Saturday, December 07, 2019

எபேசியர்

தேவனுடைய  சித்தத்தினாலே  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  அப்போஸ்தலனாகிய  பவுல்<Paul>,  எபேசுவிலே<Ephesus>  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  விசுவாசிகளாயிருக்கிற  பரிசுத்தவான்களுக்கு  எழுதுகிறதாவது:  {Eph  1:1}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>,  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {Eph  1:2}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  பிதாவாகிய  தேவனுக்கு  ஸ்தோத்திரம்;  அவர்  கிறிஸ்துவுக்குள்<Christ>  உன்னதங்களிலே  ஆவிக்குரிய  சகல  ஆசீர்வாதத்தினாலும்  நம்மை  ஆசீர்வதித்திருக்கிறார்.  {Eph  1:3}

 

தமக்குமுன்பாக  நாம்  அன்பில்  பரிசுத்தமுள்ளவர்களும்  குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு,  அவர்  உலகத்தோற்றத்துக்குமுன்னே  கிறிஸ்துவுக்குள்<Christ>  நம்மைத்  தெரிந்துகொண்டபடியே,  {Eph  1:4}

 

பிரியமானவருக்குள்  தாம்  நமக்குத்  தந்தருளின  தம்முடைய  கிருபையின்  மகிமைக்குப்  புகழ்ச்சியாக,  {Eph  1:5}

 

தம்முடைய  தயவுள்ள  சித்தத்தின்படியே,  நம்மை  இயேசுகிறிஸ்துமூலமாய்த்<Jesus  Christ>  தமக்குச்  சுவிகாரபுத்திரராகும்படி  முன்குறித்திருக்கிறார்.  {Eph  1:6}

 

அவருடைய  கிருபையின்  ஐசுவரியத்தின்படியே  இவருடைய  இரத்தத்தினாலே  பாவமன்னிப்பாகிய  மீட்பு  இவருக்குள்  நமக்கு  உண்டாயிருக்கிறது.  {Eph  1:7}

 

அந்தக்  கிருபையை  அவர்  சகல  ஞானத்தோடும்  புத்தியோடும்  எங்களிடத்தில்  பெருகப்பண்ணினார்.  {Eph  1:8}

 

காலங்கள்  நிறைவேறும்போது  விளங்கும்  நியமத்தின்படி  பரலோகத்திலிருக்கிறவைகளும்  பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய  சகலமும்  கிறிஸ்துவுக்குள்ளே<Christ>  கூட்டப்படவேண்டுமென்று,  {Eph  1:9}

 

தமக்குள்ளே  தீர்மானித்திருந்த  தம்முடைய  தயவுள்ள  சித்தத்தின்  இரகசியத்தை  எங்களுக்கு  அறிவித்தார்.  {Eph  1:10}

 

மேலும்  கிறிஸ்துவின்மேல்<Christ>  முன்னே  நம்பிக்கையாயிருந்த  நாங்கள்  அவருடைய  மகிமைக்குப்  புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,  {Eph  1:11}

 

தமது  சித்தத்தின்  ஆலோசனைக்குத்தக்கதாக  எல்லாவற்றையும்  நடப்பிக்கிற  அவருடைய  தீர்மானத்தின்படியே,  நாங்கள்  முன்குறிக்கப்பட்டு,  கிறிஸ்துவுக்குள்<Christ>  அவருடைய  சுதந்தரமாகும்படி  தெரிந்துகொள்ளப்பட்டோம்.  {Eph  1:12}

 

நீங்களும்  உங்கள்  இரட்சிப்பின்  சுவிசேஷமாகிய  சத்திய  வசனத்தைக்  கேட்டு,  விசுவாசிகளானபோது,  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட  பரிசுத்தஆவியால்  அவருக்குள்  முத்திரைபோடப்பட்டீர்கள்.  {Eph  1:13}

 

அவருக்குச்  சொந்தமானவர்கள்  அவருடைய  மகிமைக்குப்  புகழ்ச்சியாக  மீட்கப்படுவார்கள்  என்பதற்கு  ஆவியானவர்  நம்முடைய  சுதந்தரத்தின்  அச்சாரமாயிருக்கிறார்.  {Eph  1:14}

 

ஆனபடியினாலே,  கர்த்தராகிய  இயேசுவின்மேலுள்ள<Jesus>  உங்கள்  விசுவாசத்தையும்,  பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள  உங்கள்  அன்பையுங்குறித்து  நான்  கேள்விப்பட்டு,  {Eph  1:15}

 

இடைவிடாமல்  உங்களுக்காக  ஸ்தோத்திரம்பண்ணி,  என்  ஜெபங்களில்  உங்களை  நினைத்து,  {Eph  1:16}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  தேவனும்  மகிமையின்  பிதாவுமானவர்  தம்மை  நீங்கள்  அறிந்துகொள்வதற்கான  ஞானத்தையும்  தெளிவையும்  அளிக்கிற  ஆவியை  உங்களுக்குத்  தந்தருளவேண்டுமென்றும்,  {Eph  1:17}

 

தாம்  நம்மை  அழைத்ததினாலே  நமக்கு  உண்டாயிருக்கிற  நம்பிக்கை  இன்னதென்றும்,  பரிசுத்தவான்களிடத்தில்  தமக்கு  உண்டாயிருக்கிற  சுதந்தரத்தினுடைய  மகிமையின்  ஐசுவரியம்  இன்னதென்றும்;  {Eph  1:18}

 

தாம்  கிறிஸ்துவை<Christ>  மரித்தோரிலிருந்து  எழுப்பி,  அவரிடத்தில்  நடப்பித்த  தமது  பலத்த  சத்துவத்தின்  வல்லமைப்படியே  விசுவாசிக்கிறவர்களாகிய  நம்மிடத்திலே  காண்பிக்கும்  தம்முடைய  வல்லமையின்  மகா  மேன்மையான  மகத்துவம்  இன்னதென்றும்,  நீங்கள்  அறியும்படிக்கு,  அவர்  உங்களுக்குப்  பிரகாசமுள்ள  மனக்கண்களைக்  கொடுக்கவேண்டுமென்றும்  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {Eph  1:19}

 

எல்லாத்  துரைத்தனத்துக்கும்,  அதிகாரத்துக்கும்,  வல்லமைக்கும்,  கர்த்தத்துவத்துக்கும்,  இம்மையில்மாத்திரமல்ல  மறுமையிலும்  பேர்பெற்றிருக்கும்  எல்லா  நாமத்துக்கும்  மேலாய்  அவர்  உயர்ந்திருக்கத்தக்கதாக,  {Eph  1:20}

 

அவரை  உன்னதங்களில்  தம்முடைய  வலதுபாரிசத்தில்  உட்காரும்படி  செய்து,  {Eph  1:21}

 

எல்லாவற்றையும்  அவருடைய  பாதங்களுக்குக்  கீழ்ப்படுத்தி,  {Eph  1:22}

 

எல்லாவற்றையும்  எல்லாவற்றாலும்  நிரப்புகிறவருடைய  நிறைவாகிய  சரீரமான  சபைக்கு  அவரை  எல்லாவற்றிற்கும்  மேலான  தலையாகத்  தந்தருளினார்.  {Eph  1:23}

 

அக்கிரமங்களினாலும்  பாவங்களினாலும்  மரித்தவர்களாயிருந்த  உங்களை  உயிர்ப்பித்தார்.  {Eph  2:1}

 

அவைகளில்  நீங்கள்  முற்காலத்திலே  இவ்வுலக  வழக்கத்திற்கேற்றபடியாகவும்,  கீழ்ப்படியாமையின்  பிள்ளைகளிடத்தில்  இப்பொழுது  கிரியைசெய்கிற  ஆகாயத்து  அதிகாரப்  பிரபுவாகிய  ஆவிக்கேற்றபடியாகவும்  நடந்துகொண்டீர்கள்.  {Eph  2:2}

 

அவர்களுக்குள்ளே  நாமெல்லாரும்  முற்காலத்திலே  நமது  மாம்ச  இச்சையின்படியே  நடந்து,  நமது  மாம்சமும்  மனசும்  விரும்பினவைகளைச்  செய்து,  சுபாவத்தினாலே  மற்றவர்களைப்போலக்  கோபாக்கினையின்  பிள்ளைகளாயிருந்தோம்.  {Eph  2:3}

 

தேவனோ  இரக்கத்தில்  ஐசுவரியமுள்ளவராய்  நம்மில்  அன்புகூர்ந்த  தம்முடைய  மிகுந்த  அன்பினாலே,  {Eph  2:4}

 

அக்கிரமங்களில்  மரித்தவர்களாயிருந்த  நம்மைக்  கிறிஸ்துவுடனேகூட<Christ>  உயிர்ப்பித்தார்;  கிருபையினாலே  இரட்சிக்கப்பட்டீர்கள்.  {Eph  2:5}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  அவர்  நம்மிடத்தில்  வைத்த  தயவினாலே,  தம்முடைய  கிருபையின்  மகா  மேன்மையான  ஐசுவரியத்தை  வருங்காலங்களில்  விளங்கச்செய்வதற்காக,  {Eph  2:6}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  நம்மை  அவரோடேகூட  எழுப்பி,  உன்னதங்களிலே  அவரோடேகூட  உட்காரவும்  செய்தார்.  {Eph  2:7}

 

கிருபையினாலே  விசுவாசத்தைக்கொண்டு  இரட்சிக்கப்பட்டீர்கள்;  இது  உங்களால்  உண்டானதல்ல,  இது  தேவனுடைய  ஈவு;  {Eph  2:8}

 

ஒருவரும்  பெருமைபாராட்டாதபடிக்கு  இது  கிரியைகளினால்  உண்டானதல்ல;  {Eph  2:9}

 

ஏனெனில்,  நற்கிரியைகளைச்  செய்கிறதற்கு  நாம்  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  சிருஷ்டிக்கப்பட்டு,  தேவனுடைய  செய்கையாயிருக்கிறோம்;  அவைகளில்  நாம்  நடக்கும்படி  அவர்  முன்னதாக  அவைகளை  ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.  {Eph  2:10}

 

ஆனபடியினால்  முன்னே  மாம்சத்தின்படி  புறஜாதியாராயிருந்து,  மாம்சத்தில்  கையினாலே  செய்யப்படுகிற  விருத்தசேதனமுடையவர்களால்  விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட  நீங்கள்,  {Eph  2:11}

 

அக்காலத்திலே  கிறிஸ்துவைச்<Christ>  சேராதவர்களும்,  இஸ்ரவேலுடைய<Israel>  காணியாட்சிக்குப்  புறம்பானவர்களும்,  வாக்குத்தத்தத்தின்  உடன்படிக்கைகளுக்கு  அந்நியரும்,  நம்பிக்கையில்லாதவர்களும்,  இவ்வுலகத்தில்  தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று  நினைத்துக்கொள்ளுங்கள்.  {Eph  2:12}

 

முன்னே  தூரமாயிருந்த  நீங்கள்  இப்பொழுது  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  கிறிஸ்துவின்<Christ>  இரத்தத்தினாலே  சமீபமானீர்கள்.  {Eph  2:13}

 

எப்படியெனில்,  அவரே  நம்முடைய  சமாதான  காரணராகி,  இருதிறத்தாரையும்  ஒன்றாக்கி,  பகையாக  நின்ற  பிரிவினையாகிய  நடுச்சுவரைத்  தகர்த்து,  {Eph  2:14}

 

சட்டதிட்டங்களாகிய  நியாயப்பிரமாணத்தைத்  தம்முடைய  மாம்சத்தினாலே  ஒழித்து,  இருதிறத்தாரையும்  தமக்குள்ளாக  ஒரே  புதிய  மனுஷனாகச்  சிருஷ்டித்து,  இப்படிச்  சமாதானம்பண்ணி,  {Eph  2:15}

 

பகையைச்  சிலுவையினால்  கொன்று,  அதினாலே  இருதிறத்தாரையும்  ஒரே  சரீரமாகத்  தேவனுக்கு  ஒப்புரவாக்கினார்.  {Eph  2:16}

 

அல்லாமலும்  அவர்  வந்து,  தூரமாயிருந்த  உங்களுக்கும்,  சமீபமாயிருந்த  அவர்களுக்கும்,  சமாதானத்தைச்  சுவிசேஷமாக  அறிவித்தார்.  {Eph  2:17}

 

அந்தப்படியே  நாம்  இருதிறத்தாரும்  ஒரே  ஆவியினாலே  பிதாவினிடத்தில்  சேரும்  சிலாக்கியத்தை  அவர்மூலமாய்ப்  பெற்றிருக்கிறோம்.  {Eph  2:18}

 

ஆகையால்,  நீங்கள்  இனி  அந்நியரும்  பரதேசிகளுமாயிராமல்,  பரிசுத்தவான்களோடே  ஒரே  நகரத்தாரும்  தேவனுடைய  வீட்டாருமாயிருந்து,  {Eph  2:19}

 

அப்போஸ்தலர்  தீர்க்கதரிசிகள்  என்பவர்களுடைய  அஸ்திபாரத்தின்மேல்  கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்;  அதற்கு  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  தாமே  மூலைக்கல்லாயிருக்கிறார்;  {Eph  2:20}

 

அவர்மேல்  மாளிகை  முழுவதும்  இசைவாய்  இணைக்கப்பட்டு,  கர்த்தருக்குள்  பரிசுத்த  ஆலயமாக  எழும்புகிறது;  {Eph  2:21}

 

அவர்மேல்  நீங்களும்  ஆவியினாலே  தேவனுடைய  வாசஸ்தலமாகக்  கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.  {Eph  2:22}

 

இதினிமித்தம்,  பவுலாகிய<Paul>  நான்  புறஜாதியாராயிருக்கிற  உங்கள்பொருட்டுக்  கிறிஸ்து  இயேசுவினிமித்தம்<Christ  Jesus>  கட்டுண்டவனாயிருக்கிறேன்.  {Eph  3:1}

 

உங்களுக்காக  எனக்கு  அளிக்கப்பட்டிருக்கிற  தெய்வகிருபைக்குரிய  நியமமும்  இன்னதென்று  கேட்டிருப்பீர்களே;  {Eph  3:2}

 

அதென்னவெனில்  புறஜாதிகள்  சுவிசேஷத்தினாலே  உடன்  சுதந்தரருமாய்,  ஒரே  சரீரத்திற்குள்ளானவர்களுமாய்,  கிறிஸ்துவுக்குள்  அவர்  பண்ணின  வாக்குத்தத்தத்துக்கு  உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற  இந்த  இரகசியத்தை  அவர்  எனக்கு  வெளிப்படுத்தி  அறிவித்தார்.  {Eph  3:3}

 

இதைக்குறித்து  நான்  முன்னமே  சுருக்கமாய்  எழுதியிருக்கிறேன்.  {Eph  3:4}

 

அதை  நீங்கள்  வாசிக்கையில்  கிறிஸ்துவின்<Christ>  இரகசியத்தைக்குறித்து  எனக்கு  உண்டாயிருக்கிற  அறிவை  அறிந்துகொள்ளலாம்;  {Eph  3:5}

 

இந்த  இரகசியம்  இப்பொழுது  அவருடைய  பரிசுத்த  அப்போஸ்தலருக்கும்  தீர்க்கதரிசிகளுக்கும்  ஆவியானவராலே  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல,  முற்காலங்களில்  மனுபுத்திரருக்கு  அறிவிக்கப்படவில்லை.  {Eph  3:6}

 

தேவனுடைய  பலத்த  சத்துவத்தால்  எனக்கு  அளிக்கப்பட்ட  வரமாகிய  அவருடைய  கிருபையினாலே  இந்தச்  சுவிசேஷத்துக்கு  ஊழியக்காரனானேன்.  {Eph  3:7}

 

பரிசுத்தவான்களெல்லாரிலும்  சிறியவனாகிய  நான்  கிறிஸ்துவினுடைய<Christ>  அளவற்ற  ஐசுவரியத்தைப்  புறஜாதிகளிடத்தில்  சுவிசேஷமாய்  அறிவிக்கிறதற்காக  இந்தக்  கிருபை  எனக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.  {Eph  3:8}

 

தேவன்  நம்முடைய  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  கொண்டிருந்த  அநாதி  தீர்மானத்தின்படியே,  {Eph  3:9}

 

உன்னதங்களிலுள்ள  துரைத்தனங்களுக்கும்  அதிகாரங்களுக்கும்  அவருடைய  அநந்த  ஞானமானது  சபையின்மூலமாய்  இப்பொழுது  தெரியவரும்பொருட்டாக,  {Eph  3:10}

 

இயேசுகிறிஸ்துவைக்கொண்டு<Jesus  Christ>  எல்லாவற்றையும்  சிருஷ்டித்த  தேவனுக்குள்ளே  ஆதிகாலங்கள்  முதல்  மறைந்திருந்த  இரகசியத்தினுடைய  ஐக்கியம்  இன்னதென்று,  எல்லாருக்கும்  வெளிப்படையாகக்  காண்பிக்கிறதற்கு,  இந்தக்  கிருபை  எனக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.  {Eph  3:11}

 

அவரைப்  பற்றும்  விசுவாசத்தால்  அவருக்குள்  நமக்குத்  தைரியமும்  திடநம்பிக்கையோடே  தேவனிடத்தில்  சேரும்  சிலாக்கியமும்  உண்டாயிருக்கிறது.  {Eph  3:12}

 

ஆகையால்  உங்கள்நிமித்தம்  நான்  அநுபவிக்கிற  உபத்திரவங்களினால்  நீங்கள்  சோர்ந்துபோகாதிருக்க  வேண்டிக்கொள்ளுகிறேன்;  அவைகள்  உங்களுக்கு  மகிமையாயிருக்கிறதே.  {Eph  3:13}

 

இதினிமித்தம்  நான்  பரலோகத்திலும்  பூலோகத்திலுமுள்ள  முழுக்குடும்பத்துக்கும்  நாமகாரணராகிய,  {Eph  3:14}

 

நம்முடைய  கர்த்தராயிருக்கிற  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  பிதாவை  நோக்கி  முழங்கால்படியிட்டு,  {Eph  3:15}

 

நீங்கள்  அவருடைய  ஆவியினாலே  உள்ளான  மனுஷனில்  வல்லமையாய்ப்  பலப்படவும்,  {Eph  3:16}

 

விசுவாசத்தினாலே  கிறிஸ்து<Christ>  உங்கள்  இருதயங்களில்  வாசமாயிருக்கவும்,  நீங்கள்  அன்பிலே  வேரூன்றி,  நிலைபெற்றவர்களாகி,  {Eph  3:17}

 

சகல  பரிசுத்தவான்களோடுங்கூடக்  கிறிஸ்துவினுடைய<Christ>  அன்பின்  அகலமும்,  நீளமும்,  ஆழமும்,  உயரமும்  இன்னதென்று  உணர்ந்து;  {Eph  3:18}

 

அறிவுக்கெட்டாத  அந்த  அன்பை  அறிந்துகொள்ள  வல்லவர்களாகவும்,  தேவனுடைய  சகல  பரிபூரணத்தாலும்  நிறையப்படவும்,  அவர்  தமது  மகிமையினுடைய  ஐசுவரியத்தின்படியே,  உங்களுக்கு  அநுக்கிரகம்  பண்ணவேண்டுமென்று  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {Eph  3:19}

 

நாம்  வேண்டிக்கொள்ளுகிறதற்கும்  நினைக்கிறதற்கும்  மிகவும்  அதிகமாய்  நமக்குள்ளே  கிரியைசெய்கிற  வல்லமையின்படியே,  நமக்குச்  செய்ய  வல்லவராகிய  அவருக்கு,  {Eph  3:20}

 

சபையிலே  கிறிஸ்து  இயேசுவின்<Christ  Jesus>  மூலமாய்த்  தலைமுறை  தலைமுறைக்கும்  சதாகாலங்களிலும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  {Eph  3:21}

 

ஆதலால்,  கர்த்தர்நிமித்தம்  கட்டுண்டவனாகிய  நான்  உங்களுக்குச்  சொல்லுகிற  புத்தியென்னவெனில்,  நீங்கள்  அழைக்கப்பட்ட  அழைப்புக்குப்  பாத்திரவான்களாய்  நடந்து,  {Eph  4:1}

 

மிகுந்த  மனத்தாழ்மையும்  சாந்தமும்  நீடிய  பொறுமையும்  உடையவர்களாய்,  அன்பினால்  ஒருவரையொருவர்  தாங்கி,  {Eph  4:2}

 

சமாதானக்கட்டினால்  ஆவியின்  ஒருமையைக்  காத்துக்கொள்வதற்கு  ஜாக்கிரதையாயிருங்கள்.  {Eph  4:3}

 

உங்களுக்கு  உண்டான  அழைப்பினாலே  நீங்கள்  ஒரே  நம்பிக்கைக்கு  அழைக்கப்பட்டதுபோல,  ஒரே  சரீரமும்,  ஒரே  ஆவியும்  உண்டு;  {Eph  4:4}

 

ஒரே  கர்த்தரும்,  ஒரே  விசுவாசமும்,  ஒரே  ஞானஸ்நானமும்,  {Eph  4:5}

 

எல்லாருக்கும்  ஒரே  தேவனும்  பிதாவும்  உண்டு;  அவர்  எல்லார்மேலும்,  எல்லாரோடும்,  உங்கள்  எல்லாருக்குள்ளும்  இருக்கிறவர்.  {Eph  4:6}

 

கிறிஸ்துவினுடைய<Christ>  ஈவின்  அளவுக்குத்தக்கதாக  நம்மில்  அவனவனுக்குக்  கிருபை  அளிக்கப்பட்டிருக்கிறது.  {Eph  4:7}

 

ஆதலால்,  அவர்  உன்னதத்திற்கு  ஏறி,  சிறைப்பட்டவர்களைச்  சிறையாக்கி,  மனுஷர்களுக்கு  வரங்களை  அளித்தார்  என்று  சொல்லியிருக்கிறார்.  {Eph  4:8}

 

ஏறினார்  என்பதினாலே  அவர்  அதற்குமுன்னே  பூமியின்  தாழ்விடங்களில்  இறங்கினார்  என்று  விளங்குகிறதல்லவா?  {Eph  4:9}

 

இறங்கினவரே  எல்லாவற்றையும்  நிரப்பத்தக்கதாக,  எல்லா  வானங்களுக்கும்  மேலாக  உன்னதத்திற்கு  ஏறினவருமாயிருக்கிறார்.  {Eph  4:10}

 

மேலும்  நாம்  அனைவரும்  தேவனுடைய  குமாரனைப்  பற்றும்  விசுவாசத்திலும்  அறிவிலும்  ஒருமைப்பட்டவர்களாகி,  கிறிஸ்துவினுடைய<Christ>  நிறைவான  வளர்ச்சியின்  அளவுக்குத்தக்க  பூரணபுருஷராகும்வரைக்கும்,  {Eph  4:11}

 

பரிசுத்தவான்கள்  சீர்பொருந்தும்பொருட்டு,  சுவிசேஷ  ஊழியத்தின்  வேலைக்காகவும்,  கிறிஸ்துவின்<Christ>  சரீரமாகிய  சபையானது  பக்திவிருத்தி  அடைவதற்காகவும்,  {Eph  4:12}

 

அவர்,  சிலரை  அப்போஸ்தலராகவும்,  சிலரைத்  தீர்க்கதரிசிகளாகவும்,  சிலரைச்  சுவிசேஷகராகவும்,  சிலரை  மேய்ப்பராகவும்  போதகராகவும்  ஏற்படுத்தினார்.  {Eph  4:13}

 

நாம்  இனிக்  குழந்தைகளாயிராமல்,  மனுஷருடைய  சூதும்  வஞ்சிக்கிறதற்கேதுவான  தந்திரமுமுள்ள  போதகமாகிய  பலவித  காற்றினாலே  அலைகளைப்போல  அடிபட்டு  அலைகிறவர்களாயிராமல்,  {Eph  4:14}

 

அன்புடன்  சத்தியத்தைக்  கைக்கொண்டு,  தலையாகிய  கிறிஸ்துவுக்குள்<Christ>  எல்லாவற்றிலேயும்,  நாம்  வளருகிறவர்களாயிருக்கும்படியாக  அப்படிச்  செய்தார்.  {Eph  4:15}

 

அவராலே  சரீரம்  முழுதும்,  அதற்கு  உதவியாயிருக்கிற  சகல  கணுக்களினாலும்  இசைவாய்க்  கூட்டி  இணைக்கப்பட்டு,  ஒவ்வொரு  அவயவமும்  தன்தன்  அளவுக்குத்தக்கதாய்க்  கிரியைசெய்கிறபடியே,  அது  அன்பினாலே  தனக்குப்  பக்திவிருத்தி  உண்டாக்குகிறதற்கேதுவாகச்  சரீரவளர்ச்சியை  உண்டாக்குகிறது.  {Eph  4:16}

 

ஆதலால்,  கர்த்தருக்குள்  நான்  உங்களுக்குச்  சாட்சியாகச்  சொல்லி  எச்சரிக்கிறது  என்னவெனில்,  மற்றப்  புறஜாதிகள்  தங்கள்  வீணான  சிந்தையிலே  நடக்கிறதுபோல  நீங்கள்  இனி  நடவாமலிருங்கள்.  {Eph  4:17}

 

அவர்கள்  புத்தியில்  அந்தகாரப்பட்டு,  தங்கள்  இருதயகடினத்தினால்  தங்களில்  இருக்கும்  அறியாமையினாலே  தேவனுடைய  ஜீவனுக்கு  அந்நியராயிருந்து;  {Eph  4:18}

 

உணர்வில்லாதவர்களாய்,  சகலவித  அசுத்தங்களையும்  ஆவலோடே  நடப்பிக்கும்படி,  தங்களைக்  காமவிகாரத்திற்கு  ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.  {Eph  4:19}

 

நீங்களோ  இவ்விதமாய்க்  கிறிஸ்துவைக்<Christ>  கற்றுக்கொள்ளவில்லை.  {Eph  4:20}

 

இயேசுவினிடத்திலுள்ள<Jesus>  சத்தியத்தின்படியே,  நீங்கள்  அவரிடத்தில்  கேட்டறிந்து,  அவரால்  போதிக்கப்பட்டீர்களே.  {Eph  4:21}

 

அந்தப்படி,  முந்தின  நடக்கைக்குரிய  மோசம்போக்கும்  இச்சைகளாலே  கெட்டுப்போகிற  பழைய  மனுஷனை  நீங்கள்  களைந்துபோட்டு,  {Eph  4:22}

 

உங்கள்  உள்ளத்திலே  புதிதான  ஆவியுள்ளவர்களாகி,  {Eph  4:23}

 

மெய்யான  நீதியிலும்  பரிசுத்தத்திலும்  தேவனுடைய  சாயலாகச்  சிருஷ்டிக்கப்பட்ட  புதிய  மனுஷனைத்  தரித்துக்கொள்ளுங்கள்.  {Eph  4:24}

 

அன்றியும்,  நாம்  ஒருவருக்கொருவர்  அவயவங்களாயிருக்கிறபடியால்,  பொய்யைக்  களைந்து,  அவனவன்  பிறனுடனே  மெய்யைப்  பேசக்கடவன்.  {Eph  4:25}

 

நீங்கள்  கோபங்கொண்டாலும்  பாவஞ்செய்யாதிருங்கள்;  சூரியன்  அஸ்தமிக்கிறதற்கு  முன்னாக  உங்கள்  எரிச்சல்  தணியக்கடவது;  {Eph  4:26}

 

பிசாசுக்கு  இடங்கொடாமலும்  இருங்கள்.  {Eph  4:27}

 

திருடுகிறவன்  இனித்  திருடாமல்,  குறைச்சலுள்ளவனுக்குக்  கொடுக்கத்தக்கதாகத்  தனக்கு  உண்டாயிருக்கும்படி,  தன்  கைகளினால்  நலமான  வேலைசெய்து,  பிரயாசப்படக்கடவன்.  {Eph  4:28}

 

கெட்ட  வார்த்தை  ஒன்றும்  உங்கள்  வாயிலிருந்து  புறப்படவேண்டாம்;  பக்திவிருத்திக்கு  ஏதுவான  நல்ல  வார்த்தை  உண்டானால்  அதையே  கேட்கிறவர்களுக்குப்  பிரயோஜனமுண்டாகும்படி  பேசுங்கள்.  {Eph  4:29}

 

அன்றியும்,  நீங்கள்  மீட்கப்படும்  நாளுக்கென்று  முத்திரையாகப்  பெற்ற  தேவனுடைய  பரிசுத்தஆவியைத்  துக்கப்படுத்தாதிருங்கள்.  {Eph  4:30}

 

சகலவிதமான  கசப்பும்,  கோபமும்,  மூர்க்கமும்,  கூக்குரலும்,  தூஷணமும்,  மற்ற  எந்தத்  துர்க்குணமும்  உங்களைவிட்டு  நீங்கக்கடவது.  {Eph  4:31}

 

ஒருவருக்கொருவர்  தயவாயும்  மனஉருக்கமாயும்  இருந்து,  கிறிஸ்துவுக்குள்<Christ>  தேவன்  உங்களுக்கு  மன்னித்ததுபோல,  நீங்களும்  ஒருவருக்கொருவர்  மன்னியுங்கள்.  {Eph  4:32}

 

ஆதலால்,  நீங்கள்  பிரியமான  பிள்ளைகளைப்போலத்  தேவனைப்  பின்பற்றுகிறவர்களாகி,  {Eph  5:1}

 

கிறிஸ்து<Christ>  நமக்காகத்  தம்மைத்  தேவனுக்குச்  சுகந்த  வாசனையான  காணிக்கையாகவும்  பலியாகவும்  ஒப்புக்கொடுத்து  நம்மில்  அன்புகூர்ந்ததுபோல,  நீங்களும்  அன்பிலே  நடந்துகொள்ளுங்கள்.  {Eph  5:2}

 

மேலும்,  பரிசுத்தவான்களுக்கு  ஏற்றபடி,  வேசித்தனமும்,  மற்றெந்த  அசுத்தமும்,  பொருளாசையும்  ஆகிய  இவைகளின்  பேர்முதலாய்  உங்களுக்குள்ளே  சொல்லப்படவுங்கூடாது.  {Eph  5:3}

 

அப்படியே  வம்பும்,  புத்தியீனமான  பேச்சும்,  பரியாசமும்  தகாதவைகள்;  ஸ்தோத்திரஞ்செய்தலே  தகும்.  {Eph  5:4}

 

விபசாரக்காரனாவது,  அசுத்தனாவது,  விக்கிரகாராதனைக்காரனாகிய  பொருளாசைக்காரனாவது  தேவனுடைய  ராஜ்யமாகிய  கிறிஸ்துவின்<Christ>  ராஜ்யத்திலே  சுதந்தரமடைவதில்லையென்று  அறிந்திருக்கிறீர்களே.  {Eph  5:5}

 

இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக்  கீழ்ப்படியாமையின்  பிள்ளைகள்மேல்  தேவகோபாக்கினை  வருவதால்,  ஒருவனும்  உங்களை  வீண்வார்த்தைகளினாலே  மோசம்போக்காதபடிக்கு  எச்சரிக்கையாயிருங்கள்;  {Eph  5:6}

 

அவர்களுக்குப்  பங்காளிகளாகாதிருங்கள்.  {Eph  5:7}

 

முற்காலத்தில்  நீங்கள்  அந்தகாரமாயிருந்தீர்கள்,  இப்பொழுதோ  கர்த்தருக்குள்  வெளிச்சமாயிருக்கிறீர்கள்;  வெளிச்சத்தின்  பிள்ளைகளாய்  நடந்துகொள்ளுங்கள்.  {Eph  5:8}

 

ஆவியின்  கனி,  சகல  நற்குணத்திலும்  நீதியிலும்  உண்மையிலும்  விளங்கும்.  {Eph  5:9}

 

கர்த்தருக்குப்  பிரியமானது  இன்னதென்று  நீங்கள்  சோதித்துப்பாருங்கள்.  {Eph  5:10}

 

கனியற்ற  அந்தகாரக்  கிரியைகளுக்கு  உடன்படாமல்,  அவைகளைக்  கடிந்துகொள்ளுங்கள்.  {Eph  5:11}

 

அவர்களால்  ஒளிப்பிடத்தில்  செய்யப்படும்  கிரியைகளைச்  சொல்லுகிறதும்  அவலட்சணமாயிருக்கிறதே.  {Eph  5:12}

 

அவைகளெல்லாம்  கடிந்துகொள்ளப்பட்டு  வெளிச்சத்தினால்  வெளியரங்கமாகும்;  வெளியரங்கமாக்குகிறதெல்லாம்  வெளிச்சமாயிருக்கிறது.  {Eph  5:13}

 

ஆதலால்,  தூங்குகிற  நீ  விழித்து,  மரித்தோரை  விட்டு  எழுந்திரு,  அப்பொழுது  கிறிஸ்து<Christ>  உன்னைப்  பிரகாசிப்பிப்பாரென்று  சொல்லியிருக்கிறார்.  {Eph  5:14}

 

ஆனபடியினாலே,  நீங்கள்  ஞானமற்றவர்களைப்போல  நடவாமல்,  ஞானமுள்ளவர்களைப்போலக்  கவனமாய்  நடந்துகொள்ளப்பார்த்து,  {Eph  5:15}

 

நாட்கள்  பொல்லாதவைகளானதால்  காலத்தைப்  பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.  {Eph  5:16}

 

ஆகையால்,  நீங்கள்  மதியற்றவர்களாயிராமல்,  கர்த்தருடைய  சித்தம்  இன்னதென்று  உணர்ந்துகொள்ளுங்கள்.  {Eph  5:17}

 

துன்மார்க்கத்திற்கு  ஏதுவான  மதுபான  வெறிகொள்ளாமல்,  ஆவியினால்  நிறைந்து;  {Eph  5:18}

 

சங்கீதங்களினாலும்  கீர்த்தனைகளினாலும்  ஞானப்பாட்டுகளினாலும்  ஒருவருக்கொருவர்  புத்திசொல்லிக்கொண்டு,  உங்கள்  இருதயத்தில்  கர்த்தரைப்  பாடிக்  கீர்த்தனம்பண்ணி,  {Eph  5:19}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலே  எப்பொழுதும்  எல்லாவற்றிற்காகவும்  பிதாவாகிய  தேவனை  ஸ்தோத்திரித்து,  {Eph  5:20}

 

தெய்வ  பயத்தோடே  ஒருவருக்கொருவர்  கீழ்ப்படிந்திருங்கள்.  {Eph  5:21}

 

மனைவிகளே,  கர்த்தருக்குக்  கீழ்ப்படிகிறதுபோல,  உங்கள்  சொந்தப்  புருஷருக்குங்  கீழ்ப்படியுங்கள்.  {Eph  5:22}

 

கிறிஸ்து<Christ>  சபைக்குத்  தலையாயிருக்கிறதுபோல,  புருஷனும்  மனைவிக்குத்  தலையாயிருக்கிறான்;  அவரே  சரீரத்திற்கும்  இரட்சகராயிருக்கிறார்.  {Eph  5:23}

 

ஆகையால்,  சபையானது  கிறிஸ்துவுக்குக்<Christ>  கீழ்ப்படிகிறதுபோல  மனைவிகளும்  தங்கள்  சொந்தப்  புருஷர்களுக்கு  எந்தக்  காரியத்திலேயும்  கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.  {Eph  5:24}

 

புருஷர்களே,  உங்கள்  மனைவிகளில்  அன்புகூருங்கள்;  அப்படியே  கிறிஸ்துவும்<Christ>  சபையில்  அன்புகூர்ந்து,  {Eph  5:25}

 

தாம்  அதைத்  திருவசனத்தைக்கொண்டு  தண்ணீர்  முழுக்கினால்  சுத்திகரித்து,  பரிசுத்தமாக்குகிறதற்கும்,  {Eph  5:26}

 

கறைதிரை  முதலானவைகள்  ஒன்றும்  இல்லாமல்  பரிசுத்தமும்  பிழையற்றதுமான  மகிமையுள்ள  சபையாக  அதைத்  தமக்குமுன்  நிறுத்திக்கொள்வதற்கும்  தம்மைத்தாமே  அதற்காக  ஒப்புக்கொடுத்தார்.  {Eph  5:27}

 

அப்படியே,  புருஷர்களும்  தங்கள்  மனைவிகளைத்  தங்கள்  சொந்தச்  சரீரங்களாகப்  பாவித்து,  அவர்களில்  அன்புகூரவேண்டும்;  தன்  மனைவியில்  அன்புகூருகிறவன்  தன்னில்தான்  அன்புகூருகிறான்.  {Eph  5:28}

 

தன்  சொந்த  மாம்சத்தைப்  பகைத்தவன்  ஒருவனுமில்லையே;  கர்த்தர்  சபையைப்  போஷித்துக்  காப்பாற்றுகிறதுபோல  ஒவ்வொருவனும்  தன்  மாம்சத்தைப்  போஷித்துக்  காப்பாற்றுகிறான்.  {Eph  5:29}

 

நாம்  அவருடைய  சரீரத்தின்  அவயவங்களாயும்,  அவருடைய  மாம்சத்திற்கும்  அவருடைய  எலும்புகளுக்கும்  உரியவர்களாயும்  இருக்கிறோம்.  {Eph  5:30}

 

இதினிமித்தம்  மனுஷன்  தன்  தகப்பனையும்  தன்  தாயையும்  விட்டு,  தன்  மனைவியுடன்  இசைந்து,  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்.  {Eph  5:31}

 

இந்த  இரகசியம்  பெரியது;  நான்  கிறிஸ்துவைப்பற்றியும்<Christ>  சபையைப்பற்றியும்  சொல்லுகிறேன்.  {Eph  5:32}

 

எப்படியும்,  உங்களிலும்  அவனவன்  தன்னிடத்தில்  அன்புகூருவதுபோல,  தன்  மனைவியினிடத்திலும்  அன்புகூரக்கடவன்;  மனைவியும்  புருஷனிடத்தில்  பயபக்தியாயிருக்கக்கடவள்.  {Eph  5:33}

 

பிள்ளைகளே,  உங்கள்  பெற்றாருக்குக்  கர்த்தருக்குள்  கீழ்ப்படியுங்கள்,  இது  நியாயம்.  {Eph  6:1}

 

உனக்கு  நன்மை  உண்டாயிருப்பதற்கும்,  பூமியிலே  உன்  வாழ்நாள்  நீடித்திருப்பதற்கும்,  {Eph  6:2}

 

உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக  என்பதே  வாக்குத்தத்தமுள்ள  முதலாங்  கற்பனையாயிருக்கிறது.  {Eph  6:3}

 

பிதாக்களே,  நீங்களும்  உங்கள்  பிள்ளைகளைக்  கோபப்படுத்தாமல்,  கர்த்தருக்கேற்ற  சிட்சையிலும்  போதனையிலும்  அவர்களை  வளர்ப்பீர்களாக.  {Eph  6:4}

 

வேலைக்காரரே,  நீங்கள்  கிறிஸ்துவுக்குக்<Christ>  கீழ்ப்படிகிறதுபோல,  சரீரத்தின்படி  உங்கள்  எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும்  பயத்தோடும்  நடுக்கத்தோடும்  கபடற்ற  மனதோடும்  கீழ்ப்படிந்து;  {Eph  6:5}

 

மனுஷருக்குப்  பிரியமாயிருக்க  விரும்புகிறவர்களாகப்  பார்வைக்கு  ஊழியஞ்செய்யாமல்,  கிறிஸ்துவின்<Christ>  ஊழியக்காரராக,  மனப்பூர்வமாய்த்  தேவனுடைய  சித்தத்தின்படி  செய்யுங்கள்.  {Eph  6:6}

 

அடிமையானவனானாலும்,  சுயாதீனமுள்ளவனானாலும்,  அவனவன்  செய்கிற  நன்மையின்படியே  கர்த்தரிடத்தில்  பலனை  அடைவானென்று  அறிந்து,  {Eph  6:7}

 

மனுஷருக்கென்று  ஊழியஞ்செய்யாமல்,  கர்த்தருக்கென்றே  நல்மனதோடே  ஊழியஞ்செய்யுங்கள்.  {Eph  6:8}

 

எஜமான்களே,  அப்படியே  நீங்களும்,  வேலைக்காரருக்குச்  செய்யவேண்டியவைகளைச்  செய்து,  அவர்களுக்கும்  உங்களுக்கும்  எஜமானானவர்  பரலோகத்தில்  இருக்கிறாரென்றும்,  அவரிடத்தில்  பட்சபாதம்  இல்லையென்றும்  அறிந்து,  கடுஞ்சொல்லை  விட்டுவிடுங்கள்.  {Eph  6:9}

 

கடைசியாக,  என்  சகோதரரே,  கர்த்தரிலும்  அவருடைய  சத்துவத்தின்  வல்லமையிலும்  பலப்படுங்கள்.  {Eph  6:10}

 

நீங்கள்  பிசாசின்  தந்திரங்களோடு  எதிர்த்துநிற்கத்  திராணியுள்ளவர்களாகும்படி,  தேவனுடைய  சர்வாயுதவர்க்கத்தையும்  தரித்துக்கொள்ளுங்கள்.  {Eph  6:11}

 

ஏனெனில்,  மாம்சத்தோடும்  இரத்தத்தோடுமல்ல,  துரைத்தனங்களோடும்,  அதிகாரங்களோடும்,  இப்பிரபஞ்சத்தின்  அந்தகார  லோகாதிபதிகளோடும்,  வானமண்டலங்களிலுள்ள  பொல்லாத  ஆவிகளின்  சேனைகளோடும்  நமக்குப்  போராட்டம்  உண்டு.  {Eph  6:12}

 

ஆகையால்,  தீங்குநாளிலே  அவைகளை  நீங்கள்  எதிர்க்கவும்,  சகலத்தையும்  செய்துமுடித்தவர்களாய்  நிற்கவும்  திராணியுள்ளவர்களாகும்படிக்கு,  தேவனுடைய  சர்வாயுதவர்க்கத்தையும்  எடுத்துக்கொள்ளுங்கள்.  {Eph  6:13}

 

சத்தியம்  என்னும்  கச்சையை  உங்கள்  அரையில்  கட்டினவர்களாயும்,  நீதியென்னும்  மார்க்கவசத்தைத்  தரித்தவர்களாயும்;  {Eph  6:14}

 

சமாதானத்தின்  சுவிசேஷத்திற்குரிய  ஆயத்தம்  என்னும்  பாதரட்சையைக்  கால்களிலே  தொடுத்தவர்களாயும்;  {Eph  6:15}

 

பொல்லாங்கன்  எய்யும்  அக்கினியாஸ்திரங்களையெல்லாம்  அவித்துப்போடத்தக்கதாய்,  எல்லாவற்றிற்கும்  மேலாக  விசுவாசமென்னும்  கேடகத்தைப்  பிடித்துக்கொண்டவர்களாயும்  நில்லுங்கள்.  {Eph  6:16}

 

இரட்சணியமென்னும்  தலைச்சீராவையும்,  தேவவசனமாகிய  ஆவியின்  பட்டயத்தையும்  எடுத்துக்கொள்ளுங்கள்.  {Eph  6:17}

 

எந்தச்  சமயத்திலும்  சகலவிதமான  வேண்டுதலோடும்  விண்ணப்பத்தோடும்  ஆவியினாலே  ஜெபம்பண்ணி,  அதன்பொருட்டு  மிகுந்த  மனஉறுதியோடும்  சகல  பரிசுத்தவான்களுக்காகவும்  பண்ணும்  வேண்டுதலோடும்  விழித்துக்கொண்டிருங்கள்.  {Eph  6:18}

 

சுவிசேஷத்திற்காகச்  சங்கிலியால்  கட்டப்பட்டிருக்கிற  ஸ்தானாபதியாகிய  நான்  அதைப்பற்றிப்  பேசவேண்டியபடி  தைரியமாய்ப்  பேசத்தக்கதாக,  {Eph  6:19}

 

நான்  தைரியமாய்  என்  வாயைத்  திறந்து  சுவிசேஷத்தின்  இரகசியத்தை  அறிவிக்கிறதற்கு  வாக்கு  எனக்குக்  கொடுக்கப்படும்படி  எனக்காகவும்  விண்ணப்பம்பண்ணுங்கள்.  {Eph  6:20}

 

அன்றியும்,  எனக்கடுத்த  காரியங்களும்,  என்  சுகசெய்திகளும்  உங்களுக்குத்  தெரியவரும்படிக்கு,  அவைகளையெல்லாம்  நமக்குப்  பிரியமான  சகோதரனும்  கர்த்தருக்குள்  உண்மையுள்ள  ஊழியக்காரனுமாயிருக்கிற  தீகிக்கு<Tychicus>  உங்களுக்கு  அறிவிப்பான்.  {Eph  6:21}

 

நீங்கள்  எங்கள்  செய்திகளை  அறியவும்,  அவன்  உங்கள்  இருதயங்களுக்கு  ஆறுதல்  செய்யவும்,  அவனை  உங்களிடத்தில்  அனுப்பினேன்.  {Eph  6:22}

 

பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>,  சகோதரருக்குச்  சமாதானமும்  விசுவாசத்தோடு  கூடிய  அன்பும்  உண்டாவதாக.  {Eph  6:23}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினிடத்தில்<Jesus  Christ>  அழியாத  அன்புடனே  அன்புகூருகிற  யாவரோடும்  கிருபை  உண்டாயிருப்பதாக.  ஆமென்.  {Eph  6:24}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!