Friday, November 01, 2019

மத்தேயு

ஆபிரகாமின்<Abraham>  குமாரனாகிய  தாவீதின்<David>  குமாரனான  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  வம்ச  வரலாறு:  {Matt  1:1}

 

ஆபிரகாம்<Abraham>  ஈசாக்கைப்<Isaac>  பெற்றான்;  ஈசாக்கு<Isaac>  யாக்கோபைப்<Jacob>  பெற்றான்;  யாக்கோபு<Jacob>  யூதாவையும்<Judas>  அவன்  சகோதரரையும்  பெற்றான்;  {Matt  1:2}

 

யூதா<Judas>  பாரேசையும்<Phares>  சாராவையும்<Zara>  தாமாரினிடத்தில்<Thamar>  பெற்றான்;  பாரேஸ்<Phares>  எஸ்ரோமைப்<Esrom>  பெற்றான்;  எஸ்ரோம்<Esrom>  ஆராமைப்<Aram>  பெற்றான்;  {Matt  1:3}

 

ஆராம்<Aram>  அம்மினதாபைப்<Aminadab>  பெற்றான்;  அம்மினதாப்<Aminadab>  நகசோனைப்<Naasson>  பெற்றான்;  நகசோன்<Naasson>  சல்மோனைப்<Salmon>  பெற்றான்;  {Matt  1:4}

 

சல்மோன்<Salmon>  போவாசை<Booz>  ராகாபினிடத்தில்<Rachab>  பெற்றான்;  போவாஸ்<Booz>  ஓபேதை<Obed>  ரூத்தினிடத்தில்<Ruth>  பெற்றான்;  ஓபேத்<Obed>  ஈசாயைப்<Jesse>  பெற்றான்;  {Matt  1:5}

 

ஈசாய்<Jesse>  தாவீது<David>  ராஜாவைப்  பெற்றான்;  தாவீது<David>  ராஜா  உரியாவின்<Urias>  மனைவியாயிருந்தவளிடத்தில்  சாலொமோனைப்<Solomon>  பெற்றான்;  {Matt  1:6}

 

சாலொமோன்<Solomon>  ரெகொபெயாமைப்<Roboam>  பெற்றான்;  ரெகொபெயாம்<Roboam>  அபியாவைப்<Abia>  பெற்றான்;  அபியா<Abia>  ஆசாவைப்<Asa>  பெற்றான்;  {Matt  1:7}

 

ஆசா<Asa>  யோசபாத்தைப்<Josaphat>  பெற்றான்;  யோசபாத்<Josaphat>  யோராமைப்<Joram>  பெற்றான்;  யோராம்<Joram>  உசியாவைப்<Ozias>  பெற்றான்;  {Matt  1:8}

 

உசியா<Ozias>  யோதாமைப்<Joatham>  பெற்றான்;  யோதாம்<Joatham>  ஆகாசைப்<Achaz>  பெற்றான்;  ஆகாஸ்<Achaz>  எசேக்கியாவைப்<Ezekias>  பெற்றான்;  {Matt  1:9}

 

எசேக்கியா<Ezekias>  மனாசேயைப்<Manasses>  பெற்றான்;  மனாசே<Manasses>  ஆமோனைப்<Amon>  பெற்றான்;  ஆமோன்<Amon>  யோசியாவைப்<Josias>  பெற்றான்;  {Matt  1:10}

 

பாபிலோனுக்குச்<Babylon>  சிறைப்பட்டுப்  போகுங்காலத்தில்,  யோசியா<Josias>  எகொனியாவையும்<Jechonias>  அவனுடைய  சகோதரரையும்  பெற்றான்.  {Matt  1:11}

 

பாபிலோனுக்குச்<Babylon>  சிறைப்பட்டுப்  போனபின்பு,  எகொனியா<Jechonias>  சலாத்தியேலைப்<Salathiel>  பெற்றான்;  சலாத்தியேல்<Salathiel>  சொரொபாபேலைப்<Zorobabel>  பெற்றான்;  {Matt  1:12}

 

சொரொபாபேல்<Zorobabel>  அபியூதைப்<Abiud>  பெற்றான்;  அபியூத்<Abiud>  எலியாக்கீமைப்<Eliakim>  பெற்றான்;  எலியாக்கீம்<Eliakim>  ஆசோரைப்<Azor>  பெற்றான்;  {Matt  1:13}

 

ஆசோர்<Azor>  சாதோக்கைப்<Sadoc>  பெற்றான்;  சாதோக்கு<Sadoc>  ஆகீமைப்<Achim>  பெற்றான்;  ஆகீம்<Achim>  எலியூதைப்<Eliud>  பெற்றான்;  {Matt  1:14}

 

எலியூத்<Eliud>  எலெயாசாரைப்<Eleazar>  பெற்றான்;  எலெயாசார்<Eleazar>  மாத்தானைப்<Matthan>  பெற்றான்;  மாத்தான்<Matthan>  யாக்கோபைப்<Jacob>  பெற்றான்;  {Matt  1:15}

 

யாக்கோபு<Jacob>  மரியாளுடைய<Mary>  புருஷனாகிய  யோசேப்பைப்<Joseph>  பெற்றான்;  அவளிடத்தில்  கிறிஸ்து<Christ>  என்னப்படுகிற  இயேசு<Jesus>  பிறந்தார்.  {Matt  1:16}

 

இவ்விதமாய்  உண்டான  தலைமுறைகளெல்லாம்  ஆபிரகாம்முதல்<Abraham>  தாவீதுவரைக்கும்<David>  பதினாலு  தலைமுறைகளும்;  தாவீதுமுதல்<David>  பாபிலோனுக்குச்<Babylon>  சிறைப்பட்டுப்போன  காலம்வரைக்கும்  பதினாலு  தலைமுறைகளும்;  பாபிலோனுக்குச்<Babylon>  சிறைப்பட்டுப்போன  காலமுதல்  கிறிஸ்துவரைக்கும்<Christ>  பதினாலு  தலைமுறைகளுமாம்.  {Matt  1:17}

 

இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  ஜெநநத்தின்  விவரமாவது:  அவருடைய  தாயாகிய  மரியாள்<Mary>  யோசேப்புக்கு<Joseph>  நியமிக்கப்பட்டிருக்கையில்,  அவர்கள்  கூடிவருமுன்னே,  அவள்  பரிசுத்த  ஆவியினாலே  கர்ப்பவதியானாள்  என்று  காணப்பட்டது.  {Matt  1:18}

 

அவள்  புருஷனாகிய  யோசேப்பு<Joseph>  நீதிமானாயிருந்து,  அவளை  அவமானப்படுத்த  மனதில்லாமல்,  இரகசியமாய்  அவளைத்  தள்ளிவிட  யோசனையாயிருந்தான்.  {Matt  1:19}

 

அவன்  இப்படிச்  சிந்தித்துக்கொண்டிருக்கையில்,  கர்த்தருடைய  தூதன்  சொப்பனத்தில்  அவனுக்குக்  காணப்பட்டு:  தாவீதின்<David>  குமாரனாகிய  யோசேப்பே<Joseph>,  உன்  மனைவியாகிய  மரியாளைச்<Mary>  சேர்த்துக்கொள்ள  ஐயப்படாதே;  அவளிடத்தில்  உற்பத்தியாயிருக்கிறது  பரிசுத்த  ஆவியினால்  உண்டானது.  {Matt  1:20}

 

அவள்  ஒரு  குமாரனைப்  பெறுவாள்,  அவருக்கு  இயேசு<JESUS>  என்று  பேரிடுவாயாக;  ஏனெனில்  அவர்  தமது  ஜனங்களின்  பாவங்களை  நீக்கி  அவர்களை  இரட்சிப்பார்  என்றான்.  {Matt  1:21}

 

தீர்க்கதரிசியின்  மூலமாய்க்  கர்த்தராலே  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இதெல்லாம்  நடந்தது.  {Matt  1:22}

 

அவன்:  இதோ,  ஒரு  கன்னிகை  கர்ப்பவதியாகி  ஒரு  குமாரனைப்  பெறுவாள்;  அவருக்கு  இம்மானுவேல்<Emmanuel>  என்று  பேரிடுவார்கள்  என்று  சொன்னான்.  இம்மானுவேல்<Emmanuel>  என்பதற்குத்  தேவன்  நம்மோடிருக்கிறார்  என்று  அர்த்தமாம்.  {Matt  1:23}

 

யோசேப்பு<Joseph>  நித்திரை  தெளிந்து  எழுந்து,  கர்த்தருடைய  தூதன்  தனக்குக்  கட்டளையிட்டபடியே  தன்  மனைவியைச்  சேர்த்துக்கொண்டு;  {Matt  1:24}

 

அவள்  தன்  முதற்பேறான  குமாரனைப்  பெறுமளவும்  அவளை  அறியாதிருந்து,  அவருக்கு  இயேசு<JESUS>  என்று  பேரிட்டான்.  {Matt  1:25}

 

ஏரோதுராஜாவின்<Herod>  நாட்களில்  யூதேயாவிலுள்ள<Judaea>  பெத்லெகேமிலே<Bethlehem>  இயேசு<Jesus>  பிறந்தபொழுது,  கிழக்கிலிருந்து  சாஸ்திரிகள்  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  {Matt  2:1}

 

யூதருக்கு<Jews>  ராஜாவாகப்  பிறந்திருக்கிறவர்  எங்கே?  கிழக்கிலே  அவருடைய  நட்சத்திரத்தைக்  கண்டு,  அவரைப்  பணிந்துகொள்ள  வந்தோம்  என்றார்கள்.  {Matt  2:2}

 

ஏரோதுராஜா<Herod>  அதைக்  கேட்டபொழுது,  அவனும்  அவனோடுகூட  எருசலேம்<Jerusalem>  நகரத்தார்  அனைவரும்  கலங்கினார்கள்.  {Matt  2:3}

 

அவன்  பிரதான  ஆசாரியர்  ஜனத்தின்  வேதபாரகர்  எல்லாரையும்  கூடிவரச்செய்து:  கிறிஸ்துவானவர்<Christ>  எங்கே  பிறப்பாரென்று  அவர்களிடத்தில்  விசாரித்தான்.  {Matt  2:4}

 

அதற்கு  அவர்கள்:  யூதேயாவிலுள்ள<Judaea>  பெத்லெகேமிலே<Bethlehem>  பிறப்பார்;  அதேனென்றால்:  {Matt  2:5}

 

யூதேயா<Juda>  தேசத்திலுள்ள  பெத்லெகேமே<Bethlehem>,  யூதாவின்<Juda>  பிரபுக்களில்  நீ  சிறியதல்ல;  என்  ஜனமாகிய  இஸ்ரவேலை<Israel>  ஆளும்  பிரபு  உன்னிடத்திலிருந்து  புறப்படுவார்  என்று,  தீர்க்கதரிசியினால்  எழுதப்பட்டிருக்கிறது  என்றார்கள்.  {Matt  2:6}

 

அப்பொழுது  ஏரோது<Herod>,  சாஸ்திரிகளை  இரகசியமாய்  அழைத்து,  நட்சத்திரம்  காணப்பட்ட  காலத்தைக்குறித்து  அவர்களிடத்தில்  திட்டமாய்  விசாரித்து:  {Matt  2:7}

 

நீங்கள்  போய்,  பிள்ளையைக்குறித்துத்  திட்டமாய்  விசாரியுங்கள்;  நீங்கள்  அதைக்  கண்டபின்பு,  நானும்  வந்து  அதைப்  பணிந்துகொள்ளும்படி  எனக்கு  அறிவியுங்கள்  என்று  சொல்லி,  அவர்களைப்  பெத்லெகேமுக்கு<Bethlehem>  அனுப்பினான்.  {Matt  2:8}

 

ராஜா  சொன்னதை  அவர்கள்  கேட்டுப்  போகையில்,  இதோ,  அவர்கள்  கிழக்கிலே  கண்ட  நட்சத்திரம்  பிள்ளை  இருந்த  ஸ்தலத்திற்குமேல்  வந்து  நிற்கும்வரைக்கும்  அவர்களுக்குமுன்  சென்றது.  {Matt  2:9}

 

அவர்கள்  அந்த  நட்சத்திரத்தைக்  கண்டபோது,  மிகுந்த  ஆனந்த  சந்தோஷமடைந்தார்கள்.  {Matt  2:10}

 

அவர்கள்  அந்த  வீட்டுக்குள்  பிரவேசித்து,  பிள்ளையையும்  அதின்  தாயாகிய  மரியாளையும்<Mary>  கண்டு,  சாஷ்டாங்கமாய்  விழுந்து  அதைப்  பணிந்துகொண்டு,  தங்கள்  பொக்கிஷங்களைத்  திறந்து,  பொன்னையும்  தூபவர்க்கத்தையும்  வெள்ளைப்போளத்தையும்  அதற்குக்  காணிக்கையாக  வைத்தார்கள்.  {Matt  2:11}

 

பின்பு,  அவர்கள்  ஏரோதினிடத்திற்குத்<Herod>  திரும்பிப்  போகவேண்டாமென்று  சொப்பனத்தில்  தேவனால்  எச்சரிக்கப்பட்டு,  வேறு  வழியாய்த்  தங்கள்  தேசத்திற்குத்  திரும்பிப்போனார்கள்.  {Matt  2:12}

 

அவர்கள்  போனபின்பு,  கர்த்தருடைய  தூதன்  சொப்பனத்தில்  யோசேப்புக்குக்<Joseph>  காணப்பட்டு:  ஏரோது<Herod>  பிள்ளையைக்  கொலைசெய்யத்  தேடுவான்;  ஆதலால்  நீ  எழுந்து,  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு  எகிப்துக்கு<Egypt>  ஓடிப்போய்,  நான்  உனக்குச்  சொல்லும்வரைக்கும்  அங்கே  இரு  என்றான்.  {Matt  2:13}

 

அவன்  எழுந்து,  இரவிலே  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு,  எகிப்துக்குப்<Egypt>  புறப்பட்டுப்போய்,  {Matt  2:14}

 

ஏரோதின்<Herod>  மரணபரியந்தம்  அங்கே  இருந்தான்.  எகிப்திலிருந்து<Egypt>  என்னுடைய  குமாரனை  வரவழைத்தேன்  என்று,  தீர்க்கதரிசியின்  மூலமாய்க்  கர்த்தரால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  {Matt  2:15}

 

அப்பொழுது  ஏரோது<Herod>  தான்  சாஸ்திரிகளால்  வஞ்சிக்கப்பட்டதைக்  கண்டு,  மிகுந்த  கோபமடைந்து,  ஆட்களை  அனுப்பி,  தான்  சாஸ்திரிகளிடத்தில்  திட்டமாய்  விசாரித்த  காலத்தின்படியே,  பெத்லெகேமிலும்<Bethlehem>  அதின்  சகல  எல்லைகளிலுமிருந்த  இரண்டு  வயதுக்குட்பட்ட  எல்லா  ஆண்பிள்ளைகளையும்  கொலைசெய்தான்.  {Matt  2:16}

 

புலம்பலும்  அழுகையும்  மிகுந்த  துக்கங்கொண்டாடலுமாகிய  கூக்குரல்  ராமாவிலே<Rama>  கேட்கப்பட்டது;  ராகேல்<Rachel>  தன்  பிள்ளைகளுக்காக  அழுது,  அவைகள்  இல்லாதபடியால்  ஆறுதலடையாதிருக்கிறாள்  என்று,  {Matt  2:17}

 

எரேமியா<Jeremy>  தீர்க்கதரிசியினால்  உரைக்கப்பட்டது  அப்பொழுது  நிறைவேறிற்று.  {Matt  2:18}

 

ஏரோது<Herod>  இறந்தபின்பு,  கர்த்தருடைய  தூதன்  எகிப்திலே<Egypt>  யோசேப்புக்குச்<Joseph>  சொப்பனத்தில்  காணப்பட்டு:  {Matt  2:19}

 

நீ  எழுந்து,  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு,  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்குப்  போ;  பிள்ளையின்  பிராணனை  வாங்கத்தேடினவர்கள்  இறந்துபோனார்கள்  என்றான்.  {Matt  2:20}

 

அவன்  எழுந்து  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்கு  வந்தான்.  {Matt  2:21}

 

ஆகிலும்,  அர்கெலாயு<Archelaus>  தன்  தகப்பனாகிய  ஏரோதின்<Herod>  பட்டத்துக்கு  வந்து,  யூதேயாவில்<Judaea>  அரசாளுகிறான்  என்று  கேள்விப்பட்டு,  அங்கே  போகப்  பயந்தான்.  அப்பொழுது,  அவன்  சொப்பனத்தில்  தேவனால்  எச்சரிக்கப்பட்டு,  கலிலேயா<Galilee>  நாட்டின்  புறங்களிலே  விலகிப்போய்,  {Matt  2:22}

 

நாசரேத்து<Nazareth>  என்னும்  ஊரிலே  வந்து  வாசம்பண்ணினான்.  நசரேயன்<Nazarene>  என்னப்படுவார்  என்று,  தீர்க்கதரிசிகளால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  {Matt  2:23}

 

அந்நாட்களில்  யோவான்ஸ்நானன்<John  the  Baptist>  யூதேயாவின்<Judaea>  வனாந்தரத்தில்  வந்து:  {Matt  3:1}

 

மனந்திரும்புங்கள்,  பரலோகராஜ்யம்  சமீபித்திருக்கிறது  என்று  பிரசங்கம்  பண்ணினான்.  {Matt  3:2}

 

கர்த்தருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்;  அவருக்குப்  பாதைகளைச்  செவ்வைபண்ணுங்கள்  என்று  வனாந்தரத்திலே  கூப்பிடுகிறவனுடைய  சத்தம்  உண்டென்று,  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியினால்  சொல்லப்பட்டவன்  இவனே.  {Matt  3:3}

 

இந்த  யோவான்<John>  ஒட்டகமயிர்  உடையைத்  தரித்து,  தன்  அரையில்  வார்க்கச்சையைக்  கட்டிக்கொண்டிருந்தான்;  வெட்டுக்கிளியும்  காட்டுத்  தேனும்  அவனுக்கு  ஆகாரமாயிருந்தது.  {Matt  3:4}

 

அப்பொழுது,  எருசலேம்<Jerusalem>  நகரத்தாரும்,  யூதேயா<Judaea>  தேசத்தார்  அனைவரும்,  யோர்தானுக்கு<Jordan>  அடுத்த  சுற்றுப்புறத்தார்  யாவரும்  அவனிடத்திற்குப்  போய்,  {Matt  3:5}

 

தங்கள்  பாவங்களை  அறிக்கையிட்டு,  யோர்தான்<Jordan>  நதியில்  அவனால்  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  {Matt  3:6}

 

பரிசேயரிலும்<Pharisees>  சதுசேயரிலும்<Sadducees>  அநேகர்  தன்னிடத்தில்  ஞானஸ்நானம்  பெறும்படி  வருகிறதை  அவன்  கண்டு:  விரியன்  பாம்புக்  குட்டிகளே!  வருங்கோபத்துக்குத்  தப்பித்துக்கொள்ள  உங்களுக்கு  வகைகாட்டினவன்  யார்?  {Matt  3:7}

 

மனந்திரும்புதலுக்கு  ஏற்ற  கனிகளைக்  கொடுங்கள்.  {Matt  3:8}

 

ஆபிரகாம்<Abraham>  எங்களுக்குத்  தகப்பன்  என்று  உங்களுக்குள்ளே  சொல்லிக்கொள்ள  நினையாதிருங்கள்;  தேவன்  இந்தக்  கல்லுகளினாலே  ஆபிரகாமுக்குப்<Abraham>  பிள்ளைகளை  உண்டுபண்ண  வல்லவராயிருக்கிறார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  3:9}

 

இப்பொழுதே  கோடரியானது  மரங்களின்  வேர்  அருகே  வைத்திருக்கிறது;  ஆகையால்,  நல்ல  கனிகொடாத  மரமெல்லாம்  வெட்டுண்டு  அக்கினியிலே  போடப்படும்.  {Matt  3:10}

 

மனந்திரும்புதலுக்கென்று  நான்  ஜலத்தினால்  உங்களுக்கு  ஞானஸ்நானங்  கொடுக்கிறேன்;  எனக்குப்பின்  வருகிறவரோ  என்னிலும்  வல்லவராயிருக்கிறார்,  அவருடைய  பாதரட்சைகளைச்  சுமக்கிறதற்கு  நான்  பாத்திரன்  அல்ல;  அவர்  பரிசுத்த  ஆவியினாலும்  அக்கினியினாலும்  உங்களுக்கு  ஞானஸ்நானம்  கொடுப்பார்.  {Matt  3:11}

 

தூற்றுக்கூடை  அவர்  கையில்  இருக்கிறது;  அவர்  தமது  களத்தை  நன்றாய்  விளக்கி,  தமது  கோதுமையைக்  களஞ்சியத்தில்  சேர்ப்பார்;  பதரையோ  அவியாத  அக்கினியினால்  சுட்டெரிப்பார்  என்றான்.  {Matt  3:12}

 

அப்பொழுது  யோவானால்<John>  ஞானஸ்நானம்  பெறுவதற்கு  இயேசு<Jesus>  கலிலேயாவைவிட்டு<Galilee>  யோர்தானுக்கு<Jordan>  அருகே  அவனிடத்தில்  வந்தார்.  {Matt  3:13}

 

யோவான்<John>  அவருக்குத்  தடை  செய்து:  நான்  உம்மாலே  ஞானஸ்நானம்  பெறவேண்டியதாயிருக்க,  நீர்  என்னிடத்தில்  வரலாமா  என்றான்.  {Matt  3:14}

 

இயேசு<Jesus>  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  இப்பொழுது  இடங்கொடு,  இப்படி  எல்லா  நீதியையும்  நிறைவேற்றுவது  நமக்கு  ஏற்றதாயிருக்கிறது  என்றார்.  அப்பொழுது  அவருக்கு  இடங்கொடுத்தான்.  {Matt  3:15}

 

இயேசு<Jesus>  ஞானஸ்நானம்  பெற்று,  ஜலத்திலிருந்து  கரையேறினவுடனே,  இதோ,  வானம்  அவருக்குத்  திறக்கப்பட்டது;  தேவ  ஆவி  புறாவைப்போல  இறங்கி,  தம்மேல்  வருகிறதைக்  கண்டார்.  {Matt  3:16}

 

அன்றியும்,  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகி:  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவரில்  பிரியமாயிருக்கிறேன்  என்று  உரைத்தது.  {Matt  3:17}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  பிசாசினால்  சோதிக்கப்படுவதற்கு  ஆவியானவராலே  வனாந்தரத்திற்குக்  கொண்டுபோகப்பட்டார்.  {Matt  4:1}

 

அவர்  இரவும்  பகலும்  நாற்பதுநாள்  உபவாசமாயிருந்தபின்பு,  அவருக்குப்  பசியுண்டாயிற்று.  {Matt  4:2}

 

அப்பொழுது  சோதனைக்காரன்  அவரிடத்தில்  வந்து:  நீர்  தேவனுடைய  குமாரனேயானால்,  இந்தக்  கல்லுகள்  அப்பங்களாகும்படி  சொல்லும்  என்றான்.  {Matt  4:3}

 

அவர்  பிரதியுத்தரமாக:  மனுஷன்  அப்பத்தினாலேமாத்திரமல்ல,  தேவனுடைய  வாயிலிருந்து  புறப்படுகிற  ஒவ்வொரு  வார்த்தையினாலும்  பிழைப்பான்  என்று  எழுதியிருக்கிறதே  என்றார்.  {Matt  4:4}

 

அப்பொழுது  பிசாசு  அவரைப்  பரிசுத்த  நகரத்திற்குக்  கொண்டுபோய்,  தேவாலயத்து  உப்பரிகையின்மேல்  அவரை  நிறுத்தி:  {Matt  4:5}

 

நீர்  தேவனுடைய  குமாரனேயானால்  தாழக்குதியும்;  ஏனெனில்,  தம்முடைய  தூதர்களுக்கு  உம்மைக்குறித்துக்  கட்டளையிடுவார்;  உமது  பாதம்  கல்லில்  இடறாதபடிக்கு,  அவர்கள்  உம்மைக்  கைகளில்  ஏந்திக்கொண்டு  போவார்கள்  என்பதாய்  எழுதியிருக்கிறது  என்று  சொன்னான்.  {Matt  4:6}

 

அதற்கு  இயேசு<Jesus>:  உன்  தேவனாகிய  கர்த்தரைப்  பரீட்சை  பாராதிருப்பாயாக  என்றும்  எழுதியிருக்கிறதே  என்றார்.  {Matt  4:7}

 

மறுபடியும்,  பிசாசு  அவரை  மிகவும்  உயர்ந்த  மலையின்மேல்  கொண்டுபோய்,  உலகத்தின்  சகல  ராஜ்யங்களையும்  அவைகளின்  மகிமையையும்  அவருக்குக்  காண்பித்து:  {Matt  4:8}

 

நீர்  சாஷ்டாங்கமாய்  விழுந்து,  என்னைப்  பணிந்துகொண்டால்,  இவைகளையெல்லாம்  உமக்குத்  தருவேன்  என்று  சொன்னான்.  {Matt  4:9}

 

அப்பொழுது  இயேசு<Jesus>:  அப்பாலே  போ  சாத்தானே;  உன்  தேவனாகிய  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  அவர்  ஒருவருக்கே  ஆராதனை  செய்வாயாக  என்று  எழுதியிருக்கிறதே  என்றார்.  {Matt  4:10}

 

அப்பொழுது  பிசாசானவன்  அவரை  விட்டு  விலகிப்போனான்.  உடனே  தேவதூதர்கள்  வந்து,  அவருக்குப்  பணிவிடை  செய்தார்கள்.  {Matt  4:11}

 

யோவான்<John>  காவலில்  வைக்கப்பட்டான்  என்று  இயேசு<Jesus>  கேள்விப்பட்டு,  கலிலேயாவுக்குப்<Galilee>  போய்,  {Matt  4:12}

 

நாசரேத்தை<Nazareth>  விட்டு,  செபுலோன்<Zabulon>  நப்தலி<Nephthalim>  என்னும்  நாடுகளின்  எல்லைகளிலிருக்கும்  கடற்கரைக்கு  அருகான  கப்பர்நகூமிலே<Capernaum>  வந்து  வாசம்பண்ணினார்.  {Matt  4:13}

 

கடற்கரையருகிலும்  யோர்தானுக்கு<Jordan>  அப்புறத்திலுமுள்ள  செபுலோன்<Zabulon>  நாடும்  நப்தலி<Nephthalim>  நாடும்  ஆகிய  புறஜாதியாருடைய  கலிலேயாவிலே<Galilee>,  {Matt  4:14}

 

இருளில்  இருக்கும்  ஜனங்கள்  பெரிய  வெளிச்சத்தைக்  கண்டார்கள்;  மரண  இருளின்  திசையிலிருக்கிறவர்களுக்கு  வெளிச்சம்  உதித்தது  என்று,  {Matt  4:15}

 

ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியினால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  {Matt  4:16}

 

அதுமுதல்  இயேசு<Jesus>:  மனந்திரும்புங்கள்,  பரலோகராஜ்யம்  சமீபித்திருக்கிறது  என்று  பிரசங்கிக்கத்  தொடங்கினார்.  {Matt  4:17}

 

இயேசு<Jesus>  கலிலேயாக்<Galilee>  கடலோரமாய்  நடந்துபோகையில்,  மீன்பிடிக்கிறவர்களாயிருந்த  இரண்டு  சகோதரராகிய  பேதுரு<Peter>  என்னப்பட்ட  சீமோனும்<Simon>,  அவன்  சகோதரன்  அந்திரேயாவும்<Andrew>,  கடலில்  வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது,  அவர்களைக்  கண்டு:  {Matt  4:18}

 

என்  பின்னே  வாருங்கள்,  உங்களை  மனுஷரைப்  பிடிக்கிறவர்களாக்குவேன்  என்றார்.  {Matt  4:19}

 

உடனே  அவர்கள்  வலைகளை  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Matt  4:20}

 

அவர்  அவ்விடம்  விட்டுப்  போகையில்,  வேறே  இரண்டு  சகோதரராகிய  செபெதேயுவின்<Zebedee>  மகன்  யாக்கோபும்<James>,  அவன்  சகோதரன்  யோவானும்<John>  தங்கள்  தகப்பன்  செபெதேயுவுடனே<Zebedee>  படவிலிருந்து,  தங்கள்  வலைகளைப்  பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது,  அவர்களைக்  கண்டு,  அவர்களையும்  அழைத்தார்.  {Matt  4:21}

 

உடனே  அவர்கள்  படவையும்  தங்கள்  தகப்பனையும்  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Matt  4:22}

 

பின்பு,  இயேசு<Jesus>  கலிலேயா<Galilee>  எங்கும்  சுற்றி  நடந்து,  அவர்களுடைய  ஜெப  ஆலயங்களில்  உபதேசித்து,  ராஜ்யத்தின்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து,  ஜனங்களுக்கு  உண்டாயிருந்த  சகல  வியாதிகளையும்  சகல  நோய்களையும்  நீக்கிச்  சொஸ்தமாக்கினார்.  {Matt  4:23}

 

அவருடைய  கீர்த்தி  சீரியா<Syria>  எங்கும்  பிரசித்தமாயிற்று.  அப்பொழுது  பலவித  வியாதிகளையும்  வேதனைகளையும்  அடைந்திருந்த  சகல  பிணியாளிகளையும்,  பிசாசு  பிடித்தவர்களையும்  சந்திரரோகிகளையும்,  திமிர்வாதக்காரரையும்  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  {Matt  4:24}

 

கலிலேயாவிலும்<Galilee>,  தெக்கப்போலியிலும்<Decapolis>,  எருசலேமிலும்<Jerusalem>,  யூதேயாவிலும்<Judaea>,  யோர்தானுக்கு<Jordan>  அப்புறத்திலும்  இருந்து  திரளான  ஜனங்கள்  வந்து,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Matt  4:25}

 

அவர்  திரளான  ஜனங்களைக்  கண்டு  மலையின்மேல்  ஏறினார்;  அவர்  உட்கார்ந்தபொழுது,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்தார்கள்.  {Matt  5:1}

 

அப்பொழுது  அவர்  தமது  வாயைத்  திறந்து  அவர்களுக்கு  உபதேசித்துச்  சொன்னது  என்னவென்றால்:  {Matt  5:2}

 

ஆவியில்  எளிமையுள்ளவர்கள்  பாக்கியவான்கள்;  பரலோகராஜ்யம்  அவர்களுடையது.  {Matt  5:3}

 

துயரப்படுகிறவர்கள்  பாக்கியவான்கள்;  அவர்கள்  ஆறுதலடைவார்கள்.  {Matt  5:4}

 

சாந்தகுணமுள்ளவர்கள்  பாக்கியவான்கள்;  அவர்கள்  பூமியைச்  சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.  {Matt  5:5}

 

நீதியின்மேல்  பசிதாகமுள்ளவர்கள்  பாக்கியவான்கள்;  அவர்கள்  திருப்தியடைவார்கள்.  {Matt  5:6}

 

இரக்கமுள்ளவர்கள்  பாக்கியவான்கள்;  அவர்கள்  இரக்கம்  பெறுவார்கள்.  {Matt  5:7}

 

இருதயத்தில்  சுத்தமுள்ளவர்கள்  பாக்கியவான்கள்;  அவர்கள்  தேவனைத்  தரிசிப்பார்கள்.  {Matt  5:8}

 

சமாதானம்பண்ணுகிறவர்கள்  பாக்கியவான்கள்;  அவர்கள்  தேவனுடைய  புத்திரர்  என்னப்படுவார்கள்.  {Matt  5:9}

 

நீதியினிமித்தம்  துன்பப்படுகிறவர்கள்  பாக்கியவான்கள்;  பரலோகராஜ்யம்  அவர்களுடையது.  {Matt  5:10}

 

என்னிமித்தம்  உங்களை  நிந்தித்துத்  துன்பப்படுத்தி,  பலவித  தீமையான  மொழிகளையும்  உங்கள்பேரில்  பொய்யாய்ச்  சொல்வார்களானால்  பாக்கியவான்களாயிருப்பீர்கள்;  {Matt  5:11}

 

சந்தோஷப்பட்டு,  களிகூருங்கள்;  பரலோகத்தில்  உங்கள்  பலன்  மிகுதியாயிருக்கும்;  உங்களுக்கு  முன்னிருந்த  தீர்க்கதரிசிகளையும்  அப்படியே  துன்பப்படுத்தினார்களே.  {Matt  5:12}

 

நீங்கள்  பூமிக்கு  உப்பாயிருக்கிறீர்கள்;  உப்பானது  சாரமற்றுப்போனால்,  எதினால்  சாரமாக்கப்படும்?  வெளியே  கொட்டப்படுவதற்கும்,  மனுஷரால்  மிதிக்கப்படுவதற்குமே  ஒழிய  வேறொன்றுக்கும்  உதவாது.  {Matt  5:13}

 

நீங்கள்  உலகத்துக்கு  வெளிச்சமாயிருக்கிறீர்கள்;  மலையின்மேல்  இருக்கிற  பட்டணம்  மறைந்திருக்கமாட்டாது.  {Matt  5:14}

 

விளக்கைக்  கொளுத்தி  மரக்காலால்  மூடிவைக்காமல்,  விளக்குத்  தண்டின்மேல்  வைப்பார்கள்;  அப்பொழுது  அது  வீட்டிலுள்ள  யாவருக்கும்  வெளிச்சம்  கொடுக்கும்.  {Matt  5:15}

 

இவ்விதமாய்,  மனுஷர்  உங்கள்  நற்கிரியைகளைக்  கண்டு,  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதாவை  மகிமைப்படுத்தும்படி,  உங்கள்  வெளிச்சம்  அவர்கள்  முன்பாகப்  பிரகாசிக்கக்கடவது.  {Matt  5:16}

 

நியாயப்பிரமாணத்தையானாலும்  தீர்க்கதரிசனங்களையானாலும்  அழிக்கிறதற்கு  வந்தேன்  என்று  எண்ணிக்கொள்ளாதேயுங்கள்;  அழிக்கிறதற்கு  அல்ல,  நிறைவேற்றுகிறதற்கே  வந்தேன்.  {Matt  5:17}

 

வானமும்  பூமியும்  ஒழிந்துபோனாலும்,  நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம்  நிறைவேறுமளவும்,  அதில்  ஒரு  சிறு  எழுத்தாகிலும்,  ஒரு  எழுத்தின்  உறுப்பாகிலும்  ஒழிந்துபோகாது  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  5:18}

 

ஆகையால்,  இந்தக்  கற்பனைகள்  எல்லாவற்றிலும்  சிறிதானதொன்றையாகிலும்  மீறி,  அவ்விதமாய்  மனுஷருக்குப்  போதிக்கிறவன்  பரலோகராஜ்யத்தில்  எல்லாரிலும்  சிறியவன்  என்னப்படுவான்;  இவைகளைக்  கைக்கொண்டு  போதிக்கிறவனோ,  பரலோகராஜ்யத்தில்  பெரியவன்  என்னப்படுவான்.  {Matt  5:19}

 

வேதபாரகர்  பரிசேயர்<Pharisees>  என்பவர்களுடைய  நீதியிலும்  உங்கள்  நீதி  அதிகமாயிராவிட்டால்,  பரலோகராஜ்யத்தில்  பிரவேசிக்கமாட்டீர்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  5:20}

 

கொலை  செய்யாதிருப்பாயாக  என்பதும்,  கொலைசெய்கிறவன்  நியாயத்தீர்ப்புக்கு  ஏதுவாயிருப்பான்  என்பதும்,  பூர்வத்தாருக்கு  உரைக்கப்பட்டதென்று  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  {Matt  5:21}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  தன்  சகோதரனை  நியாயமில்லாமல்  கோபித்துக்கொள்பவன்  நியாயத்தீர்ப்புக்கு  ஏதுவாயிருப்பான்;  தன்  சகோதரனை  வீணனென்று  சொல்லுகிறவன்  ஆலோசனைச்  சங்கத்தீர்ப்புக்கு  ஏதுவாயிருப்பான்;  மூடனே  என்று  சொல்லுகிறவன்  எரிநரகத்துக்கு  ஏதுவாயிருப்பான்.  {Matt  5:22}

 

ஆகையால்,  நீ  பலிபீடத்தினிடத்தில்  உன்  காணிக்கையைச்  செலுத்த  வந்து,  உன்பேரில்  உன்  சகோதரனுக்குக்  குறைஉண்டென்று  அங்கே  நினைவுகூருவாயாகில்,  {Matt  5:23}

 

அங்கேதானே  பலிபீடத்தின்  முன்  உன்  காணிக்கையை  வைத்துவிட்டுப்  போய்,  முன்பு  உன்  சகோதரனோடே  ஒப்புரவாகி,  பின்பு  வந்து  உன்  காணிக்கையைச்  செலுத்து.  {Matt  5:24}

 

எதிராளி  உன்னை  நியாயாதிபதியினிடத்தில்  ஒப்புக்கொடாமலும்,  நியாயாதிபதி  உன்னைச்  சேவகனிடத்தில்  ஒப்புக்கொடாமலும்,  நீ  சிறைச்சாலையில்  வைக்கப்படாமலும்  இருக்கும்படியாக,  நீ  உன்  எதிராளியோடு  வழியில்  இருக்கும்போதே  சீக்கிரமாய்  அவனுடனே  நல்மனம்  பொருந்து.  {Matt  5:25}

 

பொருந்தாவிட்டால்,  நீ  ஒரு  காசும்  குறைவின்றிக்  கொடுத்துத்  தீர்க்குமட்டும்  அவ்விடத்திலிருந்து  புறப்படமாட்டாய்  என்று,  மெய்யாகவே  உனக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  5:26}

 

விபசாரஞ்  செய்யாதிருப்பாயாக  என்பது  பூர்வத்தாருக்கு  உரைக்கப்பட்டதென்று  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  {Matt  5:27}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  ஒரு  ஸ்திரீயை  இச்சையோடு  பார்க்கிற  எவனும்  தன்  இருதயத்தில்  அவளோடே  விபசாரஞ்செய்தாயிற்று.  {Matt  5:28}

 

உன்  வலது  கண்  உனக்கு  இடறலுண்டாக்கினால்,  அதைப்  பிடுங்கி  எறிந்துபோடு;  உன்  சரீரம்  முழுவதும்  நரகத்தில்  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  உன்  அவயவங்களில்  ஒன்று  கெட்டுப்போவது  உனக்கு  நலமாயிருக்கும்.  {Matt  5:29}

 

உன்  வலதுகை  உனக்கு  இடறலுண்டாக்கினால்,  அதைத்  தறித்து  எறிந்துபோடு;  உன்  சரீரம்  முழுவதும்  நரகத்தில்  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  உன்  அவயவங்களில்  ஒன்று  கெட்டுப்போவது  உனக்கு  நலமாயிருக்கும்.  {Matt  5:30}

 

தன்  மனைவியைத்  தள்ளிவிடுகிற  எவனும்,  தள்ளுதற்சீட்டை  அவளுக்குக்  கொடுக்கக்கடவன்  என்று  உரைக்கப்பட்டது.  {Matt  5:31}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  வேசித்தன  முகாந்தரத்தினாலொழிய  தன்  மனைவியைத்  தள்ளிவிடுகிறவன்,  அவளை  விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்;  அப்படித்  தள்ளிவிடப்பட்டவளை  விவாகம்பண்ணுகிறவனும்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.  {Matt  5:32}

 

அன்றியும்,  பொய்யாணையிடாமல்,  உன்  ஆணைகளைக்  கர்த்தர்  முன்னிலையாய்ச்  செலுத்துவாயாக  என்று  பூர்வத்தாருக்கு  உரைக்கப்பட்டதென்று  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  {Matt  5:33}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  பரிச்சேதம்  சத்தியம்பண்ணவேண்டாம்;  வானத்தின்பேரில்  சத்தியம்பண்ணவேண்டாம்,  அது  தேவனுடைய  சிங்காசனம்.  {Matt  5:34}

 

பூமியின்பேரிலும்  சத்தியம்பண்ணவேண்டாம்,  அது  அவருடைய  பாதபடி;  எருசலேமின்பேரிலும்<Jerusalem>  சத்தியம்பண்ணவேண்டாம்,  அது  மகாராஜாவினுடைய  நகரம்.  {Matt  5:35}

 

உன்  சிரசின்பேரிலும்  சத்தியம்பண்ணவேண்டாம்,  அதின்  ஒரு  மயிரையாவது  வெண்மையாக்கவும்  கறுப்பாக்கவும்  உன்னால்  கூடாதே.  {Matt  5:36}

 

உள்ளதை  உள்ளதென்றும்,  இல்லதை  இல்லதென்றும்  சொல்லுங்கள்;  இதற்கு  மிஞ்சினது  தீமையினால்  உண்டாயிருக்கும்.  {Matt  5:37}

 

கண்ணுக்குக்  கண்,  பல்லுக்குப்  பல்  என்று,  உரைக்கப்பட்டதைக்  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  {Matt  5:38}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  தீமையோடு  எதிர்த்து  நிற்கவேண்டாம்;  ஒருவன்  உன்னை  வலது  கன்னத்தில்  அறைந்தால்,  அவனுக்கு  மறு  கன்னத்தையும்  திருப்பிக்கொடு.  {Matt  5:39}

 

உன்னோடு  வழக்காடி  உன்  வஸ்திரத்தை  எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு  உன்  அங்கியையும்  விட்டுவிடு.  {Matt  5:40}

 

ஒருவன்  உன்னை  ஒரு  மைல்  தூரம்வரப்  பலவந்தம்பண்ணினால்,  அவனோடு  இரண்டு  மைல்  தூரம்  போ.  {Matt  5:41}

 

உன்னிடத்தில்  கேட்கிறவனுக்குக்  கொடு,  உன்னிடத்தில்  கடன்வாங்க  விரும்புகிறவனுக்கு  முகங்கோணாதே.  {Matt  5:42}

 

உனக்கடுத்தவனைச்  சிநேகித்து,  உன்  சத்துருவைப்  பகைப்பாயாக  என்று  சொல்லப்பட்டதைக்  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  {Matt  5:43}

 

நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  உங்கள்  சத்துருக்களைச்  சிநேகியுங்கள்;  உங்களைச்  சபிக்கிறவர்களை  ஆசீர்வதியுங்கள்;  உங்களைப்  பகைக்கிறவர்களுக்கு  நன்மை  செய்யுங்கள்;  உங்களை  நிந்திக்கிறவர்களுக்காகவும்  உங்களைத்  துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும்  ஜெபம்பண்ணுங்கள்.  {Matt  5:44}

 

இப்படிச்  செய்வதினால்  நீங்கள்  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதாவுக்குப்  புத்திரராயிருப்பீர்கள்;  அவர்  தீயோர்மேலும்  நல்லோர்மேலும்  தமது  சூரியனை  உதிக்கப்பண்ணி,  நீதியுள்ளவர்கள்மேலும்  அநீதியுள்ளவர்கள்மேலும்  மழையைப்  பெய்யப்பண்ணுகிறார்.  {Matt  5:45}

 

உங்களைச்  சிநேகிக்கிறவர்களையே  நீங்கள்  சிநேகிப்பீர்களானால்,  உங்களுக்குப்  பலன்  என்ன?  ஆயக்காரரும்  அப்படியே  செய்கிறார்கள்  அல்லவா?  {Matt  5:46}

 

உங்கள்  சகோதரரைமாத்திரம்  வாழ்த்துவீர்களானால்,  நீங்கள்  விசேஷித்துச்  செய்கிறது  என்ன?  ஆயக்காரரும்  அப்படிச்  செய்கிறார்கள்  அல்லவா?  {Matt  5:47}

 

ஆகையால்,  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதா  பூரண  சற்குணராயிருக்கிறதுபோல,  நீங்களும்  பூரண  சற்குணராயிருக்கக்கடவீர்கள்.  {Matt  5:48}

 

மனுஷர்  காணவேண்டுமென்று  அவர்களுக்கு  முன்பாக  உங்கள்  தர்மத்தைச்  செய்யாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  செய்தால்,  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதாவினிடத்தில்  உங்களுக்குப்  பலனில்லை.  {Matt  6:1}

 

ஆகையால்  நீ  தர்மஞ்செய்யும்போது,  மனுஷரால்  புகழப்படுவதற்கு,  மாயக்காரர்  ஆலயங்களிலும்  வீதிகளிலும்  செய்வதுபோல,  உனக்கு  முன்பாகத்  தாரை  ஊதுவியாதே;  அவர்கள்  தங்கள்  பலனை  அடைந்து  தீர்ந்ததென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  6:2}

 

நீயோ  தர்மஞ்செய்யும்போது,  உன்  தர்மம்  அந்தரங்கமாயிருப்பதற்கு,  உன்  வலதுகை  செய்கிறதை  உன்  இடதுகை  அறியாதிருக்கக்கடவது.  {Matt  6:3}

 

அப்பொழுது  அந்தரங்கத்தில்  பார்க்கிற  உன்  பிதா  தாமே  உனக்கு  வெளியரங்கமாய்ப்  பலனளிப்பார்.  {Matt  6:4}

 

அன்றியும்  நீ  ஜெபம்பண்ணும்போது  மாயக்காரரைப்  போலிருக்கவேண்டாம்;  மனுஷர்  காணும்படியாக  அவர்கள்  ஜெப  ஆலயங்களிலும்  வீதிகளின்  சந்திகளிலும்  நின்று  ஜெபம்பண்ண  விரும்புகிறார்கள்;  அவர்கள்  தங்கள்  பலனை  அடைந்து  தீர்ந்ததென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  6:5}

 

நீயோ  ஜெபம்பண்ணும்போது,  உன்  அறைவீட்டுக்குள்  பிரவேசித்து,  உன்  கதவைப்  பூட்டி,  அந்தரங்கத்திலிருக்கிற  உன்  பிதாவை  நோக்கி  ஜெபம்பண்ணு;  அப்பொழுது,  அந்தரங்கத்தில்  பார்க்கிற  உன்  பிதா  வெளியரங்கமாய்  உனக்குப்  பலனளிப்பார்.  {Matt  6:6}

 

அன்றியும்  நீங்கள்  ஜெபம்பண்ணும்போது,  அஞ்ஞானிகளைப்போல  வீண்வார்த்தைகளை  அலப்பாதேயுங்கள்;  அவர்கள்,  அதிக  வசனிப்பினால்  தங்கள்  ஜெபம்  கேட்கப்படுமென்று  நினைக்கிறார்கள்.  {Matt  6:7}

 

அவர்களைப்போல  நீங்கள்  செய்யாதிருங்கள்;  உங்கள்  பிதாவை  நோக்கி  நீங்கள்  வேண்டிக்கொள்ளுகிறதற்கு  முன்னமே  உங்களுக்கு  இன்னது  தேவை  என்று  அவர்  அறிந்திருக்கிறார்.  {Matt  6:8}

 

நீங்கள்  ஜெபம்பண்ணவேண்டிய  விதமாவது:  பரமண்டலங்களிலிருக்கிற  எங்கள்  பிதாவே,  உம்முடைய  நாமம்  பரிசுத்தப்படுவதாக.  {Matt  6:9}

 

உம்முடைய  ராஜ்யம்  வருவதாக;  உம்முடைய  சித்தம்  பரமண்டலத்திலே  செய்யப்படுகிறதுபோலப்  பூமியிலேயும்  செய்யப்படுவதாக.  {Matt  6:10}

 

எங்களுக்கு  வேண்டிய  ஆகாரத்தை  இன்று  எங்களுக்குத்  தாரும்.  {Matt  6:11}

 

எங்கள்  கடனாளிகளுக்கு  நாங்கள்  மன்னிக்கிறதுபோல  எங்கள்  கடன்களை  எங்களுக்கு  மன்னியும்.  {Matt  6:12}

 

எங்களைச்  சோதனைக்குட்படப்பண்ணாமல்,  தீமையினின்று  எங்களை  இரட்சித்துக்கொள்ளும்,  ராஜ்யமும்,  வல்லமையும்,  மகிமையும்  என்றென்றைக்கும்  உம்முடையவைகளே,  ஆமென்,  என்பதே.  {Matt  6:13}

 

மனுஷருடைய  தப்பிதங்களை  நீங்கள்  அவர்களுக்கு  மன்னித்தால்,  உங்கள்  பரமபிதா  உங்களுக்கும்  மன்னிப்பார்.  {Matt  6:14}

 

மனுஷருடைய  தப்பிதங்களை  நீங்கள்  அவர்களுக்கு  மன்னியாதிருந்தால்,  உங்கள்  பிதா  உங்கள்  தப்பிதங்களையும்  மன்னியாதிருப்பார்.  {Matt  6:15}

 

நீங்கள்  உபவாசிக்கும்போது,  மாயக்காரரைப்போல  முகவாடலாய்  இராதேயுங்கள்;  அவர்கள்  உபவாசிக்கிறதை  மனுஷர்  காணும்பொருட்டாக,  தங்கள்  முகங்களை  வாடப்பண்ணுகிறார்கள்;  அவர்கள்  தங்கள்  பலனை  அடைந்து  தீர்ந்ததென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  6:16}

 

நீயோ  உபவாசிக்கும்போது,  அந்த  உபவாசம்  மனுஷர்களுக்குக்  காணப்படாமல்,  அந்தரங்கத்தில்  இருக்கிற  உன்  பிதாவுக்கே  காணப்படும்படியாக,  உன்  தலைக்கு  எண்ணெய்  பூசி,  உன்  முகத்தைக்  கழுவு.  {Matt  6:17}

 

அப்பொழுது,  அந்தரங்கத்தில்  பார்க்கிற  உன்  பிதா  உனக்கு  வெளியரங்கமாய்ப்  பலனளிப்பார்.  {Matt  6:18}

 

பூமியிலே  உங்களுக்குப்  பொக்கிஷங்களைச்  சேர்த்துவைக்கவேண்டாம்;  இங்கே  பூச்சியும்  துருவும்  அவைகளைக்  கெடுக்கும்;  இங்கே  திருடரும்  கன்னமிட்டுத்  திருடுவார்கள்.  {Matt  6:19}

 

பரலோகத்திலே  உங்களுக்குப்  பொக்கிஷங்களைச்  சேர்த்துவையுங்கள்;  அங்கே  பூச்சியாவது  துருவாவது  கெடுக்கிறதும்  இல்லை;  அங்கே  திருடர்  கன்னமிட்டுத்  திருடுகிறதும்  இல்லை.  {Matt  6:20}

 

உங்கள்  பொக்கிஷம்  எங்கேயிருக்கிறதோ  அங்கே  உங்கள்  இருதயமும்  இருக்கும்.  {Matt  6:21}

 

கண்ணானது  சரீரத்தின்  விளக்காயிருக்கிறது;  உன்  கண்  தெளிவாயிருந்தால்,  உன்  சரீரம்  முழுவதும்  வெளிச்சமாயிருக்கும்.  {Matt  6:22}

 

உன்  கண்  கெட்டதாயிருந்தால்,  உன்  சரீரம்  முழுவதும்  இருளாயிருக்கும்;  இப்படி  உன்னிலுள்ள  வெளிச்சம்  இருளாயிருந்தால்,  அவ்விருள்  எவ்வளவு  அதிகமாயிருக்கும்!  {Matt  6:23}

 

இரண்டு  எஜமான்களுக்கு  ஊழியஞ்  செய்ய  ஒருவனாலும்  கூடாது;  ஒருவனைப்  பகைத்து,  மற்றவனைச்  சிநேகிப்பான்;  அல்லது  ஒருவனைப்  பற்றிக்கொண்டு,  மற்றவனை  அசட்டைபண்ணுவான்;  தேவனுக்கும்  உலகப்பொருளுக்கும்  ஊழியஞ்செய்ய  உங்களால்  கூடாது.  {Matt  6:24}

 

ஆகையால்,  என்னத்தை  உண்போம்,  என்னத்தைக்  குடிப்போம்  என்று  உங்கள்  ஜீவனுக்காகவும்;  என்னத்தை  உடுப்போம்  என்று  உங்கள்  சரீரத்துக்காகவும்  கவலைப்படாதிருங்கள்  என்று,  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  ஆகாரத்தைப்பார்க்கிலும்  ஜீவனும்,  உடையைப்பார்க்கிலும்  சரீரமும்  விசேஷித்தவைகள்  அல்லவா?  {Matt  6:25}

 

ஆகாயத்துப்  பட்சிகளைக்  கவனித்துப்பாருங்கள்;  அவைகள்  விதைக்கிறதுமில்லை,  அறுக்கிறதுமில்லை,  களஞ்சியங்களில்  சேர்த்துவைக்கிறதுமில்லை;  அவைகளையும்  உங்கள்  பரமபிதா  பிழைப்பூட்டுகிறார்;  அவைகளைப்பார்க்கிலும்  நீங்கள்  விசேஷித்தவர்கள்  அல்லவா?  {Matt  6:26}

 

கவலைப்படுகிறதினாலே  உங்களில்  எவன்  தன்  சரீர  அளவோடு  ஒரு  முழத்தைக்  கூட்டுவான்?  {Matt  6:27}

 

உடைக்காகவும்  நீங்கள்  கவலைப்படுகிறதென்ன?  காட்டுப்  புஷ்பங்கள்  எப்படி  வளருகிறதென்று  கவனித்துப்பாருங்கள்;  அவைகள்  உழைக்கிறதுமில்லை,  நூற்கிறதுமில்லை;  {Matt  6:28}

 

என்றாலும்,  சாலொமோன்<Solomon>  முதலாய்த்  தன்  சர்வ  மகிமையிலும்  அவைகளில்  ஒன்றைப்போலாகிலும்  உடுத்தியிருந்ததில்லை  என்று,  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  6:29}

 

அற்ப  விசுவாசிகளே!  இன்றைக்கு  இருந்து  நாளைக்கு  அடுப்பிலே  போடப்படும்  காட்டுப்  புல்லுக்குத்  தேவன்  இவ்விதமாக  உடுத்துவித்தால்,  உங்களுக்கு  உடுத்துவிப்பது  அதிக  நிச்சயமல்லவா?  {Matt  6:30}

 

ஆகையால்,  என்னத்தை  உண்போம்,  என்னத்தைக்  குடிப்போம்,  என்னத்தை  உடுப்போம்  என்று,  கவலைப்படாதிருங்கள்.  {Matt  6:31}

 

இவைகளையெல்லாம்  அஞ்ஞானிகள்  நாடித்தேடுகிறார்கள்;  இவைகளெல்லாம்  உங்களுக்கு  வேண்டியவைகள்  என்று  உங்கள்  பரமபிதா  அறிந்திருக்கிறார்.  {Matt  6:32}

 

முதலாவது  தேவனுடைய  ராஜ்யத்தையும்  அவருடைய  நீதியையும்  தேடுங்கள்,  அப்பொழுது  இவைகளெல்லாம்  உங்களுக்குக்கூடக்  கொடுக்கப்படும்.  {Matt  6:33}

 

ஆகையால்,  நாளைக்காகக்  கவலைப்படாதிருங்கள்;  நாளையத்தினம்  தன்னுடையவைகளுக்காகக்  கவலைப்படும்.  அந்தந்த  நாளுக்கு  அதினதின்  பாடு  போதும்.  {Matt  6:34}

 

நீங்கள்  குற்றவாளிகளென்று  தீர்க்கப்படாதபடிக்கு  மற்றவர்களைக்  குற்றவாளிகளென்று  தீர்க்காதிருங்கள்.  {Matt  7:1}

 

ஏனெனில்,  நீங்கள்  மற்றவர்களைத்  தீர்க்கிற  தீர்ப்பின்படியே  நீங்களும்  தீர்க்கப்படுவீர்கள்;  நீங்கள்  மற்றவர்களுக்கு  அளக்கிற  அளவின்படியே  உங்களுக்கும்  அளக்கப்படும்.  {Matt  7:2}

 

நீ  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  உணராமல்,  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பைப்  பார்க்கிறதென்ன?  {Matt  7:3}

 

இதோ,  உன்  கண்ணில்  உத்திரம்  இருக்கையில்  உன்  சகோதரனை  நோக்கி:  நான்  உன்  கண்ணிலிருக்கும்  துரும்பை  எடுத்துப்போடட்டும்  என்று  நீ  சொல்வதெப்படி?  {Matt  7:4}

 

மாயக்காரனே!  முன்பு  உன்  கண்ணிலிருக்கிற  உத்திரத்தை  எடுத்துப்போடு;  பின்பு  உன்  சகோதரன்  கண்ணிலிருக்கிற  துரும்பை  எடுத்துப்போட  வகைபார்ப்பாய்.  {Matt  7:5}

 

பரிசுத்தமானதை  நாய்களுக்குக்  கொடாதேயுங்கள்;  உங்கள்  முத்துக்களைப்  பன்றிகள்முன்  போடாதேயுங்கள்;  போட்டால்  தங்கள்  கால்களால்  அவைகளை  மிதித்து,  திரும்பிக்கொண்டு  உங்களைப்  பீறிப்போடும்.  {Matt  7:6}

 

கேளுங்கள்,  அப்பொழுது  உங்களுக்குக்  கொடுக்கப்படும்;  தேடுங்கள்,  அப்பொழுது  கண்டடைவீர்கள்;  தட்டுங்கள்,  அப்பொழுது  உங்களுக்குத்  திறக்கப்படும்;  {Matt  7:7}

 

ஏனென்றால்,  கேட்கிறவன்  எவனும்  பெற்றுக்கொள்ளுகிறான்;  தேடுகிறவன்  கண்டடைகிறான்;  தட்டுகிறவனுக்குத்  திறக்கப்படும்.  {Matt  7:8}

 

உங்களில்  எந்த  மனுஷனானாலும்  தன்னிடத்தில்  அப்பத்தைக்  கேட்கிற  தன்  மகனுக்குக்  கல்லைக்  கொடுப்பானா?  {Matt  7:9}

 

மீனைக்  கேட்டால்  அவனுக்குப்  பாம்பைக்  கொடுப்பானா?  {Matt  7:10}

 

ஆகையால்,  பொல்லாதவர்களாகிய  நீங்கள்  உங்கள்  பிள்ளைகளுக்கு  நல்ல  ஈவுகளைக்  கொடுக்க  அறிந்திருக்கும்போது,  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதா  தம்மிடத்தில்  வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு  நன்மையானவைகளைக்  கொடுப்பது  அதிக  நிச்சயம்  அல்லவா?  {Matt  7:11}

 

ஆதலால்,  மனுஷர்  உங்களுக்கு  எவைகளைச்செய்ய  விரும்புகிறீர்களோ,  அவைகளை  நீங்களும்  அவர்களுக்குச்  செய்யுங்கள்;  இதுவே  நியாயப்பிரமாணமும்  தீர்க்கதரிசனங்களுமாம்.  {Matt  7:12}

 

இடுக்கமான  வாசல்வழியாய்  உட்பிரவேசியுங்கள்;  கேட்டுக்குப்  போகிற  வாசல்  விரிவும்,  வழி  விசாலமுமாயிருக்கிறது;  அதின்  வழியாய்ப்  பிரவேசிக்கிறவர்கள்  அநேகர்.  {Matt  7:13}

 

ஜீவனுக்குப்  போகிற  வாசல்  இடுக்கமும்,  வழி  நெருக்கமுமாயிருக்கிறது;  அதைக்  கண்டுபிடிக்கிறவர்கள்  சிலர்.  {Matt  7:14}

 

கள்ளத்  தீர்க்கதரிசிகளுக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  அவர்கள்  ஆட்டுத்தோலைப்  போர்த்துக்கொண்டு  உங்களிடத்தில்  வருவார்கள்;  உள்ளத்திலோ  அவர்கள்  பட்சிக்கிற  ஓநாய்கள்.  {Matt  7:15}

 

அவர்களுடைய  கனிகளினாலே  அவர்களை  அறிவீர்கள்;  முட்செடிகளில்  திராட்சப்பழங்களையும்,  முட்பூண்டுகளில்  அத்திப்பழங்களையும்  பறிக்கிறார்களா?  {Matt  7:16}

 

அப்படியே  நல்ல  மரமெல்லாம்  நல்ல  கனிகளைக்  கொடுக்கும்;  கெட்ட  மரமோ  கெட்ட  கனிகளைக்  கொடுக்கும்.  {Matt  7:17}

 

நல்ல  மரம்  கெட்ட  கனிகளைக்  கொடுக்கமாட்டாது;  கெட்ட  மரம்  நல்ல  கனிகளைக்  கொடுக்கமாட்டாது.  {Matt  7:18}

 

நல்ல  கனிகொடாத  மரமெல்லாம்  வெட்டுண்டு,  அக்கினியிலே  போடப்படும்.  {Matt  7:19}

 

ஆதலால்,  அவர்களுடைய  கனிகளினாலே  அவர்களை  அறிவீர்கள்.  {Matt  7:20}

 

பரலோகத்திலிருக்கிற  என்  பிதாவின்  சித்தத்தின்படி  செய்கிறவனே  பரலோகராஜ்யத்தில்  பிரவேசிப்பானேயல்லாமல்,  என்னை  நோக்கி:  கர்த்தாவே!  கர்த்தாவே!  என்று  சொல்லுகிறவன்  அதில்  பிரவேசிப்பதில்லை.  {Matt  7:21}

 

அந்நாளில்  அநேகர்  என்னை  நோக்கி:  கர்த்தாவே!  கர்த்தாவே!  உமது  நாமத்தினாலே  தீர்க்கதரிசனம்  உரைத்தோம்  அல்லவா?  உமது  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்தினோம்  அல்லவா?  உமது  நாமத்தினாலே  அநேக  அற்புதங்களைச்  செய்தோம்  அல்லவா?  என்பார்கள்.  {Matt  7:22}

 

அப்பொழுது,  நான்  ஒருக்காலும்  உங்களை  அறியவில்லை;  அக்கிரமச்  செய்கைக்காரரே,  என்னைவிட்டு  அகன்றுபோங்கள்  என்று  அவர்களுக்குச்  சொல்லுவேன்.  {Matt  7:23}

 

ஆகையால்,  நான்  சொல்லிய  இந்த  வார்த்தைகளைக்  கேட்டு,  இவைகளின்படி  செய்கிறவன்  எவனோ,  அவனைக்  கன்மலையின்மேல்  தன்  வீட்டைக்  கட்டின  புத்தியுள்ள  மனுஷனுக்கு  ஒப்பிடுவேன்.  {Matt  7:24}

 

பெருமழை  சொரிந்து,  பெருவெள்ளம்  வந்து,  காற்று  அடித்து,  அந்த  வீட்டின்மேல்  மோதியும்,  அது  விழவில்லை;  ஏனென்றால்,  அது  கன்மலையின்மேல்  அஸ்திபாரம்  போடப்பட்டிருந்தது.  {Matt  7:25}

 

நான்  சொல்லிய  இந்த  வார்த்தைகளைக்கேட்டு,  இவைகளின்படி  செய்யாதிருக்கிறவன்  எவனோ,  அவன்  தன்  வீட்டை  மணலின்மேல்  கட்டின  புத்தியில்லாத  மனுஷனுக்கு  ஒப்பிடப்படுவான்.  {Matt  7:26}

 

பெருமழை  சொரிந்து,  பெருவெள்ளம்  வந்து,  காற்று  அடித்து,  அந்த  வீட்டின்மேல்  மோதினபோது  அது  விழுந்தது;  விழுந்து  முழுவதும்  அழிந்தது  என்றார்.  {Matt  7:27}

 

இயேசு<Jesus>  இந்த  வார்த்தைகளைச்  சொல்லி  முடித்தபோது,  அவர்  வேதபாரகரைப்போல்  போதியாமல்,  அதிகாரமுடையவராய்  அவர்களுக்குப்  போதித்தபடியால்,  {Matt  7:28}

 

ஜனங்கள்  அவருடைய  போதகத்தைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  {Matt  7:29}

 

அவர்  மலையிலிருந்து  இறங்கினபோது,  திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Matt  8:1}

 

அப்பொழுது  குஷ்டரோகி  ஒருவன்  வந்து  அவரைப்  பணிந்து:  ஆண்டவரே!  உமக்குச்  சித்தமானால்,  என்னைச்  சுத்தமாக்க  உம்மால்  ஆகும்  என்றான்.  {Matt  8:2}

 

இயேசு<Jesus>  தமது  கையை  நீட்டி  அவனைத்  தொட்டு:  எனக்குச்  சித்தமுண்டு,  சுத்தமாகு  என்றார்.  உடனே  குஷ்டரோகம்  நீங்கி  அவன்  சுத்தமானான்.  {Matt  8:3}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  இதை  நீ  ஒருவருக்கும்  சொல்லாதபடி  எச்சரிக்கையாயிரு;  ஆயினும்,  அவர்களுக்குச்  சாட்சியாக  நீ  போய்  ஆசாரியனுக்கு  உன்னைக்  காண்பித்து,  மோசே<Moses>  கட்டளையிட்ட  காணிக்கையைச்  செலுத்து  என்றார்.  {Matt  8:4}

 

இயேசு<Jesus>  கப்பர்நகூமில்<Capernaum>  பிரவேசித்தபோது,  நூற்றுக்கு  அதிபதி  ஒருவன்  அவரிடத்தில்  வந்து:  {Matt  8:5}

 

ஆண்டவரே!  என்  வேலைக்காரன்  வீட்டிலே  திமிர்வாதமாய்க்  கிடந்து  கொடிய  வேதனைப்படுகிறான்  என்று  அவரை  வேண்டிக்கொண்டான்.  {Matt  8:6}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நான்  வந்து  அவனைச்  சொஸ்தமாக்குவேன்  என்றார்.  {Matt  8:7}

 

நூற்றுக்கு  அதிபதி  பிரதியுத்தரமாக:  ஆண்டவரே!  நீர்  என்  வீட்டுக்குள்  பிரவேசிக்க  நான்  பாத்திரன்  அல்ல;  ஒரு  வார்த்தைமாத்திரம்  சொல்லும்,  அப்பொழுது  என்  வேலைக்காரன்  சொஸ்தமாவான்.  {Matt  8:8}

 

நான்  அதிகாரத்துக்குக்  கீழ்ப்பட்டவனாயிருந்தும்,  எனக்குக்  கீழ்ப்பட்டிருக்கிற  சேவகருமுண்டு;  நான்  ஒருவனைப்  போவென்றால்  போகிறான்,  மற்றொருவனை  வாவென்றால்  வருகிறான்,  என்  வேலைக்காரனை,  இதைச்  செய்யென்றால்  செய்கிறான்  என்றான்.  {Matt  8:9}

 

இயேசு<Jesus>  இதைக்  கேட்டு  ஆச்சரியப்பட்டு,  தமக்குப்  பின்செல்லுகிறவர்களை  நோக்கி:  இஸ்ரவேலருக்குள்ளும்<Israel>  நான்  இப்படிப்பட்ட  விசுவாசத்தைக்  காணவில்லை  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  8:10}

 

அநேகர்  கிழக்கிலும்  மேற்கிலுமிருந்து  வந்து,  பரலோகராஜ்யத்தில்  ஆபிரகாம்<Abraham>  ஈசாக்கு<Isaac>  யாக்கோபு<Jacob>  என்பவர்களோடே  பந்தியிருப்பார்கள்.  {Matt  8:11}

 

ராஜ்யத்தின்  புத்திரரோ  புறம்பான  இருளிலே  தள்ளப்படுவார்கள்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்குமென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  8:12}

 

பின்பு  இயேசு<Jesus>  நூற்றுக்கு  அதிபதியை  நோக்கி:  நீ  போகலாம்,  நீ  விசுவாசித்தபடியே  உனக்கு  ஆகக்கடவது  என்றார்.  அந்த  நாழிகையிலே  அவன்  வேலைக்காரன்  சொஸ்தமானான்.  {Matt  8:13}

 

இயேசு<Jesus>  பேதுருவின்<Peter>  வீட்டிலே  வந்து,  அவன்  மாமி  ஜுரமாய்க்  கிடக்கிறதைக்  கண்டார்.  {Matt  8:14}

 

அவர்  அவள்  கையைத்  தொட்டவுடனே  ஜுரம்  அவளைவிட்டு  நீங்கிற்று;  அவள்  எழுந்திருந்து,  அவர்களுக்குப்  பணிவிடை  செய்தாள்.  {Matt  8:15}

 

அஸ்தமனமானபோது,  பிசாசு  பிடித்திருந்த  அநேகரை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  அவர்  அந்த  ஆவிகளைத்  தமது  வார்த்தையினாலே  துரத்தி,  பிணியாளிகளெல்லாரையும்  சொஸ்தமாக்கினார்.  {Matt  8:16}

 

அவர்  தாமே  நம்முடைய  பெலவீனங்களை  ஏற்றுக்கொண்டு,  நம்முடைய  நோய்களைச்  சுமந்தார்  என்று,  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியினால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  {Matt  8:17}

 

பின்பு,  திரளான  ஜனங்கள்  தம்மைச்  சூழ்ந்திருக்கிறதை  இயேசு<Jesus>  கண்டு,  அக்கரைக்குப்  போகக்  கட்டளையிட்டார்.  {Matt  8:18}

 

அப்பொழுது,  வேதபாரகன்  ஒருவன்  வந்து:  போதகரே!  நீர்  எங்கே  போனாலும்  உம்மைப்  பின்பற்றி  வருவேன்  என்றான்.  {Matt  8:19}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நரிகளுக்குக்  குழிகளும்  ஆகாயத்துப்  பறவைகளுக்குக்  கூடுகளும்  உண்டு;  மனுஷகுமாரனுக்கோ  தலைசாய்க்க  இடமில்லை  என்றார்.  {Matt  8:20}

 

அவருடைய  சீஷர்களில்  வேறொருவன்  அவரை  நோக்கி:  ஆண்டவரே!  முன்பு  நான்  போய்,  என்  தகப்பனை  அடக்கம்பண்ண  எனக்கு  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  {Matt  8:21}

 

அதற்கு  இயேசு<Jesus>:  மரித்தோர்  தங்கள்  மரித்தோரை  அடக்கம்பண்ணட்டும்,  நீ  என்னைப்  பின்பற்றி  வா  என்றார்.  {Matt  8:22}

 

அவர்  படவில்  ஏறினபோது  அவருடைய  சீஷர்கள்  அவருக்குப்  பின்சென்று  ஏறினார்கள்.  {Matt  8:23}

 

அப்பொழுது  படவு  அலைகளினால்  மூடப்படத்தக்கதாய்க்  கடலில்  பெருங்காற்று  உண்டாயிற்று.  அவரோ  நித்திரையாயிருந்தார்.  {Matt  8:24}

 

அப்பொழுது,  அவருடைய  சீஷர்கள்  வந்து,  அவரை  எழுப்பி:  ஆண்டவரே!  எங்களை  இரட்சியும்,  மடிந்துபோகிறோம்  என்றார்கள்.  {Matt  8:25}

 

அதற்கு  அவர்:  அற்பவிசுவாசிகளே!  ஏன்  பயப்படுகிறீர்கள்  என்று  சொல்லி;  எழுந்து,  காற்றையும்  கடலையும்  அதட்டினார்.  உடனே,  மிகுந்த  அமைதல்  உண்டாயிற்று.  {Matt  8:26}

 

அந்த  மனுஷர்கள்  ஆச்சரியப்பட்டு:  இவர்  எப்படிப்பட்டவரோ,  காற்றும்  கடலும்  இவருக்குக்  கீழ்ப்படிகிறதே  என்றார்கள்.  {Matt  8:27}

 

அவர்  அக்கரையிலே  கெர்கெசேனர்<Gergesenes>  நாட்டில்  வந்தபோது,  பிசாசு  பிடித்திருந்த  இரண்டுபேர்  பிரேதக்கல்லறைகளிலிருந்து  புறப்பட்டு,  அவருக்கு  எதிராக  வந்தார்கள்;  அவர்கள்  மிகவும்  கொடியராயிருந்தபடியால்,  அந்த  வழியாக  ஒருவனும்  நடக்கக்கூடாதிருந்தது.  {Matt  8:28}

 

அவர்கள்  அவரை  நோக்கி:  இயேசுவே<Jesus>,  தேவனுடைய  குமாரனே,  எங்களுக்கும்  உமக்கும்  என்ன?  காலம்  வருமுன்னே  எங்களை  வேதனைப்படுத்த  இங்கே  வந்தீரோ  என்று  கூப்பிட்டார்கள்.  {Matt  8:29}

 

அவர்களுக்குக்  கொஞ்சதூரத்தில்  அநேகம்  பன்றிகள்  கூட்டமாக  மேய்ந்துகொண்டிருந்தன.  {Matt  8:30}

 

அப்பொழுது,  பிசாசுகள்:  நீர்  எங்களைத்  துரத்துவீரானால்,  நாங்கள்  அந்தப்  பன்றிக்கூட்டத்தில்  போகும்படி  உத்தரவு  கொடும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டன.  {Matt  8:31}

 

அதற்கு  அவர்:  போங்கள்  என்றார்.  அவைகள்  புறப்பட்டு,  பன்றிக்கூட்டத்தில்  போயின;  அப்பொழுது,  பன்றிக்கூட்டமெல்லாம்  உயர்ந்த  மேட்டிலிருந்து  கடலிலே  பாய்ந்து,  ஜலத்தில்  மாண்டுபோயின.  {Matt  8:32}

 

அவைகளை  மேய்த்தவர்கள்  ஓடி,  பட்டணத்தில்  சென்று,  இந்தச்  சங்கதிகள்  எல்லாவற்றையும்,  பிசாசு  பிடித்திருந்தவர்களுக்குச்  சம்பவித்தவைகளையும்  அறிவித்தார்கள்.  {Matt  8:33}

 

அப்பொழுது,  அந்தப்  பட்டணத்தார்  யாவரும்  இயேசுவுக்கு<Jesus>  எதிர்கொண்டுவந்து,  அவரைக்  கண்டு,  தங்கள்  எல்லைகளைவிட்டுப்  போகும்படி  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  {Matt  8:34}

 

அப்பொழுது,  அவர்  படவில்  ஏறி,  இக்கரைப்பட்டுத்  தம்முடைய  பட்டணத்திற்கு  வந்தார்.  {Matt  9:1}

 

அங்கே  படுக்கையிலே  கிடந்த  ஒரு  திமிர்வாதக்காரனை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  இயேசு<Jesus>  அவர்களுடைய  விசுவாசத்தைக்  கண்டு,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  மகனே,  திடன்கொள்,  உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டது  என்றார்.  {Matt  9:2}

 

அப்பொழுது,  வேதபாரகரில்  சிலர்:  இவன்  தேவதூஷணம்  சொல்லுகிறான்  என்று  தங்கள்  உள்ளத்தில்  சொல்லிக்கொண்டார்கள்.  {Matt  9:3}

 

இயேசு<Jesus>  அவர்கள்  நினைவுகளை  அறிந்து:  நீங்கள்  உங்கள்  இருதயங்களில்  பொல்லாதவைகளைச்  சிந்திக்கிறதென்ன?  {Matt  9:4}

 

உன்  பாவங்கள்  மன்னிக்கப்பட்டது  என்று  சொல்வதோ,  எழுந்து  நடவென்று  சொல்வதோ,  எது  எளிது?  {Matt  9:5}

 

பூமியிலே  பாவங்களை  மன்னிக்க  மனுஷகுமாரனுக்கு  அதிகாரம்  உண்டென்பதை  நீங்கள்  அறியவேண்டும்  என்று  சொல்லி,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  நீ  எழுந்து,  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  உன்  வீட்டுக்குப்  போ  என்றார்.  {Matt  9:6}

 

உடனே  அவன்  எழுந்து,  தன்  வீட்டுக்குப்  போனான்.  {Matt  9:7}

 

ஜனங்கள்  அதைக்கண்டு  ஆச்சரியப்பட்டு,  மனுஷருக்கு  இப்படிப்பட்ட  அதிகாரத்தைக்  கொடுத்தவராகிய  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  {Matt  9:8}

 

இயேசு<Jesus>  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டுப்போகையில்,  ஆயத்துறையில்  உட்கார்ந்திருந்த  மத்தேயு<Matthew>  என்னும்  ஒரு  மனுஷனைக்  கண்டு:  எனக்குப்  பின்சென்றுவா  என்றார்;  அவன்  எழுந்து,  அவருக்குப்  பின்சென்றான்.  {Matt  9:9}

 

பின்பு  அவர்  வீட்டிலே  போஜனபந்தியிருக்கையில்,  அநேக  ஆயக்காரரும்  பாவிகளும்  வந்து,  இயேசுவோடும்<Jesus>  அவர்  சீஷரோடுங்கூடப்  பந்தியிருந்தார்கள்.  {Matt  9:10}

 

பரிசேயர்<Pharisees>  அதைக்  கண்டு,  அவருடைய  சீஷர்களை  நோக்கி:  உங்கள்  போதகர்  ஆயக்காரரோடும்  பாவிகளோடும்  போஜனம்பண்ணுகிறதென்னவென்று  கேட்டார்கள்.  {Matt  9:11}

 

இயேசு<Jesus>  அதைக்  கேட்டு:  பிணியாளிகளுக்கு  வைத்தியன்  வேண்டியதேயல்லாமல்  சுகமுள்ளவர்களுக்கு  வேண்டியதில்லை.  {Matt  9:12}

 

பலியையல்ல,  இரக்கத்தையே  விரும்புகிறேன்  என்பதின்  கருத்து  இன்னதென்று  போய்க்  கற்றுக்கொள்ளுங்கள்;  நீதிமான்களையல்ல,  பாவிகளையே  மனந்திரும்புகிறதற்கு  அழைக்க  வந்தேன்  என்றார்.  {Matt  9:13}

 

அப்பொழுது,  யோவானுடைய<John>  சீஷர்  அவரிடத்தில்  வந்து:  நாங்களும்  பரிசேயரும்<Pharisees>  அநேகந்தரம்  உபவாசிக்கிறோமே;  உம்முடைய  சீஷர்  உபவாசியாமலிருக்கிறதென்னவென்று  கேட்டார்கள்.  {Matt  9:14}

 

அதற்கு  இயேசு<Jesus>:  மணவாளன்  தங்களோடிருக்கையில்  மணவாளனுடைய  தோழர்  துயரப்படுவார்களா?  மணவாளன்  அவர்களை  விட்டு  எடுபடும்  நாட்கள்  வரும்,  அப்பொழுது  உபவாசிப்பார்கள்.  {Matt  9:15}

 

ஒருவனும்  கோடித்துண்டைப்  பழைய  வஸ்திரத்தோடே  இணைக்கமாட்டான்;  இணைத்தால்,  அதினோடே  இணைத்த  துண்டு  வஸ்திரத்தை  அதிகமாய்க்  கிழிக்கும்,  பீறலும்  அதிகமாகும்.  {Matt  9:16}

 

புது  திராட்சரசத்தைப்  பழந்துருத்திகளில்  வார்த்துவைக்கிறதும்  இல்லை;  வார்த்துவைத்தால்,  துருத்திகள்  கிழிந்துபோம்,  இரசமும்  சிந்திப்போம்,  துருத்திகளும்  கெட்டுப்போம்;  புது  ரசத்தைப்  புது  துருத்திகளில்  வார்த்துவைப்பார்கள்,  அப்பொழுது  இரண்டும்  பத்திரப்பட்டிருக்கும்  என்றார்.  {Matt  9:17}

 

அவர்  இவைகளை  அவர்களுக்குச்  சொல்லிக்கொண்டிருக்கையில்,  தலைவன்  ஒருவன்  வந்து  அவரைப்  பணிந்து:  என்  மகள்  இப்பொழுதுதான்  மரித்துப்போனாள்;  ஆகிலும்,  நீர்  வந்து  அவள்மேல்  உமது  கையை  வையும்,  அப்பொழுது  பிழைப்பாள்  என்றான்.  {Matt  9:18}

 

இயேசு<Jesus>  எழுந்து,  தம்முடைய  சீஷரோடுகூட  அவன்  பின்னே  போனார்.  {Matt  9:19}

 

அப்பொழுது,  பன்னிரண்டு  வருஷமாய்ப்  பெரும்பாடுள்ள  ஒரு  ஸ்திரீ:  {Matt  9:20}

 

நான்  அவருடைய  வஸ்திரத்தையாகிலும்  தொட்டால்  சொஸ்தமாவேன்  என்று  தன்  உள்ளத்தில்  எண்ணிக்கொண்டு,  அவர்  பின்னாலே  வந்து,  அவருடைய  வஸ்திரத்தின்  ஓரத்தைத்  தொட்டாள்.  {Matt  9:21}

 

இயேசு<Jesus>  திரும்பி,  அவளைப்  பார்த்து:  மகளே,  திடன்கொள்,  உன்  விசுவாசம்  உன்னை  இரட்சித்தது  என்றார்.  அந்நேரம்முதல்  அந்த  ஸ்திரீ  சொஸ்தமானாள்.  {Matt  9:22}

 

இயேசுவானவர்<Jesus>  தலைவனுடைய  வீட்டிலே  வந்து,  தாரை  ஊதுகிறவர்களையும்,  இரைகிற  ஜனங்களையும்  கண்டு:  {Matt  9:23}

 

விலகுங்கள்,  இந்தச்  சிறு  பெண்  மரிக்கவில்லை,  நித்திரையாயிருக்கிறாள்  என்றார்.  அதற்காக  அவரைப்பார்த்து  நகைத்தார்கள்.  {Matt  9:24}

 

ஜனங்கள்  வெளியே  துரத்தப்பட்ட  பின்பு,  அவர்  உள்ளே  பிரவேசித்து,  அந்தச்  சிறுபெண்ணின்  கையைப்  பிடித்தார்;  உடனே  அவள்  எழுந்திருந்தாள்.  {Matt  9:25}

 

இந்தச்  சங்கதி  அத்தேசமெங்கும்  பிரசித்தமாயிற்று.  {Matt  9:26}

 

இயேசு<Jesus>  அவ்விடம்  விட்டுப்  போகையில்,  இரண்டு  குருடர்  அவர்  பின்னே  சென்று:  தாவீதின்<David>  குமாரனே,  எங்களுக்கு  இரங்கும்  என்று  கூப்பிட்டார்கள்.  {Matt  9:27}

 

அவர்  வீட்டிற்கு  வந்தபின்பு,  அந்தக்  குருடர்  அவரிடத்தில்  வந்தார்கள்.  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  இதைச்  செய்ய  எனக்கு  வல்லமை  உண்டென்று  விசுவாசிக்கிறீர்களா  என்று  கேட்டார்;  அதற்கு  அவர்கள்:  ஆம்  விசுவாசிக்கிறோம்,  ஆண்டவரே!  என்றார்கள்.  {Matt  9:28}

 

அப்பொழுது,  அவர்களுடைய  கண்களை  அவர்  தொட்டு:  உங்கள்  விசுவாசத்தின்படி  உங்களுக்கு  ஆகக்கடவது  என்றார்.  {Matt  9:29}

 

உடனே  அவர்களுடைய  கண்கள்  திறக்கப்பட்டது.  இதை  ஒருவரும்  அறியாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்  என்று  இயேசு<Jesus>  அவர்களுக்குக்  கண்டிப்பாய்க்  கட்டளையிட்டார்.  {Matt  9:30}

 

அவர்களோ  புறப்பட்டு,  அத்தேசமெங்கும்  அவருடைய  கீர்த்தியைப்  பிரசித்தம்பண்ணினார்கள்.  {Matt  9:31}

 

அவர்கள்  புறப்பட்டுப்  போகையில்,  பிசாசுபிடித்த  ஊமையான  ஒரு  மனுஷனை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  {Matt  9:32}

 

பிசாசு  துரத்தப்பட்ட  பின்பு  ஊமையன்  பேசினான்.  ஜனங்கள்  ஆச்சரியப்பட்டு:  இஸ்ரவேலில்<Israel>  இப்படி  ஒருக்காலும்  காணப்படவில்லை  என்றார்கள்.  {Matt  9:33}

 

பரிசேயரோ<Pharisees>:  இவன்  பிசாசுகளின்  தலைவனாலே  பிசாசுகளைத்  துரத்துகிறான்  என்றார்கள்.  {Matt  9:34}

 

பின்பு,  இயேசு<Jesus>  சகல  பட்டணங்களையும்  கிராமங்களையும்  சுற்றி  நடந்து,  ஜெப  ஆலயங்களில்  உபதேசித்து,  ராஜ்யத்தின்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து,  ஜனங்களுக்கு  உண்டாயிருந்த  சகல  வியாதிகளையும்  சகல  நோய்களையும்  நீக்கி,  அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  {Matt  9:35}

 

அவர்  திரளான  ஜனங்களைக்  கண்டபொழுது,  அவர்கள்  மேய்ப்பனில்லாத  ஆடுகளைப்போலத்  தொய்ந்துபோனவர்களும்  சிதறப்பட்டவர்களுமாய்  இருந்தபடியால்,  அவர்கள்மேல்  மனதுருகி,  {Matt  9:36}

 

தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  அறுப்பு  மிகுதி,  வேலையாட்களோ  கொஞ்சம்;  {Matt  9:37}

 

ஆதலால்,  அறுப்புக்கு  எஜமான்  தமது  அறுப்புக்கு  வேலையாட்களை  அனுப்பும்படி  அவரை  வேண்டிக்கொள்ளுங்கள்  என்றார்.  {Matt  9:38}

 

அப்பொழுது,  அவர்  தம்முடைய  பன்னிரண்டு  சீஷர்களையும்  தம்மிடத்தில்  வரவழைத்து,  அசுத்த  ஆவிகளைத்  துரத்தவும்,  சகல  வியாதிகளையும்  சகல  நோய்களையும்  நீக்கவும்  அவர்களுக்கு  அதிகாரங்கொடுத்தார்.  {Matt  10:1}

 

அந்தப்  பன்னிரண்டு  அப்போஸ்தலருடைய  நாமங்களாவன:  முந்தினவன்  பேதுரு<Peter>  என்னப்பட்ட  சீமோன்<Simon>,  அவன்  சகோதரன்  அந்திரேயா<Andrew>,  செபெதேயுவின்<Zebedee>  குமாரன்  யாக்கோபு<James>,  அவன்  சகோதரன்  யோவான்<John>,  {Matt  10:2}

 

பிலிப்பு<Philip>,  பற்தொலொமேயு<Bartholomew>,  தோமா<Thomas>,  ஆயக்காரனாகிய  மத்தேயு<Matthew>,  அல்பேயுவின்<Alphaeus>  குமாரன்  யாக்கோபு<James>,  ததேயு<Thaddaeus>  என்னும்  மறுநாமமுள்ள  லெபேயு<Lebbaeus>,  {Matt  10:3}

 

கானானியனாகிய<Canaanite>  சீமோன்<Simon>,  அவரைக்  காட்டிக்கொடுத்த  யூதாஸ்காரியோத்து<Judas  Iscariot>  என்பவைகளே.  {Matt  10:4}

 

இந்தப்  பன்னிருவரையும்  இயேசு<Jesus>  அனுப்புகையில்,  அவர்களுக்குக்  கட்டளையிட்டுச்  சொன்னது  என்னவென்றால்:  நீங்கள்  புறஜாதியார்  நாடுகளுக்குப்  போகாமலும்,  சமாரியர்<Samaritans>  பட்டணங்களில்  பிரவேசியாமலும்,  {Matt  10:5}

 

காணாமற்போன  ஆடுகளாகிய  இஸ்ரவேல்<Israel>  வீட்டாரிடத்திற்குப்  போங்கள்.  {Matt  10:6}

 

போகையில்,  பரலோகராஜ்யம்  சமீபித்திருக்கிறது  என்று  பிரசங்கியுங்கள்.  {Matt  10:7}

 

வியாதியுள்ளவர்களைச்  சொஸ்தமாக்குங்கள்,  குஷ்டரோகிகளைச்  சுத்தம்பண்ணுங்கள்,  மரித்தோரை  எழுப்புங்கள்,  பிசாசுகளைத்  துரத்துங்கள்;  இலவசமாய்ப்  பெற்றீர்கள்,  இலவசமாய்க்  கொடுங்கள்.  {Matt  10:8}

 

உங்கள்  கச்சைகளில்  பொன்னையாவது  வெள்ளியையாவது  செம்பையாவது,  {Matt  10:9}

 

வழிக்காகப்  பையையாவது,  இரண்டு  அங்கிகளையாவது,  பாதரட்சைகளையாவது,  தடியையாவது  தேடி  வைக்கவேண்டாம்;  வேலையாள்  தன்  ஆகாரத்துக்குப்  பாத்திரனாயிருக்கிறான்.  {Matt  10:10}

 

எந்தப்  பட்டணத்திலாவது  கிராமத்திலாவது  நீங்கள்  பிரவேசிக்கும்போது,  அதிலே  பாத்திரமானவன்  யாரென்று  விசாரித்து,  நீங்கள்  புறப்படுமளவும்  அவனிடத்தில்  தங்கியிருங்கள்.  {Matt  10:11}

 

ஒரு  வீட்டுக்குள்  பிரவேசிக்கும்போது  அதை  வாழ்த்துங்கள்.  {Matt  10:12}

 

அந்த  வீடு  பாத்திரமாயிருந்தால்,  நீங்கள்  கூறின  சமாதானம்  அவர்கள்மேல்  வரக்கடவது;  அபாத்திரமாயிருந்தால்,  நீங்கள்  கூறின  சமாதானம்  உங்களிடத்திற்குத்  திரும்பக்கடவது.  {Matt  10:13}

 

எவனாகிலும்  உங்களை  ஏற்றுக்கொள்ளாமலும்,  உங்கள்  வார்த்தைகளைக்  கேளாமலும்போனால்,  அந்த  வீட்டையாவது  பட்டணத்தையாவது  விட்டுப்  புறப்படும்போது,  உங்கள்  கால்களில்  படிந்த  தூசியை  உதறிப்போடுங்கள்.  {Matt  10:14}

 

நியாயத்தீர்ப்பு  நாளிலே  அந்தப்  பட்டணத்திற்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்  சோதோம்<Sodom>  கொமோரா<Gomorrha>  நாட்டிற்கு  நேரிடுவது  இலகுவாயிருக்கும்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  10:15}

 

ஆடுகளை  ஓநாய்களுக்குள்ளே  அனுப்புகிறதுபோல,  இதோ,  நான்  உங்களை  அனுப்புகிறேன்;  ஆகையால்,  சர்ப்பங்களைப்போல  வினாவுள்ளவர்களும்  புறாக்களைப்போலக்  கபடற்றவர்களுமாய்  இருங்கள்.  {Matt  10:16}

 

மனுஷரைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்;  அவர்கள்  உங்களை  ஆலோசனைச்  சங்கங்களுக்கு  ஒப்புக்கொடுத்து,  தங்கள்  ஜெப  ஆலயங்களில்  உங்களை  வாரினால்  அடிப்பார்கள்.  {Matt  10:17}

 

அவர்களுக்கும்  புறஜாதியாருக்கும்  சாட்சியாக  என்னிமித்தம்  அதிபதிகளுக்கு  முன்பாகவும்,  ராஜாக்களுக்கு  முன்பாகவும்  கொண்டுபோகப்படுவீர்கள்.  {Matt  10:18}

 

அவர்கள்  உங்களை  ஒப்புக்கொடுக்கும்போது:  எப்படிப்  பேசுவோம்  என்றும்,  என்னத்தைப்  பேசுவோம்  என்றும்  கவலைப்படாதிருங்கள்;  நீங்கள்  பேசவேண்டுவது  அந்நேரத்தில்  உங்களுக்கு  அருளப்படும்.  {Matt  10:19}

 

பேசுகிறவர்கள்  நீங்கள்  அல்ல,  உங்கள்  பிதாவின்  ஆவியானவரே  உங்களிலிருந்து  பேசுகிறவர்.  {Matt  10:20}

 

சகோதரன்  தன்  சகோதரனையும்,  தகப்பன்  தன்  பிள்ளையையும்,  மரணத்துக்கு  ஒப்புக்கொடுப்பார்கள்;  பெற்றாருக்கு  விரோதமாகப்  பிள்ளைகள்  எழும்பி  அவர்களைக்  கொலைசெய்வார்கள்.  {Matt  10:21}

 

என்  நாமத்தினிமித்தம்  நீங்கள்  எல்லாராலும்  பகைக்கப்படுவீர்கள்;  முடிவுபரியந்தம்  நிலைத்திருப்பவனே  இரட்சிக்கப்படுவான்.  {Matt  10:22}

 

ஒரு  பட்டணத்தில்  உங்களைத்  துன்பப்படுத்தினால்  மறு  பட்டணத்திற்கு  ஓடிப்போங்கள்;  மனுஷகுமாரன்  வருவதற்குள்ளாக  நீங்கள்  இஸ்ரவேலருடைய<Israel>  பட்டணங்களையெல்லாம்  சுற்றிமுடியாதென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  10:23}

 

சீஷன்  தன்  போதகனிலும்,  வேலைக்காரன்  தன்  எஜமானிலும்  மேற்பட்டவனல்ல.  {Matt  10:24}

 

சீஷன்  தன்  போதகனைப்போலவும்,  வேலைக்காரன்  தன்  எஜமானைப்போலவும்  இருப்பது  போதும்.  வீட்டெஜமானையே  பெயல்செபூல்<Beelzebub>  என்று  சொன்னார்களானால்,  அவன்  வீட்டாரை  அப்படிச்  சொல்வது  அதிக  நிச்சயமல்லவா?  {Matt  10:25}

 

அவர்களுக்குப்  பயப்படாதிருங்கள்;  வெளியாக்கப்படாத  மறைபொருளும்  இல்லை;  அறியப்படாத  இரகசியமும்  இல்லை.  {Matt  10:26}

 

நான்  உங்களுக்கு  இருளிலே  சொல்லுகிறதை  நீங்கள்  வெளிச்சத்திலே  சொல்லுங்கள்;  காதிலே  கேட்கிறதை  நீங்கள்  வீடுகளின்மேல்  பிரசித்தம்பண்ணுங்கள்.  {Matt  10:27}

 

ஆத்துமாவைக்  கொல்ல  வல்லவர்களாயிராமல்,  சரீரத்தை  மாத்திரம்  கொல்லுகிறவர்களுக்கு  நீங்கள்  பயப்படவேண்டாம்;  ஆத்துமாவையும்  சரீரத்தையும்  நரகத்திலே  அழிக்க  வல்லவருக்கே  பயப்படுங்கள்.  {Matt  10:28}

 

ஒரு  காசுக்கு  இரண்டு  அடைக்கலான்  குருவிகளை  விற்கிறார்கள்  அல்லவா?  ஆயினும்  உங்கள்  பிதாவின்  சித்தமில்லாமல்,  அவைகளில்  ஒன்றாகிலும்  தரையிலே  விழாது.  {Matt  10:29}

 

உங்கள்  தலையிலுள்ள  மயிரெல்லாம்  எண்ணப்பட்டிருக்கிறது.  {Matt  10:30}

 

ஆதலால்,  பயப்படாதிருங்கள்;  அநேகம்  அடைக்கலான்  குருவிகளைப்பார்க்கிலும்  நீங்கள்  விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.  {Matt  10:31}

 

மனுஷர்  முன்பாக  என்னை  அறிக்கை  பண்ணுகிறவன்  எவனோ,  அவனை  நானும்  பரலோகத்திலிருக்கிற  என்  பிதாவின்  முன்பாக  அறிக்கைபண்ணுவேன்.  {Matt  10:32}

 

மனுஷர்  முன்பாக  என்னை  மறுதலிக்கிறவன்  எவனோ,  அவனை  நானும்  பரலோகத்திலிருக்கிற  என்  பிதாவின்  முன்பாக  மறுதலிப்பேன்.  {Matt  10:33}

 

பூமியின்மேல்  சமாதானத்தை  அனுப்பவந்தேன்  என்று  எண்ணாதிருங்கள்;  சமாதானத்தையல்ல,  பட்டயத்தையே  அனுப்பவந்தேன்.  {Matt  10:34}

 

எப்படியெனில்,  மகனுக்கும்  தகப்பனுக்கும்,  மகளுக்கும்  தாய்க்கும்,  மருமகளுக்கும்  மாமிக்கும்  பிரிவினையுண்டாக்க  வந்தேன்.  {Matt  10:35}

 

ஒரு  மனுஷனுக்குச்  சத்துருக்கள்  அவன்  வீட்டாரே.  {Matt  10:36}

 

தகப்பனையாவது  தாயையாவது  என்னிலும்  அதிகமாய்  நேசிக்கிறவன்  எனக்குப்  பாத்திரன்  அல்ல;  மகனையாவது  மகளையாவது  என்னிலும்  அதிகமாய்  நேசிக்கிறவன்  எனக்குப்  பாத்திரன்  அல்ல.  {Matt  10:37}

 

தன்  சிலுவையை  எடுத்துக்கொண்டு  என்னைப்  பின்பற்றாதவன்  எனக்குப்  பாத்திரன்  அல்ல.  {Matt  10:38}

 

தன்  ஜீவனைக்  காக்கிறவன்  அதை  இழந்துபோவான்;  என்னிமித்தம்  தன்  ஜீவனை  இழந்துபோகிறவன்  அதைக்  காப்பான்.  {Matt  10:39}

 

உங்களை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  அனுப்பினவரை  ஏற்றுக்கொள்ளுகிறான்.  {Matt  10:40}

 

தீர்க்கதரிசி  என்னும்  நாமத்தினிமித்தம்  தீர்க்கதரிசியை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  தீர்க்கதரிசிக்கேற்ற  பலனை  அடைவான்;  நீதிமான்  என்னும்  நாமத்தினிமித்தம்  நீதிமானை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  நீதிமானுக்கேற்ற  பலனை  அடைவான்.  {Matt  10:41}

 

சீஷன்  என்னும்  நாமத்தினிமித்தம்  இந்தச்  சிறியரில்  ஒருவனுக்கு  ஒரு  கலசம்  தண்ணீர்  மாத்திரம்  குடிக்கக்  கொடுக்கிறவனும்  தன்  பலனை  அடையாமற்போகான்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  10:42}

 

இயேசு<Jesus>  தம்முடைய  பன்னிரண்டு  சீஷர்களுக்கும்  கட்டளைகொடுத்து  முடித்தபின்பு,  அவர்களுடைய  பட்டணங்களில்  உபதேசிக்கவும்  பிரசங்கிக்கவும்  அவ்விடம்  விட்டுப்  போனார்.  {Matt  11:1}

 

அத்தருணத்தில்  காவலிலிருந்த  யோவான்<John>  கிறிஸ்துவின்<Christ>  கிரியைகளைக்குறித்துக்  கேள்விப்பட்டு,  தன்  சீஷரில்  இரண்டு  பேரை  அழைத்து:  {Matt  11:2}

 

வருகிறவர்  நீர்தானா,  அல்லது  வேறொருவர்  வரக்காத்திருக்கவேண்டுமா?  என்று  அவரிடத்தில்  கேட்கும்படி  அனுப்பினான்.  {Matt  11:3}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  கேட்கிறதையும்  காண்கிறதையும்  யோவானிடத்தில்<John>  போய்  அறிவியுங்கள்;  {Matt  11:4}

 

குருடர்  பார்வையடைகிறார்கள்,  சப்பாணிகள்  நடக்கிறார்கள்,  குஷ்டரோகிகள்  சுத்தமாகிறார்கள்,  செவிடர்  கேட்கிறார்கள்,  மரித்தோர்  எழுந்திருக்கிறார்கள்,  தரித்திரருக்குச்  சுவிசேஷம்  பிரசங்கிக்கப்படுகிறது.  {Matt  11:5}

 

என்னிடத்தில்  இடறலடையாதிருக்கிறவன்  எவனோ  அவன்  பாக்கியவான்  என்றார்.  {Matt  11:6}

 

அவர்கள்  போனபின்பு,  இயேசு<Jesus>  யோவானைக்குறித்து<John>  ஜனங்களுக்குச்  சொன்னது  என்னவென்றால்:  எதைப்  பார்க்க  வனாந்தரத்திற்குப்  போனீர்கள்?  காற்றினால்  அசையும்  நாணலையோ?  {Matt  11:7}

 

அல்லவென்றால்,  எதைப்  பார்க்கப்போனீர்கள்?  மெல்லிய  வஸ்திரந்தரித்த  மனுஷனையோ?  மெல்லிய  வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள்  அரசர்  மாளிகைகளில்  இருக்கிறார்கள்.  {Matt  11:8}

 

அல்லவென்றால்,  எதைப்  பார்க்கப்போனீர்கள்?  தீர்க்கதரிசியையோ?  ஆம்,  தீர்க்கதரிசியைப்பார்க்கிலும்  மேன்மையுள்ளவனையே  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  11:9}

 

அதெப்படியெனில்:  இதோ,  நான்  என்  தூதனை  உமக்கு  முன்பாக  அனுப்புகிறேன்;  அவன்  உமக்கு  முன்னே  போய்,  உமது  வழியை  ஆயத்தம்பண்ணுவான்  என்று  எழுதிய  வாக்கியத்தால்  குறிக்கப்பட்டவன்  இவன்தான்.  {Matt  11:10}

 

ஸ்திரீகளிடத்திலே  பிறந்தவர்களில்  யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும்<John  the  Baptist>  பெரியவன்  ஒருவனும்  எழும்பினதில்லை;  ஆகிலும்,  பரலோகராஜ்யத்தில்  சிறியவனாயிருக்கிறவன்  அவனிலும்  பெரியவனாயிருக்கிறானென்று  உங்களுக்கு  மெய்யாகவே  சொல்லுகிறேன்.  {Matt  11:11}

 

யோவான்ஸ்நானன்<John  the  Baptist>  காலமுதல்  இதுவரைக்கும்  பரலோகராஜ்யம்  பலவந்தம்  பண்ணப்படுகிறது;  பலவந்தம்பண்ணுகிறவர்கள்  அதைப்  பிடித்துக்கொள்ளுகிறார்கள்.  {Matt  11:12}

 

நியாயப்பிரமாணமும்  தீர்க்கதரிசிகள்  யாவரும்  யோவான்வரைக்கும்<John>  தீர்க்கதரிசனம்  உரைத்ததுண்டு.  {Matt  11:13}

 

நீங்கள்  ஏற்றுக்கொள்ள  மனதாயிருந்தால்,  வருகிறவனாகிய  எலியா<Elias>  இவன்தான்.  {Matt  11:14}

 

கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்.  {Matt  11:15}

 

இந்தச்  சந்ததியை  யாருக்கு  ஒப்பிடுவேன்?  சந்தைவெளிகளில்  உட்கார்ந்து,  தங்கள்  தோழரைப்  பார்த்து:  {Matt  11:16}

 

உங்களுக்காகக்  குழல்  ஊதினோம்,  நீங்கள்  கூத்தாடவில்லை;  உங்களுக்காகப்  புலம்பினோம்,  நீங்கள்  மாரடிக்கவில்லை  என்று  குறைசொல்லுகிற  பிள்ளைகளுக்கு  ஒப்பாயிருக்கிறது.  {Matt  11:17}

 

எப்படியெனில்,  யோவான்<John>  போஜனபானம்பண்ணாதவனாய்  வந்தான்;  அதற்கு  அவர்கள்:  அவன்  பிசாசு  பிடித்திருக்கிறவன்  என்றார்கள்.  {Matt  11:18}

 

மனுஷகுமாரன்  போஜனபானம்பண்ணுகிறவராய்  வந்தார்;  அதற்கு  அவர்கள்:  இதோ,  போஜனப்பிரியனும்  மதுபானப்பிரியனுமான  மனுஷன்,  ஆயக்காரருக்கும்  பாவிகளுக்கும்  சிநேகிதன்  என்கிறார்கள்.  ஆனாலும்,  ஞானமானது  அதன்  பிள்ளைகளால்  நீதியுள்ளதென்று  ஒப்புக்கொள்ளப்படும்  என்றார்.  {Matt  11:19}

 

அப்பொழுது,  தமது  பலத்த  செய்கைகளில்,  அதிகமானவைகளைச்  செய்யக்கண்ட  பட்டணங்கள்  மனந்திரும்பாமற்  போனபடியினால்  அவைகளை  அவர்  கடிந்துகொள்ளத்  தொடங்கினார்:  {Matt  11:20}

 

கோராசினே<Chorazin>!  உனக்கு  ஐயோ,  பெத்சாயிதாவே<Bethsaida>!  உனக்கு  ஐயோ,  உங்களில்  செய்யப்பட்ட  பலத்த  செய்கைகள்  தீருவிலும்<Tyre>  சீதோனிலும்<Sidon>  செய்யப்பட்டிருந்ததானால்,  அப்பொழுதே  இரட்டுடுத்திச்  சாம்பலில்  உட்கார்ந்து  மனந்திரும்பியிருப்பார்கள்.  {Matt  11:21}

 

நியாயத்தீர்ப்புநாளிலே  உங்களுக்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்,  தீருவுக்கும்<Tyre>  சீதோனுக்கும்<Sidon>  நேரிடுவது  இலகுவாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  11:22}

 

வானபரியந்தம்  உயர்த்தப்பட்ட  கப்பர்நகூமே<Capernaum>,  நீ  பாதாளபரியந்தம்  தாழ்த்தப்படுவாய்;  உன்னில்  செய்யப்பட்ட  பலத்த  செய்கைகள்  சோதோமிலே<Sodom>  செய்யப்பட்டிருந்ததானால்,  அது  இந்நாள்வரைக்கும்  நிலைத்திருக்கும்.  {Matt  11:23}

 

நியாயத்தீர்ப்புநாளிலே  உனக்கு  நேரிடுவதைப்பார்க்கிலும்,  சோதோம்<Sodom>  நாட்டிற்கு  நேரிடுவது  இலகுவாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  11:24}

 

அந்தச்  சமயத்திலே  இயேசு<Jesus>  சொன்னது:  பிதாவே!  வானத்துக்கும்  பூமிக்கும்  ஆண்டவரே!  இவைகளை  ஞானிகளுக்கும்  கல்விமான்களுக்கும்  மறைத்து,  பாலகருக்கு  வெளிப்படுத்தினபடியால்  உம்மை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {Matt  11:25}

 

ஆம்,  பிதாவே!  இப்படிச்  செய்வது  உம்முடைய  திருவுளத்துக்குப்  பிரியமாயிருந்தது.  {Matt  11:26}

 

சகலமும்  என்  பிதாவினால்  எனக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது;  பிதா  தவிர  வேறொருவனும்  குமாரனை  அறியான்;  குமாரனும்,  குமாரன்  எவனுக்கு  அவரை  வெளிப்படுத்தச்  சித்தமாயிருக்கிறாரோ  அவனும்  தவிர,  வேறொருவனும்  பிதாவை  அறியான்.  {Matt  11:27}

 

வருத்தப்பட்டுப்  பாரஞ்சுமக்கிறவர்களே!  நீங்கள்  எல்லாரும்  என்னிடத்தில்  வாருங்கள்;  நான்  உங்களுக்கு  இளைப்பாறுதல்  தருவேன்.  {Matt  11:28}

 

நான்  சாந்தமும்  மனத்தாழ்மையுமாய்  இருக்கிறேன்;  என்  நுகத்தை  உங்கள்மேல்  ஏற்றுக்கொண்டு,  என்னிடத்தில்  கற்றுக்கொள்ளுங்கள்;  அப்பொழுது,  உங்கள்  ஆத்துமாக்களுக்கு  இளைப்பாறுதல்  கிடைக்கும்.  {Matt  11:29}

 

என்  நுகம்  மெதுவாயும்,  என்  சுமை  இலகுவாயும்  இருக்கிறது  என்றார்.  {Matt  11:30}

 

அக்காலத்திலே,  இயேசு<Jesus>  ஓய்வுநாளில்  பயிர்வழியே  போனார்;  அவருடைய  சீஷர்கள்  பசியாயிருந்து,  கதிர்களைக்  கொய்து,  தின்னத்  தொடங்கினார்கள்.  {Matt  12:1}

 

பரிசேயர்<Pharisees>  அதைக்கண்டு,  அவரை  நோக்கி:  இதோ,  ஓய்வுநாளில்  செய்யத்தகாததை  உம்முடைய  சீஷர்கள்  செய்கிறார்களே  என்றார்கள்.  {Matt  12:2}

 

அதற்கு  அவர்:  தாவீதும்<David>  அவனோடிருந்தவர்களும்  பசியாயிருந்தபோது  செய்ததை  நீங்கள்  வாசிக்கவில்லையா?  {Matt  12:3}

 

அவன்  தேவனுடைய  வீட்டில்  பிரவேசித்து,  ஆசாரியர்  தவிர  வேறொருவரும்  புசிக்கத்தகாத  தேவசமுகத்து  அப்பங்களைத்  தானும்  தன்னோடிருந்தவர்களும்  புசித்தார்களே.  {Matt  12:4}

 

அன்றியும்,  ஓய்வுநாட்களில்  ஆசாரியர்கள்  தேவாலயத்தில்  ஓய்ந்திராமல்,  ஓய்வுநாளை  வேலை  நாளாக்கினாலும்,  குற்றமில்லாதிருக்கிறார்கள்  என்று  நீங்கள்  வேதத்தில்  வாசிக்கவில்லையா?  {Matt  12:5}

 

தேவாலயத்திலும்  பெரியவர்  இங்கே  இருக்கிறார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  12:6}

 

பலியையல்ல  இரக்கத்தையே  விரும்புகிறேன்  என்பதின்  கருத்து  இன்னதென்று  அறிந்தீர்களானால்,  குற்றமில்லாதவர்களை  நீங்கள்  குற்றப்படுத்தமாட்டீர்கள்.  {Matt  12:7}

 

மனுஷகுமாரன்  ஓய்வுநாளுக்கும்  ஆண்டவராய்  இருக்கிறார்  என்றார்.  {Matt  12:8}

 

அவர்  அவ்விடம்  விட்டுப்போய்,  அவர்களுடைய  ஜெப  ஆலயத்தில்  பிரவேசித்தார்.  {Matt  12:9}

 

அங்கே  சூம்பின  கையையுடைய  மனுஷன்  ஒருவன்  இருந்தான்.  அப்பொழுது,  அவர்மேல்  குற்றஞ்சாட்டும்படிக்கு:  ஓய்வுநாளில்  சொஸ்தமாக்குகிறது  நியாயமா  என்று  கேட்டார்கள்.  {Matt  12:10}

 

அதற்கு  அவர்:  உங்களில்  எந்த  மனுஷனுக்காகிலும்  ஒரு  ஆடு  இருந்து,  அது  ஓய்வுநாளில்  குழியிலே  விழுந்தால்,  அதைப்  பிடித்துத்  தூக்கிவிடமாட்டானோ?  {Matt  12:11}

 

ஆட்டைப்பார்க்கிலும்  மனுஷனானவன்  எவ்வளவோ  விசேஷித்திருக்கிறான்!  ஆதலால்,  ஓய்வுநாளிலே  நன்மைசெய்வது  நியாயந்தான்  என்று  சொன்னார்.  {Matt  12:12}

 

பின்பு  அந்த  மனுஷனை  நோக்கி:  உன்  கையை  நீட்டு  என்றார்.  அவன்  நீட்டினான்;  அது  மறுகையைப்போல்  சொஸ்தமாயிற்று.  {Matt  12:13}

 

அப்பொழுது,  பரிசேயர்<Pharisees>  வெளியேபோய்,  அவரைக்  கொலைசெய்யும்படி  அவருக்கு  விரோதமாய்  ஆலோசனைபண்ணினார்கள்.  {Matt  12:14}

 

இயேசு<Jesus>  அதை  அறிந்து,  அவ்விடம்  விட்டு  விலகிப்போனார்.  திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்;  அவர்களெல்லாரையும்  அவர்  சொஸ்தமாக்கி,  {Matt  12:15}

 

தம்மைப்  பிரசித்தம்பண்ணாதபடி  அவர்களுக்குக்  கண்டிப்பாய்க்  கட்டளையிட்டார்.  {Matt  12:16}

 

ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசியால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  அவன்  உரைத்ததாவது:  {Matt  12:17}

 

இதோ,  நான்  தெரிந்துகொண்ட  என்னுடைய  தாசன்,  என்  ஆத்துமாவுக்குப்  பிரியமாயிருக்கிற  என்னுடைய  நேசன்;  என்  ஆவியை  அவர்மேல்  அமரப்பண்ணுவேன்,  அவர்  புறஜாதியாருக்கு  நியாயத்தை  அறிவிப்பார்.  {Matt  12:18}

 

வாக்குவாதம்  செய்யவுமாட்டார்,  கூக்குரலிடவுமாட்டார்;  அவருடைய  சத்தத்தை  ஒருவனும்  வீதிகளில்  கேட்பதுமில்லை.  {Matt  12:19}

 

அவர்  நியாயத்திற்கு  ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும்,  நெரிந்தநாணலை  முறிக்காமலும்,  மங்கியெரிகிற  திரியை  அணைக்காமலும்  இருப்பார்.  {Matt  12:20}

 

அவருடைய  நாமத்தின்மேல்  புறஜாதியார்  நம்பிக்கையாயிருப்பார்கள்  என்பதே.  {Matt  12:21}

 

அப்பொழுது,  பிசாசு  பிடித்த  குருடும்  ஊமையுமான  ஒருவன்  அவரிடத்தில்  கொண்டுவரப்பட்டான்;  குருடும்  ஊமையுமானவன்  பேசவுங்  காணவுந்தக்கதாக  அவனைச்  சொஸ்தமாக்கினார்.  {Matt  12:22}

 

ஜனங்களெல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  தாவீதின்<David>  குமாரன்  இவர்தானோ?  என்றார்கள்.  {Matt  12:23}

 

பரிசேயர்<Pharisees>  அதைக்கேட்டு:  இவன்  பிசாசுகளின்  தலைவனாகிய  பெயெல்செபூலினாலே<Beelzebub>  பிசாசுகளைத்  துரத்துகிறானேயல்லாமல்  மற்றப்படியல்ல  என்றார்கள்.  {Matt  12:24}

 

இயேசு<Jesus>  அவர்கள்  சிந்தனைகளை  அறிந்து,  அவர்களை  நோக்கி:  தனக்குத்தானே  விரோதமாய்ப்  பிரிந்திருக்கிற  எந்த  ராஜ்யமும்  பாழாய்ப்போம்;  தனக்குத்தானே  விரோதமாய்ப்  பிரிந்திருக்கிற  எந்தப்  பட்டணமும்  எந்த  வீடும்  நிலைநிற்கமாட்டாது.  {Matt  12:25}

 

சாத்தானைச்  சாத்தான்  துரத்தினால்  தனக்கு  விரோதமாகத்  தானே  பிரிவினை  செய்கிறதாயிருக்குமே;  அப்படிச்  செய்தால்  அவன்  ராஜ்யம்  எப்படி  நிலைநிற்கும்?  {Matt  12:26}

 

நான்  பெயெல்செபூலினாலே<Beelzebub>  பிசாசுகளைத்  துரத்தினால்,  உங்கள்  பிள்ளைகள்  அவைகளை  யாராலே  துரத்துகிறார்கள்?  ஆகையால்,  அவர்களே  உங்களை  நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.  {Matt  12:27}

 

நான்  தேவனுடைய  ஆவியினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறபடியால்,  தேவனுடைய  ராஜ்யம்  உங்களிடத்தில்  வந்திருக்கிறதே.  {Matt  12:28}

 

அன்றியும்,  பலவானை  முந்திக்  கட்டினாலொழியப்  பலவானுடைய  வீட்டுக்குள்  ஒருவன்  புகுந்து,  அவன்  உடைமைகளை  எப்படிக்  கொள்ளையிடக்கூடும்?  கட்டினானேயாகில்,  அவன்  வீட்டைக்  கொள்ளையிடலாம்.  {Matt  12:29}

 

என்னோடே  இராதவன்  எனக்கு  விரோதியாயிருக்கிறான்;  என்னோடே  சேர்க்காதவன்  சிதறடிக்கிறான்.  {Matt  12:30}

 

ஆதலால்,  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்:  எந்தப்  பாவமும்  எந்தத்  தூஷணமும்  மனுஷருக்கு  மன்னிக்கப்படும்;  ஆவியானவருக்கு  விரோதமான  தூஷணமோ  மனுஷருக்கு  மன்னிக்கப்படுவதில்லை.  {Matt  12:31}

 

எவனாகிலும்  மனுஷகுமாரனுக்கு  விரோதமான  வார்த்தை  சொன்னால்  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்;  எவனாகிலும்  பரிசுத்த  ஆவிக்கு  விரோதமாகப்  பேசினால்  அது  இம்மையிலும்  மறுமையிலும்  அவனுக்கு  மன்னிக்கப்படுவதில்லை.  {Matt  12:32}

 

மரம்  நல்லதென்றால்,  அதின்  கனியும்  நல்லதென்று  சொல்லுங்கள்;  மரம்  கெட்டதென்றால்,  அதின்  கனியும்  கெட்டதென்று  சொல்லுங்கள்;  மரமானது  அதின்  கனியினால்  அறியப்படும்.  {Matt  12:33}

 

விரியன்பாம்புக்  குட்டிகளே,  நீங்கள்  பொல்லாதவர்களாயிருக்க,  நலமானவைகளை  எப்படிப்  பேசுவீர்கள்?  இருதயத்தின்  நிறைவினால்  வாய்  பேசும்.  {Matt  12:34}

 

நல்ல  மனுஷன்  இருதயமாகிய  நல்ல  பொக்கிஷத்திலிருந்து  நல்லவைகளை  எடுத்துக்காட்டுகிறான்,  பொல்லாத  மனுஷன்  பொல்லாத  பொக்கிஷத்திலிருந்து  பொல்லாதவைகளை  எடுத்துக்காட்டுகிறான்.  {Matt  12:35}

 

மனுஷர்  பேசும்  வீணான  வார்த்தைகள்  யாவையும்  குறித்து  நியாயத்தீர்ப்புநாளிலே  கணக்கொப்புவிக்கவேண்டும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  12:36}

 

ஏனெனில்,  உன்  வார்த்தைகளினாலே  நீதிமான்  என்று  தீர்க்கப்படுவாய்;  அல்லது  உன்  வார்த்தைகளினாலே  குற்றவாளி  என்று  தீர்க்கப்படுவாய்  என்றார்.  {Matt  12:37}

 

அப்பொழுது,  வேதபாரகரிலும்  பரிசேயரிலும்<Pharisees>  சிலர்  அவரை  நோக்கி:  போதகரே,  உம்மால்  ஒரு  அடையாளத்தைக்  காண  விரும்புகிறோம்  என்றார்கள்.  {Matt  12:38}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  இந்தப்  பொல்லாத  விபசாரச்  சந்ததியார்  அடையாளத்தைத்  தேடுகிறார்கள்;  ஆனாலும்  யோனா<Jonas>  தீர்க்கதரிசியின்  அடையாளமேயன்றி  வேறே  அடையாளம்  இவர்களுக்குக்  கொடுக்கப்படுவதில்லை.  {Matt  12:39}

 

யோனா<Jonas>  இரவும்  பகலும்  மூன்றுநாள்  ஒரு  பெரிய  மீனின்  வயிற்றில்  இருந்தது  போல,  மனுஷகுமாரனும்  இரவும்  பகலும்  மூன்றுநாள்  பூமியின்  இருதயத்தில்  இருப்பார்.  {Matt  12:40}

 

யோனாவின்<Jonas>  பிரசங்கத்தைக்  கேட்டு  நினிவே<Nineveh>  பட்டணத்தார்  மனந்திரும்பினார்கள்.  இதோ,  யோனாவிலும்<Jonas>  பெரியவர்  இங்கே  இருக்கிறார்.  ஆதலால்  நியாயத்தீர்ப்புநாளிலே  நினிவே<Nineveh>  பட்டணத்தார்  இந்தச்  சந்ததியாரோடெழுந்து  நின்று  இவர்கள்மேல்  குற்றஞ்சுமத்துவார்கள்.  {Matt  12:41}

 

தென்தேசத்து  ராஜஸ்திரீ  பூமியின்  எல்லைகளிலிருந்து  சாலொமோனுடைய<Solomon>  ஞானத்தைக்  கேட்க  வந்தாள்.  இதோ,  சாலொமோனிலும்<Solomon>  பெரியவர்  இங்கே  இருக்கிறார்.  ஆதலால்  நியாயத்தீர்ப்புநாளிலே  அந்த  ராஜஸ்திரீ  இந்தச்  சந்ததியாரோடெழுந்து  நின்று  இவர்கள்மேல்  குற்றஞ்சுமத்துவாள்.  {Matt  12:42}

 

அசுத்த  ஆவி  ஒரு  மனுஷனை  விட்டுப்  புறப்படும்போது,  வறண்ட  இடங்களில்  அலைந்து,  இளைப்பாறுதல்  தேடியும்  கண்டடையாமல்:  {Matt  12:43}

 

நான்  விட்டுவந்த  என்  வீட்டுக்குத்  திரும்பிப்போவேன்  என்று  சொல்லி;  அங்கே  வந்து,  அந்த  வீடு  வெறுமையாகவும்,  பெருக்கி,  ஜோடிக்கப்பட்டதாகவும்  இருக்கக்கண்டு,  {Matt  12:44}

 

திரும்பிப்போய்,  தன்னிலும்  பொல்லாத  வேறு  ஏழு  ஆவிகளைத்  தன்னோடே  கூட்டிக்கொண்டுவந்து,  உட்புகுந்து,  அங்கே  குடியிருக்கும்;  அப்பொழுது,  அந்த  மனுஷனுடைய  முன்னிலைமையிலும்  அவன்  பின்னிலைமை  அதிக  கேடுள்ளதாயிருக்கும்;  அப்படியே  இந்தப்  பொல்லாத  சந்ததியாருக்கும்  சம்பவிக்கும்  என்றார்.  {Matt  12:45}

 

இப்படி  அவர்  ஜனங்களோடே  பேசுகையில்,  அவருடைய  தாயாரும்  சகோதரரும்  அவரிடத்தில்  பேசவேண்டுமென்று  வெளியே  நின்றார்கள்.  {Matt  12:46}

 

அப்பொழுது,  ஒருவன்  அவரை  நோக்கி:  உம்முடைய  தாயாரும்  உம்முடைய  சகோதரரும்  உம்மோடே  பேசவேண்டுமென்று  வெளியே  நிற்கிறார்கள்  என்றான்.  {Matt  12:47}

 

தம்மிடத்தில்  இப்படிச்  சொன்னவனுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  என்  தாயார்  யார்?  என்  சகோதரர்  யார்?  என்று  சொல்லி,  {Matt  12:48}

 

தம்முடைய  கையைத்  தமது  சீஷர்களுக்கு  நேரே  நீட்டி:  இதோ,  என்  தாயும்  என்  சகோதரரும்  இவர்களே!  {Matt  12:49}

 

பரலோகத்திலிருக்கிற  என்  பிதாவின்  சித்தத்தின்படி  செய்கிறவன்  எவனோ,  அவனே  எனக்குச்  சகோதரனும்  சகோதரியும்  தாயுமாய்  இருக்கிறான்  என்றார்.  {Matt  12:50}

 

இயேசு<Jesus>  அன்றையத்தினமே  வீட்டிலிருந்து  புறப்பட்டுப்போய்,  கடலோரத்திலே  உட்கார்ந்தார்.  {Matt  13:1}

 

திரளான  ஜனங்கள்  அவரிடத்தில்  கூடிவந்தபடியால்,  அவர்  படவில்  ஏறி  உட்கார்ந்தார்;  ஜனங்களெல்லாரும்  கரையிலே  நின்றார்கள்.  {Matt  13:2}

 

அவர்  அநேக  விசேஷங்களை  உவமைகளாக  அவர்களுக்குச்  சொன்னார்:  கேளுங்கள்,  விதைக்கிறவன்  ஒருவன்  விதைக்கப்  புறப்பட்டான்.  {Matt  13:3}

 

அவன்  விதைக்கையில்,  சில  விதை  வழியருகே  விழுந்தது;  பறவைகள்  வந்து  அதைப்  பட்சித்துப்போட்டது.  {Matt  13:4}

 

சில  விதை  அதிக  மண்ணில்லாத  கற்பாறை  இடங்களில்  விழுந்தது;  மண்  ஆழமாயிராததினாலே  அது  சீக்கிரமாய்  முளைத்தது.  {Matt  13:5}

 

வெயில்  ஏறினபோதோ,  தீய்ந்து  போய்,  வேரில்லாமையால்  உலர்ந்து  போயிற்று.  {Matt  13:6}

 

சில  விதை  முள்ளுள்ள  இடங்களில்  விழுந்தது;  முள்  வளர்ந்து  அதை  நெருக்கிப்போட்டது.  {Matt  13:7}

 

சில  விதையோ  நல்ல  நிலத்தில்  விழுந்து,  சிலது  நூறாகவும்,  சிலது  அறுபதாகவும்,  சிலது  முப்பதாகவும்  பலன்  தந்தது.  {Matt  13:8}

 

கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றார்.  {Matt  13:9}

 

அப்பொழுது,  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  ஏன்  அவர்களோடே  உவமைகளாகப்  பேசுகிறீர்  என்று  கேட்டார்கள்.  {Matt  13:10}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  பரலோகராஜ்யத்தின்  ரகசியங்களை  அறியும்படி  உங்களுக்கு  அருளப்பட்டது,  அவர்களுக்கோ  அருளப்படவில்லை.  {Matt  13:11}

 

உள்ளவன்  எவனோ  அவனுக்குக்  கொடுக்கப்படும்,  பரிபூரணமும்  அடைவான்;  இல்லாதவன்  எவனோ  அவனிடத்தில்  உள்ளதும்  எடுத்துக்கொள்ளப்படும்.  {Matt  13:12}

 

அவர்கள்  கண்டும்  காணாதவர்களாயும்,  கேட்டும்  கேளாதவர்களாயும்,  உணர்ந்துகொள்ளாதவர்களாயும்  இருக்கிறபடியினால்,  நான்  உவமைகளாக  அவர்களோடே  பேசுகிறேன்.  {Matt  13:13}

 

ஏசாயாவின்<Esaias>  தீர்க்கதரிசனம்  அவர்களிடத்தில்  நிறைவேறுகிறது;  அதாவது:  காதாரக்கேட்டும்  உணராதிருப்பீர்கள்;  கண்ணாரக்கண்டும்  அறியாதிருப்பீர்கள்.  {Matt  13:14}

 

இந்த  ஜனங்கள்  கண்களினால்  காணாமலும்,  காதுகளினால்  கேளாமலும்,  இருதயத்தினால்  உணர்ந்து  மனந்திரும்பாமலும்,  நான்  அவர்களை  ஆரோக்கியமாக்காமலும்  இருக்கும்படியாக,  அவர்கள்  இருதயம்  கொழுத்திருக்கிறது;  காதால்  மந்தமாய்க்  கேட்டு,  தங்கள்  கண்களை  மூடிக்கொண்டார்கள்  என்பதே.  {Matt  13:15}

 

உங்கள்  கண்கள்  காண்கிறதினாலும்,  உங்கள்  காதுகள்  கேட்கிறதினாலும்,  அவைகள்  பாக்கியமுள்ளவைகள்.  {Matt  13:16}

 

அநேக  தீர்க்கதரிசிகளும்  நீதிமான்களும்  நீங்கள்  காண்கிறவைகளைக்  காணவும்,  நீங்கள்  கேட்கிறவைகளைக்  கேட்கவும்  விரும்பியும்,  காணாமலும்  கேளாமலும்  போனார்களென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  13:17}

 

ஆகையால்  விதைக்கிறவனைப்பற்றிய  உவமையைக்  கேளுங்கள்.  {Matt  13:18}

 

ஒருவன்,  ராஜ்யத்தின்  வசனத்தைக்  கேட்டும்  உணராதிருக்கும்போது,  பொல்லாங்கன்  வந்து,  அவன்  இருதயத்தில்  விதைக்கப்பட்டதைப்  பறித்துக்கொள்ளுகிறான்;  அவனே  வழியருகே  விதைக்கப்பட்டவன்.  {Matt  13:19}

 

கற்பாறை  இடங்களில்  விதைக்கப்பட்டவன்,  வசனத்தைக்  கேட்டு,  உடனே  அதைச்  சந்தோஷத்தோடே  ஏற்றுக்கொள்ளுகிறவன்;  {Matt  13:20}

 

ஆகிலும்  தனக்குள்ளே  வேரில்லாதவனாய்,  கொஞ்சக்காலமாத்திரம்  நிலைத்திருப்பான்;  வசனத்தினிமித்தம்  உபத்திரவமும்  துன்பமும்  உண்டானவுடனே  இடறலடைவான்.  {Matt  13:21}

 

முள்ளுள்ள  இடங்களில்  விதைக்கப்பட்டவன்,  வசனத்தைக்  கேட்கிறவனாயிருந்தும்,  உலகக்கவலையும்  ஐசுவரியத்தின்  மயக்கமும்  வசனத்தை  நெருக்கிப்  போடுகிறதினால்,  அவனும்  பலனற்றுப்  போவான்.  {Matt  13:22}

 

நல்ல  நிலத்தில்  விதைக்கப்பட்டவனோ,  வசனத்தைக்  கேட்கிறவனும்  உணருகிறவனுமாயிருந்து,  நூறாகவும்  அறுபதாகவும்  முப்பதாகவும்  பலன்  தருவான்  என்றார்.  {Matt  13:23}

 

வேறொரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  பரலோகராஜ்யம்  தன்  நிலத்தில்  நல்ல  விதையை  விதைத்த  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறது.  {Matt  13:24}

 

மனுஷர்  நித்திரைபண்ணுகையில்  அவனுடைய  சத்துரு  வந்து,  கோதுமைக்குள்  களைகளை  விதைத்துவிட்டுப்  போனான்.  {Matt  13:25}

 

பயிரானது  வளர்ந்து  கதிர்விட்ட  போது,  களைகளும்  காணப்பட்டது.  {Matt  13:26}

 

வீட்டெஜமானுடைய  வேலைக்காரர்  அவனிடத்தில்  வந்து:  ஆண்டவனே,  நீர்  உமது  நிலத்தில்  நல்ல  விதையை  விதைத்தீர்  அல்லவா?  பின்னை  அதில்  களைகள்  எப்படி  உண்டானது  என்றார்கள்.  {Matt  13:27}

 

அதற்கு  அவன்:  சத்துரு  அதைச்  செய்தான்  என்றான்.  அப்பொழுது  வேலைக்காரர்:  நாங்கள்  போய்  அவைகளைப்  பிடுங்கிப்போட  உமக்குச்  சித்தமா?  என்று  கேட்டார்கள்.  {Matt  13:28}

 

அதற்கு  அவன்:  வேண்டாம்,  களைகளைப்  பிடுங்கும்போது  நீங்கள்  கோதுமையையுங்கூட  வேரோடே  பிடுங்காதபடிக்கு,  இரண்டையும்  அறுப்புமட்டும்  வளரவிடுங்கள்.  {Matt  13:29}

 

அறுப்புக்காலத்தில்  நான்  அறுக்கிறவர்களை  நோக்கி:  முதலாவது,  களைகளைப்பிடுங்கி,  அவைகளைச்  சுட்டெரிக்கிறதற்குக்  கட்டுகளாகக்  கட்டுங்கள்;  கோதுமையையோ  என்  களஞ்சியத்தில்  சேர்த்துவையுங்கள்  என்பேன்  என்று  சொன்னான்  என்றார்.  {Matt  13:30}

 

வேறொரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  பரலோகராஜ்யம்  கடுகு  விதைக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  மனுஷன்  எடுத்துத்  தன்  நிலத்தில்  விதைத்தான்.  {Matt  13:31}

 

அது  சகல  விதைகளிலும்  சிறிதாயிருந்தும்,  வளரும்போது,  சகல  பூண்டுகளிலும்  பெரிதாகி,  ஆகாயத்துப்  பறவைகள்  அதின்  கிளைகளில்  வந்து  அடையத்தக்க  மரமாகும்  என்றார்.  {Matt  13:32}

 

வேறொரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  பரலோகராஜ்யம்  புளித்தமாவுக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  ஸ்திரீ  எடுத்து,  முழுவதும்  புளிக்கும்வரைக்கும்,  மூன்றுபடி  மாவிலே  அடக்கிவைத்தாள்  என்றார்.  {Matt  13:33}

 

இவைகளையெல்லாம்  இயேசு<Jesus>  ஜனங்களோடே  உவமைகளாகப்  பேசினார்;  உவமைகளினாலேயன்றி,  அவர்களோடே  பேசவில்லை.  {Matt  13:34}

 

என்  வாயை  உவமைகளினால்  திறப்பேன்;  உலகத்தோற்றமுதல்  மறைபொருளானவைகளை  வெளிப்படுத்துவேன்  என்று  தீர்க்கதரிசியால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  {Matt  13:35}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  ஜனங்களை  அனுப்பிவிட்டு  வீட்டுக்குப்போனார்.  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  நிலத்தின்  களைகளைப்பற்றிய  உவமையை  எங்களுக்கு  வெளிப்படுத்தவேண்டுமென்று  கேட்டார்கள்.  {Matt  13:36}

 

அவர்  பிரதியுத்தரமாக:  நல்ல  விதையை  விதைக்கிறவன்  மனுஷகுமாரன்;  {Matt  13:37}

 

நிலம்  உலகம்;  நல்ல  விதை  ராஜ்யத்தின்  புத்திரர்;  களைகள்  பொல்லாங்கனுடைய  புத்திரர்;  {Matt  13:38}

 

அவைகளை  விதைக்கிற  சத்துரு  பிசாசு;  அறுப்பு  உலகத்தின்  முடிவு;  அறுக்கிறவர்கள்  தேவதூதர்கள்.  {Matt  13:39}

 

ஆதலால்,  களைகளைச்  சேர்த்து  அக்கினியால்  சுட்டெரிக்கிறதுபோல,  இவ்வுலகத்தின்  முடிவிலே  நடக்கும்.  {Matt  13:40}

 

மனுஷகுமாரன்  தம்முடைய  தூதர்களை  அனுப்புவார்;  அவர்கள்  அவருடைய  ராஜ்யத்தில்  இருக்கிற  சகல  இடறல்களையும்  அக்கிரமஞ்  செய்கிறவர்களையும்  சேர்த்து,  {Matt  13:41}

 

அவர்களை  அக்கினிச்  சூளையிலே  போடுவார்கள்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கும்.  {Matt  13:42}

 

அப்பொழுது,  நீதிமான்கள்  தங்கள்  பிதாவின்  ராஜ்யத்திலே  சூரியனைப்போலப்  பிரகாசிப்பார்கள்.  கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்.  {Matt  13:43}

 

அன்றியும்,  பரலோகராஜ்யம்  நிலத்தில்  புதைத்திருக்கிற  பொக்கிஷத்துக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  மனுஷன்  கண்டு,  மறைத்து,  அதைப்பற்றிய  சந்தோஷத்தினாலே  போய்,  தனக்கு  உண்டான  எல்லாவற்றையும்  விற்று,  அந்த  நிலத்தைக்  கொள்ளுகிறான்.  {Matt  13:44}

 

மேலும்,  பரலோகராஜ்யம்  நல்ல  முத்துக்களைத்  தேடுகிற  வியாபாரிக்கு  ஒப்பாயிருக்கிறது.  {Matt  13:45}

 

அவன்  விலையுயர்ந்த  ஒரு  முத்தைக்  கண்டு,  போய்,  தனக்குண்டான  எல்லாவற்றையும்  விற்று,  அதைக்  கொள்ளுகிறான்.  {Matt  13:46}

 

அன்றியும்,  பரலோகராஜ்யம்  கடலிலே  போடப்பட்டு,  சகலவிதமான  மீன்களையும்  சேர்த்து  வாரிக்கொள்ளும்  வலைக்கு  ஒப்பாயிருக்கிறது.  {Matt  13:47}

 

அது  நிறைந்தபோது,  அதைக்  கரையில்  இழுத்து,  உட்கார்ந்து,  நல்லவைகளைக்  கூடைகளில்  சேர்த்து,  ஆகாதவைகளை  எறிந்துபோடுவார்கள்.  {Matt  13:48}

 

இப்படியே  உலகத்தின்  முடிவிலே  நடக்கும்.  தேவதூதர்கள்  புறப்பட்டு,  நீதிமான்களின்  நடுவிலிருந்து  பொல்லாதவர்களைப்  பிரித்து,  {Matt  13:49}

 

அவர்களை  அக்கினிச்சூளையிலே  போடுவார்கள்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கும்  என்றார்.  {Matt  13:50}

 

பின்பு,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  இவைகளையெல்லாம்  அறிந்துகொண்டீர்களா  என்று  கேட்டார்.  அதற்கு  அவர்கள்:  ஆம்,  அறிந்துகொண்டோம்,  ஆண்டவரே,  என்றார்கள்.  {Matt  13:51}

 

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  இப்படியிருக்கிறபடியால்,  பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில்  உபதேசிக்கப்பட்டுத்  தேறின  வேதபாரகன்  எவனும்  தன்  பொக்கிஷத்திலிருந்து  புதியவைகளையும்  பழையவைகளையும்  எடுத்துக்கொடுக்கிற  வீட்டெஜமானாகிய  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறான்  என்றார்.  {Matt  13:52}

 

இயேசு<Jesus>  இந்த  உவமைகளைச்  சொல்லி  முடித்தபின்பு,  அவ்விடம்  விட்டு,  {Matt  13:53}

 

தாம்  வளர்ந்த  ஊரிலே  வந்து,  அவர்களுடைய  ஜெபஆலயத்திலே  அவர்களுக்கு  உபதேசம்பண்ணினார்.  அவர்கள்  ஆச்சரியப்பட்டு:  இவனுக்கு  இந்த  ஞானமும்  பலத்த  செய்கைகளும்  எப்படி  வந்தது?  {Matt  13:54}

 

இவன்  தச்சனுடைய  குமாரன்  அல்லவா?  இவன்  தாய்  மரியாள்<Mary>  என்பவள்  அல்லவா?  யாக்கோபு<James>  யோசே<Joses>  சீமோன்<Simon>  யூதா<Judas>  என்பவர்கள்  இவனுக்குச்  சகோதரர்  அல்லவா?  {Matt  13:55}

 

இவன்  சகோதரிகளெல்லாரும்  நம்மிடத்தில்  இருக்கிறார்கள்  அல்லவா?  இப்படியிருக்க,  இதெல்லாம்  இவனுக்கு  எப்படி  வந்தது?  என்று  சொல்லி,  {Matt  13:56}

 

அவரைக்குறித்து  இடறலடைந்தார்கள்.  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  தீர்க்கதரிசி  ஒருவன்  தன்  ஊரிலும்  தன்  வீட்டிலுமேயன்றி  வேறெங்கும்  கனவீனமடையான்  என்றார்.  {Matt  13:57}

 

அவர்களுடைய  அவிசுவாசத்தினிமித்தம்  அவர்  அங்கே  அநேக  அற்புதங்களைச்  செய்யவில்லை.  {Matt  13:58}

 

அக்காலத்தில்,  காற்பங்கு  தேசாதிபதியாகிய  ஏரோது<Herod>  இயேசுவின்<Jesus>  கீர்த்தியைக்  கேள்விப்பட்டு,  {Matt  14:1}

 

தன்  ஊழியக்காரரை  நோக்கி:  இவன்  யோவான்ஸ்நானன்<John  the  Baptist>;  இவன்  மரித்தோரிலிருந்து  எழுந்தான்;  ஆகையால்,  இவனிடத்தில்  பலத்த  செய்கைகள்  விளங்குகிறது  என்றான்.  {Matt  14:2}

 

ஏரோது<Herod>  தன்  சகோதரனாகிய  பிலிப்புவின்<Philip>  மனைவி  ஏரோதியாளினிமித்தம்<Herodias>  யோவானைப்<John>  பிடித்துக்  கட்டிக்  காவலில்  வைத்திருந்தான்.  {Matt  14:3}

 

ஏனெனில்:  நீர்  அவளை  வைத்துக்கொள்வது  நியாயமல்லவென்று  யோவான்<John>  அவனுக்குச்  சொல்லியிருந்தான்.  {Matt  14:4}

 

ஏரோது<Herod>  அவனைக்  கொலைசெய்ய  மனதாயிருந்தும்,  ஜனங்கள்  அவனைத்  தீர்க்கதரிசியென்று  எண்ணினபடியால்  அவர்களுக்குப்  பயந்திருந்தான்.  {Matt  14:5}

 

அப்படியிருக்க,  ஏரோதின்<Herod>  ஜென்மநாள்  கொண்டாடப்படுகிறபோது,  ஏரோதியாளின்<Herodias>  குமாரத்தி  அவர்கள்  நடுவே  நடனம்பண்ணி  ஏரோதைச்<Herod>  சந்தோஷப்படுத்தினாள்.  {Matt  14:6}

 

அதினிமித்தம்  அவன்:  நீ  எதைக்  கேட்டாலும்  தருவேன்  என்று  அவளுக்கு  ஆணையிட்டு  வாக்குக்கொடுத்தான்.  {Matt  14:7}

 

அவள்  தன்  தாயினால்  ஏவப்பட்டபடியே:  யோவான்ஸ்நானனுடைய<John the Baptist>  தலையை  இங்கே  ஒரு  தாலத்திலே  எனக்குத்  தாரும்  என்று  கேட்டாள்.  {Matt  14:8}

 

ராஜா  துக்கமடைந்தான்.  ஆகிலும்,  ஆணையினிமித்தமும்,  பந்தியில்  கூட  இருந்தவர்களினிமித்தமும்,  அதைக்  கொடுக்கக்  கட்டளையிட்டு,  {Matt  14:9}

 

ஆள்  அனுப்பி,  காவற்கூடத்திலே  யோவானைச்<John>  சிரச்சேதம்பண்ணுவித்தான்.  {Matt  14:10}

 

அவனுடைய  சிரசை  ஒரு  தாலத்திலே  கொண்டுவந்து,  சிறு  பெண்ணுக்குக்  கொடுத்தார்கள்;  அவள்  அதைத்  தன்  தாயினிடத்தில்  கொண்டுபோனாள்.  {Matt  14:11}

 

அவனுடைய  சீஷர்கள்  வந்து  உடலை  எடுத்து  அடக்கம்பண்ணி,  பின்பு  போய்  அந்தச்  சங்கதியை  இயேசுவுக்கு<Jesus>  அறிவித்தார்கள்.  {Matt  14:12}

 

இயேசு<Jesus>  அதைக்  கேட்டு,  அவ்விடம்  விட்டு,  படவில்  ஏறி,  வனாந்தரமான  ஓர்  இடத்துக்குத்  தனியே  போனார்.  ஜனங்கள்  அதைக்  கேள்விப்பட்டு,  பட்டணங்களிலிருந்து  கால்நடையாய்  அவரிடத்திற்குப்  போனார்கள்.  {Matt  14:13}

 

இயேசு<Jesus>  வந்து,  திரளான  ஜனங்களைக்  கண்டு,  அவர்கள்மேல்  மனதுருகி,  அவர்களில்  வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  {Matt  14:14}

 

சாயங்காலமானபோது,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  இது  வனாந்தரமான  இடம்,  நேரமுமாயிற்று;  ஜனங்கள்  கிராமங்களுக்குப்  போய்த்  தங்களுக்குப்  போஜனபதார்த்தங்களைக்  கொள்ளும்படி  அவர்களை  அனுப்பிவிடவேண்டும்  என்றார்கள்.  {Matt  14:15}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  அவர்கள்  போகவேண்டுவதில்லை;  நீங்களே  அவர்களுக்குப்  போஜனங்கொடுங்கள்  என்றார்.  {Matt  14:16}

 

அதற்கு  அவர்கள்:  இங்கே  எங்களிடத்தில்  ஐந்து  அப்பமும்  இரண்டு  மீன்களுமேயல்லாமல்,  வேறொன்றும்  இல்லை  என்றார்கள்.  {Matt  14:17}

 

அவைகளை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  {Matt  14:18}

 

அப்பொழுது,  அவர்  ஜனங்களைப்  புல்லின்மேல்  பந்தியிருக்கக்  கட்டளையிட்டு,  அந்த  ஐந்து  அப்பங்களையும்,  அந்த  இரண்டு  மீன்களையும்  எடுத்து,  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  ஆசீர்வதித்து,  அப்பங்களைப்  பிட்டுச்  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்;  சீஷர்கள்  ஜனங்களுக்குக்  கொடுத்தார்கள்.  {Matt  14:19}

 

எல்லாரும்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்;  மீதியான  துணிக்கைகளைப்  பன்னிரண்டு  கூடைநிறைய  எடுத்தார்கள்.  {Matt  14:20}

 

ஸ்திரீகளும்  பிள்ளைகளும்  தவிர,  சாப்பிட்ட  புருஷர்கள்  ஏறக்குறைய  ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.  {Matt  14:21}

 

இயேசு<Jesus>  ஜனங்களை  அனுப்பிவிடுகையில்,  தம்முடைய  சீஷர்கள்  படவில்  ஏறி,  தமக்கு  முன்னே  அக்கரைக்குப்  போகும்படி  அவர்களைத்  துரிதப்படுத்தினார்.  {Matt  14:22}

 

அவர்  ஜனங்களை  அனுப்பிவிட்ட  பின்பு,  தனித்து  ஜெபம்பண்ண  ஒரு  மலையின்மேல்  ஏறி,  சாயங்காலமானபோது  அங்கே  தனிமையாயிருந்தார்.  {Matt  14:23}

 

அதற்குள்ளாகப்  படவு  நடுக்கடலிலே  சேர்ந்து,  எதிர்க்காற்றாயிருந்தபடியால்  அலைகளினால்  அலைவுபட்டது.  {Matt  14:24}

 

இரவின்  நாலாம்  ஜாமத்திலே,  இயேசு<Jesus>  கடலின்மேல்  நடந்து,  அவர்களிடத்திற்கு  வந்தார்.  {Matt  14:25}

 

அவர்  கடலின்மேல்  நடக்கிறதைச்  சீஷர்கள்  கண்டு,  கலக்கமடைந்து,  ஆவேசம்  என்று  சொல்லி,  பயத்தினால்  அலறினார்கள்.  {Matt  14:26}

 

உடனே  இயேசு<Jesus>  அவர்களோடே  பேசி:  திடன்கொள்ளுங்கள்,  நான்தான்,  பயப்படாதிருங்கள்  என்றார்.  {Matt  14:27}

 

பேதுரு<Peter>  அவரை  நோக்கி:  ஆண்டவரே!  நீரேயானால்  நான்  ஜலத்தின்மேல்  நடந்து  உம்மிடத்தில்  வரக்  கட்டளையிடும்  என்றான்.  {Matt  14:28}

 

அதற்கு  அவர்:  வா  என்றார்.  அப்பொழுது,  பேதுரு<Peter>  படவை  விட்டிறங்கி,  இயேசுவினிடத்தில்<Jesus>  போக  ஜலத்தின்மேல்  நடந்தான்.  {Matt  14:29}

 

காற்று  பலமாயிருக்கிறதைக்  கண்டு,  பயந்து,  அமிழ்ந்துபோகையில்:  ஆண்டவரே,  என்னை  ரட்சியும்  என்று  கூப்பிட்டான்.  {Matt  14:30}

 

உடனே  இயேசு<Jesus>  கையை  நீட்டி  அவனைப்  பிடித்து:  அற்பவிசுவாசியே,  ஏன்  சந்தேகப்பட்டாய்  என்றார்.  {Matt  14:31}

 

அவர்கள்  படவில்  ஏறினவுடனே  காற்று  அமர்ந்தது.  {Matt  14:32}

 

அப்பொழுது,  படவில்  உள்ளவர்கள்  வந்து:  மெய்யாகவே  நீர்  தேவனுடைய  குமாரன்  என்று  சொல்லி,  அவரைப்  பணிந்துகொண்டார்கள்.  {Matt  14:33}

 

பின்பு,  அவர்கள்  கடலைக்  கடந்து,  கெனேசரேத்து<Gennesaret>  நாட்டில்  சேர்ந்தார்கள்.  {Matt  14:34}

 

அவ்விடத்து  மனுஷர்  அவரை  இன்னார்  என்று  அறிந்து,  சுற்றுப்புறமெங்கும்  செய்தி  அனுப்பி,  பிணியாளிகளெல்லாரையும்  அவரிடத்தில்  கொண்டுவந்து,  {Matt  14:35}

 

அவருடைய  வஸ்திரத்தின்  ஓரத்தையாகிலும்  அவர்கள்  தொடும்படி  உத்தரவாகவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டார்கள்;  தொட்ட  யாவரும்  சொஸ்தமானார்கள்.  {Matt  14:36}

 

அப்பொழுது,  எருசலேமிலிருந்து<Jerusalem>  வந்த  வேதபாரகரும்  பரிசேயரும்<Pharisees>  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து:  {Matt  15:1}

 

உம்முடைய  சீஷர்கள்  முன்னோர்களின்  பாரம்பரியத்தை  ஏன்  மீறி  நடக்கிறார்கள்?  கைகழுவாமல்  போஜனம்  பண்ணுகிறார்களே!  என்றார்கள்.  {Matt  15:2}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  உங்கள்  பாரம்பரியத்தினாலே  தேவனுடைய  கற்பனையை  ஏன்  மீறி  நடக்கிறீர்கள்?  {Matt  15:3}

 

உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக  என்றும்;  தகப்பனையாவது  தாயையாவது  நிந்திக்கிறவன்  கொல்லப்படவேண்டும்  என்றும்,  தேவன்  கற்பித்திருக்கிறாரே.  {Matt  15:4}

 

நீங்களோ,  எவனாகிலும்  தகப்பனையாவது  தாயையாவது  நோக்கி:  உனக்கு  நான்  செய்யத்தக்க  உதவி  எது  உண்டோ,  அதைக்  காணிக்கையாகக்  கொடுக்கிறேன்  என்று  சொல்லி,  தன்  தகப்பனையாவது  தன்  தாயையாவது  கனம்பண்ணாமற்போனாலும்,  அவனுடைய  கடமை  தீர்ந்ததென்று  போதித்து,  {Matt  15:5}

 

உங்கள்  பாரம்பரியத்தினாலே  தேவனுடைய  கற்பனையை  அவமாக்கிவருகிறீர்கள்.  {Matt  15:6}

 

மாயக்காரரே,  உங்களைக்குறித்து:  {Matt  15:7}

 

இந்த  ஜனங்கள்  தங்கள்  வாயினால்  என்னிடத்தில்  சேர்ந்து,  தங்கள்  உதடுகளினால்  என்னைக்  கனம்பண்ணுகிறார்கள்;  அவர்கள்  இருதயமோ  எனக்குத்  தூரமாய்  விலகியிருக்கிறது;  {Matt  15:8}

 

மனுஷருடைய  கற்பனைகளை  உபதேசங்களாகப்  போதித்து,  வீணாய்  எனக்கு  ஆராதனை  செய்கிறார்கள்  என்று,  ஏசாயா<Esaias>  தீர்க்கதரிசி  நன்றாய்ச்  சொல்லியிருக்கிறான்  என்றார்.  {Matt  15:9}

 

பின்பு  அவர்  ஜனங்களை  வரவழைத்து,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  கேட்டு  உணருங்கள்.  {Matt  15:10}

 

வாய்க்குள்ளே  போகிறது  மனுஷனைத்  தீட்டுப்படுத்தாது,  வாயிலிருந்து  புறப்படுகிறதே  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்  என்றார்.  {Matt  15:11}

 

அப்பொழுது,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  பரிசேயர்<Pharisees>  இந்த  வசனத்தைக்  கேட்டு  இடறலடைந்தார்கள்  என்று  அறிவீரா  என்றார்கள்.  {Matt  15:12}

 

அவர்  பிரதியுத்தரமாக:  என்  பரமபிதா  நடாத  நாற்றெல்லாம்  வேரோடே  பிடுங்கப்படும்.  {Matt  15:13}

 

அவர்களை  விட்டுவிடுங்கள்,  அவர்கள்  குருடருக்கு  வழிகாட்டுகிற  குருடராயிருக்கிறார்கள்;  குருடனுக்குக்  குருடன்  வழிகாட்டினால்  இருவரும்  குழியிலே  விழுவார்களே  என்றார்.  {Matt  15:14}

 

அப்பொழுது,  பேதுரு<Peter>  அவரை  நோக்கி:  இந்த  உவமையை  எங்களுக்கு  வெளிப்படுத்தவேண்டும்  என்றான்.  {Matt  15:15}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நீங்களும்  இன்னும்  உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?  {Matt  15:16}

 

வாய்க்குள்ளே  போகிறதெல்லாம்  வயிற்றில்  சென்று  ஆசனவழியாய்க்  கழிந்துபோம்  என்பதை  நீங்கள்  இன்னும்  அறியவில்லையா?  {Matt  15:17}

 

வாயிலிருந்து  புறப்படுகிறவைகள்  இருதயத்திலிருந்து  புறப்பட்டுவரும்;  அவைகளே  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்.  {Matt  15:18}

 

எப்படியெனில்,  இருதயத்திலிருந்து  பொல்லாத  சிந்தனைகளும்,  கொலைபாதகங்களும்,  விபசாரங்களும்,  வேசித்தனங்களும்,  களவுகளும்,  பொய்ச்சாட்சிகளும்,  தூஷணங்களும்  புறப்பட்டுவரும்.  {Matt  15:19}

 

இவைகளே  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்;  கைகழுவாமல்  சாப்பிடுகிறது  மனுஷனைத்  தீட்டுப்படுத்தாது  என்றார்.  {Matt  15:20}

 

பின்பு,  இயேசு<Jesus>  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  தீரு<Tyre>  சீதோன்<Sidon>  பட்டணங்களின்  திசைகளுக்குப்  போனார்.  {Matt  15:21}

 

அப்பொழுது,  அந்தத்  திசைகளில்  குடியிருக்கிற  கானானிய<Canaan>  ஸ்திரீ  ஒருத்தி  அவரிடத்தில்  வந்து:  ஆண்டவரே,  தாவீதின்<David>  குமாரனே,  எனக்கு  இரங்கும்,  என்  மகள்  பிசாசினால்  கொடிய  வேதனைப்படுகிறாள்  என்று  சொல்லிக்  கூப்பிட்டாள்.  {Matt  15:22}

 

அவளுக்குப்  பிரதியுத்தரமாக  அவர்  ஒரு  வார்த்தையும்  சொல்லவில்லை.  அப்பொழுது  அவருடைய  சீஷர்கள்  வந்து:  இவள்  நம்மைப்  பின்தொடர்ந்து  கூப்பிடுகிறாளே,  இவளை  அனுப்பிவிடும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  {Matt  15:23}

 

அதற்கு  அவர்:  காணாமற்போன  ஆடுகளாகிய  இஸ்ரவேல்<Israel>  வீட்டாரிடத்திற்கு  அனுப்பப்பட்டேனேயன்றி,  மற்றப்படியல்ல  என்றார்.  {Matt  15:24}

 

அவள்  வந்து:  ஆண்டவரே,  எனக்கு  உதவிசெய்யும்  என்று  அவரைப்  பணிந்துகொண்டாள்.  {Matt  15:25}

 

அவர்  அவளை  நோக்கி:  பிள்ளைகளின்  அப்பத்தை  எடுத்து,  நாய்க்குட்டிகளுக்குப்  போடுகிறது  நல்லதல்ல  என்றார்.  {Matt  15:26}

 

அதற்கு  அவள்:  மெய்தான்  ஆண்டவரே,  ஆகிலும்  நாய்க்குட்டிகள்  தங்கள்  எஜமான்களின்  மேஜையிலிருந்து  விழும்  துணிக்கைகளைத்  தின்னுமே  என்றாள்.  {Matt  15:27}

 

இயேசு<Jesus>  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  ஸ்திரீயே,  உன்  விசுவாசம்  பெரிது;  நீ  விரும்புகிறபடி  உனக்கு  ஆகக்கடவது  என்றார்.  அந்நேரமே  அவள்  மகள்  ஆரோக்கியமானாள்.  {Matt  15:28}

 

இயேசு<Jesus>  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  கலிலேயாக்<Galilee>  கடலருகே  வந்து,  ஒரு  மலையின்மேல்  ஏறி,  அங்கே  உட்கார்ந்தார்.  {Matt  15:29}

 

அப்பொழுது,  சப்பாணிகள்,  குருடர்,  ஊமையர்,  ஊனர்  முதலிய  அநேகரை,  திரளான  ஜனங்கள்  கூட்டிக்கொண்டு  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து,  அவர்களை  அவர்  பாதத்திலே  வைத்தார்கள்;  அவர்களை  அவர்  சொஸ்தப்படுத்தினார்.  {Matt  15:30}

 

ஊமையர்  பேசுகிறதையும்,  ஊனர்  சொஸ்தமடைகிறதையும்,  சப்பாணிகள்  நடக்கிறதையும்,  குருடர்  பார்க்கிறதையும்  ஜனங்கள்  கண்டு,  ஆச்சரியப்பட்டு,  இஸ்ரவேலின்<Israel>  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  {Matt  15:31}

 

பின்பு,  இயேசு<Jesus>  தம்முடைய  சீஷர்களை  அழைத்து:  ஜனங்களுக்காகப்  பரிதபிக்கிறேன்,  இவர்கள்  என்னிடத்தில்  மூன்றுநாள்  தங்கியிருந்து  சாப்பிட  ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;  இவர்களைப்  பட்டினியாய்  அனுப்பிவிட  எனக்கு  மனதில்லை,  வழியில்  சோர்ந்துபோவார்களே  என்றார்.  {Matt  15:32}

 

அதற்கு  அவருடைய  சீஷர்கள்:  இவ்வளவு  திரளான  ஜனங்களுக்குத்  திருப்தியுண்டாகும்படி  வேண்டிய  அப்பங்கள்  இந்த  வனாந்தரத்திலே  நமக்கு  எப்படி  அகப்படும்  என்றார்கள்.  {Matt  15:33}

 

அதற்கு  இயேசு<Jesus>:  உங்களிடத்தில்  எத்தனை  அப்பங்கள்  உண்டு  என்று  கேட்டார்.  அவர்கள்:  ஏழு  அப்பங்களும்  சில  சிறு  மீன்களும்  உண்டு  என்றார்கள்.  {Matt  15:34}

 

அப்பொழுது  அவர்  ஜனங்களைத்  தரையில்  பந்தியிருக்கக்  கட்டளையிட்டு,  {Matt  15:35}

 

அந்த  ஏழு  அப்பங்களையும்  அந்த  மீன்களையும்  எடுத்து,  ஸ்தோத்திரம்  பண்ணி,  பிட்டுத்  தம்முடைய  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்;  சீஷர்கள்  ஜனங்களுக்குப்  பரிமாறினார்கள்.  {Matt  15:36}

 

எல்லாரும்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்;  மீதியான  துணிக்கைகளை  ஏழு  கூடைநிறைய  எடுத்தார்கள்.  {Matt  15:37}

 

ஸ்திரீகளும்  பிள்ளைகளும்  தவிர,  சாப்பிட்ட  புருஷர்  நாலாயிரம்பேராயிருந்தார்கள்.  {Matt  15:38}

 

அவர்  ஜனங்களை  அனுப்பிவிட்டு,  படவில்  ஏறி,  மக்தலாவின்<Magdala>  எல்லைகளில்  வந்தார்.  {Matt  15:39}

 

பரிசேயரும்<Pharisees>  சதுசேயரும்<Sadducees>  அவரைச்  சோதிக்கும்படி  அவரிடத்தில்  வந்து:  வானத்திலிருந்து  ஓர்  அடையாளத்தைத்  தங்களுக்குக்  காண்பிக்கவேண்டும்  என்று  கேட்டார்கள்.  {Matt  16:1}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  அஸ்தமனமாகிறபோது,  செவ்வானமிட்டிருக்கிறது,  அதினால்  வெளிவாங்கும்  என்று  சொல்லுகிறீர்கள்.  {Matt  16:2}

 

உதயமாகிறபோது,  செவ்வானமும்  மந்தாரமுமாயிருக்கிறது,  அதினால்  இன்றைக்குக்  காற்றும்  மழையும்  உண்டாகும்  என்று  சொல்லுகிறீர்கள்.  மாயக்காரரே,  வானத்தின்  தோற்றத்தை  நிதானிக்க  உங்களுக்குத்  தெரியுமே,  காலங்களின்  அடையாளங்களை  நிதானிக்க  உங்களால்  கூடாதா?  {Matt  16:3}

 

இந்தப்  பொல்லாத  விபசார  சந்ததியார்  அடையாளம்  தேடுகிறார்கள்;  யோனா<Jonas>  தீர்க்கதரிசியின்  அடையாளமேயன்றி  வேறே  அடையாளம்  இவர்களுக்குக்  கொடுக்கப்படுவதில்லை  என்று  சொல்லி,  அவர்களை  விட்டுப்  புறப்பட்டுப்போனார்.  {Matt  16:4}

 

அவருடைய  சீஷர்கள்  அக்கரை  சேர்ந்தபோது,  அப்பங்களைக்  கொண்டுவர  மறந்துபோனார்கள்.  {Matt  16:5}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  பரிசேயர்<Pharisees>  சதுசேயர்<Sadducees>  என்பவர்களின்  புளித்தமாவைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்  என்றார்.  {Matt  16:6}

 

நாம்  அப்பங்களைக்  கொண்டுவராதபடியால்  இப்படிச்  சொல்லுகிறார்  என்று  அவர்கள்  தங்களுக்குள்ளே  யோசனைபண்ணிக்கொண்டார்கள்.  {Matt  16:7}

 

இயேசு<Jesus>  அதை  அறிந்து:  அற்பவிசுவாசிகளே,  அப்பங்களைக்  கொண்டுவராததைக்குறித்து  நீங்கள்  உங்களுக்குள்ளே  யோசனைபண்ணுகிறதென்ன?  {Matt  16:8}

 

இன்னும்  நீங்கள்  உணரவில்லையா?  ஐந்து  அப்பங்களை  ஐயாயிரம்பேருக்குப்  பகிர்ந்ததையும்,  மீதியானதை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்பதையும்;  {Matt  16:9}

 

ஏழு  அப்பங்களை  நாலாயிரம்பேருக்குப்  பகிர்ந்ததையும்,  மீதியானதை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்பதையும்  நீங்கள்  நினைவுகூராமலிருக்கிறீர்களா?  {Matt  16:10}

 

பரிசேயர்<Pharisees>  சதுசேயர்<Sadducees>  என்பவர்களின்  புளித்தமாவுக்கு  எச்சரிக்கையாயிருக்கவேண்டும்  என்று  நான்  சொன்னது  அப்பத்தைக்குறித்துச்  சொல்லவில்லை  என்று  நீங்கள்  உணராதிருக்கிறது  எப்படி  என்றார்.  {Matt  16:11}

 

அப்பொழுது,  அவர்  அப்பத்தின்  புளித்தமாவைக்குறித்து  எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று  சொல்லாமல்,  பரிசேயர்<Pharisees>  சதுசேயர்<Sadducees>  என்பவர்களின்  உபதேசத்தைக்குறித்தே  அப்படிச்  சொன்னார்  என்று  அறிந்துகொண்டார்கள்.  {Matt  16:12}

 

பின்பு,  இயேசு<Jesus>  பிலிப்புச்  செசரியாவின்<Caesarea  Philippi>  திசைகளில்  வந்தபோது,  தம்முடைய  சீஷரை  நோக்கி:  மனுஷகுமாரனாகிய  என்னை  ஜனங்கள்  யார்  என்று  சொல்லுகிறார்கள்  என்று  கேட்டார்.  {Matt  16:13}

 

அதற்கு  அவர்கள்:  சிலர்  உம்மை  யோவான்ஸ்நானன்<John  the  Baptist>  என்றும்,  சிலர்  எலியா<Elias>  என்றும்;  வேறு  சிலர்  எரேமியா<Jeremias>,  அல்லது  தீர்க்கதரிசிகளில்  ஒருவர்  என்றும்  சொல்லுகிறார்கள்  என்றார்கள்.  {Matt  16:14}

 

அப்பொழுது  அவர்:  நீங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டார்.  {Matt  16:15}

 

சீமோன்  பேதுரு<Simon  Peter>  பிரதியுத்தரமாக:  நீர்  ஜீவனுள்ள  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்து<Christ>  என்றான்.  {Matt  16:16}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  யோனாவின்<Barjona>  குமாரனாகிய  சீமோனே<Simon>,  நீ  பாக்கியவான்;  மாம்சமும்  இரத்தமும்  இதை  உனக்கு  வெளிப்படுத்தவில்லை,  பரலோகத்திலிருக்கிற  என்  பிதா  இதை  உனக்கு  வெளிப்படுத்தினார்.  {Matt  16:17}

 

மேலும்,  நான்  உனக்குச்  சொல்லுகிறேன்,  நீ  பேதுருவாய்<Peter>  இருக்கிறாய்,  இந்தக்  கல்லின்மேல்  என்  சபையைக்  கட்டுவேன்;  பாதாளத்தின்  வாசல்கள்  அதை  மேற்கொள்வதில்லை.  {Matt  16:18}

 

பரலோகராஜ்யத்தின்  திறவுகோல்களை  நான்  உனக்குத்  தருவேன்;  பூலோகத்திலே  நீ  கட்டுகிறது  எதுவோ  அது  பரலோகத்திலும்  கட்டப்பட்டிருக்கும்,  பூலோகத்திலே  நீ  கட்டவிழ்ப்பது  எதுவோ  அது  பரலோகத்திலும்  கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்  என்றார்.  {Matt  16:19}

 

அப்பொழுது,  தாம்  கிறிஸ்துவாகிய  இயேசு<Jesus  the  Christ>  என்று  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்குத்  தம்முடைய  சீஷர்களுக்குக்  கட்டளையிட்டார்.  {Matt  16:20}

 

அதுமுதல்  இயேசு<Jesus>,  தாம்  எருசலேமுக்குப்போய்<Jerusalem>,  மூப்பராலும்  பிரதான  ஆசாரியராலும்  வேதபாரகராலும்  பல  பாடுகள்பட்டு,  கொலையுண்டு,  மூன்றாம்  நாளில்  எழுந்திருக்கவேண்டும்  என்பதைத்  தம்முடைய  சீஷர்களுக்குச்  சொல்லத்தொடங்கினார்.  {Matt  16:21}

 

அப்பொழுது,  பேதுரு<Peter>  அவரைத்  தனியே  அழைத்துக்கொண்டுபோய்:  ஆண்டவரே,  இது  உமக்கு  நேரிடக்கூடாதே,  இது  உமக்குச்  சம்பவிப்பதில்லை  என்று  அவரைக்  கடிந்துகொள்ளத்  தொடங்கினான்.  {Matt  16:22}

 

அவரோ  திரும்பிப்  பேதுருவைப்<Peter>  பார்த்து:  எனக்குப்  பின்னாகப்போ,  சாத்தானே,  நீ  எனக்கு  இடறலாயிருக்கிறாய்;  தேவனுக்கு  ஏற்றவைகளைச்  சிந்தியாமல்  மனுஷருக்கு  ஏற்றவைகளைச்  சிந்திக்கிறாய்  என்றார்.  {Matt  16:23}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஒருவன்  என்னைப்  பின்பற்றி  வர  விரும்பினால்,  அவன்  தன்னைத்தான்  வெறுத்து,  தன்  சிலுவையை  எடுத்துக்கொண்டு  என்னைப்  பின்பற்றக்கடவன்.  {Matt  16:24}

 

தன்  ஜீவனை  ரட்சிக்க  விரும்புகிறவன்  அதை  இழந்துபோவான்;  என்னிமித்தமாகத்  தன்  ஜீவனை  இழந்துபோகிறவன்  அதைக்  கண்டடைவான்.  {Matt  16:25}

 

மனுஷன்  உலகம்  முழுவதையும்  ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,  தன்  ஜீவனை  நஷ்டப்படுத்தினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  மனுஷன்  தன்  ஜீவனுக்கு  ஈடாக  என்னத்தைக்  கொடுப்பான்?  {Matt  16:26}

 

மனுஷகுமாரன்  தம்முடைய  பிதாவின்  மகிமைபொருந்தினவராய்த்  தம்முடைய  தூதரோடுங்கூட  வருவார்;  அப்பொழுது,  அவனவன்  கிரியைக்குத்தக்கதாக  அவனவனுக்குப்  பலனளிப்பார்.  {Matt  16:27}

 

இங்கே  நிற்கிறவர்களில்  சிலர்  மனுஷகுமாரன்  தம்முடைய  ராஜ்யத்தில்  வருவதைக்  காணுமுன்,  மரணத்தை  ருசிபார்ப்பதில்லை  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  16:28}

 

ஆறுநாளைக்குப்  பின்பு,  இயேசு<Jesus>  பேதுருவையும்<Peter>  யாக்கோபையும்<James>  அவனுடைய  சகோதரனாகிய  யோவானையும்<John>  கூட்டிக்கொண்டு  தனித்திருக்கும்படி  உயர்ந்த  மலையின்மேல்  போய்,  {Matt  17:1}

 

அவர்களுக்கு  முன்பாக  மறுரூபமானார்;  அவர்  முகம்  சூரியனைப்போலப்  பிரகாசித்தது,  அவர்  வஸ்திரம்  வெளிச்சத்தைப்போல  வெண்மையாயிற்று.  {Matt  17:2}

 

அப்பொழுது  மோசேயும்<Moses>  எலியாவும்<Elias>  அவரோடே  பேசுகிறவர்களாக  அவர்களுக்குக்  காணப்பட்டார்கள்.  {Matt  17:3}

 

அப்பொழுது  பேதுரு<Peter>  இயேசுவை<Jesus>  நோக்கி:  ஆண்டவரே,  நாம்  இங்கே  இருக்கிறது  நல்லது;  உமக்குச்  சித்தமானால்,  இங்கே  உமக்கு  ஒரு  கூடாரமும்,  மோசேக்கு<Moses>  ஒரு  கூடாரமும்,  எலியாவுக்கு<Elias>  ஒரு  கூடாரமுமாக,  மூன்று  கூடாரங்களைப்  போடுவோம்  என்றான்.  {Matt  17:4}

 

அவன்  பேசுகையில்,  இதோ,  ஒளியுள்ள  ஒரு  மேகம்  அவர்கள்மேல்  நிழலிட்டது.  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவரில்  பிரியமாயிருக்கிறேன்,  இவருக்குச்  செவிகொடுங்கள்  என்று  அந்த  மேகத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாயிற்று.  {Matt  17:5}

 

சீஷர்கள்  அதைக்  கேட்டு,  முகங்குப்புற  விழுந்து,  மிகவும்  பயந்தார்கள்.  {Matt  17:6}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  வந்து,  அவர்களைத்  தொட்டு:  எழுந்திருங்கள்,  பயப்படாதேயுங்கள்  என்றார்.  {Matt  17:7}

 

அவர்கள்  தங்கள்  கண்களை  ஏறெடுத்துப்  பார்க்கையில்  இயேசுவைத்தவிர<Jesus>  வேறொருவரையும்  காணவில்லை.  {Matt  17:8}

 

அவர்கள்  மலையிலிருந்து  இறங்குகிறபோது,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  மனுஷகுமாரன்  மரித்தோரிலிருந்து  எழுந்திருக்கும்வரைக்கும்  இந்தத்  தரிசனத்தை  ஒருவருக்கும்  சொல்லவேண்டாம்  என்று  கட்டளையிட்டார்.  {Matt  17:9}

 

அப்பொழுது,  அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  அப்படியானால்  எலியா<Elias>  முந்தி  வரவேண்டும்  என்று  வேதபாரகர்  சொல்லுகிறார்களே,  அதெப்படி  யென்று  கேட்டார்கள்.  {Matt  17:10}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  எலியா<Elias>  முந்திவந்து  எல்லாவற்றையும்  சீர்ப்படுத்துவது  மெய்தான்.  {Matt  17:11}

 

ஆனாலும்,  எலியா<Elias>  வந்தாயிற்று  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  அவனை  அறியாமல்  தங்கள்  இஷ்டப்படி  அவனுக்குச்  செய்தார்கள்;  இவ்விதமாய்  மனுஷகுமாரனும்  அவர்களால்  பாடுபடுவார்  என்றார்.  {Matt  17:12}

 

அவர்  யோவான்ஸ்நானனைக்குறித்துத்<John  the  Baptist>  தங்களுக்குச்  சொன்னார்  என்று  சீஷர்கள்  அப்பொழுது  அறிந்துகொண்டார்கள்.  {Matt  17:13}

 

அவர்கள்  ஜனங்களிடத்தில்  வந்தபோது,  ஒரு  மனுஷன்  அவரிடத்தில்  வந்து,  அவர்  முன்பாக  முழங்கால்படியிட்டு:  {Matt  17:14}

 

ஆண்டவரே,  என்  மகனுக்கு  இரங்கும்,  அவன்  சந்திரரோகியாய்க்  கொடிய  வேதனைப்படுகிறான்;  அடிக்கடி  தீயிலும்,  அடிக்கடி  ஜலத்திலும்  விழுகிறான்.  {Matt  17:15}

 

அவனை  உம்முடைய  சீஷர்களிடத்தில்  கொண்டுவந்தேன்;  அவனைச்  சொஸ்தமாக்க  அவர்களால்  கூடாமற்போயிற்று  என்றான்.  {Matt  17:16}

 

இயேசு<Jesus>  பிரதியுத்தரமாக:  விசுவாசமில்லாத  மாறுபாடுள்ள  சந்ததியே,  எதுவரைக்கும்  நான்  உங்களோடு  இருப்பேன்?  எதுவரைக்கும்  உங்களிடத்தில்  பொறுமையாய்  இருப்பேன்?  அவனை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  {Matt  17:17}

 

இயேசு<Jesus>  பிசாசை  அதட்டினார்;  உடனே  அது  அவனை  விட்டுப்  புறப்பட்டது;  அந்நேரமே  அந்த  இளைஞன்  சொஸ்தமானான்.  {Matt  17:18}

 

அப்பொழுது,  சீஷர்கள்  இயேசுவினிடத்தில்<Jesus>  தனித்துவந்து:  அதைத்  துரத்திவிட  எங்களால்  ஏன்  கூடாமற்போயிற்று  என்று  கேட்டார்கள்.  {Matt  17:19}

 

அதற்கு  இயேசு<Jesus>:  உங்கள்  அவிசுவாசத்தினாலேதான்;  கடுகுவிதையளவு  விசுவாசம்  உங்களுக்கு  இருந்தால்  நீங்கள்  இந்த  மலையைப்  பார்த்து,  இவ்விடம்  விட்டு  அப்புறம்போ  என்று  சொல்ல  அது  அப்புறம்  போம்;  உங்களால்  கூடாதகாரியம்  ஒன்றுமிராது  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  17:20}

 

இந்த  ஜாதிப்  பிசாசு  ஜெபத்தினாலும்  உபவாசத்தினாலுமேயன்றி  மற்றெவ்விதத்தினாலும்  புறப்பட்டுப்போகாது  என்றார்.  {Matt  17:21}

 

அவர்கள்  கலிலேயாவிலே<Galilee>  சஞ்சரிக்கும்போது,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  மனுஷகுமாரன்  மனுஷர்  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படுவார்.  {Matt  17:22}

 

அவர்கள்  அவரைக்  கொலைசெய்வார்கள்;  ஆகிலும்  மூன்றாம்  நாளிலே  உயிர்த்தெழுந்திருப்பார்  என்றார்.  அவர்கள்  மிகுந்த  துக்கமடைந்தார்கள்.  {Matt  17:23}

 

அவர்கள்  கப்பர்நகூமில்<Capernaum>  வந்தபோது,  வரிப்பணம்  வாங்குகிறவர்கள்  பேதுருவினிடத்தில்<Peter>  வந்து:  உங்கள்  போதகர்  வரிப்பணம்  செலுத்துகிறதில்லையா  என்று  கேட்டார்கள்;  செலுத்துகிறார்  என்றான்.  {Matt  17:24}

 

அவன்  வீட்டிற்குள்  வந்தபோது,  அவன்  பேசுகிறதற்கு  முன்னமே  இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  சீமோனே<Simon>,  உனக்கு  எப்படித்  தோன்றுகிறது?  பூமியின்  ராஜாக்கள்  தீர்வையையும்  வரியையும்  தங்கள்  பிள்ளைகளிடத்திலோ,  அந்நியரிடத்திலோ,  யாரிடத்தில்  வாங்குகிறார்கள்  என்று  கேட்டார்.  {Matt  17:25}

 

அதற்குப்  பேதுரு<Peter>:  அந்நியரிடத்தில்  வாங்குகிறார்கள்  என்றான்.  இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  அப்படியானால்  பிள்ளைகள்  அதைச்  செலுத்தவேண்டுவதில்லையே.  {Matt  17:26}

 

ஆகிலும்,  நாம்  அவர்களுக்கு  இடறலாயிராதபடிக்கு,  நீ  கடலுக்குப்  போய்,  தூண்டில்போட்டு,  முதலாவது  அகப்படுகிற  மீனைப்  பிடித்து,  அதின்  வாயைத்  திறந்துபார்;  ஒரு  வெள்ளிப்பணத்தைக்  காண்பாய்;  அதை  எடுத்து  எனக்காகவும்  உனக்காகவும்  அவர்களிடத்தில்  கொடு  என்றார்.  {Matt  17:27}

 

அவ்வேளையிலே  சீஷர்கள்  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து:  பரலோகராஜ்யத்தில்  எவன்  பெரியவனாயிருப்பான்  என்று  கேட்டார்கள்.  {Matt  18:1}

 

இயேசு<Jesus>  ஒரு  பிள்ளையைத்  தம்மிடத்தில்  அழைத்து,  அதை  அவர்கள்  நடுவே  நிறுத்தி:  {Matt  18:2}

 

நீங்கள்  மனந்திரும்பிப்  பிள்ளைகளைப்போல்  ஆகாவிட்டால்,  பரலோகராஜ்யத்தில்  பிரவேசிக்கமாட்டீர்கள்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  18:3}

 

ஆகையால்  இந்தப்  பிள்ளையைப்போலத்  தன்னைத்  தாழ்த்துகிறவன்  எவனோ,  அவனே  பரலோகராஜ்யத்தில்  பெரியவனாயிருப்பான்.  {Matt  18:4}

 

இப்படிப்பட்ட  ஒரு  பிள்ளையை  என்  நாமத்தினிமித்தம்  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறான்.  {Matt  18:5}

 

என்னிடத்தில்  விசுவாசமாயிருக்கிற  இந்தச்  சிறியரில்  ஒருவனுக்கு  இடறல்  உண்டாக்குகிறவன்  எவனோ,  அவனுடைய  கழுத்தில்  ஏந்திரக்கல்லைக்  கட்டி,  சமுத்திரத்தின்  ஆழத்திலே  அவனை  அமிழ்த்துகிறது  அவனுக்கு  நலமாயிருக்கும்.  {Matt  18:6}

 

இடறல்களினிமித்தம்  உலகத்துக்கு  ஐயோ,  இடறல்கள்  வருவது  அவசியம்,  ஆனாலும்  எந்த  மனுஷனால்  இடறல்  வருகிறதோ,  அவனுக்கு  ஐயோ!  {Matt  18:7}

 

உன்  கையாவது  உன்  காலாவது  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்,  அதைத்  தறித்து  எறிந்துபோடு;  நீ  இரண்டு  கையுடையவனாய்,  அல்லது  இரண்டு  காலுடையவனாய்  நித்திய  அக்கினியிலே  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  சப்பாணியாய்,  அல்லது  ஊனனாய்,  நித்திய  ஜீவனுக்குள்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  {Matt  18:8}

 

உன்  கண்  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்,  அதைப்  பிடுங்கி  எறிந்துபோடு;  இரண்டு  கண்ணுடையவனாய்  எரிநரகத்தில்  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  ஒற்றைக்கண்ணனாய்  ஜீவனுக்குள்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  {Matt  18:9}

 

இந்தச்  சிறியரில்  ஒருவனையும்  அற்பமாய்  எண்ணாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  அவர்களுக்குரிய  தேவதூதர்கள்  பரலோகத்திலே  என்  பரமபிதாவின்  சமுகத்தை  எப்போதும்  தரிசிக்கிறார்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  18:10}

 

மனுஷகுமாரன்  கெட்டுப்போனதை  ரட்சிக்க  வந்தார்.  {Matt  18:11}

 

உங்களுக்கு  எப்படித்  தோன்றுகிறது?  ஒரு  மனுஷனுக்கு  நூறு  ஆடுகளிருக்க,  அவைகளில்  ஒன்று  சிதறிப்போனால்,  அவன்  மற்றத்  தொண்ணூற்றொன்பது  ஆடுகளையும்  மலைகளில்  விட்டுப்  போய்ச்  சிதறிப்போனதைத்  தேடாமலிருப்பானோ?  {Matt  18:12}

 

அவன்  அதைக்  கண்டுபிடித்தால்,  சிதறிப்போகாத  தொண்ணூற்றொன்பது  ஆடுகளைக்குறித்துச்  சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும்,  அதைக்குறித்து  அதிகமாய்ச்  சந்தோஷப்படுவான்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  18:13}

 

இவ்விதமாக,  இந்தச்  சிறியரில்  ஒருவனாகிலும்  கெட்டுப்போவது  பரலோகத்திலிருக்கிற  உங்கள்  பிதாவின்  சித்தமல்ல.  {Matt  18:14}

 

உன்  சகோதரன்  உனக்கு  விரோதமாகக்  குற்றஞ்செய்தால்,  அவனிடத்தில்  போய்,  நீயும்  அவனும்  தனித்திருக்கையில்,  அவன்  குற்றத்தை  அவனுக்கு  உணர்த்து;  அவன்  உனக்குச்  செவிகொடுத்தால்,  உன்  சகோதரனை  ஆதாயப்படுத்திக்கொண்டாய்.  {Matt  18:15}

 

அவன்  செவிகொடாமற்போனால்,  இரண்டு  மூன்று  சாட்சிகளுடைய  வாக்கினாலே  சங்கதிகளெல்லாம்  நிலைவரப்படும்படி,  இரண்டொருவரை  உன்னுடனே  கூட்டிக்கொண்டு  போ.  {Matt  18:16}

 

அவர்களுக்கும்  அவன்  செவிகொடாமற்போனால்,  அதைச்  சபைக்குத்  தெரியப்படுத்து;  சபைக்கும்  செவிகொடாதிருப்பானானால்,  அவன்  உனக்கு  அஞ்ஞானியைப்போலவும்  ஆயக்காரனைப்போலவும்  இருப்பானாக.  {Matt  18:17}

 

பூலோகத்திலே  நீங்கள்  எவைகளைக்  கட்டுவீர்களோ  அவைகள்  பரலோகத்திலும்  கட்டப்பட்டிருக்கும்;  பூலோகத்திலே  நீங்கள்  எவைகளைக்  கட்டவிழ்ப்பீர்களோ  அவைகள்  பரலோகத்திலும்  கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  18:18}

 

அல்லாமலும்,  உங்களில்  இரண்டு  பேர்  தாங்கள்  வேண்டிக்கொள்ளப்போகிற  எந்தக்  காரியத்தைக்  குறித்தாகிலும்  பூமியிலே  ஒருமனப்பட்டிருந்தால்,  பரலோகத்தில்  இருக்கிற  என்  பிதாவினால்  அது  அவர்களுக்கு  உண்டாகும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  18:19}

 

ஏனெனில்,  இரண்டுபேராவது  மூன்றுபேராவது  என்  நாமத்தினாலே  எங்கே  கூடியிருக்கிறார்களோ,  அங்கே  அவர்கள்  நடுவிலே  இருக்கிறேன்  என்றார்.  {Matt  18:20}

 

அப்பொழுது,  பேதுரு<Peter>  அவரிடத்தில்  வந்து:  ஆண்டவரே,  என்  சகோதரன்  எனக்கு  விரோதமாய்க்  குற்றஞ்செய்து  வந்தால்,  நான்  எத்தனைதரம்  மன்னிக்கவேண்டும்?  ஏழுதரமட்டுமோ  என்று  கேட்டான்.  {Matt  18:21}

 

அதற்கு  இயேசு<Jesus>:  ஏழுதரமாத்திரம்  அல்ல,  ஏழெழுபதுதரமட்டும்  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  18:22}

 

எப்படியெனில்,  பரலோகராஜ்யம்  தன்  ஊழியக்காரரிடத்தில்  கணக்குப்  பார்க்கவேண்டுமென்றிருந்த  ஒரு  ராஜாவுக்கு  ஒப்பாயிருக்கிறது.  {Matt  18:23}

 

அவன்  கணக்குப்பார்க்கத்  தொடங்கினபோது,  பதினாயிரம்  தாலந்து  கடன்  பட்டவன்  ஒருவனை  அவனுக்கு  முன்பாகக்  கொண்டுவந்தார்கள்.  {Matt  18:24}

 

கடனைத்தீர்க்க  அவனுக்கு  நிர்வாகம்  இல்லாதபடியால்,  அவனுடைய  ஆண்டவன்  அவனையும்  அவன்  பெண்ஜாதி  பிள்ளைகளையும்,  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  விற்று,  கடனைத்  தீர்க்கும்படிக்  கட்டளையிட்டான்.  {Matt  18:25}

 

அப்பொழுது,  அந்த  ஊழியக்காரன்  தாழ  விழுந்து,  வணங்கி:  ஆண்டவனே!  என்னிடத்தில்  பொறுமையாயிரும்,  எல்லாவற்றையும்  உமக்குக்  கொடுத்துத்  தீர்க்கிறேன்  என்றான்.  {Matt  18:26}

 

அந்த  ஊழியக்காரனுடைய  ஆண்டவன்  மனதிரங்கி,  அவனை  விடுதலைபண்ணி,  கடனையும்  அவனுக்கு  மன்னித்துவிட்டான்.  {Matt  18:27}

 

அப்படியிருக்க,  அந்த  ஊழியக்காரன்  புறப்பட்டுப்போகையில்,  தன்னிடத்தில்  நூறு  வெள்ளிப்பணம்  கடன்பட்டிருந்தவனாகிய  தன்  உடன்வேலைக்காரரில்  ஒருவனைக்  கண்டு,  அவனைப்  பிடித்து,  தொண்டையை  நெரித்து:  நீ  பட்ட  கடனை  எனக்குக்  கொடுத்துத்  தீர்க்கவேண்டும்  என்றான்.  {Matt  18:28}

 

அப்பொழுது  அவனுடைய  உடன்வேலைக்காரன்  அவன்  காலிலே  விழுந்து:  என்னிடத்தில்  பொறுமையாயிரும்,  எல்லாவற்றையும்  உமக்குக்  கொடுத்துத்  தீர்க்கிறேன்  என்று,  அவனை  வேண்டிக்கொண்டான்.  {Matt  18:29}

 

அவனோ  சம்மதியாமல்,  போய்,  அவன்  பட்ட  கடனைக்  கொடுத்துத்  தீர்க்குமளவும்  அவனைக்  காவலில்  போடுவித்தான்.  {Matt  18:30}

 

நடந்ததை  அவனுடைய  உடன்வேலைக்காரர்  கண்டு,  மிகவும்  துக்கப்பட்டு,  ஆண்டவனிடத்தில்  வந்து,  நடந்ததையெல்லாம்  அறிவித்தார்கள்.  {Matt  18:31}

 

அப்பொழுது,  அவனுடைய  ஆண்டவன்  அவனை  அழைப்பித்து:  பொல்லாத  ஊழியக்காரனே,  நீ  என்னை  வேண்டிக்கொண்டபடியினால்  அந்தக்  கடன்  முழுவதையும்  உனக்கு  மன்னித்துவிட்டேன்.  {Matt  18:32}

 

நான்  உனக்கு  இரங்கினதுபோல,  நீயும்  உன்  உடன்வேலைக்காரனுக்கு  இரங்கவேண்டாமோ  என்று  சொல்லி,  {Matt  18:33}

 

அவனுடைய  ஆண்டவன்  கோபமடைந்து,  அவன்  பட்ட  கடனையெல்லாம்  தனக்குக்  கொடுத்துத்  தீர்க்குமளவும்  உபாதிக்கிறவர்களிடத்தில்  அவனை  ஒப்புக்கொடுத்தான்.  {Matt  18:34}

 

நீங்களும்  அவனவன்  தன்  தன்  சகோதரன்  செய்த  தப்பிதங்களை  மனப்பூர்வமாய்  மன்னியாமற்போனால்,  என்  பரமபிதாவும்  உங்களுக்கு  இப்படியே  செய்வார்  என்றார்.  {Matt  18:35}

 

இயேசு<Jesus>  இந்த  வசனங்களைச்  சொல்லி  முடித்தபின்பு,  அவர்  கலிலேயாவை<Galilee>  விட்டு  யோர்தானுக்கு<Jordan>  அக்கரையான  யூதேயாவின்<Judaea>  எல்லைகளில்  வந்தார்.  {Matt  19:1}

 

திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்;  அவ்விடத்தில்  அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  {Matt  19:2}

 

அப்பொழுது,  பரிசேயர்<Pharisees>  அவரைச்  சோதிக்கவேண்டுமென்று  அவரிடத்தில்  வந்து:  புருஷனானவன்  தன்  மனைவியை  எந்த  முகாந்தரத்தினாலாகிலும்  தள்ளிவிடுவது  நியாயமா  என்று  கேட்டார்கள்.  {Matt  19:3}

 

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  ஆதியிலே  மனுஷரை  உண்டாக்கினவர்  அவர்களை  ஆணும்  பெண்ணுமாக  உண்டாக்கினார்  என்பதையும்,  {Matt  19:4}

 

இதினிமித்தம்  புருஷனானவன்  தன்  தகப்பனையும்  தாயையும்  விட்டுத்  தன்  மனைவியோடே  இசைந்திருப்பான்;  அவர்கள்  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்  என்று  அவர்  சொன்னதையும்,  நீங்கள்  வாசிக்கவில்லையா?  {Matt  19:5}

 

இப்படி  இருக்கிறபடியினால்,  அவர்கள்  இருவராயிராமல்,  ஒரே  மாம்சமாயிருக்கிறார்கள்;  ஆகையால்,  தேவன்  இணைத்ததை  மனுஷன்  பிரிக்காதிருக்கக்கடவன்  என்றார்.  {Matt  19:6}

 

அதற்கு  அவர்கள்:  அப்படியானால்,  தள்ளுதற்சீட்டைக்  கொடுத்து,  அவளைத்  தள்ளிவிடலாமென்று  மோசே<Moses>  ஏன்  கட்டளையிட்டார்  என்றார்கள்.  {Matt  19:7}

 

அதற்கு  அவர்:  உங்கள்  மனைவிகளைத்  தள்ளிவிடலாமென்று  உங்கள்  இருதயகடினத்தினிமித்தம்  மோசே<Moses>  உங்களுக்கு  இடங்கொடுத்தார்;  ஆதிமுதலாய்  அப்படியிருக்கவில்லை.  {Matt  19:8}

 

ஆதலால்,  எவனாகிலும்  தன்  மனைவி  வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி,  அவளைத்  தள்ளிவிட்டு  வேறொருத்தியை  விவாகம்பண்ணினால்,  அவன்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;  தள்ளிவிடப்பட்டவளை  விவாகம்பண்ணுகிறவனும்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  19:9}

 

அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  மனைவியைப்பற்றிப்  புருஷனுடைய  காரியம்  இப்படியிருந்தால்,  விவாகம்பண்ணுகிறது  நல்லதல்ல  என்றார்கள்.  {Matt  19:10}

 

அதற்கு  அவர்:  வரம்பெற்றவர்களே  தவிர  மற்றவர்கள்  இந்த  வசனத்தை  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  {Matt  19:11}

 

தாயின்  வயிற்றிலிருந்து  அண்ணகர்களாய்ப்  பிறந்தவர்களும்  உண்டு;  மனுஷர்களால்  அண்ணகர்களாக்கப்பட்டவர்களும்  உண்டு;  பரலோகராஜ்யத்தினிமித்தம்  தங்களை  அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும்  உண்டு;  இதை  ஏற்றுக்கொள்ள  வல்லவன்  ஏற்றுக்கொள்ளக்கடவன்  என்றார்.  {Matt  19:12}

 

அப்பொழுது,  சிறு  பிள்ளைகளின்மேல்  அவர்  கைகளை  வைத்து  ஜெபம்பண்ணும்படிக்கு  அவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  கொண்டுவந்தவர்களைச்  சீஷர்கள்  அதட்டினார்கள்.  {Matt  19:13}

 

இயேசுவோ<Jesus>:  சிறு  பிள்ளைகள்  என்னிடத்தில்  வருகிறதற்கு  இடங்கொடுங்கள்;  அவர்களைத்  தடைபண்ணாதிருங்கள்;  பரலோகராஜ்யம்  அப்படிப்பட்டவர்களுடையது  என்று  சொல்லி,  {Matt  19:14}

 

அவர்கள்மேல்  கைகளை  வைத்து,  பின்பு  அவ்விடம்விட்டுப்  புறப்பட்டுப்போனார்.  {Matt  19:15}

 

அப்பொழுது  ஒருவன்  வந்து,  அவரை  நோக்கி:  நல்ல  போதகரே,  நித்தியஜீவனை  அடைவதற்கு  நான்  எந்த  நன்மையைச்  செய்யவேண்டும்  என்று  கேட்டான்.  {Matt  19:16}

 

அதற்கு  அவர்:  நீ  என்னை  நல்லவன்  என்று  சொல்வானேன்?  தேவன்  ஒருவர்  தவிர  நல்லவன்  ஒருவனும்  இல்லையே;  நீ  ஜீவனில்  பிரவேசிக்க  விரும்பினால்  கற்பனைகளைக்  கைக்கொள்  என்றார்.  {Matt  19:17}

 

அவன்  அவரை  நோக்கி:  எவைகளை  என்று  கேட்டான்.  அதற்கு  இயேசு<Jesus>:  கொலை  செய்யாதிருப்பாயாக,  விபசாரஞ்  செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி  சொல்லாதிருப்பாயாக;  {Matt  19:18}

 

உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக;  உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்பவைகளையே  என்றார்.  {Matt  19:19}

 

அந்த  வாலிபன்  அவரை  நோக்கி:  இவைகளையெல்லாம்  என்  சிறுவயதுமுதல்  கைக்கொண்டிருக்கிறேன்;  இன்னும்  என்னிடத்தில்  குறைவு  என்ன  என்றான்.  {Matt  19:20}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நீ  பூரண  சற்குணனாயிருக்க  விரும்பினால்,  போய்,  உனக்கு  உண்டானவைகளை  விற்று,  தரித்திரருக்குக்  கொடு,  அப்பொழுது,  பரலோகத்தில்  உனக்குப்  பொக்கிஷம்  உண்டாயிருக்கும்;  பின்பு  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  {Matt  19:21}

 

அந்த  வாலிபன்  மிகுந்த  ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்,  இந்த  வார்த்தையைக்  கேட்டபொழுது,  துக்கமடைந்தவனாய்ப்  போய்விட்டான்.  {Matt  19:22}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஐசுவரியவான்  பரலோகராஜ்யத்தில்  பிரவேசிப்பது  அரிதென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  19:23}

 

மேலும்  ஐசுவரியவான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,  ஒட்டகமானது  ஊசியின்  காதிலே  நுழைவது  எளிதாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  19:24}

 

அவருடைய  சீஷர்கள்  அதைக்கேட்டு  மிகவும்  ஆச்சரியப்பட்டு:  அப்படியானால்,  யார்  ரட்சிக்கப்படக்கூடும்  என்றார்கள்.  {Matt  19:25}

 

இயேசு<Jesus>,  அவர்களைப்  பார்த்து:  மனுஷரால்  இது  கூடாததுதான்;  தேவனாலே  எல்லாம்  கூடும்  என்றார்.  {Matt  19:26}

 

அப்பொழுது,  பேதுரு<Peter>  அவரை  நோக்கி:  இதோ,  நாங்கள்  எல்லாவற்றையும்  விட்டு,  உம்மைப்  பின்பற்றினோமே;  எங்களுக்கு  என்ன  கிடைக்கும்  என்றான்.  {Matt  19:27}

 

அதற்கு  இயேசு<Jesus>:  மறுஜென்மகாலத்திலே  மனுஷகுமாரன்  தம்முடைய  மகிமையுள்ள  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்போது,  என்னைப்  பின்பற்றின  நீங்களும்,  இஸ்ரவேலின்<Israel>  பன்னிரண்டு  கோத்திரங்களையும்  நியாயந்தீர்க்கிறவர்களாகப்  பன்னிரண்டு  சிங்காசனங்களின்மேல்  வீற்றிருப்பீர்கள்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  19:28}

 

என்  நாமத்தினிமித்தம்  வீட்டையாவது,  சகோதரரையாவது,  சகோதரிகளையாவது,  தகப்பனையாவது,  தாயையாவது,  மனைவியையாவது,  பிள்ளைகளையாவது,  நிலங்களையாவது  விட்டவன்  எவனோ,  அவன்  நூறத்தனையாய்  அடைந்து,  நித்தியஜீவனையும்  சுதந்தரித்துக்கொள்ளுவான்;  {Matt  19:29}

 

ஆகிலும்,  முந்தினோர்  அநேகர்  பிந்தினோராயும்,  பிந்தினோர்  அநேகர்  முந்தினோராயும்  இருப்பார்கள்  என்றார்.  {Matt  19:30}

 

பரலோகராஜ்யம்  வீட்டெஜமானாகிய  ஒரு  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறது;  அவன்  தன்  திராட்சத்தோட்டத்துக்கு  வேலையாட்களை  அமர்த்த  அதிகாலையிலே  புறப்பட்டான்.  {Matt  20:1}

 

வேலையாட்களுடன்  நாளொன்றுக்கு  ஒரு  பணம்  கூலிபேசி,  அவர்களைத்  தன்  திராட்சத்தோட்டத்துக்கு  அனுப்பினான்.  {Matt  20:2}

 

மூன்றாம்  மணிவேளையிலும்  அவன்  புறப்பட்டுப்போய்,  கடைத்தெருவிலே  சும்மா  நிற்கிற  வேறு  சிலரைக்  கண்டு:  {Matt  20:3}

 

நீங்களும்  திராட்சத்தோட்டத்துக்குப்  போங்கள்,  நியாயமானபடி  உங்களுக்குக்  கூலி  கொடுப்பேன்  என்றான்;  அவர்களும்  போனார்கள்.  {Matt  20:4}

 

மறுபடியும்,  ஆறாம்  ஒன்பதாம்  மணிவேளையிலும்  அவன்  போய்  அப்படியே  செய்தான்.  {Matt  20:5}

 

பதினோராம்  மணிவேளையிலும்  அவன்  போய்,  சும்மா  நிற்கிற  வேறு  சிலரைக்கண்டு:  நீங்கள்  பகல்  முழுவதும்  இங்கே  சும்மா  நிற்கிறதென்ன  என்று  கேட்டான்.  {Matt  20:6}

 

அதற்கு  அவர்கள்:  ஒருவரும்  எங்களுக்கு  வேலையிடவில்லை  என்றார்கள்.  அவன்  அவர்களை  நோக்கி:  நீங்களும்  திராட்சத்தோட்டத்துக்குப்  போங்கள்,  நியாயமானபடி  கூலி  பெற்றுக்கொள்வீர்கள்  என்றான்.  {Matt  20:7}

 

சாயங்காலத்தில்,  திராட்சத்தோட்டத்துக்கு  எஜமான்  தன்  காரியக்காரனை  நோக்கி:  நீ  வேலையாட்களை  அழைத்து,  பிந்திவந்தவர்கள்  தொடங்கி  முந்திவந்தவர்கள்வரைக்கும்  அவர்களுக்குக்  கூலிகொடு  என்றான்.  {Matt  20:8}

 

அப்பொழுது  பதினோராம்  மணிவேளையில்  வேலையமர்த்தப்பட்டவர்கள்  வந்து  ஆளுக்கு  ஒவ்வொரு  பணம்  வாங்கினார்கள்.  {Matt  20:9}

 

முந்தி  அமர்த்தப்பட்டவர்கள்  வந்து,  தங்களுக்கு  அதிக  கூலி  கிடைக்கும்  என்று  எண்ணினார்கள்,  அவர்களும்  ஆளுக்கு  ஒவ்வொரு  பணம்  வாங்கினார்கள்.  {Matt  20:10}

 

வாங்கிக்கொண்டு,  வீட்டெஜமானை  நோக்கி:  {Matt  20:11}

 

பிந்திவந்தவர்களாகிய  இவர்கள்  ஒரு  மணி  நேரமாத்திரம்  வேலைசெய்தார்கள்;  பகலின்  கஷ்டத்தையும்  வெயிலின்  உஷ்ணத்தையும்  சகித்த  எங்களுக்கு  இவர்களைச்  சமமாக்கினீரே  என்று  முறுமுறுத்தார்கள்.  {Matt  20:12}

 

அவர்களில்  ஒருவனுக்கு  அவன்  பிரதியுத்தரமாக:  சிநேகிதனே,  நான்  உனக்கு  அநியாயஞ்செய்யவில்லை;  நீ  என்னிடத்தில்  ஒரு  பணத்துக்குச்  சம்மதிக்கவில்லையா?  {Matt  20:13}

 

உன்னுடையதை  நீ  வாங்கிக்கொண்டு  போ,  உனக்குக்  கொடுத்ததுபோலப்  பிந்தி  வந்தவனாகிய  இவனுக்கும்  கொடுப்பது  என்னுடைய  இஷ்டம்.  {Matt  20:14}

 

என்னுடையதை  என்  இஷ்டப்படி  செய்ய  எனக்கு  அதிகாரமில்லையா?  நான்  தயாளனாயிருக்கிறபடியால்,  நீ  வன்கண்ணனாயிருக்கலாமா  என்றான்.  {Matt  20:15}

 

இவ்விதமாக,  பிந்தினோர்  முந்தினோராயும்,  முந்தினோர்  பிந்தினோராயும்  இருப்பார்கள்;  அழைக்கப்பட்டவர்கள்  அநேகர்,  தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ  சிலர்  என்றார்.  {Matt  20:16}

 

இயேசு<Jesus>  எருசலேமுக்குப்<Jerusalem>  போகும்போது,  வழியிலே  பன்னிரண்டு  சீஷரையும்  தனியே  அழைத்து:  {Matt  20:17}

 

இதோ,  எருசலேமுக்குப்<Jerusalem>  போகிறோம்;  மனுஷகுமாரன்  பிரதான  ஆசாரியரிடத்திலும்  வேதபாரகரிடத்திலும்  ஒப்புக்கொடுக்கப்படுவார்;  அவர்கள்  அவரை  மரண  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்து,  {Matt  20:18}

 

அவரைப்  பரியாசம்பண்ணவும்,  வாரினால்  அடிக்கவும்,  சிலுவையில்  அறையவும்  புறஜாதியாரிடத்தில்  ஒப்புக்கொடுப்பார்கள்;  ஆகிலும்  மூன்றாம்  நாளிலே  அவர்  உயிரோடே  எழுந்திருப்பார்  என்றார்.  {Matt  20:19}

 

அப்பொழுது,  செபெதேயுவின்<Zebedee>  குமாரருடைய  தாய்  தன்  குமாரரோடுகூட  அவரிடத்தில்  வந்து,  அவரைப்  பணிந்துகொண்டு:  உம்மிடத்தில்  ஒரு  விண்ணப்பம்  பண்ணவேண்டும்  என்றாள்.  {Matt  20:20}

 

அவர்  அவளை  நோக்கி:  உனக்கு  என்ன  வேண்டும்  என்று  கேட்டார்.  அதற்கு  அவள்:  உம்முடைய  ராஜ்யத்திலே  என்  குமாரராகிய  இவ்விரண்டுபேரில்  ஒருவன்  உமது  வலதுபாரிசத்திலும்,  ஒருவன்  உமது  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  அருள்செய்யவேண்டும்  என்றாள்.  {Matt  20:21}

 

இயேசு<Jesus>  பிரதியுத்தரமாக:  நீங்கள்  கேட்டுக்கொள்ளுகிறது  இன்னது  என்று  உங்களுக்குத்  தெரியவில்லை.  நான்  குடிக்கும்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிக்கவும்,  நான்  பெறும்  ஸ்நானத்தை  நீங்கள்  பெறவும்  உங்களால்  கூடுமா  என்றார்.  அதற்கு  அவர்கள்:  கூடும்  என்றார்கள்.  {Matt  20:22}

 

அவர்  அவர்களை  நோக்கி:  என்  பாத்திரத்தில்  நீங்கள்  குடிப்பீர்கள்,  நான்  பெறும்  ஸ்நானத்தையும்  நீங்கள்  பெறுவீர்கள்;  ஆனாலும்,  என்  வலதுபாரிசத்திலும்  என்  இடதுபாரிசத்திலும்  உட்கார்ந்திருக்கும்படி  என்  பிதாவினால்  எவர்களுக்கு  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ  அவர்களுக்கேயல்லாமல்,  மற்றொருவருக்கும்  அதை  அருளுவது  என்  காரியமல்ல  என்றார்.  {Matt  20:23}

 

மற்றப்  பத்துப்பேரும்  அதைக்கேட்டு,  அந்த  இரண்டு  சகோதரர்பேரிலும்  எரிச்சலானார்கள்.  {Matt  20:24}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  அவர்களைக்  கிட்டவரச்செய்து:  புறஜாதியாருடைய  அதிகாரிகள்  அவர்களை  இறுமாப்பாய்  ஆளுகிறார்கள்  என்றும்,  பெரியவர்கள்  அவர்கள்மேல்  கடினமாய்  அதிகாரஞ்  செலுத்துகிறார்கள்  என்றும்,  நீங்கள்  அறிந்திருக்கிறீர்கள்.  {Matt  20:25}

 

உங்களுக்குள்ளே  அப்படி  இருக்கலாகாது;  உங்களில்  எவனாகிலும்  பெரியவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  உங்களுக்குப்  பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.  {Matt  20:26}

 

உங்களில்  எவனாகிலும்  முதன்மையானவனாயிருக்க  விரும்பினால்,  அவன்  உங்களுக்கு  ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.  {Matt  20:27}

 

அப்படியே,  மனுஷகுமாரனும்  ஊழியங்கொள்ளும்படி  வராமல்,  ஊழியஞ்  செய்யவும்,  அநேகரை  மீட்கும்பொருளாகத்  தம்முடைய  ஜீவனைக்  கொடுக்கவும்  வந்தார்  என்றார்.  {Matt  20:28}

 

அவர்கள்  எரிகோவிலிருந்து<Jericho>  புறப்பட்டுப்போகையில்,  திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Matt  20:29}

 

அப்பொழுது  வழியருகே  உட்கார்ந்திருந்த  இரண்டு  குருடர்,  இயேசு<Jesus>  அவ்வழியே  வருகிறார்  என்று  கேள்விப்பட்டு:  ஆண்டவரே,  தாவீதின்<David>  குமாரனே,  எங்களுக்கு  இரங்கும்  என்று  கூப்பிட்டார்கள்.  {Matt  20:30}

 

அவர்கள்  பேசாதிருக்கும்படி  ஜனங்கள்  அவர்களை  அதட்டினார்கள்.  அவர்களோ:  ஆண்டவரே,  தாவீதின்<David>  குமாரனே,  எங்களுக்கு  இரங்கும்  என்று  அதிகமாய்க்  கூப்பிட்டார்கள்.  {Matt  20:31}

 

இயேசு<Jesus>  நின்று,  அவர்களைத்  தம்மிடத்தில்  அழைத்து:  நான்  உங்களுக்கு  என்ன  செய்யவேண்டும்  என்றிருக்கிறீர்கள்  என்றார்.  {Matt  20:32}

 

அதற்கு  அவர்கள்:  ஆண்டவரே,  எங்கள்  கண்களைத்  திறக்கவேண்டும்  என்றார்கள்.  {Matt  20:33}

 

இயேசு<Jesus>  மனதுருகி,  அவர்கள்  கண்களைத்  தொட்டார்;  உடனே  அவர்கள்  பார்வையடைந்து,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  {Matt  20:34}

 

அவர்கள்  எருசலேமுக்குச்<Jerusalem>  சமீபமாய்ச்  சேர்ந்து,  ஒலிவமலைக்கு<mount  of  Olives>  அருகான  பெத்பகேயுக்கு<Bethphage>  வந்தபோது,  இயேசுவானவர்<Jesus>  சீஷரில்  இரண்டுபேரை  நோக்கி:  {Matt  21:1}

 

உங்களுக்கு  எதிரே  இருக்கிற  கிராமத்துக்குப்  போங்கள்;  போனவுடனே,  அங்கே  ஒரு  கழுதையையும்  அதனோடே  ஒரு  குட்டியையும்  கட்டியிருக்கக்  காண்பீர்கள்;  அவைகளை  அவிழ்த்து  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்.  {Matt  21:2}

 

ஒருவன்  உங்களுக்கு  ஏதாகிலும்  சொன்னால்:  இவைகள்  ஆண்டவருக்கு  வேண்டுமென்று  சொல்லுங்கள்;  உடனே  அவைகளை  அனுப்பிவிடுவான்  என்று  சொல்லி,  அவர்களை  அனுப்பினார்.  {Matt  21:3}

 

இதோ,  உன்  ராஜா  சாந்தகுணமுள்ளவராய்,  கழுதையின்மேலும்  கழுதைக்குட்டியாகிய  மறியின்மேலும்  ஏறிக்கொண்டு,  உன்னிடத்தில்  வருகிறார்  என்று  சீயோன்<Sion>  குமாரத்திக்குச்  சொல்லுங்கள்  என்று,  {Matt  21:4}

 

தீர்க்கதரிசியினால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இதெல்லாம்  நடந்தது.  {Matt  21:5}

 

சீஷர்கள்  போய்,  இயேசு<Jesus>  தங்களுக்குக்  கட்டளையிட்டபடியே  செய்து,  {Matt  21:6}

 

கழுதையையும்  குட்டியையும்  கொண்டுவந்து,  அவைகள்மேல்  தங்கள்  வஸ்திரங்களைப்  போட்டு,  அவரை  ஏற்றினார்கள்.  {Matt  21:7}

 

திரளான  ஜனங்கள்  தங்கள்  வஸ்திரங்களை  வழியிலே  விரித்தார்கள்;  வேறு  சிலர்  மரக்கிளைகளைத்  தறித்து  வழியிலே  பரப்பினார்கள்.  {Matt  21:8}

 

முன்நடப்பாரும்  பின்நடப்பாருமாகிய  திரளான  ஜனங்கள்:  தாவீதின்<David>  குமாரனுக்கு  ஓசன்னா<Hosanna>!  கர்த்தரின்  நாமத்தினாலே  வருகிறவர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,  உன்னதத்திலே  ஓசன்னா<Hosanna>  என்று  சொல்லி  ஆர்ப்பரித்தார்கள்.  {Matt  21:9}

 

அவர்  எருசலேமுக்குள்<Jerusalem>  பிரவேசிக்கையில்,  நகரத்தார்  யாவரும்  ஆச்சரியப்பட்டு,  இவர்  யார்?  என்று  விசாரித்தார்கள்.  {Matt  21:10}

 

அதற்கு  ஜனங்கள்:  இவர்  கலிலேயாவிலுள்ள<Galilee>  நாசரேத்திலிருந்து<Nazareth>  வந்த  தீர்க்கதரிசியாகிய  இயேசு<Jesus>  என்றார்கள்.  {Matt  21:11}

 

இயேசு<Jesus>  தேவாலயத்தில்  பிரவேசித்து,  ஆலயத்திலே  விற்கிறவர்களும்  கொள்ளுகிறவர்களுமாகிய  யாவரையும்  வெளியே  துரத்தி,  காசுக்காரருடைய  பலகைகளையும்  புறா  விற்கிறவர்களின்  ஆசனங்களையும்  கவிழ்த்து:  {Matt  21:12}

 

என்னுடைய  வீடு  ஜெபவீடு  என்னப்படும்  என்று  எழுதியிருக்கிறது;  நீங்களோ  அதைக்  கள்ளர்  குகையாக்கினீர்கள்  என்றார்.  {Matt  21:13}

 

அப்பொழுது,  குருடரும்  சப்பாணிகளும்  தேவாலயத்திலே  அவரிடத்திற்கு  வந்தார்கள்,  அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  {Matt  21:14}

 

அவர்  செய்த  அதிசயங்களையும்,  தாவீதின்<David>  குமாரனுக்கு  ஓசன்னா<Hosanna>!  என்று  தேவாலயத்திலே  ஆர்ப்பரிக்கிற  பிள்ளைகளையும்,  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  கண்டு,  கோபமடைந்து,  {Matt  21:15}

 

அவரை  நோக்கி:  இவர்கள்  சொல்லுகிறதைக்  கேட்கிறீரோ  என்றார்கள்.  அதற்கு  இயேசு<Jesus>:  ஆம்,  கேட்கிறேன்.  குழந்தைகளுடைய  வாயினாலும்  பாலகருடைய  வாயினாலும்  துதி  உண்டாகும்படி  செய்தீர்  என்பதை  நீங்கள்  ஒருக்காலும்  வாசிக்கவில்லையா  என்றார்.  {Matt  21:16}

 

அவர்களை  விட்டு  நகரத்திலிருந்து  புறப்பட்டு,  பெத்தானியாவுக்குப்<Bethany>  போய்,  அங்கே  இராத்தங்கினார்.  {Matt  21:17}

 

காலையிலே  அவர்  நகரத்துக்குத்  திரும்பிவருகையில்,  அவருக்குப்  பசியுண்டாயிற்று.  {Matt  21:18}

 

அப்பொழுது  வழியருகே  ஒரு  அத்திமரத்தைக்  கண்டு,  அதனிடத்திற்  போய்,  அதிலே  இலைகளையன்றி  வேறொன்றையுங்  காணாமல்:  இனி  ஒருக்காலும்  உன்னிடத்தில்  கனி  உண்டாகாதிருக்கக்கடவது  என்றார்;  உடனே  அத்திமரம்  பட்டுப்போயிற்று.  {Matt  21:19}

 

சீஷர்கள்  அதைக்  கண்டு:  இந்த  அத்திமரம்  எத்தனை  சீக்கிரமாய்ப்  பட்டுப்போயிற்று!  என்று  சொல்லி  ஆச்சரியப்பட்டார்கள்.  {Matt  21:20}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  நீங்கள்  சந்தேகப்படாமல்  விசுவாசமுள்ளவர்களாயிருந்தால்,  இந்த  அத்திமரத்திற்குச்  செய்ததை  நீங்கள்  செய்வதுமல்லாமல்,  இந்த  மலையைப்பார்த்து:  நீ  பெயர்ந்து  சமுத்திரத்திலே  தள்ளுண்டுபோ  என்று  சொன்னாலும்  அப்படியாகும்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  21:21}

 

மேலும்,  நீங்கள்  விசுவாசமுள்ளவர்களாய்  ஜெபத்திலே  எவைகளைக்  கேட்பீர்களோ  அவைகளையெல்லாம்  பெறுவீர்கள்  என்றார்.  {Matt  21:22}

 

அவர்  தேவாலயத்தில்  வந்து,  உபதேசம்பண்ணுகையில்,  பிரதான  ஆசாரியரும்  ஜனத்தின்  மூப்பரும்  அவரிடத்தில்  வந்து:  நீர்  எந்த  அதிகாரத்தினால்  இவைகளைச்  செய்கிறீர்?  இந்த  அதிகாரத்தை  உமக்குக்  கொடுத்தவர்  யார்?  என்று  கேட்டார்கள்.  {Matt  21:23}

 

இயேசு<Jesus>  பிரதியுத்தரமாக:  நானும்  உங்களிடத்தில்  ஒரு  காரியத்தைக்  கேட்கிறேன்,  அதை  எனக்குச்  சொல்லுவீர்களானால்,  நானும்  இன்ன  அதிகாரத்தினாலே  இவைகளைச்  செய்கிறேனென்று  உங்களுக்குச்  சொல்லுவேன்.  {Matt  21:24}

 

யோவான்<John>  கொடுத்த  ஸ்நானம்  தேவனால்  உண்டாயிற்றோ?  மனுஷரால்  உண்டாயிற்றோ?  யாரால்  உண்டாயிற்று?  என்று  கேட்டார்.  அதற்கு  அவர்கள்:  தேவனால்  உண்டாயிற்றென்று  சொல்வோமானால்,  பின்னை  ஏன்  அவனை  விசுவாசிக்கவில்லை  என்று  நம்மைக்  கேட்பார்;  {Matt  21:25}

 

மனுஷரால்  உண்டாயிற்றென்று  சொல்வோமானால்,  ஜனங்களுக்குப்  பயப்படுகிறோம்,  எல்லாரும்  யோவானைத்<John>  தீர்க்கதரிசியென்று  எண்ணுகிறார்களே  என்று,  தங்களுக்குள்ளே  ஆலோசனைபண்ணி,  {Matt  21:26}

 

இயேசுவுக்குப்<Jesus>  பிரதியுத்தரமாக:  எங்களுக்குத்  தெரியாது  என்றார்கள்.  அப்பொழுது,  அவர்:  நானும்  இன்ன  அதிகாரத்தினால்  இவைகளைச்  செய்கிறேனென்று  உங்களுக்குச்  சொல்லேன்  என்றார்.  {Matt  21:27}

 

ஆயினும்  உங்களுக்கு  எப்படித்  தோன்றுகிறது?  ஒரு  மனுஷனுக்கு  இரண்டு  குமாரர்  இருந்தார்கள்;  மூத்தவனிடத்தில்  அவன்  வந்து:  மகனே,  நீ  போய்  இன்றைக்கு  என்  திராட்சத்தோட்டத்தில்  வேலைசெய்  என்றான்.  {Matt  21:28}

 

அதற்கு  அவன்:  மாட்டேன்  என்றான்;  ஆகிலும்,  பின்பு  அவன்  மனஸ்தாபப்பட்டுப்  போனான்.  {Matt  21:29}

 

இளையவனிடத்திலும்  அவன்  வந்து,  அப்படியே  சொன்னான்;  அதற்கு  அவன்:  போகிறேன்  ஐயா,  என்று  சொல்லியும்,  போகவில்லை.  {Matt  21:30}

 

இவ்விருவரில்  எவன்  தகப்பனுடைய  சித்தத்தின்படி  செய்தவன்  என்று  கேட்டார்;  அதற்கு  அவர்கள்:  மூத்தவன்தான்  என்றார்கள்.  அப்பொழுது,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  ஆயக்காரரும்  வேசிகளும்  உங்களுக்கு  முன்னே  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிக்கிறார்கள்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  21:31}

 

ஏனென்றால்,  யோவான்<John>  நீதிமார்க்கமாய்  உங்களிடத்தில்  வந்திருந்தும்,  நீங்கள்  அவனை  விசுவாசிக்கவில்லை;  ஆயக்காரரும்  வேசிகளுமோ  அவனை  விசுவாசித்தார்கள்;  அதை  நீங்கள்  கண்டும்,  அவனை  விசுவாசிக்கும்படியாகப்  பின்பாகிலும்  மனஸ்தாபப்படவில்லை  என்றார்.  {Matt  21:32}

 

வேறொரு  உவமையைக்  கேளுங்கள்:  வீட்டெஜமானாகிய  ஒரு  மனுஷன்  இருந்தான்,  அவன்  ஒரு  திராட்சத்தோட்டத்தை  உண்டாக்கி,  அதைச்  சுற்றிலும்  வேலியடைத்து,  அதில்  ஒரு  ஆலையை  நாட்டி,  கோபுரத்தையும்  கட்டி,  தோட்டக்காரருக்கு  அதைக்  குத்தகையாக  விட்டு,  புறதேசத்துக்குப்  போயிருந்தான்.  {Matt  21:33}

 

கனிகாலம்  சமீபித்தபோது,  அதின்  கனிகளை  வாங்கிக்கொண்டுவரும்படி  தன்  ஊழியக்காரரைத்  தோட்டக்காரரிடத்தில்  அனுப்பினான்.  {Matt  21:34}

 

தோட்டக்காரர்  அந்த  ஊழியக்காரரைப்பிடித்து,  ஒருவனை  அடித்து,  ஒருவனைக்  கொலைசெய்து,  ஒருவனைக்  கல்லெறிந்து  கொன்றார்கள்.  {Matt  21:35}

 

பின்னும்  அவன்  முந்தினவர்களிலும்  அதிகமான  வேறே  ஊழியக்காரரை  அனுப்பினான்;  அவர்களையும்  அப்படியே  செய்தார்கள்.  {Matt  21:36}

 

கடைசியிலே  அவன்:  என்  குமாரனுக்கு  அஞ்சுவார்கள்  என்று  சொல்லி,  தன்  குமாரனை  அவர்களிடத்தில்  அனுப்பினான்.  {Matt  21:37}

 

தோட்டக்காரர்  குமாரனைக்  கண்டபோது:  இவன்  சுதந்தரவாளி;  இவனைக்  கொன்று,  இவன்  சுதந்தரத்தைக்  கட்டிக்கொள்வோம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டு;  {Matt  21:38}

 

அவனைப்  பிடித்துத்  திராட்சத்தோட்டத்திற்குப்  புறம்பே  தள்ளிக்  கொலைசெய்தார்கள்.  {Matt  21:39}

 

அப்படியிருக்க,  திராட்சத்தோட்டத்தின்  எஜமான்  வரும்போது,  அந்தத்  தோட்டக்காரரை  என்ன  செய்வான்  என்று  கேட்டார்.  {Matt  21:40}

 

அதற்கு  அவர்கள்:  அந்தக்  கொடியரைக்  கொடுமையாய்  அழித்து,  ஏற்றகாலங்களில்  தனக்குக்  கனிகளைக்  கொடுக்கத்தக்க  வேறே  தோட்டக்காரரிடத்தில்  திராட்சத்தோட்டத்தைக்  குத்தகையாகக்  கொடுப்பான்  என்றார்கள்.  {Matt  21:41}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  வீடுகட்டுகிறவர்கள்  ஆகாதென்று  தள்ளின  கல்லே  மூலைக்குத்  தலைக்கல்லாயிற்று,  அது  கர்த்தராலே  ஆயிற்று,  அது  நம்முடைய  கண்களுக்கு  ஆச்சரியமாயிருக்கிறது  என்று  நீங்கள்  வேதத்தில்  ஒருக்காலும்  வாசிக்கவில்லையா?  {Matt  21:42}

 

ஆகையால்,  தேவனுடைய  ராஜ்யம்  உங்களிடத்திலிருந்து  நீக்கப்பட்டு,  அதற்கேற்ற  கனிகளைத்  தருகிற  ஜனங்களுக்குக்  கொடுக்கப்படும்.  {Matt  21:43}

 

இந்தக்  கல்லின்மேல்  விழுகிறவன்  நொறுங்கிப்போவான்;  இது  எவன்மேல்  விழுமோ  அவனை  நசுக்கிப்போடும்  என்று  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  21:44}

 

பிரதான  ஆசாரியரும்  பரிசேயரும்<Pharisees>  அவருடைய  உவமைகளைக்  கேட்டு,  தங்களைக்குறித்துச்  சொல்லுகிறார்  என்று  அறிந்து,  {Matt  21:45}

 

அவரைப்  பிடிக்க  வகைதேடினார்கள்;  ஆகிலும்  ஜனங்கள்  அவரைத்  தீர்க்கதரிசியென்று  எண்ணினபடியினால்  அவர்களுக்குப்  பயந்திருந்தார்கள்.  {Matt  21:46}

 

இயேசு<Jesus>  மறுபடியும்  அவர்களோடே  உவமைகளாய்ப்  பேசிச்  சொன்னது  என்னவென்றால்:  {Matt  22:1}

 

பரலோகராஜ்யம்  தன்  குமாரனுக்குக்  கலியாணஞ்செய்த  ஒரு  ராஜாவுக்கு  ஒப்பாயிருக்கிறது.  {Matt  22:2}

 

அழைக்கப்பட்டவர்களைக்  கலியாணத்திற்கு  வரச்சொல்லும்படி  அவன்  தன்  ஊழியக்காரரை  அனுப்பினான்;  அவர்களோ  வர  மனதில்லாதிருந்தார்கள்.  {Matt  22:3}

 

அப்பொழுது  அவன்  வேறு  ஊழியக்காரரை  அழைத்து:  நீங்கள்  போய்,  இதோ,  என்  விருந்தை  ஆயத்தம்பண்ணினேன்,  என்  எருதுகளும்  கொழுத்த  ஜெந்துக்களும்  அடிக்கப்பட்டது,  எல்லாம்  ஆயத்தமாயிருக்கிறது;  கலியாணத்திற்கு  வாருங்கள்  என்று  அழைக்கப்பட்டவர்களுக்குச்  சொல்லுங்களென்று  அனுப்பினான்.  {Matt  22:4}

 

அழைக்கப்பட்டவர்களோ  அதை  அசட்டைபண்ணி,  ஒருவன்  தன்  வயலுக்கும்,  ஒருவன்  தன்  வியாபாரத்துக்கும்  போய்விட்டார்கள்.  {Matt  22:5}

 

மற்றவர்கள்  அவன்  ஊழியக்காரரைப்  பிடித்து,  அவமானப்படுத்தி,  கொலைசெய்தார்கள்.  {Matt  22:6}

 

ராஜா  அதைக்  கேள்விப்பட்டு,  கோபமடைந்து,  தன்  சேனைகளை  அனுப்பி,  அந்தக்  கொலைபாதகரை  அழித்து,  அவர்கள்  பட்டணத்தையும்  சுட்டெரித்தான்.  {Matt  22:7}

 

அப்பொழுது,  அவன்  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  கலியாண  விருந்து  ஆயத்தமாயிருக்கிறது,  அழைக்கப்பட்டவர்களோ  அதற்கு  அபாத்திரராய்ப்  போனார்கள்.  {Matt  22:8}

 

ஆகையால்,  நீங்கள்  வழிச்சந்திகளிலே  போய்,  காணப்படுகிற  யாவரையும்  கலியாணத்திற்கு  அழைத்துக்கொண்டுவாருங்கள்  என்றான்.  {Matt  22:9}

 

அந்த  ஊழியக்காரர்  புறப்பட்டு,  வழிகளிலே  போய்,  தாங்கள்  கண்ட  நல்லார்  பொல்லார்  யாவரையும்  கூட்டிக்கொண்டு  வந்தார்கள்;  கலியாணசாலை  விருந்தாளிகளால்  நிறைந்தது.  {Matt  22:10}

 

விருந்தாளிகளைப்  பார்க்கும்படி  ராஜா  உள்ளே  பிரவேசித்தபோது,  கலியாண  வஸ்திரம்  தரித்திராத  ஒரு  மனுஷனை  அங்கே  கண்டு:  {Matt  22:11}

 

சிநேகிதனே,  நீ  கலியாண  வஸ்திரமில்லாதவனாய்  இங்கே  எப்படி  வந்தாய்  என்று  கேட்டான்;  அதற்கு  அவன்  பேசாமலிருந்தான்.  {Matt  22:12}

 

அப்பொழுது,  ராஜா  பணிவிடைக்காரரை  நோக்கி:  இவனைக்  கையுங்காலும்  கட்டிக்  கொண்டுபோய்,  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கிற  புறம்பான  இருளிலே  போடுங்கள்  என்றான்.  {Matt  22:13}

 

அந்தப்படியே,  அழைக்கப்பட்டவர்கள்  அநேகர்,  தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ  சிலர்  என்றார்.  {Matt  22:14}

 

அப்பொழுது,  பரிசேயர்<Pharisees>  போய்,  பேச்சிலே  அவரை  அகப்படுத்தும்படி  யோசனைபண்ணி,  {Matt  22:15}

 

தங்கள்  சீஷரையும்  ஏரோதியரையும்<Herodians>  அவரிடத்தில்  அனுப்பினார்கள்.  அவர்கள்  வந்து:  போதகரே,  நீர்  சத்தியமுள்ளவரென்றும்,  தேவனுடைய  மார்க்கத்தைச்  சத்தியமாய்ப்  போதிக்கிறவரென்றும்,  நீர்  முகதாட்சணியம்  இல்லாதவராகையால்  எவனைக்குறித்தும்  உமக்குக்  கவலையில்லையென்றும்  அறிந்திருக்கிறோம்.  {Matt  22:16}

 

ஆதலால்,  உமக்கு  எப்படித்  தோன்றுகிறது?  இராயனுக்கு<Caesar>  வரிகொடுக்கிறது  நியாயமோ,  அல்லவோ?  அதை  எங்களுக்குச்  சொல்லும்  என்று  கேட்டார்கள்.  {Matt  22:17}

 

இயேசு<Jesus>  அவர்கள்  துர்க்குணத்தை  அறிந்து:  மாயக்காரரே,  நீங்கள்  என்னை  ஏன்  சோதிக்கிறீர்கள்?  {Matt  22:18}

 

வரிக்காசை  எனக்குக்  காண்பியுங்கள்  என்றார்;  அவர்கள்  ஒரு  பணத்தை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  {Matt  22:19}

 

அப்பொழுது  அவர்:  இந்தச்  சுரூபமும்  மேலெழுத்தும்  யாருடையது  என்று  கேட்டார்.  {Matt  22:20}

 

இராயனுடையது<Caesar>  என்றார்கள்.  அதற்கு  அவர்:  அப்படியானால்,  இராயனுடையதை<Caesar>  இராயனுக்கும்<Caesar>,  தேவனுடையதைத்  தேவனுக்கும்  செலுத்துங்கள்  என்றார்.  {Matt  22:21}

 

அவர்கள்  அதைக்கேட்டு  ஆச்சரியப்பட்டு  அவரை  விட்டுப்  போய்விட்டார்கள்.  {Matt  22:22}

 

உயிர்த்தெழுதல்  இல்லை  என்று  சாதிக்கிற  சதுசேயர்<Sadducees>  அன்றையத்தினம்  அவரிடத்தில்  வந்து:  {Matt  22:23}

 

போதகரே,  ஒருவன்  சந்தானம்  இல்லாமல்  இறந்துபோனால்,  அவனுடைய  சகோதரன்  அவன்  மனைவியை  விவாகம்பண்ணி,  தன்  சகோதரனுக்குச்  சந்தானம்  உண்டாக்கவேண்டும்  என்று  மோசே<Moses>  சொன்னாரே.  {Matt  22:24}

 

எங்களுக்குள்ளே  சகோதரர்  ஏழுபேர்  இருந்தார்கள்;  மூத்தவன்  விவாகம்பண்ணி,  மரித்து,  சந்தானமில்லாததினால்  தன்  மனைவியைத்  தன்  சகோதரனுக்கு  விட்டுவிட்டுப்போனான்.  {Matt  22:25}

 

அப்படியே  இரண்டாம்  மூன்றாம்  சகோதரன்முதல்  ஏழாம்  சகோதரன்வரைக்கும்  செய்தார்கள்.  {Matt  22:26}

 

எல்லாருக்கும்  பின்பு  அந்த  ஸ்திரீயும்  இறந்துபோனாள்.  {Matt  22:27}

 

ஆகையால்,  உயிர்த்தெழுதலில்  அவ்வேழுபேரில்  எவனுக்கு  அவள்  மனைவியாயிருப்பாள்?  அவர்கள்  எல்லாரும்  அவளை  விவாகம்பண்ணியிருந்தார்களே  என்று  கேட்டார்கள்.  {Matt  22:28}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  வேதவாக்கியங்களையும்,  தேவனுடைய  வல்லமையையும்  அறியாமல்  தப்பான  எண்ணங்கொள்ளுகிறீர்கள்.  {Matt  22:29}

 

உயிர்த்தெழுதலில்  கொள்வனையும்  கொடுப்பனையும்  இல்லை;  அவர்கள்  பரலோகத்திலே  தேவதூதரைப்போல்  இருப்பார்கள்;  {Matt  22:30}

 

மேலும்  மரித்தோர்  உயிர்த்தெழுதலைப்பற்றி:  நான்  ஆபிரகாமின்<Abraham>  தேவனும்,  ஈசாக்கின்<Isaac>  தேவனும்,  யாக்கோபின்<Jacob>  தேவனுமாயிருக்கிறேன்  என்று  தேவனால்  உங்களுக்கு  உரைக்கப்பட்டிருக்கிறதை  நீங்கள்  வாசிக்கவில்லையா?  {Matt  22:31}

 

தேவன்  மரித்தோருக்குத்  தேவனாயிராமல்,  ஜீவனுள்ளோருக்குத்  தேவனாயிருக்கிறார்  என்றார்.  {Matt  22:32}

 

ஜனங்கள்  இதைக்  கேட்டு,  அவருடைய  போதகத்தைக்குறித்து  ஆச்சரியப்பட்டார்கள்.  {Matt  22:33}

 

அவர்  சதுசேயரை<Sadducees>  வாயடைத்தார்  என்று  பரிசேயர்<Pharisees>  கேள்விப்பட்டு,  அவரிடத்தில்  கூடிவந்தார்கள்.  {Matt  22:34}

 

அவர்களில்  நியாயசாஸ்திரி  ஒருவன்  அவரைச்  சோதிக்கும்படி:  {Matt  22:35}

 

போதகரே,  நியாயப்பிரமாணத்திலே  எந்தக்  கற்பனை  பிரதானமானது  என்று  கேட்டான்.  {Matt  22:36}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  உன்  முழு  இருதயத்தோடும்  உன்  முழு  ஆத்துமாவோடும்  உன்  முழு  மனதோடும்  அன்புகூருவாயாக;  {Matt  22:37}

 

இது  முதலாம்  பிரதான  கற்பனை.  {Matt  22:38}

 

இதற்கு  ஒப்பாயிருக்கிற  இரண்டாம்  கற்பனை  என்னவென்றால்,  உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்பதே.  {Matt  22:39}

 

இவ்விரண்டு  கற்பனைகளிலும்  நியாயப்பிரமாணம்  முழுமையும்  தீர்க்கதரிசனங்களும்  அடங்கியிருக்கிறது  என்றார்.  {Matt  22:40}

 

பரிசேயர்<Pharisees>  கூடியிருக்கையில்,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  {Matt  22:41}

 

கிறிஸ்துவைக்குறித்து<Christ>  நீங்கள்  என்ன  நினைக்கிறீர்கள்,  அவர்  யாருடைய  குமாரன்?  என்று  கேட்டார்.  அவர்  தாவீதின்<David>  குமாரன்  என்றார்கள்.  {Matt  22:42}

 

அதற்கு  அவர்:  அப்படியானால்,  தாவீது<David>  பரிசுத்த  ஆவியினாலே  அவரை  ஆண்டவர்  என்று  சொல்லியிருக்கிறது  எப்படி?  {Matt  22:43}

 

நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்று  கர்த்தர்  என்  ஆண்டவரோடே  சொன்னார்  என்று  சொல்லியிருக்கிறானே.  {Matt  22:44}

 

தாவீது<David>  அவரை  ஆண்டவர்  என்று  சொல்லியிருக்க,  அவனுக்கு  அவர்  குமாரனாயிருப்பது  எப்படி  என்றார்.  {Matt  22:45}

 

அதற்கு  மாறுத்தரமாக  ஒருவனும்  அவருக்கு  ஒரு  வார்த்தையும்  சொல்லக்கூடாதிருந்தது.  அன்றுமுதல்  ஒருவனும்  அவரிடத்தில்  கேள்விகேட்கத்  துணியவில்லை.  {Matt  22:46}

 

பின்பு  இயேசு<Jesus>  ஜனங்களையும்  தம்முடைய  சீஷர்களையும்  நோக்கி:  {Matt  23:1}

 

வேதபாரகரும்  பரிசேயரும்<Pharisees>  மோசேயினுடைய<Moses>  ஆசனத்தில்  உட்கார்ந்திருக்கிறார்கள்;  {Matt  23:2}

 

ஆகையால்,  நீங்கள்  கைக்கொள்ளும்படி  அவர்கள்  உங்களுக்குச்  சொல்லுகிற  யாவையும்  கைக்கொண்டு  செய்யுங்கள்;  அவர்கள்  செய்கையின்படியோ  செய்யாதிருங்கள்;  ஏனெனில்,  அவர்கள்  சொல்லுகிறார்கள்,  சொல்லியும்  செய்யாதிருக்கிறார்கள்.  {Matt  23:3}

 

சுமப்பதற்கரிய  பாரமான  சுமைகளைக்கட்டி  மனுஷர்  தோள்களின்மேல்  சுமத்துகிறார்கள்;  தாங்களோ  ஒரு  விரலினாலும்  அவைகளைத்  தொடமாட்டார்கள்.  {Matt  23:4}

 

தங்கள்  கிரியைகளையெல்லாம்  மனுஷர்  காணவேண்டுமென்று  செய்கிறார்கள்;  தங்கள்  காப்புநாடாக்களை  அகலமாக்கி,  தங்கள்  வஸ்திரங்களின்  தொங்கல்களைப்  பெரிதாக்கி,  {Matt  23:5}

 

விருந்துகளில்  முதன்மையான  இடங்களையும்,  ஜெபஆலயங்களில்  முதன்மையான  ஆசனங்களையும்,  {Matt  23:6}

 

சந்தைவெளிகளில்  வந்தனங்களையும்,  மனுஷரால்  ரபீ<Rabbi>,  ரபீ<Rabbi>,  என்று  அழைக்கப்படுவதையும்  விரும்புகிறார்கள்.  {Matt  23:7}

 

நீங்களோ  ரபீ<Rabbi>  என்றழைக்கப்படாதிருங்கள்;  கிறிஸ்து<Christ>  ஒருவரே  உங்களுக்குப்  போதகராயிருக்கிறார்,  நீங்கள்  எல்லாரும்  சகோதரராயிருக்கிறீர்கள்.  {Matt  23:8}

 

பூமியிலே  ஒருவனையும்  உங்கள்  பிதா  என்று  சொல்லாதிருங்கள்;  பரலோகத்திலிருக்கிற  ஒருவரே  உங்களுக்குப்  பிதாவாயிருக்கிறார்.  {Matt  23:9}

 

நீங்கள்  குருக்கள்  என்றும்  அழைக்கப்படாதிருங்கள்;  கிறிஸ்து<Christ>  ஒருவரே  உங்களுக்குக்  குருவாயிருக்கிறார்.  {Matt  23:10}

 

உங்களில்  பெரியவனாயிருக்கிறவன்  உங்களுக்கு  ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.  {Matt  23:11}

 

தன்னை  உயர்த்துகிறவன்  தாழ்த்தப்படுவான்,  தன்னைத்  தாழ்த்துகிறவன்  உயர்த்தப்படுவான்.  {Matt  23:12}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே!  பரிசேயரே<Pharisees>!  உங்களுக்கு  ஐயோ,  மனுஷர்  பிரவேசியாதபடி  பரலோகராஜ்யத்தைப்  பூட்டிப்போடுகிறீர்கள்;  நீங்கள்  அதில்  பிரவேசிக்கிறதுமில்லை,  பிரவேசிக்கப்  போகிறவர்களைப்  பிரவேசிக்க  விடுகிறதுமில்லை.  {Matt  23:13}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே!  பரிசேயரே<Pharisees>!  உங்களுக்கு  ஐயோ,  பார்வைக்காக  நீண்ட  ஜெபம்பண்ணி,  விதவைகளின்  வீடுகளைப்  பட்சித்துப்போடுகிறீர்கள்;  இதினிமித்தம்  அதிக  ஆக்கினையை  அடைவீர்கள்.  {Matt  23:14}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே!  பரிசேயரே<Pharisees>!  உங்களுக்கு  ஐயோ,  ஒருவனை  உங்கள்  மார்க்கத்தானாக்கும்படி  சமுத்திரத்தையும்  பூமியையும்  சுற்றித்திரிகிறீர்கள்;  அவன்  உங்கள்  மார்க்கத்தானானபோது  அவனை  உங்களிலும்  இரட்டிப்பாய்  நரகத்தின்  மகனாக்குகிறீர்கள்.  {Matt  23:15}

 

குருடரான  வழிகாட்டிகளே!  உங்களுக்கு  ஐயோ,  எவனாகிலும்  தேவாலயத்தின்பேரில்  சத்தியம்பண்ணினால்  அதினால்  ஒன்றுமில்லையென்றும்,  எவனாகிலும்  தேவாலயத்தின்  பொன்னின்பேரில்  சத்தியம்பண்ணினால்  அவன்  கடனாளியென்றும்  சொல்லுகிறீர்கள்.  {Matt  23:16}

 

மதிகேடரே,  குருடரே!  எது  முக்கியம்?  பொன்னோ,  பொன்னைப்  பரிசுத்தமாக்குகிற  தேவாலயமோ?  {Matt  23:17}

 

மேலும்,  எவனாகிலும்  பலிபீடத்தின்பேரில்  சத்தியம்பண்ணினால்  அதினால்  ஒன்றுமில்லையென்றும்,  எவனாகிலும்  அதின்மேல்  இருக்கிற  காணிக்கையின்பேரில்  சத்தியம்பண்ணினால்,  அவன்  கடனாளியென்றும்  சொல்லுகிறீர்கள்.  {Matt  23:18}

 

மதிகேடரே,  குருடரே!  எது  முக்கியம்?  காணிக்கையோ,  காணிக்கையைப்  பரிசுத்தமாக்குகிற  பலிபீடமோ?  {Matt  23:19}

 

ஆகையால்,  பலிபீடத்தின்பேரில்  சத்தியம்பண்ணுகிறவன்  அதின்பேரிலும்  அதின்மேலுள்ள  எல்லாவற்றின்பேரிலும்  சத்தியம்பண்ணுகிறான்.  {Matt  23:20}

 

தேவாலயத்தின்பேரில்  சத்தியம்பண்ணுகிறவன்  அதின்பேரிலும்  அதில்  வாசமாயிருக்கிறவர்பேரிலும்  சத்தியம்பண்ணுகிறான்.  {Matt  23:21}

 

வானத்தின்பேரில்  சத்தியம்பண்ணுகிறவன்  தேவனுடைய  சிங்காசனத்தின்பேரிலும்  அதில்  வீற்றிருக்கிறவர்பேரிலும்  சத்தியம்பண்ணுகிறான்.  {Matt  23:22}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே!  பரிசேயரே<Pharisees>!  உங்களுக்கு  ஐயோ,  நீங்கள்  ஒற்தலாமிலும்  வெந்தையத்திலும்  சீரகத்திலும்  தசமபாகம்  செலுத்தி,  நியாயப்பிரமாணத்தில்  கற்பித்திருக்கிற  விசேஷித்தவைகளாகிய  நீதியையும்  இரக்கத்தையும்  விசுவாசத்தையும்  விட்டுவிட்டீர்கள்,  இவைகளையும்  செய்யவேண்டும்,  அவைகளையும்  விடாதிருக்கவேண்டுமே.  {Matt  23:23}

 

குருடரான  வழிகாட்டிகளே,  கொசுயில்லாதபடி  வடிகட்டி,  ஒட்டகத்தை  விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.  {Matt  23:24}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே!  பரிசேயரே<Pharisees>!  உங்களுக்கு  ஐயோ,  போஜனபானபாத்திரங்களின்  வெளிப்புறத்தைச்  சுத்தமாக்குகிறீர்கள்;  உட்புறத்திலோ  அவைகள்  கொள்ளையினாலும்  அநீதத்தினாலும்  நிறைந்திருக்கிறது.  {Matt  23:25}

 

குருடனான  பரிசேயனே<Pharisee>!  போஜனபானபாத்திரங்களின்  வெளிப்புறம்  சுத்தமாகும்படி  அவைகளின்  உட்புறத்தை  முதலாவது  சுத்தமாக்கு.  {Matt  23:26}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே!  பரிசேயரே<Pharisees>!  உங்களுக்கு  ஐயோ,  வெள்ளையடிக்கப்பட்ட  கல்லறைகளுக்கு  ஒப்பாயிருக்கிறீர்கள்,  அவைகள்  புறம்பே  அலங்காரமாய்க்  காணப்படும்,  உள்ளேயோ  மரித்தவர்களின்  எலும்புகளினாலும்  சகல  அசுத்தத்தினாலும்  நிறைந்திருக்கும்.  {Matt  23:27}

 

அப்படியே  நீங்களும்  மனுஷருக்கு  நீதிமான்கள்  என்று  புறம்பே  காணப்படுகிறீர்கள்;  உள்ளத்திலோ  மாயத்தினாலும்  அக்கிரமத்தினாலும்  நிறைந்திருக்கிறீர்கள்.  {Matt  23:28}

 

மாயக்காரராகிய  வேதபாரகரே!  பரிசேயரே<Pharisees>!  உங்களுக்கு  ஐயோ,  நீங்கள்  தீர்க்கதரிசிகளின்  கல்லறைகளைக்  கட்டி,  நீதிமான்களின்  சமாதிகளைச்  சிங்காரித்து:  {Matt  23:29}

 

எங்கள்  பிதாக்களின்  நாட்களில்  இருந்தோமானால்,  அவர்களோடே  நாங்கள்  தீர்க்கதரிசிகளின்  இரத்தப்பழிக்கு  உடன்பட்டிருக்கமாட்டோம்  என்கிறீர்கள்.  {Matt  23:30}

 

ஆகையால்,  தீர்க்கதரிசிகளைக்  கொலைசெய்தவர்களுக்குப்  புத்திரராயிருக்கிறீர்கள்  என்று  உங்களைக்குறித்து  நீங்களே  சாட்சிகளாயிருக்கிறீர்கள்.  {Matt  23:31}

 

நீங்களும்  உங்கள்  பிதாக்களின்  அக்கிரம  அளவை  நிரப்புங்கள்.  {Matt  23:32}

 

சர்ப்பங்களே,  விரியன்பாம்புக்  குட்டிகளே!  நரகாக்கினைக்கு  எப்படித்  தப்பித்துக்கொள்வீர்கள்?  {Matt  23:33}

 

ஆகையால்,  இதோ,  தீர்க்கதரிசிகளையும்  ஞானிகளையும்  வேதபாரகரையும்  உங்களிடத்தில்  அனுப்புகிறேன்;  அவர்களில்  சிலரைக்  கொன்று  சிலுவைகளில்  அறைவீர்கள்,  சிலரை  உங்கள்  ஆலயங்களில்  வாரினால்  அடித்து,  ஊருக்கு  ஊர்  துன்பப்படுத்துவீர்கள்;  {Matt  23:34}

 

நீதிமானாகிய  ஆபேலின்<Abel>  இரத்தம்  முதல்  தேவாலயத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே  நீங்கள்  கொலைசெய்த  பரகியாவின்<Barachias>  குமாரனாகிய  சகரியாவின்<Zacharias>  இரத்தம்வரைக்கும்,  பூமியின்மேல்  சிந்தப்பட்ட  நீதிமான்களின்  இரத்தப்பழியெல்லாம்  உங்கள்மேல்  வரும்படியாக  இப்படிச்  செய்வீர்கள்.  {Matt  23:35}

 

இவைகளெல்லாம்  இந்தச்  சந்ததியின்மேல்  வருமென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  23:36}

 

எருசலேமே<Jerusalem>,  எருசலேமே<Jerusalem>,  தீர்க்கதரிசிகளைக்  கொலைசெய்து,  உன்னிடத்தில்  அனுப்பப்பட்டவர்களைக்  கல்லெறிகிறவளே!  கோழி  தன்  குஞ்சுகளைத்  தன்  சிறகுகளின்கீழே  கூட்டிச்  சேர்த்துக்  கொள்ளும்வண்ணமாக  நான்  எத்தனை  தரமோ  உன்  பிள்ளைகளைக்  கூட்டிச்  சேர்த்துக்கொள்ள  மனதாயிருந்தேன்;  உங்களுக்கோ  மனதில்லாமற்போயிற்று.  {Matt  23:37}

 

இதோ,  உங்கள்  வீடு  உங்களுக்குப்  பாழாக்கிவிடப்படும்.  {Matt  23:38}

 

கர்த்தருடைய  நாமத்தினாலே  வருகிறவர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்  என்று  நீங்கள்  சொல்லுமளவும்,  இதுமுதல்  என்னைக்  காணாதிருப்பீர்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  23:39}

 

இயேசு<Jesus>  தேவாலயத்தை  விட்டுப்  புறப்பட்டுப்போகையில்,  அவருடைய  சீஷர்கள்  தேவாலயத்தின்  கட்டடங்களை  அவருக்குக்  காண்பிக்க  அவரிடத்தில்  வந்தார்கள்.  {Matt  24:1}

 

இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  இவைகளையெல்லாம்  பார்க்கிறீர்களே,  இவ்விடத்தில்  ஒரு  கல்லின்மேல்  ஒரு  கல்லிராதபடிக்கு  எல்லாம்  இடிக்கப்பட்டுப்போகும்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  24:2}

 

பின்பு,  அவர்  ஒலிவமலையின்மேல்<mount  of  Olives>  உட்கார்ந்திருக்கையில்,  சீஷர்கள்  அவரிடத்தில்  தனித்துவந்து:  இவைகள்  எப்பொழுது  சம்பவிக்கும்?  உம்முடைய  வருகைக்கும்,  உலகத்தின்  முடிவுக்கும்  அடையாளம்  என்ன?  எங்களுக்குச்  சொல்லவேண்டும்  என்றார்கள்.  {Matt  24:3}

 

இயேசு<Jesus>  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  ஒருவனும்  உங்களை  வஞ்சியாதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  {Matt  24:4}

 

ஏனெனில்,  அநேகர்  வந்து,  என்  நாமத்தைத்  தரித்துக்கொண்டு:  நானே  கிறிஸ்து<Christ>  என்று  சொல்லி,  அநேகரை  வஞ்சிப்பார்கள்.  {Matt  24:5}

 

யுத்தங்களையும்  யுத்தங்களின்  செய்திகளையும்  கேள்விப்படுவீர்கள்;  கலங்காதபடி  எச்சரிக்கையாயிருங்கள்;  இவைகளெல்லாம்  சம்பவிக்கவேண்டியதே;  ஆனாலும்,  முடிவு  உடனே  வராது.  {Matt  24:6}

 

ஜனத்துக்கு  விரோதமாய்  ஜனமும்,  ராஜ்யத்துக்கு  விரோதமாய்  ராஜ்யமும்  எழும்பும்;  பஞ்சங்களும்,  கொள்ளைநோய்களும்,  பூமியதிர்ச்சிகளும்  பல  இடங்களில்  உண்டாகும்.  {Matt  24:7}

 

இவைகளெல்லாம்  வேதனைகளுக்கு  ஆரம்பம்.  {Matt  24:8}

 

அப்பொழுது,  உங்களை  உபத்திரவங்களுக்கு  ஒப்புக்கொடுத்து,  உங்களைக்  கொலைசெய்வார்கள்;  என்  நாமத்தினிமித்தம்  நீங்கள்  சகல  ஜனங்களாலும்  பகைக்கப்படுவீர்கள்.  {Matt  24:9}

 

அப்பொழுது,  அநேகர்  இடறலடைந்து,  ஒருவரையொருவர்  காட்டிக்கொடுத்து,  ஒருவரையொருவர்  பகைப்பார்கள்.  {Matt  24:10}

 

அநேகங்  கள்ளத்தீர்க்கதரிசிகளும்  எழும்பி,  அநேகரை  வஞ்சிப்பார்கள்.  {Matt  24:11}

 

அக்கிரமம்  மிகுதியாவதினால்  அநேகருடைய  அன்பு  தணிந்துபோம்.  {Matt  24:12}

 

முடிவுபரியந்தம்  நிலைநிற்பவனே  இரட்சிக்கப்படுவான்.  {Matt  24:13}

 

ராஜ்யத்தினுடைய  இந்தச்  சுவிசேஷம்  பூலோகமெங்குமுள்ள  சகல  ஜாதிகளுக்கும்  சாட்சியாகப்  பிரசங்கிக்கப்படும்,  அப்போது  முடிவு  வரும்.  {Matt  24:14}

 

மேலும்,  பாழாக்குகிற  அருவருப்பைக்குறித்துத்  தானியேல்<Daniel>  தீர்க்கதரிசி  சொல்லியிருக்கிறானே.  வாசிக்கிறவன்  சிந்திக்கக்கடவன்.  நீங்கள்  அதைப்  பரிசுத்த  ஸ்தலத்தில்  நிற்கக்  காணும்போது,  {Matt  24:15}

 

யூதேயாவில்<Judaea>  இருக்கிறவர்கள்  மலைகளுக்கு  ஓடிப்போகக்கடவர்கள்.  {Matt  24:16}

 

வீட்டின்மேல்  இருக்கிறவன்  தன்  வீட்டிலே  எதையாகிலும்  எடுப்பதற்கு  இறங்காதிருக்கக்கடவன்.  {Matt  24:17}

 

வயலில்  இருக்கிறவன்  தன்  வஸ்திரங்களை  எடுப்பதற்குத்  திரும்பாதிருக்கக்கடவன்.  {Matt  24:18}

 

அந்நாட்களிலே  கர்ப்பவதிகளுக்கும்  பால்கொடுக்கிறவர்களுக்கும்  ஐயோ.  {Matt  24:19}

 

நீங்கள்  ஓடிப்போவது  மாரிகாலத்திலாவது,  ஓய்வுநாளிலாவது,  சம்பவியாதபடிக்கு  வேண்டிக்கொள்ளுங்கள்.  {Matt  24:20}

 

ஏனெனில்,  உலகமுண்டானதுமுதல்  இதுவரைக்கும்  சம்பவித்திராததும்,  இனிமேலும்  சம்பவியாததுமான  மிகுந்த  உபத்திரவம்  அப்பொழுது  உண்டாயிருக்கும்.  {Matt  24:21}

 

அந்நாட்கள்  குறைக்கப்படாதிருந்தால்,  ஒருவனாகிலும்  தப்பிப்போவதில்லை;  தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ  அந்த  நாட்கள்  குறைக்கப்படும்.  {Matt  24:22}

 

அப்பொழுது,  இதோ,  கிறிஸ்து<Christ>  இங்கே  இருக்கிறார்,  அதோ,  அங்கே  இருக்கிறார்  என்று  எவனாகிலும்  சொன்னால்  நம்பாதேயுங்கள்.  {Matt  24:23}

 

ஏனெனில்,  கள்ளக்கிறிஸ்துக்களும்<false  Christs>  கள்ளத்தீர்க்கதரிசிகளும்  எழும்பி,  கூடுமானால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்  வஞ்சிக்கத்தக்கதாகப்  பெரிய  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  செய்வார்கள்.  {Matt  24:24}

 

இதோ,  முன்னதாக  உங்களுக்கு  அறிவித்திருக்கிறேன்.  {Matt  24:25}

 

ஆகையால்:  அதோ,  வனாந்தரத்தில்  இருக்கிறார்  என்று  சொல்வார்களானால்,  புறப்படாதிருங்கள்;  இதோ,  அறைவீட்டிற்குள்  இருக்கிறார்  என்று  சொல்வார்களானால்  நம்பாதிருங்கள்.  {Matt  24:26}

 

மின்னல்  கிழக்கிலிருந்து  தோன்றி  மேற்குவரைக்கும்  பிரகாசிக்கிறதுபோல,  மனுஷகுமாரனுடைய  வருகையும்  இருக்கும்.  {Matt  24:27}

 

பிணம்  எங்கேயோ  அங்கே  கழுகுகள்  வந்து  கூடும்.  {Matt  24:28}

 

அந்நாட்களின்  உபத்திரவம்  முடிந்தவுடனே,  சூரியன்  அந்தகாரப்படும்,  சந்திரன்  ஒளியைக்  கொடாதிருக்கும்,  நட்சத்திரங்கள்  வானத்திலிருந்து  விழும்,  வானத்தின்  சத்துவங்கள்  அசைக்கப்படும்.  {Matt  24:29}

 

அப்பொழுது,  மனுஷகுமாரனுடைய  அடையாளம்  வானத்தில்  காணப்படும்.  அப்பொழுது,  மனுஷகுமாரன்  வல்லமையோடும்  மிகுந்த  மகிமையோடும்  வானத்தின்  மேகங்கள்மேல்  வருகிறதைப்  பூமியிலுள்ள  சகல  கோத்திரத்தாரும்  கண்டு  புலம்புவார்கள்.  {Matt  24:30}

 

வலுவாய்த்  தொனிக்கும்  எக்காள  சத்தத்தோடே  அவர்  தமது  தூதர்களை  அனுப்புவார்;  அவர்கள்  அவரால்  தெரிந்துகொள்ளப்பட்டவர்களை  வானத்தின்  ஒரு  முனை  முதற்கொண்டு  மறுமுனைமட்டும்  நாலு  திசைகளிலுமிருந்து  கூட்டிச்  சேர்ப்பார்கள்.  {Matt  24:31}

 

அத்திமரத்தினால்  ஒரு  உவமையைக்  கற்றுக்கொள்ளுங்கள்;  அதிலே  இளங்கிளை  தோன்றி,  துளிர்விடும்போது,  வசந்தகாலம்  சமீபமாயிற்று  என்று  அறிவீர்கள்.  {Matt  24:32}

 

அப்படியே  இவைகளையெல்லாம்  நீங்கள்  காணும்போது,  அவர்  சமீபமாய்  வாசலருகே  வந்திருக்கிறார்  என்று  அறியுங்கள்.  {Matt  24:33}

 

இவைகளெல்லாம்  சம்பவிக்குமுன்னே  இந்தச்  சந்ததி  ஒழிந்துபோகாதென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  24:34}

 

வானமும்  பூமியும்  ஒழிந்துபோம்,  என்  வார்த்தைகளோ  ஒழிந்துபோவதில்லை.  {Matt  24:35}

 

அந்த  நாளையும்  அந்த  நாழிகையையும்  என்  பிதா  ஒருவர்  தவிர  மற்றொருவனும்  அறியான்;  பரலோகத்திலுள்ள  தூதர்களும்  அறியார்கள்.  {Matt  24:36}

 

நோவாவின்<Noe>  காலத்தில்  எப்படி  நடந்ததோ,  அப்படியே  மனுஷகுமாரன்  வரும்  காலத்திலும்  நடக்கும்.  {Matt  24:37}

 

எப்படியெனில்,  ஜலப்பிரளயத்துக்கு  முன்னான  காலத்திலே  நோவா<Noe>  பேழைக்குள்  பிரவேசிக்கும்  நாள்வரைக்கும்,  ஜனங்கள்  புசித்தும்  குடித்தும்,  பெண்கொண்டும்  பெண்கொடுத்தும்,  {Matt  24:38}

 

ஜலப்பிரளயம்  வந்து  அனைவரையும்  வாரிக்கொண்டுபோகுமட்டும்  உணராதிருந்தார்கள்;  அப்படியே  மனுஷகுமாரன்  வருங்காலத்திலும்  நடக்கும்.  {Matt  24:39}

 

அப்பொழுது,  இரண்டுபேர்  வயலில்  இருப்பார்கள்;  ஒருவன்  ஏற்றுக்கொள்ளப்படுவான்,  ஒருவன்  கைவிடப்படுவான்.  {Matt  24:40}

 

இரண்டு  ஸ்திரீகள்  ஏந்திரம்  அரைத்துக்கொண்டிருப்பார்கள்;  ஒருத்தி  ஏற்றுக்கொள்ளப்படுவாள்,  ஒருத்தி  கைவிடப்படுவாள்.  {Matt  24:41}

 

உங்கள்  ஆண்டவர்  இன்ன  நாழிகையிலே  வருவாரென்று  நீங்கள்  அறியாதிருக்கிறபடியினால்  விழித்திருங்கள்.  {Matt  24:42}

 

திருடன்  இன்ன  ஜாமத்தில்  வருவானென்று  வீட்டெஜமான்  அறிந்திருந்தால்,  அவன்  விழித்திருந்து,  தன்  வீட்டைக்  கன்னமிடவொட்டானென்று  அறிவீர்கள்.  {Matt  24:43}

 

நீங்கள்  நினையாத  நாழிகையிலே  மனுஷகுமாரன்  வருவார்;  ஆதலால்,  நீங்களும்  ஆயத்தமாயிருங்கள்.  {Matt  24:44}

 

ஏற்றவேளையிலே  தன்  வேலைக்காரருக்குப்  போஜனங்கொடுத்து  அவர்களை  விசாரிக்கும்படி  எஜமான்  வைத்த  உண்மையும்  விவேகமுமுள்ள  ஊழியக்காரன்  யாவன்?  {Matt  24:45}

 

எஜமான்  வரும்போது  அப்படிச்  செய்கிறவனாகக்  காணப்படுகிற  ஊழியக்காரனே  பாக்கியவான்.  {Matt  24:46}

 

தன்  ஆஸ்திகள்  எல்லாவற்றின்மேலும்  அவனை  விசாரணைக்காரனாக  வைப்பானென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Matt  24:47}

 

அந்த  ஊழியக்காரனோ  பொல்லாதவனாயிருந்து:  என்  ஆண்டவன்  வர  நாள்  செல்லும்  என்று  தன்  உள்ளத்திலே  சொல்லிக்கொண்டு,  {Matt  24:48}

 

தன்  உடன்வேலைக்காரரை  அடிக்கத்  தொடங்கி,  வெறியரோடே  புசிக்கவும்  குடிக்கவும்  தலைப்பட்டால்,  {Matt  24:49}

 

அந்த  ஊழியக்காரன்  நினையாத  நாளிலும்,  அறியாத  நாழிகையிலும்,  அவனுடைய  எஜமான்  வந்து,  {Matt  24:50}

 

அவனைக்  கடினமாய்த்  தண்டித்து,  மாயக்காரரோடே  அவனுக்குப்  பங்கை  நியமிப்பான்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கும்.  {Matt  24:51}

 

அப்பொழுது,  பரலோகராஜ்யம்  தங்கள்  தீவட்டிகளைப்  பிடித்துக்கொண்டு,  மணவாளனுக்கு  எதிர்கொண்டுபோகப்  புறப்பட்ட  பத்துக்  கன்னிகைகளுக்கு  ஒப்பாயிருக்கும்.  {Matt  25:1}

 

அவர்களில்  ஐந்துபேர்  புத்தியுள்ளவர்களும்,  ஐந்துபேர்  புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.  {Matt  25:2}

 

புத்தியில்லாதவர்கள்  தங்கள்  தீவட்டிகளை  எடுத்துக்கொண்டுபோனார்கள்,  எண்ணெயையோ  கூடக்  கொண்டுபோகவில்லை.  {Matt  25:3}

 

புத்தியுள்ளவர்கள்  தங்கள்  தீவட்டிகளோடுங்கூடத்  தங்கள்  பாத்திரங்களில்  எண்ணெயையும்  கொண்டுபோனார்கள்.  {Matt  25:4}

 

மணவாளன்  வரத்  தாமதித்தபோது,  அவர்கள்  எல்லாரும்  நித்திரைமயக்கமடைந்து  தூங்கிவிட்டார்கள்.  {Matt  25:5}

 

நடுராத்திரியிலே:  இதோ,  மணவாளன்  வருகிறார்,  அவருக்கு  எதிர்கொண்டுபோகப்  புறப்படுங்கள்  என்கிற  சத்தம்  உண்டாயிற்று.  {Matt  25:6}

 

அப்பொழுது,  அந்தக்  கன்னிகைகள்  எல்லாரும்  எழுந்திருந்து,  தங்கள்  தீவட்டிகளை  ஆயத்தப்படுத்தினார்கள்.  {Matt  25:7}

 

புத்தியில்லாதவர்கள்  புத்தியுள்ளவர்களை  நோக்கி:  உங்கள்  எண்ணெயில்  எங்களுக்குக்  கொஞ்சங்கொடுங்கள்,  எங்கள்  தீவட்டிகள்  அணைந்துபோகிறதே  என்றார்கள்.  {Matt  25:8}

 

புத்தியுள்ளவர்கள்  பிரதியுத்தரமாக:  அப்படியல்ல,  எங்களுக்கும்  உங்களுக்கும்  போதாமலிராதபடி,  நீங்கள்  விற்கிறவர்களிடத்திற்  போய்,  உங்களுக்காக  வாங்கிக்கொள்ளுங்கள்  என்றார்கள்.  {Matt  25:9}

 

அப்படியே  அவர்கள்  வாங்கப்போனபோது  மணவாளன்  வந்துவிட்டார்;  ஆயத்தமாயிருந்தவர்கள்  அவரோடேகூடக்  கலியாண  வீட்டுக்குள்  பிரவேசித்தார்கள்;  கதவும்  அடைக்கப்பட்டது.  {Matt  25:10}

 

பின்பு,  மற்றக்  கன்னிகைகளும்  வந்து:  ஆண்டவரே,  ஆண்டவரே,  எங்களுக்குத்  திறக்கவேண்டும்  என்றார்கள்.  {Matt  25:11}

 

அதற்கு  அவர்:  உங்களை  அறியேன்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  25:12}

 

மனுஷகுமாரன்  வரும்  நாளையாவது  நாழிகையையாவது  நீங்கள்  அறியாதிருக்கிறபடியால்  விழித்திருங்கள்.  {Matt  25:13}

 

அன்றியும்,  பரலோகராஜ்யம்  புறத்தேசத்துக்குப்  பிரயாணமாய்ப்  போகிற  ஒரு  மனுஷன்,  தன்  ஊழியக்காரரை  அழைத்து,  தன்  ஆஸ்திகளை  அவர்கள்  வசமாய்  ஒப்புக்கொடுத்ததுபோல்  இருக்கிறது.  {Matt  25:14}

 

அவனவனுடைய  திறமைக்குத்தக்கதாக,  ஒருவனிடத்தில்  ஐந்து  தாலந்தும்,  ஒருவனிடத்தில்  இரண்டு  தாலந்தும்,  ஒருவனிடத்தில்  ஒரு  தாலந்துமாகக்  கொடுத்து,  உடனே  பிரயாணப்பட்டுப்  போனான்.  {Matt  25:15}

 

ஐந்து  தாலந்தை  வாங்கினவன்  போய்,  அவைகளைக்கொண்டு  வியாபாரம்  பண்ணி,  வேறு  ஐந்து  தாலந்தைச்  சம்பாதித்தான்.  {Matt  25:16}

 

அப்படியே  இரண்டு  தாலந்தை  வாங்கினவனும்,  வேறு  இரண்டு  தாலந்தைச்  சம்பாதித்தான்.  {Matt  25:17}

 

ஒரு  தாலந்தை  வாங்கினவனோ,  போய்,  நிலத்தைத்  தோண்டி,  தன்  எஜமானுடைய  பணத்தைப்  புதைத்துவைத்தான்.  {Matt  25:18}

 

வெகுகாலமானபின்பு  அந்த  ஊழியக்காரருடைய  எஜமான்  திரும்பிவந்து,  அவர்களிடத்தில்  கணக்குக்  கேட்டான்.  {Matt  25:19}

 

அப்பொழுது,  ஐந்து  தாலந்தை  வாங்கினவன்,  வேறு  ஐந்து  தாலந்தைக்  கொண்டுவந்து:  ஆண்டவனே,  ஐந்து  தாலந்தை  என்னிடத்தில்  ஒப்புவித்தீரே;  அவைகளைக்கொண்டு,  இதோ,  வேறு  ஐந்து  தாலந்தைச்  சம்பாதித்தேன்  என்றான்.  {Matt  25:20}

 

அவனுடைய  எஜமான்  அவனை  நோக்கி:  நல்லது,  உத்தமமும்  உண்மையுமுள்ள  ஊழியக்காரனே,  கொஞ்சத்திலே  உண்மையாயிருந்தாய்,  அநேகத்தின்மேல்  உன்னை  அதிகாரியாக  வைப்பேன்,  உன்  எஜமானுடைய  சந்தோஷத்திற்குள்  பிரவேசி  என்றான்.  {Matt  25:21}

 

இரண்டு  தாலந்தை  வாங்கினவனும்  வந்து:  ஆண்டவனே,  இரண்டு  தாலந்தை  என்னிடத்தில்  ஒப்புவித்தீரே;  அவைகளைக்கொண்டு,  இதோ,  வேறு  இரண்டு  தாலந்தைச்  சம்பாதித்தேன்  என்றான்.  {Matt  25:22}

 

அவனுடைய  எஜமான்  அவனை  நோக்கி:  நல்லது,  உத்தமமும்  உண்மையுமுள்ள  ஊழியக்காரனே,  கொஞ்சத்திலே  உண்மையாயிருந்தாய்,  அநேகத்தின்மேல்  உன்னை  அதிகாரியாக  வைப்பேன்;  உன்  எஜமானுடைய  சந்தோஷத்திற்குள்  பிரவேசி  என்றான்.  {Matt  25:23}

 

ஒரு  தாலந்தை  வாங்கினவன்  வந்து:  ஆண்டவனே,  நீர்  விதைக்காத  இடத்தில்  அறுக்கிறவரும்,  தெளிக்காத  இடத்தில்  சேர்க்கிறவருமான  கடினமுள்ள  மனுஷன்  என்று  அறிவேன்.  {Matt  25:24}

 

ஆகையால்,  நான்  பயந்து,  போய்,  உமது  தாலந்தை  நிலத்தில்  புதைத்து  வைத்தேன்;  இதோ,  உம்முடையதை  வாங்கிக்கொள்ளும்  என்றான்.  {Matt  25:25}

 

அவனுடைய  எஜமான்  பிரதியுத்தரமாக:  பொல்லாதவனும்  சோம்பனுமான  ஊழியக்காரனே,  நான்  விதைக்காத  இடத்தில்  அறுக்கிறவனென்றும்,  தெளிக்காத  இடத்தில்  சேர்க்கிறவனென்றும்  அறிந்திருந்தாயே.  {Matt  25:26}

 

அப்படியானால்,  நீ  என்  பணத்தைக்  காசுக்காரர்  வசத்தில்  போட்டுவைக்க  வேண்டியதாயிருந்தது;  அப்பொழுது,  நான்  வந்து  என்னுடையதை  வட்டியோடே  வாங்கிக்கொள்வேனே,  என்று  சொல்லி,  {Matt  25:27}

 

அவனிடத்திலிருக்கிற  தாலந்தை  எடுத்து,  பத்துத்  தாலந்துள்ளவனுக்குக்  கொடுங்கள்.  {Matt  25:28}

 

உள்ளவனெவனோ  அவனுக்குக்  கொடுக்கப்படும்,  பரிபூரணமும்  அடைவான்;  இல்லாதவனிடத்திலிருந்து  உள்ளதும்  எடுத்துக்கொள்ளப்படும்.  {Matt  25:29}

 

பிரயோஜனமற்ற  ஊழியக்காரனாகிய  இவனைப்  புறம்பான  இருளிலே  தள்ளிப்போடுங்கள்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கும்  என்றான்.  {Matt  25:30}

 

அன்றியும்  மனுஷகுமாரன்  தமது  மகிமைபொருந்தினவராய்ச்  சகல  பரிசுத்த  தூதரோடுங்கூட  வரும்போது,  தமது  மகிமையுள்ள  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருப்பார்.  {Matt  25:31}

 

அப்பொழுது,  சகல  ஜனங்களும்  அவருக்கு  முன்பாகச்  சேர்க்கப்படுவார்கள்.  மேய்ப்பனானவன்  செம்மறியாடுகளையும்  வெள்ளாடுகளையும்  வெவ்வேறாகப்  பிரிக்கிறதுபோல  அவர்களை  அவர்  பிரித்து,  {Matt  25:32}

 

செம்மறியாடுகளைத்  தமது  வலதுபக்கத்திலும்,  வெள்ளாடுகளைத்  தமது  இடதுபக்கத்திலும்  நிறுத்துவார்.  {Matt  25:33}

 

அப்பொழுது,  ராஜா  தமது  வலது  பக்கத்தில்  நிற்பவர்களைப்  பார்த்து:  வாருங்கள்  என்  பிதாவினால்  ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,  உலகம்  உண்டானது  முதல்  உங்களுக்காக  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற  ராஜ்யத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.  {Matt  25:34}

 

பசியாயிருந்தேன்,  எனக்குப்  போஜனங்கொடுத்தீர்கள்;  தாகமாயிருந்தேன்,  என்  தாகத்தைத்  தீர்த்தீர்கள்;  அந்நியனாயிருந்தேன்,  என்னைச்  சேர்த்துக்கொண்டீர்கள்;  {Matt  25:35}

 

வஸ்திரமில்லாதிருந்தேன்,  எனக்கு  வஸ்திரங்கொடுத்தீர்கள்;  வியாதியாயிருந்தேன்,  என்னை  விசாரிக்க  வந்தீர்கள்;  காவலிலிருந்தேன்,  என்னைப்  பார்க்கவந்தீர்கள்  என்பார்.  {Matt  25:36}

 

அப்பொழுது,  நீதிமான்கள்  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  ஆண்டவரே,  நாங்கள்  எப்பொழுது  உம்மைப்  பசியுள்ளவராகக்  கண்டு  உமக்குப்  போஜனங்கொடுத்தோம்?  எப்பொழுது  உம்மைத்  தாகமுள்ளவராகக்கண்டு  உம்முடைய  தாகத்தைத்  தீர்த்தோம்?  {Matt  25:37}

 

எப்பொழுது  உம்மை  அந்நியராகக்கண்டு  உம்மைச்  சேர்த்துக்கொண்டோம்?  எப்பொழுது  உம்மை  வஸ்திரமில்லாதவராகக்  கண்டு  உமக்கு  வஸ்திரங்கொடுத்தோம்?  {Matt  25:38}

 

எப்பொழுது  உம்மை  வியாதியுள்ளவராகவும்  காவலிலிருக்கிறவராகவும்  கண்டு,  உம்மிடத்தில்  வந்தோம்  என்பார்கள்.  {Matt  25:39}

 

அதற்கு  ராஜா  பிரதியுத்தரமாக:  மிகவும்  சிறியவராகிய  என்  சகோதரரான  இவர்களில்  ஒருவனுக்கு  நீங்கள்  எதைச்  செய்தீர்களோ,  அதை  எனக்கே  செய்தீர்கள்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்பார்.  {Matt  25:40}

 

அப்பொழுது,  இடதுபக்கத்தில்  நிற்பவர்களைப்  பார்த்து  அவர்:  சபிக்கப்பட்டவர்களே,  என்னைவிட்டு,  பிசாசுக்காகவும்  அவன்  தூதர்களுக்காகவும்  ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற  நித்திய  அக்கினியிலே  போங்கள்.  {Matt  25:41}

 

பசியாயிருந்தேன்,  நீங்கள்  எனக்குப்  போஜனங்கொடுக்கவில்லை;  தாகமாயிருந்தேன்,  நீங்கள்  என்  தாகத்தைத்  தீர்க்கவில்லை;  {Matt  25:42}

 

அந்நியனாயிருந்தேன்,  நீங்கள்  என்னைச்  சேர்த்துக்கொள்ளவில்லை;  வஸ்திரமில்லாதிருந்தேன்,  நீங்கள்  எனக்கு  வஸ்திரங்கொடுக்கவில்லை;  வியாதியுள்ளவனாயும்  காவலிலடைக்கப்பட்டவனாயும்  இருந்தேன்,  நீங்கள்  என்னை  விசாரிக்க  வரவில்லையென்பார்.  {Matt  25:43}

 

அப்பொழுது,  அவர்களும்  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  ஆண்டவரே,  உம்மைப்  பசியுள்ளவராகவும்,  தாகமுள்ளவராகவும்,  அந்நியராகவும்,  வஸ்திரமில்லாதவராகவும்,  வியாதிப்பட்டவராகவும்,  காவலிலடைக்கப்பட்டவராகவும்  நாங்கள்  எப்பொழுது  கண்டு,  உமக்கு  உதவி  செய்யாதிருந்தோம்  என்பார்கள்.  {Matt  25:44}

 

அப்பொழுது  அவர்  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  மிகவும்  சிறியவர்களாகிய  இவர்களில்  ஒருவனுக்கு  நீங்கள்  எதைச்  செய்யாதிருந்தீர்களோ,  அதை  எனக்கே  செய்யாதிருந்தீர்கள்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்பார்.  {Matt  25:45}

 

அந்தப்படி,  இவர்கள்  நித்திய  ஆக்கினையை  அடையவும்,  நீதிமான்களோ  நித்திய  ஜீவனை  அடையவும்  போவார்கள்  என்றார்.  {Matt  25:46}

 

இயேசு<Jesus>  இந்த  வசனங்களையெல்லாம்  சொல்லி  முடித்தபின்பு,  அவர்  தம்முடைய  சீஷரை  நோக்கி:  {Matt  26:1}

 

இரண்டுநாளைக்குப்பின்பு  பஸ்காபண்டிகை  வருமென்று  அறிவீர்கள்;  அப்பொழுது,  மனுஷகுமாரன்  சிலுவையில்  அறையப்படுவதற்கு  ஒப்புக்கொடுக்கப்படுவார்  என்றார்.  {Matt  26:2}

 

அப்பொழுது,  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  ஜனத்தின்  மூப்பரும்,  காய்பா<Caiaphas>  என்னப்பட்ட  பிரதான  ஆசாரியனுடைய  அரமனையிலே  கூடிவந்து,  {Matt  26:3}

 

இயேசுவைத்<Jesus>  தந்திரமாய்ப்  பிடித்துக்  கொலைசெய்யும்படி  ஆலோசனைபண்ணினார்கள்.  {Matt  26:4}

 

ஆகிலும்  ஜனங்களுக்குள்ளே  கலகமுண்டாகாதபடிக்குப்  பண்டிகையிலே  அப்படிச்  செய்யலாகாது  என்றார்கள்.  {Matt  26:5}

 

இயேசு<Jesus>  பெத்தானியாவில்<Bethany>  குஷ்டரோகியாயிருந்த  சீமோன்<Simon>  வீட்டில்  இருக்கையில்,  {Matt  26:6}

 

ஒரு  ஸ்திரீ  விலையேறப்பெற்ற  பரிமளதைலமுள்ள  வெள்ளைக்கல்பரணியைக்  கொண்டுவந்து,  அவர்  போஜனபந்தியிலிருக்கும்போது,  அந்தத்  தைலத்தை  அவர்  சிரசின்மேல்  ஊற்றினாள்.  {Matt  26:7}

 

அவருடைய  சீஷர்கள்  அதைக்  கண்டு  விசனமடைந்து:  இந்த  வீண்செலவு  என்னத்திற்கு?  {Matt  26:8}

 

இந்தத்  தைலத்தை  உயர்ந்த  விலைக்கு  விற்று,  தரித்திரருக்குக்  கொடுக்கலாமே  என்றார்கள்.  {Matt  26:9}

 

இயேசு<Jesus>  அதை  அறிந்து,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இந்த  ஸ்திரீயை  ஏன்  தொந்தரவுபடுத்துகிறீர்கள்?  என்னிடத்தில்  நற்கிரியையைச்  செய்திருக்கிறாள்.  {Matt  26:10}

 

தரித்திரர்  எப்போதும்  உங்களிடத்தில்  இருக்கிறார்கள்;  நானோ  எப்போதும்  உங்களிடத்தில்  இரேன்.  {Matt  26:11}

 

இவள்  இந்தத்  தைலத்தை  என்  சரீரத்தின்மேல்  ஊற்றினது  என்னை  அடக்கம்  பண்ணுவதற்கு  எத்தனமான  செய்கையாயிருக்கிறது.  {Matt  26:12}

 

இந்தச்  சுவிசேஷம்  உலகத்தில்  எங்கெங்கே  பிரசங்கிக்கப்படுமோ  அங்கங்கே  இவளை  நினைப்பதற்காக  இவள்  செய்ததும்  சொல்லப்படும்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  26:13}

 

அப்பொழுது,  பன்னிருவரில்  ஒருவனாகிய  யூதாஸ்காரியோத்து<Judas  Iscariot>  என்பவன்  பிரதான  ஆசாரியரிடத்திற்குப்  போய்:  {Matt  26:14}

 

நான்  அவரை  உங்களுக்குக்  காட்டிக்கொடுக்கிறேன்,  நீங்கள்  எனக்கு  என்ன  கொடுக்கிறீர்கள்  என்றான்.  அவர்கள்  அவனுக்கு  முப்பது  வெள்ளிக்காசைக்  கொடுக்க  உடன்பட்டார்கள்.  {Matt  26:15}

 

அதுமுதல்  அவன்  அவரைக்  காட்டிக்கொடுப்பதற்குச்  சமயம்  பார்த்துக்கொண்டிருந்தான்.  {Matt  26:16}

 

புளிப்பில்லாத  அப்பப்பண்டிகையின்  முதல்நாளிலே,  சீஷர்கள்  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து:  பஸ்காவைப்  புசிப்பதற்கு  நாங்கள்  எங்கே  உமக்கு  ஆயத்தம்பண்ணச்  சித்தமாயிருக்கிறீர்  என்று  கேட்டார்கள்.  {Matt  26:17}

 

அதற்கு  அவர்:  நீங்கள்  நகரத்திலே  இன்னானிடத்திற்குப்  போய்:  என்  வேளை  சமீபமாயிருக்கிறது,  உன்  வீட்டிலே  என்  சீஷரோடேகூடப்  பஸ்காவை  ஆசரிப்பேன்  என்று  போதகர்  சொல்லுகிறார்  என்று  அவனுக்குச்  சொல்லுங்கள்  என்றார்.  {Matt  26:18}

 

இயேசு<Jesus>  கற்பித்தபடி  சீஷர்கள்  போய்,  பஸ்காவை  ஆயத்தம்பண்ணினார்கள்.  {Matt  26:19}

 

சாயங்காலமானபோது,  பன்னிருவரோடுங்கூட  அவர்  பந்தியிருந்தார்.  {Matt  26:20}

 

அவர்கள்  போஜனம்பண்ணுகையில்,  அவர்:  உங்களிலொருவன்  என்னைக்  காட்டிக்கொடுப்பான்  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  26:21}

 

அப்பொழுது,  அவர்கள்  மிகவும்  துக்கமடைந்து,  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  நானோ,  நானோ?  என்று  ஒவ்வொருவராய்க்  கேட்கத்தொடங்கினார்கள்.  {Matt  26:22}

 

அவர்  பிரதியுத்தரமாக:  என்னோடேகூடத்  தாலத்தில்  கையிடுகிறவனே  என்னைக்  காட்டிக்கொடுப்பான்.  {Matt  26:23}

 

மனுஷகுமாரன்  தம்மைக்குறித்து  எழுதியிருக்கிறபடியே  போகிறார்;  ஆகிலும்,  எந்த  மனுஷனால்  மனுஷகுமாரன்  காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ,  அந்த  மனுஷனுக்கு  ஐயோ;  அந்த  மனுஷன்  பிறவாதிருந்தானானால்  அவனுக்கு  நலமாயிருக்கும்  என்றார்.  {Matt  26:24}

 

அவரைக்  காட்டிக்கொடுத்த  யூதாசும்<Judas>  அவரை  நோக்கி:  ரபீ<Rabbi//Master>,  நானோ?  என்றான்;  அதற்கு  அவர்:  நீ  சொன்னபடிதான்  என்றார்.  {Matt  26:25}

 

அவர்கள்  போஜனம்பண்ணுகையில்,  இயேசு<Jesus>  அப்பத்தை  எடுத்து,  ஆசீர்வதித்து,  அதைப்  பிட்டு,  சீஷர்களுக்குக்  கொடுத்து:  நீங்கள்  வாங்கிப்  புசியுங்கள்,  இது  என்னுடைய  சரீரமாயிருக்கிறது  என்றார்.  {Matt  26:26}

 

பின்பு,  பாத்திரத்தையும்  எடுத்து,  ஸ்தோத்திரம்பண்ணி,  அவர்களுக்குக்  கொடுத்து:  நீங்கள்  எல்லாரும்  இதிலே  பானம்பண்ணுங்கள்;  {Matt  26:27}

 

இது  பாவமன்னிப்புண்டாகும்படி  அநேகருக்காகச்  சிந்தப்படுகிற  புது  உடன்படிக்கைக்குரிய  என்னுடைய  இரத்தமாயிருக்கிறது.  {Matt  26:28}

 

இதுமுதல்  இந்தத்  திராட்சப்பழரசத்தை  நவமானதாய்  உங்களோடேகூட  என்  பிதாவின்  ராஜ்யத்திலே  நான்  பானம்பண்ணும்  நாள்வரைக்கும்  இதைப்  பானம்  பண்ணுவதில்லையென்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  26:29}

 

அவர்கள்  ஸ்தோத்திரப்பாட்டைப்  பாடினபின்பு,  ஒலிவமலைக்குப்<mount  of  Olives>  புறப்பட்டுப்போனார்கள்.  {Matt  26:30}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  மேய்ப்பனை  வெட்டுவேன்,  மந்தையின்  ஆடுகள்  சிதறடிக்கப்படும்  என்று  எழுதியிருக்கிறபடி,  இந்த  இராத்திரியிலே  நீங்கள்  எல்லாரும்  என்னிமித்தம்  இடறலடைவீர்கள்.  {Matt  26:31}

 

ஆகிலும்  நான்  உயிர்த்தெழுந்த  பின்பு,  உங்களுக்கு  முன்னே  கலிலேயாவுக்குப்<Galilee>  போவேன்  என்றார்.  {Matt  26:32}

 

பேதுரு<Peter>  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  உமதுநிமித்தம்  எல்லாரும்  இடறலடைந்தாலும்,  நான்  ஒருக்காலும்  இடறலடையேன்  என்றான்.  {Matt  26:33}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  இந்த  இராத்திரியிலே  சேவல்  கூவுகிறதற்கு  முன்னே,  நீ  என்னை  மூன்றுதரம்  மறுதலிப்பாய்  என்று,  மெய்யாகவே  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  26:34}

 

அதற்குப்  பேதுரு<Peter>:  நான்  உம்மோடே  மரிக்கவேண்டியதாயிருந்தாலும்  உம்மை  மறுதலிக்கமாட்டேன்  என்றான்;  சீஷர்கள்  எல்லாரும்  அப்படியே  சொன்னார்கள்.  {Matt  26:35}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  அவர்களோடே  கெத்செமனே<Gethsemane>  என்னப்பட்ட  இடத்திற்கு  வந்து,  சீஷர்களை  நோக்கி:  நான்  அங்கே  போய்  ஜெபம்பண்ணுமளவும்  நீங்கள்  இங்கே  உட்கார்ந்திருங்கள்  என்று  சொல்லி;  {Matt  26:36}

 

பேதுருவையும்<Peter>  செபெதேயுவின்<Zebedee>  குமாரர்  இருவரையும்  கூட்டிக்கொண்டுபோய்,  துக்கமடையவும்  வியாகுலப்படவும்  தொடங்கினார்.  {Matt  26:37}

 

அப்பொழுது,  அவர்:  என்  ஆத்துமா  மரணத்துக்கேதுவான  துக்கங்கொண்டிருக்கிறது;  நீங்கள்  இங்கே  தங்கி,  என்னோடேகூட  விழித்திருங்கள்  என்று  சொல்லி,  {Matt  26:38}

 

சற்று  அப்புறம்போய்,  முகங்குப்புற  விழுந்து:  என்  பிதாவே,  இந்தப்  பாத்திரம்  என்னைவிட்டு  நீங்கக்கூடுமானால்  நீங்கும்படி  செய்யும்;  ஆகிலும்  என்  சித்தத்தின்படியல்ல,  உம்முடைய  சித்தத்தின்படியே  ஆகக்கடவது  என்று  ஜெபம்பண்ணினார்.  {Matt  26:39}

 

பின்பு,  அவர்  சீஷர்களிடத்தில்  வந்து,  அவர்கள்  நித்திரைபண்ணுகிறதைக்  கண்டு,  பேதுருவை<Peter>  நோக்கி:  நீங்கள்  ஒரு  மணி  நேரமாவது  என்னோடேகூட  விழித்திருக்கக்கூடாதா?  {Matt  26:40}

 

நீங்கள்  சோதனைக்குட்படாதபடிக்கு  விழித்திருந்து  ஜெபம்பண்ணுங்கள்;  ஆவி  உற்சாகமுள்ளதுதான்,  மாம்சமோ  பலவீனமுள்ளது  என்றார்.  {Matt  26:41}

 

அவர்  மறுபடியும்  இரண்டாந்தரம்  போய்:  என்  பிதாவே,  இந்தப்  பாத்திரத்தில்  நான்  பானம்பண்ணினாலொழிய  இது  என்னைவிட்டு  நீங்கக்கூடாதாகில்,  உம்முடைய  சித்தத்தின்படி  ஆகக்கடவது  என்று  ஜெபம்பண்ணினார்.  {Matt  26:42}

 

அவர்  திரும்ப  வந்தபோது,  அவர்கள்  மறுபடியும்  நித்திரைபண்ணுகிறதைக்  கண்டார்;  அவர்களுடைய  கண்கள்  மிகுந்த  நித்திரைமயக்கம்  அடைந்திருந்தது.  {Matt  26:43}

 

அவர்  மறுபடியும்  அவர்களை  விட்டுப்போய்,  மூன்றாந்தரமும்  அந்த  வார்த்தைகளையே  சொல்லி  ஜெபம்பண்ணினார்.  {Matt  26:44}

 

பின்பு  அவர்  தம்முடைய  சீஷர்களிடத்தில்  வந்து:  இனி  நித்திரைபண்ணி  இளைப்பாறுங்கள்;  இதோ,  மனுஷகுமாரன்  பாவிகளுடைய  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படுகிற  வேளை  வந்தது.  {Matt  26:45}

 

என்னைக்  காட்டிக்கொடுக்கிறவன்,  இதோ,  வந்துவிட்டான்,  எழுந்திருங்கள்,  போவோம்  என்றார்.  {Matt  26:46}

 

அவர்  இப்படிப்  பேசுகையில்,  பன்னிருவரில்  ஒருவனாகிய  யூதாஸ்<Judas>  வந்தான்;  அவனோடேகூடப்  பிரதான  ஆசாரியரும்  ஜனத்தின்  மூப்பரும்  அனுப்பின  திரளான  ஜனங்கள்  பட்டயங்களையும்  தடிகளையும்  பிடித்துக்கொண்டு  வந்தார்கள்.  {Matt  26:47}

 

அவரைக்  காட்டிக்கொடுக்கிறவன்:  நான்  எவனை  முத்தஞ்செய்வேனோ  அவன்தான்,  அவனைப்  பிடித்துக்கொள்ளுங்கள்  என்று  அவர்களுக்கு  அடையாளம்  சொல்லியிருந்தான்.  {Matt  26:48}

 

உடனே,  அவன்  இயேசுவினிடத்தில்<Jesus>  வந்து:  ரபீ<Rabbi//Master>,  வாழ்க  என்று  சொல்லி,  அவரை  முத்தஞ்செய்தான்.  {Matt  26:49}

 

இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  சிநேகிதனே,  என்னத்திற்காக  வந்திருக்கிறாய்  என்றார்.  அப்பொழுது,  அவர்கள்  கிட்டவந்து,  இயேசுவின்மேல்<Jesus>  கைபோட்டு,  அவரைப்  பிடித்தார்கள்.  {Matt  26:50}

 

அப்பொழுது  இயேசுவோடிருந்தவர்களில்<Jesus>  ஒருவன்  கை  நீட்டித்  தன்  பட்டயத்தை  உருவி,  பிரதான  ஆசாரியனுடைய  வேலைக்காரனைக்  காதற  வெட்டினான்.  {Matt  26:51}

 

அப்பொழுது,  இயேசு<Jesus>  அவனை  நோக்கி:  உன்  பட்டயத்தைத்  திரும்ப  அதின்  உறையிலே  போடு;  பட்டயத்தை  எடுக்கிற  யாவரும்  பட்டயத்தால்  மடிந்து  போவார்கள்.  {Matt  26:52}

 

நான்  இப்பொழுது  என்  பிதாவை  வேண்டிக்கொண்டால்,  அவர்  பன்னிரண்டு  லேகியோனுக்கு  அதிகமான  தூதரை  என்னிடத்தில்  அனுப்பமாட்டாரென்று  நினைக்கிறாயா?  {Matt  26:53}

 

அப்படிச்  செய்வேனானால்,  இவ்விதமாய்ச்  சம்பவிக்கவேண்டும்  என்கிற  வேதவாக்கியங்கள்  எப்படி  நிறைவேறும்  என்றார்.  {Matt  26:54}

 

அந்த  வேளையிலே  இயேசு<Jesus>  ஜனங்களை  நோக்கி:  கள்ளனைப்  பிடிக்கப்  புறப்படுகிறதுபோல,  நீங்கள்  பட்டயங்களையும்  தடிகளையும்  எடுத்துக்கொண்டு  என்னைப்  பிடிக்கவந்தீர்கள்;  நான்  தினந்தோறும்  உங்கள்  நடுவிலே  உட்கார்ந்து  தேவாலயத்தில்  உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்;  அப்பொழுது,  நீங்கள்  என்னைப்  பிடிக்கவில்லையே.  {Matt  26:55}

 

ஆகிலும்  தீர்க்கதரிசிகள்  எழுதியிருக்கிற  வசனங்கள்  நிறைவேறும்படி  இவைகளெல்லாம்  சம்பவிக்கிறது  என்றார்.  அப்பொழுது,  சீஷர்களெல்லாரும்  அவரைவிட்டு  ஓடிப்போனார்கள்.  {Matt  26:56}

 

இயேசுவைப்<Jesus>  பிடித்தவர்கள்  அவரைப்  பிரதான  ஆசாரியனாகிய  காய்பாவினிடத்திற்குக்<Caiaphas>  கொண்டுபோனார்கள்;  அங்கே  வேதபாரகரும்  மூப்பரும்  கூடிவந்திருந்தார்கள்.  {Matt  26:57}

 

பேதுரு<Peter>,  தூரத்திலே  அவருக்குப்  பின்சென்று,  பிரதான  ஆசாரியனுடைய  அரமனைவரைக்கும்  வந்து,  உள்ளே  பிரவேசித்து,  முடிவைப்  பார்க்கும்படி  சேவகரோடே  உட்கார்ந்தான்.  {Matt  26:58}

 

பிரதான  ஆசாரியரும்  மூப்பரும்  சங்கத்தார்  யாவரும்  இயேசுவைக்<Jesus>  கொலைசெய்யும்படி  அவருக்கு  விரோதமாய்ப்  பொய்ச்சாட்சி  தேடினார்கள்;  {Matt  26:59}

 

ஒருவரும்  அகப்படவில்லை;  அநேகர்  வந்து  பொய்ச்சாட்சி  சொல்லியும்  அவர்கள்  சாட்சி  ஒவ்வவில்லை;  கடைசியிலே  இரண்டு  பொய்ச்சாட்சிகள்  வந்து:  {Matt  26:60}

 

தேவனுடைய  ஆலயத்தை  இடித்துப்போடவும்,  மூன்றுநாளைக்குள்ளே  அதைக்  கட்டவும்  என்னாலே  ஆகும்  என்று  இவன்  சொன்னான்  என்றார்கள்.  {Matt  26:61}

 

அப்பொழுது,  பிரதான  ஆசாரியன்  எழுந்திருந்து,  அவரை  நோக்கி:  இவர்கள்  உனக்கு  விரோதமாய்ச்  சாட்சிசொல்லுகிறதைக்குறித்து  நீ  ஒன்றும்  சொல்லுகிறதில்லையா  என்றான்.  {Matt  26:62}

 

இயேசுவோ<Jesus>  பேசாமலிருந்தார்.  அப்பொழுது,  பிரதான  ஆசாரியன்  அவரை  நோக்கி:  நீ  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்துதானா<Christ>?  அதை  எங்களுக்குச்  சொல்லும்படி  ஜீவனுள்ள  தேவன்பேரில்  உன்னை  ஆணையிட்டுக்  கேட்கிறேன்  என்றான்.  {Matt  26:63}

 

அதற்கு  இயேசு<Jesus>:  நீர்  சொன்னபடிதான்;  அன்றியும்,  மனுஷகுமாரன்  சர்வவல்லவருடைய  வலதுபாரிசத்தில்  வீற்றிருப்பதையும்  வானத்தின்  மேகங்கள்மேல்  வருவதையும்  இதுமுதல்  காண்பீர்களென்று,  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  {Matt  26:64}

 

அப்பொழுது  பிரதான  ஆசாரியன்  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு:  இவன்  தேவதூஷணம்  சொன்னான்;  இனிச்  சாட்சிகள்  நமக்கு  வேண்டியதென்ன?  இதோ,  இவன்  தூஷணத்தை  இப்பொழுது  கேட்டீர்களே.  {Matt  26:65}

 

உங்களுக்கு  என்னமாய்த்  தோன்றுகிறது  என்று  கேட்டான்.  அதற்கு  அவர்கள்:  மரணத்துக்குப்  பாத்திரனாயிருக்கிறான்  என்றார்கள்.  {Matt  26:66}

 

அப்பொழுது,  அவருடைய  முகத்தில்  துப்பி,  அவரைக்  குட்டினார்கள்;  சிலர்  அவரைக்  கன்னத்தில்  அறைந்து:  {Matt  26:67}

 

கிறிஸ்துவே<Christ>,  உம்மை  அடித்தவன்  யார்?  அதை  ஞானதிருஷ்டியினால்  எங்களுக்குச்  சொல்லும்  என்றார்கள்.  {Matt  26:68}

 

அத்தருணத்தில்  பேதுரு<Peter>  வெளியே  வந்து  அரமனை  முற்றத்தில்  உட்கார்ந்திருந்தான்.  அப்பொழுது,  வேலைக்காரி  ஒருத்தி  அவனிடத்தில்  வந்து:  நீயும்  கலிலேயனாகிய<Galilee>  இயேசுவோடேகூட<Jesus>  இருந்தாய்  என்றாள்.  {Matt  26:69}

 

அதற்கு  அவன்:  நீ  சொல்லுகிறது  எனக்குத்  தெரியாது  என்று,  எல்லாருக்கும்  முன்பாக  மறுதலித்தான்.  {Matt  26:70}

 

அவன்,  வாசல்  மண்டபத்திற்குப்  போனபொழுது  வேறொருத்தி  அவனைக்  கண்டு:  இவனும்  நசரேயனாகிய<Nazarene>  இயேசுவோடேகூட<Jesus>  இருந்தான்  என்று  அங்கே  இருந்தவர்களுக்குச்  சொன்னாள்.  {Matt  26:71}

 

அவனோ:  அந்த  மனுஷனை  நான்  அறியேன்  என்று  ஆணையிட்டு,  மறுபடியும்  மறுதலித்தான்.  {Matt  26:72}

 

சற்றுநேரத்துக்குப்பின்பு  அங்கே  நின்றவர்கள்  பேதுருவினிடத்தில்<Peter>  வந்து:  மெய்யாகவே  நீயும்  அவர்களில்  ஒருவன்;  உன்  பேச்சு  உன்னை  வெளிப்படுத்துகிறது  என்றார்கள்.  {Matt  26:73}

 

அப்பொழுது  அவன்:  அந்த  மனுஷனை  அறியேன்  என்று  சொல்லி,  சபிக்கவும்  சத்தியம்பண்ணவும்  தொடங்கினான்.  உடனே  சேவல்  கூவிற்று.  {Matt  26:74}

 

அப்பொழுது  பேதுரு<Peter>:  சேவல்  கூவுகிறதற்குமுன்னே  நீ  என்னை  மூன்றுதரம்  மறுதலிப்பாய்  என்று  இயேசு<Jesus>  தன்னிடத்தில்  சொன்ன  வசனத்தை  நினைத்துக்கொண்டு,  வெளியே  போய்,  மனங்கசந்து  அழுதான்.  {Matt  26:75}

 

விடியற்காலமானபோது,  சகல  பிரதான  ஆசாரியரும்  ஜனத்தின்  மூப்பரும்,  இயேசுவைக்<Jesus>  கொலைசெய்யும்படி,  அவருக்கு  விரோதமாக  ஆலோசனைபண்ணி,  {Matt  27:1}

 

அவரைக்  கட்டி,  கொண்டுபோய்,  தேசாதிபதியாகிய  பொந்தியுபிலாத்துவினிடத்தில்<Pontius  Pilate>  ஒப்புக்கொடுத்தார்கள்.  {Matt  27:2}

 

அப்பொழுது,  அவரைக்  காட்டிக்கொடுத்த  யூதாஸ்<Judas>,  அவர்  மரணாக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்பட்டதைக்  கண்டு,  மனஸ்தாபப்பட்டு,  அந்த  முப்பது  வெள்ளிக்காசைப்  பிரதான  ஆசாரியரிடத்திற்கும்  மூப்பரிடத்திற்கும்  திரும்பக்  கொண்டுவந்து:  {Matt  27:3}

 

குற்றமில்லாத  இரத்தத்தை  நான்  காட்டிக்கொடுத்ததினால்  பாவஞ்செய்தேன்  என்றான்.  அதற்கு  அவர்கள்:  எங்களுக்கென்ன,  அது  உன்பாடு  என்றார்கள்.  {Matt  27:4}

 

அப்பொழுது,  அவன்  அந்த  வெள்ளிக்காசைத்  தேவாலயத்திலே  எறிந்துவிட்டு,  புறப்பட்டுப்போய்,  நான்றுகொண்டு  செத்தான்.  {Matt  27:5}

 

பிரதான  ஆசாரியர்  அந்த  வெள்ளிக்காசை  எடுத்து:  இது  இரத்தக்கிரயமானதால்,  காணிக்கைப்  பெட்டியிலே  இதைப்  போடலாகாதென்று  சொல்லி,  {Matt  27:6}

 

ஆலோசனைபண்ணினபின்பு,  அந்நியரை  அடக்கம்பண்ணுவதற்குக்  குயவனுடைய  நிலத்தை  அதினாலே  கொண்டார்கள்.  {Matt  27:7}

 

இதினிமித்தம்  அந்த  நிலம்  இந்நாள்வரைக்கும்  இரத்தநிலம்<The  field  of  blood>  என்னப்படுகிறது.  {Matt  27:8}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரால்  மதிக்கப்பட்டவருக்குக்  கிரயமாகிய  முப்பது  வெள்ளிக்காசை  அவர்கள்  எடுத்து,  {Matt  27:9}

 

கர்த்தர்  எனக்குக்  கற்பித்தபடி  குயவனுடைய  நிலத்திற்காக  அதைக்  கொடுத்தார்கள்  என்று  எரேமியா<Jeremy>  தீர்க்கதரிசியால்  உரைக்கப்பட்டது  அப்பொழுது  நிறைவேறிற்று.  {Matt  27:10}

 

இயேசு<Jesus>  தேசாதிபதிக்கு  முன்பாக  நின்றார்;  தேசாதிபதி  அவரை  நோக்கி:  நீ  யூதருடைய  ராஜாவா<King  of  the  Jews>  என்று  கேட்டான்.  அதற்கு  இயேசு<Jesus>:  நீர்  சொல்லுகிறபடிதான்  என்றார்.  {Matt  27:11}

 

பிரதான  ஆசாரியரும்  மூப்பரும்  அவர்மேல்  குற்றஞ்சாட்டுகையில்,  அவர்  மாறுத்தரம்  ஒன்றும்  சொல்லவில்லை.  {Matt  27:12}

 

அப்பொழுது,  பிலாத்து<Pilate>  அவரை  நோக்கி:  இவர்கள்  உன்மேல்  எத்தனையோ  குற்றங்களைச்  சாட்டுகிறார்களே,  நீ  அவைகளைக்  கேட்கவில்லையா  என்றான்.  {Matt  27:13}

 

அவரோ  ஒரு  வார்த்தையும்  மாறுத்தரமாகச்  சொல்லவில்லை;  அதனால்  தேசாதிபதி  மிகவும்  ஆச்சரியப்பட்டான்.  {Matt  27:14}

 

காவல்பண்ணப்பட்டவர்களில்  எவனை  விடுதலையாக்கவேண்டுமென்று  ஜனங்கள்  கேட்டுக்கொள்வார்களோ,  அவனை  அவர்களுக்காக  விடுதலையாக்குவது  பண்டிகைதோறும்  தேசாதிபதிக்கு  வழக்கமாயிருந்தது.  {Matt  27:15}

 

அப்பொழுது  காவல்பண்ணப்பட்டவர்களில்  பரபாஸ்<Barabbas>  என்னப்பட்ட  பேர்போன  ஒருவன்  இருந்தான்.  {Matt  27:16}

 

பொறாமையினாலே  அவரை  ஒப்புக்கொடுத்தார்கள்  என்று  பிலாத்து<Pilate>  அறிந்து,  {Matt  27:17}

 

அவர்கள்  கூடியிருக்கையில்,  அவர்களை  நோக்கி:  எவனை  நான்  உங்களுக்கு  விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்?  பரபாசையோ<Barabbas>?  கிறிஸ்து<Christ>  என்னப்படுகிற  இயேசுவையோ<Jesus>?  என்று  கேட்டான்.  {Matt  27:18}

 

அவன்  நியாயாசனத்தில்  உட்கார்ந்திருக்கையில்,  அவனுடைய  மனைவி  அவனிடத்தில்  ஆளனுப்பி:  நீர்  அந்த  நீதிமானை  ஒன்றும்  செய்யவேண்டாம்;  அவர்  நிமித்தம்  இன்றைக்குச்  சொப்பனத்தில்  வெகு  பாடுபட்டேன்  என்று  சொல்லச்சொன்னாள்.  {Matt  27:19}

 

பரபாசை<Barabbas>  விட்டுவிடக்  கேட்டுக்கொள்ளவும்,  இயேசுவைக்<Jesus>  கொலைசெய்விக்கவும்  பிரதான  ஆசாரியரும்  மூப்பரும்  ஜனங்களை  ஏவிவிட்டார்கள்.  {Matt  27:20}

 

தேசாதிபதி  ஜனங்களை  நோக்கி:  இவ்விருவரில்  எவனை  நான்  உங்களுக்கு  விடுதலையாக்கவேண்டும்  என்று  கேட்டான்.  அதற்கு  அவர்கள்:  பரபாசை<Barabbas>  என்றார்கள்.  {Matt  27:21}

 

பிலாத்து<Pilate>  அவர்களை  நோக்கி:  அப்படியானால்,  கிறிஸ்து<Christ>  என்னப்பட்ட  இயேசுவை<Jesus>  நான்  என்னசெய்யவேண்டும்  என்று  கேட்டான்.  அவனைச்  சிலுவையில்  அறையவேண்டும்  என்று  எல்லாரும்  சொன்னார்கள்.  {Matt  27:22}

 

தேசாதிபதியோ:  ஏன்,  என்ன  பொல்லாப்புச்  செய்தான்  என்றான்.  அதற்கு  அவர்கள்:  அவனைச்  சிலுவையில்  அறையவேண்டும்  என்று  அதிகமதிகமாய்க்  கூக்குரலிட்டுச்  சொன்னார்கள்.  {Matt  27:23}

 

கலகம்  அதிகமாகிறதேயல்லாமல்  தன்  பிரயத்தனத்தினாலே  பிரயோஜனமில்லையென்று  பிலாத்து<Pilate>  கண்டு,  தண்ணீரை  அள்ளி,  ஜனங்களுக்கு  முன்பாகக்  கைகளைக்  கழுவி:  இந்த  நீதிமானுடைய  இரத்தப்பழிக்கு  நான்  குற்றமற்றவன்,  நீங்களே  பார்த்துக்கொள்ளுங்கள்  என்றான்.  {Matt  27:24}

 

அதற்கு  ஜனங்களெல்லாரும்:  இவனுடைய  இரத்தப்பழி  எங்கள்மேலும்  எங்கள்  பிள்ளைகள்மேலும்  இருப்பதாக  என்று  சொன்னார்கள்.  {Matt  27:25}

 

அப்பொழுது,  அவன்  பரபாசை<Barabbas>  அவர்களுக்கு  விடுதலையாக்கி,  இயேசுவையோ<Jesus>  வாரினால்  அடிப்பித்து,  சிலுவையில்  அறையும்படிக்கு  ஒப்புக்கொடுத்தான்.  {Matt  27:26}

 

அப்பொழுது,  தேசாதிபதியின்  போர்ச்சேவகர்  இயேசுவைத்<Jesus>  தேசாதிபதியின்  அரமனையிலே  கொண்டுபோய்,  போர்ச்சேவகரின்  கூட்டம்  முழுவதையும்  அவரிடத்தில்  கூடிவரச்செய்து,  {Matt  27:27}

 

அவர்  வஸ்திரங்களைக்  கழற்றி,  சிவப்பான  மேலங்கியை  அவருக்கு  உடுத்தி,  {Matt  27:28}

 

முள்ளுகளால்  ஒரு  முடியைப்பின்னி,  அவர்  சிரசின்மேல்  வைத்து,  அவர்  வலதுகையில்  ஒரு  கோலைக்  கொடுத்து,  அவர்  முன்பாக  முழங்காற்படியிட்டு:  யூதருடைய  ராஜாவே<King  of  the  Jews>,  வாழ்க  என்று  அவரைப்  பரியாசம்பண்ணி,  {Matt  27:29}

 

அவர்மேல்  துப்பி,  அந்தக்  கோலை  எடுத்து,  அவரைச்  சிரசில்  அடித்தார்கள்.  {Matt  27:30}

 

அவரைப்  பரியாசம்பண்ணினபின்பு,  அவருக்கு  உடுத்தின  மேலங்கியைக்  கழற்றி,  அவருடைய  வஸ்திரங்களை  அவருக்கு  உடுத்தி,  அவரைச்  சிலுவையில்  அறையும்படி  கொண்டுபோனார்கள்.  {Matt  27:31}

 

போகையில்,  சிரேனே<Cyrene>  ஊரானாகிய  சீமோன்<Simon>  என்னப்பட்ட  ஒரு  மனுஷனை  அவர்கள்  கண்டு,  அவருடைய  சிலுவையைச்  சுமக்கும்படி  அவனைப்  பலவந்தம்  பண்ணினார்கள்.  {Matt  27:32}

 

கபாலஸ்தலம்<a  place  of  a  skull>  என்று  அர்த்தங்கொள்ளும்  கொல்கொதா<Golgotha>  என்னும்  இடத்துக்கு  அவர்கள்  வந்தபோது,  {Matt  27:33}

 

கசப்புக்கலந்த  காடியை  அவருக்குக்  குடிக்கக்  கொடுத்தார்கள்;  அவர்  அதை  ருசிபார்த்து,  குடிக்க  மனதில்லாதிருந்தார்.  {Matt  27:34}

 

அவரைச்  சிலுவையில்  அறைந்தபின்பு,  அவர்கள்  சீட்டுப்போட்டு  அவருடைய  வஸ்திரங்களைப்  பங்கிட்டுக்  கொண்டார்கள்.  என்  வஸ்திரங்களைத்  தங்களுக்குள்ளே  பங்கிட்டு,  என்  உடையின்பேரில்  சீட்டுப்போட்டார்கள்  என்று  தீர்க்கதரிசியால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  {Matt  27:35}

 

அவர்கள்  அங்கே  உட்கார்ந்து,  அவரைக்  காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.  {Matt  27:36}

 

அன்றியும்  அவர்  அடைந்த  ஆக்கினையின்  முகாந்தரத்தைக்  காண்பிக்கும்  பொருட்டு,  இவன்  யூதருடைய  ராஜாவாகிய  இயேசு<THIS  IS  JESUS  THE  KING  OF  THE  JEWS>  என்று  எழுதி,  அவர்  சிரசுக்கு  மேலாக  வைத்தார்கள்.  {Matt  27:37}

 

அப்பொழுது,  அவருடைய  வலதுபக்கத்தில்  ஒருவனும்  அவருடைய  இடதுபக்கத்தில்  ஒருவனுமாக  இரண்டு  கள்ளர்  அவரோடேகூடச்  சிலுவைகளில்  அறையப்பட்டார்கள்.  {Matt  27:38}

 

அந்த  வழியாய்  நடந்துபோகிறவர்கள்  தங்கள்  தலைகளைத்  துலுக்கி:  {Matt  27:39}

 

தேவாலயத்தை  இடித்து,  மூன்று  நாளைக்குள்ளே  கட்டுகிறவனே,  உன்னை  நீயே  ரட்சித்துக்கொள்;  நீ  தேவனுடைய  குமாரனானால்  சிலுவையிலிருந்து  இறங்கி  வா  என்று  அவரைத்  தூஷித்தார்கள்.  {Matt  27:40}

 

அப்படியே  பிரதான  ஆசாரியரும்  வேதபாரகரும்  மூப்பரும்  பரியாசம்பண்ணி:  {Matt  27:41}

 

மற்றவர்களை  ரட்சித்தான்;  தன்னைத்தான்  ரட்சித்துக்கொள்ளத்  திராணியில்லை;  இவன்  இஸ்ரவேலின்  ராஜாவானால்<King  of  Israel>  இப்பொழுது  சிலுவையிலிருந்து  இறங்கிவரட்டும்,  அப்பொழுது  இவனை  விசுவாசிப்போம்.  {Matt  27:42}

 

தன்னைத்  தேவனுடைய  குமாரனென்று  சொல்லி,  தேவன்மேல்  நம்பிக்கையாயிருந்தானே;  அவர்  இவன்மேல்  பிரியமாயிருந்தால்  இப்பொழுது  இவனை  இரட்சிக்கட்டும்  என்றார்கள்.  {Matt  27:43}

 

அவரோடேகூடச்  சிலுவைகளில்  அறையப்பட்ட  கள்ளரும்  அந்தப்படியே  அவரை  நிந்தித்தார்கள்.  {Matt  27:44}

 

ஆறாம்மணி  நேரமுதல்  ஒன்பதாம்மணி  நேரம்வரைக்கும்  பூமியெங்கும்  அந்தகாரம்  உண்டாயிற்று.  {Matt  27:45}

 

ஒன்பதாம்மணி  நேரத்தில்  இயேசு<Jesus>:  ஏலீ<Eli>!  ஏலீ<Eli>!  லாமா<lama>  சபக்தானி<sabachthani>,  என்று  மிகுந்த  சத்தமிட்டுக்  கூப்பிட்டார்;  அதற்கு  என்  தேவனே!  என்  தேவனே!  ஏன்  என்னைக்  கைவிட்டீர்  என்று  அர்த்தமாம்.  {Matt  27:46}

 

அங்கே  நின்றவர்களில்  சிலர்  அதைக்  கேட்டபொழுது:  இவன்  எலியாவைக்<Elias>  கூப்பிடுகிறான்  என்றார்கள்.  {Matt  27:47}

 

உடனே  அவர்களில்  ஒருவன்  ஓடி,  கடற்காளானை  எடுத்து,  காடியில்  தோய்த்து,  அதை  ஒரு  கோலில்  மாட்டி,  அவருக்குக்  குடிக்கக்  கொடுத்தான்.  {Matt  27:48}

 

மற்றவர்களோ:  பொறு,  எலியா<Elias>  இவனை  இரட்சிக்க  வருவானோ,  பார்ப்போம்  என்றார்கள்.  {Matt  27:49}

 

இயேசு<Jesus>,  மறுபடியும்  மகா  சத்தமாய்க்  கூப்பிட்டு,  ஆவியை  விட்டார்.  {Matt  27:50}

 

அப்பொழுது,  தேவாலயத்தின்  திரைச்சீலை  மேல்தொடங்கிக்  கீழ்வரைக்கும்  இரண்டாகக்  கிழிந்தது,  பூமியும்  அதிர்ந்தது,  கன்மலைகளும்  பிளந்தது.  {Matt  27:51}

 

கல்லறைகளும்  திறந்தது,  நித்திரையடைந்திருந்த  அநேக  பரிசுத்தவான்களுடைய  சரீரங்களும்  எழுந்திருந்தது.  {Matt  27:52}

 

அவர்  உயிர்த்தெழுந்தபின்பு,  இவர்கள்  கல்லறைகளைவிட்டுப்  புறப்பட்டு,  பரிசுத்த  நகரத்தில்  பிரவேசித்து,  அநேகருக்குக்  காணப்பட்டார்கள்.  {Matt  27:53}

 

நூற்றுக்கு  அதிபதியும்,  அவனோடேகூட  இயேசுவைக்<Jesus>  காவல்காத்திருந்தவர்களும்,  பூமியதிர்ச்சியையும்  சம்பவித்த  காரியங்களையும்  கண்டு,  மிகவும்  பயந்து:  மெய்யாகவே  இவர்  தேவனுடைய  குமாரன்  என்றார்கள்.  {Matt  27:54}

 

மேலும்,  இயேசுவுக்கு<Jesus>  ஊழியஞ்செய்யும்படி  கலிலேயாவிலிருந்து<Galilee>  அவரோடே  வந்திருந்த  அநேக  ஸ்திரீகள்  அங்கே  தூரத்திலே  நின்று  பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  {Matt  27:55}

 

அவர்களுக்குள்ளே  மகதலேனா  மரியாளும்<Mary  Magdalene>,  யாக்கோபுக்கும்<James>  யோசேக்கும்<Joses>  தாயாகிய  மரியாளும்<Mary>,  செபெதேயுவின்<Zebedee>  குமாரருடைய  தாயும்  இருந்தார்கள்.  {Matt  27:56}

 

சாயங்காலமானபோது,  இயேசுவுக்குச்<Jesus>  சீஷனும்  ஐசுவரியவானுமாயிருந்த  யோசேப்பு<Joseph>  என்னும்  பேர்கொண்ட  அரிமத்தியா<Arimathaea>  ஊரானாகிய  ஒரு  மனுஷன்  வந்து,  {Matt  27:57}

 

பிலாத்துவினிடத்தில்<Pilate>  போய்,  இயேசுவின்<Jesus>  சரீரத்தைக்  கேட்டான்.  அப்பொழுது,  சரீரத்தைக்  கொடுக்கும்படி  பிலாத்து<Pilate>  கட்டளையிட்டான்.  {Matt  27:58}

 

யோசேப்பு<Joseph>  அந்தச்  சரீரத்தை  எடுத்து,  துய்யதான  மெல்லிய  துப்பட்டியிலே  சுற்றி,  {Matt  27:59}

 

தான்  கன்மலையில்  வெட்டியிருந்த  தன்னுடைய  புதிய  கல்லறையிலே  அதை  வைத்து,  கல்லறையின்  வாசலில்  ஒரு  பெரிய  கல்லைப்  புரட்டிவைத்துப்  போனான்.  {Matt  27:60}

 

அங்கே  மகதலேனா  மரியாளும்<Mary  Magdalene>  மற்ற  மரியாளும்<Mary>  கல்லறைக்கு  எதிராக  உட்கார்ந்திருந்தார்கள்.  {Matt  27:61}

 

ஆயத்தநாளுக்குப்  பின்னான  மறுநாளிலே  பிரதான  ஆசாரியரும்  பரிசேயரும்<Pharisees>  பிலாத்துவினிடத்தில்<Pilate>  கூடிவந்து:  {Matt  27:62}

 

ஆண்டவனே,  அந்த  எத்தன்  உயிரோடிருக்கும்போது,  மூன்றுநாளைக்குப்பின்  எழுந்திருப்பேன்  என்று  சொன்னது  எங்களுக்கு  ஞாபகமிருக்கிறது.  {Matt  27:63}

 

ஆகையால்,  அவனுடைய  சீஷர்கள்  இராத்திரியிலே  வந்து,  அவனைக்  களவாய்க்  கொண்டுபோய்,  மரித்தோரிலிருந்து  எழுந்தானென்று  ஜனங்களுக்குச்  சொல்லாதபடிக்கும்,  முந்தின  எத்தைப்பார்க்கிலும்  பிந்தின  எத்து  கொடிதாகாதபடிக்கும்,  நீர்  மூன்றுநாள்வரைக்கும்  கல்லறையைப்  பத்திரப்படுத்தும்படி  கட்டளையிடவேண்டும்  என்றார்கள்.  {Matt  27:64}

 

அதற்குப்  பிலாத்து<Pilate>:  உங்களுக்குக்  காவல்சேவகர்  உண்டே;  போய்,  உங்களால்  கூடியமட்டும்  பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்  என்றான்.  {Matt  27:65}

 

அவர்கள்  போய்க்  கல்லுக்கு  முத்திரைபோட்டு,  காவல்வைத்து,  கல்லறையைப்  பத்திரப்படுத்தினார்கள்.  {Matt  27:66}

 

ஓய்வுநாள்  முடிந்து,  வாரத்தின்  முதலாம்  நாள்  விடிந்துவருகையில்,  மகதலேனா  மரியாளும்<Mary  Magdalene>  மற்ற  மரியாளும்<Mary>  கல்லறையைப்  பார்க்கவந்தார்கள்.  {Matt  28:1}

 

அப்பொழுது,  பூமி  மிகவும்  அதிரும்படி,  கர்த்தருடைய  தூதன்  வானத்திலிருந்திறங்கி  வந்து,  வாசலிலிருந்த  கல்லைப்  புரட்டித்  தள்ளி,  அதின்மேல்  உட்கார்ந்தான்.  {Matt  28:2}

 

அவனுடைய  ரூபம்  மின்னல்போலவும்,  அவனுடைய  வஸ்திரம்  உறைந்த  மழையைப்போல  வெண்மையாகவும்  இருந்தது.  {Matt  28:3}

 

காவலாளர்  அவனுக்குப்  பயந்ததினால்  திடுக்கிட்டுச்  செத்தவர்கள்  போலானார்கள்.  {Matt  28:4}

 

தூதன்  அந்த  ஸ்திரீகளை  நோக்கி:  நீங்கள்  பயப்படாதிருங்கள்;  சிலுவையில்  அறையப்பட்ட  இயேசுவைத்<Jesus>  தேடுகிறீர்கள்  என்று  அறிவேன்.  {Matt  28:5}

 

அவர்  இங்கே  இல்லை;  தாம்  சொன்னபடியே  உயிர்த்தெழுந்தார்;  கர்த்தரை  வைத்த  இடத்தை  வந்து  பாருங்கள்;  {Matt  28:6}

 

சீக்கிரமாய்ப்  போய்,  அவர்  மரித்தோரிலிருந்து  எழுந்தார்  என்று  அவருடைய  சீஷர்களுக்குச்  சொல்லுங்கள்.  அவர்  உங்களுக்குமுன்னே  கலிலேயாவுக்குப்<Galilee>  போகிறார்;  அங்கே  அவரைக்  காண்பீர்கள்;  இதோ,  உங்களுக்குச்  சொன்னேன்  என்றான்.  {Matt  28:7}

 

அவர்கள்  பயத்தோடும்  மகா  சந்தோஷத்தோடும்  கல்லறையை  விட்டுச்  சீக்கிரமாய்ப்  புறப்பட்டு,  அவருடைய  சீஷர்களுக்கு  அறிவிக்க  ஓடினார்கள்.  {Matt  28:8}

 

அவர்கள்  அவருடைய  சீஷர்களுக்கு  அறிவிக்கப்  போகிறபோது,  இயேசு<Jesus>  தாமே  அவர்களுக்கு  எதிர்ப்பட்டு:  வாழ்க  என்றார்.  அவர்கள்  கிட்டவந்து,  அவர்  பாதங்களைத்  தழுவி,  அவரைப்  பணிந்துகொண்டார்கள்.  {Matt  28:9}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  அவர்களை  நோக்கி:  பயப்படாதிருங்கள்;  நீங்கள்  போய்,  என்  சகோதரர்  கலிலேயாவுக்குப்<Galilee>  போகும்படி  அவர்களுக்குச்  சொல்லுங்கள்;  அங்கே  அவர்கள்  என்னைக்  காண்பார்கள்  என்றார்.  {Matt  28:10}

 

அவர்கள்  போகையில்,  காவல்சேவகரில்  சிலர்  நகரத்துக்குள்ளே  வந்து,  நடந்த  யாவற்றையும்  பிரதான  ஆசாரியருக்கு  அறிவித்தார்கள்.  {Matt  28:11}

 

இவர்கள்  மூப்பரோடே  கூடிவந்து,  ஆலோசனைபண்ணி,  சேவகருக்கு  வேண்டிய  பணத்தைக்  கொடுத்து:  {Matt  28:12}

 

நாங்கள்  நித்திரைபண்ணுகையில்,  அவனுடைய  சீஷர்கள்  இராத்திரியிலே  வந்து,  அவனைக்  களவாய்க்  கொண்டு  போய்விட்டார்கள்  என்று  சொல்லுங்கள்.  {Matt  28:13}

 

இது  தேசாதிபதிக்குக்  கேள்வியானால்,  நாங்கள்  அவரைச்  சம்மதப்படுத்தி,  உங்களைத்  தப்புவிப்போம்  என்றார்கள்.  {Matt  28:14}

 

அவர்கள்  பணத்தை  வாங்கிக்கொண்டு,  தங்களுக்குப்  போதிக்கப்பட்டபடியே  செய்தார்கள்.  இந்தப்  பேச்சு  யூதருக்குள்ளே<Jews>  இந்நாள்வரைக்கும்  பிரசித்தமாயிருக்கிறது.  {Matt  28:15}

 

பதினொரு  சீஷர்களும்,  கலிலேயாவிலே<Galilee>  இயேசு<Jesus>  தங்களுக்குக்  குறித்திருந்த  மலைக்குப்  போனார்கள்.  {Matt  28:16}

 

அங்கே  அவர்கள்  அவரைக்  கண்டு,  பணிந்துகொண்டார்கள்;  சிலரோ  சந்தேகப்பட்டார்கள்.  {Matt  28:17}

 

அப்பொழுது  இயேசு<Jesus>  சமீபத்தில்  வந்து,  அவர்களை  நோக்கி:  வானத்திலும்  பூமியிலும்  சகல  அதிகாரமும்  எனக்குக்  கொடுக்கப்பட்டிருக்கிறது.  {Matt  28:18}

 

ஆகையால்,  நீங்கள்  புறப்பட்டுப்போய்,  சகல  ஜாதிகளையும்  சீஷராக்கி,  பிதா  குமாரன்  பரிசுத்த  ஆவியின்  நாமத்திலே  அவர்களுக்கு  ஞானஸ்நானங்கொடுத்து,  {Matt  28:19}

 

நான்  உங்களுக்குக்  கட்டளையிட்ட  யாவையும்  அவர்கள்  கைக்கொள்ளும்படி  அவர்களுக்கு  உபதேசம்பண்ணுங்கள்.  இதோ,  உலகத்தின்  முடிவுபரியந்தம்  சகல  நாட்களிலும்  நான்  உங்களுடனேகூட  இருக்கிறேன்  என்றார்.  ஆமென்<Amen>.  {Matt  28:20}

 

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!