Friday, November 01, 2019

யோவான்

ஆதியிலே    வார்த்தை    இருந்தது,    அந்த    வார்த்தை    தேவனிடத்திலிருந்தது,    அந்த    வார்த்தை    தேவனாயிருந்தது.    {John    1:1}

 

அவர்    ஆதியிலே    தேவனோடிருந்தார்.    {John    1:2}

 

சகலமும்    அவர்    மூலமாய்    உண்டாயிற்று;    உண்டானதொன்றும்    அவராலேயல்லாமல்    உண்டாகவில்லை.    {John    1:3}

 

அவருக்குள்    ஜீவன்    இருந்தது,    அந்த    ஜீவன்    மனுஷருக்கு    ஒளியாயிருந்தது.    {John    1:4}

 

அந்த    ஒளி    இருளிலே    பிரகாசிக்கிறது;    இருளானது    அதைப்    பற்றிக்கொள்ளவில்லை.    {John    1:5}

 

தேவனால்    அனுப்பப்பட்ட    ஒரு    மனுஷன்    இருந்தான்,    அவன்    பேர்    யோவான்<John>.    {John    1:6}

 

அவன்    தன்னால்    எல்லாரும்    விசுவாசிக்கும்படி    அந்த    ஒளியைக்குறித்துச்    சாட்சிகொடுக்க    சாட்சியாக    வந்தான்.    {John    1:7}

 

அவன்    அந்த    ஒளியல்ல,    அந்த    ஒளியைக்குறித்துச்    சாட்சிகொடுக்க    வந்தவனாயிருந்தான்.    {John    1:8}

 

உலகத்திலே    வந்து    எந்த    மனுஷனையும்    பிரகாசிப்பிக்கிற    ஒளியே    அந்த    மெய்யான    ஒளி.    {John    1:9}

 

அவர்    உலகத்தில்    இருந்தார்,    உலகம்    அவர்    மூலமாய்    உண்டாயிற்று,    உலகமோ    அவரை    அறியவில்லை.    {John    1:10}

 

அவர்    தமக்குச்    சொந்தமானதிலே    வந்தார்,    அவருக்குச்    சொந்தமானவர்களோ    அவரை    ஏற்றுக்கொள்ளவில்லை.    {John    1:11}

 

அவருடைய    நாமத்தின்மேல்    விசுவாசமுள்ளவர்களாய்    அவரை    ஏற்றுக்கொண்டவர்கள்    எத்தனைபேர்களோ,    அத்தனைபேர்களும்    தேவனுடைய    பிள்ளைகளாகும்படி,    அவர்களுக்கு    அதிகாரங்    கொடுத்தார்.    {John    1:12}

 

அவர்கள்,    இரத்தத்தினாலாவது    மாம்ச    சித்தத்தினாலாவது    புருஷனுடைய    சித்தத்தினாலாவது    பிறவாமல்,    தேவனாலே    பிறந்தவர்கள்.    {John    1:13}

 

அந்த    வார்த்தை    மாம்சமாகி,    கிருபையினாலும்    சத்தியத்தினாலும்    நிறைந்தவராய்,    நமக்குள்ளே    வாசம்பண்ணினார்;    அவருடைய    மகிமையைக்    கண்டோம்;    அது    பிதாவுக்கு    ஒரேபேறானவருடைய    மகிமைக்கு    ஏற்ற    மகிமையாகவே    இருந்தது.    {John    1:14}

 

யோவான்<John>    அவரைக்குறித்துச்    சாட்சிகொடுத்து:    எனக்குப்    பின்வருகிறவர்    எனக்கு    முன்னிருந்தவர்,    ஆகையால்    அவர்    என்னிலும்    மேன்மையுள்ளவர்    என்று    நான்    சொல்லியிருந்தேனே,    அவர்    இவர்தான்    என்று    சத்தமிட்டுக்    கூறினான்.    {John    1:15}

 

அவருடைய    பரிபூரணத்தினால்    நாம்    எல்லாரும்    கிருபையின்மேல்    கிருபைபெற்றோம்.    {John    1:16}

 

எப்படியெனில்,    நியாயப்பிரமாணம்    மோசேயின்<Moses>    மூலமாய்க்    கொடுக்கப்பட்டது,    கிருபையும்    சத்தியமும்    இயேசு    கிறிஸ்துவின்<Jesus    Christ>    மூலமாய்    உண்டாயின.    {John    1:17}

 

தேவனை    ஒருவனும்    ஒருக்காலுங்    கண்டதில்லை,    பிதாவின்    மடியிலிருக்கிற    ஒரேபேறான    குமாரனே    அவரை    வெளிப்படுத்தினார்.    {John    1:18}

 

எருசலேமிலிருந்து<Jerusalem>    யூதர்கள்<Jews>    ஆசாரியரையும்    லேவியரையும்<Levites>    யோவானிடத்தில்<John>    அனுப்பி:    நீர்    யார்    என்று    கேட்டபொழுது,    {John    1:19}

 

அவன்    மறுதலியாமல்    அறிக்கையிட்டதுமன்றி,    நான்    கிறிஸ்து<Christ>    அல்ல    என்றும்    அறிக்கையிட்டான்.    {John    1:20}

 

அப்பொழுது    அவர்கள்:    பின்னை    யார்?    நீர்    எலியாவா<Elias>    என்று    கேட்டார்கள்.    அதற்கு:    நான்    அவன்    அல்ல    என்றான்.    நீர்    தீர்க்கதரிசியானவரா    என்று    கேட்டார்கள்.    அதற்கும்:    அல்ல    என்றான்.    {John    1:21}

 

அவர்கள்    பின்னும்    அவனை    நோக்கி:    நீர்    யார்?    எங்களை    அனுப்பினவர்களுக்கு    நாங்கள்    உத்தரவு    சொல்லும்படிக்கு,    உம்மைக்குறித்து    என்ன    சொல்லுகிறீர்    என்று    கேட்டார்கள்.    {John    1:22}

 

அதற்கு    அவன்:    கர்த்தருக்கு    வழியைச்    செவ்வைபண்ணுங்கள்    என்று    ஏசாயா<Esaias>    தீர்க்கதரிசி    சொன்னபடியே,    நான்    வனாந்தரத்திலே    கூப்பிடுகிறவனுடைய    சத்தமாயிருக்கிறேன்    என்றான்.    {John    1:23}

 

அனுப்பப்பட்டவர்கள்    பரிசேயராயிருந்தார்கள்<Pharisees>.    {John    1:24}

 

அவர்கள்    அவனை    நோக்கி:    நீர்    கிறிஸ்துவுமல்ல<Christ>,    எலியாவுமல்ல<Elias>,    தீர்க்கதரிசியானவருமல்லவென்றால்,    ஏன்    ஞானஸ்நானங்    கொடுக்கிறீர்    என்று    கேட்டார்கள்.    {John    1:25}

 

யோவான்<John>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    நான்    ஜலத்தினாலே    ஞானஸ்நானங்கொடுக்கிறேன்;    நீங்கள்    அறியாதிருக்கிற    ஒருவர்    உங்கள்    நடுவிலே    நிற்கிறார்.    {John    1:26}

 

அவர்    எனக்குப்    பின்வந்தும்    என்னிலும்    மேன்மையுள்ளவர்;    அவருடைய    பாதரட்சையின்    வாரை    அவிழ்ப்பதற்கும்    நான்    பாத்திரனல்ல    என்றான்.    {John    1:27}

 

இவைகள்    யோர்தானுக்கு<Jordan>    அக்கரையில்    யோவான்<John>    ஞானஸ்நானங்கொடுத்த    பெத்தாபராவிலே<Bethabara>    நடந்தன.    {John    1:28}

 

மறுநாளிலே    யோவான்<John>    இயேசுவைத்<Jesus>    தன்னிடத்தில்    வரக்கண்டு:    இதோ,    உலகத்தின்    பாவத்தைச்    சுமந்துதீர்க்கிற    தேவ    ஆட்டுக்குட்டி.    {John    1:29}

 

எனக்குப்பின்    ஒருவர்    வருகிறார்,    அவர்    எனக்கு    முன்னிருந்தபடியால்    என்னிலும்    மேன்மையுள்ளவரென்று    நான்    சொன்னேனே,    அவர்    இவர்தான்.    {John    1:30}

 

நானும்    இவரை    அறியாதிருந்தேன்;    இவர்    இஸ்ரவேலுக்கு<Israel>    வெளிப்படும்    பொருட்டாக,    நான்    ஜலத்தினாலே    ஞானஸ்நானங்    கொடுக்கவந்தேன்    என்றான்.    {John    1:31}

 

பின்னும்    யோவான்<John>    சாட்சியாகச்    சொன்னது:    ஆவியானவர்    புறாவைப்போல    வானத்திலிருந்திறங்கி,    இவர்மேல்    தங்கினதைக்    கண்டேன்.    {John    1:32}

 

நானும்    இவரை    அறியாதிருந்தேன்;    ஆனாலும்    ஜலத்தினால்    ஞானஸ்நானங்கொடுக்கும்படி    என்னை    அனுப்பினவர்:    ஆவியானவர்    இறங்கி    யார்மேல்    தங்குவதை    நீ    காண்பாயோ,    அவரே    பரிசுத்த    ஆவியினால்    ஞானஸ்நானங்கொடுக்கிறவர்    என்று    எனக்குச்    சொல்லியிருந்தார்.    {John    1:33}

 

அந்தப்படியே    நான்    கண்டு,    இவரே    தேவனுடைய    குமாரன்    என்று    சாட்சி    கொடுத்துவருகிறேன்    என்றான்.    {John    1:34}

 

மறுநாளிலே    யோவானும்<John>    அவனுடைய    சீஷரில்    இரண்டுபேரும்    நிற்கும்போது,    {John    1:35}

 

இயேசு<Jesus>    நடந்துபோகிறதை    அவன்    கண்டு:    இதோ,    தேவ    ஆட்டுக்குட்டி    என்றான்.    {John    1:36}

 

அவன்    அப்படிச்    சொன்னதை    அவ்விரண்டு    சீஷருங்கேட்டு,    இயேசுவுக்குப்<Jesus>    பின்சென்றார்கள்.    {John    1:37}

 

இயேசு<Jesus>    திரும்பி,    அவர்கள்    பின்    செல்லுகிறதைக்    கண்டு:    என்ன    தேடுகிறீர்கள்    என்றார்.    அதற்கு    அவர்கள்:    ரபீ<Rabbi>,    நீர்    எங்கே    தங்கியிருக்கிறீர்    என்று    கேட்டார்கள்;    ரபீ<Rabbi>    என்பதற்குப்    போதகரே    என்று    அர்த்தமாம்.    {John    1:38}

 

அவர்:    வந்து    பாருங்கள்    என்றார்.    அவர்கள்    வந்து    அவர்    தங்கியிருந்த    இடத்தைக்    கண்டு,    அன்றையத்தினம்    அவரிடத்தில்    தங்கினார்கள்.    அப்பொழுது    ஏறக்குறையப்    பத்துமணி    வேளையாயிருந்தது.    {John    1:39}

 

யோவான்<John>    சொன்னதைக்    கேட்டு,    அவருக்குப்    பின்சென்ற    இரண்டுபேரில்    ஒருவன்    சீமோன்    பேதுருவின்<Simon    Peter>    சகோதரனாகிய    அந்திரேயா<Andrew>    என்பவன்.    {John    1:40}

 

அவன்    முதலாவது    தன்    சகோதரனாகிய    சீமோனைக்<Simon>    கண்டு:    மேசியாவைக்<Messias>    கண்டோம்    என்று    சொன்னான்;    மேசியா<Messias>    என்பதற்குக்    கிறிஸ்து<Christ>    என்று    அர்த்தமாம்.    {John    1:41}

 

பின்பு,    அவனை    இயேசுவினிடத்தில்<Jesus>    கூட்டிக்கொண்டுவந்தான்.    இயேசு<Jesus>    அவனைப்    பார்த்து:    நீ    யோனாவின்<Jona>    மகனாகிய    சீமோன்<Simon>,    நீ    கேபா<Cephas>    என்னப்படுவாய்    என்றார்;    கேபா<Cephas>    என்பதற்குப்    பேதுரு<Peter//A    stone>    என்று    அர்த்தமாம்.    {John    1:42}

 

மறுநாளிலே    இயேசு<Jesus>    கலிலேயாவுக்குப்போக<Galilee>    மனதாயிருந்து,    பிலிப்புவைக்<Philip>    கண்டு:    நீ    எனக்குப்    பின்சென்று    வா    என்றார்.    {John    1:43}

 

பிலிப்பென்பவன்<Philip>    அந்திரேயா<Andrew>    பேதுரு<Peter>    என்பவர்களுடைய    ஊராகிய    பெத்சாயிதா<Bethsaida>    பட்டணத்தான்.    {John    1:44}

 

பிலிப்பு<Philip>    நாத்தான்வேலைக்<Nathanael>    கண்டு:    நியாயப்பிரமாணத்திலே    மோசேயும்<Moses>    தீர்க்கதரிசிகளும்    எழுதியிருக்கிறவரைக்    கண்டோம்;    அவர்    யோசேப்பின்<Joseph>    குமாரனும்    நாசரேத்தூரானுமாகிய<Nazareth>    இயேசுவே<Jesus>    என்றான்.    {John    1:45}

 

அதற்கு    நாத்தான்வேல்<Nathanael>:    நாசரேத்திலிருந்து<Nazareth>    யாதொரு    நன்மை    உண்டாகக்கூடுமா    என்றான்.    அதற்குப்    பிலிப்பு<Philip>:    வந்து    பார்    என்றான்.    {John    1:46}

 

இயேசு<Jesus>    நாத்தான்வேலைத்<Nathanael>    தம்மிடத்தில்    வரக்கண்டு    அவனைக்குறித்து:    இதோ,    கபடற்ற    உத்தம    இஸ்ரவேலன்<Israelite>    என்றார்.    {John    1:47}

 

அதற்கு    நாத்தான்வேல்<Nathanael>:    நீர்    என்னை    எப்படி    அறிவீர்    என்றான்.    இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    பிலிப்பு<Philip>    உன்னை    அழைக்கிறதற்குமுன்னே,    நீ    அத்திமரத்தின்    கீழிருக்கும்போது    உன்னைக்    கண்டேன்    என்றார்.    {John    1:48}

 

அதற்கு    நாத்தான்வேல்<Nathanael>:    ரபீ<Rabbi>,    நீர்    தேவனுடைய    குமாரன்,    நீர்    இஸ்ரவேலின்<Israel>    ராஜா    என்றான்.    {John    1:49}

 

இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    அத்திமரத்தின்    கீழே    உன்னைக்    கண்டேன்    என்று    நான்    உனக்குச்    சொன்னதினாலேயா    விசுவாசிக்கிறாய்;    இதிலும்    பெரிதானவைகளைக்    காண்பாய்    என்றார்.    {John    1:50}

 

பின்னும்,    அவர்    அவனை    நோக்கி:    வானம்    திறந்திருக்கிறதையும்,    தேவதூதர்கள்    மனுஷகுமாரனிடத்திலிருந்து    ஏறுகிறதையும்    இறங்குகிறதையும்    நீங்கள்    இதுமுதல்    காண்பீர்கள்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    1:51}

 

மூன்றாம்    நாளிலே    கலிலேயாவிலுள்ள<Galilee>    கானா<Cana>    ஊரிலே    ஒரு    கலியாணம்    நடந்தது;    இயேசுவின்<Jesus>    தாயும்    அங்கேயிருந்தாள்.    {John    2:1}

 

இயேசுவும்<Jesus>    அவருடைய    சீஷரும்    அந்தக்    கலியாணத்துக்கு    அழைக்கப்பட்டிருந்தார்கள்.    {John    2:2}

 

திராட்சரசம்    குறைவுபட்டபோது,    இயேசுவின்<Jesus>    தாய்    அவரை    நோக்கி:    அவர்களுக்குத்    திராட்சரசம்    இல்லை    என்றாள்.    {John    2:3}

 

அதற்கு    இயேசு<Jesus>:    ஸ்திரீயே,    எனக்கும்    உனக்கும்    என்ன,    என்    வேளை    இன்னும்    வரவில்லை    என்றார்.    {John    2:4}

 

அவருடைய    தாய்    வேலைக்காரரை    நோக்கி:    அவர்    உங்களுக்கு    என்ன    சொல்லுகிறாரோ,    அதின்படி    செய்யுங்கள்    என்றாள்.    {John    2:5}

 

யூதர்கள்<Jews>    தங்களைச்    சுத்திகரிக்கும்    முறைமையின்படியே,    ஒவ்வொன்று    இரண்டு    மூன்று    குடம்    தண்ணீர்    கொள்ளத்தக்க    ஆறு    கற்சாடிகள்    அங்கே    வைத்திருந்தது.    {John    2:6}

 

இயேசு<Jesus>    வேலைக்காரரை    நோக்கி:    ஜாடிகளிலே    தண்ணீர்    நிரப்புங்கள்    என்றார்;    அவர்கள்    அவைகளை    நிறைய    நிரப்பினார்கள்.    {John    2:7}

 

அவர்    அவர்களை    நோக்கி:    நீங்கள்    இப்பொழுது    மொண்டு,    பந்திவிசாரிப்புக்காரனிடத்தில்    கொண்டுபோங்கள்    என்றார்;    அவர்கள்    கொண்டுபோனார்கள்.    {John    2:8}

 

அந்தத்    திராட்சரசம்    எங்கேயிருந்து    வந்ததென்று    தண்ணீரை    மொண்ட    வேலைக்காரருக்குத்    தெரிந்ததேயன்றி    பந்திவிசாரிப்புக்காரனுக்குத்    தெரியாததினால்,    அவன்    திராட்சரசமாய்    மாறின    தண்ணீரை    ருசிபார்த்தபோது,    மணவாளனை    அழைத்து:    {John    2:9}

 

எந்த    மனுஷனும்    முன்பு    நல்ல    திராட்சரசத்தைக்    கொடுத்து,    ஜனங்கள்    திருப்தியடைந்தபின்பு,    ருசி    குறைந்ததைக்    கொடுப்பான்,    நீரோ    நல்ல    ரசத்தை    இதுவரைக்கும்    வைத்திருந்தீரே    என்றான்.    {John    2:10}

 

இவ்விதமாக    இயேசு<Jesus>    இந்த    முதலாம்    அற்புதத்தைக்    கலிலேயாவிலுள்ள<Galilee>    கானா<Cana>    ஊரிலே    செய்து,    தம்முடைய    மகிமையை    வெளிப்படுத்தினார்;    அவருடைய    சீஷர்கள்    அவரிடத்தில்    விசுவாசம்    வைத்தார்கள்.    {John    2:11}

 

அதன்பின்பு    அவரும்    அவருடைய    தாயாரும்    அவருடைய    சகோதரரும்    அவருடைய    சீஷரும்    கப்பர்நகூமுக்குப்போய்<Capernaum>,    அங்கே    சிலநாள்    தங்கினார்கள்.    {John    2:12}

 

பின்பு    யூதருடைய<Jews>    பஸ்காபண்டிகை    சமீபமாயிருந்தது;    அப்பொழுது    இயேசு<Jesus>    எருசலேமுக்குப்<Jerusalem>    போய்,    {John    2:13}

 

தேவாலயத்திலே    ஆடுகள்    மாடுகள்    புறாக்களாகிய    இவைகளை    விற்கிறவர்களையும்,    காசுக்காரர்    உட்கார்ந்திருக்கிறதையும்    கண்டு,    {John    2:14}

 

கயிற்றினால்    ஒரு    சவுக்கையுண்டுபண்ணி,    அவர்கள்    யாவரையும்    ஆடுமாடுகளையும்    தேவாலயத்துக்குப்    புறம்பே    துரத்திவிட்டு,    காசுக்காரருடைய    காசுகளைக்    கொட்டி,    பலகைகளைக்    கவிழ்த்துப்போட்டு,    {John    2:15}

 

புறா    விற்கிறவர்களை    நோக்கி:    இவைகளை    இவ்விடத்திலிருந்து    எடுத்துக்கொண்டுபோங்கள்;    என்    பிதாவின்    வீட்டை    வியாபார    வீடாக்காதிருங்கள்    என்றார்.    {John    2:16}

 

அப்பொழுது:    உம்முடைய    வீட்டைக்குறித்து    உண்டான    பக்திவைராக்கியம்    என்னைப்    பட்சித்தது    என்று    எழுதியிருக்கிறதை    அவருடைய    சீஷர்கள்    நினைவுகூர்ந்தார்கள்.    {John    2:17}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>    அவரை    நோக்கி:    நீர்    இவைகளைச்    செய்கிறீரே,    இதற்கு    என்ன    அடையாளத்தை    எங்களுக்குக்    காண்பிக்கிறீர்    என்று    கேட்டார்கள்.    {John    2:18}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    இந்த    ஆலயத்தை    இடித்துப்போடுங்கள்,    மூன்று    நாளைக்குள்ளே    இதை    எழுப்புவேன்    என்றார்.    {John    2:19}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>:    இந்த    ஆலயத்தைக்    கட்ட    நாற்பத்தாறு    வருஷம்    சென்றதே,    நீர்    இதை    மூன்று    நாளைக்குள்ளே    எழுப்புவீரோ    என்றார்கள்.    {John    2:20}

 

அவரோ    தம்முடைய    சரீரமாகிய    ஆலயத்தைக்குறித்துப்    பேசினார்.    {John    2:21}

 

அவர்    இப்படிச்    சொன்னதை    அவர்    மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு    அவருடைய    சீஷர்கள்    நினைவுகூர்ந்து,    வேதவாக்கியத்தையும்    இயேசு<Jesus>    சொன்ன    வசனத்தையும்    விசுவாசித்தார்கள்.    {John    2:22}

 

பஸ்காபண்டிகையிலே    அவர்    எருசலேமிலிருக்கையில்<Jerusalem>,    அவர்    செய்த    அற்புதங்களை    அநேகர்    கண்டு,    அவருடைய    நாமத்தில்    விசுவாசம்    வைத்தார்கள்.    {John    2:23}

 

அப்படியிருந்தும்,    இயேசு<Jesus>    எல்லாரையும்    அறிந்திருந்தபடியால்,    அவர்களை    நம்பி    இணங்கவில்லை.    {John    2:24}

 

மனுஷருள்ளத்திலிருப்பதை    அவர்    அறிந்திருந்தபடியால்,    மனுஷரைக்    குறித்து    ஒருவரும்    அவருக்குச்    சாட்சி    கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.    {John    2:25}

 

யூதருக்குள்ளே<Jews>    அதிகாரியான    நிக்கொதேமு<Nicodemus>    என்னப்பட்ட    பரிசேயன்<Pharisees>    ஒருவன்    இருந்தான்.    {John    3:1}

 

அவன்    இராக்காலத்திலே    இயேசுவினிடத்தில்<Jesus>    வந்து:    ரபீ<Rabbi>,    நீர்    தேவனிடத்திலிருந்து    வந்த    போதகர்    என்று    அறிந்திருக்கிறோம்,    ஏனெனில்    ஒருவனும்    தன்னுடனே    தேவன்    இராவிட்டால்    நீர்    செய்கிற    இப்படிப்பட்ட    அற்புதங்களைச்    செய்யமாட்டான்    என்றான்.    {John    3:2}

 

இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    ஒருவன்    மறுபடியும்    பிறவாவிட்டால்    தேவனுடைய    ராஜ்யத்தைக்    காணமாட்டான்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உனக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    3:3}

 

அதற்கு    நிக்கொதேமு<Nicodemus>:    ஒரு    மனுஷன்    முதிர்வயதாயிருக்கையில்    எப்படிப்    பிறப்பான்?    அவன்    தன்    தாயின்    கர்ப்பத்தில்    இரண்டாந்தரம்    பிரவேசித்துப்    பிறக்கக்கூடுமோ    என்றான்.    {John    3:4}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    ஒருவன்    ஜலத்தினாலும்    ஆவியினாலும்    பிறவாவிட்டால்    தேவனுடைய    ராஜ்யத்தில்    பிரவேசிக்கமாட்டான்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உனக்குச்    சொல்லுகிறேன்.    {John    3:5}

 

மாம்சத்தினால்    பிறப்பது    மாம்சமாயிருக்கும்,    ஆவியினால்    பிறப்பது    ஆவியாயிருக்கும்.    {John    3:6}

 

நீங்கள்    மறுபடியும்    பிறக்கவேண்டும்    என்று    நான்    உனக்குச்    சொன்னதைக்    குறித்து    அதிசயப்படவேண்டாம்.    {John    3:7}

 

காற்றானது    தனக்கு    இஷ்டமான    இடத்திலே    வீசுகிறது,    அதின்    சத்தத்தைக்    கேட்கிறாய்,    ஆகிலும்    அது    இன்ன    இடத்திலிருந்து    வருகிறதென்றும்,    இன்ன    இடத்துக்குப்    போகிறதென்றும்    உனக்குத்    தெரியாது;    ஆவியினால்    பிறந்தவனெவனோ    அவனும்    அப்படியே    இருக்கிறான்    என்றார்.    {John    3:8}

 

அதற்கு    நிக்கொதேமு<Nicodemus>:    இவைகள்    எப்படி    ஆகும்    என்றான்.    {John    3:9}

 

இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    நீ    இஸ்ரவேலில்<Israel>    போதகனாயிருந்தும்    இவைகளை    அறியாமலிருக்கிறாயா?    {John    3:10}

 

மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உனக்குச்    சொல்லுகிறேன்,    நாங்கள்    அறிந்திருக்கிறதைச்    சொல்லி,    நாங்கள்    கண்டதைக்குறித்துச்    சாட்சிகொடுக்கிறோம்;    நீங்களோ    எங்கள்    சாட்சியை    ஏற்றுக்    கொள்ளுகிறதில்லை.    {John    3:11}

 

பூமிக்கடுத்த    காரியங்களை    நான்    உங்களுக்குச்    சொல்லியும்    நீங்கள்    விசுவாசிக்கவில்லையே,    பரமகாரியங்களை    உங்களுக்குச்    சொல்வேனானால்    எப்படி    விசுவாசிப்பீர்கள்?    {John    3:12}

 

பரலோகத்திலிருந்திறங்கினவரும்    பரலோகத்திலிருக்கிறவருமான    மனுஷகுமாரனேயல்லாமல்    பரலோகத்துக்கு    ஏறினவன்    ஒருவனுமில்லை.    {John    3:13}

 

சர்ப்பமானது    மோசேயினால்<Moses>    வனாந்தரத்திலே    உயர்த்தப்பட்டதுபோல    மனுஷகுமாரனும்,    {John    3:14}

 

தன்னை    விசுவாசிக்கிறவன்    எவனோ    அவன்    கெட்டுப்போகாமல்    நித்தியஜீவனை    அடையும்படிக்கு,    உயர்த்தப்படவேண்டும்.    {John    3:15}

 

தேவன்,    தம்முடைய    ஒரேபேறான    குமாரனை    விசுவாசிக்கிறவன்    எவனோ    அவன்    கெட்டுப்போகாமல்    நித்தியஜீவனை    அடையும்படிக்கு,    அவரைத்    தந்தருளி,    இவ்வளவாய்    உலகத்தில்    அன்பு    கூர்ந்தார்.    {John    3:16}

 

உலகத்தை    ஆக்கினைக்குள்ளாகத்    தீர்க்கும்படி    தேவன்    தம்முடைய    குமாரனை    உலகத்தில்    அனுப்பாமல்,    அவராலே    உலகம்    இரட்சிக்கப்படுவதற்காகவே    அவரை    அனுப்பினார்.    {John    3:17}

 

அவரை    விசுவாசிக்கிறவன்    ஆக்கினைக்குள்ளாகத்    தீர்க்கப்படான்;    விசுவாசியாதவனோ,    தேவனுடைய    ஒரேபேறான    குமாரனுடைய    நாமத்தில்    விசுவாசமுள்ளவனாயிராதபடியினால்,    அவன்    ஆக்கினைத்    தீர்ப்புக்குட்பட்டாயிற்று.    {John    3:18}

 

ஒளியானது    உலகத்திலே    வந்திருந்தும்    மனுஷருடைய    கிரியைகள்    பொல்லாதவைகளாயிருக்கிற    படியினால்    அவர்கள்    ஒளியைப்பார்க்கிலும்    இருளை    விரும்புகிறதே    அந்த    ஆக்கினைத்தீர்ப்புக்குக்    காரணமாயிருக்கிறது.    {John    3:19}

 

பொல்லாங்கு    செய்கிற    எவனும்    ஒளியைப்    பகைக்கிறான்,    தன்    கிரியைகள்    கண்டிக்கப்படாதபடிக்கு,    ஒளியினிடத்தில்    வராதிருக்கிறான்.    {John    3:20}

 

சத்தியத்தின்படி    செய்கிறவனோ,    தன்    கிரியைகள்    தேவனுக்குள்ளாய்ச்    செய்யப்படுகிறதென்று    வெளியாகும்படிக்கு,    ஒளியினிடத்தில்    வருகிறான்    என்றார்.    {John    3:21}

 

இவைகளுக்குப்பின்பு,    இயேசுவும்<Jesus>    அவருடைய    சீஷரும்    யூதேயா<Judaea>    தேசத்திற்கு    வந்தார்கள்;    அங்கே    அவர்    அவர்களோடே    சஞ்சரித்து,    ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.    {John    3:22}

 

சாலிம்<Salim>    ஊருக்குச்    சமீபமான    அயினோன்<Aenon>    என்னும்    இடத்திலே    தண்ணீர்    மிகுதியாயிருந்தபடியினால்,    யோவானும்<John>    அங்கே    ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்;    ஜனங்கள்    அவனிடத்தில்    வந்து    ஞானஸ்நானம்    பெற்றார்கள்.    {John    3:23}

 

அக்காலத்தில்    யோவான்<John>    காவலில்    வைக்கப்பட்டிருக்கவில்லை.    {John    3:24}

 

அப்பொழுது    யோவானுடைய<John>    சீஷரில்    சிலருக்கும்    யூதருக்கும்<Jews>    சுத்திகரிப்பைக்குறித்து    வாக்குவாதமுண்டாயிற்று.    {John    3:25}

 

அவர்கள்    யோவானிடத்தில்<John>    வந்து:    ரபீ<Rabbi>,    உம்முடனேகூட    யோர்தானுக்கு<Jordan>    அக்கரையில்    ஒருவர்    இருந்தாரே;    அவரைக்    குறித்து    நீரும்    சாட்சிகொடுத்தீரே,    இதோ,    அவர்    ஞானஸ்நானங்கொடுக்கிறார்,    எல்லாரும்    அவரிடத்தில்    போகிறார்கள்    என்றார்கள்.    {John    3:26}

 

யோவான்<John>    பிரதியுத்தரமாக:    பரலோகத்திலிருந்து    ஒருவனுக்குக்    கொடுக்கப்பட்டாலொழிய,    அவன்    ஒன்றையும்    பெற்றுக்கொள்ளமாட்டான்.    {John    3:27}

 

நான்    கிறிஸ்துவல்ல<Christ>,    அவருக்கு    முன்னாக    அனுப்பப்பட்டவன்    என்று    நான்    சொன்னதற்கு    நீங்களே    சாட்சிகள்.    {John    3:28}

 

மணவாட்டியை    உடையவனே    மணவாளன்;    மணவாளனுடைய    தோழனோ,    அருகே    நின்று,    அவருடைய    சொல்லைக்    கேட்கிறவனாய்    மணவாளனுடைய    சத்தத்தைக்குறித்து    மிகவும்    சந்தோஷப்படுகிறான்;    இந்தச்    சந்தோஷம்    இப்பொழுது    எனக்குச்    சம்பூரணமாயிற்று.    {John    3:29}

 

அவர்    பெருகவும்    நான்    சிறுகவும்    வேண்டும்.    {John    3:30}

 

உன்னதத்திலிருந்து    வருகிறவர்    எல்லாரிலும்    மேலானவர்;    பூமியிலிருந்துண்டானவன்    பூமியின்    தன்மையுள்ளவனாயிருந்து,    பூமிக்கடுத்தவைகளைப்    பேசுகிறான்;    பரலோகத்திலிருந்து    வருகிறவர்    எல்லாரிலும்    மேலானவர்.    {John    3:31}

 

தாம்    கண்டதையும்    கேட்டதையும்    சாட்சியாகச்    சொல்லுகிறார்;    அவருடைய    சாட்சியை    ஒருவனும்    ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.    {John    3:32}

 

அவருடைய    சாட்சியை    ஏற்றுக்கொள்ளுகிறவன்    தேவன்    சத்தியமுள்ளவரென்று    முத்திரைபோட்டு    நிச்சயப்படுத்துகிறான்.    {John    3:33}

 

தேவனால்    அனுப்பப்பட்டவர்    தேவனுடைய    வார்த்தைகளைப்    பேசுகிறார்;    தேவன்    அவருக்குத்    தமது    ஆவியை    அளவில்லாமல்    கொடுத்திருக்கிறார்.    {John    3:34}

 

பிதாவானவர்    குமாரனில்    அன்பாயிருந்து    எல்லாவற்றையும்    அவர்    கையில்    ஒப்புக்கொடுத்திருக்கிறார்.    {John    3:35}

 

குமாரனிடத்தில்    விசுவாசமாயிருக்கிறவன்    நித்தியஜீவனை    உடையவனாயிருக்கிறான்;    குமாரனை    விசுவாசியாதவனோ    ஜீவனைக்    காண்பதில்லை,    தேவனுடைய    கோபம்    அவன்மேல்    நிலைநிற்கும்    என்றான்.    {John    3:36}

 

யோவானைப்பார்க்கிலும்<John>    இயேசு<Jesus>    அநேகம்    பேரைச்    சீஷராக்கி    ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று    பரிசேயர்<Pharisees>    கேள்விப்பட்டதாகக்    கர்த்தர்    அறிந்தபோது,    {John    4:1}

 

யூதேயாவைவிட்டு<Judaea>    மறுபடியுங்    கலிலேயாவுக்குப்<Galilee>    போனார்.    {John    4:2}

 

இயேசு<Jesus>    தாமே    ஞானஸ்நானங்கொடுக்கவில்லை,    அவருடைய    சீஷர்கள்    கொடுத்தார்கள்.    {John    4:3}

 

அவர்    சமாரியா<Samaria>    நாட்டின்    வழியாய்ப்    போகவேண்டியதாயிருந்தபடியால்,    {John    4:4}

 

யாக்கோபு<Jacob>    தன்    குமாரனாகிய    யோசேப்புக்குக்<Joseph>    கொடுத்த    நிலத்துக்கு    அருகே    இருந்த    சமாரியாவிலுள்ள<Samaria>    சீகார்<Sychar>    என்னப்பட்ட    ஊருக்கு    வந்தார்.    {John    4:5}

 

அங்கே    யாக்கோபுடைய<Jacob>    கிணறு    இருந்தது;    இயேசு<Jesus>    பிரயாணத்தினால்    இளைப்படைந்தவராய்    அந்தக்    கிணற்றினருகே    உட்கார்ந்தார்;    அப்பொழுது    ஏறக்குறைய    ஆறாம்மணி    வேளையாயிருந்தது.    {John    4:6}

 

அவருடைய    சீஷர்கள்    போஜனபதார்த்தங்களைக்    கொள்ளும்படி    ஊருக்குள்ளே    போயிருந்தார்கள்.    {John    4:7}

 

அப்பொழுது    சமாரியா<Samaria>    நாட்டாளாகிய    ஒரு    ஸ்திரீ    தண்ணீர்    மொள்ள    வந்தாள்.    இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    தாகத்துக்குத்    தா    என்றார்.    {John    4:8}

 

யூதர்கள்<Jews>    சமாரியருடனே<Samaritans>    சம்பந்தங்கலவாதவர்களானபடியால்,    சமாரியா<Samaria>    ஸ்திரீ    அவரை    நோக்கி:    நீர்    யூதனாயிருக்க<Jew>,    சமாரியா<Samaria>    ஸ்திரீயாகிய    என்னிடத்தில்,    தாகத்துக்குத்தா    என்று    எப்படிக்    கேட்கலாம்    என்றாள்.    {John    4:9}

 

இயேசு<Jesus>    அவளுக்குப்    பிரதியுத்தரமாக:    நீ    தேவனுடைய    ஈவையும்,    தாகத்துக்குத்தா    என்று    உன்னிடத்தில்    கேட்கிறவர்    இன்னார்    என்பதையும்    அறிந்திருந்தாயானால்,    நீயே    அவரிடத்தில்    கேட்டிருப்பாய்,    அவர்    உனக்கு    ஜீவத்தண்ணீரைக்    கொடுத்திருப்பார்    என்றார்.    {John    4:10}

 

அதற்கு    அந்த    ஸ்திரீ:    ஆண்டவரே,    மொண்டுகொள்ள    உம்மிடத்தில்    பாத்திரமில்லையே,    கிணறும்    ஆழமாயிருக்கிறதே,    பின்னை    எங்கேயிருந்து    உமக்கு    ஜீவத்தண்ணீர்    உண்டாகும்.    {John    4:11}

 

இந்தக்    கிணற்றை    எங்களுக்குத்    தந்த    நம்முடைய    பிதாவாகிய    யாக்கோபைப்பார்க்கிலும்<Jacob>    நீர்    பெரியவரோ?    அவரும்    அவர்    பிள்ளைகளும்    அவர்    மிருகஜீவன்களும்    இதிலே    குடித்ததுண்டே    என்றாள்.    {John    4:12}

 

இயேசு<Jesus>    அவளுக்குப்    பிரதியுத்தரமாக:    இந்தத்    தண்ணீரைக்    குடிக்கிறவனுக்கு    மறுபடியும்    தாகமுண்டாகும்.    {John    4:13}

 

நான்    கொடுக்கும்    தண்ணீரைக்    குடிக்கிறவனுக்கோ    ஒருக்காலும்    தாகமுண்டாகாது;    நான்    அவனுக்குக்    கொடுக்கும்    தண்ணீர்    அவனுக்குள்ளே    நித்திய    ஜீவகாலமாய்    ஊறுகிற    நீரூற்றாயிருக்கும்    என்றார்.    {John    4:14}

 

அந்த    ஸ்திரீ    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    எனக்குத்    தாகமுண்டாகாமலும்,    நான்    இங்கே    மொண்டுகொள்ள    வராமலுமிருக்கும்படி    அந்தத்    தண்ணீரை    எனக்குத்    தரவேண்டும்    என்றாள்.    {John    4:15}

 

இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    நீ    போய்,    உன்    புருஷனை    இங்கே    அழைத்துக்    கொண்டுவா    என்றார்.    {John    4:16}

 

அதற்கு    அந்த    ஸ்திரீ:    எனக்குப்    புருஷன்    இல்லை    என்றாள்.    இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    எனக்குப்    புருஷன்    இல்லையென்று    நீ    சொன்னது    சரிதான்.    {John    4:17}

 

எப்படியெனில்,    ஐந்து    புருஷர்    உனக்கிருந்தார்கள்,    இப்பொழுது    உனக்கிருக்கிறவன்    உனக்குப்    புருஷனல்ல,    இதை    உள்ளபடி    சொன்னாய்    என்றார்.    {John    4:18}

 

அப்பொழுது    அந்த    ஸ்திரீ    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    நீர்    தீர்க்கதரிசி    என்று    காண்கிறேன்.    {John    4:19}

 

எங்கள்    பிதாக்கள்    இந்த    மலையிலே    தொழுதுகொண்டுவந்தார்கள்;    நீங்கள்    எருசலேமிலிருக்கிற<Jerusalem>    ஸ்தலத்திலே    தொழுதுகொள்ளவேண்டும்    என்கிறீர்களே    என்றாள்.    {John    4:20}

 

அதற்கு    இயேசு<Jesus>:    ஸ்திரீயே,    நான்    சொல்லுகிறதை    நம்பு,    நீங்கள்    இந்த    மலையிலும்    எருசலேமிலும்<Jerusalem>    மாத்திரமல்ல,    எங்கும்    பிதாவைத்    தொழுதுகொள்ளுங்காலம்    வருகிறது.    {John    4:21}

 

நீங்கள்    அறியாததைத்    தொழுதுகொள்ளுகிறீர்கள்;    நாங்கள்    அறிந்திருக்கிறதைத்    தொழுதுகொள்ளுகிறோம்;    ஏனென்றால்    இரட்சிப்பு    யூதர்கள்<Jews>    வழியாய்    வருகிறது.    {John    4:22}

 

உண்மையாய்த்    தொழுதுகொள்ளுகிறவர்கள்    பிதாவை    ஆவியோடும்    உண்மையோடும்    தொழுதுகொள்ளுங்காலம்    வரும்,    அது    இப்பொழுதே    வந்திருக்கிறது;    தம்மைத்    தொழுதுகொள்ளுகிறவர்கள்    இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி    பிதாவானவர்    விரும்புகிறார்.    {John    4:23}

 

தேவன்    ஆவியாயிருக்கிறார்,    அவரைத்    தொழுதுகொள்ளுகிறவர்கள்    ஆவியோடும்    உண்மையோடும்    அவரைத்    தொழுதுகொள்ளவேண்டும்    என்றார்.    {John    4:24}

 

அந்த    ஸ்திரீ    அவரை    நோக்கி:    கிறிஸ்து<Christ>    என்னப்படுகிற    மேசியா<Messias>    வருகிறார்    என்று    அறிவேன்,    அவர்    வரும்போது    எல்லாவற்றையும்    நமக்கு    அறிவிப்பார்    என்றாள்.    {John    4:25}

 

அதற்கு    இயேசு<Jesus>:    உன்னுடனே    பேசுகிற    நானே    அவர்    என்றார்.    {John    4:26}

 

அத்தருணத்தில்    அவருடைய    சீஷர்கள்    வந்து,    அவர்    ஸ்திரீயுடனே    பேசுகிறதைப்பற்றி    ஆச்சரியப்பட்டார்கள்.    ஆகிலும்    என்ன    தேடுகிறீரென்றாவது,    ஏன்    அவளுடனே    பேசுகிறீரென்றாவது,    ஒருவனும்    கேட்கவில்லை.    {John    4:27}

 

அப்பொழுது    அந்த    ஸ்திரீ,    தன்    குடத்தை    வைத்துவிட்டு,    ஊருக்குள்ளே    போய்,    ஜனங்களை    நோக்கி:    {John    4:28}

 

நான்    செய்த    எல்லாவற்றையும்    ஒரு    மனுஷன்    எனக்குச்    சொன்னார்;    அவரை    வந்து    பாருங்கள்;    அவர்    கிறிஸ்துதானோ<Christ>    என்றாள்.    {John    4:29}

 

அப்பொழுது    அவர்கள்    ஊரிலிருந்து    புறப்பட்டு    அவரிடத்தில்    வந்தார்கள்.    {John    4:30}

 

இப்படி    நடக்கையில்    சீஷர்கள்    அவரை    நோக்கி:    ரபீ<Rabbi//Master>,    போஜனம்பண்ணும்    என்று    வேண்டிக்கொண்டார்கள்.    {John    4:31}

 

அதற்கு    அவர்:    நான்    புசிப்பதற்கு    நீங்கள்    அறியாத    ஒரு    போஜனம்    எனக்கு    உண்டு    என்றார்.    {John    4:32}

 

அப்பொழுது    சீஷர்கள்    ஒருவரையொருவர்    பார்த்து:    யாராவது    அவருக்குப்    போஜனம்    கொண்டுவந்திருப்பானோ    என்றார்கள்.    {John    4:33}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நான்    என்னை    அனுப்பினவருடைய    சித்தத்தின்படி    செய்து    அவருடைய    கிரியையை    முடிப்பதே    என்னுடைய    போஜனமாயிருக்கிறது.    {John    4:34}

 

அறுப்புக்காலம்    வருகிறதற்கு    இன்னும்    நாலுமாதம்    செல்லும்    என்று    நீங்கள்    சொல்லுகிறதில்லையா?    இதோ,    வயல்    நிலங்கள்    இப்பொழுதே    அறுப்புக்கு    விளைந்திருக்கிறதென்று    உங்கள்    கண்களை    ஏறெடுத்துப்பாருங்கள்    என்று    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    4:35}

 

விதைக்கிறவனும்    அறுக்கிறவனுமாகிய    இருவரும்    ஒருமித்துச்    சந்தோஷப்படத்தக்கதாக,    அறுக்கிறவன்    கூலியை    வாங்கி,    நித்திய    ஜீவனுக்காகப்    பலனைச்    சேர்த்துக்கொள்ளுகிறான்.    {John    4:36}

 

விதைக்கிறவன்    ஒருவன்    அறுக்கிறவன்    ஒருவன்    என்கிற    மெய்யான    வழக்கச்சொல்    இதினாலே    விளங்குகிறது.    {John    4:37}

 

நீங்கள்    பிரயாசப்பட்டுப்    பயிரிடாததை    அறுக்க    நான்    உங்களை    அனுப்பினேன்,    மற்றவர்கள்    பிரயாசப்பட்டார்கள்,    அவர்களுடைய    பிரயாசத்தின்    பலனை    நீங்கள்    பெற்றீர்கள்    என்றார்.    {John    4:38}

 

நான்    செய்த    எல்லாவற்றையும்    எனக்குச்    சொன்னார்    என்று    சாட்சி    சொன்ன    அந்த    ஸ்திரீயினுடைய    வார்த்தையினிமித்தம்    அந்த    ஊரிலுள்ள    சமாரியரில்<Samaritans>    அநேகர்    அவர்மேல்    விசுவாசமுள்ளவர்களானார்கள்.    {John    4:39}

 

சமாரியர்<Samaritans>    அவரிடத்தில்    வந்து,    தங்களிடத்தில்    தங்கவேண்டுமென்று    அவரை    வேண்டிக்கொண்டார்கள்;    அவர்    இரண்டுநாள்    அங்கே    தங்கினார்.    {John    4:40}

 

அப்பொழுது    அவருடைய    உபதேசத்தினிமித்தம்    இன்னும்    அநேகம்பேர்    விசுவாசித்து,    {John    4:41}

 

அந்த    ஸ்திரீயை    நோக்கி:    உன்    சொல்லினிமித்தம்    அல்ல,    அவருடைய    உபதேசத்தை    நாங்களே    கேட்டு,    அவர்    மெய்யாய்க்    கிறிஸ்துவாகிய<Christ>    உலகரட்சகர்    என்று    அறிந்து    விசுவாசிக்கிறோம்    என்றார்கள்.    {John    4:42}

 

இரண்டுநாளைக்குப்பின்பு    அவர்    அவ்விடம்விட்டுப்    புறப்பட்டு,    கலிலேயாவுக்குப்<Galilee>    போனார்.    {John    4:43}

 

ஒரு    தீர்க்கதரிசிக்குத்    தன்    சொந்த    ஊரிலே    கனமில்லையென்று    இயேசு<Jesus>    தாமே    சொல்லியிருந்தார்.    {John    4:44}

 

அவர்    கலிலேயாவில்<Galilee>    வந்தபோது,    எருசலேமில்<Jerusalem>    பண்டிகையிலே    அவர்    செய்த    எல்லாவற்றையும்    பார்த்திருந்த    கலிலேயர்<Galilaeans>    அவரை    ஏற்றுக்கொண்டார்கள்;    அவர்களும்    பண்டிகைக்குப்    போயிருந்தார்கள்.    {John    4:45}

 

பின்பு,    இயேசு<Jesus>    தாம்    தண்ணீரைத்    திராட்சரசமாக்கின    கலிலேயாவிலுள்ள<Galilee>    கானா<Cana>    ஊருக்கு    மறுபடியும்    வந்தார்;    அப்பொழுது    கப்பர்நகூமிலே<Capernaum>    ராஜாவின்    மனுஷரில்    ஒருவனுடைய    குமாரன்    வியாதியாயிருந்தான்.    {John    4:46}

 

இயேசு<Jesus>    யூதேயாவிலிருந்து<Judaea>    கலிலேயாவுக்கு<Galilee>    வந்தாரென்று    அந்த    மனுஷன்    கேள்விப்பட்டபோது,    அவரிடத்திற்குப்    போய்,    தன்    மகன்    மரண    அவஸ்தையாயிருந்தபடியினாலே,    அவனைக்    குணமாக்கும்படிக்கு    வரவேண்டுமென்று    அவரை    வேண்டிக்கொண்டான்.    {John    4:47}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    நீங்கள்    அடையாளங்களையும்    அற்புதங்களையும்    காணாவிட்டால்    விசுவாசிக்கமாட்டீர்கள்    என்றார்.    {John    4:48}

 

அதற்கு    ராஜாவின்    மனுஷன்:    ஆண்டவரே,    என்    பிள்ளை    சாகிறதற்குமுன்னே    வரவேண்டும்    என்றான்.    {John    4:49}

 

இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    நீ    போகலாம்,    உன்    குமாரன்    பிழைத்திருக்கிறான்    என்றார்.    அந்த    மனுஷன்,    இயேசு<Jesus>    சொன்ன    வார்த்தையை    நம்பிப்    போனான்.    {John    4:50}

 

அவன்    போகையில்,    அவனுடைய    ஊழியக்காரர்    அவனுக்கு    எதிர்கொண்டுவந்து,    உம்முடைய    குமாரன்    பிழைத்திருக்கிறான்    என்று    அறிவித்தார்கள்.    {John    4:51}

 

அப்பொழுது:    எந்த    மணிநேரத்தில்    அவனுக்குக்    குணமுண்டாயிற்று    என்று    அவர்களிடத்தில்    விசாரித்தான்.    அவர்கள்:    நேற்று    ஏழாமணிநேரத்தில்    ஜுரம்    அவனை    விட்டது    என்றார்கள்.    {John    4:52}

 

உன்    குமாரன்    பிழைத்திருக்கிறான்    என்று    இயேசு<Jesus>    தன்னுடனே    சொன்ன    மணிநேரம்    அதுவே    என்று    தகப்பன்    அறிந்து,    அவனும்    அவன்    வீட்டாரனைவரும்    விசுவாசித்தார்கள்.    {John    4:53}

 

இயேசு<Jesus>    யூதேயாவிலிருந்து<Judaea>    கலிலேயாவுக்குத்<Galilee>    திரும்பிவந்தபின்பு,    இது    அவர்    செய்த    இரண்டாம்    அற்புதம்.    {John    4:54}

 

இவைகளுக்குப்பின்பு    யூதருடைய<Jews>    பண்டிகை    ஒன்று    வந்தது;    அப்பொழுது    இயேசு<Jesus>    எருசலேமுக்குப்<Jerusalem>    போனார்.    {John    5:1}

 

எபிரெய<Hebrew>    பாஷையிலே    பெதஸ்தா<Bethesda>    என்னப்பட்ட    ஒரு    குளம்    எருசலேமில்<Jerusalem>    ஆட்டுவாசலினருகே    இருக்கிறது,    அதற்கு    ஐந்து    மண்டபங்களுண்டு.    {John    5:2}

 

அவைகளிலே    குருடர்,    சப்பாணிகள்,    சூம்பின    உறுப்புடையவர்கள்    முதலான    வியாதிக்காரர்    அநேகர்    படுத்திருந்து,    தண்ணீர்    எப்பொழுது    கலங்கும்    என்று    காத்துக்கொண்டிருப்பார்கள்.    {John    5:3}

 

ஏனெனில்    சில    சமயங்களிலே    தேவதூதன்    ஒருவன்    அந்தக்    குளத்தில்    இறங்கி,    தண்ணீரைக்    கலக்குவான்;    தண்ணீர்    கலங்கினபின்பு    யார்    முந்தி    அதில்    இறங்குவானோ    அவன்    எப்பேர்ப்பட்ட    வியாதிஸ்தனாயிருந்தாலும்    சொஸ்தமாவான்.    {John    5:4}

 

முப்பத்தெட்டு    வருஷம்    வியாதிகொண்டிருந்த    ஒரு    மனுஷன்    அங்கே    இருந்தான்.    {John    5:5}

 

படுத்திருந்த    அவனை    இயேசு<Jesus>    கண்டு,    அவன்    வெகுகாலமாய்    வியாதிஸ்தனென்று    அறிந்து,    அவனை    நோக்கி:    சொஸ்தமாகவேண்டுமென்று    விரும்புகிறாயா    என்று    கேட்டார்.    {John    5:6}

 

அதற்கு    வியாதிஸ்தன்:    ஆண்டவரே,    தண்ணீர்    கலக்கப்படும்போது    என்னைக்    குளத்தில்    கொண்டுபோய்    விடுகிறதற்கு    ஒருவருமில்லை,    நான்    போகிறதற்குள்ளே    வேறொருவன்    எனக்கு    முந்தி    இறங்கிவிடுகிறான்    என்றான்.    {John    5:7}

 

இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    எழுந்திரு,    உன்    படுக்கையை    எடுத்துக்கொண்டு    நட    என்றார்.    {John    5:8}

 

உடனே    அந்த    மனுஷன்    சொஸ்தமாகி,    தன்    படுக்கையை    எடுத்துக்கொண்டு,    நடந்துபோனான்.    அந்த    நாள்    ஓய்வுநாளாயிருந்தது.    {John    5:9}

 

ஆதலால்    யூதர்கள்<Jews>    குணமாக்கப்பட்டவனை    நோக்கி:    இது    ஓய்வுநாளாயிருக்கிறதே,    படுக்கையை    எடுத்துக்கொண்டு    போகிறது    உனக்கு    நியாயமல்ல    என்றார்கள்.    {John    5:10}

 

அவன்    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    என்னைச்    சொஸ்தமாக்கினவர்,    உன்    படுக்கையை    எடுத்துக்கொண்டு    நடவென்று    எனக்குச்    சொன்னார்    என்றான்.    {John    5:11}

 

அதற்கு    அவர்கள்:    உன்    படுக்கையை    எடுத்துக்கொண்டு    நடவென்று    உன்னுடனே    சொன்ன    மனுஷன்    யார்    என்று    அவனிடத்தில்    கேட்டார்கள்.    {John    5:12}

 

சொஸ்தமாக்கப்பட்டவன்    அவர்    இன்னாரென்று    அறியவில்லை;    அவ்விடத்தில்    ஜனங்கள்    கூட்டமாயிருந்தபடியினால்    இயேசு<Jesus>    விலகியிருந்தார்.    {John    5:13}

 

அதற்குப்பின்பு    இயேசு<Jesus>    அவனைத்    தேவாலயத்திலே    கண்டு:    இதோ,    நீ    சொஸ்தமானாய்,    அதிக    கேடானதொன்றும்    உனக்கு    வராதபடி    இனிப்    பாவஞ்செய்யாதே    என்றார்.    {John    5:14}

 

அந்த    மனுஷன்    போய்,    தன்னைச்    சொஸ்தமாக்கினவர்    இயேசு<Jesus>    என்று    யூதர்களுக்கு<Jews>    அறிவித்தான்.    {John    5:15}

 

இயேசு<Jesus>    இவைகளை    ஓய்வுநாளில்    செய்தபடியால்,    யூதர்கள்<Jews>    அவரைத்    துன்பப்படுத்தி,    அவரைக்    கொலைசெய்ய    வகைதேடினார்கள்.    {John    5:16}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    என்    பிதா    இதுவரைக்கும்    கிரியை    செய்து    வருகிறார்,    நானும்    கிரியை    செய்து    வருகிறேன்    என்றார்.    {John    5:17}

 

அவர்    ஓய்வுநாள்    கட்டளையை    மீறினதுமல்லாமல்,    தேவனைத்    தம்முடைய    சொந்தப்    பிதா    என்றுஞ்சொல்லித்    தம்மைத்    தேவனுக்குச்    சமமாக்கினபடியினாலே,    யூதர்கள்<Jews>    அவரைக்    கொலைசெய்யும்படி    அதிகமாய்    வகைதேடினார்கள்.    {John    5:18}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்:    பிதாவானவர்    செய்யக்    குமாரன்    காண்கிறதெதுவோ,    அதையேயன்றி,    வேறொன்றையும்    தாமாய்ச்    செய்யமாட்டார்;    அவர்    எவைகளைச்    செய்கிறாரோ,    அவைகளைக்    குமாரனும்    அந்தப்படியே    செய்கிறார்.    {John    5:19}

 

பிதாவானவர்    குமாரனிடத்தில்    அன்பாயிருந்து,    தாம்    செய்கிறவைகளையெல்லாம்    அவருக்குக்    காண்பிக்கிறார்;    நீங்கள்    ஆச்சரியப்படத்தக்கதாக    இவைகளைப்    பார்க்கிலும்    பெரிதான    கிரியைகளையும்    அவருக்குக்    காண்பிப்பார்.    {John    5:20}

 

பிதாவானவர்    மரித்தோரை    எழுப்பி    உயிர்ப்பிக்கிறதுபோல,    குமாரனும்    தமக்குச்    சித்தமானவர்களை    உயிர்ப்பிக்கிறார்.    {John    5:21}

 

அன்றியும்    பிதாவைக்    கனம்பண்ணுகிறதுபோல    எல்லாரும்    குமாரனையும்    கனம்பண்ணும்படிக்கு,    பிதாவானவர்    தாமே    ஒருவருக்கும்    நியாயத்தீர்ப்புச்    செய்யாமல்,    நியாயத்தீர்ப்புச்    செய்யும்    அதிகாரம்    முழுவதையும்    குமாரனுக்கு    ஒப்புக்கொடுத்திருக்கிறார்.    {John    5:22}

 

குமாரனைக்    கனம்பண்ணாதவன்    அவரை    அனுப்பின    பிதாவையும்    கனம்    பண்ணாதவனாயிருக்கிறான்.    {John    5:23}

 

என்    வசனத்தைக்    கேட்டு,    என்னை    அனுப்பினவரை    விசுவாசிக்கிறவனுக்கு    நித்தியஜீவன்    உண்டு;    அவன்    ஆக்கினைத்    தீர்ப்புக்குட்படாமல்,    மரணத்தைவிட்டு    நீங்கி,    ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    5:24}

 

மரித்தோர்    தேவகுமாரனுடைய    சத்தத்தைக்    கேட்குங்    காலம்    வரும்,    அது    இப்பொழுதே    வந்திருக்கிறது;    அதைக்    கேட்கிறவர்கள்    பிழைப்பார்கள்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    5:25}

 

ஏனெனில்,    பிதாவானவர்    தம்மில்    தாமே    ஜீவனுடையவராயிருக்கிறது    போல,    குமாரனும்    தம்மில்தாமே    ஜீவனுடையவராயிருக்கும்படி    அருள்செய்திருக்கிறார்.    {John    5:26}

 

அவர்    மனுஷகுமாரனாயிருக்கிறபடியால்,    நியாயத்தீர்ப்புச்    செய்யும்படிக்கு    அதிகாரத்தையும்    அவருக்குக்    கொடுத்திருக்கிறார்.    {John    5:27}

 

இதைக்குறித்து    நீங்கள்    ஆச்சரியப்படவேண்டாம்;    ஏனென்றால்    பிரேதக்குழிகளிலுள்ள    அனைவரும்    அவருடைய    சத்தத்தைக்    கேட்குங்    காலம்    வரும்;    {John    5:28}

 

அப்பொழுது,    நன்மைசெய்தவர்கள்    ஜீவனை    அடையும்படி    எழுந்திருக்கிறவர்களாகவும்,    தீமைசெய்தவர்கள்    ஆக்கினையை    அடையும்படி    எழுந்திருக்கிறவர்களாகவும்    புறப்படுவார்கள்.    {John    5:29}

 

நான்    என்    சுயமாய்    ஒன்றுஞ்    செய்கிறதில்லை;    நான்    கேட்கிறபடியே    நியாயந்தீர்க்கிறேன்;    எனக்குச்    சித்தமானதை    நான்    தேடாமல்,    என்னை    அனுப்பின    பிதாவுக்குச்    சித்தமானதையே    நான்    தேடுகிறபடியால்    என்    தீர்ப்பு    நீதியாயிருக்கிறது.    {John    5:30}

 

என்னைக்குறித்து    நானே    சாட்சிகொடுத்தால்    என்    சாட்சி    மெய்யாயிராது.    {John    5:31}

 

என்னைக்குறித்துச்    சாட்சிகொடுக்கிறவர்    வேறொருவர்    இருக்கிறார்,    அவர்    என்னைக்குறித்துக்    கொடுக்கிற    சாட்சி    மெய்யான    சாட்சியென்று    அறிந்திருக்கிறேன்.    {John    5:32}

 

நீங்கள்    யோவானிடத்தில்<John>    ஆளனுப்பி    விசாரித்தீர்கள்,    அவன்    சத்தியத்திற்குச்    சாட்சிகொடுத்தான்.    {John    5:33}

 

நான்    ஏற்றுக்கொள்ளுகிற    சாட்சி    மனுஷருடைய    சாட்சியல்ல,    நீங்கள்    இரட்சிக்கப்படுவதற்காகவே    இவைகளைச்    சொல்லுகிறேன்.    {John    5:34}

 

அவன்    எரிந்து    பிரகாசிக்கிற    விளக்காயிருந்தான்;    நீங்களும்    சிலகாலம்    அவன்    வெளிச்சத்திலே    களிகூர    மனதாயிருந்தீர்கள்.    {John    5:35}

 

யோவானுடைய<John>    சாட்சியைப்பார்க்கிலும்    மேன்மையான    சாட்சி    எனக்கு    உண்டு;    அதென்னவெனில்,    நான்    நிறைவேற்றும்படிக்குப்    பிதாவானவர்    எனக்குக்    கற்பித்ததும்    நான்    செய்துவருகிறதுமான    கிரியைகளே    பிதா    என்னை    அனுப்பினார்    என்று    என்னைக்குறித்துச்    சாட்சி    கொடுக்கிறது.    {John    5:36}

 

என்னை    அனுப்பின    பிதா    தாமே    என்னைக்குறித்துச்    சாட்சி    கொடுத்திருக்கிறார்;    நீங்கள்    ஒருக்காலும்    அவர்    சத்தத்தைக்    கேட்டதுமில்லை,    அவர்    ரூபத்தைக்    கண்டதுமில்லை.    {John    5:37}

 

அவர்    அனுப்பினவரை    நீங்கள்    விசுவாசியாதபடியால்    அவருடைய    வசனம்    உங்களில்    தரித்திருக்கிறதுமில்லை.    {John    5:38}

 

வேதவாக்கியங்களை    ஆராய்ந்து    பாருங்கள்;    அவைகளால்    உங்களுக்கு    நித்தியஜீவன்    உண்டென்று    எண்ணுகிறீர்களே,    என்னைக்குறித்துச்    சாட்சிகொடுக்கிறவைகளும்    அவைகளே.    {John    5:39}

 

அப்படியிருந்தும்    உங்களுக்கு    ஜீவன்    உண்டாகும்படி    என்னிடத்தில்    வர    உங்களுக்கு    மனதில்லை.    {John    5:40}

 

நான்    மனுஷரால்    மகிமையை    ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.    {John    5:41}

 

உங்களில்    தேவ    அன்பு    இல்லையென்று    உங்களை    அறிந்திருக்கிறேன்.    {John    5:42}

 

நான்    என்    பிதாவின்    நாமத்தினாலே    வந்திருந்தும்    நீங்கள்    என்னை    ஏற்றுக்கொள்ளவில்லை,    வேறொருவன்    தன்    சுயநாமத்தினாலே    வந்தால்    அவனை    ஏற்றுக்கொள்வீர்கள்.    {John    5:43}

 

தேவனாலேமாத்திரம்    வருகிற    மகிமையைத்    தேடாமல்,    ஒருவராலொருவர்    மகிமையை    ஏற்றுக்கொள்ளுகிற    நீங்கள்    எப்படி    விசுவாசிப்பீர்கள்?    {John    5:44}

 

பிதாவினிடத்தில்    நான்    உங்கள்மேல்    குற்றஞ்சாட்டுவேன்    என்று    நினையாதிருங்கள்;    நீங்கள்    நம்புகிற    மோசேயே<Moses>    உங்கள்மேல்    குற்றஞ்சாட்டுவான்.    {John    5:45}

 

நீங்கள்    மோசேயை<Moses>    விசுவாசித்தீர்களானால்,    என்னையும்    விசுவாசிப்பீர்கள்;    அவன்    என்னைக்குறித்து    எழுதியிருக்கிறானே.    {John    5:46}

 

அவன்    எழுதின    வாக்கியங்களை    நீங்கள்    விசுவாசியாமலிருந்தால்    நான்    சொல்லுகிற    வசனங்களை    எப்படி    விசுவாசிப்பீர்கள்    என்றார்.    {John    5:47}

 

இவைகளுக்குப்பின்பு    இயேசு<Jesus>    திபேரியாக்கடல்<Tiberias>    என்னப்பட்ட    கலிலேயாக்<Galilee>    கடலின்    அக்கரைக்குப்    போனார்.    {John    6:1}

 

அவர்    வியாதிக்காரரிடத்தில்    செய்த    அற்புதங்களைத்    திரளான    ஜனங்கள்    கண்டபடியால்    அவருக்குப்    பின்சென்றார்கள்.    {John    6:2}

 

இயேசு<Jesus>    மலையின்மேல்    ஏறி,    அங்கே    தம்முடைய    சீஷருடனேகூட    உட்கார்ந்தார்.    {John    6:3}

 

அப்பொழுது    யூதருடைய<Jews>    பண்டிகையாகிய    பஸ்கா    சமீபமாயிருந்தது.    {John    6:4}

 

இயேசு<Jesus>    தம்முடைய    கண்களை    ஏறெடுத்து,    திரளான    ஜனங்கள்    தம்மிடத்தில்    வருகிறதைக்    கண்டு,    பிலிப்புவை<Philip>    நோக்கி:    இவர்கள்    சாப்பிடத்தக்கதாக    அப்பங்களை    எங்கே    கொள்ளலாம்    என்று    கேட்டார்.    {John    6:5}

 

தாம்    செய்யப்போகிறதை    அறிந்திருந்தும்,    அவனைச்    சோதிக்கும்படி    இப்படிக்    கேட்டார்.    {John    6:6}

 

பிலிப்பு<Philip>    அவருக்குப்    பிரதியுத்தரமாக:    இவர்களில்    ஒவ்வொருவனும்    கொஞ்சங்    கொஞ்சம்    எடுத்துக்கொண்டாலும்,    இருநூறு    பணத்து    அப்பங்களும்    இவர்களுக்குப்    போதாதே    என்றான்.    {John    6:7}

 

அப்பொழுது    அவருடைய    சீஷரிலொருவனும்,    சீமோன்    பேதுருவின்<Simon    Peter>    சகோதரனுமாகிய    அந்திரேயா<Andrew>    அவரை    நோக்கி:    {John    6:8}

 

இங்கே    ஒரு    பையன்    இருக்கிறான்,    அவன்    கையில்    ஐந்து    வாற்கோதுமை    அப்பங்களும்    இரண்டு    மீன்களும்    உண்டு,    ஆனாலும்    அவைகள்    இத்தனை    ஜனங்களுக்கு    எம்மாத்திரம்    என்றான்.    {John    6:9}

 

இயேசு<Jesus>:    ஜனங்களை    உட்காரவையுங்கள்    என்றார்.    அந்த    இடம்    மிகுந்த    புல்லுள்ளதாயிருந்தது.    பந்தியிருந்த    புருஷர்கள்    ஏறக்குறைய    ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.    {John    6:10}

 

இயேசு<Jesus>    அந்த    அப்பங்களை    எடுத்து,    ஸ்தோத்திரம்பண்ணி,    சீஷர்களிடத்தில்    கொடுத்தார்;    சீஷர்கள்    பந்தியிருந்தவர்களுக்குக்    கொடுத்தார்கள்;    அப்படியே    மீன்களையும்    அவர்    எடுத்து    அவர்களுக்கு    வேண்டியமட்டும்    கொடுத்தார்.    {John    6:11}

 

அவர்கள்    திருப்தியடைந்தபின்பு,    அவர்    தம்முடைய    சீஷர்களை    நோக்கி:    ஒன்றும்    சேதமாய்ப்    போகாதபடிக்கு    மீதியான    துணிக்கைகளைச்    சேர்த்துவையுங்கள்    என்றார்.    {John    6:12}

 

அந்தப்படியே    அவர்கள்    சேர்த்து,    வாற்கோதுமை    அப்பங்கள்    ஐந்தில்    அவர்கள்    சாப்பிட்டு    மீதியான    துணிக்கைகளினாலே    பன்னிரண்டு    கூடைகளை    நிரப்பினார்கள்.    {John    6:13}

 

இயேசு<Jesus>    செய்த    அற்புதத்தை    அந்த    மனுஷர்    கண்டு:    மெய்யாகவே    இவர்    உலகத்தில்    வருகிறவரான    தீர்க்கதரிசி    என்றார்கள்.    {John    6:14}

 

ஆதலால்    அவர்கள்    வந்து,    தம்மை    ராஜாவாக்கும்படிப்    பிடித்துக்கொண்டுபோக    மனதாயிருக்கிறார்களென்று    இயேசு<Jesus>    அறிந்து,    மறுபடியும்    விலகி,    தனியே    மலையின்மேல்    ஏறினார்.    {John    6:15}

 

சாயங்காலமானபோது    அவருடைய    சீஷர்கள்    கடற்கரைக்குப்    போய்,    {John    6:16}

 

படவில்    ஏறி,    கடலின்    அக்கரையிலுள்ள    கப்பர்நகூமுக்கு<Capernaum>    நேராய்ப்போனார்கள்;    அப்பொழுது    இருட்டாயிருந்தது,    இயேசுவும்<Jesus>    அவர்களிடத்தில்    வராதிருந்தார்.    {John    6:17}

 

பெருங்காற்று    அடித்தபடியினாலே    கடல்    கொந்தளித்தது.    {John    6:18}

 

அவர்கள்    ஏறக்குறைய    மூன்று    நாலு    மைல்தூரம்    தண்டுவலித்துப்    போனபொழுது,    இயேசு<Jesus>    கடலின்மேல்    நடந்து,    படவுக்குச்    சமீபமாய்    வருகிறதைக்    கண்டு    பயந்தார்கள்.    {John    6:19}

 

அவர்களை    அவர்    நோக்கி:    நான்தான்,    பயப்படாதிருங்கள்    என்றார்.    {John    6:20}

 

அப்பொழுது    அவரைப்    படவில்    ஏற்றிக்கொள்ள    மனதாயிருந்தார்கள்;    உடனே    படவு    அவர்கள்    போகிற    கரையைப்    பிடித்தது.    {John    6:21}

 

மறுநாளில்    கடலின்    அக்கரையிலே    நின்ற    ஜனங்கள்    அவருடைய    சீஷர்    ஏறின    அந்த    ஒரே    படவுதவிர    அங்கே    வேறொரு    படவும்    இருந்ததில்லையென்றும்,    இயேசு<Jesus>    தம்முடைய    சீஷருடனேகூடப்    படவில்    ஏறாமல்    அவருடைய    சீஷர்மாத்திரம்    போனார்களென்றும்    அறிந்தார்கள்.    {John    6:22}

 

கர்த்தர்    ஸ்தோத்திரஞ்செய்தபின்பு    அவர்கள்    அப்பம்    சாப்பிட்ட    இடத்துக்குச்    சமீபமாய்த்    திபேரியாவிலிருந்து<Tiberias>    வேறே    படவுகள்    வந்தது.    {John    6:23}

 

அப்பொழுது    இயேசுவும்<Jesus>    அவருடைய    சீஷரும்    அங்கே    இல்லாததை    ஜனங்கள்    கண்டு,    உடனே    அந்தப்    படவுகளில்    ஏறி,    இயேசுவைத்<Jesus>    தேடிக்கொண்டு,    கப்பர்நகூமுக்கு<Capernaum>    வந்தார்கள்.    {John    6:24}

 

கடலின்    அக்கரையிலே    அவர்கள்    அவரைக்    கண்டபோது:    ரபீ<Rabbi>,    நீர்    எப்பொழுது    இவ்விடம்    வந்தீர்    என்று    கேட்டார்கள்.    {John    6:25}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    நீங்கள்    அற்புதங்களைக்    கண்டதினால்    அல்ல,    நீங்கள்    அப்பம்    புசித்துத்    திருப்தியானதினாலேயே    என்னைத்    தேடுகிறீர்கள்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    6:26}

 

அழிந்துபோகிற    போஜனத்திற்காக    அல்ல,    நித்தியஜீவன்வரைக்கும்    நிலைநிற்கிற    போஜனத்திற்காகவே    கிரியை    நடப்பியுங்கள்;    அதை    மனுஷகுமாரன்    உங்களுக்குக்    கொடுப்பார்;    அவரைப்    பிதாவாகிய    தேவன்    முத்திரித்திருக்கிறார்    என்றார்.    {John    6:27}

 

அப்பொழுது    அவர்கள்    அவரை    நோக்கி:    தேவனுக்கேற்ற    கிரியைகளை    நடப்பிக்கும்படி    நாங்கள்    என்ன    செய்யவேண்டும்    என்றார்கள்.    {John    6:28}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    அவர்    அனுப்பினவரை    நீங்கள்    விசுவாசிப்பதே    தேவனுக்கேற்ற    கிரியையாயிருக்கிறது    என்றார்.    {John    6:29}

 

அதற்கு    அவர்கள்:    அப்படியானால்    உம்மை    விசுவாசிக்கும்படிக்கு    நாங்கள்    காணத்தக்கதாக    நீர்    என்ன    அடையாளத்தைக்    காண்பிக்கிறீர்?    என்னத்தை    நடப்பிக்கிறீர்?    {John    6:30}

 

வானத்திலிருந்து    அவர்களுக்கு    அப்பத்தைப்    புசிக்கக்கொடுத்தார்    என்று    எழுதியிருக்கிறபடி,    நம்முடைய    பிதாக்கள்    வனாந்தரத்தில்    மன்னாவைப்    புசித்தார்களே    என்றார்கள்.    {John    6:31}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    வானத்திலிருந்து    வந்த    அப்பத்தை    மோசே<Moses>    உங்களுக்குக்    கொடுக்கவில்லை;    என்    பிதாவோ    வானத்திலிருந்து    வந்த    மெய்யான    அப்பத்தை    உங்களுக்குக்    கொடுக்கிறார்    என்று,    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    6:32}

 

வானத்திலிருந்திறங்கி,    உலகத்துக்கு    ஜீவனைக்    கொடுக்கிற    அப்பமே    தேவன்    அருளிய    அப்பம்    என்றார்.    {John    6:33}

 

அப்பொழுது    அவர்கள்    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    இந்த    அப்பத்தை    எப்பொழுதும்    எங்களுக்குத்    தரவேண்டும்    என்றார்கள்.    {John    6:34}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    ஜீவ    அப்பம்    நானே,    என்னிடத்தில்    வருகிறவன்    ஒருக்காலும்    பசியடையான்,    என்னிடத்தில்    விசுவாசமாயிருக்கிறவன்    ஒருக்காலும்    தாகமடையான்.    {John    6:35}

 

நீங்கள்    என்னைக்    கண்டிருந்தும்    விசுவாசியாமலிருக்கிறீர்கள்    என்று    உங்களுக்குச்    சொன்னேன்.    {John    6:36}

 

பிதாவானவர்    எனக்குக்    கொடுக்கிற    யாவும்    என்னிடத்தில்    வரும்;    என்னிடத்தில்    வருகிறவனை    நான்    புறம்பே    தள்ளுவதில்லை.    {John    6:37}

 

என்    சித்தத்தின்படியல்ல,    என்னை    அனுப்பினவருடைய    சித்தத்தின்படி    செய்யவே    நான்    வானத்திலிருந்திறங்கி    வந்தேன்.    {John    6:38}

 

அவர்    எனக்குத்    தந்தவைகளில்    ஒன்றையும்    நான்    இழந்துபோகாமல்,    கடைசி    நாளில்    அவைகளை    எழுப்புவதே    என்னை    அனுப்பின    பிதாவின்    சித்தமாயிருக்கிறது.    {John    6:39}

 

குமாரனைக்    கண்டு,    அவரிடத்தில்    விசுவாசமாயிருக்கிறவன்    எவனோ,    அவன்    நித்தியஜீவனை    அடைவதும்,    நான்    அவனைக்    கடைசிநாளில்    எழுப்புவதும்,    என்னை    அனுப்பினவருடைய    சித்தமாயிருக்கிறது    என்றார்.    {John    6:40}

 

நான்    வானத்திலிருந்து    வந்த    அப்பம்    என்று    அவர்    சொன்னதினிமித்தம்    யூதர்கள்<Jews>    அவரைக்குறித்து    முறுமுறுத்து:    {John    6:41}

 

இவன்    யோசேப்பின்<Joseph>    குமாரனாகிய    இயேசு<Jesus>    அல்லவா,    இவனுடைய    தகப்பனையும்    தாயையும்    அறிந்திருக்கிறோமே;    அப்படியிருக்க,    நான்    வானத்திலிருந்திறங்கி    வந்தேன்    என்று    இவன்    எப்படிச்    சொல்லுகிறான்    என்றார்கள்.    {John    6:42}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    உங்களுக்குள்ளே    முறுமுறுக்கவேண்டாம்.    {John    6:43}

 

என்னை    அனுப்பின    பிதா    ஒருவனை    இழுத்துக்கொள்ளாவிட்டால்    அவன்    என்னிடத்தில்    வரமாட்டான்;    கடைசிநாளில்    நான்    அவனை    எழுப்புவேன்.    {John    6:44}

 

எல்லாரும்    தேவனாலே    போதிக்கப்பட்டிருப்பார்கள்    என்று    தீர்க்கதரிசிகளின்    ஆகமத்தில்    எழுதியிருக்கிறதே;    ஆகையால்    பிதாவினிடத்தில்    கேட்டுக்    கற்றுக்கொள்ளுகிறவன்    எவனும்    என்னிடத்தில்    வருகிறான்.    {John    6:45}

 

தேவனிடத்தினின்று    வந்தவரே    தவிர    வேறொருவரும்    பிதாவைக்    கண்டதில்லை,    இவரே    பிதாவைக்    கண்டவர்.    {John    6:46}

 

என்னிடத்தில்    விசுவாசமாயிருக்கிறவனுக்கு    நித்தியஜீவன்    உண்டென்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    6:47}

 

ஜீவ    அப்பம்    நானே.    {John    6:48}

 

உங்கள்    பிதாக்கள்    வனாந்தரத்திலே    மன்னாவைப்    புசித்திருந்தும்    மரித்தார்கள்.    {John    6:49}

 

இதிலே    புசிக்கிறவன்    மரியாமலிருக்கும்படி    வானத்திலிருந்திறங்கின    அப்பம்    இதுவே.    {John    6:50}

 

நானே    வானத்திலிருந்திறங்கின    ஜீவ    அப்பம்;    இந்த    அப்பத்தைப்    புசிக்கிறவன்    என்றென்றைக்கும்    பிழைப்பான்;    நான்    கொடுக்கும்    அப்பம்    உலகத்தின்    ஜீவனுக்காக    நான்    கொடுக்கும்    என்    மாம்சமே    என்றார்.    {John    6:51}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>:    இவன்    தன்னுடைய    மாம்சத்தை    எப்படி    நமக்குப்    புசிக்கக்    கொடுப்பான்    என்று    தங்களுக்குள்ளே    வாக்குவாதம்பண்ணினார்கள்.    {John    6:52}

 

அதற்கு    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நீங்கள்    மனுஷகுமாரனுடைய    மாம்சத்தைப்    புசியாமலும்,    அவருடைய    இரத்தத்தைப்    பானம்பண்ணாமலும்    இருந்தால்    உங்களுக்குள்ளே    ஜீவனில்லை    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    6:53}

 

என்    மாம்சத்தைப்    புசித்து,    என்    இரத்தத்தைப்    பானம்பண்ணுகிறவனுக்கு    நித்தியஜீவன்    உண்டு;    நான்    அவனைக்    கடைசிநாளில்    எழுப்புவேன்.    {John    6:54}

 

என்    மாம்சம்    மெய்யான    போஜனமாயிருக்கிறது,    என்    இரத்தம்    மெய்யான    பானமாயிருக்கிறது.    {John    6:55}

 

என்    மாம்சத்தைப்    புசித்து,    என்    இரத்தத்தைப்    பானம்பண்ணுகிறவன்    என்னிலே    நிலைத்திருக்கிறான்,    நானும்    அவனிலே    நிலைத்திருக்கிறேன்.    {John    6:56}

 

ஜீவனுள்ள    பிதா    என்னை    அனுப்பினதுபோலவும்,    நான்    பிதாவினால்    பிழைத்திருக்கிறதுபோலவும்,    என்னைப்    புசிக்கிறவனும்    என்னாலே    பிழைப்பான்.    {John    6:57}

 

வானத்திலிருந்திறங்கின    அப்பம்    இதுவே;    இது    உங்கள்    பிதாக்கள்    புசித்த    மன்னாவைப்போலல்ல,    அவர்கள்    மரித்தார்களே;    இந்த    அப்பத்தைப்    புசிக்கிறவனோ    என்றென்றைக்கும்    பிழைப்பான்    என்றார்.    {John    6:58}

 

கப்பர்நகூமிலுள்ள<Capernaum>    ஜெபஆலயத்திலே    அவர்    உபதேசிக்கையில்    இவைகளைச்    சொன்னார்.    {John    6:59}

 

அவருடைய    சீஷரில்    அநேகர்    இவைகளைக்    கேட்டபொழுது,    இது    கடினமான    உபதேசம்,    யார்    இதைக்    கேட்பார்கள்    என்றார்கள்.    {John    6:60}

 

சீஷர்கள்    அதைக்குறித்து    முறுமுறுக்கிறார்களென்று    இயேசு<Jesus>    தமக்குள்ளே    அறிந்து,    அவர்களை    நோக்கி:    இது    உங்களுக்கு    இடறலாயிருக்கிறதோ?    {John    6:61}

 

மனுஷகுமாரன்    தாம்    முன்னிருந்த    இடத்திற்கு    ஏறிப்போகிறதை    நீங்கள்    காண்பீர்களானால்    எப்படியிருக்கும்?    {John    6:62}

 

ஆவியே    உயிர்ப்பிக்கிறது,    மாம்சமானது    ஒன்றுக்கும்    உதவாது;    நான்    உங்களுக்குச்    சொல்லுகிற    வசனங்கள்    ஆவியாயும்    ஜீவனாயும்    இருக்கிறது.    {John    6:63}

 

ஆகிலும்    உங்களில்    விசுவாசியாதவர்கள்    சிலர்    உண்டு    என்றார்;    விசுவாசியாதவர்கள்    இன்னாரென்றும்,    தம்மைக்    காட்டிக்கொடுப்பவன்    இன்னானென்றும்    ஆதிமுதலாக    இயேசு<Jesus>    அறிந்திருந்தபடியால்,    அவர்    பின்னும்:    {John    6:64}

 

ஒருவன்    என்    பிதாவின்    அருளைப்    பெறாவிட்டால்    என்னிடத்திற்கு    வரமாட்டான்    என்று    இதினிமித்தமே    உங்களுக்குச்    சொன்னேன்    என்றார்.    {John    6:65}

 

அதுமுதல்    அவருடைய    சீஷரில்    அநேகர்    அவருடனேகூட    நடவாமல்    பின்வாங்கிப்போனார்கள்.    {John    6:66}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    பன்னிருவரையும்    நோக்கி:    நீங்களும்    போய்விட    மனதாயிருக்கிறீர்களோ    என்றார்.    {John    6:67}

 

சீமோன்    பேதுரு<Simon    Peter>    அவருக்குப்    பிரதியுத்தரமாக:    ஆண்டவரே,    யாரிடத்தில்    போவோம்,    நித்தியஜீவ    வசனங்கள்    உம்மிடத்தில்    உண்டே.    {John    6:68}

 

நீர்    ஜீவனுள்ள    தேவனுடைய    குமாரனாகிய    கிறிஸ்து<Christ>    என்று    நாங்கள்    விசுவாசித்தும்    அறிந்தும்    இருக்கிறோம்    என்றான்.    {John    6:69}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    பன்னிருவராகிய    உங்களை    நான்    தெரிந்துகொள்ளவில்லையா?    உங்களுக்குள்ளும்    ஒருவன்    பிசாசாயிருக்கிறான்    என்றார்.    {John    6:70}

 

சீமோனின்<Simon>    குமாரனாகிய    யூதாஸ்காரியோத்து<Judas    Iscariot>    பன்னிருவரிலொருவனாயிருந்தும்,    தம்மைக்    காட்டிக்கொடுக்கப்    போகிறவனாயிருந்தபடியினால்    அவனைக்குறித்து    இப்படிச்    சொன்னார்.    {John    6:71}

 

இவைகளுக்குப்பின்பு,    யூதர்கள்<Jews>    இயேசுவைக்<Jesus>    கொலைசெய்ய    வகைதேடினபடியால்,    அவர்    யூதேயாவிலே<Jewry>    சஞ்சரிக்க    மனதில்லாமல்    கலிலேயாவிலே<Galilee>    சஞ்சரித்துவந்தார்.    {John    7:1}

 

யூதருடைய<Jews>    கூடாரப்பண்டிகை    சமீபமாயிருந்தது.    {John    7:2}

 

அப்பொழுது    அவருடைய    சகோதரர்    அவரை    நோக்கி:    நீர்    செய்கிற    கிரியைகளை    உம்முடைய    சீஷர்களும்    பார்க்கும்படி,    இவ்விடம்விட்டு    யூதேயாவுக்குப்<Judaea>    போம்.    {John    7:3}

 

பிரபலமாயிருக்க    விரும்புகிற    எவனும்    அந்தரங்கத்திலே    ஒன்றையும்    செய்யமாட்டான்;    நீர்    இப்படிப்பட்டவைகளைச்    செய்தால்    உலகத்துக்கு    உம்மை    வெளிப்படுத்தும்    என்றார்கள்.    {John    7:4}

 

அவருடைய    சகோதரரும்    அவரை    விசுவாசியாதபடியால்    இப்படிச்    சொன்னார்கள்.    {John    7:5}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    என்    வேளை    இன்னும்    வரவில்லை,    உங்கள்    வேளையோ    எப்பொழுதும்    ஆயத்தமாயிருக்கிறது.    {John    7:6}

 

உலகம்    உங்களைப்    பகைக்கமாட்டாது;    அதின்    கிரியைகள்    பொல்லாதவைகளாயிருக்கிறதென்று    நான்    சாட்சிகொடுக்கிறபடியினாலே    அது    என்னைப்    பகைக்கிறது.    {John    7:7}

 

நீங்கள்    இந்தப்    பண்டிகைக்குப்    போங்கள்;    என்    வேளை    இன்னும்    வராதபடியால்    நான்    இந்தப்    பண்டிகைக்கு    இப்பொழுது    போகிறதில்லை    என்றார்.    {John    7:8}

 

இவைகளை    அவர்களுடனே    சொல்லி,    பின்னுங்    கலிலேயாவிலே<Galilee>    தங்கினார்.    {John    7:9}

 

அவருடைய    சகோதரர்    போனபின்பு,    அவர்    வெளியரங்கமாய்ப்    போகாமல்    அந்தரங்கமாய்ப்    பண்டிகைக்குப்    போனார்.    {John    7:10}

 

பண்டிகையிலே    யூதர்கள்<Jews>    அவரைத்    தேடி:    அவர்    எங்கேயிருக்கிறார்    என்றார்கள்.    {John    7:11}

 

ஜனங்களுக்குள்ளே    அவரைக்குறித்து    முறுமுறுப்புண்டாயிற்று.    சிலர்:    அவர்    நல்லவர்    என்றார்கள்.    வேறுசிலர்:    அப்படியல்ல,    அவன்    ஜனங்களை    வஞ்சிக்கிறவன்    என்று    சொல்லிக்கொண்டார்கள்.    {John    7:12}

 

ஆனாலும்    யூதருக்குப்<Jews>    பயந்திருந்ததினாலே,    ஒருவனும்    அவரைக்குறித்துத்    தாராளமாய்ப்    பேசவில்லை.    {John    7:13}

 

பாதிப்பண்டிகையானபோது,    இயேசு<Jesus>    தேவாலயத்துக்குப்போய்,    உபதேசம்பண்ணினார்.    {John    7:14}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>:    இவர்    கல்லாதவராயிருந்தும்    வேத    எழுத்துக்களை    எப்படி    அறிந்திருக்கிறார்    என்று    ஆச்சரியப்பட்டார்கள்.    {John    7:15}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    என்    உபதேசம்    என்னுடையதாயிராமல்,    என்னை    அனுப்பினவருடையதாயிருக்கிறது.    {John    7:16}

 

அவருடைய    சித்தத்தின்படி    செய்ய    மனதுள்ளவனெவனோ    அவன்    இந்த    உபதேசம்    தேவனால்    உண்டாயிருக்கிறதோ,    நான்    சுயமாய்ப்    பேசுகிறேனோ    என்று    அறிந்துகொள்ளுவான்.    {John    7:17}

 

சுயமாய்ப்    பேசுகிறவன்    தன்    சுயமகிமையைத்    தேடுகிறான்,    தன்னை    அனுப்பினவரின்    மகிமையைத்    தேடுகிறவனோ    உண்மையுள்ளவனாயிருக்கிறான்,    அவனிடத்தில்    அநீதியில்லை.    {John    7:18}

 

மோசே<Moses>    நியாயப்பிரமாணத்தை    உங்களுக்குக்    கொடுக்கவில்லையா?    அப்படியிருந்தும்    உங்களில்    ஒருவனும்    அந்த    நியாயப்பிரமாணத்தின்படி    நடக்கிறதில்லை;    நீங்கள்    ஏன்    என்னைக்    கொலைசெய்யத்    தேடுகிறீர்கள்    என்றார்.    {John    7:19}

 

ஜனங்கள்    அவருக்குப்    பிரதியுத்தரமாக:    நீ    பிசாசுபிடித்தவன்;    உன்னைக்    கொலைசெய்யத்    தேடுகிறவன்    யார்    என்றார்கள்.    {John    7:20}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    ஒரே    கிரியையைச்    செய்தேன்,    அதைக்குறித்து    எல்லாரும்    ஆச்சரியப்படுகிறீர்கள்.    {John    7:21}

 

விருத்தசேதனம்    மோசேயினால்<Moses>    உண்டாகாமல்,    பிதாக்களால்    உண்டாயிற்று;    பின்பு    மோசே<Moses>    அதை    உங்களுக்கு    நியமித்தான்;    நீங்கள்    ஓய்வுநாளிலும்    மனுஷனை    விருத்தசேதனம்    பண்ணுகிறீர்கள்.    {John    7:22}

 

மோசேயின்<Moses>    நியாயப்பிரமாணம்    மீறப்படாதபடிக்கு    ஓய்வுநாளில்    மனுஷன்    விருத்தசேதனம்    பெறலாமென்றால்,    நான்    ஓய்வுநாளில்    ஒரு    மனுஷனை    முழுவதும்    சுகமாக்கினதினாலே    என்மேல்    எரிச்சலாயிருக்கலாமா?    {John    7:23}

 

தோற்றத்தின்படி    தீர்ப்புசெய்யாமல்,    நீதியின்படி    தீர்ப்புசெய்யுங்கள்    என்றார்.    {John    7:24}

 

அப்பொழுது    எருசலேம்<Jerusalem>    நகரத்தாரில்    சிலர்:    இவனையல்லவா    கொலைசெய்யத்தேடுகிறார்கள்?    {John    7:25}

 

இதோ,    இவன்    தாராளமாய்ப்    பேசுகிறானே,    ஒருவரும்    இவனுக்கு    ஒன்றும்    சொல்லுகிறதில்லையே,    மெய்யாய்    இவன்    கிறிஸ்துதான்<Christ>    என்று    அதிகாரிகள்    நிச்சயமாக    அறிந்திருக்கிறார்களோ?    {John    7:26}

 

இவன்    இன்ன    இடத்திலிருந்து    வந்தவனென்று    நாம்    அறிந்திருக்கிறோம்,    கிறிஸ்து<Christ>    வரும்போதோ,    அவர்    இன்ன    இடத்திலிருந்து    வருகிறவரென்று    ஒருவனும்    அறியமாட்டானே    என்றார்கள்.    {John    7:27}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    தேவாலயத்தில்    உபதேசிக்கையில்    சத்தமிட்டு:    நீங்கள்    என்னை    அறிவீர்கள்,    நான்    எங்கேயிருந்து    வந்தேனென்றும்    அறிவீர்கள்;    நான்    என்சுயமாய்    வரவில்லை,    என்னை    அனுப்பினவர்    சத்தியமுள்ளவர்,    அவரை    நீங்கள்    அறியாதிருக்கிறீர்கள்.    {John    7:28}

 

நான்    அவரால்    வந்திருக்கிறபடியினாலும்,    அவர்    என்னை    அனுப்பியிருக்கிறபடியினாலும்,    நானே    அவரை    அறிந்திருக்கிறேன்    என்றார்.    {John    7:29}

 

அப்பொழுது    அவரைப்    பிடிக்க    வகைதேடினார்கள்;    ஆனாலும்    அவருடைய    வேளை    இன்னும்    வராதபடியினால்    ஒருவனும்    அவர்மேல்    கைபோடவில்லை.    {John    7:30}

 

ஜனங்களில்    அநேகர்    அவரை    விசுவாசித்து:    கிறிஸ்து<Christ>    வரும்போது,    இவர்    செய்கிற    அற்புதங்களைப்பார்க்கிலும்    அதிகம்    செய்வாரோ    என்றார்கள்.    {John    7:31}

 

ஜனங்கள்    அவரைக்குறித்து    இப்படி    முறுமுறுக்கிறதைப்    பரிசேயர்<Pharisees>    கேட்டபொழுது,    அவரைப்    பிடித்துக்கொண்டு    வரும்படிக்குப்    பரிசேயரும்<Pharisees>    பிரதான    ஆசாரியரும்    சேவகரை    அனுப்பினார்கள்.    {John    7:32}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    இன்னுங்    கொஞ்சக்காலம்    நான்    உங்களுடனேகூட    இருந்து,    பின்பு    என்னை    அனுப்பினவரிடத்திற்குப்    போகிறேன்.    {John    7:33}

 

நீங்கள்    என்னைத்    தேடுவீர்கள்,    ஆனாலும்    என்னைக்    காணமாட்டீர்கள்;    நான்    இருக்கும்    இடத்திற்கு    நீங்கள்    வரவுங்கூடாது    என்றார்.    {John    7:34}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>:    இவரை    நாம்    காணாதபடிக்கு    எங்கே    போவார்,    கிரேக்கருக்குள்ளே<Greeks//Gentiles>    சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப்    போய்,    கிரேக்கருக்கு<Greeks//Gentiles>    உபதேசம்பண்ணுவாரோ?    {John    7:35}

 

நீங்கள்    என்னைத்    தேடுவீர்கள்,    ஆனாலும்    என்னைக்    காணமாட்டீர்கள்    என்றும்,    நான்    இருக்கும்    இடத்துக்கு    நீங்கள்    வரக்கூடாது    என்றும்,    இவர்    சொன்ன    வார்த்தையின்    கருத்து    என்னவென்று    தங்களுக்குள்ளே    சொல்லிக்கொண்டார்கள்.    {John    7:36}

 

பண்டிகையின்    கடைசிநாளாகிய    பிரதான    நாளிலே    இயேசு<Jesus>    நின்று,    சத்தமிட்டு:    ஒருவன்    தாகமாயிருந்தால்    என்னிடத்தில்    வந்து,    பானம்பண்ணக்கடவன்.    {John    7:37}

 

வேதவாக்கியம்    சொல்லுகிறபடி    என்னிடத்தில்    விசுவாசமாயிருக்கிறவன்    எவனோ,    அவன்    உள்ளத்திலிருந்து    ஜீவத்தண்ணீருள்ள    நதிகள்    ஓடும்    என்றார்.    {John    7:38}

 

தம்மை    விசுவாசிக்கிறவர்கள்    அடையப்போகிற    ஆவியைக்குறித்து    இப்படிச்    சொன்னார்.    இயேசு<Jesus>    இன்னும்    மகிமைப்படாதிருந்தபடியினால்    பரிசுத்தஆவி    இன்னும்    அருளப்படவில்லை.    {John    7:39}

 

ஜனங்களில்    அநேகர்    இந்த    வசனத்தைக்    கேட்டபொழுது:    மெய்யாகவே    இவர்    தீர்க்கதரிசியானவர்    என்றார்கள்.    {John    7:40}

 

வேறுசிலர்:    இவர்    கிறிஸ்து<Christ>    என்றார்கள்.    வேறுசிலர்:    கிறிஸ்து<Christ>    கலிலேயாவிலிருந்தா<Galilee>    வருவார்?    {John    7:41}

 

தாவீதின்<David>    சந்ததியிலும்,    தாவீது<David>    இருந்த    பெத்லெகேம்<Bethlehem>    ஊரிலுமிருந்து    கிறிஸ்து<Christ>    வருவார்    என்று    வேதவாக்கியம்    சொல்லவில்லையா    என்றார்கள்.    {John    7:42}

 

இவ்விதமாக    அவரைக்குறித்து    ஜனங்களுக்குள்ளே    பிரிவினையுண்டாயிற்று.    {John    7:43}

 

அவர்களில்    சிலர்    அவரைப்    பிடிக்க    மனதாயிருந்தார்கள்;    ஆகிலும்    ஒருவனும்    அவர்மேல்    கைபோடவில்லை.    {John    7:44}

 

பின்பு    அந்தச்    சேவகர்    பிரதான    ஆசாரியரிடத்திற்கும்    பரிசேயரிடத்திற்கும்<Pharisees>    திரும்பிவந்தார்கள்;    இவர்கள்    அவர்களை    நோக்கி:    நீங்கள்    அவனை    ஏன்    கொண்டுவரவில்லை    என்று    கேட்டார்கள்.    {John    7:45}

 

சேவகர்    பிரதியுத்தரமாக:    அந்த    மனுஷன்    பேசுகிறதுபோல    ஒருவனும்    ஒருக்காலும்    பேசினதில்லை    என்றார்கள்.    {John    7:46}

 

அப்பொழுது    பரிசேயர்<Pharisees>:    நீங்களும்    வஞ்சிக்கப்பட்டீர்களா?    {John    7:47}

 

அதிகாரிகளிலாவது    பரிசேயரிலாவது<Pharisees>    யாதாமொருவர்    அவனை    விசுவாசித்ததுண்டா?    {John    7:48}

 

வேதத்தை    அறியாதவர்களாகிய    இந்த    ஜனங்கள்    சபிக்கப்பட்டவர்கள்    என்றார்கள்.    {John    7:49}

 

இராத்திரியிலே    அவரிடத்திற்கு    வந்தவனும்    அவர்களிலொருவனுமாகிய    நிக்கொதேமு<Nicodemus>    என்பவன்    அவர்களை    நோக்கி:    {John    7:50}

 

ஒரு    மனுஷன்    சொல்வதைக்    கேட்டு,    அவன்    செய்கைகளை    அறிகிறதற்கு    முன்னே,    அவனை    ஆக்கினைக்குட்படுத்தலாமென்று    நம்முடைய    நியாயப்பிரமாணம்    சொல்லுகிறதா    என்றான்.    {John    7:51}

 

அதற்கு    அவர்கள்:    நீரும்    கலிலேயனோ<Galilee>?    கலிலேயாவிலிருந்து<Galilee>    ஒரு    தீர்க்கதரிசியும்    எழும்புகிறதில்லை    என்பதை    ஆராய்ந்துபாரும்    என்றார்கள்.    {John    7:52}

 

பின்பு    அவரவர்    தங்கள்    தங்கள்    வீட்டுக்குப்    போனார்கள்.    {John    7:53}

 

இயேசு<Jesus>    ஒலிவமலைக்குப்<mount    of    Olives>    போனார்.    {John    8:1}

 

மறுநாள்    காலையிலே    அவர்    திரும்பித்    தேவாலயத்திற்கு    வந்தபோது,    ஜனங்களெல்லாரும்    அவரிடத்தில்    வந்தார்கள்.    அவர்    உட்கார்ந்து    அவர்களுக்கு    உபதேசம்பண்ணினார்.    {John    8:2}

 

அப்பொழுது    விபசாரத்திலே    கண்டுபிடிக்கப்பட்ட    ஒரு    ஸ்திரீயை    வேதபாரகரும்    பரிசேயரும்<Pharisees>    அவரிடத்தில்    கொண்டுவந்து,    அவளை    நடுவே    நிறுத்தி:    {John    8:3}

 

போதகரே,    இந்த    ஸ்திரீ    விபசாரத்தில்    கையும்    மெய்யுமாய்ப்    பிடிக்கப்பட்டாள்.    {John    8:4}

 

இப்படிப்பட்டவர்களைக்    கல்லெறிந்து    கொல்லவேண்டுமென்று    மோசே<Moses>    நியாயப்பிரமாணத்தில்    நமக்குக்    கட்டளையிட்டிருக்கிறாரே,    நீர்    என்ன    சொல்லுகிறீர்    என்றார்கள்.    {John    8:5}

 

அவர்மேல்    குற்றஞ்சுமத்துவதற்கான    காரணம்    உண்டாகும்பொருட்டு    அவரைச்    சோதிக்கும்படி    இப்படிச்    சொன்னார்கள்.    இயேசுவோ<Jesus>    குனிந்து,    விரலினால்    தரையிலே    எழுதினார்.    {John    8:6}

 

அவர்கள்    ஓயாமல்    அவரைக்    கேட்டுக்கொண்டிருக்கையில்,    அவர்    நிமிர்ந்து    பார்த்து:    உங்களில்    பாவமில்லாதவன்    இவள்மேல்    முதலாவது    கல்லெறியக்கடவன்    என்று    சொல்லி,    {John    8:7}

 

அவர்    மறுபடியும்    குனிந்து,    தரையிலே    எழுதினார்.    {John    8:8}

 

அவர்கள்    அதைக்    கேட்டு,    தங்கள்    மனச்சாட்சியினால்    கடிந்துகொள்ளப்பட்டு,    பெரியோர்முதல்    சிறியோர்வரைக்கும்    ஒவ்வொருவராய்ப்    போய்விட்டார்கள்.    இயேசு<Jesus>    தனித்திருந்தார்,    அந்த    ஸ்திரீ    நடுவே    நின்றாள்.    {John    8:9}

 

இயேசு<Jesus>    நிமிர்ந்து    அந்த    ஸ்திரீயைத்    தவிர    வேறொருவரையுங்    காணாமல்:    ஸ்திரீயே,    உன்மேல்    குற்றஞ்சாட்டினவர்கள்    எங்கே?    ஒருவனாகிலும்    உன்னை    ஆக்கினைக்குள்ளாகத்    தீர்க்கவில்லையா    என்றார்.    {John    8:10}

 

அதற்கு    அவள்:    இல்லை,    ஆண்டவரே,    என்றாள்.    இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    நானும்    உன்னை    ஆக்கினைக்குள்ளாகத்    தீர்க்கிறதில்லை;    நீ    போ,    இனிப்    பாவஞ்செய்யாதே    என்றார்.    {John    8:11}

 

மறுபடியும்    இயேசு<Jesus>    ஜனங்களை    நோக்கி:    நான்    உலகத்திற்கு    ஒளியாயிருக்கிறேன்,    என்னைப்    பின்பற்றுகிறவன்    இருளிலே    நடவாமல்    ஜீவஒளியை    அடைந்திருப்பான்    என்றார்.    {John    8:12}

 

அப்பொழுது    பரிசேயர்<Pharisees>    அவரை    நோக்கி:    உன்னைக்குறித்து    நீயே    சாட்சி    கொடுக்கிறாய்;    உன்னுடைய    சாட்சி    உண்மையானதல்ல    என்றார்கள்.    {John    8:13}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    என்னைக்குறித்து    நானே    சாட்சி    கொடுத்தாலும்,    என்    சாட்சி    உண்மையாயிருக்கிறது;    ஏனெனில்    நான்    எங்கேயிருந்து    வந்தேனென்றும்,    எங்கே    போகிறேனென்றும்    அறிந்திருக்கிறேன்;    நீங்களோ    நான்    எங்கேயிருந்து    வருகிறேனென்றும்,    எங்கே    போகிறேனென்றும்    அறியீர்கள்.    {John    8:14}

 

நீங்கள்    மாம்சத்துக்கேற்றபடி    நியாயந்தீர்க்கிறீர்கள்,    நான்    ஒருவனையும்    நியாயந்தீர்க்கிறதில்லை;    {John    8:15}

 

நான்    நியாயந்தீர்த்தால்,    என்    தீர்ப்பு    சத்தியத்தின்படியிருக்கும்;    ஏனெனில்    நான்    தனித்திருக்கவில்லை,    நானும்    என்னை    அனுப்பின    பிதாவுமாக    இருக்கிறோம்.    {John    8:16}

 

இரண்டுபேருடைய    சாட்சி    உண்மையென்று    உங்கள்    நியாயப்பிரமாணத்திலும்    எழுதியிருக்கிறதே.    {John    8:17}

 

நான்    என்னைக்குறித்துச்    சாட்சி    கொடுக்கிறவனாயிருக்கிறேன்,    என்னை    அனுப்பின    பிதாவும்    என்னைக்குறித்துச்    சாட்சி    கொடுக்கிறார்    என்றார்.    {John    8:18}

 

அப்பொழுது    அவர்கள்:    உம்முடைய    பிதா    எங்கே    என்றார்கள்.    இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    என்னையும்    அறியீர்கள்,    என்    பிதாவையும்    அறியீர்கள்;    நீங்கள்    என்னை    அறிந்தீர்களானால்    என்    பிதாவையும்    அறிவீர்கள்    என்றார்.    {John    8:19}

 

தேவாலயத்திலே    இயேசு<Jesus>    உபதேசம்பண்ணுகிறபோது,    தருமப்பெட்டியிருக்கும்    இடத்தில்    இந்த    வசனங்களைச்    சொன்னார்.    அவருடைய    வேளை    இன்னும்    வராதபடியினால்    ஒருவனும்    அவரைப்    பிடிக்கவில்லை.    {John    8:20}

 

இயேசு<Jesus>    மறுபடியும்    அவர்களை    நோக்கி:    நான்    போகிறேன்,    நீங்கள்    என்னைத்    தேடி    உங்கள்    பாவங்களிலே    சாவீர்கள்;    நான்    போகிற    இடத்துக்கு    வர    உங்களால்    கூடாது    என்றார்.    {John    8:21}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>:    நான்    போகிற    இடத்துக்கு    வர    உங்களால்    கூடாது    என்கிறானே,    தன்னைத்தான்    கொலைசெய்துகொள்வானோ    என்று    பேசிக்கொண்டார்கள்.    {John    8:22}

 

அவர்    அவர்களை    நோக்கி:    நீங்கள்    தாழ்விலிருந்துண்டானவர்கள்,    நான்    உயர்விலிருந்துண்டானவன்;    நீங்கள்    இந்த    உலகத்திலிருந்துண்டானவர்கள்,    நான்    இந்த    உலகத்திலிருந்துண்டானவனல்ல.    {John    8:23}

 

ஆகையால்    நீங்கள்    உங்கள்    பாவங்களில்    சாவீர்கள்    என்று    உங்களுக்குச்    சொன்னேன்;    நானே    அவர்    என்று    நீங்கள்    விசுவாசியாவிட்டால்    உங்கள்    பாவங்களிலே    சாவீர்கள்    என்றார்.    {John    8:24}

 

அதற்கு    அவர்கள்:    நீர்    யார்    என்றார்கள்.    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நான்    ஆதிமுதலாய்    உங்களுக்குச்    சொல்லியிருக்கிறவர்தான்.    {John    8:25}

 

உங்களைக்குறித்துப்    பேசவும்    நியாயந்தீர்க்கவும்    எனக்கு    அநேக    காரியங்களுண்டு.    என்னை    அனுப்பினவர்    சத்தியமுள்ளவர்;    நான்    அவரிடத்தில்    கேட்டவைகளையே    உலகத்துக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    8:26}

 

பிதாவைக்குறித்துப்    பேசினாரென்று    அவர்கள்    அறியாதிருந்தார்கள்.    {John    8:27}

 

ஆதலால்    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நீங்கள்    மனுஷகுமாரனை    உயர்த்தின    பின்பு,    நானே    அவரென்றும்,    நான்    என்    சுயமாய்    ஒன்றும்    செய்யாமல்,    என்    பிதா    எனக்குப்    போதித்தபடியே    இவைகளைச்    சொன்னேன்    என்றும்    அறிவீர்கள்.    {John    8:28}

 

என்னை    அனுப்பினவர்    என்னுடனேகூட    இருக்கிறார்,    பிதாவுக்குப்    பிரியமானவைகளை    நான்    எப்பொழுதும்    செய்கிறபடியால்    அவர்    என்னைத்    தனியே    இருக்கவிடவில்லை    என்றார்.    {John    8:29}

 

இவைகளை    அவர்    சொல்லுகையில்,    அநேகர்    அவரிடத்தில்    விசுவாசம்    வைத்தார்கள்.    {John    8:30}

 

இயேசு<Jesus>    தம்மை    விசுவாசித்த    யூதர்களை<Jews>    நோக்கி:    நீங்கள்    என்    உபதேசத்தில்    நிலைத்திருந்தால்    மெய்யாகவே    என்    சீஷராயிருப்பீர்கள்;    {John    8:31}

 

சத்தியத்தையும்    அறிவீர்கள்,    சத்தியம்    உங்களை    விடுதலையாக்கும்    என்றார்.    {John    8:32}

 

அவர்கள்    அவருக்குப்    பிரதியுத்தரமாக:    நாங்கள்    ஆபிரகாமின்<Abraham>    சந்ததியாயிருக்கிறோம்,    நாங்கள்    ஒருக்காலும்    ஒருவனுக்கும்    அடிமைகளாயிருக்கவில்லை;    விடுதலையாவீர்களென்று    நீர்    எப்படிச்    சொல்லுகிறீர்    என்றார்கள்.    {John    8:33}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    பாவஞ்செய்கிறவன்    எவனும்    பாவத்துக்கு    அடிமையாயிருக்கிறான்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    8:34}

 

அடிமையானவன்    என்றைக்கும்    வீட்டிலே    நிலைத்திரான்;    குமாரன்    என்றைக்கும்    நிலைத்திருக்கிறார்.    {John    8:35}

 

ஆகையால்    குமாரன்    உங்களை    விடுதலையாக்கினால்    மெய்யாகவே    விடுதலையாவீர்கள்.    {John    8:36}

 

நீங்கள்    ஆபிரகாமின்<Abraham>    சந்ததியாரென்று    அறிவேன்;    ஆனாலும்    உங்களுக்குள்ளே    என்    உபதேசம்    இடம்பெறாதபடியால்,    என்னைக்    கொலைசெய்யத்    தேடுகிறீர்கள்.    {John    8:37}

 

நான்    என்    பிதாவினிடத்தில்    கண்டதைச்    சொல்லுகிறேன்,    நீங்களும்    உங்கள்    பிதாவினிடத்தில்    கண்டதைச்    செய்கிறீர்கள்    என்றார்.    {John    8:38}

 

அதற்கு    அவர்கள்:    ஆபிரகாமே<Abraham>    எங்கள்    பிதா    என்றார்கள்.    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நீங்கள்    ஆபிரகாமின்<Abraham>    பிள்ளைகளாயிருந்தால்    ஆபிரகாமின்<Abraham>    கிரியைகளைச்    செய்வீர்களே.    {John    8:39}

 

தேவனிடத்தில்    கேட்டிருக்கிற    சத்தியத்தை    உங்களுக்குச்    சொன்ன    மனுஷனாகிய    என்னைக்    கொல்லத்    தேடுகிறீர்கள்,    ஆபிரகாம்<Abraham>    இப்படிச்    செய்யவில்லையே.    {John    8:40}

 

நீங்கள்    உங்கள்    பிதாவின்    கிரியைகளைச்    செய்கிறீர்கள்    என்றார்.    அதற்கு    அவர்கள்:    நாங்கள்    வேசித்தனத்தினால்    பிறந்தவர்களல்ல;    ஒரே    பிதா    எங்களுக்குண்டு,    அவர்    தேவன்    என்றார்கள்.    {John    8:41}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    தேவன்    உங்கள்    பிதாவாயிருந்தால்    என்னிடத்தில்    அன்பாயிருப்பீர்கள்.    ஏனெனில்    நான்    தேவனிடத்திலிருந்து    வந்திருக்கிறேன்;    நான்    சுயமாய்    வரவில்லை,    அவரே    என்னை    அனுப்பினார்.    {John    8:42}

 

என்    வசனத்தை    நீங்கள்    ஏன்    அறியாமலிருக்கிறீர்கள்?    என்    உபதேசத்தைக்    கேட்க    மனதில்லாதிருக்கிறதினால்    அல்லவா?    {John    8:43}

 

நீங்கள்    உங்கள்    பிதாவாகிய    பிசாசானவனால்    உண்டானவர்கள்;    உங்கள்    பிதாவினுடைய    இச்சைகளின்படி    செய்ய    மனதாயிருக்கிறீர்கள்;    அவன்    ஆதிமுதற்கொண்டு    மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்;    சத்தியம்    அவனிடத்திலில்லாதபடியால்    அவன்    சத்தியத்திலே    நிலைநிற்கவில்லை;    அவன்    பொய்யனும்    பொய்க்குப்    பிதாவுமாயிருக்கிறபடியால்    அவன்    பொய்பேசும்போது    தன்    சொந்தத்தில்    எடுத்துப்    பேசுகிறான்.    {John    8:44}

 

நான்    உங்களுக்குச்    சத்தியத்தைச்    சொல்லுகிறபடியினாலே    நீங்கள்    என்னை    விசுவாசிக்கிறதில்லை.    {John    8:45}

 

என்னிடத்தில்    பாவம்    உண்டென்று    உங்களில்    யார்    என்னைக்    குற்றப்படுத்தக்கூடும்?    நான்    சத்தியத்தைச்    சொல்லியிருக்க,    நீங்கள்    ஏன்    என்னை    விசுவாசிக்கிறதில்லை.    {John    8:46}

 

தேவனால்    உண்டானவன்    தேவனுடைய    வசனங்களுக்குச்    செவிகொடுக்கிறான்;    நீங்கள்    தேவனால்    உண்டாயிராதபடியினால்    செவிகொடாமலிருக்கிறீர்கள்    என்றார்.    {John    8:47}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>    அவருக்குப்    பிரதியுத்தரமாக:    உன்னைச்    சமாரியனென்றும்<Samaritan>,    பிசாசுபிடித்தவனென்றும்    நாங்கள்    சொல்லுகிறது    சரிதானே    என்றார்கள்.    {John    8:48}

 

அதற்கு    இயேசு<Jesus>:    நான்    பிசாசு    பிடித்தவனல்ல,    நான்    என்    பிதாவைக்    கனம்பண்ணுகிறேன்,    நீங்கள்    என்னைக்    கனவீனம்பண்ணுகிறீர்கள்.    {John    8:49}

 

நான்    எனக்கு    மகிமையைத்    தேடுகிறதில்லை;    அதைத்    தேடி    நியாயந்தீர்க்கிறவர்    ஒருவர்    இருக்கிறார்.    {John    8:50}

 

ஒருவன்    என்    வார்த்தையைக்    கைக்கொண்டால்,    அவன்    என்றென்றைக்கும்    மரணத்தைக்    காண்பதில்லை    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    8:51}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>    அவரை    நோக்கி:    நீ    பிசாசுபிடித்தவனென்று    இப்பொழுது    அறிந்திருக்கிறோம்;    ஆபிரகாமும்<Abraham>    தீர்க்கதரிசிகளும்    மரித்தார்கள்.    நீயோ:    ஒருவன்    என்    வார்த்தையைக்    கைக்கொண்டால்    என்றென்றைக்கும்    மரணத்தை    ருசிபார்ப்பதில்லை    என்கிறாய்.    {John    8:52}

 

எங்கள்    பிதாவாகிய    ஆபிரகாமிலும்<Abraham>    நீ    பெரியவனோ?    அவர்    மரித்தார்,    தீர்க்கதரிசிகளும்    மரித்தார்கள்;    உன்னை    நீ    எப்படிப்பட்டவனாக்குகிறாய்    என்றார்கள்.    {John    8:53}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    என்னை    நானே    மகிமைப்படுத்தினால்    அந்த    மகிமை    வீணாயிருக்கும்,    என்    பிதா    என்னை    மகிமைப்படுத்துகிறவர்,    அவரை    உங்கள்    தேவனென்று    நீங்கள்    சொல்லுகிறீர்கள்.    {John    8:54}

 

ஆயினும்    நீங்கள்    அவரை    அறியவில்லை,    நான்    அவரை    அறிந்திருக்கிறேன்;    அவரை    அறியேன்    என்று    சொல்வேனாகில்    உங்களைப்போல    நானும்    பொய்யனாயிருப்பேன்;    அவரை    நான்    அறிந்து,    அவருடைய    வார்த்தையைக்    கைக்கொண்டிருக்கிறேன்.    {John    8:55}

 

உங்கள்    பிதாவாகிய    ஆபிரகாம்<Abraham>    என்னுடைய    நாளைக்    காண    ஆசையாயிருந்தான்;    கண்டு    களிகூர்ந்தான்    என்றார்.    {John    8:56}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>    அவரை    நோக்கி:    உனக்கு    இன்னும்    ஐம்பது    வயதாகவில்லையே,    நீ    ஆபிரகாமைக்<Abraham>    கண்டாயோ    என்றார்கள்.    {John    8:57}

 

அதற்கு    இயேசு<Jesus>:    ஆபிரகாம்<Abraham>    உண்டாகிறதற்கு    முன்னமே    நான்    இருக்கிறேன்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    8:58}

 

அப்பொழுது    அவர்மேல்    எறியும்படி    கல்லுகளை    எடுத்துக்கொண்டார்கள்.    இயேசு<Jesus>    மறைந்து,    அவர்கள்    நடுவே    கடந்து,    தேவாலயத்தை    விட்டுப்போனார்.    {John    8:59}

 

அவர்    அப்புறம்    போகையில்    பிறவிக்    குருடனாகிய    ஒரு    மனுஷனைக்    கண்டார்.    {John    9:1}

 

அப்பொழுது    அவருடைய    சீஷர்கள்    அவரை    நோக்கி:    ரபீ<Rabbi//Master>,    இவன்    குருடனாய்ப்    பிறந்தது    யார்    செய்த    பாவம்,    இவன்    செய்த    பாவமோ,    இவனைப்    பெற்றவர்கள்    செய்த    பாவமோ    என்று    கேட்டார்கள்.    {John    9:2}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    அது    இவன்    செய்த    பாவமுமல்ல,    இவனைப்    பெற்றவர்கள்    செய்த    பாவமுமல்ல,    தேவனுடைய    கிரியைகள்    இவனிடத்தில்    வெளிப்படும்பொருட்டு    இப்படிப்    பிறந்தான்.    {John    9:3}

 

பகற்காலமிருக்குமட்டும்    நான்    என்னை    அனுப்பினவருடைய    கிரியைகளைச்    செய்யவேண்டும்;    ஒருவனும்    கிரியை    செய்யக்கூடாத    இராக்காலம்    வருகிறது.    {John    9:4}

 

நான்    உலகத்திலிருக்கையில்    உலகத்திற்கு    ஒளியாயிருக்கிறேன்    என்றார்.    {John    9:5}

 

இவைகளைச்    சொல்லி,    அவர்    தரையிலே    துப்பி,    உமிழ்நீரினால்    சேறுண்டாக்கி,    அந்தச்    சேற்றைக்    குருடனுடைய    கண்களின்மேல்    பூசி:    {John    9:6}

 

நீ    போய்,    சீலோவாம்<Siloam>    குளத்திலே    கழுவு    என்றார்.    சீலோவாம்<Siloam>    என்பதற்கு    அனுப்பப்பட்டவன்<Sent>    என்று    அர்த்தமாம்.    அப்படியே    அவன்    போய்க்    கழுவி,    பார்வையடைந்தவனாய்த்    திரும்பிவந்தான்.    {John    9:7}

 

அப்பொழுது    அயலகத்தாரும்,    அவன்    குருடனாயிருக்கையில்    அவனைக்    கண்டிருந்தவர்களும்:    இவன்    உட்கார்ந்து    பிச்சை    கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா    என்றார்கள்.    {John    9:8}

 

சிலர்:    அவன்தான்    என்றார்கள்.    வேறுசிலர்:    அவனுடைய    சாயலாயிருக்கிறான்    என்றார்கள்.    அவனோ:    நான்தான்    அவன்    என்றான்.    {John    9:9}

 

அப்பொழுது    அவர்கள்    அவனை    நோக்கி:    உன்    கண்கள்    எப்படித்    திறக்கப்பட்டது    என்றார்கள்.    {John    9:10}

 

அவன்    பிரதியுத்தரமாக:    இயேசு<Jesus>    என்னப்பட்ட    ஒருவர்    சேறுண்டாக்கி,    என்    கண்களின்மேல்    பூசி,    நீ    போய்    சீலோவாம்<Siloam>    குளத்திலே    கழுவு    என்றார்.    அப்படியே    நான்    போய்க்    கழுவி,    பார்வையடைந்தேன்    என்றான்.    {John    9:11}

 

அப்பொழுது    அவர்கள்:    அவர்    எங்கே    என்றார்கள்.    அவன்:    எனக்குத்    தெரியாது    என்றான்.    {John    9:12}

 

குருடனாயிருந்த    அவனைப்    பரிசேயரிடத்திற்குக்<Pharisees>    கொண்டுபோனார்கள்.    {John    9:13}

 

இயேசு<Jesus>    சேறுண்டாக்கி,    அவன்    கண்களைத்    திறந்த    நாள்    ஓய்வுநாளாயிருந்தது.    {John    9:14}

 

ஆகையால்    பரிசேயரும்<Pharisees>    அவனை    நோக்கி:    நீ    எப்படிப்    பார்வையடைந்தாய்    என்று    மறுபடியும்    கேட்டார்கள்.    அதற்கு    அவன்:    அவர்    என்    கண்களின்மேல்    சேற்றைப்    பூசினார்,    நான்    கழுவினேன்,    காண்கிறேன்    என்றான்.    {John    9:15}

 

அப்பொழுது    பரிசேயரில்<Pharisees>    சிலர்:    அந்த    மனுஷன்    ஓய்வுநாளைக்    கைக்கொள்ளாததினால்    அவன்    தேவனிடத்திலிருந்து    வந்தவனல்ல    என்றார்கள்.    வேறுசிலர்:    பாவியாயிருக்கிற    மனுஷன்    இப்படிப்பட்ட    அற்புதங்களை    எப்படிச்    செய்வான்    என்றார்கள்.    இவ்விதமாய்    அவர்களுக்குள்ளே    பிரிவினையுண்டாயிற்று.    {John    9:16}

 

மறுபடியும்    அவர்கள்    குருடனை    நோக்கி:    உன்    கண்களைத்    திறந்தானே,    அவனைக்குறித்து    நீ    என்ன    சொல்லுகிறாய்    என்றார்கள்.    அதற்கு    அவன்:    அவர்    தீர்க்கதரிசி    என்றான்.    {John    9:17}

 

அவன்    குருடனாயிருந்து    பார்வையடைந்ததை    யூதர்கள்<Jews>    நம்பாமல்,    பார்வையடைந்தவனுடைய    தாய்தகப்பன்மாரை    அழைப்பித்து,    {John    9:18}

 

அவர்களை    நோக்கி:    உங்கள்    குமாரன்    குருடனாய்ப்    பிறந்தான்    என்று    சொல்லுகிறீர்களே,    அவன்    இவன்தானா?    இவனானால்,    இப்பொழுது    இவன்    எப்படிப்    பார்வையடைந்தான்    என்று    கேட்டார்கள்.    {John    9:19}

 

தாய்தகப்பன்மார்    பிரதியுத்தரமாக:    இவன்    எங்கள்    குமாரன்தான்    என்றும்,    குருடனாய்ப்    பிறந்தான்    என்றும்    எங்களுக்குத்    தெரியும்.    {John    9:20}

 

இப்பொழுது    இவன்    பார்வையடைந்த    வகை    எங்களுக்குத்    தெரியாது;    இவன்    கண்களைத்    திறந்தவன்    இன்னான்    என்பதும்    எங்களுக்குத்    தெரியாது;    இவன்    வயதுள்ளவனாயிருக்கிறான்,    இவனைக்    கேளுங்கள்,    இவனே    சொல்லுவான்    என்றார்கள்.    {John    9:21}

 

அவனுடைய    தாய்தகப்பன்மார்    யூதர்களுக்குப்<Jews>    பயந்ததினால்    இப்படிச்    சொன்னார்கள்.    ஏனெனில்    இயேசுவைக்<Jesus>    கிறிஸ்து<Christ>    என்று    எவனாவது    அறிக்கைபண்ணினால்    அவனை    ஜெபஆலயத்துக்குப்    புறம்பாக்கவேண்டுமென்று    யூதர்கள்    அதற்குமுன்னமே    கட்டுப்பாடு    செய்திருந்தார்கள்.    {John    9:22}

 

அதினிமித்தம்:    இவன்    வயதுள்ளவனாயிருக்கிறான்,    இவனையே    கேளுங்கள்    என்று    அவன்    தாய்தகப்பன்மார்    சொன்னார்கள்.    {John    9:23}

 

ஆதலால்    அவர்கள்    குருடனாயிருந்த    மனுஷனை    இரண்டாந்தரம்    அழைத்து:    நீ    தேவனை    மகிமைப்படுத்து;    இந்த    மனுஷன்    பாவியென்று    நாங்கள்    அறிந்திருக்கிறோம்    என்றார்கள்.    {John    9:24}

 

அவன்    பிரதியுத்தரமாக:    அவர்    பாவியென்று    எனக்குத்    தெரியாது;    நான்    குருடனாயிருந்தேன்,    இப்பொழுது    காண்கிறேன்;    இது    ஒன்றுதான்    எனக்குத்    தெரியும்    என்றான்.    {John    9:25}

 

அவர்கள்    மறுபடியும்    அவனை    நோக்கி:    உனக்கு    என்னசெய்தான்,    உன்    கண்களை    எப்படித்    திறந்தான்    என்றார்கள்.    {John    9:26}

 

அவன்    பிரதியுத்தரமாக:    முன்னமே    உங்களுக்குச்    சொன்னேன்,    நீங்கள்    கேளாமற்போனீர்கள்;    மறுபடியும்    கேட்க    வேண்டியதென்ன?    அவருக்குச்    சீஷராக    உங்களுக்கும்    மனதுண்டோ    என்றான்.    {John    9:27}

 

அப்பொழுது    அவர்கள்    அவனை    வைது:    நீ    அவனுடைய    சீஷன்,    நாங்கள்    மோசேயினுடைய<Moses>    சீஷர்.    {John    9:28}

 

மோசேயுடனே<Moses>    தேவன்    பேசினாரென்று    அறிவோம்,    இவன்    எங்கேயிருந்து    வந்தவனென்று    அறியோம்    என்றார்கள்.    {John    9:29}

 

அதற்கு    அந்த    மனுஷன்:    அவர்    என்    கண்களைத்    திறந்திருந்தும்,    அவர்    எங்கேயிருந்து    வந்தவரென்று    நீங்கள்    அறியாதிருக்கிறது    ஆச்சரியமான    காரியம்.    {John    9:30}

 

பாவிகளுக்குத்    தேவன்    செவிகொடுக்கிறதில்லையென்று    அறிந்திருக்கிறோம்;    ஒருவன்    தேவபக்தியுள்ளவனாயிருந்து    அவருக்குச்    சித்தமானதைச்    செய்தால்    அவனுக்குச்    செவிகொடுப்பார்.    {John    9:31}

 

பிறவிக்குருடனுடைய    கண்களை    ஒருவன்    திறந்தானென்று    உலகமுண்டானதுமுதல்    கேள்விப்பட்டதில்லையே.    {John    9:32}

 

அவர்    தேவனிடத்திலிருந்து    வராதிருந்தால்    ஒன்றும்    செய்யமாட்டாரே    என்றான்.    {John    9:33}

 

அவர்கள்    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    முழுவதும்    பாவத்தில்    பிறந்த    நீ    எங்களுக்குப்    போதிக்கிறாயோ    என்று    சொல்லி,    அவனைப்    புறம்பே    தள்ளிவிட்டார்கள்.    {John    9:34}

 

அவனை    அவர்கள்    புறம்பே    தள்ளிவிட்டதை    இயேசு<Jesus>    கேள்விப்பட்டு,    அவனைக்    கண்டபோது:    நீ    தேவனுடைய    குமாரனிடத்தில்    விசுவாசமாயிருக்கிறாயா    என்றார்.    {John    9:35}

 

அதற்கு    அவன்:    ஆண்டவரே,    அவரிடத்தில்    நான்    விசுவாசமாயிருக்கும்படிக்கு    அவர்    யார்    என்றான்.    {John    9:36}

 

இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    நீ    அவரைக்    கண்டிருக்கிறாய்,    உன்னுடனே    பேசுகிறவர்    அவர்தான்    என்றார்.    {John    9:37}

 

உடனே    அவன்:    ஆண்டவரே,    விசுவாசிக்கிறேன்    என்று    சொல்லி,    அவரைப்    பணிந்துகொண்டான்.    {John    9:38}

 

அப்பொழுது    இயேசு<Jesus>:    காணாதவர்கள்    காணும்படியாகவும்,    காண்கிறவர்கள்    குருடராகும்படியாகவும்    நியாயத்தீர்ப்புக்கு    நான்    இந்த    உலகத்தில்    வந்தேன்    என்றார்.    {John    9:39}

 

அவருடனேகூட    இருந்த    பரிசேயரில்<Pharisees>    சிலர்    இவைகளைக்    கேட்டபொழுது:    நாங்களும்    குருடரோ    என்றார்கள்.    {John    9:40}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நீங்கள்    குருடராயிருந்தால்    உங்களுக்குப்    பாவமிராது;    நீங்கள்    காண்கிறோம்    என்று    சொல்லுகிறபடியினால்    உங்கள்    பாவம்    நிலைநிற்கிறது    என்றார்.    {John    9:41}

 

மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்;    ஆட்டுத்தொழுவத்துக்குள்    வாசல்வழியாய்ப்    பிரவேசியாமல்,    வேறுவழியாய்    ஏறுகிறவன்    கள்ளனும்    கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.    {John    10:1}

 

வாசல்வழியாய்ப்    பிரவேசிக்கிறவனோ    ஆடுகளின்    மேய்ப்பனாயிருக்கிறான்.    {John    10:2}

 

வாசலைக்    காக்கிறவன்    அவனுக்குத்    திறக்கிறான்;    ஆடுகளும்    அவன்    சத்தத்துக்குச்    செவிகொடுக்கிறது.    அவன்    தன்னுடைய    ஆடுகளைப்    பேர்சொல்லிக்    கூப்பிட்டு,    அவைகளை    வெளியே    நடத்திக்    கொண்டு    போகிறான்.    {John    10:3}

 

அவன்    தன்னுடைய    ஆடுகளை    வெளியே    விட்டபின்பு,    அவைகளுக்கு    முன்பாக    நடந்துபோகிறான்,    ஆடுகள்    அவன்    சத்தத்தை    அறிந்திருக்கிறபடியினால்    அவனுக்குப்    பின்செல்லுகிறது.    {John    10:4}

 

அந்நியருடைய    சத்தத்தை    அறியாதபடியினால்    அவைகள்    அந்நியனுக்குப்    பின்செல்லாமல்,    அவனை    விட்டோடிப்போம்    என்றார்.    {John    10:5}

 

இந்த    உவமையை    இயேசு<Jesus>    அவர்களுடனே    சொன்னார்;    அவர்களோ    அவர்    சொன்னவைகளின்    கருத்தை    அறியவில்லை.    {John    10:6}

 

ஆதலால்    இயேசு<Jesus>    மறுபடியும்    அவர்களை    நோக்கி:    நானே    ஆடுகளுக்கு    வாசல்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    10:7}

 

எனக்கு    முன்னே    வந்தவர்களெல்லாரும்    கள்ளரும்    கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்;    ஆடுகள்    அவர்களுக்குச்    செவிகொடுக்கவில்லை.    {John    10:8}

 

நானே    வாசல்,    என்    வழியாய்    ஒருவன்    உட்பிரவேசித்தால்,    அவன்    இரட்சிக்கப்படுவான்,    அவன்    உள்ளும்    புறம்பும்    சென்று,    மேய்ச்சலைக்    கண்டடைவான்.    {John    10:9}

 

திருடன்    திருடவும்    கொல்லவும்    அழிக்கவும்    வருகிறானேயன்றி    வேறொன்றுக்கும்    வரான்.    நானோ    அவைகளுக்கு    ஜீவன்    உண்டாயிருக்கவும்,    அது    பரிபூரணப்படவும்    வந்தேன்.    {John    10:10}

 

நானே    நல்ல    மேய்ப்பன்:    நல்ல    மேய்ப்பன்    ஆடுகளுக்காகத்    தன்    ஜீவனைக்    கொடுக்கிறான்.    {John    10:11}

 

மேய்ப்பனாயிராதவனும்,    ஆடுகள்    தனக்குச்    சொந்தமல்லாதவனுமான    கூலியாள்    ஓநாய்    வருகிறதைக்    கண்டு    ஆடுகளை    விட்டு    ஓடிப்போகிறான்;    அப்பொழுது    ஓநாய்    ஆடுகளைப்பீறி,    அவைகளைச்    சிதறடிக்கும்.    {John    10:12}

 

கூலியாள்    கூலிக்காக    வேலைசெய்கிறவனாகையால்    ஓடிப்போகிறான்,    ஆடுகளுக்காக    அவன்    கவலைப்படான்.    {John    10:13}

 

நானே    நல்ல    மேய்ப்பன்;    பிதா    என்னை    அறிந்திருக்கிறதுபோலவும்,    நான்    பிதாவை    அறிந்திருக்கிறதுபோலவும்,    {John    10:14}

 

நான்    என்னுடையவைகளை    அறிந்தும்    என்னுடையவைகளால்    அறியப்பட்டுமிருக்கிறேன்;    ஆடுகளுக்காக    என்    ஜீவனையும்    கொடுக்கிறேன்.    {John    10:15}

 

இந்தத்    தொழுவத்திலுள்ளவைகளல்லாமல்    வேறே    ஆடுகளும்    எனக்கு    உண்டு;    அவைகளையும்    நான்    கொண்டுவரவேண்டும்,    அவைகள்    என்    சத்தத்துக்குச்    செவிகொடுக்கும்,    அப்பொழுது    ஒரே    மந்தையும்    ஒரே    மேய்ப்பனுமாகும்.    {John    10:16}

 

நான்    என்    ஜீவனை    மறுபடியும்    அடைந்துகொள்ளும்படிக்கு    அதைக்    கொடுக்கிறபடியினால்    பிதா    என்னில்    அன்பாயிருக்கிறார்.    {John    10:17}

 

ஒருவனும்    அதை    என்னிடத்திலிருந்து    எடுத்துக்கொள்ளமாட்டான்;    நானே    அதைக்    கொடுக்கிறேன்,    அதைக்    கொடுக்கவும்    எனக்கு    அதிகாரம்    உண்டு,    அதை    மறுபடியும்    எடுத்துக்கொள்ளவும்    எனக்கு    அதிகாரம்    உண்டு.    இந்தக்    கட்டளையை    என்    பிதாவினிடத்தில்    பெற்றுக்கொண்டேன்    என்றார்.    {John    10:18}

 

இந்த    வசனங்களினிமித்தம்    யூதருக்குள்ளே<Jews>    மறுபடியும்    பிரிவினையுண்டாயிற்று.    {John    10:19}

 

அவர்களில்    அநேகர்:    இவன்    பிசாசுபிடித்தவன்,    பயித்தியக்காரன்;    ஏன்    இவனுக்குச்    செவிகொடுக்கிறீர்கள்    என்றார்கள்.    {John    10:20}

 

வேறே    சிலர்:    இவைகள்    பிசாசுபிடித்தவனுடைய    வசனங்களல்லவே.    குருடருடைய    கண்களைப்    பிசாசு    திறக்கக்கூடுமா    என்றார்கள்.    {John    10:21}

 

பின்பு    எருசலேமிலே<Jerusalem>    தேவாலயப்    பிரதிஷ்டைபண்டிகை    வந்தது;    மாரிகாலமுமாயிருந்தது.    {John    10:22}

 

இயேசு<Jesus>    தேவாலயத்தில்    சாலொமோனுடைய<Solomon>    மண்டபத்திலே    உலாவிக்கொண்டிருந்தார்.    {John    10:23}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>    அவரைச்    சூழ்ந்துகொண்டு:    எதுவரைக்கும்    எங்கள்    ஆத்துமாவுக்குச்    சந்தேகம்    உண்டாக்குகிறீர்,    நீர்    கிறிஸ்துவானால்<Christ>    எங்களுக்குத்    தெளிவாய்ச்    சொல்லும்    என்றார்கள்.    {John    10:24}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    அதை    உங்களுக்குச்    சொன்னேன்,    நீங்கள்    விசுவாசிக்கவில்லை;    என்    பிதாவின்    நாமத்தினாலே    நான்    செய்கிற    கிரியைகளே    என்னைக்குறித்துச்    சாட்சிகொடுக்கிறது.    {John    10:25}

 

ஆனாலும்,    நான்    உங்களுக்குச்    சொன்னபடியே,    நீங்கள்    என்    மந்தையின்    ஆடுகளாயிராதபடியினால்    விசுவாசியாமலிருக்கிறீர்கள்.    {John    10:26}

 

என்    ஆடுகள்    என்    சத்தத்திற்குச்    செவிகொடுக்கிறது;    நான்    அவைகளை    அறிந்திருக்கிறேன்,    அவைகள்    எனக்குப்    பின்செல்லுகிறது.    {John    10:27}

 

நான்    அவைகளுக்கு    நித்தியஜீவனைக்    கொடுக்கிறேன்;    அவைகள்    ஒருக்காலும்    கெட்டுப்போவதில்லை,    ஒருவனும்    அவைகளை    என்    கையிலிருந்து    பறித்துக்    கொள்வதுமில்லை.    {John    10:28}

 

அவைகளை    எனக்குத்    தந்த    என்    பிதா    எல்லாரிலும்    பெரியவராயிருக்கிறார்;    அவைகளை    என்    பிதாவின்    கையிலிருந்து    பறித்துக்கொள்ள    ஒருவனாலும்    கூடாது.    {John    10:29}

 

நானும்    பிதாவும்    ஒன்றாயிருக்கிறோம்    என்றார்.    {John    10:30}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>    மறுபடியும்    அவர்மேல்    கல்லெறியும்படி,    கல்லுகளை    எடுத்துக்கொண்டார்கள்.    {John    10:31}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நான்    என்    பிதாவினாலே    அநேக    நற்கிரியைகளை    உங்களுக்குக்    காண்பித்தேன்,    அவைகளில்    எந்தக்    கிரியையினிமித்தம்    என்மேல்    கல்லெறிகிறீர்கள்    என்றார்.    {John    10:32}

 

யூதர்கள்<Jews>    அவருக்குப்    பிரதியுத்தரமாக:    நற்கிரியையினிமித்தம்    நாங்கள்    உன்மேல்    கல்லெறிகிறதில்லை;    நீ    மனுஷனாயிருக்க,    உன்னைத்    தேவன்    என்று    சொல்லி,    இவ்விதமாகத்    தேவதூஷணஞ்    சொல்லுகிறபடியினால்    உன்மேல்    கல்லெறிகிறோம்    என்றார்கள்.    {John    10:33}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    தேவர்களாயிருக்கிறீர்கள்    என்று    நான்    சொன்னேன்    என்பதாய்    உங்கள்    வேதத்தில்    எழுதியிருக்கவில்லையா?    {John    10:34}

 

தேவவசனத்தைப்    பெற்றுக்கொண்டவர்களைத்    தேவர்கள்    என்று    அவர்    சொல்லியிருக்க,    வேதவாக்கியமும்    தவறாததாயிருக்க,    {John    10:35}

 

பிதாவினால்    பரிசுத்தமாக்கப்பட்டும்,    உலகத்தில்    அனுப்பப்பட்டும்    இருக்கிற    நான்    என்னைத்    தேவனுடைய    குமாரன்    என்று    சொன்னதினாலே    தேவதூஷணஞ்    சொன்னாய்    என்று    நீங்கள்    சொல்லலாமா?    {John    10:36}

 

என்    பிதாவின்    கிரியைகளை    நான்    செய்யாதிருந்தால்,    நீங்கள்    என்னை    விசுவாசிக்கவேண்டியதில்லை.    {John    10:37}

 

செய்தேனேயானால்,    நீங்கள்    என்னை    விசுவாசியாதிருந்தாலும்,    பிதா    என்னிலும்    நான்    அவரிலும்    இருக்கிறதை    நீங்கள்    அறிந்து    விசுவாசிக்கும்படி    அந்தக்    கிரியைகளை    விசுவாசியுங்கள்    என்றார்.    {John    10:38}

 

இதினிமித்தம்    அவர்கள்    மறுபடியும்    அவரைப்    பிடிக்கத்    தேடினார்கள்,    அவரோ    அவர்கள்    கைக்குத்    தப்பி,    {John    10:39}

 

யோர்தானுக்கு<Jordan>    அக்கரையிலே    முன்னே    யோவான்<John>    ஞானஸ்நானங்    கொடுத்துக்கொண்டிருந்த    இடத்துக்குத்    திரும்பிப்போய்,    அங்கே    தங்கினார்.    {John    10:40}

 

அநேகர்    அவரிடத்தில்    வந்து:    யோவான்<John>    ஒரு    அற்புதத்தையும்    செய்யவில்லை;    ஆகிலும்    இவரைக்குறித்து    யோவான்<John>    சொன்னதெல்லாம்    மெய்யாயிருக்கிறது    என்றார்கள்.    {John    10:41}

 

அவ்விடத்திலே    அநேகர்    அவரிடத்தில்    விசுவாசமுள்ளவர்களானார்கள்.    {John    10:42}

 

மரியாளும்<Mary>    அவள்    சகோதரியாகிய    மார்த்தாளும்<Martha>    இருந்த    பெத்தானியா<Bethany>    கிராமத்திலுள்ளவனாகிய    லாசரு<Lazarus>    என்னும்    ஒருவன்    வியாதிப்பட்டிருந்தான்.    {John    11:1}

 

கர்த்தருக்குப்    பரிமளதைலம்    பூசி,    தன்    தலைமயிரால்    அவருடைய    பாதங்களைத்    துடைத்தவள்    அந்த    மரியாளே<Mary>;    அவளுடைய    சகோதரனாகிய    லாசரு<Lazarus>    வியாதியாயிருந்தான்.    {John    11:2}

 

அப்பொழுது    அவனுடைய    சகோதரிகள்:    ஆண்டவரே,    நீர்    சிநேகிக்கிறவன்    வியாதியாயிருக்கிறான்    என்று    சொல்ல,    அவரிடத்திற்கு    ஆள்    அனுப்பினார்கள்.    {John    11:3}

 

இயேசு<Jesus>    அதைக்    கேட்டபொழுது:    இந்த    வியாதி    மரணத்துக்கு    ஏதுவாயிராமல்    தேவனுடைய    மகிமை    விளங்குவதற்கு    ஏதுவாயிருக்கிறது;    தேவனுடைய    குமாரனும்    அதினால்    மகிமைப்படுவார்    என்றார்.    {John    11:4}

 

இயேசு<Jesus>    மார்த்தாளிடத்திலும்<Martha>    அவளுடைய    சகோதரியினிடத்திலும்    லாசருவினிடத்திலும்<Lazarus>    அன்பாயிருந்தார்.    {John    11:5}

 

அவன்    வியாதியாயிருக்கிறதாக    அவர்    கேள்விப்பட்டபொழுது,    தாம்    இருந்த    இடத்திலே    பின்னும்    இரண்டுநாள்    தங்கினார்.    {John    11:6}

 

அதன்பின்பு    அவர்    தம்முடைய    சீஷரை    நோக்கி:    நாம்    மறுபடியும்    யூதேயாவுக்குப்<Judaea>    போவோம்    வாருங்கள்    என்றார்.    {John    11:7}

 

அதற்குச்    சீஷர்கள்:    ரபீ<Rabbi//Master>,    இப்பொழுதுதான்    யூதர்<Jews>    உம்மைக்    கல்லெறியத்    தேடினார்களே,    மறுபடியும்    நீர்    அவ்விடத்திற்குப்    போகலாமா    என்றார்கள்.    {John    11:8}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    பகலுக்குப்    பன்னிரண்டு    மணிநேரம்    இல்லையா?    ஒருவன்    பகலிலே    நடந்தால்    அவன்    இந்த    உலகத்தின்    வெளிச்சத்தைக்    காண்கிறபடியினால்    இடறமாட்டான்.    {John    11:9}

 

ஒருவன்    இரவிலே    நடந்தால்    தன்னிடத்தில்    வெளிச்சம்    இல்லாதபடியினால்    இடறுவான்    என்றார்.    {John    11:10}

 

இவைகளை    அவர்    சொல்லியபின்பு    அவர்களை    நோக்கி:    நம்முடைய    சிநேகிதனாகிய    லாசரு<Lazarus>    நித்திரையடைந்திருக்கிறான்,    நான்    அவனை    எழுப்பப்போகிறேன்    என்றார்.    {John    11:11}

 

அதற்கு    அவருடைய    சீஷர்கள்:    ஆண்டவரே,    நித்திரையடைந்திருந்தால்    சுகமடைவான்    என்றார்கள்.    {John    11:12}

 

இயேசுவானவர்<Jesus>    அவனுடைய    மரணத்தைக்குறித்து    அப்படிச்    சொன்னார்;    அவர்களோ    நித்திரைசெய்து    இளைப்பாறுகிறதைக்குறித்துச்    சொன்னாரென்று    நினைத்தார்கள்.    {John    11:13}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    லாசரு<Lazarus>    மரித்துப்போனான்    என்று    வெளிப்படையாய்ச்    சொல்லி;    {John    11:14}

 

நான்    அங்கே    இராததினால்    நீங்கள்    விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு    ஏதுவுண்டென்று    உங்கள்நிமித்தம்    சந்தோஷப்படுகிறேன்;    இப்பொழுது    அவனிடத்திற்குப்    போவோம்    வாருங்கள்    என்றார்.    {John    11:15}

 

அப்பொழுது    திதிமு<Didymus>    என்னப்பட்ட    தோமா<Thomas>    மற்றச்    சீஷர்களை    நோக்கி:    அவரோடேகூட    மரிக்கும்படி    நாமும்    போவோம்    வாருங்கள்    என்றான்.    {John    11:16}

 

இயேசு<Jesus>    வந்தபோது    அவன்    கல்லறையில்    வைக்கப்பட்டு    நாலுநாளாயிற்றென்று    கண்டார்.    {John    11:17}

 

பெத்தானியா<Bethany>    ஊர்    எருசலேமுக்குச்<Jerusalem>    சமீபமாய்    ஏறக்குறைய    இரண்டுமைல்    தூரத்திலிருந்தது.    {John    11:18}

 

யூதரில்<Jews>    அநேகர்    மார்த்தாள்<Martha>    மரியாள்<Mary>    என்பவர்களுடைய    சகோதரனைக்    குறித்து    அவர்களுக்கு    ஆறுதல்    சொல்லும்படி    அவர்களிடத்தில்    வந்திருந்தார்கள்.    {John    11:19}

 

இயேசு<Jesus>    வருகிறார்    என்று    மார்த்தாள்<Martha>    கேள்விப்பட்டபோது,    அவருக்கு    எதிர்கொண்டுபோனாள்;    மரியாளோ<Mary>    வீட்டிலே    உட்கார்ந்திருந்தாள்.    {John    11:20}

 

மார்த்தாள்<Martha>    இயேசுவினிடத்தில்<Jesus>    வந்து:    ஆண்டவரே,    நீர்    இங்கேயிருந்தீரானால்    என்    சகோதரன்    மரிக்கமாட்டான்.    {John    11:21}

 

இப்பொழுதும்    நீர்    தேவனிடத்தில்    கேட்டுக்கொள்ளுவதெதுவோ    அதைத்    தேவன்    உமக்குத்    தந்தருளுவாரென்று    அறிந்திருக்கிறேன்    என்றாள்.    {John    11:22}

 

இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    உன்    சகோதரன்    உயிர்த்தெழுந்திருப்பான்    என்றார்.    {John    11:23}

 

அதற்கு    மார்த்தாள்<Martha>:    உயிர்த்தெழுதல்    நடக்கும்    கடைசிநாளிலே    அவனும்    உயிர்த்தெழுந்திருப்பான்    என்று    அறிந்திருக்கிறேன்    என்றாள்.    {John    11:24}

 

இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    நானே    உயிர்த்தெழுதலும்    ஜீவனுமாயிருக்கிறேன்,    என்னை    விசுவாசிக்கிறவன்    மரித்தாலும்    பிழைப்பான்;    {John    11:25}

 

உயிரோடிருந்து    என்னை    விசுவாசிக்கிறவனெவனும்    என்றென்றைக்கும்    மரியாமலும்    இருப்பான்;    இதை    விசுவாசிக்கிறாயா    என்றார்.    {John    11:26}

 

அதற்கு    அவள்:    ஆம்,    ஆண்டவரே,    நீர்    உலகத்தில்    வருகிறவரான    தேவகுமாரனாகிய    கிறிஸ்து<Christ>    என்று    நான்    விசுவாசிக்கிறேன்    என்றாள்.    {John    11:27}

 

இவைகளைச்    சொன்னபின்பு,    அவள்போய்,    தன்    சகோதரியாகிய    மரியாளை<Mary>    இரகசியமாய்    அழைத்து:    போதகர்    வந்திருக்கிறார்,    உன்னை    அழைக்கிறார்    என்றாள்.    {John    11:28}

 

அவள்    அதைக்    கேட்டவுடனே,    சீக்கிரமாய்    எழுந்து,    அவரிடத்தில்    வந்தாள்.    {John    11:29}

 

இயேசு<Jesus>    இன்னும்    கிராமத்துக்குள்    வராமல்,    மார்த்தாள்<Martha>    தம்மைச்    சந்தித்த    இடத்திலே    இருந்தார்.    {John    11:30}

 

அப்பொழுது,    வீட்டிலே    அவளுடனேகூட    இருந்து    அவளுக்கு    ஆறுதல்    சொல்லிக்கொண்டிருந்த    யூதர்கள்<Jews>,    மரியாள்<Mary>    சீக்கிரமாய்    எழுந்துபோகிறதைக்    கண்டு:    அவள்    கல்லறையினிடத்தில்    அழுகிறதற்குப்    போகிறாள்    என்று    சொல்லி,    அவளுக்குப்    பின்னே    போனார்கள்.    {John    11:31}

 

இயேசு<Jesus>    இருந்த    இடத்தில்    மரியாள்<Mary>    வந்து,    அவரைக்    கண்டவுடனே,    அவர்    பாதத்தில்    விழுந்து:    ஆண்டவரே,    நீர்    இங்கே    இருந்தீரானால்    என்    சகோதரன்    மரிக்கமாட்டான்    என்றாள்.    {John    11:32}

 

அவள்    அழுகிறதையும்    அவளோடேகூட    வந்த    யூதர்கள்<Jews>    அழுகிறதையும்    இயேசு<Jesus>    கண்டபோது    ஆவியிலே    கலங்கித்    துயரமடைந்து:    {John    11:33}

 

அவனை    எங்கே    வைத்தீர்கள்    என்றார்.    ஆண்டவரே,    வந்து    பாரும்    என்றார்கள்.    {John    11:34}

 

இயேசு<Jesus>    கண்ணீர்    விட்டார்.    {John    11:35}

 

அப்பொழுது    யூதர்கள்<Jews>:    இதோ,    இவர்    அவனை    எவ்வளவாய்ச்    சிநேகித்தார்    என்றார்கள்!    {John    11:36}

 

அவர்களில்    சிலர்:    குருடனுடைய    கண்களைத்    திறந்த    இவர்,    இவனைச்    சாகாமலிருக்கப்பண்ணவும்    கூடாதா    என்றார்கள்.    {John    11:37}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    மறுபடியும்    தமக்குள்ளே    கலங்கிக்    கல்லறையினிடத்திற்கு    வந்தார்.    அது    ஒரு    குகையாயிருந்தது;    அதின்மேல்    ஒரு    கல்    வைக்கப்பட்டிருந்தது.    {John    11:38}

 

இயேசு<Jesus>:    கல்லை    எடுத்துப்போடுங்கள்    என்றார்.    மரித்தவனுடைய    சகோதரியாகிய    மார்த்தாள்<Martha>    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    இப்பொழுது    நாறுமே,    நாலுநாளாயிற்றே    என்றாள்.    {John    11:39}

 

இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    நீ    விசுவாசித்தால்    தேவனுடைய    மகிமையைக்    காண்பாய்    என்று    நான்    உனக்குச்    சொல்லவில்லையா    என்றார்.    {John    11:40}

 

அப்பொழுது    மரித்தவன்    வைக்கப்பட்ட    இடத்திலிருந்த    கல்லை    எடுத்துப்போட்டார்கள்.    இயேசு<Jesus>    தம்முடைய    கண்களை    ஏறெடுத்து:    பிதாவே,    நீர்    எனக்குச்    செவிகொடுத்தபடியினால்    உம்மை    ஸ்தோத்திரிக்கிறேன்.    {John    11:41}

 

நீர்    எப்பொழுதும்    எனக்குச்    செவிகொடுக்கிறீர்    என்று    நான்    அறிந்திருக்கிறேன்;    ஆனாலும்    நீர்    என்னை    அனுப்பினதைச்    சூழ்ந்துநிற்கும்    ஜனங்கள்    விசுவாசிக்கும்படியாக    அவர்கள்    நிமித்தம்    இதைச்    சொன்னேன்    என்றார்.    {John    11:42}

 

இவைகளைச்    சொன்னபின்பு:    லாசருவே<Lazarus>,    வெளியே    வா    என்று,    உரத்த    சத்தமாய்க்    கூப்பிட்டார்.    {John    11:43}

 

அப்பொழுது,    மரித்தவன்    வெளியே    வந்தான்.    அவன்    கால்களும்    கைகளும்    பிரேதச்    சீலைகளினால்    கட்டப்பட்டிருந்தது,    அவன்    முகமும்    சீலையால்    சுற்றப்பட்டிருந்தது.    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    இவனைக்    கட்டவிழ்த்துவிடுங்கள்    என்றார்.    {John    11:44}

 

அப்பொழுது    மரியாளிடத்தில்<Mary>    வந்திருந்து,    இயேசு<Jesus>    செய்தவைகளைக்    கண்டவர்களாகிய    யூதர்களில்<Jews>    அநேகர்    அவரிடத்தில்    விசுவாசமுள்ளவர்களானார்கள்.    {John    11:45}

 

அவர்களில்    சிலர்    பரிசேயரிடத்தில்<Pharisees>    போய்,    இயேசு<Jesus>    செய்தவைகளை    அவர்களுக்கு    அறிவித்தார்கள்.    {John    11:46}

 

அப்பொழுது    பிரதான    ஆசாரியரும்    பரிசேயரும்<Pharisees>    ஆலோசனைச்    சங்கத்தைக்    கூடிவரச்செய்து,    நாம்    என்னசெய்கிறது?    இந்த    மனுஷன்    அநேக    அற்புதங்களைச்    செய்கிறானே.    {John    11:47}

 

நாம்    இவனை    இப்படி    விட்டுவிட்டால்,    எல்லாரும்    இவனை    விசுவாசிப்பார்கள்;    அப்பொழுது    ரோமர்<Romans>    வந்து    நம்முடைய    ஸ்தானத்தையும்    ஜனத்தையும்    அழித்துப்    போடுவார்களே    என்றார்கள்.    {John    11:48}

 

அப்பொழுது    அவர்களில்    ஒருவனும்    அந்த    வருஷத்துப்    பிரதான    ஆசாரியனுமாகிய    காய்பா<Caiaphas>    என்பவன்    அவர்களை    நோக்கி:    உங்களுக்கு    ஒன்றுந்    தெரியாது;    {John    11:49}

 

ஜனங்களெல்லாரும்    கெட்டுப்போகாதபடிக்கு    ஒரே    மனுஷன்    ஜனங்களுக்காக    மரிப்பது    நமக்கு    நலமாயிருக்குமென்று    நீங்கள்    சிந்தியாமலிருக்கிறீர்கள்    என்றான்.    {John    11:50}

 

இதை    அவன்    சுயமாய்ச்    சொல்லாமல்,    அந்த    வருஷத்துப்    பிரதான    ஆசாரியனானபடியினாலே    இயேசு<Jesus>    யூதஜனங்களுக்காக<Jewish>    மரிக்கப்போகிறாரென்றும்,    {John    11:51}

 

அந்த    ஜனங்களுக்காகமாத்திரமல்ல,    சிதறியிருக்கிற    தேவனுடைய    பிள்ளைகளை    ஒன்றாகச்    சேர்க்கிறதற்காகவும்    மரிக்கப்போகிறாரென்றும்,    தீர்க்கதரிசனமாய்ச்    சொன்னான்.    {John    11:52}

 

அந்நாள்முதல்    அவரைக்    கொலைசெய்யும்படிக்கு    ஆலோசனைபண்ணினார்கள்.    {John    11:53}

 

ஆகையால்    இயேசு<Jesus>    அதன்பின்பு    வெளியரங்கமாய்    யூதருக்குள்ளே<Jews>    சஞ்சரியாமல்,    அவ்விடம்விட்டு    வனாந்தரத்துக்குச்    சமீபமான    இடமாகிய    எப்பிராயீம்<Ephraim>    என்னப்பட்ட    ஊருக்குப்போய்,    அங்கே    தம்முடைய    சீஷருடனேகூடத்    தங்கியிருந்தார்.    {John    11:54}

 

யூதருடைய<Jews>    பஸ்காபண்டிகை    சமீபமாயிருந்தது.    அதற்கு    முன்னே    அநேகர்    தங்களைச்    சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு    நாட்டிலிருந்து    எருசலேமுக்குப்<Jerusalem>    போனார்கள்.    {John    11:55}

 

அங்கே    அவர்கள்    இயேசுவைத்<Jesus>    தேடிக்கொண்டு    தேவாலயத்தில்    நிற்கையில்,    ஒருவரையொருவர்    நோக்கி:    உங்களுக்    கெப்படித்    தோன்றுகிறது,    அவர்    பண்டிகைக்கு    வரமாட்டாரோ    என்று    பேசிக்கொண்டார்கள்.    {John    11:56}

 

பிரதான    ஆசாரியரும்    பரிசேயரும்<Pharisees>    அவரைப்    பிடிக்கும்படி    யோசித்து,    அவர்    இருக்கிற    இடத்தை    எவனாவது    அறிந்திருந்தால்,    அதை    அறிவிக்கவேண்டுமென்று    கட்டளையிட்டிருந்தார்கள்.    {John    11:57}

 

பஸ்காபண்டிகை    வர    ஆறுநாளைக்கு    முன்னே    இயேசு<Jesus>    தாம்    மரணத்திலிருந்து    எழுப்பின    லாசரு<Lazarus>    இருந்த    பெத்தானியாவுக்கு<Bethany>    வந்தார்.    {John    12:1}

 

அங்கே    அவருக்கு    இராவிருந்து    பண்ணினார்கள்;    மார்த்தாள்<Martha>    பணிவிடை    செய்தாள்;    லாசருவும்<Lazarus>    அவருடனேகூடப்    பந்தியிருந்தவர்களில்    ஒருவனாயிருந்தான்.    {John    12:2}

 

அப்பொழுது    மரியாள்<Mary>    விலையேறப்பெற்ற    களங்கமில்லாத    நளதம்    என்னும்    தைலத்தில்    ஒரு    இராத்தல்    கொண்டுவந்து,    அதை    இயேசுவின்<Jesus>    பாதங்களில்    பூசி,    தன்    தலைமயிரால்    அவருடைய    பாதங்களைத்    துடைத்தாள்;    அந்த    வீடு    முழுவதும்    தைலத்தின்    பரிமளத்தினால்    நிறைந்தது.    {John    12:3}

 

அப்பொழுது    அவருடைய    சீஷரில்    ஒருவனும்    அவரைக்    காட்டிக்கொடுக்கப்    போகிறவனுமாகிய    சீமோனுடைய<Simon>    குமாரனான    யூதாஸ்காரியோத்து<Judas    Iscariot>:    {John    12:4}

 

இந்தத்    தைலத்தை    முந்நூறு    பணத்துக்கு    விற்று,    தரித்திரருக்குக்    கொடாமல்    போனதென்ன    என்றான்.    {John    12:5}

 

அவன்    தரித்திரரைக்குறித்துக்    கவலைப்பட்டு    இப்படிச்    சொல்லாமல்,    அவன்    திருடனானபடியினாலும்,    பணப்பையை    வைத்துக்கொண்டு    அதிலே    போடப்பட்டதைச்    சுமக்கிறவனானபடியினாலும்    இப்படிச்    சொன்னான்.    {John    12:6}

 

அப்பொழுது    இயேசு<Jesus>:    இவளை    விட்டுவிடு,    என்னை    அடக்கம்பண்ணும்    நாளுக்காக    இதை    வைத்திருந்தாள்.    {John    12:7}

 

தரித்திரர்    எப்பொழுதும்    உங்களிடத்தில்    இருக்கிறார்கள்;    நான்    எப்பொழுதும்    உங்களிடத்தில்    இரேன்    என்றார்.    {John    12:8}

 

அப்பொழுது    யூதரில்<Jews>    திரளான    ஜனங்கள்    அவர்    அங்கேயிருக்கிறதை    அறிந்து,    இயேசுவினிமித்தமாகமாத்திரம்<Jesus>    அல்ல,    அவர்    மரித்தோரிலிருந்தெழுப்பின    லாசருவைக்<Lazarus>    காணும்படியாகவும்    வந்தார்கள்.    {John    12:9}

 

லாசருவினிமித்தமாக<Lazarus>    யூதர்களில்<Jews>    அநேகர்    போய்,    இயேசுவினிடத்தில்<Jesus>    விசுவாசம்    வைத்தபடியால்,    {John    12:10}

 

பிரதான    ஆசாரியர்கள்    லாசருவையும்<Lazarus>    கொலைசெய்ய    ஆலோசனைபண்ணினார்கள்.    {John    12:11}

 

மறுநாளிலே    இயேசு<Jesus>    எருசலேமுக்கு<Jerusalem>    வருகிறாரென்று    பண்டிகைக்கு    வந்த    திரளான    ஜனங்கள்    கேள்விப்பட்டு,    {John    12:12}

 

குருத்தோலைகளைப்    பிடித்துக்கொண்டு,    அவருக்கு    எதிர்கொண்டுபோகும்படி    புறப்பட்டு:    ஓசன்னா<Hosanna>,    கர்த்தருடைய    நாமத்தினாலே    வருகிற    இஸ்ரவேலின்<Israel>    ராஜா    ஸ்தோத்திரிக்கப்பட்டவர்    என்று    ஆர்ப்பரித்தார்கள்.    {John    12:13}

 

அல்லாமலும்:    சீயோன்<Sion>    குமாரத்தியே,    பயப்படாதே,    உன்    ராஜா    கழுதைக்குட்டியின்மேல்    ஏறிவருகிறார்    என்று    எழுதியிருக்கிறபிரகாரமாக,    {John    12:14}

 

இயேசு<Jesus>    ஒரு    கழுதைக்குட்டியைக்    கண்டு    அதின்மேல்    ஏறிப்போனார்.    {John    12:15}

 

இவைகளை    அவருடைய    சீஷர்கள்    துவக்கத்திலே    அறியவில்லை.    இயேசு<Jesus>    மகிமையடைந்த    பின்பு,    இப்படி    அவரைக்    குறித்து    எழுதியிருக்கிறதையும்,    தாங்கள்    இப்படி    அவருக்குச்    செய்ததையும்    நினைவுகூர்ந்தார்கள்.    {John    12:16}

 

அன்றியும்    அவருடனேகூட    இருந்த    ஜனங்கள்    அவர்    லாசருவைக்<Lazarus>    கல்லறையிலிருந்து    வெளியே    வரவழைத்து,    அவனை    உயிரோடே    எழுப்பினாரென்று    சாட்சிகொடுத்தார்கள்.    {John    12:17}

 

அப்படிப்பட்ட    அற்புதத்தை    அவர்    செய்தார்    என்று    ஜனங்கள்    கேள்விப்பட்டதினால்    அவர்கள்    அவருக்கு    எதிர்கொண்டு    போனார்கள்.    {John    12:18}

 

அப்பொழுது    பரிசேயர்<Pharisees>    ஒருவரையொருவர்    நோக்கி:    நீங்கள்    செய்கிறதெல்லாம்    வீணென்று    அறிகிறதில்லையா?    இதோ,    உலகமே    அவனுக்குப்    பின்சென்று    போயிற்றே    என்றார்கள்.    {John    12:19}

 

பண்டிகையில்    ஆராதனை    செய்யவந்தவர்களில்    சில    கிரேக்கர்<Greeks>    இருந்தார்கள்.    {John    12:20}

 

அவர்கள்    கலிலேயாநாட்டுப்<Galilee>    பெத்சாயிதா<Bethsaida>    ஊரானாகிய    பிலிப்புவினிடத்தில்<Philip>    வந்து:    ஐயா,    இயேசுவைக்<Jesus>    காண    விரும்புகிறோம்    என்று    அவனைக்    கேட்டுக்கொண்டார்கள்.    {John    12:21}

 

பிலிப்பு<Philip>    வந்து,    அதை    அந்திரேயாவுக்கு<Andrew>    அறிவித்தான்;    பின்பு    அந்திரேயாவும்<Andrew>    பிலிப்புவும்<Philip>    அதை    இயேசுவுக்கு<Jesus>    அறிவித்தார்கள்.    {John    12:22}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    மனுஷகுமாரன்    மகிமைப்படும்படியான    வேளை    வந்தது.    {John    12:23}

 

மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்,    கோதுமை    மணியானது    நிலத்தில்    விழுந்து    சாகாவிட்டால்    தனித்திருக்கும்,    செத்ததேயாகில்    மிகுந்த    பலனைக்கொடுக்கும்.    {John    12:24}

 

தன்    ஜீவனைச்    சிநேகிக்கிறவன்    அதை    இழந்துபோவான்;    இந்த    உலகத்தில்    தன்    ஜீவனை    வெறுக்கிறவனோ    அதை    நித்திய    ஜீவகாலமாய்க்    காத்துக்கொள்ளுவான்.    {John    12:25}

 

ஒருவன்    எனக்கு    ஊழியஞ்செய்கிறவனானால்    என்னைப்    பின்பற்றக்கடவன்,    நான்    எங்கே    இருக்கிறேனோ    அங்கே    என்    ஊழியக்காரனும்    இருப்பான்;    ஒருவன்    எனக்கு    ஊழியஞ்செய்தால்    அவனைப்    பிதாவானவர்    கனம்பண்ணுவார்.    {John    12:26}

 

இப்பொழுது    என்    ஆத்துமா    கலங்குகிறது,    நான்    என்ன    சொல்லுவேன்.    பிதாவே,    இந்த    வேளையினின்று    என்னை    இரட்சியும்    என்று    சொல்வேனோ;    ஆகிலும்,    இதற்காகவே    இந்த    வேளைக்குள்    வந்தேன்.    {John    12:27}

 

பிதாவே,    உமது    நாமத்தை    மகிமைப்படுத்தும்    என்றார்.    அப்பொழுது:    மகிமைப்படுத்தினேன்,    இன்னமும்    மகிமைப்படுத்துவேன்    என்கிற    சத்தம்    வானத்திலிருந்து    உண்டாயிற்று.    {John    12:28}

 

அங்கே    நின்றுகொண்டிருந்து,    அதைக்    கேட்ட    ஜனங்கள்:    இடிமுழக்கமுண்டாயிற்று    என்றார்கள்.    வேறுசிலர்:    தேவதூதன்    அவருடனே    பேசினான்    என்றார்கள்.    {John    12:29}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    இந்தச்    சத்தம்    என்னிமித்தம்    உண்டாகாமல்    உங்கள்    நிமித்தமே    உண்டாயிற்று.    {John    12:30}

 

இப்பொழுதே    இந்த    உலகத்துக்கு    நியாயத்தீர்ப்பு    உண்டாகிறது;    இப்பொழுதே    இந்த    உலகத்தின்    அதிபதி    புறம்பாகத்    தள்ளப்படுவான்.    {John    12:31}

 

நான்    பூமியிலிருந்து    உயர்த்தப்பட்டிருக்கும்போது,    எல்லாரையும்    என்னிடத்தில்    இழுத்துக்கொள்ளுவேன்    என்றார்.    {John    12:32}

 

தாம்    இன்னவிதமான    மரணமாய்    மரிக்கப்போகிறாரென்பதைக்    குறிக்கும்படி    இப்படிச்    சொன்னார்.    {John    12:33}

 

ஜனங்கள்    அவரை    நோக்கி:    கிறிஸ்து<Christ>    என்றென்றைக்கும்    இருக்கிறார்    என்று    வேதத்தில்    சொல்லியதை    நாங்கள்    கேட்டிருக்கிறோம்,    அப்படியிருக்க    மனுஷகுமாரன்    உயர்த்தப்படவேண்டியதென்று    எப்படிச்    சொல்லுகிறீர்;    இந்த    மனுஷகுமாரன்    யார்    என்றார்கள்.    {John    12:34}

 

அதற்கு    இயேசு<Jesus>:    இன்னும்    கொஞ்சக்காலம்    ஒளி    உங்களிடத்தில்    இருக்கும்;    இருளில்    நீங்கள்    அகப்படாதபடிக்கு    ஒளி    உங்களோடிருக்கையில்    நடவுங்கள்;    இருளில்    நடக்கிறவன்    தான்    போகிற    இடம்    இன்னதென்று    அறியான்.    {John    12:35}

 

ஒளி    உங்களோடிருக்கையில்    நீங்கள்    ஒளியின்    பிள்ளைகளாகும்படிக்கு,    ஒளியினிடத்தில்    விசுவாசமாயிருங்கள்    என்றார்.    இவைகளை    இயேசு<Jesus>    சொல்லி,    அவர்களை    விட்டு    மறைந்தார்.    {John    12:36}

 

அவர்    இத்தனை    அற்புதங்களை    அவர்களுக்கு    முன்பாகச்    செய்திருந்தும்,    அவர்கள்    அவரை    விசுவாசிக்கவில்லை.    {John    12:37}

 

கர்த்தாவே,    எங்கள்    மூலமாய்க்    கேள்விப்பட்டதை    விசுவாசித்தவன்    யார்?    கர்த்தருடைய    புயம்    யாருக்கு    வெளிப்பட்டது    என்று    ஏசாயா<Esaias>    தீர்க்கதரிசி    சொன்ன    வசனம்    நிறைவேறும்படி    இப்படி    நடந்தது.    {John    12:38}

 

ஆகையால்    அவர்கள்    விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள்.    ஏனெனில்    ஏசாயா<Esaias>    பின்னும்:    {John    12:39}

 

அவர்கள்    கண்களினால்    காணாமலும்,    இருதயத்தினால்    உணராமலும்,    குணப்படாமலும்    இருக்கும்படிக்கும்,    நான்    அவர்களை    ஆரோக்கியமாக்காமல்    இருக்கும்படிக்கும்,    அவர்களுடைய    கண்களை    அவர்    குருடாக்கி,    அவர்கள்    இருதயத்தைக்    கடினமாக்கினார்    என்றான்.    {John    12:40}

 

ஏசாயா<Esaias>    அவருடைய    மகிமையைக்கண்டு,    அவரைக்குறித்துப்    பேசுகிறபோது    இவைகளைச்    சொன்னான்.    {John    12:41}

 

ஆகிலும்    அதிகாரிகளிலும்    அநேகர்    அவரிடத்தில்    விசுவாசம்    வைத்தார்கள்.    அப்படியிருந்தும்    ஜெபஆலயத்துக்குப்    புறம்பாக்கப்படாதபடி,    பரிசேயர்நிமித்தம்<Pharisees>    அதை    அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.    {John    12:42}

 

அவர்கள்    தேவனால்    வருகிற    மகிமையிலும்    மனுஷரால்    வருகிற    மகிமையை    அதிகமாய்    விரும்பினார்கள்.    {John    12:43}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    சத்தமிட்டு:    என்னிடத்தில்    விசுவாசமாயிருக்கிறவன்    என்னிடத்தில்    அல்ல,    என்னை    அனுப்பினவரிடத்தில்    விசுவாசமாயிருக்கிறான்.    {John    12:44}

 

என்னைக்    காண்கிறவன்    என்னை    அனுப்பினவரைக்    காண்கிறான்.    {John    12:45}

 

என்னிடத்தில்    விசுவாசமாயிருக்கிறவனெவனும்    இருளில்    இராதபடிக்கு,    நான்    உலகத்தில்    ஒளியாக    வந்தேன்.    {John    12:46}

 

ஒருவன்    என்    வார்த்தைகளைக்    கேட்டும்    விசுவாசியாமற்போனால்,    அவனை    நான்    நியாயந்தீர்ப்பதில்லை;    நான்    உலகத்தை    நியாயந்தீர்க்கவராமல்,    உலகத்தை    இரட்சிக்கவந்தேன்.    {John    12:47}

 

என்னைத்    தள்ளி    என்    வார்த்தைகளை    ஏற்றுக்கொள்ளாதவனை    நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது;    நான்    சொன்ன    வசனமே    அவனைக்    கடைசிநாளில்    நியாயந்தீர்க்கும்.    {John    12:48}

 

நான்    சுயமாய்ப்    பேசவில்லை,    நான்    பேசவேண்டியது    இன்னதென்றும்    உபதேசிக்கவேண்டியது    இன்னதென்றும்    என்னை    அனுப்பின    பிதாவே    எனக்குக்    கட்டளையிட்டார்.    {John    12:49}

 

அவருடைய    கட்டளை    நித்திய    ஜீவனாயிருக்கிறதென்று    அறிவேன்;    ஆகையால்    நான்    பேசுகிறவைகளைப்    பிதா    எனக்குச்    சொன்னபடியே    பேசுகிறேன்    என்றார்.    {John    12:50}

 

பஸ்கா    பண்டிகைக்கு    முன்னே,    இயேசு<Jesus>    இவ்வுலகத்தைவிட்டுப்    பிதாவினிடத்திற்குப்    போகும்படியான    தம்முடைய    வேளை    வந்ததென்று    அறிந்து,    தாம்    இவ்வுலகத்திலிருக்கிற    தம்முடையவர்களிடத்தில்    அன்புவைத்தபடியே,    முடிவுபரியந்தமும்    அவர்களிடத்தில்    அன்புவைத்தார்.    {John    13:1}

 

சீமோனின்<Simon>    குமாரனாகிய    யூதாஸ்காரியோத்து<Judas    Iscariot>    அவரைக்    காட்டிக்கொடுக்கும்படி    பிசாசானவன்    அவன்    இருதயத்தைத்    தூண்டினபின்பு,    அவர்கள்    போஜனம்    பண்ணிக்கொண்டிருக்கையில்;    {John    13:2}

 

தம்முடைய    கையில்    பிதா    எல்லாவற்றையும்    ஒப்புக்கொடுத்தாரென்பதையும்,    தாம்    தேவனிடத்திலிருந்து    வந்ததையும்,    தேவனிடத்திற்குப்    போகிறதையும்    இயேசு<Jesus>    அறிந்து;    {John    13:3}

 

போஜனத்தை    விட்டெழுந்து,    வஸ்திரங்களைக்    கழற்றிவைத்து,    ஒரு    சீலையை    எடுத்து,    அரையிலே    கட்டிக்கொண்டு,    {John    13:4}

 

பின்பு    பாத்திரத்தில்    தண்ணீர்    வார்த்து,    சீஷருடைய    கால்களைக்    கழுவவும்,    தாம்    கட்டிக்கொண்டிருந்த    சீலையினால்    துடைக்கவும்    தொடங்கினார்.    {John    13:5}

 

அவர்    சீமோன்    பேதுருவினிடத்தில்<Simon    Peter>    வந்தபோது,    அவன்    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    நீர்    என்    கால்களைக்    கழுவலாமா    என்றான்.    {John    13:6}

 

இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    நான்    செய்கிறது    இன்னதென்று    இப்பொழுது    நீ    அறியாய்,    இனிமேல்    அறிவாய்    என்றார்.    {John    13:7}

 

பேதுரு<Peter>    அவரை    நோக்கி:    நீர்    ஒருக்காலும்    என்    கால்களைக்    கழுவப்படாது    என்றான்.    இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    நான்    உன்னைக்    கழுவாவிட்டால்    என்னிடத்தில்    உனக்குப்    பங்கில்லை    என்றார்.    {John    13:8}

 

அதற்குச்    சீமோன்    பேதுரு<Simon    Peter>:    ஆண்டவரே,    என்    கால்களைமாத்திரமல்ல,    என்    கைகளையும்    என்    தலையையும்கூடக்    கழுவவேண்டும்    என்றான்.    {John    13:9}

 

இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    முழுகினவன்    தன்    கால்களைமாத்திரம்    கழுவவேண்டியதாயிருக்கும்,    மற்றப்படி    அவன்    முழுவதும்    சுத்தமாயிருக்கிறான்;    நீங்களும்    சுத்தமாயிருக்கிறீர்கள்;    ஆகிலும்    எல்லாரும்    அல்ல    என்றார்.    {John    13:10}

 

தம்மைக்    காட்டிக்கொடுக்கிறவனை    அவர்    அறிந்திருந்தபடியினால்    நீங்களெல்லாரும்    சுத்தமுள்ளவர்கள்    அல்ல    என்றார்.    {John    13:11}

 

அவர்களுடைய    கால்களை    அவர்    கழுவினபின்பு,    தம்முடைய    வஸ்திரங்களைத்    தரித்துக்கொண்டு,    திரும்ப    உட்கார்ந்து,    அவர்களை    நோக்கி:    நான்    உங்களுக்குச்    செய்ததை    அறிந்திருக்கிறீர்களா?    {John    13:12}

 

நீங்கள்    என்னைப்    போதகரென்றும்,    ஆண்டவரென்றும்    சொல்லுகிறீர்கள்,    நீங்கள்    சொல்லுகிறது    சரியே,    நான்    அவர்தான்.    {John    13:13}

 

ஆண்டவரும்    போதகருமாகிய    நானே    உங்கள்    கால்களைக்    கழுவினதுண்டானால்,    நீங்களும்    ஒருவருடைய    கால்களை    ஒருவர்    கழுவக்கடவீர்கள்.    {John    13:14}

 

நான்    உங்களுக்குச்    செய்ததுபோல    நீங்களும்    செய்யும்படி    உங்களுக்கு    மாதிரியைக்    காண்பித்தேன்.    {John    13:15}

 

மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்,    ஊழியக்காரன்    தன்    எஜமானிலும்    பெரியவனல்ல,    அனுப்பப்பட்டவன்    தன்னை    அனுப்பினவரிலும்    பெரியவனல்ல.    {John    13:16}

 

நீங்கள்    இவைகளை    அறிந்திருக்கிறபடியினால்,    இவைகளைச்    செய்வீர்களானால்,    பாக்கியவான்களாயிருப்பீர்கள்.    {John    13:17}

 

உங்களெல்லாரையுங்குறித்து    நான்    பேசவில்லை,    நான்    தெரிந்துகொண்டவர்களை    அறிவேன்;    ஆகிலும்    வேதவாக்கியம்    நிறைவேறத்தக்கதாக,    என்னுடனே    அப்பம்    புசிக்கிறவன்    என்மேல்    தன்    குதிகாலைத்    தூக்கினான்.    {John    13:18}

 

அது    நடக்கும்போது    நானே    அவரென்று    நீங்கள்    விசுவாசிக்கும்பொருட்டு,    இப்பொழுது    அது    நடப்பதற்கு    முன்னமே    அதை    உங்களுக்குச்    சொல்லுகிறேன்.    {John    13:19}

 

நான்    அனுப்புகிறவனை    ஏற்றுக்கொள்ளுகிறவன்    என்னை    ஏற்றுக்கொள்ளுகிறான்,    என்னை    ஏற்றுக்கொள்ளுகிறவன்    என்னை    அனுப்பினவரை    ஏற்றுக்கொள்ளுகிறான்    என்று,    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    13:20}

 

இயேசு<Jesus>    இவைகளைச்    சொன்னபின்பு,    ஆவியிலே    கலங்கி:    உங்களில்    ஒருவன்    என்னைக்    காட்டிக்கொடுப்பான்    என்று,    மெய்யாகவே    மெய்யாகவே    உங்களுக்குச்    சொல்லுகிறேன்    என்று    சாட்சியாகச்    சொன்னார்.    {John    13:21}

 

அப்பொழுது    யாரைக்குறித்துப்    பேசுகிறாரோ    என்று    சீஷர்கள்    ஐயப்பட்டு,    ஒருவரையொருவர்    நோக்கிப்பார்த்தார்கள்.    {John    13:22}

 

அந்தச்    சமயத்தில்    அவருடைய    சீஷரில்    இயேசுவுக்கு<Jesus>    அன்பானவனாயிருந்த    ஒருவன்    இயேசுவின்<Jesus>    மார்பிலே    சாய்ந்துகொண்டிருந்தான்.    {John    13:23}

 

யாரைக்குறித்துச்    சொல்லுகிறாரென்று    விசாரிக்கும்படி    சீமோன்பேதுரு<Simon    Peter>    அவனுக்குச்    சைகைகாட்டினான்.    {John    13:24}

 

அப்பொழுது    அவன்    இயேசுவின்<Jesus>    மார்பிலே    சாய்ந்துகொண்டு:    ஆண்டவரே,    அவன்    யார்    என்றான்.    {John    13:25}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    நான்    இந்தத்    துணிக்கையைத்    தோய்த்து    எவனுக்குக்    கொடுப்பேனோ,    அவன்தான்    என்று    சொல்லி,    துணிக்கையைத்    தோய்த்து,    சீமோன்<Simon>    குமாரனாகிய    யூதாஸ்காரியோத்துக்குக்<Judas    Iscariot>    கொடுத்தார்.    {John    13:26}

 

அந்தத்    துணிக்கையை    அவன்    வாங்கினபின்பு,    சாத்தான்    அவனுக்குள்    புகுந்தான்.    அப்பொழுது    இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    நீ    செய்கிறதைச்    சீக்கிரமாய்ச்    செய்    என்றார்.    {John    13:27}

 

அவர்    இப்படி    அவனுடனே    சொன்னதின்    கருத்தைப்    பந்தியிருந்தவர்களில்    ஒருவனும்    அறியவில்லை.    {John    13:28}

 

யூதாஸ்<Judas>    பணப்பையை    வைத்துக்    கொண்டிருந்தபடியினால்,    அவன்    போய்,    பண்டிகைக்குத்    தேவையானவைகளைக்    கொள்ளும்படிக்காவது,    தரித்திரருக்கு    ஏதாகிலும்    கொடுக்கும்படிக்காவது,    இயேசு<Jesus>    அவனுடனே    சொல்லியிருப்பார்    என்று    சிலர்    நினைத்தார்கள்.    {John    13:29}

 

அவன்    அந்தத்    துணிக்கையை    வாங்கினவுடனே    புறப்பட்டுப்போனான்;    அப்பொழுது    இராக்காலமாயிருந்தது.    {John    13:30}

 

அவன்    புறப்பட்டுப்போனபின்பு    இயேசு<Jesus>:    இப்பொழுது    மனுஷகுமாரன்    மகிமைப்படுகிறார்,    தேவனும்    அவரில்    மகிமைப்படுகிறார்.    {John    13:31}

 

தேவன்    அவரில்    மகிமைப்பட்டிருந்தால்,    தேவன்    அவரைத்    தம்மில்    மகிமைப்படுத்துவார்,    சீக்கிரமாய்    அவரை    மகிமைப்படுத்துவார்.    {John    13:32}

 

பிள்ளைகளே,    இன்னும்    கொஞ்சக்காலம்    நான்    உங்களுடனேகூட    இருப்பேன்;    நீங்கள்    என்னைத்    தேடுவீர்கள்;    ஆனாலும்    நான்    போகிற    இடத்துக்கு    நீங்கள்    வரக்கூடாதென்று    நான்    யூதரோடே<Jews>    சொன்னதுபோல    இப்பொழுது    உங்களோடும்    சொல்லுகிறேன்.    {John    13:33}

 

நீங்கள்    ஒருவரிலொருவர்    அன்பாயிருங்கள்;    நான்    உங்களில்    அன்பாயிருந்ததுபோல    நீங்களும்    ஒருவரிலொருவர்    அன்பாயிருங்கள்    என்கிற    புதிதான    கட்டளையை    உங்களுக்குக்    கொடுக்கிறேன்.    {John    13:34}

 

நீங்கள்    ஒருவரிலொருவர்    அன்புள்ளவர்களாயிருந்தால்,    அதினால்    நீங்கள்    என்னுடைய    சீஷர்களென்று    எல்லாரும்    அறிந்துகொள்வார்கள்    என்றார்.    {John    13:35}

 

சீமோன்பேதுரு<Simon    Peter>    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    நீர்    எங்கே    போகிறீர்    என்றான்.    இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    நான்    போகிற    இடத்துக்கு    இப்பொழுது    நீ    என்    பின்னே    வரக்கூடாது,    பிற்பாடு    என்    பின்னே    வருவாய்    என்றார்.    {John    13:36}

 

பேதுரு<Peter>    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    நான்    இப்பொழுது    உமக்குப்    பின்னே    ஏன்    வரக்கூடாது?    உமக்காக    என்    ஜீவனையும்    கொடுப்பேன்    என்றான்.    {John    13:37}

 

இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    எனக்காக    உன்    ஜீவனைக்    கொடுப்பாயோ?    சேவல்    கூவுகிறதற்கு    முன்னே    நீ    என்னை    மூன்றுதரம்    மறுதலிப்பாயென்று,    மெய்யாகவே    மெய்யாகவே    உனக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    13:38}

 

உங்கள்    இருதயம்    கலங்காதிருப்பதாக;    தேவனிடத்தில்    விசுவாசமாயிருங்கள்,    என்னிடத்திலும்    விசுவாசமாயிருங்கள்.    {John    14:1}

 

என்    பிதாவின்    வீட்டில்    அநேக    வாசஸ்தலங்கள்    உண்டு;    அப்படியில்லாதிருந்தால்,    நான்    உங்களுக்குச்    சொல்லியிருப்பேன்;    ஒரு    ஸ்தலத்தை    உங்களுக்காக    ஆயத்தம்பண்ணப்போகிறேன்.    {John    14:2}

 

நான்    போய்    உங்களுக்காக    ஸ்தலத்தை    ஆயத்தம்பண்ணினபின்பு,    நான்    இருக்கிற    இடத்திலே    நீங்களும்    இருக்கும்படி,    நான்    மறுபடியும்    வந்து    உங்களை    என்னிடத்தில்    சேர்த்துக்கொள்ளுவேன்.    {John    14:3}

 

நான்    போகிற    இடத்தை    அறிந்திருக்கிறீர்கள்,    வழியையும்    அறிந்திருக்கிறீர்கள்    என்றார்.    {John    14:4}

 

தோமா<Thomas>    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    நீர்    போகிற    இடத்தை    அறியோமே,    வழியை    நாங்கள்    எப்படி    அறிவோம்    என்றான்.    {John    14:5}

 

அதற்கு    இயேசு<Jesus>:    நானே    வழியும்    சத்தியமும்    ஜீவனுமாயிருக்கிறேன்;    என்னாலேயல்லாமல்    ஒருவனும்    பிதாவினிடத்தில்    வரான்.    {John    14:6}

 

என்னை    அறிந்தீர்களானால்    என்    பிதாவையும்    அறிந்திருப்பீர்கள்;    இதுமுதல்    நீங்கள்    அவரை    அறிந்தும்    அவரைக்    கண்டும்    இருக்கிறீர்கள்    என்றார்.    {John    14:7}

 

பிலிப்பு<Philip>    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    பிதாவை    எங்களுக்குக்    காண்பியும்,    அது    எங்களுக்குப்    போதும்    என்றான்.    {John    14:8}

 

அதற்கு    இயேசு<Jesus>:    பிலிப்புவே<Philip>,    இவ்வளவுகாலம்    நான்    உங்களுடனேகூட    இருந்தும்    நீ    என்னை    அறியவில்லையா?    என்னைக்    கண்டவன்    பிதாவைக்    கண்டான்;    அப்படியிருக்க,    பிதாவை    எங்களுக்குக்    காண்பியும்    என்று    நீ    எப்படிச்    சொல்லுகிறாய்?    {John    14:9}

 

நான்    பிதாவிலும்,    பிதா    என்னிலும்    இருக்கிறதை    நீ    விசுவாசிக்கிறதில்லையா?    நான்    உங்களுடனே    சொல்லுகிற    வசனங்களை    என்    சுயமாய்ச்    சொல்லவில்லை;    என்னிடத்தில்    வாசமாயிருக்கிற    பிதாவானவரே    இந்தக்    கிரியைகளைச்    செய்துவருகிறார்.    {John    14:10}

 

நான்    பிதாவிலும்    பிதா    என்னிலும்    இருக்கிறதை    நம்புங்கள்;    அப்படியில்லாவிட்டாலும்    என்    கிரியைகளினிமித்தமாவது    என்னை    நம்புங்கள்.    {John    14:11}

 

மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்;    நான்    என்    பிதாவினிடத்திற்குப்    போகிறபடியினால்,    என்னை    விசுவாசிக்கிறவன்    நான்    செய்கிற    கிரியைகளைத்    தானும்    செய்வான்,    இவைகளைப்பார்க்கிலும்    பெரிய    கிரியைகளையும்    செய்வான்.    {John    14:12}

 

நீங்கள்    என்    நாமத்தினாலே    எதைக்    கேட்பீர்களோ,    குமாரனில்    பிதா    மகிமைப்படும்படியாக,    அதைச்    செய்வேன்.    {John    14:13}

 

என்    நாமத்தினாலே    நீங்கள்    எதைக்    கேட்டாலும்    அதை    நான்    செய்வேன்.    {John    14:14}

 

நீங்கள்    என்னிடத்தில்    அன்பாயிருந்தால்    என்    கற்பனைகளைக்    கைக்கொள்ளுங்கள்.    {John    14:15}

 

நான்    பிதாவை    வேண்டிக்கொள்ளுவேன்,    அப்பொழுது    என்றென்றைக்கும்    உங்களுடனேகூட    இருக்கும்படிக்குச்    சத்திய    ஆவியாகிய    வேறொரு    தேற்றரவாளனை    அவர்    உங்களுக்குத்    தந்தருளுவார்.    {John    14:16}

 

உலகம்    அந்தச்    சத்திய    ஆவியானவரைக்    காணாமலும்    அறியாமலும்    இருக்கிறபடியால்    அவரைப்    பெற்றுக்கொள்ளமாட்டாது;    அவர்    உங்களுடனே    வாசம்பண்ணி    உங்களுக்குள்ளே    இருப்பதால்,    நீங்கள்    அவரை    அறிவீர்கள்.    {John    14:17}

 

நான்    உங்களைத்    திக்கற்றவர்களாக    விடேன்,    உங்களிடத்தில்    வருவேன்.    {John    14:18}

 

இன்னும்    கொஞ்சக்காலத்திலே    உலகம்    என்னைக்    காணாது,    நீங்களோ    என்னைக்    காண்பீர்கள்;    நான்    பிழைக்கிறபடியினால்    நீங்களும்    பிழைப்பீர்கள்.    {John    14:19}

 

நான்    என்    பிதாவிலும்,    நீங்கள்    என்னிலும்,    நான்    உங்களிலும்    இருக்கிறதை    அந்நாளிலே    நீங்கள்    அறிவீர்கள்.    {John    14:20}

 

என்    கற்பனைகளைப்    பெற்றுக்கொண்டு    அவைகளைக்    கைக்கொள்ளுகிறவனே    என்னிடத்தில்    அன்பாயிருக்கிறான்,    என்னிடத்தில்    அன்பாயிருக்கிறவன்    என்    பிதாவுக்கு    அன்பாயிருப்பான்;    நானும்    அவனில்    அன்பாயிருந்து,    அவனுக்கு    என்னை    வெளிப்படுத்துவேன்    என்றார்.    {John    14:21}

 

ஸ்காரியோத்தல்லாத<Iscariot>    யூதா<Judas>    என்பவன்    அவரை    நோக்கி:    ஆண்டவரே,    நீர்    உலகத்துக்கு    உம்மை    வெளிப்படுத்தாமல்    எங்களுக்கு    உம்மை    வெளிப்படுத்தப்போகிற    காரணமென்ன    என்றான்.    {John    14:22}

 

இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    ஒருவன்    என்னில்    அன்பாயிருந்தால்,    அவன்    என்    வசனத்தைக்    கைக்கொள்ளுவான்,    அவனில்    என்    பிதா    அன்பாயிருப்பார்;    நாங்கள்    அவனிடத்தில்    வந்து    அவனோடே    வாசம்பண்ணுவோம்.    {John    14:23}

 

என்னில்    அன்பாயிராதவன்    என்    வசனங்களைக்    கைக்கொள்ளமாட்டான்.    நீங்கள்    கேட்கிற    வசனம்    என்னுடையதாயிராமல்    என்னை    அனுப்பின    பிதாவினுடையதாயிருக்கிறது.    {John    14:24}

 

நான்    உங்களுடனே    தங்கியிருக்கையில்    இவைகளை    உங்களுக்குச்    சொன்னேன்.    {John    14:25}

 

என்    நாமத்தினாலே    பிதா    அனுப்பப்போகிற    பரிசுத்த    ஆவியாகிய    தேற்றரவாளனே    எல்லாவற்றையும்    உங்களுக்குப்    போதித்து,    நான்    உங்களுக்குச்    சொன்ன    எல்லாவற்றையும்    உங்களுக்கு    நினைப்பூட்டுவார்.    {John    14:26}

 

சமாதானத்தை    உங்களுக்கு    வைத்துப்போகிறேன்,    என்னுடைய    சமாதானத்தையே    உங்களுக்குக்    கொடுக்கிறேன்;    உலகம்    கொடுக்கிறபிரகாரம்    நான்    உங்களுக்குக்    கொடுக்கிறதில்லை.    உங்கள்    இருதயம்    கலங்காமலும்    பயப்படாமலும்    இருப்பதாக.    {John    14:27}

 

நான்    போவேன்    என்றும்,    திரும்பி    உங்களிடத்தில்    வருவேன்    என்றும்    நான்    உங்களுடனே    சொன்னதைக்    கேட்டீர்களே.    நீங்கள்    என்னில்    அன்புள்ளவர்களாயிருந்தால்    பிதாவினிடத்திற்குப்    போகிறேனென்று    நான்    சொன்னதைக்    குறித்துச்    சந்தோஷப்படுவீர்கள்,    ஏனெனில்    என்    பிதா    என்னிலும்    பெரியவராயிருக்கிறார்.    {John    14:28}

 

இது    நடக்கும்போது    நீங்கள்    விசுவாசிக்கும்படியாக,    நடப்பதற்குமுன்னமே    இதை    உங்களுக்குச்    சொன்னேன்.    {John    14:29}

 

இனி    நான்    உங்களுடனே    அதிகமாய்ப்    பேசுவதில்லை.    இந்த    உலகத்தின்    அதிபதி    வருகிறான்,    அவனுக்கு    என்னிடத்தில்    ஒன்றுமில்லை.    {John    14:30}

 

நான்    பிதாவில்    அன்பாயிருக்கிறேன்    என்றும்,    பிதா    எனக்குக்    கட்டளையிட்டபடியே    செய்கிறேன்    என்றும்,    உலகம்    அறியும்படிக்கு    இப்படி    நடக்கும்.    எழுந்திருங்கள்,    இவ்விடம்விட்டுப்    போவோம்    வாருங்கள்    என்றார்.    {John    14:31}

 

நான்    மெய்யான    திராட்சச்செடி,    என்    பிதா    திராட்சத்தோட்டக்காரர்.    {John    15:1}

 

என்னில்    கனிகொடாதிருக்கிற    கொடி    எதுவோ    அதை    அவர்    அறுத்துப்போடுகிறார்;    கனிகொடுக்கிற    கொடி    எதுவோ,    அது    அதிக    கனிகளைக்    கொடுக்கும்படி,    அதைச்    சுத்தம்பண்ணுகிறார்.    {John    15:2}

 

நான்    உங்களுக்குச்    சொன்ன    உபதேசத்தினாலே    நீங்கள்    இப்பொழுதே    சுத்தமாயிருக்கிறீர்கள்.    {John    15:3}

 

என்னில்    நிலைத்திருங்கள்,    நானும்    உங்களில்    நிலைத்திருப்பேன்;    கொடியானது    திராட்சச்செடியில்    நிலைத்திராவிட்டால்    அது    தானாய்க்    கனிகொடுக்க    மாட்டாதது    போல,    நீங்களும்    என்னில்    நிலைத்திராவிட்டால்,    கனிகொடுக்கமாட்டீர்கள்.    {John    15:4}

 

நானே    திராட்சச்செடி,    நீங்கள்    கொடிகள்.    ஒருவன்    என்னிலும்    நான்    அவனிலும்    நிலைத்திருந்தால்,    அவன்    மிகுந்த    கனிகளைக்    கொடுப்பான்;    என்னையல்லாமல்    உங்களால்    ஒன்றும்    செய்யக்கூடாது.    {John    15:5}

 

ஒருவன்    என்னில்    நிலைத்திராவிட்டால்,    வெளியே    எறியுண்ட    கொடியைப்போல    அவன்    எறியுண்டு    உலர்ந்து    போவான்;    அப்படிப்பட்டவைகளைச்    சேர்த்து,    அக்கினியிலே    போடுகிறார்கள்;    அவைகள்    எரிந்துபோம்.    {John    15:6}

 

நீங்கள்    என்னிலும்,    என்    வார்த்தைகள்    உங்களிலும்    நிலைத்திருந்தால்,    நீங்கள்    கேட்டுக்கொள்வதெதுவோ    அது    உங்களுக்குச்    செய்யப்படும்.    {John    15:7}

 

நீங்கள்    மிகுந்த    கனிகளைக்    கொடுப்பதினால்    என்    பிதா    மகிமைப்படுவார்,    எனக்கும்    சீஷராயிருப்பீர்கள்.    {John    15:8}

 

பிதா    என்னில்    அன்பாயிருக்கிறதுபோல    நானும்    உங்களில்    அன்பாயிருக்கிறேன்;    என்னுடைய    அன்பிலே    நிலைத்திருங்கள்.    {John    15:9}

 

நான்    என்    பிதாவின்    கற்பனைகளைக்    கைக்கொண்டு    அவருடைய    அன்பிலே    நிலைத்திருக்கிறதுபோல,    நீங்களும்    என்    கற்பனைகளைக்    கைக்கொண்டிருந்தால்,    என்னுடைய    அன்பிலே    நிலைத்திருப்பீர்கள்.    {John    15:10}

 

என்னுடைய    சந்தோஷம்    உங்களில்    நிலைத்திருக்கும்படிக்கும்,    உங்கள்    சந்தோஷம்    நிறைவாயிருக்கும்படிக்கும்,    இவைகளை    உங்களுக்குச்    சொன்னேன்.    {John    15:11}

 

நான்    உங்களில்    அன்பாயிருக்கிறதுபோல    நீங்களும்    ஒருவரிலொருவர்    அன்பாயிருக்க    வேண்டுமென்பதே    என்னுடைய    கற்பனையாயிருக்கிறது.    {John    15:12}

 

ஒருவன்    தன்    சிநேகிதருக்காகத்    தன்    ஜீவனைக்    கொடுக்கிற    அன்பிலும்    அதிகமான    அன்பு    ஒருவரிடத்திலுமில்லை.    {John    15:13}

 

நான்    உங்களுக்குக்    கற்பிக்கிற    யாவையும்    நீங்கள்    செய்வீர்களானால்,    என்    சிநேகிதராயிருப்பீர்கள்.    {John    15:14}

 

இனி    நான்    உங்களை    ஊழியக்காரரென்று    சொல்லுகிறதில்லை,    ஊழியக்காரன்    தன்    எஜமான்    செய்கிறதை    அறியமாட்டான்.    நான்    உங்களைச்    சிநேகிதர்    என்றேன்,    ஏனெனில்    என்    பிதாவினிடத்தில்    நான்    கேள்விப்பட்ட    எல்லாவற்றையும்    உங்களுக்கு    அறிவித்தேன்.    {John    15:15}

 

நீங்கள்    என்னைத்    தெரிந்துகொள்ளவில்லை,    நான்    உங்களைத்    தெரிந்துகொண்டேன்;    நீங்கள்    என்    நாமத்தினாலே    பிதாவைக்    கேட்டுக்கொள்வது    எதுவோ,    அதை    அவர்    உங்களுக்குக்    கொடுக்கத்தக்கதாக    நீங்கள்    போய்க்    கனிகொடுக்கும்படிக்கும்,    உங்கள்    கனி    நிலைத்திருக்கும்படிக்கும்,    நான்    உங்களை    ஏற்படுத்தினேன்.    {John    15:16}

 

நீங்கள்    ஒருவரிலொருவர்    அன்பாயிருக்கவேண்டுமென்றே    இவைகளை    உங்களுக்குக்    கற்பிக்கிறேன்.    {John    15:17}

 

உலகம்    உங்களைப்    பகைத்தால்,    அது    உங்களைப்    பகைக்கிறதற்குமுன்னே    என்னைப்    பகைத்ததென்று    அறியுங்கள்.    {John    15:18}

 

நீங்கள்    உலகத்தாராயிருந்தால்,    உலகம்    தன்னுடையதைச்    சிநேகித்திருக்கும்;    நீங்கள்    உலகத்தாராயிராதபடியினாலும்,    நான்    உங்களை    உலகத்திலிருந்து    தெரிந்துகொண்டபடியினாலும்,    உலகம்    உங்களைப்    பகைக்கிறது.    {John    15:19}

 

ஊழியக்காரன்    தன்    எஜமானிலும்    பெரியவனல்லவென்று    நான்    உங்களுக்குச்    சொன்ன    வார்த்தையை    நினைத்துக்கொள்ளுங்கள்.    அவர்கள்    என்னைத்    துன்பப்படுத்தினதுண்டானால்,    உங்களையும்    துன்பப்படுத்துவார்கள்;    அவர்கள்    என்    வசனத்தைக்    கைக்கொண்டதுண்டானால்,    உங்கள்    வசனத்தையும்    கைக்கொள்ளுவார்கள்.    {John    15:20}

 

அவர்கள்    என்னை    அனுப்பினவரை    அறியாதபடியினால்    என்    நாமத்தினிமித்தமே    இவைகளையெல்லாம்    உங்களுக்குச்    செய்வார்கள்.    {John    15:21}

 

நான்    வந்து    அவர்களிடத்தில்    பேசாதிருந்தேனானால்    அவர்களுக்குப்    பாவமிராது;    இப்பொழுதோ    தங்கள்    பாவத்தைக்குறித்துப்    போக்குச்சொல்ல    அவர்களுக்கு    இடமில்லை.    {John    15:22}

 

என்னைப்    பகைக்கிறவன்    என்    பிதாவையும்    பகைக்கிறான்.    {John    15:23}

 

வேறொருவரும்    செய்யாத    கிரியைகளை    நான்    அவர்களுக்குள்ளே    செய்யாதிருந்தேனானால்,    அவர்களுக்குப்    பாவமிராது;    இப்பொழுது    அவர்கள்    என்னையும்    என்    பிதாவையும்    கண்டும்    பகைத்துமிருக்கிறார்கள்.    {John    15:24}

 

முகாந்தரமில்லாமல்    என்னைப்    பகைத்தார்கள்    என்று    அவர்களுடைய    வேதத்தில்    எழுதியிருக்கிற    வாக்கியம்    நிறைவேறும்படிக்கு    இப்படியாயிற்று.    {John    15:25}

 

பிதாவினிடத்திலிருந்து    நான்    உங்களுக்கு    அனுப்பப்போகிறவரும்,    பிதாவினிடத்திலிருந்து    புறப்படுகிறவருமாகிய    சத்திய    ஆவியான    தேற்றரவாளன்    வரும்போது,    அவர்    என்னைக்குறித்துச்    சாட்சி    கொடுப்பார்.    {John    15:26}

 

நீங்களும்    ஆதிமுதல்    என்னுடனேகூட    இருந்தபடியால்    எனக்குச்    சாட்சிகளாயிருப்பீர்கள்.    {John    15:27}

 

நீங்கள்    இடறலடையாதபடிக்கு    இவைகளை    உங்களுக்குச்    சொன்னேன்.    {John    16:1}

 

அவர்கள்    உங்களை    ஜெபஆலயங்களுக்குப்    புறம்பாக்குவார்கள்;    மேலும்    உங்களைக்    கொலைசெய்கிறவன்    தான்    தேவனுக்குத்    தொண்டுசெய்கிறவனென்று    நினைக்குங்    காலம்    வரும்.    {John    16:2}

 

அவர்கள்    பிதாவையும்    என்னையும்    அறியாதபடியினால்    இவைகளை    உங்களுக்குச்    செய்வார்கள்.    {John    16:3}

 

அந்தக்    காலம்    வரும்போது    நான்    இவைகளை    உங்களுக்குச்    சொன்னேனென்று    நீங்கள்    நினைக்கும்படி    இவைகளை    உங்களுக்குச்    சொல்லியிருக்கிறேன்;    நான்    உங்களுடனேகூட    இருந்தபடியினால்    ஆரம்பத்திலே    இவைகளை    உங்களுக்குச்    சொல்லவில்லை.    {John    16:4}

 

இப்பொழுது    நான்    என்னை    அனுப்பினவரிடத்திற்குப்    போகிறேன்;    எங்கே    போகிறீரென்று    உங்களில்    ஒருவனும்    என்னைக்    கேட்கவில்லை.    {John    16:5}

 

ஆனாலும்    நான்    இவைகளை    உங்களுக்குச்    சொன்னதினால்    உங்கள்    இருதயம்    துக்கத்தால்    நிறைந்திருக்கிறது.    {John    16:6}

 

நான்    உங்களுக்கு    உண்மையைச்    சொல்லுகிறேன்;    நான்    போகிறது    உங்களுக்குப்    பிரயோஜனமாயிருக்கும்;    நான்    போகாதிருந்தால்,    தேற்றரவாளன்    உங்களிடத்தில்    வரார்;    நான்    போவேனேயாகில்    அவரை    உங்களிடத்திற்கு    அனுப்புவேன்.    {John    16:7}

 

அவர்    வந்து,    பாவத்தைக்குறித்தும்,    நீதியைக்குறித்தும்,    நியாயத்தீர்ப்பைக்குறித்தும்,    உலகத்தைக்    கண்டித்து    உணர்த்துவார்.    {John    16:8}

 

அவர்கள்    என்னை    விசுவாசியாதபடியினாலே    பாவத்தைக்குறித்தும்,    {John    16:9}

 

நீங்கள்    இனி    என்னைக்    காணாதபடிக்கு    நான்    என்    பிதாவினிடத்திற்குப்    போகிறபடியினாலே    நீதியைக்குறித்தும்,    {John    16:10}

 

இந்த    உலகத்தின்    அதிபதி    நியாயந்தீர்க்கப்பட்டதினாலே    நியாயத்தீர்ப்பைக்குறித்தும்,    கண்டித்து    உணர்த்துவார்.    {John    16:11}

 

இன்னும்    அநேகங்காரியங்களை    நான்    உங்களுக்குச்    சொல்லவேண்டியதாயிருக்கிறது,    அவைகளை    நீங்கள்    இப்பொழுது    தாங்கமாட்டீர்கள்.    {John    16:12}

 

சத்திய    ஆவியாகிய    அவர்    வரும்போது,    சகல    சத்தியத்திற்குள்ளும்    உங்களை    நடத்துவார்;    அவர்    தம்முடைய    சுயமாய்ப்    பேசாமல்,    தாம்    கேள்விப்பட்டவைகள்    யாவையுஞ்சொல்லி,    வரப்போகிற    காரியங்களை    உங்களுக்கு    அறிவிப்பார்.    {John    16:13}

 

அவர்    என்னுடையதில்    எடுத்து    உங்களுக்கு    அறிவிப்பதினால்    என்னை    மகிமைப்படுத்துவார்.    {John    16:14}

 

பிதாவினுடையவைகள்    யாவும்    என்னுடையவைகள்;    அதினாலே    அவர்    என்னுடையதில்    எடுத்து    உங்களுக்கு    அறிவிப்பார்    என்றேன்.    {John    16:15}

 

நான்    பிதாவினிடத்திற்குப்    போகிறபடியினால்    கொஞ்சக்காலத்திலே    என்னைக்    காணாதிருப்பீர்கள்,    மறுபடியும்    கொஞ்சக்காலத்திலே    என்னைக்    காண்பீர்கள்    என்றார்.    {John    16:16}

 

அப்பொழுது    அவருடைய    சீஷரில்    சிலர்:    நான்    பிதாவினிடத்திற்குப்    போகிறபடியினால்,    கொஞ்சக்காலத்திலே    என்னைக்    காணாதிருப்பீர்கள்    என்றும்,    மறுபடியும்    கொஞ்சக்காலத்திலே    என்னைக்    காண்பீர்கள்    என்றும்    அவர்    நம்முடனே    சொல்லுகிறதின்    கருத்தென்ன    என்று    தங்களுக்குள்ளே    பேசிக்கொண்டதுமன்றி:    {John    16:17}

 

கொஞ்சக்காலம்    என்கிறாரே,    இதென்ன?    அவர்    சொல்லுகிறது    இன்னதென்று    நமக்கு    விளங்கவில்லையே    என்றார்கள்.    {John    16:18}

 

அதைக்குறித்துத்    தம்மிடத்தில்    கேட்கும்படி    அவர்கள்    விரும்புகிறதை    இயேசு<Jesus>    அறிந்து,    அவர்களை    நோக்கி:    கொஞ்சக்காலத்திலே    என்னைக்    காணாதிருப்பீர்கள்,    மறுபடியும்    கொஞ்சக்காலத்திலே    என்னைக்    காண்பீர்கள்    என்று    நான்    சொன்னதைக்குறித்து    நீங்கள்    உங்களுக்குள்ளே    விசாரிக்கிறீர்களோ?    {John    16:19}

 

மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்:    நீங்கள்    அழுது    புலம்புவீர்கள்,    உலகமோ    சந்தோஷப்படும்;    நீங்கள்    துக்கப்படுவீர்கள்,    ஆனாலும்    உங்கள்    துக்கம்    சந்தோஷமாக    மாறும்.    {John    16:20}

 

ஸ்திரீயானவளுக்குப்    பிரசவகாலம்    வந்திருக்கும்போது    அவள்    துக்கமடைகிறாள்;    பிள்ளைபெற்றவுடனே    ஒரு    மனுஷன்    உலகத்தில்    பிறந்தானென்கிற    சந்தோஷத்தினால்    அப்புறம்    உபத்திரவத்தை    நினையாள்.    {John    16:21}

 

அதுபோல    நீங்களும்    இப்பொழுது    துக்கமடைந்திருக்கிறீர்கள்.    நான்    மறுபடியும்    உங்களைக்    காண்பேன்,    அப்பொழுது    உங்கள்    இருதயம்    சந்தோஷப்படும்,    உங்கள்    சந்தோஷத்தை    ஒருவனும்    உங்களிடத்திலிருந்து    எடுத்துப்போடமாட்டான்.    {John    16:22}

 

அந்த    நாளிலே    நீங்கள்    என்னிடத்தில்    ஒன்றுங்    கேட்கமாட்டீர்கள்.    மெய்யாகவே    மெய்யாகவே    நான்    உங்களுக்குச்    சொல்லுகிறேன்,    நீங்கள்    என்    நாமத்தினாலே    பிதாவினிடத்தில்    கேட்டுக்    கொள்வதெதுவோ    அதை    அவர்    உங்களுக்குத்    தருவார்.    {John    16:23}

 

இதுவரைக்கும்    நீங்கள்    என்    நாமத்தினாலே    ஒன்றும்    கேட்கவில்லை;    கேளுங்கள்,    அப்பொழுது    உங்கள்    சந்தோஷம்    நிறைவாயிருக்கும்படி    பெற்றுக்    கொள்வீர்கள்.    {John    16:24}

 

இவைகளை    நான்    உவமைகளாய்    உங்களுடனே    பேசுகிறேன்;    காலம்    வரும்,    அப்பொழுது    நான்    உவமைகளாய்    உங்களுடனே    பேசாமல்,    பிதாவைக்குறித்து    வெளிப்படையாக    உங்களுக்கு    அறிவிப்பேன்.    {John    16:25}

 

அந்த    நாளில்    நீங்கள்    என்    நாமத்தினாலே    வேண்டிக்    கொள்வீர்கள்.    உங்களுக்காகப்    பிதாவை    நான்    கேட்டுக்    கொள்வேனென்று    உங்களுக்குச்    சொல்லவேண்டியதில்லை.    {John    16:26}

 

நீங்கள்    என்னைச்    சிநேகித்து,    நான்    தேவனிடத்திலிருந்து    புறப்பட்டுவந்தேனென்று    விசுவாசிக்கிறபடியினால்    பிதாதாமே    உங்களைச்    சிநேகிக்கிறார்.    {John    16:27}

 

நான்    பிதாவினிடத்திலிருந்து    புறப்பட்டு    உலகத்திலே    வந்தேன்;    மறுபடியும்    உலகத்தைவிட்டுப்    பிதாவினிடத்திற்குப்    போகிறேன்    என்றார்.    {John    16:28}

 

அவருடைய    சீஷர்கள்    அவரை    நோக்கி:    இதோ,    இப்பொழுது    நீர்    உவமையாய்ப்    பேசாமல்,    வெளிப்படையாய்ப்    பேசுகிறீர்.    {John    16:29}

 

நீர்    எல்லாவற்றையும்    அறிந்திருக்கிறீர்    என்றும்,    ஒருவன்    உம்மை    வினாவ    வேண்டுவதில்லையென்றும்,    இப்பொழுது    அறிந்திருக்கிறோம்;    இதினாலே    நீர்    தேவனிடத்திலிருந்து    வந்தீரென்று    விசுவாசிக்கிறோம்    என்றார்கள்.    {John    16:30}

 

இயேசு<Jesus>    அவர்களுக்குப்    பிரதியுத்தரமாக:    இப்பொழுது    நீங்கள்    விசுவாசிக்கிறீர்கள்.    {John    16:31}

 

இதோ,    நீங்கள்    சிதறுண்டு,    அவனவன்    தன்    தன்    இடத்துக்குப்    போய்,    என்னைத்    தனியே    விட்டுவிடுங்காலம்    வரும்;    அது    இப்பொழுது    வந்திருக்கிறது;    ஆனாலும்    நான்    தனித்திரேன்,    பிதா    என்னுடனேகூட    இருக்கிறார்.    {John    16:32}

 

என்னிடத்தில்    உங்களுக்குச்    சமாதானம்    உண்டாயிருக்கும்பொருட்டு    இவைகளை    உங்களுக்குச்    சொன்னேன்.    உலகத்தில்    உங்களுக்கு    உபத்திரவம்    உண்டு,    ஆனாலும்    திடன்கொள்ளுங்கள்;    நான்    உலகத்தை    ஜெயித்தேன்    என்றார்.    {John    16:33}

 

இயேசு<Jesus>    இவைகளைச்    சொன்னபின்பு    தம்முடைய    கண்களை    வானத்துக்கு    ஏறெடுத்து:    {John    17:1}

 

பிதாவே,    வேளை    வந்தது,    நீர்    உம்முடைய    குமாரனுக்குத்    தந்தருளின    யாவருக்கும்    அவர்    நித்தியஜீவனைக்    கொடுக்கும்பொருட்டு    மாம்சமான    யாவர்மேலும்    நீர்    அவருக்கு    அதிகாரங்கொடுத்தபடியே,    உம்முடைய    குமாரன்    உம்மை    மகிமைப்படுத்தும்படிக்கு    நீர்    உம்முடைய    குமாரனை    மகிமைப்படுத்தும்.    {John    17:2}

 

ஒன்றான    மெய்த்தேவனாகிய    உம்மையும்    நீர்    அனுப்பினவராகிய    இயேசு    கிறிஸ்துவையும்<Jesus    Christ>    அறிவதே    நித்தியஜீவன்.    {John    17:3}

 

பூமியிலே    நான்    உம்மை    மகிமைப்படுத்தினேன்;    நான்    செய்யும்படி    நீர்    எனக்கு    நியமித்த    கிரியையைச்    செய்து    முடித்தேன்.    {John    17:4}

 

பிதாவே,    உலகம்    உண்டாகிறதற்கு    முன்னே    உம்மிடத்தில்    எனக்கு    உண்டாயிருந்த    மகிமையினாலே    இப்பொழுது    நீர்    என்னை    உம்மிடத்திலே    மகிமைப்படுத்தும்.    {John    17:5}

 

நீர்    உலகத்தில்    தெரிந்தெடுத்து    எனக்குத்    தந்த    மனுஷருக்கு    உம்முடைய    நாமத்தை    வெளிப்படுத்தினேன்.    அவர்கள்    உம்முடையவர்களாயிருந்தார்கள்,    அவர்களை    எனக்குத்    தந்தீர்,    அவர்கள்    உம்முடைய    வசனத்தைக்    கைக்கொண்டிருக்கிறார்கள்.    {John    17:6}

 

நீர்    எனக்குத்    தந்தவைகளெல்லாம்    உம்மாலே    உண்டாயினவென்று    இப்பொழுது    அறிந்திருக்கிறார்கள்.    {John    17:7}

 

நீர்    எனக்குக்    கொடுத்த    வார்த்தைகளை    நான்    அவர்களுக்குக்    கொடுத்தேன்;    அவர்கள்    அவைகளை    ஏற்றுக்கொண்டு,    நான்    உம்மிடத்திலிருந்து    புறப்பட்டுவந்தேன்    என்று    நிச்சயமாய்    அறிந்து,    நீர்    என்னை    அனுப்பினீர்    என்று    விசுவாசித்திருக்கிறார்கள்.    {John    17:8}

 

நான்    அவர்களுக்காக    வேண்டிக்கொள்ளுகிறேன்;    உலகத்துக்காக    வேண்டிக்கொள்ளாமல்,    நீர்    எனக்குத்    தந்தவர்களுக்காக    வேண்டிக்கொள்ளுகிறேன்;    அவர்கள்    உம்முடையவர்களாயிருக்கிறார்களே.    {John    17:9}

 

என்னுடையவைகள்    யாவும்    உம்முடையவைகள்,    உம்முடையவைகள்    என்னுடையவைகள்;    அவர்களில்    நான்    மகிமைப்பட்டிருக்கிறேன்.    {John    17:10}

 

நான்    இனி    உலகத்திலிரேன்,    இவர்கள்    உலகத்திலிருக்கிறார்கள்;    நான்    உம்மிடத்திற்கு    வருகிறேன்.    பரிசுத்த    பிதாவே,    நீர்    எனக்குத்    தந்தவர்கள்    நம்மைப்போல    ஒன்றாயிருக்கும்படிக்கு,    நீர்    அவர்களை    உம்முடைய    நாமத்தினாலே    காத்துக்கொள்ளும்.    {John    17:11}

 

நான்    அவர்களுடனேகூட    உலகத்திலிருக்கையில்    அவர்களை    உம்முடைய    நாமத்தினாலே    காத்துக்கொண்டேன்;    நீர்    எனக்குத்    தந்தவர்களைக்    காத்துக்    கொண்டுவந்தேன்;    வேதவாக்கியம்    நிறைவேறத்தக்கதாக,    கேட்டின்    மகன்    கெட்டுப்போனானேயல்லாமல்,    அவர்களில்    ஒருவனும்    கெட்டுப்போகவில்லை.    {John    17:12}

 

இப்பொழுது    நான்    உம்மிடத்திற்கு    வருகிறேன்;    அவர்கள்    என்    சந்தோஷத்தை    நிறைவாய்    அடையும்படி    உலகத்தில்    இருக்கையில்    இவைகளைச்    சொல்லுகிறேன்.    {John    17:13}

 

நான்    உம்முடைய    வார்த்தையை    அவர்களுக்குக்    கொடுத்தேன்;    நான்    உலகத்தானல்லாததுபோல    அவர்களும்    உலகத்தாரல்ல;    ஆதலால்    உலகம்    அவர்களைப்    பகைத்தது.    {John    17:14}

 

நீர்    அவர்களை    உலகத்திலிருந்து    எடுத்துக்கொள்ளும்படி    நான்    வேண்டிக்கொள்ளாமல்,    நீர்    அவர்களைத்    தீமையினின்று    காக்கும்படி    வேண்டிக்கொள்ளுகிறேன்.    {John    17:15}

 

நான்    உலகத்தானல்லாததுபோல,    அவர்களும்    உலகத்தாரல்ல.    {John    17:16}

 

உம்முடைய    சத்தியத்தினாலே    அவர்களைப்    பரிசுத்தமாக்கும்;    உம்முடைய    வசனமே    சத்தியம்.    {John    17:17}

 

நீர்    என்னை    உலகத்தில்    அனுப்பினதுபோல,    நானும்    அவர்களை    உலகத்தில்    அனுப்புகிறேன்.    {John    17:18}

 

அவர்களும்    சத்தியத்தினாலே    பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி,    அவர்களுக்காக    நான்    என்னைத்தானே    பரிசுத்தமாக்குகிறேன்.    {John    17:19}

 

நான்    இவர்களுக்காக    வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல்,    இவர்களுடைய    வார்த்தையினால்    என்னை    விசுவாசிக்கிறவர்களுக்காகவும்    வேண்டிக்கொள்ளுகிறேன்.    {John    17:20}

 

அவர்களெல்லாரும்    ஒன்றாயிருக்கவும்,    பிதாவே,    நீர்    என்னை    அனுப்பினதை    உலகம்    விசுவாசிக்கிறதற்காக,    நீர்    என்னிலேயும்    நான்    உம்மிலேயும்    இருக்கிறதுபோல    அவர்களெல்லாரும்    நம்மில்    ஒன்றாயிருக்கவும்    வேண்டிக்கொள்ளுகிறேன்.    {John    17:21}

 

நாம்    ஒன்றாயிருக்கிறதுபோல    அவர்களும்    ஒன்றாயிருக்கும்படி,    நீர்    எனக்குத்    தந்த    மகிமையை    நான்    அவர்களுக்குக்    கொடுத்தேன்.    {John    17:22}

 

ஒருமைப்பாட்டில்    அவர்கள்    தேறினவர்களாயிருக்கும்படிக்கும்,    என்னை    நீர்    அனுப்பினதையும்,    நீர்    என்னில்    அன்பாயிருக்கிறதுபோல    அவர்களிலும்    அன்பாயிருக்கிறதையும்    உலகம்    அறியும்படிக்கும்,    நான்    அவர்களிலும்    நீர்    என்னிலும்    இருக்கும்படி    வேண்டிக்கொள்ளுகிறேன்.    {John    17:23}

 

பிதாவே,    உலகத்தோற்றத்துக்கு    முன்    நீர்    என்னில்    அன்பாயிருந்தபடியினால்,    நீர்    எனக்குத்    தந்த    என்னுடைய    மகிமையை    நீர்    எனக்குத்    தந்தவர்கள்    காணும்படியாக,    நான்    எங்கே    இருக்கிறேனோ    அங்கே    அவர்களும்    என்னுடனேகூட    இருக்க    விரும்புகிறேன்.    {John    17:24}

 

நீதியுள்ள    பிதாவே,    உலகம்    உம்மை    அறியவில்லை,    நான்    உம்மை    அறிந்திருக்கிறேன்;    நீர்    என்னை    அனுப்பினதை    இவர்களும்    அறிந்திருக்கிறார்கள்.    {John    17:25}

 

நீர்    என்னிடத்தில்    வைத்த    அன்பு    அவர்களிடத்திலிருக்கும்படிக்கும்,    நானும்    அவர்களிலிருக்கும்படிக்கும்,    உம்முடைய    நாமத்தை    அவர்களுக்குத்    தெரியப்படுத்தினேன்;    இன்னமும்    தெரியப்படுத்துவேன்    என்றார்.    {John    17:26}

 

இயேசு<Jesus>    இவைகளைச்    சொன்னபின்பு,    தம்முடைய    சீஷருடனேகூட    கெதரோன்<Cedron>    என்னும்    ஆற்றுக்கு    அப்புறம்    போனார்;    அங்கே    ஒரு    தோட்டம்    இருந்தது,    அதிலே    அவரும்    அவருடைய    சீஷரும்    பிரவேசித்தார்கள்.    {John    18:1}

 

இயேசு<Jesus>    தம்முடைய    சீஷருடனேகூட    அடிக்கடி    அங்கே    போயிருந்தபடியினால்,    அவரைக்    காட்டிக்கொடுக்கிற    யூதாசும்<Judas>    அந்த    இடத்தை    அறிந்திருந்தான்.    {John    18:2}

 

யூதாஸ்<Judas>    போர்ச்சேவகரின்    கூட்டத்தையும்    பிரதான    ஆசாரியர்    பரிசேயர்<Pharisees>    என்பவர்களால்    அனுப்பப்பட்ட    ஊழியக்காரரையும்    கூட்டிக்கொண்டு,    பந்தங்களோடும்    தீவட்டிகளோடும்    ஆயுதங்களோடும்    அவ்விடத்திற்கு    வந்தான்.    {John    18:3}

 

இயேசு<Jesus>    தமக்கு    நேரிடப்போகிற    எல்லாவற்றையும்    அறிந்து,    எதிர்கொண்டுபோய்,    அவர்களை    நோக்கி:    யாரைத்    தேடுகிறீர்கள்    என்றார்.    {John    18:4}

 

அவருக்கு    அவர்கள்    பிரதியுத்தரமாக:    நசரேயனாகிய<Nazarene>    இயேசுவைத்<Jesus>    தேடுகிறோம்    என்றார்கள்.    அதற்கு    இயேசு<Jesus>:    நான்தான்    என்றார்.    அவரைக்    காட்டிக்கொடுத்த    யூதாசும்<Judas>    அவர்களுடனேகூட    நின்றான்.    {John    18:5}

 

நான்தான்    என்று    அவர்    அவர்களிடத்தில்    சொன்னவுடனே,    அவர்கள்    பின்னிட்டுத்    தரையிலே    விழுந்தார்கள்.    {John    18:6}

 

அவர்    மறுபடியும்    அவர்களை    நோக்கி:    யாரைத்    தேடுகிறீர்கள்    என்று    கேட்டார்.    அவர்கள்:    நசரேயனாகிய<Nazarene>    இயேசுவைத்<Jesus>    தேடுகிறோம்    என்றார்கள்.    {John    18:7}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    நான்தானென்று    உங்களுக்குச்    சொன்னேனே;    என்னைத்    தேடுகிறதுண்டானால்,    இவர்களைப்    போகவிடுங்கள்    என்றார்.    {John    18:8}

 

நீர்    எனக்குத்    தந்தவர்களில்    ஒருவனையும்    நான்    இழந்துபோகவில்லை    என்று    அவர்    சொல்லிய    வசனம்    நிறைவேறத்தக்கதாக    இப்படி    நடந்தது.    {John    18:9}

 

அப்பொழுது    சீமோன்பேதுரு<Simon    Peter>,    தன்னிடத்திலிருந்த    பட்டயத்தை    உருவி,    பிரதான    ஆசாரியனுடைய    வேலைக்காரனை    வலதுகாதற    வெட்டினான்;    அந்த    வேலைக்காரனுக்கு    மல்குஸ்<Malchus>    என்று    பெயர்.    {John    18:10}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    பேதுருவை<Peter>    நோக்கி:    உன்    பட்டயத்தை    உறையிலே    போடு;    பிதா    எனக்குக்    கொடுத்த    பாத்திரத்தில்    நான்    பானம்பண்ணாதிருப்பேனோ    என்றார்.    {John    18:11}

 

அப்பொழுது    போர்ச்சேவகரும்,    ஆயிரம்    போர்ச்சேவகருக்குத்    தலைவனும்,    யூதருடைய<Jews>    ஊழியக்காரரும்    இயேசுவைப்பிடித்து<Jesus>,    அவரைக்    கட்டி,    {John    18:12}

 

முதலாவது    அவரை    அன்னா<Annas>    என்பவனிடத்திற்குக்    கொண்டுபோனார்கள்;    அவன்    அந்த    வருஷத்துப்    பிரதான    ஆசாரியனாகிய    காய்பாவுக்கு<Caiaphas>    மாமனாயிருந்தான்.    {John    18:13}

 

ஜனங்களுக்காக    ஒரே    மனுஷன்    சாகிறது    நலமாயிருக்குமென்று    யூதருக்கு<Jews>    ஆலோசனை    சொன்னவன்    இந்தக்    காய்பாவே<Caiaphas>.    {John    18:14}

 

சீமோன்பேதுருவும்<Simon    Peter>    வேறொரு    சீஷனும்    இயேசுவுக்குப்<Jesus>    பின்சென்றார்கள்.    அந்தச்    சீஷன்    பிரதான    ஆசாரியனுக்கு    அறிமுகமானவனாயிருந்ததினால்,    இயேசுவுடனேகூடப்<Jesus>    பிரதான    ஆசாரியனுடைய    அரமனைக்குள்    பிரவேசித்தான்.    {John    18:15}

 

பேதுரு<Peter>    வாசலருகே    வெளியே    நின்றான்.    அப்பொழுது    பிரதான    ஆசாரியனுக்கு    அறிமுகமானவனாயிருந்த    மற்றச்    சீஷன்    வெளியே    வந்து,    வாசல்காக்கிறவர்களுடனே    பேசி,    பேதுருவை<Peter>    உள்ளே    அழைத்துக்கொண்டுபோனான்.    {John    18:16}

 

அப்பொழுது    வாசல்காக்கிற    வேலைக்காரி    பேதுருவை<Peter>    நோக்கி:    நீயும்    அந்த    மனுஷனுடைய    சீஷரில்    ஒருவனல்லவா    என்றாள்.    அவன்:    நான்    அல்ல    என்றான்.    {John    18:17}

 

குளிர்காலமானபடியினாலே    ஊழியக்காரரும்    சேவகரும்    கரிநெருப்புண்டாக்கி,    நின்று,    குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்;    அவர்களுடனேகூடப்    பேதுருவும்<Peter>    நின்று    குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.    {John    18:18}

 

பிரதான    ஆசாரியன்    இயேசுவினிடத்தில்<Jesus>    அவருடைய    சீஷரைக்குறித்தும்    போதகத்தைக்குறித்தும்    விசாரித்தான்.    {John    18:19}

 

இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    நான்    வெளியரங்கமாய்    உலகத்துடனே    பேசினேன்;    ஜெப    ஆலயங்களிலேயும்    யூதர்களெல்லாரும்<Jews>    கூடிவருகிற    தேவாலயத்திலேயும்    எப்பொழுதும்    உபதேசித்தேன்;    அந்தரங்கத்திலே    நான்    ஒன்றும்    பேசவில்லை.    {John    18:20}

 

நீர்    என்னிடத்தில்    விசாரிக்கவேண்டியதென்ன?    நான்    சொன்னவைகளைக்    கேட்டவர்களிடத்தில்    விசாரியும்;    நான்    பேசினவைகளை    அவர்கள்    அறிந்திருக்கிறார்களே    என்றார்.    {John    18:21}

 

இப்படி    அவர்    சொன்னபொழுது,    சமீபத்தில்    நின்ற    சேவகரில்    ஒருவன்:    பிரதான    ஆசாரியனுக்கு    இப்படியா    உத்தரவு    சொல்லுகிறது    என்று,    இயேசுவை<Jesus>    ஒரு    அறை    அறைந்தான்.    {John    18:22}

 

இயேசு<Jesus>    அவனை    நோக்கி:    நான்    தகாதவிதமாய்ப்    பேசினதுண்டானால்,    தகாததை    ஒப்புவி;    நான்    தகுதியாய்ப்    பேசினேனேயாகில்,    என்னை    ஏன்    அடிக்கிறாய்    என்றார்.    {John    18:23}

 

பின்பு    அன்னா<Annas>    என்பவன்    பிரதான    ஆசாரியனாகிய    காய்பாவினிடத்திற்கு<Caiaphas>    அவரைக்    கட்டுண்டவராக    அனுப்பினான்.    {John    18:24}

 

சீமோன்பேதுரு<Simon    Peter>    நின்று    குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.    அப்பொழுது    சிலர்    அவனை    நோக்கி:    நீயும்    அவனுடைய    சீஷரில்    ஒருவனல்லவா    என்றார்கள்.    அவன்:    நான்    அல்ல    என்று    மறுதலித்தான்.    {John    18:25}

 

பிரதான    ஆசாரியனுடைய    வேலைக்காரரில்    பேதுரு<Peter>    காதறவெட்டினவனுக்கு    இனத்தானாகிய    ஒருவன்    அவனை    நோக்கி:    நான்    உன்னை    அவனுடனேகூடத்    தோட்டத்திலே    காணவில்லையா    என்றான்.    {John    18:26}

 

அப்பொழுது    பேதுரு<Peter>    மறுபடியும்    மறுதலித்தான்;    உடனே    சேவல்    கூவிற்று.    {John    18:27}

 

அவர்கள்    காய்பாவினிடத்திலிருந்து<Caiaphas>    இயேசுவைத்<Jesus>    தேசாதிபதியின்    அரமனைக்குக்    கொண்டுபோனார்கள்;    அப்பொழுது    விடியற்காலமாயிருந்தது.    தீட்டுப்படாமல்    பஸ்காவைப்    புசிக்கத்தக்கதாக,    அவர்கள்    தேசாதிபதியின்    அரமனைக்குள்    பிரவேசியாதிருந்தார்கள்.    {John    18:28}

 

ஆதலால்    பிலாத்து<Pilate>    அவர்களிடத்தில்    வெளியே    வந்து:    இந்த    மனுஷன்மேல்    என்ன    குற்றஞ்சாட்டுகிறீர்கள்    என்றான்.    {John    18:29}

 

அவர்கள்    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    இவன்    குற்றவாளியாயிராவிட்டால்,    இவனை    உம்மிடத்தில்    ஒப்புக்கொடுக்கமாட்டோம்    என்றார்கள்.    {John    18:30}

 

அப்பொழுது    பிலாத்து<Pilate>    அவர்களை    நோக்கி:    இவனை    நீங்களே    கொண்டுபோய்,    உங்கள்    நியாயப்பிரமாணத்தின்படி    நியாயந்தீருங்கள்    என்றான்.    அதற்கு    யூதர்கள்<Jews>:    ஒருவனையும்    மரண    ஆக்கினை    செய்ய    எங்களுக்கு    அதிகாரமில்லை    என்றார்கள்.    {John    18:31}

 

தாம்    இன்னவிதமான    மரணமாய்    மரிக்கப்போகிறாரென்பதைக்    குறித்து    இயேசு<Jesus>    குறிப்பாய்ச்    சொல்லியிருந்த    வார்த்தை    நிறைவேறத்தக்கதாக    இப்படிச்    சொன்னார்கள்.    {John    18:32}

 

அப்பொழுது    பிலாத்து<Pilate>    மறுபடியும்    அரமனைக்குள்    பிரவேசித்து,    இயேசுவை<Jesus>    அழைத்து:    நீ    யூதருடைய<Jews>    ராஜாவா    என்று    கேட்டான்.    {John    18:33}

 

இயேசு<Jesus>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    நீராய்    இப்படிச்    சொல்லுகிறீரோ?    அல்லது    மற்றவர்கள்    என்னைக்குறித்து    இப்படி    உமக்குச்    சொன்னார்களோ    என்றார்.    {John    18:34}

 

பிலாத்து<Pilate>    பிரதியுத்தரமாக:    நான்    யூதனா<Jew>?    உன்    ஜனங்களும்    பிரதான    ஆசாரியரும்    உன்னை    என்னிடத்தில்    ஒப்புக்கொடுத்தார்கள்,    நீ    என்ன    செய்தாய்    என்றான்.    {John    18:35}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    என்    ராஜ்யம்    இவ்வுலகத்திற்குரியதல்ல,    என்    ராஜ்யம்    இவ்வுலகத்திற்குரியதானால்    நான்    யூதரிடத்தில்<Jews>    ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு    என்    ஊழியக்காரர்    போராடியிருப்பார்களே;    இப்படியிருக்க    என்    ராஜ்யம்    இவ்விடத்திற்குரியதல்ல    என்றார்.    {John    18:36}

 

அப்பொழுது    பிலாத்து<Pilate>    அவரை    நோக்கி:    அப்படியானால்    நீ    ராஜாவோ    என்றான்.    இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    நீர்    சொல்லுகிறபடி    நான்    ராஜாதான்;    சத்தியத்தைக்குறித்துச்    சாட்சிகொடுக்க    நான்    பிறந்தேன்,    இதற்காகவே    இந்த    உலகத்தில்    வந்தேன்;    சத்தியவான்    எவனும்    என்    சத்தம்    கேட்கிறான்    என்றார்.    {John    18:37}

 

அதற்குப்    பிலாத்து<Pilate>:    சத்தியமாவது    என்ன    என்றான்.    மறுபடியும்    அவன்    யூதர்களிடத்தில்<Jews>    வெளியே    வந்து:    நான்    அவனிடத்தில்    ஒரு    குற்றமும்    காணேன்.    {John    18:38}

 

பஸ்காபண்டிகையில்    நான்    உங்களுக்கு    ஒருவனை    விடுதலைபண்ணுகிற    வழக்கமுண்டே;    ஆகையால்    யூதருடைய<Jews>    ராஜாவை    நான்    உங்களுக்காக    விடுதலைபண்ண    உங்களுக்கு    மனதுண்டா    என்றான்.    {John    18:39}

 

அப்பொழுது:    அவர்களெல்லாரும்    இவனையல்ல,    பரபாசை<Barabbas>    விடுதலைபண்ணவேண்டும்    என்று    மறுபடியும்    சத்தமிட்டார்கள்;    அந்தப்    பரபாசென்பவன்<Barabbas>    கள்ளனாயிருந்தான்.    {John    18:40}

 

அப்பொழுது    பிலாத்து<Pilate>    இயேசுவைப்<Jesus>    பிடித்து    வாரினால்    அடிப்பித்தான்.    {John    19:1}

 

போர்ச்சேவகர்    முள்ளுகளினால்    ஒரு    முடியைப்    பின்னி    அவர்    சிரசின்மேல்    வைத்து,    சிவப்பான    ஒரு    அங்கியை    அவருக்கு    உடுத்தி:    {John    19:2}

 

யூதருடைய<Jews>    ராஜாவே,    வாழ்க    என்று    சொல்லி,    அவரைக்    கையினால்    அடித்தார்கள்.    {John    19:3}

 

பிலாத்து<Pilate>    மறுபடியும்    வெளியே    வந்து:    நான்    இவனிடத்தில்    ஒரு    குற்றமும்    காணேன்    என்று    நீங்கள்    அறியும்படிக்கு,    இதோ,    உங்களிடத்தில்    இவனை    வெளியே    கொண்டுவருகிறேன்    என்றான்.    {John    19:4}

 

இயேசு<Jesus>,    முள்முடியும்    சிவப்பங்கியும்    தரித்தவராய்,    வெளியே    வந்தார்.    அப்பொழுது    பிலாத்து<Pilate>    அவர்களை    நோக்கி:    இதோ,    இந்த    மனுஷன்    என்றான்.    {John    19:5}

 

பிரதான    ஆசாரியரும்    சேவகரும்    அவரைக்    கண்டபோது:    சிலுவையில்    அறையும்    சிலுவையில்    அறையும்    என்று    சத்தமிட்டார்கள்.    அதற்குப்    பிலாத்து<Pilate>:    நீங்களே    இவனைக்    கொண்டுபோய்ச்    சிலுவையில்    அறையுங்கள்,    நான்    இவனிடத்தில்    ஒரு    குற்றமும்    காணேன்    என்றான்.    {John    19:6}

 

யூதர்கள்<Jews>    அவனுக்குப்    பிரதியுத்தரமாக:    எங்களுக்கு    ஒரு    நியாயப்பிரமாணமுண்டு,    இவன்    தன்னைத்    தேவனுடைய    குமாரனென்று    சொன்னபடியினால்,    அந்த    நியாயப்பிரமாணத்தின்படியே,    இவன்    சாகவேண்டும்    என்றார்கள்.    {John    19:7}

 

பிலாத்து<Pilate>    இந்த    வார்த்தையைக்    கேட்டபொழுது    அதிகமாய்ப்    பயந்து,    {John    19:8}

 

மறுபடியும்    அரமனைக்குள்ளே    போய்,    இயேசுவை<Jesus>    நோக்கி:    நீ    எங்கேயிருந்து    வந்தவன்    என்றான்.    அதற்கு    இயேசு<Jesus>    மாறுத்தரம்    ஒன்றும்    சொல்லவில்லை.    {John    19:9}

 

அப்பொழுது    பிலாத்து<Pilate>:    நீ    என்னோடே    பேசுகிறதில்லையா?    உன்னைச்    சிலுவையில்    அறைய    எனக்கு    அதிகாரமுண்டென்றும்,    உன்னை    விடுதலைபண்ண    எனக்கு    அதிகாரமுண்டென்றும்    உனக்குத்    தெரியாதா    என்றான்.    {John    19:10}

 

இயேசு<Jesus>    பிரதியுத்தரமாக:    பரத்திலிருந்து    உமக்குக்    கொடுக்கப்படாதிருந்தால்,    என்மேல்    உமக்கு    ஒரு    அதிகாரமுமிராது;    ஆனபடியினாலே    என்னை    உம்மிடத்தில்    ஒப்புக்கொடுத்தவனுக்கு    அதிக    பாவமுண்டு    என்றார்.    {John    19:11}

 

அதுமுதல்    பிலாத்து<Pilate>    அவரை    விடுதலைபண்ண    வகைதேடினான்.    யூதர்கள்<Jews>    அவனை    நோக்கி:    இவனை    விடுதலைபண்ணினால்    நீர்    இராயனுக்குச்<Caesar>    சிநேகிதனல்ல;    தன்னை    ராஜாவென்கிறவனெவனோ    அவன்    இராயனுக்கு<Caesar>    விரோதி    என்று    சத்தமிட்டார்கள்.    {John    19:12}

 

பிலாத்து<Pilate>    இந்த    வார்த்தையைக்    கேட்டபொழுது,    இயேசுவை<Jesus>    வெளியே    அழைத்துவந்து,    தளவரிசைப்படுத்தின    மேடையென்றும்,    எபிரெயு<Hebrew>    பாஷையிலே    கபத்தா<Gabbatha>    என்றும்    சொல்லப்பட்ட    இடத்திலே,    நியாயாசனத்தின்மேல்    உட்கார்ந்தான்.    {John    19:13}

 

அந்த    நாள்    பஸ்காவுக்கு    ஆயத்தநாளும்    ஏறக்குறைய    ஆறுமணி    நேரமுமாயிருந்தது;    அப்பொழுது    அவன்    யூதர்களை<Jews>    நோக்கி:    இதோ,    உங்கள்    ராஜா    என்றான்.    {John    19:14}

 

அவர்கள்:    இவனை    அகற்றும்    அகற்றும்,    சிலுவையில்    அறையும்    என்று    சத்தமிட்டார்கள்.    அதற்குப்    பிலாத்து<Pilate>:    உங்கள்    ராஜாவை    நான்    சிலுவையில்    அறையலாமா    என்றான்.    பிரதான    ஆசாரியர்    பிரதியுத்தரமாக:    இராயனேயல்லாமல்<Caesar>    எங்களுக்கு    வேறே    ராஜா    இல்லை    என்றார்கள்.    {John    19:15}

 

அப்பொழுது    அவரைச்    சிலுவையில்    அறையும்படிக்கு    அவர்களிடத்தில்    ஒப்புக்கொடுத்தான்.    அவர்கள்    இயேசுவைப்<Jesus>    பிடித்துக்கொண்டுபோனார்கள்.    {John    19:16}

 

அவர்    தம்முடைய    சிலுவையைச்    சுமந்துகொண்டு,    எபிரெயு<Hebrew>    பாஷையிலே    கொல்கொதா<Golgotha>    என்று    சொல்லப்படும்    கபாலஸ்தலம்    என்கிற    இடத்திற்குப்    புறப்பட்டுப்போனார்.    {John    19:17}

 

அங்கே    அவரைச்    சிலுவையில்    அறைந்தார்கள்;    அவரோடேகூட    வேறிரண்டுபேரை    இரண்டு    பக்கங்களிலும்    இயேசுவை<Jesus>    நடுவிலுமாகச்    சிலுவைகளில்    அறைந்தார்கள்.    {John    19:18}

 

பிலாத்து<Pilate>    ஒரு    மேல்விலாசத்தை    எழுதி,    சிலுவையின்மேல்    போடுவித்தான்.    அதில்    நசரேயனாகிய    இயேசு    யூதருடைய    ராஜா<JESUS    OF    NAZARETH    THE    KING    OF    THE    JEWS>    என்று    எழுதியிருந்தது.    {John    19:19}

 

இயேசு<Jesus>    சிலுவையில்    அறையப்பட்ட    இடம்    நகரத்திற்குச்    சமீபமாயிருந்தபடியினால்,    யூதரில்<Jews>    அநேகர்    அந்த    மேல்விலாசத்தை    வாசித்தார்கள்;    அது    எபிரெயு<Hebrew>    கிரேக்கு<Greek>    லத்தீன்<Latin>    பாஷைகளில்    எழுதியிருந்தது.    {John    19:20}

 

அப்பொழுது    யூதருடைய<Jews>    பிரதான    ஆசாரியர்    பிலாத்துவை<Pilate>    நோக்கி:    யூதருடைய    ராஜா<The    King    of    the    Jews>    என்று    நீர்    எழுதாமல்,    தான்    யூதருடைய<Jews>    ராஜா    என்று    அவன்    சொன்னதாக    எழுதும்    என்றார்கள்.    {John    19:21}

 

பிலாத்து<Pilate>    பிரதியுத்தரமாக:    நான்    எழுதினது    எழுதினதே    என்றான்.    {John    19:22}

 

போர்ச்சேவகர்    இயேசுவைச்<Jesus>    சிலுவையில்    அறைந்தபின்பு,    அவருடைய    வஸ்திரங்களை    எடுத்து,    ஒவ்வொரு    சேவகனுக்கு    ஒவ்வொரு    பங்காக    நாலு    பங்காக்கினார்கள்;    அங்கியையும்    எடுத்தார்கள்,    அந்த    அங்கி,    தையலில்லாமல்    மேலே    தொடங்கி    முழுவதும்    நெய்யப்பட்டதாயிருந்தது.    {John    19:23}

 

அவர்கள்:    இதை    நாம்    கிழியாமல்,    யாருக்கு    வருமோ    என்று    இதைக்குறித்துச்    சீட்டுப்போடுவோம்    என்று    ஒருவரோடொருவர்    பேசிக்கொண்டார்கள்.    என்    வஸ்திரங்களைத்    தங்களுக்குள்ளே    பங்கிட்டு,    என்    உடையின்மேல்    சீட்டுப்போட்டார்கள்    என்கிற    வேதவாக்கியம்    நிறைவேறத்தக்கதாகப்    போர்ச்சேவகர்    இப்படிச்    செய்தார்கள்.    {John    19:24}

 

இயேசுவின்<Jesus>    சிலுவையினருகே    அவருடைய    தாயும்,    அவருடைய    தாயின்    சகோதரி    கிலெயோப்பா<Cleophas>    மரியாளும்<Mary>,    மகதலேனா    மரியாளும்<Mary    Magdalene>    நின்றுகொண்டிருந்தார்கள்.    {John    19:25}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    தம்முடைய    தாயையும்    அருகே    நின்ற    தமக்கு    அன்பாயிருந்த    சீஷனையும்    கண்டு,    தம்முடைய    தாயை    நோக்கி:    ஸ்திரீயே,    அதோ,    உன்    மகன்    என்றார்.    {John    19:26}

 

பின்பு    அந்தச்    சீஷனை    நோக்கி:    அதோ,    உன்    தாய்    என்றார்.    அந்நேரமுதல்    அந்தச்    சீஷன்    அவளைத்    தன்னிடமாய்    ஏற்றுக்கொண்டான்.    {John    19:27}

 

அதன்பின்பு,    எல்லாம்    முடிந்தது    என்று    இயேசு<Jesus>    அறிந்து,    வேதவாக்கியம்    நிறைவேறத்தக்கதாக:    தாகமாயிருக்கிறேன்    என்றார்.    {John    19:28}

 

காடி    நிறைந்த    பாத்திரம்    அங்கே    வைக்கப்பட்டிருந்தது;    அவர்கள்    கடற்காளானைக்    காடியிலே    தோய்த்து,    ஈசோப்புத்தண்டில்    மாட்டி,    அவர்    வாயினிடத்தில்    நீட்டிக்கொடுத்தார்கள்.    {John    19:29}

 

இயேசு<Jesus>    காடியை    வாங்கினபின்பு,    முடிந்தது    என்று    சொல்லி,    தலையைச்    சாய்த்து,    ஆவியை    ஒப்புக்கொடுத்தார்.    {John    19:30}

 

அந்த    நாள்    பெரிய    ஓய்வுநாளுக்கு    ஆயத்தநாளாயிருந்தபடியினால்,    உடல்கள்    அந்த    ஓய்வுநாளிலே    சிலுவைகளில்    இராதபடிக்கு,    யூதர்கள்<Jews>    பிலாத்துவினிடத்தில்<Pilate>    போய்,    அவர்களுடைய    காலெலும்புகளை    முறிக்கும்படிக்கும்,    உடல்களை    எடுத்துப்போடும்படிக்கும்    உத்தரவு    கேட்டுக்கொண்டார்கள்.    {John    19:31}

 

அந்தப்படி    போர்ச்சேவகர்    வந்து,    அவருடனேகூடச்    சிலுவையில்    அறையப்பட்ட    முந்தினவனுடைய    காலெலும்புகளையும்    மற்றவனுடைய    காலெலும்புகளையும்    முறித்தார்கள்.    {John    19:32}

 

அவர்கள்    இயேசுவினிடத்தில்<Jesus>    வந்து,    அவர்    மரித்திருக்கிறதைக்    கண்டு,    அவருடைய    காலெலும்புகளை    முறிக்கவில்லை.    {John    19:33}

 

ஆகிலும்    போர்ச்சேவகரில்    ஒருவன்    ஈட்டியினாலே    அவருடைய    விலாவில்    குத்தினான்;    உடனே    இரத்தமும்    தண்ணீரும்    புறப்பட்டது.    {John    19:34}

 

அதைக்    கண்டவன்    சாட்சிகொடுக்கிறான்,    அவனுடைய    சாட்சி    மெய்யாயிருக்கிறது;    நீங்கள்    விசுவாசிக்கும்படி,    தான்    சொல்லுகிறது    மெய்யென்று    அவன்    அறிந்திருக்கிறான்.    {John    19:35}

 

அவருடைய    எலும்புகளில்    ஒன்றும்    முறிக்கப்படுவதில்லை    என்கிற    வேதவாக்கியம்    நிறைவேறும்படி    இவைகள்    நடந்தது.    {John    19:36}

 

அல்லாமலும்    தாங்கள்    குத்தினவரை    நோக்கிப்பார்ப்பார்கள்    என்று    வேறொரு    வேதவாக்கியம்    சொல்லுகிறது.    {John    19:37}

 

இவைகளுக்குப்பின்பு    அரிமத்தியா<Arimathaea>    ஊரானும்,    யூதருக்குப்<Jews>    பயந்ததினால்    இயேசுவுக்கு<Jesus>    அந்தரங்க    சீஷனுமாகிய    யோசேப்பு<Joseph>    இயேசுவின்<Jesus>    சரீரத்தை    எடுத்துக்கொண்டுபோகும்படி    பிலாத்துவினிடத்தில்<Pilate>    உத்தரவு    கேட்டான்;    பிலாத்து<Pilate>    உத்தரவு    கொடுத்தான்.    ஆகையால்    அவன்    வந்து,    இயேசுவின்<Jesus>    சரீரத்தை    எடுத்துக்கொண்டுபோனான்.    {John    19:38}

 

ஆரம்பத்திலே    ஒரு    இராத்திரியில்    இயேசுவினிடத்தில்<Jesus>    வந்திருந்த    நிக்கொதேமு<Nicodemus>    என்பவன்    வெள்ளைப்போளமும்    கரியபோளமும்    கலந்து    ஏறக்குறைய    நூறு    இராத்தல்    கொண்டுவந்தான்.    {John    19:39}

 

அவர்கள்    இயேசுவின்<Jesus>    சரீரத்தை    எடுத்து,    யூதர்கள்<Jews>    அடக்கம்பண்ணும்    முறைமையின்படியே    அதைச்    சுகந்தவர்க்கங்களுடனே    சீலைகளில்    சுற்றிக்    கட்டினார்கள்.    {John    19:40}

 

அவர்    சிலுவையில்    அறையப்பட்ட    இடத்தில்    ஒரு    தோட்டமும்,    அந்தத்    தோட்டத்தில்    ஒருக்காலும்    ஒருவனும்    வைக்கப்பட்டிராத    ஒரு    புதிய    கல்லறையும்    இருந்தது.    {John    19:41}

 

யூதருடைய<Jews>    ஆயத்தநாளானபடியினாலும்,    அந்தக்    கல்லறை    சமீபமாயிருந்தபடியினாலும்,    அவ்விடத்திலே    இயேசுவை<Jesus>    வைத்தார்கள்.    {John    19:42}

 

வாரத்தின்    முதல்நாள்    காலையில்,    அதிக    இருட்டோடே,    மகதலேனா    மரியாள்<Mary    Magdalene>    கல்லறையினிடத்திற்கு    வந்து    கல்லறையை    அடைத்திருந்த    கல்    எடுத்துப்    போட்டிருக்கக்கண்டாள்.    {John    20:1}

 

உடனே    அவள்    ஓடி,    சீமோன்பேதுருவினிடத்திலும்<Simon    Peter>    இயேசுவுக்கு<Jesus>    அன்பாயிருந்த    மற்றச்    சீஷனிடத்திலும்    போய்:    கர்த்தரைக்    கல்லறையிலிருந்து    எடுத்துக்கொண்டு    போய்விட்டார்கள்,    அவரை    வைத்த    இடம்    எங்களுக்குத்    தெரியவில்லை    என்றாள்.    {John    20:2}

 

அப்பொழுது    பேதுருவும்<Peter>    மற்றச்    சீஷனும்    கல்லறையினிடத்திற்குப்    போகும்படி    புறப்பட்டு,    இருவரும்    ஒருமித்து    ஓடினார்கள்.    {John    20:3}

 

பேதுருவைப்பார்க்கிலும்<Peter>    மற்றச்    சீஷன்    துரிதமாய்    ஓடி,    முந்திக்    கல்லறையினிடத்தில்    வந்து,    {John    20:4}

 

அதற்குள்ளே    குனிந்துபார்த்து,    சீலைகள்    கிடக்கிறதைக்    கண்டான்;    ஆனாலும்    அவன்    உள்ளே    போகவில்லை.    {John    20:5}

 

சீமோன்பேதுரு<Simon    Peter>    அவனுக்குப்    பின்னே    வந்து,    கல்லறைக்குள்ளே    பிரவேசித்து,    {John    20:6}

 

சீலைகள்    கிடக்கிறதையும்,    அவருடைய    தலையில்    சுற்றியிருந்த    சீலை    மற்றச்    சீலைகளுடனே    வைத்திராமல்    தனியே    ஒரு    இடத்திலே    சுருட்டி    வைத்திருக்கிறதையும்    கண்டான்.    {John    20:7}

 

முந்திக்    கல்லறையினிடத்திற்கு    வந்த    மற்றச்    சீஷனும்    அப்பொழுது    உள்ளே    பிரவேசித்து,    கண்டு    விசுவாசித்தான்.    {John    20:8}

 

அவர்    மரித்தோரிலிருந்து    எழுந்திருக்கவேண்டும்    என்கிற    வேதவாக்கியத்தை    அவர்கள்    இன்னும்    அறியாதிருந்தார்கள்.    {John    20:9}

 

பின்பு    அந்தச்    சீஷர்கள்    தங்களுடைய    இடத்திற்குத்    திரும்பிப்போனார்கள்.    {John    20:10}

 

மரியாள்<Mary>    கல்லறையினருகே    வெளியே    நின்று    அழுதுகொண்டிருந்தாள்;    அப்படி    அழுதுகொண்டிருக்கையில்    அவள்    குனிந்து    கல்லறைக்குள்ளே    பார்த்து,    {John    20:11}

 

இயேசுவின்<Jesus>    சரீரம்    வைக்கப்பட்டிருந்த    இடத்திலே    வெள்ளுடை    தரித்தவர்களாய்    இரண்டு    தூதர்கள்,    தலைமாட்டில்    ஒருவனும்    கால்மாட்டில்    ஒருவனுமாக,    உட்கார்ந்திருக்கிறதைக்    கண்டாள்.    {John    20:12}

 

அவர்கள்    அவளை    நோக்கி:    ஸ்திரீயே,    ஏன்    அழுகிறாய்    என்றார்கள்.    அதற்கு    அவள்:    என்    ஆண்டவரை    எடுத்துக்கொண்டு    போய்விட்டார்கள்,    அவரை    வைத்த    இடம்    எனக்குத்    தெரியவில்லை    என்றாள்.    {John    20:13}

 

இவைகளைச்    சொல்லிப்    பின்னாகத்    திரும்பி,    இயேசு<Jesus>    நிற்கிறதைக்    கண்டாள்;    ஆனாலும்    அவரை    இயேசு<Jesus>    என்று    அறியாதிருந்தாள்.    {John    20:14}

 

இயேசு<Jesus>    அவளைப்    பார்த்து:    ஸ்திரீயே,    ஏன்    அழுகிறாய்,    யாரைத்    தேடுகிறாய்    என்றார்.    அவள்,    அவரைத்    தோட்டக்காரனென்று    எண்ணி:    ஐயா,    நீர்    அவரை    எடுத்துக்கொண்டு    போனதுண்டானால்,    அவரை    வைத்த    இடத்தை    எனக்குச்    சொல்லும்,    நான்    போய்    அவரை    எடுத்துக்கொள்ளுவேன்    என்றாள்.    {John    20:15}

 

இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    மரியாளே<Mary>    என்றார்.    அவள்    திரும்பிப்    பார்த்து:    ரபூனி<Rabboni>    என்றாள்;    அதற்குப்    போதகரே    என்று    அர்த்தமாம்.    {John    20:16}

 

இயேசு<Jesus>    அவளை    நோக்கி:    என்னைத்    தொடாதே,    நான்    இன்னும்    என்    பிதாவினிடத்திற்கு    ஏறிப்போகவில்லை;    நீ    என்    சகோதரரிடத்திற்குப்    போய்,    நான்    என்    பிதாவினிடத்திற்கும்    உங்கள்    பிதாவினிடத்திற்கும்,    என்    தேவனிடத்திற்கும்    உங்கள்    தேவனிடத்திற்கும்    ஏறிப்போகிறேன்    என்று    அவர்களுக்குச்    சொல்லு    என்றார்.    {John    20:17}

 

மகதலேனா    மரியாள்<Mary    Magdalene>    போய்,    தான்    கர்த்தரைக்    கண்டதையும்,    அவர்    தன்னுடனே    சொன்னவைகளையும்    சீஷருக்கு    அறிவித்தாள்.    {John    20:18}

 

வாரத்தின்    முதல்நாளாகிய    அன்றையத்தினம்    சாயங்காலவேளையிலே,    சீஷர்கள்    கூடியிருந்த    இடத்தில்,    யூதர்களுக்குப்<Jews>    பயந்ததினால்    கதவுகள்    பூட்டியிருக்கையில்,    இயேசு<Jesus>    வந்து    நடுவே    நின்று:    உங்களுக்குச்    சமாதானம்    என்றார்.    {John    20:19}

 

அவர்    இப்படிச்    சொல்லித்    தம்முடைய    கைகளையும்    விலாவையும்    அவர்களுக்குக்    காண்பித்தார்.    சீஷர்கள்    கர்த்தரைக்கண்டு    சந்தோஷப்பட்டார்கள்.    {John    20:20}

 

இயேசு<Jesus>    மறுபடியும்    அவர்களை    நோக்கி:    உங்களுக்குச்    சமாதானமுண்டாவதாக;    பிதா    என்னை    அனுப்பினதுபோல    நானும்    உங்களை    அனுப்புகிறேன்    என்று    சொல்லி,    {John    20:21}

 

அவர்கள்மேல்    ஊதி:    பரிசுத்த    ஆவியைப்    பெற்றுக்கொள்ளுங்கள்;    {John    20:22}

 

எவர்களுடைய    பாவங்களை    மன்னிக்கிறீர்களோ    அவைகள்    அவர்களுக்கு    மன்னிக்கப்படும்,    எவர்களுடைய    பாவங்களை    மன்னியாதிருக்கிறீர்களோ    அவைகள்    அவர்களுக்கு    மன்னிக்கப்படாதிருக்கும்    என்றார்.    {John    20:23}

 

இயேசு<Jesus>    வந்திருந்தபோது    பன்னிருவரில்    ஒருவனாகிய    திதிமு<Didymus>    என்னப்பட்ட    தோமா<Thomas>    என்பவன்    அவர்களுடனேகூட    இருக்கவில்லை.    {John    20:24}

 

மற்றச்    சீஷர்கள்:    கர்த்தரைக்    கண்டோம்    என்று    அவனுடனே    சொன்னார்கள்.    அதற்கு    அவன்:    அவருடைய    கைகளில்    ஆணிகளினாலுண்டான    காயத்தை    நான்    கண்டு,    அந்தக்    காயத்திலே    என்    விரலையிட்டு,    என்    கையை    அவருடைய    விலாவிலே    போட்டாலொழிய    விசுவாசிக்கமாட்டேன்    என்றான்.    {John    20:25}

 

மறுபடியும்    எட்டுநாளைக்குப்பின்பு    அவருடைய    சீஷர்கள்    வீட்டுக்குள்ளே    இருந்தார்கள்;    தோமாவும்<Thomas>    அவர்களுடனேகூட    இருந்தான்;    கதவுகள்    பூட்டப்பட்டிருந்தது.    அப்பொழுது    இயேசு<Jesus>    வந்து    நடுவே    நின்று:    உங்களுக்குச்    சமாதானம்    என்றார்.    {John    20:26}

 

பின்பு    அவர்    தோமாவை<Thomas>    நோக்கி:    நீ    உன்    விரலை    இங்கே    நீட்டி,    என்    கைகளைப்    பார்,    உன்    கையை    நீட்டி,    என்    விலாவிலே    போடு,    அவிசுவாசியாயிராமல்    விசுவாசியாயிரு    என்றார்.    {John    20:27}

 

தோமா<Thomas>    அவருக்குப்    பிரதியுத்தரமாக:    என்    ஆண்டவரே!    என்    தேவனே!    என்றான்.    {John    20:28}

 

அதற்கு    இயேசு<Jesus>:    தோமாவே<Thomas>,    நீ    என்னைக்    கண்டதினாலே    விசுவாசித்தாய்,    காணாதிருந்தும்    விசுவாசிக்கிறவர்கள்    பாக்கியவான்கள்    என்றார்.    {John    20:29}

 

இந்தப்    புஸ்தகத்தில்    எழுதியிராத    வேறு    அநேக    அற்புதங்களையும்    இயேசு<Jesus>    தமது    சீஷருக்கு    முன்பாகச்    செய்தார்.    {John    20:30}

 

இயேசு<Jesus>    தேவனுடைய    குமாரனாகிய    கிறிஸ்து<Christ>    என்று    நீங்கள்    விசுவாசிக்கும்படியாகவும்,    விசுவாசித்து    அவருடைய    நாமத்தினாலே    நித்தியஜீவனை    அடையும்படியாகவும்,    இவைகள்    எழுதப்பட்டிருக்கிறது.    {John    20:31}

 

இவைகளுக்குப்பின்பு    இயேசு<Jesus>    திபேரியா<Tiberias>    கடற்கரையிலே    மறுபடியும்    சீஷருக்குத்    தம்மை    வெளிப்படுத்தினார்;    வெளிப்படுத்தின    விவரமாவது:    {John    21:1}

 

சீமோன்பேதுருவும்<Simon    Peter>,    திதிமு<Didymus>    என்னப்பட்ட    தோமாவும்<Thomas>,    கலிலேயா<Galilee>    நாட்டிலுள்ள    கானா<Cana>    ஊரானாகிய    நாத்தான்வேலும்<Nathanael>,    செபெதேயுவின்<Zebedee>    குமாரரும்,    அவருடைய    சீஷரில்    வேறு    இரண்டுபேரும்    கூடியிருக்கும்போது,    {John    21:2}

 

சீமோன்பேதுரு<Simon    Peter>    மற்றவர்களை    நோக்கி:    மீன்பிடிக்கப்போகிறேன்    என்றான்.    அதற்கு    அவர்கள்:    நாங்களும்    உம்முடனேகூட    வருகிறோம்    என்றார்கள்.    அவர்கள்    புறப்பட்டுப்போய்,    உடனே    படவேறினார்கள்.    அந்த    இராத்திரியிலே    அவர்கள்    ஒன்றும்    பிடிக்கவில்லை.    {John    21:3}

 

விடியற்காலமானபோது,    இயேசு<Jesus>    கரையிலே    நின்றார்;    அவரை    இயேசு<Jesus>    என்று    சீஷர்கள்    அறியாதிருந்தார்கள்.    {John    21:4}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    பிள்ளைகளே,    புசிக்கிறதற்கு    ஏதாகிலும்    உங்களிடத்தில்    உண்டா    என்றார்.    அதற்கு    அவர்கள்:    ஒன்றுமில்லை    என்றார்கள்.    {John    21:5}

 

அப்பொழுது    அவர்:    நீங்கள்    படவுக்கு    வலதுபுறமாக    வலையைப்    போடுங்கள்,    அப்பொழுது    உங்களுக்கு    அகப்படும்    என்றார்.    அப்படியே    அவர்கள்    போட்டு,    திரளான    மீன்கள்    அகப்பட்டதினால்,    அதை    இழுக்கமாட்டாதிருந்தார்கள்.    {John    21:6}

 

ஆதலால்    இயேசுவுக்கு<Jesus>    அன்பாயிருந்த    சீஷன்    பேதுருவைப்<Peter>    பார்த்து:    அவர்    கர்த்தர்    என்றான்.    அவர்    கர்த்தர்    என்று    சீமோன்பேதுரு<Simon    Peter>    கேட்டவுடனே,    தான்    வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால்,    தன்    மேற்சட்டையைக்    கட்டிக்கொண்டு    கடலிலே    குதித்தான்.    {John    21:7}

 

மற்றச்    சீஷர்கள்    கரைக்கு    ஏறக்குறைய    இருநூறுமுழத்    தூரத்தில்    இருந்தபடியினால்    படவிலிருந்து    கொண்டே    மீன்களுள்ள    வலையை    இழுத்துக்கொண்டு    வந்தார்கள்.    {John    21:8}

 

அவர்கள்    கரையிலே    வந்திறங்கினபோது,    கரிநெருப்புப்    போட்டிருக்கிறதையும்,    அதின்மேல்    மீன்    வைத்திருக்கிறதையும்,    அப்பத்தையும்    கண்டார்கள்.    {John    21:9}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    நீங்கள்    இப்பொழுது    பிடித்த    மீன்களில்    சிலவற்றைக்    கொண்டுவாருங்கள்    என்றார்.    {John    21:10}

 

சீமோன்பேதுரு<Simon    Peter>    படவில்    ஏறி,    நூற்றைம்பத்துமூன்று    பெரிய    மீன்களால்    நிறைந்த    வலையைக்    கரையில்    இழுத்தான்;    இத்தனை    மீன்கள்    இருந்தும்    வலை    கிழியவில்லை.    {John    21:11}

 

இயேசு<Jesus>    அவர்களை    நோக்கி:    வாருங்கள்,    போஜனம்பண்ணுங்கள்    என்றார்.    அவரைக்    கர்த்தரென்று    சீஷர்கள்    அறிந்தபடியினால்    அவர்களில்    ஒருவனும்:    நீர்    யார்    என்று    கேட்கத்    துணியவில்லை.    {John    21:12}

 

அப்பொழுது    இயேசு<Jesus>    வந்து,    அப்பத்தையும்    மீனையும்    எடுத்து,    அவர்களுக்குக்    கொடுத்தார்.    {John    21:13}

 

இயேசு<Jesus>    மரித்தோரிலிருந்தெழுந்த    பின்பு    தம்முடைய    சீஷருக்கு    அருளின    தரிசனங்களில்    இது    மூன்றாவது    தரிசனம்.    {John    21:14}

 

அவர்கள்    போஜனம்பண்ணினபின்பு,    இயேசு<Jesus>    சீமோன்பேதுருவை<Simon    Peter>    நோக்கி:    யோனாவின்<Jonas>    குமாரனாகிய    சீமோனே<Simon>,    இவர்களிலும்    அதிகமாய்    நீ    என்னிடத்தில்    அன்பாயிருக்கிறாயா    என்றார்.    அதற்கு    அவன்:    ஆம்    ஆண்டவரே,    உம்மை    நேசிக்கிறேன்    என்பதை    நீர்    அறிவீர்    என்றான்.    அவர்:    என்    ஆட்டுக்குட்டிகளை    மேய்ப்பாயாக    என்றார்.    {John    21:15}

 

இரண்டாந்தரம்    அவர்    அவனை    நோக்கி:    யோனாவின்<Jonas>    குமாரனாகிய    சீமோனே<Simon>,    நீ    என்னிடத்தில்    அன்பாயிருக்கிறாயா    என்றார்.    அதற்கு    அவன்:    ஆம்    ஆண்டவரே,    உம்மை    நேசிக்கிறேன்    என்பதை    நீர்    அறிவீர்    என்றான்.    அவர்:    என்    ஆடுகளை    மேய்ப்பாயாக    என்றார்.    {John    21:16}

 

மூன்றாந்தரம்    அவர்    அவனை    நோக்கி:    யோனாவின்<Jonas>    குமாரனாகிய    சீமோனே<Simon>,    நீ    என்னை    நேசிக்கிறாயா    என்றார்.    என்னை    நேசிக்கிறாயா    என்று    அவர்    மூன்றாந்தரம்    தன்னைக்    கேட்டபடியினாலே,    பேதுரு<Peter>    துக்கப்பட்டு:    ஆண்டவரே,    நீர்    எல்லாவற்றையும்    அறிந்திருக்கிறீர்,    நான்    உம்மை    நேசிக்கிறேன்    என்பதையும்    நீர்    அறிவீர்    என்றான்.    இயேசு<Jesus>:    என்    ஆடுகளை    மேய்ப்பாயாக    என்றார்.    {John    21:17}

 

நீ    இளவயதுள்ளவனாயிருந்தபோது    உன்னை    நீயே    அரைகட்டிக்கொண்டு,    உனக்கு    இஷ்டமான    இடங்களிலே    நடந்து    திரிந்தாய்;    நீ    முதிர்வயதுள்ளவனாகும்போது    உன்    கைகளை    நீட்டுவாய்;    வேறொருவன்    உன்    அரையைக்    கட்டி,    உனக்கு    இஷ்டமில்லாத    இடத்துக்கு    உன்னைக்    கொண்டுபோவான்    என்று    மெய்யாகவே    மெய்யாகவே    உனக்குச்    சொல்லுகிறேன்    என்றார்.    {John    21:18}

 

இன்னவிதமான    மரணத்தினாலே    அவன்    தேவனை    மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக்    குறிக்கும்படியாக    இப்படிச்    சொன்னார்.    அவர்    இதைச்    சொல்லியபின்பு,    அவனை    நோக்கி:    என்னைப்    பின்பற்றிவா    என்றார்.    {John    21:19}

 

பேதுரு<Peter>    திரும்பிப்பார்த்து,    இயேசுவுக்கு<Jesus>    அன்பாயிருந்தவனும்,    இராப்போஜனம்பண்ணுகையில்    அவர்    மார்பிலே    சாய்ந்து:    ஆண்டவரே,    உம்மைக்    காட்டிக்கொடுக்கிறவன்    யார்    என்று    கேட்டவனுமாகிய    சீஷன்    பின்னே    வருகிறதைக்    கண்டான்.    {John    21:20}

 

அவனைக்    கண்டு,    பேதுரு<Peter>    இயேசுவை<Jesus>    நோக்கி:    ஆண்டவரே,    இவன்    காரியம்    என்ன    என்றான்.    {John    21:21}

 

அதற்கு    இயேசு<Jesus>:    நான்    வருமளவும்    இவனிருக்க    எனக்குச்    சித்தமானால்,    உனக்கென்ன,    நீ    என்னைப்    பின்பற்றிவா    என்றார்.    {John    21:22}

 

ஆகையால்    அந்தச்    சீஷன்    மரிப்பதில்லையென்கிற    பேச்சு    சகோதரருக்குள்ளே    பரம்பிற்று.    ஆனாலும்,    அவன்    மரிப்பதில்லையென்று    இயேசு<Jesus>    சொல்லாமல்,    நான்    வருமளவும்    இவனிருக்க    எனக்குச்    சித்தமானால்    உனக்கென்னவென்று    சொன்னார்.    {John    21:23}

 

அந்தச்    சீஷனே    இவைகளைக்குறித்துச்    சாட்சிகொடுத்து    இவைகளை    எழுதினவன்;    அவனுடைய    சாட்சி    மெய்யென்று    அறிந்திருக்கிறோம்.    {John    21:24}

 

இயேசு<Jesus>    செய்த    வேறு    அநேக    காரியங்களுமுண்டு;    அவைகளை    ஒவ்வொன்றாக    எழுதினால்    எழுதப்படும்    புஸ்தகங்கள்    உலகம்    கொள்ளாதென்று    எண்ணுகிறேன்.    ஆமென்.    {John    21:25}

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!