Saturday, February 29, 2020

ஏசாயா

ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>,  யூதாவின்<Judah>  ராஜாக்களாகிய  உசியா<Uzziah>,  யோதாம்<Jotham>,  ஆகாஸ்<Ahaz>,  எசேக்கியா<Hezekiah>  என்பவர்களின்  நாட்களில்,  யூதாவையும்<Judah>  எருசலேமையும்<Jerusalem>  குறித்துக்  கண்ட  தரிசனம்.  {Isa  1:1}

 

வானங்களே,  கேளுங்கள்;  பூமியே,  செவிகொடு;  கர்த்தர்  பேசுகிறார்;  நான்  பிள்ளைகளை  வளர்த்து  ஆதரித்தேன்;  அவர்களோ  எனக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினார்கள்.  {Isa  1:2}

 

மாடு  தன்  எஜமானையும்,  கழுதை  தன்  ஆண்டவனின்  முன்னணையையும்  அறியும்;  இஸ்ரவேலோ<Israel>  அறிவில்லாமலும்,  என்  ஜனம்  உணர்வில்லாமலும்  இருக்கிறது  என்கிறார்.  {Isa  1:3}

 

ஐயோ,  பாவமுள்ள  ஜாதியும்,  அக்கிரமத்தால்  பாரஞ்சுமந்த  ஜனமும்,  பொல்லாதவர்களின்  சந்ததியும்,  கேடு  உண்டாக்குகிற  புத்திரருமாயிருக்கிறார்கள்;  கர்த்தரை  விட்டு,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருக்குக்  கோபமுண்டாக்கி,  பின்வாங்கிப்போனார்கள்.  {Isa  1:4}

 

இன்னும்  நீங்கள்  ஏன்  அடிக்கப்படவேண்டும்?  அதிகம்  அதிகமாய்  விலகிப்போகிறீர்களே;  தலையெல்லாம்  வியாதியும்,  இருதயமெல்லாம்  பலட்சயமுமாய்  இருக்கிறது.  {Isa  1:5}

 

உள்ளங்கால்  தொடங்கி  உச்சந்தலைமட்டும்  அதிலே  சுகமேயில்லை;  அது  காயமும்,  வீக்கமும்,  நொதிக்கிற  இரணமுமுள்ளது;  அது  சீழ்  பிதுக்கப்படாமலும்,  கட்டப்படாமலும்,  எண்ணெயினால்  ஆற்றப்படாமலும்  இருக்கிறது.  {Isa  1:6}

 

உங்கள்  தேசம்  பாழாயிருக்கிறது;  உங்கள்  பட்டணங்கள்  அக்கினியினால்  சுட்டெரிக்கப்பட்டது;  உங்கள்  நாட்டை  அந்நியர்  உங்கள்  கண்களுக்கு  முன்பாகப்  பட்சிக்கிறார்கள்;  அது  அந்நியரால்  கவிழ்க்கப்பட்ட  பாழ்ந்தேசம்போல்  இருக்கிறது.  {Isa  1:7}

 

சீயோன்<Zion>  குமாரத்தி  திராட்சத்தோட்டத்திலுள்ள  ஒரு  குச்சுபோலவும்,  வெள்ளரித்தோட்டத்திலுள்ள  ஒரு  குடிசைபோலவும்,  முற்றிக்கைபோடப்பட்ட  ஒரு  பட்டணம்போலவும்  மீந்திருக்கிறாள்.  {Isa  1:8}

 

சேனைகளின்  கர்த்தர்  நமக்குக்  கொஞ்சம்  மீதியை  வைக்காதிருந்தாரானால்,  நாம்  சோதோமைப்போலாகி<Sodom>,  கொமோராவுக்கு<Gomorrah>  ஒத்திருப்போம்.  {Isa  1:9}

 

சோதோமின்<Sodom>  அதிபதிகளே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  கொமோராவின்<Gomorrah>  ஜனமே,  நமது  தேவனுடைய  வேதத்துக்குச்  செவிகொடுங்கள்.  {Isa  1:10}

 

உங்கள்  பலிகளின்  திரள்  எனக்கு  என்னத்துக்கு  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆட்டுக்கடாக்களின்  தகனபலிகளும்,  கொழுத்த  மிருகங்களின்  நிணமும்  எனக்கு  அரோசிகமாயிருக்கிறது;  காளைகள்,  ஆட்டுக்குட்டிகள்,  கடாக்களுடைய  இரத்தத்தின்மேல்  எனக்குப்  பிரியமில்லை.  {Isa  1:11}

 

நீங்கள்  என்  சந்நிதியில்  வரும்போது,  என்  பிராகாரங்களை  இப்படி  மிதிக்கவேண்டுமென்று  உங்களிடத்தில்  கேட்டது  யார்?  {Isa  1:12}

 

இனி  வீண்  காணிக்கைகளைக்  கொண்டுவரவேண்டாம்;  தூபங்காட்டுதல்  எனக்கு  அருவருப்பாயிருக்கிறது;  நீங்கள்  அக்கிரமத்தோடே  ஆசரிக்கிற  மாதப்பிறப்பையும்,  ஓய்வுநாளையும்,  சபைக்கூட்டத்தையும்  நான்  இனிச்  சகிக்கமாட்டேன்.  {Isa  1:13}

 

உங்கள்  மாதப்பிறப்புகளையும்,  உங்கள்  பண்டிகைகளையும்  என்  ஆத்துமா  வெறுக்கிறது;  அவைகள்  எனக்கு  வருத்தமாயிருக்கிறது;  அவைகளைச்  சுமந்து  இளைத்துப்போனேன்.  {Isa  1:14}

 

நீங்கள்  உங்கள்  கைகளை  விரித்தாலும்,  என்  கண்களை  உங்களைவிட்டு  மறைக்கிறேன்;  நீங்கள்  மிகுதியாய்  ஜெபம்பண்ணினாலும்  கேளேன்;  உங்கள்  கைகள்  இரத்தத்தினால்  நிறைந்திருக்கிறது.  {Isa  1:15}

 

உங்களைக்  கழுவிச்  சுத்திகரியுங்கள்;  உங்கள்  கிரியைகளின்  பொல்லாப்பை  என்  கண்களுக்கு  மறைவாக  அகற்றிவிட்டு,  தீமைசெய்தலை  விட்டு  ஓயுங்கள்;  {Isa  1:16}

 

நன்மைசெய்யப்  படியுங்கள்;  நியாயத்தைத்  தேடுங்கள்;  ஒடுக்கப்பட்டவனை  ஆதரித்து,  திக்கற்ற  பிள்ளையின்  நியாயத்தையும்,  விதவையின்  வழக்கையும்  விசாரியுங்கள்.  {Isa  1:17}

 

வழக்காடுவோம்  வாருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  உங்கள்  பாவங்கள்  சிவேரென்றிருந்தாலும்  உறைந்த  மழையைப்போல்  வெண்மையாகும்;  அவைகள்  இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும்  பஞ்சைப்போலாகும்.  {Isa  1:18}

 

நீங்கள்  மனம்பொருந்திச்  செவிகொடுத்தால்,  தேசத்தின்  நன்மையைப்  புசிப்பீர்கள்.  {Isa  1:19}

 

மாட்டோம்  என்று  எதிர்த்துநிற்பீர்களாகில்  பட்டயத்துக்கு  இரையாவீர்கள்;  கர்த்தரின்  வாய்  இதைச்  சொல்லிற்று.  {Isa  1:20}

 

உண்மையுள்ள  நகரம்  எப்படி  வேசியாய்ப்போயிற்று!  அது  நியாயத்தால்  நிறைந்திருந்தது,  நீதி  அதில்  குடிகொண்டிருந்தது;  இப்பொழுதோ  அதின்  குடிகள்  கொலைபாதகர்.  {Isa  1:21}

 

உன்  வெள்ளி  களிம்பாயிற்று;  உன்  திராட்சரசம்  தண்ணீர்க்கலப்பானது.  {Isa  1:22}

 

உன்  பிரபுக்கள்  முரடரும்  திருடரின்  தோழருமாயிருக்கிறார்கள்;  அவர்களில்  ஒவ்வொருவனும்  பரிதானத்தை  விரும்பி,  கைக்கூலியை  நாடித்திரிகிறான்;  திக்கற்ற  பிள்ளையின்  நியாயத்தை  விசாரியார்கள்;  விதவையின்  வழக்கு  அவர்களிடத்தில்  ஏறுகிறதில்லை.  {Isa  1:23}

 

ஆகையால்  சேனைகளின்  கர்த்தரும்  இஸ்ரவேலின்<Israel>  வல்லவருமாகிய  ஆண்டவர்  சொல்லுகிறதாவது:  ஓகோ,  நான்  என்  சத்துருக்களில்  கோபம்  ஆறி,  என்  பகைஞருக்கு  நீதியைச்  சரிக்கட்டுவேன்.  {Isa  1:24}

 

நான்  என்  கையை  உன்னிடமாய்த்  திருப்பி,  உன்  களிம்பு  நீங்க  உன்னைச்  சுத்தமாய்ப்  புடமிட்டு,  உன்  ஈயத்தையெல்லாம்  நீக்குவேன்.  {Isa  1:25}

 

உன்  நியாயாதிபதிகளை  முன்னிருந்ததுபோலவும்,  உன்  ஆலோசனைக்காரரை  ஆதியில்  இருந்ததுபோலவும்  திரும்பக்  கட்டளையிடுவேன்;  பின்பு  நீ  நீதிபுரம்  என்றும்,  சத்தியநகரம்  என்றும்  பெயர்பெறுவாய்.  {Isa  1:26}

 

சீயோன்<Zion>  நியாயத்தினாலும்,  அதிலே  திரும்பிவருகிறவர்கள்  நீதியினாலும்  மீட்கப்படுவார்கள்.  {Isa  1:27}

 

துரோகிகளும்  பாவிகளுமோ  ஏகமாய்  நொறுங்குண்டுபோவார்கள்;  கர்த்தரை  விட்டு  விலகுகிறவர்கள்  நிர்மூலமாவார்கள்.  {Isa  1:28}

 

நீங்கள்  விரும்பின  கர்வாலிமரங்களினிமித்தம்  வெட்கப்படுவீர்கள்;  நீங்கள்  தெரிந்துகொண்ட  தோப்புகளினிமித்தம்  நாணமடைவீர்கள்.  {Isa  1:29}

 

இலையுதிர்ந்த  கர்வாலிமரத்தைப்போலவும்,  தண்ணீரில்லாத  தோப்பைப்போலவும்  இருப்பீர்கள்.  {Isa  1:30}

 

பராக்கிரமசாலி  சணற்கூளமும்,  அவன்  கிரியை  அக்கினிப்பொறியுமாகி,  இரண்டும்  அவிப்பாரில்லாமல்  ஏகமாய்  வெந்துபோம்  என்று  சொல்லுகிறார்.  {Isa  1:31}

 

ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>  யூதாவையும்<Judah>  எருசலேமையும்<Jerusalem>  குறித்துக்  கண்ட  தரிசனம்.  {Isa  2:1}

 

கடைசிநாட்களில்  கர்த்தருடைய  ஆலயமாகிய  பர்வதம்  பர்வதங்களின்  கொடுமுடியில்  ஸ்தாபிக்கப்பட்டு,  மலைகளுக்கு  மேலாய்  உயர்த்தப்படும்;  எல்லா  ஜாதிகளும்  அதற்கு  ஓடிவருவார்கள்.  {Isa  2:2}

 

திரளான  ஜனங்கள்  புறப்பட்டு  வந்து:  நாம்  கர்த்தரின்  பர்வதத்துக்கும்,  யாக்கோபின்<Jacob>  தேவனுடைய  ஆலயத்துக்கும்  போவோம்  வாருங்கள்;  அவர்  தமது  வழிகளை  நமக்குப்  போதிப்பார்,  நாம்  அவர்  பாதைகளில்  நடப்போம்  என்பார்கள்;  ஏனெனில்  சீயோனிலிருந்து<Zion>  வேதமும்,  எருசலேமிலிருந்து<Jerusalem>  கர்த்தரின்  வசனமும்  வெளிப்படும்.  {Isa  2:3}

 

அவர்  ஜாதிகளுக்குள்  நியாயந்தீர்த்து,  திரளான  ஜனங்களைக்  கடிந்துகொள்வார்;  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  பட்டயங்களை  மண்வெட்டிகளாகவும்,  தங்கள்  ஈட்டிகளை  அரிவாள்களாகவும்  அடிப்பார்கள்;  ஜாதிக்கு  விரோதமாய்  ஜாதி  பட்டயம்  எடுப்பதில்லை,  இனி  அவர்கள்  யுத்தத்தைக்  கற்பதுமில்லை.  {Isa  2:4}

 

யாக்கோபின்<Jacob>  வம்சத்தாரே,  கர்த்தரின்  வெளிச்சத்திலே  நடப்போம்  வாருங்கள்.  {Isa  2:5}

 

யாக்கோபின்<Jacob>  வம்சத்தாராகிய  உம்முடைய  ஜனத்தைக்  கைநெகிழ்ந்தீர்;  அவர்கள்  கீழ்த்திசையாரின்  போதகத்தால்  நிறைந்து,  பெலிஸ்தரைப்போல்<Philistines>  நாள்பார்க்கிறவர்களாயிருந்து,  அந்நிய  புத்திரர்மேல்  பிரியப்படுகிறார்களே.  {Isa  2:6}

 

அவர்கள்  தேசம்  வெள்ளியினாலும்  பொன்னினாலும்  நிறைந்திருக்கிறது;  அவர்கள்  பொக்கிஷங்களுக்கு  முடிவில்லை;  அவர்கள்  தேசம்  குதிரைகளாலும்  நிறைந்திருக்கிறது;  அவர்கள்  இரதங்களுக்கும்  முடிவில்லை.  {Isa  2:7}

 

அவர்கள்  தேசம்  விக்கிரகங்களாலும்  நிறைந்திருக்கிறது;  தங்கள்  கைகளின்  கிரியையையும்,  தங்கள்  விரல்கள்  உண்டுபண்ணினதையும்  பணிந்துகொள்ளுகிறார்கள்.  {Isa  2:8}

 

சிறியவனும்  குனிகிறான்,  பெரியவனும்  பணிகிறான்;  ஆகையால்  அவர்களுக்கு  மன்னியாதிருப்பீர்.  {Isa  2:9}

 

கர்த்தரின்  பயங்கரத்திற்கும்,  அவருடைய  மகிமைப்பிரதாபத்திற்கும்  விலகி,  நீ  கன்மலையில்  ஒதுங்கி,  மண்ணில்  ஒளித்துக்கொள்.  {Isa  2:10}

 

நரரின்  மேட்டிமையான  கண்கள்  தாழ்த்தப்படும்,  மனுஷரின்  வீறாப்பும்  தணியும்;  கர்த்தர்  ஒருவரே  அந்நாளில்  உயர்ந்திருப்பார்.  {Isa  2:11}

 

எல்லாம்  தாழ்த்தப்படும்பொருட்டுச்  சேனைகளுடைய  கர்த்தரின்  நாளானது  பெருமையும்  மேட்டிமையுமானவை  எல்லாவற்றின்மேலும்,  உயர்ந்தவை  எல்லாவற்றின்மேலும்,  {Isa  2:12}

 

லீபனோனிலுள்ள<Lebanon>  உயரமும்  ஓங்கலுமான  எல்லாக்  கேதுருக்களின்மேலும்,  பாசானிலுள்ள<Bashan>  எல்லாக்  கர்வாலி  மரங்களின்மேலும்,  {Isa  2:13}

 

உன்னதமான  எல்லாப்  பர்வதங்களின்மேலும்,  உயரமான  எல்லா  மலைகளின்மேலும்,  {Isa  2:14}

 

உயர்ந்த  எல்லாக்  கோபுரத்தின்மேலும்,  அரணான  எல்லா  மதிலின்மேலும்,  {Isa  2:15}

 

தர்ஷீசின்<Tarshish>  கப்பல்கள்  எல்லாவற்றின்மேலும்,  எல்லாச்  சித்திர  விநோதங்களின்மேலும்  வரும்.  {Isa  2:16}

 

அப்பொழுது  நரரின்  மேட்டிமை  தாழ்ந்து,  மனுஷரின்  வீறாப்புத்  தணியும்;  கர்த்தர்  ஒருவரே  அந்நாளில்  உயர்ந்திருப்பார்.  {Isa  2:17}

 

விக்கிரகங்கள்  கட்டோடே  ஒழிந்துபோம்.  {Isa  2:18}

 

பூமியைத்  தத்தளிக்கப்பண்ணக்  கர்த்தர்  எழும்பும்போது,  அவருடைய  பயங்கரத்திற்கும்,  அவருடைய  மகிமைப்பிரதாபத்திற்கும்  விலகி,  கன்மலைகளின்  கெபிகளிலும்,  பூமியின்  குகைகளிலும்  புகுந்துகொள்வார்கள்.  {Isa  2:19}

 

பூமியைத்  தத்தளிக்கப்பண்ணக்  கர்த்தர்  எழும்பும்  அந்நாளிலே,  அவருடைய  பயங்கரத்திற்கும்,  அவருடைய  மகிமைப்பிரதாபத்திற்கும்  விலகி,  கன்மலைகளின்  வெடிப்புகளிலும்  குன்றுகளின்  சந்துகளிலும்  புகுந்துகொள்ளும்படிக்கு,  {Isa  2:20}

 

மனுஷன்  பணிந்துகொள்ளத்  தனக்கு  உண்டாக்கியிருந்த  தன்  வெள்ளி  விக்கிரகங்களையும்,  தன்  பொன்  விக்கிரகங்களையும்,  மூஞ்சூறுகளுக்கும்  துரிஞ்சில்களுக்கும்  எறிந்துவிடுவான்.  {Isa  2:21}

 

நாசியிலே  சுவாசமுள்ள  மனுஷனை  நம்புவதை  விட்டுவிடுங்கள்;  எண்ணப்படுவதற்கு  அவன்  எம்மாத்திரம்.  {Isa  2:22}

 

இதோ,  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  எருசலேமிலிருந்தும்<Jerusalem>  யூதாவிலிருந்தும்<Judah>  சகலவிதமான  ஆதரவுகளாகிய  அப்பமென்கிற  எல்லா  ஆதரவையும்,  தண்ணீரென்கிற  எல்லா  ஆதரவையும்;  {Isa  3:1}

 

பராக்கிரமசாலியையும்,  யுத்தவீரனையும்,  நியாயாதிபதியையும்,  தீர்க்கதரிசியையும்,  சாஸ்திரியையும்,  மூப்பனையும்;  {Isa  3:2}

 

ஐம்பதுபேருக்கு  அதிபதியையும்,  கனம்பொருந்தினவனையும்,  ஆலோசனைக்காரனையும்,  தொழில்களில்  சாமர்த்தியமுள்ளவனையும்,  சாதுரியனையும்  விலக்குவார்.  {Isa  3:3}

 

வாலிபரை  அவர்களுக்கு  அதிபதிகளாகத்  தருவேன்  என்கிறார்;  பிள்ளைகள்  அவர்களை  ஆளுவார்கள்.  {Isa  3:4}

 

ஜனங்கள்  ஒடுக்கப்படுவார்கள்;  ஒருவருக்கொருவரும்,  அயலானுக்கு  அயலானும்  விரோதமாயிருப்பார்கள்;  வாலிபன்  முதிர்வயதுள்ளவனுக்கும்,  கீழ்மகன்  மேன்மகனுக்கும்  இடும்பு  செய்வான்.  {Isa  3:5}

 

அப்பொழுது  ஒருவன்  தன்  தகப்பன்  வீட்டானாகிய  தன்  சகோதரனைப்  பிடித்து:  உனக்கு  வஸ்திரம்  இருக்கிறது,  நீ  எங்களுக்கு  அதிபதியாயிரு;  கேட்டுக்கு  இனமான  இந்தக்  காரியம்  உன்  கையின்  கீழாவதாக  என்று  சொல்ல;  {Isa  3:6}

 

அவன்  அந்நாளிலே  தன்  கையை  உயர்த்தி:  நான்  சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்;  என்  வீட்டிலே  அப்பமுமில்லை,  வஸ்திரமுமில்லை;  என்னை  ஜனங்களுக்கு  அதிபதியாக  வைக்கவேண்டாம்  என்பான்.  {Isa  3:7}

 

ஏனென்றால்  எருசலேம்<Jerusalem>  பாழாக்கப்பட்டது,  யூதா<Judah>  விழுந்துபோயிற்று;  அவர்கள்  நாவும்,  அவர்கள்  கிரியைகளும்,  கர்த்தருடைய  மகிமையின்  கண்களுக்கு  எரிச்சல்  உண்டாக்கத்தக்கதாக  அவருக்கு  விரோதமாயிருக்கிறது.  {Isa  3:8}

 

அவர்கள்  முகப்பார்வை  அவர்களுக்கு  விரோதமாய்ச்  சாட்சியிடும்;  அவர்கள்  தங்கள்  பாவத்தை  மறைக்காமல்,  சோதோம்<Sodom>  ஊராரைப்போல  வெளிப்படுத்துகிறார்கள்;  அவர்கள்  ஆத்துமாவுக்கு  ஐயோ!  தங்களுக்கே  தீமையை  வருவித்துக்கொள்ளுகிறார்கள்.  {Isa  3:9}

 

உங்களுக்கு  நன்மையுண்டாகும்  என்று  நீதிமான்களுக்குச்  சொல்லுங்கள்;  அவர்கள்  தங்கள்  கிரியைகளின்  பலனை  அநுபவிப்பார்கள்.  {Isa  3:10}

 

துன்மார்க்கனுக்கு  ஐயோ!  அவனுக்குக்  கேடு  உண்டாகும்;  அவன்  கைகளின்  பலன்  அவனுக்குக்  கிடைக்கும்.  {Isa  3:11}

 

பிள்ளைகள்  என்  ஜனங்களை  ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்;  ஸ்திரீகள்  அவர்களை  ஆளுகிறார்கள்.  என்  ஜனமே,  உன்னை  நடத்துகிறவர்கள்  உன்னை  மோசம்போக்கி,  நீ  நடக்கவேண்டிய  வழியை  அழித்துப்போடுகிறார்கள்.  {Isa  3:12}

 

கர்த்தர்  வழக்காட  எழுந்திருந்து,  ஜனங்களை  நியாயந்தீர்க்க  நிற்கிறார்.  {Isa  3:13}

 

கர்த்தர்  தமது  ஜனத்தின்  மூப்பரையும்,  அதின்  பிரபுக்களையும்  நியாயம்  விசாரிப்பார்.  நீங்களே  இந்தத்  திராட்சத்தோட்டத்தைப்  பட்சித்துப்போட்டீர்கள்;  சிறுமையானவனிடத்தில்  கொள்ளையிட்ட  பொருள்  உங்கள்  வீடுகளில்  இருக்கிறது.  {Isa  3:14}

 

நீங்கள்  என்  ஜனத்தை  நொறுக்கிச்  சிறுமையானவர்களின்  முகத்தை  நெரிக்கிறது  என்னவென்று  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Isa  3:15}

 

பின்னும்  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  சீயோன்<Zion>  குமாரத்திகள்  அகந்தையாயிருந்து,  கழுத்தை  நெறித்து  நடந்து,  கண்களால்  மருட்டிப்பார்த்து,  ஒய்யாரமாய்  நடந்து,  தங்கள்  கால்களில்  சிலம்பு  ஒலிக்கத்  திரிகிறார்கள்.  {Isa  3:16}

 

ஆதலால்  ஆண்டவர்  சீயோன்<Zion>  குமாரத்திகளின்  உச்சந்தலையை  மொட்டையாக்குவார்;  கர்த்தர்  அவர்கள்  மானத்தைக்  குலைப்பார்.  {Isa  3:17}

 

அந்நாளிலே  ஆண்டவர்  அவர்களுடைய  ஆபரணங்களாகிய  சிலம்புகளையும்,  சுட்டிகளையும்,  பிறைச்சிந்தாக்குகளையும்,  {Isa  3:18}

 

ஆரங்களையும்,  அஸ்தகடகங்களையும்,  தலைமுக்காடுகளையும்,  {Isa  3:19}

 

சிரபூஷணங்களையும்,  பாதசரங்களையும்,  மார்க்கச்சைகளையும்,  சுகந்தபரணிகளையும்,  {Isa  3:20}

 

தாயித்துகளையும்,  மோதிரங்களையும்,  மூக்குத்திகளையும்,  {Isa  3:21}

 

விநோத  வஸ்திரங்களையும்,  சால்வைகளையும்,  போர்வைகளையும்,  குப்பிகளையும்,  {Isa  3:22}

 

கண்ணாடிகளையும்,  சல்லாக்களையும்,  குல்லாக்களையும்,  துப்பட்டாக்களையும்  உரிந்துபோடுவார்.  {Isa  3:23}

 

அப்பொழுது,  சுகந்தத்துக்குப்  பதிலாகத்  துர்க்கந்தமும்,  கச்சைக்குப்  பதிலாகக்  கயிறும்,  மயிர்ச்சுருளுக்குப்  பதிலாக  மொட்டையும்,  ஆடம்பரமான  வஸ்திரங்களுக்குப்  பதிலாக  இரட்டுக்கச்சும்,  அழகுக்குப்  பதிலாகக்  கருகிப்போகுதலும்  இருக்கும்.  {Isa  3:24}

 

உன்  புருஷர்  கட்கத்தினாலும்,  உன்  பெலசாலிகள்  யுத்தத்திலும்  விழுவார்கள்.  {Isa  3:25}

 

அவளுடைய  வாசல்கள்  துக்கித்துப்  புலம்பும்;  அவள்  வெறுமையாக்கப்பட்டுத்  தரையிலே  உட்காருவாள்  என்கிறார்.  {Isa  3:26}

 

அந்நாளில்  ஏழு  ஸ்திரீகள்  ஒரே  புருஷனைப்  பிடித்து:  நாங்கள்  எங்கள்  சொந்த  ஆகாரத்தைப்  புசித்து,  எங்கள்  சொந்த  வஸ்திரத்தை  உடுப்போம்;  எங்கள்  நிந்தை  நீங்கும்படிக்கு  உன்பேர்மாத்திரம்  எங்கள்மேல்  விளங்கட்டும்  என்பார்கள்.  {Isa  4:1}

 

இஸ்ரவேலில்<Israel>  தப்பினவர்களுக்கு  அந்நாளிலே  கர்த்தரின்  கிளை  அலங்காரமும்  மகிமையுமாயிருக்கும்;  பூமியின்  கனி  அவர்களுக்குச்  சிறப்பும்  அலங்காரமுமாயிருக்கும்.  {Isa  4:2}

 

அப்பொழுது  ஆண்டவர்,  சீயோன்<Zion>  குமாரத்திகளின்  அழுக்கைக்  கழுவி,  நியாயத்தின்  ஆவியினாலும்,  சுட்டெரிப்பின்  ஆவியினாலும்,  எருசலேமின்<Jerusalem>  இரத்தப்பழிகளை  அதின்  நடுவிலிருந்து  நீக்கிவிடும்போது,  {Isa  4:3}

 

சீயோனில்<Zion>  மீதியாயிருந்து,  எருசலேமில்<Jerusalem>  தரித்திருந்து  ஜீவனுக்கென்று  பேரெழுதப்பட்டவனெவனும்  பரிசுத்தனென்று  சொல்லப்படுவான்.  {Isa  4:4}

 

அப்பொழுது  கர்த்தர்  சீயோன்<Zion>  மலையிலுள்ள  எல்லா  வாசஸ்தலங்களிலும்,  அதின்  சபைகளின்மேலும்,  பகலில்  மேகத்தையும்  புகையையும்,  இரவில்  கொழுந்துவிட்டு  எரியும்  அக்கினிப்பிரகாசத்தையும்  உண்டாக்குவார்;  மகிமையானவைகளின்மேலெல்லாம்  காவல்  உண்டாயிருக்கும்.  {Isa  4:5}

 

பகலிலே  வெயிலுக்கு  நிழலாகவும்,  பெருங்காற்றுக்கும்  மழைக்கும்  அடைக்கலமாகவும்,  மறைவிடமாகவும்,  ஒரு  கூடாரம்  உண்டாயிருக்கும்.  {Isa  4:6}

 

இப்பொழுது  நான்  என்  நேசரிடத்தில்  அவருடைய  திராட்சத்தோட்டத்தைக்  குறித்து  என்  நேசருக்கேற்ற  ஒரு  பாட்டைப்  பாடுவேன்;  என்  நேசருக்கு  மகா  செழிப்பான  மேட்டிலே  ஒரு  திராட்சத்தோட்டம்  உண்டு.  {Isa  5:1}

 

அவர்  அதை  வேலியடைத்து,  அதிலுள்ள  கற்களைப்  பொறுக்கி,  அதிலே  நற்குல  திராட்சச்செடிகளை  நட்டு,  அதின்  நடுவில்  ஒரு  கோபுரத்தைக்கட்டி,  அதில்  ஆலையையும்  உண்டுபண்ணி,  அது  நல்ல  திராட்சப்பழங்களைத்  தருமென்று  காத்திருந்தார்;  அதுவோ  கசப்பான  பழங்களைத்  தந்தது.  {Isa  5:2}

 

எருசலேமின்<Jerusalem>  குடிகளே,  யூதாவின்<Judah>  மனுஷரே,  எனக்கும்  என்  திராட்சத்தோட்டத்துக்கும்  நியாயந்தீருங்கள்.  {Isa  5:3}

 

நான்  என்  திராட்சத்தோட்டத்திற்காகச்  செய்யாத  எந்த  வேலையை  அதற்கு  இனிச்  செய்யலாம்?  அது  நல்ல  திராட்சப்பழங்களைத்  தருமென்று  நான்  காத்திருக்க,  அது  கசப்பான  பழங்களைத்  தந்ததென்ன?  {Isa  5:4}

 

இப்போதும்  நான்  என்  திராட்சத்தோட்டத்துக்குச்  செய்வதை  உங்களுக்கு  அறிவிப்பேன்;  அதின்  வேலியை  எடுத்துப்போடுவேன்,  அது  மேய்ந்துபோடப்படும்;  அதின்  அடைப்பைத்  தகர்ப்பேன்,  அது  மிதியுண்டுபோம்.  {Isa  5:5}

 

அதைப்  பாழாக்கிவிடுவேன்;  அதின்  கிளை  நறுக்கப்படாமலும்,  களைகொத்தி  எடுக்கப்படாமலும்  போவதினால்,  முட்செடியும்  நெரிஞ்சிலும்  முளைக்கும்;  அதின்மேல்  மழை  பெய்யாதபடிக்கு  மேகங்களுக்கும்  கட்டளையிடுவேன்  என்கிறார்.  {Isa  5:6}

 

சேனைகளின்  கர்த்தருடைய  திராட்சத்தோட்டம்  இஸ்ரவேலின்<Israel>  வம்சமே;  அவருடைய  மனமகிழ்ச்சியின்  நாற்று  யூதாவின்<Judah>  மனுஷரே;  அவர்  நியாயத்துக்குக்  காத்திருந்தார்,  இதோ,  கொடுமை;  நீதிக்குக்  காத்திருந்தார்,  இதோ,  முறைப்பாடு.  {Isa  5:7}

 

தாங்கள்மாத்திரம்  தேசத்தின்  நடுவில்  வாசமாயிருக்கும்படி  மற்றவர்களுக்கு  இடமில்லாமற்போகுமட்டும்,  வீட்டோடே  வீட்டைச்  சேர்த்து,  வயலோடே  வயலைக்  கூட்டுகிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  5:8}

 

சேனைகளின்  கர்த்தர்  என்  செவிகேட்கச்  சொன்னது:  மெய்யாகவே  அந்தத்  திரளான  வீடுகள்  பாழாகும்;  பெரியவைகளும்  நேர்த்தியானவைகளுமாகிய  வீடுகள்  குடியில்லாதிருக்கும்.  {Isa  5:9}

 

பத்தேர்  நிலமாகிய  திராட்சத்தோட்டம்  ஒரேபடி  ரசம்  தரும்;  ஒரு  கல  விதை  ஒரு  குறுணி  விளையும்.  {Isa  5:10}

 

சாராயத்தை  நாடி  அதிகாலமே  எழுந்து,  மதுபானம்  தங்களைச்  சூடாக்கும்படி  தரித்திருந்து,  இருட்டிப்போகுமளவும்  குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  5:11}

 

அவர்கள்  சுரமண்டலத்தையும்,  தம்புருவையும்,  மேளத்தையும்,  நாகசுரத்தையும்,  மதுபானத்தையும்  வைத்து  விருந்துகொண்டாடுகிறார்கள்;  ஆனாலும்  கர்த்தரின்  கிரியையை  நோக்குகிறதுமில்லை;  அவர்  கரத்தின்  செய்கையைச்  சிந்திக்கிறதுமில்லை.  {Isa  5:12}

 

என்  ஜனங்கள்  அறிவில்லாமையினால்  சிறைப்பட்டுப்போகிறார்கள்;  அவர்களில்  கனமுள்ளவர்கள்  பட்டினியினால்  தொய்ந்துபோகிறார்கள்;  அவர்களுடைய  திரளான  கூட்டத்தார்  தாகத்தால்  நாவறண்டுபோகிறார்கள்.  {Isa  5:13}

 

அதினிமித்தம்  பாதாளம்  தன்னை  விரிவாக்கி,  தன்  வாயை  ஆவென்று  மட்டில்லாமல்  திறந்தது;  அவர்கள்  மகிமையும்,  அவர்கள்  திரள்கூட்டமும்,  அவர்கள்  ஆடம்பரமும்,  அவர்களில்  களிகூருகிறவர்களும்  அதற்குள்  இறங்கிப்போவார்கள்.  {Isa  5:14}

 

சிறியவன்  தாழ்த்தப்படுவான்,  பெரியவனும்  தாழ்ச்சியடைவான்;  மேட்டிமையானவர்களின்  கண்கள்  தாழ்ந்துபோம்.  {Isa  5:15}

 

சேனைகளின்  கர்த்தர்  நியாயத்தீர்ப்பினால்  உயர்ந்து,  பரிசுத்தமுள்ள  தேவன்  நீதியினால்  பரிசுத்தராய்  விளங்குவார்.  {Isa  5:16}

 

அப்பொழுது  ஆட்டுக்குட்டிகள்  கண்டவிடமெல்லாம்  மேயும்;  கொழுத்தவர்களுடையதாயிருந்து  பாழாய்ப்போன  நிலங்களைப்  பரதேசிகள்  அநுபவிப்பார்கள்.  {Isa  5:17}

 

மாயையின்  கயிறுகளால்  அக்கிரமத்தையும்,  வண்டியின்  வடங்களால்  பாவத்தையும்  இழுத்துக்கொண்டு  வந்து,  {Isa  5:18}

 

நாம்  பார்க்கும்படி  அவர்  தீவிரித்துத்  தமது  கிரியையைச்  சீக்கிரமாய்  நடப்பிக்கட்டுமென்றும்,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருடைய  ஆலோசனையை  நாம்  அறியும்படி  அது  சமீபித்து  வரட்டுமென்றும்  சொல்லுகிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  5:19}

 

தீமையை  நன்மையென்றும்,  நன்மையைத்  தீமையென்றும்  சொல்லி,  இருளை  வெளிச்சமும்,  வெளிச்சத்தை  இருளுமாகப்  பாவித்து,  கசப்பைத்  தித்திப்பும்,  தித்திப்பைக்  கசப்புமென்று  சாதிக்கிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  5:20}

 

தங்கள்  பார்வைக்கு  ஞானிகளும்,  தங்கள்  எண்ணத்துக்குப்  புத்திமான்களுமாய்  இருக்கிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  5:21}

 

சாராயத்தைக்  குடிக்க  வீரரும்,  மதுவைக்  கலந்துவைக்கப்  பராக்கிரமசாலிகளுமாயிருந்து,  {Isa  5:22}

 

பரிதானத்திற்காகக்  குற்றவாளியை  நீதிமானாகத்  தீர்த்து,  நீதிமானின்  நியாயத்தை  அவனுக்கு  விரோதமாய்ப்  புரட்டுகிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  5:23}

 

இதினிமித்தம்  அக்கினிஜுவாலை  வைக்கோலைப்  பட்சிப்பதுபோலவும்,  செத்தையானது  நெருப்புக்கு  இரையாகி  எரிந்துபோவதுபோலவும்,  அவர்கள்  வேர்  வாடி,  அவர்கள்  துளிர்  தூசியைப்போல்  பறந்துபோகும்;  அவர்கள்  சேனைகளின்  கர்த்தருடைய  வேதத்தை  வெறுத்து,  இஸ்ரவேலிலுள்ள<Israel>  பரிசுத்தருடைய  வசனத்தை  அசட்டைபண்ணினார்களே.  {Isa  5:24}

 

ஆகையால்  கர்த்தருடைய  கோபம்  தமது  ஜனங்களுக்கு  விரோதமாய்  மூண்டது;  அவர்  தமது  கையை  அவர்களுக்கு  விரோதமாய்  நீட்டி,  பர்வதங்கள்  அதிரத்தக்கதாயும்,  அவர்கள்  பிணங்கள்  நடுவீதிகளில்  குப்பைபோலாகத்தக்கதாயும்,  அவர்களை  அடித்தார்;  இவை  எல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  {Isa  5:25}

 

அவர்  தூரத்திலுள்ள  ஜாதியாருக்கு  ஒரு  கொடியை  ஏற்றி,  அவர்களைப்  பூமியின்  கடையாந்தரங்களிலிருந்து  பயில்காட்டி  அழைப்பார்;  அப்பொழுது  அவர்கள்  தீவிரமும்  வேகமுமாய்  வருவார்கள்.  {Isa  5:26}

 

அவர்களில்  விடாய்த்தவனும்  இடறுகிறவனும்  இல்லை;  தூங்குகிறவனும்  உறங்குகிறவனும்  இல்லை;  அவர்களில்  ஒருவனுடைய  இடுப்பின்  கச்சை  அவிழ்வதும்,  பாதரட்சைகளின்  வார்  அறுந்துபோவதும்  இல்லை.  {Isa  5:27}

 

அவர்கள்  அம்புகள்  கூர்மையும்,  அவர்கள்  வில்லுகளெல்லாம்  நாணேற்றினவைகளும்,  அவர்கள்  குதிரைகளின்  குளம்புகள்  கற்பாறையாக  எண்ணப்பட்டவைகளும்,  அவர்கள்  உருளைகள்  சுழல்காற்றுக்கு  ஒத்தவைகளுமாயிருக்கும்.  {Isa  5:28}

 

அவர்கள்  கெர்ச்சிப்பு  சிங்கத்தின்  கெர்ச்சிப்புபோலிருக்கிறது;  பாலசிங்கங்களைப்போலக்  கெர்ச்சித்து,  உறுமி,  இரையைப்  பிடித்து,  தப்புவிக்கிறவன்  இல்லாமல்,  அதை  எடுத்துக்கொண்டு  போய்விடுவார்கள்.  {Isa  5:29}

 

அந்நாளில்,  சமுத்திரம்  இரைவதுபோல்  அவர்களுக்கு  விரோதமாய்  இரைவார்கள்;  அப்பொழுது  தேசத்தைப்பார்த்தால்,  இதோ,  அந்தகாரமும்  வியாகுலமும்  உண்டு;  அதின்  மேகங்களினால்  வெளிச்சம்  இருண்டுபோம்.  {Isa  5:30}

 

உசியா<Uzziah>  ராஜா  மரணமடைந்த  வருஷத்தில்,  ஆண்டவர்  உயரமும்  உன்னதமுமான  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கக்கண்டேன்;  அவருடைய  வஸ்திரத்தொங்கலால்  தேவாலயம்  நிறைந்திருந்தது.  {Isa  6:1}

 

சேராபீன்கள்<seraphims>  அவருக்கு  மேலாக  நின்றார்கள்;  அவர்களில்  ஒவ்வொருவனுக்கும்  அவ்வாறு  செட்டைகளிருந்தன;  அவனவன்  இரண்டு  செட்டைகளால்  தன்  தன்  முகத்தை  மூடி,  இரண்டு  செட்டைகளால்  தன்  தன்  கால்களை  மூடி,  இரண்டு  செட்டைகளால்  பறந்து;  {Isa  6:2}

 

ஒருவரையொருவர்  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  பரிசுத்தர்,  பரிசுத்தர்,  பரிசுத்தர்,  பூமியனைத்தும்  அவருடைய  மகிமையால்  நிறைந்திருக்கிறது  என்று  கூப்பிட்டுச்  சொன்னார்கள்.  {Isa  6:3}

 

கூப்பிடுகிறவர்களின்  சத்தத்தால்  வாசல்களின்  நிலைகள்  அசைந்து,  ஆலயம்  புகையினால்  நிறைந்தது.  {Isa  6:4}

 

அப்பொழுது  நான்:  ஐயோ!  அதமானேன்,  நான்  அசுத்த  உதடுகளுள்ள  மனுஷன்,  அசுத்த  உதடுகளுள்ள  ஜனங்களின்  நடுவில்  வாசமாயிருக்கிறவன்;  சேனைகளின்  கர்த்தராகிய  ராஜாவை  என்  கண்கள்  கண்டதே  என்றேன்.  {Isa  6:5}

 

அப்பொழுது  சேராபீன்களில்<seraphims>  ஒருவன்  பலிபீடத்திலிருந்து,  தன்  கையிலே  பிடித்த  குறட்டால்  ஒரு  நெருப்புத்தழலை  எடுத்து,  என்னிடத்தில்  பறந்து  வந்து,  {Isa  6:6}

 

அதினால்  என்  வாயைத்  தொட்டு:  இதோ,  இது  உன்  உதடுகளைத்  தொட்டதினால்  உன்  அக்கிரமம்  நீங்கி,  உன்  பாவம்  நிவிர்த்தியானது  என்றான்.  {Isa  6:7}

 

பின்பு:  யாரை  நான்  அனுப்புவேன்,  யார்  நமது  காரியமாய்ப்  போவான்  என்று  உரைக்கிற  ஆண்டவருடைய  சத்தத்தைக்  கேட்டேன்.  அதற்கு  நான்:  இதோ,  அடியேன்  இருக்கிறேன்;  என்னை  அனுப்பும்  என்றேன்.  {Isa  6:8}

 

அப்பொழுது  அவர்:  நீ  போய்,  இந்த  ஜனங்களை  நோக்கி,  நீங்கள்  காதாரக்  கேட்டும்  உணராமலும்,  கண்ணாரக்கண்டும்  அறியாமலும்  இருங்கள்  என்று  சொல்.  {Isa  6:9}

 

இந்த  ஜனங்கள்  தங்கள்  கண்களினால்  காணாமலும்,  தங்கள்  காதுகளினால்  கேளாமலும்,  தங்கள்  இருதயத்தினால்  உணர்ந்து  குணப்படாமலும்,  நான்  அவர்களை  ஆரோக்கியமாக்காமலுமிருக்க,  நீ  அவர்கள்  இருதயத்தைக்  கொழுத்ததாக்கி,  அவர்கள்  காதுகளை  மந்தப்படுத்தி,  அவர்கள்  கண்களை  மூடிப்போடு  என்றார்.  {Isa  6:10}

 

அப்பொழுது  நான்:  ஆண்டவரே,  எதுவரைக்கும்  என்று  கேட்டேன்.  அதற்கு  அவர்:  பட்டணங்கள்  குடியில்லாமலும்,  வீடுகள்  மனுஷசஞ்சாரமில்லாமலும்  பாழாகி,  பூமி  அவாந்தரவெளியாகி,  {Isa  6:11}

 

கர்த்தர்  மனுஷரைத்  தூரமாக  விலக்குவதினால்,  தேசத்தின்  நடுமையம்  முற்றிலும்  வெறுமையாக்கப்படும்  வரைக்குமே.  {Isa  6:12}

 

ஆகிலும்  அதில்  இன்னும்  பத்தில்  ஒரு  பங்கிருக்கும்,  அதுவும்  திரும்ப  நிர்மூலமாக்கப்படும்;  கர்வாலிமரமும்  அரசமரமும்  இலையற்றுப்போனபின்பு,  அவைகளின்  அடிமரம்  இருப்பதுபோல,  அதின்  அடிமரமும்  பரிசுத்த  வித்தாயிருக்கும்  என்றார்.  {Isa  6:13}

 

உசியாவினுடைய<Uzziah>  குமாரனாகிய  யோதாமின்<Jotham>  குமாரன்  ஆகாஸ்<Ahaz>  என்னும்  யூதாதேசத்து<Judah>  ராஜாவின்  நாட்களிலே,  ரேத்சீன்<Rezin>  என்னும்  சீரியாவின்<Syria>  ராஜாவும்,  ரெமலியாவின்<Remaliah>  குமாரனாகிய  பெக்கா<Pekah>  என்னும்  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவும்  எருசலேமின்மேல்<Jerusalem>  யுத்தம்பண்ண  வந்தார்கள்,  அவர்களால்  அதைப்  பிடிக்கக்கூடாமற்போயிற்று.  {Isa  7:1}

 

சீரியர்<Syria>  எப்பிராயீமைச்<Ephraim>  சார்ந்திருக்கிறார்களென்று  தாவீதின்<David>  குடும்பத்துக்கு  அறிவிக்கப்பட்டபோது,  ராஜாவின்  இருதயமும்  அவன்  ஜனத்தின்  இருதயமும்  காட்டிலுள்ள  மரங்கள்  காற்றினால்  அசைகிறதுபோல்  அசைந்தது.  {Isa  7:2}

 

அப்பொழுது  கர்த்தர்  ஏசாயாவை<Isaiah>  நோக்கி:  நீயும்  உன்  மகன்  சேயார்யாசூபுமாக<Shearjashub>  வண்ணார்  துறைவழியிலுள்ள  மேற்குளத்து  மதகின்  கடைசிமட்டும்  ஆகாசுக்கு<Ahaz>  எதிர்கொண்டுபோய்,  {Isa  7:3}

 

நீ  அவனை  நோக்கி:  சீரியர்<Syria>  எப்பிராயீமோடும்<Ephraim>,  ரெமலியாவின்<Remaliah>  மகனோடும்  உனக்கு  விரோதமாகத்  துராலோசனை  பண்ணி,  {Isa  7:4}

 

நாம்  யூதாவுக்கு<Judah>  விரோதமாய்ப்போய்,  அதை  நெருக்கி,  அதை  நமக்குள்ளே  பங்கிட்டுக்கொண்டு,  அதற்குத்  தபேயாலின்<Tabeal>  குமாரனை  ராஜாவாக  ஏற்படுத்துவோம்  என்று  சொன்னதினிமித்தம்;  {Isa  7:5}

 

நீ  பயப்படாமல்  அமர்ந்திருக்கப்  பார்;  இந்த  இரண்டு  புகைகிற  கொள்ளிக்கட்டைகளாகிய  சீரியரோடே<Syria>  வந்த  ரேத்சீனும்<Rezin>,  ரெமலியாவின்<Remaliah>  மகனும்  கொண்ட  உக்கிரக்கோபத்தினிமித்தம்  உன்  இருதயம்  துவளவேண்டாம்.  {Isa  7:6}

 

கர்த்தராகிய  ஆண்டவர்:  அந்த  ஆலோசனை  நிலைநிற்பதில்லை,  அதின்படி  சம்பவிப்பதுமில்லை;  {Isa  7:7}

 

சீரியாவின்<Syria>  தலை  தமஸ்கு<Damascus>,  தமஸ்குவின்<Damascus>  தலை  ரேத்சீன்<Rezin>;  இன்னும்  அறுபத்தைந்து  வருஷங்களிலே  எப்பிராயீம்<Ephraim>  ஒரு  ஜனமாயிராதபடிக்கு  நொறுங்குண்டுபோம்.  {Isa  7:8}

 

எப்பிராயீமின்<Ephraim>  தலை  சமாரியா<Samaria>,  சமாரியாவின்<Samaria>  தலை  ரெமலியாவின்<Remaliah>  மகன்;  நீங்கள்  விசுவாசியாவிட்டால்  நிலைபெறமாட்டீர்கள்  என்று  சொல்  என்றார்.  {Isa  7:9}

 

பின்னும்  கர்த்தர்  ஆகாசை<Ahaz>  நோக்கி:  {Isa  7:10}

 

நீ  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  ஒரு  அடையாளத்தை  வேண்டிக்கொள்;  அதை  ஆழத்திலிருந்தாகிலும்,  உன்னதத்திலிருந்தாகிலும்  உண்டாகக்  கேட்டுக்கொள்  என்று  சொன்னார்.  {Isa  7:11}

 

ஆகாசோ<Ahaz>:  நான்  கேட்கமாட்டேன்,  நான்  கர்த்தரைப்  பரீட்சை  செய்யமாட்டேன்  என்றான்.  {Isa  7:12}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>:  தாவீதின்<David>  வம்சத்தாரே,  கேளுங்கள்;  நீங்கள்  மனுஷரை  விசனப்படுத்துகிறது  போதாதென்று  என்  தேவனையும்  விசனப்படுத்தப்  பார்க்கிறீர்களோ?  {Isa  7:13}

 

ஆதலால்  ஆண்டவர்  தாமே  உங்களுக்கு  ஒரு  அடையாளத்தைக்  கொடுப்பார்;  இதோ,  ஒரு  கன்னிகை  கர்ப்பவதியாகி  ஒரு  குமாரனைப்  பெறுவாள்,  அவருக்கு  இம்மானுவேல்<Immanuel>  என்று  பேரிடுவாள்.  {Isa  7:14}

 

தீமையை  வெறுத்து  நன்மையைத்  தெரிந்துகொள்ள  அறியும்  வயதுமட்டும்  அவர்  வெண்ணெயையும்  தேனையும்  சாப்பிடுவார்.  {Isa  7:15}

 

அந்தப்  பிள்ளை  தீமையை  வெறுக்கவும்,  நன்மையைத்  தெரிந்துகொள்ளவும்  அறிகிறதற்குமுன்னே,  நீ  அருவருக்கிற  தேசம்  அதின்  இரண்டு  ராஜாக்களால்  விட்டுவிடப்படும்.  {Isa  7:16}

 

எப்பிராயீம்<Ephraim>  யூதாவைவிட்டுப்<Judah>  பிரிந்த  நாள்முதல்  வராத  நாட்களைக்  கர்த்தர்  உன்மேலும்,  உன்  ஜனத்தின்மேலும்,  உன்  பிதாவுடைய  வம்சத்தின்மேலும்,  அசீரியாவின்<Assyria>  ராஜாவினாலே  வரப்பண்ணுவார்.  {Isa  7:17}

 

அந்நாட்களிலே,  கர்த்தர்  எகிப்து<Egypt>  நதிகளின்  கடையாந்தரத்திலுள்ள  ஈயையும்,  அசீரியா<Assyria>  தேசத்திலிருக்கும்  தேனீயையும்  பயில்காட்டி  அழைப்பார்.  {Isa  7:18}

 

அவைகள்  வந்து  ஏகமாய்  வனாந்தரங்களின்  பள்ளத்தாக்குகளிலும்,  கன்மலைகளின்  வெடிப்புகளிலும்,  எல்லா  முட்காடுகளிலும்,  மேய்ச்சலுள்ள  எல்லா  இடங்களிலும்  தங்கும்.  {Isa  7:19}

 

அக்காலத்திலே  ஆண்டவர்  கூலிக்குவாங்கின  சவரகன்  கத்தியினால்,  அதாவது,  நதியின்  அக்கரையிலுள்ள  அசீரியா<Assyria>  ராஜாவினால்,  தலைமயிரையும்  கால்மயிரையும்  சிரைப்பித்து,  தாடியையும்  வாங்கிப்போடுவிப்பார்.  {Isa  7:20}

 

அக்காலத்தில்  ஒருவன்  ஒரு  இளம்பசுவையும்,  இரண்டு  ஆடுகளையும்  வளர்த்தால்,  {Isa  7:21}

 

அவைகள்  பூரணமாய்ப்  பால்  கறக்கிறபடியினால்  வெண்ணெயைச்  சாப்பிடுவான்;  தேசத்தின்  நடுவில்  மீதியாயிருப்பவனெவனும்  வெண்ணெயையும்  தேனையுமே  சாப்பிடுவான்.  {Isa  7:22}

 

அந்நாளிலே,  ஆயிரம்  வெள்ளிக்காசு  பெறும்  ஆயிரம்  திராட்சச்செடியிருந்த  நிலமெல்லாம்  முட்செடியும்  நெரிஞ்சிலுமாகும்.  {Isa  7:23}

 

தேசமெங்கும்  முட்செடியும்  நெரிஞ்சிலும்  உண்டாயிருப்பதினால்,  அம்புகளையும்  வில்லையும்  பிடித்து  அங்கே  போகவேண்டியதாயிருக்கும்.  {Isa  7:24}

 

மண்வெட்டியால்  கொத்தப்படுகிற  மலைகள்  உண்டே;  முட்செடிகளுக்கும்  நெரிஞ்சில்களுக்கும்  பயப்படுவதினால்  அவைகளில்  ஒன்றிற்கும்  போகக்  கூடாமையினால்,  அவைகள்  மாடுகளை  ஓட்டிவிடுவதற்கும்,  ஆடுகள்  மிதிப்பதற்குமான  இடமாயிருக்கும்  என்றான்.  {Isa  7:25}

 

பின்னும்  கர்த்தர்  என்னை  நோக்கி:  நீ  ஒரு  பெரிய  பத்திரத்தை  எடுத்து  மனுஷன்  எழுதுகிற  பிரகாரமாய்  அதிலே  மகேர்-சாலால்-அஷ்-பாஸ்<Mahershalalhashbaz>  என்று  எழுது  என்றார்.  {Isa  8:1}

 

அப்பொழுது  நான்  உண்மையுள்ள  சாட்சிக்காரராகிய  ஆசாரியனான  உரியாவையும்<Uriah>,  யெபெரெகியாவின்<Jeberechiah>  குமாரனான  சகரியாவையும்<Zechariah>  அதற்குச்  சாட்சிகளாக  வைத்துக்கொண்டேன்.  {Isa  8:2}

 

நான்  தீர்க்கதரிசியானவளைச்  சேர்ந்தபோது,  அவள்  கர்ப்பவதியாகி  ஒரு  குமாரனைப்  பெற்றாள்;  அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  மகேர்-சாலால்-அஷ்-பாஸ்<Mahershalalhashbaz>  என்னும்  பேரை  அவனுக்கு  இடு.  {Isa  8:3}

 

இந்தப்  பாலகன்,  அப்பா,  அம்மா  என்று  கூப்பிட  அறியுமுன்னே,  தமஸ்குவின்<Damascus>  ஆஸ்தியும்,  சமாரியாவின்<Samaria>  கொள்ளையும்,  அசீரியாவின்<Assyria>  ராஜாவுக்கு  முன்பாகக்  கொண்டுபோகப்படும்  என்றார்.  {Isa  8:4}

 

பின்னும்  கர்த்தர்  என்னை  நோக்கி:  {Isa  8:5}

 

இந்த  ஜனம்  மெதுவாய்  ஓடுகிற  சீலோவாவின்<Shiloah>  தண்ணீர்களை  அசட்டைபண்ணி,  ரேத்சீனையும்<Rezin>  ரெமலியாவின்<Remaliah>  குமாரனையும்  சார்ந்து  சந்தோஷிக்கிறபடியினால்,  {Isa  8:6}

 

இதோ,  ஆண்டவர்  வல்லமையுள்ள  திரளான  ஆற்றுநீரைப்போன்ற  அசீரியாவின்<Assyria>  ராஜாவையும்,  அவனுடைய  சகல  ஆடம்பரத்தையும்  அவர்கள்மேல்  புரளப்பண்ணுவார்;  அது  அவர்களுடைய  ஓடைகளெல்லாவற்றின்மேலும்  போய்,  அவர்களுடைய  எல்லாக்  கரைகள்மேலும்  புரண்டு,  {Isa  8:7}

 

யூதாவுக்குள்<Judah>  புகுந்து  பிரவாகித்துக்  கடந்து,  கழுத்துமட்டும்  வரும்  என்றார்.  இம்மானுவேலே<Immanuel>,  அவன்  செட்டைகளின்  விரிவு  உமது  தேசத்தின்  விசாலத்தை  மூடும்.  {Isa  8:8}

 

ஜனங்களே,  நீங்கள்  கூட்டங்கூடுங்கள்,  முறியடிக்கப்படுவீர்கள்;  தூரதேசத்தாராகிய  நீங்கள்  எல்லாரும்  செவிகொடுங்கள்;  இடைக்கட்டிக்கொள்ளுங்கள்,  முறிந்தோடுவீர்கள்,  {Isa  8:9}

 

ஆலோசனை  செய்யுங்கள்,  அது  அபத்தமாகும்;  வார்த்தையை  வசனியுங்கள்,  அது  நிற்காது;  தேவன்  எங்களோடே  இருக்கிறார்.  {Isa  8:10}

 

கர்த்தருடைய  கரம்  என்மேல்  அமர்ந்து,  அவர்  என்னுடனே  பேசி,  நான்  இந்த  ஜனத்தின்  வழியிலே  நடவாதபடி  எனக்குப்  புத்திசொல்லி  விளம்பினதாவது:  {Isa  8:11}

 

இந்த  ஜனங்கள்  கட்டுப்பாடு  என்று  சொல்லுகிறதையெல்லாம்  நீங்கள்  கட்டுப்பாடு  என்று  சொல்லாமலும்,  அவர்கள்  பயப்படுகிற  பயத்தின்படி  நீங்கள்  பயப்படாமலும்,  கலங்காமலும்,  {Isa  8:12}

 

சேனைகளின்  கர்த்தரையே  பரிசுத்தம்பண்ணுங்கள்;  அவரே  உங்கள்  பயமும்,  அவரே  உங்கள்  அச்சமுமாயிருப்பாராக.  {Isa  8:13}

 

அவர்  உங்களுக்குப்  பரிசுத்த  ஸ்தலமாயிருப்பார்;  ஆகிலும்  இஸ்ரவேலின்<Israel>  இரண்டு  கோத்திரத்துக்கும்  தடுக்கலின்  கல்லும்,  இடறுதலின்  கன்மலையும்,  எருசலேமின்<Jerusalem>  குடிகளுக்குச்  சுருக்கும்  கண்ணியுமாயிருப்பார்.  {Isa  8:14}

 

அவர்களில்  அநேகர்  இடறிவிழுந்து  நொறுங்கிச்  சிக்குண்டு  பிடிபடுவார்கள்.  {Isa  8:15}

 

சாட்சி  ஆகமத்தைக்  கட்டி,  என்  சீஷருக்குள்ளே  வேதத்தை  முத்திரையிடு  என்றார்.  {Isa  8:16}

 

நானோ  யாக்கோபின்<Jacob>  குடும்பத்துக்குத்  தமது  முகத்தை  மறைக்கிற  கர்த்தருக்காகக்  காத்திருந்து,  அவருக்கு  எதிர்பார்த்திருப்பேன்.  {Isa  8:17}

 

இதோ,  நானும்,  கர்த்தர்  எனக்குக்  கொடுத்த  பிள்ளைகளும்  சீயோன்<Zion>  பர்வதத்தில்  வாசமாயிருக்கிற  சேனைகளின்  கர்த்தராலே  இஸ்ரவேலில்<Israel>  அடையாளங்களாகவும்  அற்புதங்களாகவும்  இருக்கிறோம்.  {Isa  8:18}

 

அவர்கள்  உங்களை  நோக்கி:  அஞ்சனம்  பார்க்கிறவர்களிடத்திலும்,  முணுமுணென்று  ஓதுகிற  குறிகாரரிடத்திலும்  விசாரியுங்கள்  என்று  சொல்லும்போது,  ஜனங்கள்  தன்  தேவனிடத்தில்  விசாரிக்கவேண்டியதல்லவோ?  உயிருள்ளவர்களுக்காகச்  செத்தவர்களிடத்தில்  விசாரிக்கலாமோ?  {Isa  8:19}

 

வேதத்தையும்  சாட்சி  ஆகமத்தையும்  கவனிக்கவேண்டும்;  இந்த  வார்த்தையின்படியே  சொல்லாவிட்டால்,  அவர்களுக்கு  விடியற்காலத்து  வெளிச்சமில்லை.  {Isa  8:20}

 

இடுக்கண்  அடைந்தவர்களாயும்  பட்டினியாயும்  தேசத்தைக்  கடந்துபோவார்கள்;  அவர்கள்  பட்டினியாயிருக்கும்போது,  மூர்க்கவெறிகொண்டு,  தங்கள்  ராஜாவையும்  தங்கள்  தேவனையும்  தூஷிப்பார்கள்.  {Isa  8:21}

 

அவர்கள்  அண்ணாந்துபார்ப்பார்கள்,  பூமியையும்  நோக்கிப்பார்ப்பார்கள்;  ஆனாலும்  இதோ,  இக்கட்டும்  அந்தகாரமும்  இருக்கும்;  இடுக்கத்தால்  இருளடைந்து,  அந்தகாரத்திலே  தள்ளுண்டு  அலைவார்கள்.  {Isa  8:22}

 

ஆகிலும்  அவர்  செபுலோன்<Zebulun>  நாட்டையும்,  நப்தலி<Naphtali>  நாட்டையும்  இடுக்கமாய்  ஈனப்படுத்தின  முந்தின  காலத்திலிருந்ததுபோல  அது  இருண்டிருப்பதில்லை;  ஏனென்றால்  அவர்  கடற்கரையருகிலும்,  யோர்தான்<Jordan>  நதியோரத்திலுமுள்ள  புறஜாதியாருடைய  கலிலேயாவாகிய<Galilee>  அத்தேசத்தைப்  பிற்காலத்திலே  மகிமைப்படுத்துவார்.  {Isa  9:1}

 

இருளில்  நடக்கிற  ஜனங்கள்  பெரிய  வெளிச்சத்தைக்  கண்டார்கள்;  மரண  இருளின்  தேசத்தில்  குடியிருக்கிறவர்களின்மேல்  வெளிச்சம்  பிரகாசித்தது.  {Isa  9:2}

 

அந்த  ஜாதியைத்  திரளாக்கி,  அதற்கு  மகிழ்ச்சியைப்  பெருகப்பண்ணினீர்;  அறுப்பில்  மகிழ்கிறதுபோலவும்,  கொள்ளையைப்  பங்கிட்டுக்கொள்ளுகையில்  களிகூருகிறதுபோலவும்,  உமக்கு  முன்பாக  மகிழுகிறார்கள்.  {Isa  9:3}

 

மீதியானியரின்<Midian>  நாளில்  நடந்ததுபோல,  அவர்கள்  சுமந்த  நுகத்தடியையும்,  அவர்கள்  தோளின்மேலிருந்த  மிலாற்றையும்,  அவர்கள்  ஆளோட்டியின்  கோலையும்  முறித்துப்போட்டீர்.  {Isa  9:4}

 

அமளியாய்  யுத்தம்பண்ணுகிற  வீரருடைய  ஆயுதவர்க்கங்களும்,  இரத்தத்தில்  புரண்ட  உடுப்பும்  அக்கினிக்கு  இரையாகச்  சுட்டெரிக்கப்படும்.  {Isa  9:5}

 

நமக்கு  ஒரு  பாலகன்  பிறந்தார்;  நமக்கு  ஒரு  குமாரன்  கொடுக்கப்பட்டார்;  கர்த்தத்துவம்  அவர்  தோளின்மேலிருக்கும்;  அவர்  நாமம்  அதிசயமானவர்,  ஆலோசனைக்கர்த்தா,  வல்லமையுள்ள  தேவன்,  நித்திய  பிதா,  சமாதானப்பிரபு  என்னப்படும்.  {Isa  9:6}

 

தாவீதின்<David>  சிங்காசனத்தையும்  அவனுடைய  ராஜ்யத்தையும்  அவர்  திடப்படுத்தி,  அதை  இதுமுதற்கொண்டு  என்றென்றைக்கும்  நியாயத்தினாலும்  நீதியினாலும்  நிலைப்படுத்தும்படிக்கு,  அவருடைய  கர்த்தத்துவத்தின்  பெருக்கத்துக்கும்,  அதின்  சமாதானத்துக்கும்  முடிவில்லை;  சேனைகளின்  கர்த்தருடைய  வைராக்கியம்  இதைச்  செய்யும்.  {Isa  9:7}

 

ஆண்டவர்  யாக்கோபுக்கு<Jacob>  ஒரு  வார்த்தையை  அனுப்பினார்;  அது  இஸ்ரவேலின்மேல்<Israel>  இறங்கிற்று.  {Isa  9:8}

 

செங்கல்கட்டு  இடிந்துபோயிற்று,  பொளிந்த  கல்லாலே  திரும்பக்  கட்டுவோம்;  காட்டத்திமரங்கள்  வெட்டிப்போடப்பட்டது,  அவைகளுக்குப்  பதிலாகக்  கேதுருமரங்களை  வைப்போம்  என்று,  {Isa  9:9}

 

அகந்தையும்,  மனப்பெருமையுமாய்ச்  சொல்லுகிற  எப்பிராயீமரும்<Ephraim>,  சமாரியாவின்<Samaria>  குடிகளுமாகிய  எல்லா  ஜனத்துக்கும்  அது  தெரியவரும்.  {Isa  9:10}

 

ஆதலால்  கர்த்தர்  ரேத்சீனுடைய<Rezin>  சத்துருக்களை  அவர்கள்மேல்  உயர்த்தி,  அவர்களுடைய  மற்றச்  சத்துருக்களை  அவர்களோடே  கூட்டிக்  கலப்பார்.  {Isa  9:11}

 

முற்புறத்தில்  சீரியரும்<Syrians>,  பிற்புறத்தில்  பெலிஸ்தரும்<Philistines>  வந்து,  இஸ்ரவேலைத்<Israel>  திறந்தவாயால்  பட்சிப்பார்கள்;  இவையெல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  {Isa  9:12}

 

ஜனங்கள்  தங்களை  அடிக்கிறவரிடத்தில்  திரும்பாமலும்,  சேனைகளின்  கர்த்தரைத்  தேடாமலும்  இருக்கிறார்கள்.  {Isa  9:13}

 

ஆகையால்  கர்த்தர்  இஸ்ரவேலிலே<Israel>  தலையையும்,  வாலையும்,  கிளையையும்,  நாணலையும்,  ஒரேநாளிலே  வெட்டிப்போடுவார்.  {Isa  9:14}

 

மூப்பனும்  கனம்பொருந்தினவனுமே  தலை,  பொய்ப்போதகம்பண்ணுகிற  தீர்க்கதரிசியே  வால்.  {Isa  9:15}

 

இந்த  ஜனத்தை  நடத்துகிறவர்கள்  எத்தருமாய்,  அவர்களால்  நடத்தப்படுகிறவர்கள்  நாசமடைகிறவர்களுமாய்  இருக்கிறார்கள்.  {Isa  9:16}

 

ஆதலால்,  ஆண்டவர்  அவர்கள்  வாலிபர்மேல்  பிரியமாயிருப்பதில்லை;  அவர்களிலிருக்கிற  திக்கற்ற  பிள்ளைகள்மேலும்  விதவைகள்மேலும்  இரங்குவதுமில்லை;  அவர்கள்  அனைவரும்  மாயக்காரரும்  பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்;  எல்லா  வாயும்  ஆகாமியம்  பேசும்;  இவையெல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  {Isa  9:17}

 

ஆகாமியமானது  அக்கினியைப்போல  எரிகிறது;  அது  முட்செடியையும்  நெரிஞ்சிலையும்  பட்சிக்கும்,  அது  நெருங்கிய  காட்டைக்  கொளுத்தும்,  புகை  திரண்டு  எழும்பும்.  {Isa  9:18}

 

சேனைகளின்  கர்த்தருடைய  சினத்தால்  தேசம்  அந்தகாரப்பட்டு,  ஜனங்கள்  அக்கினிக்கு  இரையாவார்கள்;  ஒருவனும்  தன்  சகோதரனைத்  தப்பவிடான்.  {Isa  9:19}

 

வலதுபுறத்தில்  பட்சித்தாலும்  பசித்திருப்பார்கள்;  இடதுபுறத்தில்  தின்றாலும்  திருப்தியடையார்கள்;  அவனவன்  தன்தன்  புயத்தின்  மாம்சத்தைத்  தின்பான்.  {Isa  9:20}

 

மனாசே<Manasseh>  எப்பிராயீமையும்<Ephraim>,  எப்பிராயீம்<Ephraim>  மனாசேயையும்<Manasseh>  பட்சிப்பார்கள்;  இவர்கள்  ஏகமாய்  யூதாவுக்கு<Judah>  விரோதமாயிருப்பார்கள்;  இவையெல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  {Isa  9:21}

 

ஏழைகளை  வழக்கிலே  தோற்கப்பண்ணவும்,  என்  ஜனத்தில்  சிறுமையானவர்களின்  நியாயத்தைப்  புரட்டவும்,  விதவைகளைச்  சூறையாடவும்,  திக்கற்ற  பிள்ளைகளைக்  கொள்ளையிடவும்,  {Isa  10:1}

 

அநியாயமான  தீர்ப்புகளைச்  செய்கிறவர்களுக்கும்,  கொடுமையான  கட்டளைகளை  எழுதுகிறவர்களுக்கும்  ஐயோ!  {Isa  10:2}

 

விசாரிப்பின்  நாளிலும்,  தூரத்திலிருந்து  வரும்  பாழ்க்கடிப்பின்  நாளிலும்  நீங்கள்  என்னசெய்வீர்கள்?  உதவிபெறும்படி  யாரிடத்தில்  ஓடுவீர்கள்?  உங்கள்  மகிமையை  எங்கே  வைத்துவிடுவீர்கள்?  {Isa  10:3}

 

கட்டுண்டவர்களின்கீழ்  முடங்கினாலொழிய  கொலைசெய்யப்பட்டவர்களுக்குள்  விழுவார்கள்;  இவையெல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  {Isa  10:4}

 

என்  கோபத்தின்  கோலாகிய  அசீரியனுக்கு<Assyrian>  ஐயோ!  அவன்  கையிலிருக்கிறது  என்  சினத்தின்  தண்டாயுதம்.  {Isa  10:5}

 

அவபக்தியான  ஜனங்களுக்கு  விரோதமாய்  நான்  அவனை  அனுப்பி,  எனக்குக்  கோபமூட்டின  ஜனத்தைக்  கொள்ளையிடவும்,  சூறையாடவும்,  அதை  வீதிகளின்  சேற்றைப்போல்  மிதித்துப்போடவும்  அவனுக்குக்  கட்டளைகொடுப்பேன்.  {Isa  10:6}

 

அவனோ  அப்படி  எண்ணுகிறதுமில்லை,  அவன்  இருதயம்  அப்படிப்பட்டதை  நினைக்கிறதுமில்லை;  அநேகம்  ஜாதிகளை  அழிக்கவும்,  சங்கரிக்கவுமே  தன்  மனதிலே  நினைவுகொள்ளுகிறான்.  {Isa  10:7}

 

அவன்:  என்  பிரபுக்கள்  அனைவரும்  ராஜாக்களல்லவோ?  {Isa  10:8}

 

கல்னோபட்டணம்<Calno>  கர்கேமிசைப்போலானதில்லையோ<Carchemish>?  ஆமாத்<Hamath>  அர்பாத்தைப்போலானதில்லையோ<Arpad>?  சமாரியா<Samaria>  தமஸ்குவைப்போலானதில்லையோ<Damascus>?  {Isa  10:9}

 

எருசலேமையும்<Jerusalem>  சமாரியாவையும்பார்க்கிலும்<Samaria>  விசேஷித்த  சிலைகளுள்ள  விக்கிரக  ராஜ்யங்களை  என்  கை  கண்டுபிடித்திருக்க,  {Isa  10:10}

 

நான்  சமாரியாவுக்கும்<Samaria>,  அதின்  விக்கிரகங்களுக்கும்  செய்ததுபோல்,  எருசலேமுக்கும்<Jerusalem>  அதின்  விக்கிரகங்களுக்கும்  செய்யாமலிருப்பேனோ  என்று  சொல்லுகிறான்.  {Isa  10:11}

 

ஆதலால்:  ஆண்டவர்  சீயோன்<Zion>  மலையிலும்  எருசலேமிலும்<Jerusalem>  தமது  செயலையெல்லாம்  முடித்திருக்கும்போது,  அசீரிய<Assyria>  ராஜாவினுடைய  பெருமையான  நெஞ்சின்  வினையையும்,  அவன்  கண்களின்  மேட்டிமையான  பார்வையையும்  நான்  விசாரிப்பேன்  என்கிறார்.  {Isa  10:12}

 

அவன்:  என்  கையின்  பெலத்தினாலும்,  என்  ஞானத்தினாலும்  இதைச்  செய்தேன்;  நான்  புத்திமான்,  நான்  ஜனங்களின்  எல்லைகளை  மாற்றி,  அவர்கள்  பண்டகசாலைகளைக்  கொள்ளையிட்டு  வல்லவனைப்போல்  குடிகளைத்  தாழ்த்தினேன்.  {Isa  10:13}

 

ஒரு  குருவிக்கூட்டைக்  கண்டுபிடிக்கிறதுபோல்  என்  கை  ஜனங்களின்  ஆஸ்தியைக்  கண்டுபிடித்தது;  விட்டுவிடப்பட்ட  முட்டைகளை  வாரிக்கொள்வதுபோல்  பூமியையெல்லாம்  நான்  வாரிக்கொண்டேன்;  ஒருவரும்  செட்டையை  அசைத்ததுமில்லை,  வாயைத்  திறந்ததுமில்லை,  கீச்சென்று  சத்தமிட்டதுமில்லை  என்று  சொல்லுகிறான்.  {Isa  10:14}

 

கோடரியானது  தன்னால்  வெட்டுகிறவனுக்கு  விரோதமாய்  மேன்மைபாராட்டலாமோ?  வாளானது  தன்னைக்  கையாடுகிறவனுக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டலாமோ?  பாராட்டினால்,  தடியானது  தன்னைப்  பிடித்தவனை  மிரட்டினாற்போலவும்,  கோலானது  நான்  மரக்கட்டையல்லவென்று  எழும்பினாற்போலவும்  இருக்குமே.  {Isa  10:15}

 

ஆகையால்  சேனைகளின்  ஆண்டவராகிய  கர்த்தர்,  அவனைச்சேர்ந்த  கொழுத்தவர்களுக்குள்ளே  இளைப்பை  அனுப்புவார்;  பட்சிக்கும்  அக்கினியைப்போலும்  ஒரு  அக்கினியை  அவன்  மகிமையின்கீழ்  கொளுத்துவார்.  {Isa  10:16}

 

இஸ்ரவேலின்<Israel>  ஒளியானவர்  அக்கினியும்,  அதின்  பரிசுத்தர்  அக்கினிஜுவாலையுமாகி,  ஒரேநாளிலே  அவனுடைய  முட்செடிகளையும்,  நெரிஞ்சில்களையும்  தகித்துப்  பட்சித்து,  {Isa  10:17}

 

அவனுடைய  வனத்தின்  மகிமையையும்,  அவனுடைய  பயிர்நிலத்தின்  மகிமையையும்,  உள்ளும்  புறம்புமாய்  அழியப்பண்ணுவார்;  கொடிபிடிக்கிறவன்  களைத்து  விழுவதுபோலாகும்.  {Isa  10:18}

 

காட்டில்  அவனுக்கு  மீதியான  மரங்கள்  கொஞ்சமாயிருக்கும்,  ஒரு  சிறுபிள்ளை  அவைகளை  எண்ணி  எழுதலாம்.  {Isa  10:19}

 

அக்காலத்திலே  இஸ்ரவேலில்<Israel>  மீதியானவர்களும்,  யாக்கோபின்<Jacob>  வம்சத்தில்  தப்பினவர்களும்,  பின்னொருபோதும்  தங்களை  அடித்தவனைச்  சார்ந்துகொள்ளாமல்,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தராகிய  கர்த்தரையே  உண்மையாய்ச்  சார்ந்துகொள்வார்கள்.  {Isa  10:20}

 

மீதியாயிருப்பவர்கள்,  யாக்கோபில்<Jacob>  மீதியாயிருப்பவர்களே,  வல்லமையுள்ள  தேவனிடத்தில்  திரும்புவார்கள்.  {Isa  10:21}

 

இஸ்ரவேலே<Israel>,  உன்  ஜனங்கள்  சமுத்திரத்தின்  மணலத்தனையாயிருந்தாலும்,  அவர்களில்  மீதியாயிருப்பவர்கள்மாத்திரம்  திரும்புவார்கள்;  தீர்மானிக்கப்பட்ட  அழிவு  நிறைந்த  நீதியோடே  புரண்டுவரும்.  {Isa  10:22}

 

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  தேசத்துக்குள்ளெங்கும்  தீர்மானிக்கப்பட்ட  அழிவை  வரச்செய்வார்.  {Isa  10:23}

 

ஆகையால்  சீயோனில்<Zion>  வாசமாயிருக்கிற  என்  ஜனமே,  அசீரியனுக்குப்<Assyrian>  பயப்படாதே;  அவன்  உன்னைக்  கோலால்  அடித்து,  எகிப்தியரைப்போல்<Egypt>  தன்  தண்டாயுதத்தை  உன்மேல்  ஓங்குவான்.  {Isa  10:24}

 

ஆனாலும்  இன்னும்  கொஞ்சக்காலத்துக்குள்ளே  என்  உக்கிரமும்,  அவர்களைச்  சங்கரிக்கப்போகிறதினால்  என்  கோபமும்  தீர்ந்துபோம்  என்று  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Isa  10:25}

 

ஓரேப்<Oreb>  கன்மலையண்டையிலே  மீதியானியர்<Midian>  வெட்டுண்டதுபோல்  சேனைகளின்  கர்த்தர்  அவன்மேல்  ஒரு  சவுக்கை  எழும்பிவரப்பண்ணி,  எகிப்திலே<Egypt>  தமது  கோலைக்  கடலின்மேல்  ஓங்கினதுபோல்  அதை  அவன்மேல்  ஓங்குவார்.  {Isa  10:26}

 

அந்நாளில்  உன்  தோளினின்று  அவன்  சுமையும்,  உன்  கழுத்தினின்று  அவன்  நுகமும்  நீக்கப்படும்;  அபிஷேகத்தின்  நுகம்  முறிந்துபோம்.  {Isa  10:27}

 

அவன்  ஆயாத்துக்கு<Aiath>  வந்து,  மிக்ரோனைக்<Migron>  கடந்து,  மிக்மாசிலே<Michmash>  தன்  ரஸ்துக்களை  வைத்திருக்கிறான்.  {Isa  10:28}

 

கணவாயைத்  தாண்டி,  கேபாவிலே<Geba>  பாளயமிறங்குகிறார்கள்;  ராமா<Ramah>  அதிர்கிறது;  சவுலின்<Saul>  ஊராகிய  கிபியா<Gibeah>  ஓடிப்போகிறது.  {Isa  10:29}

 

காலீம்<Gallim>  குமாரத்தியே,  உரத்த  சத்தமாய்க்  கூப்பிடு;  ஏழை  ஆனதோத்தே<Anathoth>,  லாயீஷ்<Laish>  ஊர்மட்டும்  எட்ட  சத்தமிட்டுக்  கூப்பிடு.  {Isa  10:30}

 

மத்மேனா<Madmenah>  வலசைவாங்கிப்போம்,  கேபிமின்<Gebim>  குடிகள்  தப்பிஓடக்  கூட்டங்கூடுகிறார்கள்.  {Isa  10:31}

 

இனி  ஒருநாள்  நோபிலே<Nob>  தங்கி,  சீயோன்<Zion>  குமாரத்தியின்  பர்வதத்துக்கும்,  எருசலேமின்<Jerusalem>  மேட்டுக்கும்  விரோதமாய்க்  கை  நீட்டி  மிரட்டுவான்.  {Isa  10:32}

 

இதோ,  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  தோப்புகளைப்  பயங்கரமாய்  வெட்டுவார்;  ஓங்கி  வளர்ந்தவைகள்  வெட்டுண்டு  மேட்டிமையானவைகள்  தாழ்த்தப்படும்.  {Isa  10:33}

 

அவர்  காட்டின்  அடர்த்தியைக்  கோடரியினாலே  வெட்டிப்போடுவார்;  மகத்துவமானவராலே  லீபனோன்<Lebanon>  விழும்.  {Isa  10:34}

 

ஈசாயென்னும்<Jesse>  அடிமரத்திலிருந்து  ஒரு  துளிர்  தோன்றி,  அவன்  வேர்களிலிருந்து  ஒரு  கிளை  எழும்பிச்  செழிக்கும்.  {Isa  11:1}

 

ஞானத்தையும்  உணர்வையும்  அருளும்  ஆவியும்,  ஆலோசனையையும்  பெலனையும்  அருளும்  ஆவியும்,  அறிவையும்  கர்த்தருக்குப்  பயப்படுகிற  பயத்தையும்  அருளும்  ஆவியுமாகிய  கர்த்தருடைய  ஆவியானவர்  அவர்மேல்  தங்கியிருப்பார்.  {Isa  11:2}

 

கர்த்தருக்குப்  பயப்படுதல்  அவருக்கு  உகந்த  வாசனையாயிருக்கும்;  அவர்  தமது  கண்  கண்டபடி  நியாயந்தீர்க்காமலும்,  தமது  காது  கேட்டபடி  தீர்ப்புச்செய்யாமலும்,  {Isa  11:3}

 

நீதியின்படி  ஏழைகளை  நியாயம்  விசாரித்து,  யதார்த்தத்தின்படி  பூமியிலுள்ள  சிறுமையானவர்களுக்குத்  தீர்ப்புச்செய்து,  பூமியைத்  தமது  வாக்கின்  கோலால்  அடித்து,  தமது  வாயின்  சுவாசத்தால்  துன்மார்க்கரைச்  சங்கரிப்பார்.  {Isa  11:4}

 

நீதி  அவருக்கு  அரைக்கட்டும்,  சத்தியம்  அவருக்கு  இடைக்கச்சையுமாயிருக்கும்.  {Isa  11:5}

 

அப்பொழுது  ஓனாய்  ஆட்டுக்குட்டியோடே  தங்கும்,  புலி  வெள்ளாட்டுக்குட்டியோடே  படுத்துக்கொள்ளும்;  கன்றுக்குட்டியும்,  பாலசிங்கமும்,  காளையும்,  ஒருமித்திருக்கும்;  ஒரு  சிறு  பையன்  அவைகளை  நடத்துவான்.  {Isa  11:6}

 

பசுவும்  கரடியும்  கூடிமேயும்,  அவைகளின்  குட்டிகள்  ஒருமித்துப்  படுத்துக்கொள்ளும்;  சிங்கம்  மாட்டைப்போல்  வைக்கோல்  தின்னும்.  {Isa  11:7}

 

பால்  குடிக்குங்குழந்தை  விரியன்பாம்பு  வளையின்மேல்  விளையாடும்,  பால்  மறந்த  பிள்ளை  கட்டுவிரியன்  புற்றிலே  தன்  கையை  வைக்கும்.  {Isa  11:8}

 

என்  பரிசுத்த  பர்வதமெங்கும்  தீங்குசெய்வாருமில்லை;  கேடுசெய்வாருமில்லை;  சமுத்திரம்  ஜலத்தினால்  நிறைந்திருக்கிறதுபோல்,  பூமி  கர்த்தரை  அறிகிற  அறிவினால்  நிறைந்திருக்கும்.  {Isa  11:9}

 

அக்காலத்திலே,  ஜனங்களுக்குக்  கொடியாக  நிற்கும்  ஈசாயின்<Jesse>  வேருக்காக  ஜாதிகள்  விசாரித்துக்  கேட்பார்கள்;  அவருடைய  தாபரஸ்தலம்  மகிமையாயிருக்கும்.  {Isa  11:10}

 

அக்காலத்திலே,  ஆண்டவர்  அசீரியாவிலும்<Assyria>,  எகிப்திலும்<Egypt>,  பத்ரோசிலும்<Pathros>,  எத்தியோப்பியாவிலும்<Ethiopia>,  பெர்சியாவிலும்<Persia>,  சிநேயாரிலும்<Shinar>,  ஆமாத்திலும்<Hamath>,  சமுத்திரத்  தீவுகளிலும்,  தம்முடைய  ஜனத்தில்  மீதியானவர்களை  மீட்டுக்கொள்ளத்  திரும்ப  இரண்டாம்விசை  தமது  கரத்தை  நீட்டி,  {Isa  11:11}

 

ஜாதிகளுக்கு  ஒரு  கொடியை  ஏற்றி,  இஸ்ரவேலில்<Israel>  துரத்துண்டவர்களைச்  சேர்த்து,  யூதாவில்<Judah>  சிதறடிக்கப்பட்டவர்களை  பூமியின்  நான்கு  திசைகளிலுமிருந்து  கூட்டுவார்.  {Isa  11:12}

 

எப்பிராயீமின்<Ephraim>  பொறாமை  நீங்கும்,  யூதாவின்<Judah>  சத்துருக்கள்  சங்கரிக்கப்படுவார்கள்;  எப்பிராயீம்<Ephraim>  யூதாவின்மேல்<Judah>  பொறாமையாயிரான்,  யூதா<Judah>  எப்பிராயீமைத்<Ephraim>  துன்பப்படுத்தான்.  {Isa  11:13}

 

அவர்கள்  இருவரும்  ஏகமாய்க்  கூடி  மேற்கேயிருக்கிற  பெலிஸ்தருடைய<Philistines>  எல்லைகளின்மேல்  பாய்ந்து,  கீழ்த்திசையாரைக்  கொள்ளையிட்டு,  ஏதோமின்மேலும்<Edom>  மோவாபின்மேலும்<Moab>  கைபோடுவார்கள்;  அம்மோன்<Ammon>  புத்திரர்  அவர்களுக்குக்  கீழ்ப்படிவார்கள்.  {Isa  11:14}

 

எகிப்தின்<Egyptian>  சமுத்திரமுனையைக்  கர்த்தர்  முற்றிலும்  அழித்து,  தம்முடைய  காற்றின்  வலுமையினால்  நதியின்மேல்  தமது  கையை  நீட்டி,  ஏழாறுகளாகப்  பிரித்து,  ஜனங்கள்  கால்நனையாமல்  கடந்துபோகும்படி  பண்ணுவார்.  {Isa  11:15}

 

இஸ்ரவேலர்<Israel>  எகிப்து<Egypt>  தேசத்திலிருந்து  புறப்பட்டநாளில்  அவர்களுக்கு  இருந்ததுபோல,  அசீரியாவிலே<Assyria>  அவருடைய  ஜனத்தில்  மீதியானவர்களுக்கு  ஒரு  பெரும்பாதையிருக்கும்.  {Isa  11:16}

 

அக்காலத்திலே  நீ  சொல்வது:  கர்த்தாவே,  நான்  உம்மைத்  துதிப்பேன்;  நீர்  என்மேல்  கோபமாயிருந்தீர்;  ஆனாலும்  உம்முடைய  கோபம்  நீங்கிற்று;  நீர்  என்னைத்  தேற்றுகிறீர்.  {Isa  12:1}

 

இதோ,  தேவனே  என்  இரட்சிப்பு;  நான்  பயப்படாமல்  நம்பிக்கையாயிருப்பேன்;  கர்த்தராகிய  யேகோவா<JEHOVAH>  என்  பெலனும்,  என்  கீதமுமானவர்;  அவரே  எனக்கு  இரட்சிப்புமானவர்.  {Isa  12:2}

 

நீங்கள்  இரட்சிப்பின்  ஊற்றுகளிலிருந்து  மகிழ்ச்சியோடே  தண்ணீர்  மொண்டுகொள்வீர்கள்.  {Isa  12:3}

 

அக்காலத்திலே  நீங்கள்  சொல்வது:  கர்த்தரைத்  துதியுங்கள்;  அவர்  நாமத்தைத்  தொழுதுகொள்ளுங்கள்;  அவருடைய  செய்கைகளை  ஜனங்களுக்குள்ளே  அறிவியுங்கள்;  அவருடைய  நாமம்  உயர்ந்ததென்று  பிரஸ்தாபம்பண்ணுங்கள்.  {Isa  12:4}

 

கர்த்தரைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்,  அவர்  மகத்துவமான  கிரியைகளைச்  செய்தார்;  இது  பூமியெங்கும்  அறியப்படக்கடவது  என்பீர்கள்.  {Isa  12:5}

 

சீயோனில்<Zion>  வாசமாயிருக்கிறவளே,  நீ  சத்தமிட்டுக்  கெம்பீரி;  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தர்  உன்  நடுவில்  பெரியவராயிருக்கிறார்.  {Isa  12:6}

 

ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>  பாபிலோன்மேல்<Babylon>  வரக்கண்ட  பாரம்.  {Isa  13:1}

 

உயர்ந்த  பர்வதத்தின்மேல்  கொடியேற்றுங்கள்;  உரத்த  சத்தமிட்டு  ஜனங்களை  வரவழையுங்கள்;  அவர்கள்  பிரபுக்களின்  வாசல்களுக்குள்  பிரவேசிப்பதற்குச்  சைகை  காட்டுங்கள்.  {Isa  13:2}

 

நான்  பரிசுத்தமாக்கினவர்களுக்குக்  கட்டளை  கொடுத்தேன்;  என்  கோபத்தை  நிறைவேற்ற  என்  பராக்கிரமசாலிகளை  அழைத்தும்  இருக்கிறேன்;  அவர்கள்  என்  மகத்துவத்தினாலே  களிகூருகிறவர்கள்  என்கிறார்.  {Isa  13:3}

 

திரளான  ஜனங்களின்  சத்தத்துக்கொத்த  வெகு  கூட்டத்தின்  இரைச்சலும்,  கூட்டப்பட்ட  ஜாதிகளுடைய  ராஜ்யங்களின்  அமளியான  இரைச்சலும்  மலைகளில்  கேட்கப்படுகிறது;  சேனைகளின்  கர்த்தர்  யுத்தராணுவத்தை  இலக்கம்பார்க்கிறார்.  {Isa  13:4}

 

கர்த்தர்  வருகிறார்;  அவருடைய  கோபத்தின்  ஆயுதங்களும்,  தேசத்தையெல்லாம்  அழிக்க,  வானங்கவிழ்ந்த  கடையாந்தர  தேசத்திலிருந்து  வருகிறது.  {Isa  13:5}

 

அலறுங்கள்,  கர்த்தரின்  நாள்  சமீபமாயிருக்கிறது;  அது  சர்வவல்லவரிடத்திலிருந்து  மகா  சங்காரமாய்  வரும்.  {Isa  13:6}

 

ஆதலால்  எல்லாக்  கைகளும்  நெகிழ்ந்து,  எல்லா  மனுஷரின்  இருதயமும்  கரைந்துபோம்.  {Isa  13:7}

 

அவர்கள்  திகிலடைவார்கள்;  வேதனைகளும்  வாதைகளும்  அவர்களைப்  பிடிக்கும்;  பிள்ளைபெறுகிறவளைப்போல  வேதனைப்படுவார்கள்;  ஒருவரையொருவர்  பிரமித்துப்பார்ப்பார்கள்;  அவர்கள்  முகங்கள்  நெருப்பான  முகங்களாயிருக்கும்.  {Isa  13:8}

 

இதோ,  தேசத்தைப்  பாழாக்கி,  அதின்  பாவிகளை  அதிலிருந்து  அழிப்பதற்காகக்  கர்த்தருடைய  நாள்  கடூரமும்,  மூர்க்கமும்,  உக்கிரகோபமுமாய்  வருகிறது.  {Isa  13:9}

 

வானத்தின்  நட்சத்திரங்களும்  ராசிகளும்  ஒளி  கொடாதிருக்கும்;  சூரியன்  உதிக்கையில்  இருண்டுபோம்;  சந்திரன்  ஒளி  கொடாதிருக்கும்.  {Isa  13:10}

 

பாவத்தினிமித்தம்  உலகத்தையும்,  அக்கிரமத்தினிமித்தம்  துன்மார்க்கரையும்  நான்  தண்டித்து,  அகங்காரரின்  பெருமையை  ஒழியப்பண்ணி,  கொடியரின்  இடும்பைத்  தாழ்த்துவேன்.  {Isa  13:11}

 

புருஷனைப்  பசும்பொன்னிலும்,  மனுஷனை  ஓப்பீரின்<Ophir>  தங்கத்திலும்  அபூருவமாக்குவேன்.  {Isa  13:12}

 

இதினிமித்தம்  சேனைகளின்  கர்த்தருடைய  உக்கிரத்தினால்  அவருடைய  கடுங்கோபத்தின்  நாளிலே  பூமி  தன்னிடத்தைவிட்டு  நீங்கும்படி  வானத்தை  அதிரப்பண்ணுவேன்.  {Isa  13:13}

 

துரத்தப்பட்ட  வெளிமானைப்போலும்,  யாரும்  சேர்க்காத  ஆட்டைப்போலும்  இருப்பார்கள்;  அவரவர்  தங்கள்  ஜனத்தண்டைக்குப்  போக  முகத்தைத்  திருப்பி,  அவரவர்  தங்கள்  தேசத்துக்கு  ஓடிப்போவார்கள்.  {Isa  13:14}

 

அகப்பட்டவனெவனும்  குத்துண்டு,  அவர்களைச்  சேர்ந்திருந்தவனெவனும்  பட்டயத்தால்  விழுவான்.  {Isa  13:15}

 

அவர்கள்  குழந்தைகள்  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  மோதியடிக்கப்படும்;  அவர்கள்  வீடுகள்  கொள்ளையிடப்படும்;  அவர்கள்  மனைவிகள்  அவமானப்படுவார்கள்.  {Isa  13:16}

 

இதோ,  நான்  அவர்களுக்கு  விரோதமாய்  மேதியரை<Medes>  எழுப்புவேன்;  அவர்கள்  வெள்ளியை  மதியாமலும்,  பொன்னின்மேல்  பிரியப்படாமலும்,  {Isa  13:17}

 

வில்லுகளால்  இளைஞரைச்  சிதைத்துவிடுவார்கள்;  கர்ப்பக்கனியின்மேல்  அவர்கள்  இரங்குவதில்லை;  அவர்கள்  கண்  பிள்ளைகளைத்  தப்பவிடுவதுமில்லை.  {Isa  13:18}

 

ராஜ்யங்களுக்குள்  அலங்காரமும்,  கல்தேயருடைய<Chaldees>  பிரதான  மகிமையுமாகிய  பாபிலோனானது<Babylon>  தேவனால்  சோதோமும்<Sodom>  கொமோராவும்<Gomorrah>  கவிழ்க்கப்பட்டதுபோல  கவிழ்க்கப்படும்.  {Isa  13:19}

 

இனி  ஒருபோதும்  அதில்  ஒருவரும்  குடியேறுவதுமில்லை,  தலைமுறைதோறும்  அதில்  ஒருவரும்  தங்கித்  தரிப்பதுமில்லை;  அங்கே  அரபியன்<Arabian>  கூடாரம்போடுவதுமில்லை;  அங்கே  மேய்ப்பர்  மந்தையை  மறிப்பதுமில்லை.  {Isa  13:20}

 

காட்டுமிருகங்கள்  அங்கே  படுத்துக்கொள்ளும்;  ஊளையிடும்  பிராணிகள்  அவர்கள்  வீடுகளை  நிரப்பும்;  கோட்டான்கள்  அங்கே  குடிகொள்ளும்;  காட்டாடு  அங்கே  துள்ளும்.  {Isa  13:21}

 

அவர்கள்  பாழான  மாளிகைகளில்  ஓரிகள்  ஊளையிடும்;  வலுசர்ப்பங்கள்  அவர்கள்  செல்விக்கையான  அரமனைகளில்  ஏகமாய்க்  கூடும்;  அதின்காலம்  சீக்கிரம்  வரும்,  அதின்  நாட்கள்  நீடித்திராது  என்கிறார்.  {Isa  13:22}

 

கர்த்தர்  யாக்கோபுக்கு<Jacob>  இரங்கி,  பின்னும்  இஸ்ரவேலரைத்<Israel>  தெரிந்துகொண்டு,  அவர்களை  அவர்கள்  தேசத்திலே  தாபரிக்கப்பண்ணுவார்;  அந்நியரும்  அவர்களோடு  சேர்க்கையாகி,  யாக்கோபின்<Jacob>  வம்சத்தோடே  கூடிக்கொள்வார்கள்.  {Isa  14:1}

 

ஜனங்கள்  அவர்களை  அழைத்துக்கொண்டுபோய்  அவர்கள்  ஸ்தானத்தில்  விடுவார்கள்;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  கர்த்தருடைய  தேசத்திலே  அவர்களை  வேலைக்காரராகவும்  வேலைக்காரிகளாகவும்  கையாண்டு,  தங்களைச்  சிறையாக்கினவர்களைச்  சிறையாக்கி,  தங்களை  ஒடுக்கினவர்களை  ஆளுவார்கள்.  {Isa  14:2}

 

கர்த்தர்  உன்  துக்கத்தையும்,  உன்  தத்தளிப்பையும்,  நீ  அடிமையாக்கப்பட்டிருந்த  கடினமான  அடிமைத்தனத்தையும்  நீக்கி,  உன்னை  இளைப்பாறப்பண்ணும்  அக்காலத்திலே,  {Isa  14:3}

 

நீ  பாபிலோன்<Babylon>  ராஜாவின்மேல்  சொல்லும்  வாக்கியமாவது:  ஒடுக்கினவன்  ஒழிந்துபோனானே!  பொன்னகரி  ஒழிந்துபோயிற்றே!  {Isa  14:4}

 

கர்த்தர்  துஷ்டரின்  தண்டாயுதத்தையும்,  அரசாண்டவர்களின்  செங்கோலையும்  முறித்துப்போட்டார்.  {Isa  14:5}

 

உக்கிரங்கொண்டு  ஓயாத  அடியாய்  ஜனங்களை  அடித்து,  கோபமாய்  ஜாதிகளை  அரசாண்டவன்,  தடுப்பாரில்லாமல்  துன்பப்படுத்தப்படுகிறான்.  {Isa  14:6}

 

பூமிமுழுதும்  இளைப்பாறி  அமைந்திருக்கிறது;  கெம்பீரமாய்  முழங்குகிறார்கள்.  {Isa  14:7}

 

தேவதாரு  விருட்சங்களும்,  லீபனோனின்<Lebanon>  கேதுருக்களும்,  உன்னிமித்தம்  சந்தோஷப்பட்டு,  நீ  விழுந்துகிடந்தது  முதற்கொண்டு  எங்களை  வெட்டவருவார்  ஒருவரும்  இல்லை  என்று  சொல்லுகிறது.  {Isa  14:8}

 

கீழே  இருக்கிற  பாதாளம்  உன்னிமித்தம்  அதிர்ந்து,  உன்  வருகைக்கு  எதிர்கொண்டு,  பூமியில்  அதிபதிகளாயிருந்து  செத்த  இராட்சதர்  யாவரையும்  உன்னிமித்தம்  எழுப்பி,  ஜாதிகளுடைய  எல்லா  ராஜாக்களையும்  அவர்களுடைய  சிங்காசனங்களிலிருந்து  எழுந்திருக்கப்பண்ணுகிறது.  {Isa  14:9}

 

அவர்களெல்லாரும்  உன்னை  நோக்கி:  நீயும்  எங்களைப்போலப்  பலட்சயமானாயோ?  எங்களுக்குச்  சமானமானாயோ?  என்று  சொல்லுவார்கள்.  {Isa  14:10}

 

உன்  ஆடம்பரமும்,  உன்  வாத்தியங்களின்  முழக்கமும்  பாதாளத்தில்  தள்ளுண்டுபோயிற்று;  புழுக்களே  உன்  படுக்கை,  பூச்சிகளே  உன்  போர்வை.  {Isa  14:11}

 

அதிகாலையின்  மகனாகிய  விடிவெள்ளியே,  நீ  வானத்திலிருந்து  விழுந்தாயே!  ஜாதிகளை  ஈனப்படுத்தினவனே,  நீ  தரையிலே  விழ  வெட்டப்பட்டாயே!  {Isa  14:12}

 

நான்  வானத்துக்கு  ஏறுவேன்,  தேவனுடைய  நட்சத்திரங்களுக்குமேலாக  என்  சிங்காசனத்தை  உயர்த்துவேன்;  வடபுறங்களிலுள்ள  ஆராதனைக்  கூட்டத்தின்  பர்வதத்திலே  வீற்றிருப்பேன்  என்றும்,  {Isa  14:13}

 

நான்  மேகங்களுக்கு  மேலாக  உன்னதங்களில்  ஏறுவேன்;  உன்னதமானவருக்கு  ஒப்பாவேன்  என்றும்  நீ  உன்  இருதயத்தில்  சொன்னாயே.  {Isa  14:14}

 

ஆனாலும்  நீ  அகாதமான  பாதாளத்திலே  தள்ளுண்டுபோனாய்.  {Isa  14:15}

 

உன்னைக்  காண்கிறவர்கள்  உன்னை  உற்றுப்பார்த்து,  உன்னைக்குறித்துச்  சிந்தித்து:  இவன்தானா  பூமியைத்  தத்தளிக்கவும்,  ராஜ்யங்களை  அதிரவும்  செய்து,  {Isa  14:16}

 

உலகத்தை  வனாந்தரமாக்கி,  அதின்  நகரங்களை  அழித்து,  சிறைப்பட்டவர்களைத்  தங்கள்  வீடுகளுக்குப்  போகவிடாமலிருந்தவன்  என்பார்கள்.  {Isa  14:17}

 

ஜாதிகளுடைய  சகல  ராஜாக்களும்,  அவரவர்  தங்கள்  அறையிலே  மகிமையோடே  கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.  {Isa  14:18}

 

நீயோ  அழுகிப்போன  கிளையைப்போலவும்,  பட்டயக்குத்தால்  கொலையுண்டவர்களின்  உடுப்பைப்போலவும்,  ஒரு  குழியின்  கற்களுக்குள்ளே  கிடக்கிறவர்களைப்போலவும்,  காலால்  மிதிக்கப்பட்ட  பிணத்தைப்போலவும்,  உன்  கல்லறைக்குப்  புறம்பாய்  எறிந்துவிடப்பட்டாய்.  {Isa  14:19}

 

நீ  அவர்களோடே  அடக்கம்  பண்ணப்படுவதில்லை;  நீ  உன்  தேசத்தைக்  கெடுத்து  உன்  ஜனத்தைக்  கொன்றுபோட்டாய்;  தீமைசெய்கிறவர்களுடைய  சந்ததி  ஒருபோதும்  பேர்பெறுவதில்லை.  {Isa  14:20}

 

அவன்  புத்திரர்  எழும்பித்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொண்டு,  உலகத்தைப்  பட்டணங்களால்  நிரப்பாதபடிக்கு,  அவர்கள்  பிதாக்களுடைய  அக்கிரமத்தினிமித்தம்  அவர்களைக்  கொலைசெய்ய  ஆயத்தம்பண்ணுங்கள்.  {Isa  14:21}

 

நான்  அவர்களுக்கு  விரோதமாய்  எழும்புவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  பாபிலோனுடைய<Babylon>  பேரையும்,  அதில்  மீந்திருக்கிறதையும்,  புத்திரனையும்  பௌத்திரனையும்  சங்கரிப்பேனென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  14:22}

 

அதை  முள்ளம்பன்றிகளுக்குச்  சுதந்தரமும்,  தண்ணீர்  நிற்கும்  பள்ளங்களுமாக்கி,  அதைச்  சங்காரம்  என்னும்  துடைப்பத்தினால்  பெருக்கிவிடுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  14:23}

 

நான்  நினைத்திருக்கிறபடியே  நடக்கும்;  நான்  நிர்ணயித்தபடியே  நிலைநிற்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  ஆணையிட்டுச்  சொன்னார்.  {Isa  14:24}

 

அசீரியனை<Assyrian>  என்  தேசத்திலே  முறித்து,  என்  மலைகளின்மேல்  அவனை  மிதித்துப்போடுவேன்;  அப்பொழுது  அவனுடைய  நுகம்  அவர்கள்மேலிருந்து  விலகி,  அவனுடைய  சுமை  அவர்கள்  தோளிலிருந்து  நீங்கும்.  {Isa  14:25}

 

தேசமனைத்தின்மேலும்  நிர்ணயிக்கப்பட்ட  யோசனை  இதுவே;  சகல  ஜாதிகள்மேலும்  நீட்டப்பட்டிருக்கிற  கையும்  இதுவே  என்றார்.  {Isa  14:26}

 

சேனைகளின்  கர்த்தர்  இப்படி  நிர்ணயித்திருக்கிறார்,  யார்  அதை  வியர்த்தமாக்குவான்?  அவருடைய  கை  நீட்டப்பட்டிருக்கிறது,  யார்  அதைத்  திருப்புவான்?  {Isa  14:27}

 

ஆகாஸ்<Ahaz>  ராஜா  மரணமடைந்த  வருஷத்திலே  உண்டான  பாரம்  என்னவென்றால்:  {Isa  14:28}

 

முழு  பெலிஸ்தியாவே<Palestina>,  உன்னை  அடித்த  கோல்  முறிந்ததென்று  அக்களிப்பாயிராதே;  பாம்பின்  வேரிலிருந்து  கட்டுவிரியன்  தோன்றும்;  அதின்  கனி  பறக்கிற  அக்கினி  சர்ப்பமாயிருக்கும்.  {Isa  14:29}

 

தரித்திரரின்  தலைப்பிள்ளைகள்  திருப்தியாய்ப்  புசித்து,  எளியவர்கள்  சுகமாய்ப்  படுத்திருப்பார்கள்;  உன்வேரைப்  பஞ்சத்தினாலே  சாகப்பண்ணுவேன்,  உன்னில்  மீதியானவர்களை  அவன்  கொன்றுபோடுவான்.  {Isa  14:30}

 

வாசலே  அலறு;  நகரமே  கதறு;  பெலிஸ்தியாவே<Palestina>,  நீ  முழுதும்  கரைந்துபோகிறாய்;  ஏனென்றால்,  வடக்கே  இருந்து  புகைக்காடாய்  வருகிறான்;  அவன்  கூட்டங்களில்  தனித்தவனில்லை.  {Isa  14:31}

 

இப்போதும்  இந்த  ஜாதியின்  ஸ்தானாபதிகளுக்கு  என்ன  மாறுத்தரவு  சொல்லப்படும்?  கர்த்தர்  சீயோனை<Zion>  அஸ்திபாரப்படுத்தினார்;  அவருடைய  ஜனத்தில்  சிறுமையானவர்கள்  அதிலே  திடன்கொண்டு  தங்குவார்கள்  என்பதே.  {Isa  14:32}

 

மோவாபின்<Moab>  பாரம்.  இரவிலே  மோவாபிலுள்ள<Moab>  ஆர்<Ar>  என்னும்  பட்டணம்  பாழாக்கப்பட்டது,  அது  சங்காரமாயிற்று;  இரவிலே  மோவாபிலுள்ள<Moab>  கீர்<Kir>  என்னும்  பட்டணம்  பாழாக்கப்பட்டது,  அது  சங்காரமாயிற்று.  {Isa  15:1}

 

அழும்படி  மேடைகளாகிய  பாயித்துக்கும்<Bajith>  தீபோனுக்கும்<Dibon>  போகிறார்கள்;  நேபோவினிமித்தமும்<Nebo>  மேதெபாவினிமித்தமும்<Medeba>  மோவாப்<Moab>  அலறுகிறது;  அவர்களுடைய  தலைகளெல்லாம்  மொட்டையடித்திருக்கும்;  தாடிகளெல்லாம்  கத்தரித்திருக்கும்.  {Isa  15:2}

 

அதின்  வீதிகளில்  இரட்டைக்கட்டிக்கொண்டு,  எல்லாரும்  அதின்  வீடுகள்மேலும்,  அதின்  தெருக்களிலும்  அலறி,  அழுதுகொண்டிருக்கிறார்கள்.  {Isa  15:3}

 

எஸ்போன்<Heshbon>  ஊராரும்  எலெயாலே<Elealeh>  ஊராரும்  கூக்குரலிடுகிறார்கள்;  அவர்கள்  சத்தம்  யாகாஸ்மட்டும்<Jahaz>  கேட்கப்படுகிறது;  ஆகையால்  மோவாபின்<Moab>  ஆயுதபாணிகள்  கதறுகிறார்கள்;  அவனவனுடைய  ஆத்துமா  அவனவனில்  கிலேசப்படுகிறது.  {Isa  15:4}

 

என்  இருதயம்  மோவாபினிமித்தம்<Moab>  ஓலமிடுகிறது;  அதிலிருந்து  ஓடிவருகிறவர்கள்  மூன்று  வயது  கிடாரியைப்போல  அலைகிறார்கள்;  லூகித்துக்கு<Luhith>  ஏறிப்போகிற  வழியிலே  அழுகையோடே  ஏறுகிறார்கள்;  ஒரோனாயீமின்<Horonaim>  வழியிலே  நொறுங்குதலின்  கூக்குரல்  இடுகிறார்கள்.  {Isa  15:5}

 

நிம்ரீமின்<Nimrim>  நீர்ப்பாய்ச்சலான  இடங்கள்  பாழாய்ப்போம்;  புல்  உலர்ந்து,  முளை  அழிந்து,  பச்சையில்லாமற்போகிறது.  {Isa  15:6}

 

ஆதலால்  மிகுதியாகச்  சேர்த்ததையும்,  அவர்கள்  சம்பாதித்து  வைத்ததையும்,  அலரிகளின்  ஆற்றுக்கப்பாலே  எடுத்துக்கொண்டுபோவார்கள்.  {Isa  15:7}

 

கூக்குரல்  மோவாபின்<Moab>  எல்லையெங்கும்  சுற்றும்;  எக்லாயிம்மட்டும்<Eglaim>  அதின்  அலறுதலும்,  பெரேலீம்மட்டும்<Beerelim>  அதின்  புலம்புதலும்  எட்டும்.  {Isa  15:8}

 

தீமோனின்<Dimon>  தண்ணீர்கள்  இரத்தத்தால்  நிறைந்திருக்கும்;  தீமோனின்மேல்<Dimon>  அதிக  கேடுகளைக்  கட்டளையிடுவேன்;  மோவாபிலே<Moab>  தப்பினவர்கள்மேலும்,  தேசத்தில்  மீதியானவர்கள்மேலும்  சிங்கத்தை  வரப்பண்ணுவேன்.  {Isa  15:9}

 

தேசாதிபதிக்குச்  செலுத்தும்  ஆட்டுக்குட்டிகளை  நீங்கள்  சேலாபட்டணந்துவக்கி<Sela>  வனாந்தரமட்டும்  சேர்த்துச்  சீயோன்<Zion>  குமாரத்தியின்  மலைக்கு  அனுப்புங்கள்.  {Isa  16:1}

 

இல்லாவிட்டால்  கூட்டைவிட்டுத்  துரத்தப்பட்டு  அலைகிற  குருவியைப்போல  மோவாபின்<Moab>  குமாரத்திகள்  அர்னோன்<Arnon>  நதியின்  துறைகளிடத்திலிருப்பார்கள்.  {Isa  16:2}

 

நீ  ஆலோசனைபண்ணி,  நியாயஞ்செய்து,  மத்தியானத்திலே  உன்  நிழலை  இரவைப்போலாக்கி,  துரத்தப்பட்டவர்களை  மறைத்துக்கொள்,  ஓடிவருகிறவர்களைக்  காட்டிக்கொடாதிரு.  {Isa  16:3}

 

மோவாபே<Moab>,  துரத்திவிடப்பட்ட  என்  ஜனங்கள்  உன்னிடத்தில்  தங்கட்டும்;  சங்கரிக்கிறவனுக்குத்  தப்ப  அவர்களுக்கு  அடைக்கலமாயிரு;  ஒடுக்குகிறவன்  இல்லாதேபோவான்;  சங்கரிப்பு  ஒழிந்துபோம்;  மிதிக்கிறவர்கள்  தேசத்தில்  இராதபடிக்கு  அழிந்துபோவார்கள்.  {Isa  16:4}

 

கிருபையினாலே  சிங்காசனம்  ஸ்தாபிக்கப்படும்;  நியாயம்  விசாரித்துத்  துரிதமாய்  நீதிசெய்கிற  ஒருவர்  அதின்மேல்  தாவீதின்<David>  கூடாரத்திலே  நியாயாதிபதியாய்  உண்மையோடே  வீற்றிருப்பார்.  {Isa  16:5}

 

மோவாபின்<Moab>  பெருமையையும்,  அவன்  மேட்டிமையையும்,  அவன்  அகங்காரத்தையும்,  அவன்  உக்கிரத்தையும்  குறித்துக்  கேட்டோம்;  அவன்  மெத்தப்  பெருமைக்காரன்;  ஆனாலும்  அவன்  வீம்பு  செல்லாது.  {Isa  16:6}

 

ஆகையால்,  மோவாபியர்<Moab>  ஒருவருக்காக  ஒருவர்  அலறுவார்கள்,  எல்லாரும்  ஏகமாய்  அலறுவார்கள்;  கிராரேசேத்<Kirhareseth>  ஊரின்  அஸ்திபாரங்கள்  தகர்க்கப்பட்டதே  என்று  அவைகளுக்காகப்  பெருமூச்சு  விடுவார்கள்.  {Isa  16:7}

 

எஸ்போன்<Heshbon>  ஊர்  வயல்கள்  வாடிப்போயின;  சிப்மாஊர்த்<Sibmah>  திராட்சச்செடியின்  நல்ல  கொடிகளை  ஜாதிகளின்  அதிபதிகள்  நறுக்கிப்போட்டார்கள்;  அவைகள்  யாசேர்மட்டும்<Jazer>  சென்று  வனாந்தரத்தில்  படர்ந்திருந்தது;  அவைகளின்  கொடிகள்  நீண்டு  கடலுக்கப்பாலே  எட்டியிருந்தது.  {Isa  16:8}

 

ஆகையால்  யாசேருக்காக<Jazer>  அழுததுபோல,  சிப்மாஊர்த்<Sibmah>  திராட்சச்செடிக்காகவும்  மிகவும்  அழுவேன்;  எஸ்போனே<Heshbon>,  எலெயாலேயே<Elealeh>,  உனக்கு  என்  கண்ணீரைப்  பாய்ச்சுவேன்;  உன்  வசந்தகாலத்துப்  பழங்களுக்காகவும்,  உன்  திராட்சப்பழ  அறுப்புக்காகவும்  ஆரவாரிக்கிற  சந்தோஷ  சத்தம்  விழுந்துபோயிற்று.  {Isa  16:9}

 

பயிர்வெளியிலிருந்து  சந்தோஷமும்  களிப்பும்  அற்றுப்போயின;  திராட்சத்தோட்டங்களில்  பாடலுமில்லை  ஆர்ப்பரிப்புமில்லை;  ஆலையில்  இரசத்தை  மிதிக்கிறவனுமில்லை;  சந்தோஷ  ஆரவாரத்தை  ஓயப்பண்ணினேன்.  {Isa  16:10}

 

ஆகையால்  மோவாபினிமித்தம்<Moab>  என்  குடல்களும்,  கிராரேசினிமித்தம்<Kirharesh>  என்  உள்ளமும்  சுரமண்டலத்தைப்  போலத்  தொனிக்கிறது.  {Isa  16:11}

 

மோவாப்<Moab>  மேடைகளின்மேல்  சலித்துப்போனான்  என்று  காணப்படும்போது,  பிரார்த்தனைசெய்யத்  தன்  பரிசுத்த  ஸ்தானத்திலே  பிரவேசிப்பான்;  ஆனாலும்  அநுகூலப்படமாட்டான்.  {Isa  16:12}

 

மோவாபைக்குறித்து<Moab>  அக்காலத்திலே  கர்த்தர்  சொன்ன  வார்த்தை  இதுவே.  {Isa  16:13}

 

ஒரு  கூலிக்காரனுடைய  வருஷங்களுக்கொத்த  மூன்று  வருஷங்களுக்குள்ளே  மோவாபின்<Moab>  மகிமையும்  அதின்  மகா  ஜனக்கூட்டமும்  சீரழிந்துபோம்;  அதில்  மீதியாயிருப்பது  மிகவும்  சிறிதும்  அற்பமுமாயிருக்கும்  என்று  கர்த்தர்  இப்பொழுது  சொல்லுகிறார்.  {Isa  16:14}

 

தமஸ்குவின்<Damascus>  பாரம்.  இதோ,  தமஸ்குவானது<Damascus>  நகரமாயிராமல்  தள்ளப்பட்டு,  பாழான  மண்மேடாகும்.  {Isa  17:1}

 

ஆரோவேரின்<Aroer>  பட்டணங்கள்  பாழாய்  விடப்பட்டு,  மந்தைகளின்  வெளியாயிருக்கும்;  மிரட்டுவாரில்லாமல்  அவைகள்  அங்கே  படுத்துக்கொள்ளும்.  {Isa  17:2}

 

அரண்  எப்பிராயீமையும்<Ephraim>,  ராஜாங்கம்  தமஸ்குவையும்<Damascus>  விட்டொழியும்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  மகிமைக்கு  நேரிட்டதுபோல  சீரியாவில்<Syria>  மீதியாயிருப்பவர்களுக்கும்  நேரிடும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  17:3}

 

அக்காலத்திலே  யாக்கோபின்<Jacob>  மகிமை  குறைந்துபோம்,  அவனுடைய  கொழுத்த  தேகம்  மெலிந்துபோம்.  {Isa  17:4}

 

ஒருவன்  ஓங்கின  பயிரை  அரிந்து,  தன்  கையினால்  கதிர்களை  அறுத்து,  ரெப்பாயீம்<Rephaim>  பள்ளத்தாக்கிலே  கதிர்களைச்  சேர்க்கிறதுபோலிருக்கும்.  {Isa  17:5}

 

ஆனாலும்  ஒலிவ  மரத்தை  உலுக்கும்போது  நுனிக்கொம்பிலே  இரண்டு  மூன்று  காய்களும்,  காய்க்கிற  அதின்  கிளைகளிலே  நாலைந்து  காய்களும்  மீதியாயிருப்பதுபோல,  அதிலே  பின்பறிப்புக்குக்  கொஞ்சம்  மீதியாயிருக்குமென்று  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  17:6}

 

அக்காலத்திலே  மனுஷன்  தன்  கைகளின்  கிரியையாகிய  பீடங்களை  நோக்காமலும்,  தன்  விரல்கள்  உண்டுபண்ணின  தோப்புவிக்கிரகங்களையும்,  சிலைகளையும்  நோக்காமலும்,  {Isa  17:7}

 

தன்னை  உண்டாக்கினவரையே  நோக்குவான்,  அவன்  கண்கள்  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தரையே  நோக்கிக்கொண்டிருக்கும்.  {Isa  17:8}

 

அக்காலத்திலே  அவர்களுடைய  அரணான  பட்டணங்கள்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கு  மீதியாய்  வைக்கப்பட்ட  தழையைப்போலவும்,  நுனிக்கொம்பைப்போலவுமாகி,  பாழாய்க்  கிடக்கும்.  {Isa  17:9}

 

உன்  பெலமாகிய  கன்மலையை  நீ  நினையாமல்,  உன்  இரட்சிப்பாகிய  தேவனை  மறந்தாய்;  ஆதலால்  நீ  நேர்த்தியான  நாற்றுகளை  நட்டாலும்,  அந்நிய  தேசத்துக்  கன்றுகளை  வைத்தாலும்,  {Isa  17:10}

 

பகற்காலத்திலே  உன்  நாற்றை  வளரவும்,  விடியற்காலத்திலே  உன்  விதையை  முளைக்கவும்  பண்ணினாலும்,  பலனைச்  சேர்க்கும்  நாளிலே  துக்கமும்  கடும்வேதனையுமே  உங்கள்  அறுப்பாயிருக்கும்.  {Isa  17:11}

 

ஐயோ!  கடல்கள்  கொந்தளிக்கிறதுபோல  கொந்தளிக்கிற  அநேக  ஜனங்களின்  திரளும்,  பலத்த  தண்ணீர்கள்  இரைகிறதுபோல  இரைகிற  ஜனக்கூட்டங்களின்  அமளியும்  உண்டாயிருக்கிறது.  {Isa  17:12}

 

ஜனக்கூட்டங்கள்  திரளான  தண்ணீர்கள்  இரைகிறதுபோல  இரைந்தாலும்,  அவர்களை  அவர்  அதட்டுவார்;  அவர்கள்  தூரமாய்  ஓடிப்போவார்கள்;  மலைகளிலே  காற்றினால்  பறக்கடிக்கிற  பதரைப்போலவும்,  சுழல்காற்றிலே  அகப்பட்ட  துரும்பைப்போலவும்  துரத்தப்படுவார்கள்.  {Isa  17:13}

 

இதோ,  சாயங்காலத்திலே  கலக்கமுண்டாகும்,  விடியற்காலத்துக்குமுன்  அவர்கள்  ஒழிந்துபோவார்கள்;  இதுவே  நம்மைக்  கொள்ளையாடுகிறவர்களின்  பங்கும்,  நம்மைச்  சூறையாடுகிறவர்களின்  வீதமுமாயிருக்கும்.  {Isa  17:14}

 

எத்தியோப்பியாவின்<Ethiopia>  நதிகளுக்கு  அக்கரையிலே  நிழலிடும்  செட்டைகளுடையதும்,  {Isa  18:1}

 

கடல்வழியாய்த்  தண்ணீர்களின்மேல்  நாணல்  படவுகளிலே  ஸ்தானாபதிகளை  அனுப்புகிறதுமான  தேசத்துக்கு  ஐயோ!  வேகமான  தூதர்களே,  நெடுந்தூரமாய்ப்  பரவியிருக்கிறதும்,  சிரைக்கப்பட்டதும்,  துவக்கமுதல்  இதுவரைக்கும்  கெடியாயிருந்ததும்,  அளவிடப்பட்டதும்,  மிதிக்கப்பட்டதும்,  நதிகள்  பாழாக்குகிறதுமான  ஜாதியண்டைக்குப்  போங்கள்.  {Isa  18:2}

 

பூச்சக்கரத்தில்  வாசமாயிருக்கிறவர்களும்,  தேசத்துக்  குடிகளுமாகிய  நீங்களெல்லாரும்,  மலைகளின்மேல்  கொடியேற்றப்படும்போது  பாருங்கள்,  எக்காளம்  ஊதப்படும்போது  கேளுங்கள்.  {Isa  18:3}

 

நான்  அமர்ந்திருந்து  பயிரின்மேல்  காயும்  காந்தியுள்ள  வெயிலைப்போலவும்,  அறுப்புக்காலத்து  உஷ்ணத்தில்  உண்டாகும்  பனிமேகத்தைப்போலவும்,  என்  வாசஸ்தலத்திலிருந்து  கண்ணோக்குவேன்  என்று  கர்த்தர்  என்னுடனே  சொன்னார்.  {Isa  18:4}

 

திராட்சச்செடிகள்  அறுப்புக்கு  முன்னே  பூப்பூத்து  முற்றிக்  காய்க்கிற  காய்கள்  பிஞ்சாயிருக்கும்போதே,  அவர்  அரிவாள்களினாலே  கப்புக்கவர்களை  அறுத்துக்  கொடிகளையரிந்து  அகற்றிப்போடுவார்.  {Isa  18:5}

 

அவைகள்  ஏகமாய்  மலைகளின்  பட்சிகளுக்கும்,  பூமியின்  மிருகங்களுக்கும்  விடப்படும்;  பட்சிகள்  அதின்மேல்  கோடைகாலத்திலும்,  காட்டுமிருகங்களெல்லாம்  அதின்மேல்  மாரிகாலத்திலும்  தங்கும்.  {Isa  18:6}

 

அக்காலத்திலே  நெடுந்தூரமாய்ப்  பரவியிருக்கிறதும்,  சிரைக்கப்பட்டதும்,  துவக்கமுதல்  இதுவரைக்கும்  கெடியாயிருந்ததும்,  அளவிடப்பட்டதும்,  மிதிக்கப்பட்டதும்,  நதிகள்  பாழாக்குகிறதுமான  ஜாதியானது,  சேனைகளின்  கர்த்தரின்  நாமம்  தங்கும்  ஸ்தலமாகிய  சீயோன்<Zion>  மலையில்,  சேனைகளின்  கர்த்தருக்குக்  காணிக்கையாகக்  கொண்டுவரப்படும்.  {Isa  18:7}

 

எகிப்தின்<Egypt>  பாரம்.  இதோ,  கர்த்தர்  வேகமான  மேகத்தின்மேல்  ஏறி  எகிப்துக்கு<Egypt>  வருவார்;  அப்பொழுது  எகிப்தின்<Egypt>  விக்கிரகங்கள்  அவருக்கு  முன்பாகக்  குலுங்கும்,  எகிப்தின்<Egypt>  இருதயம்  தனக்குள்ளே  கரைந்துபோகும்.  {Isa  19:1}

 

சகோதரனோடே  சகோதரனும்,  சிநேகிதனோடே  சிநேகிதனும்,  பட்டணத்தோடே  பட்டணமும்,  ராஜ்யத்தோடே  ராஜ்யமும்  யுத்தம்பண்ணும்படியாய்,  எகிப்தியரை<Egyptians>  எகிப்தியரோடே<Egyptians>  போர்  கலக்கப்பண்ணுவேன்.  {Isa  19:2}

 

அதினால்  எகிப்தியருடைய<Egypt>  ஆவி  அவர்களுக்குள்  சோர்ந்துபோகும்;  அவர்கள்  ஆலோசனையை  முழுகிப்போகப்  பண்ணுவேன்;  அப்பொழுது  விக்கிரகங்களையும்,  மந்திரவாதிகளையும்,  சன்னதக்காரர்களையும்,  குறிசொல்லுகிறவர்களையும்  தேடுவார்கள்.  {Isa  19:3}

 

நான்  எகிப்தியரைக்<Egyptians>  கடினமான  அதிபதியின்  கையில்  ஒப்பிப்பேன்;  கடூரமான  ராஜா  அவர்களை  ஆளுவான்  என்று  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Isa  19:4}

 

அப்பொழுது  கடலின்  தண்ணீர்கள்  குறைந்து,  நதியும்  வற்றி  வறண்டுபோம்.  {Isa  19:5}

 

ஆறுகளைத்  திருப்பிவிடுவார்கள்;  அரணிப்பான  அகழிகள்  வெறுமையாகி  வறண்டுபோம்;  கொறுக்கையும்  நாணலும்  வாடும்.  {Isa  19:6}

 

நதியோரத்திலும்  நதிமுகத்திலும்  இருக்கிற  மடலுள்ள  செடிகளும்,  நதியருகே  விதைக்கப்பட்ட  யாவும்  உலர்ந்துபோம்;  அது  பறக்கடிக்கப்பட்டு  இல்லாதேபோம்.  {Isa  19:7}

 

மீன்பிடிக்கிறவர்கள்  பெருமூச்சுவிடுவார்கள்,  நதியிலே  தூண்டில்போடுகிற  யாவரும்  துக்கிப்பார்கள்;  தண்ணீர்களின்மேல்  வலைகளை  வீசுகிறவர்கள்  சலித்துப்போவார்கள்.  {Isa  19:8}

 

மெல்லிய  சணலைப்  பக்குவப்படுத்துகிறவர்களும்,  சல்லாக்களை  நெய்கிறவர்களும்  நாணுவார்கள்.  {Isa  19:9}

 

மீன்  வளர்க்கிற  குளங்களைக்  கூலிக்கு  அணைக்கட்டுகிற  அனைவருடைய  அணைக்கட்டுகளும்  உடைந்துபோம்.  {Isa  19:10}

 

சோவான்பட்டணத்தின்<Zoan>  பிரபுக்களானவர்கள்  மூடர்கள்;  பார்வோனுடைய<Pharaoh>  ஞானமுள்ள  ஆலோசனைக்காரரின்  ஆலோசனை  மதியீனமாயிற்று:  நான்  ஞானிகளின்  புத்திரன்,  நான்  பூர்வ  ராஜாக்களின்  குமாரன்  என்று  பார்வோனுடனே<Pharaoh>  எப்படிச்  சொல்லுகிறீர்கள்?  {Isa  19:11}

 

அவர்கள்  எங்கே?  உன்  ஞானிகள்  எங்கே?  சேனைகளின்  கர்த்தர்  எகிப்தைக்குறித்துப்<Egypt>  பண்ணின  யோசனையை  அவர்கள்  உனக்குத்  தெரிவிக்கட்டும்;  அல்லது  தாங்களே  அறிந்துகொள்ளட்டும்.  {Isa  19:12}

 

சோவான்<Zoan>  பிரபுக்கள்  மூடரானார்கள்;  நோப்பின்<Noph>  பிரபுக்கள்  மோசம்போனார்கள்;  எகிப்தையும்<Egypt>  அதின்  கோத்திரத்தலைவரையும்  வழிதப்பப்பண்ணுகிறார்கள்.  {Isa  19:13}

 

கர்த்தர்  அதின்  நடுவில்  தாறுமாறுகளின்  ஆவியை  வரப்பண்ணினார்;  ஆனதுகொண்டு  வெறியன்  வாந்திபண்ணி,  தள்ளாடித்  திரிகிறதுபோல,  அவர்கள்  எகிப்தை<Egypt>  அதின்  எல்லாச்  செய்கையிலும்  தள்ளாடித்  திரியப்பண்ணுகிறார்கள்.  {Isa  19:14}

 

எகிப்தில்<Egypt>  தலையாகிலும்  வாலாகிலும்  கிளையாகிலும்  நாணலாகிலும்  செய்யும்  வேலை  ஒன்றுமிராது.  {Isa  19:15}

 

அக்காலத்திலே  எகிப்தியர்<Egypt>  பெண்டுகளைப்போலிருந்து,  சேனைகளின்  கர்த்தர்  தங்கள்மேல்  அசைக்கும்  கையசைவினாலே  அஞ்சி  நடுங்குவார்கள்.  {Isa  19:16}

 

சேனைகளின்  கர்த்தர்  அவர்களுக்கு  விரோதமாக  நிர்ணயித்துக்கொண்ட  ஆலோசனையினிமித்தம்  யூதாவின்<Judah>  தேசம்  எகிப்தியருக்குப்<Egypt>  பயங்கரமாயிருக்கும்;  தனக்குள்  அதை  நினைக்கிறவனெவனும்  திடுக்கிடுவான்.  {Isa  19:17}

 

அக்காலத்திலே  எகிப்துதேசத்திலிருக்கும்<Egypt>  ஐந்து  பட்டணங்கள்  கானான்<Canaan>  பாஷையைப்  பேசி,  சேனைகளின்  கர்த்தரை  முன்னிட்டு  ஆணையிடும்;  அவைகளில்  ஒன்று  நிர்மூலமான  பட்டணம்  என்னப்படும்.  {Isa  19:18}

 

அக்காலத்திலே  எகிப்துதேசத்தின்<Egypt>  நடுவிலே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடமும்,  அதின்  எல்லையருகே  கர்த்தருக்கு  ஒரு  ஸ்தம்பமும்  உண்டாயிருக்கும்.  {Isa  19:19}

 

அது  எகிப்து<Egypt>  தேசத்திலே  சேனைகளின்  கர்த்தருக்கு  அடையாளமும்  சாட்சியுமாயிருக்கும்;  ஒடுக்குகிறவர்களினிமித்தம்  அவர்கள்  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுவார்கள்;  அப்பொழுது  அவர்களுக்கு  ஒரு  இரட்சகனையும்,  ஒரு  பெலவானையும்  அனுப்பி  அவர்களை  விடுவிப்பார்.  {Isa  19:20}

 

அப்பொழுது  கர்த்தர்  எகிப்தியருக்கு<Egypt>  அறியப்படுவார்;  எகிப்தியர்<Egyptians>  கர்த்தரை  அக்காலத்திலே  அறிந்து,  அவருக்குப்  பலிகளோடும்  காணிக்கைகளோடும்  ஆராதனைசெய்து,  கர்த்தருக்குப்  பொருத்தனைகளைப்பண்ணி  அவைகளைச்  செலுத்துவார்கள்.  {Isa  19:21}

 

கர்த்தர்  எகிப்தியரை<Egypt>  வாதையினால்  அடிப்பார்;  அடித்துக்  குணமாக்குவார்;  அவர்கள்  கர்த்தரிடத்தில்  மனந்திரும்புவார்கள்;  அப்பொழுது  அவர்கள்  விண்ணப்பத்தைக்  கேட்டு,  அவர்களைக்  குணமாக்குவார்.  {Isa  19:22}

 

அக்காலத்திலே  எகிப்திலிருந்து<Egypt>  அசீரியாவுக்குப்<Assyria>  போகிற  பெரும்பாதை  உண்டாயிருக்கும்;  அசீரியர்<Assyrian>  எகிப்துக்கும்<Egypt>,  எகிப்தியர்<Egyptian>  அசீரியாவுக்கும்<Assyria>  வந்து,  எகிப்தியர்<Egyptians>  அசீரியரோடுங்கூட<Assyrians>  ஆராதனை  செய்வார்கள்.  {Isa  19:23}

 

அக்காலத்திலே  இஸ்ரவேல்<Israel>  எகிப்தோடும்<Egypt>  அசீரியாவோடும்<Assyria>  மூன்றாவதாகப்  பூமியின்  நடுவில்  ஆசீர்வாதமாயிருக்கும்.  {Isa  19:24}

 

அவர்களைக்குறித்துச்  சேனைகளின்  கர்த்தர்:  எகிப்தியராகிய<Egypt>  என்  ஜனமும்,  அசீரியராகிய<Assyria>  என்  கரத்தின்  கிரியையும்,  இஸ்ரவேலராகிய<Israel>  என்  சுதந்தரமும்  ஆசீர்வதிக்கப்பட்டது  என்று  சொல்லி,  அவர்களை  ஆசீர்வதிப்பார்.  {Isa  19:25}

 

தர்த்தான்<Tartan>,  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சர்கோனாலே<Sargon>  அனுப்பப்பட்டு,  அஸ்தோத்துக்கு<Ashdod>  வந்து,  அஸ்தோத்தின்மேல்<Ashdod>  யுத்தம்பண்ணி,  அதைப்  பிடித்த  வருஷத்திலே,  {Isa  20:1}

 

கர்த்தர்  ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயாவை<Isaiah>  நோக்கி:  நீ  போய்  உன்  அரையிலிருக்கிற  இரட்டை  அவிழ்த்து,  உன்  கால்களிலிருக்கிற  பாதரட்சைகளைக்  கழற்று  என்றார்;  அவன்  அப்படியே  செய்து,  வஸ்திரமில்லாமலும்  வெறுங்காலுமாய்  நடந்தான்.  {Isa  20:2}

 

அப்பொழுது  கர்த்தர்:  எகிப்தின்மேலும்<Egypt>  எத்தியோப்பியாவின்மேலும்<Ethiopia>  வரும்  மூன்றுவருஷத்துக்  காரியங்களுக்கு  அடையாளமும்  குறிப்புமாக  என்  ஊழியக்காரனாகிய  ஏசாயா<Isaiah>  வஸ்திரமில்லாமலும்  வெறுங்காலுமாய்  நடக்கிறதுபோல,  {Isa  20:3}

 

அசீரியா<Assyria>  ராஜா,  தான்  சிறைபிடிக்கப்போகிற  எகிப்தியரும்<Egyptians>,  தான்  குடிவிலக்கப்போகிற  எத்தியோப்பியருமாகிய<Ethiopians>  இளைஞரையும்  கிழவரையும்,  வஸ்திரமில்லாமலும்  வெறுங்காலுமாய்  எகிப்தியருக்கு<Egypt>  வெட்கமுண்டாகும்படி,  இருப்பிடம்  மூடப்படாதவர்களாய்க்  கொண்டுபோவான்.  {Isa  20:4}

 

அப்பொழுது  இந்தக்  கடற்கரைக்  குடிகள்  தாங்கள்  நம்பியிருந்த  எத்தியோப்பியாவைக்குறித்தும்<Ethiopia>,  தாங்கள்  பெருமைபாராட்டின  எகிப்தைக்குறித்தும்<Egypt>  கலங்கி  வெட்கி:  {Isa  20:5}

 

இதோ,  அசீரிய<Assyria>  ராஜாவின்  முகத்துக்குத்  தப்பும்படிக்கு  நாங்கள்  நம்பி,  சகாயத்துக்கென்று  ஓடிவந்து  அண்டினவன்  இப்படியானானே;  நாங்கள்  எப்படி  விடுவிக்கப்படுவோம்  என்று  அக்காலத்திலே  சொல்லுவார்கள்  என்றார்.  {Isa  20:6}

 

கடல்  வனாந்தரத்தின்  பாரம்.  சுழல்காற்று  தென்திசையிலிருந்து  எழும்பிக்  கடந்துவருகிறதுபோல,  பயங்கரமான  தேசமாகிய  வனாந்தரத்திலிருந்து  அது  வருகிறது.  {Isa  21:1}

 

கொடிய  தரிசனம்  எனக்குத்  தெரிவிக்கப்பட்டது;  துரோகி  துரோகம்பண்ணி,  பாழாக்கிறவன்  பாழாக்கிக்கொண்டே  இருக்கிறான்;  ஏலாமே<Elam>  எழும்பு;  மேதியாவே<Media>  முற்றிக்கைபோடு;  அதினாலே  உண்டான  தவிப்பையெல்லாம்  ஒழியப்பண்ணினேன்.  {Isa  21:2}

 

ஆகையால்,  என்  இடுப்பு  மகா  வேதனையால்  நிறைந்திருக்கிறது;  பிள்ளைபெறுகிறவளின்  வேதனைகளுக்கு  ஒத்த  வேதனைகள்  என்னைப்  பிடித்தது;  கேட்டதினால்  உளைவுகொண்டு,  கண்டதினால்  கலங்கினேன்.  {Isa  21:3}

 

என்  இருதயம்  திகைத்தது;  திகில்  என்னைத்  திடுக்கிடப்பண்ணிற்று;  எனக்கு  இன்பந்தந்த  இரவு  பயங்கரமாயிற்று.  {Isa  21:4}

 

பந்தியை  ஆயத்தப்படுத்துங்கள்,  ஜாமக்காரரை  வையுங்கள்,  புசியுங்கள்,  குடியுங்கள்;  பிரபுக்களே,  எழுந்து  பரிசைகளுக்கு  எண்ணெய்  பூசுங்கள்.  {Isa  21:5}

 

ஆண்டவர்  என்னை  நோக்கி:  நீ  போய்,  காண்பதைத்  தெரிவிக்கும்படி  ஜாமக்காரனை  வை  என்றார்.  {Isa  21:6}

 

அவன்  ஒரு  இரதத்தையும்,  ஜோடு  ஜோடான  குதிரைவீரரையும்,  ஜோடு  ஜோடாகக்  கழுதைகளின்மேலும்  ஒட்டகங்களின்மேலும்  ஏறிவருகிறவர்களையும்  கண்டு,  மிகுந்த  கவனமாய்க்  கவனித்துக்கொண்டே  இருந்து:  {Isa  21:7}

 

ஆண்டவரே,  நான்  பகல்முழுதும்  என்  காவலிலே  நின்று,  இராமுழுதும்  நான்  என்  காவலிடத்திலே  தரித்திருக்கிறேன்  என்று  சிங்கத்தைப்போல்  சத்தமிட்டுக்  கூப்பிடுகிறான்.  {Isa  21:8}

 

இதோ,  ஒரு  ஜோடு  குதிரை  பூண்ட  இரதத்தின்மேல்  ஏறியிருக்கிற  ஒரு  மனுஷன்  வருகிறான்;  பாபிலோன்<Babylon>  விழுந்தது,  விழுந்தது;  அதின்  விக்கிரக  தேவர்களையெல்லாம்  தரையோடே  மோதி  உடைத்தார்  என்று  பிரதியுத்தரம்  சொல்லுகிறான்.  {Isa  21:9}

 

என்  போரடிப்பின்  தானியமே,  என்  களத்தின்  கோதுமையே,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தரால்  நான்  கேள்விப்பட்டதை  உங்களுக்கு  அறிவித்தேன்.  {Isa  21:10}

 

தூமாவின்<Dumah>  பாரம்.  சேயீரிலிருந்து<Seir>  என்னை  நோக்கி:  ஜாமக்காரனே,  இரவு  எவ்வளவு  சென்றது?  என்று  கூப்பிட்டுக்  கேட்க;  {Isa  21:11}

 

அதற்கு  ஜாமக்காரன்:  விடியற்காலம்  வருகிறது,  இராக்காலமும்  வருகிறது;  நீங்கள்  கேட்க  மனதானால்  திரும்பிவந்து  கேளுங்கள்  என்று  சொல்லுகிறான்.  {Isa  21:12}

 

அரபியாவின்<Arabia>  பாரம்.  திதானியராகிய<Dedanim>  பயணக்கூட்டங்களே,  நீங்கள்  அரபியாவின்<Arabia>  காடுகளில்  இராத்தங்குவீர்கள்.  {Isa  21:13}

 

தேமாதேசத்தின்<Tema>  குடிகளே,  நீங்கள்  தாகமாயிருக்கிறவர்களுக்குத்  தண்ணீர்  கொண்டுபோய்,  தப்பி  ஓடுகிறவர்களுக்கு  அப்பங்கொடுக்க  எதிர்கொண்டுபோங்கள்.  {Isa  21:14}

 

அவர்கள்,  பட்டயங்களுக்கும்,  உருவின  கட்கத்துக்கும்,  நாணேற்றின  வில்லுக்கும்,  யுத்தத்தின்  கொடுமைக்கும்  தப்பி  ஓடுகிறார்கள்.  {Isa  21:15}

 

ஆண்டவர்  என்னை  நோக்கி:  ஒரு  கூலிக்காரனுடைய  வருஷங்களுக்கொத்த  ஒரே  வருஷத்திலே  கேதாருடைய<Kedar>  மகிமையெல்லாம்  அற்றுப்போம்.  {Isa  21:16}

 

கேதார்<Kedar>  புத்திரராகிய  பராக்கிரம  வில்வீரரின்  தொகையில்  மீதியானவர்கள்  கொஞ்சப்பேராயிருப்பார்கள்  என்றார்;  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  இதை  உரைத்தார்.  {Isa  21:17}

 

தரிசனப்  பள்ளத்தாக்கின்  பாரம்.  உன்னில்  உள்ளவர்கள்  எல்லாரும்  வீடுகளின்மேல்  ஏறுவதற்கு  உனக்கு  இப்பொழுது  வந்தது  என்ன?  {Isa  22:1}

 

சந்தடிகளால்  நிறைந்து  ஆரவாரம்பண்ணி,  களிகூர்ந்திருந்த  நகரமே,  உன்னிடத்தில்  கொலையுண்டவர்கள்  பட்டயத்தால்  கொலையுண்டதில்லை,  யுத்தத்தில்  செத்ததும்  இல்லை.  {Isa  22:2}

 

உன்  அதிபதிகள்  எல்லாரும்  ஏகமாய்  ஓடி  அலைந்தும்,  வில்வீரரால்  கட்டப்படுகிறார்கள்;  உன்னில்  அகப்பட்ட  யாவரும்  தூரத்துக்கு  ஓடியும்  ஏகமாய்க்  கட்டப்படுகிறார்கள்.  {Isa  22:3}

 

ஆகையால்,  என்னை  நோக்கிப்  பாராதேயுங்கள்;  என்  ஜனமாகிய  குமாரத்தி  பாழாய்ப்போனதினிமித்தம்  மனங்கசந்து  அழுவேன்;  எனக்கு  ஆறுதல்  சொல்ல  வராதேயுங்கள்  என்கிறேன்.  {Isa  22:4}

 

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவராலே  இது  தரிசனப்  பள்ளத்தாக்கிலே  அமளியும்,  மிதியுண்குதலும்,  கலக்கமுமுள்ள  நாளாயிருக்கிறது;  இது  அலங்கத்தைத்  தகர்த்து,  பர்வதத்துக்கு  நேரே  ஆர்ப்பரிக்கும்  நாளாயிருக்கிறது.  {Isa  22:5}

 

ஏலாமியன்<Elam>  அம்பறாத்தூணியை  எடுத்து,  இரதங்களோடும்  காலாட்களோடும்  குதிரைவீரரோடும்  வருகிறான்;  கீர்<Kir>  கேடகத்தை  வெளிப்படுத்தும்.  {Isa  22:6}

 

மகா  வடிவான  உன்  பள்ளத்தாக்குகள்  இரதங்களால்  நிரப்பப்படும்;  குதிரைவீரர்  வாசல்கள்மட்டும்  வந்து  அணிவகுத்து  நிற்பார்கள்.  {Isa  22:7}

 

அவன்  யூதாவின்<Judah>  மறைவை  நீக்கிப்போடுவான்;  அந்நாளிலே  வனமாளிகையாகிய  ஆயுதசாலையை  நோக்குவாய்.  {Isa  22:8}

 

நீங்கள்  தாவீது<David>  நகரத்தின்  இடிதல்கள்  அநேகமாயிருப்பதைக்  கண்டு,  கீழ்க்குளத்துத்  தண்ணீர்களைக்  கட்டிவைத்து,  {Isa  22:9}

 

எருசலேமின்<Jerusalem>  வீடுகளை  எண்ணி,  அலங்கத்தை  அரணிப்பாக்கும்படி  வீடுகளை  இடித்து,  {Isa  22:10}

 

இரண்டு  மதில்களுக்கு  நடுவே  பழைய  குளத்துத்  தண்ணீர்களுக்கு  ஒரு  அகழை  உண்டுபண்ணுவீர்கள்;  ஆனாலும்  அதைச்  செய்தவரை  நீங்கள்  நோக்காமலும்,  அதை  ஏற்படுத்தித்  தூரத்திலிருந்து  வரப்பண்ணினவரைக்  கவனியாமலும்  போகிறீர்கள்.  {Isa  22:11}

 

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  அக்காலத்திலே  அழவும்,  புலம்பவும்,  மொட்டையிடவும்,  இரட்டுடுத்தவும்  கட்டளையிட்டார்.  {Isa  22:12}

 

நீங்களோ,  சந்தோஷித்துக்  களித்து,  ஆடுமாடுகளை  அடித்து,  இறைச்சியைச்  சாப்பிட்டு,  திராட்சரசத்தைக்  குடித்து:  புசிப்போம்  குடிப்போம்,  நாளைக்குச்  சாவோம்  என்று  சொல்வீர்கள்.  {Isa  22:13}

 

மெய்யாகவே  நீங்கள்  சாகுமட்டும்  இந்த  அக்கிரமம்  உங்களுக்கு  நிவிர்த்தியாவதில்லை  என்று  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறாரென்பது  என்  செவி  கேட்கும்படி  சேனைகளின்  கர்த்தரால்  தெரிவிக்கப்பட்டது.  {Isa  22:14}

 

சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைத்ததாவது:  நீ  அரமனை  விசாரிப்புக்காரனும்  பொக்கிஷக்காரனுமாகிய  செப்னா<Shebna>  என்பவனிடத்தில்  போய்ச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  {Isa  22:15}

 

உயர்ந்த  ஸ்தலத்திலே  தன்  கல்லறையை  வெட்டி,  கன்மலையிலே  தனக்கு  வாசஸ்தலத்தைத்  தோண்டுகிறவனைப்போல,  நீ  உனக்கு  இங்கே  கல்லறையை  வெட்டும்படிக்கு  உனக்கு  இங்கே  என்ன  இருக்கிறது?  உனக்கு  இங்கே  யார்  இருக்கிறார்கள்?  {Isa  22:16}

 

இதோ,  பெலவான்  ஒருவனைத்  துரத்துகிறவண்ணமாகக்  கர்த்தர்  உன்னைத்  துரத்திவிட்டு,  நிச்சயமாய்  உன்னை  மூடிப்போடுவார்.  {Isa  22:17}

 

அவர்  உன்னை  உருண்டையைப்போல  அகலமும்  விசாலமுமான  தேசத்திலே  சுழற்றி  எறிந்துவிடுவார்;  அங்கே  நீ  சாவாய்;  அங்கே  உன்  மகிமையின்  இரதங்கள்  உன்  ஆண்டவனுடைய  வீட்டுக்கு  இகழ்ச்சியாக  இருக்கும்.  {Isa  22:18}

 

உன்னை  உன்  நிலையைவிட்டுத்  துரத்திவிடுவேன்;  உன்  ஸ்தானத்திலிருந்து  நீ  பிடுங்கிப்போடப்படுவாய்.  {Isa  22:19}

 

அந்நாளிலே  இல்க்கியாவின்<Hilkiah>  குமாரனாகிய  எலியாக்கீம்<Eliakim>  என்னும்  என்  ஊழியக்காரனை  நான்  அழைத்து:  {Isa  22:20}

 

உன்  வஸ்திரத்தை  அவனுக்குத்  தரித்து,  உன்  கச்சையால்  அவனை  இடைக்கட்டி,  உன்  அதிகாரத்தை  அவன்  கையிலே  கொடுப்பேன்;  அவன்  எருசலேமின்<Jerusalem>  குடிகளுக்கும்,  யூதாவின்<Judah>  வம்சத்துக்கும்  தகப்பனாயிருப்பான்.  {Isa  22:21}

 

தாவீதுடைய<David>  வீட்டின்  திறவுகோலை  அவன்  தோளின்மேல்  வைப்பேன்;  ஒருவரும்  பூட்டக்கூடாதபடிக்கு  அவன்  திறப்பான்,  ஒருவரும்  திறக்கக்கூடாதபடிக்கு  அவன்  பூட்டுவான்.  {Isa  22:22}

 

அவனை  உறுதியான  இடத்திலே  ஆணியாகக்  கடாவுவேன்;  அவன்  தன்  தகப்பன்  வீட்டுக்கு  மகிமையான  சிங்காசனமாக  இருப்பான்.  {Isa  22:23}

 

அதின்மேல்  அவன்  தகப்பன்  வம்சத்தாராகிய  புத்திரர்  பௌத்திரருடைய  மகிமை  அனைத்தையும்,  சிறிதும்  பெரிதுமான  சகல  பானபாத்திரங்களையும்  தூக்கிவைப்பார்கள்.  {Isa  22:24}

 

உறுதியான  இடத்தில்  கடாவப்பட்டிருந்த  ஆணி  அந்நாளிலே  பிடுங்கப்பட்டு,  முறிந்துவிழும்;  அப்பொழுது  அதின்மேல்  தொங்கின  பாரம்  அறுந்துவிழும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறார்;  கர்த்தரே  இதை  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Isa  22:25}

 

தீருவின்<Tyre>  பாரம்.  தர்ஷீஸ்<Tarshish>  கப்பல்களே,  அலறுங்கள்;  அது  வீடு  இல்லாதபடிக்கும்,  அதில்  வருவார்  இல்லாதபடிக்கும்  பாழாக்கப்பட்டது;  இந்தச்  செய்தி  கித்தீம்<Chittim>  தேசத்திலிருந்து  அவர்களுக்குத்  தெரிவிக்கப்படுகிறது.  {Isa  23:1}

 

தீவுக்குடிகளே,  மவுனமாயிருங்கள்;  சீதோனின்<Zidon>  வர்த்தகர்  சமுத்திரத்திலே  யாத்திரைபண்ணி  உன்னை  நிரப்பினார்கள்.  {Isa  23:2}

 

சீகோர்<Sihor>  நதியின்  மிகுந்த  நீர்ப்பாய்ச்சல்களால்  விளையும்  பயிர்வகைகளும்,  ஆற்றங்கரையின்  அறுப்பும்  அதின்  வருமானமாயிருந்தது;  அது  ஜாதிகளின்  சந்தையாயிருந்தது.  {Isa  23:3}

 

சீதோனே<Zidon>,  வெட்கப்படு;  நான்  இனிக்  கர்ப்பவேதனைப்படுகிறதும்  இல்லை;  பெறுகிறதும்  இல்லை;  இளைஞரை  வளர்க்கிறதும்  இல்லை;  கன்னிகைகளை  ஆதரிக்கிறதும்  இல்லை  என்று  சமுத்திரக்  கோட்டையான  கடல்துறை  சொல்லுகிறது.  {Isa  23:4}

 

எகிப்தின்<Egypt>  செய்தி  கேட்கப்பட்டதினால்  நோய்  உண்டானதுபோல,  தீருவின்<Tyre>  செய்தி  கேட்கப்படுவதினாலும்  நோய்  உண்டாகும்.  {Isa  23:5}

 

கரைதுறைக்  குடிகளே,  நீங்கள்  தர்ஷீஸ்மட்டும்<Tarshish>  புறப்பட்டுப்போய்  அலறுங்கள்.  {Isa  23:6}

 

பூர்வநாட்கள்முதல்  நிலைபெற்றுக்  களிகூர்ந்திருந்த  உங்கள்  பட்டணம்  இதுதானா?  பரதேசம்போய்ச்  சஞ்சரிக்கிறதற்கு  அவள்  கால்களே  அவளைத்  தூரமாய்க்  கொண்டுபோம்.  {Isa  23:7}

 

கிரீடம்  தரிப்பிக்கும்  தீருவுக்கு<Tyre>  விரோதமாக  இதை  யோசித்துத்  தீர்மானித்தவர்  யார்?  அதின்  வர்த்தகர்  பிரபுக்களும்,  அதின்  வியாபாரிகள்  பூமியின்  கனவான்களுமாமே.  {Isa  23:8}

 

சர்வ  சிங்காரத்தின்  மேன்மையைக்  குலைக்கவும்,  பூமியின்  கனவான்கள்  யாவரையும்  கனஈனப்படுத்தவும்,  சேனைகளின்  கர்த்தரே  இதை  யோசித்துத்  தீர்மானித்தார்.  {Isa  23:9}

 

தர்ஷீஸின்<Tarshish>  குமாரத்தியே,  நதியைப்போல  நீ  உன்  தேசத்தில்  பாய்ந்துபோ,  உனக்கு  அணையில்லை.  {Isa  23:10}

 

கர்த்தர்  தமது  கையைச்  சமுத்திரத்தின்மேல்  நீட்டி,  ராஜ்யங்களைக்  குலுங்கப்பண்ணினார்;  கானானின்<Canaan>  அரண்களை  அழிக்க  அவர்  அதற்கு  விரோதமாய்க்  கட்டளைகொடுத்து:  {Isa  23:11}

 

ஒடுங்குண்ட  கன்னியாகிய  சீதோன்<Zidon>  குமாரத்தியே,  இனிக்  களிகூர்ந்துகொண்டிராய்;  எழுந்து  கித்தீமுக்குப்<Chittim>  புறப்பட்டுப்போ,  அங்கும்  உனக்கு  இளைப்பாறுதல்  இல்லையென்றார்.  {Isa  23:12}

 

கல்தேயருடைய<Chaldeans>  தேசத்தைப்  பார்;  அந்த  ஜனம்  முன்னிருந்ததில்லை;  அசீரியன்<Assyrian>  வனாந்தரத்தாருக்காக  அதை  அஸ்திபாரப்படுத்தினான்;  அவர்கள்  அதின்  கோபுரங்களை  உண்டாக்கி,  அதின்  அரமனைகளைக்  கட்டினார்கள்;  அவர்  அதை  அழிவுக்கென்று  நியமித்தார்.  {Isa  23:13}

 

தர்ஷீஸ்<Tarshish>  கப்பல்களே,  அலறுங்கள்;  உங்கள்  அரண்  பாழாக்கப்பட்டது.  {Isa  23:14}

 

அக்காலத்திலே  தீரு<Tyre>,  ஒரு  ராஜாவுடைய  நாட்களின்படி,  எழுபது  வருஷம்  மறக்கப்பட்டிருக்கும்;  எழுபது  வருஷங்களின்  முடிவிலே  தீருவுக்குச்<Tyre>  சம்பவிப்பது  வேசியின்  பாடலுக்குச்  சமானமாயிருக்கும்.  {Isa  23:15}

 

மறக்கப்பட்ட  வேசியே,  நீ  வீணையை  எடுத்து  நகரத்தைச்  சுற்றித்திரி;  நீ  நினைக்கப்படும்படி  அதை  இனிதாக  வாசித்துப்  பல  பாட்டுகளைப்  பாடு.  {Isa  23:16}

 

எழுபது  வருஷங்களின்  முடிவிலே  கர்த்தர்  வந்து  தீருவைச்<Tyre>  சந்திப்பார்;  அப்பொழுது  அது  தன்  பணையத்துக்கு  திரும்பிவந்து,  பூமியிலுள்ள  சகல  ராஜ்யங்களோடும்  வேசித்தனம்  பண்ணும்.  {Isa  23:17}

 

அதின்  வியாபாரமும்,  அதின்  பணையமும்  கர்த்தருக்குப்  பரிசுத்தமாக்கப்படும்;  அது  பொக்கிஷமாய்ச்  சேர்க்கப்படுவதும்  இல்லை;  பூட்டி  வைக்கப்படுவதும்  இல்லை;  கர்த்தருடைய  சமுகத்தில்  வாசமாயிருக்கிறவர்கள்  திருப்தியாகச்  சாப்பிடவும்  நல்ல  வஸ்திரங்களைத்  தரிக்கவும்  அதின்  வியாபாரம்  அவர்களைச்  சேரும்.  {Isa  23:18}

 

இதோ,  கர்த்தர்  தேசத்தை  வெறுமையும்  பாழுமாக்கி,  அதைக்  கவிழ்த்து,  அதின்  குடிகளைச்  சிதறடிப்பார்.  {Isa  24:1}

 

அப்பொழுது,  ஜனத்துக்கு  எப்படியோ  அப்படியே  ஆசாரியனுக்கும்,  வேலைக்காரனுக்கு  எப்படியோ  அப்படியே  எஜமானுக்கும்,  வேலைக்காரிக்கு  எப்படியோ  அப்படியே  எஜமானிக்கும்,  கொண்டவனுக்கு  எப்படியோ  அப்படியே  விற்றவனுக்கும்,  கடன்  கொடுத்தவனுக்கு  எப்படியோ  அப்படியே  கடன்வாங்கினவனுக்கும்,  வட்டிவாங்கினவனுக்கு  எப்படியோ  அப்படியே  வட்டிகொடுத்தவனுக்கும்,  எல்லாருக்கும்  சரியாக  நடக்கும்.  {Isa  24:2}

 

தேசம்  முழுதும்  கொள்ளையாகி,  முற்றிலும்  வெறுமையாகும்;  இது  கர்த்தர்  சொன்ன  வார்த்தை.  {Isa  24:3}

 

தேசம்  புலம்பி  வாடும்;  பூமி  சத்துவமற்று  உலர்ந்துபோகும்;  தேசத்து  ஜனத்திலே  உயர்ந்தவர்கள்  தவிப்பார்கள்.  {Isa  24:4}

 

தேசம்  தன்  குடிகளின்  மூலமாய்த்  தீட்டுப்பட்டது;  அவர்கள்  நியாயப்பிரமாணங்களை  மீறி,  கட்டளையை  மாறுபாடாக்கி,  நித்திய  உடன்படிக்கையை  முறித்தார்கள்.  {Isa  24:5}

 

இதினிமித்தம்  சாபம்  தேசத்தைப்  பட்சித்தது,  அதின்  குடிகள்  தண்டிக்கப்பட்டார்கள்;  தேசத்தார்  தகிக்கப்பட்டார்கள்,  சிலர்மாத்திரம்  மீந்திருக்கிறார்கள்.  {Isa  24:6}

 

திராட்சரசம்  துக்கங்கொண்டாடும்,  திராட்சச்செடி  வதங்கும்;  மனக்களிப்பாயிருந்தவர்கள்  எல்லாரும்  பெருமூச்சுவிடுவார்கள்.  {Isa  24:7}

 

மேளங்களின்  சந்தோஷம்  ஓயும்,  களிகூருகிறவர்களின்  சந்தடி  ஒழியும்,  வீணையின்  களிப்பு  நின்றுபோம்.  {Isa  24:8}

 

பாடலோடே  திராட்சரசம்  குடியார்கள்;  மதுபானம்  அதைக்  குடிக்கிறவர்களுக்குக்  கசக்கும்.  {Isa  24:9}

 

வெறுமையாய்ப்போன  நகரம்  தகர்ந்து,  ஒருவரும்  உள்ளே  பிரவேசிக்கக்கூடாதபடி,  வீடுகளெல்லாம்  அடைபட்டுக்கிடக்கும்.  {Isa  24:10}

 

திராட்சரசத்துக்காக  வீதிகளிலே  கூக்குரல்  உண்டு;  எல்லாச்  சந்தோஷமும்  மங்கி,  தேசத்தின்  மகிழ்ச்சி  அற்றுப்போம்.  {Isa  24:11}

 

நகரத்தில்  மீதியாயிருப்பது  அழிவே;  வாசல்கள்  இடிக்கப்பட்டுப்  பாழாய்க்  கிடக்கும்.  {Isa  24:12}

 

ஒலிவமரத்தை  உலுக்கும்போதும்,  திராட்சப்பழங்களை  அறுத்துத்  தீரும்போதும்,  பின்பறிப்புக்குக்  கொஞ்சம்  மீந்திருப்பதுபோல,  தேசத்துக்குள்ளும்  இந்த  ஜனங்களின்  நடுவிலும்  கொஞ்சம்  மீந்திருக்கும்.  {Isa  24:13}

 

அவர்கள்  சத்தமிட்டுக்  கெம்பீரிப்பார்கள்;  கர்த்தருடைய  மகத்துவத்தினிமித்தம்  சமுத்திரத்தினின்று  ஆர்ப்பரிப்பார்கள்.  {Isa  24:14}

 

ஆகையால்  கர்த்தரை,  வெளுக்குந்திசையிலும்,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்தைச்  சமுத்திரத்  தீவுகளிலும்  மகிமைப்படுத்துங்கள்.  {Isa  24:15}

 

நீதிபரனுக்கு  மகிமை  என்று  பாடும்  கீதங்களை  பூமியின்  கடையாந்தரத்திலிருந்து  கேட்கிறோம்;  நானோ,  இளைத்துப்போனேன்,  இளைத்துப்போனேன்;  எனக்கு  ஐயோ!  துரோகிகள்  துரோகம்பண்ணுகிறார்கள்;  துரோகிகள்  மிகுதியாய்த்  துரோகம்பண்ணுகிறார்கள்  என்கிறேன்.  {Isa  24:16}

 

தேசத்துக்  குடிகளே,  திகிலும்,  படுகுழியும்,  கண்ணியும்  உங்களுக்கு  நேரிடும்.  {Isa  24:17}

 

அப்பொழுது,  திகிலின்  சத்தத்திற்கு  விலகி  ஓடுகிறவன்  படுகுழியில்  விழுவான்;  படுகுழியிலிருந்து  ஏறுகிறவன்  கண்ணியில்  அகப்படுவான்;  உயர  இருக்கும்  மதகுகள்  திறவுண்டு,  பூமியின்  அஸ்திபாரங்கள்  குலுங்கும்.  {Isa  24:18}

 

தேசம்  நொறுங்கவே  நொறுங்கும்,  தேசம்  முறியவே  முறியும்,  தேசம்  அசையவே  அசையும்.  {Isa  24:19}

 

வெறித்தவனைப்போல  தேசம்  தள்ளாடி,  ஒரு  குடிலைப்போலப்  பெயர்த்துப்போடப்படும்;  அதின்  பாதகம்  அதின்மேல்  பாரமாயிருக்கையால்,  அது  விழுந்துபோம்,  இனி  எழுந்திராது.  {Isa  24:20}

 

அக்காலத்தில்  கர்த்தர்  உன்னதமான  சேனையை  உன்னதத்திலும்,  பூமியின்  ராஜாக்களைப்  பூமியிலும்  விசாரிப்பார்.  {Isa  24:21}

 

அவர்கள்  கெபியில்  ஏகமாய்க்  கட்டுண்டவர்களாகச்  சேர்ந்து,  காவலில்  அடைக்கப்பட்டு,  அநேகநாள்  சென்றபின்பு  விசாரிக்கப்படுவார்கள்.  {Isa  24:22}

 

அப்பொழுது  சேனைகளின்  கர்த்தர்  சீயோன்<Zion>  மலையிலும்  எருசலேமிலும்<Jerusalem>  ஆளுகைசெய்வதால்,  சந்திரன்  கலங்கும்,  சூரியன்  நாணமடையும்;  அவருடைய  மூப்பர்களுக்கு  முன்பாக  மகிமை  உண்டாயிருக்கும்.  {Isa  24:23}

 

கர்த்தாவே,  நீரே  என்  தேவன்;  உம்மை  உயர்த்தி,  உமது  நாமத்தைத்  துதிப்பேன்;  நீர்  அதிசயமானவைகளைச்  செய்தீர்;  உமது  பூர்வ  ஆலோசனைகள்  சத்தியமும்  உறுதியுமானவைகள்.  {Isa  25:1}

 

நீர்  நகரத்தை  மண்மேடும்,  அரணான  பட்டணத்தைப்  பாழுமாக்கினீர்;  அந்நியரின்  ராஜதானியை  ஊராயிராதபடிக்கும்,  என்றைக்கும்  கட்டப்படாதபடிக்கும்  செய்தீர்.  {Isa  25:2}

 

ஆகையால்  பலத்த  ஜனங்கள்  உம்மை  மகிமைப்படுத்துவார்கள்;  கொடூரமான  ஜாதிகளின்  நகரம்  உமக்குப்  பயப்படும்.  {Isa  25:3}

 

கொடூரமானவர்களின்  சீறல்  மதிலை  மோதியடிக்கிற  பெரு  வெள்ளத்தைப்போல்  இருக்கையில்,  நீர்  ஏழைக்குப்  பெலனும்,  நெருக்கப்படுகிற  எளியவனுக்குத்  திடனும்,  பெருவெள்ளத்துக்குத்  தப்பும்  அடைக்கலமும்,  வெயிலுக்கு  ஒதுங்கும்  நிழலுமானீர்.  {Isa  25:4}

 

வறட்சியான  இடத்தின்  காங்கை  மேகத்தினால்  தணிவதுபோல்,  அந்நியரின்  மும்முரத்தைத்  தணியப்பண்ணுவீர்;  மேகத்தின்  நிழலினால்  வெயில்  தணிகிறதுபோல்  பெலவந்தரின்  ஆரவாரம்  தணியும்.  {Isa  25:5}

 

சேனைகளின்  கர்த்தர்  இந்த  மலையிலே  சகல  ஜனங்களுக்கும்  ஒரு  விருந்தை  ஆயத்தப்படுத்துவார்;  அது  கொழுமையான  பதார்த்தங்களும்,  பழமையான  திராட்சரசமும்,  ஊனும்  நிணமுமுள்ள  பதார்த்தங்களும்,  தெளிந்த  பழமையான  திராட்சரசமும்  நிறைந்த  விருந்தாயிருக்கும்.  {Isa  25:6}

 

சகல  ஜனங்கள்மேலுமுள்ள  முக்காட்டையும்,  சகல  ஜாதிகளையும்  மூடியிருக்கிற  மூடலையும்,  இந்த  மலையிலே  அகற்றிப்போடுவார்.  {Isa  25:7}

 

அவர்  மரணத்தை  ஜெயமாக  விழுங்குவார்;  கர்த்தராகிய  தேவன்  எல்லா  முகங்களிலுமிருந்து  கண்ணீரைத்  துடைத்து,  தமது  ஜனத்தின்  நிந்தையைப்  பூமியிலிராதபடிக்கு  முற்றிலும்  நீக்கிவிடுவார்;  கர்த்தரே  இதைச்  சொன்னார்.  {Isa  25:8}

 

அக்காலத்திலே:  இதோ,  இவரே  நம்முடைய  தேவன்;  இவருக்காகக்  காத்திருந்தோம்,  இவர்  நம்மை  இரட்சிப்பார்;  இவரே  கர்த்தர்,  இவருக்காகக்  காத்திருந்தோம்;  இவருடைய  இரட்சிப்பினால்  களிகூர்ந்து  மகிழுவோம்  என்று  சொல்லப்படும்.  {Isa  25:9}

 

கர்த்தருடைய  கரம்  இந்த  மலையிலே  தங்கும்;  கூளம்  எருக்களத்தில்  மிதிக்கப்படுவதுபோல,  மோவாப்<Moab>  அவர்கீழ்  மிதிக்கப்பட்டுப்போம்.  {Isa  25:10}

 

நீந்துகிறவன்  நீந்துவதற்காகத்  தன்  கைகளை  விரிப்பதுபோல்  அவர்  தமது  கைகளை  அவர்கள்  நடுவிலே  விரித்து,  அவர்கள்  பெருமையையும்,  அவர்கள்  கைகளின்  சதிசர்ப்பனைகளையும்  தாழ்த்திவிடுவார்.  {Isa  25:11}

 

அவர்  உன்  மதில்களுடைய  உயர்ந்த  அரணைக்  கீழே  தள்ளித்  தாழ்த்தித்  தரையிலே  தூளாக  அழிப்பார்.  {Isa  25:12}

 

அக்காலத்திலே  யூதாதேசத்தில்<Judah>  பாடப்படும்  பாட்டாவது:  பெலனான  நகரம்  நமக்கு  உண்டு;  இரட்சிப்பையே  அதற்கு  மதிலும்  அரணுமாக  ஏற்படுத்துவார்.  {Isa  26:1}

 

சத்தியத்தைக்  கைக்கொண்டுவருகிற  நீதியுள்ள  ஜாதி  உள்ளே  பிரவேசிப்பதற்காக  வாசல்களைத்  திறவுங்கள்.  {Isa  26:2}

 

உம்மை  உறுதியாய்ப்  பற்றிக்கொண்ட  மனதையுடையவன்  உம்மையே  நம்பியிருக்கிறபடியால்,  நீர்  அவனைப்  பூரண  சமாதானத்துடன்  காத்துக்கொள்வீர்.  {Isa  26:3}

 

கர்த்தரை  என்றென்றைக்கும்  நம்புங்கள்;  கர்த்தராகிய  யேகோவா<JEHOVAH>  நித்திய  கன்மலையாயிருக்கிறார்.  {Isa  26:4}

 

அவர்  உயரத்திலே  வாசமாயிருக்கிறவர்களையும்  கீழே  தள்ளுகிறார்,  உயர்ந்த  நகரத்தையும்  தாழ்த்துகிறார்;  அவர்  தரைமட்டும்  தாழ்த்தி  அது  மண்ணாகுமட்டும்  இடியப்பண்ணுவார்.  {Isa  26:5}

 

கால்  அதை  மிதிக்கும்,  சிறுமையானவர்களின்  காலும்  எளிமையானவர்களின்  அடிகளுமே  அதை  மிதிக்கும்.  {Isa  26:6}

 

நீதிமானுடைய  பாதை  செம்மையாயிருக்கிறது;  மகா  நீதிபரராகிய  நீர்  நீதிமானுடைய  பாதையைச்  செம்மைப்படுத்துகிறீர்.  {Isa  26:7}

 

கர்த்தாவே,  உம்முடைய  நியாயத்தீர்ப்புகளின்  வழியிலே  உமக்குக்  காத்திருக்கிறோம்;  உமது  நாமமும்,  உம்மை  நினைக்கும்  நினைவும்  எங்கள்  ஆத்தும  வாஞ்சையாயிருக்கிறது.  {Isa  26:8}

 

என்  ஆத்துமா  இரவிலே  உம்மை  வாஞ்சிக்கிறது;  எனக்குள்  இருக்கிற  என்  ஆவியால்  அதிகாலையிலும்  உம்மைத்  தேடுகிறேன்;  உம்முடைய  நியாயத்தீர்ப்புகள்  பூமியிலே  நடக்கும்போது  பூச்சக்கரத்துக்குடிகள்  நீதியைக்  கற்றுக்கொள்வார்கள்.  {Isa  26:9}

 

துன்மார்க்கனுக்குத்  தயைசெய்தாலும்  நீதியைக்  கற்றுக்கொள்ளான்;  நீதியுள்ள  தேசத்திலும்  அவன்  அநியாயஞ்செய்து  கர்த்தருடைய  மகத்துவத்தைக்  கவனியாதேபோகிறான்.  {Isa  26:10}

 

கர்த்தாவே,  உமது  கை  ஓங்கியிருக்கிறது,  அவர்கள்  அதைக்  காணாதிருக்கிறார்கள்;  ஆனாலும்  உமது  ஜனத்துக்காக  நீர்  கொண்ட  வைராக்கியத்தைக்கண்டு  வெட்கப்படுவார்கள்;  அக்கினி  உம்முடைய  சத்துருக்களைப்  பட்சிக்கும்.  {Isa  26:11}

 

கர்த்தாவே,  எங்களுக்குச்  சமாதானத்தைக்  கட்டளையிடுவீர்;  எங்கள்  கிரியைகளையெல்லாம்  எங்களுக்காக  நடத்திவருகிறவர்  நீரே.  {Isa  26:12}

 

எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மையல்லாமல்  வேறே  ஆண்டவன்மார்  எங்களை  ஆண்டார்கள்;  இனி  உம்மைமாத்திரம்  சார்ந்து  உம்முடைய  நாமத்தைப்  பிரஸ்தாபப்படுத்துவோம்.  {Isa  26:13}

 

அவர்கள்  செத்தவர்கள்,  ஜீவிக்கமாட்டார்கள்;  மாண்ட  ராட்சதர்  திரும்ப  எழுந்திரார்கள்;  நீர்  அவர்களை  விசாரித்துச்  சங்கரித்து,  அவர்கள்  பேரையும்  அழியப்பண்ணினீர்.  {Isa  26:14}

 

இந்த  ஜாதியைப்  பெருகப்பண்ணினீர்;  கர்த்தாவே,  இந்த  ஜாதியைப்  பெருகப்பண்ணினீர்;  நீர்  மகிமைப்பட்டீர்,  தேசத்தின்  எல்லை  எல்லாவற்றையும்  நெடுந்தூரத்தில்  தள்ளிவைத்தீர்.  {Isa  26:15}

 

கர்த்தாவே,  நெருக்கத்தில்  உம்மைத்  தேடினார்கள்;  உம்முடைய  தண்டனை  அவர்கள்மேலிருக்கையில்  அந்தரங்க  வேண்டுதல்  செய்தார்கள்.  {Isa  26:16}

 

கர்த்தாவே,  பேறுகாலம்  சமீபித்திருக்கையில்  வேதனைப்பட்டு,  தன்  அம்பாயத்தில்  கூப்பிடுகிற  கர்ப்பவதியைப்போல,  உமக்கு  முன்பாக  இருக்கிறோம்.  {Isa  26:17}

 

நாங்கள்  கர்ப்பமாயிருந்து  வேதனைப்பட்டு,  காற்றைப்  பெற்றவர்களைப்போல்  இருக்கிறோம்;  தேசத்தில்  ஒரு  இரட்சிப்பையும்  செய்யமாட்டாதிருக்கிறோம்;  பூச்சக்கரத்துக்குடிகள்  விழுகிறதுமில்லை.  {Isa  26:18}

 

மரித்த  உம்முடையவர்கள்  பிரேதமான  என்னுடையவர்களோடே  கூட  எழுந்திருப்பார்கள்;  மண்ணிலே  தங்கியிருக்கிறவர்களே,  விழித்துக்  கெம்பீரியுங்கள்;  உம்முடைய  பனி  பூண்டுகளின்மேல்  பெய்யும்  பனிபோல்  இருக்கும்;  மரித்தோரைப்  பூமி  புறப்படப்பண்ணும்.  {Isa  26:19}

 

என்  ஜனமே,  நீ  போய்  உன்  அறைகளுக்குள்ளே  பிரவேசித்து,  உன்  கதவுகளைப்  பூட்டிக்கொண்டு,  சினம்  கடந்துபோகுமட்டும்  கொஞ்சநேரம்  ஒளித்துக்கொள்.  {Isa  26:20}

 

இதோ,  பூமியினுடைய  குடிகளின்  அக்கிரமத்தினிமித்தம்  அவர்களை  விசாரிக்கும்படி  கர்த்தர்  தம்முடைய  ஸ்தானத்திலிருந்து  புறப்பட்டுவருவார்;  பூமி  தன்  இரத்தப்பழிகளை  வெளிப்படுத்தி,  தன்னிடத்தில்  கொலைசெய்யப்பட்டவர்களை  இனி  மூடாதிருக்கும்.  {Isa  26:21}

 

அக்காலத்திலே  கர்த்தர்  லிவியாதான்<leviathan>  என்னும்  நீண்ட  பாம்பை,  லிவியாதான்<leviathan>  என்னும்  கோணலான  சர்ப்பத்தையே,  கடிதும்  பெரிதும்  பலத்ததுமான  தமது  பட்டயத்தால்  தண்டிப்பார்;  சமுத்திரத்தில்  இருக்கிற  வலுசர்ப்பத்தைக்  கொன்றுபோடுவார்.  {Isa  27:1}

 

அக்காலத்திலே  நல்ல  திராட்சரசத்தைத்  தரும்  திராட்சத்தோட்டம்  உண்டாயிருக்கும்;  அதைக்குறித்துப்  பாடுங்கள்.  {Isa  27:2}

 

கர்த்தராகிய  நான்  அதைக்  காப்பாற்றி,  அடிக்கடி  அதற்குத்  தண்ணீர்ப்பாய்ச்சி,  ஒருவரும்  அதைச்  சேதப்படுத்தாதபடிக்கு  அதை  இரவும்பகலும்  காத்துக்கொள்வேன்.  {Isa  27:3}

 

உக்கிரம்  என்னிடத்தில்  இல்லை;  முட்செடியையும்  நெரிஞ்சிலையும்  எனக்கு  விரோதமாய்  யுத்தத்தில்  கொண்டுவருகிறவன்  யார்?  நான்  அவைகள்மேல்  வந்து,  அவைகளை  ஏகமாய்க்  கொளுத்திவிடுவேன்;  {Isa  27:4}

 

இல்லாவிட்டால்  அவன்  என்  பெலனைப்  பற்றிக்கொண்டு  என்னோடே  ஒப்புரவாகட்டும்;  அவன்  என்னோடே  ஒப்புரவாவான்.  {Isa  27:5}

 

யாக்கோபு<Jacob>  வேர்பற்றி,  இஸ்ரவேல்<Israel>  பூத்துக்காய்த்து  உலகத்தைப்  பலனால்  நிரப்பும்  நாட்கள்  வரும்.  {Isa  27:6}

 

அவர்  அவனை  அடித்தவர்களை  அடித்ததுபோல  இவனை  அடிக்கிறாரோ?  அவர்கள்  கொல்லப்படும்  கொலையாய்  இவன்  கொல்லப்படுகிறானோ?  {Isa  27:7}

 

தேவரீர்  ஜனத்தைத்  துரத்திவிடுகையில்  மட்டாய்  அதனோடே  வழக்காடுகிறீர்;  கொண்டல்காற்றடிக்கிற  நாளிலே  அவர்  தம்முடைய  கடுங்காற்றினால்  அதை  விலக்கிவிடுகிறார்.  {Isa  27:8}

 

ஆகையால்,  அதினால்  யாக்கோபின்<Jacob>  அக்கிரமம்  நிக்கிரகம்பண்ணப்படும்;  தோப்புவிக்கிரகங்களும்  சிலைகளும்  இனி  நிற்காதபடி  அவர்கள்  பலிபீடங்களின்  கல்லுகளையெல்லாம்  நொறுக்கப்பட்ட  சுண்ணாம்பு  கல்லுகளாக்கிவிடும்போது,  அவர்களுடைய  பாவத்தை  அவர்  அகற்றுவாரென்பதே  அதினால்  உண்டாகும்  பலன்.  {Isa  27:9}

 

அரணான  நகரம்  அவாந்தரையாகும்,  அந்த  வாசஸ்தலம்  தள்ளுண்டு  வனாந்தரத்தைப்போல  விட்டுவிடப்பட்டதாயிருக்கும்;  கன்றுக்குட்டிகள்  அங்கே  மேய்ந்து,  அங்கே  படுத்துக்கொண்டு,  அதின்  தழைகளைத்  தின்னும்.  {Isa  27:10}

 

அதின்  கொப்புகள்  உலரும்போது  ஒடிந்துபோம்;  ஸ்திரீகள்  வந்து  அவைகளைக்  கொளுத்திவிடுவார்கள்;  அது  உணர்வுள்ள  ஜனமல்ல;  ஆகையால்  அதை  உண்டாக்கினவர்  அதற்கு  இரங்காமலும்,  அதை  உருவாக்கினவர்  அதற்குக்  கிருபைசெய்யாமலும்  இருப்பார்.  {Isa  27:11}

 

அக்காலத்திலே,  கர்த்தர்  ஆற்றங்கரையின்  விளைவுதொடங்கி  எகிப்தின்<Egypt>  நதிமட்டும்  போரடிப்பார்;  இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  நீங்கள்  ஒவ்வொருவராய்ச்  சேர்க்கப்படுவீர்கள்.  {Isa  27:12}

 

அக்காலத்திலே  பெரிய  எக்காளம்  ஊதப்படும்;  அப்பொழுது,  அசீரியா<Assyria>  தேசத்திலே  சிதறடிக்கப்பட்டவர்களும்,  எகிப்துதேசத்திலே<Egypt>  துரத்திவிடப்பட்டவர்களும்  வந்து,  எருசலேமிலுள்ள<Jerusalem>  பரிசுத்த  பர்வதத்திலே  கர்த்தரைப்  பணிந்துகொள்ளுவார்கள்.  {Isa  27:13}

 

எப்பிராயீமுடைய<Ephraim>  வெறியரின்  பெருமையான  கிரீடத்துக்கு  ஐயோ,  மதுபானத்தால்  மயக்கமடைந்தவர்களின்  செழிப்பான  பள்ளத்தாக்குடைய  கொடுமுடியின்மேலுள்ள  அலங்கார  ஜோடிப்பு  வாடிப்போகும்  புஷ்பமே!  {Isa  28:1}

 

இதோ,  திராணியும்  வல்லமையுமுடைய  ஒருவன்  ஆண்டவரிடத்தில்  இருக்கிறான்;  அவன்  கல்மழைப்போலவும்,  சங்காரப்  புசல்போலவும்,  புரண்டுவருகிற  பெருவெள்ளம்போலவும்  வந்து,  கையினாலே  அதைத்  தரையில்  தள்ளிவிடுவான்.  {Isa  28:2}

 

எப்பிராயீமுடைய<Ephraim>  வெறியரின்  பெருமையான  கிரீடம்  காலால்  மிதித்துப்போடப்படும்.  {Isa  28:3}

 

செழிப்பான  பள்ளத்தாக்குடைய  கொடுமுடியின்மேலுள்ள  அலங்கார  ஜோடிப்பாகிய  வாடிய  புஷ்பம்,  பருவகாலத்துக்குமுன்  பழுத்ததும்,  காண்கிறவன்  பார்த்து,  அது  தன்  கையில்  இருக்கும்போதே  விழுங்குகிறதுமான  முதல்  கனியைப்போல  இருக்கும்.  {Isa  28:4}

 

அக்காலத்திலே  சேனைகளின்  கர்த்தர்  தமது  ஜனத்தில்  மீதியானவர்களுக்கு  மகிமையான  கிரீடமாகவும்,  அலங்காரமான  முடியாகவும்,  {Isa  28:5}

 

நியாயம்  விசாரிக்க  உட்காருகிறவனுக்கு  நியாயத்தின்  ஆவியாகவும்,  யுத்தத்தை  அதின்  வாசல்மட்டும்  திருப்புகிறவர்களின்  பராக்கிரமமாகவும்  இருப்பார்.  {Isa  28:6}

 

ஆனாலும்  இவர்களும்  திராட்சரசத்தால்  மயங்கி,  மதுபானத்தால்  வழி  தப்பிப்போகிறார்கள்;  ஆசாரியனும்  தீர்க்கதரிசியும்  மதுபானத்தால்  மதிமயங்கி,  திராட்சரசத்தால்  விழுங்கப்பட்டு,  சாராயத்தினால்  வழிதப்பி,  தீர்க்கதரிசனத்தில்  மோசம்போய்,  நியாயந்தீர்க்கிறதில்  இடறுகிறார்கள்.  {Isa  28:7}

 

போஜனபீடங்களெல்லாம்  வாந்தியினாலும்  அசுத்தத்தினாலும்  நிறைந்திருக்கிறது;  சுத்தமான  இடமில்லை.  {Isa  28:8}

 

அவர்  யாருக்கு  அறிவைப்  போதிப்பார்?  யாருக்கு  உபதேசத்தை  உணர்த்துவார்?  பால்மறந்தவர்களுக்கும்,  முலை  மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.  {Isa  28:9}

 

கற்பனையின்மேல்  கற்பனையும்,  கற்பனையின்மேல்  கற்பனையும்,  பிரமாணத்தின்மேல்  பிரமாணமும்,  பிரமாணத்தின்மேல்  பிரமாணமும்,  இங்கே  கொஞ்சமும்  அங்கே  கொஞ்சமுமாம்  என்கிறார்கள்.  {Isa  28:10}

 

பரியாச  உதடுகளினாலும்  அந்நியபாஷையினாலும்  இந்த  ஜனத்தோடே  பேசுவார்.  {Isa  28:11}

 

இதுவே  நீங்கள்  இளைத்தவனை  இளைப்பாறப்பண்ணத்தக்க  இளைப்பாறுதல்;  இதுவே  ஆறுதல்  என்று  அவர்களோடே  அவர்  சொன்னாலும்  கேட்கமாட்டோம்  என்கிறார்கள்.  {Isa  28:12}

 

ஆதலால்  அவர்கள்  போய்,  பின்னிட்டு  விழுந்து,  நொறுங்கும்படிக்கும்,  சிக்குண்டு  பிடிபடும்படிக்கும்,  கர்த்தருடைய  வார்த்தை  அவர்களுக்குக்  கற்பனையின்மேல்  கற்பனையும்,  கற்பனையின்மேல்  கற்பனையும்,  பிரமாணத்தின்மேல்  பிரமாணமும்,  பிரமாணத்தின்மேல்  பிரமாணமும்,  இங்கே  கொஞ்சமும்  அங்கே  கொஞ்சமுமாக  இருக்கும்.  {Isa  28:13}

 

ஆகையால்  எருசலேமிலுள்ள<Jerusalem>  இந்த  ஜனத்தை  ஆளுகிற  நிந்தனைக்காரரே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  {Isa  28:14}

 

நீங்கள்:  மரணத்தோடே  உடன்படிக்கையும்,  பாதாளத்தோடே  ஒப்பந்தமும்  பண்ணினோம்;  வாதை  பெருவெள்ளமாய்ப்  புரண்டுவந்தாலும்  எங்களை  அணுகாது;  நாங்கள்  பொய்யை  எங்களுக்கு  அடைக்கலமாக்கி,  மாயையின்  மறைவிலே  வந்து  அடைந்தோம்  என்கிறீர்களே.  {Isa  28:15}

 

ஆதலால்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறதாவது:  இதோ,  அஸ்திபாரமாக  ஒரு  கல்லை  நான்  சீயோனிலே<Zion>  வைக்கிறேன்;  அது  பரீட்சிக்கப்பட்டதும்,  விலையேறப்பெற்றதும்,  திட  அஸ்திபாரமுள்ளதுமான  மூலைக்கல்லாயிருக்கும்,  விசுவாசிக்கிறவன்  பதறான்.  {Isa  28:16}

 

நான்  நியாயத்தை  நூலும்,  நீதியைத்  தூக்குநூலுமாக  வைப்பேன்;  பொய்  என்னும்  அடைக்கலத்தைக்  கல்மழை  அழித்துவிடும்;  மறைவிடத்தை  ஜலப்பிரவாகம்  அடித்துக்கொண்டுபோகும்.  {Isa  28:17}

 

நீங்கள்  மரணத்தோடு  செய்த  உடன்படிக்கை  விருதாவாகி,  நீங்கள்  பாதாளத்தோடு  செய்த  ஒப்பந்தம்  நிற்காதேபோம்;  வாதை  புரண்டுவரும்போது  அதின்கீழ்  மிதிக்கப்படுவீர்கள்.  {Isa  28:18}

 

அது  புரண்டுவந்தமாத்திரத்தில்  உங்களை  அடித்துக்கொண்டுபோம்;  அது  நாள்தோறும்  இரவும்பகலும்  புரண்டுவரும்;  அதைப்பற்றிப்  பிறக்குஞ்செய்தியைக்  கேட்பதும்  சஞ்சலத்தை  உண்டாக்கும்.  {Isa  28:19}

 

கால்  நீட்டப்  படுக்கையின்  நீளம்  போதாது;  மூடிக்கொள்ளப்  போர்வையின்  அகலமும்  போதாது.  {Isa  28:20}

 

கர்த்தர்  தமது  கிரியையாகிய  அபூர்வமான  கிரியையைச்  செய்யவும்,  தமது  வேலையாகிய  அபூர்வமான  வேலையை  நிறைவேற்றவும்,  அவர்  பெராத்சீம்<Perazim>  மலையிலே  எழும்பினதுபோல  எழும்பி,  கிபியோனின்<Gibeon>  பள்ளத்தாக்கில்  கோபங்கொண்டதுபோல  கோபங்கொள்வார்.  {Isa  28:21}

 

இப்பொழுதும்  உங்கள்  கட்டுகள்  பலத்துப்போகாதபடிக்குப்  பரியாசம்பண்ணாதிருங்கள்;  தேசம்  அனைத்தின்மேலும்  நிர்ணயிக்கப்பட்ட  சங்காரத்தின்  செய்தியைச்  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவராலே  கேள்விப்பட்டிருக்கிறேன்.  {Isa  28:22}

 

செவிகொடுத்து  என்  சத்தத்தைக்  கேளுங்கள்;  நான்  சொல்வதைக்  கவனித்துக்  கேளுங்கள்.  {Isa  28:23}

 

உழுகிறவன்  விதைக்கிறதற்காக  நாள்தோறும்  உழுகிறதுண்டோ?  தன்  நிலத்தைக்  கொத்தி  நாள்தோறும்  பரம்படிக்கிறது  உண்டோ?  {Isa  28:24}

 

அவன்  அதை  மேலாக  நிரவினபின்பு,  அததற்கேற்ற  இடத்தில்  உளுந்தைத்  தெளித்து,  சீரகத்தைத்  தூவி,  முதல்தரமான  கோதுமையையும்  தெரிந்துகொண்ட  வாற்கோதுமையையும்  கம்பையும்  விதைக்கிறான்  அல்லவோ?  {Isa  28:25}

 

அவனுடைய  தேவன்  அவனை  நன்றாய்ப்  போதித்து,  அவனை  உணர்த்துகிறார்.  {Isa  28:26}

 

உளுந்து  தூலத்தாலே  போரடிக்கப்படுகிறதில்லை;  சீரகத்தின்மேல்  வண்டிலின்  உருளைச்  சுற்ற  விடப்படுகிறதுமில்லை;  உளுந்து  கோலினாலும்  சீரகம்  மிலாற்றினாலும்  அடிக்கப்படும்.  {Isa  28:27}

 

அப்பத்துக்குத்  தானியம்  இடிக்கப்படும்;  இடைவிடாமல்  அவன்  அதைப்  போரடிக்கிறதில்லை;  அவன்  தன்  வண்டிலின்  உருளையால்  அதை  நசுக்குகிறதுமில்லை,  தன்  குதிரைகளால்  அதை  நொறுக்குகிறதுமில்லை.  {Isa  28:28}

 

இதுவும்  சேனைகளின்  கர்த்தராலே  உண்டாகிறது;  அவர்  ஆலோசனையில்  ஆச்சரியமானவர்,  செயலில்  மகத்துவமானவர்.  {Isa  28:29}

 

தாவீது<David>  வாசம்பண்ணின  நகரமாகிய  அரியேலே<Ariel>,  அரியேலே<Ariel>,  ஐயோ!  வருஷாவருஷம்  பண்டிகைகளை  அனுசரித்துவந்தாலும்,  {Isa  29:1}

 

அரியேலுக்கு<Ariel>  இடுக்கம்  உண்டாக்குவேன்;  அப்பொழுது  துக்கமும்  சலிப்பும்  உண்டாகும்;  அது  எனக்கு  அரியேலாகத்தான்<Ariel>  இருக்கும்.  {Isa  29:2}

 

உன்னைச்  சூழப்  பாளயமிறங்கி,  உன்னைத்  தெற்றுகளால்  முற்றிக்கைபோட்டு,  உனக்கு  விரோதமாகக்  கொத்தளங்களை  எடுப்பிப்பேன்.  {Isa  29:3}

 

அப்பொழுது  நீ  தாழ்த்தப்பட்டுத்  தரையிலிருந்து  பேசுவாய்;  உன்  பேச்சுப்  பணிந்ததாய்  மண்ணிலிருந்து  புறப்பட்டு,  உன்  சத்தம்  அஞ்சனம்  பார்க்கிறவனுடைய  சத்தத்தைப்போல்  தரையிலிருந்து  முணுமுணுத்து,  உன்  வாக்கு  மண்ணிலிருந்து  கசுகுசு  என்று  உரைக்கும்.  {Isa  29:4}

 

உன்மேல்  வருகிற  அந்நியரின்  திரள்  பொடித்தூளத்தனையாகவும்,  பலவந்தரின்  திரள்  பறக்கும்  பதர்களத்தனையாகவும்  இருக்கும்;  அது  திடீரென்று  சடிதியாய்ச்  சம்பவிக்கும்.  {Isa  29:5}

 

இடிகளினாலும்,  பூமி  அதிர்ச்சியினாலும்,  பெரிய  இரைச்சலினாலும்,  பெருங்காற்றினாலும்,  புசலினாலும்,  பட்சிக்கிற  அக்கினிஜுவாலையினாலும்,  சேனைகளின்  கர்த்தராலே  விசாரிக்கப்படுவாய்.  {Isa  29:6}

 

அரியேலின்மேல்<Ariel>  யுத்தம்பண்ணுகிற  திரளான  சகல  ஜாதிகளும்,  அதின்மேலும்  அதின்  அரண்மேலும்  யுத்தம்பண்ணி,  அதற்கு  இடுக்கண்  செய்கிற  அனைவரும்,  இராக்காலத்தரிசனமாகிய  சொப்பனத்தைக்  காண்கிறவர்களுக்கு  ஒப்பாயிருப்பார்கள்.  {Isa  29:7}

 

அது,  பசியாயிருக்கிறவன்  தான்  புசிக்கிறதாகச்  சொப்பனம்  கண்டும்,  விழிக்கும்போது  அவன்  வெறுமையாயிருக்கிறதுபோலவும்,  தாகமாயிருக்கிறவன்,  தான்  குடிக்கிறதாகச்  சொப்பனம்  கண்டும்,  விழிக்கும்போது  அவன்  விடாய்த்துத்  தவனத்தோடிருக்கிறதுபோலவும்  சீயோன்<Zion>  மலைக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணுகிற  திரளான  சகல  ஜாதிகளும்  இருக்கும்.  {Isa  29:8}

 

தரித்துநின்று  திகையுங்கள்;  பிரமித்துக்  கூப்பிடுங்கள்;  வெறித்திருக்கிறார்கள்,  திராட்சரசத்தினால்  அல்ல;  தள்ளாடுகிறார்கள்,  மதுபானத்தினால்  அல்ல.  {Isa  29:9}

 

கர்த்தர்  உங்கள்மேல்  கனநித்திரையின்  ஆவியை  வரப்பண்ணி,  உங்கள்  கண்களை  அடைத்து,  ஞானதிருஷ்டிக்காரராகிய  உங்கள்  தீர்க்கதரிசிகளுக்கும்  தலைவர்களுக்கும்  முக்காடுபோட்டார்.  {Isa  29:10}

 

ஆதலால்  தரிசனமெல்லாம்  உங்களுக்கு  முத்திரிக்கப்பட்ட  புஸ்தகத்தின்  வசனங்களைப்போலிருக்கும்;  வாசிக்க  அறிந்திருக்கிற  ஒருவனுக்கு  அதைக்  கொடுத்து:  நீ  இதை  வாசி  என்றால்,  அவன்:  இது  என்னால்  கூடாது,  இது  முத்திரித்திருக்கிறது  என்பான்.  {Isa  29:11}

 

அல்லது  வாசிக்கத்  தெரியாதவனிடத்தில்  புஸ்தகத்தைக்  கொடுத்து:  நீ  இதை  வாசி  என்றால்,  அவன்:  எனக்கு  வாசிக்கத்  தெரியாது  என்பான்.  {Isa  29:12}

 

இந்த  ஜனங்கள்  தங்கள்  வாயினால்  என்னிடத்தில்  சேர்ந்து,  தங்கள்  உதடுகளினால்  என்னைக்  கனம்பண்ணுகிறார்கள்;  அவர்கள்  இருதயமோ  எனக்குத்  தூரமாய்  விலகியிருக்கிறது;  அவர்கள்  எனக்குப்  பயப்படுகிற  பயம்  மனுஷராலே  போதிக்கப்பட்ட  கற்பனையாயிருக்கிறது.  {Isa  29:13}

 

ஆதலால்  இதோ,  நான்  அற்புதமும்  ஆச்சரியமுமான  பிரகாரமாக  இந்த  ஜனங்களுக்குள்ளே  ஒரு  அதிசயத்தைச்  செய்வேன்;  அவர்களுடைய  ஞானிகளின்  ஞானம்  கெட்டு,  அவர்களுடைய  விவேகிகளின்  விவேகம்  மறைந்துபோகும்  என்று  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Isa  29:14}

 

தங்கள்  ஆலோசனையைக்  கர்த்தருக்கு  மறைக்கும்படிக்கு  மறைவிடங்களில்  ஒளித்து,  தங்கள்  கிரியைகளை  அந்தகாரத்தில்  நடப்பித்து:  நம்மைக்  காண்கிறவர்  யார்?  நம்மை  அறிகிறவர்  யார்?  என்கிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  29:15}

 

,  நீங்கள்  எவ்வளவு  மாறுபாடுள்ளவர்கள்!  குயவன்  களிமண்ணுக்குச்  சமானமாக  எண்ணப்படலாமோ?  உண்டாக்கப்பட்டது  தன்னை  உண்டாக்கினவரைக்குறித்து:  அவர்  என்னை  உண்டாக்கினதில்லை  என்றும்;  உருவாக்கப்பட்டது  தன்னை  உருவாக்கினவரைக்குறித்து:  அவருக்குப்  புத்தியில்லையென்றும்  சொல்லத்தகுமோ?  {Isa  29:16}

 

இன்னும்  கொஞ்சக்காலத்திலல்லவோ  லீபனோன்<Lebanon>  செழிப்பான  வயல்வெளியாக  மாறும்;  செழிப்பான  வயல்வெளி  காடாக  எண்ணப்படும்.  {Isa  29:17}

 

அக்காலத்திலே  செவிடர்  புஸ்தகத்தின்  வசனங்களைக்  கேட்பார்கள்;  குருடரின்  கண்கள்  இருளுக்கும்  அந்தகாரத்துக்கும்  நீங்கலாகிப்  பார்வையடையும்.  {Isa  29:18}

 

சிறுமையானவர்கள்  கர்த்தருக்குள்  மிகவும்  மகிழ்ந்து,  மனுஷரில்  எளிமையானவர்கள்  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருக்குள்  களிகூருவார்கள்.  {Isa  29:19}

 

கொடியன்  அற்றுப்போவான்,  சக்கந்தக்காரன்  இல்லாமற்போவான்.  {Isa  29:20}

 

ஒரு  வார்த்தையினிமித்தம்  மனுஷனைக்  குற்றப்படுத்தி,  நியாயவாசலில்  தங்களைக்  கடிந்துகொள்ளுகிறவனுக்குக்  கண்ணிவைத்து,  நீதிமானை  நிர்நிமித்தமாய்த்  துரத்தி,  இப்படி  அக்கிரமஞ்செய்ய  வகைதேடுகிற  யாவரும்  சங்கரிக்கப்படுவார்கள்.  {Isa  29:21}

 

ஆகையால்,  ஆபிரகாமை<Abraham>  மீட்டுக்கொண்ட  கர்த்தர்  யாக்கோபின்<Jacob>  வம்சத்தைக்  குறித்து:  இனி  யாக்கோபு<Jacob>  வெட்கப்படுவதில்லை;  இனி  அவன்  முகம்  செத்துப்போவதுமில்லை.  {Isa  29:22}

 

அவன்  என்  கரங்களின்  செயலாகிய  தன்  பிள்ளைகளை  தன்  நடுவிலே  காணும்போது,  என்  நாமத்தைப்  பரிசுத்தப்படுத்துவார்கள்;  யாக்கோபின்<Jacob>  பரிசுத்தரை  அவர்கள்  பரிசுத்தப்படுத்தி,  இஸ்ரவேலின்<Israel>  தேவனுக்குப்  பயப்படுவார்கள்.  {Isa  29:23}

 

வழுவிப்போகிற  மனதை  உடையவர்கள்  புத்திமான்களாகி,  முறுமுறுக்கிறவர்கள்  உபதேசம்  கற்றுக்கொள்ளுவார்கள்.  {Isa  29:24}

 

பாவத்தோடே  பாவத்தைக்  கூட்டும்படி,  என்னை  அல்லாமல்  ஆலோசனைபண்ணி,  என்  ஆவியை  அல்லாமல்  தங்களை  மூடிக்கொள்ளப்  பார்க்கிறவர்களும்,  {Isa  30:1}

 

என்  வாக்கைக்  கேளாமல்  பார்வோனின்<Pharaoh>  பெலத்தினாலே  பெலக்கவும்,  எகிப்தின்<Egypt>  நிழலிலே  ஒதுங்கவும்  வேண்டும்  என்று  எகிப்துக்குப்<Egypt>  போகிறவர்களுமாகிய  முரட்டாட்டமுள்ள  புத்திரருக்கு  ஐயோ!  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  30:2}

 

பார்வோனுடைய<Pharaoh>  பெலன்  உங்களுக்கு  வெட்கமாகவும்  எகிப்தினுடைய<Egypt>  நிழலொதுக்கு  உங்களுக்கு  இலச்சையாகவும்  இருக்கும்.  {Isa  30:3}

 

அவர்கள்  பிரபுக்கள்  சோவானிலே<Zoan>  போய்,  அவர்கள்  ஸ்தானாபதிகள்  ஆனேஸ்மட்டும்<Hanes>  சேருகிறார்கள்.  {Isa  30:4}

 

ஆனாலும்  தங்கள்  சகாயத்துக்கும்  பிரயோஜனத்துக்கும்  உதவாமல்,  வெட்கத்துக்கும்  நிந்தைக்குமே  உதவும்  ஜனத்தினாலே  யாவரும்  வெட்கப்படுவார்கள்.  {Isa  30:5}

 

தெற்கேபோகிற  மிருகஜீவன்களின்  பாரம்.  துஷ்டசிங்கமும்,  கிழச்சிங்கமும்,  விரியனும்,  பறக்கிற  கொள்ளிவாய்ச்சர்ப்பமும்  வருகிறதும்,  நெருக்கமும்  இடுக்கமும்  அடைவிக்கிறதுமான  தேசத்துக்கு,  அவர்கள்  கழுதை  மறிகளுடைய  முதுகின்மேல்  தங்கள்  ஆஸ்திகளையும்,  ஒட்டகங்களுடைய  முதுகின்மேல்  தங்கள்  பொக்கிஷங்களையும்,  தங்களுக்கு  உதவாத  ஜனத்தண்டைக்கு  ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.  {Isa  30:6}

 

எகிப்தியர்<Egyptians>  சகாயம்பண்ணுவது  வியர்த்தமும்  வீணுமாம்;  ஆகையால்,  சும்மாயிருப்பதே  அவர்களுக்குப்  பெலன்  என்று  அதற்காகக்  கூறுகிறேன்.  {Isa  30:7}

 

இப்பொழுது  நீ  போய்,  இது  பிற்காலத்துக்கு  என்றென்றைக்கும்  இருக்கும்படி,  இதை  அவர்களுக்கு  முன்பாக  ஒரு  பலகையில்  எழுதி,  ஒரு  புஸ்தகத்தில்  வரை.  {Isa  30:8}

 

இவர்கள்  கலகமுள்ள  ஜனங்களும்,  பொய்பேசுகிற  பிள்ளைகளும்,  கர்த்தருடைய  வேதத்தைக்  கேட்க  மனதில்லாத  புத்திரருமாயிருக்கிறார்கள்.  {Isa  30:9}

 

இவர்கள்  தரிசனக்காரரை  நோக்கி:  தரிசனங்  காணவேண்டாம்  என்றும்,  ஞானதிருஷ்டிக்காரரை  நோக்கி:  யதார்த்தமாய்  எங்களுக்குத்  தரிசனஞ்சொல்லாமல்,  எங்களுக்கு  இதமான  சொற்களை  உரைத்து,  மாயமானவைகளைத்  திருஷ்டியுங்கள்  என்றும்,  {Isa  30:10}

 

நீங்கள்  வழியை  விட்டு,  பாதையினின்று  விலகி,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தரை  எங்கள்  முன்பாக  இராமல்  ஓயப்பண்ணுங்கள்  என்றும்  சொல்லுகிறார்கள்.  {Isa  30:11}

 

நீங்கள்  இந்த  வார்த்தையை  வெறுத்து,  இடுக்கமும்  தாறுமாறும்  செய்கிறதை  நம்பி,  அதைச்  சார்ந்துகொள்ளுகிறபடியால்,  {Isa  30:12}

 

இந்த  அக்கிரமம்  உங்களுக்கு  உயர்ந்த  சுவரில்  விழப்  பிதுங்கிநிற்கிறதும்,  திடீரென்று  சடிதியாய்  இடியப்போகிறதுமான  வெடிப்பைப்போல  இருக்கும்  என்று  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தர்  சொல்லுகிறார்.  {Isa  30:13}

 

அவர்களை  அவர்  தப்பவிடாமல்  உடையும்படி  குயக்கலத்தை  நொறுக்குவதுபோல  அவர்களை  நொறுக்குவார்;  அடுப்பிலே  நெருப்பு  எடுக்கிறதற்கும்,  குளத்திலே  தண்ணீர்  மொள்ளுகிறதற்கும்  நொறுங்கின  துண்டுகளில்,  ஒரு  ஓடாகிலும்  அகப்படாதேபோம்.  {Isa  30:14}

 

நீங்கள்  மனந்திரும்பி  அமர்ந்திருந்தால்  இரட்சிக்கப்படுவீர்கள்;  அமரிக்கையும்  நம்பிக்கையுமே  உங்கள்  பெலனாயிருக்கும்  என்று  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தராயிருக்கிற  கர்த்தராகிய  தேவன்  சொல்லுகிறார்;  நீங்களோ  அப்படிச்  செய்ய  மனதாயிராமல்;  {Isa  30:15}

 

அப்படியல்ல,  குதிரைகளின்மேல்  ஏறி  ஓடிப்போவோம்  என்கிறீர்கள்;  அப்படியே  ஓடிப்போவீர்கள்,  வேகமான  வாகனங்களின்மேல்  ஏறிப்போவோம்  என்கிறீர்கள்;  அப்படியே  உங்களைத்  துரத்துகிறவர்கள்  வேகமாய்த்  துரத்துவார்கள்.  {Isa  30:16}

 

நீங்கள்  மலையுச்சியின்மேல்  ஒரு  கம்பத்தைப்போலவும்,  மேட்டின்மேல்  ஒரு  கொடியைப்போலவும்  மீந்திருக்குமட்டாக,  ஒருவன்  பயமுறுத்த  ஆயிரம்பேரும்,  ஐந்துபேர்  பயமுறுத்த  நீங்கள்  அனைவரும்  ஓடிப்போவீர்கள்.  {Isa  30:17}

 

ஆனாலும்  உங்களுக்கு  இரங்கும்படி  கர்த்தர்  காத்திருப்பார்,  உங்கள்மேல்  மனதுருகும்படி  எழுந்திருப்பார்;  கர்த்தர்  நீதிசெய்கிற  தேவன்;  அவருக்குக்  காத்திருக்கிற  அனைவரும்  பாக்கியவான்கள்.  {Isa  30:18}

 

சீயோனைச்<Zion>  சேர்ந்த  ஜனங்கள்  எருசலேமில்<Jerusalem>  வாசமாயிருப்பார்கள்;  இனி  நீ  அழுதுகொண்டிராய்;  உன்  கூப்பிடுதலின்  சத்தத்துக்கு  அவர்  உருக்கமாய்  இரங்கி,  அதைக்  கேட்டவுடனே  உனக்கு  மறுஉத்தரவு  அருளுவார்.  {Isa  30:19}

 

ஆண்டவர்  உங்களுக்குத்  துன்பத்தின்  அப்பத்தையும்,  உபத்திரவத்தின்  தண்ணீரையும்  கொடுத்தாலும்,  உன்  போதகர்கள்  இனி  ஒருபோதும்  மறைந்திருக்கமாட்டார்கள்;  உன்  கண்கள்  உன்  போதகர்களைக்  காணும்.  {Isa  30:20}

 

நீங்கள்  வலதுபுறமாய்ச்  சாயும்போதும்,  இடதுபுறமாய்ச்  சாயும்போதும்:  வழி  இதுவே,  இதிலே  நடவுங்கள்  என்று  உங்களுக்குப்  பின்னாலே  சொல்லும்  வார்த்தையை  உங்கள்  காதுகள்  கேட்கும்.  {Isa  30:21}

 

உன்  சுரூபங்களை  மூடிய  வெள்ளித்தகட்டையும்,  உன்  விக்கிரகங்களின்  பொன்  ஆடையாபரணத்தையும்  தீட்டாக  எண்ணி,  அவைகளைத்  தீட்டுப்பட்ட  வஸ்திரம்போல  எறிந்துவிட்டு,  அதைச்  சீ!  போ  என்பாய்.  {Isa  30:22}

 

அப்பொழுது  நீ  நிலத்தில்  விதைக்கும்  உன்  விதைக்கு  அவர்  மழையையும்,  நிலத்தின்  பலனாகிய  ஆகாரத்தையும்  தருவார்;  அது  கொழுமையும்  புஷ்டியுமாய்  இருக்கும்;  அக்காலத்திலே  உன்  ஆடுமாடுகள்  விஸ்தாரமான  மேய்ச்சலுள்ள  ஸ்தலத்திலே  மேயும்;  {Isa  30:23}

 

நிலத்தை  உழுகிற  எருதுகளும்  கழுதைமறிகளும்,  முறத்தினாலும்  தூற்றுக்கூடையினாலும்  தூற்றப்பட்ட  ருசியுள்ள  கப்பிகளைத்  தின்னும்.  {Isa  30:24}

 

கோபுரங்கள்  விழுகிற  மகா  சங்காரத்தின்  நாளிலே,  உயரமான  சகல  மலைகளின்மேலும்,  உயரமான  சகல  மேடுகளின்மேலும்  ஆறுகளும்  வாய்க்கால்களும்  உண்டாகும்.  {Isa  30:25}

 

கர்த்தர்  தமது  ஜனத்தின்  முறிவைக்  கட்டி,  அதின்  அடிக்காயத்தைக்  குணமாக்கும்  நாளிலே,  சந்திரனுடைய  வெளிச்சம்  சூரியனுடைய  வெளிச்சத்தைப்போலவும்,  சூரியனுடைய  வெளிச்சம்  ஏழத்தனையாய்  ஏழு  பகலின்  வெளிச்சத்தைப்போலவும்  இருக்கும்.  {Isa  30:26}

 

இதோ,  கர்த்தருடைய  நாமம்  தூரத்திலிருந்து  வரும்;  அவருடைய  கோபம்  எரிகிறதும்  கனன்று  புகைகிறதுமாயிருக்கும்;  அவருடைய  உதடுகள்  சினத்தால்  நிறைந்து,  அவருடைய  நாவு  பட்சிக்கிற  அக்கினிபோல  இருக்கும்.  {Isa  30:27}

 

நாசம்  என்னும்  சல்லடையிலே  ஜாதிகளை  அரிக்கும்படிக்கு  அவர்  ஊதும்  சுவாசம்  கழுத்துமட்டும்  எட்டுகிற  ஆற்றுவெள்ளத்தைப்போலவும்,  ஜனங்களுடைய  வாயிலே  போட்டு  அலைக்கழிக்கிற  கடிவாளத்தைப்போலவும்  இருக்கும்.  {Isa  30:28}

 

பண்டிகை  ஆசரிக்கப்படும்  இராத்திரியிலே  பாடுகிறதுபோலப்  பாடுவீர்கள்;  கர்த்தருடைய  பர்வதமாகிய  இஸ்ரவேலின்<Israel>  கன்மலையண்டைக்குப்போக  நாகசுரத்தோடே  நடந்துவருகிறபோது  மகிழுகிறதுபோல  மகிழுவீர்கள்.  {Isa  30:29}

 

கர்த்தர்  மகத்துவமானவர்;  தமது  சத்தத்தைக்  கேட்கப்பண்ணி,  உக்கிர  கோபத்தினாலும்,  பட்சிக்கிற  அக்கினிஜுவாலையினாலும்,  இடி  பெருவெள்ளம்  கல்மழையினாலும்,  தமது  புயத்தின்  வல்லமையைக்  காண்பிப்பார்.  {Isa  30:30}

 

அப்பொழுது  தண்டாயுதத்தினால்  அடித்த  அசீரியன்<Assyrian>  கர்த்தருடைய  சத்தத்தினாலே  நொறுங்குண்டுபோவான்.  {Isa  30:31}

 

கர்த்தர்  அவன்மேல்  சுமத்தும்  ஆக்கினைத்தண்டம்  செல்லுமிடமெங்கும்,  மேளங்களும்  வீணைகளும்  அதினுடன்  போகும்;  கொடிய  யுத்தங்களினால்  அவனை  எதிர்த்து  யுத்தஞ்செய்வார்.  {Isa  30:32}

 

தோப்பேத்<Tophet>  ஏற்கனவே  ஏற்படுத்தப்பட்டது;  ராஜாவுக்கு  அது  ஆயத்தப்படுத்தப்பட்டது;  அதை  ஆழமும்  விசாலமுமாக்கினார்;  வேகும்படி  அக்கினியும்  மிகுந்த  விறகுமுண்டு;  கர்த்தரின்  சுவாசம்  கெந்தகத்  தீயைப்போல  அதைக்  கொளுத்தும்.  {Isa  30:33}

 

சகாயமடையும்படி  இஸ்ரவேலுடைய<Israel>  பரிசுத்தரை  நோக்காமலும்,  கர்த்தரைத்  தேடாமலும்,  எகிப்துக்குப்போய்<Egypt>,  குதிரைகள்மேல்  நம்பிக்கைவைத்து,  இரதங்கள்  அநேகமாயிருப்பதினால்  அவைகளை  நாடி,  குதிரைவீரர்  மகா  பெலசாலிகளாயிருப்பதினால்  அவர்களை  நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு  ஐயோ!  {Isa  31:1}

 

அவரும்  ஞானமுள்ளவர்;  அவர்  தம்முடைய  வார்த்தைகளை  மறுக்காமல்,  தீங்கு  வரப்பண்ணி,  தீமை  செய்கிறவர்களின்  வீட்டுக்கும்,  அக்கிரமக்காரருக்குச்  சகாயஞ்செய்கிறவர்களுக்கும்  விரோதமாக  எழும்புவார்.  {Isa  31:2}

 

எகிப்தியர்<Egyptians>  தெய்வம்  அல்ல,  மனுஷர்தானே;  அவர்களுடைய  குதிரைகள்  ஆவியல்ல,  மாம்சந்தானே;  கர்த்தர்  தமது  கரத்தை  நீட்டுவார்,  அப்பொழுது  சகாயம்  செய்கிறவனும்  இடறி,  சகாயம்  பெறுகிறவனும்  விழுந்து,  அனைவரும்  ஏகமாய்  அழிந்துபோவார்கள்.  {Isa  31:3}

 

கர்த்தர்  என்னுடனே  சொன்னது:  சிங்கமும்  பாலசிங்கமும்  தங்கள்  இரையைப்  பிடித்திருக்கும்போது  கெர்ச்சித்து,  தங்களுக்கு  விரோதமாய்க்  கூப்பிடுகிற  திரளான  மேய்ப்பரின்  சத்தத்தினாலே  கலங்காமலும்,  அவர்கள்  அமளியினாலே  பணியாமலும்  இருக்கிறதுபோல,  சேனைகளின்  கர்த்தர்  சீயோன்மலைக்காகவும்<Zion>,  அதின்  மேட்டுக்காகவும்  யுத்தம்பண்ண  இறங்குவார்.  {Isa  31:4}

 

பறந்து  காக்கிற  பட்சிகளைப்போல,  சேனைகளின்  கர்த்தர்  எருசலேமின்மேல்<Jerusalem>  ஆதரவாக  இருப்பார்;  அவர்  அதைக்  காத்துத்  தப்பப்பண்ணுவார்;  அவர்  கடந்துவந்து  அதை  விடுவிப்பார்.  {Isa  31:5}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  நீங்கள்  முற்றிலும்  விட்டுவிலகினவரிடத்தில்  திரும்புங்கள்.  {Isa  31:6}

 

உங்களுக்குப்  பாவமாக  உங்கள்  கைகள்  செய்திருந்த  வெள்ளி  விக்கிரகங்களையும்,  பொன்  விக்கிரகங்களையும்,  உங்களில்  ஒவ்வொருவரும்  அக்காலத்திலே  வெறுத்துவிடுவீர்கள்.  {Isa  31:7}

 

அப்பொழுது  வீரனுடைய  பட்டயம்  அல்லாத  பட்டயத்தாலே  அசீரியன்<Assyrian>  விழுவான்;  நீசனுடைய  பட்டயம்  அல்லாத  பட்டயமே  அவனைப்  பட்சிக்கும்;  அவன்  பட்டயத்துக்குத்  தப்ப  ஓடுவான்;  அவன்  வாலிபர்  கலைந்துபோவார்கள்.  {Isa  31:8}

 

அவனுடைய  கன்மலை  பயத்தினால்  ஒழிந்துபோம்,  அவர்களுடைய  பிரபுக்கள்  கொடியைக்  கண்டு  கலங்குவார்கள்  என்பதை,  சீயோனில்<Zion>  நெருப்பையும்  எருசலேமில்<Jerusalem>  சூளையையுமுடைய  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  31:9}

 

இதோ,  ஒரு  ராஜா  நீதியாக  அரசாளுவார்;  பிரபுக்களும்  நியாயமாகத்  துரைத்தனம்பண்ணுவார்கள்.  {Isa  32:1}

 

அவர்  காற்றுக்கு  ஒதுக்காகவும்,  பெருவெள்ளத்துக்குப்  புகலிடமாகவும்,  வறண்ட  நிலத்துக்கு  நீர்க்கால்களாகவும்,  விடாய்த்த  பூமிக்குப்  பெருங்கன்மலையின்  நிழலாகவும்  இருப்பார்.  {Isa  32:2}

 

அப்பொழுது  காண்கிறவர்களின்  கண்கள்  மங்கலாயிராது;  கேட்கிறவர்களின்  செவிகள்  கவனித்தே  இருக்கும்.  {Isa  32:3}

 

பதற்றமுள்ளவர்களின்  இருதயம்  அறிவை  உணர்ந்துகொள்ளும்,  தெற்றுவாயருடைய  நாவு  தடையின்றித்  தெளிவாய்ப்  பேசும்.  {Isa  32:4}

 

மூடன்  இனி  தயாளன்  என்று  மதிக்கப்படான்;  லோபி  இனி  உதாரன்  என்று  சொல்லப்படுவதுமில்லை.  {Isa  32:5}

 

ஏனென்றால்  மூடன்,  மூடத்தனத்தைப்  பேசுகிறான்;  அவன்  இருதயம்  அநியாயத்தை  நடப்பிக்கும்;  அவன்  மாயம்பண்ணி,  கர்த்தருக்கு  விரோதமாய்  விபரீதம்  பேசி,  பசியுள்ள  ஆத்துமாவை  வெறுமையாக  வைத்து,  தாகமுள்ளவனுக்குத்  தாகந்தீர்க்காதிருக்கிறான்.  {Isa  32:6}

 

லோபியின்  எத்தனங்களும்  பொல்லாதவைகள்;  ஏழைகள்  நியாயமாய்ப்  பேசும்போது,  அவன்  கள்ளவார்த்தைகளாலே  எளியவர்களைக்  கெடுக்கும்படி  தீவினைகளை  யோசிக்கிறான்.  {Isa  32:7}

 

தயாளகுணமுள்ளவன்  தயாளமானவைகளை  யோசிக்கிறான்,  தயாளமானவைகளிலே  நிலைத்தும்  இருக்கிறான்.  {Isa  32:8}

 

சுகஜீவிகளாகிய  ஸ்திரீகளே,  எழுந்திருந்து  என்  வார்த்தைகளைக்  கேளுங்கள்;  நிர்விசாரமான  குமாரத்திகளே,  என்  வசனத்துக்குச்  செவிகொடுங்கள்.  {Isa  32:9}

 

நிர்விசாரிகளே,  ஒரு  வருஷமும்  சில  நாட்களுமாய்த்  தத்தளிப்பீர்கள்;  திராட்சப்பலன்  அற்றுப்போம்;  அறுப்புக்காலம்  வராது.  {Isa  32:10}

 

சுகஜீவிகளே,  நடுங்குங்கள்;  நிர்விசாரிகளே,  தத்தளியுங்கள்;  உடையை  உரிந்து  களைந்துபோட்டு,  அரையில்  இரட்டைக்  கட்டிக்கொள்ளுங்கள்.  {Isa  32:11}

 

செழிப்பான  வயல்களினிமித்தமும்  கனிதரும்  திராட்சச்  செடிகளினிமித்தமும்  மாரடித்துப்  புலம்புவார்கள்.  {Isa  32:12}

 

என்  ஜனத்தினுடைய  நிலத்திலும்,  களிகூர்ந்திருந்த  நகரத்திலுள்ள  சந்தோஷம்  நிறைந்த  எல்லா  வீடுகளிலும்,  முட்செடியும்  நெரிஞ்சிலும்  முளைக்கும்.  {Isa  32:13}

 

அரமனை  பாழாக  விடப்படும்,  ஜனம்  நிறைந்த  நகரம்  வெறுமையாகும்,  மேடும்  துருக்கமும்  என்றைக்கும்  கெபிகளாகும்,  அவைகள்  காட்டுக்கழுதைகள்  களிக்கும்  இடமாயும்  மந்தைகளுக்கு  மேய்ச்சலிடமாயும்  இருக்கும்.  {Isa  32:14}

 

உன்னதத்திலிருந்து  நம்மேல்  ஆவி  ஊற்றப்படுமட்டும்  அப்படியே  இருக்கும்;  அப்பொழுது  வனாந்தரம்  செழிப்பான  வயல்வெளியாகும்;  செழிப்பான  வயல்வெளி  காடாக  எண்ணப்படும்.  {Isa  32:15}

 

வனாந்தரத்திலே  நியாயம்  வாசமாயிருக்கும்,  செழிப்பான  வயல்வெளியிலே  நீதி  தங்கித்தரிக்கும்.  {Isa  32:16}

 

நீதியின்  கிரியை  சமாதானமும்,  நீதியின்  பலன்  என்றுமுள்ள  அமரிக்கையும்  சுகமுமாம்.  {Isa  32:17}

 

என்  ஜனம்  சமாதான  தாபரங்களிலும்,  நிலையான  வாசஸ்தலங்களிலும்,  அமைதியாய்த்  தங்கும்  இடங்களிலும்  குடியிருக்கும்.  {Isa  32:18}

 

ஆனாலும்  காடு  அழிய  கல்மழை  பெய்யும்,  அந்த  நகரம்  மகா  தாழ்வாய்த்  தாழ்ந்துபோம்.  {Isa  32:19}

 

மாடுகளையும்  கழுதைகளையும்  நடத்திக்கொண்டுபோய்,  நீர்வளம்  பொருந்திய  இடங்களிலெல்லாம்  விதை  விதைக்கிற  நீங்கள்  பாக்கியவான்கள்.  {Isa  32:20}

 

கொள்ளையிடப்படாதிருந்தும்,  கொள்ளையிடுகிறவனும்,  துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத்  துரோகம்பண்ணுகிறவனுமாகிய  உனக்கு  ஐயோ!  நீ  கொள்ளையிட்டு  முடிந்தபின்பு  கொள்ளையிடப்படுவாய்;  நீ  துரோகம்பண்ணித்  தீர்ந்தபின்பு  உனக்குத்  துரோகம்பண்ணுவார்கள்.  {Isa  33:1}

 

கர்த்தாவே,  எங்களுக்கு  இரங்கும்,  உமக்குக்  காத்திருக்கிறோம்;  தேவரீர்  காலையில்  அவர்கள்  புயமும்,  இக்கட்டுக்காலத்தில்  எங்கள்  இரட்சிப்புமாயிரும்.  {Isa  33:2}

 

அமளியின்  சத்தத்தினாலே  ஜனங்கள்  அலைந்தோடி,  நீர்  எழுந்திருக்கும்போது  ஜாதிகள்  சிதறடிக்கப்படுவார்கள்.  {Isa  33:3}

 

வெட்டுக்கிளிகள்  சேர்க்கிறதுபோல  உங்கள்  கொள்ளை  சேர்க்கப்படும்;  வெட்டுக்கிளிகள்  குதித்துத்  திரிகிறதுபோல  மனுஷர்  அதின்மேல்  குதித்துத்  திரிவார்கள்.  {Isa  33:4}

 

கர்த்தர்  உயர்ந்தவர்,  அவர்  உன்னதத்தில்  வாசமாயிருக்கிறார்;  அவர்  சீயோனை<Zion>  நியாயத்தினாலும்  நீதியினாலும்  நிரப்புகிறார்.  {Isa  33:5}

 

பூரணரட்சிப்பும்  ஞானமும்  அறிவும்  உன்  காலங்களுடைய  உறுதியாயிருக்கும்;  கர்த்தருக்குப்  பயப்படுதலே  அதின்  பொக்கிஷம்.  {Isa  33:6}

 

இதோ,  அவர்களுடைய  பராக்கிரமசாலிகள்  வெளியிலே  அலறுகிறார்கள்;  சமாதானத்து  ஸ்தானாபதிகள்  மனங்கசந்து  அழுகிறார்கள்.  {Isa  33:7}

 

பாதைகள்  பாழாயின;  வழிப்போக்கர்  இல்லை;  உடன்படிக்கையை  மீறுகிறான்;  நகரங்களை  இகழ்ச்சிபண்ணுகிறான்;  மனுஷனை  எண்ணாதேபோகிறான்.  {Isa  33:8}

 

தேசம்  துக்கித்து  விடாய்த்திருக்கிறது;  லீபனோன்<Lebanon>  வெட்கி  வாடுகிறது;  சாரோன்<Sharon>  வனாந்தரத்துக்கு  ஒப்பாகிறது;  பாசானும்<Bashan>  கர்மேலும்<Carmel>  பாழாக்கப்படுகிறது.  {Isa  33:9}

 

இப்பொழுது  எழுந்தருளுவேன்,  இப்பொழுது  உயருவேன்,  இப்பொழுது  மேன்மைப்படுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  33:10}

 

பதரைக்  கர்ப்பந்தரித்துத்  தாளடியைப்  பெறுவீர்கள்;  அக்கினியைப்போல்  உங்கள்  சுவாசமே  உங்களைப்  பட்சிக்கும்.  {Isa  33:11}

 

ஜனங்கள்  சுண்ணாம்பைப்போல  நீற்றப்படுவார்கள்;  வெட்டப்பட்ட  முட்செடிகளைப்போலத்  தீயில்  எரிக்கப்படுவார்கள்.  {Isa  33:12}

 

தூரத்திலுள்ளவர்களே,  நான்  செய்கிறதைக்  கேளுங்கள்;  சமீபத்திலிருக்கிறவர்களே,  என்  பராக்கிரமத்தை  அறிந்துகொள்ளுங்கள்  என்கிறார்.  {Isa  33:13}

 

சீயோனிலுள்ள<Zion>  பாவிகள்  திகைக்கிறார்கள்;  மாயக்காரரை  நடுக்கம்  பிடிக்கிறது;  பட்சிக்கும்  அக்கினிக்கு  முன்பாக  நம்மில்  தரித்திருப்பவன்  யார்?  நித்தியஜுவாலைக்கு  முன்பாக  நம்மில்  தாபரிப்பவன்  யார்  என்கிறார்கள்.  {Isa  33:14}

 

நீதியாய்  நடந்து,  செம்மையானவைகளைப்  பேசி,  இடுக்கண்  செய்வதால்  வரும்  ஆதாயத்தை  வெறுத்து,  பரிதானங்களை  வாங்காதபடிக்குத்  தன்  கைகளை  உதறி,  இரத்தஞ்சிந்துவதற்கான  யோசனைகளைக்  கேளாதபடிக்குத்  தன்  செவியை  அடைத்து,  பொல்லாப்பைக்  காணாதபடிக்குத்  தன்  கண்களை  மூடுகிறவனெவனோ,  {Isa  33:15}

 

அவன்  உயர்ந்த  இடங்களில்  வாசம்பண்ணுவான்;  கன்மலைகளின்  அரண்கள்  அவனுடைய  உயர்ந்த  அடைக்கலமாகும்;  அவன்  அப்பம்  அவனுக்குக்  கொடுக்கப்படும்;  அவன்  தண்ணீர்  அவனுக்கு  நிச்சயமாய்க்  கிடைக்கும்.  {Isa  33:16}

 

உன்  கண்கள்  ராஜாவை  மகிமை  பொருந்தினவராகக்  காணும்,  தூரத்திலுள்ள  தேசத்தையும்  பார்க்கும்.  {Isa  33:17}

 

உன்  மனம்  பயங்கரத்தை  நினைவுகூரும்;  கணக்கன்  எங்கே?  தண்டல்காரன்  எங்கே?  கோபுரங்களை  எண்ணினவன்  எங்கே?  {Isa  33:18}

 

உனக்கு  விளங்காத  பாஷையையும்,  அறிதற்கரிய  ஒருவிதமான  பேச்சையுமுடைய  அந்தக்  குரூர  ஜனங்களை  இனி  நீ  காணாய்.  {Isa  33:19}

 

நம்முடைய  பண்டிகைகள்  ஆசரிக்கப்படும்  நகரமாகிய  சீயோனை<Zion>  நோக்கிப்பார்;  உன்  கண்கள்  எருசலேமை<Jerusalem>  அமரிக்கையான  தாபரமாகவும்,  பெயர்க்கப்படாத  கூடாரமாகவும்  காணும்;  இனி  அதின்  முளைகள்  என்றைக்கும்  பிடுங்கப்படுவதுமில்லை,  அதின்  கயிறுகளில்  ஒன்றும்  அறுந்து  போவதுமில்லை.  {Isa  33:20}

 

மகிமையுள்ள  கர்த்தர்  அங்கே  நமக்கு  மகா  விசாலமான  நதிகளும்  ஆறுகளுமுள்ள  ஸ்தலம்போலிருப்பார்;  வலிக்கிற  படவு  அங்கே  ஓடுவதும்  இல்லை;  பெரிய  கப்பல்  அங்கே  கடந்துவருவதும்  இல்லை.  {Isa  33:21}

 

கர்த்தர்  நம்முடைய  நியாயாதிபதி,  கர்த்தர்  நம்முடைய  நியாயப்பிரமாணிகர்,  கர்த்தர்  நம்முடைய  ராஜா,  அவர்  நம்மை  இரட்சிப்பார்.  {Isa  33:22}

 

உன்  கயிறுகள்  தளர்ந்துபோம்;  பாய்மரத்தைக்  கெட்டிப்படுத்தவும்,  பாயை  விரிக்கவுங்  கூடாமற்போம்;  அப்பொழுது  திரளான  கொள்ளைப்பொருள்  பங்கிடப்படும்;  சப்பாணிகளும்  கொள்ளையாடுவார்கள்.  {Isa  33:23}

 

வியாதிப்பட்டிருக்கிறேன்  என்று  நகரவாசிகள்  சொல்வதில்லை;  அதில்  வாசமாயிருக்கிற  ஜனத்தின்  அக்கிரமம்  மன்னிக்கப்பட்டிருக்கும்.  {Isa  33:24}

 

ஜாதிகளே,  கேட்கிறதற்குக்  கிட்டிவாருங்கள்;  ஜனங்களே,  கவனியுங்கள்;  பூமியும்  அதின்  நிறைவும்,  பூச்சக்கரமும்  அதில்  உற்பத்தியான  யாவும்  கேட்கக்கடவது.  {Isa  34:1}

 

சகல  ஜாதிகளின்மேலும்  கர்த்தருடைய  கடுங்கோபமும்,  அவைகளுடைய  சகல  சேனைகளின்மேலும்  அவருடைய  உக்கிரமும்  மூளுகிறது;  அவர்களைச்  சங்காரத்துக்கு  நியமித்து,  கொலைக்கு  ஒப்புக்கொடுக்கிறார்.  {Isa  34:2}

 

அவர்களிலே  கொலைசெய்யப்பட்டவர்கள்  வெளியே  எறியுண்டுகிடப்பார்கள்;  அவர்களுடைய  பிரேதங்கள்  நாற்றமெடுக்கும்;  அவர்களுடைய  இரத்தத்தினாலே  மலைகளும்  கரைந்துபோம்.  {Isa  34:3}

 

வானத்தின்  சர்வ  சேனையும்  கரைந்து,  வானங்கள்  புஸ்தகச்சுருளைப்போல்  சுருட்டப்பட்டு,  அவைகளின்  சர்வசேனையும்  திராட்சச்செடியின்  இலைகள்  உதிருகிறதுபோலவும்,  அத்திமரத்தின்  காய்கள்  உதிருகிறதுபோலவும்  உதிர்ந்து  விழும்.  {Isa  34:4}

 

வானங்களில்  என்  பட்டயம்  வெறிகொண்டது;  இதோ,  ஏதோமின்மேலும்<Edom>,  நான்  சங்காரத்துக்கு  நியமித்த  ஜனத்தின்மேலும்,  அது  நியாயஞ்செய்ய  இறங்கும்.  {Isa  34:5}

 

போஸ்றாவிலே<Bozrah>  கர்த்தருக்கு  ஒரு  யாகமும்,  ஏதோம்<Edom>  தேசத்திலே  மகா  சங்காரமும்  உண்டு;  கர்த்தருடைய  பட்டயம்  இரத்தத்தால்  திருப்தியாகி,  நிணத்தினால்  பூரிக்கின்றது;  ஆட்டுக்குட்டிகள்  கடாக்களுடைய  இரத்தத்தினாலும்,  ஆட்டுக்கடாக்களுடைய  குண்டிக்காய்களின்  கொழுப்பினாலும்  திருப்தியாகும்.  {Isa  34:6}

 

அவைகளோடே  காண்டாமிருகங்களும்,  ரிஷபங்களோடே  காளைகளும்  வந்து  மடியும்;  அவர்கள்  தேசம்  இரத்தவெறிகொண்டு,  அவர்கள்  மண்  நிணத்தினால்  கொழுத்துப்போம்.  {Isa  34:7}

 

அது  கர்த்தர்  பழிவாங்கும்  நாள்,  சீயோனுடைய<Zion>  வழக்கினிமித்தம்  பதிலளிக்கும்  வருஷம்.  {Isa  34:8}

 

அதின்  ஆறுகள்  பிசினாகவும்,  அதின்  மண்  கந்தகமாகவும்  மாறி,  அதின்  நிலம்  எரிகிற  கீலாய்ப்போம்.  {Isa  34:9}

 

இரவும்  பகலும்  அது  அவியாது;  அதின்  புகை  என்றென்றைக்கும்  எழும்பும்;  தலைமுறை  தலைமுறையாக  அது  பாழாயிருக்கும்;  சதாகாலம்  சதாகாலமாக  அதை  ஒருவரும்  கடந்துபோவதில்லை.  {Isa  34:10}

 

நாரையும்  முள்ளம்பன்றியும்  அதைச்  சுதந்தரிக்கும்,  ஆந்தையும்  காக்கையும்  அதிலே  குடியிருக்கும்;  அதின்மேல்  வெட்டவெளியின்  நூலையும்,  வெறுமையின்  தூக்கையும்  பிடிப்பார்.  {Isa  34:11}

 

ராஜ்யபாரம்பண்ண  அதின்  மேன்மக்களை  அழைத்தால்,  அங்கே  அவர்களில்  ஒருவரும்  இரார்கள்;  அதின்  பிரபுக்கள்  அனைவரும்  இல்லாமற்போவார்கள்.  {Isa  34:12}

 

அதின்  அரமனைகளில்  முட்செடிகளும்,  அதின்  கோட்டைகளில்  காஞ்சொறிகளும்  முட்பூண்டுகளும்  முளைக்கும்;  அது  வலுசர்ப்பங்களின்  தாபரமும்,  கோட்டான்களின்  மாளிகையுமாயிருக்கும்.  {Isa  34:13}

 

அங்கே  காட்டுமிருகங்களும்  ஓரிகளும்  ஒன்றையொன்று  சந்தித்து,  காட்டாட்டைக்  காட்டாடு  கூப்பிடும்;  அங்கே  சாக்குருவிகளும்  தங்கி,  இளைப்பாறும்  இடத்தைக்  கண்டடையும்.  {Isa  34:14}

 

அங்கே  வல்லூறும்  கூடுகட்டி,  முட்டையிட்டு,  குஞ்சுபொரித்து,  அவைகளைத்  தன்  நிழலிலே  கூட்டிக்கொள்ளும்;  அங்கே  கூளிகளும்  ஜோடுஜோடாகச்  சேரும்.  {Isa  34:15}

 

கர்த்தருடைய  புஸ்தகத்திலே  தேடி  வாசியுங்கள்;  இவைகளில்  ஒன்றும்  குறையாது;  இவைகளில்  ஒன்றும்  ஜோடில்லாதிராது;  அவருடைய  வாய்  இதைச்  சொல்லிற்று;  அவருடைய  ஆவி  அவைகளைச்  சேர்க்கும்.  {Isa  34:16}

 

அவரே  அவைகளுக்குச்  சீட்டுப்போட்டார்;  அவருடைய  கையே  அதை  அவைகளுக்கு  அளவுநூலால்  பகிர்ந்துகொடுத்தது;  அவைகள்  என்றைக்கும்  அதைச்  சுதந்தரித்துத்  தலைமுறை  தலைமுறையாக  அதிலே  சஞ்சரிக்கும்.  {Isa  34:17}

 

வனாந்தரமும்  வறண்ட  நிலமும்  மகிழ்ந்து,  கடுவெளி  களித்து,  புஷ்பத்தைப்போலச்  செழிக்கும்.  {Isa  35:1}

 

அது  மிகுதியாய்ச்  செழித்துப்  பூரித்து  ஆனந்தக்களிப்புடன்  பாடும்;  லீபனோனின்<Lebanon>  மகிமையும்,  கர்மேல்<Carmel>  சாரோன்<Sharon>  என்பவைகளின்  அலங்காரமும்  அதற்கு  அளிக்கப்படும்;  அவர்கள்  கர்த்தருடைய  மகிமையையும்,  நமது  தேவனுடைய  மகத்துவத்தையும்  காண்பார்கள்.  {Isa  35:2}

 

தளர்ந்த  கைகளைத்  திடப்படுத்தி,  தள்ளாடுகிற  முழங்கால்களைப்  பலப்படுத்துங்கள்.  {Isa  35:3}

 

மனம்  பதறுகிறவர்களைப்  பார்த்து:  நீங்கள்  பயப்படாதிருங்கள்,  திடன்கொள்ளுங்கள்;  இதோ,  உங்கள்  தேவன்  நீதியைச்  சரிக்கட்டவும்,  உங்கள்  தேவன்  பதிலளிக்கவும்  வருவார்;  அவர்  வந்து  உங்களை  இரட்சிப்பார்  என்று  சொல்லுங்கள்.  {Isa  35:4}

 

அப்பொழுது  குருடரின்  கண்கள்  திறக்கப்பட்டு,  செவிடரின்  செவிகள்  திறவுண்டுபோம்.  {Isa  35:5}

 

அப்பொழுது  முடவன்  மானைப்போல்  குதிப்பான்;  ஊமையன்  நாவும்  கெம்பீரிக்கும்;  வனாந்தரத்திலே  தண்ணீர்களும்,  கடுவெளியிலே  ஆறுகளும்  பாய்ந்தோடும்.  {Isa  35:6}

 

வெட்டாந்தரை  தண்ணீர்த்  தடாகமும்,  வறண்ட  நிலம்  நீரூற்றுகளுமாகும்;  வலுசர்ப்பங்கள்  தாபரித்துக்  கிடந்த  இடங்களிலே  புல்லும்  கொறுக்கையும்  நாணலும்  உண்டாகும்.  {Isa  35:7}

 

அங்கே  பெரும்பாதையான  வழியும்  இருக்கும்;  அது  பரிசுத்த  வழி  என்னப்படும்;  தீட்டுள்ளவன்  அதிலே  நடந்துவருவதில்லை;  அந்த  வழியில்  நடக்கிறவர்கள்  பேதையராயிருந்தாலும்  திசைகெட்டுப்  போவதில்லை.  {Isa  35:8}

 

அங்கே  சிங்கம்  இருப்பதில்லை;  துஷ்டமிருகம்  அங்கே  போவதுமில்லை,  அங்கே  காணப்படவுமாட்டாது;  மீட்கப்பட்டவர்களே  அதில்  நடப்பார்கள்.  {Isa  35:9}

 

கர்த்தரால்  மீட்கப்பட்டவர்கள்  திரும்பி,  ஆனந்தக்களிப்புடன்  பாடி,  சீயோனுக்கு<Zion>  வருவார்கள்;  நித்திய  மகிழ்ச்சி  அவர்கள்  தலையின்மேலிருக்கும்;  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  அடைவார்கள்;  சஞ்சலமும்  தவிப்பும்  ஓடிப்போம்.  {Isa  35:10}

 

எசேக்கியா<Hezekiah>  ராஜா  அரசாண்ட  பதினாலாம்  வருஷத்திலே  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சனகெரிப்<Sennacherib>  யூதாவிலிருக்கிற<Judah>  அரணான  சகல  பட்டணங்களுக்கும்  விரோதமாய்  வந்து,  அவைகளைப்  பிடித்துக்கொண்டான்.  {Isa  36:1}

 

அப்பொழுது  அசீரியா<Assyria>  ராஜா  லாகீசிலிருந்து<Lachish>  ரப்சாக்கேயைப்<Rabshakeh>  பெரிய  சேனையோடே  எருசலேமுக்கு<Jerusalem>  எசேக்கியா<Hezekiah>  ராஜாவினிடத்தில்  அனுப்பினான்;  அவன்  வந்து  வண்ணார்  துறையின்  வழியிலுள்ள  மேல்குளத்துச்  சாலகத்தண்டையிலே  நின்றான்.  {Isa  36:2}

 

அப்பொழுது  இல்க்கியாவின்<Hilkiah>  குமாரனாகிய  எலியாக்கீம்<Eliakim>  என்னும்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  செப்னா<Shebna>  என்னும்  சம்பிரதியும்,  ஆசாப்பின்<Asaph>  குமாரனாகிய  யோவாக்<Joah>  என்னும்  கணக்கனும்  அவனிடத்திற்குப்  புறப்பட்டுப்போனார்கள்.  {Isa  36:3}

 

ரப்சாக்கே<Rabshakeh>  அவர்களை  நோக்கி:  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  மகாராஜாவானவர்  உரைக்கிறதும்,  நீங்கள்  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  சொல்லவேண்டியதும்  என்னவென்றால்:  நீ  நம்பியிருக்கிற  இந்த  நம்பிக்கை  என்ன?  {Isa  36:4}

 

யுத்தத்துக்கு  மந்திராலோசனையும்  வல்லமையும்  உண்டென்று  சொல்லுகிறாயே,  அது  வாய்ப்பேச்சேயன்றி  வேறல்ல;  நீ  என்னை  விரோதிக்கும்படி  யார்மேல்  நம்பிக்கை  வைத்திருக்கிறாய்?  {Isa  36:5}

 

இதோ,  நெரிந்த  நாணல்கோலாகிய  அந்த  எகிப்தை<Egypt>  நம்புகிறாய்;  அதின்மேல்  ஒருவன்  சாய்ந்தால்,  அது  அவன்  உள்ளங்கையில்  பட்டுருவிப்போம்;  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோன்<Pharaoh>  தன்னை  நம்புகிற  யாவருக்கும்  அப்படியே  இருப்பான்.  {Isa  36:6}

 

நீ  என்னிடத்தில்:  நாங்கள்  எங்கள்  தேவனாகிய  கர்த்தரை  நம்புகிறோம்  என்று  சொல்வாயாகில்,  அவருடைய  மேடைகளையும்  அவருடைய  பலிபீடங்களையும்  அல்லவோ  எசேக்கியா<Hezekiah>  அகற்றி,  யூதாவையும்<Judah>,  எருசலேமையும்<Jerusalem>  நோக்கி:  இந்தப்  பலிபீடத்தின்முன்  பணியுங்கள்  என்றானே.  {Isa  36:7}

 

நான்  உனக்கு  இரண்டாயிரம்  குதிரைகளைக்  கொடுப்பேன்;  நீ  அவைகள்மேல்  ஏறத்தக்கவர்களைச்  சம்பாதிக்கக்கூடுமானால்  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடே  சபதங்கூறு.  {Isa  36:8}

 

கூறாதேபோனால்,  நீ  என்  ஆண்டவனுடைய  ஊழியக்காரரில்  ஒரே  ஒரு  சிறிய  தலைவனுடைய  முகத்தை  எப்படித்  திருப்புவாய்?  இரதங்களோடு  குதிரைவீரரும்  வருவார்கள்  என்று  எகிப்தையா<Egypt>  நம்புகிறாய்?  {Isa  36:9}

 

இப்பொழுதும்  கர்த்தருடைய  கட்டளையில்லாமல்  இந்தத்  தேசத்தை  அழிக்க  வந்தேனோ?  இந்தத்  தேசத்துக்கு  விரோதமாய்ப்  போய்  அதை  அழித்துப்போடு  என்று  கர்த்தர்  என்னோடே  சொன்னாரே  என்று  சொன்னான்.  {Isa  36:10}

 

அப்பொழுது  எலியாக்கீமும்<Eliakim>  செப்னாவும்<Shebna>  யோவாகும்<Joah>,  ரப்சாக்கேயைப்பார்த்து<Rabshakeh>:  உம்முடைய  அடியாரோடே  சீரியபாஷையிலே<Syrian>  பேசும்,  அது  எங்களுக்குத்  தெரியும்;  அலங்கத்திலிருக்கிற  ஜனத்தின்  செவிகள்  கேட்க  எங்களோடே  யூதபாஷையிலே<Jews>  பேசவேண்டாம்  என்றார்கள்.  {Isa  36:11}

 

அதற்கு  ரப்சாக்கே<Rabshakeh>:  உங்களோடுங்கூடத்  தங்கள்  மலத்தைத்  தின்னவும்,  தங்கள்  நீரைக்  குடிக்கவும்,  அலங்கத்திலே  தங்கியிருக்கிற  புருஷரண்டைக்கே  அல்லாமல்,  உன்  ஆண்டவனண்டைக்கும்,  உன்னண்டைக்குமா,  என்  ஆண்டவன்  இந்த  வார்த்தைகளைப்  பேச  என்னை  அனுப்பினார்  என்று  சொல்லி;  {Isa  36:12}

 

ரப்சாக்கே<Rabshakeh>  நின்றுகொண்டு,  யூதபாஷையிலே<Jews>  உரத்தசத்தமாய்:  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  மகாராஜாவுடைய  வார்த்தைகளைக்  கேளுங்கள்.  {Isa  36:13}

 

எசேக்கியா<Hezekiah>  உங்களை  வஞ்சியாதபடி  பாருங்கள்;  அவன்  உங்களைத்  தப்புவிக்கமாட்டான்.  {Isa  36:14}

 

கர்த்தர்  நம்மை  நிச்சயமாய்த்  தப்புவிப்பார்,  இந்த  நகரம்  அசீரியா<Assyria>  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை  என்று  சொல்லி,  எசேக்கியா<Hezekiah>  உங்களைக்  கர்த்தரை  நம்பப்பண்ணுவான்;  அதற்கு  இடங்கொடாதிருங்கள்  என்று  ராஜா  சொல்லுகிறார்.  {Isa  36:15}

 

எசேக்கியாவின்<Hezekiah>  சொல்லைக்  கேளாதிருங்கள்.  அசீரியா<Assyria>  ராஜா  சொல்லுகிறதாவது:  நீங்கள்  என்னோடே  ராஜியாகி,  காணிக்கையோடே  என்னிடத்தில்  வாருங்கள்.  {Isa  36:16}

 

நான்  வந்து,  உங்களைத்  தானியமும்  திராட்சத்தோட்டமுமுள்ள  தேசமும்,  அப்பமும்  திராட்சரசமுமுள்ள  தேசமுமாகிய  உங்கள்  தேசத்துக்கு  ஒப்பான  தேசத்துக்கு  அழைத்துக்கொண்டுபோகுமளவும்,  அவனவன்  தன்  தன்  திராட்சச்செடியின்  கனியையும்,  தன்  தன்  அத்திமரத்தின்  கனியையும்  புசித்து,  அவனவன்  தன்  தன்  கிணற்றின்  தண்ணீரைக்  குடியுங்கள்.  {Isa  36:17}

 

கர்த்தர்  நம்மைத்  தப்புவிப்பார்  என்று  உங்களைப்  போதனைசெய்ய  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  செவிகொடாதிருங்கள்;  ஜாதிகளுடைய  தேவர்களில்  யாராவது  தங்கள்  தேசத்தை  அசீரியா<Assyria>  ராஜாவின்  கைக்குத்  தப்புவித்ததுண்டோ?  {Isa  36:18}

 

ஆமாத்<Hamath>  அர்பாத்<Arphad>  பட்டணங்களின்  தேவர்கள்  எங்கே?  செப்பர்வாயீமின்<Sepharvaim>  தேவர்கள்  எங்கே?  அவர்கள்  சமாரியாவை<Samaria>  என்  கைக்குத்  தப்புவித்ததுண்டோ?  {Isa  36:19}

 

கர்த்தர்  எருசலேமை<Jerusalem>  என்  கைக்குத்  தப்புவிப்பார்  என்பதற்கு,  அந்தத்தேசங்களுடைய  எல்லாத்  தேவர்களுக்குள்ளும்  தங்கள்  தேசத்தை  என்  கைக்குத்  தப்புவித்தவர்  யார்  என்று  ராஜா  சொல்லுகிறார்  என்றான்.  {Isa  36:20}

 

அவர்களோ  அவனுக்கு  ஒரு  வார்த்தையையும்  பிரதியுத்தரமாகச்  சொல்லாமல்  மவுனமாயிருந்தார்கள்;  அவனுக்கு  மறுஉத்தரவு  சொல்லவேண்டாம்  என்று  ராஜா  கட்டளையிட்டிருந்தான்.  {Isa  36:21}

 

அப்பொழுது  இல்க்கியாவின்<Hilkiah>  குமாரனாகிய  எலியாக்கீம்<Eliakim>  என்னும்  அரமனை  விசாரிப்புக்காரனும்,  செப்னா<Shebna>  என்னும்  சம்பிரதியும்,  ஆசாப்பின்<Asaph>  குமாரனாகிய  யோவாக்<Joah>  என்னும்  கணக்கனும்,  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  எசேக்கியாவினிடத்தில்<Hezekiah>  வந்து,  ரப்சாக்கேயின்<Rabshakeh>  வார்த்தைகளை  அவனுக்கு  அறிவித்தார்கள்.  {Isa  36:22}

 

ராஜாவாகிய  எசேக்கியா<Hezekiah>  அதைக்  கேட்டபோது,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்து,  இரட்டு  உடுத்துக்கொண்டு,  கர்த்தருடைய  ஆலயத்தில்  பிரவேசித்து,  {Isa  37:1}

 

அரமனை  விசாரிப்புக்காரனாகிய  எலியாக்கீமையும்<Eliakim>,  சம்பிரதியாகிய  செப்னாவையும்<Shebna>,  ஆசாரியர்களின்  மூப்பரையும்,  ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>  என்னும்  தீர்க்கதரிசியினிடத்திற்கு  இரட்டு  உடுத்தவர்களாக  அனுப்பினான்.  {Isa  37:2}

 

இவர்கள்  அவனை  நோக்கி:  இந்த  நாள்  நெருக்கமும்,  கண்டிதமும்,  தூஷணமும்  அநுபவிக்கிற  நாள்;  பிள்ளைப்பேறு  நோக்கியிருக்கிறது;  பெறவோ  பெலன்  இல்லை.  {Isa  37:3}

 

ஜீவனுள்ள  தேவனை  நிந்திக்கும்படி,  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  தன்  ஆண்டவனால்  அனுப்பப்பட்ட  ரப்சாக்கே<Rabshakeh>  சொன்ன  வார்த்தைகளை  உமது  தேவனாகிய  கர்த்தர்  கேட்டிருக்கிறார்;  உமது  தேவனாகிய  கர்த்தர்  கேட்டிருக்கிற  வார்த்தைகளினிமித்தம்  தண்டனைசெய்வார்;  ஆகையால்,  இன்னும்  மீதியாயிருக்கிறவர்களுக்காக  விண்ணப்பஞ்செய்வீராக  என்று  எசேக்கியா<Hezekiah>  சொல்லச்சொன்னார்  என்றார்கள்.  {Isa  37:4}

 

இவ்விதமாய்  எசேக்கியா<Hezekiah>  ராஜாவின்  ஊழியக்காரர்  ஏசாயாவினிடத்தில்<Isaiah>  வந்து  சொன்னார்கள்.  {Isa  37:5}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>  அவர்களை  நோக்கி:  அசீரியா<Assyria>  ராஜாவின்  ஊழியக்காரர்  என்னைத்  தூஷித்ததும்  நீர்  கேட்டதுமான  வார்த்தைகளினாலே  பயப்படாதேயும்.  {Isa  37:6}

 

இதோ,  அவன்  ஒரு  செய்தியைக்கேட்டு,  தன்  தேசத்துக்குத்  திரும்புவதற்கான  ஆவியை  நான்  அவனுக்குள்  அனுப்பி,  அவனை  அவன்  தேசத்திலே  பட்டயத்தால்  விழப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்பதை  உங்கள்  ஆண்டவனிடத்தில்  சொல்லுங்கள்  என்றான்.  {Isa  37:7}

 

அசீரியா<Assyria>  ராஜா  லாகீசைவிட்டுப்<Lachish>  புறப்பட்டான்  என்று  கேள்விப்பட்டு,  ரப்சாக்கே<Rabshakeh>  திரும்பிப்போய்,  அவன்  லிப்னாவின்மேல்<Libnah>  யுத்தம்பண்ணுகிறதைக்  கண்டான்.  {Isa  37:8}

 

அப்பொழுது,  எத்தியோப்பியாவின்<Ethiopia>  ராஜாவாகிய  திராக்கா<Tirhakah>  உம்மோடு  யுத்தம்பண்ணப்  புறப்பட்டான்  என்று  சொல்லக்  கேள்விப்பட்டான்;  அதைக்  கேட்டபோது  அவன்  எசேக்கியாவினிடத்துக்கு<Hezekiah>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  {Isa  37:9}

 

நீங்கள்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  எருசலேம்<Jerusalem>  அசீரியா<Assyria>  ராஜாவின்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை  என்று  நீ  நம்பியிருக்கிற  உன்  தேவன்  உன்னை  எத்தவொட்டாதே.  {Isa  37:10}

 

இதோ,  அசீரியா<Assyria>  ராஜாக்கள்  சகல  தேசங்களையும்  சங்கரித்த  செய்தியை  நீ  கேள்விப்பட்டிருக்கிறாய்;  நீ  தப்புவாயோ?  {Isa  37:11}

 

என்  பிதாக்கள்  அழித்துவிட்ட  கோசானையும்<Gozan>,  ஆரானையும்<Haran>,  ரேத்சேப்பையும்<Rezeph>,  தெலாசாரிலிருந்த<Telassar>  ஏதேனின்<Eden>  புத்திரரையும்  அவர்களுடைய  தேவர்கள்  தப்புவித்ததுண்டோ?  {Isa  37:12}

 

ஆமாத்தின்<Hamath>  ராஜாவும்,  அர்பாத்தின்<Arphad>  ராஜாவும்,  செப்பர்வாயீம்<Sepharvaim>  ஏனா<Hena>  ஈவா<Ivah>  பட்டணங்களின்  ராஜாவும்  எங்கே  என்று  சொல்லுங்கள்  என்றார்.  {Isa  37:13}

 

எசேக்கியா<Hezekiah>  ஸ்தானாபதிகளின்  கையிலிருந்த  நிருபத்தை  வாங்கி  வாசித்தான்;  பின்பு  எசேக்கியா<Hezekiah>  கர்த்தருடைய  ஆலயத்திற்குப்  போய்  அதைக்  கர்த்தருக்கு  முன்பாக  விரித்து,  {Isa  37:14}

 

கர்த்தரை  நோக்கி:  {Isa  37:15}

 

சேனைகளின்  கர்த்தாவே,  கேருபீன்களின்<cherubims>  மத்தியில்  வாசம்பண்ணுகிற  இஸ்ரவேலின்<Israel>  தேவனே,  நீர்  ஒருவரே  பூமியின்  ராஜ்யங்களுக்கெல்லாம்  தேவனானவர்;  நீர்  வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கினீர்.  {Isa  37:16}

 

கர்த்தாவே,  உமது  செவியைச்  சாய்த்துக்கேளும்;  கர்த்தாவே,  நீர்  உமது  கண்களைத்  திறந்துபாரும்,  சனகெரிப்<Sennacherib>  ஜீவனுள்ள  தேவனை  நிந்திக்கும்படிக்குச்  சொல்லியனுப்பின  வார்த்தைகளையெல்லாம்  கேளும்.  {Isa  37:17}

 

கர்த்தாவே,  அசீரியா<Assyria>  ராஜாக்கள்  அந்த  ஜாதிகளையும்,  அவர்கள்  தேசத்தையும்  நாசமாக்கி,  {Isa  37:18}

 

அவர்களுடைய  தேவர்களை  நெருப்பிலே  போட்டுவிட்டது  மெய்தான்;  அவைகள்  தேவர்கள்  அல்லவே,  மனுஷர்  கைவேலையான  மரமும்  கல்லுந்தானே;  ஆகையால்  அவைகளை  நிர்த்தூளியாக்கினார்கள்.  {Isa  37:19}

 

இப்போதும்  எங்கள்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  ஒருவரே  கர்த்தர்  என்று  பூமியின்  ராஜ்யங்களெல்லாம்  அறியும்படிக்கு,  எங்களை  அவன்  கைக்கு  நீங்கலாக்கி  இரட்சியும்  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  {Isa  37:20}

 

அப்பொழுது  ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>,  எசேக்கியாவுக்குச்<Hezekiah>  சொல்லியனுப்பினது:  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சனகெரிபினிமித்தம்<Sennacherib>  நீ  என்னை  நோக்கி  விண்ணப்பம்பண்ணினாயே.  {Isa  37:21}

 

அவனைக்குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிற  வசனமாவது:  சீயோன்<Zion>  குமாரத்தியாகிய  கன்னியாஸ்திரீ  உன்னை  இகழ்ந்து,  உன்னைப்  பரிகாசம்பண்ணுகிறாள்;  எருசலேம்<Jerusalem>  குமாரத்தி  உன்  பின்னாலே  தலையைத்  துலுக்குகிறாள்.  {Isa  37:22}

 

யாரை  நிந்தித்துத்  தூஷித்தாய்?  யாருக்கு  விரோதமாய்  உன்  சத்தத்தை  உயர்த்தினாய்?  நீ  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருக்கு  விரோதமாய்  அல்லவோ  உன்  கண்களை  மேட்டிமையாய்  ஏறெடுத்தாய்.  {Isa  37:23}

 

உன்  ஊழியக்காரரைக்கொண்டு  நீ  ஆண்டவரை  நிந்தித்து:  என்  இரதங்களின்  திரளினாலே  நான்  மலைகளின்  கொடுமுடிகளுக்கும்  லீபனோனின்<Lebanon>  சிகரங்களுக்கும்  வந்து  ஏறினேன்;  அதின்  உயரமான  கேதுருமரங்களையும்,  உச்சிதமான  தேவதாரு  விருட்சங்களையும்  நான்  வெட்டி,  உயர்ந்த  அதின்  கடைசி  எல்லைமட்டும்,  அதின்  செழுமையான  வனமட்டும்  வருவேன்  என்றும்,  {Isa  37:24}

 

நான்  கிணறு  வெட்டித்  தண்ணீர்  குடித்தேன்;  என்  உள்ளங்காலினால்  அரணிப்பான  இடங்களின்  அகழிகளையெல்லாம்  வறளவும்  பண்ணினேன்  என்றும்  சொன்னாய்.  {Isa  37:25}

 

நான்  வெகுகாலத்துக்குமுன்  அதை  நியமித்து,  பூர்வநாட்கள்முதல்  அதைத்  திட்டம்பண்ணினேன்  என்பதை  நீ  கேட்டதில்லையோ?  இப்பொழுது  நீ  அரணான  பட்டணங்களைப்  பாழான  மண்மேடுகளாக்கும்படி  நானே  அதைச்  சம்பவிக்கப்பண்ணினேன்.  {Isa  37:26}

 

அதினாலே  அவைகளின்  குடிகள்  கையிளைத்தவர்களாகி,  கலங்கி  வெட்கப்பட்டு,  வெளியின்  பூண்டுக்கும்,  பச்சிலைக்கும்,  வீடுகளின்மேல்  முளைக்கும்  புல்லுக்கும்,  ஓங்கி  வளருமுன்  தீய்ந்துபோம்  பயிருக்கும்  சமானமானார்கள்.  {Isa  37:27}

 

உன்  இருப்பையும்,  உன்  போக்கையும்,  உன்  வரவையும்,  நீ  எனக்கு  விரோதமாய்க்  கொந்தளிக்கிறதையும்  அறிவேன்.  {Isa  37:28}

 

நீ  எனக்கு  விரோதமாய்க்  கொந்தளித்து,  வீரியம்பேசினது  என்  செவிகளில்  ஏறினபடியினாலே,  நான்  என்  துறட்டை  உன்  மூக்கிலும்,  என்  கடிவாளத்தை  உன்  வாயிலும்  போட்டு,  நீ  வந்த  வழியே  உன்னைத்  திரும்பப்பண்ணுவேன்.  {Isa  37:29}

 

உனக்கு  அடையாளமாயிருப்பது  என்னவென்றால்:  இந்த  வருஷத்திலே  தப்பிப்  பயிராகிறதையும்,  இரண்டாம்  வருஷத்திலே  தானாய்  விளைகிறதையும்  சாப்பிடுவீர்கள்;  மூன்றாம்  வருஷத்திலோ  விதைத்து  அறுத்து,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  அவைகளின்  கனிகளைப்  புசிப்பீர்கள்.  {Isa  37:30}

 

யூதா<Judah>  வம்சத்தாரில்  தப்பி  மீந்திருக்கிறவர்கள்  மறுபடியும்  கீழே  வேர்பற்றி  மேலே  கனிகொடுப்பார்கள்.  {Isa  37:31}

 

மீதியாயிருக்கிறவர்கள்  எருசலேமிலும்<Jerusalem>,  தப்பினவர்கள்  சீயோன்<Zion>  மலையிலுமிருந்து  புறப்படுவார்கள்;  சேனைகளுடைய  கர்த்தரின்  வைராக்கியம்  இதைச்  செய்யும்.  {Isa  37:32}

 

ஆகையால்  கர்த்தர்  அசீரியா<Assyria>  ராஜாவைக்குறித்து:  அவன்  இந்த  நகரத்துக்குள்  பிரவேசிப்பதில்லை;  இதின்மேல்  அம்பு  எய்வதுமில்லை;  இதற்கு  முன்பாகக்  கேடகத்தோடே  வருவதுமில்லை;  இதற்கு  எதிராகக்  கொத்தளம்  போடுவதுமில்லை.  {Isa  37:33}

 

அவன்  இந்த  நகரத்துக்குள்  பிரவேசியாமல்,  தான்  வந்தவழியே  திரும்பிப்போவான்.  {Isa  37:34}

 

என்னிமித்தமும்  என்  தாசனாகிய  தாவீதினிமித்தமும்<David>,  நான்  இந்த  நகரத்தை  இரட்சிக்கும்படிக்கு  இதற்கு  ஆதரவாயிருப்பேன்  என்பதைக்  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்லியனுப்பினான்.  {Isa  37:35}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  புறப்பட்டு,  அசீரியரின்<Assyrians>  பாளயத்தில்  லட்சத்தெண்பத்தையாயிரம்  பேரைச்  சங்கரித்தான்;  அதிகாலமே  எழுந்திருக்கும்போது,  இதோ,  அவர்களெல்லாரும்  செத்த  பிரேதங்களாய்க்  கிடந்தார்கள்.  {Isa  37:36}

 

அப்பொழுது  அசீரியா<Assyria>  ராஜாவாகிய  சனகெரிப்<Sennacherib>  பிரயாணப்பட்டுத்  திரும்பிப்போய்,  நினிவேயில்<Nineveh>  இருந்துவிட்டான்.  {Isa  37:37}

 

அவன்  தன்  தேவனாகிய  நிஸ்ரோகின்<Nisroch>  கோவிலிலே  பணிந்துகொள்ளுகிறபோது,  அவன்  குமாரராகிய  அத்ரமலேக்கும்<Adrammelech>  சரேத்சேரும்<Sharezer>  அவனைப்  பட்டயத்தினால்  வெட்டிப்போட்டு,  அரராத்<Ararat//Armenia>  தேசத்துக்குத்  தப்பி  ஓடிப்போனார்கள்;  அவன்  குமாரனாகிய  எசரத்தோன்<Esarhaddon>  அவன்  பட்டத்திற்கு  வந்து  அரசாண்டான்.  {Isa  37:38}

 

அந்நாட்களில்  எசேக்கியா<Hezekiah>  வியாதிப்பட்டு  மரணத்துக்கு  ஏதுவாயிருந்தான்;  அப்பொழுது  ஆமோத்சின்<Amoz>  குமாரனாகிய  ஏசாயா<Isaiah>  என்னும்  தீர்க்கதரிசி  அவனிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  உமது  வீட்டுக்காரியத்தை  ஒழுங்குப்படுத்தும்,  நீர்  பிழைக்கமாட்டீர்,  மரித்துப்போவீர்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {Isa  38:1}

 

அப்பொழுது  எசேக்கியா<Hezekiah>  தன்  முகத்தைச்  சுவர்ப்புறமாகத்  திருப்பிக்கொண்டு,  கர்த்தரை  நோக்கி:  {Isa  38:2}

 

  கர்த்தாவே,  நான்  உமக்கு  முன்பாக  உண்மையும்  மன  உத்தமமுமாய்  நடந்து,  உமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்தேன்  என்பதை  நினைத்தருளும்  என்று  விண்ணப்பம்பண்ணி,  எசேக்கியா<Hezekiah>  மிகவும்  அழுதான்.  {Isa  38:3}

 

அப்பொழுது  ஏசாயாவுக்கு<Isaiah>  உண்டான  கர்த்தருடைய  வார்த்தையாவது:  {Isa  38:4}

 

நீ  போய்  எசேக்கியாவை<Hezekiah>  நோக்கி:  உன்  தகப்பனாகிய  தாவீதின்<David>  தேவனாயிருக்கிற  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  உன்  விண்ணப்பத்தைக்  கேட்டேன்;  உன்  கண்ணீரைக்  கண்டேன்;  இதோ,  உன்  நாட்களோடே  பதினைந்து  வருஷம்  கூட்டுவேன்.  {Isa  38:5}

 

நான்  உன்னையும்  இந்த  நகரத்தையும்  அசீரியா<Assyria>  ராஜாவின்  கைக்குத்  தப்புவித்து,  இந்த  நகரத்துக்கு  ஆதரவாயிருப்பேன்.  {Isa  38:6}

 

இதோ,  ஆகாசுடைய<Ahaz>  சூரிய  கடியாரத்தில்  பாகைக்குப்  பாகை  இறங்கின  சாயையைப்  பத்துப்பாகை  பின்னிட்டுத்  திருப்புவேன்  என்றார்.  {Isa  38:7}

 

தாம்  சொன்ன  இந்த  வார்த்தையின்படி  கர்த்தர்  செய்வார்  என்பதற்கு  இது  கர்த்தரால்  உனக்கு  அடையாளமாயிருக்கும்  என்று  சொல்  என்றார்;  அப்படியே  கடியாரத்தில்  இறங்கியிருந்த  சூரியசாயை  பத்துப்பாகை  திரும்பிற்று.  {Isa  38:8}

 

யூதாவின்<Judah>  ராஜாவாகிய  எசேக்கியா<Hezekiah>  வியாதிப்பட்டு,  தன்  வியாதி  நீங்கிச்  சொஸ்தமானபோது  எழுதிவைத்ததாவது:  {Isa  38:9}

 

நான்  என்  பூரண  ஆயுசின்  வருஷங்களுக்குச்  சேராமல்  பாதாளத்தின்  வாசல்களுக்குட்படுவேன்  என்று  என்  நாட்கள்  அறுப்புண்கிறபோது  சொன்னேன்.  {Isa  38:10}

 

கர்த்தரை,  கர்த்தரை,  நான்  இனி  உயிரோடிருக்கிறவர்களின்  தேசத்திலே  தரிசிப்பதில்லை;  இனி  பூலோகக்  குடிகளோடே  இருந்து  மனுஷரை  நான்  காண்பதில்லை.  {Isa  38:11}

 

என்  ஆயுசு  மேய்ப்பனுடைய  கூடாரத்தைப்போல  என்னைவிட்டுப்  பெயர்ந்துபோகிறது;  நெய்கிறவன்  பாவை  அறுக்கிறதுபோல  என்  ஜீவனை  அறுக்கக்  கொடுக்கிறேன்;  என்னைப்  பாவிலிருந்து  அறுத்துவிடுகிறார்;  இன்று  இரவுக்குள்ளே  என்னை  முடிவடையப்பண்ணுவீர்.  {Isa  38:12}

 

விடியற்காலமட்டும்  நான்  எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்;  அவர்  சிங்கம்போல  என்  எலும்புகளையெல்லாம்  நொறுக்குவார்;  இன்று  இரவுக்குள்ளே  என்னை  முடிவடையப்பண்ணுவீர்  என்று  சொல்லி,  {Isa  38:13}

 

நமுட்டைப்போலும்,  தகைவிலான்  குருவியைப்போலும்  கூவினேன்,  புறாவைப்போல்  புலம்பினேன்;  என்  கண்கள்  உயரப்  பார்க்கிறதினால்  பூத்துப்போயின;  கர்த்தாவே,  ஒடுங்கிப்போகிறேன்;  என்  காரியத்தை  மேற்போட்டுக்  கொள்ளும்  என்றேன்.  {Isa  38:14}

 

நான்  என்னசொல்லுவேன்?  அவர்  எனக்கு  வாக்கு  அருளினார்;  அந்தப்பிரகாரமே  செய்தார்;  என்  ஆயுசின்  வருஷங்களிலெல்லாம்  என்  ஆத்துமாவின்  கசப்பை  நினைத்து  நடந்துகொள்வேன்.  {Isa  38:15}

 

ஆண்டவரே,  இவைகளினால்  மனுஷர்  பிழைக்கிறார்கள்;  இவைகளெல்லாம்  என்  உயிர்க்கு  உயிராயிருக்கிறது;  என்னைச்  சொஸ்தப்படவும்  பிழைக்கவும்பண்ணினீர்.  {Isa  38:16}

 

இதோ,  சமாதானத்துக்குப்  பதிலாக  மகா  கசப்பு  வந்திருந்தது,  தேவரீரோ  என்  ஆத்துமாவை  நேசித்து  அழிவின்  குழிக்கு  விலக்கினீர்;  என்  பாவங்களையெல்லாம்  உமது  முதுகுக்குப்  பின்னாக  எறிந்துவிட்டீர்.  {Isa  38:17}

 

பாதாளம்  உம்மைத்  துதியாது,  மரணம்  உம்மைப்  போற்றாது;  குழியில்  இறங்குகிறவர்கள்  உம்முடைய  சத்தியத்தைத்  தியானிப்பதில்லை.  {Isa  38:18}

 

நான்  இன்று  செய்கிறதுபோல,  உயிரோடிருக்கிறவன்,  உயிரோடிருக்கிறவனே,  உம்மைத்  துதிப்பான்,  தகப்பன்  பிள்ளைகளுக்கு  உமது  சத்தியத்தைத்  தெரிவிப்பான்.  {Isa  38:19}

 

கர்த்தர்  என்னை  இரட்சிக்கவந்தார்;  ஆகையால்  எங்கள்  ஜீவநாளெல்லாம்  கர்த்தருடைய  ஆலயத்திலே  என்  கீதவாத்தியங்களை  வாசித்துப்  பாடுவோம்  என்று  எழுதிவைத்தான்.  {Isa  38:20}

 

அத்திப்பழத்து  அடையைக்  கொண்டுவந்து,  பிளவையின்மேல்  பற்றுப்போடுங்கள்;  அப்பொழுது  பிழைப்பார்  என்று  ஏசாயா<Isaiah>  சொல்லியிருந்தான்.  {Isa  38:21}

 

அப்பொழுது  எசேக்கியா<Hezekiah>:  நான்  கர்த்தருடைய  ஆலயத்துக்குப்  போவதற்கு  அடையாளம்  என்னவென்று  கேட்டிருந்தான்.  {Isa  38:22}

 

அக்காலத்திலே  பலாதானின்<Baladan>  குமாரனாகிய  மெரோதாக்பலாதான்<Merodachbaladan>  என்னும்  பாபிலோனின்<Babylon>  ராஜா,  எசேக்கியா<Hezekiah>  வியாதிப்பட்டிருந்து  ஆரோக்கியமானதைக்  கேள்விப்பட்டு,  அவனிடத்திற்கு  நிருபங்களையும்  வெகுமானத்தையும்  அனுப்பினான்.  {Isa  39:1}

 

எசேக்கியா<Hezekiah>  அவர்களைக்  கண்டு  சந்தோஷப்பட்டு,  தன்  பொக்கிஷசாலையையும்,  வெள்ளியையும்,  பொன்னையும்,  கந்தவர்க்கங்களையும்,  நல்ல  பரிமளதைலத்தையும்,  தன்  ஆயுதசாலை  அனைத்தையும்,  தன்  பொக்கிஷசாலைகளில்  உள்ளதெல்லாவற்றையும்  அவர்களுக்குக்  காண்பித்தான்;  எசேக்கியா<Hezekiah>  தன்  அரமனையிலும்,  தன்  ராஜ்யத்தில்  எங்கும்  அவர்களுக்குக்  காண்பியாத  பொருள்  ஒன்றும்  இல்லை.  {Isa  39:2}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>  தீர்க்கதரிசி  எசேக்கியா<Hezekiah>  ராஜாவினிடத்தில்  வந்து:  அந்த  மனுஷர்  என்ன  சொன்னார்கள்,  எங்கேயிருந்து  உம்மிடத்தில்  வந்தார்கள்  என்று  கேட்டான்.  அதற்கு  எசேக்கியா<Hezekiah>:  பாபிலோன்<Babylon>  என்னும்  தூரதேசத்திலிருந்து  என்னிடத்திற்கு  வந்தார்கள்  என்றான்.  {Isa  39:3}

 

அப்பொழுது  அவன்:  உம்முடைய  வீட்டில்  என்னத்தைப்  பார்த்தார்கள்  என்று  கேட்டான்.  அதற்கு  எசேக்கியா<Hezekiah>:  என்  வீட்டிலுள்ளதெல்லாவற்றையும்  பார்த்தார்கள்;  என்  பொக்கிஷங்களில்  நான்  அவர்களுக்குக்  காண்பியாத  பொருள்  ஒன்றும்  இல்லை  என்றான்.  {Isa  39:4}

 

அப்பொழுது  ஏசாயா<Isaiah>  எசேக்கியாவை<Hezekiah>  நோக்கி:  சேனைகளுடைய  கர்த்தரின்  வார்த்தையைக்  கேளும்.  {Isa  39:5}

 

இதோ,  நாட்கள்  வரும்;  அப்பொழுது  உன்  வீட்டில்  உள்ளதிலும்,  உன்  பிதாக்கள்  இந்நாள்வரைக்கும்  சேர்த்ததிலும்  ஒன்றும்  மீதியாய்  வைக்கப்படாமல்  எல்லாம்  பாபிலோனுக்குக்<Babylon>  கொண்டுபோகப்படும்.  {Isa  39:6}

 

நீ  பெறப்போகிற  உன்  சந்ததியாகிய  உன்  குமாரரிலும்  சிலர்  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  அரமனையிலே  அரமனை  வேலைக்காரராயிருப்பார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றான்.  {Isa  39:7}

 

அப்பொழுது  எசேக்கியா<Hezekiah>  ஏசாயாவை<Isaiah>  நோக்கி:  நீர்  சொன்ன  கர்த்தருடைய  வார்த்தை  நல்லதுதான்  என்று  சொல்லி,  என்  நாட்களிலாவது  சமாதானமும்  உண்மையும்  இருக்குமே  என்றான்.  {Isa  39:8}

 

என்  ஜனத்தை  ஆற்றுங்கள்,  தேற்றுங்கள்;  {Isa  40:1}

 

எருசலேமுடன்<Jerusalem>  பட்சமாய்ப்பேசி,  அதின்  போர்  முடிந்தது  என்றும்,  அதின்  அக்கிரமம்  நிவிர்த்தியாயிற்று  என்றும்,  அது  தன்  சகல  பாவங்களினிமித்தமும்  கர்த்தரின்  கையில்  இரட்டிப்பாய்  அடைந்து  தீர்ந்தது  என்றும்,  அதற்குக்  கூறுங்கள்  என்று  உங்கள்  தேவன்  சொல்லுகிறார்.  {Isa  40:2}

 

கர்த்தருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்,  அவாந்தரவெளியிலே  நம்முடைய  தேவனுக்குப்  பாதையைச்  செவ்வைபண்ணுங்கள்  என்றும்,  {Isa  40:3}

 

பள்ளமெல்லாம்  உயர்த்தப்பட்டு,  சகல  மலையும்  குன்றும்  தாழ்த்தப்பட்டு,  கோணலானது  செவ்வையாகி,  கரடுமுரடானவைச்  சமமாக்கப்படும்  என்றும்,  {Isa  40:4}

 

கர்த்தரின்  மகிமை  வெளியரங்கமாகும்,  மாம்சமான  யாவும்  அதை  ஏகமாய்க்  காணும்,  கர்த்தரின்  வாக்கு  அதை  உரைத்தது  என்றும்  வனாந்தரத்திலே  கூப்பிடுகிற  சத்தம்  உண்டாயிற்று.  {Isa  40:5}

 

பின்னும்  கூப்பிட்டுச்  சொல்  என்று  ஒரு  சத்தம்  உண்டாயிற்று;  என்னத்தைக்  கூப்பிட்டுச்  சொல்வேன்  என்றேன்.  அதற்கு:  மாம்சமெல்லாம்  புல்லைப்போலவும்,  அதின்  மேன்மையெல்லாம்  வெளியின்  பூவைப்போலவும்  இருக்கிறது.  {Isa  40:6}

 

கர்த்தரின்  ஆவி  அதின்மேல்  ஊதும்போது,  புல்  உலர்ந்து,  பூ  உதிரும்;  ஜனமே  புல்.  {Isa  40:7}

 

புல்  உலர்ந்து  பூ  உதிரும்;  நமது  தேவனுடைய  வசனமோ  என்றென்றைக்கும்  நிற்கும்  என்பதையே  சொல்  என்று  உரைத்தது.  {Isa  40:8}

 

சீயோன்<Zion>  என்னும்  சுவிசேஷகியே,  நீ  உயர்ந்த  பர்வதத்தில்  ஏறு;  எருசலேம்<Jerusalem>  என்னும்  சுவிசேஷகியே,  நீ  உரத்த  சத்தமிட்டுக்  கூப்பிடு,  பயப்படாமல்  சத்தமிட்டு,  யூதா<Judah>  பட்டணங்களை  நோக்கி:  இதோ,  உங்கள்  தேவன்  என்று  கூறு.  {Isa  40:9}

 

இதோ,  கர்த்தராகிய  ஆண்டவர்  பராக்கிரமசாலியாக  வருவார்;  அவர்  தமது  புயத்தினால்  அரசாளுவார்;  இதோ,  அவர்  அளிக்கும்  பலன்  அவரோடேகூட  வருகிறது;  அவர்  கொடுக்கும்  பிரதிபலன்  அவருடைய  முகத்துக்கு  முன்பாகச்  செல்லுகிறது.  {Isa  40:10}

 

மேய்ப்பனைப்போலத்  தமது  மந்தையை  மேய்ப்பார்;  ஆட்டுக்குட்டிகளைத்  தமது  புயத்தினால்  சேர்த்து,  தமது  மடியிலே  சுமந்து,  கறவலாடுகளை  மெதுவாய்  நடத்துவார்.  {Isa  40:11}

 

தண்ணீர்களைத்  தமது  கைப்பிடியால்  அளந்து,  வானங்களை  ஜாணளவாய்ப்  பிரமாணித்து,  பூமியின்  மண்ணை  மரக்காலில்  அடக்கி,  பர்வதங்களைத்  துலாக்கோலாலும்,  மலைகளைத்  தராசாலும்  நிறுத்தவர்  யார்?  {Isa  40:12}

 

கர்த்தருடைய  ஆவியை  அளவிட்டு,  அவருக்கு  ஆலோசனைக்காரனாயிருந்து,  அவருக்குப்  போதித்தவன்  யார்?  {Isa  40:13}

 

தமக்கு  அறிவை  உணர்த்தவும்,  தம்மை  நியாயவழியிலே  உபதேசிக்கவும்,  தமக்கு  ஞானத்தைக்  கற்றுக்கொடுக்கவும்,  தமக்கு  விவேகத்தின்  வழியை  அறிவிக்கவும்,  அவர்  யாரோடே  ஆலோசனைபண்ணினார்?  {Isa  40:14}

 

இதோ,  ஜாதிகள்  ஏற்றச்சாலில்  தொங்கும்  துளிபோலவும்,  தராசிலே  படியும்  தூசிபோலவும்  எண்ணப்படுகிறார்கள்;  இதோ,  தீவுகளை  ஒரு  அணுவைப்போல்  தூக்குகிறார்.  {Isa  40:15}

 

லீபனோன்<Lebanon>  எரிக்கும்  விறகுக்குப்  போதாது;  அதிலுள்ள  மிருகஜீவன்கள்  தகனபலிக்கும்  போதாது.  {Isa  40:16}

 

சகல  ஜாதிகளும்  அவருக்கு  முன்பாக  ஒன்றுமில்லை,  அவர்கள்  சூனியத்தில்  சூனியமாகவும்,  மாயையாகவும்  எண்ணப்படுகிறார்கள்.  {Isa  40:17}

 

இப்படியிருக்க,  தேவனை  யாருக்கு  ஒப்பிடுவீர்கள்?  எந்தச்  சாயலை  அவருக்கு  ஒப்பிடுவீர்கள்?  {Isa  40:18}

 

கன்னான்  ஒரு  சுரூபத்தை  வார்க்கிறான்,  தட்டான்  பொன்தகட்டால்  அதை  மூடி,  அதற்கு  வெள்ளிச்சங்கிலிகளைப்  பொருந்தவைக்கிறான்.  {Isa  40:19}

 

அதற்குக்  கொடுக்க  வகையில்லாதவன்  உளுத்துப்போகாத  மரத்தைத்  தெரிந்துகொண்டு,  அசையாத  ஒரு  சுரூபத்தைச்  செய்யும்படி  நிபுணனான  ஒரு  தச்சனைத்  தேடுகிறான்.  {Isa  40:20}

 

நீங்கள்  அறியீர்களா?  நீங்கள்  கேள்விப்படவில்லையா?  ஆதிமுதல்  உங்களுக்குத்  தெரிவிக்கப்படவில்லையா?  பூமி  அஸ்திபாரப்பட்டதுமுதல்  உணராதிருக்கிறீர்களா?  {Isa  40:21}

 

அவர்  பூமி  உருண்டையின்மேல்  வீற்றிருக்கிறவர்;  அதின்  குடிகள்  வெட்டுக்கிளிகளைப்போல  இருக்கிறார்கள்;  அவர்  வானங்களை  மெல்லிய  திரையாகப்  பரப்பி,  அவைகளைக்  குடியிருக்கிறதற்கான  கூடாரமாக  விரிக்கிறார்.  {Isa  40:22}

 

அவர்  பிரபுக்களை  மாயையாக்கி,  பூமியின்  நியாயாதிபதிகளை  அவாந்தரமாக்குகிறார்.  {Isa  40:23}

 

அவர்கள்  திரும்ப  நாட்டப்படுவதுமில்லை,  விதைக்கப்படுவதுமில்லை;  அவர்களுடைய  அடிமரம்  திரும்பப்  பூமியிலே  வேர்விடுவதுமில்லை;  அவர்கள்மேல்  அவர்  ஊதவே  பட்டுப்போவார்கள்;  பெருங்காற்று  அவர்களை  ஒரு  துரும்பைப்போல்  அடித்துக்கொண்டுபோம்.  {Isa  40:24}

 

இப்படியிருக்க,  என்னை  யாருக்கு  ஒப்பிடுவீர்கள்?  எனக்கு  யாரை  நிகராக்குவீர்கள்?  என்று  பரிசுத்தர்  சொல்லுகிறார்.  {Isa  40:25}

 

உங்கள்  கண்களை  ஏறெடுத்துப்பாருங்கள்;  அவைகளைச்  சிருஷ்டித்தவர்  யார்?  அவர்  அவைகளின்  சேனையை  இலக்கத்திட்டமாகப்  புறப்படப்பண்ணி,  அவைகளையெல்லாம்  பேர்பேராக  அழைக்கிறவராமே;  அவருடைய  மகா  பெலத்தினாலும்,  அவருடைய  மகா  வல்லமையினாலும்,  அவைகளில்  ஒன்றும்  குறையாமலிருக்கிறது.  {Isa  40:26}

 

யாக்கோபே<Jacob>,  இஸ்ரவேலே<Israel>:  என்  வழி  கர்த்தருக்கு  மறைவாயிற்று  என்றும்,  என்  நியாயம்  என்  தேவனிடத்தில்  எட்டாமல்  போகிறது  என்றும்  நீ  சொல்வானேன்?  {Isa  40:27}

 

பூமியின்  கடையாந்தரங்களைச்  சிருஷ்டித்த  கர்த்தராகிய  அநாதிதேவன்  சோர்ந்துபோவதுமில்லை,  இளைப்படைவதுமில்லை;  இதை  நீ  அறியாயோ?  இதை  நீ  கேட்டதில்லையோ?  அவருடைய  புத்தி  ஆராய்ந்து  முடியாதது.  {Isa  40:28}

 

சோர்ந்துபோகிறவனுக்கு  அவர்  பெலன்  கொடுத்து,  சத்துவமில்லாதவனுக்குச்  சத்துவத்தைப்  பெருகப்பண்ணுகிறார்.  {Isa  40:29}

 

இளைஞர்  இளைப்படைந்து  சோர்ந்துபோவார்கள்,  வாலிபரும்  இடறிவிழுவார்கள்.  {Isa  40:30}

 

கர்த்தருக்குக்  காத்திருக்கிறவர்களோ  புதுப்பெலன்  அடைந்து,  கழுகுகளைப்போலச்  செட்டைகளை  அடித்து  எழும்புவார்கள்;  அவர்கள்  ஓடினாலும்  இளைப்படையார்கள்,  நடந்தாலும்  சோர்ந்துபோகார்கள்.  {Isa  40:31}

 

தீவுகளே,  எனக்கு  முன்பாக  மவுனமாயிருங்கள்;  ஜனங்கள்  தங்கள்  பெலனைப்  புதிதாக்கிக்கொண்டு,  சமீபித்து  வந்து,  பின்பு  பேசக்கடவர்கள்;  நாம்  ஒருமிக்க  நியாயாசனத்துக்கு  முன்பாகச்  சேருவோம்.  {Isa  41:1}

 

கிழக்கிலிருந்து  நீதிமானை  எழுப்பி,  தமது  பாதபடியிலே  வரவழைத்தவர்  யார்?  ஜாதிகளை  அவனுக்கு  ஒப்புக்கொடுத்து,  அவனை  ராஜாக்களுக்கு  ஆண்டவனாக்கி,  அவர்களை  அவன்  பட்டயத்துக்குத்  தூசியும்,  அவன்  வில்லுக்குச்  சிதறடிக்கப்பட்ட  தாளடியுமாக்கி,  {Isa  41:2}

 

அவன்  அவர்களைத்  துரத்தவும்,  தன்  கால்கள்  நடவாதிருந்த  பாதையிலே  சமாதானத்தோடே  நடக்கவும்  பண்ணினவர்  யார்?  {Isa  41:3}

 

அதைச்  செய்து  நிறைவேற்றி,  ஆதிமுதற்கொண்டு  தலைமுறைகளை  வரவழைக்கிறவர்  யார்?  முந்தினவராயிருக்கிற  கர்த்தராகிய  நான்தானே;  பிந்தினவர்களோடும்  இருப்பவராகிய  நான்தானே.  {Isa  41:4}

 

தீவுகள்  அதைக்  கண்டு  பயப்படும்,  பூமியின்  கடையாந்தரங்கள்  நடுங்கும்;  அவர்கள்  சேர்ந்துவந்து,  {Isa  41:5}

 

ஒருவருக்கு  ஒருவர்  ஒத்தாசை  செய்து  திடன்கொள்  என்று  சகோதரனுக்குச்  சகோதரன்  சொல்லுகிறான்.  {Isa  41:6}

 

சித்திரவேலைக்காரன்  தட்டானையும்,  சுத்தியாலே  மெல்லிய  தகடு  தட்டுகிறவன்  அடைகல்லின்மேல்  அடிக்கிறவனையும்  உற்சாகப்படுத்தி,  இசைக்கிறதற்கான  பக்குவமென்று  சொல்லி,  அது  அசையாதபடிக்கு  அவன்  ஆணிகளால்  அதை  இறுக்குகிறான்.  {Isa  41:7}

 

என்  தாசனாகிய  இஸ்ரவேலே<Israel>,  நான்  தெரிந்துகொண்ட  யாக்கோபே<Jacob>,  என்  சிநேகிதனான  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியே,  {Isa  41:8}

 

நான்  பூமியின்  கடையாந்தரங்களிலிருந்து,  உன்னை  எடுத்து,  அதின்  எல்லைகளிலிருந்து  அழைத்துவந்து:  நீ  என்  தாசன்,  நான்  உன்னைத்  தெரிந்துகொண்டேன்,  நான்  உன்னை  வெறுத்துவிடவில்லை  என்று  சொன்னேன்.  {Isa  41:9}

 

நீ  பயப்படாதே,  நான்  உன்னுடனே  இருக்கிறேன்;  திகையாதே,  நான்  உன்  தேவன்;  நான்  உன்னைப்  பலப்படுத்தி  உனக்குச்  சகாயம்பண்ணுவேன்;  என்  நீதியின்  வலதுகரத்தினால்  உன்னைத்  தாங்குவேன்.  {Isa  41:10}

 

இதோ,  உன்மேல்  எரிச்சலாயிருக்கிற  யாவரும்  வெட்கி  இலச்சையடைவார்கள்;  உன்னோடே  வழக்காடுகிறவர்கள்  நாசமாகி  ஒன்றுமில்லாமற்போவார்கள்.  {Isa  41:11}

 

உன்னோடே  போராடினவர்களைத்  தேடியும்  காணாதிருப்பாய்;  உன்னோடே  யுத்தம்பண்ணின  மனுஷர்  ஒன்றுமில்லாமல்  இல்பொருளாவார்கள்.  {Isa  41:12}

 

உன்  தேவனாயிருக்கிற  கர்த்தராகிய  நான்  உன்  வலதுகையைப்  பிடித்து:  பயப்படாதே,  நான்  உனக்குத்  துணைநிற்கிறேன்  என்று  சொல்லுகிறேன்.  {Isa  41:13}

 

யாக்கோபு<Jacob>  என்னும்  பூச்சியே,  இஸ்ரவேலின்<Israel>  சிறுகூட்டமே,  பயப்படாதே;  நான்  உனக்குத்  துணைநிற்கிறேன்  என்று  கர்த்தரும்  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருமாகிய  உன்  மீட்பர்  உரைக்கிறார்.  {Isa  41:14}

 

இதோ,  போரடிக்கிறதற்கு  நான்  உன்னைப்  புதிதும்  கூர்மையுமான  பற்களுள்ள  யந்தரமாக்குகிறேன்;  நீ  மலைகளை  மிதித்து  நொறுக்கி,  குன்றுகளைப்  பதருக்கு  ஒப்பாக்கிவிடுவாய்.  {Isa  41:15}

 

அவைகளைத்  தூற்றுவாய்,  அப்பொழுது  காற்று  அவைகளைக்  கொண்டுபோய்,  சுழல்காற்று  அவைகளைப்  பறக்கடிக்கும்;  நீயோ  கர்த்தருக்குள்ளே  களிகூர்ந்து,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருக்குள்ளே  மேன்மைபாராட்டிக்  கொண்டிருப்பாய்.  {Isa  41:16}

 

சிறுமையும்  எளிமையுமானவர்கள்  தண்ணீரைத்  தேடி,  அது  கிடையாமல்,  அவர்கள்  நாவு  தாகத்தால்  வறளும்போது,  கர்த்தராகிய  நான்  அவர்களுக்குச்  செவிகொடுத்து,  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  நான்  அவர்களைக்  கைவிடாதிருப்பேன்.  {Isa  41:17}

 

உயர்ந்த  மேடுகளில்  ஆறுகளையும்,  பள்ளத்தாக்குகளின்  நடுவே  ஊற்றுகளையும்  திறந்து,  வனாந்தரத்தைத்  தண்ணீர்த்  தடாகமும்,  வறண்ட  பூமியை  நீர்க்கேணிகளுமாக்கி,  {Isa  41:18}

 

வனாந்தரத்திலே  கேதுருமரங்களையும்,  சீத்தீம்மரங்களையும்,  மிருதுச்செடிகளையும்,  ஒலிவமரங்களையும்  நட்டு,  அவாந்தரவெளியிலே  தேவதாரு  விருட்சங்களையும்,  பாய்மரவிருட்சங்களையும்,  புன்னைமரங்களையும்  உண்டுபண்ணுவேன்.  {Isa  41:19}

 

கர்த்தருடைய  கரம்  அதைச்  செய்தது  என்றும்,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தர்  அதைப்  படைத்தார்  என்றும்,  யாவரும்  கண்டு  உணர்ந்து  சிந்தித்து  அறிவார்கள்.  {Isa  41:20}

 

உங்கள்  வழக்கைக்  கொண்டுவாருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  உங்கள்  பலமான  நியாயங்களை  வெளிப்படுத்துங்கள்  என்று  யாக்கோபின்<Jacob>  ராஜா  உரைக்கிறார்.  {Isa  41:21}

 

அவர்கள்  அவைகளைக்  கொண்டுவந்து,  சம்பவிக்கப்போகிறவைகளை  நமக்குத்  தெரிவிக்கட்டும்;  அவைகளில்  முந்தி  சம்பவிப்பவைகள்  இன்னவைகளென்று  சொல்லி,  நாம்  நம்முடைய  மனதை  அவைகளின்மேல்  வைக்கும்படிக்கும்,  பிந்தி  சம்பவிப்பவைகளையும்  நாம்  அறியும்படிக்கும்  நமக்குத்  தெரிவிக்கட்டும்;  வருங்காரியங்களை  நமக்கு  அறிவிக்கட்டும்.  {Isa  41:22}

 

பின்வரும்  காரியங்களை  எங்களுக்குத்  தெரிவியுங்கள்;  அப்பொழுது  நீங்கள்  தேவர்கள்  என்று  அறிவோம்;  அல்லது  நன்மையாவது  தீமையாவது  செய்யுங்கள்;  அப்பொழுது  நாங்கள்  திகைத்து  ஏகமாய்க்  கூடி  அதைப்  பார்ப்போம்.  {Isa  41:23}

 

இதோ,  நீங்கள்  சூனியத்திலும்  சூனியமாயிருக்கிறீர்கள்;  உங்கள்  செயல்  வெறுமையிலும்  வெறுமையானது;  உங்களைத்  தெரிந்துகொள்ளுகிறவன்  அருவருப்பானவன்.  {Isa  41:24}

 

நான்  வடக்கேயிருந்து  ஒருவனை  எழும்பப்பண்ணுவேன்,  அவன்  வருவான்;  சூரியோதய  திசையிலிருந்து  என்  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவான்;  அவன்  வந்து  அதிபதிகளைச்  சேற்றைப்போலவும்,  குயவன்  களிமண்ணை  மிதிப்பதுபோலவும்  மிதிப்பான்.  {Isa  41:25}

 

நாம்  அதை  அறியும்படியாக  ஆதியில்  சொன்னவன்  யார்?  நாம்  அவனை  யதார்த்தவான்  என்று  சொல்லும்படி  பூர்வகாலத்தில்  அறிவித்தவன்  யார்?  அறிவிக்கிறவன்  ஒருவனும்  இல்லையே;  உரைக்கிறவனும்  இல்லையே;  உங்கள்  வார்த்தைகளைக்  கேட்டிருக்கிறவனும்  இல்லையே.  {Isa  41:26}

 

முதல்  முதல்,  நானே,  சீயோனை<Zion>  நோக்கி:  இதோ,  அவைகளைப்  பார்  என்று  சொல்லி,  எருசலேமுக்குச்<Jerusalem>  சுவிசேஷகரைக்  கொடுக்கிறேன்.  {Isa  41:27}

 

நான்  பார்த்தேன்,  அவர்களில்  அறிவிக்கிறவன்  ஒருவனுமில்லை;  நான்  கேட்குங்  காரியத்துக்குப்  பிரதியுத்தரம்  கொடுக்கத்தக்க  ஒரு  ஆலோசனைக்காரனும்  அவர்களில்  இல்லை.  {Isa  41:28}

 

இதோ,  அவர்கள்  எல்லாரும்  மாயை,  அவர்கள்  கிரியைகள்  விருதா;  அவர்களுடைய  விக்கிரகங்கள்  காற்றும்  வெறுமையுந்தானே.  {Isa  41:29}

 

இதோ,  நான்  ஆதரிக்கிற  என்  தாசன்,  நான்  தெரிந்துகொண்டவரும்,  என்  ஆத்துமாவுக்குப்  பிரியமானவரும்  இவரே;  என்  ஆவியை  அவர்மேல்  அமரப்பண்ணினேன்;  அவர்  புறஜாதிகளுக்கு  நியாயத்தை  வெளிப்படுத்துவார்.  {Isa  42:1}

 

அவர்  கூக்குரலிடவுமாட்டார்,  தம்முடைய  சத்தத்தை  உயர்த்தவும்  அதை  வீதியிலே  கேட்கப்பண்ணவுமாட்டார்.  {Isa  42:2}

 

அவர்  நெரிந்தநாணலை  முறியாமலும்,  மங்கியெரிகிற  திரியை  அணையாமலும்,  நியாயத்தை  உண்மையாக  வெளிப்படுத்துவார்.  {Isa  42:3}

 

அவர்  நியாயத்தைப்  பூமியிலே  நிலைப்படுத்துமட்டும்  இளக்கரிப்பதுமில்லை,  பதறுவதுமில்லை;  அவருடைய  வேதத்துக்குத்  தீவுகள்  காத்திருக்கும்.  {Isa  42:4}

 

வானங்களைச்  சிருஷ்டித்து,  அவைகளை  விரித்து,  பூமியையும்,  அதிலே  உற்பத்தியாகிறவைகளையும்  பரப்பினவரும்,  அதில்  இருக்கிற  ஜனத்துக்குச்  சுவாசத்தையும்,  அதில்  நடமாடுகிறவர்களுக்கு  ஆவியையும்  கொடுக்கிறவருமான  கர்த்தராகிய  தேவன்  சொல்லுகிறதாவது:  {Isa  42:5}

 

நீர்  குருடருடைய  கண்களைத்  திறக்கவும்,  கட்டுண்டவர்களைக்  காவலிலிருந்தும்,  இருளில்  இருக்கிறவர்களைச்  சிறைச்சாலையிலிருந்தும்  விடுவிக்கவும்,  {Isa  42:6}

 

கர்த்தராகிய  நான்  நீதியின்படி  உம்மை  அழைத்து,  உம்முடைய  கையைப்  பிடித்து,  உம்மைத்  தற்காத்து,  உம்மை  ஜனத்திற்கு  உடன்படிக்கையாகவும்,  ஜாதிகளுக்கு  ஒளியாகவும்  வைக்கிறேன்.  {Isa  42:7}

 

நான்  கர்த்தர்,  இது  என்  நாமம்;  என்  மகிமையை  வேறொருவனுக்கும்,  என்  துதியை  விக்கிரகங்களுக்கும்  கொடேன்.  {Isa  42:8}

 

பூர்வகாலத்தில்  தெரிவிக்கப்பட்டவைகள்,  இதோ,  நிறைவேறலாயின;  புதியவைகளையும்  நானே  அறிவிக்கிறேன்;  அவைகள்  தோன்றாததற்கு  முன்னே,  அவைகளை  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {Isa  42:9}

 

சமுத்திரத்தில்  யாத்திரை  பண்ணுகிறவர்களே,  அதிலுள்ளவைகளே,  தீவுகளே,  அவைகளின்  குடிகளே,  கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  பூமியின்  கடையாந்தரத்திலிருந்து  அவருடைய  துதியைப்  பாடுங்கள்.  {Isa  42:10}

 

வனாந்தரமும்,  அதின்  ஊர்களும்,  கேதாரியர்<Kedar>  குடியிருக்கிற  கிராமங்களும்  உரத்த  சத்தமிடக்கடவது;  கன்மலைகளிலே  குடியிருக்கிறவர்கள்  கெம்பீரித்து,  பர்வதங்களின்  கொடுமுடியிலிருந்து  ஆர்ப்பரிப்பார்களாக.  {Isa  42:11}

 

கர்த்தருக்கு  மகிமையைச்  செலுத்தி,  அவர்  துதியைத்  தீவுகளில்  அறிவிப்பார்களாக.  {Isa  42:12}

 

கர்த்தர்  பராக்கிரமசாலியைப்போல்  புறப்பட்டு,  யுத்தவீரனைப்போல்  வைராக்கியமூண்டு,  முழங்கிக்  கெர்ச்சித்து,  தம்முடைய  சத்துருக்களை  மேற்கொள்ளுவார்.  {Isa  42:13}

 

நான்  வெகுகாலம்  மவுனமாயிருந்தேன்;  சும்மாயிருந்து  எனக்குள்ளே  அடக்கிக்கொண்டிருந்தேன்;  இப்பொழுது  பிள்ளை  பெறுகிறவளைப்போலச்  சத்தமிட்டு,  அவர்களைப்  பாழாக்கி  விழுங்குவேன்.  {Isa  42:14}

 

நான்  மலைகளையும்  குன்றுகளையும்  பாழாக்கி,  அவைகளிலுள்ள  பூண்டுகளையெல்லாம்  வாடப்பண்ணி,  ஆறுகளைத்  திட்டுகளாக்கி,  ஏரிகளை  வற்றிப்போகப்பண்ணுவேன்.  {Isa  42:15}

 

குருடரை  அவர்கள்  அறியாத  வழியிலே  நடத்தி,  அவர்களுக்குத்  தெரியாத  பாதைகளில்  அவர்களை  அழைத்துக்கொண்டுவந்து,  அவர்களுக்கு  முன்பாக  இருளை  வெளிச்சமும்,  கோணலைச்  செவ்வையுமாக்குவேன்;  இந்தக்  காரியங்களை  நான்  அவர்களுக்குச்  செய்து,  அவர்களைக்  கைவிடாதிருப்பேன்.  {Isa  42:16}

 

சித்திரவேலையான  விக்கிரகங்களை  நம்பி,  வார்ப்பிக்கப்பட்ட  சுரூபங்களை  நோக்கி:  நீங்கள்  எங்கள்  தேவர்கள்  என்று  சொல்லுகிறவர்கள்  பின்னிடைந்து  மிகவும்  வெட்கப்படுவார்கள்.  {Isa  42:17}

 

செவிடரே,  கேளுங்கள்;  குருடரே,  நீங்கள்  காணும்படி  நோக்கிப்பாருங்கள்.  {Isa  42:18}

 

என்  தாசனையல்லாமல்  குருடன்  யார்?  நான்  அனுப்பிய  தூதனையல்லாமல்  செவிடன்  யார்?  உத்தமனையல்லாமல்  குருடன்  யார்?  கர்த்தருடைய  ஊழியக்காரனையல்லாமல்  அந்தகன்  யார்?  {Isa  42:19}

 

நீ  அநேக  காரியங்களைக்  கண்டும்  கவனியாதிருக்கிறாய்;  அவனுக்குச்  செவிகளைத்  திறந்தாலும்  கேளாதே  போகிறான்.  {Isa  42:20}

 

கர்த்தர்  தமது  நீதியினிமித்தம்  அவன்மேல்  பிரியம்  வைத்திருந்தார்;  அவர்  வேதத்தை  முக்கியப்படுத்தி  அதை  மகிமையுள்ளதாக்குவார்.  {Isa  42:21}

 

இந்த  ஜனமோ  கொள்ளையிடப்பட்டும்,  சூறையாடப்பட்டும்  இருக்கிறார்கள்;  அவர்கள்  அனைவரும்  கெபிகளிலே  அகப்பட்டு,  காவலறைகளிலே  அடைக்கப்பட்டிருக்கிறார்கள்;  தப்புவிப்பார்  இல்லாமல்  கொள்ளையாகி,  விட்டுவிடு  என்பார்  இல்லாமல்  சூறையாவார்கள்.  {Isa  42:22}

 

உங்களில்  இதற்குச்  செவிகொடுத்துப்  பின்வருகிறதைக்  கவனித்துக்  கேட்கிறவன்  யார்?  {Isa  42:23}

 

யாக்கோபைச்<Jacob>  சூறையிட்டு  இஸ்ரவேலைக்<Israel>  கொள்ளைக்காரருக்கு  ஒப்புக்கொடுக்கிறவர்  யார்?  அவர்கள்  பாவஞ்செய்து  விரோதித்த  கர்த்தர்  அல்லவோ?  அவருடைய  வழிகளில்  நடக்க  மனதாயிராமலும்,  அவருடைய  வேதத்துக்குச்  செவிகொடாமலும்  போனார்களே.  {Isa  42:24}

 

இவர்கள்மேல்  அவர்  தமது  கோபத்தின்  உக்கிரத்தையும்,  யுத்தத்தின்  வலிமையையும்  வரப்பண்ணி,  அவர்களைச்சூழ  அக்கினிஜுவாலைகளைக்  கொளுத்தியிருந்தும்  உணராதிருந்தார்கள்;  அது  அவர்களைத்  தகித்தும்,  அதை  மனதிலே  வைக்காதேபோனார்கள்.  {Isa  42:25}

 

இப்போதும்  யாக்கோபே<Jacob>,  உன்னைச்  சிருஷ்டித்தவரும்,  இஸ்ரவேலே<Israel>,  உன்னை  உருவாக்கினவருமாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  பயப்படாதே;  உன்னை  மீட்டுக்கொண்டேன்;  உன்னைப்  பேர்சொல்லி  அழைத்தேன்;  நீ  என்னுடையவன்.  {Isa  43:1}

 

நீ  தண்ணீர்களைக்  கடக்கும்போது  நான்  உன்னோடு  இருப்பேன்;  நீ  ஆறுகளைக்  கடக்கும்போது  அவைகள்  உன்மேல்  புரளுவதில்லை;  நீ  அக்கினியில்  நடக்கும்போது  வேகாதிருப்பாய்;  அக்கினிஜுவாலை  உன்பேரில்  பற்றாது.  {Isa  43:2}

 

நான்  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தரும்,  உன்  இரட்சகருமாயிருக்கிற  உன்  தேவனாகிய  கர்த்தர்;  உன்னை  மீட்கும்பொருளாக  எகிப்தையும்<Egypt>,  உனக்கு  ஈடாக  எத்தியோப்பியாவையும்<Ethiopia>  சேபாவையும்<Seba>  கொடுத்தேன்.  {Isa  43:3}

 

நீ  என்  பார்வைக்கு  அருமையானபடியினால்  கனம்பெற்றாய்;  நானும்  உன்னைச்  சிநேகித்தேன்,  ஆதலால்  உனக்குப்  பதிலாக  மனுஷர்களையும்,  உன்  ஜீவனுக்கு  ஈடாக  ஜனங்களையும்  கொடுப்பேன்.  {Isa  43:4}

 

பயப்படாதே,  நான்  உன்னோடே  இருக்கிறேன்;  நான்  உன்  சந்ததியைக்  கிழக்கிலிருந்து  வரப்பண்ணி,  உன்னை  மேற்கிலும்  இருந்து  கூட்டிச்சேர்ப்பேன்.  {Isa  43:5}

 

நான்  வடக்கை  நோக்கி:  கொடு  என்றும்,  தெற்கை  நோக்கி:  வைத்திராதே  என்றும்  சொல்லி,  தூரத்திலிருந்து  என்  குமாரரையும்,  பூமியின்  கடையாந்தரத்திலிருந்து  என்  குமாரத்திகளையும்,  {Isa  43:6}

 

நான்  என்  மகிமைக்கென்று  சிருஷ்டித்து  உருவாக்கிப்  படைத்து,  என்  நாமந்தரிக்கப்பட்ட  யாவரையும்  கொண்டுவா  என்பேன்.  {Isa  43:7}

 

கண்களிருந்தும்  குருடராயிருக்கிற  ஜனத்தையும்,  காதுகளிருந்தும்  செவிடராயிருக்கிறவர்களையும்  புறப்பட்டு  வரப்பண்ணுங்கள்.  {Isa  43:8}

 

சகல  ஜாதிகளும்  ஏகமாய்ச்  சேர்ந்துகொண்டு,  சகல  ஜனங்களும்  கூடிவரட்டும்;  இதை  அறிவித்து,  முந்தி  சம்பவிப்பவைகளை  நமக்குத்  தெரிவிக்கிறவன்  யார்?  கேட்டு  மெய்யென்று  சொல்லக்கூடும்படிக்கு,  அவர்கள்  தங்கள்  சாட்சிகளைக்  கொண்டுவந்து  யதார்த்தவான்களாய்  விளங்கட்டும்.  {Isa  43:9}

 

நானே  அவரென்று  நீங்கள்  உணர்ந்து,  என்னை  அறிந்து  விசுவாசிக்கும்படிக்கு,  நீங்களும்  நான்  தெரிந்துகொண்ட  என்  தாசனும்  எனக்குச்  சாட்சிகளாயிருக்கிறீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  எனக்குமுன்  ஏற்பட்ட  தேவன்  இல்லை;  எனக்குப்பின்  இருப்பதும்  இல்லை.  {Isa  43:10}

 

நான்,  நானே  கர்த்தர்;  என்னையல்லாமல்  ரட்சகர்  இல்லை.  {Isa  43:11}

 

நானே  அறிவித்து,  இரட்சித்து,  விளங்கப்பண்ணினேன்;  உங்களில்  இப்படிச்  செய்யத்தக்க  அந்நிய  தேவன்  இல்லை;  நானே  தேவன்  என்பதற்கு  நீங்கள்  எனக்குச்  சாட்சிகள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  43:12}

 

நாள்  உண்டாகாததற்கு  முன்னும்  நானே  இருக்கிறேன்;  என்  கைக்குத்  தப்புவிக்கத்தக்கவன்  இல்லை;  நான்  செய்கிறதைத்  தடுப்பவன்  யார்?  {Isa  43:13}

 

நான்  உங்களுக்காக  அரண்களெல்லாம்  இடிந்துவிழவும்,  கல்தேயர்<Chaldeans>  படவுகளிலிருந்து  அலறவும்  செய்யத்தக்கவர்களைப்  பாபிலோனுக்கு<Babylon>  அனுப்பினேனென்று,  உங்கள்  மீட்பரும்  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருமாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  43:14}

 

நானே  உங்கள்  பரிசுத்தராகிய  கர்த்தரும்,  இஸ்ரவேலின்<Israel>  சிருஷ்டிகரும்,  உங்கள்  ராஜாவுமானவர்.  {Isa  43:15}

 

சமுத்திரத்திலே  வழியையும்  வலிய  தண்ணீர்களிலே  பாதையையும்  உண்டாக்கி,  {Isa  43:16}

 

இரதங்களையும்  குதிரைகளையும்  இராணுவங்களையும்  பராக்கிரமசாலிகளையும்  புறப்படப்பண்ணி,  அவைகள்  எழுந்திராதபடிக்கு  ஒருமித்து  விழுந்து  கிடக்கவும்,  ஒரு  திரி  அணைகிறதுபோல்  அவைகள்  அணைந்துபோகவும்பண்ணுகிற  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  {Isa  43:17}

 

முந்தினவைகளை  நினைக்கவேண்டாம்;  பூர்வமானவைகளைச்  சிந்திக்கவேண்டாம்.  {Isa  43:18}

 

இதோ,  நான்  புதிய  காரியத்தைச்  செய்கிறேன்;  இப்பொழுதே  அது  தோன்றும்;  நீங்கள்  அதை  அறியீர்களா?  நான்  வனாந்தரத்திலே  வழியையும்,  அவாந்தரவெளியிலே  ஆறுகளையும்  உண்டாக்குவேன்.  {Isa  43:19}

 

நான்  தெரிந்துகொண்ட  என்  ஜனத்தின்  தாகத்துக்கு  வனாந்தரத்திலே  தண்ணீர்களையும்  அவாந்தரவெளியிலே  ஆறுகளையும்  உண்டாக்குவதினால்,  காட்டுமிருகங்களும்,  வலுசர்ப்பங்களும்,  கோட்டான்  குஞ்சுகளும்  என்னைக்  கனம்பண்ணும்.  {Isa  43:20}

 

இந்த  ஜனத்தை  எனக்கென்று  ஏற்படுத்தினேன்;  இவர்கள்  என்  துதியைச்  சொல்லிவருவார்கள்.  {Isa  43:21}

 

ஆனாலும்  யாக்கோபே<Jacob>,  நீ  என்னை  நோக்கிக்  கூப்பிடவில்லை;  இஸ்ரவேலே<Israel>,  நீ  என்னைக்குறித்து  மனஞ்சலித்துப்போனாய்.  {Isa  43:22}

 

உன்  ஆடுகளைத்  தகனபலிகளாக  நீ  எனக்குச்  செலுத்தவில்லை;  உன்  பலிகளாலே  நீ  என்னைக்  கனம்பண்ணவுமில்லை;  காணிக்கைகளைச்  செலுத்தும்படி  நான்  உன்னைச்  சங்கடப்படுத்தாமலும்,  தூபங்காட்டும்படி  உன்னை  வருத்தப்படுத்தாமலும்  இருந்தேன்.  {Isa  43:23}

 

நீ  எனக்குப்  பணங்களால்  சுகந்தபட்டையைக்  கொள்ளாமலும்,  உன்  பலிகளின்  நிணத்தினால்  என்னைத்  திருப்தியாக்காமலும்,  உன்  பாவங்களினால்  என்னைச்  சங்கடப்படுத்தி,  உன்  அக்கிரமங்களினால்  என்னை  வருத்தப்படுத்தினாய்.  {Isa  43:24}

 

நான்,  நானே  உன்  மீறுதல்களை  என்  நிமித்தமாகவே  குலைத்துப்போடுகிறேன்;  உன்  பாவங்களை  நினையாமலும்  இருப்பேன்.  {Isa  43:25}

 

நாம்  ஒருவரோடொருவர்  வழக்காடும்படி  எனக்கு  நினைப்பூட்டு;  நீ  நீதிமானாக  விளங்கும்படி  உன்  காரியத்தைச்  சொல்.  {Isa  43:26}

 

உன்  ஆதிதகப்பன்  பாவஞ்செய்தான்;  உனக்கு  முன்னின்று  பேசுகிறவர்களும்  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணினார்கள்.  {Isa  43:27}

 

ஆகையால்,  நான்  பரிசுத்த  ஸ்தலத்தின்  தலைவர்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கி,  யாக்கோபைச்<Jacob>  சாபத்துக்கும்,  இஸ்ரவேலை<Israel>  நிந்தனைக்கும்  ஒப்புக்கொடுப்பேன்.  {Isa  43:28}

 

இப்போதும்,  என்  தாசனாகிய  யாக்கோபே<Jacob>,  நான்  தெரிந்துகொண்ட  இஸ்ரவேலே<Israel>,  கேள்.  {Isa  44:1}

 

உன்னை  உண்டாக்கினவரும்,  தாயின்  கர்ப்பத்தில்  உன்னை  உருவாக்கினவரும்,  உனக்குத்  துணைசெய்கிறவருமாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  என்  தாசனாகிய  யாக்கோபே<Jacob>,  நான்  தெரிந்துகொண்ட  யெஷூரனே<Jesurun>,  பயப்படாதே.  {Isa  44:2}

 

தாகமுள்ளவன்மேல்  தண்ணீரையும்,  வறண்ட  நிலத்தின்மேல்  ஆறுகளையும்  ஊற்றுவேன்;  உன்  சந்ததியின்மேல்  என்  ஆவியையும்,  உன்  சந்தானத்தின்மேல்  என்  ஆசீர்வாதத்தையும்  ஊற்றுவேன்.  {Isa  44:3}

 

அதினால்  அவர்கள்  புல்லின்  நடுவே  நீர்க்கால்களின்  ஓரத்திலுள்ள  அலரிச்செடிகளைப்போல  வளருவார்கள்.  {Isa  44:4}

 

ஒருவன்,  நான்  கர்த்தருடையவன்  என்பான்;  ஒருவன்,  யாக்கோபின்பேரைத்<Jacob>  தரித்துக்கொள்வான்;  ஒருவன்,  தான்  கர்த்தருடையவன்  என்று  கையெழுத்துப்போட்டு,  இஸ்ரவேலின்<Israel>  நாமத்தைத்  தரித்துக்கொள்வான்.  {Isa  44:5}

 

நான்  முந்தினவரும்,  நான்  பிந்தினவருந்தானே;  என்னைத்தவிரத்  தேவன்  இல்லையென்று,  இஸ்ரவேலின்<Israel>  ராஜாவாகிய  கர்த்தரும்,  சேனைகளின்  கர்த்தராகிய  அவனுடைய  மீட்பரும்  சொல்லுகிறார்.  {Isa  44:6}

 

பூர்வகாலத்து  ஜனங்களை  நான்  ஸ்தாபித்தது  முதற்கொண்டு,  என்னைப்போல  எதையாகிலும்  வரவழைத்து,  இன்னின்னதென்று  முன்னறிவித்து,  எனக்கு  முன்னே  வரிசையாக  நிறுத்தத்தக்கவன்  யார்?  நிகழ்காரியங்களையும்  வருங்காரியங்களையும்  தங்களுக்கு  அவர்கள்  அறிவிக்கட்டும்.  {Isa  44:7}

 

நீங்கள்  கலங்காமலும்  பயப்படாமலும்  இருங்கள்;  அக்காலமுதற்கொண்டு  நான்  அதை  உனக்கு  விளங்கப்பண்ணினதும்  முன்னறிவித்ததும்  இல்லையோ?  இதற்கு  நீங்களே  என்  சாட்சிகள்;  என்னைத்தவிரத்  தேவனுண்டோ?  வேறொரு  கன்மலையும்  இல்லையே;  ஒருவனையும்  அறியேன்.  {Isa  44:8}

 

விக்கிரகங்களை  உருவாக்குகிற  யாவரும்  வீணர்;  அவர்களால்  இச்சிக்கப்பட்டவைகள்  ஒன்றுக்கும்  உதவாது;  அவைகள்  ஒன்றும்  காணாமலும்,  ஒன்றும்  அறியாமலும்  இருக்கிறதென்று  தங்களுக்கு  வெட்கமுண்டாக  அவைகளுக்குத்  தாங்களே  சாட்சிகளாயிருக்கிறார்கள்.  {Isa  44:9}

 

ஒன்றுக்கும்  உதவாத  தெய்வத்தை  உருவாக்கி,  விக்கிரகத்தை  வார்ப்பிக்கிறவன்  எப்படிப்பட்டவன்?  {Isa  44:10}

 

இதோ,  அவனுடைய  கூட்டாளிகளெல்லாரும்  வெட்கமடைவார்கள்;  தொழிலாளிகள்  நரஜீவன்கள்தானே;  அவர்கள்  எல்லாரும்  கூடிவந்து  நிற்கட்டும்;  அவர்கள்  ஏகமாய்த்  திகைத்து  வெட்கப்படுவார்கள்.  {Isa  44:11}

 

கொல்லன்  இரும்பைக்  குறட்டால்  இடுக்கி,  உலையிலே  காயவைத்து,  சுத்திகளால்  அதை  உருவாக்கி,  தன்  புயபலத்தினால்  அதைப்  பண்படுத்துகிறான்;  பட்டினியாயிருந்து  பெலனற்றுப்போகிறான்;  தண்ணீர்  குடியாமல்  களைத்துப்போகிறான்.  {Isa  44:12}

 

தச்சன்  நூல்பிடித்து,  மட்டப்பலகையால்  மரத்துக்குக்  குறிபோட்டு,  உளிகளினால்  உருப்படுத்தி,  கவராசத்தினால்  அதை  வகுத்து,  மனுஷசாயலாக  மனுஷரூபத்தின்படி  உருவமாக்குகிறான்;  அதைக்  கோவிலிலே  நாட்டி  வைக்கிறான்.  {Isa  44:13}

 

அவன்  தனக்குக்  கேதுருக்களை  வெட்டுகிறான்;  ஒரு  மருதமரத்தையாவது  ஒரு  கர்வாலிமரத்தையாவது,  தெரிந்துகொண்டு,  காட்டுமரங்களிலே  பெலத்த  மரத்தைத்  தன்  காரியத்துக்காக  வளர்க்கிறான்;  அல்லது  அசோகமரத்தை  நடுகிறான்,  மழை  அதை  வளரச்செய்யும்.  {Isa  44:14}

 

மனுஷனுக்கு  அவைகள்  அடுப்புக்காகும்போது,  அவன்  அவைகளில்  எடுத்துக்  குளிர்காய்கிறான்;  நெருப்பைமூட்டி  அப்பமும்  சுடுகிறான்;  அதினால்  ஒரு  தெய்வத்தையும்  உண்டுபண்ணி,  அதைப்  பணிந்துகொள்ளுகிறான்;  ஒரு  விக்கிரகத்தையும்  அதினால்  செய்து,  அதை  வணங்குகிறான்.  {Isa  44:15}

 

அதில்  ஒரு  துண்டை  அடுப்பில்  எரிக்கிறான்;  ஒரு  துண்டினால்  இறைச்சியைச்  சமைத்துப்  புசித்து,  பொரியலைப்  பொரித்து  திருப்தியாகி,  குளிருங்காய்ந்து:  ஆஆ,  அனலானேன்;  நெருப்பைக்  கண்டேன்  என்று  சொல்லி;  {Isa  44:16}

 

அதில்  மீதியான  துண்டைத்  தனக்கு  விக்கிரகதெய்வமாகச்  செய்து,  அதற்குமுன்  விழுந்து,  அதை  வணங்கி:  நீ  என்  தெய்வம்,  என்னை  இரட்சிக்கவேண்டும்  என்று  அதை  நோக்கி  மன்றாடுகிறான்.  {Isa  44:17}

 

அறியாமலும்  உணராமலும்  இருக்கிறார்கள்;  காணாதபடிக்கு  அவர்கள்  கண்களும்,  உணராதபடிக்கு  அவர்கள்  இருதயமும்  அடைக்கப்பட்டிருக்கிறது.  {Isa  44:18}

 

அதில்  பாதியை  அடுப்பில்  எரித்தேன்;  அதின்  தழலின்மேல்  அப்பத்தையும்  சுட்டு,  இறைச்சியையும்  பொரித்துப்  புசித்தேன்;  அதில்  மீதியான  துண்டை  நான்  அருவருப்பான  விக்கிரகமாக்கலாமா?  ஒரு  மரக்கட்டையை  வணங்கலாமா  என்று  சொல்ல,  தன்  மனதில்  அவனுக்குத்  தோன்றவில்லை;  அம்மாத்திரம்  அறிவும்  சொரணையும்  இல்லை.  {Isa  44:19}

 

அவன்  சாம்பலை  மேய்கிறான்;  வஞ்சிக்கப்பட்ட  மனம்  அவனை  மோசப்படுத்தினது;  அவன்  தன்  ஆத்துமாவைத்  தப்புவிக்காமலும்:  என்  வலது  கையிலே  அபத்தம்  அல்லவோ  இருக்கிறதென்று  சொல்லாமலும்  இருக்கிறான்.  {Isa  44:20}

 

யாக்கோபே<Jacob>,  இஸ்ரவேலே<Israel>,  இவைகளை  நினை;  நீ  என்  தாசன்;  நான்  உன்னை  உருவாக்கினேன்;  நீ  என்  தாசன்;  இஸ்ரவேலே<Israel>,  நீ  என்னால்  மறக்கப்படுவதில்லை.  {Isa  44:21}

 

உன்  மீறுதல்களை  மேகத்தைப்போலவும்,  உன்  பாவங்களைக்  கார்மேகத்தைப்போலவும்  அகற்றிவிட்டேன்;  என்னிடத்தில்  திரும்பு;  உன்னை  நான்  மீட்டுக்கொண்டேன்.  {Isa  44:22}

 

வானங்களே,  களித்துப்  பாடுங்கள்;  கர்த்தர்  இதைச்  செய்தார்;  பூதலத்தின்  தாழ்விடங்களே,  ஆர்ப்பரியுங்கள்;  பர்வதங்களே,  காடுகளே,  காட்டிலுள்ள  சகல  மரங்களே,  கெம்பீரமாய்  முழங்குங்கள்;  கர்த்தர்  யாக்கோபை<Jacob>  மீட்டு,  இஸ்ரவேலிலே<Israel>  மகிமைப்படுகிறார்.  {Isa  44:23}

 

உன்  மீட்பரும்,  தாயின்  கர்ப்பத்தில்  உன்னை  உருவாக்கினவருமான  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  நானே  எல்லாவற்றையும்  செய்கிற  கர்த்தர்;  நான்  ஒருவராய்  வானங்களை  விரித்து,  நானே  பூமியைப்  பரப்பினவர்.  {Isa  44:24}

 

நான்  கட்டுக்கதைக்காரரின்  குறிகளை  அபத்தமாக்கி,  குறிசொல்லுகிறவர்களை  நிர்மூடராக்கி,  ஞானிகளை  வெட்கப்படுத்தி,  அவர்கள்  அறிவைப்  பைத்தியமாகப்  பண்ணுகிறவர்.  {Isa  44:25}

 

நான்  என்  ஊழியக்காரரின்  வார்த்தையை  நிலைப்படுத்தி,  என்  ஸ்தானாபதிகளின்  ஆலோசனையை  நிறைவேற்றி:  குடியேறுவாய்  என்று  எருசலேமுக்கும்<Jerusalem>,  கட்டப்படுவீர்கள்  என்று  யூதாவின்<Judah>  பட்டணங்களுக்கும்  சொல்லி,  அவைகளின்  பாழான  ஸ்தலங்களை  எடுப்பிப்பவர்.  {Isa  44:26}

 

நான்  ஆழத்தை  நோக்கி:  வற்றிப்போ  என்றும்,  உன்  நதிகளை  வெட்டாந்தரையாக்குவேன்  என்றும்  சொல்லுகிறவர்.  {Isa  44:27}

 

கோரேசைக்<Cyrus>  குறித்து:  அவன்  என்  மேய்ப்பன்;  அவன்  எருசலேமை<shepherd>  நோக்கி:  நீ  கட்டப்படு  என்றும்;  தேவாலயத்தை  நோக்கி:  நீ  அஸ்திபாரப்படு  என்றும்  சொல்லி,  எனக்குப்  பிரியமானதையெல்லாம்  நிறைவேற்றுவான்  என்று  சொல்லுகிறவர்  நான்.  {Isa  44:28}

 

கர்த்தராகிய  நான்  அபிஷேகம்பண்ணின  கோரேசுக்கு<Cyrus>  முன்பாக  ஜாதிகளைக்  கீழ்ப்படுத்தி,  ராஜாக்களின்  இடைக்கட்டுகளை  அவிழ்க்கும்படிக்கும்,  அவனுக்கு  முன்பாக  வாசல்கள்  பூட்டப்படாதிருக்க,  கதவுகளைத்  திறந்துவைக்கும்படிக்கும்,  அவனைப்பார்த்து,  அவன்  வலதுகையைப்  பிடித்துக்கொண்டு,  அவனுக்குச்  சொல்லுகிறதாவது:  {Isa  45:1}

 

நான்  உனக்கு  முன்னே  போய்,  கோணலானவைகளைச்  செவ்வையாக்குவேன்.  {Isa  45:2}

 

உன்னைப்  பெயர்சொல்லி  அழைக்கிற  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  நானே  என்று  நீ  அறியும்படிக்கு,  {Isa  45:3}

 

வெண்கலக்  கதவுகளை  உடைத்து,  இருப்புத்  தாழ்ப்பாள்களை  முறித்து,  அந்தகாரத்தில்  இருக்கிற  பொக்கிஷங்களையும்,  ஒளிப்பிடத்தில்  இருக்கிற  புதையல்களையும்  உனக்குக்  கொடுப்பேன்;  நான்  என்  தாசனாகிய  யாக்கோபினிமித்தமும்<Jacob>,  நான்  தெரிந்துகொண்ட  இஸ்ரவேலினிமித்தமும்<Israel>,  நான்  உன்னைப்  பெயர்சொல்லி  அழைத்து,  நீ  என்னை  அறியாதிருந்தும்,  உனக்கு  நாமம்  தரித்தேன்.  {Isa  45:4}

 

நானே  கர்த்தர்,  வேறொருவர்  இல்லை;  என்னைத்தவிரத்  தேவன்  இல்லை.  {Isa  45:5}

 

என்னைத்தவிர  ஒருவரும்  இல்லையென்று  சூரியன்  உதிக்கிற  திசையிலும்,  அது  அஸ்தமிக்கிற  திசையிலும்  அறியப்படும்படிக்கு  நீ  என்னை  அறியாதிருந்தும்,  நான்  உனக்கு  இடைக்கட்டு  கட்டினேன்;  நானே  கர்த்தர்,  வேறொருவர்  இல்லை.  {Isa  45:6}

 

ஒளியைப்  படைத்து,  இருளையும்  உண்டாக்கினேன்,  சமாதானத்தைப்  படைத்துத்  தீங்கையும்  உண்டாக்குகிறவர்  நானே;  கர்த்தராகிய  நானே  இவைகளையெல்லாம்  செய்கிறவர்.  {Isa  45:7}

 

வானங்களே,  உயர  இருந்து  சொரியுங்கள்;  ஆகாயமண்டலங்கள்  நீதியைப்பொழியக்கடவது;  பூமி  திறவுண்டு,  இரட்சிப்பின்  கனியைத்தந்து,  நீதியுங்கூட  விளைவதாக;  கர்த்தராகிய  நான்  இவைகளை  உண்டாக்குகிறேன்.  {Isa  45:8}

 

மண்ணோடுகளுக்கொத்த  ஓடாயிருந்தும்,  தன்னை  உருவாக்கினவரோடே  வழக்காடுகிறவனுக்கு  ஐயோ!  களிமண்  தன்னை  உருவாக்கினவனை  நோக்கி:  என்ன  செய்கிறாயென்று  சொல்லத்தகுமோ?  உன்  கிரியையானது:  அவருக்குக்  கைகள்  இல்லையென்று  சொல்லலாமோ?  {Isa  45:9}

 

தகப்பனை  நோக்கி:  ஏன்  ஜநிப்பித்தாய்  என்றும்,  தாயை  நோக்கி:  ஏன்  பெற்றாய்  என்றும்  சொல்லுகிறவனுக்கு  ஐயோ!  {Isa  45:10}

 

இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தரும்  அவனை  உருவாக்கினவருமாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  வருங்காரியங்களை  என்னிடத்தில்  கேளுங்கள்;  என்  பிள்ளைகளைக்குறித்தும்,  என்  கரங்களின்  கிரியைகளைக்குறித்தும்  எனக்குக்  கட்டளையிடுங்கள்.  {Isa  45:11}

 

நான்  பூமியை  உண்டுபண்ணி,  நானே  அதின்மேல்  இருக்கிற  மனுஷனைச்  சிருஷ்டித்தேன்;  என்  கரங்கள்  வானங்களை  விரித்தன;  அவைகளின்  சர்வசேனையையும்  நான்  கட்டளையிட்டேன்.  {Isa  45:12}

 

நான்  நீதியின்படி  அவனை  எழுப்பினேன்;  அவன்  வழிகளையெல்லாம்  செவ்வைப்படுத்துவேன்;  அவன்  என்  நகரத்தைக்  கட்டி,  சிறைப்பட்டுப்போன  என்னுடையவர்களைக்  கிரயமில்லாமலும்  பரிதானமில்லாமலும்  விடுதலையாக்குவான்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  45:13}

 

எகிப்தின்<Egypt>  சம்பாத்தியமும்,  எத்தியோப்பியாவின்<Ethiopia>  வர்த்தகலாபமும்,  நெடிய  ஆட்களாகிய  சபேயரின்<Sabeans>  வர்த்தகலாபமும்,  உன்னிடத்திற்குத்  தாண்டிவந்து,  உன்னுடையதாகும்;  அவர்கள்  உன்  பின்னே  சென்று,  விலங்கிடப்பட்டு  நடந்துவந்து:  உன்னுடனே  மாத்திரம்  தேவன்  இருக்கிறார்  என்றும்,  அவரையல்லாமல்  வேறே  தேவன்  இல்லையென்றும்  சொல்லி,  உன்னைப்  பணிந்துகொண்டு,  உன்னை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  45:14}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனும்  இரட்சகருமாகிய  நீர்  மெய்யாகவே  உம்மை  மறைத்துக்கொண்டிருக்கிற  தேவனாயிருக்கிறீர்.  {Isa  45:15}

 

விக்கிரகங்களை  உண்டுபண்ணுகிற  அனைவரும்  வெட்கப்பட்டு  இலச்சையடைந்து,  ஏகமாய்க்  கலங்கிப்போவார்கள்.  {Isa  45:16}

 

இஸ்ரவேலோ<Israel>,  கர்த்தராலே  நித்திய  இரட்சிப்பினால்  இரட்சிக்கப்படுவான்;  நீங்கள்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  வெட்கப்படாமலும்  கலங்காமலும்  இருப்பீர்கள்.  {Isa  45:17}

 

வானங்களைச்  சிருஷ்டித்துப்  பூமியையும்  வெறுமையாயிருக்கச்  சிருஷ்டியாமல்  அதைக்  குடியிருப்புக்காகச்  செய்து  படைத்து,  அதை  உருவேற்படுத்தின  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  நானே  கர்த்தர்,  வேறொருவர்  இல்லை.  {Isa  45:18}

 

நான்  அந்தரங்கத்திலும்,  பூமியின்  அந்தகாரமான  இடத்திலும்  பேசினதில்லை;  விருதாவாக  என்னைத்  தேடுங்களென்று  நான்  யாக்கோபின்<Jacob>  சந்ததிக்குச்  சொன்னதுமில்லை;  நான்  நீதியைப்பேசி,  யதார்த்தமானவைகளை  அறிவிக்கிற  கர்த்தர்.  {Isa  45:19}

 

ஜாதிகளினின்று  தப்பினவர்களே,  கூட்டங்கூடி  வாருங்கள்;  ஏகமாய்ச்  சேருங்கள்;  தங்கள்  விக்கிரகமாகிய  மரத்தைச்  சுமந்து,  இரட்சிக்கமாட்டாத  தேவனைத்  தொழுதுகொள்ளுகிறவர்கள்  அறிவில்லாதவர்கள்.  {Isa  45:20}

 

நீங்கள்  தெரிவிக்கும்படி  சேர்ந்து,  ஏகமாய்  யோசனைபண்ணுங்கள்;  இதைப்  பூர்வகாலமுதற்கொண்டு  விளங்கப்பண்ணி,  அந்நாள்துவக்கி  இதை  அறிவித்தவர்  யார்?  கர்த்தராகிய  நான்  அல்லவோ?  நீதிபரரும்  இரட்சகருமாகிய  என்னையல்லாமல்  வேறே  தேவன்  இல்லை;  என்னைத்தவிர  வேறொருவரும்  இல்லை.  {Isa  45:21}

 

பூமியின்  எல்லையெங்குமுள்ளவர்களே,  என்னை  நோக்கிப்பாருங்கள்;  அப்பொழுது  இரட்சிக்கப்படுவீர்கள்;  நானே  தேவன்,  வேறொருவரும்  இல்லை.  {Isa  45:22}

 

முழங்கால்  யாவும்  எனக்கு  முன்பாக  முடங்கும்,  நாவு  யாவும்  என்னை  முன்னிட்டு  ஆணையிடும்  என்று  நான்  என்னைக்கொண்டே  ஆணையிட்டிருக்கிறேன்;  இந்த  நீதியான  வார்த்தை  என்  வாயிலிருந்து  புறப்பட்டது;  இது  மாறுவது  இல்லையென்கிறார்.  {Isa  45:23}

 

கர்த்தரிடத்தில்மாத்திரம்  நீதியும்  வல்லமையுமுண்டென்று  அவனவன்  சொல்லி  அவரிடத்தில்  வந்து  சேருவான்;  அவருக்கு  விரோதமாய்  எரிச்சல்கொண்டிருக்கிற  யாவரும்  வெட்கப்படுவார்கள்.  {Isa  45:24}

 

இஸ்ரவேலின்<Israel>  சந்ததியாகிய  யாவரும்  கர்த்தருக்குள்  நீதிமான்களாக்கப்பட்டு  மேன்மைபாராட்டுவார்கள்.  {Isa  45:25}

 

பேல்<Bel>  பணியும்,  நேபோ<Nebo>  குனியும்,  அவைகளின்  விக்கிரகங்கள்  காட்டுமிருகங்களுக்கும்  நாட்டுமிருகங்களுக்கும்  சுமையாகும்;  நீங்கள்  சுமந்த  சுமைகள்  இளைத்துப்போன  மிருகங்களுக்குப்  பாரமாயிருக்கும்.  {Isa  46:1}

 

அவைகள்  ஏகமாய்க்  குனிந்துபணியும்;  சுமைகளை  அவைகள்  தப்புவிக்கமாட்டாது;  அவைகள்  தாமே  சிறைப்பட்டுப்போகும்.  {Isa  46:2}

 

யாக்கோபின்<Jacob>  சந்ததியாரே  இஸ்ரவேல்<Israel>  சந்ததியில்  மீதியாகிய  சகல  ஜனங்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  தாயின்  வயிற்றில்  தோன்றினதுமுதல்  உங்களை  ஏந்தி,  தாயின்  கர்ப்பத்தில்  உற்பத்தியானதுமுதல்  உங்களைத்  தாங்கினேன்.  {Isa  46:3}

 

உங்கள்  முதிர்வயதுவரைக்கும்  நான்  அப்படிச்  செய்வேன்;  நரைவயதுமட்டும்  நான்  உங்களைத்  தாங்குவேன்;  நான்  அப்படிச்  செய்துவந்தேன்;  இனிமேலும்  நான்  ஏந்துவேன்,  நான்  சுமப்பேன்,  தப்புவிப்பேன்.  {Isa  46:4}

 

யாருக்கு  என்னைச்  சாயலும்  சமமுமாக்கி,  யாருக்கு  நான்  ஒப்பாகும்படிக்கு  என்னை  ஒப்பிடுவீர்கள்?  {Isa  46:5}

 

பையிலிருக்கிற  பொன்னைக்கொட்டி,  வெள்ளியைத்  தராசில்  நிறுத்து,  தட்டானுடனே  கூலி  பொருத்திக்கொள்ளுகிறார்கள்;  அவன்  ஒரு  தெய்வத்தை  உண்டாக்குகிறான்;  அதை  வணங்கிப்  பணிந்துகொள்ளுகிறார்கள்.  {Isa  46:6}

 

அதைத்  தோளின்மேல்  எடுத்து,  அதைச்  சுமந்து,  அதை  அதின்  ஸ்தானத்திலே  வைக்கிறார்கள்;  அங்கே  அது  நிற்கும்;  தன்  இடத்தைவிட்டு  அசையாது;  ஒருவன்  அதை  நோக்கிக்  கூப்பிட்டால்,  அது  மறுஉத்தரவு  கொடுக்கிறதுமில்லை,  அவன்  இக்கட்டை  நீக்கி  அவனை  இரட்சிக்கிறதுமில்லை.  {Isa  46:7}

 

இதை  நினைத்துப்  புருஷராயிருங்கள்;  பாதகரே,  இதை  மனதில்  வையுங்கள்.  {Isa  46:8}

 

முந்திப்  பூர்வகாலத்தில்  நடந்தவைகளை  நினையுங்கள்;  நானே  தேவன்,  வேறொருவரும்  இல்லை;  நானே  தேவன்,  எனக்குச்  சமானமில்லை.  {Isa  46:9}

 

அந்தத்திலுள்ளவைகளை  ஆதிமுதற்கொண்டும்,  இன்னும்  செய்யப்படாதவைகளைப்  பூர்வகாலமுதற்கொண்டும்  அறிவிக்கிறேன்;  என்  ஆலோசனை  நிலைநிற்கும்,  எனக்குச்  சித்தமானவைகளையெல்லாம்  செய்வேன்  என்று  சொல்லி,  {Isa  46:10}

 

உராய்ஞ்சுகிற  ஒரு  பட்சியைக்  கிழக்கிலிருந்தும்,  என்  ஆலோசனையை  நிறைவேற்றும்  மனுஷனைத்  தூரதேசத்திலிருந்தும்  வரவழைக்கிறவராயிருக்கிறேன்;  அதைச்  சொன்னேன்,  அதை  நிறைவேற்றுவேன்;  அதைத்  திட்டம்பண்ணினேன்,  அதைச்  செய்து  முடிப்பேன்.  {Isa  46:11}

 

முரட்டு  இருதயமுள்ளவர்களே,  நீதிக்குத்  தூரமானவர்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்.  {Isa  46:12}

 

என்  நீதியைச்  சமீபிக்கப்பண்ணுகிறேன்,  அது  தூரமாயிருப்பதில்லை;  என்  இரட்சிப்புத்  தாமதிப்பதுமில்லை;  நான்  சீயோனில்<Zion>  இரட்சிப்பையும்,  இஸ்ரவேலுக்கு<Israel>  என்  மகிமையையும்  கட்டளையிடுவேன்.  {Isa  46:13}

 

பாபிலோன்<Babylon>  குமாரத்தியாகிய  கன்னிகையே,  நீ  இறங்கி  மண்ணிலே  உட்காரு;  கல்தேயரின்<Chaldeans>  குமாரத்தியே,  தரையிலே  உட்காரு;  உனக்குச்  சிங்காசனமில்லை;  நீ  செருக்குக்காரியும்  சுகசெல்வியும்  என்று  இனி  அழைக்கப்படுவதில்லை.  {Isa  47:1}

 

ஏந்திரத்தை  எடுத்து  மாவரை;  உன்  முக்காட்டை  நீக்கிவிடு;  வெறுங்காலும்  அம்மணத்தொடையுமாய்  ஆறுகளைக்  கடந்துபோ.  {Isa  47:2}

 

உன்  நிர்வாணம்  வெளிப்படும்;  உன்  இலச்சை  காணப்படும்;  நான்  ஒருவனையும்  பாராமல்  நீதியைச்  சரிக்கட்டுவேன்.  {Isa  47:3}

 

எங்கள்  மீட்பருடைய  நாமம்  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தராகிய  சேனைகளுடைய  கர்த்தர்  என்பது.  {Isa  47:4}

 

கல்தேயரின்<Chaldeans>  குமாரத்தியே,  நீ  அந்தகாரத்துக்குள்  பிரவேசித்து  மவுனமாய்  உட்காரு;  இனி  நீ  ராஜ்யங்களின்  நாயகியென்று  அழைக்கப்படுவதில்லை.  {Isa  47:5}

 

நான்  என்  ஜனத்தின்மேல்  கடுங்கோபமடைந்து,  என்  சுதந்தரத்தைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்கி,  அவர்களை  உன்  கையில்  ஒப்புக்கொடுத்தேன்;  நீ  அவர்கள்மேல்  இரக்கம்வையாமல்,  முதிர்வயதுள்ளவர்களின்மேல்  உன்  நுகத்தை  மகா  பாரமாக்கி,  {Isa  47:6}

 

என்றென்றைக்கும்  நாயகியாயிருப்பேனென்று  சொல்லி,  இந்தக்காரியங்களை  இதுவரைக்கும்  உன்  மனதிலே  வையாமலும்,  அதின்  முடிவை  நினையாமலும்  போனாய்.  {Isa  47:7}

 

இப்பொழுதும்  சுகசெல்வியே,  விசாரமில்லாமல்  வாழ்கிறவளே:  நான்தான்,  என்னைத்தவிர  ஒருவருமில்லை;  நான்  விதவையாவதில்லை,  நான்  சந்தான  சேதத்தை  அறிவதில்லையென்று  உன்  இருதயத்திலே  சொல்லுகிறவளே,  நான்  சொல்லுகிறதைக்  கேள்.  {Isa  47:8}

 

சந்தான  சேதமும்  விதவையிருப்பும்  ஆகிய  இவ்விரண்டும்  உனக்குச்  சடிதியாக  ஒரேநாளில்  வரும்;  உன்  திரளான  சூனியங்களினிமித்தமும்,  உன்  வெகுவான  ஸ்தம்பன  வித்தைகளினிமித்தமும்  அவைகள்  பூரணமாய்  உன்மேல்  வரும்.  {Isa  47:9}

 

உன்  துன்மார்க்கத்திலே  நீ  திடநம்பிக்கையாயிருந்து:  என்னைப்  பார்க்கிறவர்  ஒருவரும்  இல்லையென்றாய்.  உன்  ஞானமும்  உன்  அறிவுமே  உன்னைக்  கெடுத்தது;  நான்தான்,  என்னைத்தவிர  ஒருவருமில்லையென்று  உன்  இருதயத்தில்  எண்ணினாய்.  {Isa  47:10}

 

ஆகையால்  தீங்கு  உன்மேல்  வரும்,  அது  எங்கேயிருந்து  உதித்ததென்று  நீ  அறியாய்;  விக்கினம்  உன்மேல்  வரும்,  நீ  அதை  நிவிர்த்தியாக்கமாட்டாய்;  நீ  அறியாதபடிக்குச்  சடிதியாய்  உண்டாகும்  பாழ்க்கடிப்பு  உன்மேல்  வரும்.  {Isa  47:11}

 

நீ  உன்  சிறுவயதுமுதல்  பிரயாசப்பட்டுப்  பழகிவருகிற  உன்  ஸ்தம்பன  வித்தைகளையும்,  உன்  திரளான  சூனியங்களையும்  நீ  அநுசரித்து  நில்;  அவைகளால்  உனக்குப்  பிரயோஜனம்  உண்டோ,  பலன்  உண்டோ,  பார்ப்போம்.  {Isa  47:12}

 

உன்  திரளான  யோசனைகளினால்  நீ  இளைத்துப்போனாய்;  இப்பொழுதும்  ஜோசியரும்,  நட்சத்திரம்  பார்க்கிறவர்களும்,  அமாவாசி  கணிக்கிறவர்களும்  எழும்பி,  உனக்கு  நேரிடுகிறவைகளுக்கு  உன்னை  விலக்கி  இரட்சிக்கட்டும்.  {Isa  47:13}

 

இதோ,  அவர்கள்  தாளடியைப்போல  இருப்பார்கள்,  நெருப்பு  அவர்களைச்  சுட்டெரிக்கும்;  அவர்கள்  தங்கள்  பிராணனை  அக்கினிஜுவாலையினின்று  விடுவிப்பதில்லை;  அது  குளிர்காயத்தக்க  தழலுமல்ல;  எதிரே  உட்காரத்தக்க  அடுப்புமல்ல.  {Isa  47:14}

 

உன்  சிறுவயதுமுதல்  நீ  பிரயாசப்பட்டு  எவர்களுடன்  வியாபாரம்  பண்ணினாயோ,  அவர்களும்  அப்படியே  இருப்பார்கள்;  அவரவர்  தங்கள்  போக்கிலே  போய்  அலைவார்கள்;  உன்னை  இரட்சிப்பார்  இல்லை.  {Isa  47:15}

 

இஸ்ரவேலென்னும்<Israel>  பெயர்பெற்று,  யூதாவின்<Judah>  நீரூற்றிலிருந்து  சுரந்தவர்களும்,  கர்த்தருடைய  நாமத்தின்மேல்  ஆணையிட்டு,  உண்மையும்  நீதியும்  இல்லாமல்  இஸ்ரவேலின்<Israel>  தேவனை  அறிக்கையிடுகிறவர்களுமான  யாக்கோபின்<Jacob>  வம்சத்தாரே,  கேளுங்கள்.  {Isa  48:1}

 

அவர்கள்  தங்களைப்  பரிசுத்த  நகரத்தார்  என்று  சொல்லி,  சேனைகளின்  கர்த்தர்  என்னும்  நாமமுள்ள  இஸ்ரவேலின்<Israel>  தேவன்மேல்  பற்றுதலாயிருக்கிறார்கள்.  {Isa  48:2}

 

பூர்வகாலத்தில்  நடந்தவைகளை  ஆதிமுதல்  அறிவித்தேன்,  அவைகள்  என்  வாயிலிருந்து  பிறந்தன,  அவைகளை  வெளிப்படுத்தினேன்;  அவைகளைச்  சடிதியாய்ச்  செய்தேன்,  அவைகள்  நடந்தன.  {Isa  48:3}

 

நீ  கடினமுள்ளவனென்றும்,  உன்  பிடரி  நரம்பு  இரும்பென்றும்,  உன்  நெற்றி  வெண்கலமென்றும்  அறிந்திருக்கிறேன்.  {Isa  48:4}

 

ஆகையால்:  என்  விக்கிரகம்  அவைகளைச்  செய்ததென்றும்,  நான்  செய்த  சுரூபமும்,  நான்  வார்ப்பித்த  விக்கிரகமும்  அவைகளைக்  கட்டளையிட்டதென்றும்  நீ  சொல்லாதபடிக்கு,  நான்  அவைகளை  முன்னமே  உனக்கு  அறிவித்து,  அவைகள்  வராததற்குமுன்னே  உனக்கு  வெளிப்படுத்தினேன்.  {Isa  48:5}

 

அவைகளைக்  கேள்விப்பட்டாயே,  அவைகளையெல்லாம்  பார்,  இப்பொழுது  நீங்களும்  அவைகளை  அறிவிக்கலாமல்லவோ?  இதுமுதல்  புதியவைகளானவைகளையும்,  நீ  அறியாத  மறைபொருளானவைகளையும்  உனக்குத்  தெரிவிக்கிறேன்.  {Isa  48:6}

 

அவைகள்  ஆதிமுதற்கொண்டு  அல்ல,  இப்பொழுதே  உண்டாக்கப்பட்டன;  இதோ,  அவைகளை  அறிவேன்  என்று  நீ  சொல்லாதபடிக்கு,  இந்நாட்களுக்கு  முன்னே  நீ  அவைகளைக்  கேள்விப்படவில்லை.  {Isa  48:7}

 

நீ  கேள்விப்படவுமில்லை,  அறியவுமில்லை;  ஆதிமுதல்  உன்  செவி  திறந்திருக்கவுமில்லை;  நீ  துரோகம்பண்ணுவாயென்பதையும்,  தாயின்  கர்ப்பந்தொடங்கி  நீ  மீறுகிறவனென்று  பெயர்பெற்றதையும்  அறிந்திருக்கிறேன்.  {Isa  48:8}

 

என்  நாமத்தினிமித்தம்  என்  கோபத்தை  நிறுத்திவைத்தேன்;  உன்னைச்  சங்கரிக்காதபடிக்கு  நான்  என்  புகழ்ச்சியினிமித்தம்  உன்மேல்  பொறுமையாயிருப்பேன்.  {Isa  48:9}

 

இதோ,  உன்னைப்  புடமிட்டேன்;  ஆனாலும்  வெள்ளியைப்போலல்ல,  உபத்திரவத்தின்  குகையிலே  உன்னைத்  தெரிந்துகொண்டேன்.  {Isa  48:10}

 

என்னிமித்தம்,  என்னிமித்தமே,  அப்படிச்  செய்வேன்;  என்  நாமத்தின்  பரிசுத்தம்  எப்படிக்  குலைக்கப்படலாம்?  என்  மகிமையை  நான்  வேறொருவருக்குங்கொடேன்.  {Isa  48:11}

 

யாக்கோபே<Jacob>,  நான்  அழைத்திருக்கிற  இஸ்ரவேலே<Israel>,  எனக்குச்  செவிகொடு;  நான்  அவரே,  நான்  முந்தினவரும்,  நான்  பிந்தினவருமாமே.  {Isa  48:12}

 

என்  கரமே  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  என்  வலதுகை  வானங்களை  அளவிட்டது;  நான்  அவைகளுக்குக்  கட்டளையிட,  அவைகள்  அனைத்தும்  நிற்கும்.  {Isa  48:13}

 

நீங்களெல்லாரும்  கூடிவந்து  கேளுங்கள்;  கர்த்தருக்குப்  பிரியமானவன்  அவருக்குச்  சித்தமானதைப்  பாபிலோனில்<Babylon>  செய்வான்;  அவன்  புயம்  கல்தேயரின்மேல்<Chaldeans>  இருக்கும்  என்பதை  இவர்களில்  அறிவித்தவன்  யார்?  {Isa  48:14}

 

நான்,  நானே  அதைச்  சொன்னேன்;  நான்  அவனை  அழைத்தேன்;  நான்  அவனை  வரப்பண்ணினேன்;  அவன்  வழி  வாய்க்கும்.  {Isa  48:15}

 

நீங்கள்  என்  சமீபத்தில்  வந்து,  நான்  சொல்வதைக்  கேளுங்கள்;  நான்  ஆதிமுதற்கொண்டு  அந்தரங்கத்தில்  பேசவில்லை;  அது  உண்டான  காலந்துவக்கி  அங்கே  நான்  இருந்தேன்;  இப்பொழுதோ  கர்த்தராகிய  ஆண்டவரும்,  அவருடைய  ஆவியும்  என்னை  அனுப்புகிறார்.  {Isa  48:16}

 

இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தராயிருக்கிற  உன்  மீட்பரான  கர்த்தர்  சொல்லுகிறதாவது:  பிரயோஜனமாயிருக்கிறதை  உனக்குப்  போதித்து,  நீ  நடக்கவேண்டிய  வழியிலே  உன்னை  நடத்துகிற  உன்  தேவனாகிய  கர்த்தர்  நானே.  {Isa  48:17}

 

,  என்  கற்பனைகளைக்  கவனித்தாயானால்  நலமாயிருக்கும்;  அப்பொழுது  உன்  சமாதானம்  நதியைப்போலும்,  உன்  நீதி  சமுத்திரத்தின்  அலைகளைப்போலும்  இருக்கும்.  {Isa  48:18}

 

அப்பொழுது  உன்  சந்ததி  மணலத்தனையாகவும்,  உன்  கர்ப்பப்பிறப்பு  அதின்  அணுக்களத்தனையாகவும்  இருக்கும்;  அப்பொழுது  அதின்  பெயர்  நம்மை  விட்டு  அற்றுப்போகாமலும்  அழிக்கப்படாமலும்  இருக்கும்.  {Isa  48:19}

 

பாபிலோனிலிருந்து<Babylon>  புறப்படுங்கள்;  கல்தேயரைவிட்டு<Chaldeans>  ஓடிவாருங்கள்;  கர்த்தர்  தம்முடைய  தாசனாகிய  யாக்கோபை<Jacob>  மீட்டுக்கொண்டாரென்று  சொல்லுங்கள்;  இதைக்  கெம்பீரசத்தமாய்க்  கூறிப்  பிரசித்தப்படுத்துங்கள்,  பூமியின்  கடையாந்தரமட்டும்  வெளிப்படுத்துங்கள்  என்கிறார்.  {Isa  48:20}

 

அவர்  அவர்களை  வனாந்தரங்களில்  நடத்தும்போது,  அவர்களுக்குத்  தாகவிடாயிருந்ததில்லை;  கன்மலையிலிருந்து  தண்ணீரை  அவர்களுக்குச்  சுரக்கப்பண்ணினார்,  கன்மலையைப்  பிளந்தார்,  தண்ணீர்  ஓடிவந்தது.  {Isa  48:21}

 

துன்மார்க்கருக்குச்  சமாதானம்  இல்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  48:22}

 

தீவுகளே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  தூரத்திலிருக்கிற  ஜனங்களே,  கவனியுங்கள்;  தாயின்  கர்ப்பத்திலிருந்ததுமுதல்  கர்த்தர்  என்னை  அழைத்து,  நான்  என்  தாயின்  வயிற்றில்  இருக்கையில்  என்  நாமத்தைப்  பிரஸ்தாபப்படுத்தினார்.  {Isa  49:1}

 

அவர்  என்  வாயைக்  கூர்மையான  பட்டயமாக்கி,  தமது  கரத்தின்  நிழலினால்  என்னை  மறைத்து,  என்னைத்  துலக்கமான  அம்பாக்கி,  என்னைத்  தமது  அம்பறாத்தூணியிலே  மூடிவைத்தார்.  {Isa  49:2}

 

அவர்  என்னை  நோக்கி:  நீ  என்  தாசன்;  இஸ்ரவேலே<Israel>,  நான்  உன்னில்  மகிமைப்படுவேன்  என்றார்.  {Isa  49:3}

 

அதற்கு  நான்:  விருதாவாய்  உழைக்கிறேன்,  வீணும்  வியர்த்தமுமாய்  என்  பெலனைச்  செலவழிக்கிறேன்;  ஆகிலும்  என்  நியாயம்  கர்த்தரிடத்திலும்,  என்  பலன்  என்  தேவனிடத்திலும்  இருக்கிறது  என்று  சொன்னேன்.  {Isa  49:4}

 

யாக்கோபைத்<Jacob>  தம்மிடத்தில்  திருப்பும்படி  நான்  தாயின்  கர்ப்பத்திலிருந்ததுமுதல்  கர்த்தர்  தமக்குத்  தாசனாக  என்னை  உருவாக்கினார்;  இஸ்ரவேலோ<Israel>  சேராதேபோகிறது;  ஆகிலும்  கர்த்தருடைய  பார்வையில்  கனமடைவேன்,  என்  தேவன்  என்  பெலனாயிருப்பார்.  {Isa  49:5}

 

யாக்கோபின்<Jacob>  கோத்திரங்களை  எழுப்பவும்,  இஸ்ரவேலில்<Israel>  காக்கப்பட்டவர்களைத்  திருப்பவும்,  நீர்  எனக்குத்  தாசனாயிருப்பது  அற்பகாரியமாயிருக்கிறது;  நீர்  பூமியின்  கடைசிபரியந்தமும்  என்னுடைய  இரட்சிப்பாயிருக்கும்படி,  உம்மை  ஜாதிகளுக்கு  ஒளியாகவும்  வைப்பேன்  என்கிறார்.  {Isa  49:6}

 

இஸ்ரவேலின்<Israel>  மீட்பரும்  அதின்  பரிசுத்தருமாகிய  கர்த்தர்,  மனுஷரால்  அசட்டைபண்ணப்பட்டவரும்,  ஜாதியாரால்  அருவருக்கப்பட்டவரும்,  அதிகாரிகளுக்கு  ஊழியக்காரனுமாயிருக்கிறவரை  நோக்கி,  உண்மையுள்ள  கர்த்தர்  நிமித்தமும்,  உம்மைத்  தெரிந்துகொண்ட  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தர்  நிமித்தமும்,  ராஜாக்கள்  கண்டு  எழுந்திருந்து,  பிரபுக்கள்  பணிந்துகொள்வார்கள்  என்று  சொல்லுகிறார்.  {Isa  49:7}

 

பின்னும்  கர்த்தர்:  அநுக்கிரக  காலத்திலே  நான்  உமக்குச்  செவிகொடுத்து,  இரட்சணியநாளிலே  உமக்கு  உதவிசெய்தேன்;  நீர்  பூமியைச்  சீர்ப்படுத்தி,  பாழாய்க்கிடக்கிற  இடங்களைச்  சுதந்தரிக்கப்பண்ணவும்;  {Isa  49:8}

 

கட்டுண்டவர்களை  நோக்கி:  புறப்பட்டுப்போங்கள்  என்றும்;  இருளில்  இருக்கிறவர்களை  நோக்கி:  வெளிப்படுங்கள்  என்றும்  சொல்லவும்,  நான்  உம்மைக்  காப்பாற்றி,  உம்மை  ஜனங்களுக்கு  உடன்படிக்கையாக  ஏற்படுத்துவேன்;  அவர்கள்  வழியோரங்களிலே  மேய்வார்கள்;  சகல  மேடுகளிலும்  அவர்களுக்கு  மேய்ச்சல்  உண்டாயிருக்கும்.  {Isa  49:9}

 

அவர்கள்  பசியாயிருப்பதுமில்லை,  தாகமாயிருப்பதுமில்லை;  உஷ்ணமாகிலும்,  வெயிலாகிலும்  அவர்கள்மேல்  படுவதுமில்லை;  அவர்களுக்கு  இரங்குகிறவர்  அவர்களை  நடத்தி,  அவர்களை  நீரூற்றுகளிடத்திற்குக்  கொண்டுபோய்விடுவார்.  {Isa  49:10}

 

என்  மலைகளையெல்லாம்  வழிகளாக்குவேன்;  என்  பாதைகள்  உயர்த்தப்படும்.  {Isa  49:11}

 

இதோ,  இவர்கள்  தூரத்திலிருந்து  வருவார்கள்;  இதோ,  அவர்கள்  வடக்கிலும்  மேற்கிலுமிருந்து  வருவார்கள்;  இவர்கள்  சீனீம்<Sinim>  தேசத்திலுமிருந்து  வருவார்கள்  என்கிறார்.  {Isa  49:12}

 

வானங்களே,  கெம்பீரித்துப்பாடுங்கள்;  பூமியே,  களிகூரு;  பர்வதங்களே,  கெம்பீரமாய்  முழங்குங்கள்;  கர்த்தர்  தம்முடைய  ஜனத்துக்கு  ஆறுதல்  செய்தார்;  சிறுமைப்பட்டிருக்கிற  தம்முடையவர்கள்மேல்  இரக்கமாயிருப்பார்.  {Isa  49:13}

 

சீயோனோ<Zion>:  கர்த்தர்  என்னைக்  கைவிட்டார்,  ஆண்டவர்  என்னை  மறந்தார்  என்று  சொல்லுகிறாள்.  {Isa  49:14}

 

ஸ்திரீயானவள்  தன்  கர்ப்பத்தின்  பிள்ளைக்கு  இரங்காமல்,  தன்  பாலகனை  மறப்பாளோ?  அவர்கள்  மறந்தாலும்,  நான்  உன்னை  மறப்பதில்லை.  {Isa  49:15}

 

இதோ,  என்  உள்ளங்கைகளில்  உன்னை  வரைந்திருக்கிறேன்;  உன்  மதில்கள்  எப்போதும்  என்முன்  இருக்கிறது.  {Isa  49:16}

 

உன்  குமாரர்  தீவிரித்துவருவார்கள்;  உன்னை  நிர்மூலமாக்கினவர்களும்  உன்னைப்  பாழாக்கினவர்களும்  உன்னைவிட்டுப்  புறப்பட்டுப்போவார்கள்.  {Isa  49:17}

 

உன்  கண்களை  ஏறெடுத்துச்  சுற்றிலும்  பார்;  அவர்களெல்லாரும்  ஏகமாய்க்  கூடி  உன்னிடத்தில்  வருகிறார்கள்;  நீ  அவர்களெல்லாரையும்  ஆபரணமாகத்  தரித்து,  மணமகள்  அணிந்துகொள்வதுபோல,  நீ  அவர்களை  அணிந்துகொள்வாய்  என்று,  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்.  {Isa  49:18}

 

அப்பொழுது  உன்  வனாந்தரங்களும்,  உன்  பாழிடங்களும்,  நிர்மூலமான  உன்  தேசமும்,  இனிக்  குடிகளின்  திரளினாலே  உனக்கு  நெருக்கமாயிருக்கும்;  உன்னை  விழுங்கினவர்கள்  தூரமாவார்கள்.  {Isa  49:19}

 

பிள்ளைகளற்றிருந்த  உனக்கு  உண்டாயிருக்கப்போகிற  பிள்ளைகள்:  இடம்  எங்களுக்கு  நெருக்கமாயிருக்கிறது;  நாங்கள்  குடியிருக்கும்படிக்கு  விலகியிரு  என்று,  உன்  காதுகள்  கேட்கச்  சொல்லுவார்கள்.  {Isa  49:20}

 

அப்பொழுது  நீ:  இவர்களை  எனக்குப்  பிறப்பித்தவர்  யார்?  நான்  பிள்ளைகளற்றும்,  தனித்தும்,  சிறைப்பட்டும்,  நிலையற்றும்  இருந்தேனே;  இவர்களை  எனக்கு  வளர்த்தவர்  யார்?  இதோ,  நான்  ஒன்றியாய்  விடப்பட்டிருந்தேனே;  இவர்கள்  எங்கேயிருந்தவர்கள்?  என்று  உன்  இருதயத்தில்  சொல்லுவாய்.  {Isa  49:21}

 

இதோ,  ஜாதிகளுக்கு  நேராக  என்  கரத்தை  உயர்த்தி,  ஜனங்களுக்கு  நேராக  என்  கொடியை  ஏற்றுவேன்;  அப்பொழுது  உன்  குமாரரைக்  கொடுங்கைகளில்  ஏந்திக்கொண்டு  வருவார்கள்;  உன்  குமாரத்திகள்  தோளின்மேல்  எடுத்துக்கொண்டு  வரப்படுவார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Isa  49:22}

 

ராஜாக்கள்  உன்னை  வளர்க்கும்  தந்தைகளும்,  அவர்களுடைய  நாயகிகள்  உன்  கைத்தாய்களுமாயிருப்பார்கள்;  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  உன்னைப்  பணிந்து,  உன்  கால்களின்  தூளை  நக்குவார்கள்;  நான்  கர்த்தர்,  எனக்குக்  காத்திருக்கிறவர்கள்  வெட்கப்படுவதில்லை  என்பதை  அப்பொழுது  அறிந்துகொள்வாய்.  {Isa  49:23}

 

பராக்கிரமன்  கையிலிருந்து  கொள்ளைப்பொருளைப்  பறிக்கக்கூடுமோ?  அல்லது  நீதியாய்ச்  சிறைப்பட்டுப்போனவர்களை  விடுவிக்கக்கூடுமோ?  {Isa  49:24}

 

என்றாலும்  இதோ,  பராக்கிரமனால்  சிறைப்படுத்தப்பட்டவர்களும்  விடுவிக்கப்படுவார்கள்;  பெலவந்தனால்  கொள்ளையிடப்பட்டதும்  விடுதலையாக்கப்படும்;  உன்னோடு  வழக்காடுகிறவர்களோடே  நான்  வழக்காடி,  உன்  பிள்ளைகளை  இரட்சித்துக்கொள்ளுவேன்;  {Isa  49:25}

 

உன்னை  ஒடுக்கினவர்களுடைய  மாம்சத்தை  அவர்களுக்கே  தின்னக்கொடுப்பேன்;  மதுபானத்தால்  வெறிகொள்வதுபோல்  தங்களுடைய  இரத்தத்தினால்  வெறிகொள்வார்கள்;  கர்த்தரும்  யாக்கோபின்<Jacob>  வல்லவருமாகிய  நான்  உன்  இரட்சகரும்  உன்  மீட்பருமாயிருக்கிறதை  மாம்சமான  யாவரும்  அறிந்துகொள்வார்களென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  49:26}

 

கர்த்தர்  சொல்லுகிறார்:  நான்  உங்கள்  தாயை  அனுப்பிவிட்டபோது,  அவளுக்குக்  கொடுத்த  தள்ளுதற்சீட்டு  எங்கே?  அல்லது  எனக்குக்  கடன்கொடுத்த  எவனுக்கு  உங்களை  நான்  விற்றுப்போட்டேன்?  இதோ,  உங்கள்  அக்கிரமங்களினிமித்தம்  நீங்கள்  விற்கப்பட்டீர்கள்;  உங்கள்  பாதகங்களினிமித்தம்  உங்கள்  தாய்  அனுப்பிவிடப்பட்டாள்.  {Isa  50:1}

 

நான்  வந்தபோது  ஒருவனும்  இல்லாமற்போனதென்ன?  நான்  கூப்பிட்டபோது  மறுஉத்தரவு  கொடுக்க  ஒருவனும்  இல்லாமற்போனதென்ன?  மீட்கக்கூடாதபடிக்கு  என்  கரம்  குறுகிற்றோ?  விடுவிக்கிறதற்கு  என்னிடத்தில்  பெலனில்லாமற்போயிற்றோ?  இதோ,  என்  கண்டிதத்தினாலே  கடலை  வற்றப்பண்ணி,  நதிகளை  வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்;  அவைகளிலுள்ள  மீன்  தண்ணீரில்லாமல்  தாகத்தால்  செத்து  நாறுகின்றது.  {Isa  50:2}

 

நான்  வானங்களுக்குக்  காரிருளை  உடுத்தி,  இரட்டை  அவைகளின்  மூடுசீலையாக்குகிறேன்.  {Isa  50:3}

 

இளைப்படைந்தவனுக்கு  சமயத்திற்கேற்ற  வார்த்தை  சொல்ல  நான்  அறியும்படிக்கு,  கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  கல்விமானின்  நாவைத்  தந்தருளினார்;  காலைதோறும்  என்னை  எழுப்புகிறார்;  கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல,  நான்  கேட்கும்படி  என்  செவியைக்  கவனிக்கச்செய்கிறார்.  {Isa  50:4}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  என்செவியைத்  திறந்தார்;  நான்  எதிர்க்கவுமில்லை,  நான்  பின்வாங்கவுமில்லை.  {Isa  50:5}

 

அடிக்கிறவர்களுக்கு  என்  முதுகையும்,  தாடைமயிரைப்  பிடுங்குகிறவர்களுக்கு  என்  தாடைகளையும்  ஒப்புக்கொடுத்தேன்;  அவமானத்துக்கும்  உமிழ்நீருக்கும்  என்  முகத்தை  மறைக்கவில்லை.  {Isa  50:6}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குத்  துணைசெய்கிறார்;  ஆகையால்  நான்  வெட்கப்படேன்;  நான்  வெட்கப்பட்டுப்போவதில்லையென்று  அறிந்திருக்கிறேன்;  ஆதலால்  என்  முகத்தைக்  கற்பாறையைப்போலாக்கினேன்.  {Isa  50:7}

 

என்னை  நீதிமானாக்குகிறவர்  சமீபமாயிருக்கிறார்;  என்னோடே  வழக்காடுகிறவன்  யார்?  ஏகமாய்  நிற்போமாக,  யார்  எனக்கு  எதிராளி?  அவன்  என்னிடத்தில்  வரட்டும்.  {Isa  50:8}

 

இதோ,  கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குத்  துணைசெய்கிறார்;  என்னை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கிறவன்  யார்?  இதோ,  அவர்கள்  எல்லாரும்  ஒரு  வஸ்திரத்தைப்போலப்  பழசாவார்கள்;  பொட்டுப்பூச்சி  அவர்களை  அரிக்கும்.  {Isa  50:9}

 

உங்களில்  எவன்  கர்த்தருக்குப்  பயந்து,  அவருடைய  தாசனின்  சொல்லைக்  கேட்டு,  தனக்கு  வெளிச்சமில்லாததினால்  இருட்டிலே  நடக்கிறானோ,  அவன்  கர்த்தருடைய  நாமத்தை  நம்பி,  தன்  தேவனைச்  சார்ந்துகொள்ளக்கடவன்.  {Isa  50:10}

 

இதோ,  நெருப்பைக்  கொளுத்தி,  அக்கினிப்பொறிகளால்  சூழப்பட்டிருக்கிற  நீங்கள்  அனைவரும்,  உங்கள்  அக்கினி  தீபத்திலும்,  நீங்கள்  மூட்டின  அக்கினிஜுவாலையிலும்  நடவுங்கள்;  வேதனையில்  கிடப்பீர்கள்;  என்  கரத்தினால்  இது  உங்களுக்கு  உண்டாகும்.  {Isa  50:11}

 

நீதியைப்  பின்பற்றி,  கர்த்தரைத்  தேடுகிற  நீங்கள்  எனக்குச்  செவிகொடுங்கள்;  நீங்கள்  வெட்டி  எடுக்கப்பட்ட  கன்மலையையும்,  நீங்கள்  தோண்டி  எடுக்கப்பட்ட  துரவின்  குழியையும்  நோக்கிப்பாருங்கள்.  {Isa  51:1}

 

உங்கள்  தகப்பனாகிய  ஆபிரகாமையும்<Abraham>,  உங்களைப்  பெற்ற  சாராளையும்<Sarah>  நோக்கிப்பாருங்கள்;  அவன்  ஒருவனாயிருக்கையில்  நான்  அவனை  அழைத்து,  அவனை  ஆசீர்வதித்து,  அவனைப்  பெருகப்பண்ணினேன்.  {Isa  51:2}

 

கர்த்தர்  சீயோனுக்கு<Zion>  ஆறுதல்  செய்வார்;  அவர்  அதின்  பாழான  ஸ்தலங்களையெல்லாம்  தேறுதலடையச்  செய்து,  அதின்  வனாந்தரத்தை  ஏதேனைப்போலவும்<Eden>,  அதின்  அவாந்தரவெளியைக்  கர்த்தரின்  தோட்டத்தைப்போலவும்  ஆக்குவார்;  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  துதியும்  கீதசத்தமும்  அதில்  உண்டாயிருக்கும்.  {Isa  51:3}

 

என்  ஜனங்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  என்  ஜாதியாரே,  என்  வாக்கைக்  கவனியுங்கள்;  வேதம்  என்னிலிருந்து  வெளிப்படும்;  என்  பிரமாணத்தை  ஜனங்களின்  வெளிச்சமாக  ஸ்தாபிப்பேன்.  {Isa  51:4}

 

என்  நீதி  சமீபமாயிருக்கிறது;  என்  இரட்சிப்பு  வெளிப்படும்;  என்  புயங்கள்  ஜனங்களை  நியாயந்தீர்க்கும்;  தீவுகள்  எனக்குக்  காத்திருந்து,  என்  புயத்தின்மேல்  நம்பிக்கையாயிருக்கும்.  {Isa  51:5}

 

உங்கள்  கண்களை  வானத்துக்கு  ஏறெடுங்கள்,  கீழே  இருக்கிற  பூமியையும்  நோக்கிப்பாருங்கள்;  வானம்  புகையைப்போல்  ஒழிந்துபோம்,  பூமி  வஸ்திரத்தைப்போல்  பழசாய்ப்போம்;  அதின்  குடிகளும்  அப்படியே  ஒழிந்துபோவார்கள்;  என்  இரட்சிப்போ  என்றென்றைக்கும்  இருக்கும்;  என்  நீதி  அற்றுப்போவதில்லை.  {Isa  51:6}

 

நீதியை  அறிந்தவர்களே,  என்  வேதத்தை  இருதயத்தில்  பதித்திருக்கிற  ஜனங்களே,  எனக்குச்  செவிகொடுங்கள்;  மனுஷரின்  நிந்தனைக்குப்  பயப்படாமலும்,  அவர்கள்  தூஷணங்களால்  கலங்காமலும்  இருங்கள்.  {Isa  51:7}

 

பொட்டுப்பூச்சி  அவர்களை  வஸ்திரத்தைப்போல்  அரித்து,  புழு  அவர்களை  ஆட்டுமயிரைப்போல்  தின்னும்;  என்னுடைய  நீதியோ  என்றென்றைக்கும்  நிலைக்கும்,  என்  இரட்சிப்புத்  தலைமுறை  தலைமுறைதோறும்  இருக்கும்.  {Isa  51:8}

 

எழும்பு,  எழும்பு,  பெலன்கொள்;  கர்த்தரின்  புயமே,  முந்தினநாட்களிலும்  பூர்வ  தலைமுறைகளிலும்  எழும்பினபடி  எழும்பு;  இராகாபைத்<Rahab>  துண்டித்ததும்  வலுசர்ப்பத்தை  வதைத்ததும்  நீதானல்லவோ?  {Isa  51:9}

 

மகா  ஆழத்தின்  தண்ணீர்களாகிய  சமுத்திரத்தை  வற்றிப்போகப்பண்ணினதும்,  மீட்கப்பட்டவர்கள்  கடந்துபோகக்  கடலின்  பள்ளங்களை  வழியாக்கினதும்  நீதானல்லவோ?  {Isa  51:10}

 

அப்படியே  கர்த்தரால்  மீட்கப்பட்டவர்கள்  ஆனந்தக்களிப்புடன்  பாடி  சீயோனுக்குத்<Zion>  திரும்பிவருவார்கள்;  நித்திய  மகிழ்ச்சி  அவர்கள்  தலையின்மேல்  இருக்கும்;  சந்தோஷமும்  மகிழ்ச்சியும்  அடைவார்கள்;  சஞ்சலமும்  தவிப்பும்  ஓடிப்போம்.  {Isa  51:11}

 

நான்,  நானே  உங்களுக்கு  ஆறுதல்  செய்கிறவர்;  சாகப்போகிற  மனுஷனுக்கும்,  புல்லுக்கொப்பாகிற  மனுபுத்திரனுக்கும்  பயப்படுகிறதற்கும்,  வானங்களை  விரித்து,  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  உன்னை  உண்டாக்கின  கர்த்தரை  மறக்கிறதற்கும்  நீ  யார்?  {Isa  51:12}

 

இடுக்கண்செய்கிறவன்  அழிக்க  ஆயத்தமாகிறபோது,  நீ  அவனுடைய  உக்கிரத்துக்கு  நித்தம்  இடைவிடாமல்  பயப்படுகிறதென்ன?  இடுக்கண்செய்கிறவனுடைய  உக்கிரம்  எங்கே?  {Isa  51:13}

 

சிறைப்பட்டுப்போனவன்  தீவிரமாய்  விடுதலையாவான்;  அவன்  கிடங்கிலே  சாவதுமில்லை,  அவனுடைய  அப்பம்  குறைவுபடுவதுமில்லை.  {Isa  51:14}

 

உன்  தேவனாயிருக்கிற  கர்த்தர்  நானே;  அலைகள்  கொந்தளிக்கத்தக்கதாய்ச்  சமுத்திரத்தைக்  குலுக்குகிற  சேனைகளின்  கர்த்தர்  என்கிற  நாமமுள்ளவர்.  {Isa  51:15}

 

நான்  வானத்தை  நிலைப்படுத்தி,  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  சீயோனை<Zion>  நோக்கி:  நீ  என்  ஜனமென்று  சொல்வதற்காக,  நான்  என்  வார்த்தையை  உன்  வாயிலே  அருளி,  என்  கரத்தின்  நிழலினால்  உன்னை  மறைக்கிறேன்.  {Isa  51:16}

 

எழும்பு,  எழும்பு,  கர்த்தருடைய  உக்கிரத்தின்  பாத்திரத்தை  அவர்  கையில்  வாங்கிக்  குடித்திருக்கிற  எருசலேமே<Jerusalem>,  எழுந்துநில்,  தத்தளிக்கச்செய்யும்  பாத்திரத்தின்  வண்டல்களை  உறிஞ்சிக்  குடித்தாய்.  {Isa  51:17}

 

அவள்  பெற்ற  புத்திரரெல்லாரிலும்  அவளை  நடத்துவார்  ஒருவருமில்லை;  அவள்  வளர்த்த  குமாரரெல்லாரிலும்  அவளைக்  கைகொடுத்து  அழைப்பார்  ஒருவருமில்லை.  {Isa  51:18}

 

இவ்விரண்டும்  உனக்குச்  சம்பவித்தது;  உனக்குப்  பரிதபிக்கிறவன்  யார்?  பாழ்க்கடிப்பும்,  சங்காரமும்,  பஞ்சமும்,  பட்டயமும்  வந்தன;  யாரைக்கொண்டு  உனக்கு  ஆறுதல்  செய்வேன்?  {Isa  51:19}

 

உன்  குமாரர்  மூர்ச்சித்து  விழுந்தார்கள்;  அவர்கள்,  வலையிலே  சிக்குண்ட  கலைமானைப்போல,  எல்லா  வீதிகளின்  முனையிலும்,  கர்த்தருடைய  உக்கிரத்தினாலும்,  உன்  தேவனுடைய  கண்டிதத்தினாலும்  நிறைந்தவர்களாய்க்  கிடக்கிறார்கள்.  {Isa  51:20}

 

ஆகையால்  சிறுமைப்பட்டவளே,  மதுபானங்குடியாமல்  வெறிகொண்டவளே,  நீ  கேள்.  {Isa  51:21}

 

கர்த்தராகிய  உன்  ஆண்டவரும்  தம்முடைய  ஜனத்துக்காக  வழக்காடப்போகிற  உன்  தேவனுமானவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  தத்தளிப்பின்  பாத்திரத்தை  உன்  கையிலிருந்து  நீக்கிப்போடுகிறேன்,  இனி  என்  உக்கிரத்தினுடைய  பாத்திரத்தின்  வண்டல்களை  நீ  குடிப்பதில்லை.  {Isa  51:22}

 

உன்னை  நோக்கி:  நாங்கள்  கடந்துபோகும்படிக்குக்  குனியென்றுசொல்லி,  கடந்துபோகிறவர்களுக்கு  நீ  உன்  முதுகைத்  தரையும்  வீதியுமாக்கும்படி,  உன்னைச்  சஞ்சலப்படுத்தினவர்களின்  கையில்  அதைக்  கொடுப்பேன்  என்றார்.  {Isa  51:23}

 

எழும்பு,  எழும்பு,  சீயோனே<Zion>,  உன்  வல்லமையைத்  தரித்துக்கொள்;  பரிசுத்த  நகரமாகிய  எருசலேமே<Jerusalem>,  உன்  அலங்கார  வஸ்திரங்களை  உடுத்திக்கொள்;  விருத்தசேதனமில்லாதவனும்  அசுத்தனும்  இனி  உன்னிடத்தில்  வருவதில்லை.  {Isa  52:1}

 

தூசியை  உதறிவிட்டு  எழுந்திரு;  எருசலேமே<Jerusalem>,  வீற்றிரு;  சிறைப்பட்டுப்போன  சீயோன்<Zion>  குமாரத்தியே,  உன்  கழுத்திலுள்ள  கட்டுகளை  அவிழ்த்து  விடு.  {Isa  52:2}

 

விலையின்றி  விற்கப்பட்டீர்கள்,  பணமின்றி  மீட்கப்படுவீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  52:3}

 

பூர்வத்தில்  என்  ஜனங்கள்  தங்கும்படி  எகிப்துக்குப்<Egypt>  போனார்கள்;  அசீரியனும்<Assyrian>  முகாந்தரமில்லாமல்  அவர்களை  ஒடுக்கினான்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Isa  52:4}

 

இப்பொழுது  எனக்கு  இங்கே  என்ன  இருக்கிறது,  என்  ஜனங்கள்  விருதாவாய்க்  கொண்டுபோகப்பட்டார்கள்;  அவர்களை  ஆளுகிறவர்கள்  அவர்களை  அலறப்பண்ணுகிறார்கள்;  நித்தமும்  இடைவிடாமல்  என்  நாமம்  தூஷிக்கப்படுகிறது  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  52:5}

 

இதினிமித்தம்,  என்  ஜனங்கள்  என்  நாமத்தை  அறிவார்கள்;  இதைச்  சொல்லுகிறவர்  நானே  என்று  அக்காலத்திலே  அறிவார்கள்;  இதோ,  இங்கே  இருக்கிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  52:6}

 

சமாதானத்தைக்  கூறி,  நற்காரியங்களைச்  சுவிசேஷமாய்  அறிவித்து,  இரட்சிப்பைப்  பிரசித்தப்படுத்தி:  உன்  தேவன்  ராஜரிகம்  பண்ணுகிறாரென்று  சீயோனுக்குச்<Zion>  சொல்லுகிற  சுவிசேஷகனுடைய  பாதங்கள்  மலைகளின்மேல்  எவ்வளவு  அழகாயிருக்கின்றன.  {Isa  52:7}

 

உன்  ஜாமக்காரருடைய  சத்தம்  கேட்கப்படும்;  அவர்கள்  சத்தமிட்டு  ஏகமாய்க்  கெம்பீரிப்பார்கள்;  ஏனென்றால்,  கர்த்தர்  சீயோனைத்<Zion>  திரும்பிவரப்பண்ணும்போது,  அதைக்  கண்ணாரக்  காண்பார்கள்.  {Isa  52:8}

 

எருசலேமின்<Jerusalem>  பாழான  ஸ்தலங்களே,  முழங்கி  ஏகமாய்க்  கெம்பீரித்துப்  பாடுங்கள்;  கர்த்தர்  தம்முடைய  ஜனங்களுக்கு  ஆறுதல்செய்து  எருசலேமை<Jerusalem>  மீட்டுக்கொண்டார்.  {Isa  52:9}

 

எல்லா  ஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாகவும்  கர்த்தர்  தம்முடைய  பரிசுத்த  புயத்தை  வெளிப்படுத்துவார்;  பூமியின்  எல்லைகளில்  உள்ளவர்களெல்லாரும்  நமது  தேவனுடைய  இரட்சிப்பைக்  காண்பார்கள்.  {Isa  52:10}

 

புறப்படுங்கள்,  புறப்படுங்கள்,  அவ்விடம்விட்டுப்  போங்கள்;  அசுத்தமானதைத்  தொடாதிருங்கள்;  கர்த்தருடைய  பாத்திரங்களைச்  சுமக்கிறவர்களே,  அதின்  நடுவிலிருந்து  புறப்பட்டு  உங்களைச்  சுத்திகரியுங்கள்.  {Isa  52:11}

 

நீங்கள்  தீவிரித்துப்  புறப்படுவதில்லை;  நீங்கள்  ஓடிப்போகிறவர்கள்போல  ஓடிப்போவதுமில்லை;  கர்த்தர்  உங்கள்  முன்னே  போவார்;  இஸ்ரவேலின்<Israel>  தேவன்  உங்கள்  பிறகே  உங்களைக்  காக்கிறவராயிருப்பார்.  {Isa  52:12}

 

இதோ,  என்  தாசன்  ஞானமாய்  நடப்பார்,  அவர்  உயர்த்தப்பட்டு,  மேன்மையும்  மகா  உன்னதமுமாயிருப்பார்.  {Isa  52:13}

 

மனுஷனைப்பார்க்கிலும்  அவருடைய  முகப்பார்வையும்,  மனுபுத்திரரைப்பார்க்கிலும்  அவருடைய  ரூபமும்,  இவ்வளவு  அந்தக்கேடு  அடைந்தபடியினாலே,  அவரைக்கண்ட  அநேகர்  பிரமிப்படைந்தார்கள்.  {Isa  52:14}

 

அப்படியே,  அவர்  அநேகம்  ஜாதிகள்மேல்  தெளிப்பார்;  அவர்  நிமித்தம்  ராஜாக்கள்  தங்கள்  வாயை  மூடுவார்கள்;  ஏனெனில்,  தங்களுக்குத்  தெரிவிக்கப்படாதிருந்ததை  அவர்கள்  காண்பார்கள்;  கேள்விப்படாதிருந்ததை  அவர்கள்  அறிந்துகொள்வார்கள்.  {Isa  52:15}

 

எங்கள்  மூலமாய்க்  கேள்விப்பட்டதை  விசுவாசித்தவன்  யார்?  கர்த்தருடைய  புயம்  யாருக்கு  வெளிப்பட்டது?  {Isa  53:1}

 

இளங்கிளையைப்போலவும்,  வறண்ட  நிலத்திலிருந்து  துளிர்க்கிற  வேரைப்போலவும்  அவனுக்கு  முன்பாக  எழும்புகிறார்;  அவருக்கு  அழகுமில்லை,  சௌந்தரியமுமில்லை;  அவரைப்  பார்க்கும்போது,  நாம்  அவரை  விரும்பத்தக்க  ரூபம்  அவருக்கு  இல்லாதிருந்தது.  {Isa  53:2}

 

அவர்  அசட்டைபண்ணப்பட்டவரும்,  மனுஷரால்  புறக்கணிக்கப்பட்டவரும்,  துக்கம்  நிறைந்தவரும்,  பாடு  அநுபவித்தவருமாயிருந்தார்;  அவரைவிட்டு,  நம்முடைய  முகங்களை  மறைத்துக்கொண்டோம்;  அவர்  அசட்டைபண்ணப்பட்டிருந்தார்;  அவரை  எண்ணாமற்போனோம்.  {Isa  53:3}

 

மெய்யாகவே  அவர்  நம்முடைய  பாடுகளை  ஏற்றுக்கொண்டு,  நம்முடைய  துக்கங்களைச்  சுமந்தார்;  நாமோ,  அவர்  தேவனால்  அடிபட்டு  வாதிக்கப்பட்டு,  சிறுமைப்பட்டவரென்று  எண்ணினோம்.  {Isa  53:4}

 

நம்முடைய  மீறுதல்களினிமித்தம்  அவர்  காயப்பட்டு,  நம்முடைய  அக்கிரமங்களினிமித்தம்  அவர்  நொறுக்கப்பட்டார்;  நமக்குச்  சமாதானத்தை  உண்டுபண்ணும்  ஆக்கினை  அவர்மேல்  வந்தது;  அவருடைய  தழும்புகளால்  குணமாகிறோம்.  {Isa  53:5}

 

நாமெல்லாரும்  ஆடுகளைப்போல  வழிதப்பித்  திரிந்து,  அவனவன்  தன்  தன்  வழியிலே  போனோம்;  கர்த்தரோ  நம்மெல்லாருடைய  அக்கிரமத்தையும்  அவர்மேல்  விழப்பண்ணினார்.  {Isa  53:6}

 

அவர்  நெருக்கப்பட்டும்  ஒடுக்கப்பட்டும்  இருந்தார்,  ஆனாலும்  தம்முடைய  வாயை  அவர்  திறக்கவில்லை;  அடிக்கப்படும்படி  கொண்டுபோகப்படுகிற  ஒரு  ஆட்டுக்குட்டியைப்போலவும்,  தன்னை  மயிர்கத்தரிக்கிறவனுக்கு  முன்பாகச்  சத்தமிடாதிருக்கிற  ஆட்டைப்போலவும்,  அவர்  தம்முடைய  வாயைத்  திறவாதிருந்தார்.  {Isa  53:7}

 

இடுக்கணிலும்  நியாயத்தீர்ப்பிலுமிருந்து  அவர்  எடுக்கப்பட்டார்;  அவருடைய  வம்சத்தை  யாரால்  சொல்லி  முடியும்;  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலிருந்து  அறுப்புண்டுபோனார்;  என்  ஜனத்தின்  மீறுதலினிமித்தம்  அவர்  வாதிக்கப்பட்டார்.  {Isa  53:8}

 

துன்மார்க்கரோடே  அவருடைய  பிரேதக்குழியை  நியமித்தார்கள்;  ஆனாலும்  அவர்  மரித்தபோது  ஐசுவரியவானோடே  இருந்தார்;  அவர்  கொடுமை  செய்யவில்லை;  அவர்  வாயில்  வஞ்சனை  இருந்ததுமில்லை.  {Isa  53:9}

 

கர்த்தரோ  அவரை  நொறுக்கச்  சித்தமாகி,  அவரைப்  பாடுகளுக்குட்படுத்தினார்;  அவருடைய  ஆத்துமா  தன்னைக்  குற்றநிவாரணபலியாக  ஒப்புக்கொடுக்கும்போது,  அவர்  தமது  சந்ததியைக்  கண்டு,  நீடித்த  நாளாயிருப்பார்,  கர்த்தருக்குச்  சித்தமானது  அவர்  கையினால்  வாய்க்கும்.  {Isa  53:10}

 

அவர்  தமது  ஆத்தும  வருத்தத்தின்  பலனைக்  கண்டு  திருப்தியாவார்;  என்  தாசனாகிய  நீதிபரர்  தம்மைப்  பற்றும்  அறிவினால்  அநேகரை  நீதிமான்களாக்குவார்;  அவர்களுடைய  அக்கிரமங்களைத்  தாமே  சுமந்துகொள்வார்.  {Isa  53:11}

 

அவர்  தம்முடைய  ஆத்துமாவை  மரணத்திலூற்றி,  அக்கிரமக்காரரில்  ஒருவராக  எண்ணப்பட்டு,  அநேகருடைய  பாவத்தைத்  தாமே  சுமந்து,  அக்கிரமக்காரருக்காக  வேண்டிக்கொண்டதினிமித்தம்  அநேகரை  அவருக்குப்  பங்காகக்  கொடுப்பேன்;  பலவான்களை  அவர்  தமக்குக்  கொள்ளையாகப்  பங்கிட்டுக்கொள்வார்.  {Isa  53:12}

 

பிள்ளைபெறாத  மலடியே,  மகிழ்ந்துபாடு;  கர்ப்பவேதனைப்படாதவளே,  கெம்பீரமாய்ப்  பாடி  ஆனந்தசத்தமிடு;  வாழ்க்கைப்பட்டவளுடைய  பிள்ளைகளைப்பார்க்கிலும்,  அநாத  ஸ்திரீயினுடைய  பிள்ளைகள்  அதிகம்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  54:1}

 

உன்  கூடாரத்தின்  இடத்தை  விசாலமாக்கு;  உன்  வாசஸ்தலங்களின்  திரைகள்  விரிவாகட்டும்;  தடைசெய்யாதே;  உன்  கயிறுகளை  நீளமாக்கி,  உன்  முளைகளை  உறுதிப்படுத்து.  {Isa  54:2}

 

நீ  வலதுபுறத்திலும்  இடதுபுறத்திலும்  இடங்கொண்டு  பெருகுவாய்;  உன்  சந்ததியார்  ஜாதிகளைச்  சுதந்தரித்துக்கொண்டு,  பாழாய்க்கிடந்த  பட்டணங்களைக்  குடியேற்றுவிப்பார்கள்.  {Isa  54:3}

 

பயப்படாதே,  நீ  வெட்கப்படுவதில்லை;  நாணாதே,  நீ  இலச்சையடைவதில்லை;  உன்  வாலிபத்தின்  வெட்கத்தை  நீ  மறந்து,  உன்  விதவையிருப்பின்  நிந்தையை  இனி  நினையாதிருப்பாய்.  {Isa  54:4}

 

உன்  சிருஷ்டிகரே  உன்  நாயகர்;  சேனைகளின்  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தர்  உன்  மீட்பர்,  அவர்  சர்வபூமியின்  தேவன்  என்னப்படுவார்.  {Isa  54:5}

 

கைவிடப்பட்டு  மனம்நொந்தவளான  ஸ்திரீயைப்போலவும்,  இளம்பிராயத்தில்  விவாகஞ்செய்து  தள்ளப்பட்ட  மனைவியைப்போலவும்  இருக்கிற  உன்னைக்  கர்த்தர்  அழைத்தார்  என்று  உன்  தேவன்  சொல்லுகிறார்.  {Isa  54:6}

 

இமைப்பொழுது  உன்னைக்  கைவிட்டேன்;  ஆனாலும்  உருக்கமான  இரக்கங்களால்  உன்னைச்  சேர்த்துக்கொள்வேன்.  {Isa  54:7}

 

அற்பகாலம்  மூண்ட  கோபத்தினால்  என்  முகத்தை  இமைப்பொழுது  உனக்கு  மறைத்தேன்;  ஆனாலும்  நித்திய  கிருபையுடன்  உனக்கு  இரங்குவேன்  என்று  கர்த்தராகிய  உன்  மீட்பர்  சொல்லுகிறார்.  {Isa  54:8}

 

இது  எனக்கு  நோவாவின்<Noah>  காலத்திலுண்டான  வெள்ளம்போலிருக்கும்;  நோவாவின்<Noah>  காலத்திலுண்டான  வெள்ளம்  இனி  பூமியின்மேல்  புரண்டு  வருவதில்லை  என்று  நான்  ஆணையிட்டதுபோல,  உன்மேல்  நான்  கோபங்கொள்வதில்லையென்றும்,  உன்னை  நான்  கடிந்துகொள்வதில்லையென்றும்  ஆணையிட்டேன்.  {Isa  54:9}

 

மலைகள்  விலகினாலும்,  பர்வதங்கள்  நிலைபெயர்ந்தாலும்,  என்  கிருபை  உன்னைவிட்டு  விலகாமலும்,  என்  சமாதானத்தின்  உடன்படிக்கை  நிலைபெயராமலும்  இருக்கும்  என்று,  உன்மேல்  மனதுருகுகிற  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  54:10}

 

சிறுமைப்பட்டவளே,  பெருங்காற்றில்  அடிபட்டவளே,  தேற்றரவற்றவளே,  இதோ,  நான்  உன்  கல்லுகளைப்  பிரகாசிக்கும்படி  வைத்து,  நீலரத்தினங்களை  உன்  அஸ்திபாரமாக்கி,  {Isa  54:11}

 

உன்  பலகணிகளைப்  பளிங்கும்,  உன்  வாசல்களை  மாணிக்கக்  கற்களும்,  உன்  மதில்களையெல்லாம்  உச்சிதமான  கற்களுமாக்குவேன்.  {Isa  54:12}

 

உன்  பிள்ளைகளெல்லாரும்  கர்த்தரால்  போதிக்கப்பட்டிருப்பார்கள்;  உன்  பிள்ளைகளுடைய  சமாதானம்  பெரிதாயிருக்கும்.  {Isa  54:13}

 

நீதியினால்  ஸ்திரப்பட்டிருப்பாய்;  கொடுமைக்குத்  தூரமாவாய்;  பயமில்லாதிருப்பாய்;  திகிலுக்குத்  தூரமாவாய்,  அது  உன்னை  அணுகுவதில்லை.  {Isa  54:14}

 

இதோ,  உனக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடினால்,  அது  என்னாலே  கூடுகிற  கூட்டமல்ல;  எவர்கள்  உனக்கு  விரோதமாய்க்  கூடுகிறார்களோ,  அவர்கள்  உன்  பட்சத்தில்  வருவார்கள்.  {Isa  54:15}

 

இதோ,  கரிநெருப்பை  ஊதி,  தன்  கிரியைக்கான  ஆயுதத்தை  உண்டுபண்ணுகிற  கொல்லனையும்  நான்  சிருஷ்டித்தேன்;  கெடுத்து  நிக்கிரகமாக்குகிறவனையும்  நான்  சிருஷ்டித்தேன்.  {Isa  54:16}

 

உனக்கு  விரோதமாய்  உருவாக்கப்படும்  எந்த  ஆயுதமும்  வாய்க்காதேபோம்;  உனக்கு  விரோதமாய்  நியாயத்தில்  எழும்பும்  எந்த  நாவையும்  நீ  குற்றப்படுத்துவாய்;  இது  கர்த்தருடைய  ஊழியக்காரரின்  சுதந்தரமும்,  என்னாலுண்டான  அவர்களுடைய  நீதியுமாயிருக்கிறதென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  54:17}

 

,  தாகமாயிருக்கிறவர்களே,  நீங்கள்  எல்லாரும்  தண்ணீர்களண்டைக்கு  வாருங்கள்;  பணமில்லாதவர்களே,  நீங்கள்  வந்து,  வாங்கிச்  சாப்பிடுங்கள்;  நீங்கள்  வந்து,  பணமுமின்றி  விலையுமின்றித்  திராட்சரசமும்  பாலும்  கொள்ளுங்கள்.  {Isa  55:1}

 

நீங்கள்  அப்பமல்லாததற்காகப்  பணத்தையும்,  திருப்திசெய்யாத  பொருளுக்காக  உங்கள்  பிரயாசத்தையும்  செலவழிப்பானேன்?  நீங்கள்  எனக்குக்  கவனமாய்ச்  செவிகொடுத்து,  நலமானதைச்  சாப்பிடுங்கள்;  அப்பொழுது  உங்கள்  ஆத்துமா  கொழுப்பான  பதார்த்தத்தினால்  மகிழ்ச்சியாகும்.  {Isa  55:2}

 

உங்கள்  செவியைச்  சாய்த்து,  என்னிடத்தில்  வாருங்கள்:  கேளுங்கள்,  அப்பொழுது  உங்கள்  ஆத்துமா  பிழைக்கும்;  தாவீதுக்கு<David>  அருளின  நிச்சயமான  கிருபைகளை  உங்களுக்கு  நித்திய  உடன்படிக்கையாக  ஏற்படுத்துவேன்.  {Isa  55:3}

 

இதோ,  அவரை  ஜனக்கூட்டங்களுக்குச்  சாட்சியாகவும்,  ஜனங்களுக்குத்  தலைவராகவும்,  அதிபதியாகவும்  ஏற்படுத்தினேன்.  {Isa  55:4}

 

இதோ,  நீ  அறியாதிருந்த  ஜாதியை  வரவழைப்பாய்;  உன்னை  அறியாதிருந்த  ஜாதி  உன்  தேவனாகிய  கர்த்தரின்  நிமித்தமும்,  இஸ்ரவேலுடைய<Israel>  பரிசுத்தரின்  நிமித்தமும்  உன்னிடத்திற்கு  ஓடிவரும்;  அவர்  உன்னை  மேன்மைப்படுத்தியிருக்கிறார்.  {Isa  55:5}

 

கர்த்தரைக்  கண்டடையத்தக்க  சமயத்தில்  அவரைத்  தேடுங்கள்;  அவர்  சமீபமாயிருக்கையில்  அவரை  நோக்கிக்  கூப்பிடுங்கள்.  {Isa  55:6}

 

துன்மார்க்கன்  தன்  வழியையும்,  அக்கிரமக்காரன்  தன்  நினைவுகளையும்  விட்டு,  கர்த்தரிடத்தில்  திரும்பக்கடவன்;  அவர்  அவன்மேல்  மனதுருகுவார்;  நம்முடைய  தேவனிடத்திற்கே  திரும்பக்கடவன்;  அவர்  மன்னிக்கிறதற்குத்  தயை  பெருத்திருக்கிறார்.  {Isa  55:7}

 

என்  நினைவுகள்  உங்கள்  நினைவுகள்  அல்ல;  உங்கள்  வழிகள்  என்  வழிகளும்  அல்லவென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  55:8}

 

பூமியைப்பார்க்கிலும்  வானங்கள்  எப்படி  உயர்ந்திருக்கிறதோ,  அப்படியே  உங்கள்  வழிகளைப்பார்க்கிலும்  என்  வழிகளும்,  உங்கள்  நினைவுகளைப்பார்க்கிலும்  என்  நினைவுகளும்  உயர்ந்திருக்கிறது.  {Isa  55:9}

 

மாரியும்  உறைந்த  மழையும்  வானத்திலிருந்து  இறங்கி,  அவ்விடத்துக்குத்  திரும்பாமல்  பூமியை  நனைத்து,  அதில்  முளை  கிளம்பி  விளையும்படிச்செய்து,  விதைக்கிறவனுக்கு  விதையையும்,  புசிக்கிறவனுக்கு  ஆகாரத்தையும்  கொடுக்கிறது  எப்படியோ,  {Isa  55:10}

 

அப்படியே  என்  வாயிலிருந்து  புறப்படும்  வசனமும்  இருக்கும்;  அது  வெறுமையாய்  என்னிடத்திற்குத்  திரும்பாமல்,  அது  நான்  விரும்புகிறதைச்செய்து,  நான்  அதை  அனுப்பின  காரியமாகும்படி  வாய்க்கும்.  {Isa  55:11}

 

நீங்கள்  மகிழ்ச்சியாய்ப்  புறப்பட்டு,  சமாதானமாய்க்  கொண்டுபோகப்படுவீர்கள்;  பர்வதங்களும்  மலைகளும்  உங்களுக்கு  முன்பாகக்  கெம்பீரமாய்  முழங்கி,  வெளியின்  மரங்களெல்லாம்  கைகொட்டும்.  {Isa  55:12}

 

முட்செடிக்குப்  பதிலாகத்  தேவதாரு  விருட்சம்  முளைக்கும்;  காஞ்சொறிக்குப்  பதிலாக  மிருதுச்செடி  எழும்பும்;  அது  கர்த்தருக்குக்  கீர்த்தியாகவும்,  நிர்மூலமாகாத  நித்திய  அடையாளமாகவும்  இருக்கும்.  {Isa  55:13}

 

கர்த்தர்  சொல்லுகிறார்:  நீங்கள்  நியாயத்தைக்  கைக்கொண்டு,  நீதியைச்  செய்யுங்கள்;  என்  இரட்சிப்பு  வரவும்,  என்  நீதி  வெளிப்படவும்  சமீபமாயிருக்கிறது.  {Isa  56:1}

 

இப்படிச்  செய்கிற  மனுஷனும்,  இதைப்  பற்றிக்கொண்டிருந்து,  ஓய்வுநாளைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்காதபடி  ஆசரித்து,  ஒரு  பொல்லாப்பையும்  செய்யாதபடி  தன்  கையைக்  காத்துக்கொண்டிருக்கிற  மனுபுத்திரனும்  பாக்கியவான்.  {Isa  56:2}

 

கர்த்தரைச்  சேர்ந்த  அந்நியபுத்திரன்:  கர்த்தர்  என்னைத்  தம்முடைய  ஜனத்தைவிட்டு  முற்றிலும்  பிரித்துப்போடுவாரென்று  சொல்லானாக;  அண்ணகனும்:  இதோ,  நான்  பட்டமரமென்று  சொல்லானாக.  {Isa  56:3}

 

என்  ஓய்வுநாட்களை  ஆசரித்து,  எனக்கு  இஷ்டமானவைகளைத்  தெரிந்துகொண்டு,  என்  உடன்படிக்கையைப்  பற்றிக்கொள்ளுகிற  அண்ணகர்களைக்  குறித்துக்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  {Isa  56:4}

 

நான்  அவர்களுக்கு  என்  ஆலயத்திலும்,  என்  மதில்களுக்குள்ளும்  குமாரருக்கும்  குமாரத்திகளுக்குமுரிய  இடத்தையும்  கீர்த்தியையும்பார்க்கிலும்,  உத்தம  இடத்தையும்  கீர்த்தியையும்  கொடுப்பேன்,  என்றும்  அழியாத  நித்திய  நாமத்தை  அவர்களுக்கு  அருளுவேன்.  {Isa  56:5}

 

கர்த்தரைச்  சேவிக்கவும்,  கர்த்தருடைய  நாமத்தை  நேசிக்கவும்,  அவருக்கு  ஊழியக்காரராயிருக்கவும்,  அவரைச்  சேர்ந்து,  ஓய்வுநாளைப்  பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி  ஆசரித்து,  என்  உடன்படிக்கையைப்  பற்றிக்கொண்டிருக்கிற  அந்நியபுத்திரர்  அனைவரையும்,  {Isa  56:6}

 

நான்  என்  பரிசுத்த  பர்வதத்துக்குக்  கொண்டுவந்து:  என்  ஜெபவீட்டிலே  அவர்களை  மகிழப்பண்ணுவேன்;  அவர்களுடைய  சர்வாங்கதகனங்களும்,  அவர்களுடைய  பலிகளும்,  என்  பலிபீடத்தின்மேல்  அங்கிகரிக்கப்பட்டிருக்கும்;  என்னுடைய  வீடு  சகல  ஜனங்களுக்கும்  ஜெபவீடு  என்னப்படும்.  {Isa  56:7}

 

இஸ்ரவேலில்<Israel>  தள்ளுண்டவர்களைச்  சேர்க்கிற  கர்த்தராகிய  ஆண்டவர்:  அவனிடத்தில்  சேர்க்கப்பட்டவர்களையல்லாமல்  இன்னும்  அவனிடத்தில்  சேர்ப்பேன்  என்கிறார்.  {Isa  56:8}

 

வெளியில்  சஞ்சரிக்கிற  சகல  மிருகங்களே,  காட்டிலுள்ள  சகல  மிருகங்களே,  பட்சிக்க  வாருங்கள்.  {Isa  56:9}

 

அவனுடைய  காவற்காரர்  எல்லாரும்  ஒன்றும்  அறியாத  குருடர்;  அவர்களெல்லாரும்  குலைக்கமாட்டாத  ஊமையான  நாய்கள்;  தூக்கமயக்கமாய்ப்  புலம்புகிறவர்கள்,  படுத்துக்கொள்ளுகிறவர்கள்,  நித்திரைப்  பிரியர்;  {Isa  56:10}

 

திருப்தியடையாமலிருக்கும்  பெருவயிற்று  நாய்கள்;  பகுத்தறிவில்லாத  மேய்ப்பர்;  அவர்களில்  ஒவ்வொருவனும்  தன்  தன்  வழியையும்,  அவனவன்  தன்  தன்  மூலையிலிருந்து  தன்  தன்  பொழிவையும்  நோக்கிக்கொண்டிருக்கிறான்.  {Isa  56:11}

 

வாருங்கள்,  திராட்சரசத்தைக்  கொண்டுவருவேன்,  மதுவைக்  குடிப்போம்;  நாளையத்தினம்  இன்றையத்தினம்போலவும்,  இதற்கு  அதிகமாகவும்  இருக்கும்  என்பார்கள்.  {Isa  56:12}

 

நீதிமான்  மடிந்துபோகிறான்,  ஒருவரும்  அதை  மனதில்  வைக்கிறதில்லை;  புத்திமான்கள்  எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்,  ஆனாலும்  தீங்குவராததற்குமுன்னே  நீதிமான்  எடுத்துக்கொள்ளப்படுகிறான்  என்பதைச்  சிந்திப்பார்  இல்லை.  {Isa  57:1}

 

நேர்மையாய்  நடந்தவர்கள்  சமாதானத்துக்குள்  பிரவேசித்து,  தங்கள்  படுக்கைகளில்  இளைப்பாறுகிறார்கள்.  {Isa  57:2}

 

நாள்பார்க்கிறவளின்  பிள்ளைகளே,  விபசாரனுக்கும்  வேசிக்கும்  பிறந்த  சந்ததியாரே,  நீங்கள்  இங்கே  கிட்டிவாருங்கள்.  {Isa  57:3}

 

நீங்கள்  யாரைப்  பரியாசம்பண்ணுகிறீர்கள்?  யாருக்கு  விரோதமாய்  வாயைத்  திறந்து,  நாக்கை  நீட்டுகிறீர்கள்?  நீங்கள்  துரோகம்பண்ணுகிற  பிள்ளைகளும்,  கள்ளச்  சந்ததியாருமல்லவோ?  {Isa  57:4}

 

நீங்கள்  பச்சையான  சகல  மரத்தின்கீழும்,  விக்கிரக  தேவர்களோடே  மோகாக்கினியில்  வெந்து,  பள்ளத்தாக்குகளிலே  கன்மலை  வெடிப்புகளின்  கீழ்ப்  பிள்ளைகளைக்  கொன்றுபோடுகிறவர்கள்.  {Isa  57:5}

 

பள்ளத்தாக்குகளிலுள்ள  வழவழப்பான  சிலைகளிடத்தில்  உன்  பங்கு  இருக்கிறது;  அவைகள்,  அவைகளே  உன்  வீதம்;  அவைகளுக்கு  நீ  பானபலியை  வார்த்து,  போஜனபலியையும்  செலுத்துகிறாய்;  இவைகளின்மேல்  பிரியப்படுவேனோ?  {Isa  57:6}

 

நீ  உயரமும்  உன்னதமுமான  மலைகளின்மேல்  உன்  மஞ்சத்தை  வைக்கிறாய்;  அங்கேயும்  பலியிடும்படி  ஏறுகிறாய்.  {Isa  57:7}

 

கதவுகளுக்கும்  நிலைகளுக்கும்  பின்னாக  உன்  ஞாபகக்குறியை  வைக்கிறாய்;  நீ  என்னைவிட்டுப்போய்  மற்றவர்களுக்கு  உன்னை  வெளிப்படுத்தினாய்;  ஏறிப்போய்  உன்  மஞ்சத்தை  அகலமாக்கி,  அவர்களோடே  உடன்படிக்கை  பண்ணினாய்;  அவர்களுடைய  மஞ்சத்தைக்  காண்கிற  எல்லா  இடத்திலும்  அதை  நேசிக்கிறாய்.  {Isa  57:8}

 

நீ  தைலத்தைப்  பூசிக்கொண்டு  ராஜாவினிடத்தில்  போகிறாய்;  உன்  பரிமளங்களை  மிகுதியாக்கி,  உன்  ஸ்தானாபதிகளைத்  தூரத்துக்கு  அனுப்பி,  உன்னைப்  பாதாளமட்டும்  தாழ்த்துகிறாய்.  {Isa  57:9}

 

வழிதூரமானதால்  உழன்றுபோகிறாய்;  அது  விருதாவென்று  நீ  சொல்லுகிறதில்லை;  உன்  கைபெலத்தைக்  கண்டுபிடித்தாய்;  ஆகையால்  நீ  ஆயாசப்படவில்லை.  {Isa  57:10}

 

நீ  யாருக்கு  அஞ்சிப்  பயப்படுகிறாய்,  நீ  பொய்சொல்லுகிறாயே;  நீ  என்னை  நினையாமலும்,  உன்  மனதிலே  வைக்காமலும்  போகிறாய்;  நான்  வெகுகாலம்  மவுனமாயிருந்தேன்  அல்லவா?  ஆகையால்  எனக்குப்  பயப்படாதிருக்கிறாய்.  {Isa  57:11}

 

உன்  நீதியையும்  உன்  கிரியைகளையும்  நான்  வெளிப்படுத்துவேன்,  அவைகள்  உனக்கு  உதவாது.  {Isa  57:12}

 

நீ  கூப்பிடும்போது,  உன்  கணங்கள்  உன்னைத்  தப்புவிக்கட்டும்;  காற்று  அவைகளையெல்லாம்  பறக்கடித்து,  மாயை  அவைகளைக்  கொண்டுபோம்;  என்னை  நம்பியிருக்கிறவனோ  தேசத்தைச்  சுதந்தரித்து,  என்  பரிசுத்த  பர்வதத்திலே  காணியாட்சிக்காரனாயிருப்பான்.  {Isa  57:13}

 

வழியை  உயர்த்தி  உயர்த்தி,  அதைச்  செம்மைப்படுத்தி,  இடறல்களை  என்  ஜனத்தின்  வழியிலிருந்து  எடுத்துப்போடுங்கள்  என்னப்படும்.  {Isa  57:14}

 

நித்தியவாசியும்  பரிசுத்தர்  என்கிற  நாமமுள்ளவருமாகிய  மகத்துவமும்  உன்னதமுமானவர்  சொல்லுகிறார்:  உன்னதத்திலும்  பரிசுத்த  ஸ்தலத்திலும்  வாசம்பண்ணுகிற  நான்,  பணிந்தவர்களின்  ஆவியை  உயிர்ப்பிக்கிறதற்கும்,  நொறுங்கினவர்களின்  இருதயத்தை  உயிர்ப்பிக்கிறதற்கும்,  நொறுங்குண்டு  பணிந்த  ஆவியுள்ளவர்களிடத்திலும்  வாசம்பண்ணுகிறேன்.  {Isa  57:15}

 

நான்  எப்போதும்  வழக்காடமாட்டேன்;  நான்  என்றைக்கும்  கோபமாயிருப்பதுமில்லை;  ஏனென்றால்,  ஆவியும்,  நான்  உண்டுபண்ணின  ஆத்துமாக்களும்,  என்  முகத்துக்கு  முன்பாகச்  சோர்ந்துபோகுமே.  {Isa  57:16}

 

நான்  அவர்கள்  பொருளாசையென்னும்  அக்கிரமத்தினிமித்தம்  கடுங்கோபமாகி,  அவர்களை  அடித்தேன்;  நான்  மறைந்து,  கடுங்கோபமாயிருந்தேன்;  தங்கள்  மனம்போனபோக்கிலே  மாறுபாடாய்  நடந்தார்களே.  {Isa  57:17}

 

அவர்கள்  வழிகளை  நான்  பார்த்து,  அவர்களைக்  குணமாக்குவேன்;  அவர்களை  நடத்தி,  திரும்பவும்  அவர்களுக்கும்  அவர்களிலே  துக்கப்படுகிறவர்களுக்கும்  ஆறுதல்  அளிப்பேன்.  {Isa  57:18}

 

தூரமாயிருக்கிறவர்களுக்கும்  சமீபமாயிருக்கிறவர்களுக்கும்  சமாதானம்  சமாதானம்  என்று  கூறும்  உதடுகளின்  பலனைச்  சிருஷ்டிக்கிறேன்;  அவர்களைக்  குணமாக்குவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  57:19}

 

துன்மார்க்கரோ  கொந்தளிக்கும்  கடலைப்போலிருக்கிறார்கள்;  அது  அமர்ந்திருக்கக்  கூடாமல்,  அதின்  ஜலங்கள்  சேற்றையும்  அழுக்கையும்  கரையில்  ஒதுக்குகிறது.  {Isa  57:20}

 

துன்மார்க்கருக்குச்  சமாதானம்  இல்லையென்று  என்  தேவன்  சொல்லுகிறார்.  {Isa  57:21}

 

சத்தமிட்டுக்  கூப்பிடு;  அடக்கிக்கொள்ளாதே;  எக்காளத்தைப்போல்  உன்  சத்தத்தை  உயர்த்தி,  என்  ஜனத்துக்கு  அவர்கள்  மீறுதலையும்,  யாக்கோபின்<Jacob>  வம்சத்தாருக்கு  அவர்கள்  பாவங்களையும்  தெரிவி.  {Isa  58:1}

 

தங்கள்  தேவனுடைய  நியாயத்தை  விட்டு  விலகாமல்  நீதியைச்  செய்துவருகிற  ஜாதியாரைப்போல்  அவர்கள்  நாடோறும்  என்னைத்  தேடி,  என்  வழிகளை  அறிய  விரும்புகிறார்கள்;  நீதிநியாயங்களை  என்னிடத்தில்  விசாரித்து,  தேவனிடத்தில்  சேர  விரும்புகிறார்கள்.  {Isa  58:2}

 

நாங்கள்  உபவாசம்பண்ணும்போது  நீர்  நோக்காமலிருக்கிறதென்ன?  நாங்கள்  எங்கள்  ஆத்துமாக்களை  ஒடுக்கும்போது  நீர்  அதை  அறியாமலிருக்கிறதென்ன  என்கிறார்கள்;  இதோ,  நீங்கள்  உபவாசிக்கும்  நாளிலே  உங்கள்  இச்சையின்படி  நடந்து,  உங்கள்  வேலைகளையெல்லாம்  கட்டாயமாய்ச்  செய்கிறீர்கள்.  {Isa  58:3}

 

இதோ,  வழக்குக்கும்  வாதுக்கும்  துஷ்டத்தனத்தையுடைய  கையினால்  குத்துகிறதற்கும்  உபவாசிக்கிறீர்கள்;  நீங்கள்  உங்கள்  கூக்குரலை  உயரத்திலே  கேட்கப்பண்ணும்படியாய்,  இந்நாளில்  உபவாசிக்கிறதுபோல்  உபவாசியாதிருங்கள்.  {Isa  58:4}

 

மனுஷன்  தன்  ஆத்துமாவை  ஒடுக்குகிறதும்,  தலைவணங்கி  நாணலைப்போல்  இரட்டிலும்  சாம்பலிலும்  படுத்துக்கொள்ளுகிறதும்,  எனக்குப்  பிரியமான  உபவாச  நாளாயிருக்குமோ?  இதையா  உபவாசமென்றும்  கர்த்தருக்குப்  பிரியமான  நாளென்றும்  சொல்லுவாய்?  {Isa  58:5}

 

அக்கிரமத்தின்  கட்டுகளை  அவிழ்க்கிறதும்,  நுகத்தடியின்  பிணையல்களை  நெகிழ்க்கிறதும்,  நெருக்கப்பட்டிருக்கிறவர்களை  விடுதலையாக்கிவிடுகிறதும்,  சகல  நுகத்தடிகளையும்  உடைத்துப்போடுகிறதும்,  {Isa  58:6}

 

பசியுள்ளவனுக்கு  உன்  ஆகாரத்தைப்  பகிர்ந்துகொடுக்கிறதும்,  துரத்துண்ட  சிறுமையானவர்களை  வீட்டிலே  சேர்த்துக்கொள்ளுகிறதும்,  வஸ்திரமில்லாதவனைக்  கண்டால்  அவனுக்கு  வஸ்திரங்  கொடுக்கிறதும்,  உன்  மாம்சமானவனுக்கு  உன்னை  ஒளிக்காமலிருக்கிறதும்  அல்லவோ  எனக்கு  உகந்த  உபவாசம்.  {Isa  58:7}

 

அப்பொழுது  விடியற்கால  வெளுப்பைப்போல  உன்  வெளிச்சம்  எழும்பி,  உன்  சுகவாழ்வு  சீக்கிரத்தில்  துளிர்த்து,  உன்  நீதி  உனக்கு  முன்னாலே  செல்லும்;  கர்த்தருடைய  மகிமை  உன்னைப்  பின்னாலே  காக்கும்.  {Isa  58:8}

 

அப்பொழுது  நீ  கூப்பிடுவாய்,  கர்த்தர்  மறுஉத்தரவு  கொடுப்பார்;  நீ  சத்தமிடுவாய்:  இதோ,  நான்  இருக்கிறேன்  என்று  சொல்லுவார்.  நுகத்தடியையும்,  விரல்  நீட்டுதலையும்,  நிபச்சொல்லையும்,  நீ  உன்  நடுவிலிருந்து  அகற்றி,  {Isa  58:9}

 

பசியுள்ளவனிடத்தில்  உன்  ஆத்துமாவைச்  சாய்த்து,  சிறுமைப்பட்ட  ஆத்துமாவைத்  திருப்தியாக்கினால்,  அப்பொழுது  இருளில்  உன்  வெளிச்சம்  உதித்து,  உன்  அந்தகாரம்  மத்தியானத்தைப்போலாகும்.  {Isa  58:10}

 

கர்த்தர்  நித்தமும்  உன்னை  நடத்தி,  மகா  வறட்சியான  காலங்களில்  உன்  ஆத்துமாவைத்  திருப்தியாக்கி,  உன்  எலும்புகளை  நிணமுள்ளதாக்குவார்;  நீ  நீர்ப்பாய்ச்சலான  தோட்டத்தைப்போலவும்,  வற்றாத  நீரூற்றைப்போலவும்  இருப்பாய்.  {Isa  58:11}

 

உன்னிடத்திலிருந்து  தோன்றினவர்கள்  பூர்வமுதல்  பாழாய்க்கிடந்த  ஸ்தலங்களைக்  கட்டுவார்கள்;  தலைமுறை  தலைமுறையாக  இருக்கும்  அஸ்திபாரங்கள்மேல்  நீ  கட்டுவாய்;  திறப்பானதை  அடைக்கிறவன்  என்றும்,  குடியிருக்கும்படி  பாதைகளைத்  திருத்துகிறவன்  என்றும்  நீ  பெயர்  பெறுவாய்.  {Isa  58:12}

 

என்  பரிசுத்தநாளாகிய  ஓய்வுநாளிலே  உனக்கு  இஷ்டமானதைச்  செய்யாதபடி,  உன்  காலை  விலக்கி,  உன்  வழிகளின்படி  நடவாமலும்,  உனக்கு  இஷ்டமானதைச்  செய்யாமலும்,  உன்  சொந்தப்பேச்சைப்  பேசாமலிருந்து,  ஓய்வுநாளை  மனமகிழ்ச்சியின்  நாளென்றும்,  கர்த்தருடைய  பரிசுத்த  நாளை  மகிமையுள்ள  நாளென்றும்  சொல்லி,  அதை  மகிமையாக  எண்ணுவாயானால்,  {Isa  58:13}

 

அப்பொழுது  கர்த்தரில்  மனமகிழ்ச்சியாயிருப்பாய்;  பூமியின்  உயர்ந்த  இடங்களில்  உன்னை  ஏறியிருக்கும்படி  பண்ணி,  உன்  தகப்பனாகிய  யாக்கோபுடைய<Jacob>  சுதந்தரத்தால்  உன்னைப்  போஷிப்பேன்;  கர்த்தருடைய  வாய்  இதைச்  சொல்லிற்று.  {Isa  58:14}

 

இதோ,  இரட்சிக்கக்கூடாதபடிக்குக்  கர்த்தருடைய  கை  குறுகிப்போகவுமில்லை;  கேட்கக்கூடாதபடிக்கு  அவருடைய  செவி  மந்தமாகவுமில்லை.  {Isa  59:1}

 

உங்கள்  அக்கிரமங்களே  உங்களுக்கும்  உங்கள்  தேவனுக்கும்  நடுவாகப்  பிரிவினை  உண்டாக்குகிறது;  உங்கள்  பாவங்களே  அவர்  உங்களுக்குச்  செவிகொடாதபடிக்கு  அவருடைய  முகத்தை  உங்களுக்கு  மறைக்கிறது.  {Isa  59:2}

 

ஏனென்றால்,  உங்கள்  கைகள்  இரத்தத்தாலும்,  உங்கள்  விரல்கள்  அக்கிரமத்தாலும்  கறைப்பட்டிருக்கிறது;  உங்கள்  உதடுகள்  பொய்யைப்  பேசி,  உங்கள்  நாவு  நியாயக்கேட்டை  வசனிக்கிறது.  {Isa  59:3}

 

நீதியைத்  தேடுகிறவனுமில்லை,  சத்தியத்தின்படி  வழக்காடுகிறவனுமில்லை;  மாயையை  நம்பி,  அபத்தமானதைப்  பேசுகிறார்கள்;  தீமையைக்  கர்ப்பந்தரித்து,  அக்கிரமத்தைப்  பெறுகிறார்கள்.  {Isa  59:4}

 

கட்டுவிரியனின்  முட்டைகளை  அடைகாத்து,  சிலந்தியின்  நெசவுகளை  நெய்கிறார்கள்;  அவைகளின்  முட்டைகளைச்  சாப்பிடுகிறவன்  சாவான்;  அவைகள்  நெருக்கப்பட்டதேயானால்  விரியன்  புறப்படும்.  {Isa  59:5}

 

அவைகளின்  நெசவுகள்  வஸ்திரங்களுக்கேற்றவைகள்  அல்ல;  தங்கள்  கிரியைகளாலே  தங்களை  மூடிக்கொள்ளமாட்டார்கள்;  அவர்கள்  கிரியைகள்  அக்கிரமக்கிரியைகள்;  கொடுமையான  செய்கை  அவர்கள்  கைகளிலிருக்கிறது.  {Isa  59:6}

 

அவர்கள்  கால்கள்  பொல்லாப்புச்  செய்ய  ஓடி,  குற்றமில்லாத  இரத்தத்தைச்  சிந்தத்  தீவிரிக்கிறது;  அவர்கள்  நினைவுகள்  அக்கிரமநினைவுகள்;  பாழ்க்கடிப்பும்  அழிவும்  அவர்கள்  வழிகளிலிருக்கிறது.  {Isa  59:7}

 

சமாதான  வழியை  அறியார்கள்;  அவர்கள்  நடைகளில்  நியாயமில்லை;  தங்கள்  பாதைகளைத்  தாங்களே  கோணலாக்கிக்கொண்டார்கள்;  அவைகளில்  நடக்கிற  ஒருவனும்  சமாதானத்தை  அறியான்.  {Isa  59:8}

 

ஆதலால்,  நியாயம்  எங்களுக்குத்  தூரமாயிருக்கிறது;  நீதி  எங்களைத்  தொடர்ந்து  பிடிக்காது;  வெளிச்சத்துக்குக்  காத்திருந்தோம்,  இதோ,  இருள்;  பிரகாசத்துக்குக்  காத்திருந்தோம்,  ஆனாலும்  அந்தகாரத்திலே  நடக்கிறோம்.  {Isa  59:9}

 

நாங்கள்  குருடரைப்போல்  சுவரைப்  பிடித்து,  கண்ணில்லாதவர்களைப்போல்  தடவுகிறோம்;  இரவில்  இடறுகிறதுபோலப்  பட்டப்பகலிலும்  இடறுகிறோம்;  செத்தவர்களைப்போல்  பாழிடங்களில்  இருக்கிறோம்.  {Isa  59:10}

 

நாங்கள்  அனைவரும்  கரடிகளைப்போல  உறுமி,  புறாக்களைப்போலக்  கூவிக்கொண்டிருக்கிறோம்,  நியாயத்துக்குக்  காத்திருந்தோம்,  அதைக்  காணோம்;  இரட்சிப்புக்குக்  காத்திருந்தோம்,  அது  எங்களுக்குத்  தூரமாயிற்று.  {Isa  59:11}

 

எங்கள்  மீறுதல்கள்  உமக்கு  முன்பாக  மிகுதியாயிருந்து,  எங்கள்  பாவங்கள்  எங்களுக்கு  விரோதமாய்ச்  சாட்சி  சொல்லுகிறது;  எங்கள்  மீறுதல்கள்  எங்களோடே  இருக்கிறது;  எங்கள்  அக்கிரமங்களை  அறிந்திருக்கிறோம்.  {Isa  59:12}

 

கர்த்தருக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணி,  பொய்பேசி,  எங்கள்  தேவனைவிட்டுப்  பின்வாங்கினோம்;  கொடுமையாகவும்  கலகமாகவும்  பேசினோம்;  கள்ளவார்த்தைகளைக்  கர்ப்பந்தரித்து,  இருதயத்திலிருந்து  பிறப்பிக்கப்பண்ணினோம்.  {Isa  59:13}

 

நியாயம்  பின்னிட்டு  அகன்றது;  நீதி  தூரமாய்  நின்றது;  சத்தியம்  வீதியிலே  இடறி,  யதார்த்தம்  வந்து  சேரமாட்டாமற்போகிறது.  {Isa  59:14}

 

சத்தியம்  தள்ளுபடியாயிற்று;  பொல்லாப்பை  விட்டு  விலகுகிறவன்  கொள்ளையாகிறான்;  இதைக்  கர்த்தர்  பார்த்து  நியாயமில்லையென்று  விசனமுள்ளவரானார்.  {Isa  59:15}

 

ஒருவரும்  இல்லையென்று  கண்டு,  விண்ணப்பம்  பண்ணுகிறவன்  இல்லையென்று  ஆச்சரியப்பட்டார்;  ஆதலால்  அவருடைய  புயமே  அவருக்கு  இரட்சிப்பாகி,  அவருடைய  நீதியே  அவரைத்  தாங்குகிறது.  {Isa  59:16}

 

அவர்  நீதியை  மார்க்கவசமாக  அணிந்து,  இரட்சிப்பென்னும்  சீராவைத்  தமது  சிரசில்  தரித்து,  நீதிசரிக்கட்டுதலென்னும்  வஸ்திரங்களை  உடுப்பாக  உடுத்து,  வைராக்கியத்தைச்  சால்வையாகப்  போர்த்துக்கொண்டார்.  {Isa  59:17}

 

கிரியைகளுக்குத்தக்க  பலனை  அளிப்பார்;  தம்முடைய  சத்துருக்களிடத்தில்  உக்கிரத்தைச்  சரிக்கட்டி,  தம்முடைய  பகைஞருக்குத்தக்க  பலனையும்,  தீவுகளுக்குத்தக்க  பலனையும்  சரிக்கட்டுவார்.  {Isa  59:18}

 

அப்பொழுது  சூரியன்  அஸ்தமிக்குந்திசைதொடங்கி  கர்த்தரின்  நாமத்துக்கும்,  சூரியன்  உதிக்குந்திசைதொடங்கி  அவருடைய  மகிமைக்கும்  பயப்படுவார்கள்;  வெள்ளம்போல்  சத்துரு  வரும்போது,  கர்த்தருடைய  ஆவியானவர்  அவனுக்கு  விரோதமாய்க்  கொடியேற்றுவார்.  {Isa  59:19}

 

மீட்பர்  சீயோனுக்கும்<Zion>,  யாக்கோபிலே<Jacob>  மீறுதலைவிட்டுத்  திரும்புகிறவர்களுக்கும்,  வருவார்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  59:20}

 

உன்மேலிருக்கிற  என்  ஆவியும்,  நான்  உன்  வாயில்  அருளிய  என்  வார்த்தைகளும்,  இதுமுதல்  என்றென்றைக்கும்  உன்  வாயிலிருந்தும்,  உன்  சந்ததியின்  வாயிலிருந்தும்,  உன்  சந்ததியினுடைய  சந்ததியின்  வாயிலிருந்தும்  நீங்குவதில்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  இது  எனக்கு  அவர்களோடிருக்கும்  என்  உடன்படிக்கையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  59:21}

 

எழும்பிப்  பிரகாசி;  உன்  ஒளி  வந்தது,  கர்த்தருடைய  மகிமை  உன்மேல்  உதித்தது.  {Isa  60:1}

 

இதோ,  இருள்  பூமியையும்,  காரிருள்  ஜனங்களையும்  மூடும்;  ஆனாலும்  உன்மேல்  கர்த்தர்  உதிப்பார்;  அவருடைய  மகிமை  உன்மேல்  காணப்படும்.  {Isa  60:2}

 

உன்  வெளிச்சத்தினிடத்துக்கு  ஜாதிகளும்,  உதிக்கிற  உன்  ஒளியினிடத்துக்கு  ராஜாக்களும்  நடந்துவருவார்கள்.  {Isa  60:3}

 

சுற்றிலும்  உன்  கண்களை  ஏறெடுத்துப்பார்;  அவர்கள்  எல்லாரும்  ஏகமாய்க்  கூடி  உன்னிடத்திற்கு  வருகிறார்கள்;  உன்  குமாரர்  தூரத்திலிருந்து  வந்து,  உன்  குமாரத்திகள்  உன்  பக்கத்திலே  வளர்க்கப்படுவார்கள்.  {Isa  60:4}

 

அப்பொழுது  நீ  அதைக்  கண்டு  ஓடிவருவாய்;  உன்  இருதயம்  அதிசயப்பட்டுப்  பூரிக்கும்;  கடற்கரையின்  திரளான  கூட்டம்  உன்  வசமாகத்  திரும்பும்,  ஜாதிகளின்  பலத்த  சேனை  உன்னிடத்துக்கு  வரும்.  {Isa  60:5}

 

ஒட்டகங்களின்  ஏராளமும்,  மீதியான்<Midian>  ஏப்பாத்<Ephah>  தேசங்களின்  வேகமான  ஒட்டகங்களும்  உன்னை  மூடும்;  சேபாவிலுள்ளவர்கள்<Sheba>  யாவரும்  பொன்னையும்  தூபவர்க்கத்தையும்  கொண்டுவந்து,  கர்த்தரின்  துதிகளைப்  பிரசித்தப்படுத்துவார்கள்.  {Isa  60:6}

 

கேதாரின்<Kedar>  ஆடுகளெல்லாம்  உன்னிடத்தில்  சேர்க்கப்படும்;  நெபாயோத்தின்<Nebaioth>  கடாக்கள்  உன்னைச்  சேவித்து,  அங்கிகரிக்கப்பட்டதாய்  என்  பலிபீடத்தின்மேல்  ஏறும்;  என்  மகிமையின்  ஆலயத்தை  மகிமைப்படுத்துவேன்.  {Isa  60:7}

 

மேகத்தைப்போலவும்,  தங்கள்  பலகணித்துவாரங்களுக்குத்  தீவிரிக்கிற  புறாக்களைப்போலவும்  பறந்துவருகிற  இவர்கள்  யார்?  {Isa  60:8}

 

தீவுகள்  எனக்குக்  காத்திருக்கும்;  அவர்  உன்னை  மகிமைப்படுத்தினார்  என்று  உன்  பிள்ளைகளையும்,  அவர்களோடேகூட  அவர்கள்  பொன்னையும்,  அவர்கள்  வெள்ளியையும்  உன்  தேவனாகிய  கர்த்தரின்  நாமத்துக்கென்றும்,  இஸ்ரவேலின்<Israel>  பரிசுத்தருக்கென்றும்,  தூரத்திலிருந்து  கொண்டுவர,  தர்ஷீசின்<Tarshish>  கப்பல்களும்  ஏற்கனவே  எனக்குக்  காத்திருக்கும்.  {Isa  60:9}

 

அந்நியரின்  புத்திரர்  உன்  மதில்களைக்  கட்டி,  அவர்களுடைய  ராஜாக்கள்  உன்னைச்  சேவிப்பார்கள்;  என்  கடுங்கோபத்தினால்  உன்னை  அடித்தேன்;  ஆனாலும்  என்  கிருபையினால்  உனக்கு  இரங்கினேன்.  {Isa  60:10}

 

உன்னிடத்துக்கு  ஜாதிகளின்  பலத்த  சேனையைக்  கொண்டுவரும்படிக்கும்,  அவர்களுடைய  ராஜாக்களை  அழைத்துவரும்படிக்கும்,  உன்  வாசல்கள்  இரவும்பகலும்  பூட்டப்படாமல்  எப்பொழுதும்  திறந்திருக்கும்.  {Isa  60:11}

 

உன்னைச்  சேவிக்காத  ஜாதியும்  ராஜ்யமும்  அழியும்;  அந்த  ஜாதிகள்  நிச்சயமாய்ப்  பாழாகும்.  {Isa  60:12}

 

என்  பரிசுத்த  ஸ்தானத்தைச்  சிங்காரிக்கும்படிக்கு,  லீபனோனின்<Lebanon>  மகிமையும்,  தேவதாருவிருட்சங்களும்,  பாய்மர  விருட்சங்களும்,  புன்னைமரங்களுங்கூட  உன்னிடத்திற்குக்  கொண்டுவரப்படும்;  என்  பாதஸ்தானத்தை  மகிமைப்படுத்துவேன்.  {Isa  60:13}

 

உன்னை  ஒடுக்கினவர்களின்  பிள்ளைகளும்  குனிந்து  உன்னிடத்தில்  வந்து,  உன்னை  அசட்டைபண்ணின  யாவரும்  உன்  காலடியில்  பணிந்து,  உன்னைக்  கர்த்தருடைய  நகரம்  என்றும்,  இஸ்ரவேலுடைய<Israel>  பரிசுத்தரின்  சீயோன்<Zion>  என்றும்  சொல்வார்கள்.  {Isa  60:14}

 

நீ  நெகிழப்பட்டதும்,  கைவிடப்பட்டதும்,  ஒருவரும்  கடந்து  நடவாததுமாயிருந்தாய்;  ஆனாலும்  உன்னை  நித்திய  மாட்சிமையாகவும்,  தலைமுறை  தலைமுறையாயிருக்கும்  மகிழ்ச்சியாகவும்  வைப்பேன்.  {Isa  60:15}

 

நீ  ஜாதிகளின்  பாலைக்  குடித்து,  ராஜாக்களின்  முலைப்பாலையும்  உண்டு,  கர்த்தராகிய  நான்  இரட்சகரென்றும்,  யாக்கோபின்<Jacob>  வல்லவர்  உன்  மீட்பரென்றும்  அறிந்துகொள்வாய்.  {Isa  60:16}

 

நான்  வெண்கலத்துக்குப்  பதிலாகப்  பொன்னையும்,  இரும்புக்குப்  பதிலாக  வெள்ளியையும்,  மரங்களுக்குப்  பதிலாக  வெண்கலத்தையும்,  கற்களுக்குப்  பதிலாக  இரும்பையும்  வரப்பண்ணி,  உன்  கண்காணிகளைச்  சமாதானமுள்ளவர்களும்,  உன்  தண்டற்காரரை  நீதியுள்ளவர்களுமாக்குவேன்.  {Isa  60:17}

 

இனிக்  கொடுமை  உன்  தேசத்திலும்,  அழிவும்  நாசமும்  உன்  எல்லைகளிலும்  கேட்கப்படமாட்டாது;  உன்  மதில்களை  இரட்சிப்பென்றும்,  உன்  வாசல்களைத்  துதியென்றும்  சொல்லுவாய்.  {Isa  60:18}

 

இனிச்  சூரியன்  உனக்குப்  பகலிலே  வெளிச்சமாயிராமலும்,  சந்திரன்  தன்  வெளிச்சத்தால்  உனக்குப்  பிரகாசியாமலும்,  கர்த்தரே  உனக்கு  நித்திய  வெளிச்சமும்,  உன்  தேவனே  உனக்கு  மகிமையுமாயிருப்பார்.  {Isa  60:19}

 

உன்  சூரியன்  இனி  அஸ்தமிப்பதுமில்லை;  உன்  சந்திரன்  மறைவதுமில்லை;  கர்த்தரே  உனக்கு  நித்திய  வெளிச்சமாயிருப்பார்;  உன்  துக்கநாட்கள்  முடிந்துபோம்.  {Isa  60:20}

 

உன்  ஜனங்கள்  யாவரும்  நீதிமான்களும்,  என்றைக்கும்  பூமியைச்  சுதந்தரிக்குங்  குடிகளும்,  நான்  நட்ட  கிளைகளும்,  நான்  மகிமைப்படும்படி  என்  கரங்களின்  கிரியைகளுமாயிருப்பார்கள்.  {Isa  60:21}

 

சின்னவன்  ஆயிரமும்,  சிறியவன்  பலத்த  ஜாதியுமாவான்;  கர்த்தராகிய  நான்  ஏற்றகாலத்தில்  இதைத்  தீவிரமாய்  நடப்பிப்பேன்.  {Isa  60:22}

 

கர்த்தராகிய  தேவனுடைய  ஆவியானவர்  என்மேல்  இருக்கிறார்;  சிறுமைப்பட்டவர்களுக்குச்  சுவிசேஷத்தை  அறிவிக்கக்  கர்த்தர்  என்னை  அபிஷேகம்பண்ணினார்;  இருதயம்  நொறுங்குண்டவர்களுக்குக்  காயங்கட்டுதலையும்,  சிறைப்பட்டவர்களுக்கு  விடுதலையையும்,  கட்டுண்டவர்களுக்குக்  கட்டவிழ்த்தலையும்  கூறவும்,  {Isa  61:1}

 

கர்த்தருடைய  அநுக்கிரக  வருஷத்தையும்,  நம்முடைய  தேவன்  நீதியைச்சரிக்கட்டும்  நாளையும்  கூறவும்,  துயரப்பட்ட  அனைவருக்கும்  ஆறுதல்  செய்யவும்,  {Isa  61:2}

 

சீயோனிலே<Zion>  துயரப்பட்டவர்களைச்  சீர்ப்படுத்தவும்,  அவர்களுக்குச்  சாம்பலுக்குப்  பதிலாகச்  சிங்காரத்தையும்,  துயரத்துக்குப்  பதிலாக  ஆனந்த  தைலத்தையும்,  ஒடுங்கின  ஆவிக்குப்  பதிலாகத்  துதியின்  உடையையும்  கொடுக்கவும்,  அவர்  என்னை  அனுப்பினார்;  அவர்கள்  கர்த்தர்  தம்முடைய  மகிமைக்கென்று  நாட்டின  நீதியின்  விருட்சங்களென்னப்படுவார்கள்.  {Isa  61:3}

 

அவர்கள்  நெடுங்காலம்  பாழாய்க்  கிடந்தவைகளைக்  கட்டி,  பூர்வத்தில்  நிர்மூலமானவைகளை  எடுப்பித்து,  தலைமுறை  தலைமுறையாய்  இடிந்துகிடந்த  பாழான  பட்டணங்களைப்  புதிதாய்க்  கட்டுவார்கள்.  {Isa  61:4}

 

மறுஜாதியார்  நின்றுகொண்டு  உங்கள்  மந்தைகளை  மேய்த்து,  அந்நிய  புத்திரர்  உங்கள்  பண்ணையாட்களும்,  உங்கள்  திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள்.  {Isa  61:5}

 

நீங்களோ  கர்த்தரின்  ஆசாரியரென்று  சொல்லப்படுவீர்கள்;  உங்களை  நமது  தேவனுடைய  பணிவிடைக்காரரென்பார்கள்;  நீங்கள்  ஜாதிகளின்  செல்வத்தை  அநுபவித்து,  அவர்கள்  மகிமையைக்கொண்டு  மேன்மைபாராட்டுவீர்கள்.  {Isa  61:6}

 

உங்கள்  வெட்கத்துக்குப்  பதிலாக  இரண்டத்தனையாய்ப்  பலன்  வரும்;  இலச்சைக்குப்  பதிலாகத்  தங்கள்  பாகத்தில்  சந்தோஷப்படுவார்கள்;  அதினிமித்தம்  தங்கள்  தேசத்தில்  இரட்டிப்பான  சுதந்தரம்  அடைவார்கள்;  நித்திய  மகிழ்ச்சி  அவர்களுக்கு  உண்டாகும்.  {Isa  61:7}

 

கர்த்தராகிய  நான்  நியாயத்தை  விரும்பி,  கொள்ளைப்பொருளினால்  இடப்பட்ட  தகனபலியை  வெறுக்கிறேன்;  நான்  அவர்கள்  கிரியையை  உண்மையாக்கி,  அவர்களோடே  நித்திய  உடன்படிக்கை  பண்ணுவேன்.  {Isa  61:8}

 

அவர்கள்  சந்ததியானது  ஜாதிகளின்  நடுவிலும்,  அவர்கள்  சந்தானமானது  ஜனங்களின்  நடுவிலும்  அறியப்பட்டிருக்கும்;  அவர்களைப்  பார்க்கிற  யாவரும்  அவர்கள்  கர்த்தரால்  ஆசீர்வாதம்  பெற்ற  சந்ததியென்று  அறிந்துகொள்வார்கள்.  {Isa  61:9}

 

கர்த்தருக்குள்  பூரிப்பாய்  மகிழுகிறேன்;  என்  தேவனுக்குள்  என்  ஆத்துமா  களிகூர்ந்திருக்கிறது;  மணவாளன்  ஆபரணங்களினால்  தன்னை  அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும்,  மணவாட்டி  நகைகளினால்  தன்னைச்  சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும்  ஒப்பாக,  அவர்  இரட்சிப்பின்  வஸ்திரங்களை  எனக்கு  உடுத்தி,  நீதியின்  சால்வையை  எனக்குத்  தரித்தார்.  {Isa  61:10}

 

பூமி  தன்  பூண்டுகளை  விளைவிப்பதுபோலவும்,  தோட்டம்  தன்னில்  விதைக்கப்பட்டவைகளை  முளைவிப்பதுபோலவும்,  கர்த்தராகிய  ஆண்டவர்  எல்லா  ஜாதிகளுக்கும்  முன்பாக  நீதியையும்  துதியையும்  முளைக்கப்பண்ணுவார்.  {Isa  61:11}

 

சீயோனினிமித்தமும்<Zion>  எருசலேமினிமித்தமும்<Jerusalem>  நான்  மவுனமாயிராமலும்,  அதின்  நீதி  பிரகாசத்தைப்போலவும்,  அதின்  இரட்சிப்பு  எரிகிற  தீவட்டியைப்போலவும்  வெளிப்படுமட்டும்  அமராமலும்  இருப்பேன்.  {Isa  62:1}

 

ஜாதிகள்  உன்  நீதியையும்,  சகல  ராஜாக்களும்  உன்  மகிமையையும்  காண்பார்கள்;  கர்த்தருடைய  வாய்  சொல்லும்  புது  நாமத்தால்  நீ  அழைக்கப்படுவாய்.  {Isa  62:2}

 

நீ  கர்த்தருடைய  கையில்  அலங்காரமான  கிரீடமும்,  உன்  தேவனுடைய  கரத்தில்  ராஜமுடியுமாயிருப்பாய்.  {Isa  62:3}

 

நீ  இனிக்  கைவிடப்பட்டவள்  என்னப்படாமலும்,  உன்  தேசம்  இனிப்  பாழான  தேசமென்னப்படாமலும்,  நீ  எப்சிபா<Hephzibah>  என்றும்,  உன்  தேசம்  பியூலா<Beulah>  என்றும்  சொல்லப்படும்;  கர்த்தர்  உன்மேல்  பிரியமாயிருக்கிறார்;  உன்  தேசம்  வாழ்க்கைப்படும்.  {Isa  62:4}

 

வாலிபன்  கன்னிகையை  விவாகம்பண்ணுவதுபோல,  உன்  மக்கள்  உன்னை  விவாகம்பண்ணுவார்கள்;  மணவாளன்  மணவாட்டியின்மேல்  மகிழ்ச்சியாயிருப்பதுபோல,  உன்  தேவன்  உன்மேல்  மகிழ்ச்சியாயிருப்பார்.  {Isa  62:5}

 

எருசலேமே<Jerusalem>,  உன்  மதில்களின்மேல்  பகல்முழுதும்  இராமுழுதும்  ஒருக்காலும்  மவுனமாயிராத  ஜாமக்காரரைக்  கட்டளையிடுகிறேன்.  கர்த்தரைப்  பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே,  நீங்கள்  அமரிக்கையாயிருக்கலாகாது.  {Isa  62:6}

 

அவர்  எருசலேமை<Jerusalem>  ஸ்திரப்படுத்தி,  பூமியிலே  அதைப்  புகழ்ச்சியாக்கும்வரைக்கும்  அவரை  அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.  {Isa  62:7}

 

இனி  நான்  உன்  தானியத்தை  உன்  சத்துருக்களுக்கு  ஆகாரமாகக்கொடேன்;  உன்  பிரயாசத்தினாலாகிய  உன்  திராட்சரசத்தை  அந்நிய  புத்திரர்  குடிப்பதுமில்லையென்று  கர்த்தர்  தமது  வலதுகரத்தின்மேலும்  தமது  வல்லமையுள்ள  புயத்தின்மேலும்  ஆணையிட்டார்.  {Isa  62:8}

 

அதைச்  சேர்த்தவர்களே  அதைப்  புசித்துக்  கர்த்தரைத்  துதிப்பார்கள்;  அதைக்  கூட்டிவைத்தவர்களே  என்  பரிசுத்த  ஸ்தலத்தின்  பிராகாரங்களில்  அதைக்  குடிப்பார்கள்.  {Isa  62:9}

 

வாசல்கள்  வழியாய்ப்  பிரவேசியுங்கள்,  பிரவேசியுங்கள்;  ஜனத்துக்கு  வழியைச்  செவ்வைப்படுத்துங்கள்;  பாதையை  உயர்த்துங்கள்,  உயர்த்துங்கள்;  அதிலுள்ள  கற்களைப்  பொறுக்கிப்போடுங்கள்;  ஜனங்களுக்காகக்  கொடியை  ஏற்றுங்கள்.  {Isa  62:10}

 

நீங்கள்  சீயோன்<Zion>  குமாரத்தியை  நோக்கி:  இதோ,  உன்  இரட்சிப்பு  வருகிறது;  இதோ,  அவர்  அருளும்  பலன்  அவரோடும்,  அவர்  செய்யும்  பிரதிபலன்  அவர்  முன்பாகவும்  வருகிறது  என்று  சொல்லுங்கள்  என்று,  கர்த்தர்  பூமியின்  கடையாந்தரம்வரைக்கும்  கூறுகிறார்.  {Isa  62:11}

 

அவர்களைப்  பரிசுத்த  ஜனமென்றும்,  கர்த்தரால்  மீட்கப்பட்டவர்களென்றும்  சொல்லுவார்கள்;  நீ  தேடிக்கொள்ளப்பட்டதென்றும்,  கைவிடப்படாத  நகரமென்றும்  பெயர்பெறுவாய்.  {Isa  62:12}

 

ஏதோமிலும்<Edom>  அதிலுள்ள  போஸ்றா<Bozrah>  பட்டணத்திலுமிருந்து,  சாயந்தீர்ந்த  வஸ்திரங்களுடையவராகவும்,  மகத்துவமாய்  உடுத்திருக்கிறவராகவும்,  தமது  மகத்தான  வல்லமையிலே  எழுந்தருளினவராகவும்  வருகிற  இவர்  யார்?  நீதியாய்ப்  பேசி  இரட்சிக்க  வல்லவராகிய  நான்தானே.  {Isa  63:1}

 

உம்முடைய  உடுப்புச்  சிவப்பாகவும்,  உம்முடைய  வஸ்திரங்கள்  ஆலையை  மிதிக்கிறவன்  வஸ்திரங்கள்போலவும்  இருக்கிறதென்ன?  {Isa  63:2}

 

நான்  ஒருவனாய்  ஆலையை  மிதித்தேன்;  ஜனங்களில்  ஒருவனும்  என்னோடிருந்ததில்லை;  நான்  என்  கோபத்திலே  அவர்களை  மிதித்து,  என்  உக்கிரத்திலே  அவர்களை  நசுக்கிப்போட்டேன்;  அதினால்  அவர்கள்  இரத்தம்  என்  வஸ்திரங்களின்மேல்  தெறித்தது,  என்  உடுப்பையெல்லாம்  கறைப்படுத்திக்கொண்டேன்.  {Isa  63:3}

 

நீதியைச்  சரிக்கட்டும்  நாள்  என்  மனதிலிருந்தது;  என்னுடையவர்களை  மீட்கும்  வருஷம்  வந்தது.  {Isa  63:4}

 

நான்  பார்த்தேன்,  துணைசெய்வார்  ஒருவருமில்லை;  தாங்குவார்  ஒருவருமில்லை  என்று  ஆச்சரியப்பட்டேன்;  அப்பொழுது  என்  புயமே  எனக்கு  இரட்சிப்பாகி,  என்  உக்கிரமே  என்னைத்  தாங்கிற்று.  {Isa  63:5}

 

நான்  என்  கோபத்திலே  ஜனங்களை  மிதித்து,  என்  உக்கிரத்திலே  அவர்களை  வெறியாக்கி,  அவர்கள்  சாரத்தைத்  தரையிலே  இறங்கப்பண்ணினேன்.  {Isa  63:6}

 

கர்த்தர்  எங்களுக்குச்  செய்தருளின  எல்லாவற்றிற்கும்  தக்கதாகவும்,  அவர்  தம்முடைய  இரக்கங்களின்படியும்  தம்முடைய  திரளான  தயவுகளின்படியும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்துக்குச்  செய்த  மகா  நன்மைக்குத்தக்கதாகவும்,  கர்த்தருடைய  கிரியைகளையும்,  கர்த்தருடைய  துதிகளையும்  பிரஸ்தாபம்பண்ணுவேன்.  {Isa  63:7}

 

அவர்கள்  என்  ஜனந்தானென்றும்,  அவர்கள்  வஞ்சனைசெய்யாதிருக்கும்  பிள்ளைகளென்றும்  சொல்லி,  அவர்களுக்கு  இரட்சகரானார்.  {Isa  63:8}

 

அவர்களுடைய  எல்லா  நெருக்கத்திலும்  அவர்  நெருக்கப்பட்டார்;  அவருடைய  சமுகத்தின்  தூதனானவர்  அவர்களை  இரட்சித்தார்;  அவர்  தமது  அன்பினிமித்தமும்,  தமது  பரிதாபத்தினிமித்தமும்  அவர்களை  மீட்டு,  பூர்வநாட்களிலெல்லாம்  அவர்களைத்  தூக்கிச்  சுமந்துவந்தார்.  {Isa  63:9}

 

அவர்களோ  கலகம்பண்ணி,  அவருடைய  பரிசுத்த  ஆவியை  விசனப்படுத்தினார்கள்;  அதினால்  அவர்  அவர்களுக்குச்  சத்துருவாய்  மாறி,  அவரே  அவர்களுக்கு  விரோதமாய்  யுத்தம்பண்ணினார்.  {Isa  63:10}

 

ஆகிலும்  அவர்  பூர்வநாட்களையும்,  மோசேயையும்<Moses>,  தம்முடைய  ஜனத்தையும்  நினைவுகூர்ந்தார்;  ஆனாலும்  அவர்களையும்,  தமது  மந்தையின்  மேய்ப்பனையும்  சமுத்திரத்திலிருந்து  ஏறப்பண்ணினவர்  இப்பொழுது  எங்கே?  {Isa  63:11}

 

அவர்கள்  நடுவிலே  தம்முடைய  பரிசுத்த  ஆவியை  இருக்கக்  கட்டளையிட்டு,  மோசேயின்<Moses>  வலதுகையைக்கொண்டு  அவர்களைத்  தமது  மகிமையின்  புயத்தினாலே  நடத்தி,  தமக்கு  நித்தியகீர்த்தியை  உண்டாக்க  அவர்களுக்கு  முன்பாகத்  தண்ணீரைப்பிளந்து,  {Isa  63:12}

 

ஒரு  குதிரை  வனாந்தரவெளியிலே  நடக்கிறதுபோல,  அவர்கள்  இடறாதபடிக்கு  அவர்களை  ஆழங்களில்  நடக்கப்பண்ணினவர்  எங்கே?  {Isa  63:13}

 

கர்த்தருடைய  ஆவியானவர்  அவர்களைப்  பள்ளத்தாக்கிலே  போய்  இறங்குகிற  மிருகஜீவன்களைப்போல  இளைப்பாறப்பண்ணினார்;  இப்படியே  தேவரீர்,  உமக்கு  மகிமையுள்ள  கீர்த்தியை  உண்டாக்கும்படி  உம்முடைய  ஜனத்தை  நடத்தினீர்.  {Isa  63:14}

 

தேவரீர்  பரலோகத்திலிருந்து  கண்ணோக்கி,  பரிசுத்தமும்  மகிமையுமுள்ள  உம்முடைய  வாசஸ்தலத்திலிருந்து  பாரும்,  உம்முடைய  வைராக்கியமும்,  உம்முடைய  வல்லமையும்  எங்கே?  உம்முடைய  உள்ளத்தின்  கொதிப்பையும்,  உம்முடைய  மன  உருக்கத்தையும்  எனக்கு  முன்பாக  அடக்கிக்கொள்ளுகிறீரோ?  {Isa  63:15}

 

தேவரீர்  எங்கள்  பிதாவாயிருக்கிறீர்;  ஆபிரகாம்<Abraham>  எங்களை  அறியான்,  இஸ்ரவேலுக்கு<Israel>  நாங்கள்  அறியப்பட்டவர்களுமல்ல;  கர்த்தாவே,  நீர்  எங்கள்  பிதாவும்,  எங்கள்  மீட்பருமாயிருக்கிறீர்;  இது  பூர்வகாலமுதல்  உம்முடைய  நாமம்.  {Isa  63:16}

 

கர்த்தாவே,  நீர்  எங்களை  உம்முடைய  வழிகளைவிட்டுத்  தப்பிப்போகப்பண்ணி,  எங்கள்  இருதயத்தை  உமக்குப்  பயப்படாதபடிக்குக்  கடினப்படுத்துவானேன்?  உம்முடைய  ஊழியக்காரரினிமித்தமும்,  உம்முடைய  சுதந்தரமான  கோத்திரங்களினிமித்தமும்  திரும்பியருளும்.  {Isa  63:17}

 

பரிசுத்தமுள்ள  உமது  ஜனங்கள்  கொஞ்சக்காலமாத்திரம்  அதைச்  சுதந்தரித்தார்கள்;  எங்கள்  சத்துருக்கள்  உம்முடைய  பரிசுத்த  ஸ்தலத்தை  மிதித்துப்போட்டார்கள்.  {Isa  63:18}

 

நாங்களே  உம்முடையவர்கள்,  அவர்களை  ஒருபொழுதும்  நீர்  ஆண்டதில்லை;  அவர்களுக்கு  உமது  நாமம்  தரிக்கப்பட்டதுமில்லை.  {Isa  63:19}

 

,  உமது  நாமத்தைச்  சத்துருக்களுக்குத்  தெரியப்பண்ணுவதற்கும்,  ஜாதிகள்  உம்முடைய  சந்நிதிக்கு  முன்  தத்தளிப்பதற்கும்,  {Isa  64:1}

 

தேவரீர்  வானங்களைக்  கிழித்திறங்கி,  உருக்கும்  அக்கினி  எரியுமாப்போலவும்,  அக்கினி  தண்ணீரைப்  பொங்கப்பண்ணுமாப்போலவும்,  பர்வதங்கள்  உமக்கு  முன்பாக  உருகும்படிசெய்யும்.  {Isa  64:2}

 

நாங்கள்  எதிர்பார்த்திராத  பயங்கரமான  காரியங்களை  நீர்  செய்தபோது,  நீர்  இறங்கினீர்,  உமது  சந்நிதியில்  பர்வதங்கள்  உருகிப்போயின.  {Isa  64:3}

 

தேவனே,  உமக்குக்  காத்திருக்கிறவர்களுக்கு  நீர்  செய்பவைகளை,  நீரேயல்லாமல்  உலகத்தோற்றம்முதற்கொண்டு  ஒருவரும்  கேட்டதுமில்லை,  செவியால்  உணர்ந்ததுமில்லை,  அவைகளைக்  கண்டதுமில்லை.  {Isa  64:4}

 

மகிழ்ச்சியாய்  நீதியைச்  செய்கிறவர்களையும்,  உம்முடைய  வழிகளில்  உம்மை  நினைக்கிறவர்களையும்  சந்திக்கிறீர்;  நாங்களோ,  அவைகளுக்கு  விரோதமாக  எப்பொழுதும்  பாவஞ்செய்தபடியினாலே,  தேவரீர்  கடுங்கோபங்கொண்டீர்;  இன்னமும்  தப்பியிருக்கிறோம்.  {Isa  64:5}

 

நாங்கள்  அனைவரும்  தீட்டானவர்கள்போல  இருக்கிறோம்;  எங்களுடைய  நீதிகளெல்லாம்  அழுக்கான  கந்தைபோல  இருக்கிறது,  நாங்கள்  அனைவரும்  இலைகளைப்போல்  உதிருகிறோம்;  எங்கள்  அக்கிரமங்கள்  காற்றைப்போல்  எங்களை  அடித்துக்கொண்டுபோகிறது.  {Isa  64:6}

 

உமது  நாமத்தை  நோக்கிக்  கூப்பிடுகிறவனும்,  உம்மைப்  பற்றிக்கொள்ளும்படிக்கு  விழித்துக்கொள்ளுகிறவனும்  இல்லை;  தேவரீர்  உம்முடைய  முகத்தை  எங்களை  விட்டு  மறைத்து,  எங்கள்  அக்கிரமங்களினிமித்தம்  எங்களைக்  கரையப்பண்ணுகிறீர்.  {Isa  64:7}

 

இப்பொழுதும்  கர்த்தாவே,  நீர்  எங்களுடைய  பிதா,  நாங்கள்  களிமண்;  நீர்  எங்களை  உருவாக்குகிறவர்,  நாங்கள்  அனைவரும்  உமது  கரத்தின்  கிரியை.  {Isa  64:8}

 

கர்த்தாவே,  அதிகமாய்க்  கடுங்கோபங்கொள்ளாமலும்,  என்றைக்கும்  அக்கிரமத்தை  நினைத்துக்கொள்ளாமலும்  இருப்பீராக;  இதோ,  பாரும்,  நாங்கள்  அனைவரும்  உம்முடைய  ஜனங்களே.  {Isa  64:9}

 

உமது  பரிசுத்த  பட்டணங்கள்  வனாந்தரமாயின;  சீயோன்<Zion>  வனாந்தரமாயிற்று;  எருசலேம்<Jerusalem>  பாழாய்க்கிடக்கிறது.  {Isa  64:10}

 

எங்கள்  பிதாக்கள்  உம்மைத்  துதித்த  பரிசுத்தமும்  மகிமையுமான  எங்களுடைய  ஆலயம்  அக்கினிக்கு  இரையாகி,  இன்பமான  எங்களுடைய  ஸ்தானங்களெல்லாம்  பாழாயின.  {Isa  64:11}

 

கர்த்தாவே,  இவைகள்  இப்படியிருந்தும்  அடக்கிக்கொண்டிருப்பீரோ?  மவுனமாயிருந்து,  அதிகமாய்  எங்களைச்  சிறுமைப்படுத்துவீரோ?  {Isa  64:12}

 

என்னைக்குறித்து  விசாரித்துக்  கேளாதிருந்தவர்களாலே  தேடப்பட்டேன்;  என்னைத்  தேடாதிருந்தவர்களாலே  கண்டறியப்பட்டேன்;  என்னுடைய  நாமம்  விளங்காதிருந்த  ஜாதியை  நோக்கி:  இதோ,  இங்கே  இருக்கிறேன்  என்றேன்.  {Isa  65:1}

 

நலமல்லாத  வழியிலே  தங்கள்  நினைவுகளின்படி  நடக்கிற  முரட்டாட்டமான  ஜனத்தண்டைக்கு  நாள்  முழுதும்  என்  கைகளை  நீட்டினேன்.  {Isa  65:2}

 

அந்த  ஜனங்கள்  என்  சந்நிதியிலே  நித்தம்  எனக்குக்  கோபமுண்டாக்கி,  தோட்டங்களிலே  பலியிட்டு,  செங்கற்களின்மேல்  தூபங்காட்டி,  {Isa  65:3}

 

பிரேதக்குழிகளண்டையில்  உட்கார்ந்து,  பாழான  ஸ்தலங்களில்  இராத்தங்கி,  பன்றியிறைச்சியைத்  தின்று,  தங்கள்  பாத்திரங்களில்  அருவருப்பானவைகளின்  ஆணத்தை  வைத்திருந்து:  {Isa  65:4}

 

நீ  உன்மட்டிலிரு,  என்  சமீபத்தில்  வராதே,  உன்னைப்பார்க்கிலும்  நான்  பரிசுத்தன்  என்று  சொல்லுகிறார்கள்;  இவர்கள்  என்  கோபத்தாலாகிய  புகையும்,  நாள்முழுதும்  எரிகிற  அக்கினியுமாயிருப்பார்கள்.  {Isa  65:5}

 

இதோ,  அது  எனக்கு  முன்பாக  எழுதியிருக்கிறது;  நான்  மவுனமாயிராமல்  சரிக்குச்  சரிக்கட்டுவேன்.  {Isa  65:6}

 

உங்கள்  அக்கிரமங்களுக்கும்  மலைகளில்  தூபங்காட்டி,  மேடைகளின்மேல்  என்னை  நிந்தித்த  உங்கள்  பிதாக்களுடைய  அக்கிரமங்களுக்கும்  தக்கதாக  அவர்கள்  மடியிலே  சரிக்கட்டுவேன்;  நான்  அவர்கள்  முந்தின  செய்கையின்  பலனை  அவர்கள்  மடியிலே  அளப்பேனென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  65:7}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  ஒரு  திராட்சக்குலையில்  இரசம்  காணப்படும்போது  அதை  அழிக்காதே,  அதிலே  ஆசீர்வாதம்  உண்டென்று  சொல்லுகிறபடி,  நான்  என்  ஊழியக்காரரினிமித்தம்  அனைத்தையும்  அழிக்காதபடி  செய்வேன்.  {Isa  65:8}

 

யாக்கோபிலிருந்து<Jacob>  ஒரு  வித்தையும்,  யூதாவிலிருந்து<Judah>  என்  மலைகளைச்  சுதந்தரிப்பவரையும்  எழும்பப்பண்ணுவேன்;  நான்  தெரிந்துகொண்டவர்கள்  அதைச்  சுதந்தரித்துக்கொண்டு,  என்  ஊழியக்காரர்  அங்கே  வாசம்பண்ணுவார்கள்.  {Isa  65:9}

 

என்னைத்  தேடுகிற  என்  ஜனத்துக்குச்  சாரோன்<Sharon>  ஆட்டுத்தொழுவமாகவும்,  ஆகோரின்<Achor>  பள்ளத்தாக்கு  மாட்டுக்கிடையாகவும்  இருக்கும்.  {Isa  65:10}

 

ஆனாலும்  கர்த்தரை  விட்டு,  என்  பரிசுத்த  பர்வதத்தை  மறந்து,  காத்  என்னும்  தெய்வத்துக்குப்  பந்தியை  ஆயத்தம்பண்ணி,  மேனி  என்னும்  தெய்வத்துக்குப்  பானபலியை  நிறைய  வார்க்கிறவர்களே,  {Isa  65:11}

 

உங்களை  நான்  பட்டயத்துக்கு  எண்ணிக்கொடுப்பேன்;  நீங்கள்  அனைவரும்  கொலைசெய்யப்படக்  குனிவீர்கள்;  நான்  கூப்பிட்டும்  நீங்கள்  மறுஉத்தரவு  கொடுக்கவில்லை;  நான்  பேசியும்  நீங்கள்  கேட்கவில்லை;  என்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  எனக்குப்  பிரியமல்லாததைத்  தெரிந்துகொண்டீர்கள்.  {Isa  65:12}

 

ஆதலால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  இதோ,  என்  ஊழியக்காரர்  புசிப்பார்கள்,  நீங்களோ  பசியாயிருப்பீர்கள்;  இதோ,  என்  ஊழியக்காரர்  குடிப்பார்கள்,  நீங்களோ  தாகமாயிருப்பீர்கள்;  இதோ,  என்  ஊழியக்காரர்  சந்தோஷப்படுவார்கள்,  நீங்களோ  வெட்கப்படுவீர்கள்.  {Isa  65:13}

 

இதோ,  என்  ஊழியக்காரர்  மனமகிழ்ச்சியினாலே  கெம்பீரிப்பார்கள்,  நீங்களோ  மனநோவினாலே  அலறி,  ஆவியின்  முறிவினாலே  புலம்புவீர்கள்.  {Isa  65:14}

 

நான்  தெரிந்துகொண்டவர்களுக்கு  நீங்கள்  உங்கள்  நாமத்தைச்  சாபவார்த்தையாகப்  பின்வைத்துப்போவீர்கள்;  கர்த்தராகிய  ஆண்டவர்  உன்னைக்  கொன்றுபோட்டு,  தம்முடைய  ஊழியக்காரருக்கு  வேறே  நாமத்தைத்  தரிப்பார்.  {Isa  65:15}

 

அதினாலே  பூமியிலே  தன்னை  ஆசீர்வதிக்கிறவன்  சத்திய  தேவனுக்குள்  தன்னை  ஆசீர்வதிப்பான்;  பூமியிலே  ஆணையிடுகிறவன்  சத்திய  தேவன்பேரில்  ஆணையிடுவான்;  முந்தின  இடுக்கண்கள்  மறக்கப்பட்டு,  அவைகள்  என்  கண்களுக்கு  மறைந்துபோயின.  {Isa  65:16}

 

இதோ,  நான்  புதிய  வானத்தையும்  புதிய  பூமியையும்  சிருஷ்டிக்கிறேன்;  முந்தினவைகள்  இனி  நினைக்கப்படுவதுமில்லை,  மனதிலே  தோன்றுவதுமில்லை.  {Isa  65:17}

 

நான்  சிருஷ்டிக்கிறதினாலே  நீங்கள்  என்றென்றைக்கும்  மகிழ்ந்து  களிகூர்ந்திருங்கள்;  இதோ,  எருசலேமைக்<Jerusalem>  களிகூருதலாகவும்,  அதின்  ஜனத்தை  மகிழ்ச்சியாகவும்  சிருஷ்டிக்கிறேன்.  {Isa  65:18}

 

நான்  எருசலேமின்மேல்<Jerusalem>  களிகூர்ந்து,  என்  ஜனத்தின்மேல்  மகிழ்ச்சியாயிருப்பேன்;  அழுகையின்  சத்தமும்,  கூக்குரலின்  சத்தமும்  அதில்  இனிக்  கேட்கப்படுவதில்லை.  {Isa  65:19}

 

அங்கே  இனி  அற்ப  ஆயுசுள்ள  பாலகனும்,  தன்  நாட்கள்  பூரணமாகாத  கிழவனும்  உண்டாயிரார்கள்;  நூறு  வயதுசென்று  மரிக்கிறவனும்  வாலிபனென்று  எண்ணப்படுவான்,  நூறு  வயதுள்ளவனாகிய  பாவியோ  சபிக்கப்படுவான்.  {Isa  65:20}

 

வீடுகளைக்  கட்டி,  அவைகளில்  குடியிருப்பார்கள்,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  அவைகளின்  கனியைப்  புசிப்பார்கள்.  {Isa  65:21}

 

அவர்கள்  கட்டுகிறதும்,  வேறொருவர்  குடியிருக்கிறதும்,  அவர்கள்  நாட்டுகிறதும்,  வேறொருவர்  கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை;  ஏனெனில்  விருட்சத்தின்  நாட்களைப்போல  என்  ஜனத்தின்  நாட்களிருக்கும்;  நான்  தெரிந்துகொண்டவர்கள்  தங்கள்  கைகளின்  கிரியைகளை  நெடுநாளாய்  அநுபவிப்பார்கள்.  {Isa  65:22}

 

அவர்கள்  விருதாவாக  உழைப்பதில்லை;  அவர்கள்  துன்பமுண்டாகப்  பிள்ளைகளைப்  பெறுவதுமில்லை;  அவர்களும்,  அவர்களோடேகூட  அவர்கள்  சந்தானமும்  கர்த்தராலே  ஆசீர்வதிக்கப்பட்ட  சந்ததியாயிருப்பார்கள்.  {Isa  65:23}

 

அப்பொழுது  அவர்கள்  கூப்பிடுகிறதற்குமுன்னே  நான்  மறுஉத்தரவு  கொடுப்பேன்;  அவர்கள்  பேசும்போதே  நான்  கேட்பேன்.  {Isa  65:24}

 

ஓனாயும்  ஆட்டுக்குட்டியும்  ஒருமித்து  மேயும்;  சிங்கம்  மாட்டைப்போல  வைக்கோலைத்  தின்னும்;  புழுதி  சர்ப்பத்துக்கு  இரையாகும்;  என்  பரிசுத்த  பர்வதமெங்கும்  அவைகள்  தீங்குசெய்வதுமில்லை,  கேடுண்டாக்குவதுமில்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  65:25}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  வானம்  எனக்குச்  சிங்காசனம்,  பூமி  எனக்குப்  பாதபடி;  நீங்கள்  எனக்குக்  கட்டும்  ஆலயம்  எப்படிப்பட்டது?  நான்  தங்கியிருக்கும்  ஸ்தலம்  எப்படிப்பட்டது?  {Isa  66:1}

 

என்னுடைய  கரம்  இவைகளையெல்லாம்  சிருஷ்டித்ததினால்  இவைகளெல்லாம்  உண்டாயின  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆனாலும்  சிறுமைப்பட்டு,  ஆவியில்  நொறுங்குண்டு,  என்  வசனத்துக்கு  நடுங்குகிறவனையே  நோக்கிப்பார்ப்பேன்.  {Isa  66:2}

 

மாட்டை  வெட்டுகிறவன்  மனுஷனைக்  கொல்லுகிறவனாகவும்,  ஆட்டைப்  பலியிடுகிறவன்  நாயைக்  கழுத்தறுக்கிறவனாகவும்,  காணிக்கையைப்  படைக்கிறவன்  பன்றி  இரத்தத்தைப்  படைக்கிறவனாகவும்,  தூபங்காட்டுகிறவன்  விக்கிரகத்தை  ஸ்தோத்திரிக்கிறவனாகவும்  இருக்கிறான்;  இவர்கள்  தங்கள்  வழிகளையே  தெரிந்துகொள்ளுகிறார்கள்;  இவர்களுடைய  ஆத்துமா  தங்கள்  அருவருப்புகளின்மேல்  விருப்பமாயிருக்கிறது.  {Isa  66:3}

 

நான்  கூப்பிட்டும்  மறுஉத்தரவு  கொடுக்கிறவனில்லாமலும்,  நான்  பேசியும்  அவர்கள்  கேளாமலும்,  அவர்கள்  என்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்து,  நான்  விரும்பாததைத்  தெரிந்துகொண்டதினிமித்தம்,  நானும்  அவர்களுடைய  ஆபத்தைத்  தெரிந்துகொண்டு,  அவர்களுடைய  திகில்களை  அவர்கள்மேல்  வரப்பண்ணுவேன்.  {Isa  66:4}

 

கர்த்தருடைய  வசனத்துக்கு  நடுங்குகிறவர்களே,  அவருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  என்  நாமத்தினிமித்தம்  உங்களைப்  பகைத்து,  உங்களை  அப்புறப்படுத்துகிற  உங்கள்  சகோதரர்,  கர்த்தர்  மகிமைப்படுவாராக  என்கிறார்களே;  அவர்  உங்களுக்குச்  சந்தோஷம்  உண்டாகும்படி  காணப்படுவார்;  அவர்களோ  வெட்கப்படுவார்கள்.  {Isa  66:5}

 

நகரத்திலிருந்து  அமளியின்  இரைச்சலும்  தேவாலயத்திலிருந்து  சத்தமும்  கேட்கப்படும்;  அது  தமது  சத்துருக்களுக்குச்  சரிக்குச்  சரிக்கட்டுகிற  கர்த்தருடைய  சத்தந்தானே.  {Isa  66:6}

 

பிரசவவேதனைப்படுமுன்  பெற்றாள்,  கர்ப்பவேதனை  வருமுன்  ஆண்பிள்ளையைப்  பெற்றாள்.  {Isa  66:7}

 

இப்படிப்பட்டவைகளைக்  கேள்விப்பட்டது  யார்?  இப்படிப்பட்டவைகளைக்  கண்டது  யார்?  ஒரு  தேசத்துக்கு  ஒரேநாளில்  பிள்ளைப்பேறு  வருமோ?  ஒரு  ஜாதி  ஒருமிக்கப்  பிறக்குமோ?  சீயோனோவெனில்<Zion>,  ஒருமிக்க  வேதனைப்பட்டும்,  தன்  குமாரரைப்  பெற்றும்  இருக்கிறது.  {Isa  66:8}

 

பெறப்பண்ணுகிறவராகிய  நான்  பெறச்செய்யாமல்  இருப்பேனோ  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய  நான்  பிரசவத்தைத்  தடுப்பேனோ  என்று  உன்  தேவன்  சொல்லுகிறார்.  {Isa  66:9}

 

எருசலேமை<Jerusalem>  நேசிக்கிற  நீங்களெல்லாரும்  அவளோடேகூடச்  சந்தோஷப்பட்டு,  அவளைக்குறித்துக்  களிகூருங்கள்;  அவள்நிமித்தம்  துக்கித்திருந்த  நீங்களெல்லாரும்  அவளோடேகூட  மிகவும்  மகிழுங்கள்.  {Isa  66:10}

 

நீங்கள்  அவளுடைய  ஆறுதல்களின்  முலைப்பாலை  உண்டு  திருப்தியாகி,  நீங்கள்  சூப்பிக்குடித்து,  அவளுடைய  மகிமையின்  பிரகாசத்தினால்  மனமகிழ்ச்சியாகுங்கள்;  {Isa  66:11}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  சமாதானத்தை  ஒரு  நதியைப்போலவும்,  ஜாதிகளின்  மகிமையைப்  புரண்டு  ஓடுகிற  ஆற்றைப்போலவும்  அவளிடமாகப்  பாயும்படி  செய்கிறேன்;  அப்பொழுது  நீங்கள்  முலைப்பால்  குடிப்பீர்கள்;  இடுப்பில்  வைத்துச்  சுமக்கப்படுவீர்கள்;  முழங்காலில்  வைத்துத்  தாலாட்டப்படுவீர்கள்.  {Isa  66:12}

 

ஒருவனை  அவன்  தாய்  தேற்றுவதுபோல்  நான்  உங்களைத்  தேற்றுவேன்;  நீங்கள்  எருசலேமிலே<Jerusalem>  தேற்றப்படுவீர்கள்.  {Isa  66:13}

 

நீங்கள்  அதைக்  காணும்போது,  உங்கள்  இருதயம்  மகிழ்ந்து,  உங்கள்  எலும்புகள்  பசும்புல்லைப்  போலச்  செழிக்கும்;  அப்பொழுது  கர்த்தருடைய  ஊழியக்காரரிடத்தில்  அவருடைய  கரமும்,  அவருடைய  சத்துருக்களிடத்தில்  அவருடைய  சினமும்  அறியப்படும்.  {Isa  66:14}

 

இதோ,  தம்முடைய  கோபத்தை  உக்கிரமாகவும்,  தம்முடைய  கடிந்துகொள்ளுதலை  அக்கினிஜுவாலையாகவும்  செலுத்தக்  கர்த்தர்  அக்கினியோடும்  வருவார்,  பெருங்காற்றைப்போன்ற  தம்முடைய  இரதங்களோடும்  வருவார்.  {Isa  66:15}

 

கர்த்தர்  அக்கினியாலும்,  தமது  பட்டயத்தாலும்,  மாம்சமான  எல்லாரோடும்  வழக்காடுவார்;  கர்த்தரால்  கொலையுண்டவர்கள்  அநேகராயிருப்பார்கள்.  {Isa  66:16}

 

தங்களைத்  தாங்களே  பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும்,  தோப்புகளின்  நடுவிலே  தங்களைத்  தாங்களே  ஒருவர்பின்  ஒருவராய்ச்  சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும்,  பன்றியிறைச்சியையும்,  அருவருப்பானதையும்,  எலியையும்  சாப்பிடுகிறவர்களும்  ஏகமாய்ச்  சங்கரிக்கப்படுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  66:17}

 

நான்  அவர்கள்  கிரியைகளையும்,  அவர்கள்  நினைவுகளையும்  அறிந்திருக்கிறேன்;  நான்  சகல  ஜாதியாரையும்  பாஷைக்காரரையுங்  கூட்டிச்சேர்க்குங்காலம்  வரும்;  அவர்கள்  வந்து  என்  மகிமையைக்  காண்பார்கள்.  {Isa  66:18}

 

நான்  அவர்களில்  ஒரு  அடையாளத்தைக்  கட்டளையிடுவேன்;  அவர்களில்  தப்பினவர்களை,  என்  கீர்த்தியைக்  கேளாமலும்,  என்  மகிமையைக்  காணாமலுமிருக்கிற  ஜாதிகளின்  தேசங்களாகிய  தர்ஷீசுக்கும்<Tarshish>,  வில்வீரர்  இருக்கிற  பூலுக்கும்<Pul>,  லூதுக்கும்<Lud>,  தூபாலுக்கும்<Tubal>,  யாவானுக்கும்<Javan>,  தூரத்திலுள்ள  தீவுகளுக்கும்  அனுப்புவேன்;  அவர்கள்  என்  மகிமையை  ஜாதிகளுக்குள்ளே  அறிவிப்பார்கள்.  {Isa  66:19}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  சுத்தமான  பாத்திரத்தில்  காணிக்கையைக்  கர்த்தருடைய  ஆலயத்துக்குக்  கொண்டுவருகிறதுபோல,  உங்கள்  சகோதரரெல்லாரையும்  அவர்கள்  குதிரைகளின்மேலும்,  இரதங்களின்மேலும்,  குலாரிவண்டில்களின்மேலும்,  கோவேறுகழுதைகளின்மேலும்,  வேகமான  ஒட்டகங்களின்மேலும்,  சகல  ஜாதிகளிடத்திலுமிருந்து  எருசலேமிலுள்ள<Jerusalem>  கர்த்தருக்குக்  காணிக்கையாக  என்  பரிசுத்த  பர்வதத்துக்குக்  கொண்டுவருவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  66:20}

 

அவர்களிலும்  சிலரை  ஆசாரியராகவும்  லேவியராகவும்<Levites>  தெரிந்துகொள்வேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  66:21}

 

நான்  படைக்கப்போகிற  புதிய  வானமும்  புதிய  பூமியும்  எனக்கு  முன்பாக  நிற்பதுபோல,  உங்கள்  சந்ததியும்,  உங்கள்  நாமமும்  நிற்குமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  66:22}

 

அப்பொழுது:  மாதந்தோறும்,  ஓய்வுநாள்தோறும்,  மாம்சமான  யாவரும்  எனக்கு  முன்பாகத்  தொழுதுகொள்வார்களென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Isa  66:23}

 

அவர்கள்  வெளியே  போய்  எனக்கு  விரோதமாய்ப்  பாதகஞ்செய்த  மனுஷருடைய  பிரேதங்களைப்  பார்ப்பார்கள்;  அவர்களுடைய  பூச்சி  சாகாமலும்,  அவர்களுடைய  அக்கினி  அவியாமலும்  இருக்கும்;  அவர்கள்  மாம்சமான  யாவருக்கும்  அரோசிகமாயிருப்பார்கள்.  {Isa  66:24}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!