தெயோப்பிலுவே<Theophilus>, இயேசுவானவர்<Jesus> தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, {Acts 1:1}
அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். {Acts 1:2}
அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். {Acts 1:3}
அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான்<John> ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். {Acts 1:4}
ஆகையால் நீங்கள் எருசலேமை<Jerusalem> விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். {Acts 1:5}
அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத்<Israel> திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். {Acts 1:6}
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. {Acts 1:7}
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும்<Jerusalem>, யூதேயா<Judaea> முழுவதிலும், சமாரியாவிலும்<Samaria>, பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். {Acts 1:8}
இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. {Acts 1:9}
அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: {Acts 1:10}
கலிலேயராகிய<Galilee> மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர்<Jesus> எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். {Acts 1:11}
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச்<Jerusalem> சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை<Olivet> என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத்<Jerusalem> திரும்பிப்போனார்கள். {Acts 1:12}
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும்<Peter>, யாக்கோபும்<James>, யோவானும்<John>, அந்திரேயாவும்<Andrew>, பிலிப்பும்<Philip>, தோமாவும்<Thomas>, பற்தொலொமேயும்<Bartholomew>, மத்தேயும்<Matthew>, அல்பேயுவின்<Alphaeus> குமாரனாகிய யாக்கோபும்<James>, செலோத்தே<Zelotes> என்னப்பட்ட சீமோனும்<Simon>, யாக்கோபின்<James> சகோதரனாகிய யூதாவும்<Judas> தங்கியிருந்தார்கள். {Acts 1:13}
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின்<Jesus> தாயாகிய மரியாளோடும்<Mary>, அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். {Acts 1:14}
அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு<Peter> எழுந்து நின்று: {Acts 1:15}
சகோதரரே, இயேசுவைப்<Jesus> பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப்<Judas> பரிசுத்தஆவி தாவீதின்<David> வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. {Acts 1:16}
அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான். {Acts 1:17}
அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. {Acts 1:18}
இது எருசலேமிலுள்ள<Jerusalem> குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம்<The field of blood> என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா<Aceldama> என்னப்பட்டிருக்கிறது. {Acts 1:19}
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது. {Acts 1:20}
ஆதலால், யோவான்<John> ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர்<Jesus> நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், {Acts 1:21}
அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். {Acts 1:22}
அப்பொழுது அவர்கள் யுஸ்து<Justus> என்னும் மறுநாமமுள்ள பர்சபா<Barsabas> என்னப்பட்ட யோசேப்பும்<Joseph> மத்தியாவும்<Matthias> ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: {Acts 1:23}
எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ்<Judas> என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, {Acts 1:24}
இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; {Acts 1:25}
பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின்பேருக்கு<Matthias> விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான். {Acts 1:26}
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். {Acts 2:1}
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. {Acts 2:2}
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. {Acts 2:3}
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். {Acts 2:4}
வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள்<Jews> அப்பொழுது எருசலேமிலே<Jerusalem> வாசம்பண்ணினார்கள். {Acts 2:5}
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். {Acts 2:6}
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா<Galilaeans>? {Acts 2:7}
அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? {Acts 2:8}
பார்த்தரும்<Parthians>, மேதரும்<Medes>, எலாமீத்தரும்<Elamites>, மெசொப்பொத்தாமியா<Mesopotamia>, யூதேயா<Judaea>, கப்பத்தோக்கியா<Cappadocia>, பொந்து<Pontus>, ஆசியா<Asia>, பிரிகியா<Phrygia>, {Acts 2:9}
பம்பிலியா<Pamphylia>, எகிப்து<Egypt> என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச்<Cyrene> சுற்றியிருக்கிற லீபியாவின்<Libya> திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும்<Rome>, யூதரும்<Jews>, யூதமார்க்கத்தமைந்தவர்களும், {Acts 2:10}
கிரேத்தரும்<Cretes>, அரபியருமாகிய<Arabians> நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். {Acts 2:11}
எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். {Acts 2:12}
மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள். {Acts 2:13}
அப்பொழுது பேதுரு<Peter> பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே<Judaea>, எருசலேமில்<Jerusalem> வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். {Acts 2:14}
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. {Acts 2:15}
தீர்க்கதரிசியாகிய யோவேலினால்<Joel> உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. {Acts 2:16}
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; {Acts 2:17}
என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். {Acts 2:18}
அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். {Acts 2:19}
கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். {Acts 2:20}
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். {Acts 2:21}
இஸ்ரவேலரே<Israel>, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய<Nazarene> இயேசுவைக்கொண்டு<Jesus> தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். {Acts 2:22}
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை<Jesus> நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். {Acts 2:23}
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. {Acts 2:24}
அவரைக்குறித்துத் தாவீது<David>: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; {Acts 2:25}
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; {Acts 2:26}
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; {Acts 2:27}
ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். {Acts 2:28}
சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து<David> நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. {Acts 2:29}
அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை<Christ> எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், {Acts 2:30}
அவன் கிறிஸ்துவினுடைய<Christ> ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். {Acts 2:31}
இந்த இயேசுவைத்<Jesus> தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். {Acts 2:32}
அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். {Acts 2:33}
தாவீது<David> பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், {Acts 2:34}
நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். {Acts 2:35}
ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே<Jesus> தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று<Christ> இஸ்ரவேல்<Israel> குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். {Acts 2:36}
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும்<Peter> மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். {Acts 2:37}
பேதுரு<Peter> அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின்<Jesus Christ> நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். {Acts 2:38}
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; {Acts 2:39}
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். {Acts 2:40}
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். {Acts 2:41}
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். {Acts 2:42}
எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. {Acts 2:43}
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். {Acts 2:44}
காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். {Acts 2:45}
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, {Acts 2:46}
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார். {Acts 2:47}
ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும்<Peter> யோவானும்<John> தேவாலயத்துக்குப் போனார்கள். {Acts 3:1}
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். {Acts 3:2}
தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும்<Peter> யோவானையும்<John> அவன் கண்டு பிச்சைகேட்டான். {Acts 3:3}
பேதுருவும்<Peter> யோவானும்<John> அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். {Acts 3:4}
அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். {Acts 3:5}
அப்பொழுது பேதுரு<Peter>: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய<Nazarene> இயேசுகிறிஸ்துவின்<Jesus Christ> நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; {Acts 3:6}
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. {Acts 3:7}
அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். {Acts 3:8}
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: {Acts 3:9}
தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். {Acts 3:10}
குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும்<Peter> யோவானையும்<John> பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன்<Solomon> மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். {Acts 3:11}
பேதுரு<Peter> அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே<Israel>, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? {Acts 3:12}
ஆபிரகாம்<Abraham> ஈசாக்கு<Isaac> யாக்கோபு<Jacob> என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை<Jesus> மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து<Pilate> அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள். {Acts 3:13}
பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு, {Acts 3:14}
ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். {Acts 3:15}
அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது. {Acts 3:16}
சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன். {Acts 3:17}
கிறிஸ்து<Christ> பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். {Acts 3:18}
ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை<Jesus Christ> அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், {Acts 3:19}
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். {Acts 3:20}
உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். {Acts 3:21}
மோசே<Moses> பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. {Acts 3:22}
அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். {Acts 3:23}
சாமுவேல்<Samuel> முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். {Acts 3:24}
நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச்<Abraham> சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். {Acts 3:25}
அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை<Jesus> எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். {Acts 3:26}
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும்<Sadducees> அவர்களிடத்தில் வந்து, {Acts 4:1}
அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை<Jesus> முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, {Acts 4:2}
அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். {Acts 4:3}
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. {Acts 4:4}
மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், {Acts 4:5}
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும்<Annas>, காய்பாவும்<Caiaphas>, யோவானும்<John>, அலெக்சந்தரும்<Alexander>, பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே<Jerusalem> கூட்டங்கூடி, {Acts 4:6}
அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். {Acts 4:7}
அப்பொழுது பேதுரு<Peter> பரிசுத்தஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின்<Israel> மூப்பர்களே, {Acts 4:8}
பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், {Acts 4:9}
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய<Nazarene> இயேசுகிறிஸ்துவின்<Jesus Christ> நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல்<Israel> ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. {Acts 4:10}
வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். {Acts 4:11}
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். {Acts 4:12}
பேதுருவும்<Peter> யோவானும்<John> பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட<Jesus> இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். {Acts 4:13}
சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. {Acts 4:14}
அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: {Acts 4:15}
இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில்<Jerusalem> வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. {Acts 4:16}
ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு, {Acts 4:17}
அவர்களை அழைத்து: இயேசுவின்<Jesus> நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். {Acts 4:18}
பேதுருவும்<Peter> யோவானும்<John> அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். {Acts 4:19}
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். {Acts 4:20}
நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். {Acts 4:21}
அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். {Acts 4:22}
அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். {Acts 4:23}
அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். {Acts 4:24}
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், {Acts 4:25}
கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு<Christ> விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின்<David> வாக்கினால் உரைத்தீரே. {Acts 4:26}
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, {Acts 4:27}
ஏரோதும்<Herod> பொந்தியுபிலாத்தும்<Pontius Pilate>, புறஜாதிகளோடும் இஸ்ரவேல்<Israel> ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு<Jesus> விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். {Acts 4:28}
இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, {Acts 4:29}
உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின்<Jesus> நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். {Acts 4:30}
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். {Acts 4:31}
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. {Acts 4:32}
கர்த்தராகிய இயேசுவின்<Jesus> உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. {Acts 4:33}
நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, {Acts 4:34}
அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. {Acts 4:35}
சீப்புருதீவானும்<Cyprus> லேவியனும்<Levite> அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன்<The son of consolation> என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா<Barnabas> என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே<Joses> என்பவன், {Acts 4:36}
தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். {Acts 4:37}
அனனியா<Ananias> என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும்<Sapphira> தங்கள் காணியாட்சியை விற்றார்கள். {Acts 5:1}
தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். {Acts 5:2}
பேதுரு<Peter> அவனை நோக்கி: அனனியாவே<Ananias>, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? {Acts 5:3}
அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். {Acts 5:4}
அனனியா<Ananias> இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. {Acts 5:5}
வாலிபர் எழுந்து, அவனைச் சீலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள். {Acts 5:6}
ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். {Acts 5:7}
பேதுரு<Peter> அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். {Acts 5:8}
பேதுரு<Peter> அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். {Acts 5:9}
உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள். {Acts 5:10}
சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று. {Acts 5:11}
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய<Solomon> மண்டபத்தில் இருந்தார்கள். {Acts 5:12}
மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். {Acts 5:13}
திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். {Acts 5:14}
பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு<Peter> நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். {Acts 5:15}
சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக்<Jerusalem> கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். {Acts 5:16}
அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய<Sadducees> சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, {Acts 5:17}
அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். {Acts 5:18}
கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: {Acts 5:19}
நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான். {Acts 5:20}
அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல்<Israel> புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள். {Acts 5:21}
சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: {Acts 5:22}
சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். {Acts 5:23}
இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். {Acts 5:24}
அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். {Acts 5:25}
உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். {Acts 5:26}
அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: {Acts 5:27}
நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை<Jerusalem> உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். {Acts 5:28}
அதற்குப் பேதுருவும்<Peter> மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. {Acts 5:29}
நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை<Jesus> நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, {Acts 5:30}
இஸ்ரவேலுக்கு<Israel> மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். {Acts 5:31}
இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள். {Acts 5:32}
அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள். {Acts 5:33}
அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல்<Gamaliel> என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன்<Pharisee> ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச்சொல்லி, {Acts 5:34}
சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே<Israel>, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். {Acts 5:35}
ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ்<Theudas> என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். {Acts 5:36}
அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய<Galilee> யூதாஸ்<Judas> என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். {Acts 5:37}
இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; {Acts 5:38}
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான். {Acts 5:39}
அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின்<Jesus> நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். {Acts 5:40}
அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், {Acts 5:41}
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே<Jesus> கிறிஸ்துவென்று<Christ> பிரசங்கித்தார்கள். {Acts 5:42}
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள்<Grecians>, தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு<Hebrews> விரோதமாய் முறுமுறுத்தார்கள். {Acts 6:1}
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. {Acts 6:2}
ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். {Acts 6:3}
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். {Acts 6:4}
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும்<Stephen>, பிலிப்பையும்<Philip>, பிரொகோரையும்<Prochorus>, நிக்கானோரையும்<Nicanor>, தீமோனையும்<Timon>, பர்மெனாவையும்<Parmenas>, யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா<Antioch> பட்டணத்தானாகிய நிக்கொலாவையும்<Nicolas> தெரிந்துகொண்டு, {Acts 6:5}
அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். {Acts 6:6}
தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில்<Jerusalem> மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். {Acts 6:7}
ஸ்தேவான்<Stephen> விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். {Acts 6:8}
அப்பொழுது லிபர்த்தீனர்<Libertines> என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே<Cyrenians> பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா<Alexandrians> பட்டணத்தாரிலும், சிலிசியா<Cilicia> நாட்டாரிலும், ஆசியா<Asia> தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே<Stephen> தர்க்கம்பண்ணினார்கள். {Acts 6:9}
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று. {Acts 6:10}
அப்பொழுது அவர்கள்: மோசேக்கும்<Moses> தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி; {Acts 6:11}
ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; {Acts 6:12}
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்; {Acts 6:13}
எப்படியென்றால், நசரேயனாகிய<Nazarene> அந்த இயேசு<Jesus> இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே<Moses> நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள். {Acts 6:14}
ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள். {Acts 6:15}
பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். {Acts 7:1}
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம்<Abraham> காரானூரிலே<Charran> குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா<Mesopotamia> நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: {Acts 7:2}
நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். {Acts 7:3}
அப்பொழுது அவன் கல்தேயர்<Chaldaeans> தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே<Charran> வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். {Acts 7:4}
இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். {Acts 7:5}
அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள். {Acts 7:6}
அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். {Acts 7:7}
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப்<Isaac> பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு<Isaac> யாக்கோபையும்<Jacob>, யாக்கோபு<Jacob> பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். {Acts 7:8}
அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை<Joseph> எகிப்துக்குக்<Egypt> கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். {Acts 7:9}
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின்<Egypt> ராஜாவாகிய பார்வோன்<Pharaoh> சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும்<Egypt> தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். {Acts 7:10}
பின்பு எகிப்து<Egypt> கானான்<Chanaan> என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று. {Acts 7:11}
அப்பொழுது எகிப்திலே<Egypt> தானியம் உண்டென்று யாக்கோபு<Jacob> கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான். {Acts 7:12}
இரண்டாந்தரம் யோசேப்பு<Joseph> தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய<Joseph> வம்சமும் பார்வோனுக்குத்<Pharaoh> தெரியவந்தது. {Acts 7:13}
பின்பு யோசேப்பு<Joseph>, தன்னுடைய தகப்பன் யாக்கோபும்<Jacob> தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான். {Acts 7:14}
அந்தப்படி யாக்கோபு<Jacob> எகிப்துக்குப்<Egypt> போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து, {Acts 7:15}
அங்கேயிருந்து சீகேமுக்குக்<Sychem> கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம்<Abraham> சீகேமின்<Sychem> தகப்பனாகிய ஏமோருடைய<Emmor> சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். {Acts 7:16}
ஆபிரகாமுக்குத்<Abraham> தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது, {Acts 7:17}
யோசேப்பை<Joseph> அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே<Egypt> பலுகிப் பெருகினார்கள். {Acts 7:18}
அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். {Acts 7:19}
அக்காலத்திலே மோசே<Moses> பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். {Acts 7:20}
அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய<Pharaoh> குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். {Acts 7:21}
மோசே<Moses> எகிப்தியருடைய<Egyptians> சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். {Acts 7:22}
அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல்<Israel> புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. {Acts 7:23}
அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை<Egyptian> வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். {Acts 7:24}
தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை. {Acts 7:25}
மறுநாளிலே சண்டைபண்ணிகொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்: ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். {Acts 7:26}
பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? {Acts 7:27}
நேற்று நீ அந்த எகிப்தியனைக்<Egyptian> கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான். {Acts 7:28}
இந்த வார்த்தையினிமித்தம் மோசே<Moses> ஓடிப்போய், மீதியான்<Madian> தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். {Acts 7:29}
நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின்<Sina> வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். {Acts 7:30}
மோசே<Moses> அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: {Acts 7:31}
நான் ஆபிரகாமின்<Abraham> தேவனும் ஈசாக்கின்<Isaac> தேவனும் யாக்கோபின்<Jacob> தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே<Moses> நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான். {Acts 7:32}
பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. {Acts 7:33}
எகிப்திலிருக்கிற<Egypt> என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு<Egypt> அனுப்புவேன் என்றார். {Acts 7:34}
உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே<Moses> தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே, தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். {Acts 7:35}
இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து<Egypt> தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும்<Red sea>, நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். {Acts 7:36}
இஸ்ரவேல்<Israel> புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே<Moses>. {Acts 7:37}
சீனாய்மலையில்<Sina> தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே. {Acts 7:38}
இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத்<Egypt> திரும்பி, {Acts 7:39}
ஆரோனை<Aaron> நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து<Egypt> எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு<Moses> என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; {Acts 7:40}
அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். {Acts 7:41}
அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல்<Israel> வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், {Acts 7:42}
பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய<Moloch> கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான்<Remphan> என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு<Babylon> அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே. {Acts 7:43}
மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே<Moses> பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது. {Acts 7:44}
மேலும், யோசுவாவுடனேகூட<Joshua// Jesus> நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்தத் தேசத்தில் கொண்டுவந்து, தாவீதின்<David> நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். {Acts 7:45}
இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின்<Jacob> தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். {Acts 7:46}
சாலொமோனோ<Solomon> அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். {Acts 7:47}
ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். {Acts 7:48}
வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; {Acts 7:49}
இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. {Acts 7:50}
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். {Acts 7:51}
தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். {Acts 7:52}
தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான். {Acts 7:53}
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். {Acts 7:54}
அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர்<Jesus> நிற்கிறதையும் கண்டு: {Acts 7:55}
அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். {Acts 7:56}
அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, {Acts 7:57}
அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல்<Saul> என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். {Acts 7:58}
அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே<Jesus>, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான்<Stephen> தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். {Acts 7:59}
அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். {Acts 7:60}
அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும்<Saul> சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள<Jerusalem> சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா<Judaea> சமாரியா<Samaria> தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். {Acts 8:1}
தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை<Stephen> எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள். {Acts 8:2}
சவுல்<Saul> வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். {Acts 8:3}
சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள். {Acts 8:4}
அப்பொழுது பிலிப்பென்பவன்<Philip> சமாரியாவிலுள்ள<Samaria> ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப்<Christ> பிரசங்கித்தான். {Acts 8:5}
பிலிப்பு<Philip> செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். {Acts 8:6}
அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள். {Acts 8:7}
அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. {Acts 8:8}
சீமோன்<Simon> என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு<Samaria> ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். {Acts 8:9}
தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள். {Acts 8:10}
அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். {Acts 8:11}
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus Christ> நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு<Philip> பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள். {Acts 8:12}
அப்பொழுது சீமோனும்<Simon> விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்<Philip> பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். {Acts 8:13}
சமாரியர்<Samaria> தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள<Jerusalem> அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும்<Peter> யோவானையும்<John> அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். {Acts 8:14}
இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின்<Jesus> நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, {Acts 8:15}
அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, {Acts 8:16}
அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். {Acts 8:17}
அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன்<Simon> கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: {Acts 8:18}
நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். {Acts 8:19}
பேதுரு<Peter> அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. {Acts 8:20}
உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. {Acts 8:21}
ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். {Acts 8:22}
நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். {Acts 8:23}
அதற்குச் சீமோன்<Simon>: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான். {Acts 8:24}
இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய<Samaritans> அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத்<Jerusalem> திரும்பி வந்தார்கள். {Acts 8:25}
பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை<Philip> நோக்கி: நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து<Jerusalem> காசா<Gaza> பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான். {Acts 8:26}
அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய<Ethiopia> ராஜஸ்திரீயாகிய கந்தாகே<Candace> என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய<Ethiopians> ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு<Jerusalem> வந்திருந்து; {Acts 8:27}
ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா<Esaias> தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான். {Acts 8:28}
ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே<Philip> சொன்னார். {Acts 8:29}
அப்பொழுது பிலிப்பு<Philip> ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா<Esaias> தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான். {Acts 8:30}
அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு<Philip> ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான். {Acts 8:31}
அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். {Acts 8:32}
அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே. {Acts 8:33}
மந்திரி பிலிப்பை<Philip> நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். {Acts 8:34}
அப்பொழுது பிலிப்பு<Philip> பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து<Jesus> அவனுக்குப் பிரசங்கித்தான். {Acts 8:35}
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். {Acts 8:36}
அதற்குப் பிலிப்பு<Philip>: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவைத்<Jesus Christ> தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; {Acts 8:37}
இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும்<Philip> மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு<Philip> அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். {Acts 8:38}
அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக்<Philip> கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான். {Acts 8:39}
பிலிப்பு<Philip> ஆசோத்திலே<Azotus> காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு<Caesarea> வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான். {Acts 8:40}
சவுல்<Saul> என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; {Acts 9:1}
இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக்<Jerusalem> கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள<Damascus> ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். {Acts 9:2}
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச்<Damascus> சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; {Acts 9:3}
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே<Saul>, சவுலே<Saul>, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். {Acts 9:4}
அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு<Jesus> நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். {Acts 9:5}
அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். {Acts 9:6}
அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். {Acts 9:7}
சவுல்<Saul> தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக்<Damascus> கூட்டிக்கொண்டுபோனார்கள். {Acts 9:8}
அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான். {Acts 9:9}
தமஸ்குவிலே<Damascus> அனனியா<Ananias> என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே<Ananias>, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். {Acts 9:10}
அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு<Straight> என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின்<Judas> வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய<Tarsus> சவுல்<Saul> என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; {Acts 9:11}
அனனியா<Ananias> என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். {Acts 9:12}
அதற்கு அனனியா<Ananias>: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள<Jerusalem> உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். {Acts 9:13}
இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். {Acts 9:14}
அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். {Acts 9:15}
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். {Acts 9:16}
அப்பொழுது அனனியா<Ananias> போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே<Saul>, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய<Jesus> கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். {Acts 9:17}
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். {Acts 9:18}
பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். சவுல்<Saul> தமஸ்குவிலுள்ள<Damascus> சீஷருடனே சிலநாள் இருந்து, {Acts 9:19}
தாமதமின்றி, கிறிஸ்து<Christ> தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். {Acts 9:20}
கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில்<Jerusalem> இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். {Acts 9:21}
சவுல்<Saul> அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று<Christ> திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில்<Damascus> குடியிருக்கிற யூதர்களைக்<Jews> கலங்கப்பண்ணினான். {Acts 9:22}
அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள்<Jews> அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். {Acts 9:23}
அவர்களுடைய யோசனை சவுலுக்குத்<Saul> தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள். {Acts 9:24}
சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள். {Acts 9:25}
சவுல்<Saul> எருசலேமுக்கு<Jerusalem> வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். {Acts 9:26}
அப்பொழுது பர்னபா<Barnabas> என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில்<Damascus> அவன் இயேசுவின்<Jesus> நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். {Acts 9:27}
அதன்பின்பு அவன் எருசலேமிலே<Jerusalem> அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து; {Acts 9:28}
கர்த்தராகிய இயேசுவின்<Jesus> நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே<Grecians> பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள். {Acts 9:29}
சகோதரர் அதை அறிந்து, அவனைச் செசரியாவுக்கு<Caesarea> அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு<Tarsus> அனுப்பிவிட்டார்கள். {Acts 9:30}
அப்பொழுது யூதேயா<Judaea> கலிலேயா<Galilee> சமாரியா<Samaria> நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. {Acts 9:31}
பேதுரு<Peter> போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா<Lydda> ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். {Acts 9:32}
அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா<Aeneas> என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான். {Acts 9:33}
பேதுரு<Peter> அவனைப் பார்த்து: ஐனேயாவே<Aeneas>, இயேசுகிறிஸ்து<Jesus Christ> உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். {Acts 9:34}
லித்தாவிலும்<Lydda> சாரோனிலும்<Saron> குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். {Acts 9:35}
யோப்பா<Joppa> பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே<Greek> தொற்காள்<Dorcas> என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள்<Tabitha> என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். {Acts 9:36}
அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். {Acts 9:37}
யோப்பா<Joppa> பட்டணம் லித்தா<Lydda> ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு<Peter> அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். {Acts 9:38}
பேதுரு<Peter> எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள்<Dorcas> தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். {Acts 9:39}
பேதுரு<Peter> எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே<Tabitha>, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப்<Peter> பார்த்து உட்கார்ந்தாள். {Acts 9:40}
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான். {Acts 9:41}
இது யோப்பா<Joppa> பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். {Acts 9:42}
பின்பு அவன் யோப்பா<Joppa> பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன்<Simon> என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான். {Acts 9:43}
இத்தாலியா<Italian> பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு<Cornelius> என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா<Caesarea> பட்டணத்திலே இருந்தான். {Acts 10:1}
அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். {Acts 10:2}
பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே<Cornelius>, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, {Acts 10:3}
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. {Acts 10:4}
இப்பொழுது நீ யோப்பா<Joppa> பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு<Peter> என்று மறுபேர்கொண்ட சீமோனை<Simon> அழைப்பி. {Acts 10:5}
அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன்<Simon> என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். {Acts 10:6}
கொர்நேலியு<Cornelius> தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, {Acts 10:7}
எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா<Joppa> பட்டணத்துக்கு அனுப்பினான். {Acts 10:8}
மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு<Peter> ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். {Acts 10:9}
அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, {Acts 10:10}
வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், {Acts 10:11}
அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். {Acts 10:12}
அல்லாமலும்: பேதுருவே<Peter>, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. {Acts 10:13}
அதற்குப் பேதுரு<Peter>: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். {Acts 10:14}
அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. {Acts 10:15}
மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. {Acts 10:16}
அப்பொழுது பேதுரு<Peter>, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால்<Cornelius> அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய<Simon> வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று: {Acts 10:17}
பேதுரு<Peter> என்று மறுபேர்கொண்ட சீமோன்<Simon> இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். {Acts 10:18}
பேதுரு<Peter> அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். {Acts 10:19}
நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். {Acts 10:20}
அப்பொழுது பேதுரு<Peter> கொர்நேலியுவினால்<Cornelius> தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான். {Acts 10:21}
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும்<Jews> நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு<Cornelius> என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள். {Acts 10:22}
அப்பொழுது பேதுரு<Peter> அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனேகூடப் புறப்பட்டான்; யோப்பா<Joppa> பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள். {Acts 10:23}
மறுநாளிலே செசரியா<Caesarea> பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு<Cornelius> தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். {Acts 10:24}
பேதுரு<Peter> உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு<Cornelius> அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். {Acts 10:25}
பேதுரு<Peter> அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். {Acts 10:26}
அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளே போய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, {Acts 10:27}
அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு<Jew> விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். {Acts 10:28}
ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். {Acts 10:29}
அதற்குக் கொர்நேலியு<Cornelius>: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: {Acts 10:30}
கொர்நேலியுவே<Cornelius>, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. {Acts 10:31}
யோப்பா<Joppa> பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு<Peter> என்று மறுபேர்கொண்ட சீமோனை<Simon> வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய<Simon> வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். {Acts 10:32}
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். {Acts 10:33}
அப்பொழுது பேதுரு<Peter> பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், {Acts 10:34}
எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். {Acts 10:35}
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு<Jesus Christ> அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல்<Israel> புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. {Acts 10:36}
யோவான்<John> ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா<Galilee> நாடு முதற்கொண்டு யூதேயா<Judaea> தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. {Acts 10:37}
நசரேயனாகிய<Nazarene> இயேசுவைத்<Jesus> தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். {Acts 10:38}
யூதருடைய<Jews> தேசத்திலும் எருசலேமிலும்<Jerusalem> அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். {Acts 10:39}
மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். {Acts 10:40}
ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். {Acts 10:41}
அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். {Acts 10:42}
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். {Acts 10:43}
இந்த வார்த்தைகளைப் பேதுரு<Peter> பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். {Acts 10:44}
அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், {Acts 10:45}
பேதுருவோடேகூட<Peter> வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். {Acts 10:46}
அப்பொழுது பேதுரு<Peter>: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, {Acts 10:47}
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள். {Acts 10:48}
புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற<Judaea> அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள். {Acts 11:1}
பேதுரு<Peter> எருசலேமுக்குத்<Jerusalem> திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: {Acts 11:2}
விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள். {Acts 11:3}
அதற்குப் பேதுரு<Peter> காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி: {Acts 11:4}
நான் யோப்பா<Joppa> பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக்கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. {Acts 11:5}
அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். {Acts 11:6}
அல்லாமலும்: பேதுருவே<Peter>, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். {Acts 11:7}
அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். {Acts 11:8}
இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று. {Acts 11:9}
இப்படி மூன்றுதரம் சம்பவித்த பின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. {Acts 11:10}
உடனே செசரியாவிலிருந்து<Caesarea> என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்து நின்றார்கள். {Acts 11:11}
நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம். {Acts 11:12}
அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா<Joppa> பட்டணத்திலிருக்கிற பேதுரு<Peter> என்று மறுபேர்கொண்ட சீமோனை<Simon> அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு; {Acts 11:13}
நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான். {Acts 11:14}
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். {Acts 11:15}
யோவான்<John> ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன். {Acts 11:16}
ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை<Jesus Christ> விசுவாசித்திருக்கிற நமக்குத் தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான். {Acts 11:17}
இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். {Acts 11:18}
ஸ்தேவான்<Stephen> நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி<Jews> மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு<Phenice>, சீப்புருதீவு<Cyprus>, அந்தியோகியா<Antioch> பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். {Acts 11:19}
அவர்களில் சீப்புருதீவாரும்<Cyprus> சிரேனே<Cyrene> பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா<Antioch> பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே<Grecians> பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப்<Jesus> பிரசங்கித்தார்கள். {Acts 11:20}
கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். {Acts 11:21}
எருசலேமிலுள்ள<Jerusalem> சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும்<Antioch> போகும்படிக்குப் பர்னபாவை<Barnabas> அனுப்பினார்கள். {Acts 11:22}
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். {Acts 11:23}
அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். {Acts 11:24}
பின்பு பர்னபா<Barnabas> சவுலைத்<Saul> தேடும்படி, தர்சுவுக்குப்<Tarsus> புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு<Antioch> அழைத்துக்கொண்டுவந்தான். {Acts 11:25}
அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே<Antioch> சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள்<Christians> என்கிற பேர் வழங்கிற்று. {Acts 11:26}
அந்நாட்களிலே எருசலேமிலிருந்து<Jerusalem> சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு<Antioch> வந்தார்கள். {Acts 11:27}
அவர்களில் ஒருவனாகிய அகபு<Agabus> என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய<Claudius Caesar> நாட்களிலே உண்டாயிற்று. {Acts 11:28}
அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில்<Judaea> குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். {Acts 11:29}
அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா<Barnabas> சவுல்<Saul> என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள். {Acts 11:30}
அக்காலத்திலே ஏரோதுராஜா<Herod> சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி; {Acts 12:1}
யோவானுடைய<John> சகோதரனாகிய யாக்கோபைப்<James> பட்டயத்தினாலே கொலைசெய்தான். {Acts 12:2}
அது யூதருக்குப்<Jews> பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும்<Peter> பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. {Acts 12:3}
அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். {Acts 12:4}
அப்படியே பேதுரு<Peter> சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். {Acts 12:5}
ஏரோது<Herod> அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு<Peter> இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். {Acts 12:6}
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை<Peter> விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. {Acts 12:7}
தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். {Acts 12:8}
அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான். {Acts 12:9}
அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். {Acts 12:10}
பேதுருவுக்குத்<Peter> தெளிவு வந்தபோது: ஏரோதின்<Herod> கைக்கும் யூதஜனங்களின்<Jews> எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான். {Acts 12:11}
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு<Mark> என்னும் பேர்கொண்ட யோவானுடைய<John> தாயாகிய மரியாள்<Mary> வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். {Acts 12:12}
பேதுரு<Peter> வாசற்கதவைத் தட்டினபோது ரோதை<Rhoda> என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். {Acts 12:13}
அவள் பேதுருவின்<Peter> சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு<Peter> வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். {Acts 12:14}
அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள். {Acts 12:15}
பேதுரு<Peter> பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள். {Acts 12:16}
அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும்<James> சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான். {Acts 12:17}
பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச்<Peter> சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. {Acts 12:18}
ஏரோது<Herod> அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தை<Judaea> விட்டுச் செசரியா<Caesarea> பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான். {Acts 12:19}
அக்காலத்திலே ஏரோது<Herod> தீரியர்பேரிலும்<Tyre> சீதோனியர்பேரிலும்<Sidon> மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத்<Blastus> தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள். {Acts 12:20}
குறித்தநாளிலே, ஏரோது<Herod> ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். {Acts 12:21}
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். {Acts 12:22}
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். {Acts 12:23}
தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. {Acts 12:24}
பர்னபாவும்<Barnabas> சவுலும்<Saul> தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு<Mark> என்னும் மறுபேர்கொண்ட யோவானைக்<John> கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத்<Jerusalem> திரும்பிவந்தார்கள். {Acts 12:25}
அந்தியோகியா<Antioch> பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும்<Barnabas>, நீகர்<Niger> என்னப்பட்ட சிமியோனும்<Simeon>, சிரேனே<Cyrene> ஊரானாகிய லூகியும்<Lucius>, காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட<Herod> வளர்க்கப்பட்ட மனாயீனும்<Manaen>, சவுலும்<Saul>, தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். {Acts 13:1}
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும்<Barnabas> சவுலையும்<Saul> நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். {Acts 13:2}
அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். {Acts 13:3}
அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியாபட்டணத்துக்கு<Seleucia> வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப்<Cyprus> போனார்கள். {Acts 13:4}
சாலமி<Salamis> பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய<Jews> ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும்<John> அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். {Acts 13:5}
அவர்கள் பாப்போ<Paphos> பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு<Barjesus> என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக்<Jew> கண்டார்கள். {Acts 13:6}
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல்<Sergius Paulus> என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும்<Barnabas> சவுலையும்<Saul> அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். {Acts 13:7}
மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா<Elymas> என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான். {Acts 13:8}
அப்பொழுது பவுல்<Paul> என்று சொல்லப்பட்ட சவுல்<Saul> பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: {Acts 13:9}
எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? {Acts 13:10}
இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான். {Acts 13:11}
அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். {Acts 13:12}
பின்பு பவுலும்<Paul> அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ<Paphos> பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும்<Pamphylia> பெர்கே<Perga> பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான்<John> அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத்<Jerusalem> திரும்பிப்போனான். {Acts 13:13}
அவர்கள் பெர்கே<Perga> பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா<Pisidia> நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு<Antioch> வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள். {Acts 13:14}
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன ஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள். {Acts 13:15}
அப்பொழுது பவுல்<Paul> எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே<Israel>, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள். {Acts 13:16}
இஸ்ரவேலராகிய<Israel> இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து<Egypt> தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, {Acts 13:17}
நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து, {Acts 13:18}
கானான்<Chanaan> தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து, {Acts 13:19}
பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல்<Samuel> தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார். {Acts 13:20}
அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன்<Benjamin> கோத்திரத்தானாகிய கீசுடைய<Cis> குமாரனான சவுலை<Saul> நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார். {Acts 13:21}
பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை<David> அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின்<Jesse> குமாரனாகிய தாவீதை<David> என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார். {Acts 13:22}
அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு<Israel> இரட்சகராக இயேசுவை<Jesus> எழும்பப்பண்ணினார். {Acts 13:23}
இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான்<John> இஸ்ரவேலர்<Israel> யாவருக்கும் பிரசங்கித்தான். {Acts 13:24}
யோவான்<John> தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான். {Acts 13:25}
சகோதரரே, ஆபிரகாமின்<Abraham> சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. {Acts 13:26}
எருசலேமில்<Jerusalem> குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள். {Acts 13:27}
மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை<Pilate> வேண்டிக்கொண்டார்கள். {Acts 13:28}
அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். {Acts 13:29}
தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். {Acts 13:30}
தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து<Galilee> எருசலேமுக்குப்<Jerusalem> போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள். {Acts 13:31}
நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே, {Acts 13:32}
இயேசுவை<Jesus> எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம். {Acts 13:33}
இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு<David> அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார். {Acts 13:34}
அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது. {Acts 13:35}
தாவீது<David> தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். {Acts 13:36}
தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. {Acts 13:37}
ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், {Acts 13:38}
மோசேயின்<Moses> நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது. {Acts 13:39}
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே: {Acts 13:40}
அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான். {Acts 13:41}
அவர்கள் யூதருடைய<Jews> ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள். {Acts 13:42}
ஜெபஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும்<Jews> யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும்<Paul> பர்னபாவையும்<Barnabas> பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். {Acts 13:43}
அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள். {Acts 13:44}
யூதர்கள்<Jews> ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால்<Paul> சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். {Acts 13:45}
அப்பொழுது பவுலும்<Paul> பர்னபாவும்<Barnabas> தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். {Acts 13:46}
நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். {Acts 13:47}
புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். {Acts 13:48}
கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. {Acts 13:49}
யூதர்கள்<Jews> பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும்<Paul> பர்னபாவையும்<Barnabas> துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள். {Acts 13:50}
இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா<Iconium> பட்டணத்துக்குப் போனார்கள். {Acts 13:51}
சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள். {Acts 13:52}
இக்கோனியா<Iconium> பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய<Jews> ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும்<Jews> கிரேக்கரிலும்<Greeks> திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். {Acts 14:1}
விசுவாசியாத யூதர்கள்<Jews> சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள். {Acts 14:2}
அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார். {Acts 14:3}
பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும்<Jews> சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள். {Acts 14:4}
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும்<Jews> அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில், {Acts 14:5}
இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா<Lycaonia> நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும்<Lystra> தெர்பைக்கும்<Derbe> அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்; {Acts 14:6}
அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினார்கள். {Acts 14:7}
லீஸ்திராவிலே<Lystra> ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, {Acts 14:8}
பவுல்<Paul> பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல்<Paul> உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: {Acts 14:9}
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். {Acts 14:10}
பவுல்<Paul> செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா<Lycaonia> பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, {Acts 14:11}
பர்னபாவை<Barnabas> யூப்பித்தர்<Jupiter> என்றும், பவுல்<Paul> பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி<Mercurius> என்றும் சொன்னார்கள். {Acts 14:12}
அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய<Jupiter> கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். {Acts 14:13}
அப்போஸ்தலராகிய பர்னபாவும்<Barnabas> பவுலும்<Paul> அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: {Acts 14:14}
மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். {Acts 14:15}
சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், {Acts 14:16}
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். {Acts 14:17}
இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது. {Acts 14:18}
பின்பு அந்தியோகியாவிலும்<Antioch> இக்கோனியாவிலுமிருந்து<Iconium> சில யூதர்கள்<Jews> வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக்<Paul> கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டு போனார்கள். {Acts 14:19}
சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத்<Barnabas> தெர்பைக்குப்<Derbe> புறப்பட்டுப்போனான். {Acts 14:20}
அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும்<Lystra> இக்கோனியாவுக்கும்<Iconium> அந்தியோகியாவுக்கும்<Antioch> திரும்பிவந்து, {Acts 14:21}
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். {Acts 14:22}
அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். {Acts 14:23}
பின்பு பிசீதியாநாட்டைக்<Pisidia> கடந்து, பம்பிலியா<Pamphylia> நாட்டிற்கு வந்து, {Acts 14:24}
பெர்கே<Perga> ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா<Attalia> பட்டணத்திற்குப் போனார்கள். {Acts 14:25}
அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காகத் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு<Antioch> வந்தார்கள். {Acts 14:26}
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து, {Acts 14:27}
அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள். {Acts 14:28}
சிலர் யூதேயாவிலிருந்து<Judaea> வந்து: நீங்கள் மோசேயினுடைய<Moses> முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். {Acts 15:1}
அதினாலே அவர்களுக்கும் பவுல்<Paul> பர்னபா<Barnabas> என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும்<Paul> பர்னபாவும்<Barnabas> அவர்களைச் சேர்ந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற<Jerusalem> அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். {Acts 15:2}
அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே<Phenice> சமாரியா<Samaria> நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். {Acts 15:3}
அவர்கள் எருசலேமுக்கு<Jerusalem> வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள். {Acts 15:4}
அப்பொழுது பரிசேய<Pharisees> சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின்<Moses> நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். {Acts 15:5}
அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். {Acts 15:6}
மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு<Peter> எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். {Acts 15:7}
இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்; {Acts 15:8}
விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். {Acts 15:9}
இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? {Acts 15:10}
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்<Jesus Christ> கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான். {Acts 15:11}
அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும்<Barnabas> பவுலும்<Paul> தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள். {Acts 15:12}
அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு<James> அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். {Acts 15:13}
தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன்<Simeon> விவரித்துச் சொன்னாரே. {Acts 15:14}
அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. {Acts 15:15}
எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, {Acts 15:16}
நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின்<David> கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. {Acts 15:17}
உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது. {Acts 15:18}
ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், {Acts 15:19}
விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். {Acts 15:20}
மோசேயின்<Moses> ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான். {Acts 15:21}
அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும்<Paul> பர்னபாவோடும்<Barnabas> அந்தியோகியாவுக்கு<Antioch> அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா<Barsabas> என்று மறுபேர்கொண்ட யூதாவும்<Judas> சீலாவுமே<Silas>. {Acts 15:22}
இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும்<Antioch> சீரியாவிலும்<Syria> சிலிசியாவிலும்<Cilicia> இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்: {Acts 15:23}
எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, {Acts 15:24}
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்<Jesus Christ> நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா<Barnabas> பவுல்<Paul> என்பவர்களோடுங்கூட, {Acts 15:25}
எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது. {Acts 15:26}
அந்தப்படியே யூதாவையும்<Judas> சீலாவையும்<Silas> அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். {Acts 15:27}
எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. {Acts 15:28}
அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். {Acts 15:29}
அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு<Antioch> வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள். {Acts 15:30}
அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள். {Acts 15:31}
யூதா<Judas> சீலா<Silas> என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி; {Acts 15:32}
சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள். {Acts 15:33}
ஆகிலும் சீலாவுக்கு<Silas> அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது. {Acts 15:34}
பவுலும்<Paul> பர்னபாவும்<Barnabas> அந்தியோகியாவிலே<Antioch> சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள். {Acts 15:35}
சிலநாளைக்குப்பின்பு பவுல்<Paul> பர்னபாவை<Barnabas> நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். {Acts 15:36}
அப்பொழுது பர்னபா<Barnabas> என்பவன் மாற்கு<Mark> என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட<John> அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். {Acts 15:37}
பவுலோ<Paul>: அவன் பம்பிலியா<Pamphylia> நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். {Acts 15:38}
இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா<Barnabas> மாற்குவைக்<Mark> கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப்<Cyprus> போனான். {Acts 15:39}
பவுலோ<Paul> சீலாவைத்<Silas> தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, {Acts 15:40}
சீரியாவிலும்<Syria> சிலிசியாவிலும்<Cilicia> திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான். {Acts 15:41}
அதன்பின்பு அவன் தெர்பைக்கும்<Derbe> லீஸ்திராவுக்கும்<Lystra> போனான். அங்கே தீமோத்தேயு<Timotheus> என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ<Jewess>, அவன் தகப்பன் கிரேக்கன்<Greek>. {Acts 16:1}
அவன் லீஸ்திராவிலும்<Lystra> இக்கோனியாவிலுமுள்ள<Iconium> சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். {Acts 16:2}
அவனைப் பவுல்<Paul> தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன்<Greek> என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும்<Jews> அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். {Acts 16:3}
அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும்<Jerusalem> அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள். {Acts 16:4}
அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. {Acts 16:5}
அவர்கள் பிரிகியா<Phrygia> கலாத்தியா<Galatia> நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே<Asia> வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு, {Acts 16:6}
மீசியா<Mysia> தேசமட்டும் வந்து, பித்தினியா<Bithynia> நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். {Acts 16:7}
அப்பொழுது அவர்கள் மீசியா<Mysia> பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு<Troas> வந்தார்கள். {Acts 16:8}
அங்கே இராத்திரியிலே பவுலுக்கு<Paul> ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா<Macedonia> தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு<Macedonia> வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. {Acts 16:9}
அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப்<Macedonia> புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி, {Acts 16:10}
துரோவாவில்<Troas> கப்பல் ஏறி, சாமோத்திராக்கே<Samothracia> தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி<Neapolis> பட்டணத்துக்கும் நேராய் ஓடி, {Acts 16:11}
அங்கேயிருந்து மக்கெதோனியா<Macedonia> தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர்<Romans> குடியேறினதுமான பிலிப்பி<Philippi> பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம். {Acts 16:12}
ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். {Acts 16:13}
அப்பொழுது தியத்தீரா<Thyatira> ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள்<Lydia> என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல்<Paul> சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். {Acts 16:14}
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். {Acts 16:15}
நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள். {Acts 16:16}
அவள் பவுலையும்<Paul> எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். {Acts 16:17}
இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல்<Paul> சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின்<Jesus Christ> நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. {Acts 16:18}
அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும்<Paul> சீலாவையும்<Silas> பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள். {Acts 16:19}
அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய<Jews> இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, {Acts 16:20}
ரோமராகிய<Romans> நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள். {Acts 16:21}
அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; {Acts 16:22}
அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். {Acts 16:23}
அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். {Acts 16:24}
நடுராத்திரியிலே பவுலும்<Paul> சீலாவும்<Silas> ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். {Acts 16:25}
சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. {Acts 16:26}
சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். {Acts 16:27}
பவுல்<Paul> மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். {Acts 16:28}
அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும்<Paul> சீலாவுக்கும்<Silas> முன்பாக விழுந்து, {Acts 16:29}
அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். {Acts 16:30}
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை<Jesus Christ> விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, {Acts 16:31}
அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். {Acts 16:32}
மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். {Acts 16:33}
பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். {Acts 16:34}
பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள். {Acts 16:35}
சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு<Paul> இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான். {Acts 16:36}
அதற்குப் பவுல்<Paul>: ரோமராகிய<Romans> எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பி விடட்டும் என்றான். {Acts 16:37}
சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று<Romans> அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து, {Acts 16:38}
அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள். {Acts 16:39}
அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய்<Lydia>, சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள். {Acts 16:40}
அவர்கள் அம்பிபோலி<Amphipolis> பட்டணத்தையும் அப்பொலோனியா<Apollonia> பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே<Thessalonica> பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு<Jews> ஒரு ஜெபஆலயம் இருந்தது. {Acts 17:1}
பவுல்<Paul> தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, {Acts 17:2}
கிறிஸ்து<Christ> பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே<Jesus> கிறிஸ்து<Christ> என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். {Acts 17:3}
அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில்<Greeks> திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும்<Paul> சீலாவையும்<Silas> சேர்ந்து கொண்டார்கள். {Acts 17:4}
விசுவாசியாத யூதர்கள்<Jews> வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய<Jason> வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள். {Acts 17:5}
அவர்களைக் காணாமல், யாசோனையும்<Jason> சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். {Acts 17:6}
இவர்களை யாசோன்<Jason> ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு<Jesus> என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய<Caesar> கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு, {Acts 17:7}
இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். {Acts 17:8}
பின்பு அவர்கள் யாசோனிடத்திலும்<Jason> மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். {Acts 17:9}
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும்<Paul> சீலாவையும்<Silas> பெரோயா<Berea> பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய<Jews> ஜெபஆலயத்திற்குப் போனார்கள். {Acts 17:10}
அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில்<Thessalonica> உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். {Acts 17:11}
அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில்<Greeks> அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள். {Acts 17:12}
பெரோயாவிலும்<Berea> தேவவசனம் பவுலினால்<Paul> அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான<Thessalonica> யூதர்கள்<Jews> அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள். {Acts 17:13}
உடனே சகோதரர் பவுலைச்<Paul> சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும்<Silas> தீமோத்தேயும்<Timotheus> அங்கே தங்கியிருந்தார்கள். {Acts 17:14}
பவுலை<Paul> வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே<Athens> பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும்<Silas> தீமோத்தேயும்<Timotheus> அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள். {Acts 17:15}
அத்தேனே<Athens> பட்டணத்தில் பவுல்<Paul> அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, {Acts 17:16}
ஜெபஆலயத்தில் யூதரோடும்<Jews>, பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். {Acts 17:17}
அப்பொழுது எப்பிக்கூரரும்<Epicureans> ஸ்தோயிக்கருமான<Stoicks> ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும்<Jesus> உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள். {Acts 17:18}
அவர்கள் அவனை மார்ஸ்<Mars> மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? {Acts 17:19}
நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள். {Acts 17:20}
அந்த அத்தேனே<Athenians> பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை. {Acts 17:21}
அப்பொழுது பவுல்<Paul> மார்ஸ்<Mars> மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே<Athens>, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். {Acts 17:22}
எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு<TO THE UNKNOWN GOD> என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். {Acts 17:23}
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. {Acts 17:24}
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. {Acts 17:25}
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; {Acts 17:26}
கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. {Acts 17:27}
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். {Acts 17:28}
நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. {Acts 17:29}
அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். {Acts 17:30}
மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். {Acts 17:31}
மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள். {Acts 17:32}
இப்படியிருக்க, பவுல்<Paul> அவர்களை விட்டுப் போய்விட்டான். {Acts 17:33}
சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின்<Mars> நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு<Dionysius> என்பவனும், தாமரி<Damaris> என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள். {Acts 17:34}
அதன்பின்பு பவுல்<Paul> அத்தேனே<Athens> பட்டணத்தை விட்டு, கொரிந்து<Corinth> பட்டணத்துக்கு வந்து; {Acts 18:1}
யூதரெல்லாரும்<Jews> ரோமாபுரியை<Rome> விட்டுப் போகும்படி கிலவுதியுராயன்<Claudius Caesar> கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து<Italy> புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய<Pontus> ஆக்கில்லா<Aquila> என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும்<Jew> அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும்<Priscilla> அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். {Acts 18:2}
அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டு வந்தான். {Acts 18:3}
ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும்<Jews> கிரேக்கருக்கும்<Greeks> புத்திசொன்னான். {Acts 18:4}
மக்கெதோனியாவிலிருந்து<Macedonia> சீலாவும்<Silas> தீமோத்தேயும்<Timotheus> வந்தபோது, பவுல்<Paul> ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே<Jesus> கிறிஸ்து<Christ> என்று யூதருக்குத்<Jews> திருஷ்டாந்தப்படுத்தினான். {Acts 18:5}
அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி, {Acts 18:6}
அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து<Justus> என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது. {Acts 18:7}
ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு<Crispus> என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில்<Corinthians> அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். {Acts 18:8}
இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத்<Paul> தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; {Acts 18:9}
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். {Acts 18:10}
அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான். {Acts 18:11}
கல்லியோன்<Gallio> என்பவன் அகாயா<Achaia> நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள்<Jews> ஒருமனப்பட்டு, பவுலுக்கு<Paul> விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்: {Acts 18:12}
இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள். {Acts 18:13}
பவுல்<Paul> பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன்<Gallio> யூதரை<Jews> நோக்கி: யூதர்களே<Jews>, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும். {Acts 18:14}
இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, {Acts 18:15}
அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான். {Acts 18:16}
அப்பொழுது கிரேக்கரெல்லாரும்<Greeks> ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப்<Sosthenes> பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன்<Gallio> கவலைப்படவில்லை. {Acts 18:17}
பவுல்<Paul> அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா<Cenchrea> பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப்<Syria> போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும்<Priscilla> ஆக்கில்லாவும்<Aquila> அவனுடனே கூடப்போனார்கள். {Acts 18:18}
அவன் எபேசுபட்டணத்துக்கு<Ephesus> வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே<Jews> சம்பாஷணைபண்ணினான். {Acts 18:19}
அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது, அவன் சம்மதியாமல், {Acts 18:20}
வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில்<Jerusalem> இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை<Ephesus> விட்டுப் புறப்பட்டு, {Acts 18:21}
செசரியா<Caesarea> பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப்<Jerusalem> போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப்<Antioch> போனான். {Acts 18:22}
அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா<Galatia> நாட்டிலேயும் பிரிகியா<Phrygia> நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான். {Acts 18:23}
அப்பொழுது அலெக்சந்திரியா<Alexandria> பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ<Apollos> என்னும் பேர்கொண்ட ஒரு யூதன்<Jew> எபேசுபட்டணத்துக்கு<Ephesus> வந்தான். {Acts 18:24}
அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான்<John> கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். {Acts 18:25}
அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும்<Aquila> பிரிஸ்கில்லாளும்<Priscilla> அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். {Acts 18:26}
பின்பு அவன் அகாயா<Achaia> நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள். {Acts 18:27}
அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே<Jews> பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே<Jesus> கிறிஸ்து<Christ> என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான். {Acts 18:28}
அப்பொல்லோ<Apollos> என்பவன் கொரிந்து<Corinth> பட்டணத்திலே இருக்கையில், பவுல்<Paul> மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு<Ephesus> வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: {Acts 19:1}
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். {Acts 19:2}
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான்<John> கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். {Acts 19:3}
அப்பொழுது பவுல்<Paul>: யோவான்<John> தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில்<Christ Jesus> விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். {Acts 19:4}
அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின்<Jesus> நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். {Acts 19:5}
அல்லாமலும் பவுல்<Paul> அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். {Acts 19:6}
அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டுபேராயிருந்தார்கள். {Acts 19:7}
பின்பு பவுல்<Paul> ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். {Acts 19:8}
சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு<Tyrannus> என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான். {Acts 19:9}
இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில்<Asia> குடியிருந்த யூதரும்<Jews> கிரேக்கருமாகிய<Greeks> எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின்<Jesus> வசனத்தைக் கேட்டார்கள். {Acts 19:10}
பவுலின்<Paul> கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். {Acts 19:11}
அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. {Acts 19:12}
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில்<Jews> சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின்<Jesus> நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல்<Paul> பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில்<Jesus> ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். {Acts 19:13}
பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா<Sceva> என்னும் ஓர் யூதனுடைய<Jew> குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். {Acts 19:14}
பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை<Jesus> அறிவேன், பவுலையும்<Paul> அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, {Acts 19:15}
பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். {Acts 19:16}
இது எபேசுவிலே<Ephesus> குடியிருந்த யூதர்<Jews> கிரேக்கர்<Greeks> அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின்<Jesus> நாமம் மகிமைப்பட்டது. {Acts 19:17}
விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். {Acts 19:18}
மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். {Acts 19:19}
இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது. {Acts 19:20}
இவைகள் முடிந்தபின்பு, பவுல்<Paul> மக்கெதோனியா<Macedonia> அகாயா<Achaia> என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி<Jerusalem> ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும்<Rome> பார்க்கவேண்டியதென்று சொல்லி, {Acts 19:21}
தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும்<Timotheus> எரஸ்துவையும்<Erastus> மக்கெதோனியாவுக்கு<Macedonia> அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம் ஆசியாவிலே<Asia> தங்கினான். {Acts 19:22}
அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று. {Acts 19:23}
எப்படியென்றால், தெமேத்திரியு<Demetrius> என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின்<Diana> கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். {Acts 19:24}
இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். {Acts 19:25}
இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல்<Paul> என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல<Ephesus>, கொஞ்சங்குறைய ஆசியா<Asia> எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். {Acts 19:26}
இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய<Diana> கோவில் எண்ணமற்றுப் போகிறதற்கும், ஆசியா<Asia> முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். {Acts 19:27}
அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய<Ephesians> தியானாளே<Diana> பெரியவள் என்று சத்தமிட்டார்கள். {Acts 19:28}
பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு<Paul> வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய<Macedonia> காயுவையும்<Gaius> அரிஸ்தர்க்குவையும்<Aristarchus> அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள். {Acts 19:29}
பவுல்<Paul> கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை. {Acts 19:30}
ஆசியாநாட்டுத்<Asia> தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். {Acts 19:31}
கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. {Acts 19:32}
அப்பொழுது யூதர்கள்<Jews> அலெக்சந்தர்<Alexander> என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர்<Alexander> கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான். {Acts 19:33}
அவன் யூதனென்று<Jew> அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய<Ephesians> தியானாளே<Diana> பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். {Acts 19:34}
பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே<Ephesus>, எபேசியருடைய<Ephesians> பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும்<Diana> வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ? {Acts 19:35}
இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும். {Acts 19:36}
இந்த மனுஷரை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல. {Acts 19:37}
தெமேத்திரியுக்கும்<Demetrius> அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். {Acts 19:38}
நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். {Acts 19:39}
இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி, {Acts 19:40}
பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான். {Acts 19:41}
கலகம் அமர்ந்தபின்பு, பவுல்<Paul> சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்<Macedonia> போகப் புறப்பட்டான். {Acts 20:1}
அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி, கிரேக்கு<Greece> தேசத்திலே சேர்ந்தான். {Acts 20:2}
அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியாதேசத்துக்குப்போக<Syria> மனதாயிருந்தபோது, யூதர்கள்<Jews> அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா<Macedonia> தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம் பண்ணினான். {Acts 20:3}
பெரோயா<Berea> ஊரானாகிய சோபத்தரும்<Sopater>, தெசலோனிக்கேயரில்<Thessalonians> அரிஸ்தர்க்கும்<Aristarchus>, செக்குந்தும்<Secundus>, தெர்பையானாகிய<Derbe> காயுவும்<Gaius>, தீமோத்தேயும்<Timotheus>, ஆசியா<Asia> நாட்டாராகிய தீகிக்கும்<Tychicus> துரோப்பீமும்<Trophimus>, ஆசியாநாடுவரைக்கும்<Asia> அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள். {Acts 20:4}
இவர்கள் முன்னாகப் போய், துரோவாபட்டணத்திலே<Troas> எங்களுக்காகக் காத்திருந்தார்கள். {Acts 20:5}
புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை<Philippi> விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு<Troas> அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். {Acts 20:6}
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல்<Paul> மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். {Acts 20:7}
அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. {Acts 20:8}
அப்பொழுது ஐத்திகு<Eutychus> என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல்<Paul> நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். {Acts 20:9}
உடனே பவுல்<Paul> இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். {Acts 20:10}
பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். {Acts 20:11}
அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள். {Acts 20:12}
பவுல்<Paul> ஆசோபட்டணம்வரைக்கும்<Assos> கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம். {Acts 20:13}
அவன் ஆசோபட்டணத்திலே<Assos> எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே<Mitylene> பட்டணத்துக்கு வந்தோம். {Acts 20:14}
அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு<Chios> எதிராக வந்து, {Acts 20:15}
பவுல்<Paul> கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று<Jerusalem> தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே<Asia> காலம்போக்காதபடிக்கு, எபேசு<Ephesus> பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு<Samos> பிடித்து, துரோகில்லியோன்<Trogyllium> ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு<Miletus> வந்தோம். {Acts 20:16}
மிலேத்துவிலிருந்து<Miletus> அவன் எபேசுவுக்கு<Ephesus> ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான். {Acts 20:17}
அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில்<Asia> வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். {Acts 20:18}
வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய<Jews> தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். {Acts 20:19}
பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, {Acts 20:20}
தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை<Jesus Christ> விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும்<Jews> கிரேக்கருக்கும்<Greeks> சாட்சியாக அறிவித்தேன். {Acts 20:21}
இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப்<Jerusalem> போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். {Acts 20:22}
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். {Acts 20:23}
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில்<Jesus> பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். {Acts 20:24}
இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். {Acts 20:25}
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, {Acts 20:26}
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். {Acts 20:27}
ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். {Acts 20:28}
நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். {Acts 20:29}
உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். {Acts 20:30}
ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். {Acts 20:31}
இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். {Acts 20:32}
ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. {Acts 20:33}
நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. {Acts 20:34}
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு<Jesus> சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். {Acts 20:35}
இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான். {Acts 20:36}
அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, {Acts 20:37}
பவுலின்<Paul> கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள். {Acts 20:38}
நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும்<Coos>, மறுநாளில் ரோதுதீவையும்<Rhodes> சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா<Patara> பட்டணத்துக்கு வந்து, {Acts 21:1}
அங்கே பெனிக்கே<Phenicia> தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம். {Acts 21:2}
சீப்புருதீவைக்<Cyprus> கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு<Syria> ஓடி, தீருபட்டணத்துறையில்<Tyre> இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது. {Acts 21:3}
அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை<Paul> நோக்கி: நீர் எருசலேமுக்குப்<Jerusalem> போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள். {Acts 21:4}
அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம். {Acts 21:5}
ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள். {Acts 21:6}
நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை<Tyre> விட்டுப் பித்தொலோமாய்<Ptolemais> பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம். {Acts 21:7}
மறுநாளிலே பவுலைச்<Paul> சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு<Caesarea> வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும்<Philip> சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம். {Acts 21:8}
தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். {Acts 21:9}
நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு<Agabus> என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து<Judaea> வந்தான். {Acts 21:10}
அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய<Paul> கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள<Jerusalem> யூதர்<Jews> இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். {Acts 21:11}
இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப்<Jerusalem> போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம். {Acts 21:12}
அதற்குப் பவுல்<Paul>: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில்<Jerusalem> நான் கர்த்தராகிய இயேசுவின்<Jesus> நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். {Acts 21:13}
அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம். {Acts 21:14}
அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப்<Jerusalem> போனோம். {Acts 21:15}
செசரியாபட்டணத்திலுள்ள<Caesarea> சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய<Cyprus> மினாசோன்<Mnason> என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள். {Acts 21:16}
நாங்கள் எருசலேமுக்கு<Jerusalem> வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். {Acts 21:17}
மறுநாளிலே பவுல்<Paul> எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப்<James> போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள். {Acts 21:18}
அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான். {Acts 21:19}
அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள்<Jews> அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். {Acts 21:20}
புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும்<Jews> தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை<Moses> விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். {Acts 21:21}
இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள். {Acts 21:22}
ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். {Acts 21:23}
அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். {Acts 21:24}
விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். {Acts 21:25}
அப்பொழுது பவுல்<Paul> அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான். {Acts 21:26}
அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து<Asia> வந்த யூதர்கள்<Jews> அவனைத் தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு: {Acts 21:27}
இஸ்ரவேலரே<Israel>, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும்<Greeks> கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள். {Acts 21:28}
எபேசியனாகிய<Ephesian> துரோப்பீமு<Trophimus> என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட<Paul> இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல்<Paul> அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள். {Acts 21:29}
அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப்பிடித்து<Paul>, அவனைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது. {Acts 21:30}
அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம்<Jerusalem> முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது. {Acts 21:31}
உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை<Paul> அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள். {Acts 21:32}
அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான். {Acts 21:33}
அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். {Acts 21:34}
அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, {Acts 21:35}
இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது. {Acts 21:36}
அவர்கள் பவுலைக்<Paul> கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை<Greek> தெரியுமா? {Acts 21:37}
நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன்<Egyptian> அல்லவா என்றான். {Acts 21:38}
அதற்குப் பவுல்<Paul>: நான் சிலிசியா<Cilicia> நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து<Tarsus> யூதன்<Jew>; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். {Acts 21:39}
உத்தரவானபோது, பவுல்<Paul> படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயு<Hebrew> பாஷையிலே பேசத்தொடங்கினான். {Acts 21:40}
சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான். {Acts 22:1}
அவன் எபிரெயு<Hebrew> பாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்: {Acts 22:2}
நான் யூதன்<Jew>, சிலிசியாநாட்டிலுள்ள<Cilicia> தர்சுபட்டணத்திலே<Tarsus> பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின்<Gamaliel> பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன். {Acts 22:3}
நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். {Acts 22:4}
அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும்<Damascus> தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக்<Jerusalem> கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன். {Acts 22:5}
அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச்<Damascus> சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது. {Acts 22:6}
நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே<Saul>, சவுலே<Saul>, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். {Acts 22:7}
அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய<Nazarene> இயேசு<Jesus> நானே என்றார். {Acts 22:8}
என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. {Acts 22:9}
அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப்<Damascus> போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். {Acts 22:10}
அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு<Damascus> வந்தேன். {Acts 22:11}
அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும்<Jews> நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா<Ananias> என்னும் ஒருவன், {Acts 22:12}
என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே<Saul>, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன். {Acts 22:13}
அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். {Acts 22:14}
நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். {Acts 22:15}
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். {Acts 22:16}
பின்பு நான் எருசலேமுக்குத்<Jerusalem> திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன். {Acts 22:17}
அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப்<Jerusalem> புறப்பட்டுப்போ என்றார். {Acts 22:18}
அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும், {Acts 22:19}
உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய<Stephen> இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். {Acts 22:20}
அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான். {Acts 22:21}
இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள். {Acts 22:22}
இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில், {Acts 22:23}
சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான். {Acts 22:24}
அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டும்போது, பவுல்<Paul> சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும்<Roman> நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான். {Acts 22:25}
நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன்<Roman> என்றான். {Acts 22:26}
அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில்<Paul> வந்து: நீ ரோமனா<Roman>? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான்<Roman> என்றான். {Acts 22:27}
சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்<Paul>: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான். {Acts 22:28}
அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று<Roman> அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான். {Acts 22:29}
பவுலின்மேல்<Paul> யூதராலே<Jews> ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான். {Acts 22:30}
பவுல்<Paul> ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். {Acts 23:1}
அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா<Ananias> அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். {Acts 23:2}
அப்பொழுது பவுல்<Paul> அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். {Acts 23:3}
சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள். {Acts 23:4}
அதற்குப் பவுல்<Paul>: சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான். {Acts 23:5}
பின்பு அவர்களில், சதுசேயர்<Sadducees> ஒரு பங்கும் பரிசேயர்<Pharisees> ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல்<Paul> அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும்<Pharisee> பரிசேயனுடைய<Pharisee> மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக்குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். {Acts 23:6}
அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும்<Pharisees> சதுசேயருக்கும்<Sadducees> வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. {Acts 23:7}
என்னத்தினாலென்றால், சதுசேயர்<Sadducees> உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ<Pharisees> அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். {Acts 23:8}
ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய<Pharisees> சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள். {Acts 23:9}
மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல்<Paul> அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். {Acts 23:10}
அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின்<Paul> அருகே நின்று: பவுலே<Paul>, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே<Jerusalem> சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும்<Rome> சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். {Acts 23:11}
விடியற்காலமானபோது, யூதரில்<Jews> சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக்<Paul> கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். {Acts 23:12}
இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள். {Acts 23:13}
அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக்<Paul> கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் பண்ணிக்கொண்டோம். {Acts 23:14}
ஆனபடியினால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டு வரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள். {Acts 23:15}
இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய<Paul> சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு<Paul> அறிவித்தான். {Acts 23:16}
அப்பொழுது பவுல்<Paul> நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியம் உண்டு என்றான். {Acts 23:17}
அந்தப்படியே அவன் இவனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல்<Paul> என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான். {Acts 23:18}
அப்பொழுது சேனாபதி அவனுடைய கையைப் பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் அறிவிக்கவேண்டிய காரியம் என்னவென்று கேட்டான். {Acts 23:19}
அதற்கு அவன்: யூதர்கள்<Jews> பவுலின்<Paul> காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள். {Acts 23:20}
நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்குப் பதிவிருந்து, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்றான். {Acts 23:21}
அப்பொழுது சேனாபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான். {Acts 23:22}
பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப்<Caesarea> போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்; {Acts 23:23}
பவுலை<Paul> ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப்<Felix> பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி, {Acts 23:24}
ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது: {Acts 23:25}
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ்<Felix> என்பவருக்குக் கிலவுதியு லீசியா<Claudius Lysias> வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்: {Acts 23:26}
இந்த மனுஷனை யூதர்<Jews> பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று<Roman> அறிந்து, இவனை விடுவித்தேன். {Acts 23:27}
அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன். {Acts 23:28}
இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன். {Acts 23:29}
யூதர்கள்<Jews> இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான். {Acts 23:30}
போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக்<Paul> கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி<Antipatris> ஊருக்குப் போய், {Acts 23:31}
மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். {Acts 23:32}
அவர்கள் செசரியாபட்டணத்தில்<Caesarea> சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும்<Paul> அவன் முன்பாக நிறுத்தினார்கள். {Acts 23:33}
தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா<Cilicia> நாட்டானென்று அறிந்தபோது: {Acts 23:34}
உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின்<Herod> அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான். {Acts 23:35}
ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா<Ananias> மூப்பர்களோடும் தெர்த்துல்லு<Tertullus> என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு<Paul> விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள். {Acts 24:1}
அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு<Tertullus> குற்றஞ்சாட்டத்தொடங்கி: {Acts 24:2}
கனம்பொருந்திய பேலிக்ஸே<Felix>, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம். {Acts 24:3}
உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். {Acts 24:4}
என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும்<Jews> கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய<Nazarenes> மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். {Acts 24:5}
இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம். {Acts 24:6}
அப்பொழுது சேனாபதியாகிய லீசியா<Lysias> வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய், {Acts 24:7}
இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான். {Acts 24:8}
யூதர்களும்<Jews> அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள். {Acts 24:9}
பவுல்<Paul> பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்தத் தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன். {Acts 24:10}
நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப்<Jerusalem> போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம். {Acts 24:11}
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை. {Acts 24:12}
இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள். {Acts 24:13}
உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து, {Acts 24:14}
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன். {Acts 24:15}
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். {Acts 24:16}
அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன். {Acts 24:17}
அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா<Asia> நாட்டாரான சில யூதர்கள்<Jews> என்னைக் கண்டார்கள். {Acts 24:18}
அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும். {Acts 24:19}
நான் ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக நின்றபோது அவர்கள் யாதொரு அநியாயத்தை என்னிடத்தில் கண்டதுண்டானால் இவர்களே அதைச்சொல்லட்டும். {Acts 24:20}
நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லை என்றான். {Acts 24:21}
இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ்<Felix> இவைகளைக் கேட்டபொழுது: சேனாபதியாகிய லீசியா<Lysias> வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி; {Acts 24:22}
பவுலைக்<Paul> காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படிசெய்தான். {Acts 24:23}
சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ்<Felix> யூதஸ்திரீயாகிய<Jewess> தன் மனைவி துருசில்லாளுடனேகூட<Drusilla> வந்து, பவுலை<Paul> அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும்<Christ> விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான். {Acts 24:24}
அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ்<Felix> பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான். {Acts 24:25}
மேலும், அவன் பவுலை<Paul> விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான். {Acts 24:26}
இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ்<Felix> என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து<Porcius Festus> தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ்<Felix> யூதருக்குத்<Jews> தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக்<Paul> காவலில் வைத்துவிட்டுப்போனான். {Acts 24:27}
பெஸ்து<Festus> என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து<Caesarea> எருசலேமுக்குப்<Jerusalem> போனான். {Acts 25:1}
அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில்<Jews> முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு<Paul> விரோதமாகப் பிராதுபண்ணி, {Acts 25:2}
அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு<Jerusalem> அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். {Acts 25:3}
அதற்குப் பெஸ்து<Festus> பிரதியுத்தரமாக: பவுலைச்<Paul> செசரியாவிலே<Caesarea> காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன். {Acts 25:4}
ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான். {Acts 25:5}
அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப்<Caesarea> போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக்<Paul> கொண்டுவரும்படி கட்டளையிட்டான். {Acts 25:6}
அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த<Jerusalem> யூதர்கள்<Jews> அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள். {Acts 25:7}
அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய<Jews> வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும்<Caesar> விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான். {Acts 25:8}
அப்பொழுது பெஸ்து<Festus> யூதருக்குத்<Jews> தயவுசெய்ய மனதாய், பவுலை<Paul> நோக்கி: நீ எருசலேமுக்குப்<Jerusalem> போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான். {Acts 25:9}
அதற்குப் பவுல்<Paul>: நான் இராயருடைய<Caesar> நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு<Jews> நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர். {Acts 25:10}
நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு<Caesar> அபயமிடுகிறேன் என்றான். {Acts 25:11}
அப்பொழுது பெஸ்து<Festus> தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு<Caesar> அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே<Caesar> போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான். {Acts 25:12}
சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா<Agrippa> ராஜாவும் பெர்னீக்கேயாளும்<Bernice> பெஸ்துவைக்<Festus> கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு<Caesarea> வந்தார்கள். {Acts 25:13}
அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து<Festus> பவுலின்<Paul> சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ்<Felix> காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான். {Acts 25:14}
நான் எருசலேமில்<Jerusalem> இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய<Jews> மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். {Acts 25:15}
அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு<Romans> வழக்கமல்ல என்றேன். {Acts 25:16}
ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். {Acts 25:17}
அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல், {Acts 25:18}
தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு<Jesus> என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல்<Paul> சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன் பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள். {Acts 25:19}
இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்<Jerusalem> போய், அங்கே இவைகளைக்குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன். {Acts 25:20}
அதற்குப் பவுல்<Paul>, தான் இராயருக்குமுன்பாக<Caesar//Augustus> நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு<Caesar> அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான். {Acts 25:21}
அப்பொழுது அகிரிப்பா<Agrippa> பெஸ்துவை<Festus> நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான். {Acts 25:22}
மறுநாளிலே அகிரிப்பாவும்<Agrippa> பெர்னீக்கேயாளும்<Bernice> மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப்பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய<Festus> கட்டளையின்படி பவுல்<Paul> கொண்டுவரப்பட்டான். {Acts 25:23}
அப்பொழுது பெஸ்து<Festus>: அகிரிப்பா<Agrippa> ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும்<Jews> எருசலேமிலும்<Jerusalem> இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள். {Acts 25:24}
இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு<Caesar//Augustus> அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன். {Acts 25:25}
இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, {Acts 25:26}
இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா<Agrippa> ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான். {Acts 25:27}
அகிரிப்பா<Agrippa> பவுலை<Paul> நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல்<Paul> கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான். {Acts 26:1}
அகிரிப்பா<Agrippa> ராஜாவே, யூதர்கள்<Jews> என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். {Acts 26:2}
விசேஷமாய் நீர் யூதருடைய<Jews> சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். {Acts 26:3}
நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே<Jerusalem> என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும்<Jews> அறிந்திருக்கிறார்கள். {Acts 26:4}
நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய்<Pharisee> நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம். {Acts 26:5}
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன். {Acts 26:6}
இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா<Agrippa> ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள்<Jews> என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். {Acts 26:7}
தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன? {Acts 26:8}
முன்னே நானும் நசரேயனாகிய<Nazarene> இயேசுவின்<Jesus> நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். {Acts 26:9}
அப்படியே நான் எருசலேமிலும்<Jerusalem> செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். {Acts 26:10}
சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். {Acts 26:11}
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப்<Damascus> போகும்போது, {Acts 26:12}
மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். {Acts 26:13}
நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே<Saul>, சவுலே<Saul>, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்று எபிரெயு<Hebrew> பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். {Acts 26:14}
அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு<Jesus> நானே. {Acts 26:15}
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். {Acts 26:16}
உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, {Acts 26:17}
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். {Acts 26:18}
ஆகையால், அகிரிப்பா<Agrippa> ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை. {Acts 26:19}
முன்பு தமஸ்குவிலும்<Damascus> எருசலேமிலும்<Jerusalem> யூதேயா<Judaea> தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். {Acts 26:20}
இதினிமித்தமே யூதர்கள்<Jews> தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள். {Acts 26:21}
ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். {Acts 26:22}
தீர்க்கதரிசிகளும் மோசேயும்<Moses> முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து<Christ> பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். {Acts 26:23}
இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து<Festus> உரத்த சத்தமாய்: பவுலே<Paul>, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். {Acts 26:24}
அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே<Festus>, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். {Acts 26:25}
இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. {Acts 26:26}
அகிரிப்பா<Agrippa> ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். {Acts 26:27}
அப்பொழுது அகிரிப்பா<Agrippa> பவுலை<Paul> நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக்<Christian> கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான். {Acts 26:28}
அதற்குப் பவுல்<Paul>: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். {Acts 26:29}
இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும்<Bernice> அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, {Acts 26:30}
தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். {Acts 26:31}
அகிரிப்பா<Agrippa> பெஸ்துவை<Festus> நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு<Caesar> அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான். {Acts 26:32}
நாங்கள் இத்தாலியா<Italy> தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும்<Paul> காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து<Augustus> பட்டாளத்தைச்சேர்ந்த யூலியு<Julius> என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள். {Acts 27:1}
அதிரமித்தியம்<Adramyttium> ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா<Asia> நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா<Macedonian> தேசத்துத் தெசலோனிக்கே<Thessalonica> பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு<Aristarchus> எங்களுடனேகூட இருந்தான். {Acts 27:2}
மறுநாள் சீதோன்<Sidon> துறைபிடித்தோம். யூலியு<Julius> பவுலைப்<Paul> பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான். {Acts 27:3}
அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்காற்றாயிருந்தபடியினால், சீப்புருதீவின்<Cyprus> ஒதுக்கிலே ஓடினோம். {Acts 27:4}
பின்பு சிலிசியா<Cilicia> பம்பிலியா<Pamphylia> நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா<Lycia> நாட்டு மீறாப்பட்டணத்தில்<Myra> சேர்ந்தோம். {Acts 27:5}
இத்தாலியாவுக்குப்<Italy> போகிற அலெக்சந்திரியாபட்டணத்துக்<Alexandria> கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான். {Acts 27:6}
காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு<Cnidus> எதிரே வந்து, சல்மோனே<Salmone> ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின்<Crete> ஒதுக்கில் ஓடினோம். {Acts 27:7}
அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம்<Lasea> அதற்குச் சமீபமாயிருந்தது. {Acts 27:8}
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல்<Paul> அவர்களை நோக்கி: {Acts 27:9}
மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். {Acts 27:10}
நூற்றுக்கு அதிபதி பவுலினால்<Paul> சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான். {Acts 27:11}
அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தாதீவிலுள்ள<Crete> துறைமுகமாகிய பேனிக்ஸ்<Phenice> என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். {Acts 27:12}
தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு<Crete> அருகாக ஓடினார்கள். {Acts 27:13}
கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன்<Euroclydon> என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று. {Acts 27:14}
கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். {Acts 27:15}
அப்படிக் கிலவுதா<Clauda> என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம். {Acts 27:16}
அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச்சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். {Acts 27:17}
மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். {Acts 27:18}
மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம். {Acts 27:19}
அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று. {Acts 27:20}
அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல்<Paul> அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை<Crete> விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. {Acts 27:21}
ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. {Acts 27:22}
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: {Acts 27:23}
பவுலே<Paul>, பயப்படாதே, நீ இராயனுக்கு<Caesar> முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். {Acts 27:24}
ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். {Acts 27:25}
ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். {Acts 27:26}
பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக்<Adria> கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று. {Acts 27:27}
உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுது விட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள். {Acts 27:28}
பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். {Acts 27:29}
அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில், {Acts 27:30}
பவுல்<Paul> நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். {Acts 27:31}
அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழவிழவிட்டார்கள். {Acts 27:32}
பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல்<Paul> அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். {Acts 27:33}
ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். {Acts 27:34}
இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். {Acts 27:35}
அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள். {Acts 27:36}
கப்பலில் இருநூற்றெழுபத்தாறு பேர் இருந்தோம். {Acts 27:37}
திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள். {Acts 27:38}
பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, {Acts 27:39}
நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்றுமுகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி, {Acts 27:40}
இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. {Acts 27:41}
அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். {Acts 27:42}
நூற்றுக்கு அதிபதி பவுலைக்<Paul> காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், {Acts 27:43}
மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள். {Acts 27:44}
நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா<Melita> என்று அறிந்தோம். {Acts 28:1}
அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். {Acts 28:2}
பவுல்<Paul> சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. {Acts 28:3}
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். {Acts 28:4}
அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். {Acts 28:5}
அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். {Acts 28:6}
தீவுக்கு முதலாளியாகிய புபிலியு<Publius> என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான். {Acts 28:7}
புபிலியுவினுடைய<Publius> தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல்<Paul> அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். {Acts 28:8}
இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். {Acts 28:9}
அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள். {Acts 28:10}
மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியாபட்டணத்துக்<Alexandria> கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு, {Acts 28:11}
சீரகூசா<Syracuse> பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம். {Acts 28:12}
அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியுதுறைமுகத்துக்கு<Rhegium> வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலிபட்டணத்திற்கு<Puteoli> வந்து, {Acts 28:13}
அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப்<Rome> போனோம். {Acts 28:14}
அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும்<Appii forum>, சிலர் மூன்று சத்திரம்வரைக்கும்<The three taverns>, எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல்<Paul> கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான். {Acts 28:15}
நாங்கள் ரோமாபுரியில்<Rome> சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல்<Paul> தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். {Acts 28:16}
மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல்<Paul> யூதரில்<Jews> பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து<Jerusalem> ரோமர்<Romans> கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். {Acts 28:17}
அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். {Acts 28:18}
யூதர்கள்<Jews> அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு<Caesar> அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. {Acts 28:19}
இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய<Israel> நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். {Acts 28:20}
அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து<Judaea> எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. {Acts 28:21}
எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். {Acts 28:22}
அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின்<Moses> நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த<Jesus> விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான். {Acts 28:23}
அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள். {Acts 28:24}
இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல்<Paul> அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது: {Acts 28:25}
நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். {Acts 28:26}
இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா<Esaias> தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். {Acts 28:27}
ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். {Acts 28:28}
இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள்<Jews> தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். {Acts 28:29}
பின்பு பவுல்<Paul> தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, {Acts 28:30}
மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய<Jesus Christ> விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான். {Acts 28:31}
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!