Friday, December 27, 2019

எபிரெயர்

பூர்வகாலங்களில்  பங்குபங்காகவும்  வகைவகையாகவும்,  தீர்க்கதரிசிகள்  மூலமாய்ப்  பிதாக்களுக்குத்  திருவுளம்  பற்றின  தேவன்,  {Heb  1:1}

 

இந்தக்  கடைசி  நாட்களில்  குமாரன்  மூலமாய்  நமக்குத்  திருவுளம்பற்றினார்;  இவரைச்  சர்வத்துக்கும்  சுதந்தரவாளியாக  நியமித்தார்,  இவரைக்கொண்டு  உலகங்களையும்  உண்டாக்கினார்.  {Heb  1:2}

 

இவர்  அவருடைய  மகிமையின்  பிரகாசமும்,  அவருடைய  தன்மையின்  சொரூபமுமாயிருந்து,  சர்வத்தையும்  தம்முடைய  வல்லமையுள்ள  வசனத்தினாலே  தாங்குகிறவராய்,  தம்மாலேதாமே  நம்முடைய  பாவங்களை  நீக்கும்  சுத்திகரிப்பை  உண்டுபண்ணி,  உன்னதத்திலுள்ள  மகத்துவமானவருடைய  வலதுபாரிசத்திலே  உட்கார்ந்தார்.  {Heb  1:3}

 

இவர்  தேவதூதரைப்பார்க்கிலும்  எவ்வளவு  விசேஷித்த  நாமத்தைச்  சுதந்தரித்துக்கொண்டாரோ,  அவ்வளவு  அதிகமாய்  அவர்களிலும்  மேன்மையுள்ளவரானார்.  {Heb  1:4}

 

எப்படியெனில்,  நீர்  என்னுடைய  குமாரன்,  இன்று  நான்  உம்மை  ஜெநிப்பித்தேன்  என்றும்;  நான்  அவருக்குப்  பிதாவாயிருப்பேன்,  அவர்  எனக்குக்  குமாரனாயிருப்பார்  என்றும்,  அவர்  தூதர்களில்  யாருக்காவது  எப்போதாகிலும்  சொன்னதுண்டா?  {Heb  1:5}

 

மேலும்,  தமது  முதற்பேறானவரை  உலகத்தில்  பிரவேசிக்கச்செய்தபோது:  தேவதூதர்  யாவரும்  அவரைத்  தொழுதுகொள்ளக்கடவர்கள்  என்றார்.  {Heb  1:6}

 

தேவதூதரைக்குறித்தோ:  தம்முடைய  தூதர்களைக்  காற்றுகளாகவும்,  தம்முடைய  ஊழியக்காரரை  அக்கினிஜுவாலைகளாகவும்  செய்கிறார்  என்று  சொல்லியிருக்கிறது.  {Heb  1:7}

 

குமாரனை  நோக்கி:  தேவனே,  உம்முடைய  சிங்காசனம்  என்றென்றைக்குமுள்ளது,  உம்முடைய  ராஜ்யத்தின்  செங்கோல்  நீதியுள்ள  செங்கோலாயிருக்கிறது.  {Heb  1:8}

 

நீர்  நீதியை  விரும்பி,  அக்கிரமத்தை  வெறுத்திருக்கிறீர்;  ஆதலால்,  தேவனே,  உம்முடைய  தேவன்  உமது  தோழரைப்பார்க்கிலும்  உம்மை  ஆனந்த  தைலத்தினால்  அபிஷேகம்பண்ணினார்  என்றும்;  {Heb  1:9}

 

கர்த்தாவே,  நீர்  ஆதியிலே  பூமியை  அஸ்திபாரப்படுத்தினீர்;  வானங்கள்  உம்முடைய  கரத்தின்  கிரியைகளாயிருக்கிறது;  {Heb  1:10}

 

அவைகள்  அழிந்துபோம்;  நீரோ  நிலைத்திருப்பீர்;  அவைகளெல்லாம்  வஸ்திரம்போலப்  பழைமையாய்ப்போம்;  {Heb  1:11}

 

ஒரு  சால்வையைப்போல  அவைகளைச்  சுருட்டுவீர்,  அப்பொழுது  மாறிப்போம்;  நீரோ  மாறாதவராயிருக்கிறீர்,  உம்முடைய  ஆண்டுகள்  முடிந்துபோவதில்லை  என்றும்  சொல்லியிருக்கிறது.  {Heb  1:12}

 

மேலும்,  நான்  உம்முடைய  சத்துருக்களை  உமக்குப்  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்  நீர்  என்னுடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்  என்று  தூதர்களில்  யாருக்காவது  எப்போதாகிலும்  அவர்  சொன்னதுண்டா?  {Heb  1:13}

 

இரட்சிப்பைச்  சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக  ஊழியஞ்செய்யும்படிக்கு  அவர்களெல்லாரும்  அனுப்பப்படும்  பணிவிடை  ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?  {Heb  1:14}

 

ஆகையால்,  நாம்  கேட்டவைகளை  விட்டு  விலகாதபடிக்கு,  அவைகளை  மிகுந்த  ஜாக்கிரதையாய்க்  கவனிக்கவேண்டும்.  {Heb  2:1}

 

ஏனெனில்,  தேவதூதர்  மூலமாய்ச்  சொல்லப்பட்ட  வசனத்திற்கு  விரோதமான  எந்தச்  செய்கைக்கும்  கீழ்ப்படியாமைக்கும்  நீதியான  தண்டனை  வரத்தக்கதாக  அவர்களுடைய  வசனம்  உறுதிப்படுத்தப்பட்டிருக்க,  {Heb  2:2}

 

முதலாவது  கர்த்தர்  மூலமாய்  அறிவிக்கப்பட்டு,  பின்பு  அவரிடத்தில்  கேட்டவர்களாலே  நமக்கு  உறுதியாக்கப்பட்டதும்,  {Heb  2:3}

 

அடையாளங்களினாலும்  அற்புதங்களினாலும்  பலவிதமான  பலத்த  செய்கைகளினாலும்,  தம்முடைய  சித்தத்தின்படி  பகிர்ந்துகொடுத்த  பரிசுத்த  ஆவியின்  வரங்களினாலும்,  தேவன்  தாமே  சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற  இவ்வளவு  பெரிதான  இரட்சிப்பைக்குறித்து  நாம்  கவலையற்றிருப்போமானால்  தண்டனைக்கு  எப்படித்  தப்பித்துக்கொள்ளுவோம்.  {Heb  2:4}

 

இனிவரும்  உலகத்தைக்குறித்துப்  பேசுகிறோமே,  அதை  அவர்  தூதர்களுக்குக்  கீழ்ப்படுத்தவில்லை.  {Heb  2:5}

 

ஒரு  இடத்திலே  ஒருவன்  சாட்சியாக:  மனுஷனை  நீர்  நினைக்கிறதற்கும்,  மனுஷனுடைய  குமாரனை  நீர்  விசாரிக்கிறதற்கும்  அவன்  எம்மாத்திரம்?  {Heb  2:6}

 

அவனை  தேவதூதரிலும்  சற்றுச்  சிறியவனாக்கினீர்;  மகிமையினாலும்  கனத்தினாலும்  அவனுக்கு  முடிசூட்டி,  உம்முடைய  கரத்தின்  கிரியைகளின்மேல்  அவனை  அதிகாரியாக  வைத்து,  சகலத்தையும்  அவனுடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்தினீர்  என்று  சொன்னான்.  {Heb  2:7}

 

சகலத்தையும்  அவனுக்குக்  கீழ்ப்படுத்தினார்  என்கிற  விஷயத்தில்,  அவர்  அவனுக்குக்  கீழ்ப்படுத்தாத  பொருள்  ஒன்றுமில்லை;  அப்படியிருந்தும்,  இன்னும்  அவனுக்குச்  சகலமும்  கீழ்ப்பட்டிருக்கக்  காணோம்.  {Heb  2:8}

 

என்றாலும்,  தேவனுடைய  கிருபையினால்  ஒவ்வொருவருக்காகவும்,  மரணத்தை  ருசிபார்க்கும்படிக்கு  தேவதூதரிலும்  சற்றுச்  சிறியவராக்கப்பட்டிருந்த  இயேசு<Jesus>  மரணத்தை  உத்தரித்ததினிமித்தம்  மகிமையினாலும்  கனத்தினாலும்  முடிசூட்டப்பட்டதைக்  காண்கிறோம்.  {Heb  2:9}

 

ஏனென்றால்  தமக்காகவும்  தம்மாலேயும்  சகலத்தையும்  உண்டாக்கினவர்,  அநேகம்  பிள்ளைகளை  மகிமையில்  கொண்டுவந்து  சேர்க்கையில்  அவர்களுடைய  இரட்சிப்பின்  அதிபதியை  உபத்திரவங்களினாலே  பூரணப்படுத்துகிறது  அவருக்கேற்றதாயிருந்தது.  {Heb  2:10}

 

எப்படியெனில்,  பரிசுத்தஞ்செய்கிறவரும்  பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய  யாவரும்  ஒருவராலே  உண்டாயிருக்கிறார்கள்;  இதினிமித்தம்  அவர்களைச்  சகோதரரென்று  சொல்ல  அவர்  வெட்கப்படாமல்:  {Heb  2:11}

 

உம்முடைய  நாமத்தை  என்  சகோதரருக்கு  அறிவித்து,  சபை  நடுவில்  உம்மைத்  துதித்துப்  பாடுவேன்  என்றும்;  {Heb  2:12}

 

நான்  அவரிடத்தில்  நம்பிக்கையாயிருப்பேன்  என்றும்;  இதோ,  நானும்,  தேவன்  எனக்குக்  கொடுத்த  பிள்ளைகளும்  என்றும்  சொல்லியிருக்கிறார்.  {Heb  2:13}

 

ஆதலால்,  பிள்ளைகள்  மாம்சத்தையும்  இரத்தத்தையும்  உடையவர்களாயிருக்க,  அவரும்  அவர்களைப்போல  மாம்சத்தையும்  இரத்தத்தையும்  உடையவரானார்;  மரணத்துக்கு  அதிகாரியாகிய  பிசாசானவனைத்  தமது  மரணத்தினாலே  அழிக்கும்படிக்கும்,  {Heb  2:14}

 

ஜீவகாலமெல்லாம்  மரணபயத்தினாலே  அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள்  யாவரையும்  விடுதலைபண்ணும்படிக்கும்  அப்படியானார்.  {Heb  2:15}

 

ஆதலால்,  அவர்  தேவதூதருக்கு  உதவியாகக்  கைகொடாமல்,  ஆபிரகாமின்<Abraham>  சந்ததிக்கு  உதவியாகக்  கைகொடுத்தார்.  {Heb  2:16}

 

அன்றியும்,  அவர்  ஜனத்தின்  பாவங்களை  நிவிர்த்தி  செய்வதற்கேதுவாக,  தேவகாரியங்களைக்குறித்து  இரக்கமும்  உண்மையுமுள்ள  பிரதான  ஆசாரியராயிருக்கும்படிக்கு  எவ்விதத்திலும்  தம்முடைய  சகோதரருக்கு  ஒப்பாகவேண்டியதாயிருந்தது.  {Heb  2:17}

 

ஆதலால்,  அவர்தாமே  சோதிக்கப்பட்டுப்  பாடுபட்டதினாலே,  அவர்  சோதிக்கப்படுகிறவர்களுக்கு  உதவிசெய்ய  வல்லவராயிருக்கிறார்.  {Heb  2:18}

 

இப்படியிருக்க,  பரம  அழைப்புக்குப்  பங்குள்ளவர்களாகிய  பரிசுத்த  சகோதரரே,  நாம்  அறிக்கைபண்ணுகிற  அப்போஸ்தலரும்  பிரதான  ஆசாரியருமாயிருக்கிற  கிறிஸ்து  இயேசுவைக்<Christ  Jesus>  கவனித்துப்பாருங்கள்;  {Heb  3:1}

 

மோசே<Moses>  தேவனுடைய  வீட்டில்  எங்கும்  உண்மையுள்ளவனாயிருந்ததுபோல,  இவரும்  தம்மை  ஏற்படுத்தினவருக்கு  உண்மையுள்ளவராயிருக்கிறார்.  {Heb  3:2}

 

வீட்டை  உண்டுபண்ணினவன்  வீட்டைப்பார்க்கிலும்  அதிக  கனத்திற்குரியவனாயிருக்கிறான்;  அதுபோல  மோசேயைப்பார்க்கிலும்<Moses>  இவர்  அதிக  மகிமைக்குப்  பாத்திரராயிருக்கிறார்.  {Heb  3:3}

 

ஏனெனில்,  எந்த  வீடும்  ஒருவனால்  உண்டாக்கப்படும்;  எல்லாவற்றையும்  உண்டுபண்ணினவர்  தேவன்.  {Heb  3:4}

 

சொல்லப்படப்போகிற  காரியங்களுக்குச்  சாட்சியாக,  மோசே<Moses>  பணிவிடைக்காரனாய்,  அவருடைய  வீட்டில்  எங்கும்  உண்மையுள்ளவனாயிருந்தான்.  {Heb  3:5}

 

கிறிஸ்துவோ<Christ>  அவருடைய  வீட்டிற்கு  மேற்பட்டவரான  குமாரனாக  உண்மையுள்ளவராயிருக்கிறார்;  நம்பிக்கையினாலே  உண்டாகும்  தைரியத்தையும்  மேன்மைபாராட்டலையும்  முடிவுபரியந்தம்  உறுதியாய்ப்  பற்றிக்கொண்டிருப்போமாகில்,  நாமே  அவருடைய  வீடாயிருப்போம்.  {Heb  3:6}

 

ஆகையால்,  பரிசுத்தஆவியானவர்  சொல்லுகிறபடியே:  இன்று  அவருடைய  சத்தத்தைக்  கேட்பீர்களாகில்,  {Heb  3:7}

 

வனாந்தரத்திலே  கோபமூட்டினபோதும்,  சோதனைநாளிலும்  நடந்ததுபோல,  உங்கள்  இருதயங்களைக்  கடினப்படுத்தாதிருங்கள்.  {Heb  3:8}

 

அங்கே  உங்கள்  பிதாக்கள்  என்னைச்  சோதித்து,  என்னைப்  பரீட்சைபார்த்து,  நாற்பது  வருஷகாலம்  என்  கிரியைகளைக்  கண்டார்கள்.  {Heb  3:9}

 

ஆதலால்,  நான்  அந்தச்  சந்ததியை  அரோசித்து,  அவர்கள்  எப்பொழுதும்  வழுவிப்போகிற  இருதயமுள்ள  ஜனமென்றும்,  என்னுடைய  வழிகளை  அறியாதவர்களென்றும்  சொல்லி;  {Heb  3:10}

 

என்னுடைய  இளைப்பாறுதலில்  அவர்கள்  பிரவேசிப்பதில்லையென்று  என்னுடைய  கோபத்திலே  ஆணையிட்டேன்  என்றார்.  {Heb  3:11}

 

சகோதரரே,  ஜீவனுள்ள  தேவனைவிட்டு  விலகுவதற்கேதுவான  அவிசுவாசமுள்ள  பொல்லாத  இருதயம்  உங்களில்  ஒருவனுக்குள்ளும்  இராதபடிக்கு  நீங்கள்  எச்சரிக்கையாயிருங்கள்.  {Heb  3:12}

 

உங்களில்  ஒருவனாகிலும்  பாவத்தின்  வஞ்சனையினாலே  கடினப்பட்டுப்  போகாதபடிக்கு,  இன்று  என்னப்படுமளவும்  நாடோறும்  ஒருவருக்கொருவர்  புத்திசொல்லுங்கள்.  {Heb  3:13}

 

நாம்  ஆரம்பத்திலே  கொண்ட  நம்பிக்கையை  முடிவுபரியந்தம்  உறுதியாய்ப்  பற்றிக்கொண்டிருப்போமாகில்,  கிறிஸ்துவினிடத்தில்<Christ>  பங்குள்ளவர்களாயிருப்போம்.  {Heb  3:14}

 

இன்று  அவருடைய  சத்தத்தைக்  கேட்பீர்களாகில்,  கோபமூட்டுதலில்  நடந்ததுபோல  உங்கள்  இருதயங்களைக்  கடினப்படுத்தாதிருங்கள்  என்று  சொல்லியிருக்கிறதே.  {Heb  3:15}

 

கேட்டவர்களில்  கோபமூட்டினவர்கள்  யார்?  மோசேயினால்<Moses>  எகிப்திலிருந்து<Egypt>  புறப்பட்ட  யாவரும்  அப்படிச்  செய்தார்களல்லவா?  {Heb  3:16}

 

மேலும்,  அவர்  நாற்பது  வருஷமாய்  யாரை  அரோசித்தார்?  பாவஞ்செய்தவர்களையல்லவா?  அவர்களுடைய  சவங்கள்  வனாந்தரத்தில்  விழுந்துபோயிற்றே.  {Heb  3:17}

 

பின்னும்,  என்னுடைய  இளைப்பாறுதலில்  பிரவேசிப்பதில்லையென்று  அவர்  யாரைக்குறித்து  ஆணையிட்டார்?  கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?  {Heb  3:18}

 

ஆதலால்,  அவிசுவாசத்தினாலே  அவர்கள்  அதில்  பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று  பார்க்கிறோம்.  {Heb  3:19}

 

ஆனபடியினாலே,  அவருடைய  இளைப்பாறுதலில்  பிரவேசிப்பதற்கேதுவான  வாக்குத்தத்தம்  நமக்குண்டாயிருக்க,  உங்களில்  ஒருவனும்  அதை  அடையாமல்  பின்வாங்கிப்போனவனாகக்  காணப்படாதபடிக்குப்  பயந்திருக்கக்கடவோம்.  {Heb  4:1}

 

ஏனெனில்,  சுவிசேஷம்  அவர்களுக்கு  அறிவிக்கப்பட்டதுபோல  நமக்கும்  அறிவிக்கப்பட்டது;  கேட்டவர்கள்  விசுவாசமில்லாமல்  கேட்டபடியினால்,  அவர்கள்  கேட்ட  வசனம்  அவர்களுக்குப்  பிரயோஜனப்படவில்லை.  {Heb  4:2}

 

விசுவாசித்தவர்களாகிய  நாமோ  அந்த  இளைப்பாறுதலில்  பிரவேசிக்கிறோம்;  அவருடைய  கிரியைகள்  உலகத்தோற்றமுதல்  முடிந்திருந்தும்:  இவர்கள்  என்னுடைய  இளைப்பாறுதலில்  பிரவேசிப்பதில்லையென்று  என்னுடைய  கோபத்திலே  ஆணையிட்டேன்  என்றார்.  {Heb  4:3}

 

மேலும்,  தேவன்  தம்முடைய  கிரியைகளையெல்லாம்  முடித்து  ஏழாம்  நாளிலே  ஓய்ந்திருந்தார்  என்று  ஏழாம்  நாளைக்குறித்து  ஓரிடத்தில்  சொல்லியிருக்கிறார்.  {Heb  4:4}

 

அன்றியும்,  அவர்கள்  என்னுடைய  இளைப்பாறுதலில்  பிரவேசிப்பதில்லை  என்றும்  அந்த  இடத்திலேதானே  சொல்லியிருக்கிறார்.  {Heb  4:5}

 

ஆகையால்,  சிலர்  அதில்  பிரவேசிப்பது  இன்னும்  வரப்போகிற  காரியமாயிருக்கிறபடியினாலும்,  சுவிசேஷத்தை  முதலாவது  கேட்டவர்கள்  கீழ்ப்படியாமையினாலே  அதில்  பிரவேசியாமற்போனபடியினாலும்,  {Heb  4:6}

 

இன்று  அவருடைய  சத்தத்தைக்  கேட்பீர்களாகில்  உங்கள்  இருதயங்களைக்  கடினப்படுத்தாதிருங்கள்  என்று  வெகுகாலத்திற்குப்பின்பு  தாவீதின்<David>  சங்கீதத்திலே  சொல்லியிருக்கிறபடி,  இன்று  என்று  சொல்வதினாலே  பின்னும்  ஒருநாளைக்  குறித்திருக்கிறார்.  {Heb  4:7}

 

யோசுவா<Joshua//Jesus>  அவர்களை  இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால்,  பின்பு  அவர்  வேறொரு  நாளைக்குறித்துச்  சொல்லியிருக்கமாட்டாரே.  {Heb  4:8}

 

ஆகையால்,  தேவனுடைய  ஜனங்களுக்கு  இளைப்பாறுகிற  காலம்  இனி  வருகிறதாயிருக்கிறது.  {Heb  4:9}

 

ஏனெனில்,  அவருடைய  இளைப்பாறுதலில்  பிரவேசித்தவன்,  தேவன்  தம்முடைய  கிரியைகளை  முடித்து  ஓய்ந்ததுபோல,  தானும்  தன்  கிரியைகளை  முடித்து  ஓய்ந்திருப்பான்.  {Heb  4:10}

 

ஆகையால்,  அந்தத்  திருஷ்டாந்தத்தின்படி,  ஒருவனாகிலும்  கீழ்ப்படியாமையினாலே  விழுந்துபோகாதபடிக்கு,  நாம்  இந்த  இளைப்பாறுதலில்  பிரவேசிக்க  ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.  {Heb  4:11}

 

தேவனுடைய  வார்த்தையானது  ஜீவனும்  வல்லமையும்  உள்ளதாயும்,  இருபுறமும்  கருக்குள்ள  எந்தப்  பட்டயத்திலும்  கருக்கானதாயும்,  ஆத்துமாவையும்  ஆவியையும்,  கணுக்களையும்  ஊனையும்  பிரிக்கத்தக்கதாக  உருவக்  குத்துகிறதாயும்,  இருதயத்தின்  நினைவுகளையும்  யோசனைகளையும்  வகையறுக்கிறதாயும்  இருக்கிறது.  {Heb  4:12}

 

அவருடைய  பார்வைக்கு  மறைவான  சிருஷ்டி  ஒன்றுமில்லை;  சகலமும்  அவருடைய  கண்களுக்குமுன்பாக  நிர்வாணமாயும்  வெளியரங்கமாயுமிருக்கிறது,  அவருக்கே  நாம்  கணக்கு  ஒப்புவிக்கவேண்டும்.  {Heb  4:13}

 

வானங்களின்  வழியாய்ப்  பரலோகத்திற்குப்போன  தேவகுமாரனாகிய  இயேசு<Jesus>  என்னும்  மகா  பிரதான  ஆசாரியர்  நமக்கு  இருக்கிறபடியினால்,  நாம்  பண்ணின  அறிக்கையை  உறுதியாய்ப்  பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.  {Heb  4:14}

 

நம்முடைய  பலவீனங்களைக்குறித்துப்  பரிதபிக்கக்கூடாத  பிரதான  ஆசாரியர்  நமக்கிராமல்,  எல்லாவிதத்திலும்  நம்மைப்போல்  சோதிக்கப்பட்டும்,  பாவமில்லாதவராயிருக்கிற  பிரதான  ஆசாரியரே  நமக்கிருக்கிறார்.  {Heb  4:15}

 

ஆதலால்,  நாம்  இரக்கத்தைப்  பெறவும்,  ஏற்ற  சமயத்தில்  சகாயஞ்செய்யுங்  கிருபையை  அடையவும்,  தைரியமாய்க்  கிருபாசனத்தண்டையிலே  சேரக்கடவோம்.  {Heb  4:16}

 

அன்றியும்,  மனுஷரில்  தெரிந்துகொள்ளப்பட்ட  எந்தப்  பிரதான  ஆசாரியனும்  பாவங்களுக்காகக்  காணிக்கைகளையும்  பலிகளையும்  செலுத்தும்படி,  மனுஷருக்காகத்  தேவகாரியங்களைப்பற்றி  நியமிக்கப்படுகிறான்.  {Heb  5:1}

 

தானும்  பலவீனமுள்ளவனானபடியினாலே,  அறியாதவர்களுக்கும்  நெறிதப்பிப்போனவர்களுக்கும்  இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.  {Heb  5:2}

 

அதினிமித்தம்  அவன்  ஜனங்களுடைய  பாவங்களுக்காகப்  பலியிடவேண்டியதுபோல,  தன்னுடைய  பாவங்களுக்காகவும்  பலியிடவேண்டியதாயிருக்கிறது.  {Heb  5:3}

 

மேலும்,  ஆரோனைப்போலத்<Aaron>  தேவனால்  அழைக்கப்பட்டாலொழிய,  ஒருவனும்  இந்தக்  கனமான  ஊழியத்துக்குத்  தானாய்  ஏற்படுகிறதில்லை.  {Heb  5:4}

 

அந்தப்படியே  கிறிஸ்துவும்<Christ>  பிரதான  ஆசாரியராகிறதற்குத்  தம்மைத்தாமே  உயர்த்தவில்லை;  நீர்  என்னுடைய  குமாரன்,  இன்று  நான்  உம்மை  ஜெநிப்பித்தேன்  என்று  அவரோடே  சொன்னவரே  அவரை  உயர்த்தினார்.  {Heb  5:5}

 

அப்படியே  வேறொரு  இடத்திலும்:  நீர்  மெல்கிசேதேக்கின்<Melchisedec>  முறைமையின்படி  என்றென்றைக்கும்  ஆசாரியராயிருக்கிறீர்  என்று  சொல்லியிருக்கிறார்.  {Heb  5:6}

 

அவர்  மாம்சத்திலிருந்த  நாட்களில்,  தம்மை  மரணத்தினின்று  இரட்சிக்க  வல்லமையுள்ளவரை  நோக்கி,  பலத்த  சத்தத்தோடும்  கண்ணீரோடும்  விண்ணப்பம்பண்ணி,  வேண்டுதல்செய்து,  தமக்கு  உண்டான  பயபக்தியினிமித்தம்  கேட்கப்பட்டு,  {Heb  5:7}

 

அவர்  குமாரனாயிருந்தும்  பட்டபாடுகளினாலே  கீழ்ப்படிதலைக்  கற்றுக்கொண்டு,  {Heb  5:8}

 

தாம்  பூரணரானபின்பு,  தமக்குக்  கீழ்ப்படிகிற  யாவரும்  நித்திய  இரட்சிப்பை  அடைவதற்குக்  காரணராகி,  {Heb  5:9}

 

மெல்கிசேதேக்கின்<Melchisedec>  முறைமையின்படியான  பிரதான  ஆசாரியர்  என்று  தேவனாலே  நாமம்  தரிக்கப்பட்டார்.  {Heb  5:10}

 

இந்த  மெல்கிசேதேக்கைப்பற்றி<Melchisedec>  நாம்  விஸ்தாரமாய்ப்  பேசலாம்;  நீங்கள்  கேள்வியில்  மந்தமுள்ளவர்களானபடியால்,  அதை  விளங்கப்பண்ணுகிறது  அரிதாயிருக்கும்.  {Heb  5:11}

 

காலத்தைப்  பார்த்தால்,  போதகராயிருக்கவேண்டிய  உங்களுக்குத்  தேவனுடைய  வாக்கியங்களின்  மூல  உபதேசங்களை  மறுபடியும்  உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது;  நீங்கள்  பலமான  ஆகாரத்தையல்ல,  பாலை  உண்ணத்தக்கவர்களானீர்கள்.  {Heb  5:12}

 

பாலுண்கிறவன்  குழந்தையாயிருக்கிறபடியினாலே  நீதியின்  வசனத்தில்  பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.  {Heb  5:13}

 

பலமான  ஆகாரமானது  நன்மை  தீமையின்னதென்று  பயிற்சியினால்  பகுத்தறியத்தக்கதாக  முயற்சிசெய்யும்  ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய  பூரண  வயதுள்ளவர்களுக்கே  தகும்.  {Heb  5:14}

 

ஆகையால்,  கிறிஸ்துவைப்பற்றிச்<Christ>  சொல்லிய  மூல  உபதேச  வசனங்களை  நாம்  விட்டு,  செத்த  கிரியைகளுக்கு  நீங்கலாகும்  மனந்திரும்புதல்,  தேவன்பேரில்  வைக்கும்  விசுவாசம்,  {Heb  6:1}

 

ஸ்நானங்களுக்கடுத்த  உபதேசம்,  கைகளை  வைக்குதல்,  மரித்தோரின்  உயிர்த்தெழுதல்,  நித்திய  நியாயத்தீர்ப்பு  என்பவைகளாகிய  அஸ்திபாரத்தை  மறுபடியும்  போடாமல்,  பூரணராகும்படி  கடந்துபோவோமாக.  {Heb  6:2}

 

தேவனுக்குச்  சித்தமானால்  இப்படியே  செய்வோம்.  {Heb  6:3}

 

ஏனெனில்,  ஒருதரம்  பிரகாசிப்பிக்கப்பட்டும்,  பரமஈவை  ருசிபார்த்தும்,  பரிசுத்த  ஆவியைப்  பெற்றும்,  {Heb  6:4}

 

தேவனுடைய  நல்வார்த்தையையும்  இனிவரும்  உலகத்தின்  பெலன்களையும்  ருசிபார்த்தும்,  {Heb  6:5}

 

மறுதலித்துப்போனவர்கள்,  தேவனுடைய  குமாரனைத்  தாங்களே  மறுபடியும்  சிலுவையில்  அறைந்து  அவமானப்படுத்துகிறபடியால்,  மனந்திரும்புதற்கேதுவாய்  அவர்களை  மறுபடியும்  புதுப்பிக்கிறது  கூடாதகாரியம்.  {Heb  6:6}

 

எப்படியெனில்,  தன்மேல்  அடிக்கடி  பெய்கிற  மழையைக்  குடித்து,  தன்னிடத்தில்  பயிரிடுகிறவர்களுக்கேற்ற  பயிரை  முளைப்பிக்கும்  நிலமானது  தேவனால்  ஆசீர்வாதம்  பெறும்.  {Heb  6:7}

 

முள்செடிகளையும்  முள்பூண்டுகளையும்  முளைப்பிக்கிற  நிலமோ  தகாததாயும்  சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது;  சுட்டெரிக்கப்படுவதே  அதின்  முடிவு.  {Heb  6:8}

 

பிரியமானவர்களே,  நாங்கள்  இப்படிச்  சொன்னாலும்,  நன்மையானவைகளும்  இரட்சிப்புக்குரியவைகளுமான  காரியங்கள்  உங்களிடத்தில்  உண்டாயிருக்கிறதென்று  நம்பியிருக்கிறோம்.  {Heb  6:9}

 

ஏனென்றால்,  உங்கள்  கிரியையையும்,  நீங்கள்  பரிசுத்தவான்களுக்கு  ஊழியஞ்செய்ததினாலும்  செய்து  வருகிறதினாலும்  தமது  நாமத்திற்காகக்  காண்பித்த  அன்புள்ள  பிரயாசத்தையும்  மறந்துவிடுகிறதற்குத்  தேவன்  அநீதியுள்ளவரல்லவே.  {Heb  6:10}

 

நீங்கள்  அசதியாயிராமல்,  வாக்குத்தத்தமான  ஆசீர்வாதங்களை  விசுவாசத்தினாலும்  நீடிய  பொறுமையினாலும்  சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப்  பின்பற்றுகிறவர்களாயிருந்து,  {Heb  6:11}

 

உங்களுக்கு  நம்பிக்கையின்  பூரண  நிச்சயமுண்டாகும்படி  நீங்கள்  யாவரும்  முடிவுபரியந்தம்  அப்படியே  ஜாக்கிரதையைக்  காண்பிக்கவேண்டுமென்று  ஆசையாயிருக்கிறோம்.  {Heb  6:12}

 

ஆபிரகாமுக்குத்<Abraham>  தேவன்  வாக்குத்தத்தம்பண்ணினபோது,  ஆணையிடும்படி  தம்மிலும்  பெரியவர்  ஒருவருமில்லாதபடியினாலே  தமதுபேரிலே  தானே  ஆணையிட்டு:  {Heb  6:13}

 

நிச்சயமாக  நான்  உன்னை  ஆசீர்வதிக்கவே  ஆசீர்வதித்து,  உன்னைப்  பெருகவே  பெருகப்பண்ணுவேன்  என்றார்.  {Heb  6:14}

 

அந்தப்படியே,  அவன்  பொறுமையாய்க்  காத்திருந்து,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப்  பெற்றான்.  {Heb  6:15}

 

மனுஷர்  தங்களிலும்  பெரியவர்பேரில்  ஆணையிடுவார்கள்;  உறுதிபண்ணும்படிக்கு  ஆணையிடுதலே  சகல  விவாதத்திற்கும்  முடிவு.  {Heb  6:16}

 

அந்தப்படி,  தேவனும்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச்  சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத்  தமது  ஆலோசனையின்  மாறாத  நிச்சயத்தைப்  பரிபூரணமாய்க்  காண்பிக்கும்படி  சித்தமுள்ளவராய்,  ஓர்  ஆணையினாலே  அதை  ஸ்திரப்படுத்தினார்.  {Heb  6:17}

 

நமக்கு  முன்  வைக்கப்பட்ட  நம்பிக்கையைப்  பற்றிக்கொள்ளும்படி  அடைக்கலமாய்  ஓடிவந்த  நமக்கு  இரண்டு  மாறாத  விசேஷங்களினால்  நிறைந்த  ஆறுதலுண்டாகும்படிக்கு  எவ்வளவேனும்  பொய்யுரையாத  தேவன்  அப்படிச்  செய்தார்.  {Heb  6:18}

 

அந்த  நம்பிக்கை  நமக்கு  நிலையும்  உறுதியும்  திரைக்குள்ளாகப்  போகிறதுமான  ஆத்தும  நங்கூரமாயிருக்கிறது.  {Heb  6:19}

 

நமக்கு  முன்னோடினவராகிய  இயேசு<Jesus>  மெல்கிசேதேக்கின்<Melchisedec>  முறைமையின்படி  நித்திய  பிரதான  ஆசாரியராய்  நமக்காக  அந்தத்  திரைக்குள்  பிரவேசித்திருக்கிறார்.  {Heb  6:20}

 

இந்த  மெல்கிசேதேக்கு<Melchisedec>  சாலேமின்<Salem>  ராஜாவும்,  உன்னதமான  தேவனுடைய  ஆசாரியனுமாயிருந்தான்;  ராஜாக்களை  முறியடித்துவந்த  ஆபிரகாமுக்கு<Abraham>  இவன்  எதிர்கொண்டுபோய்,  அவனை  ஆசீர்வதித்தான்.  {Heb  7:1}

 

இவனுக்கு  ஆபிரகாம்<Abraham>  எல்லாவற்றிலும்  தசமபாகம்  கொடுத்தான்;  இவனுடைய  முதற்பேராகிய  மெல்கிசேதேக்கு<Melchisedec>  என்பதற்கு  நீதியின்  ராஜா  என்றும்,  பின்பு  சாலேமின்<Salem>  ராஜா  என்பதற்குச்  சமாதானத்தின்  ராஜா  என்றும்  அருத்தமாம்.  {Heb  7:2}

 

இவன்  தகப்பனும்  தாயும்  வம்சவரலாறும்  இல்லாதவன்;  இவன்  நாட்களின்  துவக்கமும்  ஜீவனின்  முடிவுமுடையவனாயிராமல்,  தேவனுடைய  குமாரனுக்கு  ஒப்பானவனாய்  என்றென்றைக்கும்  ஆசாரியனாக  நிலைத்திருக்கிறான்.  {Heb  7:3}

 

இவன்  எவ்வளவு  பெரியவனாயிருக்கிறான்  பாருங்கள்;  கோத்திரத்தலைவனாகிய  ஆபிரகாம்<Abraham>  முதலாய்  கொள்ளையிடப்பட்ட  பொருள்களில்  இவனுக்குத்  தசமபாகம்  கொடுத்தான்.  {Heb  7:4}

 

லேவியின்<Levi>  புத்திரரில்  ஆசாரியத்துவத்தை  அடைகிறவர்களும்,  ஆபிரகாமின்<Abraham>  அரையிலிருந்துவந்த  தங்கள்  சகோதரரான  ஜனங்களின்  கையிலே  நியாயப்பிரமாணத்தின்படி  தசமபாகம்  வாங்குகிறதற்குக்  கட்டளைபெற்றிருக்கிறார்கள்.  {Heb  7:5}

 

ஆகிலும்,  அவர்களுடைய  வம்சவரிசையில்  வராதவனாகிய  இவன்  ஆபிரகாமின்<Abraham>  கையில்  தசமபாகம்  வாங்கி,  வாக்குத்தத்தங்களைப்  பெற்றவனை  ஆசீர்வதித்தான்.  {Heb  7:6}

 

சிறியவன்  பெரியவனாலே  ஆசீர்வதிக்கப்படுவான்,  அதற்குச்  சந்தேகமில்லை.  {Heb  7:7}

 

அன்றியும்,  இங்கே,  மரிக்கிற  மனுஷர்கள்  தசமபாகம்  வாங்குகிறார்கள்;  அங்கேயோ,  பிழைத்திருக்கிறான்  என்று  சாட்சிபெற்றவன்  வாங்கினான்.  {Heb  7:8}

 

அன்றியும்,  மெல்கிசேதேக்கு<Melchisedec>  ஆபிரகாமுக்கு<Abraham>  எதிர்கொண்டுபோனபோது,  லேவியானவன்<Levi>  தன்  தகப்பனுடைய  அரையிலிருந்தபடியால்,  {Heb  7:9}

 

தசமபாகம்  வாங்குகிற  அவனும்  ஆபிரகாமின்<Abraham>  மூலமாய்த்  தசமபாகம்  கொடுத்தான்  என்று  சொல்லலாம்.  {Heb  7:10}

 

அல்லாமலும்,  இஸ்ரவேல்<Israel>  ஜனங்கள்  லேவிகோத்திர<Levi//Levitical>  ஆசாரிய  முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ  நியாயப்பிரமாணத்தைப்  பெற்றார்கள்;  அந்த  ஆசாரிய  முறைமையினாலே  பூரணப்படுதல்  உண்டாயிருக்குமானால்,  ஆரோனுடைய<Aaron>  முறைமையின்படி  அழைக்கப்படாமல்,  மெல்கிசேதேக்கினுடைய<Melchisedec>  முறைமையின்படி  அழைக்கப்பட்ட  வேறொரு  ஆசாரியர்  எழும்பவேண்டுவதென்ன?  {Heb  7:11}

 

ஆசாரியத்துவம்  மாற்றப்பட்டிருக்குமேயானால்,  நியாயப்பிரமாணமும்  மாற்றப்படவேண்டியதாகும்.  {Heb  7:12}

 

இவைகள்  எவரைக்குறித்துச்  சொல்லப்பட்டிருக்கிறதோ,  அவர்  வேறொரு  கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே;  அந்தக்  கோத்திரத்தில்  ஒருவனாகிலும்  பலிபீடத்து  ஊழியம்  செய்ததில்லையே.  {Heb  7:13}

 

நம்முடைய  கர்த்தர்  யூதாகோத்திரத்தில்<Juda>  தோன்றினாரென்பது  பிரசித்தமாயிருக்கிறது;  அந்தக்  கோத்திரத்தாரைக்குறித்து  மோசே<Moses>  ஆசாரியத்துவத்தைப்பற்றி  ஒன்றும்  சொல்லவில்லையே.  {Heb  7:14}

 

அல்லாமலும்,  மெல்கிசேதேக்குக்கு<Melchisedec>  ஒப்பாய்  வேறொரு  ஆசாரியர்  எழும்புகிறார்  என்று  சொல்லியிருப்பதினால்,  மேற்சொல்லியது  மிகவும்  பிரசித்தமாய்  விளங்குகிறது.  {Heb  7:15}

 

அவர்  மாம்ச  சம்பந்தமான  கட்டளையாகிய  நியாயப்பிரமாணத்தின்படி  ஆசாரியராகாமல்,  {Heb  7:16}

 

நீர்  மெல்கிசேதேக்கின்<Melchisedec>  முறைமையின்படி  என்றென்றைக்கும்  ஆசாரியராயிருக்கிறீர்  என்று  சொல்லிய  சாட்சிக்குத்தக்கதாக  அழியாத  ஜீவனுக்குரிய  வல்லமையின்படியே  ஆசாரியரானார்.  {Heb  7:17}

 

முந்தின  கட்டளை  பெலவீனமுள்ளதும்  பயனற்றதுமாயிருந்ததினிமித்தம்  மாற்றப்பட்டது.  {Heb  7:18}

 

நியாயப்பிரமாணமானது  ஒன்றையும்  பூரணப்படுத்தவில்லை,  அதிக  நன்மையான  நம்பிக்கையை  வருவிப்பதோ  பூரணப்படுத்துகிறது;  அந்த  நம்பிக்கையினாலே  தேவனிடத்தில்  சேருகிறோம்.  {Heb  7:19}

 

அன்றியும்,  அவர்கள்  ஆணையில்லாமல்  ஆசாரியராக்கப்படுகிறார்கள்;  இவரோ:  நீர்  மெல்கிசேதேக்கின்<Melchisedec>  முறைமையின்படி  என்றென்றைக்கும்  ஆசாரியராயிருக்கிறீர்  என்று  கர்த்தர்  ஆணையிட்டார்,  மனம்  மாறாமலுமிருப்பார்  என்று  தம்முடனே  சொன்னவராலே  ஆணையோடே  ஆசாரியரானார்.  {Heb  7:20}

 

ஆனதால்,  இயேசுவானவர்<Jesus>  ஆணையின்படியே  ஆசாரியராக்கப்பட்டது  எவ்வளவு  விசேஷித்த  காரியமோ,  {Heb  7:21}

 

அவ்வளவு  விசேஷித்த  உடன்படிக்கைக்குப்  பிணையாளியானார்.  {Heb  7:22}

 

அன்றியும்,  அவர்கள்  மரணத்தினிமித்தம்  நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால்,  ஆசாரியராக்கப்படுகிறவர்கள்  அநேகராயிருக்கிறார்கள்.  {Heb  7:23}

 

இவரோ  என்றென்றைக்கும்  நிலைத்திருக்கிறபடியினாலே,  மாறிப்போகாத  ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.  {Heb  7:24}

 

மேலும்,  தமது  மூலமாய்த்  தேவனிடத்தில்  சேருகிறவர்களுக்காக  வேண்டுதல்செய்யும்படிக்கு  அவர்  எப்பொழுதும்  உயிரோடிருக்கிறவராகையால்  அவர்களை  முற்றுமுடிய  இரட்சிக்க  வல்லவராயுமிருக்கிறார்.  {Heb  7:25}

 

பரிசுத்தரும்,  குற்றமற்றவரும்,  மாசில்லாதவரும்,  பாவிகளுக்கு  விலகினவரும்,  வானங்களிலும்  உயர்ந்தவருமாயிருக்கிற  இவ்விதமான  பிரதான  ஆசாரியரே  நமக்கு  ஏற்றவராயிருக்கிறார்.  {Heb  7:26}

 

அவர்  பிரதான  ஆசாரியர்களைப்போல  முன்பு  சொந்தப்  பாவங்களுக்காகவும்,  பின்பு  ஜனங்களுடைய  பாவங்களுக்காகவும்  நாடோறும்  பலியிடவேண்டுவதில்லை;  ஏனெனில்  தம்மைத்தாமே  பலியிட்டதினாலே  இதை  ஒரேதரம்  செய்துமுடித்தார்.  {Heb  7:27}

 

நியாயப்பிரமாணமானது  பெலவீனமுள்ள  மனுஷர்களைப்  பிரதான  ஆசாரியராக  ஏற்படுத்துகிறது;  நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு  உண்டான  ஆணையோடே  விளங்கிய  வசனமோ  என்றென்றைக்கும்  பூரணரான  குமாரனை  ஏற்படுத்துகிறது.  {Heb  7:28}

 

மேற்சொல்லியவைகளின்  முக்கியமான  பொருளென்னவெனில்;  பரலோகத்திலுள்ள  மகத்துவ  ஆசனத்தின்  வலதுபாரிசத்திலே  உட்கார்ந்திருக்கிறவருமாய்,  {Heb  8:1}

 

பரிசுத்த  ஸ்தலத்திலும்,  மனுஷரால்  அல்ல,  கர்த்தரால்  ஸ்தாபிக்கப்பட்ட  மெய்யான  கூடாரத்திலும்  ஆசாரிய  ஊழியஞ்  செய்கிறவருமாயிருக்கிற  பிரதான  ஆசாரியர்  நமக்கு  உண்டு.  {Heb  8:2}

 

ஒவ்வொரு  பிரதான  ஆசாரியனும்  காணிக்கைகளையும்  பலிகளையும்  செலுத்தும்படி  நியமிக்கப்படுகிறான்;  ஆதலால்  செலுத்தும்படிக்கு  ஏதோ  ஒன்று  இவருக்கும்  அவசியம்  வேண்டியதாயிருக்கிறது.  {Heb  8:3}

 

பூமியிலே  அவர்  இருப்பாரானால்  ஆசாரியராயிருக்கமாட்டார்;  ஏனெனில்,  நியாயப்பிரமாணத்தின்படி  காணிக்கைகளைச்  செலுத்துகிற  ஆசாரியர்கள்  இருக்கிறார்களே;  {Heb  8:4}

 

இவர்கள்  செய்யும்  ஆராதனை  பரலோகத்திலுள்ளவைகளின்  சாயலுக்கும்  நிழலுக்கும்  ஒத்திருக்கிறது;  அப்படியே,  மோசே<Moses>  கூடாரத்தை  உண்டுபண்ணப்  போகையில்:  மலையிலே  உனக்குக்  காண்பிக்கப்பட்ட  மாதிரியின்படியே  நீ  எல்லாவற்றையும்  செய்ய  எச்சரிக்கையாயிரு  என்று  தேவன்  அவனுக்குக்  கட்டளையிட்டார்.  {Heb  8:5}

 

இவரோ  விசேஷித்த  வாக்குத்தத்தங்களின்பேரில்  ஸ்தாபிக்கப்பட்ட  விசேஷித்த  உடன்படிக்கைக்கு  எப்படி  மத்தியஸ்தராயிருக்கிறாரோ,  அப்படியே  முக்கியமான  ஆசாரிய  ஊழியத்தையும்  பெற்றிருக்கிறார்.  {Heb  8:6}

 

அந்த  முதலாம்  உடன்படிக்கை  பிழையில்லாதிருந்ததானால்,  இரண்டாம்  உடன்படிக்கைக்கு  இடம்  தேடவேண்டுவதில்லையே.  {Heb  8:7}

 

அவர்களைக்  குற்றப்படுத்தி,  அவர்களை  நோக்கி:  இதோ,  கர்த்தர்  சொல்லுகிறதென்னவெனில்:  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தோடும்  யூதா<Judah>  குடும்பத்தோடும்  நான்  புது  உடன்படிக்கையை  ஏற்படுத்துங்காலம்  வருகிறது.  {Heb  8:8}

 

அவர்களுடைய  பிதாக்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  கொண்டுவரும்படிக்கு  நான்  அவர்களுடைய  கையைப்  பிடித்தநாளிலே  அவர்களோடு  பண்ணின  உடன்படிக்கையைப்போல  இது  இருப்பதில்லை;  அந்த  உடன்படிக்கையிலே  அவர்கள்  நிலைநிற்கவில்லையே,  நானும்  அவர்களைப்  புறக்கணித்தேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Heb  8:9}

 

அந்த  நாட்களுக்குப்பின்பு  நான்  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தாரோடே  பண்ணும்  உடன்படிக்கையாவது:  என்னுடைய  பிரமாணங்களை  அவர்களுடைய  மனதிலே  வைத்து,  அவர்களுடைய  இருதயங்களில்  அவைகளை  எழுதுவேன்;  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்,  அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்.  {Heb  8:10}

 

அப்பொழுது  சிறியவன்  முதற்கொண்டு  பெரியவன்வரைக்கும்  எல்லாரும்  என்னை  அறிவார்கள்;  ஆகையால்,  கர்த்தரை  அறிந்துகொள்  என்று  ஒருவன்  தன்  அயலானுக்கும்,  ஒருவன்  தன்  சகோதரனுக்கும்  போதிக்கவேண்டுவதில்லை.  {Heb  8:11}

 

ஏனெனில்  நான்  அவர்கள்  அநியாயங்களைக்  கிருபையாய்  மன்னித்து,  அவர்கள்  பாவங்களையும்  அக்கிரமங்களையும்  இனி  நினையாமலிருப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Heb  8:12}

 

புது  உடன்படிக்கை  என்று  அவர்  சொல்லுகிறதினாலே  முந்தினதைப்  பழமையாக்கினார்;  பழமையானதும்  நாள்பட்டதுமாயிருக்கிறது  உருவழிந்துபோகக்  காலம்  சமீபித்திருக்கிறது.  {Heb  8:13}

 

அன்றியும்,  முதலாம்  உடன்படிக்கையானது  ஆராதனைக்கேற்ற  முறைமைகளும்  பூமிக்குரிய  பரிசுத்த  ஸ்தலமும்  உடையதாயிருந்தது.  {Heb  9:1}

 

எப்படியெனில்,  ஒரு  கூடாரம்  உண்டாக்கப்பட்டிருந்தது;  அதின்  முந்தின  பாகத்தில்  குத்துவிளக்கும்,  மேஜையும்,  தேவசமுகத்தப்பங்களும்  இருந்தன;  அது  பரிசுத்த  ஸ்தலமென்னப்படும்.  {Heb  9:2}

 

இரண்டாந்  திரைக்குள்ளே  மகா  பரிசுத்த  ஸ்தலமென்னப்பட்ட  கூடாரம்  இருந்தது.  {Heb  9:3}

 

அதிலே  பொன்னாற்செய்த  தூபகலசமும்,  முழுவதும்  பொற்றகடு  பொதிந்திருக்கப்பட்ட  உடன்படிக்கைப்  பெட்டியும்  இருந்தன;  அந்தப்  பெட்டியிலே  மன்னா<manna>  வைக்கப்பட்ட  பொற்பாத்திரமும்,  ஆரோனுடைய<Aaron>  தளிர்த்த  கோலும்,  உடன்படிக்கையின்  கற்பலகைகளும்  இருந்தன.  {Heb  9:4}

 

அதற்கு  மேலே  மகிமையுள்ள  கேருபீன்கள்  வைக்கப்பட்டுக்  கிருபாசனத்தை  நிழலிட்டிருந்தன;  இவைகளைக்குறித்து  விவரமாய்ப்பேச  இப்பொழுது  சமயமில்லை.  {Heb  9:5}

 

இவைகள்  இவ்விதமாய்  ஆயத்தமாக்கப்பட்டிருக்க,  ஆசாரியர்கள்  ஆராதனை  முறைமைகளை  நிறைவேற்றும்படிக்கு  முதலாங்கூடாரத்திலே  நித்தமும்  பிரவேசிப்பார்கள்.  {Heb  9:6}

 

இரண்டாங்கூடாரத்திலே  பிரதான  ஆசாரியன்மாத்திரம்  வருஷத்திற்கு  ஒருதரம்  இரத்தத்தோடே  பிரவேசித்து,  அந்த  இரத்தத்தைத்  தனக்காகவும்  ஜனங்களுடைய  தப்பிதங்களுக்காகவும்  செலுத்துவான்.  {Heb  9:7}

 

அதினாலே,  முதலாங்கூடாரம்  நிற்குமளவும்  பரிசுத்த  ஸ்தலத்திற்குப்போகிற  மார்க்கம்  இன்னும்  வெளிப்படவில்லையென்று  பரிசுத்த  ஆவியானவர்  தெரியப்படுத்தியிருக்கிறார்.  {Heb  9:8}

 

அந்தக்  கூடாரம்  இக்காலத்திற்கு  உதவுகிற  ஒப்பனையாயிருக்கிறது;  அதற்கேற்றபடியே  செலுத்தப்பட்டுவருகிற  காணிக்கைகளும்  பலிகளும்  ஆராதனை  செய்கிறவனுடைய  மனச்சாட்சியைப்  பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.  {Heb  9:9}

 

இவைகள்  சீர்திருத்தல்  உண்டாகும்  காலம்வரைக்கும்  நடந்தேறும்படி  கட்டளையிடப்பட்ட  போஜனபானங்களும்,  பலவித  ஸ்நானங்களும்,  சரீரத்திற்கேற்ற  சடங்குகளுமேயல்லாமல்  வேறல்ல.  {Heb  9:10}

 

கிறிஸ்துவானவர்<Christ>  வரப்போகிற  நன்மைகளுக்குரிய  பிரதான  ஆசாரியராய்  வெளிப்பட்டு,  கையினால்  செய்யப்பட்டதாகிய  இந்தச்  சிருஷ்டிசம்பந்தமான  கூடாரத்தின்  வழியாக  அல்ல,  பெரிதும்  உத்தமமுமான  கூடாரத்தின்  வழியாகவும்,  {Heb  9:11}

 

வெள்ளாட்டுக்கடா,  இளங்காளை  இவைகளுடைய  இரத்தத்தினாலே  அல்ல,  தம்முடைய  சொந்த  இரத்தத்தினாலும்  ஒரேதரம்  மகா  பரிசுத்த  ஸ்தலத்திலே  பிரவேசித்து,  நித்திய  மீட்பை  உண்டுபண்ணினார்.  {Heb  9:12}

 

அதெப்படியெனில்,  காளை  வெள்ளாட்டுக்கடா  இவைகளின்  இரத்தமும்,  தீட்டுப்பட்டவர்கள்மேல்  தெளிக்கப்பட்ட  கடாரியின்  சாம்பலும்,  சரீரசுத்தியுண்டாகும்படி  பரிசுத்தப்படுத்துமானால்,  {Heb  9:13}

 

நித்திய  ஆவியினாலே  தம்மைத்தாமே  பழுதற்ற  பலியாகத்  தேவனுக்கு  ஒப்புக்கொடுத்த  கிறிஸ்துவினுடைய<Christ>  இரத்தம்  ஜீவனுள்ள  தேவனுக்கு  ஊழியஞ்செய்வதற்கு  உங்கள்  மனச்சாட்சியைச்  செத்தக்கிரியைகளறச்  சுத்திகரிப்பது  எவ்வளவு  நிச்சயம்!  {Heb  9:14}

 

ஆகையால்  முதலாம்  உடன்படிக்கையின்  காலத்திலே  நடந்த  அக்கிரமங்களை  நிவிர்த்திசெய்யும்பொருட்டு  அவர்  மரணமடைந்து,  அழைக்கப்பட்டவர்கள்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட  நித்திய  சுதந்தரத்தை  அடைந்துகொள்வதற்காக,  புது  உடன்படிக்கையின்  மத்தியஸ்தராயிருக்கிறார்.  {Heb  9:15}

 

ஏனென்றால்,  எங்கே  மரணசாசனமுண்டோ,  அங்கே  அந்தச்  சாசனத்தை  எழுதினவனுடைய  மரணமும்  உண்டாகவேண்டும்.  {Heb  9:16}

 

எப்படியெனில்,  மரணமுண்டான  பின்பே  மரணசாசனம்  உறுதிப்படும்;  அதை  எழுதினவன்  உயிரோடிருக்கையில்  அதற்குப்  பெலனில்லையே.  {Heb  9:17}

 

அந்தப்படி,  முதலாம்  உடன்படிக்கையும்  இரத்தமில்லாமல்  பிரதிஷ்டை  பண்ணப்படவில்லை.  {Heb  9:18}

 

எப்படியெனில்,  மோசே<Moses>,  நியாயப்பிரமாணத்தின்படி,  சகல  ஜனங்களுக்கும்  எல்லாக்  கட்டளைகளையும்  சொன்னபின்பு,  இளங்காளை  வெள்ளாட்டுக்கடா  இவைகளின்  இரத்தத்தைத்  தண்ணீரோடும்,  சிவப்பான  ஆட்டுமயிரோடும்,  ஈசோப்போடுங்கூட  எடுத்து,  புஸ்தகத்தின்மேலும்  ஜனங்களெல்லார்மேலும்  தெளித்து:  {Heb  9:19}

 

தேவன்  உங்களுக்குக்  கட்டளையிட்ட  உடன்படிக்கையின்  இரத்தம்  இதுவே  என்று  சொன்னான்.  {Heb  9:20}

 

இவ்விதமாக,  கூடாரத்தின்மேலும்  ஆராதனைக்குரிய  சகல  பணிமுட்டுகளின்மேலும்  இரத்தத்தைத்  தெளித்தான்.  {Heb  9:21}

 

நியாயப்பிரமாணத்தின்படி  கொஞ்சங்குறைய  எல்லாம்  இரத்தத்தினாலே  சுத்திகரிக்கப்படும்;  இரத்தஞ்சிந்துதலில்லாமல்  மன்னிப்பு  உண்டாகாது.  {Heb  9:22}

 

ஆதலால்,  பரலோகத்திலுள்ளவைகளுக்குச்  சாயலானவைகள்  இப்படிப்பட்ட  பலிகளினாலே  சுத்திகரிக்கப்பட  வேண்டியதாயிருந்தது;  பரலோகத்திலுள்ளவைகளோ  இவைகளிலும்  விசேஷித்த  பலிகளாலே  சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.  {Heb  9:23}

 

அந்தப்படி,  மெய்யான  பரிசுத்த  ஸ்தலத்துக்கு  அடையாளமான  கையினால்  செய்யப்பட்டதாயிருக்கிற  பரிசுத்த  ஸ்தலத்திலே  கிறிஸ்துவானவர்<Christ>  பிரவேசியாமல்,  பரலோகத்திலேதானே  இப்பொழுது  நமக்காகத்  தேவனுடைய  சமுகத்தில்  பிரத்தியட்சமாகும்படி  பிரவேசித்திருக்கிறார்.  {Heb  9:24}

 

பிரதான  ஆசாரியன்  அந்நிய  இரத்தத்தோடே  வருஷந்தோறும்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிக்கிறதுபோல,  அவர்  அநேகந்தரம்  தம்மைப்  பலியிடும்படிக்குப்  பிரவேசிக்கவில்லை.  {Heb  9:25}

 

அப்படியிருந்ததானால்,  உலகமுண்டானது  முதற்கொண்டு  அவர்  அநேகந்தரம்  பாடுபடவேண்டியதாயிருக்குமே;  அப்படியல்ல,  அவர்  தம்மைத்தாமே  பலியிடுகிறதினாலே  பாவங்களை  நீக்கும்பொருட்டாக  இந்தக்  கடைசிக்காலத்தில்  ஒரேதரம்  வெளிப்பட்டார்.  {Heb  9:26}

 

அன்றியும்,  ஒரேதரம்  மரிப்பதும்,  பின்பு  நியாயத்தீர்ப்படைவதும்,  மனுஷருக்கு  நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,  {Heb  9:27}

 

கிறிஸ்துவும்<Christ>  அநேகருடைய  பாவங்களைச்  சுமந்து  தீர்க்கும்படிக்கு  ஒரேதரம்  பலியிடப்பட்டு,  தமக்காகக்  காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு  இரட்சிப்பை  அருளும்படி  இரண்டாந்தரம்  பாவமில்லாமல்  தரிசனமாவார்.  {Heb  9:28}

 

இப்படியிருக்க,  நியாயப்பிரமாணமானது  வரப்போகிற  நன்மைகளின்  பொருளாயிராமல்,  அவைகளின்  நிழலாய்மாத்திரம்  இருக்கிறபடியால்,  வருஷந்தோறும்  இடைவிடாமல்  செலுத்தப்பட்டுவருகிற  ஒரேவிதமான  பலிகளினாலே  அவைகளைச்  செலுத்த  வருகிறவர்களை  ஒருக்காலும்  பூரணப்படுத்தமாட்டாது.  {Heb  10:1}

 

பூரணப்படுத்துமானால்,  ஆராதனை  செய்கிறவர்கள்  ஒருதரம்  சுத்தமாக்கப்பட்டபின்பு,  இன்னும்  பாவங்களுண்டென்று  உணர்த்தும்  மனச்சாட்சி  அவர்களுக்கு  இல்லாதிருப்பதினால்,  அந்தப்  பலிகளைச்  செலுத்துகிறது  நிறுத்தப்படுமல்லவா?  {Heb  10:2}

 

அப்படி  நிறுத்தப்படாதபடியால்,  பாவங்கள்  உண்டென்று  அவைகளினாலே  வருஷந்தோறும்  நினைவுகூருதல்  உண்டாயிருக்கிறது.  {Heb  10:3}

 

அல்லாமலும்,  காளை  வெள்ளாட்டுக்கடா  இவைகளுடைய  இரத்தம்  பாவங்களை  நிவிர்த்திசெய்யமாட்டாதே.  {Heb  10:4}

 

ஆகையால்  அவர்  உலகத்தில்  பிரவேசிக்கும்போது:  பலியையும்  காணிக்கையையும்  நீர்  விரும்பவில்லை,  ஒரு  சரீரத்தை  எனக்கு  ஆயத்தம்பண்ணினீர்;  {Heb  10:5}

 

சர்வாங்க  தகனபலிகளும்,  பாவநிவாரணபலிகளும்  உமக்குப்  பிரியமானதல்ல  என்றீர்.  {Heb  10:6}

 

அப்பொழுது  நான்:  தேவனே,  உம்முடைய  சித்தத்தின்படி  செய்ய,  இதோ,  வருகிறேன்,  புஸ்தகச்சுருளில்  என்னைக்குறித்து  எழுதியிருக்கிறது  என்று  சொன்னேன்  என்றார்.  {Heb  10:7}

 

நியாயப்பிரமாணத்தின்படி  செலுத்தப்பட்டுவருகிற  பலிகளைக்குறித்து  மேற்சொல்லியபடி:  பலியையும்,  காணிக்கையையும்,  சர்வாங்க  தகனபலிகளையும்,  பாவநிவாரணபலிகளையும்  நீர்  விரும்பவில்லை,  அவைகள்  உமக்குப்  பிரியமானதல்ல  என்று  சொன்னபின்பு:  {Heb  10:8}

 

தேவனே,  உம்முடைய  சித்தத்தின்படி  செய்ய,  இதோ,  வருகிறேன்  என்று  சொன்னார்.  இரண்டாவதை  நிலைநிறுத்துவதற்கு  முதலாவதை  நீக்கிப்போடுகிறார்.  {Heb  10:9}

 

இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  சரீரம்  ஒரேதரம்  பலியிடப்பட்டதினாலே,  அந்தச்  சித்தத்தின்படி  நாம்  பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.  {Heb  10:10}

 

அன்றியும்,  எந்த  ஆசாரியனும்  நாடோறும்  ஆராதனை  செய்கிறவனாயும்,  பாவங்களை  ஒருக்காலும்  நிவிர்த்திசெய்யக்கூடாத  ஒரேவித  பலிகளை  அநேகந்தரம்  செலுத்திவருகிறவனாயும்  நிற்பான்.  {Heb  10:11}

 

இவரோ,  பாவங்களுக்காக  ஒரே  பலியைச்  செலுத்தி,  என்றென்றைக்கும்  தேவனுடைய  வலதுபாரிசத்தில்  உட்கார்ந்து,  {Heb  10:12}

 

இனித்  தம்முடைய  சத்துருக்களைத்  தமது  பாதபடியாக்கிப்  போடும்வரைக்கும்  காத்துக்கொண்டிருக்கிறார்.  {Heb  10:13}

 

ஏனெனில்  பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை  ஒரே  பலியினாலே  இவர்  என்றென்றைக்கும்  பூரணப்படுத்தியிருக்கிறார்.  {Heb  10:14}

 

இதைக்குறித்துப்  பரிசுத்த  ஆவியானவரும்  நமக்குச்  சாட்சிசொல்லுகிறார்;  எப்படியெனில்:  {Heb  10:15}

 

அந்த  நாட்களுக்குப்பின்பு  நான்  அவர்களோடே  பண்ணும்  உடன்படிக்கையாவது:  நான்  என்னுடைய  பிரமாணங்களை  அவர்களுடைய  இருதயங்களில்  வைத்து,  அவைகளை  அவர்களுடைய  மனதில்  எழுதுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறாரென்பதை  உரைத்தபின்பு,  {Heb  10:16}

 

அவர்களுடைய  பாவங்களையும்  அவர்களுடைய  அக்கிரமங்களையும்  நான்  இனி  நினைப்பதில்லை  என்பதைச்  சொல்லுகிறார்.  {Heb  10:17}

 

இவைகள்  மன்னிக்கப்பட்டதுண்டானால்,  இனிப்  பாவத்தினிமித்தம்  பலி  செலுத்தப்படுவதில்லையே.  {Heb  10:18}

 

ஆகையால்,  சகோதரரே,  நாம்  பரிசுத்தஸ்தலத்தில்  பிரவேசிப்பதற்கு  இயேசுவானவர்<Jesus>  தமது  மாம்சமாகிய  திரையின்  வழியாய்ப்  புதிதும்  ஜீவனுமான  மார்க்கத்தை  நமக்கு  உண்டுபண்ணினபடியால்,  {Heb  10:19}

 

அந்த  மார்க்கத்தின்வழியாய்ப்  பிரவேசிப்பதற்கு  அவருடைய  இரத்தத்தினாலே  நமக்குத்  தைரியம்  உண்டாயிருக்கிறபடியினாலும்,  {Heb  10:20}

 

தேவனுடைய  வீட்டின்மேல்  அதிகாரியான  மகா  ஆசாரியர்  நமக்கு  ஒருவர்  இருக்கிறபடியினாலும்,  {Heb  10:21}

 

துர்மனச்சாட்சி  நீங்கத்  தெளிக்கப்பட்ட  இருதயமுள்ளவர்களாயும்,  சுத்த  ஜலத்தால்  கழுவப்பட்ட  சரீரமுள்ளவர்களாயும்,  உண்மையுள்ள  இருதயத்தோடும்  விசுவாசத்தின்  பூரண  நிச்சயத்தோடும்  சேரக்கடவோம்.  {Heb  10:22}

 

அல்லாமலும்,  நம்முடைய  நம்பிக்கையை  அறிக்கையிடுகிறதில்  அசைவில்லாமல்  உறுதியாயிருக்கக்கடவோம்;  வாக்குத்தத்தம்பண்ணினவர்  உண்மையுள்ளவராயிருக்கிறாரே.  {Heb  10:23}

 

மேலும்,  அன்புக்கும்  நற்கிரியைகளுக்கும்  நாம்  ஏவப்படும்படி  ஒருவரையொருவர்  கவனித்து;  {Heb  10:24}

 

சபை  கூடிவருதலைச்  சிலர்  விட்டுவிடுகிறதுபோல  நாமும்  விட்டுவிடாமல்,  ஒருவருக்கொருவர்  புத்திசொல்லக்கடவோம்;  நாளானது  சமீபித்துவருகிறதை  எவ்வளவாய்ப்  பார்க்கிறீர்களோ  அவ்வளவாய்ப்  புத்திசொல்லவேண்டும்.  {Heb  10:25}

 

சத்தியத்தை  அறியும்  அறிவை  அடைந்தபின்பு  நாம்  மனப்பூர்வமாய்ப்  பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால்,  பாவங்களினிமித்தம்  செலுத்தத்தக்க  வேறொருபலி  இனியிராமல்,  {Heb  10:26}

 

நியாயத்தீர்ப்பு  வருமென்று  பயத்தோடே  எதிர்பார்க்குதலும்,  விரோதிகளைப்  பட்சிக்கும்  கோபாக்கினையுமே  இருக்கும்.  {Heb  10:27}

 

மோசேயினுடைய<Moses>  பிரமாணத்தைத்  தள்ளுகிறவன்  இரக்கம்பெறாமல்  இரண்டு  மூன்று  சாட்சிகளின்  வாக்கினாலே  சாகிறானே;  {Heb  10:28}

 

தேவனுடைய  குமாரனைக்  காலின்கீழ்  மிதித்து,  தன்னைப்  பரிசுத்தஞ்செய்த  உடன்படிக்கையின்  இரத்தத்தை  அசுத்தமென்றெண்ணி,  கிருபையின்  ஆவியை  நிந்திக்கிறவன்  எவ்வளவு  கொடிதான  ஆக்கினைக்குப்  பாத்திரவானாயிருப்பான்  என்பதை  யோசித்துப்பாருங்கள்.  {Heb  10:29}

 

பழிவாங்குதல்  எனக்குரியது,  நானே  பதிற்செய்வேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றும்,  கர்த்தர்  தம்முடைய  ஜனங்களை  நியாயந்தீர்ப்பார்  என்றும்  சொன்னவர்  இன்னாரென்று  அறிவோம்.  {Heb  10:30}

 

ஜீவனுள்ள  தேவனுடைய  கைகளில்  விழுகிறது  பயங்கரமாயிருக்குமே.  {Heb  10:31}

 

முந்தின  நாட்களை  நினைத்துக்கொள்ளுங்கள்;  நீங்கள்  பிரகாசமாக்கப்பட்டிருந்த  அந்த  நாட்களில்  உபத்திரவங்களாகிய  மிகுந்த  போராட்டத்தைச்  சகித்தீர்களே.  {Heb  10:32}

 

நிந்தைகளாலும்  உபத்திரவங்களாலும்  நீங்கள்  வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல்,  அப்படி  நடத்தப்பட்டவர்களுக்குப்  பங்காளிகளுமானீர்கள்.  {Heb  10:33}

 

நான்  கட்டப்பட்டிருக்கையில்  நீங்கள்  என்னைக்குறித்துப்  பரிதபித்ததுமன்றி,  பரலோகத்தில்  அதிக  மேன்மையும்  நிலையுள்ளதுமான  சுதந்தரம்  உங்களுக்கு  உண்டென்று  அறிந்து,  உங்கள்  ஆஸ்திகளையும்  சந்தோஷமாய்க்  கொள்ளையிடக்கொடுத்தீர்கள்.  {Heb  10:34}

 

ஆகையால்,  மிகுந்த  பலனுக்கேதுவான  உங்கள்  தைரியத்தை  விட்டுவிடாதிருங்கள்.  {Heb  10:35}

 

நீங்கள்  தேவனுடைய  சித்தத்தின்படி  செய்து,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப்  பெறும்படிக்குப்  பொறுமை  உங்களுக்கு  வேண்டியதாயிருக்கிறது.  {Heb  10:36}

 

வருகிறவர்  இன்னுங்  கொஞ்சக்காலத்தில்  வருவார்,  தாமதம்பண்ணார்.  {Heb  10:37}

 

விசுவாசத்தினாலே  நீதிமான்  பிழைப்பான்,  பின்வாங்கிப்போவானானால்  அவன்மேல்  என்  ஆத்துமா  பிரியமாயிராது  என்கிறார்.  {Heb  10:38}

 

நாமோ  கெட்டுப்போகப்  பின்வாங்குகிறவர்களாயிராமல்,  ஆத்துமா  ஈடேற  விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.  {Heb  10:39}

 

விசுவாசமானது  நம்பப்படுகிறவைகளின்  உறுதியும்,  காணப்படாதவைகளின்  நிச்சயமுமாயிருக்கிறது.  {Heb  11:1}

 

அதினாலே  முன்னோர்கள்  நற்சாட்சிபெற்றார்கள்.  {Heb  11:2}

 

விசுவாசத்தினாலே  நாம்  உலகங்கள்  தேவனுடைய  வார்த்தையினால்  உண்டாக்கப்பட்டதென்றும்,  இவ்விதமாய்,  காணப்படுகிறவைகள்  தோன்றப்படுகிறவைகளால்  உண்டாகவில்லையென்றும்  அறிந்திருக்கிறோம்.  {Heb  11:3}

 

விசுவாசத்தினாலே  ஆபேல்<Abel>  காயீனுடைய<Cain>  பலியிலும்  மேன்மையான  பலியை  தேவனுக்குச்  செலுத்தினான்;  அதினாலே  அவன்  நீதிமானென்று  சாட்சி  பெற்றான்;  அவனுடைய  காணிக்கைகளைக்  குறித்துத்  தேவனே  சாட்சி  கொடுத்தார்;  அவன்  மரித்தும்  இன்னும்  பேசுகிறான்.  {Heb  11:4}

 

விசுவாசத்தினாலே  ஏனோக்கு<Enoch>  மரணத்தைக்  காணாதபடிக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டான்;  தேவன்  அவனை  எடுத்துக்கொண்டபடியினாலே,  அவன்  காணப்படாமற்போனான்;  அவன்  தேவனுக்குப்  பிரியமானவனென்று  அவன்  எடுத்துக்கொள்ளப்படுவதற்கு  முன்னமே  சாட்சிபெற்றான்.  {Heb  11:5}

 

விசுவாசமில்லாமல்  தேவனுக்குப்  பிரியமாயிருப்பது  கூடாதகாரியம்;  ஏனென்றால்,  தேவனிடத்தில்  சேருகிறவன்  அவர்  உண்டென்றும்,  அவர்  தம்மைத்  தேடுகிறவர்களுக்குப்  பலன்  அளிக்கிறவரென்றும்  விசுவாசிக்கவேண்டும்.  {Heb  11:6}

 

விசுவாசத்தினாலே  நோவா<Noah>  தற்காலத்திலே  காணாதவைகளைக்குறித்துத்  தேவஎச்சரிப்புப்  பெற்று,  பயபக்தியுள்ளவனாகி,  தன்  குடும்பத்தை  இரட்சிப்பதற்குப்  பேழையை  உண்டுபண்ணினான்;  அதினாலே  அவன்  உலகம்  ஆக்கினைக்குள்ளானதென்று  தீர்த்து,  விசுவாசத்தினாலுண்டாகும்  நீதிக்குச்  சுதந்தரவாளியானான்.  {Heb  11:7}

 

விசுவாசத்தினாலே  ஆபிரகாம்<Abraham>  தான்  சுதந்தரமாகப்  பெறப்போகிற  இடத்திற்குப்  போகும்படி  அழைக்கப்பட்டபோது,  கீழ்ப்படிந்து,  தான்  போகும்  இடம்  இன்னதென்று  அறியாமல்  புறப்பட்டுப்போனான்.  {Heb  11:8}

 

விசுவாசத்தினாலே  அவன்  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட  தேசத்திலே  பரதேசியைப்போலச்  சஞ்சரித்து,  அந்த  வாக்குத்தத்தத்திற்கு  உடன்  சுதந்தரராகிய  ஈசாக்கோடும்<Isaac>  யாக்கோபோடும்<Jacob>  கூடாரங்களிலே  குடியிருந்தான்;  {Heb  11:9}

 

ஏனெனில்,  தேவன்  தாமே  கட்டி  உண்டாக்கின  அஸ்திபாரங்களுள்ள  நகரத்துக்கு  அவன்  காத்திருந்தான்.  {Heb  11:10}

 

விசுவாசத்தினாலே  சாராளும்<Sara>  வாக்குத்தத்தம்பண்ணினவர்  உண்மையுள்ளவரென்றெண்ணி,  கர்ப்பந்தரிக்கப்  பெலனடைந்து,  வயதுசென்றவளாயிருந்தும்  பிள்ளைபெற்றாள்.  {Heb  11:11}

 

ஆனபடியால்,  சரீரஞ்செத்தவனென்று  எண்ணத்தகும்  ஒருவனாலே,  வானத்திலுள்ள  பெருக்கமான  நட்சத்திரங்களைப்போலவும்  கடற்கரையிலுள்ள  எண்ணிறந்த  மணலைப்போலவும்,  மிகுந்த  ஜனங்கள்  பிறந்தார்கள்.  {Heb  11:12}

 

இவர்களெல்லாரும்,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை  அடையாமல்,  தூரத்திலே  அவைகளைக்  கண்டு,  நம்பி  அணைத்துக்கொண்டு,  பூமியின்மேல்  தங்களை  அந்நியரும்  பரதேசிகளும்  என்று  அறிக்கையிட்டு,  விசுவாசத்தோடே  மரித்தார்கள்.  {Heb  11:13}

 

இப்படி  அறிக்கையிடுகிறவர்கள்  சுயதேசத்தை  நாடிப்போகிறோம்  என்று  தெரியப்படுத்துகிறார்கள்.  {Heb  11:14}

 

தாங்கள்  விட்டுவந்த  தேசத்தை  நினைத்தார்களானால்,  அதற்குத்  திரும்பிப்போவதற்கு  அவர்களுக்குச்  சமயங்கிடைத்திருக்குமே.  {Heb  11:15}

 

அதையல்ல,  அதிலும்  மேன்மையான  பரமதேசத்தையே  விரும்பினார்கள்;  ஆகையால்  தேவன்  அவர்களுடைய  தேவனென்னப்பட  வெட்கப்படுகிறதில்லை;  அவர்களுக்கு  ஒரு  நகரத்தை  ஆயத்தம்பண்ணினாரே.  {Heb  11:16}

 

மேலும்  விசுவாசத்தினாலே  ஆபிரகாம்<Abraham>  தான்  சோதிக்கப்பட்டபோது  ஈசாக்கைப்<Isaac>  பலியாக  ஒப்புக்கொடுத்தான்.  {Heb  11:17}

 

ஈசாக்கினிடத்தில்  உன்  சந்ததி  விளங்கும்  என்று  அவனோடே  சொல்லப்பட்டிருந்ததே;  இப்படிப்பட்ட  வாக்குத்தத்தங்களைப்  பெற்றவன்,  மரித்தோரிலிருந்தும்  எழுப்பத்  தேவன்  வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,  {Heb  11:18}

 

தனக்கு  ஒரேபேறானவனையே  பலியாக  ஒப்புக்கொடுத்தான்;  மரித்தோரிலிருந்து  அவனை  பாவனையாகத்  திரும்பவும்  பெற்றுக்கொண்டான்.  {Heb  11:19}

 

விசுவாசத்தினாலே  ஈசாக்கு<Isaac>  வருங்காரியங்களைக்குறித்து  யாக்கோபையும்<Jacob>  ஏசாவையும்<Esau>  ஆசீர்வதித்தான்.  {Heb  11:20}

 

விசுவாசத்தினாலே  யாக்கோபு<Jacob>  தன்  மரணகாலத்தில்  யோசேப்பினுடைய<Joseph>  குமாரர்  இருவரையும்  ஆசீர்வதித்து,  தன்  கோலின்  முனையிலே  சாய்ந்து  தொழுதுகொண்டான்.  {Heb  11:21}

 

விசுவாசத்தினாலே  யோசேப்பு<Joseph>  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  எகிப்து<Egypt>  தேசத்தைவிட்டுப்  புறப்படுவார்களென்பதைப்பற்றித்  தன்  அந்தியகாலத்தில்  பேசி,  தன்  எலும்புகளைக்குறித்துக்  கட்டளைகொடுத்தான்.  {Heb  11:22}

 

மோசே<Moses>  பிறந்தபோது  அவனுடைய  தாய்தகப்பன்மார்  அவனை  அழகுள்ள  பிள்ளையென்று  கண்டு,  விசுவாசத்தினாலே,  ராஜாவினுடைய  கட்டளைக்குப்  பயப்படாமல்  அவனை  மூன்றுமாதம்  ஒளித்துவைத்தார்கள்.  {Heb  11:23}

 

விசுவாசத்தினாலே  மோசே<Moses>  தான்  பெரியவனானபோது  பார்வோனுடைய<Pharaoh>  குமாரத்தியின்  மகன்  என்னப்படுவதை  வெறுத்து,  {Heb  11:24}

 

அநித்தியமான  பாவசந்தோஷங்களை  அநுபவிப்பதைப்பார்க்கிலும்  தேவனுடைய  ஜனங்களோடே  துன்பத்தை  அநுபவிப்பதையே  தெரிந்துகொண்டு,  {Heb  11:25}

 

இனிவரும்  பலன்மேல்  நோக்கமாயிருந்து,  எகிப்திலுள்ள<Egypt>  பொக்கிஷங்களிலும்  கிறிஸ்துவினிமித்தம்<Christ>  வரும்  நிந்தையை  அதிக  பாக்கியமென்று  எண்ணினான்.  {Heb  11:26}

 

விசுவாசத்தினாலே  அவன்  அதரிசனமானவரைத்  தரிசிக்கிறதுபோல  உறுதியாயிருந்து,  ராஜாவின்  கோபத்துக்குப்  பயப்படாமல்  எகிப்தைவிட்டுப்<Egypt>  போனான்.  {Heb  11:27}

 

விசுவாசத்தினாலே,  முதற்பேறானவைகளைச்  சங்கரிக்கிறவன்  இஸ்ரவேலரைத்<Israel>  தொடாதபடிக்கு,  அவன்  பஸ்காவையும்  இரத்தம்  பூசுதலாகிய  நியமத்தையும்  ஆசரித்தான்.  {Heb  11:28}

 

விசுவாசத்தினாலே  அவர்கள்  சிவந்த  சமுத்திரத்தை<Red  sea>  உலர்ந்த  தரையைக்  கடந்துபோவதுபோலக்  கடந்துபோனார்கள்;  எகிப்தியர்<Egyptians>  அப்படிச்  செய்யத்துணிந்து  அமிழ்ந்துபோனார்கள்.  {Heb  11:29}

 

விசுவாசத்தினாலே  எரிகோ<Jericho>  பட்டணத்தின்  மதில்கள்  ஏழுநாள்  சுற்றிவரப்பட்டு  விழுந்தது.  {Heb  11:30}

 

விசுவாசத்தினாலே  ராகாப்<Rahab>  என்னும்  வேசி  வேவுகாரரைச்  சமாதானத்தோடே  ஏற்றுக்கொண்டு,  கீழ்ப்படியாதவர்களோடேகூடச்  சேதமாகாதிருந்தாள்.  {Heb  11:31}

 

பின்னும்  நான்  என்ன  சொல்லுவேன்?  கிதியோன்<Gedeon>,  பாராக்<Barak>,  சிம்சோன்<Samson>,  யெப்தா<Jephthae>,  தாவீது<David>,  சாமுவேல்<Samuel>  என்பவர்களையும்,  தீர்க்கதரிசிகளையுங்குறித்து  நான்  விவரஞ்சொல்லவேண்டுமானால்  காலம்  போதாது.  {Heb  11:32}

 

விசுவாசத்தினாலே  அவர்கள்  ராஜ்யங்களை  ஜெயித்தார்கள்,  நீதியை  நடப்பித்தார்கள்,  வாக்குத்தத்தங்களைப்  பெற்றார்கள்,  சிங்கங்களின்  வாய்களை  அடைத்தார்கள்,  {Heb  11:33}

 

அக்கினியின்  உக்கிரத்தை  அவித்தார்கள்,  பட்டயக்கருக்குக்குத்  தப்பினார்கள்,  பலவீனத்தில்  பலன்கொண்டார்கள்;  யுத்தத்தில்  வல்லவர்களானார்கள்,  அந்நியருடைய  சேனைகளை  முறியடித்தார்கள்.  {Heb  11:34}

 

ஸ்திரீகள்  சாகக்கொடுத்த  தங்களுடையவர்களை  உயிரோடெழுந்திருக்கப்  பெற்றார்கள்;  வேறுசிலர்  மேன்மையான  உயிர்த்தெழுதலை  அடையும்படிக்கு,  விடுதலைபெறச்  சம்மதியாமல்,  வாதிக்கப்பட்டார்கள்;  {Heb  11:35}

 

வேறு  சிலர்  நிந்தைகளையும்  அடிகளையும்  கட்டுகளையும்  காவலையும்  அநுபவித்தார்கள்;  {Heb  11:36}

 

கல்லெறியுண்டார்கள்,  வாளால்  அறுப்புண்டார்கள்,  பரீட்சைபார்க்கப்பட்டார்கள்,  பட்டயத்தினாலே  வெட்டப்பட்டு  மரித்தார்கள்,  செம்மறியாட்டுத்  தோல்களையும்  வெள்ளாட்டுத்  தோல்களையும்  போர்த்துக்கொண்டு  திரிந்து,  குறைவையும்  உபத்திரவத்தையும்  துன்பத்தையும்  அநுபவித்தார்கள்;  {Heb  11:37}

 

உலகம்  அவர்களுக்குப்  பாத்திரமாயிருக்கவில்லை;  அவர்கள்  வனாந்தரங்களிலேயும்  மலைகளிலேயும்  குகைகளிலேயும்  பூமியின்  வெடிப்புகளிலேயும்  சிதறுண்டு  அலைந்தார்கள்.  {Heb  11:38}

 

இவர்களெல்லாரும்  விசுவாசத்தினாலே  நற்சாட்சிபெற்றும்,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை  அடையாமற்போனார்கள்.  {Heb  11:39}

 

அவர்கள்  நம்மையல்லாமல்  பூரணராகாதபடிக்கு  விசேஷித்த  நன்மையானதொன்றைத்  தேவன்  நமக்கென்று  முன்னதாக  நியமித்திருந்தார்.  {Heb  11:40}

 

ஆகையால்,  மேகம்போன்ற  இத்தனை  திரளான  சாட்சிகள்  நம்மைச்  சூழ்ந்துகொண்டிருக்க,  பாரமான  யாவற்றையும்,  நம்மைச்  சுற்றி  நெருங்கிநிற்கிற  பாவத்தையும்  தள்ளிவிட்டு,  விசுவாசத்தைத்  துவக்குகிறவரும்  முடிக்கிறவருமாயிருக்கிற  இயேசுவை<Jesus>  நோக்கி,  நமக்கு  நியமித்திருக்கிற  ஓட்டத்தில்  பொறுமையோடே  ஓடக்கடவோம்;  {Heb  12:1}

 

அவர்  தமக்குமுன்  வைத்திருந்த  சந்தோஷத்தின்பொருட்டு,  அவமானத்தை  எண்ணாமல்,  சிலுவையைச்  சகித்து,  தேவனுடைய  சிங்காசனத்தின்  வலதுபாரிசத்தில்  வீற்றிருக்கிறார்.  {Heb  12:2}

 

ஆகையால்  நீங்கள்  இளைப்புள்ளவர்களாய்  உங்கள்  ஆத்துமாக்களில்  சோர்ந்துபோகாதபடிக்கு,  தமக்கு  விரோதமாய்ப்  பாவிகளால்  செய்யப்பட்ட  இவ்விதமான  விபரீதங்களைச்  சகித்த  அவரையே  நினைத்துக்கொள்ளுங்கள்.  {Heb  12:3}

 

பாவத்திற்கு  விரோதமாய்ப்  போராடுகிறதில்  இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக  நீங்கள்  இன்னும்  எதிர்த்துநிற்கவில்லையே.  {Heb  12:4}

 

அன்றியும்:  என்  மகனே,  கர்த்தருடைய  சிட்சையை  அற்பமாக  எண்ணாதே,  அவரால்  கடிந்துகொள்ளப்படும்போது  சோர்ந்துபோகாதே.  {Heb  12:5}

 

கர்த்தர்  எவனிடத்தில்  அன்புகூருகிறாரோ  அவனை  அவர்  சிட்சித்து,  தாம்  சேர்த்துக்கொள்ளுகிற  எந்த  மகனையும்  தண்டிக்கிறார்  என்று  பிள்ளைகளுக்குச்  சொல்லுகிறதுபோல  உங்களுக்குச்  சொல்லியிருக்கிற  புத்திமதியை  மறந்தீர்கள்.  {Heb  12:6}

 

நீங்கள்  சிட்சையைச்  சகிக்கிறவர்களாயிருந்தால்  தேவன்  உங்களைப்  புத்திரராக  எண்ணி  நடத்துகிறார்;  தகப்பன்  சிட்சியாத  புத்திரனுண்டோ?  {Heb  12:7}

 

எல்லாருக்கும்  கிடைக்கும்  சிட்சை  உங்களுக்குக்  கிடையாதிருந்தால்  நீங்கள்  புத்திரராயிராமல்  வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.  {Heb  12:8}

 

அன்றியும்,  நம்முடைய  சரீரத்தின்  தகப்பன்மார்கள்  நம்மைச்  சிட்சிக்கும்போது,  அவர்களுக்கு  நாம்  அஞ்சி  நடந்திருக்க,  நாம்  பிழைக்கத்தக்கதாக  ஆவிகளின்  பிதாவுக்கு  வெகு  அதிகமாய்  அடங்கி  நடக்கவேண்டுமல்லவா?  {Heb  12:9}

 

அவர்கள்  தங்களுக்கு  நலமென்று  தோன்றினபடி  கொஞ்சக்காலம்  சிட்சித்தார்கள்;  இவரோ  தம்முடைய  பரிசுத்தத்துக்கு  நாம்  பங்குள்ளவர்களாகும்பொருட்டு  நம்முடைய  பிரயோஜனத்துக்காகவே  நம்மைச்  சிட்சிக்கிறார்.  {Heb  12:10}

 

எந்தச்  சிட்சையும்  தற்காலத்தில்  சந்தோஷமாய்க்  காணாமல்  துக்கமாய்க்  காணும்;  ஆகிலும்  பிற்காலத்தில்  அதில்  பழகினவர்களுக்கு  அது  நீதியாகிய  சமாதான  பலனைத்  தரும்.  {Heb  12:11}

 

ஆகையினால்,  நெகிழ்ந்த  கைகளையும்  தளர்ந்த  முழங்கால்களையும்  நீங்கள்  திரும்ப  நிமிர்த்தி,  {Heb  12:12}

 

முடமாயிருக்கிறது  பிசகிப்போகாமல்  சொஸ்தமாகும்படிக்கு,  உங்கள்  பாதங்களுக்கு  வழிகளைச்  செவ்வைப்படுத்துங்கள்.  {Heb  12:13}

 

யாவரோடும்  சமாதானமாயிருக்கவும்,  பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும்  நாடுங்கள்;  பரிசுத்தமில்லாமல்  ஒருவனும்  கர்த்தரைத்  தரிசிப்பதில்லையே.  {Heb  12:14}

 

ஒருவனும்  தேவனுடைய  கிருபையை  இழந்துபோகாதபடிக்கும்  யாதொரு  கசப்பான  வேர்  முளைத்தெழும்பிக்  கலக்கமுண்டாக்குகிறதினால்  அநேகர்  தீட்டுப்படாதபடிக்கும்,  {Heb  12:15}

 

ஒருவனும்  வேசிக்கள்ளனாகவும்,  ஒருவேளைப்  போஜனத்துக்காகத்  தன்  சேஷ்டபுத்திரபாகத்தை  விற்றுப்போட்ட  ஏசாவைப்போலச்<Esau>  சீர்கெட்டவனாகவும்  இராதபடிக்கும்  எச்சரிக்கையாயிருங்கள்.  {Heb  12:16}

 

ஏனென்றால்,  பிற்பாடு  அவன்  ஆசீர்வாதத்தைச்  சுதந்தரித்துக்கொள்ள  விரும்பியும்  ஆகாதவனென்று  தள்ளப்பட்டதை  அறிவீர்கள்;  அவன்  கண்ணீர்விட்டு,  கவலையோடே  தேடியும்  மனம்  மாறுதலைக்  காணாமற்போனான்.  {Heb  12:17}

 

அன்றியும்,  தொடக்கூடியதும்,  அக்கினி  பற்றியெரிகிறதுமான  மலையினிடத்திற்கும்,  மந்தாரம்  இருள்  பெருங்காற்று  ஆகிய  இவைகளினிடத்திற்கும்,  {Heb  12:18}

 

எக்காளமுழக்கத்தினிடத்திற்கும்,  வார்த்தைகளுடைய  சத்தத்தினிடத்திற்கும்,  நீங்கள்  வந்து  சேரவில்லை;  அந்தச்  சத்தத்தைக்  கேட்டவர்கள்  பின்னும்  தங்களுக்கு  வார்த்தை  சொல்லப்படாதபடிக்கு  வேண்டிக்கொண்டார்கள்.  {Heb  12:19}

 

ஏனெனில்  ஒரு  மிருகமாகிலும்  மலையைத்  தொட்டால்,  அது  கல்லெறியுண்டு,  அல்லது  அம்பினால்  எய்யுண்டு  சாகவேண்டுமென்று  சொல்லப்பட்ட  கட்டளையைச்  சகிக்கமாட்டாதிருந்தார்கள்.  {Heb  12:20}

 

மோசேயும்<Moses>:  நான்  மிகவும்  பயந்து  நடுங்குகிறேன்  என்று  சொல்லத்தக்கதாக  அந்தக்  காட்சி  அவ்வளவு  பயங்கரமாயிருந்தது.  {Heb  12:21}

 

நீங்களோ  சீயோன்<Sion>  மலையினிடத்திற்கும்,  ஜீவனுள்ள  தேவனுடைய  நகரமாகிய  பரம  எருசலேமினிடத்திற்கும்<Jerusalem>,  ஆயிரம்  பதினாயிரமான  தேவதூதர்களினிடத்திற்கும்,  {Heb  12:22}

 

பரலோகத்தில்  பேரெழுதியிருக்கிற  முதற்பேறானவர்களின்  சர்வசங்கமாகிய  சபையினிடத்திற்கும்,  யாவருக்கும்  நியாயாதிபதியாகிய  தேவனிடத்திற்கும்,  பூரணராக்கப்பட்ட  நீதிமான்களுடைய  ஆவிகளினிடத்திற்கும்,  {Heb  12:23}

 

புது  உடன்படிக்கையின்  மத்தியஸ்தராகிய  இயேசுவினிடத்திற்கும்<Jesus>,  ஆபேலினுடைய<Abel>  இரத்தம்  பேசினதைப்பார்க்கிலும்  நன்மையானவைகளைப்  பேசுகிற  இரத்தமாகிய  தெளிக்கப்படும்  இரத்தத்தினிடத்திற்கும்  வந்து  சேர்ந்தீர்கள்.  {Heb  12:24}

 

பேசுகிறவருக்கு  நீங்கள்  செவிகொடுக்கமாட்டோமென்று  விலகாதபடி  எச்சரிக்கையாயிருங்கள்;  ஏனெனில்,  பூமியிலே  பேசினவருக்குச்  செவிகொடுக்கமாட்டோமென்று  விலகினவர்கள்  தப்பிப்போகாமலிருக்க,  பரலோகத்திலிருந்து  பேசுகிறவரை  நாம்  விட்டுவிலகினால்  எப்படித்  தப்பிப்போவோம்?  {Heb  12:25}

 

அவருடைய  சத்தம்  அப்பொழுது  பூமியை  அசையப்பண்ணிற்று;  இன்னும்  ஒருதரம்  நான்  பூமியை  மாத்திரமல்ல,  வானத்தையும்  அசையப்பண்ணுவேன்  என்று  இப்பொழுது  வாக்குத்தத்தஞ்  செய்திருக்கிறார்.  {Heb  12:26}

 

இன்னும்  ஒருதரம்  என்கிற  சொல்லானது  அசையாதவைகள்  நிலைத்திருக்கத்தக்கதாக,  அசைவுள்ளவைகள்  உண்டாக்கப்பட்டவைகள்போல  மாறிப்போம்  என்பதைக்  குறிக்கிறது.  {Heb  12:27}

 

ஆதலால்,  அசைவில்லாத  ராஜ்யத்தைப்  பெறுகிறவர்களாகிய  நாம்  பயத்தோடும்  பக்தியோடும்  தேவனுக்குப்  பிரியமாய்  ஆராதனை  செய்யும்படி  கிருபையைப்  பற்றிக்கொள்ளக்கடவோம்.  {Heb  12:28}

 

நம்முடைய  தேவன்  பட்சிக்கிற  அக்கினியாயிருக்கிறாரே.  {Heb  12:29}

 

சகோதர  சிநேகம்  நிலைத்திருக்கக்கடவது.  {Heb  13:1}

 

அந்நியரை  உபசரிக்க  மறவாதிருங்கள்;  அதினாலே  சிலர்  அறியாமல்  தேவதூதரையும்  உபசரித்ததுண்டு.  {Heb  13:2}

 

கட்டப்பட்டிருக்கிறவர்களோடே  நீங்களும்  கட்டப்பட்டவர்கள்போல  அவர்களை  நினைத்துக்கொள்ளுங்கள்;  நீங்களும்  சரீரத்தோடிருக்கிறவர்களென்று  அறிந்து,  தீங்கநுபவிக்கிறவர்களை  நினைத்துக்கொள்ளுங்கள்.  {Heb  13:3}

 

விவாகம்  யாவருக்குள்ளும்  கனமுள்ளதாயும்,  விவாகமஞ்சம்  அசுசிப்படாததாயுமிருப்பதாக;  வேசிக்கள்ளரையும்  விபசாரக்காரரையும்  தேவன்  நியாயந்தீர்ப்பார்.  {Heb  13:4}

 

நீங்கள்  பண  ஆசையில்லாதவர்களாய்  நடந்து,  உங்களுக்கு  இருக்கிறவைகள்  போதுமென்று  எண்ணுங்கள்;  நான்  உன்னைவிட்டு  விலகுவதுமில்லை,  உன்னைக்  கைவிடுவதுமில்லை  என்று  அவர்  சொல்லியிருக்கிறாரே.  {Heb  13:5}

 

அதினாலே  நாம்  தைரியங்கொண்டு:  கர்த்தர்  எனக்குச்  சகாயர்,  நான்  பயப்படேன்,  மனுஷன்  எனக்கு  என்னசெய்வான்  என்று  சொல்லலாமே.  {Heb  13:6}

 

தேவவசனத்தை  உங்களுக்குப்  போதித்து  உங்களை  நடத்தினவர்களை  நீங்கள்  நினைத்து,  அவர்களுடைய  நடக்கையின்  முடிவை  நன்றாய்ச்  சிந்தித்து,  அவர்களுடைய  விசுவாசத்தைப்  பின்பற்றுங்கள்.  {Heb  13:7}

 

இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  நேற்றும்  இன்றும்  என்றும்  மாறாதவராயிருக்கிறார்.  {Heb  13:8}

 

பலவிதமான  அந்நிய  போதனைகளால்  அலைப்புண்டு  திரியாதிருங்கள்.  போஜனபதார்த்தங்களினாலல்ல,  கிருபையினாலே  இருதயம்  ஸ்திரப்படுகிறது  நல்லது;  போஜனபதார்த்தங்களில்  முயற்சிசெய்கிறவர்கள்  பலனடையவில்லையே.  {Heb  13:9}

 

நமக்கு  ஒரு  பலிபீடமுண்டு,  அதற்குரியவைகளைப்  புசிக்கிறதற்குக்  கூடாரத்தில்  ஆராதனை  செய்கிறவர்களுக்கு  அதிகாரமில்லை.  {Heb  13:10}

 

ஏனென்றால்,  எந்த  மிருகங்களுடைய  இரத்தம்  பாவங்களினிமித்தமாகப்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரதான  ஆசாரியனாலே  கொண்டுவரப்படுகிறதோ,  அந்த  மிருகங்களின்  உடல்கள்  பாளயத்துக்குப்  புறம்பே  சுட்டெரிக்கப்படும்.  {Heb  13:11}

 

அந்தப்படியே,  இயேசுவும்<Jesus>  தம்முடைய  சொந்த  இரத்தத்தினாலே  ஜனத்தைப்  பரிசுத்தஞ்செய்யும்படியாக  நகரவாசலுக்குப்  புறம்பே  பாடுபட்டார்.  {Heb  13:12}

 

ஆகையால்,  நாம்  அவருடைய  நிந்தையைச்  சுமந்து,  பாளயத்துக்குப்  புறம்பே  அவரிடத்திற்குப்  புறப்பட்டுப்போகக்கடவோம்.  {Heb  13:13}

 

நிலையான  நகரம்  நமக்கு  இங்கே  இல்லை;  வரப்போகிறதையே  நாடித்  தேடுகிறோம்.  {Heb  13:14}

 

ஆகையால்,  அவருடைய  நாமத்தைத்  துதிக்கும்  உதடுகளின்  கனியாகிய  ஸ்தோத்திரபலியை  அவர்மூலமாய்  எப்போதும்  தேவனுக்குச்  செலுத்தக்கடவோம்.  {Heb  13:15}

 

அன்றியும்  நன்மைசெய்யவும்,  தானதர்மம்பண்ணவும்  மறவாதிருங்கள்;  இப்படிப்பட்ட  பலிகளின்மேல்  தேவன்  பிரியமாயிருக்கிறார்.  {Heb  13:16}

 

உங்களை  நடத்துகிறவர்கள்,  உங்கள்  ஆத்துமாக்களுக்காக  உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய்  விழித்திருக்கிறவர்களானபடியால்,  அவர்கள்  துக்கத்தோடே  அல்ல,  சந்தோஷத்தோடே  அதைச்  செய்யும்படி,  அவர்களுக்குக்  கீழ்ப்படிந்து  அடங்குங்கள்;  அவர்கள்  துக்கத்தோடே  அப்படிச்  செய்தால்  அது  உங்களுக்குப்  பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.  {Heb  13:17}

 

எங்களுக்காக  வேண்டிக்கொள்ளுங்கள்;  நாங்கள்  நல்மனச்சாட்சியுள்ளவர்களாய்  எல்லாவற்றிலும்  யோக்கியமாய்  நடக்க  விரும்புகிறோமென்று  நிச்சயித்திருக்கிறோம்.  {Heb  13:18}

 

நான்  அதிசீக்கிரமாய்  உங்களிடத்தில்  வரும்படிக்கு  நீங்கள்  இப்படி  வேண்டிக்கொள்ளும்படி  அதிகமாய்க்  கேட்டுக்கொள்ளுகிறேன்.  {Heb  13:19}

 

நித்திய  உடன்படிக்கையின்  இரத்தத்தினாலே  ஆடுகளுடைய  பெரிய  மேய்ப்பரான  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுவை<Jesus>  மரித்தோரிலிருந்து  ஏறிவரப்பண்ணின  சமாதானத்தின்  தேவன்,  {Heb  13:20}

 

இயேசுகிறிஸ்துவைக்கொண்டு<Jesus  Christ>  தமக்குமுன்பாகப்  பிரியமானதை  உங்களில்  நடப்பித்து,  நீங்கள்  தம்முடைய  சித்தத்தின்படிசெய்ய  உங்களைச்  சகலவித  நற்கிரியையிலும்  சீர்பொருந்தினவர்களாக்குவாராக;  அவருக்கு  என்றென்றைக்கும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  {Heb  13:21}

 

சகோதரரே,  நான்  சுருக்கமாய்  உங்களுக்கு  எழுதின  இந்தப்  புத்திமதியான  வார்த்தைகளை  நீங்கள்  பொறுமையாய்  ஏற்றுக்கொள்ளும்படி  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {Heb  13:22}

 

சகோதரனாகிய  தீமோத்தேயு<Timothy>  விடுதலையாக்கப்பட்டானென்று  அறிவீர்களாக;  அவன்  சீக்கிரமாய்  வந்தால்,  அவனோடேகூட  நான்  வந்து,  உங்களைக்  காண்பேன்.  {Heb  13:23}

 

உங்களை  நடத்துகிறவர்களையும்,  பரிசுத்தவான்கள்  யாவரையும்  வாழ்த்துங்கள்.  இத்தாலியா<Italy>  தேசத்தார்  யாவரும்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  {Heb  13:24}

 

கிருபையானது  உங்களனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  {Heb  13:25}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!