Friday, May 08, 2020

பிரசங்கி

தாவீதின்<David>  குமாரனும்  எருசலேமின்<Jerusalem>  ராஜாவுமாகிய  பிரசங்கியின்  வாக்கியங்கள்.  {Eccl  1:1}

 

மாயை,  மாயை,  எல்லாம்  மாயை  என்று  பிரசங்கி  சொல்லுகிறான்.  {Eccl  1:2}

 

சூரியனுக்குக்  கீழே  மனுஷன்  படுகிற  எல்லாப்  பிரயாசத்தினாலும்  அவனுக்குப்  பலன்  என்ன?  {Eccl  1:3}

 

ஒரு  சந்ததி  போகிறது,  மறு  சந்ததி  வருகிறது;  பூமியோ  என்றைக்கும்  நிலைத்திருக்கிறது.  {Eccl  1:4}

 

சூரியன்  உதிக்கிறது,  சூரியன்  அஸ்தமிக்கிறது;  தான்  உதித்த  இடத்திற்கே  அது  திரும்பவும்  தீவிரிக்கிறது.  {Eccl  1:5}

 

காற்று  தெற்கே  போய்,  வடக்கேயுஞ்சுற்றி,  சுழன்று  சுழன்று  அடித்து,  தான்  சுற்றின  இடத்துக்கே  திரும்பவும்  வரும்.  {Eccl  1:6}

 

எல்லா  நதிகளும்  சமுத்திரத்திலே  ஓடி  விழுந்தும்  சமுத்திரம்  நிரம்பாது;  தாங்கள்  உற்பத்தியான  இடத்திற்கே  நதிகள்  மறுபடியும்  திரும்பும்.  {Eccl  1:7}

 

எல்லாம்  வருத்தத்தினால்  நிறைந்திருக்கிறது;  அது  மனுஷரால்  சொல்லிமுடியாது;  காண்கிறதினால்  கண்  திருப்தியாகிறதில்லை,  கேட்கிறதினால்  செவி  நிரப்பப்படுகிறதுமில்லை.  {Eccl  1:8}

 

முன்  இருந்ததே  இனிமேலும்  இருக்கும்;  முன்  செய்யப்பட்டதே  பின்னும்  செய்யப்படும்;  சூரியனுக்குக்  கீழே  நூதனமானது  ஒன்றுமில்லை.  {Eccl  1:9}

 

இதைப்  பார்,  இது  நூதனம்  என்று  சொல்லப்படத்தக்க  காரியம்  ஒன்றுண்டோ?  அது  நமக்கு  முன்னுள்ள  பூர்வகாலங்களிலும்  இருந்ததே.  {Eccl  1:10}

 

முன்  இருந்தவைகளைப்பற்றி  ஞாபகம்  இல்லை;  அப்படியே  பின்வரும்  காரியங்களைப்பற்றியும்  இனிமேலிருப்பவர்களுக்கு  ஞாபகம்  இராது.  {Eccl  1:11}

 

பிரசங்கியாகிய  நான்  எருசலேமில்<Jerusalem>  இஸ்ரவேலருக்கு<Israel>  ராஜாவாயிருந்தேன்.  {Eccl  1:12}

 

வானத்தின்கீழ்  நடப்பதையெல்லாம்  ஞானமாய்  விசாரித்து  ஆராய்ச்சி  செய்கிறதற்கு  என்  மனதைப்  பிரயோகம்பண்ணினேன்;  மனுபுத்திரர்  இந்தக்  கடுந்தொல்லையில்  அடிபடும்படிக்குத்  தேவன்  அதை  அவர்களுக்கு  நியமித்திருக்கிறார்.  {Eccl  1:13}

 

சூரியனுக்குக்  கீழே  செய்யப்படுகிற  காரியங்களையெல்லாம்  கவனித்துப்  பார்த்தேன்;  இதோ,  எல்லாம்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  {Eccl  1:14}

 

கோணலானதை  நேராக்கக்கூடாது;  குறைவானதை  எண்ணிமுடியாது.  {Eccl  1:15}

 

இதோ,  நான்  பெரியவனாயிருந்து,  எனக்குமுன்  எருசலேமிலிருந்த<Jerusalem>  எல்லாரைப்பார்க்கிலும்  ஞானமடைந்து  தேறினேன்;  என்  மனம்  மிகுந்த  ஞானத்தையும்  அறிவையும்  கண்டறிந்தது  என்று  நான்  என்  உள்ளத்திலே  சொல்லிக்கொண்டேன்.  {Eccl  1:16}

 

ஞானத்தை  அறிகிறதற்கும்,  பைத்தியத்தையும்  மதியீனத்தையும்  அறிகிறதற்கும்,  நான்  என்  மனதைப்  பிரயோகம்பண்ணினேன்;  இதுவும்  மனதுக்குச்  சஞ்சலமாயிருக்கிறதென்று  கண்டேன்.  {Eccl  1:17}

 

அதிக  ஞானத்திலே  அதிக  சலிப்புண்டு;  அறிவுபெருத்தவன்  நோவுபெருத்தவன்.  {Eccl  1:18}

 

நான்  என்  உள்ளத்திலே  சொல்லிக்கொண்டது  என்னவென்றால்:  வா,  இப்பொழுது  உன்னைச்  சந்தோஷத்தினாலே  சோதித்துப்பார்ப்பேன்,  இன்பத்தை  அநுபவி  என்றேன்;  இதோ,  இதுவும்  மாயையாயிருந்தது.  {Eccl  2:1}

 

நகைப்பைக்குறித்து,  அது  பைத்தியம்  என்றும்,  சந்தோஷத்தைக்குறித்து,  அது  என்ன  செய்யும்?  என்றும்  சொன்னேன்.  {Eccl  2:2}

 

வானத்தின்கீழ்  மனுபுத்திரர்  உயிரோடிருக்கும்  நாளளவும்  பெற்று  அநுபவிக்கத்தக்கது  இன்னதென்று  அறியும்பொருட்டு,  என்  இருதயத்தை  ஞானத்தால்  தேற்றிக்கொண்டிருக்கும்போதே,  நான்  என்  தேகத்தை  மதுபானத்தால்  சீராட்டிக்கொண்டிருக்கவும்,  மதியீனத்தைப்  பற்றிக்கொண்டிருக்கவும்  என்  உள்ளத்தில்  வகைதேடினேன்.  {Eccl  2:3}

 

நான்  பெரிய  வேலைகளைச்  செய்தேன்;  எனக்காக  வீடுகளைக்  கட்டினேன்,  திராட்சத்தோட்டங்களை  நாட்டினேன்.  {Eccl  2:4}

 

எனக்காகத்  தோட்டங்களையும்  சிங்காரவனங்களையும்  உண்டாக்கி,  அவைகளில்  சகலவகைக்  கனிவிருட்சங்களையும்  நாட்டினேன்.  {Eccl  2:5}

 

மரங்கள்  பயிராகும்  தோப்புக்கு  நீர்ப்பாய்ச்சுகிறதற்குக்  குளங்களை  உண்டுபண்ணினேன்.  {Eccl  2:6}

 

வேலைக்காரரையும்  வேலைக்காரிகளையும்  சம்பாதித்தேன்;  வீட்டிலும்  வேலைக்காரர்  பிறந்தார்கள்;  எனக்குமுன்  எருசலேமிலிருந்த<Jerusalem>  எல்லாரைப்பார்க்கிலும்  ஆடுமாடு  முதலான  திரண்ட  ஆஸ்திகள்  எனக்கு  இருந்தது.  {Eccl  2:7}

 

வெள்ளியையும்  பொன்னையும்,  ராஜசம்பத்தையும்  மாகாணங்களிலுள்ள  பொருள்களையும்  சேகரித்தேன்;  சங்கீதக்காரரையும்  சங்கீதக்காரிகளையும்,  மனுபுத்திரருக்கு  இன்பமான  பலவித  வாத்தியங்களையும்  சம்பாதித்தேன்.  {Eccl  2:8}

 

எனக்குமுன்  எருசலேமிலிருந்த<Jerusalem>  எல்லாரைப்பார்க்கிலும்  நான்  பெரியவனும்  திரவிய  சம்பன்னனுமானேன்;  என்  ஞானமும்  என்னோடேகூட  இருந்தது.  {Eccl  2:9}

 

என்  கண்கள்  இச்சித்தவைகளில்  ஒன்றையும்  நான்  அவைகளுக்குத்  தடைபண்ணவில்லை;  என்  இருதயத்துக்கு  ஒரு  சந்தோஷத்தையும்  நான்  வேண்டாமென்று  விலக்கவில்லை;  நான்  செய்த  முயற்சிகளிலெல்லாம்  என்  மனம்  மகிழ்ச்சிகொண்டிருந்தது;  இதுவே  என்  பிரயாசங்கள்  எல்லாவற்றினாலும்  எனக்கு  வந்த  பலன்.  {Eccl  2:10}

 

என்  கைகள்  செய்த  சகல  வேலைகளையும்,  நான்  பட்ட  எல்லாப்  பிரயாசத்தையும்  கண்ணோக்கிப்  பார்த்தேன்;  இதோ,  எல்லாம்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருந்தது;  சூரியனுக்குக்  கீழே  பலன்  ஒன்றுமில்லை.  {Eccl  2:11}

 

பின்பு  நான்,  ஞானமானது  என்ன  என்றும்,  பைத்தியமும்  மதியீனமும்  என்ன  என்றும்  பார்த்து  அறியும்படி  திரும்பினேன்;  ராஜாவுக்குப்  பின்வரும்  மனுஷன்  என்ன  செய்யக்கூடும்?  செய்ததையே  செய்வான்.  {Eccl  2:12}

 

இருளைப்பார்க்கிலும்  வெளிச்சம்  எவ்வளவு  உத்தமமோ,  அவ்வளவாய்  மதியீனத்தைப்பார்க்கிலும்  ஞானம்  உத்தமமென்று  கண்டேன்.  {Eccl  2:13}

 

ஞானியின்  கண்கள்  அவன்  முகத்திலே  இருக்கிறது;  மூடனோ  இருளிலே  நடக்கிறான்;  ஆகிலும்  அவர்களெல்லாருக்கும்  ஒரேவிதமாய்ச்  சம்பவிக்கிறது  என்று  கண்டேன்.  {Eccl  2:14}

 

மூடனுக்குச்  சம்பவிக்கிறதுபோல  எனக்கும்  சம்பவிக்கிறதே;  அப்படியிருக்க  நான்  அதிக  ஞானமடைந்ததினால்  காரியமென்ன  என்று  சிந்தித்தேன்;  இதுவும்  மாயை  என்று  என்  உள்ளத்தில்  எண்ணினேன்.  {Eccl  2:15}

 

மூடன்  என்றாலும்  ஞானியென்றாலும்  என்றைக்கும்  நினைவில்  இருப்பதில்லை;  இப்பொழுது  இருக்கிறதெல்லாம்  வருங்காலத்தில்  மறக்கப்பட்டுப்போம்;  மூடன்  எப்படிச்  சாகிறானோ  அப்படியே  ஞானியும்  சாகிறான்.  {Eccl  2:16}

 

ஆகையால்  இந்த  ஜீவனை  வெறுத்தேன்;  சூரியனுக்குக்கீழே  செய்யப்படும்  கிரியையெல்லாம்  எனக்கு  விசனமாயிருந்தது;  எல்லாம்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  {Eccl  2:17}

 

சூரியனுக்குக்கீழே  நான்  பட்ட  பிரயாசத்தையெல்லாம்  வெறுத்தேன்;  எனக்குப்  பின்வரப்போகிறவனுக்கு  அதை  நான்  வைத்துப்போகவேண்டியதாகுமே.  {Eccl  2:18}

 

அவன்  புத்திமானாயிருப்பானோ,  மூடனாயிருப்பானோ,  அதை  யார்  அறிவார்?  ஆகிலும்  சூரியனுக்குக்கீழே  நான்  பிரயாசப்பட்டு  ஞானமாய்ச்  சம்பாதித்த  சகல  வஸ்துக்களின்பேரிலும்  அவன்  அதிகாரியாவான்;  இதுவும்  மாயையே.  {Eccl  2:19}

 

ஆகையால்  சூரியனுக்குக்கீழே  நான்  பட்ட  எல்லாப்  பிரயாசத்தின்மேலுமுள்ள  ஆசையை  விட்டுவிட  வகைபார்த்தேன்.  {Eccl  2:20}

 

ஒருவன்  புத்தி,  யுக்தி,  நிதானத்தோடு  பிரயாசப்படுகிறான்;  ஆகிலும்  அப்படிப்  பிரயாசப்படாதிருந்த  வேறொருவனுக்கு  அவன்  அதைச்  சொந்தமாக  விட்டுவிடவேண்டியதாகும்;  இதுவும்  மாயையும்  பெரிய  தீங்குமாய்  இருக்கிறது.  {Eccl  2:21}

 

மனுஷன்  சூரியனுக்குக்கீழே  படுகிற  எல்லாப்  பிரயாசத்தினாலும்  அவனுடைய  இருதயத்தின்  எண்ணங்களினாலும்  அவனுக்குப்  பலன்  என்ன?  {Eccl  2:22}

 

அவன்  நாட்களெல்லாம்  அலுப்புள்ளது,  அவன்  வேலைகள்  வருத்தமுள்ளது;  இராத்திரியிலும்  அவன்  மனதுக்கு  இளைப்பாறுதலில்லை;  இதுவும்  மாயையே.  {Eccl  2:23}

 

மனுஷன்  புசித்துக்  குடித்து,  தன்  பிரயாசத்தின்  பலனை  அநுபவிப்பதைப்பார்க்கிலும்,  அவனுக்கு  ஒரு  நன்மையும்  இல்லை;  இதுவும்  தேவனுடைய  கரத்திலிருந்து  வருகிறது  என்று  நான்  கண்டேன்.  {Eccl  2:24}

 

என்னைப்பார்க்கிலும்  சம்பிரமமாய்ச்  சாப்பிடத்தக்கவன்  யார்?  என்னைப்பார்க்கிலும்  துரிதமாய்ச்  சம்பாதிக்கத்தக்கவன்  யார்?  {Eccl  2:25}

 

தேவன்  தமது  பார்வைக்கு  நல்லவனாயிருக்கிறவனுக்கு  ஞானத்தையும்  அறிவையும்  இன்பத்தையும்  அளிக்கிறார்;  பாவஞ்செய்கிறவனுக்கோ  தமது  பார்வைக்கு  நல்லவனாயிருக்கிறவன்  வசமாய்  வைத்துவிட்டுப்  போகும்பொருட்டுச்  சேர்த்துக்  குவித்துவைக்கும்  தொல்லையை  அவர்  நியமித்திருக்கிறார்;  இதுவும்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  {Eccl  2:26}

 

ஒவ்வொன்றிற்கும்  ஒவ்வொரு  காலமுண்டு;  வானத்தின்  கீழிருக்கிற  ஒவ்வொரு  காரியத்துக்கும்  ஒவ்வொரு  சமயமுண்டு.  {Eccl  3:1}

 

பிறக்க  ஒரு  காலமுண்டு,  இறக்க  ஒரு  காலமுண்டு;  நட  ஒரு  காலமுண்டு,  நட்டதைப்  பிடுங்க  ஒரு  காலமுண்டு;  {Eccl  3:2}

 

கொல்ல  ஒரு  காலமுண்டு,  குணமாக்க  ஒரு  காலமுண்டு;  இடிக்க  ஒரு  காலமுண்டு,  கட்ட  ஒரு  காலமுண்டு;  {Eccl  3:3}

 

அழ  ஒரு  காலமுண்டு,  நகைக்க  ஒரு  காலமுண்டு;  புலம்ப  ஒரு  காலமுண்டு,  நடனம்பண்ண  ஒரு  காலமுண்டு;  {Eccl  3:4}

 

கற்களை  எறிந்துவிட  ஒரு  காலமுண்டு,  கற்களைச்  சேர்க்க  ஒரு  காலமுண்டு;  தழுவ  ஒரு  காலமுண்டு,  தழுவாமலிருக்க  ஒரு  காலமுண்டு;  {Eccl  3:5}

 

தேட  ஒரு  காலமுண்டு,  இழக்க  ஒரு  காலமுண்டு;  காப்பாற்ற  ஒரு  காலமுண்டு,  எறிந்துவிட  ஒரு  காலமுண்டு;  {Eccl  3:6}

 

கிழிக்க  ஒரு  காலமுண்டு,  தைக்க  ஒரு  காலமுண்டு;  மவுனமாயிருக்க  ஒரு  காலமுண்டு,  பேச  ஒரு  காலமுண்டு;  {Eccl  3:7}

 

சிநேகிக்க  ஒரு  காலமுண்டு,  பகைக்க  ஒரு  காலமுண்டு;  யுத்தம்பண்ண  ஒரு  காலமுண்டு,  சமாதானம்பண்ண  ஒரு  காலமுண்டு.  {Eccl  3:8}

 

வருத்தப்பட்டுப்  பிரயாசப்படுகிறவனுக்கு  அதினால்  பலன்  என்ன?  {Eccl  3:9}

 

மனுபுத்திரர்  பாடுபடும்படி  தேவன்  அவர்களுக்கு  நியமித்த  தொல்லையைக்  கண்டேன்.  {Eccl  3:10}

 

அவர்  சகலத்தையும்  அதினதின்  காலத்திலே  நேர்த்தியாகச்  செய்திருக்கிறார்;  உலகத்தையும்  அவர்கள்  உள்ளத்திலே  வைத்திருக்கிறார்;  ஆதலால்  தேவன்  ஆதிமுதல்  அந்தம்மட்டும்  செய்துவரும்  கிரியையை  மனுஷன்  கண்டுபிடியான்.  {Eccl  3:11}

 

மகிழ்ச்சியாயிருப்பதும்,  உயிரோடிருக்கையில்  நன்மைசெய்வதுமேயல்லாமல்,  வேறொரு  நன்மையும்  மனுஷனுக்கு  இல்லையென்று  அறிந்தேன்.  {Eccl  3:12}

 

அன்றியும்  மனுஷர்  யாவரும்  புசித்துக்  குடித்துத்  தங்கள்  சகலப்  பிரயாசத்தின்  பலனையும்  அநுபவிப்பது  தேவனுடைய  அநுக்கிரகம்.  {Eccl  3:13}

 

தேவன்  செய்வது  எதுவோ  அது  என்றைக்கும்  நிலைக்கும்  என்று  அறிவேன்;  அதினோடே  ஒன்றும்  கூட்டவுங்கூடாது,  அதிலிருந்து  ஒன்றும்  குறைக்கவுங்கூடாது;  மனுஷர்  தமது  சமுகத்தில்  பயந்திருக்கும்படி  தேவன்  இப்படிச்  செய்துவருகிறார்.  {Eccl  3:14}

 

முன்  நடந்ததே  இப்பொழுதும்  நடக்கிறது;  இனி  நடக்கப்போகிறதும்  முன்னமே  நடந்தது;  நடந்ததையோ  தேவன்  விசாரிப்பார்.  {Eccl  3:15}

 

பின்னும்  சூரியனுக்குக்  கீழே  நான்  நியாயஸ்தலத்தைக்  கண்டேன்,  அங்கே  அநியாயம்  இருந்தது;  நீதிஸ்தலத்தையும்  கண்டேன்,  அங்கே  அநீதி  இருந்தது.  {Eccl  3:16}

 

சகல  எண்ணங்களையும்  சகல  செய்கைகளையும்  நியாயந்தீர்க்குங்காலம்  இனி  இருக்கிறபடியால்  சன்மார்க்கனையும்  துன்மார்க்கனையும்  தேவன்  நியாயந்தீர்ப்பார்  என்று  என்  உள்ளத்தில்  எண்ணினேன்.  {Eccl  3:17}

 

மனுபுத்திரர்  தாங்கள்  மிருகங்களைப்போல்  இருக்கிறார்களென்பதை  அவர்கள்  காணும்படிக்கு  தேவன்  அவர்களைச்  சோதிக்கிறாரென்று  நான்  மனுஷருடைய  நிலைமையைக்குறித்து  என்  உள்ளத்தில்  எண்ணினேன்.  {Eccl  3:18}

 

மனுபுத்திரருக்குச்  சம்பவிக்கிறது  மிருகங்களுக்கும்  சம்பவிக்கும்;  அவர்களுக்கும்  இவைகளுக்கும்  ஏக  சம்பவமுண்டு;  இவைகள்  சாகிறதுபோலவே  அவர்களும்  சாகிறார்கள்;  ஜீவன்களுக்கெல்லாம்  சுவாசம்  ஒன்றே;  மிருகத்தைப்பார்க்கிலும்  மனுஷன்  மேன்மையுள்ளவன்  அல்ல;  எல்லாம்  மாயையே.  {Eccl  3:19}

 

எல்லாம்  ஒரே  இடத்துக்குப்  போகிறது;  எல்லாம்  மண்ணிலே  உண்டாகிறது,  எல்லாம்  மண்ணுக்குத்  திரும்புகிறது.  {Eccl  3:20}

 

உயர  ஏறும்  மனுஷனுடைய  ஆவியையும்,  தாழப்  பூமியிலிறங்கும்  மிருகங்களுடைய  ஆவியையும்  அறிகிறவன்  யார்?  {Eccl  3:21}

 

இப்படியிருக்கிறபடியால்,  மனுஷன்  தன்  செய்கைகளில்  மகிழ்ச்சியாயிருக்கும்  நன்மையையேயல்லாமல்,  வேறே  நன்மை  இல்லையென்று  கண்டேன்;  இதுவே  அவன்  பங்கு;  தனக்குப்  பின்வரும்  காரியங்களைக்  காணும்படிக்கு  அவனைத்  திரும்பிவரப்பண்ணுகிறவன்  யார்?  {Eccl  3:22}

 

இதற்குப்பின்பு  நான்  சூரியனுக்குக்கீழே  செய்யப்படும்  கொடுமைகளையெல்லாம்  சிந்தித்துப்பார்த்தேன்;  இதோ,  ஒடுக்கப்பட்டவர்களின்  கண்ணீரைக்  கண்டேன்,  அவர்களைத்  தேற்றுவாரில்லை;  ஒடுக்குகிறவர்கள்  பட்சத்தில்  பெலம்  இருந்தது,  அப்படியிருந்தும்  தேற்றுவாரில்லை.  {Eccl  4:1}

 

ஆதலால்  இன்னும்  உயிரோடிருந்து  பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும்  முன்னமே  காலஞ்சென்று  மரித்தவர்களையே  பாக்கியவான்கள்  என்றேன்.  {Eccl  4:2}

 

இவ்விருதிறத்தாருடைய  நிலைமையைப்பார்க்கிலும்  இன்னும்  பிறவாதவனுடைய  நிலைமையே  வாசி;  அவன்  சூரியனுக்குக்  கீழே  செய்யப்படும்  துர்ச்செய்கைகளைக்  காணவில்லையே.  {Eccl  4:3}

 

மனுஷன்  படும்  எல்லாப்  பிரயாசமும்,  பயன்படும்  எல்லாக்  கிரியையும்,  அயலானுடைய  பொறாமைக்கு  ஏதுவாயிருக்கிறதை  நான்  கண்டேன்;  இதுவும்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  {Eccl  4:4}

 

மூடன்  தன்  கைகளைக்  கட்டிக்கொண்டு,  தன்  சதையையே  தின்கிறான்.  {Eccl  4:5}

 

வருத்தத்தோடும்  மனச்சஞ்சலத்தோடும்  இரண்டு  கைப்பிடியும்  நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும்,  அமைச்சலோடு  ஒரு  கைப்பிடி  நிறையக்  கொண்டிருப்பதே  நலம்.  {Eccl  4:6}

 

பின்பு  நான்  திரும்பிக்கொண்டு  சூரியனுக்குக்  கீழே  மாயையான  வேறொரு  காரியத்தைக்  கண்டேன்.  {Eccl  4:7}

 

ஒருவன்  ஒண்டிக்காரனாயிருக்கிறான்;  அவனுக்கு  உடனாளியுமில்லை,  அவனுக்குப்  பிள்ளையும்  சகோதரனுமில்லை;  அப்படியிருந்தும்  அவன்  படும்  பிரயாசத்துக்கு  முடிவில்லை;  அவன்  கண்  ஐசுவரியத்தால்  திருப்தியாகிறதுமில்லை;  நான்  ஒரு  நன்மையையும்  அநுபவியாமல்  யாருக்காகப்  பிரயாசப்படுகிறேன்  என்று  அவன்  சிந்திக்கிறதுமில்லை;  இதுவும்  மாயை,  தீராத  தொல்லை.  {Eccl  4:8}

 

ஒண்டியாயிருப்பதிலும்  இருவர்  கூடியிருப்பது  நலம்;  அவர்களுடைய  பிரயாசத்தினால்  அவர்களுக்கு  நல்ல  பலனுண்டாகும்.  {Eccl  4:9}

 

ஒருவன்  விழுந்தால்  அவன்  உடனாளி  அவனைத்  தூக்கிவிடுவான்;  ஒண்டியாயிருந்து  விழுகிறவனுக்கு  ஐயோ,  அவனைத்  தூக்கிவிடத்  துணையில்லையே.  {Eccl  4:10}

 

இரண்டுபேராய்ப்  படுத்துக்கொண்டிருந்தால்  அவர்களுக்குச்  சூடுண்டாகும்;  ஒண்டியாயிருக்கிறவனுக்குச்  சூடுண்டாவது  எப்படி?  {Eccl  4:11}

 

ஒருவனை  யாதாமொருவன்  மேற்கொள்ள  வந்தால்  இருவரும்  அவனுக்கு  எதிர்த்துநிற்கலாம்;  முப்புரிநூல்  சீக்கிரமாய்  அறாது.  {Eccl  4:12}

 

இனி  ஆலோசனையைக்  கேளாத  கிழவனும்  மூடனுமாகிய  ராஜாவைப்பார்க்கிலும்,  ஏழையும்  ஞானியுமாகிய  இளைஞனே  வாசி.  {Eccl  4:13}

 

அரசாளச்  சிறைச்சாலையிலிருந்து  புறப்படுவாருமுண்டு;  ராஜாங்கத்தில்  பிறந்து  ஏழையாவாருமுண்டு.  {Eccl  4:14}

 

சூரியனுக்குக்கீழே  ஜீவனுள்ளோர்  யாவரும்  ராஜாவின்  பட்டத்திற்கு  வரப்போகிற  பிள்ளையின்  பட்சத்தில்  சார்ந்திருப்பதைக்  கண்டேன்.  {Eccl  4:15}

 

அவர்களுக்குமுன்  அப்படிச்  செய்த  ஜனங்களின்  இலக்கத்திற்கு  முடிவில்லை;  இனி  இருப்பவர்கள்  இவன்மேலும்  பிரியம்  வைக்காமற்போவார்கள்;  இதுவும்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  {Eccl  4:16}

 

நீ  தேவாலயத்துக்குப்  போகும்போது  உன்  நடையைக்  காத்துக்கொள்;  மூடர்  பலியிடுவதுபோலப்  பலியிடுவதைப்பார்க்கிலும்  செவிகொடுக்கச்  சேர்வதே  நலம்.  தாங்கள்  செய்கிறது  தீமையென்று  அறியாதிருக்கிறார்கள்.  {Eccl  5:1}

 

தேவசமுகத்தில்  நீ  துணிகரமாய்  உன்  வாயினால்  பேசாமலும்,  மனம்பதறி  ஒரு  வார்த்தையையும்  சொல்லாமலும்  இரு;  தேவன்  வானத்திலிருக்கிறார்;  நீ  பூமியிலிருக்கிறாய்,  ஆதலால்  உன்  வார்த்தைகள்  சுருக்கமாயிருப்பதாக.  {Eccl  5:2}

 

தொல்லையின்  திரட்சியினால்  சொப்பனம்  பிறக்கிறதுபோல,  வார்த்தைகளின்  திரட்சியினால்  மூடனுடைய  சத்தம்  பிறக்கும்.  {Eccl  5:3}

 

நீ  தேவனுக்கு  ஒரு  பொருத்தனை  பண்ணிக்கொண்டால்,  அதைச்  செலுத்தத்  தாமதியாதே;  அவர்  மூடரில்  பிரியப்படுகிறதில்லை;  நீ  நேர்ந்துகொண்டதைச்  செய்.  {Eccl  5:4}

 

நீ  நேர்ந்துகொண்டதைச்  செய்யாமற்போவதைப்பார்க்கிலும்,  நேர்ந்துகொள்ளாதிருப்பதே  நலம்.  {Eccl  5:5}

 

உன்  மாம்சத்தைப்  பாவத்துக்குள்ளாக்க  உன்  வாய்க்கு  இடங்கொடாதே;  அது  புத்திபிசகினால்  செய்தது  என்று  தூதனுக்குமுன்  சொல்லாதே;  தேவன்  உன்  வார்த்தைகளினாலே  கோபங்கொண்டு,  உன்  கைகளின்  கிரியையை  அழிப்பானேன்?  {Eccl  5:6}

 

அநேக  சொப்பனங்கள்  மாயையாயிருப்பதுபோல,  அநேக  வார்த்தைகளும்  வியர்த்தமாயிருக்கும்;  ஆகையால்  நீ  தேவனுக்குப்  பயந்திரு.  {Eccl  5:7}

 

ஒரு  தேசத்தில்  ஏழைகள்  ஒடுக்கப்படுகிறதையும்,  நியாயமும்  நீதியும்  புரட்டப்படுகிறதையும்  நீ  காண்பாயானால்,  அதைக்குறித்து  ஆச்சரியப்படாதே;  உயர்ந்தவன்மேல்  உயர்ந்தவன்  காவலாளியாயிருக்கிறான்;  அவர்கள்மேல்  உயர்ந்தவரும்  ஒருவருண்டு.  {Eccl  5:8}

 

பூமியில்  விளையும்  பலன்  யாவருக்குமுரியது;  ராஜாவும்  வயலின்  பலனால்  ஆதரிக்கப்படுகிறான்.  {Eccl  5:9}

 

பணப்பிரியன்  பணத்தினால்  திருப்தியடைவதில்லை;  செல்வப்பிரியன்  செல்வப்பெருக்கினால்  திருப்தியடைவதில்லை;  இதுவும்  மாயையே.  {Eccl  5:10}

 

பொருள்  பெருகினால்  அதைத்  தின்கிறவர்களும்  பெருகுகிறார்கள்;  அதை  உடையவர்கள்  தங்கள்  கண்களினால்  அதைக்  காண்பதேயன்றி  அவர்களுக்குப்  பிரயோஜனம்  என்ன?  {Eccl  5:11}

 

வேலைசெய்கிறவன்  கொஞ்சமாய்ப்  புசித்தாலும்  அதிகமாய்ப்  புசித்தாலும்  அவன்  நித்திரை  இன்பமாயிருக்கும்;  செல்வனுடைய  பெருக்கோ  அவனைத்  தூங்கவொட்டாது.  {Eccl  5:12}

 

சூரியனுக்குக்  கீழே  நான்  கண்ட  வேறொரு  கொடிய  தீங்குமுண்டு;  அதாவது,  ஐசுவரியமானது  அதை  உடையவர்களுக்கே  கேடுண்டாகும்படி  சேகரித்து  வைக்கப்படுவதாம்.  {Eccl  5:13}

 

அந்த  ஐசுவரியம்  விக்கினத்தால்  அழிந்துபோகிறது;  அவன்  ஒரு  புத்திரனைப்  பெறுகிறான்,  அவன்  கையில்  யாதொன்றும்  இல்லை.  {Eccl  5:14}

 

தன்  தாயின்  கர்ப்பத்திலிருந்து  நிர்வாணியாய்  வந்தான்;  வந்ததுபோலவே  நிர்வாணியாய்த்  திரும்பப்போவான்;  அவன்  தன்  பிரயாசத்தினால்  உண்டான  பலனொன்றையும்  தன்  கையிலே  எடுத்துக்கொண்டுபோவதில்லை.  {Eccl  5:15}

 

அவன்  வந்தபிரகாரமே  போகிறான்,  இதுவும்  கொடுமையான  தீங்கு;  அவன்  காற்றுக்குப்  பிரயாசப்பட்டதினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  {Eccl  5:16}

 

அவன்  தன்  நாட்களிலெல்லாம்  இருளிலே  புசித்து,  மிகவும்  சலித்து,  நோயும்  துன்பமும்  அடைகிறான்.  {Eccl  5:17}

 

இதோ,  உயிரோடிருக்கும்படி  தேவன்  அருளிச்செய்த  நாளெல்லாம்  மனுஷன்  புசித்துக்  குடித்து,  சூரியனுக்குக்  கீழே  தான்  படும்  பிரயாசம்  அனைத்தின்  பலனையும்  அநுபவிப்பதே  நலமும்  உத்தமுமான  காரியமென்று  நான்  கண்டேன்,  இதுவே  அவன்  பங்கு.  {Eccl  5:18}

 

தேவன்  ஐசுவரியத்தையும்  சம்பத்தையும்  எவனுக்குக்  கொடுத்திருக்கிறாரோ,  அவன்  அதிலே  புசிக்கவும்,  தன்  பங்கைப்  பெறவும்,  தன்  பிரயாசத்திலே  மகிழ்ச்சியாயிருக்கவும்  அவனுக்கு  அதிகாரம்  அளிப்பது  தேவனுடைய  அநுக்கிரகம்.  {Eccl  5:19}

 

அவனுடைய  இருதயத்திலே  மகிழும்படி  தேவன்  அவனுக்கு  அநுக்கிரகம்  பண்ணுகிறபடியினால்,  அவன்  தன்  ஜீவனுள்ள  நாட்களை  அதிகமாய்  நினையான்.  {Eccl  5:20}

 

சூரியனுக்குக்  கீழே  நான்  கண்ட  வேறொரு  தீங்குமுண்டு;  அது  மனுஷருக்குள்ளே  பெரும்பாலும்  நடந்துவருகிறது.  {Eccl  6:1}

 

அதாவது,  ஒருவனுக்குத்  தேவன்  செல்வத்தையும்  சம்பத்தையும்  கனத்தையும்  கொடுக்கிறார்;  அவன்  என்ன  இச்சித்தாலும்  அதெல்லாம்  அவனுக்குக்  குறைவில்லாமல்  கிடைக்கும்;  ஆனாலும்  அவைகளை  அநுபவிக்கும்  சக்தியைத்  தேவன்  அவனுக்குக்  கொடுக்கவில்லை;  அந்நிய  மனுஷன்  அதை  அநுபவிக்கிறான்;  இதுவும்  மாயையும்,  கொடிய  நோயுமானது.  {Eccl  6:2}

 

ஒருவன்  நூறு  பிள்ளைகளைப்  பெற்று,  அநேகம்  வருஷம்  ஜீவித்து,  தீர்க்காயுசை  அடைந்திருந்தாலும்,  அவன்  ஆத்துமா  அந்தச்  செல்வத்தால்  திருப்தியடையாமலும்,  அவனுக்குப்  பிரேதக்கல்லறை  முதலாய்  இல்லாமலும்  போகுமானால்,  அவனைப்பார்க்கிலும்  கருவழிந்த  பிண்டம்  வாசி  என்கிறேன்.  {Eccl  6:3}

 

அது  மாயையாய்த்  தோன்றி  இருளிலே  மறைந்துபோய்விடுகிறது;  அதின்  பேர்  அந்தகாரத்தால்  மூடப்படும்.  {Eccl  6:4}

 

அது  சூரியனைக்  கண்டதுமில்லை,  ஒன்றையும்  அறிந்ததுமில்லை;  அவனுக்கு  இல்லாத  அமைச்சல்  அதற்கு  உண்டு.  {Eccl  6:5}

 

அவன்  இரண்டாயிரம்  வருஷம்  பிழைத்திருந்தாலும்  ஒரு  நன்மையையும்  காண்பதில்லை;  எல்லாரும்  ஒரே  இடத்துக்குப்  போகிறார்கள்  அல்லவா?  {Eccl  6:6}

 

மனுஷன்  படும்  பிரயாசமெல்லாம்  அவன்  வாய்க்காகத்தானே;  அவன்  மனதுக்கோ  திருப்தியில்லை.  {Eccl  6:7}

 

இப்படியிருக்க,  மூடனைப்பார்க்கிலும்  ஞானிக்கு  உண்டாகும்  மேன்மை  என்ன?  ஜீவனுள்ளோருக்கு  முன்பாக  நடந்துகொள்ளும்படி  அறிந்த  ஏழைக்கும்  உண்டாகும்  மேன்மை  என்ன?  {Eccl  6:8}

 

ஆசையானது  அலைந்துதேடுகிறதைப்  பார்க்கிலும்  கண்  கண்டதே  நலம்;  இதுவும்  மாயையும்,  மனதைச்  சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.  {Eccl  6:9}

 

இருக்கிறவன்  எவனும்  தோன்றுமுன்னமே  பேரிடப்பட்டிருக்கிறான்;  அவன்  மனுஷனென்று  தெரிந்திருக்கிறது;  தன்னிலும்  பலத்தவரோடே  போராட  அவனால்  கூடாது.  {Eccl  6:10}

 

மாயையைப்  பெருகப்பண்ணுகிற  அநேக  விசேஷங்கள்  உண்டாயிருக்கிறபடியால்  அதினாலே  மனுஷருக்குப்  பிரயோஜனமென்ன?  {Eccl  6:11}

 

நிழலைப்போன்ற  மாயையான  தன்  ஜீவகாலத்தைப்  போக்கும்  மனுஷனுக்கு  இந்த  ஜீவனில்  நன்மை  இன்னதென்று  அறிந்தவன்  யார்?  தனக்குப்பின்பு  சூரியனுக்குக்  கீழே  சம்பவிக்குங்காரியம்  இன்னதென்று  மனுஷனுக்கு  அறிவிப்பவன்  யார்?  {Eccl  6:12}

 

பரிமளதைலத்தைப்பார்க்கிலும்  நற்கீர்த்தியும்,  ஒருவனுடைய  ஜநநநாளைப்பார்க்கிலும்  மரணநாளும்  நல்லது.  {Eccl  7:1}

 

விருந்துவீட்டுக்குப்  போவதிலும்  துக்கவீட்டுக்குப்  போவது  நலம்;  இதிலே  எல்லா  மனுஷரின்  முடிவும்  காணப்படும்;  உயிரோடிருக்கிறவன்  இதைத்  தன்  மனதிலே  சிந்திப்பான்.  {Eccl  7:2}

 

நகைப்பைப்  பார்க்கிலும்  துக்கிப்பு  நலம்;  முகதுக்கத்தினாலே  இருதயம்  சீர்ப்படும்.  {Eccl  7:3}

 

ஞானிகளின்  இருதயம்  துக்கவீட்டிலே  இருக்கும்;  மூடரின்  இருதயம்  களிப்புவீட்டிலே  இருக்கும்.  {Eccl  7:4}

 

ஒருவன்  மூடரின்  பாட்டைக்  கேட்பதிலும்,  ஞானியின்  கடிந்துகொள்ளுதலைக்  கேட்பது  நலம்.  {Eccl  7:5}

 

மூடனின்  நகைப்பு  பானையின்கீழ்  எரிகிற  முள்ளுகளின்  படபடப்பைப்போலிருக்கும்;  இதுவும்  மாயையே.  {Eccl  7:6}

 

இடுக்கணானது  ஞானியையும்  பைத்தியக்காரனாக்கும்;  பரிதானம்  இருதயத்தைக்  கெடுக்கும்.  {Eccl  7:7}

 

ஒரு  காரியத்தின்  துவக்கத்தைப்பார்க்கிலும்  அதின்  முடிவு  நல்லது;  பெருமையுள்ளவனைப்பார்க்கிலும்  பொறுமையுள்ளவன்  உத்தமன்.  {Eccl  7:8}

 

உன்  மனதில்  சீக்கிரமாய்க்  கோபங்கொள்ளாதே;  மூடரின்  நெஞ்சிலே  கோபம்  குடிகொள்ளும்.  {Eccl  7:9}

 

இந்நாட்களைப்பார்க்கிலும்  முன்நாட்கள்  நலமாயிருந்தது  என்று  சொல்லாதே;  நீ  இதைக்குறித்துக்  கேட்பது  ஞானமல்ல.  {Eccl  7:10}

 

சுதந்தரத்தோடே  ஞானம்  நல்லது;  சூரியனைக்  காண்கிறவர்களுக்கு  இதினாலே  பிரயோஜனமுண்டு.  {Eccl  7:11}

 

ஞானம்  கேடகம்,  திரவியமும்  கேடகம்;  ஞானம்  தன்னை  உடையவர்களுக்கு  ஜீவனைத்  தரும்;  இதுவே  அறிவின்  மேன்மை.  {Eccl  7:12}

 

தேவனுடைய  செயலைக்  கவனித்துப்பார்;  அவர்  கோணலாக்கினதை  நேர்மையாக்கத்தக்கவன்  யார்?  {Eccl  7:13}

 

வாழ்வுகாலத்தில்  நன்மையை  அநுபவித்திரு,  தாழ்வுகாலத்தில்  சிந்தனைசெய்;  மனுஷன்  தனக்குப்பின்  வருவதொன்றையும்  கண்டுபிடியாதபடிக்குத்  தேவன்  இவ்விரண்டையும்  ஒன்றுக்கொன்று  எதிரிடையாக  வைத்திருக்கிறார்.  {Eccl  7:14}

 

இவை  எல்லாவற்றையும்  என்  மாயையின்  நாட்களில்  கண்டேன்;  தன்  நீதியிலே  கெட்டுப்போகிற  நீதிமானுமுண்டு,  தன்  பாவத்திலே  நீடித்திருக்கிற  பாவியுமுண்டு.  {Eccl  7:15}

 

மிஞ்சின  நீதிமானாயிராதே,  உன்னை  அதிக  ஞானியுமாக்காதே;  உன்னை  நீ  ஏன்  கெடுத்துக்கொள்ளவேண்டும்?  {Eccl  7:16}

 

மிஞ்சின  துஷ்டனாயிராதே,  அதிக  பேதையுமாயிராதே;  உன்  காலத்துக்குமுன்னே  நீ  ஏன்  சாகவேண்டும்?  {Eccl  7:17}

 

நீ  இதைப்  பற்றிக்கொள்வதும்  அதைக்  கைவிடாதிருப்பதும்  நலம்;  தேவனுக்குப்  பயப்படுகிறவன்  இவைகள்  எல்லாவற்றினின்றும்  காக்கப்படுவான்.  {Eccl  7:18}

 

நகரத்திலுள்ள  பத்து  அதிபதிகளைப்பார்க்கிலும்,  ஞானம்  ஞானியை  அதிக  பெலவானாக்கும்.  {Eccl  7:19}

 

ஒரு  பாவமும்  செய்யாமல்,  நன்மையே  செய்யத்தக்க  நீதிமான்  பூமியிலில்லை.  {Eccl  7:20}

 

சொல்லப்படும்  எல்லா  வார்த்தைகளையும்  கவனியாதே;  கவனித்தால்  உன்  வேலைக்காரன்  உன்னை  நிந்திப்பதைக்  கேள்விப்படவேண்டியதாகும்.  {Eccl  7:21}

 

அநேகந்தரம்  நீயும்  பிறரை  நிந்தித்தாயென்று,  உன்  மனதுக்குத்  தெரியுமே.  {Eccl  7:22}

 

இவை  எல்லாவற்றையும்  ஞானத்தினால்  சோதித்துப்பார்த்தேன்:  நான்  ஞானவானாவேன்  என்றேன்,  அது  எனக்குத்  தூரமாயிற்று.  {Eccl  7:23}

 

தூரமும்  மகா  ஆழமுமாயிருக்கிறதைக்  கண்டடைகிறவன்  யார்?  {Eccl  7:24}

 

ஞானத்தையும்,  காரணகாரியத்தையும்  விசாரித்து  ஆராய்ந்து  அறியவும்,  மதிகேட்டின்  ஆகாமியத்தையும்  புத்திமயக்கத்தின்  பைத்தியத்தையும்  அறியவும்  என்  மனதைச்  செலுத்தினேன்.  {Eccl  7:25}

 

கண்ணிகளும்  வலைகளுமாகிய  நெஞ்சமும்,  கயிறுகளுமாகிய  கைகளுமுடைய  ஸ்திரீயானவள்,  சாவிலும்  அதிக  கசப்புள்ளவளென்று  கண்டேன்;  தேவனுக்கு  முன்பாகச்  சற்குணனாயிருக்கிறவன்  அவளுக்குத்  தப்புவான்;  பாவியோ  அவளால்  பிடிபடுவான்.  {Eccl  7:26}

 

காரியத்தை  அறியும்படிக்கு  ஒவ்வொன்றாய்  விசாரணைபண்ணி,  இதோ,  இதைக்  கண்டுபிடித்தேன்  என்று  பிரசங்கி  சொல்லுகிறான்:  {Eccl  7:27}

 

என்  மனம்  இன்னும்  ஒன்றைத்  தேடுகிறது,  அதை  நான்  கண்டுபிடிக்கவில்லை;  ஆயிரம்பேருக்குள்ளே  ஒரு  புருஷனைக்  கண்டேன்;  இவர்களெல்லாருக்குள்ளும்  ஒரு  ஸ்திரீயை  நான்  காணவில்லை.  {Eccl  7:28}

 

இதோ,  தேவன்  மனுஷனைச்  செம்மையானவனாக  உண்டாக்கினார்;  அவர்களோ  அநேக  உபாயதந்திரங்களைத்  தேடிக்கொண்டார்கள்;  இதைமாத்திரம்  கண்டேன்.  {Eccl  7:29}

 

ஞானமுள்ளவனுக்கு  ஒப்பானவன்  யார்?  காரியத்தின்  தாற்பரியத்தை  அறிந்தவன்  யார்?  மனுஷனுடைய  ஞானம்  அவன்  முகத்தைப்  பிரகாசிக்கப்பண்ணும்,  அவன்  முகத்தின்  மூர்க்கம்  மாறும்.  {Eccl  8:1}

 

ராஜாவின்  கட்டளையைக்  கைக்கொண்டு  நட  என்று  நான்  உனக்கு  எச்சரிக்கிறேன்;  நீ  தேவனுக்கு  இட்ட  ஆணையின்படியே  இதைச்  செய்.  {Eccl  8:2}

 

நீ  அவன்  சமுகத்தை  விட்டுவிலகத்  துரிதப்படாதே;  பொல்லாத  காரியத்திலே  பிடிவாதமாய்  நில்லாதே;  அவன்  தனக்கு  இஷ்டமானதெல்லாம்  செய்வான்.  {Eccl  8:3}

 

ராஜாவின்  வார்த்தை  எங்கேயோ  அங்கே  அதிகாரம்  உண்டு;  நீர்  என்ன  செய்கிறீர்  என்று  அவனுக்குச்  சொல்லத்தக்கவன்  யார்?  {Eccl  8:4}

 

கற்பனையைக்  கைக்கொள்ளுகிறவன்  ஒரு  தீங்கையும்  அறியான்;  ஞானியின்  இருதயம்  காலத்தையும்  நியாயத்தையும்  அறியும்.  {Eccl  8:5}

 

எல்லாக்  காரியத்துக்கும்  காலமும்  நியாயமுமுண்டு;  ஆதலால்  மனுஷனுக்கு  நேரிடும்  சஞ்சலம்  மிகுதி.  {Eccl  8:6}

 

இன்னது  சம்பவிக்கும்  என்று  அவன்  அறியானே;  அது  இன்னவிதமாய்ச்  சம்பவிக்கும்  என்று  அவனுக்குச்  சொல்லத்தக்கவன்  யார்?  {Eccl  8:7}

 

ஆவியை  விடாதிருக்கிறதற்கு  ஆவியின்மேல்  ஒரு  மனுஷனுக்கும்  அதிகாரமில்லை;  மரணநாளின்மேலும்  அவனுக்கு  அதிகாரமில்லை;  அந்தப்  போருக்கு  நீங்கிப்போவதுமில்லை;  துன்மார்க்கரைத்  துன்மார்க்கம்  விடுவிக்கவுமாட்டாது.  {Eccl  8:8}

 

இவையெல்லாவற்றையும்  நான்  பார்த்து,  சூரியனுக்குக்  கீழே  செய்யப்படும்  எல்லாக்  கிரியைகளையும்  சிந்தித்தேன்;  ஒரு  மனுஷன்  தனக்கே  கேடுண்டாக  வேறொரு  மனுஷனை  ஆளுகிற  காலமுமுண்டு.  {Eccl  8:9}

 

பரிசுத்த  ஸ்தலத்துக்குப்  போக்குவரவு  செய்த  துன்மார்க்கர்  அடக்கம்பண்ணப்பட்டதைக்  கண்டேன்;  அவர்கள்  அப்படி  செய்துவந்த  பட்டணத்திலேயே  மறக்கப்பட்டுப்போனார்கள்;  இதுவும்  மாயையே.  {Eccl  8:10}

 

துர்க்கிரியைக்குத்தக்க  தண்டனை  சீக்கிரமாய்  நடவாதபடியால்,  மனுபுத்திரரின்  இருதயம்  பொல்லாப்பைச்  செய்ய  அவர்களுக்குள்ளே  துணிகரங்கொண்டிருக்கிறது.  {Eccl  8:11}

 

பாவி  நூறுதரம்  பொல்லாப்பைச்  செய்து  நீடித்து  வாழ்ந்தாலும்  என்ன?  தேவனுக்கு  அஞ்சி,  அவருக்கு  முன்பாகப்  பயந்திருப்பவர்களே  நன்றாயிருப்பார்கள்  என்று  அறிந்திருக்கிறேன்.  {Eccl  8:12}

 

துன்மார்க்கனோ  நன்றாயிருப்பதில்லை;  அவன்  தேவனுக்கு  முன்பாகப்  பயப்படாதிருக்கிறபடியால்,  நிழலைப்போலிருக்கிற  அவனுடைய  வாழ்நாள்  நீடித்திருப்பதுமில்லை.  {Eccl  8:13}

 

பூமியின்மேல்  நடக்கிற  வேறொரு  மாயையான  காரியமுமுண்டு;  அதாவது,  துன்மார்க்கரின்  கிரியைக்கு  வருவதுபோல,  நீதிமான்களுக்கும்  வரும்;  நீதிமான்களின்  கிரியைக்கு  வருவதுபோல,  துன்மார்க்கருக்கும்  வரும்;  இதுவும்  மாயை  என்றேன்.  {Eccl  8:14}

 

ஆகையால்  நான்  களிப்பைப்  புகழ்ந்தேன்;  புசிப்பதும்  குடிப்பதும்  மகிழ்வதுமேயல்லாமல்  சூரியனுக்குக்கீழே  மனுஷனுக்கு  வேறொரு  நன்மையும்  இல்லை;  சூரியனுக்குக்கீழே  தேவன்  அவனுக்குத்  தந்த  ஜீவகாலத்தில்  அவன்  பிரயாசத்தினால்  அவனுக்கு  நிலைக்கும்  பலன்  இதுவே.  {Eccl  8:15}

 

நான்  ஞானத்தை  அறியவும்,  மனுஷன்  இரவும்  பகலும்  கண்ணுறக்கமில்லாமல்  பூமியிலே  செய்யும்  வேலைகளைப்  பார்க்கவும்  என்  மனதைச்  செலுத்தினபோது,  {Eccl  8:16}

 

தேவன்  செய்யும்  சகல  கிரியைகளையும்  நான்  கவனித்துப்பார்த்து,  சூரியனுக்குக்கீழே  செய்யப்படும்  கிரியையை  மனுஷன்  கண்டுபிடிக்கக்கூடாதென்று  கண்டேன்.  அதை  அறியும்படி  மனுஷன்  பிரயாசப்பட்டாலும்  அறியமாட்டான்;  அதை  அறியலாம்  என்று  ஞானி  எண்ணினாலும்  அவனும்  அதை  அறிந்துகொள்ளமாட்டான்.  {Eccl  8:17}

 

இவை  எல்லாவற்றையும்  நான்  என்  மனதிலே  வகையறுக்கும்படிக்குச்  சிந்தித்தேன்;  நீதிமான்களும்  ஞானிகளும்,  தங்கள்  கிரியைகளுடன்,  தேவனுடைய  கைவசமாயிருக்கிறார்கள்;  தனக்குமுன்  இருக்கிறவர்களைக்கொண்டு  ஒருவனும்  விருப்பையாவது  வெறுப்பையாவது  அறியான்.  {Eccl  9:1}

 

எல்லாருக்கும்  எல்லாம்  ஒரேவிதமாய்ச்  சம்பவிக்கும்;  சன்மார்க்கனுக்கும்  துன்மார்க்கனுக்கும்,  நற்குணமும்  சுத்தமுமுள்ளவனுக்கும்  சுத்தமில்லாதவனுக்கும்,  பலியிடுகிறவனுக்கும்  பலியிடாதவனுக்கும்,  ஒரேவிதமாய்ச்  சம்பவிக்கும்;  நல்லவனுக்கு  எப்படியோ  பொல்லாதவனுக்கும்  அப்படியே;  ஆணையிடுகிறவனுக்கும்  ஆணையிடப்  பயப்படுகிறவனுக்கும்  சமமாய்ச்  சம்பவிக்கும்.  {Eccl  9:2}

 

எல்லாருக்கும்  ஒரேவிதமாய்ச்  சம்பவிக்கிறது  சூரியனுக்குக்  கீழே  நடக்கிறதெல்லாவற்றிலும்  விசேஷித்த  தீங்காம்;  ஆதலால்  மனுபுத்திரரின்  இருதயம்  தீமையினால்  நிறைந்திருக்கிறது;  அவர்கள்  உயிரோடிருக்கும்  நாளளவும்  அவர்கள்  இருதயம்  பைத்தியங்கொண்டிருந்து,  பின்பு  அவர்கள்  செத்தவர்களிடத்திற்குப்  போகிறார்கள்.  {Eccl  9:3}

 

இதற்கு  நீங்கலாயிருக்கிறவன்  யார்?  உயிரோடிருக்கிற  அனைவரிடத்திலும்  நம்பிக்கையுண்டு;  செத்த  சிங்கத்தைப்பார்க்கிலும்  உயிருள்ள  நாய்  வாசி.  {Eccl  9:4}

 

உயிரோடிருக்கிறவர்கள்  தாங்கள்  மரிப்பதை  அறிவார்களே,  மரித்தவர்கள்  ஒன்றும்  அறியார்கள்;  இனி  அவர்களுக்கு  ஒரு  பலனுமில்லை,  அவர்கள்  பேர்முதலாய்  மறக்கப்பட்டிருக்கிறது.  {Eccl  9:5}

 

அவர்கள்  சிநேகமும்,  அவர்கள்  பகையும்,  அவர்கள்  பொறாமையும்  எல்லாம்  ஒழிந்துபோயிற்று;  சூரியனுக்குக்  கீழே  செய்யப்படுகிறதொன்றிலும்  அவர்களுக்கு  இனி  என்றைக்கும்  பங்கில்லை.  {Eccl  9:6}

 

நீ  போய்,  உன்  ஆகாரத்தைச்  சந்தோஷத்துடன்  புசித்து,  உன்  திராட்சரசத்தை  மனமகிழ்ச்சியுடன்  குடி;  தேவன்  உன்  கிரியைகளை  அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.  {Eccl  9:7}

 

உன்  வஸ்திரங்கள்  எப்பொழுதும்  வெள்ளையாயும்,  உன்  தலைக்கு  எண்ணெய்  குறையாததாயும்  இருப்பதாக.  {Eccl  9:8}

 

சூரியனுக்குக்கீழே  தேவன்  உனக்கு  நியமித்திருக்கிற  மாயையான  நாட்களிலெல்லாம்  நீ  நேசிக்கிற  மனைவியோடே  நிலையில்லாத  இந்த  ஜீவவாழ்வை  அநுபவி;  இந்த  ஜீவனுக்குரிய  வாழ்விலும்,  நீ  சூரியனுக்குக்கீழே  படுகிற  பிரயாசத்திலும்  பங்கு  இதுவே.  {Eccl  9:9}

 

செய்யும்படி  உன்  கைக்கு  நேரிடுகிறது  எதுவோ,  அதை  உன்  பெலத்தோடே  செய்;  நீ  போகிற  பாதாளத்திலே  செய்கையும்  வித்தையும்  அறிவும்  ஞானமும்  இல்லையே.  {Eccl  9:10}

 

நான்  திரும்பிக்கொண்டு  சூரியனுக்குக்  கீழே  கண்டதாவது:  ஓடுகிறதற்கு  வேகமுள்ளவர்களின்  வேகமும்,  யுத்தத்துக்குச்  சவுரியவான்களின்  சவுரியமும்  போதாது;  பிழைப்புக்கு  ஞானமுள்ளவர்களின்  ஞானமும்  போதாது;  ஐசுவரியம்  அடைகிறதற்குப்  புத்திமான்களின்  புத்தியும்  போதாது;  தயவு  அடைகிறதற்கு  வித்துவான்களின்  அறிவும்  போதாது;  அவர்களெல்லாருக்கும்  சமயமும்  தேவச்செயலும்  நேரிடவேண்டும்.  {Eccl  9:11}

 

தன்  காலத்தை  மனுஷன்  அறியான்;  மச்சங்கள்  கொடிய  வலையில்  அகப்படுவதுபோலவும்,  குருவிகள்  கண்ணியில்  பிடிபடுவதுபோலவும்,  மனுபுத்திரர்  பொல்லாத  காலத்திலே  சடிதியில்  தங்களுக்கு  நேரிடும்  ஆபத்தில்  அகப்படுவார்கள்.  {Eccl  9:12}

 

சூரியனுக்குக்  கீழே  ஞானமுள்ள  காரியத்தையும்  கண்டேன்;  அது  என்  பார்வைக்குப்  பெரிதாய்த்  தோன்றிற்று.  {Eccl  9:13}

 

ஒரு  சிறு  பட்டணம்  இருந்தது,  அதிலே  இருந்த  குடிகள்  கொஞ்ச  மனிதர்;  அதற்கு  விரோதமாய்  ஒரு  பெரிய  ராஜா  வந்து,  அதை  வளைந்துகொண்டு,  அதற்கு  எதிராகப்  பெரிய  கொத்தளங்களைக்  கட்டினான்.  {Eccl  9:14}

 

அதிலே  ஞானமுள்ள  ஒரு  ஏழை  மனிதன்  இருந்தான்;  அவன்  தன்  ஞானத்தினாலே  அந்தப்  பட்டணத்தை  விடுவித்தான்;  ஆனாலும்  அந்த  ஏழை  மனிதனை  ஒருவரும்  நினைக்கவில்லை.  {Eccl  9:15}

 

ஆகையால்  ஏழையின்  ஞானம்  அசட்டைபண்ணப்பட்டு,  அவன்  வார்த்தைகள்  கேட்கப்படாமற்போனாலும்,  பெலத்தைப்பார்க்கிலும்  ஞானமே  உத்தமம்  என்றேன்.  {Eccl  9:16}

 

மூடரை  ஆளும்  அதிபதியின்  கூக்குரலைப்பார்க்கிலும்  ஞானிகளுடைய  அமரிக்கையான  வார்த்தைகளே  கேட்கப்படத்தக்கவைகள்.  {Eccl  9:17}

 

யுத்த  ஆயுதங்களைப்பார்க்கிலும்  ஞானமே  நலம்;  பாவியான  ஒருவன்  மிகுந்த  நன்மையைக்  கெடுப்பான்.  {Eccl  9:18}

 

செத்த  ஈக்கள்  தைலக்காரனுடைய  பரிமளதைலத்தை  நாறிக்  கெட்டுப்போகப்பண்ணும்;  ஞானத்திலும்  கனத்திலும்  பேர்பெற்றவனைச்  சொற்ப  மதியீனமும்  அப்படியே  செய்யும்.  {Eccl  10:1}

 

ஞானியின்  இருதயம்  வலதுகையிலும்,  மூடனின்  இருதயமோ  இடதுகையிலும்  இருக்கும்.  {Eccl  10:2}

 

மூடன்  வழியிலே  நடக்கிறபோதும்  மதிகெட்டவனாயிருக்கிறான்;  தான்  மூடனென்று  அவன்  எல்லாருக்கும்  சொல்லுகிறான்.  {Eccl  10:3}

 

அதிபதியின்  கோபம்  உன்மேல்  எழும்பினால்  உன்  ஸ்தானத்தை  விட்டு  விலகாதே;  இணங்குதல்  பெரிய  குற்றங்களையும்  அமர்த்திப்போடும்.  {Eccl  10:4}

 

நான்  சூரியனுக்குக்கீழே  கண்ட  ஒரு  தீங்குண்டு,  அது  அதிபதியினிடத்தில்  தோன்றும்  தப்பிதமே.  {Eccl  10:5}

 

மூடர்  மகா  உயர்ந்த  நிலையில்  வைக்கப்படுகிறார்கள்;  சீமான்களோ  தாழ்ந்த  நிலையில்  உட்கார்ந்திருக்கிறார்கள்.  {Eccl  10:6}

 

வேலைக்காரர்  குதிரைகள்மேல்  ஏறிப்போகிறதையும்,  பிரபுக்கள்  வேலைக்காரர்போல்  தரையிலே  நடக்கிறதையும்  கண்டேன்.  {Eccl  10:7}

 

படுகுழியை  வெட்டுகிறவன்  அதிலே  விழுவான்;  அடைப்பைப்  பிடுங்குகிறவனைப்  பாம்பு  கடிக்கும்.  {Eccl  10:8}

 

கல்லுகளைப்  பேர்க்கிறவன்  அவைகளால்  காயப்படுவான்;  மரத்தைப்  பிளக்கிறவன்  அதினால்  மோசப்படுவான்.  {Eccl  10:9}

 

இருப்பு  ஆயுதம்  மழுங்கலாயிருக்க,  அதை  ஒருவன்  தீட்டாமற்போனால்,  அதிகபலத்தைப்  பிரயோகம்பண்ணவேண்டியதாகும்;  ஆகையால்  ஒரு  காரியத்தைச்  செவ்வையாய்ச்  செய்வதற்கு  ஞானமே  பிரதானம்.  {Eccl  10:10}

 

தடைகட்டப்படாத  பாம்பு  கடிக்குமே,  அலப்புவாயனும்  அதற்கு  ஒப்பானவன்.  {Eccl  10:11}

 

ஞானியினுடைய  வாய்மொழிகள்  தயையுள்ளவைகள்;  மூடனுடைய  உதடுகளோ  அவனையே  விழுங்கும்.  {Eccl  10:12}

 

அவன்  வாய்மொழிகளின்  துவக்கம்  மதியீனமும்,  அவன்  வாக்கின்  முடிவு  கொடிய  பைத்தியமுமாம்.  {Eccl  10:13}

 

மூடன்  மிகுதியாய்ப்  பேசுகிறான்,  நடக்கப்போகிறது  இன்னதென்று  மனுஷன்  அறியான்;  தனக்குப்பிற்பாடு  சம்பவிக்கப்போகிறதை  அவனுக்கு  அறிவிப்பவன்  யார்?  {Eccl  10:14}

 

ஊருக்குப்  போகும்  வழியை  மூடன்  அறியாததினால்,  அவன்  தொல்லை  ஒவ்வொருவரையும்  இளைக்கப்பண்ணும்.  {Eccl  10:15}

 

ராஜா  சிறுபிள்ளையுமாய்,  பிரபுக்கள்  அதிகாலமே  உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட  தேசமே,  உனக்கு  ஐயோ!  {Eccl  10:16}

 

ராஜா  குலமகனுமாய்,  பிரபுக்கள்  வெறிக்க  உண்ணாமல்  பெலன்கொள்ள  ஏற்றவேளையில்  உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட  தேசமே,  நீ  பாக்கியமுள்ளது.  {Eccl  10:17}

 

மிகுந்த  சோம்பலினால்  மேல்மச்சுப்  பழுதாகும்;  கைகளின்  நெகிழ்வினாலே  வீடு  ஒழுக்காகும்.  {Eccl  10:18}

 

விருந்து  சந்தோஷத்துக்கென்று  செய்யப்படும்;  திராட்சரசம்  ஜீவனுள்ளோரைக்  களிப்பாக்கும்;  பணமோ  எல்லாவற்றிற்கும்  உதவும்.  {Eccl  10:19}

 

ராஜாவை  உன்  மனதிலும்  நிந்தியாதே,  ஐசுவரியவானை  உன்  படுக்கையிலும்  நிந்தியாதே;  ஆகாயத்துப்  பறவை  அந்தச்  சத்தத்தைக்  கொண்டுபோகும்,  செட்டைகளுள்ளது  அந்தச்  செய்தியை  அறிவிக்கும்.  {Eccl  10:20}

 

உன்  ஆகாரத்தைத்  தண்ணீர்கள்மேல்  போடு;  அநேக  நாட்களுக்குப்  பின்பு  அதின்  பலனைக்  காண்பாய்.  {Eccl  11:1}

 

ஏழுபேருக்கும்  எட்டுபேருக்கும்  பங்கிட்டுக்கொடு;  பூமியின்மேல்  என்ன  ஆபத்து  நேரிடுமோ  உனக்குத்  தெரியாது.  {Eccl  11:2}

 

மேகங்கள்  நிறைந்திருந்தால்  மழையைப்  பூமியின்மேல்  பொழியும்;  மரமானது  தெற்கே  விழுந்தாலும்  வடக்கே  விழுந்தாலும்,  விழுந்த  இடத்திலேயே  மரம்  கிடக்கும்.  {Eccl  11:3}

 

காற்றைக்  கவனிக்கிறவன்  விதைக்கமாட்டான்;  மேகங்களை  நோக்குகிறவன்  அறுக்கமாட்டான்.  {Eccl  11:4}

 

ஆவியின்  வழி  இன்னதென்றும்,  கர்ப்பவதியின்  வயிற்றில்  எலும்புகள்  உருவாகும்  விதம்  இன்னதென்றும்  நீ  அறியாதிருக்கிறதுபோலவே,  எல்லாவற்றையும்  செய்கிற  தேவனுடைய  செயல்களையும்  நீ  அறியாய்.  {Eccl  11:5}

 

காலையிலே  உன்  விதையை  விதை;  மாலையிலே  உன்  கையை  நெகிழவிடாதே;  அதுவோ,  இதுவோ,  எது  வாய்க்குமோ  என்றும்,  இரண்டும்  சரியாய்ப்  பயன்படுமோ  என்றும்  நீ  அறியாயே.  {Eccl  11:6}

 

வெளிச்சம்  இன்பமும்,  சூரியனைக்  காண்பது  கண்களுக்குப்  பிரியமுமாமே.  {Eccl  11:7}

 

மனுஷன்  அநேக  வருஷம்  ஜீவித்து,  அவைகளிலெல்லாம்  மகிழ்ச்சியாயிருந்தாலும்,  அவன்  இருளின்  நாட்களையும்  நினைக்கவேண்டும்;  அவைகள்  அநேகமாயிருக்கும்;  வந்து  சம்பவிப்பதெல்லாம்  மாயையே.  {Eccl  11:8}

 

வாலிபனே!  உன்  இளமையிலே  சந்தோஷப்படு,  உன்  வாலிப  நாட்களிலே  உன்  இருதயம்  உன்னைப்  பூரிப்பாக்கட்டும்;  உன்  நெஞ்சின்  வழிகளிலும்,  உன்  கண்ணின்  காட்சிகளிலும்  நட;  ஆனாலும்  இவையெல்லாவற்றினிமித்தமும்  தேவன்  உன்னை  நியாயத்திலே  கொண்டுவந்து  நிறுத்துவார்  என்று  அறி.  {Eccl  11:9}

 

நீ  உன்  இருதயத்திலிருந்து  சஞ்சலத்தையும்,  உன்  மாம்சத்திலிருந்து  தீங்கையும்  நீக்கிப்போடு;  இளவயதும்  வாலிபமும்  மாயையே.  {Eccl  11:10}

 

நீ  உன்  வாலிபப்பிராயத்திலே  உன்  சிருஷ்டிகரை  நினை;  தீங்குநாட்கள்  வராததற்குமுன்னும்,  எனக்குப்  பிரியமானவைகளல்ல  என்று  நீ  சொல்லும்  வருஷங்கள்  சேராததற்குமுன்னும்,  {Eccl  12:1}

 

சூரியனும்,  வெளிச்சமும்,  சந்திரனும்,  நட்சத்திரங்களும்,  அந்தகாரப்படாததற்குமுன்னும்,  {Eccl  12:2}

 

மழைக்குப்பின்  மேகங்கள்  திரும்பத்  திரும்ப  வராததற்குமுன்னும்,  வீட்டுக்காவலாளிகள்  தள்ளாடி,  பெலசாலிகள்  கூனிப்போய்,  ஏந்திரம்  அரைக்கிறவர்கள்  கொஞ்சமானதினால்  ஓய்ந்து,  பலகணிவழியாய்ப்  பார்க்கிறவர்கள்  இருண்டுபோகிறதற்குமுன்னும்,  {Eccl  12:3}

 

ஏந்திர  சத்தம்  தாழ்ந்ததினால்  தெருவாசலின்  கதவுகள்  அடைபட்டு,  குருவியின்  சத்தத்துக்கும்  எழுந்திருக்கவேண்டியதாகி,  கீதவாத்தியக்  கன்னிகைகளெல்லாம்  அடங்கிப்போகாததற்குமுன்னும்,  {Eccl  12:4}

 

மேட்டுக்காக  அச்சமுண்டாகி,  வழியிலே  பயங்கள்  தோன்றி,  வாதுமைமரம்  பூப்பூத்து,  வெட்டுக்கிளியும்  பாரமாகி,  பசித்தீபனமும்  அற்றுப்போகாததற்கு  முன்னும்,  மனுஷன்  தன்  நித்திய  வீட்டுக்குப்  போகிறதினாலே,  துக்கங்கொண்டாடுகிறவர்கள்  வீதியிலே  திரியாததற்குமுன்னும்,  {Eccl  12:5}

 

வெள்ளிக்கயிறு  கட்டுவிட்டு,  பொற்கிண்ணி  நசுங்கி,  ஊற்றின்  அருகே  சால்  உடைந்து,  துரவண்டையில்  உருளை  நொறுங்கி,  {Eccl  12:6}

 

இவ்விதமாய்  மண்ணானது  தான்  முன்னிருந்த  பூமிக்குத்  திரும்பி,  ஆவி  தன்னைத்  தந்த  தேவனிடத்திற்கு  மறுபடியும்  போகாததற்குமுன்னும்,  அவரை  உன்  வாலிபப்பிராயத்திலே  நினை.  {Eccl  12:7}

 

மாயை  மாயை,  எல்லாம்  மாயை  என்று  பிரசங்கி  சொல்லுகிறான்.  {Eccl  12:8}

 

மேலும்,  பிரசங்கி  ஞானவானாயிருந்தபடியால்,  அவன்  ஜனத்துக்கு  அறிவைப்போதித்து,  கவனமாய்க்  கேட்டாராய்ந்து,  அநேகம்  நீதிமொழிகளைச்  சேர்த்து  எழுதினான்.  {Eccl  12:9}

 

இதமான  வார்த்தைகளைக்  கண்டுபிடிக்கப்  பிரசங்கி  வகைதேடினான்;  எழுதின  வாக்கியங்கள்  செவ்வையும்  சத்தியமுமானவைகள்.  {Eccl  12:10}

 

ஞானிகளின்  வாக்கியங்கள்  தாற்றுக்கோல்கள்போலவும்  சங்கத்தலைவர்களால்  அறையப்பட்ட  ஆணிகள்போலவும்  இருக்கிறது;  அவைகள்  ஒரே  மேய்ப்பனால்  அளிக்கப்பட்டது.  {Eccl  12:11}

 

என்  மகனே!  இவைகளினாலே  புத்தியடைவாயாக;  அநேகம்  புஸ்தகங்களை  உண்டுபண்ணுகிறதற்கு  முடிவில்லை;  அதிக  படிப்பு  உடலுக்கு  இளைப்பு.  {Eccl  12:12}

 

காரியத்தின்  கடைத்தொகையைக்  கேட்போமாக,  தேவனுக்குப்  பயந்து,  அவர்  கற்பனைகளைக்  கைக்கொள்;  எல்லா  மனுஷர்மேலும்  விழுந்த  கடமை  இதுவே.  {Eccl  12:13}

 

ஒவ்வொரு  கிரியையையும்,  அந்தரங்கமான  ஒவ்வொரு  காரியத்தையும்,  நன்மையானாலும்  தீமையானாலும்,  தேவன்  நியாயத்திலே  கொண்டுவருவார்.  {Eccl  12:14}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!