விற்றுத்  தரித்திரருக்குக்  கொடு,  அப்பொழுது  பரலோகத்திலே  உனக்குப்  பொக்கிஷம்  உண்டாயிருக்கும்;  பின்பு  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  {Luke  18:22}

 

அவன்  அதிக  ஐசுவரியமுள்ளவனானபடியினால்,  இதைக்  கேட்டபொழுது,  மிகுந்த  துக்கமடைந்தான்.  {Luke  18:23}

 

அவன்  மிகுந்த  துக்கமடைந்ததை  இயேசு<Jesus>  கண்டு:  ஐசுவரியமுள்ளவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பது  எவ்வளவு  அரிதாயிருக்கிறது.  {Luke  18:24}

 

ஐசுவரியவான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,  ஒட்டகமானது  ஊசியின்  காதிலே  நுழைவது  எளிதாயிருக்கும்  என்றார்.  {Luke  18:25}

 

அதைக்  கேட்டவர்கள்:  அப்படியானால்  யார்  இரட்சிக்கப்படக்கூடும்  என்றார்கள்.  {Luke  18:26}

 

அதற்கு  அவர்:  மனுஷரால்  கூடாதவைகள்  தேவனால்  கூடும்  என்றார்.  {Luke  18:27}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  அவரை  நோக்கி:  இதோ,  நாங்கள்  எல்லாவற்றையும்  விட்டு,  உம்மைப்  பின்பற்றினோமே  என்றான்.  {Luke  18:28}

 

அதற்கு  அவர்:  தேவனுடைய  ராஜ்யத்தினிமித்தம்  வீட்டையாவது,  பெற்றாரையாவது,  சகோதரரையாவது,  மனைவியையாவது,  பிள்ளைகளையாவது  விட்டுவிட்ட  எவனும்,  {Luke  18:29}

 

இம்மையிலே  அதிகமானவைகளையும்,  மறுமையிலே  நித்திய  ஜீவனையும்  அடையாமற்போவதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  18:30}

 

பின்பு  அவர்  பன்னிருவரையும்  தம்மிடத்தில்  அழைத்து:  இதோ,  எருசலேமுக்குப்<Jerusalem>  போகிறோம்,  மனுஷகுமாரனைக்  குறித்துத்  தீர்க்கதரிசிகளால்  எழுதப்பட்டவைகளெல்லாம்  நிறைவேறும்.  {Luke  18:31}

 

எப்படியெனில்,  அவர்  புறஜாதியாரிடத்தில்  ஒப்புக்கொடுக்கப்பட்டு,  பரியாசமும்  நிந்தையும்  அடைந்து,  துப்பப்படுவார்.  {Luke  18:32}

 

அவரை  வாரினால்  அடித்து,  கொலை  செய்வார்கள்;  மூன்றாம்  நாளிலே  அவர்  உயிரோடே  எழுந்திருப்பார்  என்றார்.  {Luke  18:33}

 

இவைகளில்  ஒன்றையும்  அவர்கள்  உணரவில்லை;  அவைகளின்  பொருள்  அவர்களுக்கு  மறைவாயிருந்தது,  அவர்  சொன்னவைகளை  அவர்கள்  அறிந்துகொள்ளவில்லை.  {Luke  18:34}

 

பின்பு  அவர்  எரிகோவுக்குச்<Jericho>  சமீபமாய்  வரும்போது,  ஒரு  குருடன்  வழியருகே  உட்கார்ந்து  பிச்சை  கேட்டுக்கொண்டிருந்தான்.  {Luke  18:35}

 

ஜனங்கள்  நடக்கிற  சத்தத்தை  அவன்  கேட்டு,  இதென்ன  என்று  விசாரித்தான்.  {Luke  18:36}

 

நசரேயனாகிய  இயேசு<Jesus  of  Nazareth>  போகிறார்  என்று  அவனுக்கு  அறிவித்தார்கள்.  அப்பொழுது  அவன்:  இயேசுவே<Jesus>,  தாவீதின்<David>  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று  கூப்பிட்டான்.  {Luke  18:37}

 

முன்  நடப்பவர்கள்  அவன்  பேசாமலிருக்கும்படி  அவனை  அதட்டினார்கள்.  அவனோ:  தாவீதின்<David>  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று  மிகவும்  அதிகமாய்க்  கூப்பிட்டான்.  {Luke  18:38}

 

இயேசு<Jesus>  நின்று,  அவனைத்  தம்மிடத்தில்  கொண்டுவரும்படி  சொன்னார்.  {Luke  18:39}

 

அவன்  கிட்டவந்தபோது,  அவர்  அவனை  நோக்கி:  {Luke  18:40}

 

நான்  உனக்கு  என்ன  செய்யவேண்டும்  என்றிருக்கிறாய்  என்று  கேட்டார்.  அதற்கு  அவன்:  ஆண்டவரே,  நான்  பார்வையடையவேண்டும்  என்றான்.  {Luke  18:41}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  நீ  பார்வையடைவாயாக,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது  என்றார்.  {Luke  18:42}

 

உடனே  அவன்  பார்வையடைந்து,  தேவனை  மகிமைப்படுத்திக்கொண்டே,  அவருக்குப்  பின்சென்றான்.  ஜனங்களெல்லாரும்  அதைக்  கண்டு,  தேவனைப்  புகழ்ந்தார்கள்.  {Luke  18:43}

 

அவர்  எரிகோவில்<Jericho>  பிரவேசித்து,  அதின்  வழியாக  நடந்துபோகையில்,  {Luke  19:1}

 

ஆயக்காரருக்குத்  தலைவனும்  ஐசுவரியவானுமாயிருந்த  சகேயு<Zacchaeus>  என்னப்பட்ட  ஒரு  மனுஷன்,  {Luke  19:2}

 

இயேசு<Jesus>  எப்படிப்பட்டவரோ  என்று  அவரைப்  பார்க்க  வகைதேடினான்.  அவன்  குள்ளனானபடியால்,  ஜனக்கூட்டத்தில்  அவரைக்  காணக்கூடாமல்,  {Luke  19:3}

 

அவர்  போகும்  வழியில்  முன்னாக  ஓடி,  அவரைப்  பார்க்கும்படி  ஒரு  காட்டத்தி  மரத்தில்  ஏறினான்.  {Luke  19:4}

 

இயேசு<Jesus>  அந்த  இடத்தில்  வந்தபோது,  அண்ணாந்து  பார்த்து,  அவனைக்  கண்டு:  சகேயுவே<Zacchaeus>,  நீ  சீக்கிரமாய்  இறங்கிவா,  இன்றைக்கு  நான்  உன்  வீட்டிலே  தங்கவேண்டும்  என்றார்.  {Luke  19:5}

 

அவன்  சீக்கிரமாய்  இறங்கி,  சந்தோஷத்தோடே  அவரை  அழைத்துக்கொண்டுபோனான்.  {Luke  19:6}

 

அதைக்  கண்ட  யாவரும்:  இவர்  பாவியான  மனுஷனிடத்தில்  தங்கும்படி  போனார்  என்று  முறுமுறுத்தார்கள்.  {Luke  19:7}

 

சகேயு<Zacchaeus>  நின்று,  கர்த்தரை  நோக்கி:  ஆண்டவரே,  என்  ஆஸ்திகளில்  பாதியை  ஏழைகளுக்குக்  கொடுக்கிறேன்,  நான்  ஒருவனிடத்தில்  எதையாகிலும்  அநியாயமாய்  வாங்கினதுண்டானால்,  நாலத்தனையாகத்  திரும்பச்  செலுத்துகிறேன்  என்றான்.  {Luke  19:8}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  இன்றைக்கு  இந்த  வீட்டுக்கு  இரட்சிப்பு  வந்தது;  இவனும்  ஆபிரகாமுக்குக்<Abraham>  குமாரனாயிருக்கிறானே.  {Luke  19:9}

 

இழந்துபோனதைத்  தேடவும்  இரட்சிக்கவுமே  மனுஷகுமாரன்  வந்திருக்கிறார்  என்றார்.  {Luke  19:10}

 

அவர்கள்  இவைகளைக்  கேட்டுக்  கொண்டிருக்கையில்,  அவர்  எருசலேமுக்குச்<Jerusalem>  சமீபித்திருந்தபடியினாலும்,  தேவனுடைய  ராஜ்யம்  சீக்கிரமாய்  வெளிப்படுமென்று  அவர்கள்  நினைத்தபடியினாலும்,  அவர்  ஒரு  உவமையைச்  சொன்னார்:  {Luke  19:11}

 

பிரபுவாகிய  ஒருவன்  ஒரு  ராஜ்யத்தைப்  பெற்றுக்கொண்டு  திரும்பிவரும்படி  தூரதேசத்துக்குப்  போகப்  புறப்பட்டான்.  {Luke  19:12}

 

புறப்படும்போது,  அவன்  தன்  ஊழியக்காரரில்  பத்துப்பேரை  அழைத்து,  அவர்களிடத்தில்  பத்துராத்தல்  திரவியங்கொடுத்து:  நான்  திரும்பிவருமளவும்  இதைக்கொண்டு  வியாபாரம்பண்ணுங்கள்  என்று  சொன்னான்.  {Luke  19:13}

 

அவனுடைய  ஊரார்  அவனைப்  பகைத்து,  இவன்  எங்கள்மேல்  ராஜாவாயிருக்கிறது  எங்களுக்கு  மனதில்லையென்று  சொல்லும்படி  அவன்  பின்னே  ஸ்தானாபதிகளை  அனுப்பினார்கள்.  {Luke  19:14}

 

அவன்  ராஜ்யத்தைப்  பெற்றுக்கொண்டு  திரும்பிவந்தபோது,  தன்னிடத்தில்  திரவியம்  வாங்கியிருந்த  அந்த  ஊழியக்காரரில்  அவனவன்  வியாபாரம்பண்ணிச்  சம்பாதித்தது  இவ்வளவென்று  அறியும்படி,  அவர்களைத்  தன்னிடத்தில்  அழைத்துவரச்  சொன்னான்.  {Luke  19:15}

 

அப்பொழுது  முந்தினவன்  வந்து:  ஆண்டவனே,  உம்முடைய  ராத்தலினால்  பத்துராத்தல்  ஆதாயம்  கிடைத்தது  என்றான்.  {Luke  19:16}

 

எஜமான்  அவனை  நோக்கி:  நல்லது  உத்தம  ஊழியக்காரனே,  நீ  கொஞ்சத்தில்  உண்மையுள்ளவனாயிருந்தபடியால்  பத்துப்  பட்டணங்களுக்கு  அதிகாரியாயிரு  என்றான்.  {Luke  19:17}

 

அப்படியே  இரண்டாம்  ஊழியக்காரன்  வந்து:  ஆண்டவனே,  உம்முடைய  ராத்தலினால்  ஐந்துராத்தல்  ஆதாயம்  கிடைத்தது  என்றான்.  {Luke  19:18}

 

அவனையும்  அவன்  நோக்கி:  நீயும்  ஐந்து  பட்டணங்களுக்கு  அதிகாரியாயிரு  என்றான்.  {Luke  19:19}

 

பின்பு  வேறொருவன்  வந்து:  ஆண்டவனே,  இதோ,  உம்முடைய  ராத்தல்,  இதை  ஒரு  சீலையிலே  வைத்திருந்தேன்.  {Luke  19:20}

 

நீர்  வைக்காததை  எடுக்கிறவரும்,  விதைக்காததை  அறுக்கிறவருமான  கடினமுள்ள  மனுஷனென்று  அறிந்து,  உமக்குப்  பயந்திருந்தேன்  என்றான்.  {Luke  19:21}

 

அதற்கு  அவன்:  பொல்லாத  ஊழியக்காரனே,  உன்  வாய்ச்சொல்லைக்கொண்டே  உன்னை  நியாயந்தீர்க்கிறேன்.  நான்  வைக்காததை  எடுக்கிறவனும்,  விதைக்காததை  அறுக்கிறவனுமான  கடினமுள்ள  மனுஷனென்று  அறிந்தாயே,  {Luke  19:22}

 

பின்னை  ஏன்  நீ  என்  திரவியத்தைக்  காசுக்கடையிலே  வைக்கவில்லை;  வைத்திருந்தால்  நான்  வரும்போது,  அதை  வட்டியோடே  வரப்பற்றிக்  கொள்வேனே  என்று  சொல்லி;  {Luke  19:23}

 

சமீபமாய்  நிற்கிறவர்களை  நோக்கி:  அந்த  ராத்தலை  அவன்  கையிலிருந்தெடுத்து,  பத்துராத்தல்  உள்ளவனுக்குக்  கொடுங்கள்  என்றான்.  {Luke  19:24}

 

அதற்கு  அவர்கள்:  ஆண்டவனே,  அவனுக்குப்  பத்துராத்தல்  இருக்கிறதே  என்றார்கள்.  {Luke  19:25}

 

அதற்கு  அவன்:  உள்ளவன்  எவனுக்குங்  கொடுக்கப்படும்,  இல்லாதவனிடத்தில்  உள்ளதும்  எடுத்துக்கொள்ளப்படும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  19:26}

 

அன்றியும்  தங்கள்மேல்  நான்  ராஜாவாகிறதற்கு  மனதில்லாதிருந்தவர்களாகிய  என்னுடைய  சத்துருக்களை  இங்கே  கொண்டுவந்து,  எனக்கு  முன்பாக  வெட்டிப்போடுங்கள்  என்று  சொன்னான்  என்றார்.  {Luke  19:27}

 

இவைகளை  அவர்  சொன்னபின்பு  எருசலேமுக்குப்<Jerusalem>  புறப்பட்டு,  முந்திநடந்துபோனார்.  {Luke  19:28}

 

அவர்  ஒலிவமலையென்னப்பட்ட<mount  of  Olives>  மலையின்  அருகான  பெத்பகே<Bethphage>  பெத்தானியா<Bethany>  என்னும்  ஊர்களுக்குச்  சமீபித்தபோது,  தம்முடைய  சீஷரில்  இரண்டுபேரை  நோக்கி:  {Luke  19:29}

 

உங்களுக்கு  எதிரே  இருக்கிற  கிராமத்துக்குப்  போங்கள்,  அதிலே  பிரவேசிக்கும்போது  மனுஷரிலொருவனும்  ஒருக்காலும்  ஏறியிராத  கழுதைக்குட்டியைக்  கட்டியிருக்கக்  காண்பீர்கள்;  அதை  அவிழ்த்துக்கொண்டு  வாருங்கள்.  {Luke  19:30}

 

அதை  ஏன்  அவிழ்க்கிறீர்களென்று  யாராவது  உங்களிடத்தில்  கேட்டால்,  அது  ஆண்டவருக்கு  வேண்டுமென்று  சொல்லுங்கள்  என்றார்.  {Luke  19:31}

 

அனுப்பப்பட்டவர்கள்  போய்,  தங்களுக்கு  அவர்  சொன்னபடியே  கண்டார்கள்.  {Luke  19:32}

 

கழுதைக்குட்டியை  அவர்கள்  அவிழ்க்கும்போது,  அதற்கு  உடையவர்கள்:  குட்டியை  ஏன்  அவிழ்க்கிறீர்கள்  என்று  கேட்டார்கள்.  {Luke  19:33}

 

அதற்கு  அவர்கள்:  அது  ஆண்டவருக்கு  வேண்டுமென்று  சொல்லி,  {Luke  19:34}

 

அதை  இயேசுவினிடத்தில்<Jesus>  கொண்டுவந்து,  தங்கள்  வஸ்திரங்களை  அதின்மேல்  போட்டு,  இயேசுவை<Jesus>  அதின்மேல்  ஏற்றினார்கள்.  {Luke  19:35}

 

அவர்  போகையில்,  அவர்கள்  தங்கள்  வஸ்திரங்களை  வழியிலே  விரித்தார்கள்.  {Luke  19:36}

 

அவர்  ஒலிவமலையின்<mount  of  Olives>  அடிவாரத்துக்குச்  சமீபமாய்  வருகையில்  திரளான  கூட்டமாகிய  சீஷரெல்லாரும்  தாங்கள்  கண்ட  சகல  அற்புதங்களையுங்குறித்துச்  சந்தோஷப்பட்டு,  {Luke  19:37}

 

கர்த்தருடைய  நாமத்தினாலே  வருகிற  ராஜா  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,  பரலோகத்திலே  சமாதானமும்  உன்னதத்திலே  மகிமையும்  உண்டாவதாக  என்று  மிகுந்த  சத்தத்தோடே  தேவனைப்  புகழ்ந்தார்கள்.  {Luke  19:38}

 

அப்பொழுது  கூட்டத்திலிருந்த  பரிசேயரில்<Pharisees>  சிலர்  அவரை  நோக்கி:  போதகரே,  உம்முடைய  சீஷரை  அதட்டும்  என்றார்கள்.  {Luke  19:39}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  இவர்கள்  பேசாமலிருந்தால்  கல்லுகளே  கூப்பிடும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  19:40}

 

அவர்  சமீபமாய்  வந்தபோது  நகரத்தைப்பார்த்து,  அதற்காகக்  கண்ணீர்  விட்டழுது,  {Luke  19:41}

 

உனக்குக்  கிடைத்த  இந்த  நாளிலாகிலும்  உன்  சமாதானத்துக்கு  ஏற்றவைகளை  நீ  அறிந்திருந்தாயானால்  நலமாயிருக்கும்,  இப்பொழுதோ  அவைகள்  உன்  கண்களுக்கு  மறைவாயிருக்கிறது.  {Luke  19:42}

 

உன்னைச்  சந்திக்குங்காலத்தை  நீ  அறியாமற்போனபடியால்,  உன்  சத்துருக்கள்  உன்னைச்  சூழ  மதில்போட்டு,  உன்னை  வளைந்துகொண்டு,  எப்பக்கத்திலும்  உன்னை  நெருக்கி,  {Luke  19:43}

 

உன்னையும்  உன்னிலுள்ள  உன்  பிள்ளைகளையும்  தரையாக்கிப்போட்டு,  உன்னிடத்தில்  ஒரு  கல்லின்மேல்  ஒரு  கல்லிராதபடிக்குச்  செய்யும்  நாட்கள்  உனக்கு  வரும்  என்றார்.  {Luke  19:44}

 

பின்பு  அவர்  தேவாலயத்தில்  பிரவேசித்து,  அதிலே  விற்கிறவர்களையும்  கொள்ளுகிறவர்களையும்  புறம்பே  துரத்தத்தொடங்கி:  {Luke  19:45}

 

என்னுடைய  வீடு  ஜெபவீடாயிருக்கிறதென்று  எழுதியிருக்கிறது,  நீங்களோ  அதைக்  கள்ளர்குகையாக்கினீர்கள்  என்றார்.  {Luke  19:46}

 

அவர்  நாடோறும்  தேவாலயத்தில்  உபதேசம்  பண்ணிக்கொண்டிருந்தார்.  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  ஜனத்தின்  மூப்பரும்  அவரைக்  கொலைசெய்ய  வகைதேடியும்,  {Luke  19:47}

 

ஜனங்களெல்லாரும்  அவருக்குச்  செவிகொடுத்து  அவரை  அண்டிக்கொண்டிருந்தபடியால்,  அதை  இன்னபடி  செய்யலாமென்று  வகைகாணாதிருந்தார்கள்.  {Luke  19:48}

 

அந்நாட்களில்  ஒன்றில்,  அவர்  தேவாலயத்திலே  ஜனங்களுக்கு  உபதேசித்து,  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்தபோது,  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  மூப்பரும்  அவரிடத்தில்  கூடிவந்து:  {Luke  20:1}

 

நீர்  எந்த  அதிகாரத்தினால்  இவைகளைச்  செய்கிறீர்?  இந்த  அதிகாரத்தை  உமக்குக்  கொடுத்தவர்  யார்?  அதை  எங்களுக்குச்  சொல்லும்  என்றார்கள்.  {Luke  20:2}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  நானும்  உங்களிடத்தில்  ஒரு  காரியத்தைக்  கேட்கிறேன்,  அதை  எனக்குச்  சொல்லுங்கள்.  {Luke  20:3}

 

யோவான்<John>  கொடுத்த  ஸ்நானம்  தேவனால்  உண்டாயிற்றோ?  மனுஷரால்  உண்டாயிற்றோ?  என்று  கேட்டார்.  {Luke  20:4}

 

அவர்கள்  தங்களுக்குள்ளே  யோசனைபண்ணி:  தேவனால்  உண்டாயிற்று  என்று  சொல்வோமானால்,  பின்னை  ஏன்  அவனை  விசுவாசிக்கவில்லை  என்று  கேட்பார்.  {Luke  20:5}

 

மனுஷரால்  உண்டாயிற்று  என்று  சொல்வோமானால்,  ஜனங்களெல்லாரும்  யோவானைத்<John>  தீர்க்கதரிசியென்று  எண்ணுகிறபடியினால்  நம்மேல்  கல்லெறிவார்கள்  என்று  சொல்லி:  {Luke  20:6}

 

அது  யாரால்  உண்டாயிற்றோ,  எங்களுக்குத்  தெரியாது  என்று  பிரதியுத்தரம்  சொன்னார்கள்.  {Luke  20:7}

 

அப்பொழுது  இயேசு<Jesus>:  நானும்  இன்ன  அதிகாரத்தினால்  இவைகளைச்  செய்கிறேனென்று  உங்களுக்குச்  சொல்லேன்  என்றார்.  {Luke  20:8}

 

பின்பு  அவர்  ஜனங்களுக்குச்  சொல்லத்தொடங்கின  உவமையாவது:  ஒரு  மனுஷன்  ஒரு  திராட்சத்தோட்டத்தை  உண்டாக்கி,  அதைத்  தோட்டக்காரருக்குக்  குத்தகையாக  விட்டு,  நெடுநாளாகப்  புறத்தேசத்துக்குப்  போயிருந்தான்.  {Luke  20:9}

 

அந்தத்  தோட்டக்காரர்  திராட்சத்தோட்டத்தின்  கனிகளில்  தன்  பாகத்தைக்  கொடுத்தனுப்பும்படி,  பருவகாலத்திலே  அவர்களிடத்தில்  ஒரு  ஊழியக்காரனை  அனுப்பினான்.  அந்தத்  தோட்டக்காரர்  அவனை  அடித்து,  வெறுமையாக  அனுப்பிவிட்டார்கள்.  {Luke  20:10}

 

பின்பு  அவன்  வேறொரு  ஊழியக்காரனை  அனுப்பினான்;  அவனையும்  அவர்கள்  அடித்து,  அவமானப்படுத்தி,  வெறுமையாக  அனுப்பிவிட்டார்கள்.  {Luke  20:11}

 

அவன்  மூன்றாந்தரமும்  ஒரு  ஊழியக்காரனை  அனுப்பினான்;  அவனையும்  அவர்கள்  காயப்படுத்தி,  துரத்திவிட்டார்கள்.  {Luke  20:12}

 

அப்பொழுது  திராட்சத்தோட்டத்தின்  எஜமான்:  நான்  என்ன  செய்யலாம்,  எனக்குப்  பிரியமான  குமாரனை  அனுப்பினால்,  அவனையாகிலும்  கண்டு  அஞ்சுவார்கள்  என்று  எண்ணி,  அவனை  அனுப்பினான்.  {Luke  20:13}

 

தோட்டக்காரர்  அவனைக்  கண்டபோது:  இவன்  சுதந்தரவாளி,  சுதந்தரம்  நம்முடையதாகும்படிக்கு  இவனைக்  கொல்லுவோம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டு,  {Luke  20:14}

 

அவனைத்  திராட்சத்தோட்டத்திற்குப்  புறம்பே  தள்ளி,  கொன்றுபோட்டார்கள்.  இப்படியிருக்க,  திராட்சத்தோட்டத்தின்  எஜமான்  அவர்களை  என்னசெய்வான்?  {Luke  20:15}

 

அவன்  வந்து  அந்தத்  தோட்டக்காரரைச்  சங்கரித்து,  திராட்சத்தோட்டத்தை  வேறு  தோட்டக்காரரிடத்தில்  கொடுப்பான்  அல்லவா  என்றார்.  அவர்கள்  அதைக்கேட்டு,  அப்படியாகாதிருப்பதாக  என்றார்கள்.  {Luke  20:16}

 

அப்பொழுது  அவர்  அவர்களைப்  பார்த்து:  வீடு  கட்டுகிறவர்கள்  ஆகாதென்று  தள்ளின  கல்லே,  மூலைக்குத்  தலைக்கல்லாயிற்று  என்று  எழுதியிருக்கிற  வேதவாக்கியத்தின்  கருத்தென்ன?  {Luke  20:17}

 

அந்தக்  கல்லின்மேல்  விழுகிறவன்  எவனோ  அவன்  நொறுங்கிப்போவான்,  அது  எவன்மேல்  விழுமோ  அவனை  நசுக்கிப்போடும்  என்றார்.  {Luke  20:18}

 

பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  தங்களைக்குறித்து  இந்த  உவமையைச்  சொன்னாரென்று  அறிந்து,  அந்நேரத்திலே  அவரைப்  பிடிக்க  வகைதேடியும்  ஜனங்களுக்குப்  பயந்திருந்தார்கள்.  {Luke  20:19}

 

அவர்கள்  சமயம்பார்த்து,  தேசாதிபதியின்  ஆளுகைக்கும்  அதிகாரத்துக்கும்  அவரை  ஒப்புக்கொடுக்கும்படி  அவருடைய  பேச்சிலே  குற்றங்கண்டுபிடிக்கலாமென்று,  தங்களை  உண்மையுள்ளவர்களாய்க்  காண்பிக்கிற  வேவுகாரரை  அவரிடத்தில்  அனுப்பினார்கள்.  {Luke  20:20}

 

அவர்கள்  வந்து:  போதகரே,  நீர்  நிதானமாய்ப்  பேசி  உபதேசிக்கிறீரென்றும்,  முகதாட்சணியமில்லாமல்  தேவனுடைய  மார்க்கத்தைச்  சத்தியமாய்ப்  போதிக்கிறீரென்றும்  அறிந்திருக்கிறோம்.  {Luke  20:21}

 

இராயனுக்கு<Caesar>  வரிகொடுக்கிறது  நியாயமோ  அல்லவோ,  எங்களுக்குச்  சொல்லும்  என்று  கேட்டார்கள்.  {Luke  20:22}

 

அவர்களுடைய  தந்திரத்தை  அவர்  அறிந்து,  நீங்கள்  என்னை  ஏன்  சோதிக்கிறீர்கள்?  {Luke  20:23}

 

ஒரு  பணத்தை  எனக்குக்  காண்பியுங்கள்.  இதிலிருக்கிற  சொரூபமும்  மேலெழுத்தும்  யாருடையது  என்று  கேட்டார்.  அதற்கு  அவர்கள்:  இராயனுடையது<Caesar>  என்றார்கள்.  {Luke  20:24}

 

அதற்கு  அவர்:  அப்படியானால்,  இராயனுடையதை<Caesar>  இராயனுக்கும்<Caesar>,  தேவனுடையதைத்  தேவனுக்கும்  செலுத்துங்கள்  என்றார்.  {Luke  20:25}

 

அவர்கள்  அவரை  ஜனங்களுக்கு  முன்பாகப்  பேச்சிலே  குற்றம்பிடிக்கக்கூடாமல்,  அவர்  சொன்ன  உத்தரவைக்குறித்து  ஆச்சரியப்பட்டு,  மவுனமாயிருந்தார்கள்.  {Luke  20:26}

 

உயிர்த்தெழுதல்  இல்லையென்று  சாதிக்கிற  சதுசேயரில்<Sadducees>  சிலர்  அவரிடத்தில்  வந்து:  {Luke  20:27}

 

போதகரே,  ஒருவன்  மனைவியையுடையவனாயிருந்து  பிள்ளையில்லாமல்  இறந்துபோனால்,  அவனுடைய  சகோதரன்  அவன்  மனைவியை  விவாகம்பண்ணி,  தன்  சகோதரனுக்குச்  சந்தானமுண்டாக்கவேண்டும்  என்று  மோசே<Moses>  எங்களுக்கு  எழுதிவைத்திருக்கிறாரே.  {Luke  20:28}

 

சகோதரர்  ஏழுபேரிருந்தார்கள்,  அவர்களில்  மூத்தவன்  ஒரு  பெண்ணை  விவாகம்பண்ணி,  பிள்ளையில்லாமல்  இறந்துபோனான்.  {Luke  20:29}

 

பின்பு  இரண்டாஞ்சகோதரன்  அவளை  விவாகம்பண்ணி,  அவனும்  பிள்ளையில்லாமல்  இறந்துபோனான்.  {Luke  20:30}

 

மூன்றாஞ்சகோதரனும்  அவளை  விவாகம்பண்ணினான்.  அப்படியே  ஏழுபேரும்  அவளை  விவாகம்பண்ணி,  பிள்ளையில்லாமல்  இறந்துபோனார்கள்.  {Luke  20:31}

 

எல்லாருக்கும்  பின்பு  அந்த  ஸ்திரீயும்  இறந்துபோனாள்.  {Luke  20:32}

 

இவ்விதமாய்  ஏழுபேரும்  அவளை  விவாகம்பண்ணியிருக்க,  உயிர்த்தெழுதலில்  அவர்களில்  எவனுக்கு  அவள்  மனைவியாயிருப்பாள்  என்று  கேட்டார்கள்.  {Luke  20:33}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  இந்தப்  பிரபஞ்சத்தின்  பிள்ளைகள்  பெண்கொண்டும்  பெண்கொடுத்தும்  வருகிறார்கள்.  {Luke  20:34}

 

மறுமையையும்  மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும்  அடையப்  பாத்திரராக  எண்ணப்படுகிறவர்களோ  பெண்கொள்வதுமில்லை  பெண்  கொடுப்பதுமில்லை.  {Luke  20:35}

 

அவர்கள்  இனி  மரிக்கவுமாட்டார்கள்;  அவர்கள்  உயிர்த்தெழுதலின்  பிள்ளைகளானபடியால்  தேவதூதருக்கு  ஒப்பானவர்களுமாய்,  தேவனுக்குப்  பிள்ளைகளுமாயிருப்பார்கள்.  {Luke  20:36}

 

அன்றியும்  மரித்தோர்  எழுந்திருப்பார்களென்பதை  மோசேயும்<Moses>  முட்செடியைப்பற்றிய  வாசகத்தில்  காண்பித்திருக்கிறார்.  எப்படியெனில்,  கர்த்தரை  ஆபிரகாமின்<Abraham>  தேவனென்றும்  ஈசாக்கின்<Isaac>  தேவனென்றும்  யாக்கோபின்<Jacob>  தேவனென்றும்  சொல்லியிருக்கிறார்.  {Luke  20:37}

 

அவர்  மரித்தோரின்  தேவனாயிராமல்,  ஜீவனுள்ளோரின்  தேவனாயிருக்கிறார்;  எல்லாரும்  அவருக்குப்  பிழைத்திருக்கிறார்களே  என்றார்.  {Luke  20:38}

 

அப்பொழுது  வேதபாரகரில்  சிலர்  அதைக்  கேட்டு:  போதகரே,  நன்றாய்ச்  சொன்னீர்  என்றார்கள்.  {Luke  20:39}

 

அதன்பின்பு  அவர்கள்  அவரிடத்தில்  வேறொன்றுங்கேட்கத்  துணியவில்லை.  {Luke  20:40}

 

அவர்  அவர்களை  நோக்கி:  கிறிஸ்து<Christ>  தாவீதின்<David>  குமாரனென்று  எப்படிச்  சொல்லுகிறார்கள்?  {Luke  20:41}

 

நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்று,  {Luke  20:42}

 

கர்த்தர்  என்  ஆண்டவருடனே  சொன்னார்  என்று  தாவீது<David>  தானே  சங்கீத  புஸ்தகத்தில்  சொல்லுகிறானே.  {Luke  20:43}

 

தாவீது<David>  அவரை  ஆண்டவரென்று  சொல்லியிருக்க,  அவனுக்கு  அவர்  குமாரனாயிருப்பது  எப்படி  என்றார்.  {Luke  20:44}

 

பின்பு  ஜனங்களெல்லாரும்  கேட்கையில்  அவர்  தம்முடைய  சீஷரை  நோக்கி:  {Luke  20:45}

 

நீண்ட  அங்கிகளைத்  தரித்துக்கொண்டு  திரியவும்,  சந்தை  வெளிகளில்  வந்தனங்களை  அடையவும்,  ஜெபஆலயங்களில்  முதன்மையான  ஆசனங்களில்  உட்காரவும்,  விருந்துகளில்  முதன்மையான  இடங்களில்  இருக்கவும்  விரும்பி,  {Luke  20:46}

 

விதவைகளின்  வீடுகளைப்  பட்சித்து,  பார்வைக்கு  நீண்ட  ஜெபம்பண்ணுகிற  வேதபாரகரைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்,  அவர்கள்  அதிக  ஆக்கினையை  அடைவார்கள்  என்றார்.  {Luke  20:47}

 

அவர்  கண்ணேறிட்டுப்  பார்த்தபோது,  ஐசுவரியவான்கள்  காணிக்கைப்  பெட்டியிலே  தங்கள்  காணிக்கைகளைப்  போடுகிறதைக்  கண்டார்.  {Luke  21:1}

 

ஒரு  ஏழை  விதவை  அதிலே  இரண்டு  காசைப்  போடுகிறதையும்  கண்டு:  {Luke  21:2}

 

இந்த  ஏழை  விதவை  மற்றெல்லாரைப்  பார்க்கிலும்  அதிகமாகப்  போட்டாள்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  21:3}

 

அவர்களெல்லாரும்  தங்கள்  பரிபூரணத்திலிருந்தெடுத்துத்  தேவனுக்கென்று  காணிக்கை  போட்டார்கள்;  இவளோ  தன்  வறுமையிலிருந்து  தன்  ஜீவனத்துக்கு  உண்டாயிருந்ததெல்லாம்  போட்டுவிட்டாள்  என்றார்.  {Luke  21:4}

 

பின்பு,  சிறந்த  கற்களினாலும்  காணிக்கைகளினாலும்  தேவாலயம்  அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்துச்  சிலர்  சொன்னபோது,  {Luke  21:5}

 

அவர்:  நீங்கள்  பார்க்கிற  இவைகளில்  ஒரு  கல்  மற்றொரு  கல்லின்மேலிராதபடிக்கு  எல்லாம்  இடிக்கப்படும்  நாட்கள்  வரும்  என்றார்.  {Luke  21:6}

 

அவர்கள்  அவரை  நோக்கி:  போதகரே,  இவைகள்  எப்பொழுது  சம்பவிக்கும்,  இவைகள்  சம்பவிக்கும்  காலத்துக்கு  அடையாளம்  என்ன  என்று  கேட்டார்கள்.  {Luke  21:7}

 

அதற்கு  அவர்:  நீங்கள்  வஞ்சிக்கப்படாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  ஏனெனில்  அநேகர்  வந்து  என்  நாமத்தைத்  தரித்துக்கொண்டு:  நான்தான்  கிறிஸ்து<Christ>  என்றும்,  காலம்  சமீபித்தது  என்றும்  சொல்லுவார்கள்;  அவர்களைப்  பின்பற்றாதிருங்கள்.  {Luke  21:8}

 

யுத்தங்களையும்  கலகங்களையுங்குறித்து  நீங்கள்  கேள்விப்படும்போது,  பயப்படாதிருங்கள்;  இவைகள்  முன்னதாகச்  சம்பவிக்கவேண்டியதே;  ஆனாலும்  முடிவு  உடனே  வராது  என்றார்.  {Luke  21:9}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  ஜனத்துக்கு  விரோதமாய்  ஜனமும்,  ராஜ்யத்துக்கு  விரோதமாய்  ராஜ்யமும்  எழும்பும்.  {Luke  21:10}

 

பல  இடங்களில்  மகா  பூமியதிர்ச்சிகளும்,  பஞ்சங்களும்,  கொள்ளைநோய்களும்  உண்டாகும்;  வானத்திலிருந்து  பயங்கரமான  தோற்றங்களும்  பெரிய  அடையாளங்களும்  உண்டாகும்.  {Luke  21:11}

 

இவைகளெல்லாம்  நடப்பதற்கு  முன்னே  என்  நாமத்தினிமித்தம்,  அவர்கள்  உங்களைப்  பிடித்து,  ஜெப  ஆலயங்களுக்கும்  சிறைச்சாலைகளுக்கும்  ஒப்புக்கொடுத்து,  ராஜாக்கள்  முன்பாகவும்  அதிபதிகள்  முன்பாகவும்  உங்களை  இழுத்துத்  துன்பப்படுத்துவார்கள்.  {Luke  21:12}

 

ஆனாலும்  அது  உங்களுக்குச்  சாட்சியாவதற்கு  ஏதுவாயிருக்கும்.  {Luke  21:13}

 

ஆகையால்  என்ன  உத்தரவு  சொல்லுவோமென்று  கவலைப்படாதிருக்கும்படி  உங்கள்  மனதிலே  நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.  {Luke  21:14}

 

உங்களை  விரோதிக்கிறவர்கள்  ஒருவரும்  எதிர்பேசவும்  எதிர்நிற்கவும்  கூடாத  வாக்கையும்  ஞானத்தையும்  நான்  உங்களுக்குக்  கொடுப்பேன்.  {Luke  21:15}

 

பெற்றாராலும்,  சகோதரராலும்,  பந்துஜனங்களாலும்,  சிநேகிதராலும்  காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்;  உங்களில்  சிலரைக்  கொலைசெய்வார்கள்.  {Luke  21:16}

 

என்  நாமத்தினிமித்தம்  எல்லாராலும்  பகைக்கப்படுவீர்கள்.  {Luke  21:17}

 

ஆனாலும்  உங்கள்  தலைமயிரில்  ஒன்றாகிலும்  அழியாது.  {Luke  21:18}

 

உங்கள்  பொறுமையினால்  உங்கள்  ஆத்துமாக்களைக்  காத்துக்கொள்ளுங்கள்.  {Luke  21:19}

 

எருசலேம்<Jerusalem>  சேனைகளால்  சூழப்பட்டிருப்பதை  நீங்கள்  காணும்போது,  அதின்  அழிவு  சமீபமாயிற்றென்று  அறியுங்கள்.  {Luke  21:20}

 

அப்பொழுது  யூதேயாவிலிருக்கிறவர்கள்<Judaea>  மலைகளுக்கு  ஓடிப்போகவும்,  எருசலேமிலிருக்கிறவர்கள்<Jerusalem>  வெளியே  புறப்படவும்,  நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள்  நகரத்தில்  பிரவேசியாமலிருக்கவும்  கடவர்கள்.  {Luke  21:21}

 

எழுதியிருக்கிற  யாவும்  நிறைவேறும்படி  நீதியைச்  சரிக்கட்டும்  நாட்கள்  அவைகளே.  {Luke  21:22}

 

அந்நாட்களில்  கர்ப்பவதிகளுக்கும்  பால்கொடுக்கிறவர்களுக்கும்  ஐயோ,  பூமியின்மேல்  மிகுந்த  இடுக்கணும்  இந்த  ஜனத்தின்மேல்  கோபாக்கினையும்  உண்டாகும்.  {Luke  21:23}

 

பட்டயக்கருக்கினாலே  விழுவார்கள்,  சகல  புறஜாதிகளுக்குள்ளும்  சிறைப்பட்டுப்போவார்கள்;  புறஜாதியாரின்  காலம்  நிறைவேறும்வரைக்கும்  எருசலேம்<Jerusalem>  புறஜாதியாரால்  மிதிக்கப்படும்.  {Luke  21:24}

 

சூரியனிலும்  சந்திரனிலும்  நட்சத்திரங்களிலும்  அடையாளங்கள்  தோன்றும்;  பூமியின்மேலுள்ள  ஜனங்களுக்குத்  தத்தளிப்பும்  இடுக்கணும்  உண்டாகும்;  சமுத்திரமும்  அலைகளும்  முழக்கமாயிருக்கும்.  {Luke  21:25}

 

வானத்தின்  சத்துவங்கள்  அசைக்கப்படும்;  ஆதலால்  பூமியின்மேல்  வரும்  ஆபத்துகளுக்குப்  பயந்து  எதிர்பார்த்திருக்கிறதினால்  மனுஷருடைய  இருதயம்  சோர்ந்துபோம்.  {Luke  21:26}

 

அப்பொழுது  மனுஷகுமாரன்  மிகுந்த  வல்லமையோடும்  மகிமையோடும்  மேகத்தின்மேல்  வருகிறதைக்  காண்பார்கள்.  {Luke  21:27}

 

இவைகள்  சம்பவிக்கத்  தொடங்கும்போது,  உங்கள்  மீட்பு  சமீபமாயிருப்பதால்,  நீங்கள்  நிமிர்ந்து  பார்த்து,  உங்கள்  தலைகளை  உயர்த்துங்கள்  என்றார்.  {Luke  21:28}

 

அன்றியும்  அவர்களுக்கு  ஒரு  உவமையைச்  சொன்னார்:  அத்திமரத்தையும்  மற்றெல்லா  மரங்களையும்  பாருங்கள்.  {Luke  21:29}

 

அவைகள்  துளிர்க்கிறதை  நீங்கள்  காணும்போது  வசந்தகாலம்  சமீபமாயிற்றென்று  அறிகிறீர்கள்.  {Luke  21:30}

 

அப்படியே  இவைகள்  சம்பவிக்கிறதை  நீங்கள்  காணும்போது,  தேவனுடைய  ராஜ்யம்  சமீபமாயிற்றென்று  அறியுங்கள்.  {Luke  21:31}

 

இவையெல்லாம்  சம்பவிக்கும்  முன்  இந்தச்  சந்ததி  ஒழிந்துபோகாதென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Luke  21:32}

 

வானமும்  பூமியும்  ஒழிந்துபோம்,  என்  வார்த்தைகளோ  ஒழிந்து  போவதில்லை.  {Luke  21:33}

 

உங்கள்  இருதயங்கள்  பெருந்திண்டியினாலும்  வெறியினாலும்  லவுகீக  கவலைகளினாலும்  பாரமடையாதபடிக்கும்,  நீங்கள்  நினையாத  நேரத்தில்  அந்த  நாள்  உங்கள்மேல்  வராதபடிக்கும்  எச்சரிக்கையாயிருங்கள்.  {Luke  21:34}

 

பூமியிலெங்கும்  குடியிருக்கிற  அனைவர்மேலும்  அது  ஒரு  கண்ணியைப்போல  வரும்.  {Luke  21:35}

 

ஆகையால்  இனிச்  சம்பவிக்கப்போகிற  இவைகளுக்கெல்லாம்  நீங்கள்  தப்பி,  மனுஷகுமாரனுக்கு  முன்பாக  நிற்கப்  பாத்திரவான்களாக  எண்ணப்படுவதற்கு,  எப்பொழுதும்  ஜெபம்பண்ணி  விழித்திருங்கள்  என்றார்.  {Luke  21:36}

 

அவர்  பகற்காலங்களில்  தேவாலயத்திலே  உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து,  இராக்காலங்களில்  வெளியே  போய்,  ஒலிவமலை<mount  of  Olives>  என்னப்பட்ட  மலையிலே  தங்கிவந்தார்.  {Luke  21:37}

 

ஜனங்களெல்லாரும்  அவருடைய  உபதேசத்தைக்  கேட்கும்படி  அதிகாலமே  தேவாலயத்தில்  அவரிடத்திற்கு  வருவார்கள்.  {Luke  21:38}

 

பஸ்கா  என்னப்பட்ட  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகை  சமீபமாயிற்று.  {Luke  22:1}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  அவரைக்  கொலைசெய்யும்படி  யோசித்து,  ஜனங்களுக்குப்  பயப்பட்டபடியினால்,  எவ்விதமாய்  அப்படிச்  செய்யலாமென்று  வகைதேடினார்கள்.  {Luke  22:2}

 

அப்பொழுது  பன்னிருவரில்  ஒருவனாகிய  ஸ்காரியோத்தென்னும்<Iscariot>  மறுபேர்கொண்ட  யூதாசுக்குள்<Judas>  சாத்தான்  புகுந்தான்.  {Luke  22:3}

 

அவன்  பிரதான  ஆசாரியர்களிடத்திலும்  சேனைத்தலைவர்களிடத்திலும்  போய்,  அவரைக்  காட்டிக்கொடுக்கும்  வகையைக்  குறித்து  அவர்களோடே  ஆலோசனை  பண்ணினான்.  {Luke  22:4}

 

அவர்கள்  சந்தோஷப்பட்டு,  அவனுக்குப்  பணங்கொடுக்க  உடன்பட்டார்கள்.  {Luke  22:5}

 

அதற்கு  அவன்  சம்மதித்து,  ஜனக்கூட்டமில்லாத  வேளையில்  அவரை  அவர்களுக்குக்  காட்டிக்கொடுக்கும்படி  சமயந்தேடினான்.  {Luke  22:6}

 

பஸ்காவைப்  பலியிடவேண்டிய  புளிப்பில்லாத  அப்பப்பண்டிகை  நாள்  வந்தது.  {Luke  22:7}

 

அப்பொழுது  அவர்  பேதுருவையும்<Peter>  யோவானையும்<John>  அழைத்து:  நாம்  பஸ்காவைப்  புசிக்கும்படிக்கு  நீங்கள்  போய்,  அதை  நமக்கு  ஆயத்தம்பண்ணுங்கள்  என்றார்.  {Luke  22:8}

 

அதற்கு  அவர்கள்:  நாங்கள்  அதை  எங்கே  ஆயத்தம்பண்ணும்படி  சித்தமாயிருக்கிறீர்  என்று  கேட்டார்கள்.  {Luke  22:9}

 

அதற்கு  அவர்:  நீங்கள்  நகரத்தில்  பிரவேசிக்கும்போது,  தண்ணீர்க்குடம்  சுமந்துவருகிற  ஒரு  மனுஷன்  உங்களுக்கு  எதிர்ப்படுவான்;  நீங்கள்  அவனுக்குப்  பின்சென்று,  அவன்  போகும்  வீட்டிற்குள்  நீங்களும்  போய்,  {Luke  22:10}

 

அந்த  வீட்டெஜமானை  நோக்கி:  நான்  என்  சீஷரோடுகூடப்  பஸ்காவைப்  புசிக்கிறதற்குத்  தகுதியான  இடம்  எங்கே  என்று  போதகர்  உம்மிடத்தில்  கேட்கச்  சொன்னார்  என்று  சொல்லுங்கள்.  {Luke  22:11}

 

அவன்  கம்பளமுதலானவைகள்  விரித்திருக்கிற  மேல்வீட்டிலுள்ள  ஒரு  பெரிய  அறையை  உங்களுக்குக்  காண்பிப்பான்;  அங்கே  ஆயத்தம்பண்ணுங்கள்  என்று  சொல்லி  அனுப்பினார்.  {Luke  22:12}

 

அவர்கள்  போய்,  தங்களிடத்தில்  அவர்  சொன்னபடியே  கண்டு,  பஸ்காவை  ஆயத்தம்பண்ணினார்கள்.  {Luke  22:13}

 

வேளைவந்தபோது,  அவரும்  அவருடனேகூடப்  பன்னிரண்டு  அப்போஸ்தலரும்  பந்தியிருந்தார்கள்.  {Luke  22:14}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  நான்  பாடுபடுகிறதற்கு  முன்னே  உங்களுடனேகூட  இந்தப்  பஸ்காவைப்  புசிக்க  மிகவும்  ஆசையாயிருந்தேன்.  {Luke  22:15}

 

தேவனுடைய  ராஜ்யத்திலே  இது  நிறைவேறுமளவும்  நான்  இனி  இதைப்  புசிப்பதில்லையென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  {Luke  22:16}

 

அவர்  பாத்திரத்தை  எடுத்து,  ஸ்தோத்திரம்பண்ணி:  நீங்கள்  இதை  வாங்கி,  உங்களுக்குள்ளே  பங்கிட்டுக்  கொள்ளுங்கள்;  {Luke  22:17}

 

தேவனுடைய  ராஜ்யம்  வருமளவும்  நான்  திராட்சப்பழரசத்தைப்  பானம்பண்ணுவதில்லையென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  22:18}

 

பின்பு  அவர்  அப்பத்தை  எடுத்து,  ஸ்தோத்திரம்பண்ணி,  அதைப்  பிட்டு,  அவர்களுக்குக்  கொடுத்து:  இது  உங்களுக்காகக்  கொடுக்கப்படுகிற  என்னுடைய  சரீரமாயிருக்கிறது;  என்னை  நினைவுகூரும்படி  இதைச்  செய்யுங்கள்  என்றார்.  {Luke  22:19}

 

போஜனம்பண்ணினபின்பு  அவர்  அந்தப்படியே  பாத்திரத்தையும்  கொடுத்து:  இந்தப்  பாத்திரம்  உங்களுக்காகச்  சிந்தப்படுகிற  என்னுடைய  இரத்தத்தினாலாகிய  புதிய  உடன்படிக்கையாயிருக்கிறது  என்றார்.  {Luke  22:20}

 

பின்பு:  இதோ,  என்னைக்  காட்டிக்கொடுக்கிறவனுடைய  கை  என்னுடனேகூடப்  பந்தியிலிருக்கிறது.  {Luke  22:21}

 

தீர்மானிக்கப்பட்டபடியே  மனுஷகுமாரன்  போகிறார்,  ஆனாலும்  அவரைக்  காட்டிக்கொடுக்கிற  மனுஷனுக்கு  ஐயோ  என்றார்.  {Luke  22:22}

 

அப்பொழுது  அவர்கள்  நம்மில்  யார்  அப்படிச்  செய்வான்  என்று  தங்களுக்குள்ளே  விசாரிக்கத்  தொடங்கினார்கள்.  {Luke  22:23}

 

அன்றியும்  தங்களில்  எவன்  பெரியவனாயிருப்பான்  என்று  அவர்களுக்குள்ளே  வாக்குவாதம்  உண்டாயிற்று.  {Luke  22:24}

 

அவர்  அவர்களை  நோக்கி:  புறஜாதியாரின்  ராஜாக்கள்  அவர்களை  ஆளுகிறார்கள்;  அவர்கள்மேல்  அதிகாரம்  செலுத்துகிறவர்களும்  உபகாரிகள்  என்னப்படுகிறார்கள்.  {Luke  22:25}

 

உங்களுக்குள்ளே  அப்படியிருக்கக்கூடாது;  உங்களில்  பெரியவன்  சிறியவனைப்போலவும்,  தலைவன்  பணிவிடைக்காரனைப்போலவும்  இருக்கக்கடவன்.  {Luke  22:26}

 

பந்தியிருக்கிறவனோ,  பணிவிடைசெய்கிறவனோ,  எவன்  பெரியவன்?  பந்தியிருக்கிறவன்  அல்லவா?  அப்படியிருந்தும்,  நான்  உங்கள்  நடுவிலே  பணிவிடைக்காரனைப்போல்  இருக்கிறேன்.  {Luke  22:27}

 

மேலும்  எனக்கு  நேரிட்ட  சோதனைகளில்  என்னோடேகூட  நிலைத்திருந்தவர்கள்  நீங்களே.  {Luke  22:28}

 

ஆகையால்,  என்  பிதா  எனக்கு  ஒரு  ராஜ்யத்தை  ஏற்படுத்தினதுபோல,  நானும்  உங்களுக்கு  ஏற்படுத்துகிறேன்.  {Luke  22:29}

 

நீங்கள்  என்  ராஜ்யத்திலே  என்  பந்தியில்  போஜனபானம்பண்ணி,  இஸ்ரவேலின்<Israel>  பன்னிரண்டு  கோத்திரங்களையும்  நியாயந்தீர்க்கிறவர்களாய்ச்  சிங்காசனங்களின்மேல்  உட்காருவீர்கள்  என்றார்.  {Luke  22:30}

 

பின்னும்  கர்த்தர்:  சீமோனே<Simon>,  சீமோனே<Simon>,  இதோ,  கோதுமையைச்  சுளகினால்  புடைக்கிறதுபோலச்  சாத்தான்  உங்களைப்  புடைக்கிறதற்கு  உத்தரவு  கேட்டுக்கொண்டான்.  {Luke  22:31}

 

நானோ  உன்  விசுவாசம்  ஒழிந்துபோகாதபடிக்கு  உனக்காக  வேண்டிக்கொண்டேன்;  நீ  குணப்பட்டபின்பு  உன்  சகோதரரை  ஸ்திரப்படுத்து  என்றார்.  {Luke  22:32}

 

அதற்கு  அவன்:  ஆண்டவரே,  காவலிலும்  சாவிலும்  உம்மைப்  பின்பற்றிவர,  ஆயத்தமாயிருக்கிறேன்  என்றான்.  {Luke  22:33}

 

அவர்  அவனை  நோக்கி:  பேதுருவே<Peter>,  இன்றைக்குச்  சேவல்  கூவுகிறதற்கு  முன்னே  நீ  என்னை  அறிந்திருக்கிறதை  மூன்றுதரம்  மறுதலிப்பாய்  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  22:34}

 

பின்னும்  அவர்  அவர்களை  நோக்கி:  நான்  உங்களைப்  பணப்பையும்  சாமான்பையும்  பாதரட்சைகளும்  இல்லாமல்  அனுப்பினபோது,  ஏதாகிலும்  உங்களுக்குக்  குறைவாயிருந்ததா  என்றார்.  அவர்கள்,  ஒன்றும்  குறைவாயிருந்ததில்லை  என்றார்கள்.  {Luke  22:35}

 

அதற்கு  அவர்:  இப்பொழுதோ  பணப்பையும்  சாமான்பையும்  உடையவன்  அவைகளை  எடுத்துக்கொள்ளக்கடவன்;  பட்டயம்  இல்லாதவன்  தன்  வஸ்திரத்தை  விற்று  ஒன்றைக்  கொள்ளக்கடவன்.  {Luke  22:36}

 

அக்கிரமக்காரரில்  ஒருவனாக  எண்ணப்பட்டார்  என்று  எழுதியிருக்கிற  வாக்கியம்  என்னிடத்தில்  நிறைவேறவேண்டியதென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  என்னைப்பற்றிய  காரியங்கள்  முடிவு  பெறுங்காலம்  வந்திருக்கிறது  என்றார்.  {Luke  22:37}

 

அதற்கு  அவர்கள்:  ஆண்டவரே,  இதோ,  இங்கே  இரண்டு  பட்டயம்  இருக்கிறது  என்றார்கள்.  அவர்:  போதும்  என்றார்.  {Luke  22:38}

 

பின்பு  அவர்  புறப்பட்டு,  வழக்கத்தின்படியே  ஒலிவமலைக்குப்<mount  of  Olives>  போனார்,  அவருடைய  சீஷரும்  அவரோடேகூடப்  போனார்கள்.  {Luke  22:39}

 

அவ்விடத்தில்  சேர்ந்தபொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  சோதனைக்குட்படாதபடிக்கு  ஜெபம்பண்ணுங்கள்  என்று  சொல்லி,  {Luke  22:40}

 

அவர்களை  விட்டுக்  கல்லெறிதூரம்  அப்புறம்போய்,  முழங்கால்படியிட்டு:  {Luke  22:41}

 

பிதாவே,  உமக்குச்  சித்தமானால்  இந்தப்  பாத்திரம்  என்னைவிட்டு  நீங்கும்படி  செய்யும்;  ஆயினும்  என்னுடைய  சித்தத்தின்படியல்ல,  உம்முடைய  சித்தத்தின்படியே  ஆகக்கடவது  என்று  ஜெபம்பண்ணினார்.  {Luke  22:42}

 

அப்பொழுது  வானத்திலிருந்து  ஒரு  தூதன்  தோன்றி,  அவரைப்  பலப்படுத்தினான்.  {Luke  22:43}

 

அவர்  மிகவும்  வியாகுலப்பட்டு,  அதிக  ஊக்கத்தோடே  ஜெபம்பண்ணினார்.  அவருடைய  வேர்வை  இரத்தத்தின்  பெருந்துளிகளாய்த்  தரையிலே  விழுந்தது.  {Luke  22:44}

 

அவர்  ஜெபம்பண்ணி  முடித்து,  எழுந்திருந்து,  தம்முடைய  சீஷரிடத்தில்  வந்து,  அவர்கள்  துக்கத்தினாலே  நித்திரை  பண்ணுகிறதைக்  கண்டு:  {Luke  22:45}

 

நீங்கள்  நித்திரைபண்ணுகிறதென்ன?  சோதனைக்குட்படாதபடிக்கு,  எழுந்திருந்து  ஜெபம்பண்ணுங்கள்  என்றார்.  {Luke  22:46}

 

அவர்  அப்படிப்  பேசுகையில்  ஜனங்கள்  கூட்டமாய்  வந்தார்கள்.  அவர்களுக்கு  முன்னே  பன்னிருவரில்  ஒருவனாகிய  யூதாஸ்<Judas>  என்பவனும்  வந்து,  இயேசுவை<Jesus>  முத்தஞ்செய்யும்படி  அவரிடத்தில்  சேர்ந்தான்.  {Luke  22:47}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  யூதாசே<Judas>,  முத்தத்தினாலேயா  மனுஷகுமாரனைக்  காட்டிக்கொடுக்கிறாய்  என்றார்.  {Luke  22:48}

 

அவரைச்  சூழநின்றவர்கள்  நடக்கப்போகிறதைக்  கண்டு:  ஆண்டவரே,  பட்டயத்தினாலே  வெட்டுவோமா  என்றார்கள்.  {Luke  22:49}

 

அந்தப்படியே  அவர்களில்  ஒருவன்  பிரதான  ஆசாரியனுடைய  வேலைக்காரனை  வலதுகாதற  வெட்டினான்.  {Luke  22:50}

 

அப்பொழுது  இயேசு<Jesus>:  இம்மட்டில்  நிறுத்துங்கள்  என்று  சொல்லி,  அவனுடைய  காதைத்தொட்டு,  அவனைச்  சொஸ்தப்படுத்தினார்.  {Luke  22:51}

 

பின்பு  இயேசு<Jesus>  தமக்கு  விரோதமாய்  வந்த  பிரதான  ஆசாரியர்களையும்  தேவாலயத்துச்  சேனைத்தலைவர்களையும்  மூப்பர்களையும்  நோக்கி:  ஒரு  கள்ளனைப்  பிடிக்கப்  புறப்பட்டு  வருகிறதுபோல,  நீங்கள்  பட்டயங்களையும்  தடிகளையும்  எடுத்துப்  புறப்பட்டு  வந்தீர்களே.  {Luke  22:52}

 

நான்  தினந்தோறும்  தேவாலயத்தில்  உங்களுடனேகூட  இருக்கையில்  நீங்கள்  என்னைப்  பிடிக்கக்  கைநீட்டவில்லை;  இதுவோ  உங்களுடைய  வேளையும்  அந்தகாரத்தின்  அதிகாரமுமாயிருக்கிறது  என்றார்.  {Luke  22:53}

 

அவர்கள்  அவரைப்  பிடித்தபின்பு,  பிரதான  ஆசாரியனுடைய  வீட்டில்  கொண்டுபோய்  விட்டார்கள்.  பேதுருவும்<Peter>  தூரத்திலே  பின்சென்றான்.  {Luke  22:54}

 

அவர்கள்  முற்றத்தின்  நடுவிலே  நெருப்பை  மூட்டி,  அதைச்  சுற்றி  உட்கார்ந்தபோது,  பேதுருவும்<Peter>  அவர்கள்  நடுவிலே  உட்கார்ந்தான்.  {Luke  22:55}

 

அப்பொழுது  ஒரு  வேலைக்காரி  அவனை  நெருப்பண்டையிலே  உட்கார்ந்திருக்கக்கண்டு,  அவனை  உற்றுப்பார்த்து:  இவனும்  அவனோடிருந்தான்  என்றாள்.  {Luke  22:56}

 

அதற்கு  அவன்:  ஸ்திரீயே,  அவனை  அறியேன்  என்று  மறுதலித்தான்.  {Luke  22:57}

 

சற்றுநேரத்துக்குப்பின்பு  வேறொருவன்  அவனைக்  கண்டு:  நீயும்  அவர்களில்  ஒருவன்  என்றான்.  அதற்குப்  பேதுரு<Peter>:  மனுஷனே,  நான்  அல்ல  என்றான்.  {Luke  22:58}

 

ஏறக்குறைய  ஒருமணி  நேரத்துக்குப்பின்பு  வேறொருவன்  அவனைப்  பார்த்து:  மெய்யாகவே  இவனும்  அவனோடிருந்தான்,  இவன்  கலிலேயன்தான்<Galilaean>  என்று  சாதித்தான்.  {Luke  22:59}

 

அதற்குப்  பேதுரு<Peter>:  மனுஷனே,  நீ  சொல்லுகிறதை  அறியேன்  என்றான்.  அவன்  இப்படிச்  சொன்னவுடனே  சேவல்  கூவிற்று.  {Luke  22:60}

 

அப்பொழுது  கர்த்தர்  திரும்பி,  பேதுருவை<Peter>  நோக்கிப்  பார்த்தார்.  சேவல்  கூவுகிறதற்கு  முன்னே  நீ  என்னை  மூன்றுதரம்  மறுதலிப்பாய்  என்று  கர்த்தர்  தன்னிடத்தில்  சொன்ன  வசனத்தை  உடனே  பேதுரு<Peter>  நினைவுகூர்ந்து,  {Luke  22:61}

 

வெளியே  போய்,  மனங்கசந்து  அழுதான்.  {Luke  22:62}

 

இயேசுவைப்<Jesus>  பிடித்துக்கொண்ட  மனுஷர்  அவரைப்  பரியாசம்பண்ணி,  அடித்து,  {Luke  22:63}

 

அவருடைய  கண்களைக்  கட்டி,  அவருடைய  முகத்தில்  அறைந்து:  உன்னை  அடித்தவன்  யார்,  அதை  ஞானதிருஷ்டியினால்  சொல்  என்று  அவரைக்  கேட்டதுமன்றி,  {Luke  22:64}

 

மற்றும்  அநேக  தூஷணவார்த்தைகளையும்  அவருக்கு  விரோதமாகச்  சொன்னார்கள்.  {Luke  22:65}

 

விடியற்காலமானபோது  ஜனத்தின்  மூப்பரும்  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  கூடிவந்து,  தங்கள்  ஆலோசனைச்  சங்கத்தில்  அவரைக்  கொண்டுவந்து  நிறுத்தி:  {Luke  22:66}

 

நீ  கிறிஸ்துவா<Christ>?  அதை  எங்களுக்குச்  சொல்  என்றார்கள்.  அதற்கு  அவர்:  நான்  உங்களுக்குச்  சொன்னாலும்  நம்பமாட்டீர்கள்.  {Luke  22:67}

 

நான்  உங்களிடத்தில்  வினாவினாலும்  எனக்கு  மாறுத்தரம்  சொல்லமாட்டீர்கள்,  என்னை  விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.  {Luke  22:68}

 

இதுமுதல்  மனுஷகுமாரன்  சர்வவல்லமையுள்ள  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  வீற்றிருப்பார்  என்றார்.  {Luke  22:69}

 

அதற்கு  அவர்களெல்லாரும்:  அப்படியானால்,  நீ  தேவனுடைய  குமாரனா  என்று  கேட்டார்கள்.  அதற்கு  அவர்:  நீங்கள்  சொல்லுகிறபடியே  நான்  அவர்தான்  என்றார்.  {Luke  22:70}

 

அப்பொழுது  அவர்கள்:  இனி  வேறு  சாட்சி  நமக்கு  வேண்டுவதென்ன?  நாமே  இவனுடைய  வாயினாலே  கேட்டோமே  என்றார்கள்.  {Luke  22:71}

 

அவர்களுடைய  கூட்டத்தாரெல்லாரும்  எழுந்திருந்து,  அவரைப்  பிலாத்துவினிடத்திற்குக்<Pilate>  கொண்டுபோய்:  {Luke  23:1}

 

இவன்  தன்னைக்  கிறிஸ்து<Christ>  என்னப்பட்ட  ராஜாவென்றும்,  ராயருக்கு<Caesar>  வரிகொடுக்க  வேண்டுவதில்லையென்றும்  சொல்லி,  ஜனங்களைக்  கலகப்படுத்தக்  கண்டோம்  என்று  அவர்மேல்  குற்றஞ்சாட்டத்  தொடங்கினார்கள்.  {Luke  23:2}

 

பிலாத்து<Pilate>  அவரை  நோக்கி:  நீ  யூதருடைய  ராஜாவா<King  of  the  Jews>  என்று  கேட்டான்.  அவர்  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  நீர்  சொல்லுகிறபடிதான்  என்றார்.  {Luke  23:3}

 

அப்பொழுது  பிலாத்து<Pilate>  பிரதான  ஆசாரியர்களையும்  ஜனங்களையும்  நோக்கி:  இந்த  மனுஷனிடத்தில்  நான்  ஒரு  குற்றத்தையும்  காணவில்லை  என்றான்.  {Luke  23:4}

 

அதற்கு  அவர்கள்:  இவன்  கலிலேயா<Galilee>  நாடுதொடங்கி  இவ்விடம்வரைக்கும்  யூதேயாதேசமெங்கும்<Jewry>  உபதேசம்பண்ணி,  ஜனங்களைக்  கலகப்படுத்துகிறான்  என்று  வைராக்கியத்தோடே  சொன்னார்கள்.  {Luke  23:5}

 

கலிலேயா<Galilee>  என்பதைப்  பிலாத்து<Pilate>  கேட்டபொழுது,  இந்த  மனுஷன்  கலிலேயனா<Galilaean>  என்று  விசாரித்து,  {Luke  23:6}

 

அவர்  ஏரோதின்<Herod>  அதிகாரத்துக்குள்ளானவர்  என்றறிந்து,  அந்நாட்களில்  எருசலேமிலே<Jerusalem>  வந்திருந்த  ஏரோதுவினிடத்திற்கு<Herod>  அவரை  அனுப்பினான்.  {Luke  23:7}

 

ஏரோது<Herod>  இயேசுவைக்குறித்து<Jesus>  அநேக  காரியங்களைக்  கேள்விப்பட்டிருந்ததினாலும்,  அவரால்  செய்யப்படும்  அடையாளத்தைப்  பார்க்கவேண்டுமென்று  விரும்பியிருந்ததினாலும்,  அவரைக்  காணும்படி  வெகுநாளாய்  ஆசைகொண்டிருந்தான்.  அந்தப்படி  அவரைக்  கண்டபோது,  மிகவும்  சந்தோஷப்பட்டு,  {Luke  23:8}

 

அநேக  காரியங்களைக்குறித்து  அவரிடத்தில்  வினாவினான்.  அவர்  மறுமொழியாக  அவனுக்கு  ஒன்றும்  சொல்லவில்லை.  {Luke  23:9}

 

பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  அவர்மேல்  பிடிவாதமாய்க்  குற்றஞ்சாட்டிக்கொண்டே  நின்றார்கள்.  {Luke  23:10}

 

அப்பொழுது  ஏரோது<Herod>  தன்  போர்ச்சேவகரோடுகூட  அவரை  நிந்தித்துப்  பரியாசம்பண்ணி,  மினுக்கான  வஸ்திரத்தை  அவருக்கு  உடுத்தி,  அவரைத்  திரும்பப்  பிலாத்துவினிடத்திற்கு<Pilate>  அனுப்பினான்.  {Luke  23:11}

 

முன்னே  ஒருவருக்கொருவர்  பகைவராயிருந்த  பிலாத்துவும்<Pilate>  ஏரோதும்<Herod>  அன்றையத்தினம்  சிநேகிதரானார்கள்.  {Luke  23:12}

 

பிலாத்து<Pilate>  பிரதான  ஆசாரியர்களையும்  அதிகாரிகளையும்  ஜனங்களையும்  கூடிவரச்செய்து,  {Luke  23:13}

 

அவர்களை  நோக்கி:  ஜனங்களைக்  கலகத்துக்குத்  தூண்டிவிடுகிறவனாக  இந்த  மனுஷனை  என்னிடத்தில்  கொண்டுவந்தீர்கள்;  நான்  உங்களுக்கு  முன்பாக  விசாரித்தபோது,  இவன்மேல்  நீங்கள்  சாட்டுகிற  குற்றங்களில்  ஒன்றையும்  நான்  இவனிடத்தில்  காணவில்லை.  {Luke  23:14}

 

உங்களை  ஏரோதினிடத்திற்கும்<Herod>  அனுப்பினேன்;  அவரும்  இவனிடத்தில்  குற்றம்  காணவில்லை;  மரணத்துக்கேதுவாக  இவன்  ஒன்றும்  செய்யவில்லையே.  {Luke  23:15}

 

ஆனபடியால்  இவனைத்  தண்டித்து,  விடுதலையாக்குவேன்  என்றான்.  {Luke  23:16}

 

பண்டிகைதோறும்  அவர்களுக்கு  ஒருவனை  அவன்  விடுதலையாக்குவது  அவசியமாயிருந்தபடியால்  அப்படிச்  சொன்னான்.  {Luke  23:17}

 

ஜனங்களெல்லாரும்  அதைக்  கேட்டு:  இவனை  அகற்றும்,  பரபாசை<Barabbas>  எங்களுக்கு  விடுதலையாக்கும்  என்று  சத்தமிட்டுக்  கேட்டார்கள்.  {Luke  23:18}

 

அந்தப்  பரபாசென்பவன்<Barabbas>  நகரத்தில்  நடந்த  ஒரு  கலகத்தினிமித்தமும்  கொலைபாதகத்தினிமித்தமும்  காவலிலே  வைக்கப்பட்டிருந்தான்.  {Luke  23:19}

 

பிலாத்து<Pilate>  இயேசுவை<Jesus>  விடுதலையாக்க  மனதாய்,  மறுபடியும்  அவர்களிடத்தில்  பேசினான்.  {Luke  23:20}

 

அவர்களோ:  அவனைச்  சிலுவையில்  அறையும்,  சிலுவையில்  அறையும்  என்று  கூக்குரலிட்டார்கள்.  {Luke  23:21}

 

அவன்  மூன்றாந்தரம்  அவர்களை  நோக்கி:  ஏன்,  இவன்  என்ன  பொல்லாப்புச்  செய்தான்?  மரணத்துக்கு  ஏதுவான  குற்றம்  ஒன்றும்  இவனிடத்தில்  நான்  காணவில்லையே;  ஆகையால்  நான்  இவனைத்  தண்டித்து,  விடுதலையாக்குவேன்  என்றான்.  {Luke  23:22}

 

அப்படியிருந்தும்  அவரைச்  சிலுவையில்  அறையவேண்டுமென்று  அவர்கள்  உரத்த  சத்தத்தோடு  கேட்டுக்கொண்டேயிருந்தார்கள்.  அவர்களும்  பிரதான  ஆசாரியரும்  இட்ட  சத்தம்  மேற்கொண்டது.  {Luke  23:23}

 

அப்பொழுது  அவர்கள்  கேட்டுக்கொண்டபடியே  ஆகட்டும்  என்று  பிலாத்து<Pilate>  தீர்ப்புசெய்து,  {Luke  23:24}

 

கலகத்தினிமித்தமும்  கொலைபாதகத்தினிமித்தமும்  காவலில்  போடப்பட்டிருந்தவனை  அவர்கள்  கேட்டுக்கொண்டபடியே  விடுதலையாக்கி,  இயேசுவையோ<Jesus>  அவர்கள்  இஷ்டத்துக்கு  ஒப்புக்கொடுத்தான்.  {Luke  23:25}

 

அவர்கள்  இயேசுவைக்<Jesus>  கொண்டுபோகிறபோது,  நாட்டிலிருந்து  வருகிற  சிரேனே<Cyrenian>  ஊரானாகிய  சீமோன்<Simon>  என்கிற  ஒருவனைப்  பிடித்து,  சிலுவையை  அவர்பின்னே  சுமந்துகொண்டுவரும்படி  அதை  அவன்மேல்  வைத்தார்கள்.  {Luke  23:26}

 

திரள்கூட்டமான  ஜனங்களும்  அவருக்காகப்  புலம்பி  அழுகிற  ஸ்திரீகளும்  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Luke  23:27}

 

இயேசு<Jesus>  அவர்கள்  முகமாய்த்  திரும்பி:  எருசலேமின்<Jerusalem>  குமாரத்திகளே,  நீங்கள்  எனக்காக  அழாமல்,  உங்களுக்காகவும்  உங்கள்  பிள்ளைகளுக்காகவும்  அழுங்கள்.  {Luke  23:28}

 

இதோ,  மலடிகள்  பாக்கியவதிகளென்றும்,  பிள்ளைபெறாத  கர்ப்பங்களும்  பால்கொடாத  முலைகளும்  பாக்கியமுள்ளவைகளென்றும்  சொல்லப்படும்  நாட்கள்  வரும்.  {Luke  23:29}

 

அப்பொழுது  மலைகளை  நோக்கி:  எங்கள்மேல்  விழுங்களென்றும்,  குன்றுகளை  நோக்கி:  எங்களை  மறைத்துக்கொள்ளுங்களென்றும்  சொல்லத்தொடங்குவார்கள்.  {Luke  23:30}

 

பச்சைமரத்துக்கு  இவைகளைச்  செய்தால்,  பட்டமரத்துக்கு  என்ன  செய்யமாட்டார்கள்  என்றார்.  {Luke  23:31}

 

குற்றவாளிகளாகிய  வேறே  இரண்டுபேரும்  அவரோடேகூடக்  கொலைசெய்யப்படுவதற்குக்  கொண்டுபோகப்பட்டார்கள்.  {Luke  23:32}

 

கபாலஸ்தலம்  என்று  சொல்லப்பட்ட  இடத்தில்  அவர்கள்  சேர்ந்தபொழுது,  அங்கே  அவரையும்,  அவருடைய  வலதுபக்கத்தில்  ஒரு  குற்றவாளியையும்,  அவருடைய  இடதுபக்கத்தில்  ஒரு  குற்றவாளியையும்  சிலுவைகளில்  அறைந்தார்கள்.  {Luke  23:33}

 

அப்பொழுது  இயேசு<Jesus>:  பிதாவே,  இவர்களுக்கு  மன்னியும்,  தாங்கள்  செய்கிறது  இன்னதென்று  அறியாதிருக்கிறார்களே  என்றார்.  அவருடைய  வஸ்திரங்களை  அவர்கள்  பங்கிட்டுச்  சீட்டுப்போட்டார்கள்.  {Luke  23:34}

 

ஜனங்கள்  நின்று  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  அவர்களுடனேகூட  அதிகாரிகளும்  அவரை  இகழ்ந்து:  இவன்  மற்றவர்களை  இரட்சித்தான்,  இவன்  தேவனால்  தெரிந்துகொள்ளப்பட்ட  கிறிஸ்துவானால்<Christ>,  தன்னைத்தானே  இரட்சித்துக்கொள்ளட்டும்  என்றார்கள்.  {Luke  23:35}

 

போர்ச்சேவகரும்  அவரிடத்தில்  சேர்ந்து,  அவருக்குக்  காடியைக்  கொடுத்து:  {Luke  23:36}

 

நீ  யூதரின்<Jews>  ராஜாவானால்,  உன்னை  இரட்சித்துக்கொள்  என்று  அவரைப்  பரியாசம்பண்ணினார்கள்.  {Luke  23:37}

 

இவன்  யூதருடைய  ராஜா<THIS  IS  THE  KING  OF  THE  JEWS>  என்று,  கிரேக்கு<Greek>  லத்தீன்<Latin>  எபிரெயு<Hebrew>  எழுத்துக்களில்  எழுதி,  அவருக்கு  மேலாக  வைக்கப்பட்டது.  {Luke  23:38}

 

அன்றியும்  சிலுவையில்  அறையப்பட்டிருந்த  குற்றவாளிகளில்  ஒருவன்:  நீ  கிறிஸ்துவானால்<Christ>  உன்னையும்  எங்களையும்  இரட்சித்துக்கொள்  என்று  அவரை  இகழ்ந்தான்.  {Luke  23:39}

 

மற்றவன்  அவனை  நோக்கி:  நீ  இந்த  ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும்  தேவனுக்குப்  பயப்படுகிறதில்லையா?  {Luke  23:40}

 

நாமோ  நியாயப்படி  தண்டிக்கப்படுகிறோம்;  நாம்  நடப்பித்தவைகளுக்குத்தக்க  பலனை  அடைகிறோம்;  இவரோ  தகாததொன்றையும்  நடப்பிக்கவில்லையே  என்று  அவனைக்  கடிந்துகொண்டு,  {Luke  23:41}

 

இயேசுவை<Jesus>  நோக்கி:  ஆண்டவரே,  நீர்  உம்முடைய  ராஜ்யத்தில்  வரும்போது  அடியேனை  நினைத்தருளும்  என்றான்.  {Luke  23:42}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  இன்றைக்கு  நீ  என்னுடனேகூடப்  பரதீசிலிருப்பாய்  என்று  மெய்யாகவே  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Luke  23:43}

 

அப்பொழுது  ஏறக்குறைய  ஆறாம்மணி  நேரமாயிருந்தது;  ஒன்பதாம்மணி  நேரம்வரைக்கும்  பூமியெங்கும்  அந்தகாரமுண்டாயிற்று.  {Luke  23:44}

 

சூரியன்  இருளடைந்தது,  தேவாலயத்தின்  திரைச்சீலை  நடுவில்  இரண்டாகக்  கிழிந்தது.  {Luke  23:45}

 

இயேசு<Jesus>:  பிதாவே,  உம்முடைய  கைகளில்  என்  ஆவியை  ஒப்புவிக்கிறேன்  என்று  மகா  சத்தமாய்க்  கூப்பிட்டுச்  சொன்னார்;  இப்படிச்  சொல்லி,  ஜீவனை  விட்டார்.  {Luke  23:46}

 

நூற்றுக்கு  அதிபதி  சம்பவித்ததைக்கண்டு:  மெய்யாகவே  இந்த  மனுஷன்  நீதிபரனாயிருந்தான்  என்று  சொல்லி,  தேவனை  மகிமைப்படுத்தினான்.  {Luke  23:47}

 

இந்தக்  காட்சியைப்  பார்க்கும்படி  கூடிவந்திருந்த  ஜனங்களெல்லாரும்  சம்பவித்தவைகளைப்  பார்த்தபொழுது,  தங்கள்  மார்பில்  அடித்துக்கொண்டு  திரும்பிப்போனார்கள்.  {Luke  23:48}

 

அவருக்கு  அறிமுகமானவர்களெல்லாரும்,  கலிலேயாவிலிருந்து<Galilee>  அவருக்குப்  பின்சென்று  வந்த  ஸ்திரீகளும்  தூரத்திலே  நின்று  இவைகளைப்  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  {Luke  23:49}

 

யோசேப்பு<Joseph>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  ஆலோசனைக்காரன்  இருந்தான்;  அவன்  உத்தமனும்  நீதிமானுமாயிருந்தான்.  {Luke  23:50}

 

அவன்  யூதருடைய<Jews>  பட்டணங்களிலொன்றாகிய  அரிமத்தியாவிலிருந்து<Arimathaea>  வந்தவனும்,  தேவனுடைய  ராஜ்யத்துக்குக்  காத்திருந்தவனும்,  யூதர்களுடைய<Jews>  ஆலோசனைக்கும்  செய்கைக்கும்  சம்மதியாதவனுமாயிருந்தான்.  {Luke  23:51}

 

அவன்  பிலாத்துவினிடத்தில்<Pilate>  போய்,  இயேசுவின்<Jesus>  சரீரத்தைக்  கேட்டு,  {Luke  23:52}

 

அதை  இறக்கி,  மெல்லிய  துப்பட்டியிலே  சுற்றி,  கன்மலையில்  வெட்டப்பட்டதுமாய்  ஒருக்காலும்  ஒருவனும்  வைக்கப்படாததுமாயிருந்த  ஒரு  கல்லறையிலே  வைத்தான்.  {Luke  23:53}

 

அந்த  நாள்  ஆயத்தநாளாயிருந்தது;  ஓய்வுநாளும்  ஆரம்பமாயிற்று.  {Luke  23:54}

 

கலிலேயாவிலிருந்து<Galilee>  அவருடனேகூட  வந்திருந்த  ஸ்திரீகளும்  பின்சென்று,  கல்லறையையும்  அவருடைய  சரீரம்  வைக்கப்பட்ட  விதத்தையும்  பார்த்து,  {Luke  23:55}

 

திரும்பிப்போய்,  கந்தவர்க்கங்களையும்  பரிமளதைலங்களையும்  ஆயத்தம்பண்ணி,  கற்பனையின்படியே  ஓய்வுநாளில்  ஓய்ந்திருந்தார்கள்.  {Luke  23:56}

 

வாரத்தின்  முதலாம்நாள்  அதிகாலையிலே  தாங்கள்  ஆயத்தம்பண்ணின  கந்தவர்க்கங்களை  அவர்கள்  எடுத்துக்கொண்டு  வேறு  சில  ஸ்திரீகளோடுங்கூடக்  கல்லறையினிடத்தில்  வந்தார்கள்.  {Luke  24:1}

 

கல்லறையை  அடைத்திருந்த  கல்  புரட்டித்  தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு,  {Luke  24:2}

 

உள்ளே  பிரவேசித்து,  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  சரீரத்தைக்  காணாமல்,  {Luke  24:3}

 

அதைக்குறித்து  மிகுந்த  கலக்கமடைந்திருக்கையில்,  பிரகாசமுள்ள  வஸ்திரந்தரித்த  இரண்டுபேர்  அவர்கள்  அருகே  நின்றார்கள்.  {Luke  24:4}

 

அந்த  ஸ்திரீகள்  பயப்பட்டுத்  தலைகவிழ்ந்து  தரையை  நோக்கி  நிற்கையில்,  அந்த  இரண்டுபேரும்  அவர்களை  நோக்கி:  உயிரோடிருக்கிறவரை  நீங்கள்  மரித்தோரிடத்தில்  தேடுகிறதென்ன?  {Luke  24:5}

 

அவர்  இங்கே  இல்லை,  அவர்  உயிர்த்தெழுந்தார்.  {Luke  24:6}

 

மனுஷகுமாரன்  பாவிகளான  மனுஷர்  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படவும்,  சிலுவையில்  அறையப்படவும்,  மூன்றாம்  நாளில்  எழுந்திருக்கவும்  வேண்டுமென்பதாக  அவர்  கலிலேயாவிலிருந்த<Galilee>  காலத்தில்  உங்களுக்குச்  சொன்னதை  நினைவுகூருங்கள்  என்றார்கள்.  {Luke  24:7}

 

அப்பொழுது  அவர்கள்  அவருடைய  வார்த்தைகளை  நினைவுகூர்ந்து,  {Luke  24:8}

 

கல்லறையை  விட்டுத்  திரும்பிப்போய்,  இந்தச்  சங்கதிகளெல்லாவற்றையும்  பதினொருவருக்கும்  மற்றெல்லாருக்கும்  அறிவித்தார்கள்.  {Luke  24:9}

 

இவைகளை  அப்போஸ்தலருக்குச்  சொன்னவர்கள்  மகதலேனா  மரியாளும்<Mary  Magdalene>,  யோவன்னாளும்<Joanna>,  யாக்கோபின்<James>  தாயாகிய  மரியாளும்<Mary>,  இவர்களுடனேகூட  இருந்த  மற்ற  ஸ்திரீகளுமே.  {Luke  24:10}

 

இவர்களுடைய  வார்த்தைகள்  அவர்களுக்கு  வீண்பேச்சாகத்  தோன்றினதினால்,  அவர்கள்  இவர்களை  நம்பவில்லை.  {Luke  24:11}

 

பேதுருவோ<Peter>  எழுந்திருந்து,  கல்லறையினிடத்திற்கு  ஓடி,  அதற்குள்ளே  குனிந்துபார்க்கையில்,  சீலைகளைத்  தனிப்பட  வைத்திருக்கக்கண்டு,  சம்பவித்ததைக்  குறித்துத்  தன்னில்  ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.  {Luke  24:12}

 

அன்றையத்தினமே  அவர்களில்  இரண்டுபேர்  எருசலேமுக்கு<Jerusalem>  ஏழு  அல்லது  எட்டுமைல்  தூரமான  எம்மாவு<Emmaus>  என்னும்  கிராமத்துக்குப்  போனார்கள்.  {Luke  24:13}

 

போகையில்  இந்த  வர்த்தமானங்கள்  யாவையுங்குறித்து  அவர்கள்  ஒருவரோடொருவர்  பேசிக்கொண்டார்கள்.  {Luke  24:14}

 

இப்படி  அவர்கள்  பேசி,  சம்பாஷித்துக்கொண்டிருக்கையில்,  இயேசு<Jesus>  தாமே  சேர்ந்து  அவர்களுடனேகூட  நடந்துபோனார்.  {Luke  24:15}

 

ஆனாலும்  அவரை  அறியாதபடிக்கு  அவர்களுடைய  கண்கள்  மறைக்கப்பட்டிருந்தது.  {Luke  24:16}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  துக்கமுகமுள்ளவர்களாய்  வழிநடந்து,  ஒருவருக்கொருவர்  சொல்லிக்கொள்ளுகிற  காரியங்கள்  என்னவென்று  கேட்டார்.  {Luke  24:17}

 

அவர்களில்  ஒருவனாகிய  கிலெயோப்பா<Cleopas>  என்பவன்  பிரதியுத்தரமாக:  இந்நாட்களில்  எருசலேமிலே<Jerusalem>  நடந்தவைகளை  அறியாதபடிக்கு  நீர்  அந்நியராயிருக்கிறீரோ  என்றான்.  {Luke  24:18}

 

அவர்:  எவைகள்  என்றார்.  அதற்கு  அவர்கள்:  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவைக்<Jesus>  குறித்தவைகளே;  அவர்  தேவனுக்கு  முன்பாகவும்  ஜனங்களெல்லாருக்கு  முன்பாகவும்  செய்கையிலும்  வாக்கிலும்  வல்லமையுள்ள  தீர்க்கதரிசியாயிருந்தார்.  {Luke  24:19}

 

நம்முடைய  பிரதான  ஆசாரியரும்  அதிகாரிகளும்  அவரை  மரண  ஆக்கினைக்குட்படுத்தி,  சிலுவையில்  அறைந்தார்கள்.  {Luke  24:20}

 

அவரே  இஸ்ரவேலை<Israel>  மீட்டிரட்சிப்பவர்  என்று  நாங்கள்  நம்பியிருந்தோம்.  இவைகள்  சம்பவித்து  இன்று  மூன்று  நாளாகிறது.  {Luke  24:21}

 

ஆனாலும்  எங்கள்  கூட்டத்தைச்  சேர்ந்த  சில  ஸ்திரீகள்  அதிகாலமே  கல்லறையினிடத்திற்குப்போய்,  {Luke  24:22}

 

அவருடைய  சரீரத்தைக்  காணாமல்,  திரும்பிவந்து,  அவர்  உயிரோடிருக்கிறார்  என்று  சொன்ன  தேவதூதரைத்  தரிசித்தோம்  என்று  சொல்லி,  எங்களைப்  பிரமிக்கப்பண்ணினார்கள்.  {Luke  24:23}

 

அப்பொழுது  எங்களிலே  சிலர்  கல்லறையினிடத்திற்குப்  போய்,  ஸ்திரீகள்  சொன்னபடியே  கண்டார்கள்;  அவரையோ  காணவில்லை  என்றார்கள்.  {Luke  24:24}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  தீர்க்கதரிசிகள்  சொன்ன  யாவையும்  விசுவாசிக்கிறதற்குப்  புத்தியில்லாத  மந்த  இருதயமுள்ளவர்களே,  {Luke  24:25}

 

கிறிஸ்து<Christ>  இவ்விதமாகப்  பாடுபடவும்,  தமது  மகிமையில்  பிரவேசிக்கவும்  வேண்டியதில்லையா  என்று  சொல்லி,  {Luke  24:26}

 

மோசே<Moses>  முதலிய  சகல  தீர்க்கதரிசிகளும்  எழுதின  வேதவாக்கியங்களெல்லாவற்றிலும்  தம்மைக்குறித்துச்  சொல்லியவைகளை  அவர்களுக்கு  விவரித்துக்  காண்பித்தார்.  {Luke  24:27}

 

அத்தருணத்தில்  தாங்கள்  போகிற  கிராமத்துக்குச்  சமீபமானார்கள்.  அப்பொழுது  அவர்  அப்புறம்  போகிறவர்  போலக்  காண்பித்தார்.  {Luke  24:28}

 

அவர்கள்  அவரை  நோக்கி:  நீர்  எங்களுடனே  தங்கியிரும்,  சாயங்காலமாயிற்று,  பொழுதும்  போயிற்று,  என்று  அவரை  வருந்திக்  கேட்டுக்கொண்டார்கள்.  அப்பொழுது  அவர்  அவர்களுடனே  தங்கும்படி  உள்ளே  போனார்.  {Luke  24:29}

 

அவர்களோடே  அவர்  பந்தியிருக்கையில்,  அவர்  அப்பத்தை  எடுத்து,  ஆசீர்வதித்து,  அதைப்பிட்டு,  அவர்களுக்குக்  கொடுத்தார்.  {Luke  24:30}

 

அப்பொழுது  அவர்களுடைய  கண்கள்  திறக்கப்பட்டு,  அவரை  அறிந்தார்கள்.  உடனே  அவர்  அவர்களுக்கு  மறைந்துபோனார்.  {Luke  24:31}

 

அப்பொழுது  அவர்கள்  ஒருவரையொருவர்  நோக்கி:  வழியிலே  அவர்  நம்முடனே  பேசி,  வேதவாக்கியங்களை  நமக்கு  விளங்கக்காட்டினபொழுது,  நம்முடைய  இருதயம்  நமக்குள்ளே  கொழுந்துவிட்டு  எரியவில்லையா  என்று  சொல்லிக்கொண்டு,  {Luke  24:32}

 

அந்நேரமே  எழுந்திருந்து,  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பிப்போய்,  பதினொருவரும்  அவர்களோடிருந்தவர்களும்  கூடியிருக்கக்கண்டு:  {Luke  24:33}

 

கர்த்தர்  மெய்யாகவே  உயிர்த்தெழுந்து  சீமோனுக்குத்<Simon>  தரிசனமானார்  என்று  அவர்கள்  சொல்லக்  கேட்டு,  {Luke  24:34}

 

வழியில்  நடந்தவைகளையும்,  அவர்  அப்பத்தைப்  பிட்கையில்  தாங்கள்  அவரை  அறிந்துகொண்டதையும்  விவரித்துச்  சொன்னார்கள்.  {Luke  24:35}

 

இவைகளைக்குறித்து  அவர்கள்  பேசிக்கொண்டிருக்கையில்,  இயேசு<Jesus>  தாமே  அவர்கள்  நடுவிலே  நின்று:  உங்களுக்குச்  சமாதானம்  என்றார்.  {Luke  24:36}

 

அவர்கள்  கலங்கி,  பயந்து,  ஒரு  ஆவியைக்  காண்கிறதாக  நினைத்தார்கள்.  {Luke  24:37}

 

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  ஏன்  கலங்குகிறீர்கள்;  உங்கள்  இருதயங்களில்  சந்தேகங்கள்  எழும்புகிறதென்ன?  {Luke  24:38}

 

நான்தான்  என்று  அறியும்படி,  என்  கைகளையும்  என்  கால்களையும்  பாருங்கள்,  என்னைத்  தொட்டுப்பாருங்கள்;  நீங்கள்  காண்கிறபடி,  எனக்கு  மாம்சமும்  எலும்புகளும்  உண்டாயிருக்கிறதுபோல  ஒரு  ஆவிக்கு  இராதே  என்று  சொல்லி,  {Luke  24:39}

 

தம்முடைய  கைகளையும்  கால்களையும்  அவர்களுக்குக்  காண்பித்தார்.  {Luke  24:40}

 

ஆனாலும்  சந்தோஷத்தினால்  அவர்கள்  இன்னும்  விசுவாசியாமல்  ஆச்சரியப்படுகையில்:  புசிக்கிறதற்கு  ஏதாகிலும்  இங்கே  உண்டா  என்று  அவர்களிடத்தில்  கேட்டார்.  {Luke  24:41}

 

அப்பொழுது  பொரித்த  மீன்கண்டத்தையும்  தேன்கூட்டுத்  துணிக்கையையும்  அவருக்குக்  கொடுத்தார்கள்.  {Luke  24:42}

 

அவைகளை  அவர்  வாங்கி  அவர்களுக்கு  முன்பாகப்  புசித்து,  {Luke  24:43}

 

அவர்களை  நோக்கி:  மோசேயின்<Moses>  நியாயப்பிரமாணத்திலும்  தீர்க்கதரிசிகளின்  ஆகமங்களிலும்  சங்கீதங்களிலும்  என்னைக்குறித்து  எழுதியிருக்கிறவைகளெல்லாம்  நிறைவேறவேண்டியதென்று,  நான்  உங்களோடிருந்தபோது  உங்களுக்குச்  சொல்லிக்கொண்டுவந்த  விசேஷங்கள்  இவைகளே  என்றார்.  {Luke  24:44}

 

அப்பொழுது  வேதவாக்கியங்களை  அறிந்துகொள்ளும்படி  அவர்களுடைய  மனதை  அவர்  திறந்து  அவர்களை  நோக்கி:  {Luke  24:45}

 

எழுதியிருக்கிறபடி,  கிறிஸ்து<Christ>  பாடுபடவும்,  மூன்றாம்  நாளில்  மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும்  வேண்டியதாயிருந்தது;  {Luke  24:46}

 

அன்றியும்  மனந்திரும்புதலும்  பாவமன்னிப்பும்  எருசலேம்<Jerusalem>  தொடங்கிச்  சகல  தேசத்தாருக்கும்  அவருடைய  நாமத்தினாலே  பிரசங்கிக்கப்படவும்  வேண்டியது.  {Luke  24:47}

 

நீங்கள்  இவைகளுக்குச்  சாட்சிகளாயிருக்கிறீர்கள்.  {Luke  24:48}

 

என்  பிதா  வாக்குத்தத்தம்பண்ணினதை,  இதோ,  நான்  உங்களுக்கு  அனுப்புகிறேன்.  நீங்களோ  உன்னதத்திலிருந்து  வரும்  பெலனால்  தரிப்பிக்கப்படும்வரைக்கும்  எருசலேம்<Jerusalem>  நகரத்தில்  இருங்கள்  என்றார்.  {Luke  24:49}

 

பின்பு  அவர்  பெத்தானியாவரைக்கும்<Bethany>  அவர்களை  அழைத்துக்கொண்டுபோய்,  தம்முடைய  கைகளை  உயர்த்தி,  அவர்களை  ஆசீர்வதித்தார்.  {Luke  24:50}

 

அவர்களை  ஆசீர்வதிக்கையில்,  அவர்களை  விட்டுப்  பிரிந்து,  பரலோகத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டார்.  {Luke  24:51}

 

அவர்கள்  அவரைப்  பணிந்துகொண்டு,  மிகுந்த  சந்தோஷத்தோடே  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பிவந்து,  {Luke  24:52}

 

நாடோறும்  தேவாலயத்திலே  தேவனைப்  புகழ்ந்து  துதித்துக்கொண்டிருந்தார்கள்.  ஆமென்.  {Luke  24:53}

 

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!