Friday, November 01, 2019

மாற்கு

தேவனுடைய  குமாரனாகிய  இயேசு  கிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  சுவிசேஷத்தின்  ஆரம்பம்.  {Mark  1:1}

 

இதோ,  நான்  என்  தூதனை  உமக்கு  முன்பாக  அனுப்புகிறேன்,  அவன்  உமக்கு  முன்னே  போய்,  உமக்கு  வழியை  ஆயத்தம்பண்ணுவான்  என்றும்;  {Mark  1:2}

 

கர்த்தருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்,  அவருக்குப்  பாதைகளைச்  செவ்வைபண்ணுங்கள்  என்று  வனாந்தரத்திலே  கூப்பிடுகிறவனுடைய  சத்தம்  உண்டாகும்  என்றும்,  தீர்க்கதரிசன  ஆகமங்களில்  எழுதியிருக்கிற  பிரகாரமாய்;  {Mark  1:3}

 

யோவான்<John>  வனாந்தரத்தில்  ஞானஸ்நானங்கொடுத்து,  பாவமன்னிப்புக்கென்று  மனந்திரும்புதலுக்கேற்ற  ஞானஸ்நானத்தைக்குறித்துப்  பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.  {Mark  1:4}

 

அப்பொழுது  யூதேயா<Judaea>  தேசத்தார்  அனைவரும்  எருசலேம்<Jerusalem>  நகரத்தார்  யாவரும்,  அவனிடத்திற்குப்போய்,  தங்கள்  பாவங்களை  அறிக்கையிட்டு,  யோர்தான்<Jordan>  நதியில்  அவனால்  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  {Mark  1:5}

 

யோவான்<John>  ஒட்டகமயிர்  உடையைத்  தரித்து,  தன்  அரையில்  வார்க்கச்சையைக்  கட்டிக்கொண்டவனாயும்,  வெட்டுக்கிளியையும்  காட்டுத்தேனையும்  புசிக்கிறவனாயும்  இருந்தான்.  {Mark  1:6}

 

அவன்:  என்னிலும்  வல்லவர்  ஒருவர்  எனக்குப்பின்  வருகிறார்,  அவருடைய  பாதரட்சைகளின்  வாரைக்  குனிந்து  அவிழ்க்கிறதற்கும்  நான்  பாத்திரன்  அல்ல.  {Mark  1:7}

 

நான்  ஜலத்தினால்  உங்களுக்கு  ஞானஸ்நானம்  கொடுத்தேன்;  அவரோ  பரிசுத்த  ஆவியினால்  உங்களுக்கு  ஞானஸ்நானம்  கொடுப்பார்  என்று  பிரசங்கித்தான்.  {Mark  1:8}

 

அந்த  நாட்களில்,  இயேசு<Jesus>  கலிலேயாவிலுள்ள<Galilee>  நாசரேத்தூரிலிருந்து<Nazareth>  வந்து,  யோர்தான்<Jordan>  நதியில்  யோவானால்<John>  ஞானஸ்நானம்  பெற்றார்.  {Mark  1:9}

 

அவர்  ஜலத்திலிருந்து  கரையேறினவுடனே,  வானம்  திறக்கப்பட்டதையும்,  ஆவியானவர்  புறாவைப்போல்  தம்மேல்  இறங்குகிறதையும்  கண்டார்.  {Mark  1:10}

 

அன்றியும்,  நீர்  என்னுடைய  நேசகுமாரன்,  உம்மில்  பிரியமாயிருக்கிறேன்  என்று,  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாயிற்று.  {Mark  1:11}

 

உடனே  ஆவியானவர்  அவரை  வனாந்தரத்திற்குப்  போகும்படி  ஏவினார்.  {Mark  1:12}

 

அவர்  வனாந்தரத்திலே  நாற்பதுநாள்  இருந்து,  சாத்தானால்  சோதிக்கப்பட்டு,  அங்கே  காட்டுமிருகங்களின்  நடுவிலே  சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.  தேவதூதர்கள்  அவருக்கு  ஊழியஞ்செய்தார்கள்.  {Mark  1:13}

 

யோவான்<John>  காவலில்  வைக்கப்பட்ட  பின்பு,  இயேசு<Jesus>  கலிலேயாவிலே<Galilee>  வந்து,  தேவனுடைய  ராஜ்யத்தின்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து:  {Mark  1:14}

 

காலம்  நிறைவேறிற்று,  தேவனுடைய  ராஜ்யம்  சமீபமாயிற்று;  மனந்திரும்பி,  சுவிசேஷத்தை  விசுவாசியுங்கள்  என்றார்.  {Mark  1:15}

 

அவர்  கலிலேயாக்<Galilee>  கடலோரமாய்  நடந்துபோகையில்,  மீன்பிடிக்கிறவர்களாயிருந்த  சீமோனும்<Simon>,  அவன்  சகோதரன்  அந்திரேயாவும்<Andrew>  கடலில்  வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது  அவர்களைக்  கண்டார்.  {Mark  1:16}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  என்  பின்னே  வாருங்கள்,  உங்களை  மனுஷரைப்  பிடிக்கிறவர்களாக்குவேன்  என்றார்.  {Mark  1:17}

 

உடனே  அவர்கள்  தங்கள்  வலைகளை  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Mark  1:18}

 

அவர்  அவ்விடம்  விட்டுச்  சற்று  அப்புறம்  போனபோது,  செபெதேயுவின்<Zebedee>  குமாரன்  யாக்கோபும்<James>  அவன்  சகோதரன்  யோவானும்<John>  படவிலே  வலைகளைப்  பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக்  கண்டு,  {Mark  1:19}

 

உடனே  அவர்களையும்  அழைத்தார்;  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  தகப்பனாகிய  செபெதேயுவைக்<Zebedee>  கூலியாட்களோடு  படவிலே  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Mark  1:20}

 

பின்பு  கப்பர்நகூமுக்குப்<Capernaum>  போனார்கள்.  உடனே  அவர்  ஓய்வுநாளில்  ஜெபஆலயத்திலே  பிரவேசித்து,  போதகம்  பண்ணினார்.  {Mark  1:21}

 

அவர்  வேதபாரகரைப்போலப்  போதியாமல்,  அதிகாரமுடையவராய்  அவர்களுக்குப்  போதித்தபடியினால்,  அவருடைய  போதகத்தைக்குறித்து  ஜனங்கள்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Mark  1:22}

 

அவர்களுடைய  ஜெபஆலயத்திலே  அசுத்த  ஆவியுள்ள  ஒரு  மனுஷன்  இருந்தான்.  {Mark  1:23}

 

அவன்:  ஐயோ!  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவே<Jesus>,  எங்களுக்கும்  உமக்கும்  என்ன?  எங்களைக்  கெடுக்கவா  வந்தீர்?  உம்மை  இன்னார்  என்று  அறிவேன்,  நீர்  தேவனுடைய  பரிசுத்தர்  என்று  சத்தமிட்டான்.  {Mark  1:24}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நீ  பேசாமல்  இவனை  விட்டுப்  புறப்பட்டுப்போ  என்று  அதை  அதட்டினார்.  {Mark  1:25}

 

உடனே  அந்த  அசுத்த  ஆவி  அவனை  அலைக்கழித்து,  மிகுந்த  சத்தமிட்டு,  அவனைவிட்டுப்  போய்விட்டது.  {Mark  1:26}

 

எல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  இது  என்ன?  இந்தப்  புதிய  உபதேசம்  எப்படிப்பட்டது?  இவர்  அதிகாரத்தோடே  அசுத்த  ஆவிகளுக்கும்  கட்டளையிடுகிறார்,  அவைகள்  இவருக்குக்  கீழ்ப்படிகிறதே  என்று  தங்களுக்குள்ளே  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  {Mark  1:27}

 

அதுமுதல்  அவருடைய  கீர்த்தி  கலிலேயா<Galilee>  நாடெங்கும்  பிரசித்தமாயிற்று.  {Mark  1:28}

 

உடனே  அவர்கள்  ஜெபஆலயத்தை  விட்டுப்  புறப்பட்டு,  யாக்கோபோடும்<James>  யோவானோடுங்கூட<John>,  சீமோன்<Simon>  அந்திரேயா<Andrew>  என்பவர்களுடைய  வீட்டில்  பிரவேசித்தார்கள்.  {Mark  1:29}

 

அங்கே  சீமோனுடைய<Simon>  மாமி  ஜுரமாய்க்  கிடந்தாள்;  உடனே  அவர்கள்  அவளைக்குறித்து  அவருக்குச்  சொன்னார்கள்.  {Mark  1:30}

 

அவர்  கிட்டப்போய்,  அவள்  கையைப்  பிடித்து,  அவளைத்  தூக்கிவிட்டார்;  உடனே  ஜுரம்  அவளை  விட்டு  நீங்கிற்று;  அப்பொழுது  அவள்  அவர்களுக்குப்  பணிவிடைசெய்தாள்.  {Mark  1:31}

 

சாயங்காலமாகிச்  சூரியன்  அஸ்தமித்தபோது,  சகல  பிணியாளிகளையும்,  பிசாசுபிடித்தவர்களையும்,  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  {Mark  1:32}

 

பட்டணத்தார்  எல்லாரும்  வீட்டு  வாசலுக்கு  முன்பாகக்  கூடிவந்தார்கள்.  {Mark  1:33}

 

பலவிதமான  வியாதிகளினால்  உபத்திரவப்பட்டிருந்த  அநேகரை  அவர்  சொஸ்தமாக்கி,  அநேகம்  பிசாசுகளையும்  துரத்திவிட்டார்;  அந்தப்  பிசாசுகள்  தம்மை  அறிந்திருந்தபடியால்,  அவைகள்  பேசுகிறதற்கு  அவர்  இடங்கொடுக்கவில்லை.  {Mark  1:34}

 

அவர்  அதிகாலையில்,  இருட்டோடே  எழுந்து  புறப்பட்டு,  வனாந்தரமான  ஓரிடத்திற்குப்போய்,  அங்கே  ஜெபம்பண்ணினார்.  {Mark  1:35}

 

சீமோனும்<Simon>  அவனோடே  இருந்தவர்களும்  அவரைப்  பின்தொடர்ந்துபோய்,  {Mark  1:36}

 

அவரைக்  கண்டபோது:  உம்மை  எல்லாரும்  தேடுகிறார்கள்  என்று  சொன்னார்கள்.  {Mark  1:37}

 

அவர்களை  அவர்  நோக்கி:  அடுத்த  ஊர்களிலும்  நான்  பிரசங்கம்பண்ண  வேண்டுமாதலால்,  அவ்விடங்களுக்குப்  போவோம்  வாருங்கள்;  இதற்காகவே  புறப்பட்டுவந்தேன்  என்று  சொல்லி;  {Mark  1:38}

 

கலிலேயா<Galilee>  நாடெங்கும்  அவர்களுடைய  ஜெபஆலயங்களில்  அவர்  பிரசங்கம்  பண்ணிக்கொண்டும்,  பிசாசுகளைத்  துரத்திக்கொண்டும்  இருந்தார்.  {Mark  1:39}

 

அப்பொழுது  குஷ்டரோகி  ஒருவன்  அவரிடத்தில்  வந்து,  அவர்  முன்பாக  முழங்கால்படியிட்டு:  உமக்குச்  சித்தமானால்  என்னைச்  சுத்தமாக்க  உம்மால்  ஆகும்  என்று  வேண்டிக்கொண்டான்.  {Mark  1:40}

 

இயேசு<Jesus>  மனதுருகி,  கையை  நீட்டி,  அவனைத்  தொட்டு:  எனக்குச்  சித்தமுண்டு,  சுத்தமாகு  என்றார்.  {Mark  1:41}

 

இப்படி  அவர்  சொன்னவுடனே,  குஷ்டரோகம்  அவனை  விட்டு  நீங்கிற்று,  அவன்  சுத்தமானான்.  {Mark  1:42}

 

அப்பொழுது  அவர்  அவனை  நோக்கி:  நீ  இதை  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்கு  எச்சரிக்கையாயிரு;  {Mark  1:43}

 

ஆயினும்  நீ  போய்,  ஆசாரியனுக்கு  உன்னைக்  காண்பித்து,  நீ  சுத்தமானதினிமித்தம்,  மோசே<Moses>  கட்டளையிட்டிருக்கிறவைகளை  அவர்களுக்குச்  சாட்சியாகச்  செலுத்து  என்று  கண்டிப்பாய்ச்  சொல்லி,  உடனே  அவனை  அனுப்பிவிட்டார்.  {Mark  1:44}

 

அவனோ  புறப்பட்டுப்போய்,  இந்தச்  சங்கதி  எங்கும்  விளங்கும்படியாகப்  பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்.  அதினால்  அவர்  வெளியரங்கமாய்ப்  பட்டணத்தில்  பிரவேசிக்கக்கூடாமல்,  வெளியே  வனாந்தரமான  இடங்களில்  தங்கியிருந்தார்;  எத்திசையிலுமிருந்து  ஜனங்கள்  அவரிடத்திற்கு  வந்தார்கள்.  {Mark  1:45}

 

சிலநாட்களுக்குப்பின்பு  அவர்  மறுபடியும்  கப்பர்நகூமுக்குப்<Capernaum>  போனார்;  அவர்  வீட்டிலிருக்கிறாரென்று  ஜனங்கள்  கேள்விப்பட்டு;  {Mark  2:1}

 

உடனே  வாசலுக்கு  முன்னும்  நிற்க  இடம்போதாதபடிக்கு  அநேகர்  கூடிவந்தார்கள்;  அவர்களுக்கு  வசனத்தைப்  போதித்தார்.  {Mark  2:2}

 

அப்பொழுது  நாலுபேர்  ஒரு  திமிர்வாதக்காரனைச்  சுமந்துகொண்டு  அவரிடத்தில்  வந்தார்கள்;  {Mark  2:3}

 

ஜனக்கூட்டத்தினிமித்தம்  அவருக்குச்  சமீபமாய்ச்  சேரக்கூடாமல்,  அவர்  இருந்த  வீட்டின்  மேற்கூரையைப்  பிரித்துத்  திறப்பாக்கி,  திமிர்வாதக்காரன்  கிடக்கிற  படுக்கையை  இறக்கினார்கள்.  {Mark  2:4}

 

இயேசு<Jesus>  அவர்கள்  விசுவாசத்தைக்  கண்டு,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  மகனே,  உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டது  என்றார்.  {Mark  2:5}

 

அங்கே  உட்கார்ந்திருந்த  வேதபாரகரில்  சிலர்:  {Mark  2:6}

 

இவன்  இப்படித்  தேவதூஷணம்  சொல்லுகிறதென்ன?  தேவன்  ஒருவரேயன்றிப்  பாவங்களை  மன்னிக்கத்தக்கவர்  யார்  என்று  தங்கள்  இருதயங்களில்  சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.  {Mark  2:7}

 

அவர்கள்  தங்களுக்குள்ளே  இப்படிச்  சிந்திக்கிறார்களென்று  இயேசு<Jesus>  உடனே  தம்முடைய  ஆவியில்  அறிந்து,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  உங்கள்  இருதயங்களில்  இப்படிச்  சிந்திக்கிறதென்ன?  {Mark  2:8}

 

உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டதென்று  சொல்வதோ,  எழுந்து  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு  நடவென்று  சொல்வதோ,  எது  எளிது?  {Mark  2:9}

 

பூமியிலே  பாவங்களை  மன்னிக்க  மனுஷகுமாரனுக்கு  அதிகாரம்  உண்டென்பதை  நீங்கள்  அறியவேண்டும்  என்று  சொல்லி,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  {Mark  2:10}

 

நீ  எழுந்து,  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  உன்  வீட்டுக்குப்  போ  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Mark  2:11}

 

உடனே,  அவன்  எழுந்து,  தன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு  எல்லாருக்குமுன்பாகப்  போனான்.  அப்பொழுது  எல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  நாம்  ஒருக்காலும்  இப்படிக்  கண்டதில்லையென்று  சொல்லி,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  {Mark  2:12}

 

அவர்  மறுபடியும்  புறப்பட்டுக்  கடலருகே  போனார்;  அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  அவரிடத்தில்  வந்தார்கள்;  அவர்களுக்குப்  போதகம்பண்ணினார்.  {Mark  2:13}

 

அவர்  நடந்துபோகையில்,  அல்பேயுவின்<Alphaeus>  குமாரனாகிய  லேவி<Levi>  ஆயத்துறையில்  உட்கார்ந்திருக்கிறதைக்  கண்டு:  எனக்குப்  பின்சென்றுவா  என்றார்;  அவன்  எழுந்து  அவருக்குப்  பின்சென்றான்.  {Mark  2:14}

 

அப்பொழுது,  அவனுடைய  வீட்டிலே  அவர்  போஜனபந்தியிருக்கையில்,  அநேக  ஆயக்காரரும்  பாவிகளும்  அவரோடுகூட  வந்திருந்தபடியால்,  அவர்களும்  இயேசுவோடும்<Jesus>  அவர்  சீஷரோடுங்கூடப்  பந்தியிருந்தார்கள்.  {Mark  2:15}

 

அவர்  ஆயக்காரரோடும்  பாவிகளோடும்  போஜனம்பண்ணுகிறதை  வேதபாரகரும்  பரிசேயரும்<Pharisees>  கண்டு,  அவருடைய  சீஷரை  நோக்கி:  அவர்  ஆயக்காரரோடும்  பாவிகளோடும்  போஜனபானம்  பண்ணுகிறதென்னவென்று  கேட்டார்கள்.  {Mark  2:16}

 

இயேசு<Jesus>  அதைக்  கேட்டு:  பிணியாளிகளுக்கு  வைத்தியன்  வேண்டியதேயல்லாமல்  சுகமுள்ளவர்களுக்கு  வேண்டியதில்லை;  நீதிமான்களையல்ல,  பாவிகளையே  மனந்திரும்புகிறதற்கு  அழைக்கவந்தேன்  என்றார்.  {Mark  2:17}

 

யோவானுடைய<John>  சீஷரும்  பரிசேயருடைய<Pharisees>  சீஷரும்  உபவாசம்பண்ணிவந்தார்கள்.  அவர்கள்  அவரிடத்தில்  வந்து:  யோவானுடைய<John>  சீஷரும்  பரிசேயருடைய<Pharisees>  சீஷரும்  உபவாசிக்கிறார்களே,  உம்முடைய  சீஷர்  உபவாசியாமலிருக்கிறதென்னவென்று  கேட்டார்கள்.  {Mark  2:18}

 

அதற்கு  இயேசு<Jesus>:  மணவாளன்  தங்களோடிருக்கையில்  மணவாளனுடைய  தோழர்  உபவாசிப்பார்களா?  மணவாளன்  தங்களுடனே  இருக்கும்வரைக்கும்  உபவாசிக்கமாட்டார்களே.  {Mark  2:19}

 

மணவாளன்  அவர்களை  விட்டு  எடுபடும்  நாட்கள்  வரும்,  அந்த  நாட்களிலே  உபவாசிப்பார்கள்.  {Mark  2:20}

 

ஒருவனும்  கோடித்துண்டைப்  பழைய  வஸ்திரத்தோடு  இணைக்கமாட்டான்,  இணைத்தால்,  அதினோடே  இணைத்த  புதியதுண்டு  பழையதை  அதிகமாய்க்  கிழிக்கும்,  பீறலும்  அதிகமாகும்.  {Mark  2:21}

 

ஒருவனும்  புது  திராட்சரசத்தைப்  பழந்துருத்திகளில்  வார்த்துவைக்கமாட்டான்;  வார்த்துவைத்தால்,  புதுரசம்  துருத்திகளைக்  கிழித்துப்போடும்,  இரசமும்  சிந்திப்போம்,  துருத்திகளும்  கெட்டுப்போம்;  புதுரசத்தைப்  புது  துருத்திகளில்  வார்த்துவைக்கவேண்டும்  என்றார்.  {Mark  2:22}

 

பின்பு,  அவர்  ஓய்வுநாளில்  பயிர்  வழியே  போனார்;  அவருடைய  சீஷர்கள்  கூட  நடந்துபோகையில்,  கதிர்களைக்  கொய்யத்  தொடங்கினார்கள்.  {Mark  2:23}

 

பரிசேயர்<Pharisees>  அவரை  நோக்கி:  இதோ,  ஓய்வுநாளில்  செய்யத்தகாததை  இவர்கள்  ஏன்  செய்கிறார்கள்  என்றார்கள்.  {Mark  2:24}

 

அதற்கு  அவர்:  தாவீதுக்கு<David>  உண்டான  ஆபத்தில்,  தானும்  தன்னோடிருந்தவர்களும்  பசியாயிருந்தபோது,  {Mark  2:25}

 

அவன்  அபியத்தார்<Abiathar>  என்னும்  பிரதான  ஆசாரியன்  காலத்தில்  செய்ததை  நீங்கள்  ஒருக்காலும்  வாசிக்கவில்லையா?  அவன்  தேவனுடைய  வீட்டில்  பிரவேசித்து,  ஆசாரியர்தவிர  வேறொருவரும்  புசிக்கத்தகாத  தெய்வசமுகத்து  அப்பங்களைத்  தானும்  புசித்துத்  தன்னோடிருந்தவர்களுக்கும்  கொடுத்தானே  என்றார்.  {Mark  2:26}

 

பின்பு  அவர்களை  நோக்கி:  மனுஷன்  ஓய்வுநாளுக்காக  உண்டாக்கப்படவில்லை,  ஓய்வுநாள்  மனுஷனுக்காக  உண்டாக்கப்பட்டது;  {Mark  2:27}

 

ஆகையால்  மனுஷகுமாரன்  ஓய்வு  நாளுக்கும்  ஆண்டவராய்  இருக்கிறார்  என்றார்.  {Mark  2:28}

 

மறுபடியும்  அவர்  ஜெபஆலயத்தில்  பிரவேசித்தார்.  அங்கே  சூம்பின  கையையுடைய  ஒரு  மனுஷன்  இருந்தான்.  {Mark  3:1}

 

அவர்  ஓய்வுநாளில்  அவனைச்  சொஸ்தமாக்கினால்  அவர்பேரில்  குற்றஞ்சாட்டலாமென்று  அவர்மேல்  நோக்கமாயிருந்தார்கள்.  {Mark  3:2}

 

அப்பொழுது  அவர்  சூம்பின  கையையுடைய  மனுஷனை  நோக்கி:  எழுந்து  நடுவே  நில்  என்று  சொல்லி;  {Mark  3:3}

 

அவர்களைப்  பார்த்து:  ஓய்வுநாட்களில்  நன்மைசெய்வதோ,  தீமைசெய்வதோ,  ஜீவனைக்  காப்பதோ  அழிப்பதோ,  எது  நியாயம்  என்றார்.  அதற்கு  அவர்கள்  பேசாமலிருந்தார்கள்.  {Mark  3:4}

 

அவர்களுடைய  இருதயகடினத்தினிமித்தம்  அவர்  விசனப்பட்டு,  கோபத்துடனே  சுற்றிலும்  இருந்தவர்களைப்  பார்த்து,  அந்த  மனுஷனை  நோக்கி:  உன்  கையை  நீட்டு  என்றார்;  அவன்  நீட்டினான்;  அவன்  கை  மறுகையைப்போலச்  சொஸ்தமாயிற்று.  {Mark  3:5}

 

உடனே  பரிசேயர்<Pharisees>  புறப்பட்டுப்போய்,  அவரைக்  கொலைசெய்யும்படி,  அவருக்கு  விரோதமாய்  ஏரோதியரோடேகூட<Herodians>  ஆலோசனைபண்ணினார்கள்.  {Mark  3:6}

 

இயேசு<Jesus>  தம்முடைய  சீஷர்களோடே  அவ்விடம்விட்டு,  கடலோரத்துக்குப்  போனார்.  {Mark  3:7}

 

கலிலேயாவிலும்<Galilee>,  யூதேயாவிலும்<Judaea>,  எருசலேமிலும்<Jerusalem>,  இதுமேயாவிலும்<Idumaea>,  யோர்தானுக்கு<Jordan>  அக்கரையிலுமிருந்து  திரளான  ஜனங்கள்  வந்து,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  அல்லாமலும்  தீரு<Tyre>  சீதோன்<Sidon>  பட்டணங்களின்  திசைகளிலுமிருந்து  திரளான  ஜனங்கள்  அவர்  செய்த  அற்புதங்களைக்குறித்துக்  கேள்விப்பட்டு,  அவரிடத்தில்  வந்தார்கள்.  {Mark  3:8}

 

அவர்  அநேகரைச்  சொஸ்தமாக்கினார்.  நோயாளிகளெல்லாரும்  அதை  அறிந்து  அவரைத்  தொடவேண்டுமென்று  அவரிடத்தில்  நெருங்கிவந்தார்கள்.  {Mark  3:9}

 

ஜனங்கள்  திரளாயிருந்தபடியால்  அவர்கள்  தம்மை  நெருக்காதபடிக்கு,  தமக்காக  ஒரு  படவை  ஆயத்தம்பண்ணவேண்டுமென்று,  தம்முடைய  சீஷர்களுக்குச்  சொன்னார்.  {Mark  3:10}

 

அசுத்த  ஆவிகளும்  அவரைக்  கண்டபோது,  அவர்  முன்பாக  விழுந்து:  நீர்  தேவனுடைய  குமாரன்  என்று  சத்தமிட்டன.  {Mark  3:11}

 

தம்மைப்  பிரசித்தம்பண்ணாதபடி  அவைகளுக்குக்  கண்டிப்பாய்க்  கட்டளையிட்டார்.  {Mark  3:12}

 

பின்பு  அவர்  ஒரு  மலையின்மேல்  ஏறி,  தமக்குச்  சித்தமானவர்களைத்  தம்மிடத்தில்  வரவழைத்தார்;  அவர்கள்  அவரிடத்திற்கு  வந்தார்கள்.  {Mark  3:13}

 

அப்பொழுது  அவர்  பன்னிரண்டு  பேரைத்  தெரிந்துகொண்டு,  அவர்கள்  தம்மோடுகூட  இருக்கவும்,  பிரசங்கம்பண்ணும்படியாகத்  தாம்  அவர்களை  அனுப்பவும்,  {Mark  3:14}

 

வியாதிகளைக்  குணமாக்கிப்  பிசாசுகளைத்  துரத்தும்படி  அவர்கள்  அதிகாரமுடையவர்களாயிருக்கவும்,  அவர்களை  ஏற்படுத்தினார்.  {Mark  3:15}

 

அவர்கள்  யாரெனில்,  சீமோன்<Simon>,  இவனுக்குப்  பேதுரு<Peter>  என்கிற  பெயரிட்டார்.  {Mark  3:16}

 

செபெதேயுவின்<Zebedee>  குமாரனாகிய  யாக்கோபு<James>,  யாக்கோபின்<James>  சகோதரனாகிய  யோவான்<John>,  இவ்விருவருக்கும்  இடிமுழக்க  மக்களென்று<The  sons  of  thunder>  அர்த்தங்கொள்ளும்  பொவனெர்கேஸ்<Boanerges>  என்கிற  பெயரிட்டார்,  {Mark  3:17}

 

அந்திரேயா<Andrew>,  பிலிப்பு<Philip>,  பற்தொலொமேயு<Bartholomew>,  மத்தேயு<Matthew>,  தோமா<Thomas>,  அல்பேயுவின்<Alphaeus>  குமாரன்  யாக்கோபு<James>,  ததேயு<Thaddaeus>,  கானானியனாகிய<Canaanite>  சீமோன்<Simon>,  {Mark  3:18}

 

அவரைக்  காட்டிக்கொடுத்த  யூதாஸ்காரியோத்து<Judas  Iscariot>  என்பவர்களே.  {Mark  3:19}

 

பின்பு  வீட்டுக்குப்  போனார்கள்;  அங்கே  அவர்கள்  சாப்பிடுவதற்கும்  சமயமில்லாதபடிக்கு  அநேக  ஜனங்கள்  மறுபடியும்  கூடிவந்தார்கள்.  {Mark  3:20}

 

அவருடைய  இனத்தார்  இதைக்கேட்டபோது,  அவர்  மதிமயங்கியிருக்கிறார்  என்று  சொல்லி,  அவரைப்  பிடித்துக்கொள்ளும்படி  வந்தார்கள்.  {Mark  3:21}

 

எருசலேமிலிருந்து<Jerusalem>  வந்த  வேதபாரகர்:  இவன்  பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான்<Beelzebub>,  பிசாசுகளின்  தலைவனாலே  பிசாசுகளைத்  துரத்துகிறான்  என்றார்கள்.  {Mark  3:22}

 

அவர்களை  அவர்  அழைத்து,  உவமைகளாய்  அவர்களுக்குச்  சொன்னதாவது:  சாத்தானைச்  சாத்தான்  துரத்துவது  எப்படி?  {Mark  3:23}

 

ஒரு  ராஜ்யம்  தனக்குத்தானே  விரோதமாகப்  பிரிந்திருந்தால்,  அந்த  ராஜ்யம்  நிலைநிற்கமாட்டாதே.  {Mark  3:24}

 

ஒரு  வீடு  தனக்குத்தானே  விரோதமாகப்  பிரிந்திருந்தால்,  அந்த  வீடு  நிலைநிற்கமாட்டாதே.  {Mark  3:25}

 

சாத்தான்  தனக்குத்தானே  விரோதமாக  எழும்பிப்  பிரிந்திருந்தால்,  அவன்  நிலைநிற்கமாட்டாமல்,  அழிந்துபோவானே.  {Mark  3:26}

 

பலவானை  முந்திக்  கட்டினாலொழிய,  ஒருவனும்  பலவானுடைய  வீட்டுக்குள்  புகுந்து,  அவன்  உடைமைகளைக்  கொள்ளையிடக்கூடாது;  கட்டினானேயாகில்,  அவன்  வீட்டைக்  கொள்ளையிடுவான்.  {Mark  3:27}

 

மெய்யாகவே  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்:  மனுஷர்கள்  செய்யும்  எல்லாப்  பாவங்களும்,  அவர்கள்  தூஷிக்கும்  எந்தத்  தூஷணங்களும்,  அவர்களுக்கு  மன்னிக்கப்படும்;  {Mark  3:28}

 

ஒருவன்  பரிசுத்த  ஆவிக்கு  விரோதமாகத்  தூஷணஞ்சொல்வானாகில்,  அவன்  என்றென்றைக்கும்  மன்னிப்படையாமல்  நித்திய  ஆக்கினைக்குள்ளாயிருப்பான்  என்றார்.  {Mark  3:29}

 

அசுத்த  ஆவியைக்  கொண்டிருக்கிறானென்று  அவர்கள்  சொன்னபடியினாலே  அவர்  இப்படிச்  சொன்னார்.  {Mark  3:30}

 

அப்பொழுது  அவருடைய  சகோதரரும்  தாயாரும்  வந்து,  வெளியே  நின்று,  அவரை  அழைக்கும்படி  அவரிடத்தில்  ஆள்  அனுப்பினார்கள்.  {Mark  3:31}

 

அவரைச்  சுற்றிலும்  உட்கார்ந்திருந்த  ஜனங்கள்  அவரை  நோக்கி:  இதோ,  உம்முடைய  தாயாரும்  உம்முடைய  சகோதரரும்  வெளியே  நின்று  உம்மைத்  தேடுகிறார்கள்  என்றார்கள்.  {Mark  3:32}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  என்  தாயார்  யார்?  என்  சகோதரர்  யார்?  என்று  சொல்லி;  {Mark  3:33}

 

தம்மைச்  சூழ  உட்கார்ந்திருந்தவர்களைச்  சுற்றிப்பார்த்து:  இதோ,  என்  தாயும்,  என்  சகோதரரும்  இவர்களே!  {Mark  3:34}

 

தேவனுடைய  சித்தத்தின்படி  செய்கிறவன்  எவனோ  அவனே  எனக்குச்  சகோதரனும்,  எனக்குச்  சகோதரியும்,  எனக்குத்  தாயுமாய்  இருக்கிறான்  என்றார்.  {Mark  3:35}

 

அவர்  மறுபடியும்  கடலோரத்திலே  போதகம்பண்ணத்  தொடங்கினார்.  திரளான  ஜனங்கள்  அவரிடத்தில்  கூடிவந்தபடியால்,  அவர்  கடலிலே  நின்ற  ஒரு  படவில்  ஏறி  உட்கார்ந்தார்;  ஜனங்களெல்லாரும்  கடற்கரையில்  நின்றார்கள்.  {Mark  4:1}

 

அவர்  அநேக  விசேஷங்களை  உவமைகளாக  அவர்களுக்குப்  போதித்தார்;  போதிக்கிறபொழுது  அவர்களுக்குச்  சொன்னது:  {Mark  4:2}

 

கேளுங்கள்,  விதைக்கிறவன்  ஒருவன்  விதைக்கப்  புறப்பட்டான்.  {Mark  4:3}

 

அவன்  விதைக்கையில்,  சில  விதை  வழியருகே  விழுந்தது;  ஆகாயத்துப்  பறவைகள்  வந்து  அதைப்  பட்சித்துப்போட்டது.  {Mark  4:4}

 

சில  விதை  அதிக  மண்ணில்லாத  கற்பாறை  நிலத்தில்  விழுந்தது;  அதற்கு  ஆழமான  மண்ணில்லாததினாலே  சீக்கிரத்தில்  முளைத்தது;  {Mark  4:5}

 

வெயில்  ஏறினபோதோ,  தீய்ந்து  போய்,  வேரில்லாமையால்  உலர்ந்துபோயிற்று.  {Mark  4:6}

 

சில  விதை  முள்ளுள்ள  இடங்களில்  விழுந்தது;  முள்  வளர்ந்து,  அது  பலன்  கொடாதபடி,  அதை  நெருக்கிப்போட்டது.  {Mark  4:7}

 

சில  விதை  நல்ல  நிலத்தில்  விழுந்து,  ஓங்கிவளருகிற  பயிராகி,  ஒன்று  முப்பதும்,  ஒன்று  அறுபதும்,  ஒன்று  நூறுமாகப்  பலன்  தந்தது.  {Mark  4:8}

 

கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்று  அவர்களுக்குச்  சொன்னார்.  {Mark  4:9}

 

அவர்  தனித்திருக்கிறபோது,  பன்னிருவரோடுங்கூட  அவரைச்  சூழ்ந்திருந்தவர்கள்  இந்த  உவமையைக்  குறித்து  அவரிடத்தில்  கேட்டார்கள்.  {Mark  4:10}

 

அதற்கு  அவர்:  தேவனுடைய  ராஜ்யத்தின்  இரகசியத்தை  அறியும்படி  உங்களுக்கு  அருளப்பட்டது;  புறம்பே  இருக்கிறவர்களுக்கோ  இவைகளெல்லாம்  உவமைகளாகச்  சொல்லப்படுகிறது.  {Mark  4:11}

 

அவர்கள்  குணப்படாதபடிக்கும்,  பாவங்கள்  அவர்களுக்கு  மன்னிக்கப்படாதபடிக்கும்,  அவர்கள்  கண்டும்  காணாதவர்களாகவும்,  கேட்டும்  உணராதவர்களாகவும்  இருக்கும்படி,  இப்படிச்  சொல்லப்படுகிறது  என்றார்.  {Mark  4:12}

 

பின்பு  அவர்  அவர்களை  நோக்கி:  இந்த  உவமையை  நீங்கள்  அறியவில்லையா?  அறியாவிட்டால்  மற்ற  உவமைகளையெல்லாம்  எப்படி  அறிவீர்கள்?  {Mark  4:13}

 

விதைக்கிறவன்  வசனத்தை  விதைக்கிறான்.  {Mark  4:14}

 

வசனத்தைக்  கேட்டவுடனே  சாத்தான்  வந்து,  அவர்கள்  இருதயங்களில்  விதைக்கப்பட்ட  வசனத்தை  எடுத்துப்போடுகிறான்;  இவர்களே  வசனம்  விதைக்கப்படுகிற  வழியருகானவர்கள்.  {Mark  4:15}

 

அப்படியே,  வசனத்தைக்  கேட்டவுடனே  அதைச்  சந்தோஷத்தோடு  ஏற்றுக்கொண்டும்,  {Mark  4:16}

 

தங்களுக்குள்ளே  வேர்கொள்ளாதபடியால்,  கொஞ்சக்காலமாத்திரம்  நிலைத்திருக்கிறார்கள்,  வசனத்தினிமித்தம்  உபத்திரவமும்  துன்பமும்  உண்டானவுடனே  இடறலடைகிறார்கள்;  இவர்களே  கற்பாறை  நிலத்தில்  விதைக்கப்பட்டவர்கள்.  {Mark  4:17}

 

வசனத்தைக்  கேட்டும்,  உலகக்கவலைகளும்,  ஐசுவரியத்தின்  மயக்கமும்,  மற்றவைகளைப்பற்றி  உண்டாகிற  இச்சைகளும்  உட்பிரவேசித்து,  வசனத்தை  நெருக்கிப்போட,  அதினால்  பலனற்றுப்போகிறார்கள்.  {Mark  4:18}

 

இவர்களே  முள்ளுள்ள  இடங்களில்  விதைக்கப்பட்டவர்கள்.  {Mark  4:19}

 

வசனத்தைக்  கேட்டு,  ஏற்றுக்கொண்டு,  ஒன்று  முப்பதும்  ஒன்று  அறுபதும்  ஒன்று  நூறுமாகப்  பலன்கொடுக்கிறார்கள்;  இவர்களே  நல்ல  நிலத்தில்  விதைக்கப்பட்டவர்கள்  என்றார்.  {Mark  4:20}

 

பின்னும்  அவர்  அவர்களை  நோக்கி:  விளக்கைத்  தண்டின்மேல்  வைக்கிறதற்கேயன்றி,  மரக்காலின்  கீழாகிலும்,  கட்டிலின்  கீழாகிலும்,  வைக்கிறதற்குக்  கொண்டுவருவார்களா?  {Mark  4:21}

 

வெளியரங்கமாகாத  அந்தரங்கமுமில்லை,  வெளிக்கு  வராத  மறைபொருளுமில்லை.  {Mark  4:22}

 

கேட்கிறதற்கு  ஒருவன்  காதுள்ளவனாயிருந்தால்  கேட்கக்கடவன்  என்றார்.  {Mark  4:23}

 

பின்னும்  அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  கேட்கிறதைக்  கவனியுங்கள்.  எந்த  அளவினால்  அளக்கிறீர்களோ,  அந்த  அளவினால்  உங்களுக்கும்  அளக்கப்படும்,  கேட்கிற  உங்களுக்கு  அதிகம்  கொடுக்கப்படும்.  {Mark  4:24}

 

உள்ளவனெவனோ  அவனுக்குக்  கொடுக்கப்படும்;  இல்லாதவனெவனோ  அவனிடத்தில்  உள்ளதும்  எடுத்துக்கொள்ளப்படும்  என்றார்.  {Mark  4:25}

 

பின்னும்  அவர்  அவர்களை  நோக்கி:  தேவனுடைய  ராஜ்யமானது,  ஒரு  மனுஷன்  நிலத்தில்  விதையை  விதைத்து;  {Mark  4:26}

 

இரவில்  தூங்கி,  பகலில்  விழித்திருக்க,  அவனுக்குத்  தெரியாதவிதமாய்,  விதை  முளைத்துப்  பயிராகிறதற்கு  ஒப்பாயிருக்கிறது.  {Mark  4:27}

 

எப்படியென்றால்,  நிலமானது  முன்பு  முளையையும்,  பின்பு  கதிரையும்,  கதிரிலே  நிறைந்த  தானியத்தையும்  பலனாகத்  தானாய்க்  கொடுக்கும்.  {Mark  4:28}

 

பயிர்  விளைந்து  அறுப்புக்காலம்  வந்தவுடனே,  அறுக்கிறதற்கு  ஆட்களை  அனுப்புகிறான்  என்றார்.  {Mark  4:29}

 

பின்னும்  அவர்  அவர்களை  நோக்கி:  தேவனுடைய  ராஜ்யத்தை  எதற்கு  ஒப்பிடுவோம்?  அல்லது  எந்த  உவமையினாலே  அதைத்  திருஷ்டாந்தப்படுத்துவோம்?  {Mark  4:30}

 

அது  ஒரு  கடுகுவிதைக்கு  ஒப்பாயிருக்கிறது;  அது  பூமியில்  விதைக்கப்படும்போது  பூமியிலுள்ள  சகல  விதைகளிலும்  சிறிதாயிருக்கிறது;  {Mark  4:31}

 

விதைக்கப்பட்ட  பின்போ,  அது  வளர்ந்து,  சகல  பூண்டுகளிலும்  பெரிதாகி,  ஆகாயத்துப்  பறவைகள்  அதினுடைய  நிழலின்கீழ்  வந்தடையத்தக்க  பெரிய  கிளைகளை  விடும்  என்றார்.  {Mark  4:32}

 

அவர்கள்  கேட்டறியும்  திராணிக்குத்தக்கதாக,  அவர்  இப்படிப்பட்ட  அநேக  உவமைகளினாலே  அவர்களுக்கு  வசனத்தைச்  சொன்னார்.  {Mark  4:33}

 

உவமைகளினாலேயன்றி  அவர்களுக்கு  ஒன்றும்  சொல்லவில்லை;  அவர்  தம்முடைய  சீஷரோடே  தனித்திருக்கும்போது,  அவர்களுக்கு  எல்லாவற்றையும்  விவரித்துச்சொன்னார்.  {Mark  4:34}

 

அன்று  சாயங்காலத்தில்,  அவர்  அவர்களை  நோக்கி:  அக்கரைக்குப்  போவோம்  வாருங்கள்  என்றார்.  {Mark  4:35}

 

அவர்கள்  ஜனங்களை  அனுப்பிவிட்டு,  அவர்  படவிலிருந்தபடியே  அவரைக்  கொண்டுபோனார்கள்.  வேறே  படவுகளும்  அவரோடேகூட  இருந்தது.  {Mark  4:36}

 

அப்பொழுது  பலத்த  சுழல்காற்று  உண்டாகி,  படவு  நிரம்பத்தக்கதாக,  அலைகள்  அதின்மேல்  மோதிற்று.  {Mark  4:37}

 

கப்பலின்  பின்னணியத்தில்  அவர்  தலையணையை  வைத்து  நித்திரையாயிருந்தார்.  அவர்கள்  அவரை  எழுப்பி:  போதகரே,  நாங்கள்  மடிந்துபோகிறது  உமக்குக்  கவலையில்லையா  என்றார்கள்.  {Mark  4:38}

 

அவர்  எழுந்து,  காற்றை  அதட்டி,  கடலைப்பார்த்து:  இரையாதே,  அமைதலாயிரு  என்றார்.  அப்பொழுது  காற்று  நின்றுபோய்,  மிகுந்த  அமைதல்  உண்டாயிற்று.  {Mark  4:39}

 

அவர்  அவர்களை  நோக்கி:  ஏன்  இப்படிப்  பயப்பட்டீர்கள்?  ஏன்  உங்களுக்கு  விசுவாசம்  இல்லாமற்போயிற்று  என்றார்.  {Mark  4:40}

 

அவர்கள்  மிகவும்  பயந்து:  இவர்  யாரோ?  காற்றும்  கடலும்  இவருக்குக்  கீழ்ப்படிகிறதே  என்று,  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  {Mark  4:41}

 

பின்பு  அவர்கள்  கடலுக்கு  அக்கரையிலுள்ள  கதரேனருடைய<Gadarenes>  நாட்டில்  வந்தார்கள்.  {Mark  5:1}

 

அவர்  படவிலிருந்து  இறங்கினவுடனே,  அசுத்த  ஆவியுள்ள  ஒரு  மனுஷன்  பிரேதக்கல்லறைகளிலிருந்து  அவருக்கு  எதிராக  வந்தான்.  {Mark  5:2}

 

அவனுடைய  குடியிருப்பு  கல்லறைகளிலே  இருந்தது;  அவனைச்  சங்கிலிகளினாலும்  கட்ட  ஒருவனாலும்  கூடாதிருந்தது.  {Mark  5:3}

 

அவன்  அநேகந்தரம்  விலங்குகளினாலும்  சங்கிலிகளினாலும்  கட்டப்பட்டிருந்தும்,  சங்கிலிகளை  முறித்து,  விலங்குகளைத்  தகர்த்துப்போடுவான்;  அவனையடக்க  ஒருவனாலும்  கூடாதிருந்தது.  {Mark  5:4}

 

அவன்  எப்பொழுதும்  இரவும்  பகலும்,  மலைகளிலும்  கல்லறைகளிலும்  இருந்து,  கூக்குரலிட்டு,  கல்லுகளினாலே  தன்னைக்  காயப்படுத்திக்கொண்டிருந்தான்.  {Mark  5:5}

 

அவன்  இயேசுவைத்<Jesus>  தூரத்திலே  கண்டபோது,  ஓடிவந்து,  அவரைப்  பணிந்துகொண்டு:  {Mark  5:6}

 

இயேசுவே<Jesus>,  உன்னதமான  தேவனுடைய  குமாரனே,  எனக்கும்  உமக்கும்  என்ன?  என்னை  வேதனைப்படுத்தாதபடிக்குத்  தேவன்பேரில்  உமக்கு  ஆணையென்று  மிகுந்த  சத்தமிட்டுச்  சொன்னான்.  {Mark  5:7}

 

ஏனெனில்  அவர்  அவனை  நோக்கி:  அசுத்த  ஆவியே,  இந்த  மனுஷனை  விட்டுப்  புறப்பட்டுப்  போ  என்று  சொல்லியிருந்தார்.  {Mark  5:8}

 

அப்பொழுது  அவர்  அவனை  நோக்கி:  உன்  பேர்  என்னவென்று  கேட்டார்.  அதற்கு  அவன்:  நாங்கள்  அநேகராயிருக்கிறபடியால்  என்  பேர்  லேகியோன்<Legion>  என்று  சொல்லி,  {Mark  5:9}

 

தங்களை  அந்தத்  திசையிலிருந்து  துரத்திவிடாதபடிக்கு  அவரை  மிகவும்  வேண்டிக்கொண்டான்.  {Mark  5:10}

 

அப்பொழுது,  அவ்விடத்தில்  மலையருகே  அநேகம்  பன்றிகள்  கூட்டமாக  மேய்ந்துகொண்டிருந்தது.  {Mark  5:11}

 

அந்தப்  பிசாசுகளெல்லாம்  அவரை  நோக்கி:  பன்றிகளுக்குள்ளே  போகும்படி,  அவைகளுக்குள்ளே  எங்களை  அனுப்பும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டன.  {Mark  5:12}

 

இயேசு<Jesus>  அவைகளுக்கு  உத்தரவு  கொடுத்தவுடனே,  அசுத்த  ஆவிகள்  புறப்பட்டுப்  பன்றிகளுக்குள்  போயின;  உடனே  ஏறக்குறைய  இரண்டாயிரம்  பன்றிகளுள்ள  அந்தக்  கூட்டம்  உயர்ந்த  மேட்டிலிருந்து  ஓடி,  கடலிலே  பாய்ந்து,  கடலில்  அமிழ்ந்து  மாண்டது.  {Mark  5:13}

 

பன்றிகளை  மேய்த்தவர்கள்  ஓடி,  இதைப்  பட்டணத்திலும்  சுற்றுப்புறங்களிலும்  அறிவித்தார்கள்.  அப்பொழுது  சம்பவித்ததைப்  பார்க்கும்படி  ஜனங்கள்  புறப்பட்டு;  {Mark  5:14}

 

இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து,  லேகியோனாகிய  பிசாசுகள்  பிடித்திருந்தவன்  வஸ்திரந்தரித்து,  உட்கார்ந்து,  புத்தி  தெளிந்திருக்கிறதைக்  கண்டு,  பயந்தார்கள்.  {Mark  5:15}

 

பிசாசுகள்  பிடித்திருந்தவனுக்கும்  பன்றிகளுக்கும்  சம்பவித்ததைக்  கண்டவர்களும்  அவர்களுக்கு  விவரமாய்ச்  சொன்னார்கள்.  {Mark  5:16}

 

அப்பொழுது  தங்கள்  எல்லைகளை  விட்டுப்  போகும்படி  அவரை  வேண்டிக்கொள்ளத்  தொடங்கினார்கள்.  {Mark  5:17}

 

அப்படியே  அவர்  படவில்  ஏறுகிறபொழுது,  பிசாசு  பிடித்திருந்தவன்,  அவரோடேகூட  இருக்கும்படி  தனக்கு  உத்தரவுகொடுக்க  அவரை  வேண்டிக்கொண்டான்.  {Mark  5:18}

 

இயேசு<Jesus>  அவனுக்கு  உத்தரவுகொடாமல்:  நீ  உன்  இனத்தாரிடத்தில்  உன்  வீட்டிற்குப்போய்,  கர்த்தர்  உனக்கு  இரங்கி,  உனக்குச்  செய்தவைகளையெல்லாம்  அவர்களுக்கு  அறிவியென்று  சொன்னார்.  {Mark  5:19}

 

அந்தப்படி  அவன்  போய்,  இயேசு<Jesus>  தனக்குச்  செய்தவைகளையெல்லாம்  தெக்கப்போலி<Decapolis>  என்னும்  நாட்டில்  பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்;  எல்லாரும்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Mark  5:20}

 

இயேசு<Jesus>  படவில்  ஏறி  மறுபடியும்  இக்கரைக்கு  வந்து,  கடலோரத்திலிருந்தபோது,  திரளான  ஜனங்கள்  அவரிடத்தில்  கூடிவந்தார்கள்.  {Mark  5:21}

 

அப்பொழுது,  ஜெபஆலயத்தலைவரில்  ஒருவனாகிய  யவீரு<Jairus>  என்பவன்  வந்து,  அவரைக்  கண்டவுடனே,  அவர்  பாதத்திலே  விழுந்து:  {Mark  5:22}

 

என்  குமாரத்தி  மரண  அவஸ்தைப்படுகிறாள்,  அவள்  ஆரோக்கியம்  அடையும்படிக்கு  நீர்  வந்து,  அவள்மேல்  உமது  கைகளை  வையும்,  அப்பொழுது  பிழைப்பாள்  என்று  அவரை  மிகவும்  வேண்டிக்கொண்டான்.  {Mark  5:23}

 

அவர்  அவனோடேகூடப்  போனார்.  திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்று,  அவரை  நெருக்கினார்கள்.  {Mark  5:24}

 

அப்பொழுது  பன்னிரண்டு  வருஷமாய்ப்  பெரும்பாடுள்ள  ஒரு  ஸ்திரீ,  {Mark  5:25}

 

அநேக  வைத்தியர்களால்  மிகவும்  வருத்தப்பட்டு,  தனக்கு  உண்டானவைகளையெல்லாம்  செலவழித்தும்,  சற்றாகிலும்  குணமடையாமல்  அதிக  வருத்தப்படுகிறபொழுது,  {Mark  5:26}

 

இயேசுவைக்குறித்துக்<Jesus>  கேள்விப்பட்டு:  நான்  அவருடைய  வஸ்திரங்களையாகிலும்  தொட்டால்  சொஸ்தமாவேன்  என்று  சொல்லி;  {Mark  5:27}

 

ஜனக்கூட்டத்துக்குள்ளே  அவருக்குப்  பின்னாக  வந்து,  அவருடைய  வஸ்திரத்தைத்  தொட்டாள்.  {Mark  5:28}

 

உடனே  அவளுடைய  உதிரத்தின்  ஊறல்  நின்றுபோயிற்று;  அந்த  வேதனை  நீங்கி  ஆரோக்கியமடைந்ததை  அவள்  தன்  சரீரத்தில்  உணர்ந்தாள்.  {Mark  5:29}

 

உடனே  இயேசு<Jesus>  தம்மிலிருந்து  வல்லமை  புறப்பட்டதைத்  தமக்குள்  அறிந்து,  ஜனக்கூட்டத்துக்குள்ளே  திரும்பி:  என்  வஸ்திரங்களைத்  தொட்டது  யார்  என்று  கேட்டார்.  {Mark  5:30}

 

அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  திரளான  ஜனங்கள்  உம்மை  நெருக்கிக்கொண்டிருக்கிறதை  நீர்  கண்டும்,  என்னைத்  தொட்டது  யார்  என்று  கேட்கிறீரே  என்றார்கள்.  {Mark  5:31}

 

இதைச்  செய்தவளைக்  காணும்படிக்கு  அவர்  சுற்றிலும்  பார்த்தார்.  {Mark  5:32}

 

தன்னிடத்திலே  சம்பவித்ததை  அறிந்த  அந்த  ஸ்திரீயானவள்  பயந்து,  நடுங்கி,  அவர்  முன்பாக  வந்து  விழுந்து,  உண்மையையெல்லாம்  அவருக்குச்  சொன்னாள்.  {Mark  5:33}

 

அவர்  அவளைப்  பார்த்து:  மகளே,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது,  நீ  சமாதானத்தோடேபோய்,  உன்  வேதனை  நீங்கி,  சுகமாயிரு  என்றார்.  {Mark  5:34}

 

அவர்  இப்படிப்  பேசிக்கொண்டிருக்கையில்,  ஜெபஆலயத்தலைவனுடைய  வீட்டிலிருந்து  சிலர்  வந்து:  உம்முடைய  குமாரத்தி  மரித்துப்போனாள்,  இனி  ஏன்  போதகரை  வருத்தப்படுத்துகிறீர்  என்றார்கள்.  {Mark  5:35}

 

அவர்கள்  சொன்ன  வார்த்தையை  இயேசு<Jesus>  கேட்டவுடனே,  ஜெபஆலயத்தலைவனை  நோக்கி:  பயப்படாதே,  விசுவாசமுள்ளவனாயிரு  என்று  சொல்லி;  {Mark  5:36}

 

பேதுருவையும்<Peter>,  யாக்கோபையும்<James>,  யாக்கோபின்<James>  சகோதரன்  யோவானையும்<John>  தவிர,  வேறொருவரும்  தம்மோடே  வருகிறதற்கு  இடங்கொடாமல்;  {Mark  5:37}

 

ஜெபஆலயத்தலைவனுடைய  வீட்டிலே  வந்து,  சந்தடியையும்  மிகவும்  அழுது  புலம்புகிறவர்களையும்  கண்டு,  {Mark  5:38}

 

உள்ளே  பிரவேசித்து:  நீங்கள்  சந்தடிபண்ணி  அழுகிறதென்ன?  பிள்ளை  மரிக்கவில்லை,  நித்திரையாயிருக்கிறாள்  என்றார்.  {Mark  5:39}

 

அதற்காக  அவரைப்  பார்த்து  நகைத்தார்கள்.  எல்லாரையும்  அவர்  வெளியே  போகப்பண்ணி,  பிள்ளையின்  தகப்பனையும்  தாயையும்  தம்மோடே  வந்தவர்களையும்  அழைத்துக்கொண்டு,  பிள்ளையிருந்த  இடத்தில்  பிரவேசித்து,  {Mark  5:40}

 

பிள்ளையின்  கையைப்  பிடித்து:  தலீத்தாகூமி<Talitha  cumi>  என்றார்;  அதற்கு,  சிறுபெண்ணே  எழுந்திரு  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்று  அர்த்தமாம்.  {Mark  5:41}

 

உடனே  சிறுபெண்  எழுந்து  நடந்தாள்;  அவள்  பன்னிரண்டு  வயதுள்ளவளாயிருந்தாள்.  அவர்கள்  மிகுந்த  ஆச்சரியப்பட்டுப்  பிரமித்தார்கள்.  {Mark  5:42}

 

அதை  ஒருவருக்கும்  அறிவியாதபடி  அவர்களுக்கு  உறுதியாகக்  கட்டளையிட்டு,  அவளுக்கு  ஆகாரம்  கொடுக்கும்படி  சொன்னார்.  {Mark  5:43}

 

அவர்  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  தாம்  வளர்ந்த  ஊருக்கு  வந்தார்;  அவருடைய  சீஷரும்  அவரோடேகூட  வந்தார்கள்.  {Mark  6:1}

 

ஓய்வுநாளானபோது,  ஜெபஆலயத்தில்  உபதேசம்பண்ணத்  தொடங்கினார்.  அநேகர்  கேட்டு,  ஆச்சரியப்பட்டு,  இவைகள்  இவனுக்கு  எங்கேயிருந்து  வந்தது?  இவன்  கைகளினால்  இப்படிப்பட்ட  பலத்த  செய்கைகள்  நடக்கும்படி  இவனுக்குக்  கொடுக்கப்பட்ட  ஞானம்  எப்படிப்பட்டது?  {Mark  6:2}

 

இவன்  தச்சன்  அல்லவா?  மரியாளுடைய<Mary>  குமாரன்  அல்லவா?  யாக்கோபு<James>  யோசே<Joses>  யூதா<Juda>  சீமோன்<Simon>  என்பவர்களுக்குச்  சகோதரன்  அல்லவா?  இவன்  சகோதரிகளும்  இங்கே  நம்மிடத்தில்  இருக்கிறார்கள்  அல்லவா?  என்று  சொல்லி,  அவரைக்குறித்து  இடறலடைந்தார்கள்.  {Mark  6:3}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  தீர்க்கதரிசி  ஒருவன்  தன்  ஊரிலும்  தன்  இனத்திலும்  தன்  வீட்டிலுமேயன்றி  வேறெங்கும்  கனவீனமடையான்  என்றார்.  {Mark  6:4}

 

அங்கே  அவர்  சில  நோயாளிகள்மேல்  கைகளை  வைத்து,  அவர்களைக்  குணமாக்கினதேயன்றி,  வேறொரு  அற்புதமும்  செய்யக்கூடாமல்,  {Mark  6:5}

 

அவர்களுடைய  அவிசுவாசத்தைக்  குறித்து  ஆச்சரியப்பட்டு;  கிராமங்களிலே  சுற்றித்திரிந்து,  உபதேசம்பண்ணினார்.  {Mark  6:6}

 

அவர்  பன்னிருவரையும்  அழைத்து,  அசுத்த  ஆவிகளைத்  துரத்த  அவர்களுக்கு  அதிகாரங்கொடுத்து,  {Mark  6:7}

 

வழிக்குப்  பையையாகிலும்,  அப்பத்தையாகிலும்,  கச்சையில்  காசையாகிலும்,  எடுத்துக்கொண்டுபோகாமல்,  ஒரு  தடியை  மாத்திரம்  எடுத்துக்கொண்டுபோகவும்;  {Mark  6:8}

 

பாதரட்சைகளைப்  போட்டுக்கொண்டுபோகவும்,  இரண்டு  அங்கிகளைத்  தரியாதிருக்கவும்  கட்டளையிட்டார்.  {Mark  6:9}

 

பின்பு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  எங்கேயாகிலும்  ஒரு  வீட்டில்  பிரவேசித்தால்,  அவ்விடத்தை  விட்டுப்  புறப்படுகிறவரைக்கும்  அங்கேதானே  தங்கியிருங்கள்.  {Mark  6:10}

 

எவர்களாகிலும்  உங்களை  ஏற்றுக்கொள்ளாமலும்,  உங்கள்  வசனங்களைக்  கேளாமலும்  இருந்தால்,  நீங்கள்  அவ்விடம்  விட்டுப்  புறப்படும்போது,  அவர்களுக்குச்  சாட்சியாக  உங்கள்  கால்களின்  கீழே  படிந்த  தூசியை  உதறிப்போடுங்கள்.  நியாயத்தீர்ப்புநாளிலே  அந்தப்  பட்டணத்திற்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்  சோதோம்<Sodom>  கொமோரா<Gomorrha>  பட்டணத்திற்கு  நேரிடுவது  இலகுவாயிருக்கும்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  அவர்களை  இரண்டு  இரண்டுபேராக  அனுப்பினார்.  {Mark  6:11}

 

அவர்கள்  புறப்பட்டுப்போய்:  மனந்திரும்புங்கள்  என்று  பிரசங்கித்து;  {Mark  6:12}

 

அநேகம்  பிசாசுகளைத்  துரத்தி,  அநேகம்  நோயாளிகளை  எண்ணெய்  பூசிச்  சொஸ்தமாக்கினார்கள்.  {Mark  6:13}

 

அவருடைய  பேர்  பிரசித்தமானபடியினால்,  ஏரோதுராஜா<Herod>  அவரைக்குறித்துக்  கேள்விப்பட்டு:  யோவான்ஸ்நானன்<John  the  Baptist>  மரித்தோரிலிருந்து  எழுந்தான்,  ஆகையால்  அவனிடத்தில்  இந்தப்  பலத்த  செய்கைகள்  விளங்குகிறது  என்றான்.  {Mark  6:14}

 

சிலர்:  அவர்  எலியா<Elias>  என்றார்கள்.  வேறு  சிலர்:  அவர்,  ஒரு  தீர்க்கதரிசி,  அல்லது  தீர்க்கதரிசிகளில்  ஒருவனைப்போலிருக்கிறாரென்று  சொன்னார்கள்.  {Mark  6:15}

 

ஏரோது<Herod>  அதைக்  கேட்டபொழுது:  அவன்  நான்  சிரச்சேதம்  பண்ணின  யோவான்தான்<John>;  அவன்  மரித்தோரிலிருந்து  எழுந்தான்  என்றான்.  {Mark  6:16}

 

ஏரோது<Herod>  தன்  சகோதரனாகிய  பிலிப்புவின்<Philip>  மனைவி  ஏரோதியாளைத்<Herodias>  தனக்கு  மனைவியாக்கிக்கொண்டபோது,  {Mark  6:17}

 

யோவான்<John>  ஏரோதை<Herod>  நோக்கி:  நீர்  உம்முடைய  சகோதரன்  மனைவியை  வைத்துக்கொள்வது  நியாயமல்லவென்று  சொன்னதினிமித்தம்,  ஏரோது<Herod>  சேவகரை  அனுப்பி,  யோவானைப்<John>  பிடித்துக்  கட்டிக்  காவலில்  வைத்திருந்தான்.  {Mark  6:18}

 

ஏரோதியாளும்<Herodias>  அவனுக்குச்  சதி  நினைத்து,  அவனைக்  கொன்றுபோட  மனதாயிருந்தாள்;  ஆகிலும்  அவளால்  கூடாமற்போயிற்று.  {Mark  6:19}

 

அதேனென்றால்  யோவான்<John>  நீதியும்  பரிசுத்தமுமுள்ளவனென்று  ஏரோது<Herod>  அறிந்து,  அவனுக்குப்  பயந்து,  அவனைப்  பாதுகாத்து,  அவன்  யோசனையின்படி  அநேக  காரியங்களைச்  செய்து,  விருப்பத்தோடே  அவன்  சொல்லைக்  கேட்டு  வந்தான்.  {Mark  6:20}

 

பின்பு  சமயம்  வாய்த்தது;  எப்படியென்றால்,  ஏரோது<Herod>  தன்  ஜென்மநாளிலே  தன்னுடைய  பிரபுக்களுக்கும்,  சேனாதிபதிகளுக்கும்,  கலிலேயா<Galilee>  நாட்டின்  பிரதான  மனுஷருக்கும்  ஒரு  விருந்து  பண்ணினபோது,  {Mark  6:21}

 

ஏரோதியாளின்<Herodias>  குமாரத்தி  சபை  நடுவே  வந்து  நடனம்பண்ணி,  ஏரோதுவையும்<Herod>  அவனோடேகூடப்  பந்தியிருந்தவர்களையும்  சந்தோஷப்படுத்தினாள்.  அப்பொழுது,  ராஜா  சிறுபெண்ணை  நோக்கி:  உனக்கு  வேண்டியதை  என்னிடத்தில்  கேள்,  அதை  உனக்குத்  தருவேன்  என்று  சொன்னதுமல்லாமல்;  {Mark  6:22}

 

நீ  என்னிடத்தில்  எதைக்  கேட்டாலும்,  அது  என்  ராஜ்யத்தில்  பாதியானாலும்,  அதை  உனக்குத்  தருவேன்  என்று  அவளுக்கு  ஆணையும்  இட்டான்.  {Mark  6:23}

 

அப்பொழுது,  அவள்  வெளியே  போய்,  நான்  என்ன  கேட்கவேண்டும்  என்று  தன்  தாயினிடத்தில்  கேட்டாள்.  அதற்கு  அவள்:  யோவான்ஸ்நானனுடைய<John  the  Baptist>  தலையைக்  கேள்  என்றாள்.  {Mark  6:24}

 

உடனே  அவள்  ராஜாவினிடத்தில்  சீக்கிரமாய்  வந்து:  நீர்  இப்பொழுதே  ஒரு  தாலத்தில்  யோவான்ஸ்நானனுடைய<John  the  Baptist>  தலையை  எனக்குத்  தரவேண்டும்  என்று  கேட்டாள்.  {Mark  6:25}

 

அப்பொழுது  ராஜா  மிகுந்த  துக்கமடைந்தான்;  ஆகிலும்,  ஆணையினிமித்தமும்,  கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும்,  அவளுக்கு  அதை  மறுக்க  மனதில்லாமல்;  {Mark  6:26}

 

உடனே  அவனுடைய  தலையைக்  கொண்டுவரும்படி  சேவகனுக்குக்  கட்டளையிட்டு  அனுப்பினான்.  {Mark  6:27}

 

அந்தப்படி  அவன்  போய்,  காவற்கூடத்திலே  அவனைச்  சிரச்சேதம்பண்ணி,  அவன்  தலையை  ஒரு  தாலத்திலே  கொண்டுவந்து,  அதை  அந்தச்  சிறுபெண்ணுக்குக்  கொடுத்தான்;  அந்தச்  சிறுபெண்  அதைத்  தன்  தாயினிடத்தில்  கொடுத்தாள்.  {Mark  6:28}

 

அவனுடைய  சீஷர்கள்  அதைக்  கேள்விப்பட்டு  வந்து,  அவன்  உடலை  எடுத்து,  ஒரு  கல்லறையில்  வைத்தார்கள்.  {Mark  6:29}

 

அப்பொழுது  அப்போஸ்தலர்  இயேசுவினிடத்தில்<Jesus>  கூடிவந்து,  தாங்கள்  செய்தவைகள்  உபதேசித்தவைகள்  யாவையும்  அவருக்கு  அறிவித்தார்கள்.  {Mark  6:30}

 

அவர்  அவர்களை  நோக்கி:  வனாந்தரமான  ஓரிடத்தில்  தனித்துச்  சற்றே  இளைப்பாறும்படி  போவோம்  வாருங்கள்  என்றார்;  ஏனெனில்,  வருகிறவர்களும்  போகிறவர்களும்  அநேகராயிருந்தபடியினால்  போஜனம்  பண்ணுகிறதற்கும்  அவர்களுக்குச்  சமயமில்லாதிருந்தது.  {Mark  6:31}

 

அப்படியே  அவர்கள்  தனிமையாய்  ஒரு  படவில்  ஏறி  வனாந்தரமான  ஓர்  இடத்திற்குப்  போனார்கள்.  {Mark  6:32}

 

அவர்கள்  புறப்பட்டுப்  போகிறதை  ஜனங்கள்  கண்டார்கள்.  அவரை  அறிந்த  அநேகர்  சகல  பட்டணங்களிலுமிருந்து  கால்நடையாய்  அவ்விடத்திற்கு  ஓடி,  அவர்களுக்கு  முன்னே  அங்கே  சேர்ந்து,  அவரிடத்தில்  கூடிவந்தார்கள்.  {Mark  6:33}

 

இயேசு<Jesus>  கரையில்  வந்து,  அநேக  ஜனங்களைக்  கண்டு,  அவர்கள்  மேய்ப்பனில்லாத  ஆடுகளைப்போலிருந்தபடியால்,  அவர்கள்மேல்  மனதுருகி,  அநேக  காரியங்களை  அவர்களுக்கு  உபதேசிக்கத்  தொடங்கினார்.  {Mark  6:34}

 

வெகுநேரம்  சென்றபின்பு,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  இது  வனாந்தரமான  இடம்,  வெகுநேரமுமாயிற்று;  {Mark  6:35}

 

புசிக்கிறதற்கும்  இவர்களிடத்தில்  ஒன்றுமில்லை;  ஆகையால்  இவர்கள்  சுற்றியிருக்கிற  கிராமங்களுக்கும்  ஊர்களுக்கும்  போய்,  தங்களுக்காக  அப்பங்களை  வாங்கிக்கொள்ளும்படி  இவர்களை  அனுப்பிவிடவேண்டும்  என்றார்கள்.  {Mark  6:36}

 

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்களே  அவர்களுக்குப்  போஜனங்கொடுங்கள்  என்றார்.  அதற்கு  அவர்கள்:  நாங்கள்  போய்,  இருநூறு  பணத்துக்கு  அப்பங்களை  வாங்கி  இவர்களுக்குப்  புசிக்கும்படி  கொடுக்கக்கூடுமோ  என்றார்கள்.  {Mark  6:37}

 

அதற்கு  அவர்:  உங்களிடத்தில்  எத்தனை  அப்பங்களுண்டு,  போய்ப்பாருங்கள்  என்றார்.  அவர்கள்  பார்த்துவந்து:  ஐந்து  அப்பங்களும்,  இரண்டு  மீன்களும்  உண்டு  என்றார்கள்.  {Mark  6:38}

 

அப்பொழுது  எல்லாரையும்  பசும்புல்லின்மேல்  பந்திபந்தியாக  உட்காரவைக்கும்படி  அவர்களுக்குக்  கட்டளையிட்டார்.  {Mark  6:39}

 

அப்படியே  வரிசை  வரிசையாய்,  நூறுநூறுபேராகவும்  ஐம்பதைம்பதுபேராகவும்,  உட்கார்ந்தார்கள்.  {Mark  6:40}

 

அவர்  அந்த  ஐந்து  அப்பங்களையும்,  அந்த  இரண்டு  மீன்களையும்  எடுத்து,  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  ஆசீர்வதித்து,  அப்பங்களைப்பிட்டு,  அவர்களுக்குப்  பரிமாறும்படி  தம்முடைய  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்.  அப்படியே  இரண்டு  மீன்களையும்  எல்லாருக்கும்  பங்கிட்டார்.  {Mark  6:41}

 

எல்லாரும்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்.  {Mark  6:42}

 

மேலும்  அப்பங்களிலும்  மீன்களிலும்  மீதியான  துணிக்கைகளைப்  பன்னிரண்டு  கூடைநிறைய  எடுத்தார்கள்.  {Mark  6:43}

 

அப்பம்  சாப்பிட்ட  புருஷர்  ஏறக்குறைய  ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.  {Mark  6:44}

 

அவர்  ஜனங்களை  அனுப்பிவிடுகையில்,  தம்முடைய  சீஷர்கள்  படவில்  ஏறி  அக்கரையில்  பெத்சாயிதாவுக்கு<Bethsaida>  எதிராக,  தமக்கு  முன்னே  போகும்படி,  அவர்களைத்  துரிதப்படுத்தினார்.  {Mark  6:45}

 

அவர்  ஜனங்களை  அனுப்பிவிட்டபின்பு,  ஜெபம்பண்ணும்படி  ஒரு  மலையின்மேல்  ஏறினார்.  {Mark  6:46}

 

சாயங்காலமானபோது  படவு  நடுக்கடலிலிருந்தது;  அவரோ  கரையிலே  தனிமையாயிருந்தார்.  {Mark  6:47}

 

அப்பொழுது  காற்று  அவர்களுக்கு  எதிராயிருந்தபடியினால்,  அவர்கள்  தண்டு  வலிக்கிறதில்  வருத்தப்படுகிறதை  அவர்  கண்டு,  இராத்திரியில்  நாலாம்  ஜாமத்தில்  கடலின்மேல்  நடந்து  அவர்களிடத்தில்  வந்து,  அவர்களைக்  கடந்துபோகிறவர்போல்  காணப்பட்டார்.  {Mark  6:48}

 

அவர்  கடலின்மேல்  நடக்கிறதை  அவர்கள்  கண்டு,  ஆவேசம்  என்று  எண்ணி,  சத்தமிட்டு  அலறினார்கள்.  {Mark  6:49}

 

அவர்களெல்லாரும்  அவரைக்  கண்டு  கலக்கமடைந்தார்கள்.  உடனே  அவர்  அவர்களோடே  பேசி:  திடன்கொள்ளுங்கள்,  நான்தான்,  பயப்படாதிருங்கள்  என்று  சொல்லி,  {Mark  6:50}

 

அவர்கள்  இருந்த  படவில்  ஏறினார்.  அப்பொழுது  காற்று  அமர்ந்தது;  அதினால்  அவர்கள்  தங்களுக்குள்ளே  மிகவும்  பிரமித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  {Mark  6:51}

 

அவர்களுடைய  இருதயம்  கடினமுள்ளதாயிருந்தபடியினால்  அப்பங்களைக்  குறித்து  அவர்கள்  உணராமற்போனார்கள்.  {Mark  6:52}

 

அவர்கள்  கடலைக்  கடந்து  கெனேசரேத்தென்னும்<Gennesaret>  நாட்டிற்கு  வந்து,  கரைபிடித்தார்கள்.  {Mark  6:53}

 

அவர்கள்  படவிலிருந்து  இறங்கினவுடனே,  ஜனங்கள்  அவரை  அறிந்து,  {Mark  6:54}

 

அந்தச்  சுற்றுப்புறமெங்கும்  ஓடித்திரிந்து,  பிணியாளிகளைப்  படுக்கைகளில்  கிடத்தி,  அவர்  வந்திருக்கிறாரென்று  கேள்விப்பட்ட  இடங்களிலெல்லாம்  சுமந்து  கொண்டுவந்தார்கள்.  {Mark  6:55}

 

அல்லாமலும்  அவர்  பிரவேசித்த  கிராமங்கள்  பட்டணங்கள்  நாடுகள்  எவைகளோ,  அவைகளின்  சந்தைவெளிகளிலே  வியாதிக்காரரை  வைத்து,  அவருடைய  வஸ்திரத்தின்  ஓரத்தையாகிலும்  அவர்கள்  தொடும்படி  உத்தரவாகவேண்டும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டார்கள்;  அவரைத்  தொட்ட  யாவரும்  சொஸ்தமானார்கள்.  {Mark  6:56}

 

எருசலேமிலிருந்து<Jerusalem>  வந்த  பரிசேயரும்<Pharisees>,  வேதபாரகரில்  சிலரும்  அவரிடத்தில்  கூடிவந்தார்கள்.  {Mark  7:1}

 

அப்பொழுது  அவருடைய  சீஷரில்  சிலர்  கழுவாத  அசுத்த  கைகளாலே  போஜனம்பண்ணுகிறதை  அவர்கள்  கண்டு  குற்றம்பிடித்தார்கள்.  {Mark  7:2}

 

ஏனெனில்  பரிசேயர்<Pharisees>  முதலிய  யூதர்<Jews>  அனைவரும்  முன்னோர்களின்  பாரம்பரியத்தைக்  கைக்கொண்டு,  அடிக்கடி  கைகழுவினாலொழியச்  சாப்பிடமாட்டார்கள்.  {Mark  7:3}

 

கடையிலிருந்து  வரும்போதும்  ஸ்நானம்பண்ணாமல்  சாப்பிடமாட்டார்கள்.  அப்படியே  செம்புகளையும்  கிண்ணங்களையும்  செப்புக்குடங்களையும்  மணைகளையும்  கழுவுகிறதுமல்லாமல்,  வேறு  அநேக  ஆசாரங்களையும்  கைக்கொண்டுவருவார்கள்.  {Mark  7:4}

 

அப்பொழுது,  அந்தப்  பரிசேயரும்<Pharisees>  வேதபாரகரும்  அவரை  நோக்கி:  உம்முடைய  சீஷர்கள்  முன்னோர்களின்  பாரம்பரியத்தை  மீறி,  ஏன்  கை  கழுவாமல்  சாப்பிடுகிறார்கள்  என்று  கேட்டார்கள்.  {Mark  7:5}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  இந்த  ஜனங்கள்  தங்கள்  உதடுகளினால்  என்னைக்  கனம்பண்ணுகிறார்கள்;  அவர்கள்  இருதயமோ  எனக்குத்  தூரமாய்  விலகியிருக்கிறது  என்றும்,  {Mark  7:6}

 

மனுஷருடைய  கற்பனைகளை  உபதேசங்களாகப்  போதித்து,  வீணாய்  எனக்கு  ஆராதனை  செய்கிறார்கள்  என்றும்,  எழுதியிருக்கிறபிரகாரம்,  மாயக்காரராகிய  உங்களைக்  குறித்து,  ஏசாயா<Esaias>  நன்றாய்த்  தீர்க்கதரிசனம்  சொல்லியிருக்கிறான்.  {Mark  7:7}

 

நீங்கள்  தேவனுடைய  கட்டளையைத்  தள்ளிவிட்டு,  மனுஷருடைய  பாரம்பரியத்தைக்  கைக்கொண்டுவருகிறவர்களாய்,  கிண்ணங்களையும்  செம்புகளையும்  கழுவுகிறீர்கள்;  மற்றும்  இப்படிப்பட்ட  அநேக  சடங்குகளையும்  அனுசரித்துவருகிறீர்கள்  என்றார்.  {Mark  7:8}

 

பின்னும்  அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  உங்கள்  பாரம்பரியத்தைக்  கைக்கொள்ளும்படிக்குத்  தேவனுடைய  கட்டளைகளை  வியர்த்தமாக்கினது  நன்றாயிருக்கிறது.  {Mark  7:9}

 

எப்படியெனில்,  உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக  என்றும்,  தகப்பனையாவது  தாயையாவது  நிந்திக்கிறவன்  கொல்லப்படவேண்டும்  என்றும்,  மோசே<Moses>  சொல்லியிருக்கிறாரே.  {Mark  7:10}

 

நீங்களோ,  ஒருவன்  தன்  தகப்பனையாவது  தாயையாவது  நோக்கி:  உனக்கு  நான்  செய்யத்தக்க  உதவி  எது  உண்டோ,  அதைக்  கொர்பான்<Corban>  என்னும்  காணிக்கையாகக்  கொடுக்கிறேன்  என்று  சொல்லிவிட்டால்  அவனுடைய  கடமை  தீர்ந்தது  என்று  சொல்லி,  {Mark  7:11}

 

அவனை  இனி  தன்  தகப்பனுக்காவது  தன்  தாய்க்காவது  யாதொரு  உதவியும்  செய்ய  ஒட்டாமல்;  {Mark  7:12}

 

நீங்கள்  போதித்த  உங்கள்  பாரம்பரியத்தினால்  தேவவசனத்தை  அவமாக்குகிறீர்கள்.  இதுபோலவே  நீங்கள்  மற்றும்  அநேக  காரியங்களையும்  செய்கிறீர்கள்  என்று  சொன்னார்.  {Mark  7:13}

 

பின்பு  அவர்  ஜனங்களெல்லாரையும்  வரவழைத்து  அவர்களை  நோக்கி:  நீங்கள்  எல்லாரும்  எனக்குச்  செவிகொடுத்து  உணருங்கள்.  {Mark  7:14}

 

மனுஷனுக்குப்  புறம்பே  இருந்து  அவனுக்குள்ளே  போகிறதொன்றும்  அவனைத்  தீட்டுப்படுத்தமாட்டாது;  அவன்  உள்ளத்திலிருந்து  புறப்படுகிறவைகளே  அவனைத்  தீட்டுப்படுத்தும்.  {Mark  7:15}

 

கேட்கிறதற்கு  ஒருவன்  காதுள்ளவனாயிருந்தால்  கேட்கக்கடவன்  என்றார்.  {Mark  7:16}

 

அவர்  ஜனங்களைவிட்டு  வீட்டுக்குள்  பிரவேசித்தபோது,  அவருடைய  சீஷர்கள்  அவர்  சொன்ன  உவமையைக்குறித்து  அவரிடத்தில்  விசாரித்தார்கள்.  {Mark  7:17}

 

அதற்கு  அவர்:  நீங்களும்  இவ்வளவு  உணர்வில்லாதவர்களா?  புறம்பேயிருந்து  மனுஷனுக்குள்ளே  போகிறதொன்றும்  அவனைத்  தீட்டுப்படுத்தமாட்டாதென்று  நீங்கள்  அறிந்துகொள்ளவில்லையா?  {Mark  7:18}

 

அது  அவன்  இருதயத்தில்  போகாமல்  வயிற்றிலே  போகிறது;  அதிலிருந்து  எல்லாப்  போஜனங்களின்  அசுத்தங்களையும்  கழிக்கிற  ஆசனவழியாய்  நீங்கிப்போகும்.  {Mark  7:19}

 

மனுஷனுக்குள்ளே  இருந்து  புறப்படுகிறதே  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்.  {Mark  7:20}

 

எப்படியெனில்,  மனுஷருடைய  இருதயத்திற்குள்ளிருந்து  பொல்லாத  சிந்தனைகளும்,  விபசாரங்களும்,  வேசித்தனங்களும்,  கொலைபாதகங்களும்,  {Mark  7:21}

 

களவுகளும்,  பொருளாசைகளும்,  துஷ்டத்தனங்களும்,  கபடும்,  காமவிகாரமும்,  வன்கண்ணும்,  தூஷணமும்,  பெருமையும்,  மதிகேடும்  புறப்பட்டுவரும்.  {Mark  7:22}

 

பொல்லாங்கானவைகளாகிய  இவைகளெல்லாம்  உள்ளத்திலிருந்து  புறப்பட்டு  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்  என்றார்.  {Mark  7:23}

 

பின்பு,  அவர்  எழுந்து  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  தீரு<Tyre>  சீதோன்<Sidon>  பட்டணங்களின்  எல்லைகளில்  போய்,  ஒரு  வீட்டுக்குள்  பிரவேசித்து,  ஒருவரும்  அதை  அறியாதிருக்க  விரும்பியும்,  அவர்  மறைவாயிருக்கக்  கூடாமற்போயிற்று.  {Mark  7:24}

 

அசுத்த  ஆவி  பிடித்திருந்த  ஒரு  சிறு  பெண்ணின்  தாயாகிய  ஒரு  ஸ்திரீ  அவரைக்குறித்துக்  கேள்விப்பட்டு,  வந்து  அவர்  பாதத்தில்  விழுந்தாள்.  {Mark  7:25}

 

அந்த  ஸ்திரீ  சீரோபேனிக்கியா<Syrophenician>  தேசத்தாளாகிய  கிரேக்க<Greek>  ஸ்திரீயாயிருந்தாள்;  அவள்  தன்  மகளைப்  பிடித்திருந்த  பிசாசைத்  துரத்திவிடவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டாள்.  {Mark  7:26}

 

இயேசு<Jesus>  அவளை  நோக்கி:  முந்திப்  பிள்ளைகள்  திருப்தியடையட்டும்;  பிள்ளைகளின்  அப்பத்தை  எடுத்து  நாய்க்குட்டிகளுக்குப்  போடுகிறது  நல்லதல்ல  என்றார்.  {Mark  7:27}

 

அதற்கு  அவள்:  மெய்தான்,  ஆண்டவரே,  ஆகிலும்,  மேஜையின்  கீழிருக்கும்  நாய்க்குட்டிகள்  பிள்ளைகள்  சிந்துகிற  துணிக்கைகளைத்  தின்னுமே  என்றாள்.  {Mark  7:28}

 

அப்பொழுது,  அவர்:  நீ  சொன்ன  அந்த  வார்த்தையினிமித்தம்  போகலாம்.  பிசாசு  உன்  மகளை  விட்டு  நீங்கிப்போயிற்று  என்றார்.  {Mark  7:29}

 

அவள்  தன்  வீட்டுக்கு  வந்தபொழுது,  பிசாசு  போய்விட்டதையும்,  தன்  மகள்  கட்டிலில்  படுத்திருக்கிறதையும்  கண்டாள்.  {Mark  7:30}

 

மறுபடியும்,  அவர்  தீரு<Tyre>  சீதோன்<Sidon>  பட்டணங்களின்  எல்லைகளை  விட்டுப்  புறப்பட்டு,  தெக்கப்போலியின்<Decapolis>  எல்லைகளின்  வழியாய்க்  கலிலேயாக்<Galilee>  கடலருகே  வந்தார்.  {Mark  7:31}

 

அங்கே  கொன்னைவாயுடைய  ஒரு  செவிடனை  அவரிடத்தில்  கொண்டுவந்து,  அவர்  தமது  கையை  அவன்மேல்  வைக்கும்படி  வேண்டிக்கொண்டார்கள்.  {Mark  7:32}

 

அப்பொழுது,  அவர்  அவனை  ஜனக்கூட்டத்தை  விட்டுத்  தனியே  அழைத்துக்கொண்டுபோய்,  தம்முடைய  விரல்களை  அவன்  காதுகளில்  வைத்து,  உமிழ்ந்து,  அவனுடைய  நாவைத்  தொட்டு;  {Mark  7:33}

 

வானத்தை  அண்ணாந்துபார்த்து,  பெருமூச்சுவிட்டு:  எப்பத்தா<Ephphatha>  என்றார்;  அதற்குத்  திறக்கப்படுவாயாக  என்று  அர்த்தமாம்.  {Mark  7:34}

 

உடனே  அவனுடைய  செவிகள்  திறக்கப்பட்டு,  அவனுடைய  நாவின்  கட்டும்  அவிழ்ந்து,  அவன்  செவ்வையாய்ப்  பேசினான்.  {Mark  7:35}

 

அதை  ஒருவருக்கும்  சொல்லவேண்டாமென்று  அவர்களுக்குக்  கட்டளையிட்டார்;  ஆகிலும்  எவ்வளவு  அதிகமாய்  அவர்களுக்குக்  கட்டளையிட்டாரோ,  அவ்வளவு  அதிகமாய்  அவர்கள்  அதைப்  பிரசித்தம்பண்ணி,  {Mark  7:36}

 

எல்லாவற்றையும்  நன்றாய்ச்  செய்தார்;  செவிடர்  கேட்கவும்,  ஊமையர்  பேசவும்பண்ணுகிறார்  என்று  சொல்லி,  மேன்மேலும்  ஆச்சரியப்பட்டார்கள்.  {Mark  7:37}

 

அந்த  நாட்களிலே  திரளான  ஜனங்கள்  கூடிவந்திருக்கையில்,  அவர்கள்  சாப்பிடுகிறதற்கு  ஒன்றுமில்லாதபோது,  இயேசு<Jesus>  தம்முடைய  சீஷரை  அழைத்து:  {Mark  8:1}

 

ஜனங்களுக்காகப்  பரிதபிக்கிறேன்,  இவர்கள்  இப்பொழுது  என்னிடத்தில்  தங்கியிருந்த  மூன்றுநாளாய்ச்  சாப்பிட  ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.  {Mark  8:2}

 

இவர்களில்  சிலர்  தூரத்திலிருந்து  வந்தவர்களாகையால்,  நான்  இவர்களைப்  பட்டினியாய்  வீட்டிற்கு  அனுப்பிவிட்டால்  வழியில்  சோர்ந்துபோவார்களே  என்றார்.  {Mark  8:3}

 

அதற்கு  அவருடைய  சீஷர்கள்:  இந்த  வனாந்தரத்திலே  ஒருவன்  எங்கேயிருந்து  அப்பங்களைக்  கொண்டுவந்து  இத்தனை  பேர்களைத்  திருப்தியாக்கக்கூடும்  என்றார்கள்.  {Mark  8:4}

 

அதற்கு  அவர்:  உங்களிடத்தில்  எத்தனை  அப்பங்கள்  உண்டு  என்று  கேட்டார்.  அவர்கள்:  ஏழு  அப்பங்கள்  உண்டு  என்றார்கள்.  {Mark  8:5}

 

அப்பொழுது  அவர்  ஜனங்களைத்  தரையிலே  பந்தியிருக்கக்  கட்டளையிட்டு,  அந்த  ஏழு  அப்பங்களையும்  எடுத்து,  ஸ்தோத்திரம்  பண்ணி,  பிட்டு,  அவர்களுக்குப்  பரிமாறும்படி  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்;  அவர்கள்  ஜனங்களுக்குப்  பரிமாறினார்கள்.  {Mark  8:6}

 

சில  சிறுமீன்களும்  அவர்களிடத்தில்  இருந்தது;  அவர்  அவைகளையும்  ஆசீர்வதித்து  அவர்களுக்குப்  பரிமாறும்படி  சொன்னார்.  {Mark  8:7}

 

அவர்கள்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்;  மீதியான  துணிக்கைகளை  ஏழு  கூடைநிறைய  எடுத்தார்கள்.  {Mark  8:8}

 

சாப்பிட்டவர்கள்  ஏறக்குறைய  நாலாயிரம்பேராயிருந்தார்கள்.  பின்பு  அவர்  அவர்களை  அனுப்பிவிட்டார்.  {Mark  8:9}

 

உடனே  அவர்  தம்முடைய  சீஷரோடேகூடப்  படவில்  ஏறி,  தல்மனூத்தாவின்<Dalmanutha>  எல்லைகளில்  வந்தார்.  {Mark  8:10}

 

அப்பொழுது  பரிசேயர்<Pharisees>  வந்து  அவரோடே  தர்க்கிக்கத்தொடங்கி,  அவரைச்  சோதிக்கும்படி,  வானத்திலிருந்து  ஒரு  அடையாளத்தைக்  காண்பிக்கவேண்டும்  என்று  கேட்டார்கள்.  {Mark  8:11}

 

அவர்  தம்முடைய  ஆவியில்  பெருமூச்சுவிட்டு:  இந்தச்  சந்ததியார்  அடையாளம்  தேடுகிறதென்ன?  இந்தச்  சந்ததியாருக்கு  ஒரு  அடையாளமும்  கொடுக்கப்படுவதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  {Mark  8:12}

 

அவர்களை  விட்டு  மறுபடியும்  படவில்  ஏறி,  அக்கரைக்குப்  போனார்.  {Mark  8:13}

 

சீஷர்கள்  அப்பங்களைக்  கொண்டுவர  மறந்துபோனார்கள்;  படவிலே  அவர்களிடத்தில்  ஒரு  அப்பம்  மாத்திரம்  இருந்தது.  {Mark  8:14}

 

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  பரிசேயருடைய<Pharisees>  புளித்தமாவைக்குறித்தும்  ஏரோதின்<Herod>  புளித்தமாவைக்குறித்தும்  எச்சரிக்கையாயிருங்கள்  என்று  கற்பித்தார்.  {Mark  8:15}

 

அதற்கு  அவர்கள்:  நம்மிடத்தில்  அப்பங்கள்  இல்லாதபடியால்  இப்படிச்  சொல்லுகிறார்  என்று  தங்களுக்குள்ளே  யோசனைபண்ணிக்கொண்டார்கள்.  {Mark  8:16}

 

இயேசு<Jesus>  அதை  அறிந்து,  அவர்களை  நோக்கி:  உங்களிடத்தில்  அப்பங்கள்  இல்லாதபடியினால்  நீங்கள்  யோசனைபண்ணுகிறதென்ன?  இன்னும்  சிந்தியாமலும்  உணராமலும்  இருக்கிறீர்களா?  இன்னும்  உங்கள்  இருதயம்  கடினமாயிருக்கிறதா?  {Mark  8:17}

 

உங்களுக்குக்  கண்களிருந்தும்  காணாதிருக்கிறீர்களா?  காதுகளிருந்தும்  கேளாதிருக்கிறீர்களா?  நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?  {Mark  8:18}

 

நான்  ஐந்து  அப்பங்களை  ஐயாயிரம்  பேருக்குப்  பங்கிட்டபோது,  மீதியான  துணிக்கைகளை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்று  கேட்டார்.  பன்னிரண்டு  என்றார்கள்.  {Mark  8:19}

 

நான்  ஏழு  அப்பங்களை  நாலாயிரம்  பேருக்குப்  பங்கிட்டபோது,  மீதியான  துணிக்கைகளை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்று  கேட்டார்.  ஏழு  என்றார்கள்.  {Mark  8:20}

 

அப்படியானால்,  நீங்கள்  உணராதிருக்கிறது  எப்படி  என்றார்.  {Mark  8:21}

 

பின்பு  அவர்  பெத்சாயிதா<Bethsaida>  ஊருக்கு  வந்தார்;  அப்பொழுது  ஒரு  குருடனை  அவரிடத்தில்  கொண்டுவந்து,  அவனைத்  தொடும்படி  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  {Mark  8:22}

 

அவர்  குருடனுடைய  கையைப்  பிடித்து,  அவனைக்  கிராமத்துக்கு  வெளியே  அழைத்துக்கொண்டுபோய்,  அவன்  கண்களில்  உமிழ்ந்து,  அவன்மேல்  கைகளை  வைத்து:  எதையாகிலும்  காண்கிறாயா  என்று  கேட்டார்.  {Mark  8:23}

 

அவன்  ஏறிட்டுப்பார்த்து:  நடக்கிற  மனுஷரை  மரங்களைப்போலக்  காண்கிறேன்  என்றான்.  {Mark  8:24}

 

பின்பு  அவர்  மறுபடியும்  அவன்  கண்களின்மேல்  கைகளை  வைத்து,  அவனை  ஏறிட்டுப்  பார்க்கும்படி  செய்தார்;  அப்பொழுது  அவன்  சொஸ்தமடைந்து,  யாவரையும்  தெளிவாய்க்  கண்டான்.  {Mark  8:25}

 

பின்பு  அவர்  அவனை  நோக்கி:  நீ  கிராமத்தில்  பிரவேசியாமலும்,  கிராமத்தில்  இதை  ஒருவருக்கும்  சொல்லாமலும்  இரு  என்று  சொல்லி,  அவனை  வீட்டிற்கு  அனுப்பிவிட்டார்.  {Mark  8:26}

 

பின்பு,  இயேசுவும்<Jesus>  அவருடைய  சீஷர்களும்  புறப்பட்டு,  பிலிப்புச்  செசரியா<Caesarea  Philippi>  பட்டணத்தைச்  சேர்ந்த  கிராமங்களுக்குப்  போனார்கள்.  வழியிலே  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஜனங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறார்கள்  என்று  கேட்டார்.  {Mark  8:27}

 

அதற்கு  அவர்கள்:  சிலர்  உம்மை  யோவான்ஸ்நானன்<John  the  Baptist>  என்றும்,  சிலர்  எலியா<Elias>  என்றும்,  வேறு  சிலர்  தீர்க்கதரிசிகளில்  ஒருவர்  என்றும்  சொல்லுகிறார்கள்  என்றார்கள்.  {Mark  8:28}

 

அப்பொழுது  அவர்:  நீங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டார்;  பேதுரு<Peter>  பிரதியுத்தரமாக:  நீர்  கிறிஸ்து<Christ>  என்றான்.  {Mark  8:29}

 

அப்பொழுது  தம்மைக்குறித்து  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்கு  அவர்களுக்கு  உறுதியாய்க்  கட்டளையிட்டார்.  {Mark  8:30}

 

அல்லாமலும்,  மனுஷகுமாரன்  பல  பாடுகள்பட்டு,  மூப்பராலும்  பிரதான  ஆசாரியராலும்  வேதபாரகராலும்  ஆகாதவனென்று  தள்ளப்பட்டு,  கொல்லப்பட்டு,  மூன்றுநாளைக்குப்பின்பு  உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று  அவர்களுக்குப்  போதிக்கத்  தொடங்கினார்.  {Mark  8:31}

 

இந்த  வார்த்தையை  அவர்  தாராளமாகச்  சொன்னார்.  அப்பொழுது,  பேதுரு<Peter>  அவரைத்  தனியே  அழைத்துக்கொண்டுபோய்,  அவரைக்  கடிந்துகொள்ளத்  தொடங்கினான்.  {Mark  8:32}

 

அவர்  திரும்பித்  தம்முடைய  சீஷரைப்  பார்த்து,  பேதுருவை<Peter>  நோக்கி:  எனக்குப்  பின்னாகப்போ,  சாத்தானே,  நீ  தேவனுக்கு  ஏற்றவைகளைச்  சிந்தியாமல்  மனுஷருக்கு  ஏற்றவைகளைச்  சிந்திக்கிறாய்  என்று  சொல்லி,  அவனைக்  கடிந்து  கொண்டார்.  {Mark  8:33}

 

பின்பு  அவர்  ஜனங்களையும்  தம்முடைய  சீஷர்களையும்  தம்மிடத்தில்  அழைத்து:  ஒருவன்  என்  பின்னே  வர  விரும்பினால்,  அவன்  தன்னைத்தான்  வெறுத்து,  தன்  சிலுவையை  எடுத்துக்கொண்டு,  என்னைப்  பின்பற்றக்கடவன்.  {Mark  8:34}

 

தன்  ஜீவனை  இரட்சிக்க  விரும்புகிறவன்  அதை  இழந்துபோவான்,  என்னிமித்தமாகவும்  சுவிசேஷத்தினிமித்தமாகவும்  தன்  ஜீவனை  இழந்துபோகிறவன்  அதை  இரட்சித்துக்கொள்ளுவான்.  {Mark  8:35}

 

மனுஷன்  உலகம்  முழுவதையும்  ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,  தன்  ஜீவனை  நஷ்டப்படுத்தினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  {Mark  8:36}

 

மனுஷன்  தன்  ஜீவனுக்கு  ஈடாக  என்னத்தைக்  கொடுப்பான்?  {Mark  8:37}

 

ஆதலால்  விபசாரமும்  பாவமுமுள்ள  இந்தச்  சந்ததியில்  என்னைக்குறித்தும்  என்  வார்த்தைகளைக்குறித்தும்  எவன்  வெட்கப்படுவானோ,  அவனைக்  குறித்து  மனுஷகுமாரனும்  தமது  பிதாவின்  மகிமைபொருந்தினவராய்ப்  பரிசுத்த  தூதர்களோடுங்கூட  வரும்போது  வெட்கப்படுவார்  என்றார்.  {Mark  8:38}

 

அன்றியும்,  அவர்  அவர்களை  நோக்கி:  இங்கே  நிற்கிறவர்களில்  சிலர்  தேவனுடைய  ராஜ்யம்  பலத்தோடே  வருவதைக்  காணுமுன்,  மரணத்தை  ருசிபார்ப்பதில்லையென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Mark  9:1}

 

ஆறுநாளைக்குப்  பின்பு,  இயேசு<Jesus>  பேதுருவையும்<Peter>  யாக்கோபையும்<James>  யோவானையும்<John>  அழைத்து,  உயர்ந்த  மலையின்மேல்  அவர்களைத்  தனியே  கூட்டிக்கொண்டுபோய்,  அவர்களுக்கு  முன்பாக  மறுரூபமானார்.  {Mark  9:2}

 

அவருடைய  வஸ்திரம்  உறைந்த  மழையைப்போல்  பூமியிலே  எந்த  வண்ணானும்  வெளுக்கக்கூடாத  வெண்மையாய்ப்  பிரகாசித்தது.  {Mark  9:3}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  எலியாவும்<Elias>  இயேசுவுடனே<Jesus>  பேசுகிறவர்களாக  அவர்களுக்குக்  காணப்பட்டார்கள்.  {Mark  9:4}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  இயேசுவை<Jesus>  நோக்கி:  ரபீ<Rabbi//Master>,  நாம்  இங்கே  இருக்கிறது  நல்லது;  உமக்கு  ஒரு  கூடாரமும்,  மோசேக்கு<Moses>  ஒரு  கூடாரமும்,  எலியாவுக்கு<Elias>  ஒரு  கூடாரமுமாக,  மூன்று  கூடாரங்களைப்  போடுவோம்  என்றான்.  {Mark  9:5}

 

அவர்கள்  மிகவும்  பயந்திருந்தபடியால்,  தான்  பேசுகிறது  இன்னதென்று  அறியாமல்  இப்படிச்  சொன்னான்.  {Mark  9:6}

 

அப்பொழுது,  ஒரு  மேகம்  அவர்கள்மேல்  நிழலிட்டது:  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவருக்குச்  செவிகொடுங்கள்  என்று  அந்த  மேகத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாயிற்று.  {Mark  9:7}

 

உடனே  அவர்கள்  சுற்றிலும்  பார்த்தபோது,  இயேசு<Jesus>  ஒருவரைத்தவிர  வேறொருவரையும்  காணவில்லை.  {Mark  9:8}

 

அவர்கள்  மலையிலிருந்து  இறங்குகிறபோது,  அவர்  அவர்களை  நோக்கி:  மனுஷகுமாரன்  மரித்தோரிலிருந்து  எழுந்திருக்கும்வரைக்கும்,  நீங்கள்  கண்டவைகளை  ஒருவருக்கும்  சொல்லவேண்டாம்  என்று  கட்டளையிட்டார்.  {Mark  9:9}

 

மரித்தோரிலிருந்து  எழுந்திருப்பது  என்னவென்று  அவர்கள்  ஒருவரிடத்தில்  ஒருவர்  விசாரித்து,  அந்த  வார்த்தையைத்  தங்களுக்குள்ளே  அடக்கிக்கொண்டு:  {Mark  9:10}

 

எலியா<Elias>  முந்தி  வரவேண்டுமென்று  வேதபாரகர்  சொல்லுகிறார்களே,  அதெப்படியென்று  அவரிடத்தில்  கேட்டார்கள்.  {Mark  9:11}

 

அவர்  பிரதியுத்தரமாக:  எலியா<Elias>  முந்திவந்து  எல்லாவற்றையும்  சீர்ப்படுத்துவது  மெய்தான்;  அல்லாமலும்,  மனுஷகுமாரன்  பல  பாடுகள்பட்டு,  அவமதிக்கப்படுவாரென்று,  அவரைக்குறித்து  எழுதியிருக்கிறதே  அது  எப்படி  என்றார்.  {Mark  9:12}

 

ஆனாலும்  எலியா<Elias>  வந்தாயிற்று,  அவனைக்குறித்து  எழுதியிருக்கிற  பிரகாரம்  தங்களுக்கு  இஷ்டமானபடி  அவனுக்குச்  செய்தார்களென்று,  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Mark  9:13}

 

பின்பு  அவர்  சீஷரிடத்தில்  வந்தபோது,  அவர்களைச்  சுற்றித்  திரளான  ஜனங்கள்  நிற்கிறதையும்,  அவர்களோடே  வேதபாரகர்  தர்க்கிக்கிறதையும்  கண்டார்.  {Mark  9:14}

 

ஜனங்களெல்லாரும்  அவரைக்  கண்டவுடனே  மிகவும்  ஆச்சரியப்பட்டு,  ஓடிவந்து,  அவருக்கு  வந்தனஞ்செய்தார்கள்.  {Mark  9:15}

 

அவர்  வேதபாரகரை  நோக்கி:  நீங்கள்  இவர்களோடே  என்னத்தைக்  குறித்துத்  தர்க்கம்பண்ணுகிறீர்கள்  என்று  கேட்டார்.  {Mark  9:16}

 

அப்பொழுது  ஜனக்கூட்டத்தில்  ஒருவன்  அவரை  நோக்கி:  போதகரே,  ஊமையான  ஒரு  ஆவி  பிடித்த  என்  மகனை  உம்மிடத்தில்  கொண்டுவந்தேன்.  {Mark  9:17}

 

அது  அவனை  எங்கே  பிடித்தாலும்  அங்கே  அவனை  அலைக்கழிக்கிறது;  அப்பொழுது  அவன்  நுரைதள்ளி,  பல்லைக்கடித்து,  சோர்ந்துபோகிறான்.  அதைத்  துரத்திவிடும்படி  உம்முடைய  சீஷரிடத்தில்  கேட்டேன்;  அவர்களால்  கூடாமற்போயிற்று  என்றான்.  {Mark  9:18}

 

அவர்  பிரதியுத்தரமாக:  விசுவாசமில்லாத  சந்ததியே,  எதுவரைக்கும்  நான்  உங்களோடு  இருப்பேன்?  எதுவரைக்கும்  உங்களிடத்தில்  பொறுமையாய்  இருப்பேன்?  அவனை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  {Mark  9:19}

 

அவனை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  அவரைக்  கண்டவுடனே,  அந்த  ஆவி  அவனை  அலைக்கழித்தது;  அவன்  தரையிலே  விழுந்து,  நுரைதள்ளிப்  புரண்டான்.  {Mark  9:20}

 

அவர்  அவனுடைய  தகப்பனை  நோக்கி:  இது  இவனுக்கு  உண்டாகி  எவ்வளவு  காலமாயிற்று  என்று  கேட்டார்.  அதற்கு  அவன்:  சிறுவயதுமுதற்கொண்டே  உண்டாயிருக்கிறது;  {Mark  9:21}

 

இவனைக்  கொல்லும்படிக்கு  அது  அநேகந்தரம்  தீயிலும்  தண்ணீரிலும்  தள்ளிற்று.  நீர்  ஏதாகிலும்  செய்யக்கூடுமானால்,  எங்கள்மேல்  மனதிரங்கி,  எங்களுக்கு  உதவிசெய்யவேண்டும்  என்றான்.  {Mark  9:22}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  நீ  விசுவாசிக்கக்கூடுமானால்  ஆகும்,  விசுவாசிக்கிறவனுக்கு  எல்லாம்  கூடும்  என்றார்.  {Mark  9:23}

 

உடனே  பிள்ளையின்  தகப்பன்:  விசுவாசிக்கிறேன்  ஆண்டவரே,  என்  அவிசுவாசம்  நீங்கும்படி  உதவிசெய்யும்  என்று  கண்ணீரோடே  சத்தமிட்டுச்  சொன்னான்.  {Mark  9:24}

 

அப்பொழுது  ஜனங்கள்  கூட்டமாய்  ஓடிவருகிறதை  இயேசு<Jesus>  கண்டு,  அந்த  அசுத்த  ஆவியை  நோக்கி:  ஊமையும்  செவிடுமான  ஆவியே,  இவனை  விட்டுப்  புறப்பட்டுப்போ,  இனி  இவனுக்குள்  போகாதே  என்று  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறேன்  என்று  அதை  அதட்டினார்.  {Mark  9:25}

 

அப்பொழுது  அது  சத்தமிட்டு,  அவனை  மிகவும்  அலைக்கழித்துப்  புறப்பட்டுப்போயிற்று.  அவன்  செத்துப்போனான்  என்று  அநேகர்  சொல்லத்தக்கதாகச்  செத்தவன்போல்  கிடந்தான்.  {Mark  9:26}

 

இயேசு<Jesus>  அவன்  கையைப்பிடித்து,  அவனைத்  தூக்கினார்;  உடனே  அவன்  எழுந்திருந்தான்.  {Mark  9:27}

 

வீட்டில்  அவர்  பிரவேசித்தபொழுது,  அவருடைய  சீஷர்கள்:  அதைத்  துரத்திவிட  எங்களால்  ஏன்  கூடாமற்போயிற்று  என்று  அவரிடத்தில்  தனித்துக்  கேட்டார்கள்.  {Mark  9:28}

 

அதற்கு  அவர்:  இவ்வகைப்  பிசாசு  ஜெபத்தினாலும்  உபவாசத்தினாலுமேயன்றி  மற்றெவ்விதத்தினாலும்  புறப்பட்டுப்போகாது  என்றார்.  {Mark  9:29}

 

பின்பு  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  கலிலேயாவைக்<Galilee>  கடந்துபோனார்கள்;  அதை  ஒருவரும்  அறியாதிருக்க  வேண்டுமென்று  விரும்பினார்.  {Mark  9:30}

 

ஏனெனில்,  மனுஷகுமாரன்  மனுஷர்  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படுவார்  என்றும்,  அவர்கள்  அவரைக்  கொன்றுபோடுவார்கள்  என்றும்;  கொல்லப்பட்டு,  மூன்றாம்  நாளிலே  உயிர்த்தெழுந்திருப்பார்  என்றும்  அவர்  தம்முடைய  சீஷர்களுக்குப்  போதகம்பண்ணிச்  சொல்லியிருந்தார்.  {Mark  9:31}

 

அவர்களோ  அந்த  வார்த்தையை  அறிந்துகொள்ளவில்லை,  அதைக்குறித்து  அவரிடத்தில்  கேட்கவும்  பயந்தார்கள்.  {Mark  9:32}

 

அவர்  கப்பர்நகூமுக்கு<Capernaum>  வந்து,  வீட்டிலே  இருக்கும்போது,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  வழியிலே  எதைக்குறித்து  உங்களுக்குள்ளே  தர்க்கம்பண்ணினீர்கள்  என்று  கேட்டார்.  {Mark  9:33}

 

அதற்கு  அவர்கள்  பேசாமல்  இருந்தார்கள்;  ஏனெனில்  அவர்கள்  தங்களுக்குள்ளே  எவன்  பெரியவன்  என்று  வழியில்  தர்க்கம்பண்ணினார்கள்.  {Mark  9:34}

 

அப்பொழுது  அவர்  உட்கார்ந்து,  பன்னிருவரையும்  அழைத்து:  எவனாகிலும்  முதல்வனாயிருக்க  விரும்பினால்  அவன்  எல்லாருக்கும்  கடையானவனும்,  எல்லாருக்கும்  ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்  என்று  சொல்லி;  {Mark  9:35}

 

ஒரு  சிறு  பிள்ளையை  எடுத்து,  அதை  அவர்கள்  நடுவிலே  நிறுத்தி,  அதை  அணைத்துக்கொண்டு:  {Mark  9:36}

 

இப்படிப்பட்ட  சிறு  பிள்ளைகளில்  ஒன்றை  என்  நாமத்தினாலே  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  அல்ல,  என்னை  அனுப்பினவரை  ஏற்றுக்கொள்ளுகிறான்  என்றார்.  {Mark  9:37}

 

அப்பொழுது  யோவான்<John>  அவரை  நோக்கி:  போதகரே,  நம்மைப்  பின்பற்றாதவன்  ஒருவன்  உமது  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறதைக்  கண்டோம்;  அவன்  நம்மைப்  பின்பற்றாதவனானதால்,  அவனைத்  தடுத்தோம்  என்றான்.  {Mark  9:38}

 

அதற்கு  இயேசு<Jesus>:  அவனைத்  தடுக்கவேண்டாம்;  என்  நாமத்தினாலே  அற்புதஞ்  செய்கிறவன்  எளிதாய்  என்னைக்குறித்துத்  தீங்கு  சொல்லமாட்டான்.  {Mark  9:39}

 

நமக்கு  விரோதமாயிராதவன்  நமது  பட்சத்திலிருக்கிறான்.  {Mark  9:40}

 

நீங்கள்  கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே,  என்  நாமத்தினிமித்தம்  உங்களுக்கு  ஒரு  கலசம்  தண்ணீர்  குடிக்கக்  கொடுக்கிறவன்  தன்  பலனை  அடையாமற்போவதில்லை  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Mark  9:41}

 

என்னிடத்தில்  விசுவாசமாயிருக்கிற  இந்தச்  சிறியரில்  ஒருவனுக்கு  இடறல்  உண்டாக்குகிறவன்  எவனோ,  அவனுடைய  கழுத்தில்  ஏந்திரக்கல்லைக்  கட்டி,  சமுத்திரத்தில்  அவனைத்  தள்ளிப்போடுகிறது  அவனுக்கு  நலமாயிருக்கும்.  {Mark  9:42}

 

உன்  கை  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்,  அதைத்  தறித்துப்போடு;  நீ  இரண்டு  கையுடையவனாய்  அவியாத  அக்கினியுள்ள  நரகத்திலே  போவதைப்பார்க்கிலும்,  ஊனனாய்  ஜீவனுக்குள்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  {Mark  9:43}

 

அங்கே  அவர்கள்  புழு  சாவாமலும்  அக்கினி  அவியாமலுமிருக்கும்.  {Mark  9:44}

 

உன்  கால்  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்  அதைத்  தறித்துப்போடு;  நீ  இரண்டு  காலுடையவனாய்  அவியாத  அக்கினியுள்ள  நரகத்திலே  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  சப்பாணியாய்  ஜீவனுக்குள்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  {Mark  9:45}

 

அங்கே  அவர்கள்  புழு  சாவாமலும்  அக்கினி  அவியாமலுமிருக்கும்.  {Mark  9:46}

 

உன்  கண்  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்,  அதைப்  பிடுங்கிப்போடு;  நீ  இரண்டு  கண்ணுடையவனாய்  நரக  அக்கினியிலே  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  ஒற்றைக்  கண்ணனாய்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  {Mark  9:47}

 

அங்கே  அவர்கள்  புழு  சாவாமலும்  அக்கினி  அவியாமலுமிருக்கும்.  {Mark  9:48}

 

எந்தப்  பலியும்  உப்பினால்  உப்பிடப்படுவதுபோல,  எந்த  மனுஷனும்  அக்கினியினால்  உப்பிடப்படுவான்.  {Mark  9:49}

 

உப்பு  நல்லதுதான்,  உப்பு  சாரமற்றுப்போனால்,  அதற்கு  எதினாலே  சாரமுண்டாக்குவீர்கள்?  உங்களுக்குள்ளே  உப்புடையவர்களாயிருங்கள்,  ஒருவரோடொருவர்  சமாதானமுள்ளவர்களாயும்  இருங்கள்  என்றார்.  {Mark  9:50}

 

அவர்  அவ்விடம்  விட்டெழுந்து,  யோர்தானுக்கு<Jordan>  அக்கரையிலுள்ள  தேசத்தின்  வழியாய்  யூதேயாவின்<Judaea>  எல்லைகளில்  வந்தார்.  ஜனங்கள்  மறுபடியும்  அவரிடத்தில்  கூடிவந்தார்கள்.  அவர்  தம்முடைய  வழக்கத்தின்படியே  மறுபடியும்  அவர்களுக்குப்  போதகம்பண்ணினார்.  {Mark  10:1}

 

அப்பொழுது  பரிசேயர்<Pharisees>,  அவரைச்  சோதிக்கவேண்டுமென்று,  அவரிடத்தில்  வந்து:  புருஷனானவன்  தன்  மனைவியைத்  தள்ளிவிடுவது  நியாயமா  என்று  கேட்டார்கள்.  {Mark  10:2}

 

அவர்  பிரதியுத்தரமாக:  மோசே<Moses>  உங்களுக்குக்  கட்டளையிட்டிருக்கிறது  என்ன  என்று  கேட்டார்.  {Mark  10:3}

 

அதற்கு  அவர்கள்:  தள்ளுதற்சீட்டை  எழுதிக்கொடுத்து,  அவளைத்  தள்ளிவிடலாமென்று  மோசே<Moses>  உத்தரவுகொடுத்திருக்கிறார்  என்றார்கள்.  {Mark  10:4}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  உங்கள்  இருதயகடினத்தினிமித்தம்  இந்தக்  கட்டளையை  உங்களுக்கு  எழுதிக்கொடுத்தான்.  {Mark  10:5}

 

ஆகிலும்,  ஆதியிலே  மனுஷரைச்  சிருஷ்டித்த  தேவன்  அவர்களை  ஆணும்  பெண்ணுமாக  உண்டாக்கினார்.  {Mark  10:6}

 

இதினிமித்தம்  புருஷனானவன்  தன்  தகப்பனையும்  தாயையும்  விட்டுத்  தன்  மனைவியோடே  இசைந்திருப்பான்;  {Mark  10:7}

 

அவர்கள்  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்;  இவ்விதமாய்  அவர்கள்  இருவராயிராமல்  ஒரே  மாம்சமாயிருக்கிறார்கள்.  {Mark  10:8}

 

ஆகையால்,  தேவன்  இணைத்ததை  மனுஷன்  பிரிக்காதிருக்கக்கடவன்  என்றார்.  {Mark  10:9}

 

பின்பு  வீட்டிலே  அவருடைய  சீஷர்கள்  அந்தக்  காரியத்தைக்குறித்து  மறுபடியும்  அவரிடத்தில்  விசாரித்தார்கள்.  {Mark  10:10}

 

அப்பொழுது  அவர்:  எவனாகிலும்  தன்  மனைவியைத்  தள்ளிவிட்டு,  வேறொருத்தியை  விவாகம்பண்ணினால்,  அவன்  அவளுக்கு  விரோதமாய்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.  {Mark  10:11}

 

மனைவியும்  தன்  புருஷனைத்  தள்ளிவிட்டு,  வேறொருவனை  விவாகம்பண்ணினால்,  விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள்  என்றார்.  {Mark  10:12}

 

அப்பொழுது,  சிறு  பிள்ளைகளை  அவர்  தொடும்படிக்கு  அவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  கொண்டுவந்தவர்களைச்  சீஷர்கள்  அதட்டினார்கள்.  {Mark  10:13}

 

இயேசு<Jesus>  அதைக்  கண்டு,  விசனமடைந்து:  சிறு  பிள்ளைகள்  என்னிடத்தில்  வருகிறதற்கு  இடங்கொடுங்கள்;  அவர்களைத்  தடைபண்ணாதிருங்கள்;  தேவனுடைய  ராஜ்யம்  அப்படிப்பட்டவர்களுடையது.  {Mark  10:14}

 

எவனாகிலும்  சிறு  பிள்ளையைப்போல்  தேவனுடைய  ராஜ்யத்தை  ஏற்றுக்கொள்ளாவிட்டால்,  அவன்  அதில்  பிரவேசிப்பதில்லையென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  {Mark  10:15}

 

அவர்களை  அணைத்துக்கொண்டு,  அவர்கள்மேல்  கைகளை  வைத்து,  அவர்களை  ஆசீர்வதித்தார்.  {Mark  10:16}

 

பின்பு  அவர்  புறப்பட்டு  வழியிலே  போகையில்,  ஒருவன்  ஓடிவந்து,  அவருக்கு  முன்பாக  முழங்கால்படியிட்டு:  நல்ல  போதகரே,  நித்தியஜீவனைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  நான்  என்னசெய்யவேண்டும்  என்று  கேட்டான்.  {Mark  10:17}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நீ  என்னை  நல்லவன்  என்று  சொல்வானேன்?  தேவன்  ஒருவர்  தவிர  நல்லவன்  ஒருவனுமில்லையே.  {Mark  10:18}

 

விபசாரஞ்  செய்யாதிருப்பாயாக,  கொலை  செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி  சொல்லாதிருப்பாயாக,  வஞ்சனை  செய்யாதிருப்பாயாக,  உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக  என்கிற  கற்பனைகளை  அறிந்திருக்கிறாயே  என்றார்.  {Mark  10:19}

 

அதற்கு  அவன்:  போதகரே,  இவைகளையெல்லாம்  என்  சிறு  வயதுமுதல்  கைக்கொண்டிருக்கிறேன்  என்றான்.  {Mark  10:20}

 

இயேசு<Jesus>  அவனைப்  பார்த்து,  அவனிடத்தில்  அன்புகூர்ந்து:  உன்னிடத்தில்  ஒரு  குறைவு  உண்டு;  நீ  போய்,  உனக்கு  உண்டானவைகளையெல்லாம்  விற்று,  தரித்திரருக்குக்  கொடு;  அப்பொழுது  பரலோகத்திலே  உனக்குப்  பொக்கிஷம்  உண்டாயிருக்கும்;  பின்பு  சிலுவையை  எடுத்துக்கொண்டு,  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  {Mark  10:21}

 

அவன்  மிகுந்த  ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்,  இந்த  வார்த்தையைக்  கேட்டு,  மனமடிந்து,  துக்கத்தோடே  போய்விட்டான்.  {Mark  10:22}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  சுற்றிப்பார்த்து,  தம்முடைய  சீஷரை  நோக்கி:  ஐசுவரியமுள்ளவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பது  எவ்வளவு  அரிதாயிருக்கிறது  என்றார்.  {Mark  10:23}

 

சீஷர்கள்  அவருடைய  வார்த்தைகளைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  இயேசு<Jesus>  பின்னும்  அவர்களை  நோக்கி:  பிள்ளைகளே,  ஐசுவரியத்தின்மேல்  நம்பிக்கையாயிருக்கிறவர்கள்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிக்கிறது  எவ்வளவு  அரிதாயிருக்கிறது!  {Mark  10:24}

 

ஐசுவரியவான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,  ஒட்டகமானது  ஊசியின்  காதிலே  நுழைவது  எளிதாயிருக்கும்  என்றார்.  {Mark  10:25}

 

அவர்கள்  பின்னும்  அதிகமாய்  ஆச்சரியப்பட்டு:  அப்படியானால்  யார்  இரட்சிக்கப்படக்கூடும்  என்று  தங்களுக்குள்ளே  சொல்லிக்கொண்டார்கள்.  {Mark  10:26}

 

இயேசு<Jesus>  அவர்களைப்  பார்த்து:  மனுஷரால்  இது  கூடாததுதான்,  தேவனால்  இது  கூடாததல்ல;  தேவனாலே  எல்லாம்  கூடும்  என்றார்.  {Mark  10:27}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  அவரை  நோக்கி:  இதோ,  நாங்கள்  எல்லாவற்றையும்விட்டு,  உம்மைப்  பின்பற்றினோமே,  என்று  சொல்லத்தொடங்கினான்.  {Mark  10:28}

 

அதற்கு  இயேசு<Jesus>  பிரதியுத்தரமாக:  என்னிமித்தமாகவும்,  சுவிசேஷத்தினிமித்தமாகவும்,  வீட்டையாவது,  சகோதரரையாவது,  சகோதரிகளையாவது,  தகப்பனையாவது,  தாயையாவது,  மனைவியையாவது,  பிள்ளைகளையாவது,  நிலங்களையாவது  விட்டவன்  எவனும்,  {Mark  10:29}

 

இப்பொழுது  இம்மையிலே,  துன்பங்களோடேகூட  நூறத்தனையாக,  வீடுகளையும்,  சகோதரரையும்,  சகோதரிகளையும்,  தாய்களையும்,  பிள்ளைகளையும்,  நிலங்களையும்,  மறுமையிலே  நித்தியஜீவனையும்  அடைவான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Mark  10:30}

 

ஆகிலும்  முந்தினோர்  அநேகர்  பிந்தினோராயும்,  பிந்தினோர்  அநேகர்  முந்தினோராயும்  இருப்பார்கள்  என்றார்.  {Mark  10:31}

 

பின்பு  அவர்கள்  எருசலேமுக்குப்<Jerusalem>  பிரயாணமாய்ப்  போகையில்,  இயேசு<Jesus>  அவர்களுக்கு  முன்னே  நடந்துபோனார்;  அவர்கள்  திகைத்து,  அவருக்குப்  பின்னே,  பயத்தோடே  போனார்கள்.  அப்பொழுது  அவர்  பன்னிருவரையும்  அழைத்து,  தமக்குச்  சம்பவிக்கப்போகிறவைகளை  அவர்களுக்கு  மறுபடியும்  சொல்லத்தொடங்கினார்:  {Mark  10:32}

 

இதோ,  எருசலேமுக்குப்<Jerusalem>  போகிறோம்;  அங்கே  மனுஷகுமாரன்  பிரதான  ஆசாரியரிடத்திலும்  வேதபாரகரிடத்திலும்  ஒப்புக்கொடுக்கப்படுவார்;  அவர்கள்  அவரை  மரண  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து,  புறத்தேசத்தாரிடத்தில்  ஒப்புக்கொடுப்பார்கள்.  {Mark  10:33}

 

அவர்கள்  அவரைப்  பரியாசம்பண்ணி,  அவரை  வாரினால்  அடித்து,  அவர்மேல்  துப்பி,  அவரைக்  கொலைசெய்வார்கள்;  ஆகிலும்  மூன்றாம்  நாளிலே  அவர்  உயிரோடே  எழுந்திருப்பார்  என்றார்.  {Mark  10:34}

 

அப்பொழுது  செபெதேயுவின்<Zebedee>  குமாரராகிய  யாக்கோபும்<James>  யோவானும்<John>  அவரிடத்தில்  வந்து:  போதகரே,  நாங்கள்  கேட்டுக்கொள்ளப்போகிறதை  நீர்  எங்களுக்குச்  செய்யவேண்டுமென்று  விரும்புகிறோம்  என்றார்கள்.  {Mark  10:35}

 

அவர்  அவர்களை  நோக்கி:  நான்  உங்களுக்கு  என்னசெய்யவேண்டுமென்று  விரும்புகிறீர்கள்  என்று  கேட்டார்.  {Mark  10:36}

 

அதற்கு  அவர்கள்:  உமது  மகிமையிலே,  எங்களில்  ஒருவன்  உமது  வலதுபாரிசத்திலும்,  ஒருவன்  உமது  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  எங்களுக்கு  அருள்செய்யவேண்டும்  என்றார்கள்.  {Mark  10:37}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  நீங்கள்  கேட்டுக்கொள்ளுகிறது  இன்னது  என்று  உங்களுக்கே  தெரியவில்லை.  நான்  குடிக்கும்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிக்கவும்,  நான்  பெறும்  ஸ்நானத்தை  நீங்கள்  பெறவும்,  உங்களால்  கூடுமா  என்றார்.  {Mark  10:38}

 

அதற்கு  அவர்கள்:  கூடும்  என்றார்கள்.  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  நான்  குடிக்கும்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிப்பீர்கள்,  நான்  பெறும்  ஸ்நானத்தையும்  நீங்கள்  பெறுவீர்கள்.  {Mark  10:39}

 

ஆனாலும்  என்  வலதுபாரிசத்திலும்  என்  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  எவர்களுக்கு  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ  அவர்களுக்கேயல்லாமல்,  மற்றொருவருக்கும்  அதை  அருளுவது  என்  காரியமல்ல  என்றார்.  {Mark  10:40}

 

மற்றப்  பத்துப்பேரும்  அதைக்கேட்டு,  யாக்கோபின்<James>  மேலும்  யோவானின்<John>  மேலும்  எரிச்சலானார்கள்.  {Mark  10:41}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  அவர்களைக்  கிட்டவரச்செய்து:  புறஜாதியாருக்கு  அதிகாரிகளாக  எண்ணப்பட்டவர்கள்  அவர்களை  இறுமாப்பாய்  ஆளுகிறார்கள்  என்றும்,  அவர்களில்  பெரியவர்கள்  அவர்கள்மேல்  கடினமாய்  அதிகாரம்  செலுத்துகிறார்கள்  என்றும்  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  {Mark  10:42}

 

உங்களுக்குள்ளே  அப்படி  இருக்கலாகாது;  உங்களில்  எவனாகிலும்  பெரியவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  உங்களுக்குப்  பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.  {Mark  10:43}

 

உங்களில்  எவனாகிலும்  முதன்மையானவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  எல்லாருக்கும்  ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.  {Mark  10:44}

 

அப்படியே,  மனுஷகுமாரனும்  ஊழியங்கொள்ளும்படி  வராமல்,  ஊழியஞ்செய்யவும்,  அநேகரை  மீட்கும்பொருளாகத்  தம்முடைய  ஜீவனைக்  கொடுக்கவும்  வந்தார்  என்றார்.  {Mark  10:45}

 

பின்பு  அவர்கள்  எரிகோவுக்கு<Jericho>  வந்தார்கள்.  அவரும்  அவருடைய  சீஷர்களும்  திரளான  ஜனங்களும்  எரிகோவைவிட்டுப்<Jericho>  புறப்படுகிறபோது,  திமேயுவின்<Timaeus>  மகனாகிய  பர்திமேயு<Bartimaeus>  என்கிற  ஒரு  குருடன்,  வழியருகே  உட்கார்ந்து,  பிச்சை  கேட்டுக்கொண்டிருந்தான்.  {Mark  10:46}

 

அவன்  நசரேயனாகிய<Nazarene>  இயேசு<Jesus>  வருகிறாரென்று  கேள்விப்பட்டு:  இயேசுவே<Jesus>,  தாவீதின்<David>  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று  கூப்பிடத்  தொடங்கினான்.  {Mark  10:47}

 

அவன்  பேசாதிருக்கும்படி  அநேகர்  அவனை  அதட்டினார்கள்.  அவனோ:  தாவீதின்<David>  குமாரனே,  எனக்கு  இரங்கும்  என்று,  முன்னிலும்  அதிகமாய்க்  கூப்பிட்டான்.  {Mark  10:48}

 

இயேசு<Jesus>  நின்று,  அவனை  அழைத்துவரச்  சொன்னார்.  அவர்கள்  அந்தக்  குருடனை  அழைத்து:  திடன்கொள்,  எழுந்திரு,  உன்னை  அழைக்கிறார்  என்றார்கள்.  {Mark  10:49}

 

உடனே  அவன்  தன்  மேல்வஸ்திரத்தை  எறிந்துவிட்டு,  எழுந்து,  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்தான்.  {Mark  10:50}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  நான்  உனக்கு  என்ன  செய்யவேண்டும்  என்றிருக்கிறாய்  என்றார்.  அதற்கு  அந்தக்  குருடன்:  ஆண்டவரே,  நான்  பார்வையடையவேண்டும்  என்றான்.  {Mark  10:51}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  நீ  போகலாம்,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது  என்றார்.  உடனே  அவன்  பார்வையடைந்து,  வழியிலே  இயேசுவுக்குப்<Jesus>  பின்சென்றான்.  {Mark  10:52}

 

அவர்கள்  எருசலேமுக்குச்<Jerusalem>  சமீபமாய்ச்  சேர்ந்து,  ஒலிவமலைக்கு<mount  of  Olives>  அருகான  பெத்பகே<Bethphage>  பெத்தானியா<Bethany>  என்னும்  ஊர்களுக்கு  வந்தபோது,  அவர்  தம்முடைய  சீஷரில்  இரண்டுபேரை  நோக்கி:  {Mark  11:1}

 

உங்களுக்கு  எதிரேயிருக்கிற  கிராமத்துக்குப்  போங்கள்;  அதில்  பிரவேசித்தவுடனே,  மனுஷர்  ஒருவரும்  ஒருக்காலும்  ஏறியிராத  ஒரு  கழுதைக்குட்டி  கட்டியிருக்கக்  காண்பீர்கள்,  அதை  அவிழ்த்துக்  கொண்டு  வாருங்கள்.  {Mark  11:2}

 

ஏன்  இப்படிச்  செய்கிறீர்கள்  என்று  ஒருவன்  உங்களிடத்தில்  கேட்டால்:  இது  ஆண்டவருக்கு  வேண்டுமென்று  சொல்லுங்கள்;  உடனே  அதை  இவ்விடத்திற்கு  அனுப்பிவிடுவான்  என்று  சொல்லி,  அவர்களை  அனுப்பினார்.  {Mark  11:3}

 

அவர்கள்  போய்,  வெளியே  இருவழிச்சந்தியில்  ஒரு  வாசலருகே  கட்டியிருந்த  அந்தக்  குட்டியைக்  கண்டு,  அதை  அவிழ்த்தார்கள்.  {Mark  11:4}

 

அப்பொழுது  அங்கே  நின்றவர்களில்  சிலர்:  நீங்கள்  குட்டியை  அவிழ்க்கிறது  என்னவென்றார்கள்.  {Mark  11:5}

 

இயேசு<Jesus>  கற்பித்தபடியே  அவர்களுக்கு  உத்தரவு  சொன்னார்கள்.  அப்பொழுது,  அவர்களைப்  போகவிட்டார்கள்.  {Mark  11:6}

 

அவர்கள்  அந்தக்  குட்டியை  இயேசுவினிடத்தில்<Jesus>  கொண்டுவந்து,  அதின்மேல்  தங்கள்  வஸ்திரங்களைப்  போட்டார்கள்;  அவர்  அதின்மேல்  ஏறிப்போனார்.  {Mark  11:7}

 

அநேகர்  தங்கள்  வஸ்திரங்களை  வழியிலே  விரித்தார்கள்;  வேறு  சிலர்  மரக்கிளைகளைத்  தறித்து  வழியிலே  பரப்பினார்கள்.  {Mark  11:8}

 

முன்நடப்பாரும்  பின்நடப்பாரும்:  ஓசன்னா<Hosanna>!  கர்த்தரின்  நாமத்தினாலே  வருகிறவர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;  {Mark  11:9}

 

கர்த்தரின்  நாமத்தினாலே  வருகிற  நம்முடைய  பிதாவாகிய  தாவீதின்<David>  ராஜ்யம்  ஆசீர்வதிக்கப்படுவதாக;  உன்னதத்திலே  ஓசன்னா<Hosanna>  என்று  சொல்லி  ஆர்ப்பரித்தார்கள்.  {Mark  11:10}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  தேவாலயத்தில்  பிரவேசித்து,  எல்லாவற்றையும்  சுற்றிப்பார்த்து,  சாயங்காலமானபோது,  பன்னிருவரோடுங்கூடப்  பெத்தானியாவுக்குப்<Bethany>  போனார்.  {Mark  11:11}

 

மறுநாளிலே  அவர்கள்  பெத்தானியாவிலிருந்து<Bethany>  புறப்பட்டுவருகையில்,  அவருக்குப்  பசியுண்டாயிற்று.  {Mark  11:12}

 

அப்பொழுது  இலைகளுள்ள  ஒரு  அத்திமரத்தைத்  தூரத்திலே  கண்டு,  அதில்  ஏதாகிலும்  அகப்படுமோ  என்று  பார்க்கவந்தார்.  அத்திப்பழக்  காலமாயிராதபடியால்,  அவர்  அதினிடத்தில்  வந்தபோது  அதில்  இலைகளையல்லாமல்,  வேறொன்றையும்  காணவில்லை.  {Mark  11:13}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  அதைப்  பார்த்து:  இதுமுதல்  ஒருக்காலும்  ஒருவனும்  உன்னிடத்தில்  கனியைப்  புசியாதிருக்கக்கடவன்  என்றார்;  அதை  அவருடைய  சீஷர்கள்  கேட்டார்கள்.  {Mark  11:14}

 

அவர்கள்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தார்கள்.  இயேசு<Jesus>  தேவாலயத்தில்  பிரவேசித்து,  ஆலயத்தில்  விற்கிறவர்களையும்  கொள்ளுகிறவர்களையும்  துரத்திவிட்டு,  காசுக்காரருடைய  பலகைகளையும்,  புறா  விற்கிறவர்களுடைய  ஆசனங்களையும்  கவிழ்த்து,  {Mark  11:15}

 

ஒருவனும்  தேவாலயத்தின்  வழியாக  யாதொரு  பண்டத்தையும்  கொண்டுபோகவிடாமல்:  {Mark  11:16}

 

என்னுடைய  வீடு  எல்லா  ஜனங்களுக்கும்  ஜெபவீடு  என்னப்படும்  என்று  எழுதியிருக்கவில்லையா?  நீங்களோ  அதைக்  கள்ளர்  குகையாக்கினீர்கள்  என்று  அவர்களுக்குச்  சொல்லி  உபதேசித்தார்.  {Mark  11:17}

 

அதை  வேதபாரகரும்  பிரதான  ஆசாரியரும்  கேட்டு,  அவரைக்  கொலைசெய்ய  வகைதேடினார்கள்;  ஆகிலும்  ஜனங்களெல்லாரும்  அவருடைய  உபதேசத்தைக்குறித்து  ஆச்சரியப்பட்டபடியினாலே  அவருக்குப்  பயந்திருந்தார்கள்.  {Mark  11:18}

 

சாயங்காலமானபோது  அவர்  நகரத்திலிருந்து  புறப்பட்டுப்போனார்.  {Mark  11:19}

 

மறுநாள்  காலையிலே  அவர்கள்  அவ்வழியாய்ப்  போகும்போது,  அந்த  அத்திமரம்  வேரோடே  பட்டுப்போயிருக்கிறதைக்  கண்டார்கள்.  {Mark  11:20}

 

பேதுரு<Peter>  நினைவுகூர்ந்து,  அவரை  நோக்கி:  ரபீ<Rabbi//Master>,  இதோ,  நீர்  சபித்த  அத்திமரம்  பட்டுப்போயிற்று  என்றான்.  {Mark  11:21}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  தேவனிடத்தில்  விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.  {Mark  11:22}

 

எவனாகிலும்  இந்த  மலையைப்  பார்த்து:  நீ  பெயர்ந்து,  சமுத்திரத்திலே  தள்ளுண்டுபோ  என்று  சொல்லி,  தான்  சொன்னபடியே  நடக்கும்  என்று  தன்  இருதயத்தில்  சந்தேகப்படாமல்  விசுவாசித்தால்,  அவன்  சொன்னபடியே  ஆகும்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Mark  11:23}

 

ஆதலால்,  நீங்கள்  ஜெபம்பண்ணும்போது  எவைகளைக்  கேட்டுக்கொள்வீர்களோ,  அவைகளைப்  பெற்றுக்கொள்வோம்  என்று  விசுவாசியுங்கள்,  அப்பொழுது  அவைகள்  உங்களுக்கு  உண்டாகும்  என்று  சொல்லுகிறேன்.  {Mark  11:24}

 

நீங்கள்  நின்று  ஜெபம்பண்ணும்போது,  ஒருவன்பேரில்  உங்களுக்கு  யாதொரு  குறை  உண்டாயிருக்குமானால்,  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதா  உங்கள்  தப்பிதங்களை  உங்களுக்கு  மன்னிக்கும்படி,  அந்தக்  குறையை  அவனுக்கு  மன்னியுங்கள்.  {Mark  11:25}

 

நீங்கள்  மன்னியாதிருப்பீர்களானால்,  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதாவும்  உங்கள்  தப்பிதங்களை  மன்னியாதிருப்பார்  என்றார்.  {Mark  11:26}

 

அவர்கள்  மறுபடியும்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தார்கள்.  அவர்  தேவாலயத்திலே  உலாவிக்கொண்டிருக்கையில்,  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  மூப்பரும்  அவரிடத்தில்  வந்து:  {Mark  11:27}

 

நீர்  எந்த  அதிகாரத்தினால்  இவைகளைச்  செய்கிறீர்?  இவைகளைச்  செய்கிறதற்கு  அதிகாரத்தை  உமக்குக்  கொடுத்தவர்  யார்  என்று  கேட்டார்கள்.  {Mark  11:28}

 

இயேசு<Jesus>  பிரதியுத்தரமாக:  நானும்  உங்களிடத்தில்  ஒரு  காரியத்தைக்  கேட்கிறேன்,  நீங்கள்  எனக்கு  உத்தரவு  சொல்லுங்கள்,  அப்பொழுது  நானும்  இன்ன  அதிகாரத்தினாலே  இவைகளைச்  செய்கிறேனென்று  உங்களுக்குச்  சொல்லுவேன்.  {Mark  11:29}

 

யோவான்<John>  கொடுத்த  ஸ்நானம்  தேவனால்  உண்டாயிற்றோ,  மனுஷரால்  உண்டாயிற்றோ,  எனக்கு  உத்தரவு  சொல்லுங்கள்  என்றார்.  {Mark  11:30}

 

அதற்கு  அவர்கள்:  தேவனால்  உண்டாயிற்றென்று  சொல்வோமானால்,  பின்னை  ஏன்  அவனை  விசுவாசிக்கவில்லையென்று  கேட்பார்.  {Mark  11:31}

 

மனுஷரால்  உண்டாயிற்றென்று  சொல்வோமானால்,  ஜனங்களுக்குப்  பயப்படவேண்டியதாயிருக்கும்;  எல்லாரும்  யோவானை<John>  மெய்யாகத்  தீர்க்கதரிசியென்று  எண்ணுகிறார்களே  என்று  தங்களுக்குள்ளே  ஆலோசனைபண்ணி;  {Mark  11:32}

 

இயேசுவுக்குப்<Jesus>  பிரதியுத்தரமாக:  எங்களுக்குத்  தெரியாது  என்றார்கள்.  அப்பொழுது  இயேசு<Jesus>:  நானும்  இன்ன  அதிகாரத்தினாலே  இவைகளைச்  செய்கிறேன்  என்று  உங்களுக்குச்  சொல்லேன்  என்றார்.  {Mark  11:33}

 

பின்பு  அவர்  உவமைகளாய்  அவர்களுக்குச்  சொல்லத்தொடங்கினதாவது:  ஒரு  மனுஷன்  ஒரு  திராட்சத்தோட்டத்தை  உண்டாக்கி,  அதைச்  சுற்றிலும்  வேலியடைத்து,  இரசத்தொட்டியை  உண்டுபண்ணி,  கோபுரத்தையும்  கட்டி,  தோட்டக்காரருக்கு  அதைக்  குத்தகையாக  விட்டு,  புறத்தேசத்துக்குப்  போயிருந்தான்.  {Mark  12:1}

 

தோட்டக்காரரிடத்தில்  திராட்சத்தோட்டத்துக்  கனிகளில்  தன்  பாகத்தை  வாங்கிக்கொண்டுவரும்படி,  பருவகாலத்திலே  அவர்களிடத்தில்  ஒரு  ஊழியக்காரனை  அனுப்பினான்.  {Mark  12:2}

 

அவர்கள்  அவனைப்  பிடித்து,  அடித்து,  வெறுமையாய்  அனுப்பிவிட்டார்கள்.  {Mark  12:3}

 

பின்பு  வேறொரு  ஊழியக்காரனை  அவர்களிடத்தில்  அனுப்பினான்;  அவர்கள்  அவன்மேல்  கல்லெறிந்து,  தலையிலே  காயப்படுத்தி,  அவமானப்படுத்தி,  அனுப்பிவிட்டார்கள்.  {Mark  12:4}

 

மறுபடியும்  வேறொருவனை  அனுப்பினான்;  அவனை  அவர்கள்  கொலைசெய்தார்கள்.  வேறு  அநேகரையும்  அனுப்பினான்;  அவர்களில்  சிலரை  அடித்து,  சிலரைக்  கொன்றுபோட்டார்கள்.  {Mark  12:5}

 

அவனுக்குப்  பிரியமான  ஒரே  குமாரன்  இருந்தான்;  என்  குமாரனுக்கு  அஞ்சுவார்களென்று  சொல்லி,  அவனையும்  கடைசியிலே  அவர்களிடத்தில்  அனுப்பினான்.  {Mark  12:6}

 

தோட்டக்காரரோ:  இவன்  சுதந்தரவாளி,  இவனைக்  கொலைசெய்வோம்  வாருங்கள்;  அப்பொழுது  சுதந்தரம்  நம்முடையதாகும்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டு;  {Mark  12:7}

 

அவனைப்  பிடித்துக்  கொலைசெய்து,  திராட்சத்தோட்டத்துக்குப்  புறம்பே  போட்டுவிட்டார்கள்.  {Mark  12:8}

 

அப்படியிருக்க,  திராட்சத்தோட்டத்துக்கு  எஜமான்  என்ன  செய்வான்?  அவன்  வந்து  அந்தத்  தோட்டக்காரரைச்  சங்கரித்து,  திராட்சத்தோட்டத்தை  மற்றவர்களுக்கு  ஒப்புக்கொடுப்பான்  அல்லவா?  {Mark  12:9}

 

வீடு  கட்டுகிறவர்கள்  ஆகாதென்று  தள்ளின  கல்லே  மூலைக்குத்  தலைக்கல்லாயிற்று;  {Mark  12:10}

 

அது  கர்த்தராலே  ஆயிற்று,  அது  நம்முடைய  கண்களுக்கு  ஆச்சரியமாயிருக்கிறது  என்று  எழுதியிருக்கிற  வாக்கியத்தை  நீங்கள்  வாசிக்கவில்லையா  என்றார்.  {Mark  12:11}

 

இந்த  உவமையைத்  தங்களைக்குறித்துச்  சொன்னாரென்று  அவர்கள்  அறிந்து,  அவரைப்  பிடிக்க  வகைதேடினார்கள்;  ஆனாலும்  ஜனத்துக்குப்  பயந்து,  அவரை  விட்டுப்  போய்விட்டார்கள்.  {Mark  12:12}

 

அவர்கள்,  பேச்சிலே  அவரை  அகப்படுத்தும்படிக்கு,  பரிசேயரிலும்<Pharisees>  ஏரோதியரிலும்<Herodians>  சிலரை  அவரிடத்தில்  அனுப்பினார்கள்.  {Mark  12:13}

 

அவர்கள்  வந்து:  போதகரே,  நீர்  சத்தியமுள்ளவரென்றும்,  எவனைக்குறித்தும்  உமக்குக்  கவலையில்லையென்றும்  அறிந்திருக்கிறோம்,  நீர்  முகதாட்சணியம்  இல்லாதவராய்த்  தேவனுடைய  மார்க்கத்தைச்  சத்தியமாய்ப்  போதிக்கிறீர்,  இராயனுக்கு<Caesar>  வரிகொடுக்கிறது  நியாயமோ  அல்லவோ?  நாம்  கொடுக்கலாமோ,  கொடுக்கக்கூடாதோ?  என்று  கேட்டார்கள்.  {Mark  12:14}

 

அவர்களுடைய  மாயத்தை  அவர்  அறிந்து:  நீங்கள்  என்னை  ஏன்  சோதிக்கிறீர்கள்?  நான்  பார்க்கும்படிக்கு  ஒரு  பணத்தை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  {Mark  12:15}

 

அவர்கள்  அதைக்  கொண்டுவந்தார்கள்.  அப்பொழுது  அவர்:  இந்தச்  சுரூபமும்  மேலெழுத்தும்  யாருடையது  என்று  கேட்டார்;  இராயனுடையது<Caesar>  என்றார்கள்.  {Mark  12:16}

 

அதற்கு  இயேசு<Jesus>:  இராயனுடையதை<Caesar>  இராயனுக்கும்<Caesar>,  தேவனுடையதைத்  தேவனுக்கும்  செலுத்துங்கள்  என்றார்.  அவர்கள்  அவரைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  {Mark  12:17}

 

உயிர்த்தெழுதல்  இல்லையென்று  சாதிக்கிற  சதுசேயர்<Sadducees>  அவரிடத்தில்  வந்து:  {Mark  12:18}

 

போதகரே,  ஒருவனுடைய  சகோதரன்  சந்தானமில்லாமல்  தன்  மனைவியை  விட்டு  இறந்துபோனால்,  அவனுடைய  சகோதரன்  அவன்  மனைவியை  விவாகம்பண்ணி,  தன்  சகோதரனுக்குச்  சந்தானம்  உண்டாக்கவேண்டுமென்று  மோசே<Moses>  எங்களுக்கு  எழுதிவைத்திருக்கிறாரே.  {Mark  12:19}

 

இப்படியிருக்க,  ஏழுபேர்  சகோதரர்  இருந்தார்கள்;  மூத்தவன்  ஒரு  பெண்ணை  விவாகம்பண்ணி,  சந்தானமில்லாமல்  இறந்துபோனான்.  {Mark  12:20}

 

இரண்டாம்  சகோதரன்  அவளை  விவாகம்பண்ணி,  அவனும்  சந்தானமில்லாமல்  இறந்துபோனான்.  மூன்றாம்  சகோதரனும்  அப்படியேயானான்.  {Mark  12:21}

 

ஏழுபேரும்  அவளை  விவாகம்பண்ணி,  சந்தானமில்லாமல்  இறந்துபோனார்கள்.  எல்லாருக்கும்  பின்பு  அந்த  ஸ்திரீயும்  இறந்துபோனாள்.  {Mark  12:22}

 

ஆகையால்,  உயிர்த்தெழுதலில்,  அவர்கள்  எழுந்திருக்கும்போது,  அவர்களில்  எவனுக்கு  அவள்  மனைவியாயிருப்பாள்?  ஏழுபேரும்  அவளை  மனைவியாகக்  கொண்டிருந்தார்களே  என்று  கேட்டார்கள்.  {Mark  12:23}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  வேதவாக்கியங்களையும்,  தேவனுடைய  வல்லமையையும்  அறியாததினாலல்லவா  தப்பான  எண்ணங்  கொள்ளுகிறீர்கள்?  {Mark  12:24}

 

மரித்தோர்  உயிரோடெழுந்திருக்கும்போது  கொள்வனையும்  கொடுப்பனையும்  இல்லை.  அவர்கள்  பரலோகத்தில்  இருக்கிற  தேவதூதரைப்போலிருப்பார்கள்.  {Mark  12:25}

 

மரித்தோர்  எழுந்திருப்பதைப்பற்றி:  நான்  ஆபிரகாமின்<Abraham>  தேவனும்,  ஈசாக்கின்<Isaac>  தேவனும்,  யாக்கோபின்<Jacob>  தேவனுமாய்  இருக்கிறேன்  என்று,  தேவன்  முட்செடியைக்குறித்துச்  சொல்லிய  இடத்தில்,  மோசேயின்<Moses>  ஆகமத்தில்  அவனுக்குச்  சொன்னதை,  நீங்கள்  வாசிக்கவில்லையா?  {Mark  12:26}

 

அவர்  மரித்தோருக்குத்  தேவனாயிராமல்,  ஜீவனுள்ளோருக்குத்  தேவனாயிருக்கிறார்;  ஆகையால்  நீங்கள்  மிகவும்  தப்பான  எண்ணங்கொள்ளுகிறீர்கள்  என்றார்.  {Mark  12:27}

 

வேதபாரகரில்  ஒருவன்  அவர்கள்  தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு,  அவர்களுக்கு  நன்றாய்  உத்தரவு  சொன்னாரென்று  அறிந்து,  அவரிடத்தில்  வந்து:  கற்பனைகளிலெல்லாம்  பிரதான  கற்பனை  எதுவென்று  கேட்டான்.  {Mark  12:28}

 

இயேசு<Jesus>  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  கற்பனைகளிலெல்லாம்  பிரதான  கற்பனை  எதுவென்றால்:  இஸ்ரவேலே<Israel>  கேள்,  நம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஒருவரே  கர்த்தர்.  {Mark  12:29}

 

உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உன்  முழு  இருதயத்தோடும்,  உன்  முழு  ஆத்துமாவோடும்,  உன்  முழு  மனதோடும்,  உன்  முழுப்  பலத்தோடும்  அன்புகூருவாயாக  என்பதே  பிரதான  கற்பனை.  {Mark  12:30}

 

இதற்கு  ஒப்பாயிருக்கிற  இரண்டாம்  கற்பனை  என்னவென்றால்:  உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோல்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்பதே;  இவைகளிலும்  பெரிய  கற்பனை  வேறொன்றுமில்லை  என்றார்.  {Mark  12:31}

 

அதற்கு  வேதபாரகன்:  சரிதான்,  போதகரே,  நீர்  சொன்னது  சத்தியம்;  ஒரே  தேவன்  உண்டு,  அவரைத்தவிர  வேறொரு  தேவன்  இல்லை.  {Mark  12:32}

 

முழு  இருதயத்தோடும்,  முழு  மனதோடும்,  முழு  ஆத்துமாவோடும்,  முழுப்  பலத்தோடும்  அவரிடத்தில்  அன்புகூருகிறதும்,  தன்னிடத்தில்  அன்புகூருகிறதுபோல்  பிறனிடத்தில்  அன்புகூருகிறதுமே  சர்வாங்கதகனம்  முதலிய  பலிகளைப்பார்க்கிலும்  முக்கியமாயிருக்கிறது  என்றான்.  {Mark  12:33}

 

அவன்  விவேகமாய்  உத்தரவுசொன்னதை  இயேசு<Jesus>  கண்டு:  நீ  தேவனுடைய  ராஜ்யத்துக்குத்  தூரமானவனல்ல  என்றார்.  அதன்பின்பு  ஒருவரும்  அவரிடத்தில்  யாதொரு  கேள்வியுங்  கேட்கத்  துணியவில்லை.  {Mark  12:34}

 

இயேசு<Jesus>  தேவாலயத்திலே  உபதேசம்பண்ணுகையில்,  அவர்:  கிறிஸ்து<Christ>  தாவீதின்<David>  குமாரனென்று  வேதபாரகர்  எப்படிச்  சொல்லுகிறார்கள்?  {Mark  12:35}

 

நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்று  கர்த்தர்  என்  ஆண்டவரோடே  சொன்னார்  என்று  தாவீது<David>  பரிசுத்த  ஆவியினாலே  சொல்லியிருக்கிறானே.  {Mark  12:36}

 

தாவீதுதானே<David>  அவரை  ஆண்டவரென்று  சொல்லியிருக்க,  அவனுக்கு  அவர்  குமாரனாயிருப்பது  எப்படி  என்றார்.  அநேக  ஜனங்கள்  அவருடைய  உபதேசத்தை  விருப்பத்தோடே  கேட்டார்கள்.  {Mark  12:37}

 

பின்னும்  அவர்  உபதேசம்பண்ணுகையில்  அவர்களை  நோக்கி:  நீண்ட  அங்கிகளைத்  தரித்துக்கொண்டு  திரியவும்,  சந்தைவெளிகளில்  வந்தனங்களை  அடையவும்,  {Mark  12:38}

 

ஜெப  ஆலயங்களில்  முதன்மையான  ஆசனங்களில்  உட்காரவும்,  விருந்துகளில்  முதன்மையான  இடங்களில்  இருக்கவும்  விரும்பி,  {Mark  12:39}

 

விதவைகளின்  வீடுகளைப்  பட்சித்து,  பார்வைக்கு  நீண்ட  ஜெபம்  பண்ணுகிற  வேதபாரகரைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்;  அவர்கள்  அதிக  ஆக்கினையை  அடைவார்கள்  என்றார்.  {Mark  12:40}

 

இயேசு<Jesus>  காணிக்கைப்  பெட்டிக்கு  எதிராக  உட்கார்ந்து,  ஜனங்கள்  காணிக்கைப்  பெட்டியில்  பணம்  போடுகிறதைப்  பார்த்துக்கொண்டிருந்தார்;  ஐசுவரியவான்கள்  அநேகர்  அதிகமாய்ப்  போட்டார்கள்.  {Mark  12:41}

 

ஏழையான  ஒரு  விதவையும்  வந்து,  ஒரு  துட்டுக்குச்  சரியான  இரண்டு  காசைப்  போட்டாள்.  {Mark  12:42}

 

அப்பொழுது  அவர்  தம்முடைய  சீஷரை  அழைத்து,  காணிக்கைப்  பெட்டியில்  பணம்  போட்ட  மற்றெல்லாரைப்  பார்க்கிலும்  இந்த  ஏழை  விதவை  அதிகமாய்ப்  போட்டாள்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  {Mark  12:43}

 

அவர்களெல்லாரும்  தங்கள்  பரிபூரணத்திலிருந்து  எடுத்துப்போட்டார்கள்;  இவளோ  தன்  வறுமையிலிருந்து  தன்  ஜீவனத்துக்கு  உண்டாயிருந்ததெல்லாம்  போட்டுவிட்டாள்  என்றார்.  {Mark  12:44}

 

அவர்  தேவாலயத்தை  விட்டுப்  புறப்படும்போது,  அவருடைய  சீஷர்களில்  ஒருவன்  அவரை  நோக்கி:  போதகரே,  இதோ,  இந்தக்  கல்லுகள்  எப்படிப்பட்டது!  இந்தக்  கட்டடங்கள்  எப்படிப்பட்டது!  பாரும்  என்றான்.  {Mark  13:1}

 

இயேசு<Jesus>  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  இந்தப்  பெரிய  கட்டடங்களைக்  காண்கிறாயே,  ஒரு  கல்லின்மேல்  ஒரு  கல்லிராதபடிக்கு  எல்லாம்  இடிக்கப்பட்டுப்போகும்  என்றார்.  {Mark  13:2}

 

பின்பு,  அவர்  தேவாலயத்துக்கு  எதிராக  ஒலிவமலையின்மேல்<mount  of  Olives>  உட்கார்ந்திருக்கையில்,  பேதுருவும்<Peter>  யாக்கோபும்<James>  யோவானும்<John>  அந்திரேயாவும்<Andrew>  அவரிடத்தில்  தனித்துவந்து:  {Mark  13:3}

 

இவைகள்  எப்பொழுது  சம்பவிக்கும்?  இவைகளெல்லாம்  நிறைவேறுங்காலத்துக்கு  அடையாளம்  என்ன?  எங்களுக்குச்  சொல்லவேண்டும்  என்றார்கள்.  {Mark  13:4}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  ஒருவனும்  உங்களை  வஞ்சியாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்.  {Mark  13:5}

 

ஏனெனில்  அநேகர்  வந்து,  என்  நாமத்தைக்கொண்டு:  நானே  கிறிஸ்து<Christ>  என்று  சொல்லி,  அநேகரை  வஞ்சிப்பார்கள்.  {Mark  13:6}

 

யுத்தங்களையும்  யுத்தங்களின்  செய்திகளையும்  கேள்விப்படும்போது  கலங்காதேயுங்கள்;  இவைகள்  சம்பவிக்கவேண்டியதே.  ஆனாலும்,  முடிவு  உடனே  வராது.  {Mark  13:7}

 

ஜனத்துக்கு  விரோதமாய்  ஜனமும்,  ராஜ்யத்துக்கு  விரோதமாய்  ராஜ்யமும்  எழும்பும்;  பூமியதிர்ச்சிகளும்  பல  இடங்களில்  உண்டாகும்,  பஞ்சங்களும்  கலகங்களும்  உண்டாகும்;  இவைகள்  வேதனைகளுக்கு  ஆரம்பம்.  {Mark  13:8}

 

நீங்களோ  எச்சரிக்கையாயிருங்கள்,  ஏனெனில்  உங்களை  ஆலோசனைச்  சங்கங்களுக்கு  ஒப்புக்கொடுப்பார்கள்,  நீங்கள்  ஜெபஆலயங்களில்  அடிக்கப்படுவீர்கள்;  என்னிமித்தம்  தேசாதிபதிகளுக்கும்  ராஜாக்களுக்கும்  சாட்சியாக  அவர்களுக்கு  முன்பாக  நிறுத்தப்படுவீர்கள்.  {Mark  13:9}

 

சகல  ஜாதிகளுக்கும்  சுவிசேஷம்  முந்திப்  பிரசங்கிக்கப்படவேண்டும்.  {Mark  13:10}

 

அவர்கள்  உங்களைக்  கொண்டுபோய்  ஒப்புக்கொடுக்கும்போது,  நீங்கள்  என்ன  பேசுவோமென்று  முன்னதாகக்  கவலைப்படாமலும்  சிந்தியாமலுமிருங்கள்;  அந்த  நாழிகையிலே  உங்களுக்கு  எது  அருள்  செய்யப்படுமோ  அதையே  பேசுங்கள்;  ஏனெனில்  பேசுகிறவர்கள்  நீங்களல்ல,  பரிசுத்த  ஆவியே  பேசுகிறவர்.  {Mark  13:11}

 

அன்றியும்  சகோதரன்  சகோதரனையும்,  தகப்பன்  பிள்ளையையும்  மரணத்துக்கு  ஒப்புக்கொடுப்பார்கள்;  பெற்றாருக்கு  விரோதமாகப்  பிள்ளைகள்  எழும்பி,  அவர்களைக்  கொலைசெய்வார்கள்.  {Mark  13:12}

 

என்  நாமத்தினிமித்தம்  எல்லாராலும்  பகைக்கப்படுவீர்கள்.  முடிவுபரியந்தம்  நிலைநிற்பவனே  இரட்சிக்கப்படுவான்.  {Mark  13:13}

 

மேலும்  பாழாக்குகிற  அருவருப்பைக்குறித்துத்  தானியேல்<Daniel>  தீர்க்கதரிசி  சொல்லியிருக்கிறானே;  வாசிக்கிறவன்  சிந்திக்கக்கடவன்;  அது  நிற்கத்தகாத  இடத்திலே  நீங்கள்  அதை  நிற்கக்  காணும்போது,  யூதேயாவில்<Judaea>  இருக்கிறவர்கள்  மலைகளுக்கு  ஓடிப்போகக்கடவர்கள்.  {Mark  13:14}

 

வீட்டின்மேல்  இருக்கிறவன்  தன்  வீட்டுக்குள்  இறங்காமலும்,  தன்  வீட்டில்  எதையாகிலும்  எடுத்துக்கொள்ள  உள்ளே  போகாமலும்  இருக்கக்கடவன்.  {Mark  13:15}

 

வயலில்  இருக்கிறவன்  தன்  வஸ்திரத்தை  எடுப்பதற்குப்  பின்னிட்டுத்  திரும்பாதிருக்கக்கடவன்.  {Mark  13:16}

 

அந்நாட்களிலே  கர்ப்பவதிகளுக்கும்  பால்கொடுக்கிறவர்களுக்கும்  ஐயோ!  {Mark  13:17}

 

நீங்கள்  ஓடிப்போவது  மாரிகாலத்திலே  சம்பவியாதபடிக்கு  வேண்டிக்கொள்ளுங்கள்.  {Mark  13:18}

 

ஏனெனில்  தேவன்  உலகத்தைச்  சிருஷ்டித்ததுமுதல்  இதுவரைக்கும்  சம்பவித்திராததும்,  இனிமேலும்  சம்பவியாததுமான  உபத்திரவம்  அந்நாட்களில்  உண்டாயிருக்கும்.  {Mark  13:19}

 

கர்த்தர்  அந்நாட்களைக்  குறைத்திராவிட்டால்,  ஒருவனாகிலும்  தப்பிப்போவதில்லை;  தாம்  தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ,  அவர்  அந்த  நாட்களைக்  குறைத்திருக்கிறார்.  {Mark  13:20}

 

அப்பொழுது:  இதோ,  கிறிஸ்து<Christ>  இங்கே  இருக்கிறார்,  அதோ,  அங்கேயிருக்கிறார்  என்று  எவனாகிலும்  சொன்னால்,  நம்பாதேயுங்கள்.  {Mark  13:21}

 

ஏனெனில்  கள்ளக்கிறிஸ்துக்களும்<false  Christs>  கள்ளத்தீர்க்கதரிசிகளும்  எழும்பி,  கூடுமானால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்  வஞ்சிக்கத்தக்கதாக  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  செய்வார்கள்.  {Mark  13:22}

 

நீங்களோ  எச்சரிக்கையாயிருங்கள்;  இதோ,  எல்லாவற்றையும்  முன்னதாக  உங்களுக்கு  அறிவித்திருக்கிறேன்.  {Mark  13:23}

 

அந்நாட்களிலே,  அந்த  உபத்திரவத்திற்குப்  பின்பு,  சூரியன்  அந்தகாரப்படும்,  சந்திரன்  ஒளியைக்  கொடாதிருக்கும்;  {Mark  13:24}

 

வானத்தின்  நட்சத்திரங்கள்  விழும்,  வானங்களிலுள்ள  சத்துவங்களும்  அசைக்கப்படும்.  {Mark  13:25}

 

அப்பொழுது  மனுஷகுமாரன்  மிகுந்த  வல்லமையோடும்  மகிமையோடும்  மேகங்களின்மேல்  வருகிறதைக்  காண்பார்கள்.  {Mark  13:26}

 

அப்பொழுது  அவர்  தம்முடைய  தூதரை  அனுப்பி,  தாம்  தெரிந்துகொண்டவர்களைப்  பூமியின்  கடைமுனை  முதற்கொண்டு,  வானத்தின்  கடைமுனைமட்டுமுள்ள  நாலு  திசைகளிலுமிருந்து  கூட்டிச்  சேர்ப்பார்.  {Mark  13:27}

 

அத்திமரத்தினால்  ஒரு  உவமையைக்  கற்றுக்கொள்ளுங்கள்;  அதிலே  இளங்கிளை  தோன்றி,  துளிர்விடும்போது,  வசந்தகாலம்  சமீபமாயிற்று  என்று  அறிவீர்கள்.  {Mark  13:28}

 

அப்படியே  இவைகள்  சம்பவிக்கிறதை  நீங்கள்  காணும்போது,  அவர்  சமீபமாய்  வாசலருகே  வந்திருக்கிறார்  என்று  அறியுங்கள்.  {Mark  13:29}

 

இவைகளெல்லாம்  சம்பவிக்கும்  முன்னே  இந்தச்  சந்ததி  ஒழிந்துபோகாதென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Mark  13:30}

 

வானமும்  பூமியும்  ஒழிந்துபோம்,  என்  வார்த்தைகளோ  ஒழிந்துபோவதில்லை.  {Mark  13:31}

 

அந்த  நாளையும்  அந்த  நாழிகையையும்  பிதா  ஒருவர்  தவிர  மற்றொருவனும்  அறியான்,  பரலோகத்திலுள்ள  தூதர்களும்  அறியார்கள்,  குமாரனும்  அறியார்.  {Mark  13:32}

 

அக்காலத்தை  நீங்கள்  அறியாதபடியால்  எச்சரிக்கையாயிருங்கள்,  விழித்திருந்து  ஜெபம்பண்ணுங்கள்.  {Mark  13:33}

 

ஒரு  மனுஷன்  தன்  வீட்டைவிட்டு,  புறத்தேசத்துக்குப்  பிரயாணம்போக  எத்தனிக்கும்போது,  தன்  ஊழியக்காரருக்கு  அதிகாரங்கொடுத்து,  அவனவனுக்குத்  தன்  தன்  வேலையையும்  நியமித்து,  விழித்திருக்கும்படிக்குக்  காவல்காக்கிறவனுக்குக்  கற்பிப்பான்.  {Mark  13:34}

 

அப்படியே  நீங்களும்  விழித்திருங்கள்;  ஏனெனில்,  வீட்டெஜமான்  சாயங்காலத்திலோ,  நடுராத்திரியிலோ,  சேவல்  கூவும்  நேரத்திலோ,  காலையிலோ,  எப்பொழுது  வருவான்  என்று  நீங்கள்  அறியீர்கள்.  {Mark  13:35}

 

நீங்கள்  நினையாதவேளையில்  அவன்  வந்து,  உங்களைத்  தூங்குகிறவர்களாகக்  கண்டுபிடியாதபடிக்கு  விழித்திருங்கள்.  {Mark  13:36}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறதை  எல்லாருக்கும்  சொல்லுகிறேன்,  விழித்திருங்கள்  என்றார்.  {Mark  13:37}

 

இரண்டு  நாளைக்குப்பின்பு  புளிப்பில்லாத  அப்பஞ்சாப்பிடுகிற  பஸ்காபண்டிகை  வந்தது.  அப்பொழுது  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்,  அவரைத்  தந்திரமாய்ப்  பிடித்துக்  கொலைசெய்யும்படி  வகைதேடினார்கள்.  {Mark  14:1}

 

ஆகிலும்  ஜனங்களுக்குள்ளே  கலகம்  உண்டாகாதபடிக்கு,  பண்டிகையிலே  அப்படிச்  செய்யலாகாது  என்றார்கள்.  {Mark  14:2}

 

அவர்  பெத்தானியாவில்<Bethany>  குஷ்டரோகியாயிருந்த  சீமோன்<Simon>  வீட்டிலே  போஜனபந்தியிருக்கையில்,  ஒரு  ஸ்திரீ  விலையேறப்பெற்ற  நளதம்  என்னும்  உத்தம  தைலமுள்ள  வெள்ளைக்கல்  பரணியைக்  கொண்டுவந்து,  அதை  உடைத்து,  அந்தத்  தைலத்தை  அவர்  சிரசின்மேல்  ஊற்றினாள்.  {Mark  14:3}

 

அப்பொழுது  சிலர்  தங்களுக்குள்ளே  விசனமடைந்து:  இந்தத்  தைலத்தை  இப்படி  வீணாய்ச்  செலவழிப்பானேன்?  {Mark  14:4}

 

இதை  முந்நூறு  பணத்துக்கு  அதிகமான  கிரயத்துக்கு  விற்று,  தரித்திரருக்குக்  கொடுக்கலாமே  என்று  சொல்லி,  அவளைக்குறித்து  முறுமுறுத்தார்கள்.  {Mark  14:5}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  அவளை  விட்டுவிடுங்கள்;  ஏன்  அவளைத்  தொந்தரவு  படுத்துகிறீர்கள்?  என்னிடத்தில்  நற்கிரியையைச்  செய்திருக்கிறாள்.  {Mark  14:6}

 

தரித்திரர்  எப்போதும்  உங்களிடத்தில்  இருக்கிறார்கள்,  உங்களுக்கு  மனதுண்டாகும்போதெல்லாம்  நீங்கள்  அவர்களுக்கு  நன்மை  செய்யலாம்,  நானோ  எப்போதும்  உங்களிடத்தில்  இரேன்.  {Mark  14:7}

 

இவள்  தன்னால்  இயன்றதைச்  செய்தாள்;  நான்  அடக்கம்பண்ணப்படுவதற்கு  எத்தனமாக,  என்  சரீரத்தில்  தைலம்பூச  முந்திக்கொண்டாள்.  {Mark  14:8}

 

இந்தச்  சுவிசேஷம்  உலகத்தில்  எங்கெங்கே  பிரசங்கிக்கப்படுமோ  அங்கங்கே  இவளை  நினைப்பதற்காக  இவள்  செய்ததும்  சொல்லப்படும்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Mark  14:9}

 

அப்பொழுது,  பன்னிருவரில்  ஒருவனாகிய  யூதாஸ்காரியோத்து<Judas  Iscariot>  என்பவன்  அவரைப்  பிரதான  ஆசாரியருக்குக்  காட்டிக்கொடுக்கும்படி  அவர்களிடத்திற்குப்  போனான்.  {Mark  14:10}

 

அவர்கள்  அதைக்  கேட்டு,  சந்தோஷப்பட்டு,  அவனுக்குப்  பணங்கொடுப்போம்  என்று  வாக்குத்தத்தம்  பண்ணினார்கள்;  அவன்  அவரைக்  காட்டிக்கொடுப்பதற்குத்  தகுந்த  சமயம்  பார்த்துக்கொண்டிருந்தான்.  {Mark  14:11}

 

பஸ்காவைப்  பலியிடும்  நாளாகிய  புளிப்பில்லாத  அப்பஞ்சாப்பிடுகிற  முதலாம்  நாளிலே,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  நீர்  பஸ்காவைப்  புசிப்பதற்கு  நாங்கள்  எங்கே  போய்  ஆயத்தம்பண்ணச்  சித்தமாயிருக்கிறீர்  என்று  கேட்டார்கள்.  {Mark  14:12}

 

அவர்  தம்முடைய  சீஷரில்  இரண்டுபேரை  நோக்கி:  நீங்கள்  நகரத்திற்குள்ளே  போங்கள்,  அங்கே  தண்ணீர்க்குடம்  சுமந்துவருகிற  ஒரு  மனுஷன்  உங்களுக்கு  எதிர்ப்படுவான்,  அவன்  பின்னே  போங்கள்;  {Mark  14:13}

 

அவன்  எந்த  வீட்டிற்குள்  பிரவேசிக்கிறானோ  அந்த  வீட்டு  எஜமானை  நீங்கள்  நோக்கி:  நான்  என்  சீஷரோடுகூடப்  பஸ்காவைப்  புசிக்கிறதற்குத்  தகுதியான  இடம்  எங்கேயென்று  போதகர்  கேட்கிறார்  என்று  சொல்லுங்கள்.  {Mark  14:14}

 

அவன்  கம்பளம்  முதலானவைகள்  விரித்து  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற  விஸ்தாரமான  மேல்வீட்டறையை  உங்களுக்குக்  காண்பிப்பான்;  அங்கே  நமக்காக  ஆயத்தம்பண்ணுங்கள்  என்று  சொல்லி  அனுப்பினார்.  {Mark  14:15}

 

அப்படியே,  அவருடைய  சீஷர்  புறப்பட்டு  நகரத்தில்  போய்,  தங்களுக்கு  அவர்  சொன்னபடியே  கண்டு,  பஸ்காவை  ஆயத்தம்பண்ணினார்கள்.  {Mark  14:16}

 

சாயங்காலமானபோது,  அவர்  பன்னிருவரோடுங்கூட  அவ்விடத்திற்கு  வந்தார்.  {Mark  14:17}

 

அவர்கள்  பந்தியமர்ந்து  போஜனம்பண்ணுகையில்,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  என்னுடனே  புசிக்கிற  உங்களில்  ஒருவன்  என்னைக்  காட்டிக்கொடுப்பான்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Mark  14:18}

 

அப்பொழுது  அவர்கள்  துக்கமடைந்து:  நானோ?  நானோ?  என்று  ஒவ்வொருவரும்,  அவரிடத்தில்  கேட்கத்  தொடங்கினார்கள்.  {Mark  14:19}

 

அவர்  பிரதியுத்தரமாக:  என்னுடனேகூடத்  தாலத்தில்  கையிடுகிறவனாகிய  பன்னிருவரிலொருவனே  அவன்  என்று  சொல்லி;  {Mark  14:20}

 

மனுஷகுமாரன்  தம்மைக்குறித்து  எழுதியிருக்கிறபடியே  போகிறார்;  ஆகிலும்,  எந்த  மனுஷனால்  மனுஷகுமாரன்  காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ,  அந்த  மனுஷனுக்கு  ஐயோ!  அந்த  மனுஷன்  பிறவாதிருந்தானானால்  அவனுக்கு  நலமாயிருக்கும்  என்றார்.  {Mark  14:21}

 

அவர்கள்  போஜனம்பண்ணுகையில்,  இயேசு<Jesus>  அப்பத்தை  எடுத்து  ஆசீர்வதித்து,  அதைப்  பிட்டு,  அவர்களுக்குக்  கொடுத்து:  நீங்கள்  வாங்கிப்  புசியுங்கள்,  இது  என்னுடைய  சரீரமாயிருக்கிறது  என்றார்.  {Mark  14:22}

 

பின்பு,  பாத்திரத்தையும்  எடுத்து,  ஸ்தோத்திரம்பண்ணி,  அதை  அவர்களுக்குக்  கொடுத்தார்.  அவர்களெல்லாரும்  அதிலே  பானம்பண்ணினார்கள்.  {Mark  14:23}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  இது  அநேகருக்காகச்  சிந்தப்படுகிற  புது  உடன்படிக்கைக்குரிய  என்னுடைய  இரத்தமாயிருக்கிறது.  {Mark  14:24}

 

நான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  நவமான  ரசத்தைப்  பானம்பண்ணும்  நாள்வரைக்கும்  திராட்சப்பழரசத்தை  இனி  நான்  பானம்பண்ணுவதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Mark  14:25}

 

அவர்கள்  ஸ்தோத்திரப்பாட்டைப்  பாடினபின்பு,  ஒலிவமலைக்குப்<mount  of  Olives>  புறப்பட்டுப்போனார்கள்.  {Mark  14:26}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  மேய்ப்பனை  வெட்டுவேன்,  ஆடுகள்  சிதறடிக்கப்படும்,  என்று  எழுதியிருக்கிறபடி,  இந்த  இராத்திரியிலே  நீங்களெல்லாரும்  என்னிமித்தம்  இடறலடைவீர்கள்.  {Mark  14:27}

 

ஆகிலும்  நான்  உயிர்த்தெழுந்தபின்பு,  உங்களுக்கு  முன்னே  கலிலேயாவுக்குப்<Galilee>  போவேன்  என்றார்.  {Mark  14:28}

 

அதற்குப்  பேதுரு<Peter>:  உமதுநிமித்தம்  எல்லாரும்  இடறலடைந்தாலும்,  நான்  இடறலடையேன்  என்றான்.  {Mark  14:29}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  இன்றைக்கு,  இந்த  இராத்திரியிலே,  சேவல்  இரண்டுதரம்  கூவுகிறதற்குமுன்னே,  நீ  மூன்றுதரம்  என்னை  மறுதலிப்பாய்  என்று  மெய்யாகவே  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Mark  14:30}

 

அதற்கு  அவன்:  நான்  உம்மோடே  மரிக்கவேண்டியதாயிருந்தாலும்  உம்மை  மறுதலிக்கமாட்டேன்  என்று  உறுதியாய்ச்  சொன்னான்;  எல்லாரும்  அப்படியே  சொன்னார்கள்.  {Mark  14:31}

 

பின்பு  கெத்செமனே<Gethsemane>  என்னப்பட்ட  இடத்திற்கு  வந்தார்கள்.  அப்பொழுது  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  நான்  ஜெபம்பண்ணுமளவும்  இங்கே  உட்கார்ந்திருங்கள்  என்று  சொல்லி;  {Mark  14:32}

 

பேதுருவையும்<Peter>  யாக்கோபையும்<James>  யோவானையும்<John>  தம்மோடே  கூட்டிக்கொண்டுபோய்,  திகிலடையவும்,  மிகவும்  வியாகுலப்படவும்  தொடங்கினார்.  {Mark  14:33}

 

அப்பொழுது  அவர்:  என்  ஆத்துமா  மரணத்துக்கேதுவான  துக்கங்கொண்டிருக்கிறது.  நீங்கள்  இங்கே  தங்கி,  விழித்திருங்கள்  என்று  சொல்லி,  {Mark  14:34}

 

சற்று  அப்புறம்போய்,  தரையிலே  விழுந்து,  அந்த  வேளை  தம்மைவிட்டு  நீங்கிப்போகக்கூடுமானால்  அது  நீங்கவேண்டுமென்று  வேண்டிக்கொண்டு:  {Mark  14:35}

 

அப்பா  பிதாவே,  எல்லாம்  உம்மாலே  கூடும்;  இந்தப்  பாத்திரத்தை  என்னிடத்திலிருந்து  எடுத்துப்போடும்,  ஆகிலும்  என்  சித்தத்தின்படியல்ல,  உம்முடைய  சித்தத்தின்படியே  ஆகக்கடவது  என்றார்.  {Mark  14:36}

 

பின்பு  அவர்  வந்து,  அவர்கள்  நித்திரைபண்ணுகிறதைக்கண்டு,  பேதுருவை<Peter>  நோக்கி:  சீமோனே<Simon>,  நித்திரைபண்ணுகிறாயா?  ஒரு  மணிநேரம்  நீ  விழித்திருக்கக்கூடாதா?  {Mark  14:37}

 

நீங்கள்  சோதனைக்குட்படாதபடிக்கு  விழித்திருந்து  ஜெபம்பண்ணுங்கள்.  ஆவி  உற்சாகமுள்ளதுதான்,  மாம்சமோ  பலவீனமுள்ளது  என்றார்.  {Mark  14:38}

 

அவர்  மறுபடியும்  போய்  அந்த  வார்த்தைகளையே  சொல்லி  ஜெபம்பண்ணினார்.  {Mark  14:39}

 

அவர்  திரும்ப  வந்தபோது,  அவர்கள்  மறுபடியும்  நித்திரைபண்ணுகிறதைக்  கண்டார்;  அவர்களுடைய  கண்கள்  மிகுந்த  நித்திரைமயக்கம்  அடைந்திருந்தபடியால்,  தாங்கள்  மறுமொழியாக  அவருக்குச்  சொல்வது  இன்னதென்று  அறியாதிருந்தார்கள்.  {Mark  14:40}

 

அவர்  மூன்றாந்தரம்  வந்து:  இனி  நித்திரைபண்ணி  இளைப்பாறுங்கள்;  போதும்,  வேளை  வந்தது,  இதோ,  மனுஷகுமாரன்  பாவிகளுடைய  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.  {Mark  14:41}

 

என்னைக்  காட்டிக்கொடுக்கிறவன்,  இதோ,  வந்துவிட்டான்,  எழுந்திருங்கள்,  போவோம்  என்றார்.  {Mark  14:42}

 

உடனே,  அவர்  இப்படிப்  பேசுகையில்,  பன்னிருவரில்  ஒருவனாகிய  யூதாஸ்<Judas>  வந்தான்;  அவனோடேகூடப்  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  மூப்பரும்  அனுப்பின  திரளான  ஜனங்கள்,  பட்டயங்களையும்  தடிகளையும்  பிடித்துக்கொண்டு  வந்தார்கள்.  {Mark  14:43}

 

அவரைக்  காட்டிக்கொடுக்கிறவன்:  நான்  எவனை  முத்தஞ்செய்வேனோ  அவன்தான்,  அவனைப்  பிடித்துப்  பத்திரமாய்க்  கொண்டுபோங்கள்  என்று  அவர்களுக்குக்  குறிப்புச்  சொல்லியிருந்தான்.  {Mark  14:44}

 

அவன்  வந்தவுடனே,  அவரண்டையில்  சேர்ந்து:  ரபீ<Rabbi//Master>,  ரபீ<Rabbi//Master>,  என்று  சொல்லி,  அவரை  முத்தஞ்செய்தான்.  {Mark  14:45}

 

அப்பொழுது  அவர்கள்  அவர்மேல்  கைபோட்டு,  அவரைப்  பிடித்தார்கள்.  {Mark  14:46}

 

அப்பொழுது  கூடநின்றவர்களில்  ஒருவன்  கத்தியை  உருவி,  பிரதான  ஆசாரியனுடைய  வேலைக்காரனைக்  காதற  வெட்டினான்.  {Mark  14:47}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  கள்ளனைப்  பிடிக்கப்  புறப்படுகிறதுபோல,  நீங்கள்  பட்டயங்களையும்  தடிகளையும்  எடுத்துக்கொண்டு  என்னைப்  பிடிக்கவந்தீர்கள்;  {Mark  14:48}

 

நான்  தினந்தோறும்  உங்கள்  நடுவிலே  தேவாலயத்தில்  உபதேசம்பண்ணிக்  கொண்டிருந்தேன்;  அப்பொழுது  நீங்கள்  என்னைப்  பிடிக்கவில்லையே;  ஆனாலும்  வேதவாக்கியங்கள்  நிறைவேற  வேண்டியதாயிருக்கிறது  என்றார்.  {Mark  14:49}

 

அப்பொழுது  எல்லாரும்  அவரைவிட்டு  ஓடிப்போனார்கள்.  {Mark  14:50}

 

ஒரு  வாலிபன்  ஒரு  துப்பட்டியை  மாத்திரம்  தன்மேல்  போர்த்துக்கொண்டு  அவர்  பின்னே  போனான்;  அவனைப்  பிடித்தார்கள்.  {Mark  14:51}

 

அவன்  தன்  துப்பட்டியைப்  போட்டு  விட்டு,  நிர்வாணமாய்  அவர்களை  விட்டு  ஓடிப்போனான்.  {Mark  14:52}

 

இயேசுவை<Jesus>  அவர்கள்  பிரதான  ஆசாரியனிடத்தில்  கொண்டுபோனார்கள்;  அங்கே  ஆசாரியர்  மூப்பர்  வேதபாரகர்  எல்லாரும்  கூடிவந்திருந்தார்கள்.  {Mark  14:53}

 

பேதுரு<Peter>  தூரத்திலே  அவருக்குப்  பின்சென்று,  பிரதான  ஆசாரியனுடைய  அரமனைக்குள்  வந்து,  சேவகரோடேகூட  உட்கார்ந்து,  நெருப்பண்டையிலே  குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.  {Mark  14:54}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியரும்  ஆலோசனைச்  சங்கத்தாரனைவரும்  இயேசுவைக்<Jesus>  கொலைசெய்யும்படி  அவருக்கு  விரோதமாகச்  சாட்சி  தேடினார்கள்;  அகப்படவில்லை.  {Mark  14:55}

 

அநேகர்  அவருக்கு  விரோதமாகப்  பொய்ச்சாட்சி  சொல்லியும்,  அந்தச்  சாட்சிகள்  ஒவ்வவில்லை.  {Mark  14:56}

 

அப்பொழுது  சிலர்  எழுந்து,  கைவேலையாகிய  இந்தத்  தேவாலயத்தை  நான்  இடித்துப்போட்டு,  கைவேலையல்லாத  வேறொன்றை  மூன்று  நாளைக்குள்ளே  கட்டுவேன்  என்று  இவன்  சொன்னதை  நாங்கள்  கேட்டோம்  என்று,  {Mark  14:57}

 

அவருக்கு  விரோதமாய்ப்  பொய்ச்சாட்சி  சொன்னார்கள்.  {Mark  14:58}

 

அப்படிச்  சொல்லியும்  அவர்கள்  சாட்சி  ஒவ்வாமற்போயிற்று.  {Mark  14:59}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியன்  எழுந்து  நடுவே  நின்று,  இயேசுவை<Jesus>  நோக்கி:  இவர்கள்  உனக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிறதைக்  குறித்து  நீ  ஒன்றும்  சொல்லுகிறதில்லையா  என்று  கேட்டான்.  {Mark  14:60}

 

அவரோ  ஒரு  உத்தரவும்  சொல்லாமல்  பேசாதிருந்தார்.  மறுபடியும்  பிரதான  ஆசாரியன்  அவரை  நோக்கி:  நீ  ஸ்தோத்திரிக்கப்பட்ட  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்துதானா<Christ>?  என்று  கேட்டான்.  {Mark  14:61}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நான்  அவர்தான்;  மனுஷகுமாரன்  சர்வவல்லவரின்  வலதுபாரிசத்தில்  வீற்றிருப்பதையும்,  வானத்தின்  மேகங்கள்மேல்  வருவதையும்  நீங்கள்  காண்பீர்கள்  என்றார்.  {Mark  14:62}

 

பிரதான  ஆசாரியன்  இதைக்  கேட்டவுடனே,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  இனிச்  சாட்சிகள்  நமக்கு  வேண்டியதென்ன?  {Mark  14:63}

 

தேவதூஷணத்தைக்  கேட்டீர்களே,  உங்களுக்கு  என்னமாய்த்  தோன்றுகிறது  என்றான்.  அதற்கு  அவர்களெல்லாரும்:  இவன்  மரணத்துக்குப்  பாத்திரனாயிருக்கிறான்  என்று  தீர்மானம்பண்ணினார்கள்.  {Mark  14:64}

 

அப்பொழுது  சிலர்  அவர்மேல்  துப்பவும்,  அவருடைய  முகத்தை  மூடவும்,  அவரைக்  குட்டவும்,  ஞானதிருஷ்டியினாலே  பார்த்துச்  சொல்  என்று  சொல்லவும்  தொடங்கினார்கள்;  வேலைக்காரரும்  அவரைக்  கன்னத்தில்  அறைந்தார்கள்.  {Mark  14:65}

 

அத்தருணத்திலே  பேதுரு<Peter>  கீழே  அரமனை  முற்றத்திலிருக்கையில்,  பிரதான  ஆசாரியனுடைய  வேலைக்காரிகளில்  ஒருத்தி  வந்து,  {Mark  14:66}

 

குளிர்காய்ந்துகொண்டிருக்கிற  பேதுருவைக்<Peter>  கண்டு,  அவனை  உற்றுப்பார்த்து:  நீயும்  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவோடே<Jesus>  இருந்தாய்  என்றாள்.  {Mark  14:67}

 

அதற்கு  அவன்:  நான்  அறியேன்;  நீ  சொல்லுகிறது  எனக்குத்  தெரியாது  என்று  மறுதலித்து,  வெளியே  வாசல்  மண்டபத்துக்குப்  போனான்;  அப்பொழுது  சேவல்  கூவிற்று.  {Mark  14:68}

 

வேலைக்காரி  அவனை  மறுபடியும்  கண்டு:  இவன்  அவர்களில்  ஒருவன்  என்று  அருகே  நின்றவர்களுக்குச்  சொன்னாள்.  {Mark  14:69}

 

அவன்  மறுபடியும்  மறுதலித்தான்.  சற்றுநேரத்துக்குப்பின்பு  மறுபடியும்  அருகே  நிற்கிறவர்கள்  பேதுருவைப்<Peter>  பார்த்து:  மெய்யாகவே  நீ  அவர்களில்  ஒருவன்,  நீ  கலிலேயன்<Galilaean>,  உன்  பேச்சு  அதற்கு  ஒத்திருக்கிறது  என்றார்கள்.  {Mark  14:70}

 

அதற்கு  அவன்:  நீங்கள்  சொல்லுகிற  மனுஷனை  அறியேன்  என்று  சொல்லி,  சபிக்கவும்  சத்தியம்பண்ணவும்  தொடங்கினான்.  {Mark  14:71}

 

உடனே  சேவல்  இரண்டாந்தரம்  கூவிற்று.  சேவல்  இரண்டுதரங்  கூவுகிறதற்குமுன்னே  நீ  என்னை  மூன்றுதரம்  மறுதலிப்பாய்  என்று  இயேசு<Jesus>  தனக்குச்  சொன்ன  வார்த்தையைப்  பேதுரு<Peter>  நினைவுகூர்ந்து,  மிகவும்  அழுதான்.  {Mark  14:72}

 

பொழுது  விடிந்தவுடனே,  பிரதான  ஆசாரியரும்  மூப்பரும்  வேதபாரகரும்  ஆலோசனைச்  சங்கத்தாரனைவரும்  கூடி  ஆலோசனைபண்ணி,  இயேசுவைக்<Jesus>  கட்டிக்  கொண்டுபோய்,  பிலாத்துவினிடத்தில்<Pilate>  ஒப்புக்கொடுத்தார்கள்.  {Mark  15:1}

 

பிலாத்து<Pilate>  அவரை  நோக்கி:  நீ  யூதருடைய  ராஜாவா<King  of  the  Jews>  என்று  கேட்டான்.  அதற்கு  அவர்:  நீர்  சொல்லுகிறபடிதான்  என்றார்.  {Mark  15:2}

 

பிரதான  ஆசாரியர்கள்  அவர்மேல்  அநேகங்  குற்றங்களைச்  சாட்டினார்கள்.  அவரோ  மாறுத்தரம்  ஒன்றும்  சொல்லவில்லை.  {Mark  15:3}

 

அப்பொழுது  பிலாத்து<Pilate>  மறுபடியும்  அவரை  நோக்கி:  இதோ,  இவர்கள்  உன்மேல்  எத்தனையோ  குற்றங்களைச்  சாட்டுகிறார்களே,  அதற்கு  நீ  உத்தரவு  ஒன்றும்  சொல்லுகிறதில்லையா  என்று  கேட்டான்.  {Mark  15:4}

 

இயேசுவோ<Jesus>  அப்பொழுதும்  உத்தரவு  ஒன்றும்  சொல்லவில்லை;  அதினால்  பிலாத்து<Pilate>  ஆச்சரியப்பட்டான்.  {Mark  15:5}

 

காவல்பண்ணப்பட்டவர்களில்  எவனை  விடுதலையாக்க  வேண்டுமென்று  ஜனங்கள்  கேட்டுக்கொள்வார்களோ,  அவனை  அவர்களுக்காக  விடுதலையாக்குவது  பண்டிகைதோறும்  பிலாத்துவுக்கு<Pilate>  வழக்கமாயிருந்தது.  {Mark  15:6}

 

கலகம்பண்ணி  அந்தக்  கலகத்தில்  கொலைசெய்து,  அதற்காகக்  காவல்பண்ணப்பட்டவர்களில்  பரபாஸ்<Barabbas>  என்னப்பட்ட  ஒருவன்  இருந்தான்.  {Mark  15:7}

 

ஜனங்கள்,  வழக்கத்தின்படியே  தங்களுக்கு  ஒருவனை  விடுதலையாக்கவேண்டுமென்று  சத்தமிட்டுக்  கேட்டுக்கொள்ளத்  தொடங்கினார்கள்.  {Mark  15:8}

 

பொறாமையினாலே  பிரதான  ஆசாரியர்கள்  அவரை  ஒப்புக்கொடுத்தார்களென்று  பிலாத்து<Pilate>  அறிந்து,  {Mark  15:9}

 

அவர்களை  நோக்கி:  நான்  யூதருடைய  ராஜாவை<King  of  the  Jews>  உங்களுக்கு  விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா  என்று  கேட்டான்.  {Mark  15:10}

 

பரபாசைத்<Barabbas>  தங்களுக்கு  விடுதலையாக்கவேண்டுமென்று  ஜனங்கள்  கேட்டுக்கொள்ளும்படி,  பிரதான  ஆசாரியர்கள்  அவர்களை  ஏவிவிட்டார்கள்.  {Mark  15:11}

 

பிலாத்து<Pilate>  மறுபடியும்  அவர்களை  நோக்கி:  அப்படியானால்,  யூதருடைய  ராஜாவென்று<King  of  the  Jews>  நீங்கள்  சொல்லுகிறவனை  நான்  என்ன  செய்யவேண்டும்  என்று  கேட்டான்.  {Mark  15:12}

 

அவனைச்  சிலுவையில்  அறையும்  என்று  மறுபடியும்  சத்தமிட்டுச்  சொன்னார்கள்.  {Mark  15:13}

 

அதற்குப்  பிலாத்து<Pilate>:  ஏன்,  என்ன  பொல்லாப்புச்  செய்தான்  என்றான்.  அவர்களோ:  அவனைச்  சிலுவையில்  அறையும்  என்று  பின்னும்  அதிகமாய்க்  கூக்குரலிட்டுச்  சொன்னார்கள்.  {Mark  15:14}

 

அப்பொழுது  பிலாத்து<Pilate>  ஜனங்களைப்  பிரியப்படுத்த  மனதுள்ளவனாய்,  பரபாசை<Barabbas>  அவர்களுக்கு  விடுதலையாக்கி,  இயேசுவையோ<Jesus>  வாரினால்  அடிப்பித்து,  சிலுவையில்  அறையும்படிக்கு  ஒப்புக்கொடுத்தான்.  {Mark  15:15}

 

அப்பொழுது  போர்ச்சேவகர்  அவரைத்  தேசாதிபதியின்  அரமனையாகிய  மாளிகையில்  கொண்டுபோய்,  அவ்விடத்தில்  போர்ச்சேவகருடைய  கூட்டமுழுவதையும்  கூடிவரச்செய்து,  {Mark  15:16}

 

சிவப்பான  மேலங்கியை  அவருக்கு  உடுத்தி,  முள்முடியைப்  பின்னி  அவருக்குச்  சூட்டி:  {Mark  15:17}

 

யூதருடைய  ராஜாவே<King  of  the  Jews>,  வாழ்க  என்று  அவரை  வாழ்த்தி,  {Mark  15:18}

 

அவரைச்  சிரசில்  கோலால்  அடித்து,  அவர்மேல்  துப்பி,  முழங்கால்படியிட்டு  அவரை  வணங்கினார்கள்.  {Mark  15:19}

 

அவரைப்  பரியாசம்பண்ணினபின்பு,  சிவப்பான  அங்கியைக்  கழற்றி,  அவருடைய  வஸ்திரங்களை  அவருக்கு  உடுத்தி,  அவரைச்  சிலுவையில்  அறையும்படி  வெளியே  கொண்டுபோனார்கள்.  {Mark  15:20}

 

சிரேனே<Cyrenian>  ஊரானும்,  அலெக்சந்தருக்கும்<Alexander>  ரூப்புக்கும்<Rufus>  தகப்பனுமாகிய  சீமோன்<Simon>  என்னப்பட்ட  ஒருவன்  நாட்டிலிருந்து  அவ்வழியே  வருகையில்,  அவருடைய  சிலுவையைச்  சுமக்கும்படி  அவனைப்  பலவந்தம்பண்ணினார்கள்.  {Mark  15:21}

 

கபாலஸ்தலம்<The  place  of  a  skull>  என்று  அர்த்தங்கொள்ளும்  கொல்கொதா<Golgotha>  என்னும்  இடத்துக்கு  அவரைக்  கொண்டுபோய்,  {Mark  15:22}

 

வெள்ளைப்போளம்  கலந்த  திராட்சரசத்தை  அவருக்குக்  குடிக்கக்  கொடுத்தார்கள்;  அவர்  அதை  ஏற்றுக்கொள்ளவில்லை.  {Mark  15:23}

 

அப்பொழுது  அவரைச்  சிலுவையில்  அறைந்தார்கள்.  அதன்பின்பு  அவருடைய  வஸ்திரங்களைப்  பங்கிட்டு,  ஒவ்வொருவன்  ஒவ்வொரு  பங்கை  எடுத்துக்கொள்ளும்படி  அவைகளைக்குறித்துச்  சீட்டுப்போட்டார்கள்.  {Mark  15:24}

 

அவரைச்  சிலுவையில்  அறைந்தபோது  மூன்றாம்மணி  வேளையாயிருந்தது.  {Mark  15:25}

 

அவர்  அடைந்த  ஆக்கினையின்  முகாந்தரத்தைக்  காண்பிக்கும்பொருட்டு,  யூதருடைய  ராஜா<THE  KING  OF  THE  JEWS>  என்று  எழுதி,  சிலுவையின்மேல்  கட்டினார்கள்.  {Mark  15:26}

 

அல்லாமலும்,  அவருடைய  வலதுபக்கத்தில்  ஒருவனும்  அவருடைய  இடதுபக்கத்தில்  ஒருவனுமாக,  இரண்டு  கள்ளரை  அவரோடேகூடச்  சிலுவைகளில்  அறைந்தார்கள்.  {Mark  15:27}

 

அக்கிரமக்காரரில்  ஒருவனாக  எண்ணப்பட்டார்  என்கிற  வேதவாக்கியம்  அதனாலே  நிறைவேறிற்று.  {Mark  15:28}

 

அந்த  வழியாய்  நடந்துபோகிறவர்கள்  தங்கள்  தலைகளைத்  துலுக்கி:  !  !  தேவாலயத்தை  இடித்து,  மூன்று  நாளைக்குள்ளே  கட்டுகிறவனே,  {Mark  15:29}

 

உன்னை  நீயே  இரட்சித்துக்கொள்;  சிலுவையிலிருந்திறங்கிவா  என்று  அவரைத்  தூஷித்தார்கள்.  {Mark  15:30}

 

அப்படியே  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  தங்களுக்குள்ளே  பரியாசம்பண்ணி:  மற்றவர்களை  இரட்சித்தான்,  தன்னைத்தான்  இரட்சித்துக்கொள்ளத்  திராணியில்லை.  {Mark  15:31}

 

நாம்  கண்டு  விசுவாசிக்கத்தக்கதாக  இஸ்ரவேலுக்கு  ராஜாவாகிய  கிறிஸ்து<Christ  the  King  of  Israel>  இப்பொழுது  சிலுவையிலிருந்திறங்கட்டும்  என்று  சொல்லிக்கொண்டார்கள்.  அவரோடேகூடச்  சிலுவைகளில்  அறையப்பட்டவர்களும்  அவரை  நிந்தித்தார்கள்.  {Mark  15:32}

 

ஆறாம்மணி  நேரமுதல்  ஒன்பதாம்மணி  நேரம்வரைக்கும்  பூமியெங்கும்  அந்தகாரம்  உண்டாயிற்று.  {Mark  15:33}

 

ஒன்பதாம்மணி  நேரத்திலே,  இயேசு<Jesus>:  எலோயீ!  எலோயீ!  லாமா  சபக்தானி<Eloi,  Eloi,  lama  sabachthani>,  என்று  மிகுந்த  சத்தமிட்டுக்  கூப்பிட்டார்;  அதற்கு:  என்  தேவனே!  என்  தேவனே!  ஏன்  என்னைக்  கைவிட்டீர்  என்று  அர்த்தமாம்.  {Mark  15:34}

 

அங்கே  நின்றவர்களில்  சிலர்  அதைக்  கேட்டபொழுது:  இதோ,  எலியாவைக்<Elias>  கூப்பிடுகிறான்  என்றார்கள்.  {Mark  15:35}

 

ஒருவன்  ஓடி,  கடற்காளானைக்  காடியிலே  தோய்த்து,  அதை  ஒரு  கோலில்  மாட்டி,  அவருக்குக்  குடிக்கக்கொடுத்து:  பொறுங்கள்,  எலியா<Elias>  இவனை  இறக்க  வருவானோ  பார்ப்போம்  என்றான்.  {Mark  15:36}

 

இயேசு<Jesus>  மகா  சத்தமாய்க்  கூப்பிட்டு  ஜீவனை  விட்டார்.  {Mark  15:37}

 

அப்பொழுது,  தேவாலயத்தின்  திரைச்சீலை  மேல்தொடங்கிக்  கீழ்வரைக்கும்  இரண்டாகக்  கிழிந்தது.  {Mark  15:38}

 

அவருக்கு  எதிரே  நின்ற  நூற்றுக்கு  அதிபதி  அவர்  இப்படிக்  கூப்பிட்டு  ஜீவனை  விட்டதைக்  கண்டபோது:  மெய்யாகவே  இந்த  மனுஷன்  தேவனுடைய  குமாரன்  என்றான்.  {Mark  15:39}

 

சில  ஸ்திரீகளும்  தூரத்திலிருந்து  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  அவர்  கலிலேயாவிலிருந்தபோது<Galilee>  அவருக்குப்  பின்சென்று  ஊழியஞ்செய்துவந்த  மகதலேனா  மரியாளும்<Mary  Magdalene>,  சின்ன  யாக்கோபுக்கும்<James>  யோசேக்கும்<Joses>  தாயாகிய  மரியாளும்<Mary>,  சலோமே<Salome>  என்பவளும்,  {Mark  15:40}

 

அவருடனேகூட  எருசலேமுக்கு<Jerusalem>  வந்திருந்த  வேறே  அநேக  ஸ்திரீகளும்  அவர்களோடே  இருந்தார்கள்.  {Mark  15:41}

 

ஓய்வுநாளுக்கு  முந்தினநாள்  ஆயத்தநாளாயிருந்தபடியால்,  சாயங்காலமானபோது,  {Mark  15:42}

 

கனம்பொருந்திய  ஆலோசனைக்காரனும்  அரிமத்தியா<Arimathaea>  ஊரானும்  தேவனுடைய  ராஜ்யம்  வரக்  காத்திருந்தவனுமாகிய  யோசேப்பு<Joseph>  என்பவன்  வந்து,  பிலாத்துவினிடத்தில்<Pilate>  துணிந்துபோய்,  இயேசுவின்<Jesus>  சரீரத்தைக்  கேட்டான்.  {Mark  15:43}

 

அவர்  இத்தனை  சீக்கிரத்தில்  மரித்துப்போனாரா  என்று  பிலாத்து<Pilate>  ஆச்சரியப்பட்டு,  நூற்றுக்கு  அதிபதியை  அழைப்பித்து:  அவர்  இதற்குள்ளே  மரித்தது  நிச்சயமா  என்று  கேட்டான்.  {Mark  15:44}

 

நூற்றுக்கு  அதிபதியினாலே  அதை  அறிந்துகொண்டபின்பு,  சரீரத்தை  யோசேப்பினிடத்தில்<Joseph>  கொடுத்தான்.  {Mark  15:45}

 

அவன்  போய்,  மெல்லிய  துப்பட்டியை  வாங்கிக்கொண்டுவந்து,  அவரை  இறக்கி,  அந்தத்  துப்பட்டியிலே  சுற்றி,  கன்மலையில்  வெட்டியிருந்த  கல்லறையிலே  அவரை  வைத்து,  கல்லறையின்  வாசலில்  ஒரு  கல்லைப்  புரட்டிவைத்தான்.  {Mark  15:46}

 

அவரை  வைத்த  இடத்தை  மகதலேனா  மரியாளும்<Mary  Magdalene>  யோசேயின்<Joses>  தாயாகிய  மரியாளும்<Mary>  பார்த்தார்கள்.  {Mark  15:47}

 

ஓய்வுநாளானபின்பு  மகதலேனா  மரியாளும்<Mary  Magdalene>,  யாக்கோபின்<James>  தாயாகிய  மரியாளும்<Mary>,  சலோமே<Salome>  என்பவளும்,  அவருக்குச்  சுகந்தவர்க்கமிடும்படி  அவைகளை  வாங்கிக்கொண்டு,  {Mark  16:1}

 

வாரத்தின்  முதலாம்நாள்  அதிகாலையிலே  சூரியன்  உதயமாகிறபோது  கல்லறையினிடத்தில்  வந்து,  {Mark  16:2}

 

கல்லறையின்  வாசலிலிருக்கிற  கல்லை  நமக்காக  எவன்  புரட்டித்தள்ளுவான்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  {Mark  16:3}

 

அந்தக்  கல்  மிகவும்  பெரிதாயிருந்தது;  அவர்கள்  ஏறிட்டுப்பார்க்கிறபோது,  அது  தள்ளப்பட்டிருக்கக்  கண்டார்கள்.  {Mark  16:4}

 

அவர்கள்  கல்லறைக்குள்  பிரவேசித்து,  வெள்ளையங்கி  தரித்தவனாய்  வலதுபக்கத்தில்  உட்கார்ந்திருந்த  ஒரு  வாலிபனைக்  கண்டு  பயந்தார்கள்.  {Mark  16:5}

 

அவன்  அவர்களை  நோக்கி:  பயப்படாதிருங்கள்,  சிலுவையில்  அறையப்பட்ட  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவைத்<Jesus>  தேடுகிறீர்கள்;  அவர்  உயிர்த்தெழுந்தார்;  அவர்  இங்கேயில்லை;  இதோ,  அவரை  வைத்த  இடம்.  {Mark  16:6}

 

நீங்கள்  அவருடைய  சீஷரிடத்திற்கும்  பேதுருவினிடத்திற்கும்<Peter>  போய்:  உங்களுக்கு  முன்னே  கலிலேயாவுக்குப்<Galilee>  போகிறார்,  அவர்  உங்களுக்குச்  சொன்னபடியே  அங்கே  அவரைக்  காண்பீர்கள்  என்று,  அவர்களுக்குச்  சொல்லுங்கள்  என்றான்.  {Mark  16:7}

 

நடுக்கமும்  திகிலும்  அவர்களைப்  பிடித்தபடியால்,  அவர்கள்  சீக்கிரமாய்  வெளியே  வந்து,  கல்லறையை  விட்டு  ஓடினார்கள்;  அவர்கள்  பயந்திருந்தபடியினால்  ஒருவருக்கும்  ஒன்றும்  சொல்லாமற்  போனார்கள்.  {Mark  16:8}

 

வாரத்தின்  முதலாம்நாள்  அதிகாலையிலே  இயேசு<Jesus>  எழுந்திருந்தபின்பு,  மகதலேனா  மரியாளுக்கு<Mary  Magdalene>  முதல்முதல்  தரிசனமானார்.  {Mark  16:9}

 

அவளிடத்திலிருந்து  அவர்  ஏழு  பிசாசுகளைத்  துரத்தியிருந்தார்.  அவள்  புறப்பட்டு,  அவரோடேகூட  இருந்தவர்கள்  துக்கப்பட்டு  அழுதுகொண்டிருக்கையில்,  அவர்களிடத்தில்  போய்,  அந்தச்  செய்தியை  அறிவித்தாள்.  {Mark  16:10}

 

அவர்  உயிரோடிருக்கிறாரென்றும்  அவளுக்குக்  காணப்பட்டார்  என்றும்  அவர்கள்  கேட்டபொழுது  நம்பவில்லை.  {Mark  16:11}

 

அதன்பின்பு  அவர்களில்  இரண்டுபேர்  ஒரு  கிராமத்துக்கு  நடந்துபோகிறபொழுது  அவர்களுக்கு  மறுரூபமாய்த்  தரிசனமானார்.  {Mark  16:12}

 

அவர்களும்  போய்,  அதை  மற்றவர்களுக்கு  அறிவித்தார்கள்;  அவர்களையும்  அவர்கள்  நம்பவில்லை.  {Mark  16:13}

 

அதன்பின்பு  பதினொருவரும்  போஜனபந்தியிலிருக்கையில்  அவர்களுக்கு  அவர்  தரிசனமாகி,  உயிர்த்தெழுந்திருந்த  தம்மைக்  கண்டவர்களை  அவர்கள்  நம்பாமற்போனதினிமித்தம்  அவர்களுடைய  அவிசுவாசத்தைக்குறித்தும்  இருதயகடினத்தைக்குறித்தும்  அவர்களைக்  கடிந்துகொண்டார்.  {Mark  16:14}

 

பின்பு,  அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  உலகமெங்கும்  போய்,  சர்வ  சிருஷ்டிக்கும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கியுங்கள்.  {Mark  16:15}

 

விசுவாசமுள்ளவனாகி  ஞானஸ்நானம்  பெற்றவன்  இரட்சிக்கப்படுவான்;  விசுவாசியாதவனோ  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படுவான்.  {Mark  16:16}

 

விசுவாசிக்கிறவர்களால்  நடக்கும்  அடையாளங்களாவன:  என்  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்துவார்கள்;  நவமான  பாஷைகளைப்  பேசுவார்கள்;  {Mark  16:17}

 

சர்ப்பங்களை  எடுப்பார்கள்;  சாவுக்கேதுவான  யாதொன்றைக்  குடித்தாலும்  அது  அவர்களைச்  சேதப்படுத்தாது;  வியாதியஸ்தர்மேல்  கைகளை  வைப்பார்கள்,  அப்பொழுது  அவர்கள்  சொஸ்தமாவார்கள்  என்றார்.  {Mark  16:18}

 

இவ்விதமாய்க்  கர்த்தர்  அவர்களுடனே  பேசினபின்பு,  பரலோகத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டு,  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  உட்கார்ந்தார்.  {Mark  16:19}

 

அவர்கள்  புறப்பட்டுப்போய்,  எங்கும்  பிரசங்கம்பண்ணினார்கள்.  கர்த்தர்  அவர்களுடனேகூடக்  கிரியையை  நடப்பித்து,  அவர்களால்  நடந்த  அடையாளங்களினாலே  வசனத்தை  உறுதிப்படுத்தினார்.  ஆமென்.  {Mark  16:20}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!