இந்துதேசம்முதல்<India> எத்தியோப்பியா<Ethiopia> தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின்<Ahasuerus> நாட்களிலே சம்பவித்ததாவது: {Esth 1:1}
ராஜாவாகிய அகாஸ்வேரு<Ahasuerus> சூசான்<Shushan> அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான். {Esth 1:2}
அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா<Persia> மேதியா<Media> தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள். {Esth 1:3}
அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான். {Esth 1:4}
அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான்<Shushan> அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான். {Esth 1:5}
அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது. {Esth 1:6}
பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது. {Esth 1:7}
அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம் பண்ணவில்லை. {Esth 1:8}
ராஜஸ்திரீயாகிய வஸ்தியும்<Vashti> ராஜாவாகிய அகாஸ்வேருவின்<Ahasuerus> அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள். {Esth 1:9}
ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின்<Vashti> சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்குமுன்பாக அழைத்துவரவேண்டுமென்று, {Esth 1:10}
ராஜாவாகிய அகாஸ்வேருவின்<Ahasuerus> சமுகத்தில் சேவிக்கிற மெகுமான்<Mehuman>, பிஸ்தா<Biztha>, அற்போனா<Harbona>, பிக்தா<Bigtha>, அபக்தா<Abagtha>, சேதார்<Zethar>, கர்காஸ்<Carcas> என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான். {Esth 1:11}
ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி<Vashti> வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான். {Esth 1:12}
அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா<Carshena>, சேதார்<Shethar>, அத்மாதா<Admatha>, தர்ஷீஸ்<Tarshish>, மேரேஸ்<Meres>, மர்சேனா<Marsena>, மெமுகான்<Memucan> என்னும் பெர்சியர்<Persia> மேதியருடைய<Media> ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள். {Esth 1:13}
ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி: {Esth 1:14}
ராஜாவாகிய அகாஸ்வேரு<Ahasuerus> பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி<Vashti> செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். {Esth 1:15}
அப்பொழுது மெமுகான்<Memucan> ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி<Vashti> ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய<Ahasuerus> சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள். {Esth 1:16}
ராஜாவாகிய அகாஸ்வேரு<Ahasuerus> ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத்<Vashti> தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள். {Esth 1:17}
இன்றையதினமே பெர்சியாவிலும்<Persia> மேதியாவிலுமுள்ள<Media> பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். {Esth 1:18}
ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி<Vashti> இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு<Ahasuerus> முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும்<Persians> மேதியாவுக்கும்<Medes> உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். {Esth 1:19}
இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான். {Esth 1:20}
இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய<Memucan> வார்த்தையின்படியே செய்து, {Esth 1:21}
எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான். {Esth 1:22}
இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின்<Ahasuerus> உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும்<Vashti> அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். {Esth 2:1}
அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும். {Esth 2:2}
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான்<Shushan> அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின்<Hege> வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். {Esth 2:3}
அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப்<Vashti> பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாக வேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான். {Esth 2:4}
அப்பொழுது சூசான்<Shushan> அரமனையிலே பென்யமீனியனாகிய<Benjamite> கீசின்<Kish> குமாரன் சீமேயினுடைய<Shimei> மகனாகிய யாவீரின்<Jair> குமாரன் மொர்தெகாய்<Mordecai> என்னும் பேருள்ள ஒரு யூதன்<Jew> இருந்தான். {Esth 2:5}
அவன் பாபிலோன்<Babylon> ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்<Nebuchadnezzar> யூதாவின்<Judah> ராஜாவாகிய எகொனியாவைப்<Jeconiah> பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து<Jerusalem> பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான். {Esth 2:6}
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர்<Esther> என்னும் அத்சாளை<Hadassah> வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய்<Mordecai> அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான். {Esth 2:7}
ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான்<Shushan> அரமனையிலுள்ள யேகாயின்<Hegai> வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும்<Esther> ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின்<Hegai> வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள். {Esth 2:8}
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான். {Esth 2:9}
எஸ்தரோவென்றால்<Esther> தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய்<Mordecai> அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். {Esth 2:10}
எஸ்தருடைய<Esther> சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய்<Mordecai> நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான். {Esth 2:11}
ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில்<Ahasuerus> பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது, {Esth 2:12}
இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். {Esth 2:13}
சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய<Shaashgaz> விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது. {Esth 2:14}
மொர்தெகாய்<Mordecai> தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின்<Abihail> குமாரத்தியுமான எஸ்தர்<Esther> ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய்<Hegai> நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத்<Esther> தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயைகிடைத்தது. {Esth 2:15}
அப்படியே எஸ்தர்<Esther> ராஜாவாகிய அகாஸ்வேரு<Ahasuerus> அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத்<Tebeth> மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். {Esth 2:16}
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல்<Esther> அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின்<Vashti> ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான். {Esth 2:17}
அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம்<Esther> ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான். {Esth 2:18}
இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய்<Mordecai> ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான். {Esth 2:19}
எஸ்தர்<Esther> மொர்தெகாய்<Mordecai> தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர்<Esther> மொர்தெகாய்<Mordecai> இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள். {Esth 2:20}
அந்நாட்களில் மொர்தெகாய்<Mordecai> ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும்<Bigthan> தேரேசும்<Teresh> வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல்<Ahasuerus> கைபோட வகைதேடினார்கள். {Esth 2:21}
இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத்<Mordecai> தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு<Esther> அறிவித்தான்; எஸ்தர்<Esther> மொர்தெகாயின்<Mordecai> பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள். {Esth 2:22}
அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது. {Esth 2:23}
இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு<Ahasuerus> அம்மெதாத்தாவின்<Hammedatha> குமாரனாகிய ஆமான்<Haman> என்னும் ஆகாகியனை<Agagite> மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். {Esth 3:1}
ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை<Haman> வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய்<Mordecai> அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. {Esth 3:2}
அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப்<Mordecai> பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். {Esth 3:3}
இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன்<Jew> என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின்<Mordecai> சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு<Haman> அறிவித்தார்கள். {Esth 3:4}
ஆமான்<Haman> மொர்தெகாய்<Mordecai> தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான். {Esth 3:5}
ஆனாலும் மொர்தெகாயின்மேல்மாத்திரம்<Mordecai> கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின்<Mordecai> ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு<Haman> அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின்<Ahasuerus> ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின்<Mordecai> ஜனமாகிய யூதரையெல்லாம்<Jews> சங்கரிக்க அவன் வகைதேடினான். {Esth 3:6}
ராஜாவாகிய அகாஸ்வேருவின்<Ahasuerus> பன்னிரண்டாம் வருஷம் நிசான்<Nisan> மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு<Haman> முன்பாகப் பூர்<Pur> என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார்மாதமான<Adar> பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது. {Esth 3:7}
அப்பொழுது ஆமான்<Haman> அகாஸ்வேரு<Ahasuerus> ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. {Esth 3:8}
ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான். {Esth 3:9}
அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான<Agagite> அம்மெதாத்தாவின்<Hammedatha> குமாரனும் யூதரின்<Jews> சத்துருவுமாகிய ஆமானிடத்தில்<Haman> கொடுத்து, {Esth 3:10}
ஆமானை<Haman> நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான். {Esth 3:11}
முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான்<Haman> கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்<Ahasuerus> பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது. {Esth 3:12}
ஆதார்<Adar> மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும்<Jews> அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது. {Esth 3:13}
அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது. {Esth 3:14}
அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான்<Shushan> அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும்<Haman> குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான்<Shushan> நகரம் கலங்கிற்று. {Esth 3:15}
நடந்த யாவற்றையும் மொர்தெகாய்<Mordecai> அறிந்தபோது, மொர்தெகாய்<Mordecai> தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு, {Esth 4:1}
ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை. {Esth 4:2}
ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே<Jews> மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். {Esth 4:3}
அப்பொழுது எஸ்தரின்<Esther> தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும்போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய்<Mordecai> உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான். {Esth 4:4}
அப்பொழுது எஸ்தர்<Esther> தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை<Hatach> அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில்<Mordecai> விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள். {Esth 4:5}
அப்படியே ஆத்தாகு<Hatach> ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயினிடத்தில்<Mordecai> புறப்பட்டுப்போனான். {Esth 4:6}
அப்பொழுது மொர்தெகாய்<Mordecai> தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை<Jews> அழிக்கும்படி ஆமான்<Haman> ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி, {Esth 4:7}
யூதர்களை<Jews> அழிக்கும்படி சூசானில்<Shushan> பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக்<Esther> காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான். {Esth 4:8}
ஆத்தாகு<Hatach> வந்து, மொர்தெகாயின்<Mordecai> வார்த்தைகளை எஸ்தருக்கு<Esther> அறிவித்தான். {Esth 4:9}
அப்பொழுது எஸ்தர்<Esther> ஆத்தாகினிடத்தில்<Hatach> மொர்தெகாய்க்குச்<Mordecai> சொல்லியனுப்பினது: {Esth 4:10}
யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். {Esth 4:11}
எஸ்தரின்<Esther> வார்த்தைகளை மொர்தெகாய்க்குத்<Mordecai> தெரிவித்தார்கள். {Esth 4:12}
மொர்தெகாய்<Mordecai> எஸ்தருக்குத்<Esther> திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர்<Jews> தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. {Esth 4:13}
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச்<Jews> சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். {Esth 4:14}
அப்பொழுது எஸ்தர்<Esther> மொர்தெகாய்க்கு<Mordecai> மறுபடியும் சொல்லச்சொன்னது: {Esth 4:15}
நீர் போய், சூசானில்<Shushan> இருக்கிற யூதரையெல்லாம்<Jews> கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். {Esth 4:16}
அப்பொழுது மொர்தெகாய்<Mordecai> புறப்பட்டுப்போய், எஸ்தர்<Esther> தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான். {Esth 4:17}
மூன்றாம் நாளிலே எஸ்தர்<Esther> ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான். {Esth 5:1}
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர்<Esther> முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு<Esther> நீட்டினான்; அப்பொழுது எஸ்தர்<Esther> கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். {Esth 5:2}
ராஜா அவளை நோக்கி: எஸ்தர்<Esther> ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான். {Esth 5:3}
அப்பொழுது எஸ்தர்<Esther>: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும்<Haman> இன்றைக்கு வரவேண்டும் என்றாள். {Esth 5:4}
அப்பொழுது ராஜா எஸ்தர்<Esther> சொற்படி செய்ய, ஆமானைத்<Haman> தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர்<Esther> செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும்<Haman> வந்தார்கள். {Esth 5:5}
விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப்<Esther> பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான். {Esth 5:6}
அதற்கு எஸ்தர்<Esther> பிரதியுத்தரமாக: {Esth 5:7}
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும்<Haman> நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள். {Esth 5:8}
அன்றையதினம் ஆமான்<Haman> சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய்<Mordecai> தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான்<Haman> கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல்<Mordecai> உக்கிரம் நிறைந்தவனானான். {Esth 5:9}
ஆகிலும் ஆமான்<Haman> அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும்<Zeresh> அழைத்து, {Esth 5:10}
தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான்<Haman> அவர்களுக்கு விவரித்துச்சொன்னான். {Esth 5:11}
பின்னையும் ஆமான்<Haman>: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும்<Esther> தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன். {Esth 5:12}
ஆனாலும் அந்த யூதனாகிய<Jew> மொர்தெகாய்<Mordecai> ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான். {Esth 5:13}
அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும்<Zeresh> அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை<Mordecai> தூக்கிப்போடும்படி நாளையத்தினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு<Haman> நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான். {Esth 5:14}
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. {Esth 6:1}
அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும்<Bigthana> தேரேசும்<Teresh>, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல்<Ahasuerus> கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய்<Mordecai> அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது. {Esth 6:2}
அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு<Mordecai> கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள். {Esth 6:3}
ஆமான்<Haman> தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத்<Mordecai> தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான். {Esth 6:4}
ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான்<Haman> முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான். {Esth 6:5}
ஆமான்<Haman> உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான்<Haman>, என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து, {Esth 6:6}
ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், {Esth 6:7}
ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். {Esth 6:8}
அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான். {Esth 6:9}
அப்பொழுது ராஜா ஆமானை<Haman> நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய<Jew> மொர்தெகாய்க்கு<Mordecai> அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான். {Esth 6:10}
அப்படியே ஆமான்<Haman> வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை<Mordecai> அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான். {Esth 6:11}
பின்பு மொர்தெகாய்<Mordecai> ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால்<Haman> சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான். {Esth 6:12}
ஆமான்<Haman> தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும்<Zeresh> தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும்<Zeresh> அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு<Mordecai> முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால்<Jews>, நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள். {Esth 6:13}
அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர்<Esther> செய்த விருந்துக்கு வர ஆமானைத்<Haman> துரிதப்படுத்தினார்கள். {Esth 6:14}
ராஜாத்தியாகிய எஸ்தருடனே<Esther> விருந்துண்ண, ராஜாவும் ஆமானும்<Haman> வந்தபோது, {Esth 7:1}
இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை<Esther> நோக்கி: எஸ்தர்<Esther> ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான். {Esth 7:2}
அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர்<Esther> பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. {Esth 7:3}
எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள். {Esth 7:4}
அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு<Ahasuerus> மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை<Esther> நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான். {Esth 7:5}
அதற்கு எஸ்தர்<Esther>: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான்<Haman> என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான்<Haman> திகிலடைந்தான். {Esth 7:6}
ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப்பந்தியை விட்டெழுந்து, அரமனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான்<Haman> கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில்<Esther> தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்துநின்றான். {Esth 7:7}
ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர்<Esther> உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான்<Haman> விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின்<Haman> முகத்தை மூடிப்போட்டார்கள். {Esth 7:8}
அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா<Harbonah> என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு<Mordecai> ஆமான்<Haman> செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின்<Haman> வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். {Esth 7:9}
அப்படியே ஆமான்<Haman> மொர்தெகாய்க்கு<Mordecai> ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே<Haman> தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது. {Esth 7:10}
அன்றையதினம் அகாஸ்வேரு<Ahasuerus> ராஜா யூதரின்<Jews> சத்துருவாயிருந்த ஆமானின்<Haman> வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக்<Esther> கொடுத்தான்; மொர்தெகாய்<Mordecai> ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர்<Esther> அறிவித்திருந்தாள். {Esth 8:1}
ராஜா ஆமானின்<Haman> கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக்<Mordecai> கொடுத்தான்; எஸ்தர்<Esther> மொர்தெகாயை<Mordecai> ஆமானின்<Haman> அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள். {Esth 8:2}
பின்னும் எஸ்தர்<Esther> ராஜசமுகத்தில் பேசி, அவன் பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான<Agagite> ஆமானின்<Haman> தீவினையையும் அவன் யூதருக்கு<Jews> விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள். {Esth 8:3}
அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு<Esther> நீட்டினான்; எஸ்தர்<Esther> எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்று: {Esth 8:4}
ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை<Jews> அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின்<Hammedatha> குமாரனாகிய ஆமான்<Haman> என்னும் ஆகாகியன்<Agagite> தீவினையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும். {Esth 8:5}
என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள். {Esth 8:6}
அப்பொழுது அகாஸ்வேரு<Ahasuerus> ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும்<Esther> யூதனாகிய<Jew> மொர்தெகாயையும்<Mordecai> நோக்கி: இதோ, ஆமானின்<Haman> வீட்டை எஸ்தருக்குக்<Esther> கொடுத்தேன்; அவன் யூதர்மேல்<Jews> தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள். {Esth 8:7}
இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக<Jews> எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான். {Esth 8:8}
சீவான்<Sivan> மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய்<Mordecai> கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும்<Jews> இந்துதேசம்முதல்<India> எத்தியோப்பியா<Ethiopia> தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும்<Jews> அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது. {Esth 8:9}
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு<Ahasuerus> ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது. {Esth 8:10}
அவைகளில், அகாஸ்வேரு<Ahasuerus> ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார்<Adar> மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே, {Esth 8:11}
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர்<Jews> ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக்<Jews> கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது. {Esth 8:12}
யூதர்<Jews> தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது. {Esth 8:13}
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான்<Shushan> அரமனையில் கொடுக்கப்பட்டது. {Esth 8:14}
அப்பொழுது மொர்தெகாய்<Mordecai> இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்<Shushan> நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது. {Esth 8:15}
இவ்விதமாய் யூதருக்கு<Jews> வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று. {Esth 8:16}
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே<Jews> அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப்<Jews> பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில்<Jews> அமைந்தார்கள். {Esth 8:17}
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார்<Adar> மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின்<Jews> பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள்<Jews> தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது. {Esth 9:1}
யூதர்<Jews> அகாஸ்வேரு<Ahasuerus> ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப் பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று. {Esth 9:2}
நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத்<Jews> துணைநின்றார்கள்; மொர்தெகாயினால்<Mordecai> உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது. {Esth 9:3}
மொர்தெகாய்<Mordecai> ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய்<Mordecai> என்பவன் மேன்மேலும் பெரியவனானான். {Esth 9:4}
அப்படியே யூதர்<Jews> தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக் கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள். {Esth 9:5}
யூதர்<Jews> சூசான்<Shushan> அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள். {Esth 9:6}
அம்மெதாத்தாவின்<Hammedatha> குமாரனாகிய ஆமான்<Haman> என்னும் யூதருடைய<Jews> சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா<Parshandatha>, தல்போன்<Dalphon>, அஸ்பாதா<Aspatha>, {Esth 9:7}
பொராதா<Poratha>, அதலியா<Adalia>, அரிதாத்தா<Aridatha>, {Esth 9:8}
பர்மஷ்டா<Parmashta>, அரிசாய்<Arisai>, அரிதாய்<Aridai>, வாய்சாதா<Vajezatha> ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள். {Esth 9:9}
ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. {Esth 9:10}
அன்றையதினம் சூசான்<Shushan> அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது. {Esth 9:11}
அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை<Esther> நோக்கி: யூதர்<Jews> சூசான்<Shushan> அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின்<Haman> பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான். {Esth 9:12}
அப்பொழுது எஸ்தர்<Esther>: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற<Shushan> யூதர்<Jews> நாளையதினமும் செய்யவும், ஆமானின்<Haman> பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள். {Esth 9:13}
அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே<Shushan> கட்டளை பிறந்தது; ஆமானின்<Haman> பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள். {Esth 9:14}
சூசானிலிருக்கிற<Shushan> யூதர்<Jews> ஆதார்<Adar> மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில்<Shushan> முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. {Esth 9:15}
ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள்<Jews> தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. {Esth 9:16}
ஆதார்<Adar> மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். {Esth 9:17}
சூசானிலுள்ள<Shushan> யூதரோவென்றால்<Jews>, அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க் கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். {Esth 9:18}
ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள்<Jews> ஆதார்<Adar> மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள். {Esth 9:19}
மொர்தெகாய்<Mordecai> இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு<Ahasuerus> ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும்<Jews> நிருபங்களை அனுப்பி, {Esth 9:20}
வருஷந்தோறும் ஆதார்<Adar> மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்<Jews> தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து, {Esth 9:21}
அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான். {Esth 9:22}
அப்பொழுது யூதர்<Jews> தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய்<Mordecai> தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள். {Esth 9:23}
அம்மெதாத்தாவின்<Hammedatha> குமாரனாகிய ஆமான்<Haman> என்னும் ஆகாகியன்<Agagite>, யூதருக்கெல்லாம்<Jews> சத்துருவாயிருந்து யூதரைச்<Jews> சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர்<Pur> என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான். {Esth 9:24}
ஆனாலும் எஸ்தர்<Esther>, ராஜசமுகத்தில் போய், யூதருக்கு<Jews> விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள். {Esth 9:25}
ஆகையினால் அந்த நாட்கள் பூர்<Pur> என்னும் பேரினால் பூரீம்<Purim> என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும், {Esth 9:26}
யூதர்<Jews> அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும், {Esth 9:27}
இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம்<Purim> என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே<Jews> தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள். {Esth 9:28}
பூரீமைக்குறித்து<Purim> எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின்<Abihail> குமாரத்தியாகிய எஸ்தர்<Esther> என்னும் ராஜாத்தியும், யூதனாகிய<Jew> மொர்தெகாயும்<Mordecai>, பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள். {Esth 9:29}
யூதனாகிய<Jew> மொர்தெகாயும்<Mordecai>, ராஜாத்தியாகிய எஸ்தரும்<Esther> யூதருக்கு<Jews> உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம்<Purim> என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க, {Esth 9:30}
அவன் அகாஸ்வேருவின்<Ahasuerus> ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும்<Jews> சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான். {Esth 9:31}
இப்படியே எஸ்தரின்<Esther> கட்டளையானது பூரீம்<Purim> நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது. {Esth 9:32}
ராஜாவாகிய அகாஸ்வேரு<Ahasuerus> தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். {Esth 10:1}
வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய<Mordecai> மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா<Media> பெர்சியா<Persia> ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. {Esth 10:2}
யூதனாகிய<Jew> மொர்தெகாய்<Mordecai> ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு<Ahasuerus> இரண்டாவதானவனும், யூதருக்குள்<Jews> பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான். {Esth 10:3}
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!