Thursday, March 19, 2020

எசேக்கியேல்

முப்பதாம்  வருஷம்  நாலாம்  மாசம்  ஐந்தாந்தேதியிலே,  நான்  கேபார்<Chebar>  நதியண்டையிலே  சிறைப்பட்டவர்கள்  நடுவில்  இருக்கும்போது,  சம்பவித்தது  என்னவென்றால்,  வானங்கள்  திறக்கப்பட,  நான்  தேவதரிசனங்களைக்  கண்டேன்.  {Ezek  1:1}

 

அது  யோயாக்கீன்<Jehoiachin>  ராஜாவுடைய  சிறையிருப்பின்  ஐந்தாம்  வருஷமாயிருந்தது.  {Ezek  1:2}

 

அந்த  ஐந்தாந்தேதியிலே,  கல்தேயர்<Chaldeans>  தேசத்திலுள்ள  கேபார்<Chebar>  நதியண்டையிலே  பூசியென்னும்<Buzi>  ஆசாரியனுடைய  குமாரனாகிய  எசேக்கியேலுக்குக்<Ezekiel>  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அங்கே  கர்த்தருடைய  கரம்  அவன்மேல்  அமர்ந்தது.  {Ezek  1:3}

 

இதோ,  வடக்கேயிருந்து  புசல்காற்றும்  பெரிய  மேகமும்,  அத்தோடே  கலந்த  அக்கினியும்  வரக்கண்டேன்;  அதைச்  சுற்றிலும்  பிரகாசமும்,  அதின்  நடுவில்  அக்கினிக்குள்ளிருந்து  விளங்கிய  சொகுசாவின்  நிறமும்  உண்டாயிருந்தது.  {Ezek  1:4}

 

அதின்  நடுவிலிருந்து  நாலு  ஜீவன்கள்  தோன்றின;  அவைகளின்  சாயல்  மனுஷசாயலாயிருந்தது.  {Ezek  1:5}

 

அவைகளில்  ஒவ்வொன்றுக்கும்  நந்நான்கு  முகங்களும்,  ஒவ்வொன்றுக்கும்  நந்நான்கு  செட்டைகளும்  இருந்தன.  {Ezek  1:6}

 

அவைகளுடைய  கால்கள்  நிமிர்ந்த  கால்களாயிருந்தன;  அவைகளுடைய  உள்ளங்கால்கள்  கன்றுக்குட்டியின்  உள்ளங்கால்களுக்கு  ஒப்பாயிருந்தன;  அவைகள்  துலக்கப்பட்ட  வெண்கலத்தின்  வருணமாய்  மின்னிக்கொண்டிருந்தன.  {Ezek  1:7}

 

அவைகளுடைய  செட்டைகளின்கீழ்  அவைகளின்  நாலு  பக்கங்களிலும்  மனுஷகைகள்  இருந்தன;  அந்த  நாலுக்கும்  அதினதின்  முகங்களும்  அதினதின்  செட்டைகளும்  உண்டாயிருந்தன.  {Ezek  1:8}

 

அவைகள்  ஒவ்வொன்றின்  செட்டைகளும்  மற்றதின்  செட்டைகளோடே  சேர்ந்திருந்தன;  அவைகள்  செல்லுகையில்  திரும்பாமல்  ஒவ்வொன்றும்  தன்தன்  திசைக்கு  நேர்முகமாய்ச்  சென்றன.  {Ezek  1:9}

 

அவைகளுடைய  முகங்களின்  சாயலாவது,  வலதுபக்கத்தில்  நாலும்  மனுஷமுகமும்  சிங்கமுகமும்,  இடதுபக்கத்தில்  நாலும்  எருது  முகமும்  கழுகு  முகமுமாயிருந்தன.  {Ezek  1:10}

 

அவைகளுடைய  முகங்கள்  இப்படியிருக்க,  அவைகளுடைய  செட்டைகள்  மேலே  பிரிந்திருந்தன,  ஒவ்வொன்றுக்குமுள்ள  இரண்டிரண்டு  செட்டைகள்  ஒன்றோடொன்று  சேர்ந்திருந்தன;  மற்ற  இரண்டிரண்டு  செட்டைகள்  அவைகளுடைய  உடல்களை  மூடின.  {Ezek  1:11}

 

அவைகள்  ஒவ்வொன்றும்  தன்தன்  திசைக்கு  நேர்முகமாய்ச்  சென்றது;  ஆவி  போகவேண்டுமென்றிருந்த  எவ்விடத்துக்கும்  அவைகள்  போயின;  போகையில்  அவைகள்  திரும்பிப்பார்க்கவில்லை.  {Ezek  1:12}

 

ஜீவன்களுடைய  சாயல்  எப்படியிருந்ததென்றால்,  அவைகள்  எரிகிற  அக்கினித்தழலின்  தோற்றமும்  தீவர்த்திகளின்  தோற்றமுமாயிருந்தது;  அந்த  அக்கினி  ஜீவன்களுக்குள்ளே  உலாவிப்  பிரகாசமாயிருந்தது;  அக்கினியிலிருந்து  மின்னல்  புறப்பட்டது.  {Ezek  1:13}

 

அந்த  ஜீவன்கள்  மின்னலின்  தோற்றம்போல  ஓடித்திரிந்தன.  {Ezek  1:14}

 

நான்  அந்த  ஜீவன்களைப்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  இதோ,  பூமியில்  ஜீவன்களண்டையிலே  நாலு  முகங்களையுடைய  ஒரு  சக்கரத்தைக்  கண்டேன்.  {Ezek  1:15}

 

சக்கரங்களின்  ரூபமும்  அவைகளின்  வேலையும்  படிகப்பச்சை  வருணமாயிருந்தது;  அவைகள்  நாலுக்கும்  ஒரேவித  சாயல்  இருந்தது;  அவைகளின்  ரூபமும்  அவைகளின்  வேலையும்  சக்கரத்துக்குள்  சக்கரம்  இருக்குமாபோல்  இருந்தது.  {Ezek  1:16}

 

அவைகள்  ஓடுகையில்  தங்கள்  நாலு  பக்கங்களிலும்  ஓடும்,  ஓடுகையில்  அவைகள்  திரும்புகிறதில்லை.  {Ezek  1:17}

 

அவைகளின்  வட்டங்கள்  பயங்கரப்படத்தக்க  உயரமாயிருந்தன;  அந்த  நாலு  வட்டங்களும்  சுற்றிலும்  கண்களால்  நிறைந்திருந்தன.  {Ezek  1:18}

 

அந்த  ஜீவன்கள்  செல்லும்போது,  அந்தச்  சக்கரங்கள்  அவைகள்  அருகே  ஓடின;  அந்த  ஜீவன்கள்  பூமியிலிருந்து  எழும்பும்போது  சக்கரங்களும்  எழும்பின.  {Ezek  1:19}

 

ஆவி  போகவேண்டுமென்றிருந்த  எவ்விடத்துக்கும்  அவைகள்  போயின;  அவ்விடத்துக்கு  அவைகளின்  ஆவியும்  போகவேண்டுமென்றிருந்தது;  சக்கரங்களும்  அவைகளின்  அருகே  எழும்பின;  ஜீவனுடைய  ஆவி  சக்கரங்களில்  இருந்தது.  {Ezek  1:20}

 

அவைகள்  செல்லும்போது  இவைகளும்  சென்றன;  அவைகள்  நிற்கும்போது  இவைகளும்  நின்றன;  அவைகள்  பூமியிலிருந்து  எழும்பும்போது,  சக்கரங்களும்  அவைகள்  அருகே  எழும்பின;  ஜீவனுடைய  ஆவி  சக்கரங்களில்  இருந்தது.  {Ezek  1:21}

 

ஜீவனுடைய  தலைகளின்மேல்  பிரமிக்கத்தக்க  வச்சிரப்பிரகாசமான  ஒரு  மண்டலம்  இருந்தது;  அது  அவைகளுடைய  தலைகளின்மேல்  உயர  விரிந்திருந்தது.  {Ezek  1:22}

 

மண்டலத்தின்கீழ்  அவைகளுடைய  செட்டைகள்  ஒன்றுக்கொன்று  எதிர்நேராய்  விரிந்திருந்தன;  தங்கள்தங்கள்  உடல்களை  மூடிக்கொள்ளுகிற  இரண்டிரண்டு  செட்டைகள்  இருபக்கத்திலும்  இருக்கிற  ஒவ்வொன்றுக்கும்  இருந்தன.  {Ezek  1:23}

 

அவைகள்  செல்லும்போது  அவைகளுடைய  செட்டைகளின்  இரைச்சலைக்  கேட்டேன்;  அது  பெருவெள்ளத்தின்  இரைச்சல்போலவும்,  சர்வவல்லவருடைய  சத்தம்போலவும்,  ஒரு  இராணுவத்தின்  இரைச்சலுக்கு  ஒத்த  ஆரவாரத்தின்  சத்தம்போலவுமிருந்தது;  அவைகள்  நிற்கும்போது  தங்கள்  செட்டைகளைத்  தளரவிட்டிருந்தன.  {Ezek  1:24}

 

அவைகள்  நின்று  தங்கள்  செட்டைகளைத்  தளரவிட்டிருக்கையில்,  அவைகளுடைய  தலைகளுக்கு  மேலான  மண்டலத்தின்மேலிருந்து  ஒரு  சத்தம்  பிறந்தது.  {Ezek  1:25}

 

அவைகளின்  தலைகளுக்குமேலுள்ள  மண்டலத்தின்மீதில்  நீலரத்தினம்போல  விளங்கும்  ஒரு  சிங்காசனத்தின்  சாயலும்,  அந்தச்  சிங்காசனத்தின்  சாயலின்மேல்  மனுஷசாயலுக்கு  ஒத்த  ஒரு  சாயலும்  இருந்தது.  {Ezek  1:26}

 

அவருடைய  இடுப்பாகக்  காணப்பட்டதுமுதல்  மேலெல்லாம்  உட்புறம்  சுற்றிலும்  அக்கினிமயமான  சொகுசாவின்  நிறமாயிருக்கக்கண்டேன்;  அவருடைய  இடுப்பாகக்  காணப்பட்டதுமுதல்  கீழெல்லாம்  அக்கினிமயமாகவும்,  அதைச்  சுற்றிலும்  பிரகாசமாகவும்  இருக்கக்கண்டேன்.  {Ezek  1:27}

 

மழைபெய்யும்  நாளில்  மேகத்தில்  வானவில்  எப்படிக்  காணப்படுகிறதோ,  அப்படியே  சுற்றிலுமுள்ள  அந்தப்  பிரகாசம்  காணப்பட்டது;  இதுவே  கர்த்தருடைய  மகிமையின்  சாயலுக்குரிய  தரிசனமாயிருந்தது;  அதை  நான்  கண்டபோது  முகங்குப்புற  விழுந்தேன்;  அப்பொழுது  பேசுகிற  ஒருவருடைய  சத்தத்தைக்  கேட்டேன்.  {Ezek  1:28}

 

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  உன்  காலூன்றி  நில்;  உன்னுடனே  பேசுவேன்  என்றார்.  {Ezek  2:1}

 

இப்படி  அவர்  என்னோடே  பேசும்போது,  ஆவி  எனக்குள்  வந்து,  என்னைக்  காலூன்றி  நிற்கும்படி  செய்தது;  அப்பொழுது  அவர்  என்னுடனே  பேசுகிறதைக்  கேட்டேன்.  {Ezek  2:2}

 

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  எனக்கு  விரோதமாய்  எழும்பின  கலகக்கார  ஜாதியாகிய  இஸ்ரவேல்<Israel>  புத்திரரிடத்திற்கு  நான்  உன்னை  அனுப்புகிறேன்;  அவர்களும்  அவர்கள்  பிதாக்களும்  இந்நாள்வரைக்கும்  எனக்கு  விரோதமாய்த்  துரோகஞ்செய்தார்கள்.  {Ezek  2:3}

 

அவர்கள்  கடினமுகமும்  முரட்டாட்ட  இருதயமுமுள்ள  புத்திரர்;  அவர்களிடத்திற்கு  நான்  உன்னை  அனுப்புகிறேன்;  கர்த்தராகிய  ஆண்டவர்  இன்னின்னதை  உரைக்கிறார்  என்று  அவர்களோடே  சொல்லு.  {Ezek  2:4}

 

கலகவீட்டாராகிய  அவர்கள்  கேட்டாலும்  சரி,  கேளாவிட்டாலும்  சரி,  தங்களுக்குள்ளே  ஒரு  தீர்க்கதரிசி  உண்டென்கிறதை  அவர்கள்  அறியவேண்டும்.  {Ezek  2:5}

 

மனுபுத்திரனே,  நீ  அவர்களுக்குப்  பயப்படவேண்டாம்;  அவர்கள்  வார்த்தைகளுக்கும்  அஞ்சவேண்டாம்;  நெரிஞ்சில்களுக்குள்ளும்  முள்ளுகளுக்குள்ளும்  நீ  தங்கியிருந்தாலும்,  நீ  தேள்களுக்குள்  வாசம்பண்ணினாலும்,  நீ  அவர்கள்  வார்த்தைகளுக்குப்  பயப்படாமலும்  அவர்கள்  முகத்துக்குக்  கலங்காமலுமிரு;  அவர்கள்  கலகவீட்டார்.  {Ezek  2:6}

 

கலகக்காரராகிய  அவர்கள்  கேட்டாலும்  சரி,  கேளாவிட்டாலும்  சரி,  நீ  என்  வார்த்தைகளை  அவர்களுக்குச்  சொல்லு.  {Ezek  2:7}

 

மனுபுத்திரனே,  நீ  அந்தக்  கலகவீட்டாரைப்போலக்  கலகக்காரனாயிராமல்,  நான்  உன்னோடே  சொல்லுகிறதைக்  கேள்;  உன்  வாயைத்  திறந்து  நான்  உனக்குக்  கொடுக்கிறதைப்  புசி  என்றார்.  {Ezek  2:8}

 

அப்பொழுது  இதோ,  என்னிடத்திற்கு  நீட்டப்பட்ட  ஒரு  கையைக்  கண்டேன்;  அந்தக்  கையிலே  ஒரு  புஸ்தகச்சுருள்  இருந்தது.  {Ezek  2:9}

 

அவர்  அதை  எனக்குமுன்பாக  விரித்தார்;  அதில்  உள்ளும்  புறம்பும்  எழுதப்பட்டிருந்தது;  அதிலே  புலம்பல்களும்,  தவிப்பும்,  ஐயோ  என்பதும்  எழுதியிருந்தது.  {Ezek  2:10}

 

பின்பு  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  காண்கிறதைப்  புசி;  இந்தச்  சுருளை  நீ  புசித்து,  இஸ்ரவேல்<Israel>  சந்ததியாரிடத்தில்  போய்  அவர்களோடே  பேசு  என்றார்.  {Ezek  3:1}

 

அப்படியே  என்  வாயைத்  திறந்தேன்;  அப்பொழுது  அவர்  அந்தச்  சுருளை  எனக்குப்  புசிக்கக்கொடுத்து:  {Ezek  3:2}

 

மனுபுத்திரனே,  நான்  உனக்குக்  கொடுக்கிற  இந்தச்  சுருளை  நீ  உன்  வயிற்றிலே  உட்கொண்டு,  அதினால்  உன்  குடல்களை  நிரப்புவாயாக  என்றார்;  அப்பொழுது  நான்  அதைப்  புசித்தேன்;  அது  என்  வாய்க்குத்  தேனைப்போல்  தித்திப்பாயிருந்தது.  {Ezek  3:3}

 

பின்பு  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  போய்,  இஸ்ரவேல்<Israel>  சந்ததியாரிடத்தில்  சேர்ந்து,  என்  வார்த்தைகளைக்கொண்டு  அவர்களோடே  பேசு.  {Ezek  3:4}

 

விளங்காத  பேச்சும்,  கடினமான  பாஷையுமுள்ள  ஜனத்தண்டைக்கல்ல,  இஸ்ரவேல்<Israel>  சந்ததியாரிடத்திற்கே  நீ  அனுப்பப்படுகிறாய்.  {Ezek  3:5}

 

விளங்காத  பேச்சும்,  தாங்கள்  சொல்லும்  வார்த்தைகளை  நீ  அறியாத  கடினமான  பாஷையுமுள்ள  அநேகமான  ஜனங்களிடத்திற்கு  நீ  அனுப்பப்படவில்லை;  நான்  அவர்களிடத்திற்கு  உன்னை  அனுப்பினாலும்,  அவர்கள்  உனக்குச்  செவிகொடுப்பார்களோ?  {Ezek  3:6}

 

இஸ்ரவேல்<Israel>  வீட்டாரோவெனில்,  உனக்குச்  செவிகொடுக்கமாட்டார்கள்;  எனக்கே  செவிகொடுக்கமாட்டோம்  என்கிறார்களே;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அனைவரும்  கடினமான  நெற்றியும்  முரட்டாட்டமுள்ள  இருதயமும்  உள்ளவர்கள்.  {Ezek  3:7}

 

இதோ,  உன்  முகத்தை  அவர்கள்  முகத்துக்கு  எதிராகவும்,  உன்  நெற்றியை  அவர்கள்  நெற்றிக்கு  எதிராகவும்  கெட்டியாக்கினேன்.  {Ezek  3:8}

 

உன்  நெற்றியை  வச்சிரக்கல்லைப்போலாக்கினேன்,  கன்மலையைப்பார்க்கிலும்  கெட்டியாக்கினேன்;  அவர்கள்  கலகமுள்ள  வீட்டாரென்று  நீ  அவர்களுக்குப்  பயப்படாமலும்  அவர்கள்  முகங்களுக்குக்  கலங்காமலும்  இரு  என்றார்.  {Ezek  3:9}

 

பின்னும்  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நான்  உன்னுடனே  சொல்லும்  என்  வார்த்தைகளையெல்லாம்  நீ  உன்  செவிகளாலே  கேட்டு,  உன்  இருதயத்தில்  ஏற்றுக்கொண்டு,  {Ezek  3:10}

 

நீ  போய்,  சிறைப்பட்ட  உன்  ஜனத்தின்  புத்திரரிடத்திலே  சேர்ந்து,  அவர்கள்  கேட்டாலும்  கேளாவிட்டாலும்  அவர்களோடே  பேசி,  கர்த்தராகிய  ஆண்டவர்  இன்னின்னதை  உரைக்கிறார்  என்று  அவர்களோடே  சொல்  என்றார்.  {Ezek  3:11}

 

அப்பொழுது  ஆவி,  என்னை  உயர  எடுத்துக்கொண்டது;  கர்த்தருடைய  ஸ்தானத்திலிருந்து  விளங்கிய  அவருடைய  மகிமைக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக  என்று  எனக்குப்  பின்னாகக்  கூப்பிட்ட  மகா  சத்தத்தின்  இரைச்சலைக்  கேட்டேன்.  {Ezek  3:12}

 

ஒன்றோடொன்று  இணைந்திருக்கிற  ஜீவன்களுடைய  செட்டைகளின்  இரைச்சலையும்,  அதற்கெதிரே  ஓடிய  சக்கரங்களின்  இரைச்சலையும்,  மகா  சத்தத்தின்  இரைச்சலையும்  கேட்டேன்.  {Ezek  3:13}

 

ஆவி  என்னை  உயர  எடுத்துக்கொண்டது;  நான்  என்  ஆவியின்  உக்கிரத்தினாலே  மனங்கசந்துபோனேன்;  ஆனாலும்  கர்த்தருடைய  கரம்  என்மேல்  பலமாக  இருந்தது.  {Ezek  3:14}

 

கேபார்<Chebar>  நதியண்டையிலே  தெலாபீபிலே<Telabib>  தாபரிக்கிற  சிறைப்பட்டவர்களிடத்துக்கு  நான்  வந்து,  அவர்கள்  தாபரிக்கிற  ஸ்தலத்திலே  தாபரித்து,  ஏழுநாள்  அவர்கள்  நடுவிலே  பிரமித்தவனாய்த்  தங்கினேன்.  {Ezek  3:15}

 

ஏழுநாள்  முடிந்தபின்பு  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  3:16}

 

மனுபுத்திரனே,  உன்னை  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்குக்  காவலாளனாக  வைத்தேன்;  நீ  என்  வாயினாலே  வார்த்தையைக்கேட்டு,  என்  நாமத்தினாலே  அவர்களை  எச்சரிப்பாயாக.  {Ezek  3:17}

 

சாகவே  சாவாய்  என்று  நான்  துன்மார்க்கனுக்குச்  சொல்லுகையில்,  நீ  துன்மார்க்கனைத்  தன்  துன்மார்க்கமான  வழியில்  இராதபடிக்கு  எச்சரிக்கும்படியாகவும்,  அவனை  உயிரோடே  காக்கும்படியாகவும்,  அதை  அவனுக்குச்  சொல்லாமலும்,  நீ  அவனை  எச்சரிக்காமலும்  இருந்தால்,  அந்தத்  துன்மார்க்கன்  தன்  துன்மார்க்கத்திலே  சாவான்;  அவன்  இரத்தப்பழியையோ  உன்  கையிலே  கேட்பேன்.  {Ezek  3:18}

 

நீ  துன்மார்க்கனை  எச்சரித்தும்,  அவன்  தன்  துன்மார்க்கத்தையும்  தன்  ஆகாத  வழியையும்  விட்டுத்  திரும்பாமற்  போவானாகில்,  அவன்  தன்  துன்மார்க்கத்திலே  சாவான்;  நீயோவென்றால்  உன்  ஆத்துமாவைத்  தப்புவிப்பாய்.  {Ezek  3:19}

 

அப்படியே,  நீதிமான்  தன்  நீதியை  விட்டுத்  திரும்பி,  நீதிகேடு  செய்யும்போதும்,  நான்  அவன்முன்  இடறலை  வைக்கும்போதும்,  அவன்  சாவான்;  நீ  அவனை  எச்சரிக்காதபடியினாலே  அவன்  தன்  பாவத்திலே  சாவான்;  அவன்  செய்த  நீதிகள்  நினைக்கப்படுவதில்லை;  அவனுடைய  இரத்தப்பழியையோ  உன்  கையிலே  கேட்பேன்.  {Ezek  3:20}

 

நீதிமான்  பாவஞ்  செய்யாதபடிக்கு  நீ  நீதிமானை  எச்சரித்தபின்பு  அவன்  பாவஞ்செய்யாவிட்டால்,  அவன்  பிழைக்கவே  பிழைப்பான்;  அவன்  எச்சரிக்கப்பட்டான்;  நீயும்  உன்  ஆத்துமாவைத்  தப்புவித்தாய்  என்றார்.  {Ezek  3:21}

 

அவ்விடத்திலே  கர்த்தருடைய  கரம்  என்மேல்  அமர்ந்தது;  அவர்:  நீ  எழுந்திருந்து  பள்ளத்தாக்குக்குப்  புறப்பட்டுப்போ,  அங்கே  உன்னுடனே  பேசுவேன்  என்றார்.  {Ezek  3:22}

 

அப்படியே  நான்  எழுந்திருந்து,  பள்ளத்தாக்குக்குப்  புறப்பட்டுப்  போனேன்;  இதோ,  கேபார்<Chebar>  நதியண்டையிலே  நான்  கண்ட  மகிமைக்குச்  சரியாக  அங்கே  கர்த்தருடைய  மகிமை  விளங்கினது;  அப்பொழுது  நான்  முகங்குப்புற  விழுந்தேன்.  {Ezek  3:23}

 

உடனே  ஆவி  எனக்குள்ளே  புகுந்து,  என்னைக்  காலூன்றி  நிற்கும்படி  செய்தது,  அப்பொழுது  அவர்  என்னுடனே  பேசி:  நீ  போய்,  உன்  வீட்டுக்குள்ளே  உன்னை  அடைத்துக்கொண்டிரு.  {Ezek  3:24}

 

இதோ,  மனுபுத்திரனே,  உன்மேல்  கயிறுகளைப்போட்டு,  அவைகளால்  உன்னைக்  கட்டப்போகிறார்கள்;  ஆகையால்  நீ  அவர்களுக்குள்ளே  போகவேண்டாம்.  {Ezek  3:25}

 

நான்  உன்  நாவை  உன்  மேல்வாயோடே  ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்;  நீ  அவர்களைக்  கடிந்துகொள்ளுகிற  மனுஷனாயிராமல்,  ஊமையனாயிருப்பாய்;  அவர்கள்  கலகவீட்டார்.  {Ezek  3:26}

 

நான்  உன்னோடே  பேசும்போது,  உன்  வாயைத்  திறப்பேன்;  அப்பொழுது  கர்த்தராகிய  ஆண்டவர்  இன்னின்னதை  உரைத்தார்  என்று  அவர்களோடே  சொல்வாய்;  கேட்கிறவன்  கேட்கட்டும்,  கேளாதவன்  கேளாதிருக்கட்டும்;  அவர்கள்  கலகவீட்டார்.  {Ezek  3:27}

 

மனுபுத்திரனே,  நீ  ஒரு  செங்கலை  எடுத்து,  அதை  உன்முன்  வைத்து,  அதின்மேல்  எருசலேம்<Jerusalem>  நகரத்தை  வரைந்து,  {Ezek  4:1}

 

அதற்கு  விரோதமாக  முற்றிக்கைபோட்டு,  அதற்கு  விரோதமாகக்  கொத்தளங்களைக்  கட்டி,  அதற்கு  விரோதமாக  மண்மேடுபோட்டு,  அதற்கு  விரோதமாக  இராணுவங்களை  நிறுத்தி,  சுற்றிலும்  அதற்கு  விரோதமாக  மதிலிடிக்கும்  யந்திரங்களை  வை.  {Ezek  4:2}

 

மேலும்  நீ  ஒரு  இருப்புச்சட்டியை  வாங்கி,  அதை  உனக்கும்  நகரத்துக்கும்  நடுவாக  இருப்புச்சுவராக்கி,  அது  முற்றிக்கையாய்க்  கிடக்கும்படிக்கு  உன்  முகத்தை  அதற்கு  நேராய்த்  திருப்பி,  அதை  முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு;  இது  இஸ்ரவேல்<Israel>  வம்சத்துக்கு  அடையாளம்.  {Ezek  4:3}

 

நீ  உன்  இடதுபக்கமாய்  ஒருக்களித்துப்  படுத்து,  அதின்மேல்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  அக்கிரமத்தைச்  சுமத்திக்கொள்;  நீ  அந்தப்பக்கமாய்  ஒருக்களித்திருக்கும்  நாட்களின்  இலக்கத்தின்படியே  அவர்களுடைய  அக்கிரமத்தைச்  சுமப்பாய்.  {Ezek  4:4}

 

அவர்களுடைய  அக்கிரமத்தின்  வருஷங்களை  உனக்கு  நாட்கணக்காய்  எண்ணக்  கட்டளையிட்டேன்;  முந்நூற்றுத்  தொண்ணூறு  நாட்கள்வரைக்கும்  நீ  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  அக்கிரமத்தைச்  சுமக்கவேண்டும்.  {Ezek  4:5}

 

நீ  இவைகளை  நிறைவேற்றினபின்பு,  மறுபடியும்  உன்  வலதுபக்கமாய்  ஒருக்களித்து,  யூதா<Judah>  வம்சத்தாரின்  அக்கிரமத்தை  நாற்பதுநாள்வரைக்கும்  சுமக்கவேண்டும்;  ஒவ்வொரு  வருஷத்துக்குப்  பதிலாக  ஒவ்வொரு  நாளை  உனக்குக்  கட்டளையிட்டேன்.  {Ezek  4:6}

 

நீ  எருசலேமின்<Jerusalem>  முற்றிக்கைக்கு  நேராகத்  திருப்பிய  முகமும்,  திறந்த  புயமுமாக  இருந்து,  அதற்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  சொல்லு.  {Ezek  4:7}

 

இதோ,  நீ  அதை  முற்றிக்கைப்போடும்  நாட்களை  நிறைவேற்றுமட்டும்  ஒரு  பக்கத்திலிருந்து  மறுபக்கத்தில்  புரளக்கூடாதபடிக்கு  உன்னைக்  கயிறுகளால்  கட்டுவேன்.  {Ezek  4:8}

 

நீ  கோதுமையையும்  வாற்கோதுமையையும்  பெரும்பயற்றையும்  சிறுபயற்றையும்  தினையையும்  கம்பையும்  வாங்கி,  அவைகளை  ஒரு  பாத்திரத்திலே  போட்டு,  அவைகளால்  உனக்கு  அப்பஞ்சுடுவாய்;  நீ  ஒருக்களித்துப்  படுக்கும்  நாட்களுடைய  இலக்கத்தின்படியே  முந்நூற்றுத்  தொண்ணூறுநாள்  அதில்  எடுத்துச்  சாப்பிடுவாயாக.  {Ezek  4:9}

 

நீ  சாப்பிடும்  போஜனம்,  நாள்  ஒன்றுக்கு  இருபது  சேக்கல்  நிறையாயிருக்கும்;  அப்படி  நாளுக்குநாள்  சாப்பிடுவாயாக.  {Ezek  4:10}

 

தண்ணீரையும்  அளவாய்  ஹின்  என்னும்  படியில்  ஆறிலொரு  பங்கைக்  குடிப்பாய்;  அப்படி  நாளுக்குநாள்  குடிப்பாயாக.  {Ezek  4:11}

 

அதை  வாற்கோதுமை  அடையைப்போல்  சாப்பிடுவாயாக;  அது  மனுஷனிலிருந்து  கழிந்த  கஷ்டத்தின்  வறட்டிகளால்  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகச்  சுடப்படுவதாக.  {Ezek  4:12}

 

அதற்கு  ஒத்தபடியே  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்,  நான்  அவர்களைத்  துரத்துகிற  புறஜாதிகளுக்குள்ளே  தங்கள்  அப்பத்தைத்  தீட்டுள்ளதாகச்  சாப்பிடுவார்கள்  என்று  கர்த்தர்  சொன்னார்.  {Ezek  4:13}

 

அப்பொழுது  நான்:  ,  கர்த்தராகிய  ஆண்டவரே,  இதோ,  என்  ஆத்துமா  தீட்டுப்படவில்லை;  தானாய்ச்  செத்ததையாவது,  பீறுண்டதையாவது  நான்  என்  சிறுவயதுமுதல்  இதுவரைக்கும்  சாப்பிட்டதில்லை;  அருவருப்பான  இறைச்சி  என்  வாய்க்குட்பட்டதுமில்லை  என்றேன்.  {Ezek  4:14}

 

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  பார்,  மனுஷ  கஷ்டத்தின்  வறட்டிக்குப்  பதிலாக  உனக்கு  மாட்டுச்சாணி  வறட்டியைக்  கட்டளையிடுகிறேன்;  அதினால்  உன்  அப்பத்தைச்  சுடுவாயாக  என்றார்.  {Ezek  4:15}

 

பின்னும்  அவர்:  மனுபுத்திரனே,  இதோ,  அப்பமும்  தண்ணீரும்  அவர்களுக்குக்  குறையவும்,  அவனவன்  திடுக்கிடவும்,  அவர்கள்  தங்கள்  அக்கிரமத்திலே  வாடிப்போகவும்,  {Ezek  4:16}

 

நான்  எருசலேமிலே<Jerusalem>  அப்பம்  என்னும்  ஆதரவுகோலை  முறிக்கிறேன்;  அவர்கள்  அப்பத்தை  நிறையின்படியே  விசாரத்தோடே  சாப்பிட்டு,  தண்ணீரை  அளவின்படியே  திடுக்கிடுதலோடே  குடிப்பார்கள்.  {Ezek  4:17}

 

பின்னும்  அவர்:  மனுபுத்திரனே,  சவரகன்  கத்தியாகிய  கருக்கான  கத்தியை  வாங்கி,  அதினால்  உன்  தலையையும்  உன்  தாடியையும்  சிரைத்துக்கொண்டு,  பின்பு  நிறுக்கும்  தராசை  எடுத்து,  அந்த  மயிரைப்  பங்கிடக்கடவாய்.  {Ezek  5:1}

 

மூன்றில்  ஒரு  பங்கை  எடுத்து  முற்றிக்கைபோடும்  நாட்கள்  முடிகிறபோது  நகரத்தின்  நடுவிலே  அக்கினியால்  சுட்டெரித்து,  மூன்றில்  ஒரு  பங்கை  எடுத்து,  அதைச்  சுற்றிலும்  கத்தியாலே  வெட்டி,  மூன்றில்  ஒரு  பங்கை  எடுத்துக்  காற்றிலே  தூற்றக்கடவாய்;  அவைகளின்  பின்னாக  நான்  பட்டயத்தை  உருவுவேன்.  {Ezek  5:2}

 

அதில்  கொஞ்சம்மாத்திரம்  எடுத்து,  அதை  உன்  வஸ்திரத்தோரங்களில்  முடிந்துவைப்பாயாக.  {Ezek  5:3}

 

பின்னும்  அதில்  கொஞ்சம்  எடுத்து,  அதைத்  தீயின்  நடுவில்  எறிந்து,  அதை  அக்கினியால்  சுட்டெரிப்பாயாக;  அதிலிருந்து  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அனைவருக்கும்  விரோதமாக  அக்கினி  புறப்படும்.  {Ezek  5:4}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  இதுவே  எருசலேம்<Jerusalem>,  புறஜாதிகளின்  நடுவிலே  நான்  அதை  வைத்தேன்,  அதைச்  சுற்றிலும்  தேசங்கள்  இருக்கிறது.  {Ezek  5:5}

 

அது  புறஜாதிகளைப்பார்க்கிலும்  என்  நியாயங்களையும்,  தன்னைச்  சுற்றிலும்  இருக்கிற  தேசங்களைப்பார்க்கிலும்  என்  கட்டளைகளையும்  அக்கிரமமாக  மாற்றிப்போட்டது;  அவர்கள்  என்  நியாயங்களை  வெறுத்து,  என்  கட்டளைகளில்  நடவாமற்  போனார்கள்.  {Ezek  5:6}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  உங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  புறஜாதிகளைப்பார்க்கிலும்  அதிகரிக்கிறவர்களாகிய  நீங்கள்  என்  கட்டளைகளிலே  நடவாமலும்,  என்  நியாயங்களின்படி  செய்யாமலும்,  உங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  புறஜாதிகளுடைய  நீதிநியாயங்களின்படியாவது  நடவாமலும்  போனபடியினாலே,  {Ezek  5:7}

 

இதோ,  நான்,  நானே  உனக்கு  விரோதமாக  வந்து,  புறஜாதிகளுடைய  கண்களுக்கு  முன்பாக  உன்  நடுவிலே  நீதி  செலுத்தி,  {Ezek  5:8}

 

நான்  முன்பு  செய்யாததும்  இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய்  உனக்கு  உன்  எல்லா  அருவருப்புகளினிமித்தமும்  செய்வேன்.  {Ezek  5:9}

 

ஆதலால்  உன்  நடுவிலே  பிதாக்கள்  பிள்ளைகளைத்  தின்பார்கள்;  பிள்ளைகள்  பிதாக்களைத்  தின்பார்கள்;  நான்  உன்னில்  நீதிசெலுத்தி  உன்னில்  மீதியாயிருப்பவர்களையெல்லாம்  சகல  திசைகளிலும்  சிதறிப்போகப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  5:10}

 

ஆதலால்,  சீயென்றிகழப்படத்தக்கதும்  அருவருக்கப்படத்தக்கதுமான  உன்  கிரியைகளால்  நீ  என்  பரிசுத்த  ஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்தினபடியால்  என்  கண்  உன்னைத்  தப்பவிடாது,  நான்  உன்னைக்  குறுகிப்போகப்பண்ணுவேன்,  நான்  இரங்கமாட்டேன்,  இதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  5:11}

 

உன்னிலே  மூன்றில்  ஒரு  பங்கு  கொள்ளைநோயால்  சாவார்கள்,  பஞ்சத்தாலும்  உன்  நடுவிலே  மடிந்துபோவார்கள்;  மூன்றில்  ஒரு  பங்கு  உன்னைச்  சுற்றிலும்  இருக்கிற  பட்டயத்தால்  வெட்டுண்டு  விழுவார்கள்;  மூன்றில்  ஒரு  பங்கை  நான்  சகல  திசைகளிலும்  சிதறிப்போகப்பண்ணி,  அவர்கள்  பின்னே  பட்டயத்தை  உருவுவேன்.  {Ezek  5:12}

 

இப்படி  என்  கோபம்  நிறைவேறும்;  இப்படி  நான்  என்  உக்கிரத்தை  அவர்கள்மேல்  தங்கப்பண்ணுகிறதினால்  என்னை  ஆற்றிக்கொள்வேன்;  நான்  என்  உக்கிரத்தை  அவர்களில்  நிறைவேற்றும்போது,  கர்த்தராகிய  நான்  என்  வைராக்கியத்திலே  இதைப்  பேசினேன்  என்று  அறிவார்கள்.  {Ezek  5:13}

 

கடந்துபோகிற  யாவருடைய  கண்களுக்கு  முன்பாகவும்  உன்  சுற்றுப்புறத்தாராகிய  ஜாதிகளுக்குள்ளே  நான்  உன்னைப்  பாழும்  நிந்தையுமாக்குவேன்.  {Ezek  5:14}

 

நான்  கோபத்தாலும்  உக்கிரத்தாலும்  கொடிய  கண்டனைகளாலும்,  உன்னில்  நீதிசெலுத்தும்போது,  உன்  சுற்றுப்புறத்தாராகிய  ஜாதிகளுக்கு  அது  நிந்தையும்  துர்க்கீர்த்தியும்  எச்சரிப்பும்  பிரமிப்புமாய்  இருக்கும்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்.  {Ezek  5:15}

 

உங்களை  அழிப்பதற்கு  நான்  அனுப்பும்  அழிவுக்கேதுவான  பஞ்சத்தின்  கொடிய  அம்புகளை  நான்  அவர்களுக்குள்ளே  எய்யும்போது,  நான்  பஞ்சத்தை  உங்கள்மேல்  அதிகரிக்கப்பண்ணி,  உங்கள்  அப்பம்  என்னும்  ஆதரவுகோலை  முறித்துப்போடுவேன்.  {Ezek  5:16}

 

பஞ்சத்தையும்,  உன்னைப்  பிள்ளையில்லாமற்போகப்பண்ணும்  துஷ்டமிருகங்களையும்  உங்களுக்கு  விரோதமாக  அனுப்புவேன்;  கொள்ளைநோயும்  இரத்தஞ்சிந்துதலும்  உன்னில்  சுற்றித்திரியும்;  பட்டயத்தை  நான்  உன்மேல்  வரப்பண்ணுவேன்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்றார்.  {Ezek  5:17}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  6:1}

 

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேலின்<Israel>  பர்வதங்களுக்கு  நேராக  உன்  முகத்தைத்  திருப்பி,  அவைகளுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  {Ezek  6:2}

 

இஸ்ரவேலின்<Israel>  பர்வதங்களே,  கர்த்தராகிய  ஆண்டவரின்  வார்த்தையைக்  கேளுங்கள்;  கர்த்தராகிய  ஆண்டவர்  பர்வதங்களையும்  குன்றுகளையும்  ஓடைகளையும்  பள்ளத்தாக்குகளையும்  நோக்கி:  இதோ,  உங்கள்மேல்  நான்,  நானே  பட்டயத்தை  வரப்பண்ணி,  உங்கள்  மேடைகளை  அழித்துப்போடுவேன்.  {Ezek  6:3}

 

உங்கள்  பலிபீடங்கள்  பாழாக்கப்பட்டு,  உங்கள்  சிலைகள்  தகர்க்கப்படும்;  உங்களில்  கொலையுண்கிறவர்களை  உங்கள்  நரகலான  விக்கிரகங்களுக்கு  முன்பாக  விழப்பண்ணுவேன்.  {Ezek  6:4}

 

நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  பிரேதங்களை  அவர்களுடைய  நரகலான  விக்கிரகங்களின்  முன்னே  கிடக்கப்பண்ணி,  உங்கள்  பலிபீடங்களைச்  சுற்றிலும்  உங்கள்  எலும்புகளைச்  சிதறப்பண்ணுவேன்.  {Ezek  6:5}

 

உங்கள்  பலிபீடங்கள்  நிர்மூலமும்  பாழுமாகும்படிக்கும்,  உங்கள்  நரகலான  விக்கிரகங்கள்  தகர்க்கப்பட்டு,  ஓய்ந்து,  உங்கள்  சிலைகள்  வெட்டுண்டு,  உங்கள்  கிரியைகள்  குலைந்துபோகும்படிக்கும்,  உங்களுடைய  சகல  வாசஸ்தலங்களிலுமுள்ள  பட்டணங்கள்  நிர்மூலமும்  உங்கள்  மேடைகள்  பாழுமாகும்.  {Ezek  6:6}

 

கொலைசெய்யப்பட்டவர்கள்  உங்கள்  நடுவில்  விழுவார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  6:7}

 

நீங்கள்  தேசங்களில்  சிதறடிக்கப்படும்போது,  புறஜாதிகளுக்குள்ளே  பட்டயத்துக்குத்  தப்புவாரை  உங்களுக்கு  மீதியாக  வைப்பேன்.  {Ezek  6:8}

 

என்னை  விட்டுச்  சோரம்போகிற  இருதயத்தைக்குறித்தும்,  தங்கள்  நரகலான  விக்கிரகங்களின்  பின்னே  சோரம்போகிற  தங்கள்  கண்களைக்குறித்தும்  மனமடிவானேன்  என்று  உங்களில்  தப்பிப்போன  அவர்கள்  தாங்கள்  சிறைப்பட்டிருக்கும்  புறஜாதிகளுக்குள்ளே  என்னை  நினைத்து,  தங்களுடைய  சகல  அருவருப்புகளினாலும்  தாங்கள்  செய்த  பொல்லாப்புகளினிமித்தம்  தங்களையே  வெறுத்து,  {Ezek  6:9}

 

இந்தத்  தீங்குகளையெல்லாம்  தங்களுக்கு  நேரிடப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  நான்  விருதாவாய்ச்  சொன்னதில்லையென்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  {Ezek  6:10}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  உன்  கையில்  அடித்து,  உன்  காலால்  தட்டி,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருடைய  சகல  பொல்லாத  அருவருப்புகளினிமித்தமும்  ஐயோ!  என்று  சொல்;  அவர்கள்  பட்டயத்தாலும்  பஞ்சத்தாலும்  கொள்ளைநோயாலும்  விழுவார்கள்.  {Ezek  6:11}

 

தூரத்திலிருக்கிறவன்  கொள்ளைநோயால்  சாவான்;  சமீபத்திலிருக்கிறவன்  பட்டயத்தால்  விழுவான்;  மீதியாயிருந்து,  முற்றிக்கைபோடப்பட்டவன்  பஞ்சத்தால்  சாவான்;  இப்படி  அவர்களில்  என்  உக்கிரத்தைத்  தீர்த்துக்கொள்ளுவேன்.  {Ezek  6:12}

 

அவர்கள்  தங்கள்  நரகலான  சகல  விக்கிரகங்களுக்கும்  மதுரவாசனையான  தூபத்தைக்  காட்டின  ஸ்தலங்களாகிய  உயர்ந்த  சகல  மேடுகளிலும்,  பர்வதங்களுடைய  சகல  சிகரங்களிலும்,  பச்சையான  சகல  விருட்சங்களின்கீழும்,  தழைத்திருக்கிற  சகல  கர்வாலி  மரங்களின்கீழும்,  அவர்களுடைய  நரகலான  விக்கிரகங்களின்  நடுவிலும்  அவர்களுடைய  பலிபீடங்களைச்  சுற்றிலும்,  அவர்களில்  கொலையுண்டவர்கள்  கிடக்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  6:13}

 

நான்  என்  கையை  அவர்களுக்கு  விரோதமாக  நீட்டி,  அவர்களுடைய  எல்லா  வாசஸ்தலங்களுமுள்ள  தேசத்தை  அழித்து,  அதைத்  திப்லாத்தின்<Diblath>  வனாந்தரத்தைப்பார்க்கிலும்  அதிகமாய்ப்  பாழாக்குவேன்,  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  {Ezek  6:14}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  7:1}

 

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்<Israel>  தேசத்தைக்குறித்துக்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  முடிவு  வருகிறது,  தேசத்தின்  நாலு  முனைகளின்மேலும்  முடிவு  வருகிறது.  {Ezek  7:2}

 

இப்போதே  உன்மேல்  முடிவு  வருகிறது;  நான்  என்  கோபத்தை  உன்மேல்  வருவித்து,  உன்  வழிகளுக்குத்தக்கதாக  உன்னை  நியாயந்தீர்த்து,  உன்  எல்லா  அருவருப்புகளின்  பலனையும்  உன்மேல்  வரப்பண்ணுவேன்.  {Ezek  7:3}

 

என்  கண்  உன்னைத்  தப்பவிடாது;  நான்  இரங்காமல்  உன்  வழிகளுக்குத்தக்கதை  உன்மேல்  வரப்பண்ணுவேன்;  உன்  அருவருப்புகளுக்குத்தக்கது  உன்  நடுவில்  வந்திருக்கும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  7:4}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  தீங்கு  வருகிறது;  இதோ,  ஏகமான  தீங்கு  வருகிறது.  {Ezek  7:5}

 

முடிவு  வருகிறது,  முடிவு  வருகிறது,  அது  உன்மேல்  நோக்கமாயிருக்கிறது;  இதோ,  வருகிறது.  {Ezek  7:6}

 

தேசத்தில்  குடியிருக்கிறவனே,  அந்நாளின்  விடியற்காலம்  வருகிறது,  காலம்  வருகிறது,  அமளியின்  நாள்  சமீபித்திருக்கிறது,  மலைகளில்  சந்தோஷசத்தம்  இல்லை.  {Ezek  7:7}

 

இப்பொழுது  விரைவில்  என்  உக்கிரத்தை  உன்மேல்  ஊற்றி,  என்  கோபத்தை  உன்னில்  தீர்த்துக்கொண்டு,  உன்னை  உன்  வழிகளுக்குத்தக்கதாக  நியாயந்தீர்த்து,  உன்  எல்லா  அருவருப்புகளின்  பலனையும்  உன்மேல்  வரப்பண்ணுவேன்.  {Ezek  7:8}

 

என்  கண்  உன்னைத்  தப்பவிடாது;  நான்  இரங்காமல்  உன்  வழிகளுக்குத்தக்கதை  உன்மேல்  வரப்பண்ணுவேன்;  உன்  அருவருப்புகளுக்குத்தக்கது  உன்  நடுவில்  வந்திருக்கும்;  அப்பொழுது  அடிக்கிறவராகிய  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  7:9}

 

இதோ,  அந்த  நாள்,  இதோ,  வருகிறது,  அந்நாளின்  விடியற்காலம்  உதிக்கிறது,  மிலாறு  பூக்கிறது,  அகந்தை  செழிக்கிறது.  {Ezek  7:10}

 

அக்கிரமத்துக்கு  மிலாறாகக்  கொடுமை  எழும்புகிறது;  அவர்களிலும்  அவர்களுடைய  திரளான  கும்பிலும்  அவர்களுடைய  அமளியிலும்  ஒன்றும்  மீதியாயிருப்பதில்லை;  அவர்கள்  நிமித்தம்  புலம்பல்  உண்டாயிருப்பதுமில்லை.  {Ezek  7:11}

 

அந்தக்  காலம்  வருகிறது,  அந்த  நாள்  கிட்டுகிறது;  கொள்ளுகிறவன்  சந்தோஷப்படாமலும்,  விற்கிறவன்  துக்கப்படாமலும்  இருப்பானாக;  அதின்  திரளான  கும்பின்மேலும்  உக்கிரம்  இறங்கும்.  {Ezek  7:12}

 

அவர்கள்  ஜீவனுள்ளோருக்குள்ளே  இன்னும்  உயிரோடிருந்தாலும்,  விற்றவன்  விற்கப்பட்டதற்குத்  திரும்பிவருவதில்லை;  அதின்  திரளான  கும்பின்மேலும்  உண்டான  தரிசனம்  திரும்பாது;  தன்  அக்கிரமத்திலே  வாழுகிற  எவனும்  தன்னைத்  திடப்படுத்தமாட்டான்.  {Ezek  7:13}

 

அவர்கள்  எக்காளம்  ஊதி,  எல்லாவற்றையும்  ஆயத்தம்பண்ணியும்,  யுத்தத்துக்குப்  போகிறவனில்லை;  என்  உக்கிரம்  அதின்  திரளான  கும்பின்மேலும்  இறங்குகிறது.  {Ezek  7:14}

 

வெளியே  பட்டயமும்  உள்ளே  கொள்ளைநோயும்  பஞ்சமும்  உண்டு;  வயல்வெளியில்  இருக்கிறவன்  பட்டயத்தால்  சாவான்;  நகரத்தில்  இருக்கிறவனையோ  பஞ்சமும்  கொள்ளைநோயும்  பட்சிக்கும்.  {Ezek  7:15}

 

அவர்களில்  தப்புகிறவர்கள்  தப்புவார்கள்;  ஆனாலும்  அவர்கள்  அனைவரும்  அவனவன்  தன்  தன்  அக்கிரமத்தினிமித்தம்  துக்கித்துக்  கூப்பிடுகிற  பள்ளத்தாக்குகளின்  புறாக்களைப்போல  மலைகளில்  இருப்பார்கள்.  {Ezek  7:16}

 

எல்லாக்  கைகளும்  சலித்து,  எல்லா  முழங்கால்களும்  தண்ணீரைப்போல்  தத்தளிக்கும்.  {Ezek  7:17}

 

இரட்டை  உடுத்திக்கொள்வார்கள்;  தத்தளிப்பு  அவர்களை  மூடும்;  எல்லா  முகங்களும்  வெட்கப்படும்,  எல்லாத்  தலைகளும்  மொட்டையிடப்படும்.  {Ezek  7:18}

 

தங்கள்  வெள்ளியைத்  தெருக்களில்  எறிந்துவிடுவார்கள்;  அவர்களுடைய  பொன்  வேண்டாவெறுப்பாயிருக்கும்;  கர்த்தருடைய  சினத்தின்  நாளிலே  அவர்கள்  வெள்ளியும்  அவர்கள்  பொன்னும்  அவர்களை  விடுவிக்கமாட்டாது;  அவர்கள்  அதினால்  தங்கள்  ஆத்துமாக்களைத்  திருப்தியாக்குவதும்  இல்லை,  தங்கள்  வயிறுகளை  நிரப்புவதும்  இல்லை;  அவர்கள்  அக்கிரமமே  அவர்களுக்கு  இடறலாயிருந்தது.  {Ezek  7:19}

 

அவருடைய  சிங்காரத்தின்  மகிமையை  அகந்தைக்கென்று  வைத்து,  அதிலே  அருவருக்கப்படத்தக்கதும்  சீயென்றிகழப்படத்தக்கதுமான  காரியங்களின்  விக்கிரகங்களை  உண்டுபண்ணினார்கள்;  ஆகையால்  நான்  அவைகளை  அவர்களுக்கு  வேண்டாவெறுப்பாக்கி,  {Ezek  7:20}

 

அதை  அந்நியர்  கையிலே  கொள்ளையாகவும்,  பூமியில்  துஷ்டர்களுக்குச்  சூறையாகவும்  கொடுப்பேன்;  அவர்கள்  அதைப்  பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.  {Ezek  7:21}

 

என்  முகத்தை  அவர்களை  விட்டுத்  திருப்புவேன்;  அதினால்  என்  அந்தரங்க  ஸ்தலத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்;  பறிகாரர்  அதற்குள்  பிரவேசித்து,  அதைப்  பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.  {Ezek  7:22}

 

ஒரு  சங்கிலியைப்  பண்ணிவை;  தேசம்  நியாயத்தீர்ப்புக்குள்ளான  இரத்தப்பழிகளால்  நிறைந்திருக்கிறது;  நகரம்  கொடுமையால்  நிறைந்திருக்கிறது.  {Ezek  7:23}

 

ஆகையால்  புறஜாதிகளின்  துஷ்டர்களை  வரப்பண்ணுவேன்,  அவர்கள்  இவர்களுடைய  வீடுகளைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்;  பலவான்களின்  பெருமையை  ஒழியப்பண்ணுவேன்,  அவர்கள்  பரிசுத்த  ஸ்தலங்கள்  பரிசுத்தக்குலைச்சலாகும்.  {Ezek  7:24}

 

சங்காரம்  வருகிறது;  அப்பொழுது  சமாதானத்தைத்  தேடுவார்கள்;  ஆனாலும்  அது  கிடையாது.  {Ezek  7:25}

 

விக்கினத்தின்மேல்  விக்கினம்  வரும்;  துர்ச்செய்தியின்மேல்  துர்ச்செய்தி  பிறக்கும்;  அப்பொழுது  தீர்க்கதரிசியினிடத்திலே  தரிசனத்தைத்  தேடுவார்கள்;  ஆனாலும்  ஆசாரியனிடத்திலே  வேதமும்  மூப்பரிடத்திலே  ஆலோசனையும்  இராமல்  ஒழிந்துபோகும்.  {Ezek  7:26}

 

ராஜா  துக்கித்துக்கொண்டிருப்பான்;  பிரபுவைத்  திகில்  மூடிக்கொண்டிருக்கும்;  தேசத்து  ஜனங்களின்  கைகள்  தளர்ந்துபோகும்;  நான்  அவர்கள்  வழிகளின்படியே  அவர்களுக்குச்  செய்து,  அவர்கள்  நியாயங்களின்படியே  அவர்களை  நியாயந்தீர்ப்பேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  {Ezek  7:27}

 

ஆறாம்  வருஷத்து  ஆறாம்  மாதம்  ஐந்தாந்தேதியிலே,  நான்  என்  வீட்டில்  உட்கார்ந்திருக்கிறபோதும்,  யூதாவின்<Judah>  மூப்பர்கள்  எனக்கு  முன்பாக  உட்கார்ந்திருக்கிறபோதும்,  கர்த்தராகிய  ஆண்டவருடைய  கரம்  அங்கே  என்மேல்  அமர்ந்தது.  {Ezek  8:1}

 

அப்பொழுது  இதோ,  அக்கினிச்சாயலாய்த்  தோன்றுகிற  ஒருவரைக்  கண்டேன்;  அவருடைய  இடுப்புக்குக்  கீழெல்லாம்  அக்கினியும்  அவருடைய  இடுப்புக்கு  மேலெல்லாம்  சொகுசாவைப்போல்  பிரகாசிக்கிற  சாயலுமாயிருந்தது.  {Ezek  8:2}

 

கைபோல்  தோன்றினதை  அவர்  நீட்டி,  என்  தலைமயிரைப்  பிடித்து  என்னைத்  தூக்கினார்;  ஆவியானவர்  என்னைப்  பூமிக்கும்  வானத்துக்கும்  நடுவே  கொண்டுபோய்,  தேவதரிசனத்திலே  என்னை  எருசலேமில்<Jerusalem>  வடதிசைக்கு  எதிரான  உள்வாசலின்  நடையிலே  விட்டார்;  அங்கே  எரிச்சலுண்டாக்குகிற  விக்கிரகத்தின்  ஸ்தானம்  இருந்தது.  {Ezek  8:3}

 

இதோ,  நான்  பள்ளத்தாக்கிலே  கண்டிருந்த  தரிசனத்துக்குச்  சரியாக  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  மகிமை  அங்கே  விளங்கினது.  {Ezek  8:4}

 

அவர்  என்னைப்பார்த்து:  மனுபுத்திரனே,  உன்  கண்களை  ஏறெடுத்து,  வடக்கே  பார்  என்றார்;  அப்பொழுது  நான்  என்  கண்களை  ஏறெடுத்து,  வடக்கே  பார்த்தேன்;  இதோ,  பலிபீடத்தின்  வாசலுக்கு  வடக்கே  பார்த்தேன்;  நடையிலே  எரிச்சலுண்டாக்குகிற  அந்த  விக்கிரகம்  இருந்தது.  {Ezek  8:5}

 

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  அவர்கள்  செய்கிறதைக்  காண்கிறாயா?  என்  பரிசுத்த  ஸ்தலத்தைவிட்டு  என்னைத்  தூரமாய்ப்  போகப்பண்ணும்படியான  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  இங்கே  செய்கிற  மிகுந்த  அருவருப்புகளைக்  காண்கிறாய்  அல்லவா?  இதிலும்  அதிக  அருவருப்புகளை  இன்னமும்  காண்பாய்  என்று  சொல்லி,  {Ezek  8:6}

 

என்னைப்  பிராகாரத்தின்  வாசலுக்குக்  கொண்டுபோனார்;  அப்பொழுது  இதோ,  சுவரில்  ஒரு  துவாரத்தைக்  கண்டேன்.  {Ezek  8:7}

 

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  சுவரிலே  துவாரமிடு  என்றார்;  நான்  சுவரிலே  துவாரமிட்டபோது,  இதோ,  ஒரு  வாசல்  இருந்தது.  {Ezek  8:8}

 

அவர்  என்னைப்பார்த்து:  நீ  உள்ளே  போய்,  அவர்கள்  இங்கே  செய்கிற  கொடிய  அருவருப்புகளைப்  பார்  என்றார்.  {Ezek  8:9}

 

நான்  உள்ளே  போய்ப்  பார்த்தபோது,  இதோ,  சகலவித  ஊரும்பிராணிகளும்  அருவருப்பான  மிருகங்களுமாகிய  இவைகளின்  சுரூபங்களும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருடைய  நரகலான  சகல  விக்கிரகங்களும்  சுவரில்  சுற்றிலும்  சித்திரந்தீரப்பட்டிருந்தன.  {Ezek  8:10}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  மூப்பரில்  எழுபதுபேரும்,  அவர்களின்  நடுவிலே  சாப்பானுடைய<Shaphan>  குமாரனாகிய  யசனியாவும்<Jaazaniah>,  அவனவன்  தன்தன்  கையிலே  தன்தன்  தூபகலசத்தைப்  பிடித்துக்கொண்டு,  அவைகளுக்கு  முன்பாக  நின்றார்கள்;  தூபவர்க்கத்தினால்  மிகுந்த  புகை  எழும்பிற்று.  {Ezek  8:11}

 

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  மூப்பர்கள்  அந்தகாரத்திலே  அவரவர்  தங்கள்  விக்கிரகங்களின்  சித்திர  விநோத  அறைகளில்  செய்கிறதை  நீ  கண்டாயா?  கர்த்தர்  எங்களைப்  பார்க்கிறதில்லை;  கர்த்தர்  தேசத்தைக்  கைவிட்டார்  என்று  சொல்லுகிறார்களே  என்றார்.  {Ezek  8:12}

 

பின்னும்  அவர்கள்  செய்கிற  அதிக  அருவருப்புகளை  இன்னமும்  காண்பாய்  என்று  அவர்  என்னுடனே  சொல்லி,  {Ezek  8:13}

 

என்னைக்  கர்த்தருடைய  ஆலயத்து  வடக்கு  வாசலின்  நடையிலே  கொண்டு  போனார்;  இதோ,  அங்கே  தம்மூசுக்காக<Tammuz>  அழுதுகொண்டிருக்கிற  ஸ்திரீகள்  உட்கார்ந்திருந்தார்கள்.  {Ezek  8:14}

 

அப்பொழுது  அவர்:  மனுபுத்திரனே,  இதைக்  கண்டாயா?  இதிலும்  அதிக  அருவருப்புகளை  இன்னமும்  காண்பாய்  என்று  என்னுடனே  சொல்லி,  {Ezek  8:15}

 

என்னைக்  கர்த்தருடைய  ஆலயத்தின்  உட்பிராகாரத்திலே  கொண்டுபோனார்;  இதோ,  கர்த்தருடைய  ஆலயத்தின்  வாசல்  நடையிலே  மண்டபத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே,  ஏறக்குறைய  இருபத்தைந்து  புருஷர்,  தங்கள்  முதுகைக்  கர்த்தருடைய  ஆலயத்துக்கும்  தங்கள்  முகத்தைக்  கீழ்த்திசைக்கும்  நேராகத்  திருப்பினவர்களாய்க்  கிழக்கே  இருக்கும்  சூரியனை  நமஸ்கரித்தார்கள்.  {Ezek  8:16}

 

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இதைக்  கண்டாயா?  இங்கே  யூதா<Judah>  வம்சத்தார்  செய்கிற  அருவருப்புகள்  அற்பமான  காரியமா?  அவர்கள்  தேசத்தைக்  கொடுமையினால்  நிரப்பி  என்னை  அடிக்கடி  கோபமூட்டுகிறார்கள்;  இதோ,  அவர்கள்  திராட்சக்கிளையைத்  தங்கள்  நாசிக்கு  நேராகப்  பிடிக்கிறார்கள்.  {Ezek  8:17}

 

ஆகையால்  நானும்  உக்கிரத்தோடே  காரியத்தை  நடத்துவேன்;  என்  கண்  தப்பவிடுவதில்லை,  நான்  இரங்குவதில்லை;  அவர்கள்  மகா  சத்தமாய்  என்  செவிகள்  கேட்கக்  கூப்பிட்டாலும்  அவர்களுக்கு  நான்  செவிகொடுப்பதில்லை  என்றார்.  {Ezek  8:18}

 

பின்பு  அவர்  என்  காதுகள்  கேட்க  மகா  சத்தமாய்:  நகரத்தின்  விசாரிப்புக்காரர்  சங்கரிக்கும்  ஆயுதங்களைத்  தங்கள்  கைகளில்  பிடித்துக்கொண்டு  வரக்கடவர்கள்  என்று  சொன்னார்.  {Ezek  9:1}

 

அப்பொழுது  இதோ,  ஆறு  புருஷர்,  வெட்டுகிற  ஆயுதங்களைத்  தங்கள்  கைகளில்  பிடித்துக்கொண்டு,  வடக்கே  பார்த்த  உயர்ந்த  வாசலின்  வழியிலிருந்து  வந்தார்கள்;  அவர்களில்  சணல்நூல்  அங்கிதரித்து,  தன்  அரையில்  கணக்கனுடைய  மைக்கூட்டை  வைத்திருக்கிற  ஒருவன்  இருந்தான்;  அவர்கள்  உள்ளே  பிரவேசித்து,  வெண்கல  பலிபீடத்தண்டையிலே  நின்றார்கள்.  {Ezek  9:2}

 

அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  மகிமை  கேருபீன்மேலிருந்தெழும்பி<cherub>,  ஆலயத்தின்  வாசற்படியிலே  வந்து,  சணல்நூல்  அங்கிதரித்து,  தன்  அரையிலே  கணக்கனுடைய  மைக்கூட்டை  வைத்திருக்கிற  புருஷனைக்  கூப்பிட்டு,  {Ezek  9:3}

 

கர்த்தர்  அவனை  நோக்கி:  நீ  எருசலேம்<Jerusalem>  நகரம்  எங்கும்  உருவப்போய்,  அதற்குள்ளே  செய்யப்படுகிற  சகல  அருவருப்புகளினிமித்தமும்  பெருமூச்சுவிட்டழுகிற  மனுஷரின்  நெற்றிகளில்  அடையாளம்  போடு  என்றார்.  {Ezek  9:4}

 

பின்பு  அவர்  என்  காதுகள்  கேட்க  மற்றவர்களை  நோக்கி:  நீங்கள்  இவன்  பின்னாலே  நகரமெங்கும்  உருவப்போய்  வெட்டுங்கள்;  உங்கள்  கண்  தப்பவிடாமலும்,  நீங்கள்  இரங்காமலும்,  {Ezek  9:5}

 

முதியோரையும்,  வாலிபரையும்,  கன்னிகைகளையும்,  குழந்தைகளையும்,  ஸ்திரீகளையும்  சங்கரித்துக்  கொன்றுபோடுங்கள்;  அடையாளம்  போடப்பட்டிருக்கிற  ஒருவனையும்  கிட்டாதிருங்கள்,  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  துவக்குங்கள்  என்று  என்  காதுகள்  கேட்கச்  சொன்னார்;  அப்பொழுது  அவர்கள்  ஆலயத்துக்குமுன்னே  இருந்த  மூப்பரிடத்தில்  துவக்கம்  பண்ணினார்கள்.  {Ezek  9:6}

 

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  ஆலயத்தைத்  தீட்டுப்படுத்தி,  பிராகாரங்களைக்  கொலையுண்டவர்களாலே  நிரப்பி,  புறப்பட்டுப்போங்கள்  என்றார்;  அவர்கள்  நகரத்தில்  போய்  வெட்டினார்கள்.  {Ezek  9:7}

 

அவர்கள்  வெட்டிக்கொண்டுபோகையில்  நான்மாத்திரம்  தனித்து,  முகங்குப்புற  விழுந்து:  ,  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  எருசலேமின்மேல்<Jerusalem>  உமது  உக்கிரத்தை  ஊற்றுகையில்  இஸ்ரவேலின்<Israel>  மீதியானவர்களையெல்லாம்  அழிப்பீரோ  என்று  முறையிட்டேன்.  {Ezek  9:8}

 

அதற்கு  அவர்:  இஸ்ரவேலும்<Israel>  யூதாவுமாகிய<Judah>  வம்சத்தாரின்  அக்கிரமம்  மிகவும்  பெரிது;  தேசம்  இரத்தப்பழிகளால்  நிறைந்திருக்கிறது;  நகரமும்  மாறுபாட்டினால்  நிரப்பப்பட்டிருக்கிறது;  கர்த்தர்  தேசத்தைக்  கைவிட்டார்;  கர்த்தர்  பார்க்கமாட்டார்  என்று  சொல்லுகிறார்கள்.  {Ezek  9:9}

 

ஆகையால்  என்  கண்  தப்பவிடுவதுமில்லை,  நான்  இரக்கஞ்செய்வதுமில்லை;  அவர்களுடைய  வழியின்  பலனை  அவர்கள்  சிரசின்மேல்  இறங்கப்பண்ணுவேன்  என்றார்.  {Ezek  9:10}

 

இதோ,  சணல்நூல்  அங்கி  தரித்து,  தன்  அரையில்  மைக்கூட்டை  வைத்திருக்கிற  புருஷன்  வந்து:  நீர்  எனக்குக்  கட்டளையிட்டபடியே  செய்தேன்  என்று  காரியத்தைத்  தெரிவித்தான்.  {Ezek  9:11}

 

இதோ,  கேருபீன்களுடைய<cherubims>  தலைக்குமேல்  இருந்த  மண்டலத்தில்  இந்திரநீலரத்தினம்போன்ற  சிங்காசனச்  சாயலான  ஒரு  தோற்றத்தைக்  கண்டேன்;  அது  அவைகளுக்குமேல்  காணப்பட்டது.  {Ezek  10:1}

 

அவர்  சணல்நூல்  அங்கி  தரித்திருந்த  புருஷனை  நோக்கி:  நீ  கேருபீனின்கீழ்<cherub>  இருக்கிற  சக்கரங்களுக்கு  நடுவிலே  பிரவேசித்து,  கேருபீன்களின்<cherubims>  நடுவே  இருக்கிற  அக்கினித்தழலில்  உன்  கை  நிறைய  எடுத்து,  அதை  நகரத்தின்மேல்  இறையென்றார்;  அப்படியே  அவன்  என்  கண்  காண  உள்ளே  பிரவேசித்தான்.  {Ezek  10:2}

 

அந்தப்  புருஷன்  உள்ளே  பிரவேசிக்கையில்,  கேருபீன்கள்<cherubims>  ஆலயத்தின்  வலதுபுறத்தில்  நின்றன;  ஒரு  மேகம்  உட்பிராகாரத்தை  நிரப்பிற்று.  {Ezek  10:3}

 

கர்த்தருடைய  மகிமை  கேருபீனின்<cherub>  மேலிருந்து  எழும்பி,  ஆலயத்தின்  வாசற்படியிலே  வந்தது;  ஆலயம்  மேகத்தினாலே  நிறைந்திருந்தது,  பிராகாரமும்  கர்த்தருடைய  மகிமையின்  பிரகாசத்தினால்  நிரம்பிற்று.  {Ezek  10:4}

 

கேருபீன்களுடைய<cherubims>  செட்டைகளின்  இரைச்சல்  சர்வத்துக்கும்  வல்ல  தேவன்  பேசுகையில்  உண்டாகும்  சத்தம்போல  வெளிப்பிராகாரமட்டும்  கேட்கப்பட்டது.  {Ezek  10:5}

 

அவர்  சணல்நூல்  அங்கி  தரித்திருந்த  புருஷனை  நோக்கி:  நீ  கேருபீன்களுக்குள்<cherubims>  சக்கரங்களின்  நடுவிலிருந்து  அக்கினியை  எடு  என்று  கட்டளையிட்டவுடனே,  அவன்  உள்ளே  பிரவேசித்துச்  சக்கரங்களண்டையிலே  நின்றான்.  {Ezek  10:6}

 

அப்பொழுது  கேருபீன்களுக்குள்ளே<cherubims>  ஒரு  கேருபீன்<cherub>  தன்  கையைக்  கேருபீன்களின்<cherubims>  நடுவில்  இருக்கிற  அக்கினியில்  நீட்டி,  அதில்  எடுத்து,  சணல்நூல்  அங்கி  தரித்திருந்த  புருஷனுடைய  கையில்  கொடுத்தான்;  அவன்  அதை  வாங்கிக்கொண்டு  வெளியே  வந்தான்.  {Ezek  10:7}

 

கேருபீன்களுடைய<cherubims>  செட்டைகளின்  கீழ்  மனுஷர்  கையின்  சாயலானது  காணப்பட்டது.  {Ezek  10:8}

 

இதோ,  கேருபீன்களண்டையில்<cherubims>  நாலு  சக்கரங்கள்  இருக்கக்  கண்டேன்;  ஒவ்வொரு  கேருபீன்<cherub>  அண்டையில்  ஒவ்வொரு  சக்கரம்  இருந்தது;  சக்கரங்களின்  தோற்றம்  படிகப்பச்சை  வருணம்போலிருந்தது.  {Ezek  10:9}

 

அவைகள்  நாலுக்கும்  ஒரே  சாயலான  ரூபம்  இருந்தது;  சக்கரங்களின்  நடுவிலே  சக்கரம்  இருக்குமாப்போல்  காணப்பட்டது.  {Ezek  10:10}

 

அவைகள்  ஓடுகையில்  தங்கள்  நாலு  பக்கங்களிலும்  ஓடும்;  ஓடுகையில்  அவைகள்  திரும்பினதில்லை;  தலைநோக்கும்  இடத்துக்கே  அவைகள்  அதின்  பின்னாலே  ஓடின;  ஓடுகையில்  அவைகள்  திரும்பினதில்லை.  {Ezek  10:11}

 

அவைகளின்  உடல்  அனைத்தும்,  அவைகளின்  முதுகுகளும்,  அவைகளின்  கைகளும்,  அவைகளின்  செட்டைகளும்,  அந்தச்  சக்கரங்களும்,  சுற்றிலும்  கண்களினாலே  நிறைந்திருந்தன;  அவைகள்  நாலுக்கும்  இருந்த  சக்கரங்களும்  அப்படியே  இருந்தன.  {Ezek  10:12}

 

அந்தச்  சக்கரங்களைப்  பார்த்து:  சக்கரமே  என்று  ஒருவன்  கூப்பிடுகிற  சத்தத்தைக்  கேட்டேன்.  {Ezek  10:13}

 

ஒவ்வொன்றுக்கும்  நாலு  முகங்கள்  இருந்தன;  முதலாம்  முகம்  கேருபீன்<cherub>  முகமும்,  இரண்டாம்  முகம்  மனுஷமுகமும்,  மூன்றாம்  முகம்  சிங்கமுகமும்,  நாலாம்  முகம்  கழுகுமுகமுமாயிருந்தது.  {Ezek  10:14}

 

கேருபீன்கள்<cherubims>  மேலே  எழும்பின;  இதுதான்,  நான்  கேபார்<Chebar>  நதியண்டையிலே  கண்டிருந்த  ஜீவன்.  {Ezek  10:15}

 

கேருபீன்கள்<cherubims>  செல்லுகையில்  சக்கரங்கள்  அவைகள்  அருகே  ஓடின;  பூமியிலிருந்து  எழும்பக்  கேருபீன்கள்<cherubims>  தங்கள்  செட்டைகளை  விரித்தபோது,  சக்கரங்களும்  அவைகளை  விட்டு  விலகிப்போகவில்லை.  {Ezek  10:16}

 

அவைகள்  நிற்கையில்  இவைகளும்  நின்றன;  அவைகள்  எழும்புகையில்  இவைகளும்  எழும்பின;  ஜீவனுடைய  ஆவி  இவைகளில்  இருந்தது.  {Ezek  10:17}

 

கர்த்தருடைய  மகிமை  ஆலயத்தின்  வாசற்படியைவிட்டுப்  புறப்பட்டு,  கேருபீன்களின்மேல்<cherubims>  நின்றது.  {Ezek  10:18}

 

அப்பொழுது  கேருபீன்கள்<cherubims>  தங்கள்  செட்டைகளை  விரித்து,  என்  கண்  காணப்  பூமியைவிட்டு  எழும்பின;  அவைகள்  புறப்படுகையில்  சக்கரங்களும்  அவைகளுக்குச்  சரியாய்ச்  சென்றன;  கர்த்தருடைய  ஆலயத்தின்  கிழக்கு  வாசலிலே  போய்  நிற்க,  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  மகிமை  அவைகளின்மேல்  உயர  இருந்தது.  {Ezek  10:19}

 

இது  நான்  கேபார்<Chebar>  நதியண்டையிலே  இஸ்ரவேலின்<Israel>  தேவனுக்குக்  கீழே  இருக்கக்கண்ட  அந்த  ஜீவன்தானே;  அவைகள்  கேருபீன்கள்<cherubims>  என்று  அறிந்துகொண்டேன்.  {Ezek  10:20}

 

அவைகளில்  ஒவ்வொன்றுக்கும்  நாலு  முகமும்,  ஒவ்வொன்றுக்கும்  நாலு  செட்டைகளும்  இருந்தன;  அவைகளுடைய  செட்டைகளின்  கீழ்  மனுஷகைகளின்  சாயல்  இருந்தது.  {Ezek  10:21}

 

அவைகளுடைய  முகங்கள்  நான்  கேபார்<Chebar>  நதியண்டையிலே  கண்டிருந்த  அந்த  முகங்களின்  சாயலாயிருந்தது;  ஒவ்வொன்றும்  தன்தன்  முகத்துக்கு  எதிரான  திசையை  நோக்கிச்  சென்றது.  {Ezek  10:22}

 

பின்பு  ஆவியானவர்  என்னை  எடுத்து,  என்னைக்  கர்த்தருடைய  ஆலயத்தின்  கிழக்கு  முகமாயிருக்கிற  வாசலுக்குக்  கொண்டுபோனார்;  இதோ,  அந்த  வாசலின்  நடையில்  இருபத்தைந்து  புருஷர்  இருந்தார்கள்;  அவர்களின்  நடுவே  ஜனத்தின்  பிரபுக்களாகிய  ஆசூரின்<Azur>  குமாரனாகிய  யசனியாவையும்<Jaazaniah>,  பெனாயாவின்<Benaiah>  குமாரனாகிய  பெலத்தியாவையும்<Pelatiah>  கண்டேன்.  {Ezek  11:1}

 

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இவர்கள்  இந்த  நகரத்திலே  அக்கிரமமான  நினைவுகளை  நினைத்து,  துராலோசனை  சொல்லுகிற  மனுஷர்.  {Ezek  11:2}

 

இது  வீடுகளைக்  கட்டுவதற்குக்  காலமல்ல  என்றும்,  இந்த  நகரம்  பானை,  நாங்கள்  அதிலுள்ள  இறைச்சியென்றும்  சொல்லுகிறார்கள்.  {Ezek  11:3}

 

ஆகையால்  அவர்களுக்கு  விரோதமாய்த்  தீர்க்கதரிசனஞ்சொல்லு,  மனுபுத்திரனே,  தீர்க்கதரிசனஞ்சொல்லு  என்றார்.  {Ezek  11:4}

 

அப்பொழுது  கர்த்தருடைய  ஆவி  என்மேல்  இறங்கினார்;  அவர்  என்னை  நோக்கி:  நீ  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  இப்படிப்  பேசுகிறது  உண்டு;  உங்கள்  மனதில்  எழும்புகிறதை  நான்  அறிவேன்.  {Ezek  11:5}

 

இந்த  நகரத்தில்  நீங்கள்  அநேகரைக்  கொலைசெய்தீர்கள்;  அதின்  வீதிகளைக்  கொலையுண்டவர்களால்  நிரப்பினீர்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Ezek  11:6}

 

ஆகையால்  நீங்கள்  கொலைசெய்து,  அதின்  நடுவிலே  போட்டுவிட்டவர்களே  இறைச்சியும்,  இந்த  நகரம்  பானையுமாமே;  உங்களையோ  அதற்குள்  இராதபடிக்குப்  புறம்பாக்குவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  11:7}

 

பட்டயத்துக்குப்  பயப்பட்டீர்கள்,  பட்டயத்தையே  உங்கள்மேல்  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  11:8}

 

நான்  உங்களை  அதற்குள்  இராதபடிக்குப்  புறம்பாக்கி,  உங்களை  அந்நியரின்  கையில்  ஒப்புக்கொடுத்து,  உங்களில்  நியாயத்தீர்ப்புகளை  நிறைவேற்றுவேன்.  {Ezek  11:9}

 

பட்டயத்தால்  விழுவீர்கள்;  இஸ்ரவேல்<Israel>  தேசத்தின்  எல்லையிலே  உங்களை  நியாயந்தீர்ப்பேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  11:10}

 

இந்த  நகரம்  உங்களுக்குப்  பானையாயிருப்பதுமில்லை,  நீங்கள்  அதிலுள்ள  இறைச்சியாயிருப்பதுமில்லை;  இஸ்ரவேல்<Israel>  தேசத்தின்  எல்லையிலே  உங்களை  நியாயந்தீர்ப்பேன்.  {Ezek  11:11}

 

என்  கட்டளைகளின்படி  நடவாமலும்,  என்  நியாயங்களின்படி  செய்யாமலும்,  உங்களைச்  சுற்றிலுமிருக்கிற  புறஜாதிகளுடைய  முறைமைகளின்படி  செய்த  நீங்கள்  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்றார்.  {Ezek  11:12}

 

நான்  இப்படித்  தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில்,  பெனாயாவின்<Benaiah>  குமாரனாகிய  பெலத்தியா<Pelatiah>  செத்தான்;  அப்பொழுது  நான்  முகங்குப்புற  விழுந்து,  மகா  சத்தமாய்:  ,  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  இஸ்ரவேலில்<Israel>  மீதியானவர்களைச்  சர்வசங்காரஞ்செய்வீரோ  என்று  முறையிட்டேன்.  {Ezek  11:13}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  11:14}

 

மனுபுத்திரனே,  நீங்கள்  கர்த்தரை  விட்டுத்  தூரமாய்ப்  போங்கள்,  எங்களுக்கு  இந்தத்  தேசம்  சுதந்தரமாகக்  கொடுக்கப்பட்டதென்று,  உன்  சகோதரருக்கும்,  உன்  குடும்பத்தாருக்கும்,  உன்  பந்து  ஜனங்களுக்கும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அனைவருக்கும்,  எருசலேமின்<Jerusalem>  குடிகள்  சொல்லுகிறார்கள்.  {Ezek  11:15}

 

ஆகையால்  நான்  அவர்களைத்  தூரமாகப்  புறஜாதிகளுக்குள்ளே  துரத்தியிருந்தாலும்,  நான்  அவர்களைத்  தேசங்களிலே  சிதறடித்திருந்தாலும்,  நான்  அவர்கள்  போன  தேசங்களில்  அவர்களுக்குக்  கொஞ்சக்காலத்துக்குப்  பரிசுத்த  ஸ்தலமாக  இருப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்.  {Ezek  11:16}

 

ஆதலால்  நான்  உங்களை  ஜனங்களிடத்திலிருந்து  சேர்த்து,  நீங்கள்  சிதறடிக்கப்பட்ட  தேசங்களிலிருந்து  உங்களைக்  கூட்டிக்கொண்டு,  இஸ்ரவேல்<Israel>  தேசத்தை  உங்களுக்குக்  கொடுப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  {Ezek  11:17}

 

அவர்கள்  அங்கே  வந்து,  அதில்  சீயென்றிகழப்படத்தக்கதும்  அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம்  அதிலிருந்து  அகற்றுவார்கள்.  {Ezek  11:18}

 

அவர்கள்  என்  கட்டளைகளின்படி  நடந்து,  என்  நியாயங்களைக்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்ய  நான்  அவர்களுக்கு  ஏக  இருதயத்தைத்  தந்து,  அவர்கள்  உள்ளத்தில்  புதிய  ஆவியைக்  கொடுத்து,  கல்லான  இருதயத்தை  அவர்கள்  மாம்சத்திலிருந்து  எடுத்துப்போட்டு,  சதையான  இருதயத்தை  அவர்களுக்கு  அருளுவேன்.  {Ezek  11:19}

 

அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்.  {Ezek  11:20}

 

ஆனாலும்  சீயென்றிகழப்படத்தக்கதும்  அருவருக்கப்படத்தக்கதுமான  தங்கள்  இருதயத்தின்  இச்சையிலே  எவர்கள்  நடக்கிறார்களோ  அவர்களுடைய  வழியின்  பலனை  அவர்கள்  தலைகளின்மேல்  சுமரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  11:21}

 

அப்பொழுது  கேருபீன்கள்<cherubims>  தங்கள்  செட்டைகளை  விரித்து  எழும்பின;  சக்கரங்களும்  அவைகளுக்கு  அருகே  சென்றன;  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  மகிமை  அவைகளின்மேல்  உயர  இருந்தது.  {Ezek  11:22}

 

கர்த்தருடைய  மகிமை  நகரத்தின்  நடுவிலிருந்தெழும்பி,  நகரத்துக்குக்  கிழக்கே  இருக்கிற  மலையின்மேல்  போய்  நின்றது.  {Ezek  11:23}

 

பின்பு  ஆவியானவர்  என்னை  எடுத்து,  என்னை  தேவனுடைய  ஆவிக்குள்ளான  தரிசனத்திலே  கல்தேயாவுக்குச்<Chaldea>  சிறைப்பட்டுப்போனவர்கள்  இடத்திலே  கொண்டுபோய்  விட்டார்;  அப்பொழுது  நான்  கண்ட  தரிசனம்  என்னிலிருந்து  எடுபட்டுப்போயிற்று.  {Ezek  11:24}

 

கர்த்தர்  எனக்குக்  காண்பித்த  யாவையும்  சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச்  சொன்னேன்.  {Ezek  11:25}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  12:1}

 

மனுபுத்திரனே,  நீ  கலகவீட்டாரின்  நடுவிலே  தங்கியிருக்கிறாய்;  காணும்படிக்கு  அவர்களுக்குக்  கண்கள்  இருந்தாலும்  காணாமற்போகிறார்கள்;  கேட்கும்படிக்கு  அவர்களுக்குக்  காதுகள்  இருந்தாலும்  கேளாமற்போகிறார்கள்;  அவர்கள்  கலகவீட்டார்.  {Ezek  12:2}

 

இப்போதும்  மனுபுத்திரனே,  நீ  பரதேசம்  போகும்படி  பிரயாண  சாமான்களை  ஆயத்தப்படுத்தி,  பகற்காலத்திலே  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகப்  பிரயாணப்படு;  உன்  ஸ்தலத்தைவிட்டு  வேறே  ஸ்தலத்துக்கு  அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாகப்  புறப்பட்டுப்போ;  அவர்கள்  கலகவீட்டாரானபோதிலும்  ஒருவேளை  சிந்தித்து  உணருவார்கள்.  {Ezek  12:3}

 

சிறையிருப்புக்குப்  போகிறவனைப்போல்  உன்  சாமான்களை  நீ  பகற்காலத்திலே  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  வெளியே  வைத்து,  நீ  சாயங்காலத்திலே  அவர்கள்  கண்களுக்கு  முன்பாகச்  சிறையிருப்புக்குப்  போகிறவனைப்போல்  புறப்படுவாயாக.  {Ezek  12:4}

 

அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாக  நீ  சுவரிலே  துவாரமிட்டு,  அதின்  வழியாய்  அவைகளை  வெளியே  கொண்டுபோவாயாக.  {Ezek  12:5}

 

அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாக  அவைகளை  உன்  தோளின்மேல்  எடுத்து,  மாலைமயங்கும்  வேளையிலே  வெளியே  கொண்டுபோவாயாக;  நீ  தேசத்தைப்  பாராதபடி  உன்  முகத்தை  மூடிக்கொள்;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்கு  உன்னை  அடையாளமாக்கினேன்  என்றார்.  {Ezek  12:6}

 

எனக்குக்  கட்டளையிட்டபடியே  நான்  செய்தேன்;  சிறைப்பட்டுப்போகும்போது  சாமான்களைக்  கொண்டுபோவதுபோல  என்  சாமான்களைப்  பகற்காலத்தில்  வெளியே  வைத்தேன்;  சாயங்காலத்திலோ  கையினால்  சுவரிலே  துவாரமிட்டு,  மாலை  மயங்கும்  வேளையிலே  அவைகளை  வெளியே  கொண்டுபோய்,  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  அவைகளைத்  தோளின்மேல்  எடுத்துக்கொண்டுபோனேன்.  {Ezek  12:7}

 

விடியற்காலத்திலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  12:8}

 

மனுபுத்திரனே,  கலகவீட்டாராகிய  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  உன்னைப்  பார்த்து:  நீ  செய்கிறது  என்னவென்று  உன்னைக்  கேட்டார்கள்  அல்லவா?  {Ezek  12:9}

 

இது  எருசலேமில்<Jerusalem>  இருக்கிற  அதிபதியின்மேலும்  அதின்  நடுவில்  இருக்கிற  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அனைவரின்மேலும்  சுமரும்  பாரம்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  அவர்களிடத்தில்  சொல்லு.  {Ezek  12:10}

 

நீ  அவர்களை  நோக்கி:  நான்  உங்களுக்கு  அடையாளமாயிருக்கிறேன்;  நான்  செய்வது  எப்படியோ,  அப்படியே  அவர்களுக்கும்  செய்யப்படும்;  சிறைப்பட்டுப்  பரதேசம்  போவார்கள்.  {Ezek  12:11}

 

அவர்கள்  நடுவில்  இருக்கிற  அதிபதி  மாலைமயங்கும்போது  தோளின்மேல்  சுமைசுமந்து  புறப்படுவான்;  வெளியே  சுமைகொண்டுபோகச்  சுவரிலே  துவாரமிடுவார்கள்;  கண்ணினாலே  அவன்  தன்  தேசத்தைக்  காணாதபடி  தன்  முகத்தை  மூடிக்கொள்வான்.  {Ezek  12:12}

 

நான்  என்  வலையை  அவன்மேல்  வீசுவேன்,  அவன்  என்  கண்ணியிலே  பிடிபடுவான்;  அவனைக்  கல்தேயர்<Chaldeans>  தேசமாகிய  பாபிலோனுக்குக்<Babylon>  கொண்டுபோவேன்;  அங்கே  அவன்  சாவான்;  ஆகிலும்  அதைக்  காணமாட்டான்.  {Ezek  12:13}

 

அவனுக்கு  உதவியாக  அவனைச்  சுற்றிலும்  இருக்கிற  யாவரையும்  அவனுடைய  எல்லா  இராணுவங்களையும்  நான்  சகல  திசைகளிலும்  தூற்றி,  அவர்கள்  பின்னே  பட்டயத்தை  உருவுவேன்.  {Ezek  12:14}

 

அப்படி  நான்  அவர்களை  ஜாதிகளுக்குள்ளே  தூற்றி,  அவர்களை  தேசங்களிலே  சிதறடிக்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  12:15}

 

ஆனாலும்  தாங்கள்  போய்ச்சேரும்  ஜாதிகளுக்குள்ளே  தங்கள்  அருவருப்புகளையெல்லாம்  விவரிக்கும்படி,  நான்  அவர்களில்  கொஞ்சம்பேரைப்  பஞ்சத்துக்கும்  பட்டயத்துக்கும்  கொள்ளைநோய்க்கும்  தப்பி  மீந்திருக்கப்பண்ணுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்று  சொல்  என்றார்.  {Ezek  12:16}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  12:17}

 

மனுபுத்திரனே,  நீ  உன்  அப்பத்தை  நடுக்கத்தோடே  புசித்து,  உன்  தண்ணீரைத்  தத்தளிப்போடும்  விசாரத்தோடும்  குடித்து,  {Ezek  12:18}

 

தேசத்திலுள்ள  ஜனங்களை  நோக்கி:  இஸ்ரவேல்<Israel>  தேசத்திலுள்ள  எருசலேமின்<Jerusalem>  குடிகளைக்குறித்துக்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  தங்கள்  அப்பத்தை  விசாரத்தோடே  புசித்து,  தங்கள்  தண்ணீரைத்  திகிலோடே  குடிப்பார்கள்;  அவர்களுடைய  தேசத்துக்  குடிகளுடைய  கொடுமைகளினிமித்தம்  அதிலுள்ளதெல்லாம்  அழிய,  அது  பாழாகும்.  {Ezek  12:19}

 

குடியேறியிருக்கிற  பட்டணங்கள்  வனாந்தரங்களாகி,  தேசம்  பாழாய்ப்போகும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்றார்.  {Ezek  12:20}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  12:21}

 

மனுபுத்திரனே,  நாட்கள்  நீடிக்கும்,  தரிசனம்  எல்லாம்  அவமாகும்  என்று  இஸ்ரவேல்<Israel>  தேசத்திலே  வழங்கும்  பழமொழி  என்ன?  {Ezek  12:22}

 

ஆகையால்  நீ  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  அவர்கள்  இனி  இஸ்ரவேலிலே<Israel>  இந்தப்  பழமொழியைச்  சொல்லிவராதபடிக்கு  நான்  அதை  ஒழியப்பண்ணுவேன்;  நாட்களும்  எல்லாத்  தரிசனத்தின்  பொருளும்  சமீபித்து  வந்தன  என்று  அவர்களோடே  சொல்லு.  {Ezek  12:23}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  நடுவில்  இனிச்  சகல  கள்ளத்தரிசனமும்  முகஸ்துதியான  குறிசொல்லுதலும்  இராமற்போகும்.  {Ezek  12:24}

 

நான்  கர்த்தர்,  நான்  சொல்லுவேன்,  நான்  சொல்லும்  வார்த்தை  நிறைவேறும்;  இனித்  தாமதியாது;  கலகவீட்டாரே,  உங்கள்  நாட்களிலே  நான்  வார்த்தையைச்  சொல்லுவேன்,  அதை  நிறைவேறவும்  பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  12:25}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  12:26}

 

மனுபுத்திரனே,  இதோ,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்:  இவன்  காண்கிற  தரிசனம்  நிறைவேற  அநேகநாள்  செல்லும்;  தூரமாயிருக்கிற  காலங்களைக்குறித்து  இவன்  தீர்க்கதரிசனம்  சொல்லுகிறான்  என்கிறார்கள்.  {Ezek  12:27}

 

ஆகையால்  என்  வார்த்தைகளில்  ஒன்றாகிலும்  இனித்  தாமதிப்பதில்லையென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  நான்  சொன்ன  வார்த்தை  நிறைவேறும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  அவர்களோடே  சொல்  என்றார்.  {Ezek  12:28}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  13:1}

 

மனுபுத்திரனே,  தீர்க்கதரிசனம்  சொல்லுகிற  இஸ்ரவேலின்<Israel>  தீர்க்கதரிசிகளுக்கு  விரோதமாக  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  தங்கள்  இருதயத்தில்  இருக்கிறதையே  எடுத்துத்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறவர்களோடே  நீ  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  {Ezek  13:2}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறதாவது:  தாங்கள்  ஒன்றும்  தரிசியாதிருந்தும்,  தங்களுடைய  ஆவியின்  ஏவுதலைப்  பின்பற்றுகிற  மதிகெட்ட  தீர்க்கதரிசிகளுக்கு  ஐயோ!  {Ezek  13:3}

 

இஸ்ரவேலே<Israel>,  உன்  தீர்க்கதரிசிகள்  வனாந்தரங்களிலுள்ள  நரிகளுக்கு  ஒப்பாயிருக்கிறார்கள்.  {Ezek  13:4}

 

நீங்கள்  கர்த்தருடைய  நாளிலே  யுத்தத்தில்  நிலைநிற்கும்படிக்கு,  திறப்புகளில்  ஏறினதுமில்லை;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்காகச்  சுவரை  அடைத்ததுமில்லை.  {Ezek  13:5}

 

கர்த்தர்  தங்களை  அனுப்பாதிருந்தும்,  கர்த்தர்  உரைத்தார்  என்று  சொல்லி,  அவர்கள்  அபத்தத்தையும்  பொய்க்குறியையும்  தரிசித்து,  காரியத்தை  நிர்வாகம்பண்ணலாமென்று  நம்பிக்கையாயிருக்கிறார்கள்.  {Ezek  13:6}

 

நான்  உரைக்காதிருந்தும்,  நீங்கள்  கர்த்தர்  உரைத்தார்  என்று  சொல்லும்போது,  அபத்தமான  தரிசனையைத்  தரிசித்து,  பொய்க்குறியைச்  சொல்லுகிறீர்கள்  அல்லவா?  {Ezek  13:7}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நீங்கள்  அபத்தமானதைச்  சொல்லி,  பொய்யானதைத்  தரிசிக்கிறபடியினால்,  இதோ,  நான்  உங்களுக்கு  விரோதமானவர்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  13:8}

 

அபத்தமானதைத்  தரிசித்து,  பொய்க்குறியைச்  சொல்லுகிற  தீர்க்கதரிசிகளுக்கு  என்  கை  விரோதமாயிருக்கும்;  அவர்கள்  என்  ஜனத்தின்  சங்கத்தில்  இருப்பதுமில்லை;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  அட்டவணையில்  எழுதப்படுவதுமில்லை;  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்குள்  பிரவேசிப்பதுமில்லை;  அப்பொழுது  நான்  கர்த்தராகிய  ஆண்டவரென்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  13:9}

 

சமாதானம்  இல்லாதிருந்தும்  சமாதானமென்று  சொல்லி,  அவர்கள்  என்  ஜனத்தை  மோசம்போக்குகிறார்கள்;  ஒருவன்  மண்சுவரை  வைக்கிறான்;  இதோ,  மற்றவர்கள்  சாரமில்லாத  சாந்தை  அதற்குப்  பூசுகிறார்கள்.  {Ezek  13:10}

 

சாரமில்லாத  சாந்தைப்  பூசுகிறவர்களை  நோக்கி:  அது  இடிந்துவிழுமென்று  சொல்;  வெள்ளமாகப்  பெருகுகிற  மழை  பெய்யும்;  மகா  கல்மழையே,  நீ  சொரிவாய்;  கொடிய  புசல்காற்றும்  அதைப்  பிளக்கும்.  {Ezek  13:11}

 

இதோ,  சுவர்  விழும்போது:  நீங்கள்  பூசின  பூச்சு  எங்கே  என்று  சொல்வார்கள்  அல்லவா?  {Ezek  13:12}

 

ஆகையால்  என்  உக்கிரத்திலே  கொடிய  புசல்காற்றை  எழும்பி  அடிக்கப்பண்ணுவேன்;  என்  கோபத்திலே  வெள்ளமாக  அடிக்கிற  மழையும்,  என்  உக்கிரத்திலே  நிர்மூலமாக்கத்தக்க  பெருங்கல்  மழையும்  சொரியும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  13:13}

 

அப்பொழுது  நீங்கள்  சாரமில்லாத  சாந்தைப்  பூசின  சுவரை  நான்  இடித்து,  அதின்  அஸ்திபாரம்  திறந்துகிடக்கும்படி  அதைத்  தரையிலே  விழப்பண்ணுவேன்;  உள்ளே  இருக்கிற  நீங்கள்  நிர்மூலமாகும்படி  அது  விழும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  13:14}

 

இப்படிச்  சுவரிலும்,  அதற்குச்  சாரமில்லாத  சாந்தைப்  பூசினவர்களிலும்  நான்  என்  உக்கிரத்தைத்  தீர்த்துக்கொண்டு:  சுவருமில்லை,  அதற்குச்  சாந்து  பூசினவர்களுமில்லை.  {Ezek  13:15}

 

எருசலேமைக்குறித்துத்<Jerusalem>  தீர்க்கதரிசனஞ்சொல்லி,  சமாதானம்  இல்லாதிருந்தும்  சமாதானம்  உண்டென்று  தரிசனங்காண்கிற  இஸ்ரவேலின்<Israel>  தீர்க்கதரிசிகள்  இல்லாமற்போவார்கள்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  13:16}

 

மனுபுத்திரனே,  தங்களுடைய  இருதயத்தில்  இருக்கிறதையே  எடுத்து,  தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற  உன்  ஜனத்தின்  குமாரத்திகளுக்கு  எதிராக  உன்  முகத்தைத்  திருப்பி,  அவர்களுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  {Ezek  13:17}

 

ஆத்துமாக்களை  வேட்டையாடும்படிக்குச்  சகல  கைகளுக்கும்  தழுவணைகளைத்  தைத்து,  அந்தந்த  வயதுள்ளவர்களுடைய  தலைக்கும்  தலையணைகளை  உண்டு  பண்ணுகிறவர்களுக்கு  ஐயோ!  நீங்கள்  என்  ஜனத்தின்  ஆத்துமாக்களை  வேட்டையாடி,  அவைகளை  உங்களுக்கு  உயிரோடே  காப்பாற்றுவீர்களோ?  {Ezek  13:18}

 

சாகத்தகாத  ஆத்துமாக்களைக்  கொல்வதற்கும்,  உயிரோடே  இருக்கத்தகாத  ஆத்துமாக்களை  உயிரோடே  காப்பாற்றுவதற்குமாக  நீங்கள்  பொய்க்குச்  செவிகொடுக்கிற  என்  ஜனத்துக்குப்  பொய்  சொல்லுகிறதினாலே  சில  சிரங்கை  வாற்கோதுமைக்காகவும்  அப்பத்துண்டுகளுக்காகவும்  என்னை  என்  ஜனத்துக்குள்ளே  பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  13:19}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நீங்கள்  ஆத்துமாக்களைப்  பறக்கடிக்கும்படி  வேட்டையாடுகிற  உங்கள்  தழுவணைகளுக்கு  விரோதமாக  நான்  வந்து,  அவைகளை  உங்கள்  புயங்களிலிருந்து  பிடுங்கிக்  கிழித்து,  நீங்கள்  பறக்கடிக்க  வேட்டையாடுகிற  ஆத்துமாக்களை  நான்  விடுதலை  பண்ணி,  {Ezek  13:20}

 

உங்கள்  தலையணைகளைக்  கிழித்து,  என்  ஜனத்தை  உங்கள்  கைகளுக்கு  நீங்கலாக்கிவிடுவேன்;  அவர்கள்  இனி  வேட்டையாடப்படும்படி  உங்கள்  கைகளில்  இரார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  13:21}

 

நான்  சஞ்சலப்படுத்தாத  நீதிமானின்  இருதயத்தை  நீங்கள்  வீணாய்  முறியப்பண்ணினபடியினாலும்,  துன்மார்க்கன்  தன்  பொல்லாத  வழியைவிட்டுத்  திரும்பவும்  நான்  அவனை  உயிரோடே  காக்கவுங்  கூடாதபடிக்கு  நீங்கள்  அவனுடைய  கைகளைத்  திடப்படுத்தினபடியினாலும்,  {Ezek  13:22}

 

நீங்கள்  இனி  அபத்தமானதைத்  தரிசிப்பதுமில்லை,  சாஸ்திரம்  பார்ப்பதுமில்லை;  நான்  என்  ஜனத்தை  உங்கள்  கைகளுக்கு  நீங்கலாக்கிவிடுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்றார்.  {Ezek  13:23}

 

இஸ்ரவேலுடைய<Israel>  மூப்பரில்  சிலர்  என்னிடத்தில்  வந்து,  எனக்கு  முன்பாக  உட்கார்ந்தார்கள்.  {Ezek  14:1}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  14:2}

 

மனுபுத்திரனே,  இந்த  மனுஷர்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களைத்  தங்கள்  இருதயத்தின்மேல்  நாட்டி,  தங்கள்  அக்கிரமமாகிய  இடறலைத்  தங்கள்  முகத்துக்கு  எதிராக  வைத்துக்கொண்டிருக்கிறார்களே;  இவர்கள்  என்னிடத்தில்  விசாரிக்கத்தகுமா?  {Ezek  14:3}

 

ஆகையால்,  நீ  அவர்களோடே  பேசிச்சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரில்  தன்னுடைய  நரகலான  விக்கிரகங்களைத்  தன்  இருதயத்தின்மேல்  நாட்டி,  தன்  அக்கிரமமாகிய  இடறலைத்  தன்  முகத்துக்கு  எதிராக  வைத்துக்கொண்டிருக்கிற  எவனாகிலும்  தீர்க்கதரிசியினிடத்தில்  வந்தால்,  கர்த்தராகிய  நான்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருடைய  இருதயத்தில்  இருக்கிறதைப்  பிடிக்கும்படியாக  அப்படிப்பட்டவனுடைய  நரகலான  விக்கிரகங்களின்  திரட்சிக்குத்தக்கதாக  உத்தரவு  கொடுப்பேன்.  {Ezek  14:4}

 

அவர்கள்  எல்லாரும்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களைப்  பின்பற்றி,  என்னைவிட்டுப்  பேதலித்துப்போனார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  14:5}

 

ஆகையால்,  நீ  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  நோக்கி:  திரும்புங்கள்,  உங்கள்  நரகலான  விக்கிரகங்களை  விட்டுத்  திரும்புங்கள்;  உங்கள்  சகல  அருவருப்புகளையும்  விட்டு  உங்கள்  முகங்களைத்  திருப்புங்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  14:6}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரிலும்  இஸ்ரவேலில்<Israel>  தங்குகிற  அந்நியரிலும்  என்னைப்  பின்பற்றாமல்  பேதலித்து,  தன்  நரகலான  விக்கிரகங்களைத்  தன்  இருதயத்தின்மேல்  நாட்டி,  தன்  அக்கிரமமாகிய  இடறலைத்  தன்  முகத்துக்கெதிராக  வைத்துக்கொண்டிருக்கிற  எவனாகிலும்  தீர்க்கதரிசியின்  மூலமாய்  என்னிடத்தில்  விசாரிக்க  வந்தால்,  அவனுக்குக்  கர்த்தராகிய  நானே  உத்தரவுகொடுத்து,  {Ezek  14:7}

 

அந்த  மனுஷனுக்கு  விரோதமாக  என்  முகத்தைத்  திருப்பி,  அவனை  அடையாளமாகவும்  பழமொழியாகவும்  வைத்து,  அவனை  என்  ஜனத்தின்  நடுவில்  இராதபடிக்குச்  சங்கரித்துப்போடுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  14:8}

 

ஒரு  தீர்க்கதரிசி  எத்தப்பட்டு  ஒரு  விசேஷத்தைச்  சொன்னானாகில்,  அப்படிக்கொத்த  தீர்க்கதரிசியைக்  கர்த்தராகிய  நானே  எத்தப்படப்பண்ணினேன்;  நான்  அவனுக்கு  விரோதமாக  என்  கையை  நீட்டி,  அவனை  இஸ்ரவேல்<Israel>  ஜனத்தின்  நடுவில்  இராதபடிக்கு  அழிப்பேன்.  {Ezek  14:9}

 

அப்படியே  அவரவர்  தங்கள்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்;  தீர்க்கதரிசியினிடத்தில்  விசாரிக்கிறவனுடைய  தண்டனை  எப்படியோ  அப்படியே  தீர்க்கதரிசியினுடைய  தண்டனையும்  இருக்கும்.  {Ezek  14:10}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  இனி  என்னைவிட்டு  வழிதப்பிப்போகாமலும்,  தங்கள்  எல்லா  மீறுதல்களாலும்  இனி  அசுசிப்படாமலும்  இருக்கும்பொருட்டாக  இப்படிச்  சம்பவிக்கும்;  அப்பொழுது  அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  14:11}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  14:12}

 

மனுபுத்திரனே,  ஒரு  தேசம்  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து,  பாவஞ்செய்தால்,  நான்  அதற்கு  விரோதமாக  என்  கையை  நீட்டி,  அதில்  அப்பம்  என்னும்  ஆதரவுகோலை  முறித்து,  அதில்  பஞ்சத்தை  அனுப்பி,  மனுஷரையும்  மிருகங்களையும்  அதில்  இராதபடிக்கு  நாசம்பண்ணுவேன்.  {Ezek  14:13}

 

அப்பொழுது  நோவா<Noah>  தானியேல்<Daniel>  யோபு<Job>  ஆகிய  இம்மூன்று  புருஷரும்  அதின்  நடுவில்  இருந்தாலும்,  அவர்கள்  தங்கள்  நீதியினால்  தங்கள்  ஆத்துமாக்களைமாத்திரம்  தப்புவிப்பார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  14:14}

 

நான்  தேசத்தில்  துஷ்டமிருகங்களை  அனுப்ப,  அம்மிருகங்களினிமித்தம்  ஒருவரும்  அதின்  வழியாய்  நடக்கக்கூடாதபடி  வெறுமையும்  பாழுமாகும்போது,  {Ezek  14:15}

 

அந்த  மூன்று  புருஷரும்  அதின்  நடுவில்  இருந்தாலும்,  தாங்கள்மாத்திரம்  தப்புவார்களேயல்லாமல்,  குமாரரையாகிலும்  குமாரத்திகளையாகிலும்  தப்புவிக்கமாட்டார்கள்;  தேசமும்  பாழாய்ப்போகும்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  14:16}

 

அல்லது  நான்  அந்தத்  தேசத்தின்மேல்  பட்டயத்தை  வரப்பண்ணி:  பட்டயமே,  தேசத்தை  உருவப்போ  என்று  சொல்லி,  அதிலுள்ள  மனுஷரையும்  மிருகங்களையும்  நாசம்பண்ணும்போது,  {Ezek  14:17}

 

அந்த  மூன்று  புருஷரும்  அதின்  நடுவில்  இருந்தாலும்,  தாங்கள்மாத்திரம்  தப்புவார்களேயல்லாமல்,  குமாரரையாகிலும்  குமாரத்திகளையாகிலும்  தப்புவிக்கமாட்டார்கள்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  14:18}

 

அல்லது  நான்  அந்தத்  தேசத்தில்  கொள்ளைநோயை  அனுப்பி,  அதிலுள்ள  மனுஷரையும்  மிருகங்களையும்  நாசம்பண்ணும்படி  அதின்மேல்  இரத்தப்பழியாக  என்  உக்கிரத்தை  ஊற்றும்போது,  {Ezek  14:19}

 

நோவாவும்<Noah>  தானியேலும்<Daniel>  யோபும்<Job>  அதின்  நடுவில்  இருந்தாலும்,  அவர்கள்  தங்கள்  நீதியினால்  தங்கள்  ஆத்துமாக்களை  மாத்திரம்  தப்புவிப்பார்களேயல்லாமல்,  குமாரனையாகிலும்,  குமாரத்தியையாகிலும்  தப்புவிக்கமாட்டார்கள்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  14:20}

 

ஆகையால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  மனுஷரையும்  மிருகங்களையும்  நாசம்பண்ணும்படி  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாகப்  பட்டயம்,  பஞ்சம்,  துஷ்டமிருகங்கள்,  கொள்ளைநோய்  என்னும்  இந்நான்கு  கொடிய  தண்டனைகளையும்  அனுப்பும்போது  எவ்வளவு  அதிக  சங்காரமாகும்?  {Ezek  14:21}

 

ஆகிலும்,  இதோ,  அதிலே  தப்பி  மீதியாகி  வெளியே  கொண்டுவரப்படுகிற  குமாரரும்  குமாரத்திகளும்  சிலர்  இருப்பார்கள்;  இதோ,  அவர்கள்  உங்களண்டைக்குப்  புறப்பட்டு  வருவார்கள்;  அப்பொழுது  நீங்கள்  அவர்கள்  மார்க்கத்தையும்  அவர்கள்  கிரியைகளையும்  கண்டு,  நான்  எருசலேமின்மேல்<Jerusalem>  வரப்பண்ணின  தீங்கையும்  அதின்மேல்  நான்  வரப்பண்ணின  எல்லாவற்றையுங்குறித்துத்  தேற்றப்படுவீர்கள்.  {Ezek  14:22}

 

நீங்கள்  அவர்கள்  மார்க்கத்தையும்  அவர்கள்  கிரியையையும்  காணும்போது,  அவர்கள்  உங்களுக்குத்  தேற்றரவாயிருப்பார்கள்;  நான்  அதிலே  செய்த  எல்லாவற்றையும்  முகாந்தரமில்லாமல்  செய்யவில்லையென்று  அப்பொழுது  அறிந்துகொள்வீர்கள்  என்பதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொன்னார்.  {Ezek  14:23}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  15:1}

 

மனுபுத்திரனே,  காட்டிலிருக்கிற  செடிகளுக்குள்  மற்ற  எல்லாச்  செடிகொடிகளைப்பார்க்கிலும்  திராட்சச்செடிக்கு  மேன்மை  என்ன?  {Ezek  15:2}

 

யாதொரு  வேலைசெய்ய  அதிலே  ஒரு  கட்டை  எடுக்கப்படுமோ?  யாதொரு  தட்டுமுட்டைத்  தூக்கிவைக்கும்படி  ஒரு  முளையை  அதினால்  செய்வார்களோ?  {Ezek  15:3}

 

இதோ,  அது  அக்கினிக்கு  இரையாக  எறியப்படும்;  அதின்  இரண்டு  முனைகளையும்  அக்கினி  எரித்துப்போடும்;  அதின்  நடுத்துண்டும்  வெந்துபோம்;  அது  எந்த  வேலைக்காவது  உதவுமோ?  {Ezek  15:4}

 

இதோ,  அது  வேகாதிருக்கும்போதே  ஒரு  வேலைக்கும்  உதவாதிருக்க,  அக்கினி  அதை  எரித்து,  அது  வெந்துபோனபின்பு,  அது  இனி  ஒரு  வேலைக்கு  உதவுவதெப்படி?  {Ezek  15:5}

 

ஆதலால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  காட்டுச்  செடிகளுக்குள்ளிருக்கிற  திராட்சச்செடியை  நான்  அக்கினிக்கு  இரையாக  ஒப்புக்கொடுத்ததுபோல,  எருசலேமின்<Jerusalem>  குடிகளையும்  அப்படியே  ஒப்புக்கொடுத்து,  {Ezek  15:6}

 

என்  முகத்தை  அவர்களுக்கு  விரோதமாகத்  திருப்புவேன்;  அவர்கள்  ஒரு  அக்கினியிலிருந்து  நீங்கித்  தப்பினாலும்,  வேறே  அக்கினி  அவர்களைப்  பட்சிக்கும்;  அப்படியே  நான்  என்  முகத்தை  அவர்களுக்கு  விரோதமாய்த்  திருப்பும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  15:7}

 

அவர்கள்  துரோகம்பண்ணினபடியினால்,  நான்  தேசத்தைப்  பாழாய்ப்  போகப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  {Ezek  15:8}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  16:1}

 

மனுபுத்திரனே,  நீ  எருசலேமின்<Jerusalem>  அருவருப்புகளை  அதற்கு  அறிவித்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  {Ezek  16:2}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  எருசலேமுக்குச்<Jerusalem>  சொல்லுகிறார்,  கானான்<Canaan>  தேசமே  உன்  உற்பத்திக்கும்  உன்  பிறப்புக்கும்  இடம்,  உன்  தகப்பன்  எமோரியன்<Amorite>,  உன்  தாய்  ஏத்தித்தி<Hittite>.  {Ezek  16:3}

 

உன்  பிறப்பின்  வர்த்தமானம்  என்னவென்றால்,  நீ  பிறந்த  நாளிலே  உன்  தொப்புள்  அறுக்கப்படவுமில்லை;  நீ  சுத்தமாவதற்குத்  தண்ணீரினால்  குளிப்பாட்டப்படவுமில்லை;  உப்பால்  சுத்திகரிக்கப்படவுமில்லை;  துணிகளில்  சுற்றப்படவுமில்லை.  {Ezek  16:4}

 

உனக்காகப்  பரிதபித்து,  இவைகளில்  ஒன்றையாகிலும்  உனக்குச்  செய்ய  ஒரு  கண்ணும்  உன்பேரில்  இரக்கமாயிருந்ததுமில்லை;  நீ  பிறந்தநாளில்  நீ  அருவருக்கப்பட்டதினால்  வெளியில்  எறிந்துவிடப்பட்டாய்.  {Ezek  16:5}

 

நான்  உன்  அருகே  கடந்துபோகும்போது,  மிதிக்கப்படுவதற்கு  ஏதுவாய்  நீ  உன்  இரத்தத்தில்  கிடக்கிறதைக்  கண்டு,  உன்  இரத்தத்தில்  கிடக்கிற  உன்னைப்பார்த்து:  பிழைத்திரு  என்றேன்;  ஆம்,  உன்  இரத்தத்தில்  கிடக்கிற  உன்னைப்பார்த்து:  பிழைத்திரு  என்று  சொன்னேன்.  {Ezek  16:6}

 

உன்னை  வயலின்  பயிரைப்போல  அநேகமாயிரமாய்ப்  பெருகும்படி  வைத்தேன்;  நீ  வளர்ந்து  பெரியவளாகி,  மகா  சௌந்தரியவதியானாய்;  உன்  ஸ்தனங்கள்  எழும்பின,  உன்  மயிர்  வளர்ந்தது;  ஆனாலும்,  நீ  நிர்வாணமும்  அம்மணமுமாயிருந்தாய்.  {Ezek  16:7}

 

நான்  உன்  அருகே  கடந்துபோனபோது,  உன்னைப்  பார்த்தேன்;  இதோ,  உன்  காலம்  பருவகாலமாயிருந்தது;  அப்பொழுது  என்  வஸ்திரத்தை  உன்மேல்  விரித்து,  உன்  நிர்வாணத்தை  மூடி,  உனக்கு  ஆணையிட்டுக்கொடுத்து,  உன்னோடு  உடன்படிக்கை  பண்ணினேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  இவ்விதமாய்  நீ  என்னுடையவளானாய்.  {Ezek  16:8}

 

நான்  உன்னை  ஜலத்தினால்  முழுக்காட்டி,  உன்னை  இரத்தமற  ஸ்நானம்  பண்ணுவித்து,  உனக்கு  எண்ணெய்  பூசி,  {Ezek  16:9}

 

சித்திரத்தையலாடையை  உனக்கு  உடுத்தி,  சாயந்தீர்ந்த  பாதரட்சைகளை  உனக்குத்  தரித்து,  கட்ட  மெல்லிய  புடவையையும்,  மூடிக்கொள்ளப்  பட்டுச்  சால்வையையும்  உனக்குக்  கொடுத்து,  {Ezek  16:10}

 

உன்னை  ஆபரணங்களால்  அலங்கரித்து,  உன்  கைகளிலே  கடகங்களையும்,  உன்  கழுத்திலே  சரப்பணியையும்  போட்டு,  {Ezek  16:11}

 

உன்  நெற்றியில்  நெற்றிப்பட்டத்தையும்,  உன்  காதுகளில்  காதணியையும்,  உன்  தலையின்மேல்  சிங்காரமான  கிரீடத்தையும்  தரித்தேன்.  {Ezek  16:12}

 

இவ்விதமாய்ப்  பொன்னினாலும்  வெள்ளியினாலும்  நீ  அலங்கரிக்கப்பட்டாய்;  உன்  உடுப்பு  மெல்லிய  புடவையும்  பட்டும்  சித்திரத்தையலாடையுமாயிருந்தது;  மெல்லிய  மாவையும்  தேனையும்  நெய்யையும்  சாப்பிட்டாய்;  நீ  மிகவும்  அழகுள்ளவளாகி,  ராஜ்யத்தைச்  சுதந்தரிக்கும்  சிலாக்கியத்தையும்  பெற்றாய்.  {Ezek  16:13}

 

உன்  அழகினாலே  உன்  கீர்த்தி  புறஜாதிகளுக்குள்ளே  பிரசித்தமாயிற்று;  நான்  உன்மேல்  வைத்த  என்  மகிமையினாலே  அது  குறைவற்றதாய்  இருந்ததென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  16:14}

 

நீயோவென்றால்  உன்  அழகை  நம்பி,  உன்  கீர்த்தியினால்  சோரமார்க்கமாய்  நடந்து,  வழிப்போக்கரில்  உனக்கு  நேர்பட்ட  யாவரோடும்  வேசித்தனம்பண்ணி,  {Ezek  16:15}

 

உன்  வஸ்திரங்களில்  சிலவற்றை  எடுத்து,  பலவருணச்  சோடிப்பான  மேடைகளை  உனக்கு  உண்டாக்கி,  அவைகளின்மேல்  வேசித்தனம்பண்ணினாய்;  அப்படிக்கொத்த  காரியங்கள்  ஒருக்காலும்  சம்பவித்ததுமில்லை,  சம்பவிப்பதுமில்லை.  {Ezek  16:16}

 

நான்  உனக்குக்  கொடுத்த  என்  பொன்னும்  என்  வெள்ளியுமான  உன்  சிங்கார  ஆபரணங்களை  நீ  எடுத்து,  உனக்கு  ஆண்சுரூபங்களை  உண்டாக்கி,  அவைகளோடே  வேசித்தனம்பண்ணி,  {Ezek  16:17}

 

உன்  சித்திரத்தையலாடைகளை  எடுத்து,  அவைகளை  மூடி,  என்  எண்ணெயையும்  என்  தூபவர்க்கத்தையும்  அவைகளின்முன்  படைத்து,  {Ezek  16:18}

 

நான்  உனக்குக்  கொடுத்த  என்  அப்பத்தையும்,  நீ  சாப்பிடும்படி  உனக்குக்  கொடுத்த  மெல்லிய  மாவையும்  நெய்யையும்  தேனையும்  நீ  அவைகளின்முன்  சுகந்தவாசனையாகப்  படைத்தாய்;  காரியம்  இப்படி  ஆயிற்றென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  16:19}

 

நீ  எனக்குப்  பெற்ற  உன்  குமாரரையும்  உன்  குமாரத்திகளையும்  எடுத்து,  அவர்களை  அவைகளுக்கு  இரையாகப்  பலியிட்டாய்.  {Ezek  16:20}

 

நீ  செய்த  வேசித்தனங்கள்  போதாதென்று,  நீ  என்  பிள்ளைகளை  அவைகளுக்குத்  தீக்கடக்கப்பண்ண  ஒப்புக்கொடுத்து,  அவர்களைக்  கொலைசெய்தாய்.  {Ezek  16:21}

 

நீ  உன்  எல்லா  அருவருப்புகளிலும்  வேசித்தனங்களிலும்  நடக்கும்போது,  நிர்வாணமும்  அம்மணமுமாயிருந்ததும்,  உன்  இரத்தத்திலே  மிதிக்கப்பட  ஏதுவாய்க்  கிடந்ததுமான  உன்  சிறுவயதின்  நாட்களை  நினையாமற்போனாய்.  {Ezek  16:22}

 

ஐயோ!  உனக்கு  ஐயோ!  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நீ  செய்த  பொல்லாப்புகளெல்லாம்  தவிர,  {Ezek  16:23}

 

நீ  உனக்கு  மண்டபங்களைக்  கட்டி,  உனக்குச்  சகல  வீதிகளிலும்  உயர்ந்த  மேடைகளை  உண்டுபண்ணினாய்.  {Ezek  16:24}

 

நீ  சகல  வழிமுகனையிலும்  உன்  உயர்ந்த  மேடைகளைக்  கட்டி,  உன்  அழகை  அருவருப்பாக்கி,  வழிப்போக்கர்  யாவருக்கும்  உன்  கால்களை  விரித்து,  உன்  வேசித்தனங்களைத்  திரளாய்ப்  பெருகப்பண்ணி,  {Ezek  16:25}

 

சதை  பெருத்த  உன்  அயல்  தேசத்தாராகிய  எகிப்திய<Egyptians>  புத்திரரோடே  வேசித்தனம்பண்ணி,  எனக்குக்  கோபம்  உண்டாக்கும்படி  உன்  வேசித்தனங்களைப்  பெருகப்பண்ணினாய்.  {Ezek  16:26}

 

ஆதலால்,  இதோ,  நான்  என்  கையை  உனக்கு  விரோதமாக  நீட்டி,  உனக்கு  நியமித்த  போஜனத்தைக்  குறுக்கி,  உன்  முறைகேடான  மார்க்கத்தைக்  குறித்து  வெட்கப்பட்ட  உன்  பகையாளிகளாகிய  பெலிஸ்தருடைய<Philistines>  குமாரத்திகளின்  இச்சைக்கு  உன்னை  ஒப்புக்கொடுத்தேன்.  {Ezek  16:27}

 

நீ  திருப்தியடையாததினால்  அசீரிய<Assyrians>  புத்திரரோடும்  வேசித்தனம்பண்ணினாய்;  அவர்களோடே  வேசித்தனம்பண்ணியும்  நீ  திருப்தியடையவில்லை.  {Ezek  16:28}

 

நீ  கானான்<Canaan>  தேசத்திலே  செய்த  வேசித்தனத்தைக்  கல்தேயர்மட்டும்<Chaldea>  எட்டச்  செய்தாய்;  அதினாலும்  நீ  திருப்தியடையாமற்போனாய்.  {Ezek  16:29}

 

வெட்கங்கெட்ட  வேசியின்  கிரியைகளாகிய  இவைகளையெல்லாம்  நீ  செய்து,  {Ezek  16:30}

 

சகல  வழிமுகனையிலும்  உன்  மண்டபங்களைக்  கட்டி,  சகல  வீதிகளிலும்  உன்  மேடைகளை  உண்டாக்கினபடியால்,  உன்  இருதயம்  எவ்வளவாய்க்  களைத்துப்போயிருக்கிறது  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நீ  பணையத்தை  அலட்சியம்பண்ணுகிறதினால்,  நீ  வேசியைப்போல  இராமல்,  {Ezek  16:31}

 

தன்  புருஷனுக்குப்  பதிலாக  அந்நியரைச்  சேர்த்துக்கொள்ளுகிற  விபசார  ஸ்திரீயைப்போல  இருக்கிறாய்.  {Ezek  16:32}

 

எல்லா  வேசிகளுக்கும்  பணையங்  கொடுக்கிறார்கள்;  நீயோ  உன்  நேசர்கள்  சுற்றுப்புறங்களிலிருந்து  உன்னிடத்தில்  வேசித்தனஞ்செய்ய  வரும்படி  அவர்களுக்கெல்லாம்  நீயே  பணையங்கொடுத்து,  அவர்களுக்கு  வெகுமதிகளைத்  தருகிறாய்.  {Ezek  16:33}

 

இவ்விதமாய்  உன்  வேசித்தனங்களுக்கும்  வேறே  ஸ்திரீகளின்  வேசித்தனங்களுக்கும்  வித்தியாசமுண்டு;  வேசித்தனம்பண்ண  அவர்கள்  உன்னைப்  பின்  செல்லமாட்டார்கள்;  பணையம்  உனக்குக்  கொடுக்கப்படாமல்  நீயே  பணையம்  கொடுக்கிறபடியால்  நீ  செய்வது  விபரீதம்.  {Ezek  16:34}

 

ஆகையால்,  வேசியே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேள்.  {Ezek  16:35}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உன்  வேசித்தனத்தின்  அசுத்தம்  பாய்ந்தபடியினாலும்,  நீ  உன்  காமவிகாரிகளோடும்  அருவருப்பாகிய  உன்  நரகலான  விக்கிரகங்களோடும்  வேசித்தனம்பண்ணி,  இவைகளுக்கு  உன்  பிள்ளைகளின்  இரத்தத்தைப்  படைத்ததினால்  உன்  நிர்வாணம்  திறக்கப்பட்டபடியினாலும்,  {Ezek  16:36}

 

இதோ,  நீ  சம்போகம்பண்ணின  உன்  எல்லாக்  காமவிகாரிகளையும்,  நீ  நேசித்த  யாவரையும்,  நீ  பகைத்திருக்கிற  அனைவரோடும்  நான்  கூடிவரச்செய்து,  சுற்றிலுமிருந்து  அவர்களை  உனக்கு  விரோதமாகச்  சேர்த்து,  அவர்கள்  உன்  நிர்வாணத்தையெல்லாம்  காணும்படி  உன்  நிர்வாணத்தை  அவர்களுக்கு  முன்பாகத்  திறந்துவைத்து,  {Ezek  16:37}

 

விபசாரிகளையும்  இரத்தஞ்சிந்தினவர்களையும்  நியாயந்தீர்க்கிறபடியே  உன்னை  நியாயந்தீர்த்து,  உக்கிரத்தோடும்  எரிச்சலோடும்  இரத்தப்பழியை  உன்பேரில்  சுமத்தி,  {Ezek  16:38}

 

உன்னை  அவர்கள்  கையில்  ஒப்புக்கொடுப்பேன்;  அவர்கள்  உன்  மண்டபங்களை  இடித்து,  உன்  மேடைகளைத்  தரையாக்கிப்போட்டு,  உன்  வஸ்திரங்களை  உரிந்து,  உன்  சிங்கார  ஆபரணங்களை  எடுத்துக்கொண்டு,  உன்னை  அம்மணமும்  நிர்வாணமுமாக  விட்டுப்போய்,  {Ezek  16:39}

 

உனக்கு  விரோதமாக  ஒரு  கூட்டத்தைக்  கொண்டுவந்து,  உன்னைக்  கல்லெறிந்து,  உன்னைத்  தங்கள்  பட்டயங்களால்  குத்திபோட்டு,  {Ezek  16:40}

 

உன்  வீடுகளை  அக்கினியால்  சுட்டெரித்து,  அநேக  ஸ்திரீகளின்  கண்களுக்கு  முன்பாக  உன்னில்  நியாயத்தீர்ப்புகளைச்  செய்வார்கள்;  உன்  வேசித்தனத்தை  ஒழியப்பண்ணுவேன்;  நீ  இனிப்  பணையங்கொடுப்பதில்லை.  {Ezek  16:41}

 

இவ்விதமாய்  என்  எரிச்சல்  உன்னை  விட்டு  நீங்கும்படி,  நான்  என்  உக்கிரத்தை  உன்னில்  ஆறப்பண்ணி,  இனி  கோபமாயிராமல்  அமருவேன்.  {Ezek  16:42}

 

நீ  உன்  இளவயதின்  நாட்களை  நினையாமல்,  இவைகளெல்லாவற்றினாலும்  எனக்குக்  கோபம்  உண்டாக்கினபடியினால்,  இதோ,  நான்  உன்  வழியின்  பலனை  உன்  தலையின்மேல்  சுமரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  அதினாலே  இனி  உன்  எல்லா  அருவருப்புகளினாலும்  இப்படிப்பட்ட  முறைகேடான  காரியத்தைச்  செய்யமாட்டாய்.  {Ezek  16:43}

 

இதோ,  பழமொழி  சொல்லுகிறவர்கள்  எல்லாரும்:  தாயைப்போல  மகள்  என்று  உன்னைக்குறித்துப்  பழமொழி  சொல்லுவார்கள்.  {Ezek  16:44}

 

நீ,  தன்  புருஷனையும்  தன்  பிள்ளைகளையும்  அருவருத்த  உன்  தாயின்  மகள்;  நீ,  தங்கள்  புருஷரையும்  தங்கள்  பிள்ளைகளையும்  அருவருத்த  உன்  சகோதரிகளின்  சகோதரி;  உங்கள்  தாய்  ஏத்தித்தி<Hittite>;  உங்கள்  தகப்பன்  எமோரியன்<Amorite>.  {Ezek  16:45}

 

உன்  இடதுபுறத்திலே,  தானும்  தன்  குமாரத்திகளுமாய்க்  குடியிருந்த  சமாரியா<Samaria>  உன்  தமக்கை;  உன்  வலதுபுறத்திலே,  தானும்  தன்  குமாரத்திகளுமாய்க்  குடியிருந்த  சோதோம்<Sodom>  உன்  தங்கை.  {Ezek  16:46}

 

ஆகிலும்  நீ  அவர்களுடைய  மார்க்கங்களிலே  நடவாமலும்,  அவர்களுடைய  அருவருப்புகளின்படி  செய்யாமலும்,  அது  மகா  அற்பகாரியம்  என்கிறதுபோல  நீ  உன்  எல்லா  வழிகளிலேயும்  அவர்களைப்பார்க்கிலும்  கேடாய்  நடந்தாய்.  {Ezek  16:47}

 

நீயும்  உன்  குமாரத்திகளும்  செய்ததுபோல,  உன்  சகோதரியாகிய  சோதோமும்<Sodom>  அவளுடைய  குமாரத்திகளும்  செய்யவில்லை  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  16:48}

 

இதோ,  கெர்வமும்,  ஆகாரத்  திரட்சியும்,  நிர்விசாரமான  சாங்கோபாங்கமுமாகிய  இவைகளே  உன்  சகோதரியான  சோதோமின்<Sodom>  அக்கிரமம்;  இவைகளே  அவளிடத்திலும்  அவள்  குமாரத்திகளிடத்திலும்  இருந்தன;  சிறுமையும்  எளிமையுமானவனுடைய  கையை  அவள்  பலப்படுத்தவில்லை.  {Ezek  16:49}

 

அவர்கள்  தங்களை  உயர்த்தி,  என்  முகத்துக்கு  முன்பாக  அருவருப்பானதைச்  செய்தார்கள்;  அதை  நான்  கண்டபோது,  அவர்களை  ஒழித்துவிட்டேன்.  {Ezek  16:50}

 

நீ  செய்த  பாவங்களில்  அரைவாசியும்  சமாரியா<Samaria>  செய்யவில்லை;  நீ  உன்  சகோதரிகளைப்பார்க்கிலும்  உன்  பாவங்களைப்  பெருகப்பண்ணி,  நீ  செய்த  உன்  எல்லா  அருவருப்புகளினாலும்  அவர்களை  நீதியுள்ளவர்களென்று  விளங்கப்பண்ணினாய்.  {Ezek  16:51}

 

இப்போதும்  உன்  சகோதரிகளைக்  குற்றவாளிகள்  என்று  தீர்த்த  நீ  அவர்களைப்பார்க்கிலும்  அருவருப்பாகச்  செய்த  உன்  பாவங்களினிமித்தம்  உன்  இலச்சையைச்  சுமந்துகொள்;  உன்னைப்பார்க்கிலும்  அவர்கள்  நீதியுள்ளவர்கள்;  உன்  சகோதரிகளை  நீதியுள்ளவர்களென்று  விளங்கப்பண்ணின  நீ  வெட்கமடைந்து,  உன்  இலச்சையைச்  சுமந்துகொள்.  {Ezek  16:52}

 

நான்  சோதோமும்<Sodom>  அவள்  குமாரத்திகளும்  சிறையிருக்கிற  அவர்களுடைய  சிறையிருப்பையும்,  சமாரியாவும்<Samaria>  அவள்  குமாரத்திகளும்  சிறையிருக்கிற  சிறையிருப்பையும்  திருப்பும்போது,  அவர்கள்  நடுவிலே  நீ  சிறையிருக்கிற  உன்னுடைய  சிறையிருப்பையும்  திருப்புவேன்.  {Ezek  16:53}

 

அதினால்  நீ  அவர்களுக்கு  ஆறுதலாக  இருந்து,  உன்  இலச்சையைச்  சுமந்து,  நீ  செய்த  எல்லாவற்றினாலும்  வெட்கமடைவாய்.  {Ezek  16:54}

 

உன்  சகோதரிகளாகிய  சோதோமும்<Sodom>  அவள்  குமாரத்திகளும்  தங்கள்  முந்தின  சீருக்குத்  திரும்புவார்கள்;  சமாரியாவும்<Samaria>  அவள்  குமாரத்திகளும்  தங்கள்  முந்தின  சீருக்குத்  திரும்புவார்கள்;  நீயும்  உன்  குமாரத்திகளும்  உங்கள்  முந்தின  சீருக்குத்  திரும்புவீர்கள்.  {Ezek  16:55}

 

உன்னை  வெறுக்கும்  சீரியாவின்<Syria>  குமாரத்திகளும்,  அவளைச்  சுற்றிலும்  இருக்கிற  பெலிஸ்தரின்<Philistines>  குமாரத்திகளும்  அவமானம்பண்ணினபோது  உன்  பொல்லாப்பு  வெளியாயிற்றே.  {Ezek  16:56}

 

அதற்குமுன்  உன்  கெர்வத்தின்  நாளிலே  உன்  சகோதரியாகிய  சோதோமின்<Sodom>  பெயரை  உன்  வாயினாலே  உச்சரிக்கவுமாட்டாய்.  {Ezek  16:57}

 

உன்  முறைகேட்டையும்  உன்  அருவருப்புகளையும்  நீ  சுமப்பாய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Ezek  16:58}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உடன்படிக்கையை  முறித்துப்போடுகிறதினால்  ஆணையை  அசட்டைபண்ணின  நீ  செய்ததுபோல  நான்  உனக்கும்  செய்வேன்.  {Ezek  16:59}

 

ஆகிலும்  உன்  இளவயதில்  உன்னோடே  பண்ணின  என்  உடன்படிக்கையை  நான்  நினைத்து,  நித்திய  உடன்படிக்கையை  உனக்கு  ஏற்படுத்துவேன்.  {Ezek  16:60}

 

அப்பொழுது  உன்  தமக்கைகளையும்  உன்  தங்கைகளையும்  நீ  சேர்த்துக்கொள்ளுகையில்,  உன்  வழிகளை  நினைத்து  நாணுவாய்;  அவர்களை  நான்  உனக்குக்  குமாரத்திகளாகக்  கொடுப்பேன்;  உன்னுடைய  உடன்படிக்கையைப்  பார்த்துக்  கொடுப்பதில்லை.  {Ezek  16:61}

 

உன்னோடே  என்  உடன்படிக்கையைப்பண்ணி  ஏற்படுத்துவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிவாய்.  {Ezek  16:62}

 

நீ  செய்த  எல்லாவற்றையும்  நான்  மன்னித்தருளும்போது,  நீ  நினைத்து  வெட்கி,  உன்  நாணத்தினால்  உன்  வாயை  இனித்  திறக்கமாட்டாதிருப்பாய்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  16:63}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  17:1}

 

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்கு  ஒரு  விடுகதையையும்  உவமையையும்  கூறி,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  {Ezek  17:2}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்,  பெரிய  செட்டைகளையும்  நீளமான  இறகுகளையும்  உடையதும்,  பலவருணமான  இறகுகளால்  நிறைந்ததுமாகிய  ஒரு  பெரிய  கழுகு  லீபனோனில்<Lebanon>  வந்து,  ஒரு  கேதுருவின்  நுனிக்கிளையைப்  பிடித்து,  {Ezek  17:3}

 

அதின்  இளங்கிளையிலுள்ள  கொழுந்துகளைக்கொய்து,  அதை  வர்த்தக  தேசத்துக்குக்  கொண்டுபோய்,  அதை  வர்த்தகருடைய  நகரத்திலே  வைத்தது;  {Ezek  17:4}

 

தேசத்தின்  விதையில்  ஒன்றை  எடுத்து,  அதைப்  பயிர்நிலத்திலே  போட்டு,  அதை  எடுத்து,  மிகுந்த  தண்ணீர்  ஓரத்திலே  பத்திரமாய்  நட்டது.  {Ezek  17:5}

 

அது  துளிர்த்து,  படர்ந்து,  தாழ்ந்த  அடிமரமுள்ள  திராட்சச்செடியாயிற்று;  அதின்கொடிகள்  அந்தக்  கழுகுக்கு  நேராகவும்,  அதின்  வேர்கள்  அதின்  கீழாகவும்  இருந்தன;  இவ்விதமாய்  அது  திராட்சச்செடியாகி,  கிளைகளை  வீசி,  கொப்புகளை  விட்டது.  {Ezek  17:6}

 

அன்றியும்  பெரிய  செட்டைகளையும்  திரளான  இறகுகளையும்  உடைய  வேறொரு  பெரிய  கழுகு  இருந்தது;  இதோ,  அது  தன்  நடவாகிய  பாத்திகளிலிருந்து  அதற்குத்  தண்ணீர்  பாய்ச்சும்படி  இந்த  திராட்சச்செடி  அதற்கு  நேராகத்  தன்  வேர்களை  விட்டு,  அதற்கு  நேராகத்  தன்  கொடிகளை  வீசினது.  {Ezek  17:7}

 

கொப்புகளை  விடுகிறதற்கும்,  கனியைத்  தருகிறதற்கும்,  மகிமையான  திராட்சச்செடியாகிறதற்கும்,  இது  மிகுந்த  தண்ணீர்களின்  ஓரமாகிய  நல்ல  நிலத்தில்  நடப்பட்டிருந்தது.  {Ezek  17:8}

 

இது  செழிக்குமா?  இது  பட்டுப்போகத்தக்கதாய்  ஒருவன்  இதின்  வேர்களைப்  பிடுங்காமலும்,  இதின்  கனியை  வெட்டாமலும்  இருப்பானோ?  துளிர்த்த  எல்லா  இலைகளோடும்  இது  பட்டுப்போகும்;  இதை  வேரோடே  பிடுங்கும்படி  ஒருவன்  பலத்த  புயத்தோடும்  திரண்ட  ஜனத்தோடும்  வரத்தேவையில்லை.  {Ezek  17:9}

 

இதோ,  நடப்பட்ட  இது  செழிப்பாயிருக்குமோ?  கொண்டல்காற்று  இதின்பேரில்  படும்போது  இது  வாடி  உலர்ந்து  போகாதோ?  இது  நடப்பட்ட  பாத்திகளிலே  வாடிப்போமென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  17:10}

 

பின்பு  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  17:11}

 

இப்போதும்  இவைகளின்  தாற்பரியம்  தெரியுமா  என்று  நீ  கலகவீட்டாரைக்கேட்டுச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  இதோ,  பாபிலோன்<Babylon>  ராஜா  எருசலேமுக்கு<Jerusalem>  வந்து,  அதின்  ராஜாவையும்  அதின்  பிரபுக்களையும்  பிடித்து,  அவர்களைத்  தன்னிடமாகப்  பாபிலோனுக்குக்<Babylon>  கொண்டுபோகும்போது,  {Ezek  17:12}

 

அவன்  ராஜவம்சத்திலே  ஒருவனைத்  தெரிந்தெடுத்து,  அவனோடே  உடன்படிக்கைபண்ணி,  {Ezek  17:13}

 

ராஜ்யம்  தன்னை  உயர்த்தாமல்  தாழ்ந்திருக்கும்படிக்கும்,  தன்  உடன்படிக்கையை  அவன்  கைக்கொள்ளுகிறதினால்  அது  நிலைநிற்கும்படிக்கும்,  அவனை  ஆணைப்பிரமாணத்துக்கு  உட்படுத்தி,  தேசத்தில்  பலசாலிகளைப்  பிடித்துக்  கொண்டுபோனானே.  {Ezek  17:14}

 

இவன்  அவனுக்கு  விரோதமாய்க்  கலகஞ்செய்து,  தனக்குக்  குதிரைகளையும்  அநேகம்  ஆட்களையும்  அனுப்பவேண்டுமென்று  தன்  ஸ்தானாபதிகளை  எகிப்துக்கு<Egypt>  அனுப்பினான்;  இப்படிப்பட்டவனுக்கு  வாய்க்குமோ?  இப்படிச்  செய்கிறவன்  தப்பித்துக்கொள்வானோ?  உடன்படிக்கையை  முறித்தவன்  தப்பித்துக்கொள்வானோ?  {Ezek  17:15}

 

தன்னை  ராஜாவாக  ஏற்படுத்திய  ராஜாவினுடைய  ஆணையை  அசட்டைபண்ணி,  அவனுடைய  உடன்படிக்கையை  முறித்துப்போட்டவன்,  அந்த  ராஜாவினுடைய  ஸ்தானமாகிய  பாபிலோன்<Babylon>  நடுவிலே  அவனண்டையில்  இருந்து  மரணமடைவானென்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  17:16}

 

அவன்  அநேகம்  ஜனங்களை  நாசம்பண்ணும்படி  அணைபோட்டு,  கொத்தளங்களைக்  கட்டும்போது,  பார்வோன்<Pharaoh>  பெரிய  சேனையோடும்,  திரளான  கூட்டத்தோடும்  வந்து  இவனுக்காக  யுத்தத்தில்  உதவமாட்டான்.  {Ezek  17:17}

 

இதோ,  இவன்  கையடித்துக்  கொடுத்திருந்தும்  உடன்படிக்கையை  முறித்துப்போட்டு,  ஆணையை  அசட்டைபண்ணினான்;  இப்படியெல்லாம்  செய்தவன்  தப்புவதில்லை.  {Ezek  17:18}

 

அதினிமித்தம்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அவன்  என்  ஆணையை  அசட்டைபண்ணினதையும்,  என்  உடன்படிக்கையை  முறித்துப்போட்டதையும்,  நான்  அவனுடைய  தலையின்மேல்  வரப்பண்ணுவேன்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {Ezek  17:19}

 

அவன்  என்னுடைய  கண்ணியில்  அகப்படும்படிக்கு  நான்  என்  வலையை  அவன்மேல்  வீசி,  அவனைப்  பாபிலோனுக்குக்<Babylon>  கொண்டுபோய்,  அவன்  எனக்கு  விரோதமாய்ப்  பண்ணின  துரோகத்தினிமித்தம்  அங்கே  அவனை  நியாயம்  விசாரிப்பேன்.  {Ezek  17:20}

 

அவனோடேகூட  ஓடிப்போகிற  யாவரும்  அவனுடைய  எல்லா  இராணுவங்களும்  பட்டயத்தால்  விழுவார்கள்;  மீதியானவர்களோ  சகல  திசைகளிலும்  சிதறடிக்கப்படுவார்கள்;  அப்பொழுது  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  17:21}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  உயர்ந்த  கேதுருவின்  நுனிக்கிளைகளில்  ஒன்றை  எடுத்து,  அதை  நடுவேன்;  அதின்  இளங்கிளையிலுள்ள  கொழுந்துகளில்  இளசாயிருக்கிற  ஒன்றைக்  கொய்து,  அதை  உயரமும்  உன்னதமுமான  ஒரு  பர்வதத்தின்மேல்  நாட்டுவேன்.  {Ezek  17:22}

 

இஸ்ரவேலின்<Israel>  உயரமான  பர்வதத்திலே  அதை  நாட்டுவேன்;  அது  கொப்புகளை  விட்டு,  கனிதந்து,  மகிமையான  கேதுருவாகும்;  அதின்  கீழே  சகலவித  பட்சிஜாதிகளும்  தங்கி,  அதின்  கிளைகளின்  நிழலிலே  தாபரிக்கும்.  {Ezek  17:23}

 

அப்படியே  கர்த்தராகிய  நான்  உயர்ந்த  விருட்சத்தைத்  தாழ்த்தி,  தாழ்ந்த  விருட்சத்தை  உயர்த்தினேன்  என்றும்,  நான்  பச்சையான  விருட்சத்தைப்  பட்டுப்போகப்பண்ணி,  பட்டுப்போன  விருட்சத்தைத்  தழைக்கப்பண்ணினேன்  என்றும்  வெளியின்  விருட்சங்களுக்கு  எல்லாம்  தெரியவரும்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்,  இதை  நிறைவேற்றினேன்  என்று  உரைத்தார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  17:24}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  18:1}

 

பிதாக்கள்  திராட்சக்காய்களைத்  தின்றார்கள்,  பிள்ளைகளின்  பற்கள்  கூசிப்போயின  என்னும்  பழமொழியை  நீங்கள்  இஸ்ரவேல்<Israel>  தேசத்தைக்குறித்துச்  சொல்லுகிறது  என்ன?  {Ezek  18:2}

 

இனி  இஸ்ரவேலில்<Israel>  இந்தப்  பழமொழியைச்  சொல்வது  இல்லை  என்பதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  18:3}

 

இதோ,  எல்லா  ஆத்துமாக்களும்  என்னுடையவைகள்;  தகப்பனின்  ஆத்துமா  எப்படியோ,  அப்படியே  மகனின்  ஆத்துமாவும்  என்னுடையது;  பாவஞ்செய்கிற  ஆத்துமாவே  சாகும்.  {Ezek  18:4}

 

ஒருவன்  நீதிமானாயிருந்து,  நியாயத்தையும்  நீதியையும்  செய்து,  {Ezek  18:5}

 

மலைகளின்மேல்  சாப்பிடாமலும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  நரகலான  விக்கிரகங்களுக்கு  நேராகத்  தன்  கண்களை  ஏறெடுக்காமலும்,  தன்  அயலானுடைய  மனைவியைத்  தீட்டுப்படுத்தாமலும்  தூரஸ்திரீயோடே  சேராமலும்,  {Ezek  18:6}

 

ஒருவனையும்  ஒடுக்காமலும்,  கொள்ளையிடாமலுமிருந்து,  கடன்  வாங்கினவனுக்கு  அடைமானத்தைத்  திரும்பக்கொடுத்து,  தன்  அப்பத்தைப்  பசித்தவனுக்குப்  பங்கிட்டு,  வஸ்திரமில்லாதவனுக்கு  வஸ்திரம்  தரிப்பித்து,  {Ezek  18:7}

 

வட்டிக்குக்  கொடாமலும்,  பொலிசை  வாங்காமலும்,  அநியாயத்துக்குத்  தன்  கையை  விலக்கி,  மனிதருக்குள்ள  வழக்கை  உண்மையாய்த்  தீர்த்து,  {Ezek  18:8}

 

என்  கட்டளைகளின்படி  நடந்து,  என்  நியாயங்களைக்  கைக்கொண்டு,  உண்மையாயிருப்பானாகில்  அவனே  நீதிமான்;  அவன்  பிழைக்கவே  பிழைப்பான்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  18:9}

 

ஆனாலும்  அவனுக்கு  ஒரு  குமாரன்  பிறந்து,  அவன்  கள்ளனும்  இரத்தஞ்சிந்துகிறவனும்,  மேற்சொல்லிய  கடமைகளின்படி  நடவாமல்,  {Ezek  18:10}

 

இவைகளில்  ஒன்றுக்கொப்பானதைச்  செய்கிறவனுமாயிருந்து,  மலைகளின்மேல்  சாப்பிட்டு,  தன்  அயலானுடைய  மனைவியைத்  தீட்டுப்படுத்தி,  {Ezek  18:11}

 

சிறுமையும்  எளிமையுமானவனை  ஒடுக்கி,  கொள்ளைக்காரனாயிருந்து,  அடைமானத்தைத்  திரும்பக்  கொடாமல்,  நரகலான  விக்கிரகங்களுக்கு  நேராகத்  தன்  கண்களை  ஏறெடுத்து,  அருவருப்பானதைச்  செய்து,  {Ezek  18:12}

 

வட்டிக்குக்  கொடுத்து,  பொலிசை  வாங்கினால்,  அவன்  பிழைப்பானோ?  அவன்  பிழைப்பதில்லை;  இந்த  எல்லா  அருவருப்புகளையும்  செய்தானே;  அவன்  சாகவே  சாவான்;  அவன்  இரத்தப்பழி  அவன்மேல்  இருக்கும்.  {Ezek  18:13}

 

பின்னும்,  இதோ,  அவனுக்கு  ஒரு  குமாரன்  பிறந்து,  அவன்  தன்  தகப்பன்  செய்த  எல்லாப்  பாவங்களையும்  கண்டு,  தான்  அவைகளின்படி  செய்யாதபடிக்கு  எச்சரிக்கையாயிருந்து,  {Ezek  18:14}

 

மலைகளின்மேல்  சாப்பிடாமலும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  நரகலான  விக்கிரகங்களுக்கு  நேராகத்  தன்  கண்களை  ஏறெடுக்காமலும்,  தன்  அயலானுடைய  மனைவியைத்  தீட்டுப்படுத்தாமலும்,  {Ezek  18:15}

 

ஒருவனையும்  ஒடுக்காமலும்,  அடைமானத்தை  வைத்துக்கொண்டிராமலும்,  கொள்ளையிடாமலும்,  தன்  அப்பத்தைப்  பசித்தவனுக்குப்  பங்கிட்டு,  வஸ்திரமில்லாதவனுக்கு  வஸ்திரந்தரிப்பித்து,  {Ezek  18:16}

 

சிறுமையானவனுக்கு  நோவுண்டாக்காதபடித்  தன்  கையை  விலக்கி,  வட்டியும்  பொலிசையும்  வாங்காமலிருந்து  என்  நியாயங்களின்படி  செய்து,  என்  கட்டளைகளில்  நடந்தால்,  அவன்  தன்  தகப்பனுடைய  அக்கிரமத்தினிமித்தம்  சாகாமல்  பிழைக்கவே  பிழைப்பான்.  {Ezek  18:17}

 

அவன்  தகப்பனோவென்றால்  கொடுமைசெய்து,  சகோதரனைக்  கொள்ளையிட்டு,  தகாததைத்  தன்  ஜனங்களின்  நடுவிலே  செய்தபடியினால்,  இதோ,  அவன்  தன்  அக்கிரமத்திலே  சாவான்.  {Ezek  18:18}

 

இதெப்படி,  குமாரன்  தகப்பனுடைய  அக்கிரமத்தைச்  சுமக்கிறதில்லையா  என்று  நீங்கள்  கேட்டால்,  குமாரன்  நியாயத்தையும்  நீதியையும்  செய்து,  என்  கட்டளைகளைக்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்ததினால்,  அவன்  பிழைக்கவே  பிழைப்பான்.  {Ezek  18:19}

 

பாவஞ்செய்கிற  ஆத்துமாவே  சாகும்;  குமாரன்  தகப்பனுடைய  அக்கிரமத்தைச்  சுமப்பதுமில்லை,  தகப்பன்  குமாரனுடைய  அக்கிரமத்தைச்  சுமப்பதுமில்லை;  நீதிமானுடைய  நீதி  அவன்மேல்தான்  இருக்கும்,  துன்மார்க்கனுடைய  துன்மார்க்கமும்  அவன்மேல்தான்  இருக்கும்.  {Ezek  18:20}

 

துன்மார்க்கன்  தான்  செய்த  எல்லாப்  பாவங்களையும்  விட்டுத்  திரும்பி,  என்  கட்டளைகளையெல்லாம்  கைக்கொண்டு,  நியாயத்தையும்  நீதியையும்  செய்வானேயாகில்,  அவன்  பிழைக்கவே  பிழைப்பான்,  அவன்  சாவதில்லை.  {Ezek  18:21}

 

அவன்  செய்த  எல்லா  மீறுதல்களும்  நினைக்கப்படுவதில்லை;  அவன்  தான்  செய்த  நீதியிலே  பிழைப்பான்.  {Ezek  18:22}

 

துன்மார்க்கன்  சாகிறது  எனக்கு  எவ்வளவேனும்  பிரியமோ?  அவன்  தன்  வழிகளை  விட்டுத்  திரும்பிப்  பிழைப்பது  அல்லவோ  எனக்குப்  பிரியம்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  18:23}

 

நீதிமான்  தன்  நீதியைவிட்டு  விலகி,  அநீதி  செய்து,  துன்மார்க்கன்  செய்கிற  சகல  அருவருப்புகளின்படியும்  செய்வானேயாகில்,  அவன்  பிழைப்பானோ?  அவன்  செய்த  அவனுடைய  எல்லா  நீதிகளும்  நினைக்கப்படுவதில்லை;  அவன்  செய்த  தன்  துரோகத்திலேயும்  அவன்  செய்த  தன்  பாவத்திலேயும்  சாவான்.  {Ezek  18:24}

 

நீங்களோ,  ஆண்டவருடைய  வழி  செம்மையாய்  இருக்கவில்லை  என்கிறீர்கள்;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  கேளுங்கள்;  என்  வழி  செம்மையாயிராதோ?  உங்கள்  வழிகள்  அல்லவோ  செம்மையல்லாததாயிருக்கிறது.  {Ezek  18:25}

 

நீதிமான்  தன்  நீதியைவிட்டு  விலகி,  அநீதிசெய்து  அதிலே  செத்தால்,  அவன்  செய்த  தன்  அநீதியினிமித்தம்  அவன்  சாவான்.  {Ezek  18:26}

 

துன்மார்க்கன்  தான்  செய்த  துன்மார்க்கத்தைவிட்டு  விலகி,  நியாயத்தையும்  நீதியையும்  செய்வானேயாகில்,  அவன்  தன்  ஆத்துமாவைப்  பிழைக்கப்பண்ணுவான்.  {Ezek  18:27}

 

அவன்  எச்சரிப்படைந்து,  தான்  செய்த  எல்லா  மீறுதல்களையும்  விட்டுத்  திரும்புகிறபடியினாலே  அவன்  பிழைக்கவே  பிழைப்பான்,  அவன்  சாவதில்லை.  {Ezek  18:28}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரோ:  ஆண்டவருடைய  வழி  செம்மையாய்  இருக்கவில்லை  என்கிறார்கள்;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  என்  வழிகள்  செம்மையாயிராதோ?  உங்கள்  வழிகள்  அல்லவோ  செம்மையல்லாததாயிருக்கிறது.  {Ezek  18:29}

 

ஆகையால்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நான்  உங்களில்  அவனவனை  அவனவன்  வழிகளுக்குத்  தக்கதாக  நியாயந்தீர்ப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நீங்கள்  மனந்திரும்புங்கள்,  உங்களுடைய  எல்லா  மீறுதல்களையும்  விட்டுத்  திரும்புங்கள்;  அப்பொழுது  அக்கிரமம்  உங்கள்  கேட்டுக்குக்  காரணமாயிருப்பதில்லை.  {Ezek  18:30}

 

நீங்கள்  துரோகம்பண்ணின  உங்களுடைய  எல்லாத்  துரோகங்களையும்  உங்கள்மேல்  இராதபடிக்கு  விலக்கி,  உங்களுக்குப்  புது  இருதயத்தையும்  புது  ஆவியையும்  உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  ஏன்  சாகவேண்டும்?  {Ezek  18:31}

 

மனந்திரும்புங்கள்,  அப்பொழுது  பிழைப்பீர்கள்;  சாகிறவனுடைய  சாவை  நான்  விரும்புகிறதில்லை  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  18:32}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  பிரபுக்களின்பேரில்  ஒரு  புலம்பல்  பாடி,  {Ezek  19:1}

 

சொல்லவேண்டியது  என்னவென்றால்:  உன்  தாய்  எப்படிப்பட்டவள்?  அவள்  ஒரு  பெண்சிங்கம்,  அவள்  சிங்கங்களுக்குள்ளே  படுத்திருந்து,  பாலசிங்கங்களின்  நடுவிலே  தன்  குட்டிகளை  வளர்த்தாள்.  {Ezek  19:2}

 

தன்  குட்டிகளில்  ஒன்று  வளர்ந்து,  பாலசிங்கமாகி,  இரைதேடப்  பழகி,  மனுஷரைப்  பட்சித்தது.  {Ezek  19:3}

 

புறஜாதிகளும்  அதின்  செய்தியைக்  கேட்டார்கள்,  அது  அவர்களுடைய  படுகுழியில்  அகப்பட்டது;  அதைச்  சங்கிலிகளினால்  கட்டி,  எகிப்துதேசத்திற்குக்<Egypt>  கொண்டுபோனார்கள்.  {Ezek  19:4}

 

தாய்ச்சிங்கம்  காத்திருந்து,  தன்  நம்பிக்கை  அபத்தமாய்ப்  போயிற்றென்று  கண்டு,  அது  தன்  குட்டிகளில்  வேறொன்றை  எடுத்து,  அதைப்  பாலசிங்கமாக  வைத்தது.  {Ezek  19:5}

 

அது  சிங்கங்களுக்குள்ளே  சஞ்சரித்து,  பாலசிங்கமாகி,  இரைதேடப்  பழகி,  மனுஷரைப்  பட்சித்தது.  {Ezek  19:6}

 

அவர்களுடைய  பாழான  அரமனைகளில்  திரிந்து,  அவர்களுடைய  பட்டணங்களைப்  பாழாக்கிற்று;  அதினுடைய  கெர்ச்சிப்பின்  சத்தத்துக்குத்  தேசமும்  அதிலுள்ள  யாவும்  திகைத்தது.  {Ezek  19:7}

 

அப்பொழுது  சுற்றுப்புறத்து  ஜாதிகள்  அதற்கு  விரோதமாக  எழும்பிவந்து,  தங்கள்  வலையை  அதின்மேல்  வீசினார்கள்;  அது  அவர்களுடைய  படுகுழியிலே  அகப்பட்டது.  {Ezek  19:8}

 

அவர்கள்  அதைச்  சங்கிலிகளினால்  கட்டி,  ஒரு  கூட்டுக்குட்படுத்தி,  அதைப்  பாபிலோன்<Babylon>  ராஜாவினிடத்துக்குக்  கொண்டுபோனார்கள்;  இனி  அதின்  சத்தம்  இஸ்ரவேலின்<Israel>  பர்வதங்களின்மேல்  கேட்கப்படாதபடிக்கு  அதை  அரணான  இடங்களில்  கொண்டுபோய்  அடைத்தார்கள்.  {Ezek  19:9}

 

நீ  அமரிக்கையோடு  இருக்கையில்  உன்  தாய்  தண்ணீர்  ஓரமாய்  நாட்டப்பட்டதும்,  மிகுதியான  நீர்ப்பாய்ச்சலால்  கனிதருகிறதும்  தழைத்திருக்கிறதுமான  திராட்சச்செடியாயிருந்தாள்.  {Ezek  19:10}

 

ஆளுகிறவர்களின்  செங்கோலுக்கேற்ற  பலத்த  கொப்புகள்  அதற்கு  இருந்தது;  அதின்  வளர்த்தி  அடர்த்தியான  கிளைகளுக்குள்ளே  உயர  ஓங்கி,  தன்  உயர்த்தியினாலே  தன்  திரளான  கொடிகளோடுங்கூடத்  தோன்றிற்று.  {Ezek  19:11}

 

ஆனாலும்  அது  உக்கிரமாய்ப்  பிடுங்கப்பட்டு,  தரையிலே  தள்ளுண்டது;  கீழ்க்காற்றினால்  அதின்  கனி  காய்ந்துபோயிற்று;  அதின்  பலத்த  கொப்புகள்  முறிந்து,  பட்டுப்போயின;  அக்கினி  அவைகளைப்  பட்சித்தது.  {Ezek  19:12}

 

இப்பொழுது  அது  வறண்டதும்  தண்ணீர்  இல்லாததுமான  வனாந்தர  பூமியிலே  நடப்பட்டிருக்கிறது.  {Ezek  19:13}

 

அதின்  கொடிகளிலுள்ள  ஒரு  கொப்பிலிருந்து  அக்கினி  புறப்பட்டு,  அதின்  கனியைப்  பட்சித்தது;  ஆளுகிற  செங்கோலுக்கேற்ற  பலத்த  கொப்பு  இனி  அதில்  இல்லையென்று  சொல்;  இதுவே  புலம்பல்,  இதுவே  புலம்பலாயிருக்கும்  என்றார்.  {Ezek  19:14}

 

ஏழாம்  வருஷத்து  ஐந்தாம்  மாதம்  பத்தாந்தேதியிலே  இஸ்ரவேலின்<Israel>  மூப்பரில்  சிலர்  கர்த்தரிடத்தில்  விசாரிக்கும்படிவந்து,  எனக்கு  முன்பாக  உட்கார்ந்தார்கள்.  {Ezek  20:1}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  20:2}

 

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்<Israel>  மூப்பரோடே  பேசி,  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  நீங்கள்  என்னிடத்தில்  விசாரிக்க  வந்தீர்களோ?  நீங்கள்  என்னிடத்தில்  விசாரிக்க  இடங்கொடேன்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்.  {Ezek  20:3}

 

மனுபுத்திரனே,  நீ  அவர்களுக்காக  வழக்காடுவாயோ?  வழக்காட  மனதானால்,  நீ  அவர்கள்  பிதாக்களின்  அருவருப்புகளை  அவர்களுக்குத்  தெரியக்காட்டி,  அவர்களை  நோக்கி:  {Ezek  20:4}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  நான்  இஸ்ரவேலைத்<Israel>  தெரிந்துகொண்ட  நாளிலே  யாக்கோபு<Jacob>  வம்சத்து  ஜனங்களுக்கு  நான்  ஆணையிட்டு,  எகிப்துதேசத்தில்<Egypt>  என்னை  அவர்களுக்குத்  தெரியப்படுத்தி,  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  ஆணையிட்டேன்.  {Ezek  20:5}

 

நான்  அவர்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  அழைப்பேன்  என்றும்,  அவர்களுக்காக  நான்  பார்த்துவைத்ததும்,  பாலும்  தேனும்  ஓடுகிறதும்  எல்லாத்  தேசங்களின்  சிங்காரமுமான  தேசத்திலே  அவர்களைக்  கொண்டுவந்து  விடுவேன்  என்றும்  அந்நாளிலே  ஆணையிட்டு,  {Ezek  20:6}

 

உங்களில்  அவரவர்  தங்கள்  கண்களால்  நோக்கின  அருவருப்புகளைத்  தள்ளிவிட்டு,  எகிப்தின்<Egypt>  நரகலான  விக்கிரகங்களால்  உங்களைத்  தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக;  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  நான்  என்று  அவர்களோடே  சொன்னேன்.  {Ezek  20:7}

 

அவர்களோ,  என்  சொல்லைக்  கேட்க  மனதில்லாமல்  எனக்கு  விரோதமாய்  இரண்டகம்பண்ணினார்கள்;  அவரவர்  தங்கள்  கண்களால்  நோக்கின  அருவருப்புகளைத்  தள்ளிப்போடாமலும்,  எகிப்தின்<Egypt>  நரகலான  விக்கிரகங்களை  விடாமலும்  இருந்தார்கள்;  ஆதலால்  எகிப்து<Egypt>  தேசத்தின்  நடுவிலே  என்  கோபத்தை  அவர்களிலே  தீர்த்துக்கொள்ளும்படிக்கு  என்  உக்கிரத்தை  அவர்கள்மேல்  ஊற்றுவேன்  என்றேன்.  {Ezek  20:8}

 

ஆகிலும்  நான்  என்னை  இவர்களுக்கு  வெளிப்படுத்தி,  இவர்களுக்கு  முன்பாக  என்  நாமம்  பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு,  இவர்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணி,  என்  நாமத்தினிமித்தம்  கிருபைசெய்தேன்.  {Ezek  20:9}

 

ஆகையால்  நான்  அவர்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணி,  அவர்களை  வனாந்தரத்தில்  அழைத்துவந்து,  {Ezek  20:10}

 

என்  கட்டளைகளை  அவர்களுக்குக்  கொடுத்து,  என்  நியாயங்களை  அவர்களுக்குத்  தெரியப்படுத்தினேன்;  அவைகளின்படி  செய்கிற  மனுஷன்  அவைகளால்  பிழைப்பான்.  {Ezek  20:11}

 

நான்  தங்களைப்  பரிசுத்தம்பண்ணுகிற  கர்த்தர்  என்று  அவர்கள்  அறியும்படிக்கு,  எனக்கும்  அவர்களுக்கும்  அடையாளமாய்  இருப்பதற்கான  என்  ஓய்வுநாட்களையும்  அவர்களுக்குக்  கட்டளையிட்டேன்.  {Ezek  20:12}

 

ஆனாலும்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  வனாந்தரத்தில்  எனக்கு  விரோதமாய்  இரண்டகம்பண்ணினார்கள்;  என்  கட்டளைகளின்படியே  மனுஷன்  செய்தால்  அவைகளால்  பிழைப்பான்;  அவர்களோ  அவைகளில்  நடவாமல்,  என்  நியாயங்களை  வெறுத்து,  என்  ஓய்வுநாட்களின்  பரிசுத்தத்தை  மிகவும்  குலைத்துப்போட்டார்கள்;  ஆதலால்  அவர்களை  நிர்மூலமாக்கும்படி  வனாந்தரத்திலே  என்  உக்கிரத்தை  அவர்கள்மேல்  ஊற்றுவேன்  என்றேன்.  {Ezek  20:13}

 

ஆகிலும்  நான்  இவர்களைப்  புறப்படப்பண்ணினதைக்  கண்ட  புறஜாதிகளுடைய  கண்களுக்கு  முன்பாக  என்  நாமம்  பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு,  என்  நாமத்தினிமித்தம்  கிருபைசெய்தேன்.  {Ezek  20:14}

 

ஆனாலும்  அவர்களுடைய  இருதயம்  அவர்களுடைய  நரகலான  விக்கிரகங்களைப்  பின்பற்றி,  அவர்கள்  என்  நியாயங்களை  வெறுத்து,  என்  கட்டளைகளில்  நடவாமற்போய்,  என்  ஓய்வுநாட்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால்,  {Ezek  20:15}

 

நான்  வாக்குத்தத்தம்பண்ணினதும்,  பாலும்  தேனும்  ஓடுகிறதும்,  எல்லா  தேசங்களின்  சிங்காரமாயிருக்கிறதுமான  தேசத்திலே  அவர்களைக்  கொண்டுவந்து  விடுவதில்லை  என்று  வனாந்தரத்தில்  ஆணையிட்டேன்.  {Ezek  20:16}

 

ஆகிலும்  அவர்களை  அழிக்காதபடிக்கு,  என்  கண்  அவர்களைத்  தப்பவிட்டது;  நான்  அவர்களை  வனாந்தரத்தில்  நிர்மூலமாக்கவில்லை.  {Ezek  20:17}

 

வனாந்தரத்தில்  அவர்களுடைய  பிள்ளைகளை  நோக்கி:  நீங்கள்  உங்கள்  பிதாக்களின்  முறைமைகளில்  நடவாமலும்  அவர்களுடைய  நியாயங்களைக்  கைக்கொள்ளாமலும்,  அவர்களுடைய  நரகலான  விக்கிரகங்களால்  உங்களைத்  தீட்டுப்படுத்தாமலும்  இருங்கள்.  {Ezek  20:18}

 

உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  நானே;  நீங்கள்  என்  கட்டளைகளில்  நடந்து,  என்  நியாயங்களைக்  கைக்கொண்டு,  அவைகளின்படியே  செய்து,  {Ezek  20:19}

 

என்  ஓய்வுநாட்களைப்  பரிசுத்தமாக்குங்கள்;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  நீங்கள்  அறியும்படிக்கு  அவைகள்  எனக்கும்  உங்களுக்கும்  அடையாளமாயிருக்கும்  என்றேன்.  {Ezek  20:20}

 

ஆனாலும்  பிள்ளைகளும்  எனக்கு  விரோதமாய்  எழும்பினார்கள்;  என்  கட்டளைகளின்படியே  மனுஷன்  செய்தால்  அவைகளால்  பிழைப்பானே;  அவர்களோ  அவைகளில்  நடவாமலும்,  என்  நியாயங்களைக்  கைக்கொண்டு  அவைகளின்படி  செய்யாமலும்,  என்  ஓய்வுநாட்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்;  ஆகையால்  வனாந்தரத்திலே  என்  கோபத்தை  அவர்களில்  தீர்த்துக்கொள்ளும்படி  என்  உக்கிரத்தை  அவர்கள்மேல்  ஊற்றுவேன்  என்றேன்.  {Ezek  20:21}

 

ஆகிலும்  நான்  என்  கையைத்  திருப்பி,  நான்  இவர்களைப்  புறப்படப்பண்ணினதைக்  கண்ட  புறஜாதிகளுடைய  கண்களுக்கு  முன்பாக  என்  நாமம்  பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு,  என்  நாமத்தினிமித்தம்  கிருபைசெய்தேன்.  {Ezek  20:22}

 

ஆனாலும்  அவர்கள்  என்  நியாயங்களின்படி  செய்யாமல்,  என்  கட்டளைகளை  வெறுத்து,  என்  ஓய்வுநாட்களை  பரிசுத்தக்  குலைச்சலாக்கினபடியாலும்,  அவர்களுடைய  கண்கள்  அவர்கள்  பிதாக்களின்  நரகலான  விக்கிரகங்களின்மேல்  நோக்கமாயிருந்தபடியாலும்,  {Ezek  20:23}

 

நான்  அவர்களைப்  புறஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து,  அவர்களைத்  தேசங்களிலே  தூற்றிப்போடுகிறதற்கு  வனாந்தரத்திலே  ஆணையிட்டேன்.  {Ezek  20:24}

 

ஆகையால்  நன்மைக்கேதுவல்லாத  கட்டளைகளையும்  ஜீவனுக்கேதுவல்லாத  நியாயங்களையும்  நான்  அவர்களுக்குக்  கொடுத்தேன்.  {Ezek  20:25}

 

நான்  கர்த்தர்  என்று  அவர்கள்  அறியத்தக்கதாக,  நான்  அவர்களைப்  பாழாக்கும்படி,  அவர்கள்  கர்ப்பந்திறந்து  பிறக்கிறதையெல்லாம்  தீக்கடக்கப்பண்ணி,  இவ்விதமாய்  அவர்களுடைய  பலிகளினாலே  அவர்களைத்  தீட்டுப்படப்பண்ணினேன்.  {Ezek  20:26}

 

ஆகையால்  மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரோடே  பேசி,  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  உங்கள்  பிதாக்கள்  இன்னும்  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணி,  என்னைத்  தூஷித்தார்கள்.  {Ezek  20:27}

 

அவர்களுக்குக்  கொடுப்பேன்  என்று  ஆணையிட்ட  தேசத்திலே  நான்  அவர்களைப்  பிரவேசிக்கப்பண்ணினபின்பு,  அவர்கள்  உயர்ந்த  ஒரு  மேட்டையும்  தழைத்த  ஒரு  விருட்சத்தையும்  எங்கெங்கே  கண்டார்களோ,  அங்கங்கே  தங்கள்  பலிகளைச்  செலுத்தி,  அவ்விடங்களிலெல்லாம்  எனக்கு  எரிச்சல்  உண்டாக்குகிற  தங்கள்  காணிக்கைகளைப்  படைத்து,  சுகந்த  வாசனையான  தங்கள்  தூபங்களைக்காட்டி,  தங்கள்  பானபலிகளை  வார்த்தார்கள்.  {Ezek  20:28}

 

அப்பொழுது  நான்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  போகிற  அந்த  மேடு  என்னவென்று  கேட்டேன்;  அதினால்  இந்நாள்வரைக்கும்  அதற்குப்  பாமா<Bamah>  என்று  பேர்.  {Ezek  20:29}

 

ஆகையால்  நீ  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  உங்கள்  பிதாக்களுடைய  மார்க்கத்தின்படியே  நீங்களும்  தீட்டுப்பட்டவர்கள்  அல்லவோ?  அவர்களுடைய  அருவருப்புகளை  நீங்களும்  பின்பற்றிச்  சோரம்போகிறீர்கள்  அல்லவோ?  {Ezek  20:30}

 

நீங்கள்  உங்கள்  பிள்ளைகளைத்  தீக்கடக்கப்பண்ணி,  உங்கள்  பலிகளைச்  செலுத்துகிறபோது,  இந்நாள்வரைக்கும்  அவர்களுடைய  எல்லா  நரகலான  விக்கிரகங்களாலும்  நீங்கள்  தீட்டுப்படுகிறீர்களே;  நீங்கள்  என்னிடத்தில்  விசாரிக்க  இடங்கொடுப்பேனோ?  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  என்னிடத்தில்  விசாரிக்கும்படி  இடங்கொடுப்பதில்லை  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  20:31}

 

மரத்துக்கும்  கல்லுக்கும்  ஆராதனைசெய்து,  அஞ்ஞானிகளைப்போலவும்  தேசத்து  ஜனங்களின்  ஜாதிகளைப்போலவும்  இருப்போம்  என்று  சொல்லுகிறீர்களே;  உங்கள்  மனதில்  எழும்புகிற  இந்த  நினைவின்படி  ஆவதே  இல்லை.  {Ezek  20:32}

 

பலத்த  கையினாலும்,  ஓங்கிய  புயத்தினாலும்,  ஊற்றப்பட்ட  உக்கிரத்தினாலும்,  உங்களை  ஆளுவேன்  என்பதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  20:33}

 

நீங்கள்  ஜனங்களுக்குள்  இராதபடிக்கு  நான்  உங்களைப்  புறப்படப்பண்ணி,  நீங்கள்  சிதறியிருக்கிற  தேசங்களில்  இராதபடிக்கு  நான்  உங்களைப்  பலத்தகையினாலும்,  ஓங்கிய  புயத்தினாலும்,  ஊற்றப்பட்ட  உக்கிரத்தினாலும்  கூடிவரச்செய்து,  {Ezek  20:34}

 

உங்களை  ஜனசதளங்களின்  வனாந்தரத்திலே  கொண்டுபோய்,  அங்கே  உங்களோடே  முகமுகமாய்  வழக்காடுவேன்.  {Ezek  20:35}

 

நான்  எகிப்துதேசத்தின்<Egypt>  வனாந்தரத்தில்  உங்கள்  பிதாக்களோடு  வழக்காடினதுபோல  உங்களோடும்  வழக்காடுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  20:36}

 

நான்  உங்களைக்  கோலின்கீழ்  செல்லும்படி  செய்து,  உங்களை  உடன்படிக்கையின்  கட்டுக்குட்படுத்தி,  {Ezek  20:37}

 

கலகக்காரரையும்  துரோகிகளையும்  உங்களைவிட்டுப்  பிரித்துப்போடுவேன்;  அவர்களைத்  தாங்கள்  தங்கும்  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணுவேன்;  ஆனாலும்  அவர்கள்  இஸ்ரவேல்<Israel>  தேசத்தில்  பிரவேசிப்பதில்லை;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  20:38}

 

இப்போதும்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  என்  சொல்லைக்கேட்க  மனதில்லாதிருந்தால்,  நீங்கள்  போய்,  அவனவன்  தன்  தன்  நரகலான  விக்கிரகங்களை  இன்னும்  சேவியுங்கள்;  ஆனாலும்  என்  பரிசுத்த  நாமத்தை  உங்கள்  காணிக்கைகளாலும்  உங்கள்  நரகலான  விக்கிரகங்களாலும்  இனிப்  பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  20:39}

 

இஸ்ரவேலின்<Israel>  உயரமான  மலையாகிய  என்  பரிசுத்த  மலையிலே  இஸ்ரவேலுடைய<Israel>  எல்லா  வம்சத்தாருமாகிய  தேசத்திலுள்ள  அனைவரும்  என்னைச்  சேவிப்பார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  அங்கே  அவர்கள்மேல்  பிரியம்  வைப்பேன்;  அங்கே  நீங்கள்  பரிசுத்தம்பண்ணுகிற  எல்லாவற்றிலும்  உங்கள்  காணிக்கைகளையும்  உங்கள்  முதற்பலன்களையும்  செலுத்தும்படி  கேட்பேன்.  {Ezek  20:40}

 

நான்  உங்களை  ஜனங்களிலிருந்து  புறப்படப்பண்ணி,  நீங்கள்  சிதறுண்டிருக்கிற  தேசங்களிலிருந்து  உங்களைச்  சேர்த்துக்கொள்ளும்போது,  சுகந்த  வாசனையினிமித்தம்  நான்  உங்கள்பேரில்  பிரியமாயிருப்பேன்;  அப்பொழுது  புறஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாக  உங்களால்  பரிசுத்தம்பண்ணப்படுவேன்.  {Ezek  20:41}

 

உங்கள்  பிதாக்களுக்குக்  கொடுப்பேன்  என்று  ஆணையிட்ட  தேசமாகிய  இஸ்ரவேல்<Israel>  தேசத்திலே  நான்  உங்களைத்  திரும்பிவரப்பண்ணும்போது,  நான்  கர்த்தர்  என்று  நீங்கள்  அறிந்துகொண்டு,  {Ezek  20:42}

 

அங்கே  உங்களுடைய  எல்லா  வழிகளையும்  உங்களைத்  தீட்டுப்படுத்தின  உங்களுடைய  எல்லாக்  கிரியைகளையும்  நினைத்து,  நீங்கள்  செய்திருந்த  உங்களுடைய  எல்லாப்  பொல்லாப்புகளினிமித்தமும்  உங்களை  நீங்களே  அருவருப்பீர்கள்.  {Ezek  20:43}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  உங்கள்  பொல்லாத  வழிகளுக்குத்  தக்கதாகவும்,  உங்கள்  கெட்ட  கிரியைகளுக்குத்தக்கதாகவும்  நான்  உங்களுக்குச்  செய்யாமல்,  என்  நாமத்தினிமித்தம்  உங்களுக்குக்  கிருபைசெய்யும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்கிறதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  20:44}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  20:45}

 

மனுபுத்திரனே,  நீ  உன்  முகத்தைத்  தென்திசைக்கு  நேரே  திருப்பி,  தெற்குக்கு  விரோதமாக  உன்  வசனத்தைப்பொழிந்து,  தென்புறமான  வயல்வெளியின்  காட்டுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  {Ezek  20:46}

 

தென்திசைக்  காட்டை  நோக்கி:  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேள்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  இதோ,  நான்  உன்னில்  அக்கினியைக்  கொளுத்துவேன்;  அது  உன்னில்  பச்சையான  சகல  மரங்களையும்  பட்டுப்போன  சகல  மரங்களையும்  பட்சிக்கும்;  ஜுவாலிக்கிற  ஜுவாலை  அவிக்கப்படமாட்டாது;  தெற்கு  துவக்கி  வடக்குமட்டுமுள்ள  தேசமெங்கும்  அதினால்  வெந்துபோகும்.  {Ezek  20:47}

 

கர்த்தராகிய  நான்  அதைக்  கொளுத்தினேன்  என்பதை  எல்லா  மாம்சமும்  காணும்;  அது  அவிக்கப்படுவதில்லை  என்று  சொல்  என்றார்.  {Ezek  20:48}

 

அப்பொழுது  நான்:  ,  கர்த்தராகிய  ஆண்டவரே,  இவன்  உவமைகளையல்லவோ  சொல்லுகிறான்  என்று  அவர்கள்  என்னைக்குறித்துச்  சொல்லுகிறார்கள்  என்றேன்.  {Ezek  20:49}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  21:1}

 

மனுபுத்திரனே,  நீ  உன்  முகத்தை  எருசலேமுக்கு<Jerusalem>  நேராகத்  திருப்பி,  பரிசுத்த  ஸ்தலங்களுக்கு  விரோதமாக  உன்  வசனத்தைப்  பொழிந்து,  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  {Ezek  21:2}

 

இஸ்ரவேல்<Israel>  தேசத்தை  நோக்கி,  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  என்  பட்டயத்தை  அதின்  உறையிலிருந்து  உருவி,  உன்னில்  சன்மார்க்கனையும்  துன்மார்க்கனையும்  சங்காரம்பண்ணுவேன்.  {Ezek  21:3}

 

நான்  உன்னில்  சன்மார்க்கனையும்  துன்மார்க்கனையும்  சங்காரம்பண்ணப்  போகிறபடியினால்  தெற்கு  துவக்கி  வடக்குமட்டுமுள்ள  எல்லா  மாம்சத்துக்கும்  விரோதமாய்  என்  பட்டயம்  அதின்  உறையிலிருந்து  புறப்படும்.  {Ezek  21:4}

 

அப்பொழுது  கர்த்தராகிய  நான்  என்  பட்டயத்தை  அதின்  உறையிலிருந்து  உருவினேன்  என்பதை  எல்லா  மாம்சமும்  அறியும்;  அது  இனி  உறைக்குள்  திரும்புவதில்லை.  {Ezek  21:5}

 

ஆதலால்  மனுபுத்திரனே,  உன்  இடுப்பு  நொறுங்கும்படி  பெருமூச்சுவிடு;  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  மனங்கசந்து  பெருமூச்சுவிடு.  {Ezek  21:6}

 

நீ  எதினிமித்தம்  பெருமூச்சுவிடுகிறாய்  என்று  அவர்கள்  உன்னிடத்தில்  கேட்டால்,  நீ  அவர்களை  நோக்கி:  துர்ச்செய்தி  வருகிறதினிமித்தமே;  அதினால்,  இருதயங்களெல்லாம்  உருகி,  கைகளெல்லாம்  தளர்ந்து,  மனமெல்லாம்  தியங்கி,  முழங்கால்களெல்லாம்  தண்ணீரைப்போல  அலைவுண்ணும்;  இதோ,  அது  வந்து  சம்பவிக்கும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  21:7}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  21:8}

 

மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  பட்டயம்  கூர்மையாக்கப்பட்டது,  பட்டயம்  கூர்மையாக்கப்பட்டது;  அது  துலக்கப்பட்டுமிருக்கிறது.  {Ezek  21:9}

 

மகா  சங்காரஞ்செய்வதற்கு  அது  கூர்மையாக்கப்பட்டிருக்கிறது;  மின்னத்தக்கதாய்  அது  துலக்கப்பட்டிருக்கிறது;  சந்தோஷப்படுவோமோ?  அது  என்  குமாரனுடைய  கோல்,  அது  சகல  விருட்சங்களையும்  அலட்சியம்பண்ணும்.  {Ezek  21:10}

 

அதைக்  கையாடும்படி  அதைத்துலக்கக்  கொடுத்தார்;  கொல்லுகிறவன்  கையிலே  கொடுக்கும்படி  அந்தப்  பட்டயம்  கூர்மையாக்கப்பட்டிருக்கிறது;  அது  துலக்கப்பட்டதுமாயிருக்கிறது  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்.  {Ezek  21:11}

 

மனுபுத்திரனே,  நீ  ஓலமிட்டு  அலறு;  பட்டயம்  என்  ஜனத்தின்மேல்  வரும்;  அது  இஸ்ரவேல்<Israel>  பிரபுக்கள்  எல்லார்மேலும்  வரும்;  அதினிமித்தம்  என்  ஜனத்துக்குள்ளே  திகில்  உண்டாயிருக்கும்;  ஆகையால்  உன்  விலாவிலே  அடித்துக்கொள்.  {Ezek  21:12}

 

யாவையும்  கண்டிக்கிற  கோல்  வந்தாலொழிய  இனிச்  சோதனையினால்  தீருகிறதென்னவென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  21:13}

 

ஆகையால்  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  சொல்லி,  கையோடே  கைகொட்டு;  பட்டயம்  மூன்றுதரம்  இரட்டித்துவரும்;  அது  கொலையுண்டவர்களின்  பட்டயம்;  அது  கொலையுண்ணப்போகிற  பெரியவர்களின்  உள்ளறைகளில்  பிரவேசிக்கிற  பட்டயம்.  {Ezek  21:14}

 

அவர்களுடைய  இருதயம்  கரைந்து,  அவர்களுடைய  இடையூறுகள்  திரளாகும்படி,  பட்டயத்தின்  கூர்மையை  அவர்களுடைய  எல்லா  வாசல்களுக்கும்  நேரிடக்  கட்டளையிடுவேன்;  ,  அது  மின்னும்படியாகப்  பதமிடப்பட்டது,  வெட்டும்படியாகத்  தீட்டிவைக்கப்பட்டது.  {Ezek  21:15}

 

ஏகபலமாய்  வலதுபுறமாக  வெட்டு,  திரும்பி  இடதுபுறமாகவும்  வெட்டு;  உன்  முகம்  திரும்புகிற  திக்கெல்லாம்  வெட்டு.  {Ezek  21:16}

 

நானும்  கையோடே  கைகொட்டி,  என்  உக்கிரத்தை  ஆறப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  நான்  சொன்னேன்  என்றார்.  {Ezek  21:17}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  21:18}

 

மனுபுத்திரனே,  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  பட்டயம்  வரத்தக்கதாக  இரண்டுவழிகளைக்  குறித்துக்கொள்;  இரண்டும்  ஒரே  தேசத்திலிருந்து  வரவேண்டும்;  நீ  ஒரு  இடத்தைத்  தெரிந்துகொள்,  நகரத்துக்குப்  போகிற  வழியின்  முனையில்  அந்த  இடத்தைத்  தெரிந்துகொள்.  {Ezek  21:19}

 

பட்டயம்  அம்மோன்<Ammonites>  புத்திரரின்  பட்டணமாகிய  ரப்பாவுக்கு<Rabbath>  விரோதமாக  வரத்தக்க  ஒரு  வழியையும்,  யூதாவில்<Judah>  இருக்கிற  அரணான  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாக  வரத்தக்க  ஒரு  வழியையும்  குறித்துக்கொள்.  {Ezek  21:20}

 

பாபிலோன்<Babylon>  ராஜா  இரண்டு  வழிகளின்  முனையாகிய  வழிப்பிரிவிலே  நிமித்தம்  பார்க்கிறதற்காக  நிற்பான்;  அம்புகளைத்  தீட்டி,  விக்கிரகங்களை  உசாவி,  ஈரலால்  குறிபார்ப்பான்.  {Ezek  21:21}

 

தலைவரை  நியமிக்கிறதற்கும்,  சங்காரஞ்செய்யும்படி  ஆர்ப்பரிக்கிறதற்கும்,  கெம்பீரமாய்ச்  சத்தமிடுகிறதற்கும்,  வாசல்களை  முட்டும்  யந்திரங்களை  வைக்கிறதற்கும்,  மண்மேடு  போடுகிறதற்கும்,  கொத்தளங்களைக்  கட்டுகிறதற்கும்,  எருசலேமைக்குறித்து<Jerusalem>  நிமித்தம்  பார்க்குதல்  அவனுடைய  வலதுபுறத்திலே  உண்டாயிருக்கும்.  {Ezek  21:22}

 

இந்த  நிமித்தமானது  ஆணையிட்டவர்களுக்கு  முன்பாகப்  பொய்யாகத்  தோன்றும்;  ஆயினும்  அவர்கள்  பிடிக்கப்படும்படி  அவன்  அவர்கள்  துரோகத்தை  நினைப்பான்.  {Ezek  21:23}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உங்கள்  துரோகங்கள்  வெளியரங்கமாகிறதினாலும்,  உங்கள்  செய்கைகளிலெல்லாம்  உங்கள்  பாவங்கள்  தெரியவருகிறதினாலும்,  நீங்கள்  உங்கள்  அக்கிரமத்தை  நினைக்கப்பண்ணுகிறீர்களே;  நீங்கள்  இப்படிப்பட்டவர்களென்று  நினைக்கப்படுகிறீர்களே;  ஆதலால்  கைப்பிடியாய்ப்  பிடிக்கப்படுவீர்கள்.  {Ezek  21:24}

 

இஸ்ரவேலை<Israel>  ஆளுகிற  அவபக்தியுள்ள  துன்மார்க்க  அதிபதியே,  அக்கிரமத்துக்கு  முடிவுவருங்காலத்தில்  உன்  நாள்  வந்தது.  {Ezek  21:25}

 

பாகையைக்  கழற்று,  கிரீடத்தை  எடுத்துப்போடு;  அது  இனி  முன்போலிராது;  தாழ்ந்தவனை  உயர்த்தி,  உயர்ந்தவனைத்  தாழ்த்துவேன்.  {Ezek  21:26}

 

அதைக்  கவிழ்ப்பேன்,  கவிழ்ப்பேன்,  கவிழ்ப்பேன்;  உரிமைக்காரனானவர்  வருமட்டும்  அது  இல்லாதிருக்கும்;  அவருக்கே  அதைக்  கொடுப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  21:27}

 

பின்னும்  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  சொல்லு:  அம்மோன்<Ammonites>  புத்திரரையும்  அவர்கள்  சொல்லும்  நிந்தனைகளையும்  குறித்துக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  {Ezek  21:28}

 

அக்கிரமத்துக்கு  முடிவுவருங்காலத்தில்  வந்த  தங்களுடைய  நாளுக்கு  ஏதுவாகி,  கொலையுண்டுபோனவர்களுடைய  பிடரிகளோடேகூட  உன்னைத்  துன்மார்க்கரின்  கையினால்  விழப்பண்ணும்படிக்கு,  உனக்கு  அபத்தமானது  தரிசிக்கப்படுகிறபோதும்,  உனக்குப்  பொய்நிமித்தம்  பார்க்கப்படுகிறபோதும்  பட்டயம்  உருவப்பட்டது,  பட்டயமே  உருவப்பட்டது;  வெட்டவும்  சங்கரிக்கவும்  அது  மின்னத்தக்கதாய்த்  துலக்கப்பட்டிருக்கிறது.  {Ezek  21:29}

 

உன்  பட்டயத்தை  நீ  திரும்ப  அதின்  உறையிலே  போடு;  நீ  சிருஷ்டிக்கப்பட்ட  ஸ்தானமாகிய  உன்  ஜெந்மதேசத்திலே  நான்  உன்னை  நியாயந்தீர்த்து,  {Ezek  21:30}

 

என்  சினத்தை  உன்மேல்  ஊற்றுவேன்;  நான்  என்  மூர்க்கத்தின்  அக்கினியை  உன்மேல்  ஊதி,  மிருககுணமுள்ளவர்களும்,  அழிக்கிறதற்குத்  திறமையுள்ளவர்களுமாகிய  மனுஷரின்  கையில்  உன்னை  ஒப்புக்கொடுப்பேன்.  {Ezek  21:31}

 

நீ  அக்கினிக்கு  இரையாவாய்;  உன்  இரத்தம்  உன்  தேசத்தின்  நடுவில்  சிந்திக்கிடக்கும்;  நீ  இனி  நினைக்கப்படுவதில்லை;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்றார்.  {Ezek  21:32}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  22:1}

 

இப்போதும்  மனுபுத்திரனே,  இரத்தஞ்சிந்தின  நகரத்துக்காக  நீ  வழக்காடுவாயோ?  வழக்காட  மனதானால்,  நீ  அதின்  அருவருப்புகளையெல்லாம்  அதற்குத்  தெரியக்காட்டி,  {Ezek  22:2}

 

அதை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  உன்  காலம்  வரத்தக்கதாக  உன்  நடுவிலே  இரத்தஞ்சிந்துகிறதும்,  உன்னைத்  தீட்டுப்படுத்தத்தக்கதாக  உனக்கே  விரோதமாய்  நரகலான  விக்கிரகங்களை  உண்டுபண்ணுகிறதுமான  நகரமே,  {Ezek  22:3}

 

நீ  சிந்தின  உன்  இரத்தத்தினால்  நீ  குற்றஞ்சுமந்ததாகி,  நீ  உண்டுபண்ணின  உன்  நரகலான  விக்கிரகங்களால்  நீ  தீட்டுப்பட்டு,  உன்  நாட்களைச்  சமீபிக்கப்பண்ணி,  உன்  வருஷங்களை  நிறைவேற்றினாய்;  ஆகையால்  நான்  உன்னைப்  புறஜாதிகளுக்கு  நிந்தையாகவும்,  தேசங்களுக்கெல்லாம்  பரியாசமாகவும்  வைப்பேன்.  {Ezek  22:4}

 

உனக்குச்  சமீபமும்  உனக்குத்  தூரமுமான  தேசங்களின்  மனுஷர்  நீ  அவகீர்த்தியுள்ளதென்றும்,  அமளி  பெருத்ததென்றும்  உன்னைப்  பரியாசம்பண்ணுவார்கள்.  {Ezek  22:5}

 

இதோ,  இஸ்ரவேலின்<Israel>  அதிபதிகளில்  அவரவர்  தங்கள்  புயபலத்துக்குத்  தக்கதாக,  உன்னில்  இரத்தஞ்சிந்தினார்கள்.  {Ezek  22:6}

 

உன்னிலுள்ள  தாய்  தகப்பனை  அற்பமாய்  எண்ணினார்கள்;  உன்  நடுவில்  பரதேசிக்கு  இடுக்கண்  செய்தார்கள்;  உனக்குள்  திக்கற்றவனையும்  விதவையையும்  ஒடுக்கினார்கள்.  {Ezek  22:7}

 

நீ  என்  பரிசுத்த  வஸ்துக்களை  அசட்டைபண்ணி,  என்  ஓய்வுநாட்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்.  {Ezek  22:8}

 

இரத்தஞ்சிந்தும்படிக்கு  அபாண்டம்  பேசுகிறவர்கள்  உன்னிடத்தில்  இருக்கிறார்கள்;  மலைகளின்மேல்  சாப்பிடுகிறவர்களும்  உன்னிடத்தில்  இருக்கிறார்கள்;  முறைகேடு  செய்கிறவர்கள்  உன்  நடுவில்  இருக்கிறார்கள்.  {Ezek  22:9}

 

தகப்பனை  நிர்வாணமாக்கினவர்கள்  உன்னில்  இருக்கிறார்கள்;  தூரஸ்திரீயைப்  பலவந்தப்படுத்தினவர்கள்  உன்னில்  இருக்கிறார்கள்.  {Ezek  22:10}

 

உன்னில்  ஒருவன்  தன்  அயலானுடைய  மனைவியோடே  அருவருப்பானதைச்  செய்கிறான்;  வேறொருவன்  முறைகேடாய்த்  தன்  மருமகளைத்  தீட்டுப்படுத்துகிறான்;  வேறொருவன்  தன்  தகப்பனுக்குப்  பிறந்த  தன்  சகோதரியைப்  பலவந்தம்  பண்ணுகிறான்.  {Ezek  22:11}

 

இரத்தஞ்சிந்தும்படிக்குப்  பரிதானம்  வாங்கினவர்கள்  உன்னில்  இருக்கிறார்கள்;  நீ  வட்டியையும்  பொலிசையையும்  வாங்கி,  பொருளாசையினால்  உன்  அயலானுக்கு  இடுக்கண்  செய்து,  என்னை  மறந்து  போனாய்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  22:12}

 

இதோ,  நீ  அநியாயமாய்ச்  சம்பாதித்த  பொருளினிமித்தமும்,  உன்  நடுவில்  நீ  சிந்தின  இரத்தத்தினிமித்தமும்  நான்  கைகொட்டுகிறேன்.  {Ezek  22:13}

 

நான்  உன்னில்  நியாயஞ்செய்யும்  நாட்களில்  உன்  இருதயம்  தாங்குமோ?  அப்பொழுது  உன்  கைகள்  திடமாயிருக்குமோ?  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்,  இதை  நிறைவேற்றுவேன்.  {Ezek  22:14}

 

நான்  உன்னைப்  புறஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து,  உன்னைத்  தேசங்களிலே  தூற்றி,  உன்  அசுத்தத்தை  உன்னில்  ஒழியப்பண்ணுவேன்.  {Ezek  22:15}

 

நீ  புறஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாகப்  பரிசுத்தக்  குலைச்சலாயிருந்து,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வாய்  என்று  சொல்  என்றார்.  {Ezek  22:16}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  22:17}

 

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  எனக்குக்  களிம்பாய்ப்  போனார்கள்;  அவர்களெல்லாரும்  குகையிலுள்ள  பித்தளையும்  தகரமும்  இரும்பும்  ஈயமுமாயிருக்கிறார்கள்;  அவர்கள்  வெள்ளியின்  களிம்பாய்ப்  போனார்கள்.  {Ezek  22:18}

 

ஆதலால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீங்களெல்லாரும்  களிம்பாய்ப்  போனபடியினால்,  இதோ,  நான்  உங்களை  எருசலேமுக்குள்<Jerusalem>  சேர்ப்பேன்.  {Ezek  22:19}

 

வெள்ளியையும்  பித்தளையையும்  இரும்பையும்  ஈயத்தையும்  தகரத்தையும்  அக்கினியில்  ஊதி  உருக்குவதற்காகக்  குகைக்குள்  சேர்க்கிறதுபோல,  நான்  என்  கோபத்தினாலும்  என்  உக்கிரத்தினாலும்  உங்களைச்  சேர்த்துவைத்து  உருக்குவேன்.  {Ezek  22:20}

 

நான்  உங்களைக்  கூட்டி,  என்  கோபமாகிய  அக்கினியை  உங்கள்மேல்  ஊதுவேன்;  அதற்குள்ளே  நீங்கள்  உருகுவீர்கள்.  {Ezek  22:21}

 

குகைக்குள்  வெள்ளி  உருகுமாப்போல,  நீங்கள்  அதற்குள்  உருகுவீர்கள்;  அப்பொழுது  கர்த்தராகிய  நான்  என்  உக்கிரத்தை  உங்கள்மேல்  ஊற்றிவிட்டேன்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்றார்.  {Ezek  22:22}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  22:23}

 

மனுபுத்திரனே,  நீ  தேசத்தைப்  பார்த்து:  நீ  சுத்தம்பண்ணப்படாததேசம்,  கோபத்தின்  காலத்தில்  மழை  பெய்யாத  தேசம்  என்று  அதற்குச்  சொல்லு.  {Ezek  22:24}

 

அதிலுள்ள  தீர்க்கதரிசிகள்  அதின்  நடுவில்  கட்டுப்பாடு  பண்ணுகிறார்கள்;  கெர்ச்சிக்கிற  சிங்கம்  இரை  கவ்வுகிறதுபோல,  ஆத்துமாக்களை  அவர்கள்  பட்சிக்கிறார்கள்;  திரவியத்தையும்  விலையுயர்ந்த  பொருள்களையும்  வாங்கிக்கொள்ளுகிறார்கள்;  அதின்  நடுவில்  அநேகரை  விதவைகளாக்குகிறார்கள்.  {Ezek  22:25}

 

அதின்  ஆசாரியர்கள்  என்  வேதத்துக்கு  அநியாயஞ்செய்து,  என்  பரிசுத்த  வஸ்துக்களைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்குகிறார்கள்;  பரிசுத்தமுள்ளதற்கும்  பரிசுத்தமில்லாததற்கும்  வித்தியாசம்பண்ணாமலும்,  அசுத்தமுள்ளதற்கும்  அசுத்தமில்லாததற்கும்  உண்டான  வேற்றுமையைக்  காண்பியாமலும்  இருந்து,  என்  ஓய்வுநாட்களுக்குத்  தங்கள்  கண்களை  மூடிக்கொள்ளுகிறார்கள்;  அவர்கள்  நடுவிலே  நான்  கனஈனம்பண்ணப்படுகிறேன்.  {Ezek  22:26}

 

அதின்  நடுவில்  இருக்கிற  அதின்  பிரபுக்கள்  இரை  கவ்வுகிற  ஓநாய்களைப்போல்  இருக்கிறார்கள்;  அநியாயமாய்ப்  பொருள்  சம்பாதிக்கிறதற்கு  இரத்தஞ்சிந்துகிறார்கள்,  ஆத்துமாக்களைக்  கொள்ளையிடுகிறார்கள்.  {Ezek  22:27}

 

அதின்  தீர்க்கதரிசிகள்  அபத்தமானதைத்  தரிசித்து,  பொய்ச்சாஸ்திரத்தை  அவர்களுக்குச்  சொல்லி,  கர்த்தர்  உரைக்காதிருந்தும்,  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைத்தார்  என்று  சொல்லி,  அவர்களுக்குச்  சாரமற்ற  சாந்தைப்  பூசுகிறார்கள்.  {Ezek  22:28}

 

தேசத்தின்  ஜனங்கள்  இடுக்கண்செய்து,  கொள்ளையடித்து,  சிறுமையும்  எளிமையுமானவனை  ஒடுக்கி,  அந்நியனை  அநியாயமாய்த்  துன்பப்படுத்துகிறார்கள்.  {Ezek  22:29}

 

நான்  தேசத்தை  அழிக்காதபடிக்குத்  திறப்பிலே  நிற்கவும்  சுவரை  அடைக்கவுந்தக்கதாக  ஒரு  மனுஷனைத்  தேடினேன்,  ஒருவனையும்  காணேன்.  {Ezek  22:30}

 

ஆகையால்,  நான்  அவர்கள்மேல்  என்  கோபத்தை  ஊற்றி,  என்  மூர்க்கத்தின்  அக்கினியால்  அவர்களை  நிர்மூலமாக்கி,  அவர்களுடைய  வழியின்  பலனை  அவர்கள்  தலையின்மேல்  சுமரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்றார்.  {Ezek  22:31}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  23:1}

 

மனுபுத்திரனே,  ஒரே  தாயின்  குமாரத்திகளாகிய  இரண்டு  ஸ்திரீகள்  இருந்தார்கள்.  {Ezek  23:2}

 

அவர்கள்  எகிப்திலே<Egypt>  வேசித்தனம்பண்ணினார்கள்;  தங்கள்  இளம்பிராயத்திலே  வேசித்தனம்பண்ணினார்கள்;  அங்கே  அவர்களுடைய  ஸ்தனங்கள்  அமுக்கப்பட்டு,  அவர்களுடைய  கன்னிமையின்  கொங்கைகள்  தொடப்பட்டது.  {Ezek  23:3}

 

அவர்களில்  மூத்தவளின்  பெயர்  அகோலாள்<Aholah>,  அவளுடைய  தங்கையின்  பெயர்  அகோலிபாள்<Aholibah>;  அவர்கள்  என்னுடையவர்களாகி,  குமாரரையும்  குமாரத்திகளையும்  பெற்றார்கள்;  இவைகளே  அவர்களுடைய  பெயர்கள்;  அகோலாள்<Aholah>  என்பதற்குச்  சமாரியா<Samaria>  என்றும்,  அகோலிபாள்<Aholibah>  என்பதற்கு  எருசலேம்<Jerusalem>  என்றும்  பொருளாம்.  {Ezek  23:4}

 

அகோலாள்<Aholah>  என்னுடையவளாயிருக்கும்போது  சோரம்போனாள்.  {Ezek  23:5}

 

நீலாம்பரந்தரித்த  தலைவரும்,  அதிபதிகளும்,  சௌந்தரிய  வாலிபரும்,  குதிரைகளின்மேல்  ஏறுகிற  வீரருமாயிருந்த  சமீபதேசத்தாராகிய  அசீரியரென்கிற<Assyrians>  தன்  சிநேகிதர்மேல்  அவள்  மோகித்து,  {Ezek  23:6}

 

அசீரியரின்<Assyria>  புத்திரரில்  சிரேஷ்டமான  அனைவரோடும்,  தான்  மோகித்த  அனைவரோடும்  தன்  வேசித்தனங்களை  நடப்பித்து,  அவர்களுடைய  நரகலான  சகல  விக்கிரகங்களாலும்  தீட்டுப்பட்டுப்போனாள்.  {Ezek  23:7}

 

தான்  எகிப்திலே<Egypt>  பண்ணின  வேசித்தனங்களை  அவள்  விடவில்லை;  அவர்கள்  அவளுடைய  வாலிபத்திலே  அவளோடே  சயனித்து,  அவளுடைய  கன்னிமையின்  கொங்கைகளைத்  தொட்டு,  அவளிடத்தில்  தங்கள்  வேசித்தனத்தை  நடப்பித்தார்கள்.  {Ezek  23:8}

 

ஆகையால்  அவளுடைய  சிநேகிதரின்  கையிலே,  அவள்  மோகித்திருந்த  அசீரியபுத்திரரின்<Assyrians>  கையிலே,  நான்  அவளை  ஒப்புக்கொடுத்தேன்.  {Ezek  23:9}

 

அவர்கள்  அவளை  நிர்வாணமாக்கினார்கள்;  அவளுடைய  குமாரரையும்  அவளுடைய  குமாரத்திகளையும்  சிறைபிடித்து,  அவளையோ  பட்டயத்தினால்  கொன்றுபோட்டார்கள்;  அப்படியே  அவளிடத்தில்  ஆக்கினைகள்  செய்யப்பட்டபடியினால்  ஸ்திரீகளுக்குள்  அவகீர்த்தியுள்ளவளானாள்.  {Ezek  23:10}

 

அவளுடைய  தங்கையாகிய  அகோலிபாள்<Aholibah>  இதைக்  கண்டும்,  தன்  மோகவிகாரத்தில்  அவளைப்பார்க்கிலும்  கெட்டவளானாள்;  தன்  சகோதரியின்  வேசித்தனங்களிலும்  தன்  வேசித்தனங்கள்  அதிகமாயிற்று.  {Ezek  23:11}

 

மகா  அலங்கார  உடுப்புள்ள  தலைவரும்,  அதிபதிகளும்,  குதிரைகள்மேல்  ஏறுகிற  வீரரும்,  சௌந்தரியமுள்ள  வாலிபருமான  சமீபதேசத்தாராகிய  அசீரிய<Assyrians>  புத்திரர்மேல்  மோகங்கொண்டாள்.  {Ezek  23:12}

 

அவளும்  அசுத்தமானாளென்றும்,  அவர்கள்  இருவரும்  ஒரே  வழியில்  போனார்களென்றும்  கண்டேன்.  {Ezek  23:13}

 

அவள்  தன்  வேசித்தனங்களில்  அதிகரித்தாள்;  சுவரில்  ஜாதிலிங்கத்தால்  சித்திரந்தீர்ந்த  கல்தேயரின்<Chaldeans>  புருஷ  சுரூபங்களைக்  கண்டாள்.  {Ezek  23:14}

 

அவர்கள்  எல்லாரும்  தங்கள்  ஜெந்மதேசமாகிய  கல்தேயாவில்<Chaldea>  உள்ள  பாபிலோன்<Babylonians>  புத்திரரின்  சாயலாகத்  தங்கள்  அரைகளில்  கச்சை  கட்டினவர்களும்,  தங்கள்  தலைகளில்  சாயந்தீர்ந்த  பெரிய  பாகைகளைத்  தரித்தவர்களும்,  பார்வைக்கு  ராஜகுமாரர்களுமாக  இருந்தார்கள்.  {Ezek  23:15}

 

அவளுடைய  கண்கள்  அவர்களைப்  பார்த்தவுடனே,  அவள்  அவர்கள்மேல்  மோகித்து,  கல்தேயாவுக்கு<Chaldea>  அவர்களண்டையிலே  ஸ்தானாதிபதிகளை  அனுப்பினாள்.  {Ezek  23:16}

 

அப்பொழுது  பாபிலோன்<Babylonians>  புத்திரர்  அவளண்டையிலே  சிநேக  சம்போகத்துக்கு  வந்து,  தங்கள்  வேசித்தனங்களால்  அவளைத்  தீட்டுப்படுத்தினார்கள்;  அவள்  இவர்களால்  தீட்டுப்பட்டுப்  போனபின்பு,  அவள்  மனது  அவர்களை  விட்டுப்  பிரிந்தது.  {Ezek  23:17}

 

இவ்விதமாய்  அவள்  தன்  வேசித்தனங்களை  வெளிப்படுத்தி,  தன்னை  நிர்வாணமாக்கினபோது,  என்  மனம்  அவளுடைய  சகோதரியை  விட்டுப்  பிரிந்ததுபோல  அவளையும்  விட்டுப்  பிரிந்தது.  {Ezek  23:18}

 

அவள்  எகிப்துதேசத்திலே<Egypt>  வேசித்தனம்  பண்ணின  தன்  வாலிபத்தின்  நாட்களை  நினைத்து,  தன்  வேசித்தனங்களில்  அதிகரித்துப்போனாள்.  {Ezek  23:19}

 

கழுதைமாம்சமான  மாம்சமும்,  குதிரை  இந்திரியமான  இந்திரியமுமுள்ள  அவர்களுக்கு  அவள்  வைப்பாட்டியாயிருக்கும்படி  அவர்கள்மேல்  மோகித்தாள்.  {Ezek  23:20}

 

எகிப்தியரால்<Egyptians>  உன்  கன்னிமையின்  ஸ்தனங்களாகிய  கொங்கைகள்  தொடப்பட்ட  காலத்தில்,  நீ  உன்  இளம்பிராயத்தில்  செய்த  முறைகேடுகளை  நினைத்துவருகிறாய்.  {Ezek  23:21}

 

ஆகையால்,  அகோலிபாளே<Aholibah>,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  உன்  மனது  விட்டுப்  பிரிந்த  உன்  சிநேகிதரை  நான்  உனக்கு  விரோதமாக  எழுப்பி,  உனக்கு  விரோதமாக  அவர்களைச்  சுற்றிலும்  வரப்பண்ணுவேன்.  {Ezek  23:22}

 

சௌந்தரியமுள்ள  வாலிபரும்,  தலைவரும்,  அதிபதிகளும்,  குதிரைகள்மேல்  ஏறுகிற  வீரருமாகிய  பேர்பெற்ற  பிரபுக்களான  பாபிலோன்<Babylonians>  புத்திரரையும்,  கல்தேயர்<Chaldeans>  எல்லாரையும்,  பேகோடு<Pekod>,  சோவா<Shoa>,  கோவா<Koa>  என்கிற  தேசங்களின்  மனுஷரையும்  அவர்களோடேகூட  அசீரிய<Assyrians>  புத்திரர்  எல்லாரையும்  வரப்பண்ணுவேன்.  {Ezek  23:23}

 

அவர்கள்  வண்டில்களோடும்,  இரதங்களோடும்,  யந்திரங்களோடும்,  ஜனக்கூட்டத்தோடும்,  கேடகங்களும்  பரிசைகளும்  தலைச்சீராக்களும்  தரித்தவர்களாய்,  உனக்கு  விரோதமாக  வந்து,  உன்னைச்  சுற்றிலும்  பாளயமிறங்குவார்கள்;  அவர்களுக்கு  முன்னே  நான்  நியாயத்தை  விளங்கப்பண்ணுவேன்;  அவர்கள்  தங்கள்  நியாயங்களின்படி  உன்னை  நியாயந்தீர்ப்பார்கள்.  {Ezek  23:24}

 

உனக்கு  விரோதமாக  என்  எரிச்சலை  விளங்கப்பண்ணுவேன்;  அவர்கள்  உன்னை  உக்கிரமாய்  நடப்பித்து,  உன்  மூக்கையும்  உன்  காதுகளையும்  அறுத்துப்போடுவார்கள்;  உன்னில்  மீதியாயிருப்பவர்கள்  பட்டயத்தால்  வெட்டுண்டுபோவார்கள்;  அவர்கள்  உன்  குமாரரையும்  உன்  குமாரத்திகளையும்  பிடித்துக்கொள்ளுவார்கள்;  உன்னில்  மீதியாயிருப்பவர்கள்  அக்கினிக்கு  இரையாவார்கள்.  {Ezek  23:25}

 

அவர்கள்  உன்  வஸ்திரங்களை  உரிந்து,  உன்  சிங்காரமான  ஆபரணங்களைப்  பறித்துக்கொள்ளுவார்கள்.  {Ezek  23:26}

 

இவ்விதமாய்  உன்  முறைகேட்டையும்,  நீ  எகிப்துதேசத்தில்<Egypt>  துவக்கின  உன்  வேசித்தனத்தையும்  ஒழியப்பண்ணுவேன்;  நீ  இனி  அவர்களை  நோக்க  உன்  கண்களை  ஏறெடுக்காமலும்,  எகிப்துவை<Egypt>  நினையாமலும்  இருப்பாய்.  {Ezek  23:27}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நீ  பகைக்கிறவர்களின்  கையிலும்,  உன்  மனம்  விட்டுப்  பிரிந்தவர்களின்  கையிலும்  நான்  உன்னை  ஒப்புக்கொடுப்பேன்.  {Ezek  23:28}

 

அவர்கள்  உன்னை  வெறுப்பாய்  நடத்தி,  உன்  பிரயாசத்தின்  பலனையெல்லாம்  எடுத்துக்கொண்டு,  உன்னை  அம்மணமும்  நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்;  அப்படியே  உன்  வெட்கக்கேடும்  உன்  முறைகேடுமான  உன்  வேசித்தனத்தின்  நிர்வாணம்  வெளிப்படுத்தப்படும்.  {Ezek  23:29}

 

நீ  புறஜாதிகளைப்  பின்தொடர்ந்து,  அவர்களுடைய  நரகலான  விக்கிரகங்களால்  உன்னைத்  தீட்டுப்படுத்திக்கொண்ட  உன்  வேசித்தனத்தினிமித்தம்  இவைகள்  உனக்குச்  செய்யப்படும்.  {Ezek  23:30}

 

உன்  சகோதரியின்  வழியிலே  நீ  நடந்தாய்;  ஆகையால்  அவளுடைய  பாத்திரத்தை  உன்  கையிலே  கொடுப்பேன்.  {Ezek  23:31}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  உன்  சகோதரியினுடைய  ஆழமும்  அகலமுமானதும்  நிறைய  வார்க்கப்பட்டதுமான  பாத்திரத்தைக்  குடித்து,  நகைப்பும்  பரியாசமுமாவாய்.  {Ezek  23:32}

 

சமாரியா<Samaria>  என்னும்  உன்  சகோதரியினுடைய  பாத்திரமாயிருக்கிற  பிரமிப்பும்  பாழ்க்கடிப்பும்  என்கிற  பாத்திரத்தால்  வெறியினாலும்  சஞ்சலத்தினாலும்  நிறையப்படுவாய்.  {Ezek  23:33}

 

நீ  அதில்  இருக்கிறதைக்  குடித்து,  உறிஞ்சி,  அதின்  ஓடுகளை  உடைத்துப்போட்டு,  உன்  ஸ்தனங்களைக்  கீறிக்கொள்வாய்;  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  23:34}

 

ஆகையால்,  நீ  என்னை  மறந்து,  என்னை  உனக்குப்  புறம்பே  தள்ளிவிட்டதினிமித்தம்,  நீ  உன்  முறைகேட்டையும்  உன்  வேசித்தனங்களையும்  சுமப்பாய்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  23:35}

 

பின்னும்  கர்த்தர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  அகோலாளையும்<Aholah>  அகோலிபாளையும்<Aholibah>  குறித்து  வழக்காட  மனதானால்,  அவர்களுடைய  அருவருப்புகளை  அவர்களுக்குத்  தெரியக்காட்டு.  {Ezek  23:36}

 

அவர்கள்  விபசாரம்பண்ணினார்கள்;  அவர்கள்  கைகளில்  இரத்தமும்  இருக்கிறது;  அவர்கள்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களோடே  விபசாரம்பண்ணி,  தாங்கள்  எனக்குப்  பெற்ற  தங்கள்  பிள்ளைகளையும்  அவைகளுக்கு  இரையாகத்  தீக்கடக்கப்பண்ணினார்கள்.  {Ezek  23:37}

 

அன்றியும்  அவர்கள்  என்  பரிசுத்த  ஸ்தலத்தை  அந்நாளிலேதானே  தீட்டுப்படுத்தி,  என்  ஓய்வுநாட்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.  {Ezek  23:38}

 

அவர்கள்  தங்கள்  பிள்ளைகளைத்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களுக்கென்று  பலியிட்டபின்பு,  அவர்கள்  என்  பரிசுத்த  ஸ்தலத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்க  அந்நாளில்தானே  அதற்குள்  பிரவேசித்தார்கள்;  இதோ,  என்  ஆலயத்தின்  நடுவிலே  இப்படிச்  செய்தார்கள்.  {Ezek  23:39}

 

இதுவுமல்லாமல்,  தூரத்திலுள்ள  புருஷரிடத்திற்குத்  தூது  அனுப்பி,  அவர்களை  வரவழைத்தார்கள்,  அவர்கள்  வந்தார்கள்;  அவர்களுக்கென்று  நீ  குளித்து,  உன்  கண்களில்  மையிட்டுக்கொண்டு,  ஆபரணங்களால்  உன்னை  அலங்கரித்து,  {Ezek  23:40}

 

சிறந்த  மஞ்சத்தின்மேல்  உட்கார்ந்துகொண்டாய்;  அதின்  முன்னே  ஒரு  பீடம்  ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது;  என்  தூபவர்க்கத்தையும்  என்  எண்ணெயையும்  அதின்மேல்  வைத்தாய்.  {Ezek  23:41}

 

அவளிடத்திலே  அந்தச்  சந்தடியின்  இரைச்சல்  அடங்கின  பின்பு,  ஜனத்திரளான  புருஷரையும்  அழைத்தனுப்பினார்கள்;  சபேயர்<Sabeans>  வனாந்தரத்திலிருந்து  கொண்டுவரப்பட்டார்கள்;  இவர்கள்  அவர்களுடைய  கைகளில்  கடகங்களையும்  அவர்களுடைய  தலைகளில்  அலங்காரமான  கிரீடங்களையும்  போட்டார்கள்.  {Ezek  23:42}

 

விபசாரங்களில்  கிழவியானவளைக்குறித்து  அவள்  இன்னும்  தன்  வேசித்தனங்களைச்  செய்வாளோ  என்றேன்.  {Ezek  23:43}

 

பரஸ்திரீயினிடத்திலே  பிரவேசிக்குமாப்போல  அவளிடத்தில்  பிரவேசித்தார்கள்;  இந்தப்பிரகாரமாக  முறைகேடானவர்களாகிய  அகோலாளிடத்திலும்<Aholah>  அகோலிபாளிடத்திலும்<Aholibah>  பிரவேசித்தார்கள்.  {Ezek  23:44}

 

ஆகையால்,  விபசாரிகளை  நியாயந்தீர்க்கிற  பிரகாரமாகவும்,  இரத்தஞ்சிந்தும்  ஸ்திரீகளை  நியாயந்தீர்க்கிற  பிரகாரமாகவும்,  நீதிமான்கள்  அவர்களை  நியாயந்தீர்ப்பார்கள்;  அவர்கள்  விபசாரிகள்,  அவர்களுடைய  கைகளில்  இரத்தம்  இருக்கிறது.  {Ezek  23:45}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  அவர்களுக்கு  விரோதமாய்  ஒரு  கூட்டத்தைவரப்பண்ணி,  அவர்களை  அலைச்சலுக்கும்  கொள்ளைக்கும்  ஒப்புக்கொடுப்பேன்.  {Ezek  23:46}

 

அந்தக்  கூட்டத்தார்  அவர்களைக்  கல்லெறிந்து,  தங்கள்  பட்டயங்களால்  வெட்டிப்போடுவார்கள்;  அவர்களுடைய  குமாரரையும்  அவர்களுடைய  குமாரத்திகளையும்  கொன்று,  அவர்களுடைய  வீடுகளை  அக்கினியால்  சுட்டெரிப்பார்கள்.  {Ezek  23:47}

 

இவ்விதமாய்  எல்லா  ஸ்திரீகளும்  புத்தியடைந்து,  உங்கள்  முறைகேடுகளைச்  செய்யாதிருக்கும்படி,  முறைகேட்டைத்  தேசத்தைவிட்டு  ஒழியப்பண்ணுவேன்.  {Ezek  23:48}

 

உங்கள்  முறைகேட்டை  உங்கள்மேல்  சுமத்துவார்கள்;  அப்பொழுது  நீங்கள்  உங்கள்  நரகலான  விக்கிரகங்களைச்  சேவித்த  பாவங்களைச்  சுமந்து,  நான்  கர்த்தராகிய  ஆண்டவர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  23:49}

 

ஒன்பதாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  பத்தாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  24:1}

 

மனுபுத்திரனே,  இந்த  நாளின்  பேரையும்  இந்தத்  தேதியையும்  நீ  எழுதிவை,  இந்தத்  தேதியில்தானே  பாபிலோன்<Babylon>  ராஜா  எருசலேமில்<Jerusalem>  பாளயமிறங்கினான்.  {Ezek  24:2}

 

இப்போதும்  நீ  கலகவீட்டாருக்கு  ஒரு  உபமானத்தைக்  காண்பித்து,  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  ஒரு  கொப்பரையை  அடுப்பிலே  வை;  அதை  அடுப்பிலே  வைத்து,  அதிலே  தண்ணீரை  விடு.  {Ezek  24:3}

 

சகல  நல்ல  கண்டங்களான  பின்னந்தொடைகளும்  முன்னந்தொடைகளுமாகிய  கண்டங்களைச்  சேர்த்து  அதிலே  போடு;  நல்ல  எலும்புகளால்  அதை  நிரப்பு.  {Ezek  24:4}

 

ஆட்டுமந்தையில்  தெரிந்துகொள்ளப்பட்டதை  அதற்காகக்  கொண்டுவந்து,  எலும்புகளை  அதின்  கீழே  குவித்து  எரிக்கவேண்டும்;  அதிலுள்ள  எலும்புகளும்  வேகத்தக்கதாக  அதைப்  பொங்கப்பொங்கக்  காய்ச்சவேண்டும்.  {Ezek  24:5}

 

இதற்காகக்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நுரை  ஒட்டிக்கொண்டிருக்கிறதும்  நுரை  நீங்காததுமாகிய  கொப்பரை  என்னப்பட்ட  இரத்தஞ்சிந்திய  நகரத்துக்கு  ஐயோ!  அதில்  இருக்கிறதைக்  கண்டங்கண்டமாக  எடுத்துக்கொண்டுபோ;  அதின்பேரில்  சீட்டுப்போடலாகாது.  {Ezek  24:6}

 

அவள்  இரத்தம்  அவள்  நடுவில்  இருக்கிறது;  மண்ணிலே  மறைந்து  போகும்படி  அதைத்  தரையிலே  ஊற்றாமல்  கற்பாறையிலே  ஊற்றிப்போட்டாள்.  {Ezek  24:7}

 

நீதியைச்  சரிக்கட்டுவதற்காகக்  கோபம்  மூளும்படி  நான்  அவள்  இரத்தத்தை  மறைக்காமல்  கன்மலையின்மேல்  வைத்தேன்.  {Ezek  24:8}

 

ஆதலால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இரத்தஞ்சிந்திய  நகரத்துக்கு  ஐயோ!  நான்  பெரிதான  கட்டைகளைக்  குவித்து  எரியப்பண்ணுவேன்.  {Ezek  24:9}

 

திரளான  விறகுகளைக்  கூட்டு,  தீயை  மூட்டு,  இறைச்சியை  முறுகவேவித்துச்  சம்பாரங்களை  இடு;  எலும்புகளை  எரித்துப்போடு.  {Ezek  24:10}

 

பின்பு  கொப்பரை  காய்ந்து,  அதின்  களிம்பு  வெந்து,  அதற்குள்  இருக்கிற  அதின்  அழுக்கு  உருகி,  அதின்  நுரை  நீங்கும்படி  அதை  வெறுமையாகத்  தழலின்மேல்  வை.  {Ezek  24:11}

 

அது  மகா  வருத்தத்தை  உண்டாக்கியும்,  அதின்  திரளான  நுரை  அதை  விட்டு  நீங்கவில்லை;  அதின்  நுரை  அக்கினிக்கு  உள்ளாகவேண்டியது.  {Ezek  24:12}

 

உன்  அசுத்தத்தோடே  முறைகேடும்  இருக்கிறது;  நான்  உன்னைச்  சுத்திகரித்தும்,  நீ  சுத்தமாகாதபடியினால்,  இனி  என்  உக்கிரம்  உன்னில்  ஆறித்தீருமட்டும்  உன்  அசுத்தம்  நீங்கிச்  சுத்திகரிக்கப்படமாட்டாய்.  {Ezek  24:13}

 

கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்,  இது  நிறைவேறும்,  நான்  இதைச்  செய்வேன்;  நான்  பின்வாங்குவதும்  தப்பவிடுவதும்  மனஸ்தாபப்படுவதும்  இல்லை;  உன்  வழிகளுக்கும்  உன்  செய்கைகளுக்குந்தக்கதாக  உன்னை  நியாயந்தீர்ப்பார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  24:14}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  24:15}

 

மனுபுத்திரனே,  இதோ,  நான்  உன்  கண்களுக்கு  விருப்பமானவளை  ஒரே  அடியினாலே  உன்னைவிட்டு  எடுத்துக்கொள்ளுவேன்;  ஆனாலும்  நீ  புலம்பாமலும்  அழாமலும்  கண்ணீர்விடாமலும்  இருப்பாயாக.  {Ezek  24:16}

 

அலறாமல்  பெருமூச்சுவிடு,  இழவு  கொண்டாடவேண்டாம்;  உன்  பாகையை  உன்  தலையிலே  கட்டி,  உன்  பாதரட்சைகளை  உன்  பாதங்களில்  தொடுத்துக்கொள்;  உன்  தாடியை  மூடாமலும்  துக்கங்கொண்டாடுகிறவர்களின்  அப்பத்தைப்  புசியாமலும்  இருக்கக்கடவாய்  என்றார்.  {Ezek  24:17}

 

விடியற்காலத்தில்  நான்  ஜனங்களோடே  பேசினேன்;  அன்று  சாயங்காலத்தில்  என்  மனைவி  செத்துப்போனாள்;  எனக்குக்  கட்டளையிட்டபடியே  விடியற்காலத்தில்  செய்தேன்.  {Ezek  24:18}

 

அப்பொழுது  ஜனங்கள்  என்னை  நோக்கி:  நீர்  செய்கிறவைகள்  எங்களுக்கு  என்னத்திற்கு  அடையாளம்  என்பதை  எங்களுக்குத்  தெரிவிக்கமாட்டீரா  என்று  கேட்டார்கள்.  {Ezek  24:19}

 

நான்  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  24:20}

 

நீ  இஸ்ரவேல்<Israel>  வீட்டாரை  நோக்கி,  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  உங்கள்  பலத்தின்  முக்கியமும்  உங்கள்  கண்களின்  விருப்பமும்  உங்கள்  ஆத்துமாவின்  வாஞ்சையுமாகிய  என்  பரிசுத்த  ஸ்தலத்தை  நான்  பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்;  நீங்கள்  விட்டுவந்த  உங்கள்  குமாரரும்  உங்கள்  குமாரத்திகளும்  பட்டயத்தால்  விழுவார்கள்.  {Ezek  24:21}

 

அப்பொழுது  நான்  செய்ததுபோல  நீங்களும்  செய்வீர்கள்;  தாடியை  மூடாமலும்  துக்கங்கொண்டாடுகிறவர்களின்  அப்பத்தைப்  புசியாமலும்  இருப்பீர்கள்.  {Ezek  24:22}

 

உங்கள்  பாகைகள்  உங்கள்  தலைகளிலும்,  உங்கள்  பாதரட்சைகள்  உங்கள்  கால்களிலும்  இருக்கும்;  நீங்கள்  புலம்பாமலும்  அழாமலும்  இருந்து,  உங்கள்  அக்கிரமங்களில்  வாடிப்போய்,  ஒருவரையொருவர்  பார்த்துத்  தவிப்பீர்கள்.  {Ezek  24:23}

 

அப்படியே  எசேக்கியேல்<Ezekiel>  உங்களுக்கு  அடையாளமாக  இருப்பான்;  அவன்  செய்தபடி  எல்லாம்  நீங்களும்  செய்வீர்கள்;  இப்படி  வரும்போது  நான்  கர்த்தராகிய  ஆண்டவர்  என்று  அறிந்துகொள்வீர்கள்  என்று  சொல்  என்று  உரைத்தார்  என்றேன்.  {Ezek  24:24}

 

பின்னும்  மனுபுத்திரனே,  நான்  எந்த  நாளிலே  அவர்களுடைய  பலத்தையும்,  அவர்களுடைய  அலங்காரத்தின்  மகிழ்ச்சியையும்,  அவர்களுடைய  கண்களின்  விருப்பத்தையும்,  அவர்களுடைய  ஆத்துமாவின்  விசேஷித்த  வாஞ்சையையும்,  அவர்களுடைய  குமாரரையும்,  அவர்களுடைய  குமாரத்திகளையும்  அவர்களைவிட்டு  எடுத்துக்கொள்ளுகிறேனோ,  {Ezek  24:25}

 

அந்த  நாளிலேதானே  தப்பிவந்த  ஒருவன்  உன்னிடத்தில்  வந்து  உன்  காதுகள்  கேட்கச்  சொல்லுவான்  அல்லவோ?  {Ezek  24:26}

 

அந்த  நாளிலேதானே  உன்  வாய்  திறக்கப்பட்டு,  நீ  தப்பிவந்தவனோடே  பேசுவாய்;  இனி  மவுனமாயிருக்கமாட்டாய்;  இப்படி  நீ  அவர்களுக்கு  அடையாளமாக  இருப்பாய்;  நான்  கர்த்தர்  என்று  அப்பொழுது  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  {Ezek  24:27}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  25:1}

 

மனுபுத்திரனே,  நீ  அம்மோன்<Ammonites>  புத்திரருக்கு  எதிராக  உன்  முகத்தைத்திருப்பி,  அவர்களுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  {Ezek  25:2}

 

அம்மோன்<Ammonites>  புத்திரருக்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்:  என்  பரிசுத்த  ஸ்தலம்  பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும்,  இஸ்ரவேல்<Israel>  தேசம்  பாழாக்கப்படுகிறபோதும்,  யூதா<Judah>  வம்சத்தார்  சிறையிருப்பிலே  போகிறபோதும்,  நீ  அவர்களுக்கு  விரோதமாக    ,  என்று  நிந்தித்தபடியினால்,  {Ezek  25:3}

 

இதோ,  நான்  உன்னைக்  கிழக்குத்  தேசத்தாருக்குச்  சுதந்தரமாக  ஒப்புக்கொடுப்பேன்,  அவர்கள்  உன்னில்  தங்கள்  அரண்களைக்  கட்டி,  உன்னில்  தங்கள்  வாசஸ்தலங்களை  உண்டுபண்ணுவார்கள்;  அவர்கள்  உன்  கனிகளைப்  புசித்து,  உன்  பாலைக்  குடிப்பார்கள்.  {Ezek  25:4}

 

நான்  ரப்பாவை<Rabbah>  ஒட்டகங்களின்  கொட்டகையும்,  அம்மோன்<Ammonites>  புத்திரரின்  தேசத்தை  ஆட்டுக்கிடையுமாக்குவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  25:5}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்கு  விரோதமாக  நீ  கைகொட்டி,  உன்  காலால்  தட்டி,  வர்மம்  வைத்து,  ஆகடியம்  பண்ணினபடியினால்,  {Ezek  25:6}

 

இதோ,  உனக்கு  விரோதமாக  நான்  என்  கையை  நீட்டி,  உன்னை  ஜாதிகளுக்குக்  கொள்ளையாக  ஒப்புக்கொடுத்து,  உன்னை  ஜனங்களுக்குள்ளே  வேரற்றுப்போகப்பண்ணி,  உன்னைத்  தேசங்களுக்குள்ளே  அழித்து,  உன்னை  நிர்மூலமாக்குவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வாய்.  {Ezek  25:7}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  இதோ,  யூதா<Judah>  வம்சத்தார்  எல்லா  ஜாதிகளுக்கும்  ஒத்தவர்களென்று  மோவாபும்<Moab>  சேயீரும்<Seir>  சொல்லுகிறபடியினால்,  {Ezek  25:8}

 

இதோ,  அம்மோன்<Ammonites>  புத்திரரின்பேர்  ஜாதிகளுக்குள்  இராதபடிக்கு  நான்  அம்மோன்<Ammonites>  புத்திரரின்  தேசத்தைக்  கிழக்குத்  தேசத்தாருக்குத்  திறந்துவைத்து,  சுதந்தரமாய்  ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக,  {Ezek  25:9}

 

நான்  மோவாப்<Moab>  தேசத்தின்  பக்கத்திலுள்ள  அதின்  கடையாந்தர  ஊர்களாகிய  பட்டணங்கள்  முதற்கொண்டுள்ள  தேசத்தின்  அலங்காரமாகிய  பெத்யெசிமோத்தையும்<Bethjeshimoth>,  பாகால்மெயோனையும்<Baalmeon>,  கீரியாத்தாயீமையும்<Kiriathaim>  அவர்களுக்குத்  திறந்துவைத்து,  {Ezek  25:10}

 

மோவாபிலே<Moab>  நியாயங்களைச்  செய்வேன்,  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  25:11}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  ஏதோம்<Edom>  யூதா<Judah>  வம்சத்தாரிடத்தில்  குரோதந்தீர்த்து,  பழிவாங்கி,  பெரிய  குற்றஞ்செய்தபடியினால்,  {Ezek  25:12}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  நான்  ஏதோம்<Edom>  தேசத்துக்கு  விரோதமாக  என்  கையை  நீட்டி  அதில்  மனுஷரையும்  மிருகங்களையும்  இராதபடிக்குச்  சங்காரம்பண்ணி,  அதைத்  தேமான்<Teman>  துவக்கித்  தேதான்மட்டும்<Dedan>  வனாந்தரமாக்குவேன்;  பட்டயத்தால்  விழுவார்கள்.  {Ezek  25:13}

 

நான்  இஸ்ரவேலாகிய<Israel>  என்  ஜனத்தின்  கையினால்  ஏதோமினிடத்தில்<Edom>  பழிவாங்குவேன்;  அவர்கள்  என்  கோபத்தின்படியும்  என்  உக்கிரத்தின்படியும்  ஏதோமுக்குச்<Edom>  செய்வார்கள்;  அப்பொழுது  நான்  பழிவாங்குவது  இன்னதென்று  அறிந்துகொள்வார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  25:14}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  பெலிஸ்தியர்<Philistines>  குரோதக்காரராயிருந்து,  பழம்பகையால்  கேடுசெய்யவேண்டுமென்று,  வர்மம்  வைத்துப்  பழிவாங்கினபடியினால்,  {Ezek  25:15}

 

இதோ,  நான்  பெலிஸ்தியருக்கு<Philistines>  விரோதமாக  என்  கையை  நீட்டி,  கிரேத்தியரைச்<Cherethims>  சங்கரித்து,  சமுத்திரக்கரையில்  மீதியானவர்களை  அழித்து,  {Ezek  25:16}

 

உக்கிரமான  தண்டனைகளினால்  அவர்களில்  கொடிதாய்ப்  பழிவாங்குவேன்;  நான்  அவர்களில்  பழிவாங்கும்போது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  25:17}

 

பதினோராம்  வருஷம்  முதலாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  26:1}

 

மனுபுத்திரனே,  தீருவானது<Tyrus>  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாக,    ,  ஜனசதளங்களின்  ஒலிமுகவாசலாயிருந்த  நகரி  இடிக்கப்பட்டதென்றும்  என்னிடமாக  எல்லாம்  புரண்டுவரும்,  அது  பாழாக்கப்பட்டிருக்க  நான்  நிரப்பப்படுவேன்  என்றும்  சொல்லுகிறபடியினால்,  {Ezek  26:2}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  தீருவே<Tyrus>,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வருகிறேன்;  சமுத்திரம்  தன்  அலைகளை  எழும்பிவரப்பண்ணுகிற  வண்ணமாய்  நான்  அநேகம்  ஜாதிகளை  உனக்கு  விரோதமாக  எழும்பி  வரப்பண்ணுவேன்.  {Ezek  26:3}

 

அவர்கள்  தீருவின்<Tyrus>  மதில்களை  அழித்து,  அதின்  கொத்தளங்களை  இடித்துப்போடுவார்கள்;  நான்  அதின்  மண்ணும்  அதில்  இராதபடிக்கு  விளக்கிப்போட்டு,  அதை  வெறும்  பாறையாக்கிவிடுவேன்.  {Ezek  26:4}

 

அது  வலைகளை  விரிக்கிற  இடமாகச்  சமுத்திரத்தின்  நடுவிலே  இருக்கும்;  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  அது  ஜாதிகளுக்குக்  கொள்ளையாகும்.  {Ezek  26:5}

 

வெளியில்  இருக்கிற  அதின்  குமாரத்திகளோ  பட்டயத்தால்  கொன்றுபோடப்படுவார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  26:6}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  ராஜாதிராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்<Nebuchadrezzar>  என்னும்  பாபிலோன்<Babylon>  ராஜாவை  வடக்கேயிருந்து  குதிரைகளோடும்  இரதங்களோடும்  குதிரைவீரரோடும்  கூட்டத்தோடும்  திரளான  ஜனத்தோடும்  தீருவுக்கு<Tyrus>  விரோதமாக  வரப்பண்ணுவேன்.  {Ezek  26:7}

 

அவன்  வெளியில்  இருக்கிற  உன்  குமாரத்திகளைப்  பட்டயத்தினால்  கொன்று,  உனக்கு  விரோதமாகக்  கொத்தளங்களைக்  கட்டி,  உனக்கு  விரோதமாக  அணைபோட்டு,  உனக்கு  விரோதமாகக்  கேடயங்களை  எடுத்து,  {Ezek  26:8}

 

உன்  மதில்களை  இடிக்கிற  யந்திரங்களை  எதிரே  வைத்து,  தன்  கட்டைப்பாரைகளால்  உன்  கொத்தளங்களை  இடித்துப்போடுவான்.  {Ezek  26:9}

 

அவன்  குதிரைகளின்  ஏராளத்தினால்  தூள்  எழும்பி  உன்னை  மூடும்;  இடித்துத்  திறப்பாக்கப்பட்ட  பட்டணத்தில்  பிரவேசிக்கும்  வண்ணமாக,  அவன்  உன்  வாசல்களுக்குள்  பிரவேசிக்கையில்,  குதிரைவீரரும்  வண்டில்களும்  இரதங்களும்  இரைகிற  சத்தத்தினாலே  உன்  மதில்கள்  அதிரும்.  {Ezek  26:10}

 

தன்  குதிரைகளின்  குளம்புகளினால்  உன்  வீதிகளையெல்லாம்  மிதிப்பான்;  உன்  ஜனத்தைப்  பட்டயத்தினால்  கொன்றுபோடுவான்;  உன்  பலமான  தூண்கள்  தரையில்  விழுந்துபோகும்.  {Ezek  26:11}

 

அவர்கள்  உன்  ஆஸ்தியைக்  கொள்ளையிட்டு,  உன்  சரக்குகளைச்  சூறையாடி,  உன்  மதில்களை  இடித்து,  உனக்கு  விருப்பமான  வீடுகளை  அழித்து,  உன்  கல்லுகளையும்  உன்  மரங்களையும்  உன்  மண்ணையும்  கடலின்  நடுவிலே  போட்டுவிடுவார்கள்.  {Ezek  26:12}

 

உன்  பாட்டுகளின்  சத்தத்தை  ஓயப்பண்ணுவேன்;  உன்  சுரமண்டலங்களின்  சத்தம்  இனிக்  கேட்கப்படுவதில்லை.  {Ezek  26:13}

 

உன்னை  வெறும்  பாறையாக்கிவிடுவேன்;  நீ  வலைகளை  விரிக்கிற  ஸ்தலமாயிருப்பாய்;  இனிக்  கட்டப்படாய்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  26:14}

 

தீருவுக்குக்<Tyrus>  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  காயம்பட்டவர்கள்  அலறும்போதும்,  உன்  நடுவில்  சங்காரம்  நடக்கும்போதும்,  நீ  விழுகிற  சத்தத்தினால்  தீவுகள்  அதிராதோ?  {Ezek  26:15}

 

கடலரசர்  எல்லாரும்  தங்கள்  சிங்காசனங்களைவிட்டு  இறங்கி;  தங்கள்  சால்வைகளைக்  கழற்றி,  தங்கள்  சித்திரத்தையலாடைகளை  உரிந்துபோடுவார்கள்;  நடுக்கமே  அவர்கள்  உடையாகும்;  தரையிலே  உட்கார்ந்து,  நிமிஷந்தோறும்  தத்தளித்து,  உன்னிமித்தம்  பிரமிப்பார்கள்.  {Ezek  26:16}

 

அவர்கள்  உன்னிமித்தம்  புலம்பி,  உன்னைக்  குறித்து:  கடல்  சஞ்சாரிகள்  குடியிருந்த  புகழ்பெற்ற  நகரியே,  ஐயோ!  உன்னில்  தங்கினவர்களுக்கெல்லாம்  பயமுண்டாக்கின  உன்  குடிகளோடுங்கூடச்  சமுத்திரத்திலே  பலத்திருந்த  நீ  அழிந்துபோனாயோ!  {Ezek  26:17}

 

நீ  விழும்  நாளில்  தீவுகள்  தத்தளிக்கும்;  நீ  அகன்றுபோகும்போது  சமுத்திரத்திலுள்ள  தீவுகள்  கலங்கும்  என்பார்கள்.  {Ezek  26:18}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  உன்னைக்  குடியில்லாத  நகரங்களைப்போலப்  பாழான  நகரமாக்கும்போதும்,  மிகுந்த  தண்ணீர்கள்  உன்னை  மூடத்தக்கதாய்  நான்  உன்மேல்  சமுத்திரத்தை  வரப்பண்ணும்போதும்,  {Ezek  26:19}

 

பூர்வகாலத்து  ஜனத்தண்டைக்குக்  குழியில்  இறங்குகிறவர்களோடே  நான்  உன்னை  இறங்கப்பண்ணுவேன்;  நீ  குடியேறாதிருக்கும்படி  பூர்வகாலமுதற்கொண்டு  பாழாயிருக்கிற  பூமியின்  தாழ்விடங்களிலே  குழியில்  இறங்குகிறவர்களோடேகூட  நான்  உன்னைத்  தங்கியிருக்கப்பண்ணுவேன்;  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலோ  மகிமை  விளங்கச்  செய்வேன்.  {Ezek  26:20}

 

உன்னை  மகா  பயங்கரமாக  வைப்பேன்;  இனி  நீ  இருக்கமாட்டாய்;  நீ  தேடப்பட்டாலும்  இனி  என்றைக்கும்  காணப்படமாட்டாய்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்  என்றார்.  {Ezek  26:21}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  27:1}

 

மனுபுத்திரனாகிய  நீ  இப்போது  தீருவின்பேரிலே<Tyrus>  புலம்பி,  {Ezek  27:2}

 

சமுத்திரக்  கரைதுறையிலே  குடியிருந்து,  அநேகம்  தீவுகளின்  ஜனங்களோடே  வியாபாரம்பண்ணுகிற  தீருவை<Tyrus>  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  தீருவே<Tyrus>,  நீ  உன்னைப்  பூரணசௌந்தரியவதி  என்கிறாய்.  {Ezek  27:3}

 

கடல்களின்  நடுமையத்திலே  உன்  தாபரம்  இருக்கிறது;  உன்னைக்  கட்டினவர்கள்  உன்னைப்  பூரணவடிவாய்க்  கட்டினார்கள்.  {Ezek  27:4}

 

சேனீரிலிருந்து<Senir>  வந்த  தேவதாருமரத்தால்  உன்  கப்பற்  பலகைகளைச்  செய்தார்கள்;  பாய்மரங்களைச்  செய்யும்படிக்கு  லீபனோனிலிருந்து<Lebanon>  கேதுருமரங்களைக்  கொண்டுவந்தார்கள்.  {Ezek  27:5}

 

பாசானின்<Bashan>  கர்வாலிமரங்களினாலே  உன்  துடுப்புகளைச்  செய்தார்கள்;  கித்தீம்<Chittim>  தீவுகளிலிருந்து  வந்த  ஆஷூர்<Ashurites>  மரத்தால்  உன்  வாரிபலகைகளைச்  செய்து,  அதிலே  யானைத்தந்தம்  அழுத்தியிருந்தார்கள்.  {Ezek  27:6}

 

எகிப்திலிருந்து<Egypt>  வந்த  சித்திரத்தையலுள்ள  சணல்நூல்  புடவை  நீ  விரித்த  பாயாயிருந்தது;  எலீசா<Elishah>  தீவுகளின்  இளநீலமும்  இரத்தாம்பரமும்  உன்  விதானமாயிருந்தது.  {Ezek  27:7}

 

சீதோன்<Zidon>  அர்வாத்<Arvad>  என்னும்  பட்டணங்களின்  குடிகள்  உனக்குத்  தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள்.  தீருவே<Tyrus>,  உன்னிடத்திலிருந்த  உன்  சாஸ்திரிகள்  உன்  மாலுமிகளாயிருந்தார்கள்.  {Ezek  27:8}

 

கேபாரின்<Gebal>  முதியோரும்  அதின்  சாஸ்திரிகளும்  உன்னில்  கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்;  சமுத்திரத்தின்  சகல  கப்பல்களும்  அவைகளிலுள்ள  கப்பற்காரரும்  உன்னோடே  தொழில்துறை  வியாபாரம்  பண்ணுகிறதற்காக  உன்னிடத்தில்  இருந்தார்கள்.  {Ezek  27:9}

 

பெர்சியரும்<Persia>,  லூதியரும்<Lud>,  பூத்தியரும்<Phut>  உன்  இராணுவத்தில்  யுத்தவீரராயிருந்து  உனக்குள்  கேடகமும்  தலைச்சீராவும்  தூக்கிவைத்து,  உன்னை  அலங்கரித்தார்கள்.  {Ezek  27:10}

 

அர்வாத்<Arvad>  புத்திரரும்  உன்  இராணுவ  மனுஷரும்  உன்  மதில்கள்மேல்  சுற்றிலும்,  கம்மாத்தியர்<Gammadims>  உன்  கொத்தளங்களிலும்  இருந்தார்கள்;  இவர்கள்  உன்  மதில்கள்மேல்  சுற்றிலும்  தங்கள்  பரிசைகளைத்  தூக்கிவைத்து,  உன்  வடிவத்தைப்  பூரணப்படுத்தினார்கள்.  {Ezek  27:11}

 

சகலவித  பொருள்களின்  திரளினாலும்  தர்ஷீஸ்<Tarshish>  ஊரார்  உன்னோடே  வியாபாரம்  பண்ணினார்கள்;  வெள்ளியையும்  இரும்பையும்  தகரத்தையும்  ஈயத்தையும்  உன்  சந்தைகளில்  விற்கவந்தார்கள்.  {Ezek  27:12}

 

யாவான்<Javan>,  தூபால்<Tubal>,  மேசேக்<Meshech>  என்னும்  ஜாதியார்  உன்  வியாபாரிகளாயிருந்து,  மனுஷர்களையும்  வெண்கலப்பாத்திரங்களையும்  உன்  தொழில்துறைக்குக்  கொண்டுவந்தார்கள்.  {Ezek  27:13}

 

தொகர்மா<Togarmah>  வம்சத்தார்  குதிரைகளையும்  குதிரைவீரரையும்  கோவேறு  கழுதைகளையும்  உன்  சந்தைகளுக்குக்  கொண்டுவந்தார்கள்.  {Ezek  27:14}

 

தேதான்<Dedan>  புத்திரர்  உன்  வியாபாரிகளாயிருந்தார்கள்;  அநேகம்  தீவுகளின்  வர்த்தகம்  உன்  வசமாகச்  சேர்ந்தது;  யானைத்தந்தங்களையும்  கருங்காலி  மரங்களையும்  அவைகளுக்குப்  பதிலாகக்  கொண்டுவந்தார்கள்.  {Ezek  27:15}

 

சீரியர்<Syria>  உன்  வேலைப்பாடான  பற்பல  பொருள்களினிமித்தம்  உன்னோடே  வியாபாரம்பண்ணி,  மரகதங்களையும்,  இரத்தாம்பரங்களையும்,  சித்திரத்தையலாடைகளையும்,  உயர்ந்த  வஸ்திரங்களையும்,  பவளங்களையும்,  பளிங்கையும்  உன்  சந்தைகளில்  விற்கவந்தார்கள்.  {Ezek  27:16}

 

யூதரும்<Judah>  இஸ்ரவேல்<Israel>  தேசத்தாரும்  உன்னோடே  வியாபாரம்பண்ணி,  மின்னீத்<Minnith>,  பன்னாக்<Pannag>  என்கிற  ஊர்களின்  கோதுமையையும்,  தேனையும்,  எண்ணெயையும்,  பிசின்தைலத்தையும்  உன்  தொழில்துறைக்குக்  கொண்டுவந்தார்கள்.  {Ezek  27:17}

 

தமஸ்கு<Damascus>  உன்  வேலைப்பாடான  பற்பல  பொருள்களினிமித்தமும்,  சகலவிதப்  பொருள்களின்  திரட்சியினிமித்தமும்  உன்னோடே  வர்த்தகம்பண்ணி,  கெல்போனின்<Helbon>  திராட்சரசத்தையும்  வெண்மையான  ஆட்டுமயிரையும்  உனக்கு  விற்றார்கள்.  {Ezek  27:18}

 

தாண்<Dan>  நாட்டாரும்,  போக்கும்  வரத்துமான  யாவானரும்<Javan>  துலக்கப்பட்ட  இரும்பையும்  இலவங்கத்தையும்  வசம்பையும்  உன்  சந்தைகளில்  கொண்டுவந்து  உன்  தொழில்துறையில்  விற்றார்கள்.  {Ezek  27:19}

 

இரதங்களுக்குப்  போடுகிற  மேன்மையான  இரத்தினக்கம்பளங்களைத்  தேதானின்<Dedan>  மனுஷர்  கொண்டுவந்து,  உன்னோடே  வியாபாரம்பண்ணினார்கள்.  {Ezek  27:20}

 

அரபியரும்<Arabia>,  கேதாரின்<Kedar>  சகல  பிரபுக்களும்  உனக்கு  வாடிக்கையான  வர்த்தகராகி,  ஆட்டுக்குட்டிகளையும்  ஆட்டுக்கடாக்களையும்  வெள்ளாட்டுக்கடாக்களையும்  கொண்டுவந்து,  உன்னோடே  வியாபாரம்பண்ணினார்கள்.  {Ezek  27:21}

 

சேபா<Sheba>,  ராமா<Raamah>  பட்டணங்களின்  வியாபாரிகள்  உன்னோடே  வர்த்தகம்பண்ணி,  மேல்தரமான  சகலவித  சம்பாரங்களையும்,  சகலவித  இரத்தினக்கற்களையும்,  பொன்னையும்  உன்  சந்தைகளில்  கொண்டுவந்தார்கள்.  {Ezek  27:22}

 

ஆரான்<Haran>,  கன்னே<Canneh>,  ஏதேன்<Eden>  என்னும்  பட்டணத்தாரும்,  சேபாவின்<Sheba>  வியாபாரிகளும்,  அசீரியரும்<Asshur>,  கில்மாத்<Chilmad>  பட்டணத்தாரும்  உன்னோடே  வியாபாரம்பண்ணினார்கள்.  {Ezek  27:23}

 

இவர்கள்  சகலவித  உயர்ந்த  சரக்குகளையும்,  இளநீலப்  பட்டுகளும்  விசித்திரத்தையலாடைகளும்  அடங்கிய  புடவைக்கட்டுகளையும்,  விலை  உயர்ந்த  வஸ்திரங்கள்  வைக்கப்பட்டு,  கயிறுகளால்  கட்டியிருக்கும்  கேதுருமரப்பெட்டிகளையும்  கொண்டுவந்து,  உன்னோடே  வியாபாரம்பண்ணினார்கள்.  {Ezek  27:24}

 

உன்  தொழில்துறையில்  தர்ஷீசின்<Tarshish>  கப்பலாட்கள்  உன்னைப்  போற்றிப்  பாடினார்கள்;  நீ  சமுத்திரத்தின்  நடுவிலே  உன்னைப்  பூரணப்படுத்தி,  உன்னை  மிகவும்  மகிமைப்படுத்தினாய்.  {Ezek  27:25}

 

தண்டுவலிக்கிறவர்கள்  ஆழமான  தண்ணீர்களில்  உன்னை  வலித்துக்கொண்டுபோனார்கள்;  நடுச்சமுத்திரத்திலே  கொண்டற்காற்று  உன்னை  உடைத்துப்போட்டது.  {Ezek  27:26}

 

நீ  நாசமடையும்  நாளிலே  உன்  ஆஸ்தியோடும்,  உன்  சந்தைகளோடும்,  உன்  தொழில்துறையோடுங்கூட  உன்  கப்பலாட்களும்,  உன்  மாலுமிகளும்,  உன்னில்  கம்பத்துப்பார்க்கிறவர்களும்,  உன்  வியாபாரிகளும்,  உன்னிலுள்ள  எல்லா  யுத்தவீரரும்,  உன்  நடுவில்  இருக்கிற  எல்லாக்  கூட்டத்தாரும்  நடுச்சமுத்திரத்திலே  விழுவார்கள்.  {Ezek  27:27}

 

உன்  மாலுமிகள்  ஓலமிடும்  சத்தத்தினால்  சுற்றுப்புறங்கள்  அதிரும்.  {Ezek  27:28}

 

தண்டுவலிக்கிற  யாவரும்,  கப்பலாட்களும்,  கடல்  மாலுமிகள்  அனைவரும்,  தங்கள்  கப்பல்களை  விட்டுஇறங்கி,  கரையிலே  நின்று,  {Ezek  27:29}

 

உன்னிமித்தம்  சத்தமிட்டுப்புலம்பி,  மனங்கசந்து  அழுது,  தங்கள்  தலைகளின்மேல்  புழுதியைப்  போட்டுக்கொண்டு,  சாம்பலில்  புரண்டு,  {Ezek  27:30}

 

உனக்காக  மொட்டையிட்டு  இரட்டுடுத்திக்கொண்டு,  உனக்காக  மனங்கசந்து  அழுது,  துக்கங்கொண்டாடுவார்கள்.  {Ezek  27:31}

 

அவர்கள்  உனக்காகத்  தங்கள்  துக்கத்திலே  ஓலமிட்டு,  உன்னிமித்தம்  புலம்பி,  உன்னைக்குறித்து:  சமுத்திரத்தின்  நடுவிலே  அழிந்துபோன  தீருவுக்குச்<Tyrus>  சமான  நகரம்  உண்டோ?  {Ezek  27:32}

 

உன்  சந்தைச்சரக்குகள்  சமுத்திரங்கள்  வழியாய்க்  கொண்டுவரப்படுகையில்,  அநேக  ஜனங்களைத்  திருப்தியாக்கினாய்;  உன்  ஆஸ்தியின்  திரளினாலும்  உன்  வியாபாரத்தினாலும்  பூமியின்  ராஜாக்களை  ஐசுவரியவான்களாக்கினாய்.  {Ezek  27:33}

 

நீ  சமுத்திரத்  திரைகளினாலே  ஆழங்களில்  உடைக்கப்பட்டபோது,  உன்  தொழில்  துறையும்  உன்  நடுவிலுள்ள  கூட்டம்  அனைத்தும்  அழிந்துபோயின  என்பார்கள்.  {Ezek  27:34}

 

தீவுகளின்  குடிகள்  எல்லாம்  உன்னிமித்தம்  திகைப்பார்கள்;  அவர்களுடைய  ராஜாக்கள்  மிகவும்  பிரமித்து,  கலங்கின  முகமாயிருப்பார்கள்.  {Ezek  27:35}

 

சகல  ஜனங்களிலுமுள்ள  வர்த்தகர்  உன்பேரில்  ஈசல்போடுவார்கள்;  நீ  பயங்கரமாவாய்;  இனி  ஒருபோதும்  இருக்கமாட்டாய்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  27:36}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  28:1}

 

மனுபுத்திரனே,  நீ  தீருவின்<Tyrus>  அதிபதியை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  உன்  இருதயம்  மேட்டிமைகொண்டு:  நான்  தேவன்,  நான்  சமுத்திரத்தின்  நடுவே  தேவாசனத்தில்  வீற்றிருக்கிறேன்  என்று  நீ  சொல்லி,  உன்  இருதயத்தைத்  தேவனின்  இருதயத்தைப்போல்  ஆக்கினாலும்,  நீ  மனுஷனேயல்லாமல்  தேவனல்ல.  {Ezek  28:2}

 

இதோ,  தானியேலைப்பார்க்கிலும்<Daniel>  நீ  ஞானவான்;  இரகசியமானதொன்றும்  உனக்கு  மறைபொருள்  அல்ல.  {Ezek  28:3}

 

நீ  உன்  ஞானத்தினாலும்  உன்  புத்தியினாலும்  பொருள்  சம்பாதித்து,  பொன்னையும்  வெள்ளியையும்  உன்  பொக்கிஷசாலைகளில்  சேர்த்துக்கொண்டாய்.  {Ezek  28:4}

 

உன்  வியாபாரத்தினாலும்  உன்  மகா  ஞானத்தினாலும்  உன்  பொருளைப்  பெருகப்பண்ணினாய்;  உன்  இருதயம்  உன்  செல்வத்தினால்  மேட்டிமையாயிற்று.  {Ezek  28:5}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  உன்  இருதயத்தைத்  தேவனின்  இருதயத்தைப்போல  ஆக்குகிறபடியினால்,  {Ezek  28:6}

 

இதோ,  ஜாதிகளில்  மகா  பலவான்களாகிய  மறுதேசத்தாரை  உனக்கு  விரோதமாய்  வரப்பண்ணுவேன்;  அவர்கள்  உன்  ஞானத்தின்  அழகுக்கு  விரோதமாய்த்  தங்கள்  பட்டயங்களை  உருவி,  உன்  மினுக்கைக்  குலைத்துப்போடுவார்கள்.  {Ezek  28:7}

 

உன்னைக்  குழியிலே  விழத்தள்ளுவார்கள்;  நீ  சமுத்திரங்களின்  நடுவே  கொலையுண்டு  சாகிறவர்களைப்போல்  சாவாய்.  {Ezek  28:8}

 

உன்னைக்  கொல்லுகிறவனுக்கு  முன்பாக:  நான்  தேவனென்று  நீ  சொல்வாயோ?  உன்னைக்  குத்திப்போடுகிறவன்  கைக்கு  நீ  மனுஷனேயல்லாமல்  தேவனல்லவே.  {Ezek  28:9}

 

மறுதேசத்தாரின்  கையினால்  நீ  விருத்தசேதனமில்லாதவர்கள்  சாவதுபோல்  சாவாய்;  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  28:10}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  28:11}

 

மனுபுத்திரனே,  நீ  தீரு<Tyrus>  ராஜாவைக்குறித்துப்  புலம்பி,  அவனை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  நீ  விசித்திரமாய்ச்  செய்யப்பட்ட  முத்திரைமோதிரம்;  நீ  ஞானத்தால்  நிறைந்தவன்;  பூரண  அழகுள்ளவன்.  {Ezek  28:12}

 

நீ  தேவனுடைய  தோட்டமாகிய  ஏதேனில்<Eden>  இருந்தவன்;  பத்மராகம்,  புஷ்பராகம்,  வைரம்,  படிகப்பச்சை,  கோமேதகம்,  யஸ்பி,  இந்திரநீலம்,  மரகதம்,  மாணிக்கம்  முதலான  சகலவித  இரத்தினங்களும்  பொன்னும்  உன்னை  மூடிக்கொண்டிருக்கிறது;  நீ  சிருஷ்டிக்கப்பட்ட  நாளில்  உன்  மேளவாத்தியங்களும்  உன்  நாகசுரங்களும்  உன்னிடத்தில்  ஆயத்தப்பட்டிருந்தது.  {Ezek  28:13}

 

நீ  காப்பாற்றுகிறதற்காக  அபிஷேகம்பண்ணப்பட்ட  கேருப்<cherub>;  தேவனுடைய  பரிசுத்த  பர்வதத்தில்  உன்னை  வைத்தேன்;  அக்கினிமயமான  கற்களின்  நடுவே  உலாவினாய்.  {Ezek  28:14}

 

நீ  சிருஷ்டிக்கப்பட்ட  நாள்துவக்கி  உன்னில்  அநியாயம்  கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும்,  உன்  வழிகளில்  குறையற்றிருந்தாய்.  {Ezek  28:15}

 

உன்  வியாபாரத்தின்  மிகுதியினால்,  உன்  கொடுமை  அதிகரித்து  நீ  பாவஞ்செய்தாய்;  ஆகையால்  நான்  உன்னைத்  தேவனுடைய  பர்வதத்திலிருந்து  ஆகாதவனென்று  தள்ளி,  காப்பாற்றுகிற  கேருபாய்<cherub>  இருந்த  உன்னை  அக்கினிமயமான  கற்களின்  நடுவே  இராதபடிக்கு  அழித்துப்போடுவேன்.  {Ezek  28:16}

 

உன்  அழகினால்  உன்  இருதயம்  மேட்டிமையாயிற்று;  உன்  மினுக்கினால்  உன்  ஞானத்தைக்  கெடுத்தாய்;  உன்னைத்  தரையிலே  தள்ளிப்போடுவேன்;  ராஜாக்கள்  உன்னைப்  பார்க்கும்படி  உன்னை  அவர்களுக்கு  முன்பாக  வேடிக்கையாக்குவேன்.  {Ezek  28:17}

 

உன்  அக்கிரமங்களின்  ஏராளத்தினாலும்,  உன்  வியாபாரத்தின்  அநீதத்தினாலும்  உன்  பரிசுத்த  ஸ்தலங்களைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்;  ஆகையால்  உன்னைப்  பட்சிப்பதாகிய  ஒரு  அக்கினியை  நான்  உன்  நடுவிலிருந்து  புறப்படப்பண்ணி,  உன்னைப்பார்க்கிற  எல்லாருடைய  கண்களுக்கு  முன்பாகவும்  உன்னைப்  பூமியின்மேல்  சாம்பலாக்குவேன்.  {Ezek  28:18}

 

ஜனங்களில்  உன்னை  அறிந்த  அனைவரும்  உன்னிமித்தம்  திகைப்பார்கள்;  மகா  பயங்கரமாவாய்;  இனி  ஒருபோதும்  இருக்கமாட்டாய்  என்று  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  28:19}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  28:20}

 

மனுபுத்திரனே,  நீ  உன்  முகத்தைச்  சீதோனுக்கு<Zidon>  எதிராகத்  திருப்பி,  அதற்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  {Ezek  28:21}

 

கர்த்தராகிய  தேவன்  சொல்லுகிறார்:  சீதோனே<Zidon>,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  உன்  நடுவிலே  மகிமைப்படுவேன்;  நான்  அதிலே  நியாயத்தீர்ப்புகளைச்  செய்து,  அதிலே  பரிசுத்தரென்று  விளங்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  28:22}

 

நான்  அதிலே  கொள்ளைநோயையும்,  அதின்  வீதிகளில்  இரத்தத்தையும்  வரப்பண்ணுவேன்;  அதற்கு  விரோதமாய்ச்  சுற்றிலும்  வந்த  பட்டயத்தினால்  காயம்பட்டவர்கள்  அதின்  நடுவிலே  வெட்டுண்டு  விழுவார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  28:23}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  இகழ்ந்த  அவர்களுடைய  சுற்றுப்புறத்தாராகிய  அனைவரிலும்,  இனித்  தைக்கிற  முள்ளும்  நோவுண்டாக்குகிற  நெரிஞ்சிலும்  அவர்களுக்கு  இராது;  அப்பொழுது  நான்  கர்த்தராகிய  ஆண்டவரென்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  28:24}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை,  அவர்கள்  சிதறடிக்கப்பட்டிருக்கிற  ஜனங்களிடத்திலிருந்து  சேர்த்துக்கொண்டுவந்து,  அவர்களால்  ஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாகப்  பரிசுத்தரென்று  விளங்கும்போது,  அவர்கள்  என்  தாசனாகிய  யாக்கோபுக்கு<Jacob>  நான்  கொடுத்த  தங்களுடைய  தேசத்திலே  குடியிருப்பார்கள்.  {Ezek  28:25}

 

அவர்களுடைய  சுற்றுப்புறத்தாரில்  அவர்களை  இகழ்ந்த  அனைவரிலும்  நான்  நியாயத்தீர்ப்புகளைச்  செய்யும்போது,  அவர்கள்  அதிலே  சுகமாய்க்  குடியிருந்து,  வீடுகளைக்  கட்டி,  திராட்சத்தோட்டங்களை  நாட்டி,  சுகமாய்  வாழ்ந்து,  நான்  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  28:26}

 

பத்தாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  பன்னிரண்டாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  29:1}

 

மனுபுத்திரனே,  நீ  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனுக்கு<Pharaoh>  எதிராக  உன்  முகத்தைத்  திருப்பி,  அவனுக்கும்  எகிப்து<Egypt>  முழுதுக்கும்  விரோதமாய்த்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  {Ezek  29:2}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்,  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனே<Pharaoh>,  நீ  உன்  நதிகளின்  நடுவிலே  படுத்துக்கொண்டு:  என்  நதி  என்னுடையது,  நான்  அதை  எனக்காக  உண்டுபண்ணினேன்  என்று  சொல்லுகிற  பெரிய  முதலையே,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாய்  வந்து,  {Ezek  29:3}

 

உன்  வாயிலே  துறடுகளை  மாட்டி,  உன்  நதிகளின்  மச்சங்களை  உன்  செதிள்களில்  ஒட்டிக்கொள்ளும்படி  செய்து,  உன்னை  உன்  நதிகளின்  நடுவிலிருந்து  தூக்கிவிடுவேன்;  உன்  நதிகளின்  மச்சங்களெல்லாம்  உன்  செதில்களில்  ஒட்டிக்கொண்டிருக்கும்.  {Ezek  29:4}

 

உன்னையும்  உன்  நதிகளின்  எல்லா  மச்சங்களையும்  வனாந்தரத்திலே  போட்டுவிடுவேன்;  வெட்டவெளியிலே  விழுவாய்;  நீ  சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை;  உன்னைப்  பூமியின்  மிருகங்களுக்கும்  ஆகாயத்தின்  பறவைகளுக்கும்  இரையாகக்  கொடுப்பேன்.  {Ezek  29:5}

 

அப்பொழுது  எகிப்துதேசத்தின்<Egypt>  குடிகளெல்லாரும்  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்;  அவர்கள்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்கு  நாணற்கோலாயிருந்தார்களே.  {Ezek  29:6}

 

அவர்கள்  உன்னைக்  கையிலே  பிடிக்கும்போது,  நீ  ஒடிந்துபோய்,  அவர்கள்  விலாவையெல்லாம்  பிளப்பாய்;  அவர்கள்  உன்மேல்  சாயும்போது,  நீ  முறிந்து,  அவர்கள்  இடுப்பு  முழுவதையும்  மரத்துப்போகப்பண்ணுவாய்.  {Ezek  29:7}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  உன்மேல்  பட்டயத்தை  வரப்பண்ணி,  உன்னில்  மனுஷரையும்  மிருகங்களையும்  சங்காரம்பண்ணுவேன்.  {Ezek  29:8}

 

எகிப்து<Egypt>  தேசம்  பாழும்  வனாந்தரமுமாகும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்:  நதி  என்னுடையது,  நான்  அதை  உண்டாக்கினேன்  என்று  சொன்னானே.  {Ezek  29:9}

 

ஆகையால்,  இதோ,  நான்  உனக்கும்  உன்  நதிகளுக்கும்  விரோதமாக  வந்து,  மிக்தோல்முதல்<Migdol>  எத்தியோப்பியாவின்<Ethiopia>  எல்லையிலுள்ள  செவெனேவரைக்கும்<Syene>  எகிப்துதேசத்தை<Egypt>  அவாந்தரமும்  பாழுமான  வனாந்தரங்களாக்குவேன்.  {Ezek  29:10}

 

மனுஷனுடைய  கால்  அதைக்  கடப்பதுமில்லை,  மிருகஜீவனுடைய  கால்  அதை  மிதிப்பதுமில்லை;  அது  நாற்பது  வருஷம்  குடியற்றிருக்கும்.  {Ezek  29:11}

 

எகிப்துதேசத்தைப்<Egypt>  பாழாய்ப்போன  தேசங்களின்  நடுவிலே  பாழாய்ப்போகப்பண்ணுவேன்;  அதின்  பட்டணங்கள்  அவாந்தரமாக்கப்பட்ட  பட்டணங்களின்  நடுவிலே  நாற்பது  வருஷம்  பாழாய்க்  கிடக்கும்;  நான்  எகிப்தியரை<Egyptians>  ஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து,  அவர்களைத்  தேசங்களுக்குள்ளே  தூற்றிவிடுவேன்.  {Ezek  29:12}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நாற்பதுவருஷம்  முடியும்போது,  நான்  எகிப்தியரை<Egyptians>  அவர்கள்  சிதறுண்டிருக்கிற  ஜனங்களிடத்திலிருந்து  சேர்த்துக்கொண்டு,  {Ezek  29:13}

 

எகிப்தியரின்<Egypt>  சிறையிருப்பைத்  திருப்பி,  அவர்களை  அவர்களுடைய  ஜநநதேசமாகிய  பத்ரோஸ்<Pathros>  தேசத்திலே  திரும்பிவரப்பண்ணுவேன்;  அங்கே  அவர்கள்  அற்ப  ராஜ்யமாயிருப்பார்கள்.  {Ezek  29:14}

 

அது  இனி  ஜாதிகளின்மேல்  தன்னை  உயர்த்தாமல்,  மற்ற  ராஜ்யங்களிலும்  அற்பமானதாயிருக்கும்;  அவர்கள்  இனி  ஜாதிகளை  ஆளாதபடிக்கு  அவர்களைக்  குறுகிப்போகப்பண்ணுவேன்.  {Ezek  29:15}

 

அவர்களின்  பிறகே  போய்,  அவர்களை  நோக்கிக்கொண்டிருக்கிறதினால்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  எனக்குத்  தங்கள்  அக்கிரமத்தை  நினைப்பூட்டாதபடிக்கு,  இனி  அவர்கள்  இவர்களுடைய  நம்பிக்கையாயிராமற்போவார்கள்;  அப்பொழுது  நான்  கர்த்தராகிய  ஆண்டவர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  29:16}

 

இருபத்தேழாம்  வருஷம்  முதலாம்  மாதம்  முதலாந்தேதியிலே,  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  29:17}

 

மனுபுத்திரனே,  பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்<Nebuchadrezzar>  தீருவின்<Tyrus>  முன்னே  தன்  சேனையினிடத்தில்  கடும்  ஊழியம்  வாங்கினான்;  ஒவ்வொரு  தலையும்  மொட்டையாயிற்று;  ஒவ்வொரு  தோள்பட்டையின்  தோலும்  உரிந்துபோயிற்று;  ஆனாலும்  அவன்  தீருவுக்கு<Tyrus>  விரோதமாகச்  செய்த  ஊழியத்தினாலே  அவனுக்காவது  அவன்  சேனைக்காவது  கூலி  கிடைக்கவில்லை.  {Ezek  29:18}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாருக்கு<Nebuchadrezzar>  எகிப்துதேசத்தைக்<Egypt>  கொடுக்கிறேன்;  அவன்  அதின்  ஏராளமான  ஜனத்தைச்  சிறைபிடித்து  அதின்  ஆஸ்தியைச்  சூறையாடி,  அதின்  கொள்ளைப்பொருளை  எடுத்துக்கொள்வான்;  இது  அவனுடைய  சேனைக்குக்  கூலியாயிருக்கும்.  {Ezek  29:19}

 

அவன்  அதிலே  செய்த  வேலைக்கு  எகிப்துதேசத்தை<Egypt>  நான்  அவனுக்குக்  கூலியாகக்  கொடுத்தேன்;  எனக்காக  அதைச்  செய்தார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  29:20}

 

அந்நாளிலே  நான்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  கொம்பை  முளைக்கப்பண்ணி,  அவர்கள்  நடுவிலே  தாராளமாய்ப்  பேசும்  வாயை  உனக்குக்  கட்டளையிடுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  {Ezek  29:21}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  30:1}

 

மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  சொல்லு:  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  ஐயோ!  ஆபத்துநாள்  வருகிறதென்று  அலறுங்கள்.  {Ezek  30:2}

 

நாள்  சமீபமாயிருக்கிறது;  ஆம்,  கர்த்தருடைய  நாள்  சமீபமாயிருக்கிறது;  அது  மந்தாரமான  நாள்,  அது  புறஜாதிகளுக்கு  வரும்  காலம்.  {Ezek  30:3}

 

பட்டயம்  எகிப்திலே<Egypt>  வரும்;  எகிப்திலே<Egypt>  கொலையுண்கிறவர்கள்  விழும்போது  எத்தியோப்பியாவிலே<Ethiopia>  மகா  வேதனை  உண்டாயிருக்கும்;  அதின்  ஏராளமான  ஜனத்தைப்  பிடித்துக்கொண்டுபோவார்கள்;  அதின்  அஸ்திபாரங்கள்  நிர்மூலமாக்கப்படும்.  {Ezek  30:4}

 

எத்தியோப்பியரும்<Ethiopia>,  பூத்தியரும்<Phut>,  லூத்தியரும்<Lud>,  கலந்த  கூட்டமாகிய  அனைவரும்,  கூபியரும்<Chub>,  உடன்படிக்கைக்குள்ளான  தேசத்தின்  புத்திரரும்  அவர்களோடேகூடப்  பட்டயத்தால்  விழுவார்கள்.  {Ezek  30:5}

 

எகிப்தை<Egypt>  ஆதரிக்கிறவர்களும்  விழுவார்கள்;  அதினுடைய  பலத்தின்  முக்கியமும்  தாழ்ந்துபோம்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அதிலே  மிக்தோல்முதல்<Syene>  செவெனேவரைக்கும்<Migdol>  பட்டயத்தினால்  விழுவார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  30:6}

 

பாழாய்ப்போன  தேசங்களின்  நடுவிலே  பாழாய்ப்போவார்கள்;  அவாந்தரமாக்கப்பட்ட  பட்டணங்களில்  அவர்கள்  பட்டணங்களும்  அவாந்தரமாகும்.  {Ezek  30:7}

 

நான்  எகிப்திலே<Egypt>  தீக்கொளுத்தும்போதும்,  உனக்குத்  துணைநின்ற  யாவரும்  முறிக்கப்படும்போதும்,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  30:8}

 

நிர்விசாரமான  எத்தியோப்பியரைத்<Ethiopians>  தத்தளிக்கப்பண்ண  அந்நாளிலே  என்  கட்டளையினால்  தூதாட்கள்  கப்பல்களிலே  போவார்கள்;  அப்பொழுது  எகிப்தின்<Egypt>  நாளிலே  உண்டானதுபோல  அவர்களுக்குள்ளே  மகா  வேதனை  உண்டாயிருக்கும்;  இதோ,  அது  வருகிறது.  {Ezek  30:9}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  பாபிலோன்<Babylon>  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரைக்கொண்டு<Nebuchadrezzar>  எகிப்தின்<Egypt>  சந்ததியை  ஒழியப்பண்ணுவேன்.  {Ezek  30:10}

 

இவனும்  இவனோடேகூட  ஜாதிகளில்  மகா  பலசாலிகளான  இவனுடைய  ஜனங்களும்  தேசத்தை  அழிப்பதற்காக  ஏவப்பட்டு  வந்து,  தங்கள்  பட்டயங்களை  எகிப்துக்கு<Egypt>  விரோதமாக  உருவி,  கொலையுண்டவர்களாலே  தேசத்தை  நிரப்புவார்கள்.  {Ezek  30:11}

 

அப்பொழுது  நான்  நதிகளை  வற்றிப்போகப்பண்ணி,  தேசத்தைத்  துஷ்டர்களின்  கையிலே  விற்று,  தேசத்தையும்  அதிலுள்ள  யாவையும்  அந்நியதேசத்தாரின்  கையால்  பாழாக்கிப்போடுவேன்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்.  {Ezek  30:12}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  நரகலான  விக்கிரகங்களை  அழித்து,  நோப்பின்<Noph>  சிலைகளை  ஒழியப்பண்ணுவேன்;  இனி  எகிப்துதேசத்தில்<Egypt>  ஒரு  அதிபதியும்  இரான்;  நான்  எகிப்துதேசத்தில்<Egypt>  பயமுண்டாக்கி,  {Ezek  30:13}

 

பத்ரோசைப்<Pathros>  பாழாக்கி,  சோவானிலே<Zoan>  தீக்கொளுத்தி,  நோ<No>  பட்டணத்தில்  ஆக்கினைகளைச்  செய்து,  {Ezek  30:14}

 

எகிப்தின்<Egypt>  பெலனாகிய  சீனின்மேல்<Sin>  என்  உக்கிரத்தை  ஊற்றி,  நோ<No>  பட்டணத்தின்  ஏராளமான  ஜனத்தைச்  சங்கரிப்பேன்.  {Ezek  30:15}

 

எகிப்தில்<Egypt>  தீக்கொளுத்துவேன்;  சீன்<Sin>  மகா  வேதனை  அடையும்;  நோ<No>  பட்டணம்  தகர்ந்து  இடிந்துபோகும்;  நோப்புக்குத்<Noph>  தினந்தோறும்  நெருக்கங்களுண்டாகும்.  {Ezek  30:16}

 

ஆவென்<Aven>,  பிபேசெத்<Pibeseth>  என்கிற  பட்டணங்களின்  வேலைக்காரர்  பட்டயத்தால்  விழுவார்கள்;  அவைகளின்  குடிகள்  சிறையிருப்புக்குப்  போவார்கள்.  {Ezek  30:17}

 

எகிப்தின்<Egypt>  நுகங்களை  நான்  முறிக்கும்போதும்,  அதினுடைய  பெலத்தின்  முக்கியம்  அதிலே  ஓயும்போதும்,  மந்தாரம்  அதை  மூடும்;  தக்பானேசிலே<Tehaphnehes>  பகல்  இருண்டுபோகும்;  அதின்  குமாரத்திகள்  சிறைப்பட்டுப்போவார்கள்.  {Ezek  30:18}

 

இப்படி  எகிப்திலே<Egypt>  நியாயத்தீர்ப்புகளைச்  செய்வேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  30:19}

 

பதினோராம்  வருஷம்  முதலாம்  மாதம்  ஏழாந்தேதியிலே,  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  30:20}

 

மனுபுத்திரனே,  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனுடைய<Pharaoh>  புயத்தை  முறித்துப்போடுவேன்;  இதோ,  அது  குணமாகத்தக்கதாகக்  கட்டப்படுவதில்லை;  அது  பட்டயத்தைப்  பிடிக்கத்தக்க  பெலனை  அடையும்படி  பத்தை  வைத்துக்  கட்டப்படுவதுமில்லை.  {Ezek  30:21}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனுக்கு<Pharaoh>  விரோதமாக  வந்து,  பெலனுள்ளதும்  முறிந்ததுமாகிய  அவனுடைய  புயங்களை  முறித்துப்போடுவேன்;  பட்டயத்தை  நான்  அவன்  கையிலிருந்து  விழப்பண்ணி,  {Ezek  30:22}

 

எகிப்தியரை<Egyptians>  ஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து,  அவர்களைத்  தேசங்களில்  தூற்றிவிடுவேன்.  {Ezek  30:23}

 

பாபிலோன்<Babylon>  ராஜாவின்  புயங்களைப்  பெலப்படுத்தி,  அவன்  கையிலே  என்  பட்டயத்தைக்  கொடுத்து,  பார்வோனின்<Pharaoh>  புயங்களை  முறித்துவிடுவேன்;  அப்பொழுது  அவன்  கொலையுண்கிறவன்  தவிக்கிறதுபோல  அவனுக்கு  முன்பாகத்  தவிப்பான்.  {Ezek  30:24}

 

பாபிலோன்<Babylon>  ராஜாவின்  புயங்களைப்  பெலப்படுத்துவேன்;  பார்வோனின்<Pharaoh>  புயங்களோ  விழுந்துபோம்;  என்  பட்டயத்தை  நான்  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  கையில்  கொடுக்கும்போதும்,  அவன்  அதை  எகிப்துதேசத்தின்மேல்<Egypt>  நீட்டும்போதும்,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  30:25}

 

நான்  எகிப்தியரை<Egyptians>  ஜாதிகளுக்குள்ளே  சிதறடித்து,  அவர்களைத்  தேசங்களில்  தூற்றிப்போடுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  30:26}

 

பதினோராம்  வருஷம்  மூன்றாம்  மாதம்  முதலாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  31:1}

 

மனுபுத்திரனே,  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனோடும்<Pharaoh>  அவனுடைய  திரளான  ஜனத்தோடும்  நீ  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீ  உன்  மகத்துவத்திலே  யாருக்கு  ஒப்பாயிருக்கிறாய்?  {Ezek  31:2}

 

இதோ,  அசீரியன்<Assyrian>  லீபனோனிலே<Lebanon>  அலங்காரக்  கொப்புகளோடும்,  நிழலிடும்  தழைகளோடும்,  வளர்ந்தோங்கிய  கேதுரு  விருட்சமாயிருந்தான்;  அதின்  கிளைகளின்  தழைகளுக்குள்ளே  அதின்  நுனிக்கொழுந்து  உயர்ந்திருந்தது.  {Ezek  31:3}

 

தண்ணீர்கள்  அதைப்  பெரிதும்,  ஆழம்  அதை  உயர்த்தியும்  ஆக்கின;  அதின்  ஆறுகள்  அதின்  அடிமரத்தைச்  சுற்றிலும்  ஓடின;  தன்  நீர்க்கால்களை  வெளியின்  விருட்சங்களுக்கெல்லாம்  பாயவிட்டது.  {Ezek  31:4}

 

ஆகையால்  வெளியின்  சகல  விருட்சங்களிலும்  அது  மிகவும்  உயர்ந்தது;  அது  துளிர்விடுகையில்  திரளான  தண்ணீரினால்  அதின்  கிளைகள்  பெருகி,  அதின்  கொப்புகள்  நீளமாயின.  {Ezek  31:5}

 

அதின்  கொப்புகளில்  ஆகாயத்தின்  பறவைகளெல்லாம்  கூடுகட்டின;  அதின்  கொப்புகளின்கீழ்  வெளியின்  மிருகங்களெல்லாம்  குட்டிகளைப்போட்டன;  பெரிதான  சகல  ஜாதிகளும்  அதின்  நிழலிலே  குடியிருந்தார்கள்.  {Ezek  31:6}

 

அப்படியே  அதின்  வேர்  திரளான  தண்ணீர்களருகே  இருந்ததினால்  அது  தன்  செழிப்பினாலும்  தன்  கொப்புகளின்  நீளத்தினாலும்  அலங்காரமாயிருந்தது.  {Ezek  31:7}

 

தேவனுடைய  வனத்திலுள்ள  கேதுருக்கள்  அதை  மறைக்கக்கூடாதிருந்தது;  தேவதாரு  விருட்சங்கள்  அதின்  கொப்புகளுக்குச்  சமானமல்ல;  அர்மோன்  மரங்கள்  அதின்  கிளைகளுக்கு  நிகரல்ல;  தேவனுடைய  வனத்திலுள்ள  ஒரு  விருட்சமும்  அலங்காரத்திலே  அதற்கு  ஒப்பல்ல.  {Ezek  31:8}

 

அதின்  கிளைகளின்  திரளினால்  அதை  அலங்கரித்தேன்;  தேவனுடைய  வனமாகிய  ஏதேனின்<Eden>  விருட்சங்களெல்லாம்  அதின்பேரில்  பொறாமைகொண்டன.  {Ezek  31:9}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அது  தன்  வளர்த்தியிலே  மேட்டிமையாகி,  கொப்புகளின்  தழைகளுக்குள்ளே  தன்  நுனிக்கிளையை  ஓங்கவிட்டபடியினாலும்,  அதின்  இருதயம்  தன்  மேட்டிமையினால்  உயர்ந்துபோனபடியினாலும்,  {Ezek  31:10}

 

நான்  அதை  ஜாதிகளில்  மகா  வல்லமையுள்ளவன்  கையிலே  ஒப்புக்கொடுத்தேன்;  அவன்  தனக்கு  இஷ்டமானபடி  அதற்குச்  செய்வான்;  அதினுடைய  அக்கிரமத்தினிமித்தம்  அதைத்  தள்ளிப்போட்டேன்.  {Ezek  31:11}

 

ஜாதிகளில்  வல்லவராகிய  அந்நியதேசத்தார்  அதை  வெட்டிப்போட்டு,  விட்டுப்போனார்கள்;  அதின்  கொப்புகள்  மலைகளின்மேலும்  சகல  பள்ளத்தாக்குகளிலும்  விழுந்தன;  அதின்  கிளைகள்  தேசத்தினுடைய  எல்லா  ஆறுகளினருகே  முறிந்தன;  பூமியிலுள்ள  ஜனங்களெல்லாரும்  அதின்  நிழலைவிட்டுக்  கலைந்துபோனார்கள்.  {Ezek  31:12}

 

விழுந்துகிடக்கிற  அதின்மேல்  ஆகாயத்துப்  பறவைகளெல்லாம்  தாபரித்தன;  அதின்  கொம்புகளின்மேல்  வெளியின்  மிருகங்களெல்லாம்  தங்கின.  {Ezek  31:13}

 

தண்ணீரின்  ஓரமாய்  வளருகிற  எந்த  விருட்சங்களும்  தங்கள்  உயர்த்தியினாலே  மேட்டிமைகொள்ளாமலும்,  தங்கள்  கொப்புகளின்  தழைக்குள்ளே  தங்கள்  நுனிக்கிளையை  ஓங்கவிடாமலும்,  தண்ணீரைக்  குடிக்கிற  எந்த  மரங்களும்  தங்கள்  உயர்த்தியினாலே  தங்கள்மேல்  நம்பிக்கைவைக்காமலும்  இருக்கும்பொருட்டு  இப்படிச்  செய்வேன்;  மனுபுத்திரரின்  நடுவே  அவர்கள்  எல்லாரும்  குழியில்  இறங்குகிறவர்களோடேகூட  மரணத்துக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டு,  பூமியின்  தாழ்விடங்களில்  போனார்கள்.  {Ezek  31:14}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அவன்  பாதாளத்தில்  இறங்குகிற  நாளிலே  புலம்பலை  வருவித்தேன்;  நான்  அவனிமித்தம்  ஆழத்தை  மூடிப்போட்டு,  திரளான  தண்ணீர்கள்  ஓடாதபடிக்கு  அதின்  ஆறுகளை  அடைத்து,  அவனிமித்தம்  லீபனோனை<Lebanon>  இருளடையப்பண்ணினேன்;  வெளியின்  விருட்சங்களெல்லாம்  அவனிமித்தம்  பட்டுப்போயின.  {Ezek  31:15}

 

நான்  அவனைக்  குழியில்  இறங்குகிறவர்களோடேகூடப்  பாதாளத்தில்  இறங்கப்பண்ணுகையில்,  அவன்  விழுகிற  சத்தத்தினால்  ஜாதிகளை  அதிரப்பண்ணினேன்;  அப்பொழுது  பூமியின்  தாழ்விடங்களில்  ஏதேனின்<Eden>  விருட்சங்களும்,  லீபனோனின்<Lebanon>  மேன்மையான  சிறந்த  விருட்சங்களும்,  தண்ணீர்  குடிக்கும்  சகல  மரங்களும்  ஆறுதல்  அடைந்தன.  {Ezek  31:16}

 

அவனோடேகூட  இவர்களும்,  ஜாதிகளின்  நடுவே  அவன்  நிழலில்  குடியிருந்து  அவனுக்குப்  புயபலமாயிருந்தவர்களும்,  பட்டயத்தால்  வெட்டுண்டவர்களண்டையிலே  பாதாளத்தில்  இறங்கினார்கள்.  {Ezek  31:17}

 

இப்படிப்பட்ட  மகிமையிலும்  மகத்துவத்திலும்  ஏதேனின்<Eden>  விருட்சங்களில்  நீ  எதற்கு  ஒப்பானவன்?  ஏதேனின்<Eden>  விருட்சங்களோடேகூட  நீயும்  பூமியின்  தாழ்விடங்களில்  இறக்கப்பட்டு,  பட்டயத்தாலே  வெட்டுண்டவர்களோடேகூட  விருத்தசேதனமில்லாதவர்களின்  நடுவிலே  கிடப்பாய்;  பார்வோனும்<Pharaoh>  அவன்  கூட்டமும்  இதுவே  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  31:18}

 

பன்னிரண்டாம்  வருஷம்  பன்னிரண்டாம்  மாதம்  முதலாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  32:1}

 

மனுபுத்திரனே,  நீ  எகிப்தின்<Egypt>  ராஜாவாகிய  பார்வோனைக்குறித்துப்<Pharaoh>  புலம்பி,  அவனோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  ஜாதிகளுக்குள்ளே  நீ  பாலசிங்கத்துக்கு  ஒப்பானவன்;  நீ  பெருந்தண்ணீர்களில்  முதலையைப்போல்  இருந்து,  உன்  நதிகளில்  எழும்பி,  உன்  கால்களால்  தண்ணீர்களைக்  கலக்கி,  அவைகளின்  ஆறுகளைக்  குழப்பிவிட்டாய்.  {Ezek  32:2}

 

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  நான்  வெகு  ஜனக்கூட்டத்தைக்கொண்டு  உன்மேல்  என்  வலையை  வீசுவேன்;  அவர்கள்  என்  வலையில்  உன்னை  இழுத்துக்கொள்வார்கள்.  {Ezek  32:3}

 

உன்னைத்  தரையிலே  போட்டுவிடுவேன்;  நான்  உன்னை  வெட்டவெளியில்  எறிந்துவிட்டு,  ஆகாயத்துப்  பறவைகளையெல்லாம்  உன்மேல்  இறங்கப்பண்ணி,  பூமியனைத்தின்  மிருகங்களையும்  உன்னால்  திருப்தியாக்கி,  {Ezek  32:4}

 

உன்  சதையைப்  பர்வதங்களின்மேல்  போட்டு,  உன்  உடலினாலே  பள்ளத்தாக்குகளை  நிரப்பி,  {Ezek  32:5}

 

நீ  நீந்தின  தேசத்தின்மேல்  உன்  இரத்தத்தைப்  பர்வதங்கள்மட்டும்  பாயச்செய்வேன்;  ஆறுகள்  உன்னாலே  நிரம்பும்.  {Ezek  32:6}

 

உன்னை  நான்  அணைத்துப்போடுகையில்,  வானத்தை  மூடி,  அதின்  நட்சத்திரங்களை  இருண்டுபோகப்பண்ணுவேன்;  சூரியனை  மேகத்தினால்  மூடுவேன்,  சந்திரனும்  தன்  ஒளியைக்கொடாதிருக்கும்.  {Ezek  32:7}

 

நான்  வானஜோதியான  விளக்குகளையெல்லாம்  உன்மேல்  இருண்டுபோகப்பண்ணி,  உன்  தேசத்தின்மேல்  அந்தகாரத்தை  வரப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  32:8}

 

உன்  சங்காரத்தை  ஜாதிகள்மட்டும்,  நீ  அறியாத  தேசங்கள்மட்டும்  நான்  எட்டப்பண்ணுகையில்,  அநேகம்  ஜனங்களின்  இருதயத்தை  விசனமடையப்பண்ணுவேன்.  {Ezek  32:9}

 

அநேகம்  ஜனங்களை  உன்னிமித்தம்  திகைக்கப்பண்ணுவேன்;  அவர்களின்  ராஜாக்கள்,  தங்கள்  முகங்களுக்கு  முன்பாக  என்  பட்டயத்தை  நான்  வீசுகையில்  மிகவும்  திடுக்கிடுவார்கள்;  நீ  விழும்  நாளில்  அவரவர்  தம்தம்  பிராணனுக்காக  நிமிஷந்தோறும்  தத்தளிப்பார்கள்.  {Ezek  32:10}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  பாபிலோன்<Babylon>  ராஜாவின்  பட்டயம்  உன்மேல்  வரும்.  {Ezek  32:11}

 

பராக்கிரமசாலிகளின்  பட்டயங்களால்  உன்  ஜனத்திரளை  விழப்பண்ணுவேன்;  அவர்களெல்லாரும்  ஜாதிகளில்  வல்லமையானவர்கள்;  அவர்கள்  எகிப்தின்<Egypt>  ஆடம்பரத்தைக்  கெடுப்பார்கள்;  அதின்  ஏராளமான  கூட்டம்  அழிக்கப்படும்.  {Ezek  32:12}

 

திரளான  தண்ணீர்களின்  கரைகளில்  நடமாடுகிற  அதின்  மிருகஜீவன்களையெல்லாம்  அழிப்பேன்;  இனி  மனுஷனுடைய  கால்  அவைகளைக்  கலக்குவதுமில்லை,  மிருகங்களுடைய  குளம்புகள்  அவைகளைக்  குழப்புவதுமில்லை.  {Ezek  32:13}

 

அப்பொழுது  அவர்களுடைய  தண்ணீர்களைத்  தெளியப்பண்ணி,  அவர்கள்  ஆறுகளை  எண்ணெயைப்போல்  ஓடப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  32:14}

 

நான்  எகிப்துதேசத்தைப்<Egypt>  பாழாக்கும்போதும்,  தேசம்  தன்  நிறைவை  இழந்து  வெறுமையாய்க்  கிடக்கும்போதும்,  நான்  அதில்  குடியிருக்கிற  யாவரையும்  சங்கரிக்கும்போதும்,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  32:15}

 

இது  புலம்பல்;  இப்படிப்  புலம்புவார்கள்;  இப்படி  ஜாதிகளின்  குமாரத்திகள்  புலம்புவார்கள்;  இப்படி  எகிப்துக்காகவும்<Egypt>,  அதினுடைய  எல்லாத்  திரளான  ஜனங்களுக்காகவும்  புலம்புவார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  32:16}

 

பின்னும்  பன்னிரண்டாம்  வருஷம்  அந்த  மாதத்தின்  பதினைந்தாந்தேதியிலே  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  32:17}

 

மனுபுத்திரனே,  நீ  எகிப்தினுடைய<Egypt>  ஏராளமான  ஜனத்தினிமித்தம்  புலம்பி,  அவர்களையும்  பிரபலமான  ஜாதிகளின்  குமாரத்திகளையும்  குழியில்  இறங்கினவர்கள்  அண்டையிலே  பூமியின்  தாழ்விடங்களில்  தள்ளிவிடு.  {Ezek  32:18}

 

மற்றவர்களைப்பார்க்கிலும்  நீ  அழகில்  சிறந்தவளோ?  நீ  இறங்கி,  விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில்  கிட.  {Ezek  32:19}

 

அவர்கள்  பட்டயத்தால்  வெட்டுண்டவர்களின்  நடுவிலே  விழுவார்கள்,  பட்டயத்துக்கு  ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்;  அவளையும்  அவளுடைய  ஜனத்திரள்  யாவையும்  பிடித்திழுங்கள்.  {Ezek  32:20}

 

பராக்கிரமசாலிகளில்  வல்லவர்களும்,  அவனுக்குத்  துணைநின்றவர்களும்,  பாதாளத்தின்  நடுவிலிருந்து  அவனோடே  பேசுவார்கள்;  அவர்கள்  விருத்தசேதனமில்லாதவர்களாய்ப்  பட்டயத்தால்  வெட்டுண்டு,  இறங்கி,  அங்கே  கிடக்கிறார்கள்.  {Ezek  32:21}

 

அங்கே  அசூரும்<Asshur>  அவனுடைய  எல்லாக்  கூட்டத்தாரும்  கிடக்கிறார்கள்;  அவனைச்  சுற்றிலும்  அவர்களுடைய  பிரேதக்குழிகள்  இருக்கிறது;  அவர்கள்  எல்லாரும்  பட்டயத்தால்  வெட்டுண்டு  விழுந்தவர்கள்தானே.  {Ezek  32:22}

 

பாதாளத்தின்  பக்கங்களில்  அவர்களுடைய  பிரேதக்குழிகள்  இருக்கிறது;  அவனுடைய  பிரேதக்குழியைச்  சுற்றிலும்  அவனுடைய  கூட்டம்  கிடக்கிறது,  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலே  கெடியுண்டாக்கின  அவர்களெல்லாரும்  பட்டயத்தால்  வெட்டுண்டு  விழுந்தவர்கள்தானே.  {Ezek  32:23}

 

அங்கே  ஏலாமும்<Elam>  அவனுடைய  பிரேதக்குழியைச்  சுற்றிலும்  அவனுடைய  எல்லா  ஏராளமான  ஜனமும்  கிடக்கிறார்கள்;  அவர்களெல்லாரும்  பட்டயத்தால்  வெட்டுண்டு  விழுந்து,  விருத்தசேதனமில்லாதவர்களாய்ப்  பூமியின்  தாழ்விடங்களில்  இறங்கினார்கள்;  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலே  கெடியுண்டாக்கின  அவர்கள்,  குழியில்  இறங்கினவர்களோடேகூடத்  தங்கள்  அவமானத்தைச்  சுமக்கிறார்கள்.  {Ezek  32:24}

 

வெட்டுண்டவர்களின்  நடுவே  அவனை  அவனுடைய  எல்லா  ஏராளமான  ஜனத்துக்குள்ளும்  கிடத்தினார்கள்;  அவனைச்  சுற்றிலும்  அவர்களுடைய  பிரேதக்குழிகள்  இருக்கிறது;  அவர்களெல்லாரும்  பட்டயத்தால்  வெட்டுண்ட  விருத்தசேதனமில்லாதவர்கள்;  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலே  அவர்கள்  கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும்,  அவர்கள்  குழியில்  இறங்கினவர்களோடேகூடத்  தங்கள்  அவமானத்தைச்  சுமக்கிறார்கள்;  அவன்  வெட்டுண்டவர்களின்  நடுவே  வைக்கப்பட்டிருக்கிறான்.  {Ezek  32:25}

 

அங்கே  மேசேக்கும்<Meshech>  தூபாலும்<Tubal>  அவர்களுடைய  ஏராளமான  ஜனங்களும்  கிடக்கிறார்கள்;  அவர்களைச்சுற்றிலும்  அவர்களுடைய  பிரேதக்குழிகள்  இருக்கிறது;  அவனுடைய  ஜீவனுள்ளோருடைய  தேசத்திலே  கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும்,  அவர்களெல்லாரும்  விருத்தசேதனமில்லாதவர்கள்;  பட்டயத்தால்  வெட்டுண்டு  விழுவார்கள்.  {Ezek  32:26}

 

ஜீவனுள்ளோருடைய  தேசத்திலே  பராக்கிரமசாலிகளுக்குக்  கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும்,  அவர்கள்  விருத்தசேதனமில்லாதவர்களாய்  விழுந்து,  தங்கள்  யுத்த  ஆயுதங்களோடு  பாதாளத்திலிறங்கின  பராக்கிரமசாலிகளோடே  இவர்கள்  கிடப்பதில்லை;  அவர்கள்  தங்கள்  பட்டயங்களைத்  தங்கள்  தலைகளின்கீழ்  வைத்தார்கள்;  ஆனாலும்  அவர்களுடைய  அக்கிரமம்  தங்கள்  எலும்புகளின்மேல்  இருக்கும்.  {Ezek  32:27}

 

நீயும்  விருத்தசேதனமில்லாதவர்களின்  நடுவே  நொறுங்குண்டு,  பட்டயத்தால்  வெட்டுண்டவர்களோடே  கிடப்பாய்.  {Ezek  32:28}

 

அங்கே  ஏதோமும்<Edom>  அதின்  ராஜாக்களும்  அதின்  எல்லாப்  பிரபுக்களும்  கிடக்கிறார்கள்;  பட்டயத்தால்  வெட்டுண்டவர்களிடத்தில்  இவர்கள்  தங்கள்  வல்லமையோடுங்கூடக்  கிடத்தப்பட்டார்கள்;  இவர்கள்  விருத்தசேதனமில்லாதவர்களிடத்திலும்,  குழியில்  இறங்குகிறவர்களிடத்திலும்  கிடக்கிறார்கள்.  {Ezek  32:29}

 

அங்கே  வடதிசை  அதிபதிகள்  அனைவரும்  எல்லாச்  சீதோனியரும்<Zidonians>  கிடக்கிறார்கள்;  இவர்கள்  கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும்  தங்கள்  பராக்கிரமத்தைக்  குறித்து  வெட்கப்பட்டு,  வெட்டுண்டவர்களிடத்தில்  இறங்கி,  பட்டயத்தால்  வெட்டுண்டவர்களோடே  விருத்தசேதனமில்லாதவர்களாய்க்  கிடந்து,  குழியில்  இறங்கினவர்களிடத்தில்  தங்கள்  அவமானத்தைச்  சுமந்துகொண்டிருக்கிறார்கள்.  {Ezek  32:30}

 

பார்வோன்<Pharaoh>  அவர்களைப்  பார்த்து  தன்  ஏராளமான  ஜனத்தின்பேரிலும்  ஆறுதலடைவான்;  பட்டயத்தால்  வெட்டுண்டார்களென்று,  பார்வோனும்<Pharaoh>  அவனுடைய  சர்வ  சேனையும்  ஆறுதலடைவார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  32:31}

 

என்னைப்பற்றிய  கெடியை  ஜீவனுள்ளோர்  தேசத்தில்  உண்டுபண்ணுகிறேன்,  பார்வோனும்<Pharaoh>  அவனுடைய  ஏராளமான  ஜனமும்  பட்டயத்தால்  வெட்டுண்டவர்களிடத்தில்  விருத்தசேதனமில்லாதவர்களின்  நடுவே  கிடத்தப்படுவார்கள்  என்கிறதைக்  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  32:32}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  33:1}

 

மனுபுத்திரனே,  நீ  உன்  ஜனத்தின்  புத்திரரோடே  பேசி,  அவர்களோடே  சொல்லவேண்டியதாவது:  நான்  தேசத்தின்மேல்  பட்டயத்தை  வரப்பண்ணுகையில்  தேசத்தின்  ஜனம்  தங்கள்  எல்லைகளிலுள்ள  ஒருவனை  அழைத்து,  அவனைத்  தங்களுக்குக்  காவற்காரனாக  வைத்தபின்பு,  {Ezek  33:2}

 

இவன்  தேசத்தின்மேல்  பட்டயம்  வருவதைக்கண்டு,  எக்காளம்  ஊதி,  ஜனத்தை  எச்சரிக்கும்போது,  {Ezek  33:3}

 

எக்காளத்தின்  சத்தத்தைக்  கேட்கிறவன்  அதைக்  கேட்டும்,  எச்சரிக்கையாயிராமல்,  பட்டயம்  வந்து  அவனை  வாரிக்கொள்ளுகிறது  உண்டானால்,  அவனுடைய  இரத்தப்பழி  அவன்  தலையின்மேல்  சுமரும்.  {Ezek  33:4}

 

அவன்  எக்காளத்தின்  சத்தத்தைக்  கேட்டும்,  எச்சரிக்கையாயிருக்கவில்லை;  அவனுடைய  இரத்தப்பழி  அவன்  பேரிலே  சுமரும்;  எச்சரிக்கையாயிருக்கிறவனோ  தன்  ஜீவனைத்  தப்புவித்துக்கொள்ளுவான்.  {Ezek  33:5}

 

காவற்காரன்  பட்டயம்  வருவதைக்  கண்டும்,  அவன்  எக்காளம்  ஊதாமலும்  ஜனங்கள்  எச்சரிக்கப்படாமலும்,  பட்டயம்  வந்து  அவர்களில்  யாதொருவனை  வாரிக்கொள்ளுகிறது  உண்டானால்,  அவன்  தன்  அக்கிரமத்திலே  வாரிக்கொள்ளப்பட்டான்;  ஆனாலும்  அவன்  இரத்தப்பழியைக்  காவற்காரன்  கையிலே  கேட்பேன்.  {Ezek  33:6}

 

மனுபுத்திரனே,  நான்  உன்னை  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்குக்  காவற்காரனாக  வைத்தேன்;  ஆகையால்  நீ  என்  வாயினாலே  வார்த்தையைக்கேட்டு,  என்  நாமத்தினாலே  அவர்களை  எச்சரிப்பாயாக.  {Ezek  33:7}

 

நான்  துன்மார்க்கனை  நோக்கி:  துன்மார்க்கனே,  நீ  சாகவே  சாவாய்  என்று  சொல்லுகையில்,  நீ  துன்மார்க்கனைத்  தன்  துன்மார்க்கத்தில்  இராதபடி  எச்சரிக்கத்தக்கதாக  அதை  அவனுக்குச்  சொல்லாமற்போனால்,  அந்தத்  துன்மார்க்கன்  தன்  அக்கிரமத்திலே  சாவான்;  ஆனாலும்  அவன்  இரத்தப்பழியை  உன்  கையிலே  கேட்பேன்.  {Ezek  33:8}

 

துன்மார்க்கன்  தன்  வழியைவிட்டுத்  திரும்பும்படி  நீ  அவனை  எச்சரித்தும்,  அவன்  தன்  வழியைவிட்டுத்  திரும்பாமற்போனால்,  அவன்  தன்  அக்கிரமத்திலே  சாவான்;  நீயோ  உன்  ஆத்துமாவைத்  தப்புவிப்பாய்.  {Ezek  33:9}

 

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  நோக்கி:  எங்கள்  துரோகங்களும்  எங்கள்  பாவங்களும்  எங்கள்மேல்  இருக்கிறது,  நாங்கள்  சோர்ந்துபோகிறோம்,  நாங்கள்  பிழைப்பது  எப்படியென்று  நீங்கள்  சொல்லுகிறீர்கள்.  {Ezek  33:10}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நான்  துன்மார்க்கனுடைய  மரணத்தை  விரும்பாமல்,  துன்மார்க்கன்  தன்  வழியைவிட்டுத்  திரும்பிப்  பிழைப்பதையே  விரும்புகிறேன்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  உங்கள்  பொல்லாத  வழிகளைவிட்டுத்  திரும்புங்கள்,  திரும்புங்கள்;  நீங்கள்  ஏன்  சாகவேண்டும்  என்கிறார்  என்று  அவர்களோடே  சொல்லு.  {Ezek  33:11}

 

மனுபுத்திரனே,  நீ  உன்  ஜனத்தின்  புத்திரரை  நோக்கி:  நீதிமான்  துரோகம்பண்ணுகிற  நாளிலே  அவனுடைய  நீதி  அவனைத்  தப்புவிப்பதில்லை;  துன்மார்க்கன்  தன்  துன்மார்க்கத்தைவிட்டுத்  திரும்புகிற  நாளிலே  அவன்  தன்  அக்கிரமத்தினால்  விழுந்துபோவதுமில்லை;  நீதிமான்  பாவஞ்செய்கிற  நாளிலே  தன்  நீதியினால்  பிழைப்பதுமில்லை.  {Ezek  33:12}

 

பிழைக்கவே  பிழைப்பாய்  என்று  நான்  நீதிமானுக்குச்  சொல்லும்போது,  அவன்  தன்  நீதியை  நம்பி,  அநியாயஞ்செய்தால்,  அவனுடைய  நீதியில்  ஒன்றும்  நினைக்கப்படுவதில்லை,  அவன்  செய்த  தன்  அநியாயத்திலே  சாவான்.  {Ezek  33:13}

 

பின்னும்  சாகவே  சாவாய்  என்று  நான்  துன்மார்க்கனுக்குச்  சொல்லும்போது,  அவன்  தன்  பாவத்தைவிட்டுத்  திரும்பி,  நியாயமும்  நீதியுஞ்செய்து,  {Ezek  33:14}

 

துன்மார்க்கன்  தான்  வாங்கின  அடைமானத்தையும்  தான்  கொள்ளையிட்ட  பொருளையும்  திரும்பக்  கொடுத்துவிட்டு,  அநியாயம்  செய்யாதபடி  ஜீவப்பிரமாணங்களில்  நடந்தால்,  அவன்  சாகாமல்  பிழைக்கவே  பிழைப்பான்.  {Ezek  33:15}

 

அவன்  செய்த  அவனுடைய  எல்லாப்  பாவங்களும்  அவனுக்கு  விரோதமாக  நினைக்கப்படுவதில்லை;  அவன்  நியாயமும்  நீதியும்  செய்தான்,  பிழைக்கவே  பிழைப்பான்  என்று  சொல்லு.  {Ezek  33:16}

 

உன்  ஜனத்தின்  புத்திரரோ,  ஆண்டவருடைய  வழி  செம்மையானதல்ல  என்கிறார்கள்;  அவர்களுடைய  வழியே  செம்மையானதல்ல.  {Ezek  33:17}

 

நீதிமான்  தன்  நீதியைவிட்டுத்  திரும்பி,  அநியாயஞ்செய்தால்,  அவன்  அதினால்  சாவான்.  {Ezek  33:18}

 

துன்மார்க்கன்  தன்  அக்கிரமத்தைவிட்டுத்  திரும்பி,  நியாயமும்  நீதியும்  செய்தால்,  அவன்  அவைகளினால்  பிழைப்பான்.  {Ezek  33:19}

 

நீங்களோ,  ஆண்டவருடைய  வழி  செம்மையானதல்ல  என்கிறீர்கள்,  இஸ்ரவேல்<Israel>  வீட்டாரே,  நான்  உங்களில்  ஒவ்வொருவனையும்  அவனவன்  வழிகளின்படியே  நியாயந்தீர்ப்பேன்  என்று  சொல்  என்றார்.  {Ezek  33:20}

 

எங்கள்  சிறையிருப்பின்  பன்னிரண்டாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  ஐந்தாந்தேதியிலே  எருசலேமிலிருந்து<Jerusalem>  தப்பின  ஒருவன்  என்னிடத்தில்  வந்து:  நகரம்  அழிக்கப்பட்டது  என்றான்.  {Ezek  33:21}

 

தப்பினவன்  வருகிறதற்கு  முந்தின  சாயங்காலத்திலே  கர்த்தருடைய  கை  என்மேல்  அமர்ந்து,  அவன்  காலையில்  என்னிடத்தில்  வருமட்டும்  என்  வாயைத்  திறந்திருக்கப்பண்ணிற்று;  என்  வாய்  திறக்கப்பட்டது,  பின்பு  நான்  மௌனமாயிருக்கவில்லை.  {Ezek  33:22}

 

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  33:23}

 

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்<Israel>  தேசத்தின்  பாழான  இடங்களிலுள்ள  குடிகள்:  ஆபிரகாம்<Abraham>  ஒருவனாயிருந்து,  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொண்டான்;  நாங்கள்  அநேகராயிருக்கிறோம்,  எங்களுக்கு  இந்தத்  தேசம்  சுதந்தரமாகக்  கொடுக்கப்பட்டது  என்று  சொல்லுகிறார்கள்.  {Ezek  33:24}

 

ஆகையால்,  நீ  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இரத்தத்தோடே  கூடியதைத்  தின்று,  உங்கள்  நரகலான  விக்கிரகங்களுக்கு  நேராக  உங்கள்  கண்களை  ஏறெடுத்து,  இரத்தத்தைச்  சிந்தியிருக்கிறீர்கள்,  நீங்கள்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்வீர்களோ?  {Ezek  33:25}

 

நீங்கள்  உங்கள்  பட்டயத்தை  நம்பிக்கொண்டு,  அருவருப்பானதைச்  செய்து,  உங்களில்  அவனவன்  தன்தன்  அயலான்  மனைவியைத்  தீட்டுப்படுத்துகிறீர்கள்;  நீங்கள்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்வீர்களோ  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  {Ezek  33:26}

 

நீ  அவர்களை  நோக்கி:  பாழான  இடங்களில்  இருக்கிறவர்கள்  பட்டயத்தால்  விழுவார்கள்;  வெளிகளில்  இருக்கிறவனை  மிருகங்களுக்கு  இரையாக  ஒப்புக்கொடுப்பேன்;  கோட்டைகளிலும்  கெபிகளிலும்  இருக்கிறவர்கள்  கொள்ளைநோயால்  சாவார்கள்.  {Ezek  33:27}

 

நான்  தேசத்தைப்  பாழும்  அவாந்தரமுமாக்குவேன்;  அப்பொழுது  அதினுடைய  பெலத்தின்  பெருமை  ஒழிந்துபோகும்;  அப்பொழுது  இஸ்ரவேலின்<Israel>  மலைகள்  கடந்துபோவாரில்லாமல்  அவாந்தரமாய்க்  கிடக்கும்.  {Ezek  33:28}

 

அவர்கள்  செய்த  அவர்களுடைய  எல்லா  அருவருப்புகளினிமித்தமும்  நான்  தேசத்தைப்  பாழும்  அவாந்தரமுமாக்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்,  இதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  {Ezek  33:29}

 

மேலும்  மனுபுத்திரனே,  உன்  ஜனத்தின்  புத்திரர்  சுவர்  ஓரங்களிலும்  வீட்டுவாசல்களிலும்  உன்னைக்குறித்துப்  பேசி,  கர்த்தரிடத்திலிருந்து  புறப்பட்ட  வார்த்தை  என்னவென்று  கேட்போம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவரும்  சகோதரனோடே  சகோதரனும்  சொல்லி,  {Ezek  33:30}

 

ஜனங்கள்  கூடிவருகிற  வழக்கத்தின்படி  உன்னிடத்தில்  வந்து,  உனக்கு  முன்பாக  என்  ஜனங்கள்போல்  உட்கார்ந்து,  உன்  வார்த்தைகளைக்  கேட்கிறார்கள்;  ஆனாலும்  அவர்கள்  அவைகளின்படி  செய்கிறதில்லை;  அவர்கள்  தங்கள்  வாயினாலே  இன்பமாய்ப்  பேசுகிறார்கள்,  அவர்கள்  இருதயமோ  பொருளாசையைப்  பின்பற்றிப்  போகிறது.  {Ezek  33:31}

 

இதோ,  நீ  இனிய  குரலும்  கீதவாத்தியம்  வாசிப்பதில்  சாமர்த்தியமுமுடையவன்  பாடும்  இன்பமான  பாட்டுக்குச்  சமானமாயிருக்கிறாய்;  அவர்கள்  உன்  வார்த்தைகளைக்  கேட்கிறார்கள்;  ஆனாலும்  அவைகளின்படி  செய்யாமற்போகிறார்கள்.  {Ezek  33:32}

 

இதோ,  அது  வருகிறது,  அது  வருகையில்  தங்கள்  நடுவிலே  ஒரு  தீர்க்கதரிசி  இருந்தான்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  {Ezek  33:33}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  34:1}

 

மனுபுத்திரனே,  இஸ்ரவேலின்<Israel>  மேய்ப்பருக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரை;  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  அவர்களோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  மேய்ப்பருக்குச்  சொல்லுகிறார்;  தங்களையே  மேய்க்கிற  இஸ்ரவேலின்<Israel>  மேய்ப்பருக்கு  ஐயோ!  மேய்ப்பர்  அல்லவா  மந்தையை  மேய்க்கவேண்டும்.  {Ezek  34:2}

 

நீங்கள்  நெய்யைச்  சாப்பிட்டு,  ஆட்டுமயிரை  உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்;  கொழுத்ததை  அடிக்கிறீர்கள்;  மந்தையையோ  மேய்க்காமற்போகிறீர்கள்.  {Ezek  34:3}

 

நீங்கள்  பலவீனமானவைகளைப்  பலப்படுத்தாமலும்,  நசல்கொண்டவைகளைக்  குணமாக்காமலும்,  எலும்பு  முறிந்தவைகளைக்  காயங்கட்டாமலும்,  துரத்துண்டவைகளைத்  திருப்பிக்கொண்டு  வராமலும்,  காணாமற்போனவைகளைத்  தேடாமலும்  போய்,  பலாத்காரமும்  கடூரமுமாய்  அவைகளை  ஆண்டீர்கள்.  {Ezek  34:4}

 

மேய்ப்பன்  இல்லாததினால்  அவைகள்  சிதறுண்டுபோயின;  சிதறுண்டுபோனவைகள்  காட்டு  மிருகங்களுக்கெல்லாம்  இரையாயின.  {Ezek  34:5}

 

என்  ஆடுகள்  சகல  மலைகளிலும்  உயரமான  சகல  மேடுகளிலும்  அலைப்புண்டு,  பூமியின்மீதெங்கும்  என்  ஆடுகள்  சிதறித்திரிகிறது;  விசாரிக்கிறவனுமில்லை,  தேடுகிறவனுமில்லை.  {Ezek  34:6}

 

ஆகையால்  மேய்ப்பரே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  {Ezek  34:7}

 

கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நான்  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  மேய்ப்பன்  இல்லாததினால்  என்  ஆடுகள்  சூறையாகி,  என்  ஆடுகள்  காட்டுமிருகங்களுக்கெல்லாம்  இரையாய்ப்  போயின;  என்  மேய்ப்பர்கள்  என்  ஆடுகளை  விசாரியாமற்போனார்கள்,  மேய்ப்பர்கள்  மந்தையை  மேய்க்காமல்  தங்களையே  மேய்த்தார்கள்.  {Ezek  34:8}

 

ஆகையால்  மேய்ப்பரே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  {Ezek  34:9}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  இதோ,  நான்  மேய்ப்பருக்கு  விரோதமாக  வந்து,  என்  ஆடுகளை  அவர்கள்  கையிலே  கேட்டு,  மேய்ப்பர்  இனித்  தங்களையே  மேய்க்காதபடி,  மந்தையை  மேய்க்கும்  தொழிலைவிட்டு  அவர்களை  விலக்கி,  என்  ஆடுகள்  அவர்களுக்கு  ஆகாரமாயிராதபடி,  அவைகளை  அவர்கள்  வாய்க்குத்  தப்பப்பண்ணுவேன்  என்று  சொல்லு.  {Ezek  34:10}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  நானே  என்  ஆடுகளை  விசாரித்து,  அவைகளைத்  தேடிப்பார்ப்பேன்.  {Ezek  34:11}

 

ஒரு  மேய்ப்பன்  சிதறுண்ட  தன்  ஆடுகளின்  நடுவே  இருக்கிற  நாளில்  தன்  மந்தையைத்  தேடிக்கொண்டிருக்கிறதுபோல,  நான்  என்  ஆடுகளைத்  தேடி,  மப்பும்  மந்தாரமுமான  நாளிலே  அவைகள்  சிதறுண்டுபோன  எல்லா  இடங்களிலுமிருந்து  அவைகளைத்  தப்பிவரப்பண்ணி,  {Ezek  34:12}

 

அவைகளை  ஜனங்களிடத்திலிருந்து  புறப்படவும்  தேசங்களிலிருந்து  சேரவும்பண்ணி,  அவைகளுடைய  சுயதேசத்திலே  அவைகளைக்  கொண்டுவந்து,  இஸ்ரவேல்<Israel>  மலைகளின்மேலும்  ஆறுகள்  அண்டையிலும்  தேசத்தின்  சகல  வாசஸ்தலங்களிலும்  அவைகளை  மேய்ப்பேன்.  {Ezek  34:13}

 

அவைகளை  நல்ல  மேய்ச்சலிலே  மேய்ப்பேன்;  இஸ்ரவேலுடைய<Israel>  உயர்ந்த  மலைகளில்  அவைகளுடைய  தொழுவம்  இருக்கும்;  அங்கே  அவைகள்  நல்ல  தொழுவத்தில்  படுத்துக்கொள்ளும்,  இஸ்ரவேலின்<Israel>  மலைகளின்மேல்  நல்ல  மேய்ச்சலை  மேயும்.  {Ezek  34:14}

 

என்  ஆடுகளை  நான்  மேய்த்து,  அவைகளை  நான்  மடக்குவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  34:15}

 

நான்  காணாமற்போனதைத்  தேடி,  துரத்துண்டதைத்  திரும்பக்கொண்டுவந்து,  எலும்பு  முறிந்ததைக்  காயங்கட்டி,  நசல்கொண்டதைத்  திடப்படுத்துவேன்;  நியாயத்துக்குத்தக்கதாய்  அவைகளை  மேய்த்து,  புஷ்டியும்  பெலமுமுள்ளவைகளை  அழிப்பேன்.  {Ezek  34:16}

 

என்  மந்தையே,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  ஆட்டுக்கும்  ஆட்டுக்கும்,  ஆட்டுக்கடாக்களுக்கும்,  வெள்ளாட்டுக்கடாக்களுக்கும்  நான்  நியாயந்தீர்ப்பேன்.  {Ezek  34:17}

 

நீங்கள்  நல்ல  மேய்ச்சலை  மேய்ந்து,  உங்கள்  மேய்ச்சல்களில்  மீதியானதை  உங்கள்  கால்களால்  மிதிக்கலாமா?  தெளிந்த  தண்ணீரைக்  குடித்து  மீதியாயிருக்கிறதை  உங்கள்  கால்களால்  குழப்பிப்போடலாமா?  {Ezek  34:18}

 

என்  ஆடுகள்  உங்கள்  கால்களால்  மிதிக்கப்பட்டதை  மேயவும்,  உங்கள்  கால்களால்  குழப்பப்பட்டதைக்  குடிக்கவும்  வேண்டுமோ?  {Ezek  34:19}

 

ஆகையால்,  கர்த்தராகிய  ஆண்டவர்  அவைகளை  நோக்கி:  இதோ,  நான்,  நானே  கொழுத்த  ஆடுகளுக்கும்  இளைத்த  ஆடுகளுக்கும்  நியாயந்தீர்ப்பேன்.  {Ezek  34:20}

 

நீங்கள்  பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம்  புறம்பாக்கிச்  சிதறப்பண்ணும்படி,  அவைகளைப்  பக்கத்தினாலும்  முன்னந்தொடையினாலும்  தள்ளி  உங்கள்  கொம்புகளைக்கொண்டு  முட்டுகிறபடியினாலே,  {Ezek  34:21}

 

நான்  என்  ஆடுகளை  இனிச்  சூறையாகாதபடிக்கு  இரட்சித்து,  ஆடுகளுக்கும்  ஆடுகளுக்கும்  நியாயந்தீர்ப்பேன்.  {Ezek  34:22}

 

அவர்களை  மேய்க்கும்படி  என்  தாசனாகிய  தாவீது<David>  என்னும்  ஒரே  மேய்ப்பனை  நான்  அவர்கள்மேல்  விசாரிப்பாயிருக்க  ஏற்படுத்துவேன்;  இவர்  அவர்களை  மேய்த்து,  இவரே  அவர்களுக்கு  மேய்ப்பனாயிருப்பார்.  {Ezek  34:23}

 

கர்த்தராகிய  நான்  அவர்களுக்குத்  தேவனாக  இருப்பேன்,  என்  தாசனாகிய  தாவீது<David>  அவர்கள்  நடுவில்  அதிபதியாயிருப்பார்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்.  {Ezek  34:24}

 

நான்  அவர்களோடு  சமாதான  உடன்படிக்கைசெய்து,  துஷ்ட  மிருகங்களைத்  தேசத்தில்  இராதபடிக்கு  ஒழியப்பண்ணுவேன்;  அவர்கள்  சுகமாய்  வனாந்தரத்தில்  தாபரித்து,  காடுகளில்  நித்திரைபண்ணுவார்கள்.  {Ezek  34:25}

 

நான்  அவர்களையும்  என்  மேட்டின்  சுற்றுப்புறங்களையும்  ஆசீர்வாதமாக்கி,  ஏற்றகாலத்திலே  மழையைப்  பெய்யப்பண்ணுவேன்;  ஆசீர்வாதமான  மழை  பெய்யும்.  {Ezek  34:26}

 

வெளியின்  விருட்சங்கள்  தங்கள்  கனியைத்தரும்;  பூமி  தன்  பலனைக்  கொடுக்கும்;  அவர்கள்  தங்கள்  தேசத்தில்  சுகமாயிருப்பார்கள்;  நான்  அவர்கள்  நுகத்தின்  கயிறுகளை  அறுத்து,  அவர்களை  அடிமைகொண்டவர்களின்  கைக்கு  அவர்களை  நீங்கலாக்கி  விடுவிக்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  34:27}

 

இனி  அவர்கள்  புறஜாதிகளுக்குக்  கொள்ளையாவதில்லை,  பூமியின்  மிருகங்கள்  அவர்களைப்  பட்சிப்பதுமில்லை;  தத்தளிக்கப்பண்ணுவார்  இல்லாமல்  சுகமாய்த்  தங்குவார்கள்.  {Ezek  34:28}

 

நான்  அவர்களுக்குக்  கீர்த்திபொருந்திய  ஒரு  நாற்றை  எழும்பப்பண்ணுவேன்;  அவர்கள்  இனி  தேசத்திலே  பஞ்சத்தால்  வாரிக்கொள்ளப்படுவதுமில்லை,  இனிப்  புறஜாதிகள்  செய்யும்  அவமானத்தைச்  சுமப்பதுமில்லை.  {Ezek  34:29}

 

தங்கள்  தேவனாகிய  கர்த்தராயிருக்கிற  நான்  தங்களோடே  இருக்கிறதையும்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாராகிய  தாங்கள்  என்  ஜனமாயிருக்கிறதையும்,  அவர்கள்  அறிந்துகொள்வார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  34:30}

 

என்  மந்தையும்  என்  மேய்ச்சலின்  ஆடுகளுமாகிய  நீங்கள்  மனுஷர்;  நான்  உங்கள்  தேவன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  34:31}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  35:1}

 

மனுபுத்திரனே,  நீ  உன்  முகத்தைச்  சேயீர்மலைக்கு<Seir>  நேராகத்  திருப்பி  அதற்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  {Ezek  35:2}

 

அதற்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  சேயீர்மலையே<Seir>,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  என்  கையை  உனக்கு  விரோதமாகநீட்டி,  உன்னைப்  பாழும்  அவாந்தரவெளியுமாக்குவேன்.  {Ezek  35:3}

 

உன்  பட்டணங்களை  வனாந்தரமாக்கிப்போடுவேன்;  நீ  பாழாய்ப்போவாய்;  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வாய்.  {Ezek  35:4}

 

நீ  பழைய  பகையை  வைத்து,  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  அக்கிரமம்  நிறைவேறுகையில்  அவர்களுக்கு  உண்டான  ஆபத்தின்  காலத்திலே  பட்டயத்தின்  கூர்மையினால்  அவர்களுடைய  இரத்தத்தைச்  சிந்தினபடியால்,  {Ezek  35:5}

 

நான்  இரத்தப்  பழிக்கு  உன்னை  ஒப்புவிப்பேன்;  இரத்தப்பழி  உன்னைப்  பின்தொடரும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நான்  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  நீ  இரத்தத்தை  வெறுக்காதபடியினால்  இரத்தம்  உன்னைப்  பின்தொடரும்.  {Ezek  35:6}

 

நான்  சேயீர்மலையைப்<Seir>  பாழும்  அவாந்தர  இடமுமாக்கி,  அதிலே  போக்குவரவு  செய்வார்  இல்லாதபடி  சங்காரஞ்செய்து,  {Ezek  35:7}

 

அதின்  மலைகளைக்  கொலையுண்டவர்களாலே  நிரப்புவேன்;  உன்  மேடுகளிலும்  உன்  பள்ளத்தாக்குகளிலும்  உன்  எல்லா  ஆறுகளிலும்  பட்டயத்தால்  வெட்டுண்டவர்கள்  விழுவார்கள்.  {Ezek  35:8}

 

நீ  என்றைக்கும்  அவாந்தரவெளியாயிருக்கும்படி  செய்வேன்;  உன்  பட்டணங்கள்  குடியேற்றப்படுவதில்லை;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  35:9}

 

இரண்டு  ஜாதிகளும்  இரண்டு  தேசங்களும்  கர்த்தர்  வசமாயிருந்தும்,  அவைகள்  என்னுடையவைகளாகும்,  நான்  அவைகளைச்  சுதந்தரித்துக்கொள்ளுவேன்  என்று  நீ  சொல்லுகிறபடியினால்,  {Ezek  35:10}

 

நீ  அவர்கள்மேல்  வைத்த  வர்மத்தினால்  செய்த  உன்  கோபத்துக்குத்தக்கதாகவும்,  உன்  பொறாமைக்குத்தக்கதாகவும்  நான்  செய்து,  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நான்  உன்னை  நியாயந்தீர்க்கும்போது,  என்னை  அவர்களுக்குள்  அதினால்  அறியப்பண்ணுவேன்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {Ezek  35:11}

 

இஸ்ரவேலின்<Israel>  மலைகள்  பாழாக்கப்பட்டு  எங்களுக்கு  இரையாகக்  கொடுக்கப்பட்டது  என்று,  நீ  அவைகளுக்கு  விரோதமாய்ச்  சொன்ன  உன்  நிந்தனைகளையெல்லாம்  கர்த்தராகிய  நான்  கேட்டேன்  என்று  அப்பொழுது  அறிந்துகொள்வாய்.  {Ezek  35:12}

 

நீங்கள்  உங்கள்  வாயினால்  எனக்கு  விரோதமாகப்  பெருமைபாராட்டி,  எனக்கு  விரோதமாக  உங்கள்  வார்த்தைகளைப்  பெருகப்பண்ணினீர்கள்;  அதை  நான்  கேட்டேன்.  {Ezek  35:13}

 

பூமியெல்லாம்  மகிழும்போது  நான்  உன்னைப்  பாழாயிருக்கும்படி  செய்வேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  35:14}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரின்  சுதந்தரம்  பாழாய்ப்போனதைக்  கண்டு  மகிழ்ந்தாயே,  உனக்கும்  அப்படியே  சம்பவிக்கச்செய்வேன்;  சேயீர்மலையே<Seir>,  ஏதோமே<Edom>,  நீ  முழுதும்  பாழாவாய்;  அதினால்  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்களென்று  உரைத்தார்  என்று  சொல்லு.  {Ezek  35:15}

 

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்<Israel>  மலைகளை  நோக்கித்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்<Israel>  மலைகளே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  {Ezek  36:1}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  பகைஞன்  உங்களைக்குறித்து    ,  நித்திய  மேடுகள்  எங்கள்  வசமாயிற்று  என்று  சொல்லுகிறபடியினால்,  {Ezek  36:2}

 

நீ  தீர்க்கதரிசனம்  உரைத்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  நீங்கள்  புறஜாதிகளில்  மீதியானவர்களுக்குச்  சுதந்தரமாயிருக்கும்படி  அவர்கள்  உங்களைப்  பாழாக்கி,  உங்களைச்  சுற்றிலுமிருந்து  விழுங்கினபடியினாலும்,  நீங்கள்  வாயாடிகளுக்குப்பேச்சும்  ஜனங்களுக்கு  அவதூறுமானவர்களானபடியினாலும்,  {Ezek  36:3}

 

இஸ்ரவேல்<Israel>  மலைகளே,  நீங்கள்  கர்த்தராகிய  ஆண்டவருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  மலைகளுக்கும்,  மேடுகளுக்கும்,  ஆறுகளுக்கும்,  பள்ளத்தாக்குகளுக்கும்,  பாழாக்கப்பட்ட  அவாந்தர  இடங்களுக்கும்,  வெறுமையாய்  விடப்பட்ட  பட்டணங்களுக்கும்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  உங்களைச்  சுற்றிலும்  மீதியான  புறஜாதிகளுக்கு  நீங்கள்  கொள்ளையும்  பரியாசமுமாய்ப்போனபடியினால்,  {Ezek  36:4}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  என்  தேசத்தைக்  கொள்ளையிடப்பட்ட  வெளியாக்கும்படிக்கு  அதை  முழு  இருதயத்தின்  சந்தோஷத்தோடும்  கர்வமான  மனதோடும்  தங்களுக்குச்  சுதந்தரமாக  நியமித்துக்கொண்ட  புறஜாதிகளில்  மீதியானவர்களுக்கு  விரோதமாகவும்  ஏதோம்<Edom>  அனைத்துக்கும்  விரோதமாகவும்,  என்  அக்கினியான  எரிச்சலினால்  பேசினேன்  என்று  நிச்சயமாய்ச்  சொல்லுகிறேன்.  {Ezek  36:5}

 

ஆகையால்,  நீ  இஸ்ரவேல்<Israel>  தேசத்தைக்குறித்துத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  மலைகளுக்கும்,  மேடுகளுக்கும்,  ஆறுகளுக்கும்,  பள்ளத்தாக்குகளுக்கும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  இதோ,  நீங்கள்  புறஜாதிகள்  செய்யும்  அவமானத்தைச்  சுமந்தபடியினால்  நான்  என்  எரிச்சலினாலும்  என்  உக்கிரத்தினாலும்  பேசினேன்,  {Ezek  36:6}

 

ஆதலால்,  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நான்  என்  கரத்தை  உயர்த்துவேன்,  உங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  புறஜாதிகள்  தங்களுடைய  அவமானத்தை  நிச்சயமாய்ச்  சுமப்பார்கள்  என்று  சொல்லுகிறேன்.  {Ezek  36:7}

 

இஸ்ரவேல்<Israel>  மலைகளே,  நீங்கள்  உங்கள்  கொப்புகளை  விட்டு,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  உங்கள்  கனிகளைக்  கொடுப்பீர்கள்;  அவர்கள்  சமீபமாய்  வந்துவிட்டார்கள்.  {Ezek  36:8}

 

இதோ,  நான்  உங்கள்  பட்சத்திலிருந்து,  உங்களைக்  கண்ணோக்குவேன்;  நீங்கள்  பண்படுத்தப்பட்டு  விதைக்கப்படுவீர்கள்.  {Ezek  36:9}

 

நான்  உங்கள்மேல்  இஸ்ரவேல்<Israel>  வம்சமாகிய  மனுஷர்  யாவரையும்  வர்த்திக்கப்பண்ணுவேன்;  பட்டணங்கள்  குடியேற்றப்படும்,  அவாந்தரமான  ஸ்தலங்கள்  கட்டப்படும்.  {Ezek  36:10}

 

உங்கள்மேல்  மனுஷரையும்  மிருகஜீவன்களையும்  பெருகிப்  பலுகும்படி  வர்த்திக்கப்பண்ணுவேன்;  பூர்வநாட்களில்  நீங்கள்  இருந்த  நிலைமையில்  நான்  உங்களை  ஸ்தாபித்து,  உங்கள்  முந்தின  சீரைப்பார்க்கிலும்  உங்களுக்கு  நற்சீர்  உண்டாகச்செய்வேன்;  அதினால்  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  36:11}

 

நான்  உங்கள்மேல்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்<Israel>  மனுஷரை  நடமாடப்பண்ணுவேன்,  அவர்கள்  உன்னைக்  கையாளுவார்கள்;  அவர்களுக்குச்  சுதந்தரமாயிருப்பாய்;  நீ  இனிமேல்  அவர்களைச்  சாகக்கொடுப்பதில்லை.  {Ezek  36:12}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  ஜனங்கள்  உன்னைப்பார்த்து:  நீ  மனுஷரைப்  பட்சிக்கிற  தேசமென்றும்,  நீ  உன்  ஜனங்களைச்  சாகக்கொடுக்கிற  தேசமென்றும்  சொல்லுகிறபடியினால்,  {Ezek  36:13}

 

நீ  இனிமேல்  மனுஷரைப்  பட்சிப்பதுமில்லை,  இனிமேல்  உன்  ஜனங்களைச்  சாகக்கொடுப்பதுமில்லை  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  36:14}

 

நான்  இனிமேல்  புறஜாதிகள்  செய்யும்  அவமானத்தை  உன்னிடத்திலே  கேட்கப்பண்ணுவதுமில்லை,  நீ  ஜனங்களின்  நிந்தையை  இனிமேல்  சுமப்பதுமில்லை;  நீ  இனிமேல்  உன்  ஜாதிகளைச்  சாகக்கொடுப்பதுமில்லையென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  36:15}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  36:16}

 

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  தங்கள்  சுயதேசத்திலே  குடியிருக்கையில்  அதைத்  தங்கள்  நடக்கையினாலும்  தங்கள்  கிரியைகளினாலும்  தீட்டுப்படுத்தினார்கள்;  அவர்களுடைய  நடக்கை  என்  முகத்துக்கு  முன்பாகத்  தூரஸ்திரீயின்  தீட்டைப்போல்  இருந்தது.  {Ezek  36:17}

 

ஆகையினால்  தேசத்திலே  அவர்கள்  சிந்தின  இரத்தத்தினிமித்தமும்,  அதை  அவர்கள்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களால்  தீட்டுப்படுத்தினதினிமித்தமும்  நான்  என்  உக்கிரத்தை  அவர்கள்மேல்  ஊற்றி,  {Ezek  36:18}

 

அவர்களைப்  புறஜாதிகளுக்குள்ளே  சிதறடித்தேன்;  தேசங்களில்  தூற்றிப்போடப்பட்டார்கள்;  அவர்களுடைய  நடக்கையின்படியேயும்  அவர்களுடைய  கிரியைகளின்படியேயும்  அவர்களை  நியாயந்தீர்த்தேன்.  {Ezek  36:19}

 

அவர்கள்  புறஜாதிகளிடத்தில்  போனபோது  அந்த  ஜனங்கள்  இவர்களைக்குறித்து:  இவர்கள்  கர்த்தருடைய  ஜனங்கள்,  அவருடைய  தேசத்திலிருந்து  வந்தார்கள்  என்று  சொன்னதினால்,  இவர்கள்  என்  பரிசுத்த  நாமத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.  {Ezek  36:20}

 

ஆனாலும்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  தாங்கள்  வந்துசேர்ந்த  புறஜாதிகளிடத்திலே  பரிசுத்தக்குலைச்சலாக்கின  என்  பரிசுத்த  நாமத்தினிமித்தமாகவே  இரங்குகிறேன்.  {Ezek  36:21}

 

ஆதலால்,  நீ  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  உங்கள்  நிமித்தம்  அல்ல,  நீங்கள்  வந்து  சேர்ந்த  புறஜாதிகளிடத்தில்  பரிசுத்தக்குலைச்சலாக்கின  என்  பரிசுத்த  நாமத்தினிமித்தமே  நான்  இப்படிச்  செய்கிறேன்.  {Ezek  36:22}

 

புறஜாதிகளின்  நடுவே  நீங்கள்  பரிசுத்தக்குலைச்சலாக்கினதும்  அவர்களுக்குள்  உங்களால்  பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான  என்  மகத்தான  நாமத்தை  நான்  பரிசுத்தம்பண்ணுவேன்;  அப்பொழுது  புறஜாதிகள்  தங்கள்  கண்களுக்கு  முன்பாக  நான்  உங்களுக்குள்  பரிசுத்தம்பண்ணப்படுகையில்,  நான்  கர்த்தர்  என்பதை  அறிந்துகொள்வார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  36:23}

 

நான்  உங்களைப்  புறஜாதிகளிடத்திலிருந்து  அழைத்து,  உங்களைச்  சகல  தேசங்களிலுமிருந்து  சேர்த்து,  உங்கள்  சுயதேசத்திற்கு  உங்களைக்  கொண்டுவருவேன்.  {Ezek  36:24}

 

அப்பொழுது  நான்  உங்கள்மேல்  சுத்தமான  ஜலம்  தெளிப்பேன்;  நான்  உங்களுடைய  எல்லா  அசுத்தங்களையும்  உங்களுடைய  எல்லா  நரகலான  விக்கிரகங்களையும்  நீக்கி  உங்களைச்  சுத்தமாக்குவேன்,  நீங்கள்  சுத்தமாவீர்கள்.  {Ezek  36:25}

 

உங்களுக்கு  நவமான  இருதயத்தைக்  கொடுத்து,  உங்கள்  உள்ளத்திலே  புதிதான  ஆவியைக்  கட்டளையிட்டு,  கல்லான  இருதயத்தை  உங்கள்  மாம்சத்திலிருந்து  எடுத்துப்போட்டு,  சதையான  இருதயத்தை  உங்களுக்குக்  கொடுப்பேன்.  {Ezek  36:26}

 

உங்கள்  உள்ளத்திலே  என்  ஆவியை  வைத்து,  உங்களை  என்  கட்டளைகளில்  நடக்கவும்  என்  நியாயங்களைக்  கைக்கொள்ளவும்  அவைகளின்படி  செய்யவும்பண்ணுவேன்.  {Ezek  36:27}

 

உங்கள்  பிதாக்களுக்கு  நான்  கொடுத்த  தேசத்திலே  நீங்கள்  குடியிருப்பீர்கள்;  நீங்கள்  என்  ஜனமாயிருப்பீர்கள்,  நான்  உங்கள்  தேவனாயிருந்து,  {Ezek  36:28}

 

உங்கள்  அசுத்தங்களையெல்லாம்  நீக்கி,  உங்களை  இரட்சித்து,  உங்கள்மேல்  பஞ்சத்தைக்  கட்டளையிடாமல்,  கோதுமையை  வரவழைத்து,  அதைப்பெருகப்பண்ணி,  {Ezek  36:29}

 

நீங்கள்  இனிமேல்  ஜாதிகளுக்குள்ளே  பஞ்சத்தினாலுண்டாகும்  நிந்தையை  அடையாதபடிக்கு,  விருட்சத்தின்  கனிகளையும்  வயலின்  பலன்களையும்  பெருகப்பண்ணுவேன்.  {Ezek  36:30}

 

அப்பொழுது  நீங்கள்  உங்கள்  பொல்லாத  மார்க்கங்களையும்  உங்கள்  தகாத  கிரியைகளையும்  நினைத்து,  உங்கள்  அக்கிரமங்களினிமித்தமும்  உங்கள்  அருவருப்புகளினிமித்தமும்  உங்களையே  அரோசிப்பீர்கள்.  {Ezek  36:31}

 

நான்  இப்படிச்  செய்வது  உங்கள்  நிமித்தமாக  அல்லவென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்,  இது  உங்களுக்கு  அறியப்பட்டிருக்கக்கடவது;  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  உங்கள்  வழிகளினிமித்தம்  வெட்கி  நாணுங்கள்.  {Ezek  36:32}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  உங்கள்  அக்கிரமங்களையெல்லாம்  நீக்கி,  உங்களைச்  சுத்தமாக்கும்  காலத்திலே  பட்டணங்களில்  குடியேற்றுவிப்பேன்;  அவாந்தரமான  ஸ்தலங்களும்  கட்டப்படும்.  {Ezek  36:33}

 

பாழாக்கப்பட்ட  தேசம்  கடந்துபோகிற  யாவருடைய  பார்வைக்கும்  பாழாய்க்கிடந்ததற்குப்  பதிலாக  பயிரிடப்படும்.  {Ezek  36:34}

 

பாழாய்க்கிடந்த  இத்தேசம்,  ஏதேன்<Eden>  தோட்டத்தைப்போலாயிற்றென்றும்,  அவாந்தரமும்  பாழும்  நிர்மூலமுமாயிருந்த  பட்டணங்கள்  அரணிப்பானவைகளும்  குடியேற்றப்பட்டவைகளுமாய்  இருக்கிறது  என்றும்  சொல்லுவார்கள்.  {Ezek  36:35}

 

கர்த்தராகிய  நான்  நிர்மூலமானவைகளைக்  கட்டுகிறேன்  என்றும்,  பாழானதைப்  பயிர்நிலமாக்குகிறேன்  என்றும்,  அப்பொழுது  உங்களைச்  சுற்றிலுமுள்ள  மீதியான  ஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்,  இதைச்  செய்வேன்.  {Ezek  36:36}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்காக  நான்  இதை  அநுக்கிரகஞ்செய்யும்படி  அவர்கள்  என்னிடத்தில்  விண்ணப்பம்  பண்ணவேண்டும்;  மந்தை  பெருகுகிறதுபோல்  அவர்களில்  மனிதரைப்  பெருகப்பண்ணுவேன்.  {Ezek  36:37}

 

பண்டிகை  காலங்களில்  எருசலேமிலே<Jerusalem>  பரிசுத்தம்பண்ணப்பட்டு  வருகிற  மந்தைகள்  எப்படித்  திரளாயிருக்கிறதோ,  அப்படியே  அவாந்தரமாயிருந்த  பட்டணங்கள்  மனுஷரின்  மந்தையால்  நிரம்பியிருக்கும்;  அதினால்  நான்  கர்த்தர்  என்பதை  அறிந்துகொள்வார்கள்  என்று  சொல்  என்றார்.  {Ezek  36:38}

 

கர்த்தருடைய  கை  என்மேல்  அமர்ந்து,  கர்த்தர்  என்னை  ஆவிக்குள்ளாக்கி  வெளியே  கொண்டுபோய்,  எலும்புகள்  நிறைந்த  ஒரு  பள்ளத்தாக்கின்  நடுவில்  நிறுத்தி,  {Ezek  37:1}

 

என்னை  அவைகளின்  அருகே  சுற்றி  நடக்கப்பண்ணினார்;  இதோ,  பள்ளத்தாக்கின்  வெட்டவெளியிலே  அந்த  எலும்புகள்  மகா  திரளாய்க்கிடந்தது;  அவைகள்  மிகவும்  உலர்ந்ததுமாயிருந்தது.  {Ezek  37:2}

 

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இந்த  எலும்புகள்  உயிரடையுமா  என்று  கேட்டார்;  அதற்கு  நான்:  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  அதை  அறிவீர்  என்றேன்.  {Ezek  37:3}

 

அப்பொழுது  அவர்:  நீ  இந்த  எலும்புகளைக்குறித்துத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  அவைகளைப்பார்த்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  உலர்ந்த  எலும்புகளே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  {Ezek  37:4}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  இந்த  எலும்புகளை  நோக்கி:  இதோ,  நான்  உங்களுக்குள்  ஆவியைப்  பிரவேசிக்கப்பண்ணுவேன்,  அப்பொழுது  உயிரடைவீர்கள்.  {Ezek  37:5}

 

நான்  உங்கள்மேல்  நரம்புகளைச்  சேர்த்து,  உங்கள்மேல்  மாம்சத்தை  உண்டாக்கி,  உங்களைத்  தோலினால்  மூடி,  உங்களில்  ஆவியைக்  கட்டளையிடுவேன்;  அப்பொழுது  நீங்கள்  உயிரடைந்து,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்களென்று  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  37:6}

 

எனக்குக்  கட்டளையிட்டபடியே  நான்  தீர்க்கதரிசனம்  உரைத்தேன்;  நான்  தீர்க்கதரிசனம்  உரைக்கையில்  ஒரு  இரைச்சல்  உண்டாயிற்று;  இதோ,  அசைவுண்டாகி,  ஒவ்வொரு  எலும்பும்  தன்தன்  எலும்போடே  சேர்ந்துகொண்டது.  {Ezek  37:7}

 

நான்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  இதோ,  அவைகள்மேல்  நரம்புகளும்  மாம்சமும்  உண்டாயிற்று,  மேற்புறமெங்கும்  தோலினால்  மூடப்பட்டது;  ஆனாலும்  அவைகளில்  ஆவி  இல்லாதிருந்தது.  {Ezek  37:8}

 

அப்பொழுது  அவர்  என்னைப்பார்த்து:  நீ  ஆவியை  நோக்கித்  தீர்க்கதரிசனம்  உரை;  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  ஆவியை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  ஆவியே,  நீ  காற்றுத்திசை  நான்கிலுமிருந்து  வந்து,  கொலையுண்ட  இவர்கள்  உயிரடையும்படிக்கு  இவர்கள்மேல்  ஊது  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  37:9}

 

எனக்குக்  கற்பிக்கப்பட்டபடி  நான்  தீர்க்கதரிசனம்  உரைத்தேன்;  அப்பொழுது  ஆவி  அவர்களுக்குள்  பிரவேசிக்க,  அவர்கள்  உயிரடைந்து,  காலூன்றி,  மகா  பெரிய  சேனையாய்  நின்றார்கள்.  {Ezek  37:10}

 

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இந்த  எலும்புகள்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அனைவருமே;  இதோ,  அவர்கள்  எங்கள்  எலும்புகள்  உலர்ந்துபோயிற்று;  எங்கள்  நம்பிக்கை  அற்றுப்போயிற்று;  நாங்கள்  அறுப்புண்டுபோகிறோம்  என்கிறார்கள்.  {Ezek  37:11}

 

ஆகையால்  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  அவர்களோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  இதோ,  என்  ஜனங்களே,  நான்  உங்கள்  பிரேதக்குழிகளைத்  திறந்து,  உங்களை  உங்கள்  பிரேதக்குழிகளிலிருந்து  வெளிப்படவும்,  உங்களை  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்கு  வரவும்பண்ணுவேன்.  {Ezek  37:12}

 

என்  ஜனங்களே,  நான்  உங்கள்  பிரேதக்குழிகளைத்  திறந்து,  உங்களை  உங்கள்  பிரேதக்குழிகளிலிருந்து  வெளிப்படப்பண்ணும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  {Ezek  37:13}

 

என்  ஆவியை  உங்களுக்குள்  வைப்பேன்;  நீங்கள்  உயிரடைவீர்கள்;  நான்  உங்களை  உங்கள்  தேசத்தில்  வைப்பேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்;  இதைச்  சொன்னேன்,  இதைச்  செய்வேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  37:14}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  37:15}

 

மனுபுத்திரனே,  நீ  ஒரு  கோலை  எடுத்து,  அதிலே  யூதாவுக்கும்<Judah>  அதைச்  சேர்ந்த  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்கும்  அடுத்தது  என்று  எழுதி;  பின்பு  வேறொரு  கோலை  எடுத்து,  அதிலே  எப்பிராயீமுக்கும்<Ephraim>  அதைச்சேர்ந்த  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அனைவருக்கும்  அடுத்த  யோசேப்பின்<Joseph>  கோலென்று  எழுதி,  {Ezek  37:16}

 

அவைகளை  ஒரே  கோலாகும்படி  ஒன்றோடொன்று  இசையச்செய்,  அவைகள்  உன்  கையில்  ஒன்றாகும்.  {Ezek  37:17}

 

இவைகளின்  பொருள்  இன்னதென்று  எங்களுக்கு  அறிவிக்கமாட்டீரோ  என்று  உன்  ஜனத்தின்  புத்திரர்  உன்னிடத்தில்  கேட்டால்,  {Ezek  37:18}

 

நீ  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  எப்பிராயீமுக்கும்<Ephraim>  அதைச்சேர்ந்த  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களுக்கும்  அடுத்த  யோசேப்பின்<Joseph>  கோலை  எடுத்து,  அதை  யூதாவின்<Judah>  கோலோடே  சேர்த்து,  அவைகளை  ஒரே  கோலாக்குவேன்;  அவைகள்  என்  கையில்  ஒன்றாகும்  என்கிறார்  என்று  சொல்.  {Ezek  37:19}

 

சொல்லும்போது,  நீ  எழுதின  கோல்கள்  அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாக  உன்  கையில்  இருக்கவேண்டும்.  {Ezek  37:20}

 

நீ  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  நான்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  அவர்கள்  போயிருக்கும்  ஜாதிகளிடத்திலிருந்து  அழைத்து,  சுற்றிலுமிருந்து  அவர்களைச்  சேர்த்து,  அவர்களை  அவர்கள்  சுயதேசத்திலே  வரப்பண்ணி,  {Ezek  37:21}

 

அவர்களை  இஸ்ரவேலின்<Israel>  மலைகளாகிய  தேசத்திலே  ஒரே  ஜாதியாக்குவேன்;  ஒரே  ராஜா  அவர்கள்  எல்லாருக்கும்  ராஜாவாக  இருப்பார்;  அவர்கள்  இனி  இரண்டு  ஜாதிகளாக  இருப்பதில்லை;  அவர்கள்  இனி  இரண்டு  ராஜ்யங்களாகப்  பிரிவதுமில்லை.  {Ezek  37:22}

 

அவர்கள்  இனித்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களினாலும்  தங்கள்  அருவருப்புகளினாலும்  தங்களுடைய  சகல  மீறுதல்களினாலும்  தங்களைத்  தீட்டுப்படுத்துவதுமில்லை;  அவர்கள்  குடியிருந்து  பாவஞ்செய்த  எல்லா  இடங்களிலிருந்தும்  நான்  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்து,  அவர்களைச்  சுத்தம்பண்ணுவேன்;  அப்பொழுது  அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்.  {Ezek  37:23}

 

என்  தாசனாகிய  தாவீது<David>  என்பவர்  அவர்கள்மேல்  ராஜாவாக  இருப்பார்;  அவர்கள்  எல்லாருக்கும்  ஒரே  மேய்ப்பர்  இருப்பார்;  அப்பொழுது  அவர்கள்  என்  நியாயங்களில்  நடந்து,  என்  கட்டளைகளைக்  கைக்கொண்டு,  அவைகளின்படியே  செய்து,  {Ezek  37:24}

 

நான்  என்  தாசனாகிய  யாக்கோபுக்குக்<Jacob>  கொடுத்ததும்,  உங்கள்  பிதாக்கள்  குடியிருந்ததுமான  தேசத்திலே  குடியிருப்பார்கள்;  அவர்களும்  அவர்கள்  பிள்ளைகளும்  அவர்களுடைய  பிள்ளைகளின்  பிள்ளைகளும்  அதிலே  என்றென்றைக்கும்  குடியிருப்பார்கள்;  என்  தாசனாகிய  தாவீது<David>  என்பவர்  என்றென்றைக்கும்  அவர்களுக்கு  அதிபதியாயிருப்பார்.  {Ezek  37:25}

 

நான்  அவர்களோடே  சமாதான  உடன்படிக்கை  செய்வேன்;  அது  அவர்களுக்கு  நித்திய  உடன்படிக்கையாயிருக்கும்;  நான்  அவர்களை  நிலைப்படுத்தி,  அவர்களை  வர்த்திக்கப்பண்ணி,  அவர்கள்  நடுவிலே  என்  பரிசுத்த  ஸ்தலத்தை  என்றென்றைக்கும்  ஸ்தாபிப்பேன்.  {Ezek  37:26}

 

என்  வாசஸ்தலம்  அவர்களிடத்தில்  இருக்கும்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்,  அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்.  {Ezek  37:27}

 

அப்படியே  என்  பரிசுத்த  ஸ்தலம்  அவர்கள்  நடுவிலே  என்றென்றைக்கும்  இருக்கும்போது,  நான்  இஸ்ரவேலைப்<Israel>  பரிசுத்தம்பண்ணுகிற  கர்த்தர்  என்று  ஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  {Ezek  37:28}

 

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Ezek  38:1}

 

மனுபுத்திரனே,  மேசேக்<Meshech>  தூபால்<Tubal>  ஜாதிகளின்  தலைமையான  அதிபதியாகிய  மாகோகு<Magog>  தேசத்தானான  கோகுக்கு<Gog>  எதிராக  நீ  உன்  முகத்தைத்  திருப்பி,  அவனுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  {Ezek  38:2}

 

சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  மேசேக்<Meshech>  தூபால்<Tubal>  ஜாதிகளின்  அதிபதியாகிய  கோகே<Gog>,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வருவேன்.  {Ezek  38:3}

 

நான்  உன்னைத்  திருப்பி,  உன்  வாயில்  துறடுகளைப்  போட்டு,  உன்னையும்  உன்னுடைய  எல்லாச்  சேனையையும்,  குதிரைகளையும்,  சர்வாயுதந்தரித்த  குதிரைவீரர்களையும்,  பரிசையும்  கேடகமுமுடைய  திரளான  கூட்டத்தையும்  புறப்படப்பண்ணுவேன்;  அவர்கள்  எல்லாரும்  பட்டயங்களைப்  பிடித்திருப்பார்கள்.  {Ezek  38:4}

 

அவர்களோடேகூடப்  பெர்சியரும்<Persia>,  எத்தியோப்பியரும்<Ethiopia>,  லீபியரும்<Libya>  இருப்பார்கள்;  அவர்களெல்லாரும்  கேடகம்  பிடித்து,  தலைச்சீராவுந்  தரித்திருப்பவர்கள்.  {Ezek  38:5}

 

கோமேரும்<Gomer>  அவனுடைய  எல்லா  இராணுவங்களும்,  வடதிசையிலுள்ள  தோகர்மா<Togarmah>  வம்சத்தாரும்  அவர்களுடைய  எல்லா  இராணுவங்களுமாகிய  திரளான  ஜனங்கள்  உன்னுடனேகூட  இருப்பார்கள்.  {Ezek  38:6}

 

நீ  ஆயத்தப்படு,  உன்னுடனே  கூடின  உன்  எல்லாக்  கூட்டத்தையும்  ஆயத்தப்படுத்து;  நீ  அவர்களுக்குக்  காவலாளனாயிரு.  {Ezek  38:7}

 

அநேக  நாட்களுக்குப்  பிற்பாடு  நீ  விசாரிக்கப்படுவாய்;  பட்டயத்துக்கு  நீங்கலாகி,  பற்பல  ஜனங்களிலிருந்து  சேர்த்துக்கொள்ளப்பட்டு  வந்தவர்களின்  தேசத்தில்  கடைசி  வருஷங்களிலே  வருவாய்;  நெடுநாள்  பாழாய்க்கிடந்து,  பிற்பாடு  ஜாதிகளிலிருந்து  கொண்டுவரப்பட்டவர்கள்  எல்லாரும்  சுகத்தோடே  குடியிருக்கும்  இஸ்ரவேலின்<Israel>  மலைகளுக்கு  விரோதமாய்  வருவாய்;  அவர்கள்  எல்லாரும்  அஞ்சாமல்  குடியிருக்கும்போது,  {Ezek  38:8}

 

பெருங்காற்றைப்போல்  எழும்பிவருவாய்;  நீயும்  உன்னுடைய  எல்லா  இராணுவங்களும்  உன்னோடேகூட  இருக்கும்  திரளான  ஜனங்களும்  கார்மேகம்போல்  தேசத்தை  மூடுவீர்கள்.  {Ezek  38:9}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அந்நாளிலே  பாழாய்க்கிடந்து  திரும்பக்  குடியேற்றப்பட்ட  ஸ்தலங்களுக்கு  விரோதமாகவும்,  ஜாதிகளிடத்திலிருந்து  சேர்க்கப்பட்டதும்,  ஆடுகளையும்  மாடுகளையும்  ஆஸ்திகளையும்  சம்பாதித்து,  தேசத்தின்  நடுவில்  குடியிருக்கிறதுமான  ஜனத்துக்கு  விரோதமாகவும்,  நீ  உன்  கையைத்  திருப்பும்படிக்கு,  {Ezek  38:10}

 

உன்  இருதயத்தில்  யோசனைகள்  எழும்ப,  நீ  பொல்லாத  நினைவை  நினைத்து,  {Ezek  38:11}

 

நான்  கொள்ளையிடவும்  சூறையாடவும்,  மதில்களில்லாமல்  கிடக்கிற  கிராமங்களுள்ள  தேசத்துக்கு  விரோதமாய்ப்போவேன்;  நிர்விசாரமாய்ச்  சுகத்தோடே  குடியிருக்கிறவர்களின்மேல்  வருவேன்;  அவர்கள்  எல்லாரும்  மதில்களில்லாமல்  குடியிருக்கிறார்கள்;  அவர்களுக்குத்  தாழ்ப்பாளும்  இல்லை,  கதவுகளும்  இல்லை  என்பாய்.  {Ezek  38:12}

 

சேபா<Sheba>  தேசத்தாரும்,  தேதான்<Dedan>  தேசத்தாரும்,  தர்ஷீசின்<Tarshish>  வர்த்தகரும்  அதினுடைய  பாலசிங்கங்களான  அனைவரும்  உன்னை  நோக்கி:  நீ  கொள்ளையிட  அல்லவோ  வருகிறாயென்றும்,  நீ  சூறையாடி,  வெள்ளியையும்  பொன்னையும்  ஆஸ்தியையும்  எடுத்துக்கொள்ளுகிறதற்கும்,  ஆடுகளையும்  மாடுகளையும்  பிடிக்கிறதற்கும்,  மிகவும்  கொள்ளையிடுகிறதற்கும்  அல்லவோ  உன்னுடைய  கூட்டத்தைக்  கூட்டினாயென்றும்  சொல்லுவார்கள்.  {Ezek  38:13}

 

ஆகையால்  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  கோகை<Gog>  நோக்கிச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  என்  ஜனமாகிய  இஸ்ரவேல்<Israel>  சுகமாய்க்  குடியிருக்கிற  அக்காலத்திலே  நீ  அதை  அறிவாய்  அல்லவோ?  {Ezek  38:14}

 

அப்பொழுது  நீயும்  உன்னுடனேகூடத்  திரளான  ஜனங்களும்  வடதிசையிலுள்ள  உன்  ஸ்தானத்திலிருந்து  வருவீர்கள்;  அவர்கள்  பெரிய  கூட்டமும்  திரளான  சேனையுமாயிருந்து,  எல்லாரும்  குதிரைகளின்மேல்  ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.  {Ezek  38:15}

 

நீ  தேசத்தைக்  கார்மேகம்போல்  மூட,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  விரோதமாக  எழும்பிவருவாய்;  கடைசி  நாட்களிலே  இது  சம்பவிக்கும்;  கோகே<Gog>,  ஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாக  உன்மூலமாய்  நான்  பரிசுத்தர்  என்று  விளங்கப்படுகிறதினால்  அவர்கள்  என்னை  அறியும்படிக்கு  உன்னை  என்  தேசத்துக்கு  விரோதமாக  வரப்பண்ணுவேன்.  {Ezek  38:16}

 

உன்னை  அவர்களுக்கு  விரோதமாக  வரப்பண்ணுவேன்  என்று  பூர்வநாட்களிலே  அநேக  வருஷகாலமாய்த்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  இஸ்ரவேலின்<Israel>  தீர்க்கதரிசிகளாகிய  என்  ஊழியக்காரரைக்கொண்டு,  அந்நாட்களிலே  நான்  குறித்துச்சொன்னவன்  நீ  அல்லவோ  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  38:17}

 

இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்கு  விரோதமாகக்  கோகு<Gog>  வரும்காலத்தில்  என்  உக்கிரம்  என்  நாசியில்  ஏறுமென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  38:18}

 

அந்நாளிலே  இஸ்ரவேல்<Israel>  தேசத்திலே  பெரிய  அதிர்ச்சி  உண்டாகி,  {Ezek  38:19}

 

என்  பிரசன்னத்தினால்  சமுத்திரத்து  மச்சங்களும்,  ஆகாயத்துப்  பறவைகளும்,  வெளியின்  மிருகங்களும்,  தரையில்  ஊருகிற  சகல  பிராணிகளும்,  தேசமெங்குமுள்ள  சகல  நரஜீவன்களும்  அதிரும்;  பர்வதங்கள்  இடியும்;  செங்குத்தானவைகள்  விழும்;  எல்லா  மதில்களும்  தரையிலே  விழுந்துபோம்  என்று  என்  எரிச்சலினாலும்  என்  சினத்தின்  அக்கினியினாலும்  நிச்சயமாய்ச்  சொல்லுகிறேன்.  {Ezek  38:20}

 

என்  எல்லா  மலைகளிலும்  பட்டயத்தை  அவனுக்கு  விரோதமாக  வரவழைப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  அவனவன்  பட்டயம்  அவனவன்  சகோதரனுக்கு  விரோதமாயிருக்கும்.  {Ezek  38:21}

 

கொள்ளைநோயினாலும்  இரத்தம்  சிந்துதலினாலும்  நான்  அவனோடே  வழக்காடி,  அவன்மேலும்  அவன்  இராணுவங்களின்மேலும்  அவனோடிருக்கும்  திரளான  ஜனங்களின்மேலும்  வெள்ளமாய்  அடிக்கும்  மழையையும்,  பெருங்கல்மழையையும்,  அக்கினியையும்,  கந்தகத்தையும்  வருஷிக்கப்பண்ணுவேன்.  {Ezek  38:22}

 

இவ்விதமாய்  நான்  அநேக  ஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாக  என்  மகத்துவத்தையும்  என்  பரிசுத்தத்தையும்  விளங்கப்பண்ணி,  அறியப்படுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  38:23}

 

இப்போதும்  மனுபுத்திரனே,  நீ  கோகுக்கு<Gog>  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  மேசேக்<Meshech>  தூபால்<Tubal>  ஜாதிகளின்  அதிபதியாகிய  கோகே<Gog>,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வருகிறேன்.  {Ezek  39:1}

 

நான்  உன்னைத்  திருப்பி  உன்னை  ஆறு  துறடுகளால்  இழுத்து,  உன்னை  வடபுறங்களிலிருந்து  எழும்பவும்  இஸ்ரவேல்<Israel>  மலைகளில்  வரவும்பண்ணி,  {Ezek  39:2}

 

உன்  வில்லை  உன்  இடதுகையிலிருந்து  தட்டிவிட்டு,  உன்  அம்புகளை  உன்  வலதுகையிலிருந்து  விழப்பண்ணுவேன்.  {Ezek  39:3}

 

நீயும்  உன்  எல்லா  இராணுவங்களும்  உன்னோடிருக்கிற  ஜனங்களும்  இஸ்ரவேல்<Israel>  மலைகளில்  விழுவீர்கள்;  உராய்ஞ்சுகிற  சகலவித  பட்சிகளுக்கும்  வெளியின்  மிருகங்களுக்கும்  உன்னை  இரையாகக்  கொடுப்பேன்.  {Ezek  39:4}

 

விசாலமான  வெளியில்  விழுவாய்;  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  {Ezek  39:5}

 

நான்  மாகோகிடத்திலும்<Magog>  தீவுகளில்  நிர்விசாரமாய்க்  குடியிருக்கிறவர்களிடத்திலும்  அக்கினியை  அனுப்புவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  39:6}

 

இவ்விதமாய்  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்<Israel>  நடுவிலே  என்  பரிசுத்தநாமத்தைத்  தெரிவிப்பேன்;  என்  பரிசுத்த  நாமத்தை  இனிப்  பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்;  அதினால்  நான்  இஸ்ரவேலில்<Israel>  பரிசுத்தராகிய  கர்த்தர்  என்று  புறஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  39:7}

 

இதோ,  அது  வந்தது,  அது  சம்பவித்தது  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நான்  சொன்ன  நாள்  இதுவே.  {Ezek  39:8}

 

இஸ்ரவேல்<Israel>  பட்டணங்களின்  குடிகள்  வெளியே  போய்,  கேடகங்களும்,  பரிசைகளும்,  வில்லுகளும்,  அம்புகளும்,  வளைதடிகளும்,  ஈட்டிகளுமாகிய  ஆயுதங்களை  எடுத்து  எரிப்பார்கள்;  ஏழுவருஷம்  அவைகளை  எடுத்து  எரிப்பார்கள்.  {Ezek  39:9}

 

அவர்கள்  வெளியிலிருந்து  விறகு  கொண்டுவராமலும்  காடுகளில்  வெட்டாமலும்,  ஆயுதங்களை  எடுத்து  எரிப்பார்கள்;  அவர்கள்  தங்களைக்  கொள்ளையிட்டவர்களைக்  கொள்ளையிட்டு,  தங்களைச்  சூறையாடினவர்களைச்  சூறையாடுவார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  39:10}

 

அந்நாளில்  இஸ்ரவேல்<Israel>  தேசத்திலே  சமுத்திரத்துக்குக்  கிழக்கே  பிரயாணக்காரரின்  பள்ளத்தாக்கைப்  புதைக்கிற  ஸ்தானமாகக்  கோகுக்குக்<Gog>  கொடுப்பேன்;  அது  வழிப்போக்கர்  மூக்கைப்  பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்;  அங்கே  கோகையும்<Gog>  அவனுடைய  எல்லாச்  சேனையையும்  புதைத்து,  அதை  ஆமோன்கோகின்<Hamongog>  பள்ளத்தாக்கு  என்பார்கள்.  {Ezek  39:11}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்,  தேசத்தைச்  சுத்தம்பண்ணும்படிக்கு  அவர்களைப்  புதைத்துத்தீர  ஏழுமாதம்  செல்லும்.  {Ezek  39:12}

 

தேசத்தின்  ஜனங்களெல்லாரும்  புதைத்துக்கொண்டிருப்பார்கள்;  நான்  மகிமைப்படும்  அந்நாளிலே  அது  அவர்களுக்குக்  கீர்த்தியாக  இருக்கும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  39:13}

 

தேசத்தைச்  சுத்தம்பண்ணுவதற்காக  அதில்  கிடக்கும்  மற்றப்  பிரேதங்களைப்  புதைக்கும்படிக்கு  நித்தமும்  தேசத்தில்  சுற்றித்திரியும்  மனுஷரையும்,  சுற்றித்திரிகிறவர்களோடேகூடப்  புதைக்கிறவர்களையும்  தெரிந்து  நியமிப்பார்கள்;  ஏழுமாதங்கள்  முடிந்தபின்பும்  இவர்கள்  தேடிக்கொண்டிருப்பார்கள்.  {Ezek  39:14}

 

தேசத்தில்  சுற்றித்திரிகிறவர்கள்  திரிந்துகொண்டிருப்பார்கள்;  யாராவது  ஒருவன்  மனுஷனின்  எலும்பைக்  காணும்போது  புதைக்கிறவர்கள்  அதை  ஆமோன்கோகுடைய<Hamongog>  பள்ளத்தாக்கிலே  புதைக்குமட்டும்  அதினண்டையிலே  ஒரு  அடையாளத்தை  நாட்டுவான்.  {Ezek  39:15}

 

அந்த  நகரத்துக்கு  ஆமோனா<Hamonah>  என்று  பெயரிடப்படும்;  இவ்விதமாய்த்  தேசத்தைச்  சுத்தம்பண்ணுவார்கள்.  {Ezek  39:16}

 

மனுபுத்திரனே,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  சகலவித  பட்சிகளையும்  வெளியில்  இருக்கிற  சகல  மிருகங்களையும்  நோக்கி:  நீங்கள்  ஏகமாய்க்  கூடிக்கொண்டு,  இஸ்ரவேலின்<Israel>  மலைகளில்  நான்  உங்களுக்காகச்  செய்யும்  யாகமாகிய  மகா  யாகத்துக்குச்  சுற்றிலுமிருந்து  வந்துசேர்ந்து,  மாம்சம்  தின்று  இரத்தங்குடியுங்கள்.  {Ezek  39:17}

 

நீங்கள்  பராக்கிரமசாலிகளின்  மாம்சத்தைத்  தின்று,  பூமியினுடைய  பிரபுக்களின்  இரத்தத்தைக்  குடிப்பீர்கள்;  அவர்கள்  எல்லாரும்  பாசானிலே<Bashan>  கொழுத்துப்போன  ஆட்டுக்கடாக்களுக்கும்,  ஆட்டுக்குட்டிகளுக்கும்  வெள்ளாட்டுக்  கடாக்களுக்கும்  காளைகளுக்கும்  சமானமானவர்கள்.  {Ezek  39:18}

 

நான்  உங்களுக்காகச்  செய்யும்  யாகத்திலே  நீங்கள்  திருப்தியாகுமளவும்  கொழுப்பைத்  தின்று,  வெறியாகுமளவும்  இரத்தத்தைக்  குடிப்பீர்கள்.  {Ezek  39:19}

 

இவ்விதமாய்  என்  பந்தியிலே  குதிரைகளையும்,  இரதவீரர்களையும்,  பராக்கிரமசாலிகளையும்,  சகல  யுத்தவீரர்களையும்  தின்று,  திருப்தியாவீர்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  {Ezek  39:20}

 

இவ்விதமாய்  என்  மகிமையை  நான்  புறஜாதிகளுக்குள்ளே  விளங்கப்பண்ணுவேன்;  நான்  செய்த  என்  நியாயத்தையும்  அவர்கள்மேல்  நான்  வைத்த  என்  கையையும்  எல்லா  ஜாதிகளும்  காண்பார்கள்.  {Ezek  39:21}

 

அன்றுமுதல்  என்றும்  நான்  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  39:22}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  தங்கள்  அக்கிரமத்தினிமித்தமே  சிறைப்பட்டுப்போனார்கள்  என்று  அப்பொழுது  புறஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்;  அவர்கள்  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணினபடியால்,  என்  முகத்தை  நான்  அவர்களுக்கு  மறைத்து,  அவர்கள்  சத்துருக்களின்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுத்தேன்;  அவர்கள்  அனைவரும்  பட்டயத்தால்  விழுந்தார்கள்.  {Ezek  39:23}

 

அவர்களுடைய  அசுத்தத்துக்குத்  தக்கதாகவும்,  அவர்களுடைய  மீறுதல்களுக்குத்தக்கதாகவும்,  நான்  அவர்களுக்குச்  செய்து,  என்  முகத்தை  அவர்களுக்கு  மறைத்தேன்.  {Ezek  39:24}

 

ஆதலால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  {Ezek  39:25}

 

அவர்கள்  தங்கள்  அவமானத்தையும்,  பயப்படுத்துவார்  இல்லாமல்,  தாங்கள்  சுகமாய்த்  தங்கள்  தேசத்தில்  குடியிருக்கும்போது  எனக்கு  விரோதமாய்த்  தாங்கள்  செய்த  எல்லாத்  துரோகத்தையும்  சுமந்து  தீர்த்தபின்பு,  நான்  யாக்கோபின்<Jacob>  சிறையிருப்பைத்  திருப்பி,  இஸ்ரவேல்<Israel>  வம்சமனைத்துக்கும்  இரங்கி,  என்  பரிசுத்த  நாமத்துக்காக  வைராக்கியமாயிருப்பேன்.  {Ezek  39:26}

 

நான்  அவர்களை  ஜனசதளங்களிலிருந்து  திரும்பிவரப்பண்ணி,  அவர்களுடைய  பகைஞரின்  தேசங்களிலிருந்து  அவர்களைக்  கூட்டிக்கொண்டுவந்து,  திரளான  ஜாதிகளுடைய  கண்களுக்கு  முன்பாக  அவர்களுக்குள்  நான்  பரிசுத்தர்  என்று  விளங்கும்போது,  {Ezek  39:27}

 

தங்களைப்  புறஜாதிகளிடத்தில்  சிறைப்பட்டுப்போகப்பண்ணின  நான்  தங்களில்  ஒருவரையும்  அங்கே  அப்புறம்  வைக்காமல்,  தங்களைத்  தங்கள்  சுயதேசத்திலே  திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன்  என்பதினால்,  நான்  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  {Ezek  39:28}

 

நான்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்மேல்  என்  ஆவியை  ஊற்றினபடியினால்  என்  முகத்தை  இனி  அவர்களுக்கு  மறைக்கமாட்டேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்  என்றார்.  {Ezek  39:29}

 

நாங்கள்  சிறைப்பட்டுப்போன  இருபத்தைந்தாம்  வருஷத்தின்  ஆரம்பத்தில்  முதலாம்  மாதம்  பத்தாந்தேதியாகிய  அன்றே  கர்த்தருடைய  கை  என்மேல்  அமர்ந்தது,  அவர்  என்னை  அவ்விடத்துக்குக்  கொண்டுபோனார்;  அப்பொழுது  நகரம்  அழிக்கப்பட்டுப்  பதினாலு  வருஷமாயிற்று.  {Ezek  40:1}

 

தேவதரிசனங்களில்  அவர்  என்னை  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்குக்  கொண்டுபோய்,  என்னை  மகா  உயரமான  ஒரு  மலையின்மேல்  நிறுத்தினார்;  அதின்மேல்  தெற்காக  ஒரு  நகரம்  கட்டியிருக்கிறதுபோல்  காணப்பட்டது.  {Ezek  40:2}

 

அவர்  என்னை  அங்கே  கொண்டுபோனார்;  இதோ,  அங்கே  ஒரு  புருஷன்  இருந்தார்;  அவருடைய  தோற்றம்  வெண்கலமாயிருந்தது;  அவர்  கையில்  சணற்கயிறும்  ஒரு  அளவுகோலும்  இருந்தது;  அவர்  வாசலிலே  நின்றார்.  {Ezek  40:3}

 

அந்தப்  புருஷன்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  கண்ணாரப்பார்த்து,  காதாரக்  கேட்டு,  நான்  உனக்குக்  காண்பிப்பதெல்லாவற்றின்  மேலும்  உன்  மனதை  வை;  நான்  உனக்கு  அவைகளைக்  காண்பிக்கும்படி  நீ  இங்கே  கொண்டுவரப்பட்டாய்;  நீ  காண்பதையெல்லாம்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்குத்  தெரிவி  என்றார்.  {Ezek  40:4}

 

இதோ,  ஆலயத்துக்குப்  புறம்பே  சுற்றிலும்  ஒரு  மதில்  இருந்தது;  அந்தப்  புருஷன்  கையிலே  ஆறுமுழ  நீளமான  ஒரு  அளவுகோல்  இருந்தது;  ஒவ்வொரு  முழமும்  நமது  கைமுழத்திலும்  நாலு  விரற்கடை  அதிகமானது;  அவர்  அந்த  மதிலை  அளந்தார்;  அகலம்  ஒரு  கோலாகவும்  உயரம்  ஒரு  கோலாகவும்  இருந்தது.  {Ezek  40:5}

 

பின்பு  அவர்  கிழக்குமுக  வாசலுக்கு  வந்து,  அதின்  படிகளின்மேல்  ஏறி,  வாசற்படியை  ஒரு  கோல்  அகலமாகவும்,  மறுவாசற்படியை  ஒரு  கோல்  அகலமாகவும்  அளந்தார்.  {Ezek  40:6}

 

ஒவ்வொரு  அறையும்  ஒரு  கோல்  நீளமும்  ஒரு  கோல்  அகலமுமாயிருந்தது;  அறைவீடுகளுக்கு  நடுவே  ஐந்துமுழ  இடம்  விட்டிருந்தது;  வாசலின்  மண்டபத்தருகே  உள்வாசற்படி  ஒரு  கோலளவாயிருந்தது.  {Ezek  40:7}

 

வாசலின்  மண்டபத்தையும்  உள்ளே  ஒரு  கோலளவாக  அளந்தார்.  {Ezek  40:8}

 

பின்பு  வாசலின்  மண்டபத்தை  எட்டுமுழமாகவும்,  அதின்  தூணாதாரங்களை  இரண்டு  முழமாகவும்  அளந்தார்;  வாசலின்  மண்டபம்  உட்புறத்திலிருந்தது.  {Ezek  40:9}

 

கீழ்த்திசைக்கெதிரான  வாசலின்  அறைகள்  இந்தப்புறத்தில்  மூன்றும்  அந்தப்புறத்தில்  மூன்றுமாயிருந்தது;  அவைகள்  மூன்றுக்கும்  ஒரே  அளவும்,  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்  இருந்த  தூணாதாரங்களுக்கு  ஒரே  அளவும்  இருந்தது.  {Ezek  40:10}

 

பின்பு  வாசல்  நடையின்  அகலத்தைப்  பத்துமுழமாகவும்,  வாசலின்  நீளத்தைப்  பதின்மூன்று  முழமாகவும்  அளந்தார்.  {Ezek  40:11}

 

அறைகளுக்குமுன்னே  இந்தப்புறத்தில்  ஒரு  முழ  இடமும்  அந்தப்புறத்தில்  ஒரு  முழ  இடமும்  இருந்தது;  ஒவ்வொரு  அறையும்  இந்தப்புறத்தில்  ஆறு  முழமும்  அந்தப்புறத்தில்  ஆறு  முழமுமாயிருந்தது.  {Ezek  40:12}

 

பின்பு  வாசலில்  இருந்த  அறையின்  மெத்தையினின்று  மற்ற  அறையின்  மெத்தைமட்டும்  இருபத்தைந்து  முழமாக  அளந்தார்;  கதவுக்குக்  கதவு  நேராயிருந்தது.  {Ezek  40:13}

 

தூணாதாரங்களை  அறுபது  முழமாக  அளந்தார்;  இந்தத்  தூணாதாரங்களின்  அருகே  சுற்றிலும்  முன்வாசலின்  முற்றம்  இருந்தது.  {Ezek  40:14}

 

பிரவேச  வாசலின்  முகப்புத்துவக்கி,  உட்புறவாசல்  மண்டபமுகப்புமட்டும்  ஐம்பது  முழமாயிருந்தது.  {Ezek  40:15}

 

வாசலுக்கு  உட்புறமாகச்  சுற்றிலுமுள்ள  அறைகளுக்கும்  அவைகளின்  தூணாதாரங்களுக்கும்  ஒடுக்கமான  ஜன்னல்கள்  இருந்தது;  மண்டபங்களிலும்  அப்படியே  இருந்தது;  உட்புறமாய்ச்  சுற்றிலும்  அந்த  ஜன்னல்களும்  தூணாதாரங்களில்  சித்திரிக்கப்பட்ட  பேரீச்சமரங்களும்  இருந்தது.  {Ezek  40:16}

 

பின்பு  என்னை  வெளிப்பிராகாரத்துக்கு  அழைத்துக்கொண்டுபோனார்;  அங்கே  அறைவீடுகளும்,  பிராகாரத்தின்  சுற்றிலும்  பதித்த  தளவரிசையும்  இருந்தது;  அந்தத்  தளவரிசையின்மேல்  முப்பது  அறைவீடுகள்  இருந்தது.  {Ezek  40:17}

 

வாசலுக்குப்  பக்கத்திலும்  வாசல்களின்  நீளத்துக்கு  எதிரிலுமுள்ள  அந்தத்  தளவரிசை  தாழ்வான  தளவரிசையாயிருந்தது.  {Ezek  40:18}

 

பின்பு  அவர்  கீழ்வாசலின்  முகப்புத்துவக்கி,  உட்பிராகாரத்துப்  புறமுகப்புமட்டுமுள்ள  விசாலத்தை  அளந்தார்;  அது  கிழக்கும்  வடக்கும்  நூறு  முழமாயிருந்தது.  {Ezek  40:19}

 

வெளிப்பிராகாரத்துக்கு  அடுத்த  வடதிசைக்கு  எதிரான  வாசலின்  நீளத்தையும்  அகலத்தையும்  அளந்தார்.  {Ezek  40:20}

 

அதற்கு  இப்புறத்தில்  மூன்று  அறைகளும்  அப்புறத்தில்  மூன்று  அறைகளும்  இருந்தது;  அதின்  தூணாதாரங்களும்  அதின்  மண்டபங்களும்  முதல்  வாசலின்  அளவுக்குச்  சரியாயிருந்தது;  அதின்  நீளம்  ஐம்பது  முழமும்,  அகலம்  இருபத்தைந்து  முழமுமாயிருந்தது.  {Ezek  40:21}

 

அதின்  ஜன்னல்களும்,  அதின்  மண்டபங்களும்,  அதின்மேல்  சித்திரிக்கப்பட்ட  பேரீச்சமரங்களும்,  கீழ்த்திசைக்கு  எதிரான  வாசலின்  அளவுக்குச்  சரியாயிருந்தது;  அதில்  ஏறுகிறதற்கு  ஏழு  படிகளிருந்தது;  அதின்  மண்டபங்கள்  அவைகளுக்கு  முன்னாக  இருந்தது.  {Ezek  40:22}

 

வடதிசையிலும்  கீழ்த்திசையிலுமுள்ள  ஒவ்வொரு  வாசலுக்கு  எதிராக  உட்பிராகாரத்துக்கும்  வாசல்கள்  இருந்தது;  ஒரு  வாசல்துவக்கி  மற்ற  வாசல்மட்டும்  நூறு  முழமாக  அளந்தார்.  {Ezek  40:23}

 

பின்பு  என்னைத்  தென்திசைக்கு  அழைத்துக்கொண்டுபோனார்;  அங்கே  தென்திசைக்கு  எதிரான  வாசல்  இருந்தது;  அதின்  தூணாதாரங்களையும்  அதின்  மண்டபங்களையும்  அதற்குரிய  அளவின்படி  அளந்தார்.  {Ezek  40:24}

 

அந்த  ஜன்னல்களுக்குச்  சரியாக  அதற்கும்  அதின்  மண்டபங்களுக்கும்  ஜன்னல்கள்  சுற்றிலும்  இருந்தது;  நீளம்  ஐம்பதுமுழமும்  அகலம்  இருபத்தைந்து  முழமுமாயிருந்தது.  {Ezek  40:25}

 

அதில்  ஏறுகிறதற்கு  ஏழு  படிகளிருந்தது;  அதற்கு  முன்பாக  அதின்  மண்டபங்களும்  இருந்தது;  அதின்  தூணாதாரங்களில்  சித்திரிக்கப்பட்ட  பேரீச்சமரங்களும்  இந்தப்புறத்தில்  ஒன்றும்  அந்தப்புறத்தில்  ஒன்றுமாக  இருந்தது.  {Ezek  40:26}

 

உட்பிராகாரத்துக்கும்  ஒரு  வாசல்  தென்திசைக்கு  எதிராக  இருந்தது;  தென்திசையிலுள்ள  ஒரு  வாசல்துவக்கி  மற்ற  வாசல்மட்டும்  நூறுமுழமாக  அளந்தார்.  {Ezek  40:27}

 

பின்பு  அவர்  தெற்கு  வாசலால்  என்னை  உட்பிராகாரத்துக்கு  அழைத்துக்கொண்டுபோய்,  அந்த  அளவுக்குச்  சரியாகத்  தெற்கு  வாசலையும்  அளந்தார்.  {Ezek  40:28}

 

அதின்  அறைகளும்,  அதின்  தூணாதாரங்களும்,  அதின்  மண்டபங்களும்,  அந்த  அளவுக்குச்  சரியாக  இருந்தது;  அதற்கும்  அதின்  மண்டபங்களுக்கும்  ஜன்னல்கள்  சுற்றிலும்  இருந்தது;  நீளம்  ஐம்பது  முழமும்  அகலம்  இருபத்தைந்து  முழமுமாயிருந்தது.  {Ezek  40:29}

 

இருபத்தைந்து  முழ  நீளமும்  ஐந்துமுழ  அகலமுமான  மண்டபங்கள்  சுற்றிலும்  இருந்தது.  {Ezek  40:30}

 

அதின்  மண்டபங்கள்  வெளிப்பிராகாரத்தில்  இருந்தது;  அதின்  தூணாதாரங்களில்  சித்திரிக்கப்பட்ட  பேரீச்சமரங்களும்  இருந்தது;  அதில்  ஏறுகிறதற்கு  எட்டுப்படிகள்  இருந்தது.  {Ezek  40:31}

 

பின்பு  அவர்  கீழ்த்திசை  வழியாய்  என்னை  உட்பிராகாரத்துக்கு  அழைத்துக்கொண்டுபோய்,  அந்த  அளவுக்குச்  சரியாக  அந்த  வாசலையும்  அளந்தார்.  {Ezek  40:32}

 

அதின்  அறைகளும்  அதின்  தூணாதாரங்களும்  அதின்  மண்டபங்களும்  அந்த  அளவுகளுக்குச்  சரியாக  இருந்தது;  அதற்கும்  அதின்  மண்டபங்களுக்கும்  ஜன்னல்கள்  சுற்றிலும்  இருந்தது;  நீளம்  ஐம்பது  முழமும்  அகலம்  இருபத்தைந்து  முழமுமாயிருந்தது.  {Ezek  40:33}

 

அதின்  மண்டபங்கள்  வெளிப்பிராகாரத்தில்  இருந்தது;  அதின்  தூணாதாரங்களில்  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்  சித்திரிக்கப்பட்ட  பேரீச்சமரங்களும்  இருந்தது;  அதில்  ஏறுகிறதற்கு  எட்டுப்  படிகள்  இருந்தது.  {Ezek  40:34}

 

பின்பு  அவர்  என்னை  வடக்குவாசலுக்கு  அழைத்துக்கொண்டுபோய்,  அந்த  அளவுக்குச்  சரியாய்  அதின்  வாசலை  அளந்தார்.  {Ezek  40:35}

 

அதின்  அறைகளும்  அதின்  தூணாதாரங்களும்  அதின்  மண்டபங்களும்  அளக்கப்பட்டது;  அதைச்  சுற்றி  ஜன்னல்களும்  இருந்தது;  நீளம்  ஐம்பது  முழமும்  அகலம்  இருபத்தைந்து  முழமுமாயிருந்தது.  {Ezek  40:36}

 

அதின்  தூணாதாரங்கள்  வெளிப்பிராகாரத்தில்  இருந்தது;  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்  அதின்  தூணாதாரங்களில்  பேரீச்சமரங்களும்  சித்திரிக்கப்பட்டிருந்தது;  அதில்  ஏறுவதற்கு  எட்டுப்  படிகள்  இருந்தது.  {Ezek  40:37}

 

அதின்  அறைகளும்  அதின்  கதவுகளும்  வாசல்களின்  தூணாதாரங்களுக்கு  அருகில்  இருந்தது;  அங்கே  தகனபலிகளைக்  கழுவுவார்கள்.  {Ezek  40:38}

 

வாசலின்  மண்டபத்திலே  இந்தப்புறத்தில்  இரண்டு  பீடங்களும்  அந்தப்புறத்தில்  இரண்டு  பீடங்களும்  இருந்தது;  அவைகளின்மேல்  தகனபலியையும்  பாவநிவாரண  பலியையும்  குற்றநிவாரணபலியையும்  செலுத்துவார்கள்.  {Ezek  40:39}

 

வடக்குவாசலுக்குள்  பிரவேசிக்கிறதற்கு  ஏறிப்போகிற  வெளிப்புறத்திலே  இரண்டு  பீடங்களும்,  வாசலின்  மண்டபத்திலுள்ள  மறுபுறத்திலே  இரண்டு  பீடங்களும்  இருந்தது.  {Ezek  40:40}

 

வாசலின்  அருகே  இந்தப்புறத்தில்  நாலு  பீடங்களும்,  அந்தப்புறத்தில்  நாலு  பீடங்களும்,  ஆக  எட்டுப்  பீடங்கள்  இருந்தது;  அவைகளின்மேல்  பலிகளைச்  செலுத்துவார்கள்.  {Ezek  40:41}

 

தகனபலிக்குரிய  நாலு  பீடங்கள்  வெட்டின  கல்லாயிருந்தது;  அவைகள்  ஒன்றரை  முழ  நீளமும்,  ஒன்றரை  முழ  அகலமும்,  ஒரு  முழ  உயரமுமாயிருந்தது;  அவைகளின்மேல்  தகனபலிகளையும்  மற்றப்  பலிகளையும்  செலுத்துகிற  ஆயுதங்களை  வைப்பார்கள்.  {Ezek  40:42}

 

நாலு  விரற்கடையான  முளைகள்  உள்ளே  சுற்றிலும்  வரிசையாய்  அடிக்கப்பட்டிருந்தது;  செலுத்தும்  பலிகளின்  மாம்சம்  பீடங்களின்மேல்  வைக்கப்படும்.  {Ezek  40:43}

 

உட்பிராகாரத்திலே  உள்வாசலுக்குப்  புறம்பாகச்  சங்கீதக்காரரின்  அறைவீடுகள்  இருந்தது;  அவைகளில்  வடக்கு  வாசலின்  பக்கமாக  இருந்தவைகள்  தென்திசைக்கு  எதிராகவும்,  கிழக்கு  வாசலின்  பக்கமாக  இருந்த  வேறொரு  வரிசை  வடதிசைக்கு  எதிராகவும்  இருந்தது.  {Ezek  40:44}

 

பின்பு  அவர்  என்னை  நோக்கி:  தென்திசைக்கு  எதிராயிருக்கிற  இந்த  அறை  ஆலயக்காவலைக்  காக்கிற  ஆசாரியர்களுடையது.  {Ezek  40:45}

 

வடதிசைக்கு  எதிராயிருக்கிற  அறையோ,  பலிபீடத்தின்  காவலைக்  காக்கிற  ஆசாரியர்களுடையது;  இவர்கள்  லேவியின்<Levi>  புத்திரரில்  கர்த்தருக்கு  ஆராதனை  செய்கிறதற்காக  அவரிடத்தில்  சேருகிற  சாதோக்கின்<Zadok>  புத்திரர்  என்றார்.  {Ezek  40:46}

 

அவர்  பிராகாரத்தை  நூறுமுழ  நீளமாகவும்  நூறுமுழ  அகலமாகவும்  அளந்தார்;  அது  சதுரமாயிருந்தது;  பலிபீடமோ  ஆலயத்துக்கு  முன்பாக  இருந்தது.  {Ezek  40:47}

 

பின்பு  அவர்  என்னை  ஆலய  மண்டபத்துக்கு  அழைத்துக்கொண்டுபோய்,  மண்டபத்தின்  தூணாதாரத்தை  இந்தப்புறத்தில்  ஐந்து  முழமும்  அந்தப்புறத்தில்  ஐந்து  முழமுமாக  அளந்தார்;  வாசலின்  அகலம்  இந்தப்புறம்  மூன்று  முழமும்  அந்தப்புறம்  மூன்று  முழமுமாயிருந்தது.  {Ezek  40:48}

 

மண்டபத்தின்  நீளம்  இருபது  முழமும்,  அகலம்  பதினொரு  முழமுமாயிருந்தது;  அதற்கு  ஏறிப்போகிற  படிகளும்  இருந்தது;  தூணாதாரங்களிலே  இந்தப்புறத்தில்  ஒரு  தூணும்  அந்தப்புறத்தில்  ஒரு  தூணும்  இருந்தது.  {Ezek  40:49}

 

பின்பு  அவர்  என்னைத்  தேவாலயத்திற்கு  அழைத்துக்கொண்டுபோய்,  தூணாதாரங்களை  இந்தப்புறத்தில்  ஆறுமுழ  அகலமும்  அந்தப்புறத்தில்  ஆறுமுழ  அகலமுமாக  அளந்தார்;  அது  வாசஸ்தலத்தின்  அகல  அளவாம்.  {Ezek  41:1}

 

வாசல்  நடையின்  அகலம்  பத்து  முழமும்  வாசல்  நடையின்  பக்கங்கள்  இந்தப்புறத்தில்  ஐந்து  முழமும்  அந்தப்புறத்தில்  ஐந்து  முழமுமாயிருந்தது;  அதின்  நீளத்தை  நாற்பது  முழமும்  அகலத்தை  இருபது  முழமுமாக  அளந்தார்.  {Ezek  41:2}

 

பின்பு  அவர்  உள்ளே  போய்,  வாசல்  நடையின்  தூணாதாரங்களை  இரண்டு  முழமாகவும்,  வாசல்  நடையை  ஆறுமுழமாகவும்,  வாசல்  நடையின்  அகலத்தை  ஏழுமுழமாகவும்  அளந்தார்.  {Ezek  41:3}

 

பின்பு  அவர்  தேவாலயத்தின்  முன்புறத்திலே  அதின்  நீளத்தை  இருபதுமுழமாகவும்,  அதின்  அகலத்தை  இருபது  முழமாகவும்  அளந்து,  என்னை  நோக்கி:  இது  மகா  பரிசுத்த  ஸ்தலம்  என்றார்.  {Ezek  41:4}

 

பின்பு  அவர்  ஆலயத்தின்  சுவரை  ஆறு  முழமாகவும்,  ஆலயத்தைச்  சுற்றிலும்  இருந்த  சுற்றுக்கட்டினுடைய  அகலத்தை  நாலுமுழமாகவும்  அளந்தார்.  {Ezek  41:5}

 

இந்தச்  சுற்றுக்கட்டுகள்  பக்கக்கட்டின்மேல்  பக்கக்கட்டான  வரிசைகளாய்  முப்பத்துமூன்று  இருந்தது;  அவைகள்  ஆலயத்தின்  சுவருக்குள்  ஊன்றியிராமல்,  சுற்றுக்கட்டுகளுக்காகச்  சுற்றிலும்  அவைகள்  ஊன்றும்படிக்கு  ஆலயத்துக்கு  அடுத்திருந்த  ஒட்டுச்சுவரிலே  பாய்ந்திருந்தது.  {Ezek  41:6}

 

உயர  உயரச்  சுற்றிலும்  சுற்றுக்கட்டுகளுக்கு  அகலம்  அதிகமாயிருந்தது;  ஆலயத்தைச்  சுற்றிலும்  உயர  உயர  ஆலயத்தைச்  சுற்றிச்  சுற்றி  அகலம்  வரவர  அதிகமாயிருந்தது;  ஆதலால்  இவ்விதமாய்க்  கீழ்நிலையிலிருந்து  நடுநிலைவழியாய்  மேல்நிலைக்கு  ஏறும்  வழியிருந்தது.  {Ezek  41:7}

 

மாளிகைக்குச்  சுற்றிலும்  இருந்த  உயரத்தையும்  பார்த்தேன்,  சுற்றுக்கட்டுகளின்  அஸ்திபாரங்கள்  ஆறு  பெரிய  முழங்கொண்ட  ஒரு  முழக்கோலின்  உயரமாயிருந்தது.  {Ezek  41:8}

 

புறம்பே  சுற்றுக்கட்டுக்கு  இருந்த  சுவரின்  அகலம்  ஐந்துமுழமாயிருந்தது;  ஆலயத்துக்கு  இருக்கும்  சுற்றுக்கட்டுகளின்  மாளிகையிலே  வெறுமையாய்  விட்டிருந்த  இடங்களும்  அப்படியே  இருந்தது.  {Ezek  41:9}

 

ஆலயத்தைச்  சுற்றிலும்  அறைவீடுகளுக்கு  நடுவாக  இருந்த  விசாலம்  இருபது  முழமாயிருந்தது.  {Ezek  41:10}

 

சுற்றுக்கட்டினுடைய  வாசல்  நடைகள்,  வெறுமையாய்  விட்டிருந்த  இடங்களிலிருந்து,  ஒரு  வாசல்  நடை  வடக்கேயும்,  ஒரு  வாசல்  நடை  தெற்கேயும்  இருந்தது;  வெறுமையாய்  விட்டிருந்த  இடங்களின்  விசாலம்  சுற்றிலும்  ஐந்து  முழமாயிருந்தது.  {Ezek  41:11}

 

மேற்றிசையிலே  பிரத்தியேகமான  இடத்துக்கு  முன்னிருந்த  மாளிகைமட்டும்  அகலம்  எழுபது  முழமும்,  மாளிகையினுடைய  சுவரின்  அகலம்  சுற்றிலும்  ஐந்து  முழமும்,  அதினுடைய  நீளம்  தொண்ணூறு  முழமுமாயிருந்தது.  {Ezek  41:12}

 

அவர்  ஆலயத்தை  நூறு  முழ  நீளமாகவும்,  பிரத்தியேகமான  இடத்தையும்  மாளிகையையும்  அதின்  சுவர்களையும்  நூறு  முழ  நீளமாகவும்  அளந்தார்.  {Ezek  41:13}

 

ஆலயத்தின்  முற்புறமும்  கிழக்குக்கு  எதிரான  பிரத்தியேகமான  இடமும்  இருந்த  அகலம்  நூறு  முழமாயிருந்தது.  {Ezek  41:14}

 

பிரத்தியேகமான  இடத்தின்  பின்புறமாக  அதற்கு  எதிரே  இருந்த  மாளிகையின்  நீளத்தையும்,  அதற்கு  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்  இருந்த  நடைகாவணங்களையும்  அளந்தார்;  உள்ளான  தேவாலயமும்  முற்றத்தின்  மண்டபங்களும்  உட்பட  நூறு  முழமாயிருந்தது.  {Ezek  41:15}

 

வாசற்படிகளும்,  ஒடுக்கமான  ஜன்னல்களும்,  மூன்று  பக்கங்களில்  சுற்றிலும்  வாசல்களுக்கு  எதிரான  நடைகாவணங்களும்  சுற்றிலும்  தரைதுவக்கி  ஜன்னல்கள்  மட்டாகப்  பலகை  அடித்திருந்தது;  ஜன்னல்கள்  மூடப்பட்டிருந்தது.  {Ezek  41:16}

 

வாசலின்  மேலேதுவக்கி  ஆலயத்தின்  உட்புறமும்  வெளிப்புறமும்  சுற்றிலும்  சுவரின்  உட்புறமும்  வெளிப்புறமும்  எல்லாம்  அளவிட்டிருந்தது.  {Ezek  41:17}

 

கேருபீன்களும்<cherubims>  பேரீச்சமரங்களும்  சித்திரிக்கப்பட்டிருந்தது;  கேருபீனுக்கும்<cherub>  கேருபீனுக்கும்<cherub>  நடுவாக  ஒவ்வொரு  பேரீச்சமரம்  இருந்தது;  ஒவ்வொரு  கேருபீனுக்கும்<cherub>  இரண்டிரண்டு  முகங்கள்  இருந்தது.  {Ezek  41:18}

 

பேரீச்சமரத்துக்கு  இந்தண்டையில்  மனுஷமுகமும்,  பேரீச்சமரத்துக்கு  அந்தண்டையில்  சிங்கமுகமும்  இருந்தது;  இப்படியே  ஆலயத்தைச்  சுற்றிலும்  செய்திருந்தது.  {Ezek  41:19}

 

தரைதுவக்கி  வாசலின்  மேற்புறமட்டும்,  தேவாலயத்தின்  சுவரிலும்,  கேருபீன்களும்<cherubims>  பேரீச்சமரங்களும்  சித்திரிக்கப்பட்டிருந்தது.  {Ezek  41:20}

 

தேவாலயத்தின்  கதவு  நிலைகள்  சதுரமும்,  பரிசுத்த  ஸ்தலத்தினுடைய  முகப்பின்  உருவம்  அந்த  உருவத்துக்குச்  சரியுமாயிருந்தது.  {Ezek  41:21}

 

மரத்தினால்  செய்யப்பட்ட  பலிபீடத்தின்  உயரம்  மூன்று  முழமும்,  அதின்  நீளம்  இரண்டு  முழமுமாயிருந்தது;  அதின்  கோடிகளும்  அதின்  விளிம்புகளும்  அதின்  பக்கங்களும்  மரத்தினால்  செய்யப்பட்டிருந்தது.  அவர்  என்னை  நோக்கி:  இது  கர்த்தருடைய  சந்நிதியிலிருக்கிற  பீடம்  என்றார்.  {Ezek  41:22}

 

தேவாலயத்துக்கும்  பரிசுத்த  ஸ்தலத்துக்கும்  இரண்டு  வாசல்களும்,  {Ezek  41:23}

 

வாசல்களுக்கு  மடக்குக்  கதவுகளாகிய  இரட்டைக்  கதவுகளும்  இருந்தது;  ஒரு  வாசலுக்கு  இரண்டு  கதவுகளும்  மற்ற  வாசலுக்கு  இரண்டு  கதவுகளும்  இருந்தது.  {Ezek  41:24}

 

சுவர்களில்  சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல்  ஆலயத்தினுடைய  கதவுகளிலும்  கேருபீன்களும்<cherubims>  பேரீச்சமரங்களும்  சித்திரிக்கப்பட்டிருந்தது;  புறம்பே  மண்டபத்தின்  முன்பாக  உத்திரங்கள்  வைத்திருந்தது.  {Ezek  41:25}

 

மண்டபத்தின்  பக்கங்களில்  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்,  ஆலயத்தின்  சுற்றுக்கட்டுகளிலும்  ஒடுக்கமான  ஜன்னல்களும்  சித்திரிக்கப்பட்ட  பேரீச்சமரங்களும்  உத்திரங்களும்  இருந்தது.  {Ezek  41:26}

 

பின்பு  அவர்  என்னை  வடதிசையின்  வழியாக  வெளிப்பிராகாரத்திலே  புறப்படப்பண்ணி,  பிரத்தியேகமான  இடத்துக்கு  எதிராகவும்,  மாளிகைக்கு  எதிராகவும்  வடக்கே  இருந்த  அறைவீடுகளுக்கு  என்னை  அழைத்துக்கொண்டுபோனார்.  {Ezek  42:1}

 

நூறு  முழ  நீளத்துக்கு  முன்னே  வடக்கு  வாசல்  இருந்தது;  அவ்விடத்து  அகலம்  ஐம்பது  முழம்.  {Ezek  42:2}

 

உட்பிராகாரத்தில்  இருந்த  இருபது  முழத்துக்கு  எதிராகவும்  வெளிப்பிராகாரத்தில்  இருந்த  தளவரிசைக்கு  எதிராகவும்  ஒன்றுக்கொன்று  எதிரான  மூன்று  நிலைகளுள்ள  நடைகாவணங்கள்  இருந்தது.  {Ezek  42:3}

 

உட்புறத்திலே  அறைவீடுகளின்  முன்பாகப்  பத்து  முழ  அகலமான  வழியும்,  ஒரு  முழ  அகலமான  பாதையும்  இருந்தது;  அவைகளின்  வாசல்கள்  வடக்கே  இருந்தது.  {Ezek  42:4}

 

உயர  இருந்த  அறைவீடுகள்  அகலக்கட்டையாயிருந்தது;  நடைகாவணங்கள்  கீழேயிருக்கிற  அறைவீடுகளுக்கும்  நடுவேயிருக்கிறவைகளுக்கும்  அதிக  உயரமான  மாளிகையாயிருந்தது.  {Ezek  42:5}

 

அவைகள்  மூன்று  அடுக்குகளாயிருந்தது;  பிராகாரங்களின்  தூண்களுக்கு  இருந்ததுபோல,  அவைகளுக்குத்  தூண்களில்லை;  ஆகையால்  தரையிலிருந்து  அளக்க,  அவைகள்  கீழேயும்  நடுவேயும்  இருக்கிறவைகளைப்பார்க்கிலும்  அகலக்கட்டையாயிருந்தது.  {Ezek  42:6}

 

புறம்பே  அறைவீடுகளுக்கு  எதிரே  வெளிப்பிராகாரத்  திசையில்  அறைவீடுகளுக்கு  முன்பாக  இருந்த  மதிலின்  நீளம்  ஐம்பது  முழம்.  {Ezek  42:7}

 

வெளிப்பிராகாரத்திலுள்ள  அறைவீடுகளின்  நீளம்  ஐம்பது  முழம்,  தேவாலயத்துக்கு  முன்னே  நூறு  முழமாயிருந்தது.  {Ezek  42:8}

 

கிழக்கே  வெளிப்பிராகாரத்திலிருந்து  அந்த  அறைவீடுகளுக்குள்  பிரவேசிக்கிற  நடை  அவைகளின்  கீழே  இருந்தது.  {Ezek  42:9}

 

கீழ்த்திசையான  பிராகாரத்து  மதிலின்  அகலத்திலே  பிரத்தியேகமான  இடத்துக்கு  முன்பாகவும்  மாளிகைக்கு  முன்பாகவும்  அறைவீடுகளும்  இருந்தது.  {Ezek  42:10}

 

அவைகளுக்கு  முன்னான  வழியிலே  அந்த  அறைவீடுகள்  நீளத்திலும்  அகலத்திலும்,  எல்லா  வாசற்படிகளிலும்,  திட்டங்களிலும்,  வாசல்  நடைகளிலும்  வடதிசையான  அறைவீடுகளின்  சாயலாயிருந்தது.  {Ezek  42:11}

 

தென்திசையான  அறைவீடுகளின்  வாசல்  நடைக்கு  ஒப்பாக  ஒரு  வாசல்  நடைவழியின்  முகப்பில்  இருந்தது;  கீழ்த்திசையில்  அவைகளுக்குப்  பிரவேசிக்கும்  இடத்திலே  செம்மையான  மதிலின்  எதிரே  இருந்த  வழியின்  முகப்பில்  ஒரு  வாசலிருந்தது.  {Ezek  42:12}

 

அவர்  என்னை  நோக்கி:  பிரத்தியேகமான  இடத்துக்கு  முன்னிருக்கிற  வடபுறமான  அறைவீடுகளும்,  தென்புறமான  அறைவீடுகளும்,  பரிசுத்த  அறைவீடுகளாயிருக்கிறது;  கர்த்தரிடத்தில்  சேருகிற  ஆசாரியர்  அங்கே  மகா  பரிசுத்தமானதையும்,  போஜனபலியையும்,  பாவநிவாரண  பலியையும்,  குற்றநிவாரண  பலியையும்  வைப்பார்கள்;  அந்த  ஸ்தலம்  பரிசுத்தமாயிருக்கிறது.  {Ezek  42:13}

 

ஆசாரியர்  உட்பிரவேசிக்கும்போது,  அவர்கள்  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  வெளிப்பிராகாரத்துக்கு  வராததற்குமுன்னே,  அங்கே  தாங்கள்  ஆராதனைசெய்து,  உடுத்தியிருந்த  வஸ்திரங்களைக்  கழற்றிவைப்பார்கள்;  அவ்வஸ்திரங்கள்  பரிசுத்தமானவைகள்;  வேறே  வஸ்திரங்களை  உடுத்திக்கொண்டு,  ஜனத்தின்  பிராகாரத்திலே  போவார்கள்  என்றார்.  {Ezek  42:14}

 

அவர்  உள்வீட்டை  அளந்து  தீர்ந்தபின்பு,  கீழ்த்திசைக்கு  எதிரான  வாசல்வழியாய்  என்னை  வெளியே  அழைத்துக்கொண்டுபோய்,  அதைச்  சுற்றிலும்  அளந்தார்.  {Ezek  42:15}

 

கீழ்த்திசைப்  பக்கத்தை  அளவுகோலால்  அளந்தார்;  அது  அளவுகோலின்படியே  சுற்றிலும்  ஐந்நூறு  கோலாயிருந்தது.  {Ezek  42:16}

 

வடதிசைப்பக்கத்தை  அளவுகோலால்  சுற்றிலும்  ஐந்நூறு  கோலாய்  அளந்தார்.  {Ezek  42:17}

 

தென்திசைப்பக்கத்தை  அளவுகோலால்  ஐந்நூறு  கோலாய்  அளந்தார்.  {Ezek  42:18}

 

மேற்றிசைப்பக்கத்துக்குத்  திரும்பி  அதை  அளவுகோலால்  ஐந்நூறு  கோலாய்  அளந்தார்.  {Ezek  42:19}

 

நாலு  பக்கங்களிலும்  அதை  அளந்தார்;  பரிசுத்தமானதற்கும்  பரிசுத்தமில்லாததற்கும்  வித்தியாசம்பண்ணும்படிக்கு  அதற்கு  ஐந்நூறு  கோல்  நீளமும்  ஐந்நூறு  கோல்  அகலமுமான  மதில்  சுற்றிலும்  இருந்தது.  {Ezek  42:20}

 

பின்பு  அவர்  என்னைக்  கீழ்த்திசைக்கு  எதிர்  வாசலாகிய  வாசலுக்கு  அழைத்துக்கொண்டுபோனார்.  {Ezek  43:1}

 

இதோ,  இஸ்ரவேலின்<Israel>  தேவனுடைய  மகிமை  கீழ்த்திசையிலிருந்து  வந்தது;  அவருடைய  சத்தம்  பெருவெள்ளத்தின்  இரைச்சலைப்போல  இருந்தது;  அவருடைய  மகிமையினால்  பூமி  பிரகாசித்தது.  {Ezek  43:2}

 

நான்  கண்ட  இந்தத்  தரிசனம்  நகரத்தை  அழிக்கவந்தபோது  கண்ட  தரிசனம்போல  இருந்தது;  இந்தத்  தரிசனங்கள்  கேபார்<Chebar>  நதியண்டையிலே  நான்  கண்டிருந்த  தரிசனத்தைப்போலும்  இருந்தது;  நான்  முகங்குப்புற  விழுந்தேன்.  {Ezek  43:3}

 

கர்த்தருடைய  மகிமை  கீழ்த்திசைக்கு  எதிரான  வாசல்வழியாய்  ஆலயத்துக்குள்  பிரவேசித்தது.  {Ezek  43:4}

 

அப்பொழுது  ஆவி  என்னை  எடுத்து,  உட்பிராகாரத்திலே  கொண்டுபோய்விட்டது;  இதோ,  கர்த்தருடைய  மகிமை  ஆலயத்தை  நிரப்பிற்று.  {Ezek  43:5}

 

அவர்  ஆலயத்திலிருந்து  என்னோடே  பேசுகிறதைக்  கேட்டேன்;  அந்தப்  புருஷன்  என்னண்டையில்  நின்றிருந்தார்.  {Ezek  43:6}

 

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இது  நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  நடுவே  என்றென்றைக்கும்  வாசம்பண்ணும்  என்  சிங்காசனமும்  என்  பாதபீடத்தின்  ஸ்தானமுமாயிருக்கிறது;  இனி  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரும்  அவர்களுடைய  ராஜாக்களும்  என்  பரிசுத்த  நாமத்தைத்  தங்கள்  மேடைகளில்  தங்கள்  வேசித்தனத்தினாலும்  தங்கள்  ராஜாக்களின்  பிரேதங்களினாலும்  தீட்டுப்படுத்துவதில்லை.  {Ezek  43:7}

 

அவர்கள்  எனக்கும்  தங்களுக்கும்  நடுவே  ஒரு  சுவர்  இருக்கும்படி,  தங்கள்  வாசற்படியை  என்  வாசற்படியண்டையிலும்,  தங்கள்  வாசல்நிலைகளை  என்  வாசல்  நிலைகளண்டையிலும்  சேர்த்து,  என்  பரிசுத்த  நாமத்தைத்  தாங்கள்  செய்த  அருவருப்புகளினால்  தீட்டுப்படுத்தினார்கள்;  ஆகையால்  என்  கோபத்திலே  அவர்களை  நாசமாக்கினேன்.  {Ezek  43:8}

 

இப்பொழுதும்  அவர்கள்  தங்கள்  வேசித்தனத்தையும்  தங்கள்  ராஜாக்களின்  பிரேதங்களையும்  என்  சமுகத்தினின்று  அகற்றினால்  நான்  என்றென்றைக்கும்  அவர்கள்  நடுவே  வாசமாயிருப்பேன்.  {Ezek  43:9}

 

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  தங்கள்  அக்கிரமங்களினிமித்தம்  வெட்கப்படும்படிக்கு,  நீ  அவர்களுக்கு  இந்த  ஆலயத்தைக்  காண்பி;  அதின்  அளவை  அளக்கக்கடவர்கள்.  {Ezek  43:10}

 

அவர்கள்  செய்த  எல்லாவற்றினிமித்தமும்  வெட்கப்பட்டால்,  அப்பொழுது  இந்த  ஆலயத்தின்  ரூபத்தையும்,  அதின்  அளவையும்,  அதின்  முன்  வாசல்களையும்,  அதின்  பின்  வாசல்களையும்,  அதின்  எல்லா  ஒழுங்குகளையும்,  அதின்  எல்லாக்  கட்டளைகளையும்,  அதின்  எல்லா  நியமங்களையும்,  அதின்  எல்லாச்  சட்டங்களையும்  அவர்களுக்குத்  தெரியப்படுத்தி,  அவர்கள்  அதினுடைய  எல்லா  ஒழுங்குகளையும்,  அதினுடைய  எல்லா  முறைமைகளையும்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்யும்படிக்கு  அதை  அவர்கள்  கண்களுக்கு  முன்பாக  எழுதிவை.  {Ezek  43:11}

 

ஆலயத்தினுடைய  பிரமாணம்  என்னவென்றால்:  மலையுச்சியின்மேல்  சுற்றிலும்  அதின்  எல்லையெங்கும்  மிகவும்  பரிசுத்தமாயிருக்கும்;  இதுவே  ஆலயத்தினுடைய  பிரமாணம்.  {Ezek  43:12}

 

முழங்களின்படி  அளக்கும்  பலிபீடத்தின்  அளவுகளாவன:  ஒரு  கை  முழமும்  நாலு  விரற்கடையும்  கொண்டது  ஒரு  முழமாகும்;  அதின்படி  சுற்றாதாரம்,  ஒரு  முழ  உயரமும்,  ஒரு  முழ  அகலமும்,  அதின்  ஓரத்தைச்  சுற்றிலுமுள்ள  விளிம்பு  ஒரு  ஜாணுமாயிருக்கும்;  இது  பலிபீடத்தின்  மேற்புறம்.  {Ezek  43:13}

 

தரையில்  இருக்கிற  ஆதாரந்துவக்கிக்  கீழ்நிலைமட்டும்  இரண்டுமுழமும்,  அகலம்  ஒரு  முழமும்,  சின்ன  நிலைதுவக்கிப்  பெரிய  நிலைமட்டும்  நாலு  முழமும்,  அகலம்  ஒரு  முழமுமாயிருக்கும்.  {Ezek  43:14}

 

பலிபீடத்தின்  சிகரம்  நாலு  முழ  உயரமாயிருக்கும்;  பலிபீடத்தின்  சிகரத்துக்குமேலே  நாலு  கொம்புகள்  இருக்கும்.  {Ezek  43:15}

 

பலிபீடத்தின்  சிகரம்  பன்னிரண்டு  முழ  நீளமும்,  பன்னிரண்டு  முழ  அகலமும்  தன்  நாலு  பக்கங்களிலும்  நாற்சதுரமுமாயிருக்கும்.  {Ezek  43:16}

 

அதின்  நாலு  பக்கங்களிலுள்ள  சட்டத்தின்  நீளம்  பதிநாலு  முழமும்,  அகலம்  பதிநாலு  முழமும்,  அதைச்  சுற்றிலுமிருக்கிற  விளிம்பு  அரை  முழமும்,  அதற்கு  ஆதாரமானது  சுற்றிலும்  ஒரு  முழமுமாயிருக்கும்;  அதின்  படிகள்  கிழக்குக்கு  எதிராயிருக்கும்  என்றார்.  {Ezek  43:17}

 

பின்னும்  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  பலிபீடத்தை  உண்டுபண்ணும்  நாளிலே  அதின்மேல்  தகனபலியிடுகிறதற்கும்  அதின்மேல்  இரத்தம்  தெளிக்கிறதற்குமான  கட்டளைகளாவன:  {Ezek  43:18}

 

எனக்கு  ஆராதனை  செய்கிறதற்கு  என்னிடத்தில்  சேருகிற  சாதோக்கின்<Zadok>  வம்சத்தாரான  லேவி<Levites>  கோத்திரத்தாராகிய  ஆசாரியர்களுக்கு  நீ  பாவநிவாரணபலியாக  ஒரு  இளங்காளையைக்  கொடுப்பாயாக  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  43:19}

 

அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  அதின்  நாலு  கொம்புகளிலும்,  சட்டத்தின்  நாலு  கோடிகளிலும்,  சுற்றியிருக்கிற  விளிம்பிலும்  பூசி  பாவநிவிர்த்திசெய்து,  அதைச்  சுத்திகரித்து,  {Ezek  43:20}

 

பின்பு  பாவநிவாரணத்தின்  காளையைக்  கொண்டுபோய்,  அதை  ஆலயத்திலே  பரிசுத்த  ஸ்தலத்துக்குப்  புறம்பாகக்  குறிக்கப்பட்ட  இடத்திலே  சுட்டெரிக்கவேண்டும்.  {Ezek  43:21}

 

இரண்டாம்  நாளிலே  பழுதற்ற  ஒரு  வெள்ளாட்டுக்கடாவைப்  பாவநிவாரணத்துக்காகப்  பலியிடுவாயாக;  அவர்கள்  இளங்காளையினாலே  பலிபீடத்தைச்  சுத்திசெய்ததுபோலப்  பாவநிவாரணஞ்  செய்யவேண்டும்.  {Ezek  43:22}

 

நீ  பாவநிவாரணத்தை  முடித்தபின்பு,  பழுதற்ற  ஒரு  இளங்காளையையும்,  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவையும்  மந்தையிலிருந்தெடுத்துப்  பலியிடுவாயாக.  {Ezek  43:23}

 

அவைகளைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  பலியிடுவாயாக;  ஆசாரியர்கள்  அவைகளின்மேல்  உப்புதூவி,  அவைகளைக்  கர்த்தருக்குத்  தகனபலியாக  இடக்கடவர்கள்.  {Ezek  43:24}

 

ஏழுநாள்வரைக்கும்  தினந்தினம்  பாவநிவாரணத்துக்காக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவைப்  படைப்பாயாக;  பழுதற்றவைகளான  இளங்காளையையும்  மந்தையிலிருந்தெடுத்த  ஆட்டுக்கடாவையும்  படைப்பார்களாக.  {Ezek  43:25}

 

ஏழுநாள்வரைக்கும்  பலிபீடத்தைப்  பாவநிவிர்த்திசெய்து,  அதைச்  சுத்திகரித்து,  பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.  {Ezek  43:26}

 

அந்நாட்கள்  முடிந்தபின்பு,  எட்டாம்  நாள்முதல்  ஆசாரியர்கள்  பலிபீடத்தின்மேல்  உங்கள்  தகனபலிகளையும்  உங்கள்  ஸ்தோத்திரபலிகளையும்  படைப்பார்களாக;  அப்பொழுது  உங்களை  அங்கீகரிப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  43:27}

 

பின்பு,  அவர்  என்னைக்  கிழக்குக்கு  எதிரே  பரிசுத்த  ஸ்தலத்துக்குப்  புறவாசல்  வழியே  திரும்பப்பண்ணினார்;  அது  பூட்டப்பட்டிருந்தது.  {Ezek  44:1}

 

அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  இந்த  வாசல்  திறக்கப்படாமல்  பூட்டப்பட்டிருக்கும்;  ஒருவரும்  இதற்குள்  பிரவேசிப்பதில்லை;  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  இதற்குள்  பிரவேசித்தார்,  ஆகையால்  இது  பூட்டப்பட்டிருக்கவேண்டும்.  {Ezek  44:2}

 

இது  அதிபதிக்கே  உரியது,  அதிபதி  கர்த்தருடைய  சந்நிதியில்  போஜனம்பண்ணும்படி  இதில்  உட்காருவான்;  அவன்  வாசல்  மண்டபத்தின்  வழியாய்ப்  பிரவேசித்து,  மறுபடியும்  அதின்  வழியாய்ப்  புறப்படுவான்  என்றார்.  {Ezek  44:3}

 

பின்பு  அவர்  என்னை  வடக்கு  வாசல்வழியாய்  ஆலயத்தின்  முகப்பிலே  அழைத்துக்கொண்டுபோனார்;  இதோ,  கர்த்தருடைய  ஆலயம்  கர்த்தருடைய  மகிமையால்  நிறைந்ததை  நான்  கண்டு,  முகங்குப்புற  விழுந்தேன்.  {Ezek  44:4}

 

அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  கர்த்தருடைய  ஆலயத்தின்  சகல  நியமங்களையும்  அதின்  சகல  சட்டங்களையுங்குறித்து  நான்  உன்னோடே  சொல்வதையெல்லாம்  நீ  உன்  மனதிலே  கவனித்து,  உன்  கண்களினாலே  பார்த்து,  உன்  காதுகளினாலே  கேட்டு,  பரிசுத்த  ஸ்தலத்தினுடைய  எல்லா  வாசற்படிகளின்  வழியாய்  ஆலயத்துக்குள்  பிரவேசிப்பதும்  அதிலிருந்து  புறப்படுவதும்  இன்னவிதமென்று  நீ  ஆலோசித்துப்  பார்த்து,  {Ezek  44:5}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாராகிய  கலகக்காரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  செய்த  சகல  அருவருப்புகளும்  போதும்.  {Ezek  44:6}

 

நீங்கள்  எனக்குச்  செலுத்தவேண்டிய  ஆகாரமாகிய  நிணத்தையும்  இரத்தத்தையும்  செலுத்துகையில்,  என்  ஆலயத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி  விருத்தசேதனமில்லாத  இருதயமும்  விருத்தசேதனமில்லாத  மாம்சமுமுள்ள  அந்நிய  புத்திரரை  என்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  இருக்கிறதற்காக  அழைத்துக்கொண்டுவந்தீர்கள்;  நீங்கள்  செய்த  எல்லா  அருவருப்புகளினாலும்  அவர்கள்  என்  உடன்படிக்கையை  மீறினார்கள்.  {Ezek  44:7}

 

நீங்கள்  என்  பரிசுத்த  வஸ்துக்களின்  காவலைக்  காவாமல்,  உங்களுக்கு  இஷ்டமானவர்களை  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  என்  காவலைக்  காக்கிறதற்காக  வைத்தீர்கள்.  {Ezek  44:8}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேல்<Israel>  புத்திரரின்  நடுவில்  இருக்கிற  சகல  அந்நிய  புத்திரரிலும்,  விருத்தசேதனமில்லாத  இருதயமும்  விருத்தசேதனமில்லாத  மாம்சமுமுள்ள  அந்நிய  புத்திரன்  ஒருவனும்  என்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிப்பதில்லை.  {Ezek  44:9}

 

இஸ்ரவேல்<Israel>  வழிதப்பிப்போகையில்,  என்னைவிட்டுத்  தூரமானவர்களும்,  என்னைவிட்டு  வழிதப்பித்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களைப்  பின்பற்றினவர்களுமாகிய  லேவியரும்<Levites>  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்.  {Ezek  44:10}

 

ஆகிலும்  அவர்கள்  என்  ஆலயத்தின்  வாசல்களைக்  காத்து,  என்  ஆலயத்தில்  ஊழியஞ்செய்து,  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  பணிவிடைக்காரராயிருப்பார்கள்;  அவர்கள்  ஜனங்களுக்காகத்  தகனபலிகளையும்  மற்றப்  பலிகளையும்  செலுத்தி,  இவர்களுக்கு  ஊழியஞ்செய்கிறதற்கு  இவர்கள்  முன்பாக  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  பணிவிடைக்காரராயிருப்பார்கள்.  {Ezek  44:11}

 

அவர்கள்  இவர்களுடைய  நரகலான  விக்கிரகங்களுக்கு  முன்பாக  நின்று  இவர்களுக்கு  ஊழியஞ்செய்து,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரை  அக்கிரமத்தில்  விழப்பண்ணினபடியினால்,  நான்  என்  கையை  அவர்களுக்கு  விரோதமாய்  உயர்த்தினேன்,  அவர்கள்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  44:12}

 

அவர்கள்  எனக்கு  ஆசாரியராய்  ஆராதனை  செய்யும்படி  என்  சமீபத்தில்  வராமலும்,  மகா  பரிசுத்தமான  ஸ்தலத்தில்  என்  பரிசுத்த  வஸ்துக்களில்  யாதொன்றையும்  கிட்டாமலும்  இருக்கவேண்டும்,  அவர்கள்  தங்கள்  இலச்சையையும்  தாங்கள்  செய்த  அருவருப்புகளையும்  சுமக்கக்கடவர்கள்.  {Ezek  44:13}

 

ஆலயத்தின்  சகல  வேலைகளுக்கும்  அதில்  செய்யப்படவேண்டிய  எல்லாவற்றிற்கும்  நான்  அவர்களை  அதில்  காவல்காக்கிறவர்களாயிருக்கக்  கட்டளையிடுவேன்.  {Ezek  44:14}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரரே,  என்னைவிட்டு  வழிதப்பிப்போகையில்,  என்  பரிசுத்த  ஸ்தலத்தின்  காவலைக்  காக்கிற  சாதோக்கின்<Zadok>  புத்திரராகிய  லேவியரென்னும்<Levites>  ஆசாரியர்களே  எனக்கு  ஆராதனைசெய்ய  என்  சமீபத்தில்  சேர்ந்து,  நிணத்தையும்  இரத்தத்தையும்  எனக்குச்  செலுத்த  என்  சந்நிதியில்  நிற்பார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  44:15}

 

இவர்கள்  என்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிப்பார்கள்;  இவர்களே  எனக்கு  ஆராதனை  செய்ய  என்  பீடத்தைக்  கிட்டிவந்து,  என்  காவலைக்  காப்பார்கள்.  {Ezek  44:16}

 

உட்பிராகாரத்தின்  வாசல்களுக்குள்  பிரவேசிக்கிறபோது,  சணல்நூல்  வஸ்திரங்களை  உடுத்திக்கொள்வார்களாக;  அவர்கள்  உட்பிராகாரத்தின்  வாசல்களிலும்,  உள்ளேயும்  ஆராதனை  செய்கையில்,  ஆட்டுமயிர்  உடுப்பைத்  தரிக்கலாகாது.  {Ezek  44:17}

 

அவர்களுடைய  தலைகளில்  சணல்நூல்  குல்லாக்களையும்,  அவர்களுடைய  இடைகளில்  சணல்நூல்  சல்லடங்களையும்  தரிக்கவேண்டும்;  வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும்  அரையில்  கட்டலாகாது.  {Ezek  44:18}

 

அவர்கள்  வெளிப்பிராகாரமாகிய  புறமுற்றத்திலே  ஜனங்களிடத்தில்  போகும்போது,  அவர்கள்  தாங்கள்  ஆராதனைசெய்யும்  சமயத்தில்  உடுத்தியிருந்த  தங்கள்  வஸ்திரங்களைக்  கழற்றி,  அவைகளைப்  பரிசுத்த  அறைவீடுகளில்  வைத்து,  வேறே  வஸ்திரங்களை  உடுத்திக்கொள்ளக்கடவர்கள்;  தங்கள்  வஸ்திரங்களாலே  ஜனங்களைப்  பரிசுத்தப்படுத்தலாகாது.  {Ezek  44:19}

 

அவர்கள்  தங்கள்  தலைகளைச்  சிரையாமலும்,  தங்கள்  மயிரை  நீளமாய்  வளர்க்காமலும்,  தங்கள்  தலைமயிரைக்  கத்தரிக்கக்கடவர்கள்.  {Ezek  44:20}

 

ஆசாரியர்களில்  ஒருவனும்,  உட்பிராகாரத்துக்குள்  பிரவேசிக்கும்போது,  திராட்சரசம்  குடிக்கலாகாது.  {Ezek  44:21}

 

விதவையையும்  தள்ளிவிடப்பட்டவளையும்  அவர்கள்  விவாகம்பண்ணாமல்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாளாகிய  கன்னிகையையாகிலும்  ஒரு  ஆசாரியனின்  மனைவியாயிருந்த  விதவையையாகிலும்  விவாகம்பண்ணலாம்.  {Ezek  44:22}

 

அவர்கள்  பரிசுத்தமானதற்கும்  பரிசுத்தமல்லாததற்கும்,  தீட்டானதற்கும்  தீட்டல்லாததற்கும்  இருக்கும்  வித்தியாசத்தை  என்  ஜனத்துக்குப்  போதித்து,  அவர்களுக்குத்  தெரியப்பண்ணக்கடவர்கள்.  {Ezek  44:23}

 

வழக்கிருந்தால்  அவர்கள்  நியாயந்தீர்க்க  ஆயத்தமாயிருந்து,  என்  நியாயங்களின்படி  அதைத்  தீர்த்து,  என்னுடைய  பண்டிகைகளில்  எல்லாம்  என்  நியாயப்பிரமாணத்தையும்  என்  கட்டளைகளையும்  கைக்கொண்டு,  என்  ஓய்வுநாட்களைப்  பரிசுத்தமாக்கக்கடவர்கள்.  {Ezek  44:24}

 

தகப்பன்,  தாய்,  குமாரன்,  குமாரத்தி,  சகோதரன்,  புருஷனுக்கு  வாழ்க்கைப்படாத  சகோதரி  என்னும்  இவர்களுடைய  சவத்தினால்  அவர்கள்  தீட்டுப்படலாமேயல்லாமல்,  அவர்களில்  ஒருவனும்  செத்த  ஒருவனிடத்தில்  போய்த்  தீட்டுப்படலாகாது.  {Ezek  44:25}

 

அவன்  சுத்திகரிக்கப்பட்டபின்பு,  அவனுக்கு  ஏழுநாள்  எண்ணப்படவேண்டும்.  {Ezek  44:26}

 

அவன்  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆராதனை  செய்யும்படி  பரிசுத்த  ஸ்தலம்  இருக்கிற  உட்பிராகாரத்துக்குள்  பிரவேசிக்கிறநாளிலே,  அவன்  தனக்காகப்  பாவநிவாரண  பலியைச்  செலுத்தக்கடவன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  44:27}

 

அவர்களுக்குரிய  சுதந்தரம்  என்னவென்றால்:  நானே  அவர்கள்  சுதந்தரம்;  ஆகையால்  இஸ்ரவேலில்<Israel>  அவர்களுக்குக்  காணியாட்சியைக்  கொடாதிருப்பீர்களாக;  நானே  அவர்கள்  காணியாட்சி.  {Ezek  44:28}

 

போஜனபலியையும்  பாவநிவாரணபலியையும்  குற்றநிவாரணபலியையும்  அவர்கள்  புசிப்பார்கள்;  இஸ்ரவேலிலே<Israel>  பொருத்தனை  பண்ணப்பட்டதெல்லாம்  அவர்களுடையதாயிருப்பதாக.  {Ezek  44:29}

 

சகலவித  முதற்கனிகளில்  எல்லாம்  முந்தின  பலனும்,  நீங்கள்  காணிக்கையாய்ச்  செலுத்தும்  எவ்விதமான  பொருள்களும்  ஆசாரியர்களுடையதாயிருப்பதாக;  உங்கள்  வீட்டில்  ஆசீர்வாதம்  தங்கும்படிக்கு  நீங்கள்  பிசைந்தமாவில்  முதற்பாகத்தையும்  ஆசாரியனுக்குக்  கொடுக்கக்கடவீர்கள்.  {Ezek  44:30}

 

பறவைகளிலும்  மிருகங்களிலும்  தானாய்ச்  செத்ததும்  பீறுண்டதுமான  ஒன்றையும்  ஆசாரியர்கள்  புசிக்கலாகாது.  {Ezek  44:31}

 

நீங்கள்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  தேசத்தைச்  சீட்டுப்போட்டுப்  பங்கிடும்போது,  தேசத்தில்  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  பதினாயிரங்கோல்  அகலமுமான  பரிசுத்த  பங்கைக்  கர்த்தருக்கு  அர்ப்பிதமாகப்  பிரித்து  வைக்கக்கடவீர்கள்;  இது  தன்  சுற்றெல்லை  எங்கும்  பரிசுத்தமாயிருக்கும்.  {Ezek  45:1}

 

இதிலே  பரிசுத்த  ஸ்தலத்துக்கென்று  ஐந்நூறு  கோல்  நீளமும்  ஐந்நூறு  கோல்  அகலமுமான  நாற்சதுரம்  அளக்கப்படக்கடவது;  அதற்குச்  சுற்றிலும்  ஐம்பது  முழமான  வெளிநிலம்  இருக்கவேண்டும்.  {Ezek  45:2}

 

இந்த  அளவு  உட்பட  இருபத்தையாயிரங்கோல்  நீளத்தையும்  பதினாயிரங்கோல்  அகலத்தையும்  அளப்பாயாக;  அதற்குள்  பரிசுத்த  ஸ்தலமும்  மகா  பரிசுத்த  ஸ்தலமும்  இருக்கவேண்டும்.  {Ezek  45:3}

 

தேசத்தில்  பரிசுத்த  பங்காகிய  இது  கர்த்தருக்கு  ஆராதனைசெய்யச்  சேருகிறவர்களும்,  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆராதனை  செய்கிறவர்களுமான  ஆசாரியருடையது;  இது  அவர்களுக்கு  வீடுகளுக்கான  இடமும்,  பரிசுத்த  ஸ்தலத்துக்கு  அடுத்த  இடமுமாயிருக்கவேண்டும்.  {Ezek  45:4}

 

பின்னும்  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்  பதினாயிரங்கோல்  அகலமுமான  இடம்  ஆலயத்தின்  பணிவிடைக்காரராகிய  லேவியருடையதாயிருக்கும்<Levites>;  அது  அவர்களுடைய  காணியாட்சி;  அதில்  இருபது  அறைவீடுகள்  இருக்கவேண்டும்.  {Ezek  45:5}

 

பரிசுத்த  பங்காகப்  படைக்கப்பட்டதற்கு  எதிரே  நகரத்தின்  காணியாட்சியாக  ஐயாயிரங்கோல்  அகலத்தையும்  இருபத்தையாயிரங்கோல்  நீளத்தையும்  அளந்து  கொடுப்பீர்களாக;  அது  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  அனைவருக்கும்  சொந்தமாயிருக்கும்.  {Ezek  45:6}

 

பரிசுத்த  பங்காகப்  படைக்கப்பட்டதற்கும்  நகரத்தின்  காணியாட்சிக்கும்  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்,  பரிசுத்த  படைப்புக்கு  முன்பாகவும்,  நகரத்தின்  காணிக்கு  முன்பாகவும்,  அதிபதியினுடைய  பங்கு  மேற்கிலே  மேற்புறமாகவும்  கிழக்கிலே  கீழ்ப்புறமாகவும்  இருப்பதாக;  அதின்  நீளம்  மேல்  எல்லை  துவக்கிக்  கீழ்  எல்லைமட்டும்  பங்குகளில்  ஒவ்வொன்றுக்கும்  எதிராயிருக்கவேண்டும்.  {Ezek  45:7}

 

இது  அவனுக்கு  இஸ்ரவேலிலே<Israel>  காணிபூமியாக  இருக்கக்கடவது;  என்  அதிபதிகள்  இனி  என்  ஜனத்தை  ஒடுக்காமல்  தேசத்தை  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்கு  அவர்களுடைய  கோத்திரங்களுக்குத்தக்கதாக  விட்டுவிடுவார்களாக.  {Ezek  45:8}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேலின்<Israel>  அதிபதிகளே,  நீங்கள்  செய்ததுபோதும்;  நீங்கள்  கொடுமையையும்  கொள்ளையிடுதலையும்  தவிர்த்து,  நியாயத்தையும்  நீதியையும்  செய்யுங்கள்;  உங்கள்  உத்தண்டங்களை  என்  ஜனத்தைவிட்டு  அகற்றுங்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  45:9}

 

சுமுத்திரையான  தராசும்,  சுமுத்திரையான  மரக்காலும்,  சுமுத்திரையான  அளவுகுடமும்  உங்களுக்கு  இருக்கக்கடவது.  {Ezek  45:10}

 

மரக்காலும்  அளவுகுடமும்  ஒரே  அளவாயிருந்து,  மரக்கால்  கலத்திலே  பத்தில்  ஒரு  பங்கும்,  அளவுகுடம்  கலத்திலே  பத்தில்  ஒரு  பங்கும்  பிடிக்கக்கடவது;  கலத்தின்படியே  அதின்  அளவு  நிருணயிக்கப்படுவதாக.  {Ezek  45:11}

 

சேக்கலானது  இருபது  கேரா;  இருபது  சேக்கலும்  இருபத்தைந்து  சேக்கலும்  பதினைந்து  சேக்கலும்  உங்களுக்கு  ஒரு  இராத்தலாகும்.  {Ezek  45:12}

 

நீங்கள்  செலுத்தவேண்டிய  காணிக்கையாவது:  ஒரு  கலம்  கோதுமையிலே  ஒரு  மரக்காலில்  ஆறிலொரு  பங்கையும்,  ஒரு  கலம்  வாற்கோதுமையிலே  ஒரு  மரக்காலில்  ஆறிலொருபங்கையும்  படைக்கக்கடவீர்கள்.  {Ezek  45:13}

 

அளவுகுடத்தால்  அளக்கிற  எண்ணெயின்  கட்டளையாவது:  பத்துக்குடம்  பிடிக்கிற  கலத்துக்குச்  சரியான  ஒரு  ஜாடி  எண்ணெயிலே  பத்தில்  ஒரு  பங்கைப்  படைப்பீர்களாக;  பத்து  அளவுகுடம்  ஒரு  கலமாகும்.  {Ezek  45:14}

 

இஸ்ரவேல்<Israel>  தேசத்திலே  நல்லமேய்ச்சலை  மேய்கிற  மந்தையிலே  இருநூறு  ஆடுகளில்  ஒரு  ஆடும்,  அவர்களுடைய  பாவநிவாரணத்திற்காகப்  போஜனபலியாகவும்  தகனபலியாகவும்  சமாதானபலியாகவும்  செலுத்தப்படக்கடவதென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  45:15}

 

இஸ்ரவேலின்<Israel>  அதிபதிக்கு  முன்பாகத்  தேசத்தின்  ஜனங்களெல்லாரும்  இந்தக்  காணிக்கையைச்  செலுத்தக்  கடனாளிகளாயிருக்கிறார்கள்.  {Ezek  45:16}

 

இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  கூடிவரக்  குறிக்கப்பட்ட  சகல  பண்டிகைகளிலும்  மாதப்பிறப்புகளிலும்  ஓய்வுநாட்களிலும்  தகனபலிகளையும்  போஜனபலிகளையும்  பானபலிகளையும்  செலுத்துவது  அதிபதியின்மேல்  சுமந்த  கடனாயிருக்கும்;  அவன்  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாருக்காகப்  பாவநிவாரணம்பண்ணும்படிக்குப்  பாவநிவாரணபலியையும்  போஜனபலியையும்  தகனபலியையும்  சமாதானபலியையும்  படைப்பானாக.  {Ezek  45:17}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  முதலாம்  மாதம்  முதலாந்தேதியிலே  நீ  பழுதற்ற  ஒரு  காளையைக்  கொண்டுவந்து,  பரிசுத்த  ஸ்தலத்துக்குப்  பாவநிவிர்த்தி  செய்வாயாக.  {Ezek  45:18}

 

பாவநிவாரணபலியின்  இரத்தத்திலே  கொஞ்சம்  ஆசாரியன்  எடுத்து,  ஆலயத்தின்  வாசல்  நிலைகளிலும்,  பலிபீடத்துச்  சட்டத்தின்  நாலு  கோடிகளிலும்,  உட்பிராகாரத்தின்  வாசல்நிலைகளிலும்  பூசக்கடவன்.  {Ezek  45:19}

 

பிழைசெய்தவனுக்காகவும்,  அறியாமல்  தப்பிதம்  செய்தவனுக்காகவும்  அந்தப்பிரகாரமாக  ஏழாந்தேதியிலும்  செய்வாயாக;  இவ்விதமாய்  ஆலயத்துக்குப்  பாவநிவர்த்தி  செய்வாயாக.  {Ezek  45:20}

 

முதலாம்  மாதம்  பதினாலாந்தேதியிலே  புளிப்பில்லாத  அப்பம்  புசிக்கப்படுகிற  ஏழுநாள்  பண்டிகையாகிய  பஸ்கா  ஆரம்பமாகும்.  {Ezek  45:21}

 

அந்நாளிலே  அதிபதி  தன்னிமித்தமும்  தேசத்து  எல்லா  ஜனங்களிநிமித்தமும்  பாவநிவாரணத்துக்காக  ஒரு  காளையைப்  படைப்பானாக.  {Ezek  45:22}

 

ஏழுநாள்  பண்டிகையில்,  அவன்  அந்த  ஏழுநாளும்  தினந்தோறும்  கர்த்தருக்குத்  தகனபலியாகப்  பழுதற்ற  ஏழு  காளைகளையும்  ஏழு  ஆட்டுக்கடாக்களையும்,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  தினந்தோறும்  படைப்பானாக.  {Ezek  45:23}

 

ஒவ்வொரு  காளையோடே  ஒரு  மரக்கால்  மாவும்  ஒவ்வொரு  ஆட்டுக்கடாவோடே  ஒரு  மரக்கால்  மாவுமான  போஜனபலியையும்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயையும்  படைப்பானாக.  {Ezek  45:24}

 

ஏழாம்  மாதம்  பதினைந்தாந்தேதியில்  ஆரம்பமாகிற  பண்டிகையிலே  அவன்  அப்படியே  ஏழுநாளும்  அதற்குச்  சரியானபிரகாரமாகப்  பாவநிவாரணபலிகளையும்  தகனபலிகளையும்  போஜனபலிகளையும்,  எண்ணெயையும்  படைக்கக்கடவன்.  {Ezek  45:25}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  வேலைசெய்கிற  ஆறுநாளிலும்  கிழக்குக்கு  எதிரான  உட்பிராகாரத்தினுடைய  வாசல்  பூட்டப்பட்டிருந்து,  ஓய்வுநாளிலும்  மாதப்பிறப்பிலும்  திறக்கப்படக்கடவது.  {Ezek  46:1}

 

அப்பொழுது  அதிபதி  வெளிவாசல்  மண்டபத்தின்  வழியாய்ப்  பிரவேசித்து,  வாசல்  நிலையண்டையிலே  நிற்கக்கடவன்;  ஆசாரியர்களோ  அவனுடைய  தகனபலியையும்,  அவனுடைய  சமாதான  பலிகளையும்  படைக்கக்கடவர்கள்;  அவன்  வாசற்படியிலே  ஆராதனைசெய்து,  பின்பு  புறப்படுவானாக;  அந்த  வாசல்  சாயங்காலமட்டும்  பூட்டப்படாதிருப்பதாக.  {Ezek  46:2}

 

தேசத்து  ஜனங்களும்  ஓய்வுநாட்களிலும்  மாதப்பிறப்புகளிலும்  அந்த  வாசலின்  நடையிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  ஆராதனை  செய்யக்கடவர்கள்.  {Ezek  46:3}

 

அதிபதி  ஓய்வுநாளிலே  கர்த்தருக்குப்  பலியிடும்  தகனபலி,  பழுதற்ற  ஆறு  ஆட்டுக்குட்டிகளும்  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவுமே.  {Ezek  46:4}

 

ஆட்டுக்கடாவோடே  போஜனபலியாக  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஆட்டுக்குட்டிகளோடே  போஜனபலியாகத்  தன்  திராணிக்குத்தக்கதாய்த்  தருகிற  ஈவையும்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயையும்  படைக்கக்கடவன்.  {Ezek  46:5}

 

மாதப்பிறப்பான  நாளிலோ,  அவன்  பழுதற்ற  ஒரு  இளங்காளையையும்,  பழுதற்ற  ஆறு  ஆட்டுக்குட்டிகளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்  பலியிட்டு,  {Ezek  46:6}

 

போஜனபலியாக  இளங்காளையோடே  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஆட்டுக்கடாவோடே  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஆட்டுக்குட்டிகளோடே  தன்  திராணிக்குத்தக்கதாய்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயையும்  படைக்கக்கடவன்.  {Ezek  46:7}

 

அதிபதி  வருகிறபோது  வாசல்  மண்டபத்தின்  வழியாய்ப்  பிரவேசித்து,  அது  வழியாய்த்  திரும்பப்  புறப்படக்கடவன்.  {Ezek  46:8}

 

தேசத்தின்  ஜனங்கள்  குறிக்கப்பட்ட  நாட்களில்  கர்த்தருடைய  சந்நிதியில்  வரும்போது,  ஆராதனை  செய்கிறதற்காக  வடக்கு  வாசல்வழியாய்  உட்பிரவேசித்தவன்  தெற்கு  வாசல்  வழியாய்ப்  புறப்படவும்,  தெற்கு  வாசல்வழியாய்  உட்பிரவேசித்தவன்  வடக்கு  வாசல்வழியாய்ப்  புறப்படவும்கடவன்;  தான்  பிரவேசித்த  வாசல்வழியாய்த்  திரும்பிப்போகாமல்,  தனக்கு  எதிரான  வழியாய்ப்  புறப்பட்டுப்போவானாக.  {Ezek  46:9}

 

அவர்கள்  உட்பிரவேசிக்கும்போது,  அதிபதி  அவர்கள்  நடுவிலே  அவர்களோடேகூட  உட்பிரவேசித்து,  அவர்கள்  புறப்படும்போது  அவனும்  கூடப்  புறப்படுவானாக.  {Ezek  46:10}

 

பண்டிகைகளிலும்  குறிக்கப்பட்ட  காலங்களிலும்  அவன்  படைக்கும்  போஜனபலியாவது:  காளையோடே  ஒரு  மரக்கால்  மாவும்,  ஆட்டுக்கடாவோடே  ஒரு  மரக்கால்  மாவும்,  ஆட்டுக்குட்டிகளோடே  அவன்  திராணிக்குத்தக்கதாய்த்  தருகிற  ஒரு  ஈவும்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயும்  கொடுக்கவேண்டும்.  {Ezek  46:11}

 

அதிபதி  உற்சாகமான  தகனபலியாகிலும்,  சமாதான  பலிகளையாகிலும்  கர்த்தருக்கு  உற்சாகமாய்ச்  செலுத்தவேண்டுமென்றால்,  அவனுக்குக்  கிழக்கு  நோக்கிய  எதிரான  வாசல்  திறக்கப்படுவதாக;  அப்பொழுது  அவன்  ஓய்வுநாளில்  செய்கிறதுபோல,  தன்  தகனபலியையும்  தன்  சமாதான  பலியையும்  செலுத்தி,  பின்பு  புறப்படக்கடவன்;  அவன்  புறப்பட்டபின்பு  வாசல்  பூட்டப்படவேண்டும்.  {Ezek  46:12}

 

தினந்தோறும்  ஒரு  வயதான  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்குட்டியைக்  கர்த்தருக்குத்  தகனபலியாகப்  படைக்கக்கடவாய்;  காலைதோறும்  அதைப்படைக்கவேண்டும்.  {Ezek  46:13}

 

அதினோடே  காலைதோறும்  போஜனபலியாக  ஒரு  மரக்கால்  மாவிலே  ஆறத்தொரு  பங்கையும்,  மெல்லிய  மாவைப்  பிசையும்படிக்கு  ஒருபடி  எண்ணெயிலே  மூன்றத்தொரு  பங்கையும்  படைக்கக்கடவாய்;  இது  அன்றாடம்  கர்த்தருக்குப்  படைக்கவேண்டிய  நித்திய  கட்டளையான  போஜனபலி.  {Ezek  46:14}

 

இப்படிக்  காலைதோறும்  அன்றாட  தகனபலியாக  ஆட்டுக்குட்டியையும்  போஜனபலியையும்  எண்ணெயையும்  செலுத்துவார்களாக.  {Ezek  46:15}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அதிபதி  தன்  குமாரரில்  ஒருவனுக்குத்  தன்  சுதந்தரத்தில்  ஒரு  பங்கைக்  கொடுத்தால்,  அது  அவன்  குமாரருடையதாயிருக்கும்;  அது  சுதந்தரவீதமாய்  அவர்களுக்குச்  சொந்தமாகும்.  {Ezek  46:16}

 

அவன்  தன்  ஊழியக்காரரில்  ஒருவனுக்குத்  தன்  சுதந்தரத்தில்  ஒரு  பங்கைக்  கொடுத்தானேயாகில்,  அது  விடுதலையின்  வருஷமட்டும்  அவனுடையதாயிருந்து,  பின்பு  திரும்ப  அதிபதியின்  வசமாய்ச்  சேரும்;  அதின்  சுதந்தரம்  அவன்  குமாரருக்கே  உரியது,  அது  அவர்களுடையதாயிருக்கும்.  {Ezek  46:17}

 

அதிபதியானவன்  ஜனத்தை  இடுக்கண்  செய்து,  அவர்களின்  சொந்தமானதற்கு  அவர்களைப்  புறம்பாக்கி,  அவர்களுடைய  சுதந்தரத்திலிருந்து  ஒன்றும்  எடுக்கலாகாது;  என்  ஜனத்தில்  ஒருவரும்  தங்கள்  சொந்தமானதற்குப்  புறம்பாக்கப்பட்டுச்  சிதறடிக்கப்படாதபடிக்கு  அவன்  தன்  சொந்தத்திலே  தன்  குமாரருக்குச்  சுதந்தரம்  கொடுக்கக்கடவன்.  {Ezek  46:18}

 

பின்பு  அவர்  வாசலின்  பக்கத்தில்  இருந்த  நடைவழியாய்  என்னை  வடக்குக்கு  எதிரான  ஆசாரியர்களுடைய  பரிசுத்த  அறைவீடுகளுக்கு  அழைத்துக்கொண்டுபோனார்;  அவ்விடத்தில்  மேற்கே  இருபுறத்திலும்  ஒரு  இடம்  இருந்தது.  {Ezek  46:19}

 

அவர்  என்னை  நோக்கி:  குற்றநிவாரணபலியையும்  பாவநிவாரணபலியையும்  போஜனபலியையும்  ஆசாரியர்கள்  வெளிப்பிராகாரத்திலே  கொண்டுபோய்  ஜனங்களைப்  பரிசுத்தம்பண்ணாதபடிக்கு,  அவர்கள்  அவைகளைச்  சமைக்கிறதற்கும்  சுடுகிறதற்குமான  ஸ்தலம்  இதுவே  என்றார்.  {Ezek  46:20}

 

பின்பு  அவர்  என்னை  வெளிப்பிராகாரத்தில்  அழைத்துக்கொண்டுபோய்,  என்னைப்  பிராகாரத்தின்  நாலு  மூலைகளையும்  கடந்துபோகப்பண்ணினார்;  பிராகாரத்து  ஒவ்வொரு  மூலையிலும்  ஒவ்வொரு  முற்றம்  இருந்தது.  {Ezek  46:21}

 

பிராகாரத்தின்  நாலு  மூலைகளிலும்  புகைத்துவாரங்களுள்ள  இந்த  முற்றங்கள்  நாற்பது  முழ  நீளமும்,  முப்பது  முழ  அகலமுமானவைகள்;  இந்த  நாலு  மூலை  முற்றங்களுக்கும்  ஒரே  அளவு  இருந்தது.  {Ezek  46:22}

 

இந்த  நாலுக்கும்  சுற்றிலும்  உள்ளே  ஒரு  சுற்றுக்கட்டு  உண்டாயிருந்தது;  இந்தச்  சுற்றுக்கட்டுகளின்  சுற்றிலும்  அடுப்புகள்  போடப்பட்டிருந்தது.  {Ezek  46:23}

 

அவர்  என்னை  நோக்கி:  இவைகள்  ஜனங்கள்  இடும்  பலிகளை  ஆலயத்தின்  பணிவிடைக்காரர்  சமைக்கிற  வீடுகள்  என்றார்.  {Ezek  46:24}

 

பின்பு  அவர்  என்னை  ஆலயத்தின்  வாசலுக்குத்  திரும்பிவரப்பண்ணினார்;  இதோ,  வாசற்படியின்  கீழிருந்து  தண்ணீர்  புறப்பட்டுக்  கிழக்கே  ஓடுகிறதாயிருந்தது;  ஆலயத்தின்  முகப்பு  கிழக்கு  நோக்கியிருந்தது;  அந்தத்  தண்ணீர்  ஆலயத்தின்  வலதுபுறமாய்ப்  பலிபீடத்துக்குத்  தெற்கே  பாய்ந்தது.  {Ezek  47:1}

 

அவர்  என்னை  வடக்கு  வாசல்  வழியாய்ப்  புறப்படப்பண்ணி,  என்னை  வெளியிலே  கீழ்த்திசைக்கு  எதிரான  புறவாசல்மட்டும்  சுற்றி  நடத்திக்கொண்டுபோனார்;  அங்கே  தண்ணீர்  வலதுபுறத்திலிருந்து  பாய்கிறதாயிருந்தது.  {Ezek  47:2}

 

அந்தப்  புருஷன்  தமது  கையில்  நூலைப்  பிடித்துக்கொண்டு,  கிழக்கே  புறப்படுகையில்  ஆயிரமுழம்  அளந்து,  என்னைத்  தண்ணீரைக்  கடக்கப்பண்ணினார்;  தண்ணீர்  கணுக்கால்  அளவாயிருந்தது.  {Ezek  47:3}

 

பின்னும்  அவர்  ஆயிரமுழம்  அளந்து,  என்னைத்  தண்ணீரைக்  கடக்கப்பண்ணினார்;  அங்கே  தண்ணீர்  முழங்கால்  அளவாயிருந்தது;  பின்னும்  அவர்  ஆயிரமுழம்  அளந்து  என்னைக்  கடக்கப்பண்ணினார்;  அங்கே  தண்ணீர்  இடுப்பளவாயிருந்தது.  {Ezek  47:4}

 

பின்னும்  அவர்  ஆயிரமுழம்  அளந்தார்;  அங்கே  அது  நான்  கடக்கக்கூடாத  நதியாயிருந்தது;  தண்ணீர்  நீச்சாழமும்  கடக்கமுடியாத  நதியுமாயிருந்தது.  {Ezek  47:5}

 

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இதைக்  கண்டாயா  என்று  சொல்லி,  என்னை  நதியோரமாய்த்  திரும்ப  நடத்திக்கொண்டுபோனார்.  {Ezek  47:6}

 

நான்  நடந்துவருகையில்,  இதோ,  நதியோரத்தில்  இக்கரையிலும்  அக்கரையிலும்  வெகு  திரளான  விருட்சங்கள்  இருந்தது.  {Ezek  47:7}

 

அவர்  என்னை  நோக்கி:  இந்தத்  தண்ணீர்  கிழக்குதேசத்துக்குப்  புறப்பட்டுப்போய்,  வனாந்தரவழியாய்  ஓடி  கடலில்  விழும்;  இது  கடலில்  பாய்ந்து,  விழுந்தபின்பு,  அதின்  தண்ணீர்  ஆரோக்கியமாகும்.  {Ezek  47:8}

 

சம்பவிப்பது  என்னவென்றால்,  இந்த  நதி  போகுமிடமெங்கும்  சஞ்சரிக்கும்  ஜீவபிராணிகள்  யாவும்  பிழைக்கும்;  இந்தத்  தண்ணீர்  அங்கே  வந்தபடியினால்  வெகு  ஏராளமான  மச்சங்களும்  உண்டாயிருக்கும்;  இந்த  நதி  போகுமிடமெங்குமுள்ள  யாவும்  ஆரோக்கியப்பட்டுப்  பிழைக்கும்.  {Ezek  47:9}

 

அப்பொழுது  என்கேதிதுவக்கி<Engedi>  எனெக்லாயிம்மட்டும்<Eneglaim>  மீன்பிடிக்கிறவர்கள்  அதின்  கரையிலே  நிற்பார்கள்;  அதெல்லாம்  வலைகளை  விரிக்கிற  ஸ்தலமாயிருக்கும்;  அதின்  மச்சங்கள்  பெரிய  சமுத்திரத்தின்  மச்சங்களைப்போலப்  பல  ஜாதியும்  மகா  ஏராளமுமாயிருக்கும்.  {Ezek  47:10}

 

ஆனாலும்  அதினுடைய  உளையான  பள்ளங்களும்  அதினுடைய  மடுக்களும்  ஆரோக்கியமாகாமல்,  உப்பாகவே  விட்டுவிடப்படும்.  {Ezek  47:11}

 

நதியோரமாய்  அதின்  இக்கரையிலும்  அக்கரையிலும்  புசிப்புக்கான  சகலவித  விருட்சங்களும்  வளரும்;  அவைகளின்  இலைகள்  உதிர்வதுமில்லை,  அவைகளின்  கனிகள்  கெடுவதுமில்லை;  அவைகளுக்குப்  பாயும்  தண்ணீர்  பரிசுத்த  ஸ்தலத்திலிருந்து  பாய்கிறபடியினால்  மாதந்தோறும்  புதுக்கனிகளைக்  கொடுத்துக்கொண்டேயிருக்கும்;  அவைகளின்  கனிகள்  புசிப்புக்கும்,  அவைகளின்  இலைகள்  அவிழ்தத்துக்குமானவைகள்.  {Ezek  47:12}

 

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீங்கள்  இஸ்ரவேலின்<Israel>  பன்னிரண்டு  கோத்திரங்களுடைய  இலக்கத்தின்படியே  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொண்டு  குறிக்கவேண்டிய  எல்லையாவது:  யோசேப்புக்கு<Joseph>  இரண்டு  பங்கு  உண்டு.  {Ezek  47:13}

 

சகோதரனோடே  சகோதரனுக்குச்  சரிபங்கு  உண்டாக  அதைச்  சுதந்தரித்துக்கொள்ளக்கடவீர்கள்;  அதை  உங்கள்  பிதாக்களுக்குக்  கொடுப்பேன்  என்று  நான்  ஆணையிட்டுக்  கொடுத்தேன்;  ஆகையால்  உங்களுக்கு  இந்தத்  தேசம்  சுதந்தரமாகக்  கிடைக்கும்.  {Ezek  47:14}

 

தேசத்தின்  எல்லையாவது:  வடபுறம்  பெரிய  சமுத்திரந்துவக்கி,  சேதாதுக்குப்<Zedad>  போகிற  எத்லோன்<Hethlon>  வழியாயிருக்கிற,  {Ezek  47:15}

 

ஆமாத்தும்<Hamath>,  பேரொத்தாவும்<Berothah>,  தமஸ்குவின்<Damascus>  எல்லைக்கும்  ஆமாத்தின்<Hamath>  எல்லைக்கும்  நடுவான  சிப்ராயிமும்<Sibraim>,  ஆப்ரானின்<Hauran>  எல்லையோடே  சேர்ந்த  ஆத்சார்  அத்தீகோனுமானது<Hazarhatticon>.  {Ezek  47:16}

 

அப்படியே  சமுத்திரத்திலிருந்து  போகிற  எல்லை  ஆத்சார்ஏனானும்<Hazarenan>,  தமஸ்குவின்<Damascus>  எல்லையும்,  வடமூலையான  வடக்கும்  ஆமாத்தின்<Hamath>  எல்லையுமானது;  இது  வடபுறம்.  {Ezek  47:17}

 

கீழ்ப்புறத்தை  ஆப்ரானுக்கும்<Hauran>  தமஸ்குவுக்கும்<Damascus>  நடுவாகவும்,  கீலேயாத்துக்கும்<Gilead>  யோர்தானின்<Jordan>  ஓரமான  இஸ்ரவேல்<Israel>  தேசத்துக்கும்  நடுவாகவும்  கீழ்க்கடல்மட்டும்  இருக்கும்  எல்லையாய்  அளப்பீர்களாக;  இது  கீழ்ப்புறம்.  {Ezek  47:18}

 

தென்மூலையான  தென்புறம்  தாமார்<Tamar>  துவக்கி,  காதேசிலுள்ள<Kadesh>  சண்டைமூட்டுதலின்  தண்ணீர்கள்மட்டாகவும்,  ஆறுமட்டாகவும்,  பெரிய  சமுத்திரமட்டாகவும்  இருப்பது;  இது  தென்மூலையான  தென்புறம்.  {Ezek  47:19}

 

மேற்புறம்  அந்த  எல்லைதுவக்கி  ஆமாத்துக்கு<Hamath>  எதிராக  வந்து  சேருமட்டும்  இருக்கிற  பெரிய  சமுத்திரமே;  இது  மேற்புறம்.  {Ezek  47:20}

 

இந்தத்  தேசத்தை  நீங்கள்  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களின்படியே  உங்களுக்குள்ளே  பங்கிட்டுக்கொள்வீர்களாக.  {Ezek  47:21}

 

உங்களுக்கும்,  உங்களுக்குள்ளே  தங்கி  உங்களுக்குள்ளே  பிள்ளைகளைப்  பெறுகிற  அந்நியர்களுக்கும்,  நீங்கள்  அதைச்  சீட்டுப்போட்டுச்  சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக;  இவர்கள்  உங்களுக்கு  இஸ்ரவேல்<Israel>  புத்திரரில்  பிறந்தவர்களைப்போல  இருந்து,  உங்களோடேகூட  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களின்  நடுவே  சுதந்தரத்துக்கு  உடன்படுவார்களாக.  {Ezek  47:22}

 

அந்நியன்  எந்தக்  கோத்திரத்தோடே  தங்கியிருக்கிறானோ,  அதிலே  அவனுடைய  சுதந்தரத்தை  அவனுக்குக்  கொடுக்கக்கடவீர்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  47:23}

 

கோத்திரங்களின்  நாமங்களாவன:  வடமுனைதுவக்கி  ஆமாத்துக்குப்போகிற<Hamath>  எத்லோன்<Hethlon>  வழியின்  ஓரத்துக்கும்,  ஆத்சார்ஏனானுக்கும்<Hazarenan>,  ஆமாத்தருகே<Hamath>  வடக்கேயிருக்கிற  தமஸ்குவின்<Damascus>  எல்லைக்கும்  உள்ளாகக்  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  தாணுக்கு<Dan>  ஒரு  பங்கும்,  {Ezek  48:1}

 

தாணின்<Dan>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  ஆசேருக்கு<Asher>  ஒரு  பங்கும்,  {Ezek  48:2}

 

ஆசேரின்<Asher>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  நப்தலிக்கு<Naphtali>  ஒரு  பங்கும்,  {Ezek  48:3}

 

நப்தலியின்<Naphtali>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  மனாசேக்கு<Manasseh>  ஒரு  பங்கும்,  {Ezek  48:4}

 

மனாசேயின்<Manasseh>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  எப்பிராயீமுக்கு<Ephraim>  ஒரு  பங்கும்,  {Ezek  48:5}

 

எப்பிராயீமின்<Ephraim>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  ரூபனுக்கு<Reuben>  ஒரு  பங்கும்,  {Ezek  48:6}

 

ரூபனின்<Reuben>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  யூதாவுக்கு<Judah>  ஒரு  பங்கும்  உண்டாவதாக.  {Ezek  48:7}

 

யூதாவின்<Judah>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  நீங்கள்  அர்ப்பிதமாக்கவேண்டிய  பங்கு  இருக்கும்;  அது,  இருபத்தையாயிரங்கோல்  அகலமும்,  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  இருக்கிற  பங்குகளில்  ஒவ்வொன்றுக்கும்  சரியான  நீளமுமாம்;  பரிசுத்த  ஸ்தலம்  அதின்  நடுவிலே  இருப்பதாக.  {Ezek  48:8}

 

இதிலே  கர்த்தருக்கு  நீங்கள்  அர்ப்பிதமாக்கவேண்டிய  பங்கு  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  பதினாயிரங்கோல்  அகலமுமாயிருப்பதாக.  {Ezek  48:9}

 

வடக்கே  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  மேற்கே  பதினாயிரங்கோல்  அகலமும்,  கிழக்கே  பதினாயிரங்கோல்  அகலமும்,  தெற்கே  இருபத்தையாயிரங்கோல்  நீளமுமாகிய  இந்தப்  பரிசுத்த  அர்ப்பிதநிலமானது  ஆசாரியருடையதாயிருக்கும்;  கர்த்தருடைய  பரிசுத்த  ஸ்தலம்  அதின்  நடுவிலே  இருப்பதாக.  {Ezek  48:10}

 

இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  வழிதப்பிப்போகையில்,  லேவியர்<Levites>  வழிதப்பிப்போனதுபோல  வழிதப்பிப்போகாமல்,  என்  காவலைக்  காத்துக்கொண்ட  சாதோக்கின்<Zadok>  புத்திரராகிய  பரிசுத்தமாக்கப்பட்ட  ஆசாரியர்களுக்கு  அது  உரியதாகும்.  {Ezek  48:11}

 

அப்படியே  தேசத்தில்  அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே  மகா  பரிசுத்தமான  பங்கு  அவர்களுக்கு  லேவியருடைய<Levites>  எல்லையருகே  இருப்பதாக.  {Ezek  48:12}

 

ஆசாரியரின்  எல்லைக்கு  எதிராக  லேவியர்<Levites>  அடையும்  பங்கு  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  பதினாயிரங்கோல்  அகலமுமாயிருக்கவேண்டும்;  நீளம்  இருபத்தையாயிரங்கோலும்,  அகலம்  பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.  {Ezek  48:13}

 

அவர்கள்  அதில்  ஒன்றையும்  விற்கவும்  தேசத்தின்  முதல்  விளைவை  மாற்றவும்  மற்றவர்களுக்குக்  கொடுக்கவும்  தகாது;  அது  கர்த்தருக்குப்  பரிசுத்தமானது.  {Ezek  48:14}

 

இருபத்தையாயிரங்கோலுக்கு  எதிராக  அகலத்தில்  மீதியாயிருக்கும்  ஐயாயிரங்கோலோவென்றால்,  பரிசுத்தமாயிராமல்,  குடியேறும்  நகரத்துக்கும்  வெளிநிலங்களுக்கும்  விடவேண்டும்;  நகரம்  அதின்  நடுவில்  இருப்பதாக.  {Ezek  48:15}

 

அதின்  அளவுகளாவன:  வடபுறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலும்,  தென்புறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலும்,  கீழ்ப்புறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலும்,  மேற்புறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலுமாம்.  {Ezek  48:16}

 

நகரத்தின்  வெளிநிலங்கள்  வடக்கே  இருநூற்றைம்பது  கோலும்,  தெற்கே  இருநூற்றைம்பது  கோலும்,  கிழக்கே  இருநூற்றைம்பது  கோலும்,  மேற்கே  இருநூற்றைம்பது  கோலுமாயிருப்பதாக.  {Ezek  48:17}

 

பரிசுத்த  அர்ப்பிதநிலத்துக்கு  எதிராக  நீளத்தில்  மீதியானது  கிழக்கே  பதினாயிரங்கோலும்  மேற்கே  பதினாயிரங்கோலுமாம்;  அது  பரிசுத்த  அர்ப்பிதநிலத்துக்கு  எதிராயிருக்கும்;  அதின்  வருமானம்  நகரத்திற்காக  ஊழியஞ்செய்கிறவர்களுக்கு  ஆகாரமாயிருப்பதாக.  {Ezek  48:18}

 

இஸ்ரவேலின்<Israel>  சகல  கோத்திரங்களிலுமிருந்து  குறிக்கப்பட்ட  சிலர்  நகரத்திற்காகப்  பணிவிடை  செய்வார்கள்.  {Ezek  48:19}

 

அர்ப்பிதநிலமனைத்தும்  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  இருபத்தையாயிரங்கோல்  அகலமுமாய்  இருக்கக்கடவது;  பட்டணத்தின்  காணி  உட்பட  இந்தப்  பரிசுத்த  அர்ப்பிதநிலம்  சதுரமாய்  இருக்கவேண்டும்.  {Ezek  48:20}

 

பரிசுத்த  அர்ப்பிதநிலத்துக்கும்  நகரத்தின்  காணிக்கும்  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்,  அர்ப்பிதநிலத்தினுடைய  இருபத்தையாயிரங்கோலின்  முன்பாகக்  கிழக்கு  எல்லைமட்டுக்கும்,  மேற்கிலே  இருபத்தையாயிரங்கோலின்  முன்பாக  மேற்கு  எல்லைமட்டுக்கும்  மீதியாயிருப்பது  அதிபதியினுடையது;  பங்குகளுக்கு  எதிரான  அது  அதிபதியினுடையதாயிருப்பதாக;  அதற்கு  நடுவாகப்  பரிசுத்த  அர்ப்பிதநிலமும்  ஆலயத்தின்  பரிசுத்த  ஸ்தலமும்  இருக்கும்.  {Ezek  48:21}

 

அதிபதியினுடையதற்கு  நடுவேயிருக்கும்  லேவியரின்<Levites>  காணிதுவக்கியும்  நகரத்தின்  காணிதுவக்கியும்,  யூதாவின்<Judah>  எல்லைக்கும்  பென்யமீனின்<Benjamin>  எல்லைக்கும்  நடுவேயிருக்கிறது  அதிபதியினுடையது.  {Ezek  48:22}

 

மற்றக்  கோத்திரங்களுக்கு  உண்டாகும்  பங்குகளாவன:  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  பென்யமீனுக்கு<Benjamin>  ஒரு  பங்கும்,  {Ezek  48:23}

 

பென்யமீன்<Benjamin>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  சிமியோனுக்கு<Simeon>  ஒரு  பங்கும்,  {Ezek  48:24}

 

சிமியோனின்<Simeon>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  இசக்காருக்கு<Issachar>  ஒரு  பங்கும்,  {Ezek  48:25}

 

இசக்காரின்<Issachar>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  செபுலோனுக்கு<Zebulun>  ஒரு  பங்கும்,  {Ezek  48:26}

 

செபுலோனின்<Zebulun>  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  காத்துக்கு<Gad>  ஒரு  பங்கும்  உண்டாயிருப்பதாக.  {Ezek  48:27}

 

காத்தின்<Gad>  எல்லையருகே  தென்மூலையாகிய  தெற்கு  எல்லை,  தாமார்துவக்கி<Tamar>  காதேசிலுள்ள<Kadesh>  சண்டைமூட்டுதலின்  தண்ணீர்கள்  மட்டாகவும்  பெரிய  சமுத்திரமட்டாகவும்  போகும்.  {Ezek  48:28}

 

சுதந்தரிக்கும்படி  இதுவே  நீங்கள்  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களுக்குச்  சீட்டுப்போட்டுப்  பங்கிடும்  தேசம்,  இவைகளே  அவர்களின்  பங்குகள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  {Ezek  48:29}

 

நகரத்தினின்று  புறப்படும்  வழிகளாவன:  வடபுறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோலாகிய  அளவுண்டாயிருக்கும்.  {Ezek  48:30}

 

நகரத்தின்  வாசல்கள்,  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களுடைய  நாமங்களின்படியே  பெயர்  பெறக்கடவது;  வடக்கே  ரூபனுக்கு<Reuben>  ஒரு  வாசல்,  யூதாவுக்கு<Judah>  ஒரு  வாசல்,  லேவிக்கு<Levi>  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  {Ezek  48:31}

 

கீழ்ப்புறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோல்,  அதில்  யோசேப்புக்கு<Joseph>  ஒரு  வாசல்,  பென்யமீனுக்கு<Benjamin>  ஒரு  வாசல்,  தாணுக்கு<Dan>  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  {Ezek  48:32}

 

தென்புறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோல்,  அதில்  சிமியோனுக்கு<Simeon>  ஒரு  வாசல்,  இசக்காருக்கு<Issachar>  ஒரு  வாசல்,  செபுலோனுக்கு<Zebulun>  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  {Ezek  48:33}

 

மேற்புறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோல்,  அதில்  காத்துக்கு<Gad>  ஒரு  வாசல்,  ஆசேருக்கு<Asher>  ஒரு  வாசல்,  நப்தலிக்கு<Naphtali>  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  {Ezek  48:34}

 

சுற்றிலும்  அதின்  அளவு  பதினெண்ணாயிரங்கோலாகும்;  அந்நாள்  முதல்  நகரம்  யேகோவா  ஷம்மா<JEHOVAH SHAMMAH// The  LORD  is  there>  என்னும்  பெயர்பெறும்.  {Ezek  48:35}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!