ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். {Gen 1:1}
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். {Gen 1:2}
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. {Gen 1:3}
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். {Gen 1:4}
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. {Gen 1:5}
பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். {Gen 1:6}
தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. {Gen 1:7}
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. {Gen 1:8}
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. {Gen 1:9}
தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். {Gen 1:10}
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. {Gen 1:11}
பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். {Gen 1:12}
சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. {Gen 1:13}
பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். {Gen 1:14}
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. {Gen 1:15}
தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். {Gen 1:16}
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், {Gen 1:17}
பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். {Gen 1:18}
சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. {Gen 1:19}
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். {Gen 1:20}
தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். {Gen 1:21}
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். {Gen 1:22}
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று. {Gen 1:23}
பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. {Gen 1:24}
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். {Gen 1:25}
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். {Gen 1:26}
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். {Gen 1:27}
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். {Gen 1:28}
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; {Gen 1:29}
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று. {Gen 1:30}
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. {Gen 1:31}
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. {Gen 2:1}
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். {Gen 2:2}
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். {Gen 2:3}
தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. {Gen 2:4}
நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. {Gen 2:5}
அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. {Gen 2:6}
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். {Gen 2:7}
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன்<Eden> என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். {Gen 2:8}
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். {Gen 2:9}
தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து<Eden> ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. {Gen 2:10}
முதலாம் ஆற்றுக்குப் பைசோன்<Pison> என்று பேர், அது ஆவிலா<Havilah> தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். {Gen 2:11}
அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு. {Gen 2:12}
இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன்<Gihon> என்று பேர், அது எத்தியோப்பியா<Ethiopia> தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். {Gen 2:13}
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல்<Hiddekel> என்று பேர், அது அசீரியாவுக்குக்<Assyria> கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து<Euphrates> என்று பேர். {Gen 2:14}
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன்<Eden> தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். {Gen 2:15}
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். {Gen 2:16}
ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். {Gen 2:17}
பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். {Gen 2:18}
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம்<Adam> அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம்<Adam> எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. {Gen 2:19}
அப்படியே ஆதாம்<Adam> சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ<Adam> ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. {Gen 2:20}
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு<Adam> அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். {Gen 2:21}
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். {Gen 2:22}
அப்பொழுது ஆதாம்<Adam>: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். {Gen 2:23}
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். {Gen 2:24}
ஆதாமும்<Adam> அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள். {Gen 2:25}
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. {Gen 3:1}
ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; {Gen 3:2}
ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். {Gen 3:3}
அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; {Gen 3:4}
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. {Gen 3:5}
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். {Gen 3:6}
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். {Gen 3:7}
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும்<Adam> அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். {Gen 3:8}
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக்<Adam> கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். {Gen 3:9}
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். {Gen 3:10}
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். {Gen 3:11}
அதற்கு ஆதாம்<Adam>: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். {Gen 3:12}
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். {Gen 3:13}
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; {Gen 3:14}
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். {Gen 3:15}
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். {Gen 3:16}
பின்பு அவர் ஆதாமை<Adam> நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். {Gen 3:17}
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். {Gen 3:18}
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். {Gen 3:19}
ஆதாம்<Adam> தன் மனைவிக்கு ஏவாள்<Eve> என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். {Gen 3:20}
தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும்<Adam> அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். {Gen 3:21}
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, {Gen 3:22}
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன்<Eden> தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். {Gen 3:23}
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன்<Eden> தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும்<Cherubims>, வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். {Gen 3:24}
ஆதாம்<Adam> தன் மனைவியாகிய ஏவாளை<Eve> அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப்<Cain> பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். {Gen 4:1}
பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப்<Abel> பெற்றாள்; ஆபேல்<Abel> ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன்<Cain> நிலத்தைப் பயிரிடுகிறவனானான். {Gen 4:2}
சிலநாள் சென்றபின்பு, காயீன்<Cain> நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். {Gen 4:3}
ஆபேலும்<Abel> தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும்<Abel> அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். {Gen 4:4}
காயீனையும்<Cain> அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு<Cain> மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. {Gen 4:5}
அப்பொழுது கர்த்தர் காயீனை<Cain> நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? {Gen 4:6}
நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். {Gen 4:7}
காயீன்<Cain> தன் சகோதரனாகிய ஆபேலோடே<Abel> பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன்<Cain> தன் சகோதரனாகிய ஆபேலுக்கு<Abel> விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். {Gen 4:8}
கர்த்தர் காயீனை<Cain> நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல்<Abel> எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். {Gen 4:9}
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. {Gen 4:10}
இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். {Gen 4:11}
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார். {Gen 4:12}
அப்பொழுது காயீன்<Cain> கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. {Gen 4:13}
இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். {Gen 4:14}
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக்<Cain> கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக்<Cain> கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். {Gen 4:15}
அப்படியே காயீன்<Cain> கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக்<Eden> கிழக்கான நோத்<Nod> என்னும் தேசத்தில் குடியிருந்தான். {Gen 4:16}
காயீன்<Cain> தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப்<Enoch> பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய<Enoch> பேரை இட்டான். {Gen 4:17}
ஏனோக்குக்கு<Enoch> ஈராத்<Irad> பிறந்தான்; ஈராத்<Irad> மெகுயவேலைப்<Mehujael> பெற்றான்; மெகுயவேல்<Mehujael> மெத்தூசவேலைப்<Methusael> பெற்றான்; மெத்தூசவேல்<Methusael> லாமேக்கைப்<Lamech> பெற்றான். {Gen 4:18}
லாமேக்கு<Lamech> இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள்<Adah> என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள்<Zillah> என்று பேர். {Gen 4:19}
ஆதாள்<Adah> யாபாலைப்<Jabal> பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். {Gen 4:20}
அவன் சகோதரனுடைய பேர் யூபால்<Jubal>; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். {Gen 4:21}
சில்லாளும்<Zillah> தூபால் காயீனைப்<Tubalcain> பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய<Tubalcain> சகோதரி நாமாள்<Naamah>. {Gen 4:22}
லாமேக்கு<Lamech> தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே<Adah>, சில்லாளே<Zillah>, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின்<Lamech> மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்; {Gen 4:23}
காயீனுக்காக<Cain> ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக<Lamech> எழுபத்தேழு பழி சுமரும் என்றான். {Gen 4:24}
பின்னும் ஆதாம்<Adam> தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன்<Cain> கொலைசெய்த ஆபேலுக்குப்<Abel> பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத்<Seth> என்று பேரிட்டாள். {Gen 4:25}
சேத்துக்கும்<Seth> ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ்<Enos> என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள். {Gen 4:26}
ஆதாமின்<Adam> வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். {Gen 5:1}
அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். {Gen 5:2}
ஆதாம்<Adam> நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத்<Seth> என்று பேரிட்டான். {Gen 5:3}
ஆதாம்<Adam> சேத்தைப்<Seth> பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:4}
ஆதாம்<Adam> உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:5}
சேத்<Seth> நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப்<Enos> பெற்றான். {Gen 5:6}
சேத்<Seth> ஏனோசைப்<Enos> பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:7}
சேத்துடைய<Seth> நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:8}
ஏனோஸ்<Enos> தொண்ணூறு வயதானபோது, கேனானைப்<Cainan> பெற்றான். {Gen 5:9}
ஏனோஸ்<Enos> கேனானைப்<Cainan> பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:10}
ஏனோசுடைய<Enos> நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:11}
கேனான்<Cainan> எழுபது வயதானபோது, மகலாலெயேலைப்<Mahalaleel> பெற்றான். {Gen 5:12}
கேனான்<Cainan> மகலாலெயேலைப்<Mahalaleel> பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:13}
கேனானுடைய<Cainan> நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:14}
மகலாலெயேல்<Mahalaleel> அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப்<Jared> பெற்றான். {Gen 5:15}
மகலாலெயேல்<Mahalaleel> யாரேதைப்<Jared> பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:16}
மகலாலெயேலுடைய<Mahalaleel> நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:17}
யாரேத்<Jared> நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப்<Enoch> பெற்றான். {Gen 5:18}
யாரேத்<Jared> ஏனோக்கைப்<Enoch> பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:19}
யாரேதுடைய<Jared> நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:20}
ஏனோக்கு<Enoch> அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப்<Methuselah> பெற்றான். {Gen 5:21}
ஏனோக்கு<Enoch> மெத்தூசலாவைப்<Methuselah> பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:22}
ஏனோக்குடைய<Enoch> நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். {Gen 5:23}
ஏனோக்கு<Enoch> தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். {Gen 5:24}
மெத்தூசலா<Methuselah> நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப்<Lamech> பெற்றான். {Gen 5:25}
மெத்தூசலா<Methuselah> லாமேக்கைப்<Lamech> பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:26}
மெத்தூசலாவுடைய<Methuselah> நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:27}
லாமேக்கு<Lamech> நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று, {Gen 5:28}
கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா<Noah> என்று பேரிட்டான். {Gen 5:29}
லாமேக்கு<Lamech> நோவாவைப்<Noah> பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 5:30}
லாமேக்குடைய<Lamech> நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான். {Gen 5:31}
நோவா<Noah> ஐந்நூறு வயதானபோது, சேம்<Shem> காம்<Ham> யாப்பேத்<Japheth> என்பவர்களைப் பெற்றான். {Gen 5:32}
மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: {Gen 6:1}
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். {Gen 6:2}
அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். {Gen 6:3}
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். {Gen 6:4}
மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, {Gen 6:5}
தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. {Gen 6:6}
அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். {Gen 6:7}
நோவாவுக்கோ<Noah>, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. {Gen 6:8}
நோவாவின்<Noah> வம்சவரலாறு: நோவா<Noah> தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா<Noah> தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். {Gen 6:9}
நோவா<Noah> சேம்<Shem> காம்<Ham> யாப்பேத்<Japheth> என்னும் மூன்று குமாரரைப் பெற்றான். {Gen 6:10}
பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. {Gen 6:11}
தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். {Gen 6:12}
அப்பொழுது தேவன் நோவாவை<Noah> நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். {Gen 6:13}
நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு. {Gen 6:14}
நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும். {Gen 6:15}
நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும். {Gen 6:16}
வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். {Gen 6:17}
ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். {Gen 6:18}
சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். {Gen 6:19}
ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது. {Gen 6:20}
உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார். {Gen 6:21}
நோவா<Noah> அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். {Gen 6:22}
கர்த்தர் நோவாவை<Noah> நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். {Gen 7:1}
பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், {Gen 7:2}
ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். {Gen 7:3}
இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார். {Gen 7:4}
நோவா<Noah> தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். {Gen 7:5}
ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா<Noah> அறுநூறு வயதாயிருந்தான். {Gen 7:6}
ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும்<Noah> அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். {Gen 7:7}
தேவன் நோவாவுக்குக்<Noah> கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், {Gen 7:8}
ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில்<Noah> பேழைக்குட்பட்டன. {Gen 7:9}
ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. {Gen 7:10}
நோவாவுக்கு<Noah> அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. {Gen 7:11}
நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. {Gen 7:12}
அன்றைத்தினமே நோவாவும்<Noah>, நோவாவின்<Noah> குமாரராகிய சேமும்<Shem> காமும்<Ham> யாப்பேத்தும்<Japheth>, அவர்களுடனேகூட நோவாவின்<Noah> மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். {Gen 7:13}
அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன. {Gen 7:14}
இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்சஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாக நோவாவிடத்தில்<Noah> பேழைக்குள் பிரவேசித்தன. {Gen 7:15}
தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார். {Gen 7:16}
ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது. {Gen 7:17}
ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது. {Gen 7:18}
ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. {Gen 7:19}
மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. {Gen 7:20}
அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. {Gen 7:21}
வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. {Gen 7:22}
மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும்<Noah> அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. {Gen 7:23}
ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது. {Gen 7:24}
தேவன் நோவாவையும்<Noah>, அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. {Gen 8:1}
ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. {Gen 8:2}
ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. {Gen 8:3}
ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத்<Ararat> என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. {Gen 8:4}
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. {Gen 8:5}
நாற்பது நாள் சென்றபின், நோவா<Noah> தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, {Gen 8:6}
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. {Gen 8:7}
பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான். {Gen 8:8}
பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான். {Gen 8:9}
பின்னும் ஏழுநாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான். {Gen 8:10}
அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா<Noah> பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான். {Gen 8:11}
பின்னும் ஏழுநாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை. {Gen 8:12}
அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா<Noah> பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது. {Gen 8:13}
இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. {Gen 8:14}
அப்பொழுது தேவன் நோவாவை<Noah> நோக்கி: {Gen 8:15}
நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். {Gen 8:16}
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார். {Gen 8:17}
அப்பொழுது நோவாவும்<Noah>, அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள். {Gen 8:18}
பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன. {Gen 8:19}
அப்பொழுது நோவா<Noah> கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். {Gen 8:20}
சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. {Gen 8:21}
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். {Gen 8:22}
பின்பு தேவன் நோவாவையும்<Noah>, அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். {Gen 9:1}
உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. {Gen 9:2}
நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். {Gen 9:3}
மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். {Gen 9:4}
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். {Gen 9:5}
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. {Gen 9:6}
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார். {Gen 9:7}
பின்னும் தேவன் நோவாவையும்<Noah>, அவன் குமாரரையும் நோக்கி: {Gen 9:8}
நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், {Gen 9:9}
உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். {Gen 9:10}
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். {Gen 9:11}
அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: {Gen 9:12}
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். {Gen 9:13}
நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். {Gen 9:14}
அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். {Gen 9:15}
அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன். {Gen 9:16}
இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே<Noah> சொன்னார். {Gen 9:17}
பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின்<Noah> குமாரர், சேம்<Shem> காம்<Ham> யாப்பேத்<Japheth> என்பவர்களே. காம்<Ham> கானானுக்குத்<Canaan> தகப்பன். {Gen 9:18}
இம்மூவரும் நோவாவின்<Noah> குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள். {Gen 9:19}
நோவா<Noah> பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். {Gen 9:20}
அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். {Gen 9:21}
அப்பொழுது கானானுக்குத்<Canaan> தகப்பனாகிய காம்<Ham> தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். {Gen 9:22}
அப்பொழுது சேமும்<Shem> யாப்பேத்தும்<Japheth> ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. {Gen 9:23}
நோவா<Noah> திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: {Gen 9:24}
கானான்<Canaan> சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். {Gen 9:25}
சேமுடைய<Shem> தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான்<Canaan> அவனுக்கு அடிமையாயிருப்பான். {Gen 9:26}
யாப்பேத்தை<Japheth> தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய<Shem> கூடாரங்களில் குடியிருப்பான்; கானான்<Canaan> அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். {Gen 9:27}
ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா<Noah> முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான். {Gen 9:28}
நோவாவின்<Noah> நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான். {Gen 9:29}
நோவாவின்<Noah> குமாரராகிய சேம்<Shem> காம்<Ham> யாப்பேத்<Japheth> என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். {Gen 10:1}
யாப்பேத்தின்<Japheth> குமாரர், கோமர்<Gomer>, மாகோகு<Magog>, மாதாய்<Madai>, யாவான்<Javan>, தூபால்<Tubal>, மேசேக்கு<Meshech>, தீராஸ்<Tiras> என்பவர்கள். {Gen 10:2}
கோமரின்<Gomer> குமாரர், அஸ்கினாஸ்<Ashkenaz>, ரீப்பாத்து<Riphath>, தொகர்மா<Togarmah> என்பவர்கள். {Gen 10:3}
யாவானின்<Javan> குமாரர், எலீசா<Elishah>, தர்ஷீஸ்<Tarshish>, கித்தீம்<Kittim>, தொதானீம்<Dodanim> என்பவர்கள். {Gen 10:4}
இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன. {Gen 10:5}
காமுடைய<Ham> குமாரர், கூஷ்<Cush>, மிஸ்ராயீம்<Mizraim>, பூத்<Phut>, கானான்<Canaan> என்பவர்கள். {Gen 10:6}
கூஷுடைய<Cush> குமாரர், சேபா<Seba>, ஆவிலா<Havilah>, சப்தா<Sabtah>, ராமா<Raamah>, சப்திகா<Sabtecha> என்பவர்கள். ராமாவின்<Raamah> குமாரர், சேபா<Sheba>, திதான்<Dedan> என்பவர்கள். {Gen 10:7}
கூஷ்<Cush> நிம்ரோதைப்<Nimrod> பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். {Gen 10:8}
இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல<Nimrod> என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. {Gen 10:9}
சிநெயார்<Shinar> தேசத்திலுள்ள பாபேல்<Babel>, ஏரேக்<Erech>, அக்காத்<Accad>, கல்னே<Calneh> என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள். {Gen 10:10}
அந்தத் தேசத்திலிருந்து அசூர்<Asshur> புறப்பட்டுப்போய், நினிவேயையும்<Nineveh>, ரெகொபோத்<Rehoboth> பட்டணத்தையும், காலாகையும்<Calah>, {Gen 10:11}
நினிவேக்கும்<Nineveh> காலாகுக்கும்<Calah> நடுவாக ரெசேனையும்<Resen> கட்டினான்; இது பெரிய பட்டணம். {Gen 10:12}
மிஸ்ராயீம்<Mizraim>, லூதீமையும்<Ludim>, அனாமீமையும்<Anamim>, லெகாபீமையும்<Lehabim>, நப்தூகீமையும்<Naphtuhim>, {Gen 10:13}
பத்ருசீமையும்<Pathrusim>, பெலிஸ்தரின்<Philistim> சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும்<Casluhim>, கப்தொரீமையும்<Caphtorim> பெற்றான். {Gen 10:14}
கானான்<Canaan> தன் மூத்தமகனாகிய சீதோனையும்<Sidon>, கேத்தையும்<Heth>, {Gen 10:15}
எபூசியரையும்<Jebusite>, எமோரியரையும்<Amorite>, கிர்காசியரையும்<Girgasite>, {Gen 10:16}
ஈவியரையும்<Hivite>, அர்கீரியரையும்<Arkite>, சீநியரையும்<Sinite>, {Gen 10:17}
அர்வாதியரையும்<Arvadite>, செமாரியரையும்<Zemarite>, காமாத்தியரையும்<Hamathite> பெற்றான்; பின்பு கானானியரின்<Canaanites> வம்சத்தார் எங்கும் பரவினார்கள். {Gen 10:18}
கானானியரின்<Canaanites> எல்லை, சீதோன்முதல்<Sidon> கேரார்<Gerar> வழியாய்க் காசாமட்டுக்கும்<Gaza>, அது முதல் சோதோம்<Sodom>, கொமோரா<Gomorrah>, அத்மா<Admah>, செபோயிம்<Zeboim> வழியாய் லாசாமட்டுக்கும்<Lasha> இருந்தது. {Gen 10:19}
இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய<Ham> சந்ததியார். {Gen 10:20}
சேமுக்கும்<Shem> பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய<Eber> சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத்<Japheth> தம்பியுமாய் இருந்தான். {Gen 10:21}
சேமுடைய<Shem> குமாரர், ஏலாம்<Elam>, அசூர்<Asshur>, அர்பக்சாத்<Arphaxad>, லூத்<Lud>, ஆராம்<Aram> என்பவர்கள். {Gen 10:22}
ஆராமுடைய<Aram> குமாரர், ஊத்ஸ்<Uz>, கூல்<Hul>, கேத்தெர்<Gether>, மாஸ்<Mash> என்பவர்கள். {Gen 10:23}
அர்பக்சாத்<Arphaxad> சாலாவைப்<Salah> பெற்றான்; சாலா<Salah> ஏபேரைப்<Eber> பெற்றான். {Gen 10:24}
ஏபேருக்கு<Eber> இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு<Peleg> என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்<Joktan>. {Gen 10:25}
யொக்தான்<Joktan> அல்மோதாதையும்<Almodad>, சாலேப்பையும்<Sheleph>, அசர்மாவேத்தையும்<Hazarmaveth>, யேராகையும்<Jerah>, {Gen 10:26}
அதோராமையும்<Hadoram>, ஊசாலையும்<Uzal>, திக்லாவையும்<Diklah>, {Gen 10:27}
ஓபாலையும்<Obal>, அபிமாவேலையும்<Abimael>, சேபாவையும்<Sheba>, {Gen 10:28}
ஒப்பீரையும்<Ophir>, ஆவிலாவையும்<Havilah>, யோபாபையும்<Jobab> பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய<Joktan> குமாரர். {Gen 10:29}
இவர்களுடைய குடியிருப்பு மேசா<Mesha> துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப்<Sephar> போகிற வழிமட்டும் இருந்தது. {Gen 10:30}
இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய<Shem> சந்ததியார். {Gen 10:31}
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய<Noah> குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன. {Gen 10:32}
பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. {Gen 11:1}
ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார்<Shinar> தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். {Gen 11:2}
அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. {Gen 11:3}
பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். {Gen 11:4}
மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். {Gen 11:5}
அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். {Gen 11:6}
நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். {Gen 11:7}
அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். {Gen 11:8}
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல்<Babel> என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். {Gen 11:9}
சேமுடைய<Shem> வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம்<Shem> நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப்<Arphaxad> பெற்றான். {Gen 11:10}
சேம்<Shem> அர்பக்சாத்தைப்<Arphaxad> பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:11}
அர்பக்சாத்<Arphaxad> முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப்<Salah> பெற்றான். {Gen 11:12}
சாலாவைப்<Salah> பெற்றபின் அர்பக்சாத்<Arphaxad> நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:13}
சாலா<Salah> முப்பது வயதானபோது, ஏபேரைப்<Eber> பெற்றான். {Gen 11:14}
ஏபேரைப்<Eber> பெற்றபின் சாலா<Salah> நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:15}
ஏபேர்<Eber> முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப்<Peleg> பெற்றான். {Gen 11:16}
பேலேகைப்<Peleg> பெற்றபின் ஏபேர்<Eber> நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:17}
பேலேகு<Peleg> முப்பது வயதானபோது, ரெகூவைப்<Reu> பெற்றான். {Gen 11:18}
ரெகூவைப்<Reu> பெற்றபின் பேலேகு<Peleg> இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:19}
ரெகூ<Reu> முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப்<Serug> பெற்றான். {Gen 11:20}
செரூகைப்<Serug> பெற்றபின் ரெகூ<Reu> இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:21}
செரூகு<Serug> முப்பது வயதானபோது, நாகோரைப்<Nahor> பெற்றான். {Gen 11:22}
நாகோரைப்<Nahor> பெற்றபின் செரூகு<Serug> இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:23}
நாகோர்<Nahor> இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப்<Terah> பெற்றான். {Gen 11:24}
தேராகைப்<Terah> பெற்றபின் நாகோர்<Nahor> நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். {Gen 11:25}
தேராகு<Terah> எழுபது வயதானபோது, ஆபிராம்<Abram>, நாகோர்<Nahor>, ஆரான்<Haran> என்பவர்களைப் பெற்றான். {Gen 11:26}
தேராகுடைய<Terah> வம்சவரலாறு: தேராகு<Terah> ஆபிராம்<Abram>, நாகோர்<Nahor>, ஆரான்<Haran> என்பவர்களைப் பெற்றான்; ஆரான்<Haran> லோத்தைப்<Lot> பெற்றான். {Gen 11:27}
ஆரான்<Haran> தன் ஜந்மபூமியாகிய ஊர்<Ur> என்கிற கல்தேயர்<Chaldees> தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு<Terah> மரிக்குமுன்னே மரித்தான். {Gen 11:28}
ஆபிராமும்<Abram> நாகோரும்<Nahor> தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய<Abram> மனைவிக்குச் சாராய்<Sarai> என்று பேர்; நாகோருடைய<Nahor> மனைவிக்கு மில்க்காள்<Milcah> என்று பேர்; இவள் ஆரானுடைய<Haran> குமாரத்தி; அந்த ஆரான்<Haran> மில்க்காளுக்கும்<Milcah> இஸ்காளுக்கும்<Iscah> தகப்பன். {Gen 11:29}
சாராய்க்குப்<Sarai> பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். {Gen 11:30}
தேராகு<Terah> தன் குமாரனாகிய ஆபிராமையும்<Abram>, ஆரானுடைய<Haran> குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும்<Lot>, தன் குமாரன் ஆபிராமுடைய<Abram> மனைவியாகிய தன் மருமகள் சாராயையும்<Sarai> அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர்<Ur> என்கிற கல்தேயருடைய<Chaldees> பட்டணத்தைவிட்டு, கானான்<Canaan> தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும்<Haran> வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். {Gen 11:31}
தேராகுடைய<Terah> ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு<Terah> ஆரானிலே<Haran> மரித்தான். {Gen 11:32}
கர்த்தர் ஆபிராமை<Abram> நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. {Gen 12:1}
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். {Gen 12:2}
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். {Gen 12:3}
கர்த்தர் ஆபிராமுக்குச்<Abram> சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும்<Lot> அவனோடேகூடப் போனான். ஆபிராம்<Abram> ஆரானைவிட்டுப்<Haran> புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். {Gen 12:4}
ஆபிராம்<Abram> தன் மனைவியாகிய சாராயையும்<Sarai>, தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும்<Lot>, தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே<Haran> சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான்<Canaan> தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான்<Canaan> தேசத்தில் சேர்ந்தார்கள். {Gen 12:5}
ஆபிராம்<Abram> அந்தத் தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம்<Sichem> என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே<Moreh> என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர்<Canaanite> அத்தேசத்தில் இருந்தார்கள். {Gen 12:6}
கர்த்தர் ஆபிராமுக்குத்<Abram> தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். {Gen 12:7}
பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக்<Bethel> கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல்<Bethel> தனக்கு மேற்காகவும் ஆயீ<Hai> கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். {Gen 12:8}
அதின்பின் ஆபிராம்<Abram> புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டுபோனான். {Gen 12:9}
அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம்<Abram> எகிப்து<Egypt> தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். {Gen 12:10}
அவன் எகிப்துக்குச்<Egypt> சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப்<Sarai> பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். {Gen 12:11}
எகிப்தியர்<Egyptians> உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். {Gen 12:12}
ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான். {Gen 12:13}
ஆபிராம்<Abram> எகிப்திலே<Egypt> வந்தபோது, எகிப்தியர்<Egyptians> அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். {Gen 12:14}
பார்வோனுடைய<Pharaoh> பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு<Pharaoh> முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய<Pharaoh> அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். {Gen 12:15}
அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத்<Abram> தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது. {Gen 12:16}
ஆபிராமுடைய<Abram> மனைவியாகிய சாராயின்<Sarai> நிமித்தம் கர்த்தர் பார்வோனையும்<Pharaoh>, அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். {Gen 12:17}
அப்பொழுது பார்வோன்<Pharaoh> ஆபிராமை<Abram> அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? {Gen 12:18}
இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான். {Gen 12:19}
பார்வோன்<Pharaoh> அவனைக் குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள். {Gen 12:20}
ஆபிராமும்<Abram>, அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும்<Lot>, எகிப்தை<Egypt> விட்டு, தென்திசையில் வந்தார்கள். {Gen 13:1}
ஆபிராம்<Abram> மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். {Gen 13:2}
அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும்<Bethel>, பெத்தேலுக்கும்<Bethel> ஆயீக்கும்<Hai> நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், {Gen 13:3}
தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம்<Abram> கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். {Gen 13:4}
ஆபிராமுடனே<Abram> வந்த லோத்துக்கும்<Lot> ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. {Gen 13:5}
அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. {Gen 13:6}
ஆபிராமுடைய<Abram> மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய<Lot> மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும்<Canaanite> பெரிசியரும்<Perizzite> அத்தேசத்தில் குடியிருந்தார்கள். {Gen 13:7}
ஆபிராம்<Abram> லோத்தை<Lot> நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். {Gen 13:8}
இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். {Gen 13:9}
அப்பொழுது லோத்து<Lot> தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான்<Jordan> நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும்<Sodom> கொமோராவையும்<Gomorrah> அழிக்கும்முன்னே, சோவாருக்குப்<Zoar> போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து<Egypt> தேசத்தைப்போலவும் இருந்தது. {Gen 13:10}
அப்பொழுது லோத்து<Lot> யோர்தானுக்கு<Jordan> அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். {Gen 13:11}
ஆபிராம்<Abram> கானான்<Canaan> தேசத்தில் குடியிருந்தான்; லோத்து<Lot> அந்த யோர்தானுக்கு<Jordan> அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு<Sodom> நேரே கூடாரம் போட்டான். {Gen 13:12}
சோதோமின்<Sodom> ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். {Gen 13:13}
லோத்து<Lot> ஆபிராமைவிட்டுப்<Abram> பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை<Abram> நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். {Gen 13:14}
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, {Gen 13:15}
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். {Gen 13:16}
நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார். {Gen 13:17}
அப்பொழுது ஆபிராம்<Abram> கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும்<Hebron> மம்ரேயின்<Mamre> சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். {Gen 13:18}
சிநெயாரின்<Shinar> ராஜாவாகிய அம்ராப்பேலும்<Amraphel>, ஏலாசாரின்<Ellasar> ராஜாவாகிய அரியோகும்<Arioch>, ஏலாமின்<Elam> ராஜாவாகிய கெதர்லாகோமேரும்<Chedorlaomer>, ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும்<Tidal> இருந்த நாட்களில்; {Gen 14:1}
அவர்கள் சோதோமின்<Sodom> ராஜாவாகிய பேராவோடும்<Bera>, கொமோராவின்<Gomorrah> ராஜாவாகிய பிர்சாவோடும்<Birsha>, அத்மாவின்<Admah> ராஜாவாகிய சிநெயாவோடும்<Shinab>, செபோயீமின்<Zeboiim> ராஜாவாகிய செமேபரோடும்<Shemeber>, சோவார்<Zoar> என்னும் பேலாவின்<Bela> ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள். {Gen 14:2}
இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய<salt sea> சித்தீம்<Siddim> பள்ளத்தாக்கிலே கூடினார்கள். {Gen 14:3}
இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச்<Chedorlaomer> சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள். {Gen 14:4}
பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும்<Chedorlaomer>, அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே<Ashteroth Karnaim> இருந்த ரெப்பாயீமியரையும்<Rephaims>, காமிலே<Ham> இருந்த சூசிமியரையும்<Zuzims>, சாவேகீரியத்தாயீமிலே<Shaveh Kiriathaim> இருந்த ஏமியரையும்<Emims>, {Gen 14:5}
சேயீர்<Seir> மலைகளில் இருந்த ஓரியரையும்<Horites>, வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும்<Elparan> முறியடித்து, {Gen 14:6}
திரும்பிக் காதேஸ்<Kadesh> என்னும் என்மிஸ்பாத்துக்கு<Enmishpat> வந்து, அமலேக்கியருடைய<Amalekites> நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே<Hazezontamar> குடியிருந்த எமோரியரையும்கூடச்<Amorites> சங்கரித்தார்கள். {Gen 14:7}
அப்பொழுது சோதோமின்<Sodom> ராஜாவும், கொமோராவின்<Gomorrah> ராஜாவும், அத்மாவின்<Admah> ராஜாவும், செபோயீமின்<Zeboiim> ராஜாவும், சோவார்<Zoar> என்னும் பேலாவின்<Bela> ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம்<Siddim> பள்ளத்தாக்கிலே, {Gen 14:8}
ஏலாமின்<Elam> ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும்<Chedorlaomer>, ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும்<Tidal>, சிநெயாரின்<Shinar> ராஜாவாகிய அம்ராப்பேலோடும்<Amraphel>, ஏலாசாரின்<Ellasar> ராஜாவாகிய அரியோகோடும்<Arioch> யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள். {Gen 14:9}
அந்தச் சித்தீம்<Siddim> பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம்<Sodom> கொமோராவின்<Gomorrah> ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். {Gen 14:10}
அப்பொழுது அவர்கள் சோதோமிலும்<Sodom> கொமோராவிலுமுள்ள<Gomorrah> பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். {Gen 14:11}
ஆபிராமின்<Abram> சகோதரனுடைய குமாரனாகிய லோத்து<Lot> சோதோமிலே<Sodom> குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள். {Gen 14:12}
தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய<Hebrew> ஆபிராமிடத்தில்<Abram> வந்து அதை அறிவித்தான்; ஆபிராம்<Abram> தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும்<Eshcol> ஆநேருக்கும்<Aner> சகோதரனாகிய மம்ரே<Mamre> என்னும் எமோரியனுடைய<Amorite> சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான். {Gen 14:13}
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம்<Abram> கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண்<Dan> என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து, {Gen 14:14}
இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு<Damascus> இடதுபுறமான ஓபாமட்டும்<Hobah> துரத்தி, {Gen 14:15}
சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும்<Lot>, அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். {Gen 14:16}
அவன் கெதர்லாகோமேரையும்<Chedorlaomer>, அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின்<Sodom> ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே<Shaveh> பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். {Gen 14:17}
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின்<Salem> ராஜாவாகிய மெல்கிசேதேக்கு<Melchizedek> அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, {Gen 14:18}
அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு<Abram> உண்டாவதாக. {Gen 14:19}
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம்<Abram> எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். {Gen 14:20}
சோதோமின்<Sodom> ராஜா ஆபிராமை<Abram> நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். {Gen 14:21}
அதற்கு, ஆபிராம்<Abram> சோதோமின்<Sodom> ராஜாவைப் பார்த்து: ஆபிராமை<Abram> ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, {Gen 14:22}
வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். {Gen 14:23}
வாலிபர் சாப்பிட்டதுபோக, என்னுடனே வந்த ஆநேர்<Aner>, எஸ்கோல்<Eshcol>, மம்ரே<Mamre> என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான். {Gen 14:24}
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத்<Abram> தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே<Abram>, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். {Gen 15:1}
அதற்கு ஆபிராம்<Abram>: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு<Damascus> ஊரானாகிய இந்த எலியேசர்<Eliezer> என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். {Gen 15:2}
பின்னும் ஆபிராம்<Abram>: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். {Gen 15:3}
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, {Gen 15:4}
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். {Gen 15:5}
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். {Gen 15:6}
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர்<Ur> என்கிற கல்தேயருடைய<Chaldees> பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். {Gen 15:7}
அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். {Gen 15:8}
அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார். {Gen 15:9}
அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை. {Gen 15:10}
பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம்<Abram> துரத்தினான். {Gen 15:11}
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு<Abram> அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. {Gen 15:12}
அப்பொழுது அவர் ஆபிராமை<Abram> நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். {Gen 15:13}
இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். {Gen 15:14}
நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். {Gen 15:15}
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய<Amorites> அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். {Gen 15:16}
சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின. {Gen 15:17}
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே<Abram> உடன்படிக்கைபண்ணி, எகிப்தின்<Egypt> நதிதுவக்கி ஐபிராத்து<Euphrates> நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், {Gen 15:18}
கேனியரும்<Kenites>, கெனிசியரும்<Kenizzites>, கத்மோனியரும்<Kadmonites>, {Gen 15:19}
ஏத்தியரும்<Hittites>, பெரிசியரும்<Perizzites>, ரெப்பாயீமியரும்<Rephaims>, {Gen 15:20}
எமோரியரும்<Amorites>, கானானியரும்<Canaanites>, கிர்காசியரும்<Girgashites>, எபூசியரும்<Jebusites> என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார். {Gen 15:21}
ஆபிராமுடைய<Abram> மனைவியாகிய சாராய்க்குப்<Sarai> பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து<Egyptian> தேசத்தாளாகிய ஆகார்<Hagar> என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். {Gen 16:1}
சாராய்<Sarai> ஆபிராமை<Abram> நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின்<Sarai> வார்த்தைக்கு ஆபிராம்<Abram> செவிகொடுத்தான். {Gen 16:2}
ஆபிராம்<Abram> கானான்தேசத்தில்<Canaan> பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின்<Abram> மனைவியாகிய சாராய்<Sarai> எகிப்து<Egyptian> தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை<Hagar> அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு<Abram> மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். {Gen 16:3}
அவன் ஆகாரோடே<Hagar> சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். {Gen 16:4}
அப்பொழுது சாராய்<Sarai> ஆபிராமை<Abram> நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள். {Gen 16:5}
அதற்கு ஆபிராம்<Abram> சாராயை<Sarai> நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய்<Sarai> அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள். {Gen 16:6}
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற<Shur> வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: {Gen 16:7}
சாராயின்<Sarai> அடிமைப்பெண்ணாகிய ஆகாரே<Hagar>, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு<Sarai> ஓடிப்போகிறேன் என்றாள். {Gen 16:8}
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். {Gen 16:9}
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார். {Gen 16:10}
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல்<Ishmael> என்று பேரிடுவாயாக. {Gen 16:11}
அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். {Gen 16:12}
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். {Gen 16:13}
ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ<Beerlahairoi> என்னப்பட்டது; அது காதேசுக்கும்<Kadesh> பாரேத்துக்கும்<Bered> நடுவே இருக்கிறது. {Gen 16:14}
ஆகார்<Hagar> ஆபிராமுக்கு<Abram> ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம்<Abram> ஆகார்<Hagar> பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல்<Ishmael> என்று பேரிட்டான். {Gen 16:15}
ஆகார்<Hagar> ஆபிராமுக்கு<Abram> இஸ்மவேலைப்<Ishmael> பெற்றபோது, ஆபிராம்<Abram> எண்பத்தாறு வயதாயிருந்தான். {Gen 16:16}
ஆபிராம்<Abram> தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத்<Abram> தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. {Gen 17:1}
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். {Gen 17:2}
அப்பொழுது ஆபிராம்<Abram> முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: {Gen 17:3}
நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். {Gen 17:4}
இனி உன் பேர் ஆபிராம்<Abram> என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம்<Abraham> என்னப்படும். {Gen 17:5}
உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். {Gen 17:6}
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். {Gen 17:7}
நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான்<Canaan> தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். {Gen 17:8}
பின்னும் தேவன் ஆபிரகாமை<Abraham> நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். {Gen 17:9}
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; {Gen 17:10}
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். {Gen 17:11}
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். {Gen 17:12}
உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. {Gen 17:13}
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். {Gen 17:14}
பின்னும் தேவன் ஆபிரகாமை<Abraham> நோக்கி: உன் மனைவி சாராயை<Sarai> இனி சாராய்<Sarai> என்று அழையாதிருப்பாயாக; சாராள்<Sarah> என்பது அவளுக்குப் பேராயிருக்கும். {Gen 17:15}
நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். {Gen 17:16}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள்<Sarah> பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, {Gen 17:17}
இஸ்மவேல்<Ishmael> உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம்<Abraham> தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான். {Gen 17:18}
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள்<Sarah> நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு<Isaac> என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். {Gen 17:19}
இஸ்மவேலுக்காகவும்<Ishmael> நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். {Gen 17:20}
வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள்<Sarah> உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே<Isaac> நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். {Gen 17:21}
தேவன் ஆபிரகாமோடே<Abraham> பேசி முடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார். {Gen 17:22}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> தன் குமாரனாகிய இஸ்மவேலையும்<Ishmael>, தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான். {Gen 17:23}
ஆபிரகாமுடைய<Abraham> நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான். {Gen 17:24}
அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய<Ishmael> நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான். {Gen 17:25}
ஒரேநாளில் ஆபிரகாமும்<Abraham> அவன் குமாரன் இஸ்மவேலும்<Ishmael> விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். {Gen 17:26}
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள். {Gen 17:27}
பின்பு கர்த்தர் மம்ரேயின்<Mamre> சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, {Gen 18:1}
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து: {Gen 18:2}
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். {Gen 18:3}
கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். {Gen 18:4}
நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். {Gen 18:5}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப்<Sarah> போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். {Gen 18:6}
ஆபிரகாம்<Abraham> மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். {Gen 18:7}
ஆபிரகாம்<Abraham> வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்துவந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். {Gen 18:8}
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள்<Sarah> எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். {Gen 18:9}
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு<Sarah> ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள்<Sarah> அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். {Gen 18:10}
ஆபிரகாமும்<Abraham> சாராளும்<Sarah> வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு<Sarah> நின்றுபோயிற்று. {Gen 18:11}
ஆகையால், சாராள்<Sarah> தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். {Gen 18:12}
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை<Abraham> நோக்கி: சாராள்<Sarah> நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? {Gen 18:13}
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு<Sarah> ஒரு குமாரன் இருப்பான் என்றார். {Gen 18:14}
சாராள்<Sarah> பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். {Gen 18:15}
பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை<Sodom> நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும்<Abraham> அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். {Gen 18:16}
அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம்<Abraham> பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், {Gen 18:17}
நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு<Abraham> மறைப்பேனோ? {Gen 18:18}
கர்த்தர் ஆபிரகாமுக்குச்<Abraham> சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். {Gen 18:19}
பின்பு கர்த்தர் சோதோம்<Sodom> கொமோராவின்<Gomorrah> கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், {Gen 18:20}
நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். {Gen 18:21}
அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை<Sodom> நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ<Abraham> பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். {Gen 18:22}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? {Gen 18:23}
பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? {Gen 18:24}
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். {Gen 18:25}
அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில்<Sodom> ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். {Gen 18:26}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். {Gen 18:27}
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். {Gen 18:28}
அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். {Gen 18:29}
அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். {Gen 18:30}
அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். {Gen 18:31}
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். {Gen 18:32}
கர்த்தர் ஆபிரகாமோடே<Abraham> பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும்<Abraham> தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான். {Gen 18:33}
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு<Sodom> வந்தார்கள்; லோத்து<Lot> சோதோமின்<Sodom> வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து<Lot> எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: {Gen 19:1}
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். {Gen 19:2}
அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். {Gen 19:3}
அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம்<Sodom> பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, {Gen 19:4}
லோத்தைக்<Lot> கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள். {Gen 19:5}
அப்பொழுது லோத்து<Lot> வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: {Gen 19:6}
சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். {Gen 19:7}
இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். {Gen 19:8}
அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து<Lot> என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். {Gen 19:9}
அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத்<Lot> தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி, {Gen 19:10}
தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள். {Gen 19:11}
பின்பு அந்தப் புருஷர் லோத்தை<Lot> நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ. {Gen 19:12}
நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். {Gen 19:13}
அப்பொழுது லோத்து<Lot> புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. {Gen 19:14}
கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை<Lot> நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். {Gen 19:15}
அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். {Gen 19:16}
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். {Gen 19:17}
அதற்கு லோத்து<Lot>: அப்படியல்ல ஆண்டவரே, {Gen 19:18}
உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன். {Gen 19:19}
அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். {Gen 19:20}
அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன். {Gen 19:21}
தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக் கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார்<Zoar> என்னப்பட்டது. {Gen 19:22}
லோத்து<Lot> சோவாருக்குள்<Zoar> வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. {Gen 19:23}
அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும்<Sodom> கொமோராவின்மேலும்<Gomorrah>, கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, {Gen 19:24}
அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். {Gen 19:25}
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். {Gen 19:26}
விடியற்காலத்தில் ஆபிரகாம்<Abraham> எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், {Gen 19:27}
சோதோம்<Sodom> கொமோரா<Gomorrah> பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. {Gen 19:28}
தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை<Abraham> நினைத்து, லோத்து<Lot> குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை<Lot> அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார். {Gen 19:29}
பின்பு லோத்து<Lot> சோவாரிலே<Zoar> குடியிருக்கப் பயந்து, சோவாரை<Zoar> விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். {Gen 19:30}
அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. {Gen 19:31}
நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். {Gen 19:32}
அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். {Gen 19:33}
மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். {Gen 19:34}
அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். {Gen 19:35}
இவ்விதமாய் லோத்தின்<Lot> குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். {Gen 19:36}
மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப்<Moab> என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத்<Moabites> தகப்பன். {Gen 19:37}
இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி<Benammi> என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன்<Ammon> புத்திரருக்குத் தகப்பன். {Gen 19:38}
ஆபிரகாம்<Abraham> அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும்<Kadesh> சூருக்கும்<Shur> நடுவாகக் குடியேறி, கேராரிலே<Gerar> தங்கினான். {Gen 20:1}
அங்கே ஆபிரகாம்<Abraham> தன் மனைவியாகிய சாராளைத்<Sarah> தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின்<Gerar> ராஜாவாகிய அபிமெலேக்கு<Abimelech> ஆள் அனுப்பிச் சாராளை<Sarah> அழைப்பித்தான். {Gen 20:2}
தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச்<Abimelech> சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். {Gen 20:3}
அபிமெலேக்கு<Abimelech> அவளைச் சேராதிருந்தான்<Abimelech>. ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? {Gen 20:4}
இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். {Gen 20:5}
அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. {Gen 20:6}
அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். {Gen 20:7}
அபிமெலேக்கு<Abimelech> அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள். {Gen 20:8}
அப்பொழுது அபிமெலேக்கு<Abimelech> ஆபிரகாமை<Abraham> அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான். {Gen 20:9}
பின்னும் அபிமெலேக்கு<Abimelech> ஆபிரகாமை<Abraham> நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான். {Gen 20:10}
அதற்கு ஆபிரகாம்<Abraham>: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன். {Gen 20:11}
அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள். {Gen 20:12}
என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான். {Gen 20:13}
அப்பொழுது அபிமெலேக்கு<Abimelech> ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக்<Abraham> கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும்<Sarah> அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். {Gen 20:14}
பின்னும் அபிமெலேக்கு<Abimelech>: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான். {Gen 20:15}
பின்பு சாராளை<Sarah> நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள். {Gen 20:16}
ஆபிரகாமுடைய<Abraham> மனைவியாகிய சாராளினிமித்தம்<Sarah> கர்த்தர் அபிமெலேக்குடைய<Abimelech> வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், {Gen 20:17}
ஆபிரகாம்<Abraham> தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும்<Abimelech>, அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார். {Gen 20:18}
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில்<Sarah> கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச்<Sarah> செய்தருளினார். {Gen 21:1}
ஆபிரகாம்<Abraham> முதிர்வயதாயிருக்கையில், சாராள்<Sarah> கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். {Gen 21:2}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> தனக்குச் சாராள்<Sarah> பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு<Isaac> என்று பேரிட்டான். {Gen 21:3}
தன் குமாரனாகிய ஈசாக்கு<Isaac> பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம்<Abraham> தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். {Gen 21:4}
தன் குமாரனாகிய ஈசாக்கு<Isaac> பிறந்தபோது ஆபிரகாம்<Abraham> நூறு வயதாயிருந்தான். {Gen 21:5}
அப்பொழுது சாராள்<Sarah>: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள். {Gen 21:6}
சாராள்<Sarah> பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு<Abraham> எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள். {Gen 21:7}
பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு<Isaac> பால் மறந்தநாளிலே ஆபிரகாம்<Abraham> பெரிய விருந்துபண்ணினான். {Gen 21:8}
பின்பு எகிப்துதேசத்தாளாகிய<Egyptian> ஆகார்<Hagar> ஆபிரகாமுக்குப்<Abraham> பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள்<Sarah> கண்டு, {Gen 21:9}
ஆபிரகாமை<Abraham> நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே<Isaac> சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். {Gen 21:10}
தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு<Abraham> மிகவும் துக்கமாயிருந்தது. {Gen 21:11}
அப்பொழுது தேவன் ஆபிரகாமை<Abraham> நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில்<Isaac> உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள்<Sarah> உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். {Gen 21:12}
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். {Gen 21:13}
ஆபிரகாம்<Abraham> அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய<Hagar> தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின்<Beersheba> வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். {Gen 21:14}
துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, {Gen 21:15}
பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். {Gen 21:16}
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக்<Hagar> கூப்பிட்டு: ஆகாரே<Hagar>, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். {Gen 21:17}
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். {Gen 21:18}
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். {Gen 21:19}
தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான். {Gen 21:20}
அவன் பாரான்<Paran> வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து<Egypt> தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள். {Gen 21:21}
அக்காலத்தில் அபிமெலேக்கும்<Abimelech> அவன் சேனாபதியாகிய பிகோலும்<Phichol> ஆபிரகாமை<Abraham> நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். {Gen 21:22}
ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவுசெய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான். {Gen 21:23}
அதற்கு ஆபிரகாம்<Abraham>: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான். {Gen 21:24}
ஆனாலும், அபிமெலேக்குடைய<Abimelech> வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம்<Abraham> அபிமெலேக்கைக்<Abimelech> கடிந்துகொண்டான். {Gen 21:25}
அதற்கு அபிமெலேக்கு<Abimelech>: இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான். {Gen 21:26}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக்<Abimelech> கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். {Gen 21:27}
ஆபிரகாம்<Abraham> ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான். {Gen 21:28}
அப்பொழுது அபிமெலேக்கு<Abimelech> ஆபிரகாமை<Abraham> நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான். {Gen 21:29}
அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். {Gen 21:30}
அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா<Beersheba> என்னப்பட்டது. {Gen 21:31}
அவர்கள் பெயெர்செபாவிலே<Beersheba> உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும்<Abimelech>, அவன் சேனாபதியாகிய பிகோலும்<Phichol> எழுந்து பெலிஸ்தருடைய<Philistines> தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். {Gen 21:32}
ஆபிரகாம்<Abraham> பெயெர்செபாவிலே<Beersheba> ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். {Gen 21:33}
ஆபிரகாம்<Abraham> பெலிஸ்தருடைய<Philistines> தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான். {Gen 21:34}
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச்<Abraham> சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே<Abraham> என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். {Gen 22:1}
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை<Isaac> நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா<Moriah> தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். {Gen 22:2}
ஆபிரகாம்<Abraham> அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும்<Isaac> கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். {Gen 22:3}
மூன்றாம் நாளில் ஆபிரகாம்<Abraham> தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். {Gen 22:4}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். {Gen 22:5}
ஆபிரகாம்<Abraham> தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல்<Isaac> வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள். {Gen 22:6}
அப்பொழுது ஈசாக்கு<Isaac> தன் தகப்பனாகிய ஆபிரகாமை<Abraham> நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். {Gen 22:7}
அதற்கு ஆபிரகாம்<Abraham>: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், {Gen 22:8}
தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம்<Abraham> ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக்<Isaac> கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். {Gen 22:9}
பின்பு ஆபிரகாம்<Abraham> தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். {Gen 22:10}
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே<Abraham>, ஆபிரகாமே<Abraham> என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். {Gen 22:11}
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். {Gen 22:12}
ஆபிரகாம்<Abraham> தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம்<Abraham> போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். {Gen 22:13}
ஆபிரகாம்<Abraham> அந்த இடத்துக்கு யேகோவாயீரே<Jehovahjireh> என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. {Gen 22:14}
கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக்<Abraham> கூப்பிட்டு: {Gen 22:15}
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; {Gen 22:16}
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், {Gen 22:17}
நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். {Gen 22:18}
ஆபிரகாம்<Abraham> தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயெர்செபாவுக்குப்<Beersheba> போனார்கள்; ஆபிரகாம்<Abraham> பெயெர்செபாவிலே<Beersheba> குடியிருந்தான். {Gen 22:19}
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில்<Abraham> வந்து: மில்க்காளும்<Milcah> உன் சகோதரனாகிய நாகோருக்குப்<Nahor> பிள்ளைகளைப் பெற்றாள்; {Gen 22:20}
அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ்<Huz>, அவன் தம்பியாகிய பூஸ்<Buz>, ஆராமுக்குத்<Aram> தகப்பனாகிய கேமுவேல்<Kemuel>, {Gen 22:21}
கேசேத்<Chesed>, ஆசோ<Hazo>, பில்தாஸ்<Pildash>, இத்லாப்<Jidlaph>, பெத்துவேல்<Bethuel> என்பவர்கள்; பெத்துவேல்<Bethuel> ரெபெக்காளைப்<Rebekah> பெற்றான் என்று அறிவித்தான். {Gen 22:22}
அந்த எட்டுப்பேரை மில்க்காள்<Milcah> ஆபிரகாமுடைய<Abraham> சகோதரனாகிய நாகோருக்குப்<Nahor> பெற்றாள். {Gen 22:23}
ரேயுமாள்<Reumah> என்று பேர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா<Tebah>, காகாம்<Gaham>, தாகாஸ்<Thahash>, மாகா<Maachah> என்பவர்களைப் பெற்றாள். {Gen 22:24}
சாராள்<Sarah> நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய<Sarah> வயது. {Gen 23:1}
கானான்<Canaan> தேசத்திலுள்ள எபிரோன்<Hebron> என்னும் கீரியாத்அர்பாவிலே<Kirjatharba> சாராள்<Sarah> மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம்<Abraham> வந்து, சாராளுக்காகப்<Sarah> புலம்பி அழுதான். {Gen 23:2}
பின்பு ஆபிரகாம்<Abraham> பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின்<Heth> புத்திரரோடே பேசி: {Gen 23:3}
நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான். {Gen 23:4}
அதற்கு ஏத்தின்<Heth> புத்திரர் ஆபிரகாமுக்குப்<Abraham> பிரதியுத்தரமாக: {Gen 23:5}
எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள். {Gen 23:6}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> எழுந்திருந்து, ஏத்தின்<Heth> புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து, {Gen 23:7}
அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய<Zohar> குமாரனாகிய எப்பெரோன்<Ephron>, {Gen 23:8}
தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா<Machpelah> என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான். {Gen 23:9}
எப்பெரோன்<Ephron> ஏத்தின்<Heth> புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய<Hittite> எப்பெரோன்<Ephron> தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின்<Heth> புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப்<Abraham> பிரதியுத்தரமாக: {Gen 23:10}
அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான். {Gen 23:11}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து, {Gen 23:12}
தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை<Ephron> நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம்பண்ணுவேன் என்றான். {Gen 23:13}
அதற்கு எப்பெரோன்<Ephron> ஆபிரகாமுக்குப்<Abraham> பிரதியுத்தரமாக: {Gen 23:14}
என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான். {Gen 23:15}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> எப்பெரோனின்<Ephron> சொல்லைக் கேட்டு, ஏத்தின்<Heth> புத்திரருக்கு முன்பாக எப்பெரோன்<Ephron> சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான். {Gen 23:16}
இந்தப்பிரகாரம் மம்ரேக்கு<Mamre> எதிரே மக்பேலாவிலுள்ள<Machpelah> எப்பெரோனுடைய<Ephron> நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும், {Gen 23:17}
அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின்<Heth> புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச்<Abraham> சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது. {Gen 23:18}
அதற்குப்பின் ஆபிரகாம்<Abraham> தன் மனைவியாகிய சாராளைக்<Sarah> கானான்தேசத்தில்<Canaan> எப்பெரோன்<Ephron//Hebron> ஊர் பூமியான மம்ரேக்கு<Mamre> எதிரே இருக்கிற மக்பேலா<Machpelah> என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான். {Gen 23:19}
இப்படி ஏத்தின்<Heth> புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச்<Abraham> சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது. {Gen 23:20}
ஆபிரகாம்<Abraham> வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச்<Abraham> சகல காரியங்களிலும் ஆசீர்வதித்துவந்தார். {Gen 24:1}
அப்பொழுது ஆபிரகாம்<Abraham> தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: {Gen 24:2}
நான் குடியிருக்கிற கானானியருடைய<Canaanites> குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; {Gen 24:3}
நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப்<Isaac> பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான். {Gen 24:4}
அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான். {Gen 24:5}
அதற்கு ஆபிரகாம்<Abraham>: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. {Gen 24:6}
என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார். {Gen 24:7}
பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான். {Gen 24:8}
அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய<Abraham> தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். {Gen 24:9}
பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே<Mesopotamia> நாகோருடைய<Nahor> ஊரில் சேர்ந்து, {Gen 24:10}
ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: {Gen 24:11}
என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு<Abraham> தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத்<Abraham> தயவுசெய்தருளும். {Gen 24:12}
இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. {Gen 24:13}
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு<Isaac> நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான். {Gen 24:14}
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய<Abraham> சகோதரனாகிய நாகோரின்<Nahor> மனைவி மில்க்காளுடைய<Milcah> குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப்<Bethuel> பிறந்த ரெபெக்காள்<Rebekah> குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள். {Gen 24:15}
அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். {Gen 24:16}
அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான். {Gen 24:17}
அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். {Gen 24:18}
கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி; {Gen 24:19}
சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள். {Gen 24:20}
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான். {Gen 24:21}
ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்து, {Gen 24:22}
நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான். {Gen 24:23}
அதற்கு அவள்: நான் நாகோருக்கு<Nahor> மில்க்காள்<Milcah> பெற்ற குமாரனாகிய பெத்துவேலின்<Bethuel> மகள் என்று சொன்னதுமன்றி, {Gen 24:24}
எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள். {Gen 24:25}
அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, {Gen 24:26}
என் எஜமானாகிய ஆபிரகாமின்<Abraham> தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான். {Gen 24:27}
அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள். {Gen 24:28}
ரெபெக்காளுக்கு<Rebekah> ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான்<Laban> என்று பேர்; அந்த லாபான்<Laban> வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான். {Gen 24:29}
அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள்<Rebekah> சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான். {Gen 24:30}
அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான். {Gen 24:31}
அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான்<Laban> ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். {Gen 24:32}
பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான். {Gen 24:33}
அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய<Abraham> ஊழியக்காரன். {Gen 24:34}
கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். {Gen 24:35}
என் எஜமானுடைய மனைவியாகிய சாராள்<Sarah> முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். {Gen 24:36}
என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான்<Canaanites> தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், {Gen 24:37}
நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார். {Gen 24:38}
அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு, {Gen 24:39}
அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய். {Gen 24:40}
நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார். {Gen 24:41}
அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின்<Abraham> தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால், {Gen 24:42}
இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது: {Gen 24:43}
நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன். {Gen 24:44}
நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள்<Rebekah> தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்றேன். {Gen 24:45}
அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள். {Gen 24:46}
அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள்<Milcah> நாகோருக்குப்<Nahor> பெற்ற குமாரனாகிய பெத்துவேலின்<Bethuel> மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு; {Gen 24:47}
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின்<Abraham> தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன். {Gen 24:48}
இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான். {Gen 24:49}
அப்பொழுது லாபானும்<Laban> பெத்துவேலும்<Bethuel> பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. {Gen 24:50}
இதோ, ரெபெக்காள்<Rebekah> உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள். {Gen 24:51}
ஆபிரகாமின்<Abraham> ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைமட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான். {Gen 24:52}
பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக்<Rebekah> கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான். {Gen 24:53}
பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான். {Gen 24:54}
அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள். {Gen 24:55}
அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான். {Gen 24:56}
அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, {Gen 24:57}
ரெபெக்காளை<Rebekah> அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். {Gen 24:58}
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும்<Rebekah>, அவள் தாதியையும், ஆபிரகாமின்<Abraham> ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து, {Gen 24:59}
ரெபெக்காளை<Rebekah> வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். {Gen 24:60}
அப்பொழுது ரெபெக்காளும்<Rebekah> அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை<Rebekah> அழைத்துக்கொண்டுபோனான். {Gen 24:61}
ஈசாக்கு<Isaac> தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ<Lahairoi> என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான். {Gen 24:62}
ஈசாக்கு<Isaac> சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான். {Gen 24:63}
ரெபெக்காளும்<Rebekah> தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக்<Isaac> கண்டபோது, {Gen 24:64}
ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள். {Gen 24:65}
ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு<Isaac> விவரித்துச் சொன்னான். {Gen 24:66}
அப்பொழுது ஈசாக்கு<Isaac> ரெபெக்காளைத்<Rebekah> தன் தாய் சாராளுடைய<Sarah> கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு<Isaac> தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான். {Gen 24:67}
ஆபிரகாம்<Abraham> கேத்தூராள்<Keturah> என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். {Gen 25:1}
அவள் அவனுக்குச் சிம்ரானையும்<Zimran>, யக்ஷானையும்<Jokshan>, மேதானையும்<Medan>, மீதியானையும்<Midian>, இஸ்பாக்கையும்<Ishbak>, சூவாகையும்<Shuah> பெற்றாள். {Gen 25:2}
யக்ஷான்<Jokshan> சேபாவையும்<Sheba>, தேதானையும்<Dedan> பெற்றான்; தேதானுடைய<Dedan> குமாரர் அசூரீம்<Asshurim>, லெத்தூசீம்<Letushim>, லெயூமீம்<Leummim> என்பவர்கள். {Gen 25:3}
மீதியானுடைய<Midian> குமாரர் ஏப்பா<Ephah>, ஏப்பேர்<Epher>, ஆனோக்கு<Hanoch>, அபீதா<Abida>, எல்தாகா<Eldaah> என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின்<Keturah> பிள்ளைகள். {Gen 25:4}
ஆபிரகாம்<Abraham> தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக்<Isaac> கொடுத்தான். {Gen 25:5}
ஆபிரகாமுக்கு<Abraham> இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம்<Abraham> நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக்<Isaac> கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான். {Gen 25:6}
ஆபிரகாம்<Abraham> உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். {Gen 25:7}
பிற்பாடு ஆபிரகாம்<Abraham> நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். {Gen 25:8}
அவன் குமாரராகிய ஈசாக்கும்<Isaac> இஸ்மவேலும்<Ishmael> மம்ரேக்கு<Mamre> எதிரே ஏத்தியனான<Hittite> சோகாரின்<Zohar> குமாரனாகிய எப்பெரோனின்<Ephron> நிலத்திலுள்ள மக்பேலா<Machpelah> என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். {Gen 25:9}
அந்த நிலத்தை ஏத்தின்<Heth> புத்திரர் கையிலே ஆபிரகாம்<Abraham> வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும்<Abraham> அவன் மனைவியாகிய சாராளும்<Sarah> அடக்கம்பண்ணப்பட்டார்கள். {Gen 25:10}
ஆபிரகாம்<Abraham> மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை<Isaac> ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ<Lahairoi> என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு<Isaac> குடியிருந்தான். {Gen 25:11}
சாராளுடைய<Sarah> அடிமைப்பெண்ணாகிய எகிப்து<Egyptian> தேசத்தாளான ஆகார்<Hagar> ஆபிரகாமுக்குப்<Abraham> பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின்<Ishmael> வம்சவரலாறு: {Gen 25:12}
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின்<Ishmael> புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய<Ishmael> மூத்த மகன் நெபாயோத்<Nebajoth>; பின்பு கேதார்<Kedar>, அத்பியேல்<Adbeel>, மிப்சாம்<Mibsam>, {Gen 25:13}
மிஷ்மா<Mishma>, தூமா<Dumah>, மாசா<Massa>, {Gen 25:14}
ஆதார்<Hadar>, தேமா<Tema>, யெத்தூர்<Jetur>, நாபீஸ்<Naphish>, கேத்மா<Kedemah> என்பவைகளே. {Gen 25:15}
தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின்<Ishmael> குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே. {Gen 25:16}
இஸ்மவேலின்<Ishmael> வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். {Gen 25:17}
அவர்கள் ஆவிலா<Havilah> துவக்கி எகிப்துக்கு<Egypt> எதிராக அசீரியாவுக்குப்<Assyria> போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும்<Shur> வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி. {Gen 25:18}
ஆபிரகாமின்<Abraham> குமாரனாகிய ஈசாக்குடைய<Isaac> வம்சவரலாறு; ஆபிரகாம்<Abraham> ஈசாக்கைப்<Isaac> பெற்றான். {Gen 25:19}
ஈசாக்கு<Isaac> ரெபெக்காளை<Rebekah> விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம்<Padanaram> என்னும் சீரியா<Syrian> தேசத்தானாகிய பெத்துவேலுக்குக்<Bethuel> குமாரத்தியும், சீரியா<Syrian> தேசத்தானாகிய லாபானுக்குச்<Laban> சகோதரியுமானவள். {Gen 25:20}
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு<Isaac> கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள்<Rebekah> கர்ப்பந்தரித்தாள். {Gen 25:21}
அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள். {Gen 25:22}
அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். {Gen 25:23}
பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது. {Gen 25:24}
மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன்போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா<Esau> என்று பேரிட்டார்கள். {Gen 25:25}
பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின்<Esau> குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு<Jacob> என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு<Isaac> அறுபது வயதாயிருந்தான். {Gen 25:26}
இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா<Esau> வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு<Jacob> குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான். {Gen 25:27}
ஏசா<Esau> வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய<Isaac> வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல்<Esau> பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ<Rebekah> யாக்கோபின்மேல்<Jacob> பட்சமாயிருந்தாள். {Gen 25:28}
ஒருநாள் ஏசா<Esau> வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு<Jacob> கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். {Gen 25:29}
அப்பொழுது ஏசா<Esau> யாக்கோபை<Jacob> நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம்<Edom> என்கிற பேர் உண்டாயிற்று. {Gen 25:30}
அப்பொழுது யாக்கோபு<Jacob>: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். {Gen 25:31}
அதற்கு ஏசா<Esau>: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். {Gen 25:32}
அப்பொழுது யாக்கோபு<Jacob>: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு<Jacob> ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். {Gen 25:33}
அப்பொழுது யாக்கோபு<Jacob> ஏசாவுக்கு<Esau> அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா<Esau> தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான். {Gen 25:34}
ஆபிரகாமின்<Abraham> நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு<Isaac> பெலிஸ்தருக்கு<Philistines> ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில்<Abimelech> கேராருக்குப்<Gerar> போனான். {Gen 26:1}
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப்<Egypt> போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. {Gen 26:2}
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு<Abraham> நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். {Gen 26:3}
ஆபிரகாம்<Abraham> என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், {Gen 26:4}
நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். {Gen 26:5}
ஈசாக்கு<Isaac> கேராரிலே<Gerar> குடியிருந்தான். {Gen 26:6}
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள்<Rebekah> பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான். {Gen 26:7}
அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு<Philistines> ராஜாவாகிய அபிமெலேக்கு<Abimelech> ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு<Isaac> தன் மனைவியாகிய ரெபெக்காளோடே<Rebekah> விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். {Gen 26:8}
அபிமெலேக்கு<Abimelech> ஈசாக்கை<Isaac> அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு<Isaac>: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான். {Gen 26:9}
அதற்கு அபிமெலேக்கு<Abimelech>: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான். {Gen 26:10}
பின்பு, அபிமெலேக்கு<Abimelech>: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான். {Gen 26:11}
ஈசாக்கு<Isaac> அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; {Gen 26:12}
அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். {Gen 26:13}
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர்<Philistines> அவன் பேரில் பொறாமைகொண்டு, {Gen 26:14}
அவன் தகப்பனாகிய ஆபிரகாமின்<Abraham> நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். {Gen 26:15}
அபிமெலேக்கு<Abimelech> ஈசாக்கை<Isaac> நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப்பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். {Gen 26:16}
அப்பொழுது ஈசாக்கு<Isaac> அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின்<Gerar> பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து, {Gen 26:17}
தன் தகப்பனாகிய ஆபிரகாமின்<Abraham> நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம்<Abraham> மரித்தபின் பெலிஸ்தர்<Philistines> தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். {Gen 26:18}
ஈசாக்குடைய<Isaac> வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். {Gen 26:19}
கேராரூர்<Gerar> மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய<Isaac> மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு<Esek> என்று பேரிட்டான். {Gen 26:20}
வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா<Sitnah> என்று பேரிட்டான். {Gen 26:21}
பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத்<Rehoboth> என்று பேரிட்டான். {Gen 26:22}
அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப்<Beersheba> போனான். {Gen 26:23}
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய<Abraham> தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம்<Abraham> உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். {Gen 26:24}
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின்<Isaac> வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். {Gen 26:25}
அபிமெலேக்கும்<Abimelech> அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும்<Ahuzzath> அவன் சேனாபதியாகிய பிகோலும்<Phichol>, கேராரிலிருந்து<Gerar> அவனிடத்துக்கு வந்தார்கள். {Gen 26:26}
அப்பொழுது ஈசாக்கு<Isaac> அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். {Gen 26:27}
அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். {Gen 26:28}
நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். {Gen 26:29}
அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். {Gen 26:30}
அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு<Isaac> அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். {Gen 26:31}
அந்நாளில்தானே ஈசாக்கின்<Isaac> வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். {Gen 26:32}
அதற்கு சேபா<Shebah> என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா<Beersheba> என்னப்படுகிறது. {Gen 26:33}
ஏசா<Esau> நாற்பது வயதானபோது, ஏத்தியனான<Hittite> பெயேரியினுடைய<Beeri> குமாரத்தியாகிய யூதீத்தையும்<Judith>, ஏத்தியனான<Hittite> ஏலோனுடைய<Elon> குமாரத்தியாகிய பஸ்மாத்தையும்<Bashemath> விவாகம்பண்ணினான். {Gen 26:34}
அவர்கள் ஈசாக்குக்கும்<Isaac> ரெபெக்காளுக்கும்<Rebekah> மனநோவாயிருந்தார்கள். {Gen 26:35}
ஈசாக்கு<Isaac> முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை<Esau> அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். {Gen 27:1}
அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். {Gen 27:2}
ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, {Gen 27:3}
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான். {Gen 27:4}
ஈசாக்கு<Isaac> தன் குமாரனாகிய ஏசாவோடே<Esau> பேசுகையில், ரெபெக்காள்<Rebekah> கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா<Esau> வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான். {Gen 27:5}
அப்பொழுது ரெபெக்காள்<Rebekah> தன் குமாரனாகிய யாக்கோபை<Jacob> நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை<Esau> அழைத்து: {Gen 27:6}
நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன். {Gen 27:7}
ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய். {Gen 27:8}
நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன். {Gen 27:9}
உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள். {Gen 27:10}
அதற்கு யாக்கோபு<Jacob> தன் தாயாகிய ரெபெக்காளை<Rebekah> நோக்கி: என் சகோதரனாகிய ஏசா<Esau> ரோமம் மிகுத்தவன், நான் ரோமமில்லாதவன். {Gen 27:11}
ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான். {Gen 27:12}
அதற்கு அவன் தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள். {Gen 27:13}
அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள். {Gen 27:14}
பின்பு, ரெபெக்காள்<Rebekah> வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின்<Esau> நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு<Jacob> உடுத்தி, {Gen 27:15}
வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு; {Gen 27:16}
தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின்<Jacob> கையிலே கொடுத்தாள். {Gen 27:17}
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான். {Gen 27:18}
அப்பொழுது யாக்கோபு<Jacob> தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா<Esau>; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான். {Gen 27:19}
அப்பொழுது ஈசாக்குத்<Isaac> தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான். {Gen 27:20}
அப்பொழுது ஈசாக்கு<Isaac> யாக்கோபை<Jacob> நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ<Esau> அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான். {Gen 27:21}
யாக்கோபு<Jacob> தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில்<Isaac> கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின்<Jacob> சத்தம், கைகளோ ஏசாவின்<Esau> கைகள் என்று சொல்லி, {Gen 27:22}
அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின்<Esau> கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து, {Gen 27:23}
நீ என் குமாரனாகிய ஏசாதானோ<Esau> என்றான்; அவன்: நான்தான் என்றான். {Gen 27:24}
அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான். {Gen 27:25}
அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு<Isaac> அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான். {Gen 27:26}
அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. {Gen 27:27}
தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. {Gen 27:28}
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். {Gen 27:29}
ஈசாக்கு<Isaac> யாக்கோபை<Jacob> ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு<Jacob> தன் தகப்பனாகிய ஈசாக்கின்<Isaac> சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா<Esau> வேட்டையாடி வந்து சேர்ந்தான். {Gen 27:30}
அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான். {Gen 27:31}
அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு<Isaac>: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா<Esau> என்றான். {Gen 27:32}
அப்பொழுது ஈசாக்கு<Isaac> மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான். {Gen 27:33}
ஏசா<Esau> தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான். {Gen 27:34}
அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான். {Gen 27:35}
அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு<Jacob> என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான். {Gen 27:36}
ஈசாக்கு<Isaac> ஏசாவுக்குப்<Esau> பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான். {Gen 27:37}
ஏசா<Esau> தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா<Esau> சத்தமிட்டு அழுதான். {Gen 27:38}
அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு<Isaac> அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும். {Gen 27:39}
உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான். {Gen 27:40}
யாக்கோபைத்<Jacob> தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா<Esau> யாக்கோபைப்<Jacob> பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக்<Jacob> கொன்றுபோடுவேன் என்று ஏசா<Esau> தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான். {Gen 27:41}
மூத்த மகனாகிய ஏசாவின்<Esau> வார்த்தைகள் ரெபெக்காளுக்கு<Rebekah> அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை<Jacob> அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா<Esau> உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். {Gen 27:42}
ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில்<Haran> இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு<Laban> ஓடிப்போய், {Gen 27:43}
உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு. {Gen 27:44}
உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரேநாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள். {Gen 27:45}
பின்பு, ரெபெக்காள்<Rebekah> ஈசாக்கை<Isaac> நோக்கி: ஏத்தின்<Heth> குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின்<Heth> குமாரத்திகளில் யாக்கோபு<Jacob> ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள். {Gen 27:46}
ஈசாக்கு<Isaac> யாக்கோபை<Jacob> அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய<Canaan> குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், {Gen 28:1}
எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற<Padanaram> உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய<Bethuel> வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின்<Laban> குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். {Gen 28:2}
சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி; {Gen 28:3}
தேவன் ஆபிரகாமுக்குக்<Abraham> கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு<Abraham> அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி; {Gen 28:4}
ஈசாக்கு<Isaac> யாக்கோபை<Jacob> அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும்<Padanaram> சீரியா<Syrian> தேசத்தானாகிய பெத்துவேலுடைய<Bethuel> குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும்<Esau> தாயாகிய ரெபெக்காளின்<Rebekah> சகோதரனுமான லாபானிடத்துக்குப்<Laban> போகப் புறப்பட்டான். {Gen 28:5}
ஈசாக்கு<Isaac> யாக்கோபை<Jacob> ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு<Padanaram> அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய<Canaan> குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும், {Gen 28:6}
யாக்கோபு<Jacob> தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப்<Padanaram> புறப்பட்டுப்போனதையும் ஏசா<Esau> கண்டதினாலும், {Gen 28:7}
கானானியருடைய<Canaan> குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின்<Isaac> பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா<Esau> அறிந்ததினாலும், {Gen 28:8}
ஏசா<Esau> இஸ்மவேலிடத்துக்குப்<Ishmael> போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய<Abraham> குமாரனாகிய இஸ்மவேலின்<Ishmael> குமாரத்தியும் நெபாயோத்தின்<Nebajoth> சகோதரியுமாகிய மகலாத்தையும்<Mahalath> விவாகம்பண்ணினான். {Gen 28:9}
யாக்கோபு<Jacob> பெயெர்செபாவை<Beersheba> விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப்<Haran> போகப் பிரயாணம்பண்ணி, {Gen 28:10}
ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். {Gen 28:11}
அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். {Gen 28:12}
அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின்<Abraham> தேவனும் ஈசாக்கின்<Isaac> தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். {Gen 28:13}
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். {Gen 28:14}
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். {Gen 28:15}
யாக்கோபு<Jacob> நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். {Gen 28:16}
அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். {Gen 28:17}
அதிகாலையிலே யாக்கோபு<Jacob> எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, {Gen 28:18}
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல்<Bethel> என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ்<Luz> என்னும் பேர் இருந்தது. {Gen 28:19}
அப்பொழுது யாக்கோபு<Jacob>: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, {Gen 28:20}
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; {Gen 28:21}
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான். {Gen 28:22}
யாக்கோபு<Jacob> பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். {Gen 29:1}
அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. {Gen 29:2}
அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். {Gen 29:3}
யாக்கோபு<Jacob> அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான்<Haran> ஊரார் என்றார்கள். {Gen 29:4}
அப்பொழுது அவன்: நாகோரின்<Nahor> குமாரனாகிய லாபானை<Laban> அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். {Gen 29:5}
அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல்<Rachel>, அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். {Gen 29:6}
அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். {Gen 29:7}
அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். {Gen 29:8}
அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல்<Rachel> அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டுவந்தாள். {Gen 29:9}
யாக்கோபு<Jacob> தன் தாயின் சகோதரனான லாபானுடைய<Laban> குமாரத்தியாகிய ராகேலையும்<Rachel>, தன் தாயின் சகோதரனாகிய லாபானின்<Laban> ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு<Jacob> போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின்<Laban> ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். {Gen 29:10}
பின்பு யாக்கோபு<Jacob> ராகேலை<Rachel> முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, {Gen 29:11}
தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின்<Rebekah> குமாரனென்றும் ராகேலுக்கு<Rachel> அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். {Gen 29:12}
லாபான்<Laban> தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய<Jacob> செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச்<Laban> சொன்னான். {Gen 29:13}
அப்பொழுது லாபான்<Laban>: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு<Jacob> அவனிடத்தில் தங்கினான். {Gen 29:14}
பின்பு லாபான்<Laban> யாக்கோபை<Jacob> நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். {Gen 29:15}
லாபானுக்கு<Laban> இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள்<Leah>, இளையவள் பேர் ராகேல்<Rachel>. {Gen 29:16}
லேயாளுடைய<Leah> கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ<Rachel> ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். {Gen 29:17}
யாக்கோபு<Jacob> ராகேல்பேரில்<Rachel> பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக<Rachel> உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான். {Gen 29:18}
அதற்கு லாபான்<Laban>: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான். {Gen 29:19}
அந்தப்படியே யாக்கோபு<Jacob> ராகேலுக்காக<Rachel> ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. {Gen 29:20}
பின்பு யாக்கோபு<Jacob> லாபானை<Laban> நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான். {Gen 29:21}
அப்பொழுது லாபான்<Laban> அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான். {Gen 29:22}
அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை<Leah> அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். {Gen 29:23}
லாபான்<Laban> தன் வேலைக்காரியாகிய சில்பாளைத்<Zilpah> தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு<Leah> வேலைக்காரியாகக் கொடுத்தான். {Gen 29:24}
காலையிலே, இதோ, அவள் லேயாள்<Leah> என்று யாக்கோபு<Jacob> கண்டு, லாபானை<Laban> நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக<Rachel> அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். {Gen 29:25}
அதற்கு லாபான்<Laban>: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. {Gen 29:26}
இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான். {Gen 29:27}
அந்தப்படியே யாக்கோபு<Jacob>, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும்<Rachel> அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். {Gen 29:28}
மேலும் லாபான்<Laban> தன் வேலைக்காரியாகிய பில்காளைத்<Bilhah> தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு<Rachel> வேலைக்காரியாகக் கொடுத்தான். {Gen 29:29}
யாக்கோபு<Jacob> ராகேலையும்<Rachel> சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும்<Leah> ராகேலை<Rachel> அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான். {Gen 29:30}
லேயாள்<Leah> அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ<Rachel> மலடியாயிருந்தாள். {Gen 29:31}
லேயாள்<Leah> கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன்<Reuben> என்று பேரிட்டாள். {Gen 29:32}
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன்<Simeon> என்று பேரிட்டாள். {Gen 29:33}
பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி<Levi> என்று பேரிட்டாள். {Gen 29:34}
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா<Judah> என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று. {Gen 29:35}
ராகேல்<Rachel> தான் யாக்கோபுக்குப்<Jacob> பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை<Jacob> நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள். {Gen 30:1}
அப்பொழுது யாக்கோபு<Jacob> ராகேலின்மேல்<Rachel> கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான். {Gen 30:2}
அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள்<Bilhah> இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி, {Gen 30:3}
அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை<Bilhah> மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு<Jacob> அவளைச் சேர்ந்தான். {Gen 30:4}
பில்காள்<Bilhah> கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு<Jacob> ஒரு குமாரனைப் பெற்றாள். {Gen 30:5}
அப்பொழுது ராகேல்<Rachel>: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண்<Dan> என்று பேரிட்டாள். {Gen 30:6}
மறுபடியும் ராகேலின்<Rachel> வேலைக்காரியாகிய பில்காள்<Bilhah> கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு<Jacob> இரண்டாம் குமாரனைப் பெற்றாள். {Gen 30:7}
அப்பொழுது ராகேல்<Rachel>: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி<Naphtali> என்று பேரிட்டாள். {Gen 30:8}
லேயாள்<Leah> தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை<Zilpah> அழைத்து, அவளை யாக்கோபுக்கு<Jacob> மனைவியாகக் கொடுத்தாள். {Gen 30:9}
லேயாளின்<Leah> வேலைக்காரியாகிய சில்பாள்<Zilpah> யாக்கோபுக்கு<Jacob> ஒரு குமாரனைப் பெற்றாள். {Gen 30:10}
அப்பொழுது லேயாள்<Leah>: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத்<Gad> என்று பேரிட்டாள். {Gen 30:11}
பின்பு லேயாளின்<Leah> வேலைக்காரியாகிய சில்பாள்<Zilpah> யாக்கோபுக்கு<Jacob> இரண்டாம் குமாரனைப் பெற்றாள். {Gen 30:12}
அப்பொழுது லேயாள்<Leah>: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர்<Asher> என்று பேரிட்டாள். {Gen 30:13}
கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன்<Reuben> வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில்<Leah> கொடுத்தான். அப்பொழுது ராகேல்<Rachel> லேயாளை<Leah> நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள். {Gen 30:14}
அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்<Rachel>: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள். {Gen 30:15}
சாயங்காலத்தில் யாக்கோபு<Jacob> வெளியிலிருந்து வருகையில் லேயாள்<Leah> புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான். {Gen 30:16}
தேவன் லேயாளுக்குச்<Leah> செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு<Jacob> ஐந்தாம் குமாரனைப் பெற்றாள். {Gen 30:17}
அப்பொழுது லேயாள்<Leah>: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார்<Issachar> என்று பேரிட்டாள். {Gen 30:18}
அப்புறம் லேயாள்<Leah> கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு<Jacob> ஆறாம் குமாரனைப் பெற்றாள். {Gen 30:19}
அப்பொழுது லேயாள்<Leah>: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன்<Zebulun> என்று பேரிட்டாள். {Gen 30:20}
பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள்<Dinah> என்று பேரிட்டாள். {Gen 30:21}
தேவன் ராகேலை<Rachel> நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். {Gen 30:22}
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், {Gen 30:23}
இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு<Joseph> என்று பேரிட்டாள். {Gen 30:24}
ராகேல்<Rachel> யோசேப்பைப்<Joseph> பெற்றபின், யாக்கோபு<Jacob> லாபானை<Laban> நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். {Gen 30:25}
நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான். {Gen 30:26}
அப்பொழுது லாபான்<Laban>: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். {Gen 30:27}
உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான். {Gen 30:28}
அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர். {Gen 30:29}
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். {Gen 30:30}
அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு<Jacob>: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். {Gen 30:31}
நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும். {Gen 30:32}
அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான். {Gen 30:33}
அதற்கு லாபான்<Laban>: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, {Gen 30:34}
அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, {Gen 30:35}
தனக்கும் யாக்கோபுக்கும்<Jacob> இடையிலே மூன்றுநாள் பிரயாண தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய<Laban> மற்ற ஆடுகளை யாக்கோபு<Jacob> மேய்த்தான். {Gen 30:36}
பின்பு யாக்கோபு<Jacob> பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, {Gen 30:37}
தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. {Gen 30:38}
ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது. {Gen 30:39}
அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு<Jacob> பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய<Laban> மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய<Laban> மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான். {Gen 30:40}
பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு<Jacob> அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். {Gen 30:41}
பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும்<Laban>, பலமுள்ளவைகள் யாக்கோபையும்<Jacob> சேர்ந்தன. {Gen 30:42}
இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான். {Gen 30:43}
பின்பு, லாபானுடைய<Laban> குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு<Jacob> எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு<Jacob> கேட்டான். {Gen 31:1}
லாபானின்<Laban> முகத்தை யாக்கோபு<Jacob> பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். {Gen 31:2}
கர்த்தர் யாக்கோபை<Jacob> நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். {Gen 31:3}
அப்பொழுது யாக்கோபு<Jacob>, ராகேலையும்<Rachel> லேயாளையும்<Leah> வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து, {Gen 31:4}
அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார். {Gen 31:5}
என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். {Gen 31:6}
உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. {Gen 31:7}
புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது. {Gen 31:8}
இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். {Gen 31:9}
ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன். {Gen 31:10}
அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே<Jacob> என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். {Gen 31:11}
அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான்<Laban> உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். {Gen 31:12}
நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே<Bethel> உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். {Gen 31:13}
அதற்கு ராகேலும்<Rachel> லேயாளும்<Leah>: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ? {Gen 31:14}
அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார். {Gen 31:15}
ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள். {Gen 31:16}
அப்பொழுது யாக்கோபு<Jacob> எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி, {Gen 31:17}
தான் பதான் அராமிலே<Padanaram> சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில்<Canaan> இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப்<Isaac> போகப் புறப்பட்டான். {Gen 31:18}
லாபான்<Laban>, தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல்<Rachel> தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள். {Gen 31:19}
யாக்கோபு<Jacob> தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய<Syrian> லாபானுக்கு<Laban> அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான். {Gen 31:20}
இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத்<Gilead> மலையை நோக்கி ஓடிப்போனான். {Gen 31:21}
யாக்கோபு<Jacob> ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு<Laban> அறிவிக்கப்பட்டது. {Gen 31:22}
அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத்<Gilead> மலையிலே அவனைக் கண்டுபிடித்தான். {Gen 31:23}
அன்று ராத்திரி தேவன் சீரியா<Syrian> தேசத்தானாகிய லாபானுக்குச்<Laban> சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே<Jacob> நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். {Gen 31:24}
லாபான்<Laban> யாக்கோபினிடத்தில்<Jacob> வந்தான்; யாக்கோபு<Jacob> மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும்<Laban> தன் சகோதரரோடேகூடக் கீலேயாத்<Gilead> மலையிலே கூடாரம் போட்டான். {Gen 31:25}
அப்பொழுது லாபான்<Laban> யாக்கோபை<Jacob> நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை? {Gen 31:26}
நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. {Gen 31:27}
என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய். {Gen 31:28}
உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே<Jacob> நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார். {Gen 31:29}
இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான். {Gen 31:30}
யாக்கோபு<Jacob> லாபானுக்குப்<Laban> பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன். {Gen 31:31}
ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல்<Jacob> அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு<Rachel> அறியாதிருந்தான். {Gen 31:32}
அப்பொழுது லாபான்<Laban> யாக்கோபின்<Jacob> கூடாரத்திலும், லேயாளின்<Leah> கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப்பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின்<Leah> கூடாரத்தைவிட்டு ராகேலின்<Rachel> கூடாரத்துக்குப் போனான். {Gen 31:33}
ராகேல்<Rachel> அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான்<Laban> கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. {Gen 31:34}
அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை. {Gen 31:35}
அப்பொழுது யாக்கோபுக்குக்<Jacob> கோபம் எழும்பி, லாபானோடே<Laban> வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன? {Gen 31:36}
என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும். {Gen 31:37}
இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. {Gen 31:38}
பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். {Gen 31:39}
பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். {Gen 31:40}
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். {Gen 31:41}
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின்<Abraham> தேவனும் ஈசாக்கின்<Isaac> பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான். {Gen 31:42}
அப்பொழுது லாபான்<Laban> யாக்கோபுக்குப்<Jacob> பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்? {Gen 31:43}
இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். {Gen 31:44}
அப்பொழுது யாக்கோபு<Jacob> ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். {Gen 31:45}
பின்னும் யாக்கோபு<Jacob> தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள். {Gen 31:46}
லாபான்<Laban> அதற்கு ஜெகர்சகதூதா<Jegarsahadutha> என்று பேரிட்டான்; யாக்கோபு<Jacob> அதற்குக் கலயெத்<Galeed> என்று பேரிட்டான். {Gen 31:47}
இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான்<Laban> சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத்<Galeed> என்னப்பட்டது. {Gen 31:48}
அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்; {Gen 31:49}
நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா<Mizpah> என்னும் பேர்பெற்றது. {Gen 31:50}
பின்னும் லாபான்<Laban> யாக்கோபை<Jacob> நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார். {Gen 31:51}
தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. {Gen 31:52}
ஆபிரகாமின்<Abraham> தேவனும் நாகோரின்<Nahor> தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு<Jacob> தன் தகப்பனாகிய ஈசாக்கின்<Isaac> பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். {Gen 31:53}
பின்பு, யாக்கோபு<Jacob> மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள். {Gen 31:54}
லாபான்<Laban> அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான்<Laban> புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான். {Gen 31:55}
யாக்கோபு<Jacob> பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். {Gen 32:1}
யாக்கோபு<Jacob> அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம்<Mahanaim> என்று பேரிட்டான். {Gen 32:2}
பின்பு, யாக்கோபு<Jacob> ஏதோம்<Edom> சீமையாகிய சேயீர்<Seir> தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப்<Esau> போகும்படி ஆட்களை அழைப்பித்து: {Gen 32:3}
நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில்<Esau> போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில்<Laban> தங்கியிருந்தேன் என்றும், {Gen 32:4}
எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு<Jacob> சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான். {Gen 32:5}
அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத்<Jacob> திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப்<Esau> போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள். {Gen 32:6}
அப்பொழுது யாக்கோபு<Jacob> மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து: {Gen 32:7}
ஏசா<Esau> ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான். {Gen 32:8}
பின்பு யாக்கோபு<Jacob>: என் தகப்பனாகிய ஆபிரகாமின்<Abraham> தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின்<Isaac> தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, {Gen 32:9}
அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக்<Jordan> கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். {Gen 32:10}
என் சகோதரனாகிய ஏசாவின்<Esau> கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். {Gen 32:11}
தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான். {Gen 32:12}
அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு<Esau> வெகுமானமாக, {Gen 32:13}
இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், {Gen 32:14}
பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, {Gen 32:15}
வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி, {Gen 32:16}
முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா<Esau> உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால், {Gen 32:17}
நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது<Jacob>; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு<Esau> அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான். {Gen 32:18}
இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக்<Esau> காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி, {Gen 32:19}
இதோ, உமது அடியானாகிய யாக்கோபு<Jacob> எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான். {Gen 32:20}
அந்தப்படியே வெகுமதி அவனுக்கு முன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி, {Gen 32:21}
இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு<Jabbok> என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான். {Gen 32:22}
அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான். {Gen 32:23}
யாக்கோபு<Jacob> பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, {Gen 32:24}
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின்<Jacob> தொடைச்சந்து சுளுக்கிற்று. {Gen 32:25}
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். {Gen 32:26}
அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு<Jacob> என்றான். {Gen 32:27}
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு<Jacob> என்னப்படாமல் இஸ்ரவேல்<Israel> என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். {Gen 32:28}
அப்பொழுது யாக்கோபு<Jacob>: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். {Gen 32:29}
அப்பொழுது யாக்கோபு<Jacob>: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்<Peniel> என்று பேரிட்டான். {Gen 32:30}
அவன் பெனியேலைக்<Penuel> கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான். {Gen 32:31}
அவர் யாக்கோபுடைய<Jacob> தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல்<Israel> புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை. {Gen 32:32}
யாக்கோபு<Jacob> தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும்<Esau> அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும்<Leah> ராகேலிடத்திலும்<Rachel> இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து, {Gen 33:1}
பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும்<Leah> அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும்<Rachel> யோசேப்பையும்<Joseph> கடையிலும் நிறுத்தி: {Gen 33:2}
தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். {Gen 33:3}
அப்பொழுது ஏசா<Esau> எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். {Gen 33:4}
அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான். {Gen 33:5}
அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். {Gen 33:6}
லேயாளும்<Leah> அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும்<Joseph> ராகேலும்<Rachel> சேர்ந்துவந்து வணங்கினார்கள். {Gen 33:7}
அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான். {Gen 33:8}
அதற்கு ஏசா<Esau>: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான். {Gen 33:9}
அதற்கு யாக்கோபு<Jacob>: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. {Gen 33:10}
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். {Gen 33:11}
பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான். {Gen 33:12}
அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம். {Gen 33:13}
என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு<Seir> என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான். {Gen 33:14}
அப்பொழுது ஏசா<Esau>: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான். {Gen 33:15}
அன்றைத்தினம் ஏசா<Esau> திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்<Seir> போனான். {Gen 33:16}
யாக்கோபு<Jacob> சுக்கோத்திற்குப்<Succoth> பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத்<Succoth> என்று பேரிட்டான். {Gen 33:17}
யாக்கோபு<Jacob> பதான் அராமிலிருந்து<Padanaram> வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற<Canaan> சாலேம்<Shalem> என்னும் சீகேமுடைய<Shechem> பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான். {Gen 33:18}
தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின்<Shechem> தகப்பனாகிய ஏமோரின்<Hamor> புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு, {Gen 33:19}
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல்<Elelohe-Israel> என்று பேரிட்டான். {Gen 33:20}
லேயாள்<Leah> யாக்கோபுக்குப்<Jacob> பெற்ற குமாரத்தியாகிய தீனாள்<Dinah> தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள். {Gen 34:1}
அவளை ஏவியனான<Hivite> ஏமோரின்<Hamor> குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம்<Shechem> என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். {Gen 34:2}
அவனுடைய மனம் யாக்கோபின்<Jacob> குமாரத்தியாகிய தீனாள்மேல்<Dinah> பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான். {Gen 34:3}
சீகேம்<Shechem> தன் தகப்பனாகிய ஏமோரை<Hamor> நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான். {Gen 34:4}
தன் குமாரத்தியாகிய தீனாளை<Dinah> அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு<Jacob> கேள்விப்பட்டபோது, அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு<Jacob> பேசாமலிருந்தான். {Gen 34:5}
அத்தருணத்தில் சீகேமின்<Shechem> தகப்பனாகிய ஏமோர்<Hamor> புறப்பட்டு, யாக்கோபோடே<Jacob> பேசும்படி அவனிடத்தில் வந்தான். {Gen 34:6}
யாக்கோபின்<Jacob> குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின்<Jacob> குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில்<Israel> செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள். {Gen 34:7}
ஏமோர்<Hamor> அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின்<Shechem> மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள். {Gen 34:8}
நீங்கள் எங்களோடே சம்பந்தங்கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு, {Gen 34:9}
எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான். {Gen 34:10}
சீகேமும்<Shechem> அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்; {Gen 34:11}
பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான். {Gen 34:12}
அப்பொழுது யாக்கோபின்<Jacob> குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச்<Dinah> சீகேம்<Shechem> என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும்<Hamor> வஞ்சகமான மறுமொழியாக: {Gen 34:13}
விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும். {Gen 34:14}
நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப்போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து, {Gen 34:15}
உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம். {Gen 34:16}
விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள். {Gen 34:17}
அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும்<Hamor> ஏமோரின்<Hamor> குமாரனாகிய சீகேமுக்கும்<Shechem> நலமாய்த் தோன்றினது. {Gen 34:18}
அந்த வாலிபன் யாக்கோபுடைய<Jacob> குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான். {Gen 34:19}
ஏமோரும்<Hamor> அவன் குமாரன் சீகேமும்<Shechem> தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி: {Gen 34:20}
இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம். {Gen 34:21}
அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறதுபோல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள். {Gen 34:22}
அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள். {Gen 34:23}
அப்பொழுது ஏமோரின்<Hamor> பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின்<Shechem> சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள். {Gen 34:24}
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின்<Jacob> குமாரரும் தீனாளின்<Dinah> சகோதரருமான சிமியோன்<Simeon> லேவி<Levi> என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். {Gen 34:25}
ஏமோரையும்<Hamor> அவன் குமாரன் சீகேமையும்<Shechem> பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின்<Shechem> வீட்டிலிருந்த தீனாளை<Dinah> அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். {Gen 34:26}
மேலும், யாக்கோபின்<Jacob> குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு, {Gen 34:27}
அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும், {Gen 34:28}
அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். {Gen 34:29}
அப்பொழுது யாக்கோபு<Jacob> சிமியோனையும்<Simeon> லேவியையும்<Levi> பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும்<Canaanites> பெரிசியரிடத்திலும்<Perizzites> என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான். {Gen 34:30}
அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள். {Gen 34:31}
தேவன் யாக்கோபை<Jacob> நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப்<Bethel> போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின்<Esau> முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். {Gen 35:1}
அப்பொழுது யாக்கோபு<Jacob> தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். {Gen 35:2}
நாம் எழுந்து பெத்தேலுக்குப்<Bethel> போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். {Gen 35:3}
அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில்<Jacob> கொடுத்தார்கள்; யாக்கோபு<Jacob> அவைகளைச் சீகேம்<Shechem> ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான். {Gen 35:4}
பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின்<Jacob> குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள். {Gen 35:5}
யாக்கோபும்<Jacob> அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான்தேசத்திலுள்ள<Canaan> பெத்தேல்<Bethel> என்னும் லூசுக்கு<Luz> வந்தார்கள். {Gen 35:6}
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல்<Elbethel> என்று பேரிட்டான். {Gen 35:7}
ரெபெக்காளின்<Rebekah> தாதியாகிய தெபொராள்<Deborah> மரித்து, பெத்தேலுக்குச்<Bethel> சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத்<Allonbachuth> என்னும் பேர் உண்டாயிற்று. {Gen 35:8}
யாக்கோபு<Jacob> பதான் அராமிலிருந்து<Padanaram> வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: {Gen 35:9}
இப்பொழுது உன் பேர் யாக்கோபு<Jacob>, இனி உன் பேர் யாக்கோபு<Jacob> என்னப்படாமல், இஸ்ரவேல்<Israel> என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல்<Israel> என்று பேரிட்டார். {Gen 35:10}
பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். {Gen 35:11}
நான் ஆபிரகாமுக்கும்<Abraham> ஈசாக்குக்கும்<Isaac> கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி, {Gen 35:12}
தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார். {Gen 35:13}
அப்பொழுது யாக்கோபு<Jacob> தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான். {Gen 35:14}
தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு<Jacob> பெத்தேல்<Bethel> என்று பேரிட்டான். {Gen 35:15}
பின்பு, பெத்தேலை<Bethel> விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு<Ephrath> வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல்<Rachel> பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. {Gen 35:16}
பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். {Gen 35:17}
மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி<Benoni> என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன்<Benjamin> என்று பேரிட்டான். {Gen 35:18}
ராகேல்<Rachel> மரித்து, பெத்லெகேம்<Bethlehem> என்னும் எப்பிராத்தா<Ephrath> ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். {Gen 35:19}
அவள் கல்லறையின்மேல் யாக்கோபு<Jacob> ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய<Rachel> கல்லறையின் தூண். {Gen 35:20}
இஸ்ரவேல்<Israel> பிரயாணம்பண்ணி, ஏதேர்<Edar> என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். {Gen 35:21}
இஸ்ரவேல்<Israel> அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன்<Reuben> போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே<Bilhah> சயனித்தான்; அதை இஸ்ரவேல்<Israel> கேள்விப்பட்டான். {Gen 35:22}
யாக்கோபின்<Jacob> குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின்<Jacob> மூத்தமகனாகிய ரூபன்<Reuben>, சிமியோன்<Simeon>, லேவி<Levi>, யூதா<Judah>, இசக்கார்<Issachar>, செபுலோன்<Zebulun> என்பவர்கள் லேயாள்<Leah> பெற்ற குமாரர். {Gen 35:23}
யோசேப்பு<Joseph>, பென்யமீன்<Benjamin> என்பவர்கள் ராகேல்<Rachel> பெற்ற குமாரர். {Gen 35:24}
தாண்<Dan>, நப்தலி<Naphtali> என்பவர்கள் ராகேலுடைய<Rachel> பணிவிடைக்காரியாகிய பில்காள்<Bilhah> பெற்ற குமாரர். {Gen 35:25}
காத்<Gad>, ஆசேர்<Asher> என்பவர்கள் லேயாளின்<Leah> பணிவிடைக்காரியாகிய சில்பாள்<Zilpah> பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப்<Jacob> பதான் அராமிலே<Padanaram> பிறந்த குமாரர். {Gen 35:26}
பின்பு, யாக்கோபு<Jacob> அர்பாவின்<Arbah> ஊராகிய மம்ரேக்கு<Mamre> தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில்<Isaac> வந்தான்; அது ஆபிரகாமும்<Abraham> ஈசாக்கும்<Isaac> தங்கியிருந்த எபிரோன்<Hebron> என்னும் ஊர். {Gen 35:27}
ஈசாக்கு<Isaac> விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து, {Gen 35:28}
பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும்<Esau> யாக்கோபும்<Jacob> அவனை அடக்கம்பண்ணினார்கள். {Gen 35:29}
ஏதோமியரின்<Edom> தகப்பனாகிய ஏசாவின்<Esau> வம்சவரலாறு: {Gen 36:1}
ஏசா<Esau> கானான்<Canaan> தேசத்துப் பெண்களில் ஏத்தியனான<Hittite> ஏலோனின்<Elon> குமாரத்தியாகிய ஆதாளையும்<Adah>, ஏவியனாகிய<Hivite> சிபியோனின்<Zibeon> குமாரத்தியும் ஆனாகின்<Anah> குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும்<Aholibamah>, {Gen 36:2}
இஸ்மவேலின்<Ishmael> குமாரத்தியும் நெபாயோத்தின்<Nebajoth> சகோதரியுமாகிய பஸ்மாத்தையும்<Bashemath> விவாகம்பண்ணியிருந்தான். {Gen 36:3}
ஆதாள்<Adah> ஏசாவுக்கு<Esau> எலீப்பாசைப்<Eliphaz> பெற்றாள்; பஸ்மாத்து<Bashemath> ரெகுவேலைப்<Reuel> பெற்றாள். {Gen 36:4}
அகோலிபாமாள்<Aholibamah> எயூஷையும்<Jeush>, யாலாமையும்<Jaalam>, கோராகையும்<Korah> பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக்<Esau> கானான்தேசத்திலே<Canaan> பிறந்த குமாரர். {Gen 36:5}
ஏசா<Esau> தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான்தேசத்திலே<Canaan> சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை<Jacob> விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான். {Gen 36:6}
அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது. {Gen 36:7}
ஆதலால் ஏசா<Esau> சேயீர்மலையில்<Seir> குடியேறினான்; ஏசாவுக்கு<Esau> ஏதோம்<Edom> என்றும் பேர். {Gen 36:8}
சேயீர்மலையில்<Seir> இருக்கிற ஏதோமியருடைய<Edomites> தகப்பனாகிய ஏசாவின்<Esau> சந்ததிகளும், {Gen 36:9}
ஏசாவின்<Esau> குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின்<Esau> மனைவியாகிய ஆதாளுடைய<Adah> குமாரனுக்கு எலீப்பாஸ்<Eliphaz> என்று பேர்; ஏசாவின்<Esau> மனைவியாகிய பஸ்மாத்துடைய<Bashemath> குமாரனுக்கு ரெகுவேல்<Reuel> என்று பேர். {Gen 36:10}
எலீப்பாசின்<Eliphaz> குமாரர், தேமான்<Teman>, ஓமார்<Omar>, செப்போ<Zepho>, கத்தாம்<Gatam>, கேனாஸ்<Kenaz> என்பவர்கள். {Gen 36:11}
திம்னாள்<Timna> ஏசாவின்<Esau> குமாரனாகிய எலீப்பாசுக்கு<Eliphaz> மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு<Eliphaz> அமலேக்கைப்<Amalek> பெற்றாள்; இவர்களே ஏசாவின்<Esau> மனைவியாகிய ஆதாளுடைய<Adah> புத்திரர். {Gen 36:12}
ரெகுவேலுடைய<Reuel> குமாரர், நகாத்<Nahath>, செராகு<Zerah>, சம்மா<Shammah>, மீசா<Mizzah> என்பவர்கள்; இவர்களே ஏசாவின்<Esau> மனைவியாகிய பஸ்மாத்தின்<Bashemath> புத்திரர். {Gen 36:13}
சிபியோனின்<Zibeon> குமாரத்தியும் ஆனாகின்<Anah> குமாரத்தியுமான அகோலிபாமாள்<Aholibamah> என்கிற ஏசாவின்<Esau> மனைவி எயூஷ்<Jeush>, யாலாம்<Jaalam>, கோராகு<Korah> என்னும் புத்திரரை ஏசாவுக்குப்<Esau> பெற்றாள். {Gen 36:14}
ஏசாவின்<Esau> குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு<Esau> மூத்த மகனாகிய எலீப்பாசுடைய<Eliphaz> குமாரரில் தேமான்<Teman> பிரபு, ஓமார்<Omar> பிரபு, செப்போ<Zepho> பிரபு, கேனாஸ்<Kenaz> பிரபு, {Gen 36:15}
கோராகு<Korah> பிரபு, கத்தாம்<Gatam> பிரபு, அமலேக்கு<Amalek> பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம்<Edom> தேசத்தில் எலீப்பாசின்<Eliphaz> சந்ததியும் ஆதாளின்<Adah> குமாரருமாயிருந்த பிரபுக்கள். {Gen 36:16}
ஏசாவின்<Esau> குமாரனாகிய ரெகுவேலின்<Reuel> புத்திரரில் நகாத்<Nahath> பிரபு, செராகு<Zerah> பிரபு, சம்மா<Shammah> பிரபு, மீசா<Mizzah> பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம்<Edom> தேசத்தில் ரெகுவேலின்<Reuel> சந்ததியும் ஏசாவின்<Esau> மனைவியாகிய பஸ்மாத்தின்<Bashemath> குமாரருமாயிருந்த பிரபுக்கள். {Gen 36:17}
ஏசாவின்<Esau> மனைவியாகிய அகோலிபாமாளின்<Aholibamah> குமாரர், எயூஷ்<Jeush> பிரபு, யாலாம்<Jaalam> பிரபு, கோராகு<Korah> பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின்<Anah> குமாரத்தியும் ஏசாவுடைய<Esau> மனைவியுமாகிய அகோலிபாமாளின்<Aholibamah> சந்ததியாயிருந்த பிரபுக்கள். {Gen 36:18}
இவர்களே ஏதோம்<Edom> என்னும் ஏசாவின்<Esau> சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள். {Gen 36:19}
அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான<Horite> சேயீரின்<Seir> குமாரர், லோத்தான்<Lotan>, சோபால்<Shobal>, சிபியோன்<Zibeon>, ஆனாகு<Anah>, {Gen 36:20}
திஷோன்<Dishon>, ஏத்சேர்<Ezer>, திஷான்<Dishan> என்பவர்கள்; இவர்களே ஏதோம்<Edom> தேசத்தில் சேயீரின்<Seir> புத்திரராகிய ஓரியருடைய<Horites> சந்ததியாயிருந்த பிரபுக்கள். {Gen 36:21}
லோத்தானுடைய<Lotan> குமாரர், ஓரி<Hori>, ஏமாம்<Hemam> என்பவர்கள்; லோத்தானின்<Lotan> சகோதரி திம்னாள்<Timna> என்பவள். {Gen 36:22}
சோபாலின்<Shobal> குமாரர், அல்வான்<Alvan>, மானகாத்<Manahath>, ஏபால்<Ebal>, செப்போ<Shepho>, ஓனாம்<Onam> என்பவர்கள். {Gen 36:23}
சிபியோனின்<Zibeon> குமாரர், அயா<Ajah>, ஆனாகு<Anah> என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சிபியோனின்<Zibeon> கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு<Anah> இவன்தான். {Gen 36:24}
ஆனாகின்<Anah> பிள்ளைகள், திஷோன்<Dishon>, அகோலிபாமாள்<Aholibamah> என்பவர்கள்; இந்த அகோலிபாமாள்<Aholibamah> ஆனாகின்<Anah> குமாரத்தி. {Gen 36:25}
திஷோனுடைய<Dishon> குமாரர், எம்தான்<Hemdan>, எஸ்பான்<Eshban>, இத்தரான்<Ithran>, கெரான்<Cheran> என்பவர்கள். {Gen 36:26}
ஏத்சேருடைய<Ezer> குமாரர், பில்கான்<Bilhan>, சகவான்<Zaavan>, அக்கான்<Akan> என்பவர்கள். {Gen 36:27}
திஷானுடைய<Dishan> குமாரர், ஊத்ஸ்<Uz>, அரான்<Aran> என்பவர்கள். {Gen 36:28}
ஓரியரின்<Horites> சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான்<Lotan> பிரபு, சோபால்<Shobal> பிரபு, சிபியோன்<Zibeon> பிரபு, ஆனாகு<Anah> பிரபு, {Gen 36:29}
திஷோன்<Dishon> பிரபு, ஏத்சேர்<Ezer> பிரபு, திஷான்<Dishan> பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர்<Seir> தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர்<Hori> சந்ததியான பிரபுக்கள். {Gen 36:30}
இஸ்ரவேல்<Israel> புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம்<Edom> தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: {Gen 36:31}
பேயோருடைய<Beor> குமாரனாகிய பேலா<Bela> ஏதோமிலே<Edom> அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா<Dinhabah> என்று பேர். {Gen 36:32}
பேலா<Bela> மரித்தபின், போஸ்றா<Bozrah> பட்டணத்தானாகிய சேராகுடைய<Zerah> குமாரனாகிய யோபாப்<Jobab> அவன் பட்டத்திற்கு வந்தான். {Gen 36:33}
யோபாப்<Jobab> மரித்தபின், தேமானிய<Temani> தேசத்தானாகிய உஷாம்<Husham> அவன் பட்டத்திற்கு வந்தான். {Gen 36:34}
உஷாம்<Husham> மரித்தபின், மோவாபின்<Moab> நாட்டிலே மீதியானியரை<Midian> முறிய அடித்த பேதாதின்<Bedad> குமாரனாகிய ஆதாத்<Hadad> அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத்<Avith> என்று பேர். {Gen 36:35}
ஆதாத்<Hadad> மரித்தபின், மஸ்ரேக்கா<Masrekah> ஊரானாகிய சம்லா<Samlah> அவனுடைய பட்டத்திற்கு வந்தான். {Gen 36:36}
சம்லா<Samlah> மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத்<Rehoboth> என்னும் ஊரானாகிய சவுல்<Saul> அவனுடைய பட்டத்திற்கு வந்தான். {Gen 36:37}
சவுல்<Saul> மரித்தபின், அக்போருடைய<Achbor> குமாரனாகிய பாகால்கானான்<Baalhanan> அவனுடைய பட்டத்திற்கு வந்தான். {Gen 36:38}
அக்போருடைய<Achbor> குமாரனாகிய பாகால்கானான்<Baalhanan> மரித்தபின், ஆதார்<Hadar> அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு<Pau> என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்<Mehetabel>; அவள் மத்ரேத்துடைய<Matred> குமாரத்தியும் மேசகாவின்<Mezahab> குமாரத்தியுமாய் இருந்தாள். {Gen 36:39}
தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின்<Esau> சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா<Timnah> பிரபு, அல்வா<Alvah> பிரபு, ஏதேத்<Jetheth> பிரபு, {Gen 36:40}
அகோலிபாமா<Aholibamah> பிரபு, ஏலா<Elah> பிரபு, பினோன்<Pinon> பிரபு, {Gen 36:41}
கேனாஸ்<Kenaz> பிரபு, தேமான்<Teman> பிரபு, மிப்சார்<Mibzar> பிரபு, {Gen 36:42}
மக்தியேல்<Magdiel> பிரபு, ஈராம்<Iram> பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம்<Edom> சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத்<Edomites> தகப்பன் ஏசா<Esau>. {Gen 36:43}
யாக்கோபு<Jacob> தன் தகப்பன் தங்கியிருந்த கானான்<Canaan> தேசத்திலே குடியிருந்தான். {Gen 37:1}
யாக்கோபுடைய<Jacob> சந்ததியின் வரலாறு: யோசேப்பு<Joseph> பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள்<Bilhah> சில்பாள்<Zilpah> என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். {Gen 37:2}
இஸ்ரவேலின்<Israel> முதிர்வயதிலே யோசேப்புத்<Joseph> தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல்<Israel> தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். {Gen 37:3}
அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். {Gen 37:4}
யோசேப்பு<Joseph> ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். {Gen 37:5}
அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: {Gen 37:6}
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். {Gen 37:7}
அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். {Gen 37:8}
அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். {Gen 37:9}
இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான். {Gen 37:10}
அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். {Gen 37:11}
பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே<Shechem> தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். {Gen 37:12}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> யோசேப்பை<Joseph> நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே<Shechem> ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான். {Gen 37:13}
அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன்<Hebron> பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப்<Shechem> போனான். {Gen 37:14}
அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். {Gen 37:15}
அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான். {Gen 37:16}
அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப்<Dothan> போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு<Joseph> தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே<Dothan> கண்டுபிடித்தான். {Gen 37:17}
அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி, {Gen 37:18}
ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், {Gen 37:19}
நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள். {Gen 37:20}
ரூபன்<Reuben> அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், {Gen 37:21}
அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன்<Reuben> அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். {Gen 37:22}
யோசேப்பு<Joseph> தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு<Joseph> உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, {Gen 37:23}
அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. {Gen 37:24}
பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து<Gilead> வருகிற இஸ்மவேலருடைய<Ishmeelites> கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக்<Egypt> கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். {Gen 37:25}
அப்பொழுது யூதா<Judah> தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? {Gen 37:26}
அவனை இந்த இஸ்மவேலருக்கு<Ishmeelites> விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். {Gen 37:27}
அந்த வர்த்தகரான மீதியானியர்<Midianites> கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை<Joseph> அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர்<Ishmeelites> கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை<Joseph> எகிப்திற்குக்<Egypt> கொண்டுபோனார்கள். {Gen 37:28}
பின்பு, ரூபன்<Reuben> அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு<Joseph> குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, {Gen 37:29}
தன் சகோதரரிடத்துக்குத் திரும்பிவந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான். {Gen 37:30}
அவர்கள் யோசேப்பின்<Joseph> அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து, {Gen 37:31}
பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள். {Gen 37:32}
யாக்கோபு<Joseph> அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு<Joseph> பீறுண்டுபோனான் என்று புலம்பி, {Gen 37:33}
தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். {Gen 37:34}
அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். {Gen 37:35}
அந்த மீதியானியர்<Midianites> யோசேப்பை<Joseph> எகிப்திலே<Egypt> பார்வோனின்<Pharaoh> பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார்<Potiphar> என்பவனிடத்தில் விற்றார்கள். {Gen 37:36}
அக்காலத்திலே யூதா<Judah> தன் சகோதரரை விட்டு, அதுல்லாம்<Adullamite> ஊரானாகிய ஈரா<Hirah> என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். {Gen 38:1}
அங்கே யூதா<Judah>, சூவா<Shuah> என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய<Canaanite> குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். {Gen 38:2}
அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர்<Er> என்று பேரிட்டான். {Gen 38:3}
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான்<Onan> என்று பேரிட்டாள். {Gen 38:4}
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா<Shelah> என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே<Chezib> இருந்தான். {Gen 38:5}
யூதா<Judah> தன் மூத்த மகனாகிய ஏர்<Er> என்பவனுக்குத் தாமார்<Tamar> என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். {Gen 38:6}
யூதாவின்<Judah> மூத்த மகனாகிய ஏர்<Er> என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். {Gen 38:7}
அப்பொழுது யூதா<Judah> ஓனானை<Onan> நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். {Gen 38:8}
அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான்<Onan> அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். {Gen 38:9}
அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். {Gen 38:10}
அப்பொழுது யூதா<Judah>, தன் குமாரனாகிய சேலாவும்<Shelah> அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை<Tamar> நோக்கி: என் குமாரனாகிய சேலா<Shelah> பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார்<Tamar> போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். {Gen 38:11}
அநேகநாள் சென்றபின், சூவாவின்<Shuah> குமாரத்தியாகிய யூதாவின்<Judah> மனைவி மரித்தாள். யூதாவினுடைய<Judah> துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம்<Adullamite> ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே<Hirah> திம்னாவிலே<Timnath> தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். {Gen 38:12}
அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்கத்தரிக்கத் திம்னாவுக்குப்<Timnath> போகிறார் என்று தாமாருக்கு<Tamar> அறிவிக்கப்பட்டது. {Gen 38:13}
சேலா<Shelah> பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப்<Timnath> போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். {Gen 38:14}
யூதா<Judah> அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, {Gen 38:15}
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். {Gen 38:16}
அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். {Gen 38:17}
அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, {Gen 38:18}
எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். {Gen 38:19}
யூதா<Judah> அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம்<Adullamite> ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், {Gen 38:20}
அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். {Gen 38:21}
அவன் யூதாவினிடத்தில்<Judah> திரும்பிவந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். {Gen 38:22}
அப்பொழுது யூதா<Judah>: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். {Gen 38:23}
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார்<Tamar> வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு<Judah> அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா<Judah>: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். {Gen 38:24}
அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். {Gen 38:25}
யூதா<Judah> அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக்<Shelah> கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. {Gen 38:26}
அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. {Gen 38:27}
அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். {Gen 38:28}
அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ்<Pharez> என்று பேரிடப்பட்டது. {Gen 38:29}
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா<Zarah> என்று பேரிடப்பட்டது. {Gen 38:30}
யோசேப்பு<Joseph> எகிப்துக்குக்<Egypt> கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய<Pharaoh> பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார்<Potiphar> என்னும் எகிப்து<Egyptian> தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில்<Ishmeelites> விலைக்கு வாங்கினான். {Gen 39:1}
கர்த்தர் யோசேப்போடே<Joseph> இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய<Egyptian> தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். {Gen 39:2}
கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; {Gen 39:3}
யோசேப்பினிடத்தில்<Joseph> தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். {Gen 39:4}
அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம்<Joseph> அந்த எகிப்தியன்<Egyptian> வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. {Gen 39:5}
ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின்<Joseph> கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு<Joseph> அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். {Gen 39:6}
சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல்<Joseph> கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். {Gen 39:7}
அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். {Gen 39:8}
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். {Gen 39:9}
அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே<Joseph> இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. {Gen 39:10}
இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. {Gen 39:11}
அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். {Gen 39:12}
அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, {Gen 39:13}
அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய<Hebrew> மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். {Gen 39:14}
நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். {Gen 39:15}
அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, {Gen 39:16}
அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய<Hebrew> வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். {Gen 39:17}
அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள். {Gen 39:18}
உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. {Gen 39:19}
யோசேப்பின்<Joseph> எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். {Gen 39:20}
கர்த்தரோ யோசேப்போடே<Joseph> இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். {Gen 39:21}
சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின்<Joseph> கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு<Joseph> செய்வித்தான். {Gen 39:22}
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. {Gen 39:23}
இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து<Egypt> ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து<Egypt> ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள். {Gen 40:1}
பார்வோன்<Pharaoh> தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு, {Gen 40:2}
அவர்களை யோசேப்பு<Joseph> வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல் பண்ணுவித்தான். {Gen 40:3}
தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின்<Joseph> வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள். {Gen 40:4}
எகிப்து<Egypt> ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள். {Gen 40:5}
காலமே யோசேப்பு<Joseph> அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். {Gen 40:6}
அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய<Pharaoh> பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான். {Gen 40:7}
அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு<Joseph>: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான். {Gen 40:8}
அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை<Joseph> நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன். {Gen 40:9}
அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. {Gen 40:10}
பார்வோனுடைய<Pharaoh> பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய<Pharaoh> பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய<Pharaoh> கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான். {Gen 40:11}
அதற்கு யோசேப்பு<Joseph>: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம். {Gen 40:12}
மூன்று நாளைக்குள்ளே பார்வோன்<Pharaoh> உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின்<Pharaoh> பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; {Gen 40:13}
இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு<Pharaoh> அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். {Gen 40:14}
நான் எபிரெயருடைய<Hebrews> தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான். {Gen 40:15}
அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை<Joseph> நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; {Gen 40:16}
மேற்கூடையிலே பார்வோனுக்காகச்<Pharaoh> சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான். {Gen 40:17}
அதற்கு யோசேப்பு<Joseph>: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். {Gen 40:18}
இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன்<Pharaoh> உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான். {Gen 40:19}
மூன்றாம் நாள் பார்வோனுடைய<Pharaoh> ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி, {Gen 40:20}
பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய<Pharaoh> கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். {Gen 40:21}
சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு<Joseph> அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. {Gen 40:22}
ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை<Joseph> நினையாமல் அவனை மறந்துவிட்டான். {Gen 40:23}
இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன்<Pharaoh> ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். {Gen 41:1}
அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. {Gen 41:2}
அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது. {Gen 41:3}
அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன்<Pharaoh> கண்டு விழித்துக்கொண்டான். {Gen 41:4}
மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. {Gen 41:5}
பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது. {Gen 41:6}
சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன்<Pharaoh> விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான். {Gen 41:7}
காலமே பார்வோனுடைய<Pharaoh> மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள<Egypt> சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச்<Pharaoh> சொல்லக்கூடாமற்போயிற்று. {Gen 41:8}
அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை<Pharaoh> நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது. {Gen 41:9}
பார்வோன்<Pharaoh> தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், {Gen 41:10}
நானும் அவனும் ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம். {Gen 41:11}
அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய<Hebrew> பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். {Gen 41:12}
அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான். {Gen 41:13}
அப்பொழுது பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில்<Pharaoh> வந்தான். {Gen 41:14}
பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். {Gen 41:15}
அப்பொழுது யோசேப்பு<Joseph> பார்வோனுக்குப்<Pharaoh> பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு<Pharaoh> மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான். {Gen 41:16}
பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். {Gen 41:17}
அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது. {Gen 41:18}
அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்துதேசமெங்கும்<Egypt> நான் கண்டதில்லை. {Gen 41:19}
கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. {Gen 41:20}
அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். {Gen 41:21}
பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். {Gen 41:22}
பின்பு சாவியானவைகளும் கீழ்க்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது. {Gen 41:23}
சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான். {Gen 41:24}
அப்பொழுது யோசேப்பு<Joseph> பார்வோனை<Pharaoh> நோக்கி: பார்வோனின்<Pharaoh> சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு<Pharaoh> அறிவித்திருக்கிறார். {Gen 41:25}
அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே. {Gen 41:26}
அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்க்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம். {Gen 41:27}
பார்வோனுக்கு<Pharaoh> நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக்<Pharaoh> காண்பித்திருக்கிறார். {Gen 41:28}
எகிப்து<Egypt> தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். {Gen 41:29}
அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து<Egypt> தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். {Gen 41:30}
வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். {Gen 41:31}
இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு<Pharaoh> இரட்டித்தது. {Gen 41:32}
ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு<Egypt> அதிகாரியாகப் பார்வோன்<Pharaoh> ஏற்படுத்துவாராக. {Gen 41:33}
இப்படிப் பார்வோன்<Pharaoh> செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே<Egypt> விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக. {Gen 41:34}
அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய<Pharaoh> அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக. {Gen 41:35}
தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில்<Egypt> உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான். {Gen 41:36}
இந்த வார்த்தை பார்வோனுடைய<Pharaoh> பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது. {Gen 41:37}
அப்பொழுது பார்வோன்<Pharaoh> தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். {Gen 41:38}
பின்பு, பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. {Gen 41:39}
நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில்மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். {Gen 41:40}
பின்னும் பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> நோக்கி: பார், எகிப்துதேசம்<Egypt> முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, {Gen 41:41}
பார்வோன்<Pharaoh> தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின்<Joseph> கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, {Gen 41:42}
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம்<Egypt> முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்; {Gen 41:43}
பின்னும் பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> நோக்கி: நான் பார்வோன்<Pharaoh>; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில்<Egypt> ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான். {Gen 41:44}
மேலும், பார்வோன்<Pharaoh> யோசேப்புக்கு<Joseph> சாப்நாத்பன்னேயா<Zaphnathpaaneah> என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து<On> ஆசாரியனாகிய போத்திபிராவின்<Potipherah> குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை<Asenath> அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு<Joseph> எகிப்துதேசத்தைச்<Egypt> சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். {Gen 41:45}
யோசேப்பு<Joseph> எகிப்தின்<Egypt> ராஜாவாகிய பார்வோனுக்கு<Pharaoh> முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு<Joseph> பார்வோனுடைய<Pharaoh> சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம்<Egypt> எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். {Gen 41:46}
பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. {Gen 41:47}
அவ்வேழு வருஷங்களில் எகிப்து<Egypt> தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். {Gen 41:48}
இப்படி யோசேப்பு<Joseph> அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. {Gen 41:49}
பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு<Joseph> இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன்<On> பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின்<Potipherah> குமாரத்தியாகிய ஆஸ்நாத்து<Asenath> அவனுக்குப் பெற்றாள். {Gen 41:50}
யோசேப்பு<Joseph>: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே<Manasseh> என்று பேரிட்டான். {Gen 41:51}
நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம்<Ephraim> என்று பேரிட்டான். {Gen 41:52}
எகிப்துதேசத்தில்<Egypt> வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், {Gen 41:53}
யோசேப்பு<Joseph> சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும்<Egypt> ஆகாரம் இருந்தது. {Gen 41:54}
எகிப்துதேசமெங்கும்<Egypt> பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை<Pharaoh> நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்<Pharaoh>: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப்<Joseph> போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர்<Egyptians> எல்லாருக்கும் சொன்னான். {Gen 41:55}
தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு<Joseph> களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு<Egyptians> விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில்<Egypt> வரவரக் கொடிதாயிற்று. {Gen 41:56}
சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில்<Joseph> தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு<Egypt> வந்தார்கள். {Gen 41:57}
எகிப்திலே<Egypt> தானியம் உண்டென்று யாக்கோபு<Jacob> அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன? {Gen 42:1}
எகிப்திலே<Egypt> தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான். {Gen 42:2}
யோசேப்பின்<Joseph> சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப்<Egypt> போனார்கள். {Gen 42:3}
யோசேப்பின்<Joseph> தம்பியாகிய பென்யமீனுக்கு<Benjamin> ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு<Jacob> அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை. {Gen 42:4}
கானான்தேசத்திலே<Canaan> பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின்<Israel> குமாரரும் போனார்கள். {Gen 42:5}
யோசேப்பு<Joseph> அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின்<Joseph> சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். {Gen 42:6}
யோசேப்பு<Joseph> அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான்<Canaan> தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள். {Gen 42:7}
யோசேப்பு<Joseph> அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. {Gen 42:8}
யோசேப்பு<Joseph> அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான். {Gen 42:9}
அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். {Gen 42:10}
நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள். {Gen 42:11}
அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான். {Gen 42:12}
அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான்<Canaan> தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள். {Gen 42:13}
யோசேப்பு<Joseph> அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி. {Gen 42:14}
உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின்<Pharaoh> ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். {Gen 42:15}
இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின்<Pharaoh> ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி, {Gen 42:16}
அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான். {Gen 42:17}
மூன்றாம் நாளிலே யோசேப்பு<Joseph> அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். {Gen 42:18}
நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, {Gen 42:19}
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து: {Gen 42:20}
நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். {Gen 42:21}
அப்பொழுது ரூபன்<Reuben> அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான். {Gen 42:22}
யோசேப்பு<Joseph> துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள். {Gen 42:23}
அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப்<Simeon> பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான். {Gen 42:24}
பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு<Joseph> கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது. {Gen 42:25}
அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள். {Gen 42:26}
தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு, {Gen 42:27}
தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள். {Gen 42:28}
அவர்கள் கானான்<Canaan> தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில்<Jacob> வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து: {Gen 42:29}
தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான். {Gen 42:30}
நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல. {Gen 42:31}
நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில்<Canaan> எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம். {Gen 42:32}
அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து, {Gen 42:33}
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள். {Gen 42:34}
அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள். {Gen 42:35}
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு<Jacob> அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும்<Joseph> இல்லை, சிமியோனும்<Simeon> இல்லை; பென்யமீனையும்<Benjamin> கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான். {Gen 42:36}
அப்பொழுது ரூபன்<Reuben> தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான். {Gen 42:37}
அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றான். {Gen 42:38}
தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. {Gen 43:1}
எகிப்திலிருந்து<Egypt> அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான். {Gen 43:2}
அதற்கு யூதா<Judah>: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான். {Gen 43:3}
எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். {Gen 43:4}
அனுப்பாவிட்டால், நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான். {Gen 43:5}
அதற்கு இஸ்ரவேல்<Israel>: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான். {Gen 43:6}
அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள். {Gen 43:7}
பின்னும், யூதா<Judah> தன் தகப்பனாகிய இஸ்ரவேலை<Israel> நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும். {Gen 43:8}
அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக. {Gen 43:9}
நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பிவந்திருப்போமே என்றான். {Gen 43:10}
அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்<Israel>: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள். {Gen 43:11}
பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும். {Gen 43:12}
உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள். {Gen 43:13}
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும்<Benjamin> உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான். {Gen 43:14}
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும்<Benjamin> கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய்<Egypt>, யோசேப்பின்<Joseph> சமுகத்தில் வந்து நின்றார்கள். {Gen 43:15}
பென்யமீன்<Benjamin> அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு<Joseph> கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான். {Gen 43:16}
அவன் தனக்கு யோசேப்பு<Joseph> சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின்<Joseph> வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான். {Gen 43:17}
தாங்கள் யோசேப்பின்<Joseph> வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி, {Gen 43:18}
யோசேப்பின்<Joseph> வீட்டு விசாரணைக்காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி: {Gen 43:19}
ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே; {Gen 43:20}
நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம். {Gen 43:21}
மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டுவந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள். {Gen 43:22}
அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை<Simeon> வெளியே அழைத்துவந்து, அவர்களிடத்தில் விட்டான். {Gen 43:23}
மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின்<Joseph> வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான். {Gen 43:24}
தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு<Joseph> வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். {Gen 43:25}
யோசேப்பு<Joseph> வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள். {Gen 43:26}
அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான். {Gen 43:27}
அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள். {Gen 43:28}
அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக்<Benjamin> கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான். {Gen 43:29}
யோசேப்பின்<Joseph> உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான். {Gen 43:30}
பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான். {Gen 43:31}
எகிப்தியர்<Egyptians> எபிரெயரோடே<Hebrews> சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு<Egyptians> அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத்<Egyptians> தனிப்படவும் வைத்தார்கள். {Gen 43:32}
அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். {Gen 43:33}
அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய<Benjamin> பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள். {Gen 43:34}
பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு, {Gen 44:1}
இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு<Joseph> சொன்னபடியே அவன் செய்தான். {Gen 44:2}
அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டு போகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள். {Gen 44:3}
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்குமுன்னே, யோசேப்பு<Joseph> தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன? {Gen 44:4}
அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான். {Gen 44:5}
அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான். {Gen 44:6}
அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம். {Gen 44:7}
எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து<Canaan> திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா? {Gen 44:8}
உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்கக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள். {Gen 44:9}
அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான். {Gen 44:10}
அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள். {Gen 44:11}
மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய<Benjamin> சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது. {Gen 44:12}
அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள். {Gen 44:13}
யூதாவும்<Judah> அவன் சகோதரரும் யோசேப்பின்<Joseph> வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு<Joseph> அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள். {Gen 44:14}
யோசேப்பு<Joseph> அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான். {Gen 44:15}
அதற்கு யூதா<Judah>: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான். {Gen 44:16}
அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான். {Gen 44:17}
அப்பொழுது யூதா<Judah> அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு<Pharaoh> ஒப்பாயிருக்கிறீர். {Gen 44:18}
உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். {Gen 44:19}
அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். {Gen 44:20}
அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். {Gen 44:21}
நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். {Gen 44:22}
அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். {Gen 44:23}
நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம். {Gen 44:24}
எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார். {Gen 44:25}
அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக் காணக்கூடாது என்றோம். {Gen 44:26}
அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்; {Gen 44:27}
அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். {Gen 44:28}
நீங்கள் இவனையும் என்னை விட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார். {Gen 44:29}
ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால், {Gen 44:30}
அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம். {Gen 44:31}
இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். {Gen 44:32}
இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். {Gen 44:33}
இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான். {Gen 44:34}
அப்பொழுது யோசேப்பு<Joseph> தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு<Joseph> தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. {Gen 45:1}
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்<Egyptians> கேட்டார்கள், பார்வோனின்<Pharaoh> வீட்டாரும் கேட்டார்கள். {Gen 45:2}
யோசேப்பு<Joseph> தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு<Joseph>; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள். {Gen 45:3}
அப்பொழுது யோசேப்பு<Joseph> தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப்<Egypt> போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு<Joseph> நான்தான். {Gen 45:4}
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். {Gen 45:5}
தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். {Gen 45:6}
பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். {Gen 45:7}
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத்<Pharaoh> தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம்<Egypt> முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார். {Gen 45:8}
நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து<Egypt> தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம். {Gen 45:9}
நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன்<Goshen> நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். {Gen 45:10}
உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு<Joseph> சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள். {Gen 45:11}
இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின்<Benjamin> கண்களும் காண்கிறதே. {Gen 45:12}
எகிப்திலே<Egypt> எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி; {Gen 45:13}
தன் தம்பியாகிய பென்யமீனின்<Benjamin> கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும்<Benjamin> அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். {Gen 45:14}
பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள். {Gen 45:15}
யோசேப்பின்<Joseph> சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன்<Pharaoh> அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும்<Pharaoh> அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள். {Gen 45:16}
பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப்<Canaan> போய், {Gen 45:17}
உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின்<Egypt> நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். {Gen 45:18}
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து<Egypt> கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டுவாருங்கள். {Gen 45:19}
உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள<Egypt> நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச்சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான். {Gen 45:20}
இஸ்ரவேலின்<Israel> குமாரர் அப்படியே செய்தார்கள். யோசேப்பு<Joseph> பார்வோனுடைய<Pharaoh> கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும், {Gen 45:21}
அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ<Benjamin> முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான். {Gen 45:22}
அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின்<Egypt> உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். {Gen 45:23}
மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். {Gen 45:24}
அவர்கள் எகிப்திலிருந்து<Egypt> போய், கானான்தேசத்திலே<Canaan> தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில்<Jacob> வந்து: {Gen 45:25}
யோசேப்பு<Joseph> உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம்<Egypt> அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. {Gen 45:26}
அவர்கள் யோசேப்பு<Joseph> தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு<Joseph> அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின்<Jacob> ஆவி உயிர்த்தது. {Gen 45:27}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel>: என் குமாரனாகிய யோசேப்பு<Joseph> இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான். {Gen 45:28}
இஸ்ரவேல்<Israel> தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப்<Beersheba> போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய<Isaac> தேவனுக்குப் பலியிட்டான். {Gen 46:1}
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத்<Israel> தரிசனமாகி: யாக்கோபே<Jacob>, யாக்கோபே<Jacob> என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான். {Gen 46:2}
அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப்<Egypt> பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். {Gen 46:3}
நான் உன்னுடனே எகிப்துக்கு<Egypt> வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு<Joseph> தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார். {Gen 46:4}
அதற்குப்பின்பு, யாக்கோபு<Jacob> பெயெர்செபாவிலிருந்து<Beersheba> பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின்<Israel> குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும்<Jacob> தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன்<Pharaoh> அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, {Gen 46:5}
தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான்<Canaan> தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும்<Jacob> அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப்<Egypt> போனார்கள். {Gen 46:6}
அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத்<Egypt> தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான். {Gen 46:7}
எகிப்துக்கு<Egypt> வந்த இஸ்ரவேலரின்<Israel> நாமங்களாவன: யாக்கோபும்<Jacob> அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய<Jacob> மூத்தகுமாரனான ரூபன்<Reuben>. {Gen 46:8}
ரூபனுடைய<Reuben> குமாரர் ஆனோக்கு<Hanoch>, பல்லூ<Phallu>, எஸ்ரோன்<Hezron>, கர்மீ<Carmi> என்பவர்கள். {Gen 46:9}
சிமியோனுடைய<Simeon> குமாரர் எமுவேல்<Jemuel>, யாமின்<Jamin>, ஓகாத்<Ohad>, யாகீன்<Jachin>, சொகார்<Zohar>, கானானிய<Canaanitish> ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்<Shaul> என்பவர்கள். {Gen 46:10}
லேவியினுடைய<Levi> குமாரர் கெர்சோன்<Gershon>, கோகாத்<Kohath>, மெராரி<Merari> என்பவர்கள். {Gen 46:11}
யூதாவினுடைய<Judah> குமாரர் ஏர்<Er>, ஓனான்<Onan>, சேலா<Shelah>, பாரேஸ்<Pharez>, சேரா<Zerah> என்பவர்கள்; அவர்களில் ஏரும்<Er> ஓனானும்<Onan> கானான்தேசத்தில்<Canaan> இறந்துபோனார்கள்; பாரேசுடைய<Pharez> குமாரர் எஸ்ரோன்<Hezron>, ஆமூல்<Hamul> என்பவர்கள். {Gen 46:12}
இசக்காருடைய<Issachar> குமாரர் தோலா<Tola>, பூவா<Phuvah>, யோபு<Job>, சிம்ரோன்<Shimron> என்பவர்கள். {Gen 46:13}
செபுலோனுடைய<Zebulun> குமாரர் செரேத்<Sered>, ஏலோன்<Elon>, யக்லேல்<Jahleel> என்பவர்கள். {Gen 46:14}
இவர்கள் லேயாளின்<Leah> சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள்<Dinah> என்னும் ஒரு குமாரத்தியையும் பதான்அராமிலே<Padanaram> யாக்கோபுக்குப்<Jacob> பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர். {Gen 46:15}
காத்துடைய<Gad> குமாரர், சிப்பியோன்<Ziphion>, அகி<Haggi>, சூனி<Shuni>, எஸ்போன்<Ezbon>, ஏரி<Eri>, அரோதி<Arodi>, அரேலி<Areli> என்பவர்கள். {Gen 46:16}
ஆசேருடைய<Asher> குமாரர் இம்னா<Jimnah>, இஸ்வா<Ishuah>, இஸ்வி<Isui>, பெரீயா<Beriah> என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு<Serah> என்பவள்; பெரீயாவின்<Beriah> குமாரர் ஏபேர்<Heber>, மல்கியேல்<Malchiel> என்பவர்கள். {Gen 46:17}
இவர்கள் லாபான்<Laban> தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக்<Leah> கொடுத்த சில்பாளுடைய<Zilpah> பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப்<Jacob> பெற்றாள். {Gen 46:18}
யாக்கோபின்<Jacob> மனைவியாகிய ராகேலுடைய<Rachel> குமாரர் யோசேப்பு<Joseph>, பென்யமீன்<Benjamin> என்பவர்கள். {Gen 46:19}
யோசேப்புக்கு<Joseph> எகிப்து<Egypt> தேசத்திலே மனாசேயும்<Manasseh> எப்பிராயீமும்<Ephraim> பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து<On> ஆசாரியனாகிய போத்திபிராவின்<Potipherah> குமாரத்தியாகிய ஆஸ்நாத்<Asenath> அவனுக்குப் பெற்றாள். {Gen 46:20}
பென்யமீனுடைய<Benjamin> குமாரர் பேலா<Belah>, பெகேர்<Becher>, அஸ்பேல்<Ashbel>, கேரா<Gera>, நாகமான்<Naaman>, ஏகி<Ehi>, ரோஷ்<Rosh>, முப்பிம்<Muppim>, உப்பிம்<Huppim>, ஆர்து<Ard> என்பவர்கள். {Gen 46:21}
ராகேல்<Rachel> யாக்கோபுக்குப்<Jacob> பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர். {Gen 46:22}
தாணுடைய<Dan> குமாரன் உசீம்<Hushim> என்பவன். {Gen 46:23}
நப்தலியின்<Naphtali> குமாரர் யாத்சியேல்<Jahzeel>, கூனி<Guni>, எத்செர்<Jezer>, சில்லேம்<Shillem> என்பவர்கள். {Gen 46:24}
இவர்கள் லாபான்<Laban> தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக்<Rachel> கொடுத்த பில்காள்<Bilhah> யாக்கோபுக்குப்<Jacob> பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர். {Gen 46:25}
யாக்கோபுடைய<Jacob> குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே<Egypt> வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர். {Gen 46:26}
யோசேப்புக்கு<Joseph> எகிப்திலே<Egypt> பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப்<Egypt> போன யாக்கோபின்<Jacob> குடும்பத்தார் எழுபதுபேர். {Gen 46:27}
கோசேன்<Goshen> நாட்டிலே தன்னை யோசேப்பு<Joseph> சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத்<Judah> தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு<Jacob> அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே<Goshen> சேர்ந்தார்கள். {Gen 46:28}
யோசேப்பு<Joseph> தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச்<Israel> சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான். {Gen 46:29}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel> யோசேப்பைப்<Joseph> பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான். {Gen 46:30}
பின்பு, யோசேப்பு<Joseph> தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப்<Pharaoh> போய், கானான்தேசத்திலிருந்து<Canaan> என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். {Gen 46:31}
அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன். {Gen 46:32}
பார்வோன்<Pharaoh> உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால், {Gen 46:33}
நீங்கள், கோசேன்<Goshen> நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு<Egyptians> அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான். {Gen 46:34}
யோசேப்பு<Joseph> பார்வோனிடத்தில்<Pharaoh> போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து<Canaan> வந்தார்கள்; இப்பொழுது கோசேன்<Goshen> நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி; {Gen 47:1}
தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு<Pharaoh> முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான். {Gen 47:2}
பார்வோன்<Pharaoh> அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில்<Pharaoh> சொன்னதுமன்றி, {Gen 47:3}
கானான்<Canaan> தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன்<Goshen> நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். {Gen 47:4}
அப்பொழுது பார்வோன்<Pharaoh> யோசேப்பை<Joseph> நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே. {Gen 47:5}
எகிப்துதேசம்<Egypt> உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன்<Goshen> நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான். {Gen 47:6}
பின்பு, யோசேப்பு<Joseph> தன் தகப்பனாகிய யாக்கோபை<Jacob> அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு<Pharaoh> முன்பாக நிறுத்தினான். யாக்கோபு<Jacob> பார்வோனை<Pharaoh> ஆசீர்வதித்தான். {Gen 47:7}
பார்வோன்<Pharaoh> யாக்கோபை<Jacob> நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான். {Gen 47:8}
அதற்கு யாக்கோபு<Jacob>: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே<Pharaoh> சொன்னான். {Gen 47:9}
பின்னும் யாக்கோபு<Jacob> பார்வோனை<Pharaoh> ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான். {Gen 47:10}
பார்வோன்<Pharaoh> கட்டளையிட்டபடியே, யோசேப்பு<Joseph> தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே<Egypt> நல்ல நாடாகிய ராமசேஸ்<Rameses> என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். {Gen 47:11}
யோசேப்பு<Joseph> தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான். {Gen 47:12}
பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்துதேசமும்<Egypt> கானான்<Canaan> தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. {Gen 47:13}
யோசேப்பு<Joseph> எகிப்து<Egypt> தேசத்திலும் கானான்<Canaan> தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன்<Pharaoh> அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான். {Gen 47:14}
எகிப்துதேசத்திலும்<Egypt> கானான்தேசத்திலுமுள்ள<Canaan> பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்<Egyptians> எல்லாரும் யோசேப்பினிடத்தில்<Joseph> வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள். {Gen 47:15}
அதற்கு யோசேப்பு<Joseph>: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான். {Gen 47:16}
அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில்<Joseph> கொண்டுவந்தார்கள்; யோசேப்பு<Joseph> குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான். {Gen 47:17}
அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்துபோயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் எங்கள் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல. {Gen 47:18}
நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு<Pharaoh> ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப்போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத் தானியத்தைத் தாரும் என்றார்கள். {Gen 47:19}
அப்படியே எகிப்தியர்<Egyptians> தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு<Joseph> எகிப்தின்<Egypt> நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக்<Pharaoh> கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று<Pharaoh>. {Gen 47:20}
மேலும் அவன் எகிப்தின்<Egypt> ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான். {Gen 47:21}
ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே<Pharaoh> ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன்<Pharaoh> அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை. {Gen 47:22}
பின்னும் யோசேப்பு<Joseph> ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக<Pharaoh> வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள். {Gen 47:23}
விளைவில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக்<Pharaoh> கொடுக்கவேண்டும்; மற்ற நாலுபங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாயிருக்கட்டும் என்றான். {Gen 47:24}
அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு<Pharaoh> அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள். {Gen 47:25}
ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச்<Pharaoh> சேரும் வாரம் என்று யோசேப்பு<Joseph> இட்ட கட்டளைப்படி எகிப்து<Egypt> தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச்<Pharaoh> சேராமல் நீங்கலாயிருந்தது. {Gen 47:26}
இஸ்ரவேலர்<Israel> எகிப்து<Egypt> தேசத்திலுள்ள கோசேன்<Goshen> நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள். {Gen 47:27}
யாக்கோபு<Jacob> எகிப்து<Egypt> தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய<Jacob> ஆயுசுநாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம். {Gen 47:28}
இஸ்ரவேல்<Israel> மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை<Joseph> வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே<Egypt> அடக்கம்பண்ணாதிருப்பாயாக. {Gen 47:29}
நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து<Egypt> எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான். {Gen 47:30}
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல்<Israel> கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான். {Gen 47:31}
அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச்<Joseph> சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும்<Manasseh> எப்பிராயீமையும்<Ephraim> தன்னோடேகூடக் கொண்டுபோனான். {Gen 48:1}
இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு<Joseph> உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு<Jacob> அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல்<Israel> தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். {Gen 48:2}
யாக்கோபு<Jacob> யோசேப்பை<Joseph> நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான்<Canaan> தேசத்திலுள்ள லூஸ்<Luz> என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து: {Gen 48:3}
நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார். {Gen 48:4}
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு<Egypt> வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில்<Egypt> பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன்<Reuben> சிமியோன்<Simeon> என்பவர்களைப்போல, எப்பிராயீமும்<Ephraim> மனாசேயும்<Manasseh> என்னுடையவர்கள். {Gen 48:5}
இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள். {Gen 48:6}
நான் பதானை<Padan> விட்டு வருகையில், கானான்தேசத்தில்<Canaan> எப்பிராத்தாவுக்குக்<Ephrath> கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல்<Rachel> என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லெகேம்<Bethlehem> என்னும் எப்பிராத்தா<Ephrath> ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான். {Gen 48:7}
இஸ்ரவேல்<Israel> யோசேப்பின்<Joseph> குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான். {Gen 48:8}
யோசேப்பு<Joseph> தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான். {Gen 48:9}
முதிர்வயதினால் இஸ்ரவேலின்<Israel> கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான். {Gen 48:10}
இஸ்ரவேல்<Israel> யோசேப்பை<Joseph> நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான். {Gen 48:11}
அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு<Joseph> பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். {Gen 48:12}
பின்பு, யோசேப்பு<Joseph> அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத்<Ephraim> தன் வலதுகையினாலே இஸ்ரவேலின்<Israel> இடதுகைக்கு நேராகவும், மனாசேயைத்<Manasseh> தன் இடதுகையினாலே இஸ்ரவேலின்<Israel> வலதுகைக்கு நேராகவும் விட்டான். {Gen 48:13}
அப்பொழுது இஸ்ரவேல்<Israel>, மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய<Ephraim> தலையின்மேலும், மனாசே<Manasseh> மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய<Manasseh> தலையின்மேலும் வைத்தான். {Gen 48:14}
அவன் யோசேப்பை<Joseph> ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும்<Abraham> ஈசாக்கும்<Isaac> வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும், {Gen 48:15}
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம்<Abraham> ஈசாக்கு<Isaac> என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான். {Gen 48:16}
தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய<Ephraim> தலையின்மேல் வைத்ததை யோசேப்பு<Joseph> கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய<Ephraim> தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய<Manasseh> தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து: {Gen 48:17}
என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான். {Gen 48:18}
அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான். {Gen 48:19}
இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும்<Ephraim> மனாசேயைப்போலவும்<Manasseh> ஆக்குவாராக என்று இஸ்ரவேலர்<Israel> உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை<Ephraim> மனாசேக்கு<Manasseh> முன்னே வைத்தான். {Gen 48:20}
பின்பு, இஸ்ரவேல்<Israel> யோசேப்பை<Joseph> நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும், {Gen 48:21}
உன் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர்<Amorite> கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான். {Gen 48:22}
யாக்கோபு<Jacob> தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். {Gen 49:1}
யாக்கோபின்<Jacob> குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச்<Israel> செவிகொடுங்கள். {Gen 49:2}
ரூபனே<Reuben>, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். {Gen 49:3}
தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. {Gen 49:4}
சிமியோனும்<Simeon>, லேவியும்<Levi> ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். {Gen 49:5}
என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. {Gen 49:6}
உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே<Jacob> அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே<Israel> அவர்களைச் சிதறவும் பண்ணுவேன். {Gen 49:7}
யூதாவே<Judah>, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். {Gen 49:8}
யூதா<Judah> பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? {Gen 49:9}
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு<Judah> நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். {Gen 49:10}
அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக் கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான். {Gen 49:11}
அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும். {Gen 49:12}
செபுலோன்<Zebulun> கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும்<Zidon> இருக்கும். {Gen 49:13}
இசக்கார்<Issachar> இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. {Gen 49:14}
அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான். {Gen 49:15}
தாண்<Dan> இஸ்ரவேல்<Israel> கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். {Gen 49:16}
தாண்<Dan>, குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். {Gen 49:17}
கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். {Gen 49:18}
காத்<Gad> என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். {Gen 49:19}
ஆசேருடைய<Asher> ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான். {Gen 49:20}
நப்தலி<Naphtali> விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். {Gen 49:21}
யோசேப்பு<Joseph> கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். {Gen 49:22}
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். {Gen 49:23}
ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய<Jacob> வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின்<Israel> கன்மலையும் ஆனான். {Gen 49:24}
உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். {Gen 49:25}
உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய<Joseph> சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. {Gen 49:26}
பென்யமீன்<Benjamin> பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். {Gen 49:27}
இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின்<Israel> பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். {Gen 49:28}
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான<Hittite> எப்பெரோனின்<Ephron> நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; {Gen 49:29}
அந்தக் குகை கானான்<Canaan> தேசத்திலே மம்ரேக்கு<Mamre> எதிராக மக்பேலா<Machpelah> என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம்<Abraham> ஏத்தியனாகிய<Hittite> எப்பெரோன்<Ephron> கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். {Gen 49:30}
அங்கே ஆபிரகாமையும்<Abraham> அவர் மனைவியாகிய சாராளையும்<Sarah> அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும்<Isaac> அவர் மனைவியாகிய ரெபெக்காளையும்<Rebekah> அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும்<Leah> அடக்கம்பண்ணினேன். {Gen 49:31}
அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின்<Heth> புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். {Gen 49:32}
யாக்கோபு<Jacob> தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். {Gen 49:33}
அப்பொழுது யோசேப்பு<Joseph> தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான். {Gen 50:1}
பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு<Joseph> தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச்<Israel> சுகந்தவர்க்கமிட்டார்கள். {Gen 50:2}
சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்<Egyptians> அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள். {Gen 50:3}
துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு<Joseph> பார்வோனின்<Pharaoh> குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய<Pharaoh> காது கேட்க அவருக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால், {Gen 50:4}
என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான்<Canaan> தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி, ஆணையிடுவித்துக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். {Gen 50:5}
அதற்குப் பார்வோன்<Pharaoh>: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா என்றான். {Gen 50:6}
அப்படியே யோசேப்பு<Joseph> தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய<Pharaoh> அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து<Egypt> தேசத்திலுள்ள சகல பெரியோரும், {Gen 50:7}
யோசேப்பின்<Joseph> வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன்<Goshen> நாட்டிலே விட்டுப் போனார்கள். {Gen 50:8}
இரதங்களும் குதிரைவீரரும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. {Gen 50:9}
அவர்கள் யோர்தானுக்கு<Jordan> அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின்<Atad> போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான். {Gen 50:10}
ஆத்தாத்தின்<Atad> களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர்<Canaanites> கண்டு: இது எகிப்தியருக்குப்<Egyptians> பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு<Jordan> அப்பால் இருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம்<Abelmizraim> என்னும் பேர் உண்டாயிற்று. {Gen 50:11}
யாக்கோபின்<Jacob> குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, {Gen 50:12}
அவனைக் கானான்<Canaan> தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம்<Abraham> மம்ரேக்கு<Mamre> எதிரே இருக்கிற மக்பேலா<Machpelah> என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய<Hittite> எப்பெரோனிடத்தில்<Ephron> வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். {Gen 50:13}
யோசேப்பு<Joseph> தன் தகப்பனை அடக்கம்பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம்பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத்<Egypt> திரும்பினார்கள். {Gen 50:14}
தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின்<Joseph> சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு<Joseph> நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில்<Joseph> ஆள் அனுப்பி, {Gen 50:15}
உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். {Gen 50:16}
ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச்<Joseph> சொன்னபோது, அவன் அழுதான். {Gen 50:17}
பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். {Gen 50:18}
யோசேப்பு<Joseph> அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; {Gen 50:19}
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். {Gen 50:20}
ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான். {Gen 50:21}
யோசேப்பும்<Joseph> அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே<Egypt> குடியிருந்தார்கள். யோசேப்பு<Joseph> நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான். {Gen 50:22}
யோசேப்பு<Joseph> எப்பிராயீமுக்குப்<Ephraim> பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின்<Manasseh> குமாரனாகிய மாகீரின்<Machir> பிள்ளைகளும் யோசேப்பின்<Joseph> மடியில் வளர்க்கப்பட்டார்கள். {Gen 50:23}
யோசேப்பு<Joseph> தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும்<Abraham> ஈசாக்குக்கும்<Isaac> யாக்கோபுக்கும்<Jacob> ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; {Gen 50:24}
தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு<Joseph> இஸ்ரவேல்<Israel> புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான். {Gen 50:25}
யோசேப்பு<Joseph> நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து<Egypt> தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள். {Gen 50:26}
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!